Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 800

கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 8

இந்த மண்ணின் மைந்தர்களான இந்துக்களுக்குக் கூட கொடுக்கப்படாத சலுகைகள் மதம் மாறிப் போனவர்களுக்கு அளிக்கப்படுவது மிகப் பெரிய கொடுமையாகும். பள்ளிக் கூடம் தொடங்குவது நடத்துவது போன்ற விசயங்களில் கூட முசுலீம், கிறித்தவர்களுக்கு உள்ள சலுகைகளையாவது தாருங்கள் என்று கேட்கின்ற நிலையில் இந்துக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

– ”இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா

இந்து முன்னணி வெளியீடு. பக்.19

இயற்கையையும், சமூகத்தையும் அறிவியல் நோக்கிலிருந்து புரிந்து கொள்வதே கல்வி. முட்டாள்தனங்களையும், மூடநம்பிக்கைகளையும் உயிராகக் கொண்டுள்ள மதங்கள் கல்வியுடன் உறவு கொள்ள எவ்வித அடிப்படையும் இல்லை. இந்தியாவில் பல நூறு ஆண்டுகளாக மதத்தின் பிடியில் சிக்கியிருக்கும் கல்வியை விடுவிக்க வேண்டும் என்பதுதான் மதச் சார்பின்மையின் முக்கியக் கோரிக்கை. இந்தியாவில் மதத்தோடு கல்வி கொண்டுள்ள உறவின் வரலாறு என்ன?

பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு கல்வி கிடையாது என்பதைத்தான் பார்ப்பனியம் ஈராயிரம் ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது. ஷாகாவில் ஸ்வயம் சேவகர்கள் ஆராதனை செய்யும் ‘மனு’ தனது தர்மத்தில் வேதம் கேட்ட காதில் ஈயத்தை ஊற்றுவது, உச்சரித்த நாக்கை வெட்டுவது உட்பட கல்வி மறுப்பிற்காகப் பெரும் தண்டனைப் பட்டியலையே உருவாக்கியிருந்தான். நடைமுறையிலும் கட்டை விரல் வெட்டப்பட்ட ஏகலைவனிலிருந்து, கண்பறிக்கப்பட்ட சேலம் கட்டிநாயக்கன்பட்டி தனம் வரை அதே ‘தர்மம்’ தான் நிலவுகின்றது.

பிராமணர் – சத்திரியர்’ போன்ற ஆளும் வர்க்கப் பிரிவினருக்காக நடத்தப்பட்ட குருகுலங்களிலும் வருணாசிரம தர்மத்தின் பாடத்திட்டம்தான் கல்வியாகக் கற்றுத் தரப்பட்டது. மத்திய காலத்தில் முகலாய மன்னர்கள் அறிமுகப்படுத்திய மதரஸா கல்வியில்  இருந்த மதசார்பின்மை அம்சங்கள் படிப்படியாக ஒழிக்கப்பட்டு இறுதியில் அங்கேயும் மதக்கல்வியே மேலோங்கியது. ஆங்கிலேயர் காலத்தில்தான் கிறித்தவ மிஷனரிகள் மூலம் நவீன கல்வி அறிமுகமாகியது. அதுவும் காலனியாதிக்கத்திற்கு உதவும் வகையிலேயே உருவாக்கப்பட்டது.

இந்த கிறித்தவ நிறுவனங்களில் அன்றும் இன்றும் படித்துப் பயனடைபவர்களில் ஆகப் பெரும்பான்மையினர் பார்ப்பன – மேல் சாதியினர்தான். வெள்ளையர் காலத்து ஐ.சி.எஸ். தற்போதைய ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். கும்பல்களெல்லாம் கிறித்தவக் கல்லூரிகளில் படித்து வந்தவர்கள்தான். அத்வானி போன்ற பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் இங்கு படித்தவர்களே. அந்த வகையில் பார்த்தால் மிஷனரிகளின் சேவையில் முக்கியப் பங்கை இவர்கள்தான் அனுபவித்திருக்கின்றனர்.

‘இயேசு சங்கம்’ நடத்தி வரும் சென்னை லயோலா கல்லூரி இந்தியாவின் சிறந்த கல்லூரிகளில் ஒன்று என்கிறார்கள். நடிகர்கள், பணக்காரர்கள், அதிகாரி – அரசியல்வாதிகள் போன்றவர்களின் வாரிசுகள் இங்குதான் படிக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’ என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், கிறித்தவப் பள்ளியோ, அரசுப் பள்ளியோ அங்கே தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை அம்பேத்கார் முதல் குப்பன் சுப்பன் வரை மாறவில்லை. அவர்கள் படிக்கக்கூடாது என்ற மனுதர்மம் இன்னும் இறக்கவில்லை.

தற்சமயம் கல்வி நிறுவனங்கள் நடத்தும் சிறுபான்மைப் பிரிவினருக்கு சட்டத்தில் சில சலுகைகள் உள்ளது உண்மை. ஆனால், இச்சலுகை மதச் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல, மொழி, இனம் என்று பலருக்கும் தரப்படுகிறது. அதை வைத்தே ராமகிருஷ்ணா மிஷன், சமஸ்கிருதக் கல்லூரிகள் போன்ற இந்துக்களும் சலுகைகளை அனுபவிக்கின்றனர். ராமகிருஷ்ணா மிஷன் கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் நியமன முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கு வங்க அரசு தலையிட்டது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்காடிய மிஷன், ‘நாங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரை வழிபடும் சிறுபான்மையினர், இந்துக்களல்ல’ என்று பகிரங்கமாக அறிவித்தது.

கல்விக் கொள்ளைக்காக மதத்தையே மாற்றிக்கொள்கிறார்களே என்று எந்த இந்து பக்தரும் இதுவரை கேள்வி எழுப்பியதில்லை. இத்தகைய முறைகேடுகள் எல்லாத் தனியார் கல்வி நிறுவனங்களிலும் நடந்து வருகின்றன. சிறுபான்மை கல்வி நிறுவனங்களும் விதி விலக்கல்ல. கேரளத்தில் கிறித்தவ மிஷனரிகள், நாயர்கள் மற்றும் இசுலாமியக் கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்த முனைந்த நம்பூதிரிபாடு அரசு அதற்காகவே கவிழ்க்கப்பட்டதும் ஒரு உதாரணம்.

சிறுபான்மையினருக்கான கல்விச் சலுகைகளால் இசுலாமிய மக்கள் அடைந்த பயன் என்ன? இந்துக்களை விடவும் கல்வி, வேலை வாய்ப்பில் அவர்கள் அதிகம் பயனடைந்திருக்கிறார்களா என்பதையும் நாம் பரிசீலிப்போம். தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு நிறுவனத்தின் ஆய்வுப்படி (1987-88) கிராமப்புற முசுலீம்களில் 58% பேர் கல்வியறிவற்றவர்கள். இந்துக்களில் கல்வியறிவற்றோர் 51% பேர். நகர்ப்புறத்திலோ 42% முசுலீம்கள் கல்வியறிவற்றவர்கள்; இந்துக்களில் 25% பேர் கல்வியறிவற்றவர்கள், முசுலீம் பெண்களின் கல்வியறிவின்மை பற்றிச் சொல்லவே தேவையில்லை.

நகர்ப்புற இந்துக்களில் பட்டப்படிப்பு படித்தோர் 8% பேர்; முசுலீம்களில் 2.3%தான் பட்டதாரிகள். மேலும் முசுலீம் கல்வி நிறுவனங்களில் முசுலீம் அல்லாத மாணவர்களின் எண்ணிக்கைதான் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றது. படிப்பதே வேலை வாய்ப்புக்காகத்தான் என்ற நிலைமையும், அரசு வேலை வாய்ப்புகளில் முசுலீம்கள் புறக்கணிக்கபடுவதாலும், கல்வி கற்பதற்கான அவர்களது ஆர்வமும் இயல்பாகவே குறைந்து விடுகிறது. மேலும் ஏழ்மை காரணமாக பள்ளிப் படிப்பைப் பாதியில் நிறுத்துவதென்பது இந்துக்களைவிடவும் முசுலீம் மாணவர்கள் மத்தியில்தான் அதிகமாக இருக்கிறது. உத்திரப்பிரதேசத்தில் மட்டும் 90% முசுலீம் மாணவர்கள் ஆரம்பப்பள்ளியையே தாண்டுவதில்லை என்கிறது கோபால் சிங் குழு (1983) அறிக்கை.

வடமாநிலங்களில் குறிப்பாக உ.பி.யில் முசுலீம் மக்களின் தாய்மொழியான உருது திட்டமிட்டே புறக்கணிக்கப்படுவதும், பாட நூல்கள் உருது மொழியில் அச்சிடுவது வேண்டுமென்றே தவிர்க்கப்படுவதும், சமஸ்கிருதமயமான இந்தி திணிக்கப்படுவதும், பாடத்திட்டமே மறைமுக இந்துப் பிரச்சாரமாக இருப்பதும் இந்நிலைக்குக் கூடுதல் காரணங்களாக அமைகின்றன.

ஆனால், கல்வி அமைச்சர்களின் மாநாட்டிலே சரசுவதி வந்தனம் பாடப்படும் சூழ்நிலையில், ஆர்.எஸ்.எஸ் .இன் புரட்டல் வரலாறு கல்வித் திட்டத்தில் அமலாக்கப்படும் நிலையில், 1947 இந்தியா – பாக். பிரிவினைக் கலவரத்தில் தன் கைத்துப்பாக்கியால் முசுலீம் பெண்ணைக் கொன்றதை சுயசரிதையில் எழுதிப் பெருமைப்படும் ராஷ்டோகி (ஓய்வு பெற்ற பேராசிரியர்) போன்ற இந்து வெறியரெல்லாம் – தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பொறுப்பெடுக்கும் காலத்தில், சிறுபான்மை மக்கள் சலுகை தந்து சீராட்டப்படுவதாகக் கூறுவது, அப்பட்டமான பித்தலாட்டமாகும். சிறுபான்மையோ, பெரும்பான்மையோ, கல்வி என்பதைக் கடைச்சரக்காக்கி விற்றுவரும் சூழ்நிலையில் உழைக்கும் மக்களுக்கு எந்தச் சலுகையுமில்லை என்பதே நடைமுறை. ஒரு மதச்சார்பற்ற அரசில் மதத்தின் பிடியிலிருந்து கல்வியை விடுதலை செய்வதுதான் இந்தப் பிரச்சினைக்குரிய ஒரே தீர்வு. அத்தகைய அரசில் சிறுபான்மையோரின் கல்விக்கும் உத்தரவாதமிருப்பதால் அவர்களுக்குச் சலுகை வேண்டும் என்ற கேள்வியே எழாது.

கிறித்தவ – இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களில பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ஆனால், ‘இந்துக்களால்’ நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் யார்? நிறுவனத்தை நடத்துகின்ற குறிப்பிட்ட ‘மேல்’சாதியினர்தான் பெரும்பான்மையாகப் படிக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் ‘இந்துக் கல்லூரிகள்’ என்ற பெயரில் ஏராளமான நிறுவனங்கள் உண்டு. நாகர்கோவில் மற்றும் திருநெல்வேலியில் இருக்கும் ‘இந்துக் கல்லூரிகள்’ சைவ வேளாளருக்குச் சொந்தமானவை. ஆசிரியர் நியமனத்திலிருந்து, மாணவர் சேர்க்கை வரை சைவப் பிள்ளையினருக்குத்தான் முன்னுரிமை. அதைப்போல ‘ஆதித்தன் குரூப்’ நடத்தும் கல்லூரிகளில் நாடார்களுக்குத்தான் முதல் மரியாதை. தென் மாவட்டக் கலவரங்களின் போது பல தேவர் கல்லூரிகளில் படித்த தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தூக்கி எறியப்பட்டனர். அத்துடன் அவர்கள் கல்வி வாழ்க்கையும் முடிந்தது.

இப்படி தமிழகத்தில் வட்டார மேல் சாதியினரால் நடத்தப்படும் ‘இந்துக் கல்லூரிகளில்’ தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்புதான். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு சுயநிதிக் கல்லூரிகளின் இடஒதுக்கீடு மற்றும் கட்டணங்களை முறைப்படுத்தும் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. அரசுப் பதவிகளில் இடஒதுக்கீடு பெறுவதே சமூகநீதி என்று பேசும் மேல் சாதிக்காரர்களெல்லாம் – இச்சட்டத்தைக் கடுமையாக எதிர்த்தனர். காரணம் தங்கள் கல்விக் கொள்ளை குறைந்துவிடும் என்பதே. ஆக ‘இந்துப்’ போர்வையில் நடத்தப்படும் இம்மோசடிகளை மறைப்பதற்கு, இந்து முன்னணியின் பிரச்சாரம் எப்படி உதவுகிறது என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே ‘காசுக்கேற்ற கல்வி’ என்பதுதான் உண்மையான பிரச்சினை. ”தமிழ் வழிக்கல்வி வேண்டாம், (கிறித்தவ) ஆங்கில மொழிக் கல்விதான் வேண்டும்” என்று கூறும் மெட்ரிக்குலேசன் கல்விச் சங்கம் ஒரு நாள் பள்ளி அடைப்பையே நடத்தியிருக்கிறது. இந்தச் சங்கத்தின் நிர்வாகிகள் எல்லாம் ‘இந்துக்கள்’தான். சங்கர மடம் துவக்க இருக்கும் மருத்துவக் கல்லூரியை எதிர்த்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். மாணவர்களில் பெரும்பான்மையினர் ‘இந்துக்கள்’தான். ‘இந்து நலன்’ பேசும் இந்து மதவெறியர்கள் இத்தகைய பிரச்சினைகளில் மக்கள் நலனுக்கு விரோதிகளாக இருக்கிறார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

இந்து முன்னணி கவலைப்படும் அளவிற்கு இந்துக்கல்வி நிறுவனங்கள் இல்லாமலில்லை. சங்கரமடம், சைவ ஆதீனங்கள், பங்காரு, சாயிபாபா, ஆனந்தமாயி, சின்மயானந்தா, சித்பவானந்தா, ராமகிருஷ்ணா மிஷன், விவேகானந்தா கேந்திரா, ஆர்.எஸ்.எஸ்.ன் சேவா பாரதி, ஜெயலலிதா, சசிகலா, உடையர், வாழப்பாடி, தங்கபாலு, விஸ்வநாதன், தம்பித்துரை, சோ.பாலகிருஷ்ணன் இன்னபிற வகையாறாக்களெல்லாம் ஏராளமான கல்வி நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

இனி, இராம.கோபாலன் ஒரு உண்மையான இந்துவாக இருந்தால் கீழ்க்கண்ட உண்மையான இந்து நலனுக்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

  1. ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிசதத் நடத்தும் கல்வி நிறுவனங்களில் சமசுகிருத மொழியில்தான் கல்வி. மிலேச்ச, சூத்திர மொழிகளுக்கு இடமில்லை. மெக்காலே பாணியிலான கல்வித் திட்டத்திற்குப் பதில் வேத, உபநிடத, புராண, இதிகாச, மனுதர்மம் முதலியவைதான் கல்வித்திட்டம். இந்துக்களே அணிதிரண்டு வாருங்கள்!
  2. இந்துக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் மட்டும் இந்து மாணவர்களுக்குக் கட்டணம் கிடையாது. அல்லது குறைவான கட்டணமே வசூலிக்க வேண்டும்.
  3. கிறித்தவ, இசுலாமியக் கல்வி நிறுவனங்களில் – இந்துக்கள் யாரும் படிக்கக்கூடாது, பணியாற்றக்கூடாது!

– இப்படி ஆத்ம சுத்தியுடன் இந்து முன்னணி கோரிக்கைகளை முன்வைத்துப் போராட வேண்டும். போராடினால் இந்து மத வெறியர்களை ஒழிப்பதற்கு எவரும் மெனக்கெட வேண்டியதில்லை. ‘இந்துக்களே’ பார்த்துக்கொள்வார்கள்.

-தொடரும்

_________________________இதுவரை …………………………………………..

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?

9
ஸ்பெக்ட்ரம் ஊழல்: வழக்கு நீர்த்துப் போகும் காரணம் என்ன?
படம் - www.thehindu.com

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த பிரம்மாண்டமான ஊழலை மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.  நாமோ அப்போதே இதை வெறும் ஊழல் மட்டுமல்ல – கார்ப்பரேட் பகற்கொள்ளை என்றோம். மட்டுமல்லாமல், இந்த ஊழல் தனியார்மய தாராளமயக் கொள்(ளை)கை  எனும் அடித்தளத்தில் நிற்கிறது என்பதை எமது பதிவுகளிலும், பத்திரிகைகளிலும் சுட்டிக் காட்டி எழுதினோம். தனியார்மயத்தை  ஆதரித்துக் கொண்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை  ஊழல் என்று தனியாக பிரிக்க முடியாது என்பதையும் வலியுறுத்தியிருந்தோம்.

கடந்த மாதத்தில் அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு சர்க்கஸ் நடந்து கொண்டிருந்த அதே சமயத்தில் இந்த வழக்கு விசாரணைகளில் நடந்துள்ள சில முக்கியமான விஷயங்கள் ஏற்கனவே நாம் வைத்த வாதங்களை மெய்பிப்பதாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஸ்பெக்ட்ரம் ஊழல் தேசிய அளவிலான ஒரு விவாதப் பொருளாக ஆனபின் உச்சநீதிமன்ற உத்திரவின் கீழ் விசாரணையைத் துவக்கும் சிபிஐ, இதில் சுமாராக முப்பதாயிரம் கோடிகள் அளவுக்கு ஊழல் நடந்திருக்கலாம் என்று ஒரு குத்துமதிப்பாக தனது விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டது.

பின்னர், இந்த ஊழலில் குறிப்பாக ஏற்பட்ட இழப்பின் அளவு என்ன என்பதை தொலை தொடர்புத்துறை ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஜனவரி 19-ம் தேதி சி.பி.ஐ கேட்டது. இதற்காக ஒரு ‘நிபுணர்’ குழுவை தொலைதொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) அமைத்தது. சி.பி.ஐயிடம் செப்டெம்பர் முதல் வாரத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்த அக்குழு, அதில், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் இழப்பு ஏதும் இல்லையென்றும், நியாயமாகப் பார்த்தால் மூவாயிரம் கோடியில் இருந்து ஏழாயிரம் கோடிகள் வரை லாபம் கிடைத்துள்ளது என்றும் குறிப்பிட்டிருந்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் ஏதும் நடக்கவே இல்லை என்று ஆ.ராசாவைத் தொடர்ந்து தொலைதொடர்புத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் கபில் சிபல் தெரிவித்து வருகிறார். இதே பாட்டை மன்மோகன் சிங்கும் பாராளுமன்றத்தில் பாடியிருக்கிறார்.

ஆ.ராசா ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை ஏலம் விடவில்லை என்றும், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற கொள்கையைக் கடைபிடித்தார் என்றும், இதனால் தான் ஊழலுக்கு வழியேற்பட்டது என்றும் ஆங்கில ஊடகங்கள் எழுதி வந்த நிலையில், ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட தனது கடிதம் ஒன்றில், ட்ராய் செயலாளர் ஏ.கே. அர்னால்ட், “ஸ்பெக்ட்ரமை ஏலம் விடக்கூடாது என்பது தான் தமது கொள்கை, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பொருத்தமட்டில் அதை ஒரு வருமானம் ஈட்டும் வகையினமாகக் கருதக் கூடாது என்பதே ட்ராயின் கொள்கை முடிவு” என்றும் தெரிவித்திருந்தார்.

ஆக, இப்போது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தேசத்திற்கு பாரதூரமான இழப்பை ஆ.ராசா ஏற்படுத்தி விட்டார் எனும் குற்றச்சாட்டை தொலைத்தொடர்புத் துறை ஒழுங்குமுறை ஆணையமே காலாவதியாக்கி விட்டது. அடுத்து, ‘இதையே ஏலம் விட்டிருந்தால்….’ எனும் கேள்விக்கும் மடையடைத்து விட்டது. மேலும், ஒரு பொருளைக் களவு கொடுத்தவனின் குற்றச்சாட்டு தான் குற்றவியல் விசாரணைக்கே மிக அடிப்படையான ஆதாரம் – இங்கோ, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை யாருக்கு சொந்தமோ – அதாவது அரசு – அவரே, இதில் இழப்பு ஏதும் இல்லை என்பதை பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியேயும் பட்டவர்த்தனமாக சொல்லியாகிவிட்டது.

மட்டுமல்லாமல், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பலனடைந்த டாடா குழுமத்துக்கு சி.பி.ஐயே முன்வந்து தனது குற்றப்பத்திரிகையில் பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல், ‘எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையே..’ என்கிற கணக்கில் ‘மன்மோகன் சிங் நெம்ப நல்லவராக்கும்‘ என்றும் குற்றப்பத்திரிகையில் சொருகியிருக்கிறது.

அடுத்து, ஊழல் நடந்திருப்பதற்கு சான்றாக குறைந்த விலையில் வாங்கிய அலைக்கற்றை உரிமத்தை, வேறு பன்னாட்டு கம்பெனிகளுக்கு அதிக விலைக்குக் கைமாற்றி விட்டதை குறிப்பிட்டார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலங்களை அளிக்கத் துவங்கிய ஆ.ராசா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் எனும் வகையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில் தான் எடுத்த முடிவுகளால் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும், இதில் ஊழல் நடைபெறவில்லை என்றும், தனது முடிவுகள் அனைத்தும் பிரதமருக்கும் பா. சிதம்பரத்துக்கும் ஏற்கனவே தெரியுமென்றும், தேவைப்பட்டால் அவர்கள் இருவரையும் சாட்சியாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆ.ராசா மன்மோகன் சிங்கின் டவுசரை அவிழ்த்ததும், ஆங்கிலச் செய்தி ஊடகங்களில் தோன்றிய சிதம்பரம், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு இழப்பு ஏதும் ஏற்படவில்லை என்று ஏற்கனவே கபில் சிபலும் பிரதமரும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார். மேலும், ஒரு நிறுவனம் தனது பங்குகளை விற்பதோ அல்லது முதலீடுகளை வெளிச்சந்தையில் இருந்து கோரிப் பெறுவதோ சட்டப்படி தப்பே இல்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே தனது ஆகஸ்ட் 29-ம் தேதியிட்ட அறிக்கையில், ஆ.ராசாவுக்கும் யுனிடெக்குக்கும் இடையிலான பணப்பரிவர்த்தனையையோ, ரிலையன்ஸால் போலியாக உருவாக்கப்பட்ட ஸ்வான் டெலிகாமுக்கும் அதனால் ரிலையன்ஸ் அடாக் குழுமத்துக்கு கிடைத்த ஆதாயத்தையோ நிரூபிக்கத் தேவையான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது. அதே போல், மாக்ஸிஸ் நிறுவனத்திடம் இருந்து தயாநிதி மாறனும் சன் டிவி குழுமமும் லஞ்சம் பெற்று, ஏர்செல்லின் பங்குகளை அடாவடியாக மாக்ஸிஸ் நிறுவனம் கைப்பற்ற வகைசெய்தார்கள் எனும் குற்றச்சாட்டையும் நிரூபிக்க போதுமான ஆதாரம் ஏதும் இல்லை என்று சிபிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆக, இந்த விவரங்களில் இருந்து நமக்குத் தெரியவருவது என்னவென்றால், சிபிஐயே ஊழல் பெருச்சாளிகள் புகுந்து புறப்படுவதற்கான அத்தனை ஓட்டைகளையும் தனது குற்றப்பத்திரிகைகளிலும் விசாரணை அறிக்கைகளிலும் செய்து முடித்துள்ளது என்பதைத் தான். இதில் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இது அனைத்தும் அண்ணா ஹசாரே நாடகம் சிறப்பாக நடந்தேறிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் நடந்து முடிந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம் ஊழலைப் பொருத்தளவில், அரசுக்குச் சொந்தமான அலைக்கற்றையை பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்லிடம் அளிக்காமல் தனியாருக்கு விற்பது என்று முடிவெடுத்த இடத்தில் தான் இந்த மோசடியின் மையம் உள்ளது. பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல்லை முடக்கி வைப்பது என்கிற ‘கொள்கை’ முடிவின் ஆரம்பம் காட் ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆக, பொதுச் சொத்தை கூறு கட்டி தனியாருக்கு தாரை வார்ப்பதை கொள்கையாக வைத்திருப்பதில் தான் ஊழலின் அச்சு இருக்கிறது. ஊழலை எதிர்க்க வேண்டுமென்றால், தனியார்மய தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்க்க வேண்டியிருக்கும். ஒன்றை விட்டு ஒன்றைப் பேசுவதும், ஒன்றை ஆதரித்துக் கொண்டு இன்னொன்றை எதிர்ப்பதும் அடிப்படையிலேயே முட்டாள்தனமானது.

ஆனால், இந்த முட்டாள்தனம் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிவந்த சமயத்தில் தேசிய  ஊடகங்களில் இருந்து நம் தமிழ் வலைப்பதிவு உலகம் வரையில் நடந்து வந்தது. இந்த ஊழலைக்  குறித்து வலைப்பதிவுகளில் எழுதியவர்களில் பெரும்பாலானோர் இந்த அமைப்பு முறையை மனதார நம்புகிறவர்கள். இந்த ஊழல் நீதிமன்றத்தில் வைத்து முறையாக விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட்டுவிடும் என்று இன்னமும் நம்புபவர்கள். இதோ, இந்த வழக்கையே ஒட்டுமொத்தமாக நீர்த்துப் போகச் செய்யும் சி.பி.ஐயின் சதிகள் ஒவ்வொன்றாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிலையிலும் அவர்களது நம்பிக்கையின் தரமென்ன என்று கேட்கிறோம்.

முக்கியமாக இவர்கள் தான் ஊழலுக்கும் தனியார்மய கொள்கைகளுக்கும் தொடர்பே இல்லை என்றும், தனியார்மயம் தான் போட்டியை ஊக்குவித்து தரமான சேவை கிடைப்பதை உறுதி செய்ய வல்லது என்றும் பேசினார்கள். ஊழலுக்கும் லஞ்சத்துக்குமான அடிப்படை வேறுபாடு கூட தெரியாமல் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் தரகர்கள் பெரும் லஞ்சத்தையும் ஸ்பெக்ட்ரம் போன்ற கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் இணைவைத்துப் பேசினார்கள்.

ஒருலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அளித்த அதிர்ச்சி மயக்கத்திற்கு இப்போது சி.பி.ஐ விசாரணையின் பித்தலாட்டங்கள் தண்ணீர் தெளித்து எழுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. மக்களுக்கு தேசத்தின் வளங்களின் மேலிருக்கும் உரிமையை மறுப்பதிலிருந்தும், அதை பங்கு வைத்து பன்னாட்டுக் கம்பெனிகளுக்குப் பரிமாற வேண்டும் என்கிற இந்தக் கைக்கூலிகளின் துரோகத்தனங்களிலிருந்துமே ஊழலுக்கான ஆரம்ப விதை தூவப்படுகிறது. அதற்குத் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது தான் சி.பி.ஐ, போலீசு, நீதிமன்றம் போன்ற அரசு அலகுகளின் நடைமுறையாக உள்ளது.

இதில் எரியும் அடிக்கொள்ளியான மறுகாலனியாதிக்கப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்துப் போராடி முறியடிக்கும் போது, அதற்கு இசைவாய் ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் இந்த அரசு இயந்திரங்களின் கொதிப்பு தானே அடங்கிப் போகும்.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!

74

அரக்கோணம் ரயில் விபத்து: உதவிக்கு வந்தது கடவுளல்ல, தொழிலாளி வர்க்கம்!சென்னை, அரக்கோணம் அருகேயுள்ள சித்தேரியில் 13.09.2011 இரவு நடந்த இரயில் விபத்து குறித்து அறிந்திருப்பீர்கள். அதில் பத்து பேர் உயிரிழக்க, 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் சிலர் இன்னும் அபாய கட்டத்தை தாண்டவில்லை. இயற்கை சீற்றமல்லாது நடக்கும் விபத்துக்கள் இந்தியா போல எங்கும் நடப்பதில்லை. பாசஞ்சர், புறநகர் இரயில்களில் பயணிக்கும் சாதரண மக்கள் பாதுகாப்பாக செல்வார்கள் என்பதற்கு நமது அதிகார வர்க்கம் எப்போதும் கவலைப்படுவதில்லை.

விபத்து குறித்து முறையான விசாரணை நடந்து காரணங்கள் கண்டறியப்படுவதற்கு முன்னரே அமைச்சர்களும், அதிகார வர்க்கமும் புறநகர் ரயிலின் ஓட்டுநரின் தவறென்று கை கழுவதில் அவசரம் காட்டுகின்றனர். அவர்தான் தவறு செய்தார் என்பதை முறையாக ஆய்வு செய்து கண்டுபிடித்துவிட்டு அறிவிக்கலாமே? எல்லா விபத்திற்கும் ரயில்வே ஓட்டுநர்கள்தான் காரணமென்றால் அதிகாரிகளுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் எந்தப் பொறுப்புமில்லையா?

ஓட்டுநர்களின் தயவில் மட்டும்தான் பொதுமக்களது உயிர் பயணிக்கிறது என்பது உண்மையானால் ரயில்வேயின் பொது மேலாளரது ஊதியத்தை ஓட்டுநர்களுக்கும், ஓட்டுநர்களின் ஊதியத்தை அதிகாரிகளுக்கும் மாற்றி அமைக்கலாமே? ஒத்துக் கொள்வார்களா, நமது அதிகாரிகள்?

இரவு 9.30 மணிக்கு விபத்து நடக்கிறது. மழையும் பெய்கிறது. எனினும் அருகாமையில் இருந்த மக்கள் உடன் வந்திருக்கிறார்கள். அருகாமை இடத்தில் ஒரு திருமண விருந்திற்கு பிரியாணி சமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்த முகமது அலியும் அவரது 20 உதவியாளர்களும் சமையலை நிறுத்தி விட்டு ஓடி வந்திருக்கிறார்கள். இடிபாடுகளுக்கிடையில் உள்ள மக்களை காப்பாற்றியிருக்கிறார்கள். தலையற்ற, கை, கால்களற்ற உடல்களையும் எடுத்திருக்கிறார்கள்.

பின்னர் அந்த வட்டாரத்தில் உள்ள மருத்துவர்கள் பலரையும் வற்புறுத்தி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். எல் அன்ட் டி நிறுவனத்தின் தொழிலாளர்களும், லாரி ஓட்டுநர்களும் கூட உடன் வந்து நிவாரண வேலைகளை ஆரம்பித்திருக்கிறார்கள். அரக்கோணம் பகுதியில் உள்ள அநேக டாக்சி ஓட்டுநர்களும் காயமுற்றவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வேலையினை அவர்களாகவே முன்வந்து இரவு முழுவதும் செய்திருக்கிறார்கள்.

விபத்தில் காயமடைந்தவர்களை சுமந்து சென்றால் பணம் கிடைக்காது, வண்டியையும் கழுவ வேண்டும், பிற சவாரிகளையும் இழக்க வேண்டும் என்ற நிலையில் அவர்களை அப்படி செய்யச் சொன்னது எது? திருமண விருந்து வேலையை நிறுத்தி விட்டு சிதறிக்கிடக்கும் மனிதச்சதை கண்டு நிலை தவறாமல், காயம் பட்ட உயிர்களை அந்த சமையல் தொழிலாளிகள் காப்பாற்றியது எதனால்?

ஒரு வேளை சித்தேரி கிராமத்தில் ஏதாவது ஒரு கோயில் குடமுழுக்கிற்காக நூறு புரோகிதப் பார்ப்பனர்கள் யாகம் வளர்த்து மந்திரம் சொல்லிக் கொண்டிருக்கையில் இந்த விபத்து நடந்தால் என்ன செய்திருப்பார்கள்? ரத்தமும், எலும்புத் துண்டுகளும் சிதறி, மக்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக இருக்கும் நிலை கண்டு மயக்கம் அடைந்திருப்பார்களோ? என்ன இருந்தாலும் சைவ உணவு உட்கொள்ளும் அந்த புனிதர்களுக்கு இந்த வதைக்கூடத்தில் வேலையில்லையே? ஆனால் கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டும் அந்த ‘பாய்’கள்தான் விபத்தில் சிக்கிய மனிதர்களின் உடலை யாரும் சொல்லாமலேயே சுமந்தார்கள் என்பதன் காரணம் என்ன? நமக்குத் தோழன் பாயா, இல்லை புரோகிதப் பார்ப்பனரா?

ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்சி ஓட்டுநர்கள் என்றால் ரவுடிகள் என்று முகத்தை சுழிக்கும் படித்த நடுத்தர வர்க்கம், நாளையே எல் அன்ட் டி தொழிலாளிகள் ஊதிய உயர்விற்காக வேலை நிறுத்தம் என்றால் கரித்துக் கொட்டும் அந்த அன்பர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

காயம்பட்டவர்களை யாரும் அப்பல்லோ மருத்தவமனைக்கு கொண்டு செல்லப் போவதில்லை. அரசு மருத்துவமனைக்குத்தான் கொண்டு செல்வார்கள். தானாக சரியாகும் சளியென்றாலும் தனியார் மருத்தவமனைக்கு தட்சணை வைக்கும் மேட்டுக்குடியினர்தான் தனியார்மயத்திற்கு ஆதரவாக வெறியுடன் கூச்சலிடுவார்கள். ஆனால் விபத்தில் படுகாயமுற்ற மக்களை காப்பாற்ற அந்த தனியார் மயம் முன்வராது.

ஆம். இந்த உலகில் இயற்கைச் சீற்றமோ, துயரமான விபத்தோ எதுவாக இருந்தாலும், உதவிக்கு ஆண்டவன் வரப்போவதில்லை. உழைக்கும் மக்கள்தான் உதவிக்கு வருவார்கள்.

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

ஜெயா பிளஸ் வழங்கும் ”தாலியறுக்கும் டாஸ்மாக்-சீசன் 2”

15
ஜெயா பிளஸ் வழங்கும்  தாலியறுக்கும் டாஸ்மாக் – சீசன் 2
கருணாநிதி அரசின் இலவசத் திட்டங்களைச் சாடிய ‘அம்மா’வின் படத்தைப் பெட்டியில் ஒட்டிக் கொண்டு, ‘அம்மா’வுடன் இலவச கவர்ச்சி பட்ஜெட்டை சமர்ப்பிக்க வரும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்.

ழைகளின் கோவணத்தைப் பிடுங்காத குறையாக வரிவிதிப்பைத் தீவிரப்படுத்துவது, தமிழனைப் போதையில் தள்ளி சாராயத்தின் மூலம் கிடைக்கும் கொழுத்த வருவாயிலிருந்து எலும்புத்துண்டு போல கவர்ச்சித் திட்டங்களுக்கு வாரியிறைப்பது என்ற உத்தியுடன் கிளம்பியிருக்கிறது, பாசிச ஜெயா அரசு. தமிழச்சிகளின் தாலியறுத்து இலவச கலர் டிவிக்களை கருணாநிதி கொடுத்தார் என்றால், அதே சாராய உத்தியோடு கலர் டிவிக்களுக்குப் பதிலாக மிக்சி, கிரைண்டரைக் கொடுக்கக் கிளம்பியிருக்கிறார், ஜெயலலிதா. மதுபானங்கள் மூலம் கடந்த ஆண்டில் ரூ. 6,246 கோடி கிடைத்த விற்பனை வரி, இந்த ஆண்டு ரூ. 7,755 கோடியாக அதிகரிக்கும் என்றும், கடந்த ஆண்டைவிட கலால் வரி மூலம் ரூ. 2,076 கோடி கூடுதலாகக் கிடைக்கும் என்றும் ஜெயா அரசின் 201112ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில்(பட்ஜெட்டில்) தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, முந்தைய கருணாநிதி ஆட்சியைப் போலவே தமிழக மக்களைக் குடிபோதையில் ஆழ்த்தி, சாராய விற்பனை மூலம் கூடுதலாகக் கொள்ளையடிக்க ஜெயா அரசு தீர்மானித்துள்ளது.

இலவசத் திட்டங்களை தி.மு.க. அரசு அறிவித்தபோதெல்லாம், மக்களை ஏழைகளாக வைத்திருக்கும் திட்டங்கள் என்று கேலி செய்த ஜெயலலிதா, இப்போது 6ஆம் வகுப்பு முதலாக மாணவர்களுக்கு பேண்ட் சர்ட், மாணவிகளுக்கு சல்வார் கமீஸ், ஏழைகளுக்கு மிக்சிகிரைண்டர், மின்விசிறி, மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்  என 8,900 கோடி ரூபாய்க்குப் புதிய திட்டங்களையும் சலுகைகளையும் பட்ஜெட்டில் அறிவித்துள்ளதோடு, வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஆடுமாடுகள் தரப்போவதாகவும் அறிவித்துள்ளார்.

போலி கம்யூனிஸ்டுகளால் அன்றாடம் துதிபாடப்படும் ஜெயா, பட்ஜெட்டுக்கு முன்னதாக கடந்த ஜூலை மாதத்தில் அரசு வருவாயைப் பெருக்குவது என்ற பெயரில், இதற்கு முன் 4 சதவீதமாக வசூலிக்கப்பட்டு வந்த மதிப்புக் கூட்டு வரியை(வாட் வரியை) 5 சதவீதமாக அவசர அவசரமாக உயர்த்தினார். இக்கூடுதல் வரி விதிப்பால் சமையல் எண்ணெய் விலை கிலோ ரூ.2 முதல் 3 வரையிலும், சிகரெட் விலை பாக்கெட்டுக்கு ரூ.5 வரையிலும் அதிகரித்துள்ளதோடு, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகளும் கிடுகிடுவென அதிகரித்துள்ளன. இக்கூடுதல் வரி விதிப்பால் மொத்தமாக அரசுக்கு ரூ.5200 கோடி கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இப்படி, பட்ஜெட்டுக்கு முன்னதாக வரிகளைப் போட்டுவிட்டு, இப்போது வரிகளே இல்லாத பட்ஜெட் என்று மாய்மாலம் செய்தும், இலவசக் கவர்ச்சித் திட்டங்களின் ஒளிவெள்ளத்தில் வரிக் கொள்ளையை மூடிமறைக்கவும் பாசிச ஜெயா கும்பல் எத்தணிக்கிறது.

வழக்கம் போலவே, “கருணாநிதி கஜானாவைக் காலியாக்கி ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி கடன் வைத்துவிட்டுப் போயுள்ளார்; அதைக் குறைக்கப் போகிறோம்” என்று சவடால் அடித்தார் ஜெயலலிதா. ஆனால், நிர்வாக சூரப்புலியாகப் பார்ப்பன ஊடகங்களால் சித்தரிக்கப்படும் ஜெயா, எந்த அளவுக்குக் குறைத்திருக்கிறார் என்று பார்த்தால், 31.3.2012இல் 1,18,801 கோடி ரூபாயாக மாநில அரசின் கடன் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நடப்பு நிதியாண்டின் கடன் மதிப்பு ரூ.17 ஆயிரம் கோடிக்கு அதிகரித்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில், ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையால் தமிழகத்தில் நீடித்துவரும் மின்வெட்டு 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் முழுவதுமாக நீக்கப்பட்டுவிடும் என்று ஆரவாரத்துடன் அறிவிக்கிறார், அமைச்சர் நத்தம் விசுவநாதன். முந்தைய தி.மு.க. அரசின் மின்திட்டங்கள் நிறைவேறுவதால்தான் மின்தடை முற்றாக நீங்குகிறதே தவிர, இது ஜெயலலிதாவின் மூன்று மாத கால நிர்வாக சூரத்தனத்தால் விளைந்த சாதனை அல்ல.

“விலைவாசி உயர்வுக்கு மைய அரசுதான் காரணம்” என்றும், “தமிழக மக்களுக்கு நன்மை செய்ய விடாமல் மத்திய அரசு தடையாக இருக்கிறது, மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை” என்றும் ஆவேசமாகக் கூப்பாடு போடும் ஜெயலலிதா, “மைய அரசிடம் ரூ.2.5 லட்சம் கோடி கோரிய நிதியில் ரூ.10,000 கோடியாவது தமிழகத்துக்குக் கொடுத்திருந்தால், கூடுதலாக வரி போட்டிருக்க மாட்டோம்” என்று பழியை மைய அரசின் மீது சுமத்துகிறார். ஆனால், திட்டக்குழு விவாதத்தில் கலந்து கொண்டபோது, மாநில அரசு கேட்டதைவிட மத்திய அரசு அதிகமாகக் கொடுத்ததாகக் கூறியதும் இதே ஜெயாதான். இப்போது, கேட்டாலும் கொடுக்காதது மத்திய அரசு என்று சொல்பவரும் இவரேதான். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மைய அரசு அநியாயமாக உயர்த்தியபோது, மாநில அரசின் சார்பில் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் அளிப்பதாகப் பம்மாத்து செய்த ஜெயா, அக் கூடுதல் செலவை வாட் வரி விதிப்பின் மூலமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் விலையை ரூ.3 அளவுக்குக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதலாக உயர்த்தியும் மீண்டும் பறித்துக் கொண்டுவிட்டார்.

ஜெயா பிளஸ் வழங்கும்  தாலியறுக்கும் டாஸ்மாக் – சீசன் 2
தமிழச்சிகளின் தாலியை அறுக்கும் சாராயத்தின் மூலம் கிடைக்கும் வருவாயில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் ஜெயா.

முந்தைய கருணாநிதி அரசு “செம்மை நெல் சாகுபடி”, “ராஜராஜன்1000” என்றெல்லாம் பெயர் சூட்டிய ஒற்றை நாற்று நடவு என்று விவசாயிகளால் குறிப்பிடப்படுவதையே பெயர் மாற்றி “திருந்திய நெல் சாகுபடி” என்று அறிவித்துள்ள ஜெயா அரசு, திருந்திய நெல் சாகுபடித் திட்டத்தைப் பரவலாக்கப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. இது தவிர, நவீன முறையில் கரும்பு உற்பத்தித் திறனை உயர்த்தும் திட்டம், துல்லிய பண்ணையம், பி.டி. பருத்தியைப் பரவலாக்குதல், பயறு வகைகள்  எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றில் உகந்த பயிர் மேலாண்மையைக் கடைபிடித்தல், பசுமைக் குடில், துல்லிய பண்ணைய முறைகளில் காய்கறிகளைப் பயிரிடுதல், தோட்டக்கலைப் பயிர்களுக்கான அடர் நடவு முறை போன்றவை தீவிரமாகப் பரவலாக்குவது என்று அடுக்கடுக்கான திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. பருத்தியைப் பரவலாக்கக் கூடாது என சில சட்டமன்ற உறுப்பினர்கள் கூறியதும், பி.டி. பருத்தியைப் பரவலாக்கும் எந்த நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளாது என்று ஜெயா அறிவித்தார். ஆனால் தமிழக விவசாயிகள் பெரிதும் சார்ந்துள்ள தனியார் விதைக் கம்பெனிகள், பி.டி. பருத்தி விதைகளை விற்பதைத் தடுக்க அவரிடமிருந்து எந்த அறிவிப்பும் இல்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, தொழிற்சாலைப் பயன்பாட்டுக்காக அரசின் வசமுள்ள நிலங்களை ஒருங்கிணைத்தும், நில உரிமையாளர்களைப் பாதிக்காதவண்ணம் தனியார் நிலத்தைக் கையகப்படுத்தியும் நில வங்கி ஏற்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதி அரசு சிப்காட் மூலமாக செய்து வந்த நிலப்பறிப்பு வேலையை, இப்போது ஜெயா அரசு நிலவங்கியின் மூலமாகச் செய்யப்போகிறது. பலியாட்டுக்கு மாலை போட்டுக் கொண்டு வருவதைப் போல, விவசாயிகளிடமிருந்து நிலங்களைப் பறித்து, விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்றி நாடோடிகளாக்கும் இச்சதியை மூடிமறைத்துக் கொண்டு, விவசாய வளர்ச்சித் திட்டங்களை ஆரவாரமாக ஜெயா அரசு அறிவித்துள்ளது.

நேற்றுவரை ஜெயா ஆதரவு பார்ப்பன ஊடகங்கள், இலவசங்களே கூடாது, அதனால் மக்கள் சோம்பேறிகளாக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்டன. இப்போது ஜெயலலிதா அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இலவசத் திட்டங்களை “ஆக்கபூர்வமான திட்டங்கள்’’, “வளர்ச்சிக்கு வித்திடும் திட்டங்கள்’’, “கிராமப்புறத்துக்கு முன்னுரிமை தரும் திட்டங்கள்” என்றும் ஏற்றிப் போற்றி துதிபாடிக் கொண்டிருக்கின்றன. நிலத்தைப் பறிகொடுத்துவிட்டு ஜெயா அரசின் ஆரவார விவசாயத் திட்டங்களால் எந்த விவசாயி முன்னேற முடியும் என்பது இந்தக் கோயபல்சுகளுக்கே வெளிச்சம்.

_______________________________________________

புதிய ஜனநாயகம், செப்டம்பர் – 2011
__________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

விக்கிலீக்சில் நம்புங்கள் (எம்.கே) நாராயணன் பின்னுகிறார்!!

17

ம்புங்கள் எம்.கே நாராயணணை மறந்திருக்க மாட்டீர்கள். பிரதமர் அலுவலகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிந்து வந்த நாராயணன், கடந்த 2010-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந்தேதி அன்று அந்தப் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வெளியுறவுத் துறை செயலாளராக பதவி வகித்து ஓய்வு பெற்ற சிவசங்கர் மேனன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்த பதவி மாற்றம் குறித்து இந்தியாவின் அமெரிக்க தூதரான திமோதி ரோமர் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

ஹெட்லி - எம்.கே.நாராயணன்
ஹெட்லி - எம்.கே.நாராயணன்

அந்தக் கடிதத்தில், “மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என, இந்திய அரசு கேட்பதெல்லாம், சும்மா பம்மாத்து வேலை தான். உண்மையில், ஹெட்லியை இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரிக்க விரும்பவில்லை. நாட்டு மக்களை திசை திருப்பவே, ஹெட்லியை கொண்டுவர வேண்டும் என இந்திய அரசு கேட்கிறது. இந்தத் தகவலை, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனே என்னிடம் தெரிவித்தார்’ என்று, ரோமர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “மேலும், ஹெட்லியை அனுப்பும்படி அமெரிக்காவை இந்திய அரசு கேட்க வேண்டாம். அப்படிக் கேட்டாலும், அமெரிக்க விதிகளின்படி அதை நிறைவேற்றுவது சாத்தியமல்ல’ என, நாராயணனிடம் தான் கூறியதாகவும் ரோமர் தெரிவித்துள்ளார். 2009-ம் ஆண்டு டிசம்பரில் இந்த விஷயங்கள் நடந்தன என்று, விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும் எம்.கே.நாராயணின் பதவி மாற்றம் குறித்தும், அவர் காஷ்மீர் பிரச்சினையில் பழமைவாதமாகவும், அதிக்கம் செய்யும் தரப்பின் கருத்தை பிரதிபலிப்பதாகவும், அவருக்கும் நேரு, இந்திரா குடும்பத்திற்கும் உள்ள செல்வாக்கும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பஞ்சாங்க அம்பி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியிலிருந்து மாற்றப்பட்டிருப்பதையும் அமெரிக்கர்கள் விரும்பியிருக்கிறார்கள் என்பதும் அதிலிருந்து தெரிகிறது.

இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மட்டுமல்ல நம்புங்கள் நாராயணனுக்கும் அதிர்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், “”விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல் முற்றிலும் உண்மைக்கு மாறானது. ஹெட்லியை எப்படியும் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, மும்பை தொடர் குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதில், மத்திய அரசு மிகுந்த அக்கறை காட்டியது. அவரை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. அத்துடன், ஹெட்லியை பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதிலும் மத்திய அரசு அக்கறை காட்டியது,” என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில், அமெரிக்க அதிகாரிகள் உடனான தன் பேச்சு குறித்து, அவர் கருத்து தெரிவிக்க மறுத்திருக்கிறார். அதைப் பற்றியும் கருத்து சொல்லியிருந்தால் அண்ணாத்தேவின் தேசசேவை சந்தி சிரித்திருக்கும்.

இந்திய அரசின் உயர் பதவியில் இருந்த ஒரு அம்பி அதிகாரி, இந்திய அரசை கண்டபடி பேசியிருப்பது குறித்து அண்ணா ஹசாரே அம்பிகள் என்ன சொல்வார்கள்? நாங்கள் வெளிப்படையாக இந்திய அரசை கண்டித்தால் எங்களை தேச துரோகிகள் என்று தூற்றும் ‘தேசபக்தர்கள்’ இவ்விடத்தில் அமைதி காக்கும் மர்மம் என்ன?

அரசுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாமல் அதன் இரகசியங்களை இப்படி ஒரு வெளிநாட்டு தூதரிடம் பேசுவது என்ன செயல்? இது மட்டும் தேசத் துரோகமில்லையா? இங்கு நாராயணன் கூறியிருக்கும் கருத்துக்களின் படி இந்திய அரசு மக்களை திசை திருப்புவதற்காக ஹெட்லியைப் பற்றி பேசுகிறது என்பது உண்மைதான். பாக்குடனான பதட்டமே இவர்களது அரசியல் லாபத்திற்காகத்தான் என்பதை பலமுறை சொல்லியிருக்கிறோம். ஆனால் இந்த நாராயணன் இந்திய அரசைப் போல ஒரு அமெரிக்க அடிமை என்பதையும், அமெரிக்கர்களின் மனம் கோணாமல் நடந்து கொள்ளுவதைப் பற்றியும் பேசியிருப்பதுதான் குறிப்பிடத் தக்கது. இருந்தும் இவரை அமெரிக்கா கை கழுவியிருப்பதற்கு காரணம், இன்னும் மோசமான அடிமை வேண்டும் என்பதுதான்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடக்கும் போது இந்த நாராயணன்தான் தே.பா.ஆலோசகர். அப்போது இவர் கொழும்பு சென்று ஈழத்தமிழர்களை காப்பாற்றுவது போல சீனெல்லாம் போட்டார். அப்போது இவர் ராஜபக்சேவிடம் என்ன பேசியிருப்பார்? ” உங்களுக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறோம். சீக்கிரம் புலிகளையும், ஈழத்தமிழர்களையும் முடித்து விடுங்கள், தமிழ்நாட்டிலிருந்து வரும் குரல்களையெல்லாம் கண்டு கொள்ளதீர்கள்”, என்றுதான் சொல்லியிருப்பார்.

இந்திய அரசும் அதன் அடிநாதமாய் விளங்கும் அதிகார வர்க்கமும் மக்களை எப்படி கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள், எவ்வாறு அமெரிக்க அடிமைகளாக பணிபுரிகிறார்கள் என்பதற்கு இந்த நம்புங்கள் எம்.கே.நாராயணன் ஒரு சான்று.

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!

59
கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
படம் www.thehindu.com

2002 குஜராத் கலவரத்தில் இந்துமதவெறியர்களால் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஷான் ஜாப்ரியின் மனைவி ஜகியா உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் அகமதாபாத் நீதிமன்றம் குஜராத் இனப்படுகொலை வழக்கை ஒழுங்காக விசாரிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்துமதவெறியர்களின் இனப்படுகொலையை, இந்துமதவெறியர்கள் ஆளும் மாநிலத்தில் விசாரித்தால் கொலைகாரர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்பது சிறு குழுந்தைக்கும் தெரியும்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஆ.கே.ராகவன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைத்தது. இந்தக்குழுவும் இந்துமதவெறியர்களை குறிவைத்து விசாரிக்கமால் ஏதோ விசாரணை செய்து, உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது.

இந்நிலையில் மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகிய ஜகியா, சிறப்புப் புலனாய்வுக் குழுவும் சரிவர விசாரணை செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார்.

மோடியின் அதிகாரமும், மாநிலமே இந்துமதவெறியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறப்பு புலனாய்வுக்குழுவும் சோடை போவதில் தவறவில்லை.

இதையடுத்து சிறப்புப் புலனாய்வுக் குழு அறிக்கையை ஆய்வு செய்து ரகசிய அறிக்கை தாக்கல் செய்ய மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. நீதிமன்றத்தின் அமிகஸ் குரியாக (நீதிமன்ற நண்பர்) செயல்பட்ட அவர், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து, உச்ச நீதிமன்றத்தில் ரகசிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார். அதுவும் சொதப்பலாகத்தான் இருக்குமென்பதை இப்போது ஊகிக்க முடிகிறது.

குஜராத் கலவரத்தை ஒடுக்க முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மட்டுமல்ல இனப்படுகொலைக்கும் அவர்கள்தான் தலைமை தாங்கியிருந்தார்கள். இதனால் அவர்களையும் இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஜகியா கோரியிருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் டி.கே.ஜெயின், பி.சதாசிவம், அப்தாப் ஆலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை, அமிகஸ் குரியின் அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், குஜராத் கலவர வழக்கில் முதல்வர் மோடி மற்றும் 63 அதிகாரிகளை சேர்ப்பதா, வேண்டாமா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் முடிவெடுக்க விரும்பவில்லை என்று தெரிவித்து விட்டனர்.

இதுகுறித்து ஆமதாபாத் விசாரணை நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ளட்டும் என்றும், இந்த வழக்கை இனிமேலும் தொடர்ந்து கண்காணிக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் கூறி, உத்தரவு பிறப்பிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு குறித்து விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழு தனது இறுதி அறிக்கையை ஆமதாபாத் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதற்கு என்ன காரணமென்று அவர்கள் தெரிவிக்கவில்லை.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறது என்று நாடு முழுவதுமே பரவலான எதிர்பார்ப்பு இருந்தது.

பா.ஜ.க தலைவர்கள் இந்தத் தீர்ப்பை மனமுருக வரவேற்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயுள்ளனர். மோடி தனது ட்விட்டில் GOD IS GREAT என்று தெரிவிக்க அத்வானி, சுஷ்மா ஸ்வராஜ், அருண் ஜேட்லி முதலான பா.ஜ.க தலைவர்கள் தாங்கள் ஏற்கனவே மோடி ஒரு நிரபராதி என்பதை பல முறை சொல்லி வருவதாகவும் இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

கணவனை இந்துமதவெறியர்களுக்கு பலிகொடுத்து அதற்காக வழக்கு தொடுத்த ஜகியாவோ இந்த தீர்ப்பு தனக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாகவும், தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தப் போவதாகவும் கூறியிருக்கிறார். இனி என்ன சட்டப் போராட்டம் நடத்த முடியும்?

கவனியுங்கள், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மோடி குற்றவாளி இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அந்த முடிவை விசாரித்து எடுக்குமாறு அகமதாபாத் நீதிமன்றத்திடம்தான் கேட்டிருக்கிறது. இதற்கே ஏதோ வழக்கிலிருந்து விடுதலை செய்தது போல பா.ஜ.க தலைவர்கள் துள்ளிக் குதிக்கிறார்கள் என்றால் காரணம் என்ன?

அகமதாபாத் நீதிமன்றம் குஜராத்தில் இருப்பதால், தீர்ப்பை நாமே எழுதிவிடலாம் என்ற திமிரன்றி வேறு என்ன?

டெல்லி குண்டுவெடிப்பில் 12 பேர் இறந்த உடன் எத்தனை எத்தனை கவனிப்புக்கள், விசாரிப்புகள், உளவுத்துறை அமைப்புகள், அமைச்சர்கள், ஐ.எஸ்.சதி, குற்றவாளிகளின் படங்கள் என்று எத்தனை வேகம்? ஆனால் 2000த்திற்கும் மேற்பட்ட முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த குஜராத் கலவரம் குறித்து தெகல்காவின் நேரடி வீடியோ ஆதாரம் வந்த பிறகும் குற்றவாளிகளை இன்னும் நெருங்க முடியவில்லை என்றால்?

உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க முடியாது என்று கைவிரித்து விட்ட நிலையில் கொலைகார மோடியும் அவரது கொலைகார கூட்டத்தையும் இனி யாருமே தண்டிக்கவோ, சட்டத்தின்படி குற்றவாளி என்று நிரூபிக்கவோ முடியாது. உறவினர்களை இழந்த குஜராத் முசுலீம் மக்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்களில் சில இளைஞர்கள் இந்து மதவெறியர்களை சட்டப்படி தண்டிக்க முடியாது என்று விரக்தியடைந்தால் என்ன நடக்கும்?

இந்த நாடும், அரசும், நீதிமன்றங்களும் இந்துத்வாவின் கையிலிருப்பதால் கொலைகார மோடிகளை சட்டப்படி தண்டிக்க முடியாது என்பதைத்தான் உச்சநீதிமன்றத்தின் கைவிரிப்பு தெளிவாக சுட்டிக்காட்டுகிறது. எனில் இந்த கொலைகாரர்களை யார் தண்டிப்பது?

(செய்தி தினமணியிலிருந்து எடுத்தாளப்பட்டிருக்கிறது)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

ஒரு பா.ஜ.க பெருச்சாளியின் வளைக்குள்ளே…

26

ஜனார்தன ரெட்டிநீங்கள் எதை பெயரிட்டுச் சொன்னாலும் அது அவரிடம் இருந்தது. 44 வயதான ரெட்டி தனது வீட்டருகே 3 அடுக்கு பிரம்மாண்ட வளாகம் ஒன்றை தனது குழந்தைகள் விளையாட மட்டும் அமைத்திருந்தார்.  ரெட்டியின் குழந்தைகள் பாதுகாப்பு கருதி வெளியில் செல்வதில்லை.  மாறாக தங்கள் நண்பர்களை அழைத்து வந்து தமது வளாகத்தில் தான் விளையாடுவார்கள். ஹெலிகாப்டர்கள் வைத்திருப்பதிலிருந்து, வீட்டினுள்ளே அமைத்துள்ள நீச்சல் குளத்தில் மிதந்து கொண்டே, அதன் அருகில் பிரத்யோகமாக அமைக்கப்பட்டுள்ள 70 எம் எம் திரையில் படங்களை ரசிக்கும் முன்னாள் அமைச்சரும், மேலவை உறுப்பினருமான ஜனார்த்தன ரெட்டி வாழ்ந்தது ஒரு ராஜ வாழ்க்கை.

ரெட்டி திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ 40 கோடி மதிப்பிலான வைர கிரீடத்தை நன்கொடையாக கொடுத்ததோடு, அதே போல் மற்றொன்றை தனது பெல்லாரி வீட்டிலும் வைத்திருக்கிறார்.  அவர் வீட்டிற்குள் ஒருவர் நுழைந்தால் சந்தனத்தால் வேலைப்பாடு செய்த அச்சு ஒன்றில் மின் ஒளியில் ஜொலித்துக் கொண்டு அந்த வைர கிரீடம் சுழன்று நம்மீது ஒளிக்கதிர்களை வீசும். பெங்களூருவில் உள்ள நிரந்தர அறை ஒன்று அவருக்காக ஒதுக்கப்பட்ட டாஜ் நட்சத்திர விடுதியின் மேற்கு எல்லைக்கு அருகில் ரெட்டிக்கு பாரிஜாதா என்ற பெயரில் பெரிய அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது.  அதிகமான சொகுசுக் கார்கள் ரெட்டியின் வீட்டில். பென்ட்லே, மெர்சிடீஸ் பென்ஸ், ரேஞ்ச் ரோவர் என பல இதில் அடங்கும்.  விடுமுறைகளை உலகின் பல பகுதியிலுள்ள உல்லாச இடங்களில் பொழுதை கழிப்பவர் ரெட்டி.

சுரங்க தொழில் உச்சத்தை அடைந்து சில வருடங்களுக்கு முன் சுறுசுறுப்பானபோது, பெல்லாரிக்கும், பெங்களூருவிற்கும் சிற்றுண்டிக்கு, மதிய அல்லது இரவு உணவிற்கு ஹெலிகாப்டரில் பறப்பார் ரெட்டி.

ஆனால் சூழல் எப்போதும் ஒரே மாதிரி இருந்து விடுவதில்லை. கடந்த சில மாதங்களாக காரில்தான் அதிக அளவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.  3 ஹெலிகாப்டர் வைத்திருந்த ரெட்டியிடம் தற்போது ஒன்றுதான் உள்ளது.  1990களின் இறுதியில் கோடிக்கணக்கில் கடனில் இருந்த ரெட்டி கடந்த 12 ஆண்டு காலத்திற்கு பிறகு அவர் ஒப்புக் கொண்டபடி பார்த்தாலே அவரது மனைவி பெயரில் மட்டும் 150 கோடி சொத்து. இந்த கொழுத்தலுக்கு நன்றி சொல்ல வேண்டியது சுரங்கத் தொழிலுக்கு.  பெல்லாரியில் அவர் வீட்டருகே உள்ள மலைகுன்றை விளக்குகளால் அலங்கரிக்க மட்டும் ஆன செலவு 30 லட்சம்.

அவரது அரசியல் கலந்தாய்விற்காக உள்ள அறையின் பெயர் குட்டீரா.  அங்கு நுழைந்தால் முன்னாள் பாரத பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி, மூத்த பா ஜ க தலைவர் எல் கே அத்வானி, பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், மற்றும் கர்நாடக முன்னாள் முதல்வர் பி எஸ் எடியூரபபா ஆகியோரின் பிரும்மாண்ட உருவப்படங்கள் நம்மை வரவேற்கும்.

ரெட்டியின் வீடு ஒரு கோட்டையை போன்றது. ஒரு பார்வையாளர் உள்ளே செல்ல வேண்டுமெனில் 3 செக்போஸ்ட், ஸ்கேனர்கள், வெடிகுண்டு சோதனைகள், மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் என்ற அடுக்குகளை கடந்து தான் செல்ல வேண்டும்.

பணங்களின் சுரங்கம்

தங்கம், வெள்ளி, பண்ணை வீடுகள், கட்டிடங்கள், முன்னோர் சொத்துக்கள், என முன்னாள் அமைச்சரான ரெட்டியின் சொத்துக்கள் 153.49 கோடிகள்


மலை போல் நகைகள்

2.2 கோடி மதிப்புள்ள தங்க இருக்கை (சேர்)

2.58 கோடி மதிப்பில் தங்க சிலைகள்

13.15 லட்சம் மதிப்பில் தங்க பெல்ட்

20.87 லட்சம் மதிப்பில் தங்க சாப்பாட்டு தட்டு, ஸ்பூன், சிறு பாத்திரங்கள்

இவை தவிர வைர, வைடூரிய, கோமேதக கற்கள், கழுத்து நகைகள், ஆண்கள் அணியும் கங்கணங்கள், மோதிரங்கள், வளையல்கள் என ஒரு நகைக் குவியலே காணப்பட்டதாம்.

 

வருமானமும் முதலீடுகளும்-

கர்நாடக லோக்யுக்தா முன் அவர் சமா்ப்பித்த விபரங்களின்படி

பணம் ரொக்க கையிருப்பு

1.11 லட்சம்

கார் – லேன்சர்

ஆண்டுச் சம்பளம் – 31.5 கோடி

வியாபார வருவாய் – 18 கோடி

வட்டிகளின் மூலம் வருவாய் – 1.8 கோடி

காப்பீடு (இன்சூரன்ஸ்) – 18.91 கோடி

பரஸ்பர நிதி முதலீடு – 4.2 கோடி

பத்திரங்கள் – 14.4 கோடி

பங்கு முதலீடுகள் – 47.31 கோடி

மக்களுக்கு கடன் முன்பணம் – 8.6 கோடி

வியாபார நிறுவனங்களில் முதலீடு – 2.9 கோடி

வங்கி முதலீடுகள் – 14.51 கோடி

வங்கி சேமிப்பு கணக்குகள் – 60.79 லட்சங்கள்

அஞ்சலக முதலீடு – 24 லட்சங்கள்

 

பண்ணை வீட்டு சொத்துக்கள்-

பண்ணை வீடு 19.71 ஏக்கர்

4.4 கோடி மதிப்பில் 7800 சதுர அடி இடம்

ஆர் எம் வி விரிவாகத்தில் பெங்களூருவிலும், பெல்லாரியிலும் இரண்டு கட்டிடங்கள்

பெல்லாரியில் மூதாதையர் சொத்து 40 லட்சம்

பொறுப்புகள் – 16.82 கோடி

 

 குடும்ப வருவாய்-

மனைவி அருணா ரெட்டியின் சொத்துக்களை கணக்கிட்டால் அது ரெட்டியின் கணக்கிற்கு மேல் செல்லும்

ஆண்டுச் சம்பளம் – 16.5 கோடி

வியாபார வருவாய் 22.69 கோடி

நகைகள், இன்சூரன்ஸ், பங்கு வர்த்தகம், முதலீடுகள் என கணக்கிட்டால் கோடிகளில் வரும்

இவை தவிர இவரது குழந்தைகள் பிராமணி மற்றும் கிரீத்தியின்  வருடாந்திர வியாபார வருவாய் 3.7 கோடி

__________________________________________________________

நன்றி – டைம்ஸ் ஆப் இந்தியா, தமிழில் – சித்ரகுப்தன்
__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு!

176

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. 11/09/2011 அன்று பரமக்குடியில் நடந்த இம்மானுவேல் சேகரனின் நினைவுநாள் விழாவில் மூவரைச் சுட்டுக்கொன்றதன் மூலம் மனித ரத்தம் குடிக்க வெறி பிடித்து அலைவதில் இந்திய ராணவத்திற்கும், அமெரிக்க ராணுவத்திற்கும், சிங்கள ராணுவத்திற்கும் நாங்கள் பங்காலிகள் எனக்காட்டியிருக்கிறது தமிழகப்போலீசு.

விழாவிற்கு ஒருவாரத்திற்கு முன்பாகவே ஏராளமான போலீசை கும்பல் கும்பலாக இறக்கிவிட்டு பரமக்குடி நகரில் அலையவிட்டிருந்தது தமிழக அரசு. மக்களைப் பீதியூட்டுகிற வழக்கமான நடைமுறை என்று அப்போது தோன்றினாலும், ஒரு பயங்கரமான சதிதிட்டத்தை அரங்கேற்றத்தான் இந்தப் போலீசுக் கும்பல் வந்திருக்கிறது என்பது பின்னால்தான் தெரிந்தது.

விழாவிற்கு வந்துகொண்டிருந்த ஜான்பாண்டியனை அவர் வந்தால் கலவரம் ஏற்படும் எனக்காரணம் கூறி காலை 11 மணிக்கு எட்டுக் குடியருகே கைது செய்கிறது போலீசு.  முத்துராமலிங்கம் குருபூசைக்கு வருகிற ஒட்டுக்கட்சித் தலைவர்களையெல்லாம் வப்பாட்டியைப் போல மிகப் பாதுகாப்பாக அணைத்துக் கூட்டிக்கொண்டு போய் விட்டுவிட்டு வருகிற போலீசு, ஜான்பாண்டியனை மட்டுக் கலவரம் செய்பவராகக் காட்டி தனது திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் முயற்சியைத் துவக்கி வைக்கிறது.

தேவர்சாதிவெறியின் அடையாளமாக கொண்டாடப்படும் தேவர் குருபூஜைக்கு ஜெயா, மு.க.ஸ்டாலின், நடிகர்கள், போலிக் கம்யூனிஸடுத் தலைவர்கள் உட்பட பலரும் வருவார்கள். அவர்களுக்கு முறை வைத்து அழைத்துச் சென்று பாதுகாப்பாக கொண்டு விடுவதில் இந்த அடிமைப் போலீசுக்கு பிரச்சினை இல்லை. மேலும் அந்த குருபூஜை நாளில் தேவர் சாதிவெறியர்கள் வரும் வழிகளிளெல்லாம் தலித் மக்களை தாக்குவதும், வெறுப்பூட்டுவதும் வருடா வருடம் நடக்கும். அப்போதெல்லாம் போலீசின் துப்பாக்கி வேலை செய்யாது. ஆதிக்க சாதி வெறியர்களின் வன்முறைகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்பட மாட்டாது.

இதற்கு எதிர்வினையாக தலித் மக்கள் இம்மானுவேல் சேகரனது குருபூஜையை நடத்தத் துவங்கியதும் போலீசும், அரசும் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதிப்பது வழக்கம். இந்த வருடம் குருபூஜைக்கு வரும் ஜான்பாண்டியனை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? கேட்டால் அவர் ஒரு ரவுடி, கட்டைப் பஞ்சாயத்து செய்பவர் என்று கூறுவார்கள். இந்த வேலைகளை எல்லாக் கட்சித் தளபதிகளும்தான் செய்கிறார்கள். எனில் ஜான்பாண்டியனை மட்டும் அப்படி சித்தரிப்பதற்கு ஆதிக்க சாதி வெறியே முக்கியக் காரணம். சரி தங்களது தலைவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஜான்பாண்டியனின் ஆதரவாளர்கள் சாலை மறியல் செய்யக்கூடாதா? அவர்களை நாய்களைப் போல அடித்து நொறுக்க வேண்டிய அவசியம் என்ன?

ஆதிக்க சாதிக்கூட்டத்திற்கு பிரச்சனை ஏற்படுமென்றால் பிரச்னை ஏற்படுத்துபவர்கள் என தலித்துகளைக் கைது செய்வது, தலித்துகளுக்குப் பிரச்னை ஏற்படுமென்றால் பிரச்னை வராமல் தடுக்கிறோம் என்று தலித்துகளைக் கைது செய்வது தமிழகப் போலீசின் சாதி வழக்கம்.

7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு! -
இமானுவேல் சேகரன்

ஜான்பாண்டியன் கைது செய்யப்படுகிறார். பரமக்குடியில் இருக்கிற அவரது ஆதரவாளர்கள் உடனடியாக அவரை விடுதலை செய்யச் சொல்லி ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். விடுதலை செய்ய மறுக்கும் போலீசு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் பரமக்குடி ஐந்துமுக்கு ரோட்டில் சாலைமறியல் செய்கிறார்கள். சாதாரணமாக, ஓட்டுக்கட்சிகள் உள்படப் பலரும் செய்கின்ற அதே சாலைமறியல்தான். ஆனால், இப்போது அதை ஒரு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டதைப்போல மாற்ற முயலும் முயற்சியாகத் தனது வேட்டையைத் தொடங்கியது. காட்டடி, மாட்டடி என்று சொல்வார்களே அப்படிப்பட்ட  போலீசின் வழக்கமான காட்டுமிராண்டித்தனமான அடியை அடிக்க ஆரம்பிக்கிறது. இன்னோரு வகையில் சொல்லப்போனால் வெறிகொண்ட தெருநாய்கள் பாய்ந்து பிறாண்டிக் கடித்துக் குதறுமே அதைபோல அ(க)டிக்கத் துவங்கியது. சிதறி ஓடுகிறார்கள் மக்கள். விரட்டி விரட்டியடிக்கிறது போலீசு.      கருணாநிதி கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் திமுககாரர்களையோ, ஜெயலலிதா கைது செய்யப்பட்டபோது சாலைமறியல் செய்யும் அதிமுககாரர்களையோ என்றாவது தமிழகப்போலீசு விழுந்து பிறாண்டியிருக்குமா? இல்லை தேவர் சிலையில் காக்கா கக்கா போனதற்காக சாலை மறியல் செய்யும் தேவர் சாதி வெறியர்களை என்றாவது தாக்கியிருக்கிறார்களா? தலித்துக்கள் சாலை மறியல் செய்தால் மட்டும் அது பயங்கரவாத நடவடிக்கையா?

அடிதாங்க முடியாமல் சில இளைஞர்கள் அங்கிருந்த தனியார் மருத்துவமனைக்குள் தஞ்சம் புகுந்து கொள்கிறார்கள். மருத்துவமனைக்குள் புகுந்த போலீசு அங்கிருந்தவர்களை வெளியில் இழுத்து சாலையில் போட்டு அடித்துத் துவைக்கிறது. இப்படி அடித்துக்கொண்டிரும்போது டி.எஸ்.பி கீழே விழுகிறார். இனி அடிவாங்கியவர்களின் முறை ஆரம்பிக்கிறது. நையப்புடைக்கப்பட்ட அவரை போலீசு காப்பாற்றிக் கூட்டிச் செல்கிறது. தன்னுடைய நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற நேரம் குறிக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான மக்கள் தங்களின் ஆத்திரத்தை அங்கிருந்த வஜ்ரா வாகனத்தை எரித்ததின் மூலம் தணித்துக் கொள்ள முயன்றனர். உணர்ச்சி வசப்பட்டிருந்த மக்கள் கூட்டத்தை தடுத்து நிறுத்த அங்கே போலீசு இல்லை. உணர்ச்சி வசப்படும் அவர்கள் ஏதேனும் செய்ய வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்ததால் சற்றுத் தூரமாக இருந்த போலீஸ் ஸ்டேசனுக்கே போலீசுக் கும்பல் போய்விட்டிருந்தது. அதாவது தாங்கள் துப்பாக்கி சூடு நடத்துவதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்றே அவர்கள் சாதுர்யமாக முதலில் ஒதுங்கி இருக்கிறார்கள்.

பிறகு அங்கிருந்து திரும்புகிறார்கள், சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசாகிய நாங்கள் என்பதை மீண்டுமொருமுறை நிரூபிப்பதற்கான உத்தரவோடு வந்தார்கள். சுட்டார்கள். பொதுமக்களில் மூன்று பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். ஆபத்தான காயங்களோடு இரண்டுபேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஏழுபேர் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. சுடப்பட்டவர்கள் யாரென்கிற விவரம் இன்னும் தெரியவில்லை. சுடப்பட்டவர்களின் உடல்கள் ஐந்துமுனை ரோட்டிலேயே கிடக்க போலீசு மீண்டும் நின்று கொண்டிருந்த மக்களை விரட்டிக்கொண்டு ஒடியது. மக்கள் சிதறி ஓடுகிறார்கள். அப்போதும் போலீசு சுடுகிறது. மதுரை ராமநாதபுரம் ரோட்டில், நடுச்சாலையில் நின்றுகொண்டு ஓடுகின்ற மக்களை நோக்கிக் குறிவைத்துச்சுடுகிறது போலீசு.

ஒரு போர்க்களத்தை நினைவூட்டுகிறது அந்தக்காட்சி.

ஏற்கனவே சாதி வெறியூட்டப்பட்ட ரெளடிக் கும்பலாக வளர்க்கப்பட்டிருக்கிற போலீசு, ஒரு பக்கா பாசிஸ்ட்டான, சாதித்திமிரின் மொத்த உருவமான, பார்ப்பன ஜெயலலிதாவின் ஆசீர்வாதத்தோடு தங்களின் வெறியைத் தீர்த்துக்கொள்வதற்காகவே சுடுகிறது. மேலும் பாசிச ஜெயா பதவிக்கு வந்த உடன் போலீசுக்கு அனைத்து அதிகாரமும் வழங்கி அவர்களை குளிப்பாட்டி பலமுறை பேசியிருக்கிறார். இப்படி ஜெயாவால் அதிகார போதை வெறியேறிய போலீசு இப்படி அப்பாவி மக்களை சுட்டுக் கொல்வதற்கு எந்த தயக்கத்தையும் காட்டவில்லை. எல்லாம் அம்மா கொடுத்திருக்கும் அதிகாரம் என்பது போல நடந்திருக்கிறது.

முத்துராமலிங்கம் குருபூசையின் போது அனைத்து ஓட்டுக்கட்சித் தலைவர்களும் வருகிறார்கள், போகிறார்கள். ஆனால், இம்மானுவேல் சேகரனின் நினைவுநாளின் போது எந்த ஓட்டுக்கட்சித் தலைவனும் வருவதில்லை. ஏன் வருவதில்லை என்பதைப்பற்றிக்கூடச் சிந்திக்காமல் அந்த ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித் இளைஞர்கள் தங்கள் தலைவர்களின் படங்களைத் தாங்களே பிளக்ஸ் பேனர்களில் போட்டுக்கொண்டு அவர்களும் இந்த விழாவிலே கலந்துகொள்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறார்கள்.

இதோ, திட்டமிட்டே, ஜெயாவின் ஆசிகளோடு,  துப்பாக்கியால் சுட்டு 4 பேரைக்கொலை செய்திருக்கிறது போலீசு. ஓரிடத்தில் இன்ஸ்பெக்டர் கைத்துப்பாக்கியினால் சுட்டு இருவரைக் கொன்றிருக்கிறார். மதுரையிலும் துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறது. இருவர் படுகாயமடைந்திருக்கிறார்கள். பத்திரிகைகளிலே என்ன எழுதப்போகிறார்கள்? கலவரம் செய்தார்கள், அதை அடக்கப்போன போலீசாரைத் தாக்கினார்கள், கலவரத்தை அடக்க போலீசார் சுட்டனர் என்றுதான் எழுதப்போகிறார்கள்.

“இவெங்களும் ஆட்டம் அதிகமாகத்தான போட்ராங்க” என்கிற, ஆதிக்க சாதிப்பார்வையில் ஊறிக்கிடக்கும் ‘மக்களும்’ இதைக்கலவரம் என்றே நம்புவார்கள். பரப்புவார்கள். கலவரம் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றுதான் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் பேசுவார்கள். அவர்களது அகராதியில் போலீசு எப்போதுமே கலவரம் செய்யாது. எதிர்க்கட்சியாக இருப்பவர்களோ, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பார்கள். ஆனால், சட்டம் ஒழுங்கைக் கெடுத்தது போலீசுதான் எனச்சொல்லமாட்டார்கள்.

இந்த துப்பாக்கி சூட்டில் இறந்து போனவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயை வீசியிருக்கும் பாசிச ஜெயா யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம். வன்முறையில் ஈடுபட்டது ஜெயாவில் காவல் நாய்களான தமிழக போலீசு. வன்முறைக்கு பலியானது தலித் மக்கள். எனில் ஜெயாவின் வேண்டுகோளுக்கு என்ன பொருள்?   இனி இந்த ‘கலவர’ வழக்குகளுக்காக நூற்றுக்கணக்கான தலித்துக்கள் மீது பொய் வழக்கு போடப்படும். அவர்கள் இனி வரும் ஆண்டுகள் முழுவதும் வழக்கு, வாய்தா, சிறை என்று அலைய வேண்டும். இது கொடியங்குளம் ‘கலவரம்’ போதே நடந்திருக்கிறது. அந்த வழக்குகளுக்காக பல கிராம தலித் மக்கள் இன்றும் நீதிமன்றங்களுக்கு அலைகிறார்கள். சுட்டுகொன்றது போதாது என்று இப்படி நீதிமன்றங்கள் மூலமும் சித்திரவதை செய்கிறார்கள்.

ஆதிக்க சாதிக்கும்பல்கள் ஆடாத ஆட்டங்களெல்லாம் ஆடுகையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு, போதையில் மிதக்கும் போலீசு, தலித்துகள் உணர்வுபூர்வமாக ஏதேனும் செய்தால் கீச்சாதிப்பயலுக்கு திமிரப்பாருடா எனக் குமுறுகிறது. எல்லாத்துறைகளிலும் ஆதிக்கசாதி உணர்வுதான் வெளிப்படுகிறது. அதுதான் இப்போது ஆறு பேரைப் பழிவாங்கியிருக்கிறது. இனியும் இது அதிகரிக்கவே செய்யும். இதை யார் உணர்கிறார்களோ இல்லையோ, போலீசில் வேலை பார்க்கும் தலித்துகளும், ஓட்டுக்கட்சிகளில் இருக்கும் தலித்துகளும் உணரவேண்டும்.

இப்போது பாசிச ஜெயா போலீசை வைத்து செய்திருக்கும் இந்தக் கொலைக்கு புதிய தமிழகம் கிருஷ்ணசாமி, சே.கு தமிழரசன் போன்ற விலை போன தலித் அமைப்புத் தலைவர்கள் வக்காலத்து வாங்குவார்கள். இத்தகைய பிழைப்புவாதிகளையும் தலித் மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

சாதிவெறிபிடித்த, அதிகாரத்திமிரெடுத்த, மக்களின் ரத்தம் குடிக்கிற ஓநாய்கள்தான் தமிழகப்போலீசு என்பதும் ஜெயாவின் ஆட்சிக்காலங்களில் அது இரட்டிப்பாகிறது என்பதும், ஒட்டுக்கட்சிகள் இதை எப்போதும் சுட்டிக்காட்டுவதில்லை என்பதும் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிற இந்நேரத்தில் போலீசிலும் ஓட்டுக் கட்சிகளிலும் இனியும் நாம் இருக்கமுடியுமா என தலித்துகள் உடனடியாக முடிவு செய்யவேண்டும். வெளியேற வேண்டும். உங்களுக்காக புரட்சிகர அமைப்புகள் காத்திருக்கின்றன.

_____________________________________________________________

குருசாமி மயில்வாகனன்

________________________________________________________

புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1. லிபியா- அமெரிக்காவின் மறுகாலனியாகிறது!

2. ராஜீவ் கொலை வழக்கு- தூக்கு மேடையில் நிற்கிறது அரசியல் நியாயம்.

3. டோல்கேட் வழிப்பறி- தனியார்மயக் கொள்ளை!

4. தண்ணீர்க் கொள்ளையர்களுக்கு எதிராக….

5. அண்ணா ஹசாரே- கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

6. அமெரிக்கக் கடன் நெருக்கடி- மைனரின் சாயம் வெளுத்தது!

7. தனியார் கல்வி நிறுவனமா? கொலைகாரக் கூடாரமா?

8. நார்வே படுகொலைகள்- நவீன நாஜிசத்தின் கோரத் தாண்டவம்.

9. 108 ஆம்புலன்ஸ்- சேவையா? சுரண்டலா?

10. இலண்டன்: ‘தற்குறிகளின்’ கலகமும் கனவான்களின் கலக்கமும்

11. தமிழக பட்ஜெட்- வருமானத்திற்கு வரி, சாராயம் கவர்ச்சிக்கு இலவசத் திட்டங்கள்

12. சமச்சீர் கல்வி- போராட்டத்தால் விளைந்த வெற்றி!

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

___________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வெளிநாட்டு பல்கலைக்கழக முதலாளிகள் வரப்போகின்றனர்! உஷார்!!

25

ந்தியாவில் இருக்கும் உயர்கல்வி நிறுவனங்களை செம்மைப்படுத்த வேண்டும், அது பன்னாட்டு கல்வி நிறுவனங்களினால் மட்டுமே சாத்தியம் என்ற முழக்கத்தோடு எஞ்சியிருக்கும் அரசு கல்வி நிறுவனங்களையும் அடியோடொழிக்க, கல்விக்கான  மசோதாக்களை நமக்குத் தெரியாமல் அமல்படுத்தப் போவதை அம்பலப்படுத்தவே இக்கட்டுரை.

மைய அரசின் நேரடிக் கண்காணிப்பால் இயக்கப்படும் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், மாநில அரசால் நடத்தப்படும் அறிவியல், கலை,  பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அவற்றின் ஆராய்ச்சி நிறுவனங்கள், சுயநிதிக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்லூரிகள், தனியார் ஆராய்ச்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள்,  தொலைதூரக் கல்வி நிறுவனங்கள், திறந்த நிலைப் பல்கலைக் கழகங்கள் போன்ற அனைத்தும் உயர்கல்வி நிறுவனங்கள் என்கிற வரையறைக்குள் அடங்கும்.

47க்குப் பிந்தைய இந்தியாவில் சில நூறு உயர்கல்வி நிறுவனங்களே இருந்த நிலையில் கடந்த பத்து ஆண்டுகளில் கல்வி தனியார்மயமானதன் முலமாக அவற்றின் எண்ணிக்கை புற்றீசல்களைப் போல முளைத்து  ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் வளர்ந்துள்ளது. மத்திய  மாநில அரசுகளால் நடத்தப்படும் பல்கலைக் கழகங்களே தரங்கெட்டுப் போயுள்ள நிலையில், மக்களைக் கொள்ளையடிப்பதற்காகவே பல தனியார் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதியளித்து, அனைவருக்கும் இலவசக் கல்வியளித்தல் என்ற தன் அடிப்படைக் கடமையிலிருந்து இவ்வரசு விலகியுள்ளதை அதன் நடைமுறையிலிருந்து நாமறிவோம்.

இதற்கெல்லாம் மேலாக உலக வர்த்தகக் கழகம் மற்றும் உலக வங்கியின் ஆணையின் பேரில் கடந்த ஆண்டில் (2011) உயர்கல்விக்கான பல சட்ட முன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது மைய அரசு. அவற்றில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழக சட்டமுன்வரைவு – 2010 (Universities for innovations Bill – 2010), கல்வித்தீர்ப்பாயங்களுக்கான சட்டமுன்வரைவு (Educational tribunals Bill – 2010), பன்னாட்டுக் கல்விநிறுவனங்களுக்கான சட்டமுன்வரைவு (Foreign educational institutions bill – 2010) அகிய மூன்று உட்பட மொத்தம் 16 வகையான உயர்கல்விச் சட்டமுன்வரைவுகளைக் கொண்டுவந்துள்ளது. குறிப்பாக மேற்சொன்ன மூன்று சட்டமுன்வரைவுகள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இங்கு வந்து சந்தை போடவும், அதன் மூலம் அமைக்கப் பெறும் கல்வித் தீர்ப்பாயங்களுக்கு நிகரில்லா அதிகாரம் கொடுக்கவும் ஒட்டுமொத்தமாக உயர்கல்வியில் மாணவர்களை முடமாக்கப் பார்க்கவும் வந்துள்ள திட்டங்களாகும்.

உலக அளவில் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் கிளைகளை இங்கு கொண்டு வந்து நமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களைப் புத்துயிரூட்டலாம் மேலும் இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களை உலகத்தரத்திற்கு கொண்டுவரலாம், என்ற நோக்கத்திற்காக, 2010 ஆம் ஆண்டின் மத்தியில் புத்தாக்கத்திற்கான பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும் என்பதை வரைவுத்திட்டத்தின் மூலமாக இச்சட்டமுன்வரைவுகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கொண்டு வந்தது. இவ்வகையான பல்கலைக்கழகங்கள் இந்தியாவை அறிவுத் துறைக்கான மையமாக மாற்ற வழிவகுக்கும் என்றும் மத்திய மாநில பல்கலைக் கழகங்களில் தனித் தன்மையான சிறப்புத்துறைகள் ஆரம்பிக்கப்பட்டு இந்தியாவில் காணப்படும் குறிப்பிட்ட சமூகப் பிரச்சினைகளுக்காக ஆராய்ச்சிகள் மேம்படுத்தப்படும் எனவும் இவ்வறிக்கைகள் கூறுகின்றன.

காட் ஒப்பந்தத்தின் மூலம் வரி மற்றும் வணிகத்துறையில் நாட்டைக் கொள்ளையடித்துக்கொண்டிருக்கும் பன்னாட்டுக் கம்பெனிகள், வணிகம் தொடர்பான சேவைத்துறைகளின் பொது ஒப்பந்தத்தின் மூலம் (GATS – General agreement of trade on services) சேவைத்துறகளான தொலைபேசி, மின்சாரம், வங்கி, காப்பீட்டு நிறுவனம், மருத்துவம், ஆராய்ச்சி, நீதிமன்றங்கள், ஊடகங்கள், கல்வி போன்ற அனைத்திலும் தனது தனியார்மயமெனும் ஆக்டோபஸ் கரங்களை நீட்டி காவு வாங்க ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு நீட்சியாகவே இந்த சட்ட முன்வரைவுகள் உயர்கல்வி நிறுவனங்களிலும் தனது அமெரிக்க விசுவாசத்தின் மூலம் பல பன்னாட்டு உயர்கல்வி நிறுவனங்களை கல்லா கட்ட கூவி அழைக்கின்றன. கரும்பு தின்னக் கூலியா என்பது போல வெளிநாட்டு உயர்கல்வி நிறுவனங்களும் தனது கவர்ச்சி விளம்பரங்கள் மூலம் அனைவரையும் அடிமையாக்க திட்டம் தீட்டிக்கொண்டிருக்கின்றன.

அந்நிய நேரடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும் இவை, மாணவர்களைப் பல்கலைக்கழகங்களில் சேர்ப்பதிலிருந்து இப்பல்கலைக்கழகங்களில் சேர அவர்கள் கட்டவேண்டிய கட்டணம், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம்,தேவையான துறைகளை ஆரம்பிப்பது, புதிய பாடத்திட்டங்களை அமைப்பது, ஆசிரியர்களை நியமிப்பது,  நிர்வாகத்தின் மற்ற வேலைகளுக்கு ஆட்களை நியமிப்பது, அவர்களின் சம்பளம், அவர்களுக்குள் எழும் பிரச்சினைகளைத் தீர்ப்பது போன்ற அனைத்தையும் குறிப்பிட்ட  பன்னாட்டுப் பல்கலைக்கழகங்களே கவனித்துக்கொள்வதற்கான முழு அதிகாரத்தையும் இச்சட்ட முன்வரைவு கொடுக்கிறது. மேலும் இக்கல்வி நிறுவனங்களில் செய்யப்படும் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளுக்காகப் பெறும் காப்புரிமையும் அந்தந்த நாட்டைச் சேர்ந்த பல்கலைகழகங்களே உரிமை கோரும் என்பது உட்சபட்சம்.

ஏற்கனவே எய்ம்ஸ், ஐ.ஐ.டிக்கள் போன்ற மத்தியக் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை அமுல்படுத்தாமல் தனது ஆதிக்க சாதி மனபான்மையை வெட்ட வெளிச்சமாக்கிக் காட்டிய இவ்வரசு, தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப்பல்களைக் கழகங்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள் ஆரம்பிக்க அனுமதியளித்ததன் மூலம் அங்கும் இடஒதுக்கீட்டை இல்லாமல் செய்தது.  தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் அக்கல்விநிறுவனங்களில் நுழையாத அளவிற்குச் சவக்குழிவெட்டி நவீனத்தீண்டாமையைக் கடைபிடித்து வருகிற நிலையில், அது மேலும் புற்றுநோய் போல இப்புதியப் பல்கலைக் கழகங்களிலும் பரவவிருக்கிறது.

தற்போதைய உயர் கல்வி நிறுவனங்களில் இருப்பது போல மாணவர்களுக்கிடையில் தேர்தலோ, மாணக்க உறுப்பினர்களை முக்கிய முடிவெடுக்கும் சிண்டிகேட் கூட்டங்களில் நுழையவோ இப்பல்கலைக்கழகங்களில் அனுமதியில்லை. இவ்வாறு ஆரம்பிக்கப்படும் புத்தாக்கப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வரவு செலவு கணக்குகளை யாரிடமும் காட்டவேண்டிய அவசியம் இல்லை, இன்னும் சொல்லப் போனால் இப்பல்கலைக் கழகங்களை நடத்துபவர்கள் மீது ஏதேனும் ஊழல் நடந்திருக்கிறது போன்ற நம்பகத்தகுந்த தகவல்கள் வந்தால் கூட அதை சி.பி.ஐ அல்லது மத்திய  கணக்குத் தணிக்கை அலுவலகம் (CAG)  தலையிட்டு அதன் நிதி விவகாரங்களில் தலையிடும் அதிகாரம் கிஞ்சித்தும் இல்லை.

கல்விக்கானத்தீர்ப்பாயச் சட்டமுன்வரைவு – 2010, இது மாநிலத் தீர்ப்பாயம், மற்றும் தேசியத் தீர்ப்பாயம் என இரண்டு படிநிலைகளைக் கொண்டுள்ளது, இவை முறையே மூன்று மற்றும் ஆறு பேர் கொண்ட கமிட்டியை உள்ளடக்கியதாகும். பல்கலைக்கழகத்தின் பங்குதாரர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள் போன்றவர்களுக்குள் எழும் பிரச்சினைகளை உடனடியாகத் தீர்த்து வைக்கவும், இத்தீர்ப்பாயம் குற்றவாளி என்று கருதுபவர்களுக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டையும் சேர்த்து தண்டிக்கவும் வரைமுறையில்லா அதிகாரத்தைக் கொடுக்கிறது இம்மசோதா. தீர்ப்பாயங்களின் முடிவே இறுதியானது, வேண்டுமானால் சிறப்பு அனுமதியுடன் உச்சநீதிமன்றம் அனுகலாம்.

இவ்வாறு பல்வேறு சட்டங்களின் மூலம் அனைவரது உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறித்துள்ள அரசு, இத்தீர்ப்பாயத்தின் மூலம் குறைந்தபட்சம் எஞ்சியிருக்கும் ஜனநாயகத்தையும் பறித்துக்கொண்டு, நம்மை அம்மணமாக்கும் நிலையும் வரப்போகிறது. இச்சட்டமுன்வரைவைக் கொண்டுவரபோவதாக பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு பல்வேறு கட்சியினரையும் கூட்டி கருத்துக்கணிப்பு கேட்டுள்ள நிலையில் சி.பி.ஐ, சி.பி.எம் போன்ற போலி கம்யூனிஸ்டுகள் உட்பட எஸ்.யு.சி.ஐ, தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் என அனைத்துக் கட்சிகளும் இப்பகாசுர 16 சட்டமுன்வரைவுகளை எதிர்க்கவோ, அதைப் பற்றி வாய்த்திறக்கவோ, குறைந்தபட்சம் தன்னுடைய கட்சித் தொண்டர்கள் அல்லது கீழ்க்கமிட்டிகுக் கூட தெரிவிக்காதது ஆச்சரியப்படத்தக்கதல்ல.

உயர்கல்வி விஷயத்தில் கொண்டுவரப் போகிற இந்த சட்டமுன்வரைவுகள் மூலம் கடைசியாக மீதமிருக்கும் அரசுக் கல்லூரிகளையும் ஒழித்துவிட்டு பணம் இருப்பவர்கள் மட்டுமே இனி கல்வி கற்கலாம் என்கிற நிலை இன்னும் கூடிய விரைவில் வரப்போகிறது என்பதுடன் இடஒதுகீட்டை முற்றிலுமாக ஒழிப்பது,  கோடிகளில் கொள்ளையடிப்பது, தீர்ப்பாயங்களின் ஏகபோக அதிகாரம், மிச்ச சொச்ச சமூக நீதியை ஒழிப்பது போன்ற அபாயங்களும் நிகழவுள்ளன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்கிற பெயரில் நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமையாக்கி வரும் நிலையில், உயர்கல்விகான இச்சட்ட முன்வரைவுகள் சேவைத்துறையில் சோரம் போக வழிவகுப்பதுடன், நமது அறிவு வளத்தையும் திருடிக்கொண்டு போகப்போவது,  வெகுதொலைவில் இல்லை. மேலைநாட்டு கலாச்சாரங்களையும், பழக்கவழக்கங்களையும் பரப்புவதன்  மூலம் இன்று இருக்கும் அந்நிய மோகத்தை மேலும் வெறியாக்கி வளர்க்கவும், மாணவர்களை அதிக விலைபோகக்கூடிய பண்டமாக மாற்றவும் இறுதியில் கிஞ்சித்தும் சமூக அக்கறை இல்லாத, முடமாக்கப்பட்ட சமூகமாக மாற்றும் அபாயமும் உள்ளது.

தீவிர நிதி நெருக்கடியால் பாதிக்கப்படுள்ள அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் தங்கள் கல்விச் சந்தையைத் திறக்கவே இச்சட்டத்தை இங்கு அமுல் படுத்த  நெருக்கடியைக் கொடுக்கின்றன என்பதுதான் நிதர்சனம். ஆனால் ஏதோ நமது குழந்தைகளின் எதிர்காலத்தில் பெரிய அக்கறை இருப்பது போலவும் அதற்காகத்தான் இக்கழிசடை மசோதாக்கள் வரவிருப்பதாகவும் ஒரு போலி பிம்பத்தை இவ்வரசு உருவாக்கி வருகிறது. இந்த அபாயச் சங்கைக்  குறிப்புணர்ந்து  போராடப் போகிறோமா அல்லது மேலும் இருளில் மூழ்கிச் சாகப்போகிறோமா என்பது நமது கையில்தான் உள்ளது.

______________________________________________________________

குட்டக்கொழப்பி
______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

13

பாபா ராம்தேவ் : கைப்புள்ளயின் கருப்புப் பண மோசடிகள்!

லக வரலாற்றில் இடம் பெற்றுள்ள அதிகார வர்க்க காமெடி பீஸ்கள் அனைவரும் இரண்டு முறை ‘பல்பு’ வாங்கியவர்களாகவே இருக்கிறார்கள். முதல் முறை இந்த ‘கைப்புள்ளை’களின் வருகை சோகக் கதையாகவும், மறுமுறை கேலிக் கூத்தாகவும் அமைகிறது என்பது விதி.

இதற்கு சமீபத்திய உதாரணம், சுவாமி ராம்தேவ் (Swami Ramdev), அல்லது பாபா ராம்தேவ் என்றழைக்கப்படும் ‘வண்டு முருகனி’ன் கதை.

‘இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என எவ்வளவுதான் கார்ப்பரேட் ஊடகங்கள் அடித்து விரட்டினாலும், ‘நானும் ரவுடிதான்’ கணக்காக எப்படியாவது ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு போராளியாக ஜீப்பில் ஏறி விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார் பாபா ராம்தேவ். அதனால்தான் வரும் செப்டம்பர் 20-ம் தேதி இரண்டாம் கட்ட யாத்திரையைத் தொடங்கப் போவதாக செய்தியாளர் கூட்டத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார்.

உண்மையில் செய்தியாளர்கள் இந்தக் கைப்புள்ளயை தேடிச் சென்றது, ‘எப்போது ஊழலை ஒழிக்க – கறுப்புப் பணத்தை மீட்க யாத்திரை செல்வீர்கள்?’ என்று கேட்பதற்காக அல்ல.

உத்தரகண்ட் மாநிலம் அரித்துவாரில் உள்ள பதஞ்சலி யோக பீட அறக்கட்டளை, திவ்ய யோக மந்திர் அறக்கட்டளை, பாரத் ஸ்வாபிமான் அறக்கட்டளை ஆகியவற்றுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து நாடுகளிலிருந்து ரகசியமாக பணம் வருவதாக கும்பகர்ண உறக்கத்திலிருந்து திடீரென்று கண் விழித்த அமலாக்கத் துறை ‘கண்டுபிடித்திருந்தது’. எனவே இந்த மோசடியில் ஈடுபட்ட, இந்த அறக்கட்டளைகளை நடத்தி வரும் பாபா ராம்தேவ்வின் மீது அன்னிய செலாவணி விதிமுறை மீறல் தடை சட்டத்தின் கீழ் ‘சட்டப்படி’ வழக்கு பதிவு செய்திருந்தது.

தவிர, ஆங்கிலேய தம்பதியரால் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவு, பாபா ராம்தேவ்வுக்கு பரிசாக அளிக்கப்பட்டிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்தத் தீவு அன்பளிப்பாகத்தான் வழங்கப்பட்டதா அல்லது வாங்கப்பட்டதா என்ற விவரத்தையும், லிட்டில் கும்ரே தீவில் செயல்படும் ராம்தேவின் சுகாதார மையம் குறித்த தகவலையும் இங்கிலாந்து அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இதுபோக இந்த வழக்கு தொடர்பாக மடகாஸ்கர் தீவில் உள்ள அதிகாரிகளிடமும், பாபா ராம்தேவ் சம்பந்தப்பட்ட கம்பெனிகளின் இயக்குனர்கள், அவற்றின் வர்த்தப் பங்குகளின் நிலை, அவற்றை வைத்துள்ளவர்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றியும் விசாரித்து வருகின்றனர். கையோடு இந்தக் கைப்புள்ளையின் சீடரான சுவாமி பாலகிருஷ்ணன் மீது பாஸ்போர்ட் விஷயமாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். போலி படிப்புச் சான்றிதழ் கொடுத்து இந்தச் சீடர் பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறாராம்.

சுருக்கமாக சொல்வதென்றால் எந்தக் கறுப்புப் பணத்தை மீட்கப் போவதாக கடப்பாறையின் நுனியில் அமர்ந்தபடி பிரும்ம முகூர்த்தத்தில் தவம் செய்வதாக இந்தக் கைப்புள்ள பிலீம் காட்டுகிறதோ, அந்தக் கறுப்புப் பண பதுக்கலில் – கையாடலில் – பரிமாற்றத்தில் – மோசடியில் – அவரே ஈடுபடுவதாக அமலாக்கப் பிரிவு ‘கண்டுபிடித்து’ அது தொடர்பான விசாரணைக்கும் வெற்றிலை தாம்பூலத்துடன் அழைத்திருந்தது. இதைக் குறித்து கேள்வி கேட்கத்தான் செய்தியாளர்கள் சென்றனர். அப்போதுதான் ‘இரண்டாம் கட்ட ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு யாத்திரை’யை தொடங்கப் போவதாக கிச்சுகிச்சு மூட்டினார்.

ஹவாலா ஏஜெண்டுகளாகவும், கறுப்புப் பண மோசடிக்கு துணை நிற்பவர்களாகவும் இந்தியாவிலுள்ள மடாதிபதிகளே – சாமியார்களே – யோக, லோக குருக்களே – செயல்படுகிறார்கள் என்பது சந்திராசாமியில் ஆரம்பித்து பிரேமானந்தா, ஜெயேந்திரன், நித்தியானந்தன் வரை நிரூபணம் ஆகியிருக்கிறது. அதாவது மடங்களையும், ஆஸ்ரமங்களையும் தொடங்குவதே ‘கறுப்பை’ வெள்ளையாக்கத்தான் என்பது அம்பலமாகியிருக்கிறது. இந்தப் பொறுக்கி லிஸ்டில் இடம்பெறும் தகுதி பாபா ராம்தேவுக்கு உண்டு என்பது அரசியலின் பால பாடத்தை பயிலும் குழந்தைக்கும் தெரியும். அப்படியிருக்க இப்போதுதான் இந்த ‘உண்மை’யை அமலாக்கப் பிரிவினர் கண்டுபிடித்திருக்கிறார்களாம். இதை ரிசர்வ் வங்கியும் உறுதி செய்துள்ளதாம்.

இந்த வழக்கும், விசாரணையும் எந்த லட்சணத்தில் இழுத்தடிக்கப்படும் என்பது பாபா ராம்தேவ்வின் தாடி உரோமத்துக்குக் கூட தெரியும். இந்தக் கைப்புள்ள வெளிநாடுகளுக்குச் சென்று வந்தது, வெளிநாட்டுச் சீடர்கள் அவருக்கு அதாவது அவரது டிரஸ்ட்டுகளுக்கு பணம் கொடுத்தது, அன்பளிப்பாக சொத்துகளை எழுதி கொடுத்தது முதலியவை ‘சட்டரீதியாக’ செய்யப்பட்டுள்ளன. தவிர அறக்கட்டளைகளை பதிவு செய்யும்போது ‘விவரங்களை’ கொடுத்துதான் பதிவு செய்வார்கள். சட்டமீறல்கள் இருந்திருந்தால், அப்பொழுதே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு தொடை தட்டி இப்போது ‘விசாரணை’ நடத்துவது சும்மா பயங்காட்டத்தான் என்பதை இந்த பொறுக்கி குரு மட்டுமல்ல, இவரை பிளாஷ் லைட்டில் காட்டும் கார்ப்பரேட் ஊடகங்களும் நன்றாகவே அறிவார்கள்.

அதற்கேற்ப டிரஸ்ட்டுகளின் சார்பில், டாக்டர் வேத் பிரதாப் வைதிக் என்பவர், ‘சட்டப்படி எல்லா நடவடிக்கைகளையும் எதிர்கொள்வோம். அரசு வேண்டுமென்றே, இத்தகைய கெடுபிடிகளை செய்து வருகிறது. அரசுக்கு முன்பே இந்த விவரங்கள் தெரியும் என்றால், ஏன் அப்பொழுதே நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கர்ஜித்திருக்கிறார். அதனால்தான் ஒருநாள் கூத்தாக இந்த விசாரணை வைபவத்தை ‘காட்டி’ முடித்துவிட்டார்கள்.

இந்த இடத்தில்தான் ஒரு கேள்வி எழுகிறது.

நியாயமாக பார்த்தால், இந்தக் கைப்புள்ள வரும் 20-ம் தேதி மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கும் இரண்டாம் கட்ட யாத்திரையை இந்திய காட்சி ஊடகங்கள் அனைத்தும் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாட வேண்டும். ஏனெனில் பணம் காய்ச்சி மரமாக இப்போதைக்கு காட்சி ஊடகங்களுக்கு இருப்பது ‘ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு’ என்ற வார்த்தை விளையாட்டுதான்.

இத்தனைக்கும் இந்த பணம் காய்ச்சி மரத்தை கண்டுபிடித்தது எப்படியெல்லாம் சட்டப்படியும் – சட்டத்துக்கு புறம்பாகவும் சுரண்டலாம் என்று ரூம் போட்டு திட்டமிடும் தொழில்முறை வல்லுனர்கள் அல்ல. ‘ஒரு சாதாரண’ குணச்சித்திர நடிகர். அதுவும் கைக்குட்டை நனையும் அளவுக்கு பார்வையாளர்களை அழ வைப்பதில் கில்லாடிகளான பீம்சிங் பட கம்பெனி ஆர்ட்டிஸ்டுகள் எஸ்.வி.ரங்காராவ், நாகைய்யாவை விட பலே கில்லாடியான ஒரு ப்ரெஷ் பீஸ் புனிதர். அவர்தான் அண்ணா ஹசாரே. 12 நாட்களுக்கு நான் – ஸ்டாப் ஆக அவர் உருண்டு புரண்டு நடித்ததை பார்த்து காட்சி ஊடகங்களே மிரண்டுவிட்டன. தேசியக் கொடியால் கண்ணீரை துடைத்தபடி கை வலிக்க வலிக்க ரசிகர்கள் கைதட்ட, காட்சி ஊடகங்களின் கல்லா பெட்டி திருப்பதி உண்டியல் கணக்காக நிரம்பி வழிந்தது. ஒரே இரவில் ‘ஜன் லோக்பால்’ என்ற வார்த்தை ஒவ்வொரு ரசிகராலும் பல லட்சம் முறை ஜெபிக்கப்பட்டது.

எனவே கோடி முறை விஷ்ணு சகஸ்ரநாமம் – லலிதா சகஸ்ரநாமத்தை ஜெபித்தாலும் அடைய முடியாத லட்சுமி கடாச்சத்தை ‘ஜன் லோக்பால்’ நாமாவளி ‘சிங்கிள் வாய்ஸில்’ தருவதை பார்ப்பன ஊடகங்கள் அனுபவப் பூர்வமாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் உணர்ந்து கொண்டன. எனவே வணிகச் சின்னமாக மாறிவிட்ட ‘ஊழல் ஒழிப்பு – கறுப்புப் பண மீட்பு’க்காக இந்தக் கைப்புள்ள மேற்கொள்ளப் போகும் இரண்டாம் கட்ட போராட்டத்தை காட்சி ஊடகங்கள் பிரைம் டைமில் ஹைலைட் செய்ய வேண்டும்.

ஆனால், செய்யவில்லை. தயக்கத்துடன் இருக்கிறார்கள் அல்லது பின் வாங்குகிறார்கள். அது ஏன்?

காரணம், நாடக மேடையில் கோமாளி அவ்வப்போதுதான் வர வேண்டும். அவனே முக்கிய கதாபாத்திரமாக மாறி விடக் கூடாது. அப்படி மாறி விட்டால், உணர்ச்சிப்பூர்வமான கட்டங்கள் நமத்துப் போய்விடும். இதற்கு உதாரணம், இந்தக் கைப்புள்ள கடந்த ஜூன் 4-ம் தேதி அன்று மேற்கொண்ட உண்ணாவிரத போராட்டம். ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகையால் சிலாகிக்கப்பட்ட இந்த யோக குருவால், 10 நாட்களுக்கு மேல் கோலாகலமாக விளம்பரம் செய்யப்பட்ட மாபெரும் உண்ணாவிரத கலை நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை. சுருண்டு விழுந்துவிட்டார். ஓபனிங்கும் சரியில்லை. ஃபினீஷிங்கும் சரியில்லை. அடித்த கைப்புள்ளைக்கே இந்தக் காயம் என்றால், அடி வாங்கிய – இந்த காமெடி பீஸை நம்பி ஏகத்துக்கு முதலீடு செய்திருந்த – கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு எவ்வளவு காயம் ஏற்பட்டிருக்கும்?! தங்கள் தலையில் அடித்தபடி அப்போதுதான் தீர்மானித்தனர்: ‘ம்ஹும்… இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’

இதன் பிறகுதான் அண்ணா ஹசாரே என்ற குணசித்திர நடிகர் இரண்டாவது முறையாக மேடையில் ஏற்றப்பட்டார். ‘கொடுத்த காசுக்கு மேலயே நடிக்கும் நடிகரைப் போல்’ நெகிழ்ச்சியுடன் நடித்து, பாபா ராம் தேவ்வால் காட்சி ஊடகங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியதுடன் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 288 மணி நேரங்களுக்கு விடாமல் ஒளி(லி)பரப்பப்பட்ட மெகா ஹிட் எபிசோடையும் வழங்கினார்.

எனவே தெரிந்தே ஒரு மொக்கையை மீண்டும் ஃபோகஸ் செய்ய வேண்டுமா… அண்ணா ஹசாரே மூலம் கிடைத்திருக்கும் வசூலில் இருந்து ஒரு பகுதியை கடலில் கரைத்த பெருங்காயமாக இழக்க வேண்டுமா என்று யோசிக்கிறார்கள்.

இந்த டம்மி பீஸாவது தனக்கு படியளிக்கும் கார்ப்பரேட் பரமன்களின் எண்ணத்தை அறிந்து சும்மா இருக்கலாம். அதை விட்டுவிட்டு செப்டம்பர் 3 அன்று செய்தியாளர்களின் முன்னால் ‘அண்ணா ஹசாரேவுக்கு மத்திய அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவது சந்தேகமே. ஹசாரே உண்ணாவிரததத்தை தொடர்ந்திருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. ஹசாரேவின் எந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது? முன்பு ஒரு முறை அவர் ஏமாற்றப்பட்டார். பிரதமர், நீதித்துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் லோக் பால் சட்ட வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என்று ஹசாரே போராட்டம் நடத்தினார். அரசு அவரது கோரிக்கையை ஏற்பதாக கூறிய போது, போராட்டத்துக்கு 50 சதவீத வெற்றி கிடைத்ததாக ஹசாரே கூறினார். ஆனால், இது வெற்றியின் முதல் படிதான் என்பது எனது கருத்து. அதிகாரத்தில் உள்ளவர்களால் ஹசாரே வஞ்சிக்கப்பட்டுள்ளார். உறுதிமொழிகள் நிறைவேற்றப்படுமா என்பது ஐயமே…’  என்று தாடியை தடவியபடி சகலருக்கும் தெரிந்ததை பேசியிருக்கிறார்.

அநேகமாக இதைக் கேட்டு காட்சி ஊடகங்களும், பன்னாட்டு தரகு முதலாளிகளும் அலறியிருக்க வேண்டும். ஏனெனில் ‘மாபெரும் உண்ணாவிரத போராட்ட கலைநிகழ்ச்சியின் பார்ட் 3’ஐ எடுக்க அவர்கள் திட்டமிட்டு வருகிறார்கள். இதற்காக தொழில்முறை சுரண்டும் வல்லுனர்கள் குழு, பக்காவாக ஷாட் பை ஷாட் ஆக திரைக்கதை எழுதி வருகிறது. முந்தைய வசூல் ரெக்கார்டை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அவர்கள் 24 மணிநேரங்களும் உழைத்து வருகிறார்கள். இப்படி ப்ரீ புரொடக்ஷன் நடந்து வருகையில் – ஆராவாரமாக நாள், நட்சத்திரம் பார்த்து படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்னர் – இப்படியா ‘ஜஸ்ட் லைக் தட்’ அறிவிப்பது?

எனவேதான் ‘ம்ஹும்… இவரு இதுக்கு சரிப்பட மாட்டாரு…’ என அவர்கள் கழட்டி விட்டுவிட்டார்கள்…. ஆனாலும்

இப்படி காமெடி பீஸாக இருப்பதாலேயே பாபா ராம்தேவ்வை கார்ப்பரேட்டுகளும், பன்னாட்டு தரகு முதலாளிகளும், காட்சி ஊடகங்களும் கையாள்வது போல் உழைக்கும் மக்களும் அணுக முடியாது. ஏனெனில் கைப்புள்ளையாக இருந்தாலும், பாபா ராம் தேவ் அதிகார வர்க்க கைப்புள்ளை. கறுப்புப் பணமாக திரளும் பணத்தின் புரோக்கர். ‘பாரத் சுவாபிமான் ஆந்தோலன்’ என்ற அமைப்பை நிறுவி ஊழலை ஒழிப்பதாகவும், கறுப்புப் பணத்தை மீட்பதாகவும் பிலீம் காட்டும் பரதேசி. ‘சுதேசி சிக்சா, சுதேசி சிகித்சா’ என்ற முழக்கங்களுடன் இந்தி மொழி முதன்மை மொழியாக அமைய வேண்டும் என்றும் இந்திய ஆயுர்வேதம் முதன்மை சிகிச்சை முறையாக இருக்க வேண்டும் என்றும் பகிரங்கமாக போராடி வரும் விஷப் பாம்பு.

விஷப் பாம்புகளில் காமெடி பீஸ், கைப்புள்ளை என்று ஏதாவது இருக்கிறதா என்ன?

_______________________________________________________

–  அறிவுச்செல்வன்
_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

“விளம்பரங்களில் ஆங்கிலம்”, “அரசியலில் மாணவர்கள்” – கேள்வி பதில்!

17

கேள்வி 1:
தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் காட்சிகள் மற்றும் நிகழ்ச்சிகளில் விளம்பரங்களே அதிக நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.தமிழ் மற்றும் அனைத்து இந்திய மொழிகளையும் பின் தள்ளிவிட்டு ஆங்கிலமே முதன்மையாக விளம்பரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.விளம்பரங்களில் தமிழோ அல்லது வேறு இந்திய மொழி மட்டும்தான் பயன்படுத்தவேண்டும் என இந்த விளம்பர கம்பெனிகளுக்கு நெருக்கடி கொடுத்து போராட யாரும் முன்வருவதில்லையே ஏன்??

கேள்வி 2:
70
களில் மாணவர் போராட்டங்களினால் ஆட்சியை பிடித்தவர்கள், இன்று மாணவர் உரிமைக்காக போராடுவதற்கு மாணவர்களை அணி திரட்டி போராட களத்திற்கு வருவதில்லையே ஏன்??

– புதுநிலா

அன்புள்ள புதுநிலா,

விஷத்தை ஆழகான வண்ண பாட்டிலில் வைத்து பாய்சன் என்று ஆங்கிலத்தில் காட்டுவதற்கு பதில் நஞ்சு என்று தமிழில் காட்டவைத்து நாம் சாதிக்கப் போவது என்ன? உங்கள் கேள்வியிலேயே விளம்பரங்கள் அதிக நேரம் ஆக்கிரமித்துக் கொள்வதாக கவலைப்படுகிறீர்கள். அப்படி இருக்கும்போது அதில் ஆங்கிலம் இருந்தால் என்ன, தமிழில் வந்தால் என்ன?

சாதாரண மக்களையும் உள்ளிட்ட அன்றாட வாழ்வில் ஆங்கிலம் இரண்டறக் கலந்து விட்டதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்தக் கலப்பு ஒரு இயல்பான மொழிக் கலப்பில் உருவானதல்ல. முதலாளித்துவத்தின் உலகமயத்தால் திணிக்கப்பட்ட ஒன்று. சமூவியல், பண்பாட்டு துறைகளில் உலகம் முழுக்க ஒன்றாக இருந்தால் மட்டுமே அவர்கள் விரும்பும் நுகர்வுக் கலாச்சார சந்தையை விரிக்க முடியும். அதற்கு தேசிய இனங்களின் பண்பாடுகளை திட்டமிட்டு அழிப்பதை அவர்கள் செய்கிறார்கள். அந்த வரிசையில் தேசிய இனங்களின் தாய் மொழிகளும் சிதைக்கப்படுகின்றது.

கார்ட்டூன் நெட்ஒர்க்கோ, இல்லை டபிள்யு.டபிள்யு.இ.வோ, இல்லை அமெரிக்க அடையாளங்களோடு வரும் வீடியோ கேமோ இவை போன்ற அமெரிக்க வார்ப்புகளோடுதான் நமது குழந்தைகள் வளர்கிறார்கள். பெற்றது நாமென்றாலும் வளர்ப்பது அவர்கள்தான். அமெரிக்க நகரங்கள், நதிகள், நட்சத்திரங்கள் தெரிந்த அளவுக்கு நமது மண் சார்ந்த, மக்கள் சார்ந்த வாழ்க்கைகள் குழந்தைகளுக்கு தெரிவதில்லை.

ஒரு நண்பரது மகனை சமீபத்தில் சந்தித்தேன். ஏழாம் வகுப்பு படிக்கும் அவன் சாலையில் செல்லும் எந்தக் கார்களையும் பார்த்த மாத்திரத்திலேயே அது முன்புறமோ, பின்புறமோ எப்படி இருந்தாலும் கம்பெனி, மாடல் முதலியவற்றை சரியாக சொல்லுவானென்று அவனது தந்தை பெருமையாகக் கூறினார். அதை சோதித்துப் பார்த்த போது உண்மைதான் எனத் தெரிந்தது. பிறகு அவன் வாழும் நகரில் ஓடும் நதியின் பெயரைக் கேட்டேன். அவனுக்கு தெரியவில்லை!

இது எப்படி நடந்திருக்கும்? தொலைக்காட்சியில் பார்ப்பது ஒன்று, பின்னர் உணவகங்கள், சுற்றுலா மையங்கள், ஷாப்பிங் மால்கள் என்று நடுத்தர வர்க்கம் பொழுதைக் கழிக்கும் வர்த்தக இடங்களிலெல்லாம் புதுக் கார்களை பார்க்க முடியும். இதிலிருந்து அவன் சுயமாகவே தனக்கு காட்டப்பட்டதை மனப்பாடம் செய்து தேறிவிட்டான். மேலும் கார் என்பது அந்தஸ்தான வாழ்வின் அடையாளம் காட்டும் பொருளென்ற வகையிலும் அவனுக்கு நெருக்கமாக இருக்கிறது. இப்படித்தான் நமது சிறார்களை முதலாளித்துவத்தின் நுகர்வுக்கலாச்சாரம் வளர்க்கிறது. ஆனால் சிறுவர்களை விட பெரியவர்கள்தான் இதில் வேகமாக வென்றெடுக்கப்பட்டு வருகிறார்கள்.

செல்பேசி, இணையம், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பல்பொருள் சூப்பர் அங்காடி, மல்டி கசின் உணவகங்கள் என்று நவீன வாழ்க்கையின் மைல்கற்கள் அனைத்திலும் உலகமய பண்பாடுதான் ஆட்சி செலுத்துகிறது. புதிய புதிய உடைகள், அணிகலன்கள், வாகனங்கள், வீட்டுப் பொருட்கள், வீடுகள் என்று இந்த முடிவுறா ஆட்டத்தில்தான் நடுத்தர வர்க்கம் தனது நேரத்தையும், பொருளையும் இழந்து வருகிறது. இப்படித்தான் தொலைக்காட்சிகளின் விளம்பரங்களில் ஆங்கிலம் இயல்பாக வருவதாக நினைக்கப்படுகிறது. அதை யாரும் உறுத்தலாகக் கருதுவதில்லை.

ஆகவே உள்ளூர் சமூக விசயங்கள், மனிதர்கள், வாழ்க்கைகள் எல்லாம் காலம் செல்லச் செல்ல அந்நியமாகிப் போகிறார்கள். அதன்படிப் பார்த்தால் இது மொழிப் பிரச்சினை என்பதை விட ஒரு மனிதனின் சமூக உணர்வு குறித்த பிரச்சினையாகிறது. படித்த நடுத்தர வர்க்கத்தினர் பலர் மேலாட்டமாக அரசியல் பேசுவதும், பாசிசத்தை ஆதரிப்பதும், ஊழலை ‘எதிர்ப்பது’, அநாதைகளை ஆதரிப்பது போன்ற அவர்களது தர்ம சிந்தனைகளுக்கும் இதுவே அடிப்படை எனலாம்.

ஆகவே இந்த திணிக்கப்படும் ஆங்கிலத்தை எதிர்க்கும் நமது போராட்டம் நமது மக்களுக்கு சமூக உணர்வையும், அரசியலையும் கற்றுத் தருவதிலேயே வெல்ல முடியும். என்னதான் நுகர்வுக் கலாச்சாரம் ஒரு மேகமூட்டமாக கவிந்து வந்தாலும், வாழ்க்கை எனும் சூரியன் உண்மையினை எடுத்துச் சொல்வதை மறைக்க முடியாதே? அதனால்தான் நுகர்வு மோகம் கொண்டிருக்கும் மக்கள் கூட ஒரு கட்டத்தில் “செலவுக்காக வாழ்க்கை, பொருளுக்காக வாழ்க்கை” என்பதின் சிரமங்களை புரிந்து கொண்டு, தாம் சுரண்டப்படுவதை உணர்கிறார்கள். இன்று ஆங்கிலப் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக அவர்கள் வீதியில் இறங்கிப் போராடுவதை பார்க்கலாம். அந்த வகையில் “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை”.

___________________________________________________

70களில் மாணவர்களை அணிதிரட்டிப் போராடியவர்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? தி.மு.கவையா?

1960களில் தமிழக மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டத்தினை தி.மு.க அறுவடை செய்து கொண்டது வரலாறு. மற்றபடி அவர்கள் என்றுமே மாணவர்களை அணிதிரட்டி அரசியல் போராட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியவர்கள் இல்லை. 60களுக்குப் பிறகு கூட தி.மு.க தனது அரசியல் மேலாண்மை கருதி மாணவர் அணி வைத்துக் கொண்டு, கல்லூரி தேர்தல்களில் வெற்றி பெற்று வந்தாலும் அதை மாணவரிடையேயான அரசியல் பணியாக கருத முடியாது. இன்றும் கூட இத்தகைய வழிமுறைகளை காங்கிரசு, அ.தி.மு.க கட்சிகள் பின்பற்றுகின்றன.

அதாவது இவர்களது ஆதிக்கம் இருக்கும் ஊர்களின் கல்லூரிகளில், பகுதிகளில், அரசியல், பண செல்வாக்கு காரணமாக ஏரியா பிரமுகரின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதும், அதற்கென்று எம்.எல்.ஏ தேர்தல் போன்று செலவழிப்பதும் யதார்த்தம். மற்றபடி மாணவருக்கென்று இருக்கும் பிரச்சினைகளில் இவர்கள் போராடியது கிடையாது. ஒவ்வொரு கல்லூரிகளிலும்  இருக்கும் ஒரு சில மாணவர்களை வைத்தே இவர்கள் தமது செல்வாக்கை காட்டிக் கொள்கிறார்கள்.

தி.மு.கவின் ஆரம்ப அரசியல் காலங்கள் எல்லாம் கல்லூரிகளிலும், விடுதிகளிலும், ஏன் முடி திருத்தும் நிலையங்களிலும் வளர்ந்து வந்தன. இன்றைக்கு பழம்பெருச்சாளிகளாக இருக்கும் பல்வேறு தி.மு.க தலைவர்களெல்லாம் அப்படி மாணவப் பருவத்திலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். அந்தக் காலம் ஒருவகையான மறுமலர்ச்சிக் காலம் போன்றது. படிப்பது, பத்திரிகை நடத்துவது, கூட்டங்களில் பேசுவது என்று அறிவுசார் இயக்கம் கொடிக்கட்டிப் பறந்த காலம்.

ஆனால் அண்ணாத்துரை காலத்திலிருந்தே இத்தகைய அறிவுசார் முனைப்புகள் எல்லாம் தொண்டர்களிடையே தத்தமது தனித்திறமையை காட்டிக் கொள்ளும் காரியவாதமாக மாறத் துவங்கியிருந்தது. மேலும் தி.மு.கவின் சமரசங்களும், காரியவாதமும் கூட அதன் தோற்றத்திலேயே வேர்விட்டிருந்தது. இருப்பினும் எளிய மக்களின் அரசியலை பேசும் இயக்கமாக அது தமிழகத்தில் குறிப்பிட்ட காலம் செல்வாக்குடன் இருந்ததையும் நாம் ஏற்க வேண்டும்.

இதைத்தாண்டி மாணவரிடையே ஒரு நீண்ட அரசியல் இயக்கமாக அது வளரவில்லை, வளர்ந்திருக்கவும் முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தேசவிடுதலைப் போராட்டக் காலத்தில் சாதிரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் ஆண்ட பரம்பரைகளின் பிரதிநிதியாக விளங்கிய காங்கிரசு கட்சியில் அத்தகைய பின்னணியிலிருந்து மாணவர்களும் வந்தார்கள். காந்தியின் கோரிக்கையை ஏற்று படிப்பையும், பதவியையும் துறந்த சாதாரணமானவர்களும் உண்டு. ஆனால் காங்கிரசு, காந்தியின் சமரசப்பாதையினால் அது ஒரு வலுவாக மாணவர் இயக்கமாக வளரவில்லை. எதிர்மாறாக பகத்சிங் கொல்லப்படும் போது இந்திய மாணவர்களிடையே முதன்மையான நட்சத்திரமாக மிளிர்ந்தார்.

இதன் பாதிப்பை ஆரம்ப கால பொதுவுடைமை இயக்கங்களில் காணலாம். எனினும் காங்கிரசின் வாலாக செயல்பட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி காந்தியின் செல்வாக்கைத் தாண்டி மாணவரிடையே ஒரு சக்தியாக எழமுடியவில்லை. இருந்தபோதும் இன்றைக்கு போலிக்கம்யூனிஸ்டுக் கட்சியில் இருக்கும் தலைவர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

மேற்கு வங்கம், கேராளவில் சி.பி.எம்மின் அமைப்பு பலம் காரணமாக பரவலான கல்லூரிகளில் எஸ்.எஃப்.ஃஐ இருந்தாலும் அது மாணவரை அரசியல் ரீதியாக திரட்டும் அளவு உறுதியாக இல்லை. மற்ற மாநிலங்களில் குறிப்பாக ஆந்திரா, தமிழகம் போன்றவற்றில் போலிக் கம்யூனிஸ்டுகள் இதர ஓட்டுக் கட்சிகளைப் போல கல்லூரிக்கு ஓரிருவரை வைத்துக் கொண்டு வேலை செய்கிறார்கள். மாணவர்களின் தனிச்சிறப்பான கோரிக்கைகளுக்காக அவர்களை அணிதிரட்டி போராடுமளவு அவர்களுக்கு பலமும் இல்லை, நோக்கமும் இல்லை.

இன்றும் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் பொதுவுடமை இயக்கம் சார்ந்த மாணவர்களே தேர்தலில் வெற்றிபெறுகிறார்கள். வட இந்தியாவில் குறிப்பாக இந்தி பெல்ட்டில் தமது அரசியல் பலத்தைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கம் அகில பாரத வித்யார்தி பரிஷத் எனும் மாணவர் பிரிவை நடத்தி வருகிறது. நாட்டில் இருக்கும் மாணவர் அமைப்பிலேயே மிகவும் பிற்போக்கான இயக்கம் இதுதான். ஆசிரியர்களுக்கு குரு பூஜை, காதலுக்கு எதிர்ப்பு, முசுலீம் எதிர்ப்பு, ஹூசைன் எதிர்ப்பு என்று இவர்களது ‘போராட்டங்கள்’ அனைத்தும் அதன் திசைவழியைச் சொல்லும்.

மேலும் இவர்கள் ஆளும் வர்க்கங்களின் நோக்கத்திற்கேற்ற அரசியலைக் கொண்டிருப்பதனால் பல கல்லூரி நிர்வாகங்கள் ஏ.பி.வி.பியை வைத்திருக்கவே விரும்புகின்றன. அந்த வகையில் கல்வி முதலாளிகள் ஆசிபெற்ற சங்கமென்றும் இதனைச் சொல்லலாம்.

70களில் நெருக்கடி காலத்தின் போது ஜெயப்பிரகாஷ் நாராயணனது காங்கிரசு எதிர்ப்பு இயக்கத்தை ஏ.பி.வி.பி ஓரளவுக்கு அறுவடை செய்தது. பின்னர் ஜனதா ஆட்சி அமைப்பதற்கு காரணமான ஜெ.பியின் இயக்கத்திற்கு அம்பலப்பட்டு போன இந்திராவின் சர்வாதிகாரமும் ஒரு காரணம். மேலும் ரசிய சார்பு முதலாளிகள் இந்திராவையும், அமெரிக்க ஆதரவு முதலாளிகள் ஜனதாவையும் ஆதரித்தமையும் ஒரு முக்கியக் காரணமாகும்.

பிறகு அனைத்து ஒட்டுக்கட்சிகளும் பணத்தை இறைத்து தமக்கு மாணவர் அணி இருப்பதாக பிரமையை தோற்றுவிக்கின்றன. அ.தி.மு.க – காங்கிரசு – தி.மு.க முதலான கட்சிகளின் மாணவர் அணி போராட்டங்கள் என்று ஒரு செய்தியையோ, படத்தையோ நீங்கள் அடிக்கடி பார்த்திருக்கலாம். ஆனால் அதில் இருக்கும் கூட்டம் அனைத்தும் காசுக்கு அழைத்து வரப்பட்ட கூட்டம்தான். பல ஏழை மாணவர்களுக்கு இந்த முறையில் வருமானம் வருவதால் ஓட்டுக் கட்சிகளின் மாணவர் அணிகள் இன்றும் செவ்வனே ‘இயங்கி’ வருகின்றன.

60களின் பிற்பகுதியிலும், 70களின் முற்பகுதியிலும் இந்திய பொதுவுடமை இயக்கத்தின் நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றிய நக்சல்பாரி இயக்கம் மாணவர்களிடையே பெரும் செல்வாக்குடன் திகழ்ந்தது. பல நூறு மாணவர்கள் படிப்பு, கல்லூரி, வாழ்க்கையை விடுத்து இயக்கத்தின் முழுநேர ஊழியர்களாக கிராமங்களுக்கு சென்றார்கள். மேற்கு வங்கம், பீகார், ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா என்று பல்வேறு மாநிலங்களில் மாணவர் இயக்கம் காட்டாற்று வெள்ளமாய் திரண்டது.

ஆயினும் மார்க்சிய லெனினிய இயக்கம் செய்த தவறு மற்றும் ஆளும் வர்க்கத்தின் கொடூரமான அடக்குமுறை காரணமாக இயக்கம் பின்னடைந்தது. கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கான தோழர்களில் மாணவர்களும் கணிசமாக இருந்தார்கள். இக்காலமே இந்திய மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்ட காலமாக இருந்தது. இதன் பின்னர் நக்சல்பாரி இயக்கம் சிதறுண்ட போதும் பல்வேறு மாநிலங்களில் இருந்த பல்வேறு மா.லெ குழுக்களின் சமூக அடித்தளமாக மாணவர் இயக்கங்களே இருந்தன, இருக்கின்றன. மாவோயிஸ்ட்டுகள் தடை செய்யப்படுவதற்கு முன்னர் ஆந்திராவில் வலுவான மாணவர் இயக்கத்தை வைத்திருந்தார்கள். இன்றைய அதன் முழுநேர ஊழியர்கள் பலர் மாணவர் இயக்கங்களிலிருந்து வந்தவர்கள்தான்.

தமிழகத்தைப் பொறுத்த வரை இன்று மாணவரிடையே அமைப்பு ரீதியான பலமும், அரசியல் ரீதியான தலைமையும் கொண்ட நக்சல்பாரி இயக்கமாக ம.க.இ.கவின் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி திகழ்கிறது. ஈழம், சமச்சீர் கல்வி, மூவர் தூக்கு, தனியார் மயம், கட்டணக் கொள்ளை என்று பல்வேறு பிரச்சினைகளுக்காக பரவலான கல்லூரிகளில் இவ்வியக்கம் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கின்றது.

இன்று மாணவரிடையே சுயநிதிக் கல்லூரி முதலாளிகளின் ஆக்கிரமிப்பு காரணமாக அரசியல் பணிகள் பொதுவில் மந்தமடைந்துள்ளன. ஆனால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் முன்பை விட அரசியல் ஆர்வம் அதிகரித்துள்ளதையும் பார்க்கலாம். இவர்களும், சட்டக்கல்லூரி மாணவர்களும்தான் சமீபத்திய மூவர் தூக்கிற்கு எதிரான போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தினார்கள்.

தனியார் மயம், காசு இருப்பவனுக்குத்தான் கல்வி – வேலை என்ற சூழலில் மாணவர்கள் முன்பை விட அதிகம் அரசியல் ரீதியாக அணிதிரள்வதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. அதே நேரம் நுகர்வுக் கலாச்சார மோகம், சீரழிவு காரணமாக பண்பாட்டு சீர்கேடுகளும் அவர்களிடையே பரவி வருகிறது. எனினும் முந்தையக் கேள்விக்கு சொன்னது போல “வாழ்க்கைதான் மிகப்பெரிய உண்மை” என்ற அடிப்படையில் அந்த மயக்கங்களிலிருந்து மாணவர்கள் விடுபட்டு போராடுவார்கள், தமிழகத்தின் அரசியல் போக்கை நேர்மறையில் திசை திருப்புவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !

5

வல்லரசு இந்தியா கொலை செய்த 11 குழந்தைகள் !லக நாடுகளைப் பொறுத்தவரை இந்தியாவில் மருத்துவம்  ஒரு ‘புகழ்’பெற்ற துறை.  இங்கு கிடைக்காத மருத்துவ வசதிகளே இல்லை. ஆபரேஷன் செய்த தடம் கூட இல்லாமல் சிறு துளைமூலம் அறுவைசிகிச்சை,  இதய சிகிச்சைக்கான சிறந்த வல்லுநர்கள், உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும் தனிசிறப்பு பெற்ற “ஸ்பெஷாலிட்டி” மருத்துவமனைகள், குழந்தை பேறுக்கான சிகிச்சை மையங்கள் என்று இந்தியாவில்தான் மருத்துவங்கள் எத்தனை வகை! மருத்துவமனைக்குச் சென்றால் வீட்டுக்கு திரும்பி வரக்கூட விரும்ப மாட்டீர்கள் என்றெல்லாம் விளம்பரங்கள் வருகின்றன.

வெளிநாட்டினரை கவந்திழுக்க தனியாக மருத்துவ சுற்றுலா – அதாவது வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைவிட குறைந்த செலவில் இங்கு மருத்துவம் பெறுவதற்காகவே இதனை அரசாங்கம் தனியாகவே விளம்பரப்படுத்துகிறது. பெரியவர்களிலிருந்து கைக்குழந்தை வரை அதில் அடக்கம்.  அவ்வப்போது, செய்திதாள்களில் கூட பார்த்திருக்கலாம், ஒரு வெளிநாட்டுக் குழந்தை தாய் தந்தையின் அரவணைப்பில் சிரித்துக்கொண்டிருக்கும் – மருத்துவத்துக்காகவே இந்தியாவுக்கு பறந்து வந்த குழந்தையென்று தனியாகக் கட்டம் கட்டிப் போட்டிருப்பார்கள்.

ஆயினும் இந்த வசதிகளும் வாய்ப்புகளும் ஏழைகளுக்கு இல்லையென்றுதான் கடந்தவாரம் ஆந்திராவில் உயிரழந்த குழந்தைகள் மூலம் நிருபணமாயிருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 11 குழந்தைகள், பிறந்து சில நாட்களேயான குழந்தைகள் இறந்திருக்கின்றன. ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பொது மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில்தான்  மனதை பிசையும் இந்த கொலைகள் நடந்திருக்கின்றன. அதே ஆந்திராவில் சாகக்கிடந்த சாயிபாபாவை உயிர் பிழைக்க வைத்த  அந்த ஆந்திராவில் 11 குழந்தைகள் இறந்தது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது இல்லையா?  கடந்தவாரத்தின் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில்  48 மணிநேரங்களுக்குள்ளாகவே   இக்குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாக உயிரிழந்திருக்கின்றன.

இது தங்களது கவனக்குறைவினால் ஏற்பட்டதல்ல என்று ஆரம்பத்தில் மருத்துவமனையின் தரப்பிலிருந்து சொல்லப்பட்டாலும் உண்மை வேறாக இருந்தது. ஆக்சிஜன் போதாமையால் மூச்சடைத்து குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கிறார்கள் பெற்றோர்கள்.மருத்துவமனை நிர்வாகத்துக்கு  இதனை சொல்லியும்  அவர்கள் கண்டுக்கொள்ளவேயில்லை.  குழந்தைகளை மிகவும் அபாயகரமான நிலையில்தான் கொண்டு வந்தார்கள் என்றும் அவர்களது ஆபத்தான நிலைதான் சாவுக்குக் காரணம் என்றும் வாதிட்டார்கள்.   இந்த மருத்துவமனையில் மொத்தம் 20 படுக்கைகள் இருக்கின்றன. ஆனால், எப்போதும் 30 குழந்தைகளாவது இருக்கும்.  அதோடு, ஆக்சிஜனுக்கான சாதனங்களில் இரண்டுதான் வேலை செய்யும். மீதி இரண்டு பழுதானவை.

“இது ராயலசீமாவின் பகுதியின் ஒரே  மருத்துவமனையாக இருப்பதால் நான்கு அல்லது ஐந்து மாவட்டங்களிலிருந்து வருகிறார்கள்.  போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாவிட்டாலும் அவர்களை திருப்பி அனுப்ப முடியாமல்  கவனித்துக்கொள்கிறோம். தேவையான மருத்துவ வசதிகளுக்காக  அரசாங்கத்தை அணுகியிருக்கிறோம் மேலும் இது குறித்து விசாரணை நடக்கும்” என்கிறார்  கர்னூல் மாவட்டத்தின் கலெக்டர் ராம்ஷங்கர் நாயக். ஆனால், அரசாங்கமோ இதற்கு நேர்மாறாக  சொல்கிறது.  ஆந்திராவின் குடும்பநல அமைச்சரான  ரவீந்திர ரெட்டி இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. கலெக்டர் அனுப்பிய ரிப்போர்ட்டில் டூட்டியில் இருக்க வேண்டிய மருத்துவர்கள் தங்களது சொந்த கிளினிக்கில் இருந்திருக்கின்றனர். இந்த கவனக்குறைவே குழந்தைகளின் மரணத்துக்குக் காரணம் என்றுசொல்லியிருப்பதாகக் கூறுகிறார். மேலும், இது மருத்துவர்களின் தவறாலேயும் கவனக்குறைவாலும்  நிகழ்ந்ததுதானென்றும் சொல்கிறார்

இப்படி இவர்கள் மாறி மாறி ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கையில்  மருத்துவமனையிலிருந்து  ரிப்போர்ட்டை அனுப்பியிருக்கிறது, பிரபல மருத்துவர்களைக்கொண்ட குழுவொன்று.

அதாவது, மருத்துவமனையில் 16 இன்குபேட்டர்களும், 4 சூடேற்றிகளும், 4 வெண்டிலேட்டர்களும் பிற சாதனங்களும் இருக்கின்றன.  போதுமான அளவுக்கு மருந்துகளும் இருப்பில் உள்ளது,  கடந்த ஆக்ஸ்டு 30 -ஆம் தேதியும் செப்டம்பர் 1-ஆம் தேதியும் இறந்த 10 குழந்தைகளுள் ஒரு குழந்தைதான் அங்கேயே – அதாவது அந்த மருத்துவமனையிலையே பிறந்த குழந்தை.  அதில் 4 குழந்தைகள் குறிப்பிட்ட காலத்துக்கு முந்தி பிறந்தவை. மூச்சுத்திணறலின் காரணமாகவே  அனைத்துக் குழந்தைகளும் அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்று பிரபல  குழந்தை மருத்துவர்களைக் கொண்டு முதலமைச்சருக்காகத் தயாரிக்கப்பட்ட ரிப்போர்ட் கூறுகிறது.

இந்தியாவின் மருத்துவ வசதிகள் என்னதான் உலகமே மெச்சக்கூடியதாக இருந்தாலும் ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் இந்த வசதிகள் இல்லை. எங்கிருந்தோ வந்த குழந்தையானாலும் வசதியும் கையில் பணமிருந்தால் எந்த சிகிச்சையும் கிடைக்கும்.

இப்படி எவ்வளவோ வசதிகள் இங்கிருந்தும் அமெரிக்காவுக்கு பறக்கிறார் சோனியா. அவரைப் பற்றி கவலைப்பட  எத்தனை மீடியாக்கள், அரசியல்வாதிகள்!  ராமச்சந்திராவில்  மருத்துவம் பார்த்துவிட்டு மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூருக்குப் பறந்தார் ரஜினி. அவர் இட்லி சாப்பிட்டதும்,  தண்ணீர் குடித்ததும்,  நடந்ததும் தலைப்புச் செய்திகளாயின. அதோடு சிகிச்சை முடிந்து அவர் தனியாக நடந்து வந்ததை பார்த்து கோபமும் ஆவேசமும் கண்டனமும் தூள் பறந்தன.  செத்துப்போய் பலநாட்களான சாயிபாபாவுக்குத்தான் அலங்காரங்களும் அலப்பரைகளும் எத்தனை!

அதிகார வர்க்கமும், மேட்டுக்குடியும் மத பீடாதிபதிகளும் அதிஉயர் தொழில்நுட்பத்துடன் சிகிச்சை பெற்றுகொள்ள உழைக்கும் மக்களோ போதிய பாதுகாப்பும் வசதிகளும் இன்றி கால்நடைகளை கொட்டடியில் அடைப்பதுபோல அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். சிகிச்சை என்பதைவிட கொலை செய்யப்படுகின்றனர் என்பதே பொருத்தமாக இருக்கும்.

உள்நாட்டில் மருத்துவர்கள் விகிதாச்சாரம் மிகக்குறைவாக இருந்தாலும் வெளிநாட்டுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை குறைவதில்லை. இந்தியாவிலிருந்துதான் அதிக எண்ணிக்கையிலான மருத்துவர்கள் வெளிநாடுகளுக்கு பணிபுரியச் செல்கின்றனர். அதிலும், ஊரகப்பகுதிகளுக்கு ஒரு வருடம் பணிபுரிய வேண்டுமென்று சொன்னதற்கே மருத்துவ மாணவர்கம் ஸ்டிரைக் செய்தனர். மருத்துவம், ஆசிரியர்  போன்ற தொழில்கள் அவற்றின் மகத்துவத்தை இழந்து பணம் பண்ணுவதற்கான தொழிலாக மாற்றியிருக்கிறது முதலாளித்துவம்.

ஆரம்பத்தில் சொல்லிய மருத்துவ சுற்றுலா வருடா வருடம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வெளிநாட்டு பணம் படைத்த நோயாளிகள் மூலம்  அரசாங்கமும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகிறது.   இன்னும் வரும் வருடங்களில் இவர்களின் வரவு அதிகரிக்கலாமென்று  அதற்கான் முதலீடுகல், சொகுசு பங்களாக்கள், கலாச்சார சுற்றுலாக்கள் திட்டமிடப்படுகின்றன.  ஆனால், உழைக்கும் மக்களோ போதுமான வசதியின்றி மருத்துவமனை நிர்வாகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே பந்தாடப்படுகின்றனர். ஏனெனில், உழைக்கும் மக்களிடமிருந்து பறிப்பதற்கு எதுவுமில்லை உயிரைத்தவிர!

_______________________________________________________

– வேல்விழி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

டெல்லி குண்டு வெடிப்பு : ஆரம்பிச்சுட்டாங்கையா !

87

புதுதில்லி உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயிலிற்கு வெளியே இன்று (7.9.2011) காலை 10.20அளவில் குண்டு வெடித்து 12 பேர் உயிரிழக்க, அறுபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தோர் அருகாமை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். எவரும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றத்தின் ஐந்தாவது வாயில்தான் முதன்மையான வாயிலென்பதால் மக்கள் கூட்டம் அதிகமிருக்கும், சேதம் அதிகமிருக்கும் என்று முன்னறிந்தே இந்த குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் சமீப ஆண்டுகளாக நிகழும் குண்டு வெடிப்பின் அரசியல் பரிமாணங்களை வினவில் பலமுறை எழுதியிருக்கிறோம். பொதுவில் அரச பயங்கரவாதம் மற்றும் இந்து மதவெறி பயங்கரவாதத்தின் எதிர் விளைவுதான் இத்தகைய பயங்கரவாதங்கள். எனினும் இதை யார் வைத்தார் என்று தேசவெறி ஊடகங்கள் சந்தேகமில்லாமல் எழுப்பும் இலக்குகளைத் தாண்டி பல குண்டுவெடிப்புகள் இந்துமதவெறி அமைப்புக்காளாலும் நடத்தப்பட்டிருக்கின்றன. இதனால் ஜிகாதி பயங்கரவாதம் இல்லை என்பதல்ல. ஆனால் எந்த குண்டு வெடித்தாலும், எந்த ஆதாரமும் இல்லாமல் உடனடியாக கைகாட்டப்படுபவை இசுலாமிய தீவிரவாத இயக்கங்கள்தான்.

தற்போதைய குண்டு வெடிப்பிற்கு கூட அர்கத் அல் ஜிகாத் இசுலாமி எனும் இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டு மின்னஞ்சல் அனுப்பியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்ட கையோடு அவர்கள்தான் சந்தேகத்திற்கிடமற்ற குற்றவாளிகள் என்பதாக குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இதில் டைம்ஸ் நௌ அம்பி ஆர்னாப் கோஸ்வாமி சாமியாடவே ஆரம்பித்து விட்டார்.

குண்டு வெடிப்பை அவர்கள் வைத்தார்களா, இல்லை வேறு யாரும் வைத்தார்களா என்பதை எதை வைத்து முடிவு செய்வது? ஒரு மின்னஞ்சல் மட்டுமே போதுமானது என்றால் இந்த நாட்டில் பலரும் ‘தேச விரோத’ கருத்தை பேசியதற்காக உள்ளே போக வேண்டும். ஒரு பாரிய குண்டு வெடிப்பின் பின்னே யார் வைத்தார்கள் என்பதை மட்டும் சுலபமாக சொல்ல முடியுமா? அல்லது அப்படி சொல்ல வேண்டுமா? இது யாருக்கு ஆதாயம்?

இந்த குண்டுவெடிப்பை யார் வைத்தார்கள் என்பது இப்போதைக்கு தெரியவில்லை என்றும், அந்த மின்னஞ்சலை வைத்து மட்டும் முடிவு செய்ய முடியாது என்றும் தேசிய புலனாய்வுத்துறை நிறுவன தலைமை அதிகாரி கூறிய பிறகும் ஊடக அம்பிகள் துள்ளிக் குதிக்கிறார்கள். அவர்களுக்குத் தேவை உடனடி வில்லன். அந்த வில்லன் இசுலாமிய அமைப்பென்றால் அவர்களுக்கு கல்லா கட்டுவது சுலபம்.

குறிப்பிட்ட அந்த மின்னஞ்சலில் அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்று இருக்கிறதாம். இது தெரியமலேயே இந்த குண்டு வெடிப்பு செய்தியை கேட்ட மாத்திரத்திலேயே பலரும் மூவர் தூக்கு நிறுத்தி வைத்ததற்காக கடும் கண்டனங்களை பொழிய ஆரம்பித்துவிட்டார்கள். ராஜிவ் கொலைக்கான குண்டு வெடிப்பை நடத்தியவர்களையெல்லாம் தூக்கில் போடக்கூடாது என்பதுதான் இத்தகைய தீவிரவாதிகளுக்கு குளிர் விடக் காரணமென்று அவர்கள் ஆங்கில, தமிழ் ஊடகங்களில் ஆவேசம் பொங்க கத்துகிறார்கள்.

அப்சல் குருவுக்கும் எந்த தீவிரவாத இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை. அவரை இந்த வழக்கில் சிக்க வைத்தது இராணுவ, துணை இராணுவ படைகள்தான். அவரது வழக்கில் கூட உச்சநீதிமன்றம் போதிய ஆதாரங்கள் இல்லையென்றாலும், தேசத்தின் மனசாட்சியை கருத்தில் கொண்டு தூக்குத் தண்டனை விதித்திருப்பதாக கூறியிருக்கிறது. இந்த மனசாட்சியைத்தான் இப்போது ஆங்கில ஊடகங்கள் எடுத்துக் கொண்டு தீர்ப்புகளை அள்ளி வழங்குகிறார்கள்.

அதில் அம்பி அர்னாப் கோஸ்வாமியின் டைம்ஸ் நௌ முன்னிலை வகிக்கிறது. அண்ணா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு மேளாவில் டி.ஆர்.பி ரேட்டிங்கை எகிற வைத்த அந்த தொலைக்காட்சிக்கு அடுத்த சென்சேஷனாக இந்த குண்டுவெடிப்பு கிடைத்திருக்கிறது. அதில் அவர்கள் அச்சு பிசகாமல் நடுத்த வர்க்கத்தின் மேலோட்டமான இந்துத்வ மற்றும் பாசிச அரசியல் பார்வையை திருப்திபடுத்தும் வகையில் பேசுகிறார்கள். இதுதான் சமூகத்தை பாசிசமாக்கும் நடவடிக்கை என்பதை எத்தனை பேர் புரிந்து கொள்கிறார்கள்?

டெல்லி உயர்நீதிமன்றத்தில் மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் வேலை செய்ய வில்லை என்பதை உலகமகா கண்டுபிடிப்பாக எடுத்துக் காட்டும் டைம்ஸ் நௌ குத்தாட்டம் போடுகிறது. 120 கோடி மக்களை காப்பாற்ற ஒரு சில வேலை செய்கின்ற மெட்டல் டிடெக்டரும், சி.சி.டி.டிவியும் மட்டும் போதுமா? ஆனால் அவர்களது நோக்கம் மக்களை காப்பது அல்ல. ஆளும் வர்க்கத்தின் கேந்திரமான இடங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் உயிரைத் துச்சமென மதிக்கும் ஒருவன் இந்த கண்காணிப்புகளுக்கு ஏன் பயப்படப் போகிறான்?

குண்டு வெடித்து மக்களிடமிருந்து சிந்தும் இரத்தம் கூட நிற்கவில்லை. அதற்குள் குண்டில் என்ன ரசாயனம் இருந்தது, யார் வைத்தார்கள், என்று ஊடகங்களின் மொக்கை நிருபர்கள் கேள்விக்கணைகளால் துளைக்கிறார்கள். இது அமெரிக்காவாகவே இருந்தாலும் சோதனைச்சாலையில் ஆய்வு செய்த பிறகுதானே என்ன வகை குண்டு என்பதை சொல்ல முடியும்? அவர்களது நோக்கம் உடனடி நீதி வேண்டுமென்பதால் ஆதாரங்களை அவர்களே ஜோடிக்க முயல்கிறார்கள்.

வங்கதேசத்திற்கு சென்றிருக்கும் பிரதமர் நாட்டு மக்கள் இத்தகைய தீவிரவாதிகளின் செயல்களுக்கு பலியாகக்கூடாது என்கிறார். அப்படி பலியாகக்கூடாது என்றால் தீவிரவாதிகள் உருவாக காரணமாக இருக்கும் செயல்கள், சக்திகளை கண்டறிந்து ஒழிக்க வேண்டும். அதை விடுத்து இந்த ஃபார்முலா அட்வைசு சாதிப்பதென்ன?

இந்து மதவெறியர்களைப் பொறுத்த வரை இந்த குண்டு வெடிப்பு அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். மூவர் தூக்கை நிறுத்தி வைக்க தமிழகம் காட்டிய முன்னுதாரணத்தை இதன் மூலம் ரத்து செய்து அப்சல் குருவை தூக்கிலேற்றி இந்துத்தவ வெறியை ஓட்டாக்கலாம் என்பது அவர்களது எண்ணம்.

இந்த குண்டு வெடிப்பை நாம் கண்டனம் செய்கிறோம். இது யார் வைத்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்களே. அப்பாவி மக்களின் உயிரைப் பணயம் வைத்து இலட்சியம் பேசுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் அந்த உரிமையை வைத்துக் கொண்டுதான் இந்திய அரசு காஷ்மீரிலும், வடகிழக்கிலும், இந்துமதவெறியர்கள் குஜராத் உள்ளிட்ட இந்தி மாநிலங்களிலும் மக்கள் மீது குறிப்பாக சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். இந்த நிறுவன பயங்கவரவாதத்தை வேரறுக்காமல் நாம் குண்டு வெடிப்புகளை நிறுத்த முடியாது.

இனி மீண்டும் தடா, பொடா போன்ற சட்டங்கள் அவசியம் என்ற வாதம் எழுப்பப்படும். தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள அப்சல் குரு, மற்றும் தமிழக மூவருக்கும் கருணை காட்டக்கூடாது என்ற இரைச்சல் ஊடகங்களை நிறைக்கும். மொத்தத்தில் அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு உதவும் முகமாகவே இந்த குண்டு வெடிப்பு நடந்திருக்கிறது.

ஊழல் வழக்குளில் பிரதமர் உள்ளிட்ட பெரும் தலைகளெல்லாம் சிக்கியுள்ள நிலையில் முதல் ஆசுவாசமாக அண்ணா ஹசாரே இருந்தார், இரண்டாவதாக இந்த குண்டு வெடிப்பு! 11 பேர் உயிரிழந்ததை விட இதுதான் பெரிய இழப்பு!!

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்

தூக்கு மேடையில் நிற்பது அரசியல் நியாயம் – தோழர் மருதையன்

மரண தண்டனை விதிக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகக் கொடுஞ்சிறையில் வைத்து வதைக்கப்படும் பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரின் மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு 8 வாரங்கள் இடைக்காலத்தடை விதித்திருக்கிறது, சென்னை உயர் நீதிமன்றம். இம்மூவரின் சார்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி, காலின் கன்சால்வேஸ், வைகை ஆகிய வழக்குரைஞர்கள் கருணை மனுவின் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுப்பதில் நேர்ந்துள்ள 11 ஆண்டு காலத் தாமதத்தின் விளைவாக கைதிகள் மூவரும் அனுபவித்துவரும் துன்பம் மரணதண்டனையை விடக் கொடியது என்ற வாதத்தை முதன்மைப் படுத்தி, இம்மரணதண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியிருக்கின்றனர். மனுவை ஏற்றுக்கொண்ட  உயர் நீதிமன்ற பெஞ்சு, 8 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசைக் கோரியுள்ளதுடன், செப்டம்பர் 9 ஆம் தேதியன்று நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனையை அதுவரை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களுடைய பொதுக்கருத்தின் திரண்ட உருவமாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் அலைமோதிக் கொண்டிருந்த மக்கள் வெள்ளம், தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்பளித்தது. இது இறுதி வெற்றி அல்ல என்றபோதிலும், குறிப்பிடத்தக்க வெற்றி. தமிழுணர்வாளர்களும் பல்வேறு அமைப்பினரும் தமிழகம் முழுவதும் செய்த பரப்புரைக்கும் பரவலாக நடைபெற்ற போர்க்குணமிக்க போராட்டங்களுக்கும் கிடைத்த வெற்றி. மக்கள் மத்தியில் கருத்து ரீதியான ஆதரவை உருவாக்குவதில் வைகோ, சீமான் போன்றோர் ஆற்றிய பங்கும், கருமமே கண்ணாக இருந்து இவ்வழக்கினைக் கொண்டு சென்ற உயர்நீதிமன்ற வழக்குரைஞர் புகழேந்தி போன்றோரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கவை.

ஏறத்தாழ உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியான அதேநேரத்தில், மூவரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு குடியரசுத் தலைவரைக் கோரும் தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் முதல்வர் ஜெயலலிதா. அதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தோரைக் காட்டிலும் அதிர்ச்சி அடைந்தோரே அதிகம். முந்தைய நாள் இதே பிரச்சினை பற்றி சட்டமன்றத்தில் பேசிய ஜெயலலிதா, குடியரசுத்தலைவர் நிராகரித்த கருணை மனுவை அங்கீகரிக்கின்ற அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாது என்று கூறி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கடிதம் ஒன்றையும் அதற்கு ஆதாரம் காட்டினார். மரண தண்டனையை ரத்து செய்வதற்கான அதிகாரமில்லை என்பதுடன் அதில் தனக்கு  விருப்பமும் இல்லை என்பதை அவரது பேச்சு பளிச்சென்று காட்டியது.

முதல்வரைச் சந்திப்பதற்கு பேரறிவாளனின் தாயார் மற்றும் வைகோ உள்ளிட்ட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. வேலூர் சிறையின் தூக்கு மேடைக்கு பூசை போடப்படுவதையும் புதுப்பிக்கப்படுவதையும் வக்கிரப் பரவசத்துடன் வருணித்துக் கொண்டிருந்தது, தினமலர். ஜெயலலிதா கும்பலின் உறுப்பினர்களான பார்ப்பன பாசிஸ்டு சுப்பிரமணிய சாமி, சோ போன்றோர் நடைபெறவிருக்கும் நரகாசுரவதம் குறித்த தங்களது மறைக்கவொண்ணா மகிழ்ச்சியை தொலைக்காட்சிகளில் பகிர்ந்து கொண்டிருந்தனர். இந்நிலையில்தான் ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று வெளிவந்தது ஜெயலலிதாவின் அந்தர்பல்டி அறிவிப்பு.

மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று முந்தின நாள் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையை மறுத்து முதல்வர் அலுவலகத்துக்கு கடிதம் எழுதிய பி.யு.சி.எல் அமைப்பின் மாநிலத் தலைவர் டாக்டர். சுரேஷ் இது தொடர்பான அரசியல் சட்டத்தின் நிலையை அக்கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

அரசியல் சட்டத்தின் பிரிவு 161 ஆளுநருக்கு வழங்கியிருக்கும் இறையாண்மைமிக்க அதிகாரத்தையோ, இபிகோ பிரிவு 54 மற்றும் கு.ந.ச பிரிவு 433 மாநில அரசுக்கு வழங்கியிருக்கும் அதிகாரத்தையோ மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒரு நிர்வாகரீதியான அறிவுறுத்து கடிதம் பறிக்கவோ, கட்டுப்படுத்தவோ இயலாது. மேலும், இந்திய ஒன்றியத்தின் மாநில மைய அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பிரிவினைகள் வரையறுக்கப்பட்டுள்ள துறைகளில், குடியரசுத்தலைவர் மேல் என்றும் ஆளுநர் கீழென்றும் (அதாவது மைய அரசு மேல், மாநில அரசு கீழ் என்று) கருதும் அதிகாரப் படிநிலை அணுகுமுறை பொருந்தாது என்பதே அரசியல் சட்டத்தின் நிலை. எனவே, குடியரசுத்தலைவர் நிராகரித்த மனுவை மீண்டும் குடியரசுத்தலைவர்தான் பரிசீலிக்க இயலும் என்ற கருத்து தவறு என்று அவரது கடிதம் விளக்குகிறது.

ஆர்த்தெழுந்தது தமிழகம்: மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் நடத்திய ரயில் மறியல் போராட்டம்

இவையெல்லாம் தமிழக அரசுக்கோ, ஜெயலலிதாவின் ஆலோசகர்களுக்கோ தெரியாததல்ல. சட்டப்பிரிவு 161 அம்மாவின் கருணைக்கரங்களைக் கட்டிப் போட்டிருப்பதனால்தான், தூக்கு தண்டனையை அம்மா ரத்து செய்யமுடியவில்லை என்று அ.தி.மு.க வைச் சேர்ந்த அடிமுட்டாளும்கூட நம்பமாட்டான். ஏனென்றால் கடந்த 20 ஆண்டுகளாக ஜெயலலிதா தமிழகத்தில் நடத்திவரும் அரசியலின் மையப்புள்ளியே புலி பீதியூட்டுவதுதான் . ராஜீவ் கொலைப் பழியை தி.மு.க.வின் மீது போட்டு, ராஜீவின் பிணத்தின் மீதேறித்தான் ஜெயலலிதா முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றினார். அன்று ஈழத்தமிழர்களுக்கும், ஈழ ஆதரவாளர்களுக்கும் எதிராக அவர் ஆடிய பேயாட்டத்தை யாரும் மறந்துவிடவில்லை.

தடா, பொடா சட்டங்களை ஏவியதாக இருக்கட்டும், புலிகள் இயக்கத்தை வேரறுப்பதற்கு முனைந்து நின்றதாக இருக்கட்டும், தமிழ்ச்செல்வன் மரணத்துக்கு இரங்கல் கவிதை எழுதியதற்காக கருணாநிதியைக் சாடியதாக இருக்கட்டும் அனைத்திலும் ‘மாறாத கொள்கை உறுதி’யை பார்ப்பன பாசிச ஜெயலலிதா காட்டி வந்திருக்கிறார். ஒரு தாய் என்ற காரணத்தினால் நளினியின் மரண தண்டனையை அன்றைய தி.மு.க. அரசு ஆயுள்தண்டனையாக குறைத்தபோது, அதையும் எதிர்த்த இந்த அம்மையார்தான், “மூவரின் கருணை மனுவை நிராகரித்தவர் கருணாநிதி” என்ற உண்மையை இன்று உலகுக்கு அறிவித்து அவரது சந்தர்ப்பவாதத்தை சாடுகிறார்.

“எதுவும் செய்யமுடியாது” என்று முந்தின நாள் கைவிரித்து விட்டு, மறுநாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் அம்மாவின் அந்தர்பல்டிக்கு அடிப்படை என்ன? மனிதாபிமானமோ, தமிழுணர்வோ 24 மணி நேரத்துக்குள் முதல்வரிடம் ஊற்றெடுத்துப் பெருகி சட்டமன்றத்தில் பாய்ந்துவிடவில்லை. தமிழக மக்களின் மனநிலை குறித்த அவரது மதிப்பீடுதான் மாற்றத்துக்கு உள்ளாகியிருக்கிறது. அதன் விளைவாக முடிவிலும் மாற்றம் வந்திருக்கிறது.

சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகை இட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர்

முதலாவதாக, இம்மரணதண்டனைக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்களில் அவதானிக்கத்தக்கதொரு போர்க்குணம் இருந்தது. அமைப்பு சார்ந்த போராட்டங்கள் மட்டுமின்றி, தன்னெழுச்சியாக  நடைபெற்ற மாணவர்கள்  வழக்குரைஞர்களின் போராட்டங்களும் ஈழப்போரின் இறுதி நாட்களில் தமிழகம் இருந்த நிலையை நினைவூட்டின. சமச்சீர் கல்விக்கான  போராட்டங்களுக்காக தெருவுக்கு வந்து பழகிய மாணவர்களும், ஈழம் மற்றும் உயர் நீதிமன்ற போலீசு தாக்குதல் தொடர்பான பிரச்சினைகளில் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்தியிருக்கும் வழக்குரைஞர்களும் தூக்கு தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நிற்கக் கூடிய சாத்தியப்பாடு  விளங்கிக் கொள்ள முடியாததல்ல.

மூவரின் தூக்கு தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த தீர்ப்பினை அறிந்தவுடன் மகிழ்ச்சிப் பெருக்கில் கொப்புளித்த மக்கள் வெள்ளம்.

1991-இல் ராஜீவின் உடலைக் கண்டு தமிழகம் அழுததும், அந்தக் கண்ணீரை ஓட்டுகளாக ஜெயலலிதா மாற்றிக் கொண்டதும் உண்மைதான். ஆனால், அது வேறு தமிழகம். இன்று, இன அழிப்புப் போரைத் தடுக்க முடியாமல் தோற்றது மட்டுமின்றி, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை  தண்டிக்க முடியாமல் பாதுகாத்து நிற்கும் டெல்லியைக் கண்டு குமுறிக் கொண்டிருக்கிறது, ஒரு தலைமுறை. இந்த குமுறலின் மீது உப்புக் காகிதத்தைத் தேய்க்கும் விதமாக மூவரின் தண்டனையை நிறைவேற்ற முற்பட்டால், அது தோற்றுவிக்கும் காயமானது பார்ப்பனக் கும்பலையும் அவர்களது தேசியத்தையும் வெறுக்கின்ற புதியதொரு  தலைமுறையை உருவாக்கக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்க, ‘அபாயகரமான’ அந்த சாத்தியப்பாட்டினைத் தடுப்பதற்கானதொரு உபாயமாகவும் அம்மா இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கக் கூடும்.

மூன்றாவதாகவும் ஒரு காரணம் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் இடைக்காலத்தடை கிடைத்துவிடும் என்பது ஓரளவு சட்டம் தெரிந்த அனைவரும் எதிர்பார்த்த விடயம். வேறொரு வழக்கில் கருணை மனுவின்மீது கருத்து கூறாமல் 2 ஆண்டுகள் தாமதித்ததையே காரணம் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். 11 ஆண்டுகள் என்பது எவ்விதத்திலும் நியாயப்படுத்த இயலாத தாமதம் என்பதால், இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைப்பதற்கான சாத்தியம் அதிகம் என்றே சொல்லவேண்டும். இத்தகைய சூழலில், சட்டமன்றத்தின் மூலம் குடியரசுத் தலைவருக்கு விடப்படும் வேண்டுகோள் அரசியல் ரீதியில் தனக்கு உபயோகமானதாக இருக்கும் என்றும் ஜெயலலிதா கணக்கிட்டிருக்கக் கூடும்.

இக்காரணிகள் அனைத்தின் கூட்டல் கழித்தலில் வந்திருக்கக் கூடிய விடைகளில் ஒன்றுதான் ஜெயலலிதாவின் சட்டமன்றத் தீர்மானம். இது அமைச்சரவை முடிவல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். ஆட்சிக்கு வந்த மறுகணமே உடுக்கை இழந்தவன் கைபோல மெட்ரிக் முதலாளிகளின் இடுக்கண் களைவதற்காக நீண்ட கரங்கள் அல்ல இவை. இது அரசியல் ஆதாயத்தை ஜேப்படி செய்வதற்காக நீண்டிருக்கும் கரம். அதிலும் கூட கொஞ்சம் வேண்டா வெறுப்பாகவே நீட்டப்பட்டிருக்கும் கரம். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்குமாறு மத்திய அரசைக் கோருகின்ற தீர்மானத்தைப் போல, இது இன்னொரு தீர்மானம். அவ்வளவே.

உண்மை இவ்வாறிருக்க, “இலங்கை அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய ஜெயலலிதாவை இக்கட்டில் ஆழ்த்துவதற்காகத்தான் காங்கிரசு அரசு கருணை மனுவை நிராகரித்திருக்கிறது” என்றொரு நகைக்கத்தக்க காரணத்தைக் கண்டுபிடித்து வெளியிட்டிருக்கிறார்கள், “ரூம் போட்டு” சிந்திக்கும் சில அறிஞர் பெருமக்கள். ‘தமிழினத்தின் மானத்துக்கு மரணதண்டனை விதிக்காதீர்கள்’ என்பதுதான் நாம் இவர்களிடம்  பணிந்தளிக்கும் கருணை மனு.

குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவை நிராகரித்து கடிதம் அனுப்பியிருப்பது மத்திய உள்துறை அமைச்சகம். அதன் அமைச்சர் ப.சிதம்பரத்துக்கும் ஜெயலலிதாவுக்கும் ஓட்டுக்கட்சி அரசியல் களத்தில் முரண்பாடுகள் இருந்த போதிலும், ஈழப்போராட்டத்தை ஒடுக்குவதில் அவர்கள் கொள்கை ரீதியான ஒற்றுமை உடையவர்கள். தமக்கிடையிலான சில்லறை முரண்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தேசியநலனுடன்’ தொடர்புள்ள விடயங்களில் சேர்ந்தியங்கும் ‘பக்குவம்’ உடையவர்கள். மேலும், தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் அம்மாவின் ஆட்சி அமைந்திருக்கும் இந்தச் சூழல்தான் சுமுகமாகவும், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏதும் இல்லாமலும் தூக்கு தண்டனையை நிறைவேற்றத் தகுந்த சூழல் என்று மத்திய உளவுத்துறைகளும் மதிப்பிட்டிருக்கும். தமது மதிப்பீடு முற்றிலுமாய்ப் பொய்த்துவிடும் என்று உளவுத்துறையினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

அவர்கள் மட்டுமா, ஆகஸ்டு 30  ஆம் தேதியன்று இப்படியொரு அந்தர்பல்டி தீர்மானத்தை முன்மொழியப் போகிறோம் என்பதை ஆகஸ்டு 29  ஆம் தேதியன்று ஜெயலலிதாவே எண்ணிப்பார்க்கவில்லை என்பது மட்டுமல்ல, இத்தகையதொரு துரதிருஷ்டம் குறித்து சோதிடர்கள்கூட முதல்வரை எச்சரித்ததாகத் தெரியவில்லையே.

இந்த சட்டமன்றத் தீர்மானம் சில அரசியல் துணை விளைவுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. “ஜெயலலிதாவைப் போல, காஷ்மீர் சட்டமன்றத்தில் அப்சல் குருவின் தூக்கு தண்டனைக்கு எதிராக நான் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால், அதற்கான எதிர்வினை இவ்வளவு அமைதியாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா. “இதே தீர்மானத்தை இந்தக் கருணாநிதி நிறைவேற்றியிருந்தால் பிரிவினை வாதம், தேசத்துரோகம் என்று பத்திரிகைகள் என்னை பிரித்து மேய்ந்திருக்க மாட்டார்களா உடன்பிறப்பே”  என்று கேட்கத்தான் கலைஞரும் நினைத்திருப்பார்.

நாம் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், அம்மா உதைத்து விட்டிருக்கும் இந்தப்பாறையானது உருண்டு போகிற போக்கில் பல ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ விளைவுகளை ஏற்படுத்தித்தான் செல்கிறது. தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக சுயேச்சையான பார்ப்பன பாசிஸ்டான ஜெயலலிதா அசைத்திருக்கும் இந்த ஆப்பில், அதிகாரபூர்வ பார்ப்பன பாசிஸ்டுகளான பாரதிய ஜனதாவினரின் உயிர்நிலை மாட்டிக்கொண்டுவிட்டது. அவர்கள் வாயைத் திறக்கிறார்கள், பல்லைக் கடிக்கிறார்கள். ஆனால் வார்த்தை வரமறுக்கிறது. ‘அப்சல் குருவை உடனே தூக்கில் போடு’ என்று தொடைதட்டியவர்கள், அம்மாவின் சட்டமன்றத் தீர்மானத்துக்குப் பின்னர், ‘ஒமர்  அப்துல்லா இப்படிப் பேசுவது துரதிருஷ்டவசமானது’ என்று நெளிகிறார்கள்.

மரண தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு, 21 ஆண்டுகளாகச் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி.

வட இந்திய ஆங்கில ஊடகங்களைப் பொருத்தவரை மூவர் தூக்குக்கு எதிராக தமிழக மக்கள் மத்தியில் எழுந்துள்ள பொதுக்கருத்தையோ, போராட்டங்களையோ அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அத்தகைய பொதுக்கருத்து தோன்றுவதற்கான நியாயம் ஈழத்தின் இனப்படுகொலையிலும் இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பிலும் இருக்கிறது என்பதையும் அவர்கள் அங்கீகரிப்பதில்லை. ‘இந்திய தேசியத்தின்’ சந்தேகப் பட்டியலில் நிரந்தரமாக அவர்கள் தமிழகத்தை வைத்திருக்கிறார்கள். ‘திராவிடதமிழ் அரசியலை’ தைரியமாக எதிர்கொண்டு நின்ற ஜெயலலிதாவும் இப்போது அதற்குப் பணிந்து விட்டார் என்பதுதான் அவர்களது மனக்குமுறல்.

தேசத்தின் முன்னாள் பிரதமரையே கொலை செய்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வீதியில் போராட்டம் நடத்துவதும், அதனையொட்டி சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றுவதும் அவர்களை நடுங்கச் செய்கிறது. இது நீதித்துறையின் செயல்பாட்டில் குறுக்கிடுவதும் மிரட்டுவதும் ஆகும் என்று அந்த ஊடகங்களில் கருத்துரைக்கின்றனர் அதிகாரபூர்வ அறிவுஜீவிகள்.

இது அபத்தமானதும் அரசமைப்புச்சட்டம் அரசுக்கு வழங்கியுள்ள மன்னிக்கும் அதிகாரத்தை மறுப்பதும் ஆகும். நீதிமன்றம் தனக்கு முன்னால் வைக்கப்படுகின்ற சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தின் தன்மையையும் குற்றவாளிகளையும் முடிவு செய்து தண்டனை விதிக்கிறது. ஆனால் மன்னிக்கும் அதிகாரத்தை பெற்றிருக்கும் அரசு (Ececutive)  குற்றத்தின் தன்மையை ஆராய்வதில்லை. குற்றவாளிகளின் சமூக, கலாச்சார பின்னணி, குறிப்பிட்ட குற்றத்தை இழைக்குமாறு அந்தக் குற்றவாளியைத் தூண்டிய காரணிகள், குற்றத்தின் சமூகப் பின்புலம் ஆகியவற்றை பரிசீலித்து மன்னிப்பு வழங்குவது பற்றி முடிவு செய்கிறது. மரண தண்டனையை ஆயுளாகக் குறைப்பது, ஆயுள்தண்டனையின் காலத்தை குறைப்பது ஆகியவை பற்றி மட்டும்தான் அரசு முடிவு செய்கிறதேயன்றி, குற்றத்திலிருந்து குற்றவாளிகளை விடுவிப்பதில்லை.

ராஜீவ் கொலை வழக்கையே எடுத்துக் கொள்வோம். இந்திய அரசு அதனை ஒரு பயங்கரவாத நடவடிக்கையாக சித்தரிப்பது மட்டுமின்றி, ராஜீவ் கொலை செய்யப்பட்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாகவும் கடைபிடிக்கிறது. ஆனால் ‘ராஜீவ் கொலை ஒரு பயங்கரவாதக் குற்றமல்ல’ என்று தனது தீர்ப்பில் அழுத்தம் திருத்தமாகக் கூறும் உச்ச நீதிமன்றம், ராஜீவைத் தவிர வேறு யாரையும் கொலை செய்யும் நோக்கமோ இந்திய அரசை அச்சுறுத்தும் நோக்கமோ கொலையாளிகளுக்கு இல்லை என்றும், எனவே இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை தடா சட்டத்தின் கீழ் தண்டிக்க இயலாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது. இத்தீர்ப்புக்குப் பின்னரும் ராஜீவ் கொலையுண்ட நாளை பயங்கரவாத எதிர்ப்பு நாளாகத்தான் இந்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் இந்த அயோக்கியத்தனத்தை அதிகாரபூர்வமான நீதிமன்ற அவமதிப்பு என்று சொல்வதா, அதிகாரபூர்வமற்ற அரசியல் குறுக்கீடு என்பதா?

ஒரு சாதாரண கொலைவழக்கை பயங்கரவாதமாக சித்தரிக்கும் இந்த அரசியல் மோசடியின் அடிப்படையில்தான் மூவருக்கும் எதிரான மரண தண்டனை மட்டுமின்றி, புலிகள் இயக்கத்தின் மீதான தடையும் மக்கள் மத்தியில் நியாயப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த வழக்கின் வாக்குமூலங்களும் சாட்சியங்களும் கைதிகளிடம்  மிரட்டிப் பெறப்பட்டவை, அல்லது போலீசால் தயாரித்துக் கொள்ளப்பட்டவை. தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட இந்த சாட்சியங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்காவிட்டால், குற்றவாளிகளை தண்டித்திருக்கவே முடியாது என விசாரணை அதிகாரி கார்த்திகேயன் அன்று கூறியது இங்கே நினைவு கூரத்தக்கது. “ஆனானப்பட்ட ஜோன் ஆப் ஆர்க்கூடச் சித்திரவதை பொறுக்காமல் தன்னை ஒரு சூனியக்காரி என்று ஒப்புக்கொண்டாள். சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மனிதன் எதையும் ஒப்புக்கொள்வான். எனவே தடா சட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் வாக்குமூலம் செல்லத்தக்கது என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படுகிறதெனினும், அது பலவீனமான சாட்சியமே” என்று கூறி உல்ஃபா இயக்கத்தை சேர்ந்த புய்யான் என்பவரை சமீபத்தில் (17.2.2011) விடுதலை செய்தது உச்சநீதிமன்றம். அப்படிப்பட்ட ‘பலவீனமான’ சாட்சியம்தான் இம்மூவரின் மரண தண்டனைக்கும் அடிப்படை.

தனது மகன் உள்ளிட்ட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரிப் போராடிய தமிழக மக்களுக்கு, தீர்ப்பின் பின் கண்ணீர் பெருக்கோடு நன்றி சொல்லும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்.

அது மட்டுமல்ல, எந்த ஜெயின் கமிசன் அறிக்கையில் தி.மு.க. வின் புலி ஆதரவு பற்றிக் குறிப்பிட்டுள்ளதைக் காட்டி 1998   இல் ஐக்கிய முன்னணி ஆட்சியைக் காங்கிரசு கவிழ்த்ததோ, அதே ஜெயின் கமிசன் அறிக்கை ராஜீவ் கொலை தொடர்பாக சந்திராசாமி, சுப்பிரமணியசாமி  ஆகியார் விசாரிக்கப்படவேண்டும் என்று கூறியிருந்தும், அதற்காகவே பலநோக்கு கண்காணிப்பு முகமை (MDMA) ஒன்று ஏற்படுத்தப்பட்டிருந்தும் அத்தகைய விசாரணை எதுவும் நடைபெறவில்லை. ஒரு அரசியல் கொலை வழக்கில், சந்தேகத்திற்கிடமான சிலரை விசாரிக்காமலிருக்கும்போதே ஏனையோரின் உயிரைப் பறிப்பது, அப்பட்டமான அநீதி மட்டுமல்ல, சந்தேகத்திற்கு இடமளிக்கும் சதியும் ஆகும்.

இந்திய  இலங்கை ஒப்பந்த திணிப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு, அமைதிப்படையை திரும்பப் பெற்ற வி.பி.சிங் மீது ராஜீவ் வெளியிட்ட கண்டனம் — ஆகியவற்றின் தொடர்ச்சியாகவும் எதிர்வினையாகவும் நடைபெற்றதே ராஜீவ் கொலை என்று கூறுகிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு. இதுதான் இந்தக் ‘குற்றத்தின்’ அரசியல் பின்புலம். ராஜீவ் கொலையை  ஏற்றுக் கொள்ள இயலாதவர்களும் எதிர்ப்பவர்களும் கூட, அதன் அரசியல் நியாயத்துக்குத் தம்மையறியாமல் தலைவணங்குவதன் விளைவுதான் மூவரின் தூக்கு தண்டனைக்கு எதிரான பொதுக்கருத்து.

‘சங்கடமளிக்கும்’ இந்த அரசியல் பின்புலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மனிதாபிமானம், நிரபராதிகள், மரணதண்டனை ஒழிப்பு என்றெல்லாம் பேசுவதன் மூலம் பரந்த மக்கட்பிரிவினரையும் அரசியல் கட்சிகளையும் இக்கோரிக்கைக்கு ஆதரவாகத் திரட்டிவிட முடியும் என்று கருதுவோர் அம்மயக்கத்திலிருந்து விடுபடவேண்டும்.  இம்மூவரின் இடத்தில் நிற்பவர்கள் தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாக இருந்திருப்பின், தமிழகம் இவர்களைத் திரும்பியும் பார்த்திருக்காது. தன்னுடைய ரத்தத்தின் ரத்தங்களேயானாலும், அவர்களுக்காக ஜெயலலிதா ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கவும் முடியாது.

மரண தண்டனை ஒழிப்பு என்ற பொதுக்கோரிக்கை, ராஜீவுடைய போர்க்குற்றத்தை மூடும் வெள்ளைத்துணி ஆகிவிடக்கூடாது. குற்றம் ராஜீவுடன் முடியவில்லை. முள்ளிவாய்க்காலில் அனைத்தையும் முடித்துப் புதைக்கும் வரையில் இலங்கை இராணுவத்துக்கு இந்திய அரசு துணை நின்றது. இன்னமும் நிற்கிறது. அதனால்தான் பேரறிவாளனும், சாந்தனும், முருகனும் தூக்கு மேடையில் நிற்கிறார்கள். இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை மறித்து நிற்பதனால்தான் அப்சல் குருவும் தூக்குமேடையில் நிற்க நேர்ந்திருக்கிறது.

கருப்புத்துணி மூடித் தூக்கிலிடப்படவோ, கருணை மனுவினால் விடுவிக்கப்படவோ முடியாத, உண்மையின் இந்த முகம்தான் மக்களைப் போராட்டத்தில் இறக்கியிருக்கிறது. மூவரையும் தூக்குமேடையிலிருந்து இறக்க வல்லதும் அதுதான்.

_________________________________________________________________

மருதையன், புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2011

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்: