Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 161

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்

#getoutravi இயக்கம்

ஜனவரி 25 அன்று இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் சமூக வலைத்தளங்களில் #getoutravi என்பதை நிரப்புவோம்! 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இம்மாதம் உளறத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சரவை எழுதி கொடுத்ததற்கு மாற்றாக தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர் கருணாநிதி ஆகிய வார்த்தைகளை பேச மறுத்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் தமிழ்நாடு இலட்சினையை திட்டமிட்டு புறக்கணித்தார். இப்பொழுது, ஆரிய – பார்ப்பன – வேத எதிர்ப்பையே உயிர்நாடியாக கொண்ட தமிழ்நாட்டில் தான் சனாதனம் தோன்றியது என்று பொய் புரட்டு பேசிக்கொண்டு திரிகிறார்.

ஆக, தமிழ்நாட்டுக்கும் தமிழனத்துக்கும் தொடர்ந்து எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi என்ற இயக்கம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆளுநர் ரவிக்கு #getoutravi என்று எழுதப்பட்ட அஞ்சல் அட்டையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 25 அஞ்சல் அட்டைகளை அனுப்பி தமிழின எதிரி ஆர்.என்.ரவிக்கு நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்வோம்.

மேலும் அன்றைய தினம் #getoutravi என்று எழுதப்பட்ட கைத்தட்டிகளை பிடித்து தமிழ் மக்கள் தங்களுடைய படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அன்றைய தினம் #getoutravi என்பதை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321.
Fb : makkal Athikaram

This slideshow requires JavaScript.

பகிருங்கள் ! பரப்புங்கள் !!

ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு | தோழர் அமிர்தா வீடியோ

தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உண்டு கொழுத்த ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறதா என்ன? தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆரிய ரவி வெளியேற்றப்பட வேண்டும்.

ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு | தோழர் அமிர்தா வீடியோ

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!

0

மீபத்தில் தமிழ்நாடு அரசு கனிமச் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் (Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959) திருத்தங்களை மேற்கொண்டது. இது தமிழ்நாட்டின் காப்புக்காடுகளை (Reserve Forests) ஒழித்துக் கட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த திருத்தத்திற்கான அரசாணை தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தால் டிசம்பர் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் பிரிவு 36 உட்பிரிவு 1(A)-இன் படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்விதியைத் திருத்தி காப்புக்காடுகளின் அருகில் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடையை நீக்கிவிட்டது திமுக அரசு.

நவம்பர் 3, 2021 அன்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள் (Wildlife sanctuaries), தேசியப் பூங்காக்கள் (National Parks), புலிகள் காப்பகங்கள் (Tiger reserves) மற்றும் யானைகளின் வலசைப் பாதைகள் (Elephant corridors) ஆகியவற்றிலிருந்து ஒரு கி.மீ தொலைவுவரை கனிமச் சுரங்கங்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்தப் பட்டியலில் இருந்து ‘காப்புக்காடுகள்’ மட்டும் நீக்கப்பட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !


2021ஆம் ஆண்டு தடையால் 200க்கும் மேற்பட்ட குவாரிகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தப்படுகிறார். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதாம்!

இப்பிரச்சினை குறித்துப் பேசிய திமுக அமைச்சர் துரைமுருகன், “உச்சநீதிமன்ற ஆணையும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களும் காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரிகள் இயங்குவதை தடை செய்யவில்லை” என்று கூறினார். மேலும், டி.என். கோதவர்மன் திருமுல்பாட் (TN Godavarman Thirumulpad vs Union Of India & Others) வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, “தேசியப் பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றை சுற்றி 1 கி.மீ தொலைவிற்கு சுரங்கங்கள் அமைக்கக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. காப்புக்காடுகள் குறித்து அத்தீர்ப்பில் கூறப்படவில்லை” என்று சட்ட விளக்கம் வேறு கூறுகிறார்.

காப்புக்காடுகளில் இருந்து 60 மீட்டர் தொலைவில் குவாரிகள் செயல்படலாம் என்று திமுக அரசின் அரசாணை கூறுகிறது. கல் குவாரி மாஃபியாக்கள் லாபம் அடைவதற்காக முன்னர் இருந்த 1 கி.மீ தொலைவு என்பதை தற்போது 60 மீட்டர்-ஆக மாற்றி உள்ளார்கள்.

“ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இப்படியான சூழலில் தமிழக அரசு செய்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தின் பின்னணியில் எந்த நியாயமான காரணமும் இல்லை” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறுகிறார்.


படிக்க: பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !


இந்த சட்டவிதி திருத்தங்களை ரத்துசெய்யக் கோரி விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளன. ஆனால் அமைச்சர் துரைமுருகனின் பேச்சு, திமுக அரசு இம்முடிவில் இருந்து பின்வாங்காது என்பதையே உணர்த்துகிறது. அதாவது கல்குவாரி மாஃபியாக்களின் நலன்களை பாதுகாப்பதில் இருந்து திமுக அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என்பதையே அமைச்சரின் பேச்சு நமக்கு உணர்த்துகிறது.

பாசிச எதிர்ப்பு என்பது வெறும் காவி எதிர்ப்பு மட்டுமல்ல என்பதை ஜனநாயக சக்திகள் உணர்ந்து கொண்டு, திமுகவின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை எதிர்த்து களத்தில் நின்று சமரசமின்றி போராட வேண்டும்.

பொம்மி

தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்

11.01.2023

தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை!
வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு !

பத்திரிகை செய்தி

காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகள் நிறுவிக் கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரத்திற்கான உளவாளியே தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி. அதனால்தான் தமிழ்ப்பெருமை, திருவள்ளுவர் பெருமை என்று பேசிக்கொண்டே தமிழினத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார். தமிழ்நாட்டு சட்டசபையில் அமைச்சரவை எழுதி கொடுத்ததற்கு மாறாக உரையாற்றினார். அதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற மிரட்டுகிறார்.

படிக்க : தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் | தோழர் மருது வீடியோ

இப்போது ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடைபெறும் என்று அறிவிக்கும் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரையும் தமிழ்நாட்டின் லட்சினையையும் நீக்கி இருக்கிறார் ஆரிய ரவி.

தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உண்டு கொழுத்த ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறதா என்ன? தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆரிய ரவி வெளியேற்றப்பட வேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் போராடிய இம்மாதத்தில் தமிழ்நாடு, தமிழ் இனத்தின் மீது இப்படிப்பட்ட ஒரு தாக்குதலை தொடுத்திருக்கிறார் ரவி. தமிழ்நாட்டு மக்களாகிய நாம் இதை இனியும் அனுமதிக்க கூடாது. கோ பேக் மோடி என்று மோடியை விரட்டியடித்த தமிழ்நாடு, தன்னுடைய போர்க்குணமான போராட்டங்களை தொடர வேண்டும்.

படிக்க : தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா? ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு! | மக்கள் அதிகாரம்

நாகாலாந்திலே ரவி நடத்திய அக்கிரமங்களுக்கு எதிர்வினையாகத்தான் அந்த மக்களாலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டார். அவருடைய பிரிவு விழாவில் கூட எந்த ஒரு ஊடகமும் கலந்து கொள்ளாமல் நாகாலாந்து மாநில மக்களின் உணர்வை பிரதிபலித்தன.

அதைப்போலவே தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ரவிக்கு பொங்கல் விழா நடத்த எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே ரவி நடத்தவுள்ள பொங்கல் விழாவினை  ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

லகின் பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியா நாடு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. தீவிர வெப்ப காற்று வீசுவது, ஒரே நாளில் ஒரு மாதத்திற்கான மொத்த மழையும் பெய்துவிடுவது, அதனால் அதீதவெள்ளம் வருவது, உடல் விரைத்து போகும் அளவிற்கு கடுங்குளிர் என பல்வேறு இயற்கை பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் ஆஸ்திரேலிய மக்கள்.

இப்படி மாறுபட்ட காலநிலையால் மக்கள் ஒருபக்கம் பாதிப்பை எதிர் கொண்டுவரும் நிலையில், அந்நாட்டிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விளையாட்டில் ஆர்வமாக இருப்பதால் ஆஸ்திரேலியா நாடு 30 சதவிதம் வருமானத்தை விளையாட்டின் மூலம் ஈட்டி வருகிறது அரசு. விளையாட்டு பொருட்கள் விற்பனை என அனைத்திலும் மிகப்பெரும் வருமானம் ஈட்டப்படுகிறது.

படிக்க : இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

இந்தியாவில் மக்கள் பொழுது போக்கிற்கு சுற்றுலா, சினிமா என செல்வார்கள். ஆஸ்திரேலிய மக்கள் பொழுது போக்கிறகாகக் கூட மைதானத்தில் தான் அதிகம் விளையாட செல்வார்கள். கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து என அனைத்து விளையாட்டுகளையும் தவறவிடமாட்டார்கள். கடன் வாங்கியாவது மைதானம் சென்றுவிடுவார்கள்.

இந்த மோசமான காலநிலை மாற்றத்தால் தற்போது ஆஸ்திரேலியாவில் வெளியரங்க போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நேரப்படி மதிய நேரத்திலேயே மேகமூட்டத்தால் வானம் இருண்டது. சூரியன் உச்சத்தில் நிற்கும் மதிய நேரத்தில் எப்படி வானம் இருட்டாகும். இதுதான் காலநிலை மாற்றத்தின் புதிய சர்ச்சை. இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் இனி வெளியரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடியாத சூழல் உருவாகி பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு சந்திக்ககூடும் என எச்சரிக்கின்றனர் ஆஸ்திரேலியா  பொருளாதார நிபுணர்கள்.

கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு கோடைகாலத்தில் மட்டும் 2.84 கோடி ஏக்கர் பசுமைக் காடுகள் கடும் காட்டுத் தீ-ஆல் நாசமானது. இதில் 300 கோடி விலங்குகள் இடம்பெயர்ந்தும் இறந்தும் போனதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் பொதுமக்கள் 30 பேர் இறந்துள்ளனர். இது பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியா எதிர்கொண்டுவரும் அபாயகரமான நிலையை நமக்கு உணர்த்துகிறது.

இதேபோன்று அமெரிக்கா மௌனா லோவா தீவில் அமைந்துள்ள ஹவாய்  எரிமலை, நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரமாக வெடித்து நெருப்பு குழம்புகளை அதிக அளவில்  வெளியேற்று வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படக்கூடும், எனவே அனைவரும் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்நாட்டு அரசு எரிமலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மேலும் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்படும் காட்டு தீ  என்பது 1972 முதல் 2018 வரை இருப்பதைக்காட்டிலும் தற்போது 5 மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த காட்டு தீயினால் வெளியேறும் கரும்புகை மற்றும் சாம்பல்களினால் அந்த நகரமே இருள் சூழ்ந்தது போன்று மாறியுள்ளது.

படிக்க : பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!

அதை தொடர்ந்து ஆசிய கண்டத்தின் பருவநிலை மாற்றத்தின் வெளிப்பாடாக இதுவரை கண்டிராத அளவுக்கு பாகிஸ்தான் நாட்டின் நிலப்பகுதி 3 பங்கில் 1 பங்கு முழுவதும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. அதிலிருந்து அந்நாட்டை மீட்க பல்வேறு நாடுகள் பலகட்ட உதவி செய்கின்றன. கடுமையாக பாதிப்பட்ட அந்நாட்டு மக்கள் தன் உயிரை காப்பற்றிக் கொள்ள கடும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

இப்படி உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே உள்ள பிணைப்பு அறுந்து இயற்கையை சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவ லாபவெறியை எதிர்ப்பதை தவிர வேறேன்ன இருக்கிறது நமக்கு.

டேவிட்

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!

கொரோனா பெருந்தொற்றில் தற்காலிகமாக பணியாற்றிய செவிலியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பெரும்தொற்று மிகப்பெரும் அழிவை உண்டாக்கியது. இதையொட்டி அன்று இருந்த அதிமுக அரசு மருத்துவமனையில் ஆறு மாதம் தற்காலிகமாக செவிலியர்கள் பலரை பணியமர்த்தியது. அப்பணி தொடர்ந்து பலமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது டிசம்பர் 31, 2022 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த பணி நீட்டிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்போவகதாக அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து, தங்களுக்கு நிரந்தரமாக பணி வழங்கக்கோரி தமிழ்நாட்டு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள் செவிலியர்கள்.

படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !

சென்னையில் நடைபெற்றப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் ஒருவர், “திமுக தேர்தல் அறிக்கையின் 356-வது வாக்குறுதியின் படி ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு தனது வாக்குறிதியை நிறைவேற்றாமல் எங்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

கோவையில் கடந்த பத்து நாட்களாக செவிலியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 10 அன்று கையில் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் ஒருவர் கௌசியா, “நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். கொரோனா காலத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் பணியில் சேர்ந்தோம். இப்பணிக்கு பல்வேறு சலுகைகள் தருகிறோம் என்று அரசு கூறியது. எனினும் மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் நாங்கள் கொரோனா மீட்பு பணியை மேற்கொண்டோம். கடந்த ஆறு மாதமாக எங்களுக்கு சம்பளமோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படவில்லை. நான் கருவுற்றிருந்த போது விடுப்புக்கூட எடுக்காமல் மக்களுக்காக கொரோனா மீட்பு பணியை செய்தேன். தற்போது எங்களின் போராட்டத்தை அரசு அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளவில்லை. எங்களுக்கு பணி நிரந்தரமும் பணிப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்” என்றார் வேதனையுடன்.

இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் விழுப்புரம், கிருஷ்ணகிரி, சென்னை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் சேலத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க : மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மா.சுப்ரமணியம் “போராடும் செவிலியர்கள் ஜனநாயக ரீதியாக போராடுவது சரி, ஆனால் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து நிரந்தரம் செய்ய வேண்டும் என்று செவிலியர்கள் போராடுவதை காரணம் காரியம் அறிந்து போராட வேண்டும்” என்று கூறுகிறார்.

போராடக் கூடிய செவிலியர்கள், கொரோனாவில் மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் உயிரை பனையம் வைத்து சேவை செய்தார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை முடிந்ததும் வெளியேற்றப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு! செவிலியர்கள் போராட்டத்திற்கு துணைநிற்கவேண்டியதே நம் அனைவரின் கடமை.

ரோகித் வெமுலா

இந்தியாவின் தலைநகராம் டெல்லி?  கைகளால் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம்!

டந்த நவம்பர் 13, 2022 அன்று MAZA (தொழிலாளர் உரிமைகள் மற்றும் போராட்டங்களுக்கான இயக்கம்) சார்பாக தொழிலாளர் நலச்சட்டத் திருத்தம் ரத்து உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம், பேரணி நடைபெற்றது. இதில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சார்பாக கலந்து கொண்டோம்.

இந்தப் போராட்டத்துக்கு வெளியே நாம் பார்த்த காட்சிகள் வடஇந்தியாவின் உண்மை முகத்தை ஓங்கி அறைவதுபோல் உணர்த்தியது. தலைநகர் டெல்லியில் உணவகங்களின் நிலை, சாலையோர கடைகள், வீடுகள், பற்றிப் படர்ந்திருக்கும் தூசிகள், குப்பைகள் அம்மக்களின் துயரமான வாழ்நிலையை நமக்கு உணர்த்தி விடுகின்றன. மக்களின் வாழ்நிலை படுமோசமாக இருக்கிறது.

படிக்க : நேர்காணல் : ஒக்கிப் புயலின் ஐந்தாம் ஆண்டு – மீளா துயரத்தில் மீனவர் வாழ்க்கை!

டெல்லி, ஆக்ரா இரண்டு நகரங்களிலும் இதுதான் நிலைமை. டில்லி நகரில் காலைக் கடன்களுக்காக பொதுக் கழிப்பிடத்தைப் பயன்படுத்தினோம். அப்போது அங்கு கண்ட காட்சி  இதயத்தை உலுக்குவதாக இருந்தது. கழிப்பிடத்தை துப்புரவுத் தொழிலாளர்கள் கையுறையின்றி பிளாஸ்டிக் குப்பை பேப்பரைப் பயன்படுத்திக் கழுவுகின்றனர். தூய்மை பாரதம் என்று மோடி அரசு கூவிக் கொண்டிருக்கும் யோக்கியதை இதுதான்.

சங்கி கும்பலின் இன்னொரு அவதாரமான நடுத்தர வர்க்க நாயகனாக முன்னிறுத்தப்படும் கெஜ்ரிவால் ஆட்சியின் உண்மை முகமும் இதுதான். துடைப்பம் சின்னத்தை வைத்துக் கொண்டு ஓட்டுப் பொறுக்கும் கெஜ்ரிவாலின் அரசாங்கம் கழிவறைகளுக்கு துடைப்பம் வாங்கிக் கொடுப்பதற்குக் கூட வக்கில்லாமல் இருக்கிறது. இப்படிப்பட்ட கெஜ்ரிவாலைத்தான் பிஜேபிக்கு மாற்று பலரும் முன்னிறுத்துகிறார்கள்.

ஆக்ராவில் ஒரு உணவகத்தில் மதிய உணவு சாப்பிட்டோம். ஒரு சாப்பாட்டின் விலை ரூ.150 கூட கொஞ்சம் சாப்பாடு வைய்யுங்கள் என்று கேட்டதற்கு ஓட்டல்காரர் “இது தமிழ்நாடு இல்ல, இங்க நடக்கிறது யோகி ஆட்சி” என்று கூறினார். தாராளமாக உணவு கொடுக்கும் நிலைமை கூட இல்லை. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் மக்கள் நலத்திட்டங்களை குறைந்தபட்சம் செய்ய வேண்டும். அதன் மூலமாகத்தான் இங்கு முதலாளித்துவத் தொழில் வளர்ச்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்ற நிலைமையும், தங்கள் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலைமையும் உள்ளது. ஆனால் உத்தரப்பிரதேசத்தில் மக்களை பாசிஸ்டுகள் வறுமையில் வாட்டினாலும் மதவெறியை ஊட்டினால் போதும் என்ற நிலைமைதான் உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

டெல்லி, ஆக்ரா நகரங்களில் சாலையோர வியாபாரம் செய்பவர்கள் கூட பொருட்களை தரையில் போட்டுத்தான் விற்கின்றனர். தரைவிரிப்பு கூட இல்லை. சிறுநீர் துர்நாற்றத்துக்கு இடையில்தான் வியாபாரம் நடக்கிறது.

அதேசமயம் ராஜ்பவன் – நொய்டா செல்லும் சாலைகளும், கட்டிடங்களும் மட்டும் உலகத்தரத்தில் இருக்கின்றன. கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சிதான் நடைபெறுகிறது என்பதை உணர்வதற்கு டெல்லியை ஒருமுறை சுற்றிப் பார்த்தால் போதும்.

டெல்லியை சுற்றிவரும் பழைய பேருந்துகள், பராமரிப்பு இல்லாத ஆட்டோக்கள், மீன்பாடி வண்டிகள், சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இவைகளைத்தான் பெரும்பாலும் மக்கள் பயன்படுத்துகின்றனர். சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இன்னும் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது.

இதன்மூலம் வட இந்தியாவின் ஒட்டுமொத்த நிலைமையை நம்மால் உணர முடிகிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகள் எப்படிப்பட்ட நிலைமையை வளர்த்தெடுத்திருக்கிறார்கள் என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஒட்டுமொத்த சமூகத்தையும் பின்னோக்கி இழுத்துச் செல்கின்றனர். உழைக்கும் மக்களின் வாழ்க்கையைப் பற்றி எள்ளளவும் அவர்களுக்கு கவலையில்லை என்பதே உண்மை.

படிக்க : நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!

மத்திய அரசு மக்கள் நலப் பணிகளுக்காக ஆண்டுதோறும் ஒதுக்கும் நிதி எங்குப்போகிறது என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. கார்ப்பரேட் கொழுத்திருக்கும் நிலைமையைப் பார்க்கும்போதும், மதவெறி கொழுந்துவிட்டெரிவதைப் பார்க்கும்போதும் நிதி எங்கு போகிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

காவி பாசிஸ்டுகளின் வளர்ச்சி என்பது வடஇந்தியாவில் இத்தகைய அவலத்தைத்தான் சாதித்துள்ளது. இந்த இருண்ட காலத்தைத்தான் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பரப்ப எத்தனிக்கிறது காவிக் கும்பல்.

பரசுராமன் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – பிரச்சாரக்குழு – ஓசூர்

சென்னையின் தீண்டாநகரம்: கண்ணப்பர் திடல் | வீடியோ

சென்னை பெரியமேடு பகுதிக்கு அருகில் உள்ள அமைந்துள்ளது கண்ணப்பர் திடல் எனும் பகுதி. இங்கு வாழும் மக்கள் பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி, மோசமான வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர். பலமுறை அரசிடம் மனுகொடுத்தும் போராட்டங்கள் நடத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு கட்டும் குடிசை மாற்று வாரிய வீடுகளுக்கு பணம் கேட்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள் கண்ணப்பர் திடல் மக்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!

தற்போது விற்பனையில்...

சோறு தின்பவர்களின் பிரச்சினை! – நூல் அறிமுகம்

ண்மைக் காலங்களில் விவசாயம் சார்ந்த மாத இதழ்கள் அதிக அளவில் வந்து கொண்டிருக்கின்றன. விவசாயத்தின் மூலமாக நன்கு சம்பாதிக்கலாம் என்பது இவை பரப்புகின்ற முக்கியமான கருத்தாகும்.

இது, பரப்பப்படும் கருத்தல்ல, மக்கள் மத்தியில் கார்ப்பரேட் ஊடகங்கள் விதைக்கும் நச்சுக் கருத்தாகும். எதனையும் தீர பரிசீலிக்கும் திறன் குறைந்துவருகின்ற இன்றைய அரசியல், சமூகச் சூழலில், விவசாயம் தொடர்பாக பரப்பப்படும் இவ்வாறான கருத்துகள், விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள், அவர்கள் படுகின்ற துன்பங்கள், அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் விவசாயிகளுக்கு எதிராக மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள இயலாமல் தடுக்கும் ‘மாய’க் கண்ணாடி தான் இக்கருத்தாகும்.

தொடர்ச்சியான நகரமயமாக்கத்தின் விளைவாக, பெரும்பாலான மக்கள் விவசாயத்தில் இருந்தும் விவசாயப் பின்னணியில் இருந்து பிரிந்து வருகின்றனர். இது விவசாயிகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளைப் புரிந்து கொள்ள இயலாமல் போவதற்கு மற்றொரு காரணமாகும்.

படிக்க : ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்ட மசோதா: தேவை, ஒரு மக்கள் போராட்டம் !

ஏறக்குறைய, இந்தியாவில் பாரம்பரிய வடிவிலான விவசாயம் என்பது அதன் அந்திம நிலையை சந்தித்து வருகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில்(GDP) விவசாயம் குறைவான பங்கையே வகிக்கிறது. ஆனால், இந்த நாட்டின் ஆகப் பெரும்பான்மையான மக்கள் இன்னும் விவசாயத்தையே சார்ந்து வாழ்கின்றனர். இன்னும் கார்ப்பரேட் முதலாளிகள் விவசாயத்தில் புகுந்து அடிக்கும் கொள்ளையைக் கணக்கிட்டால் விவசாயிகளின் வருவாய் என்பது மிகமிக மோசமாகும். இந்த நிலைமை, விவசாயம் எந்த அளவிற்கு அழிக்கப்பட்டு விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்பதற்குச் சான்றாகும்.  நாள்தோறும் அதிகரித்துவரும் விவசாயிகள் தற்கொலை இதன் வெளிப்பாடாகும்.

விவசாயம் அழிந்ததற்கான காரணங்களை பலரும் அவரவர் அறிந்த வகையில் விளக்கி வந்தாலும் சரியான காரணங்களையும் அதற்கான தீர்வுகளும் முன்வைக்கப்படுவதில்லை. விவசாயமும் விவசாயிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி அரிதும் அரிதாகவே நூல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

இச்சூழலில், மக்கள் அதிகாரம் கொண்டுவந்துள்ள, “மறுகாலனியாக்கத்தின் இரும்புப் பிடியில் சிக்கியுள்ள இந்திய விவசாயம்” என்ற சிறுநூல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்றும் நவீன தாராளவாதம் என்றும் அழைக்கப்படுகின்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் விவசாயத்தில் புகுத்தப்பட்ட பின்னர் ஏற்பட்டு வரும் மாற்றங்களை இந்த நூல் சுருக்கமாக எடுத்துரைக்கிறது.

அரசும் கார்ப்பரேட் நிறுவனங்களும் விவசாயத்தில் புகுந்து மேற்கொள்ளப்படும் இந்த மாற்றங்கள் புதிய வகை விவசாயத்தையும் அதற்கேற்ற சட்டத்திருத்தங்களையும் கொண்டுள்ளது. இவற்றின் குறியிலக்கு, இன்னமும் பாரம்பரிய முறையிலும் சிறுவீத அளவிலும் ஆகப் பெரும்பான்மை மக்களால் மேற்கொள்ளப்படும் விவசாயத்தைக் கைப்பற்றிக் கொள்வதும், நவீனம் என்கின்ற பெயரில் மக்களுக்கும் இயற்கைக்கும் எதிரான நச்சு, பேராபத்துக் கொண்ட விவசாயத்தைப் புகுத்துவதுமாகும்.

குறிப்பாக, மோடி அரசு அண்மையில் கொண்டுவர முயற்சித்த மூன்று வேளாண் சட்டங்கள் முதல் இனி எதிர்காலத்தில் கொண்டு வர இருக்கின்ற மாற்றங்களும் இந்த வகையிலானவை. இவற்றின் பின்னணி பற்றியும் பிற நாடுகளின் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்களில் இருந்து இந்த சிறுநூல் எடுத்துரைக்கிறது.

பில்கேட்ஸ், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டுக் கம்பெனிகளும் மகேந்திரா, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா, பாரத் பயோடெக், பயாலஜிக்கல்-ஈ போன்ற இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களும் இணைந்து டிஜிட்டல் முறையிலான விவசாயத்தைப் புகுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும், விவசாயம் தொடர்பான தகவல் திருட்டுகளில் ஈடுபடுவதைப் பற்றியும் இதற்கு மோடி அரசு செய்துவரும் துரோகத்தனமான ஆதரவு குறித்தும் விரிவாக விளக்கியுள்ளது, இந்நூல்.

டிஜிட்டல் தரவுகள் மூலம் விவசாயம் கட்டுப்படுத்தப்படுவது குறித்தும், செங்குத்துமுறை விவசாயம் என்ற புதிய நாசகரமான இயற்கைக்கு எதிரான விவசாய முறை குறித்து இந்நூல் விரிவாக விளக்கியுள்ளது.

படிக்க : ஹல்த்வானி: ஆக்கிரமிப்பு அகற்றமா? இஸ்லாமிய மக்கள் மீதான படையெடுப்பா?

இதைப் போலவே, பால் உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கம் அதிகரித்து வருவதையும் அது தொடர்பான சட்டங்கள், திட்டங்களும் தனித்தலைப்பாக விளக்கப்பட்டுள்ளது. “இந்தியாவில் விரிவடையும் கார்ப்பரேட் பால் நிறுவனங்கள்” என்ற தலைப்பில், ஜெர்ஸி, ஹெரிட்டேஜ் புட்ஸ், ரிலையன்ஸ், குவாலிட்டி லிமிடெட், ஹட்சன் அக்ரோ, குரூப் லேக்டலிஸ், பராக் மில்க் புட்ஸ், நெஸ்லே, டேன்ஒன், ஃப்யூச்சர், ஷ்ரீய்பெர், டைனமிக்ஸ் போன்ற கார்ப்பரேட் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியில் ஆதிக்கம் புரிவதை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பால் உற்பத்தியில் கார்ப்பரேட் ஆதிக்கத்தின் விளைவாக, இந்திய அரசாங்கத்தில் இருந்த பால் உற்பத்தி தொடர்பான பல்வேறு திட்டங்கள், கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டதையும் இந்த நூல் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.

சமகாலத்தில் விவசாயத்தில் ஏற்படும் மாற்றங்களை விரிவாக அலசும் இந்த நூல், இந்த மறுகாலனியாக்கத் தாக்குதல்களுக்கு எதிராக உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து ஒரு விடுதலைப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறது! அப்படி ஒரு போராட்டத்திற்கு மக்களைத் தயார்ப்படுத்த இந்த நூல் ஒரு ஆயுதமாகத் திகழும்!

நன்கொடை : ரூ.70
நூலைப் பெற தொடர்பு கொள்ளவும் : 99623 66321

தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் | தோழர் மருது வீடியோ

மிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் வாழக்கூடிய ஆளுநர், ‘தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும்’ என்று கூறுகிறார் என்றால் அவருக்கு எவ்வளவு தைரியம் திமிர் இருக்கும். தமிழ்நாடு என்பதை தமிழகம் என மாற்றினால் பொருத்தமாக இருக்கும் என்றால் ஆளுநரை எப்படி அழைத்தால் பொருத்தமாக இருக்கும்.

ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்-இன் ஆளாகவே பேசிவருவது இது முதல்முறையல்ல. தொடர்ச்சியாக இவ்வாறு பேசிவரும் ஆர்.என்.ரவிக்கு இனி தமிழக மக்கள் மரியாதை கொடுக்கவேண்டுமா என எண்ணிப்பார்க்க வேண்டும். இந்தி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு மரபை உயர்த்தி பிடிக்கக் கூடிய நம்மை இழிவுபடுத்தும் இதுபோன்ற ஆர்.எஸ்.எஸ் கும்பல்களுக்கு இனி தமிழ்நாட்டில் இடமில்லை என்ற வகையில் தமிழக மக்கள் இவர்களை விரட்டியடிக்க வேண்டும்.

தமிழிசை சௌந்தரராஜன், அண்ணாமலை, எல்.முருகன் போன்றவர்கள் ஆளநருக்கு ஆதரவாக பேசுவதில் வியப்பு ஏதும் இல்லை. பூலித்தேவன், கட்டபொம்மன், மருது சகோதரர்களுக்கு துரோகம் செய்தது யார்? சொந்த மக்களையே காட்டிக் கொடுக்கக்கூடிய துரோகிகள் வரலாறு நெடுகிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு நாம் நிராகரிக்க வேண்டும்.

ஜனவரி மாதம் என்பது மொழிப்போர் தியாகிகளுக்கானது. அந்த வகையில் தியாகி சுந்தரலிங்கனார் அவர்களின் உயிர் தியாகத்தை உயர்த்தி பிடிப்போம்! இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் இன்றைய தேவையை அனைத்து பொதுமக்களிடம் கொண்டு செல்வோம்! அப்போதுதான், ஆரிய ரவியை மட்டுமல்ல, மோடி, அமித்ஷா உட்பட அதானி-அம்பானி பாசிச கும்பல் அனைவரையும் முறியடிக்க முடியும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை துட்சமாக மதிக்கும் ஆளுநர் ரவியை கண்டனம் செய்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள் பேசியிருக்கிறார்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தோனேசியா: ‘புதிய குற்றவியல் சட்டம்’ எனும் போர்வையில் அரசு ஒடுக்குமுறை!

0

டந்த டிசம்பர் 6, 2022 அன்று இந்தோனேசிய அரசாங்கம் குற்றவியல் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டது.

இப்புதிய குற்றவியல் சட்டம் 1946 ஆம் ஆண்டில் இருந்து, அதாவது இந்தோனேசியா விடுதலை அடைந்ததாக கூறப்படும் ஆண்டில் இருந்து, நடைமுறையில் இருக்கும் குற்றவியல் சட்டத்தை மாற்றி அமைக்கிறது. இந்த புதிய சட்டமானது டச்சு சட்டம் (Dutch law), ஹுகும் அதத் (hukum adat) என்ற வழமைச் சட்டம் (customary law) மற்றும் நவீன இந்தோனேசிய சட்டத்தின் கூட்டுக் கலவையாகும்.

200 பக்கங்களைக் கொண்ட இச்சட்டம் அதிபர் மற்றும் அரசு நிறுவனங்களை “அவதூறு” செய்வதை கடும் குற்றமாக்குகிறது. அதேபோல், மத நிந்தனைக்கான (blasphemy) வரையறையை மேலும் விரிவாக்கியுள்ளது. 1998 ஆம் ஆண்டில் சுகார்த்தோ-வின் (Suharto) பாசிச சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்த பின்னர் கிடைத்த உரிமைகளுக்கு இது பெரும் பின்னடைவு என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

“இப்புதிய குற்றவியல் சட்டத்தால் அரசையும் அரசின் கொள்கையையும் கேள்வி கேட்கும் அனைவரும் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஒருவர் தனது கருத்தைக் கூறினாலே அது அதிபருக்கு எதிரானது, அரசு நிறுவனங்களுக்கு எதிரானது என்று கூறப்படும்” என்று வழக்குரைஞராக உள்ள சிட்ரா (Citra Referandum) கூறினார்.


படிக்க: இந்தோனேசிய தொழிலாளர் சட்ட திருத்தம் : களமிறங்கிய தொழிலாளர்கள் – மாணவர்கள் !


மேலும் அது திருமண பந்தத்தை மீறிய பாலியல் உறவுக்கும் தடை விதித்துள்ளது. திருமண உறவைத் தாண்டி யாராவது உடலுறவு வைத்துக்கொண்டால் (adultery) ஒரு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும்; பாதிக்கப்பட்ட கணவன்/மனைவி மட்டுமே புகார் அளிக்க முடியும். அதேபோல், திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்ந்தால் (cohabitation/living together) 6 மாதம் சிறை; பெற்றோர்கள் மட்டுமே புகார் அளிக்க முடியும். இச்சட்டம் அந்நாட்டு குடிமக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும்.

இச்சட்டத்தை திருத்துவதற்கான முயற்சி 2019 ஆம் ஆண்டில் மேற்கொண்ட போது, டச்சு காலனி கால சட்டங்களை ஒழித்துக் கட்டுவதன் ஒரு அங்கமே புதிய குற்றவியல் சட்டம் என்று முலாம் பூசினார்கள். ஆனால், அதற்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றதன் விளைவாக அம்முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது இச்சட்டம் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு இருப்பதானது மத பழமைவாதம் எழுச்சி கண்டுள்ளதை நமக்கு உணர்த்துகிறது. இச்சட்டம் 37 அத்தியாயங்களையும் 624 சரத்துகளையும் கொண்டுள்ளது. இது மூன்று ஆண்டுகள் கழித்துதான், அதாவது 2025 ஆம் ஆண்டில்தான், முழுமையாக நடைமுறைக்கு வரும்.

இந்தோனேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் நிர்வாக குழுவைச் சேர்ந்த டஃபி ஹென்சன் (Taffi Hensan) “இந்தோனேசிய அரசின் தத்துவமான பஞ்சசீலம் (Pancasila) என்பதற்கு ஏதுவாக இல்லாத சித்தாந்தங்களை, அதாவது மார்க்சியம் கம்யூனிசம் போன்றவற்றை, பரப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். அரசியல் மற்றும் சமூக அறிவியல் துறை மாணவர்கள் மார்க்சியம் போன்ற பல்வேறு சித்தாந்தங்களை படித்து விவாதிப்பார்கள். அது பஞ்சசீலத்துக்கு எதிராக இருக்கிறது என்று சிறையில் அடைக்கப் போகிறார்களா?” என்று கூறினார்.

மேலும், “மாணவர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு அதிக கெடுபிடிகளை ஏற்படுத்தியுள்ளனர். அரசு அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு வழங்காமல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினால், புதிய சட்டத்தின் கீழ், ஆறு மாதம் வரை சிறையும் கடும் அபராதமும் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இரண்டு வாரம் சிறை என்பதே தண்டனையாக இருந்தது” என்று அவர் கூறினார்.


படிக்க: கேள்வி பதில் : இந்தோனேசிய கம்யூனிஸ்டுகள் படுகொலையின் பின்னணி !


இச்சட்டம் பெண்களின் மகப்பேறு உரிமைகளுக்கு (reproductive rights) எதிராக அமைவதோடு இல்லாமல், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான‌ பெண்ணையே குற்றவாளியாக மாற்றும் வல்லமை கொண்டது. பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால், ‘திருமணத்திற்கு முன் ஒன்றாக வாழ்தல் / திருமண உறவைத் தாண்டி உறவு வைத்தல்’ என்பதைப் பயன்படுத்தி குற்றவாளியாக மாற்றப்படுவார்.

சட்டங்கள் இவ்வாறு திருத்தப்படுவதானது ஒரு உலகு தழுவிய போக்காகும். நவ- தாராளவாத கொள்கைகளால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க அரசுகள் அதிகமாக ஒடுக்குமுறை சட்டங்களை இயற்றுவதும் பயன்படுத்துவதும் நடந்து வருகிறது. அரசுக்கு எதிரான எதிர் குரல்களையும் போராட்டங்களையும் நசுக்குவதே இவற்றின் நோக்கம். பிரிட்டன் காலனித்துவ சட்டங்களை ஒழித்துக்கட்டி புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றப்போவதாக மோடி அரசு கூறுவதோடு நாம் இதைப் பொருத்திப் பார்க்கலாம். மோடி அரசு இயற்றப்போகும் புதிய குற்றவியல் சட்டங்கள் இதைவிட அரக்கத்தனமானதாகத் தான் இருக்கும் என்பதில் ஐயம் ஏதுமில்லை!

பொம்மி

நன்றி: டி.டபிள்யு, அல் ஜசீரா

தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா T.சுப்புலாபுரம் பகுதியில் உள்ள விசைத்தறி, ஒப்பந்த விசைத்தறி நெசவாளர்கள் பல்வேறு தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஜனவரி 2-ம் தேதியில் இருந்து 9 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்கள் 50% கூலி உயர்வு, 20% போனஸ், காப்பீடு உள்ளிட்ட தொழிலாளர் உரிமைகளையும் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளையும் முன்னிறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறி நெசவாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஒப்பந்தம் போடப்படும். கடந்த 2020 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தில் விசைத்தறி நெசவாளர்களுக்கு 13 சதவீதமும் ஒப்பந்த விசைத்தறி நெசவாளர்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு கோரியிருந்தனர். ஆனால் இறுதி முடிவு எட்டப்படவில்லை. ஆதலால் சப் கலெக்டர் இந்த கூலிஉயர்வை அமல்படுத்த ஒரு உத்தரவை பிறப்பித்தார். ஆனால் இதுநாள் வரையில் அவர்களுக்கு கூலி உயர்த்தப்படவே இல்லை. 4 வருடத்திற்கு முன்னால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் படியே கூலி வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாத முதலாளிகளின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து மக்களிடம் கேட்டதற்கு:
“இங்கு வசிப்பவர்களுக்கு நெசவுத் தொழிலைத் தவிர வேறு தொழில் எதுவும் தெரியாது. காலையில் 5 மணிக்கு வேலைக்கு போனால் இரவு 8 மணி வரை வேலை செய்வோம், எட்டு மணி நேர வேலை என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. விலைவாசி எல்லாம் ஏறிக்கிட்டே போகுது ஆனா எங்க கூலி தான் ஏறவே மாட்டேங்குது; நாலு வருஷத்துக்கு முன்ன கொடுத்த கூலி இப்ப கட்டுமா? நாங்கள் ஏறிவரும் விலைவாசிக்கு ஏற்ப தானே கூலி கேட்கிறோம்?” என்று சுப்புலாபுர நெசவாளர்கள் தங்கள் கையறுநிலையை வெளிப்படுத்தினர்.


படிக்க: சேலம் மாவட்டமும் – நெசவுத் தொழில் நெருக்கடியும் !


அதேபோல் கொரோனா காலகட்டத்தில் அரசால் அறிவிக்கப்பட்ட  எந்தவித  நிவாரணமும் நெசவாளர்களுக்கு கிடைக்கவில்லை. நூல் விலை ஏற்றத்தால் ஒரு மாதமாக முடங்கிய போதும் எந்த வித நிவாரணமும் அளிக்கப்படவில்லை.

இந்த பகுதியில் 40 முதல் 45  நிறுவனங்கள் இருக்கிறது, மாதத்திற்கு சுமார் ஒரு கோடி வரை வருமானம் வருகிறது. ஆனால் நெசவாளர்களுக்கு கூலி உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. மேலும் நெசவாளர்கள் சேலையில் பாக்கா பிணைப்பதற்கு அடிப்படை கூலி தர வேண்டும் என்றும் கோரிக்கையில் முன்வைக்கின்றனர்.

முதலாளிகளும் கூலி உயர்த்தாததற்கு ஜி.எஸ்.டி, கொரோனா, உபகரணங்களின் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் லாபம் கிடைக்கவில்லை என்று கூறுகிறார்களே என்று மக்களிடம் கேட்டதற்கு: “முதலாளிகளுக்கு எப்போதும் கட்டாதுன்னுதான் சொல்லுவாங்க;  முதலாளிகள் வாங்கும் கடையில் தான் நாங்களும் தறிக்கு தேவையான பொருட்களை வாங்குகிறோம். விலைவாசி உயர்வால் நாங்களும்தான் பாதிப்பை அனுபவிக்கிறோம். ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் கூலி உயர்வு கிடைப்பதில்லை” என்று கூறினர்.


படிக்க: கோவை – திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போராட்டம் !


முன்பு 400 ரூபாய் க்கு விற்ற காட்டன் நூல் இன்று 600 ரூபாய் வரை விலையேறியுள்ளது. ஆனால் தொழிலாளிக்கு  மட்டும் கூலி அதே நிலையிலேயே நீடிக்கிறது.

இரண்டு கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திண்டுக்கல்லில் இன்று (9.1.2023) தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆணையர் மற்றும் தேனி மாவட்ட சப்-கலெக்டர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. எங்கள்  கோரிக்கைகளை அரசு ஏற்கவில்லை என்றால், 2000 நெசவாளர்களை திரட்டி மிகப்பெரிய போராட்டத்தை இங்கு நடத்துவோம் என்று நெசவாளர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.நெசவாளர்களுக்கு ஆதரவாக ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டி நெசவாளர்களும் ஜன.6-ம் தேதியில் இருந்து போராடி வருகின்றனர். உழைத்து உழைத்து உக்கி போன நெசவாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்

ந்த 21-ஆம் நூற்றாண்டிலும் “தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை ஒரு பெருங்குற்றம்; தீண்டாமை ஒரு மனிதநேயமற்ற செயல்” என்பது புத்தக-ஏட்டில் மட்டுமே உள்ளது.

சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்தன.

பாராட்டிற்குரியதுதான்; ஆனால் அது ஒருபுறம் இருக்கட்டும். நாம் அனைவரும் இந்த மூன்று கேள்விகளுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டிருக்கிறோம்..

சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகியும் தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் நுழைய முடியாத நிலைமையே நீடிக்கிறது. இது ஏன்?

இரட்டை குவளை முறை இன்னும் பின்பற்றப்படுவது ஏன்?

ஆதிக்க சாதி வெறியர்கள் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது ஏன்?

‘இப்பெல்லாம் யார் சார் ஜாதி பார்க்குறாங்க’ என்பவர்களுக்காக தான் இந்த பதிவு!

இவ்வாறு சென்னை பு.மா.இ.மு தோழர் யுவராஜ் அவர்கள் சாதி-தீண்டாமையின் இருப்பை கேள்வி எழுப்பியுள்ளார்..

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

அதிகரிக்கும் வேலையின்மை! அதிகரித்து வரும் தற்கொலைகள்!

மோடி பரிந்துரைக்கும் சுய தொழில் / வேலைவாய்ப்பு

2014 மக்களவை தேர்தலில் ஆண்டுக்கு 2- கோடி  பேருக்கு வேலை  தருவோம் என  பிரதமர் மோடி வாக்குறுதிஅளித்தார். அவர் ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்து விட்டன. வாக்குறுதிப்படி வேலைவாய்ப்பு அளிக்கவில்லை என்பது மட்டுமல்ல, வேலையில் இருந்தவர்கள் வீதிக்கு  விரட்டப்பட்டதோடு புதிய வேலைவாய்ப்புகளும் அருகிவிட்டன. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம்  வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவில் வேலையின்மை விகிதம் நவம்பர் மாதம் 8சதவீதமாக இருந்த நிலையில் டிசம்பரில் 8.30சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 16 மாதங்களோடு ஒப்பிடும் போது இதுவே அதிகபட்ச அளவாகும்.

கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சிபெறுவதற்கு அறிஞர்கள், மற்ற கட்சியினர் முன்வைத்த எந்த ஆலோசனையையும் மோடி அரசு காதில் போட்டுக் கொள்ளவில்லை. மாறாக இந்த நெருக்கடியை பயன்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கொள்ளையடித்துக் கொடுத்து கொண்டிருந்தது. இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாத சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு புத்துயிர் அளிக்க எந்தவொரு நிவாரண நடவடிக்கையும் மேற்கொள்ளபடவில்லை. இதனால் பெரும்பாலான சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்கள் நசிந்து போய் மூடப்பட்டுவிட்டன.

படிக்க : “சம வேலை சம ஊதியம்” கோரிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் உணர்த்துவது என்ன?

மேலும் கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் மறுவாழ்வுக்காக எந்த திட்டங்களையும் அறிவிக்காத மோடி அரசு, ‘ஆத்மநிர்பர்’ என்ற பெயரில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது பணமயமாக்கல், உள்கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் பொதுத்துறை நிறுவனங்களை தாரைவார்த்து வருகிறது.

கொரோனா வருவதற்கு முன்பும் இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டுதான் இருந்தது. மோடி ஆட்சிக்கு வரும்போது இந்தியாவில் வேலைவாய்ப்பை அதிகரிப்பேன் என்றார். ஆனால், தற்போது வரை வேலைவாய்ப்பு அதிகரித்ததாக தெரியவில்லை. ஏற்கனவே வேலைகளில் இருப்பவர்களும் தற்போது துரத்தப்பட்டு வருகின்றனர். ஐ.டி நிறுவனங்களில் கூட லே-ஆஃப் என்ற பெயரில் வேலையில் இருந்து ஊழியர்கள் துரத்தப்படுகிறார்கள். படித்தப் பட்டதாரி இளைஞர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல், வாழ்வாதாரத்திற்காக கிடைக்கும் உதிரி வேலைகளைச் செய்துவருகின்றனர்.

இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாய்ச்சவடாலடித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதிகாரத்திற்கு வந்தபின்பு “பக்கோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்கிறார். இதையே ஆர்.எஸ்.எஸ் “வேலைக்காக காத்திருக்காமல் சுயத்தொழில் தொடங்கி பிழைக்க வேண்டும்” என வேறு வார்த்தையில் சொல்கிறது.

வேலையின்மை, கடன், வியாபார நெருக்கடி பிரச்சினை காரணமாக 2018 முதல் 2020 ஆண்டு வரை தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மட்டும் 25,000 ஆகும். வறுமை காரணமாக அண்ணன், தங்கை தற்கொலை, பணியைவிட்டு நீக்கியதால் புகைப்படக் கலைஞர் தற்கொலை, கடன் தொல்லை அவதியால் விவசாயி பலி, வேலையின்மையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு” என தற்கொலைகளெல்லாம் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.

படிக்க : அடாவடி வேலைநீக்கம்: ஐ.டி நிறுவனங்களுக்கு பதிலடி! | பு.ஜ.தொ.மு

வேலையின்மை என்பது பொருளாதார பிரச்சினையாக மட்டுமின்றி ஆழமான சமூகப் பிரச்சனையாகவும் உருவெடுக்கிறது. படித்த இளைஞர்கள் வேலையின்மை காரணமாக கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமை என பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடவும் ஆரம்பிக்கின்றனர். போதைப் பழக்கம் அதிகரித்து வருவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக வேலையின்மை பிரச்சினை அமைந்துதுள்ளது.

இந்த வேலையின்மை என்ற பிரச்சினை இங்கு தீவிரமாக அமல்படுத்தப்படும் மறுகாலனியாதிக்க கொள்கைகளினால் ஏற்பட்ட விளைவாகும். அதனை அமல்படுத்தும் இந்த பாசிச மோடி அரசை படித்த இளைஞர்களும், கடன் சுமையால் தவிக்கும் சிறு-குறு வணிகர்கள் மற்றும் விவசாயிகள், உழைக்கும் மக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து  இந்த அரசையும், இந்த நாசகார மறுகாலனியாதிக்கக் கொள்கையையும் தகர்த்துத்தெரியாமல் நாம் இந்த வேலையின்மையால் அதிகரிக்கும் தற்கொலை பிரச்சினையில் இருந்து மீள முடியாது.

சத்தீஸ்கர்: கிறிஸ்தவ பழங்குடிகள் மீது வன்முறையை ஏவும் ஆர்.எஸ்.எஸ்!

0

த்தீஸ்கர் மாநிலத்தின் பஸ்தர் பகுதியை ஆர்.எஸ்.எஸ் மதக் கலவரத்திற்கான புதிய மையமாக உருவாக்கியுள்ளது. கடந்த ஜனவரி 2-ஆம் தேதியன்று நாராயண்பூர் நகரில் ஒரு கும்பல் தேவாலயத்தை சூறையாடியது; தடுக்க முயன்ற போலீசுகாரர்களையும் தாக்கியது. கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக போராட்டம் நடத்தத் திட்டமிட கூட்டம் ஒன்று நடைபெற்றதைத் தொடர்ந்து இந்த வன்முறை சம்பவம் அரங்கேரி உள்ளது.

இதற்கு முன்னதாக, ஜனவரி 1-ஆம் தேதியன்று, கோரா (Gorra) கிராமத்தில் கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவர்-அல்லாத பழங்குடிகளுக்கு இடையில் நடைபெற்ற மோதலில் கிராம மக்கள் பலரும் போலீசுகாரர்களும் காயமடைந்தனர். அதேபோல டிசம்பர் 18 அன்று, நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் ‘தாய் மதம் திரும்புதல்’ (Ghar Wapsi) என்பதற்கு உடன்படாத பழங்குடிகள், கிட்டத்தட்ட 500 பேர், அப்பகுதிகளில் இருந்து வன்முறை மூலமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணம், ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச் (Janjati Suraksha Manch) என்ற ஆர்.எஸ்.எஸ்-இன் கிளை அமைப்பே ஆகும். ஒரு வருட காலமாக, முன்னாள் பாஜக எம்.எல்.ஏ-ஆன போஜ்ராஜ் நாக் (Bhojraj Nag) தலைமையேற்று இப்பகுதியில் மத முனைவாக்கத்தை உருவாக்கியதன் விளைவே தற்போது நடைபெற்று வரும் இக்கலவரங்கள்.

நாராயண்பூர் மற்றும் கொண்டகான் மாவட்டங்களில் பல்வேறு பேரணிகளை நடத்திய போஜ்ராஜ் நாக், கடந்த நவம்பர் 6 அன்று “பழங்குடிகளுக்காக வழங்கப்படும் ஆதாயங்களை இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும் போது கிறிஸ்தவர் என்றோ இஸ்லாமியர் என்றோ அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள். இவர்களுக்கு இடஒதுக்கீடு தருவதை நிறுத்த வேண்டும். அதற்காக நீதிமன்றம் செல்ல இருக்கிறோம்” என்று கூறினார். ஒருபுறம் நீதிமன்றத்தை நாடுவதாக கூறிவிட்டு மற்றொருபுறம் கலவரத்தை தொடங்கிவிட்டனர்.


படிக்க: அதிகரித்துவரும் கிறிஸ்தவ சிறுபான்மையினரின் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்கள்!


சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 30.6 சதவிகிதத்தினர் பழங்குடிகள் ஆவர். காலனிய காலத்திலிருந்து கிறிஸ்தவ மிஷனரிகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. கிறிஸ்தவ அமைப்புகள் பழங்குடிகளை ஏமாற்றியும் கட்டாயப்படுத்தியும் மதமாற்றம் செய்து வருவதாகக் கூறி ஆர்.எஸ்‌.எஸ் கிறிஸ்தவ வெறுப்பை பரப்பி வருகிறது. இதற்காக வனவாசி கல்யாண் ஆசிரமம் (Vanavasi Kalyan Ashram) என்ற ஒரு அமைப்பை வடக்கு சத்தீஸ்கரில் 1952 ஆம் ஆண்டில் ஏற்படுத்தியது. இந்த அமைப்பின் மூலம் ‘தாய் மதம் திரும்புதல்’ (Ghar Wapsi) என்ற பெயரில் சடங்குகளை நடத்தி கிறிஸ்தவ பழங்குடிகளை இந்து மதத்திற்கு மதமாற்றம் செய்து வருகிறது.

பழங்குடி மக்களை இந்து அடையாளத்தைக் கொண்டு விழுங்க எத்தனிக்கிறது ஆர்.எஸ்.எஸ். பழங்குடிகளை ‘ஆதிவாசி’ என்று குறிப்பிடாமல் ‘வனவாசி’ என்றே ஆர்.எஸ்.எஸ் குறிப்பிடுகிறது. அதாவது, “பழங்குடியினர் என்பவர்கள் ‘பிற்பட்ட இந்துக்கள்’; சில சீர்திருத்தங்களை செய்வதன் மூலம் அவர்களை இந்து மதத்திற்குள் இணைத்துக் கொள்ளலாம்” என்பதே அவர்களின் நிலைப்பாடு.

2006 ஆம் ஆண்டில், வனவாசி கல்யாண் ஆசிரமத்தின்(VKA) ஒரு முன்னெடுப்பாக ஜன்ஜாதி சுரக்ஷா மன்ச் தொடங்கப்பட்டது. ஆனால், 2018 ஆம் ஆண்டில், 15 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சி முடிவு பெற்று காங்கிரஸ் ஆட்சி தொடங்கிய பின்புதான் இந்த அமைப்பின் செயல்பாடுகள் அதிகரித்தது. அதிலும் கடந்த ஒரு வருடத்தில் வடக்கு பஸ்தர் பகுதியைச் சேர்ந்த நாராயண்பூர், கொண்டகான் மற்றும் காங்கேர் மாவட்டங்களில் வீரியமாக செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து பேசிய சத்தீஸ்கர் கிறிஸ்தவ மன்றத்தின் (Chattisgarh Christian Forum) தலைவர் பன்னாலால் “15 ஆண்டு கால பாஜக ஆட்சியில் கிறித்தவர்கள் மீது 18 தாக்குதல்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 3 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் 380 தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன” என்று கூறினார்.


படிக்க: தமிழ்நாடு: கிறிஸ்துவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தும் காவிக் குண்டர்கள்!


கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நான்கு நாள் பயணமாக சத்தீஸ்கர் சென்று வாஜ்பாய் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த திலீப் சிங் ஜூடெவ் (Dilip Singh Judeo) சிலையை திறந்து வைத்தார். திலீப் சிங் ஜூடெவ் கிறிஸ்தவ மிஷனரிகளுக்கு எதிரானவர்; பழங்குடியினரை இந்துத்துவா கருத்தாக்கத்திற்கு ஆட்படுத்த வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டவர். மோகன் பகவத், ஜூடெவ்-ஐ நினைவு கூர்வது என்பது “பழங்குடிகள் அனைவரையும் இந்து அடையாளம் என்ற வட்டத்திற்குள் கொண்டு வருவோம்” என்று பிரகடனம் செய்வதாகும்.

கார்ப்பரேட் கொள்ளைக்காக பழங்குடிகள் உரிமைகள் பறிக்கப்பட்டு காடுகளில் இருந்து வெளியேற்றப்படுவது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் இந்துத்துவா பாசிச கும்பல்கள் பழங்குடி மக்களின் அடையாளங்களை அழித்து அவர்களை இந்துக்களாக்க முயற்சி செய்து வருகின்றன. இந்த நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் பயன்படுத்தும் கருவிதான் கிறித்தவர்கள் மீதான வன்முறை.

பொம்மி