மதம் பற்றிய ஆய்வுகளுக்கான அடிப்படை நூல்களில் ஒன்றாக இது திகழ்கிறது. மார்க்சிய வழிமுறையைப் பின்பற்றி பொதுவாக மதங்களின் தோற்றத்தைப் பற்றியும் – குறிப்பாக, இந்து மதம் என்று நாம் இன்று அழைக்கும் மதம் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றியுமான மிகச்சிறந்த நூல் இது.
அனாதிகாலம் தொட்டே இந்து மதம் உலகுக்கு ஆன்மீகத்தை அளித்தது என்ற புரட்டை – புனிதமுலாம் பூசப்பட்ட மடமையை – நமது பேராசிரியர் உடைத்து நொறுக்குகிறார். இந்திய ஆதி பொருள்முதல் வாதத்தில் இருந்து ஆன்மிகக் கற்பனைகள் எவ்வாறு தோன்றின? ஏன் தோன்றின? என்பன போன்ற கேள்விகளுக்கு வரலாற்றுப் பூர்வமாகவும் – தத்துவ அடிப்படையிலும் விளக்கி மதத்தின் முறிவு சமதர்ம சமூக உருவாக்கக் கட்டத்தில் சர்வ நிச்சயம் என உறுதிபட உரைக்கிறார்.
காலனி ஆட்சியாளர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தியதை எதிர்த்த விடுதலைக்கான போர் இந்திய தேசியத்தை அனைத்துத் துறைகளிலும் கட்டமைக்க வேண்டிய பணியை தேசிய இயக்கத்துக்கு வழங்கியது. இந்திய தேசியத்தின் இருப்புக்கான நியாயங்களை அது வழங்க வேண்டி வந்தது. தத்துவத் துறையிலும், வரலாற்றுத் துறையிலும் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப ஆண்டுகளில் இது பெரிதும் நிறைவேற்றப்பட்டது. இந்திய தேசியத்தின் பெருமிதங்களை முன்வைத்தபோது ஆன்மிகம் அதன் பெருமைகளில் ஒன்றாக முன்னிறுத்தப்பட்டது. சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா போன்ற அறிஞர்கள் தத்துவத் துறையில் இதனை நிலைநாட்டப் பாடுபட்டனர். இயல்பாகவே, அவர்களுடைய முயற்சிகள் இந்திய அறிவியல் மரபுக்கும், பொருள் முதல் வாத மரபுக்கும் (நாத்திக மரபு) எதிரானவையாகவே முடிந்தன. குடும்பம், ஒழுக்க நெறிகள், பண்பாடு போன்றவற்றில் காணப்படும் இந்தியத் தன்மைக்கு ஆன்மிகமே அடிப்படை எனவும், நாத்திகம் அவற்றுக்கெல்லாம் எதிரானது எனவும் மதவெறிக் கூச்சல் அதனையொட்டிப் பரப்பப்பட்டது.
இந்தியத் தத்துவஞானத்தின் வரலாற்றில் கருத்துமுதல் வாதத்துக்கும் – பொருள்முதல் வாதத்துக்கும் இடையிலான போர் – ஆன்மிகத்துக்கும் நாத்திகத்துக்கும் இடையிலான ஓய்வறியாப் போர் நடந்துவந்த வரலாற்றை எடுத்துரைத்து இந்தியப் பொருள்முதல் வாதத்தின் மேன்மையை நிலைநாட்ட வேண்டிய அவசியம் எழுந்தது.
அதனைத் தத்துவஞானத் துறையில் பேராசிரியர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா தனியராய் நின்று சாதித்தார். இந்திய மார்க்சியத்தை வளப்படுத்தினார். இந்தியப் பகுத்தறிவு இயக்கத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செய்தார். வரலாற்றுத் துறையில் டி.டி.கோசாம்பி, ஆர்.எஸ்.சர்மா, இர்பான் ஹபீப் போன்ற மார்க்சிய அறிஞர்கள் அனைவரும் ஆற்றிய சாதனைகளுக்கு ஈடானது அது.
டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா (பிறப்பு: 19-11-1918; மறைவு: 8-5-1993) இந்திய அறிவியல் வரலாற்றுக்கும், தத்துவஞானத்துக்கும் அளித்த மேதமை மிகுந்த பங்களிப்பு இல்லாமல் முற்போக்கு இயக்கம் தனக்கான கருத்தியல் கருவியை வளப்படுத்திக்கொள்ள இயலாது…
… மதம் குறித்த மார்க்சியத்தின் அணுகுமுறை, இந்திய மதம் / மதங்கள் தோன்றியதற்கான சமூக – பொருளியல் மற்றும் கருத்தியல் அடிப்படைகள், வேத மதம் பற்றிய மாயை, ஆதி பொருள்முதல் வாதத்தின் அழிவுக்கும் – ஆன்மிகத்தின் எழுச்சிக்குமான பொருளாயத, வரலாற்றுக் காரணிகள், மீமாம்சம் / பௌத்தம் போன்றவை ஆன்மிக வாதத்துக்குள் கொண்டு வரப்பட்டதன் வரலாறு முதலிய பலவும் இந்த நூலில் மிக எளிமையாக – ஒரு சாதாரண வாசகன் புரிந்து கொள்ளும் வரையில் “உரையாடல்’ மொழியில் சொல்லப்படுகிறது.
இந்த நூலைப் பயில்வதற்கு உதவியாக சில குறிப்புகளை இங்குத் தரவேண்டிய அவசியம் உள்ளது. தத்துவம் மட்டுமல்லாது தொல்லியல், மானுடவியல் போன்ற துறைகளின் துணையோடு இந்த நூல் எழுதப்பட்டுள்ளதால் அத்துறை சார்ந்த சொல் வழக்குகளை அத்துறைகளின் சொல் வழக்குகளாகப் புரிந்துகொண்டு பயில்வது அவசியமாகும். அதேபோல, மாயை, மாய வித்தை போன்ற சொற்களை அவற்றின் இன்றைய புரிதல் அடிப்படையில் அல்லாது குறிப்பிட்ட வரலாற்றுக் காலத்தின் தத்துவப் புரிதல் அடிப்படையில் புரிந்துகொண்டு பயில்வது மிகவும் அவசியமாகும். இல்லையேல், மதம் குறித்த இந்த உரையாடலைக் கொச்சைப்படுத்திப் புரிந்துகொள்ளும் அபாயம் ஏற்படும். இந்தப் பொருளைப் பற்றி மேலும் பயில்வதற்கான நூல் பட்டியலாகவே கடைசியில் இணைக்கப்பட்டுள்ள நூல் பட்டியலைப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த நூல்களைப் பயில்வது மதம் குறித்த மார்க்சிய அறிதலுக்கு மேலும் துணை புரிவதாக அமையும். (நூலின் பதிப்புரையிலிருந்து)
படிக்க:
♦ மோடி அரசின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் 2.0 : உண்மை என்ன ?
♦ இந்து மதம் : ஏகாதிபத்திய சந்தையை உறுதிப்படுத்த உருவாக்கப்பட்ட ஓர் கட்டமைப்பு !
ஒரு காலத்தில் தவிர்க்கவியலாமல் தோன்றிய மதம் இறுதியில் மறைந்தே தீரவேண்டும். நமது விவாதத்துக்கு வசதியாக நாம் இதனை இரு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம். முதலாவதாக, மதத்திற்கு உறுதியான ஒரு துவக்கம் உள்ளது. இரண்டாவதாக, அது உதிர்வதைத் தவிர அதற்கு வேறு எதிர்காலம் இல்லை. முதலாவது அம்சத்தை நாம் இரு கட்டங்களாக விளக்கலாம். நாம் மதம் என்றழைப்பதை மனிதகுலம் அறியாத காலம் ஒன்று இருந்தது. அது வர்க்கங்களாகப் பிளவுபடுவதற்கு முந்திய தொல்குடி சமுதாயமாகும். காட்டுமிராண்டி மனிதர்கள் உலகின் சில பகுதிகளில் இன்னமும் வசித்து வருகின்றனர்.
வர்த்தகர்களும், தொண்டு நிறுவனங்களும் இல்லாது இருந்த இவர்களிடம் மதம் கிடையாது. மதத்திற்குப் பதிலாக இவர்கள் மாயவித்தைகளை கடைபிடித்து வந்தனர். வரலாற்றுக்கு முந்திய சமுதாயத்தை நாம் உள்நோக்கும்பொழுது அங்கு மதத்திற்குப் பதிலாக மாயவித்தை இருந்ததை நம்மால் அறிய முடிகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக, வர்க்கத்துக்கு முந்திய சமுதாயத்தில் மனிதன் இதே நிலையில்தான் இருந்து வந்தான். உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி மிகவும் தாழ்நிலையில் இருந்ததே இதற்குக் காரணமாகும். தமது குறைந்தபட்ச தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள மட்டுமே அதிகபட்சமாக உழைக்க வேண்டியிருந்தது.

உபரி எதுவும் இல்லாததால்தான் சமுதாயத்தின் ஒரு பகுதி மக்கள், மற்றொரு பிரிவினரின் உழைப்பைக் கொண்டு வாழ்வது சாத்தியமில்லாமல் இருந்தது. இத்தகைய எளிமையான உற்பத்தித் திறனைச் சார்ந்து வாழவேண்டிய, ஆதரவற்ற கட்டத்தில் மனிதன் தனது உண்மையான தொழில்நுட்பத்துக்கு மாறாக, மாயையான ஒன்றின் தேவையை உணர்ந்தான். அதுவே மாயவித்தை ஆகும்…
… உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி காரணமாக மனிதன் தனது அடிப்படைத் தேவைகளுக்குக் கூடுதலாக ஒரு கட்டத்தில் உற்பத்தி செய்யும் திறனைப் பெற்றான். அதாவது உபரியாக உற்பத்தி செய்யத் தொடங்கினான். இது நடைபெற்றபொழுது மனிதன் நாகரிகத்தின் வாசற்படியை எட்டினான். ஆனால், இன்னும் முழுமையான நாகரிகத்துக்கு வரவில்லை…
… சமூக உபரியை ஆரம்ப நிலையிலுள்ள நகர மையங்களுக்குக் கொண்டு செல்ல சில கருவிகள் தேவைப்பட்டன. இதற்குத் தேவையான எல்லாவிதமான கருவிகளையும் பரிசீலித்த நாம், மிகவும் சாத்தியமான, சாத்வீகமான மதம் என்ற ஒரு சித்தாந்தக் கருவி உருவானதைக் கண்டறிந்தோம். வெற்றிடத்திலிருந்து இது உருவாகவில்லை. மாயத் தன்மையுடன் விளங்கிய புராதன மாயவித்தையிலிருந்து திறம்பட உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இது பல்வேறு தாய் தெய்வங்களும், கடவுள்களும் உருவாக வழிவகுத்தது…
… இத்தகைய தாய் தெய்வங்களும், கடவுள்களும் நேரடி உற்பத்தியாளர்களுக்குத் தேவையான பொருட்களை அளித்ததாக அவர்கள் கருதினர். அதுமட்டுமல்லாமல், அவர்களுக்காகச் செயல்பட, அவர்களது விவகாரங்களைக் கவனிக்க இகலோக அல்லது பூவுலகப் பிரதிநிதிகள் அவர்களுக்குத் தேவைப்பட்டனர். எனவே, அவர்களிடமிருந்து மதகுருமார் வர்க்கம் என்ற சமூகப் பிரிவுத் தோன்றியது. அவர்கள் மட்டுமே வாழ்வின் ரகசியங்களை அறிந்திருந்தனர். இவ்வாறுதான் மதம் உருவாக்கப்பட்டது அல்லது செயல்பாட்டுக்கு வந்தது. (நூலிலிருந்து பக். 181-183)
நூல்: மதமும் சமூகமும்
தமிழில்: டாக்டர் தேவி பிரசாத் சட்டோபாத்தியாயா
தமிழில்: இரா.சிசுபாலன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி: 044 – 2625 1968 | 2635 9906
பக்கங்கள்: 202
விலை: ரூ 100.00
வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க
இணையத்தில் வாங்க: noolulagam | panuval
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:
கீழைக்காற்று,
கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277






பாகிஸ்தான் இரண்டு மிக் விமானங்களை வீழ்த்தியது என்று பாகிஸ்தான் பிரதமரே பகிரங்கமாக ட்வீட் போடுகிறார். ஆனால் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. இந்திய சார்பு ஊடகங்கள், இந்திய நிலையினை எடுப்பதில் நமக்கு சிக்கலில்லை. ஆனால், நெடுசாண்கிடையாக இப்படி மோடிக்கு கால் கழுவி விட வேண்டிய அவசியமென்ன? பிறகு என்ன எம்-மிற்கு நடுநிலை நாளிதழ் என்கிற பெயர்? இதற்கு பேசாமல் ‘தினமலர்’ மாதிரியும், அதன் முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் மாதிரியும் இருந்து விட்டு போகலாமே? ஊடகங்களில் இருக்கும் “மாமாக்கள்” என்ன வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பது ஊரறிந்தது. ஆனால் ஊடகமே “மாமா” வேலை பார்த்தால் எங்கே போய் முட்டிக் கொள்வது?



அவர் முகம் நிறைய மஞ்சள். குளிச்சு நெத்தியல வைச்சிருந்த பெரிய வட்டப் பொட்டு, இறந்து போன என் பெரியம்மா கண் முன்னாடி வந்து போனாங்க. அவர் வண்டியில ஏறச் சொன்ன விதம் கன நேரத்துல கோபத்த குறைச்சுடுச்சு. உடனே ஆட்டோவுல ஏறிட்டேன்.
யாருக்கு கவலையில்ல சொல்லு. இந்த இவளுக்கு (அருகிலிருந்த இளம் திருநங்கை) இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் வச்சுருக்கு. இன்னும் மூணு பவுனு வாங்கனும் என்ன செய்றதுன்னு தெரியல. இவ கண்ண கசக்கியே உயிர விட்டுடுவா போலருக்கு.”
“கவலை படாதீங்க. சிவனும் பார்வதியும் சேந்துருக்கும் ஒடம்பு உங்களுக்கு. அதனால உங்களப் போல உள்ளவங்க எல்லாம் கடவுள் மாதிரி. நான் சொல்றேன் கல்யாணம் நல்லபடியா நடக்கும்.” என்றார் அருகில் அமர்ந்து இருந்த தெலுங்குக்கார அம்மா.
பேருந்து அன்றைய நாளுக்கான கடைசி இலக்கை அடைந்துவிட்ட களைப்பில் இரைச்சலோடு ஓய்கிறது. கடந்த சில நாட்களாக மத்திய பிரதேசத்தின் பெரும்பகுதியை கடந்து வந்த பிறகு, அது ராஜஸ்தானின் கிழக்கு முனையில் நுழைந்துள்ளது. தாஹோட் மாவட்டத்தின் தேவ்கத் பாரியா தாலுகாவின் அடிவாரத்தில் உள்ள பழங்குடிகளின் குடியிருப்பில் வாகனம் நிறுத்தப்பட்டு, பயணிகள் இறங்கி திறந்தவெளிக்கு வருகின்றனர். இவர்களில் பலர் பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள், சிறு அளவிலான பாதிப்புகளிலிருந்து மீண்டவர்கள், அவர்களுடைய பெற்றோர். அனைவரும் ஊரக தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
“மருத்துவ பரிசோதனை காலதாமதமாவது என்னுடைய வழக்கில் உதவவில்லை. நீதிபதி என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என சொன்னபோது, நான் வேண்டுமானால் உடையை களைந்து காட்டுகிறேன். எங்கேயெல்லாம் காயம் ஆகியிருக்கிறது என்பதை நீங்களே பாருங்கள் என அவரிடம் சொன்னேன்” என நடந்ததை விவரிக்கிற அவர், வீட்டிற்கு திரும்பியபோது அவருடைய கணவரும் கணவரின் குடும்பத்தினரும் தான் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாகக் கூறி, தன்னை ரத்தம் வரும்வரை அடித்ததாக கூறுகிறார். அவருடைய பிறந்த வீட்டிலும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. “எங்கும் போக வழியில்லாமல், எட்டு நாட்கள் ரயில் நிலையத்தில் படுத்து கிடந்தேன். ஒரு சமூக சேவகர் என்னை கண்டுபிடித்து, நான் வாழ ஒரு இடத்தை கண்டுபிடிக்க உதவினார்”.
தனது மகளின் படிப்பு முக்கியம் என கருதும் அவருடைய தாய், தினமும் பள்ளிக்கு போகும்போது கத்திரிக்கோலும் மிளகாய் பொடியை பாதுகாப்புக்கு தந்து அனுப்புவதாக சொல்கிறார். “போலீசிடமிருந்தோ நீதிமன்றத்திடமோ நாங்கள் எந்தவித மரியாதையும் பெறவில்லை. எங்களுடைய சொந்த மக்களே குற்றம் புரிந்தவனை நிராகரிப்பதற்கு பதிலாக எங்களை நிராகரித்துவிட்டார்கள். இந்த பேரணி நாங்கள் இழந்த மரியாதையும் நம்பிக்கையும் பெற்றுத்தரும் என நினைக்கிறோம்” என்கிறார் அவர்.
உத்திரப்பிரதேச மாநிலம், பண்டல்கண்ட் பகுதியில் உடல் நலம் குன்றிய தன்னுடைய பேரனை பார்த்துக் கொள்கிறார் ஒரு மூதாட்டி. சமீபத்தில் வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி இந்தியாவில் 2.55 கோடி குழந்தைகள் மிகவும் மோசமான ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டல்கண்ட், லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் தன்னுடைய குழந்தையை வீட்டிற்கு வெளியே தூக்கி செல்கிறார். லலித்பூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளுமே ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் ஒரு சமூக நல மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஒரு குழந்தை. உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின் படி உலக அளவில் மூன்றில் ஒருபங்கு குறை வளர்ச்சியுள்ள குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.
ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதியுறும் இராஜஸ்தான் பாரன் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை.
இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தின் மற்றுமொரு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.
உத்திரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இராஜஸ்தான், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பாரன் மாவட்டத்தின் கேல்வாடா கிராமத்தை சேர்ந்த சகாரியா பழங்குடி குழந்தை. 2018-ம் ஆண்டு வெளியான உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின்படி 4.66 கோடி எடை குறைவான குழந்தைகள் இந்தியாவில் உள்ளனர்.
இராஜஸ்தான், பாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சமூக நல மருத்துவ கூடத்தில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை.


தூய்மை பணியாளர்களில் 1% மட்டுமே பூட்ஸ், மாஸ்க், கையுறைகள் உள்ளிட்ட உபகரணங்களை நிர்வாகம் வழங்கியிருக்கிறது என்றும் இவர்கள் தெரிவிக்கிறார்கள். மூன்று மாத காலம் என்பதால் குடும்பத்தோடு வந்துள்ள இவர்களுக்கு சொதசொதப்பான சேரும் சகதியும் மிக்க இடங்களில்தான் டெண்ட் அமைத்து தந்திருக்கிறார்கள்.
அரசின் திட்டமிட்ட மோதல் படுகொலைகள், மதவெறி கும்பலின் கொலைகள், இவை நிகழும் அதே கால கட்டத்தில் சத்திஸ்காரில் போலிஸ் ஆட்சியும் கஷ்மீரில் ராணுவ ஆட்சியும் நடப்பது தற்செயலானதல்ல எனக் குறிப்பிட்ட ராய், புல்வாமா நிகழ்வுக்கு பின்னர் ராணுவத்தை காஷ்மீரில் குவிப்பது அம்மாநில மக்களை பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கும் என கவலை தெரிவித்தார்.



இப்ப இருக்கிற வேலைக்கும், பாஸ்ட் லைப்புக்கும் கரெக்ட்டா மேட்ச் ஆகுற ஃபுட் இதுதான். இன்ஸ்டண்ட் உணவு. அதிகபட்சம் 3 மணிநேரம் பசி தாங்கற மினி மீல்ஸ் இது. ஜஸ்ட் லைக் தட். வந்தம்மா…. நின்னம்மா….. சாப்பிட்டம்மா….. போனம்மா..ன்னு இருக்கனும். சாப்பாட்டுக்குன்னு ஸ்பெஷலா டைம் தேவையில்லை.
அய்யோ! இன்னிக்குத்தான் நாங்க இங்க அதிசயமா வந்தோம்! இது எங்களுக்கு இல்ல. வீட்டுக்குப்போனா எங்கப் பொண்ணு அடம்புடிப்பா, அவளுக்காகத்தான் இது. நம்மளுக்கு இது ஒத்து வராது. பசங்கக்கூட என்னிக்கினா ஒருநாள் டேஸ்ட் பாக்கிறதோட சரி. நம்ம பலகாரம் மாதிரி வராது. ஆனா அதெல்லாம் ஆற அமர செய்யிறது இப்ப நம்மளாள முடியலியே. பணமும் இல்ல, நேரமும் இல்ல. ஏதோ பசங்களுக்காக நம்ம வாழ்க்கை ஓடுது.
இங்க சாப்பிட வந்தாவே மனசே ரொம்ப கண்ட்ரோல் பண்ணிக்கிட்டுத்தான் வருவேன். ஒன்னு சாப்பிட்டதும்…அடுத்ததுனு மனசு கேட்கும். ஆனா வயிறு மக்கர் பண்ணுமே..! அதனாலே வாரத்துக்கு ஒரு தடவைதான் இந்தப்பக்கம் வருவேன். ஒரு சமோசா… இல்லனா ஒரு வடை சாப்பிட்டு திரும்பி பாக்காத போய்டுவேன். ஆனா ஜங்க் ஃபுட் மாதிரி ரொம்ப மோசமான உணவுன்னு இதை சொல்லமுடியாது.
கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி இதெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதான். தெரியுது. என்ன பிரயோஜனம். நம்மளுக்கு கைக்கு எட்டற மாதிரி கிடைக்கிறது இதுதானே. நம்ம உடம்பு கிடைக்கிறத ஏத்துக்கும். எல்லாத்துக்கும் பழகிக்கும். எதனா புடிக்கலன்னா நம்ம உடம்பே நம்மக்கிட்ட சொல்லும். எனக்கு பாருங்கோ… இங்க ஒரு சமோசா சாப்பிட்டுட்டு போனா ஒன்னும் பண்ணாது. எக்ஸ்ட்ரா ஒண்ணு சாப்பிட்டா வயிறு உடனே அப்செட் ஆவும். பிரச்சனை அங்கதான் இருக்குது. அத தெரிஞ்சி உடம்பு சொல்றத கேட்டு நாம நடந்தா ஒண்ணுமில்ல. லிமிட்ட தாண்டக்கூடாது.
இப்ப உங்களுக்கு என்னா பிரச்சனை? நான் எத சாப்பிட்ட உங்களுக்கு என்னா? சமோசா நார்த் இன்டியன் ஃபுட்னா அதுக்கு நான் இன்னா பன்றது? பெருசுங்கதானே எங்களுக்கு இதை அறிமுகப்படுத்தினாங்க! அவங்கதானே இந்த அயிட்டத்த தமிழ்நாட்டுக்குள்ள உட்டது! அப்ப வேடிக்கை பாத்துக்கினு இருந்துட்டு இப்ப நாங்க சாப்பிட்டா கேள்வி கேட்கறீங்க? அதிரசம், தேன்குழல், உப்பு உருண்டைனு எங்கள சுத்தி நின்னு இதுமாதிரி நீங்க வித்தா சாப்பிட போறோம். அதுக்கு வழியில்ல. அப்போ, எது சீப்பா கெடைக்குதோ அதத்தானே நாங்க சாப்பிட முடியும். எல்லாத்துக்கும் கதவு திறந்து வைச்சா இதுதான் நடக்கும்.
தோ… இந்தமாதிரி வட இந்தியாகாரனுங்கள உள்ள விட்டதால நம்ம உணவுக்கு மவுசு இல்லாம போயிடுச்சி. இருந்தாலும் இவங்களுக்கு இதுதான் வாழ்வாதாரமா இருக்கு. நான் அதை குறை சொல்லல. இதை வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுற நாம அப்பவே நம்ம உணவுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்திருக்கலாம்னு சொல்றேன். இன்னைக்கு அது பணக்காரங்க உணவா மாறிடுச்சி.
நீங்க எதப்பத்தி எழுதப்போறீங்க? இருக்கிறது சவுத் இன்டியா! சாப்பிடறது நார்த் இன்டியா ஃபுட் அப்படினு இதுக்கு தலைப்பு போடுவீங்களா? எப்படி எழுதுவீங்கனு சொல்லுங்க அதுக்கு ஏத்தமாதிரி நான் உங்களுக்கு சொல்றேன்! நீங்க வந்து கேள்வி கேட்கிற எடம் எதுனு உங்களுக்கு தெரியுதா? அய்யருங்க ஏரியா இது! அதுவும் மாம்..ம்பலம் அய்யருங்க..! அங்க, மயிலாப்பூர் அய்யருங்க வேற மாதிரி! நாங்க பசிக்கு மட்டும் சாப்பிடறது இல்ல! கூட எங்க ஸ்டேட்ஸையும்(status) சேர்த்து தட்டுல வைக்கிறவாகிட்டதான் நாங்க சாப்பிட முடியும். அது முக்கியம். அய்யருங்க அவங்களுக்குள்ள பேசிக்கும் போது நீங்க கவனிச்சிருந்தா உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஜம்பலம் பத்தி, இந்த வார்த்தைக்கு உங்களுக்கு அர்த்தம் தெரியுமா? தெரிஞ்சவங்ககிட்ட கேளுங்க சொல்லுவாங்க! …நான் வர்றேன்.
காலப்போக்கில் அட்லாண்டிக், இலெமூரியா என்ற இரு கண்டங்களிலும் வாழ்ந்த மனித குல முன்னோடிகள் தொழில் நுட்பங்களில் வல்லமை பெற்றிருந்தனர் எனப் பிராஸ் ஜோசப் கூறியுள்ளார்…



















மத்திய சுகாதார அமைச்சகத்தின் இணை இயக்குனர் ஜெனரல் அனில் குமார் இதுகுறித்து கூறுகையில், “கண்கூடாக காணக்கூடிய உருமாறுதலை ஏற்படுத்தும் தொழுநோயை 2020-ம் ஆண்டுக்குள் ஒழிக்க உலக சுகாதார நிறுவனம் இலக்கு வைத்துள்ளது. ஆனால் நாம் அதற்கு முன்னதாகவே அக்டோபர் 2, 2019-க்குள் அந்த இலக்கை அடைந்துவிடுவோம். தொழுநோயை முற்றிலுமாக ஒழித்து விடுவோம்” என்றார்.
இதுகுறித்து குமார் கூறுகையில், “உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ள இலக்கான 2020-ம் ஆண்டு என்பது மிகவும் நெருக்கமானது. பெரும்பாலான நாடுகள் இந்த இலக்கை அடைய முடியாமல் போகலாம். ஆனால் நாம் அந்த இலக்கை கண்டிப்பாக அடைந்துவிடுவோம். அதில் உறுதியாக இருக்கிறேன்” என்கிறார்.