Sunday, June 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 236

எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

0

ல்கார் பரிஷத் மாநாடு முதல் சமீபத்திய டெல்லி கலவரம் வரை அனைத்து சந்தர்ப்பங்களையும் சதித்தனமான பொய் வழக்குகள் மூலம் மக்களுக்காக குரல் கொடுக்கும் அறிவுத்துறையினரை முடக்கவும், சிறையிலடைக்கவும் பயன்படுத்திவருகிறது மோடி அரசு. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் எல்கர் பரிஷத் மாநாடு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனிபாபு கைது செய்யப்பட்டிருகிறார். அதே போல், டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் அபூர்வானந்தை விசாரணைக்கு உட்படுத்தி மிரட்டியிருக்கிறது டெல்லி போலீசு.

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹனி பாபுவை எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 28 அன்று கைது செய்தது தேசிய பாதுகாப்பு முகமை (NIA).  ஆகஸ்ட் 8-ம் தேதியோடு என்.ஐ.ஏ காவல் முடிவடைந்த நிலையில், தற்போது அவரை ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனிபாபு

பேராசிரியர் ஹனிபாபு மீது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், பேராசிரியர் சாய்பாபாவை ஆதரித்து அவருக்காக நிதி திரட்டியதாகவும் குற்றம்சாட்டி அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது தேசிய பாதுகாப்பு முகமை. ஜூலை 28-ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹனிபாபுவை ஆகஸ்ட் 4 வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டது என்.ஐ.ஏ. அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் 8 வரை என்.ஐ.ஏ காவலை நீட்டித்துக் கொடுத்தது சிறப்பு நீதிமன்றம்.

என்.ஐ.ஏ விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில் அவரை ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாரு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையின் போது ஹனிபாபுவிடம் அவரது செயல்பாடுகளுக்கு அவருடன் பணிபுரிபவர்கள், அவரது மாணவர்கள் என யாரேனும் இதைச் செய்கிறார்களா என்ற விதத்திலேயே விசாரித்திருக்கிறது போலீசு.

சிறப்பு நீதிமன்றத்தில் பேராசிரிய ஹனிபாபுவை நேர்நிறுத்திய என்.ஐ.ஏ., அவர் பீமா கொரேகான் வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருக்கும் பலரையும் தொடர்பு கொண்டுள்ளதாகவும், மாவோயிஸ்ட்டுகளையும், பேராசிரியர் சாய்பாபாவையும் சிறையில் இருந்து விடுவிக்க நிதியாதாரத்தை திரட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

படிக்க:
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

ஹனிபாபுவின் கணிணியைக் கைப்பற்றிச் சென்ற போலீசு, அந்தக் கணிணியின்  வன்தகட்டில் உள்ள ஒரு பிரிவில் (partition) பிப்ரவரி – ஏப்ரல் 2019 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு அதில் மாவோயிஸ்ட்டுகள் சம்பந்தப்பட்ட 62 கோப்புகள் இருந்ததாகவும் கூறி அது குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு வன்தகட்டுப் பிரிவை (Hard disk partition) தாம் ஏற்படுத்தவேயில்லை என்று கூறி மறுத்திருக்கிறார் ஹனிபாபு. ஏற்கெனவே பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் கான்சால்வேஸ் உள்ளிட்டவர்களின் கைப்பற்றப்பட்ட கணிணிக்குள் இது போன்ற மோவோயிஸ்ட் தொடர்பான கோப்புகள் என்.ஐ.ஏ விசாரணையின் போது திடீர் திடீரென முளைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. சமூகச் செயற்பாட்டாளர்களை முடக்குவதற்கு ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்த இத்தகைய கிரிமினல்தனமான வேலைகளைச் செய்ய என்றுமே என்.ஐ.ஏ தயங்கியதில்லை.

பேராசிரியர் அபூர்வானந்த்

இதே போல கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தி வயர் இணையதளத்தில் தொடர்ந்து இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து எழுதிவருபவருமான பேராசிரியர் அபூர்வானந்த்-ஐ விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது டெல்லி போலீசு. கடந்த பிப்ரவரி மாதம் இந்துத்துவக் கும்பலால் நடத்தப்பட்ட டெல்லி கலவரத்தில் அவருக்கு பங்கிருப்பதாகக் கூறி அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி போலீசு.

விசாரணைக்கு பின்னர், தமது மொபைலை தங்களது விசாரணைக்குத் தேவை என்று கூறி டெல்லி போலீசு பறித்துக் கொண்டதாகக் கூறியுள்ளார் அபூர்வானாந்த்.  இந்த விசாரணை சுமார் 5 மணிநேரம் நீண்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய பேராசிரியர் அபூர்வானந்த், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக போராடுபவர்களையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் குற்றவாளியாக்கவும், துன்புறுத்தவும் கூடாது என்று கூறினார்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

பேராசிரியர் அபூர்வானந்த் கடந்த மே மாதம், தி வயர் இணையதளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில்,  சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டக்காரர்கள்தான் வட கிழக்கு டில்லியில் வன்முறையை தூண்டி விட்டதாகக் கூறும் போலீசின் கருத்தாக்கம், அவர்களது அரசியல் எஜமானர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என எழுதினார். மேலும், இந்த திட்டத்தை ஒரு கதையாக உருவாக்கி, அந்த திரைக்கதைக்கு உகந்த கதாபாத்திரங்களைக் கண்டுபிடித்து நீதிமன்றங்களையும், பொதுமக்களையும் நம்ப வைக்க டெல்லி போலீசு முயற்சிப்பதாக எழுதியிருந்தார்.

மோடி அரசாங்கத்தினை விமர்சிக்கும், சில அறிவுத்துறையினரும் செயல்பாட்டாளர்களும் விசாரணைக்காக டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவால் சம்மன் அனுப்பப்படலாம் எனத் தெரியவருவதாக தி வயர் இணையதளம் தெரிவிக்கிறது. குறிப்பாக “டெல்லி போராட்ட ஆதரவுக் குழு” என்ற வாட்சப் குழுவில் இருப்பவர்களின் பங்கு குறித்து விசாரித்து வருவதாகக் கூறுகிறது.

காவி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட டெல்லி கலவரம்.

குறிப்பாக “டெல்லி போராட்ட ஆதரவுக் குழு” என்ற வாட்சப் குழுவில் பிரபல படத் தயாரிப்பாளர்களான ராகுல் ராய், சபா திவான், அரசிய செயல்பாட்டாளர்களான கவிதா கிருஷ்ணன், யோகேந்திர யாதவ், அன்னி ராஜ, சமூகச் செயற்பாட்டாளர்களான ஹர்ஷ் மந்தெர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். பேராசிரியர் அபூர்வானந்த் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வாட்சப் குழுவில் உறுப்பினராக  இருந்தாலே முதல் தகவல் அறிக்கையில் பெயரைச் சேர்த்து விசாரிக்கும் டெல்லி போலீசு, வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படையாகவே பேசிய  கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதியவில்லை.

ஆனால் சொந்த நாட்டில் தங்களது குடியுரிமைக்காகப் போராடிய மக்களையும் அவர்களுக்கு ஆதரவாக நின்றவர்களையும், குரல் கொடுத்தவர்களையும் தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்து வருகிறதுய். குறிப்பாக பல மாணவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஊபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அந்த வாட்சப் குழுமத்தில் நடந்த விவாதங்களைச் சதியாக சித்தரிக்கும் வகையிலேயே போலீசு ஆவணங்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

பீமா கொரேகான் வழக்கைப் போலவே டெல்லி கலவர வழக்கும் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும்  செயற்பாட்டாளர்களையும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய இந்த வழக்கை பயன்படுத்துகின்றன, என்.ஐ.ஏ உள்ளிட்ட அரசின் ஒடுக்குமுறைக் கருவிகள். குறிப்பாக தற்போதைய ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் அறிவுத்துறையினரை முடக்கிவருகிறது மோடி அரசு. அரசின் சுரண்டலில் இருந்து நமது உரிமைகளைப் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை அல்லவா ?

நந்தன்

செய்தி ஆதாரம் :

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை

கொரோனா பெருந்தொற்றானது இந்த அரசு கட்டமைப்பின் தோல்வியை அம்பலப்படுத்திவிட்டது. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரியண்ணனாகத் திகழும் அமெரிக்கா மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து நாடுகளின் முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.

இந்நிலையில் தனது தோல்வியை மறைக்கவும், தனது அடக்குமுறை அனைத்தையும் சட்டப் பூர்வமாக்கவும் துடிக்கிறது மோடி அரசு. அதனால்தான் இப்பெருந்தொற்று சூழலைப் பயன்படுத்தி மின்சார திருத்தச் சட்டம், சுற்றுசூழல் சட்டத் திருத்தம், புதிய கல்விக் கொள்கை, கிரிமினல் சட்ட திருத்தம் என நீள்கிறது காவி – கார்ப்பரேட்  திட்டங்கள். ஆனால் இவை எதைப் பற்றியும் மக்கள் பேச முடியாதபடியும் எதிர்த்துப் போராட முடியாதபடியும் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது மோடி அரசு.

மீறிப் போராடுபவர்களை “5-பேருக்கு மேல் கூடாதே…” எனக் கூறி வழக்கு பதிவு செய்கிறது போலிசு. மற்றொரு பக்கம் மக்களுக்காக பேசும் அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் பொய் வழக்குகளின் பேரில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த அரசின் மக்கள் விரோத சட்டங்களையும்  ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து யாரும் நீதிமன்றம் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய மோடி அரசு எவ்வித தங்குதடையுமின்றி தனது நாசகர திட்டங்களை அறிவித்து கொண்டே செல்கிறது. எனவே மக்களுக்கு, மக்கள் போராட்டங்களுக்கு ஊரடங்கு என்றால் இந்த அரசும் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. பெருந்தொற்று அபாயம்தான் உடனடிப் பிரச்சினை என்றால் அதனை தீர்ப்பது ஒன்றுதான் அரசின் முழு கடமையாக இருக்கவேண்டும். இல்லையெனில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்க துணை செய்யும் இந்த “ஊரடங்கை இரத்து செய்!” என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு ! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !

 

ஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 59

ஸ்மித்தின் வாதம்

அ.அனிக்கின்

ஸ்மித்தின் போதனை இங்கிலாந்திலும் பிரான்சிலும் அதிகமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்த நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்தது. மேலும் இங்கே முதலாளிகள் கணிசமான அளவுக்கு அரசு அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள்.

எனினும் இங்கிலாந்தில் ஸ்மித்தைப் பின்பற்றியவர்களில் சுதந்திரமான, முக்கியத்துவமுடைய சிந்தனையாளர்கள் (ரிக்கார்டோ வரும் வரையிலும்) யாருமே இல்லை. ஸ்மித்தின் முதல் விமரிசகர்கள் நிலவுடைமையாளர்களின் நலன்களை எடுத்துரைத்தவர்களே. இங்கிலாந்தில் அத்தகைய விமரிசகர்களில் மால்தசும், லொடர்டேல் பிரபுவும் அதிக முக்கியமானவர்கள்.

மால்தஸ் பாதிரியார்

பிரான்சில் ஸ்மித்தின் போதனை ஆரம்பத்தில் அண்மைக் காலத்தைச் சேர்ந்த பிஸியோகிராட்டுகளிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. பிறகு புரட்சி ஏற்பட்டதும் பொருளாதாரத் தத்துவத்திலிருந்து கவனம் திரும்பிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 1802 -ம் வருடத்தில் நாடுகளின் செல்வம் முதல் தடவையாக ஜெ. கார்னியே என்பவரால் சரியான முறையில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதில் அவருடைய விளக்கக் குறிப்புகளும் இருந்தன. 1803-ம் வருடத்தில் ஸேய், ஸி ஸ்மான்டி ஆகியோருடைய புத்தகங்கள் வெளிவந்தன.

இந்த இரண்டு பொருளியலாளர்களும் தங்களுடைய புத்தகங்களில் பிரதானமாக ஸ்மித்தைப் பின்பற்றுபவர்களாகவே தோன்றினார்கள். ஸேய் ஸ்மித்துக்கு எழுதிய பொருள் விளக்கம் ”பரிசுத்தமான” ஸ்மித்தைக் காட்டிலும் ஓரளவுக்கு முதலாளிகளுக்கு உகந்ததாக இருந்தது. எனினும் ஸேய் முதலாளித்துவத் தொழில் துறை வளர்ச்சிக்காக சுறுசுறுப்பாகப் போராடிய அளவுக்கு, அவருடைய கருத்துக்களில் பல ஸ்மித்துக்கு நெருக்கமாக இருந்தன.

இங்கிலாந்திலும் பிரான்சிலும் ஸ்மித்தின் கருத்துக்கள் முற்போக்கானவையாக இருந்தன என்றால் நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு நிலவிக் கொண்டு முதலாளித்துவ வளர்ச்சி அப்பொழுது தான் ஆரம்பமாகியிருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயினிலும் நிச்சயமாக ருஷ்யாவிலும் இது இன்னும் அதிகமாகத் தெளிவாயிற்று. ஸ்பெயினிலிருந்த மத விரோதக் குற்ற விசாரணை மன்றம் ஸ்மித்தின் புத்தகத்துக்கு முதலில் தடை விதித்தது என்று சொல்லப்படுகிறது.

காமெராலிஸ்டிக் என்று சொல்லப்படும் வாணிப ஊக்கக் கொள்கையின் ஜெர்மானியப் பதிப்பின் உணர்ச்சியை ஒட்டி விரிவுரையாற்றிய பிற்போக்குத்தனமான ஜெர்மானியப் பேராசிரியர்கள் நெடுங்காலம் வரை ஸ்மித்தை அங்கீகரிக்க மறுத்தார்கள். எனினும் ஜெர்மனியிலிருந்த அரசுகளில் மிகவும் பெரியதான பிரஷ்யாவில்தான் ஸ்மித்தின் கருத்துக்கள் சம்பவங்களின் நிகழ்ச்சிப் போக்கின் மீது ஓரளவுக்குத் தாக்கத்தைச் செலுத்தின; நெப்போலியனின் யுத்தங்களின் காலகட்டத்தில் அங்கே மிதவாத முதலாளித்துவ சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தவர்கள் ஸ்மித்தின் கருத்துக்களை ஆதரித்தவர்களே.

படிக்க:
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

ஸ்மித்தின் போதனையையும் அவருடைய தாக்கத்தையும் பற்றிப் பேசும் பொழுது, அவரிடமிருந்த பொருந்தாத் தன்மை, வேறுபாடுள்ள – சில சமயங்களில் முரண்பாடுள்ள – கருத்துக்கள் அவர் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது முற்றிலும் வெவ்வேறான கோட்பாடுகளையும் கருத்துக்களையும் கொண்ட மனிதர்கள் அவரிடமிருந்து பலனடைவதற்கும் அவரைத் தங்களுடைய ஆசிரியராகவும் முன்னோடியாகவும் கருதுவதற்கும் இடமளித்தது என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருபதுகளிலும் நாற்பதுகளிலும் ரிக்கார்டோவின் போதனையை முதலாளி வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்த விரும்பிய ஆங்கில சோஷலிஸ்டுகள் ஆடம் ஸ்மித்தின் ஆன்மிக வாரிசுகளாகத் தங்களைக் கருதினார்கள்; உண்மையும் அதுவே.

The Wealth of Nations Adam Smith Bookஉழைப்பின் முழு உற்பத்திப் பொருள், அதிலிருந்து முத லாளிக்கும் நிலவுடைமையாளருக்கும் கழிவுகள் செய்வது பற்றிய ஸ்மித்தின் கருத்துக்களை இவர்கள் பிரதானமாகத் தங்களுக்கு அடிப்படையாகக் கொண்டார்கள். மறு பக்கத் தில் பிரான்சில் முதலாளித்துவ அரசியல் பொருளா தாரத்தில் கொச்சையான; மழுப்பல்வாதப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய “ஸேயின் மரபு” தன்னை ஸ்மித்தைப் பின்பற்றுபவர்கள் என்று கருதியது. ஸ்மித்தினுடைய சிந்தனையில் இன்னொரு போக்கை, பொருளையும் அதன் மதிப்பையும் படைப்பதில் உற்பத்திக் காரணிகளின் ஒத்துழைப்பு என்ற போக்கை அது ஆதாரமாகக் கொண்டது. அவர்கள் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த ஸ்மித்தின் வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர், ஆனால் அதற்கு நயமில்லாத வர்த்தகத் தன்மையைக் கொடுத்தனர்.

ஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது.

ஸ்மித்தின் போதனை தத்துவ ரீதியாகவும் பொருளாதார, சமூகக் கொள்கை என்ற ஸ்தூலமான ரீதியிலும் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. ஸ்மித்தைப் பின் பற்றியவர்களில் சிலர் இவற்றில் சுதந்திரமான அந்நிய வர்த்தகம், காப்புவாதத்தை எதிர்த்துப் போராட்டம் போல ஏதாவது ஒரு அம்சத்தை மட்டும் இரவல் வாங்கிக் கொண்டார்கள். இந்த வாதங்கள் அங்கேயிருந்த ஸ்தூலமான நிலைமையைப் பொறுத்து முற்போக்குத் தன்மையோ அல்லது சுமாரான பிற்போக்குத் தன்மையோ கொண்டிருந்தன.

உதாரணமாக, பிரஷ்யாவில் பிற்போக்கான ஜங்கர் வட்டாரங்களே சுதந்திர வர்த்தகத்துக்காக இயக்கம் நடத்தின. மலிவான தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் தங்களுடைய சொந்த தானியத்தை எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்வதிலும் அவர்களுக்கு அக்கறை இருந்தது. ஆனால் ஸ்மித்தைப் பொறுத்தவரையிலும் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்துக்குரிய விரிவான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு வேலைத் திட்டத்தில் சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு பகுதி மட்டுமே என்பதை நாம் நன்றாக அறிவோம்.

ஸ்மித்தினுடைய கருத்துக்களை (முன்னணியிலிருந்த மற்ற பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களின் கருத்துக்களோடு இவை பிரிக்க முடியாதபடி பெரும்பாலும் கலந்திருந்தன) பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் தோன்றிய பல முற்போக்கான இயக்கங்களிலும் விடுதலை இயக்கங்களிலும் உணர முடியும் என்பது நாகரிக வரலாற்றில் அவருடைய மகத்தான பாத்திரத்தைக் காட்டுகிறது.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் !

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 04

முதல் பாகம்

4. பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி பற்றி

நம்முடைய பிரச்சாரம் புரட்சிகரமானது

20. புரட்சிகரமான பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவது என்பது வெளிப்படையான புரட்சிப் போராட்டம் நடத்தும் நமது கடமையில் தலையாயதாகும். இந்த வேலையும் இதை நடத்துவதற்கான நிறுவனங்களும் இன்னமும், பிரதானமாக, சம்பிரதாயமான முறைகளிலேயே நடத்தப்படுகின்றன. எப்போதாவது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுவதுடனேயே இருக்கிறது. உரைகள் மற்றும் கட்டுரைகளின் பருண்மையான புரட்சிகர உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தப்படாமல் உள்ளது.

தொழிலாளர்களின் பொது நலன்களிலிருந்தும், விழைவுகளிலிருந்தும் குறிப்பாக அவர்களது ஒன்றுபட்ட போராட்டங்களிலிருந்தும், அவர்கள் மத்தியிலிருந்தே பொதுவுடைமைப் பிரச்சாரமும் கிளர்ச்சியும் வேர்விட்டிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவுடைமைவாதப் பிரச்சாரம் புரட்சிகரத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய அதிமுக்கியமான விசயம். பருண்மையான பிரச்சினைகளின்பாலான பொதுவுடைமைவாதக் கண்ணோட்டமும், அதற்குரிய பொதுவுடைமைவாதப் போராட்ட அறைகூவல்களும் (முழக்கங்களும்) நமது சிறப்பான கவனத்தையும் அக்கறையையும் பெற வேண்டும்.

இந்தச் சரியான போக்கை உத்திரவாதப்படுத்திக் கொள்ள, பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அறிவுறுத்துவதற்குக் கவனம் செலுத்த வேண்டும்.

பிரச்சாரம் மற்றும் முழக்கங்களின் வடிவங்கள்

21. பொதுவுடைமைவாதப் பிரச்சாரங்களின் தலையாய வடிவங்கள் பின்வருமாறு: 1. தனிப்பட்ட வாய்வழிப் பிரச்சாரம் 2. தொழிலாளர்களின் தொழிற்சங்க மற்றும் அரசியல் இயக்கத்தில் பங்கு பெறுவது 3. கட்சிப் பத்திரிகை மற்றும் கட்சி வெளியீடுகளை விநியோகிப்பது – ஆகியவைகளின் வாயிலாக நடத்தும் பிரச்சாரம். சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இப்பிரச்சார வடிவங்கள் ஏதாவதொன்றில் முறையாகப் பங்கேற்க வேண்டும்.

பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

தனிப்பட்ட வாய்வழிப் பிரச்சாரம் என்பது விசேடமான தொழிலாளர் குழுக்கள் வீடுவீடாகச் சென்று முறையாகவும் தொடர்ச்சியாகவும் பிரச்சாரம் செய்வது என்ற வடிவத்தை மேற்கொள்ள வேண்டும். கட்சி செல்வாக்குக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டைக்கூட விட்டுவிடாமல் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெரு நகரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்கள் விநியோகிப்பது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பிரச்சார இயக்கம் மனநிறைவு அளிக்கக்கூடிய விளைவுகளை வழக்கமாக ஏற்படுத்தும். இத்துடன் தொழில் நிலையங்களில் பிராக்சன்கள் நேரடியான கிளர்ச்சிகளை முறையாக நடத்த வேண்டும். இதைத் தொடர்ந்து கட்சி வெளியீடுகளை தொழில் நிலையங்களில் விநியோகிக்க வேண்டும்.

தேசிய சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் இந்தத் தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கப் பிரிவினரிடையில் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவதற்குத் தேவையான கவனத்தைச் செலுத்துவது கட்சியின் கடமையாகும். கட்சியின் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி அந்தந்த சிறுபான்மை மொழிகளில்தான் நடத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக அவசியமான விசேட பத்திரிகைகளை கட்சி உருவாக்க வேண்டும்.

22. பெரும்பான்மை பாட்டாளி வர்க்கத்தினர் இன்னும் புரட்சிகர உணர்வை அடையாத நிலையில் உள்ள முதலாளித்துவ நாடுகளில், இத்தகைய பின்தங்களிய தொழிலாளர்களைப் புரட்சிகர அணிவரிசைக்குக் கொண்டுவரும் வகையிலான புதுப்புது பிரச்சார வடிவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முறையில் பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி அமைய வேண்டும். முதலாளித்துவ கருதுகோள்கள் மற்றும் மரபுகளுக்கு எதிராக, தொழிலாளர் மனங்களில் உணர்வுபூர்வமற்ற முறையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்ற அரைகுறையான, ஊசலாட்டமான, அரை முதலாளித்துவத் தன்மையுடைய புரட்சிகரப் போக்குகள் மேலோங்குவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. பொதுவுடைமைவாதப் பிரச்சாரமானது, திரும்பத்திரும்ப பிரபலப்படுத்தப்படும் தனக்கே உரித்தான சொற்றொடர்கள், அறைகூவல்களுடன் (முழக்கங்களுடன்) இப்போக்குகளை வெளிக்கொணரச் செய்ய வேண்டும்.

அதேவேளையில், பாட்டாளி வர்க்கத் திரளினரின் வரம்புக்கு உட்பட்ட மற்றும் குழப்பமான கோரிக்கைகள் அல்லது விருப்பங்களுடன் பொதுவுடைமைவாதப் பிரச்சாரம் மனநிறைவு பெற்று ஓய்ந்துவிடக் கூடாது. இந்தக் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் புரட்சிக் கருத்துக்களின் நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கின்றன. இவை பாட்டாளி வர்க்கத்தை பொதுவுடைமைவாதப் பிரச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் கொண்டு வருவதற்கான சாதனங்களாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் அன்றாடப் போராட்டங்களுக்குத் தலைமையேற்பது

23. பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

இதை ஈடேற்ற பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களின் ஆரம்ப நிலையிலுள்ள போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்திலும் பங்கேற்க வேண்டும். வேலைநேரம், வேலை நிலைமைகள், கூலி இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளில் முதலாளிகளுடனான மோதலில் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தினுடைய பருண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியும் பொதுவுடைமையாளர்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டும். இப்பிரச்சினைகளின் மீது சரியான புரிதலுக்கு வர தொழிலாளர்களுக்குப் பொதுவுடைமையாளர்கள் உதவ வேண்டும். மிகமிகக் கொடிய அத்துமீறல்களின்பால் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்ப்பதையும் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை நடைமுறை ரீதியிலும், தெளிவான வடிவிலும் உருவாக்க உதவுவதையும் பொதுவுடைமையாளர்கள் செய்ய வேண்டும். இந்த வழியில் பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர் மத்தியில் ஒற்றுமை உணர்வை விழித்தெழச் செய்ய முடியும். ஒரு ஒன்றுபட்ட வர்க்கம் – இது உலகப் பாட்டாளி வர்க்கப் படைவரிசையின் ஒரு பிரிவே – என்ற ரீதியில் நாட்டில் உள்ள தொழிலாளர்கள் அனைவரிடமும் சமுதாய நலன்கள் பற்றிய உணர்வை ஏற்படுத்த முடியும்.

முட்டாள்தனமான வேலை நிறுத்தங்கள் மற்றும் பரிசீலனையற்ற நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறோம், வெறியூட்டுகிறோம் என்ற குற்றச்சாட்டு வரும்படியானதாக நமது கிளர்ச்சி வேலைகள் இருக்கக் கூடாது. மக்களுடைய போராட்டங்களில் வீரத்துடனும் துடிப்புடனும் பங்கேற்பவர்கள் பொதுவுடைமையாளர்கள் என்ற பெயரை போராடும் மக்களிடையே ஈட்ட பொதுவுடைமையாளர்கள் திடசித்தத்துடன் முயல வேண்டும்.

இத்தகைய அடிப்படையான கடமைகளை அன்றாடம் நிறைவேற்றுவது பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பது ஆகியவற்றின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியானது உண்மையான பொதுவுடைமைக் கட்சியாக உருவாக முடியும். இத்தகைய முறைகளை மேற்கொள்வதன் மூலமாகவே பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரத்தை பாமரத்தனமான பிரச்சாரகர்களிடமிருந்து, தூய சோசலிஸ்டு பிரச்சாரம் என்று சொல்லப்படுவதிலிருந்து – புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, சீர்திருத்தங்கள் பற்றியும், நாடாளுமன்ற சாத்தியப்பாடுகள் அல்லது சாத்தியப்பாடின்மைகள் பற்றிப் பேசுவது ஆகியவற்றைக் கொண்டது இது – வேறுபடுத்திப் பார்க்க முடியும். சுரண்டுபவர்களுடனான சுரண்டப்படுவோரின் அன்றாடப் போராட்டங்கள் மற்றும் பல வடிவங்களிலான மோதல்களில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சுயதியாக அர்ப்பணிப்புடனும், உணர்வுபூர்வமாகவும் பங்கேற்பது என்பது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு மட்டுமின்றி, மேலும் கூடுதலான அளவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமானதாகும். முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிரான சிறு போர்களில் தொழிலாளி வர்க்கத்தை வழிநடத்துவதன் வாயிலாகவே பொதுவுடைமைக் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படையாக வளர முடியும். முதலாளித்துவ வர்க்கத்தின் மீது மேல்நிலையை அடைவதற்கான போராட்டத்தில் முறையான தலைமை அளிப்பதற்கான திராணி உடையதாக வளர முடியும்.

ஒவ்வொரு போராட்டத்திலும் முன்வரிசையில் நிற்பது

24. தொழிலாளர் இயக்கத்தில் பங்கேற்க, வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள், தொழிலாளர்கள் மொத்தமாக வெளியேற்றப்படுவது போன்ற விசேடமான காலங்களிலும் பொதுவுடைமையாளர்கள் தமது முழு சக்தியையும் அணிதிரட்டிட வேண்டும்.

கட்சியின் வேலைத்திட்டத்தை, ஏன், இறுதி நோக்கங்களை அடைவதற்கான புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் தேவையைக் காரணம் காட்டி, தொழிலாளர்களின் வேலை நிலைமைகளில் சிறு முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான இப்போதைய போராட்டங்களை பொதுவுடைமையாளர்கள் வெறுத்தொதுக்குவதும், இத்தகைய போராட்டங்களின்பால் ஊக்கமற்ற போக்கைக் கடைபிடிப்பதும் மிகப் பெரிய தவறாகும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் எவ்வளவுதான் சிறு அளவிலானதாகவும், சாதாரணமானதாகவும் இருந்தாலும் இன்று தொழிலாளர்கள் முதலாளிக்கு எதிராகப் போராடத் தயாராக முன்வரும் பட்சத்தில் அந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதற்கான நொண்டிச் சாக்காக கோரிக்கைகளின் சிறு அளவிலான தன்மையை பொதுவுடைமையாளர்கள் காட்டக் கூடாது. முட்டாள்தனமான வேலை நிறுத்தங்கள் மற்றும் பரிசீலனையற்ற நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறோம், வெறியூட்டுகிறோம் என்ற குற்றச்சாட்டு வரும்படியானதாக நமது கிளர்ச்சி வேலைகள் இருக்கக் கூடாது. மக்களுடைய போராட்டங்களில் வீரத்துடனும் துடிப்புடனும் பங்கேற்பவர்கள் பொதுவுடைமையாளர்கள் என்ற பெயரை போராடும் மக்களிடையே ஈட்ட பொதுவுடைமையாளர்கள் திடசித்தத்துடன் முயல வேண்டும்.

பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டங்களைத் தொடுக்கக் கற்பது

25. தொழிற்சங்க இயக்கத்தில் உள்ள பொதுவுடைமைவாத செல்கள் (அல்லது பிராக்சன்கள்) அன்றாட வாழ்க்கையில் எழக்கூடிய சில சாதாரணமான பிரச்சினைகளை நடைமுறையில் எதிர்கொள்ள இயலாதவை என்று தம்மைக் காட்டிக் கொண்டுள்ளன. பொதுவுடைமையின் பொதுக் கோட்பாடுகளைப் போதித்துக் கொண்டே இருப்பது எளிமையானது. ஆனால் பயனற்றது. ஏனெனில், பருண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்கையில் எதிர்மறை போக்கான சர்வசாதாரணமான சிண்டிகலிசத்தில் வீழ்வதில் போய் முடியும். இத்தகைய நடைமுறைகள் ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் அகிலத்தின்* வலையில் வீழ்வதாகும்.

மாறாக, பொதுவுடைமையாளர்கள் தமது நடவடிக்கைகளில், பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் எச்சரிக்கையாகப் பரிசீலிக்குமாறு வழிநடத்தப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தத்துவார்த்த ரீதியில் மற்றும் கோட்பாடுகளின் மீது வேலை சம்பந்தமான ஒப்பந்தங்களையும் (கூலிகள் மற்றும் வேலை நிலைமைகள் பற்றி) எதிர்ப்பதுடன் பொதுவுடைமையாளர்கள் மனநிறைவு அடைந்துவிடுவதற்குப் பதிலாக ஆம்ஸ்டர்டாம் தலைவர்களால் சிபாரிசு செய்யப்படும் கூலி ஒப்பந்தங்களின் குறிப்பான இயல்புக்கு எதிரான போராட்டத்தில் தலைமை ஏற்று நடத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தயாரிப்புக்கு ஊறுவிளைவிக்கும் விசயங்கள் எதையும் எதிர்க்க வேண்டும் என்பது உண்மையே. எல்லாவகை நடைமுறை ஒப்பந்தங்களின் மூலமாகவும் முதலாளிகளும் ஆம்ஸ்டர்டாம் கேடுகெட்ட ஆமாம்சாமிகளும் தொழிலாளர்களின் கைகளைக் கட்டிப் போடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். எனவே, இந்த நோக்கங்களின் இயல்பு பற்றி தொழிலாளர்களின் கண்களைத் திறக்கச் செய்வது பொதுவுடைமையாளர்களின் கட்டாயக் கடமையாகும். தொழிலாளர்களை விலங்கிடாத ஒப்பந்தங்களுக்காக வாதிடுவதன் மூலம் இந்நோக்கத்தை பொதுவுடைமையாளர்கள் மிகச் சிறப்பாக அடைய முடியும்.

தொழிற்சங்க நிறுவனங்களுடைய வேலையின்மை, சுகவீனம் மற்றும் பிற நன்மைகளுக்கும் இதுவே பொருந்தும். போராட்ட நிதிகளை உருவாக்குவது, வேலை நிறுத்தக் காலத்துக்குச் சம்பளம் வேண்டும் எனக் கோருவது ஆகிய நடவடிக்கைகள் நாம் சிபாரிசு செய்யக் கூடாது.

எனவே கோட்பாட்டு ரீதியில் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பது உசிதமானது அல்ல. ஆனால் ஆம்ஸ்டர்டாம் தலைவர்கள் கூறுகின்ற முறையில் இந்த நிதிகளை சேகரிப்பதும் உபயோகிப்பதும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்பதை பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். நோயுற்றோர் நல நிதி போன்றவை சம்பந்தப்பட்டவரை பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களிடமிருந்து நிதி கோரும் முறையை ஒழிக்க வேண்டும். எல்லா வகையான தாமாக முன்வந்து தரும் நிதிகள் தொடர்பாக கட்டாயப்படுத்தும் நிபந்தனைகளையும் ஒழிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். (அரசும் முதலாளிகளும் இவற்றுக்கான நிதியைத் தர வேண்டும் என்று கோர வேண்டும் – மொழிபெயர்ப்பாளர்) கட்டணங்கள் செலுத்துவதன் மூலம் நோயுற்றோர் நல நிதி பெறுவதற்கு சில தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்னமும் ஆர்வம் காட்டுவார்களேயானால், அவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ என்று அஞ்சி, வெறுமனே அவற்றைத் தடை செய்வது நமக்குப் பலனளிக்காது. தீவிரமான நேரடியான பிரச்சாரத்தின் மூலம் அத்தகைய தொழிலாளர்லளை அவர்களது குட்டி முதலாளித்துவ கருத்தோட்டங்களிலிருந்து வென்றெடுப்பது அவசியமாக இருக்கும்.

(தொடரும்)


குறிப்பு:

* மஞ்சள் அகிலம் அல்லது பெர்ன் அகிலம் :
இரண்டாம் அகிலத்தில் எப்பொழுதுமே இடது, வலது, நடுநிலை என்றிருந்தது. இவை நாளடைவில் கெட்டிப்பட்டு மூன்று அகிலங்களாகப் பிரிந்தன. வலது சந்தர்ப்பவாதிகள் இரண்டாம் அகிலத்தைப் புதுப்பித்துக் கொண்டனர். 1919-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பெர்ன் நகரில் கூடிய சோசலிஸ்டுக் கட்சிகளுடைய மாநாட்டில் இது நடந்தது. இதுவே மஞ்சள் அல்லது பெர்ன் அகிலம் எனப்படுவதாகும்.

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம், கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ-யின் கைகளில் ஒப்படைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்ப்பது என மோடி அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக நாடே எதிர்த்து வந்த தேசிய கல்விக் கொள்கைக்கும் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு ஜூலை 29-ல் ஒப்புதல் அளித்துள்ளது.

34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கை உண்மையில் ஒரு தேன் தடவிய விஷம். 2016-ல் வெளியிடப்பட்ட டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழு அறிக்கை, 2019-ல் வெளியிடப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு தலைமையிலான “வரைவு தேசியக் கொள்கை” இவையிரண்டின் சாரமாகவே வெளிவந்துள்ளது தற்போதைய புதிய கல்விக் கொள்கை. ஒரே வேறுபாடு என்னவென்றால், முந்தையவற்றை விட இது நைச்சியமாகவும் தந்திரமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதே.

இக்கொள்கையில், இந்தியக் கல்வியை உலகமயமாக்கி அதைத் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் திட்டமும், தங்களின் இந்து சாம்ராஜ்ஜியக் கனவுக்கேற்ப பாடத்திட்டங்களை  அமைப்பது, முதல் மூன்று வயதிலிருந்தே மாணவர்களின் மூளையை வார்ப்பு செய்வது வரையிலான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது.

***

2015-இல் இந்தியா ஏற்றுக்கொண்ட (காட்ஸின் கீழ் வருகிற) சர்வதேச கல்வி விதிமுறைகளுக்கு ஏற்பத்தான் தற்போதைய கல்விக் கொள்கை மாற்றியமைக்கப் பட்டிருப்பதாக இக்கொள்கையின் முன்னுரையே கூறுகிறது. (பக்.3). “நிலையான வளர்ச்சி இலக்கு (SDG4)” என்று கூறப்படும் இச்சர்வதேச விதியானது, 2030-க்குள் கல்வியை உலகமயமாக்கி அதை தனியாரிடம் ஒப்படைப்பதையும் 21 ஆம் நூற்றாண்டில் சந்தையின் தேவைகளுக்கேற்ப கல்வி முறையை மாற்றியமைப்பதையுமே நோக்கமாகக் கொண்டதாகும்.

மேலும் துடிப்பான கல்வியை அடைய, கொடையாளர்கள் என்ற பெயரில் தனியாரின் முதலீட்டை ஊக்குவிப்பதே இக்கொள்கையின் நோக்கம் என்று வெளிப்படையாகவே கூறுகிறது. (பக்.6).

இன்னொருபுறம் அதே முன்னுரையில், ஆயிரமாண்டு  கால (ஆரிய-பார்ப்பன) மரபையும், சிந்னையையும் வழிகாட்டும் ஒளிவிளக்காகக் கொண்டுதான் இக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. மேலும் சரகா, சுஸ்ருதா, சாணக்கியர், பதஞ்சலி  போன்றவர்கள் மருத்துவம், கணிதம், அறுவை சிகிச்சை உட்பட பலதுறைகளைப் பற்றிக் கூறியுள்ள இலக்கியங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் இப்பொக்கிஷங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. (பக்.4,6). வேறு வார்த்தையில் சொல்வதானால், “அந்தக் காலத்திலேயே நாங்கள் அறுவை சிகிச்சையெல்லாம் செய்துள்ளோம்” என்ற சங்கிகளின் முட்டாள் கூற்றுகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று கல்விக் கொள்கையாகவே ஆகிறது.

இவற்றுக்கெல்லாம் அச்சாரம் வைத்தாற்போல், “எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒருவரை இந்தியப் பெருமிதமுள்ளவராக மாற்றுவதே இக்கொள்கையின் இலக்கு” என்கிறது. (பக்.6). இது வெளியானவுடன், இக்கூற்றுக்களையெல்லாம் மேற்கோள்காட்டி இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்றும் எங்களின் கருத்துக்களில் பெரும்பான்மையானவைதான் இதில் இடம் பெற்றுள்ளது என்றும் கூறியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. எனவே, நாம் இப்படித் துணிந்து சொல்லலாம் : எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒரு மனிதனை சங்கியாக மறுவார்ப்பு செய்வதே இக்கல்விக் கொள்கையின் நோக்கம்.

***

பள்ளிக் கல்வி :

குழந்தைகளின் 85% மூளை வளர்ச்சி 3 வயதிலேயே நடப்பதால், தற்போதுள்ள 10+2 என்ற பள்ளிக் கல்விக் கட்டமைப்பை 5+3+3+4 என்று மாற்றுவதோடு 3 வயதிலிருந்தே குழந்தைகளுக்கு மும்மொழிகளை கற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். இவையெல்லாம் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பது ஒருபுறம். இன்னொருபுறமோ, ஆயிரமாண்டு இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் கதைகள், நாடகங்கள்,  கலைகள், பாடல்கள் மூலமாகச் சொல்லித்தருவது என்ற பெயரில் பள்ளி செல்லும் குழந்தைகளின் மனதில் இந்துத்துவ நஞ்சு விதைக்கப்படும். இப்படிக் கூறுவது மிகையல்ல. பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒரு பள்ளியில், பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகம் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான சிறார்கள், அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவற்றவர்களாய் இருப்பது பற்றியும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது பற்றியும் நீலிக்கண்ணீர் வடிக்கும் இக்கொள்கை, அதைப்போக்க உள்ளூர் தன்னார்வலர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப் பரிந்துரைக்கிறது. இதற்கேற்ற வகையில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கையாட்களை இனி அதிகாரப்பூர்வமாகவே கல்வி நிலையங்களுக்குள் ஊடுருவ வைக்கும் சதித்தனமே இது.

படிக்க:
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

இடைநிற்றல் அதிகமாகிவிட்டதாகவும் 2035-க்குள் 50% சேர்க்கை விகிதத்தை அடையப்போவதாகவும் கூறும் இவர்கள், அரசு மற்றும் தனியார் கொடையாளர்களின் (கார்ப்பரேட்களின்) ஒருங்கிணைந்த முயற்சியில் இதைச் சரிபடுத்தப் போகிறார்களாம்.

பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறையைப் பொறுத்தவரை, மனப்பாடக் கல்வியை  ஒழிக்கப் போவதாகவும், செயல் முறைக் கல்வியை வளர்க்கப் போவதாகவும், பாடச் சுமைகளைக் குறைக்கப் போவதாகவும் பேசுகிறது இக்கொள்கை. பாடச்சுமைகளைக் குறைக்கப் போகிறோம் என்று ‘முற்போக்காகப்’ பேசும் இக்கொள்கை ‘இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம், மரபு’ ஆகியவற்றை கற்றுத்தருவதற்கு அதிக அழுத்தம் தருகிறது. எனவே, “பாடச்சுமையைக் குறைப்பது” என்ற பெயரில் ஜனநாயக, பகுத்தறிவுக் கருத்துக்களை நீக்கி பாடப்புத்தகங்களை முழுக்கக் காவிமயமாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கை ஒட்டி சமீபத்தில் குறைக்கப்பட்டிருக்கும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலேயே ஜனநாயகம் தொடர்பான பாடப் பகுதிகளை மத்திய அரசு நீக்கியிருப்பதை இதனுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.

அதேபோல, 5 ஆம் வகுப்புவரை தாய்மொழி வழிக் கல்வி என்று கூறுவதெல்லாம் பச்சைப் பொய். இக்கொள்கையின் 4.11 ஆவது அம்சத்தில், “சாத்தியமான இடங்களில்” (Where ever possible) தாய்மொழி வழிக் கல்வியைக் கற்றுக்கொடுக்கலாம் என்றுதான் உள்ளது. மேலும் இக்கொள்கை வெளியான மறுதினமே, தங்கள் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை அமல்படுத்த மாட்டோம் என சி.பி.எஸ்.சி பள்ளிகள் அறிவித்துவிட்டன.

3 வயதிலிருந்தே குழந்தைகள் மீது மும்மொழி திணிக்கப்படுகிறது. 3-வது மொழி இந்தியோ சமஸ்கிருதமோ அல்ல, எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கூறுனாலும், இக்கொள்கை முழுவதும் சமஸ்கிருதத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற செம்மொழிகளை பெயரளவுக்குக் குறிப்பிடும் இதில், மொத்தம் 23 இடங்களில் சமஸ்கிருதத்துக்கான முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது. அதேபோல, 4.17 ஆவது அம்சத்தில், “பள்ளி முதல் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் முக்கிய விருப்ப மொழியாக இருக்கும்” என்று வெளிப்படையாகவே கூறுகிறது.

மேலும், 22.15 ஆவது அம்சத்தில், “சமஸ்கிருத மொழியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வரையறுக்கப்பட்ட ஒற்றை வழியில் அல்லாமல், பள்ளிகளின் வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படும். மும்மொழிப் பாடத்திட்டத்தில் ஒருமொழியாக மட்டுமின்றி உயர் கல்வியிலும் பயிற்றுவிக்கப்படும். வெறுமனே மொழியாக மட்டுமின்றி புதுமையான சுவாரஸ்யமான முறைகளில் இது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். ….. மாணவர்கள் விரும்பும் பட்சத்தில், சமஸ்கிருதமானது ஒருவகை புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகளைக் கற்றுக் கொடுக்க முறையாகச் செயல்படத் துவங்கும். அதிக அளவிலான சமஸ்கிருத ஆசிரியர்கள், 4 வருட ஒருங்கிணைந்த பல்துறை கல்வி & பி.எட் பட்டம் பெறுவதன் மூலம் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறுகிறது. (பக்.55)

படிக்க:
நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்
புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

பிற தேசிய இனங்களின் மீதான தங்களது ஆரிய சமஸ்கிருதப் பன்பாட்டுப் படையெடுப்பை இவ்வளவு பச்சையாகவே கூறுகின்றனர். இத்தனைக்கு பிறகும் இதை வெறும் மொழித் திணிப்பு என்று சுருக்கிப் பார்க்க முடியுமா? மேலும், “ஒருவகைப் புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகள்” என்று கூறுவது சனாதன தர்மத்தை தவிர வேறென்ன.

5+3+3+4 என்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் தேசிய அளவிலான பொதுத்தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுகள் மாணவர்கள் – ஆசிரியர்களின் செயல்திறனை, விருப்பத்தை மதிப்பீடு செய்வதற்காகவே என்று கூறப்பட்டாலும், உண்மையில் ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதையே இது சதித்தனமாக செய்கிறது. இதற்கு இணையாக, 6-வது முதல் 12-வது வரை தொழிற்கல்வி என்ற பேரில் நவீன குலக்கல்வியைப் புகுத்துகிறது இக்கொள்கை. உள்ளூரிலுள்ள தச்சர்கள், குயவர்கள், தோட்டக்காரார்களிடம் மாணவர்கள் இண்டர்ன்சிப் செல்ல வேண்டுமாம். இதற்கு “புத்தகப் பைகளற்ற நாட்கள்” (bagless days) என்று தந்திரமாகப் பெயரும் சூட்டுகிறார்கள். கிராமப்புறங்களின் சமூக சூழ்நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் வீரியம் இன்னும் தெளிவாகத் தெரியும். இன்ன சாதி இன்ன தொழிலைத் தான் செய்ய வேண்டுமென வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில், காலனியைச் சேர்ந்த மாணவன் ஊருக்குள் நுழைவதே சிக்கல் எனும் நிலையில், அந்த மாணவன் குலத் தொழிலை மட்டும்தானே கற்க முடியும் ?

பல்வேறு மொழி, தேசிய இனங்கள், பண்பாடுகள் நிறைந்த நம் நாட்டில், தேசிய அளவில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும் அதை வரையறுக்க ஒரே அமைப்பும் உருவாக்கப்படும் என்றும் கூறுகிறது இக்கொள்கை. மாநிலங்களிடம் கருத்துக்களைக் கேட்டால் போதுமானது என்று கூறுவதோடு, இவ்வமைப்பு கூறும் வரையறைக்குட்பட்டே மாநிலங்கள் தத்தம் வரலாறுகளையும் சிறப்பியல்புகளையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்றும் சொல்கிறது. (பக்.16, 17). ஒரே நாடு ஒரே கலாச்சாரம் அது இந்துக் கலாச்சாரம் தான் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையையே இந்தப் புதிய கல்விக் கொள்கை பறைசாற்றுகிறது.

ஆசிரியர்களைப் பற்றிய பகுதியில், பண்டைய குருகுலக் கல்வி முறையை வானளாவப் புகழ்ந்துவிட்டு, தற்போது தகுதியற்றவர்கள் நுழைந்துவிடுகிறார்கள் என்று கூறிவிட்டு, ஆசிரியர்களுக்கும் இனி தேசிய அளவிலான தகுதித்தேர்வு, நேர்முகத் தேர்வுகளை வைக்க வேண்டும் என்றும், பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப் பணி தரக்கூடாது அவர்களின் செயல்திறனை மதிப்பிட்டே நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்றும் இதற்கு இடையில் தற்காலிக “தகுதிகாண்” கட்டத்தை வைத்து சோதிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஆளெடுப்பு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் பிடிக்குள் செல்லும் போது அறிவியல் பூர்வமான, ஜனநாயக சிந்தனை கொண்ட ஆசிரியர்களைக் கல்வி நிலையங்களுக்குள் செல்லவிடாமல் தடுக்கவும் அப்படி இருப்பவர்களை வெளியேற்றவுமே இவை பயன்படும். இவ்விதிகளேதான் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும்.

மேலும், இன்றைய பாடத்திட்டங்கள் உலகத்தரத்தில் இல்லை என்று கூறும் இக்கொள்கை, கார்ப்பரேட்டுகளின் சந்தைக்கேற்ற படிப்புகளான செயற்கை நுண்ணறிவு (AI), மீப்பெரும் தரவுப் பகுப்பாய்வு, coding, உயிரி தொழில் நுட்பம் போன்றவற்றையே 21-ம் நூற்றாண்டின் திறன்களாகச்  சித்தரித்துள்ளது. உயர் கல்வியில் அவற்றைக் கற்பதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பதற்கே பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அதிக அழுத்தமும் கொடுத்துள்ளது. இந்தியர்களை கார்ப்பரேட் கூலியாட்களாக மாற்றுவதோடு அவர்களின் சந்தை தேவைகளுக்கேற்ற படிப்பையே நாட்டின் வளர்ச்சியாக இக்கொள்கை தொழிற்கல்வி என்ற பெயரில் சித்தரிக்கிறது.

ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருங்கிணைந்த பல்துறை கல்வியை அளித்தல் என்ற பெயரில் சிறிய அளவிலான பள்ளிகளை ஒருங்கிணைத்து பள்ளி வளாகங்கள், குழுக்களாக (School complexes and clusters) மாற்றப்படுமென்கிறது இக்கொள்கை. இதை 2025-க்குள் எல்லா மாநில அரசுகளும் செய்யவேண்டும் என்கிறது. “எல்லா வளங்களையும், துறைகளையும் ஒரே இடத்தில் கொண்ட கல்வி நிறுவனங்கள் வேண்டும்” என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையான இதில், சிறுசிறு அரசு பள்ளிகளையே படிப்படியாக மூடி ஒழித்துக்கட்டும் மாபெரும் திட்டம் ஒளிந்துள்ளது.

இதற்காக, முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளியுடன் ஒரு அரசுப் பள்ளியை இணைக்கப் போகிறார்களாம். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்தர ஆய்வங்கள், நூலகங்கள் கிடைக்கும் என்று காதில் பூச்சுற்றுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் தெரிவிக்க விரும்புவது, இனி அரசுப் பள்ளிகளுக்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்காது என்பதுதான். இலாப நோக்கம் கொண்ட தனியார் பள்ளிகளின் வளங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்குமா? அல்லது அரசுப் பள்ளிகளின் நிலங்களையும், விளையாட்டுத் திடல்களையும் தனியார் பள்ளிகள் சுருட்டிக்கொள்ளுமா?.

தற்போதுள்ள கல்வித்துறையின் பெயரளவிலான விதிகள்கூட தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை உள்ளிட்டவற்றை கேள்விகேட்பதாக மறைமுகமாக குறிப்பிடும் இக்கொள்கை, இவற்றை “தொந்தரவுகள்” என்றும் “வளர்ச்சியைத் தடுப்பவை” என்றும் வரையறை செய்கிறது. “பள்ளிகளின் விதிகளிலோ அல்லது செயல்பாடுகளிலோ, பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதிலோ பள்ளிக் கல்வித் துறை தலையிடாது.” (பக்.31). இவ்விதிகள் அனைத்தையும் தளர்த்திக் கொண்டு தனியார் கல்விக் கொள்ளை நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போலக் கொள்ளையடிக்க ஏதுவான வழிவகைகளைச் செய்துகொடுக்கிறது. மேலும், ‘இலாப நோக்கற்ற தனியார் நிறுவனங்கள்’ கல்வியில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் பள்ளிக் கல்வியின் சந்தையை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுகிறது.

மேலும், பள்ளிக் கல்வியில் ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் கற்பித்தல் இவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பன்னாட்டு ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரிக்க விடுக்கும் சமிக்ஞையே ஆகும்.

***

உயர்கல்வி :

பள்ளிக்கல்வி பகுதியில் தங்களின் திட்டங்களை சூசகமாகக் கூறிய மோடி அரசு உயர்கல்வியில் வெளிப்படையாகவே கூறுகிறது.

மிகமுக்கியமாக உயர்கல்வியில் இதுவரை பல்கலை – கல்லூரிகளுக்கு நிதியளிப்பது, அங்கீகாரம் வழங்குவது, தர நிர்ணயம் செய்வது ஆகியவற்றைச் செய்துவந்த UGC, AICTE போன்ற அமைப்புகளைக் கலைத்துவிட்டு மருத்துவம், சட்டத்துறைகளைத் தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகிக்க, தர நிர்ணயம் செய்ய HECI என்ற ஒற்றைச் சர்வாதிகார அமைப்பைக் கொண்டுவருகிறது.

2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு அமைத்த, பிர்லா-அம்பானி அறிக்கை யு.ஜி.சி யைக் கலைக்கவும், அரசு பல்கலைக் கழகங்கள்-கல்லூரிகளுக்கு நிதியளிப்பதை படிப்படியாக நிறுத்தவும் கூறியது. அதன்படியே கடந்த 2018 டிசம்பரில் HECI மசோதாவை மோடி அரசு வெளியிட்டது. இவ்வமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை. கல்லூரிகள் தாங்களாகவே, கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் அல்லது கடன் மூலம் நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக அதற்காக உயர்கல்வி நிதி முகமை என்ற அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இது அரசு கல்வி நிறுவனங்களை நிதி நெருக்கடியில் தள்ளி மூடும் நோக்கத்தைக் கொண்டதாகும். அதுமட்டுமல்ல இந்த HECI அமைப்பில், புரவலர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் அமர்வார்கள். அவர்கள்தான் இனி கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுப்பார்கள்.

மேலும் இக்கொள்கை, 15 ஆண்டுகளுக்குள் எல்லா உயர் கல்வி நிறுவனங்களுக்கும் படிப்படியாக, தர அடிப்படையிலான தன்னாட்சியை (Graded Autonomy) அளிக்க வேண்டும் என்கிறது. நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளதை இதனுடன் இணைத்துப் பார்த்தால், அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிச்சயம் மூடுவிழாதான்.

“நாளந்தா, தக்சசீலா போன்ற பண்டைய கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டவர் வந்து படித்த பெருமையைக் கொண்டது நமது நாடு” என்று கூறிவிட்டு அதை இப்போது மீட்டெடுக்கப்போவதாக தங்கள் மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு தேசிய சாயம் பூசுகிறார்கள். உலகளாவிய கல்வியின் தலமாக இந்தியாவை மாற்ற வேண்டும், கற்றல்-கற்பித்தல், ஆசிரியர், மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் உயர்தர பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும், உலகின் சிறந்த 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட வசதி செய்து தரப்படும் என்றெல்லாம் வெளிப்படையாகவே கூறுகிறது இக்கொள்கை. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் விருப்பம்போல ஆன்லைன் கல்வி நிறுவனங்களைத் தொடங்கவும் இதில் முழுச்சுதந்திரம் தரப்பட்டுள்ளது. இவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடியில் இந்திய உயர்கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டு, காசிருந்தால்  மட்டுமே உயர்கல்வி என்ற நிலை ஏற்படும்.

படிக்க:
மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

பள்ளிக்கல்வியைப் போலவே தரத்தைக் காரணமாகக்கூறி, கல்லூரிகளையும் உயர்கல்வி கூட்டமைப்புகளாக ஒருங்கிணைக்கச் சொல்கிறது. மேலும், 2040-க்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் பலதரப்பட்ட புலங்களைக் கொண்ட (multidisciplinary) கல்வி மையங்களாக (HUB) உருவாக்க வேண்டும் என்று கூறும் இக்கொள்கை ஒற்றைப் புலங்களைக் கொண்ட (single-strem) பல்கலைக் கழகங்களைப் படிப்படியாக மூடிவிட வேண்டும் அல்லது அத்துடன் இணைத்துவிட வேண்டும் என்கிறது. (பக்.34, 35).

நீட் தேர்வைப் போல, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை உயர்கல்வியிலிருந்து வடிகட்டி வெளியே தள்ளும். மேலும், கல்வியிலிருந்து எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதை “நெகிழ்வுத் தன்மைகொண்டது” எனக் கூசாமல் இக்கொள்கை வரையறுக்கிறது. உயர்கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் குடும்ப சூழலில் கல்வி கற்க முடியாமல் போனால், அவர்கள் கல்வியை முழுமையாக முடிப்பதற்கு உதவி செய்வது நல்ல கல்விக் கொள்கையா ? காசிருக்கும் வரை படித்ததற்கு ஏற்றவாறு இரண்டாம் தர சான்றிதழ் தருவது நல்ல கல்விக் கொள்கையா ?

பள்ளிக் கல்வியைப் போலவே, கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, தகுதிகாண் கட்டம் இவற்றை அமல்படுத்துவதோடு, அப்பேராசிரியர்கள் இந்திய விழுமியங்கள், கலாச்சாரம், மரபுகள் இவற்றில் ஆழமான அடித்தளத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும்  கூறுகிறது இக்கொள்கை. (பக்.42). இனி சிந்தனையாலும், ஆத்மாவாலும் முழு சங்கியாக வாழ்பவர்கள்தான் பேராசிரியர்களாக முடியும் என்பதே இதன் பொருள்.

ஆய்வுகளுக்காக, தேசிய அளவிலான ஆரய்ச்சி மையம் (NRF) உருவாக்கப்படும். பல்கலை, கல்லூரிகளின் ஆய்வுகளுக்கு இந்நிறுவனம்தான் நிதி, அங்கீகாரம், ஒப்புதல் இவற்றை வழங்கும். இதுபற்றிக் கூறும் பகுதியில், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான டிஜிட்டல் சந்தை, செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில் நுட்பம், பிக் டேட்டா, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிலும் காவிகளின் விருப்பமான நாட்டின் அடையாளம், கலாச்சாரம், கலை ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்யத்தான் இனி ஊக்குவிக்கப்படும் என வெளிப்படையாகவே கூறுகிறது. 22.16-இல் “இந்தியக் கலை, கலை வரலாறு, இந்தியத் தத்துவம் – வரலாறு – இலக்கியம் – தத்துவம் – பண்பாடு இவற்றுக்கான கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் அமைக்கப்படும். இதில் ஆராய்ச்சியில் ஈடுபட அனைத்து விதமான நிதி உதவிகளும் NRF மூலம் செய்யப்படும்” என்று காவிகளின் நோக்கத்தை வெளிப்படையாகவே கூறுகிறது இந்த புதிய கல்விக் கொள்கை. மேலும் தொழிற்துறை சார்ந்த ஆய்வுகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான தேவையை மையமாகக் கொண்டே நடைபெறும் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை (பக்.45, 46, 55).

ஜனநாயகத்தின் வாசனையோ, மக்கள் நலனின் வாசனையோ அற்ற கார்ப்பரேட் – காவிமயமான ஆய்வுகள்தான் இனி வெளிவரும். சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோரெல்லாம் முடக்கப்படுவார்கள்.

***

வ்வாறு, ஏழைகளைக் கல்வியிலிருந்து துடைத்தெறிந்து, ஒட்டுமொத்தமாகக் கல்வியையே கார்ப்பரேட் – காவிமயமாக்கும் நவீன மனுநீதியையே புதிய கல்விக் கொள்கையாக வெளியிட்டுள்ளது மோடி அரசு.

இக்கொள்கை ஏழைகளைக் கல்வியிலிருந்து துடைத்தெறிகிறது என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்து ராஷ்டிரக் கனவுக்கேற்ப மனித மூளையை மூன்று வயதிலிருந்தே வார்ப்பு செய்கிறது. வேறு  வார்த்தைகளில் மீண்டும் சொல்வதானால், எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒருவனைச் சங்கியாகவும் கார்ப்பரேட் அடிமையாகவும்  மாற்றுகிறது என்பதுதான் மிகப்பெரிய அபாயம்.

தீரன்

பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

0

பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று இவற்றுடன் சேர்த்து பாசிச அபாயத்தையும் இந்தியா எதிர் கொண்டுள்ளது. ஆம் ! இங்கு அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தியின் அன்றைய அவசரநிலை ஆட்சியை எதிர்கொண்டதைப் போல பாஜக அரசின் இன்றைய அவசரநிலை ஆட்சியை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் இங்கு பாஜக -வைப் பின்னிருந்து இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ்.. மேலும், அதிகார மட்டங்களிலும் அடியாட்படை பலத்திலும் வலுவாக உள்ளது இக்கும்பல்.

தற்போதைய கொரோனா பெருந்தொற்றுச் சூழலை தனக்கு  சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா துவங்கி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா, புதிய கல்விக் கொள்கை வரை தொடர்ச்சியாக தனது காவி – கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது மோடி அரசு.

இந்த பாசிச சூழலை எதிர்க்க, நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்டுகள், பெரியாரிய – அம்பேத்கரிய சிந்தனையாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் நாட்டின் மீது அக்கறை உள்ள அனைவரும் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை இக்காணொலியில் விரிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். பாருங்கள்… பகிருங்கள்…

நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்

பார்ப்பன எதிர்ப்பு கொண்ட தமிழகத்திலேயே பெண்ணடிமைத்தனமும், சடங்கு சம்பிராதயங்களும், மூடக்கருத்துக்களும் கோலாச்சுகிறது; குடும்பங்களிலிருந்து அகற்றுவது அப்படி ஒன்றும் எளிமையானது இல்லை என்கிறபோது, வட இந்தியாவின் நிலையைப் பற்றி தனியாக விளக்கத் தேவையில்லை. அதனால்தான் அங்கே இராமனின் பெயரால் இலட்சக்கணக்கானோர் கூடுகிறார்கள்; கொலைக்கருவிகளோடு தெருக்களில் வலம் வருகிறார்கள்.

வட இந்தியாவில் இராமன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட மதச் சார்பாக்கத்தை தமிழகத்தில் முருகனின் பெயரால் கொண்டுவர முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர்களின் மதச்சார்பற்ற பண்பாட்டை இந்துப் பண்பாடாக மாற்றிக் காட்டி நம்மையும் காட்டுமிராண்டிகளாக்கத் துடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர் பாரம்பரியம்  ‘இந்துப்’ பாரம்பரியம் அல்ல என்பதை நமக்கு ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல்..

நூலிலிருந்து சில பகுதிகள்:

அந்தணர்

“பண்டைத் தமிழர்களிடையே எவ்விதமான ஏற்றத்தாழ்வும், சாதிப் பாகுபாடும் கிடையாது. செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளே அவை.”

“சுருங்கக்கூறின், அனுபவ அறிவும், பொதுநல நாட்டமும் உடைய, இல்வாழ்க்கையை விட்டு பொதுத் தொண்டாற்ற முன்வந்த தமிழ்ப் பெரியவர்களே அந்தணர்கள். இவர்கள் தனிப் பிரிவினர் அல்ல.”

“இளஞ்சேட் சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் மகள் ஆவாள். அவனுடைய மகன் கரிகாலனின் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேள் ஒருவனின் மகள்.

எனவே, அந்தணர் என்பதும், அரசர் என்பதும், வணிகர் என்பதும், வேளாளர் என்பதும் தொழில் பிரிவுகளே! சாதிப் பிரிவுகள் அல்ல என்பதற்கு மேற்கண்ட திருமண உறவுகளே நல்ல சான்றுகளாகும். சாதிப் பிரிவுகளாக இருந்திருந்தால் திருமண உறவு ஏற்பட்டிருக்காது அல்லவா?”

தமிழர் காதல்

“பருவமடைந்த ஒரு ஆணும் பெண்ணும் தனியே சந்தித்து, பேசி, காதல் கொள்வது என்பது அன்று குற்றமாகக் கொள்ளப்படவில்லை. காதல் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவேக் கருதப்பட்டது.”

“… அக்கால தமிழ்க் காதலுக்கு சாதியில்லை, உறவு இல்லை; உறவுக்காரர்கள்தான் மணந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை; ஏற்றத்தாழ்வு இல்லை. அன்பு கொண்ட, பருவமடைந்த எந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டனர், இல்வாழ்வு நடத்தினர்.”

தமிழர் திருமணம்

“காதல் கொண்ட இருவரும் இறுதியில் இல்வாழ்க்கையை எந்தவித திருமணச் சடங்கும் இன்றி துவங்குவதே பண்டைத் தமிழர்களின் மரபாக இருந்தது…”

“பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், காதலியின் விருப்பத்தோடு அவளை ஒருவரும் அறியாமல் தன் ஊருக்கு அழைத்துச் சென்று இல்வாழ்வு நடத்துவான்.”

“இதைக்கண்ட பெரியவர்கள், இப்படிப்பட்ட மோசடிகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு பலரறிய திருமணம் செய்யும் முறையை ஏற்படுத்தினர்…..”

“…. பண்டைத் தமிழர்கள் திருமணத்தில், தாலி இல்லை, தரம்கெட்ட வேதம் இல்லை, எரிவளர்த்தல் இல்லை, ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பனர் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி பார்த்தல் இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.”

இல்லுறை தெய்வ வழிபாடு

“இறந்துபோன குடும்பப் பெரியவர்களை, பெற்றோர்களை வழிபாடு செய்வதே இல்லுறை தெய்வ வழிபாடு ஆகும்.”

“முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலத்து மக்கள் முறையே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத்தலைவர்களை வணங்கினர்.

மாயோன் என்றால் திருமால் என்றும், சேயோன் என்றால் முருகன் என்றும், வேந்தன் என்றால் இந்திரன் என்றும், வருணன் என்றால் கடற்கடவுள் என்றும் பல உரையாசிரியர்கள் இதற்குப் பொருள் கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.

தங்கள் கருத்துக்களை வலியுறுத்திக் கூற, தமிழர் வழக்கத்தையே திரித்துக் கூறுகின்ற பெருங்குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.” (நூலில் பக்கம் 8-19)

சிந்துவெளித் தமிழன் வழிபட்டது சிவலிங்மா?

“அக்காலத்தில் மக்களைவிட விலங்குகளே அதிக அளவில் இருந்தன. மனிதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

எனவே அக்கால மக்களுக்கு தங்கள் இனத்தை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டிய அவசியம் அதிக அளவில் இருந்தன. மக்கள் எண்ணிக்கை அதிகம் பெருக வேண்டும் என்று அக்கால மக்கள் விரும்பினர்.”

“இக்காலத்தில், ஆயுத பூசை என்ற பெயரில் மக்கள் தங்களுக்குப் பயன்படக்கூடிய கருவிகளை வழிபடுவதைக் காணலாம்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின்
புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

தச்சன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், கொல்லன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், அவ்வாறே ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குப் பயன்படும் கருவிகளையும் வழிபடுதல் போலவே அக்கால மக்கள் தங்களுக்கு அவசியம் என்று கருதப்பட்ட ஆண் – பெண் உறுப்புகளை வழிபட்டனர்.

இவ்வாறு ஆன் – பெண் உறுப்புகளை பொருத்தி வழிபட்ட வழக்கம் சிந்துவெளி மக்களிடம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் அக்காலத்தில் இருந்தது.”

“வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும், சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் கதை கட்டியது போல; அக்கால மக்கள் வழிபட்ட ஆண், பெண் உறுப்பு இணைந்த உருவங்களைக் கண்ட ஆரியர்கள் அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர்.”

“அதாவது, சிவனின் ஆண் உறுப்பும், பார்வதியின் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்று ஒரு கதை கட்டினர். ஆதாரம் லிங்கபுராணம்.” (நூலில் பக்கம் 23–26)

ஆரியர்கள் பார்ப்பனர் ஆனது எப்படி?

பார்ப்பு என்ற சொல்லிலிருந்தே பார்ப்பனர் என்ற சொல் உருவாயிற்று. பார்ப்பு என்பதற்கு இளமை என்பது அர்த்தம்.”

“இளங்குழந்தைகளை “பாப்பா” என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்பது பார்ப்பா என்றாகி பின்னர் பாப்பா என்று வழக்கத்தில் ஆகியது.”

“தமிழ் மன்னர்களின் அரண்மனையிலும், பெருஞ்செல்வர்களின் வீடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த தமிழர்களே பார்ப்பனர் ஆவர்.

அதாவது, இளம்பருவத்தில் (பார்ப்பு பருவத்தில்) உள்ளவர்களுக்கு உதவியாளர் பணி செய்தவர்கள் என்பதால் அந்த உதவியாளர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பார்ப்பனர் என்பதற்கு இளைஞர்களின் துணைவன் என்று அர்த்தம். பார்ப்பனர் என்பது ஒரு வேலையின் (தொழிலின்) பெயரே ஆகும்.” (நூலில் பக்கம் 29, 30)

ஜாதிப் பிரிவினையை உருவாக்குதல்

“ஆரம்பத்தில் தமிழர்கள் செய்து வந்த பார்ப்புத் தொழிலை ஆரியர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் ஆனதுபோல, நாளடைவில் அந்தணப் பணியையும் மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தவர்கள், அந்தணர்கள் என்றாலே ஆரியர்கள்தான் என்றாகிவிட்டது.

தமிழர்கள் அந்தணர் பணி செய்யும்போது அவர்கள் சமுதாயப் பணியினை செய்தனர். ஆனால் ஆரியர்கள் அந்தணர் பணி செய்ய ஆரம்பித்தபின், அந்தணர் பணியை சமயப் பணியாக்கிவிட்டனர். கடவுள் பணி, கடவுள் கொள்கையைப் பரப்புதல், சடங்குகள் செய்தல், யாகங்கள் நடத்துதல் போன்றவை அந்தணர்களுக்கு உரியது என்று ஆக்கிவிட்டனர்.”

“அதாவது, ஆரியர்கள் செல்வாக்கடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 1.தமிழர், 2.ஆரியர் என்று இரு இனப்பிரிவும், தமிழர்களிடையே 1.அரசர், 2.வணிகர், 3.வேளாளர் என்ற தொழில் பிரிவும் காணப்பட்டன.

சாதியை உருவாக்கி தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தத் திட்டமிட்ட ஆரியர்கள், இந்த நான்கு பிரிவையும் (1.ஆரியர், 2.அரசர், 3.வணிகர், 4.வேளாளர்) நான்கு வருணங்களாக ஆக்கத் திட்டமிட்டனர்.” (நூலில் பக்கம் 39, 40)

இவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தியதை பல்வேறு சம்பவங்கள் மூலம் தக்க ஆதாரங்களுடன் சிறுசிறு தலைப்புகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் நூலாசிரியர். அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் : தமிழா, நீ ஓர் இந்துவா?
ஆசிரியர் : மஞ்சை வசந்தன்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை – 600 007.
தொலைபேசி எண்: 044 – 26618161

கிடைக்குமிடங்கள்: பெரியார் புத்தக நிலையம்
பெரியார் திடல், 84/1(50). ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007. தொ.பே. 044-26618163

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி – 620 017. தொ.பே. 0431-2771815
info@periyar.org | www.dravidianbookhouse.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

 

மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !

மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு – 80 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மரணம் ! காரணம் இயற்கைப் பேரழிவல்ல ! டாட்டாவின் லாபவெறியே !

கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெட்டிமுடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை (07-08-2020) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு பணிபுரிந்த தமிழர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த உயிரிழப்பை இயற்கைப் பேரிடராகக் காட்ட கேரள அரசும், தேயிலை எஸ்டேட் உரிமையாளரான டாட்டா நிறுவனமும் முயற்சிக்கின்றன.

கடந்த ஆண்டு கடும் மழை பெய்த சமயத்திலேயே, நிலவியல் ஆய்வறிஞர்கள் மழை பொழிந்தால், அப்பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று கொடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அதற்கான முயற்சிகள் எதையும் செய்யாமல், இன்று 80 பேரின் உயிரிழப்பிற்குக் காரணமாகியுள்ளது டாட்டா நிர்வாகம்.

இந்த மரணத்திற்குக் காரணம் இயற்கைப் பேரிடர் அல்ல, மாறாக டாட்டாவின் இலாபவெறி. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஈட்டப்படும் தமது வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட தொழிலாளர்களைப் பாதுகாக்க செலவு செய்யாத முதலாளித்துவ இலாபவெறியே காரணம் !

படிக்க:
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து குறித்து பேசும் தேசிய மீடியாக்கள் எதுவும் மூணாறு பிரச்சினை குறித்து வாய் திறப்பதில்லை.

தொழிலாளர்களின் பேரழிவிற்குக் காரணமான டாட்டா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு அந்த எஸ்டேட்டையும் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் அரசே எடுத்து நடத்த வேண்டும். தனியார் இலாபவெறிக்கு அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பலியாவதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

***

“மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் மரணம் ! பெட்டிமுடி நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறிக்காக நடத்தப்பட்ட படுகொலை !” என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் வரும் 12.08.2020 அன்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்…

மத்திய அரசே ! கேரள அரசே !

  • கார்ப்பரேட் முதலாளி டாட்டாவை காப்பாற்ற முயற்சிக்காதே !
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்கு !
  • வாழ்க்கை முழுவதும் வாழ்வாதார பதுகாப்பு கொடு !

உழைக்கும் மக்களே !

  • கொலைகார கார்ப்பரேட்டுகளின் தேயிலைத் தோட்டங்களை அரசுடமையாக்க போராடுவோம் !

 

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.

பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 03

முதல் பாகம்

பொதுவுடைமைவாத செல்(Cell) களை எப்படிக் கட்டியமைப்பது?

உறுதியான நம்பிக்கையும் ஊக்கமும் உடைய பொதுவுடைமைவாதிகளான செயல்திறனுள்ள பல அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து – நாட்டின் பல்வேறு மையங்களில் உள்ள இயக்கத்தின் நிலைமையை அறிந்தவர்களைக் கலந்தாலோசித்து இந்தப் புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவதற்கான விவரமான அடிப்படைகளை விரிவாக வகுக்க வேண்டும் என்பதை நாம் சிபாரிசு செய்கிறோம். இதன்பின்னர், பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாளர்கள் அல்லது அமைப்புக் கமிட்டிகள், களத்தில் வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழுக்களின் முதல்தரமான தலைவர்களைத் தெரிவு செய்து கொண்டு ஆரம்ப வேலைகளைத் துவக்க வேண்டும். அதன்பின்னர் கட்சி நிறுவனங்கள், வேலைக்கான குழுக்கள், கருக்குழுக்கள், தனிப்பட்ட உறுப்பினர்கள் அனைத்துக்கும் பருண்மையான, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகள் முன்வைக்கப்பட வேண்டும். இவற்றை முன்வைக்கும்போது, அவை அவர்களுக்குப் பயனுள்ளவையாகவும், விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அமல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமான இடங்களில் இக்கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்போது தவிர்க்கப்பட வேண்டிய தவறான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.

பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

14. இந்த மறு ஒழுங்கமைப்பு வேலைகள் நடைமுறையில் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் எண்ணற்ற கருக்குழுக்கள் அல்லது வேலைக்கான குழுக்களை உள்ளூர் நிறுவனங்களில் அமைக்கக் கூடாது. தனியாகப் பிரிக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் அமைக்கப்பட்ட சில கருக்குழுக்கள் சரியாக இயங்குவதையும், கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அவசியமான அளவு அவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் (எடுத்துக்காட்டாக, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, மகளிர் இயக்கம், கிளர்ச்சித்துறை, பத்திரிகை வேலை, வேலையின்மை எதிர்ப்பு இயக்கம் போன்றவை) நிரூபணமாக்க வேண்டும். புதிய நிறுவன எந்திரம் குறிப்பிடத்தக்க நடைமுறை அனுபவம் பெறும்வரை பழைய நிறுவனக் கட்டமைப்பு அவசர கோலமாகக் கலைக்கப்படக் கூடாது. அதேவேளையில், கட்சி நிறுவன வேலைகளின் இந்த அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இடத்திலும் மீமிகு ஆற்றலுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இவை சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகளுக்கும் மகத்தான கடமைகளை சுமத்துகின்றன.

பாட்டாளி வர்க்கப் போராட்ட மையங்கள் அனைத்திலும் பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் பரந்துவிரிந்து வலைப்பின்னல் ஆக அமைக்கப்பட்டு இயங்கும் வரையில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாட புரட்சி வேலையில் தனது பங்கைச் செய்யும் வரையில் இவ்வாறு செய்வது உறுப்பினர்களுக்கு இயல்பானதாகவும் வழமையானதாகவும் ஆகும் வரையில் இக்கடமைகளை நிறைவேற்றுவதில் கடின உழைப்பைச் செலுத்துவதிலிருந்து கட்சியானது ஓய்வாக இருக்க தன்னைத்தானே அனுமதிக்கக் கூடாது.

சோதித்தறிவது

15. இந்த அடிப்படையிலான நிறுவனக் கடமையானது கட்சித் தலைமை உறுப்புகளின் மீது ஒரு கடப்பாட்டைச் சுமத்துகின்றது. கட்சி வேலைகளின் மீது முறையான, தொடர்ச்சியான, செல்வாக்கு செலுத்தும்படியான முறையில் இடையறாது வழிகாட்டுவதும் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதுமே அக்கடப்பாடு. கட்சி நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் செயலூக்கமிக்கத் தோழர்கள் தமது பங்குக்கு பன்முக செல்வாக்கு செலுத்துவதானது இதற்குத் தேவைப்படுகிறது. பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

 

மேலிருந்து அறிவிப்பதும் கீழிருந்து அறிக்கை பெறுவதும்
– தலைமையின் மையக் கடமை

16. நமது கட்சி வேலைகள் முழுவதும் சித்தாந்த அல்லது நடைமுறைப் போராட்டங்களாகவோ அல்லது போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையாகவோ இருக்கின்றன. இதுவரையில் இப்பணியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைபாடுள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சி நடவடிக்கைகள் அரிதாகவே இருப்பது என்பது மிக முக்கிய துறைகளில் கூட காணப்படுகின்றன. உதாரணமாக, இரகசிய உளவாளிகளை எதிர்ப்பது என்ற விசயத்தில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகள் மிகச் சிறிய அளவு பணிகளையே செய்துள்ளன. நமது கட்சித் தோழர்களுக்கு ஒரு விதி என்ற முறையில் செய்ய வேண்டிய அறிவுறுத்தும் (Instruct) வேலை எப்போதாவது செய்யப்படுகிறது – அல்லது இரண்டாம் பட்சமாக செய்யப்படுவதாக இருக்கிறது. இது எந்த அளவு மேலோட்டமாகச் செய்யப்படுகிறது என்றால், கட்சியின் தீர்மானங்களும் ஏன் கட்சித் திட்டமும் பொதுவுடைமை அகிலத்தின் தீர்மானங்களும்கூட மிகப் பெருமளவில், மிகப் பரவலான பிரிவினரான கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. மிக உயர்ந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்காக கட்சி நிறுவனக் கட்டமைவு முழுவதிலும் கட்சியின் செயல்பாட்டுக் கமிட்டிகள் அனைத்திலும் முறையாகவும், இடையறாதும் அறிவுறுத்தும் வேலை செய்யப்பட்டாக வேண்டும்.

17. (கீழிருந்து) அறிக்கைகள் சமர்ப்பிப்பது என்பதும் பொதுவுடைமைவாத நடவடிக்கையில் கடமைகளைச் சேர்ந்ததாகும். இது, கட்சியின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்புகளின், இதுபோலவே ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் கடமையாகும். குறுகிய காலத்துக்கான பொது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்சியின் விசேடமான கமிட்டிகளின் வேலைகளைப் பற்றி விசேடமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முறையாகவும் தொடர்ச்சியாகவும் அறிக்கை சமர்ப்பிப்பது என்பதை எந்த அளவு அவசியமானதாக செய்ய வேண்டும் என்றால், இது ஒரு நிரந்தரமாக நிறுவப்பட்ட வழிமுறை என்ற அளவுக்கு, பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த பாரம்பரியம் என்ற அளவுக்கு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தனது மேல்மட்ட கமிட்டிக்கு வேலை அறிக்கை சமர்ப்பிப்பது

18. ஒவ்வொரு கட்சியும் தனது காலாண்டு வேலை அறிக்கையை பொதுவுடைமை அகிலத்தின் தலைமை உறுப்புக்குத் தருதல் வேண்டும். கட்சி நிறுவனம் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த மேல் கமிட்டிக்கு (எடுத்துக்காட்டாக, பகுதி அடிப்படையிலான ஒவ்வொரு கிளையும் தனக்கு மேலான கட்சிக் கமிட்டிக்கு) மாதாந்திர வேலை அறிக்கையை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக் கருக்குழுவும், பிராக்சனும், தொழிலாளர் குழுவும் எந்தக் கட்சி உறுப்பின் பொறுப்பில் இருக்கின்றனவோ, அவற்றுக்குத் தமது அறிக்கையை அனுப்புதல் வேண்டும். தனி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் அங்கம் வகிக்கும் கருக்குழு அல்லது தொழிலாளர் குழுவுக்கு (முறையே அவற்றின் தலைவருக்கு) அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோலவே குறிப்பிட்ட விசேட பொறுப்பை நிறைவேற்றியது பற்றி எந்தக் கட்சி உறுப்பு அந்த வேலையை ஒப்படைத்ததோ, அதற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

படிக்க:
முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை!
♦ காஷ்மீர் பிரிவு 370 ரத்து: ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

இந்த அறிக்கையானது எப்போது சாத்தியப்பட்ட அளவுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அளிக்கப்பட வேண்டும். வேலையைச் செய்யுமாறு பணித்த கட்சி உறுப்பு அல்லது தோழர் எழுத்து பூர்வமான அறிக்கை வேண்டுமெனக் கோரினால் ஒழிய, அறிக்கை வாய் மூலமாகவே இருக்க வேண்டும். அறிக்கைகள் குறிப்பாகவும் விசயத்தை விட்டு விலகாமலும் இருக்க வேண்டும். வெளியிடப்படக் கூடாத அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருக்கவும், முக்கியமான அறிக்கைகளைக் காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட கட்சி அங்கங்களுக்கு அனுப்புவதும் அறிக்கைகளைப் பெறுபவரின் பொறுப்பாகும்.

வேலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

19. இந்த அறிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே, அறிக்கை அளிப்பவரின் வேலைகளைப் பற்றிய விவரங்களுடன் வரம்பிட்டுக் கொள்பவையாக இருக்க வேண்டும். நமது வேலையின்போது கவனத்துக்கு வந்த, நமது எதிர்காலப் போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவமுடைய விசேட சூழ்நிலைகள், நமது எதிர்கால வேலைகளில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தைக் கொண்டுவரத்தக்கதான குறிப்பான பரிசீலனைகள், வேலையை நிறைவேற்றும்போது உணரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அனைத்தும் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்க வேண்டும்.

பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் அனைத்திலும் எல்லா வேலை அறிக்கைகளும் – அவை பெறுகின்றவையும், அதுபோலவே அவை அனுப்புபவையும் – முற்று முழுதாக விவாதிக்கப்பட வேண்டும். இத்தகைய விவாதங்களை நடத்துவது ஒரு முறையான பழக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிறுவனங்களின் குறிப்பாக குட்டி முதலாளித்துவ தொழிலாஈளர் நிறுவனங்களின் அதிலும் முக்கியமாக சோசலிஸ்டு கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிப்பதையும், அவை பற்றி அறிக்கை செய்வதையும் கருக்குழுக்களிலும் தொழிலாளர் குழுக்களிலும் உள்ள தனிப்பட்ட கட்சி உறுப்பினர்களும் அல்லது குழுவாக உள்ள கட்சி உறுப்பினர்களும் கவனமாகச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !

2

ருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து வெளியிட்ட காணொலியைப் பயன்படுத்தி அந்த சேனலையே இந்துத்துவக் கும்பல் முடக்கியது நினைவிருக்கலாம். குறிப்பாக இது போலீசின் உதவியுடன் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழர் பண்பாட்டின் மீது தாங்கள் தனிக்காதல் கொண்டவர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது இந்துத்துவக் கும்பல். ’தமிழ்க்’ கடவுள் முருகனை ‘திராவிட’ நாத்திகவாதிகள் அவமதித்துவிட்டதாகக் கூறி ஒரு கொந்தளிப்பைக் காட்ட சங்க பரிவாரக் கூட்டம் எத்தனித்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாஜக-வின் தமிழகத் தலைவர் முருகன், திடீரென ஒரு அறைகூவல் விடுத்தார். அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிறு அன்று மாலை 6.01 மணிக்கு அனைவரும் அவரவர்களது வீட்டில் இருந்து கொண்டே வேல் அல்லது முருகன் (கடவுள்) படத்தை வைத்துப் பூஜை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பெருந்தொற்றில் மக்களின் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஒரு நடவடிக்கையோ, போராட்டமோ நடத்தாத பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பலின் இந்த ‘அறைகூவல்’ மக்களுக்கு ஆத்திரத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் தங்களது ‘கந்த சஷ்டி இயக்கம்’ வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டது பாஜக. அதற்குச் சான்றாக பாஜக-வின் தலைவர்களும், அதிமுக தலைவர்களும் தாங்கள் வேலோடும் முருகன் படத்தோடும் நிற்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

படிக்க :
♦ புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

பண்டைய தமிழகத்தின் குறிஞ்சி நிலத் தலைவனான முருகனை வழிபடும் போக்கை சுவீகரித்துக் கொண்ட பார்ப்பனீயம், முருகனுக்கு ஒரு புதிய கதையைக் கட்டி ஸ்கந்தன் என்றும் சுப்ரமணியன் என்றும் பெயரிட்டு முருக வழிபாட்டை பார்ப்பனமயமாக்கிக் கொண்டது. முருகனின் துணைவியாக அறியப்பட்ட வள்ளியை ஓரம்கட்ட தெய்வானையைக் கொண்டுவந்து இறக்கிப் புராணப் புழுகுகளைக் கட்டிவிட்டது தனிக் கதை !

மக்களின் மத நம்பிக்கையை பார்ப்பனியமயமாக்க முருகனை சுவீகரித்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் வீட்டில், விஷ்ணுவின் அவதாரங்களுக்கும், சிவனுக்கும், பிள்ளையாருக்கும் தான் முதல் மரியாதையே ஒழிய முருகனுக்கு என்றும் இருந்ததில்லை. பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பாஜக, அதிமுக தலைவர்கள் நேற்று (09-08-2020) வெளியிட்டுள்ள முருகன் வழிபாட்டுப் புகைப்படங்களே அதற்குச் சான்று!

மேலே உள்ள புகைப்படங்களில் பாஜகவின்  எஸ்.வி. சேகர், எச். ராஜா ஆகியோரின் பூஜையறையைப் பாருங்கள். கடவுளர்களுக்கே வர்ணாசிரம தர்மப்படிதான் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பாக எச்.ராஜாவின் பூஜை அறையின் ‘மேல்’ தட்டில், “மகா பெரியவா”, திருப்பதி வெங்கடாசலபதி, லெட்சுமி, பிள்ளையார், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட கடவுளர் படங்களும், ‘கீழ்’ தட்டில் மாரியம்மன், பராசக்தி உள்ளிட்ட கடவுளர்களும், தரையில், கட்சியின் செயல்திட்டத்துக்காக நிறுத்திவைக்கப்பட்ட வேலும் இடம் பெற்றிருக்கிறது. கடவுளர்களேயானாலும் பார்ப்பனியத்தின் படிநிலைக்கு உட்பட்டவர்கள்தான்.

‘சவுண்டு ஸ்பெசலிஸ்ட்’ திருப்பதி நாராயணன், அதிமுகவின் மைத்ரேயன் ‘ஐயங்கார்’ உள்ளிட்ட அனைவரின் வீட்டு பூஜையறையிலும் முருகனின் படம் எதுவும் இல்லை என்பதையும் அவசரத்துக்காக காலண்டரில் இருந்து கிழித்துவந்த படமும், அவசரமாக ஆர்டர் செய்யப்பட்ட வேலும் தான் அதற்கு சான்று.

அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட செட்டப்புகளில், அவசர அவசரமாக வாங்கப்பட்ட போட்டோக்களைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகின்றன. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் வீட்டுப் பூஜையறையில் மகா பெரியவாளின் அருகில் ஒரு சிலையாகவோ, படமாகவோ இடம்பெறக் கூட முருகனுக்கு பாக்கியதையில்லை. இதுதான் முருகப் பெருமான் மீதான பாஜகவினரின் ‘திடீர்க் காதலின்’ இலட்சணம். நியாயப்படி அவர்களின் ‘பாஷையில்’ சொல்வதானால் இதை நாடகக் காதல் என்றுதானே சொல்லமுடியும்.  ஆனால் ஒன்று ! பூஜை அறையில் முருகனைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய  ‘அவல நிலைக்கு’  பாஜக பார்ப்பனர்களைத் தள்ளிய பெருமை தமிழ்நாட்டையே சேரும் !

தமிழகத்தில் மக்களை மதரீதியாக தங்கள் பக்கம் அணி சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சித்து வரும் பாஜக-விற்கு தமிழக ஊடகங்களும் ஆதரவாக இருந்து வருகின்றன. இன்றைய ‘தமிழ் இந்து’ நாளிதழில், இது குறித்து அதற்கே உரிய இந்துத்துவ நரித்தனத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

”கந்த சஷ்டி கவசத்தை பெருமைப் படுத்த வீடுதோறும் கந்தவேல் பூஜை” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் யூடியூப் சேனல் ஒன்று தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசியதால் தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள் ஆகியோர் சார்பில் தான் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கந்த சஷ்டிக் கவசம்  படிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டதாம். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் இந்த பூஜையை நடத்தினராம். இந்த செய்தியோடு முருகன் படத்தைக் கும்பிடும் ஒரு சிறுவனின் படத்தையும் வெளியிட்டு, வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது சாதாரண மக்கள் இதைத் தங்களுக்கான பிரச்சினையாக கையிலெடுத்துக் கொண்டு தாங்களே முன் வந்து அறைகூவல் விடுத்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மற்றொரு செய்தியில், பாஜக அமைப்பினருடன், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த பூஜையை நடத்தியது குறித்து விலாவாரியாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. ‘தமிழ் இந்து’ நாளிதழைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அதிகாரப் பூர்வ நாளிதழாக அறிவிக்கப்படாதது ஒன்றுதான் பாக்கி. அந்த அளவிற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலின் செயல்திட்டத்தின் அங்கமாக மாறியிருக்கிறது.

கொரோனாவை விடக் கொடூரமான இந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு விரட்டியடிப்பதுதான் காலத்தின் அவசியத் தேவையாக இருக்கிறது.

நந்தன்

பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 02

முதல் பாகம்

3. பொதுவுடைமைவாத நடவடிக்கையின் கடமைகள் பற்றி

கட்சி உறுப்பினரின் கடமை

8. புரட்சிகர மார்க்சிய பயிற்சிப் பள்ளியாக பொதுவுடைமைக் கட்சி விளங்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் அன்றாட பொது வேலைகள் வாயிலாக கட்சி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் உயிரோட்டமுள்ள உறவுகள் நிறுவப்படுகின்றன.

கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்பது சட்டபூர்வ பொதுவுடைமைக் கட்சிகளில் இன்றும் கூட குறைவாக உள்ளது. இது இந்தக் கட்சிகளின் தலையாயக் குறைபாடாகும். அவற்றின் முன்னேற்றத்தில் தொடர்ச்சியான உத்திரவாதமின்மைக்கு அடித்தளமாக இக்குறைபாடு விளங்குகிறது.

9. பொதுவுடைமைவாதத்துக்கு மாறும் ஆரம்பக் கட்டங்களில் ஒவ்வொரு தொழிலாளர் கட்சியும் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது, தனது பிரச்சாரத்தில் பழைய கோட்பாட்டுக்குப் பதில் பொதுவுடைமைவாத போதனைகளைக் கடைபிடிப்பது, எதிர் முகாமைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து பொதுவுடைமைவாத நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது ஆகியவற்றுடன் மனநிறைவு அடையக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவுடைமைவாதியாவதற்கான விருப்பதைக் குறிப்பது மட்டுமேயாகும். பொதுவுடைமைவாத நடவடிக்கை இல்லாமலிருந்தால், பரந்துபட்ட கட்சி உறுப்பினர்கள் இன்னமும் செயலின்றி இருந்தால், பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் கட்சியானது ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்றே ஆகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது. மேலும், பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

10. பொதுவுடைமைக் கட்சியானது, உண்மையிலேயே செயல் திறனுள்ளவர்களை மட்டுமே கொண்டிருக்க முயல வேண்டும். கட்சியின் தேவைக்கு உட்பட்டு தனது அணிவரிசையிலுள்ள கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது முழு பலத்தையும் காலத்தையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் முடிந்தவரை கட்சி வேலைகளுக்காக ஒதுக்கி தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். தனது மிகச் சிறந்த சக்திகளை கட்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோர வேண்டும்.

உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும்..

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது இயல்பாகவே பொதுவுடைமைவாத நம்பிக்கைகளுடன் சேர்ந்து முதலில் தேர்வுநிலை உறுப்பினராகவும், பின்னர் உறுப்பினராகவும் அதிகார பூர்வமாகப் பதிவு செய்வது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாகச் செலுத்துவது, கட்சிப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துவது போன்றவற்றையும் கொண்டதாகும். ஆனால் மிகமிக முக்கியமானது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதாகும்.

ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் ஒரு குழுவில் இருப்பது

11. கட்சி வேலைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக ஒரு விதி என்ற முறையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குழு, கமிட்டி, கமிஷன், பெரிய குழு, பிராக்சன் அல்லது கருக்குழு போன்று செயல்படும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே கட்சி வேலைகளைச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும். வழிகாட்ட முடியும். நிறைவேற்ற முடியும்.

உள்ளூர் அமைப்பின் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே வேண்டியதில்லை. சட்டபூர்வ சூழ்நிலைகள் நிலவும்போது, குறிப்பிட்ட காலக்கிரமத்தில் நடைபெறும் இக் கூட்டங்களுக்கு பதிலாக, உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவது உசிதமானதல்ல. அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டங்களில் முறையாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. இந்தக் கூட்டங்களுக்கான தயாரிப்பு என்பதே சிறு குழுக்களாக வேலையைப் பிரித்து செய்வது அல்லது குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சில தோழர்கள் ஒதுக்கப்படுவது என்பதை முன் அனுமானமாகக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தியே தொழிலாளர்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள்திரள் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலதரப்பட்ட கடமைகளை சிறு குழுக்கள் மட்டுமே எச்சரிக்கையாக ஆய்வதும், ஆழமாக நடைமுறைப் படுத்துவதும் இயலும். உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும். இவ்வாறே ஒன்றுபட்ட திறன்மிக்க பொதுவுடைமைக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள புரட்சி சக்திகள் அனைத்தையும் கொண்டுவந்து கெட்டிப்படுத்துவது இயலாது.

ஆலை செல்களின் (Factory Cells) முக்கியத்துவம்

12. கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அன்றாட வேலைகளைச் செய்ய பொதுவுடைமைக் கருக்குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கிளர்ச்சிகளை நடத்துதல், கட்சி ஆய்வு, செய்திப் பத்திரிகை வேலை, கட்சி வெளியீடுகளை விநியோகித்தல், தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான பணிகள் – இன்னும் இதுபோன்றவற்றைக் கருக்குழுக்கள் செய்யும்.

பொதுவுடைமைக் கட்சிக்கு ஒருசில உறுப்பினர்கள் அல்லது தேர்வுநிலை உறுப்பினர்கள் உள்ள இடங்களில் எல்லாம் தொழிற்சாலை மற்றும் பணிமனைகளில் உள்ள தொழிற்சங்கங்களில், பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இராணுவப் பிரிவுகளில், அன்றாட கட்சி வேலைகளைச் செய்வதற்கான சிறு குழுக்களே பொதுவுடைமைவாதக் கருக்குழுக்களாகும். ஒரே தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்கள் இருந்தால், கருக்குழுவானது பிராக்சனாக மாற்றப்பட்டு, அது சிறு குழுக்களின் வேலைகளை வழிநடத்தும்.

படிக்க:
காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை
♦ நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !

பரந்த தன்மையுடைய எதிர்த்தரப்பு பிராக்சனை அமைப்பதோ, அல்லது ஏற்கெனவே உள்ளதில் பங்கேற்பதோ அவசியமாகும்போது சிறப்புக் கருக்குழுவின் வாயிலாக தொழிற்சங்கத் தலைமையைக் கைப்பற்ற அல்லது தலைமை ஏற்க பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும். தனது சொந்த சுற்றுச்சூழலைப் பொருத்து கருக்குழு வெளிப்படையாக வருவதா, அல்லது பொதுமக்கள் மத்தியில் கூட வெளிப்படையாக வருவதா என்பது விசேட சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து அவ்வாறு வருவதன் அபாயங்கள் மற்றும் சாதகங்களை ஆழமாகப் பரிசீலிப்பதைச் சார்ந்திருக்கும்.

13. பொதுக் கடமையான வேலைகளைக் கட்சியில் அறிமுகப்படுத்துவதும், சிறு வேலைக் குழுக்களைக் கட்டியமைப்பதும் மக்கள்திரள் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு (மிகக் குறிப்பாக) கடினமான பணியாகும். இதை எடுத்த எடுப்பிலேயே சாதித்துவிட முடியாது. இதற்கு சலிப்பற்ற விடாமுயற்சி, முதிர்ச்சி பெற்ற அறிவு, மகத்தான ஆற்றல் ஆகியவை வேண்டும்.

இந்தப் புதிய வடிவிலான நிறுவனத்தைத் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கையுடனும் முதிர்ச்சியான அறிவுடனும் கட்டியமைப்பது குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் பெயரளவிலான திட்டத்தின்படி கருக்குழுக்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து உடனடியாகக் கட்சியின் அன்றாட பொது வேலைகளைச் செய்யுமாறு அவற்றை அறைகூவி அழைப்பது என்பது மிகச் சுலபமான வேலையாகும். ஆனால், இத்தகைய தொடக்கம் என்பது தொடங்காமல் இருப்பதைவிட மோசமானது. இந்த மகத்தான கண்டுபிடிப்புகளின்பால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மன நிறைவின்மையும் வெறுப்பையுமே இது தூண்டிவிடும்.

(தொடரும்)

முந்தைய பாகம்*****************************************அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் !

0

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே!

பாசிச மோடி அரசு 2014-ல் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடித்துக்கொண்டிருந்தது. இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா சூழலில் மக்கள் வாழ்விழந்து செத்துக் கொண்டிருக்கும் போது பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத இந்த நிலையில் பெரும்பான்மை மாணவர்களின் கல்வியை பறித்து மாணவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.

மூன்று வயதில் இருந்தே மும்மொழிக் கல்வியை படிக்க வேண்டும் என்று செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்கின்றனர். ஏழை மாணவர்களின் அடிப்படை கல்வி கற்கும் உரிமையை பறிக்க 3, 5,8 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைத்து, “அவனவன் அப்பன் தொழிலை செய்யட்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் நவீன வடிவத்தில் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .

இனி அனைத்து கல்வி நிறுவனங்களும் தனியார் முதலாளிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். இவையின்றி உயர்கல்விக்கு செல்ல அனைத்து படிப்புகளுக்கும் (கலைக் கல்லூரிகள் உட்பட) நீட் போன்ற அகில இந்திய அளவில் பொதுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். அதே போல நாடு முழுவதும் ஒரே மாதிரி பாடமுறையின் மூலம் பல்தேசிய இனங்களின் கலை இலக்கிய பண்பாடுகளையும் ஒழிக்க பார்க்கிறது மோடி அரசு.

மேலும் கல்வியின் மீது மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இதில் பல ஜனநாயக அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கின்றனர். நமது கல்வி உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரையும் இந்த ஆர்ப்பட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறது புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி.

நம் அடுத்த தலைமுறையின் கல்வியைக் காக்க வீதியில் களமிறங்குவோம் !

இவண்:
பு.மா.இ.மு.
தருமபுரி

புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !

0
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 06

முதல் பாகம்

புராதன ஆரியரும் திராவிடரும்

(டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி. இங்கிலாந்தில் நிலவியலில் (geology) டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே சிறந்த ஆராய்ச்சியாளருள் ஒருவராகத் திகழ்ந்தார். சுமார் 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 1947-ம் ஆண்டில் உயிர் நீத்தார். அவர் எழுதிய நூல்களுள், இந்திய இந்தோனேசியக் கலைகளின் வரலாறு தலைசிறந்தது. அதைப் போன்றதோர் சிறந்த நூல் வரலாற்றுத் துறையில் இதுவரை எழுதப்பட்டதில்லை. இந்நூலில் ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். அவரது கருத்துக்களைத் தொகுத்து இக்கட்டுரையில் விளக்க முயன்றுள்ளேன். – நா. வா.)

டாக்டர் ஆனந்த குமாரசுவாமி.

கிறிஸ்து சகாப்தத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் இந்தியா முழுவதிலும் சிறு சிறு குடியினராகப் பரவியிருந்தனர். இவர்கள் மேற்கிலிருந்து வந்தனர் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுவர். ஆனால் புதிய கற்காலம் தொட்டு இந்நாட்டிலேயே பண்பாட்டு வளர்ச்சி பெற்றவர்கள் திராவிடர் என்பதே ஆனந்தரின் கருத்து. ஆரியர்கள் ‘தாஸ்யூக்கள்’ அல்லது ‘தாஸர்’ என்ற வகுப்பாரோடு ஓயாமல் போராடி வந்தார்களென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்களது நகரங்கள் ஆரியர்களால் புரங்கள் என்று அழைக்கப்பட்டன. அவர்கள் ஆரிய இனத்தவர் அல்ல என்பது ‘அனாஸர்’ (மூக்கற்றவர்கள்) என்று ஆரியர் அவர்களுக்கு இட்ட பெயரிலிருந்து தெரிகிறது.

இன்றைய இந்தியப் பண்பாட்டில் திராவிட அம்சங்களை நாம் சுட்டிக்காட்டலாம். லிங்க வணக்கம், சக்தி வணக்கம், நாகர், யக்ஷி வணக்கம் இன்னும் இயற்கைத் தேவதை வணக்கம் முதலிய திராவிடப் பண்பாட்டிலிருந்து தோன்றியவை பல கலைகளிலும் அவர்களது காணிக்கையைக் காணலாம். ஆரியர்கள் வட நாட்டார், திராவிடர் தென்னாட்டார்; ஆரியர் திராவிடரை வெற்றி கொண்டனர். இவ்வெற்றி முடியரசு அமைப்பு, இன ஆட்சி முறையின் மீது கொண்ட வெற்றி என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால் வெற்றி பெற்றவர்களது பண்பாடு, தோற்றவரது கலைகளாலும் பண்பாட்டாலும் மூழ்கடிக்கப்பட்டு, தோற்றுவிட்டது. திராவிடர் பண்பாட்டின் முக்கிய அம்சங்களான லிங்க வணக்கம், சக்தி வணக்கம், பக்தி இயக்கம், அது தோற்றுவித்த உருவ வழிபாடு முதலியன ஆரியர் பண்பாட்டை ஆட்கொண்டது. ஆரியரது யக்ஞம் என்ற வழிபாட்டு முறையை திராவிடரது பூசை என்ற வழிபாட்டு முறை ஆக்கிரமித்து மாற்றிவிட்டது.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?

சிற்பக் கலையில் மூங்கில் வேலைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய கலை உருவங்கள், திராவிடர் கலையில் தோன்றி, இந்தியக் கலைக்குப் பரவியிருக்க வேண்டும். புத்த சைத்தியங்கள், (பிரார்த்தனை மண்டபங்கள்) புராதன திராவிடக் கல்லறைகளின் சிற்ப அமைப்பிலிருந்து தோன்றியவை. ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்களல்லர். ஆகவே கப்பல் நிர்மாண அறிவிலும், மீன் பிடித்தல், தொழில், புராதன கடல் வழி வாணிபம் அனைத்தும் திராவிடர்களுடையதே.

தட்சிணத்திலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த திராவிடருடைய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கிறிஸ்து சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வளர்ச்சி பெற்றதோர் பண்பாட்டை உடையவர்கள் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரை முதல் கிழக்குக் கடற்கரை வரை பரந்து கிடந்த ஆந்திரப் பேரரசு புகழ் பெற்று விளங்கியது. அக்காலத்திலேயே கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர் பேரரசு வலிமை பெற்று விளங்கியது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியமும் இன்கலைகளும் மகத்தான வளர்ச்சி பெற்று உலகப் புராதனப் பண்பாடுகளுள் சிறந்ததொன்று என விளங்கியது. தமிழ்நாடு, ரோம சாம்ராஜ்யத்தோடும் இந்தோனேசியாவோடும் வாணிபத் தொடர்பும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து மிளகு, முத்து, சந்தனம், தேக்கு முதலிய பொருள்கள் ஏற்றுமதியாயின.

மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘குங்கேரியா’ பகுதியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செம்புக் கருவிகள்.

இந்தியத் தொல் பொருள்களில் சில, கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும், பின்புமாகத் தோன்றியவை. அவற்றின் தோற்றகாலம் சரியாகக் கணக்கிடப்படவில்லை. பழங்கற்காலச் சின்னங்களும், நடுகற்காலச் சின்னங்களும் இந்தியா முழுவதிலும் கிடைக்கின்றன. புதிய கற்காலச் சின்னங்கள் கிறிஸ்து சகாப்தத்திற்கு அணித்தானவை. அவற்றில் கல் ஆயுதங்களும், மண்பாண்டங்களும் அடங்கும். வட இந்தியாவில் புதிய கற்காலத்தில் செம்புப் பண்பாடு தோன்றியது. இவ்வுண்மைக்கு மொகெஞ்சதாரோ தொல் பொருள்களே சான்றாக அமையும். மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘குங்கேரியா’ என்ற பகுதியில் செம்புக் கருவிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சாதாரண ஈட்டி முனைகளும், பிளவற்ற ஈட்டி முனைகளும், போர்வாள்களும், மீன் தூண்டில்களும் இவ்விடத்தில் அகப்பட்டன. அவற்றுள் சில திறமையான வேலைப்பாடுடையவை. இவற்றுள் சில மிகவும் கனமாகவிருக்கின்றன. இவை தொழில்களில் பயன்பட்டிரா பூசைக்குரியனவாக இவை இருந்திருக்கலாம். வட இந்தியாவில் கி.பி. முதல் நூற்றாண்டு வரை வெண்கலச் சாமான்கள் இருந்ததாகத் தெரியவில்லை. இரும்பு கி.மு. 1000 ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்திருக்கலாம்.

ஆரியர்களுக்கு அதற்கும் முன்னரே இரும்பின் பயன் தெரிந்திருக்க வேண்டும். செம்புக்காலம் என்றதோர் பண்பாட்டுக் கட்டம் தென்னிந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கும், இரும்புக் காலத்திற்கும் இடைவெளியற்ற தொடர்பு உள்ளது. தென்னாட்டில் வரலாற்று முற்காலப் புதை பொருள் தலங்களில் இரும்புக் கருவிகள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் இரும்புக் கனியம் ஏராளமாகக் கிடைக்கிறது என்பதைக் காணும் பொழுதும், சங்க வளையல் முதலிய அணிகலன்களைச் செய்வதற்கு இரும்பு அரங்கள் தேவை என்பதை நினைவில் கொண்டும் இரும்பு தென்னிந்தியாவிலேயே உருக்கி எடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவது தவறாகாது. வேதங்களில் இரும்பு என்ற சொல் இல்லாததைக் கவனத்தில் கொண்டு கி.மு. 1500-ம் ஆண்டிற்கு முன் இரும்பு வட இந்தியாவில் உபயோகத்தில் இருந்ததில்லை எனக் கூறுவாரும் உளர். ஆயினும் இந்தியா முழுவதிலும் சுமார் 3000 ஆண்டுகளாகவே இரும்புக் கால நாகரிகம் தோன்றிவிட்டது என்று கூறலாம்.

திராவிடருக்கும் முந்திய பண்பாடு ‘நிகிரிடோ’ பண்பாடு என்றும், அதுவும் இந்தியா முழுவதிலும் காணப்பட்டதென்றும் நினைக்கப் பல சான்றுகள் உள்ளன.

இந்தியாவினுள் ஆரியர் நுழைந்த காலம் சுமார் கி.மு.2000 முதல் 1600 வரை இருக்கலாம். சிந்து சமவெளியில் குடியேறி பின்னர் அவர்கள் கங்கைச் சமவெளியிலும், விந்திய மலையடிவாரத்திலும் பரவினார்கள் என்று நாம் கருதலாம். பின்னர் அவர்கள் தென்னிந்தியாவிலும் குடியேறினர். வேதகால ஆரியர் தச்சுத் தொழில், வீடுகட்டும் தொழில், ரத நிர்மாணம், உலோக வேலைகள், செம்புப் பாத்திரங்கள் செய்தல், தங்க நகைத் தொழில் முதலியனவற்றை அறிந்திருந்தார்கள். நெசவும் மண்பாண்டத் தொழிலும். தோல் பதனிடும் தொழிலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தெய்வப் படிமங்களை அவர்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்தார்கள் என்பதற்குப் புராதன நூல்களில் சான்று கிடைக்கவில்லை. ஆரியர்களது கலை அழகுப்படுத்தும் கலையாக அடையாளப் பூர்வமான கலையாக இருந்தது. இயற்கையையோ, மனிதர்களையோ, உருவப் பூர்வமாக அல்லாமல், அடையாளப் பூர்வமாக இக்கலை வெளியிட்டது.

Synthesis வகையிலான திராவிடக் கலை வடிவம்.

ஆனால் திராவிடக் கலையில் உருவபூர்வமான வெளியீடு காணப்பட்டது. ஆனால் வளர்ச்சியுற்ற நிலையில் அடையாளப் பூர்வமான கலைப் போக்கும் உருவபூர்வமான கலைப் போக்கும் கலந்து (Synthesis) புதியதோர் கலைப் போக்கு உருவாயிற்று. உதாரணமாக பெளத்தக் கலையில் உருவமும், அடையாளமும் ஒன்றி நிற்பதைக் காணலாம். யானையின் உருவமும், அதன் பொருளான செழிப்பும் பழங்கால நாணயங்களின் சின்னங்களாகக் காணப்படுகின்றன. யானையின் உருவம் செழிப்பை அடையாளமாக உணர்த்தும். இதில் இரண்டு கலைப்போக்குகள் கலந்து பரிணமித்து முழுமையடைவதைக் காணலாம். இதுபோலவே உடைகளின் கரைகளிலும், சுவரில் எழுதிய கொடி சித்திரங்களிலும் இக்கலப்புப் போக்கைக் காணலாம். ஆனால் இக்கலை இணைப்பு மிகப் பழங்காலத்திலேயே தோன்றி விட்டது. குஷானர் காலகட்டத்தில் நிலவிய கலை பக்தி இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சாராம்சத்தில் திராவிடர் கலையாகும். புத்த கயாவிலுள்ள ’இந்திர சாந்தி’ உருவம் திராவிடர் கலையை ஆரியர் கலை மாற்றியமைத்ததின் விளைவாகும். குப்தர்காலப் புத்தர் படிமங்களும் எலிபான்டா குகையிலுள்ள மகேசுவரர் திருவுருவமும். பல்லவர் காலத்து லிங்கங்களும், நடராஜர் மூர்த்தங்களும், இரு ஆன்ம ஓட்டங்களினால் விளைந்த கலை உருவங்களாகும். தென்னாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வத் திருவுருவங்கள் உள்ளன.

இவையாவும் இந்திய சிற்பக் கலையின் ஆழ்ந்த தத்துவத்தை வெளியிடுகின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும் அடையாள பூர்வமானதாகும். வழிபடுபவன் தனது உணர்வின் உருவமாகவும் சிலையைக் காண்கிறான். வரலாற்றுக் கால இந்தியக் கலையிலும், தத்துவத்திலும், புலனுணர்விற்கும், அகத்துறவிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டைத் தீர்த்து ஒன்றுபடுத்த நிகழ்ந்த நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். மேற்கும், கிழக்கும், வடக்கும் தெற்கும் இவ்வாறாக ஒன்றி உருமாறிப் புதியதொரு முழுமையான கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்தன. இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்து வளர்ச்சியுறத் தொடங்கி விட்டன. உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன்னரே ஆரியத் திராவிட பண்பாட்டுக் கலப்பு முழுமை பெற்று விட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் !

பத்திரிகைச் செய்தி

தேதி: 07.08.2020

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு பு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் !

கடந்த 29.07.2020 அன்று வெளிவந்த நக்கீரன் இதழில், “பலநூறு ஏக்கர் அனாதீனநிலத்தை ஆட்டையைப்போடும் ஆளுங்கட்சியினர் + அதிகாரிகள்” என்ற தலைப்பிட்டு ஒரு சிறப்புக் கட்டுரை வெளிவந்தது.

“பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 400 -க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டி ஒன்றைத் துவங்கி இயங்கி வருகின்றனர். இந்த பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் செயலாளராக இருந்த தங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்திலுள்ள சில சர்வே எண்களில் அமைந்துள்ள நிலங்களை வாங்கித்தருவதாக உறுதியளித்து சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இந்த தாழம்பூர் நிலமானது அரசுக்கு சொந்தமான அனாதீன நிலம் என்பதால், அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கும் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து அந்நிலத்துக்கு பட்டா வாங்க முயற்சி செய்ததாகவும், ஆனாலும் வாக்களித்தவாறு தங்களுக்கு இன்னும் நிலம் கிடைக்கவில்லை எனவும் மேற்படி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் நக்கீரனுக்குத் தகவல் சொன்னதன் பேரில் புலனாய்வு செய்யப்பட்டது’’ என்று மேற்படி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நக்கீரன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கராஜ் என்பவர், எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசு தான் என மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்கிற போதிலும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியும். பு.ஜ.தொ.மு அணிகளில் சில பேருக்கும் அது தெரிந்திருக்கக்கூடும்.

மேற்படி பிரச்சினையில், அக்டோபர் – 2019 இல் சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் மூலம் சுப.தங்கராசு மீது மோசடி – பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் ஒன்று மாநில நிர்வாகக்குழுவுக்கு வந்து, அதன் மீதான விசாரணை நடைபெற்றிருந்தாலும், இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், 29.7.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் கட்டுரை வெளிவந்துள்ள நிலையில், அன்றைய தினமே (29.7.2020) பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழுவின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதில் சுப.தங்கராசு அவர்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும், அவர் வகித்து வந்த மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவு அன்றைய தினமே மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கீற்று இணையதளத்தில், “ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு” என்கிற பெயரில் வெளியான கட்டுரையில் ஒட்டுமொத்த தலைமைக்குழுவுக்கும் இக்‘குற்றத்தில்’ பங்குள்ளது என்ற அவதூறு கட்டுரை வெளியாகியுள்ளது. எந்தக் கட்டுரையை வெளியிடுவது என்பது கீற்று இணையதளத்தின் உரிமை என்கிறபோதிலும், பல்லாயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புரட்சிகரத் தொழிற்சங்க அமைப்பான பு.ஜ.தொ.மு மீதான குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமாக இருக்க முடியும். வணிகப் பத்திரிக்கையான நக்கீரன் கூட தனக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், கீற்று இணையதளமோ, பு.ஜ.தொ.மு மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வெளியிட்டிருப்பதன் நோக்கம் என்ன? அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற இயக்கத்தினை வீழ்த்திவிட முடியாது. இந்தச் சூழலில், சுப.தங்கராசு அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன? அந்தக் குற்றச்சாட்டை பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக்குழு எவ்வாறு கையாண்டது? என்பது குறித்து ஒரு சுருக்கமான விளக்கத்தைத் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 400 தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவது என்ற நோக்கத்துடன் ஒரு சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த சொசைட்டிக்கு ஒரு நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு, அதன் செயலராக சுப.தங்கராசு இருந்து வந்தார். வாங்கத் திட்டமிடப்பட்ட வீட்டுமனைகளுக்காக சொசைட்டி உறுப்பினர்களிடமிருந்து, மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை திட்டமிட்டவாறு வீட்டுமனைகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் சுப.தங்கராசு அவர்களுக்கு முக்கியப்பங்கிருப்பதாகவும், அந்த சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் 11.10.2019 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாநில நிர்வாகக்குழுவுக்கு அளித்தனர். இந்தப் புகாரின் மீது சுப.தங்கராசு விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் 14.10.2019 தேதியிட்டு, தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

25.10.2019 அன்று கூட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் மாநில நிர்வாகக்குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, சுப.தங்கராசு மீது கூறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிய 3 பேர் கொண்ட விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குழுவானது 12.11.2019 முதல் 17.11.2019 வரை பல்வேறு ஆவணங்கள், சான்றுகள், இதில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களது வாக்குமூலங்கள் என பலவற்றைத் திரட்டி, தனது விசாரணை அறிக்கையை 25.11.2019 அன்று மாநில நிர்வாகக்குழுவுக்குக் கொடுத்தது. ( இந்தப் பிரச்சினை குறித்து புகார் அளித்தவர்களில் சிலரும், இந்த சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் விசாரணைக்குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )

மேற்குறிப்பிடப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு 03.12.2019 முதல் 05.01.2020 வரை பல சுற்று கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் மூலமாக குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக மாநில நிர்வாகக்குழு வந்தடைந்த முடிவின் அடிப்படையில் சுப.தங்கராசு அவர்களுக்கு 06.01.2020 அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கபட்டு, அதன் மீதான அவரது விளக்கத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 12.01.2020 தேதியிட்ட கடிதம் மூலமாக சுப.தங்கராசு தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பு விதிகளின்படி, மாநிலக்குழு முதல் மாவட்டக்குழு வரை அமைப்பின் கொள்கைக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எந்தத் தனிநபர் மீதோ அல்லது எந்தக் குழு மீதோ புகார் வந்தால் அதை எப்படிக் கையாள வேண்டுமென விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் அடிப்படையில், மேற்குறித்த விசாரணைக்குழு அறிக்கை மீது நடந்த விவாதத்தின் வழியாக வந்தடைந்த முடிவுகள், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை, அந்தக் குற்றப்பத்திரிக்கை மீது சுப.தங்கராசு கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மாநில நிர்வாகக்குழு பரிசீலித்து, தண்டனை வழங்குவதற்குரிய அடிப்படை இருந்தால், குற்றத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்பட வேண்டிய தண்டனை என்னவென்பதைத் தீர்மானித்து, தொடர்புடைய ஆவணங்களோடு மாநில செயற்குழுவில் வைத்து விவாதித்து இறுதி முடிவெடுக்க வேண்டும். புகார் மற்றும் புகார் மீதான விளக்கம் தொடங்கி இறுதி முடிவெடுப்பது வரை இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக்குழு உறுதியாக நின்றது.

மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக்கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டுவரும் பொது ஊரடங்கு காரணமாகப் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு, ஈ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க முடியாத நிலைமை காரணமாக மாநில நிர்வாகக்குழு நேரில்கூடி இறுதி முடிவெடுக்கவோ, மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்து இறுதி முடிவெடுக்கு ஒப்புதல் பெறவோ, மாவட்ட செயற்குழு மட்டம் வரை எடுத்துச்சென்று விவரிக்கவோ இயலாத சூழல் நிலவியது.

இந்தச் சூழலில் நக்கீரன் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்து தேவையற்ற குழப்பங்கள், அவநம்பிக்கைகள், அவதூறுகள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நக்கீரன் கட்டுரை வெளியான அன்றைய தினமே கான்பரன்ஸ் கால் மூலம் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, மாநில நிர்வாகக்குழு முதல் கிளைச்சங்கம் வரை அமல்படுத்தி வருகின்ற ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட சுப.தங்கராசு வகித்து வந்த பொதுச்செயலாளர் பொறுப்பை மாநில இணைச்செயலாளர் தோழர் டி. பழனிச்சாமி அவர்கள் தற்காலிகமாக ஏற்று செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நக்கீரன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனாதீன நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்பது குறித்து விசாரணைக்குழுவின் விசாரணையின்போது தெரியவந்தது. இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, அபகரிப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து, இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்ட போதிலும், சுப.தங்கராசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் புறநிலைமைகளைத் தாண்டி உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும் என்கிற பாரிய தவறிழைத்துள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக உணர்கிறோம்.

அதேசமயத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எந்தத் தகுதியில் இருந்தாலும், அவர் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மைக்கேற்ப எவ்வித பாகுபாடும் இன்றி அமைப்புரீதியான தண்டனை வழங்குவதிலும், அத்தகைய நடவடிக்கைகளை கீழ் அணிகள் வரை எடுத்துச்சென்று ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதிலும் பு.ஜ.தொ.மு உறுதியாக நிற்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இடைநீக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுப.தங்கராசு அவர்களுடன் தொழிற்சங்கரீதியாக எவ்விதத் தகவல் பரிமாற்றமோ, தொடர்போ வைத்துக் கொள்ள வேண்டாம் என மாநில நிர்வாகக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,

டி. பழனிச்சாமி
பொதுச் செயலாளர் (பொறுப்பு)

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374.

புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

மோடி அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து தமது இந்து ராஷ்டிரக் கனவுக்கும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் ஏதுவான ‘புதிய கல்விக் கொள்கையை’ நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனை தமிழக மக்களும், மாணவர் அமைப்புகளும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் விளைவாக ஒவ்வொரு முறையும் பின்வாங்கியுள்ளது மோடி அரசு.

எனினும், தனது திணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதன் உச்சமாக தற்போதைய கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, எவ்வித எதிர்ப்பும் இன்றி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பார்க்கிறது மோடி அரசு.

நாம் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டிய அவசியச் சூழலில் உள்ளோம். எனவே இப்புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த சாரம் என்ன ? அதில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன ? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு அதன் காணொளி உங்களுக்காக. பாருங்கள்… பகிருங்கள்…