Saturday, June 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 141

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் : பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தலைவர் | அ.லுனச்சார்ஸ்க்கிய்

ரலாற்றை ஆக்குபவர்கள் மாபெரும் தனிநபர்களே, அதிலும் முதன்மையாக அதிகாரப் பதவியில் உள்ள அரசர்களும் மந்திரிகளுமே என்ற கருத்தை திரளான பாமரமக்கள் போலவே ஆதர்சவாத வரலாற்று அறிஞர்களும் ஆதரித்து வந்தார்கள். இன்றும் ஆதரித்து வருகிறார்கள். கீழிருந்து அதிகாரத்தின் உச்சத்துக்கு உயர்ந்துவிட்ட மாண்புமிக்க புரட்சி வீரர்கள் அவர்களுக்கு எதிர்ப் பட்டால், இந்தத் தலைவர்களின் மேதை, ஆற்றல், தந்திரம், திறமை இவையே புரட்சிக்குப் பெருமளவு காரணம் என்று கூறவும் அவர்கள் தயங்குவதில்லை.

மார்க்ஸிய வரலாற்று ஆசிரியர்கள் வரலாற்று நிகழ்ச்சிகளுக்கு எவரது விருப்பாற்றலையும் சாராத மாபெரும் சமூக நிகழ்முறைகளையே காரணமாகக் காட்டுகிறார்கள். இந்த நிகழ்முறைகள் முடிவாகப் பார்க்கையில் வர்க்கங்களின் போராட்டத்தில் ஏற்படும் திடீர் மாற்றங்களையே பொருத்திருக்கின்றன என்றும் வர்க்கங்களின் ஒப்பு வலிமையும் அவை அடைய விரும்பும் குறிக்கோள்களும் எந்த குறித்த காலத்திலும் சமூக உற்பத்தியில் அவை ஆற்றும் பங்கினுள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் அவர்கள் விளக்குகிறார்கள்.

மார்க்ஸீயம் மாபெரும் தனிநபர்களுக்கு வரலாற்றில் எவ்விதப் பங்கையும் அளிக்க மறுக்கிறது மாபெரும் தனி நபர்கள் நிலவுவதையே அது ஏற்கவில்லை என்று இந்த விளக்கம் காரணமாகச் சிலர் முடிவு கட்டிவிடுகிறார்கள்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

மார்க்ஸியத்தின் பெயரே ஒரு மாபெரும் மனிதரின் பெயரிலிய தோன்றியுள்ளது. அப்படியிருக்க மார்க்சியம் மாபெரும் மனிதர்கள் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது விசித்திரமா இருக்கும் அல்லவா?

இல்லை, மார்க்ஸிய வரலாறும் இன்னும் சிறப்பாக மார்க்சிய நடைமுறையும் தனிநபர்பால் மிகுந்த கவனம் செலுத்துகின்றன. எந்த நபரையும் மிகச் சிறு பொறுப்புள்ள பதவியில் கூட அமர்த்துவதற்கு முன்னால் நமது கட்சியின் மத்தியக் கமிட்டி அவரது ஆற்றல், ஒழுங்கமைப்புத் திறனின் தன்மை ஆகியவற்றின் நோக்கிலிருந்து அவருடைய தனித்தன்மையை மிக ஆழ்ந்த கவனத்துடன் ஆராய்கிறது.

மார்க்சியவாதிகள் தற்செயல் நிகழ்ச்சிகளை நம்புபவர்கள் அல்ல. புரட்சியைச் செயற்கையாக உண்டாக்க முடியாது. அது தானாகவே தோன்ற வேண்டும் என்பதை நாம் அறிவோம். அதே சமயம், புரட்சி ஒழுங்கமைப்பு அற்றதாக, தாறுமாறானதாக இருக்க முடியும், அல்லது திட்டமிட்ட தடத்தில் பெருமளவுக்கு இயக்கப்படுவதாகவும், அதில் பங்கு கொள்வோர் எல்லாருடையவும் அறிவினால் இல்லாவிடினும் அதை ஒழுங்கமைக்கும் முன்னணியினரின் அறிவினால் ஒளியுறுத்தப்படுவதாகவும் இருக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். புரட்சிகர வர்க்கம் என்ற முறையில் பாட்டாளி வர்க்கத்தின் ஆற்றல், இதில்தான் அடங்கியுள்ளது.

அதாவது அது ஒழுங்மைப்புக்குச் சிறப்பாக இசைகிறது, தன் இடையிலிருந்து ஒழுங்கமைப்பாளர்களை அதிக எளிதாகத் தோற்று விக்கிறது. உதாரணமாகக் குடியானவர்களிலிருந்து பாட்டாளி வர்க்கத்தைத் தனியாகப்பிரித்துக் காட்டுவது இந்த ஆற்றல்தான்.

பாட்டாளிவர்க்கமே ஒழுங்கமைக்கும் வர்க்கம் ஆகும். முதலில் அது நாட்டை வென்று பெற வேண்டியிருந்தது, இப்போது அதைச் சீரமைக்க வேண்டியிருக்கிறது…. இத்தகைய வேலையை ஒரு தலைமை அலுவலகம் இன்றி அதனால் நிறைவேற்ற முடியாது. எல்லாப் புறங்களிலுமிருந்து வரும் விவரங்களைத் திரட்டி தொகுப்பதும் பரஸ்பரம் இசைவுள்ள உத்தரவுகளை எல்லாப் புறங்களுக்கும் அனுப்புவதும் இந்த அலுவலகத்தின் பணி. எல்லா மிக மதிப்புள்ள அனுபவங்களும் இங்கே திரட்டப்படும். செயல்படுத்தப்பட வேண்டிய திட்டம் இங்கே தெளிவாக வரையறுக்கப்படும். இன்னும் விவரமாகப் பார்த்தால், தவிர்க்க இயலாதவாறு பல பணியாளர்கள் கொண்ட இந்த அலுவலகத்தை முழுமையாக முறைப்படுத்துவதற்கு ஒன்றிணைக்கும்

அறிவும் ஒன்றிணைக்கும் உளத்திண்மையும் தேவை. இத்தகைய அறிவுக்குச் சட்டப்பூர்வமாக அதிகாரம் எதுவும், அரசன் அல்லது சர்வாதிகாரிக்கு உள்ளது போன்ற அதிகாரம் எதுவும் இராது. ஆனால் வளமான அனுபவம், தன்னடக்கம், ஊடுருவி நோக்கும் அறிவுக் கூர்மை ஆகியவை காரணமாகக் கிடைத்துள்ள மதிப்பு அதற்கு இருக்கும்.

மக்களது புரட்சி அதுவரை ஆட்சி அதிகாரத்திலிருந்து பிரித்து ஒதுக்கப்பட்டிருந்த ஜன சமுதாயத்தின் பெருத்த படிவுகளை மேல்மட்டத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த மக்களுக்கிடையே உயர் மேதை வாய்ந்த குறித்த தொகை நபர்கள் தேர்வு முறையில் மேல் வருவார்கள் என்று இயல்பாகவே எதிர்பார்க்கலாம்.

இத்துடன் புரட்சி இயக்கம் இன்னும் மறைமுகமாகவே இருக்கும்போது, அதற்குத் தலைமை வகிப்பவர்கள் மிகச் சிறந்த செயல்முறையான, வெல்லமுடியாத துணிவு வாய்ந்தவர்கள்; மறைமுக நடவடிக்கைகள், கடும் போராட்டம் என்னும் கண்டிப்பான பள்ளியில் பயின்று கீழிருந்து மேலே உயர்ந்தவர்கள் என்பதையும் சேர்த்துக்கொண்டீர்களானால் விரிவான புரட்சி பெருத்தத தலைவர்களைத் தோற்றுவிக்காமல் ஏன் இருக்க முடியாது என்பதற்கு உரிய விளக்கம் உங்களுக்குக் கிடைத்துவிடும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

ருஷ்யாவில் நடந்த சமூகப் புரட்சி போன்று அவ்வளவு விரிந்து பரந்த, அவ்வளவு நீண்ட காலப் போராட்டத்தின் மூலம் முன்னேற்பாடு செய்யப்பட்ட புரட்சி எதையும் உலகம் கண்டதில்லை. எனவே, இத்தகைய புரட்சிக்கு, உயர்ந்த அரசியல் மேதையும் அசாதாரண உறுதி வாய்ந்த இயல்பும் கொண்டவர்கள் தலைமை தாங்குவார்கள் என்பதை முன்னுரைக்க முடிந்திருக்கும்.

நமது கட்சியின் தலைவராக ஒரு மாண்புயர் மனிதர் விளங்குவது தற்செயல் அல்ல. இது இவ்வாறு நிகழ்ந்தே தீர வேண்டியிருந்தது. அவரது மேதைகளின் பெருமையும் அவரது விருப்பாற்றலின் அசையா உறுதியும் நமது புரட்சியின் விரிவையும் பேரளவையும், சிறப்பாக அதன் பிரதான இயக்கு சக்தியான தொழிலாளி வர்க்கத்தின் முன்கண்டறியாப் பண்புகளையுமே பிரதிபலிக்கின்றன.

அ. லுனச்சார்ஸ்க்கிய்

(குறிப்பு : அ.வ. லுனச்சார்ஸ்க்கிய் (1875 – 1933) – அகாதமிசியன், சோவியத் பண்பாட்டுத் துறையில் சிறந்த செயலாற்றியவர். தமது 17-வது வயதில் சோசல் – டெமாக்ரடிக் ஸ்தாபனத்தில் சேர்ந்தார். ‘வ்பெர்யோத்’ (மன்னே), ‘பரோலித்தாரிய்’ (பாட்டாளி) என்னும் போல்ஷ்விக் செய்தித் தாள்களில் வி.இ. லெனினது தலைமையில் உடன் உழைத்தார். அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பின் ருசிய சோவியத் கூட்டாட்சி சோசலிஸக் குடியரசின் கல்வித்துறை மக்கள் கமிஸாராகப் பல ஆண்டுகள் பதவி வகித்தார்.

லுனச்சார்ஸ்க்கிய் தலைசிறந்த சொற்பொழிவாளர், கட்டுரையாளர். ருஷ்ய, மேற்கு ஐரோப்பிய இலக்கிய வரலாற்று ஆசிரியர். பல நாடக நூல்களும் சோவியத் இலக்கியம் பற்றிய சிறந்த விமர்சன நூல்களும் இயற்றியவர்.)

ஸ்விக்கி தொழிலாளர் போராட்டம் : நவீன பாட்டாளிகளே, முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக அமைப்பாய் திரள்வோம்!

திய வெட்டு, வேலைச்சுமை அதிகரிப்பு உள்ளிட்டு ஸ்விக்கி நிறுவனத்தின் சுரண்டல் அட்டூழியங்களை எதிர்த்து, ஏற்கெனவே அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்டு பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். இந்நிலையில், ஸ்விக்கி நிறுவனம் அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகள் இதுவரை மேற்கொண்டு வந்த சுரண்டலுக்கு எல்லாம் உச்சமாக அமைந்துள்ளது.

முழுநேரமாக ஸ்விக்கியில் பணிபுரிபவர்களின் வேலைநேரம், புதிய விதிமுறைகளின்படி 12 மணிநேரத்திலிருந்து 18 மணிநேரமாக மாற்றப்பட்டிருக்கிறது. பழைய முறையின்படி, காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை இருந்த வேலைநேரம் (ஓய்வு நேரம் 3 மணி நேரத்தோடு சேர்த்து), காலை 5:30 மணியிலிருந்து இரவு 11 மணியாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றி அமைக்கப்பட்டுள்ள புதிய வேலை நேரத்தில், முன்பு போல் செயலியை அணைத்து வைத்துவிட்டு ஓய்வெடுக்க முடியாது. எப்போதும் செயலியைத் திறந்து வைத்திருக்க வேண்டும் என உத்தரவு போடுகிறார்கள்.

“காலையிலிருந்து இரவு வரை இங்கேயே வேலை பார்த்தால், எங்கள் குடும்பத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நாங்கள் எப்போது வாழ்வது” என கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள்.

சர்வதேச தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்திப் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை கழிப்பறைக் காகிதமாக ஆக்கப்பட்டு, கொத்தடிமைக்கு ஒப்பாக மாற்றப்படுகிறார்கள் ஸ்விக்கி தொழிலாளர்கள்.

படிக்க : ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! | துண்டறிக்கை

இதுவரை கொடுத்து வந்த வார ஊக்கத்தொகை ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதுவரை சராசரி வார ஊதியமாகப் பெற்றுவந்த 11,500 ரூபாயை பெறுவதற்கு, 180 முறை உணவு டெலிவரி செய்திருக்க வேண்டும் என்று புதிய விதி சொல்கிறது. அதாவது ஒரு நாளைக்கு 26 டெலிவரி செய்ய வேண்டும் என்கிறார்கள்.

110, 125, 140, 160 என டெலிவரி இலக்குகள் வகுக்கப்பட்டு, அதற்கேற்ப ஊதியமும் ரூ.7,000, ரூ.7,500, ரூ.8,500, ரூ.9,750 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

“ஒரு தொழிலாளி 180 டெலிவரி என்ற இலக்கை, ஒரு வாரத்தில் நிறைவேற்றுவது மிகச் சவாலான ஒன்று; சராசரி ஊதியமான ரூ.11,500-ஐ வெட்டி ரூ.7,000 ஆக குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டே இந்த இலக்கை திணித்துள்ளார்கள்” என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள்.

நாளொன்றுக்கு காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை 20 டெலிவரி செய்தால், அந்நாளின் ஊக்கத்தொகையாக ரூ.400 வழங்கப்பட்டது. ஆனால் புதிய விதிமுறையில், ஆர்டர்கள் அதிகமுள்ள இடங்களில், டெலிவரி எல்லைகள் சுருக்கப்பட்டு, தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. இதனால், ஒரு நாளைக்கு 20 டெலிவரி எடுப்பதே குதிரைக் கொம்பு ஆகியுள்ளது. எனவே இதுவரை பெற்றுவந்த நாள் ஊக்கத்தொகையையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

***

கடந்த 20 ஆம் தேதி, தங்கள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதிகளுக்கு எதிராக சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். ஸ்விக்கியின் அடாவடியைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்யும்படி தன் சக தொழிலாளர்களுக்கு அறைகூவினர்.

22 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 23 ஆம் தேதி சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையிலிருந்து பெங்களூரில் அமைந்துள்ள ஸ்விக்கி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நடைபேரணியாக சென்றுள்ளார்கள்.

தொழிலாளர்களின் இந்த கிளர்ச்சியால், ஸ்விக்கி நிறுவனத்தின் குறிப்பிட்ட அளவு வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் தனது விதிகளை ரத்துசெய்யவோ, தளர்த்திக் கொள்ளவோ அந்நிறுவனம் முன்வராது என்ற நிலையே உள்ளது. ஏனெனில், லாபவெறி பிடித்த ஸ்விக்கி, தான் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காக தொழிலாளர் ஊதியத்தில் கை வைப்பது புதிதல்ல.

ஊதிய வெட்டு, வேலைச்சுமை அதிகரிப்பைக் கண்டித்து ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடத்திய ஸ்விக்கி ஊழியர்கள்.

2014 இல் ஸ்விக்கி நிறுவனம் தொடங்கப்பட்டபோது மாதம் 45 ஆயிரம் ரூபாய் வருமானம் எனக் கூவிக் கூவி அழைத்தார்கள். தொடக்கத்தில் ஒரு முறை உணவு விநியோகித்தால் (டெலிவரி) ரூ.60 வரை கிடைத்தது. ஆனால், அதன் பின்னர் ரூ.40, ரூ.35, ரூ.30, ரூ.25 எனக் குறைந்துகொண்டே வந்து தற்போது ரூ.20 ஆக நிற்கிறது.

இதேபோல ஆரம்ப காலகட்டங்களில் மாத ஊக்கத்தொகை, விற்பனை ஊக்கத்தொகை போன்ற சலுகைகளைக் கொடுத்து வந்தது. பிறகு அது வார ஊக்கத்தொகையாக மாற்றப்பட்டு, இன்று அதுவும் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. நாள் ஊக்கத்தொகையோ, பெற முடியாத ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது.

அமைப்பாக்கப்படாமல் இருந்தாலும்கூட, ஸ்விக்கி நிறுவனத்தின் தொடர்ச்சியான அடாவடிகளைக் கண்டித்து கொல்கத்தா, அசாம், பெங்களூர், டெல்லி என பல நகரங்களில் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். எனவே தொழிலாளர்களின் இந்த கிளர்ச்சி, ஸ்விக்கி நிறுவனம் எதிர்பாராத ஒன்றல்ல.

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதி என்பது சென்னையின் சில மண்டலங்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரே அடியாக நாடு முழுக்க அமல்படுத்தினால் என்ன நேரிடும் என்பதை உணர்ந்து, படிப்படியாக தனது திட்டத்தை நிறைவேற்றும் எண்ணத்தோடு சதித்தனமாக செயல்படுகிறது ஸ்விக்கி

***

ஸ்விக்கி நிறுவனம் தொடங்கப்பட்டபோது, ‘நாம் அனைவரும் நிறுவனத்தின் பங்குதாரர்கள்’ என்று தொழிலாளர்களைப் பார்த்து கூறியது. இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் தீவிரமடைந்த காலத்தில், தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தில் எண்ணற்ற படித்த இளைஞர்கள் வேலைக்குச் சேர்ந்தார்கள். வாரத்திற்கு சராசரியாக 15,000 அளவிற்கு சம்பாதிக்க முடியும் என்றாலும் கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது.

12 மணிநேரம் முழுநேர வேலை பார்க்கும் ஒரு தொழிலாளி, பல நேரங்களில் சாப்பிட தாமதமாகி அல்சரால் (குடல் புண்) அவதிப்பட வேண்டியிருந்தது. மேலும் இருசக்கர வாகனத்திலேயே நீண்டநேரம் அமரும் காரணத்தால் மூல நோயை (பைல்ஸ்) சந்தித்தவர்களும் உண்டு.

இப்படி கொத்தடிமை போல வேலைசெய்த தொழிலாளர்களின் உழைப்பிலேதான் ‘ஸ்விக்கி’ என்ற நிறுவனம் தனக்கென தனியொரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது. இன்று தனக்கென்று குறிப்பிட்ட அளவு சந்தையைப் பிடித்த பிறகு, சுரண்டலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த புதிய விதிமுறையோடு இது நிற்காது. ஏனெனில் லாபவெறிக்கு ஒரு வரம்பு கிடையாது.

“பழைய ஊதிய முறை குறித்து பேசக் கூடாது; புதிய ஊதிய முறையில் ஏதேனும் கருத்து இருந்தால் தெரிவியுங்கள்” என பேச்சுவார்த்தைக்கு வந்த தொழிலாளர்களிடம் ஸ்விக்கி நிறுவன அதிகாரி பேசும் காணொளி வெளியாகியுள்ளது.

“விருப்பம் இருந்தால் வேலைசெய், இல்லாவிட்டால் வெளியேறு” என்று கூறுகிறார்கள். நாட்டில் வேலையில்லாத ரிசர்வ் பட்டாளம் குவிந்திருக்கிற சூழலில், சில பேர் போனால் பலர் போட்டிப்போட்டுக் கொண்டு வருவார்கள் என்ற நிலை ஸ்விக்கி நிறுவனத்திற்கு துணிச்சலைக் கொடுக்கிறது.

படிக்க : 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவனுக்கு தண்டனையை குறைத்த நீதிமன்றம்!

ஸ்விக்கி தொழிலாளர்கள் சந்தித்துவரும் பிரச்சினை தனித்த ஒன்றல்ல, கிக் தொழிலாளர்கள் (Gig Workers) என்றழைக்கப்படும் நவீன பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினை. முறையான நிறுவனமோ, பணி நிரந்தமோ, பணிப் பாதுகாப்போ அற்ற ஒரு நிலையில், குறிப்பிட்ட வேலைக்கு, குறிப்பிட்ட மணிநேரம் வேலைசெய்யும் தொழிலாளர்களே ‘கிக் தொழிலாளர்கள்’ என்றழைக்கப்படுகின்றனர். இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில், ஏகபோக முதலாளி வர்க்கம் தன்னுடைய சுரண்டலை அதிநவீன முறையில் தீவிரப்படுத்தும் ஒரு வடிவமாக கிக் பொருளாதாரத்தைப் புகுத்திவருகிறது.

நிதி ஆயோக் அறிக்கைப் படி, இந்தியாவில் தற்போது 77 லட்சம் கிக் தொழிலாளர்கள் உள்ளனர். இது 2029-30க்குள் 2 கோடியே 35 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. (ஆதாரம்: தீக்கதிர்)

முதலாளி யாரென்றே கண்ணுக்குத் தெரியாத, ஆலை அல்லது நிறுவனங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளைப் போல, திரளாக ஒன்றிணைந்து வேலைசெய்ய வாய்ப்பற்ற ‘கிக் தொழிலாளர்கள்’, பிற பிரிவு தொழிலாளிகளைவிட ஆகக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள். ஜூலை 21ஆம் தேதி பெங்களூரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஸ்விக்கி தொழிலாளர்கள் “நாம் முகமில்லா நிர்வாகத்துடன் போராட வேண்டியுள்ளது” என்று கூறினர்.

“அவர்களால் ஒருங்கிணைந்து எதிர்ப்பைக் காட்டமுடியாது” என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கத்தை, அமைப்பாய் திரண்டு போராடுவதன் மூலம் மட்டுமே பணியவைக்க முடியும். நாடெங்கும் பரவலாக நடைபெற்றுவரும் ஸ்விக்கி தொழிலாளிகளின் தன்னெழுச்சிப் போராட்டங்களானது, அதற்கான முதல் அடியாகும்.

ரவி

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்கள் பிரதிநிதிகளின் சோவியத்துகள் | தோழர் ஸ்டாலின்

சியப் புரட்சியின் ரதம் மின்னல் வேகத்தில் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. புரட்சிகரப் போராளிகளின் படைப்பிரிவுகள் எல்லா இடங்களிலும் வளர்ந்து கொண்டும் பரவிக்கொண்டும் இருக்கின்றன. பழைய அதிகாரத்தின் தூண்கள் அவற்றின் அடித்தளங்களின் மீது அதிர்ந்து குலுங்கிக் கொண்டிருக்கின்றன, நொறுங்கிக் கொண்டிருக்கின்றன. இப்போது, எப்போதும்போல, பெட்ரோகிராடு முன்னணியில் இருக்கிறது. அதற்குப் பின்னால் எண்ணற்ற மாகாணங்களைத் தட்டுத்தடுமாறி இழுத்துவந்துகொண்டிருக்கின்றன.

பழைய அதிகாரத்தின் சக்திகள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன, ஆனால் அவை இன்னும் அழிக்கப்படவில்லை. அவை தாழ்வாக இருக்கின்றன, தமது தலையை உயர்த்தி, சுதந்திர ரசியா மீது வேகமாக எழுந்து தாக்குவதற்குத் தருணம் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன. சுற்றிலும் பாருங்கள், இருண்ட சக்திகளின் தீய வேலை இடையீடின்றி நடந்து கொண்டிருப்பதைக் காண்பீர்கள்……..

வென்றெடுக்கப்பட்ட உரிமைகளை உயர்த்திப்பிடிக்க வேண்டும், அதன்மூலம் பழைய சக்திகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும், மாகாணங்கள் தொடர்பில் ரசியப் புரட்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் – இதுதான் தலைநகரின் பாட்டாளி வர்க்கத்தின் அடுத்த உடனடிப் பணியாக இருக்க வேண்டும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

ஆனால் இதை எப்படிச் செய்வது?

இதைச் செய்து முடிக்க தேவையாக இருப்பது என்ன?

பழைய அதிகாரத்தைத் தூள் தூளாக்குவதற்கு கிளர்ச்சிக்காரத் தொழிலாளர்களுக்கும் மற்றும் படைவீரர்களுக்கும் இடையிலான ஒரு தற்காலிகக் கூட்டணி போதுமானது. ஏனென்றால் ரசியப் பலம் படை வீரர்களின் சீருடையில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டணியில் இருக்கிறது என்பது தானாகவே தெளிவாகத் தெரியக் கூடியதாகும்.

ஆனால் அடையப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் புரட்சியை மேலும் வளர்த்தெடுக்கவும், தொழிலாளர்களுக்கும் படைவீரர்களுக்கும் இடையிலான ஒரு தற்காலிகக் கூட்டணி போதுமானதல்ல.

இதற்கு அந்தக் கூட்டணி உணர்வுபூர்வமானதாகவும் உறுதியானதாகவும் செய்யப்பட வேண்டியதும், அது நீடித்து நிலைத்து நிற்க வேண்டியதும், எதிர்ப்புரட்சியாளர்களின் ஆத்திரமூட்டும் தாக்குதல்களைத் தாக்குப்பிடித்துப் போதுமான அளவுக்கு நிலைத்து நிற்க வேண்டியதும் அவசியமாகும். ஏனென்றால் ரசியப் புரட்சியின் இறுதி வெற்றியின் உத்தரவாதம் புரட்சிகரத் தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகரப் படைவீரர்களுக்கு இடையிலான கூட்டணியைப் பலப்படுத்துவதில் அடங்கியிருக்கிறது என்பது அனைவருக்கும் தெளிவாகத் தெரிந்ததாகும்.

தொழிலாளர்களின் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகள் இந்தக் கூட்டணியின் அமைப்புகள் ஆகும்.

இந்தச் சோவியத்துகள் எந்த அளவுக்கு மிகவும் நெருக்கமாக இணைக்கப்படுகிறதோ அந்த அளவுக்கு அவை மிகவும் பலமாக அமைப்பாக்கப்படுகின்றன, அவை வெளிப்படுத்தும் புரட்சிகர மக்களின் புரட்சிகர சக்தி அந்த அளவுக்கு மிகவும் செயலூக்கம் கொண்டதாக இருக்கும், மேலும் எதிர்ப்புரட்சிக்கு எதிரான உத்தரவாதங்கள் மிகவும் நம்பிக்கை வாய்ந்தவையாக இருக்கும்.

புரட்சிகர சமூக-ஜனநாயகவாதிகள் இந்தச் சோவியத்துகளைப் பலப்படுத்துவதற்குப் பாடுபட வேண்டும், எல்லா இடங்களிலும் அவற்றை அமைக்க வேண்டும், தொழிலாளர்களின் மற்றும் விவசாயிகளின் பிரதிநிதிகளின் மத்திய சோவியத் ஒன்றியத்தின் கீழ் அவற்றை ஒன்றாக இணைக்க வேண்டும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

தொழிலாளர்களே, உங்கள் அணிகளை நெருக்கமாகக் கொண்டு வாருங்கள், ரசிய சமூக-ஜனநாயகத் தொழிலாளர் கட்சியைச் சுற்றி அணிதிரட்டுங்கள்!

விவசாயிகளே, விவசாயிகள் சங்கங்களில் அமைப்பாகுங்கள், ரசியப் புரட்சியின் தலைவரான புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்துடன் அணிதிரளுங்கள்!

படைவீரர்களே, உங்கள் சொந்தச் சங்கங்களில் அமைப்பாகுங்கள், ரசியப் புரட்சிகரப் படையின் ஒரே உண்மையான கூட்டாளியான ரசிய மக்களைச் சுற்றி அணிதிரளுங்கள்!

தொழிலாளர்களே, விவசாயிகளே, படைவீரர்களே, எல்லா இடங்களிலும் கூட்டணியின் அமைப்புகளாக, ரசியாவின் புரட்சிகர சக்திகளின் ஆற்றலாக தொழிலாளர்களின் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்துகளில் ஒன்றிணையுங்கள்!

அதில்தான் பழைய ரசியாவின் இருண்ட சக்திகளின் மீதான முழுமையான வெற்றியின் உத்தரவாதம் அடங்கியிருக்கிறது.

அதில்தான் விவசாயிகளுக்கு நிலம், தொழிலாளர்களுக்கு உழைப்புப் பாதுகாப்பு, ரசியாவின் அனைத்துக் குடிமக்களுக்கும் ஒரு ஜனநாயகக் குடியரசு ஆகிய ரசிய மக்களின் அடிப்படைக் கோரிக்கைகள் மெய்யாக்கப்படும் என்ற உத்தரவாதம் அடங்கியிருக்கிறது.

பிராவ்தா, எண் 8,
மார்ச் 14, 1917

ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்! ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்! | துண்டறிக்கை

நவம்பர் 7: ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!
டிசம்பர் 21: ஹிட்லர்-முசோலினியின் பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலினின் பிறந்த நாளை நெஞ்சிலேந்துவோம்!

சிறுதொழில்கள் நசிவு – வேலையின்மை – விலையேற்றம் – பாசிச அடக்குமுறைகள்:

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம்!
ரசிய சோசலிசப் புரட்சி நாளை உயர்த்திப் பிடிப்போம்!

நவம்பர் – டிசம்பர் 2022

அரங்கக் கூட்டங்கள் | தெருமுனைக் கூட்டங்கள் | கலைநிகழ்ச்சிகள்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் நடந்த மகத்தான சோசலிசப் புரட்சியிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வந்த ஹிட்லர் – முசோலினி பாசிசத்தை வீழ்த்திய பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் ஸ்டாலின் பிறந்தநாளில் நமது நாட்டை அச்சுறுத்திவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்கும் கடமையை நாம் சுமந்துள்ளோம்.

எட்டாண்டு கால பாசிசப் பேயாட்சி:

பணப் பரிவர்த்தனையில் கொள்ளையிட டிஜிட்டல் மயமாக்கம், சிறுதொழில்களை அழிக்கும் ஜி.எஸ்.டி., செஸ் வரி, பெட்ரோல், டீசல் மீதான கலால்வரி என 20 இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை ஒட்டச் சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி வழங்கிவரும் மோடி அரசு, மாநில அரசுகளை பேரரசனுக்குக் கப்பம் கட்டும் அடிமை பாளையங்களாக்கி விட்டது.

நமது சொந்த நாட்டில் சிறுதொழில்களைச் செய்வதையும், விவாசயம் செய்வதையும், பழங்குடி மக்கள் காடுகளைச் சார்ந்து வாழ்வதையும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதையும் தடுத்து, அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிப்பதற்கேற்ப சட்டத்திருத்தங்களைச் செய்துவருகிறது. மூன்று வேளாண் சட்டங்கள், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மசோதா, தொழிலாளர் நலச்சட்டத் திருத்தங்கள், புதிய கல்விக்கொள்கை, மின்சார மசோதா, பொதுத்துறைகளை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கும் தேசியப் பணமயமாக்கல் திட்டம் போன்றவை மோடியின் பாசிசத் திட்டங்களில் சிலதுளிகள் மட்டுமே.

ஆம், நாட்டையே பேரழிவின் விளிம்பில் நிறுத்தியிருக்கிறது மோடியின் ஆட்சி!

மோடி உருவாக்குவது சொர்க்கமா, சோமாலியாவா?

கடந்த எட்டாண்டுகளாக, பெருவாரியான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வந்த சிறுகுறுதொழில்கள், கைத்தொழில்கள் மீது, கார்ப்பரேட் கொள்ளை என்னும் சுருக்குக் கயிற்றை மாட்டி நெருக்கி வருகிறது. இதன் விளைவாக, வரலாறு காணாத வகையில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. சொர்க்கத்தைப் படைப்பதாக வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியில் பஞ்சமும், பட்டினிச்சாவுகளும் பெருகி, நம் நாடு சோமாலியாவாக மாறும் அபாயம் சூழ்ந்து வருகிறது. ஆகக் கொடூரமான ஆர்.எஸ்.எஸ். கும்பலே இந்த உண்மையை இனியும் மறைக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டது, அதனால்தான், 20 கோடிக்கும் மேற்பட்டோர் வறுமையில் வாடுவதாகவும், 4 கோடி இளைஞர்களுக்கு வேலையில்லை எனவும் நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் டாலரின் மதிப்பைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதனால், உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரிக்கிறது. தனது பொருளாதார நெருக்கடியை உலக மக்களின் மீது சுமத்துகின்ற அமெரிக்காவின் இந்த அயோக்கியத்தனத்தைக் கண்டிக்கத் துணிவின்றி, உலகப் பொருளாதாரம் புதிய புயலின் கண்ணியில் சிக்கியிருக்கிறது என்கிறார் ரிசர்வங்கியின் கவர்னர். இதன் விளைவாக, இந்தியாவில் உணவுப் பஞ்சம் வரப்போகிறது என்று சொல்லி மக்களை கைகழுவுகிறது மோடி-நிர்மலா சீதாராமன் கும்பல்.

உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியாவை மாற்றிவிட்டதாக பீற்றிக் கொள்கிறார் மோடி. ஆனால், இந்தியாவை இன்னொரு இலங்கையாக மாற்றியிருப்பதே உண்மை.

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம்

அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள், நம்மைப் போன்ற பின்தங்கிய, வளரும் நாடுகளைக் கொள்ளையடிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் 1992-களில் இருந்தே இந்தியாவில் திணிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கொள்ளையில் மார்வாரி, பார்சி, பார்ப்பன, பனியா, சிந்தி பின்னணி கொண்ட கார்ப்பரேட் முதலாளிகளான அம்பானி, அதானி, வேதாந்தா, மிட்டல், டாடா-க்களுக்கு பங்கு பிரித்துக் கொடுப்பதில் முன்னணியில் நிற்கிறது பா.ஜ.க.வின் மோடி ஆட்சி.

ஏற்றத்தாழ்வு, ஜனநாயக மறுப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய சாதிய வர்ணாசிரம – பார்ப்பன பயங்கரவாதமே ஆர்.எஸ்.எஸ்.இன் சித்தாந்தம். இதன் வெளிப்படாகிய இந்துராஷ்டிரக் கொள்கையே பா.ஜ.க.வின் கார்ப்பரேட் விசுவாசத்துக்கு அடிப்படை. எனவேதான், கார்ப்பரேட் கொள்ளையைக் காக்க, பார்ப்பன பாசிசமும் கார்ப்பரேட் பாசிசமும் பின்னிப் பிணைந்து சீறி வருகின்றன.

தனியுடைமையையும் சுரண்டலையும் பாதுகாப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, அரசு எந்திரம் மற்றும் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ். விஷக்கிருமிகள் ஊடுருவியுள்ளன. கார்ப்பரேட் சுரண்டலையும், இந்துராஷ்டிர நோக்கத்தையும் கேள்விக்கிடமற்ற முறையில் மேற்கொள்வதற்கு வசதியாக, ஏட்டளவிலான ஜனநாயகக் கூறுகள் அனைத்தையும் ஒழித்துக் கட்டி வருகின்றது பாசிசக் கும்பல்.

முசுலீம் மக்களை நாட்டின் எதிரிகளாகக் காட்டி மக்களைப் பிளவுபடுத்துவது, அவர்களுக்கு எதிராகக் கலவரங்களைத் திட்டமிட்டு நடத்துவது; சிறுபான்மை மதத்தினர், பழங்குடியினர், தலித்துகளை அடித்துக் கொல்வது; சிறுமிகள், பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொல்வது போன்றவை பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அன்றாட நிகழ்வாகி, ஒட்டுமொத்த சமூகத்தையும் பதட்டத்திலேயே வைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரக் கும்பல்.

பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க சாதியினர், பணக்கார மேட்டுக்குடியினருக்கு மட்டும்தான் இது நாடு. மற்ற உழைக்கும் மக்களுக்கோ உரிமைகள் ஏதுமற்ற சுடுகாடு. இதுதான் காவிகள் கட்டமைக்க விரும்பும் இந்துராஷ்ட்ரம்.

சோசலிச ரசியாவே நமது வழிகாட்டி!

ஏகாதிபத்தியங்களின் கொள்ளைக்காக நடந்த முதல் உலப்போரின் போது, தோழர் லெனின் தலைமையில் ரசிய உழைப்பாளி மக்கள், சொந்த நாட்டில் முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிப் புரட்சியை நடத்தினர். உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்டினர். அதைபோல, நாஜி ஹிட்லர் – பாசிச முசோலினி தலைமையில் மீண்டுமொரு கொள்ளைக்கார போரை – இரண்டாம் உலகப்போரை ஏகாதிபத்தியங்கள் கட்டவிழ்த்து விட்டபோது, தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோசலிச ரசியாவின் 200 இலட்சம் பாட்டாளிகள் தங்களது இன்னுயிரை தியாகம் செய்து பாசிசத்திடமிருந்து உலக மக்களைக் காத்தனர்.

இத்தகைய, உழைக்கும் மக்களின் ஒன்றுபட்ட போராட்டங்களும் தியாகங்களுமே இந்தியாவைச் சூழ்ந்துவரும் பாசிசத்தையும் கிள்ளியெறியும்.

போராட்டங்கள் எழுச்சிகளாக உயரட்டும்!

நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிச கும்பலுக்கு எதிரான போராட்டங்கள் வளர்ந்து வருகின்றன. தமிழகத்திலும் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, பரந்தூர், புதுச்சேரி, கோவை என பல பகுதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மாணவர்கள், செவிலியர்கள், பேராசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்.இன் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பாசிச எதிர்ப்பு சக்திகள் போராடி வருகின்றனர். பாசிச ஆட்சியதிகாரத்திற்கு எதிராகப் போராடுகின்ற அனைவரும் ஒன்றிணைந்து பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்புகள், பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை அமைத்துப் போராடுவது காலத்தின் கட்டாயமாகும். பாசிசத்தை முறியடிக்கும் இலக்கில் இந்தப் போராட்டங்களை மக்கள் எழுச்சிகளாக வளர்த்தெடுப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் தனது அடித்தளத்தை நிறுவத் தீவிரமாக சதிவேலைகளில் ஈடுபட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல். தமிழகம் ஒருபோதும் மண்டியிடாது என்பதை மீண்டும் உணர்த்துவோம்! மக்கள் போராட்டங்களை மாபெரும் எழுச்சிகளாக வளர்த்தெடுப்போம்! ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசத்தை வேரோடும், வேரடி மண்ணோடும் வீழ்த்துவோம்!

  • காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
  • போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பின் மீதுள்ள மாயையை உதறியெறிவோம்!
  • பாசிச எதிர்ப்பு ஜனநாயக் குடியரசைக் கட்டியமைப்போம்!
  • ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி; பாசிசம் முறியடிப்போம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியாக ஒன்றிணைவோம்!
  • பாசிச எதிர்ப்பு மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்போம்!

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக்குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.

தொடர்புக்கு :- 9791653200, 9444836642, 7397404242, 9962366321

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | தோழர் லெனினுடைய விடுமுறை குறிப்புகள் | தோழர் ஸ்டாலின்

விடுமுறையோ முடியப் போகிறது. தோழர் லெனினோ, விரைவில் கடமையாற்ற மீண்டும் வரப்போகிறார். இந்த நேரத்தில் “தோழர் லெனினுடைய விடுமுறையைப் பற்றி” எழுத வேண்டுமா? இது பொருத்தமானதாக எனக்குத் தோன்றவில்லை. இதுமட்டுமல்ல; என்னுடைய மனப்பதிவுகளோ அநேகம்; அவையோ மதிப்பிடற்கரியவை. பிராவ்தாவின் ஆசிரியர் குழு கேட்பதைப்போல இவற்றை ஒரு சுருக்கமான குறிப்பாக எழுதுவது முற்றிலும் விவேகமானதல்ல. இருந்தாலும், நான் என்ன செய்வது? ஆசிரியர்கள் வலியுறுத்துவதால், நான் எழுதத்தான் வேண்டும்.

ஓய்வுறக்கமில்லாமல், நாட்கணக்கில் தொடர்ந்து போர் முனைகளில் செயல்பட்ட பழம்பெரும் போராளிகளை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. போர்முனையிலிருந்து திரும்ப வரும் அவர்கள் நிழல்களைப் போன்ற தோற்றத்துடன் இருப்பார்கள்; மரம் சாய்ந்தது போல விழுவார்கள். அப்படியே நாள் முழுவதும் தூங்கி விடுவார்கள். புத்துணர்வு பெற்று, புதிய போர்களுக்கான ஆர்வத்துடன் எழுவார்கள். என்னசெய்வது? போரிடாமல் அவர்களால் “வாழ முடியாதே!” ஆறு வார காலமாகப் பார்க்காமல் இருந்துவிட்டு, ஜூலை மாதத்தில் லெனினைப் பார்க்கப்போனபோது, அவரைப் பற்றி எனது மனதில் எழுந்த எண்ணமே இதுதான். களைப்பூட்டும் இடையறாத போர்களுக்குப் பின்னர், ஏதோ கொஞ்சம் ஓய்வெடுத்து விட்டு, அந்த இளைப்பாறலால் புத்துணர்வு பெற்ற பழம்பெரும் போராளியைப் போல அவர் தோன்றினார். அவர் புத்துணர்வோடும்

நோயிலிருந்து மீண்டவராகவும் காணப்பட்டார். ஆனால், மிதமிஞ்சிய உழைப்பாளனுடைய, அளவற்ற களைப்பினுடைய ரேகைகள் அவரது முகத்தில் காணப்பட்டன.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

“பத்திரிகைகளைப் படிக்க எனக்கு அனுமதியில்லை. நான் அரசியல் பேசவே கூடாதாம். மேசை மீது ஒரு துண்டுக் காகிதம் இருந்தால்கூட, நான் அதைப் பார்க்காமல் எச்சரிக்கையுடன் தவிர்த்து விடுகிறேன். ஒருவேளை அது பத்திரிகையாக இருந்தால் என்னவாகும்? கட்டுப்பாட்டை மீறுவதற்கு அது வழிவகுத்து விடுமோ?” என்று தோழர் லெனின் வஞ்சகப் புகழ்ச்சியாகக் கூறினார்.

நானோ மனம்விட்டு சிரித்தேன். கட்டுப்பாட்டுக்கு அவர் கீழ் படிவதைப் பற்றி வானவளாவப் புகழ்ந்தேன். அரசியலையே தொழிலாகக் கொண்டவர்கள் சந்திக்கும்போது அரசியல் பேசாமல் இருப்பதாவது! இது ஆகிற காரியமா? இதைப் புரிந்து கொள்ள முடியாத டாக்டர்களைப் பற்றி நாங்கள் சிரித்துச் சிரித்துப் பேசினோம்.

தோழர் லெனினைப் பார்த்தவுடன் நமது மனதில் பட்டுத் தெறிக்கும் விசயம், செய்திகளை அறிவதற்கான அவரது தணியாத தாகம், கடமையாற்றுவதற்கான அடங்காத – அடக்கவே முடியாத அவரது துடிப்பு; இவற்றில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால், அவர் ஏதோ பட்டினி போடப்பட்டவர்போல காணப்பட்டார் என்பது தெளிவாகத் தெரிந்தது. சோசலிஸ்டு புரட்சியாளர்கள் மீதான வழக்கு விசாரணை என்ன நிலையில் இருக்கிறது? ஜெனோவாவிலும் தி ஹேக்-இலும் என்ன நடக்கிறது? அறுவடைக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கின்றன? தொழில்கள் எந்த நிலையில் உள்ளன? நிதி நிலைமை என்ன? – இந்தக் கேள்விகள் எல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் வந்தன. தன்னுடைய கருத்துகளைத் தெரிவிப்பதற்கு அவர் அவசரப்படவில்லை. நிகழ்ச்சிகளோடு தொடர்பிழந்து பின்தங்கி விட்டதாக அவர் அங்கலாய்க்கிறார், குறைப்பட்டுக் கொள்கிறார். உரையாடலில் பெருமளவு கேள்விகளையே அவர் அடுக்குகிறார். அமைதியாக எல்லாவற்றையும் கேட்டுக் கொள்கிறார். நல்ல அறுவடைக்கான வாய்ப்புகள் இருப்பதை அறிந்து மிகவும் உற்சாகமடைகிறார்.

ஒரு மாதம் கழித்து, அவரை மீண்டும் பார்த்தபோது, முற்றிலும் மாறுபட்டக் காட்சியை நான் கண்டேன். இம்முறை புத்தகக் கட்டுகளும் பத்திரிகைகளும் அவரைச் சுற்றி குவிந்திருந்தன. (ஆசை தீரப் படிக்கவும் அரசியல் பேசவும் அவருக்கு இப்போது அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.) சோர்வு, மிதமிஞ்சிய உழைப்பு ஆகியவற்றின்  அடையாளம் ஏதும் காணப்படவில்லை. வேலை செய்வதாக தணியாத தாகத்தின் காரணமாக எழும் பதற்றம் அவரிடம் இல்லை. இதற்கு முன்னர் இருந்ததுபோல ”பட்டினி” கிடப்பவராக அவர் தெரியவில்லை. அமைதியும் தன்னம்பிக்கையும் முழுமையாகத் திரும்பிவிட்டன. இவர்தான் நம்முடைய பழைய லெனின். தன்னுடன் பேசுபவரை ஊடுருவிப் பார்க்கிறார்; கருத்தூன்றி ஆராய்கிறார்…

இந்தமுறை எங்களுடைய உரையாடல் உற்சாகமாகவும் விறு விறுப்பாகவும் இருந்தது.

உள்நாட்டு விவகாரங்கள்… அறுவடை நிலைமை… தொழில்களின் நிலை…. அன்னிய நாணயங்களுடன் ரூபிளின் பறிமாற்ற மதிப்பு விகிதம்… வரவு செலவுத் திட்டம்… இப்படிப் பலவற்றையும் பற்றிப் பேசினோம்.

”சிரமமிக்க காலம்தான். ஆனால், படுமோசமான நிலைமை போய்விட்டது. நல்ல அறுவடை கிடைக்கும். நிலைமையில் அடிப்படையான மாற்றத்தை இது ஏற்படுத்திவிடும். இதையடுத்து, தொழில் துறையிலும் நிதிநிலைமையிலும் முன்னேற்றம் ஏற்பட்டே தீரும். இப்போது செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. அரசின் அனாவசிய செலவுகளைக் குறைத்து, அதன் மீதுள்ள பளுவை அகற்ற வேண்டும். இதற்காக நம்முடைய நிறுவனங்களிலும் தொழிலகங்களிலும் சிக்கனத்தை மேற்கொண்டு, அவற்றின் நிலையை மேம்படுத்த வேண்டும். குறிப்பாக, இந்த விசயத்தில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். கஷ்ட நிலையிலிருந்து நாம் மீளுவோம். ஆம், நிச்சயமாக நாம் மீண்டே தீருவோம். இது உறுதி” என்றார் லெனின்.

அயல்நாட்டு விவகாரங்கள்… ஏகாதிபத்தியங்களின் சோவியத் எதிர்ப்பு கூட்டணி…. பிரான்சின் நடத்தை… பிரிட்டனும் ஜெர்மனியும்…. அமெரிக்காவின் பங்கு பாத்திரம்…. இவற்றைப் பேசினோம்.

லெனின் சொன்னார். ”அவர்கள் (ஏகாதிபத்தியவாதிகள்) பேராசை பிடித்தவர்கள். அவர்களோ ஒருவரை ஒருவர் மனமார வெறுக்கின்றனர். அவர்கள் ஒருவரோடொருவர் முட்டி மோதிக் கொள்வார்கள். நாம் அவசரப்படத் தேவையில்லை. நமது பாதை தெளிவானது, நிச்சயமானது; நாம் அமைதியையே வேண்டுகிறோம். இதற்கான ஒப்பந்தத்துக்காக நாம் வாதிடுகிறோம். ஆனால் நாம் அடிமைப்படுத்தலையும் அடிமைப்படுத்தும் ஒப்பந்தங்களின் நிபந்தனைகளையும் எதிர்க்கிறோம். நமது கப்பலின் சுக்கானை உறுதியாகப் பற்றி நின்று, நமது சொந்த வழியில் நாம் முன்னேறிச்செல்லு 20

வோம். நாம் முகத்துதிக்கு இரையாக மாட்டோம். அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

சோசலிஸ்டு புரட்சியாளர்கள், மென்ஷ்விக்குகள் – சோவியத் ரஷ்யாவுக்கு எதிரான இவ்விரு தரப்பினரின் வெறி கொண்ட கிளர்ச்சி / எதிர்ப்பு….. இவை பற்றியும் நாங்கள் பேசினோம்.

”ஆம், சோவியத் ரஷ்யாவை இழிவுபடுத்துவதையே அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். சோவியத் ரஷ்யாவுக்கு எதிராகத் தாக்குதல் தொடுக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவர்கள் துணை போகின்றனர், வழிசெய்கின்றனர். முதலாளித்துவப் அவர்கள் விழுந்துவிட்டனர்; படுபாதாளத்தில் வீழந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் தடுமாறி தடுமாறி கெட்டொழியட்டும். தொழிலாளர் வர்க்கத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் எப்போதோ செத்தொழிந்து விட்டனர்…” என்றார் லெனின்.

வெண் காவலர்களின் பத்திரிகைகள்… நாட்டைவிட்டு ஓடிப் போனவர்கள்… லெனின் இறந்து விட்டார்; முழு விவரங்கள் இதோ என்று கூறி எண்ணற்ற இழிந்த கட்டுக்கதைகளைப் பரப்புகின்றனர்….

புன்னகைத்தபடியே லெனின் குறிப்பிட்டார்: ”புளுகுவதால், அவர்களுக்கு ஏதாவது ஆறுதல் கிடைக்குமென்றால் அவர்கள் புளுகித் திரியட்டும். சாகப் போகிறவர்களுக்கு கடைசி ஆறுதலாக உள்ளவற்றை நாம் பறித்து விட வேண்டாம்.”

செப்டம்பர் 15, 1922

தோழர் லெனினுடைய விடுமுறை
பிராவ்தாவுக்கான படத்துடன் கூடிய இணைப்பு
எண். 215, செப்டம்பர் 24,1922

ஸ்டாலின்படைப்புகள்,
ரஷ்யப்பதிப்பு ,
தொகுதி 5..

தூத்துக்குடியில் ஒலித்த குமுறல் சத்தம்.. வாயிலேயே சுட்டு வீழ்த்திய போலீசு! | மருது வீடியோ

தூத்துக்குடி மக்கள் போராடியது நியாயம் என்ற ஒரு உண்மை இப்போது இந்த அறிக்கையின் மூலமாக வெளிவந்திருக்கிறது. இந்த துப்பாக்கிச்சூட்டின் முதல் குற்றவாளி எடப்பாடி கே.பழனிசாமி. நாசிச ஹிட்லனின் சகாக்கலுக்கு எப்படிப்பட்ட விராசணையும் தண்டனையும் பகிரங்கமாக அளிக்கப்பட்டதோ, அப்படிப்பட்ட தூக்கு தண்டனையை தூத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்ற குற்றவாளிகளுக்கு வழங்க வேண்டும்.

ஆரிய பட்டியை சார்ந்த எங்கள் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் ஜெயராமன் எப்படி இறந்தார் என்று கேட்கும்போது, எங்கள் தோழர்கள் சொல்கிறார்கள். துப்பாக்கிக் குண்டுகள் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வருகிறது என்று. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் இறந்த தியாகிகளுக்கு இன்றுவரை அஞ்சலி செலுத்த மறுத்துவருகிறார்கள்.

தூத்துக்குடியில் மக்கள் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு, ரஜினி அங்கு வரவேண்டிய அவசியம் என்ன? என்ன நோக்கம்? முதலில் ரஜினி சென்று போலீசுக்காரர்களை சந்தித்தார். பல போலீசு படுகாயம் அடைந்துள்ளார்கள் என்றார். ஆனால் ஒரேஒரு போலீசுக்காரருக்குதான் உதடு கிழிந்திருந்தது என்று ஆணையம் சொல்கிறது. நாங்கள் இப்படி கொல்லுவோம், மக்கள் ரஜினி வந்தால் ஏமார்ந்து விடுவார்கள் என்ற இவை அனைத்துமே ஒரு முன் திட்டம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை பற்றி Galatta Voice யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விளக்கங்களை தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

பாகம் 1

https://www.youtube.com/watch?v=2GeQjjJ65P4

பாகம் 2

https://youtu.be/zDY-S9ADthw

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உ.பி.யும் பா.ஜ.க ஆளும் மாநிலங்களும் பாலியல் வன்கொடுமைக் கூடாரங்கள்!

டந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் மதோதண்டா பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ஆதிக்க சாதிவெறியர்கள் இருவர் வீட்டிற்குள் நுழைந்து அச்சிறுமியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, மண்ணெண்ணையை ஊற்றித் தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். விவசாயப் பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய அச்சிறுமியின் தந்தை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தனது மகளைக் கண்டு, கதறியழுதபடி அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குத் தூக்கிச் சென்றுள்ளார். அங்கிருந்து லக்னோ மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட, 80 சதவிகித தீக்காயங்களுடன் இருந்த அச்சிறுமி சிகிச்சை பலனின்றி 12 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்.

செப்டம்பர் 14 ஆம் தேதி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள தமோலிபுர்வா என்ற கிராமத்தில் 15 மற்றும் 17 வயதுடைய இரண்டு தலித் சிறுமிகளின் உடல்கள் மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தன. இதைப் பார்த்துக் கோபமடைந்த கிராம மக்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி பல மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறுமிகளின் பிரேதப் பரிசோதனையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுக் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டது அம்லபமாகியுள்ளது.

***

இந்த இரு சம்பவங்களிலும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள், மிகக் கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இக்கொடூரச் சம்பவங்கள் ஊடகங்களில் வெளிவந்து மக்களின் கவனத்தை ஈர்க்காதவரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

படிக்க : பாலியல் குற்றவாளிகளுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்கும் கேரள நீதிமன்றத்தின் ஆணாதிக்க தீர்ப்பு !

இந்துத்துவத்தின் சோதனைச் சாலையான உத்தரப்பிரதேசத்தில்தான் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. 2020-ஆம் ஆண்டில், ஹதராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பத்தொன்பது வயது பெண்ணை ஆதிக்கச் சாதி வெறியர்கள் பாலியல் வன்கொடுமை செய்து, கை கால்களை உடைத்து, நாக்கை அறுத்து, முதுகெலும்பை உடைத்துக் கொடூரமாகக் கொலை செய்தனர். ஆதிக்கச் சாதி வெறியர்களைக் காப்பாற்றுவதற்காகக் கொலை செய்யப்பட்ட பெண்ணை, போலீசே இரவோடு இரவாக எரித்து சாம்பலாக்கியது. இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. தற்போது லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த சம்பவமும் 2014-இல் நடந்த பதாவுன் மாவட்டத்தில் நடந்த தலித் சகோதரிகளின் மரணத்தைப் போன்றே உள்ளது.

சமீபத்தில் வெளியிடப்பட்ட NCRB அறிக்கையில், 2021-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4,28,278 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில்  பெண்களுக்கு எதிரான அதிகக் குற்றங்களுடன் 56,093 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உத்தரப் பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. இந்த ஓராண்டில் மட்டும் 218 கூட்டுப் பாலியல் வன்முறைகள் நடந்துள்ளன. இதிலும் உ.பி. தான் முதலிடத்தில் உள்ளது. நாட்டில் நடைபெறும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் 26 சதவீதம் உத்தரப்பிரதேசத்தில்தான் நடக்கின்றன.

யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு, இந்துத்துவத்தின் சோதனைச் சாலையாக முன்னிறுத்தப்படும் உ.பி.-இல், பெண்கள், தலித்துகள், முஸ்லீம்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பெண்களைக் கொடூரமாகக் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்வது, வீடு புகுந்து சிறுமிகளைத் தூக்கிச் செல்வது, அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்கவிடுவது என சர்வசாதாரணமாக நடக்கின்றன.

பா.ஜ.க ஆளும் பிற மாநிலங்களிலும் இந்த நிலை வேகமாக வளர்ந்து வருகிறது. அண்மையில், உத்தரகாண்டில் பா.ஜ.க தலைவரின் மகன் பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்ததற்காக இளம்பெண்ணைக் கொலை செய்தது அம்பலமாகியது ஒரு சான்றாகும். தென்னிந்தியாவின் இந்துராஷ்டிர சோதனைச் சாலையாக மாறிவரும் கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள லிங்காயத்து மடத்தில் இரண்டு சிறுமிகள் (ஒரு தலித் சிறுமி) மூன்றாண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், அந்த மடத்திற்கு பா.ஜ.க ஆதரவு அளித்து பாதுகாத்து வந்ததும் அம்பலமாகியுள்ளது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக இருக்கும் போதே, பெண்களுக்கு இதுதான் நிலைமை என்றால், இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டால் எப்படி இருக்கும் என்பதை இவை உணர்த்துகின்றன.


அறிவு

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | லெனின் புரட்சியின் மேதை – தோழர் ஸ்டாலின்

புரட்சிக்காகப் பிறந்தவர் லெனின். உண்மையில் புரட்சிகர எழுச்சியின் மேதை அவர்; புரட்சிகரத் தலைமை என்ற கலையின் ஆகச்சிறந்த மேதை அவர். புரட்சிகர எழுச்சிக் காலத்தில் சுதந்திரமாகவும், மகிழ்வாகவும் உணர்வதுபோல வேறு எப்போதும் அவர் உணர்வதில்லை.

எல்லா புரட்சிகர எழுச்சிகளுக்கும் சமமான ஒப்புதல் என்று நான் கூற வரவில்லை; எல்லா நேரத்திலும், எல்லா சூழ்நிலையிலும் புரட்சிகர எழுச்சியை ஆதரித்தார் என்று நான் கூற வரவில்லை. இல்லவே இல்லை. புரட்சிகர எழுச்சிகளின்போது, அவரது உள்ளுணர்வின் மேதைமை முழுமையாகவும், தெளிவாகத் தெரியுமாறும் வெளிப்படுத்தப்பட்டவாறு, வேறு நேரங்களில் வெளிப்படவில்லை என்பதே எனது கூற்றிற்குப் பொருளாகும். புரட்சி நேரத்தில் மலர்ச்சியாக இருந்தார்;

முனிவராக மாறி வர்க்கங்களின் இயக்கத்தையும், புரட்சியின் ஏற்ற இறக்கங்களையும் தனது உள்ளங்கையில் அது கிடப்பதாகப் பார்த்தார். நமது கட்சி வட்டாரத்தில் வழக்கமாக கீழ்க்காணும்படி கூறப்படுவதற்கு நல்ல காரணம் இருக்கிறது: “நீரில் மீன் நீந்துவதுபோல, புரட்சி அலையில் லெனின் நீந்தினார்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

எனவேதான், லெனின் அவர்களின் செயலுத்தி ரீதியான முழக்கங்களில் “பிரமிப்பான” தெளிவு இருந்தது; அவரது புரட்சிகர திட்டங்களில் ”திகைக்கவைக்கும்” துணிவு இருந்தது.

லெனின் அவர்களின் இந்த குணாம்சங்கள் தொடர்பாக உண்மைகளை நினைவுகூர விரும்புகிறேன்.

முதல் உண்மை: அக்டோபர் புரட்சிக்கு சற்று முந்தைய காலகட்டம் அது; பின்னணியிலும், முன்னணியிலும் நெருக்கடியால் உந்தப்பட்ட பல இலட்சக்கணக்கான தொழிலாளர்களும், விவாசாயிகளும், படையினரும் சமாதானத்தையும், விடுதலையையும் கோரி வந்தனர்; ”இறுதிவரை யுத்தம்” என்பதற்காக இராணுவ சர்வாதிகாரத்தைப் படைத்தளபதிகளும், முதலாளித்துவ வர்க்கமும் திட்ட மிட்ட நேரம் அது; “மக்கள் கருத்து” என்றழைக்கப்படுவதும், “சோசலிகக் கட்சிகள்” என்றழைக்கப்பட்டவர்களின் கருத்தும், போல்ஷ்விக்குகளுக்கு விரோதமாகவும், அவர்களை “ஜெர்மானிய ஒற்றர்கள்” என்று முத்திரைக் குத்துவதாகவும் இருந்த நேரம் அது.

போல்ஷ்விக் கட்சியை தலைமறைவிற்கு தள்ளுவதற்கு கெரன்ஸ்கி முயற்சித்த – ஏற்கெனவே அதில் ஓரளவிற்கு வெற்றி கண்டிருந்தார் – நேரம் அது; சோர்ந்து போன, நொறுங்கி நின்ற நமது படையை ஆஸ்திரிய – ஜெர்மானிய நாடுகளின் சக்திவாய்ந்த, கட்டுப்பாடான படைகள் எதிர்த்த நேரம் அது; மேற்கு – ஐரோப்பிய “சோசலிசவாதிகள்” “வெற்றியை நிறைவு செய்வதற்கான யுத்தம்” என்பதற்காகத் தங்களது அரசுடன் மகிழ்வாக கூட்டணி அமைத்திருந்த நேரம் அது…..

அத்தகைய நேரத்தில் ஒரு புரட்சி எழுச்சியைத் தொடங்குவதற்கு என்ன பொருள் இருக்கும்? அத்தகைய சூழ்நிலையில் தொடங்குவது என்பதற்கு எல்லாவற்றையும் பணயம் வைப்பது என்று பொருள் தருகிறது. அந்த அபாயத்தை எதிர்கொள்ள லெனின் அஞ்சவில்லை; அவரது தொலைநோக்குப் பார்வையில், புரட்சிகர எழுச்சி தவிர்க்க முடியாதது என்பதும், அது வெல்லும் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்ததால் அவர் அஞ்சவில்லை; ரஷ்யாவில் ஒரு புரட்சி ஏற்பட்டால், அது ஏகாதிபத்திய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் என்று அவர் அறிந்திருந்ததால் அவர் அஞ்சவில்லை; யுத்தத்தால் சோர்வடைந்திருந்த மேலைநாட்டு மக்களை அது தட்டியெழுப்பும் என்று அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை; அது ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றும் என்று அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை ; புரட்சிகர எழுச்சி சோவியத் குடியரசை உருவாக்கும் என்றும், சோவியத் குடியரசு உலகெங்கும் உள்ள புரட்சிகர இயக்கங்களுக்கு அரணாக அமையும் என்றும் அறிந்திருந்ததால், அவர் அஞ்சவில்லை.

ஈடு இணையற்ற துல்லியத்தோடு லெனினின் புரட்சிகர தொலை நோக்கு அமைந்திருந்தது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்.

இரண்டாவது உண்மை. மக்கள் அரசுத் தலைவர்களின் (கமிசார்களின்) பேராயம், சண்டையை நிறுத்தி, ஜெர்மனியோடு இராணுவ ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தையைத் தொடங்குமாறு, கலகக்கார தலைமைத் தளபதியான ஜெனரல் டுக்கோனினை வற்புறுத்த முயற்சித்த அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்கள் அவை. லெனின், கிரைலென்கோ (வருங்கால தலைமைத்தளபதி) மற்றும் நான் பெட்ரோகிராடில் இருந்த இராணுவ தலைமையகத்துக்குச் சென்று, டுக்கோனினோடு நேரடியாகப் பேசுவதற்கு முயற்சித்தோம். அது பயங்கரமான தருணம். மக்கள் அரசுத் தலைவர்களின் கவுன்சிலின் ஆணையை ஏற்க டுக்கோனினும், கள தலைமையகமும் மறுத்தனர்.

கள தலைமையகத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இராணுவ அதிகாரிகள் இருந்தனர். சோவியத் அதிகாரத்துக்கு விரோதமாக இருந்த, இராணுவ அமைப்புகளுக்கு அடிபணிந்திருந்த, 140 லட்சம் பேர்களைக் கொண்ட இராணுவம் என்ன சொல்லும் என்று யாருக்கும் தெரியாது. பெட்ரோகிராடிலும் கூட இராணுவ வீரர்களின் கலகம் தொடங்கிவிட்டிருந்தது.

மேலும் கெரன்ஸ்கி பெட்ரோகிராடு மீது அணிவகுத்தார். நேரடி பேச்சுவார்த்தையில் சிறிய இடைவெளி ஏற்பட்ட பிறகு, லெனினின் முகத்தில் அசாதாரண வெளிச்சம் திடீரென தோன்றியதை நினைவு கூர்கிறேன். அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தது தெளிவாகத் தெரிந்தது. அவர் கூறினார்: ”கம்பியில்லாத ஒயர்லெஸ் நிலையத்திற்கு நாம் செல்வோம்; ஜெனரல் டுக்கோனினை பதவி நீக்கம் செய்வதற்கான சிறப்பு ஆணையை வெளியிடுவோம்; தோழர் கிரைலென்கோவை தலைமைத் தளபதியாக அவருக்குப் பதிலாக நியமிப்போம்; அதிகாரிகளைப் புறக்கணித்து, தளபதிகளைச் சுற்றி வளைக்குமாறும் சண்டையை நிறுத்துமாறும், ஆஸ்திரிய – ஜெர்மானிய இராணுவத் தினருடன் தொடர்பை ஏற்படுத்தி, சமாதானத்தை தங்களது கரத்தில் எடுத்துக் கொள்ளுமாறும் இராணுவ வீரர்களுக்கு வேண்டுகோள் விடுப்போம்.”

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

இது “இருட்டில் ஒரு பாய்ச்சல்” ஆகும். இந்தப் பாய்ச்சலில் இருந்து லெனின் பின்வாங்கவில்லை. இராணுவம் அமைதியை விரும்பியது என்றும், தனது பாதையில் உள்ள ஒவ்வொரு தடைகளையும் தகர்த்து சமாதானத்தை அது வெல்லும் என்றும் அவர் அறிந்திருந்ததால், அந்தப் பாய்ச்சலை அவர் ஆர்வமாக எடுத்திருந்தார். சமாதானத்தை நிறுவுவதற்கான இந்த வழிமுறை ஆஸ்திரிய – ஜெர்மானிய படைவீரர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், விதி விலக்கின்றி ஒவ்வொரு முனையிலும் சமாதானத்திற்காக ஏங்கு பவர்களுக்கு கடிவாளம் வழங்கும் என்றும் அவர் அறிந்திருந்தார்.

உச்சபட்ச துல்லியத்தோடு இதிலும் கூட லெனினின் புரட்சிகர தீர்க்கதரிசனம் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது என்று நமக்குத் தெரியும்.

மேதைமையின் உள்ளுணர்வு, வரவுள்ள நிகழ்வுகளை விரைவாகக் கிரகிக்கும் திறன், அவற்றின் உள்அர்த்தத்தைக் கண்டுபிடிப்பது ஆகிய லெனினின் இந்தத் தன்மைகள்தான் சரியான மூலஉத்தியை வகுத்துத் தருவதற்கு வழிவகுத்தது; புரட்சிகர இயக்கத்தின் முக்கிய திருப்பங்களில் தெளிவான நடத்தை வழியை வகுத்துத் தருவதற்கு வழிவகுத்தது.

பிராவ்தா எண். 34, பிப்ரவரி 12, 1924

தீபாவளி கதை! | தந்தை பெரியார்

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.

படிக்க : தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ

என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும்பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார்.

இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரம் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

படிக்க : தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்

திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

– குடிஅரசு, 07.10.1944

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: எடப்பாடி முதல் மக்களை சுட்ட போலீசு வரை அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் | மருது வீடியோ

ரு மனிதன் சுத்தமான காற்று சுத்தமான நிலம் சுத்தமான நீர் வேண்டும் என்பதற்காக, இந்த வேதாந்தா கார்ப்பரேட்டுக்கு எதிராக போராடி, நாசகார ஸ்டெர்லைட் கம்பெனியை மூடிய தூத்துக்குடியின் தியாகிகளுக்கு நாம் என்னென்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்திய அளவில் இலட்சம் மக்கள் கூடுவோம் ஸ்டெர்லைட்டை மூடுவோம் என்ற முழக்கத்தின் கீழ் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு முன்வைத்த முழக்கத்தை ஏற்று இலட்சம் மக்கள் கூடி அன்றைக்கு மே 22 தேதி போலீசின் துப்பாக்கிச்சூட்டில் அந்த இடத்திலேயே இறந்தவர்கள் 13 பேர் அதற்கு பிறகு இரண்டு மூன்று பேர் இறந்துள்ளனர். இன்றைக்கு போலீசு கொன்றது உண்மை என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குற்றவாளிகள் பற்றி பல்வேறு விமர்சனங்களையும், தூத்துக்குடி மக்களின் தியாகத்தையும் தமிழ் குரல் யூடியூப் சேனலிக்கு அளித்த பேட்டியில் விவரிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !!

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சுரண்டலுக்கு முடிவுகட்டிய நவம்பர் புரட்சி !

1917-ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் நாள் உலக வரலாற்றில் என்றுமே நிலைத்து நிற்கும் நாள். முதன் முதலாக சுரண்டல் ஒழிக்கப்பட்டது, அந்த நாளில் தான். கஞ்சிக்கு வழியில்லாமல் வயிறு காய்நதுகிடந்த உழைப்பாளிகள் தன்மானத்துடன் நிமிர்ந்து நின்றது அந்த நாளில்தான். அன்றுதான் உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது.

அன்று காலை முதல் பெத்ரோகி ராடு வீதிகளில் தொழிலாளர்கள் ஆயுதங்களுடன் அணி வகுக்கத் தொடங்கினர். அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், காவல் நிலையங்கள், வானொலி நிலையம் முதலியவை கைப்பற்றப்பட்டன. அரசின் தலைமையகமான கிரெம்ளின் மாளிகை இறுதியாக வீழ்ந்தது. முதலாளிகள் அலறி அடித்துக் கொண்டு ஊரை விட்டு ஓடினர். இப்படியாக உலகின் முதல் பாட்டாளி வர்க்க அரசு அமைக்கப்பட்டது. ரசியா சோசலிச நாடு என அறிவிக்கப்பட்டது. லெனின் அதனுடைய அரசு தலைவரானார்.

ஆட்சியில் அமர்ந்த அடுத்த கணமே அனைத்து நாடுகளுடனும் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்வதாக லெனின் அறிவித்தார். போரினால் நீண்ட காலமாக அமைதி இழந்திருந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். ரசியாவின் அனைத்து நிலங்களும், வளங்களும் தேசிய உடைமை ஆக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருந்த பண்ணையார்களின் நிலங்கள் ஏழை உழவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டன. உழவர்களின் வறுமை இருந்த இடம் தெரியாமல் மறைந்தது.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

உழைப்பாளி மக்கள் அரசு அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டனர். சோவியத்துகள் என்ற உழைக்கும் மக்கள் மன்றங்கள் அரசு நிர்வாகத்தை நடத்தின. ஒரு ஊரின் உழைக்கும் மக்கள் அனைவரும் அந்த ஊர் சோவியத்தின் உறுப்பினர்கள். அவர்கள் மாதம் ஒரு முறை கூடி ஊருக்குத் தேவையான சட்டங்களையும், திட்டங்களையும் தீட்டுவார்கள். அதை அமல்படுத்த ஒரு நிர்வாகக் குழுவும் தேர்ந்தெடுக்கப்படும். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கடுமையாக வேலை செய்து அந்த திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

சரியாக ஒரு மாதம் கழித்து மீண்டும் சோவியத்தின் கூட்டம் நடைபெறும். அதில் நிர்வாகக் குழு உறுப்பினர்களின் வேலைகள் பரிசீலிக்கப்படும். திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றாலும், ஊழல் புகார் எழுந்தாலும் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்ல நீதிமன்றங்களாக செயல்படும் அதிகாரமும் சோவியத்துகளுக்கு இருந்தது.

மக்களே சட்டங்களை இயற்றி, மக்களே அவற்றை அமல்படுத்தி, மக்களே நீதி வழங்கும் ஆட்சி முறைதான் சோவியத் ஆட்சிமுறை. லெனினால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சிமுறைதான் உண்மையான, ஜனநாயகம். இதில் மக்களே சர்வ அதிகாரம் படைத்தவர் கள்.

தொழிற்சாலைகளின் நிர்வாகம் தொழிலாளர்களிடம் வழங்கப்பட்டது. இதுவரை தனிப்பட்ட முதலாளிகளின் இலாபத்திற்காக பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. புரட்சிக்குப் பின்னர் மக்களுக்கு எவ்வளவு பொருட்கள் தேவையோ அவ்வளவு பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. ஒவ்வொருவருக்கும் திறமைக்கேற்ற வேலை வழங்கப்பட்டது. வேலைக்கேற்ற ஊதியம் வழங்கப்பட்டது. வேலையில்லாத் திண்டாட்டம் ஒரு நொடியில் மறைந்தது.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!

நாட்டின் எதிர்காலம் குழந்தைகள் கையில். இதை மனதில் கொண்டு 20 வயது வரை கட்டாய இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. ஒரே நாளில் புதிதாக ஆயிரக்கணக்கான பள்ளிகளும், கல்லூரிகளும் உருவாக்கப்பட்டன. மனப்பாட கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அறிவு மற்றும் திறமைகளின் வளர்ச்சிக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அது மட்டுமல்ல. உலகில் எந்த நாடும் செய்யாத மற்றொரு விசயத்தையும் சோவியத் ரசியா செய்தது. ஜார் மன்னன் பல அண்டை நாடுகளை அடிமையாக்கி வைத்திருந்தான். புரட்சி அந்த அடிமைச் சங்கிலிகளை உடைத்தெறிந்தது. லெனின் அந்த நாடுகளுக்கு முழு விடுதலை அளிப்பதாக அறிவித்தார். இச்செயல் உலக மக்களால் போற்றப்பட்டது. ஆயினும் அந்த நாடுகளிலுள்ள மக்கள் பிரிந்துபோக விரும்பவில்லை.

லெனின் தலைமையில் தங்கள் நாட்டிலும் சோசலிசம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பினர். அதனால் இந்த நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து சோவியத் யூனியன் என்ற கூட்டமைப்பை லெனின் ஏற்படுத்தினார். தொழிற்சாலை உற்பத்தியும், விவசாய உற்பத்தியும் பெருகியது. வளமான எதிர்காலத்தை நோக்கி சோவியத் யூனியன் வேகமாக நடைபோட்டது.

(இவர்தான் லெனின் நூலிலிருந்து…)

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக! மக்கள் அதிகாரம்

22.10.2024

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய
இந்திய கடற்படையினரை கைது செய்து தண்டனை வழங்குக!

கண்டன அறிக்கை!

மிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த மீனவர்கள் மன்னார் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இந்தியக் கடற்படையால் துப்பாக்கிச் சூட்டுக்குள்ளாகியுள்ளனர். இந்திய கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த மீனவர் வீரகுமார் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடலில் படகினை நிறுத்தச் சொன்ன போது, நிறுத்தாமல் சென்றதால்தான் சுட்டதாக கடற்படை தெரிவிக்கிறது. ஒரு மீன்பிடி படகு நிற்காமல் சென்றால் அதனை சுட வேண்டும் என்பதுதான் இந்தியக் கடற்படையின் சட்டமா?

எவ்வித அடையாளமும் இல்லாததால் இலங்கை கடற்படையாக இருக்குமோ என்ற அச்சத்திலேயே  நிற்காமல் சென்றதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் மீன்பிடித்து வாழ்க்கையை நடத்தும் மீனவர்கள் மீது சராமரியாக குண்டுமழை பொழிந்து உள்ள இந்திய கடற்படை வீரர்கள்,  மீனவர்கள் தங்களுடைய ஆதார் கார்டை காட்டிய பிறகும் அவர்களைக் கட்டி வைத்து சுமார் 2 மணி நேரம்  கடும் சித்திரவதை செய்துள்ளனர்.

தமிழ்நாட்டு மீனவர்களை துப்பாக்கியால் சுடுவதிலும் சித்திரவதை செய்வதிலும் இலங்கை ராணுவத்துக்கு சளைத்ததல்ல இந்திய கடற்படை என்பதை நிரூபித்திருக்கிறது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் கப்பல்கள் மீது இந்திய கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்த முடியுமா? அல்லது இந்தியாவின் வேறு எந்த பகுதியிலாவது, வேறு எந்த மீனவர்கள் மீதாவது இந்திய கடற்படை துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறதா?

சில ஆண்டுகளுக்கு முன்பு கேரள மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை போல தமிழ்நாட்டு மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் சித்திரவதை செய்த இந்திய கடற்படையினர் உடனே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321.

நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !

சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் ! – மீள்பதிவு

ஜான் பெலாமி ஃபாஸ்டர், அமெரிக்காவிலிருந்து வெளிவரும் மன்த்லி ரிவ்யூ இதழின் ஆசிரியர். ஓரேகான் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறை பேராசிரியர். மார்க்சிய சூழலியல் தொடர்பான இவரது பங்களிப்புகள் குறிப்பிடத்தக்கவை. சூழலியலின் பால் மார்க்சியமும், குறிப்பாக மார்க்சின் எழுத்துகளும் கொண்டுள்ள அக்கறைகளை விளக்கப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

வளர்சிதை மாற்றப் பிளவு குறித்த மார்க்சின் கோட்பாடு (Marx’s Theory of Metabolic Rift)  என்ற இவரது புகழ் பெற்ற கட்டுரை, அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் சோசியாலஜியில் வெளியிடப்பட்டது. முதலாளித்துவ கட்டமைப்பின் கீழ் மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான உறவில் நிகழும் நாசகரமான மாற்றங்களைச் சுட்டுவதற்கு மார்க்ஸ் உருவாக்கிய வளர்சிதை மாற்றப் பிளவு என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரையின் வாயிலாக அறிமுகப்படுத்தினார் ஃபாஸ்டர்.

ஃபாஸ்டரின் கருத்துப்படி உலகம் இன்று எதிர்கொண்டிருக்கும் சூழலியல் நெருக்கடி என்பது முதலாளித்துவத்தின் விளைவாகத் தோன்றியிருக்கும் ஒரு கட்டமைவு நெருக்கடியாகும். முதலாளித்துவமும் சூழலியல் பேண்தகைமையும் (Environmental Sustainability) ஒன்றுக்கொன்று ஒவ்வாதவை என்கிறார் ஃபாஸ்டர். மனிதகுலத்துக்கு முன்னால் இரண்டு வாய்ப்புகள்தான் உள்ளன. சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் (Socialism or Cannibalism) என்றார் ஜெர்மன் கம்யூனிஸ்டு புரட்சியாளர் ரோசா லக்சம்பர்க். ரோசாவின் கூற்றைச் சற்றே மாற்றி, சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு (Socialism or Exterminism)  எனக் கூறுகிறார் ஃபாஸ்டர்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள் | சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம்!!

பத்திரிகையாளர்கள் ஜிப்சன் ஜான், பி.எம்.ஜித்தீஷ் ஆகியோர் ஜான் பெலாமி ஃபாஸ்டருடன் நிகழ்த்திய நேர்காணலை ஃபிரண்ட்லைன் ஆங்கில இதழ் (“Socialism a necessity for human survival”,  Feb 02, 2018) வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கப்பட்ட மொழியாக்கத்தைத் தருகிறோம்.

* * *

இயற்கை குறித்து  மார்க்ஸ், எங்கெல்ஸின் கருத்து என்ன?

பொருள்முதல்வாதிகள் என்ற முறையில் மார்க்சும் எங்கெல்சும் வரலாறு குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும், இயற்கை குறித்த பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தையும் இயல்பாகவே பிரிக்கவொண்ணாதவையாகக் கருதினார்கள்.

“ஆற்றலைச் சேமிக்கின்ற அதே நேரத்தில், மனிதத் திறனின் சாத்தியங்களை நிறைவு செய்வது என்ற வகையில், மனித இனத்துக்கும் இயற்கைக்கும் இடையிலான வளர்சிதை மாற்றத்தினை அறிவுபூர்வமாக நெறிப்படுத்துவதே சோசலிசம்” என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ்.

“பூமி யாருக்கும் சொந்தமானது அல்ல. இந்தப் புவிப்பரப்பிலுள்ள மக்கட்சமூகத்தினர் அனைவரும் சேர்ந்தாலும் கூட, அவர்கள் இந்தப் பூமியைத் தங்கள் உடைமையாகக் கருதவியலாது. ஒரு குடும்பத்தலைவன் குடும்பத்தைப் பேணிப் பாதுகாத்து, அடுத்த வாரிசுக்கு விட்டுச்செல்வதைப் போல, இந்தப் பூமியைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்து, வருங்காலச் சந்ததிக்கு விட்டுச்செல்லும் காவலர்களே மக்கட்சமூகத்தினர்” என்கிறார் மார்க்ஸ். முதலாளித்துவத்துக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவை, அறிவியல்பூர்வமாகவும், ஒரு வலிமையான இயங்கியல் சட்டகத்தில் வைத்தும் புரிந்து கொள்ளும் விதத்திலும் வேறு யாருடைய ஆய்வும் சொன்னதில்லை என்று நான் கூறுவேன்.

சூழலியல் பேரழிவைத் தோற்றுவிப்பது முதலாளித்துவமே!

முதலாளித்துவம் என்ற தற்போதைய சமூகப் பொருளாதார அமைப்பு உலகின் சூழலியல் அமைப்புகள் அனைத்தையும் அச்சுறுத்துவதோடு நிற்கவில்லை. இந்தப் பூமியே மனித குலத்தின் இருப்பிடமாக தொடர்ந்து நீடித்திருக்குமா என்ற அச்சுறுத்தலை விடுக்கிறது. இது கேள்விக்கிடமற்ற உண்மை. இன்றைய அறிவியலின் எல்லாத்துறைகளும் இந்த உண்மையை அங்கீகரிக்கின்றன. 2017 நவம்பரில் உலகின் 184 நாடுகளைச் சேர்ந்த 15,000 அறிவியலாளர்கள் இது குறித்து மனித குலத்தை இன்னொருமுறை எச்சரித்தார்கள். எனவே, நாம் கேள்வியை இப்படி எழுப்பவேண்டியுள்ளது.

புவியின் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவியலாததாக்குகின்ற இந்தப் போக்கிற்கான கூறுகள், முதலாளித்துவத்தின் இயக்கத்தைத் தீர்மானிக்கின்ற விதிகளிலேயே இருக்கின்றனவா? ஆம் என்பதுதான் இதற்கான விடை. முதலாளித்துவத்தின் விதி ஒன்றுதான். அதை மார்க்சின் சொற்களில் கூறுவதாயின், “மூலதனத்தைக் குவி, குவி, மேலும் குவி என்பதுதான் மோசஸின் இறைக்கட்டளை.”

அதிகரித்த அளவில் மூலதனத்தைக் குவிப்பதைத் தவிர, இந்த முதலாளித்துவ அமைப்பிற்கு வேறு எதைப் பற்றியும் அக்கறை இல்லை.  அத்தகைய மூலதனக் குவிப்பு சாத்தியமாக வேண்டுமென்றால், பொருளாதாரம் முடிவே இல்லாமல் வளர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு வளரவேண்டுமானால், உலகிலுள்ள அனைத்துமே வாங்கவும் விற்கவுமான பண்டமாக்கப்படவேண்டும். உலகமே பணத்தால் ஆனதாக மாற்றப்படவேண்டும்.

இந்தப் பூமியின் உயிரியல், புவியியல், வேதியியல் இயக்கப்போக்குகளில் தோன்றும் முறிவுகளும் பிளவுகளுமே (Ruptures or Rifts in the Bio-Geo-Chemical Processes of the Planet)  இதன் விளைவு. இப்பிரச்சினையைத்தான் வளர்சிதை மாற்றப் பிளவு என்று கணித்தார் மார்க்ஸ் – இன்றைய சூழல் அமைப்பியலாளர்கள் கணிப்பதைப் போலவே.

தொழில்நுட்ப முன்னேற்றங்கள் சூழலியல் நெருக்கடிக்கு ஒரு தீர்வை வழங்கக் கூடுமா?

தொழில்நுட்பம் குறித்துப் பல தவறான அபிப்ராயங்கள் நிலவுகின்றன. நமது காலத்தின் மிக முக்கியமான தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்குக் காரணம் – தனியார் மூலதனக் குவிப்புக்கான கட்டமைப்பு என்ற பொருளில் – முதலாளித்துவமல்ல.

புதிய கண்டுபிடிப்புகள் இலக்கை மிகத் துல்லியமாகத் தாக்கும் சாத்தியத்தை வழங்குவதால், அணு ஆயுதங்களை இதற்குப் பொருத்தமாக நவீனப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கிறது. துல்லியமாகத் தாக்க முடியும் என்பதால், இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றத்தின் விளைவாக அணு ஆயுதப் போர் கூட சாத்தியமே என்ற ஆபத்தான, அபத்தமான கருத்துகளும் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், இந்த புவிக்கோளத்தில் தோன்றியிருக்கும் சூழலியல் முறிவை எதிர்கொள்வது எப்படி என்ற பிரச்சினையில் இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்களைப் பயன்படுத்துவது குறித்து யாரும் சிந்திப்பதில்லை.

சூழலியல் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான எல்லா தொழில்நுட்பங்களும் நம்மிடம் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், மூலதனத்தை மென்மேலும் குவித்துக் கொள்ளும் பொருட்டு, இயற்கை இந்தப் பூமிக்கு விதித்திருக்கும் வரம்புகளைத் தாண்டிப் பொருளாதாரத்தை வளரச்செய்ய வேண்டுமென்றும், இந்த நோக்கத்தைப் பாதுகாப்பான முறையில் நிறைவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் முதலாளித்துவ அமைப்பு விரும்புகிறது. இந்த விருப்பத்தைத் தொழில்நுட்பத்தால் தீர்த்துவைக்க முடியாது.

இயற்கை விதிக்கின்ற எல்லா வரம்புகளையும் மீறப்பட வேண்டிய தடைகளாக மட்டுமே கருதுகின்ற முதலாளித்துவத்தின் மிகக் குறுகலான பார்வையை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். இப்பிரச்சினையைக் கடக்கவியலாத இயற்கையின் வரம்புகள் (Insuperable natural limits) என்று அழைத்தார் மார்க்ஸ். நாம் இந்தச் சமூகத்தை அர்த்தமுள்ள சமத்துவத்தையும் சூழலியல் பேண்தகைமையையும் நோக்கிப் பெருமளவில் நகர்த்திச் செல்ல வேண்டுமானால், – சுதந்திரமும் மனித குலத்தின் எதிர்காலமும் இதைத்தான் கோருகின்றன – சமூக உறவுகளை நாம் மாற்றியமைப்பது அவசியம். இந்த முதலாளித்துவ கட்டமைப்பு அதனை ஏற்றுக்கொள்ளாது.

சோசலிசம் இயற்கையைச் சீரழிக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

“உற்பத்திச் சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சியை சோசலிசம் கோருகிறது என்று மார்க்சியம் கூறுவதால், அது இயற்கையை மிகப்பெரும் அளவில் சுரண்டுவதற்கும் அழிப்பதற்கும் வழிவகுக்காதா?” என்று கேட்கப்படுகிறது. உற்பத்தி சக்திகளின் உயர்ந்த கட்ட வளர்ச்சி என்பதன் பொருள் என்ன? உற்பத்தி சக்திகளில் தலையாய சக்தி மனிதர்கள்தான் என்பதையும் அவற்றின் வளர்ச்சி என்பது வேலைப்பிரிவினயின் வளர்ச்சியே என்பதையும் மார்க்ஸ் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: தோழர் லெனினை நினைவு கூறுவோம்!

“இறுதியாக சோசலிசத்தின் கீழ் உற்பத்தியாளர்களின் ஒருங்கிணைவானது, மனித சாத்தியத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும், ஆற்றலைச் சேமிக்கும் வகையிலும் இயற்கையுடனான தமது வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் மார்க்ஸ். இதனை உற்பத்தி உற்பத்திக்காகவே என்றோ, தொழில்மயம் தொழில்மயத்துக்காகவே என்றோ யாரும் விளக்கப்படுத்த முடியாது. வளர்ச்சியின் அலகு இந்தப் பூமிதான் என்பதால், பேண் தகைமையைத்தான் (Sustainability) மார்க்ஸ் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

பருவநிலை மாற்றம் அறிவியல் வழியில் நிரூபிக்கப்பட்ட பின்னரும் அதனைச் சிலர் மறுப்பது ஏன்?

பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அறிவியல் எந்த அளவுக்கு அசைக்க முடியாத உறுதியுடன் இருக்கிறதோ, அதைக் காட்டிலும் சற்று அதிகமாகவே பருவநிலை மாற்றம் குறித்த விவகாரத்தில் இன்றைய அறிவியல் உறுதியாக இருக்கிறது.

“இது அனைத்தையும் மாற்றுகிறது” (This Changes Everything -Naomi Klein)  என்ற தனது நூலில் நவோமி கிளைன் சரியாகத்தான் சொல்கிறார். அவரது கருத்துப்படி பருவநிலை மாற்றப் பிரச்சினையை வலதுசாரிகள் மறுப்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது.

புவி சூடேறுதலைக் கட்டுப்படுத்துகின்ற முயற்சியானாலும் சரி, அல்லது புதைபடிவ எரிபொருள் தொழிலின் மீது (fossil fuel industry) கட்டுப்பாடுகளை விதிக்கின்ற முயற்சியானாலும் சரி, அவற்றை முதலாளித்துவத்துக்கு எதிரான அச்சுறுத்தலாகவும் புதைபடிவ எரிபொருள் தொழிலை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறைகளுக்கு எதிரான அச்சுறுத்தலாகவுமே வலதுசாரிகள் காண்கிறார்கள். அந்த வகையில் வலதுசாரிகள் அஞ்சுவது சரிதான் (The Right is right)  என்கிறார் நவோமி கிளைன். பருவநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான இயக்கமென்பது தவிர்க்கவியலாமல் புரட்சிகரமான மாற்றத்துக்கானதாகவும் முதலாளித்துவத்துக்கு எதிரானதாகவும் இருக்கிறது என்கிறார் நவோமி கிளைன்.

நவோமி கிளைன் வலதுசாரிகளை விமரிசித்த போதிலும், அவரது உண்மையான இலக்கு வலதுசாரிகள் என்பதை விடத் தாராளவாத மையவாதிகளே (liberal centrists) ஆவர். இந்த மையவாதிகள் வேறொரு முறையில் பருவநிலை மாற்றப் பிரச்சினையை மறுக்கிறார்கள். சமூக உறவுகளில் மாற்றத்தைக் கொண்டு வராமலேயே, சந்தை மற்றும் தொழில்நுட்பத்தின் துணையுடன் மந்திர வித்தையைப் போல புவி சூடேறுதலைத் தடுத்து விட முடியும் என்று எதார்த்தத்துக்குப் புறம்பான வகையில் வாதிடுகிறார்கள்.

சூழலியல் பேரழிவை நம்மால் தடுக்க முடியுமா?

நம்மை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலியல் பேரழிவிலிருந்து தப்புவதற்கு தொழில்நுட்பத் தடைகளோ, வேறு பௌதிகத் தடைகளோ ஏதும் இல்லை. ஆனால், வழமையான முறையில், அதாவது, மூலதனக் குவிப்பு வழக்கம் போல நிகழ்ந்து கொண்டிருக்க, அதன் போக்கிலேயே இப்பிரச்சினைகளைத் தீர்க்கவியலாது.

ஒரு பேரழிவைத் தடுக்கின்ற அதே நேரத்தில், பெரும்பான்மையான மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்தவும் முடியும். சாத்தியமான தீர்வுகள் பல உள்ளன. ஆனால், அநேகமாக அவை அனைத்துமே மூலதனக் குவிப்புக்கு எதிரானவையாகவே இருக்கின்றன.

அமெரிக்காவில் யாருக்கும் தேவைப்படாத, யாரும் விரும்பாத பொருட்களை, பெரும்பாலும் குப்பைகள் என்று சொல்லத்தக்கவற்றை மக்களின் தலையில் கட்டுவதற்கான விளம்பரங்களுக்காக மட்டும் ஒரு டிரில்லியன் டாலர்கள் ஆண்டுதோறும் செலவிடப்படுகின்றன.

உலகப் பொருளாதாரத்தில் சூழலியில்ரீதியில் அழிவுத்தன்மை வாய்ந்த துறை இராணுவம். அழிவினை இலக்காகக் கொண்ட இந்தத் துறைக்கு ஆண்டுதோறும் ஒரு டிரில்லியன் டாலர்களைச் செலவிடுகிறது, அமெரிக்கா. மேலும் பல எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். இத்தகைய செலவுகள் அனைத்துமே தேவையற்றவை. எனினும், இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதிகளுக்கு எதிராகச் செயல்படுவது அவசியம்.

ஒரு புரட்சிகரமான எதிர்வினை என்பதன் பொருள் நாம் விதிகளை மாற்ற வேண்டும் என்பதுதான். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, எரிந்து கொண்டிருக்கும் இந்த வீட்டிலிருந்து வெளியேறுவதற்கு நாம் வழி தேடவேண்டும். அதற்கான நமது போராட்டத்தில்தான் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும் நாம் பெற முடியும்.

முதலாளித்துவ நெருக்கடியும் பாசிசமும்

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நாம் காணும் பாசிசத்தின் எழுச்சி என்பது மையப் பொருளாதாரங்களின் மூலதனம் எதிர்கொள்ளும் கட்டமைவு நெருக்கடியுடன் தொடர்புள்ளவை.

டிரம்பும் வெள்ளை மாளிகையும்  என்ற எனது நூலில் இத்தகைய பிரச்சினைகள் பலவற்றைக் கையாண்டிருக்கிறேன். பாசிசம் என்பது நெருக்கடியில் சிக்கிய முதலாளித்துவக் கட்டமைப்பிலிருந்து பிறப்பது. அது குறிப்பான வர்க்க அடித்தளத்தைக் கொண்ட தெளிவானதொரு அரசியல் கட்டமைப்பு.  தாராளவாத ஜனநாயக அரசின் நெருக்கடியையும் பாசிசத் தன்மை கொண்ட அரசமைப்பால் அது மாற்றீடு செய்யப்படுவதையும் இது காட்டுகிறது.

1930-களிலும் 40-களிலும் பாசிசம் குறித்த விமரிசனமென்பது மார்க்சியத்திடமிருந்துதான் வந்தது என்றபோதிலும் அது பரவலாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. ஒரு அரசமைப்புச் சட்டத்தின்படியான ஆட்சி நடப்பதைப் போன்ற தோற்றத்தை பாசிச அரசுகள் பராமரித்த போதிலும், தாராளவாத ஜனநாயக அரசுக்குரிய வரம்புகளை மறுத்து, முதலாளித்துவ ஆளும் வர்க்கம் நடத்துகின்ற ஆட்சி என்றவாறே பாசிசம் புரிந்து கொள்ளப்பட்டது.

பின்னர் முதலாளித்துவத்துக்கும் பாசிசத்துக்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று காட்டும் விதத்தில் பாசிசத்துக்கு வியாக்கியானம் அளிப்பதற்குத் தாராளவாதக் கோட்பாட்டுப் பிரிவினர் அரும்பாடுபட்டார்கள். பாசிசம் என்பதை ஒரு வகை உளவியல் பிறழ்ச்சி போலக் காட்டுவதற்கும், நிறவெறி தோன்றிய வரலாற்றுப் பின்புலத்திலிருந்து அதனைப் பிரித்தெடுத்துவிட்டு, நிறவெறிதான் பாசிசம் என்பதுபோலக் காட்டுவதற்கும் இவர்கள் பெரிதும் முயன்றார்கள். பாசிசம் என்பதை அரசியல்ரீதியான வர்க்கக் கட்டமைவாக நாம் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. அப்போதுதான் அதனைத் தீர்மானகரமாக முறியடிக்க முடியும். பெட்ரோல்ட் பிரெக்ட் கூறியதைப் போல, முதலாளித்துவத்தை எதிர்க்கத் தயாராக இல்லாதவர்கள் பாசிசத்தை எதிர்க்க முடியாது.

ஒரு புதிய புரட்சிகர சூழலை நாம் வந்தடைந்து விட்டோமா?

முதலாளித்துவக் கட்டமைப்பை ஒரு நாளில் கடந்து சென்றுவிட முடியாதென்பதை நாம் அறிவோம். நிலப்பிரபுத்துவ வர்க்கத்தை வெற்றி கொள்வதற்கு முதலாளித்துவ வர்க்கத்துக்குப் பல நூற்றாண்டுகள் ஆயின. நாம் நீண்டதொரு புரட்சி என்ற கோணத்தில் சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், தன் ஒவ்வொரு அடி வைப்பிலும் அது புரட்சிகரமானதாகவும் இருக்க வேண்டியுள்ளது. இந்தப் பூமியும் நாமும் பிழைத்திருக்க வேண்டுமென்றால், மூலதனத்தின் இயக்க விதியை எதிர்த்துத்தான் நாம் நகர வேண்டும். மூலதனக் குவிப்பின் தர்க்க நியாயத்தை முறியடிக்க இடையறாது போராடவேண்டும். இது நம்முடைய காலம் நம் அனைவருக்கும் அளித்திருக்கும் பாடமாகும்.

படிக்க : நவம்பர் 7: 106-வது ரஷ்ய புரட்சி நாள்: புரட்சி வீரர்களை நினைவு கூறுவோம்!

சோசலிசம் அல்லது காட்டுமிராண்டித்தனம் என்று நாம் பேசும் நிலை ஒருகாலத்தில் இருந்தது. இன்று நமது தெரிவு சோசலிசம் அல்லது இறுதிப் பேரழிவு என்பதாக மாறிவிட்டது. சோசலிசத்தை நோக்கிய முன் நகர்வு என்பது தவிர்க்கவியலாத் தேவை ஆகிவிட்டது. மனித சுதந்திரம் என்ற இலட்சியத்துக்காக மட்டுமல்ல, மனித இனம் பிழைத்திருப்பதற்கான வழியே  சோசலிசம்தான் என்றாகிவிட்டது.

150 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று மார்க்சுடைய மூலதனத்தின் பொருத்தப்பாடு குறித்து..

மார்க்சின் விமரிசனபூர்வமான இயங்கியல் ஆய்வுமுறையும், முதலாளித்துவ சமூகம் குறித்த அவரது வரலாற்று ஆய்வுகளும் அவரது பணியைத் தன்னிகரற்றதாகவும் தவிர்க்கவியலாததாகவும் ஆக்கியிருக்கிறது. கடந்த 150 ஆண்டு காலத்தில் சமூக விஞ்ஞானத்துறையில் நிகழ்த்தப்பட்டுள்ள ஆய்வுகள் அனைத்தைக் காட்டிலும் மார்க்சியம் நெடிதுயர்ந்து நிற்கிறது.

மாறி வரும் வரலாற்றுச் சூழலுக்கு ஏற்ப சோசலிச இயக்கம் முன்னேறிச் செல்லச் செல்ல, தான் வாழ்ந்த காலத்தின் தேவைகளுக்கு அப்பால் நெடுந்தொலைவுக்கு ஊடுறுவிப் பார்த்த மார்க்சின் சிந்தனைகளுக்குள் பொதிந்திருக்கும் புதிய, புதிய அறிவியல் கூறுகளை அது கண்டு கொள்ளும் என்று ரோசா லக்சம்பர்க் ஒரு முறை சொன்னார். அது உண்மையென நிரூபிக்கப்பட்டு வருகிறது.

நம்முடைய வரலாற்றுக் கட்டத்தின் தேவைகளுக்கேற்ப நமது போராட்டங்கள் புதிய புதிய வடிவங்களை எடுக்கலாம். ஆனால், அவருடைய ஆய்வுமுறை நீடித்து நிற்கிறது.

மொழியாக்கம்: சூரியன்
புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: திட்டமிட்ட அரச பயங்கரவாதப் படுகொலை | மருது வீடியோ

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே இருந்து துப்பாக்கிக் குண்டுகள் பாய்கின்றன. ஒரு எஸ்.பி நேரடியாக சென்று சுட்டுக்கொல்கிறார். டி.எஸ்.பி சுட்டுக்கொல்கிறார். இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொள்கிறார். ஒரு ஏட்டு சுட்டுக்கொல்கிறார். அப்போது இந்த வன்மம் எதற்காக இருந்தது என்பது அந்த அறிக்கையில் பதிவு செய்யப்படவில்லை.

போலீசு – அரசு – நிர்வாகம் மூன்று பேரும் ஒன்றிணைந்து, முன்கூட்டிய திட்டமிட்டு அரச பயங்கரவாத நடவடிக்கையை இவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இந்த அறிக்கையில் மாற்றுக்கருத்து இருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிச்சாமி தான். அவருக்கு இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள உச்சபட்ச தண்டனையை கொடுக்கவேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம்.

அருணா ஜெகதீசன் அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமியை முதல் குற்றவாளியாக சேர்க்காமல் ‘அவர் பொய் சொல்லிவிட்டார்’ என்பதை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறார்கள். ஒரு துப்பாக்கிச்சூடு என்பது டி.ஜி.பி-கோ முதலமைச்சருக்கோ தெரியாமல் நடப்பதற்கு வாய்பே இல்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் குற்றவாளிகளை பற்றி பல்வேறு விளக்கங்களை IBC TAMIL யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தருகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவர்களுக்காக கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை? | புமாஇமு பத்திரிகை செய்தி

0

21.10.2022

கூடுதல் பேருந்துகளை இயக்க மறுக்கும் அரசுக்கு என்ன தண்டனை?

புமாஇமு பத்திரிகை செய்தி!

மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் கூட்டமாக தொங்கிக்கொண்டு பயணித்தால் அவர்களின் பாதுகாப்பிற்கு நடத்துனர்கள் ஓட்டுநர்கள் தான் பொறுப்பு என போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம் என ஓட்டுநர்கள், நடத்துநர்கள் அறிவுறுத்த வேண்டும். அறிவுரைகளை மீறி மாணவர்கள் செயல்பட்டால், போலீசு நிலையத்தில் அல்லது அவரச போலீசு உதவி எண் 100-ஐ நாடலாம் எனவும் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியுடன் கடந்த செப்டம்பர் மாதத்தில் போலீசுத்துறையின் அறிவிப்பையும் சேர்த்து பார்க்க வேண்டும். அதாவது மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் அபாயகரமான முறையில் பயணித்தால் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். இது பல்வேறு தரப்பினராலும் கண்டனங்களுக்கு உள்ளானது.

மாணவர்களுக்கு பள்ளி – கல்லூரி செல்லும் நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற குரல் தொடர்ந்து சமூகத்திலிருந்து எழுந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு துளியும் செவி சாய்க்காத ஒரு அறிக்கையை தான் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து மாணவர் மரணங்களும், பெரிய – சிறிய காயங்களும் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு போகும் மாணவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்சினைகள். இதிலிருந்துதான் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது.

அரசுப் பள்ளிக் கல்லூரி மாணவர்களை தாண்டி, தனியார் பள்ளிக் கல்லூரி மாணவர்களும் நிர்வாகங்களின் அடாவடியான பேருந்துக் கட்டணங்களை சமாளிக்க முடியாமல் அரசுப் பேருந்துகளை நம்பியே இருக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்லூரிகளில் சுமார் ஒரு கோடி பேருக்கு மேல் பயிலும் நிலையில், தினசரி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களைக் கணக்கில் கொண்டு பேருந்துகள் இயக்கப்படவில்லை. போதுமான பேருந்துகளை இயக்காத இந்த அரசின் அலட்சியப்போக்கிற்கு மிக முக்கியமான காரணம் தனியார்மய கொள்ளையே.

கடன் அதிகமாக உள்ள அரசு நிறுவனங்களில் மின்சாரத்துறை போக்குவரத்துத் துறை மிக முக்கியமாக உள்ளது. ஒரு காலத்தில் இலாபத்தில் இயங்கி வந்த இந்த அரசுத்துறைகளை எல்லாம் தனியாருக்கு தாரை வார்த்துவிட்டு இன்று தனியார் நிறுவனங்கள் கேட்கும் தொகையை கொடுத்து மின்சாரத் துறையையே போண்டி ஆக்கிவிட்டார்கள். விளைவு மின்சாரத் துறையின் கடனே இலட்சம் கோடிக்குமேல் வரும்.

இதேபோல் போக்குவரத்து துறையில் பேருந்து வாங்குவதில் முறைகேடு, உதிரி பாகங்கள் வாங்குவதில் முறைகேடு என ஒட்டுமொத்த போக்குவரத்து துறையையும் சீரழித்து விட்டார்கள். முக்கியமான வழித்தடங்களை தனியார் நிறுவனங்கள் கொள்ளை இலாபம் சம்பாதிப்பதற்கு ஏற்றார்போல் வாரி வழங்கினார்கள்.

போக்குவரத்துத் துறையின்  சீரழிவு  மற்றும் தனியார்மயமாக்கல் போன்றவற்றை ஒழித்துக்கட்டாமல் மாணவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும், ஓட்டுனர்களையும், நடத்துனர்களையும் குற்றவாளி கூண்டில் ஏற்றிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

மேலும் இதுபோன்ற அறிவிப்புகள் தொடர்ச்சியான நடவடிக்கைகள் நடத்துனர்கள் மாணவர்களுக்கிடையிலான மோதலாக மாறிய சம்பவங்களும் எண்ணற்றவை.

இதை முடிவுக்கு கொண்டுவர மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஓட்டுநர்கள், நடத்துனர்கள் அனைவரும் களத்தில் இறங்க வேண்டும். தனியார்மயம் – தாராளமயம் – உலகமயத்தை ஒழித்துக் கட்டுவதை நோக்கி நாம் முன்னேற வேண்டும். அதுவே இந்த பிரச்சினைக்கு முடிவாகும்.


இவண்,
தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
தொடர்புக்கு : 94448 36642.