Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 165

திருநெல்வேலி: மருத்துவமனை பணியார்களுக்கு ஊதியம் வழங்காமல் வஞ்சிக்கும் நிர்வாகத்தை கண்டித்து போராட்டம்!

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் 88 பேர் டிசம்பர் 19, 2022 காலை 7 மணி அளவில் ஊதியம் முறையாக வழங்காததை கண்டித்தும், ஊதியம் முறையாக வழங்கக் கோரியும் மருத்துவமனைக்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலியில் ரூ.150 கோடியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி, 2019-ல் மதுரையில் நடைபெற்ற விழாவில் இருந்து திறந்து வைத்தார். பிரதமரின் சுவஸ்திய சுரக்ஷா யோஜனா திட்டம்-3 இன் கீழ் மத்திய அரசு சார்பில் ரூ.120 கோடி, மாநில அரசு சார்பில் ரூ.30 கோடி என மொத்தம் ரூ.150 கோடியில் இம்மருத்துவமனை தொடங்கப்பட்டது.

8 தளங்களுடன் 20 ஆயிரத்து 64 சதுர அடியில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில் பணிபுரியும் தொழிலாளர்கள் பாரத் மேன்பவர் எனும் நிறுவனத்தின் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்டனர். நான்கு வருடமாக முறையான சம்பளம் எதுவும் அவர்களுக்கு தரப்படுவதில்லை என்று பணியாளர்கள் கூறுகின்றனர். 2 அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறை சம்பளம் வழங்குவது, ஈ.எஸ்.ஐ, பி.எஃப் போன்றவை பிடித்தாலும் அது எந்த கணக்கிலும் காட்டப்படுவதில்லை என்றும் தெரிவித்தனர்.

படிக்க : சிதலமடைந்த மருத்துவக் கட்டமைப்பால் கால்பந்து வீராங்கனை பிரியா மரணம்!

கடந்த அக்டோபர், நவம்பர் இருமாதங்களும் சம்பளம் போடவில்லை. இந்த மாதமும் 20-ஆம் தேதி நெருங்குகிறது இன்னமும் சம்பளம் ஏறியபாடில்லை. ஒருநாளைக்கு சம்பளம் ரூ.250 தரப்படுகிறது. ஆனால் ஒருநாள் விடுப்பு எடுத்தாலோ ரூ.400 பிடித்தம் செய்கிறார்கள். இதற்குமுன் முறையான சம்பளம் கேட்டு சென்ற 4 தொழிலாளர்களை மிரட்டி அனுப்பி உள்ளது ஒப்பந்த நிறுவனம். அதன்பின் 7 பேர் வேலையை விட்டு நின்றுவிட்டனர். தொடர்ந்து சம்பளப் பிரச்சினை நீடிக்கவே பொறுத்துப் பார்த்த 3 ஷிப்ட்-ல் பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் ஒன்றாய் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர்.

செய்தியறிந்து சென்ற மக்கள் அதிகாரம் இணைச் செயலாளர் கின்ஷன் தனியார்மயத்தால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் நிலை பற்றியும், இம்மாதிரியான போராட்டங்களால் மட்டுமே நம்முடைய உரிமைகளை நாம் மீட்க முடியும் என்று போராடும் தூய்மைப்பணியாளர்களிடம் பேசினார்.

போராட்டத்தை கண்டு ஆடிப்போன மருத்துவமனை நிர்வாகம் முதலில் நான்கு பேரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. ஆனால், பணியாளர்கள் அனைவர் முன்னிலையிலும் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக நின்றனர். வேறுவழியின்றி நிர்வாகம் ரோட்டுக்கு வந்தது. பேச்சுவார்த்தையின் போது பணியாளர்களை வேலைக்கு எடுத்த பாரத் மேன்பவர் நிர்வாகத்தை சார்ந்த யாரும்வரவில்லை. விசாரித்தால் அந்த நிறுவனம் தற்போது ஒப்பந்தத்தில் கிடையாது என்கிற தகவல் வெளியாகியுள்ளது. இது பணியாளர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியானால் தாங்கள் யாருக்கு கீழ்தான் வேலை செய்கிறோம் என்று கேட்டனர் பணியாளர்கள். மருத்துவமனை நிர்வாகமோ மலுப்பலாகவே பதில் கூறியது. பின்னர் வரும் வெள்ளிக்கிழமை சம்பளம் அக்கவுண்ட்டில் ஏற்றப்படும் என்று உறுதி அளித்தது. வெள்ளிக்கிழமை சம்பளம் ஏறவில்லையானால் திங்கள்கிழமை மறுபடி போராட்டம் தொடரும் என்ற எச்சரிக்கையுடன் தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.

மக்கள் வரிப்பணத்தில் மருத்துவமனை கட்ட ரூ.150 கோடி ஒதுக்கிய மத்திய, மாநில அரசுகள் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களை ஏன் ஒப்பத்த முறையில் பணிக்கு அமர்த்துகிறது? இதன் காரணம் என்ன? இவர்களை நிரந்தரமாக பணியிலமர்த்தி மாதம் முறையான சம்பளம் தருவதில் அரசுக்கு என்ன பிரச்சினை வந்துவிடும்? என்ன பிரச்சினை என்றால் இங்குதான் அரசின் கொள்கை தலையிடுகிறது. அதுதான் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவான தனியார்மயக் கொள்கை!

பணியாளர்களில் ஆரம்பித்து செவிலியர்கள், மருத்துவக் காப்பீடு என்று ஒவ்வொரு பிரிவும் தனியார்மயப்படுத்தி இறுதியில் மொத்த மருத்துவத்துறையும் தனியாருக்கு தாரை வார்க்கப்படப்போகும் கொடுமை நம்மை எட்டுவதற்கு நாம் வெகு நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதன் ஆரம்ப புள்ளிதான் இது. நாளை முழுவதும் தனியாருக்கு என்றானபின் இன்று உழைத்த காசையே தர மறுக்கும் முதலாளிகள், நாளை நம்மை பார்த்து ஓசியில் உனக்கு நான் மருத்துவம் பார்க்க வேண்டுமா என கண்டிப்பாக கேட்பார்கள். அப்போது அரசு மருத்துவமனையை மட்டும் நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்கள் மருத்துவம் பார்க்க வழியின்றி தவிப்பார்கள். அந்த நாள் வராதிருக்க வேண்டுமானால் இந்த நாளில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம்.

படிக்க : மதுரை: அரசு ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

தனியார் வசம் ஒப்படைத்தால்தான் நிர்வாகம் நன்றாக நடக்கும் என்கிற சில தனியார்மய ஆதரவாளர்களின் எண்ணங்களுக்கு இப்போராட்டம் ஒரு சாட்டையடி. தன் நிறுவனத்தின் கீழ் வேலை செய்த தொழிலாளர்களுக்கு முறையான ஊதியம் தரக் கூட துப்பில்லாமல், அவர்களின் உழைப்பை சுரண்டிதான் இந்நிறுவனங்களும் அதன் முதலாளிகளும் வயிறு வளர்க்கின்றனர். அரசு நிர்வாகமும் தனியார்மயத்திற்கு ஆதரவான கொள்கையை தீவிரப்படுத்தி வருகிறது.

கொரோனா சமயத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு பூ போட்டு வணங்கி ஏமாற்று நாடகம் நடத்திய மோடியின் பா.ஜ.க கட்சியினர் ஒருவர் கூட இந்த போராட்டத்தை எட்டிக்கூட பார்க்கவில்லை.

மருத்துவமனை பணியாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக மருத்துவர்கள், பொதுமக்கள் அனைவரும் இணைந்திருக்க வேண்டிய நேரமிது. புரட்சிகர அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள் இம்மாதிரியான பொருளாதார போராட்டத்தை அரசியல் போராட்டமாக மாற்றுவதன் மூலமே ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்குமான தீர்வை நோக்கி நகர முடியும் என்பதை உணர்ந்து போராட்டக்களத்தில் இறங்க வேண்டிய தருணமிது!

தகவல்:
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605.

பாஜக மோடி ஆட்சியின் எட்டாண்டுகால கார்ப்பரேட் கரசேவை: வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி!

டந்த 5 வருடத்தில் வங்கியில் வழங்கப்பட்ட கடன்தொகையில் வசூலிக்க முடியாத 10.09 லட்சம் கோடி வாராக்கடனை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் தள்ளுபடி செய்யப்பட்டதாக சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். மேலும், இந்த வாராக்கடன்களுக்கு காரணமான 3,312 வங்கி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேசி மழுப்பியிருக்கிறார். கார்ப்பரேட் சேவகர் மோடியின் எட்டாண்டுக்கால ஆட்சியில் மட்டும் 12 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

2008-2014 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் வாராக்கடன் தள்ளுபடி 32 ஆயிரம் கோடி, 2014-2022 வரையிலான பாஜக ஆட்சியியில் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடியாகும். சமீபத்தில் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே கூறுகையில், “பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து வாராக்கடன் 365 சதவிதம் அதிகரித்துள்ளது எனவும், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியை ஒப்பிடுகையில் 5 லட்சம் கோடியிலிருந்து 18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது எனவும்” குற்றம்சாட்டினார்.

மோடி ஆட்சியில் 5 லட்சம் கோடிக்கும்மேல் வங்கி மோசடி நடந்துள்ளது. 2015-2019 வரை மட்டும் வங்கிக்கடன் மோசடி செய்த 38 பெருமுதலாளிகள் நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அதில் மெகுல் சோக்சி, நீரவ் மோடி போன்ற மோடிக்கு நெருக்கமான குஜராத்திகளும் அடங்குவர்.

படிக்க : ரூ. 10,72,000 கோடி : மோடியின் ஆட்சியில் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் !

பொதுத்துறை வங்கிகளில் 2019-2020-ஆம் ஆண்டில் 4,410 கடன் மோசடிகளும், 2020-2021-ஆம் ஆண்டில் 2,903 மோசடிகளும் நடைபெற்றுள்ளன. தனியார் வங்கிகளில் 2019-2020-ஆம் ஆண்டில் 3,065, 2020-2021-ஆம் ஆண்டில் 3,710 மோசடிகளும் நடந்துள்ளன. இந்த லட்சனத்தில்தான் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டு வருகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகள் கொழுக்க வங்கிகள் கடன் கொடுப்பதும் பின்னர் வசூலிக்க முடியவில்லை எனக்கூறி வாராக்கடனாக அறிவித்து தள்ளுபடி செய்வதும் பல வருடங்களாக நடக்கும் கேலிக்கூத்துதான். அது, மோடி ஆட்சியின் தீவிர கார்ப்பரேட் சேவையின் விளைவுதான் வாராக்கடன் தள்ளுபடி 12 லட்சம் கோடி. உலக அளவில் வாராக்கடன் விகிதத்தில் இந்தியா இரண்டாவது இடம்.

மறுகாலனியாக்க கொள்கை அமல்படுத்திய கடந்த 30 ஆண்டுகளில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துள்ளன. உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்ட போர்ப்ஸ் அறிக்கையின்படி, 1990-ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் யாருமில்லை, 2000-ஆம் ஆண்டில் எண்ணிக்கை 9 பேர், 2015-ஆம் ஆண்டில் 90 பேர், 2022-ஆம் ஆண்டில் 166 பேர் என இந்திய பணக்காரர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

குறிப்பாக, கோவிட் நெருக்கடி காலங்களில் உயர்மட்டத்தினர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது (2020 மார்ச் முதல் 2021 நவம்பர் வரையுள்ள 20 மாதங்களில் இந்தியாவில் கோடிஸ்வரர்களின் சொத்து 23.14 லட்சம் கோடி) என ஆக்ஸ்பார்ம் அறிக்கை கூறுகிறது.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையின்படி, “இந்தியாவில் அமைப்பு சார்ந்த துறையில் தொழிலாளர்களில் ஊதியத்தில் பெரும் ஏற்றத்தாழ்வு உள்ளது” என கூறுகிறது. சில நிறுவனங்களில் சி.இ.ஓ.க்கள் கோடிகணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில், மாதம் ரூ.15,000 குறைவான ஊதியம் பெறும் ஊழியர்களும் உள்ளனர். சில தனியார் நிறுவனங்களில் ஊதிய இடைவெளி 1000 சதவிதத்திற்கும் அதிகமாக உள்ளது. ஊதிய இடைவெளியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

இவை, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கையை தீவிரமாக அமல்படுத்தி வருவதன் விளைவே.

***

இன்று உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் அதானியும், மோடி அரசும் கூட்டணி அமைத்து நாட்டை கொள்ளையிட்டு வருகின்றனர். கிராமத்தில் இருக்கும் சாமானியர் ஒருவர் கூட “அதானிக்கே எல்லாம் டெண்டரும் கொடுக்கிறாங்க” என்று கூறுவது மோடி அரசு அம்பலப்பட்டு நிற்பதற்கு மிக சிறந்த உதாரணம்.

2001-ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த காலத்திலிருந்து மோடிக்கும் அதானிக்குமான உறவு தொடங்கிவிட்டது. 2009-ஆம் ஆண்டில் தனித்தனியான 11 நிறுவனத்தை மட்டுமே வைத்திருந்த அதானி, கடந்த 10 வருடத்தில் 40-க்கும் மேற்பட்ட நிறுவனத்தை வாங்கியுள்ளார். அதிலும், கடந்த 5 வருடத்தில் மட்டும் 35 நிறுவனங்களை வாங்கப்பட்டுள்ளார்.

வங்கியில் உள்ள மக்கள் பணத்தை கார்ப்பரேட் முதலைகளுக்கு கடனாக மோடி அரசு வாரியிரைத்து வருகிறது. அதானியின் சொத்து மதிப்பு உயர்ந்தது போலவே கடனும் உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் அதிக கடன் சுமை கொண்டதாக அதானி குழுமமே உள்ளது. 2022 மே மாத கணக்கின்படி, அதானிக்கு இருக்கும் கடன் 2 லட்சத்து 22 ஆயிரம் கோடி.

ஒருபக்கம் அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளை கொழுக்க கடுமையாக உழைக்கும் மோடி அரசு, மறுபக்கம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு என்ற பெயரில் சிறு, குறு தொழிலை அழிப்பதும், சாமானிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீது வரி விதிப்பது மூலமாக சட்டப்பூர்வமாக பகற்கொள்ளையை அரங்கேற்றி வருகிறது.

படிக்க : கொரோனா பொருளாதார நெருக்கடியிலும் கார்ப்பரேட் வரிகளை தள்ளுபடி செய்த மோடி அரசு!

தமிழகத்திலும் திராவிட மாடல் அரசும் பள்ளி கல்வியில் தனியாரை நுழைக்க இல்லம் தேடிக் கல்வி, வானவில் மன்றம் போன்ற கவர்ச்சித் திட்டங்களை கொண்டுவருவது, குடிநீர் வழங்குவதில் சூயஸ் என்ற தனியார் கொள்ளைக்கு ஆதரவு கொடுப்பது, மாநகராட்சி நிரந்தர ஊழியர்களின் பணியை ஒழித்து ஒப்பந்த ஊழியர் முறைக்கு மாற்றுவது, பள்ளி, கல்லூரி நிரந்தர ஆசிரியர்கள் பணியை ஒழித்து தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது என ஒவ்வொரு துறையிலும் தனியாருக்கு தாரைவார்த்து கொண்டிருக்கிறது.

ஒன்றிய அரசும், மாநில அரசும் அனைத்து துறைகளையும் கார்ப்பரேட்டுகளுக்கு தாரைவார்த்து கொண்டிருக்கும் அதேவேலையில், நாட்டை அடிமையாக்கும் தனியார்மய – தாராளமய –உலகமய – மறுகாலனியாக்க கொள்கைக்கெதிரான போராட்டங்கள் அன்றாடம் நடப்பதும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. இவை கட்டாயம் ஒரு மாபெரும் மக்கள் எழுச்சிக்கு கொண்டுசெல்லும் என்பது யாவரும் அறிந்ததே.

இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ளலாம் என்று யாரும் கனவுக்கான முடியாது. சமீபத்தில் பொருளாதர நெருக்கடியால் இலங்கை மக்களின் எழுச்சி, மங்கோலியாவில் ஊழலுக்கு எதிரான போராட்டம், ஈரானில் மத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என உலகெங்கும் அரசுக்கு எதிராக நடக்கும் உழைக்கும் மக்களின் போராட்டங்கள் நமக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் கொடுக்கின்றன.

காவி – கார்ப்பரேட் கும்பல் மக்களிடம் அம்பலப்பட்டு வருகின்றனர். உழைக்கும் மக்களின் போராட்டங்களை கட்டியமைத்து வளர்த்தெடுப்பதே அடுத்தக்கட்ட நகர்வாக இருக்க முடியும்.

குழலி

பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? 

நம்முள் ஊறியிருக்கும் ஆணாதிக்கத்தைக் கொஞ்சம் உரசிப் பார்ப்போமா?

யிலில் ஒரு பெண்ணின் மீது குடிகாரன் ஒருவன் எச்சிலைத் துப்புகிறான், எதிர்த்து கேள்வி கேட்ட அப்பெண்ணைக் கெட்ட வார்த்தைகளால் திட்டுகிறான். அப்பெண்ணுக்கு ஆதரவாகச் சிலர் வருகிறார்கள். அப்படிவந்த ஒருவர் அந்த குடிகாரனை அடித்துப் புரட்டி எடுக்கிறார். அப்பெண்ணும் அவரது குடும்பமும் அவருக்கு நன்றி சொல்கிறது.

பெண்ணை காப்பாற்றியவர் அமர்ந்து நடந்தவற்றை நிதானமாக யோசிக்கும் போதுதான் ஒரு விஷயம் புரியவருகிறது. குடிகாரன் அப்பெண்ணை தகாத முறையில் திட்டினான்; அப்பெண்ணைக் காப்பாற்ற வந்தவரோ, “குடிகாரன் முறைதவறிப் பிறந்ததால்தான் இப்படி நடந்துகொள்கிறான்” என்று இவரும் அவனது தாயான பெண்ணை இழிவுபடுத்துகிறார். குடிகாரன் அப்பெண்ணைத் தகாத வார்த்தைகளால் பேசியதைவிட, இன்னமும் மோசமான, பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பெண்ணை காப்பாற்றியவர் பயன்படுத்தியிருக்கிறார்.

குடிகாரனுக்கும் அவருக்கும் என்ன வித்தியாசம்? எச்சிலைத் துப்புவதற்கும் திட்டுவதற்கும் இப்பெண் ஏற்றவள் என்பது குடிகாரனின் கருத்து. தவறு இவன் செய்யவில்லை, அது அவன் தாயின் குற்றம் என்பது காப்பாற்ற வந்தவரின் கருத்து. இப்படி எல்லாம் யோசித்துத்தான் அவர் இவ்வார்த்தைகளைப் பேசினாரா? யோசிக்காமல் ஒருவர் இவ்வார்த்தைகளைப் பேசியிருக்கிறார் என்றால் பரிசீலிக்க வேண்டியது அதைத்தான். யோசிக்காமல், திட்டமிடாமல், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் வருகின்ற வார்த்தைகள்தான் உண்மையாக ஒரு மனிதனை சமூகத்திற்கு அறிமுகப்படுத்துபவை.

சந்திரமுகி படம் பார்த்திருக்கிறீர்களா? மனைவியைச் சந்தேகப்படும் கணவன், அதைப் பயன்படுத்திக் கொண்டு இரட்டை அர்த்த வசனங்களுடன் விளையாடும் நாயகன். இந்தக்காட்சிகளை எல்லாம் புன்முறுவலின்றி பார்க்க முடிகிறதா? அதெப்படி இருக்க முடியும்? வடிவேலுவின் உடல்மொழியை பார்க்கும்போது சிரிப்பு வராதா என்ன?


படிக்க : ஆணாதிக்க வெறி: காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொன்ற கொடூரம்!


பெண்ணை பாலியல் நுகர்வுப்பொருளாகக் கருதும் நகைச்சுவையை நம்மால் எப்படி ரசிக்கவும் மகிழவும் முடிகிறது? இப்படி ஒரு கேள்வியை யாராவது வைத்துக்கேட்டால் என்ன பதில் கூறுவோம்? கேட்டது பொதுவெளியாக இருப்பின் சற்று தடுமாறுவோம். அதுவே சமூகவலைத்தளமாக இருப்பின், “உனக்கென்ன? எல்லாத்தையும் அரசியலாக பார்க்க முடியுமா? நீ என்ன யோக்கியமா?…” இப்படி ஏதாவது பதிலளித்துவிடலாம். பதில்கள் எவ்வாறு இருப்பினும் சரி, வெளியில் தவறென்று கூறி மீண்டும் மீண்டும் அதையே ரசிக்கும், ஆழ்மனதில் அதை நியாயப்படுத்தும் உணர்வுக்குப் பெயர்தான் என்ன?

பத்து முதல் பதினான்கு வயதுள்ள இளைஞர்கள், தனக்கு முன்னே சென்று கொண்டிருந்த ஐம்பது வயதுடைய பெண்ணின் பாலுறுப்புகளை கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். தன் தாயின் வயதையொத்த பெண் என்பது தெரியாமலா இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்? எல்லாம் தெரியும், இது தவறில்லை என்பது அவர்களின் எண்ணம். பெண், அவர் எந்த வயது பெண்ணாக இருந்தாலும் சரி, அவர் தனக்காக தன்னுடைய நுகர்வுக்காகவே படைக்கப்பட்டவர் என்பதுதான் ஆணாதிக்கம்.

ஆதித்யா தொலைக்காட்சி என்று நினைக்கிறேன். அது ஒரு நேரலை நிகழ்ச்சி, இளம் வயது ஆண், பெண் என இருவர் தொகுத்து வழங்குகின்றனர். எதிர்முனையில் ஒரு ஆண் நிகழ்ச்சி தொகுப்பாளரான பெண்ணின் ரசிகர் என்றும் அப்பெண்ணை தங்கள் குடும்பம் அனைவருக்குமே  பிடிக்கும் என்று கூறி, அப்பெண் தொகுப்பாளரைத் தனது வீட்டுக்கு அழைக்கிறார். அப்பெண்ணும் “கண்டிப்பாக” என்கிறார். உடனே ஆண் தொகுப்பாளர், “என்ன நீ ஹனிமூன் ட்ரிப்புக்கு பிளான் செஞ்சுட்டியா?” என்கிறார். உடனே சுதாரித்துக்கொண்டு தெரியாமல் செய்த தவறு என்று சிரித்துக் கொண்டே அவ்விஷயத்தை கடந்துசென்றார். அப்பெண்ணும் ஏற்றுக்கொள்கிறார். ஒரு தவறு செய்துவிட்டு எவ்வித குற்ற உணர்வு இல்லாமல் அதைச் சிரித்துக்கொண்டே செல்ல முடிகிறது? அதை எப்படி அப்பெண்ணாலும் ஏற்றுக்கொள்ள முடிகிறது? ஏனெனில் இதுதான் விதி.

சாதியை, மதத்தை, ஒரு நபரைப்பற்றி இழிவாகப் பேசினால் அடிவிழும் என்ற பயம் பெண்ணைப் பற்றிப்பேசும் போது ஏன் வரவில்லை? தன்னைப் பற்றி எப்படி இழிவாகப் பேசினாலும் அதை ஏற்றுக் கொண்டுதான் செல்ல வேண்டும் என்பது அந்த விதியினுள் இருக்கும் உள் விதி.

கணவன் தன் மனைவியைத் தேவடியா என்றழைக்கலாம் அது தவறில்லை, மற்றொருவர் அவ்வாறு கூறக்கூடாது என்பதுதானே இன்னொரு விதி விதி’ . அந்த விதி அவ்வப்போது விதிவிலக்காகிறது. விதிவிலக்குகள் பின்னாளில் விதிகளாகின்றன.

அறியாமல், தெரியாமல் எப்படி ஒரு பெண்ணைப் பார்த்து இவ்வாறு கூற முடியும்? ஏனென்றால் அவ்வாறு கூறுவதற்கு எந்த ஒரு பெண்ணும் தகுதியானவர்தான் என்பதுதான் ஒரு ஆணின் கருத்து. அதைப் பொது வெளியில் கூறும் நபர் சாதாரண காலங்களில் எப்படி நடந்து கொள்வார்? நாம் எப்படி நடந்து கொள்கிறோம்? அந்த நிகழ்ச்சியை பார்த்து அவரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டவர்களை விட அதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை என்போர்தான் அதிகமாக இருப்போர்.

ஒருவர் முகநூலில் தோழிகள் இல்லையே என்று நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு அலைகிறார். அவருக்கு ஏகப்பட்ட லைக்குகள், நக்கலும் நையாண்டியுமான கமெண்ட்டுகள். இன்னொருவர் தனது முன்னாள் காதலியின் பிரிவைப்பற்றி பினாத்துக்கிறார். பதிவைப்போடுவோர்களும் லைக் போட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்ல; எப்போதும் உலகை தன் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு திரிபவர்கள்; எல்லாவற்றுக்கும் கருத்துக்களும் ஆலோசனைகளும் கூறுபவர்கள் அவர்கள்.

பெண் பற்றிய இக்கருத்தைப் புறக்கணித்துவிட்டு அவர்களின் பொதுக் கருத்துக்களை எங்ங்னம் பரிசீலிப்பது?

ஜெயலலிதாவையும் காயத்ரி ரகுராமையும் அரசியல் ரீதியில் விமர்சிப்பதற்கு எவ்வளவோ இருக்கின்றன. ஆனால் அவர்களை பாலியல் ரீதியாக விமர்சிப்பதில்தான் பலருக்கும் அளவற்ற, மட்டற்ற மகிழ்ச்சி; அதில் ஒரு இன்பம்.  பெண்ணை வீழ்த்திவிட்ட நினைப்பு. காரில் தொங்கியபடி சென்ற மேயர் பிரியா, கீழே விழுந்தால் எப்படி இருக்கும் தெரியுமா என்று ஆபாசமாக, இழிவாகப் பேசும் சங்கிகளுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

முகநூலில் பெண்கள் விதவிதமாக தங்களின் படங்களைப் பதிவிடுகிறார்கள் என்று அங்கலாய்ப்பவர்கள் சுயமோகி ஆண்களின் புகைப்படங்களைப் பார்த்து என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்? கேட்டால் பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டாமா என்பார்கள். ஆக, உலகில் உள்ள எல்லா பெண்களையும் காப்பாற்றுவதுதான் ஆண்களின் வேலை. யார் அந்த பணியை ஆண்களுக்கு வழங்கியது? நாங்களாகவே அதை எடுத்துக்கொண்டோம்.

பிறப்பின் அடிப்படையில் ஆண்களாகவே எடுத்துக்கொண்ட உரிமை அதுவல்லவா? பிறப்பின் அடிப்படையில் பிராமணர்களுக்கு மற்ற சாதியினர் கட்டுப்பட்டதை எதிர்ப்போர் இதை  எதிர்ப்பதில்லை.

பல்வேறு அமைப்புகளிலிருந்து பாலியல் மற்றும் சீரழிவு நடவடிக்கைகளுக்காக வெளியேற்றப்பட்டவர்களுள் பெரும்பாலோர் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கின்றனர் என்று கவனியுங்கள். தாங்கள் செய்த தவறைப்பற்றி எவ்வித குற்ற உணர்வும் இல்லாமல், தாங்கள் ஏதோ சிந்தாந்த ரீதியிலான போராட்டம் நடத்தியதைப்போலவும் அதற்கு ஜனநாயகம் இல்லாமல் போனதால் வெளியேற்றப்பட்டோம் போன்ற தோற்றத்தை அல்லவா காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்? நான் செய்ததெல்லாம் தவறே இல்லை, தவறாகப் பழிவாங்கப்பட்டுவிட்டேன், ஜஸ்ட் எச்சரித்துவிட்டு அனுப்ப வேண்டிய விசயம் அல்லவா? யார்தான் சரியாக இருக்கிறார்கள் என்று அடுத்த கணைகளைத் தயாராக வைத்திருப்பார்கள். செய்த தவறுகளைப்பற்றி கொஞ்சமும் வருந்தாத இவர்களைப்பற்றி என்ன முடிவுக்கு வர முடியும்?

தன்னுடைய மனைவியைத் தெருவில் வைத்து தகாத வார்த்தைகளால் வசை பாடி அடித்துத் துவைத்து பிறகு அந்தச் சுவடே இல்லாமல் ஊருக்கு, உபதேசம் செய்பவர்களை என்ன சொல்வது? அதெல்லாம் அப்படித்தான் இருக்கும், அவர் அரசியலில் எப்படி இருக்கிறார் பாருங்கள் என்று மட்டும் நாம் ஒதுங்க முடியுமா?

சவுக்கு சங்கர் ஒரு பாலியல் குற்றவாளி என்பது ஊரறிந்த செய்தி. அது தொடர்பாக பொது மன்னிப்போ குற்ற உணர்வோ துளியும் இல்லாதவர். சவுக்கு சங்கர் ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்திவிட்டு, அப்பெண்ணுக்கும் குழந்தைக்கும் இதுவரை எவ்வித பராமரிப்பு நிதி கூட கொடுக்க மறுப்பவர், என்றாலும் அவரின் ஆணாதிக்க வக்கிர செயல்பாடு விவாதத்திற்கு வரவில்லை. ஆனாலும் இன்றைக்கு மிகப்பெரிய ‘போராளியாக’ வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சவுக்கு சங்கரின் ரசிகர்களிடம் இது குறித்துக் கேட்டுப்பாருங்கள். இதெல்லாம் ஒரு விசயமே கிடையாது என்பார்கள். ஒரு பெண்ணை ஏமாற்றி தெருவில் விட்டுவிட்டு வந்த அயோக்கியனை எப்படி உங்களால் ஏற்றிப்போற்ற முடிகின்றது? அதுதான் உள்ளுக்குள் இருக்கும் ஆணாதிக்க – நுகர்வு பண்பாடு. இப்படி பெண் பித்தர்களாக இருப்பதையே பெருமையாகவும் சாதனையாகவும் கருதும் இச்சமூகத்தில் இன்னமும் பல சவுக்கு சங்கர்களுக்கு நிச்சயம் இடம் இருக்கும்.

0-0-0

அரசியல் என்றால் என்ன? மோடியை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் மட்டும்தானா? பாலியல் சீரழிவை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் அரசியல் இல்லையா என்ன? இதையெல்லாம் விவாதித்துக் கொண்டிருக்கும் போது, பலரும் வேற என்ன செய்ய முடியும் என்று விலகிப்போகிறார்கள் அல்லது மௌனத்தை முன்வைத்து விட்டுப்போவார்கள்?

அனல் மேலே பனித்துளி திரைப்படத்தில் பல காட்சிகள் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருக்கும். ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் அதன் மீதான அரசின் பார்வை என்ன?  சமூகத்தின் பார்வை என்ன அதை எப்படித் தீர்ப்பது? என்ற கேள்விக்கு அப்படத்தில் பதில் ஏதும் இல்லை.  ஒரு பெண்ணின் அந்தரங்கப் படங்களைப் பார்ப்பதும் பலருக்கும் பகிர்வதுமான இச்சமூகம் இனியும் நீடித்திருக்கத் தகுதியுடையதுதானா? இந்தக் கேள்வியைத்தான் நாம் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும்.

ஆணாதிக்கத்தையும் நுகர்வுப் பண்பாட்டையும் எப்படி ஒழிப்பது?

பெண்ணை தன்னுடைய உடமையாக – சொத்தாகக் கருதும் இந்த நிலப்பிரபுத்துவ பண்பாட்டையும்; எல்லாவற்றையும் அனுபவித்து விட்டுத் தூக்கியெறி என்ற மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் ஒழித்துக்கட்டாமல் அனல் மேலே பனித்துளி நாயகி போல கவுன்சிலிங் கொடுப்பதன் மூலம் இப்பிரச்சினையைத் தீர்க்க முடியுமா? பேசாமல் இருப்பதற்கு கொஞ்சம் பேசுவதே மேல் என்பதுதான் பிரச்சினை.

ஆணாதிக்கம் அதற்கு அடிப்படையான நிலப்பிரபுத்துவம், நுகர்வுப்பண்பாடு அதற்கு அடிப்படையான மறுகாலனியாக்கம் இவற்றை எப்படி மாற்றுவது? ஆணாதிக்க மற்றும் நுகர்வுப்பண்பாட்டில் இருந்து பெண் விடுதலை என்பது, உலகில் உள்ள அத்தனை கோடி ஆண்களிடமும் சென்று நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ளுங்கள் என்று சொல்வதன்மூலம் நடைபெறுவதல்ல; தனிநபர் மாறினால் எல்லாம் மாறும் என்ற மூடநம்பிக்கை நமக்கு எதையும் தரப்போவதில்லை.

ஆணாதிக்கத்துடனும் நுகர்வுப் பண்பாட்டுடனும் சமரம் செய்து அல்லது பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சம் சலுகை பெற்று வாழ முடியுமா என்ன?

பக்கத்து வீட்டுப்பையன் தானே என்று நம்பி அனுப்பிய 3 வயது பெண் குழந்தையை வன்கொடுமை செய்து சூட்கேசில் அடைத்து துண்டாக்கி வீசினான் தஷ்வந்த். அவன் குற்றவாளி என்றால், அவனை அவ்வழக்கிலிருந்து விடுவிக்கச் சொத்துக்களை விற்ற அவனின் தாய் தந்தையரை என்ன செய்வது? இறுதியில் அவன் தன் தாயையே கொன்று போட்டான்.


படிக்க : ஆணாதிக்க சமூகத்தால் பொருளாதாரம் மற்றும் பாலியல் ரீதியாக ஒடுக்கப்படும் பெண்கள் !


இப்படிப்பட்ட தாய் தந்தையர் நிறைந்த உலகல்லவா இது? கார்கி படத்தில் வருவது போல எத்தனை பேர் பாலியல் குற்றவாளி என்று தெரிந்தும் தன் தந்தையைப் போலீசில் பிடித்துக் கொடுத்திருக்கிறார்கள்? பொள்ளாச்சியில் பெண்களை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டோர்க்கு ஆதரவாக அவர்களின் குடும்பத்தினர் வழக்காடு மன்றத்தில் வந்து சண்டையிடவில்லையா?

ஆணாதிக்க வெறியனிடம் – பொறுக்கியிடம் சொல்லிப் புரிய வையுங்கள் அது உங்கள் திறமை. இருக்கட்டும், அவனின் தாயிடம் என்ன சொல்லி புரிய வைக்கப்போகிறீர்கள்?

பெண்ணை தனிச்சொத்தாகவும் நுகர்வுப் பொருளாகவும் கருதும் இச்சமூகத்தில் நாம் இனியும் வாழமுடியுமா என்ன? முடியாது என்ற முடிவுக்கு வராத வரையில் மூட நம்பிக்கைகளை நம்பிப்பயணம் செய்து படுகுழியில்தான் விழவேண்டும். மனிதரை சகமனிதராக மதிக்காத இந்த சமூகம் அழித்து, ஒழிக்கப்பட வேண்டும் என்றால் அது புரட்சியைத்தவிர வேறு எதுவாக இருக்க முடியும்? தனிச் சொத்துடமையை ஒழிக்காமல் பிற்போக்கு விழுமியங்களை அறுத்தெறியாமல் சுரண்டலை அடித்து நொறுக்காமல் பெண்விடுதலை மட்டும் எப்படி சாத்தியம்?

புரட்சிதான் தீர்வு என்று பேசும்போது பலரும் கிண்டல் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் புரட்சி தீர்வு என்கிறீர்கள், இப்போதைக்கு என்ன ஆக வேண்டுமோ அதைப் பேசமாட்டீர்கள் என்பார்கள். மக்களுக்குச் சாத்தியமானதைப் பேசுங்கள் என்பார்கள்? பார்ப்பனிய – ஆணாதிக்க – நுகர்வுப் பண்பாட்டில் திளைத்திருக்கும் இச்சமூகத்தில் சாத்தியமான மாற்று என்ன என்பதைச் சாத்தியமானவர்கள்தான் கூற வேண்டும்.

தமிழ்

விட்னஸ் (Witness): திரை விமர்சனம் (Movie Review) | தோழர் அமிர்தா | வீடியோ

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் சாதியக்கொடுமை காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இந்த நவீன காலத்திலும் பல்வேறு தூமைப்பணியாளர்கள் – கழிவுஅகற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பில்லாத காரணத்தினாலும், விஷவாயு தாக்கியதாலும் இறந்திருக்கிறார்கள். அவர்களின் உயிருக்கே பாதுக்கப்பில்லாத இந்த வேலையில் கூட அவர்களுக்கு மிகவும் சொற்பமான சம்பளமே வழங்கப்படுகிறது. இதுபோன்று சமூக அவலங்களை பற்றி கூறும் படங்கள் சமகாலங்களில் வருகின்றன. படம் வந்ததும் பேசு பொருள் ஆகிறது. அதையும் தாண்டி அந்த அவலங்களுக்கு எதிரான போராட்டங்கள் சமூகத்தில் அதிகரிக்க வேண்டியது அவசியம்.

லக்குழி மரணம் தொடர்பாக தற்போது வெளியாகி இருக்கும் விட்னஸ் திரைப்படத்தை பற்றிய திரை விமர்சனத்தை இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

சிற்பி திட்டம்-வானவில் மன்றம்: கல்வித்துறையில் கார்ப்பரேட்-ஐ நுழைக்கும் திராவிட மாடல் அரசு!

சிற்பி திட்டம் என்ற பெயரில் ஒட்டு மொத்த மாணவர்களையும் குற்றவாளிகளாக்குகிறது திமுக அரசு. கல்வி நிலையங்களுக்குள் போலீசை நுழைக்கிறது. சமூக குற்றங்கள் பெருகுவதற்கு முதன்மை காரணமே போலீசுதான் இவர்கள் மாணவர்களை நல்வழிப்படுத்த போகிறார்களாம்!

வானவில் திட்டம் என்ற பெயரில் மாணவர்களுக்கு கலை அறிவியில் பயிற்சி எடுக்க கார்ப்பரேட்-என்.ஜி.ஓக்களை பள்ளிக்குள் நுழைக்க திட்டமிடுகிறது திராவிட மாடல் அரசு.

சிற்பி திட்டம் மற்றும் வானவில் திட்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் ரவி அவர்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

கொலைகார ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க சதி! | தோழர் வெற்றிவேல்செழியன் | வீடியோ

டந்த சில நாட்களாகவே பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் கொலைகார வேதாந்தா ஸ்டெர்லைட் கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பரங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

“போராட்டம் என்பது அழிவை நோக்கி, தூத்துக்குடி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை, பசுமையான தூத்துக்குடி – 1.25 லட்சம் மரங்கள் நடப்பட்டிருக்கின்றன” என விளம்பரப்படுத்தப் பட்டிருக்கின்றன.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேதாந்தா நிறுவனத்துடன் இணைந்து தமிழக அரசும் சதி செய்து வருகிறது என்பதை அம்பலப்படுத்தி இக்காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர் வெற்றிவேல்செழியன் அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!

0

த்திரிகையாளர்கள் தங்கள் கடமையை செய்ததற்காக சிறையில் அடைக்கப்படுவது ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. டிசம்பர் 1, 2022 நிலவரப்படி உலகம் முழுவதிலும் 363 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது சென்ற ஆண்டை விட 20 சதவிகிதம் அதிகமாகும்.

இந்த தகவல் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to protect Journalists – CPJ) டிசம்பர் 14 அன்று வெளியிட்ட “2022 சிறை கணக்கு” அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதேச்சாதிகார அரசுகள் ஊடக சுதந்திரத்தின் குரல்வலையை தொடர்ந்து நசுக்கி வருகின்றன. ‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது” என்று பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) மேலும் கூறுகிறது.

பத்திரிகையாளர்களை கைது செய்வதில் உலக அளவில் ஈரான் முதலிடத்தில் உள்ளது. அங்கு 62 பத்திரிகையாளர்கள் தற்போது சிறையில் இருக்கின்றனர். மாசா அமினி என்ற இளம்பெண் ‘ஒழுக்கநெறி’ போலீசால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போராட்டம் வெடித்தது. அங்கு போராட்டம் துவங்கப்பட்ட பின்பு மட்டும், 22 பெண் பத்திரிகையாளர்கள் உட்பட 49 பத்திரிகையாளர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


படிக்க: பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!


இந்தியாவில் 7 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டு முதல் சி.பி.ஜே சிறை கணக்கெடுப்பு நடத்த தொடங்கியதிலிருந்து இதுதான் புதிய உச்சம். அந்த எழுவர்: ஆசிப் சுல்தான் (Aasif Sultan), சித்திக் கப்பன் (Siddique Kappan), கவுதம் நவ்லகா (Gautam Navlakha), மனன் தர் (Manan Dar), சஜாத் குல் (Sajad Gul), ஃபஹத் ஷா (Fahad Shah) and ரூபேஷ் குமார் சிங் (Rupesh Kumar Singh). இந்த எழுவரில் காஷ்மீரை சேர்ந்தவர்கள் நான்கு பேர்.

ஜம்மு காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டம் (Jammu and Kashmir Public Safety Act) என்ற ஆள்தூக்கி சட்டத்தின் கீழ் ஆசிப் சுல்தான், ஃபஹத் ஷா மற்றும் சஜாத் குல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சில தனி வழக்குகளில் பிணை கிடைத்தும் சிறையிலேயே இருக்கிறார்கள்.

தற்போது சிறையில் இருக்கும் எழுவரில் 6 பேர் ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆசிப் சுல்தான் – காஷ்மீர் நரேட்டர் (Kashmir Narrator) என்ற பத்திரிகையில் பணிபுரிந்து வந்தார். அவர் ஆகஸ்டு 27, 2018 என்று கைது செய்யப்பட்டார். அவர் 4 ஆண்டுகள் மற்றும் 3 மாதங்களாக சிறையில் இருக்கிறார். ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவருக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் பிணை கிடைத்தது. ஆனால் பிணை வழங்கப்பட்ட மறுகணமே அவர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (PSA) கைது செய்யப்பட்டார்.

சித்திக் கப்பன் என்ற சுதந்திர ஊடகவியலாளர் அக்டோபர் 5, 2020 இல் கைது செய்யப்பட்டு 2 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்களாக சிறையில் உள்ளார். ஹத்ராஸ் பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு எதிரான போராட்டங்களில் இவருக்கு பங்கு இருப்பதாக கூறி உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியது. ஆனால், பணமோசடி தடுப்பு சட்டத்தின் (PMLA) கீழ் பதியப்பட்டுள்ள வழக்கின் காரணமாக அவர் தொடர்ந்து சிறையிலேயே இருக்கிறார்.

கவுதம் நவ்லகா – சுதந்திர ஊடகவியலாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளரான இவர் ஏப்ரல் 14, 2020 அன்று புனே போலீசால் எல்கர் பரிஷத் வழக்கில் தொடர்புபடுத்தி கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள இவர், 30 மாதங்கள் சிறையில் இருந்தார்.

மனன் தர் என்ற சுதந்திர ஊடகவியலாளர் அக்டோபர் 10, 2021 அன்று கைது செய்யப்பட்டு 1 வருடம் மற்றும் 2 மாதங்களாக சிறையில் உள்ளார்.


படிக்க: சித்திக் கப்பனை திட்டமிட்டு வதைக்கும் அதிகார வர்க்கம் !


சஜாத் குல் – காஷ்மீர் வாலா (Kashmir Walla) பத்திரிகையில் பணிபுரியும் இவர் கடந்த ஜனவரி மாதம் முதல் சிறையில் இருக்கிறார். போராட்டம் ஒன்றைப் பற்றி ட்வீட் செய்த காரணத்திற்காக இவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவ்வழக்கில் இவருக்கு பிணை கிடைத்தது; ஆனால் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (PSA ) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ஃபஹத் ஷா – காஷ்மீர் வாலா (Kashmir Walla) பத்திரிகையில் பணிபுரிந்து வந்த இவர் “பொய் செய்தி” பரப்பினார் என்று ராணுவம் குற்றம்சாட்டியைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதத்தில் கைது செய்யப்பட்டார். இவர் மீது வேறு இரண்டு வழக்குகளும் பதியப்பட்டன. இரண்டு வழக்குகளில் இவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது; ஆனால் மூன்றாவது வழக்கின் காரணமாக இன்னும் சிறையிலேயே இருக்கிறார்.

ரூபேஷ் குமார் சிங் – ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திர ஊடகவியலாளரான இவர், 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இவர் மீது ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது; கூடுதலாக இரண்டு வழக்கங்களும் பதியப்பட்டுள்ளன.

உலக அளவில் பத்திரிகையாளர்கள் அரசு எந்திரத்தால் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது என்பதையே இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. குறிப்பாக பத்திரிகை சுதந்திரத்தின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறது காவி-கார்ப்பரேட் பாசிச மோடி அரசு. ஊபா போன்ற கொடுமையான சட்டத்தை பத்திரிகையாளர்கள்-முற்போக்கு எழுத்தாளர்கள்-ஊடகவியளாளர்கள்-ஜனநாயக சக்திகள் மீது பயன்படுத்தி அவர்களை செயல்படவிடாமல் முடக்குவதே இவர்களின் நோக்கம்.

பொம்மி

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜூன் சம்பத்தை விரட்டியடித்தது தமிழ்நாடு !
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி,  அம்பானி-அதானி பாசிசம் முறியடிப்போம் !
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் !

திருவள்ளுவர், பெரியாரைத் தொடர்ந்து அம்பேத்கரை காவிமயமாக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளுக்கு எதிராக களத்தில் நின்று அவர்களை ஓடஓட விரட்டியடித்து இருக்கிறது தமிழ்நாடு. 2009-ல் ஈழத்தமிழர்களுக்கு எதிராக வன்மத்தைக்கக்கிய சுப்பிரமணியசாமியை முட்டையால் அடித்து ஓடவிட்ட தமிழ்நாட்டு வழக்குரைஞர்கள்தான் இப்போதும் களத்தில் அர்ஜுன் சம்பத்தை ஓட ஓட விரட்டியடித்திருக்கிறார்கள்.

அம்பேத்கரின் சிலைக்கு காவி அணிவிக்க மாட்டேன் என்று உயர்நீதிமன்றத்தில் உறுதி மொழி அளித்துவிட்டு அதற்கு மாறாக, கும்பகோணத்தில் அம்பேத்கர் காவியும் பட்டையுடன் இருப்பது போன்ற சுவரொட்டியை ஒட்டியிருக்கிறார் அர்ஜூன் சம்பத். அப்படிப்பட்ட அயோக்கியனைத்தான் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் மற்ற அமைப்பினரும்  அம்பேத்கர் மணிமண்டபத்தினுள் நுழையவிடாமல் தடுத்தனர்.


படிக்க : அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!


அம்பேத்கரை இழிவுபடுத்துவதை எதிர்த்த அனைவரையும் கடுமையாகத்தாக்கி கைது செய்த போலீசு, பலநூறு போலீசை கொண்டுவந்து பத்திரமாக அர்ஜூன் சம்பத் அம்பேத்கரை இழிவுபடுத்த உதவி புரிந்திருக்கிறது. வெற்றி, தோல்வி என்பதல்ல பிரச்சினை, எதிரிக்கு எதிராக, இந்துமதவெறி பாசிசத்துக்கு எதிராக களத்தில் நின்றோமா என்பதுதான் முக்கியம்.

ஓரண்டுக்கு முன்னர் வி.சி.க.வின் தலைவர் திருமாவளவன் பெண்கள் குறித்து மனுநூலில் உள்ளதை விளக்கியதை திரித்து, “திருமாவளவன் பெண்களை தவறாகப்பேசுகிறார்” என்றார்கள். பிறப்பின் அடிப்படையில் யாரும் உயர்வு தாழ்வு இல்லை என்றுரைத்த திருவள்ளுவருக்கு, பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிய சாதியையும் வர்ணத்தையும் காப்பாற்றும் இந்துமத வெறியர்கள் காவி உடையை அணிவித்து அவரை இந்து சாமியாராக்க முயன்றனர். மனுதர்மத்தை மேற்கோள் காட்டிப்பேசிய ஆ.ராசாவை குறிவைத்தார்கள். மேற்கண்ட அத்தனைப் பிரச்சினையிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகளை புறந்தள்ளியதுடன் காறி உமிழ்ந்தது. பார்ப்பனியத்தை எதிர்த்தவர்களுடன் இணைந்து நின்றது தமிழ்நாடு.

யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் இல்லாத ஆளுநர் அம்பேத்கரை சீர்திருத்தவாதி என்று கூறிக் கொண்டே இழிவுபடுத்துகிறார். அர்ஜுன் சம்பத்தும் ஜெய்பீம் என்று கூறிக் கொண்டே அம்பேத்கருக்கு காவி உடை போடுகிறார். ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வைச் சேர்ந்த பலரும் அம்பேத்கர் இந்துமதத்தலைவர் என்கிறார்கள். காசி தமிழ்ச்சங்கம் என்ற பெயரில் தமிழ் பண்பாட்டின் உயிர் நாடியான வேத, பார்ப்பன எதிர்ப்பு என்பதை திட்டமிட்டு நீக்கம் செய்கிறார்கள்.

 

தமிழ்நாட்டிலிருந்து 2000-க்கும் மேற்பட்டவர்களை மக்களின் வரிப்பணத்தில் காசிக்கு அழைத்துச் சென்று காவிச் சாயம் பூசுகிறார்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய திருக்குறளுக்கு, நானே நான்கு வர்ணத்தையும் உருவாக்கினேன் என்று கூறிய கீதையின் சாயத்தை பூசுகிறார்கள். தமிழுக்கு நாங்கள் தொண்டாற்றுகிறோம் என்ற பெயரில் தமிழினத்தையும் தமிழ் பண்பாட்டையும் அழிக்க, வாளேந்திய காலம் முடிந்து போனதால் தற்போது நூல்” ஏந்தி வருகிறார்கள்.

நாம் அமைதியாக இருந்தோம் என்றால், அம்பேத்கர் நூலுக்கும் பார்ப்பன பொழிப்புரை எழுதுவார்கள். நான் கொல்ல வேண்டும் என்று விருப்பப்பட்டால் அது மனுஸ்மிருதியை எழுதிய மனுவாகத்தான் இருக்க முடியும் என்ற அம்பேத்கரின் கருத்துக்களைக்கூட மனுஸ்மிருதியின் கருத்துக்களாக திரிப்பார்கள்.

திருவள்ளுவர், பெரியார், அம்பேத்கர் என தொடர்ந்து இழிவுபடுத்தப்படும் பாசிச போக்கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் ஒவ்வொரு நொடியும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கு எதிராக களத்தில் நின்று விரட்டியடிக்க வேண்டும். அதைத்தான் தமிழ்நாடு செய்திருக்கிறது, இனியும் செய்ய வேண்டும். நம்முடைய எதிர்ப்பு வேத – சனாதன – பார்ப்பனிய, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்புடன் நின்று விடுவதாக இருக்கக் கூடாது.


படிக்க : மக்கள் அதிகாரம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றை தடை செய்ய சொல்லும் பயங்கரவாதி அர்ஜுன் சம்பத்தை கைது செய் !


அம்பானி – அதானி பாசிச கும்பலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பலும் இணைந்து மறுகாலனியாக்க கொள்கைகளுக்காக நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கிறார்கள். சிறுபான்மையினர்,  பெண்கள்,  தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் இந்த நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவரின் உரிமையை மறுத்து கொத்தடிமைகளாக்கி பார்ப்பன, பனியா – கார்ப்பரேட்டுகளின் பாசிச ஆட்சியை நிலை நிறுத்துவதே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளின் நோக்கம்.

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிஸ்டுகளை வீழ்த்த வேண்டும் என்றால் ஒவ்வொரு தெருவிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தொழிற்சாலைகளிலும் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணிகளை கட்டியமைத்து அவர்களை களத்தில் சந்திக்க வேண்டும். அதுவே நம்முடைய தலையாய கடமையாகவும் இருக்க வேண்டும்.

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு – 99623 66321.

அரசுப் பள்ளிகளில் கல்வி வியாபாரிகள்? | ஆசிரியர் உமா மகேஷ்வரி

மிழக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்காக வானவில் மன்றம் என்ற புதிய முயற்சியை தமிழக அரசு இந்த ஆண்டு உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 13,210 அரசுப்பள்ளிகளில் இத்திட்டத்தைத் தொடங்கிவைப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இது கடந்த நவம்பர் மாதம் 28ஆம் தேதி, திருச்சி மாவட்டத்தில் உள்ள காட்டூர் அரசு ஆதி திராவிடர் நலப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக முதல்வரால் தொடங்கிவைக்கப்பட்டது.

வானவில் மன்றம் என்பது அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களின்மீது மாணவர்களுக்கு ஈர்ப்பு வரும்படியாக அவர்களைத் தயார்படுத்தும் ஒரு புதிய முயற்சி என்ற செய்தி நிலவிவருகின்றது. அதனை நாம் வரவேற்கிறோம், பாராட்டுகிறோம். மாணவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையைத் தூண்டுவது கல்விதருவதன் ஒரு பகுதியே. ஆனால் இந்தத் திட்டம் புதிது அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இது ஒன்றிய அரசுத் திட்டத்தின் வழியாக நிதி ஒதுக்கப்படக்கூடிய ஒரு  திட்டம்தான். பல ஆண்டுகளாகத் தமிழகத்தில் நடைமுறையில் உள்ள STEM (Science Technology Engineering and Mathematics) என்ற திட்டமே புதிய பெயரில் மீண்டும் வருகிறது. இதே திட்டத்திற்காக மாநிலம் முழுவதும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு பள்ளிகளுக்கும் அதற்கான கருவிப்பெட்டிகள் (KIT) வழங்கிய நடைமுறை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் இருந்தது. அப்போது தன்னார்வலர்கள் என்றோ தொண்டு நிறுவனங்கள் என்றோ பள்ளிக்குள் எவரும் ஊடுருவவில்லை.

படிக்க : தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

ஆனால் தற்போதைய வானவில் மன்றம் திட்டத்தில், வெளியிலிருந்து கார்ப்பரேட் கல்வி நிறுவனங்களை பள்ளிக்கூடங்களுக்கு அழைத்துவந்து நுழைக்கும் வேலையை பிராதானமாகச் செய்கின்றனர் அதிகாரிகள்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குனரான சுதன் ஐஏஎஸ் அவர்கள் இதற்கான சுற்றறிக்கையை மாநிலம் முழுவதிலும் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அரசுப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புவரை உள்ள மாணவர்களுக்கு இத்திட்டம்  செயல்படுத்தப்படப் போவதாகவும் இதற்காக சிறந்த நிபுணர்கள் வந்து செயல்முறைகளைச் செய்துகாட்டுவார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். யார் அந்தச் சிறந்த நிபுணர்கள்?

பள்ளிக்குள் அறிவியலைக் கற்று உயர்கல்வி பயின்று தேர்வு எழுதி ஆசிரியராக வருபவர்களிடம் இந்தத் திறன் இல்லையா என்று நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். சிறந்த நிபுணர்கள் என்ற அடையாளத்துடன் பள்ளிகளுக்கு உள்ளே நுழைபவர்கள் கார்ப்பரேட்டுகள் என்பதனை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இந்த நிறுவனங்கள் அனைத்துமே நிதி பெற்றுக்கொண்டு பணியாற்றும் கார்ப்பரேட் அமைப்புகள். இந்த அமைப்புகளில் பயிற்சி பெற்றுள்ள ஊழியர்கள்தான் (தன்னார்வலர்கள் என்பது தவறு) சிறப்புப் கருத்தாளர்களாம்.

இந்த அமைப்புகளின் லோகோக்களைத் தாங்கித்தான் வானவில் மன்றங்களின் செயல்பாடுகளை வடிவமைத்துள்ளனர். இவர்களைத் தேர்வுசெய்ய கல்வித்துறையினருக்கு வழிகாட்டுவது யார் என்ற கேள்வியை நாம் எழுப்புவதே எழுவதேயில்லை. திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, கார்ப்பரேட்டுகளை பள்ளிக்கல்வியில் நுழைக்கும் முறைக்குப் பெயர் என்ன?

கல்வித்துறையில் பணியாற்றும் இளங்கலை முதுகலை பயின்ற திறமையான ஆசிரியர்கள் லட்சக்கணக்கில் இருக்கின்றனர். அறிவியல் மற்றும் கணக்குப் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டதுதான் தமிழக பள்ளிக் கல்வித்துறை. 12,000 ஆசிரியர்கள் தாமாகவே முன்வந்து இத்திட்டத்திற்கு ஆலோசனை வழங்கியதாகவும் செய்திக்குறிப்பிலிருந்து அறிந்துகொள்ள முடிந்தது. அப்படியிருக்க ஆசிரியர்களைத் தயார்படுத்தும் பணியைச் செய்யாமல் அவர்களிடம் உள்ள திறமையை மாணவர்களுக்குக் கடத்த நினைக்காமல், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத ஏராளமான பணிகளை ஒதுக்கீடு செய்துவிட்டு, மறுபுறம் தன்னார்வலர்கள் என்ற பெயரில் பெருநிறுவனங்களைக் கொண்டு பள்ளிகளுக்குள் மாணவர்களிடையே பரிசோதனைகள் நடக்கும் என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது?

ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் உள்ளன. அங்கு ஆராய்ச்சிப் படிப்பு முடித்த பேராசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி மாவட்டந்தோறும் ஒன்றிய அளவில் அறிவியல் கணக்கு படித்த ஆசிரியர் பயிற்றுனர்கள் (BRT) ஏராளமாக இருக்கின்றனர். அவர்களை எல்லாம் புள்ளிவிவரக் கணக்குகளை எடுக்கவைத்துவிட்டு, பள்ளி ஆசிரியர்களையும் தகவல் சேகரிப்பு, புள்ளி விவரங்கள் சேகரிப்பு என திசைமாற்றி அனுப்பிவிட்டு கார்ப்பரேட்டுகளைப் பள்ளிக்குள் திட்டமிட்டு நுழைப்பதன் பின்னணி என்ன?

அறிவியல் மனப்பான்மையை மாணவர்களிடம் ஏற்படுத்துவதுதானே அறிவியல் ஆசிரியர்களின் பணி? அதை அவர்கள் செய்யட்டுமே? கணக்குப் பாடத்தைக் கற்பிப்பதுதானே கணக்கு ஆசிரியர்களின் வேலை? அதையெல்லாம் அவர்கள் செய்யட்டுமே? அதைவிடுத்து தன்னார்வலர்கள் ஏன் இந்த இடங்களுக்கு வரவேண்டும்? இதற்காக வருபவர்களுக்கு பயணப்படி உள்ளிட்ட தொகை நிச்சயமாக வழங்கப்படும். இதற்காக 1.58 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாம். ஒவ்வொரு பள்ளிக்கும் முதல்கட்டமாக ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அறிவியல், கணிதப் பாடங்களில் சோதனைகள் செய்வதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து வாரந்தோறும் அந்தப் பாடத்தில் உள்ள தொடர்புடைய கருத்துக்களை விளக்குவதற்கான உபகரணங்களை வாங்குவதாகவும் அவற்றைப் பயன்படுத்தி சோதனைகளை விளக்கப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கற்பித்தல் பணியை ஆசிரியர்களிடம் விட்டுவிட்டு, எழுத்தர், கணக்கர், புள்ளிவிவரங்கள் சேகரிப்பவர், ஆதார் எண் இணைப்பவர் போன்ற பணிகளுக்கு இவர்களைப் போன்ற கார்ப்பரேட் நிறுவங்களை அரசு பயன்படுத்தலாமே?

நமக்கு எழக்கூடிய சில ஐயங்களை இங்கே பட்டியலிடுகிறோம்.

♦ ஆகா குரு (Aha Guru) என்பது எந்த அமைப்பு? (நீட், JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் அமைப்பு இது என்பது வெளிப்படை)

♦ Parikshan, AID INDIA மற்றும் சுடர் அமைப்பு இவர்களெல்லாம் யார்?

♦ எல்லோருமே கார்ப்பரேட் அமைப்புகள். கல்வி நிறுவனங்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் இவை. இந்தக் குறிப்பிட்ட அமைப்புகளை இந்தத் திட்டத்தில் ஈடுபடுத்த அரசு யாரிடம் ஆலோசனை கேட்டது? எந்த அடிப்படையில் இவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது? இந்த நிறுவனங்கள் பள்ளிகளுக்கு அனுப்புகின்றவர்கள் அறிவியல் மற்றும் கணக்குத் துறையில் பெற்றுள்ள நிபுணத்துவம் என்ன?

♦ தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையங்கள் (Tamilnadu Science and Technology Centres), ‌‌‌கோளரங்குகள் போன்ற அரசு  அறிவியல் நிறுவனங்கள் இருக்கின்றனவே! அவர்களை ஏன் இந்தத் திட்டங்களில் ஈடுபடுத்தவில்லை? சென்னையில் உள்ள பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி மற்றும் வேலூர் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அறிவியல் மையங்கள் இந்த வானவில் திட்டச்செயல்பாட்டில் ஈடுபடுத்தப்படாதது ஏன்?

♦ இந்த அரசு நிறுவனங்களின் லோகோக்கள் இல்லை வானவில் மன்றத் திட்ட அறிவிப்புகளில் இல்லை. ஆனால் கல்வி வியாபாரக் கார்ப்பரேட்டுகளின் லோகோக்கள்தான் வானவில் மன்றம் செயல்திட்டங்களின் முகப்பில் இடம்பெற்றுள்ளன.

♦ அதேபோல் தமிழ்நாடு முழுவதும் அறிவியல் இயக்கம் என்ற அமைப்பு அரசுப் பள்ளிகளுடன் நல்ல புரிதலையும் இணக்கத்தையும் பின்பற்றி அறிவியல் மனப்பான்மையைக் கொண்டுசேர்க்கும் விதமாகப் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறது. அதில் ஆயிரக்கணக்கான உண்மைத் தன்னார்வலர்கள் இயங்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான பரிசோதனை முயற்சிகளை எந்த எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கான பள்ளிகளில் பல பத்தாண்டுகளாக அந்த அமைப்பினர் செய்துவருகின்றனர். அதைப்போன்ற அமைப்புடன் ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் பயிற்சிபெற்று வானவில் மன்றங்களை நிதிச்சுமையின்றிச் செயல்படுத்தலாம். இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கும் நிதியைப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாட்டுக்குப் பயன்படுத்தலாம்.

படிக்க : ஆதார் எண் இணைக்கும் பணி ஆசிரியருக்கு தேவையா? | ஆசிரியர் உமா மகேஸ்வரி | வீடியோ

♦ இத்திட்டம் மாநில அரசால் மேற்கொள்ளப்படுகிறது எனில் இதற்கான நிதி மாநில அரசால் வழங்கப்படுகிறதா? முதல்வர் உருவாக்கிய திட்டம் எனில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் செயல்படுத்தப்படுமா? அல்லது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமே இந்தத் திட்டமா?

♦ அரசுப்பள்ளிகளில் கல்வி வியாபார நிறுவங்களை உள்ளே நுழைத்து, அந்த நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்களை இழுக்கத் தூண்டில் போடவும் அதற்கான புள்ளிவிவரங்களை அந்த நிறுவனங்களுக்கு வழங்கவும் அரசே வாசல் திறந்து வைக்கிறதா? இதற்கெல்லாம் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார்? என்ற கேள்விகளையும் முன்வைக்கிறோம்.

♦ ஆசிரியர்களைக் கற்பித்தல் பணியிலிருந்து வெளியேற்றிவிட்டு, அந்த இடத்தில் தனியார் கல்வி வியாபாரிகளை நுழைக்கும் பள்ளிக்கல்வித்துறையின் இந்தப் போக்கிற்கு திராவிட மாடல் ஆட்சி தரப்போகும் விளக்கம் என்ன என்பதை அறிய ஆவலாக உள்ளோம்.

உமா, கல்விச் செயல்பாட்டாளர்
நன்றி: சுவடு இணையதளம்

disclaimer

அரசுக்கு எதிராக மங்கோலிய மக்கள் போராட்டம்!

டந்த டிசம்பர் 4–ஆம் தேதி முதல் மங்கோலிய நாட்டில், நிலக்கரி துறையில் பில்லியன் கணக்கில் நடந்த ஊழலைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசுக்கெதிராக மக்கள் போர்க்குணமிக்க முறையில் போராடி வருகின்றனர். குறிப்பாக, பாராளுமன்றத்தை கலைக்கக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் (-30 °C) உறையவைக்கும் பணியிலும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்; இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களில் பெரும்பான்மையினர் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே, உள்ளூர் சிறு வணிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டக்காரர்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கும் வகையில் உணவு, தேநீர் முதலானவற்றை வழங்கி வருகின்றனர்.

அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்க நிறுவனமான எர்டெனெஸ் டவன் டோல்கோயிலில் (Ertenes Tavan Tolgoi-ETT) ஊழல் நடந்து இருப்பதுதான் இப்போராட்டம் தொடங்குவதற்கு அடிப்படைக் காரணமாகும்.

படிக்க : உருமாறி வரும் கொரோனா : பெருந்தொற்றுகளின் வரலாறு !

இந்நிறுவனமானது 2011 முதல் 2017 வரை நிலக்கரி ஏற்றுமதி செய்ததற்கான எந்த தரவுகளையும் சமர்ப்பிக்கவில்லை. கடந்த அக்டோபர் மாதம் கிட்டத்தட்ட நான்கு லட்சம் டன் நிலக்கரி கணக்கில் வரவில்லை என மங்கோலிய அரசே தெரிவித்துள்ளது.

இந்த ஊழல் குற்றச்சாட்டில் அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி பட்டுல்கா கால்ட்மாவும் ஈடுபட்டுள்ளார். அவர்மட்டுமன்றி பல்வேறு முக்கிய தலைவர்களும் ஈடுபட்டுள்ளனர். ஊழல் குற்றவாளிகளின் முழுமையான பட்டியலை வெளியிடக்கோரியும், அவர்களை தண்டிக்க வேண்டும் என்றும், அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் மங்கோலிய மக்கள் போராட்டத்தை துவங்கினர். ஆனால், தற்போது போராட்டம் அரசைக் கலைக்கக் கோரி முன்னேறி வருகிறது. கடந்த வாரம் போராட்டகாரர்கள் அரச மாளிகையை கைப்பற்ற முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

000

சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அமைந்திருக்கும் நாடுதான் மங்கோலியா. அங்கு சுரங்கத் தொழில் மிக முக்கிய தொழில் ஆதாரமாகும். மேலும், உள்நாட்டு உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்ற தொழிலாகவும் அது இருக்கிறது. தாமிரம், தங்கம், நிலக்கரி உள்ளிட்ட கனிமங்களை வெட்டியெடுக்கும் சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல நாடுகளில் அந்நாட்டு அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் தீவிரமாக நடந்துவருவதைப் போல, மங்கோலியாவிலும் மக்கள் போராட்டங்கள் நாடு தழுவிய அளவில் நடந்து வருகின்றன.

சான்றாக, கடந்த 2015-ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கத்தின் ஏகபோக உரிமையை மங்கோலிய அரசு சீனாவை சார்ந்த நிறுவனத்துக்கு மாற்றிக் கொடுத்ததை தொடர்ந்து மிகப்பெரிய அளவில் தொழிலாளர்கள் போராட்டங்களைக் கட்டியமைத்ததைக் குறிப்பிடலாம். அரசின் இந்நடவடிக்கைக்கு எதிராக தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தீக்குளித்ததன் மூலம் இப்போராட்டத்தின் தீவிரத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட மக்கள் போராட்டங்கள் தொடர்ந்து நடந்தாலும், மங்கோலியாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நிலக்கரி ஏற்றுமதியில் மங்கோலியா வளர்ச்சியடைந்து இருந்தாலும், சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கைநிலைமையானது நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்தே வந்தது. கொரோனா பெருந்தொற்றானது மக்களின் இந்நிலைமையை மேலும் மோசமாக்கியது.

கொரோனா ஊரடங்கில் புதிதாக குழந்தை பெற்ற தாய் ஒருவர், கொரோனா நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்ததால், அரசாங்கத்தால் உடலை உறைய வைக்கும் கடுங்குளிரில் எவ்வித பாதுகாப்பு சாதனமும் இன்றி தனிமைப்படுத்தும் அறைக்கு மாற்றப்பட்டார். இச்சம்பவத்தை ஒட்டிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. எனவே  நாடு தழுவிய அளவில் மக்கள் போராட்டம் வெடித்தது.

அப்போராட்டமானது அந்நிகழ்வை மட்டும் கண்டிப்பதோடு நில்லாமல், கொரோனா பெருந்தொற்றை மங்கோலிய அரசு முறையாக கையாளதை எதிர்த்த போராட்டமாக மாறியது. மக்கள் போராட்டத்தின் தீவிரத்தால், அப்போதைய பிரதமர் உக்நாகின் அரசின் நடவடிக்கைகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆள்பவர்கள் மாறினாலும், மக்களின் வாழ்நிலைமைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தற்போது வரை மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் எவ்வித நடவடிக்கைகளையும் மங்கோலிய அரசு மேற்கொள்ளவில்லை; ஏற்றத்தாழ்வுகள் சற்றும் குறைந்தபாடில்லை; பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. குறிப்பாக, தற்போது பணவீக்கமானது 15.2% -ஆக உயர்ந்துள்ளது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதன் விளைவாக ஒருபுறம் வறுமை, வேலையின்மை முதலானவற்றால் மக்கள் அவதிக்குள்ளாவதுடன், மறுபுறம் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களுடைய இலாபவெறிக்காக கனிமவளங்களை வரைமுறையின்றி வெட்டி எடுப்பதால் நாட்டின் சுற்றுச்சுழல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி மக்கள் வாழ முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காற்று மாசுபாடு நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

படிக்க : ஐரோப்பிய உணவு வங்கிகள்: ஏகாதிபத்திய உலகின் அவலம்

இந்நிலைமைகளை தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் – ரஷ்யா போரானது மேலும் தீவிரப்படுத்தியது. இந்த நிலைமைதான், -மக்களால் இனிமேல் வாழவே முடியாது என்கிற நிலைமைதான்- அரசுக்கு எதிரான இம்மாபெரும் போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களையும் இணைத்துக்கொள்ள தூண்டியது. இதுதான் வெறும் ஊழல்வாதிகளுக்கெதிராக ஆரம்பித்த போராட்டத்தை அரசுக்கெதிரான போராட்டமாக மாற்றியது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தால் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, இலங்கை போன்ற உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுவரும் மக்கள் போராட்டங்களைத் தொடர்ந்து, மங்கோலியாவில் நடைபெற்றுவரும் இந்த போராட்டமானது, ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தோல்வியையும், என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அதன் நெருக்கடியின் தீவிரத்தையும் உணர்த்தும் மற்றுமொரு வெளிப்பாடாகும்.

இசை

சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?

மீபகாலமாக தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடையே போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. போதை பொருள் விற்கும் மாஃபியா கும்பல்களும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இக்கும்பல்களை ஒழிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் டாஸ்மாக் கடைகளை நடத்தி தமிழகத்தை சீரழித்து வரும் தமிழக அரசு, தற்போது கண் துடைப்பிற்காக சில நடவடிக்கைகளை அரங்கேற்றி நாடகமாடி வருகிறது தமிழக அரசு.

கடந்த 14.09.2022 அன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் போதை பழக்க வழக்கங்களில் இருந்து பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் சென்னை மாநகர போலீசுத்துறை சார்பில் ‘சிற்பி’ (Students in Responsible Police Initiatives (SIRPI)) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “சிறுவர்களை சமூக ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது நம் கடமை” என்று வலியுறுத்தியுள்ளார். இதற்காக தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சீருடைகளையும், பள்ளிகளில் ஒருங்கிணைப்பு அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.

படிக்க : இல்லம் தேடிக் கல்வி கொள்கை என்ற பெயரில் திணிக்கப்படும் புதிய கல்விக் கொள்கை! | புமாஇமு கண்டனம்!

இதில் முதல்வர்  ஸ்டாலின் பேசியதாவது: “போலீசுத்துறையை மக்களின் நண்பன் என்கிறோம். அதற்கேற்ப, மக்கள் அனைவரும் போலீசுத்துறையின் நண்பர்களாக இருக்க வேண்டும். போலீசுத்துறையும் மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் குற்றங்கள் குறையும் என்பதைவிட, குற்றங்களே நிகழாமல் தடுக்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலைவாய்ப்பின்மை போன்றவையே சிறுவர்கள் குற்றச்செயலில் ஈடுபட காரணமாக உள்ளன. இவற்றை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் அவர்கள் குற்றச்செயலில் ஈடுபடுவதை தடுக்க முடியும்.

போதைப்பொருள் ஒழிப்பு, குடிப் பழக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகள், சட்டம் சார்ந்த விழிப்புணர்வு, அரசு சார்ந்த, அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்துதல், சுய ஆளுமைத் திறனை மேம்படுத்துதல், பெற்றோர் பேச்சை மதித்து நடத்தல், பொதுமக்களுடன் தொடர்பு, இளம் வயதிலிருந்தே போக்குவரத்து விதிகளை கடைபிடிக்கச் செய்தல், மாநிலத்தின் செழுமை, வளர்ச்சியை கண்டு பெருமை கொள்ளச் செய்தல் ஆகிய பண்புகளை சிறார்களிடம் உருவாக்க வேண்டும்.

இத்திட்டத்துக்கு 100 பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு படிக்கும் 2,764 மாணவர்களும், 2,236 மாணவிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இப்பள்ளிகளில் ஒவ்வொரு புதன்கிழமையும் மாணவ, மாணவிகள் இந்த ஒருங்கிணைப்பு அதிகாரிகளின் முன்னிலையில் கூடுவார்கள். அவர்களுக்கான வகுப்புகளை போலீசு அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் நடத்துவார்கள்” என்று இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகளை முதல்வர் விளக்கியுள்ளார்.

மேலே முதல்வர் ஸ்டாலின் விளக்கியுள்ள படி பள்ளி மாணவர்களை ஒழுக்கமுள்ளவர்களாகவும், சமூக பற்றுள்ளவர்களாகவும் வளர்க்க வேண்டியதும், சிறார் குற்றங்கள் நிகழாதபடியும், மாணவர்களை மதுபழக்கத்தில் இருந்து மீட்டெடுப்பதும் அவசியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. கட்டாயம் செய்தாக வேண்டும்.

ஆனால், தமிழக அரசு கொண்டு வந்துள்ள சிற்பி திட்டம் இந்த வேலையை  நிறைவேற்றுமா என்று சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில், இந்தத் திட்டத்தை செயல்படுத்த போவது போலீசுத்துறை ஆகும்.

போலீசுதான் மாணவர்களுக்கு முதல்வர் குறிப்பிடுகின்ற நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்க போகிறார்கள் என்றால், மாணவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்களால் செய்ய முடியாததை போலீசால் மட்டும் எப்படி செய்ய முடியும்? இந்த நற்பண்புகளை கற்றுக் கொடுக்கத்தான் பாடத்திட்டங்கள், பயிற்றுவிக்கும் முறைகள், அவற்றிற்கான ஆசிரியர்கள், பள்ளிகள் ஆகிய கட்டமைப்புகள் உள்ளன. இந்தக் கட்டமைப்பு சரியாக செயல்படவில்லை என்கிறபோது கட்டமைப்பை சரிசெய்யாமல், போலீசை வைத்து கற்றுக் கொடுப்பது எப்படி தீர்வாகும்?

மாணவர்களுக்கு போதை பொருள், மதுவினால் ஏற்படும் பாதிப்புகள் நாம் அனைவரும் அறிந்ததே. போதை பொருள் விற்கும் மாஃபியா கிரிமினல் கும்பல்களும், மதுவை விற்கும் அரசும் இதன் மூலம் கல்லாகட்டி வருகிறது. அவற்றை ஒழித்து கட்டாமல் மாணவர்களை குற்றவாளிகளாக்கி போலீசு மூலம் கண்காணிக்க வழி செய்வதே ’சிற்பி’ திட்டமாகும்.

மேலும், குடும்ப உறுப்பினர்களின் கவனக்குறைவு, போதிய வருவாய் இல்லாமை, ஆதரவின்றி வளர்வது, வேலையின்மையே குற்ற செயல்களில் ஈடுபட காரணம் என கூறிவிட்டு அதை தீர்ப்பதற்கான வேலையை செய்வதை புறந்தள்ளிவிட்டு, பள்ளி மாணவர்களை  கண்காணிப்பதால் மட்டும் இவை எல்லாம் தீர்ந்து விடுமா?

கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலர் வெ.இறையன்பு, “இத்திட்டத்தில் மாணவர்களுக்கு போலீசுத்துறையினரால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். போதை ஒழிப்பில் இருந்து பல்வேறு நன்னடத்தைகளை கற்பார்கள். தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்வார்கள். இது மற்ற மாணவர்களிடம் நாமும் தூய்மையானவர்களாக திகழ வேண்டும், திறன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். அதன்மூலம் அவர்களும் தங்களை மேம்படுத்திக் கொள்வர். 100 பள்ளிகளிலும் இப்பழக்கம் ஏற்படும்போது, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாற்றம் ஏற்படும். எதிர்காலத்தில் நாட்டுக்கு பங்களிப்பவர்களாகவும், சட்ட திட்டத்தை மதிப்பவர்களாகவும் திகழ்வார்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை இந்த சிற்பி திட்டம் விதைக்கிறது” என்றார்.

பார்க்க : அரசுப் பள்ளி ஆசிரியர்களை வதைக்கும் மத்திய, மாநில அரசுகள்!

இதிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது என்ன வென்றால் இனி பள்ளியில் பாடம் நடத்தபோவது கட்டாயம் ஆசிரியர்கள் இல்லை போலீசுதான் என்பதாகும். இவ்வாறு போலீசு வழங்கும் பயிற்சியின் மூலம் தங்களை தாங்களே ஒழுங்குப்படுத்திக் கொள்வதோடு, இதை பார்க்கும் மற்ற மாணவர்களுக்கும் தங்களை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் என்றால், அந்த பயிற்சியை ஆசிரியர்களால் ஏன் கொடுக்க முடியாது.

போலீசு மூலம் மாணவர்களை ஒழுங்குபடுத்தும் வேலையை அரசுப் பள்ளிகளில் மட்டும்தான் தமிழக அரசு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது போலீசு கண்காணிப்புக்குள் அரசுப் பள்ளிகளை கொண்டு வரும் தமிழக அரசு, தனியார் பள்ளிகளில் நடக்கும் கிரிமினல் குற்றங்கள் மற்றும் சீரழிவுகளுக்கு எந்த கண்காணிப்பையும்  போடுவதில்லையே அது ஏன் என்ற கேள்விக்கு எந்த விளக்கமில்லை. அதாவது தனியார் பள்ளி மாணவர்கள் போதைப்பழக்கத்திற்கும், ஒழுக்க சீர்கேட்டிற்கும் பலியாகவில்லை என்றாகிவிடுமா?

ஆகையால் தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.

போதைப் பொருட்கள், விபச்சாரம் உள்ளிட்ட அனைத்து குற்றச் செயல்களின் பிறப்பிடம் போலீசுதான். போலீசுத்துறையை ஒழித்தாலே குற்றங்கள் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம். அதனைவிடுத்து போலீசை வைத்து குற்றங்களைக் குறைக்கப்போவதாக சொல்வது மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, தமிழக அரசின் சிற்பி திட்டத்தை எதிர்த்துப் போராடுவது நமது அனைவரின் கடமையாகும்.

அபுபக்கர்

நிகோபாரை அழிக்க படையெடுக்கும் காவி-கார்ப்பரேட் வெட்டுக்கிளிகள்!

0

’வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் அழிக்கப்படும் நிகோபார் தீவுகள்!

மோடி அரசாங்கம் கிரேட் நிகோபார் தீவுகளில் ₹ 72,000 கோடி செலவில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள உள்ளதாகக் கூறியிருக்கிறது. இத்திட்டத்திற்காக 8 இலட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வெட்டப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான பணிகள் அடுத்த ஆண்டில் துவங்க உள்ளன.

‘அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் உள்ள கிரேட் நிகோபார் தீவுகளின் முழுமையான வளர்ச்சி’ (Holistic Development of Great Nicobar Island in Andaman & Nicobar Islands) என்று இத்திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இத்திட்டமானது நான்கு இணை திட்டங்களைக் கொண்டுள்ளது:

  • 1.42 கோடி 20 அடி கொள்கலன்களை (Twenty-foot Equivalent Unit – TEU) கையாளும் அளவிலான சர்வதேச சரக்குப் பெட்டக பரிமாற்ற முனையம் (International Container Transhipment Terminal – ICTT) அமைப்பதற்கான திட்டம்
  • போகும் வழி வரும் வழி என இரு வழிகளிலும் தலா 4,000 பயணிகளை கையாளும் வகையிலான பசுமை விமான நிலையம்
  • ஒரு புதிய நகரம்
  • 16,610 ஹெக்டேர் பரப்பளவில் 450 மெகாவாட் (MVA) எரிவாயு மற்றும் சூரிய மின் நிலையம்

கடந்த நவம்பர் மாதத்தில் இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் (MoEFCC) சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் தற்போது 8 இலட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட உள்ளன. 2 தேசிய பூங்காக்களும், 1 உயிர்க்கோளக் காப்பகமும் (biosphere reserve) பாதிக்கப்படும். 910 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட கிரேட் நிகோபார் தீவுகளில் 161 சதுர கிலோமீட்டர் இத்திட்டத்திற்காக எடுத்துக்கொள்ளப்படும்; இதில் 130 சதுர கிலோமீட்டர் முதன்மை வனப்பகுதியாகும்.


படிக்க: மேற்கு சிங்பூமில் ஜார்க்கண்ட் அரசை எதிர்த்து பழங்குடிகள் போராட்டம்!


வன பாதுகாப்பு சட்டம் 1980-யின் படி, வளர்ச்சி திட்டம் என்று கூறப்படும் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டால், எவ்வளவு பரப்பளவு காடுகள் அழிக்கப்படுகிறதோ அதே அளவிளான ஈடுசெய் காடு வளர்ப்பை (compensatory afforestation) காடுகள் அல்லாத பகுதிகளில் மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், 2019 ஆம் ஆண்டில், மோடி அரசு இச்சட்டத்தின் விதிகளை 75 சதவிகிதத்திற்கு மேல் வனப் பரப்பளவு கொண்ட மாநிலங்கள் ஈடுசெய் காடு வளர்ப்பை வேறு மாநிலங்களில் மேற்கொள்ள வழிவகை செய்துகொள்ளலாம் என்று திருத்தி விட்டது.

அந்தமான் நிகோபார் தீவுகள் 80 சதவிகிதம் வனப் பரப்பளவு கொண்டுள்ளதால், (திருத்தப்பட்ட புதிய விதிகளின்படி) அங்கு வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக மத்திய பிரதேசம் ஹரியானா ஆகிய மாநிலங்களில் மரம்நடப் போகிறார்களாம். இந்தியாவிலேயே ஹரியானா மாநிலம் தான் வனப் பரப்பளவு மிகவும் குறைவாக உள்ள மாநிலம் (3.63 சதவிகிதம்) என்பது குறிப்பிடத்தக்கது. தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு அதிகம் இருப்பதால், டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஹரியானா மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கதை அளக்கிறார்கள்.

நவம்பர் 11 அன்று சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அந்த அனுமதியில் மெகாபோட் பறவை (megapode), கடலாமைகள் மற்றும் பிற உயிரினங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். இவ்வாறு சுற்றுச்சூழல் அனுமதி அளித்துவிட்டு ஆய்வு நடத்துவதானது பாசிச மோடி அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

கிரேட் நிகோபார் தீவானது 648 தாவர இனங்களுக்கும் 330 விலங்கு இனங்களுக்கும் புகலிடமாகும். இத்திட்டத்தால் கடல் ஆமைகள் முட்டையிடும் தளங்களும், அழிவாய்ப்பு இனமான (vulnerable species) நிகோபார் மெகாபோட் பறவை முட்டையிடும் தளங்களில் குறைந்தது 30 தளங்களும் பாதிக்கப்படும். எந்த இடத்தில் எவ்வளவு மரங்கள் நடப்பட்டாலும் அவை மழைக்காடுகள் மற்றும் சதுப்பு நில காடுகளுக்கு ஒருபோதும் ஈடாகாது.


படிக்க: அருணாச்சல பிரதேசத்தில் புறக்கணிக்கப்படும் சக்மா பழங்குடிகள்!


இயற்கை அழிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, இன்னொரு புறம் கிரேட் நிகோபார் தீவுகளின் பூர்வக் குடிகள் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள்‌. 1960-களில் ஷோம்பென் (Shompen) மற்றும் நிகோபாரி (Nicobarese) மக்களுக்குச் சொந்தமானதாக இத்தீவு இருந்தது. பின்னர் இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து மக்கள் அங்கு குடியேற்றப்பட்டனர். அத்தீவின் மக்கள் தொகை தற்போது 8,067; சுமார் 200 ஷோம்பென் மக்களும், 1000 நிகோபாரி மக்களும் உள்ளனர். இத்திட்டத்தை நிறைவேற்றிய பின்னர், அடுத்த 30 ஆண்டுகளில் சுமார் 3.5 இலட்சம் பேர் கிரேட் நிகோபார் தீவில் குடியேறப் போகிறார்கள். இது பூர்வக் குடிகளை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாகும்.

ஷோம்பென் பழங்குடியின பெண்மணி

விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காக ‘வளர்ச்சி திட்டம்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அதற்கு சட்ட விதிகள் தடையாக இருந்தால் அவை மாற்றப்படுகின்றன; 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படுகின்றன; நிலச்சூழல் மண்டலங்களும் (terrestrial ecosystems)கடல் சூழல் மண்டலங்களும் (marine ecosystems) அழிக்கப்படுகின்றன; பூர்வக்குடி மக்களும் அடையாளம் சிதைக்கப்பட்டு தமது சொந்த நிலத்திலேயே அகதிகளாக்கப் படுகின்றனர். காவி-கார்ப்பரேட் பாசிசம் கோரத்தாண்டவம் ஆடுகிறது.

பொம்மி

பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதா 2021: பல்லுயிரிகள் மீதான பாசிசத்தாக்குதல்!

ந்தியாவின் பல்லுயிர்த்தன்மையைப் பெயரளாவிற்காவது பாதுகாக்க நகோயா நெறிமுறைகளின்படி 1992-ல், ரியோ டி ஜெனிரொவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபையின் உயிரினப் பன்மயம் குறித்த மாநாட்டில் எட்டப்பட்ட உடன்பாட்டின் அடிப்படையில்தான் பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2002 கொண்டுவரப்பட்டது. இச்சட்டமானது ஒரு நாடு அதன் எல்லைக்குள் உள்ள இயற்கை செல்வம் மற்றும் வளங்களின் மீது முழு இறையாண்மை செலுத்துவதை உறுதி செய்கிறது. இந்தச் சட்டத்தைதான் திருத்துவதற்காக பல்லுயிர்ப் பாதுகாப்புச் சட்டத்திருத்த மசோதா 2021-ஐ அக்டோபர் 2021 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது மோடி அரசு.

இச்சட்டத் திருத்தத்தில் முதலாவதாக, உயிரி வளங்கள் மற்றும் உயிரி வளங்களின் மரபு சார்ந்த அறிவை பயன்படுத்தும் போதும் கிடைக்கும் பலன்களை சம்மந்தப்பட்ட உள்ளூர் மக்கள் மற்றும் சமுதாயத்தினருக்கு சமமாக பகிர்ந்து கொடுப்பதை உறுதி செய்கிற அம்சத்தைத் திருத்தியுள்ளது. அதன்படி, பயன்பாட்டுப் பலன்களை உள்ளூர் மக்களுக்கன்றி, தேசிய பல்லுயிர் ஆணையத்திற்கு பகிர்ந்தளிக்கும் வகையில் மாற்றியளித்துள்ளது.

படிக்க : காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !

இரண்டாவதாக, இத்தகைய உயிரி வளப் பயன்பாட்டுப் பலன்களைப் பகிர்ந்தளிப்பதலிருந்து சில நிறுவனங்களுக்கு விலக்கும் அளித்துள்ளது. குறிப்பாக ஆயுஷ் எனப்படும் ஆயுர்வேதா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவதாக, இந்தியாவின் மரபு உயிரிவளங்களைப் பயன்படுத்துவதற்கு இந்திய நிறுவனங்கள் மாநில பல்லுயிர் வாரியத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை, இந்தியாவைச் சாராத இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் தேசியப் பல்லுயிரி வாரியத்திடம் (இந்திய அரசு) அனுமதி பெறத்தேவையில்லை. உயிரிவளங்கள் பயன்பாடு என்ற பெயரில் சிற்றினங்கள், துணை சிற்றினங்கள் என்ற எந்த பாகுபாடின்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என்று திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திருத்தங்களானது இந்திய உயிரிவளங்களின் மீதான இறையாண்மையை பன்னாட்டு – உள்நாட்டு ஏகபோகங்களுக்கு விட்டுக் கொடுப்பதாகும். அதுமட்டுமின்றி காலங்காலமாக பாதுகாத்து வரும் இம்மண்ணின் இயற்கை உயிரிவளங்களை டாபர், பதஞ்சலி, ஹிமாலயா, யூனிலிவர் போன்ற பான்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் சூறையாடலுக்குக் கொடுக்கப்பட்ட சட்ட அங்கீகாரமாகும்.

மேலும், மஞ்சள், வேம்பு ஆகியவை பற்றிய மரபு சார்ந்த அறிவை பன்னாட்டு ஏகபோகங்கள் கொள்ளையிடும் முயற்சியை போராடித்தான் தடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நம்மண்ணின் வளத்தை, இவ்வளம் பற்றிய மரபு சார்ந்த நம்மக்களின் அறிவை கொள்ளையடித்து உள்நாட்டு-வெளிநாட்டு ஏகபோகங்கள் அறிவுசார் சொத்துடைமையாக தனதாக்கிக் கொள்வதற்கான ஏற்பாடே இச்சட்டத்திருத்தம்.

தங்கம்

தோழர்களுக்கு பத்து கேள்விகள்!

தானியின் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மீனவர்கள் போராடிவருவதை நாம் அனைவரும் அறிவோம்.

அதானியின் துறைமுகத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விழிஞ்சம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட மீனவர்கள், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டோம், ஏராளமான உயிர்களை காப்பாற்றினோம், அதற்கு அரசு எங்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா?” எனக் கேட்கின்றனர்.

அதானி குழுமத்திற்கும், கேரள அரசுக்குமிடையே 2015-ல் ஒப்பந்தமாகி கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகத் திட்டத்தால் ஏற்படும் கடலரிப்பால் 56,000 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள் போராட்டக்குழுவினர். விழிஞ்சம் அருகிலுள்ள கோட்டூர்புரத்தில் மட்டும் 5,000 குடும்பங்களின்  வாழ்வாதாரம் அழிவுக்குள்ளாகும்.

திட்டத்தை அமல்படுத்த தொடங்கிய நாள் முதலே கடலரிப்பும், பாதிப்பும் அதிகமாகி பல குடும்பங்கள் வீடுகளை இழந்துவிட்டனர். இத்திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்த நிலையில் போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக 3000 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது போலீசு. இதனிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

படிக்க : கேரளாவின் விழிஞ்சம் துறைமுக விவகாரத்தில் கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்டுகளுடன் கைகோர்த்துள்ள சி.பி.ஐ(எம்) !

அதானி விழிஞ்சம் துறைமுகத்திட்டம் அறிவியலடிப்படையிலானது அல்ல என்கின்றனர் போராட்டக்குழுவினர். கேரள சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்காளரின் அறிக்கையும் 2015-ல் போடப்பட்ட ஒப்பந்தம் கேரளத்தின் நலனை பாதுகாப்பதாக இல்லை என்கிறது.

எதிர்க்கட்சியாக இருந்தபோது அதானி குழுமத்துடனான துறைமுக ஒப்பந்தத்தை வழிப்பறிக்கொள்ளை, இதில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்த்த சி.பி.எம் கட்சி, ஆட்சியை கைப்பற்றிய பிறகு, “துறைமுக கட்டுமானப் பணிகளை நிறுத்த முடியாது, போராடுபவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்கிறது. இதற்கும் மேலேபோய் அதானி குழுமம் துறைமுகத் திட்டப்பணியை பாதுகாக்க நடத்தப்பட்ட பேரணியில் சி.பி.எம் மாவட்ட செயலரும், பி.ஜே.பி மாவட்ட செயலாளரும் ஒன்றாக அணிவகுக்கிறார்கள்.

சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தலைமைக் கணக்காளரின் அறிக்கையிலுள்ள ஒப்பந்த விபரங்கள், கருத்துகளிலிருந்து இத்திட்டத்தால் அதானி குழுமத்திற்கே லாபம், அதானி குழுமம் நலன் காக்கவே இந்த துறைமுகத்திட்டம் என்பது தெளிவாக தெரிகிறது். திட்டத்தை அமல்படுத்த தொடங்கிய 2015 முதல் அதிகரிக்கும் கடலரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் ஏற்படப்போகும் மோசமான அழிவுகள் பற்றி கண்முன்னே உணர்த்துகின்றன.

இருந்தும் மக்கள்நலன், தேச நலன் என்று பேசும் கட்சிகள் தாம் நேசிப்பதாகக் கூறும் மக்களின் வாழ்க்கை தம் கண்முன்னே அழிவதைப்பற்றி கவலைகொள்ளாமல், கார்ப்பரேட் கொள்ளைக்கு துணைபோவதை நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாக கூறுவதெப்படி? – வாழ்க்கையை பாதுகாக்க போராடும் மீனவர்களை ஒடுக்குவதும், வளர்ச்சித் திட்டத்தை சீர்குலைக்கும் சதிகாரர்களாக அவர்களை சித்தரிப்பதும் எப்படி? – இது தேச நலன், மக்கள் நலன் என்று பேசிக்கொண்டு, இந்த போர்வையால் தங்களை மறைத்துக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது என்பதுதான்.

நாட்டையும், மக்களையும், கம்யூனிசத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் தம் கண்முன்னே நடைபெறும் நிகழ்வுகளை விருப்பு, வெறுப்பின்றி பரிசீலித்து உணர்வதன் மூலமே உண்மையின் பக்கம் நிற்பதையும், தாம் சரியான இடத்தில் நிற்பதையும் உறுதிப்படுத்த முடியும். இதன் மூலமே மக்களின் போராட்டங்கள் மேலும் வலுப்பெற முடியும். மக்களின் எதிரிகளான காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை வீழ்த்த முடியும்.

பிஜேபியுடன் இணைந்து அதானியின் விழிஞ்சம் துறைமுகத்திற்கு ஆதரவாகவும், போராடும் மக்களுக்கு எதிராகவும் பேரணி நடத்திய கேரள சி.பி.ஐ(எம்) கட்சி

சி.பி.ஐ(எம்) தோழர்களுக்கு பத்து கேள்விகள்!

01.ஆர்.எஸ்எஸ்-பி.ஜே.பி.யினர் பாசிஸ்டுகள், மக்கள் நலனுக்கு எதிரானவர்கள், அவர்களுக்கெதிரான சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று கூறிவிட்டு, விழிஞ்சம் மக்களின் போராட்டத்திற்கெதிராக பா.ஜ.க பாசிஸ்டுகளுடன் கைகோர்த்து நிற்பது ஏன்?

02.விழிஞ்சம் மக்கள் போராட்டம் போலவே, கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக, தங்கள் நிலம், வாழ்வாதாரத்திற்காக, போராடிய நந்திகிராம் மக்களின் போராட்டத்தை கடுமையாக அடக்கியதால்தான் மேற்குவங்க மக்களிடம் செல்வாக்கிழந்து முப்பது ஆண்டுக்கு மேல் ஆட்சியில் இருந்த சி.பி.ஐ(எம்) கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது என்பதை யாராவது மறுக்க முடியுமா?

03.தங்கள் வாழ்வுரிமைக்காக விழிஞ்சம் துறைமுகத்திட்டத்தை எதிர்த்த மீனவர்களின் போராட்டத்தை “வெளிநாட்டு சதி”, “வளர்ச்சிக்கெதிராக திட்டமிட்டு சதி செய்பவர்கள்” என்றெல்லாம் இழிவுபடுத்துவது – அதானி, அம்பானியே எங்கள் கூட்டாளி, மீனவப் பாட்டாளிகள் எங்கள் பகையாளிகள் என்று முழங்குவதற்கு சமமல்லவா!

04.உம்மன் சாண்டி ஆட்சியின்போது போடப்பட்ட அதானியின் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை வழிப்பறிக்கொள்ளை, அநீதியானது என எதிர்த்த சி.பி.எம் கட்சி, தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒப்பந்தத்தை இரத்து செய்யாமல், ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாக அமல்படுத்துவதன் காரணம் என்ன?

05.அதானியின் துறைமுகத்திட்டத்தை கைவிடமுடியாது. கைவிட்டால் கேரளாவின் நம்பகத்தன்மை போய்விடும் என்கிறார் முதல்வர் பினராயி விஜயன். அப்படியானால் அதானி, அம்பானியின் நம்பிக்கைதான் முக்கியம். மீனவர்கள், கடலோர மக்களின் நம்பிக்கை, வாழ்க்கை பற்றி கவலையில்லை என்பது தானே!

06.சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கையின்படி இத்திட்டம் கேரளத்தின் நலனை பாதுகாக்கவில்லை, இழப்பையே தரும் என்றால் உண்மையில் இத்திட்டத்தால் யார் லாபமடைவது, அதானியா? கேரள மக்களா?

07.கேரளாவில் நூற்றுக்கணக்கில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் ஆர்.எஸ்,எஸ்-பி.ஜே.பி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தொண்டர்களின் உணர்வு, வலியை அலட்சியமாக புறக்கணித்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி அதானி துறைமுகத் திட்டத்திற்கு ஆதரவாக பி.ஜே.பி-யினருடன் பேரணியில் கைகோர்க்க வைத்தது, சொந்த அணிகளுக்கு இழைத்த பச்சை துரோகமல்லவா?

படிக்க : உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !

08.எதிர் கட்சியாக இருந்தால் கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஆட்சியில் இருந்தால் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை அமல்படுத்தி மக்களை ஒடுக்குவது – இது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா?

09.போராடும் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான நிபுணர்கள், மீனவர்கள் அடங்கிய குழுவின் மூலம் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நியாயமான மக்களின் கோரிக்கையை உடனே அமல்படுத்தாதது ஏன்? மக்கள் வாழ்க்கை, சுற்றுச்சூழல் அழிவெல்லாம் பெரிதல்ல என்பதைத்தவிர இதற்கு வேறென்ன பொருள்?

கேரள சி.பி.ஐ(எம்) அலுவலகத்தில் அதானி

10.அதானி துறைமுகத் திட்டத்திற்கான செலவில் வெறும் 33 சதவீதமே அதானியின் பங்கு, மீதம் 67 சதவீதம் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. ஆனாலும் துறைமுக நிர்வாகமும், 40 வருட லாபமும் அதானிக்கு! மக்களின் வாழ்வாதாரம், வரிப்பணத்தை அதானிக்கு தாரைவார்த்துக் கொண்டு பொதுத்துறையை தனியார்மயமாக்காதே என முழங்குவது எதற்காக?

அம்பானியும் அதானியும் மோடியின் நண்பர்கள் என்கிறார் யெச்சூரி! அதே அதானியை கொண்டு கம்பெனியை தொடங்குகிறது சி.பி.ஐ(எம்). இந்த துரோகத்திற்கு எதிராக சி.பி.ஐ(எம்) தோழர்கள் போராட வேண்டும்.

ராஜன்

Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power

11.12.2022

Conspiracy to reopen the murderous Sterlite!
Let’s support the struggling Tuticorin people!

Press release

Advertisements of the murderous Vedanta Sterlite Corporation have been appearing for the past few days in newspapers and television.

“Strike is towards Destruction, Scholarships awarded to Tuticorin children, Green Tuticorin – 1.25 lakh trees planted” are advertised.

Sterlite Vedanta Corporation has been involved in various crimes like operating without permission, direct burial of hazardous waste in the soil and not creating a green belt for many years. This was revealed during the hearing of the case against the Sterlite plant by the Madras High Court.

Sterlite company and Tamil Nadu police jointly fired and severely suppressed the people in Tuticorin who protested against Sterlite issue.


Also Read: The Supreme Court’s confirmed the desicion of 10% reservation! | People’s power Press release


Close to five years after the firing, anti-people campaign in support of the Sterlite plant has been continuing till now, justifying the firing and insisting on reopening the sterlite plant.

But till now, the Tuticorin District Police has banned anyone from speaking against the Sterlite plant. The Tuticorin police had also told them that not to talk about Aruna Jagadeesan’s statement in the recent protest held by the Indian Democratic Youth Association. Thus, the police have made it a condition that no one should speak against Sterlite during the demonstrations and protests in Tuticorin.

But in Tuticorin, continuous campaigns are going on in favor of Sterlite. The police never stopped it. Instead the police encourages them.

In this situation, “we will act according to the final report of the CBI investigation”, says Tuticorin District Collector. In the CBI’s chargesheet, it has been recorded that the martyrs who fought were erroneous. The people of Tuticorin tore up the CBI’s chargesheet demanding that the CBI’s investigation should be discarded.

On behalf of United Anti-Sterlite People’s Federation, a special law should be enacted to remove Sterlite permanently, the murderers should be arrested and criminal action should be taken against them.It is in this situation that the people are constantly fighting to take criminal action, and advertisements are being given by Sterlite in the media.

The People’s Power strongly condemns the anti-people media for publishing advertisements of Vedanta Sterlite Corporate Company, which has been doing injustice to the people and the land of Tuticorin.

Also, a protest insisting that a special law should be passed to remove Sterlite permanently, and the murderers of the shooting should be arrested and prosecuted is to be held on December 12. In order to disrupt this, a person claiming to be Vijayakumar from People’s Power spoke inappropriately to Prof. Fatima Babu. In that conversation, he falsely claimed that People’s Power was working with the Maoist organization.

Sterlite Vedanta itself has planned and organized such a person to disrupt the people’s protest.


Also Read: The Working People pushed towards Catastrophe by the Fascist Modi Regime!


A few years ago Sterlite stooges published a fake press report criticizing Fatima Babu in the name of people’s power. No action has been taken so far on the complaint filed against this by the police.

All the above incidents are an attempt to disrupt the people’s protests and re-establish the Sterlite plant. It is a well-known fact that the government and Tamilnadu police are helping this effort of Vedanta Sterlite Corporation. People’s power strongly condemns this.

The People’s power requests the government for immediate action against the Sterlite Vedanta Company and its supporters who are continuously disrupting law and order.

Let the struggle against Vedanta Sterlite Company, which destroyed Tuticorin soil and people’s livelihood, win!

With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power.
Contact : 99623 66321