Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 310

ஹைதராபாத் போலி என்கவுண்டர் – தமிழ் ஃபேஸ்புக் கண்டனம்

திகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பதில் இந்திய அளவில் தமிழகம் ஒரு முன்னணி மாநிலமாகவே திகழ்கிறது. தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 4 இளைஞர்களை இன்று காலையில் ஐதராபாத் போலீசு சுட்டுக் கொன்றது.

முற்போக்காளர்கள், ஜனநாயகவாதிகள் என பலரும் இந்தப் போலி என்கவுண்டரை எதிர்த்து தங்கள் கருத்தை பதிவு செய்திருக்கின்றனர். அவற்றில் சில இதோ…

Mohana Dharshiny

வன்புணர்வு செய்யப்பட்ட பெண்ணுக்கான நீதி அந்தப் பெண்ணின் சமூக அந்தஸ்தில் தங்கியிருக்கிறது. அதே போலவே குற்றவாளிக்கான தண்டனையும் அவரின் சமூக அந்தஸ்தில் தான் இருக்கிறது. கேட்க நாதியற்ற அப்பாவிகள் எனில் உடனே தண்டனை கிடைத்துவிடும்.

கத்துவா சிறுமி கோயிலில் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட போது , குற்றவாளியைக் காப்பாற்ற போராட்டம் செய்யவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்காக வாதாடிய வக்கீலை மிரட்டவும் செய்தபோது இதே நீதி எங்கே இருந்தது? அரசும் நீதிமன்றமும் வர்க்கச் சார்பற்றது என்பது தான் பெரிய பித்தலாட்டம்.

பிரியங்கா கொலையின் குற்றவாளிகளுக்காக அவர்கள் பெற்றோரே வக்கீல் வைத்து வாதாடப் போவதில்லை என்று கூறி விட்டார்கள். அதற்கான வசதியும் அவர்களிடம் இல்லை. ஆகவே என்கவுண்டர் மூலம் நீதியை நிலைநாட்டி விட்டார்கள்.

இதே துப்பாக்கிகள் தான் தூத்துக்குடியில் தமது வாழ்விற்காக போராடிய மக்களை நோக்கியும் நீண்டது. போலீஸ் துப்பாக்கிகளும் வர்க்க சார்புள்ளது தான்….
மறந்துவிடாதீர்கள்.

Sukirtha Rani

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் வல்லுறவு செய்து கொல்லப்பட்ட சகோதரியின் உண்மையான பெயரையும் ஐதராபாத்தில் பாலியல் வல்லுறவு செய்து எரிக்கப்பட்ட கால்நடை மருத்துவச் சகோதரியின் உண்மையான பெயரையும் குறிப்பிடாமல் எல்லாரும் கவனமாய்த் தவிர்ப்பதற்கும், பாலியல் வல்லுறவு செய்து தூக்கில் தொங்கவிடப்பட்ட காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்டி சிறுவள்ளூர் சகோதரியின் உண்மையான பெயரைத் தவிர்க்காமல் வெளிப்படையாக எல்லாரும் குறிப்பிடுவதற்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்.  – சாதியும் வர்க்கமும்.

படிக்க :
ஹைதராபாத் என்கவுண்டர் : எங்கள் பெயரில் கொட்டடிக் கொலைகள் கூடாது | AIPWA கண்டனம் !
சொராபுதீன் என்கவுண்டர் : 22 பேரும் விடுதலை ! நீதி தேவதைக்கு தூக்கு !

Raja Rajendran

ஐயா திடீர் என்கவுண்டர் (மனிதநேய) ஆதரவாளர்களே….. ஆமாம் அதிகாரவர்க்கமும், போலீசும் சொல்வதுதான் உண்மை, அவர்கள் பிடித்துவிட்டால் அவர்கள்தான் குற்றவாளிகள் எனில்;

1.) சோராபுதீன் என்கவுண்டர் படி அவர்கள் அனைவரும் நாட்டை அழிக்க வந்த தீவிரவாதிகள், இப்படிக்கு குஜராத் காவல்துறை !
2.) சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட நாலு மாவோயிஸ்ட்கள் எங்கள் மாநிலத்தை அழிக்க மாபெரும் சதித்திட்டம் தீட்டியவர்கள், இப்படிக்கு கேரளக் காவல்துறை !
3.) 27 தமிழகத் தொழிலாளர்கள் மட்டுமே ஆந்திராவில் செம்மரம் வெட்டி வளத்தைச் சூறையாடுபவர்கள், எனவே அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது சரி, இப்படிக்கு ஆந்திரக் காவல்துறை !
4.) ராம்குமார் கரண்ட் கம்பியை கவ்வி விளையாடித்தான் தற்கொலை செய்துக்கொண்டான் இப்படிக்கு தமிழகக் காவல்துறை !
5.) கலவரம் செய்ய ஆயுதங்கள், கற்களுடன் வந்ததால்தான் தூத்துகுடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர் இப்படிக்கு காவல்துறை சொன்னதாய் ரஜினிகாந்த் !
இதையும் ஏற்றுக்கொள்ளுங்கள். அறம் போற்றுங்கள். சங்கிகளுடன் கலந்தோமென்று ஆனந்தக் கூத்தாடுங்கள் !!!

Villavan Ramadoss

எப்படியோ பணம் இல்லாதவன் குற்றம் செய்தாலாவது உடனடி நியாயம் கிடைக்குது இல்ல, அதை நினைத்து சந்தோஷப்படலாமே?

பணக்காரன் எங்க பொண்ணுங்களை ரேப் பண்ணினா பரவாயில்லைன்னு அதுக்கு இன்னொரு அர்த்தம் வருமே, அதுக்கு எப்படிங்க சந்தோஷப்பட முடியுது உங்களால??

Rajan Radhamanalan

பொள்ளாச்சி ரேப்பிஸ்டுகளுக்கு என்னாச்சு., ஆசிரம சாமியார்களுக்கு என்னாச்சு வகையறா கேள்விகள் எழுகின்றன. வாஸ்தவம் தான். இந்த நாட்ல இப்பிடி வர்க்கத்துக்கு ஒரு நியாயம், சாதிக்கு ஒரு தர்மம்னு இருக்கறதும்; இந்த பேதத்த பொது சமூகம் கமுக்கமா மென்னு முழுங்கி கடந்து போறதும் தான் உண்மைல சகிக்க முடியாத அயோக்கியத்தனங்கள்.

இதோட எதிர்விளைவா ஒடுக்கப்படுற வர்க்கத்துலருந்து எழுந்து வர்ற கிரிமினல்கள் கொஞ்சமும் குற்ற உணர்ச்சி இல்லாத வகைல தகவமைஞ்சு வருவாங்க. அப்ப மட்டும் லபோதிபோனு கதறிப் பிரயோசனம் இல்லை. இப்பிடியே போச்சுனா இந்த சமூகத்தோட ஒரு மிகப்பெரிய மக்கள் திரள் பவாரியா கொள்ளைக் கூட்டம் மாதிரிதான் ஆகப்போகுது.

ஆனா இதுல பெரிய வருத்தமே., இந்த வழக்குல டிரையல் நடத்தி வேற யாருக்கும் தொடர்பில்லை., இவனுக மட்டும் தான் செஞ்சுருக்கானுக உறுதியான பின்னாடி கொல்றதுதான் கொஞ்சமாவது அர்த்தமுள்ளதுனு கூட புரியாத அளவுக்கு சனம் மக்குக் கூட்டமா இருக்கறதுதான்.

அவனவன் சூத்துல சூடு படாத வரைக்கும் இந்த இன்ஸ்டண்ட் ஜஸ்டிஸ் பார்க்க மசாலா படம் மாதிரி ஜாலியாதான் இருக்கும். எஞ்சாய் பண்ணுங்க!

Villavan Ramadoss

டேய், போலீசுக்கு பூ தூவி வரவேற்கிற புண்ணியவானுங்களா..

இதே துணிச்சல்ல ரேப் பண்ணப்பட்டு கொல்லப்பட்ட தலித், முஸ்லீம் இல்லை வேற ஏழை பொண்ணுங்களுக்கும் இதே மாதிரி நீதி வேண்டும்ன்னு ஸ்டேஷன் பக்கம் போயிராதீங்க. நேரம் நல்லா இருந்தா மேட்டுப்பாளையம் ட்ரீட்மெண்ட் கிடைக்கும் இல்லைன்னா தூத்துக்குடி ட்ரீட்மெண்ட்தான்.

அன்சாரி முஹம்மது

மத்திய காங்கிரஸ் ஆட்சிலேயே அந்த ரெண்டு குஜராத்தி தீவிரவாதிகளையும் என்கௌண்டர் பண்ணியிருந்தா இந்த நாட்டையும் காப்பாத்தி இருக்கலாம்!

தங்க.செங்கதிர் செங்கதிர்

போலி மோதல் கொலையை முன்னின்று நடத்திய போலீசு அதிகாரி.

காவல்துறையினரின் போலி மோதல் கொலையை ஆதரிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணராமல், சிலர் ஆகா…ஓகோ…என காவல்துறையினரின் இந்த மோசமான செயலை சிலாகித்துப் பேசுகிறார்கள். நிகழ்விடத்தில் சிலர் மலர்தூவி காவல்துறையினரை கொண்டாடியிருக்கிறார்கள்.!

ஒவ்வொரு போலி மோதல் கொலைகளின் போதும் காவல்துறையினர் சொல்லும் கதை வசனங்கள் இராஜேஸ்குமாரின் திகில் நாவலையே மிஞ்சுபவை.!

இப்போது அந்த நால்வருக்கு எதிராக நீண்ட காவல்துறையினரின் துப்பாக்கிகள் நாளை மனித உரிமை போராடும் போராளிகளுக்கு எதிராக நீளாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அப்போதும் எதிர் முகாம் அரசியலில் நிற்கும் மனிதகுல விரோதிகள் அதை ஆதரித்து நிற்பார்கள்.

ஒருநாள் அவர்களுக்கு எதிராகவும் அத்துப்பாக்கிகள் சுழலும்.!
நீதிமன்ற அமைப்பைக் கேள்விக்குள்ளாக்கும் காவல்துறையினரின் இச்செயல் வரவேற்கத்தக்கது அல்ல

Vijayabaskar S

கூட்டு வன்புணர்வு போன்ற கொடிய குற்றங்கள் நடக்கும்போது
அந்தக் குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் சட்டத்திற்குப் புறம்பாக, அராஜகமாக, நீதிமன்றத்திற்கு வெளியே, ஜனநாயகம் மாண்புகளுக்கு அப்பாற்பட்டு, குற்ற விசாரணைகளுக்கு அப்பாற்பட்டு, “என்கவுண்டர் என்ற பெயரில் கொலை” செய்யும்போது அந்தக் கொலையை வரவேற்கும் அதே நபர்கள் தான் இஸ்லாமிய நாடுகளில் குற்றவாளிகளுக்கு பொது இடத்தில் தரப்படும் தண்டனைகளை காட்டுமிராண்டித்தனம், அராஜகம், ‘இஸ்லாமியர்களே இப்படித்தான்” என்று சொல்லுவார்கள்.

இஸ்லாமிய நாடுகளின் சட்டத்தை கண்டிப்பவர்களின் காதல் ஜனநாயகத்தின் மீதானது அல்ல. மாறாக அது இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் வந்தது.

பொது இடத்தில் குற்றவாளிகளை தண்டிக்கும் இஸ்லாமிய நாடுகளை கண்டிக்கும் நபர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் எனில்
இந்தியா போன்ற நாடுகளில் நடக்கும் என்கவுண்டர் கொலைகளையும் கண்டிக்கவேண்டும். இரண்டிற்கும் பாரிய வேறுபாடு இல்லை.

ஆனால் இஸ்லாமிய நாடுகளில் நடக்கும் கொலைத்தண்டனையை கண்டிப்பவர்கள் இந்தியாவில் நடக்கும் என்கவுண்டர் கொலையை கண்டிப்பதில்லை. இந்த முரண் ஜனநாயக அடிப்படையில் வந்ததல்ல. இஸ்லாமிய வெறுப்பின் அடிப்படையில் வருகிறது.

இதற்கு தமிழக அல்லது இந்திய உதாரணம் இன்னொன்று தருகிறேன். இப்படி இப்படியான அராஜக என்கவுன்டர் கொலைகளை ஆதரிப்பவர்கள் தலித் மக்கள் மீது வன்முறை செலுத்தப்படும் போது, அந்தக் குற்றவாளிகளை இப்படி தண்டிக்கவேண்டும் என்று ஒருபோதும் சொல்வதில்லை. நம் கண்முன்னே சில நாட்களுக்கு முன்னர் 17 உயிர்கள் ஒரே இடத்தில் கொல்லப்பட்டுள்ளன.

அந்தக் கொலையாளியை, அந்தக் கொலைக்கு காரணமானவனை என்கவுண்டர் செய்ய வேண்டும் என எவரும் சொல்வதில்லை. இந்த முரணும் ஜனநாயகத்தின் அடிப்படையில் வருவதல்ல. மாறாக தலித் மக்களின் மீதான காழ்ப்புணர்வில் வருகிறது.

சு.விஜயபாஸ்கர்.

Saravanakarthikeyan Chinnadurai

என்கவுண்டர் என்பது அரச பயங்கரவாதம். மக்கள் ஆதரவு இருப்பதாலேயே அரச பயங்கரவாதம் நியாயம் ஆகிடாது. அரசுக்குத் தேவை ஒரு தீர்வு அல்லது ஒரு பிம்பம்; அதற்காக என்கவுண்டர்கள் நிகழ்த்தும். நாம் case by case தேர்ந்தெடுத்து அதை ஆதரித்தும் எதிர்த்தும் கொண்டிருக்க முடியாது. அதுதான் இதில் இருக்கும் ஆகப்பெரிய சிக்கல்.

இன்று தெலுங்கானா அரசுக்குத் தேவை வருங்காலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட குற்றம் செய்வோரிடையே பயத்தை ஏற்படுத்துவது, சட்டத்தைக் கையிலெடுத்தேனும் இது உடனடி நீதிபரிபாலனம் செய்யும் அரசு என்ற பிம்பம் ஏற்படுத்துவது. அதனால் இந்த என்கவுண்டர். தமிழக அரசுக்குச் சென்ற ஆண்டு தேவைப்பட்டது போராட்டம் செய்வோரிடையே பயத்தை விதைப்பது, செல்வாக்கு மிகுந்த ஒரு கார்ப்பரேட்டுக்கு ஆதரவாய்ச் செயல்படுவது. அதனால் தூத்துக்குடியில் சுட்டார்கள். அது சரியா? ஹைதராபாத்தை ஆதரித்து விட்டு தூத்துக்குடியை எப்படித் தடுப்பீர்கள்? துப்பாக்கி யாரைச் சுட்டாலும் சுடும் என்பது தான் இதில் சோகமான யதார்த்தம். அதனால் துப்பாக்கியை மொத்தமாய்ப் பொத்தி வைப்பதே வழி.

நீதி விசாரணை என்பதன் முக்கியத்துவம் என்ன என்பதை உணராத ஒரு மொண்ணைச் சமூகம் உருவாகுமளவு அரசும், நீதித்துறையும் இங்கே கேடுகெட்டதனமாய் நீதி விசாரணைகள் நடத்தி வந்திருப்பதும் மிகத் தெளிவாய்த் தெரிகிறது.

படிக்க :
♦ அஸ்ஸாம் போலி மோதல் கொலை : இராணுவத்தை விசாரிக்கக் கூடாதாம் !
♦ தோழர் பத்மாவை போலி மோதலில் கொல்ல முயற்சியா ? PRPC கண்டனம்

Arivazhagan Kaivalyam

தெலுங்கானா மருத்துவர் படுகொலையில் தொடர்புடையதாக சொல்லப்படும் 4 பேரையும் அரச படுகொலை செய்தாகி விட்டது. தெலுங்கானா காவல்துறைக்கு சமூக இணைய ஊடகங்களில் துவங்கி காட்சி ஊடகங்கள் வரை விழா எடுக்கும் படலம் துவங்கி விட்டது.

சரி, இந்த நால்வரில் ஒருவன் அப்பாவி இளைஞன், வழக்கமாக நமது இந்தியக் காவல்துறை நடைமுறையான பொய் வழக்கில் அகப்பட்டவன், வழக்கமான கனவுகளோடு வாழ்க்கையை எதிர்கொண்ட ஒரு எளிய குடும்பத்தின் பிரதிநிதி என்று வைத்துக் கொள்வோம். அவனது குரலும், அந்தக் குடும்பத்தின் கண்ணீரும் நமது கும்பல் மனநிலையில் உரைக்காது.

இந்தியாவில் காவல்துறைக்கென்று தனியாக ஒரு குற்றப் பின்புலம் இருக்கிறது. வலியவன் அல்லது அதிகார வல்லமை கொண்டவனுக்கு ஒரு நீதி, எளிய குரலற்றவர்களுக்கு ஒரு நீதி என்று அது தேசமெங்கும் நிரவிக் கிடக்கிறது.

இந்தப் படுகொலைக்குப் பின்னால் ஒரு பெரிய கும்பல் இருக்கலாம். ஒரு Criminal Network இந்த நிகழ்வின் பின்புலத்தில் காவல்துறையின் ஆசிகளோடு இயங்கும் வாய்ப்பு இருக்கிறது. அந்தப் பின்புலத்தைக் காப்பாற்றும் முயற்சியாகக் கூட இந்த அரச படுகொலை அவசர அவசரமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம்.

அந்த மருத்துவரின் கண்கள் என் குழந்தையின் கண்களைப் போல அன்பு தோய்ந்த அற்புதமான கண்கள். உடலைத் தாண்டி அந்தக் கண்களில் மிதக்கும் கனவுகளை மனித உயிர்களின் பரிதவிப்புகளை என்னால் உங்களை விட அதிகமாக உணர முடியும். அந்தக் குழந்தையின் மரணத்துக்கு நீதி வேண்டும். ஆனால் அந்த நீதி வெறும் உணர்ச்சிக் குவியல்களால் நிரப்பப்பட்ட வழக்கமான “அரசபடுகொலை” நீதியல்ல.

நீதி என்பது தண்டனை அல்ல, நீதி என்பது ஒரு சமூகம் தனது நாகரீகத்தை நோக்கிய பயணத்தை நிகழ்த்தும் பாதை. அந்தப் பாதையில் தான் நமது குழந்தைகள் நடக்கப் போகிறார்கள். நாம் ஆபத்தான பாதைகளை உணர்வின் முள் வேலிகளால் தற்காலிகமாக அடைத்து விட்டு நீதி வழங்கி விட்டதாக வெற்றுக் கூச்சல் இடுகிறோம்.

Arul Ezhilan

சமூகத்தில் அடவடியாக நடந்து கொள்வதையும், பெண்களை அடிப்பது உதைப்பது, காதலிக்கச் சொல்லி நிர்பந்திப்பது, தனக்கு கிடைக்கா விட்டால் ஆசிட் ஊத்தி சிதைப்பது என ஆண் சமூக விரோதியாக வாழ்வதை ஆண்மை என்கிறது இந்திய குடும்ப அமைப்பு. அடங்கிச் செல்வதையும் பெண் என்றால் கட்டுப்பெட்டியாக சுருங்கி அடங்கி வாழ வேண்டும் என்பதை பெண்மை என்கிறது இந்திய சமூக, சாதி, குடும்ப அமைப்பு யாரோசில கிரிமினல்களை சாகச பாணியில் கொன்று விட்டு குடும்பம் என்னும் அயோக்கியத்தனமான ஜனநாயகமற்ற நிறுவனம் தன்னை புனிதமாக்கிக் கொள்கிறது.

Sugumaran Govindarasu

ஐதராபாத்தில் போலி மோதலில் நால்வர் கொல்லப்பட்டது சட்டவிரோதம். தேசிய மனித உரிமைகள் ஆணையப் பரிந்துரைப்படி போலீசார் மீது இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 302 கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். தண்டனை வழங்கும் அதிகாரம் போலீசுக்குக் கிடையாது.

Vathsala Nagendran

பூக்காரி,வேலக்காரி,மீன்காரி எனும் இந்தியா என்கவுண்டரைக் கொண்டாடுகிறது !
பூக்காரம்மா,வேலக்காரம்மா, மீன்காரம்மாக்களுக்கான இந்தியா அரியலூர் நந்தினி/ஆசிஃபாக்களுக்கான நியாயம் தேடி குறைந்தபட்சம் மாவுக்கட்டோ, கரண்ட் வயர்ல கடிபடுறதோ கூட நடக்காம தான் கெடக்குது !

Veldurai Rajkumar

கொலைகளை கொண்டாடும் இச்சமூக உளவியலை எண்ணி சற்று அச்சமாக இருக்கிறது.

Villavan Ramadoss

அப்போ செத்தவனோட ஜாதிதான் தண்டனையை தீர்மானிக்குதுன்னு சொல்றேளா?

இல்ல கொன்னவனோட ஜாதியும் சேர்ந்தே தீர்மானிக்குதுன்னு சொல்றேன்.

Anas Sulthana

ரோஜா பூ தூவி போலீசை வரவேற்கும் உள்ளூர் மக்கள்.

இன்ஸ்டன்டா ஒரு குற்றத்திற்கு மரணம் தண்டனை தரணும்னா இங்கு யாரும் உயிரோடவே இருக்க முடியாது.
என்கவுண்டர் ஒருபோதும் இங்கு குற்றத்தை குறைத்ததாக வரலாறு இல்லை..

பாலியல் கல்வி, ஆண்-பெண் சமத்துவம், ஆணாதிக்கம் மனோபாவத்தை உடைப்பது போன்ற சமூக தேவையை பற்றி விவாதிக்க ஆரம்பியுங்கள். அதைவிட்டு நாலு பேரை கொன்றால் இனி பாலியல் வன்க்கொடுமையே நடக்காது பயப்படுவார்கள் என்று போலி பிம்பத்தை உருவாக்க வேண்டாம்..

அதுமட்டும் அல்ல… இது எளியவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற இன்ஸ்டன்ட் நீதி.. இது வலிமைமிக்க பொள்ளாச்சி கயவான்களுக்கு பொருந்தாது என்பத்தையும் யோசியுங்கள்..

Durai Arun

‘பெண் மருத்துவர் கொலை: குற்றவாளிகள் என்கவுன்ட்டர்!’ – தெலங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை!

ஆம், இப்படித்தான் இவர்களை கொல்ல வேண்டும் இது தானே சரியான தீர்ப்பு என்று எல்லோரும் நினைக்க தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் இந்த சட்ட முறை, நீதித்துறை மூலமாக உரிய தண்டனை குற்றவாளிக்கு கிடைக்காது என்ற மன நிலையை உருவாக்கியது எவ்வளவு பெரிய தவறு. சரி ஹைதராபாத்தில் சுட்டுக்கொல்லப்பட்டது போல பொள்ளாச்சி கூட்டு பாலியல் குற்றவாளிகள் கொலை செய்யப்படுவார்களா ???

உன்னாவில் 23 வயது இளம்பெண்- பிஜேபி எம்.எல்.ஏ மற்றும் குற்றவாளிகளால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டார் . அந்த எம்.எல்.ஏ வும் மற்றும் இதர குற்றவாளிகள் எப்போது சுட்டுக்கொல்லப்படுவார்கள்?????

நிர்பயா வழக்கு தொடர்புடையவர்கள் ஏன் என்கவுண்டர் செய்யப்படவில்லை ?? நாணல் போல வளைவது தான் சட்டமா ???

மனிதி தெரசா

இதெல்லாம் கொண்டாடிக்கிட்டு திரியனுமா ? இதான் கேள்வி.. உண்மையாலும் ரேப் பன்னா கூட தீர்ப்பு இவ்வளவு சீக்கிரம் கொடுக்குற அளவுக்கு இந்த நாட்டுக்கு அதிகாரம் இருக்கா.! அந்த ரேப் பண்ண பொண்ணோட குடும்பம் நொந்து போகாம இந்த நாட்டு சட்டம் எந்த ரேப் கேசுக்கு தீர்ப்பு கொடுத்துருக்கு..

சுட்டு கொல்லப்பட்ட அத்தனை பேரும் ஒருவேளை சம்பந்தபடுத்தி கொல்லப்பட்ட மனிதர்களா இருக்கலாம்.. இந்த மாதிரியான என்கவுண்டர் கண்டிப்பாக இவ்வளவு சீக்கிரம் செய்யகூடிய ஒன்னு இல்ல.. நியாயம் இருந்தா சட்டம் சமமா தீர்ப்பு வழங்கட்டும்..

அதான் நீதீமன்றம் என்னத்துக்கு இருக்கு.. இவங்க இஷ்ட மயிருக்கு ஹீரோயிசம் காட்டுறதுக்கா.. இதெல்லாம் கொலைங்க.. இத போய் கொண்டாடிக்கிட்டு இருக்குறதே தப்பு.!

எல்லாருக்கும் சட்டம் சமமா இருந்தா இத சட்டம் பண்ணாது.. இந்த என்கவுண்டர் எல்லாம் உண்மையாக மனித உரிமை மீறலே.. அதும் அந்த பொண்ணு கொல்லப்பட்ட இடத்திலே கொன்னுருகாங்க..இது என்ன படமா..ஹீரோயிசம் காட்ட..! முறைப்படி தானே தண்டனை கொடுத்துருக்கனும்..

#ஜனநாயகம் தழைந்தோங்கட்டும்
என்கவுண்டர்கள் ஒழிக்கப்பட வேண்டும்..

Jawahar Dra

என்கௌண்டரில் பெண் மருத்துவரை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிக் கொலை செய்து எரித்த நால்வரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்:- செய்தி

இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே! ஆனால் சட்டப்படி. இந்த என்கௌண்டரை ஆதரிப்போருக்கு சில கேள்விகள்.

சிறுமிகளின் பாலியல் கொடுமைகளை நீலப்படமாக பார்ப்போர் எத்தனை பேர் தெரியுமா? இப்படிப்பட்டவர்கள் நம் சமூகத்தில் எத்தனை இடத்தில் இருக்கின்றனர்? இவர்களுக்கும் இந்த நால்வருக்கும் என்ன வித்தியாசம்?

நித்தியானந்தா பெண் குழந்தைகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது என்பதற்கு மத பாதுகாப்பா? அப்படியானால் இனிமேல் நோய்க் கிருமியை ஒழிக்காமல் நோயாளிகளைக் கொன்றுவிடலாம் அல்லவா? பெண் குழந்தைகளுக்கு Good touch, Bad touch சொல்லித்தரச் சொல்லும் நாம் ஏன் இன்னும் ஆண் குழந்தைகளிடம் பெண், ஆண் சமத்துவம் சொல்லிக் கொடுக்கத் தயாரில்லை?

ஏன் சில இடங்கள் Don’t touch இடங்கள் என்பதை சொல்வதே இல்லையே? சரி இனி கோர்ட் எதற்கு? வக்கில் எதற்கு? நீதிபதி எதற்கு? உன் மதம் பெண்ணை எவ்வளவு கேவலமாக ஒரு பண்டமாக வைத்துள்ளதே? பெண் – ஆணின் பாலியல் விருப்பத்திற்கு இணங்கியாக வேண்டும் என்றுதானே சொல்கின்றன????

இக்குற்றங்கள் மட்டுமல்ல எந்தக் குற்றம் இருக்க கூடாது என்றால் சமூக மாற்றம்தான் தேவை..

படிக்க:
♦ நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?
♦ கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

Muthukumar Jayaraman

கேள்வி: ‘உங்கள் வீட்டு பெண்ணுக்கு இது போன்று நடந்தால் இந்த என்கவுன்டரை எதிர்ப்பீர்களா?’

பதில்: ‘உங்கள் வீட்டு ஆண் ஒரு வேளை பொய்யாக குற்றம்சாட்டப்பட்டு இது போன்று விசாரணை இல்லாமல் என்கவுன்டரில் கொலை செய்யப்பட்டால் இப்படித்தான் ஆர்ப்பரிப்பீர்களா?’

விசாரணை கைதிகளாக பல ஆண்டுகள் வாழ்க்கையை தொலைத்துவிட்டு பின்பு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்ட சம்பவங்கள் இந்த நாட்டில் எண்ணற்றவை.

Rajkumar Sellampillai

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி எரித்துக்கொல்லப்பட்ட மருத்துவர் பிரியங்கா கொலையில் குற்றவாளிகள் அதே இடத்தில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட செய்தி பரவலாக பாராட்டைப் பெற்றுவருகிறது.

நிதானமான சிந்தனைகள் வருவதற்கு முன் நமக்கும் இது ஒருவிதமான ஆறுதலையும் பழிவாங்கிய உணர்வையும் ஏற்படுத்துகிறது.
‘என் மகளின் ஆன்மா சாந்தி அடையும் ‘என்று மகளை பறிகொடுத்த தந்தை கூறுவதை அதே உணர்வுடன் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் இது சரியான முறையான தீர்வு அல்ல. ஏனெனில்

  1. இந்த மாதிரியான குற்றங்களில் குற்றவாளிகளின் பின்னணியைப் பொறுத்துதான் என்கவுண்டர்கள் நடக்கின்றன.
  2. கைது செய்யப்பட்டவர்கள் இப்படி கொல்லப்படும்போது உண்மையான குற்றவாளிகள் இவர்கள்தானா ? அல்லது இவர்கள் மட்டும்தானா ? என்ற உண்மைகள் வெளிவருவதில்லை.
  3. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்கவுண்டர்களால் தீர்க்கப்பட முடியாதது.

இதேபோல உத்தரப் பிரதேசத்தில் உனாவ் மாவட்டத்தில் பாலியல்வன்கொடுமை செய்யப்பட்ட பெண் ஒருவர் தொடர்ந்து வழக்குநடத்திக் கொண்டிருந்தார் . அப்பெண்ணின் தந்தை காவல்நிலையத்தில் வைத்து அடித்து கொல்லப்பட்டார் . இன்னொரு பெண் வழக்கு நடத்துவதற்காக நீதிமன்றம் செல்லும் வழியில் வழிமறித்து எரிக்கப்பட்டுள்ளார். 90 சதவீத தீக்காயங்களோடு அவர் இப்போது டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்த வழக்குகளில் மட்டுமா
தமிழ்நாட்டை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கூட யாரும் என்கவுண்டர் செய்யப்படவில்லை.

எனவே இந்தக் கொடுமைகளுக்குத் தீர்வு சட்டத்தை சரியாக , விரைவாக , சமமாக ,முறையாக , குறித்த கால வரையறைக்குள் முடிக்க வேண்டும் . அதிகபட்ச தண்டனையை ஒரேமாதிரி அனைவருக்கும் வழங்க வேண்டும் என்பதுதான்.

அதைவிட முக்கியமானது அவன் ஆம்பளைங்க .. அவன் அப்படித்தான் இருப்பான் என்று பேசுகிற மூளைகளுக்கு முதலில் மருத்துவம் செய்ய வேண்டும் .
– வழக்கறிஞர் அருள்மொழி,
திராவிடர் கழகம்.

Asif Meeran

பொதுப்புத்தி எப்போதும் உடனடி நீதியையே வேண்டுகிறது. வன்புணர்வு செய்தவனை விசாரணையின்றி நடுவீதியில் சுட்டுக் கொல்வதை ஆரவாரமாக வரவேற்குமளவுக்கு நம் தேசத்தின் நீதித்துறையும் காவல் துறையும் செயலற்றுப் போயிருக்கின்றன என்பதே உண்மை.

உடனடித் தீர்வுகளின் மேல் நம்பிக்கை வைக்குமளவுக்கு நம்மைத் தள்ளியிருப்பது வரம் போலத் தோன்றினாலும் அது மிகப் பெரும் சாபம். காவல் துறையின் கையில் விசாரணையின்றி சட்டத்தை ஒப்படைப்பது போன்ற பெருங்கொடுமை வேறில்லை.

சட்டம் கடுமையாக்கப்பட்டு நீதி வழங்கல் விரைவாக்கப்படாதவரை காவல் துறை விசாரணையின்றி சுட்டுக் கொல்வதை ஆரவாரம் செய்து வரவேற்கும் கூட்டதோடு கோவிந்தா போடும் அசட்டு மனநிலையே எஞ்சும்.

இதையெல்லாம் யோசிக்கும்போதும் கூடவே எப்போதும் அறிவுசார்ந்து மட்டுமே எப்போதும் இயங்க முடியாது என்பதும் புலனாகிறது.

Prince Ennares Periyar

மக்கள் வன்முறையை விரும்புகிறார்கள். எனவே தான் பாலியல் வன்கொடுமைக்குத் தீர்வாக குற்றவாளிகளை தூக்கிலிடவோ, கூட்டாக அடித்துக் கொலை செய்யவோ, குறியறுக்கவோ, கொலை செய்யவோ பரிந்துரைத்தால் அந்த யோசனையை மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் பெண்களுக்கான சம உரிமைக்கும், ஆணாதிக்கம் – பெண் வெறுப்புக்கெதிராகவும், பெண்கள் ஒடுக்கப்படுதலை ஒழிக்கவும் ஆண்களுக்கு விழிப்புணர்வூட்ட நினைத்தால் மக்கள் அதை விரும்புவதில்லை.
– தஸ்லிமா நஸ்ரின்


முகநூல் தொகுப்பு : வினவு செய்திப் பிரிவு

ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு

ஹைதராபாத் போலி என்கவுண்டர் சரியா தவறா ? கருத்துக் கணிப்பு

ஹைதராபாத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட நான்கு இளைஞர்களை போலி மோதலில் சுட்டுக் கொன்றிருக்கிறது ஹைதராபாத் போலீசு. வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட பெண் கால்நடை மருத்துவர் ரெட்டி எனும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர். குற்றம் சாட்டப்பட்ட நால்வரும் விவசாயக் கூலிகள். அவர்களது குடும்பத்தினரது நேர்காணலை பிபிசி விரிவாக பதிவு செய்திருக்கிறது. தங்களது மகன் குற்றம் புரிந்திருந்தால் அவனை தூக்கிலிடட்டும் என்கிறார் ஒரு தந்தை.

இப்படி இருக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் விசாரித்து தண்டனை வாங்கிக் கொடுப்பதில் என்ன பிரச்சினை? மாவோயிஸ்டுகளை போலி மோதலில் கொன்று இழிபுகழ் அடைந்திருக்கும் தெலுங்கானா போலீசு இப்போது நடுத்தர வர்க்கத்தினை திருப்திபடுத்த இந்த போலி மோதலைக் கொன்றிருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் உண்மையிலயே அந்தக் குற்றம் செய்திருப்பின் அவர்கள் பால் இரக்கம் கொள்ளத் தேவையில்லை. ஆனால் அவர்களை நீதிமன்றம் மூலம் தண்டிக்காமல் போலீசாரால் சுட்டுக் கொன்றிருப்பது என்ன நியாயம்?

இதே நியாயத்தை கீழ்க்கண்ட குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் வழங்குவார்களா? என்கவுண்டரில் போட்டுத் தள்ளுவார்களா? நாளையே நீரவ் மோடியும், மல்லையாவும், நித்தியானந்தாவும் இந்தியாவில் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படும் போது தப்பிச் செல்ல முயன்றார்கள் என்று சுட்டுக் கொல்லப்படுவார்களா? இந்தப் போலீசும், நீதிமன்றமும் யாருக்கானது?

“நான்கு பேரும் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். இதுதான் நீதியா? நீதிமன்றத்தை மூடிவிட்டு இதுபோன்ற என்கவுண்டர்களை பார்க்க வேண்டுமா? ஒருபுறம் ஆதித்யநாத் ஒரு மாநிலத்தையே ஆள்கிறார், நித்தியானந்தா புதிய நாட்டை அறிவிக்கிறார், மறுபுறம் உன்னாவில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டவர் மீது தீ வைக்கப்படுகிறது. அவரை போன்ற எண்ணற்றவர்களின் குடும்பத்தினர் நீதிக்காக போராடி வருகின்றனர். என்கவுன்டர்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியாது” என்று ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த சட்டத்துறை பேராசிரியரான கல்பனா.

உன்னாவ் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவு வழக்கில் சாட்சி சொல்லச் சென்ற பாதிக்கப்பட்ட பெண்ணை பிணையில் வந்த குற்றவாளிகள் எரித்து கொல்ல முயன்றார்கள். அப்பெண் 90% தீக்காயம் அடைந்துள்ளார் – இது சமீபத்திய செய்தி. இந்தக் குற்றவாளிகளை, ஆஷிபாவைக் கொன்ற குற்றவாளிகளை, அந்தக் கோவில் பூசாரியை, உன்னாவ் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங்கை, 

அரியலூரில் நந்தினி என்ற சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற இந்து முன்னணி நிர்வாகி மணிகண்டனை,

சென்னையில் சிறுமி ஹாசினியை பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு, தனது தாயையும் கொலை செய்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட துஷ்வந்தை,

சென்னை எர்ணாவூர் மீனவக்குடியிருப்பை சேர்ந்த 3 வயது சிறுமி ரித்திகாவை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சேகரை,

சேலத்தில் தலித் சிறுமி ராஜலெட்சுமியை சாதி ஆணவத்தால் வன்கொடுமை செய்ய முயன்று தலையை வெட்டிக்கொன்ற பா.ம.க கட்சியில் இருந்த கொடூரனை,

பொள்ளாச்சியில் பல பெண்களின் வாழ்க்கையை சூறையாடிய கொடூரர்களை, அ.தி.மு.க பின்னணி உள்ள குற்றவாளிகளை,

பல பெண்கள் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சாமியார்கள் ராம் ரஹீமை, ஆசாரம் பாபுவை, நித்தியானந்தாவை

இவர்களையெல்லாம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்வார்களா? இன்னும் இர்ஷத் ஜஹான் வழக்கில் போலி மோதலில் ஈடுபட்ட போலீசார், பா.ஜ.க.வினரை என்கவுண்டர் செய்வதில் என்ன தயக்கம்?

ஐ.ஐ.டி.யில் மூன்று பேரை அடையாளம் காட்டி விட்டு வாழ முடியாமல் செத்துப் போனார் பாத்திமா. அவர்கள் மீது கைது நடவடிக்கையாவது எடுக்கப்பட்டதா? அல்லது இனிமேலும் எடுக்கப்படுமா?

என்கவுண்ட்டரும் கூட வர்க்கம் பார்த்துதான் பாயும் என்பது வரலாறு.

இன்றைய கேள்வி!

ஹைதராபாத் போலி என்கவுண்டர் பற்றி உங்கள் கருத்து என்ன?

♦ ஆதரிக்கிறேன்
♦ எதிர்க்கிறேன்
♦ குழப்பத்தில் இருக்கிறேன்

டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூப்பில் :

வாக்களிக்க !

ஃபேஸ்புக்கில் :

தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?

தூக்கிலிடப்படும்போது கையில் கீதையை வைத்திருந்தாரா பகத் சிங் ?

கத் சிங் தூக்கு மேடை ஏறும்போதும் கையில் பகவத் கீதையை வைத்திருந்ததாக இந்த வாரம் வெளிவந்திருக்கும் விஜயபாரதம் இதழ் கூறுகிறது. இது பகத் சிங்கை மிகவும் இழிவுபடுத்தும் செயல். பகத் சிங் கடவுள் நம்பிக்கையற்றவர். ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்’ என புத்தகம் எழுதியவர்.

1931 மார்ச் 23ஆம் தேதி லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்டார் பகத் சிங். அவரைத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்ல வந்தவர், லாகூர் சிறையின் வார்டனான சரத் சிங். அவரிடம்தான் தான் படிக்க வேண்டிய புத்தகங்களைக் கேட்பார் பகத் சிங். அவர் கேட்ட பெரும்பாலான புத்தகங்கள், பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட மார்க்சிய, லெனினிய நூல்கள். கார்ல் லெய்ப்னெச்டின் மிலிட்டரிஸம், லெனினின் லெஃப்ட் விங் கம்யுனிஸம், ரஸ்ஸலின் வை மென் ஃபைட் மற்றும் உப்டன் சின்க்ளேரின் நாவலான தி ஸ்பை உள்ளிட்ட மார்க்சிய நூல்களைத்தான் பகத் சிங் சிறைக்கு வரவழைத்துப் படித்தார்.

அவரைத் தூக்குமேடைக்கு அழைத்து செல்வதற்கு முன்பாக, வாகே குருவை வணங்கும்படி சரத் சிங் சொன்னபோது, “எனது வாழ்நாளில் நான் கடவுளை வணங்கியதில்லை. சொல்லப்போனால், பல முறை ஏழைகளின் துயரங்களுக்கு காரணமாக இருக்கிறார் என்று கடவுளை ஏசியிருக்கிறேன். இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டால் தனது முடிவு நெருங்கிவிட்டதால் மன்னிப்புக்கேட்கிறான் இந்த கோழை என்று கடவுள் சொல்வார்” என்று புன்னகையோடு மறுத்துவிட்டார் பகத் சிங்.

பகத் சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பாக, அவரது கடைசி விருப்பத்தை கேட்டறிய அவரது வழக்கறிஞர் பிராண்நாத் மேத்தா தூக்கிலிடப்படுவதற்கு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பு பகத் சிங்கை சந்தித்தார். பிராண்நாத் மேத்தாவைப் பார்த்த பகத் சிங், புன்னகைத்தபடியே தான் கேட்ட ‘தி ரெவெல்யுஷ்னரி லெனின்’ என்கிற புத்தகத்தை கொண்டு வந்தாரா என்று கேட்டார்.

அந்த புத்தகத்தைப் பற்றி ஒரு நாளிதழில் வந்திருந்த மதிப்புரையால் மிகவும் கவரப்பட்டிருந்தார் பகத் சிங். அதனாலேயே வழக்கறிஞருக்கு புத்தகம் கேட்டு தகவல் அனுப்பியிருந்தார். புத்தகத்தை மேத்தா கொடுத்தவுடன் மகிழ்ந்து போய் உடனே படிக்க ஆரம்பித்துவிட்டார், நாட்டிற்கு எதாவது செய்தி உண்டா என்று மேத்தா கேட்டார். புத்தகத்திலிருந்து பார்வையை விலக்காமல் பகத் சிங் சொன்னார்: “இரண்டு செய்திகள், எதேச்சதிகாரம் ஒழியட்டும். புரட்சி ஓங்கட்டும்.”

படிக்க:
நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
♦ பகத் சிங்கின் நண்பர் கணேஷ் வித்யார்த்தியை உங்களுக்குத் தெரியுமா ?

மேத்தா சென்ற பிறகு பகத் சிங்கிடம் வந்த அதிகாரிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு 11 மணி நேரங்கள் முன்பாக அவர்கள் தூக்கிலிடப்படபோவதாக தெரிவிக்கிறார்கள். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு பதில் அதே நாள் ஏழு மணிக்கு அவர்கள் தூக்கிலிடப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது.

அப்போது பகத் சிங் The Revolutionary Lenin புத்தகத்தின் ஒரு சில பக்கங்களையே படித்து முடித்திருந்தார். அந்த அதிகாரியிடம் சிரித்தபடி பகத் சிங் கேட்டது இதுதான்: “ஒரு அத்தியாயத்தை முடிக்க விட மாட்டீர்களா?”

பகத் சிங் தூக்கிலிடப்படும்போது அவரது கையில் எந்தப் புத்தகமும் இல்லை. கைகள் கட்டப்பட்டிருந்தன. தன்னை விடுவிக்க உண்மையிலேயே முயற்சிகளை மேற்கொண்ட ஜவஹர்லால் நேருவுக்கும் சுபாஷ் சந்திர போஸிற்கும் நன்றி தெரிவிக்கும்படி சொன்னார் பகத் சிங்.

இதுதான் நடந்தது. இதைவிடுத்து, கையில் கீதை வைத்திருந்தார் என்று கூறி பகத் சிங்கை இழிவு செய்வது anti- nationalகளின் வேலை.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

பகத்சிங் – ஆர்.எஸ்.எஸ்-ன் அவதூறு!

disclaimer

நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டாராம் ! இதுல என்ன பெருமை … எருமை ?

‘வெங்காயம் சாப்பிடுவதில்லை’ :
நிர்மலாவின் பார்ப்பன சாதி பெருமைக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு !

ந்தியாவில் பல மாநிலங்களில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை ரூ. 150 முதல் ரூ. 250 வரை ஏறியுள்ளது. இந்த விலை உயர்வு நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பினார் தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சூலே.

அமைச்சர் பதவிக்குரிய கண்ணியமில்லாத நிர்மலா சீதாராமன், ‘நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை. வெங்காயம், பூண்டு சேர்த்துக்கொள்ளாத குடும்பம் என்னுடையது’ என தனது பார்ப்பன சாதிபெருமை குறித்து சிலாகித்தார்.  இந்திய வரலாறு காணாதவகையில், எந்தவொரு நிதியமைச்சரும் அளித்திராத ’சாதிய’விளக்கம் இதுவாகத்தான் இருக்கும்.

’ஏழைகளின் காய்கறி’ என சொல்லப்பட்டும் வெங்காயத்தை 99% இந்தியர்கள் பயன்படுத்துகிறார்கள். மீதியுள்ளவர்களின் பிரதிநிதியாக மட்டுமே பதில் சொல்லியிருக்கும் நிர்மலா, நிதியமைச்சராகியிருப்பது காலக்கொடுமை.

நிர்மலாவின் ஆணவப் பேச்சு, சமூக ஊடகங்களில் பலரும் தகுந்த பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.

“வெங்காயம் சாப்பிடுவதும் தவிர்ப்பதும் தனிமனித ருசி. அதை நகைச்சுவையாகத்தான் நிதி அமைச்சர் சொன்னதாக யாரும் சப்பைக்கட்டு கட்ட முடியாது. சிரித்துக் கொண்டே பேசும் நிலையிலா பொருளாதாரம் இருக்கிறது?

வெங்காயம் பற்றிய இப்பேச்சின் உள் ஒரு மிகப் பெரிய திமிர் தொனிக்கிறது. யாரும் நிரந்தரமாய் மேலேயே இருந்ததில்லை. இன்றைய ஆணவம் நாளைய கேவலத்தின் முன்னறிவிப்பு தான். இன்னும் பேசட்டும். நுணல்கள்.” எனத் தெரிவித்துள்ளார் மருத்துவர் ருத்ரன்.

தயாளன்: வெங்காயம், பூண்டு ஆகியவற்றை பார்ப்பனர்கள் பயன்படுத்துவதில்லை, ஏனெனில் மண்ணுக்கு கீழே விளையும் எதையும் அவர்கள் உட்கொள்ள மாட்டார்கள். அந்த உணவுப் பொருட்கள் பன்றிக்கும் தீண்டத்தகாத மக்களுக்கும் உரியவை என்று கருதுகிறார்கள். ஆனால் உருளைக் கிழங்கும் கேரட்டும் அவர்களுக்கு இந்த வகையில் வராது … – பண்பாட்டு அசைவுகளில் தொ.ப.

நிர்மலா சீதாராமன் சொல்லும் உணவு அரசியல் வெறும் விலை குறித்தது அல்ல. அது இந்திய சாதிய அரசியல்.

நாச்சியாள்சுகந்தி: சாதிய திமிரைத் தன் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் நிமிடத்துக்கு நிமிடம் காண்பித்துக்கொண்டிருக்கும் நபர் தான் நிர்மலா சீதாராமன் என்னும் மனிதநேயம் துளியுமற்ற ஒரு பிறவி.

மீனவர்கள் கொல்லப்பட்டபோது ராமேஸ்வரம் வந்த நிர்மலா பேசிய ஒவ்வொரு பேச்சும் சொல்லும் அத்துணை ஆணவம். செய்தியாளர்களை அவரைப் போல் யாரும் அத்தனை எளிதாக அவமானப்படுத்தியதில்லை.

படிக்க :
சுற்றுச்சுவர் : எட்டடிக்குமேல் என்றால் இடித்துத் தள்ளுங்கள் !
திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

‘நான் வெங்காயம் பூண்டு சாப்பிடாத குடியில் பிறந்தவள். அதனால் எனக்கு வெங்காய விலை பற்றி எனக்குத் தெரியாது’ என்று கூறுவதெல்லாம் திமிர்த்தனம் மட்டுமில்லை. எப்போதும் சாதியத்திமிரை தூக்கிச் சுமக்கும் அகம்பாவம்.

மக்களை நேரடியாகச் சந்தித்து வாக்குக் கேட்டு வெற்றிபெறாத போதே இந்த அகம்பாவம். மக்களை சந்தித்திருந்தால்…?

கவின்மலர்:  அண்மையில் வாடகைக்கு வீடு பார்க்கச் சென்றிருந்தேன். அந்த வீட்டு சொந்தக்காரரின் மகளைப் பார்த்தேன். அவர் ஆங்கிலத்திலேயே பேசினார். அன்றுதான் மும்பையில் இருந்து வந்ததாகச் சொன்னார். ஆகவே அவருக்கு தமிழ் தெரியாதோ என எண்ணிக்கொண்டு ‘Do you know Tamil?’ என்று கேட்டேன். ‘ what? I am a Tamil Brahmin’ என்றார் பதறி.

எங்காவது வேறு சாதியினர் இப்படி ‘I am a Tamil _______ என்று சொல்லிப் பார்த்திருக்கிறோமா?

இதுல என்ன பெருமை… எருமை? என்று கேட்கத் தோன்றியது. ஒரு மொழி தெரியுமா எனக் கேட்டால் எவராவது தன் சாதியையும் சேர்த்துச் சொல்வது வேறு சாதியில் கிடையாது.

நான் வெங்காயம் பூண்டு பயன்படுத்தாததால் அவற்றின் விலையேற்றம் பற்றி அதிகம் கவலைப்படாத குடும்பத்திலிருந்து வந்தவள் – நாடாளுமன்றத்தில் நிர்மலா சீத்தாராமன்.

“நான் பாப்பாத்தி. என்னை ஆட்டவோ அசைக்கவோ முடியாது” – சட்டமன்றத்தில் ஜெயலலிதா.

இப்படிப்பட்டவங்களை எல்லாம் பெண்ணியம் என்கிற பெயரில் எல்லாம் ஆதரிப்பவர்களைப் பார்த்தால்தான் வியப்பாக இருக்கிறது.

ராம் கோபால்:  நான் வெங்காயம் அவ்வளவாக உபயோகிப்பதில்லை. எங்கள் பரம்பரையில் நாங்கள் வெங்காயம், பூண்டு பயன்படுத்துவதில்லை. அதனால் எனக்கு கவலையில்லை, என நமது நாட்டு நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீத்தாரமன் பாராளுமன்றத்தில் எம்.பி. ஒருவரின் கேள்விக்கு போகிற போக்கில் ஒரு பதிலுக்கு கமெண்ட் செய்துள்ளார்.

கிட்டதட்ட இந்த மனிநிலையில்தான் அரசுப் பள்ளிகளின் மத்திய உணவில் வெங்காயம் கூடாது என்று அக்‌ஷய பாத்ரா தொண்டு நிறுவனமும் சொல்கிறது. எனக்குத் தெரிய இந்திய நாட்டில் ஒரே ஒரு வெங்காயத்தை வைத்து கூட நீர் சோறு தின்று வாழும் மக்கள் தான் ஏராளம்.

ராஜசங்கீதன்: நான் மூளை சாப்பிடுவதில்லை. அதனால் மூளை வளர்ச்சி பற்றிய கவலை இல்லை! – நிர்மூலம்

மதிவாணன்: வெங்காயம், பூண்டு சாப்பிடாத குடும்பம் என பார்ப்பன பெருமை பேசும் நிதியமைச்சர் நிர்மலா அரசியல் சட்ட அரசமைப்புக்கு நேர்ந்த களங்கம்.

சின்னையா ராஜசேகர்: நிர்மலா சீத்தாராமன் வெங்காய விலை உயர்வை பற்றி பதிலளிக்கையில் நாங்க வெங்காயம் சாப்பிடாத பரம்பரையிலிருந்து வந்தவர்கள். ஆகவே எனக்கு கவலையில்லை என்று சொன்னதாக தவறாக பலர் சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். உண்மையில் அவர் அப்படி சொல்லியிருந்தால் அறிவுகெட்ட பார்ப்பனிய சாதி திமிர் வார்த்தைகள் என சொல்லிட்டு போகலாம். ஆனால் அவர் சொன்னது ஆழ்ந்த சாதிய மன நிலை கொண்ட சாதிப்பெருமையை நிலை நாட்டும் கூற்று. வெங்காய விலை உயர்வு பற்றி கேட்டபோது வெங்காய விலை உயர்வுக்கான காரணங்களை சொல்லி அதற்கான நடவடிக்கைகளையும் சொன்ன அவர் தமது பரம்பரை வெங்காயம் சாப்பிடுவதில்லை என்பதையும் குறித்ததுதான் ஆபத்தான விடயம். இது வெறும் முட்டாள் தனமான பேச்சில்லை. பார்ப்பனிய சிந்தனையின் நுணுக்கமான வெளிப்பாடு.

பாலாஜி தியாகராஜன்: அன்றாட உணவுகளுக்கு வெறும் வெங்காயத்தை மட்டுமே கடித்துக் கொண்டு உணவருந்தும் ஏழை, எளிய மக்கள் பெரும்பான்மையானவர்களை, சூத்திர மக்களின் உணவென்பதற்காகவே வெங்காயத்தை வெறுக்கும் பார்ப்பன கூட்டத்தை சேர்ந்தவொருவர் ஆள நேர்ந்தால் எதைச் சொல்வாரோ அதைத்தான் நிர்மலா சீத்தாராமன் சொல்லியிருக்கிறார். அது நிர்மலா சீத்தாராமன் என்ற தனியொருவரின் திமிரல்ல, ஒட்டுமொத்த பார்ப்பன கூட்டத்திற்கே உரிய திமிர். #BarbaricAgraharamBehaviour

கருணாகரசு: உப்புப்போட்டு சோறு திங்கிற குடும்பத்திலிருந்தாவது வந்திருக்கிங்களா “மேடம்”?

முகநூலில் கண்டனங்கள் எழுந்ததுபோல, ட்விட்டரில் நிர்மலாவுக்கென்றே உருவாக்கப்பட்ட #SayItLikeNirmalaTai என்ற ஹேஷ்டேக் மீண்டும் ட்ரெண்டானது.

காளி: வெங்காயம் கிலோ ரூ. 250–க்கு விற்கிறது. பாஜகவில் உள்ள பெரும்பாலான பார்ப்பன – பனியா கும்பலை அது எப்படி பாதிக்கும்?

ரித்தேஷ் ராஜ்: என்னுடைய நுண்ணறிவு குறைவாக உள்ளது, ஏனெனில் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பாஜக ஆதரவாளர்கள்.

பன் ஸ்டார்: நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றிய கவலை இல்லை, ஏனெனில் அவர் எகானமி கிளாஸில் பயணிப்பதில்லை.

கவுரவ்: எனக்கு பொருளாதாரம் தெரியாது என்பதால், எனக்கு பொருளாதாரத்தைப் பற்றி கவலையில்லை.

அனா: வெங்காய விலை ஏற்றம் குறித்து பேசும்போதும் நிதியமைச்சர் நிர்மலா வெங்காயம் சாப்பிடுவதில்லை என்றார். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் வெங்காய விலை உயர்ந்தபோது, ஸ்மிருதி  இரானி வெங்காயத்தை உண்டார். பாஜக ஆட்சியில் மில்லேனியல்கள் ஏன் வெங்காயத்தை உண்ண நினைக்கிறார்கள்?

மாங்காய் மனிதன்:  நீங்கள் வெங்காயத்தை விரும்புகிறீர்களா இல்லையா என்பது முக்கியமல்ல. இந்த விசயத்தால் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதற்கு ஏதாவது செய்யுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள். உங்கள் ஆணவம் தேசத்தின் நலனுக்கு முற்றிலும் எதிரானது.

விவேக் திவாரி: நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிட மாட்டார். எனவே, அவர் குடிமக்கள்  எந்த விலையில் வாங்குகிறார்கள் என்று கவலைப்படவில்லை. வெங்காயம், உப்பு, மிளகாய் மற்றும் ரொட்டி மட்டுமே உண்டு  வாழும் ஏழைகள் இருக்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியுமா?

நாட்டு மக்கள் வறுமையில் வாடியபோது, ஆடம்பரத்தில் ஊறி திளைத்த மேரி அண்டோனேட் என்ற பிரெஞ்சு ராணியிடம் மக்கள் உண்ண ரொட்டி இல்லாமல் தவிக்கிறார்கள் என்றபோது, அவர்களை கேக் வாங்கி சாப்பிடச் சொல்லுங்கள் என மமதையுடன் பதிலளித்தார். அதற்குப் பின் நடந்த பிரெஞ்சு புரட்சியின்போது ராணி கொல்லப்பட்டார் என்பது வரலாறு.

மேரி ஆண்டோனேட்டின் மமதைக்கு நிகரானது, நிர்மலா சீதாராமனின் சாதி திமிர் பேச்சு.

தொகுப்பு : அனிதா


இதையும் பாருங்க :

நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்

கார்ல் மார்க்ஸின் மூலதன நூல் வெளியாகி ஏறக்குறைய 150 ஆண்டுகள் பூர்த்தியாகிவிட்டது. உலக அளவில் அதிக அளவில் அச்சாகி விற்பனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ”மூலதன நூல் இன்றைய சூழலுக்கு பொருந்தாது; அது காலாவதியாகி விட்டது” என்று முதலாளித்துவவாதிகள் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனாலும் காலத்தைக் கடந்து இன்றளவும் மூலதன நூல் தொழிலாளி காலத்தைக் கடந்து இன்றளவும் மூலதன நூல் தொழிலாளி வர்க்கத்திற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக ஒளி பாய்ச்சி வருகிறது.

ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் பிரசுரமாகிவிட்டது. பொதுவுடைமைத் தத்துவத்தைக் கடைப்பிடிக்கும் தோழர்களில் பெரும்பான்மையினர் இல்லங்களில் மூலதன நூல் அலங்கரித்து வந்தாலும், நூலை முழுமையாகப் படித்து முடித்தவர்கள் மிகச் சிலரே. ”இரண்டு பக்கம் படித்தேன், அதற்கு மேல் தொடர முடியவில்லை, அல்லது படித்தேன், ஆனால் புரியவில்லை” என்று பலர் சொல்லக் கேள்விபடுகிறோம். காரல் மார்க்ஸூம் தன்னுடைய முதல் ஜெர்மன் பதிப்புக்கு முன்னுரை எழுதியபோது முதல் அத்தியாயமான சரக்குகளின் பகுப்பாய்வைப் புரிந்து கொள்வதில் வாசகர்களுக்குச் சிரமம் இருக்கலாம் என்பதைப் பதிவு செய்து உள்ளார். ஆனால் அதைப் புரிந்து கொண்டுவிட்டால் மூலதன நூலை முழுமையாகப் படிப்பதில் எந்தச் சிரமமும் இல்லை என்பதை தெளிவுபடக் கூறி உள்ளார். பிரெஞ்சுப் பதிப்புக்கு எழுதிய முன்னுரையில் பிரெஞ்சு வாசகர்களை மனதில் கொண்டு அவர் கூறுவது இதோ, ”விஞ்ஞானத்துக்கு ராஜ பாட்டை ஏதுமில்லை; அதன் களைப்பூட்டும் செங்குத்துப் பாறைகளில் ஏறத் துணிந்தவர்களுக்கே அதன் ஒளிரும் உச்சிகளை அடைகிற வாய்ப்புண்டு”.

மார்க்ஸின் மூலதனம் மூன்று தொகுதிகளும் வெளிவரக் காரணமாயிருந்த ஃபிரடெரிக் எங்கெல்சும் தன் பங்கிற்கு மூலதனத்தை உலக அளவில் அறிமுகப்படுத்தி வாசகர்களின் ஆர்வத்தை தூண்டி வந்தார். அவருடைய சுருக்கமான மூலதன உரை முழுமையடையவில்லை. ஆனாலும் ஜெர்மன், ஃப்ரெஞ்ஃசு ஆங்கில மற்றும் ருசிய மொழி சஞ்சிரிகைகளுக்கு அவர் எழுதிய மூலதன நூல் பற்றிய கட்டுரைகள் வாசகர்களின் ஆர்வத்தை மிகவும் தூண்டின.

தமிழ் வாசகர்களிடையே மூலதன நூல் வாசிப்பை அவசர அவசியமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இந்த ”மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்” என்ற நூல். (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து…)

புவிஈர்ப்பு விதி என்பது புறநிலையானது. அதனை நாம் மாற்றிடவே அல்லது மீறிடவே முடியாது. அதனைப் பற்றிய அறிவை மனிதன் பெற்றதனால், விமானங்களையும், புவி ஈர்ப்பு விசையை கடந்து செல்லக்கூடிய ராக்கெட்டுகளையும் உருவாக்கி அனுப்ப முடிகிறது. இது போன்றே புறநிலையான சமூக வளர்ச்சியின் விதியை தவிர்த்திடவோ, மீறிடவோ முடியாது. இவ்விதிகளை அறிந்த மனிதன் சமூக மாற்றத்தை விரைவுபடுத்தலாம். மார்க்சியம் இந்த விதியை அறிந்து செயல்படுவதற்குத் தேவையான கண்ணோட்டத்தை வழங்குகிறது.

மார்க்சியம் என்பது தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இம்மூன்றும் தம்முள் உள்ளிணைப்பைப் பெற்றதாக இருக்கிறது. இம்மூன்றில் பொருளாதாரம் முதன்நிலை பெறுகிறது. ஏன் என்றால் பொருளாதார முறையே சமூக வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல், மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம் கூறுவதால் பொருளாதாரமே முதன்மையாகவும், இம்மூன்றினில் அடிப்படையாகவும் இருக்கிறது. சமூகத்தை மாற்றுவதற்கு போராடுகின்ற கம்யூனிஸ்டுகள் அரசியல் பொருளாதாரம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.

… முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்குக் காரணம் மக்களின் குறைநுகர்வல்ல என்று மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஆகியோர் கூறியிருப்பதற்கு மாறாகக் குறைநுகர்வே என்று பல பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதில் என்ன கொடுமை என்றால் இப்படிச் சொல்பவர்களில் சிலர் மார்க்சிய பொருளாதார அறிஞராக அறியப்பட்டவர்களாக இருக்கின்றனர். தோழர் த.ஜீவானந்தம் 2008-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருக்கடிக்கு மிகை உற்பத்தியே காரணம் என்று மார்க்சிய முதலாசிரியர்களின் வழியில் நின்று விளக்கியிருக்கிறார். முதலாளித்துவத்தின் தீர்க்க முடியாத உள்முரணின் வெளிப்பாடே பொருளாதார நெருக்கடி வளர்ச்சியடைந்த சமூகவழிப்பட்ட உற்பத்திக்கு தனிச்சொத்துடைமைக்கான உற்பத்தி உறவுகள் பொருத்தமற்றுப் போவதையும், அதன் தொடர்ச்சியாக சமூகப் புரட்சி ஏற்படுவதையும் மார்க்ஸிய நூல்கள் நமக்குத் தெளிவை ஏற்படுத்தியுள்ளன. இந்த விளக்கத்தில் காணப்படும் முரணை தவிர்க்க முடியுமா? என்ற முயற்சியில் முதலாளித்துவ அறிஞர்கள் மார்க்சின் ”மூலதனம்” நூலை படித்தாராய்கின்றனர். சமூக மாற்றத்திற்குப் போராடுகின்ற பலர் இதன் அவசியத்தைப் பற்றியப் போதிய அறிவு பெறாமையினால், முதலாளித்துவ எதிர்ப்பு, புதிய சமூக மாற்றம் என்ற சொல்லோடு மார்க்சியத்தைச் சுருக்கிப் புரிந்து கொண்டவர்களாக இருக்கின்றனர்.

சமூகத்தைப் பற்றிய விஞ்ஞான புரிதலுக்கும், அதனைப் புரட்சிகரமாக மாற்றுவதற்கும் தேவைப்படுகின்ற மார்க்சிய வழிபட்ட அரசியல் பொருளாதார அறிவைப் பெறுவதற்கு மார்க்சின் ”மூலதனம்” நூலைப் படிக்க வேண்டும். ”மூலதனம்” நூலில் காணப்படும் கடினமான பகுதியை நமக்கு எளிமையாக அறிமுகப்படுத்தும் வகையில் சுருக்கித் தந்துள்ளார். இந்த சுருக்கத்தை மட்டும் படித்தால் ”மூலதனம்” நூல் முழுமையையும் அறிந்து கொண்டதாகாது. முழுமையாக நூலை படிப்பதற்குத் துணைபுரியும் வகையில் அனைத்து அத்தியாயத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதனைப் புரிந்து இந்நூலின் துணையோடு மார்க்சின் ”மூலதனம்” நூலைப் படித்து நிறைவு செய்ய வேண்டும். ( அ.கா.ஈஸ்வரன் எழுதியுள்ள நூலுக்கான மதிப்புரையிலிருந்து…)

எல்லா விஞ்ஞான நூலுக்கும் இருக்கிற பிரச்சினை மூலதன நூலுக்கும் உண்டு. அதாவது மார்க்ஸ் கையாளும் சில கலைச் சொற்களின் தத்துவ விஞ்ஞான உள்ளடக்கம் மக்கள் புரிகிற முறையில் சொல்லப்படவேண்டும். அப்படி சொல்லவில்லையானால் அந்தச்சொல் பிதற்றலாகி மக்கள் மனதில் தைக்காது. அந்தவகையில் மார்க்ஸ் கையாளும் தத்துவ விஞ்ஞான உள்ளடக்கம் கொண்ட கலைச் சொற்களை புரியவைக்க எடுத்த முயற்சியில் நண்பர் ஜீவா எழுதிய நூல் வெற்றி பெற்றுள்ளது எனலாம். சரக்கு, மதிப்பு, உபரிமதிப்பு, சரக்குகளின் மாய்மாலம் போன்ற கலைச் சொற்களின் உள்ளடக்கம் புரியும்பொழுதுதான் மூலதன நூலின் சிறப்பினை ஒருவர் உணர முடியும். இந்நூல் அந்தக் கடினத்தை எளிமையாகக் கூற முயற்சித்திருக்கிறது.

இன்று மார்க்ஸ் மூலதனம் என்ற நூலை எழுதியுள்ளார் என்ற தகவல் தெரியாதவர்கள் உலகநாடுகளிலே மிகக் குறைவானவர்களே. அதேநேரம் அந்த நூல் என்ன சொல்லுகிறது என்று கேட்டால் தெரியாது என்று சொல்லுகிறவர்களே 99 சதம் இருப்பர். அப்படிச் சொல்ல நேர்கிற நிலைமையை மாற்றுகிற முறையில் நண்பர் ஜீவா எழுதிய நூல் அமைந்துள்ளது என்பதே இந்த சிறிய நூலின் அடுத்த சிறப்பாகும்.

பொருளாதாரப் பிரச்சினைகளை அலசுகிறபொழுது முதலீடு, கூலி, விலை, லாபம், நட்டம் என்பது மட்டுமே கண்ணில்படும். அது ஏதோ ஜடப்பொருள்களுக்கிடையே உள்ள உறவாக தோன்றுமே தவிர முரண்பாடுகளை உருவாக்கும் மானுட உறவாக இருப்பது பார்வையில் படாது.

சரக்குற்பத்தியில் இருக்கும் முரண்படும் வர்க்க உறவைப் பார்க்க வைத்தது மார்க்சின் மூலதன நூலே. மூலதன நூல் பரவுவதற்கு முன்காலத்தில் கஜானாவில் திரண்டு கிடக்கும் தங்கம் வெள்ளி இவைகளின் அளவு, ஆயுத பலம் இவை இரண்டுமே ஒரு நாட்டின் வல்லமைக்கு அடையாளமாக இருந்தது. பொருளாதார வளர்ச்சியின் அளவுகோலாகவும் இருந்தது.

படிக்க :
பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு | ராஜு – கருணானந்தன் – முத்துகிருஷ்ணன் உரை | காணொளி
மூலதனம் : மனிதகுல வரலாற்றின் மாவெடிப்பு ! தோழர் தியாகு

இன்று ”மானுட வளர்ச்சிக் குறியீட்டெண்”, ”மானுட மகிழ்ச்சிக் குறியீட்டெண்”, ”வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் திறன்”, ”தனிநபர் வருமான ஏற்றத்தாழ்வை கணக்கிடும் முறை” இவைகளோடு பொருளாதார வளர்ச்சியை இணைத்துக் கூறும் முறைகள் வந்துவிட்டன. இவைகளைப் பொருளாதார வளர்ச்சியின் அளவுகோல்களாகக் கொள்ளும் நிலை எய்தக் காரணம் மூலதனம் என்ற நூலின் தாக்கம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மார்க்சியத்தை நடைமுறைப்படுத்த முயன்ற சோவியத் மறைந்தாலும் அது உருவாக்கிய மார்க்சிய அணுகுமுறையின் ஒரு முக்கிய அம்சம் பரவலாகிவிட்டது என்பதன் அடையாளமே இந்த அளவுகோல்கள். (வே.மீனாட்சி சுந்தரம் எழுதியுள்ள நூலுக்கான மதிப்புரையிலிருந்து…)

நூல் : மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு திறவுகோல்
ஆசிரியர் : த.ஜீவானந்தம், B.com, MBA.

வெளியீடு : சுருதி வெளியீட்டகம்,
எண்:123, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை – 600 011.
தொலைபேசி எண் : 94440 09990
மின்னஞ்சல் :jeeva1953@yahoo.com

பக்கங்கள்: 156
விலை: ரூ 100.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

மரங்களே எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 12

மரங்களுடன் விடைபெறுதல்

ரங்கள் சரிவில் நன்கு நிமிர்ந்து நிற்கின்றன. இவை எங்கும் போய்விடவில்லை, இவற்றால் எங்கும் ஓட முடியாது, ஏனெனில் எங்களுக்காகக் காத்திருக்கின்றன.

இந்த மரங்கள் எங்களுடைய நண்பர்கள்.

நாங்கள் பிப்ரவரியில் இவற்றை நட்டோம். பெற்றோர்கள் நல்ல நாற்றுகளைக் கொண்டு வந்தனர், நாற்பது குழிகளைத் தோண்ட பயனீர்கள் உதவினர், நாற்பத்து ஒன்றாவது குழியை நானே தோண்டினேன். நாங்கள் கவனமாக நாற்றுக்களை நட்டோம்..

“யார் எந்த மரத்தை நட்டது என்று எப்படி அறிவது! இவற்றிற்குப் பெயரிடலாமே” என்றான் தேன்கோ.

ஒவ்வொரு மரத்தையும் யார், எப்போது நட்டது என்ற விஷயங்கள் எழுதிய சிறு இரும்பு வில்லையை ஒவ்வொருவரும் மரங்களில் கட்டித் தொங்க விட்டனர்.

அன்றாடம் சாதாரணமாக பெரும் இடைவேளையின் போது எங்கள் பூங்காவிற்கு வந்து மரங்களைப் பராமரிப்போம்; மண்ணைக் கொத்துவோம், தண்ணீர் ஊற்றுவோம். இவற்றைத் தடவிக் கொடுத்து, பேசவும், முதல் இலைகள் எப்போது வருகின்றன என்று கவனிக்கவும் வந்தோம்.

ஒரு முறை மழை பெய்த போது பூங்காவிற்கு சென்று எங்கள் மரங்களைப் பார்க்க முடியவில்லை. அவற்றிற்கு – யாராவது எதாவது தீங்கு செய்திருந்தால் என்ன செய்வது என்று குழந்தைகள் கவலைப்பட்டனர்.

“சரி, நம் மரங்கள் எப்படியிருக்கின்றன என்று பார்க்க மூவரை அனுப்பலாம்” என்றேன் நான்.

தாத்தோ, கோத்தே, இலிக்கோ ஆகிய மூவரையும் அனுப்பினோம். சிறுவர்கள் திரும்பி வந்து மரங்கள் நன்றாக இருப்பதாயும் எங்களுக்கு வாழ்த்து சொல்வதாயும் தெரிவித்தனர்.

இம்மரங்களில் முதல் இலைகள் தோன்றிய போது குழந்தைகள் பேரானந்தமடைந்தனர். லாலி காலையில் பள்ளிக்கு வந்த போது பூங்காவிற்கு சென்று இதை கவனித்து வந்தாள். எனவே மூன்றாவதாக இருந்த உழைப்பு பாடத்தை முதலுக்கு கொண்டு வந்து உடனே குழந்தைகளைப் பூங்காவிற்கு அழைத்துச் சென்றேன். குழந்தைகள் வழி பூராவும் லாலியை நோக்கிக் கேள்வி கேட்ட வண்ணமிருந்தனர்:

“எனது மரத்திலும் முதல் இலைகள் வந்து விட்டனவா? நீ பார்த்தாயா?”

“ஒருவேளை எனது மரம் காய்க்காவிடில் என்ன செய்வது?” என்று சிலர் கவலைப்பட்டனர்.

…இன்று மீண்டும் எங்கள் மரங்களைச் சந்தித்தோம். குழந்தைகள் அவற்றுடன் பேசுகின்றனர், இலைகளைத் தடவித் தருகின்றனர், மண்ணைக் கொத்துகின்றனர்.

“சரி, நீ எப்படியிருக்கிறாய்?” என்று லாலி தன் மரத்திடம் கேட்கிறாள். இங்கு வளர பிடித்துள்ளதா? உன்னருகே இயாவின் மரம் உள்ளது, வலதுபுறம் கோத்தேயின் மரம்…. ஓ, உனக்கு எல்லோரையும் தெரியுமா? இன்று பள்ளியில் கல்வியாண்டின் கடைசி தினம் தெரியுமா? நீ பயப்படாதே, நான் உன்னை அடிக்கடி வந்து பார்ப்பேன், என் வீடு பக்கத்தில்தான். உன் நண்பர்களுக்கும் உதவுவேன்!..”

படிக்க :
தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

என் வகுப்புக் குழந்தைகள் தம் மரங்களுடன் பேசக் கற்றுக் கொண்டு விட்டனர். தன் மகிழ்ச்சி, ஏமாற்றம், எண்ணங்கள், கனவுகள் எல்லாவற்றையும் இவற்றிற்குச் சொல்லலாம். நூலைக் கூடப் படித்துக் காட்டலாம். நல்ல கதைகளும் கவிதைகளும் எல்லோருக்கும் – மரங்களுக்கும் கூட – பிடிக்கும்.

குழந்தைகள் தங்கள் மரங்களுடன் பேசும்படி நான் ஊக்குவிக்கிறேன்; என் மரத்துடன் பேசுகிறேன், மற்றவற்றைத் தடவித் தருகிறேன்.

“குழந்தைகளே, உங்களுடைய மரங்களை நேசியுங்கள். அவை உயிருள்ளவை, உங்கள் பேச்சை அவை கேட்கின்றன, அவை உங்களுக்காக எப்போதும் காத்திருக்கும். இயற்கைக்கு மனித அன்பும் அக்கறையும் வேண்டுமே தவிர இதன் அழகைப் பற்றிய பாராட்டுதல்கள் வேண்டாம். நீங்கள் நிரந்தர அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்தினால் உங்கள் மரங்கள் விரைவாக, சுதந்திரமாக வளரும், அழகாகும் என்று உறுதி கூறுகிறேன். யாராவது இவற்றை மறந்தால், அவை நோய்வாய்ப்படும், வேர்களும் தண்டுகளும் அழுகும். என்ன செய்யலாம் தெரியுமா? நீங்கள் வெகு தொலைவில் இருந்து, உங்களால் அடிக்கடி வர முடியாமல் இருந்தால் அங்கே வளரும் மற்ற மரங்களை, இவற்றின் சகோதர, சகோதரி மரங்களைப் பராமரித்து அன்பு காட்டுங்கள்! காற்று உங்கள் அன்பைப் பற்றிச் செய்தி சொல்லும், உங்கள் மரங்கள் எப்போதும் நோய்வாய்ப்படாது.

ஏனெனில் இந்த சின்னஞ் சிறு மரங்களுக்குப் பெரிய இதயங்கள்; இவை உங்களை நேசிக்கின்றன, உங்கள் ஒவ்வொருவரையும் அன்பானவனாக, பரந்த மனப்பாங்குள்ளவனாகப் பார்க்க விரும்புகின்றன. இப்போது உங்களைப் போன்றே இவை, சிறியவை. ஆனால் இவை விரைவில் உங்களை விட விரைவாக வளரும். ஏன் தெரியுமா? இந்தச் சிறு வில்லைகளோடு உங்களுடைய தனித்துவத்தையும் உயர்த்திக் காட்டுவதற்காக! 20 – 30 ஆண்டுகள் கழித்து இங்கு வந்து இத்தோப்பில் இளைப்பாறுங்கள் உங்கள் மரங்களின் மீது சாய்ந்தபடி (இப்போது இவற்றின் மீது சாயக் கூடாது) வாழ்க்கையில் நீங்கள் சாதித்ததைப் பற்றிக் கூறுங்கள்!” மரங்களைப் பராமரிக்கவும், இவற்றைக் கண்டு நேசிக்கவும் எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணவும் நாங்கள் இங்கு வந்த போது இவ்வாறு நான் என் வகுப்புக் குழந்தைகளிடம் கூறினேன்.

“ஏன் நம் மரங்களுக்காக நாம் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தக் கூடாது!” என்று கோத்தே திடீரெனக் கேட்கிறான். அவன் லேலா அருகில் நின்றபடி அவள் தன் மரத்துடன் பேசுவதைக் கேட்கிறான்.

“நடத்தலாமே!” என்று நான் ஆதரவு தெரிவிக்கிறேன். குழந்தைகள் உடனேயே இதைப் பற்றிப் பேசுகின்றனர்:

“கலை நிகழ்ச்சி நடத்துவோமா!”

“நடத்துவோம்!”

“மரங்களே, எங்கள் கலை நிகழ்ச்சியைப் பார்க்கின்றீர்களா?”

“எப்படித் துவங்குவது?”

“பாடலிலிருந்து!”

மரங்களின் நடுவே நான் மட்டும் இருக்க, குழந்தைகள் சற்றுத் தள்ளிச் சரிவில் உள்ளனர். குழந்தைகள் சந்தோஷமான பாட்டைப் பாடுகின்றனர், சிலர் கவிதைகளை வாசிக்கின்றனர், சிலர் நடனமாடுகின்றனர். நானும் மரங்களும் கை தட்டுகிறோம்…

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

திராவிடம் | திமுக – அதிமுக | பஞ்சமி நிலம் | பாபர் மசூதி தீர்ப்பு | கேள்வி – பதில் !

கேள்வி : //திராவிடம் என்ற சொல்லே இல்லை, ஆராய்ச்சி பிழை. தமிழர் பெருமை மறைப்புகாக என இன்று திராவிட எதிர்ப்பு தீவிரமாக பலரால் கையாளப்படுகிறது. உண்மையில் திராவிடம் என்றால் என்ன? வரலாற்று ரீதியில்…//

இளம்பரிதி

ன்புள்ள இளம்பரிதி,

இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் இரு வகைக் குடும்பங்களிலிருந்து உருவாகின. ஒன்று திராவிட மொழிக் குடும்பம், மற்றொன்று இந்தோ ஆரியன் அல்லது சம்ஸ்கிருத மொழிக் குடும்பம். ஆரிய மொழிக் குடும்பத்திலிருந்து திராவிட மொழிக் குடும்பம் வேறுபட்டது என்பதை முதன்முறையாக எல்லீசு, ராபர்ட் கால்டுவெல் ஆகிய ஆங்கிலேய அறிஞர்கள் நிறுவினார்கள். அதற்கு முன்னர் வரை இந்தியாவில் தமிழ் உள்ளிட்டு அனைத்து மொழிகளும் சம்ஸ்கிருத மொழிக் குடும்பத்திலிருந்தே தோன்றின என்ற கருத்து செல்வாக்கோடு இருந்தது. இதை மறுத்து அறிஞர் ராபர்ட் கால்டுவெல் தனது “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” எனும் நூலில் இரு மொழிக் குடும்பங்களின் வேறுபாட்டை நிறுவினார். அது குறித்த வரலாற்று பின்னணியை விளக்கும் கீழ்க்கண்ட கட்டுரையை படித்துப் பாருங்கள்!

இது வெறுமனே இரண்டு மொழிக் குடும்பங்கள் பற்றிய பிரச்சினை அல்ல! சமஸ்கிருத மொழிக் குடும்பங்கள் பேசப்படும் மாநிலங்களின் வரலாறு பார்ப்பனிய வரலாறாகவும், திராவிட மொழிக் குடும்பங்கள் பேசப்படும் மாநிலங்களின் வரலாறு, ஆரம்பத்தில் பார்ப்பனிய எதிர்ப்பு மரபு, சமண, புத்த மரபுகளைக் கொண்ட பகுதிகளாவும் இருக்கின்றன.

அறிஞர் கால்டுவெல்

சிந்து சமவெளி நாகரீகம் முதல், கீழடி தொல்லியல் ஆய்வுகள் வரை திராவிட மரபை நிரூபிக்கின்றன. திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியாக தமிழ் இருக்கின்றது. மற்ற திராவிட மொழிகளில் சமஸ்கிருதக் கலப்பு அதிகமிருந்தாலும் தமிழ் மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொண்டு தனித்து நிற்கிறது.

மாறாக இன்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதிகள் தமிழ் மரபை வடமொழி சார்ந்த வேதமரபுதான் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதற்கு சில தமிழனவாதிகளும், ஆர்வலர்களும் பலியாகியிருக்கிறார்கள். எனவே மொழி, பண்பாடு என்ற வகையில் திராவிடம், பார்ப்பனியத்திடமிருந்து பிரிந்தும் எதிர்த்தும் நிற்கிறது. திராவிடத்தில் தமிழ் ஒரு அங்கம். உண்மையில் தமிழ் மரபு என்றால் அது திராவிடம் உருவாக்கிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சிதான்.

ஆகையால் திராவிடம், தமிழ் இரண்டையும் எதிரெதிரான முகாம்களாக குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. அது ஆர்.எஸ்.எஸ்.-ன் சூழ்ச்சி. அதற்கு ஏன் நாம் பலியாக வேண்டும்?

♦ ♦ ♦

கேள்வி : //அனைத்தும் சரிதான். இருப்பினும் கருணாநிதியை விட ஜெயலலிதா எவ்வகையிலும் பின் தங்கியவரல்ல. தமிழ் என்ற ஒற்றைப் போர்வையில் தன் வாழ்நாள் முழுதும் மக்களை ஏமாற்றிப் பிழைத்தது கருணாநிதிதான். ஜெயலலிதா அவர்களிடமும் சில எதிர்மறைகள் உண்டு. இருப்பினும் கருணாநிதியின் அனைத்துத் தவறுகளும் தமிழ் மூலமும் ஜெயலலிதா மூலமான ஒப்பீடு மூலமும் மறைக்கப்படு அவரை உயர்வாகச் சித்தரிப்பதைத் துளி அளவும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.//

மகாலட்சுமி

ன்புள்ள மகாலட்சுமி,

ஜெயலலிதா அரசியலுக்கு எப்படி வந்தார்? எம்.ஜி.ஆரின் பட நாயகி என்ற நெருக்கத்தால் அதே எம்.ஜி.யாரால் அரசியலில் இறக்கப்பட்டார். கருணாநிதியோ மாணவப் பருவத்தில் இருந்து திராவிட இயக்கத்தில் சேர்ந்து பல வருடங்கள் களப்பணியாற்றி கட்சியின் தலைவராக உயர்ந்தார். ஜெயாவை பார்ப்பன ஊடகங்கள் முற்று முழுவதாக போற்றுவதும், கருணாநிதியை அதே ஊடகங்கள் என்ன செய்தாலும் இகழுவதும் கூட இங்கே இன்னும் இருக்கும் யதார்த்தம்தான்.

இருவரைப் பற்றி ஒப்பீடு செய்வதை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது, படித்துப் பாருங்கள்!

 

♦ ♦ ♦

கேள்வி : //பஞ்சமி நிலம் என்றால் என்ன?//

சி. நெப்போலியன்

ன்புள்ள நெப்போலியன்,

ஆங்கிலேயர் காலத்தில் பட்டியலின மக்களுக்கு என்று தனிச்சிறப்பாக அளிக்கப்பட்ட விளைநிலங்கள் பஞ்சமி நிலம் என்று அழைக்கப்படுகின்றன. இது குறித்து கீழ்க்கண்ட விக்கிபீடியா கட்டுரை ஒரு அறிமுகத்தை அளிக்கும். படியுங்கள்!

♦ ♦ ♦

கேள்வி : //அயோத்தியின் தீர்ப்பை முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொண்டார்கள்?//

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

நல்லதொரு கேள்வி! அரசியலை கூர்மையாக அவதானிப்பதோடு அதன் முரண்பாடுகளை கேள்விகளாய் அடிக்கடி எழுப்பும் உங்களுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்!

சில முஸ்லீம் அமைப்புக்களைத் தவிர பெரும்பான்மை முஸ்லீம் அமைப்புகள் பாபர் மசூதி குறித்த தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான். முஸ்லீம்கள் ஏன் ஏற்றுக் கொண்டார்கள்?

மதச்சார்பின்மை கட்சிகளாய் கூறிக்கொள்ளும் காங்கிரசு, சி.பி.எம்., சி.பி.ஐ, போன்ற கட்சிகள் கூட இந்த தீர்ப்பினை ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி பெரும்பான்மை அரசியல் கட்சிகளே ஏற்றுக் கொண்டிருக்கும் போது முஸ்லீம் மக்களுக்கு வேறு வழி என்ன இருக்கிறது?

சொத்தை பறிகொடுத்தவருக்கு அநீதியும், சொத்தை இடித்து விட்டு அபகரித்தவருக்கு நீதியும் வழங்கியிருக்கும் இந்த தீர்ப்பு அநீதியானது. தீர்ப்பு குறித்த வினவு தளத்தில் வெளிவந்த பல கட்டுரைகளை நீங்கள் படித்திருக்கக் கூடும்.

தீர்ப்பு வருவதற்கு முன்னரே உச்சநீதிமன்ற தீர்ப்பினை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதுதான் இறுதியான தீர்ப்பு என்பதான சட்ட மாயையை ஊடகங்கள் மூலம் அனைவரும் அடிக்கடி பேசி வந்தார்கள். அதில் முஸ்லீம் அமைப்புகளும் உண்டு.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அதற்கு முந்தைய அத்வானியின் ரத யாத்திரை இரண்டும் இந்தியாவெங்கும் முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரங்களை தோற்றுவித்து ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர். பிறகு இப்போது நடப்பது பார்ப்பனிய பாசிசத்தை முன்னிறுத்தும் பாஜக ஆட்சி. இந்த ஆட்சியில் மாட்டுக்கறி வைத்திருந்தார் என முஸ்லீம் மக்கள் கொல்லப்படுவதும், கொலைக் குற்றவாளிகளை நீதிமன்றங்கள் விடுதலை செய்வதும் ஒரு கள யதார்த்தம். இந்நிலையில் இந்த நாடு இந்துக்களின் நாடு, பார்ப்பனியத்தை போற்றும் நாடு, அதை எதிர்ப்போரை அடக்கும் நாடு என்றே எவரும் கருத வேண்டும். அயோத்தி தீர்ப்பு குறித்த விமர்சனங்களை வெளிநாட்டு பத்திரிகைகளே கூட இப்படித்தான் எழுதியிருக்கின்றன.

இந்த சூழ்நிலையில் கையறு நிலையில் இருக்கும் இந்திய முஸ்லீம் மக்கள் வேறு வழியின்றி ஒருவிதமான தோல்வி மற்றும் சுய பாதுகாப்பு மனப்பான்மையில் அயோத்தி பாபர் மசூதி தீர்ப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதன் பொருள் இந்தியாவில் உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதே. சிறுபான்மையினரின் நலனை பாதுகாக்காமல் அவர்களை அடிமை போல நடத்தும் ஒரு அமைப்பு முறையை நாம் ஜனநாயகம் என்றே அழைக்க முடியாது. போலி ஜனநாயகத்தில் நமக்கு நீதி கிடைக்காது என்று யதார்த்தமாக கருதும் ஒரு முஸ்லீமுக்கு தீர்ப்பை ஏற்காமல் மறுப்பதற்கு என்ன இருக்கிறது? இல்லை அவர்களது உள்ளக்கிடக்கையில் பாபர் மசூதியை திருப்பிக் கட்டித் தரவேண்டும் என இருந்தாலும் அதை இங்கே எந்த வாக்கு வங்கி அரசியல் கட்சி (ஒரு சில விதிவிலக்குகள் தவிர) பேசுகிறது?

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி
♦ அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

இப்படி ஜனநாயகத்தாலும், அரசியல் கட்சிகளாலும் கைவிடப்பட்ட நிலையில் முஸ்லீம்கள் அயோத்தி தீர்ப்பை ஏற்பது என்பது பாஜகவின் பார்ப்பனிய பாசிசத்தை எதிர்த்து இங்கே எதுவும் செய்ய முடியாது என்று சரணடைந்த நிலையாகும். அதனால்தான் அவர்கள் தீர்ப்பை ஏற்கிறார்கள். உண்மையில் மறுப்பதற்கு அவர்களுக்கு உரிமையோ, ஆதரவோ, அமைப்போ இங்கு இல்லை. மோடி ஆட்சியில் எப்போதும் அச்சத்தோடு வாழும் நிலைக்கு முஸ்லீம்கள் தள்ளப்பட்டுவிட்டார்கள் என்பதை அயோத்தி தீர்ப்பு மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீரின் தனிச்சட்டம் நீக்கப்பட்டது, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவையும் எடுத்துரைக்கின்றன.

இந்த நிலையை மாற்றும் வரலாற்றுக் கடமை இங்கே இருக்கும் முற்போக்கு, ஜனநாயக, புரட்சிகர அமைப்புகளுக்கு இருக்கிறது. இல்லையேல் ஹிட்லரின் ஆட்சி போல மோடி ஆட்சி இங்கே சிறுபான்மை, இன, மொழி, பண்பாட்டு, வரலாற்று அழிப்பை தொடரும். அதற்கு அயோத்தி தீர்ப்பு ஒரு முன்னோட்டம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !

“நீங்கள் விலங்குகளை துன்புறுத்துகிறீர்கள், நீங்கள் மீன், கறி, கோழி சாப்பிடுவது விலங்குகளுக்கு எதிரானது” என்ற வாதத்தை முன்னெடுத்து நம்மைச் சுற்றி ஒரு சதிகார கும்பலே இயங்கி வருகிறது. என் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்பதை நான் மட்டும்தான் முடிவு செய்வேன், வேறு எந்த கொம்பனுக்கும் அந்த உரிமை இல்லை என்பதை தெளிவாகச் சொல்ல நமக்குத் தெரியும். ஆனால் அதே சிறு குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கு வளைத்தால்?

அதைத்தான் இந்த கும்பல் செய்து வருகிறது. கோவையைச் சேர்ந்த அரவிந்தன், ஹீனா ஆச்சார்யா என்ற நபர்கள் “வீகன்” டயட் என்று கறி கோழி உண்ணக் கூடாது, அது விலங்குகளுக்கு எதிரானது என்று பச்சிளம் குழந்தைகளை தேர்ந்தெடுத்து விஷம் பரப்பி வருகிறார்கள். அதிலும் உண்ண உணவின்றி பள்ளியில் சத்துணவு உண்ணும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளிடம். மிக மிக அயோக்கியத்தனமான முயற்சி இது. ஊட்டச்சத்து சரியாக இல்லாமல், உண்ண உணவு இல்லாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு புரதம் சேர்க்க கிடைப்பதை வசதிக்கேற்ப பாவப்பட்ட மக்கள் வாங்கித் தந்தால், அந்தக் குழந்தைகள் அதை உண்பது கூட இல்லை.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

Food chain, nutrition supplement availability, anemia என்று எந்த அறிவும் இல்லாமல் இந்த முட்டாள்தனம் ஏழைக் குழந்தைகள் மேல் அரங்கேறுவது அநியாயம். விலங்குகள் கொடூரமாக துன்புறுத்தப்படும் வெளிநாட்டு காணொளிகள் இந்தக் குழந்தைகளிடம் காண்பிக்கப்பட்டு மனமாற்றம் செய்யப்படுகிறது. ஏற்கெனவே இந்தியப் பெண் குழந்தைகள் இரத்த சோகையால் அவதியுறுவது உலகறிந்த செய்தி. அப்படி இருக்க, தான்தோன்றித் தனமாக எந்த அனுமதியும் இன்றி அரசுப் பள்ளிகளில் செய்யப்படும் இந்த பரப்புரைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். ஹேர்பாலைப், பாலியோ, கீட்டோ டயட் வரிசையில் இந்த வீகன் பைத்தியங்கள்.

படிக்க:
கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !
♦ என் ஊரு நெல்லை ! ஆனா எனக்கு சொதி குழம்பு தெரியாது !

ஆரோக்கியமாக உண்ண வேண்டும், உண்ணும் உணவு நம் உடலை பாதிக்காமல் இருக்க வேண்டும், சரியான உடற்பயிற்சி வேண்டும், சமச்சீர் டயட் வேண்டும், அவரவர் உடல்நிலை, வாழும் சூழலுக்கேற்ப உண்ண வேண்டும், அவ்வளவுதான். அதை விட்டு என் டயட் சிறந்தது என்று தம்பட்டம் அடிப்பது, இதை உண்ண வேண்டும் என்று அடுத்தவரை கட்டாயப் படுத்துவது என்பதெல்லாம் வன்முறை.

அதிலும் உரிய அனுமதி இன்றி 1.39 லட்சம் குழந்தைகளிடம் பேசி மனம் மாற்றி இருக்கிறேன் என்று இந்த கும்பல் மார்தட்டிக் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்? சங்கிகளின் இந்த ஆயுதத்தை எப்படி தடுத்து ஆடப் போகிறோம்?

நன்றி : ஃபேஸ்புக்கில் Nivedita Louis 

தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்துட்டாங்க : குமுறும் ஆட்டோமொபைல் உதிரி பாக விற்பனையாளர்

மோடி கொண்டுவந்த ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்குப் பிறகு, சிறு – குறுந் தொழில்கள் அழிந்து நாசமாயின. அதேபோல, சந்தையின் மிக உயரிய இடத்தைப் பிடித்திருந்த ஆட்டோ மொபைல் தொழிலும் மிகப்பெரும் வீழ்ச்சியை அடைந்தது.

ஆட்டோ மார்கெட் என்று அழைக்கப்படும் சென்னை ஜி.பி ரோட்டில் இருக்கும் பல நூறு கடைகளில் கார் சீட் கவர்களை மட்டுமே விற்கும் பிரத்தியேக கடை. அதன் உரிமையாளர் பாலுவிடம் தொழிலைப் பற்றி விசாரித்தோம். ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோற்றின் பதமாக திரு பாலுவின் மனக் குமுறல்.

பாலு, கடை உரிமையாளர்.

“எனக்கு 50 வயதாகிறது. கடந்த 35 வருசமாக இங்கே வியாபாரம் செய்து பல ஏற்ற இறக்கங்களைப் பார்த்து விட்டேன். இப்போது வியாபார நிலைமை தீர்க்க முடியாமல் மிகவும் சிக்கலாகி வருகிறது. கடைக்கு வரும் கஸ்டமர்களும் பாதியாகக் குறைந்து விட்டார்கள். வரும் சில கஸ்டமர்களும் விலையைக் கேட்டு வெறுமனே போய் விடுகிறார்கள். வியாபாரத்தை அனுசரித்து பழைய விலைக்கே கொடுத்தாலும் வாங்கத் தயங்குகிறார்கள்.

(படத்தை பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

என்னுடைய வியாபார அனுபவத்தில் இந்த கஷ்டமான சூழலை இதுவரை அனுபவித்ததில்லை.

படிக்க:
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

இந்த இடம் பல தலைமுறைகளைக் கடந்தது. ஏறக்குறைய 100 ஆண்டுகளாக வர்த்தகம் நடக்கும் இடம். இங்கு முதன்முதலில் சென்னை துறைமுகத்தில் வந்து நிற்கும் கப்பல்களுக்குத் தேவையான உதிரி பாகங்கள் விற்கும் கடைகள் இருந்தன. கப்பலை நிறுத்தத் தேவையான நங்கூரம், பல நூறு கிலோ எடையுள்ள இரும்பு சங்கிலிகள், கப்பலில் பொருத்தப்படும் ப்ரொபல்லர் (நீர் விலக்கி), அதன் பல பாகங்கள் என்று ஆரம்பித்த இப்பகுதி இன்றைய நிலையை அடைந்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இங்கு ஒரு காருக்குத் தேவையான சீட் கவரைப் பொருத்தவரை ரூ. 2800-லிருந்து அதிகபட்சம் 18 ஆயிரம் ரூபாய் வரை இருக்கிறது. ரெக்சின், ஃபோம், கார்ட்டன், வெல்வெட், லெதர் என்று கால நிலைகளுக்குத் தேவையானதை வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்வார்கள். தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று தென்னிந்தியா முழுவதும் இருந்து இங்கே வாங்க வருவார்கள். இப்போ அந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சிறு தொழில் நடத்தி வந்த எங்களை ஜி.எஸ்.டியும், பண மதிப்பழிப்பும் சின்னாபின்னமாக்கி விட்டது. சர்வதேச கார் தயாரிக்கும் கார் கம்பெனிகளுக்கு இலவச மின்சாரம், வட்டியில்லா கடன், வட்டி விடுமுறை அளிக்கும் மத்திய அரசு காரின் உப பொருட்களை ஆடம்பரப் பொருள் என்று வகைப்படுத்தி எங்களுக்கு 28% வரி விதித்திருக்கிறது. இந்த விலையேற்றத்தால் ஏறக்குறைய நாங்கள் அழியும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இங்கிருக்கும் அதிமுக தலைவர்களும், ஆமாம் சாமிகளாகி தமிழ்நாட்டை மொத்தமாக மத்திய அரசுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். இதிலிருந்து எப்படி மீள்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் வாழ்ந்துதானே ஆக வேண்டும் என்றார்.


வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

கேள்வி : // அம்பேத்கர் புத்த மதத்திற்கு மாறிய பிறகு அனைத்து தலித் தலைவர்களும் புத்தமதத்தின் சித்தாந்தங்களை தலித் மக்களுக்கு கற்பிக்காதது ஏன்? இதுதான் உண்மையிலேயே நமது தலித் தலைவர்களின் தோல்வி. ஆகவே தலித் மக்களின் முன்னேற்றம் குறித்த எதிர்காலம் என்ன?//

குபேந்திரன்

ன்புள்ள குபேந்திரன்,

அம்பேத்கர் புத்தமதத்திற்கு மாறிய வரலாற்றுப் பின்னணியை, கீழ்க்கண்ட கட்டுரை விளக்குகிறது. படித்துப் பாருங்கள்!

தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காக தளராது பாடுபட்ட அம்பேத்கர் தனது முயற்சிகள் தோல்வியுற்று தளர்ந்த இறுதி காலத்தில்தான் புத்த மதத்திற்கு மாறுகிறார். அது “நான் இந்துவாகச் சாகமாட்டேன்” எனும் எதிர்ப்பின் ஒரு பகுதி.

இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றிய புத்த மதம் இருபத்தோராம் நூற்றாண்டின் பிரச்சினைகளுக்கு தீர்வல்ல. மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மதம் தேவை எனும் கருத்தைக் கொண்டிருந்த அம்பேத்கர், பார்ப்பனியத்தை எதிர்த்து தோன்றிய புத்த மதத்தை தெரிவு செய்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைப் போராட்டத்தின் மூலம்தான் அவர்களை தீண்டாமைக் கொடுமைகளிலிருந்தும், ஆதிக்க சாதி அடக்குமுறைகளிலிருந்தும் விடுதலை செய்ய முடியும். அது மதம் எனும் நம்பிக்கையின் பாற்பட்டதல்ல. தலித் அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை வாக்கு அரசியலில் சில தொகுதிகளைப் பெறுவதே பிரயத்தனமாக இருக்கிறது. அதன் பொருட்டு அவர்கள் பாஜக, காங்கிரசுடனோ இல்லை அதிமுக, திமுகவுடனோ கூட்டணி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களது பிரச்சினை மதம் அல்ல, தேர்தலில் வெற்றி பெறுவது.

பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக மதம் மாறுவது என்பது ஒரு எதிர்ப்பின் அடையாளம் மட்டுமே. அதுவே சமூக ரீதியான விளைவுகளை தோற்றுவிப்பதில்லை. வர்க்க ரீதியான உழைக்கும் மக்களின் அரசியல் – சமூகப் போராட்டம் எந்த அளவுக்கு வீச்சாக நடைபெறுகிறதோ அந்த அளவுக்கு தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலம் ஒளிமயமாய் இருக்கும்.

பொருளாதார அடக்குமுறை அனைத்து சாதி ஏழைகளையும் பாதிக்கிறது. சமூக ரீதியான அடக்குமுறை தாழ்த்தப்பட்ட மக்களை மட்டும் பாதிக்கிறது. இந்த இரு அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட ஐக்கியத்தை, உழைக்கும் மக்களை திரட்டும் போக்கில் ஏற்படுத்த முடியும். தலித் அரசியல் கட்சிகளோ தேர்தலில் எத்தனை சீட்டுக்கள் பெற முடியும் என்பதாக சிறுத்துப் போய்விட்டன. தலித் அரசியல் பேசும் சித்தாந்தவாதிகளோ அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு ஊறு விளைவுக்கும் வகையில் அடையாள அரசியலை முன்வைக்கின்றனர். இரண்டுமே தவறு என்கிறோம்.

நன்றி!

படிக்க :
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !
♦ சீமானின் எதிர்காலம் – மகாராஷ்டிரா தேர்தல் கூத்து | கேள்வி – பதில் !

♦ ♦ ♦

கேள்வி : //ஈரான் மீது அமெரிக்கா ஏன் வெறுப்பைக் காட்டுகிறது, எண்ணெய் வளத்தை பெற சவுதியை போல் பயன்படுத்திக் கொள்ளலாமே?//

கண்ணா

ன்புள்ள கண்ணா,

எழுபதுகளில் அமெரிக்க ஆதரவு மன்னனான ஷா, ஈரானில் தூக்கியெறியப்பட்ட நாள் முதல் ஈரான் ஆட்சியாளர்களும், மக்களும் அமெரிக்காவை எதிர்த்து வருகிறார்கள். மாறாக சவுதி மற்றும் இன்னபிற வளைகுடா நாடுகளில் ஜனநாயகவாதிகள் துடைத்தெறியப்பட்டு அமெரிக்க ஆதரவு ஷேக்குகள் ஆண்டு வருகிறார்கள்.

ஈரானில் ஷியா பிரிவு மக்களும், சவுதி முதலான வளைகுடா நாடுகளில் சன்னி பிரிவு மக்களும் வாழ்கின்றனர். இஸ்லாமிய உலகில் இந்தப் பிரிவு மதவாதிகளால் வெறுப்புடன் மேலும் வளர்க்கப்படுகிறது. இந்த வேறுபாட்டை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்கிறது.

வளைகுடாவில் தொடர்ந்து பதற்றமும், போரும் இருந்து வருவது அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, இஸ்ரேலுக்கும் அது நல்லது. ஈரானைப் பயமுறுத்திக் கொண்டே அமெரிக்கா பல பில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்று வருகிறது. அதே போன்று இந்நாடுகளில் தனது இராணுவத் தளங்களையும் பராமரித்து வருகிறது.

இராக் – குவைத் போரையும் அமெரிக்கா அப்படித்தான் பயன்படுத்திக் கொண்டது. ஆரம்பத்தில் அமெரிக்க ஆதரவு அடியாளாக இருந்த சதாம் உசேன் அமெரிக்காவின் ஆசீர்வாதத்தோடு ஈரான் மீது போர் தொடுத்தார். பின்னர் ஒரு பிராந்திய வல்லரசாக வளர்ந்து குவைத்தை ஆக்கிரமித்தார். அதன் போக்கில் அமெரிக்காவையும் எதிர்த்தார். வளர்த்த கடாவை வெட்டும் விதமாக அமெரிக்கா சதாமைக் கொன்று ஈராக்கை ஆக்கிரமித்தது. உள்நாட்டுப் போரில் ஈராக்கை அமிழ்த்தும் விதமாக ஐ.எஸ்.ஐ.எஸ்-ஐ தோற்றுவித்து பின்னர் அழித்தது.

எனவே இந்த முரண்பாடுகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு ஏராளமான வருமானத்தையும், தொழில் முதலீடுகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. அவ்வகையில் ஈரானை பூச்சாண்டி காட்டி மற்ற வளைகுடா நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.

நன்றி!

படிக்க :
♦ ஈரான் கச்சா எண்ணெய் : அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிந்த மோடி அரசு !
♦ உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !

♦ ♦ ♦

கேள்வி : //சீனா பொருளாதாரத்தில் வளர்ந்த அளவு ருசியா (russia) 1990-க்கு பிறகு வளர்ச்சி பெற முடியவில்லையே ஏன்?//

ஹரினிவாஸ் வடிவேல்

சியா 1990-க்கு பிறகு இல்லை, 1970-களிலேயே நொடித்துப் போக ஆரம்பித்து விட்டது. 1950-களில் தோழர் ஸ்டாலின் மரணமடையும் போது சோவியத் யூனியன் தனது சோசலிச உற்பத்தியால் பலமான நாடாக இருந்தது. அதற்கு பிறகு பதவியை கைப்பற்றிய திரிபுவாதியான குருசேவ் முதல் பிரஷ்னேவ் வரை சோவியத் யூனியன் போலி சோசலிச நாடாக மாறியது.

அதன் பொருளாதார வளம் அனைத்தும் இராணுவத்திற்கு திருப்பப்பட்டு அமெரிக்காவுடன் கெடுபிடிப் போரில் ஈடுபட்டது ரசியா. இந்தப் பதிலிப் போர் கியூபா முதல் ஆப்கான் வரை உலகெங்கிலும் நடைபெற்றது. இந்த கெடுபிடிப் போரில் ரசியா தோற்றதோடு தனது பொருளாதார வளத்தையும் இழந்தது. இறுதியில் அதனிடம் அமெரிக்காவிற்கு ஈடான இராணுவ பலம் இருந்ததே ஒழிய பொருளாதார பலமில்லை.

மாறாக சீனாவில் 1970-களில் மாவோ மரணமடையும் போது அந்த நாடு பலமான அடிப்படைக் கட்டமைப்பு கொண்ட சோசலிச பொருளாதார நாடாக இருந்தது. அதற்கு பிறகு அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்ட டெங்சியோ பிங் தலைமையிலான அதிகாரவர்க்க கும்பல் சீனாவை முதலாளித்துவ பொருளாதார நாடாக மாற்றியது. ரசியா போல எந்தப் பதிலிப் போரிலும் ஈடுபடாமல் தனது வளமனைத்தையும் சந்தைப் பொருளாதாரத்தில் போட்டது. கிழக்கு கடற்கரைப் பகுதியில் உருவான சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மேற்குலகின் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மலிவான உற்பத்தி பின்னிலமாக விளங்கியன. சீனாவும் போலி சோசலிச நாடாக மாறினாலும் அதன் முதலாளித்துவ பொருளதாரம் சோசலிச சாதனைகளை அடிப்படையாக்கி வளர்ந்தது.

கோர்பசேவ் காலத்தில் சோவியத் யூனியன் தனது இறுதிக் கோவணத்தையும் வீசி விட்டு முழு முதலாளித்துவ நாடாக மாறியது. எனினும் அவருக்கு பிறகு வந்த எல்சின் காலத்தில் ரசியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. பின்னர் விளாதிமிர் புடீன் காலத்தில் அரசின் ஆதிக்கம் நிலை நாட்டப்பட்டு, இராணுவ பலம் மீட்கப்பட்டு இருந்தாலும் பொருளாதாரத்தில் அடைந்த வீழ்ச்சியில் இருந்து ரசியா எழவே முடியவில்லை.

ரசியா சொல்லில் சோசலிசம் செயலில் ஏகாதிபத்தியம் என்ற சமூக ஏகாதிபத்திய நாடாக மாறி பொருளாதாரத்தை இழந்தது. சீனா சொல்லில் சோசலிசம் செயலில் முதலாளித்துவம் என்று மேற்குல நாடுகளின் உற்பத்தி கூடமாக தன்னை வளர்த்துக் கொண்டது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

மேட்டுப்பாளையத்தில் 17 பேரைப் பலிவாங்கிய சுவர் பற்றி வெளிவரும் உண்மைகள் படுமோசமானவையாக உள்ளன.

அது ஒரு வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமல்ல. மேட்டுப்பாளையத்திலேயே வசதி படைத்தவர்கள் வாழும் பகுதியையும், அருந்ததிய மக்கள் வாழும் பகுதியையும் பிரித்து எழுப்பப்பட்டிருந்த சுவருமாகும்.

அருந்ததிய மக்கள் லே அவுட் சாலைகளில் நடமாடுவதைத் தடை செய்யவே அமைக்கப்பட்ட தீண்டாமைச் சுவர் இது.

மேட்டுப்பாளையத்தில் ஒரு கூட்டுறவு சங்கம் லேஅவுட் அமைத்த போது பெரும் பணக்காரர்கள் இங்கே வந்து குவிந்தனர். லேஅவுட்டுக்கு அப்பால் இருந்த நடூர் தலித் மக்கள் வாழும் பகுதியாகவும், வறுமை மிகுந்ததாகவும் இருந்ததால் அது தங்கள் கண்ணில் பட்டு இந்தப் பகுதியின் அழகைக் கெடுத்து விடக்கூடாது என்றும், அவர்கள் தங்கள் சாலைகளில் நடமாடிவிடக் கூடாது என்றும் 100 அடி நீளமும், 20 அடி உயரமும் கொண்ட கருங்கல் சுவரை சேரிக்கும், லேவுட்டும் நடுவே துகில் மாளிகையார் உள்ளிட்டவர்கள் எழுப்பினர்.

இது அருந்ததிய மக்களின் சாலையை அடியோடு மறித்தது. இந்தச் சுவரை எடுக்க வேண்டும் என்பது அவர்களது நீண்ட நாள் கோரிக்கையாகும்.

சுவர் எழுப்பிய இந்த பணக்கார லேஅவுட்டானது காம்பவுண்ட் போட்டு தங்கள் பகுதியை மூடி வைக்க அனுமதி பெற்ற கேட்டட் கம்யூனிட்டியோ, தனியார் டவுன்ஷிப்போ அல்ல. அதே போல இந்த லே அவுட்டின் மற்ற சாலைகளை மறித்து சுவர் எழுப்பப் படவில்லை.

மற்றவர்கள் நடமாட்டத்தைத் தடுக்க சுவர் எழுப்பும் உரிமை இவர்களுக்கு இல்லை. சட்டப்படி வீட்டு மனைகள் விற்றுத் தீர்ந்ததும் லேஅவுட் சாலைகளை தான செட்டில்மெண்ட் பத்திரம் எழுதி அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். பின்பு அந்த சாலைகள் எல்லோருக்கும் பொதுவானவை ஆகிவிடும்.

இங்கே நடூரை மறித்து சட்டவிரோதமாக சுவர் எழுப்புவதை அரசும் நகராட்சியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன.

இந்த சுவரோரம் 22 செண்ட் மனை சக்ரவர்த்தி துகில் மாளிகை உரிமையாளருடையது. எனவே சுவர் எழுப்புவதில் அவருக்கு முக்கிய பங்கிருந்திருக்கலாம்.

படிக்க:
மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் : இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் – நம் மனசாட்சியை உலுக்க ?
♦ தீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்

இவர் கருங்கல் சுவர் ஓரம் செடிகள் வளர்த்து நீர் விட்டு அந்தப் பகுதியையே சதுப்பு நிலம் போல ஆக்கிவிட்டார். இது சுவரை பாதித்து சுவருக்கு அப்பால் வாழ்ந்து வந்த மக்களையும் கடுமையாகப் பாதித்தது.

அவர்கள் இது பற்றி முறையிட்டும் துகில் மாளிகை உரிமையாளர் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள்.

மழைகாலத்தில் தொடர்ந்து மழை பெய்ததும் வடிகால் இல்லாமல் சுவர் ஓரம் நீர் குளம் போலத் தேங்கியது. சுவர் உடைந்து விடுவதைத் தடுக்கும் கான்கிரீட் பீம்கள் இல்லாமல் நெடுநெடு உயரத்தில் கட்டப்பட்டிருந்த சுவர் ஏற்கெனவே பலவீனமடைந்திருந்தது.

கேடுகெட்ட சாதியுணர்ச்சி, சுத்த உணர்ச்சி, அழகுணர்ச்சியால் நரக வேதனை அனுபவித்து வந்த மக்கள் உடமைகளையும் உயிரையும் இழந்து உள்ளனர்.

இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர்?

நன்றி : ஃபேஸ்புக்கில் இரா. முருகவேள். 

இரண்டு போர் விமானங்களை வீழ்த்திய கால்கள் இல்லாத விமானி !

உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 01

பின்னுரை

ர்யோல் பிரதேசத்துக்கான போர் சோவியத் சைனியத்தின் வெற்றியில் முடியும் தருவாயில் இருந்தது. வடக்கே இருந்து தாக்கிய முன்னணி ரெஜிமென்டுகள் க்ராஸ்னகோர்ஸ்க்கயா மேட்டிலிருந்து தாங்கள் தீப்பற்றி எரியும் நகரைக் காண்பதாக அறிவித்துவிட்டன. அந்தப் பிரதேசத்தில் நடவடிக்கைகளை நடத்திக் கொண்டிருந்த சண்டை விமான ரெஜிமென்டைச் சேர்ந்த விமானிகள் கடைசி ஒன்பது நாட்களில் நாற்பத்தேழு பகை விமானங்களைச் சுட்டு வீழ்த்தி விட்டார்கள் என்ற தகவல் அப்போது ப்ரியான்ஸ்க் முனைமுக அலுவலகத்துக்கு கிடைத்தது. இந்தக் காலப் பகுதியில் ரெஜிமென்டுக்கு நேர்ந்த இழப்புக்கள் ஐந்து விமானங்களும் மூன்று ஆட்களும் மட்டுமே, ஏனெனில் இரு விமானிகள் சேதமடைந்த விமானங்களிலிருந்து பாராஷூட்டுடன் குதித்து கால்நடையாக ரெஜிமென்டை அடைந்து விட்டார்கள் என்று தகவல் அறிவிக்கப்பட்டது. சோவியத் சைனியத்தின் பிரமாண்டமான தாக்குதல்கள் நடந்து கொண்டிருந்த அந்த நாட்களில் கூட இத்தகைய வெற்றி அசாதாரணமாக இருந்தது.

விமானிகளின் இந்த வீரச் செயல்கள் பற்றிப் “பிராவ்தா” செய்தித்தாளுக்கு எழுதும் நோக்கத்துடன் நான் தகவல் தொடர்பு விமானத்தில் இந்த ரெஜிமென்டுக்குச் சென்றேன்.

நாங்கள் விமான நிலையத்தை அடைந்தபோது மாலை ஆகிவிட்டது. ரெஜிமென்டின் கெடுபிடி நிறைந்த வேலை நாள் முடிந்துவிட்டது. அர்யோல் நகரின் அருகே ஜெர்மானியர்கள் விமான நடவடிக்கைகளைச் சிறப்பாகத் தீவிரப்படுத்தியிருந்தார்கள். ரெஜிமென்ட் சண்டை விமானங்கள் அன்று ஏழு முறை சண்டைப் பறப்புகள் நடத்த நேர்ந்திருந்தது. பொழுது சாயும் தருவாயில் கடைசிக் குழுக்கள் எட்டாவது பறப்புக்குப் பின் திரும்பி வந்திருந்தன. ரெஜிமென்ட் கமாண்டர் சிறு கூடான மேனியர். பழுப்பேறிய நிறமுள்ள துடியான மனிதர். புத்தம் புதிய நீல விமானி உடை அணிந்திருந்தார். அவரது முடி கச்சிதமாக நேர் வகிடு எடுத்து வாரிவிடப்பட்டிருந்தது. அன்று எதுவும் உருப்படியாக எனக்கு தெரிவிக்கும் நிலையில் தான் இல்லை என்றும், காலை ஆறு மணிமுதல் விமான நிலையத்தில் இருப்பதாகவும் தாமே மூன்று முறைப் பறப்பு நடத்தியதாகவும் களைப்பினால் இப்போது நிற்பதே தமக்கு அரும்பாடாக இருக்கிறது என்றும் அவர் ஒளிக்காமல் ஒப்புக் கொண்டார். மற்ற ஸ்குவாட்ரன் கமாண்டர்களுக்கும் பத்திரிக்கைப் பேட்டி அளிக்க அன்று நேரமில்லை. பேட்டியை அடுத்த நாளுக்கு ஒத்திப் போட வேண்டும் என்பதை நான் புரிந்து கொண்டேன். தவிர நேரமாகிவிட்டபடியால் அன்று திரும்பவும் முடியாது என்பது தெளிவாயிருந்தது. சூரியன் பிர்ச் மர முடிகள் மீது தனது கிரணங்களின் உருக்கிய தங்கத்தை ஊற்றிக் கொண்டிருந்தது.

கடைசி விமானங்கள் தரையில் இறங்கலாயின. எஞ்சின்களை நிறுத்தாமல் அவற்றை ஓட்டப் பாதையிலிருந்து நேரே காட்டோரத்துக்குச் செலுத்தினார்கள் விமானிகள். அங்கே மெக்கானிக்குகள் அவற்றை கைகளால் திருப்பினார்கள். முகட்டின் மேல் புல் பற்றைகள் பரப்பப்பட்டுப் பசேலென்றிருந்த காப்பிடத்துக்குள் விமானம் நின்ற பிறகே, களைத்து வெளிறிய விமானி தன் அறையிலிருந்து மெதுவாக வெளியே வந்தான்.

கடைசியாக நிலையம் சேர்ந்தது மூன்றாவது ஸ்குவாட்ரன் கமாண்டரின் விமானம். விமானி அறையின் ஒளிபுகும் வளைமுகடு திறக்கப்பட்டது. முதலாவது அங்கிருந்து வீசப்பட்டுப் புல் மேல் விழுந்தது பெரிய கருங்காலிக் கைத்தடி. அதன் மேல் தங்கக் கூட்டெழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பிறகு, பழுப்பேறிய அகன்ற முகமும் கரிய முடியும் கொண்ட ஒருவன் வலிய கரங்களால் விளிம்பைப் பற்றிச் சட்டென எழுந்து லாவகமாக மறுபுறம் தாண்டி இறக்கை மேல் நின்றான். அங்கிருந்து சிரமத்துடன் தரையில் இறங்கினான். ரெஜிமென்டிலேயே சிறந்த விமானி என்று யாரோ என்னிடம் சொன்னார்கள். மாலை நேரத்தை வீணாக்க விரும்பாமல் அப்போதே அவனிடம் உரையாட நான் தீர்மானித்தேன். எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது, உயிரோட்ட முள்ள கரிய ஜிப்ஸிக் கண்களால் அவன் என்னைக் குதூகலம் பொங்க நோக்கினான். அந்த விழிகளில் தணியாத இளமை உற்சாகம் பெருக்கெடுத்தது. அதே சமயம், வாழ்க்கையில் நிறைய அடிபட்டுத் தேறிய அனுபவ சாலியின் அலுப்பும் விவேகமும் தென்பட்டன.

அவன் புன்னகையுடன் சொன்னான்; “கொஞ்சம் கருணை காட்டுங்கள்! மெய்யாகவே சொல்லுகிறேன், நிற்க மாட்டாமல் தள்ளாடுகிறேன். காதுகளில் நொய்யென்று இரைகிறது. நீங்கள் சாப்பிட்டாயிற்றா? இல்லையா? ரொம்ப நல்லதாயிற்று! சாப்பாட்டு அறைக்குப் போய், சேர்ந்து உண்போம். ஒரு பகை விமானத்தை வீழ்த்தியதற்கு இருநூறு கிராம் வோத்கா இரவு சாப்பாட்டின் போது கொடுப்பது எங்கள் ரெஜிமென்டில் வழக்கம். இதன்படி எனக்கு இன்று நாநூறு கிராம் வோட்கா கிடைக்கும். நம் இருவருக்கும் போதும். என்ன, போவோமா? சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம், உங்களுக்கு அவ்வளவு ஆவலாயிருந்தால்.”

நான் இசைந்தேன். கரவற்ற இந்தக் குதூகல இளைஞனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. காட்டின் ஊடாக நேரே சென்ற ஒற்றையடிப் பாதையில் நாங்கள் நடந்தோம். அந்த இளைஞன் விரைவாக நடந்தான். நடு நடுவே குனிந்து காட்டுப் பெர்ரிப் பழங்களைப் பறித்து உடனே வாயில் போட்டுக் கொண்டான். அன்று அவன் மிகவும் களைத்துப் போனான் போலும், ஏனெனில் சிரமத்துடன் அடியெடுத்து வைத்தான். ஆனால் தனது விந்தைக் கைத்தடியை அவன் ஊன்றிக் கொள்ளவில்லை. கைத்தடி அவன் முழங்கையில் தொங்கிற்று. எப்போதாவது அதை எடுத்து ஈப்பொறிக் காளானை அடித்து முறித்தான், அல்லது ஏதோ புதரின் ரோஜா நிறக் கொண்டை மேல் அடித்தான். பள்ளத்தாக்கைத் தாண்டி வழுக்கலான செங்குத்துக் களிமண் மேட்டில் நாங்கள் ஏறிய போது விமானி புதர்களை ஆதரவாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக ஏறினான். ஆனால் அப்போதும் தடியை ஊன்றிக் கொள்ளவில்லை.

சாப்பாட்டு அறையை அடைந்தோமோ, அவனுடைய களைப்பெல்லாம் எங்கோ பறந்துவிட்டது. அவன் ஜன்னல் அருகே உட்கார்ந்து கொண்டான். குளிரான சிவந்த சூரிய அஸ்தமனம் அங்கிருந்து தெரிந்தது. விமானிகளின் குறிகளின் படி மறுநாள் காற்று வீசும் என்பதை இது முன்னறிவித்தது. இளைஞன் பெரிய குவளை நீரை ஆர்வமாக, ஓசையுடன் பருகினான். அழகிய சுருள் கூந்தல் கொண்ட உணவு பரிமாறுபவளிடம் கேலியாகப் பேசினான். மருத்துவமனையிலிருக்கும் தனது ஒரு நண்பன் மேல் உள்ள காதலால் உணவு பரிமாறுபவள் சூப்பில் அளவு மீறி உப்பு போட்டுவிட்டாள் என்று நகையாடினான். விருப்புடன் நிறைய சாப்பிட்டான், ஆட்டு விலாவெலும்புகளை வலிய பற்களால் ஒட்ட கறுவினான். பக்கத்து மேஜைகளைச் சுற்றி அமர்ந்திருந்த தோழர்களுடன் கேலிப் பேச்சுக்களைப் பரிமாறிக் கொண்டான். மாஸ்கோ செய்திகளை என்னிடம் விசாரித்தான். புதிய இலக்கிய வெளியீடுகள் பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினான். மாஸ்கோ தியேட்டர்களில் என்னென்ன நிகழ்ச்சிகள் நடக்கின்றன என்று ஆர்வத்துடன் கேட்டான். தான் அந்தத் தியேட்டர்களுக்கு ஒரு தடவைக் கூடப் போனதில்லை என்று அங்கலாய்த்தான். இங்கே ”புயல் மேகங்கள்” என்று அழைக்கப்படும் பில்பெர்ரி ஜெல்லியை நாங்கள் சாப்பிட்டு இரவில் முடித்ததும் அவன் கேட்டான்:

“நீங்கள் இரவில் எங்கே தங்கப் போகிறீர்கள்? இடம் இன்னும் நிச்சயமாகவில்லையா? நிரம்ப நல்லது. எனது நிலவறையில் தங்குங்கள்!” இவ்வாறு சொல்லிக் கண நேரம் முகத்தைச் சுளித்தான். பின்பு விளக்கினான்: “என் அறைக் கூட்டாளி இன்று பறப்பிலிருந்து திரும்பவில்லை… ஆகவே படுக்கை காலியாக இருக்கிறது. புதிய படுக்கைத் துணிகள் கிடைக்கும். போவோம் வாருங்கள்.”

அவன் எல்லாருடனும் கலகலப்பாகப் பழகுவதை விரும்புவன், புதிய ஆளுடன் உரையாடவும் அவன் அறிந்தவற்றை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் அடங்கா ஆர்வம் உள்ளவன் என்பது தெளிவாகப் புலப்பட்டது.

நான் அவன் அறையில் தங்க இசைந்தேன். நாங்கள் பள்ளத்தாக்கிற்கு வந்தோம். அதன் இரு சரிவுகளிலும் மட்கிய இலைகள், ஈரக் காளான்கள் ஆகியவற்றின் மணம் வீசிய காட்டுப் புதர்களின் மறைவில் தோண்டப்பட்டிருந்தன நிலவறைகள்.

விளக்கின் புகையும் சுவாலை எரியத் தொடங்கி நிலவறைக்குள் வெளிச்சம் பரப்பியும் அறை இடமகன்றதாகவும் வசிக்க வசதியுள்ளதாகவும் காணப்பட்டது. மண் சுவர்களில் அமைந்த பிறைகளில், மணம் வீசும் புதிய வைக்கோல், அடைத்த நீர் கவறாத் துணி மெத்தைகள் மேல் கச்சிதமாக விரிக்கப் பட்டிருந்தன இரண்டு படுக்கைகள். அறையின் மூலைகளில் நின்றன இளம் பிர்ச் கன்றுகள். அவற்றின் இலைகள் இன்னும் வாடவில்லை. இந்தக் கன்றுகள் “நறுமணத்திற்காக” வைக்கப் பட்டிருந்ததாக விமானி விளக்கினான். படுக்கைகளுக்கு மேலே மண்சுவரில் ஒழுங்கான குறடுகள் அமைந்திருந்தன. அவற்றில் செய்தித்தாள் விரிப்புக்கள் மேல் புத்தக அடுக்குகளும், குளியல், சவர சாதனங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு கட்டிலின் தலைமாட்டில் ஒளிபுகும் பிளாஸ்டிக் கண்ணாடிச் சட்டங்கள் போட்ட இரண்டு நிழல் படங்கள் மாட்டப்பட்டிருந்தன. நேர்த்தியான வேலைப்பாடுள்ள இந்தச் சட்டங்கள் விமானி தன் கைப்பட செய்தது என்பது தெரியவந்தது.

போர் நடவடிக்கைகள் ஓரளவு ஓய்ந்திருந்த நேரங்களில் கைத்தேர்ச்சியுள்ள ரெஜிமென்ட்காரர்கள் பொழுதைக் கழிப்பதற்காக இம்மாதிரிச் சட்டங்களைப் பகை விமானத் துண்டுகளிலிருந்து ஏராளமாக செய்வதுண்டு. மேஜையின் மேல், ராஸ்ப்பெர்ரிப் பழங்கள் நிறைந்த இராணுவ உணவுப் பாத்திரம் புர்டாக் இலையால் மூடி வைக்கப்பட்டிருந்தது. ராஸ்பெர்ரிப் பழங்கள், பசிய பிர்ச் கன்றுகள், வைக்கோல், தரையில் பரப்பப்பட்டிருந்த பிர்ச் மர கிளைகள் ஆகியவற்றிலிருந்து இன்பமான செழு மணம் வீசிக் கிளு கிளுப்பு ஊட்டியது. நிலவறையில் இனிமையும் ஈரிப்பும் உள்ள குளுமை பரவியிருந்தது. வெளியே பள்ளத்தாக்கில் தாலாட்டுவது போலச் சிலம்பின தத்துக் கிளிகள். இதமான சோர்வு உடல் முழுவதிலும் பரவியது. எனவே, ராஸ்ப்பெர்ரிப் பழங்களைத் தின்று கொண்டே உரையாடுவது என்று திட்டமிட்டிருந்த நாங்கள் அந்தத் திட்டத்தை காலை வரை ஒத்திப் போடத் தீர்மானித்தோம்.

படிக்க :
கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !
பாபர் மசூதி இடிப்பு வழக்கு | ஷா நவாஸ் – நீதிபதி அரிபரந்தாமன் உரை | காணொளி

விமானி வெளியே போனான். அவன் உரத்த சத்தத்துடன் பல் தேய்த்ததும், காடெல்லாம் ஒலிக்கும் படி தொண்டையை கனைத்துச் செருமியவாறு குளிர் நீரைத் தலையில் கொட்டிக் கொண்டதும் கேட்டது. குதூகலமும் புத்துணர்ச்சியும் சுடர் விடத் திரும்பி வந்தான் அவன். நீர்த் துளிகள் அவனது தலைமயிரிலும் புருவங்களிலும் காணப்பட்டன. விளக்கைச் சற்றுத் தணித்து விட்டு அவன் உடையைக் கலையலானான். ஏதோ பொத்தென்று தரையில் விழுந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். அங்கேக் கண்டதை என்னால் நம்ப முடியவில்லை. தரையில் பொய்க் கால்களை வைத்தான் அவன். கால்கள் இல்லாத விமானி! அதிலும் சண்டை விமானமோட்டி! இன்று மட்டுமே ஏழு போர்ப் பறப்புகள் நிகழ்த்தி இரண்டு பகை விமானங்களை வீழ்த்தியவன்! இது முற்றிலும் நடக்க முடியாததாகத் தோன்றியது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கைலாசா : நித்தியானந்தா உருவாக்கிய ஹிந்து ராஷ்டிரம் !

3

“பரமசிவனின் அருளால் இந்தக் கடவுச்சீட்டை வைத்துள்ளவர்கள் பதினான்கு லோகங்களிலும், பதினோரு பரிமாணங்களிலும், கைலாயத்திலும் நுழைய முடியும்” என்கிறது அந்த “நாட்டின்” இணையதளம்.  “கடவுச்சீட்டு வைத்துள்ளவர்களின் பக்தியையும், தனது பூலோக அவதாரத்துடன் ஒன்றியிருப்பதையும் கணக்கில் கொண்டு தன்னோடு ஏற்றுக் கொள்கிறார் பரமசிவன்” என்று மேலும் விவரிக்கிறது “அந்நாட்டின்” அதிகாரப்பூர்வ இணையதளம்.  இது பிற நாடுகளுக்கு பயணம் செய்ய பயன்படும் பாஸ்போர்ட் மட்டுமல்ல – கைலாயத்துக்காக கைலாயமே வழங்கும் பாஸ்போர்ட்.

ஆம் மக்களே, உருவாகிவிட்டது ஒரு புதிய நாடு. இந்துக்களுக்கேயான நாடு.

மேற்படி நாட்டின் பெயர் கைலாஷ். தேசம் என்றால் தேசப்பிதா இல்லாமலா, கைலாய நாட்டின் தேசப்பிதா நித்தியானந்த பரமஹம்ச; தேசத் தாய் ரஞ்சிதா. என்ன, அமிலத்தில் வாய் கொப்புளித்தது போல் இருக்கிறதா? இன்னும் இருக்கிறது மேலே செல்லுங்கள். ஒரு நாட்டை உருவாக்க வேண்டும் என்கிற கனவு எப்போது நித்தியானந்தாவுக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை இந்த விசாரணையின் போக்கில் நீங்களே புரிந்து கொள்வீர்கள். இந்த விசயம் வெளியே தெரிய வந்தது குஜராத் வழக்கைத் தொடர்ந்து என்பதால் அதை முதலில் பார்த்து விடுவோம்.

***

னார்தன் ஷர்மா என்பவருக்கு நான்கு பெண் குழந்தைகள். நித்தியானந்தாவின் முன்னாள் சீடர். கடந்த 2013-ம் ஆண்டு தனது நான்கு பெண் குழந்தைகளையும் பெங்களூரு, பிடதியில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் சேர்த்துள்ளார் ஷர்மா. அப்போது அவரது மூத்த மகளின் வயது 15தான். பின்னர் ஏதோ காரணங்களுக்காக நித்தியானந்தாவுடன் ஷர்மாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. தனது மகள்களை தன்னோடு அனுப்பி வைக்குமாறு ஆசிரமத்தில் கேட்டுள்ளார். ஆனால், அங்குள்ள நிர்வாகிகள் ஷர்மாவின் பிள்ளைகளை அவரோடு அனுப்பாமல் அகமதாபாத்தில் நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சர்வக்ய பீடம் என்கிற ஆசிரமத்திற்கு இந்த ஆண்டு (2019) துவக்கத்தில் அனுப்பி வைத்துள்ளனர். குருகுலமாக செயல்பட்டு வந்த இந்த ஆசிரமம், அகமதாபாத்தில் உள்ள “தில்லி பப்ளிக் ஸ்கூல்” வளாகத்தில் நடத்தப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க :
♦ குழந்தைகள் கடத்தல் : நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் !
♦ கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட SVS கல்லூரி வாசுகி பாஜக-வில் இணைந்தார் !

இதற்கிடையே ஆசிரம நிர்வாகிகளிடம் சண்டையிட்டு தனது பிள்ளைகள் நால்வரில் இளையவர்கள் இருவரை மட்டும் மீட்டு வந்துள்ளார் ஷர்மா. தற்போது 21 வயதாகும் மூத்த மகளும், இரண்டாவது மகளும் ஷர்மாவோடு வர மறுத்துள்ளனர். தன்னுடைய பிள்ளைகள் ஆசிரமத்தில் கொடுமை செய்யப்படுவதாகவும், அவர்களை மீட்டுத் தருமாறும் கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார் ஷர்மா. இதையடுத்து ஷர்மாவின் மூத்த மகள் பேசுவது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது நித்தி தரப்பு. அந்த வீடியோவில், தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக் கொள்ள தனது பெற்றோர் வற்புறுத்துவதாகவும், தாங்கள் ஆசிரமத்திலேயே தங்க விரும்புவதாகவும் அந்தப் பெண்கள் பேசியுள்ளனர்.

இந்த வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து அகமதாபாத் ஆசிரமத்தில் கடந்த மாதம் (நவம்பர்) 30-ம் தேதி போலீசார் சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது வேறு மூன்று குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். ஆசிரமத்தின் நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சோதனைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், நித்தியானந்தா நாட்டை விட்டு சென்றிருக்க கூடும் என்றும், ஷர்மாவின் முதல் இரண்டு மகள்களும் அவருடன் சென்றிருக்க வேண்டும் என்றும் கூறினர். பின்னர் பத்திரிகைகளில் வெளியான தகவல்கள் அவ்விரு பெண்களும் நித்தியானந்தாவுடன் கரீபியன் தீவுகளுக்கு அருகே இருப்பதாகத் தெரிவித்தன.

ஏற்கெனவே பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுகள் இருக்கும் நித்தியானந்தா தற்போது பிணையில் இருப்பதாகவும், எந்த நாட்டிற்கு ஓடி ஒளிந்தாலும் அவரை கைது செய்தே தீருவோம் என்றும்  குஜராத் போலீசார் பத்திரிகைகளில் தெரிவித்து வருகின்றனர்.

எந்த போலீசார்?  குஜராத் போலீசார்!! எந்த குஜராத்? பாஜக-வின் குஜராத்!!

ஹிந்து சாம்ராஜ்ஜியத்தின் பரிசோதனைச் சாலையான குஜராத்தின் போலீசார், ஒரு ஹிந்து துறவியின் மீதே நடவடிக்கை எடுக்கத் துணிந்துள்ளது.

வைரமுத்து – ஆண்டாள் விவகாரம் துவங்கி கடந்த காலங்களில் எப்போதெல்லாம் ஹிந்து ’ஸமூகத்திற்கு’ அபாயம் நேரிட்டதோ அப்போதெல்லாம் களமிறங்கி கம்பு சுழற்றுவதில் நித்தியானந்தாவும் அவரது சிஷ்யைகளும் முன்னணியில் நின்றதை யாரும் மறந்திருக்க முடியாது. ரஞ்சிதா விவகாரத்தை அடுத்து ஊரே நித்தியை காறித் துப்பிய நிலையில் அவரது “ஆன்மீக” சொற்பொழிவுகளுக்கு இடம் கொடுத்தது பாஜக ஆதரவாளர் நடத்திய லோட்டஸ் தொலைக்காட்சி என்பதையும் மறந்து விடக்கூடாது.

இந்து சாமியார்களுக்கும் இந்துத்துவ பரிவாரங்களுக்கும் இடையே உள்ள உறவு அப்படியொன்றும் இலைமறை காய் கிடையாது. ஜக்கி, ஸ்ரீ ஸ்ரீ, பாபா ராம்தேவ், மலையாள தேசத்து கட்டிப்புடி சாமியாரிணி, ராம் ரஹீம், பாபா ராம்பால், அசாரம் பாபு, நாகா சாமியார்கள், கங்கைக் கரையோர கஞ்சா குடிக்கிகள், பிரயாகையின் பிணந்தின்னி சாமியார்கள், பழனி படிக்கட்டில் வீற்றிருக்கும் நட்டு கழண்ட கேசுகள் – இப்படி கார்ப்பரேட் பாரின் சரக்கில் இருந்து லோக்கல் பேட்டரி சரக்கு வரை எல்லா சாமியார் மடங்களிலும் இந்துத்துவ பரிவார அமைப்புகள் துண்டைப் போட்டு வைத்துள்ளது ஊர் அறிந்த ரகசியம் தான். அந்த வகையில் ஆன்மீக ஜோடிகள் நித்தியானந்தா மற்றும் ரஞ்சிதாவோடு இந்த கும்பலுக்கு உறவிருந்ததில் ஆச்சர்யமில்லை.

படிக்க :
♦ கதவை திற… நாற்றம் வரட்டும் ! – நித்தியானந்தா கார்ட்டூன்
♦ ஜே.என்.யூ : விடுதி கட்டண உயர்வைக் கண்டித்து தேர்வு புறக்கணிப்பு !

நகமும் சதையுமாக, சொறிநாயும் உண்ணியுமாக தொடர்ந்த இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது ஏன்? நித்தியின் ஆன்மீக ஆராய்ச்சியை தடுக்க குஜராத் போலீசுக்கு துணிச்சல் வந்தது எப்படி? போன்ற விவரங்களெல்லாம் சிவ ரகசியம் என்பதால் நம்மைப் போன்றவர்கள் எந்தக் காலத்திலும் அறிந்து கொள்ளவே முடியாது. ஆனால், நித்தியானந்தா உருவாக்கி இருக்கும் இந்து ராஷ்டிரத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சில சுவாரசியமான தகவல்களைத் தருகின்றது.

***

நித்தியானந்தாவின் கைலாயத்தில் உள்நாட்டு பாதுகாப்பு, உள்துறை அமைச்சகம், ரிசர்வ் வங்கி, சுகாதாரத் துறை, கல்வித் துறை என பல்வேறு அரசு துறைகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் பொறுப்பான அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் இருப்பார்கள். இந்த நாட்டிற்கென்று இரண்டு நிறங்களில் பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த நாட்டிற்குள் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும். மேற்படி “நாட்டை” சட்ட ரீதியாக உலகம் முழுவதும் பிரகடனப்படுத்த தேவையான அனுமதியை ஐ.நா சபையிடம் பெறுவதற்கான புரோக்கர் வேலைகளை  மேற்கொள்ளும் பொறுப்பு, அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

“கைலாசா என்கிற எல்லைகள் அற்ற இந்த தேசம் உலகெங்கிலும் உள்ள உரிமை பறிக்கப்பட்ட இந்துக்கள் தங்களது மத நம்பிக்கைகளை பின்பற்றவும், உண்மையான இந்து மத கோட்பாடுகளின் படி வாழவும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்” என்று அறிவிக்கின்றது அதிகாரப்பூர்வ இணையதளம். மேலும், இந்துக்கள் தங்களது நம்பிக்கைகளை பின்பற்ற உலகெங்கும் (இந்தியா உட்பட) உள்ள தடைகள், மற்றும் 5000 ஆண்டுகளாக நடந்து வரும் “இந்து ஹாலோகாஸ்ட்” (இன அழிப்பு) குறித்த தகவல்களையும் மேற்படி இணையதளம் பட்டியலிடுகின்றது. “இந்துக்கள்” அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு நித்தியானந்தா தன்னையே ஒரு வகை மாதிரியாக பல பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ரஞ்சி உடன் நித்தி நடத்திய ஆன்மீக ஆராய்ச்சிகளின் போது கதவைத் திறந்து காமெராவை நுழைத்த மத துரோகிகளுக்கு கைலாயத்தில் இடம் கிடைக்காது என்பது நிச்சயம். எந்த தொந்திரவுகளும் இன்றி நித்தியானந்தா போன்ற இந்துக்கள் தங்கள் மத வழக்கங்களின் படி வாழ ஒரு தேசம் உருவாகி விட்டது – அதாவது இந்து ராஷ்டிரம் அமைந்தே விட்டது. இப்போது ஒரு சிக்கல் எழுகின்றது. இந்து மதத்திற்கு கிறிஸ்தவ, இசுலாமிய, பௌத்த, சீக்கிய மதங்களில் உள்ளதைப் போல் ஒரு சட்டபுத்தகம் இல்லை. அதே போல் எந்த சட்டங்கள் எந்த காலகட்டங்கள் வரை, யாருக்கெல்லாம் செல்லுபடியாகும் என்பதை வரையறுக்கும் நூல்களோ – இவையெல்லாவற்றையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் ஒற்றை நிறுவனமோ இல்லை.

இந்து மதத்தில் இருப்பதெல்லாம் “மரபுகள்”. சமீபத்திய சபரிமலைத் தீர்ப்பின் படி அந்த மரபுகளைக் கூட யாரும் எப்படியும் எந்தக் காலத்திலும், என்ன நோக்கத்திற்காகவும் உருவாக்கி விட முடியும் என்று தெரிகிறது. உதாரணமாக அசைவம் தின்னக் கூடாது என்பதும் மரபு தான் – கோவிலிலேயே அசைவம் சமைத்து தின்னலாம் என்பதும் மரபு தான். அதிகாரத்தில் இருப்பது யார் என்பதைப் பொறுத்து ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு விதமாக அமல்படுத்திக் கொள்ளலாம். பாஜக போன்ற கட்சிகள் கையில் அதிகாரம் கிடைக்கும் போது முன்னதே மரபு என அமல்படுத்தப்படும்; அதை உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கும்.

சரி, கைலாயம் என்கிற இந்து ராஷ்டிரத்தில் எம்மாதிரியான இந்து மரபுகள் எல்லாம் பின்பற்றப்படும்?

நிச்சயம் “ஆன்மீக ஆராய்ச்சிக்கு” பிரதான இடம் இருக்கும். அந்த “நாட்டின்” ரிசர்வ் வங்கி “க்ரிப்டோ” கரன்சியை ஏற்றுக் கொள்ளும் என்று அறிவித்திருப்பதால் நிழல் உலக தாதாக்கள், சட்டவிரோத ஆயுத வியாபாரிகள், சர்வதேச மாஃபியாக்கள், விபச்சார கும்பல் போன்றோருக்கு அது திறந்த மடமாக இருக்கும். அதைப் போன்ற தொழில்களே தர்மம், மரபு என்றும் எழுதி வைத்துக் கொள்ளலாம். யாரெல்லாம் இந்துக்களோ அவர்களே அந்த நாட்டின் குடிமக்களாக இருப்பார்கள் என்பதால், யாரெல்லாம் இந்துக்கள் இல்லை என்பதையும் அவர்களே தீர்மானிப்பார்கள் என்பதால் – தீண்டாமைச் சுவர் எழுப்பும் சிரமத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.

படிக்க :
♦ ஜெயேந்திரன் – நித்தியனாந்தா கும்பமேளா சந்திப்பு !
♦ பொறுக்கி நித்தியாவின் புகழ் பாடும் கொலைகார மோடி !

இந்து ராஷ்டிரத்தில் அனைவருக்கும் இலவச கல்வி – அதுவும் வேதங்களை அடிப்படையாக கொண்டது. இந்து ராஷ்டிரத்தின் பள்ளிகளில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து யானை முகமாக மாற்றிக் கொள்வது குறித்த பாடங்கள் இருக்கும். இந்துக்கள் தங்களுடைய பாரம்பரிய கலாச்சாரத்தை அமைதியான முறையில் பின்பற்றுவதற்கு கைலாயம் ஒரு சிறந்த இடம் என்கிறார்கள் – எனவே போலீசு தொந்திரவு இல்லாமல் வேத முறைப்படி சோம-சுரா பானங்களைக் காய்ச்சிக் கொள்ளலாம்.

ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் செல்ல வேதங்களில் சொல்லப்பட்டுள்ளதைப் போன்ற பறக்கும் கம்பளங்கள், ரதங்கள் போன்றவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். மகாரிஷி சுஷ்ருதரின் மருத்துவ முறைகளைப் பின்பற்றி கான்சருக்கும், அல்சருக்கும் பச்சிலை வைத்தியம் செய்யப்படும். பிள்ளைப் பேறு வேண்டி அசுவமேத யாகம் செய்யலாம். கணவனை இழந்த பெண்களை உயிரோடு  தீயிலிட்டு எஞ்சிய சாம்பலை ஒரு சொம்பில் வைத்து அந்த சொம்புக்கு ஒரு கோவில் கட்டிக் கொள்ளலாம்.  பெண் குழந்தைகள் பிறந்த உடனேயே திருமணம் செய்து வைத்து விடலாம்.

மொத்தத்தில் செத்து செத்து விளையாடலாம்.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் பல்லாண்டுகளாக முயன்றும் இந்தியாவில் இன்னமும் முழுமை பெற்று விடாத அவர்களின் “இந்து ராஷ்டிர” திட்டத்தை நித்தியானந்தா “ஜஸ்ட் லைக் தட்” நிறைவேற்றி முடித்துள்ளார். ஒருவேளை குஜராத் போலீசாரின் திடீர் ஆவேசத்திற்கு இதுவே கூட காரணமாக இருக்க கூடும். எனினும், இதுவரை நூற்றி முப்பது கோடி இந்துக்களுக்கென்று ஒரு தேசம் இல்லையே என்ற ஏக்கத்தோடு அலைந்து கொண்டிருந்த பரிவாரங்களுக்கு இப்போது நிம்மதி ஏற்பட்டிருக்கும். இந்துக்களுக்கென்று ஒரு தேசம் உருவாகி விட்டது.

ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் இனிமேல் நிம்மதியாக கைலாயத்திற்கு டிக்கெட் வாங்கிச் சென்று விடலாம். நமக்கும் நிம்மதியாக இருக்கும்.


சாக்கியன்

உறவுகளுக்குள் திருமணம் செய்வதால் குறைபாட்டோடு பிறக்கும் குழந்தைகள் !

றவுகளுக்குள் திருமணம் செய்வதால் பிறக்கும் குழந்தைகளிடம் உடல் குறைபாடு அதிகமாக இருப்பதில், நாட்டிலேயே தமிழகத்திற்கு இரண்டாம் இடம். முதல் இடத்தில் இருப்பது அருணாச்சல பிரதேசம்.

சரி… உறவுகளுக்குள் திருமணம் செய்வது மற்றும் அதனால் என்ன பிரச்சினைகள் எல்லாம் வரலாம் என்பதை கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

***

லகம் முழுவதும் ஆராய்ச்சி செய்து பார்த்தாலும் சொந்தத்தில் திருமணம் செய்வதை வளர்ந்த நாடுகளான அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள், ஐரோப்பா , ஆஸ்திரேலியா காண முடிவதில்லை.

அரேபிய தீபகற்ப நாடுகள், தெற்காசிய நாடுகளில் தான் சொந்தத்தில் திருமணம் செய்யும் சதவிகிதம் மிக அதிகமாக இருக்கிறது

சரி எதற்காக சொந்தத்தில் திருமணம் செய்வது அதிகமாக இருக்கிறது என்று ஆய்வு செய்ததில்- சொந்தத்தில் திருமணம் செய்யும்போது ரிஸ்க் குறைவு;
திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகள் இல்லை; மாப்பிள்ளை பொண்ணு இருவரையும் இருவருக்கும் முன்னமே நன்றாக தெரிந்திருக்கும்; அது போக மாமியார் கொடுமை, வரதட்சணைக் கொடுமை இவையெல்லாம் அந்நிய திருமணங்களை ஒப்பிடும் போது “comparatively” குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அடுத்த காரணம் சொத்து வெளியே போகாது. அந்நிய சம்பந்தம் செய்தால் சொத்து வெளியே போகும்.

சில நேரங்களில் குடும்ப மரியாதைக்காகவும் ஏற்கெனவே வாக்கு கொடுத்து விட்டதற்காகவும் சொந்த திருமணங்கள் நடக்கின்றன.

child-marriageபெண் குழந்தை பிறந்தவுடனே இந்த
பொண்ணு என் மகனுக்கு தான் என்று கூறும்
மக்கள் உள்ளனர். சிலர் பெண் பூப்பெய்தும் போது இப்படி கூறுவார்கள்.

இப்படியாக ஒரு சமூக அழுத்தம் காரணமாகவும் சொந்தத்தில் திருமணங்கள் அதிகரிக்கின்றன. யாரோ ஊர் பேர் தெரியாத ஆட்களை ப்ரோக்கர் சொல்கிறார் / மேட்ரிமோனி சொல்கிறது என்று நம்பி ரிஸ்க் எடுக்க யோசிக்கிறோம்.

நமது ஊர்களில் அதிகம் செய்யப்படும் சொந்தத் திருமணம், அக்கா மகள் மாமாவை திருமணம் செய்யும் முறை; அத்தை மகன்; மாமன் மகன்; அத்தை மகள் போன்றவர்களை திருமணம் செய்கிறோம். அக்காள் தங்கைகள் தங்களுக்குள் பெண் கொடுத்து எடுத்து சம்பந்திகள் ஆகுவதையும் பார்க்கிறோம்.

இஸ்லாமிய சமயத்தில் இந்த வகை ரத்த சொந்த திருமண முறை உண்டு. இதுபோன்ற திருமணங்களை ரத்த சொந்தமுள்ள திருமண முறைகள் என்று அழைக்கிறோம்.

சில ஊர்களில் அவர்கள் ஊரை விட்டு வெளியே பெண் எடுக்க மாட்டார்கள். கொடுக்க மாட்டார்கள். சில இடங்களில் தங்களின் கோத்திரத்தை சரியாக கடைபிடிப்பார்கள்.
இவ்வாறு சுய சாதிகளுக்குள்ளும் குலம் கோத்திரம் என்று உண்டு.

சில சாதிகளில் இது போன்ற ரத்த உறவுகளை தவிர்க்க ஒரு குலத்தில் இருப்போர் அதே குலத்தில் பெண் கொடுத்து பெண் எடுக்க மாட்டார்கள். இவ்வாறு அவரவர் நம்பிக்கைப்படி திருமண பந்தம் செய்வதுண்டு.

படிக்க :
கல்விக் கடன் பயனாளிகளில் 10% மட்டுமே பட்டியலின, பழங்குடியின மாணவர்கள் | சாதிய அவலம்
குழந்தைத் திருமணம் ஏன் நடைபெறுகிறது?

மிக நெருங்கிய சொந்தங்களுக்குள் திருமணம் செய்வதால் வரும் பிரச்சனைகள் என்னவென்றால் ?

பிறக்கும் குழந்தை பிறவி குறைபாடுடன் பிறக்கும் சதவிகிதம் சொந்த திருமணங்களில் செய்பவர்களுக்கு இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.

மேலும், பிறக்கும் குழந்தைகளிடம் மரபணுக்கோளாறால் விளையும் X க்ரோமோசோம் சம்பந்தப்பட்ட ஆட்டோசோமல் ரிசசிவ் வியாதிகள் அதிகமாக தென்படுகின்றன.

பொதுவாக மரபணு ஆராய்ச்சி கருத்துப்படி, ஒரு நோய் உண்டாக்கும் காரணியான ஜீனை நோயை மட்டுப்படுத்தும் ஜீன் வென்று விடும். ஆனால், தாய் தந்தை ஆகிய இருவருமே நெருங்கிய ரத்த சொந்தங்களாக இருப்பதால் அவர்களிடம் மரபணுக்கோளாறுக்கான மரபணுக்கள் வெளிப்படாமல் இருந்த நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கு வெளிப்பட வாய்ப்புள்ளது.

சொந்தங்கள் திருமணம் செய்வதால் பிரசவங்களில் அதிக சிசு மரணங்கள் நிகழ்கின்றன என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள செம்புலப் பெயல்நீராரின் (40-வது பாடல்) கொண்டு முடிக்கிறேன்.

“யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே” – என்று பாடுகிறார்

இதன் அர்த்தம் என்ன? தலைவியிடம் தலைவன் கூறுவதாக இந்த பாடல் பதிவாகிறது.

“என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன” என்கிறான்.

இதன் மூலம் சில ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே NON CONSANGUINOUS MARRIAGE அதாவது சொந்தம் தவிர வெளியே திருமணம் செய்யும் வழக்கம் நம்மிடையே இருந்து வந்துள்ளது தெரிகிறது.

Inbreeding எனப்படும் நமது சொந்தங்கள் நமது ஊர் நமது இனம் என்று திருமணம் செய்து கொண்டே சென்றால் பிரச்சனையை உருவாக்கும் மரபணுக்கள் வெளியே வரும் வாய்ப்பு இருக்கிறது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இதை நாம் உணரவே இந்த பதிவு.

நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

தீண்டாமைச் சுவர் : இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் | கருத்துப் படம்

மேட்டுப்பாளையம் அடூர் : சாதியப் படுகொலை

தீண்டாமைச் சுவர் தானாக இடிந்து விழுந்தால் நாம் அழிவோம்;
இடித்துத் தரைமட்டமாக்கும் போது நாம் துளிர்ப்போம் !

 

 

கருத்துப்படம் : வேலன்