Wednesday, November 5, 2025
முகப்பு பதிவு பக்கம் 380

நூல் அறிமுகம் : தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்

பாசனப் பொறியியல் வல்லுநரான முனைவர் பழ. கோமதிநாயகம் அவர்களின் நூல் வரிசையில் பாவை பதிப்பகத்திலிருந்து வெளிவரும் மூன்றாவது நூல், ‘தாமிரவருணி: சமூக – பொருளியல் மாற்றங்கள்’.

ஏற்கெனவே, ‘தமிழக பாசன வரலாறு’, ‘தமிழகம்… தண்ணீர்… தாகம் தீருமா?’ என்ற இரு நூல்கள் வெளிவந்து வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன…

காய்தல், உவத்தல் இன்றி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு நூல், தாமிரவருணியின் தண்ணீர்த் தடத்தைப் பற்றிக்கொண்டு, வரலாற்று, சமூக, பொருளியல், அரசியல் தடங்களை அலசிச் செல்கிறது. (நூலின் பதிப்புரையிலிருந்து)

…தாமிரவருணியைச் சார்ந்து 60 ஆண்டுகளில் ஏராளமான சமூக பொருளியல் – அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல, தாமிரவருணி நெடுகிலும் தலைமடை, நடுமடை, கடைமடைப் பகுதிகளில் ஆய்வுக் கிராமங்களைத் தெரிவு செய்து, மாற்றங்களை மிகத் துல்லியமாக மதிப்பிட்டுள்ளார் முனைவர் பழ.கோமதிநாயகம்.

சாதி சார்ந்து தாமிரவருணித் தண்ணீருக்காக நடந்த விஷயங்களும் மாற்றங்களும் அலசப்பட்டுள்ளன. (இந்நூலின் மொழிப்பெயர்ப்பாளரான எம்.பாண்டியராஜன் உரையிலிருந்து)

… தோன்றும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் மன்னார் வளைகுடா வரையில் தாமிரவருணி ஆற்றின் நீளம் 125 கி.மீ. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் இதுதான். கி.மு. 400 வாக்கிலேயே இந்தப் பகுதியில் நாகரிகமான மக்கள் வாழ்ந்திருந்ததை ஆற்றின் கரைகளில் மேற்கொண்ட அகழாய்வுக் கண்டுபிடிப்புகள் சுட்டிக் காட்டுகின்றன. வரலாற்றாய்வாளர்களின் கருத்தில், இந்திய ஆறுகளில் மிக உயரிய இடத்தைப் பெறுகிறது தாமிரவருணி. இந்த ஆறு, காவிரியைப் போலவே, இரு பருவ மழைக் காலங்களிலும் தண்ணீரைப் பெறுகிறது. குறுகிய, ஆனால், அதுவே உருவாக்கிய வளமான வண்டல் மிக்க படுகை வழியே தாமிரவருணி செல்கிறது. இதுபோன்ற ஆறுதான், வேளாண் சாகுபடிக்கு, குறிப்பாக, பாசனம் மூலம் நெல் சாகுபடி செய்வதற்கு மிகவும் பொருத்தமானது. தாமிரவருணி, பாண்டிய நாட்டில் இருந்தது. ஆறு, கடலில் கலக்கும் இடத்தில் முத்துகள் கிடைத்தன. இந்த இடத்தில்தான் கொற்கைத் துறைமுகம் இருந்தது. இந்தத் துறைமுகம், ‘’தி பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்திரியன் ஸீ’’ மற்றும் தாலமியின் “ஜியாகிராபி’ ஆகிய இரு நூல்களிலுமே காணக் கிடைக்கிறது. தாமிரவருணியை ஒட்டியுள்ள நெல் விளையும் தாழ்வான பகுதிகளில் தமிழ்ப்பண்பாடு வாழ்ந்திருந்தது என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ‘டின்னவேலி டிஸ்ட்ரிக்ட்’ என்று அப்போது அழைக்கப்பட்ட இந்த மாவட்டத்தை, கொழும்புக்கும் அருகில் இருப்பதால், பன்னாட்டு வணிகத்துக்கான ஒரு திறவுகோல் என்று இயல்பாகவே ஆங்கிலேயர்கள் கருதினர். (நூலிலிருந்து பக்.25)

படிக்க:
கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !
மணற்கொள்ளை: பேரழிவுக்குள் தள்ளப்படும் தமிழகம்!

தாமிரபரணி எங்கள் ஆறு! அமெரிக்கக் கோக்கே வெளியேறு!!

… தாமிரவருணி பாசனத் திட்டம் பல்வேறு கட்டங்களாக வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், பல்வேறு வளர்ச்சிகள் – உயர்சாதியினரிமிருந்து ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு மாறிய நிலவுடைமைகள், ஒரு போகத்திலிருந்து இரு போகங்களாக சாகுபடிப் பரப்பின் விரிவாக்கம், கடைமடைப் பகுதியில் பணமதிப்புமிக்க வாழை மற்றும் வெற்றிலை போன்ற தண்ணீர்த் தேவையை அதிகரிக்கும் பயிர்ச் சாகுபடிக்கு மாற்றம், அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பணப் புழக்கம், சமூகபொருளாதார மற்றும் அரசியல்ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சி, நகர்ப்புறம் மற்றும் தொழில் துறைகளுக்கான தேவைகள் அதிகரிப்பு – ஆற்றுப் படுகையில் கிடைக்கக்கூடிய தண்ணீரின் மீதான நெருக்குதலை அதிகப்படுத்தின. இதனால், தகராறுகள் / மோதல்கள் தோன்றின. பாசனத் திட்டத்தின் பல்வேறு நிலைகளிலும் இந்த மோதல்கள் ஏற்பட்டன. கடந்த 50 ஆண்டுகளில் கிடைத்த தண்ணீரின் அளவு மற்றும் பல்வேறு கால்வாய்களின் பிரச்சினைகளைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால், மோதல்களுக்கு மேலாண்மைக் கொள்கையும் காரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. (நூலிலிருந்து பக்.50)

… வரலாறு நெடுகிலும், தண்ணீரைச் சேகரித்து, சேமித்து / இருப்புவைத்துக் கொள்ளும் தன்னுடைய திறனை மனிதன் வளர்த்துக்கொண்டுள்ளான். ஆனால், இந்த அடிப்படையான வளத்தின் அளவை எந்தத் தொழில் நுட்பத்தாலும் அதிகரிக்க இயலாது. மக்கள்தொகை அதிகரிக்கும்போது, ஒரு தனிநபருக்குக் கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு குறைகிறது. இத்தகைய சூழ்நிலையில், வேளாண் துறைக்கும் தொழில் மற்றும் நகர்ப்புற நுகர்வோருக்கும் இடையிலான நீர்வள ஆதாரங்களுக்கான போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. நகர்மயமாதல் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது; 2025 இல் 250 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, வளரும் நாடுகளில் மக்கள்தொகையின் அளவில் அறுபது சதவீதத்தினர் நகர்ப்புறங்களில் வாழத் தொடங்கியிருப்பார்கள் (யூடெல்மேன், எம். 1994). இரண்டரைக் கோடி ஹெக்டேர்களுக்குப் பாசனம் செய்யத் தேவைப்படும் அளவுக்கு இவர்களுக்கும் தண்ணீர் தேவைப்படும்.

மாறிவரும் பொருளியல் கட்டமைப்பின் விலையே நகர்மயமாதல். தொழில் உற்பத்தி, நகர்சார்ந்ததாகிறது; உணவுக்கான ஒரு புதிய சந்தையையும் உருவாக்குகிறது. பாரம்பரியமாக, மக்கள்தொகையில் பெரும்பகுதியினர், வாழ்க்கைக்கான ஆதாரமாக விவசாயம் செய்து கொண்டிருக்கின்றனர்… வளர்ச்சியுறா நாடுகளின் மொத்த உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், ஒரு சதவீதம் உயர்ந்தால், தானியப் பயன்பாட்டின் அளவு, பத்து கோடி டன்கள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இயான் கார்த்ரஸ் மற்றும் ஜெமி மோரிசன், 1994). எனவே, வேளாண் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும்; ஆனால், அது தண்ணீரைச் சார்ந்திருக்கிறது. (நூலிலிருந்து பக்.3-4)

… இத்தகைய காரணங்களால், தண்ணீர்ப் பகிர்வு தொடர்பாகப் போட்டி போட்டு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இது போட்டியாளர்களிடையே மிக மோசமான தகராறை ஏற்படுத்தும். கிடைக்கக்கூடிய தண்ணீரின் அளவு பற்றிய குறிப்பிடத்தக்கதொரு பிரச்சினை என்னவென்றால் தன் எல்லைகளுக்கு வெளியிலிருந்து தோன்றிவரும் ஆறுகளில் வரும் (கிடைக்கும்) தண்ணிரில் எந்த அளவுக்கு ஒரு நாடு சார்ந்திருக்கலாம் என்பதே. டான்யூப், யூப்ரடீஸ், டைக்ரிஸ், சிந்து, நைல் போன்ற ஆறுகள், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தண்ணீரைத் தருகின்றன. பிற நாடுகளிலிருந்து தங்கள் எல்லைகளைக் கடந்து செல்லும் தண்ணீரைச் சார்ந்திருக்கும் நிலையில், அந்த நாடுகளுக்கான தேவைகள், அதனதன் கட்டுப்பாட்டில் இருப்பதை விடவும் அதிகரிக்கும்போது, நீர்வள ஆதாரங்களைப் பகிர்ந்துகொள்வது தொடர்பான தகராறுகள் தோன்றுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. எதிர்காலத்தில், தட்டுப்பாடு மிகுந்த, மதிப்புமிக்கதொரு பொருளாகி, சண்டை சச்சரவுக்கும் அமைதி உருவாக்கத்துக்கும் மையப் பொருளாவதன் மூலம் எண்ணெய்யையும் தண்ணீர் விஞ்சி விடும் எனப் பலர் எச்சரித்துள்ளனர்.

தண்ணீரைப் பெறுவதில் பெரியளவில் சமூக-பொருளியல் காரணிகளின் தாக்கமும் இருக்கிறது. பல வளரும் நாடுகள், நீர்வள ஆதாரங்களை எடுத்துப் பயன்படுத்தத் தேவையான முதலீடும் தொழில்நுட்பமும் இல்லாதிருக்கின்றன. ஒரு நாட்டுக்குள்ளேயேகூட, செல்வாக்கு மிக்க தொழில் அல்லது வேளாண் துறை, நீர்வள ஆதாரங்களில் தங்களுக்குரியதை விடவும் அதிகமான பங்கைக் கேட்கலாம். தண்ணீர் விநியோகம் வரையறுக்கப்படும்போது, தாழ்நிலையிலுள்ள வறிய மக்களே எப்போதும் பாதிக்கப்படுகின்றனர். ஓர் ஆற்றுப் படுகையிலுள்ள பல்வேறு பங்குதாரர்களுக்கு இடையிலான தகராறுகளால் தண்ணீரைப் பெறுவது மேலும் சிக்கலாகி விடுகிறது. தனிநபர்களிலிருந்து நாடுகள் வரையில் பல்வேறு நிலைகளில் இந்தத் தகராறுகள் ஏற்படுகின்றன. இத்தகைய தகராறுகளும், வளர்ச்சியுடன் இணைந்ததொரு பகுதி என்கிற நிலையில், சிறந்த நீர்வள மேலாண்மைக்கும் பொருளாதார வளர்ச்சியைச் சமாளிக்கவும், தகராறுகளுக்கான அல்லது மோதல்களுக்கான வேர்களையும் அதற்கான தீர்வுகளையும் புரிந்து கொள்வது அவசியம். (நூலிலிருந்து பக்.4-5)

இந்நூலில் நீரும் வேளாண்மையும்; வளர்ச்சியில் வேளாண்மை; தாமிரவருணியில் வேளாண்மை; பாசன நிர்வாகம்; தாமிரவருணி ஆற்றில் பாசனம்; தாமிரவருணி ஆற்றுப்படுகையின் வளர்ச்சிகளும் மோதல்களும்; சமுதாய மோதல்கள்; 1970-2000 கால மோதல்கள்; விவசாயிகளின் சங்கங்கள்; தொழிற்சாலைகளின் தேவைகளுக்கும் வேளாண் தேவைகளுக்கும் இடையிலான மோதல்… என்பது உள்ளிட்ட பல்வேறு உட்தலைப்புகளில் ஆய்வு நோக்கில் தொகுத்திருக்கிறார். பொருத்தமான வரைபடங்களும், பொதுப்பணித்துறை, நீர்வள ஆதாரத்துறை, வேளாண்துறை, வருவாய்த்துறைகளிடமிருந்து பெறப்பட்ட புள்ளிவிவரங்களும் இடம் பெற்றிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு.

நூல்: தாமிரவருணி : சமூக – பொருளியல் மாற்றங்கள்
ஆசிரியர்: முனைவர் பழ.கோமதிநாயகம்
தமிழில்: பாண்டியராஜன்

வெளியீடு: பாவை பப்ளிகேஷன்ஸ்,
16, (142) ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை – 600 014.
தொலைபேசி: 044 – 2848 2441
மின்னஞ்சல்: pavai123@yahoo.com

பக்கங்கள்: 166
விலை: ரூ 120.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: noolulagam

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !

நன்றி: Artigala Awantha

தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்பாட்டை நிராகரிக்கின்றோம் !

புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் வெ மகேந்திரன்

தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஓப்பந்தம் தொடர்பில் கடந்த மூன்று மாதங்களாக இடம்பெற்று வந்த இழுத்தடிப்புகளுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில், கடந்த 2015 -ஆம் ஆண்டிலிருந்து வலியுறுத்தப்பட்டு வந்த 1,000 ரூபா கோரிக்கை புறந்தள்ளப்பட்டு 700 ரூபா அடிப்படை சம்பள உடன்பாடு மேற்கொள்ளப்பட்டமையானது, மீண்டும் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் வரலாற்று துரோகமாகும். என புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

நன்றி: Artigala Awantha

கடந்த முன்று வருடங்களாக 1000 ரூபா சம்பள கோரிக்கையை முன்னிறுத்தி பல்வேறு அரசியல் கபட நாடகங்கள் அரங்கேற்றப்பட்டு வந்தன. இந்த சூழ்நிலையில் கடந்த முன்று மாதங்களில் தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான 1000 ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டுமென கோரி பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வந்தன. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் தேசிய போராட்டமாக எழுச்சிபெற்று வந்த நிலையிலேயே அப்போராட்டங்களை மலினப்படுத்தும் வகையிலும் தொழிலாளர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்தும் வகையிலும் எட்டப்படிருக்கும் உடன்பாடு முற்றாக நிராகரிக்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ இலங்கை : நாடு முழுவதும் வலுவடையும் 1000 ரூபாய் தோட்டத் தொழிலாளர் போராட்டம் !
♦ இலங்கை : தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலியை ரூ.1000 ஆக உயர்த்து | போராட்டம்

பேச்சு வார்த்தைகளின் போது கொடுப்பனவுகளுடன் 940 ரூபா வரை உடன்பாடு எட்டபட்டதாகவும் தாம் 1000 ரூபா அடிப்படை சம்பள நிலைப்பாட்டில் இருந்து தாம் பின்வாங்க போவதில்லை என கூட்டு ஒப்பந்ததில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் தெரிவித்து வந்தன. மறுபுறதில் ஏனைய மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் இவ்விடயம் தொடர்பில் முன்னுக்கு பின் முரணான நிலைப்பாட்டையை வெளிப்படுத்தி வந்தன. இந்த பின்னணியில் நாட்டின் முற்போக்கு ஜனநாயக இடதுசாரி சக்திகளும் ஏனைய தொழிற்சங்கங்களும் இனைந்து முன்னெடுத்து வந்த எதிர்ப்பு இயக்கம் நாடளாவிய ரீதியில் வலுப்பட்டு வந்த நிலையில் அரசாங்கமும் தொழிற்சங்களும் இனைந்து இந்த துரோகத்தனமான சூழ்ச்சியை செய்திருக்கின்றன.

எனவே, தோட்டத்தொழிலாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத, நாட்டில் இருந்து வரும் அடிப்படை சம்பள கொள்கைக்கு முரணாகவும் எந்த வகையிலும் வாழ்க்கை செலவுக்கு போதுமானதுமல்லாத இந்த தீர்மானத்தை எமது கட்சி முற்றாக நிராகிக்கிறது.

தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் போராட முன்வரவேண்டும் எனவும் இடது சாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஏனைய தொழிலிற்சங்கங்கள் தோட்டத்தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை வென்றெடுப்பதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வதுடன். அதேவேளை, மலையக தொழிற்சங்க அரசியல் தலைமைகள் தமது சுயநல மக்கள் விரோத அரசியலை கைவிட்டு தொழிலாளர்கள் சார்பாாக செயற்பட வேண்டும் எனவும் வலிறுத்துயுள்ளார்.

__________________

வரலாற்றில் மீண்டும் ஒரு மாபெரும் காட்டிக்கொடுப்பு அரங்கேறியுள்ளது.

தொண்டா, வடிவேல் இணைந்து இதனை நடத்தியுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டிலிருந்து தோட்டத் தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளத்திற்காக போராடி வந்துள்ளனர். தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முழுமையாக ஆதரித்ததோடு எமது நேச சக்திகளான சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, கம்யூனிஸ்ட் தொழிலாளர் சங்கம், புதிய ஜனநாயக இளைஞர் முன்னணி, பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு போன்றவற்றுடன் இணைந்து அடிப்படை சம்பளம் ரூ 1000/- ஜ வென்றெடுப்பதற்காக போராடி வந்திருக்கின்றோம்.

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூட்டு ஒப்பந்தம் காலாவதியானதற்கு பிறகு தோட்டத் தொழிலாளர்கள் ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரி சக்திகள், இளைஞர்கள் என ஒன்றிணைந்து அடிப்படை சம்பளத்திற்காக போராடி வந்த போதும் தோட்டத் தொழிலாளர்களின் சந்தாவை பெற்று கம்பெனிகளுக்கு விலைபோகும் பிற்போக்கான தொழிற்சங்கங்கள் தாம் கூறிவந்த ஆயிரம் ரூபாய் கோரிக்கையை முதலாளிமாருக்காகவும் அரசாங்கத்துக்காகவும் விட்டுக் கொடுத்துள்ளனர். வெறும் 20 ரூபாய் சம்பள அதிகரிப்பே நடந்துள்ளது எனவும் இதனை மிக வன்மையாக கண்டிப்பதாகவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் கூட்டு ஒப்பந்த காட்டிக்கொடுப்பிற்கு எதிராக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஊழியர் சேமலாப நிதிக்கும் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கும் வைப்பிலிடப்படும் தொகையையும் சேர்த்து சம்பளம் அதிகரிக்கப்படுள்ளது என காட்டும் மாபெரும் துரோகத்தனம் தோட்டத் தொழிலாளர்களுக்கு மாத்திரமே நடந்துள்ளது.

இதற்கான முழுப் பொறுப்பையும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் மத்தியஸ்தம் வகித்த அரசாங்கமும் ஏற்க வேண்டும். 28.01.2019 அன்று அலரிமாளிகையில் வைத்து கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திருட்டுக் கூட்டத்தின் தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தோட்ட தொழிலாளர்கள் இவ்வளவு போராடியும் வாய் திறக்காத ஜனாதிபதி யார் பக்கம் என்பதை காட்டியிருக்கின்றார்.

தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது பற்றி முன்னாள் மனித உரிமைப் போராளி மனோ கணேசன் என்ன சொல்லப் போகிறார்? நாங்கள் ஒப்பந்தத்தில் கையொப்பம் இடுபவர்கள் இல்லை. கையொப்பமிடும் தொழிற்சங்கங்கள் மட்டும் தான் காட்டிக் கொடுத்து விட்டார்கள் எனக் கூறி தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து தப்பிக்க போகிறாரா அமைச்சர் திகாம்பரம்? மைத்திரி, ரணில், தொண்டா, திகா, வடிவேல் சுரேஸ் தொழிலாளர் பக்கம் இல்லை நாங்கள் என்றுமே முதலாளிமார் பக்கம் என்று அடித்து கூறியுள்ள நிலையில் தோட்டத் தொழிலாளர்கள் எவ்வாறான அரசியல் பாதையை தெரிவுச்செய்ய போகிறார்கள் என்பது பற்றி பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம், காணி, வீட்டுரிமை மற்றும் நிர்வாக சிவில் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி என்றுமே பயணிக்கும் எனவும் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து போராடும் எனவும் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் மலையகப் பிராந்திய செயலாளர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.

தகவல் :
ஃபேஸ்புக்கில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி, இலங்கை

சென்னை : டாக்சி ஓட்டுநரை தற்கொலைக்கு தள்ளிய போலீசு – ஓட்டுநர்கள் போராட்டம் !

சென்னை டி.எல்.எஃப் ஐடி நிறுவனத்தின் கால் டாக்ஸி ஓட்டுநரை போலீசு திட்டியதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்திற்கு நீதி கேட்டும் சம்பந்தப்பட்ட போலீசுமீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அந்த நிறுவனத்தின் முன்பாக சக ஓட்டுநர்கள் 31.01.2019 அன்று போராட்டம் நடத்தினர்.

போலீசு திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர் ராஜேஷ்.

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஐடி நிறுவனத்தில் என்.டி.எல் கால்டாக்ஸியின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார் ராஜேஷ். காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஸ் சென்னை மாங்காட்டில்  வாடகை வீட்டில் தங்கி பணிபுரிந்து வந்தார். கடந்த 25 -ம் தேதி காலை 7 மணிக்கு  டி.எல்.எஃப்-ன் முதல்  சவாரிக்காக கோயம்பேட்டில் இருந்து பாடி செல்லும் வழியில் உள்ள அண்ணாநகரில் பெண் ஊழியரை ஏற்றி வர சென்றிருக்கிறார்.

அப்பெண் ஊழியரை ஏற்றிக் கொண்டு மற்றொரு ஆண் ஊழியர் வருவதற்காக காத்திருந்த போது அங்கு வந்த போலீசுக்காரர், காரின் பின் பக்கம் அடித்து  ராஜேஷை  அசிங்கமாக திட்டியிருக்கிறார். அதனால் அடுத்த 100 அடி தள்ளி வண்டியை பார்க் செய்திருக்கிறார். அப்பொழுதும் அதே போலீசு வந்து திட்டியிருக்கிறார். வண்டியில் பெண் ஊழியர் இருப்பதாக சொல்லியும் அவமானப்படுத்தி இருக்கிறது போலிசு.  இதனால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலை நகர் ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

உடலை கைப்பற்றிய போலீசு தற்கொலைக்கான  காரணம் குறித்து அவரது மொபலை ஆராய்ந்து பார்த்தபோது மரண வாக்கு மூலத்தில் தனக்கு நேர்ந்த துயரத்தைப் பற்றி வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அந்த ஆதாரத்தை அழித்து விட்டு மொபலை ராஜேஷின் சகோதரரிடம் ஒப்படைத்து இருக்கிறது.  அவருடைய மரணத்தில் சந்தேகமடைந்த உறவினர்கள் போனை ரெக்கவரி செய்து பார்த்த போதுதான் தற்கொலைக்கான காரணம் தெரிய வந்துள்ளது. உடனடியாக அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இல்லையென்றால் வழக்கம் போல் காதல் தோல்வி, பணிச்சுமை, குடும்ப தகறாறு என்ற பொய்யை சொல்லி போலீசு கிரிமினல்கள் மூடி மறைத்திருப்பார்கள்.

இதற்கு முந்தையநாள் திருவொற்றியூரில் வாடிக்கையாளரை அழைக்கச் சென்றபோது நோ பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தியதாக சொல்லி ரூ. 500  அபராதம் விதித்துள்ளது. அதற்கு பில் கேட்டதற்கு அசிங்கமாக திட்டியுள்ளது போலீசு. அதுபற்றி தன் மரணத்திற்கு முன் பேசிய அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார் ராஜேஷ்.

மேலும் அந்த வீடியோவில், “பப்ளிக் ஸ்ட்ரைக் பண்ணால் அடிச்சி உள்ள ஏத்துறீங்க. போலிசு தப்பு பன்னா என்ன பன்றது. இதுக்கு எதனா ரூல் இருக்கா உங்க சட்டத்துல… எதுவும் கிடையாது. போலீசு வைத்ததுதான் சட்டம். நீங்க எட்டு மணி நேரம் டூட்டி பாத்துட்டு போயிட்டு தூங்குறிங்க. நாங்க எவ்ளோ நேரம் வண்டி ஓட்டுறோம்னு உங்களுக்கு தெரியுமா?  காலையில் ஐந்து மணிக்கு எழுந்து 6 மணிக்குள் கம்பனி சென்று ஏழு மணிக்குள் பிக்கப் பாயிண்ட் போயிவிட்டு நைட்டு தூங்க ஒன்றை மணி ஆகி விடுகிறது..  மூன்றரை மணி நேரம் தான் தூக்கமே. இதை எல்லாம் தாங்கிட்டு வண்டி ஓட்டிட்டு இருந்தா உங்காளுங்க என்ன கேக்குறாங்கன்னா, “நீ உங்க அம்மாளுக்குத்தான் பொறந்தியா” என்று கேட்கிறார்கள். இது உன் வேலையா? நோ பார்க்கிங்கில் இருந்தால் நீ ஃபைன் போடு. நான் நோ பார்க்கிங்கில் கூட நிறுத்தவில்லை. என் சாவுக்கு காரணம் சென்னை போலீசுதான்” என்று கூறியிருக்கிறார்.

வாக்குமூல வீடியோவின் சுட்டி:

மேலும், “ஒவ்வொரு டிரைவரும் தினந்தோறும் செத்து செத்து வண்டி ஓட்டிட்டு இருக்கான். அதிலும் இந்த மாதிரி பிச்சைப் பசங்களால் மாசத்துக்கு ஒரு டிரைவர் செத்துகிட்டு இருக்கான். என் சாவே கடைசியா இருக்கனும். இதுக்கப்புறம் இந்த மாதிரி நடந்துச்சினா எடப்பாடி பழனிச்சாமியோ, ஏ.கே விஸ்வநாதனோ வேஸ்ட்தான்…

தரமணியில் ஒரு ஓட்டுநர் இதே போல் இறந்தார். எதாவது நடவடிக்கை எடுத்திங்களா? கேட்டா, இடம் மாத்திட்டேன், ஆயதப் படைக்கு மாத்திட்டேன்னு சொல்லுவிங்க. மாத்திட்டிங்க….. மறுபடியும் அதே மாதிரி தானே நடந்துக்கினு இருக்கு. அதுக்கு எதாவது தீர்வு இருக்கா. ஒன்னும் கிடையாது. மேற்கொண்டு இதுமாதிரி நடந்தா வேலையை விட்டு போயிடுங்க. மக்கள்கிட்ட கொடுத்துடுங்க. மக்களாட்சி பண்ணிக்கட்டும்” என்று கூறி இருக்கிறார்.

இந்த வீடியோ வாயிலாக தகவலறிந்த ஓட்டுநர்கள் தற்போது போராடி வருகிறார்கள். முக்கியமாக “மாடாக உங்கள் நிறுவனத்துக்காக நாங்கள் உழைக்கிறோம். எங்களுக்காக குரல் கொடுங்கள்”. சம்பந்தப்பட்ட போலீசை தண்டிக்க வலியுறுத்துமாறும் சம்பவம் நடந்தபோது வாகனத்தில் இருந்த ஊழியரை போலீசுக்கு எதிரான சாட்சியாக முன்னிறுத்துமாறும் கோருகிறார்கள். ஆனால் டி.எல்.எஃப் நிறுவனமோ அதன் ஊழியர்களோ அரசோ இப்போராட்டத்தை கிஞ்சித்தும் கண்டுகொள்ளவில்லை.

ஒருபக்கம் பணி பாதித்துவிடக்கூடாது என்று டி.எல்.எஃப் ஊழியர்களே இறங்கி வந்து ட்ராபிக் கிளீயர் செய்கிறார்கள். மற்றொரு பக்கம் அலுவலகத்தின் முன் போராடுவது பிரச்சனை எனக்கருதி போலிசின் மூலம் முடக்க முயற்சித்து வருகிறனர்.

போலீசை கண்டித்து டி.எல்.எஃப் நிறுவனம் முன்பாக ஓட்டுநர்கள் நடத்திய போராட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சென்னையில் ஐ.டி நிறுவனங்கள் அதிகரித்த பிறகு கால் டாக்சிகள் பெருமளவு அதிகரித்து விட்டன. இந்தக் கார்களின் ஓட்டுநர்கள் சவாரிக்காக சென்னை முழுவதும் காத்துக் கிடக்கின்றனர். எல்லா இடங்களிலும் கார் நிறுத்த வழியில்லை. மீறி நிறுத்தினால் போலீசு அடாவடி செய்கிறது. தள்ளி நின்று வந்தால் தாமதமா என்று வாடிக்கையாளரோ இல்லை கால் டாக்சி நிறுவனங்களோ பதிவு செய்கின்றன. மேலும் குறிப்பிட்ட வேலை நேரத்தில் இத்தனை சவாரி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்திலும் அவர்கள் இருக்கின்றனர். மற்றொரு புறம் பொதுப்போக்குவரத்தை கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கி வருகிறார்கள்.

இன்று சென்னையில் கால் டாக்சி ஓட்டும் ஓட்டுநர்கள் அனைவரும் பெரும் பதட்டத்திலேயே ஓட்டுகிறார்கள். அந்த பதட்டத்தை மேலும் கிளறிவிடுகிறது போலீசு. கார் வசதி வேண்டுமென்று ஆக்கிய கார்ப்பரேட் நிறுவனங்கள் இது குறித்து கவலைப்படுவதில்லை. இறுதியில் நம் தொழிலாளிகள் தற்கொலை செய்கிறார்கள். தனியார்மயமாக்கத்தால் கார்களும், உணவு செயலிகளும் இப்போது நவீன பாணியாகி வருகின்றன. ஆனால் இந்த நவீன அடையாளங்களுக்குள்ளே பணியாற்றுவோர் ஒரு போர்க்களத்தில் பணியாற்றுவது போல ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அரசோ, ஆளும் வர்க்கமோ எதற்கும் பொறுப்பேற்பதில்லை. என்ன செய்யப் போகிறோம்?

மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் | மருத்துவர் எழிலன்

புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் காணொளி …

அவர் உரையாற்றியதிலிருந்து சில பகுதிகள் …

♦ நான் மருத்துவம் படித்த மாணவர்களிடம் கேட்கிறேன்… அனாடமி படிச்சிருக்க, பிசியாலஜி படிச்சிருக்க, பயோகெமிஸ்ட்ரி படிச்சிருக்க, 19 அறிவியல் பாடத்தையும் படிச்சிட்டு அப்புறமும் உன் கிளினிக்ல சாமிபடம் இருந்திச்சினா என்ன சொல்றது?

♦ கேள்வி மேல கேள்வி கேட்பான். இந்த தியரி தப்பு. நான் இங்க படிச்சேன். அங்கே படிச்சேன். அப்படினு சொல்லிட்டு வீட்ல பட்ட போட்டுட்டு தூங்குவான்.

♦ நீங்கல்லாம் கும்பிட்டு கும்பிட்டு அப்படியே அமைதியா இருங்க. எதுக்கு டீமானிடேசன்? கடவுள் பாத்துப்பாருப்பா. ஜி.எஸ்.டி. பிரச்சினையா கடவுள் பாத்துபாருப்பா. பெட்ரோல் விலை ஏறிட்டே போகுது.. நம்ம வருமானம் குறைஞ்சிட்டே போகுதே… அத கடவுள் பாத்துப்பாருப்பா.. சிரிப்பா இருக்கு… கோவமா இருக்கு…

♦ இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள்  நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது.

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பது யார் ? மோடிக்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ் முன்னிறுத்துவது யாரை ? கேள்வி பதில்

கேள்வி: நம் ஓட்டு உண்மையாக கணக்கெடுக்கப்படுகிறதா…?? தேர்தலில் நாம் தேர்ந்தெடுக்கும் நபர் வெற்றிபெறுகிறாரா..???அல்லது யாரோ முடிவு செய்கிறார்களா..??

– க.தட்சிணாமூர்த்தி

ன்புள்ள தட்சிணாமூர்த்தி,

இரண்டாம் உலகப் போருக்கு பின்பு கார்ப்பரேட் நிறுவனங்களின் விளம்பரங்கள் மக்களிடையே செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன. விளம்பரத் தொழிலே பிரம்மாண்டமாய் வளர்ந்தது. இன்று ஒரு நபர் பயன்படுத்தும் சோப்பு, சீப்பு, பற்பசை அனைத்தும் அவரே முடிவு செய்து வாங்குவதாக நினைத்தால் அது உண்மையில்லை.

electionsநமது நுகர்வு ஆசையையும், அதில் வாங்க வேண்டிய பிராண்டையும் விளம்பரங்களே முடிவு செய்கின்றன. விளம்பரங்கள் என்பது ஊடகம், விளம்பரப் பலகைகள் மூலம் மட்டுமல்ல, இவற்றின் செல்வாக்கினால் மக்களே குறிப்பிட்ட பிராண்டுகளை தாமாகவே விளம்பரம் செய்கிறார்கள்.

ஒரு பற்பசை வாங்குவதையே நம்மால் சுயமாக முடிவு செய்ய முடியாத போது தேர்தலில் மட்டும் சுயமாக ஓட்டுப் போட முடியும் என்று நம்புகிறீர்களா? சென்ற 2014 தேர்தலில் மோடிக்கு வாக்களித்த மக்களில் கணிசமானோர் ஊடகங்களின் செல்வாக்கினால் பாஜக-வைத் தெரிவு செய்தனர். வாக்குப் பதிவு எந்திரத்தின் பிரச்சினை எல்லாம் இரண்டாம் பட்சமானது.

அந்தக் காலத்தில் இருந்த “பூத் கேப்சரிங் – வாக்கு சாவடிகளை கைப்பற்றுவது” இன்று இல்லை என்றாலும் இந்த எந்திரத்தில் மென்பொருள் மோசடி செய்ய முடியுமென்றும், முடியாது என்றும் விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் இந்தப் பிரச்சினையே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றது என்று சொல்ல முடியாது.

அரசியல் படுத்தப்படாத மக்கள் சிற்சில பிரச்சாரங்களின் மூலமும், எது வெற்றிபெறும் என பொதுக்கருத்தில் ஒத்துப் போவதினாலும் அதிகம் வாக்களிக்கிறார்கள். அல்லது ஆளும் கட்சி ஒன்றுமே செய்யவில்லை என்று எதிர்க்கட்சிகளை தெரிவு செய்கிறார்கள். அவர்களுக்கு வேறு மாற்று இல்லை என்பதனாலும் அப்படி தெரிவு செய்கிறார்கள்.

சென்ற தேர்தலில் மோடியின் வெற்றியை தீர்மானித்தது ஆளும் வர்க்கங்களும், கார்ப்பரேட் ஊடகங்களுமே! அதானி எனும் தரகு முதலாளி பெரும் பணத்தை அளித்தார். ஊடகங்கள் மோடியின் “வளர்ச்சி” சவடால் பிரச்சாரத்தை செய்தியாக அளித்துக் கொண்டே இருந்தன. ஆகவே நமது நாட்டில் தேர்தல் முடிவுகள் என்பது பெயரளவில் ஜனநாயகத்தையும், செயலளவில் முதலாளிகள் – ஆளும் வர்க்கங்களுக்கானதாக மட்டுமே இருக்கின்றன.

தேர்தல் அரசியலுக்கு வெளியே யோசிப்பதன் மூலமே மக்களின் உரிமைகள் மீட்டெடுக்க முடியும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதோ, இந்துத்துவ பார்ப்பனிய பாசிசத்தை வேரறுப்பதோ தேர்தல் மூலம் மட்டும் முடியாது.

♦ ♦ ♦

கேள்வி: ஆர்.எஸ்.எஸ் மோடிக்கு மாற்றாக முன்னிறுத்த போகும் அடுத்த பிரதமர் வேட்பாளர் யாராக இருக்கும்…?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

காங்கிரசு போல பாஜக-வும் கோஷ்டி மோதலை வைத்து இயங்கும் ஒரு கட்சிதான். தமிழகத்திலேயே எச்.ராஜா, பொன்னார், தமிழிசை, எஸ்.வி.சேகர் போன்றோர் கோஷ்டிகளாகத்தான் செயல்படுகின்றனர். காங்கிரசு போல பாஜகவும் நேரடியாக முதலாளிகளின் நலனுக்காக செயல்படும் கட்சி என்பதால் முதலாளிகளின் பிரிவுகளுக்கேற்ப கோஷ்டிகள் செயல்படுகின்றன.

Modi-rahul gandhiஇறந்து போன பிரமோத் மஹாஜன், இன்றைய நிதியமைச்சர் (மருத்துவ விடுப்பில் இருக்கிறார்) அருண் ஜேட்லி போன்றோர் நேரடியாக சில தரகு முதலாளிகளை ஆதரிக்கும் சற்றே லிபரல் கொள்கை கொண்டோர். அன்று பாஜக-விற்கு நன்கொடை வாங்கும் வேலையை பிரமோத் மஹாஜன் செய்தார். சென்ற தேர்தலின் போது மோடி – அமித்ஷா கூட்டணி அதானி, அம்பானி போன்ற முதலாளிகளின் தயவில் ஆட்சியைப் பிடித்தது. இவர்களது முதலாளிகள் பாசம் ரஃபேல் ஊழல் வரை சந்தி சிரிக்கிறது. இன்றோ நன்கொடைகள் முதலாளிகள் மூலம் குவிந்து வருகிறது. காங்கிரசு கூட பாஜக-வின் நன்கொடை சேர்ப்பு வேகத்தின் அருகில் இல்லை.

எனினும் மோடி எனும் பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ் – தரகு முதலாளிகள் – பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டாக நிறுத்தித்தான் மன்மோகன் சிங் எனும் பழைய பிம்பத்தை மாற்றினர். பாஜக ஆட்சியைப் பிடித்த பிறகு தாராளமயக் கொள்கை எனும் பொருளாதார ஒடுக்குமுறையோடு இந்துத்துவத்தையும் அமல்படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சிப் போக்கு முதலாளிகளுக்கு ஆதரவாகவே இருப்பதால் மேற்கண்ட மோடி பிம்பத்திற்கு இப்போது பெரிய ஆபத்தில்லை.

அதே நேரம் சிற்சில அதிருப்திக் குரல்கள் அதாவது ஆர்.எஸ்.எஸ் – சில முதலாளிகள் மூலம் நிதின் கட்காரியை நிறுத்தலாம் என்று வரலாம். ராகுல் காந்தியை சந்தித்த கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கரும், ரஃபேர் ஊழலில் அம்பானிக்கு ஆதரவாக மோடி செயல்பட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் சில முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த ஆளும் வர்க்கத்தின் அதிருப்தியை மோடி இழந்து விட்டார் என்று சொல்ல முடியாது.

ஜெயா போன்று மோடியும் தனிச்சிறப்பான சலுகைகளோடு ஆளும் வர்க்கத்தால் ஆதரிக்கப்படும் ஒரு தலைவராக இருக்கிறார். அதனால்தான் ஊடகங்கள் முதல் நீதிமன்றம் வரை அவரை தட்டிக் கேட்க யாருமில்லை. அதேநேரம் மோடி எனும் தனிநபராலேயே இந்த ஆட்சி நடைபெறுவதாக பொருளில்லை.

மறைபொருளில் அது ஆர்.எஸ்.எஸ்-இன் பார்ப்பனியம், முதலாளிகளின் தாராளமயத்தின் நலனாகவே ஒரு கும்பலால் முன்னிறுத்தப்படுகிறது. ஆகவே மோடி எனும் நபர் இக்கொள்கைக் கூட்டணியின் நலனை முன்னிறுத்தும் ஒரு பிம்பம். அது மோடி இல்லையென்றாலும் அப்படித்தான் செயல்படும்.

♦ ♦ ♦

கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

ஜாக்டோ ஜியோ போராட்டம் : ஒரு சுருக்கமான வரலாறு + கருத்துக் கணிப்பு

ரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, கடந்த 22-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்று வந்தது. போராடும் ஊழியர்களை கைது – சிறை சஸ்பெண்ட் என்று அடக்குமுறையை ஏவி மிரட்டியது எடப்பாடி அரசு. இறுதியில் பேச்சு வார்த்தைக்கு எடப்பாடி அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் – மக்கள் கோரிக்கைகளை ஏற்று அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டு பணிக்கு திரும்பியிருக்கின்றனர்.

ஜாக்டோ ஜியோ போராட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு காரணம் யார்?

♦ எடப்பாடி அரசின் அடக்குமுறை
♦ எதிர்க்கட்சிகளின் கோரிக்கை
♦ வேலை போகுமென்ற பயம்
♦ மக்கள் ஆதரவில்லை

(இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம்.)

♦ ♦ ♦ 

ந்தப் போராட்டத்திற்கு நெடிய வரலாறு உண்டு.1.3.2003-ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்,  ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சிறப்பு காலமுறை தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஆகியவற்றை ஒழித்துவிட்டு அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்;

மத்திய அரசில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இணையான சம்பளத்தைத் தங்களுக்கும் தர வேண்டும், ஒரே கல்வித்தகுதியில் ஒரே வேலையை செய்யும் எங்களுக்கு மட்டும் ஊதியத்தில் பாரபட்சம் காட்டக்கூடாது என்ற அடிப்படையில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் கோருகின்றனர்.

7-வது ஊதியக் குழுவின்படி பரிந்துரைப்படி 01.01.2016 முதல் ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசோ அக்டோபர் 2017 முதல் கணக்கிட்டு வழங்குகிறது. பாக்கியுள்ள 21 மாத கால நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது ஊழியர்களின கோரிக்கை.

ஐந்தாயிரம் அரசு பள்ளிகளை மூடவும், பல பள்ளிக்கூடங்களை இணைக்கவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதைச் செய்யக்கூடாது. இப்படி பள்ளிக்கூடங்களை இணைப்பதால் பல தலைமையாசிரியர் பணியிடங்கள் இல்லாமல் போய்விடும். ஒருவர் தலைமையாசிரியராக பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே இத்திட்டத்தை கைவிட வேண்டும்.

அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி, அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டும். 3500 சத்துணவு மையங்களை மூடும் திட்டத்தையும் அரசு கைவிட வேண்டும், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி – யு.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இந்த அரசாணைகள் அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க வித்திடுகிறது. இது எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும். அதாவது அரசுப்பணிக்கு இனி ஆட்கள் எடுப்பது இருக்காது. இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது குதிரைக்கொம்பாகி விடும். அதை நீக்க வேண்டும்” இதுவே போராடும் ஊழியர்களின் கோரிக்கையாகும்.

இந்த கோரிக்கைகள் அனைத்தும் நியாயமான கோரிக்கை. இதனை தவறு என்று மறுத்துபேச இந்த ஊழல் கும்பலால் முடியவில்லை. அதனால்தான் போராட்டத்தை குறுக்கு வழியில் ஒடுக்க முயற்சிக்கிறது.

போராட்டம் தொடங்கிய வரலாறு

இந்த போராட்டம் நேற்று இன்று தொடங்கியதல்ல. சுமார் 10 ஆண்டுகளாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர். போராட்ட வடிவங்கள் ஒன்றல்ல இரண்டல்ல… தங்களால் என்ன வடிவங்களில் கோரிக்கையை எடுத்துரைக்க முடியுமோ அத்தனை வழிகளிலும் போராடி இருக்கிறார்கள். ஆனால், ஆளும் அதிமுக அரசோ அவர்களை கண்டுகொள்ளாமல் இழுத்தடிப்பது அல்லது பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது என்ற பாணியை பத்தாண்டுகளுக்கும் மேலாக செய்து வருகின்றனர்.

கடந்த 2003-ம் ஆண்டு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்து சிறையிடைத்தார் மறைந்த குற்றவாளியான ஜெயலலிதா.

எஸ்மா சட்டத்தின்கீழ் கொடூரமான அடக்குறைகளை ஏவினார். இரவில் வீடு புகுந்து கைது செய்வது, பொது ஒழுங்கை சீர்குலைத்தல் என்று பல்வேறு பொய் வழக்குகளை போட்டு 30 நாட்களுக்கும் மேல் சிறையிடைத்தார்.  1 லட்சத்து 76 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அதே 2003 காலகட்டத்தில்தான் புதிய ஓய்வூதிய திட்டமும் அமல்படுத்தப்பட்டது. அதற்கான முன்னோட்டம்தான் அந்த அடக்குமுறை.  அன்றிலிருந்தே தொடங்கி விட்டது இதற்கெதிரான போராட்டம்.  ஆரம்பத்தில் இந்த திட்டத்துக்கு பெரிய அளவில் எதிர்ப்பு இல்லை. சம்பளத்தில் 10 சதவீதம் பணம் பிடித்தம் செய்யப்பட்டு பணி ஓய்வின்போது அரசின் பங்களிப்போடு கணிசமான தொகை திரும்ப கிடைக்கும், என அவர்கள் நம்பியதால் எதிர்ப்பு கிளம்பவில்லை.

2016: புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நடத்திய பேரணி. (கோப்புப் படம்)

ஆனால், அரசு ஊழியர்கள் நம்பியதற்கு மாறாக புதிய ஓய்வூதிய திட்டத்தின்கீழ் பணியாற்றியவர்கள் உயிரிழந்தபோது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அவர்களிடம் பிடிக்கப்பட்ட தொகைகூட கிடைக்கவில்லை. அப்பொழுதுதான் இது ஒரு மோசடியான திட்டம் என உணர்ந்து போராட்டத்தை தொடங்கினர்.

பின்னாளில் எந்த ஜெயலலிதா இத்திட்டத்தை கண்மூடித்தனமாக அமல்படுத்தி ஊழியர்களின் வாழ்வை அதலபாதாளத்துக்கு தள்ளினாரோ அதே ஜெயலலிதாதான் கடந்த முறை சட்டமன்றத்தில் 110-ம் விதியின் கீழும், 2016 சட்ட மன்ற தேர்தல் வாக்குறுதிகளின்போதும் இதனை ரத்து செய்வதாக கூறியிருந்தார். அதை நிறைவேற்றக்கோரிதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள் தீவிரமாக போராடி வருகிறார்கள்.

2017 ஆகஸ்ட் 22 அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து, செப்டம்பர்-7 2017ம் ஆண்டு தமிழகம் முழுவதும் காத்திருப்புப் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதித்தது. தடையை மீறி போராட்டத்தை தொடரவே நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நாட்டண்மைத்தனத்துடன் நடந்து கொண்ட நீதிமன்றம் “இரண்டு மணிக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள்” என்று எச்சரித்தது. அதனடிப்படையில் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

பிறகு மீண்டும் 24.03.2018 மாநிலம் தழுவிய பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து 08.05.2018 கோட்டை முற்றுகை போராட்டம். கைது, சிறை … அப்பொழுதாவது இவர்களின் கோரிக்கையில் ஒருபாதியாவது  நிறைவேற்ற முயற்சித்திருக்கலாம். ஆனால், இல்லை.

மீண்டும் ஜூன் மாதம் அடையாளப் போராட்டம் நடத்தி கைதாகினர். அதனைத்தொடர்ந்து அக்டோபர் 13-ம் தேதி ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக் குழு கூடி விவாதித்து  நவம்பர் 27-ம் தேதி இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். அந்த சமயத்தில் கஜா புயலால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் போராட்டம் டிசம்பர் 4-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

2017-ம் ஆண்டு விழுப்புரத்தில் நடைபெற்ற போராட்டம். (கோப்புப் படம்)

அப்பொழுதே பல்வேறு எதிர்கட்சி தலைவர்கள் போராட்டத்தை சுமுகமாக முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அடிமை எடப்பாடி அரசோ, மெத்தனம் காட்டியது.

டிசம்பர் 10-ம் தேதி நீதிமன்றத்தில் அந்த விசாரணைக்கு வந்ததால் ஜனவரி 7 வரை போராட்டத்தை ஒத்தி வைக்கவும் அதற்குள் ஊதிய முரன்பாடு குறித்த சித்திக் கமிட்டியின் அறிக்கையையும், புதிய பென்சன் திட்டம் குறித்த ஸ்ரீதர் குழுவின் அறிக்கையையும் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.  அந்த உத்தரவையும் எடப்பாடி அரசு காற்றில் பறக்கவிட்டது. அதைப்பற்றி நீதிமன்றம் எள்ளளவும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது போராட்டமும் தீவிரமடைந்துள்ளது.

அரசின் அடக்குமுறையும் பொய் பித்தலாட்டமும் !

இந்த போராட்டத்தை தனது வழக்கமான பாணியில் கலைத்து விடலாம் என்று கனவு கண்டது அதிமுக கும்பல். அது முடியவில்லை. பிறகு மாணவர்களுக்கு தேர்வு நேரம் என்பதால் பாதிக்கப்படுவார்கள் என்ற போலியான அக்கறையை ஊடகங்கள் மூலம் பரப்பியது. இந்த அக்கறை பள்ளிகளை மூடலாம் என்று முடிவு செய்தபோது வரவில்லை.

போராட்டம் தீவிரமடையவே நீதிமன்றத்தை நாடி தடைவிதிக்கக் கோரியது. முதலில் முடியாது என்று கூறிய நீதிமன்றம் அடுத்தடுத்து மென்மையாக கடிந்தது. பிறகு 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று மிரட்டியது. இவ்வாறு நீதிமன்றம் தலையிடுவது முதல் முறையல்ல, நான்குமுறை இந்த போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்துள்ளது.

எப்பொழுதெல்லாம் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் நடத்துகிறார்களோ அப்பொழுதெல்லாம் அந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் நீதிமன்றம் பகிரங்கமாவே இவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

இதுமட்டுமா? சம்பள உயர்வு கேட்டு போராடிய செவிலியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்ததோடு “சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லலாம்” என்று எகத்தாளமாக சொன்னது. முதுகலை மருத்துவப் படிப்புக்கு இடஒதுக்கீடு கேட்டு போராடிய அரசு மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய உத்தரவு, போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்துக்கு தடை என அனைத்திற்கும் நீதிமன்றம் தாமாகவே உத்தரவு போட்டு வருகிறது.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை 28-ம் தேதிக்குள் பணிக்கு வர வேண்டும். இல்லையென்றால் அந்த இடம் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என மிரட்டியது. அவ்வாறு வருபவர்கள் அதே பள்ளியில் பணியைத் தொடரலாம் என்ற சலுகையும் அளித்தது. போராடுபவர்களை இதைவிட கொச்சைப்படுத்த முடியாது. இவர்களுக்கு பக்கபலமாக பாஜக அல்லக்கைகள் பள்ளியை நாங்களே நடத்துவோம் என்று வக்காலத்து வாங்கியது.

போராட்டம் தொடரவே, தற்காலிக ஆசிரியர்களை எடுக்கப்போவதாக அறிவித்தது. அதற்கு இதுவரை மூன்று லட்சம்பேர் விண்ணப்பித்திருக்கிறார்கள். தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 10,000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அறிவித்து தனது கொடூர முகத்தை காட்டியது.  இதற்கெல்லாம் அஞ்சாத அரசு ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர்.

அரசோ, போராடுபவர்களுக்கு 17பி நோட்டீஸ் கொடுத்து பணிய வைக்க முயன்று தோற்றுப் போனது. 23-ம் தேதி மாவட்டத் தலைநகர்களில் செய்த மறியலில் உளவுத்துறை புள்ளிவிவரப்படி 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கைதாகி உள்ளார்கள். 24.01.2019 அன்று வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற மறியலில் 2 இலட்சத்து 32 ஆயிரம் பேர் கைதாகி உள்ளார்கள். இரண்டு நாட்களிலும் நாலரை லட்சம் பேர் கைதாகியுள்ளனர். இதில் இரண்டு இலட்சம்பேர் பெண் ஊழியர்கள்.

500-க்கும் மேற்பட்டோரை சஸ்பெண்ட் செய்துள்ளது. முன்னணியார்களை  கைது செய்து அவர்கள் மீது 143 சட்டவிரோதமாக கூடுதல், 290 அரசு ஊழியர்கள் சொல்வதை கேட்காமல் இருத்தல், 341 அரசு ஊழியரை தடுத்தல், 353 அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், 7(1)(ஏ) (சிஎல்) பொதுமக்களுகும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்துதல் மற்றும் சாலை மறியல் செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது போலிசு.

இந்நிலையில், மாநில அரசு மிக மோசமான நிதி நெருக்கடியில் இயங்குவதால் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்று வெளிப்படையாகவே  கூறி, நிதி நெருக்கடிக்கான வரைவோலையை பத்திரிக்கையில் விளம்பரம் செய்தது.

அதில், “ஓய்வூதிய நிதிச் சுமையின் காரணமாக உலகம் முழுவதுமே புதிய ஓய்வூதிய முறைதான் பின்பற்றப்பட்டு வருவதாகவும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தினால், மக்கள் நலப் பணிகளுக்கு நிதியே இல்லாமல் போய்விடும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அரசின் மொத்த வருவாயில் 71 சதவீதம் சம்பளத்துக்கே சரியாகி விடுகிறது. ஊழியர்களுக்கான சம்பளத்தையே கடன் பெற்றுத்தான் தர வேண்டியிருக்கும். ஆகவே பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த முடியாது.

அதேபோல் 21 மாதங்களுக்கான ஊதிய உயர்வு நிலுவையை பொறுத்தவரை, தமிழக அரசு ஏற்கனவே 24 ஆயிரம் கோடி ரூபாய் பற்றாக்குறையுடன் இயங்கிவரும் நிலையில், இந்த நிலுவைத் தொகையையும் வழங்கினால் கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படும் அதனைத் தங்களால் வழங்க முடியாது” என்றும் கூறியது.

படிக்க:
அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்
வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

அரசின் இந்த மோசடியான பொய் பிரச்சாரத்திற்கு பதலளிக்கும் விதமாக, நிதி நெருக்கடி இருக்கும்போது சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு மட்டும் எப்படி சம்பளம் உயர்த்தினீர்கள் என்றும், 21 மாத நிலுவைத்தொகையை நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் ஆகியோருக்கு மட்டும் வழங்கியிருக்கிறீர்களே அவர்களுக்கு கொடுக்க மட்டும் எங்கிருந்து நிதி வந்தது என்றும் கேள்வியெழுப்பினார்கள். இதுவரை அதற்கு பதில் இல்லை.

அதோடில்லாமல் வருவாயில் 71 சதவீதம் தங்களுக்கு வழங்கப்படுவதாக  அமைச்சர் சொல்வது உண்மையில்லை. சம்பளத்துக்கான செலவீனம் 31.63%. ஒரு ஆண்டுக்கு 52 ஆயிரத்து 172 கோடி. ஓய்வுதியத்துக்கான செலவீனம் 15.37 சதவீதம். இது ஆண்டுக்கு 25,362 கோடி. ஆக மொத்தம் 47 சதவீதம்தான் ஒதுக்கப்படுகிறது. இந்த சம்பளத்தில் உயர் அதிகாரிகளின் நிர்வாகச் செலவினமான 6.57 சதம், 10 ஆயிரத்து 837 கோடியும், வருடம்தோறும் அரசு செலுத்தும் வட்டியான 17.42 சதவீதமான 28,729 கோடியையும் சேர்த்து ஊழியர்களின் சம்பளமாக சொல்கிறார்கள்” என்பதை அம்பலப்படுத்தினர். அத்துடன் “முதல்வர் எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுதான் மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் நல்லது” என்றனர்.

இந்நிலையில் 28-ம் தேதி இந்த வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சசிதரன் மற்றும் சாமிநாதன், “தற்காலிகமாக வேலைக்கு ஆள் எடுத்தால் அவர்களும் நிரந்தரமாக்கக் கோரி போராடுவார்கள். எனவே புதுப்பிரச்சனைக்கு வழி வகுக்காமல் ஊழியர்களுடன் பேசி தீர்வு காண வேண்டும்” என்று கூறி வழக்கை பிப் 18 க்கு தள்ளி வைத்துள்ளது.

இருந்தாலும் முதல்வர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்த ஊழியர்கள் எதிர்த்து போராடுவது அடிமை எடப்பாடியின் எஜமானானர்களாகிய பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட புதிய பென்சன் திட்டத்தை எதிர்த்துதான். அதனால்தான் பிடிகொடுக்காமல் நடவடிக்கையை எடுத்து வருகிறது.

கஜானா காலி யாரால் ?

உலகம் முழுவதும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமார் கதறுவதன் பின்னனி என்ன? பங்களிப்புத் ஓய்வூதியத் திட்டம் வாஜ்பாய் அரசால் தொடங்கப்பட்டது. இந்த திட்டமே ஓய்வூதியத்துறையில் தனியார்மயத்தை திறந்துவிடத்தான்.

தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஊதியம், மற்றும் பி.எஃப் போன்றவற்றை அரசு மற்றும் துறைசார்ந்த நிறுவனங்களில் முதலீடு செய்து அதைப் பெருக்கும் திறன் அரசுக்கு இல்லை எனக் கருதி, இப்பெருந்தொகையைக் கையாளும் பொறுப்பை, ஐ.சி.ஐ.சி.ஐ., கோடக் மஹிந்திரா வங்கி, ரிலையன்ஸ் கேபிடல், ஹெச்.டி.எஃப்.சி. அம்பானி, அதானி போன்ற தனியார் முதலீட்டு நிதி நிறுவனங்களிடம் அளித்தது மத்திய அரசு.

அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தில் தனது சட்டபூர்வ பொறுப்பைக் கைவிட்டது மத்திய மாநில அரசுகள்.  தொழிலாளர்கள், அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை பங்குச் சந்தை சூதாட்டத்திலும், தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைத்ததாலேயே கஜானா காலியானது.

இந்த உண்மையை மறைத்து அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தால்தான்  அரசின் கஜானா காலியாவதுபோன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி போராடுபவர்களை மக்களுக்கு எதிரானவர்களாக காட்டுகிறது.

போராட்டத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் !

ஆசிரியர்களின் இந்தப் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தாலும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பாக இந்த போராட்டத்திற்கு ஆதரவு வலுத்து வருகிறது.

தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்கள்.

இன்னொருபக்கம் சமூக வலைத்தளங்களில் வேலை இல்லாத இளைஞர்களும் விமர்சித்து வருகின்றனர். ஒரு லட்சம் சம்பளம் போதாதா? எங்களுக்கெல்லாம் வேலையே இல்லை. அதில் பாதி சம்பளத்தை கொடுத்தால்கூட நாங்கள் வேலை செய்யத் தாயார் என்று ஏராளமான எதிர்ப்புக் குரல்களும் வருகிறது. இந்த எதிர்ப்புக் குரல்கள் ஊடகங்கள் மற்றும் அரசு கட்டியமைத்துள்ள பொதுப்புத்தியில் இருந்து கேட்கின்றன. உண்மையில் அரசுப் பள்ளிகளை ஒழிப்பது, கல்வி எனும் மக்கள் உரிமையை விற்பனைச் சரக்காக மாற்றுவது ஆகியவை அரசிடம் இருக்கும் கொள்கை. அந்த அபாயத்தை உணராமல் ஆசிரியர்களை எதிரிகளா பாவிப்பது பாரிய தவறு.

மற்றொருபுறம் அரசுபள்ளியின் தரத்தை உயர்த்த போராடாத ஆசிரியர்கள் சம்பள உயர்வுக்காக மட்டும் போராட வருகிறார்கள் என்ற குரலும் ஒலிக்கிறது. அப்படி வருவதில் உண்மை இல்லாமல் இல்லை. அதற்காக அந்தக் கோரிக்கையை ஆசிரியர்கள் வைக்காமலும் இல்லை.

தீர்வு என்ன ?

ஊழியர்களின் போராட்டத்திற்கு சுமூகமான முறையில் பேசி தீர்வு காண அரசு தயாராக இல்லை. பல்வேறு தரப்பினரை பொய் பிரச்சாரத்தின் மூலம் போராட்டத்திற்கு எதிராக திசைதிருப்பும் கீழ்த்தரமான செயலை செய்து கொண்டிருக்கிறது. மாணவர்களும் பெற்றோர்களும் அரசுப் பள்ளியை தரம் உயர்த்தக்கோரி ஆசிரியர்களோடு களத்தில் இறங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. கல்வி-வேலைவாய்ப்பு – சம்பள உயர்வு என ஒட்டு மொத்தத்திலும் தீர்வு காண முடியாமல் அரசு தோல்வியடைந்து விட்டது அரசு. இப்பொழுது கரம் கோர்த்து போராடாவிட்டால் நாளை நிச்சயம் இதே அடக்குமுறை நம்மீது பாயும். இதுதான் தமிழகம் சந்தித்து வரும் எல்லா பிரச்சினைகளிலும் நமக்கு கிடைத்திருக்கும் அனுபவம்.

தற்போது  போராட்டம் விலக்கப்பட்டாலும் அது நீருபூத்த நெருப்பாகவே இருக்கும். அந்த அடிப்படையில் ஆசிரியர்கள் – மாணவ – இளைஞர்கள் -பெற்றோர்கள் இணைந்து சிவில் சமூகத்திற்கான போராட்டமாக முன்னெடுப்பதன் மூலம்தான் அனைவரது உரிமையையும் மீட்க முடியும்!

மேலதிக விவரங்களுக்கு படிக்க:
போராடும் ஆசிரியர்கள் – குறட்டை விடும் பினாமி அரசு !
அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் போராட்டம் வெல்லட்டும் !

தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு இது | மருத்துவர் ஃபருக் அப்துல்லா

மீபத்தில் நடந்த குடியரசு தின விழா தொற்றா நோய்கள் விழிப்புணர்வு மருத்துவ முகாமில், கொடைக்கானல் அருகில் உள்ள ஒரு சிற்றூரிலிருந்து வந்திருந்த 25 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது.

ரத்தப் பரிசோதனை செய்ய அனுமதித்த நூறு பேருக்கு ரத்த சர்க்கரை அளவு சோதிக்கப்பட்டது.

மிகவும் அதிர்ச்சி தரும் விசயமாக ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்ட சுமார் 300 -க்கும் மேற்பட்டவர்களில் 50% நபர்களுக்கு ரத்த அழுத்தம் சராசரி சரியான அளவை விட அதிகமாக இருந்தது கண்டறியப்பட்டது. அதில் சுமார் 50 பேருக்கு ரத்த கொதிப்பு நோய் இருப்பது அதுவரை தெரியாது.

100-க்கு மேற்பட்டவர்களுக்கு தாங்கள் எடுக்கும் ரத்த கொதிப்பு மாத்திரைகள் சரியாக எடுக்காததாலும் / தேவையான அளவுள்ள மாத்திரை எடுக்காததாலும் ரத்த அழுத்தம் சரியாக இல்லை என்று கண்டறியப்பட்டது

ரத்த சர்க்கரை அளவுகள் சோதித்ததில் சுமார் 100 பேரில் 48 நபர்களுக்கு சரியான அளவை விட அதிகம் இருந்தது. அதில் 33 நபர்களுக்கு தங்களுக்கு நீரிழிவு இருப்பது அதுவரை தெரியாது.

இந்த சிறிய முகாம் மூலம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வானது தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் செய்யப்படும் அம்மா ஆரோக்கியத் திட்டம் எனும் முழு உடல் பரிசோதனை முடிவுகளுடன் ஒத்துப்போகிறது.

ஆம்.. தமிழகத்தில் 30 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் பேருக்கு ரத்த கொதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 20-30 சதவிகிதம் பேருக்கு நீரிழிவு இருப்பது தெரியவருகிறது.

நிலம் / தொழில் / பொருளாதாரம் இவற்றால் பெரிய பாதிப்புகள் இல்லை…
ஏழை, பணக்காரன், நன்றாக உழைப்பவன், அசமந்தமாக ஒரே இடத்தில் அமர்ந்திருப்பவன், ஆண், பெண் என்ற பெரிய பாகுபாடுகள் எல்லாம்
இல்லை..

எங்கு காணிணும் நீரிழிவும் ரத்தக்கொதிப்பும் வியாபித்திருக்கிறது. மூன்று புறத்தில் நீராலும் அனைத்து புறத்திலும் நீரிழிவால் சூழப்பட்ட தேசமாய் தமிழகம் மாறி வருகிறது.

படிக்க :
♦ சர்க்கரையின் அறிவியல்
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்

நாங்கள் சென்ற மலைவாழ் கிராமத்தில் கிட்டத்தட்ட அனைவருக்கும் நீரிழிவு ரத்தக்கொதிப்பு பற்றிய விழிப்புணர்வு மிக குறைவு.

இதே நிலை தமிழகத்தின் கிராமங்களிலும் ஏன் பல நகர்ப்பகுதிகளிலும் உண்டெனலாம். நீரிழிவு மற்றும் ரத்த கொதிப்பு குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

எங்கு மக்கள் கூடிப்பிரிந்தாலும் இந்த இரு நோய்கள் குறித்து பேசப்பட வேண்டும்.
நீரிழிவு மற்றும் ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்வதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

இளைஞர்களுக்கு – இளைஞிகளுக்கு ஆரோக்கிய உணவு முறை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இந்த நூற்றாண்டு “தொற்றா நோய்கள் காவு வாங்கும் நூற்றாண்டு”.

தொற்றா நோய்கள் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது ஆனால் ஒரு சமூகத்தை ஒரு நாட்டை ஒரு சேர ஆட்கொண்டு மொத்த பொருளாதாரம் மற்றும் மனித வளத்தை அழிக்கவல்லது என்று உணர வேண்டும்.

அரசு கட்டாயம் தனது உணவு சார்ந்த கொள்கைகளை சரிசெய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது. கொழுப்புணவை கெட்டது என்றும் மாவுச்சத்து கட்டாயம் என்றும் பேசியதால் இன்று அனைத்து மக்களும் மாவுச்சத்து / இனிப்பு / சீனி என்று அடிமையாகி நீரிழிவிற்கும் ரத்தக்கொதிப்புக்கும் இரையாகின்றனர்.

இன்னும் மருத்துவர்கள் கூடும் ஒரு கலந்தாய்வாகட்டும், ஒரு முக்கிய கூட்டமாகட்டும் அங்கும் சீனி கலந்த டீ காபி மட்டுமே வழங்கப்படுகிறது இது வேதனையான விசயம்.

எனது கனா யாதெனில் சீனி சர்க்கரை மற்றும் இவை கலந்த பானங்கள் பண்டங்களை விசமாகப்பார்க்கும் காலம் மலர்வதே…. பிறகு புகை மதுவை பார்த்துக்கொள்ளலாம்.

முதலில் நம் வீட்டில் உள்ள சீனி / நாட்டு சக்கரை / போன்ற அனைத்து இனிப்புகளையும் குப்பையில் போட வேண்டாம்… எரித்து விடுவோம் குப்பையில் போட்டால் நாயோ மாடோ பூனையோ கூட அதை திண்ணக்கூடும். அவற்றுக்கும் அவை விசம்தான்…

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தை ஆதரித்து கரூர் – ஈரோடு கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த ஒரு வார காலமாக தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அரசின் வருவாயில் 40%க்கும் மேல் இவர்களுக்கே செலவிட வேண்டியிருக்கிறது; இவர்கள் இதற்குமேலும் சம்பள உயர்வு கேட்டுப் போராடுகிறார்கள் என்று அரசே பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுவது தொடங்கி.. போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்வது; கூட்டமைப்பைச் சேர்ந்த முன்னணியாளர்களை மிரட்டுவது; தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்வது; பணியிட மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு உடனடியாக பணியிட மாற்றம் வழங்கப்படும் என ஆசை வார்த்தை காட்டி தூண்டில் போடுவது வரையில் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு விதமான தந்திரங்களைக் கையாண்டு வருகிறது எடப்பாடி அரசு.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் – ஆசிரியர்களின் போராட்டம் வெறுமனே சம்பள உயர்வுக்கானது அல்ல. “5000 அரசுப்பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட்டு, சமூக நீதியினை பாதுகாத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; 3500 சத்துணவு மையங்கள் மூடும் முடிவினையும் ரத்து செய்ய வேண்டும்; சிறப்புக் காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும்; எல்.கே.ஜி. / யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை ரத்து செய்ய வேண்டும்; 2003, 2004-ல் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு முதல் பணிவரன் முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.’’ என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியே போராடி வருகின்றனர். ஒன்பது அம்சக் கோரிக்கைகளுள் ஒன்றுதான் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை. இது, உரிமைக்கான போராட்டம்!

பன்னாட்டு நிறுவனங்களிலும் தனியார் ஆலைகளிலும் பெயருக்கு பத்து நிரந்தரப் பணியாளர்களை நியமித்துவிட்டு ஆகப்பெரும்பான்மையினரை ஒப்பந்தக்கூலிகளாகவும், அப்ரண்டீஸ் மாணவர்களாகவும் வைத்துக்கொண்டு உற்பத்தியை நடத்தி இலாபத்தை ஈட்டுவதைப்போலத்தான் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்களையும் அத்துக்கூலிகளைப் போல அற்ப சம்பளத்தில் நியமித்து வருகிறது. பழைய பென்சன் முறையை ஒழித்துக்கட்டியுள்ளது.

இந்தப் பின்புலத்திலிருந்து ஜாக்டோ – ஜியோ கூட்டமைப்பினரின் போராட்டத்தை நாம் ஆதரிக்க வேண்டுமென்று மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டங்களை நடத்திவருகிறது, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

கடந்த ஜன-29 அன்று கரூர் அரசு கலைக்கல்லூரி எதிரில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.

ஈரோடு – சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மாணவர்கள் ஜன-29 அன்று தங்கள் கல்லூரி வாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை அச்சுறுத்தும் விதத்தில் கல்லூரி முதல்வரும், போலீசும் புகைப்படங்களை எடுத்த போதும் அதனை பொருட்படுத்தாமல் முழக்கங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்; அவர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட வேண்டும்; ஒன்பது அம்சக் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்து அரசு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர்.

தொகுப்பு:

அறிவியலை முடக்கும் பார்ப்பனிய மேலாதிக்கத்தை விரட்டுவோம் | CCCE கருத்தரங்கம்

“புராண குப்பைகள் அறிவியலாகுமா ? உயர் சாதி இட ஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு(CCCE) சார்பாக கருத்தரங்கம் 25/01/2019 அன்று பெரியார் திடலில் நடைபெற்றது.

மொழிப்போர் தியாகிகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தும் கூட்ட பங்கேற்பாளர்கள்.

இக்கருத்தரங்கிற்கு CCCE-ன் ஒருங்கிணைப்பாளர் பேரா வீ. அரசு தலைமை தாங்கினார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போலீசின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான தியாகிகளுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து UAPA-வின் பிரிவில் பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டெவை கைது செய்ய முயற்சிக்கும் மோடி அரசை கண்டித்தும் அவர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும்  தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பேராசிரியர்கள் மாணவர்கள் உட்பட சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் வீ. அரசு

தலைமை உரையாற்றிய பேராசிரியர் வீ. அரசு ஐரோப்பாவில் கத்தோலிக்க மத நிறுவனம் எப்படி அறிவியல் வளர்ச்சியை ஆரம்ப காலத்தில் இருந்தே தடுத்து வந்தது என்பதையும் அறிவியல் வளர்ச்சி மத கருத்துகளுக்கு எதிரான சமூக போராட்டங்களாக மாறியதையும்  உதாரணங்களோடு விளக்கி பேசினார்.

தமிழகத்தில் 1870-களில் சென்னை லௌகீக சங்கம் என்ற அமைப்பு அறிவியல் கண்டுபிடிப்புகளையும் பகுத்தறிவுக் கருத்துகளையும் பத்திரிகைகள் வாயிலாக பரப்பியுள்ளனர். இந்தியாவில் பகவத் கீதையில் சொல்லப்பட்ட “எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது ……” என்ற முட்டாள் தனமான வசனங்களே வழிகாட்டியாகயுள்ளது என்று தனது வேதனையை தெரிவித்துப் பேசினார்.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் கதிரவன் உயர் சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஜாதியின் அடிப்படையில் பல நூற்றாண்டுகளாய்  மக்கள் அடிமையாக்கபட்டு உரிமைகள் மறுக்கபட்டு வந்துள்ளது. பாதிக்கபட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்றால் அது ஜாதி அடிப்படையில் தான் வழங்க முடியும். அரசியல் சாசனத்தில் கூட socially and educationally backward என்றுதான் உள்ளது. பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என திருத்தம் முன் மொழியபட்டபோது கூட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, இந்த திருத்தத்தை நிராகரித்ததை விளக்கி பேசினார்.

பேராசிரியர் கதிரவன்

இந்திய பல்கலைக்கழகங்களில் உள்ள 14,18,000 பேராசிரியர்களில் 4 லட்சம் பேராசிரியர்கள்தான் SC/ST பிரிவினர் இருக்கின்றனர்.  மேலும் 3% உள்ள பார்ப்பனர்கள் அரசு உயர் பதவிகளிலும் ஐ.ஐ.டி.-களிலும் சுமார் 70 சதவிகிதம் ஆக்கிரமித்திருக்கின்றனர். தற்போது வழங்கப்பட்டுள்ள உயர்சாதி இடஒதுக்கீடு, பார்பனர்களின் ஆதிக்கத்தை  அதிகரிக்கவே செய்யும் என்று விளக்கினார்.

மேலும் தனி நபர் வருமான வரிக்கு அரசு வைத்திருக்கும் குறைந்தபட்ச வருமான இலக்கு 2.5 லட்சம். ரேசன் கடைகளில் மானிய விலையில் பொருள்கள் பெற அரசு நிர்ணயித்துள்ள ஆண்டு வருமானம் ரூ.72,000. SC/ST மானவர்கள் metric scholarship பெறுவதற்கு அரசு நிர்ணயித்த அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம். ஆனால் உயர்சாதியில் ஏழைகள் என்று தீர்மானிப்பதற்கான ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம். மோடி அரசின் உயர்சாதி பத்து சதவிகித இடஒதுக்கீடு உயர்சாதிக்கு சார்பான திட்டம் என்பதையும் விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து மாணவர்களை மூடர்களாக்கும் இந்துத்துவ சக்திகள் என்ற தலைப்பில் மருத்துவர் எழிலன் அவர்கள் உரையாற்றினார்.

தற்போது  நடைமுறையில் இருக்கும் இட ஒதுக்கீட்டில் உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய  தீர்ப்பு,  பிற்பட்ட/தாழ்த்தபட்ட சமூகத்தின் பிரதிநிதித்துவத்தை  எப்படி மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது என்பதையும் விளக்கினார். இத்தீர்ப்பின் படி  மொத்தமாக கணக்கிடப்படும் பல்கலைக்கழகத்திற்கான இட ஒதுக்கீடு என்பது  துறை சார்ந்த இட ஒதுக்கீடாக மாற்றப்பட்டுள்ளது. பொதுப் போட்டியின் மூலம் உயர்கல்வி, வேலைகளுக்கு பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து   வருபவர்களின் எண்ணிக்கையை  உயர் சாதி இட ஒதுக்கீடு குறைக்கச் செய்யும் என்று பேசினார்.

மருத்துவர் எழிலன்

இந்தியாவிலுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் பெரும்பான்மையானோர் கடவுள் நம்பிக்கை உடையவர்களாகவே உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான கருத்துக்கள் குடும்பத்திலிருந்தும் சமூக பழக்கவழக்கங்களிலிருந்தே பெறப்படுகிறது. இது கடவுள்  நம்பிக்கையை மாணவர்களின் மூளையில் Conditioned Reflex-ஐ போல செயல்படுகிறது. இது சமூகத்தில் இருக்கும் சில பிரச்சினைகளை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று விட்டுவிடுவதற்கான அடிப்படையை வழங்குகிறது என்பதை விளக்கி பேசினார். இந்நிலையில் RSS-BJP கூட்டத்திலிருந்து பலரும் வேத – புராண – இதிகாச குப்பைகளை அறிவியல் என பேசிவருவதையும் உதாரணங்களோடு கூறினார்.

அதன் பின் இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல்  என்ற தலைப்பில் பேராசிரியர் முருகன் உரையாற்றினார்.

பேராசிரியர் முருகன்

இந்தியாவில் உள்ள சாதி படிநிலையை நியாயப்படுத்தவே புராணக் குப்பைகளை உண்மை போல சித்தரிக்கிறார்கள் என்பதை விளக்கினார். போலி அறிவியலை பேசுபவர்கள் உண்மையான அறிவியல் கோட்பாட்டை பேசுவதோடு  தங்கள் கருத்துக்களையும் சேர்த்து பேசுவார்கள். விஞ்ஞானிகளின் கோட்பாடுகளை ஒரே அடியாக நிராகரிப்பார்கள். இப்போக்கு இந்திய அறிவியல் பேராயத்தில் வெளிப்படையாகவே தெரிகிறது என்று விளக்கினார்.

அவரைத் தொடர்ந்து அறிவியக்கத்தின் தேவை பற்றி முனைவர் ரமேஷ் பேசினார்.

RSS-BJP ஆளுகின்ற மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள், முதலமைச்சர்கள், பிரதமர் என இந்நாட்டின் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் தொடர்ந்து வேத-புராணக் குப்பைகளை அறிவியல் தொழில்நுட்பம் என பொது வெளியில் தொடர்ந்து பேசிவருகின்றனர். பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களில்  திணிக்கின்றனர்.

உதாரணமாக  அடுத்த கல்வியாண்டிலிருந்து பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு சமஸ்கிருதம், யோகா மற்றும் வேத-புராணங்களை கட்டாய பாடமாக்கியுள்ளனர். இக்கருத்துக்கள் அனைத்தும் RSS முகாமிலிருந்து தயாரிக்கப்பட்டவை.

முனைவர் ரமேஷ்

இவைகளனைத்தும் அறிவியலுக்கு முரணானவை என்று RSS-BJP கும்பலுக்கு தெளிவாக தெரியும். இருந்தும் இவைகளை முன்தள்ளுவதற்கு காரணம் மாணவர்களுடைய சமூக கண்ணோட்டத்தை பார்பனியமாக்குவதன் மூலம் அவர்களை அடிமைகளாகவும் அவர்களிடமிருந்து எதிர்ப்பற்ற சுரண்டலையும் உறுதிப்படுத்த முடியும். பார்ப்பனிய மேலாதிக்கத்திற்காகவும், பெருமுதலாளிகளின் லாப பெருக்கத்திற்காகவே இதனை செய்கின்றனர்.

ஆகவே போலி அறிவியலுக்கு எதிரான போராட்ட மற்றும் பகுத்தறிவு பற்றிய விவாதங்கள் வெறும் கல்லூரிகளுக்குள் மட்டும் நடந்தால் போதாது. சமுதாயத்தோடு இணைக்கப்பட வேண்டும். அதற்கு பேராசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவரமைப்புகள், பெற்றோர்கள் என அனைவரும் சேர்ந்த ஒரு இயக்கத்தின் வாயிலாகவே சாத்தியமாகும். அதற்கான ஒரு சிறு முயற்சியே பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழுவின் இக்கூட்டம் என்று பேசினார்.

இறுதியாக கூட்டம் நன்றியுரையுடன் கூட்டம் முடிவுற்றது.

தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்பு குழு
(Co-ordination Committee for Common Education)
சென்னை
பேச : 72993 61319, 94443 80211


இதையும் பாருங்க ..

போலி அறிவியல் பேசும் இந்திய அறிவியல் மாநாடு | Prof. Murugan

 

பொருளாதாரம் கற்போம் | பாகம் 9 : பொருளாதாரம் – அரசியல் பொருளாதாரம் எது சரி ?

6

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 9

அரசியல் பொருளாதாரமும், பொருளாதாரமும்

அ.அனிக்கின்
 டந்த சில பத்தாண்டுகளில் மேற்கு நாடுகளில் அரசியல் பொருளாதாரம் என்ற வார்த்தை கைவிடப்பட்டு அதற்கு பதிலாகப் பொருளாதாரம் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது. அதற்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு: ஒரு சமூகத்திலுள்ள உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தம் என்பது ஒரு அர்த்தம், பொருளாதார வளர்ச்சி விதிகளின் விஞ்ஞானம் என்பது மற்றொரு அர்த்தம்.

எனினும் பொருளாதாரம் என்ற சொல்லும் அரசியல் பொருளாதாரம் என்பதும் ஒன்று எனக் கருதிவிடக் கூடாது. அறிவின் துறை என்ற அர்த்தத்தில் பொருளாதாரம் என்ற சொல் பொருளாதார விஞ்ஞானங்களையே அதிகமாகக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. இன்று இந்த விஞ்ஞானங்கள் அரசியல் பொருளாதாரத்தைத் தவிர பொருளாதாரப் போக்குகளைப் பற்றிய பல அறிவுத் துறைகளையும் உள்ளடக்கியிருக்கின்றன.

உற்பத்தி அமைப்பு, உழைப்பு, உற்பத்திப் பொருள்களின் விற்பனை, தொழில் துறை நிதிமுறை பற்றியவை அனைத்தும் பொருளாதார விஞ்ஞானங்களே. இது முதலாளித்துவப் பொருளாதாரம், சோஷலிசப் பொருளாதாரம் ஆகிய இரண்டுக்குமே பொருந்தும்.

முதலாளித்துவத் திட்டம் என்பது பெரிய முதலாளித்துவ அமைப்புக்களின் சுற்றுவட்டத்துக்குள் நடைபெறுவது என்பது நமக்குத் தெரியும்; அதன் முறைகளும் வடிவங்களும் பொருளாதார விஞ்ஞானத்தின் துறையைச் சேர்ந்தவையே. இன்று அரசு ஏகபோக முறையில் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு – இது இல்லாமல் நவீன முதலாளித்துவத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது – பொருளாதாரம் முழுவதைப் பற்றியும் அதனுடைய தனித்தனித் துறைகளைப் பற்றியும் யதார்த்த அறிவு என்ற அடிப்படை அவசியமாகிறது. எனவே பொருளாதார விஞ்ஞானங்களின் செய்முறைக் கடமைகள் அதிகரித்து வருகின்றன.

சோஷலிஸ்ட் நாடுகளில் பொருளாதார நிபுணருக்கு வெவ்வேறான பல கடமைகள் ஒதுக்கப்படுகின்றன; ஸ்தூலமான பொறி இயல் அல்லது திட்ட வேலைகள் முதல் மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரத்தைப் பரப்புகின்ற கலப்பற்ற சித்தாந்தக் கடமை வரை அவருக்கு உண்டு.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : பொது உடைமைக் கல்வி முறை | குரூப்ஸ்காயா
♦ கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

உற்பத்தி உறவுகள் என்ற கருதுகோளின் பன்முகத் தன்மையினால் இப்படி ஏற்படுவதாக விளக்கம் தரலாம். அவற்றின் சில வடிவங்கள் அதிகமான அளவுக்குப் பொதுவான சமூகத் தன்மையைக் கொண்டிருக்கின்றன, இவை அரசியல் பொருளாதாரத்தின் துறையைச் சேர்ந்தவை. மற்றவை ஸ்தூலமான உற்பத்தி உறவுகள் தொழில்நுட்பத்தோடு, உற்பத்திச் சக்திகளோடு நேரடியான தொடர்பு கொண்டிருக்கின்றன.

வேறுசில பொருளாதார, தொழில் நுட்பப் பிரச்சினைகள் உற்பத்தி உறவுகளோடு மறைமுகமாகவே தொடர்பு கொண்டிருக்கின்றன. ஸ்தூலமான பொருளாதார விஞ்ஞானங்களின் முக்கியத்துவம் அதிகமாக வளர்ச்சியடைவது உறுதியாகும், அவற்றின் வளர்ச்சி பொருளாதார ஆராய்ச்சியோடும் பொருளாதாரத்தின் நடைமுறை நிர்வாகத்தோடும் கணிதத்தையும் மின்கணிதப் பொறி இயலையும் இணைப்பதைப் பொறுத்திருக்கிறது.

முன்காலத்தில் தத்துவஞானம் விஞ்ஞானங்களின் விஞ்ஞானமாகத் திகழ்ந்து, அநேகமாக அறிவின் எல்லாத் துறைகளையும் உள்ளடக்கியதாக இருந்தது. ஆனால் இன்று அது “பல துறைகளில் ஒன்றாகத்” தாழ்ந்து விட்டது. அது போலவே முன்பு எல்லாப் பொருளாதார நிகழ்வுகளையும் உள்ளடக்கியிருந்த அரசியல் பொருளாதாரம் இன்று பொருளாதார விஞ்ஞானங்கள் என்ற குடும்பத்துக்குத் தலைவனாக மட்டுமே இருக்கிறது. இதுவும் தர்க்கரீதியில் சரியானதே.

ஆனால் விஷயம் இதோடு முடிந்து விடவில்லை. ஸ்மித், ரிக்கார்டோவின் ஆராய்ச்சிகளிலிருந்து உருவான அரசியல் பொருளாதாரம் அடிப்படையில் முதலாளித்துவ சமூகத்தில் மக்களுக்கு இடையே உள்ள வர்க்க உறவுகளின் விஞ்ஞானமாக இருந்தது. அதனுடைய முக்கியமான பிரச்சினை உற்பத்தி விளைவுகளை (அல்லது வருமானங்களை) பகிர்வது எப்படி என்பதே.

இது ஒரு சமூகப் பிரச்சினை. அதிலும் ஆழமான கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்துகின்ற பிரச்சினை. ரிக்கார்டோவைப் பின்பற்றியவர்கள் பலரும் அவருடைய அரசியல் பொருளாதாரத்தின் சமூகத் தீவிரத்தின் வலுவைக் குறைப்பதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் முதலாளி வர்க்கத்துக்கு இது மட்டும் போதுமானதாக இருக்கவில்லை, ஏனென்றால் அதே சமயத்தில் ரிக்கார்டோவின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மார்க்சின் அரசியல் பொருளாதாரம் தோன்றியது. சமூக உற்பத்தி உறவுகள் இந்த விஞ்ஞானத் துறையைச் சேர்ந்தவை என்றும் முதலாளித்துவத்தின் வீழ்ச்சி தர்க்கரீதியானது என்றும் பகிரங்கமாக அறிவித்தது.

எனவே சென்ற நூற்றாண்டின் எழுத்துக்களில் புதிய பொருளாதாரக் கருதுகோள்கள் தோன்றின; அவை ஒரே சமயத்தில் பல நாடுகளில் வேரூன்றின. இவை உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை நிராகரிப்பதன் மூலம் அரசியல் பொருளாதாரத்தின் புரட்சிகரமான உள்ளடக்கத்தை நீக்குவதற்கு முயற்சி செய்தன. இந்த விஞ்ஞானம் சமூக, வரலாற்று உள்ளடக்கம் இல்லாத சில பொதுவான கோட்பாடுகளைச் சுற்றிச் சுழலுமாறு செய்யப்பட்டது.

பண்டங்களை மென்மேலும் உபயோகிக்கும் பொழுது அவற்றின் அகவய உபயோகத் தன்மை குறைந்து விடுகிறது என்பதும், பொருளாதார சமநிலை என்பதுமே இந்தப் பொதுவான கோட்பாடுகளாகும். உண்மையில் இந்த அரசியல் பொருளாதாரம் உற்பத்தியோடு சம்பந்தப்பட்ட மக்களின் சமூக உறவுகளைத் தனது ஆராய்ச்சிப் பொருளாகக் கொள்ளாமல், பொருள்களோடு மக்களின் உறவுகளை ஆராய்ந்தது.

பொருளாதார விஞ்ஞானத்தின் முக்கியமான பிரச்சினை சமூக உள்ளடக்கம் இல்லாத “தொழில் நுட்பப்” பிரச்சினையாக, ஒரு குறிப்பிட்ட பண்டத்தை உபயோகிப்பதில் இரண்டு வழிகளில் எதைத் தேர்ந்தெடுப்பதென்ற பிரச்சினையாக மாறியது; அல்லது உழைப்பு, மூலதனம், நிலம் என்ற உற்பத்திக் காரணிகளில் எந்த ஒன்றைத் தேர்ந்தெடுப்பதென்ற பிரச்சினையாக மாறியது. குறைவாக உள்ள செல்வாதாரங்களை மிகவும் உசிதமாகப் பயன்படுத்துவது எப்படி என்ற பிரச்சினை எந்த சமூகத்துக்கும் முக்கியமான ஒன்று என் பதில் சந்தேகமில்லை; அது பொருளாதார விஞ்ஞானங்களின் துறையினுள் வருவதே. ஆனால் அரசியல் பொருளாதாரத்தின் ஒரே நோக்கம் அது மட்டுமே என்று கருத முடியாது.

அரசியல் பொருளாதாரத்தின் “சமூக நடுநிலைமை” அறிவிக்கப்பட்டது. விஞ்ஞானம் எதற்காக வர்க்கங்கள், சுரண்டல், வர்க்கப் போராட்டம் ஆகியவற்றைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்? ஆனால் இது முதலாளித்துவத்தைச் சித்தாந்த ரீதியாக ஆதரிப்பதில் ஒரு புதிய வடிவத்தை மறைத்திருந்தது.

இங்கிலாந்தில் ஜெவோன்ஸ், ஆஸ்திரியாவில் மேங்கர் மற்றும் வெய்ஸெர், ஸ்விட்சர்லாந்தில் வால்ராஸ், அமெரிக்காவில் ஜான் கிளார்க் ஆகிய பொருளாதார நிபுணர்களின் கைகளில் “பழைய” அரசியல் பொருளாதாரம் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாற்றமடைந்தது. இப்பொழுது அது பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிய அகவய உளவியல் அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட சூக்குமமான தர்க்கவியல், கணிதவியல் பாடங்களாக மாற்றமடைந்தது. சீக்கிரத்தில் இந்த விஞ்ஞானத்துக்கு ஒரு புதுப் பெயர் தேவைப்பட்டது இயற்கையே. “அரசியல் பொருளாதாரம்” என்ற சொற்றொடர் அதன் நேர்ப் பொருளிலும் மரபுவழியாகவும் ஒரு சமூக உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. அது இப்பொழுது ஒரு தொல்லையாக, குழப்பமாக மாறியது.

பி.செலிக்மான் (இடது)

பொருளாதாரச் சிந்தனை வரலாற்றை எழுதியிருக்கும் அமெரிக்கர் பி.செலிக்மான் பின்வருமாறு எழுதுகிறார்: ஜெவோன்ஸ் “அரசியல் பொருளாதாரத்திலிருந்து அரசியல் என்ற வார்த்தையை வெற்றிகரமாக நீக்கினார்; பொருளாதாரம் பரந்து கிடக்கும் சமூகம் இயங்குகின்ற முறைகளை ஆராய்வதற்குப் பதிலாக தனித்தனியாகப் பிரிந்து போயிருக்கின்ற நபர்கள் இயங்கும் முறைகளை ஆராய்கின்ற துறையாக மாற்றினார்.”(1)

எமீல் ஜாம்ஸ் என்ற பிரெஞ்சுப் பொருளாதார நிபுணர் ஒரு பிரபலமான முதலாளித்துவ அறிஞர். பொருளாதார விஞ்ஞானத்தில் ஏற்பட்ட “புரட்சியின்” தன்மையை அவர் இன்னும் தெளிவாக எடுத்துக் காட்டுகிறார். “எவ்விதமான பொருளாதார அமைப்புகளிலும் இயங்கக் கூடிய முறைகளை எடுத்துக் காட்டுவதுதான் எல்லாவற்றுக்கும் மேலாக பொருளாதார விஞ்ஞானத்தின் நோக்கம் என்று இந்த மாபெரும் தத்துவ போதகர்கள் கருதினார்கள்; அதனால் அவைகளைப் பற்றி எத்தகைய தீர்ப்பும் கூறாதிருக்க முயற்சித்தார்கள். சமூகப் பிரச்சினைகளைப் பொறுத்தவரை, அவர்களுடைய அடிப்படையான தத்துவங்கள் நடுநிலைமை வகித்தன; அதாவது அப்போதிருக்கின்ற ஆட்சி முறைகளை அவர்கள் பாராட்டுகிறார்களா அல்லது குறை சொல்லுகிறார்களா என்பதை அவர்களுடைய எழுத்துக்களிலிருந்து நாம் முடிவு செய்ய முடியாது. ”(2)

ஆஸ்திரியாவின் புதிய பொருளாதார நிபுணர்கள் “மதிப்புக்கு இறுதி நிலைப் பயன்பாட்டின் மூலம் விளக்கம் கூறிய பொழுது எல்லாவற்றுக்கும் மேலாக மார்க்சியக் கொள்கையான உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தாக்குவதே அவர்களுடைய நோக்கம்.”(3)

அடுத்த நூற்றாண்டில் முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் இந்தக் கோட்பாடுகளை ஆதாரமாகக் கொண்டு பொருளாதார ஆராய்ச்சி முறைகளை வளர்த்துக் கொண்டார்கள். ”புதிய” முறைகளின் உதவியோடு பொருளாதார விஞ்ஞானத்தின் சமூகக் கூர்முனையைத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ மழுங்கடிக்கக் கூடிய ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டன. பொருளாதார விஞ்ஞானம் பல சுவாரசியமான பிரச்சினைகளைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வந்த போதிலும் அது தொடக்கத்தில் தனக்கு விதித்துக் கொண்ட கடமையையும் உள்ளடக்கத்தையும் மறக்க ஆரம்பித்தது.

எனவே அரசியல் பொருளாதாரமா அல்லது பொருளாதாரமா என்ற கேள்வி வெறும் வார்த்தைகளைப் பற்றிய விவாதமல்ல; அது அடிப்படையான கோட்பாடுகளைப் பற்றிய கருத்துப் போராட்டமே.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:
(1) B. Seligman, Main Currents in Modern Economics, N.-Y., 1963, p. 499.
(2) E. James, Histoire de la pensée économique an XXe siècle, Paris, 1955, pp. 10-11.
(3) Ibid.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

ஆளுமை என்ற தமிழ்ச் சொல்லை உருவாக்கியது யார் !

Personality என்ற சொல்லுக்கு இணையாக தமிழில் ‘ஆளுமை’ என்ற சொல்லை தற்போது சர்வசாதாரணமாக பயன்படுத்துகிறோம். ஆனால், இந்த சொல் அவ்வளவு எளிதில் உருவாகிடவில்லை. இந்தச் சொல் உருவானதன் பின்னால், பெரும் உழைப்பு இருக்கிறது, ஒரு வரலாறு இருக்கிறது.

***

1940-களின் பிற்பகுதியில் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவுக்கு இணையாக தமிழில் ஒரு கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் முயற்சிகள் துவங்கின. இந்தியா அப்போதுதான் சுதந்திரமடைந்திருந்த நிலையில், அது ஒரு இமாலய முயற்சியாக அமைந்தது.

இதன் முதுகெலும்பாக தி.சு. அவினாசிலிங்கமும் பெ. தூரனும் இருந்தனர். இந்தக் கலைக்களஞ்சியத்தின் அனைத்துத் தொகுதிகளும் வெளியாகி முடிக்க, 20 ஆண்டுகள் ஆயின.

1200 -க்கும் மேற்பட்டவர்கள் இதற்காகப் பங்களிப்புச் செய்தனர். முடிவில் 10 தொகுதிகளாக 7,500 பக்கங்களுடன் இந்த கலைக்களஞ்சியம் வெளியானது.

இந்தக் கலைக்களஞ்சியம் எப்படி உருவானது என்பது ஒரு மிகவும் சுவாரஸ்யமான வரலாறு. இந்தியாவின் பதிப்பு வரலாற்றாசிரியர்களில் முக்கியமானவர்களில் ஒருவரான பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி இதனை மிகச் சுருக்கமாக, விறுவிறுப்பான நடையில் ஒரு சிறு நூலாக உருவாக்கியிருக்கிறார். இந்தப் புத்தகம் கிரவுன் சைஸில் வெறும் 86 பக்கங்கள்தான். ஆனால், இதற்கே 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறார் சலபதி.

பதிப்பு வரலாற்றில் மட்டுமல்ல, தமிழ் மொழி வளர்ச்சியின் மீது ஆர்வமுடையவர்களும் அறிந்துகொள்ள வேண்டிய செய்திகளும் இதில் நிறைய உள்ளன. கண்டிப்பாக படியுங்கள்.

இந்நூல் இணையத்தில் கிடைக்குமிடங்கள் :

காமன் ஃபோக்ஸ் (Common Folks)
பனுவல் வெளியீட்டகம்
நூல் உலகம்

விலை : ரூ. 75/- காலச்சுவடு வெளியீடு.

மீண்டும் முதல் பத்திக்கு வருவோம். தமிழ் கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் குழுவினர், Personality-ஐ விளக்க முற்பட்டபோது அவர்களுக்கு தகுந்த சொல் உடனடியாக கிடைக்கவில்லை. புதிய சொற்களை உருவாக்குவதற்கான அறிஞர் குழு, ஒரு நாள் முழுவதும் விவாதித்து, எதுவும் தோன்றாமல் கலைந்து சென்றிருக்கிறார்கள். அதற்கு அடுத்த கூட்டத்தில், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், Personality-க்கு இணையாக, ஆளுமை என்ற சொல்லை முன்வைத்திருக்கிறார். என்சைக்கிளோபீடியா என்ற சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லான கலைக்களஞ்சியம் என்ற சொல்லும் இந்தக் குழுவினர் உருவாக்கியதே!!

இந்தக் கலைக்களஞ்சியத்தைப் பார்க்க விரும்புபவர்களுக்காக தமிழ் இணைய கல்விக் கழகத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நன்றி :முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

வாசகர் புகைப்படம் இரு வாரத் தலைப்புகள் : அரசு பள்ளிகள் | விளையாடும் குழந்தைகள்

0

ன்பார்ந்த வாசகர்களே,

இந்த முறை வாசகர் புகைப்படங்கள் பகுதியில் இரண்டு வாரங்களுக்கான தலைப்புகள் சேர்த்துத் தருகிறோம்.

முதல் வாரத்திற்கான தலைப்பு : அரசு பள்ளிகள்

ஜாக்டோ ஜியோ போராட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கியமாக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று போராடி வருகின்றனர். அரசுப் பள்ளிகளை ஒழித்துவிட்டு தனியார் கல்வியை முழுமையடையச் செய்யும் சதி நீண்ட காலமாக நடைபெறுகிறது. கல்வி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்பதை மாற்றி அதை காசுக்கேற்ற சரக்காக மாற்றுவதே உலகமயத்தின் நோக்கம்.

இந்தப் பின்னணியின் அரசுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தை நம் மக்களுக்கு திரும்பத் திரும்ப எடுத்துரைக்க வேண்டியிருக்கிறது. அரசுப் பள்ளிகள் தொடர்பான காட்சிகள், பள்ளிக் கட்டிடங்கள், மைதானங்கள், பெயர்ப்பலகைகள், சீருடையுடன் செல்லும் மாணவர்கள், அறிவிப்பு பலகைகள், காலை நேர அணிவகுப்புகள், பாடம் நடத்தும் ஆசிரியர்கள், போராட்டம் செய்யும் ஆசிரியர்கள் என எது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒருவரே பல படங்களையும் அனுப்பலாம். படங்களை தெளிவாகவும், விவரங்களோடும் அனுப்புங்கள். ஏனோ தானோவென்று அனுப்ப வேண்டாம். சில நண்பர்கள் சிரத்தை எடுத்து அழகுற அனுப்புகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 06.02.2019

இதற்கு அடுத்த வாரத்திற்கான தலைப்பு: விளையாடும் குழந்தைகள்

பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் விளையாடும் காட்சிகளை மையப்படுத்தி படங்கள் எடுத்து அனுப்பலாம். நவீன வாழ்க்கையில் விளையாட்டு அருகி வருகிறது. வீட்டிற்குள்ளேயே முடங்கும் அடைபட்ட நகர வாழ்க்கை நிலைபெற்று வருகிறது. குழந்தைகள் வயதில் விளையாட்டு மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் இந்தக் கருவில் நீங்கள் படம் எடுத்து அனுப்பலாம். ஒருவரே பல படங்களையும் அனுப்பலாம். படங்களை தெளிவாகவும், விவரங்களோடும் அனுப்புங்கள். ஏனோ தானோவென்று அனுப்ப வேண்டாம். சில நண்பர்கள் சிரத்தை எடுத்து அழகுற அனுப்புகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

படங்கள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி: 13.02.2019
மின்னஞ்சல் முகவரி: vinavu@gmail.com
வாட்ஸ்அப் எண்:
(91) 97100 82506

புகைப்படம் எடுக்கப்பட்ட இடம், நாள், அது குறித்த விவரங்கள் கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்! தெரிவு செய்யப்படும் படங்கள் அனைத்தும் வெளியிடப்படும். காத்திருக்கிறோம். நன்றி!

நட்புடன்
வினவு


புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:

♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.

♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.

♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.

♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.

♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.

♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.

♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.

♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.

♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.

♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.

♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.

♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.

♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.

♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).


புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கும்பமேளாவில் கொலு பொம்மைகளோடு மோடியின் மேக் இன் இந்தியா கண்காட்சி ! படங்கள் !

த்திரபிரதேச மாநிலம் அலகாபாத்தில்  பல ஆயிரம் கோடிகளை கொட்டி கும்பமேளா விழாவை நடத்தி வருகிறது உ.பி. அரசு. பாஜக-வின் இந்துத்துவ பிரச்சாரத்திற்காக முன்னெடுக்கப்படும் இந்த விழாவின் பிரம்மாண்டத்தில் ஒரு அம்சம் மோடி அரசின் மேக் இன் இந்தியா திட்டக் கண்காட்சி. உள்நாட்டில் இருக்கும் தொழிலையும், சிறு முதலீட்டாளரையும் அழித்து வரும் மத்திய அரசு மறுபுறம் மேக் இன் இந்தியா என்று ஒரு முழுப் புரட்டை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இதற்காக அமைக்கப்பட்ட செட் சினிமா செட்டையே மிஞ்சி விடும் அளவிற்கு பல இலட்சங்கள் செலவு செய்து போடப்பட்டுள்ளது. கண்காட்சிக்கு வருபவர்களை கவர அரங்கத்திற்கு வெளியே திறந்தவெளி மேடை இசைக்கச்சேரியும் நடத்தப்பட்டு வருகிறது. யாரும் கேட்கவில்லையென்றாலும் பாடல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இடையிடையே இந்துத்துவத்தின் பிரசங்கமும் காதை குடைகிறது.

திறந்தவெளி மேடை இசைக்கச்சேரி.

காண்காட்சியின் உள்ளே சென்றால் உ.பி.யில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்தின் தொழிலையும் காட்சிக்கு வைத்திருந்தார்கள். அமேதி மற்றும் அலகாபாத்தின் மூஞ்ச் தயாரிப்பு, அயோத்தியின் ஜெக்கரி, ஜான்சி பகுதியின் பொம்மைகள், பெதாபுரி பெட்சீட்கள், சம்பாலின் கார்பெட் மற்றும் கைவினைப் பொருட்களின் தயாரிப்பு என்று ஏராளமாக இருந்தன. கடைசியில் மோடியின் மேக் இன் இந்தியாவிற்கான பிரச்சாரத்தில் வெறும் கொலு பொம்மைகளே வீற்றிருந்தன.

சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு என்று சொல்லி உள்ளூர் தொழில் முதலாளிகளை வைத்து கண்காட்சி நடத்தியது போல அலகாபாத்திலும் நடத்துகிறார்கள். குளுகுளு ஏசி.. சிகப்புக் கம்பள விரிப்புகள், வண்ணமயமான டிசைன்கள் என்று பார்க்கவே பளபளப்பாக இருந்தன.

அந்த கண்காட்சியில் அலகாபாத் மாவட்டத்தின் தயாரிப்பான மூஞ்ச்-அழகு கூடை பின்னும் ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்டபோது, “மகளிர் சுய உதவிக்குழு மூலமாக பத்து வருடம் இந்த தொழிலை செஞ்சிகிட்டு இருக்கோம். இதனை வித்துதான் வேலை செய்யும் பெண்களுக்கு 200 ரூபாய் கூலி தரணும்.. அதையே தர முடியுமா.. இல்லையான்னு தெரியல. வருடா வருடம் இந்தமாதிரி கண்காட்சி நடக்கக்கூடியவைதான். ஆனால், இந்த வருடம் கண்காட்சியும், கும்பவிழாவும் ஆடம்பரமா செய்திருக்காங்க. ஆனா பெரிய அளவுல கூட்டம்தான் வர்ல” என்றார்.

உங்களுக்கு தொழில் செய்ய அரசு லோன் எதாவது தருகிறதா எனக்கேட்டால், “எதுவும் இல்லை” என்று சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினார். மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே வந்து தொழில் முதலீடு செய்வதாக கதையளந்தவர்களுக்கு இது ஒரு நல்ல கவிதை நீதி! மகளீர் சுய உதவிக் குழுக்கள்தான் பாஜக அரசின் உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்பு செய்கிறார்கள்.

வழக்கமாக இந்தக் கண்காட்சி “ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு” என்ற பெயரில் இருக்குமாம். ஆனால், இந்த முறை அந்தக் கண்காட்சிக்கு “மேக் இன் இந்தியா” எனப் பெயர் வைத்து தனது விளம்பரத்தை தேடிக்கொண்டது காவி கும்பல். மக்களை எப்படி மலிவாக நினைக்கிறார்கள் பாருங்கள்!

சரி இத்தகைய கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலுக்காக மோடி அரசு ஏதும் செய்ததா என்றால் எதுவும் இல்லை. மேற்கண்ட தொழில்கள் பெரும்பாலும் நலிவடைந்து வருகின்றன. இதை அந்த அரங்குகளில் இருக்கும் பணியாளர்களிடம் பேசினால் நிறைய செய்திகளை அளித்து ஒத்துக் கொள்கிறார்கள். அவர்களை ஊக்குவிக்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் பலவற்றை நம்மூரில் சாலைகளில் கடை விரித்து விற்றுக் கொண்டிருப்பதை பார்க்க முடியும்.

படிக்க:
இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்
நேரலையில் வந்த மோடியை திருப்பி அனுப்பிய திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு லோன் தருவதாக வங்கிகள் ஸ்டாலும் வைத்திருந்தனர். அது எல்லா கண்காட்சியிலும் இருக்கும் ஒரு வழக்கமான டெம்ப்ளேட்தான் என்பதால் இந்த கைதொழில் நிறுவனங்களுக்கு அவற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது நாமறிந்ததே.

அந்த காட்சியரங்கத்திற்குள் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் திரையில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் போடப்பட்ட புரிந்துணர்வு  ஒப்பந்தங்கள் குறித்த வீடியோவை ஒளிபரப்பிக் கொண்டிருந்தனர். ’மேக் இன் இந்தியா’ என்ற பெயரில் ஒப்புக்கு எதையாவது ஒளிபரப்பிக் கொண்டு தமது தோல்வியை மறைத்து வருகிறது காவி கும்பல். பெயர் மட்டும் பளபளப்பாக ‘மேக் இன் இந்தியா’வாம் !

(தொடரும்)

வினவு செய்தியாளர்கள் , அலகாபாத்திலிருந்து…


முந்தைய பாகம்:
பாகம் – 1: அலகாபாத் : கார்ப்பரேட் + காவி கூட்டணியின் கும்பமேளா ! நேரடி ரிப்போர்ட்

இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல் | பேராசிரியர் முருகன்

”புராணக் குப்பைகள் அறிவியலாகுமா ? உயர்சாதி இடஒதுக்கீடு சமூக நீதியா ?” என்ற தலைப்பில் கடந்த ஜன-25 அன்று சென்னை பெரியார் திடல் – அன்னை மணியம்மையார் அரங்கத்தில் பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு (CCCE) – வின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கருத்தரங்கத்தில் பங்கேற்று, ”இந்திய அறிவியல் மாநாட்டில் போலி அறிவியல்” என்ற தலைப்பில் உரையாற்றிய தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்தவரும் சென்னை விவேகானந்தா கல்லூரியின் மேனாள் இயற்பியல் துறைத்தலைவருமான பேராசிரியர் முருகன் ஆற்றிய உரையின் காணொளி …

உரையிலிருந்து சில துணுக்குகள்…

♦ நேஷனல் சயின்ஸ் காங்கிரசு ஏறத்தாழ நூறு வருடங்களுக்கு முன்பிலிருந்து நடைபெற்று வருகிறது. இது 106-வது காங்கிரசு. இந்திய விஞ்ஞானிகளுக்கு நல்ல தளமாக இருந்தது. சிறுவர்களுக்கு அறிவியல் மனப்பான்மையை உருவாக்கும் பொருட்டு, சிறுவர்களுக்கான சயின்ஸ் காங்கிரசு 25 வருசமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

♦ சிறுவர்களையும் பள்ளி ஆசிரியர்களையும் இலக்கு வைத்து இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். விஞ்ஞானிகளுடன் சந்திப்பு என்ற உரையாடல் நிகழ்வில் பெரும்பாலும் மாணவர்கள் கேள்வி கேட்பார்கள், விஞ்ஞானிகள் அதற்கு பதிலுரைப்பார்கள். ஜெகதள கிருஷ்ணனும், நாகேஸ்வர ராவும் ஆளுக்கு ஒரு மணிநேரம் பேசியிருக்கிறார்கள். இது ‘மீட் த சயின்டிஸ்ட்’ நிகழ்ச்சியே அல்ல. அவர்கள் அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ். சிந்தாந்தத்தைப் பரப்புவதற்கான தளமாக பயன்படுத்தியிருக்கிறார்கள்.

♦ இன்றைய நிலையில் அறிவியல் நம்மை அதிகமாக பாதிக்கிறது. இதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது? உண்மை இல்லை. எந்தளவுக்கு நம்பகத்தன்மை உள்ளது. நம்பகத்தன்மை இல்லை. அறிவியல் என்றால் என்ன? அறிவியலில் நிரூபணம் என்றால் என்ன? எவிடன்ஸ் என்றால் என்ன?

அவரது பேச்சின் முழுமையான காணொளியைக் காண…

பாருங்கள்! பகிருங்கள்!!

தொகுப்பு:

10 ஆண்டுகளுக்கு மட்டும் இட ஒதுக்கீடு போதும் என்றாரா அம்பேத்கர் ? தினமணியின் பார்ப்பனப் புரட்டு !

தினமணியின் பார்ப்பனிய விஷமத்தனம் !

தினமணி தமிழ் நாளேட்டில், நடுப்பக்கத்தில் “இட ஒதுக்கீடு சலுகை : விட்டுக் கொடுக்க தயாரா? ” என்ற தலைப்பில் பூ.சேஷாத்ரி என்ற தினமணியில் பணியாற்றும் பார்ப்பனர் கட்டுரை எழுதியுள்ளார்.

எந்தவொரு சமூக பொருளாதார ஆய்வும் இல்லாமல், வரலாற்று அறிவும் இல்லாமல் … அம்பேத்கர் கருத்துக்களையும் தப்பும், தவறுமாக திரித்து தனது 2000 ஆண்டு கால சாதீய வன்மத்தை தலித்துகள் & பழங்குடிகள் மீது காட்டியுள்ளார்.

1) “பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு பலத்த விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறது ” எனத் துவங்கி, “பொருளாதாரத்தில் மேம்பட்ட SC &ST பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர் தாமாகவே முன்வந்து இட ஒதுக்கீடு எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் என அறிவிக்க வேண்டும் ” என முடிக்கிறார்.

பொருளாதாரத்தில் மேம்பட்ட என்பதற்கு “ரூ.8 இலட்சம் ஆண்டு வருமானம் – 5 ஏக்கர் நிலமா ” என அவர் எந்த அளவுகோலும் சொல்லவில்லை ; எவ்வளவு பேர் வருவார்கள் என்றும் சொல்லவில்லை. பார்ப்பன குசும்பும், காழ்ப்புணர்ச்சியும் இத்துடன் நிற்கவில்லை.

2) “10 ஆண்டுகளுக்கு மட்டுமே இட ஒதுக்கீடு தேவை என அம்பேத்கர் கூறியிருந்தார்” என மொட்டையாக ஒரு கருத்து சொல்லுகிறார். எப்போது தெரிவித்தார்? கல்வி, வேலைவாய்ப்பு விசயத்தில் சொன்னாரா? என்பது பற்றி எல்லாம் விளக்கவில்லை. பலரும் இவ் விசயத்தில் குழம்புகிறார்கள்.

இரட்டை வாக்குரிமை பற்றிய விவாதத்தில் தான் அம்பேத்கர் , மக்கள் மன்றங்களில் 10 ஆண்டு கால அரசியல் இட ஒதுக்கீடு பற்றி முன்மொழிகிறார். காந்தி தலையீட்டால் இரட்டை வாக்குரிமை முடிவுக்கு வந்துவிட்ட வரலாறு அனைவரும் அறிந்ததே! சாதிய அமைப்பு இருக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என அம்பேத்கர் பல இடங்களில் தெரிவித்து உள்ளார்.

3) அம்பேத்கர் இயக்க ஆய்வாளர் சுஹாஸ் சோனாவணே என்பவர் ‘தலித் அமைப்புகளோ, அம்பேத்கரியவாதிகளோ அரசியல் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் எனக் கோரவில்லை; இதனால் சமூகத்திற்கு எந்தப் பயனும் இல்லை ; இது தேவையில்லாதது” எனக் கூறிவிட்டாராம். !

எனவே பூ.சேஷாத்ரி அய்யர் தாங்களாகவே பலரும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுத்ததுபோல … பொருளாதாரத்தில் மேம்பட்ட SC & ST யினர் தங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என விட்டு தரவேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

பொருளாதாரத்தில் ஏழைகளாக உள்ள முன்னேறிய சாதிகளுக்கு, வசதி படைத்த பார்ப்பனர்கள் விட்டு கொடுக்கலாமே! பின்வரும் RTI தகவல் ஒன்றை பாருங்கள்!

Kind Attention : பூ.சேஷாத்ரி & வைத்யநாதன்!

1. ஜனாதிபதி செயலகத்தின் மொத்த பதவிகள் – 49.
இவர்களில் 39 பிராமணர்கள்; எஸ்.சி – எஸ்.டி – 4; ஓ.பி.சி – 06.

2.  துணை ஜனாதிபதி செயலகத்தின் பதவிகள் – 7.
7 பதவியிலும் பிராமணர்கள் இருக்கிறார்கள்.
எஸ்.சி – எஸ்.டி – 00. ஓ.பி.சி – 00

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20.
பிராமணர்கள் – 17; எஸ்.சி – எஸ்.டி – 01 . ஓ.பி.சி. – 02.

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் .
பிராமணர்கள் – 31; எஸ்.சி – எஸ்.டி – 02; ஓ.பி.சி.  – 02.

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த பதவிகள் – 274.
பிராமணர்கள் – 259; எஸ்.சி – எஸ்.டி – 05; ஓ.பி.சி. –10

6. மொத்த அமைச்சகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் 1379.
பிராமணர்கள் – 1300; எஸ்.சி – எஸ்.டி – 48; ஓ.பி.சி. – 31.

7. சமூக நல & சுகாதார அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 209.
பிராமணர்கள் – 132; எஸ்.சி – எஸ்.டி – 17; ஓ.பி.சி. – 60

8. நிதி அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 1008.
பிராமணர்கள் – 942; எஸ்.சி – எஸ்.டி –20; ஓ.பி.சி. – 46.

9. பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 409 பதவிகள்.
பிராமணர்கள் – 327; எஸ்.சி – எஸ்.டி –19; ஓ.பி.சி. – 63.

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 74.
பிராமணர்கள் – 59; எஸ்.சி – எஸ்.டி – 4; ஓ.பி.சி. – 9.

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலிய அமைச்சகத்தின் மொத்த பதவிகள் 121.
பிராமணர்கள் – 99; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 22.

12. கவர்னர் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் ஒட்டுமொத்தம் – 27.
பிராமணர்கள் – 25; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 2.

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140.
பிராமணர்கள் – 140; எஸ்.சி – எஸ்.டி – 00; ஓ.பி.சி. – 00.

14. மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் – 108.
பிராமணர்கள் – 100; எஸ்.சி – எஸ்.டி – 03; ஓ.பி.சி. – 05.

15. மத்திய பொதுச் செயலாளர் பதவிகள் –26.
பிராமணர்கள்–18; எஸ்.சி – எஸ்.டி – 01; ஓ.பி.சி.-7.

16. உயர் நீதிமன்ற நீதிபதி – 330.
பிராமணர்கள் – 306; எஸ்.சி – எஸ்.டி – 04; ஓ.பி.சி. – 20.

17. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் – 26.
பிராமணர்கள் – 23; எஸ்.சி – எஸ்.டி – 01; ஓ.பி.சி. – 02.

18. மொத்த ஐஏஎஸ் அதிகாரி–3600.
பிராமணர்கள்– 2750; எஸ்.சி – எஸ்.டி – 300; ஓ.பி.சி. – 350.

கோயில்கள், வழிபாட்டு தலங்கள், திருமணங்கள் & கருமாதிகளில் பிராமணர்கள் வாய்ப்பு 99% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில்
3% க்கும் குறைவான பிராமணர்கள் 90% பதவிகளைப் பெற்றனர்.

(டெல்லியினை அடிப்படையாகக் கொண்ட ‘யங் இந்தியா’ எனப்படும் நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் பெற்றது.)

பூ.சேஷாத்ரி அய்யர் அவர்களே!

இது எல்லாம் ஆயிரத்தில் ஒன்று என்ற வகையான தகவல் ஆகும். மத்திய, மாநில அரசுகளின், பொதுத்துறையின் கணிசமான உயர் பதவிகளை, இடைநிலை பதவிகளை பார்ப்பனர்கள் ஆக்கிரமித்து உள்ளார்கள் என்பது தாங்கள் அறியாத செய்தியல்ல! (தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள், IT துறைகளை ஆக்கிரமித்துள்ள பார்ப்பனர்கள் பற்றி இங்கு விவாதிக்க விரும்பவில்லை. )

பொருளாதாரத்தில் முன்னேறியுள்ள பார்ப்பனர்கள் தாமாகவே முன்வந்து “இத்தகைய அரசுப் பணிகள் எல்லாம் எங்கள் குடும்பத்துக்கு வேண்டாம் – ஏழை பார்ப்பனர்கள் மற்றும் உயர்சாதி ஏழைகளுக்கு வழங்கிவிடுங்கள் ” என்று சொன்னால், உயர்சாதி ஏழைகள் பயனடைய வாய்ப்பாகவும் முன்னுதாரணமாகவும் அமையும்.

தாங்கள் இதைப் பற்றியும் கட்டுரை ஒன்றை தினமணியில் எழுத வேண்டும்.

பின்குறிப்பு :
அய்யா,
தாங்கள் தினமணியில் வகிக்கும் பதவியை ஒரு உயர்சாதி ஏழைக்கு விட்டுக் கொடுத்து சென்று முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் இருகரம் கூப்பி வேண்டிக் கொள்கிறேன்.

சந்திரமோகன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி: டைம்ஸ் தமிழ்