Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 333

கேள்வி பதில் : பாகிஸ்தான் – சீமான் – அரசு – அரசாங்கம்

கேள்வி : //காஷ்மீர் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஏன் ரெளத்திரமாகிறது? எதனடிப்படையில் அது இந்தியாவை கண்டிக்கிறது?//

– சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை போராட்டத்திற்கு எதிராக இந்தியா மட்டுமல்ல, பாகிஸ்தானும் நடந்து கொள்கிறது. தனது ஆதரவு மதவாதக் குழுக்களை ஏவி விட்டு காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்புகிறது. மேலும் பாகிஸ்தான் அரசியலில் மக்கள் நலப் பிரச்சினைகள் பின்னுக்கு தள்ளுவதற்கு காஷ்மீரும் ஒரு கேடயமாக பயன்படுகிறது. அதற்காகவும் இந்தியாவின் நடவடிக்கைகளை அவ்வப்போது பாகிஸ்தான் கண்டிக்கிறது.

காஷ்மீர் மக்களின் போராட்டம்: "இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,"
காஷ்மீர் மக்களின் போராட்டம்: “இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம்,”

அதே போன்று இந்தியாவும் அதாவது பாஜக அரசாங்கமும் இதர மாநிலங்களில் காஷ்மீரைக் காட்டி சாதனையாக கூறிக் கொள்கிறது. உண்மையில் காஷ்மீர் மக்களோ இந்திய அரசை எதிர்த்து அடக்குமுறைகளை மீறி போராடிக் கொண்டிருக்கிறார்கள். காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் மதச்சார்பற்ற முறையில் இருந்ததை மதரீதியாக மாற்றியதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு நாடுகளுக்கும் பங்குண்டு.

அதற்காகவே ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி போன்ற மதச்சார்பற்ற அமைப்புகளின் செயல்பாடுகளை முடக்கி தீவிரவாதக் குழுக்களை களத்தில் இறக்கினார்கள். காஷ்மீர் மக்களோ இரண்டு நாடுகளிலிருந்து வரும் ஒடுக்குமுறைகளை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

♦ ♦ ♦

கேள்வி : //திராவிட ஆட்சியின் 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் பாலாற்றில், காவிரியில் 1 தடுப்பணை கூட கட்டாதது ஏன்?//

– பழனிச்சாமி

ன்புள்ள பழனிச்சாமி,

இன்றிருப்பது போல தமிழகத்தின் நீர் வறட்சியும், காவேரிப் பிரச்சினையும் 1960-களில் இல்லை. இடைப்பட்ட காலத்தில் கர்நாடகா, தமிழ்நாடு இரண்டு மாநிலங்களிலும் விவசாய சாகுபடி நிலங்கள் அதிகரித்து, நீரின் தேவையும் அதிகரித்திருக்கிறது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு வந்த பிறகும் அதை இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அமல்படுத்தாமல் தமிழகத்திற்கு துரோகம் செய்து வருகிறது.

தற்போது பருவ மழையின் தயவால் மேட்டூர் அணை நிரம்புகிறதே அன்றி வேறல்ல! இதற்கு தடுப்பணை கட்டாமல் போனது பிரச்சினை அல்ல. மாறாக தமிழகத்தின் உரிமையை நிலை நாட்ட உச்சநீதிமன்றமும், மத்திய பாஜக அரசும் செயல்படவில்லை என்பதே முதன்மையான பிரச்சினை. இதற்கு மேல் இருக்கும் அணைகளையும், நீர்ப்பாசன திட்டங்களையும் தி.மு.க., அ.தி.மு.க., இரண்டு கட்சிகளும் முறையாக பரமாரிக்கவில்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். கூடவே அரசாங்கங்கள் அமல்படுத்தி வரும் உலகமயக் கொள்கையால் விவசாயம் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகிறது.

படிக்க :
♦ பீமா கொரேகான் : டெல்லி பல்கலை பேராசிரியர் வீட்டில் போலீசு அடாவடி சோதனை !
♦ கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

♦ ♦ ♦

கேள்வி : //பிள்ளையாரின் பிறப்பு பற்றி அவ்வப்பொழுது சில திராவிட இயக்கங்கள் துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு உண்மை நிலையை உரைக்கின்றன. அது பற்றி வினவின் கருத்து என்ன ?//

– சீனி. மோகன்

ன்புள்ள சீனி.மோகன்,

பிள்ளையாரின் பிறப்பு குறித்து தந்தை பெரியார் சிவபுராணம், கந்தபுராணத்தை ஆதாரமாக்கி எழுதிய கட்டுரையை இணைப்பில் படிக்கலாம்.

பிள்ளையார் வரலாறு – தந்தை பெரியார்

இந்துக் கடவுள்களில் பாப்புலராக இருக்கும் பிள்ளையாரின் பக்தர்கள் இந்த பிறப்பு கதைகள் தெரிந்துதான் பக்தர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அதே போன்று இந்தக் கதைகளை படித்தாலும் அவர்கள் பிள்ளையார் வழிபாட்டை நிறுத்திவிடப் போவதில்லை என்பதும் உண்மைதான்.

ஆய்வாளர் தொ.பரமசிவனது கருத்துப்படி கி.பி ஆறாம் நூற்றாண்டிலேயே வணிகரகள் மூலம் பிள்ளையார் தமிழகத்திற்கு அறிமுகமாகிவிட்டார். அப்போது அவர் பூணூல், வாகனம், ஆயுதம் இன்றி சாதாப் பிள்ளையாராக இருந்தார். பிறகு அவர் பார்ப்பனிய பிள்ளையாராகி இன்று இந்துமுன்னணி பங்கில் 1980-களுக்குப் பிறகு கலவரம் ஏற்படுத்தும் பிள்ளையாராக மாறி விட்டார்.

நூல் அறிமுகம் : பிள்ளையார் அரசியல்

கடவுள் வழிபாடு, நம்பிக்கைகளை அம்லப்படுத்துவதன் மூலம் பக்தர்கள் மனம் புண்படுத்தப்படும். இதன் மூலம் இந்துமதவெறியர்கள் இந்துக்களை திரட்டுவார்கள் என்றொரு கருத்து இருக்கிறது.

ganesh-chaturthi

அப்படியானால் தமிழகத்தில் தந்தை பெரியாருக்கு மரியாதையே இருந்திருக்க கூடாது. மாறாக அவர் இன்றளவும் மதிக்கப்படுகிறார். அதே நேரம் இன்று பிள்ளையார் குறித்த பிறப்பு கதைகளை விட இந்து முன்னணி நடத்தும் பிள்ளையார் ஊர்வலங்கள் ஏற்படும் வன்முறை குறித்து மக்களிடையே அம்பலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

இந்த வருடம் (2019) திரூப்பூரில் ஒரு பனியன் கம்பெனி ஒரு இந்து முன்னணிக் குழுவிற்கு பணம் கொடுத்துவிட்டு தங்களுக்கு கொடுக்கவில்லை என மற்றொரு இந்து முன்னணிக் குழு அந்தப் பனியன் கம்பெனியை தாக்கியிருக்கிறது. பிள்ளையார் சாதாரண பக்தர்களின் கடவுளாக இருந்து விட்டு போகட்டும். ஆனால் இந்துமதவெறியர்களின் கையில் அவர் கலவரத்திற்கான கடவுளாக இருப்பதுதான் பிரச்சினை. இதை பிள்ளையார் தீர்க்கமாட்டார். நாம்தான் தீர்க்க வேண்டும்.

♦ ♦ ♦

கேள்வி : //நாம் தமிழர் கட்சி பற்றி எதிர்மறை பதில்கள் அர்த்தமற்றது. எந்த கட்சி நேர்மையா வென்றது? உண்மையா நிர்வாகம் செய்யுது? அடுத்த தலைமுறை நல்லா வாழ ஒழுக்கததை கடத்துர கட்சிதான் எது? பதில் சொல்ல வேண்டும்.//

– மாதவன்

ன்புள்ள மாதவன்,

அரசு, அரசாங்கம் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. அரசு என்பது நாடாளுமன்றம் – சட்டமன்றம், அதிகார வர்க்கம், போலீசு இராணுவம், நீதித்துறை – சிறை போன்ற உறுப்புகளுடன் செயல்படுகிறது. இதில் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்ற மக்களால் ‘தெரிவு’ செய்யப்படும் உறுப்பையே அரசாங்கம் என்று அழைக்கிறோம். இந்த இலக்கணப்படி அரசாங்கம் என்பது அதிகாரம் குறைந்த உறுப்பு ஆகும். கட்சிகள் நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்து அரசாங்கம் அமைக்கின்றனர்.

ஆனால் அரசின் மற்ற உறுப்புகள் அனைத்தும் நிலையாக இருக்கின்றன. இதனால்தான் சட்டமன்றம் கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தும்போது மாநிலங்களில் அரசுகள் வழக்கம் போலவே செயல்படுகின்றன. அப்போது தெரிவு செய்யப்பட்ட அரசாங்கங்கள் இல்லை.

அரசாங்கத்தால் சட்டத்தை இயற்ற மட்டும் முடியும். அரசின் அதிகார வர்க்கம்தான் சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரம் படைத்தது. எனவே நாம் தமிழர் என்று மட்டுமல்ல மற்ற கட்சிகளும் அரசாங்கத்தை கைப்பற்றுவது – வெல்வதை மட்டுமே பேச முடியும். சீமான் முதல்வரானால் ஒரு கலெக்டரையோ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையோ நியமனம் செய்ய முடியாது. அவர்களது தயவு இன்றி ஆட்சியும் செய்ய முடியாது. எனவே நிர்வாகம், ஊழல், அதிகார முறைகேடு அனைத்தும் அரசு எனும் ஒட்டுமொத்த அமைப்பில் இருக்கும் போது நீங்கள் ஒரு கட்சியாக அரசாங்கத்தை மட்டும் மாற்றி என்ன பயன்? ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டால் அதை மாவட்ட கலெக்டர் அமல்படுத்தியே தீரவேண்டும். அப்போது சீமானோ மற்றவர்களோ முதல்வர்களாக இருந்தால் அதை வேடிக்கை மட்டுமே பார்க்க வேண்டும்.

உலகமய காலகட்டத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச அதிகாரமும் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்திற்கு வராமலேயே பல ஒப்பந்தங்கள் அமலுக்கு வருகின்றன. மாநில அரசாங்கங்களோ தமது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து வருகின்றன. அதானிக்கும், அம்பானிக்கும் இந்த அரசு எந்திரம் சுறுசுறுப்பாக வேலை செய்யும் போது நாம் இந்த அரசு அமைப்பை எப்படி மாற்றுவது என்று யோசிப்பதே சரியானது. யோசித்துப் பாருங்கள்! நன்றி

 

♦ ♦ ♦

கேள்வி : //1. பா.ஜ.க தலைமையிலான அரசு தற்போது பாசிசத்தை விரைவாக அமுல்படுத்தி வருவதை அறியமுடிகிறது. இதனை எதிர்கொள்ள நாடு தழுவிய அளவில் அமைப்பு ரீதியாக திரண்ட தொழிலாளர்கள் போராட்டமோ, விவசாயிகள் போராட்டமோ நடைபெறுவதாக தெரியவில்லை. எப்படி பாசிசத்தினை எதிர்கொள்வது? பலமில்லாத இச்சூழ்நிலையின் விளைவாக ஹிட்லரின் வழியில் நாட்டின் போக்கு மாறிவிட்டால் கம்யூனிச இயக்கங்களால் என்ன செய்ய முடியும்?

2. தமிழகத்தில் இருந்து தான் பெரும்பாலும் பாசிசத்திற்கு எதிரான அமைப்பு ரீதியான குரல்கள் எழுகின்றன. இச்சூழ்நிலையில் களத்தில் செயல்படும் மக்கள் அதிகாரம், மே 17 இயக்கம், பூவுலகின் நண்பர்கள், த.பெ.தி.க., கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகள் இணைந்து கூட்டாக செயல்பட்டால் ஒரு வலுவான பாசிச எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமே, அதற்காக இந்த இயக்கங்கள் ஒண்றினைவதில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?//

– சுரேஷ்

ன்புள்ள சுரேஷ்,

பொருளாதார ரீதியான நெருக்கடி நாட்டினை கவ்விக் கொண்டிருக்கும் போது பாஜக அரசாங்கத்தின் பாசிசப் போக்கு ஒவ்வொரு துறையிலும் வந்து கொண்டிருக்கிறது. இதை காஷ்மீர் விவகாரத்திலேயே பார்த்தோம். பாஜக-வை எதிர்ப்போரை எந்த வகையிலாவது முடக்குவதை திட்டமிட்டே மத்திய அரசு செய்கிறது. இதை எதிர்த்து நாடு தழுவிய அளவில் தொழிலாளர் அமைப்புகள், ஜனநாயக சக்திகள், புரட்சிகர அமைப்புகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அப்படி இணையவில்லை என்றால் பாசிசத்தின் பிடியில் இருந்து மக்களைக் காப்பாற்ற இங்கு யாருமே எஞ்சியிருக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் ஒத்த கருத்துள்ள அமைப்புக்களை மக்கள் அதிகாரம் திரட்டி வருவதாகவே நம்புகிறோம். அது அரசியல் ரீதியில் பலமுள்ள குரலாக மாற வேண்டும். மக்கள் அதிகாரம் ஒன்றிணைக்கும் போராட்டங்களில் மாற்று அமைப்புகள், கட்சிகளைச் சார்ந்தோர் அவ்வப்போது பங்கேற்கின்றனர். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த ஒற்றுமை வளரும் போதே அந்தக் குரலுக்கு வலு அதிகரிக்கும். பொறுத்திருந்து பார்ப்போம். நன்றி.

♦ ♦ ♦

கேள்வி : //சீமான் பற்றிய உங்கள் பார்வை சிரிப்பை வரவைக்கிறது. ஆதிக்க சாதிதான் தமிழன் என்று குறிப்பிட்டு இதுவரை பேசியது இல்லை ஆதி தமிழனே பறையன் தான்டா என்று பல முறை பேசியுள்ளார், அப்பறம் சீமான் பதவியில் அமர்ந்தாலும் அவரால் ஒன்றும் செய்ய முடியும் முடியாது சொல்ல முடியாது.

ஏன்னா நம்மளுடைய நாடு ஜனநாயக நாடு அதிகாரத்துடன் சரியான முறையில் காய் நகர்த்தினால் எதுவுமே சாத்தியமே, வேறு எந்த கட்சிக்கு வாக்கு செலுத்துவது அனைத்து கட்சியையும் விமர்சனம் சொல்லுறிங்க அப்ப யாருக்கு வாக்கு செலுத்துவது உங்கள் பார்வையில் ? (குறிப்பு : நான் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவன் அல்ல . I’m Communist (SFI)). பதிலுக்காக காத்திருக்கிறேன்.//

– கணேஷ்குமார்

ன்புள்ள கணேஷ்குமார்,

தமிழகத்தின் மண் வளம், கனிம வளம், நீர் வளம், காட்டு வளம், மலை வளம், கால்நடை வளம், விவசாய வளம் அனைத்தையும் நான் ஆட்சிக்கு வந்தால் காப்பாற்றுவேன் என்று சீமான் கூறுகிறார். அவர் ஆட்சிக்கு வருவதாகவே வைத்துக் கொள்வோம். இவ்வளங்களை அவர் எப்படிக் காப்பாற்றுவார்? அதற்கு அவரிடம் என்ன அதிகாரம் இருக்கிறது? தாதுமணல் கொள்ளையராக வைகுண்டராசனை சிறையில் அடைப்பாரா? உண்மையில் வைகுண்டராசன் காலில் தம்பதி சகிதமாக காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கியவர் அவர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவு போட்டால்

Seeman poster

சீமான் மாநில முதல்வர் என்ற முறையில் அதை அமல்படுத்த வேண்டும். முடியாது என்றால் பதவி விலக வேண்டும். அதானிக்கு கொடுக்கப்பட்ட மீத்தேன் உரிமையை அவரால் ரத்து செய்ய முடியாது. மீறினால் அவரது அரசாங்கம் நீக்கப்படும். இல்லையேல் அவரே பதவி விலக வேண்டும். இப்படி நிர்வாக ரீதியாக அவர் தமிழகத்தின் எந்த வளத்தையும் காப்பாற்ற முடியாது போவதால் சாதிக்கொரு தலைவரை தெரிவு செய்து அவர்களது பிறந்த இறந்த தினத்தன்று பிரம்மாண்டமாக சுவரொட்டி போட்டு வீரத்தமிழன், மறத் தமிழன், என்று அடைமொழியுடன் விளம்பரம் செய்கிறது

நாம் தமிழர் கட்சி. சீமான் சாதிகளிக்கிடையில் நல்லுறவு பேண நினைக்கிறார். பறையர் இன மக்களை ஆதித் தமிழர்கள் என்றால் தேவர் ஜெயந்தி அன்று தேவர் இன மக்களை வீரத் தமிழர் என்பார். சாதிகள் என்பதே உயர்வு தாழ்வு கற்பித்து அசமத்துவத்தை பேணும் அமைப்பு எனும் போது சாதிகளுக்கிடையில் நல்லுறவு வருவது எங்கனம்? ஆதிக்க சாதி மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது அடக்கப்படும் சாதி மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பது எப்படி? அதற்கு நாம் தமிழரிடம் என்ன திட்டம் உள்ளது? வாக்கு வங்கி அரசியல் படி அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆதிக்க சாதி மக்களை வைத்துத்தான் அரசியல் செய்ய முடியும் என்றால் அதற்கு நாம் தமிழரும் விதி விலக்கு அல்ல.

நாம் தமிழர் என்று அல்ல எல்லா வாக்கு வங்கி கட்சிகளுக்கும் மேற்கண்ட சிக்கல் பொருந்தும். அதனால்தான் நாம் வாக்கு வங்கி அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த அமைப்பு முறையை மாற்றுவது குறித்து யோசிக்க வேண்டும். ஸ்டெர்லைட் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால் அது அங்குள்ள மக்கள் அணிதிரண்டு ஒற்றுமையுடன் போராடுவதால் மட்டுமே சாத்தியம். வேறு எதுவும், எதையும் செய்து விடமுடியாது. சட்டமும், நீதிமன்றமும், பாராளுமன்றமும் மக்கள் ஒன்று திரண்டு போராடும் போது மட்டுமே பின்வாங்கும். இதை ஜல்லிக்கட்டிலிருந்து, தூத்துக்குடி வரை பார்த்து விட்டோம். இப்படி கொஞ்சம் அசைபோட்டு பாருங்கள். நன்றி

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

 

கேள்வி பதில் : திராவிட இயக்கம் பொருளாதார தளத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லையா ?

maanila-suyaatchi_Murasoli-Maran

கேள்வி : //பண்பாட்டு மற்றும் அரசியல் தளங்களின் மீட்டெடுப்பில் திராவிடர் இயக்கத்தார் காட்டும் அக்கறையை, இந்திய பொருளாதார கட்டமைப்பை விளக்கும் வகையான விழிப்புணர்வு தளங்களில் ஏற்படுத்த மறந்துவிட்டனவோ?//

– பிரபாகரன்

முரசொலி மாறன் எழுதிய “மாநில சுயாட்சி” (1974-ம் ஆண்டில் வெளியானது) நூலின் முன்னுரையில் அவர் தி.மு.கவின் இலட்சியங்களாக நான்கைக் குறிப்பிடுகிறார்.

  • இந்தி ஆதிக்க ஒழிப்பு
  • தமிழ் மொழி – தமிழ் இன – தமிழ் மரபின் மேம்பாடு
  • தமிழ்நாட்டின் உரிமைகள்; அதன் நியாயமான பங்கு
  • சுரண்டல் ஒழிப்பு
    – ஆகியவைதான் அந்த இலட்சியங்கள்

1962-இல் சீனப் படையெடுப்பையொட்டி இந்திய ஒற்றுமையின் அவசியத்தை உணர்ந்து, தி.மு.க. பிரிவினைக் கோரிக்கையை கைவிட்டு விட்டதைக் குறிப்பிடுகிறார் மாறன். மேற்கண்ட இலட்சியங்களை நிறைவேற்றவே பிரிவினை கோரிக்கையை வைத்திருந்ததாகவும் அதன் பிறகு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அடைய வேண்டிய இலட்சியங்களாக அவை மாற்றப்பட்டது என்கிறார் அவர்.

அவற்றில் முதல் மூன்று இலட்சியங்கள் மொழி, பண்பாடு, மாநில சுயாட்சி என்ற வகைப்பாட்டில் வருகிறது. நான்காவது பொருளியல் துறையில் வருகிறது. தி.மு.க. முதல் மூன்றுக்கும் கொடுத்த முக்கியத்துவத்தை நான்காவதில் ஏன் கொடுக்கவில்லை என்பது உங்கள் கேள்வி!

Murasoli Maran
கருணாநிதி – முரசொலி மாறன்

ஆனால் முதல் மூன்றிலுமே தி.மு.க. தனது இலட்சியத்தை அடைந்து விடவில்லை. இன்றும் தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக, அதிகார வர்க்க, நீதிமன்ற மொழியாக இல்லை. கல்வியிலும் அது பயிற்று மொழியாக அனைத்து துறைகளிலும் இல்லை. காங்கிரசு ஆட்சி துவங்கி இன்றைக்கு மோடி ஆட்சி வரை இருந்த கொஞ்ச நஞ்ச மாநில உரிமைகள் கூட பறிபோய்விட்டன. நீட் தேர்வு திணிப்பு, தபால் துறை இந்தி தேர்வு ஆகியவை சமீபத்திய சான்றுகள்.

பொருளாதார தளத்தில் தி.மு.க.வும் சரி பொதுவில் திராவிட இயக்கத்தின் பங்களிப்பு என்று இட ஒதுக்கீடு, சமூக நலத்திட்டங்கள் முன்வைக்கப்படுகின்றன. மதிய உணவு, இலவசக் கல்வி, வேலை வாய்ப்பு, பொது மருத்துவம், தாலிக்கு தங்கம், ஒரு ரூபாய் அரிசி, திருமணப் பெண்களுக்கு நிதி, லேப்டாப், சைக்கிள், டிவி என்று தமிழகம் மற்ற மாநிலங்களை விட வாழ்க்கைத் தர வரிசையில் முன்னுக்கிருப்பது உண்மைதான். ஆனால் இவை மட்டும்தான் பொருளியல் தளமா? இன்று கல்வி தனியார் மயமாகிவிட்டது. மருத்துவமும் கார்ப்பரேட் மயமாகிவிட்டது. இரண்டிலும் செல்ல முடியாத மிக வறியவர்கள்தான் அரசுப் பள்ளிகளில் படித்துவிட்டு, அரசு மருத்துவமனைகளில் வைத்தியம் பார்க்கிறார்கள்.

படிக்க :
♦ அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

இந்தி பேசும் மாநிலங்களை விட இங்கே நிலமற்ற விவசாயிகளின் விகிதம் அதிகம். அதே போன்று தொழிற்துறையில் நிரந்தரத் தொழிலாளர்களை விட ஒப்பந்த தொழிலாளர்களே அதிகம் பணி செய்கின்றனர். இடையில் நடுத்த வர்க்கம் அதிகரித்திருக்கிறது. நகரமயமாக்கம் அதிகரித்திருக்கிறது. நகரத்தில் ஈட்டப்படும் பணத்தை வைத்து விவசாயம் கிராமத்தில் உயிர் பிழைத்திருக்கிறது.

இந்த சூழலை உருவாக்கிய உலகமயம், தாராளமயம், தனியார் மயத்தை தி.மு.க.வும் சரி, அதிமுகவும் சரி அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கின்றன. இரு கட்சிகளைச் சேர்ந்த சிலர் தரகு முதலாளிகளாக இருக்கின்றனர். தனியார் உயர் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றனர்.

எனவே பார்ப்பனிய ஆதிக்க எதிர்ப்பு, சமூக நீதி, மாநில சுயாட்சி, மொழி உணர்வு என்று ஆரம்பத்தில் திராவிட இயக்கத்தின் இலட்சியங்கள் இருந்தாலும் காலம் செல்லச் செல்ல அவை நீர்த்துப் போய்விட்டன. அதே போன்று 1969-க்கு முந்தைய கம்யூனிச இயக்க வரலாற்றில் மேற்கண்ட பார்ப்பனிய – சாதிய சமூகத்தின் பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டன. ஒன்றுபட்ட கம்யூனிசக் கட்சியும், அதிலிருந்து பிரிந்த மார்க்சியக் கம்யூனிசக் கட்சியும் வர்க்கப் போராட்டம், உழைக்கும் மக்களிடம் வேலை செய்தல் என்று பேசினவே அன்றி இந்தியாவில் இருக்கும் இந்தி ஆதிக்கம், பார்ப்பனிய ஆதிக்கம், தேசிய இன ஒடுக்குமுறை குறித்து ஆய்வோ, திட்டமோ, விழிப்புணர்வோ கொண்டிருக்கவில்லை. அவர்களது வர்க்க அமைப்புகளும் பெயரளவு போராட்டங்களை நடத்துவதைத் தாண்டி புரட்சிக்கான திட்டத்தை கொண்டிருக்கவில்லை. 1969-ம் ஆண்டில் பிரிந்த மார்க்சிய லெனினிய இயக்கம்தான் பின்னாட்களில் இந்தத் தவறுகளை திருத்திக் கொண்டது.

எனவே இலட்சியம் என்ற வகையில் பார்த்தால் திராவிட இயக்கம் பொருளியல் துறையை புறக்கணித்தது, ஒன்றுபட்ட பொதுவுடமை இயக்கம் பண்பாட்டு துறையை புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பிற்கு இந்த இயக்கங்களுக்கு தலைமை வகித்த சிறு முதலாளி – நடுத்தர வர்க்க தலைமையும் ஒரு காரணம்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !

0

காராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த தாட்கான் (Dhadgaon) கிராம மருத்துவமனையின் ஒரே மருத்துவரான சந்தோஷ் பர்மர் கடந்த திங்கள்கிழமை மட்டும் பாம்புக்கடியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர், கால்-கை வலிப்பு நோயாளி மற்றும் கருக்கலைப்பு செய்த ஒரு பெண் உட்பட 483 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறார். மேலும் அவர் ஐந்து பிரசவம் பார்த்துள்ளதுடன் பாம்பு கடியால் இறந்த இரண்டு சிறுவர்களின் உடல்களுக்கு பிரேத பரிசோதனையும் தனிநபராக செய்துள்ளார்.

Dr Santosh Parmar
மருத்துவர் சந்தோஷ் பர்மர்.

மகாராஷ்டிராவின் வடக்கு பழங்குடி மாவட்டமான நந்தர்பாரில் (Nandurbar) அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் மொத்தமுள்ள எட்டு இடங்களில் ஏழு மருத்துவருக்கான இடங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ளன. மகளிர் மருத்துவத்தில் எம்.டி பட்டம் பெற்ற ஒரே மருத்துவர் 7/24 மணி நேரமும் பணி புரிகிறார்.

மலைப்பாங்கான நிலப்பரப்பில் பரவியிருக்கும் 150 கிராமங்களுக்கு (அவற்றில் சில 30 கிலோமீட்டருக்கும் அப்பால் உள்ளன), சேவை செய்வதற்காக தட்கான் கிராமப்புற மருத்துவமனை அமைந்திருக்கிறது. மருத்துவமனையில் உள்ள 10 செவிலியர்களின் உதவியால் ஒரு மாதத்திற்கு 160 குழந்தை பிறப்புகளை பர்மர் பதிவு செய்கிறார்.

ஒவ்வொரு நாளும் காய்ச்சல், அரிவாள் செல் சோகை, பாம்பு கடி மற்றும் சளியால் பாதிக்கப்படும் சுமார் 350 முதல் 400 நோயாளிகள், 30 படுக்கைகள் கொண்ட அந்த மருத்துவமனைக்கு வருகிறார்கள். மருத்துவர்களின் பற்றாக்குறையானது நோயாளிகளை வரிசையில் நிற்கவும், சில நேரங்களில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக, தங்கள் முறைக்கு காத்திருக்கவும் அவர்களை கட்டாயப்படுத்தியுள்ளது.

படிக்க:
பீகார் : 100 குழந்தைகளின் மரணத்துக்கு பொறுப்பேற்பது யார் ?
♦ மக்கள் மருத்துவர் கோட்னிஸ் நூற்றாண்டு விழா

இந்த ஆண்டு தொடக்கத்தில், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காலியிடங்களை (10,568 பதவிகள்) நிரப்புவதற்காக ஆட்சேர்க்கும் நடவடிக்கையை மாநில அரசு தொடங்கியது. பழங்குடி பகுதிகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களின் பற்றாக்குறையானது மருத்துவர்களின் மாத ஊதியத்தை 2 முதல் 3 இலட்சம் வரை உயர்த்த அறிவிப்பு வெளியிட மாநில அரசை நிர்பந்தித்தது.

மகளிர் மருத்துவர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் தொடக்கத்தில் இதில் ஆர்வம் காட்டினர். “ஆனால் இறுதியில் அந்த ஆர்வம் போய்விட்டது” என்று நந்தூர்பார் பொது அறுவை சிகிச்சை மருத்துவர் இரகுநாத் போயே கூறுகிறார்.

ஜூலை 28 முதல், மருத்துவர்கள் பலர் வேலையை விட்டு நின்று விட்ட பின்னர், தட்கான் மருத்துவமனையை பர்மர் தனியாக சமாளித்துக் கொண்டிருக்கிறார். காலை 8.30 மணிக்கு அவர் அனைத்து வார்டுகளிலும் செல்வதிலிருந்து அவரது நாள் தொடங்குகிறது: மகப்பேறுக்கு பிறகு தங்கக் கூடிய வார்டில் 10 பேர் இருக்கின்றனர். அவசர மருத்துவப் பிரிவில் இரண்டு பேர், பொது வார்டில் மூன்று பேர் மற்றும் திங்கள்கிழமை காலை பிரசவம் செய்ய வேண்டிய இரு கர்ப்பிணிகள் உள்ளனர். காலை 9.30 மணியளவில், அவர் வெளி நோயாளி பிரிவிற்கு செல்கிறார். அங்கு பாம்பு போல நீண்ட ஒரு குறுகிய வரிசையில் நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

Queues at Hospitals
அரசு மருத்துவமனைகளில் காத்திருப்பு என்பது இந்தியாவில் அனைவருக்கும் தெரிந்த இரகசியம் தான் (மாதிரிப் படம்)

பாம்புக் கடியால் இறந்துபோன இரண்டு சிறார்களின் உடல்களை மருத்துவர் அலுவலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு நூற்றுக்கணக்கானவர்கள் அவரை சந்திக்க காத்திருந்தனர். பின்னர் கைப்பேசியில் மருத்துவரை அழைத்து பிரேத பரிசோதனைகள் செய்வதற்காக பிற்பகல் வரை காத்திருந்தாக சேத்தன் சல்வே கூறினார்.

பர்மார், ஏறத்தாழ பிற்பகல் மூன்று மணி அளவில் 483 நோயாளிகளை சந்தித்து ஆலோசனை கூறியிருந்தார். அதில் மூன்று நபர்களுக்கு உள்நோயாளிப் பிரிவில் சிகிச்சை அளிக்க வேண்டும். “சமாளிக்க முடியாத அளவிற்கு கூட்டம் வந்தால், இராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய காரியக்ரத்தை (Rashtriya Bal Swasthya Karyakram ) சேர்ந்த மருத்துவர்களை நான் உதவிக்கு அழைக்க வேண்டும்” என்று பர்மார் கூறினார். அதே நேரத்தில் அந்த மருத்துவர்கள் அவர்களது அன்றாட பணியையும் கைவிட வேண்டியிருக்கும்.

மாலை நேரத்தில், பர்மர் ஊட்டச்சத்து குறைப்பாடுள்ள குழந்தைகளை கவனிக்கும் ஊட்டச்சத்து மறுவாழ்வு மையத்திற்கு செல்கிறார். திங்கட்கிழமை இரவு, அவரது வேலை முடிந்துவிடவில்லை. முதல் நெருக்கடி அழைப்பு நள்ளிரவில் வந்தது – ஒரு பெண் பாம்புக் கடியின் காரணமாக மூச்சு விட முடியாமல் ஆபத்தான நிலையில் இருந்தார். இரண்டு மணி நேரம் கழித்து, மூக்கில் அடைப்பட்ட ஒரு பொருளுடன் ஒரு குழந்தை கொண்டு வரப்பட்டது. அதை அறுவை சிகிச்சை மூலமே அகற்ற வேண்டியிருந்தது. அதிகாலை 4 மணிக்கு கருச்சிதைவினால் ஏற்பட்ட கடுமையான குருதிக்கசிவுடன் ஒரு பெண் வந்திருந்தார்.

படிக்க:
ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை
♦ மக்கள் மருத்துவர் 5 ரூபாய் டாக்டர் ஜெயச்சந்திரன் மறைந்தார் ! நேரடி ரிப்போர்ட்

“எங்களது கண் முன்னால் ஒரு நோயாளி இறப்பதை பார்ப்பது கொடுமையானது. ஒவ்வொருவரையும் காப்பற்ற நான் முயற்சி செய்ய வேண்டும். ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் நாங்கள்தான் பொறுப்பு” என்று அவர் கூறினார். அப்போது அவர் தொடர்ச்சியாக 50 மணி நேரம் பணியில் இருந்தார்.

இது போன்ற தொலைவான பழங்குடி பகுதிகளில் பணிப்புரிவதற்கு மருத்துவர்கள் விரும்புவதில்லை. “நாங்கள் தற்காலிகமான மருத்துவர்களை அமர்த்தி இருந்தோம். ஆனால் ஒரு மாததிற்கு முன்பு நிரந்தரமான மருத்துவர்களுக்காக அரசாங்கம் விளம்பரம் கொடுத்தது. எங்களது மருத்துவமனையில் பணிப்புரியும் யாரும் அதற்கு விண்ணப்பிக்கவில்லை” என்று போயே கூறினார். விரைவில் நந்தூர்பார் மாவட்ட நிர்வாகம் தற்காலிக மருத்துவர்களுக்காக விளம்பரம் கொடுக்க இருக்கிறது.

doctor-service-in-rural-india-1
தொலைவான பழங்குடி பகுதிகளில் பணிப்புரிவதற்கு மருத்துவர்கள் விரும்புவதில்லை.

அம்மருத்துவமனையில் மகளிர் பிரிவில் வெறும் 10 படுக்கை வசதியே உள்ளது. பெண்களுக்கான 60 படுக்கை வசதியும் குழந்தைகள் மருத்துவமனையும் கட்டுவதற்கான திட்டம் இன்னும் காலதாமதமாகி கொண்டே இருக்கிறது. மகப்பேறுக்கு பின்பு மூன்று நாட்கள் மருத்துவமனையில் பெண்கள் இருக்க வேண்டும். ஆனால் படுக்கை வசதி பற்றாக்குறையால் மற்ற கர்ப்பிணிகளுக்கு இடம் கொடுப்பதற்காக அவர்கள் உடனடியாக மருத்துவமனையை காலி செய்ய வேண்டும்.

உடனடியாக மருத்துவர்களை நியமிக்க பல கடிதங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எழுதப்பட்டுள்ளன. மயக்க மருந்து நிபுணர் இல்லாமல் சிசேரியன் செய்வது கடும் சிக்கலாகிவிடும்.

குழந்தை மருத்துவர்கள் பற்றாக்குறையால் அவசர சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளை இரண்டு மணி நேர பயணத் தொலைவில் உள்ள நந்தூர்பார் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார். மேலும் இம்மருத்துவமனையில் நிரந்தர மருத்துவ கண்காணிப்பாளர், தொற்றுநோயல்லாத பிற நோய்களுக்கான மருத்துவர் அல்லது தேசிய சுகாதார திட்ட (National Health Mission) மருத்துவரோ யாரும் இல்லை.

மருத்துவமனை பொது சிகிச்சை நிபுணரிடம் பேசிய ஒரு வாரத்தில் ஒரு மருத்துவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அவர் இன்னும் பணிக்கு வரவில்லை. மேலும் மயக்க மருத்துவ நிபுணர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் இன்னும் விடுப்பிலேயே உள்ளதாக அவர் கூறினார்.

இந்த மறுகாலனியாக்கச் சூழலில், மருத்துவத் தொழிலின் அடிப்படையே சேவை என்பதிலிருந்து இலாபநோக்கம் என்பதாக மாற்றப்பட்டுவிட்டது. பணமிருப்பவனுக்குத் தான் மருத்துவப் படிப்பு என்பதை நீட் தேர்வுகள் உறுதிசெய்கின்றன. கோடிக்கணக்கில் பணம் கொட்டிப் படித்து வந்த மருத்துவர்கள், ஏழை மக்கள் மிகுதியாக வாழும் கிராமப்புறங்களிலும் பழங்குடி கிராமங்களிலும் பணியாற்ற முன்வருவார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்?


சுகுமார்
நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

அழிவை நோக்கி அமேசான் மழைக் காடுகள் | முனைவர் சேதுபதி

Forest-fire

மேசான் காடானது சுமார் 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவை கொண்டது; மூன்று மில்லியன் தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் வீடாக உள்ளது. அமேசான் காடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 13 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில், பத்து லட்சம் மக்கள் பூர்வீகக்குடி மைந்தர்கள்; இங்கு சராசரியாக 200 மொழிகள் பேசப்படுகின்றன.

Amazon Tribesஇந்த பூமியில் மனிதர்களால் வெளியேற்றப்படும் கார்பன்-டை-ஆக்ஸைட் (CO2) வாயுவில் 5 சதவிகிதத்தை இந்த காடுகள் ஒளிச்சேர்க்கை (photosynthesis) சுழற்சிக்காக தன்னகத்தே இழுத்துக்கொண்டு ஆக்ஸிஜன் வாயுவை வெளியேற்றுகிறது. இதனால்தான் இந்தக் காடுகள், பூமியின் நுரையீரலாக மற்றும் காற்று குளிரூட்டிகளாகவும் (Air Conditioner) செயல்படுகின்றன. அதுமட்டுமன்றி உலக வெப்பமயமாக்குதலையும் (Global Warming) கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.

எவ்வாறு புயல், வெள்ளம், பூகம்பம் என இயற்கை சீற்றம் ஏற்படுகிறதோ, அதேபோல் காட்டுத்தீயும் இயற்கையின் ஒரு அங்கம்தான். கோடை காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும்போது மரங்கள் ஒன்றோடொன்று மோதும்போதும், இடி-மின்னல்களாலும் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஆய்வுகளின்படி, 94 சதவிகித காட்டுத் தீயானது, மனிதர்களின் கேடுகளால் மட்டுமே உருவாகிறது.

காட்டுத்தீ ஒருவிதத்தில் நல்லதும் கூட; ஏனெனில் காய்ந்த இலைகள், சருகுகள், மரங்கள் எரிந்து மண்ணில் புதைந்து கால்சியம், பொட்டாசியம், மக்னிசீயம் போன்ற கனிமங்களை மண்ணில் அதிகப்படுத்துகிறது. வடஅமெரிக்கக் கண்டத்தில், ஆண்டுக்கு 1,00,000 ஏக்கர் நிலம் காட்டுத் தீயால் அழிகிறது. காட்டுத் தீயானது ஒருவகையில் காட்டின் வளர்ச்சியை புதுப்பிக்கப் பயன்படுகிறது.

படிக்க :
♦ அமேசான் : பற்றியெரியும் பூமிப்பந்தின் நுரையீரல் !
♦ பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !

பிரேசிலின் INPE நிறுவனம் (National Institute for Space Research) பிரேசிலில் உள்ள அமேசான் காடுகளில் மட்டும், இந்த ஆண்டு (2019) ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 72,843 தீ கொழுந்துவிட்டு எரியும் இடங்களை (Fire Hotspot) கண்டுபிடித்துள்ளனர். அமேசான் காட்டுத் தீயினால் எழும்பிய புகையானது 3000 கிலோ மீட்டர் கடந்து சென்றுள்ளது. உலகின் சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களிடம், அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பற்றிய தகவல்கள் 2013-ம் ஆண்டிலிருந்து சேகரிக்கப்பட்டுள்ளன. அதன்படி மற்ற ஆண்டுகளைவிட, 2019-ம் ஆண்டு மட்டும் காட்டுத்தீயானாது 85% அதிகமாக உள்ளது.

Amazon Forest Fireஅமேசான் காட்டுத்தீ இதுவரை 200 மில்லியன் டன்கள் (Tonnes) கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவை வெளியேற்றியுள்ளது. இது கடந்த வருடம் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் வெளியேற்றப்பட்ட கார்பன்-டை-ஆக்ஸைட் வாயுவின் அளவைவிட மூன்று மடங்கு அதிகமாகும். நாசா (NASA)-வின் ஆய்வின்படி, கடந்த வருடம் ஜூலை மாதத்தை விட, 2019-ம் வருடம் ஜூலை மாதம் காட்டுத்தீயானது 90 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆய்வாளர்களின் கருத்தின்படி இந்த காட்டுத்தீக்கு முக்கிய காரணம் காடழிப்பு (Deforestation) தான். கிளைமேட் வாட்ச் (Climate Watch) என்கிற அமெரிக்க ஆராய்ச்சி நிறுவன கணக்குப்படி, 2000-ம் முதல் 2009-ம் ஆண்டு வரை 320 லட்சம் ஏக்கர் பரப்பளவு அமேசான் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கடந்த வருடங்களை விட, இந்த வருடம்தான் அதிக காடழிப்பு நடந்துள்ளது என்று INPE நிறுவனமும் தகவல் வெளியிட்டுள்ளது.

நாசா(NASA)-வால் இந்த வருடம் மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் எவ்வாறு காடழிப்பு அதிகமான அளவில் ஏற்பட்டுள்ளது என கண்டுபிடிக்கப்பட்டது. (Bio-Sphere Sciences Laboratory, NASA). சட்டவிரோதமான காடழிப்புகள் தான் இந்த காட்டுத்தீக்கு மிகமுக்கியக் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் 2019-ம் ஆண்டுக்கு பிறகு கனரக வாகனங்களை (Bulldozer, Trucker) கொண்டு மரங்கள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன.

படிக்க :
♦ கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ ஜய் பொல்சானரோ : அமேசான் பழங்குடிகளை அழிக்க வந்த பிரேசிலின் மோடி

பிரேசிலின் முந்தைய ஆட்சி (2009 – 2012) காலங்களில், சட்டவிரோத காடழிப்பு, தீவைத்தல் ஆகிவற்றிற்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டு காடழிப்பு 75 சதவிகிதம் குறைக்கப்பட்டிருந்தது. பிரேசிலின் வலதுசாரிக் கொள்கைகொண்ட ஜனாதிபதியான ஜய் போல்சானரோ, தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக, நாட்டின் பெருளாதாரத்தை உயர்த்துவதற்கு அமேசான் காடுகளின் வளங்கள் பயன்படுத்தப்படும் என்றார். போல்சனாரோ பதவியேற்றபின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக சட்டவிரோத காடழிப்பு அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டது.

Amazon Forest Fire Data
அமேசான் காட்டுதீ குறித்த புள்ளி விவரம் (2018 மற்றும் 2019)

சிறை தண்டனை மற்றும் அபராதம் ஆகியவை நிறுத்தப்பட்டன. மரங்களை வெட்டுதல், காட்டை அழித்தல், விவசாயம் முடிந்தபிறகு நிலத்தை தீவைத்தல் முறை (Slash and Burn method) என போல்சனாரோ பதவி ஏற்ற பிறகு பல கேடுகள் அதிக அளவில் ஊக்குவிக்கப்பட்டன. மாட்டிறைச்சி ஏற்றுமதிக்காகவும், விவசாயத்திற்காகவும், மரம் வெட்டும் தொழில்களுக்காகவும் அமேசான் காடுகள் இந்த 2019-ம் ஆண்டு கடந்த ஒன்பது மாதங்களில் 20% அழிக்கப்பட்டுள்ளன.

INPE நிறுவன இயக்குனர், முக்கிய தகவல்களை வெளியிட்டதால் போல்சனாரோ அவரை இயக்குனர் பதவியிலிருந்து நீக்கிவிட்டார். நூறு நிபுணர்களை கொண்ட பிரேசிலின் National Enviornment Council குழுவை கலைத்துவிட்டு, ஜனாபதியால் நியமிக்கப்பட்ட ஐந்து நிபுணர்கள் கொண்ட குழுவாக மாற்றியமைத்தார். தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வேண்டுமென்றே அமேசான் பற்றி பொய்யான தகவல்களை பரபரப்புகின்றன என்கிறார் போல்சனாரோ. உலக வெப்பமயமாகுதல் பற்றி சிறு கவலையும் கொள்ளாதவர்.

2010-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சியின் போதும் கூட 60,000 தீ கொழுந்துவிட்டு எரியும் (Fire Hotspot) இடங்கள் பிரேசிலில் கண்டறியப்பட்டன. ஆனால், இந்த வருடம் 2019-ல் கடந்த எட்டு மாதங்களுக்குள் 72,843 கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கள் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 2010-ம் ஆண்டை ஒப்பிடும் போது, இந்த வருடம் மிதமான வெப்பம் தான் வீசியது. இந்த வருட காட்டுத்தீக்களால் இதுவரை 2000 லட்சம் டன்கள் கார்பன்-டை-ஆக்ஸைட்(CO2) வாயு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்த வருட இறுதிக்குள் 5000 லட்சம் டன்கள் வெளியேற்றப்பட்டிருக்கும்.

Jair-Bolsonaro
பிரேசில் ஜனாதிபதி ஜய் போல்சானரோ.

சட்டவிரோத காடழிப்பு ஒன்றே அமேசான் காட்டுத்தீக்கு காரணம் என உறுதியாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த வருடத்திற்குள் காட்டுத்தீயானது இன்னமும் பலமடங்கு பெருகும் என்பதால், இந்த மழைக்காடானது (Rain Forest) பாலைவனமாக மாறும் அபாயம் உருவாகியுள்ளது. சட்டவிரோத காடழிப்பும், உலக வெப்பமயமாக்குதலும் அமேசான் மழைக்காடுகளை மூன்றில் இரண்டு பங்கை பாலைவனமாக்கும். அமேசான் காடுகளில் ஏற்படும் பருவகால மாறுதல்கள் பிரேசில் மட்டுமின்றி தென்அமெரிக்க, வடஅமெரிக்க மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுக்கும் கடுமையான பாதிப்புகளை மிக விரைவில் ஏற்படுத்தும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காடுகளை இந்தியாவின் அமேசான் காடுகள் என்றால் மிகையில்லை. மேற்குத் தொடர்ச்சி மலைகள் முழுவதுமாக பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என மாதவ் காட்கில் அறிக்கை கூறியது. ஆனால், அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, உல்லாச விடுதிகள்(Resorts), மிகப்பெரிய வணிக வளாகங்கள் மற்றும் தேயிலை தோட்டங்களும் மேற்குத் தெடர்ச்சி மலைகளை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அதனால்தான், வருடாவருடம் கேரளாவில் பெருவெள்ளத்தினால் மிகப்பெரிய சேதம் ஏற்படுகிறது. அதே, மேற்குத் தெடர்ச்சி மலையில்தான் நியூட்ரினோ திட்டத்திற்கு மலையை குடைந்து மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் கட்ட முனைகிறார்கள்.

இயற்கையை நாம் அழித்தால், இயற்கை நம்மை மட்டுமில்லாது, நம் சந்ததினரையும் நிச்சயம் அழிக்கும். இயற்கையோடு இசைந்து வாழப் பழகுவோம்!
இயற்கையைக் காத்து, நமையும், நம் சந்ததினரையும் காப்போம்!

Dr.சேதுபதி ஆறுமுகம், Phd (Geology)
சுற்றுச் சூழல் ஆர்வலர்.

disclaimer

ஹெபாடைட்டிஸ் பி : மதுவினால் மட்டும் கல்லீரல் நோய் வருவதில்லை

Hepatitis-B-Amitabh-Bachchan

வரைத் தெரியாத இந்தியர்கள் இருக்க முடியாது. Big “B” என்று அழைக்கப்படும் இவர் தனது வலைப்பூவில் எழுதியுள்ள அனுபவக் கட்டுரை நம் பார்வையை ஈர்த்தது.

அவர் கூறியிருப்பதாவது “எனது கல்லீரல் 75 சதவிகிதம் செயலற்று விட்டது. மீதம் உள்ள 25 சதவிகிதத்தில் நான் இயங்கி வருகிறேன்.” அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தும் செய்தியாக இருக்கிறது.

அவருக்கு இறைவன் பூரண உடல் நலத்தை தருவானாக…

அவருக்கு கல்லீரல் சுருக்க நோயான CIRRHOSIS வந்துள்ளது. அவர் மதுவை ஒரு முறை கூட தீண்டாத ஒரு சில நடிகர்களுள் ஒருவர். பொதுவாக ஒரு பொது அபிப்ராயம் இங்கு நிலவுகிறது. மது அருந்துவோருக்குத்தான் கல்லீரல் நோய் வரும் என்பது தான் அது.

உண்மையில் அதுவொரு மூடநம்பிக்கையே. மதுவை அறவே சுவைக்காத பலருக்கும் கல்லீரல் நோய் வரலாம். அதற்கான காரணங்கள் :

  • ஹெபாடைடிஸ் பி எனும் வைரஸ் கிருமித் தொற்று
  • NASH எனும் Non Alcoholic Steato Heptosis.

இந்த நோய்(NASH) மது அருந்தாதவர்கள் ஆனால் கார்போஹைட்ரேட் அடங்கிய உணவுகளை அதிகம் உண்பர்வகளுக்கு வரும் நோயாகும். இதை ultra sound abdomen and pelvis ஸ்கேனில் “Fatty liver” என்று குறிப்பிடுவார்கள்.

இந்த Fatty liver நோயில் படிநிலைகள் உண்டு, கிரேடு 1,2,3 என நோய் முற்றும். இதன் கடைசி நிலை சிரோசிஸ் எனும் கல்லீரல் அழற்சி நோய் தான்.

எனது தந்தையும் இந்த வகை மது அருந்தாதவர்களுக்கு வரும் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வருகிறார். அமிதாப் பச்சனுக்கு இந்த நோய் வந்ததர்க்கு காரணமாக இருப்பது “ஹெபாடைட்டிஸ் பி” நோய்த்தொற்று.

அவர் 1982-ம் ஆண்டு “கூலி” எனும் படப்படிப்பில் இருக்கும் போது பயஙகரமான விபத்து ஏற்பட்டு அவரது மண்ணீரலில் (spleen) பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதில் அபாயகரமான அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டிருக்கிறது (Near fatal situation) அவரைக்காப்பாற்ற பல யூனிட் ரத்தம் ஏற்றப்பட்டிருக்கிறது.

CIRRHOSIS-Liver
கல்லீரல் சுருக்க நோயான CIRRHOSIS

அப்படி ஏற்றப்பட்ட ஒரு யூனிட் ரத்தத்தில் “ஹெபாடைடிஸ் பி” வைரசும் சேர்ந்து வந்து விட்டது. கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் தான் அவர் சிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

இது எதைக்காட்டுகிறது என்றால் அமிதாப் போன்ற உச்ச நிலை நடிகர்கள் கூட தங்களுக்கு வருடம் ஒருமுறை ஹெல்த் செக் அப் செய்து கொள்வதில்லை. அல்லது அவர் செய்த ஹெல்த் செக் அப்களில் “ஹெபாடைடிஸ் பி” குறித்த பரிசோதனை இடம்பெற வில்லை என்று தெரிகிறது.

ஹெபாடைடிஸ் பி வைரஸை பொருத்த வரை ஒன்னு சுனாமி போல சீறிப்பாய்ந்து கல்லீரலை ஆறு மாதம் முதல் ஒரு வருடத்துக்குள் புசித்து ஏப்பம் விட்டு விடும். அல்லது கும்பகர்ணத்துயில் கொண்டு பல ஆண்டுகள் கழித்து எழுந்து சோம்பேறித்தனமாக தனது வேலையை செய்து கொண்டிருக்கும்.

பின்னாள் சொன்ன கும்பகர்ண வெரைட்டியாக அமைந்து விட்டால், அவர்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். அமிதாப்பும் அந்த வகையில் தான் வருகிறார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் (1982 முதல் 2012 வரை) தூங்கி விட்டு இப்போது எழுந்து பிரச்சனை கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

படிக்க:
மூளை செயலிழப்பு : மந்திரம் தீர்வு தருமா | மத்திய அரசு ஆய்வு !
♦ குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?

நவீன மருத்துவம் இந்த வைரஸை எப்படி அணுகுகிறது?

கல்லீரல் ரத்தப்பரிசோதனையில் யாருக்கேனும் பிரச்சனை இருந்தால் அவர்களுக்கு கட்டாயமாக Viral markers எனும் இந்த ஹெபாடைடிஸ் வைரஸ் தொற்று இருக்கிறதா ? என்று பார்க்கப்படுகிறது. அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்து பார்த்து எந்த நிலையில் பிரச்சனை இருக்கிறது என்று கண்டறியப்படுகிறது.

Hepatitis B என்று அறியப்பட்டுவிட்டால் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று அர்த்தம் இல்லை. அதற்குப்பிறகு தான் உண்மையான வாழ்க்கை இருக்கிறது. இதற்கு அமிதாப்பச்சனே உதாரணம்.

Hepatitis B வைரஸின் அளவை குறைக்க நம்மிடம் வைரஸ் கொல்லி மாற்று மருந்து இருக்கிறது. அதை குடல் மற்றும் கல்லீரல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தருவார்கள்.

இந்த நோய் எப்படி பரவுகிறது?

  • ரத்தம் மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட விசயங்களை பகிர்ந்து கொள்வதால் பரவும்.
  • பாதுகாப்பற்ற உடலுறவு மூலம் பரவும்.
  • தாயிடம் இருந்து சேய்க்கு பரவும்.

தற்போது ஏற்றப்படும் ரத்தம் அனைத்தும் ஹெபாடைடிஸ் வைரஸ்கள் இருக்கின்றனவா? என்று கட்டாயம் சோதித்த பின் ஏற்றப்படுகின்றன.

Hepatitis B
ஹெபாடைடிஸ் வைரஸ்

ஹெபாடைடிஸ் பி தொற்று இருப்பவர்கள் ஆணுறை / பெண்ணுறை அணிந்து பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடலாம். ஹெபாடைடிஸ் பி-க்கு எதிரான தடுப்பூசி குழந்தை பிறந்தவுடனே போடப்படுகிறது.

அதற்குப்பிறகு 45 நாட்கள், 75 நாட்கள் , 105 நாட்கள் போடப்படும் பெண்ட்டாவேலண்ட் தடுப்பூசியில் ஹெபாடைட்டிஸ் பி-க்கு எதிரான தடுப்பு மருந்து இருக்கிறது. ஒருவேளை உங்களுக்கு இந்த நான்கு ஊசிகளும் போடப்பட்டிருக்கவில்லை என்றால் கவலை வேண்டாம்..

இதே தடுப்பூசியை முதல் நாள் (0 day); ஒரு மாதம் கழித்து (30th day);
பிறகு ஆறாவது மாதம் ( 6th month) என்று போட்டுக்கொண்டால் இந்த வைரஸுக்கு எதிரான தடுப்பு சக்தியை நம்மால் பெற முடியும். இந்த தடுப்பூசி விலை குறைந்த எளிய தடுப்பு முறையாகும். இதை அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

ஹெபாடைடிஸ் பி வைரஸ் தொற்றால் ஏற்பட்ட கல்லீரல் நோய்க்கு முறையான நவீன மருத்துவ சிகிச்சை எடுப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

கல்லீரல் இடியைக்கூட தாங்கும் ஒரு உறுப்பு.
நம் உடலின் இரண்டாவது பெரிய உறுப்பு
அதன் நலனை பாதுகாப்பது நமது பொறுப்பு.

நன்றி அமிதாப்.
உங்களால் ஒரு விழிப்புணர்வு கட்டுரை பிறந்தது.

பின் குறிப்பு : எனது தந்தை கடந்த 2016-ம் ஆண்டு முதல் பேலியோ எனும் மாவுச்சத்தை குறைத்து கொழுப்பை கூட்டி உண்ணும் உணவு முறை + கல்லீரல் சிறப்பு நிபுணரின் ஊக்கம் மற்றும் மருந்துகளால் கல்லீரல் இயக்கத்தை இறைவன் கருணையால் முறையாகப் பேணி வருகிறார்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

குன்றத்தூரில் குழிகளுக்கு கொண்டாட்டம் | படக் கட்டுரை

1-porur-kundrathur-road-Slider

க்கள் தங்கள் குறைகளைக் கூற அதிகாரிகளுக்காகக் காத்திருந்த நிலைமை மாறி, அதிகாரிகள் நேரிடையாக மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிவார்கள் என்று தினத்தந்தி போன்ற ஜால்ரா நாளிதழ்களும் ஊடகங்களும் செய்திகளைக் கக்க ஆரம்பித்தன.

குறைகளைச் சொல்ல முடியாத தமிழகத்தின் இரத்தச் சாட்சியாக சென்னை போரூர் – குன்றத்தூர் முக்கியச் சாலை இருக்கிறது.

porur kundrathur road
போரூர் சிக்னல் அருகே.

ஆம், குண்டும் குழியுமாகவும், எந்நேரமும் கடும் போக்குவரத்து நெரிசலுடனும் காணப்படும் போரூர் – குன்றத்தூர் சாலை, கிட்டத்தட்ட 2 வருடங்களாகவே இப்படித்தான் இருக்கிறது. மழை பெய்தால் எந்த இடத்தில் குழி உள்ளது, எந்த இடம் சமதளமானது என்று கண்டுபிடிக்க முடியாது. அந்தச் சாலையில் வழக்கமாகச் செல்பவர்களே தடுமாறி விழுந்துதான் எழுந்திரிப்பார்கள். அவ்வப்போது செல்வோரின் நிலைமை பரிதாபத்துக்குரியது. சரி, மழை ஓய்ந்து ரோடு காய்ந்ததே என்று எண்ணினால், புழுதி கண்களை மறைக்கும்; மூச்சைத் திணறச் செய்யும்.

என்ன நடக்கிறது இங்கே?

பகுதிவாழ் மக்களிடமும், சாலையில் பயணிப்போரிடமும் கேட்டால், “ஏதோ திடீர்னு வர்றாங்க இரவோடு இரவா குழியத் தோண்டி, காலையில மண்ண போட்டு மூடிட்டுப் போயிடுறாங்க” என்கிறார்கள். சிலர், மெட்ரோ வாட்டருக்காகத் தோண்டியிருக்கிறார்கள் என்றும்; இன்னும் சிலர் இ.பி காரங்கதான் என்றும் வேறு சிலர் கேபிள் டிவிக்காரங்கதான் என்றும் கூறுகிறார்கள்.

porur kundrathur road
பெரும்பாலான கடைகள் மூடியே கிடக்கின்றன; அல்லது, பகலில் இரண்டு மூன்று மணிநேரம் மட்டுமே திறந்திருக்கின்றனர்.

ஸ்ரீபெரும்புதூர் சிப்காட்டுக்கு ரூ.396 கோடியில் மூன்றாம் நிலை சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்குவதற்கான ஆயத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக கோயம்பேட்டிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்குத் தேவையான இராட்சச குழாய்கள் பதிப்பதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் சரிவர மூடப்படவில்லை. உதாரணமாக மதனந்தபுரம் நாராயணா பள்ளி அருகே சாலையில் தோண்டப்பட்ட குழியை மேலாக மண்ணைப் போட்டு மூடியுள்ளது தெரியாமல் சென்ற வேன் அந்தக் குழியில் மாட்டிக்கொண்டது. மேலும், கர்ப்பிணிகள், வயதானோர், பள்ளிச் சிறுவர்கள், வியாபாரிகள் என அனைவரும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதிமுக எடப்பாடி ஆட்சியின் அலங்கோலத்தை அந்தப் பகுதி மக்களும் அந்தச் சாலையில் செல்லும் பயணிகளும் சொல்வதைக் கேளுங்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

ராஜன், மளிகைக் கடைக்காரர்

15 வருடமா மளிகைக்கடை நடத்துறேன். 9 மாதமா முன்பக்கமா தெறந்து வச்சு வியாபாரம் பண்ண முடியல. இந்த ரோடு சீர்கெட்டுப் போயி தூசு கருமேகம் மாதிரி கௌம்புது. சாலையே கொள்ளாத அளவு எந்த நேரமும் வாகனம் நெரிசல் உள்ள பகுதி இது. இங்கே வசிக்சிறவங்க முழுசா மூச்சு விட்டு பல மாதங்களாயிருச்சி. இருமுனா, தும்முனா கரி மாதிரி தூசு வருது. நெலம கொடுமையாயிருக்குது. பல குழந்தைங்க டாக்டரே கதியா கெடக்குது. எல்லோரும் நோயாளி மாதிரி ஆயிட்டோம்.

வியாபாரம் சுத்தமா இல்ல. இந்தப் பக்கமே யாரும் வர்றதில்லை; அப்புறம் எங்கே கடைக்கு பொருள் வாங்க வர்றது? வர்ற ஒன்னு ரெண்டு பேரும் பழைய பொருளையே வச்சிகிட்டிருக்கியான்னு கேக்குறாங்க. அவ்வளவும் தூசி. பொருளெல்லாம் அரை நாள்ல தூசி படிஞ்சி போயிடுது. எவ்வளவுதான் தொடைக்கிறது. இதனால வியாபாரத்துல நஷ்டம். கட வாடகை கொடுக்க முடியல. தண்டல் கட்ட முடியல. எங்க வேதனைய யாருகிட்டே சொல்றதுன்னே புரியல.

thirumalai & rajan
திருமலை, இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர், கொளப்பாக்கம் மற்றும் ராஜன், மளிகைக் கடைக்காரர் (வலது).

திருமலை, இருசக்கர வாகனம் பழுது பார்ப்பவர், கொளப்பாக்கம்

இந்த மெயின் ரோட்டை ஏன் இப்படி பொளந்தாங்கன்னு தெரியல. கேட்டா மெட்ரோ வாட்டர் காரங்கதான் காரணம், அவன் வேலய முடிக்கல, டெண்டர் படியல, பணம் வரலன்னு ஏதேதோ சொல்றாங்க. இன்னொரு பக்கம் இ.பி காரங்க ஒத்துழைக்கல, நாங்க என்ன பண்றதுன்னு மெட்ரோகாரங்க சொல்றாங்க. ஒங்க ஆட்டத்த எங்க தலமேல ஏன்டா ஆடுறீங்கன்னு கேட்டா, இங்கே வேல செய்ய வர்றவங்க, சொல்றத நாங்க செய்யிறோங்கிறாங்க. கடைசியில எங்க தொழில்தான் மண் மூடி போயிடும் போல. வேல செய்யிறவங்களுக்கு சம்பளம் கொடுக்க முடியல. வேலைக்கு பாக்குற ரெண்டு பேரும் வரல. கடைய இழுத்து மூடிடலாமுன்னு தோணுது. ஆனால், எதிர்காலத்த நெனச்சா பயம் தட்டுது. போற உயிரு கடையிலேயே போகட்டுமுன்னு உக்காந்திருக்கேன்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : ஜாதி ஒழிய வேண்டும் – ஏன் ?
♦ சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

***

கணேஷ், டீ – கடைக்காரர்

ganesh tea shop
கணேஷ், டீக்கடை உரிமையாளர்

சொன்னா நம்ப மாட்டீங்க, ஏறக்குறைய ஒரு வருஷமாகப் போகுது, இந்த ரோடு மண் ரோடாகி. அப்பயிருந்த வியாபாரம் இல்ல. இதுவரைக்கும் எனக்கு 1 லட்சம் ரூபாய் நஷ்டம். மாஸ்டர் கூலி, கரண்ட் பில், வாட்டர் கேன், கடை வாடகை எதயும் சமாளிக்க முடியல. தண்டல், தண்டலுன்னு தண்டல் வாங்கியே பொழப்பு போகுது. அவனும் கைய விரிச்சு எப்ப சண்டைக்கு வருவான்னே தெரியல. போட்ட போண்டா, பஜ்ஜிய சுத்தமா கொஞ்ச நேரம் வைக்க முடியல. வாயில வக்கிறவன் மண்ணு மண்ணுன்னு காறித் துப்புறான். அரைகுறையா பஜ்ஜி தின்னவங்கிட்டே பணம் கேக்குறதுக்கே பயமா இருக்கு. ஏன்டா மண்ண கொடுத்துட்டு பணம் கேக்குறன்னு முறைக்கிறாங்க.

***

சுந்தர், பிஸ்கட் போடுபவர்

sundar
சுந்தர்

தினமும் இன்னொரு வண்டி மேல விழுந்து எழுந்துதான் இங்கே வர்றேன். இந்த லட்சணத்துல லோடு வண்டிங்க போனா இன்னும் சுத்தம். ரோடு பிளாக் ஆயிடும். அன்னைக்கு எம் பொழப்பு நாறிடும். எல்லா பக்கமும் வண்டிங்க அடைச்சிகிட்டு நிக்கும். சைக்கிள் டயரு கூட போக வழி இருக்காது. மூனு கடைக்கு சரக்குப் போட மூனு மணி நேரமாகும். அதுக்கப்புறம் எங்கே நாலு கடை ஏறி எறங்குறது. ஒரு நாளைக்கு 50 கடை ஏறி இறங்குனாதான் 500 ரூபாயாவது கெடக்கும். இந்த சீர்கெட்ட ரோட்டால பலநாளா வியாபாரம் இல்லாமத்தான் போறேன். சரக்குத் தேங்கிருச்சின்னா கெட்டுப் போகுது. என்ன பண்றது வேற தொழிலும் எனக்குத் தெரியாது.

***

ஜேம்ஸ், எலக்ட்ரானிக் கடைக்காரர்

james
ஜேம்ஸ்

இந்த ரோட்டுனால கௌம்புற புழுதியினால இங்கே சுத்தியிருக்குற ஆஸ்பிட்டலுங்களுக்குத்தான் கொள்ள லாபம். ரோட்டுல போறவங்களுக்கும் தினமும் விபத்து நடக்குது. வீட்டுல இருக்குறவங்களுக்கும் தூசினால உடம்பு கெட்டுப் போகுது. இருமல், சளி, இழுப்புன்னு ஆயிரதெட்டு நோய் வருது. குறைகாலத்துக்கு எப்படி உயிர் வாழப் போறோமுன்னு தெரியல.

***

பாபு, ஆட்டோ டிரைவர்

babu
பாபு

சார், நாங்க ஆட்டோ ஓட்டல, படகு ஓட்டுறோம். கடல் அலையில போற மாதிரி ரோட்டுல போறோம். பின் சீட்டுல உக்கார்றவங்க ரெண்டே குலுங்கள்ல முன் சீட்டுக்கு வந்துருவாங்க. உசாரா ஸ்டேரிங்க புடிக்கலன்னா, வெளியிலதான் போயி விழணும். ரெண்டு கிலோ மீட்டர் போறதுக்கு அரை மணி நேரமாகுது. ஆட்டோவில ஏர்றவங்க திடீர்னு நாங்க நடந்தே போறோமுன்னு எறங்கிடுவாங்க. ஆட்டோவில நாளாவது கியர் போட்டே பல மாசங்களாகுது, முழுக்க ரெண்டாவது கியர்லதான் போறோம். பெட்ரோல் டபுளா குடிக்குது. ஆட்டோ பார்ட்ஸ் அடிவாங்குது. இப்ப வருமானம் பாதியாயிடுச்சு; செலவு டபுளாயிடுச்சு. ஏண்டா வண்டிய ஓட்டுறோமுன்னு இருக்குது. வீட்டுல பசியோடவாவது படுத்துத் தூங்கலாம். ஆட்டோவுக்கு ஏன் வீண் செலவுன்னு பல டிரைவருங்க ஆட்டோவை எடுக்குறதில்ல.

படிக்க:
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
♦ மழையில் கரையும் தார் சாலை ! | பாகலூர் பகுதி மக்கள் போராட்டம்

***

ஜெயபாலன், ஓலா டிரைவர்

jayabalan
ஜெயபாலன்

நான் விக்னேஷ்வரா நகர்லதான் இருக்கேன். இருந்தாலும் இந்தப் பக்கம் சவாரி வந்தா நான் எடுக்கிறதே இல்ல. இந்த இடமே இப்படி சுடுகாடா மாறுனதுக்குக் காரணம் அதிமுக கட்சிதான். கமிசன் கமிசன் கமிசன். அது பாதாளம் வரைக்கும் போயிருச்சு. கடைசில அந்தக் கமிசன் பள்ளத்துல ஜனங்கள பொதச்சிடுவாங்க போலிருக்கு. இப்போ இதுதான் நடக்குது.

இந்த ரோட்ட ஏன் நோண்டுனாங்க, இதுவரைக்கு ஏன் மூடலன்னு யாருக்கும் எதுவும் தெரியாது. எவனும் சொல்ல மாட்டேங்கிறான். மெட்ரோ வாட்டருங்கிறான். இபி-ங்கிறான். டிரைனேஜ்ங்கிறான். கேபிள் பொதைக்கிறோமுங்கிறான். என்ன பொதைக்கப் போறாய்ங்கன்னு யாருக்கும் தெரியல. கடைசில ஜனங்கதான் அதுல உழுந்து வார்றாங்க. இப்ப ஒரு செய்தி வருது. யாருக்கும் தெரியாது இங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் கார் ஃபேக்டரிக்கு தண்ணி போகப் போகுதுன்னு சொல்றாங்க.

ராத்திரி 11 மணியானா 20 வண்டி ஜேசிபி, டிப்பருன்னு வருது. 500 அடி நீளத்துக்கு தோண்டுறாங்க. 5 அடி ஆழத்துல, 3 அடி அகலத்துல பைப் பொதைக்கிறாங்க. காலையில பாத்தா திடீர்னு பள்ளம் மேடு. போறவங்க வர்றவங்க, அதில விழுந்து வார்றாங்க. மழை பேஞ்சா இன்னும் கொடுமை. எங்கே பள்ளம், எங்கே மோடுன்னு தெரியாது. வண்டியில போறவங்க கொழந்த குட்டியோட கீழே விழுறாங்க. இங்கிருக்கிறவங்க இவங்களோட நிலமையே இப்படியிருக்க, எடப்பாடியோ கோட்டு சூட்டு போட்டு லண்டன் போயிட்டாரு. நாய் படாத பாடு நாமதான். அவங்களுக்கு ஓட்டுப் போட்டோம். இப்போ ரோடு கூட இல்லாது சாகுறோம்.

***

மேலே நாம் பார்த்தது, அடிப்படை வசதிகளைத் தீர்க்க எடப்பாடி அரசு எப்படியெல்லாம் ‘முனைப்பு’ காட்டுகிறது என்பதற்கு மொத்தத் தமிழகத்தின் ஒரு சிறு துளி. இந்த இலட்சணத்தில் வேலூர் மாவட்டத்தில் “முதலமைச்சர் சிறப்பு குறைதீர்ப்பு” திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

அதையும் நம்பினார்கள், வேலூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல் நத்தம் கிராம மக்கள். மனுக்களைப் பட்டியலிட்டு மண்டல தாசில்தாரை பார்க்கச் சென்றார்கள். அலுவலக வளாகத்தில் அதிகாரிகளைக் காணவில்லை, மேய்ந்து கொண்டிருந்த மாடுகளின் வாயில் மனுக்களைத் திணித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டார்கள்.

ஆறுகளின் மார்பறுத்து மணல் கறந்த எடப்பாடி கும்பல், நம்மைப் பார்த்து கேட்கிறது, ‘ஜனங்களே உங்கள் குறைகளை எங்களிடம் தெரிவியுங்கள், ஒரே மாதத்தில் நிவர்த்தி செய்கிறேன்’ என்று. நமது குறையை சரி செய்வோம், மனுக்களை நீட்டியல்ல; சுட்டு விரலை நீட்டுவோம். அது சுட்டிக் காட்டும் குற்றவாளிகள் யார் என்று.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள் | பொருளாதாரம் கற்போம் – 34

0
mandeville-the-Fable-of-the-bees-political-economy-Slider

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 34

டாக்டர் மான்டெவில்லின் புதிர்கள்

அ.அனிக்கின்

ண்டனில் டிஃபோ வழக்கமாகப் போகின்ற அதே சிற்றுண்டி விடுதிகளுக்கும் புத்தகக் கடைகளுக்கும் இன்னொரு கவர்ச்சிகரமான நபர் வருவதுண்டு. அவர் பெயர் டாக்டர் பெர்னார்டு மான்டெவில். அவர் வைத்தியம் செய்யாத மருத்துவர், ஏழைகள் வசிக்கும் பகுதியில் குடியிருந்தவர், நண்பர்களோடு ஆனந்தமாகப் பொழுதுபோக்குவதில் ஆசை கொண்டவர். மற்றவர்கள் விரும்ப முடியாத புகழ் அவருக்குக் கிடைத்திருந்தது. மது பானங்களின் உபயோகத்தை ஆதரித்துப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதற்காக மதுத் தயாரிப்பவர்கள் அவருக்கு வாடிக்கையாகப் பணம் கொடுத்து வந்தார்கள், முக்கியமாக அந்தப் பணத்தைக் கொண்டுதான் அவர் உயிர் வாழ்ந்தாரென்று சொல்லப்பட்டது .

பெர்னார்டு மான்டெவில் ஹாலந்து நாட்டில் 1670-ம் வருடத்தில் பிறந்தார். 1691-ம் வருடத்தில் லெய்டென் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்துச் சிறிது காலத்துக்குப் பிறகு அவர் இங்கிலாந்துக்குப் போனார். அவர் திருமணம் செய்து கொண்டார், அங்கேயே லண்டனில் தங்கினார், இங்கிலாந்துக் குடியுரிமையைப் பெற்றார்; அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான விவரங்கள் தெரியவில்லை. 1733-ம் வருடத்தில் அங்கேயே மரண மடைந்தார்.

அவர் தத்துவஞானி, எழுத்தாளர் என்ற வகையில் அடைந்த புகழுக்கு ஒரு புத்தகமே காரணமாக இருக்கிறது. 1705-ம் வருடத்தில் முணுமுணுக்கும் தேன்கூடு அல்லது நேர்மையாக மாறிய போக்கிரிகள் என்ற தலைப்புள்ள சிறு கவிதை நூலை ஆசிரியர் பெயர் குறிப்பிடாமல் வெளியிட்டார். கவிதை சாதாரணமாகவே இருந்தது; அந்த நூல் அதிகமான கவனத்தைப் பெறவில்லை. 1714-ம் வருடத்தில் அந்தக் கவிதையோடு நீண்ட கட்டுரையையும் சேர்த்து வெளியிட்டார். அந்தப் புத்தகத்துக்கு தேனீக்களின் கதை அல்லது தனிப்பட்ட தீயொழுக்கம் – பொதுஜன அனுகூலம் என்ற தலைப்பைக் கொடுத்திருந்தார். இந்தத் தலைப்பில் தான் அந்தப் புத்தகம் பிரபலமாயிற்று.

Bernard_Mandeville
டாக்டர் பெர்னார்டு மான்டெவில்

ஆனால் இந்தப் பதிப்பும் கூட அதிகமான கவனத்தைப் பெறவில்லை என்று தோன்றுகிறது. 1723-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் புதிய பதிப்பை சமூகத்தின் இயல்பைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி என்ற ஆர்ப்பாட்டமான துணைத் தலைப்போடு வெளியிட்டார். இதுவரை மான்டெவில் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த விளைவு இப்பொழுது ஏற்பட்டது. மிடில் செக்ஸ் பிராந்தியத்தின் நீதிபதி அந்தப் புத்தகம் ‘சமுதாயத்துக்குக் கேடானது’ என்று கருத்துத் தெரிவித்தார்; பத்திரிகைகளில் இப்புத்தகத்தைப் பற்றி வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இந்த விவாதங்களில் மான்டெவில் உற்சாகமாகப் பங்கெடுத்துக் கொண்டார். அவருடைய வாழ்நாளிலேயே அந்தப் புத்தகத்துக்கு ஐந்து பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. 1729-ம் வருடத்தில் தேனீக்களின் கதையின் இரண்டாம் பகுதியை வெளியிட்டார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த பொழுது இரண்டு நூற்றாண்டுக் காலம் இலக்கியத்தில் மான்டெவிலைப் பற்றி வெளிவந்திருக்கும் குறிப்புகளின் நீண்ட பட்டியலையும் இணைத்து வெளியிட்டது. அவரைப் பற்றி மார்க்ஸ், ஆடம் ஸ்மித், வால்டேர், மெக்காலே, மால்தஸ், கெய்ன்ஸ் ஆகியோர் எழுதியிருக்கின்றனர்.

ஆங்கில அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியில், குறிப்பாக ஸ்மித், மால்தஸ் ஆகியோர் மீது (இருவருமே அவரை நயமில்லாதவர், நன்மையில் நம்பிக்கையற்றவர் என்று சொல்லி ஒதுக்கியது வேடிக்கையானதே) மாபெரும் தாக்கத்தைக் கொண்டிருந்தார். இந்தத் தாக்கம் முக்கியமான இனங்களைப் பற்றிய (மதிப்பு, மூலதனம், லாபம், இதரவை) விளக்கத்தில் ஏற்படவில்லை, ஆனால் மூலச் சிறப்புடைய மரபுக்கு ஆதாரமாக இருந்த அடிப்படையான தத்துவஞான அணுகுமுறையில் இந்தத் தாக்கம் அதிகமாக இருந்தது.

படிக்க:
கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

”தனிப்பட்ட தீயொழுக்கம் பொதுஜன அனுகூலம்” என்ற சொற்றொடரில் மான்டெவிலின் முக்கியமான புதிர் அடங்கியிருந்தது. இதில் “தீயொழுக்கம்” என்பதற்குப் பதில் ஸ்மித்தின் பிரபலமான “சுயலாபம்” என்ற சொல்லை உபயோகித்துப் பாருங்கள். முதலாளித்துவ சமுதாயத்தைப் பற்றிய ஸ்மித்தின் முக்கியமான கருத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய சுயலாபத்தை அறிவோடு தேட அனுமதிக்கப்பட்டால், மொத்த சமூகமும் தழைத்துச் செழிப்பதை அது ஊக்குவிக்கும், அதன் செல்வத்தைப் பெருக்கும். அறநெறிச் சிந்தனைகளின் தத்துவம் என்ற புத்தகத்தில் ஸ்மித் மான்டெவிலைப் பின்வருமாறு குறை கூறினார்: தேனீக்களின் கதையின் ஆசிரியர் எல்லா விதமான தன் முனைப்பான முயற்சிகளையும் செயல்களையும் ”தீயொழுக்கம்’ என்று கூறுவது மட்டும் தவறானதாகும். உதாரணமாக, சுயலாபத்தைத் தீயொழுக்கம் என்று கூற முடியாது.

ஆனால் பொருளாதார விஞ்ஞானத்தின் வரலாற்றுக்கு மான்டெவிலின் முக்கியத்துவம் இதனோடு நின்றுவிடவில்லை. அவருடைய அங்கதக் கவிதையில் அவர் முதலாளித்துவ சமூகத்தைக் கடித்து விடுவது போல விமரிசனம் செய்தார்; அதன் அடிப்படையான தீயொழுக்கங்களில் சிலவற்றை முதலில் கண்டுபிடித்தவர்களில் அவரும் ஒருவர். இது தான் அவருடைய “ஒழுக்கஞ்சாராத் தன்மை” என்று சொல்லப் படுவதாகும். மார்க்ஸ் அவரை “நேர்மையும் தெளிவான சிந்தனையும் கொண்ட மனிதர்”(1)  என்று கூறுகிறார்.

தேன்கூடு என்பது மனித சமூகம்; அதை மான்டெவில் காலத்திய முதலாளித்துவ இங்கிலாந்து என்றும் சொல்லலாம். அவருடைய கற்பனைக் கதையின் முதற்பகுதியில் இங்கிலாந்தைப் பற்றி ஏளனம் செய்து எழுதியிருப்பது ஸ்விப்ட் போன்ற மாபெரும் எழுத்தாளரை நினைவுபடுத்துகிறது. அந்த சமூகம் அதிலுள்ள தீயொழுக்கங்கள், குறைகள், குற்றங்கள் முதலியவற்றின் காரணத்தினால் தான் இருக்க முடிகிறது. தழைத்துச் செழிக்க முடிகிறது என்பது அவருடைய கற்பனைக் கதையின் மூலக் கருத்தாகும். இந்த சமூகம் “செழிப்போடு” இருப்பதற்குக் காரணம் கோடிக்கணக்கான மக்கள். அவர்கள்

….. அரிவாளும் மண்வெட்டியும்
தூக்கிப் பாடுபடுமாறு
ஆயுள்வரை விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவற்றோடு இன்னும் பல் வகையான
கடின உழைப்பும் அவர்கள்
செய்தே தீர வேண்டும்.
கடைகெட்டவர்கள் தினமும்
வியர்வை வழியப் பாடுபட்டு
ஒரு வேளை உணவுக்காக
உடலையும் பலத்தையும்
அழித்துச் சாகிறார்கள்….(2)  

பணக்காரர்கள் சுகத்தையும் வசதிகளையும் விரும்புவதால், நாகரிகம் ஒப்பனை, கற்பனை, வீண் பெருமை முதலியவற்றுக்காகப் பல விதமான பொருள்களையும் வாங்குவதில் வீணாகப் பணத்தைச் செலவழிப்பதால் அவர்கள் இவ்விதம் பாடுபட வேண்டியிருக்கிறது. இந்த சமூகத்துக்குப் பேராசையுள்ள வக்கீல்கள், போலி மருத்துவர்கள், சோம்பேறித்தனமும் முட்டாள்தனமும் கொண்ட மதகுருக்கள், போர்த் தினவு கொண்ட தளபதிகள், குற்றவாளிகளும் கூட அவசியமானவர்கள். ஏன்? அவர்களுடைய நடவடிக்கைகள் பல விதமான பொருள்களையும் சேவைகளையும் – அவசியமாக்குகின்றன; அதனால் உழைப்பு ஆர்வமும் புதியனவற்றைக் கண்டுபிடிக்கும் திறமையும் செயலூக்கமும் முன்னேற்றமடைகின்றன.

mandeville-the-Fable-of-the-bees
டாக்டர் பெர்னார்டு மான்டெவில் நூலின் முகப்பு.

எனவே இந்த சமூகத்தில் ”இன்பம் கோடி ஏழைகளுக்கு வேலை தந்தது; இன்னொரு கோடிக்கு கர்வம் வேலை தந்தது; அங்கே பொறாமையும் பெருமையும் தொழில் அமைச்சர்கள்; உணவு, சாமான்கள், உடைகளில் நிலைத்த மடமையும் நிலையில்லாமையும் அவர்கள் பெற்ற குழந்தைகள்; வினோதமான ஏளனத்துக்கு உரிய தீயொழுக்கம் வர்த்தகத்தை இயக்கும் சக்கரம் ஆயிற்று.”(3)

(இங்கே ஒரு உதாரணத்தை நினைவுபடுத்தாமலிருக்க முடியவில்லை. அமெரிக்காவில் மோட்டார் கம்பெனிகள் வருடந்தோறும் புதுரகமான கார்களை உற்பத்தி செய்கின்றன. அதற்குத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் எந்தக் காரணமும் கிடையாது. கார்களை வைத்திருப்பவர்களிடமுள்ள வீண் பெருமையைப் பயன்படுத்திக் கொள்வதற்கும் எந்த விதத்திலாவது விற்பனையை அதிகரிப்பதற்காகவும் இப்படிச் செய்கிறார்கள். மான்டெவில் கூறுவது உண்மை, மக்களுடைய “நிலையற்ற தன்மையாலும்” மற்ற பலவீனங்களாலுமே எங்களுடைய தொழில் அமோகமாக முன்னேறியுள்ளது, இந்த பலவீனங்களை நாங்கள் வேண்டுமென்றே ஊக்குவிக்கிறோம் என்று இந்தக் கம்பெனிகளின் இயக்குநர்கள் ஒத்துக் கொள்வது சாத்தியமே.)

ஆனால் தேன் கூட்டில் தீயொழுக்கம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று தேனீக்கள் முணுமுணுக்கின்றன. அவர்களுடைய புகார்களைக் கேட்டு அலுத்துப் போன ஜூபிடர் கடவுள் திடீரென்று தீயொழுக்கத்தை அகற்றிவிடுகிறார், தேனீக்களிடம் நற்பண்புகளை ஏற்படுத்துகிறார். ஆடம்பரச் செலவு போய் சிக்கனம் வருகிறது. இன்பம் மறைகிறது; சாதாரணமான இயற்கைத் தேவை களைத் தவிர வேறு விதமான நுகர்வு நின்றுவிடுகிறது. அடுத்தவர்களைச் சுரண்டி வாழ்கின்ற தொழில்கள் ஒழிக்கப்படுகின்றன. குறுகிய இன வெறி, பிற நாடுகளை ஆக்கிரமிக்கும் ஆசை ஆகியவற்றிலிருந்து விடு விக்கப்பட்டபிறகு ”அவர்களுடைய துருப்புகள் வெளிநாடுகளில் இல்லை; யுத்தங்களால் கிடைக்கும் அந்நியர்கள் பாராட்டையும் போலியான பெருமையையும் பார்த்துச் சிரிக்கிறார்கள்.” (4) 

சுருக்கமாகச் சொல்வதென்றால் மனித சமூகத்தின் வழக்கமான, ஆரோக்கியமான கோட்பாடுகள் அங்கே நிலவுகின்றன. ஆனால், என்ன பயங்கரம்! இது தான் அந்த சமூகத்தைச் சீர்குலைக்கிறது, அழிவை ஏற்படுத்துகிறது. மான்டெவில் இதைக் கவிதையில் வர்ணிக்கிறார்:

அழகான தேன் கூட்டைப் பாருங்கள்; அங்கே
நேர்மை இருப்பின் வர்த்தகம் அழிந்து போகும்.
வருடந்தோறும் அதிகமாகப் பணத்தை விரயமாக்கிய
வசதிகள் மறைந்தன; அவற்றைச் செய்து
பிழைத்த எண்ணற்ற ஏழைகளும் தவித்தார்கள்;
எங்கே போவார்கள்; என் செய்வார்கள்?
அத்தனை தொழில்களிலும் முன்பே நெருக்கடி;
கட்டிடத் தொழில் அநேகமாக அழிந்தது;
திறமை மிக்க கைவினைஞர்களுக்கு வேலையில்லை; அதுபோல
ஓவியர்களைப் புகழ்வதற்கு ஒருவருமில்லை ; பிரபலமான
கட்டிடக்கலைஞர்கள் சிற்பிகள் அனைவருக்கும் வேலை
யில்லை.
அவர்கள் உயிர் பிழைக்கவும் வழியில்லை.(5)

படிக்க:
ஜார்க்கண்ட் : தப்ரேஸ் அன்சாரி கொலை வழக்கில் 11 பேரை விடுவித்த போலீசு !
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

சுருக்கமாகச் சொல்வதென்றால், ஒரு பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது; கிட்டங்கிகளில் சரக்குகள் குவிந்து கிடக்கின்றன; விலைகள் குறைகின்றன; வருமானம் குறைகிறது; கட்டிட வேலைகள் நிறுத்தப்படுகின்றன. எப்படிப்பட்ட சமூகம் பார்த்தீர்களா? பிறரைச் சுரண்டி வாழ்பவர்களும் யுத்த வெறியர்களும் வீண் செலவு செய்பவர்களும் போக்கிரிகளும் அந்த சமூகத்தில் வளப்பெருக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

நற்பண்புகளான சமாதான ஆர்வம், நேர்மை, சிக்கனம், நிதானம் ஆகியவை பொருளாதார நாசத்தை உண்டாக்குகின்றன! – மான்டெவில் தன்னுடைய கருத்துக்களை விசித்திரமான முரணுரையின் வடிவத்தில் வெளியிட்டார் (அவருடைய கற்பனைக் கதையின் பின்னர் வருகின்ற உரைநடைப் பகுதியில் அவற்றை அதிகமான நிதானத்தோடு வெளியிட்டார்). இந்தக் கருத்துக்கள் இனி வரப்போகின்ற நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியின் வெளிச்சத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு சுவாரசியமானவையாகும். அதிக முக்கியமான இரண்டு விவரங்களை மட்டும் இங்கே குறிப்பிடுவோம்.

mandeville-the-Fable-of-the-bees-political-economy-Sliderஎல்லா வர்க்கங்களும் வகுப்பினரும் (நிலவுடைமையாளர்கள், மதகுருக்கள், அதிகாரிகள் ஆகியோர்) உற்பத்திக்கு உதவி செய்பவர்கள், பொருளாதார ரீதியாக அவசியமானவர்கள் என்ற கருத்தை மால்தசும் அவரைப் பின்பற்றியவர்களும் எடுத்துக் கொண்டனர். உபரி மதிப்புத் தத்துவங்கள் என்ற புத்தகத்தில் அடங்கியுள்ள சிறு பிரசுரத்தில் மார்க்ஸ் இந்தக் கருத்தை எதிர்ப்பதற்கு மான்டெவிலின் கருத்துக்களையும் அவருடைய நடையையும் கூடப் பயன்படுத்துகிறார்.

அவர் பின்வருமாறு எழுதுகிறார் : “… சாத்தியமான ஒவ்வொரு வகைத் தொழிலுமே உற்பத்திக்கு உதவக் கூடியது என்பதை மான்டெவில் முன்பே காட்டினார். முதலாளித்துவ சமூகத்துக்கு ஆதரவாக வாதம்புரிகின்ற மழுப்பல் வாதிகளைக் காட்டிலும் மான்டெவில் அதிகமான நேர்மையும் முடிவில்லாத துணிச்சலும் கொண்டவர்.”(6)

அளவுக்கு மீறிய சிக்கனம் ஆபத்தை ஏற்படுத்தும்; உற்பத்திக்குப் பயன்படாத செலவு, எந்த வடிவத்திலுள்ள ஊதாரித்தனமும் தேவையையும் வேலை வாய்ப்பையும் உருவாக்குகின்றபடியால் அது நன்மை தருவது அவசியமானதும் கூட என்ற கருத்து நம் காலத்தில் கெய்ன்சினால் புத்துயிர் கொடுக்கப்பட்டு ஒரு கட்டளை விதியாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அவர் மான்டெவிலைத் (மால்தசையும் சேர்த்து) தன்னுடைய முன்னறிவிப்பாளர் என்று கருதினார்.

19-ம் நூற்றாண்டின் இறுதிக்கு வருகின்ற பொழுது முதலாளித்துவ அமைப்பில் எத்தகைய தீமையையும் பார்க்க மறுத்த முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம், மான்டெவில் ஒரு போலியான கெட்டிக்காரர், சூழ்ச்சியான வாதத் திறமை உடையவர் என்று கருதியது . ஆடம் ஸ்மித் சிக்கனத்தை தனிப்பட்ட வகையிலும் பொதுமுறையிலும் மிகப் பெரிய நற்பண்பாக உயர்த்தியதைக் குறை சொல்ல வேண்டும் என்று அவர்களில் ஒரு வருக்குக்கூடத் தோன்றவில்லை. 1929-33-ம் வருடங்களில் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடியே முக்கியமான முதலாளித்துவப் பொருள்ளியலாளர்களை மான்டெவில் காட்டிய வழியில் சிந்திக்குமாறு செய்தது. மக்கள் சேமிக்க ஆரம்பித்தால் அவர்கள் பண்டங்களை வாங்க மாட்டார்கள்; அப்படியானால் “பயனுள்ள தேவை” குறைந்துவிடும்; மக்கள் தங்களுடைய பணத்தை எந்த நோக்கத்துக்காவது எவ்வழியிலாவது செலவழிக்குமாறு செய்ய வேண்டும்.

டாக்டர் மான்டெவிலின் முரணுரைகளுக்கு வயது இருநூற்றைம்பதாகிறது; ஆனால் அவர் தம்முடைய விமர்சனக் கண்ணோடு ஆராய்ந்த சமூகத்தைப் போலவே, அந்த முரணுரைகளும் இன்னும் உயிரோடிருக்கின்றன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1)  K. Marx, Capital, Vol. 1, Moscow, 1972, p. 577.
(2) B. Mandeville, The Fable of the Bees. Or, Private Vices, Public Benefits. With an Essay on Charity and Charity-Schools. And a Search into the Nature of Society, 5th edition, London, 1728, p. 3.
(3) B. Mandeville, op. cit., p. 10.
(4) Ibid., p. 18.
(5) Ibid., pp. 18-19.
(6) K. Marx, Theories of Surplus-Value, Part I, Moscow, 1969, p. 388.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

கேள்வி: //என் வீட்டில் உள்ள பெண்களை பார்த்து, பெண்களை முடக்குவதற்கான ஏற்பாடாகத் தான் பூச்சூடுதல், நகையணிதல், பொட்டு வைத்தால், தாலி அணிதல் ஆணாதிக்க சமூகத்தால் உண்டாக்கப்பட்டிருக்கிறது என்கிறேன். என்னைத் தான் ஏளனமாக பார்க்கின்றனர். நான் என்ன செய்து அவர்களை மாற்றுவது?//

– துழாயன்

ன்புள்ள துழாயன்,

வெறும் கருத்து உரையாடலில் பெண்களை மாற்றி விட முடியாதது மட்டுமல்ல, அது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும். சராசரி வாழ்வில் அதாவது ஆணாதிக்க சமூகத்தில் அடிமையாக வாழும் பெண்களிடம் எடுத்த எடுப்பிலேயே அப்படி பேசுவது பலனளிக்காது. பெண்களின் அடிமைத்தனத்தை பேணிப் பாதுகாப்பது குடும்பமும், சொந்த பந்த உறவுகளும்தான். அதை உறுதி செய்யும் வண்ணமே பெண்கள் பார்க்கும் சீரியல்களும், பார்ப்பனிய சமூகத்தின் மரபு – சம்பரதாயங்கள் – சடங்குகள் இருக்கின்றன. ஆக வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பெண்களை அவர்களே விரும்பி ஏற்கச் செய்யும் அடிமைத்தனம் செல்வாக்கு செலுத்துகிறது. பெண்கள் அலங்காரங்களை துறப்பதற்கு முன்னர் அவர்கள் சமூக வெளியில் அரசியல் ஆளுமையை வரித்துக் கொள்ள வேண்டும். இந்த துறத்தலையும் வரித்தலையும் நிறைவேற்றுவது எப்படி?

Makeup அலங்காரம்
மாதிரிப் படம்

முதலில் பெண்களை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து வரவேண்டும். அது ஒரு பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ, இல்லை ஆர்ப்பாட்டமாகக் கூட இருக்கலாம். இவற்றில் அவரது சிறு உலகிற்கு வெளியே உள்ள பெரிய உலகம் கொஞ்சம் கொஞ்சமாக திறக்கப்படும். தன்னைச் சுற்றியுள்ள சமூகத்தின் பிரச்சினைகள் சில அவளது கண்பார்வைக்கு கொண்டு செல்லப்படும். முக்கியமாக இத்தகைய சமூகப் பிரச்சினைக்கு கவலை கொண்டு இப்படி சிலர் வாழ்கிறார்களே என்ற உண்மையும் கவனத்திற்கு வரும்.

இதற்கு அடுத்தபடியாக சாதி மறுப்பு – புரட்சிகரத் திருமணங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கே தாலி, அலங்காரங்கள் இன்றி எளிமையாக நடக்கும் திருமண நிகழ்வும், பெண்ணடிமைத்தனம் – ஆணாதிக்கம் குறித்து பேசப்படும் உரைகளும், மணமக்கள் ஏற்கும் உறுதி மொழியும் பெண்களது அக உலகை விசாலமாக்கி அசை போடவைக்கும்.

நமக்குத் தெரிந்து இத்தகைய திருமண விழாவிற்கு வரும் புதிய பெண்கள் இந்த சுயமரியாதை திருமண முறைகளை விரும்புவதும், தங்களுடைய வாழ்விலும் அது போன்று நடக்காதா என்றும் யோசிக்கிறார்கள். சமூகத்தில் சகல சம்பரதாயங்களோடு நடக்கும் திருமணங்கள் அதே சம்பரதாயங்கள், சீர்வரிசைகளால் நின்று போவதோ, சண்டை நடப்பதோ குறித்து இந்த தருணத்தில் அவர்கள் சீர் தூக்கி பார்க்கிறார்கள்.

படிக்க:
பெண் ஏன் அடிமையானாள் ? நூல் – PDF வடிவில் !
♦ கேள்வி பதில் : நாடு தழுவிய கட்சி சாத்தியமா – தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன் ?

இன்னும் நமது சமூகத்தில் கைம்பெண்களுக்கு பூ, பொட்டு அழித்து, தாலி அகற்றும் சடங்குகள் நடக்கின்றன. மாதவிடாய் காலத்தில் அலங்காரம் அதிகம் செய்யக் கூடாது, கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதும் பின்பற்றப்படுகின்றன. இவை குறித்தெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பேச வேண்டும். பெரியார், இதர முற்போக்கு நூல்களை படிக்க ஆர்வமேற்படுத்துதல் ஆகியவையும் அவசியம். இதையே விரும்பிப் படிக்கும் வண்ணம் நாவல்களையும் படிக்கத் தரலாம்.

Women-protest
முதலில் பெண்களை அரசியல் நிகழ்வுகளுக்கு அழைத்து வரவேண்டும். அது ஒரு பொதுக்கூட்டமோ, அரங்கக் கூட்டமோ, இல்லை ஆர்ப்பாட்டமாகக் கூட இருக்கலாம்.

இறுதியாக நீங்கள் ஒரு இயக்கத்தில் செயல்பாட்டாளராக இருந்தால் உங்கள் அரசியல் செயல்பாடுகளுக்கு அவர்களையும் அழைத்துச் செல்ல வேண்டும். இங்கே மக்கள் எப்படி வாழ்கிறார்கள், என்ன பிரச்சினை, இந்த சமூகம் எப்படி இயங்குகிறது என்பது பற்றி ஒரு துவக்கம் இருக்கும். அது அடிமைத்தனம் என்ற ஆயுள் சிறையை விட்டொழித்து சமூக சுதந்திரவெளியில் ஒரு ஒளியூட்டும் ஆளுமையாக மாறுவதற்கு வழி அமைத்துத் தரும்.

பெண்களுடன் நேரம் ஒதுக்கி அரசியல் சமூக பண்பாட்டு பிரச்சினைகளை அறிமுகப்படுத்தி விவாதிக்க வேண்டும். இதன் போக்கில் அலங்காரங்கள் எனும் வெற்று ஜோடனைகள் தானாகவே துறந்து தனது ஆளுமை எது என ஒரு பெண் விரும்பி தரிக்க முடியும். இந்த நீண்ட நிகழ்ச்சிப் போக்கிற்கு ஓரிரு வருடங்கள் கூட ஆகலாம். பொறுமையுடன் முயலுங்கள்!

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

கேள்வி பதில் : நாடு தழுவிய கட்சி சாத்தியமா – தமிழ் புறக்கணிக்கப்படுவது ஏன் ?

கேள்வி : //இந்த நாட்டில் அரசியல் அமைப்புச் சட்டம் தோல்வியுற்றதாகக் கொண்டாலும், நாடு தழுவிய ஒரு கட்சி அல்லது அமைப்பு இல்லாமல் மாநில அளவில் எப்படி நாடு முழுவதும் மக்களை ஒன்று திரட்டுவது?//

– பெ. கண்ணன்

ன்புள்ள கண்ணன்,

நாடு தழுவிய புரட்சிகரக் கட்சி இல்லாமல் மாநில அளவில் மட்டும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கட்சி நாடு முழுவதும் மக்களை ஒன்று திரட்டுவது கடினம்தான். ஆனால் பிரச்சினைகள் என்ற அளவில் அவ்வப்போது நாடு முழுவதும் உள்ள அரசியல் முன்னணியாளர்கள் உரையாடுகிறார்கள்.

தமிழகத்தில் ஐ.ஐ.டி சென்னை வளாகத்தில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்பட்டபோது, சூரஜ் எனும் மாணவர் தாக்கப்பட்ட போது, “கோ பேக் மோடி” எனும் ஹேஷ்டாக் வைரலான போது இப்படி சில தருணங்களில் குறைந்த பட்சம் இணையத்திலாவது அந்த சங்கமம் நடந்திருக்கிறது. தென்னிந்தியாவைச் சேர்ந்த டிவிட்டர் வாசிகள் பலர் திராவிடஸ்தான் தேவை எழுந்திருப்பதாக கூட அப்போது பேசினர். மோடி – பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கும் தமிழகத்தை வாழ்த்தியும் பிற மாநிலத்தவர் பேசியிருக்கின்றனர்.

kovan-arrestedஅதே போன்று பாடகர் கோவன் கைது செய்யப்பட்ட போதும் இந்திய அளவில் எதிர்ப்பு உருவானது, பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்ததும் உண்மை. இப்படி நாடு தழுவிய அளவில் இந்துத்துவ எதிர்ப்பிற்கு ஒரு ஐக்கியம் உள்ளது. அந்த ஐக்கியத்தின்படி ஒத்த பார்வை கொண்ட மாற்று அமைப்புகள் ஒரு முன்னணியாக சேர்ந்து பாஜகவை எதிர்த்து ஒரு மாற்றை இந்திய அளவில் செயல்படுத்துவதற்கு நிறையவே வாய்ப்பு இருக்கிறது. பாசிச சூழல் நெருங்கி வரும் இந்நேரம் இத்தகைய இணைவு காலத்தின் கட்டாயம்.

இதன் போக்கில் ஒரு புரட்சிகரக் கட்சி தோன்றுவதற்கும் அது இந்திய அளவில் செயல்படுவதற்கும் உகந்த சூழல் வரலாம். அல்லது இந்திய அளவில் இல்லாமல் சில மாநிலங்களிலாவது செயல்படும் சூழல் வரலாம். காத்திருப்போம். மற்றபடி சித்தாந்த ரீதியாக ஐக்கியம், புரட்சியை எவ்வழியில் அடைய முடியும் என்ற தெளிவு ஆகியவற்றில் இந்தியா முழுவதும் உள்ள புரட்சிகர அரசியல் பேசுவோரிடம் ஒரு ஒற்றுமை உருவாவதும் முக்கியம்.

♦ ♦ ♦

கேள்வி : //நரேந்திர மோடி அவர்களே தமிழ் சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி என்று கூறுகிறார். தற்போது சமஸ்கிருத மேம்பாட்டிற்கு18 பல்கலைக் கழகங்கள் உள்ளன. இந்திய அரசு மேலும் ஒரு தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் தொடங்க நிதித்துறையும் நிதி ஆயோக்கும் ஒப்புதல் தருகிறது.

ஆனால், சமஸ்கிருதத்தை மூத்த மொழியாகவும், உலக அளவில்10 கோடி மக்கள் பேசும் மொழிக்கு ஒரு பல்கலைக் கழகம் கூட மத்திய அரசு ஏற்படுத்த அக்கறை காட்டவில்லை. இதை ஏன் தமிழகத் தலைவர்கள் கண்டிக்கவில்லை?//

– ஆ.ரா.அமைதி ஆனந்தம்

ன்புள்ள நண்பருக்கு,

இந்தி பேசும் மாநிலங்களான பீகார், சட்டீஸ்கர், ஹரியாணா, ஹிமாச்சல் பிரதேசம், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தர்காண்ட், உத்திரப் பிரதேசம், தில்லி யூனியன் பிரதேசம் ஆகியவையோடு குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் இந்துத்துவ பிற்போக்குத்தனம் வலுவாக இருக்கிறது. இவற்றை பசுப்படுகை மாநிலங்கள் என்றும் அழைக்கலாம். இம்மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் பாஜக-வே ஆள்கிறது. ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையிடமான நாக்பூர், மராட்டியத்தில்தான் இருக்கிறது.

இம்மாநிலங்களில் சங்க பரிவாரம் வைத்திருக்கும் அத்தனை திட்டங்களுக்கும் பெரு வரவேற்பு இருக்கிறது. பசுப்புனிதம், மாட்டுக்கறிக்கு தடை, மதமாற்றத் தடை, லவ் ஜிகாத், முசுலீம் எதிர்ப்பு, தலித் ஒடுக்குமுறை, கிறித்தவ எதிர்ப்பு, கம்யூனிச எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு, ராமன் மீதான வழிபாடு என்று நிறைய ஆர்.எஸ்.எஸ் அஜண்டாக்கள் இங்கே பெரும் வரவேற்புடன் இருக்கின்றன. இம்மாநிலங்களுடன் இப்போது மேற்கு வங்கம், ஒரிசாவும் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்து வருகின்றன. அங்கேயும் சங்க பரிவாரத்தின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது.

இம்மாநிலங்களில் இருக்கும் பாஜக-வின் வாக்கு வங்கியோடு தமிழகத்தை ஒப்பிட்டால் அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுதான்.

Tamil - Sanskritஎனவே இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, பார்ப்பனயமாக்கம், பள்ளிகளில் யோக வழிபாடு, கல்வி – வரலாற்றில் இந்துத்துவ திணிப்பு அனைத்தும் இம்மாநிலங்களில் வரவேற்பு பெற்று பாஜக-வின் அரசியல் செல்வாக்கை உயர்த்தும். சமீப காலமாக பொருளாதார நெருக்கடி இந்தியாவில் பரவி வரும் போது மத்திய அரசாங்கத்தின் பார்வை இத்தகைய பண்பாட்டு பிற்போக்குத்தனங்களின் பால் செல்வது அவர்களுக்கு திசை திருப்பவும் வசதியாக இருக்கிறது. சில மாநிலங்களில் காங்கிரசு ஆட்சியில் இருந்தாலும் அவர்களும் மிதவாத இந்துத்துவாவையே தமது அரசியல் செல்நெறியாக கொண்டிருக்கின்றனர். தற்போது ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் மனுசிங்வி, சசிதரூர் ஆகிய காங்கிரசு தலைவர்கள் மோடியிடம் சரணாகதியே அடைந்திருக்கின்றனர்.

ஆக வட மாநிலங்களில் தமது வாங்கு வங்கியை தக்க வைக்க பாஜக இப்படி நடந்து கொள்வது இயல்பான ஒன்று. அதாவது தமிழகத்தையும், தமிழையும் புறக்கணிப்பதற்கு இப்படி ஒரு அடிப்படை இருக்கிறது. மற்றபடி சமஸகிருதத்தை விட தமிழ் மூத்த மொழி என்று மோடி பேசவில்லை. பொதுவில் தமிழ் மூத்த மொழி என்றுதான் பேசியிருக்கிறார். தமிழகத்தில் அ.தி.மு.க தவிர்த்து மற்ற வாக்கரசியல் கட்சிகள் இந்துத்துவ கொள்கைகளை அவ்வப்போது விமரிசிக்கத்தான் செய்கின்றனர். இருப்பினும் இக்கட்சிகள் பாஜக-வை திட்டம் சார்ந்து எதிர்க்கின்றனவே அன்றி பாஜக – ஆர்.எஸ்.எஸ் -ஐ ஒட்டு மொத்தமாக கொள்கை சார்ந்து போதுமான அளவு விமரிசிப்பதில்லை. வாக்கரசியலுக்கு வெளியே உள்ள அமைப்புகள், ஜனநாயக சக்திகள்தான் கொள்கை சார்ந்து எதிர்க்கின்றனர். அந்த அழுத்தம் அதிகமாகும் போது பெரிய கட்சிகளும் எதிர்க்கும்.

தமிழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் ஈராயிரம் ஆண்டிற்கு மேலாக பகை உள்ளது. இந்தப் போரில் சமஸ்கிருதம் மக்கள் மொழியாக உருவெடுக்கவில்லை. தமிழ் இன்றும் மக்களிடையே நிலைத்து இருக்கிறது. இது இந்துத்துவவாதிகளின் கண்ணை உறுத்துவது இயல்பான ஒன்றுதான். நாம் போரைத் தொடர்வோம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் அல்ல – மரபணு ஆய்வு முடிவுகள் !

mohenjo-daro-Indus-Valley-Civilization-Slider

ரப்பா நாகரிகம் என்றழைக்கப்படும் சிந்துச் சமவெளி நாகரிக (Indus Valley Civilisation – IVC) மக்களின் மரபு வழி அடையாளம் குறித்த மர்மம் மற்றும் சர்ச்சைகளுக்கு கடந்த வியாழனன்று (05-09-2019) வெளியிடப்பட்ட இரண்டு மரபணு ஆய்வுகள் மறுக்கவியலாத பதிலை அளித்துள்ளன. மேலும், ஆரியர்களின் வருகை படையெடுப்பின் விளைவானதா அல்லது இடம்பெயர்வு குடியேற்றத்தின் மூலமானதா என்கிற கேள்விக்கும் விடையளித்துள்ளன.

சிந்துச் சமவெளி நாகரிகம் உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்று. தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பகுதிகளில் தோராயமாக கி.மு3300 முதல் கி.மு1300 வரை (5000 ஆண்டுகளுக்கு முன்) செழித்திருந்த இந்நாகரிகம் மெசபடோமிய மற்றும் எகிப்திய நாகரிகங்களின் சமகாலத்தியதும் அளவில் அவற்றைவிடப் பெரியதுமாகும்.

சிந்துச் சமவெளி நாகரிக மக்கள் யார், எங்கிருந்து வந்தனர், அவர்களுடைய நாகரிகம் என்ன? வட மற்றும் தென்னிந்திய மக்களின் மூதாதையர்கள் யார்? என்ற இரண்டு கேள்விகளுக்கும் இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

Indus-Valley-Civilizationமத்திய ஆசியாவிலிருந்து சிந்துச் சமவெளி நாகரிகத்தின் இறுதிக் காலத்தில் படையெடுத்தோ அல்லது இடம்பெயர்ந்தோ வந்த ஆரியர்களின் மொழியே இந்தோ-ஐரோப்பிய மொழியான சமஸ்கிருதம். அவர்களின் கலாச்சாரமே வேத கலாச்சாரமும் வேதங்களும் என்பது மொழியியல் மற்றும் தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து. குறிப்பாக சிந்து சமவெளி நாகரீகம் வேத நாகரீகம் அல்ல என்பது தொல்லியல் ஆய்வறிஞர்களின் கருத்து.

ஆனால் இந்துத்துவ சார்பு அறிஞர்களோ, இந்தக் கருத்துக்கள் முதலில் ஐரோப்பிய ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டதைக் காரணம் காட்டி, காலனியவாதிகள் இந்தியர்களை பிரித்தாள்வதற்காக பரப்பிய கருத்தாகக் கூறி வருகின்றனர். மேலும், திராவிடர்கள் முந்தி வந்தனர், ஆரியர்கள் பிந்தி வந்தனர் என்பது போன்ற வாதங்கள் எல்லாம் வெளியில் இருந்து வந்து ஆட்சியைப் பிடித்த ஆங்கிலேயர்கள் தங்களது ஆதிக்கத்திற்கு ஒரு தார்மீக நியாயத்தைக் கற்பிப்பதற்காக எடுத்த முயற்சிகளின் ஒரு பகுதியே என்பதுதான் இந்த இந்துத்துவ அறிஞர்களின் வாதம்.

“சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய், வேத நாகரிகமும் அதன் கலாச்சாரமுமே எல்லா இந்தியப் பண்பாடுகளுக்கும் மூலம். இந்தியப் துணைக்கண்டத்தின் முதல் நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகம் ஒரு வேத நாகரிகமே. அதனடிப்படையிலேயே இந்நாடு இந்தியா என்றழைக்கப்படுகிறது. அனாதிக்காலம் தொட்டு இங்கே இந்து மதமும் சமஸ்கிருதமும் நிலவி வந்தது” என்பதே இந்துத்துவ அரசியலின் அடிப்படை. இந்தப் பின்னணியில்தான் அவர்கள் சிந்துச் சமவெளி நாகரிகம் வேத நாகரிகம் என்று நிறுவ முற்படுகின்றனர்.

படிக்க:
சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !
♦ நூல் அறிமுகம் : வேதமும் விஞ்ஞானமும்

ஹரியானா மாநிலத்தின் ராக்கிகர்ஹி என்ற இடத்தில் வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிக கால நகரம் இருந்துள்ளது. அவ்விடத்தில் தொல்பொருள் அகழ்வாய்வில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் சிந்துச் சமவெளி நாகரிக காலத்தைச் சேர்ந்த இடுகாட்டில் ஆண், பெண் இருவரின் எலும்புக்கூடுகளை கண்டுபிடித்தனர். அதில் பெண்ணின் எலும்பை மரபணு ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இவ்வாய்வறிக்கை செல்(Cell) என்ற அறிவியல் ஆய்விதழில் வெளியாகியுள்ளது.

இரண்டாவது, அறிவியல் (science) ஆய்விதழில் வெளியான “தெற்காசியா மற்றும் மத்திய ஆசிய மக்களின் மரபணு உருவாக்கம்” என்ற ஆய்வறிக்கை. இது மத்திய ஆசியா மற்றும் தெற்காசியாவின் வடபகுதியில் (குறிப்பாக ஈரான், ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில்) கண்டெடுக்கப்பட்ட 300 முதல் 8000 ஆண்டுகள் வரை பழமையான 523 மரபணுத் தொகுப்புக்களை தற்போதைய தெற்காசிய மக்களின் மரபணுவுடன் ஒப்படுவதன் மூலம் முழுதுமாக மத்திய, தெற்காசிய மக்களின் வம்சாவளி, கலாச்சாரம் மற்றும் மொழி நகர்வுகள் குறித்து ஆராய்கிறது.

mohenjo-daro-Indus-Valley-Civilizationஇதில் சிந்துச்சமவெளி நாகரிக மக்கள் மற்றும் இந்திய வம்சாவளிகள் குறித்தும் “வெளிப்புற மாதிரி”யின் (Outlier Model) மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதாவது நேரடியான சிந்துசமவெளி நாகரிக மனிதர்களின் மரபணுவைக் கொண்டு செய்யப்படவில்லை. அதோடு தொடர்பிலிருந்த பிற நாகரிகங்களில் அவற்றோடு பொருந்தாத ஆனால் சிந்துசமவெளி நாகரிகத்தோடு பொருத்தபாடுடைய 11 மரபணுக்களைக் கொண்டு செய்யப்பட்டது. தொல்லியலில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய மனிதர்களின் மரபணு பற்றிய ஆய்வுகளிலேயே மிகப்பெரும் ஆய்வு இதுவாகும்.

சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் பண்டைய ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை. பழங்கால தென்னிந்திய வேட்டைச் சமூகம் மற்றும் பழங்கால விவசாயத்திற்கு முந்தைய (புதிய கற்கால) ஈரானிய சமூகம் ஆகிய கலப்பின மரபணுவைக் கொண்டிருப்பதை இவ்விரு ஆய்வு முடிவுகளும் தெரிவிக்கின்றன.

சிந்துச் சமவெளி மக்களிடம் ஈரானிய வேளாண்குடிகளின் மரபணு இல்லை என்பதை இந்த ஆய்வு அறிக்கை நிறுவுயிருப்பதன் மூலம் இந்தோ – ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் சிந்துச் சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட காலத்திலேயே ஈரானில் இருந்து வந்து இந்திய மூதாதையினருடன் கலந்தனர் என்றும், இவர்களே பின்னர் வேளாண்மையில் ஈடுபட்டு சிந்துச்சமவெளி நாகரிகமாக வளர்ச்சியடைந்தனர் என்றும் இந்துத்துவ அறிஞர்களால் பரப்பப்பட்டுவந்த கூற்று தவறானது என்பது தற்போது ஆதாரத்துடன் நிருபணமாகியுள்ளது.

இந்தோ-ஐரோப்பிய மொழி ஈரானிலிருந்து வரவில்லை எனும்போது ஸ்டெப்பி புல்வெளி மேய்ப்பர்களின் மூலம் மட்டுமே வந்திருக்க முடியும். சிந்துச் சமவெளி நாகரிக மக்களிடம் ஸ்டெப்பி புல்வெளி நாடோடி மேய்ப்பர்களின் மரபணுவும் இல்லை என்பதிலிருந்து சிந்துச்சமவெளி நாகரிகம் வேத (ஆரிய) நாகரிகம் அல்ல என்பதும் உறுதியாகிவிட்டது.

படிக்க:
தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

“தற்கால வட இந்தியர்களிடம் குறிப்பாக இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பங்களை பயன்படுத்தும் இந்திய புரோகித சமூகங்களில் (குறிப்பாக பார்ப்பன, பனியா மேல்சாதியினர்) இந்த ஸ்டெப்பி வம்சாவளி மரபணு மிக அதிகமாகக் காணக்கிடைக்கிறது” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு.

சிந்துச் சமவெளி மக்களிடம் இல்லாத மரபணுக் கூறு இன்றைய வட இந்திய மக்களின், மேலதிகமாக பார்ப்பன- பனியா மேல் சாதியினரின் மரபணுக்களில் காணப்படுவதன் காரணம் என்ன?

இன்றைய நவீன இந்தியர்கள் அனைவருமே வடஇந்திய மூதாதையர் (Ancestral Noth Indians – ANI)  மற்றும்  தென்னிந்திய மூதாதையர் (Ancestral South Indians – ASI) ஆகிய இரு வம்சாவளியின் வழித்தோன்றல்களே. இவ்விரு வம்சாவளியினரும் சிந்துச் சமவெளி நாகரிகத்தின் அழிவிற்குப் பின்னரே தோன்றினர் என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது.

“சிந்துச்சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அம்மக்கள் வடமேற்கில் இருந்த இனக்குழுக்களுடனும் மற்றும் ஸ்டெப்பி வம்சாவளியுடனும் கலந்து ‘வடஇந்திய மூதாதையர்’ உருவாகினர். மேலும் தென்கிழக்கு குழுக்களுடன் கலந்து ‘தென்இந்திய மூதாதையர்’  உருவாகினர்” என்கிறது science இதழில் வெளியான ஆய்வு அறிக்கை.

Aryansஅதாவது, இந்தோ-ஐரோப்பிய (இந்தோ-ஆரிய) மொழிகளை இந்தியாவுக்குக் கொண்டுவந்த ஸ்டெப்பி நாடோடி மேய்ப்பர்கள் கிமு 2000 முதல் கிமு 1500 வரையிலான காலப்பகுதியில் தான் அதாவது ஹரப்பா நாகரிக வீழ்ச்சிக்குப் பின்னர்தான் வந்தனர் என்பதை இவ்விரு ஆய்வுகளும் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மக்கட்தொகுப்பு மரபணு (Population Genetics) ஆய்வில் ஏற்கெனவே நிருபிக்கப்பட்டிருந்த இக்கருத்து மீண்டும் உறுதியாகியுள்ளது.

இதன் மூலம் ஆரியப் படையெடுப்பு – அதாவது, ஆரியர்களின் படையெடுப்பினால்தான் சிந்துச் சமவெளி நாகரிகம் அழிந்தது என்ற கருதுகோல் தவறென்று நிருபிக்கப்பட்டுள்ள, அதேவேளையில் குடியேற்றங்கள் மூலமான ஆரியர் வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆரியர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்து சேர்ந்தனர், தங்களுடன் சமஸ்கிருதத்தையும், இன்னபிற வேத கலாச்சாரங்களையும் சுமந்து வந்தனர் என்பதை தற்போது வெளியாகியிருக்கும் இவ்விரண்டு ஆய்வுகளும் உறுதிபடக் கூறுகின்றன. ஏற்கெனவே இந்த உண்மைகளை தொல்லியல் மற்றும் மொழியியல் ஆய்வுகள் நிறுவி உள்ளன. தற்போது மறுக்கவியலாத வகையில் மரபணு ஆய்வுகளும் அதே முடிவுக்கு வந்தடைந்துள்ளன. வந்தேறி ஆரியர்களின் பண்பாட்டுக் கலாச்சாரமே இன்றைய வேத – பார்ப்பன கலாச்சாரம் என்பதும் நிறுவப்பட்டுள்ளது.

இவை மட்டுமின்றி இந்தியாவில் வேளாண்மை எப்போது தோன்றியது என்ற கேள்விக்கான விடைதேடலுக்கும் ஒளியை வழங்கியுள்ளன இந்த ஆய்வுகள். ஹரப்பா நாகரிகத்துக்கும் மிக முற்பட்ட காலத்தில் மத்திய ஆசியாவின் அனடோலியா என்ற ஆசியா மைனர் (தற்போதைய துருக்கி) அல்லது ஈரானில் இருந்துதான் விவசாயம் பண்டைய இந்தியாவுக்கு வந்திருக்க வேண்டும் என்றுதான் இதற்கு முன் கருதப்பட்டது. தற்போதைய ஆய்வின் மூலம், சிந்து சமவெளி மனிதரில் பண்டைய ஈரானிய விவசாயக் குடி சமுகத்தின் மரபணு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டதால், இந்திய சமூகம் தனிசுயமாக (Indigenously) விவசாய சமூகமாக முன்னேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

படிக்க:
சிந்துவெளி நாகரீகம் திராவிட நாகரீகமே
♦ ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

“தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றிய கேள்விக்கும் இந்த ஆய்வு விடையளித்துள்ளது. தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள இணையுறவை வைத்துப் பார்க்கும்போது தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்திய மூதாதைகளான வேட்டை சமூக குழுக்களுடன் (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசியிருக்கக்கூடும்” என்கிறது Science இதழில் வெளியான ஆய்வறிக்கை. அதாவது, இம்மண்ணின் தொல்குடி மக்கள் பேசிய மொழி திராவிட மொழியே என்றும் அது சமஸ்கிருதத்தை விட தொன்மையானது என்பதும் மீண்டுமொருமுறை உறுதியாகியுள்ளது.

இந்துத்துவ அரசியலின் அச்சாணியை இந்த ஆய்வுகள் முறித்துள்ளதால் அதற்கு முட்டுக் கொடுக்கும் முயற்சிகள் பல முனைகளில் இருந்தும் வந்துள்ளன. ராக்கிகர்ஹி எலும்புக்கூட்டில் ஸ்டெப்பி புல்வெளி மனிதனின் மரபணு இல்லை என்பதை மட்டும் வைத்துக்கொண்டு, ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதாக தி பிரிண்ட் இணைய இதழ், தி எகனாமிக் டைம்ஸ், தி வீக் போன்ற பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. இதை ஆர்.எஸ்.எஸ்-ன் ஆர்கனைசர் உள்ளிட்ட பல இந்துத்துவ தளங்கள் மீள்பதிவிட்டிருந்தன.

“சிந்து சமவெளி நகரங்கள் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் இடங்களாக இருந்தன என்று தொல்பொருள் சான்றுகள் கூறுகின்றன. அதனால், ஒரு நபரின் மரபணுவைக் கொண்டு செய்யப்பட்ட ஆய்வு மற்ற மக்களுடன் பொருந்த வேண்டியதில்லை. இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் சமூகத்தின் ஒரு பிரிவினரிடம் மட்டுமே இருந்திருக்கும்” என்று விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஜொனாதன் மார்க் கெனோயர் கூறுகிறார். இவற்றை எடுத்துக்காட்டி இந்த ஆய்வுகளிலிருந்து முடிவுக்கு வரவேண்டிய அவசியமில்லை என சில இந்துத்துவ அறிஞர்கள் வாதிடுகின்றனர்.

ரிக் வேதத்தில் குறிப்பிட்டுள்ள இறந்த உடல்களை எரிக்கும் முறைகளைக் கொண்டு, வேதகாலத்திற்கு முற்பட்ட சிந்துச் சமவெளி நாகரிகத்தில் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் சமூகத்தின் கீழ்நிலையிலிருந்த பிரிவினரிடம் மட்டுமே இருந்திருக்கும். அதனால் அது மொத்த மக்கட்தொகையின் மரபணுவுடன் பொருந்த வேண்டியதில்லை என்று ஆர்.எஸ். பிஸ்த் போன்ற ஆய்வாளர்கள் கூற்றை சுட்டிக்காட்டி வாதிடுகின்றனர்.

Nadukal
மாதிரிப்படம்

இறந்தவர்களை எரிப்பதென்பது ஓரிடத்தில் தங்காமல் அலைந்து திரியும் நாடோடிகளின், குறிப்பாக ஸ்டெப்பி புல்வெளி நாடோடிகளின் வழக்கமாகும். ஓரிடத்தில் நிலையாக குடியிருக்கும் மக்களிடம் பெரும்பாலும் புதைக்கும் வழக்கம், நடுகல் நடும் வழக்கம் போன்றவை இருந்துள்ளன. மேலும், வேதமே சிந்துச்சமவெளி நாகரிகத்தின் அழிவிற்கு பின்னர் தான் வந்தது என்றான பிறகு அந்நாகரிகத்தில் வேதத்தில் குறிப்பிட்டுள்ள எரிக்கும் வழக்கம் இருந்திருக்கும் என்று வாதிடுவதை என்னவென்பது? இத்தகைய சிந்தனை மாட்டு மூளைகளுக்கு மட்டுமே சாத்தியம்.

மேலும், கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளையின் (INTACH) சார்பில் கடந்த வெள்ளியன்று (06-09-2019) இவ்விரு ஆய்வறிக்கையின் பதிப்பித்த ஆய்வாளர் குழுவைச் சேர்ந்த இந்தியர்கள் இருவரைக் கொண்டு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தப்பட்டது. பேராசிரியர் வசந்த் ஷிண்டே மற்றும் நீரஜ் ராய் இருவரும் ராக்கிகர்ஹி மரபணு ஆய்வு முடிவைக் கொண்டு ஆரியர்களின் குடியேற்றம் என்பது இல்லை என நிரூபணமாகிவிட்டது என்றும் சிந்து சமவெளி நாகரிகம் வேத நாகரிகமே என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். அதோடு, இந்தியாவிலிருந்து வெளியேறி குடியேறிய (Out of India migration theory – OIT) கருதுகோளுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் கதையளந்தனர்.

முரண்நகையாக, பேராசிரியர் வசந்த் ஷிண்டே மற்றும் நீரஜ் ராய் இருவரும் இணை ஆசிரியர்களாக இருக்கும் Science இதழில் வெளியான ஆய்வறிக்கை ஸ்டெப்பி புல்வெளி மேய்ச்சல் இனத்தைச் சேர்தோரும் அவர்களுடைய மொழியான சமஸ்கிருதமும், வேத நாகரிகமும் வெளியிலிருந்து வந்ததாக உறுதியாகக் கூறுகிறது. இந்த இரண்டாவது ஆய்வறிக்கையைப் பற்றி இவர்களும் சரி, இந்துத்துவ ‘அறிஞர்’ குழாமும் சரி, வாய் திறக்கவே இல்லை.

இந்தியா முழுமைக்கும் ஒற்றைப் பண்பாடு, கலாச்சாரத்தை திணிக்கும் நோக்கில் சமஸ்கிருதமயமாக்கப்படுகிறது. ஆனால் அறிவியல் ஆய்வுகளோ, நம்முடைய இந்தியப் பண்பாடு ஒற்றை மூலத்தைக் கொண்டதல்ல; மாறாக பன்முக மூலத்தைக் கொண்டது என நிருபிக்கின்றன.

ஒற்றைக் கலாச்சாரக் கருத்துருவாக்கத்தை மக்களிடம் பரப்புவதன் மூலம் இந்துத்துவ முனைவாக்கம் தெடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த மதங்கள், கலாச்சாரங்களை பிரித்தொதுக்குவதன் மூலம் இம்முனைவாக்கம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அஸ்ஸாமில் தற்போது தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 19 இலட்சம் மக்களை குடியுரிமையற்றவர்கள் என இரண்டாம் நிலைக்கு தள்ளியுள்ளது இந்துத்துவ பாசிசம். இந்தியா முழுமைக்கும் தேசியக் குடிமக்கள் பதிவேடு திட்டம் அமுல்படுத்தப்படும் என்றும் இந்து, பௌத்த, சீக்கியர் தவிர பிற மக்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சமஸ்கிருதமே இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய், வேத நாகரிகமும் அதன் கலாச்சாரமுமே எல்லா இந்தியப் பண்பாடுகளுக்கும் மூலம் என்ற இந்துத்துவத்தின் அச்சாணியை அறிவியல் முறித்துவிட்டது. அதன் முதுகெலும்பை முறிப்பதற்கு அவர்களது ஆயுதத்தை நாம் கையிலெடுக்க வேண்டும். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த முதல் வந்தேறி கலாச்சாரமான ஸ்டெப்பி புல்வெளி மரபணு கொண்டவர்களிடமிருந்து பிரித்தொதுக்குதலை துவங்குமாறு நாம் கோரவேண்டும். அறிவுத்தளத்திலும் தெருவிலும் அதை வீழ்த்தி பன்முகத் தன்மையை மீட்டெடுக்கவில்லையெனில் கலாச்சாரத் திணிப்பு தவிர்க்கவியலாததாகி நாம் இரண்டாம் குடிமக்களாக்கப்படுவோம்.

– மார்ட்டின்

மேலும் படிக்க :
An Ancient Harappan Genome Lacks Ancestry From Steppe Pastoralists or Iranian Farmers
♦ The formation of human populations in South and Central Asia
♦ Study of ancient DNA throws light on origin of farming, languages
♦ Mysterious Indus Valley People Gave Rise to Modern-Day South Asians
♦ ‘We are a multisource civilisation, not unisource’: Tony Joseph
♦ The Press Conference On Rakhigarhi Findings Throws Up More Questions Than Answers
♦ Forever, even in death
♦ New DNA study debunks Aryan invasion theory

தமிழ் இலக்கிய வரலாற்றுப் புதையல் PDF வடிவில் !

3

( தமிழறிஞர் மு. அருணாசலம் அவர்கள் எழுதிய நூற்றாண்டுவாரியான இலக்கிய வரலாற்று நூல்கள் அனைத்தும் pdf வடிவில் )

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ருபதாம் நூற்றாண்டில் வேறு எந்த தமிழறிஞரும் செய்திராத ஒரு பெரும் தமிழ்ப்பணியை சிறப்பாகச் செய்து முடித்தவர் அறிஞர் மு. அருணாசலம் ஆவார். ஒன்பதாம் நூற்றாண்டு தொடங்கி பதினேழாம் நூற்றாண்டு வரையிலான தமிழ் இலக்கிய வரலாற்றை 15 நூல்களில் 5,404 பக்கங்களில் அரிய தகவல்களைப் பதிவு செய்துள்ளார். இந்நூல்களுக்கான பொருளடக்கத்தை இறுதியாக 417 பக்கங்களில் பார்க்கர் நிறுவனம் பகுத்து தொகுத்துக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பக்கங்களையும் எப்படி ஒரு மனிதன் படிக்க முடியும் என்று நீங்கள் மலைக்க வேண்டாம். இந்நூற்களில் உள்ள முன்னுரைகளை ( குறிப்பாக 13, 14-ம் நூற்றாண்டு முன்னுரைகள் ) நீங்கள் படித்துவிட்டு தொடர்ந்து இந்த நூல்களில் உள்ள பொருளடக்கப் பக்கங்களைப் புரட்டினால் உங்களுக்குத் தேவையான பகுதிகளை கண்டெடுத்து தேவையான பொழுது படித்துக் கொள்ளலாம்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட செய்தியை நீங்கள் படிக்க வேண்டும் என்று விரும்பினால் கடைசியில் கொடுக்கப்பட்டுள்ள பொருளடக்கம் சார்ந்த நூலைப் புரட்டி அந்தப் பகுதி எந்த தொகுதியில் எந்த பக்கத்தில் உள்ளது என்பதை உடனே தெரிந்து கொள்ளலாம். ஆகவே இந்நூலின் தொகுதிகளைக் கண்டு திகைப்படைய வேண்டியதில்லை.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

தமிழ் இலக்கிய வரலாறு : ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : ஒன்பதாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு : தமிழ்ப் புலவர் வரலாறு பத்தாம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினோராம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : பன்னிரண்டாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு பதின்மூன்றாம் நூற்றாண்டு : தமிழ்ப் புலவர் வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு : தமிழ்ப் புலவர் வரலாறு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினைந்தாம் நூற்றாண்டு

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 2

தமிழ் இலக்கிய வரலாறு : பதினாறாம் நூற்றாண்டு பாகம் – 3

தமிழ் இலக்கிய வரலாறு : பதினேழாம் நூற்றாண்டு பாகம் – 1

தமிழ் இலக்கிய வரலாறு : நூற்றாண்டு முறை 9 முதல் 16 வரை

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

அசோக் லேலாண்ட் : மிகை உற்பத்தி ! வேலை நாள் குறைப்பு சதி !

Ashoke-Layeland

அசோக் லேலாண்ட் -ல் மிகை உற்பத்தி ! வேலை நாட்களைப் பறிக்கும் சதியை முறியடிப்போம் !

ன்பார்ந்த தொழிலாளர்களே !

இலாபத்தை தின்னது, நிர்வாகம்! வயித்து வலி மருந்து தொழிலாளிக்கா?

சோக் லேலாண்ட் நிர்வாகம் உலகமயமாக்கத்திற்கு பிந்தைய 26 ஆண்டுகளின் உற்பத்தியை சாரமாக பார்த்தால் லேலாண்டின் மிகை உற்பத்தி கொள்கையை புரிந்து கொள்ள முடியும். தேவையை விட அதிகமாக தின்றால் வயிற்று வலி ஏற்படும் என்பது எப்படி இயற்கை விதியோ முதலாளித்துவ மிகை உற்பத்தியால் சந்தையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

இதுபோல நாடு முழுவதும் உள்ள ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிகை உற்பத்தி செய்து பெருவாரியான வாகனங்களை சந்தையில் தள்ளியுள்ளது. மிகை உற்பத்தியால் தற்காலிக தேக்கத்தை சந்தித்து நிற்கிறது,ஆட்டோமொபைல் சந்தை!

ஆண்டு உற்பத்தி வர்த்தகம் இலாபம்
1993 – 94 24,226 வாகனங்கள் 1,181 கோடி 35 கோடி
2003 – 04 48,654 வாகனங்கள் 3,527 கோடி 194 கோடி
2018 – 19 1,97,366 வாகனங்கள் 29,165 கோடி 1,983 கோடி
2016 – 19 (3 ஆண்டு) 5,17,305 வாகனங்கள் 77,327 கோடி 4,923 கோடி

ஆட்டோமொபைல் சந்தையில் ஏற்பட்டுள்ள தேக்கத்திற்கு பிரதான காரணம் சந்தையை கணக்கில் கொள்ளாத, இலாபத்தை மட்டும் மையமாகக் கொண்ட முதலாளித்துவ மிகை உற்பத்தி கொள்கையே ஆகும்.

ஆட்டோமொபைல் வீழ்ச்சி, பொருளாதார மந்தம்: மத்திய அரசின் சதித்திட்டம்!

narendra-modi-gstமற்றொருபுறம் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான ஆட்சியானது சிறு குறு முதலீட்டாளர்கள், விவசாயிகள், தொழிலாளர்களை ஒழித்துக்கட்ட பலமுனைகளில் திட்டமிட்டு கார்ப்பரேட் கும்பலை வாழவைக்க இடையறாது வேலை செய்து வருகிறது. குறிப்பாக, பணமதிப்பு நீக்கம் முதல் GST வரிக் கொள்கை, விவசாயிகளின் விளைபொருளுக்கு விலை தீர்மானிக்காமல் இருப்பது, 44 தொழிலாளர் சட்டங்களை குப்பைத் தொட்டிக்கு அனுப்பும் சட்ட திருத்தங்கள் என்று தடாலடியாக செயல்பட்டு வருகிறது.

மத்திய அரசு உள்நாட்டு மக்களின் தொழில்களை பறித்து கார்ப்பரேட் கொள்ளையரிடம் தாரை வார்க்க செயல்பட்டு வருகிறது. இதனால் பொது மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்து வாங்கும் சக்தியும் குறைந்துவிட்டது. காவிகள் தீவிரப்படுத்தும் இந்த பொருளாதாரக் கொள்கை பெருவாரியான ‘சூத்திரவாளை’ குறிவைத்தே நகர்த்தப்படுகிறது. மக்களின் பொருளாதாரம் மீட்சியடையும் என்பதற்கு எந்த அடிப்படையுமில்லை.

*மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கை, முதலாளிகளின் மிகை உற்பத்தி கொள்கை இரண்டு காரணங்களால் இன்று நாடு பொருளாதார மந்தம், ஆட்டோமொபைல் வீழ்ச்சி என்று வீழ்ந்து கிடக்கிறது.* இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு சட்டவிரோதமாக வேலை நாட்கள் – குறைப்பு, சம்பள வெட்டு, ஆட்குறைப்பு -ஆலை மூடல் என்று தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

படிக்க:
♦ கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ? 
♦ தொழிலாளர்களை வஞ்சிக்கும் தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் !

அசோக் லேலாண்டில் மட்டும் முதலாளித்துவத்தின் நிபந்தனையற்ற உற்பத்தியால் 2017-ம் ஆண்டு வாரத்தில் 6-வது வேலை நாளை சட்டவிரோதமாக பறித்துக் கொண்டது, தற்போது சந்தை நிலைமையைக் காட்டி வாரத்தில் ஐந்தாவது நாள் வேலைகளையும் பறிக்கத் திட்டமிட்டு போனஸ் வழங்காமல் சங்கத்தை நிர்ப்பந்திக்கிறது, லேலாண்டு நிர்வாகம்.

தொழிற்சங்க தலைமைகள் தொழிலாளர் வர்க்கத்தின் தியாகம் செறிந்த போராட்ட வரலாற்றை வசதியாக மறந்துவிட்டு, கார்ப்பரேட் நிர்வாகத்திடம் நடப்பு காலாண்டில் இலாபம் குறைந்த கதையை கேட்டுக்கொண்டு தொழிலாளர் வாழ்நிலையை மறந்து விட்டனர். இதனால் வேலை நாள் பறிப்பு, உற்பத்தி உயர்வு – உள்ளிட்ட தொழிலாளர்கள் மீதான தாக்குதல் தினந்தோறும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

ashokleylandஅசோக் லேலாண்டின் லாபம் குறைகிறது என்று சட்டவிரோதமான வேலைநாட்கள் குறைப்புக்கு முன் தொழிற்சங்கங்கள் சரணாகதியாகிவிட்டது. இதனால் ஒசூரில் பிற ஆலை நிர்வாகங்கள் இதையே முன்னுதாரணமாக காட்டி பல விதமான அடக்குமுறைகளை ஏவி வருகின்றன.

காண்ட்ராக்ட், தற்காலி தொழிலாளர்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்டவர்கள் வேலை இழந்துள்ளனர். பணியில் இருப்பவர்களில் மாதத்தில் சரிபாதி வேலை நாட்கள் பறிக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் மொத்த தொழிலாளர்களும் உரிமை பறிப்புக்கு எதிராக அரசியல் எழுச்சி ஏற்படுத்த வீதியில் திரளவேண்டிய தேவை முன் வந்துள்ளது.

படிக்க:
♦ அசோக் லேலண்ட் : அநியாயமான வேலைநாள் பறிப்பும் சம்பள வெட்டும் !
♦ ஓசூர் அசோக் லேலாண்டில் சட்டவிரோத லே – ஆஃப் !

முதலாளித்துவத்தின் லாபவெறி பிடித்த மிகை உற்பத்தி கொள்கையால் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் பறிக்கப்படுவது மட்டுமில்லாமல் நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது. ஆகையால், மத்திய அரசின் கார்ப்பரேட் ஆதரவு பொருளாதாரக் கொள்கைக்கும் முதலாளித்துவ இலாபவெறி பிடித்த மிகை உற்பத்தி கொள்கைக்கும் ஓர் முடிவு கட்டினால் தான் சிறு – குறுந்தொழில்கள், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்க முடியும். மக்கள் கையில் பணப்புழக்கம் ஏற்படும். மக்கள் வாழ முடியும். தொழிலாளர்களின் சட்ட உரிமைகள் கூட பாதுகாக்க முடியும் என்பது தற்போது வெளிச்சமாகி விட்டது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – அணிகள்,
அசோக் லேலாண்ட் – 1 & 2 , ஒசூர்.
தொடர்புக்கு : 97880 11784.

நூல் அறிமுகம் : போர் நினைவுகள் : 1876 – 1877

வெள்ளை அமெரிக்க அரசின் ஆதிக்கத்தின் கீழ் தங்களுடைய மண்ணை, மொழியை, பண்பாட்டை இழந்து, இன்றுவரை தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வறுமையில் வாழ்ந்தபடி தொடர்ந்து போராடி வரும் அமெரிக்கக் கண்டங்களைச் சார்ந்த பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் வாழ்வையும் வரலாற்றையும் முன்வைக்கும் விதத்தில் விடியல் வெளியிடும் மூன்றாவது நூல் இது. … பத்தொன்பதாம் நூற்றாண்டில் வெள்ளை அமெரிக்க அரசிற்கு எதிராக நடந்த போரில் நேரடியாகப் பங்கேற்ற பழங்குடியினரின் வாய்மொழி வரலாற்றுப் பதிவுகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. (நூலின் பதிப்புரையிலிருந்து…)

மாபெரும் சூ யுத்தம் என்பது அமெரிக்க இராணுவத்தின் படையணிகளால் 1876 மார்ச் மாதத்திலிருந்து 1877 மே மாதம் வரை பதினைந்து மாதங்களாக டெட்டோன்கள் அல்லது மேற்குப் பிரதேசத்தைச் சேர்ந்த பழங்குடிகள், சூ பழங்குடிகள் மற்றும் வடக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய பல்வேறு பழங்குடி இந்தியர்களின் { இந்நூல் முழுவதிலும் இந்தியர்கள் என்று குறிப்பிடப்படுபவர்கள் அமெரிக்காவில் வாழும், செவ்விந்தியர்கள் என்று அறியப்பட்டிருக்கும் பழங்குடி இந்திய மக்களே. ஆசியாவின் துணைக்கண்டமாகிய இந்தியாவில் வாழும் மக்கள் அல்ல – (தமிழ் மொ-ர்) } மீது மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான யுத்தங்களையும் மோதல்களையும் உள்ளடக்கியதாகும்.

தற்காலத்திய மான்டானா, வியோமிங், நெப்ராஸ்கா மற்றும் தெற்கு டகோட்டா ஆகியவற்றின் பகுதிகள் உள்ளிட்ட பரந்த நிலப்பரப்பில் நிகழ்ந்த பல்வேறு நிலைகளிலான பதினைந்து மோதல்களை இந்தப் போர் உள்ளடக்கியிருந்தது. சூ பழங்குடிகளாலும் சேயென் பழங்குடிகளாலும் (அது போலவே பிற பழங்குடிகளாலும்) உரிமை கொண்டாடப்பட்ட மாபெரும் வடக்குச் சமவெளியில் வெள்ளையர்கள் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவியதுதான் இந்தப் போருக்குக் காரணமாக இருந்தது. இந்தப் போரின் முடிவில் பழங்குடிகளுக்கிடையிலான ஒற்றுமை சீர்குலைந்தது. பழங்குடி மக்கள் டகோட்டா பிரதேசம், நெப்ராஸ்கா, மற்றும் இந்தியப் பிரதேசம் (தற்போதைய ஓக்லஹோமா) ஆகியவற்றில் அவர்களுக்கென ஒதுக்கித்தரப்பட்ட (ரிசர்வேசன்) {அமெரிக்காவின் வெள்ளை அரசாங்கத்தால் இந்தியர்களுக்கென ஒதுக்கித் தரப்பட்ட நிலப்பரப்புகள் ஏஜென்சிகள் என்றும், இந்த நிலப்பரப்புகளில் குடியேறும் இந்தியர்கள் எஜென்சி இந்தியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள் (மொ-ர்)} பகுதிகளில் சிதறிப் போனார்கள் அல்லது கனடாவுக்கு அகதிகளாகச் சென்றார்கள்.

மாபெரும் சூ போரில் ஈடுபட்ட டெட்டோன் சூ பழங்குடிகள் அல்லது லகோட்டா பழங்குடிகள் மற்றும் வடக்கே பிரதேசத்தைச் சேர்ந்த சேயென் பழங்குடிகள் ஆகிய இரு பழங்குடிகளும் வெவ்வேறு மொழிகளைப் பேசுபவர்களாக இருந்தபோதிலும் 1870-களின் மத்தியில் ஒன்றையொன்று பாதிக்கக் கூடியவையாக அமைந்திருந்த, ஒத்த தன்மைகளைக் கொண்ட இணையான பண்பாட்டுப் போக்குகளைக் கொண்டிருந்தார்கள். மேற்குப் பகுதியிலிருந்த மாபெரும் ஏரிகளை ஒட்டிய நிலப் பகுதியில் ஒரு காலத்தில் வாழ்ந்தவர்களான அல்கோங்கிய மொழி பேசும் சேயென் பழங்குடிகள் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், எருமைக் கூட்டங்களை வேட்டையாடுவதற்கென மிஸ்ஸோரி நதியின் கிழக்குப் பகுதியிலுள்ள புல்வெளிகளில் குடியேறினார்கள். குதிரைகளின் வரவு அதிகரித்ததன் காரணமாக அவர்கள் மேற்கு நோக்கி இடம் பெயர்வதும் தொடர்ந்து நீடித்தது. (நூலிலிருந்து பக்.7-8)

படிக்க:
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை
அமெரிக்க அரசு ஒடுக்குமுறையை எதிர்க்கும் பழங்குடிகள் – படங்கள்

அன்றிரவு அவர்கள் புறப்பட்டார்கள்; பகல் நேரத்தில் இந்தியர்களின் முகாமை அடைவதற்காக மெதுவாகப் பயணம் செய்தார்கள். உயரமான அந்தக் குன்றை அடைந்ததும், இந்தியர்களின் முகாம் எங்கே இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக ஜெனரல் மைல்லை அந்தக் குன்றின் மேல் அவர்கள் கூட்டிச் சென்றார்கள், அவர் அதைப் பார்த்துவிட்டுக் கீழே இறங்கிவந்தார். கீழே ஆற்றுக்குப் பக்கத்தில் இருந்த இராணுவப் படைகளிடம் அவர் திரும்பிச் சென்றார். இந்தியர் ஒருவர் அந்தக் குன்றின் மேல் ஏறி வருவதை அவர்கள் கண்டார்கள். அவர் முகாமிற்குத் திரும்பிப் போனார்.

ஆனால் முகாமில் எதையும் தெரியப்படுத்தாமல் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். உளவு பார்ப்பவர்கள் இருவரை மேலே முகாமிற்குப் பக்கத்தில் ஜெனரல் மைல்ஸ் அனுப்பி வைத்தார். முகாம் அவர்களது பார்வையில் பட்டதும் அவர்களில் ஒருவர் திரும்பி வந்தார்; முகாம் அமைதியாக இருப்பதாகவும், ஆள் நடமாட்டம் ஏதுமில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஓடையில் குதிரைகளைத் தளர்நடையில் ஓட்டிக் கொண்டு அவர்கள் மேலே வந்தார்கள். மேலே வந்து சேர்ந்ததும் குறிப்பிட்ட இடத்தின் வழியாகப் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தினார்கள்.

சில குதிரைகள் சிப்பாய்களுடன் கீழே விழுந்தன. (1900-இல்) நடன இல்லம் இருந்த இடத்தில்தான் முதல் தோட்டா வெடித்தது. இந்தியர்களின் குதிரைகள் நாலா திசைகளிலும் மிரண்டோடுவதையும், பெண்களும் குழந்தைகளும் பைன் மரங்களிடையே மறைந்து கொள்வதற்காக குன்றுகளை நோக்கி ஓடுவதையும் நீங்கள் பார்த்திருக்க முடியும். அப்போது வெளிச்சம் முழுமையாக வந்திருக்கவில்லை.

சண்டை நடந்து கொண்டிருந்தபோது, இந்தியர்கள் ஓடைப் படுகையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். உளவுப் பணி செய்து வந்த ‘கூனன்’ என்ற பெயர் கொண்ட இந்தியரொருவர் மைல்ஸுடன் இருந்தார். அவர் உரக்கக் கூவியபடியே அந்த இந்தியர்களை நோக்கி இறங்கி வரத் தொடங்கினார். இந்தியர்கள் உடனே சுடுவதை நிறுத்தினார்கள். சுடுவதை நிறுத்தும்படி மைல்ஸும் ஆணையிட்டார். பிறகு ‘நொண்டி மானும் ‘ வேறு சிலரும் ஓடையை விட்டு மேலே வந்தார்கள். ‘நொண்டி மான் அவரைப் பார்க்க விரும்புவதாகவும், அவருடன் சமாதானம் செய்து கொள்ள விரும்புவதாகவும் மைல்ஸிடம் ‘கூனன்’ வந்து சொன்னார்.

ஓர் அதிகாரியை அழைத்துக்கொண்டு ‘நொண்டி மான் இருந்த இடத்திற்கு மைல்ஸ் சென்றார். அவர்களுடைய ஆயுதங்களைக் கீழே போடுமாறு மைல்ஸ் அவர்களிடம் சொன்னார். ‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே போட்டார். தங்கள் துப்பாக்கிகளையும் குதிரைகளையும் அவர்கள் ஒப்படைத்து விட வேண்டும் என்றும், அவை கியோக்கிற்குக் கொண்டு செல்லப்படும் என்றும் அவர்களிடம் அவர் சொன்னார். ‘நொண்டி மானின்’ மகன் ஒரு போர்க் கவசத்தை அணிந்திருந்தார்.

‘நொண்டி மான்’ தனது துப்பாக்கியைக் கீழே வைத்த போது, அது வெடிப்பதற்குத் தயாரான நிலையில் இருந்தது. அப்போது ‘ நொண்டி மானின் ‘ மகன் சொன்னார், “ நான் ஒரு போராளி. என்னுடைய துப்பாக்கியை யாரிடத்திலும் நான் தரமாட்டேன். ஏற்கனவே அவர்கள் என் பாட்டியைக் கொன்று விட்டார்கள்.” வயது முதிர்ந்த பெண்ணொருத்தியை அவர்கள் கொன்றிருந்தார்கள். ‘நொண்டி மானின்’ மகனிடம் ‘ வெள்ளை எருது ‘ தன் குதிரையைச் செலுத்தினார்.

அவருடைய துப்பாக்கியைப் பறிப்பதற்காக அதை இறுகப் பற்றினார். அந்த அதிகாரி ‘நொண்டி மானின்’ கையைப் பிடித்துக்கொண்டார். ஆனால் தனது துப்பாக்கியை அவர் கைவிட மறுத்தார். அதைத் தந்து விடும்படி அவரை இணங்கச் செய்வதற்கு “ நொண்டி மான் முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. அப்போது ”சரி மகனே,” என்று சொல்லிவிட்டு ‘ நொண்டி மான்’ ஓடிப் போய்த் தனது துப்பாக்கியை எடுத்து மைல்ஸை நோக்கிச் சுட்டார். ‘நொண்டி மானின்’ மகன், ‘வெள்ளை எருதுவைச் சுட முயற்சி செய்தார். ஆனால் துப்பாக்கிக் குழலை ‘ வெள்ளை எருது’ விலக்கித் தள்ளினார். ஒரு சிப்பாய் ஓடிப்போய் ‘நொண்டி மானின்’ மகனைச் சுட்டார். ஆனால் குறி தவறிவிட்டதால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டார். தங்கள் துப்பாக்கிகளால் சுட்ட பிறகு “ நொண்டி மானும்’, அவருடைய மகனும் ஓடைக்கு ஓடினார்கள்.

படிக்க:
“இந்தியராக நான் பெருமை கொள்ளவில்லை” : அமர்த்தியா சென்
முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

 

ஆனால் அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்தபோது “ நொண்டி மானின்’ மகன் பலவீன மடைந்தவரைப்போல் தனது துப்பாக்கியைக் குழல் பகுதியைப் பற்றி இழுத்துக் கொண்டு வந்தார். உடனே அவருடைய தந்தை அவருக்கு உதவியாக அவருடைய தோளைப் பற்றித் தூக்கிக் கொண்டார். பிறகு யாரோ சிலர் சுடத் தொடங்கினார்கள். எல்லோரும் வீழ்த்தப்பட்டார்கள். சிப்பாய்கள் ஓடிப் போய்ப் பார்த்தபோது, ‘நொண்டி மானின்’ மகன் எழ முயற்சித்தார். ஆனால் அவர் மிகவும் பலவீனமாக இருந்தார். (உளவுப் பணி செய்து வந்த) பாப் ஜாக்சன் அவரைத் தலையில் சுட்டார். (நூலிலிருந்து பக்.162-163)

நூல் : போர் நினைவுகள் : 1876 – 1877
(பழங்குடி அமெரிக்க இந்தியர்களின் மனப்பதிவுகள்)
தொகுப்பு : ஜெரோம் ஏ. கிரீன்
தமிழில் :  வி. நடராஜ்

வெளியீடு : விடியல் பதிப்பகம்,
23/5, ஏ.கே.ஜி. நகர், 3-வது தெரு, உப்பிலிபாளையம் – அஞ்சல்,
கோயம்புத்தூர் – 641 015.
தொலைபேசி எண் : 0422 – 2576 772 ; 94434 68758
மின்னஞ்சல் : vidiyal@vidiyalpathippagam.org

பக்கங்கள்: 184
விலை: ரூ 80.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : tamilbooksonline | newbooklands

குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெற்றோரின் பங்கு இல்லையா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 07

ஆறு வயதுக் குழந்தைகளின் மகிழ்ச்சிகளும் வருத்தங்களும்

னால் இந்த அதிசயம் எனக்கு வருத்தத்தையும் அளித்தது. எல்லாக் குழந்தைகளின் மனதும் அமைதியாக இல்லை. பலருக்குப் பல கஷ்டங்கள் உள்ளன என்பது எனக்குத் தெரியும், இதைப் பற்றி மறைக்காமல் குழந்தைகள் எழுதுவார்களென நான் எதிர் பார்த்திருக்க வேண்டும். என் அன்புச் சிறுவனே, சிறுமியே! உண்மையிலே இப்படிப்பட்ட துக்கமா உங்களை ஆட்கொள்கிறது?

“மலர்கள், பறவைகள், என் மாஷா பொம்மை எனக்கு மகிழ்ச்சி தருகின்றன. மாஷா புத்திசாலிப் பெண். நன்கு படிக்கிறாள், நான் சொல்வதைக் கேட்கிறாள். நாங்கள் சேர்ந்து தூங்குகிறோம், நான் அவளுக்குக் கதை சொல்கிறேன். விரைவில் அம்மா திருமணம் செய்து கொள்ளப் போகிறாள். இதில் எனக்கு சம்மதமில்லை. என்னை போர்டிங் பள்ளியில் சேர்க்கப் போவதாக அம்மா சொன்னாள். அங்கு நன்றாயிருக்குமாம். ஆனால் நான் அம்மாவுடன் இருக்க விரும்புகிறேன். இரவில் அம்மா தூங்கும் போது நான் விழித்தெழுந்து அழுகிறேன்.”

அந்தத் தாய்க்கு மகளின் இக்கட்டுரையைக் காட்டுவதா? நிச்சயமாகக் கூடாது! அவளை எனக்குத் தெரியும் – அவள் தன் விருப்பப்படி செயல்படக் கூடியவள், அவளது அழகால், மனதின் முரட்டுத்தனத்தையும் இரக்கமற்ற தன்மையையும் மூடி மறைக்க முடியாது. அவள் தன் மகளின் திறந்த மனதைப் பற்றி அறிந்தால், குடும்ப ரகசியத்தை வெளிப்படுத்தியதற்காக ஒருவேளை தண்டிக்கலாம். அந்தத் தாயோடு கலந்து பேச வேண்டுமா? ஆம், கட்டாயம் பேச வேண்டும். போர்டிங் பள்ளியில் மகளைச் சேர்க்காமலிருக்க ஒருவேளை அவளை ஒப்புக் கொள்ளச் செய்ய முடியலாம். தன் குழந்தையின் மகிழ்ச்சியையும் இன்பத்தையும் பறித்துக் கொண்டு சொந்த மகிழ்ச்சியைப் பெற முடியாது என அவளுக்கு சொல்வேன்.

ஆறு வயதுச் சிறுமி தாயன்பு இல்லாமல் அவதியுறும் போது அது என்ன மகிழ்ச்சி? இன்னமும் தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் உணராத ஒரு குழந்தையை மறுக்கும் ஆணிற்குப் பெண்ணின் அன்பைப் பெற அருகதையில்லை என்று சொல்லலாமா? என் அன்புச் சிறுமியே! சொந்தத் தாயின் தாக்குதலிலிருந்து உனது மென்மையான இதயத்தை என்னால் காப்பாற்ற இயலுமா?..

“எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்று என்னால் இன்னமும் சொல்ல முடியாது. அம்மா என்னை உலாவ அழைத்துச் செல்லும் போது மகிழ்ச்சியடைகிறேன். என் தாய் பத்திரிகைத் துறையில் இருக்கிறாள், எனக்கு ஏராளமான சுவாரசியமான விஷயங்களைச் சொல்கிறாள். ஆனால் அம்மா சில சமயங்களில் அழுகிறாள், இது எனக்கு வருத்தம் தருகிறது. அப்பா அம்மாவோடு சண்டை போட்டு, பிரிந்து செல்ல வேண்டும் என்கிறார். முன் போல் அப்பா என்னுடன் நட்புக் கொள்வதில்லை. இனி என்ன நடக்குமென எனக்குத் தெரியாது. இன்னொரு நகரத்திற்குப் போகலாம் என்கிறார் அம்மா. எனக்கு இதில் மிகவும் வருத்தம்.”

ஓ, சிறுவனே, நீ உன் அப்பாவை எப்படி நேசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும். நீ அவரைக் கண்டு பெருமிதம் அடைகிறாய். “என் அப்பா…. நானும் அப்பாவும்… அப்பா சொன்னார்” என்றெல்லாம் நீ அடிக்கடி பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அந்த அப்பாவா உன்னுடன் அன்பாக நடந்து கொள்ள விரும்பவில்லை?! எளிதில் காயம்பட்டு விடக் கூடிய உன் இதயத்தை விடத் தன் சொந்த உணர்ச்சிகளின் மீதா இந்த அப்பா அதிக அக்கறை காட்டுகிறார்?! இது சுய நலமல்லவா! உனது மேன்மை, அம்மாவின் மீது உனக்குள்ள பிடிப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமலா இவர் உன் அம்மாவைத் தாழ்த்துகிறார்?! கண்டிப்பாக உனது இதயத்தின் இந்தக் கூக்குரலை உனது அப்பாவிற்குக் காட்டுவேன். “அப்பாவாக இருப்பது என்றால் என்ன? உன்னால் என் இடத்தில் இருக்க முடியுமா? எனது மிக நெருங்கிய முதல் நண்பனாகத் திகழும் அப்பாவை இழப்பதை உன்னால் தாங்க முடியுமா?” என்று சில கேள்விகளை நீ உன் அப்பாவிடம் கேள். உன்னால் அப்பாவிடம் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க முடியுமா?

பெரியவர்களின் யோசனையின்மை, ஒழுங்கீனம், தம் குழந்தைகளின் பாலான கவனமின்மை முதலியவற்றை அம்பலப்படுத்தவல்ல கேள்விகளை ஏன் குழந்தைகளால் அவர்களிடம் கேட்க முடியாது? எனதருமை சக ஆசிரியர்களே, உங்கள் வகுப்பிலுள்ள ஒரு ஆறு வயதுக் குறும்புக்காரச் சிறுவன் ஒரு நாள் வகுப்பு முடிவில் எழுந்து தீவிர முகபாவத்துடன் பின்வரும் கேள்விகளை உண்மையாகக் கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்: “ஏன் இப்படி தயாராகாமல் பாடம் நடத்த வருகின்றீர்கள்? ஏன் இந்த மாதிரி சலிப்பான, பழைய முறையில் பாடங்களை நடத்துகின்றீர்கள்? எங்களுடைய வளர்ப்பிற்கு ஏன் உங்களை நீங்களே முற்றிலுமாக அர்ப்பணித்துக் கொள்ளவில்லை? இது எவ்வளவு நாள் நீடிக்கப் போகிறது?” நீங்கள் என்ன செய்வீர்கள்? ஒரு வேளை இப்படிச் சொல்வீர்களோ: “ஏ, கள்ளப் பையனே! என்னோடு இப்படிப் பேச என்ன தைரியம் உனக்கு?” இந்த நகைச்சுவையைக் கண்டு பொங்கியெழுந்திருப்பீர்களோ! இப்படி நீங்கள் செய்தால் அது முரட்டுத்தனமான நடவடிக்கையாக இருக்கும். மாறாக, வெட்கத்தால் தலை குனிந்து, முகம் சிவக்க, குற்ற உணர்வோடு “இனி அப்படிச் செய்ய மாட்டேன், வேண்டுமானால் பாருங்களேன்” என்று கூறுவது சிறப்பாக இருக்கும்.

இன்னமும் தந்தையின் அன்பையும் அரவணைப்பையும் உணராத ஒரு குழந்தையை மறுக்கும் ஆணிற்குப் பெண்ணின் அன்பைப் பெற அருகதையில்லை என்று சொல்லலாமா? என் அன்புச் சிறுமியே! சொந்தத் தாயின் தாக்குதலிலிருந்து உனது மென்மையான இதயத்தை என்னால் காப்பாற்ற இயலுமா?

அன்பான பெற்றோர்களே, இதே மாதிரியான உங்கள் குறும்புக்கார மகன் உங்களிடையே வேற்றுமைகளைக் கண்டுணர்ந்து பின்வருமாறு கூறினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்: “அன்புள்ள அப்பா! அம்மா! நான் ஒன்றும் உங்களுடன் வந்து ஒட்டிக்கொள்ளவில்லை. நீங்கள் தான் என்னைப் பெற்றெடுத்தீர்கள். எனவே தாயன்பிற்கும், தந்தையின் கவனிப்பிற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் எனக்கு உரிமையுண்டு. நான் மனதார, நெஞ்சாரத்தான் உங்களுடன் ஒன்றி விட்டேன்! எனது உரிமை, உணர்வுகள் மீது இரக்கம் காட்டுங்கள்!” “தேவையில்லாத விஷயத்தில் தலையிடாதே! நாங்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டால் உனக்கென்ன?” என்று ஒரு வேளை நீங்கள் பதில் சொல்வீர்களோ! இதன் மூலம் மகிழ்ச்சியாக, சந்தோஷமாக இருப்பதற்கு குழந்தைக்கு உள்ள மிகப் புனிதமான உரிமையை நீங்கள் மிதித்து அழிப்பவர்களாவீர்கள். அல்லது ஒரு வேளை தந்தை வெட்கத்தால் முகம் சிவக்க, தாய் கண்ணீர் சிந்த “ஆம், மகனே, நாங்கள் உன் முன் குற்றமிழைத்து விட்டோம்! உனது உரிமையையும் உணர்வுகளையும் பற்றி மறந்து விடாமல், மேற்கொண்டு எப்படி வாழுவது என்று சிந்திப்போம்” என்று மகனிடம் கூறியிருப்பீர்களோ!

அன்புள்ள ஆசிரியர்களே, பெற்றோர்களே, அஞ்சாதீர்கள்! இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமை உங்களுக்கு எப்போதுமே ஏற்படாது, ஏனெனில், உங்கள் குழந்தைகளுக்கு உரிமை உண்டு என்றாலும் இம்மாதிரியான கேள்விகளை எப்போதுமே கேட்கமாட்டார்கள். நாம் நமது குழந்தை வளர்ப்புப் பணியைச் செம்மையுறச் செய்ய வேண்டுமென அவர்கள் மட்டும் நம்மிடம் கண்டிப்பாகக் கோரினால் நமது வாழ்க்கையின் பல சமூகப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமென நான் உறுதியாக நம்புகிறேன். நமது கெட்ட, சிந்தனையற்ற வளர்ப்பின் பயனாய் இன்றைய சிறுவர்களிலிருந்து சில சமயங்களில் துஷ்டர்களும் அறிவிலிகளும் வளர்ந்தால் அதற்குக் காரணம் பெரியவர்களை, பொறுப்பற்ற வளர்ப்பாளர்களை, தாய் தந்தையரை உரிய தருணத்தில் “திருத்த குழந்தைகளால் முடியாமல் போனதேயாகும். நம்மை நாமே கேள்விகளைக் கேட்டுக் கொள்ளுமாறு குழந்தைகள் நமக்குச் சொல்கின்றனர், இவர்களின் எதிர்காலம் இக்கேள்விகளுக்கான பதில்களைப் பொறுத்துள்ளது.

விரைவில் மணியடிக்கும். குழந்தைகள் அழகிய தாள்களை என் மேசை மீது அடுக்குகின்றனர்.

“நாளை எனக்குப் பிறந்த நாள். எனவே நான் மகிழ்ச்சியடைகிறேன். நமது சிறுவர்களின் கெட்ட நடத்தை எனக்கு வருத்தம் தருகிறது. அவர்கள் நேற்று சண்டை போட்டுக் கொண்டு தாழ்வாரத்தில் ஒருவரையொருவர் அடிக்க ஆரம்பித்தனர். இப்படிச் செய்யலாமா?” (இயா)

“குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட என்னை முற்றத்திற்கு அனுப்பும் போது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். எங்கள் வீட்டு முற்றம் பெரியது. ஆனால் அம்மா என்னை எப்போதாவது தான் விளையாட அனுப்புவார். ஐந்து நிமிடம் கழித்ததும் திரும்பக் கூப்பிடுவார். எனக்கு ஒரே வருத்தமாயிருக்கும்!” (சூரிக்கோ )

“இன்றைய விழா எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு எல்லா எழுத்துகளும் தெரியும், என்னால் படிக்க முடியும். விரைவில் விடுமுறை வந்ததும் கிராமத்திற்குச் சென்று பாட்டி, தாத்தாவுடன் பொழுதைக் கழிப்பேன் என்பதும் எனக்கு சந்தோஷம் தருகின்றன. எது எனக்கு வருத்தம் தருகிறது என்று தெரியவில்லை. எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் இறந்தது எனக்கு வருத்தம் தந்தது. என்னோடு விளையாட கீவி மாமாவிற்குப் பிடிக்கும், அவர் அன்பானவராய், சந்தோஷமானவராய் இருந்தார்.” (தாத்தோ)

“அப்பா வெளியூர் வேலையை முடித்து விட்டுத் திரும்பியது எனக்கு மகிழ்ச்சியாய் உள்ளது. அவர் குழந்தைகள் பாட்டிசைக் குழுவோடு பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றிருந்தார். எனக்கும் அம்மாவிற்கும் பாட்டிகளுக்கும் பரிசுகளைக் கொண்டு வந்தார். வீட்டில் ஒரே மகிழ்ச்சி. படிக்கக் கற்றுக் கொண்டதும் எனக்கு மகிழ்ச்சி தருகிறது. பாட்டிக்கு உடம்பு சரியில்லாதது எனக்கு வருத்தம் தருகிறது.” (கோச்சா)

“முதலில், எனக்கு எதெல்லாம் மகிழ்ச்சி தருகிறது என்று சொல்கிறேன். பள்ளிக்கு என்னைக் கூட்டிச் செல்லும் போது சந்தோஷமாய் உள்ளது. பாடங்கள், நண்பர்கள், ஆசிரியர் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களைச் சந்திக்கும் போது நான் மகிழ்கிறேன். உடம்பு சரியில்லாமல் பள்ளிக்கு வராதிருந்த போது நான் மிகவும் வருத்தப்பட்டேன். மழை பெய்யும் போதும் எனக்கு வருத்தமாயிருக்கும். மழைக்காலம் எனக்குப் பிடிக்காது. அப்போது முற்றத்தில் விளையாட முடியாது.” (தாம்ரீக்கோ)

“அன்புள்ள அப்பா! அம்மா! நான் ஒன்றும் உங்களுடன் வந்து ஒட்டிக்கொள்ளவில்லை. நீங்கள் தான் என்னைப் பெற்றெடுத்தீர்கள். எனவே தாயன்பிற்கும், தந்தையின் கவனிப்பிற்கும், குடும்ப மகிழ்ச்சிக்கும் எனக்கு உரிமையுண்டு. நான் மனதார, நெஞ்சாரத்தான் உங்களுடன் ஒன்றி விட்டேன்! எனது உரிமை, உணர்வுகள் மீது இரக்கம் காட்டுங்கள்!”

“தேன்கோ ஒரு மிக அழகிய பேட்ஜை எனக்குப் பரிசளித்தான். தேன்கோ என்னை சந்தோஷப்படுத்தினான். தேன்கோ, உனக்கு நன்றி! அம்மாவும் என்னை சந்தோஷப்படுத்தினாள். சனிக்கிழமை என்னை உலாவ அழைத்து செல்வதாக அவள் கூறியிருக்கிறாள். நாங்கள் மலையில் ஏறுவோம். அப்பா நேற்று நேரங்கழித்து வந்தார், நான் தூங்கி விட்டேன். சீக்கிரம் வந்து என் சைக்கிளை ரிப்பேர் செய்து தருவதாகச் சொல்லியிருந்தார். இது எனக்கு வருத்தமளித்தது.” (வாஹ்தாங்)

இந்த அழகிய தாள்கள் எனக்கு எவ்வளவு விஷயங்களைச் சொல்கின்றன!…

இனிய, மின்சார மணி ஒலிக்கிறது.

“குழந்தைகளே, இரண்டு இரண்டு பேராக நில்லுங்கள்! உலாவச் செல்லலாம்!”

ஆனால் அங்கு என்ன நடக்கிறது? தேயாவைச் சுற்றிக் குழந்தைகள் கூட்டம். அவள் நாற்காலியில் உட்கார்ந்திருந்ததால் அவள். தலையே தெரியவில்லை. எல்லோரும் எதையோ பார்க்கின்றனர், எதைப் பற்றியோ விவாதிக்கின்றனர். சிலர் பின்னாலிருந்து குதிக்காலால் எம்பிப் பார்க்கின்றனர். சிறுவர்கள் சிறுமியரைத் தள்ளிக் கொண்டு தேயாவை நோக்கிச் செல்கின்றனர்.

“சாஷா! போய் என்ன விஷயமென்று பார்த்துவிட்டு வா!”

“என்னவென்று எனக்குத் தெரியும்!” என்கிறான் சாஷா.

“தேயா தன் முடிகளை எண்ணுகிறாள்!”

“என்ன?!”

“நேற்றும் அவள் தன் முடிகளை எண்ணினாள்.”

தேயாவை என்னிடம் கூப்பிடுகிறேன். குழந்தைகள் புடை சூழ அவள் என்னிடம் வருகிறாள்.

”தேயா, நீ என்ன செய்கிறாய்?”

“என் முடிகளை எண்ண விரும்புகிறேன். இதோ இவ்வளவு முடியை எண்ணி விட்டேன்.”

ரிப்பனால் கட்டப்பட்டுள்ள ஒரு பிடி முடியைக் காட்டுகிறாள்.

“இதில் 200 முடிகள் உள்ளன.”

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ்  பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?

தேயாவின் தலையில் எவ்வளவு முடி இருக்க முடியும் என்று குழந்தைகள் விவாதிக்கின்றனர்: 500, 1000, மில்லியன், டிரில்லியன்… இவை சிறுவர்களின் கணிப்புகள்.

“நீ முடியை எண்ணுவது நல்லது தான். உன் தலையில் எவ்வளவு முடி உள்ளது என்று தெரிந்து கொள்வது சுவாரசியமாயிருக்கும். பூங்காவிற்குப் போகலாம் வாருங்கள். அங்கே தொடர்ந்து எண்ணலாம்.”

நானும் எனது குழந்தைகளும் அதிசய நாட்டில் வாழவில்லையா என்ன?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

கேள்வி பதில் : டாலர் மட்டும் உலகம் முழுவதும் இருப்பது ஏன் ?

US-dollar-Global-Currency

கேள்வி: //டாலர் என்றால் என்ன? அது மட்டும் எப்படி உலகம் முழுவதும் இருக்கிறது? அதன் மதிப்பு எப்படி மதிப்பிடப்படுகிறது? அது எந்த மதிப்பீட்டின் பெயரில் அச்சடிக்கப் படுகிறது?//

– சந்திரன்

ன்புள்ள சந்திரன்

டாலர் என்ற பெயரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா, சிங்கப்பூர், தைவான் மற்றும் அமெரிக்காவை உள்ளிட்டு 20  நாடுகள் தமது செலவாணியை வைத்துள்ளன. ஆனால் உலகம் முழுவதும் டாலர் என்றால் அமெரிக்காவின் டாலரைத்தான் குறிப்பிடுகிறார்கள். அது உலக செலவாணி போல செல்வாக்குடன் இருக்கிறது. மேலும் கரீபியன் நெதர்லாந்து, கிழக்கு திமோர், ஈக்வெடார், மார்ஷல் தீவுகுள், சிம்பாவே போன்ற சில சிறிய நாடுகளும் கூட அமெரிக்க டாலரை அதிகாரப்பூர்வ செலவாணியாக வைத்துள்ளன.

US-dollarஇருபதாம் நூற்றாண்டின் மத்தியில் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு உலகம் முழுவதும் வளர்ந்து வந்தது. சமூக ஏகாதிபத்தியமான சோவியத் யூனியன் 90-களில் வீழ்ச்சி அடைந்த பிறகு அமெரிக்காவே ஒற்றைத் துருவ வல்லரசாக உலகில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. 1971-ம் ஆண்டு வரை பெரும்பான்மை நாடுகள் தமது செலவாணி அச்சடிப்பை தங்கத்தின் இருப்பைக் கொண்டு நடத்தின. அதன்பின் எவ்வளவு அன்னியச் செலவாணி (டாலர்) இருக்கிறது என்பதை வைத்து (கூடவே தங்கம், கடன் பத்திரங்கள்) செலவாணியை அச்சடிக்கிறார்கள். மேலும் ஒரு நாட்டில் செல்வ மதிப்பு என்பது அது எத்தனை டாலர் வைத்திருக்கிறது என்பதை வைத்து மதிப்பிடப்படுகிறது.

இது தொடர்பாக புதிய ஜனநாயகம் கட்டுரை ஒன்றின் பகுதியை கீழே தருகிறோம்.

‘‘அமெரிக்கா டாலர்களை உற்பத்தி செய்கிறது; உலகின் பிற பகுதியினர் அந்த டாலர்களால் வாங்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்கின்றனர்” என டாலரின் ஆதிக்கம் பற்றிக் கூறுகிறார், ஹென்றி லியூ என்ற பொருளாதார அறிஞர். உலகின் பிற பகுதியினர் என்பதில் சீனா, இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல; ரசியா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய வல்லரசு நாடுகளும் அடங்கும்.

இன்று உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினில் ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்கா விழுந்தால், வளர்ந்து வரும் நாடுகள் மட்டுமல்ல, பிற மேல்நிலை வல்லரசுகளும் சேர்ந்தே விழ வேண்டியதுதான். இந்த நாடுகள், தமது உற்பத்திப் பொருட்களின் சந்தைக்காக மட்டும் அமெரிக்காவைச் சார்ந்திருக்கவில்லை. ஏற்றுமதி வர்த்தகத்தின் மூலம் தாம் ஈட்டும் டாலரில் பெரும்பகுதியை அமெரிக்க அரசு வெளியிடும் கடன் பத்திரங்களில்தான் முதலீடு செய்கின்றன. அதனால்தான், அமெரிக்கப் பொருளாதாரத்தைத் தேள் கொட்டினால், இவர்களுக்கு நெறி கட்டிவிடுகிறது.

படிக்க:
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
♦ அமெரிக்காவில் தோண்டத் தோண்ட டாலர் – பட விளக்கம்

அமெரிக்கா இந்த நாடுகளை இரண்டு வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. இந்நாடுகளில் இருந்து மிகவும் மலிவான விலையில் நுகர்பொருட்களை இறக்குமதி செய்து, தனது சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. அமெரிக்காவின் இந்த இறக்குமதி சார்ந்த கொள்கையால் அதிகரித்துக் கொண்டே போகும் வர்த்தகப் பற்றாக்குறையை (ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகரிப்பதால் ஏற்படும் பற்றாக்குறை) டாலரை அச்சடித்தோ அல்லது தனது நாட்டில் முதலீடு செய்யப்படும் டாலர்களைக் கொண்டோ ஈடுகட்டிக் கொள்கிறது. வர்த்தகப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு மட்டுமின்றி, அந்நிய நாடுகளில் அதிக வட்டியில் முதலீடு செய்வதற்கும், தனது போர்ச் செலவுகளுக்கும்கூடத் தனது நாட்டுக் கடன் பத்திரங்களில் பிற நாடுகள் முதலீடு செய்யும் டாலர்களைப் பயன்படுத்தி வருகிறது.

டாலரின் மேலாதிக்கத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பிற நாடுகளின் உழைப்பையும், சேமிப்பையும் உறிஞ்சிக் கொழுக்கும் ஒட்டுண்ணியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் வாழுகிறது என்பதைதான் இது எடுத்துக் காட்டுகிறது. டாலருக்குப் போட்டியாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வராதவரை அமெரிக்காவின் இந்த ஒட்டுண்ணித்தனம் கேள்விகேட்பாரின்றிச் செல்லுபடியாகும்.

uncle-samபொருட்களை உற்பத்தி செய்வதைவிட, டாலரை இடையறாது அச்சடித்து, அதனை வெளியே புழக்கத்தில் விடுவதுதான் இப்பொழுது அமெரிக்காவில் இலாபகரமான வர்த்தகம் எனக் குறிப்பிடுகிறது எக்கானமிஸ்ட் என்ற இதழ். இதுநாள்வரை அமெரிக்காவில் அச்சடிக்கப்பட்ட மொத்த டாலரில் ஏறத்தாழ 70 சதவீத டாலர்கள் அமெரிக்காவுக்கு வெளியேதான் சுற்றிக் கொண்டுள்ளன. இதில் ஒரு 5 சதவீத டாலரை அமெரிக்கா திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டாலே அதன் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விடும் எனக் கூறப்படுகிறது. எனினும், எண்ணெய் வளம் டாலருக்கு மட்டும் விற்கப்படுவது என்ற அலாதியான ஏற்பாட்டின் காரணமாகவும், தனது இராணுவ பலத்தைக் கொண்டும் டாலரின் புழக்கத்தையும், அதன் மேலாதிக்கத்தையும் அமெரிக்கா பாதுகாத்து வருகிறது.

டாலருக்கு மாற்றாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த ஜெர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் வெறும் 0.1 சதவீதம்தான். அதே யூரோ பிராந்தியத்தைச் சேர்ந்த பிரான்சிலோ இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி சுழியமாகத்தான் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த ‘வளர்ச்சிக்கு’க்கூட இந்த நாடுகள் அமெரிக்காவைதான் நம்பியுள்ளன. அது மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த கிரீஸ், ஸ்பெயின், போர்த்துகல், இத்தாலி உள்ளிட்டு 17 நாடுகள் அமெரிக்காவைவிட மோசமாகப் பொதுக் கடன் பிரச்சினையில் சிக்கித் திண்டாடி வருகின்றன. தனது உறுப்பு நாடுகளைக்கூடக் கைதூக்கிவிட முடியாத நிலையில் உள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்காவுக்கும் டாலருக்கும் மாற்றாக வர தற்சமயம் வாய்ப்பில்லை.

உலகப் பொருளாதாரம் அமெரிக்கா என்ற ஒற்றை இஞ்சினையே நம்பி இருப்பதால், அமெரிக்காவின் டாலரும், அதன் சந்தையும் சரிந்துவிடாமல் காப்பதில் ஏனைய நாடுகள் அதிக அக்கறை காட்டுகின்றன. தனக்கு மிகக் குறைந்த விலையில் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், குறைந்த வட்டியில் கடன் கொடுக்கவும் ஏனைய நாடுகள் தயாராக இருப்பதால், அமெரிக்க ஏகாதிபத்தியம் மைனரைப் போலக் கவலையின்றி இருக்கிறது.

படிக்க:
கேள்வி பதில் : சமூக மாற்றத்திற்கு சமூக அந்தஸ்து உள்ள தலைவர் தேவையா ?
♦ உலகப் பொருளாதாரம் : பொது அறிவு வினாடி வினா – 20

டாலருக்கு மாற்றாக வேறொரு நாணயம் சர்வதேச செலாவணியாக வர வேண்டும் என்றால், அமெரிக்காவிற்குக் கடன் கொடுத்துள்ள நாடுகள் தமது டாலர் முதலீடுகளைத் திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்படும். இப்படித் திரும்பப் பெறும் முதலீடுகளை மறு முதலீடு செய்ய ஒரு இடம் வேண்டும். அமெரிக்காவுக்கு பதிலாக தங்களது பொருட்களை நுகர்வதற்கான வேறொரு சந்தையையும் அவர்கள் தேட வேண்டும். இதற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை என்பதால் டாலரின் மேலாதிக்கத்திற்கு பெரிய அச்சுறுத்தல் ஏதும் தற்சமயம் ஏற்பட வாய்ப்பில்லை.

அமெரிக்கா போண்டியாகிவிட்டது என்பது இன்று உலகறிந்த உண்மை. எனினும், அந்த உண்மையை ஒப்புக் கொள்ளும் பட்சத்தில் உலக முதலாளித்துவப் பொருளாதாரம் அனைத்தும் அடுத்த கணமே போண்டியாகிவிடும். எனவே, கடவுள் இருக்கிறார் என்று ஒப்புக் கொள்வதைத் தவிர மற்ற நாட்டு அரசுகளுக்கு வேறு வழி இல்லை.

இனி, அமெரிக்காவுக்குப் பொருளை விற்றவர்கள் பில்லைக் கொடுத்துப் பணம் கேட்டால் அமெரிக்க அரசு இப்படி வெளிப்படையாகவே பதில் சொல்லக்கூடும், “ கனவான்களே, ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள். மெசின் ஓடிக் கொண்டிருக்கிறது; டாலர் நோட்டுகள் காய்ந்தவுடன் எடுத்து வெட்டி, எண்ணி, கட்டித் தந்து விடுகிறோம்’’. கடவுள் மீது நம்பிக்கை இருப்பவர்கள் பிரசாதத்தையும் நம்பித்தானே ஆக வேண்டும்.”

முழுமையான கட்டுரையை கீழே உள்ள இணைப்பில் படிக்கலாம்.

இந்தக் கட்டுரை 2008-ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட சிக்கலை விளக்கும் வண்ணம் எழுதப்பட்டது. இன்றைக்கு அந்த நெருக்கடி மேலும் தீவிரமாகியிருக்கிறது. விரைவிலேயே அமெரிக்காவை மையமாக வைத்து ஒரு பெரும் நெருக்கடி வரும், முதலாளித்துவ உலகில் அதை தடுத்து நிறுத்த எந்த சீர்திருத்தங்களும் இல்லையென முதலாளித்துவ அறிஞர்களே எழுதி வருகின்றனர்.

அதன் அறிகுறியாக அமெரிக்கா சீன வர்த்தகப் போர், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முரண்பாடு, ரசியா தனியாக எண்ணெயை ஏற்றுமதி செய்வது, ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடை என நிறைய பிரச்சினைகள் சமீப மாதங்களில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் டாலரின் ஏகபோகம் கேள்விக்குள்ளாக்கப்பட்டாலும் அமெரிக்கா வீழ்ந்தால் மொத்த உலகமும் விழ வேண்டியிருக்கும் என்ற சுழலில் முழு உலகமும் சிக்கியிருக்கிறது.

2008 அமெரிக்க நெருக்கடி குறித்த கட்டுரையை கீழே படிக்கலாம்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்