கேள்வி: //சீமான் அரசியலை எந்தெந்த அளவு கோள்களை கொண்டு மதிப்பிடுவது? அல்லது சீமான் அரசியலை பகுப்பாயவும்.//
– ராஜேந்திரன்
அன்புள்ள ராஜேந்திரன்,
ஏற்கனவே நீங்கள் “நாம் தமிழர்” பற்றிக் கேட்டிருந்தீர்கள். அப்போது நாம்தமிழர் கட்சி குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள், உங்களது சந்தேகம் என்ன என்று கேட்டிருந்தோம். அதற்கு நீங்கள் இப்போதும் பதிலளிக்கவில்லை. கேள்வி பதில் பகுதி பொருளுள்ள வகையில் அமைய வேண்டுமென்றால் உங்களைப் போன்ற நண்பர்கள் உண்மையிலேயே கேள்விகள், சந்தேகங்கள் கேட்டால் பதிலளிக்க பயனுள்ளதாக அமையும். பரவாயில்லை, இப்போது பதிலளிக்கிறோம்.
நாம் தமிழர் கட்சியை தன்னுடைய தனிப்பட்ட சொத்தாக சீமான் கருதுகிறார். நேர்காணல்களில் கட்சியையும் அவரையும் தொடர்புபடுத்தி ஏகப்பட்ட ‘நான்கள்’ வருகின்றன. அதனால்தான் பேரா. அருணனோடு நடந்த விவாதத்தில் சவால் விடும்போது சவாலில் தோற்றுவிட்டால் என் கட்சியை கலைத்து விடுவேன் என்றார். ஆகையால் நாம் தமிழர் கட்சியின் வாழ்வும் இருப்பும் சாவும் சீமானின் கையில்தான் இருக்கிறது. நாம் தமிழரின் நிரந்தரத் தலைவரும், தேர்தலில் வென்றால் ஒரே முதல்வரும் சீமான்தான். இது வாரிசு அரசியலுக்கு இணையான அரசியல்தான். கூட்டுத்துவம் இல்லாமல் ஒரு நபரை மட்டும் மையப்படுத்தி ஒரு கட்சி அல்லது இயக்கம் வளர்வது கடினம். அப்படியே வளர்ந்தாலும் அந்த வளர்ச்சியின் காலம் மிகவும் வரம்பிற்குட்பட்டது. இது முதல் விசயம்.
வந்தேறிகள் ஆளக்கூடாது, தமிழன்தான் ஆளவேண்டும் என்று அனைத்து பிரச்சினைகளுக்கும் இனவாத அரசியலை முன்வைத்து உணர்ச்சியாக பேசுகிறார். யார் வந்தேறி, யார் தமிழன் என்ற கேள்வி தமிழ்ச் சாதிகள்தான் அதாவது ஆதிக்க சாதிகள்தான் தமிழர்கள் என்று வருகிறது. அந்த வகையில் அவருடைய தமிழ் தேசிய அரசியலில் சாதியம் கலந்திருக்கிறது. தமிழனுக்கு பொற்கால வரலாறு உண்டு, இன்று தமிழன் ஏமாந்து விட்டான், தமிழினத்தை மீட்க வேண்டும் என்பதையெல்லாம் நா புடைக்க, நரம்பு மிடுக்க அவர் பேசுகிறார். மேலோட்டமான அரசியல் புரிதலில் இருக்கும் மக்கள் பிரிவினரை இந்த உணர்ச்சிமயமான முழக்கம் ஆரம்பத்தில் ஈர்க்கும். மராட்டிய மாநிலத்தில் இப்படித்தான் “மதராசிகளை விரட்ட வேண்டும்” என்று பால் தாக்கரே பேசி தனது சிவசேனாவை வலுப்படுத்தினார். இன்று அந்த முழக்கம் அங்கேயே எடுபடுவதில்லை. சிவசேனாவும் பாஜக-வின் இளைய பங்காளியாக தேய்ந்து போனது. இது இரண்டாவது விசயம்.
சீமான் தனது மாற்று அரசியலாக தேர்தல் அரசியலையே முன்வைக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்று தான் கூறும் மாற்று அரசியல் தீர்வுகளை அமல்படுத்துவேன் எனக் கூறுகிறார். அதன்படி நாம்தமிழர் கட்சி இந்திய பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற வாய்ப்பில்லை. தமிழகத்தில் மட்டும் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக வைப்போம். அப்போதும் அவரால் அவர் கூறியவற்றை செய்ய வாய்ப்பேதுமில்லை. கார்கள் எனப்படும் மகிழுந்து தயாரிப்பை நிறுத்துவேன், அதனால் சுற்றுச்சூழல் மாசடைகிறது, ஏராளமான நீர் விரயமாகிறது என்கிறார். மகிழுந்து தேவைப்படுவோருக்கு வெளிநாட்டில் அதாவது ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வேன் என்று கூறுகிறார்.
படிக்க:
♦ காஷ்மீர் வெளிமாநில தொழிலாளர்கள் முதல் பீகார் குழந்தைத் தொழிலாளர்கள் வரை !
♦ தாக்கரேவின் தமிழ் அவதாரம் சீமான் !
இப்படி அனைத்திற்கும் ஒரு மாற்றைக் கூறி தமிழகத்தின் பஞ்ச பூதங்களையும் காப்பாற்றி சிங்கப்பூர் போல மாற்றுவேன் என்கிறார். கார் தயாரிப்பை நிறுத்தி இறக்குமதி செய்வது என்பது தேர்தல் அரசியலில் நடக்கிற காரியமா? இவை மத்திய அரசுடன் சம்பந்தப்பட்டதோடு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற முறையில் தனியார்மயம், தாராளமயத்தின் அடிப்படையில் தமிழகத்தில் கார் உற்பத்தி நடைபெறுகிறது. இதை எப்படி சீமானால் நிறுத்த முடியும்? பேச்சுக்கு நிறுத்துவதாகக் கொண்டால் ஒரு நீதிமன்ற உத்திரவு போதும் அதை செல்லாது என்று மாற்ற. மேலும் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்ற கொள்கைகளை ஏற்றுக் கொள்பவர்தான் தேர்தல் அரசியலில் நிற்கவே முடியும். இன்று கல்வி, சுகாதாரம் தனியார்மயமாக்கப்பட்டிருக்கிறது. விரைவுப் பேருந்துகள் வழிதடத்தில் ஆம்னி பேருந்துகள் தனியார்மயமாகி கொள்ளையடித்து வருகின்றன. சீமான் இவற்றை அரசுடைமையாக்க முடியுமா? நிச்சயம் முடியாது. அதனால்தான் தனியார் கல்வியின் தரத்துக்கு ஏற்ப அரசு கல்வியை மாற்றுகிறேன் என்று தற்காப்பாக பேசுகிறார். அந்த தரத்திற்குரிய காசுக்கு எங்கே போவார்?
எனவே தேர்தல் அரசியலில் சீமான் கூறும் எதையும் அமல்படுத்த முடியவே முடியாது. அது போகாத ஊருக்குரிய அரசியலே அன்றி வேறல்ல. இந்த அமைப்பு முறையே இன்றைய சமூக அரசியல் பொருளாதார சீரழிவுகளுக்கு காரணம் எனும் போது அந்த அமைப்பு முறைக்குள்ளேயே தீர்வு தேடுவது அடிப்படையிலேயே தவறானது. இது மூன்றாவது விசயம்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போதும், மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சியின் போதும் சீமான் இவர்களை கடுமையாக விமரிசிக்கவில்லை. அடக்கி வாசித்தார். நாம்தமிழர் கட்சி திராவிட இயக்கத்தையே முதன்மையான எதிரியாக கருதுவதால் திமுக, திக போன்றவற்றை எதிர்ப்பது போல அதிமுக, பாஜக-வை எதிர்ப்பதில்லை. இதனால் பலநேரம் நாம் தமிழர் கட்சி தமிழ் ஆர்.எஸ்.எஸ் போன்றே காட்சி தருகிறது. இனவாதம் இயற்கையாகவே மதவாதம், சாதியவாதத்தோடு தொடர்புடையது என்பதற்கு இது ஒரு சான்று. இது நான்காவது விசயம்.
சென்ற 2019 பாராளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஏறக்குறைய மூன்று சதவீதம் வாக்கு கிடைத்திருப்பது எப்படி? மக்கள் தேர்தல் அரங்கில் எப்போதும் புதியவர்கள், புதிய கட்சிகளுக்கு ஆதரவு தருகிறார்கள். திமுக, அதிமுகவின் அரசியலால் ஏமாற்றமடைந்து புதிய சக்திகள் என்ற முறையில் அப்படி ஆதரவு தருகிறார்கள். ஏற்கெனவே ஆரம்பத்தில் விஜயகாந்த் கட்சிக்கு அப்படி மக்கள் ஆதரவு தந்தார்கள். இன்று தேமுதிகவே திமுக – அதிமுக போல பழைய கட்சியாக மாறிவிட்டது. சென்ற தேர்தலில் நாம் தமிழருக்கு இணையாக கமல்ஹாசனது கட்சிக்கும் மக்கள் வாக்களித்தார்கள். அதுவும் புதிய கட்சி என்ற முறையில்தான். நாளை ரஜினி நின்றாலும் அப்படி ஓரளவு பிரிவு மக்கள் வாக்களிப்பார்கள். இருப்பினும் இந்த தேர்தல் முறை யாரையும் தின்று செரித்துவிட்டு சந்தர்ப்பவாதிகளாக மாற்றும் என்பதால் புதிய கட்சிகளின் மீதான மக்களின் புதிய மோகம் தற்காலிகமாக ஓரிரு தேர்தலோடு முடிந்து விடும் ஒன்று. ஆதலால் இந்த புதிய கட்சிகள் இறுதியில் திமுக, அதிமுகவோடு கூட்டணி அமைத்து தமது அரசியல் இருப்பை உறுதி செய்கிறார்கள். நாம் தமிழரும் அப்படி கூட்டணி அரசியல் இன்றி தனிக்கடை போட்டு ரொம்ப நாள் ஓட்ட முடியாது. இது ஐந்தாவது விசயம்.
நாம் தமிழர் கட்சியை புரிந்து கொள்ள இந்த அளவுகோல்கள் போதுமா?
நன்றி!
♦ ♦ ♦
(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்



திருமணமான பெண் தனது மாதவிடாய் நிற்கும் நாட்களை கட்டாயம் குறித்து வைத்து இருக்க வேண்டும். மருத்துவர் Last menstrual period எப்போது என்று கேட்டால் சட்டென கூற உதவும். மாதவிடாய் தள்ளிப்போனால் கடைசி மாதவிடாய் நிகழ்ந்து நாற்பது நாட்கள் கழியும் போது சிறுநீர் மூலம் கர்ப்பமானதற்கான பரிசோதனையை செய்து பாருங்கள்.
தமிழக அரசு கர்ப்பமாகும் ஒவ்வொரு தாயும் கட்டாயம் கர்ப்பத்தை பதிவு செய்ய ஆணையிட்டிருக்கிறது. ஒவ்வொரு கர்ப்பிணியின் முழுவிபரமும் PICME (pregnancy infant cohort monitoring and evaluation) எனும் மென்பொருள் மூலம் பதிந்து ஒரு பிரத்யேக எண் கொடுக்கப்படுகிறது.
குமட்டல் அதிகம் வந்தால் உள்ளே இருப்பது ஆண் குழந்தை, குழந்தைக்கு மண்டையில் முடி அதிகம் இருந்தால் அதிகம் வாந்தி வரும் என்று சில கட்டுக்கதைகள் உலாவந்தாலும்.

ஆக மொத்தம் இந்த இருபது கோடி மக்களை நம்பித்தான் இந்திய முதலாளிகள் பொருட்களை உற்பத்தி செய்து, சேவைத்துறை சேவைகளையும் அளிக்கின்றனர். மாதத்திற்கு சில இலட்சம் கார்களும், இருசக்கர வாகனங்களும் இப்போதும் விற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முந்தைய ஆண்டுகள், காலாண்டுகளை விட மிகக் குறைவாக விற்கிறது. மேலே சொன்ன அந்த பத்துக் கோடியில் பெரும்பான்மையினர் கடைசி பத்து ஆண்டுகளில் தங்களுக்குத் தேவையான நுகர்பொருட்களை வாங்கி விட்டார்கள். அந்த வாங்குதல் பூர்த்தி அடைய அடைய இங்கே புதிய விற்பனை தள்ளாடுகிறது. இதில் ஓலா, உபர் போன்ற நிறுவனங்கள் ஓட்டுநர்களின் தலையில் புதிய கார்களை கட்டி கொத்தடிமைகளாக நடத்தினாலும் கார் சந்தை தேங்கித்தான் நிற்கிறது.
சிறு, குறு நிறுவனங்களும், சிறு வணிகர்களும்தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பை அளிக்கும் பிரிவினராவர். அவர்களை கேட்பார் கேள்வியின்றி ஜி.எஸ்.டி சூறையாடியது. வரிப்பிடித்தம் திரும்பும் நாள்கள் அதிகமானதால் வணிகர்கள் ரொக்க சுழற்சி இன்றி திண்டாடினர். இதற்கு முன்னர் மறைமுக வரியாக செலுத்திக் கொண்டிருந்த நுகர்வோர் எனப்படும் பொது மக்கள் இப்போது ஜி.எஸ்.டி வரியாக கூடுதலாக செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பிஸ்கெட், பேஸ்ட், சோப், நாப்கின், செல்பேசி கட்டணங்கள் என ஒன்று விடாமல் ஜி.எஸ்.டியால் விலை உயர்ந்தது. போதாக்குறைக்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வை அதிகரித்தது. வேலைவாய்ப்பின்மை, ஜி.எஸ்.டி- இவை எல்லாம் ஒன்று சேர்ந்து மக்களின் நுகர்வை வெகுவாகக் குறைத்து விட்டது.
இந்த நிலைமைகளும் இந்தியாவின் பொருளாதார நெருக்கடியை அதிகரிக்கச் செய்கின்றன. இந்தியாவின் முதலாளிகள் பலர் தமது நிறுவனத்தின் மதிப்பைக் காட்டிலும் கடன்களை கணிசமாக வைத்திருக்கின்றனர். அனில் அம்பானி திவால் என்றால் முகேஷ் அம்பானி சவுதி அராம்கோ நிறுவனத்திற்கு பங்குகளை விற்று முதலீட்டை வாங்குகிறார். டாடா, அதானி உள்ளிட்ட நிறுவனங்களும் சர்வதேச நிதி நிறுவனங்களிடமும், உள்ளூர் பொதுத்துறை வங்கிகளிடமும் கணிசமான கடன்களை வாங்கியிருக்கின்றனர். பங்குச் சந்தை சூதாட்டம், ஊக வாணிபத்தின் மூலம் இவர்களது நிறுவனங்களின் சொத்து காட்டப்பட்டாலும் உண்மையில் அவர்களும் நெருக்கடியில் உள்ளனர். இதையெல்லாம் தாண்டி அவர்களது தனிப்பட்ட சொத்துக்கள் மட்டும் நாள்தோறும் அதிகரித்து வருகின்றது.



அல் ஜசீரா வெளியிட்ட செய்தி அங்கிருக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிப்பதோடு, பயத்தோடு வாழ்வதாக சொல்கிறது. தினக்கூலிகளாக உள்ள தொழிலாளர்களை வெளியேற்ற எந்தவித நோட்டீசும் வழங்கப்படவில்லை. வெளிமாநிலங்களிலிருந்து வந்திருக்கும் இந்தத் தொழிலாளர்களுக்கு எதிராக வன்முறைகள் எதுவும் நிகழவில்லை.
“தேர்தலுக்கு முன்பு பாத யாத்திரையின்போது, எங்களுடைய சம்பளத்தை ரூ. 3 ஆயிரத்திலிருந்து ரூ. 10 ஆயிரமாக உயர்த்தித் தருவதாக ஜெகன் வாக்குறுதி அளித்திருந்தார். முதலமைச்சராக பதவியேற்றபின், சம்பள உயர்வை அறிவித்தார். ஆனாலும் எங்களுக்கு சம்பளம் உயர்த்தி வழங்கப்படவில்லை” என தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பி. மணி தெரிவித்துள்ளார். மேலும் கடந்த நான்கு மாதங்களாக மதிப்பூதியமும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆந்திர மாநிலத்தில் கிட்டத்தட்ட 45 ஆயிரம் ஆஷா தொழிலாளர்கள் உள்ளனர்.
பீகார் மற்றும் ஜார்க்கண்டில் உள்ள மைக்கா சுரங்கங்கள் உள்ள பகுதிகளான கொடெர்மா, கிரித், ராஜாவ்லி பகுதிகளில் இந்த ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.
ஊதியம், சிறப்பு பயன்கள், பணிச் சூழல் ஆகியவற்றில் தொழிலாளர்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ‘பணியிடத்தில் ஜனநாயக திட்டம்’ என்ற பெயரில் தனது இணையதளத்தில் பெர்னி சாண்டர்ஸ் அந்தத் திட்டத்தை வெளியிட்டுள்ளார்.





புறநிலையில் இருக்கும் ஓரிரு விசயங்கள் குறிப்பிட்ட சமூக சூழல் காரணமாக அகநிலையில் நுணுக்கி நுணுக்கி நீண்ட நேரம் சிந்திக்கும் போது இத்தகைய கற்பிதங்கள் போகப் போகத் தோன்றுகின்றன. அது கலைஞனாக இருந்தால் ஒரு கவிதை தோன்றும். மனநிலை பாதிப்படைந்திருந்தால் கடவுள் பேசுவது போலத் தோன்றும். கவிஞன் கவிதை எழுதிய பிறகு சமநிலை அடைந்து விடுகிறான். மனநிலை பாதிப்படைந்தோரோ அப்படி உடனே சமநிலை அடைந்து விடுவதில்லை. இராமகிருஷண் பரமஹம்சரிடம் இந்த இரண்டும் இருக்கின்றன. அதனால்தான் நீதி உபதேசங்களை கதைகள் வழியாக உபதேசிக்கிறார். கூடவே இத்தகைய மாய கற்பிதங்களையும் உண்மையெனக் கூறுகிறார்.
“நாடார்களுக்கு தீண்டாமை காரணமாக ஆலய நுழைவு மறுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் திரு. பாஸ்கர சேதுபதி இந்து மதத்தின் அருமைப் பெருமைகளை அயல்நாடுகளில் வியந்துரைக்க விவேகானந்தரின் சிகாகோ பயணத்திற்குப் பொருளுதவி செய்தார். 1893-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அனைத்துலக சமய மாநாட்டில் விவேகானந்தர், சகோதரர்களே, சகோதரிகளே, எனத் தனது உரையைத் தொடங்கி இந்து மதத்தின் மேன்மைகள் குறித்து பேசிய அதே காலகட்டத்தில் இந்து சனாதன தர்மங்களின் அடிப்படைத் தேவையான தீண்டாமையின் பொருட்டு, இந்துக் கோயில்களுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தங்களை இந்துக்களாக கருதிய உள்ளூர் நாடார் சகோதர சகோதரிகள் இந்துக் கோயிலுக்குள் தங்களை அனுமதிக்கும்படி திரு. பாஸ்கர் சேதுபதியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தனர்.”
1990-களில் போலியோ போன்ற நோய்கள் பெரும் மரணங்களை ஏற்படுத்தி நம்மை கவலையடையச் செய்தன. இந்தியாவின் சுகாதார கொள்கைகளும் அந்நோய்களுக்கு கவனம் செலுத்தி சரியாக உருவாக்கப்பட்டிருந்தன. நான் கல்லூரியில் படிக்கும்போது எப்போதோ என்னுடைய உறவினரோ அல்லது குடும்பத்திற்கு தெரிந்தவரோ, ஒருவருக்கு புற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகரித்து கொண்டே இருப்பது போல தெரிகிறது. பிறகு, போன ஆண்டின் கடைசியில் ஒருநாள் என்னுடைய அம்மாவிற்கும் கருப்பை புற்றுநோய் இருப்பதாக ஒரு அதிர்ச்சியான செய்தி எனக்கு வந்தது.
ஆனால் இதுவே முழுமையான சித்திரமல்ல. பெருகி வரும் புற்றுநோய் பாதிப்புகளுக்கும் இறப்புகளுக்கும் என்னுடைய மாமா சொல்வது போல மேற்கத்திய உணவு அல்ல பெரிய காரணம். உண்மையில் இறைச்சியை விட புகை பிடிப்பது உள்ளிட்ட வாழ்க்கை முறைகளால் தான் இந்தியாவில் அதிக புற்றுநோய் ஏற்படுகிறது. மேலும் வாழ்நாள் அதிகரிப்புடன் அதற்கு தொடர்பிருப்பதை நாம் ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.

திருக்குறளிலும் கல்லாமை குறித்தும், கற்பதின் அருமை பற்றியும் நிறைய குறள்கள் உள்ளன. குறளின் காலம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் திருக்குறள் வருகிறது.














