Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 331

கல்லூரி கட்டண உயர்வு – இந்தி திணிப்பு – 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு | மாணவர்கள் போராட்டம் !

0

டலூர் பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள், தந்தை பெரியாரின் பிறந்த நாளான 17.09.2019 அன்று பெரியாரை நினைவில் ஏந்தும் வகையில்  “சாதியத்தை ஒழித்து மனிதத்தை நிலைநாட்டுவோம் ! சாதி மனிதனை சாக்கடையாக்கும் மதம் மனிதனை மிருகமாக்கும் !” என்ற பெரியாரின் கருத்துக்களை முழங்கி கல்லூரி வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர். அதன் பின்னர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பல்தேசிய இனங்களின் மொழி, கலாச்சாரம் பண்பாட்டை பறிக்கும் வகையில் அமித்ஷாவின் இந்தி திணிப்பு ஆணவ பேச்சிற்கு எதிராகவும்; 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வை கொண்டுவந்து மீண்டும் மனுதர்ம குலக்கல்வியை நிலை நாட்ட துடிக்கும் மோடியின் தேசிய கல்வி கொள்கையை வழி மொழியும் அறிவிப்பை கண்டித்தும்; மாணவர்கள் நலனில் அக்கறை கொண்ட நுண்ணுயிரியல் துறை தலைவர் பேராசிரியர் நிர்மல் குமார் பணியிட மாற்றத்தை கல்லூரி நிர்வாகம் ரத்து செய்ய வேண்டும் என்றும் பெரும்பான்மை ஏழை எளிய மாணவர்கள் பயிலும் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் திடீரென உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் ! ஆகிய கோரிக்கைகள் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் மாணவர்கள் ஏற்கனவே பஸ்கட்டணம் உயர்ந்து விட்டது, ஸ்காலர்ஷிப் முறையாக வழங்கவில்லை. இதை பற்றி எல்லாம் கவலைபடாமல் தேர்வு கட்டணத்தை உயர்த்தியுள்ளது பல்கலைக்கழகம். இப்போது மாணவர்களின் நிலை தனியார் கல்லூரியில் படிப்பதுபோல் உள்ளது.

அதனால் இம்முறை பல்கலைகழக நிர்வாகம் தேர்வு கட்டணத்தை குறைக்காத வரை போராட்டத்தை கைவிமாட்டோம் என அனைவரும் ஒரே குரலாய் ஒலித்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர். தொடர்புக்கு : 97888 08110

***

தேர்வு கட்டண உயர்வு ! இந்தி திணிப்பு ! 5,8 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை கண்டித்தும் விழுப்புரம் திண்டிவனத்தில் மாணவர்கள் போராட்டம் !   

திருவள்ளுவர் பல்கலைகழகத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரியிலும் திடீர் என  தேர்வு கட்டண உயர்வுவை அறிவித்ததை தொடர்ந்து, கல்லூரி மாணவர்கள் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி (RSYF)  ஒருங்கிணைப்பில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை கல்லூரி மற்றும் திண்டிவனம் கோவிந்த சாமி அரசு கலை கல்லூரி ஆகியவற்றில் 17.09.2019 அன்று வகுப்புகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த தேர்வு கட்டண உயர்வு என்பதை ‘மோடி எப்படி 500,1000 ரூபாய் செல்லாது என்று இரவோடு இரவாக அறிவித்தாரோ’ அதை போல கல்லூரி நிர்வாகம் 15-ம் தேதி இரவில் மாணவர்களுக்கு தொடர்பு கொண்டு கட்டண அறிக்கை வந்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில்  கட்டணம் முழுவதும் கட்டி விடவேண்டும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

அரசு கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் பெரும்பாலும் ஏழை, எளிய குடும்பம்களில் இருந்து  பல்வேறு கடினமான சூழ்நிலையில் இருந்து வருகிறவர்கள். இந்த தேர்வு கட்டண உயர்வு என்பது  மாணவர்கள் மீது மிக பெரிய சுமையாக மாறும் எனவே இந்த கட்டண உயர்வை உடனடியாக திருவள்ளுவர் பல்கலைக்கழகம் திரும்ப பெற வேண்டும் என்ற அடிபடையிலும் கல்லூரி நிர்வாகம் அதிர்ந்து போகும் விதமாகவும்.

தேசிய கல்வி கொள்கை – 2019 உள்ள அனைத்து பரிந்துரைளை அமல்படுத்தும் விதமாக 5, 8-ம்  வகுப்பிற்கு பொது தேர்வு நடத்த வேண்டும் என்பதை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த தேர்வு என்பதை பள்ளி மாணவர்கள் மத்தியில் ஒரு பயத்தை ஏற்படுத்தி மன அழுத்தத்தை ஏற்படுத்தும். அது மட்டும் இல்லாமல் இடை நிற்றலை அதிகரிக்கும் ஆகவே இந்த பொதுத்தேர்வு பெரும்பான்மை மாணவர்களுக்கு எதிராக இருப்பதால் உடனடியாக அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும், கடந்த சில நாட்களுக்கு முன் அமித்ஷா -வின் இந்தி திணிப்பு பற்றி ஆணவ பேச்சை கண்டித்தும் மாணவர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் மேற்கண்ட கோரிக்கையை உடனே நிறைவேற்றவில்லை என்றால் தொடர்ந்து அடுத்தகட்ட போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விழுப்புரம் மாவட்டம். தொடர்புக்கு : 91593 51158

***

திருச்சி பெரியார் கலைக் கல்லூரி – பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் :

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் தந்தை பெரியாரின் 141-வது பிறந்த நாளை முன்னிட்டு மாணவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்தும், மாணவர்களுக்கிடையே இனிப்புகளைப் பகிர்ந்தும் கொண்டாடினர்.

கல்லூரி தந்த தலைவனுக்கு மாணவர்களின் மரியாதை :
“கருப்பு எங்கள் நிறமடா”
“இது பெரியார் பிறந்த மண்ணடா”

என்ற முழக்கங்களையும் முழங்கினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு.
திருச்சி. தொடர்புக்கு : 74182 06819.

பொருளாதாரத்தில் மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல் | பொருளாதாரம் கற்போம் – 35

0
Adam-smith-1

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 35

மூலச் சிறப்புடைய மரபு தோன்றுதல்

அ.அனிக்கின்

டின்பரோ பல்கலைக்கழகத்தில்தான் அரசியல் பொருளாதாரம் முதன் முதலில் ஒரு தனி விஞ்ஞானமாகக் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. அங்கே 1801-ம் வருடத்தில் ஆடம் ஸ்மித்தின் மாணவரும் நண்பருமான டக்ளஸ் ஸ்டுவர்ட் அரசியல் பொருளாதாரத்தைக் கற்பித்தார். 19-ம் நூற்றாண்டின் இறுதிவரை பொருளாதாரப் பேராசிரியர் எல்லோருக்கும் பழக்கமான நபராக வளர்ச்சியடையவில்லை. ஆயினும் பேராசிரியர்களாக இல்லாத பலர் இந்த விஞ்ஞானத்துக்கு மிக முக்கியமான கருத்துரைகளைக் கொடுப்பது தொடர்ந்து கொண்டிருந்தது. 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்தப் புதிய விஞ்ஞானத்தைப் படைத்த திறமை மிக்கவர்களை மூன்று முக்கியமான பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

முதலாவதாக, அந்தக் குறிப்பிட்ட யுகத்தின் தனித் தன்மையைக் கொண்ட, இயற்கை மற்றும் சமூகத்தைப் பற்றிய தங்களுடைய பொதுவான அமைப்புக்களுக்குள்ளாகவே பொருளாதாரப் பிரச்சினைகளை ஆராய்ந்த தத்துவ ஞானிகளைக் குறிப்பிடலாம். அவர்களில் மிகச் சிறந்தவர்களாக இங்கிலாந்தைச் சேர்ந்த தாமஸ் ஹாப்ஸ், ஜான் லாக், டேவிட் ஹியூம் மற்றும் குறிப்பிட்ட அர்த்தத்தில் ஆடம் ஸ்மித்; பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹெல்வெடியஸ் மற்றும் காண்டில்லாக்; இத்தாலியைச் சேர்ந்த பெக்காரியா முதலியோர் உள்ளனர்.

இரண்டாவதாக, வணிகர்களும் தொழிலதிபர்களும். இவர்கள் தங்களுடைய குறுகிய வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து அரசு விவகாரங்களுக்கு முன்னேறி இராஜியவாதிகளாகச் சிந்தனை செய்ய முயற்சித்தவர்கள். இங்கே தாமஸ் மான், ஜான் லோ, டட்லி நோர்த் மற்றும் ரிச்சர்ட் கான்டில்லான் ஆகியோரைக் குறிப்பிடலாம். பிரான்சில் புவாகில்பேர், டியுர்கோ, குர்னே ஆகியோர் அந்த நாட்டின் தனிச்சிறப்புக்கு ஏற்ற வகையில் நீதி, நிர்வாகத் துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள்.

மூன்றாவதாகவும் கடைசியாகவும் இருப்பவர்கள் அறிவிற்சிறந்து விளங்கிய சாதாரணமானவர்கள். இவர்கள் பல தொழில்களையும் சேர்ந்தவர்கள்; சில சமயங்களில் இவர்கள் மேல் வர்க்கத்துக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள், சில சமயங்களில் அவ்விதம் நடைபெறவில்லை. மருத்துவர்களான வில்லியம் பெட்டி, நிக்கோலஸ் பார்பன், பெர்னார்டு மான்டெவில், பிரான்சுவா கெனே முதலியோர் அரசியல் பொருளாதாரத்தை நன்றாகப் படித்திருந்தனர் என்று மார்க்ஸ் எழுதியிருக்கிறார். இது புரிந்து கொள்ளக் கூடியதே.

படிக்க:
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

அந்தக் காலத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் மருத்துவத்துறை மட்டுமே சிறப்பான வளர்ச்சி பெற்றிருந்தபடியால் அது சுறுசுறுப்பானவர்களை, சிந்திக்கக் கூடியவர்களைக் கவர்ந்தது. 18-ம் நூற்றாண்டில் பொருளியலாளர்கள் மத்தியில் மதப் பணிகளை மேற்கொண்டவர்களையும் பார்க்கிறோம்; பிரான்சிலும் இத்தாலியிலும் மத குருக்கள் (தற்சிந்தனையும் ஆழமான அறிவும் கொண்ட இத்தாலியப் பொருளியலாளரான காலியானி இவர்களில் ஒருவர்), இங்கிலாந்தில் ஆங்கிலத் திருச்சபையின் பாதிரிமார்கள் (டக்கர் மற்றும் மால்தஸ்) இதில் அடங்குவர்.

இந்தப் பிரிவுகள் சில நிபந்தனைகளுக்குட்பட்டே சரியானவை என்பதால் கருத்துக்கள் எவ்விதமாக வளர்ச்சியடைந்தன என்பதை இவை நிச்சயமாக நிர்ணயிக்கவில்லை; ஆனால் இந்த விஞ்ஞான வளர்ச்சியிலிருந்த சிக்கலான நிகழ்வுகளை நாம் புரிந்து கொள்வதற்கு இவை உதவுகின்றன.

ஏதாவதொரு குறிப்பிட்ட பொருளாதாரக் கொள்கைக்கு ஆதரவாக எழுதுவது அல்லது அந்தக் கொள்கையைப் பற்றி விமர்சனம் செய்வது என்பதே பொருளாதாரக் கட்டுரைகளின் முக்கியமான செய்முறை நோக்கமாக இன்னும் இருந்து வருகிறது. எனினும் 18-ம் நூற்றாண்டின் அறுபதுக்களில் டியுர்கோ மற்றும் ஜேம்ஸ் ஸ்டுவர்ட் எழுதிய புத்தகங்கள் 17-ம் நூற்றாண்டிலும் 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாணிப ஊக்கக் கொள்கையினர் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து அதிகமாக வேறுபட்டிருக்கின்றன. அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான கோட்பாடுகளை முறையாகவும் தத்துவரீதியாகவும் விளக்கிக் கூறுவதற்குச் செய்யப்பட்ட முதல் முயற்சிகள் இவை.

The Wealth of Nations Adam Smith Bookமேலும் “செய்முறை நோக்கம்” பலவிதமான வடிவங்களை அடைகிறது. சில எழுத்தாளர்களைப் பொறுத்தவரை அது அவர்களுடைய சொந்த நலன்களையும் அவர்களுடைய வர்க்கத்தின் நலன்களையும் நேரடியாக ஆதரித்துப் பத்திரிகைகளில் எழுதுவதாக இருக்கிறது. வேறு சிலரிடம் அது சமூக நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியாக ஆராய்கின்ற மிகவும் ஆழமான போக்காக இருக்கிறது; இந்த ஆராய்ச்சியானது வர்க்க நலன்களை பல் கூட்டுத் தொகுதியாகவும் இடையில் வருகின்ற வடிவத்திலும் மட்டுமே கவனம் கொள்கிறது. இரண்டாவது வகையைச் சேர்ந்த மனிதர்கள்தான் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தை உருவாக்கினார்கள் என்பதை வலியுறுத்துவது அவசியமல்ல. உதாரணமாக, ஆடம் ஸ்மித் வணிகருமல்ல, தொழில் அதிபருமல்ல. நாடுகளின் செல்வம் என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகத்தில் சுதந்திரமான வர்த்தகக் கொள்கையை ஆதரித்துத் தீவிரமாக வாதாடுகிறார்; அதனால் தனக்குத் தனிப்பட்ட முறையில் லாபம் கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க முடியாது. அந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு அவருக்குச் சுங்க இலாகாவில் வேலை கிடைத்தது. அவர் எந்தக் கருத்தை எதிர்த்துப் போராடினாரோ அந்தக் கருத்தின் உருவகமான அமைப்பிலேயே அவர் பணி புரிய நேர்ந்தது அவருடைய வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்றாகும்.

மான்டெவிலின் முரணுரைகள் எவ்வளவு சிறப்பாக இருந்த போதிலும் அவர் இங்கிலாந்தில் மூலச்சிறப்புடைய மரபின் உருவாக்கத்திலிருந்து சற்று விலகியே நிற்கிறார். அந்த மரபு முதலாவதாகவும் முதன்மையாகவும் லாக் (1632-1704) மற்றும் நோர்த் (1641-1691) ஆகியோரோடு இணைக்கப்பட்டிருக்கிறது; இவர்கள் பெட்டியின் நேரடியான வாரிசுகள்.

18-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த தத்துவஞானியும், பொருள்முதல்வாத அறியும் ஆற்றல் தத்துவத்தை உருவாக்கியவர்களில் ஒருவரும் முதலாளித்துவ மிதவாதத்தின் தந்தையுமான லாக் பொருளாதார விஞ்ஞானத்தில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கிறார். 1691-ம் வருடத்தில் அவர் வெளியிட்ட வட்டி விகிதத்தைக் குறைப்பது, பணத்தின் மதிப்பை உயர்த்துவது ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி சில கருத்துக்கள் என்ற புத்தகம் இதற்குக் காரணமாகும். அதே சமயத்தில் லாக்கின் தத்துவஞானம் முழுவதுமே, 18-ம் நூற்றாண்டில் – 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கூட – ஆங்கில அரசியல் பொருளாதாரத்துக்கு அடிப்படையாக உதவியது. லாக் சமூக விஞ்ஞானத்தில் இயற்கைச் சட்டக் கருத்துக்களை வளர்த்தார்; இவை இயற்கை விஞ்ஞானத்தில் நியூட்டன் வளர்த்த யாத்திரிகப் பொருள்முதல்வாதத்துக்குச் சமமான போக்காகும். நாம் முன்னர் குறிப்பிட்டது போல, இந்தக் கருத்துக்கள் அவர் களுடைய காலத்தைப் பார்க்கும் பொழுது முற்போக்கான வையாகும்; ஏனென்றால் அவை சமூக நிகழ்வுகளின் உலகத்தில் புறநிலையான விதிகள் என்ற கோட்பாட்டை ஏற்படுத்தின.

உபரி மதிப்பைப் புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் லாக் செய்த முக்கியமான முன்னேற்றம் கூட இயற்கைச் சட்டம் என்ற கருத்து நிலையிலிருந்தே தோன்றியது. மனிதன் தன்னுடைய சொந்த உழைப்பைக் கொண்டு விவசாயம் செய்யக் கூடிய அளவுக்குத் தேவையான நிலத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்பது இயற்கையானது; அது போல தன்னுடைய சொந்த நுகர்வுக்குத் தேவையான எல்லாவிதமான மற்ற வசதிகளையும் (இதில் பணமும் உண்டு) பெற்றிருக்க வேண்டும் என்பதும் இயற்கையே என்று அவர் எழுதுகிறார். ஆனால் உடைமைகளைப் பகிர்ந்தளிப்பதிலுள்ள செயற்கையான ஏற்றத்தாழ்வின் காரணமாகச் சிலரிடம் அதிகமான நிலமும் பணமும் சேர்ந்து விடுகிறது; அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுகிறார்கள், பணத்தை வட்டிக்குக் கொடுக்கிறார்கள். நிலக் குத்தகையும் வட்டியும் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட வருமானத்தின் ஒரே மாதிரியான இரு வடிவங்கள் என்று லாக் கருதினார்.

படிக்க:
1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
♦ குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் !

டட்லி நோர்த் தற்சிந்தனை மிக்க ஆளுமை பெற்றவர். ஒரு பிரபுவின் குடும்பத்தில் இளைய மகனாகப் பிறந்தார்; இளமைப் பருவத்தில் அவர் கல்வி கற்பதில் காட்டிய ஈடுபாடு மிகவும் குறைவாக இருந்த காரணத்தால் அவரை (தாமஸ் மானைப் போலவே) நடுக்கடல் நாடுகளோடு வர்த்தகம் செய்யும் கம்பெனியின் வணிகர் ஒருவரிடம் சேர்த்து விட்டார்கள். அவர் துருக்கியில் பல வருடங்களைக் கழித்து விட்டு அநேகமாக நாற்பது வயதாகும் பொழுது பணக்காரராக இங்கிலாந்துக்குத் திரும்பினார். ஆனால் ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டிருப்பது போல, ”அவருடைய தோற்றம் காட்டு மிராண்டியைப் போல இருந்தது; அவனைக் காட்டிலும் அதிகப் பண்பாடு எதுவும் அவரிடம் இல்லை.”

1683-ம் வருடத்தில், இரண்டாம் சார்ல்சின் ஆட்சியில் டோரிகள் ஆதிக்கம் செலுத்திய காலகட்டத்தில் அவர் லண்டன் நகரத்தின் ஷெரிபாக நியமிக்கப்பட்டார். அந்தப் பதவியை வகிக்கும் பொழுது துருக்கி நாட்டுப் போர் வீரர்களுக்குரிய பழக்க வழக்கங்களைத்தான் அவர் வெளிக்காட்டினார். அரசருக்கு விசுவாசமாகப் பாடுபட்டு விக் கட்சியினருக்கு அதிகமான கெடுதல்களைச் செய்ததற்காக அவருக்கு ‘சர்’ பட்டம் வழங்கப்பட்டது; சர் டட்லி நோர்த் அதற்குப் பிறகு இன்னும் சில முக்கியமான பதவிகளை வகித்தார்; ஆனால் 1688-89ம் வருடப் புரட்சி அவருடைய முன்னேற்றத்தை ஒழித்தது.

1691-ம் வருடத்தில் லாக் வெளியிட்ட வட்டி விகிதத்தைக் குறைப்பது, பணத்தின் மதிப்பை உயர்த்துவது ஆகியவற்றின் விளைவுகளைப் பற்றி சில கருத்துக்கள் என்ற புத்தகம்.

லாக்கின் ஆழ்ந்த புலமையில் பத்தில் ஒரு பங்கு கூட நோர்த்திடம் இருக்கவில்லை. எனினும் அவர் துல்லியமாகவும் துணிச்சலாகவும் பொருளாதாரத்தில் சிந்தனை செய்யக் கூடிய அசாதாரணமான திறமையைக் கொண்டிருந்தார். சென்ற காலத்தின் அங்கீகாரம் பெற்ற மேதைகளைப் பற்றிக் கவலையில்லாமல் அவர் புதுச் சிந்தனையைக் கொண்டிருந்தார். லாக் எழுதிய புத்தகம் வெளிவந்த அதே சமயத்தில் வர்த்தகத்தைப் பற்றிய கருத்துரை என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுபிரசுரம் வெளிவந்தது. லாக் எழுதிய பிரச்சினைகளைப் பற்றியே இவரும் எழுதியிருந்தார். இந்தச் சிறு பிரசுரம் 17-ம் நூற்றாண்டின் பொருளாதாரச் சிந்தனையின் அரிய சாதனைகளில் ஒன்றாக விளங்குகிறது.

அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையான விஞ்ஞான முறையை – தர்க்கரீதியான சூக்குமப்படுத்துதலை வளர்த்துச் செல்வதில் நோர்த் பெரும் பங்கு வகித்தார். ஒரு பொருளாதார நிகழ்வு முடிவில்லாத அளவுக்குப் பல கூட்டுத் தொகுதியாக, எண்ணற்ற உறவுகளைக் கொண்டுள்ள தாக இருக்கிறது. எனவே அதை ஆராய்வதென்றால் அதிலுள்ள தேவையற்ற எல்லாத் தொடர்புகளையும் கூறு களையும் ஒதுக்கிப் பிரித்து “கலப்பற்ற வடிவத்தில்” அதைக் கற்பனை செய்து பார்க்க வேண்டும். இதுதான் தர்க்கரீதியான சூக்குமப்படுத்துதலாகும்.

நோர்த் மூலதனத்தை வட்டி கிடைக்கிற பண மூலதனத்தின் வடிவத்தில் மட்டுமே ஆராய்ந்தார் என்பது உண்மையே என்ற போதிலும் அதன் தன்மையைப் புரிந்துகொள்வதற்கு முதல் அடி எடுத்து வைத்தவர் அவரே. கடன்களுக்குக் கிடைக்கும் வட்டி (வாணிப ஊக்கக் கொள்கையினரும் லாக்கும் கூட நினைத்தது போல) நாட்டிலுள்ள பணத்தின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்படுவதில்லை; பண மூலதனத் திரட்சிக்கும் அதன் தேவைக்குமுள்ள உறவு தான் இதை நிர்ணயிக்கிறது என்று எடுத்துக் காட்டினார். இது வட்டி பற்றிய மூலச் சிறப்புடைய மரபினரின் தத்துவத்துக்கு ஆதாரமாயிற்று; இதிலிருந்து தான் பிற்காலத்தில் லாபம் என்ற இனத்தைப் பற்றிய தெளிவு ஏற்பட்டது. பணத்தைப் பற்றிய தத்துவத்தின் வளர்ச்சிக்கும் நோர்த் அதிகப்பங்காற்றினார்.

நோர்த் வாணிப ஊக்கக் கொள்கையைக் கூர்மையான, அடிப்படையான விமர்சனத்துக்கு உட்படுத்தியதும், “இயற்கையான சுதந்திரத்தை” உறுதியாகத் தீவிரமாக ஆதரித்ததுமே அவரைப் பற்றிய முக்கியமான அம்சமாகவும் இருக்கலாம். வட்டியைக் கட்டாயமாக ஒழுங்குபடுத்துவதை (தனக்கு முன்னர் பெட்டியும் லாக்கும் செய்ததைப் போல) அவர் ஆட்சேபித்தது இதற்குக் காரணமாகும். எனினும் வாணிப ஊக்கக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் அவர்களைக் காட்டிலும் நோர்த் வெகுதூரம் முன்னே சென்றார். இந்த அம்சத்தைப் பொறுத்த வரையிலும் அவர் ஆடம் ஸ்மித்தின் நேரடியான முன்னோடிகளில் ஒருவராக இருக்கிறார்.

உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைப் பொறுத்தமட்டில் லாக், நோர்த் ஆகிய இருவருமே பெட்டி அளவுக்கு முன்னே செல்லவில்லை. ஆனால் 17, 18-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட எண்ணற்ற நூல்களில் அது படிப்படியாக வளர்க்கப்பட்டு நிறுவப்பட்டது; அதன் மூலம் ஸ்மித் வருவதற்கு தளம் தயாரிக்கப்பட்டது. உழைப்புப் பிரிவினையின் வளர்ச்சி, உற்பத்தியில் புதுப்புதுத் துறைகளின் தோற்றம், பண்டப் பரிவர்த்தனை விஸ்தரிக்கப்படுதல் இவை அனைத்துமே மக்கள் உண்மையில் மனித உழைப்பின் பகுதிகளைத்தான் பரிவர்த்தனை செய்கிறார்கள் என்ற கருத்தை உறுதியாக்கியது. எனவே பரிவர்த்தனை விகிதம், பண்டங்களின் பரிவர்த்தனை மதிப்புக்கள் ஒவ்வொரு பண்டத்தையும் உற்பத்தி செய்வதற்குச் செலவழிக்கப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டு நிர்ணயிக்கப்பட வேண்டும். நிலமும் உற்பத்திக் கருவிகளும் பயன்மதிப்புக்கள் என்ற வகையில் செல்வத்தைப் படைப்பதில் நிச்சயமாக ஒரு பாத்திரத்தை வகிக்கின்றன, ஆனால் மதிப்பைப் படைப்பதில் அவற்றுக்கு எத்தகைய பங்கும் இல்லை என்ற உணர்வு வளர்ந்து கொண்டிருந்தது.

பல விதமான கருத்துக்கள் மோதிக் கொண்டிருந்த குழப்பமான நிலையில் இத்தகைய கருத்துக்கள் மெதுவாக, அதிக சிரமத்தோடு கெட்டிப்பட்டன. இவ்விதமாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கருத்துக்களின் கடினமான போராட்டம் ஆடம் ஸ்மித்தின் மூளையிலும் நடைபெற்றது. அதை நாம் பின்வரும் பகுதியில் வர்ணிப்போம். மதிப்புத் தத்துவத்தில் அவருடைய முன்னோடிகளில் அதிக முக்கிய மானவர்கள் ரிச்சர்ட் கான்டில்லான், ஜோசப் ஹாரிஸ், வில்லியம் டெம்பிள் மற்றும் ஜோஸையா டக்கர் ஆகியோராவர். இவர்கள் 18-ம் நூற்றாண்டின் முப்பதுக்களுக்கும் ஐம்பதுக்களுக்கும் இடையில் எழுதினார்கள்.

இவர்களில் ஒரு எழுத்தாளரைப் பற்றி நாம் எந்தத் தகவலையும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் பெயர் நமக்குத் தெரியாது. “பெயரில்லாத-1738”(1) என்று தான் அவரைக் குறிப்பிடுகிறார்கள். அவர் ஓரளவுக்கு ஆடம் ஸ்மித்தைக் கூட விஞ்சும் படி மதிப்புத் தத்துவத்தை அற்புதமான வகையில் துல்லியமாக வகுத்துரைத்தார். 17, 18-ம் நூற்றாண்டுகளில் பல பொருளாதார நூல்கள் ஆசிரியர் பெயர் இல்லாமல் வெளியிடப்பட்டன. இவற்றில் சிலவற்றை எழுதியவர்களின் பெயர்கள் முன்பே கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன. மற்றவர்கள் இந்த விஞ்ஞானத்தில் முக்கியத்துவம் நிறைந்த பாத்திரத்தை வகிக்கவில்லை. இவர்களில் ‘பெயரில்லாத-1738’ ஒரு விதிவிலக்காக இருக்கிறார்.

அவருடைய புத்தகம் பொதுவாக பணத்துக்கு வட்டியைப் பற்றிய சில சிந்தனைகள் என்ற சாதாரணமான தலைப்பைக் கொண்டிருக்கிறது. இதிலிருந்து ஒரு முக்கியமான பகுதியை இங்கே மேற்கோள் காட்டுவோம். நமது ஆராய்ச்சிக்கு உதவுகின்ற வகையில் கீழே (2)விளக்கக் குறிப்பும் தரப்பட்டிருக்கிறது.

”வாழ்க்கைக்கு அவசியமான பொருள்களின் உண்மையான, மெய்யான மதிப்பு அவை மனிதகுலத்தை நிலைத்திருக்கச் செய்வதற்குத் தரும் பங்குக்கு ஏற்ற விகிதத்தில் இருக்கிறது. பரிவர்த்தனையாக அவற்றில் ஒன்றைக் கொடுத்து இன்னொன்றைப் பெறுகிற பொழுது அவற்றின் மதிப்பு, அவற்றை உற்பத்தி செய்வதற்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்ற, அவசியமான உழைப்பின் அளவைக் கொண்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது. அவற்றை விற்பனை செய்கிற பொழுது அவற்றின் மதிப்பு அல்லது விலை அவற்றில் பயன் படுத்தப்பட்ட உழைப்பின் அளவைக் கொண்டும், பொதுவான அளவுகோல் அல்லது ஊடகமானது அதிகமாக அல்லது குறைவாகக் கிடைப்பதைக் கொண்டும் முடிவாகும்.

Carrying Waterவாழ்க்கைக்கு ரொட்டியையும் மதுவையும் போல் தண்ணீரும் அவசியமே; ஆனால் கடவுளின் கருணையால் ஒவ்வொரு மனிதனுக்கும் எந்த சிரமமும் இல்லாமல் போதுமான அளவுக்குக் கிடைக்கும் வகையில் தண்ணீர் ஏராளமாக இருக்கிறது : அதனால் பொதுவாக அதற்கு எந்த விலையும் கிடையாது. ஆனால் குறிப்பிட்ட மனிதர்களுக்கு அதைக் கொண்டு வந்து கொடுப்பதற்கு எங்கே, எப்பொழுது உழைப்புத் தேவைப்படுகிறதோ அங்கே தண்ணீருக்குக் கொடுக்காவிட்டாலும் உழைப்புக்குக் கூலி கொடுக்க வேண்டும். அதன் காரணமாக சில நேரங்களில், சில இடங்களில் ஒரு பீப்பாய் தண்ணீர் கூட ஒரு பீப்பாய் மதுவைப் போல அதிகமான விலையுள்ளதாக இருக்கலாம்” (3)

மதிப்புத் தத்துவத்தின் வளர்ச்சியோடு ஒட்டிய வகையில் வேறு முக்கியமான துறைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. கடைசியாகப் பார்க்கும் பொழுது கூலித் தொழிலாளர்களின் ஊதியம் அவர்கள் உயிரோடிருப்பதற்குக் குறைந்த பட்சம் தேவையானவற்றின் மூலமாக நிர்ணயிக்கப்படுகிறது என்பது பெட்டியின் கருத்து. இந்தக் கருத்தை வளர்த்துச் செல்லும் பொழுது பொருளியலாளர்கள் இந்தக் குறைந்த பட்சத்தின் தன்மையைப் புரிந்து கொள்ளும் வகையில் நெருங்கி வந்தனர். அவர்கள் மக்கள் தொகைப் பிரச்சினைகளை ஆராய்ந்ததன் மூலமாக, குறைந்த பட்சத்தோடு நின்றுவிடுகிற அளவுக்குத் தொழிலாளர்களின் கூலியைக் குறைத்துவிடும் வகையில் தொழிலாளர்களுக்கிடையே போட்டியை ஏற்படுத்துகின்ற விதத்தில் தொழிலாளர் எண்ணிக்கையின் புனருற்பத்தியை உறுதிப்படுத்துகின்ற பொறியமைவை ஓரளவுக்கு விளக்கினார்கள்,

வர்த்தகம், தொழில்துறை ஆகியவற்றிலிருந்து கிடைக்கின்ற லாபத்துக்கும் கடன்களிலிருந்து கிடைக்கின்ற வட்டிக்கும் வேறுபடுத்திப் பார்த்தது மூலதனத்தையும் அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தையும் புரிந்து கொள்வதில் முக்கியமான முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. 18ம் நூற்றாண்டின் ஐம்பதுக்களில் எழுதிய ஜோசப் மாஸ்ஸி, டேவிட் ஹியூம் ஆகியோர் வழக்கமான நிலைமைகளில் வட்டி என்பது வருமானத்தின் பகுதி; வணிகரும் தொழிலதிபரும் பணத்தின் , கடன் மூலதனத்தின் உடைமையாளரோடு இதைப் பகிர்ந்து கொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்பதை முன்பே புரிந்து கொண்டிருந்தனர்.

ஆகவே ஆடம் ஸ்மித்துக்கு முந்திய அரசியல் பொருளாதாரம் உண்மையில் உபரி மதிப்பை ஆராய்கிறது ; ஆனால் அதன் தன்மையைப் புரிந்து கொள்ளாமல் லாபம், வட்டிமற்றும் நிலவாரம் என்ற விசேஷமான வடிவங்களை மட்டுமே எடுத்துக்கொள்கிறது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) 1738 என்ற வருடமும் முற்றிலும் நிச்சயமானதல்ல.

(2)  ஆசிரியர் இந்த இடத்தில் உண்மையில் பயன்மதிப்பை வரையறுத்துக் கூறுகிறார். இங்கே அவர் பரிவர்த்தனை மதிப்பு பற்றிய கருத்து கோளைத் தருகிறார். இது பயன் மதிப்பிலிருந்து முழுவதும் வேறுபட்டிருக்கிறது. சமூகத்துக்கு அவசியமான உழைப்பு நேரம் என்ற கருத்து இங்கே கரு வடிவத்தில் காணப்படுகிறது.

ஆசிரியர் விலைக்கும் மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டைப் பார்க்கிறார். பணத்தின் மிகையளவு அல்லது பற்றாக்குறையின் தாக்கத்தினால் விலை மாற்றமடைகிறது என்பதைக் குறிப்பிடுகிறார்.

இது ”மதிப்பைப் பற்றிய புதிர்” என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறப்பான உதாரணமாகும். இது பயன் மதிப்புக்கும் பரிவர்த்தனை மதிப்புக்கும் உள்ள வேறுபாட்டைக் காட்டுகிறது.

மதிப்பை உருவாக்குவது உழைப்பு; இயற்கை அல்ல என்பதை ஆசிரியர் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

(3)  R. Meelk, Studies in thie Labour Theory of Value, London, 1956, pp. 42-43.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

வரலாறு : இந்தியாவை வீழ்த்த கிழக்கிந்தியக் கம்பெனிக்கு நிதியளித்த சேட்டுகள் !

கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவியது அதன் சாதுரியமான செயல்பாடுகளாலோ அல்லது அதிநவீன ராணுவ வல்லமையாலோ மட்டுமல்ல; கடல் போல் விரிந்த இந்திய கடன் வாய்ப்பை கைதேர்ந்த வகையில் தன்னோடு இணைத்துக் கொண்டதே அதற்கான முக்கியக் காரணம் ஆகும்.

– வில்லியம் டாரிம்பிள்

***

ந்தியாவை பிரிட்டன் வெற்றி கொண்டது பற்றி இன்னமும் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இது ஒரு கொடூரமான எதார்த்த உண்மையை மறைக்கும் பேச்சே ஆகும். 18-ம் நூற்றாண்டின் மத்தியில் இந்தியாவின் பெரும்பகுதியை கைப்பற்றியது பிரிட்டிஷ் அரசாங்கம் அல்ல; மாறாக அது ஒரு அபாயகரமான கட்டுப்படுத்தப்படாத தனியார் நிறுவனமாகும்.

இலண்டனில் 5 ஜன்னல் வைத்த ஒரு சின்னஞ்சிறு அறையை தலைமையகமாகக் கொண்டு இயங்கியதுதான் அந்த கிழக்கிந்தியக் கம்பெனி. ஈவிரக்கமற்ற முரடனும் அவ்வப்போது புத்தி சுவாதீனம் இழப்பவருமாகிய ராபர்ட் கிளைவ் என்னும் ஒரு கார்பரேட் பிணந்தின்னியே அதன் இந்திய நிர்வாகி. லாப வெறி பிடித்த இந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் கீழ்தான் இந்தியா காலனி நாடானது.

தி அனார்கி நூலின் ஆசிரியர் வில்லியம் டாரிம்பிள்.

இந்த நிகழ்வின் சாத்தியக்கூறு குறித்து 2013-ம் ஆண்டு முதல் ஆறு ஆண்டு காலம் செய்த ஆய்வில் விளைவு தான் ப்ளூம்ஸ்பர்ரி நிறுவனத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள தி அனார்கி (அராஜகம் / கும்பினி ஆட்சி: கிழக்கிந்தியக் கம்பெனி, கார்ப்பரேட் வன்முறை மற்றும் ஒரு சாம்ராஜ்யம் சூறையாடப்படுதல்) என்ற என்னுடைய நூல்.

இந்த நூலின் குறிக்கோள் கிழக்கிந்தியக் கம்பெனியின் வரலாறு மற்றும் வர்த்தக செயல்பாடுகளை ஆய்வதல்ல. மாறாக, லண்டனில் ஓர் அலுவலக வளாகத்தின் சிற்றறையில் இயங்கிய சின்னஞ்சிறு தொழில் நிறுவனம், 1756 – 1803-ம் ஆண்டுகளில் இந்தியத் துணைக்கடத்தின் வல்லமைமிக்க இருபெரும் பேரரசுகளான மொகலாய மற்றும் மராட்டியப் பேரரசுகளை அகற்றிவிட்டு தனது ஆட்சியை நிறுவியது எப்படிச் சாத்தியமானது என்ற மையமான கேள்விக்கு விடை காணும் முயற்சியே இது.

1740-களின் கர்நாடக போர் தொடங்கி, 1803-ம் ஆண்டின் ஆங்கில – மராத்தா போர் ஈராக 60 ஆண்டு காலத்தில் கிழக்கிந்திய கம்பெனி தன்னை எதிர்த்த இந்தியப் பேரரசுகள் அனைத்தையும் வீழ்த்தி தில்லியைக் கைப்பற்றியது. இந்த அசாதாரணமான வெற்றிக்கு வழமையான பல காரணங்களை வரலாற்று ஆய்வாளர்கள் முன் வைக்கிறார்கள்: பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் மொகலாயப் பேரரசு சிதறுண்டு போய் போட்டியும் பொறாமையும் மிக்க நவாபுகளின் ஆட்சி நடைபெற்றதும், இந்திய அரசுகளிடையே ஒற்றுமை இன்மையும் இதற்கு முக்கியப் பங்காற்றின.

மேலும் மிக முக்கியமாக பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் முழு ஒத்துழைப்பையும் கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. 18-ம் நூற்றாண்டு முழுவதும் பரஸ்பர நலன் கருதி கம்பெனிக்கும் பாராளுமன்றத்துக்குமான உறவு சீராக வளர்ச்சியுற்று இன்று சொல்லப்படும் அரசு தனியார் கூட்டு நிறுவனம் (PPP) என்ற நிலையை அன்றே அடைந்தது. பெரும் கனவான்களாக ஏராளமான செல்வத்துடன் திரும்பிய ராபர்ட் கிளைவ் போன்றோர் பாராளுமன்ற இரு அவைகளிலும் இருக்கைகளை விலைபேசி வாங்க முடிந்தது. பதிலுக்கு பாராளுமன்றம் கம்பெனிக்கு தன்னுடைய கப்பல்களையும், ராணுவ வீரர்களையும் கொடுத்து வெற்றிக்கு வழி கோலியது.

Robert Clive
ராபர்ட் கிளைவ்

புதிய இராணுவ தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் ஏற்பட்ட வளர்ச்சி ராணுவ மேன்மையை உறுதிசெய்தது. உதாரணமாக, அக்டோபர் 24, 1746 அன்று அடையாறு கழிமுகப் பகுதியில் நடைபெற்ற சண்டை இந்திய வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. முதல் முதலாக நவீன போர்க்கலையில் பயிற்சிபெற்ற 700 பிரெஞ்சு – இந்திய சிப்பாய்களை கர்நாடக நவாப்பின் மூத்த மகன் மஹ்ஃபுஸ்கான் 10,000 குதிரைப்படை வீரர்களுடன் சென்று இடைமறித்தார். இதுநாள் வரை இந்தியாவில் எங்கும் பார்த்திராத புதிய துப்பாக்கிப் பிரயோக முறை சில நிமிட நேரங்களில் எதிர்ப்பை முறியடித்து போரை முடிவுக்குக் கொண்டுவந்தது. இறுதியில் இரண்டு பிரெஞ்சு சிப்பாய்களும் 300 முகலாய படைவீரர்களும் பலியாகி இருந்தனர். இந்த இராணுவ வல்லமையை ஈடுசெய்யும்படியான எந்த ஒரு ராணுவமும் இந்தியாவில் இல்லை என்ற நிலை தெளிவானது. 1765-ம் ஆண்டுவரை இந்த நிலை தொடர்ந்தது. இருபது ஆண்டுகால இடைவெளிக்குள் இந்திய அரசுகள் இராணுவத் தொழில்நுட்பத்தில் கும்பினி படைகளோடு ஒப்பிடத்தக்க வகையில் தமது போர்த்திறனை முன்னேற்றிக் கொண்டன.

“வங்காளம் மற்றும் கோரமண்டலக் கடற்கரை பகுதிகளில் இந்தியர்கள் போர்க்கலையில் அடைந்திருக்கும் முன்னேற்றம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது” என்று 1765-ல் லண்டனில் இருந்த கும்பினி இயக்குனர்கள் கருதினர். “ஐரோப்பிய அதிகாரிகளோ சிப்பாய்களோ பிரதேச அரசுகளின் படையில் பணியாற்றுவதை தடை செய்ய வேண்டும்” என்றும், “அவர்களிடையே ராணுவ ரீதியான முன்னேற்றங்கள் தொடர்வதை சாத்தியமான அளவு தொய்வடையச் செய்யும்படியும்” கும்பினி இயக்குனர்கள் தங்களது வங்காள கவுன்சிலை வலியுறுத்தினர்.

படிக்க:
ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !
♦ திப்பு சுல்தான் – ஆங்கிலேயர் + ஆர்.எஸ்.எஸ்-ன் குலை நடுக்கம் !

கும்பினி இயக்குனர்களின் மேற்படி அச்சத்தை நியாயப்படுத்துவது போல ஜனவரி 1779-ல் மும்பையில் இருந்து வந்த கும்பினிப் படையை, புனே நகருக்கு வெளியே தலைக்கானத்தில் நடைபெற்ற போரில் மகாத்ஜி சிந்தியாவின் படை சுற்றி வளைத்து தோற்கடித்தது.

அடுத்த ஆண்டு, ஆகஸ்ட் 26, 1780-ல் நடைபெற்ற புலியூர் சண்டையில் ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானின் படை வில்லியம் பைலீ தலைமையில் வந்த 3,800 சிப்பாய்களைக் கொண்ட கும்பினிப் படைப்பிரிவை சுற்றிவளைத்து ஒட்டு மொத்தமாக அழித்தொழித்து மாபெரும் வெற்றியீட்டியது.

Battel of Pulliour
1780-ல் நடைபெற்ற புலியூர் சண்டையில் கும்பினி படைகள் பெரிய சேதத்தை சந்தித்தன. அதனை விளக்கும் ஓவியம்.

இந்தப் பேரழிவு செய்தி கல்கத்தாவின் வில்லியம் கோட்டையை எட்டியது. இப் படுதோல்வி உணர்த்தும் செய்தியை உடனடியாக உணர்ந்த வாரன் ஹேஸ்டிங்ஸ் “இதுநாள் வரை வெற்றிக் களிப்பில் மிதப்பதை தவிர வேறு ஒன்றும் அறியாத நமது படைகள் பயங்கரமான இந்தத் தலைகீழ் முடிவு ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து எளிதில் மீள முடியாது; மேலும் தோற்றுப்போன கமாண்டர்கள் தலைமையின் கீழ் முன்போல் அவர்கள் நம்பிக்கையுடன் போர்க்களம் செல்வதும் சாத்தியமில்லை” என்று லண்டனுக்கு எழுதினார்.

மதராஸில் இருந்து மெக்கார்ட்னி பிரபுவும் அதே புரிதலுடன், “இந்தியர்களுக்கு நமது ராணுவத்தின் மேல் இருந்த அச்சம் போய் விட்டது; அவர்களது எதிர்ப்பை பற்றிய நமது அலட்சியமும் போய்விட்டது. எனவே கடந்த கால அனுபவத்தைக் கொண்டு நமது எதிர்கால நலன்களை கணக்கிட முடியாது” என்று லண்டனுக்கு எழுதினார்.

இதன் பின்னர் ஐரோப்பிய ராணுவ செயல் தந்திரங்களின் முக்கியத்துவம் குறைந்து மூலவளங்கள், ஆட்சியதிகாரம், வரிவசூல் போன்ற விஷயங்களுக்கு கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டது. இது நொடிப்பொழுதில் பெருந்தொகையை திரட்டுவதற்கான வாய்ப்பை கும்பினிக்கு வழங்கியது. செந்தூர சிவப்பில் சீருடைகள், பல்லாடியன் அரண்மனைகள், புலி வேட்டைகள், போல்கா நடனங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் கும்பினியின் கணக்கர்கள் விரித்த லாப நட்ட பேரேடும், லண்டன் பங்குச் சந்தையில் ஏறி இறங்கும் அதன் பங்கு விலைகளும் இருக்கத்தானே செய்கின்றன.

இந்தியர்கள் பலரது ஆதரவை, குறிப்பாக 18-ம் நூற்றாண்டின் இந்திய பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்திய ஜெயின் மற்றும் மார்வாடி வட்டிக் கடைக்காரர்கள், வங்கியாளர்களின் ஆதரவைப் கும்பினி பெற்றிருந்தது. இதுவே கிழக்கிந்திய கம்பெனியின் வெற்றிக்கான இரகசியம் ஆகும். எனினும் இது பெரிதும் பேசப்படாத இரகசியமாகவே நீடிக்கிறது.

உண்மையில் கிழக்கிந்திய கம்பெனியினர் இந்திய நிதி மூலதன உடைமையாளர்களுக்கு இணக்கமான மொழியில் பேசினர். இந்திய மூலதனத்திற்கு தங்களுடைய போட்டியாளர்களை விட கூடுதலான பாதுகாப்பு வழங்கினர். இறுதியாகப் பார்த்தால் எல்லாம் பணத்துக்கான ஏற்பாடுதான். பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் வங்காளம் வருவாய் உபரியாக ஆண்டொன்றுக்கு 25 மில்லியன் ரூபாய்களை கிழக்கிந்தியக் கம்பெனிக்குத் தவறாமல் வழங்கி வந்தது. அதேசமயம் மகாத்ஜி சிந்தியா 1.2 மில்லியன் ரூபாய்களை தனது மால்வா பிரதேசத்தில் இருந்து பெறுவதற்குத் தடுமாறிக் கொண்டிருந்தார். “பணமில்லாமல் பட்டாளத்தை திரட்டுவது எப்படி; போர் நடத்துவதுதான் எப்படி” என்று இந்நிலையை அவர் வேதனையோடு வெளிப்படுத்தினார்.

Mahadaji Scindia
மகாத்ஜி சிந்தியா

ஜெயின், மார்வாரி போன்ற இந்தியாவெங்கிலும் உள்ள வங்கியாளர்கள், வட்டி லேவாதேவிக்காரர்கள் மைசூர் சுல்தான்களையோ மராட்டியர்களையோ ஆதரிக்கவில்லை; மாறாக கிழக்கிந்திய கம்பெனியயையே ஆதரிப்பதென்று தீர்மானித்தார்கள். இறுதியாகப் பார்க்கையில், இதுதான் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியதிகாரத்துக்கு வழிகோலியது.

பேரரசர் அவுரங்கசீப்பின் மறைவுக்குப் பிறகு முகலாயப் பேரரசு எங்கும் அராஜகம் தலைவிரித்தாடியது. அந்த காலகட்டத்தில் வங்காள நவாப் முர்ஷித்அலி கான் தில்லிக்கு செலுத்தவேண்டிய ஆண்டு திறைத் தொகையை தங்கம், வெள்ளி காசுகளாக வண்டிகளில் ஏற்றி பட்டாளம் புடைசூழ மோசமான சாலை வழியே அனுப்புவதை முற்றிலுமாக தவிர்த்தார். அதற்கு பதிலாக ஜோத்பூர் ராஜ்ஜியத்தின் நாகர் பகுதியை பூர்வீகமாக கொண்ட மார்வாரி ஒஸ்வால் ஜெயின் குடும்ப வங்கியாளர்களின் பணப்பரிவர்த்தனை வலைப்பின்னலை பயன்படுத்தி திறைத் தொகையை அனுப்பி வைத்தார். 1722-ல் மொகலாயப் பேரரசர் இந்த மார்வாரி ஜெயின்களைத்தான் ஜெகத் சேத்கள் (உலக வங்கியாளர்கள்) என்ற பாரம்பரியத்துக்கும் நிலைக்கும்படியான பட்டத்தை அளித்து கவுரவித்தார்.

மொகலாயப் பேரரசின் செழுமையான வங்காள மாகாணத்தின் நாணய தயாரிப்பை கட்டுப்படுத்துதல், வரி வசூலித்தல், வருவாய் பரிமாற்றங்கள் செய்தல் போன்ற அனைத்தையும் தங்களது முர்ஷிதாபாத் அரண்மனையில் இருந்து கொண்டு செயல்படுத்திய ஜெகத்சேத்துகள் வங்காள நவாபுக்கு அடுத்தபடியான அதிகாரத்தைச் செலுத்தினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் செல்வச் செழிப்பு மிக்க யூத வங்கியாளர் குடும்பமாக ரோத்ஸ்சைல்டுகளுக்கு இணையானவர்கள் என்று கூறுமளவுக்கு இவர்கள் செல்வாக்கு பெற்றிருந்தனர். “கங்கை தனது 100 கிளைகள் வழியாக நீரை கடலுக்குள் சொரிவது போன்று செல்வம் சேத்துகளின் கஜானாவை சென்று சேருகிறது” என்று ஒரு வங்காளக் கவிஞர் விவரிக்கிறார்.

கும்பினி விரிவுரையாளர்களும் ஜகத் சேத்துகளின் செல்வச் செழிப்பு கண்டு ஒரு கணம் கண் கூசி நின்றனர். வங்காளத்தை நெருக்கமாய் அறிந்த ராபர்ட் ஓர்ம் “இவர்கள் நாம் அறிந்த உலகின் மாபெரும் நாணய வல்லுனர்களும் வங்கியாளர்களும் ஆவர்” என்று அப்போதைய ஜெகத் சேத்துகளைப் புகழ்ந்து விவரிக்கிறார். கேப்டன் ஃபென்விக், “வங்காள விவகாரங்கள் 1747-48” என்ற தலைப்பின் கீழ் எழுதும்போது மஹ்தாப் ராய் ஜெகத் சேத் பற்றி “வங்காள நவாப்புக்கு மிகவும் பிரியமானவர்” என்றும். “லண்டன் நகரத்தில் வங்கிகளின் வீதியான லாம்பர்ட் வீதியின் ஒட்டுமொத்த வங்கியாளர்களையும் விட மிகப்பெரிய வங்கியாளர்” என்றும் குறிப்பிடுகிறார். வங்காளத்தின் ஆட்சியாளர்கள் உட்பட யாரையும் உருவாக்கவோ அழிக்கவோ வல்லவர்களாக ஜெகத் சேத்துகள் விளங்கினர். அவர்கள் தங்களது பொருளாதார உள்ளுணர்வுக்கு இணையான அரசியல் உள்ளுணர்வை கொண்டிருந்தனர்.

துண்டு துக்காணி அரசுகளாக சிதறிக்கிடக்கும் ஒழுங்கற்ற இந்திய அரசியல் சூழலில் இயங்குவதற்கு ஜெகத் சேத்துகள் தங்களுக்கு வாய்த்த இயல்பான கூட்டாளிகள் என்பதையும் பெரும்பாலான விஷயங்களில் இருவரது நலன்களும் ஒத்துப்போகின்றன என்பதையும் ஆரம்ப காலம் முதற்கொண்டே கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் உணர்ந்திருந்தனர். மேலும் அவர்கள் ஜெகத் சேத்துகளின் கடன் வசதிகளை வாடிக்கையாகவும், தாராளமாகவும் பயன்படுத்திக் கொண்டனர்.

1718-க்கும் 1730-க்கும் இடைப்பட்ட காலத்தில் கும்பினி இவர்களிடமிருந்து ஆண்டுக்கு சராசரியாக ரூ 4 லட்சம் கடனாக பெற்றது. “கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் பரஸ்பர நலன்களின்” அடிப்படையில் பொருத்தமான காலத்தில் அமையப்பெற்ற இவர்களது கூட்டணி மற்றும் மார்வாரி வங்கியாளர்கள், இந்திய நிதிச் சந்தையில் நுழைய கும்பினியினருக்கு வழிவகை செய்து கொடுத்தது ஆகியவை இந்திய வரலாற்றின் போக்கையே புரட்டிப்போடும் மாற்றத்தைக் கொண்டு வந்தன.

படிக்க:
காவிகள் மறைத்த சிவாஜி வரலாறு !
♦ ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

மார்ச், 1757-ல் சந்தர்நகரில் பிரெஞ்சுப் படைகளை தோற்கடித்த பின்னர் ராபர்ட் கிளைவ் தனது துருப்புக்களை மெட்ராசுக்குத் திருப்பி அனுப்ப ஆயத்தமானார். அப்போது ஜெகத் சேத்துகளின் தூதுவர்கள் கிளைவைச் சந்தித்து, வங்காளத்தின் புதிய நவாப் சிராஜ் உத்தவுலாவை ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அகற்றிவிட்டு அவரது பாட்டனார் அலிவர்தி கானை அதிகாரத்துக்குக் கொண்டுவர ஜெகத் சேத்துகள் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நடவடிக்கையில் கிளைவ் பங்கேற்க வேண்டும் என்றும் கோரி ஆசை காட்டினர்.

மஹதாப் ராய் ஜெகத் சேத் மற்றும் அவரது ஒன்று விட்ட சகோதரரும் மஹாராஜா என்று அல்வர்திகானால் பட்டம் சூட்டப்பட்டவருமான ஸ்வரூப் சந்த் ஆகிய இருவரும் அப்போது வங்கி நிர்வாகப் பொறுப்பில் இருந்தனர். இவர்களிடம் புதிதாக பட்டத்துக்கு வந்த சிராஜ் தனது போர் நடவடிக்கைக்காக 30 மில்லியன் ரூபாய்களைக் கொடுக்கும்படி ஆணையிட்டார். அதை மஹதாப் மறுத்து விடவே சிராஜ் ஆத்திரத்தில் அவரை அறைந்து விட்டார். அதன் பின்னரும் தலைநகரின் முதல் குடிமகனான ஜெகத் சேத்திடம் சிராஜ் மோசமாகவே நடந்து கொள்ளத் தொடங்கினார்.

இதற்கு பழிவாங்கவே ஜெகத் சேத்துகள் நிதி திரட்டி ராபர்ட் கிளைவுக்கு லஞ்சம் கொடுத்து அவரை வடக்கே வரவழைத்து சிராஜ் உத்தவுலாவுடன் பிளாசிப் போரில் இறக்கினர். “பிளாசிப் போருக்கான காரண கர்த்தாக்கள் ஜெகத் சேரத்துகள்தான் என்று நான் உறுதிபடக் கூற முடியும்”, “அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால் ஆங்கிலேயர்கள் மட்டும் இதைச் செய்திருக்க மாட்டார்கள். ஆங்கிலேயர்களின் குறிக்கோள் சேத்துகளுடைய குறிக்கோளாக ஆனது” என வங்காளத்தின் பிரெஞ்சுப் படை கமாண்டர் ஜீன் லா எழுதினார்.

கும்பினி ஆட்சியின் ஆரம்ப காலமான 1757-ல் பிளாசி யுத்தத்தில் தொடங்கிய இந்த உறவு அடுத்த அரை நூற்றாண்டுக்குப் பின்னர் 1803-ல் நடந்த இரண்டாவது ஆங்கிலோ மராத்தியப் போரில் கிழக்கிந்திய கம்பெனி மராட்டியர்களை வெற்றி கொண்ட போதும் தொடர்ந்தது. அடிப்படையில் இந்த உறவுதான் கும்பினியாருக்கு தில்லியிலும் மத்திய இந்தியாவின் சமதள பகுதிகளிலும் ஆட்சியதிகாரத்தை வழங்கியது.

ஏராளமாகத் திரண்டிருக்கும் நிதி இருப்பை நிலையான நிலவரி வருவாய் என்ற வகையிலும், வட்டி லேவாதேவிக் காரர்கள், வங்கியாளர்கள் கூட்டணி மூலமும் பெறுவதற்கான வாய்ப்புதான் இந்திய எதிரிகளை விட கும்பினிப் படைகளின் கை ஓங்கியிருக்கச் செய்தது. கீழ்த்திசை நாடுகளிலேயே மிகப்பிரம்மாண்டமான, நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட ராணுவத்தைக் களமிறக்கும் அளவுக்கு மாபெரும் நிதி ஆதாரத்தைத் திரட்டவும், முறையாக வினியோகிக்கவுமான வழிவகைகளை கிழக்கிந்திய கம்பெனி பெற்றிருந்தது. எதிரிகளுக்கு அமையாத இந்த வாய்ப்புதான் கும்பினிப்படைகளை அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய அம்சமாகும்.

திப்பு சுல்தான்
திப்பு சுல்தானின் மகன்களை பணயக் கைதிகளாக அழைத்துச் செல்லும் கார்ன்வாலிஸ் பிரபு.

லாலா கஷ்மிரி மால் ஹவுஸ், ராம் சந்த் – கோபால் சந்த் ஷாஹு, கோபால் தாஸ் – மனோகர் தாஸ் போன்ற அன்றைய மிகப்பெரும் நிதி நிறுவனங்கள் கிழக்கிந்திய கம்பெனியின் ராணுவ பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகளை கையாண்டன; மும்பை, சூரத் அல்லது மைசூர் ஆகிய இடங்களில் பணப்பரிமாற்றம் செய்யத் தக்க மாற்று முறிகளை [bills of exchange] தயார் செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்டன; கூடவே, ஏராளமான கடன்களைப் பணமாக வழங்கின. இச்சேவைகள் அனைத்தும் கும்பினி சிப்பாய்களுக்கு முறையாக சம்பளம் கொடுப்பது, படைப் பராமரிப்பு, ஆயுத தளவாடங்களையும் சிப்பாய்களின் பிற வழங்கீடுகளையும் உரிய நேரத்தில் சேர்ப்பித்தல் ஆகிய பணிகளை சாத்தியமாக்கின.

இந்த அளப்பரிய உதவிகளுக்குக் கைமாறாக கிழக்கிந்திய கம்பெனி ஜெகத் சேத்துகளுக்கு பதிலாக இனி ஹவுஸ் ஆஃப் கோபால்தாஸ் அரசாங்க வங்கியாளர்களாக இருப்பார்கள் என்று அறிவித்தது. கம்பெனியின் ஆதரவைப் பெற்ற இந்த நிதி நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மேற்கு இந்தியாவிலும் விரிவாக்கின.

படிக்க:
கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?
♦ விடுதலைப் போரின் வீர மரபு – அறிமுகம்

இந்திய வர்த்தகர்கள் மற்றும் வங்கியாளர்களுக்கு கிழக்கிந்தியக் கம்பெனி இயற்கையான கூட்டாளியாக அமைந்தது. “தங்களது பிராந்தியத்தில் வசிக்கும் வங்கியாளர்கள், வியாபாரிகள் மற்றும் பிற பணக்காரர்களின் செல்வத்தில் கும்பினி எந்த ஒரு குறுக்கீடும் செய்யவில்லை; மாறாக அந்த செல்வந்தர்களிடம் நேசமாக நடந்து கொண்டது” என்று ஹரிச்சரண் தாஸ் எழுதுகிறார்.

1798 -ல் வெல்லஸ்லி பிரபுவின் வருகைக்குப்பின் கும்பினியின் இராணுவம் வெகுவேகமாக பெருகியது. சில ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 1,15,000 -த்தில் இருந்து 1,55,000 ஆகவும் அடுத்த பத்தாண்டில் 1,95,000 ஆகவும் அதிகரித்தது. இது பிரிட்டிஷ் ராணுவத்தை போன்று ஏறத்தாழ இரு மடங்காகும். அதுபோலவே உலகின் மிகப்பெரிய ஐரோப்பிய பாணி நிலை ராணுவங்களில் ஒன்றாகவும் கும்பினிப்படை உயர்ந்தது. த(லை)க்கானத்துப் போர் மற்றும் புலியூர் சண்டையின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டு ஐரோப்பிய மற்றும் தென் ஆப்பிரிக்க குதிரைகளை வரவழைத்து ஒரு குதிரைப்படையும் நிறுவப்பட்டது. இவ்வாறான மாபெரும் ராணுவ ஏற்பாட்டிற்கு செலவு செய்ய வெல்லஸ்லி சிரமப்படவில்லை.

Tipu
திப்பு சுல்தான்

காரன்வாலிஸ் பிரபு செய்த நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளின் காரணமாக எழுந்த கிராமப்புறக் கிளர்ச்சிகள் ஓய்ந்த பிறகு வங்காளம் கும்பினிக்கு ஆண்டு உபரி வருவாயாக ரூபாய் 25 மில்லியன்களை சீராக வழங்கியது. மாறாக தனது பாசன வசதி குறைவான மால்வா பிரதேசத்திலிருந்து 1.2 மில்லியன் ரூபாய்களை திரட்டுவதே சிந்தியாவுக்கு பெரும் பாடாக இருந்தது. ஆங்கிலேயர்கள் பெற்ற இந்த உத்தரவாதமான உபரி வருவாய் வங்காளத்தின் நிதி சந்தையிலிருந்து தேவைக்கேற்ப ஏராளமான தொகையை கடனாக பெறுவதற்கு அடிப்படையை அமைத்துக் கொடுத்தது. 1798 -க்கும் 1806 -க்கும் இடைப்பட்ட வெல்லஸ்லியின் காலத்தில் கம்பெனியின் கடன் சுமை மூன்று மடங்காக உயர்ந்தது.

கம்பெனி தனது நிதி ஆதாரத்தை நாடு முழுவதும் திறம்பட மறு விநியோகம் செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தது. பனாரஸ் வங்கியாளர்கள் மற்றும் வெஸ்ட் கோஸ்ட ஆஃப் கோபால் தாஸ் – மனோகர் தாஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் கம்பெனியின் ராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் படைகளுடன் நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று ராணுவத் துருப்புகளுக்கும் அவர்களது எஜமானர்களுக்கும் தேவையான தொகையை பட்டுவாடா செய்தனர். உண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்த வங்கியாளர்கள் கம்பெனிப் படைகளுக்கு கடன் கொடுப்பதற்கு தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு முன்வந்தனர். இவ்வாறு தனது சக்திவாய்ந்த கூலிப்படைகளுக்குத் தேவையான நிதியை உத்தரவாதப் படுத்தியது தான் கிழக்கிந்தியக் கம்பெனி போர்களில் பெற்ற வெற்றிக்கான பிரதான காரணமாகும்.

இதற்கு நேர் எதிரான வகையில் “இந்த நாடு முழுவதிலும் பேஷ்வா முதல் கடைநிலை குதிரைவீரன் வரை எந்த ஒரு மராட்டியனிடத்திலும் ஒரு சல்லி காசு கூட கிடையாது” என்று இளம் ஆர்தர் வெல்லெஸ்லி குறிப்பிட்டார்.

இந்தியாவின் மீதான காலனியாதிக்க வெற்றி எந்த அளவுக்கு போராடிப் பெறப்பட்டதோ அதே அளவுக்கு விலை கொடுத்தும் வாங்கப் பட்டிருக்கிறது என்று பர்டோன் ஸ்டீன் குறிப்பிட்டார். மேலும், இந்த நிகழ்வு நடந்தேறுவதற்கான நிதியும் கூட இந்தியாவின் ஜெயின் மற்றும் மார்வாரி வங்கியாளர்களிடம் இருந்துதான் வந்தது.

கம்பெனியின் வர்த்தகர்களும் அவர்களது இந்திய கூட்டாளிகளான வங்கியாளர்களும் எப்பொழுதுமே ஆதாயம் என்ற ஒரே மொழியில் பேசிக் கொண்டனர். 1750 முதல் அவர்கள் நெருங்கி செயல்படத் தொடங்கியதன் தொடர் விளைவாகத்தான் கும்பினி அரசு இந்தியாவில் வெற்றி வாகை சூடியது.

சர்வதேச அரசியலில் நிதியாதிக்கக் கும்பலின் கை, ஏதோ இன்று  மட்டும் ஓங்கியிருக்கவில்லை. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே வட்டி, லேவாதேவிக்காரர்களின் ஆதிக்கம், அரசை உருவாக்குவதிலும் வீழ்த்துவதிலும் இருந்திருக்கிறது. அன்று முதல் இன்றுவரை அன்னியர்களுக்கு நாட்டை காட்டிக் கொடுத்து வந்தது இந்த பார்ப்பன பனியா, மார்வாடிக் கும்பல்கள்தான்.


கட்டுரையாளர் : William Dalrymple
தமிழாக்கம் :  ரவி வர்மன்
நன்றி
: அவுட்லுக் இந்தியா.

கேள்வி பதில் : பங்குச் சந்தையில் பங்கின் விலை நொடிக்கு நொடி மாறுவது ஏன் ?

Share-Market

கேள்வி: //ஆன்லைன் பங்குச் சந்தை வர்த்தகத்தில்.. பங்கின் விலை மற்றும் பொருளின் விலை ஏற்றம் இறக்கம் நொடிக்கு நொடி மாறுகிறது. இது எப்படி…?

பங்குச்சந்தை வர்த்தகத்திற்கும் விலைவாசி உயர்வுக்கும் சம்பந்தம் இருக்கிறதா..?

பங்குகளின் (equity) விலை பொருட்களின் (commodity) விலை ஏற்றம் இறக்கத்திற்கு எப்படி சாத்தியமாகும்..?//

– எம். ஃப்ராங்கிளின்

ன்புள்ள ஃப்ராங்கிளின்,

இந்தியாவில் இரண்டு பங்குச் சந்தைகள் இருக்கின்றன. மும்பை தலால் தெருவில் இருக்கும் மும்பை பங்குச் சந்தை 1875-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது ஆசியாவின் முதல் பங்குச் சந்தையாகும். தற்போது உலக அளவில் பத்தாவது பெரிய சந்தையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

மும்பையில் இருக்கும் தேசியப் பங்குச் சந்தை 1993-ம் ஆண்டு துவங்கப்பட்டது. நவீனவசதிகளுடன் வர்த்தகம் செய்யும் இந்தச் சந்தை உலகின் பதினோராவது பெரிய சந்தையாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

Share-Marketஇரண்டு பங்குச் சந்தைகளிலும் சுமார் நான்காயிரம் நிறுவனங்கள் வர்த்தகம் புரிகின்றன. இவை இந்திய மொத்த உள்நாட்டு வருமானத்தில் நான்கு சதவீதத்தையே கொண்டிருக்கின்றன. இந்தியாவின் கார்ப்பரேட் நிறுவனங்களது அனைத்து மதிப்பையும் சேர்த்தால் அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12-14 சதவீதத்தையே கொண்டிருக்கின்றன என்கிறார் ஒரு ஆய்வாளர். மற்றபடி பெரும்பான்மையான மொத்த உள்நாட்டு வருமானம் முறைசாரா தொழில்கள் மூலமே வருகிறது.

இரண்டு பங்குச் சந்தைகளில் துறைவாரியாக முக்கிமாக கருதப்படும் நிறுவனங்கள் பட்டியல் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும். இவற்றின் பங்குகள் வர்த்தகம் ஒரு நாளில் எவ்வாறு என்பதைப் பொறுத்து பங்குச் சந்தையின் குறியீட்டெண் மதிப்பிடப்படுகிறது. இதை வைத்து பங்குச் சந்தையின் வர்த்தகப் போக்கை மதிப்பிடுகிறார்கள். அதாவது பங்குச் சந்தை குறியீட்டெண் அதிகரிக்கிறது, குறைகிறது என்பது இப்படித்தான்.

“எக்னாமிக்ஸ் டைம்ஸ்” பத்திரிகை மதிப்பீட்டின் படி இந்தியாவில் ஆறு கோடிப்பேர் தங்களது சேமிப்பை பங்கு வர்த்தகத்திலும், பரஸ்பர நிதியங்களிலும் முதலீடு செய்கின்றனர். பிமால் ஜாலன் கமிட்டி அறிக்கையின் படி இந்திய மக்கள் தொகையில் 1.3% நபர்களே பங்குச் சந்தையில் முதலீடு செய்திருக்கிறார்கள். இது அமெரிக்காவில் 27% ஆகவும், சீனாவில் 10% ஆகவும் இருக்கிறது.

சரி, பங்குச் சந்தையில் பங்குகளின் விலை நொடிக்கு நொடி எப்படி மாறுகிறது?

பங்குச் சந்தையில் நிறுவனங்கள் முக மதிப்போடு பங்குகளை வெளியிடுகின்றன. சான்றாக டாடா நிறுவனம் தனது பங்கு விலையின் முக மதிப்பை ரூ. 10 என்று 1995 -ல் வெளியிட்டிருக்கிறது என்று வைப்போம். இன்றைக்கு அந்த பங்கின் விலை ரூ.100 -ஆக மாறியிருக்கிறது. அதாவது தொடர்ந்து அந்த பங்கின் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து ரூ.100-ஆக உயர்ந்திருக்கிறது. சரி, இன்னும் சில மாதங்களில் அது 125-ஆக மாறும் என எதிர்பார்த்து இன்று சிலர் அதை ரூ.100 கொடுத்து வாங்குகிறார்கள்.

படிக்க :
♦ 1967 – தமிழக இந்தி எதிர்ப்புப் போரை நினைவு கொள் ! பாஜகவுக்கு தென்னிந்தியா எச்சரிக்கை !
♦ பங்குச் சந்தை என்றால் என்ன ? பாகம் 1

ஆனால் இன்னும் சில நாட்களில் அது விலை உயர்வுக்கு பதில் ரூ.90 ஆக குறைந்திருக்கிறது. அப்படி எனில் அதை நூறு ரூபாய்க்கு வாங்கியவர்கள் பங்கு ஒன்றுக்கு பத்து நட்டமடைகிறார்கள். தொடர்ந்து அது நட்டமடையும் என எதிர்பார்த்து ஒருவர் தன்னிடம் உள்ள 100 டாடா பங்குகளையும் விற்றுவிட்டால் அவர் ரூ.1000 நட்டமடைகிறார். இல்லை இன்னும் சில நாட்களில் பங்கு விலை சீராகி உயரும் என நினைத்து அவர் அப்படியே வைத்துக் கொள்ளவும் செய்யலாம். அவர் நினைத்தபடி சில மாதங்களில் பங்குகள் ரூ.140 என உயர்ந்து அவர் விற்றால் ரூ.4000 ரூபாய் இலாபம் அடைகிறார். இவை அனைத்தும் பேப்பரில் நடக்கும் பரிவர்த்தனை மட்டுமே. ஒருவர் பங்குச் சந்தையிலிருந்து அடியோடு வெளியேறாத வரைக்கும் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டலில் மட்டும் நடக்கும்.

பங்குச் சந்தையில் சிறு முதலீட்டாளர்கள்தான் மேற்சொன்னவாறு பரஸ்பர நிதியங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் 6 கோடி பேர். ஆனால் பங்குச் சந்தையில் பெரும் வர்த்தகத்தை அன்னிய நிதி நிறுவனங்கள் செய்கின்றன. இவர்கள் தினசரி இலட்சக்கணக்கான பங்குகளை வாங்குவார்கள், விற்பார்கள். சில நேரங்களில் நிறுவனங்களே தமது பினாமிகள் மூலம் பங்குகளை அதிகம் வாங்கி செயற்கையாக விலையை உயர்த்த  முயற்சி செய்யும். இதனால் காலையில் பங்குகள் விலை உயர்வது போன்று தோன்றி நாம் வாங்குவோம். மாலையில் அதன் விலை வீழும். அப்போது வீழ்ந்த விலைக்கு விற்க நினைத்தால் அது நமக்கு நட்டம். இல்லை நாளை உயரும் என எதிர்பார்த்து விற்காமலும் வைத்திருக்கலாம்.

stocks-market

மொத்தத்தில் பங்குச் சந்தையின் இயக்கம் என்பது ஒரு சூதாட்டம் போன்றதுதான். அதற்கும் நிஜமான பொருளாதாரத்திற்கும் சம்பந்தமில்லை. இதில் ஒரு பங்கின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கும் என்பதற்கு எந்த அறிவியல் அடிப்படை இல்லை. ஏனெனில் உயர்ந்து கொண்டே இருந்தால் அதை யார் தொடர்ந்து வாங்குவார்கள் என்ற கேள்வி எழுகிறது. புதுப்புது முதலீட்டாளர்கள் சேர்ந்து கொண்டே இருக்கும் போதுதான் அந்த செயற்கையான உயர்வு சாத்தியம். இது மல்டி லெவல் மார்க்கெட்டிங் போன்றதுதான். நம் நாட்டில் 130 கோடிப் பேர்களும் கற்பனையாக பங்குச் சந்தையில் சேர்ந்து விட்டால் அடுத்து பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்க ஆள் இல்லை. இந்நிலையில்தான் இருக்கும் சிறு முதலீட்டு பங்குதாரர்களை ஏமாற்றி அன்னிய நிதி நிறுவனங்கள் செயற்கையாக பங்குகளின் விலையை உயர்த்தியோ, தாழ்த்தியோ விளையாடுகின்றன. அவர்கள் நொடிக்கு சில பல மில்லியன் டாலர்களை முதலீடும் செய்வார்கள், திரும்ப எடுக்கவும் செய்கிறார்கள்.

எனவே பங்குச் சந்தையில் ஒருவர் இலாபமடைகிறார் என்றால் அதன் பொருள் இன்னொருவர் நட்டமடைகிறார் என்பதே. பங்குச் சந்தை முகவர்களிடம் கேட்டால் முதலில் குறைவான முதலீடுகளைச் செய்யுங்கள், பங்குகளை தவிர்த்து விட்டு பரஸ்பர நிதியங்கள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யுங்கள், பங்குகளில் கொஞ்சமாக முதலீடு செய்யுங்கள் என்று ஆலோசனை கூறுவார்கள். எப்படி இருந்தாலும் இலாபம் என்றால் நட்டம் என்பது இருந்தே தீரும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?
♦ தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

இது போக ஒரு நிறுவனத்தின் செயல்பாடு, அவர்களது பொருட்களின் வர்த்தகம், புதிய பொருளை சந்தைப்படுத்துவது, மத்திய அரசின் நிதிக் கொள்கை, ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் போன்றவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இவை இரண்டாம் பட்சக் காரணங்கள் மட்டுமே. அதே போன்று உலக அளவில் அரசியல் மாறுபாடு, கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கங்கள் இவையும் பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதனால்தான் நொடிக்கு நொடி பங்குகளின் விலை ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கும் விலைவாசி உயர்விற்கும் நேரடித் தொடர்பில்லை. விலைவாசி உயர்விற்கு அரசின் வரிக் கொள்கை, கச்சா எண்ணைய் விலை உயர்வு, மையப்படுத்தப்படாத உற்பத்தி, முதலாளித்துவ நெருக்கடி, பணவீக்கம், வேலையின்மை போன்ற பொருளாதாரக் காரணங்கள் காரணமாக இருக்கின்றன.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூல் அறிமுகம் : இயற்பியல் உலகம்

வேகமாக மாறிவரும் இவ்வுலகில் அனைத்துமே துரிதகதியில் இயங்கிவருகின்றன. எங்கும் வேகம், எதிலும் வேகம். இன்று புதிது என நாம் காண்பது நாளை நடைமுறைக்கொவ்வாத பழம் பொருளாகிவிடுவதைக் காண்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் கற்பனைகூடச் செய்ய முடியாத அளவு முற்றிலும் புதிதானவை முளைத்து நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. இவற்றுக் கான காரணம் என்ன என்று கூறவும் வேண்டுமோ? ஆம், நாளுக்கு நாள் நாம் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளில் அடைந்துவரும் அசுர வளர்ச்சியே மனித இனத்தை இத்துணை சிறப்பான நிலைக்கு உயர்த்தி வருகிறது.

சமூக விலங்குகளாகிய நாம், மாறிவரும் உலகின் புதுப் புது சூழ்நிலைகளின் சவால்களை வெற்றிகரமாகச் சந்திக்க, அவற்றுக்கேற்ப நம்மை மாற்றிக்கொண்டாக வேண்டும். அதற்குரிய திறமைகளை முயன்று அடைந்து சமாளித்து வாழ்வில் முன்னேற வேண்டும். இல்லாவிடில் திக்கு தெரியாத காட்டில் மாட்டிக்கொண்டவனைப் போன்று வாழ்க்கையையே இழக்க நேரிடும். அறிவியல் மற்றும் தொழில் நுட்பம், மனிதாப உணர்வுடன் கூடிய சமுதாய வளர்ச்சிக்கான பாதையை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன. இப்பாதை சமுதாயத்தின் ஒவ்வொரு அங்கத்தினரின் நலனையும் கருத்தில் கொண்டதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆயின் சமீபகாலங்களில், அறிவியல் மற்றும் தொழில் நுட்பக் கண்டுபிடிப்புகளின் ஆதார அம்சமாகிய மனிதாபம் என்பது புறக்கணிக்கப் படுவதைக் காண்கிறோம். இந்த அபாயகரமான உண்மைநிலை நம்மைத் தொடர்ந்த கவலைக்குள்ளாக்கிவருகிறது.

1854-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஃபிராங்க்ளின் பியர்ஸ் சிவப்பிந்தியச் சமுதாயத்தினரைத் தாங்கள் நிலங்களை அரசிடம் ஒப்படைத்துவிடுமாறு உத்தர விட்டார். இது தொடர்பாகச் சிவப்பிந்தியர்களின் தலைவர்களில் ஒருவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு: “எங்களுக்குத் தெரியும் … இந்தப் பூமி மனிதர்களுடையதல்ல. ஆயின் மனிதர்கள் பூமியைச் சேர்ந்தவர்கள். இரத்தமானது எவ்வாறு ஒரு குடும்பம் முழுவதையும் இணைக்கிறதோ அவ்வாறே இங்கு எல்லாமே ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன. நறுமணமுள்ள பூக்கள் நமது சகோதரிகள் . . . மான்கள், குதிரைகள், பருந்துகள் எல்லாமே நமது சகோதரர்கள் மனித இனம் எல்லாமே மலையுச்சிகள், பசுமையான புல்தரைகள், அடர்ந்த காடுகள் மற்றும் மனித இனம் எல்லாமே ஒரே குடும்பத்தின் பல்வேறு அங்கங்கள், ஊற்றுகளிலும் நதிகளிலும் பாயும் நீர் வெறும் தண்ணீரல்ல …. அது எங்கள் முன்னோர்களின் இரத்தமே. இந்த நிலத்தை ஒப்படைக்கும் படி நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டால் நினைவில் கொள்ளுங்கள் இப்பூமி புனிதமானது. அது தனது தூய்மை பற்றி உங்கள் குழந்தைகளுக்குப் பாடம் புகட்டும்….”

Amazon Rainforest fire… அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிக்கத்தக்க உயர்வுகளை மேன்மேலும் கண்டுகொண்டிருக்கையில் பாமர மக்களிடையே, ஏன் படித்தவர்களிடையேயும் பல்வேறு விதமான மூடநம்பிக்கைகள் இன்னமும் இருப்பது வருந்தத்தக்கன. சகுனங்கள், வாஸ்து, வண்ணக்கற்களை அணிகலன்களில் பொருத்துவது, பெயரின் எழுத்துக்களை கூட்டுவது / குறைப்பது, நாள் நட்சத்திரம் பார்ப்பது என இந்தப் பட்டியல் நீண்டுக்கொண்டே போகும் ஒன்று. இத்தகையவற்றை மக்கள் மனதிலிருந்து நீக்கி, மனிதர்கள் மனிதர்களாக மனித நேயத்துடன் வாழ்வதற்கு எங்களது வெளியீடுகள் பெரிதும் உதவுபவை. (நூலின் முன்னுரையிலிருந்து…)

பெருவெடிப்பு (பிக் பாங்க்) கோட்பாடு :

அகிலத்தின் தொடக்கத்திற்குக் காரணம் பெரு வெடிப்பு நிகழ்வே என்பது பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு அறிவியல் கோட்பாடு. இந்தக் கோட்பாட்டின்படி, இந்நிகழ்விற்கு முன்னால் அகிலம் ஒரு மிக மிக அடர்த்தியான குறுக்கப்பட்ட நிலையில் மிகவும் வெப்பமான நிலையில் இருந்ததாக அறிகிறோம். சுமார் 15 பில்லியன் (1500 கோடி) ஆண்டுகளுக்கு முன்னர் பெருவெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர், இந்த அகிலம் தொடர்ந்து விரிவடைந்தும் குளிர்ந்து கொண்டும் வருகிறது. 1927-ல் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜியார்ஜிஸ் லெமைடர் இந்த அகிலம் “தொன்மையான ஒரு அணு” வெடித்ததால் உருவானதாகக் கருத்து தெரிவித்தார்.

அமெரிக்காவைச் சேர்ந்த எட்வின் ஹப்பின் எனும் வானவியலாளர் மேற்கூறிய கருத்தை ஆதரிக்கும் ஆதாரங்களை 1929-ல் கண்டுபிடித்தார். ஹப்பிளின் கண்டுபிடிப்பின்படி, நட்சத்திரக் கூட்டங்கள் (Galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகிச் சென்றுகொண்டே இருக்கின்றன. அகிலம் ஒரே சீராக விரிவடைந்து கொண்டிருக்கிறது; அதாவது காலக்ஸிகள் அவை உள்ள தொலை தூரத்திற் கேற்பக் கூடுதல் வேகத்தில் விலகிச் சென்றுகொண்டுள்ளன.

அறிவியலும் மதமும் !

உண்மையிலேயே பெரு வெடிப்பு நிகழ்ந்திருந்த அச்சமயம் ஏற்பட்ட கதிர் வீச்சின் சுவடு கொஞ்சமாவது இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் நம்புகின்றன. இந்தப் “பெருவெடிப்புக் கதிர்வீச்சின் மிச்சம்” பற்றிய கண்டுபிடிப்பை 1965-ம் ஆண்டு ஆர்னோ பென்சியாஸ் மற்றும் ராபர்ட் வில்சன் எனும் விஞ்ஞானிகள் செய்தனர். இதற்காக இவர்களுக்கு 1978-ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பெருவெடிப்பு நிகழ்வு பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் அகிலம் தொடர்பான அனைத்து உண்மைகளையும் விஞ்ஞானிகளால் இன்றுவரை சரிவர விளக்க முடியவில்லை. அவை விளக்கப்படாமலேயே போகக் கூடும். இதனால் விடையளிக்கப்படாத பல கடினமான கேள்விகள் அப்படியே இருந்துவிடலாம். (நூலிலிருந்து பக்.11-12)

க்வான்டம் கோட்பாடு (Quantum Theory) :

கதிரியக்க ஆற்றல் அலைவீச்சுக் கோட்பாடு : பொருளினால் சக்தி வெளிப்படுதல், சக்தி உள் வாங்கப்படுதல் மற்றும் துகள்களின் இயக்கம் பற்றிய நவீன இயற்பியல் கோட்பாடு “க்வான்டம் கோட்பாடு” எனப்படுகிறது. க்வான்டம் கோட்பாடு, மிகமிகச் சிறிய அளவுடைய அணு மூலக்கூறுகள், அணுக்கள் மற்றும் ஆதாரத்துகள்கள் போன்றவை சம்பந்தப்பட்டவற்றை அறிய மிக முக்கியமானது. இந்தக் கோட்பாடு மூன்று அடிப்படை உந்துவிசைகளைப் பற்றி விளக்குகிறது – மின்காந்த விசை, பலவீனமான விசை மற்றும் பலமிக்க விசை, இது புவி ஈர்ப்பு விசை பற்றி விளக்காது. க்வான்டம் கோட்பாட்டினால் அணுக்கள் பற்றியும், வேதியல் மற்றும் வேதியல் இணைப்புகள் பற்றியும் அறிய முடிகிறது. கடந்த 60 ஆண்டுகளில் நிகழ்ந்துள்ள பல தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் க்வாண்டம் கோட்பாட்டின் அடிப்படையிலானவை.

படிக்க:
உ.பி : பிரியாணியை வைத்து பிரச்சினை கிளப்பிய பிரியாணி அண்டா திருடர்கள் !
காஷ்மீர் போராட்டம் : மருத்துவமனையிலும் மோப்பம் பிடிக்கும் அரசுப் படைகள் !

க்வான்டம் கோட்பாடு வித்தியாசமானது. வழக்கமான கோட்பாட்டின்படி சக்தி என்பது ஒரு தொடர் நிகழ்வாகக் கருதப்படுகிறது. க்வான்டம் கோட்பாடு, பொருள் மற்றும் சக்தியை “க்வான்டா” என அழைக்கப்படும் தனித்தனியான, கண்ணுக்குத் தெரியாத சிறு பெட்டகங்களாக (Packets) விளக்குகிறது. ஒரு அணு உட்கிரகிக்கும் அல்லது வெளியிடும் கதிர்வீச்சின் அதிர்வெண், ஒளி க்வான்டா அல்லது ஃபோட்டான்களின் சக்தியைப் பொறுத்தது என க்வான்டம் கோட்பாடு விளக்குகிறது. (நூலிலிருந்து பக். 84-85)

நூல் : இயற்பியல் உலகம்
ஆசிரியர் : முனைவர் தினேஷ் சந்திர கோஸ்வாமி
தமிழில் : சி.எஸ். வெங்கடேஸ்வரன்

வெளியீடு : அறிவியல் வெளியீடு,
245, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2811 3630.

பக்கங்கள்: 104
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இந்திய இராணுவத்தால் குதறப்படும் காஷ்மீர் ! | படக் கட்டுரை

0

ட்டுமொத்த காஷ்மீரும் ஒரு மாத காலமாக முடக்கப்பட்டு, கொத்துக் கொத்தாக மக்கள் கைது செய்யப்படுவதும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதுமன்றி, பொருளாதாரத் தடைகளும் ஏற்படுத்தப்பட்டு காஷ்மீர் மக்களைக் கொடுமைப்படுத்தி வருகிறது இந்திய ஆளும் வர்க்கமும், இராணுவமும்.

இந்திய அரசால் நிர்வகிக்கப்பட்டு வரும் காஷ்மீருக்கான சிறப்பு சட்ட அங்கீகாரப் பிரிவு 370 நீக்கத்திற்குப் பிறகு ஏறக்குறைய ஒரு மாத காலமாக அங்கு நிலவி வரும் கொடுமைகளைச் சொல்லி மாளாது. அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் சிறைபிடிப்பு, இந்திய அரசை இன்னமும் நம்பி நிற்கும் அப்பாவி காஷ்மீரிகள் கைது செய்யப்பட்டு கொடூர முறையில் சித்திரவதை செய்யப்படும் நிலை உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

Kashmir-Life-Siege
இந்தியாவில் முசுலீம்கள் மெஜாரிட்டியாக வசித்துவரும் ஒரே மாநிலமான காஷ்மீரில், சட்டப்பிரிவு 370 இரத்து செய்யப்பட்ட பின்னர் ஏற்கெனவே நிலவி வந்த கொஞ்ச நஞ்ச அமைதி நிலையும் சீர்குலைந்து, போராட்டக்களமாய் மாறி, மக்கள் பொதுவெளியில் கூட வரமுடியாமல் ரோந்துப்பணியில் ஈடுபட்டுவரும் இந்திய இராணுவம்.

உலகிலேயே அதிக அளவிலான இராணுவம் குவிக்கப்பட்ட பகுதிகளில் காஷ்மீரமும் ஒன்று. அப்படியிருந்தும் எங்கே மக்கள் ஒன்றுசேர்ந்து போராடி விடுவார்களோ என்ற பயத்தில் மேலும் ஆயிரக்கணக்கில் படைவீரர்களைக் குவித்துள்ளது இந்திய அரசு.

படிக்க:
தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை

இணைய சேவை முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டு, தொலைத்தொடர்பு சேவைகளும் முடக்கப்பட்டு வரும் நிலையில் இப்போது மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இராணுவத்தின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டில் சிக்கித்தவிக்கும் காஷ்மீர் மக்களின் அவல நிலைகளைப் பாருங்கள்.

Kashmir-Life-Siege 2சுதந்திரம் வேண்டும் என்று கூறி வெள்ளியன்று நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனைக்குப் பிறகு போராடும் காஷ்மீர் பெண்கள். இடம் – சிறீநகர்

Kashmir-Life-Siegeஸ்ரீநகரின் புறநகர்ப்பகுதியில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தைக் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியும், பெல்லட் குண்டுகளால் தாக்கியும் கலைக்கும் இந்திய இராணுவமும், போலீசும்.

Kashmir-Life-Siegeரகுமான் தர் தன்னுடைய மகனின் புகைப்படத்தை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறார். கல்லெறிந்தார் என்ற பொய்க்குற்றம் சாட்டப்பட்டு இரவோடு இரவாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாத காலமாக 4000-க்கும் மேற்பட்டோர் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கின்றன ஊடக செய்திகள்.

Kashmir-Life-Siegeஆகஸ்டு 6-ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் தெற்கு காஷ்மீரில் உள்ள ஒரு கிராமத்தில் ஃபிர்தூஸ் அகமது – வயது 22 ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) மற்றும் 12 கிராமத்தினரைக் கைது செய்து சித்திரவதை செய்துள்ளது போலீசு. தடிகளாலும், வயர்களாலும் தாக்கப்பட்ட ஃபிர்தூஸின் பின்னந்தொடை, முழங்கால் பகுதிகள் முழுவதும் கறுப்பு நிறமாகியுள்ளது. போலீசார் தன்னைக் குறைந்தபட்சம் 100 முறையாவது அறைந்திருப்பர் என்கிறார் ஃபிர்தூஸ்.

Kashmir-Life-Siegeசிறீநகரில் உள்ள மகாராஜா ஹரிசிங் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஆறு வயது சிறுமி முனிஃபா நசீர். தன்னுடைய மாமாவுடன் பண்டிகை தினத்தன்று வெளியே சென்ற சிறுமி இராணுவத்தால் குறிவைத்துத் தாக்கப்பட்டுள்ளார். அவருடைய வலது கண்ணால் பார்க்கும் திறனை இழந்துவருகிறார் என்கிறார் இவரைக் கவனித்துக்கொள்ளும் உறவினர் ஒருவர்.

Kashmir-Life-Siegeதங்களுடைய சொந்த பந்தங்களுடன் தொலைபேசியில் பேசுவதற்காக வரிசையில் காத்திருக்கும் காஷ்மீர் மக்கள். தனி நபர் தொலைத்தொடர்பு சேவை துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் யாஸ்மீன் என்ற தன்னார்வலரால் தொடங்கப்பட்ட இலவச தொலைத்தொடர்பு சேவை வசதியை தினமும் 400 பேர் வரை பயன்படுத்தி வருகின்றனர்.

Kashmir-Life-Siegeமுகம்மது அயூப் (ஆட்டோ ஓட்டுனர்) தன் வீட்டிற்கு வெளியே பெட்ரோல் விற்பனை செய்துவரும் காட்சி. ஆட்டோ ஓட்டும்போது தனக்கும் தன் குடும்பத்திற்கும் தேவையான பணம் கிடைத்ததாகவும், தற்போதைய நிலவிவரும் சூழலில் இப்போது பெட்ரோல் விற்று மட்டுமே குடும்பத்தைக் காக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். காஷ்மீரில் இதுவரை நான் பார்த்த நெருக்கடி நிலைமைகளில் மிகவும் மோசமானது இதுதான் என்கிறார் முகம்மது அயூப்.

Kashmir-Life-Siegeதுப்பாக்கி மற்றும் அதி நவீன ஆயுதங்கள் ஏந்தி வலம் வரும் இராணுவத்தை வெறும் கம்புகளுடன் எதிர்நோக்கி நிற்கும் காஷ்மீரின் வீரப்பெண்கள். இடம்- அஞ்சார், சிறீநகர். இராணுவத்தின் இரவு நேர அத்துமீறல் கைதுகளைத் தடுப்பதற்காக இப்பகுதி இளைஞர்கள் இரவு முழுவதும் கண்விழித்து ரோந்துப் பணியில் ஈடுபடுவதால், தாய்மார்கள் பகல் நேரங்களில் இராணுவத்தை எதிர்கொள்கின்றனர். காஷ்மீரின் வீரம் நிறைந்த போராட்டக்களங்களில் இதுவும் ஒன்று.

Kashmir-Life-Siegeபத்திரிக்கையாளர்கள் அரசாங்கத்தால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள இணைய சேவை மையத்தில் காத்து நிற்கும் காட்சி. வெறும் 5 கணிணிகளே ஒதுக்கப்பட்டுள்ளதால், தரவுகளை அனுப்ப நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்கிறார் ஒரு பத்திரிக்கையாளர்.


தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera

தில்லை நடராசர் கோவிலை சத்திரமாக்கி காசு பார்த்த தீட்சிதர்கள் ! – மக்கள் அதிகாரம் கண்டனம்

PP Letter head

நாள் 16-9-2019

பத்திரிகைச் செய்தி

ன்புடையீர் வணக்கம் !

கடந்த 12-9-2019 அன்று சிதம்பரம் நடராசர் கோவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் நட்சத்திர ஓட்டல் போல் ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டு தனியார் திருமணம்  நடந்துள்ளது. இதற்காக ஒரு பெரும் தொகை தீட்சிதர்களிடம் கைமாறி உள்ளது. இதனால் மக்கள் தீட்சிதர்கள் மீது ஆத்திரம் கொண்டதுடன் அதிர்ச்சியடைந்துள்ளனர். வழக்கமாக திருமணங்கள் நடராசர் கோவில் உள்ளே வடக்கு கோபுரம் அருகில் பாண்டியனார் சன்னதியில்தான் நடைபெறும். தீட்சிதர்கள் பணத்திற்காக எதையும் செய்வார்கள், என்பதுதான் கடந்தகால வரலாறு.

நடராசர் நின்று தரிசனம் தரும் இடத்தில் எப்படி ஆடம்பர திருமணம் நடத்த தீட்சிதர்கள் அனுமதித்தார்கள் என்பதுதான் சிதம்பரம் பக்தர்களின் ஆதங்கம். தொடர்ந்து பத்திரிக்கைகளில் கண்டனங்கள் எதிர்ப்புகள் அதிகரிக்கவே வேறு வழியில்லாமல் கண்துடைப்பாக பொது தீட்சிதர்களின் செயலாளர் பாலகணேச தீட்சிதர் இரு நாட்கள் கழித்து, “சம்பந்தபட்ட தீட்சதர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமணம் நடத்த ஏற்பாடு செய்த கட்டளை தீட்சிதரான பட்டு தீட்சிதரை இரண்டு மாதம் சஸ்பெண்ட் செய்ததுடன் ஆயிரத்து ஒரு ரூபாய் அபாராதம் விதித்துள்ளோம்” என அறிவித்தார். இது தமிழக அரசையும், தமிழக மக்களையும் முட்டாளாக்கும் செயல் ஆகும்.

சிவலோகத்திலிருந்து சிவனோடு முவாயிரம் தீட்சிதர்கள் வந்த கதையில் தற்போது சுமார் 450 தீட்சிதர்கள் உள்ளனர். நடந்த ஆடம்பர ஆயிரங்கால் திருமணத்திற்கு கையூட்டாக தீட்சிதர்கள் அனைவரும் தங்கம், பட்டுப்புடவை, பட்டு வேஷ்டி என தொழிலதிபர்களிடம் பெற்றுள்ளனர். அர்த்தசாம பூசைக்கு பிறகு இரவில் கோவில் சாத்தப்படும். வழக்கத்திற்கு மாறாக ரகசியமாக இரவில் வெளியூர் ஆட்களை வைத்து ஆயிரம்கால் மண்டபம் முழுவதும் கண்கவரும் ஆடம்பர மின் விளக்குகள், வண்ண சீலைகள், பிரமிப்பூட்டும் மலர் அலங்காரம். அலங்கரிக்கப்பட்ட சேர்கள், என ஐந்து நட்சத்திர விடுதி போல ஜொலிக்க ஆடம்பர ஏற்பாடு செய்துள்ளனர்.

படிக்க:
மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !
♦ சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் கட்டிய தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !

பொற்கூரைமீது ஏறி அலங்கரித்துள்ளனர். திருமணத்திற்கு காலணிகளுடன் செல்வ சீமான்கள் நடந்து சென்றுள்ளனர். பேட்ஜ் அணிந்தவர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்த பிற பக்தர்கள் தடுக்கப்பட்டுள்ளனர். திருமணங்கள் தொடர்பான சில புகைப்படங்கள் வெளியே வந்த பிறகுதான் தீட்சிதர்களின் இந்த அநியாயம் தெரிய வந்தது.

திருமணம், சிவகாசி தொழிலதிபர் ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் உரிமையாளர்  ராஜரத்தினம் – பத்மா தம்பதியரின் குமாரத்தி சிவகாமி மணமகள். சென்னை ரத்னா ஸ்டோர் உரிமையாளர் சிவசங்கர் – வாசுகி குமாரன் சித்தார்த்தன் மணமகன். இத்திருமணத்திற்காக கைமாறியது பல லட்சங்களா? பல கோடிகளா என்ற இந்த சிதம்பர ரகசியத்தையும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்.

சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் தமிழில் பாடியதை தீட்டு என்ற தீட்சிதர்கள் கும்பல், கோவிலை திருமணத்துக்கு வாடகைக்கு விட்டு பணம் பார்க்கிறது.

சிவனடியார் ஆறுமுகசாமி 2000-ம் வருடம் சிற்றம்பல மேடையில் தேவாரம் பாட முயன்ற போது தீட்டு பட்டு விட்டது என தாக்கிய தீட்சிதர்கள், பொற்கூரையின் மீதே ஏறி இரவில் வேலை ஆட்கள் மலர் அலங்காரம் செய்ததை ஏன் தடுக்கவில்லை. தில்லை நடராசன் மட்டுமல்ல, சிதம்பரம் கோவிலே எங்கள் சொத்து என்ற தீட்சிதர்களின் இருமாப்புதான். அரசும் நீதிமன்றமும் நாங்கள் ஆட்டுவித்தால் ஆடும் என்ற ஆணவம்தான் காரணம்.

சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து பல ஆண்டுகளாக தூங்கி கிடந்த நடராசர் கோவில் வழக்கை விசாரணைக்கு கொண்டு வந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுபாட்டில் கொண்டு வந்தோம். நீதிபதி பானுமதி அவர்கள் தீட்சிதர்கள் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒத்துழைக்க வேண்டும் என தீர்ப்பில் கூறியிருந்தார்.

ஆனால் கடைசி வரை தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்க வில்லை. மாறாக தீட்சிதர்கள் உண்டியலில் எண்ணெய்யை ஊற்றினார்கள். ஆறுமுகசாமி பாட பல முறை இடையூறு செய்தார்கள். சுப்பிரமணிய சுவாமியை வழக்கில் நுழைத்தார்கள். வழக்கில் தீட்சிதர்களை எதிர்த்து வாதாடாமல் இருக்க அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை நேரில் பார்த்தார்கள். வடக்கே உள்ள விசுவ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்காலை சிதம்பரம் கோவிலுக்கு அழைத்து வந்தார்கள். கோவிலை அரசு நிர்வகிப்பது கூடாது என பிராமணர் சங்கத்தை வைத்து சிதம்பரத்தில் பொதுக்கூட்டம் நடத்தினர். பா.ஜ.க இல. கணேசனை பேச வைத்தார்கள். இவ்வாறு பல சூழ்ச்சிகளை செய்து தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலை தங்கள் அனுபவ சொத்தாக அனுபவித்து வருகின்றனர் என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

படிக்க:
பக்தர்களே தீட்சிதன் தட்டில் காசு போடாதீர்கள் !
♦ தில்லை கோயிலில் திருமுறை பாட ரூ.5,000 – தீட்சிதர்கள் அறிவிப்பு ! கேலிப்படம்

தீட்சிதர்களுக்கு முதலில் சொத்துரிமை, பிறகுதான் தில்லை நடராசன், ஆன்மீகம், புனிதம், பக்தர்கள் எல்லாம். கோவில் உள்ளே தீட்சிதர்கள் பீர், பிராந்தி சிக்கன் மட்டன் அருந்தினார்கள். பெண்களுடன் சல்லாபங்கள் செய்தார்கள். கோவில் உள்ளே மர்ம மரணங்கள் நடந்துள்ளது. விலை உயர்ந்த சாமி நகை களவு போனது. கோவில் சொத்தை முறைகேடாக விற்றது. கோவில் வருமானத்தை யாருக்கும் கணக்கு காட்டமல் பொய் கணக்கு எழுதி தங்களுக்குள் பிரித்து கொள்வது. வெளியூர் பக்தர்களிடம் பணம் பறிப்பது. பணம் தரமுடியாத பக்தர்களை அவமானபடுத்துவது என்ற பல குற்றச்சாட்டுக்கள் மீது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் பல்வேறு புகார் மனுக்களை தொகுத்து அனுப்பியது. நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கும் உத்திரவிடப்பட்டது. ஆனால் போலீசார் ஊத்தி மூடிவிட்டனர். ஆனால் அத்தகைய குற்றச்சாட்டுகள் இன்னும் முடிவு காணமுடியாமல்  உள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பொய் பித்தலாட்டம் செய்யும் இப்படிப்பட்ட தீட்சிதர்களிடம்தான் உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலும் நடராசரும் உள்ளார் என்பதை பக்தர்கள் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சிதம்பரம் கோவில் போன்று அனைத்து கோவிலையும் பார்ப்பனர் கையில் கொடுக்க வேண்டும் என்பதற்காகதான் பா.ஜ.க இந்து முன்னணி அமைப்புகள் போராடி வருகின்றனர். இதற்கு சாதாரண மக்களின் பக்தியை முகமூடியாக இந்துத்வா சக்திகள் பயன்படுத்துகின்றனர். பயமும் பக்தியும் கடவுள் மீது மட்டும் இருந்தால் போதும். மணியடிக்கும் பார்ப்பனரிடம் எதற்கு பயம் பக்தி. தில்லை நடராசர் கோவிலை கையகப்படுத்த தனிச்சட்டம் இயற்றி அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து பிற கோவில்கள் போன்று தீட்சிதர்களும் ஊதியம் பெற்றுக் கொள்ளட்டும். இனியும் தீட்சிதர்கள் வசம் கோவில் இருக்க கூடாது. அதற்கு சிதம்பரம் வாழ் மக்கள் முன்னணியாக போராடாமல் அது சாத்தியம் இல்லை.

தமிழக அரசே !

  • தனிச்சட்டம் இயற்றி சிதம்பரம் நடராசர் கோவிலை தீட்சிதர்களிடமிருந்து காப்பாற்று!
  • கோவிலை வைத்து பல லட்சம் வசூல் செய்துவரும் தீட்சிதர்களின் சொத்துக்கள் மீது விசாரணை நடத்து!
  • சிதம்பரம் நடராசர் கோவில் வருமானம், வரவு – செலவு மீது தணிக்கை நடத்து!
  • நடராசர் கோவில் ஆயிரம்கால் மண்டபத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக்கி ஆடம்பர திருமணம் நடத்திய தொழிலதிபர்கள் மற்றும் தீட்சிதர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்து ! அதன் மூலம் நடந்த பணபறிமாற்றத்தின் மீதும் நடவடிக்கை எடு!

தோழமையடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99626 66321

மதுரையில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் விழா கூட்டம் ! செய்தி – படங்கள் !

பெரியாரின் 141-வது பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் கலை இலக்கிய கழகம் சார்பில் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரையில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தோழர் ராமலிங்கம் வரவேற்புறை நிகழ்த்தினார். அவர் தன்னுடைய வரவேற்புறையில் “பெரியார் என்றாலே பார்ப்பன கும்பலுக்கு அச்சம்தான். அந்த அச்சத்தின் காரணத்தை தெரிந்துகொள்ளத்தான் இந்த கூட்டம் நடத்தப்படுகிறது. மதுரை சென்ட்ரல் தியேட்டர் சுற்றி உள்ள கடைகளில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு நிதி தராதவர்கள் பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் என பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுமளவிற்கு சங் பரிவாரங்கள் வளர்ந்துள்ள இந்த நிலையில் நாம் பெரியாரின் சிந்தனையை உயர்த்திப் பிடிக்க வேண்டிய அவசியமிருக்கிறது” என்று பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் தன்னுடைய தலைமையுரையில் “தேசிய கல்வி கொள்கை என்கின்ற பெயரில் நம்முடைய குழந்தைகளின் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது, அமித்ஷா இந்தி மொழிதான் இந்தியாவை ஒருங்கிணைக்கும் மொழி என்கிறார்.

நம் கண்ணுக்கு எதிரிலேயே மக்களின் சேமிப்பான 1.75 லட்சம் கோடியை ரிசர்வ் வங்கியிலிருந்து பல்வந்தமாக பெற்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுக்கிறார்கள். ஒரே நாடு – ஒரே ரேசன் கார்ட் என்ற பெயரில் குறைந்தபட்ச உணவு பாதுகாப்பும் மக்களுக்கு மறுக்கிறார்கள். கேட்டால் நாட்டின் வளர்ச்சிக்காக என்கிறார்கள். தேசத்தை பற்றி பேசும் இவர்களுடைய யோக்கியதை என்ன?

வெள்ளையர்களுக்கு எதிராக தேசமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் ஹெட்கேவர் மாட்டிற்கு புல்லு வெட்டும் போராட்டம் செய்யபோகிறோம் என்றவர். எனவே இத்தகைய பாசிச கும்பலை முறியடிக்க வேண்டும் என்றால் அது பெரியாரின் துணையோடுதான் முடியும்” என்று பேசினார்.

படிக்க:
பாஜக முன்னாள் அமைச்சர் சின்மயானந்த் மீது மேலும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை புகார் !
♦ கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

அடுத்ததாக பேசிய சமநீதி வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் வழக்கறிஞர் கனகவேல் அவர்கள் “நாம் ஒருவரை சந்தித்தவுடன் கூறும் வணக்கம் என்ற சொல்லின் வரலாறையே பெரியாரின் வரலாற்றோடுதான் நாம் பார்க்கமுடியும். நமஸ்காரம் என்றும், கும்புடுறேன் சாமி என்றும் சாதி ஆதிக்கத்தில் மூழ்கியிருந்த இந்த சமூகத்தை ஒவ்வொரு செங்கலாக உடைதெறிந்து இந்த சமூகத்தை மாற்றிக்காட்டியவர். அவர் செய்யாத போராட்டங்களே கிடையாது.

சாதி ஒழிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாடு தமிழருக்கே போராட்டம், பெண் விடுதலை, கள்ளுக்கடை போராட்டம், இட ஒதுக்கீடு போராட்டம், கோவில் நுழைவு போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் என்று எண்ணிலடங்காத போராட்டம். அதில் குறிப்பாக இரண்டு விசயத்தை குறிப்பிடலாம். முதலாவது பெண்களை அரசியல் படுத்துவது என்பதை தன்னுடைய குடும்பத்திலிருந்து தொடங்கியவர். இரண்டாவது புனிதம், புனிதமானவர் என்று எதைக் கண்டும் அஞ்சாதவர்.

தேச தந்தை என்று காந்தியை இந்த நாடே கொண்டாடிக் கொண்டிருந்த போது காந்தி ஒழிய வேண்டும் என்று வெளிப்படையாக அம்பேத்கருக்கு வட்ட மேஜை மாநாட்டின் இரட்டை வாக்குரிமை பிரச்சினையின் போது தந்தி அடித்து ஆதரவு தெரிவித்த ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டும்தான். எனவேதான் அம்பேத்கரையும், பகத்சிங்கையும் செரிக்க முடிந்த ஆர்.எஸ்.எஸ்-ஸால் பெரியாரை நெருங்க முடியவில்லை. எனவே இந்துத்துவ கும்பல்களை விரட்டியடிக்க வேண்டும் என்பதில் நாம் பெரியாரைத்தான் உயர்த்தி பிடிக்கவேண்டும்” என்று பேசினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக சிறப்புறையாற்றிய நிஜ நாடக இயக்கத்தின் நிறுவனர் பேராசிரியர் மு. இராமசாமி அவர்கள் பேசுகையில்

“யாரை கண்டு எதிரி குலை நடுங்குகிறானோ அவரை கொண்டாடிக் கழிப்பது நமக்கு தார்மீக வலிமையும் எதிரிக்கு அச்சமும் தரும். அப்படியான பெரும் நெருப்பு தந்தை பெரியார் அவர்கள்” என உணர்ச்சிமயமாக‌ கண்ணீர் மல்க கூறினார். “பெரியாரியத்தை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் அனைத்து வித பாகுபாடுகளையும் ஒழிப்பதுதான். அவரை போல் இதுவரை இந்தியநாடு ஒரு வலிமையான தலைவரை பார்த்ததில்லை. அவர் உங்கள் கட்சியின் நோக்கம் என்ன என்று கேட்ட போது காந்தி ஒழிய வேண்டும், காங்கிரஸ் ஒழிய வேண்டும், கடவுள் ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும், சாதி ஒழிய வேண்டும் என்று ஒழிக்க வேண்டியதை மட்டுமே லட்சியமாக கொண்ட தலைவர் தந்தை பெரியார்” என்று பேசினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய AIBSNLAE -யின் முன்னாள் மாநில செயலாளர் தோழர் வீரபாண்டியன் அவர்கள் பேசும் போது “செப்டம்பர் 17 தான் மோடிக்கும் பிறந்த நாளாம். செப்டம்பர் 17-ல் பிறந்தவர்கள் எல்லாம் பெரியாரை போல் வாழ்ந்து விட முடியுமா? பெரியாரின் வாழ்க்கை அப்படிப்பட்டது. வெறும் 3-ம் வகுப்பு படித்தவர் என்று நாம் பேசுகிறோம். ஆனால் வட்ட மேஜை மநாடு, வகுப்புவாரி பிரதிநிதித்துவம் ஆகிய விசயத்தில் மிக பெரிய ஆய்வாளராக பட்டம் பெற்றவரான அம்பேத்கருக்கே ஆலோசனை சொல்லும் அளவிற்கு புத்தி கூர்மையோடு இருந்தார்.

அவர் அயோத்திதாசரிடமிருந்தும் ரெட்டைமலை சீனிவாசனிடமிருந்தும் தன்னுடைய கருத்தின் சாராம்சத்தை பெற்றார். தான் எடுத்து கொண்ட பொறுப்புகளில் எல்லாம் ஆழமாக ஊன்றி நின்று செயல்பட்டவர். காங்கிரசில் சேர்ந்த போது கூட வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை முன்மொழிவதையே நோக்கமாக செயல்பட்டவர். அதில் இருந்து வந்த பிரச்சினைதான் சேரன்மாகாதேவி குருகுல பிரச்சினை. இந்த உலகம் புனிதம் என்று சொன்னதை எல்லாம் தூக்கி போட்டு உடைத்தவர். சாதி ஆதிக்க சமூகமாக இருந்ததை மாற்றுவதற்கு தன் காலம் முழுவதும் உழைத்தவர் பெரியார். இன்று நம்முடைய தினசரி மாமூல் வாழ்க்கையை தினம் ஒரு சட்டத்தை போட்டு மாற்றிவிட துடிக்கிறவர்கள் அதிகாரத்தில் இருக்கும் போது நமக்கு பெரியார் அவசியமாகிறார்.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேரும் போது ஏராளமான கவுரவ பதவிகளை வகித்து வந்தவர். அப்படிப்பட்ட மிக பெரிய மிட்டா மிராசு குடும்பத்தை சேர்ந்தவர். அத்தனை கவுரவ பதவிகளையும் ஒரே நாளில் ராஜினாமா செய்துவிட்டுத்தான் காங்கிரசில் சேருகிறார். அந்தளவிற்கு பொது நன்மைக்காக தியாகம் செய்யக்கூடியவராக இருந்தார். ஆனால் பெரியார் வழியில் வந்தவர்கள் பெரியாரை போல் இருக்கவில்லை. எனவே நமக்கு மீண்டும் ஒரு பெரியார் தேவைபடுகிறார்” என சூளுரைத்தார்.

இறுதியாக ம.க.இ.க தோழர் முத்தையா அவர்களின் நன்றியுரை உடன் கூட்டம் நிறைவுற்றது.

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை

கடைமடை சேராத காவிரி : எடப்பாடி அரசே குற்றவாளி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

PP Letter head

  • பாசனத்துக்கு 21,000 கன அடி, கடலுக்கு 26,756 கன அடி !
  • டெல்டா விவசாயிகளின் முதல் எதிரி எடப்பாடி அரசுதான் !!
  • கொள்ளைக் கும்பலிடம் சிக்கிச் சீரழியும் டெல்டா நீர்ப்பாசனம் !!!

பத்திரிகைச் செய்தி

காவிரி நீரில் தமிழக விவசாயிகளின் உரிமைக்கு மத்திய, கர்நாடக அரசுகள் தொடர்ந்து செய்யும் வஞ்சகத்தால் கடந்த 10 ஆண்டுகளாக ஒருபோக சாகுபடியைக்கூட உறுதியாகச் செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர் டெல்டா விவசாயிகள். இந்நிலையில் பெரும் மழையின் காரணமாக கர்நாடக அரசு திறந்துவிடும் உபரி நீரைக்கூட தேக்கி, சேமித்து பாசனத்திற்கு வழங்க எந்த அக்கறையும் காட்டாத எடப்பாடி அரசு பெருமளவு நீரைக்கடலில் கொட்டி விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கிறது.

கடந்த ஆண்டு முக்கொம்பு மேலணை உடைந்ததன் விளைவாக சுமார் 227 டிஎம்சி நீர் கடலில் கலந்து வீணானது. இவ்வாண்டும் , மேட்டூர் அணை நிரம்பியிருந்தும் விவசாயத்திற்கு நீர்விடாமல் கடந்த சில நாட்களாக 26,000 கன அடிக்கும் மேல் நீரை கொள்ளிடத்தில் திறந்து வீணடித்து வருகிறது. கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதே இல்லை.

இவ்வாண்டு மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒருமாதம் ஆன பின்னரும் தஞ்சையை அடுத்த அம்மாப்பேட்டை போன்ற பகுதிகளுக்குக்கூட இன்னும் தண்ணீர் போய்ச் சேரவில்லை.

காவிரி டெல்டா பாசனத்திற்கு அடிப்படை காவிரி, வெண்ணாறு , கல்லணைக்கால்வாய் ஆகிய மூன்று ஆறுகள்தான். இவற்றின் அதிகபட்ச நீர் எடுத்துச்செல்லும் திறன் முறையே 16461 கனஅடி, 13295 கனஅடி, 4500 கனஅடி. தற்போது போதுமான தண்ணீர் இருந்தும் காவிரி வெண்ணாற்றில் தலா 9,000 கனஅடி கல்லணைக் கால்வாயில் 3,000 கனஅடி என்று குறைவாகவே திறக்கப்பட்டுள்ளது. இந்த அளவை உயர்த்தினால் மட்டுமே பல பகுதிகளுக்கு நீர் போய்ச்சேரும். ஆனால் பொதுப்பணித்துறையோ, தற்போது திறப்பதைவிட கூடுதலாக நீரைத் திறந்தால் கரைகள் உடைந்து பாதிப்பு ஏற்படும் என்ற ஒரு மோசடியான காரணத்தைக்கூறி போதிய நீர் திறக்க மறுக்கிறது.

இது பொய் என்பதற்கு சான்று ; வெண்ணாற்றில் இயல்பான நீர்தாங்கும் திறன் 8,863 கியூசெக்ஸ். ஆனால் இப்போது விடப்படும் நீரின் அளவு 9,000 கியூசெக்ஸ். கரை உடையும் ஆபத்து என்றால் வெண்ணாறு உடையாதா? டெல்டா பாசன அமைப்புக்களை சீர்குலைத்துவிட்டு பழியை இயற்கை மீது சுமத்துகிறது எடப்பாடி அரசு.

கடந்த பல ஆண்டுகளாக வரைமுறையின்றி ஆற்றுமணலை அள்ளி ஆறுகள் ஆழமாகிவிட்டன. இன்னொருபுறம் பாசனக்கால்வாய்கள், ஏரிக்குளங்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து மேடாகி வருகின்றன. எனவே தண்ணீர்க் கால்வாய்களுக்கும் ஏரிகுளங்களுக்கும் பாய்வது தடைபடுகின்றது. இந்த உண்மையை மறைத்து கரை உடைந்துவிடும் எனப் பொய்யான காரணம் சொல்லி பாசனத்திற்குத் திறந்துவிடும் நீரைவிட அதிகமாக கடலில் கொட்டி வீணடிக்கிறது.(பாசனத்துக்கு 21,000 கன அடி, கடலுக்கு 26,756 கன அடி) ஜெயலலிதா காலத்திலிருந்து இன்றுவரை எடப்பாடி விடாமல் கைக்குள் வைத்துக்கொண்டு இருக்கும்துறை பொதுப்பணித்துறை. எடப்பாடிக்கு இத்துறை ஒரு தங்கச்சுரங்கம்.

இத்துறைக்கு ஒதுக்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை எடப்பாடி கும்பல் சூறையாடியதுதான் தமிழக பாசன அமைப்புக்கள் மோசமாக சீர்கெட்டதற்குக் காரணம். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 28-ம் நாள் மேட்டூர் அணை மூடப்படும். அதன் பிறகு ஜூன் 12-ம் தேதிக்குள் ஆறு, ஏரி குளம் போன்ற நீராதாரங்களை தூர்வாரி மராமத்துப் பணிகளை முடித்துவிட வேண்டும் என்பது பொதுப்பணித்துறையின் விதி. இதை இவர்கள் அமல்படுத்துவதே இல்லை.

படிக்க:
காவிரி டெல்டாவை எச்சரிக்கிறது நைஜர் டெல்டா !
♦ கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

மாறாக ஜூன் மாதத்திற்குப்பிறகே நிதி ஒதுக்குகின்றனர். இவ்வாண்டு ஜூலை 8-ம் தேதிதான் நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டது. எந்த வேலையும் செய்யாமல் நிதியை அதிமுக கும்பல் சுருட்டவே இந்த ஏற்பாடு. எந்த ஏரி, எந்த வாய்க்காலுக்கு எவ்வளவு நிதி தேவை என ஆய்வு செய்து நிதி ஒதுக்கீடு செய்வதுதான் அறிவியல்பூர்வமான அணுகுமுறை. ஆனால் ஒவ்வொரு தொகுதிக்கும் இவ்வளவு என்றல்லவா நிதி ஒதுக்குகிறார்கள். இது கொள்ளையடிப்பதற்கான முறையல்லவா?

மக்களே உருவாக்கிய குடிமராமத்து முறைய மீண்டும் கொண்டு வந்துவிட்டோமென பீற்றிக்கொள்ளும் எடப்பாடி அரசு. இதற்கென்று ஒதுக்கிய தொகை 2016 -17ல் ரூ 100 கோடி, 2017-2018ல் 331.69 கோடி, 2018 -2019ல் 499.69 கோடி ஆக இந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் தூர்வார ஒதுக்கிய தொகை ரூ 931.38 கோடி . 2500 கி.மீ. நீளக் கால்வாய்களும் தூர்வார நடவடிக்கை எடுத்திருப்பதாக அறிவித்தார் எடப்பாடி. ஒருமாதமாகியும் கடைமடை உட்பட பலபகுதிகளுக்கு நீர்போய்ச் சேரவில்லையே ஏன்?

டெல்டா பாசனத்தின் முக்கிய ஆறாகிய வெண்ணாற்றின் சூழலை புனரமைத்து மேம்படுத்தும் திட்டத்திற்கென ஆசிய வளர்ச்சி வங்கியிலிருந்து ரூ 800 கோடி கடன் பெற்று சென்ற ஆண்டு செலவிடப்பட்டது.. இதனால் விளைந்த பயன் என்ன என்பது எடப்பாடிக்கே வெளிச்சம். இதே போல ரூ 2000 கோடியில் ஆசிய வளர்ச்சி வங்கிக்கடன் மூலம் கல்லணைக் கால்வாய்த் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகச் செய்திகள் வருகின்றன. தன் அதிகாரம் முடிவுக்கு வருவதற்குள் முழுதாக தமிழகத்தை மொட்டையடிப்பதுதான் எடப்பாடியின் திட்டம் போலும்.

எடப்பாடி கும்பலும் அதிகார வர்க்கமும் கூட்டுச் சேர்த்து சட்ட விரோதமான முறையில் பாசன மேலாண்மையைக் கையாண்டு வருகின்றன. மராமத்து , நீர்ப்பங்கீடு ஆகியவற்றை விவசாயிகளின் கமிட்டி மூலம் செய்ய வகைசெய்யும் தமிழ்நாடு விவசாயிகள் பாசன மேலாண்மைச் சட்டம் 2000 நடைமுறைப்படுத்தப்படவே இல்லை. (Tamilnadu Farmers Management of Irrigation System Act 2000). மாறாக அதிகாரிகளே தன்னிச்சையாக முடிவுகள் எடுக்கின்றனர்.

எனவே பாசனத்திட்டங்களை சீராக்கி, நீரை சேமிக்க வழிகாணாமல் நீரை கடலில் கலக்க விடுவது கர்நாடகம் மேக்கேத்தாட்டு திட்டத்தை நிறைவேற்ற மறைமுகமாக உதவுவதாகவே அமையும். மேலும் எடப்பாடி அரசு அறிவித்துள்ள காவிரி உபரி நீரை சேமிக்க சேலம் மாவட்டத்தில் ஏரி வெட்டும் திட்டம் சிக்கலானதும் பல நூறுகோடி செலவு பிடிக்கக்கூடியது மட்டுமல்ல காவிரி டெல்டா விவசாயிகளின் உரிமையைப் பறிப்பதுமாகும்.

மத்திய, கர்நாடக அரசுகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லது எடப்பாடி அரசின் செயல்பாடும் டெல்டாவைப் பாலைவனமாக்கி ஹைட்ரோகார்பன் எடுக்கும் சதி என்ற ஐயமும், அச்சமும் பரவலாக எழுந்து வருகிறது. கிடைக்கும் நீரை வீணாக்கி விட்டு, நீர் சிக்கனம் பற்றி அறிந்து வர எடப்பாடி இஸ்ரேல் செல்லவிருப்பது இந்த அச்சத்தை மேலும் அதிகமாக்குகிறது. டெல்டா விவசாயம் பெரும் ஆபத்துக்கு உள்ளாக்கியிருப்பதையே தற்போதைய நடப்புகள் காட்டுகின்றன. அரசு, அதிகாரவர்க்கத்தின் மீது நம்பிக்கையிழந்த மக்கள் தாமே தம் சொந்த செலவில் ஏரி குளங்களைத் தூர் வாரும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை சில தொலைக்காட்சிகளும் ஊக்குவிக்கின்றன. பார்வைக்கு இவை நல்ல முயற்சிகள் போன்று தோன்றலாம். ஆனால் விளைவு கொள்ளையர்கள் சுதந்திரமாகக் கொள்ளையிடவே வழிவகுக்கும்.

எனவே விவசாயிகளின் அதிகாரத்தை நிலைநாட்டும் வகையில் பாசன மேலாண்மை முழுவதும் விவசாயிகள் கருத்தின் அடிப்படையிலேயே எடுக்கப்பட வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக பதவி வகித்த பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மீது சுயேச்சையான அமைப்பு மூலம் விசாரணை நடத்தி அவர்களை தண்டிப்பதுடன் சொத்துக்களையும் பறிமுதல் செய்யவேண்டும். ஹைட்ரோகார்பன் திட்டம் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். இந்த கோரிக்கைகளுக்காக விவசாயிகள், தொழிலாளிகள் மற்றும் அனைவரும் இணைந்த மக்கள் போராட்டங்களே இன்றைய தேவை.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்
மாநிலப்பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

***

திருச்சி – மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் :

கடைமடைக்கு வராத காவிரியை கடலுக்கு திருப்பி விடுகிறது எடப்பாடி அரசு! 
ஆற்று மணல் கொள்ளை !! தூர் வாரியதிலும் கொள்ளை !!!

“மன்றாடியது போதும் போராடுவோம் !” என்ற தலைப்பில் 16.09.2019 அன்று காலை 11.30 மணியளவில் திருச்சி மண்டல மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி மண்டல பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகம் வாயில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக அலுவலகத்திற்கு சுப்பிரமணியபுரம் பேருந்து நிருத்ததிலிருந்து தோழர்கள் பேனர், முழக்க அட்டை, கொடி பிடித்து முழக்கமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காவிரி நீர் கடலில் கலந்து ஆறு ஏரி வாய்க்கால் குளம் சீரழித்து விவசாயத்தை நாசமாக்காதே !

வெண்ணாற்றை சீரமைக்க 800 கோடி என்னாச்சு?
கல்லணை கால்வாய் சீரமைக்க 2000 கோடி என்னாச்சு?
சீரமைக்க வாங்கிய கடனை அதிகாரிகளும்,
எடப்பாடி கும்பலும் ஏப்பம் விட்டு அழிச்சாச்சு ..

என முழக்கமிட்ட தோழர்களை பகுதி மக்கள் அருகில் வந்து கவனித்தனர். செயலிழந்து போன பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத்துறையின் தலைமை பொறியாளர் அலுவலகத்தை போலீசு கும்பல் பாதுகாத்து நின்றனர்.

எதாவது ‘செய்வோம்’ என போலீசு உடனே ஆர்ப்பாட்டத்தை முடிக்குமாறு நெருக்கடி தந்தது. மறுத்து அரை மணி நேரம் முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் செழியன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநகர செயலர் தோழர் வின்சென்ட் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் திரு ம.ப. சின்னத்துரை மற்றும் அரியூர் பகுதி விவசாயிகள் திரு. திருநாவுக்கரசு, திரு. ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதன் பின்னர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதற்காக தோழர்களை கைது செய்து மண்டபத்தில் அடைத்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம். தொடர்புக்கு : 94454 75157.

குழந்தைகளின் இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 09

கசப்பான மனப் புண்

யாரோ ஒருவர் தன் மகனைப் பற்றி என்னுடன் பேசத் துவங்குகிறார். “அதிகாரத் தொனியுள்ள அம்மாவிற்கு” திருப்தியில்லை: “என் மகன் ஏன் ஒரு தடவை தான் வாசித்தான்? ஏன் அவனுக்கு கிசிலாஃபானைத் தராமல் மரக் கரண்டிகளைத் தந்தீர்கள்?” இக்குழப்பத்தில் ஒரு சிறுமியின் அழுகை என் காதுகளை எட்டுகிறது. “இங்கே வா, ஏன் அழுகிறாய்?”

விழாவிற்கு அவளுடைய அம்மா வரவில்லை. அதனால் தான் அழுகிறாள். வருவதாகச் சொல்லியிருந்தும் வரவில்லை. எனவேதான் அவள் நடனமாடவில்லை. இதய வேதனை மகிழ்ச்சியில் திளைக்க விடவில்லை. அச்சிறுமி என்னோடு ஒட்டிக் கொண்டு அழுகிறாள். இதோ அம்மா வந்து விட்டாள். அவள் என்னை விட்டுப் பிரியவில்லை, அம்மாவை நோக்கிப் பாயவில்லை.

“போய் வருகிறேன்!” என்று அமைதியாகச் சொல்லி விட்டு, கண்ணீரைத் துடைத்தபடி, அம்மாவிற்கான ரகசியத்தை (பரிசை) மறந்த படி அல்லது விட்டு விட்டு அறையிலிருந்து வெளியேறுகிறாள்.

“என்னம்மா ஆயிற்று?” என்று தன் அக்கறையையும் கவனிப்பையும் எனக்கும் மற்ற பெற்றோர்களுக்கும் காட்டும் முகமாக அம்மா கேட்கிறாள்.

ஆனால் அச்சிறுமி பதிலளிக்கவில்லை. ஒருவேளை அம்மா இப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறாளா இல்லையா என்று அவளுக்குக் கவலையில்லையோ, ஒருவேளை இப்போது அம்மாவை விட்டுத் தள்ளி தொலைவில், போர்டிங் பள்ளியில் சேர விரும்புகின்றாளோ!

“என் மகன் மீது அதிக அக்கறை காட்டுங்கள்!”

“அதிகாரத் தொனியுள்ள அம்மா” என்னை விட்டு அகலவில்லை.

நான் அவள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. ஏனெனில், அரிச்சுவடி விழா முடிந்த உடனேயே, இந்த “அதிகாரத் தொனியுள்ள அம்மாவின் கற்பனைக் குறைகளைக் கேட்பதை விட வேறு முக்கிய வேலைகள் எனக்கு வந்தன. தாழ்வாரத்தில் ஒரு சிறுவன் நிற்கிறான். அனேகமாக அவனும் தன்னை வீட்டிற்கு அழைத்துச் செல்ல யாராவது வருவார்களெனக் காத்திருக்க வேண்டும். அவன் வீட்டிலிருந்தும் விழாவிற்கு யாரும் வரவில்லை. பெரும் கோபத்துடன் அவன் ஜன்னலருகே நிற்கிறான், இப்போது அவனைப் பார்த்தால் குழந்தையைப் போலவேயில்லை. பெரிய மனிதனின் கவலைகள் அவனிடம் நிறைந்துள்ளன. அவன் எதைப் பற்றிச் சிந்திக்கிறான்? “அப்பா முன் போல் என்னுடன் நட்பாக இல்லை.”

ஏதோ ஒரு நபர் வருகிறார்: “நான் உன்னைக் கூட்டிச் செல்ல வந்திருக்கிறேன். பெற்றோர்கள் என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்”.

“இது என் மாமா!” என்று சிறுவன் விளக்குகிறான், என்னிடம் விடைபெற மறந்து, சன்னலருகே உள்ள பெரிய பாக்கெட்டை மறந்து செல்கிறான்.

படிக்க:
குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கத்தை உண்டாக்குவது எப்படி ?
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

அந்த பாக்கெட்டில் எவை இருக்கின்றன என்று எனக்குத் தெரியும். அதில் அவன் எழுதிய எழுத்துகளின் மாதிரிகள், நூறு, ஆயிரம், மில்லியன் வரையில் அவன் போட்ட கணக்குகள், வரைகணித வடிவப் படங்கள் (இவற்றில் முக்கோணங்கள், சதுரங்கள் தவிர கன வடிவங்களும் பிரமீடுகளும் கூட உள்ளன), இன்னும் சில படங்கள், மாடல்கள் முதலியன இருக்கின்றன. இவற்றில் ஒரு படம் மனிதனின் உடலாகும், இதில் ஒவ்வொரு உள் உறுப்பின் அருகேயும் அதன் பெயர் எழுதப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக அவன் இடைவேளைகளில் வகுப்பறையை விட்டு வெளியே செல்லாமல் ரகசிய பாக்கெட்டைத் தயாரித்தான். வீட்டிலிருந்து சுத்தமான தாள்கள், பசை, வண்ணப் பேனாக்கள், கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்டு வந்தான். அவன் கணக்குகளைப் போட்டான், வரைந்தான், வெட்டினான்…. சில நாட்களுக்கு முன் இதே போன்ற மனித உடலமைப்பு பற்றிய படத்தை எனக்குப் பரிசளித்தான்.

“வயிற்றில் என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியும்! இரைப்பையினுள் உணவு எப்படி வருகிறது, அங்கு ஜீரணம் எப்படி நடைபெறுகிறது என்று எனக்குத் தெரியும்…” என்றான் அவன்.

“நீயா இதை வரைந்தாய்?”

“ஆமாம்.”

“இது என்ன ?”

“இரைப்பை !”

“அது?”

“இதயம்…. இது கல்லீரல்… இங்கே உணவு ஜீரணமாகிறது.”

“உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” “பாட்டி சொல்லித் தந்தாள். அவள் உயிரியல் விஞ்ஞானி.”

“மிக சுவாரசியமான படம்!”

“நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்… நான் இதை உங்களுக்காக வரைந்தேன்.”

“நன்றி !”

இதோ இந்தக் கனமான பாக்கெட்டை, “பெற்றோர்களுக்கான ரகசியத்தை” அவன் ஜன்னலருகே வைத்துச் சென்றுள்ளான். ஒருவேளை அவனுடைய ரகசியத்தைப் பகிர்ந்து கொள்ள இனி யாருமில்லையோ, தனது இதயத்தை, மனதைத் திறந்து காட்ட ஒருவருமில்லையோ?

மனிதர்களின் பரஸ்பரக் கவனமும் அக்கறையும்தான் துக்கத்தைத் தாங்கிக் கொள்ளவும் மனதால் வீழ்ந்து விடாமல் இருக்கவும் புதிய சக்தி பெறவும் ஒவ்வொருவருக்கும் உதவுகின்றன. பெற்றோர்களின் தீமையோடு கலந்த, குடும்ப மகிழ்ச்சி குலைவதுடன் தொடர்புடைய துக்கத்தை குழந்தை எப்படித் தாங்குவான்? இதைத் தாங்கவல்ல எந்த ஆசிரியரியல் விஞ்ஞானம் எனக்குத் துணை புரியும்? ஒருவேளை அன்பு, பாசம், நேசம், அக்கறை, கவனம் அல்லது கண்டிப்பு – இவற்றில் எது எனக்குக் கை கொடுக்கும்? அல்லது இங்கு வேறு ஏதாவது ஒரு விசேஷ அணுகுமுறை தேவையோ?

“கடினமான குழந்தைகள்” என்றழைக்கப்படுபவர்கள் எப்படித் தோன்றுகின்றனர் என்பதன் அடிப்படைகளைக் கண்டுபிடிப்பதில் எவ்விதக் கஷ்டமும் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. நாம்தான் அவர்களை அப்படி ஆக்குகின்றோம். மனதைப் பாழ்படுத்தி, இதயத்தைப் பிழிந்தெடுக்கவல்ல துக்கம் குழந்தையை ஆட்கொள்ளும் போது அவனுக்கு எப்படி உதவுவது? எனது ஆயிரக்கணக்கான சக ஆசிரியர்களைப் போன்றே நானும் இவர்களின் மனதிலும் இதயத்திலும் ஏற்பட்டுள்ள வடுவைப் போக்கும் வழிகளைத் தேட வேண்டியதாகிறது. என்னால் இது முடியுமா?

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

கேள்வி பதில் : இந்தியாவில் கிறிஸ்தவ மதம் எப்படி காலூன்றியது ?

Saint-Thomas-Slider

கேள்வி: //இந்தியாவில் கிறிஸ்துவ மதம் எப்போது யாரால் தோற்றுவிக்கப்பட்டது ? இப்போதுள்ள கிறிஸ்துவர்கள் அக்காலத்திலேயே மதமாற்றம் செய்யப்பட்டவர்களா?//

– கமல ஹாசன்

ன்புள்ள கமலஹாசன்,

இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தின் வரலாறு குறித்து “கண்ணை மறைக்கும் காவிப் புழுதி” நூலின் ஒரு அத்தியாயம் விரிவாக விளக்குகிறது. அதையே இங்கு கொஞ்சம் சுருக்கி இணைக்கிறோம்.

ஏசுநாதரின் நேரடிச் சீடரான புனித தாமஸ் முதல் நூற்றாண்டிலேயே இந்தியா வந்து பிரச்சாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனினும் அப்போதைய கிறித்தவம் ஒரு மத நிறுவனமாக மாறியிருக்கவில்லை. எனவே வெறும் சமயக் கொள்கையைப் பரப்புதல் என்பதோடு அது நின்று விட்டது. பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகே கிறித்தவ மதமாற்றம், ‘மிஷனரிகள்’ எனும் சமயநெறி பரப்பும் நிறுவனங்கள் மூலமாக உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டது.

Saint-Thomasகிறித்தவ மிஷனரிகள் என்பதன் பொருள் இன்றிருப்பது போல் அன்று இல்லை. அப்போது போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் அடங்கிய ஐரோப்பியப் பகுதிகள் இசுலாமியப் பேரரசில் இருந்தன. மேலும் மங்கோலியர்களின் படையெடுப்பும் அடிக்கடி நிகழ்ந்தது. 1245-ம் ஆண்டில் திருச்சபையைக் கூட்டிய போப், கிறித்தவ உலகத்தைப் பாதுகாக்கும் வழிகளை விவாதித்தார். அதன்படி மங்கோலியர்களின் அரசியல், இராணுவ விவரங்களை அறிந்து கொள்ளும் பொருட்டு ‘மிஷனரிகள்’ அனுப்பப்பட்டன. இப்படி தகவல் சேகரிக்கும் நிறுவனங்களாகத் தோன்றிய மிஷனரிகள் பின்னாளில் சமயநெறி பரப்பி மதமாற்றம் செய்பவையாக மாறின.

அதன்பின் ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலம் துவங்கியது. முதலாளித்துவப் புரட்சி நடப்பதற்கான சூழ்நிலைகள் அரும்ப ஆரம்பித்தன. ஐபீரிய தீபகற்ப நாடுகளான ஸ்பெயினும், போர்ச்சுகலும் வணிகம் செய்யவும், காலனிகளை உருவாக்குவதற்கும், இந்தியாவைப் போன்ற பழைய உலகைச் சேர்ந்த நாடுகளுக்குப் புதிய கடல் வழிகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் போட்டியிட்டன. அப்படி வழி கண்டுபிடிக்கப்பட்ட நாடுகளைப் போட்டித் தகராறின்றி ஸ்பெயினுக்கும், போர்ச்சுகலுக்கும் சரிபாதியாகப் பிரித்துக் கொடுக்கும் ‘புனிதப் பணியினை’ போப் செய்து வந்தார். கூடவே கத்தோலிக்க மதத்தினைப் பரப்பும் கடமையையும் அறிவுறுத்தினார்.

1534-ல் இக்னேஷியஸ் லயோலா ஆரம்பித்த ‘ஜெசூட்ஸ்’ என்ற ஏசு சங்கம் இத்தகைய மிஷனரி மற்றும் பாதிரி – துறவியர்களுக்கு முன்னோடியாக விளங்கியது. இதன்பின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மிஷனரி அமைப்புகள் தோன்றின. இவற்றில் போப்புக்கும் திருச்சபைக்கும் கட்டுப்பட்டவை ரோமன் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்தும், ஏனையவை புராட்டஸ்டண்ட் பிரிவைச் சார்ந்தும் இருந்தன. இருப்பினும் இரு பிரிவைச் சேர்ந்த மிஷனரிகளும் மதத் தொண்டுப் பணிகளோடு தத்தமது நாட்டு ஆட்சியாளர்களின் காலனியாதிக்க நலன்களுக்குச் சேவையாற்றுவதையும் முக்கியமாகக் கொண்டிருந்தனர். இனி இந்தியாவுக்குத் திரும்புவோம்.

படிக்க :
♦ அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

போர்ச்சுக்கல் நாட்டின் கடலோடி நாயகனான வாஸ்கோடகாமா தென் ஆப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றி, மடகாஸ்கர்தீவு வழியாக இந்திய மாலுமிகளின் உதவியோடு கேரளத்தின் கோழிக்கோடு கடற்கரையில் 1498, மே மாதம் 27-ம் தேதி கரை இறங்கினார். ஆரம்பித்தில் போர்ச்சுக்கீசியர்களின் நோக்கம் வியாபாரம் செய்வதும் கிறித்தவ மதப் பிரச்சாரம் செய்வதும் என்பதாக இருந்தது. வலிமை வாய்ந்த இசுலாமியப் பேரரசினைப் போல கிறித்தவமும் அப்படி உருவாக வேண்டும் என்று திருச்சபையினால் ஊக்கங் கொடுக்கப்பட்ட போர்ச்சுக்கீசியர்கள் இந்தியாவில் குறிப்பாக கோவா மற்றும் கேரளாவில் சுவிசேசப் பணியைத் துவங்கினர். முதலில் இந்தியாவும் கிறிஸ்தவ நாடுதான் என்று நம்பிய போர்ச்சுக்கீசியர்கள் பின்னர் அப்படி இல்லை எனப் புரிந்து கொண்டனர். எனினும் கேரளாவில் ஏற்கனவே சிரியன் கிறித்தவப் பிரிவு மக்கள் அரைகுறை கிறித்தவ மரபோடு இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களெல்லாம் முறையான கிறித்தவ மரபிற்கு உட்படுத்தப்பட்டு திருச்சபையின் வலைப் பின்னலில் சேர்க்கப்பட்டனர்.

francis xavier
பிரான்சிஸ் சேவியர்

ஆரம்பத்தில் அடாவடி வழிகள் மூலமாக மறை பரப்பிய போர்ச்சுக்கல் மிஷனரிகள் பின்னர் தமது வழிமுறைகளை மாற்றிக் கொண்டனர். இந்தியக் கிறித்தவ வரலாற்றில்  கோவாவில் மட்டுமே வன்முறைப் பாதையினை மேற்கொண்ட முதலும் – கடைசியுமான மிஷனரிகள் இவர்கள் மட்டுமே. அதேசமயம் தொண்டுப் பணியியைத் துவக்கி வைத்தவர்களும் இவர்கள்தான். 1541-ல் பிரான்சிஸ் சேவியர் என்ற புகழ்பெற்ற பாதிரியார்  கோவாவில் வந்திறங்கினார். இயேசு சங்க (ஜெசூட்ஸ்) நிறுவனரான இக்னோஷியஸ் லயோலாவின் சீடரான இவர், கப்பலை விட்டிறங்கி  முதலில் தொழுநோயாளிகளின் மருத்துவமனைக்குத் சென்றுவிட்டு பின்னரே ஆர்ச் பிஷப் அரண்மனைக்குச் சென்றார்.  அடுத்த வருடமே கோவாவில் புனித – பால் கல்லூரி நிறுவப்பட்டது. இது ஆசிய மற்றும் ஐரோப்பியப் பாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கும் நிறுவனமாக விளங்கியது. சேவியரின் முயற்சியினால் கோவாவிலும், கேரளத்தில் மலபார் கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கிறித்தவத்தைத் தழுவினர். இந்தியாவில் பெருந்திரளான மக்கள் கத்தோலிக்கத்தில் இணைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

அதன்பின் ஏனைய ஐரோப்பிய நாடுகள் இந்தியாவின் செழிப்பான பொருளாதாரத்தைச் சுரண்டும் நோக்குடன் வணிகம் செய்ய வந்தன. போர்ச்சுக்கீசியர்கள் கோவா, டாமன், டையூவிலும், டச்சுக்காரர்கள் (ஹாலந்து) கொச்சியிலும், பிரெஞ்சுக்காரர்கள் காரைக்கால், பாண்டிச்சேரி, மாஹேயிலும், ஆங்கிலேயர்கள் சென்னை, மசூலிப்பட்டினம், சூரத், கொல்கத்தா என ஏனைய இந்தியப் பகுதிகளிலும் காலூன்றினர். இவர்களில் போர்ச்சுக்கீசியர்கள் கத்தோலிக்கப் பிரிவையும், ஏனைய நாடுகள்  புராட்டஸ்டண்ட் பிரிவையும் சார்ந்திருந்தன. 17, 18-ம் நூற்றாண்டுகளில் இந்தியாவில் நிலைகொண்ட ‘புராட்டஸ்டண்ட்’ நாடுகள் முதலில் முக்கியமாக வணிகத்தில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தன. பின்னர்தான் ஆசியாவில் தமது அரசியல் ஆதிக்கத்திற்கு மதமாற்றம் உதவுமென்பதைப் புரிந்து கொண்டனர். 17ஆம் நூற்றாண்டில் முடிவுற்ற போர்ச்சுக்கீசியர்களின் மதமாற்றம் பெருமளவு மக்களைச் சேர்ப்பதில் தோல்வியுற்றது.

அதன் பின்னரே 18, 19, 20-ம் நூற்றண்டுகளில் பெருமளவு மக்கள் பல்வேறு மிஷனரிகளால் கிறித்தவர்களாய் மாறினர். இன்று இந்திய கிறித்தவ மக்களின் எண்ணிக்கை நார்வே, டென்மார்க், பின்லாந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் மக்கள் தொகையைவிட அதிகம். மொத்த கிறித்தவர்களில் 70 சதவீதம் பேர் தென்னிந்தியாவிலும், 30 சதவீதம் பேர் வடக்கிலும் வாழ்கின்றனர். அந்தந்த மாநிலங்களின் மொத்த மக்கள் தொகையில் தமிழ்நாடு 5%, கேரளா 26%, ஆந்திரா 4%, கோவா 36%, நாகலாந்து 53%, மணிப்பூர் 19% என கிறித்தவ மக்களின் விகிதம் இருக்கிறது. இப்படிப் பெருந்திரளான மக்கள் மாறுவதற்குக் காரணம் என்ன?

இந்து மதவெறியர்கள் கூறுவதுபோல் கிறித்தவ மிஷனரிகள் ஆசைகாட்டியோ, அச்சுறுத்தியோ இதைச் செய்யவில்லை. பார்ப்பனியத்தின் கொடூரமான சாதிய சமூக அடக்குமுறையின் காரணமாக, தாழ்த்தப்பட்ட – பழங்குடியின மக்களிடம் தோன்றிய விடுதலை ஆர்வமே முதன்மையான காரணம்.

படிக்க :
♦ மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
♦ ‘இந்து கடையிலேயே வாங்கு!’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு…..?

10-ஆம் நூற்றாண்டில் இருந்து தீவிரமான பார்ப்பனமயமாக்கத்திற்கு உள்ளாகிய மாநிலம் கேரளம். வடக்கிலிருந்து வந்த நம்பூதிரிகள் சில பத்தாண்டுகளுக்குள்ளாகவே கேரளத்தின் சமூக பொருளாதார ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொண்டனர். நம்பூதிரி, நாயர், கம்மாளர், ஈழவர் மற்றும் புலையர் என்ற இறுக்கமான சாதிய அமைப்பு கொடூரமான விதிமுறைகளுடன் அமல்படுத்தப்பட்டது. அதற்கென்றே ‘சங்கர ஸ்மிருதி’ எனும் ‘பார்ப்பனக் குற்றவியல்’ சட்டத் தொகுப்பும் இயற்றப்பட்டது. மனுஸ்மிருதியின் கேரளப் பதிப்பான இந்நூலின் விதிமுறைப்படி தொலைவில் வரும் புலையரை ஒரு நம்பூதிரியின் கண்கள் பார்த்து விட்டாலே நம்பூதிரியைத் தீட்டுப்படுத்திய குற்றத்திற்காக அந்தப் புலையரைக் கொலை செய்யலாம். நாயர்களின் மணப் பெண்கள் தமது முதலிரவை நம்பூதிரிகளின் படுக்கையில் கழிக்க வேண்டும். இதுபோன்ற விதிமுறைகள் இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை அமலில் இருந்துள்ளன. கேரள சாதியக் கொடுமைகளைக் கண்ட விவேகானந்தர் கேரளாவை ‘பைத்தியக்காரர்களின் நாடு’ என்றழைத்தார். கேரளாவில் இலட்சக்கணக்கான மக்கள் மதம் மாறுவதற்கு இவையே காரணங்கள். பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு எதிராக ஈழவ மக்களுக்குத் தன்மானமளித்த நாராயண குரு தோன்றுவதற்கான காரணமும் இதுதான்.

காலனிய ஆட்சியின்போது கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கி தென்கேரளத்தை ஆண்டு வந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்திலும் ஆயிரக்கணக்கான மீனவர்களும், நாடார் சாதி மக்களும் கிறித்தவத்தைத் தழுவினர். ‘பள்ளு, பறை, சாணான், சக்கிலியன்’ என்ற தாழ்த்தப்பட்டவர்களின் படியமைப்பில் மூன்றாம் நிலையிலிருந்த சாணான் என்றழைக்கப்பட்டவர்கள் நாடார் சாதி மக்களாகும். ‘நாடார் பெண்கள் மாராப்பு போடக்கூடாது’ என்ற பார்ப்பன அடக்குமுறை அங்கே சட்டமாகவே இருந்தது. தமது போராட்டத்தின் மூலம் திருவிதாங்கூர் அரசை மாராப்பு போடக்கூடாது என்ற சட்டத்தை இரத்து செய்ய வைத்தார்கள் நாடார் சாதிப் பெண்களும், ஆண்களும். நாடார்கள் கோவில்களுக்குள் நுழையக்கூடாது என்பதை எதிர்த்துத் தனிக்கோவில்  – வழிபாட்டு முறையை உருவாக்கினார்  ஐயா வைகுண்ட நாதர். நாராயண குருவைப் போல குமரி மாவட்டத்தில் தோன்றிய இச்சீர்த்திருத்தப் பெரியவரின் கொள்கையை ஏற்றவர்கள் ‘ஐயா வழி’ மக்கள் என இன்றும் வாழ்கிறார்கள்.  எனவே குமரி மாவட்டத்தில் மதமாற்றம் எளிதில் நடந்தேறியதில் வியப்பில்லை.

ஒரிசாவின் சோட்டா நாக்பூர் பகுதியில் முந்த்தா ஆரோன், காரியா போன்ற பழங்குடியின மக்கள் வாழ்கிறார்கள். பார்ப்பன மேல் சாதி நிலப்பிரபுக்களிடம் நிலமிழந்து, வாழ்விழந்து அடிமையில் உழன்று கொண்டிருந்த இம்மக்களுக்கு பொருளாதார, கல்வி உதவிகளைச் செய்த மிஷனரிகள் வெகு விரைவிலேயே அவர்களுடைய நம்பிக்கை நட்சத்திரமாய் மாறினார்கள். 19-ம் நூற்றாண்டில் கிறித்தவ மதத்திற்கு மாறிய இம்மக்கள், அதன் மூலமே ஓரளவிற்கேனும் தமது சுயமரியாதையையும், வாழ்க்கையையும் மீட்க முடிந்தது.

பெண் குழந்தைத் திருமணம், வல்லுறவில் இறந்து போகும் சிறுமிகளான மணப்பெண்கள், குலின் எனப்படும் பார்ப்பனப் பிரிவில் விதவைகள் விபச்சாரிகளாக மாற்றப்பட்டது, விதவைகளுக்கும் – விபச்சாரிகளுக்கும் பிறக்கும் கள்ளக் குழந்தைகள் ஒரு மாதத்தில் சராசரியாக 1000 வரை கொல்லப்படுவது – இவையெல்லாம் வங்காள மாநிலத்தில் பார்ப்பன இந்து மதம் ஏற்றி வைத்த மணி மகுடங்கள்.

இத்தகைய பார்ப்பன ஒடுக்கு முறைகளை ஒழிக்க முகலாயப் பேரரசர்களும், முசுலீம் குறுநில மன்னர்களும் பெரிதும் முயன்றாலும் வெற்றி பெறவில்லை. பின்னர் மிஷனரிகளின் முயற்சியாலும், கிறித்தவக் கல்லூரிகளில் பயின்ற இராஜாராம் மோகன்ராய் போன்ற இந்து அறிவாளிகளின் போராட்டத்தினாலும் ஆங்கிலேய அரசு தடைச் சட்டங்களைக் கொண்டு வந்தது.

இனி, இந்து மதவெறியர்கள் அபாயச் சங்கு ஊதும் வடகிழக்கு மாநிலங்களைப் பார்ப்போம். அஸ்ஸாமும் அதைச் சுற்றியுள்ள 6 மாநிலங்களும் அடங்கிய வடகிழக்குப் பகுதி ஏனைய இந்தியாவிலிருந்து இயற்கை, இனம், மொழி, பண்பாடு என பலவற்றிலும் வரலாற்று ரீதியாகப் பிரிந்தே காணப்படுகிறது. பிரம்மபுத்திரா, பாரக் நதிகளின் இரு பள்ளத்தாக்குகளும் இவற்றினைச் சுற்றி நெருக்கமான மலைகளும் இருக்கின்றன. மலைப் பகுதியில் மங்கோலிய இனப்பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இம்மக்கள் சீனா, திபெத் வழியாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பேயே குடியேறியவர்கள். பள்ளத்தாக்குப் பகுதியில் கலப்பின மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

காமரூபம் என்று வரலாற்றில் அழைக்கப்படும் (ஆரியர்களை எதிர்த்து நின்ற) இப்பகுதியை வேதங்கள் ‘கிராதர்கள், மிலேச்சர்கள் வாழும் நாடு’ எனக் குறிப்பிடுகின்றன. 13-ம் நூற்றாண்டில் பர்மிய மன்னரான அஹோமி இப்பகுதியைக் கைப்பற்றிய பின்னர், அவனது வம்சத்தின் ஆட்சி ஏறக்குறைய 6 நூற்றாண்டுகள் நீடித்தது. அஹோமி என்பதே பின்னர் அஸ்ஸாம் என்பதாக மாறிற்று. கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஆரியர்கள் அஸ்ஸாமில் குடியேற ஆரம்பித்தனர். பழங்குடி மக்கள் மலைப்பகுதிகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். பார்ப்பனியத்தின் வர்ண – சாதிச் சமூகமும், அதை நடைமுறைப்படுத்தும் சட்ட திட்டங்களும் அமுல்படுத்தப்பட்டன. அஹோமி வமிச மன்னர்களும் வைணவ இந்து மதத்தைத் தழுவிய பின்னர் ஆரியமயமாக்கம் முழு வேகத்தில் நடந்தேறியது. தாந்திரீகம் எனப்படும் மந்திர வழிபாடும், நரபலி, நிர்வாண பூஜை, சக்தி வழிபாடு எனக் கொடூரமான சடங்குகள் வெறியாடும் பிரதேசமாக அஸ்ஸாம் மாறியது.

Buddhaஇதை எதிர்த்து வந்த புத்த மதம் நெடுங்காலம் செல்வாக்குடன் நீடித்தது. வடகிழக்கில்  வர்ண சமூகம் குலைக்கப்பட்டு, புத்த மதம் வந்தது பற்றி ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் வருத்தப்பட்டார். அதனால்தான் வங்கத்தில் இசுலாமும், வடகிழக்கு மாநிலங்களில் கிறித்தவமும் எளிதில் பரவமுடிந்தது என்று குமுறுகிறார் கோல்வால்கர். இன்றும் வடகிழக்கு மாநில இந்துக்களிடம், ஏனைய இந்திய இந்துக்கள் மத்தியில் காணப்படும் அசமத்துவச் சடங்குகள், இறைச்சி உண்பதில் பேதங்கள், கீழ் சாதியிடம் உணவு பெறுவதைத் தீட்டாகக் கருதுவது போன்ற பார்ப்பனப் பண்புகள் பெருமளவில் கிடையாது. காரணம் இம்மக்களிடம் மரபுரீதியாக இருந்து வந்த பழங்குடியினப் பண்பாடுதான்.

1825-ம் ஆண்டு பர்மியர்களை ஆங்கிலேயர்கள் வென்ற பிறகு வடகிழக்கு மாநிலங்களில் காலனி ஆதிக்கம் தொடங்கியது. அப்போதிருந்து கிறித்தவ மிஷனரிகளின் தொண்டுப் பணியும் தொடங்கியது.  பல்வேறு பழங்குடியின மொழிகளுக்குக் கிறித்தவப் பாதிரிகள் ரோமானிய வரி வடிவம் கொடுத்தனர். தாய்மொழிக் கல்விக்கும், ஏனைய மருத்துவ பொருளாதார முன்னேற்றத்திற்கும் அவர்கள் ஆற்றிய பங்கு முக்கியமானதாகும். இதனாலேயே கேரளாவிற்கு அடுத்து இலட்சக்கணக்கான மக்கள் இங்கே மதம் மாறினர்.

காலனிய ஆட்சியில் ஒன்றுபட்ட அஸ்ஸாமாக இருந்த வட கிழக்குப் பிரதேசம் வெள்ளையர்கள் வெளியேறிய பிறகு அஸ்ஸாம், அருணாச்சல் பிரதேசம், நாகாலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், மேகாலயா என ஏழு மாநிலங்களாக இந்திய அரசால் பிரிக்கப்பட்டன. இவற்றில் 3 மாநிலங்கள் கிறித்தவப் பெரும்பான்மையினைக் கொண்டிருக்கின்றன. ஏராளமான பழங்குடியினப் பிரிவுகளையும், மொழிகளையும், வளர்ச்சி பெறாத தேசிய இனங்களையும் கொண்டிருக்கும் இம்மாநிலங்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி இருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான்.

படிக்க :
♦ கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?
♦ இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

வரலாற்று ரீதியாக இந்தியாவிலிருந்து பிரிந்திருந்த இம்மக்கள் இன்று  தமது வாழ்வுரிமைக்காக இந்திய அரசை எதிர்த்துப் போரிடுகிறார்கள். இந்தப் போராட்டத்தைச் சீர்குலைக்கும் வண்ணம் அஸ்ஸாம் – போடோ, குக்கி – நாகா என ஒன்றுக்கெதிராக மற்றொரு இன மக்களை நிறுத்தி மோதவிட்டது இந்திய அரசின் சதி வேலையாகும்.  தற்போது அசாம் விடுதலைக்காகப் போராடி வரும் ‘உல்ஃபா’ இயக்கம் பெரும்பான்மையாக இந்துக்கள் அடங்கிய ஒரு குழுதான். அதனால் இவ்வமைப்பை இந்து மதவெறியர்கள் அங்கீகரிக்கிறார்களா என்ன? அவர்களை அடக்க கூடுதல் இராணுவத்தைத்தானே அனுப்புகின்றார்கள். எனவே வடகிழக்குப் பிரச்சினைகளுக்குக் கிறித்தவ மத மாற்றம் காரணமல்ல.

இந்தியாவில் மதமாற்றம் செய்ய வந்த மிஷனரிகளுக்கும் அவர்தம் நாடுகளுக்கும் ஆதிக்கம் செய்யும் நோக்கம் இருந்தது உண்மையே. ஆனால், மக்களோ, பார்ப்பனிய சாதிக் கொடுமைகளிலிருந்து விடுபடவே மதம் மாறினார்கள். பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியம் மறுத்த கல்வியைக் கிறித்தவம் கொண்டு செல்ல முயன்றது. அசாமி, வங்க மொழி, தமிழ், ஒரியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற தேசிய மொழிகளில் முதன் முறையாகப் பள்ளிகளும், கல்லூரிகளும் நிறுவப்பட்டன. 18-ம் நூற்றாண்டிலேயே பெண்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியின மக்களுக்காக கல்விக் கூடங்கள் நிறுவப்பட்டன. அச்சகங்களும், வட்டார மொழி நூல்களும்  –  பைபிளும் வெளியிடப்பட்டன. நவீன வங்க இலக்கியம் தோன்றுவதற்கு மிஷனரிகளே காரணமாயின. வீரமாமுனிவரும், பெர்க்லி பாதிரியாரும் தமிழுக்குச் செய்த தொண்டு அளவிடற்கரியது. ஆங்கில – வட்டார மொழி அகராதிகள் வெளியிடப்பட்டன. இன்றும் இந்திய அளவில் 15 சதவீத பள்ளி மாணவர்களும், 10 சதவீத கல்லூரி மாணவர்களும் கிறித்தவ நிறுவனங்களில்தான் படிக்கின்றனர். 15% மருத்துவச் சேவையும் கிறித்தவ மருத்துவமனைகளால்தான் இப்போதும் அளிக்கப்படுகின்றது.

இப்படி கல்வி, வட்டார மொழி வளர்ச்சி, சுகாதாரம், மருத்துவம், சிறு தொழில்கள் எனப் பல்வேறு சேவைகள் மூலம் கிறித்தவம் மக்களைக் கவர்ந்தது. சூத்திரரும், பஞ்சமரும் தங்களை முதன் முதலில் மனிதர்களாக மதித்தவர்களைக் கண்டனர்.

இருப்பினும் இந்திய மக்களைப் பெருமளவில் மதம் மாற்றுவதில் கிறித்தவம் தோல்வியுற்றது. பார்ப்பனியத்தின் சகல நோய்களையும் தீர்க்கும் வீரிய மருந்து பைபிளிடம் இல்லை. அதாவது பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பை மிஷனரிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனாலேயே இந்தியக் கிறித்தவ மதம் பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்டு சாதிய அமைப்பையும் ஏற்றுக்கொண்டது.

1606-ம் ஆண்டு, மதுரையில் திருமலை நாயக்கன் ஆண்ட காலத்தில் மதப்பிரச்சாரம் செய்ய வந்தார் நொபிலி என்ற பாதிரியார். அவர் தன்னை பிரம்மா அனுப்பிய பார்ப்பனனென்றும், தன்னுடன் 5-வது வேதத்தைக் கொண்டு வந்திருப்பதாகவும் கூறிக்கொண்டார். அதன் மூலமே பார்ப்பன மேல் சாதியினர் உள்ளிட்டு ஒரு சிலரை மதம் மாற வைத்தார். மதப்பிரச்சாரம் செய்ய அனுமதியும் பெற்றார். தமது சாதியச் சமூகச் சுரண்டலுக்கும் – ஆதிக்கத்திற்கும்  கிறித்துவ மதம் தடையில்லை என உணர்ந்த பிறகே பார்ப்பன மேல் சாதியினர் இந்தியாவெங்கும் கிறித்தவ மதமாற்றத்தை ஓரளவிற்கு அனுமதித்தனர்.

மேலும் மிஷனரிகளின் கல்வி – ஏனைய தொண்டுப் பணிகள் மூலமாக இந்து மதத்தின் ஆதிக்க சாதிப் பிரிவே கணிசமான ஆதாயங்களைப் பெற்றது. இவ்வாறு காலனியாதிக்கத்தின் சலுகைகளைப் பெற்று பிழைப்புவாதிகளாக மாறியதும் இவர்களே. இன்றும் நாடெங்கும் உள்ள செயின்ட் ஜோசப் – பீட்டர்ஸ் – ஜான்ஸ் – லயோலா போன்ற மிகப் பிரபலமான கிறித்தவக் கல்லூரிகளில் படித்துப் பயனடைபவர்களில் 90 சதவீதம் பேர் பார்ப்பன ‘மேல்சாதி’ மேட்டுக்குடியினர்தான். அவ்வளவு ஏன், இன்று இந்து மதவெறியர்களின் பிரபலமான தலைவர்கள் பலரும் கிறித்தவக் கல்லூரிகளில் படித்தவர்களே!

இவையெல்லாம் கிறித்தவ மதமாற்றத்தின் இன்னொரு பக்கம். பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை காரணமாக கிறித்தவ மதத்தைத் தழுவிய கேரளம் கூட இன்று தலைகீழாக மாறிவிட்டது. கேரளத்தில ‘புதுக் கிறிஸ்தியானி’ என்ற பெயர் மிகவும் பிரபலம். அதன் பொருள் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் என்பதே. மேலும் இவர்கள் சமீபத்தில் மதம் மாறியவர்கள், பரம்பரைக் கிறித்தவர்கள் அல்ல என்றும் ஒதுக்கப்படுகிறார்கள். அதேபோல ‘சிரியன் கிறித்தவர்’ என்ற ‘பரம்பரைக் கிறித்தவப் பிரிவு’ இந்துக்களின் நம்பூதிரி – நாயரைப் போன்ற ‘மேல்சாதி’ கிறித்தவர்களைக் குறிக்கும். இவர்களைத் ‘தம்புரானே, பணிக்கரே’ என்றுதான் தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்கள் விளிக்க வேண்டும். மேலும் தீண்டாமையும் வாழ்க்கையின் சகல அம்சங்களிலும் உண்டு. தேவாலயங்களில் கூட சாதிகளுக்குக்கேற்பத் தனி வழிபாடுகள், அல்லது தனித் தேவாலயங்கள் என்பதெல்லாம் சகஜமாகி விட்டன. தமிழ்நாட்டின் பல கிறித்தவ இடுகாடுகளில் தாழ்த்தப்பட்ட கிறித்தவப் பிணங்கள் நுழைய முடியாது.

எனவே, இந்தியாவில் எந்த மதமானாலும், எத்தகைய உயர்ந்த கோட்பாடுகளைக் கொண்டிருந்தாலும் அவை பார்ப்பனியத்தின் சாதிய அமைப்பால் செரிக்கப்படும் என்பது கிறித்தவத்தின் வரலாற்றில் உண்மையாகிவிட்டது.

அதேசமயம் இத்தகைய பார்ப்பன இந்து மதத்தின் சாதிய – தீண்டாமைக் கொடுமைகளே இன்றைக்கும் தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாம் – கிறித்தவ மதங்களுக்கு மாறுவதற்குக் காரணமாகிறது. இவை இந்து மதவெறியர்களுக்குத் தெரியும். அதனால்தான் “சாதி – தீண்டாமையை ஒழிக்கிறோம், யாரும் மதம் மாறாதீர்கள்” என்று கூறுவதற்குப் பதில், மதமாற்றத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள்.  அதனாலேயே கிறித்தவப் பாதிரிகள் எரிக்கப்படுவதும், தேவாலயங்கள் இடிக்கப்படுவதும் தொடர்கின்றது.

பார்ப்பனச் சாதிய அமைப்பு என்பது வெறும் சாதிய உணர்வு என்ற கௌரவம் சார்ந்த கருத்து மட்டுமல்ல; ஒரு சமூகப் பொருளாதாரச் சுரண்டல் நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் அதன் பலம். மதமாற்றத்திற்கெதிரான இந்து மதவெறியர்களின் வெறுப்பும் – திமிரும் அதிலிருந்துதான் பிறக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அரசு பொது மருத்துவமனை ஊழியர்களும் மனிதர்கள்தான் | ஃபரூக் அப்துல்லா

Govt-Hospital-Slider

ரசு பொது மருத்துவமனைகளில் வேலை செய்யும் மருத்துவ ஊழியர்கள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை செய்யும் ஊழியர்களைப் பார்த்தால் இந்த சமூகத்திற்கு எப்படித் தெரிகிறது ? என்று தெரியவில்லை.

தமிழக சுகாதாரத்துறையில் தினசரி இரண்டு கோடி புறநோயாளிகளை கவனித்து வருகின்றன இந்த அரசு மருத்துவமனைகள். ஆறு மணிநேரத்தில் இரண்டாயிரம் நோயாளிகளைப் பார்த்து அவர்களுக்கு ஊசி தேவையென்றால் அதைப் போட்டு மருந்துகளைக் கொடுத்து அனுப்பி வைக்க வேண்டும்.

பணியில் அதிக பட்சம் நான்கு ஐந்து மருத்துவர்கள் புறநோயாளிகளை பார்ப்பார்கள். ஒவ்வொரு மருத்துவனும் தினசரி முன்நூறு முதல் நானூறு நோயாளிகளை பார்த்தாக வேண்டும்.

rajiv_gandhi_GH
சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை.

இது நம் நாடு, நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் தொகை சார்ந்து ஒவ்வொரு மருத்துவர் மீதும் மருத்துவ ஊழியர் மீதும் விதிக்கப்பட்ட சுமை. இதை ஏற்று தான் உங்கள் ஊருக்கு ஊழியம் செய்ய ஒவ்வொரு அரசு மருத்துவத்துறை ஊழியரும் வருகிறார்கள்.

அரசு பொது மருத்துவமனைகளில் காலை 8 மணிக்கு புறநோயாளிகள் பிரிவு ஆரம்பம் ஆகிறது என்று வைத்துக்கொண்டால் மதியம் 12 வரை இடைவிடாது மக்கள் சாரை சாரையாக வந்து கொண்டே இருப்பார்கள். கண் சிமிட்டக்கூட நேரம் இருக்காது மக்களே.

ஒரு டீ குடிக்க…
சிறுநீர் கழிக்க நேரம் இருக்காது…

ஒரு நோயாளிக்கு கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் பின்னால் வரிசையில் நிற்கும் பெருசுகள் இருமுவார்கள். பின் உறுமுவார்கள்.
“தம்பி.. பஸ்ஸு போயிரும். ஒருத்துருக்கே எம்புட்டு நேரம் பாப்பீக” என்பார்.

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ மகாராட்டிரம் : 483 நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் !

கடகடவென பார்த்து அனுப்பவேண்டும். இதற்கு நடுவில் சாலை விபத்துக்களில் அடிப்படை எமர்ஜென்சி வந்தால் அதைப்பார்க்க ஒரு டாக்டர் செல்வார். பிரசவம் பார்க்க தாய்மார் வந்தால் அங்கே ஒரு பெண் மருத்துவர் சென்று விடுவார்.

இருவர் பார்க்க வேண்டிய 400 முதல் 500 புறநோயாளிகளும் மீதம் இருக்கும் இருவர் மீதுதான் சுமையாக ஏறும்.

நீங்களே சொல்லுங்கள். நாவரண்டு தொண்டை காய்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இது போன்ற சமூக விரோதிகள் நடுவே வந்து மொபைல் போனை வைத்து படம் எடுத்து சீண்டினால் கோபம் வரத்தானே செய்யும். அந்த நியாயமான கோபம் தான் மருத்துவனுக்கும் வருகிறது. மருத்துவனும் ரத்தமும் சதையும் இருக்கும் மனிதன் தானே.

இதில் 24 மணிநேர ட்யூட்டி உண்டு…

அப்போது மது அருந்திவிட்டு வரும் குடிகாரர்கள் தரும் தொல்லை தனி. மிக மன அழுத்தம் நிறைந்த பணி சகோதரர்களே. எங்களையும் சகோதரர்களாக மதியுங்கள்.

அரசு மருத்துவமனைகளாவது தாலுக்காவில் உள்ள நல்ல ரோடு வசதி உள்ள ஊர்களில் இருக்கின்றன. அதை அடைவது ஓரளவு எளிது. ஆனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் கிராமங்களில் குக்கிராமங்களில் இருக்கின்றன.

Govt-Hospital
மாதிரிப் படம்

இவற்றை காலை ஒன்பது மணிக்கு அடைய ஒரு மருத்துவர் / நர்ஸ் / மருந்தாளுனர் காலை ஏழு மணிக்கெல்லாம் பேருந்தில் ஏறி உட்கார்ந்து வந்தடைகிறார் என்பதை அறிவீர்களா?

ஆக ஒன்பது மணிக்கு ட்யூட்டி ஆரம்பித்தாலும் அவரைப்பொறுத்த வரை ஏழு மணிக்கே கிளம்பி ஆக வேண்டும். அந்த கிராமத்திற்கும் காலை ஒரு பஸ் மாலை ஒரு பஸ் என்று தான் இருக்கும். மாலை செல்ல வேண்டிய பஸ்ஸை விட்டால் அவ்வளவு தான். ஊர் உலகை சுற்றி இரவு தான் வீடு போய் சேர முடியும்.

சரி அந்த ஊரிலேயே தங்கலாம் என்றால் பாதுகாப்பு குறைபாடு இருக்கும். நல்ல உணவகம் கூட இருக்காது. பிள்ளைகளுக்கு கல்வி கொடுக்க பல கிலோமீட்டர் தூரம் உள்ள மாவட்ட தலைநகருக்கு அனுப்ப வேண்டும்.

இப்படியான இன்னல்களை தாண்டி ஒரு மருத்துவ ஊழியன் அந்த கிராமத்தில் பணி புரிவதை சேவை என்பதை விடுத்து வேறு வார்த்தைகளில் சுட்ட முடியுமா?

இதே கதைதான் கிராமங்களில் இருக்கும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும்.

ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தபட்சம் 150 முதல் 400 புறநோயாளிகள் வரை வருவார்கள். இதைp பார்க்க இரண்டு மருத்துவர்கள் இருப்பார்கள். ஆக இவர்களும் 200 புறநோயாளிகளை பார்த்தாக வேண்டும். நடுவே அவசர சிகிச்சை மற்றும் பிரசவம் நடக்கும். அதையும் சேர்த்து கவனிக்க வேண்டும்.

பல கிராமத்தவர்களுக்கு நினைப்பு என்னவென்றால் “எங்க காச தான சம்பளமா வாங்குறீங்க? நாங்க தான உங்களுக்கு சம்பளம் தரோம்” என்று அறியாமையால் பேசுகிறார்களா? கர்வத்தில் பேசுகிறார்களா? தெரியாது.

ஆனால் அன்பர்களே ஒன்றைப்புரிந்து கொள்ள வேண்டும். அரசுப் பணியாளர்களுக்கு சம்பளம் தருவது அரசாங்கம். அரசாங்கத்துக்கு பணம் கிராமங்களில் இருந்து மட்டும் வருவதில்லை. அரசாங்கம் கிராமங்களை வலுவாக்க பல திட்டங்களை கொண்டு வருகிறது. அதில் பள்ளிகளும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் அடங்கும்.

அதில் பணிபுரிய வரும் ஆசிரியர்களும் மருத்துவர்களும் ஊழியர்களும் உங்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள். அவர்களை நீங்கள் வரவேற்க வேண்டும். அன்பை வாரி வழங்க வேண்டும். ஆனால் இங்கு நிகழ்வதோ வேறு.

படிக்க:
இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ 5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !

உங்களுக்குத் தெரியுமா. இது போன்ற பிரச்சனைக்குரிய கிராமங்களில் உள்ள பள்ளிகளில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் நிரப்பப்படாமல் இருக்கும்.

அதன் ஆணிவேரை கவனித்தால் அந்த ஊர் மக்களின் எண்ண ஓட்டம் தவறாக இருக்கும். அந்த ஊருக்கு பணி செய்ய வரும் அரசு ஊழியனின் நிலையை ஏற்காமல் இவர்கள் எஜமானர்கள் போல் நடப்பது. மரியாதைக் குறைவாக நடப்பது போன்றவற்றால் அந்த ஊரில் யாரும் வந்து வேலை செய்ய ஆசைப்பட மாட்டார்கள்.

இது நிதர்சனமான உண்மை. மேலும் சில ஊர்களில் எப்போதும் மருத்துவ இடங்கள் காலியாகவே இருக்காது. ஆசிரிய இடங்களும் உடனே பூர்த்தி ஆகும். அதற்கு காரணம் அது அந்த ஊர் மக்கள் மற்றும் அவர்களின் சிறந்த பண்பாகத்தான் இருக்கும்.

doctor-service-in-rural-india-1

ஏனய்யா.. ஒரு அரசாங்க பெண் ஊழியர் அவர் டாக்டரோ நர்ஸோ, கிராம சுகாதார செவிலியிரோ, சத்துணவு பணியாளரோ, ஆசிரியையோ அவளது வீடு பிள்ளைகள் அனைத்தையும் விட்டு காலை எழுந்து தனது வீட்டு வேலைகளை முடித்து விட்டு உங்கள் கிராமத்தை தேடி பல கிலோமீட்டர் பேருந்தில் பயணம் செய்து வருவது உங்களுக்கு சேவை செய்யத்தானே..

உங்கள் ஊரில் பிரசவ மரணம் நிகழக்கூடாது.
உங்கள் ஊரில் யாரும் கொள்ளை நோய்க்கு மடியக்கூடாது.
உங்கள் ஊரில் யாரும் படிக்காத குழந்தைகள் இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே?

அவர்களை நீங்கள் வம்புக்கு இழுத்து அடித்து துன்புறுத்துவதன் மூலம் மிகப்பெரும் இழுக்கை உங்கள் ஊருக்கு சம்பாதிக்கிறீர்கள். உங்கள் அரசியலைக் கொண்டு வந்து மருத்துவமனைகளிலும் பள்ளிகளிலும் செய்யாதீர்கள்.

மருத்துவமனைகளும் பள்ளிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை. உங்கள் சிற்றின்பத்திற்கு பல நல்லவர்கள் பயன்பெற்று வந்த சேவைகளை இழக்கிறீர்கள்.

கையில் மொபைல் போன் ஒன்று இருந்தால் போதும் உடனே காணும் அனைத்தையும் படம் பிடித்து ஃபேஸ்புக்கில் போட்டு வைரலாக்கலாம் என்று நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்கே பெரிய பிரச்சனைகள் உண்டாகலாம் என்பதை மறக்காதீர்கள்.

அரசு மருத்துவமனைகளையும், அரசு பள்ளிகளையும் அதன் போக்கில் சிறப்பாக நடக்க விடுங்கள் உங்களுக்கு சேவை செய்யவே அவை நடக்கின்றன.

மருத்துவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எதிராக உங்கள் சமுதாயத்தில் சிலர் பொய் பித்தலாட்ட வேலைகளில் இறங்கினால் அவர்கள் உங்களுக்கு தீமையையே செய்கிறார்கள் என்பதை அறிந்து அவர்களைப்போன்ற சமூக விரோதிகளை அடக்கி வையுங்கள்.

அதுவே உங்கள் எதிர்கால சந்ததியினரின் கல்விக்கும், வேலைவாய்ப்புக்கும், சுகாதாரத்திற்கும் நன்மை பயக்கும் செயல். அரசு மருத்துவப் பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் எந்த செயலையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

சமுதாயம் திருந்தும்…
தவறு செய்பவர்களை திருத்தும் என்று எதிர்பார்க்கிறேன்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

கேள்வி பதில் : இன்றைய இந்தியாவில் பார்ப்பனியத்தின் செல்வாக்கு உள்ளதா ?

brahminism-in-india

கேள்வி: //வணக்கம்…. நான் சில மாதங்களாக வினவை இணையத்தில் வாசிக்கும் வாசகன். அதே நேரம் இடதுசாரி சிந்தனையும் பெரியார் மற்றும் அம்பேத்கரிய சிந்தனைகளால் ஈர்க்கபட்டவன். கேள்வி என்னவெனில் தாங்கள் கூறும் பார்பனியம், சனாதன கோட்பாடு இவைகள் தான் இன்றும் இந்தியாவை ஆள்கிறதா? ஆம் எனில் எப்படி?

வலதுசாரி சிந்தனையற்ற நண்பர் என்னிடம் கேட்ட கேள்வி அதெப்படி 3% உள்ளவர்கள் 97% மக்களை ஆள முடியும்? அதுவும் அரசின் முழு அதிகாரமும் எப்படி இயலும்? நானும் என்னளவில் இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு உயர் பதவிகளில் அவர்களின் ஆதிக்கம் என எவ்வளவோ கூறினாலும் திருப்தி இல்லை, அவருக்கும் எனக்கும்.

BJP போன்ற கட்சிகளுக்கு மட்டும்தான் இது பொருந்துமா. அல்ல காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளில் நிலை என்ன. இதேவேளையில் இடதுசாரி தலைவர்களும் அவாள்தான் என இன்னொரு பேச்சு எழுகிறது.. உண்மையா?

“என்றும் நினைவில் கொள், மனிதனாகப் பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது..” என்ற மார்க்ஸின் தத்துவத்தின் மீதும் சமூக நீதியின் மேல் பற்றும் கொண்ட எனக்கு என் அறிவிற்கு எட்டியவரை குழப்பத்துடன் இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன். காத்திருக்கிறேன் பதிலுக்காக.//

– ஜி. ஆனந்தன்

ன்புள்ள ஆனந்தன்,

பார்ப்பனியம் என்பது சமூக அளவிலும், அரசு ரீதியிலும் செல்வாக்கு செலுத்தும் சித்தாந்தம். அது நபர்களை வைத்து மட்டும் இயங்கவில்லை.

பார்ப்பனியம் என்பது படிநிலை சாதி – வர்க்க ஆதிக்கம் – தீண்டாமையையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும், மொழி – இன ஒடுக்குமுறையையும் நியாயப்படுத்துகின்ற, போற்றிக் கொண்டாடுகின்ற சித்தாந்தம். இது வெறும் பண்பாடாக மட்டும் இல்லை, வரலாற்றில் சட்டமாகவே இருந்தது. இன்று நமது அரசமைப்பு சட்டத்திலும் தொடர்கிறது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என தமிழக அரசு 1972-ம் ஆண்டிலேயே சட்டம் இயற்றியிருந்தாலும், அது தொடர்பாக பல வழக்குகள் போட்டிருந்தாலும் இன்று வரை அமலுக்கு வரவில்லை. கருவறையில் பார்ப்பனரல்லாத சாதியினர் நுழைந்து விடக்கூடாது என்பது இன்று வரையிலும் அமலில் இருக்கிறது. திருப்பதி வெங்கடசாலபதி, மயிலை கபாலிஸ்வரர், திருவரங்கம் ரெங்கநாதர், மதுரை மீனாட்சி, திருச்செந்தூர் செந்திலாண்டவர் என எந்தக் கோவிலிலும் சூத்திரர்களோ, பஞ்சமர்களோ பூசாரிகளாக மாற முடியாது. மாறாக அவர்களது குல தெய்வ வழிபாட்டுக் கோவில்களில் மட்டும்தான் பூசை செய்ய முடியும். இத்தெய்வங்களை சிறு தெய்வம், கறி சாப்பிடும் தெய்வம் என்று பார்ப்பனியம் இழிவுபடுத்தி வருகிறது.

archagar
அர்ச்சகர் பயிற்சி முடித்திருந்தும் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணி நியமனம் பெற இயலாது உள்ள மாணவர்கள்.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கவும், ஆலயத் தீண்டாமையை ஒழிக்கவும் 1993-ல் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தியது மக்கள் கலை இலக்கியக் கழகம். அந்தப் போராட்டம் நடந்த பிறகு தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டு சிறை வைக்கப்பட்டார்கள். அந்தக் கோவிலின் கருவறையை சுத்தப்படுத்தும் பூசை நடத்தி  ’தீட்டுக் கழித்துக்’ கொண்டார்கள் பார்ப்பனர்கள். 2007-ல் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்று திரட்டி சங்கமாக்கி, உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். தங்களுக்குப் பணி நியமனம் கோரி பத்து ஆண்டுகளாக அர்ச்சக மாணவர்கள் பல போராட்டங்களை நடத்தி விட்டார்கள். ஒன்றும் பயனில்லை. ஏனெனில் இது பார்ப்பனியம் ஆளுகின்ற நாடு.

ஒரு பாதிரியாரோ, ஒரு மௌல்வியோ பிறப்பின் அடிப்படையில் உருவாக்கப்படுவதில்லை. ஆனால் இந்து மதத்தில் மட்டும்தான் கடவுளுக்கு பூஜை செய்யும் வேலையை பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கிறார்கள். கூடவே மற்ற சாதியினர் தொட்டால் தீட்டு என்றும் பகிரங்கமாகவே கூறுகிறார்கள்.

படிக்க :
♦ ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !
♦ சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோவிலும் எங்களுடையதுதான் : பாஜக அமைச்சர் !

சபரிமலைக்கு பெண்கள் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்திருந்தாலும் இன்று வரை அங்கே பெண்கள் செல்ல முடியவில்லை. பா.ஜ.க-வும் காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு அங்கே பெண்களை தடுக்க வேண்டும் என்று போராடுகின்றன. பார்ப்பன இந்துமதவெறி பக்தர்களோ ரவுடிகள் போல அங்கே வரும் பெண்களை தடுப்பதற்கு காத்திருக்கிறார்கள். இப்படி ஒரு நீதிமன்றம் தீர்ப்பே வழங்கிய பிறகும் பெண்கள் கோவிலுக்கு போக முடியவில்லை என்றால் இங்கே பார்ப்பனியத்தின் செல்வாக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதறியலாம்.

அதே போன்று தாய் மொழி வழிபாடும் தடை செய்யப்பட்டு சமஸ்கிருதத்தில்தான் பூஜை, புனஸ்காரங்கள் நடந்து வருகின்றன. தமிழ் மொழி நீச பாசை என்று இழிவுபடுத்தப்படுகிறது. சிதம்பரம் தில்லை நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்கு சிவனடியார் ஆறுமுக சாமியார் இறக்கும் வரை போராட வேண்டியிருந்தது. அந்தப் போராட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகமும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் பல ஆண்டுகள் நடத்த வேண்டியிருந்தது. மக்கள் பேசும் மொழியாக இல்லாத சமஸ்கிருதத்திற்கு மத்திய அரசு கோடிகளைக் கொட்டிக் கொடுத்து பரப்பி வருகிறது. பல்வேறு பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருத துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பட்டு வருகிறது.

chidambaram-temple-arumugasami-05
தன் வாழ்நாள் முழுவதும் தில்லையில் தமிழ்பாட போராடி மறைந்த ஆறுமுகசாமி.

மதத்தை தாண்டி செல்வாக்குடன் இருக்கும் சங்கர மடங்கள் அனைத்திலும் பார்ப்பனர்களே சங்கராச்சாரிகளாக பட்டமேற்க  முடியும். அதே போன்று சைவ ஆதினங்களில் சைவ வேளாளர்களே ஆதீனங்களாக பதவியேற்க முடியும். இந்த மடங்களுக்கென்று பெரும் சொத்தும், விவசாய நிலங்களும் உள்ளன. சூத்திர, பஞ்சம மக்களோ இந்த நிலங்களில் வேலை பார்க்கும் தகுதியைத்தான் பெற்றிருக்கின்றனர். பார்ப்பனர்களும் இதர உயர்சாதியினரும் விவசாயம் வேலைக்காகாது என நிலங்களை சென்ற நூற்றாண்டிலேயே விற்று விட்டு, சென்னை, தில்லி, அமெரிக்கா என்று குடியேறி விட்டனர். மற்ற சாதி மக்கள்தான் வயிற்றில் அடித்தாலும் விவசாயத்தை விடமுடியாமல் இன்றும் வேலை பார்க்கின்றனர்.

பிறப்பின் அடிப்படையில் தொழில்களை வரையறுத்திருக்கிறது பார்ப்பனியம். அதன்படி இன்றுவரை அருந்ததி இன மக்கள் துப்புரவு தொழில்களையே மேற்கொண்டு வருகின்றனர். சலவை தொழிலாளி, முடிவெட்டும் தொழிலாளி, என்று சாதியின் அடிப்படையில் பணி செய்வது இன்றும் தொடர்கிறது. ஆகப்பெரும்பான்மையான தலித் மக்கள் விவசாயக் கூலிகளாகவே இன்றும் இருக்கின்றனர். இந்த வேலைகளில் ஒரிரு விதி விலக்குகள் தவிர பார்ப்பன, ஷத்ரிய, வைசிய சாதிகளைச் சார்ந்தோரை பார்க்க இயலாது.

இந்தியாவின் தொழில் துறை பெரும்பாலும் பார்ப்பன – பனியா சாதிகளைச் சார்ந்தோரால்தான் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அதே போன்று ஊடகங்களில் பெரும்பான்மை பார்ப்பன ஊடகங்களாகவும், பார்ப்பன கருத்தியல்களை பரப்பும் நிறுவனங்களாகவும் உள்ளன. வெள்ளி அன்று ஆன்மீக மலர் போடாத நாளேடு இல்லை. அதில் கிறித்தவ, முசுலீம் மதங்களுக்கு ஐந்து சதவீத இடத்தை ஒதுக்கிவிட்டு மற்றவை பார்ப்பன புராண புரட்டுக்களும், ஜோசிய பலன்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. தற்போது இது சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்டு அனைத்து டி.வி சானல்களில் காலை நிகழ்ச்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

Rasi-Palanஅரசு விடுமுறைகளில் இந்துப் பண்டிகைகளுக்குத்தான் விடுமுறை அதிகம். தீபாவளி, அக்ஷய திரியை போன்ற பண்டிகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் விற்பனைக்காக முன்னிலைப்படுத்துகின்றன. சந்திராயன் 2 வெற்றிகரமாக அமைவதற்கு மட்டுமல்ல, விடும் ஒவ்வொரு செயற்கை கோளுக்கும் திருப்பதி சென்று ஆசி வாங்குகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம். அதே போன்று கப்பற்படைக்கு ஒரு புதிய கப்பல் வெள்ளோட்டம் விடப்படுகிறது என்றால் தேங்காய் உடைத்து, ஐயர் பூசை செய்துதான் விடுகிறார்கள். சரஸ்வதி பூஜை என்று அனைத்து அரசு, தனியார் அலுவலகங்களும் அலுவலக ரீதியாகவே கொண்டாடுகின்றன.

பெண்களைப் பொறுத்தவரை பார்ப்பனிய பிற்போக்குத்தனங்கள் இன்றும் செல்வாக்கோடு அடிமைப்படுத்துகின்றன. ஆணவக் கொலை, குழந்தை திருமணம், வரதட்சிணைக் கொடுமைகள், காதல் மணம் மறுப்பு என்பதை ஆதிக்க சாதி இந்துக்கள் இன்றளவும் பின்பற்றுகிறார்கள். அதற்கான வழிகாட்டும் கோட்பாடுகள் கீதை, மனுஸ்மிருதியில் இருப்பது இன்றும் செல்லுபடியாகிறது.

கோமாதாவின் புனிதத்தை இந்திய அரசியல் சட்டமே வரையறுத்து வைத்திருக்கிறது. அதன்படி பசுவை எங்கேயும் கொல்ல முடியாது. வட இந்தியாவில் மாட்டுக்கறியின் பெயரில் முசுலீம்களும், தலித்துக்களும் தாக்கப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர். கொலை செய்த குற்றவாளிகளோ நிரபராதிகளாக வரவேற்கப்படுகின்றனர். மாட்டு மூத்திரத்தை ஆய்வு செய்து சந்தைப்படுத்த நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. வட இந்தியாவில் இறைச்சி சாப்பிடுவதையே ஒரு குற்றம் போல ஆக்கி விட்டனர். இதனால் கால்நடை இறைச்சி தொழில் சரிந்து போயிருக்கிறது.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !
♦ கேள்வி பதில் : ஆணாதிக்க சமூகத்தின் அலங்காரங்களை ஒரு பெண் துறப்பது எப்படி ?

இது போக தலித்துக்களும், முசுலீம்களும் இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ரோகித் வெமுலா, அக்லக், பெஹ்லுகான் என்று அந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கட்டப் பஞ்சாயத்து செய்யும் அர்ஜுன் சம்பத்தை கொலை செய்ய சதி என அப்பாவி முசுலீம்களை கைது செய்ய தேசிய புலனாய்வு முகமை தமிழகத்திற்கு விரைந்தோடி வருகிறது. ஆனால் இந்துமதவெறியர்கள் நடத்திய கொலைகள், கலவரங்களில் யாரும் தண்டிக்கப்படவில்லை. மட்டுமல்ல பிரக்யா சிங் தாக்கூர் எம்.பியாகவே தெரிவு செய்யப்படுகிறார். அசீமானந்தா விடுதலை செய்யப்படுகிறார்.

rohith vemulaஅதிகார வர்க்கத்தின் உயர் பிரிவில் பார்ப்பன – உயர் சாதியினரே கோலேச்சுகின்றனர். ரா, சிபிஐ, இராணுவம், பிரதமர் போன்ற பதவிகளுக்கு முசுலீம்கள் வரக்கூடாது என்பது எழுதப்படாத சட்டமாகவே பின்பற்றப்படுகிறது. முசுலீம்கள் அவர்களது மக்கள் தொகை விகிதத்திற்கு ஏற்ப எந்த துறையிலும் இல்லை. பாராளுமன்றத்திலும் இல்லை.

இப்படி இந்தியாவின் 24 மணி நேர வாழ்விலும் பார்ப்பனியம் முழு செல்வாக்கு செலுத்துகிறது. அரசியல் கட்சிகளைப் பொறுத்தவரை பா.ஜ.க. தீவிர இந்துத்துவத்தை பின்பற்றுகிறது என்றால் காங்கிரசு மிதவாத இந்துத்துவத்தை பின்பற்றுகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் ஆளும் காங்கிரசு அரசுகள் இந்துத்துவ அஜெண்டாக்களை போட்டி போட்டுக் கொண்டு செயல்படுத்துகின்றனர்.

இடது சாரிகளைப் பொறுத்தவரை பிறப்பின் அடிப்படையில் பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. அவர்கள் எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்பதைப் பொறுத்து பயிற்சி அளிக்கப்பட்டு பொறுப்புகள் வழங்கப்படுகின்றன. மற்றபடி பார்ப்பனியத்தின் செல்வாக்கு என்பது இடதுசாரி பிரிவில் உள்ள கம்யூனிஸ்டு கட்சிகளின் கொள்கை – திட்டத்தோடு தொடர்புடையது. சி.பி.எம்., சி.பி.ஐ கட்சிகள் பார்ப்பனியம் என்று வரையறுத்து செயல்படுவதில்லை. இந்து மதத்தில் நல்ல இந்து மதம் இருப்பதாக அவர்கள் இந்துக்களிடம் அரசியல் பேசுகின்றனர். பார்ப்பனிய பண்டிகைகளுக்கு சிறப்பிதழ் கொண்டு வருகின்றனர். மார்க்சிய லெனினிய இயக்கம் தான் பார்ப்பனியம் என்ற வரையறுப்பை வைத்து செயல்படுகிறது.

இந்தியாவில் சமூக மாற்றம் குறித்து செயல்பட விரும்பும் எவரும் நமது மக்களை அடிமைச் சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் பார்ப்பனியத்தை எதிர்த்து பல்வேறு துறைகளில் அரசியல், பண்பாட்டு போராட்டங்களை நடத்த வேண்டியிருப்பது முன் நிபந்தனையாக இருக்கிறது.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

5, 8-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு ! பு.மா.இ.மு கண்டனம் !

0

RSY - Letter - Head - New

  • 5-வது, 8-வதற்கு இவ்வாண்டு முதல் பொதுத்தேர்வு அரசாணையை உடனே திரும்பப் பெறு!
  • இந்தியை திணிக்கும் அமித்ஷா பேச்சை வன்மையாக கண்டிக்கிறோம்!

மிழக பள்ளிக் கல்வித்துறை இந்த கல்வியாண்டு முதல் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இது பிஞ்சு மாணவர்கள் மீது திணிக்கப்படும் மிகப்பெரிய வன்முறை. கிராமப்புறங்களைச் சார்ந்த பல லட்சம் ஏழை மாணவர்களை பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேற்றி, தொழிற்கல்விக்குத் தள்ளும் நவீன குலக்கல்வி. தேசிய கல்விக் கொள்கை அமலுக்கு வரும் முன்பே மோடி அரசின் அடிமையாக இருந்து தமிழக அரசு அரசாணை வழியாக நடைமுறைப்படுத்துகிறது.

public-exam-for-5th-and-8th-in-tamil-nadu

இந்த சதித் திட்டத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அரசு ஆணையை தமிழக அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

3,5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்பது தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் உள்ள ஒரு பரிந்துரை. மோடி அரசு வெளியிட்டுள்ள தேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையை ஏற்க முடியாது என்று நாடு முழுவதுமுள்ள கல்வியாளர்களும், பேராசிரியர்களும், மாணவர் அமைப்புகளும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், மோடி அரசு தேசிய கல்விக் கொள்கை சட்டமாக்கப்படும் முன்பே குறுக்கு வழியில் பல பரிந்துரைகளை அமுலுக்கு கொண்டு வந்துவிட்டது.

படிக்க:
கடைமடை சேராத காவிரி : கடலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
♦ கால்கள் இல்லாமல் எப்படிப் பறக்க முடியும் ? வேடிக்கைதான் …

என்.சி.இ.ஆர்.டி மூலம் பாடப் புத்தகங்களில் சாதி, மத கருத்துக்களை புகுத்துவது, ‘இந்தியாவில் படியுங்கள்’ திட்டத்திற்கும், மேன்மைதகு பல்கலைக்கழகங்கள் திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி நடைமுறைப்படுத்துவது, யூ.ஜி.சி சுற்றறிக்கை மூலம் கல்லூரிகளில் இளங்கலை படிப்பில் தொழிற்படிப்புக்கான பட்ட வகுப்புகளை ஆரம்பிப்பது என பல விசயங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டது.

அப்படித்தான் கல்வி உரிமை சட்டத்தின்படி எட்டாம் வகுப்புவரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்ய வேண்டும் என்று இருந்ததில் திருத்தம் செய்து 5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பதை நடைமுறைக்கு கொண்டு வந்துவிட்டனர்.

minister_sengottaiyan
அமைச்சர் செங்கோட்டையன்

8 வகுப்புவரை கட்டாய தேர்ச்சி செய்வதால் கல்வியின் தரம் பாதிக்கப்படுகிறது, அதனால் 5,8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துகிறோம் என்று மத்திய அரசு சொல்வதை அப்படியே வழிமொழிகிறார் அமைச்சர் செங்கோட்டையன். அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காமல், போதிய அடிப்படை வசதிகளை செய்யாமல், ஆசிரியர்களை போடாமல், அவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் கொடுக்காமல், தனியார் கல்வியை ஊக்குவிக்க அரசுப் பள்ளிக்கூடங்களை ஆயிரக்கணக்கில் இழுத்து மூடி, பள்ளிக்கல்வியை சீர்குலைத்துவரும் இவர்களுக்கு கல்வியின் தரத்தைப் பற்றிப் பேச  என்ன அருகதை இருக்கிறது? 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என்பது கல்வியின் தரத்தை உயர்த்த அல்ல, பெருவாரியான மாணவர்களை பள்ளிக்கல்வியில் இருந்து விரட்டவே இந்த நடவடிக்கை.

இது மட்டுமல்ல, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தியை நாடு முழுவதும் பொது மொழியாக்க வேண்டும் என்று பேசுகிறார். இது பல்தேசிய இன்ங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தின் மீதான தாக்குதல். சமஸ்கிருதத்தை கொண்டு வருவதன் முதற்படியாக இந்தியை வன்முறையாக திணிக்கும் முயற்சியில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது. இவைகளை தமிழகம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களும், ஆசிரியர்களும் இணைந்து தொடர் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்களை நடத்தி மோடி – எடப்பாடி அரசுகளின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களை எமது பு.மா.இ.மு ஆதரிப்பதோடு, முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


.கணேசன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு.

இந்தி தேசிய மொழி : அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! – மக்கள் அதிகாரம் கண்டனம் !

hindi-amit-shah-slider

இந்தி தேசிய மொழி ; அமித்ஷாவின் ஆணவப்பேச்சு ! மொழி, கல்வி, பண்பாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலை முறியடிக்க தமிழகம் கிளர்ந்தெழட்டும் !!

பத்திரிகைச் செய்தி

நாள் : 14.09.2019

த்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ‘இந்தி நாளை’யொட்டி, இந்திதான் உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இந்திய ஒருமைப்பாட்டை உருவாக்கவல்ல தகுதி இந்திக்குத்தான் உள்ளது. எனவே இந்திதான் இந்தியாவின் பொது மொழியாக இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தற்போதைய கூட்டாட்சி முறைமீது மட்டுமல்லாது, பல்வேறு தேசிய இன மொழி, பண்பாட்டு உரிமைகளின் மீதான மிகப்பெரிய தாக்குதலாகும் . ஆர்.எஸ்.எஸ்–ன் இந்து ராஷ்டிரத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையே இது. இந்த மக்கள் விரோத, தேச விரோத அறிவிப்பை மக்கள் அதிகாரம் மிக வன்மையாக கண்டிக்கிறது. அமித்ஷா தனது கருத்தை உடனே திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறது.

hindi-amitshaபாஜக ஆட்சிக்கு வந்தது முதலே இந்தி, சமஸ்கிருதத்தைத் திணிக்கும் முயற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ரயில்வே, அஞ்சல் துறை போன்ற மத்திய அரசின் துறைகளுக்கான தேர்வுகளில் மாநில மொழிகளை அகற்றியதற்கே கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் அமித்ஷாவின் இந்த அறிவிப்பு மிகவும் ஆபத்தானது. இந்தியைப் பொது மொழியாக்குவது என்பது சமஸ்கிருதத்தைப் பொது மொழியாக்குவதன் முதற்படியே. இந்தி என்பது மொழி மட்டுமல்ல, அது இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துத்துவத்தின் அடிப்படையுமாகும்.

படிக்க:
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
♦ ஹனிபாபு வீட்டில் போலீசு அடாவடி : ஆசிரியர்கள் மாணவர்கள் போராட்டம் !

அமித்ஷாவின் அறிவிப்பு பிற மொழிகளின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, மதச் சிறுபான்மையினரின் மீதான தாக்குதலுமாகும். இந்து பாசிச சர்வாதிகாரத்தைக் கட்டியமைக்க முனையும் பாஜக – ஆர்.எஸ்.எஸ்-ன் இந்த ஒடுக்குமுறையை தமிழகம் ஒருக்காலும் ஏற்காது.

தமிழகத்தில் உள்ள பாஜகவின் அடிமை அரசு , புதிய கல்விக்கொள்கையை உடனே அமல்படுத்தும்விதமாக 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வினை அறிவித்துள்ளது. எனவே மொழி, கல்வி, பண்பாடு மீது அடுத்தடுத்து தொடுக்கப்படும் தாக்குதலை முறியடிக்க அனைவரும் அணிதிரள்வோம்.

தோழமையுடன்
தோழர் காளியப்பன்
மாநிலப் பொருளாளர்

தகவல் :
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321