சென்னை துப்புரவு தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கோரும் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொழிலாளர்கள் (ஒப்பந்த தொழிலாளர்கள்) 16.05.2022 அன்று தொடங்கி மூன்றாவது நாளாக 700-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் CMWSSB-ன் பட்டினப்பாக்கம் தலைமை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இத்தொழிலாளர்களுக்கு ஆதரவாகச் சென்ற பலரையும் போலீசு தடுத்துள்ளது. சிலரை தாக்கி கைது செய்தும் உள்ளது. இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கின்றது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் போராட்டங்களில் ஓடோடிப்போய் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு முதல்வரான பின்னர், தனது போலீசுத்துறை மூலம் போராட்டங்களுக்கு ஆதரவு தருவோரை அச்சுறுத்திக் கொண்டு இருக்கிறார்.
டெண்டர் விட்டு ஒப்பந்த முறையில் வேலைக்கு அமர்த்துவதை எதிர்த்து பல ஆண்டுகளாக வேலை செய்யும் தொழிலாளர்கள் வேலை நிரந்தரம் கோரி 3 நாட்களாக தொடர்ந்து போராடி வருகிறார்கள். பல தொழிலாளர்கள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஒப்பந்த தொழிலாளர்களாகவே இறுதிவரை வாழ்ந்து மடிகின்றனர்.
மனித கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை, இவர்கள் ஒரு நாள் கழிவு நீரை அகற்றவில்லையென்றால் சென்னை நாறிவிடும். ஆனால், இத்தொழிலாளர்களின் வாழ்க்கையோ கொடும் துயரில். இத்தொழிலாளர்களுக்கு ஊதியமாக அதிகப்பட்சம் மாதம் ரூ.19,000 வழங்கப்படுகின்றது. ஆனால், ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அதிகபட்சமாக ரூ.25,000 வரை பெறுகிறார்கள். இப்படி ஒரு தொழிலாளிக்கு ரூ.6000 என பல இலட்சங்களை கொள்ளையடிக்கிறார்கள்.
இந்த அநியாயத்துக்கு எதிராக தங்களை நிரந்தரமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சட்டப்படியான கோரிக்கைகளை வலியுறுத்தி CMWSSB நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்திய தொழிலாளர்களை மிரட்டும் தொனியில் அணுகியுள்ளது. இது கடுமையான கண்டனத்திற்குரியது. தொழிலாளர்கள் தரப்பில் ஏற்கனவே பலமுறை அளிக்கப்பட்ட கோரிக்கை மனுக்கள் கிடப்பில் போடப்பட்ட நிலையில், மனு கொடுத்து மனு கொடுத்து ஓய்ந்து போய், போராட்டத்தில் இறங்கி உள்ள தொழிலாளர்களை புதிதாக மனு அளிக்குமாறு அதிகாரிகள் நிர்பந்தித்து வருக்கின்றனர்.
தொழிலாளர்களோ தொழிற்தகராறு சட்டம், 1947, பிரிவு 18(1)-ன் கீழ் அவர்களின் கோரிக்கையை இருதரப்பு ஒப்பந்தமாக கையொப்பமிட வலியுறுத்தி வருகிறார்கள். தொழிலாளர்கள் தங்களை சட்டப்படி தொழிலாளர்களாக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆனால், அரசோ தொழிலாளர்களை சட்டப்படி தொழிலாளர்களாக கருத முடியாதென்று இருக்கிறது. ஆகவே, இது ஏதோவெறும் கூலி உயர்வு தொடர்புடைய பிரச்சினை மட்டுமன்று, தொழிலாளி தன்னை சட்டப்படி தொழிலாளியாக அறிவிக்க வேண்டும் என்பதற்கான போராட்டம். ஆனால், தனியார்மய – தாராளமய – உலகமய நடவடிக்கைகளோ தொழிலாளியை தொழிலாளி என்ற தன்மையிலிருந்து ஒழித்துக்கட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கின்றது.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் பணி நிரந்தரம் செய்ய கோரி போராடும் ஒப்பந்த தொழிலாளர்களின் கோரிக்கை நியாயமானது. தொடர்ந்து ஒரு தொழிலாளி 480 நாட்கள் வேலை செய்தால் அவரை நிரந்தரமாக்க வேண்டும் என்கிறது தொழிலாளர் சட்டம். ஆனால், தான் வகுத்த சட்டத்தைக் கூட அரசு துறைகளே மதிக்காமல், தொழிலாளர்களை வஞ்சிக்கும் வேலைகளை செய்து வருகிறது. தொழிலாளர்களின் நியாமான கோரிக்கையை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது.
நமக்காகத்தான் அவர்கள் உழைக்கிறார்கள். ஏதோ கழிவிரக்கத்தின் அடிப்படையில் அல்ல; தொழிலாளிகளின் உரிமைக்காக அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதும் அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
தோழமையுடன், தோழர்அமிர்தா,
மாநிலப்பொருளாளர், மக்கள்அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 99623 66321.
Is expelling working class people from the city and setting up Shed for cow, the Dravidian model ?
During the Corona pandemic, people spewed upon the BJP Fascist Yogi Adityanath’s Uttar Pradesh government, who organised ambulance for cows while the people suffered due to lack of oxygen.
In RSS-BJP ruling states, the government themselves spearhead irrational brahminical activities such as construction of Cow Sheds, banning of meat and even provided medical treatment for the idols worshipped by people.
Tamilnadu is known for its rational anti-brahminstic tradition. Recent reports in newspapers along with the photographs shows DMK, who claim themselves to be the heir of Thanthai Periyar’s ideology and follow Dravidian model, seeking 25 acres of land near Avadi to set up sheds for cows.
Already, the obsolete Brahministic ritual called “Pattanapravesam”, which advocates a human carrying another human is allowed again by the DMK government, surrendering to the pressure created by BJP-RSS. Despite the name “Dravidian model”, it has become quite normal for the DMK to surrender to the BJP-RSS agenda.
In this row, working class people (proletariat) in many places in Chennai are anarchically chased out of the city. The demolished houses in Raja Annamalaipuram and Kannaiya, who burnt himself resisting the forced public eviction are the latest evidence.
In this situation, it has been reported that the Tamilnadu government is planning to set up a cow shed on a 25 acres land. Makkal Adhikaram strongly condemns the DMK government’s move to set up this shed.
The Brahministic agenda accomplished in various BJP-RSS ruling states to exploit people, cannot be allowed in Tamilnadu, since it is carried out in the name of Dravidian model. Therefore, Makkal Adhikaram strongly demands the Tamilnadu government to cease the setting up of shed immediately.
With Comradeship, Comrade Marudhu,
Spokesperson, Makkal Athikaram,
Tamil Nadu – Puducherry, 99623 66321.
பேரறிவாளன் விடுதலை ; நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட
அனைவரையும் விடுதலை செய்!
இறுதியாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 18 வயதில் சிறையிலடைக்கப்பட்ட அவர் முப்பது ஆண்டுகள் கழித்து சில மாதங்களுக்கு முன்பு பரோலில் வெளியே வந்துள்ளார். ராஜீவ் கொலைக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்று எவ்வித சான்றும் இல்லாமல் இந்திய கௌரவத்தை காப்பாற்றுவதற்காக கழுவிலேற்றப்பட்டவர்களில் அவரும் ஒருவர். அவரை மிரட்டி பொய்யாகத்தான் வாக்குமூலம் வாங்கினோம். இது சோடிக்கப்பட்ட வழக்கே என்று இவ்வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளும் தெரிவித்தனர்.
பேரறிவாளனின் விடுதலையை கேட்ட உடன் தமிழ்நாட்டு மக்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்துள்ளனர். ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்ட எழுவரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டங்கள் எத்தனையெத்தனை? காஞ்சி மக்கள் மன்றத்தின் தோழர் செங்கொடி எழுவரின் தூக்கு தண்டனையை தடுத்து நிறுத்த தன்னுயிரையே தீக்குளித்து மாய்த்து கொண்டார்.
எழுவரின் விடுதலை அரசியல் ரீதியில் சரியானது என்பதை வலியுறுத்தி மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் பல போராட்டங்களை நடத்தியிருக்கிறோம். அதில் எழுவர் மீதான தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி உயர் நீதிமன்றத்தை (அது தொடர்பான தீர்ப்பு வெளியாக உள்ள நாளில்) முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள், தமிழ் அமைப்புகள் என அனைத்து அமைப்புக்களுமே எழுவர் விடுதலைக்காக தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த மக்களின் கோரிக்கையாக எழுவரின் விடுதலை இருந்தது. குறிப்பாக, பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் தன் மகனின் விடுதலைக்காக தன்னுடையை வாழ்வையே அர்ப்பணித்து இருந்தார். எழுவரின் விடுதலைக்கு எதிராக காங்கிரசு, பாரதிய ஜனதா கட்சியினர் செயல்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களின் தொடர் போராட்டங்களால் அன்றைய தமிழ்நாட்டின் முதல்வர் ஜெயலலிதாவால் 2014 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் எழுவரையும் விடுவிக்க வேண்டுமென்று தீர்மானம் போடப்பட்டது. இத்தீர்மானங்களை ஆளுனரும் ஒன்றிய அரசும் சல்லிப் பைசாவுக்கு கூட மதிக்கவில்லை. இறுதியில் அரசியலைமைப்புச் சட்டம் 142-ன் கீழ் உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை தற்போது 2022-ல் விடுவித்துள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரும் அநீதியாக பல ஆண்டுகள் சிறைபடுத்தப்பட்டுள்ளதை அநீதி என்பதை தவிர்க்க இயலாமல் உச்ச நீதிமன்றமே ஒத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகள் மக்களின் போராட்டங்கள், சட்ட மன்றத் தீர்மானங்கள், செங்கொடியின் தியாகம் எனை அனைத்தையும் ஏளனப்படுத்திய ஆளுனர் மற்றும் ஒன்றிய அரசு ஆகியோர் குற்றவாளிகளே. குறிப்பாக தமிழ்நாட்டு சட்ட மன்றத் தீர்மானத்தை மதிக்காத ஆளுனர் பதவி ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் தத், அம்மாநில அரசால் விடுவிக்கப்படும் போது தமிழ்நாட்டு அரசால் ஏன் எழுவரை விடுவிக்க முடியவில்லை. ஏழு தமிழரின் விடுதலைக்கு எதிராக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரசும் பாரதிய ஜனதா கட்சியும் தடுத்தே வந்திருக்கின்றன. நான், நீ என மாநில, ஒன்றிய அரசுகள் போட்டிப் போட்டுக் கொண்டு பேரறிவாளனின் விடுதலையை தாமதப்படுத்தியே இழுத்தடித்து இருக்கின்றன என்பதே உண்மை.
ஆகவே, பேரறிவாளன் விடுதலை தொடக்கமாக இருக்கட்டும். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்ல; கோவை குண்டு வெடிப்பு வழக்கிலும் அநீதியாக சிறைப்படுத்தப்பட்டோர் அனைவரும் உடனே விடுதலை செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன், தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 99623 66321.
The results of elections to five states – Uttar Pradesh, Uttarakhand, Punjab, Manipur and Goa – were announced on March 10. Except Punjab, the BJP had won big in four other states. Aam Aadmi Party has won in Punjab.
Uttar Pradesh is the largest state with 403 constituencies. Winning UP is a key factor in deciding who will capture power in the 2024 Parliamentary elections. Therefore, the results of the UP state elections were noticed by all.
In the case of UP, both the pre-poll and the post-poll surveys had predicted that the BJP would form the government even if the number of seats gets reduced. At the same time, a series of opinion polls predicted that the Samajwadi Party was likely to win.
Therefore, it was discussed that there would be a stiff competition between the BJP and the Samajwadi Party. Going a step further, the opposers of BJP and a section of the democratic forces said, “This time the BJP will be defeated and the Samajwadi Party will come to power”.
But, even as the UP election campaigns were going on, in an article in our last December’s Tamil issue titled “Uttar Pradesh: No ‘viable alternative’ within Hindurashtra!”, we had written about the course of the election, explaining that there was no political party to call as an “alternative” to the BJP-RSS. The election results had come just as we predicted.
Uttar Pradesh: What made the BJP win again?
“Unlike the parties that are putting themselves forward against the BJP in Tamilnadu, none of the parties, including the Congress, which are putting forward themselves against the BJP in Uttar Pradesh, express nothing against its saffron policies.”
”It is an old rhetoric that the opposition parties are not opposing saffron politics; it is a new reality that is now maturing that those who stand up against the BJP are assimilating its ‘hindu politics’. Yes, next year’s election campaigns are heating up.” — “Uttar Pradesh: No ‘viable alternative’ within Hindurashtra!”
This is how the anti-BJP election field in Uttar Pradesh was. We have explained this in detail in that article.
The Congress, which proclaimed that “we are the real Hindus”, has been wiped out. “Lord Krishna himself came in my dream and said that the Ram Rajya will be built under your leadership”, Akhilesh Yadav said. People didn’t make him win either.
The BJP had criticised the Samajwadi Party as a “pro-Muslim, terrorist party”. Yogi’s campaign, which openly provoked a Hindu-Muslim conflict, has worked: “This is a contest between 80 percent and 20 percent”.
As said in our aforementioned article, “Congress, Bahujan Samaj, Samajwadi and Aam Aadmi Party are contesting against the BJP. The content of the campaigns is the BJP’s ‘Hindu’ politics vs the opposition’s anti-BJP Hindu politics. ‘No viable alternatives’ are visible as far we can see”.
The real ‘Hindu politics’ had defeated the ‘pseudo-Hindu politics’. The people of UP have made the BJP win because they thought it was the ‘original’ protector of their religion and nation. Can we ask them why they have not chosen anyone other than the BJP after the election campaign itself went in the direction of ‘Hindu politics’?
No party has ever returned to power in Uttar Pradesh for the second time. This 30-year-long history of UP, has been broken by the saffron fascists. They won 255 seats and now have 41.33 percent vote share, up from 39.67 percent last time.
How to view AAP’s victory?
On the other side, the Congress had lost all the strength it already had in the five state elections and the eligibility to call the Congress a “national party” has come into question. This too had created a sense of distrust and fear among the opposers of the RSS-BJP.
Even in Punjab, people did not choose the Congress as they opposed the BJP. They have made the Aam Aadmi Party win with a whopping majority. While exit polls have predicted AAP’s victory, it came as a surprise to many.
Kejriwal calls the victory a ‘revolution’ and says it will soon spread across the country.
In a short span of time, how could a party go beyond one state and capture power in another state that too winning with a majority? It is a mystery to many that AAP is able to register its presence at the national level.
In our aforementioned article on this, we explained about this under the sub-heading, “Aam Aadmi Party: Stepney of the ruling classes, another political tool for the RSS!”
“… .. In compilation, the hindutva politics by AAP is much closer to saffron fascism than any other party.
… .. The liberals who criticize this attitude of Aam Aadmi, call it as BJP’s ‘B’ team.
It is more appropriate to call it as ‘B’ team of the ruling classes than calling it as BJP’s ‘B’ team. The working people, stirred up by the Modi government’s economic policies, have begun to show discontent and anger towards the BJP. But not on its ideology of hindutva or jingoism. In this context, if the BJP’s popularity declines, the ruling classes will adopt the AAP, which is transforming into a party that can attract the masses by speaking the same hindutva-jingoism. In short, the AAP will act as a ‘stepney’ for the ruling classes if the ‘tyre’ called BJP gets punctured.
Moreover, the fascist army called RSS, doesn’t have to attain its goal of Hindurashtra by only using the BJP. BJP is just a political tool to the RSS. The RSS may also use another political party as its tool.”
Therefore, the AAP was kept by the ruling classes and the RSS as an alternative. Raghav Chadha, one of the party’s leaders, said that after winning the Punjab elections, that “the AAP has emerged as a major national force and will be a ‘natural and national’ replacement of Congress”.
We can understand from Raghav Chadha’s statement about the object of AAP’s birth!
Therefore, as far as the results of the elections in five states are concerned, the BJP had won in four states. But in all the five states (including the AAP in Punjab) the RSS had won.
The plight of migrant workers during the Covid-19 pandemic, children who died without oxygen cylinders in a government hospital, dead bodies floating on the banks of the Ganges, rape & crimes against women, attacks on Dalits-Muslims, murder of farmers by hitting with a car – We may criticize the people that, after all these injustices, the people had chosen the BJP.
It is true that religious fanaticism has been instilled on the heads of the people of UP to such an extent that they cannot even imagine their degradation. However, there is no one to campaign that all these problems were because of the RSS-BJP led saffron – corporate fascism. Who/which party is there to mobilise the people and create a class consciousness against fascism by mobilising them and saying that they will not survive unless fascism is defeated? The vote-bank political parties say “We’re also Hindu. What we are going to establish is also Rama Rajya”. There was no alternative to these vote-bank parties who had fallen prey to fascism.
Opposing the RSS-BJP means speaking anti-fascist politics; to wage field struggles against them; The “viable alternative” against the RSS-BJP is allying against the Hindu Rashtra.
அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துவிட்டு கட்டுக் கதைகளை பரப்பி இந்திய நீதிமன்றங்களின் மூலம் அந்த இடத்தை அபகரித்து கொண்டது இந்துத்துவ கும்பல்கள். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து அதுவரை பாபர் மசூதி மட்டும் அல்ல காசி, மதுரா, தாஜ்மஹால் போன்ற இடங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் அதை நாங்கள் கைப்பற்றிக் கொள்வோம் என்று வெளிப்படையாக பேசியதோடு மட்டுமல்லாமல் அதை நிகழ்ச்சி நிரலுக்கும் கொண்டவர அப்போதே தொடங்கிவிட்டனர் சங் பரிவார அமைப்புகள். தற்போது அந்த நிகழ்ச்சி நிரலை செயல்பட்டுக்கு கொண்டுவருவதை உறுதிபடுத்துகிறது, வடஇந்தியாவில் இஸ்லாமியர்களின் வழிபாட்டு தளங்களையும் நினைவு சின்னங்களையும் அபகரிக்க இந்நிகழ்வுகள்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் கியான்வாபி என்ற மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் என்ற முகலாய மன்னனால் கட்டப்பட்ட இந்த மசூதிக்கு அந்த பகுதியில் இருக்கும் இஸ்லாமிய மக்கள் தொழுகை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள சிங்காரகவுரி அம்மனை தரிசனம் செய்ய அனுமதிகோரி சங் பரிவார அமைப்புகள் வாரணாசியில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதையடுத்து ஓர் ஆண்டுக்கு மட்டும் அந்த கோயிலை வழிபாடு செய்ய அனுமதி பெற்றனர்.
இந்த நிலையில் சுவற்றில் உள்ள அம்மனை நிரந்தரமாக தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்துத்துவ கும்பல் மீண்டும் நீதிமன்றத்தை நாடியது. ஆனால் இந்துத்துவ கும்பல் எழுப்பு பிரச்சினையை பற்றி பேசாமல், மசூதி முழுவதும் ஆய்வு செய்ய தொல்லியல் துறையினருக்கு நீதிபதி ரவிக்குமார் திவாகர் உத்தரவிட்டுள்ளார்.
மசூதியில் நடக்கும் ஆய்விற்கு தடைவிதிக்க வேண்டும் என்று மசூதி நிர்வாகம் சார்பில் அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்றும் ஆய்விற்கு இடைக்கால தடைவிதிக்க முடியாது என்றும் கூறியுள்ளது உச்ச நீதிமன்றம்.
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிப்பதற்குள் வாரணாசியில் காவி கும்பல்கள் அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிடுவார்கள்.
பாபர் மசூதி அருகே முதலில் நம்பிக்கையின் அடிப்படையினல் ராமனை வணங்க அனுமதி வாங்கிய காவி கும்பல், பின்னர் படிப்படியாக தனது இழிவான செயல்களை அரங்கேற்றி மசூதியை இடித்து உச்ச நீதிமன்றத்தின் மூலம் தற்போது கோவிலை கட்ட அனுமதி வாங்கியுள்ளது. அதேபோல்தான் இனிவரும் அனைத்து நிகழ்வுகளும் நடைபெறவிருக்கிறது.
கடந்த 3 நாட்களாக கியான்வாபி மசூதியில் கள ஆய்வு செய்யப்பட்ட அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே ஆய்வில் கலந்து கொண்ட ஒருநபரின் மகன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அதனை காரணமாக வைத்து மசூதியின் ஒசுகானாவில் உள்ள கை கால்கள் கழுவதற்கான குளத்தில் சிவலிங்கம் இருப்பதாகவும் அதனால் உடனடியாக மசூதியை அரசு கட்டுப்பாட்டுகுள் கொண்டு வரவேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இதற்கு, மசூதியில் ஒசுகானாவின் மைய பகுதியில் இருப்பது நீர் ஊற்றுக்கான கல் என்று மசூதி நிர்வாகம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. ஆனால், நீதிபதி மசூதி நிர்வாகம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்காமல் இந்துத்துவ அமைப்புகளின் வாதத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, மசூதியின் மையப் பகுதியில் இருக்கும் ஒசுகானாவை உடனடியாக ஜப்தி செய்த வாராணசி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த மசூதியின் ஒசுகானா இருக்கும் இடத்திற்குள் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவித்தும், மசூதியின் வளாகத்திற்குள் 20 பேரை மட்டுமே தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறியுள்ளது. ஒசுகானாவில் பாதுகாப்பிற்காக மத்திய பாதுகாப்புப் படை போலீசை பணியில் அமர்த்த வேண்டும் என்று கூறியுள்ளது.
இது தொடர்பாக விஷ்வ வேதிக் சனாதன் சங் என்ற சங் பரிவார அமைப்பின் தலைவர் ஜிதேந்தர் சிங் கூறும்போது, ஒசுகானாவில் உள்ள குளத்தில் சுமார் 13 அடி அளவுள்ள சிவலிங்கம் இருப்பதாகவும், இதை மறுக்கும் இஸ்லாமியர்கள் மீது கலவரத்தை நடத்துங்கள் என்றும் இந்தியாவில் உள்ள இந்துக்களுக்கு மறைமுகமாக மதவெறி பிரச்சாரம் செய்துள்ளார். மேலும் நீதிமன்றம் மூலம் நமக்கு சாதகமான முடிவுகளை பெறலாம் என்றும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ஒன்றியத்தில் ஆளுவதும் நம்ம அரசுதான். அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் நீதிமன்றமும் நமது அடியாள்தான் என்று வேறுவார்த்தையில் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இஸ்லாமியர்களிடம் நாம் இழந்ததை பெறும் காலம் நெருங்கிவிட்டது என்று அவர் கூறியதும், இந்தப் பட்டிலில் காசி, மதுரா, தாஜ்மஹால் மற்றும் குதுப் மினார் ஆகியவை உள்ளன என்று அவர் தெரிவித்ததும் இனி அவர்களின் நோக்கம் என்ன என்பதை நமக்கு புலப்படுத்துகிறது.
***
கி.பி.1206 முதல் 1526 வரை சுல்தான்கள் டெல்லியை தலைநகராக கொண்டு வடஇந்தியா மற்றும் தக்காகன் பீடபூமி வரை தனது ஆட்சியை நிறுவினர். சுமார் 300 ஆண்டு காலம் ஆட்சி செய்த இவர்கள் அடிமை, துக்ளக், கில்ஜி, சையது, லோடி என 5 வம்சகளாக இருந்தனர். இந்தியாவில் நேரடியாக ஆட்சியமைத்த முதல் இஸ்லாமிய வம்சத்தினர் இவர்கள்தான். அடிமை வம்சத்தை சேர்ந்த குப்புதின் ஐபக் என்பவர் டெல்லியில் குதுப் மினாரை 1193–ம் ஆண்டு கட்ட தொடங்கினார். பின்னர் அவர் மரணமடையவே அவரது மருமகன் இல்துமிஷ் என்பவர் இதனை கட்டி முடித்தார். குதுப் மினார் என்பது கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட பள்ளிவாசல் ஆகும். தற்போது டெல்லியின் மெஹரோலி பகுதியில் அமைந்துள்ள வரலாற்று புகழ் பெற்ற இந்த குதுப் மினார் சங்கிகளின் தற்போதைய இலக்காகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சங் பரிவார கும்பல் காவி கொடிகளுடன் வந்து குதுப் மினார் முன்பு அனுமன் மந்திரத்தை ஓதினர். பின்னர் குதுப் மினாரின் பெயரை ‘விஷ்ணு மினார்’ என மாற்ற வேண்டும் என்று கூறினர். வேறு ஒருவன் பெற்ற பிள்ளைக்கு தனது பெயரை அப்பனாக சேர்க்க வேண்டும் என்று சங்களில் கூறுவதை நாம் நகைச் சுவையாக எடுத்துகொண்டு கடந்துவிட முடியாது. இஸ்லாமிய மக்களின் மீதும் உழைக்கும் மக்களின் மீதும் கோமாளிகள் தொடுக்கும் தாக்குதல் என்பது கொடூரமானது.
ஆர்.எஸ்.எஸ்.ன் கிளை அமைப்பான மஹாகால் மானவ் சேவா என்ற அமைப்பினர் இந்த கொடூரமான செயலை கையில் எடுத்துள்ளனர். குதுப் மினார் முன்பு அமர்ந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என கோஷமிட்டபடி அங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், இந்து கோயில்களை இடித்து இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. எனவே இந்த இடம் இந்துக்களுக்குதான் சொந்தம் என்று கூறிவருகின்றனர். மேலும் டெல்லியில் இஸ்லாமியர்களின் பெயரில் இருக்கும் ஊர்கள், சாலைகள், தெருக்கள், பூங்காக்கள் ஆகியவற்றை இந்துக்களின் பெயர்களாக மாற்றும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிவருகின்றனர்.
குதுப்மினாரை காவிகள் சொந்தம் கொண்டாடுவது இது முதல்முறை அல்ல. கடந்த 2020–ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் தேவ் என்ற ஆர்.எஸ்.எஸ் சாமியார் குதுப்மினாரை இந்து கோவில்களாக அங்கிகரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார். குதுப்மினாரின் நுழைவு வாயிலில் உள்ள ஒரு மசூதி 27 இந்து கோயில்களை இடித்து கட்டப்பட்டதாகவும் அங்கு இருக்கும் சிலைகள் தரையில் வைத்து அவமானப் படுத்தபடுவதாகவும் ஒரு கட்டுக்கதையை கட்டமைத்து குதுப்மினாரை கைப்பற்ற பலவாறு முயற்சிகள் முன்னர் மேற்கொள்ளப்பட்டது. தற்போதும் அதை அபகரிக்க அனைத்து விதமான வேலைகளையும் செய்ய தொடங்கியுள்ளனர்.
ரிஷப் தேவ் என்பவர் மீண்டும் குதுப்மினாரை இந்து கோயிகளாக அங்கிகரிக்க கோரி டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதேபோல், தாஜ்மஹால் நிறுவப்பட்டுள்ள இடம் தங்களுக்கு சொந்தமானது என்கிறார் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தியா குமாரி. மேலும், முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யும்போது தங்கள் பரம்பரையின் நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், அந்த நிலத்தின்மீதுதான் தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும் கூறியுள்ளார். கேட்பவன் கேனையன் என்றால் எதுவேண்டுமானானும் சொல்லலாம் என்பதே சங்கிகளின் செயல்பாடு.
அயோத்தியில் பாஜகவை சேர்ந்த ரஜ்னீஷ் சிங் எனபவர் தாஜ்மஹாலில் மூடப்பட்டு கிடக்கும் 20 அறைகளில் இந்து கடவுள்களின் சிலைகள் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் உடனடியாக அந்த அறைகளை திறக்க உத்தரவிட வேண்டும் என்றும் கூறி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
***
காவி கும்பல் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயில் கட்டுவதில் பெற்ற வெற்றிவைத்து தற்போது அடுத்தடுத்து மசூதிகள், இஸ்லாமியர்கள் கட்டிய கட்டிடங்களை குறிவைத்து அதை கைப்பற்ற தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
ராமர் கோயில் கட்டுவதற்கு அவர்கள் 20 ஆண்டுகாலம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் அனைத்து துறைகளையும் கைப்பற்றிவிட்ட ஆர்.எஸ்.எஸ் கும்பல் தனது இலக்கை நோக்கி தீவிரமாக முன்னேறி வருகிறது.
உழைக்கும் மக்களை ஒடுக்கியும் இஸ்லாமியார்கள், கிறித்துவர்கள், தலித்துக்களை அடக்கியும் வைக்கும் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான நடவடிக்கைகளை ஒழுங்கமைத்து, அதை ஒருங்கிணைத்து கொண்டு செல்ல வேண்டிய கடமை தற்போது நம்முன் வந்து நிற்கிறது.
LET THE STRUGGLE OF THE SRI LANKAN PEOPLE WIN! FASCISTS WILL FALL!! PEOPLE WILL WIN!!!
Sri Lanka, the country that had most actively implemented the policies of Privatization-Liberalization-Globalization among the Asian countrues, is on fire today.
Yesterday (May 9), in retaliation to the violence against the people by the fascist supporters of Rajapaksa, Rajapaksa’s house and the houses of several of his allies have been set on fire. This felt like a welcome summer rain.
Following this, Mahinda Rajapaksa has announced his resignation as Prime Minister. But the people continue to fight for the resignation of Gotabaya Rajapaksa. The series of struggles by more than 1500 labour unions has reached a climax. The way out of this is to sell the entire Sri lanka. But the situation is that there is no one to buy.
Keeping this as an excuse countries like the US, China and India are lending money to Sri Lanka as loans, even if the people of their countries have been suffering. By doing so, they are trying to bring Sri Lanka under their control by making them as debtors.
But these loans are not and will not be sufficient for Sri lanka. There is no electricity & fuel. As the prices have skyrocketed the people are unable to afford even the essential food items such as rice, pulses, milk.
The Rajapaksa gang, which incited ethnic riots and massacred thousands of Tamil people, is on the run. However, Gotabaya did not resign. The struggles against it are never going to stop. The fact of the matter is that Sri Lankans had united as a class against the privatization-liberalism-Globalization that is destroying the lives of the people, despite the ethnic, linguistic and religious bigotry in the country.
India is rapidly moving towards the economic situation of Sri Lanka. While the government of Sri Lanka owns Lankan Airlines, India does not even have its own Airlines. We must learn from the working people of Sri Lanka how to protect ourselves from this fascist mob that is privatizing all the public sector units and gifting the natural resources, such as forests and mountains to the corporates.
Sri Lanka offers great hope that the RSS-BJP Modi-Amit shah-Ambani-Adani saffron-corporate fascist mob, which divides India along religious and caste lines and commits violence, will be overthrown.
All these struggles must evolve into struggles against the pro-imperialist policies of the ruling classes, which acts as the core of the entire problem. Tamil Nadu must stand by the struggles of people from all walks of life, such as Tamils, Sinhalese and Muslims. People’s Power (Makkal Athikaram) requests the people of Tamil Nadu to support the struggles of the people of Sri lanka.
♦ LET THE STRUGGLE OF THE SRI LANKAN PEOPLE WIN!
♦ FASCISTS WILL FALL!!
♦ PEOPLE WILL WIN!!!
With Comradeship, Comrade C.Vetrivel Chezhian,
State Secretary, Makkal Athikaram,
Tamil Nadu – Puducherry, 99623 66321.
நூல் விலை உயர்வை கண்டித்து 18850 ஜவுளி நிறுவனங்கள் மூடல் ! இந்த வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது !
பத்திரிகை செய்தி
ஈரோடு, திருப்பூர், கரூர், சேலத்தில் உள்ள ஜவுளி நிறுவனங்கள், நூல் விலை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலைநிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு கண்டியின் (356 கிலோ பஞ்சு) விலை ரூ.76,000-ஆக இருந்தது தற்போது ரூ.1,05,000 அதிகரித்துள்ளது. இதேபோல் நூலின் விலையும் ஏறியுள்ளது.
பஞ்சு மற்றும் நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விலை ஏற்றதால் கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட 36 சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. இதனால் 8,000-த்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இயக்கத்தை நிறுத்தியுள்ளன.
மேலும் ஆதரவு தெரிவித்து பல்லடம் மற்றும் சுற்று வட்டாரத்தில் 2.5 லட்சம் விசைத்தறிகள், 20,000 காடா இல்லாத தறிகளின் உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம், ஆண்டிபட்டி, கரூர் போன்ற மாவட்டங்களிலும் இந்த விலை ஏற்றத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.
பஞ்சு, நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தியை ஊகவணிகத்திலிருந்து நீக்கி அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மே 16,17 ஆகிய தேதிகளில் உற்பத்தி நிறுத்த போராட்டத்தை ஜவுளி மற்றும் பின்னலாடை துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொடர்பில்லாத நிறுவனங்களில் இலட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என குற்றம் சாட்டியுள்ளனர். செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
நூல், விலை மற்றும் பஞ்சு விலை உயர்வை கண்டித்து ஜவுளி நிறுவனங்கள் நடத்தும் வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கின்றது.
ஒன்றிய அரசு உடனே நூல், பஞ்சு போன்ற பொருட்களை பதுக்கி செயற்கையான விலையேற்றத்தை தடுக்க வேண்டும். இந்திய பருத்தி கழகமானது பருத்தி பஞ்சு வர்த்தகத்தை முறைப்படுத்த வேண்டும்.
ஏற்கனவே அரிசி, பருப்பு, எண்ணெய், தக்காளி, வெங்காயம் மற்றும் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் என மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அடிப்படை உணவு பொருட்களின் விலை நாளுக்கு நாள் ஏறிக் கொண்டே வருகிறது. அதை கட்டுப்படுத்துவதற்கான எந்த நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ளாமல் இருக்கிறது. அதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சிறு, குறு, நடுத்தர தொழில்களை அழிக்கின்ற வேலையை மோடி அரசு பதவியேற்ற 2014-யிலிருந்தே செய்து வருகிறது. இன்று பஞ்சு, நூல் விலை ஏறினால், பல சிறு, குறு பஞ்சாலை நிறுவனங்கள் தொடர்ந்து இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்படும் அதில் வேலை செய்யும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளுப்படுவார்கள். தமிழக மக்களும் இந்த கோரிக்கையை ஆதரிக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
தோழமையுடன், அமிர்தா
மாநிலப் பொருளாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321.
கல்குவாரி தொடர்பாக தகவல் அறியும் சட்டப்படி தகவல் தர மறுக்கும் திராவிட மாடல் பொது தகவல் அதிகாரியை கண்டித்து நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் !
திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், இருக்கன்துறை பகுதி-2, உதயத்தூர், பரமேஸ்வரபுரம் ஆகிய கிராமங்களில் ஆளுங்கட்சியினர் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க முயன்று வருகின்றனர். இந்த கிராமங்கள் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சார்ந்த விவசாயிகள், பொதுமக்கள் இந்த பகுதிகளில் கல்குவாரி மற்றும் கிரஷர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து பலமுறை மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். மேலும், தகவல் அறியும் உரிமை சட்டப்படி குவாரி தொடர்பான தகவல் கோரியும் மனு கொடுத்துள்ளனர். ஆனால், பொது தகவல் அதிகாரி இது நாள் வரை இது குறித்த தகவல் தரவில்லை.
குவாரி மற்றும் கிரஷர் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டதாக அப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கப்படாத நிலையில் குவாரி துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மே 16-ம் தேதி காலை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கல் குவாரி தொடர்பாக தகவல் தர மறுக்கும் பொது தகவல் அதிகாரியை கண்டித்தும், கல்குவாரிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று கூறியும் இருக்கன்துறை பகுதி-2, உதயத்தூர், பரமேஸ்வரபுரம், கூடங்குளம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மீண்டும் மனு அளித்துள்ளனர்.
தங்கள் கிராமங்களில் குவாரி அமைக்க உரிமம் வழங்க கோரி ஆளும் கட்சியினரே தங்கள் பினாமி பெயரில் விண்ணப்பித்திருப்பதாக தங்கள் மனுவல் குறிப்பிட்டுள்ளனர்.
தங்கள் பகுதி மக்கள் கோரிக்கையின் அடிப்படையில் இந்த பகுதியில் கல்குவாரி அமைக்க 2021-ம் ஆண்டில் தடை விதித்த அப்போதைய சேரன்மகாதேவி சார் ஆட்சியர், குவாரி அமைக்க தடைவிதித்தார் என்ற காரணத்திற்காகவே உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும், எந்த கல்குவாரியும் அரசு வகுத்துள்ள விதி முறைகள் படியே கூட இயங்குவதில்லை என்பதற்கு மே 15-ம் தேதி நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளம் கல் குவாரி விபத்து சமீபத்திய சான்றாகும் என்றும் தங்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கிராமங்கள் அமைந்திருப்பது சட்டமன்ற சபாநாயகர் திரு.அப்பாவு அவர்களின் தொகுதியாகும். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் அவர்களே இந்த பகுதியில் தனது பினாமி பெயரில் குவாரி அமைக்க முயற்சி செய்து வருகின்றார் என்று சில நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இருக்கன்துறை பகுதியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் ஏற்கனவே குவாரி நடத்தி கொள்ளையடித்து வருகின்றார்.
திராவிட மாடல் ஆட்சியின் கல்குவாரிகள் மூடப்படவும், புதிதாக குவாரிகள் திறக்கப்படாமல் இருக்கவும் மக்கள் தொடர்ந்து போராடுவதைத் தவிர வேறுவழியில்லை. இந்த திராவிட மாடல் என்பது புது வகையான ஏமாற்று என்பதை மக்கள் தங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகள் மூலம் அன்றாடம் அம்பலப்படுத்தி வருகின்றனர்.
“Let us live in peace; Struggle has become our life; We have fought against the Jindal Group, the agitation against the eight-lane expressway, the fight against the garbage dump. Now we are fighting against the setting up of SIPCOT Industrial Park by taking away our lands and driving us out of the village. We will never give up our land. We will not hesitate to die during the struggle”.
The SIPCOT Industrial Park referred by the protesting people is proposed to be setup in the rural areas in and around Paliyapattu panchayat – Chinna Paliyapattu, Pazhaya Colony, Puthiya Colony, Selvapuram, Anna Nagar, Mariamman Nagar, Chinna Punalkadu, Arunthathiyar Colony, Vaniyambadi – located 10 km from Chengam taluk of Tiruvannamalai district. SIPCOT will be set up by destroying farmlands and Kavuthi-Vediyappan hills and thereby destroying the environment and livelihood of the people. People from nine villages have engaged in a continuous agitation for over 54 days against setting up of SIPCOT Industrial Park, which will engulf roughly 1,500 acres of land and 500 houses, for the benefit of corporate bosses.
Chengam block of Tiruvannamalai district is the area where a variety of agricultural commodities including paddy, groundnut and flowers are grown. Realizing that the establishment of SIPCOT industrial park would result in the loss of agricultural land and the houses they had traditionally lived in, and that they will be turned into refugees in their own country, the nine villagers immediately convened a gram sabha meeting and decided to oppose the SIPCOT industrial park. Moreover, people from the villages around Paliyapattu panchayat came together by breaking caste barriers and formed a protest organisation called “SIPCOT Ethirpu Vivasaya Makkal Iyakkam” (Anti SIPCOT Peasant’s Movement). They declared that the agitation will continue until the plan for SIPCOT is completely abandoned. They convened a gram sabha meeting on the third day (24.12.2021) of the continuous protests and passed a resolution urging the government not to set up the SIPCOT industrial park in the area under the jurisdiction of their village to protect their interests.
SIPCOT Ethirpu Vivasaya Makkal Iyakkam has been organising many protests continuosly including demonstrations, hoisting black flags in the houses, picketing government offices, boycotting Pongal festival & announcing it as a black day, etc. The agitations have been going on for over 50 days but the TN government didn’t pay any attention. Majority of the media averted from this issue.
Lethargy and Arrogance of power
In an interview to BBC Tamil regarding this issue, Chengam DMK MLA M.P.Giri arrogantly said that “agriculture is not properly carried out in and around Paliyapattu; There are other things that take place by setting up huts; If SIPCOT industrial park comes up, proper relief will be provided to the affected lands and houses’’.
On the fifth day of the protest, Minister E.V. Velu said in Chengam East said that “a few fake farmers are wearing green towels and holding a fake demonstration; We will not give space to it; The SIPCOT industrial park will definitely be set up in that area”, he told reporters there.
On the ninth day of the ongoing agitation, the District Collector did not even bother to meet the people (more than 250 gathered) who had attended the farmers’ grievance redressal meeting at the Tiruvannamalai collectorate. Inviting only 10 people to his bungalow separately, he said “We will not hesitate to arrest you under the Goondas Act if you are doing something against the government”. Not only that, he also threatened the people by narrating the Sterlite shooting incident.
The Scenic beauty of Paliyapattu village
On the 36th day, when the gram sabha was to pass a resolution again that SIPCOT, the government cancelled the meeting. On the 45th day, more than 500 villagers came together to file 424 RTI petitions under the Right to Information (RTI) Act with 25 questions against the SIPCOT land acquisition. The Collector showed disrespect towards the people by receiving the petitions through his assistant.
The protesting history of the people
Earlier, in 2006, Jindal entered into an agreement with TIMCO (Tamil Nadu Iron Ore Mining Corporation Limited), belonging to the Tamilnadu government, to mine iron ore in an area of 23 hectares in the Kavuthi-Vediyappan hills for 10 years. Thus, the extraction of iron ore from the soil threatened to completely destroy the livelihood, water resources and agricultural lands of 55 villages in the vicinity of Kavuthi Hills.
In 2008, democratic forces along with the people of 55 villages, including the Paliyapattu area, formed the Tiruvannamalai Kavuthi and Vediyappan Hills Protection Association under the leadership of Balakrishnan and protested against the project given to Jindal. As a result, the contract was abandoned for the time being. Then, in 2014, another agreement was signed with Jindal. It was stopped as a result of series of campaigns and determined agitations by the association.
In 2018, the ADMK government brought in the Salem-Chennai eight-lane expressway project. It was suspended as a result of continuous protests organised by Movement Against Eight-Lane Expressway against the project.
In January 2022, more than 500 people of Paliyapattu panchayat staged a road blockade to protest against the dumping of urban garbage in the Periya Punalkadu area. Due to the continuous agitation by the people, the government has put on hold the landfill project. Thus, in the last few years alone, the people of the area have been engaged in a series of protests against various detrimental projects.
The Tamilnadu government has now resorted to a conspiratorial process of handing over the land and the Kavuthi-Vediyappan hills to the corporates in the name of SIPCOT, industrial development and employment opportunities, as the agreements with the corporates for direct mining of iron ore have faced stiff opposition. Wearing a mask called SIPCOT, the TN government is persuading to allow the corporates to chase away the villagers of Paliyapattu and surrounding areas and plunder the Kavuthi Hills. Highways Minister E.V.Velu’s speech also reveals that this project will be implemented in full swing.
Is Corporate land grabbing development?
Paliyapattu and the villages in its vicinity doesn’t even have proper road and bus facilities. Private minibus which came into village for a few years had now been stopped. Construction of roads in Selvapuram, Punalkadu, Arunthathiyar Nagar, Mariamman Nagar had been stopped halfway. The people are commuting through the rough sand roads. The students have to walk a distance of 3 km daily to reach the school. This locality doesn’t have any medical facility even for emergency care. Paliyapattu and its surrounding villages are isolated from the rest of Tamilnadu like an island. This area, which lacks even the basic amenities, relies on agriculture for its subsistence.
“We are filling our stomachs with goats and cows; If SIPCOT comes, the entire land will be destroyed; They will suck the entire groundwater; Our family would have to wander for drinking water; Where can we go and live if we are driven out of this place?” says a woman from Punalkadu, who participated in the protest.
The TN government is trying to displace the people for the benefit of the corporates and calls it as ‘growth’. A day after the people of Paliyapattu passed a resolution against the SIPCOT project, the government officials persuaded a group of people belonging to 10 villages to pass a resolution in favour of SIPCOT. The people of Paliyapattu have been monitored day and night by the police and the intelligence.
During a discussion in the 2021 assembly session, the DMK government had said that it would start such industrial parks not only in Tiruvannamalai but also in 10 other areas.
It is the practice of all the votebank parties to whip up against the recolonizational policies of privatization-liberalisation-globalization when they are in opposition and aggressively implement the same in the name of “development, progress and employment” when they come to power. The experience we gain from the actions of the DMK government is also the same.
The looting of the Kavuthi-Vediyappan hills is not just an issue related to the livelihood of the people of that locality. It is a part of the corporate fascistic assault on the country and crores of people, similar to the projects like eight-lane expressway, Sagarmala, Bharatmala, Koodankulam nuclear power plant, nuclear waste storage facility, neutrino laboratory, etc. The people of Dhinkia in Odisha continue to protest against the destructive Jindal. The people of Chhattisgarh are fighting against the looting of the mineral resources by the corporates. Today’s crucial task for the working people is to stand hand-in-hand with the people of Paliyapattu in their struggle and to launch united struggles of the working people from all walks of life against corporate looting.
“இப்போலாம் யாருங்க சாதி பாக்குறாங்க” என ஒரு கும்பல் எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்கிறது. ஒருபுறம் சாதி ஆணவப் படுகொலை என்பதும் நடந்த வண்ணம் உள்ளது. பள்ளிகளில் சாதி தீண்டாமைகளினால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஊராட்சித் தலைவர்கள் தலித்களாக இருந்தால் அவர்கள் அவமதிக்கப்படுவது மட்டும் இல்லாமல், அவர்கள் வேலைகளையே செய்யவிடாமல் தடுக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் எதோ ஒரு இடத்தில் நடந்தது என்று மட்டும் விட்டுவிட முடியாது. தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.
நாம் சமூகநீதி ஆட்சி நடக்கிறது என்று பெருமை பீற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டு சிலாகித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே வேலையில்தான் தமிழகத்தில் 445 ஊர்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கின்றன என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்துள்ளது.
படம் : பி.பி.சி
அதிலும் மாவட்டம் வாரியாக எத்தனை கிராமங்கள் என்ற தகவலும் சேர்த்து வெளியாகி உள்ளது.
இந்த தகவல் என்பது தமிழ்நாடு அரசின் போலீசுத் துறையால் பதியப்பட்ட வழக்குகளில் இருந்து கொடுக்கப்பட்டதுதான். மேலும், பதியப்படாத வழக்குகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன என வி.சி.க.வின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். அப்படியானால் இவற்றை ஒழிக்க அரசு என்ன வகையான முயற்சியை எடுக்கிறது? சாதி தீண்டாமையை ஒழிப்பதற்காக 2015 – 2016 ஆண்டு முதல் 2021 – 2022-ம் ஆண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதற்கு பெயர்தான் சமூக நீதி ஆட்சி.
சட்டங்களின் செயல்பாடு:
1955-ம் ஆண்டு இந்த சட்டம் இந்தியாவில் பட்டியலினத்தவர் எனப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க கொண்டுவரப்பட்ட சட்டமாகும். அதன் பிறகு 1976-ல் பி.சி.ஆர் சட்டம் (குடியுரிமை பாதுகாப்பு சட்டம்) என மாற்றப்பட்டது. இந்த சட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதாலும், சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதாலும் இளைய பெருமாள் என்பவரது தலைமையில் பாராளுமன்றம் ஒரு கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989-ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (சட்டம் எண் 33/1989) கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் மிகவும் தாமதமாக 1995-ல் தான் நடைமுறைக்கே கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன் பிறகு பழங்குடியினர் மீது போலீசுத்துறை நடத்திய வன்கொடுமை பலாத்காரம் சம்மந்தமாக போலீசுத்துறை, இராணுவத்திற்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் இந்த சட்டம் போலீசுத்துறையினர் தங்களுக்கு எதிராக இருப்பதாக கருதி கிடப்பிலே போட்டு உள்ளனர். இந்தியா முழுக்க இதுதான் நிலை.
கீழ்க்காணும் செயல்களுக்கு இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்
சாதியை கொச்சைப்படுத்தி பேசுதல்,
சாதி பெயரை சொல்லி திட்டுவது,
சாதியின் பெயரால் விலக்கி கொள்வது
இதேதான் நம் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளிலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கை பதிய சொன்னால் இந்த போலீசுத்துறையோ உயர் அதிகாரிகளோ சாதாரண சண்டையாகதான் பதிவு செய்து பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியானால் இந்த சட்டம் எந்த வகையில் யாருக்குதான் பயன்படும்?
ஆனால், சொல்லுவது என்னமோ பட்டியலினத்தவரை அவர் சாதி சொல்லி திட்டினாலும், அவரை அருவருப்பான பொருள்களை உண்ண சொல்லி கட்டாயப்படுத்துவதும், குறிப்பிட்ட இடத்தில் அவர்களை உட்காரக் கூடாது, வரக்கூடாது என்று சொல்வதும், அவர்களை சாதி பெயர்களை சொல்லி இழிவுபடுத்தி திட்டுவதும், அவர்களின் இடங்களிலோ, குடியிருப்புகளை அழித்தோ யாரேனும் ஆக்கிரமித்தாலோ, ஆதிக்க சாதியினரால் பலாத்காரம் செய்யப்பட்டாலோ இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம் என அரசு சொல்கிறது.
ஆனால், தமிழகத்தில் 445 கிராமங்களில் சாதி வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், பல கிராமங்கள் பதியப்பாடாமலும் உள்ளது. அப்படியானால் இவற்றை ஒழிக்க இந்த சமூக நீதி ஆட்சியில் என்னதான் திட்டம் உள்ளது. சமூகநீதி கூட்டம் மட்டும் நடத்தினால் போதுமா? அப்படியானல் இந்த திட்டங்கள் எல்லாம் ஒரு கண்துடைப்பு என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக சாதி தீண்டாமை அதிகமாக கடைபிடிக்கும் மாவட்டத்தில் முதலிடத்தில் மதுரை மாவட்டம்தான் உள்ளது. அதைத் தடுக்க அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அரசின் திட்டத்தினாலோ அல்லது சட்டத்தினாலோ இதை தடுக்க முடியுமா?
1955-ம் ஆண்டுகளுக்கு முன்பு சாதி தீண்டாமை படுகொலை என்பது மிகவும் அதிகமாக இருந்ததினால்தான் அதை தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த சட்டங்களை அமுல்படுத்தவே அடுத்தடுத்து பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், சம்பவங்களோ தீண்டாமையோ ஒழிந்ததா? அல்லது குறைந்ததா? வடமாநிலங்களில் இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.
சாதிக் கட்சிகள் சொல்லும் தீர்வு என்ன?
இந்தியாவில் 1108 பட்டியல் சாதிகளும் 744 பழங்குடியின சாதிகளும் இருப்பதாக இந்திய அரசியலமைப்பு ஆணை 1950 குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் பழங்குடியினரில் 36 சாதிகளும், பட்டியல் சாதிகளில் 76-ம் உள்ளது. இவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல சிறிய சிறிய அமைப்புகளை வைத்து உள்ளனர். ஆனால், இவர்கள் மீதான கொடுமைகள் என்பதும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. மேலும், பொது வழிகளை பயன்படுத்துவது, பிணங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்கப்படாதது போன்ற தீண்டாமைகள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற உரிமைகளுக்கே போராடி வழக்கு போட்டுதான் பெற முடிகிறது.
ஆனால், வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சொல்வதுபோல பட்டியலினத்தில் உள்ளவர்களை இந்து மதம் என்பதிலிருந்து நீக்கி அனைவரையும் பெளத்த மதத்தில் சேர்த்து விட்டால் இந்த தீண்டாமையில் இருந்து அவர்கள் விடுபட்டு விட முடியுமா? பல நூறு ஆண்டுகளாக பழக்கப்படுத்தி வைக்கப்பட்ட அடிமைத் தீண்டாமை தனத்தை மதமாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியுமா? ஏன் கிறிஸ்துவ மதத்தில் சாதி தீண்டாமை இல்லையா? இந்த வர்ணாசிரம நிலப்பிரத்துவ பிற்போக்குதனமான சமூகக் கட்டமைப்புதான் மக்களைப் பிளவுபடுத்தி வைத்துள்ளது. இதன் உள்ளே நின்று கொண்டே இதை மாற்ற வேண்டும் என்றால் எப்படி மாற்ற முடியும்?
அவரவர் செய்யும் தொழில் அந்த அடிப்படையில்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் என்பது அந்த காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படியானால் இதை மாற்ற வேண்டாமா? பொருளாதார ரீதியிலான பாகுபாட்டை போக்க வேண்டாமா? ஆனால், பல தலித் அமைப்பினர் தன் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதில் பெருமை உள்ளது என்று பேனர் அடித்து கூட வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் ஆதிக்க சாதியினர் போட்டுக் கொள்ளும்போது நாங்கள் எங்கள் சாதி பெருமையை போட்டுக் கொள்கிறோம் என்கின்றனர். ஆனால் இதனால் சாதி ஒழிக்கப்படுமா? சாதிக் கட்டமைப்பைப் பலப்படுத்ததான் செய்யும்.
இதுவரை நடத்தப்பட்ட ஆணவக் கொலைகள் நமக்கு பாடம் கற்றுத்தரவில்லையா?, இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் மேலும் பலர்… தொடர்ந்து கொண்டே செல்கிறது. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன? சாதி ரீதியில் அமைப்பாக திரளாமல் வர்க்கம் என்ற அடிப்படையில் அமைப்பாக திரண்டு, ஒன்றிணைந்து சாதிய பிற்போக்கான நிலப்பிரபுத்துவ கட்டமைப்பிற்கு எதிராகப் போராடி தகர்ப்பது மூலமே உண்மையான சமத்துவ ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மே 2 அன்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டு இருந்தது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தினசரி 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு 23 டன் நிலக்கரி தேவை. கடந்த சில தினங்களாக நிலக்கரி வரத்து குறைவு மற்றும் மின் தேவை அதிகமாக இருந்ததால் இருப்பில் உள்ள நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டதால் நிலக்கரி இருப்பும் வெகுவாக குறைந்தது. அதனால் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தை போல் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.
நிலக்கரி தட்டுப்பாடானது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியா முழுவதும் உள்ளது. மற்ற மாநிலங்களில் (பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்) நிலக்கரி தட்டுப்பாடானது தமிழ்நாட்டுடன் ஒப்பீடும் போது மிக அதிகமாக உள்ளது.
“நாடு முழுவதும் மொத்தமுள்ள 173 அனல்மின் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்டவற்றில் தேவையான நிலக்கரி கையிருப்பு 25%-க்கும் குறைவாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களில் 10%-க்கும் குறைவாக உள்ளது” என தமிழ் இந்து 29.4.2022 அன்று தனது தலையங்க கட்டுரையில் எழுதியுள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி நிலவரப்படி 66.72 மில்லியன் டன்களுக்கு இருக்க வேண்டிய நிலக்கரி கையிருப்பு 22.52 மில்லியன் டன்கள் தான் உள்ளது. இது பொதுவான கையிருப்பில் 34% மட்டுமே. அதன்படி 9 நாட்கள் மட்டுமே அனல்மின் நிலையங்கள் மின்சாரம் தயாரிக்க முடியும் என ஒன்றிய மின்சார ஆணைய அறிக்கை கூறுகிறது.
மேற்கூறியவாறு நிலக்கரி தட்டுப்பாடானது நாடு முழுவதும் நிலவுவதால், இந்தியா முழுவதும் மின்தடையும் அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் தேவையான மின்சாரத்தைவிட 6% குறைவாக மின்சார விநியோகமே உள்ளது. ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27 வரை 1.88 பில்லியன் யூனிட் தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகிறது.
உ.பி.யில் 3 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 8 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. ஆந்திரப்பிரதேசத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 7 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பீகாரில் 300 மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 4 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பஞ்சாப்பில் 6 – 7 மணி நேரம், ராஜஸ்தானில் 7 மணி நேரம், உத்தரகாண்டில் 6 மணி நேரம், தெலுங்கானாவில் 6 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது.
குஜராத்தில் தொழிற்சாலைகள் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு இந்தியாவிற்கே முன்மாதிரி அல்லவா. ஆனால் அங்கேயே வாரம் 1 நாள் தொழிற்சாலைகள் விடுமுறை விடப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை நாள்தோறும் 2 – 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள மின் தேவையில் 70% அனல்மின் நிலையங்களில் இருந்தே பெறப்படுகிறது. அனல்மின் நிலையங்களானது நிலக்கரி வைத்தே இயங்குகிறது. எனவே நிலக்கரி தட்டுப்பாடானது நாட்டின் மின் உற்பத்தியை பெரிதும் பாதிக்கிறது.
தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு கொள்ளை லாபம் – மக்களுக்கோ விலையேற்றம்
மே 5, 2022 அன்று ஒன்றிய அரசானது மின்சாரச் சட்டம் 11-வது பிரிவு படி, இறக்குமதி நிலக்கரியில் இயங்கும் அனைத்து அனல்மின் நிலையங்களையும் முழுத்திறனில் மின்சாரம் உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்களில் பெரும்பாலானவை தனியார் அனல்மின் நிலையங்கள். எஸ்ஸார் பவர், கோஸ்டல் எனர்ஜென், டாடா பவர், அதானி பவர் போன்றவை முக்கியமானவை ஆகும்.
உக்ரைன் – இரஷ்யா இடையிலான போரினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை 44% – 55% வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மடங்கு இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது.
இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மின் உற்பத்தியாளர்கள், அதிகப்படியான விலை வைத்து மின்சாரத்தை விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர்.
கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இதேபோல் நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, அதானி பவர், டாடா பவர், எஸ்ஸான் பவர் 3 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்தன.
நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு முன்னால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4 முதல் ரூ.6-க்கு விற்பனை செய்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி ரூ.16 முதல் ரூ.18 வரை பல மாநிலங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசானது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20 வரை விலை கொடுத்து வாங்கியதாக செய்திகள் வெளியாகின.
ஒன்றிய அரசானது தற்போது தனியார் மின் உற்பத்தி நிலையங்களை முழு வீச்சோடு மின் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியதோடு மட்டுமில்லாமல், மாநில அரசுகளுக்கு கூடுதல் விலையை மக்களிடம் இருந்து வசூலிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.
2022 ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படு மின்சாரத்திற்கான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூலிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 அக்டோபரில் ஒரு யூனிட் ரூ.16 முதல் ரூ.18 வரை வைத்து விற்றவர்கள், தற்போது எவ்வளவு விலை வைத்து விற்பார்கள் என்பது தெரியவில்லை.
இப்படி நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி ஒருபுறம் தனியார் மின் உற்பத்தியாளர்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர். மறுபுறம் மின்சார விலை ஏற்றமானது மக்களின் தலை மீது விழுகிறது.
கோடை காலமும், ஒன்றிய அரசின் முறையற்ற நிலக்கரி விநியோகமும் தான் காரணமா?
இந்தியாவில் 9 வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில், 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது.
அதனால் 2022 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் தேவை 207.11 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2021-ல் 182 ஜிகாவாட்டாகவும், ஏப்ரல் 2020-ல் 133 ஜிகாவாட்டாக தான் மின் தேவை இருந்தது. தற்போது மின் தேவையானது 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் கோடைக்காலம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் 220 ஜிகாவாட் வரை மின்சாரம் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிபிசி செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஒன்றிய மின்துறை அதிகாரிகள், “கோடை வெப்பம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே உச்சத்தை தொட்டுள்ளதால் நுகர்வோரின் மின்தேவை அதிவேகமாக அதிகரித்தது. இது தேவை – விநியோக இடைவெளியை அதிகமாக்கியிருக்கிறது” என்று கூறியுள்ளார்கள்.
மேற்கூறியவாறு அவர்கள் கூற்றுப்படி பார்த்தாலும், கோடை வெப்பச்சலனம் காரணமாக ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனால், அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை. அதைச் செய்ய தவறியது பற்றி இந்த அதிகாரிகள் பேச மறுக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் நிலக்கரி கையிருப்பு குறைந்தற்கான காரணம் பற்றாக்குறை அல்ல. அவற்றை அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்குப் போதுமான அளவில் ரயில் பெட்டிகள் கிடைக்காததுதான் என்று ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அமித்ஷா ஏப்ரல் 29 அன்று நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பு உள்ள அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்ல போதுமான சரக்கு ரயில்களை ஏற்பாடு செய்ய ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
ரயில் பெட்டிகளை முறையாக ஏற்பாடு செய்யாதது, கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய முன்கூட்டியே திட்டமிடாதது எல்லாம் அரசின் நிர்வாக குறைபாடுகள் தான். அவை நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாட்டிற்கான உண்மையான காரணங்கள் அல்ல. ஆனால் அரசானது இவைகள் தான் உண்மையான காரணங்கள் என மக்களின் முன் நிறுத்த முயற்சி செய்கிறது.
நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாடு – தனியார்மயமாக்கத்தின் விளைவே
ஒன்றிய அரசானது நிலக்கரி தட்டுப்பாட்டை தொடர்ந்து, இந்திய நிலக்கரி லிமிடெட் (கோல் இந்தியா) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏற்கெனவே மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்களை தனியார் மூலம் மீண்டும் இயக்க மே 6 அன்று முடிவு செய்துள்ளது.
இந்த 20 நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியானது, சந்தையில் நடைமுறையில் உள்ள விலையின் அடிப்படையில் தனியார் மூலம் விற்பனை செய்யப்படும். அதில், ஒரு பகுதி இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 20 நிலக்கரி சுரங்கங்களின் திறப்பு விழாவில் பேசிய ஒன்றிய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “நிலக்கரி உற்பத்தியில் தற்சார்பை அடையவும், இறக்குமதியை குறைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இணைய தனியார் துறைகளை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
அதாவது ஒன்றிய அரசு சொல்லும் தற்சார்பு என்றால், எல்லா நிலக்கரி சுரங்கங்களையும் தனியாருக்கு கொடுத்து, எல்லா விதிகளையும் தகர்த்து நிலக்கரியை ஒட்ட சுரண்டி உற்பத்தியை அதிகரிப்பதுதான் தற்சார்பு ஆகும். ஏன் தற்போது 20 நிலக்கரி சுரங்கங்களை அரசு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா மூலமே இயக்கலாமே? ஏன் தனியார் மூலம் இயக்க வேண்டும்? இங்குதான் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கை அமல்படுத்துதல் உள்ளது.
ஒன்றிய அரசானது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனப்படும் புதிய தாராளவாதக் கொள்கைகள் மூலம் இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனத்தை சீரழித்ததை சுருக்கமாக பார்ப்போம்.
1972 – 1973 காலகட்டத்தில் நிலக்கரி சுரங்க தேசியமயமாக்கல் சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் தேசியமயமாக்கப்பட்டன. 1990-களில் தனியார்மய, தாராளமய மற்றும் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒன்றிய அரசானது 1993 – 2010 வரை ஐந்து முறை நிலக்கரி சட்டங்களில் தனியாருக்கு சாதகமாக திருத்தம் செய்துள்ளது. இதில், 2006-ல் நிறைவேற்றப்பட்ட 100% அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் சட்ட திருத்தமும் அடங்கும்.
1993-ம் ஆண்டு இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 200 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டன. இந்த 200 சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 500 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், 2021 வரை உற்பத்தியானது ஆண்டுக்கு 60 மில்லியன் டன்னை தாண்டவில்லை. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய கோல் இந்தியாவானது ஒரு நிர்பந்தத்திலேயே வைக்கப்பட்டது எனக் கூறுகிறார் முன்னாள் கோல் இந்தியா தலைவர் பார்த்தா பட்டாச்சார்யா.
இப்படி ஒருபுறம் ஒன்றிய அரசானது கோல் இந்தியா நிறுவனத்தை நிர்பந்தத்திலேயே வைத்த வேளையில், மறுபுறம் அந்நிறுவனத்தின் உபரி நிதியை சூறையாடியது.
2015-ம் ஆண்டு கோல் இந்தியாவானது 35 ஆயிரம் கோடி உபரி நிதியாக வைத்திருந்தது. அதைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தை மேம்படுத்தாமல் ஒன்றிய அரசானது அப்பணத்தை தன் பங்காக எடுத்துக் கொண்டது. 2019-ம் ஆண்டு உபரி நிதி 8 ஆயிரம் கோடியாக குறைந்தது என்கிறார் நிலக்கரி துறையின் முன்னாள் செயலர் அணில் ஸ்வரூப்.
மோடி அரசானது 2020-ம் ஆண்டு, வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரியை மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி, வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம் என அனுமதித்தது. அதாவது தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை, அதிக இலாபம் வைத்து எந்த துறை சார்ந்த நிறுவனத்துக்கும் விற்கலாம் என்பது தான் அத்தளர்வு கூறுகிறது.
மேற்கூறியவாறு கோல் இந்தியா நிறுவனமானது படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டாலும், தொடர்ச்சியாக தன் உற்பத்தியை அதிகரித்து கோல் இந்தியா நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போராடி வந்துள்ளது.
1990-க்குப் பிறகு 2021 வரை கோல் இந்தியாவிற்கு சொந்தமான 28 பில்லியன் டன் உற்பத்தி திறனுடைய நிலக்கரி சுரங்கங்கள் அதனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள் முன்னாள் கோல் இந்தியா நிர்வாகிகள். ஆகவே ஒன்றிய அரசானது, நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயப்படுத்தாமல் முறையாக இயக்கி இருந்தாலே, நிலக்கரி தட்டுப்பாடு என்பது இந்தியாவில் இருக்காது.
ஆனால், ஒன்றிய அரசு அதற்கு மாறாக நிலக்கரி சுரங்கங்களை படிப்படியாக தனியார்மயமாக்கி, கோல் இந்தியாவை சீரழித்து, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்கும் வேகத்தை அதிகப்படுத்துகிறது. இதற்கு தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி, 20 பழைய சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைத்ததே சிறந்த உதாரணம்.
ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகள் மூலம் நாட்டில் உள்ள நிலக்கரி வளங்களை ஒட்ட சுரண்டி இலாபம் சம்பாதிக்கபோவது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள்தான். நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களின் சொத்து. அதை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்கையடிக்க மக்களாகிய நாம் அனுமதிக்கலாமா? கண்டிப்பாக முடியாது.
ஆகவே, உழைக்கும் மக்களாகிய நாம், நிலக்கரி துறையில் மட்டுமல்லாமல் எல்லாதுறைகளிலும் அமல்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைகளை முறியடிக்க எல்லா ஒடுக்கப்படும் வர்க்கங்களை ஒன்றிணைத்து போராட்டங்களை கட்டியமைப்பதே, தனியார்மயக் கொள்கைகளை ஒழிப்பதற்கான தொடக்கமாக அமையும்.
தேசத் துரோக சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிய இடைக்கால உத்தரவை மே 11 அன்று பிறபித்துள்ளது உச்சநீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்வதையும் நடவடிக்கைகள் எடுப்பதையும் ஒன்றிய – மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
1962-ம் ஆண்டு, தேசத் துரோக வழக்கு, கேதார்நாத் சிங் vs பீகார் வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யகோரி பொதுநல இயக்கங்களால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கு கடந்த மே 10 அன்று விசாரணைக்கு வந்தபோது, “தேசத் துரோக வழக்கு தவறாக கையாளப்படுவதாக ஒன்றிய அரசே கவலை தெரிவித்துள்ளது. இதில் நடுநிலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதுவரையில் ஒன்றிய, மாநில அரசுகள் – 124-A பிரிவை – தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தனது அமைச்சகத்தின் மூலம் ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விசாரணையின் போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொசிலிட்டர் ஜெனரல் தூஷார் மேத்தா, இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் அறிவுறுத்தல் கேட்ட பின்பு மே 11 அன்று கருத்து தெரிவிப்பதாக கூறினார்.
000
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மே 11 அன்று ஒன்றிய அரசின் கருத்தை பதிவு செய்தார் துஷார் மேத்தா. ஒன்றிய அரசின் சார்பில், இடைக்கால தடைவிதிக்க கோரும் மனுவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதனோடு, ‘கடுமையான குற்றங்களுக்காக கடந்த 1962-ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு மூலமாக உறுதி செய்யப்பட்ட இந்த சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது. தேவைப்பட்டால் இந்தச் சட்ட பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரத்தை காவல் கண்காணிப்பாளர் வரை பொறுப்புகளை உயர்த்தலாம் என கூறினார். மேலும், நிலுவையில் உள்ள தேசத் துரோக சட்டங்கள் குறித்த தீவிரம் அரசுக்கு தெரியாது. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பயங்கரவாத செயல்களாகவும் இருக்கலாம். வேண்டுமென்றால் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தாலாம்” என ஒன்றிய அரசின் கருத்தை பதிவு செய்துள்ளார்.
துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் 124-A பிரிவினை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இந்த விசயத்தை அராசாங்கம் ஆராயும் வரை வழக்கை எடுக்க வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு கேட்டு கொண்டு உள்ளது. ஒன்றிய அரசு காலனித்துவ சட்டங்களை மாற்றி அமைப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
தலைமை நீதிபதி ரமணா, ‘இச்சட்டம் தவறாக மாநில அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது. அனுமன் சாலிசா கோசமிட்டதற்கு வழக்குபோடுவது போன்ற நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுக்கோபால் கூறியிருந்தார் என்றார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும், தேசத் துரோகம் சட்டம் தேவையா? என்று ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பினார். இச்சட்டம் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். காந்தி, பால கங்காதர திலகர் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தபட்ட சட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். இச்சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாகவும் கூறினார்.
அட்டர்னி ஜென்ரல் கே.கே.வேணுகோபால் இச்சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்றும் ஆனால், இந்த பிரிவு குறித்த வழிகாட்டுதல்கள் தேவை அவசியமானது எது, அவசியமற்றவை எவை என்பதை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இச்சட்டம் தவறாக பயன்படுத்துவது குறைந்து வருகிறது என்றும் கூறினார்.
ஒன்றிய அரசின் கருத்து வரும் வரை மாத கணக்கில் ஒருவரை சிறையில் அடைக்க முடியாது. அதன்பிறகு விரிவாக ஆலோசனை செய்து ஒன்றிய அரசின் கருத்தை மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முழுமையாக ஏற்றுகொள்ளவில்லை. மேலும், 124-A சட்டப்பிரிவு மறுஆய்வு செய்யப்படும் வரை, தேசத்துரோக சட்டத்தின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணை தொடரவும், நடவடிக்கைகள் எடுக்கவும் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். இச்சட்டப்பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணைகள், மேல்முறையீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
000
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘அரசு நிர்வாகம் – நீதித்துறை என ஒவ்வொரு நிர்வாகத்துக்குமான எல்லையை லட்சுமண ரேகை வழிகாட்டுகிறது. அதன்படி தெளிவான எல்லை வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் யாரும் அவரவர் எல்லையை மீறக் கூடாது. நீதிமன்றம் அரசையும் நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார்.
000
தேசத் துரோக வழக்கு சட்டம் 124-A பிரிவின் கீழ் இதுவரை 13,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில். கடந்த 2015 – 2020 வரை இச்சட்டப்பிரிவின் கீழ் 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2014 பிறகு 149 பேர் மீது மோடியை விமர்சனம் செய்ததற்காகவும், சிறுமைப்படுத்தும் விதமாக குறிப்புகள் எழுதியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய நபர்கள் மீது பல்வேறு தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக தனிநபராகவும், அமைப்பாகவும் பலரும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். காவி பாசிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கதான் பெரும்பாலும் இச்சட்டம் பயன்படுத்த படுகிறது. இதுவரை மோடி அரசுக்கு எதிராக போராடும் தனிநபர்களை, இயக்கத்தின் முன்னணியான நபர்களை இச்சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
000
உச்ச நீதிமன்றம் காலனியகால சட்டங்களான தேசத் துரோக வழக்கிற்கு இடைக்கால தடைவிதித்தாலும், இதைவிட கொடூர சட்டங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கத் தான் செய்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊபா போன்ற கொடும் ஆள்தூக்கி சட்டங்களே அரசியல் ரீதியாக எதிர் கருத்து சொல்லும் அமைப்பாக இருந்தாலும், தனிநபர்களாக இருந்தாலும் கைது செய்ய முடியும் என்று 2019-ல் திருத்தம் கொண்டு வந்தது மோடி அரசு.
ஊபா சட்டத்தின் மூலம் இதுவரை 3005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊபா போன்ற கடும் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது தேசப் பாதுகாப்பு சட்டம் இடைக்கால தடை உத்தரவு என்பதெல்லாம் ஒரு போலி முகத்திரை ஜனநாயகத்தை உருவாக்கும் தன்மை கொண்டதுதான்.
அடுத்து வரக்கூடிய தேசப் பாதுகாப்பு சட்ட திருத்தங்கள் என்பது காவி பாசிசத்திற்கு எதிராக கருத்து சொல்பவர்களை ஒடுக்கவதற்காகவும், மறுகாலணியக்கத்திற்கும், பாசிசத்திற்கும் சேவை செய்யும் வகையில்தான் அமையும். காவி பாசிஸ்டுகள் ஆட்சியில் இருக்கும் வரை ஜனநாயகத்திற்கான சட்டம் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுவது என்பது அது காலனிய கால சட்ட என்பதால்தான் இல்லை, இந்திய மக்களை இந்த அரசாங்கம் கொடுமைப் படுத்துகிறது என்பதால்தான் என்று உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மூலம் அறிய முடியும். மக்களை கொடுமைப்படுத்துகிறது என்று கருதி உச்ச நீதிமன்ற இந்த சட்டத்திற்கு தடை விதிக்கிறது என எடுத்துக் கொண்டால் ஊ.பா போன்ற கொடூரச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை. இதில் இருந்தே உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த நீதித் துறையும், அரசு அதிகார வர்க்கமும் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைதான் இயற்றும் என்பதை தவிர வேறென்ன செய்துவிட போகிறது.
In Tamilnadu, intellectuals and progressive-democratic forces have been consistently saying that “This is Periyar’s soil. The RSS-BJP won’t gain foothold even if they stand upside down”. We have the right to think high of Tamilnadu, which had incessantly fought the brahmanical ideology throughout its history. But, speaking like this is a dangerous trend and it underestimates the fascists and hides our inaction. It is because of this inaction that fascism is slowly taking root in Tamilnadu. To understand this, it is necessary to review the activities of the RSS-BJP with a little consideration.
The suicide of Lavanya, a student from Ariyalur, was a rare opportunity for the BJP, which was waiting like a hawk to incite communal riots in Tamil Nadu. Lavanya, a Class 12 student of Sacred Hearts Higher Secondary School in Michealpatti, in Thanjavur district committed suicide on January 19. The RSS-BJP claimed that Lavanya, a Hindu, committed suicide due to forced conversion and turned the student’s death into a trump card for its evil religious fanaticism.
This issue went viral after the BJP President Annamalai shared a video on his Twitter handle, in which Lavanya can be seen saying that conversion was the reason behind her suicide. Sangh Parivar organisations like Vishva Hindu Parishad (VHP), Hindu Munnani, Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP), including the BJP, came together and protested to “close down the Christian school and bring in a law in Tamilnadu banning conversions”. Prayer houses and churches were attacked in Madurai, Coimbatore and Ramanathapuram.
The saffron mob bent Lavanya’s parents according to its intentions. For two days, they protested without even receiving the girl’s body from the hospital.
Lavanya’s father Muruganandam lodged a complaint with the police alleging that his daughter committed suicide because that she was forced to convert and filed a petition in the Madurai High Court seeking a CBI probe. But the saffron mob’s moves can be understood from the fact that the complaint lodged with the police on January 15 earlier did not mention “conversion”. The BJP had made the family to file a case in the Supreme Court by spending money.
In fact, it was later revealed that the girl had committed suicide because of her stepmother’s cruelty and the excessive workload imposed by the hostel warden. It was revealed that in an earlier video circulated by Annamalai, Muthuvel of VHP was the one who asked the girl whether she was forced to convert and that the video was cut and circulated as per their intent. Lavanya’s statement to the district magistrate also confirmed that conversion was not the reason. After getting all this evidence, the democratic forces exposed the RSS-BJP and tore their faces.
But the BJP-RSS’s attempt can’t be considered a complete failure. The RSS-BJP tried to turn Lavanya’s suicide into a tool to implement their saffron fascist agenda in Tamilnadu. For this, even their national leaders paid direct attention.
National President of BJP J.P. Nadda himself intervened and set up an enquiry committee. The saffron mob created the hashtag ‘Justice for Lavanya’ and made the incident a topic of discussion across the nation. The old Tamilnadu House in Delhi was besieged by the ABVP. Chief Minister Mk Stalin’s residence in Tamil Nadu was also under siege. The ABVP also staged protests in Shimla, Jammu, Gorakhpur, Bhopal and other parts of the country.
They tried to pressurize the DMK by creating attention at a national level. It is to be noted that the Madurai High Court and the Supreme Court helped in moving the case in the direction desired by the fascists. As a result, they have succeeded in their plan to transfer the case to their puppet, the CBI.
Justice G R Swaminathan of the Madurai High Court, who gave the Deshbhakt Award to Maridhas, handed over the case to the CBI and ordered an investigation. What he said during the trial was important.
The judge didn’t condemn the RSS-BJP, which protested under the false propaganda of forced conversions and attacked churches and tried to orchestrate a riot in Tamilnadu by using Lavanya’s death. Instead he condemned SP Ravali Priya who said there was no evidence to prove that conversion was the cause of the death. The news spreaded on the social media that Lavanya had earlier contacted the child protection centre as she could not bear the harassment of her stepmother, in the view that her stepmother might be responsible for the death. Pointing out at this, the judge condemned it as “an act of disrupting the investigation”.
The ABVP had protested across the country, blaming religious conversion for Lavanya’s suicide. The scene of burning an effigy against the Tamilnadu government.
But during the trial, the judge spoke like a member of the Sangh Parivar as if conversion was the reason behind the student’s suicide. Referring to the Conversion to Christianity in the Hindi film “Serious Men” and the Tamil film “Kalyana Agathigal”, he said, “while movies, particularly, Tamil movies are notorious for melodrama and exaggeration, they do contain a kernel of truth”. He also suggested that someone could undertake an exercise into how the area “Michaelpatti” acquired its name.
The DMK government which foresaw the danger appealed in the Supreme Court against the High Court verdict. The TN police argued that the girl’s suicide was being politicised. The police argued that it was not right to transfer the case to the CBI without giving adequate opportunity to the TN police. The Supreme Court insisted to not make this a “prestige issue”.
Annamalai declared that the transfer of the case to the CBI was a victory for the BJP’s struggle. Even though the disharmony campaign of conversion openly disrupted the peace in Tamilnadu, the DMK government did not dare to arrest and imprison the BJP leaders including Annamalai and H Raja. There has not been much debate among the intellectuals about the judiciary being a puppet of the saffron mob.
The recent incident in Coimbatore is a good testimony to the infiltration of saffrons not only in the judiciary but also in the police department. During a meeting organised by ‘Kovai Makkal Otrumai Medai’ at Sivananda Colony on the death anniversary of Gandhi (January 30), members of various outfits including CPM, VCK and TPDK planned to take a pledge under the theme “Let’s pledge to organise people against Hindu fanaticism”.
Coimbatore police, who entered the function, tried to remove the flex banner with the slogan “Gandhi was killed by Hindu fanatics”. There was an argument between the crowd and the police over the issue and then the meeting had to be held only after hiding the word ‘Hindu’ in the text.
In the function that followed, CPM Politburo member G Ramakrishnan recited that the father of the nation “was shot dead by Godse” and RSS “terrorists”. Rathinapuri Inspector Ramesh Khanna had argued that the the references to Godse and the RSS could lead to “law and order issues” and should not be used. Democracy is being denied by the police just because the well-known truth disturbs the minds of the saffron thugs.
But it was during this period that there was a thrilling debate over Chief Minister M K Stalin’s tweet — “No place in Indian soil for Godse’s heirs and their evil thoughts”.
It is the usual practice of the RSS-BJP to indulge in fascist rowdyism in the areas where they have their base. Mob lynchings in the northern states are a tragic form of fascist rowdyism. Though mob lynchings are not on the rise in Tamilnadu as of now, the question arises as to whether the fascist rowdyism is becoming a new normal.
When Modi visited Punjab, the BJP claimed that there was a “security lapse” and protested throughout India. Muthusamy, a trolley fruit vendor, was brutally attacked by the BJP functionaries in Palladam area of Tamilnadu till he fainted in front of the police for criticising Modi during a human chain protest. This incident can be seen as an expression of fascist rowdyism. Similar was the attack on the churches in areas like Ramanathapuram and Coimbatore on Lavanya issue.
We cannot forget that when farmers’ unions burnt an effigy of Modi and protested against the massacre of farmers in UP’s Lakhimpur Kheri, BJP disputed that “if Modi’s effigy is burnt, we will burn Lenin’s effigy in return”. During the local body elections, a Muslim woman wearing burqa in Madurai’s Melur area was threatened by a BJP booth agent and was asked to remove it. These are only significant activities of the RSS-BJP.
The saffron fascists are making efforts to gain a foothold in Tamilnadu more vigorously than ever before; They are growing gradually. But the DMK, which was supported by democratic forces as a force that will oppose the RSS-BJP in Tamilnadu, made no attempt to stop the activities of the RSS-BJP; except for the talk.
Apart from not stopping, the DMK is supporting the growth of fascism. The actions of the Hindu Religious and Charitable Endowments Department is a good example. The DMK has appointed RSS supporter Ramasubramanian as a non-official member to the Advisory Committee of the HR & CE Department.
Though he has been a vocal critic of the BJP, he always proudly identifies himself as a “RSS cadre”. In a media interview, he said, “Illam Thedi Kalvi scheme requires volunteers from the RSS”. From this one can understand what he will do with his office in the department of HR & CE. Moreover, on the Thillai Nataraja Temple issue, he said, “Thillai temple is the property of Dikshitars (brahmin priests) and it is right to throw her (Jayasheela) out of cithrambala medai”. It was him that the “Dravidian” DMK had appointed.
The latest evidence is the action of Sekar Babu, who organised Mahashivarathri celebrations on behalf of the HR & CE Department this time to compete with Jaggi Vasudev. Durga Stalin, wife of the Chief Minister, inaugurated the Shivarathri special programmes held at the Kapaleeswarar temple by lighting a kuthuvilakku (lamp). Rudraksha and Theertham are free for the devotees who attended.
Sekar Babu’s announcement was opposed by the DMK allies like VCK and CPM. “Organising religious functions and carrying out religious propaganda by the government itself is against dravidian ideology” the Deputy General Secretary of VCK Vanni Arasu condemned it. DK leader Veeramani, CPM’s K Balakrishnan and many others condemned this act.
During the local body election campaign, TN BJP President Annamalai said, “We are the opposition in Tamil Nadu. The DMK has been criticising the BJP for whatever they do. We are also criticising Dravidianism. This is an ideological fight”
It’s true. Ideologically, the fascists are on the rise. The DMK is a victim of it, not its competitor. If the danger of saffron fascism is to be defeated at the outset, both ideologically and practically, the revolutionary and democratic forces of Tamilnadu must act vigorously. On the contrary, it is a dangerous trend to stay afloat in the ‘golden age’ spell and just mocking at the RSS-BJP.
மக்கள் போராட்டங்களால் குலுங்கிக் கொண்டிருக்கிறது இலங்கை தீவின் வீதிகள். காலி முகத்திடலுக்கு தனது குண்டர்களை அனுப்பி, அமைதியாக போராடிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை தாக்கி, போராட்ட முகாம்களை கொளுத்திய பாசிஸ்ட் மஹிந்த ராஜபக்சேவை பழிக்குப் பழி வாங்கிவிட்டார்கள் உழைக்கும் மக்கள். அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு, கொழும்பில் உள்ள அரசு இல்லம் உள்ளிட்டு பல இடங்கள் மக்களின் கோபத்தால் தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. இராஜபக்சே கட்சியினர் நாடெங்கும் அடித்து துரத்தப்படுகிறார்கள்.
சிங்கள மக்களை இனவெறிக்கு பலியாக்கி, ஈழத் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சே பதவியைத் துறந்துவிட்டு ஓடியதோடு, தாம் எங்கிருக்கிறோம் என்றே கூற முடியாமல் தலைமறைவாகிவிட்டார்.
“இலங்கையில் இனப் பிரச்சினையைத் தாண்டி, வர்க்க ஒற்றுமை உருவாக வாய்ப்பே இல்லை” என்று கதையளந்தவர்கள், இன்று தமது இனவாத அரசியலின் எதிர்காலத்தை நினைத்து விழிபிதுங்கி நிற்கிறார்கள். சிங்களர், தமிழர், முசுலீம், கிறித்துவர் என அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கைகோர்த்து போராடுகிறார்கள்.
தமது நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆளும் வர்க்கம் பல்லாண்டு காலமாக பேணி வளர்த்த இனவெறி – மதவெறிக் கசடுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் போக்கில் துப்புரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் நமக்கு ஊக்கத்தைத் தந்தாலும், மக்கள் எழுச்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி எடுத்துச் செல்ல புரட்சிகர கட்சி ஒன்றின் தலைமை இல்லாத காரணத்தால், ஏகாதிபத்தியங்கள் இதை தம்முடைய நோக்கத்திற்கேற்ப வரம்புக்குட்படுத்திவிட்டன என்பது கசப்பான மறுபக்க உண்மையாக இருக்கிறது…
000
இலங்கையின் இன்றைய அரசியல் – பொருளாதார நெருக்கடிக்கு காரணம், அந்நாட்டில் 1970-களில் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வி மட்டும் அல்ல; தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடந்து கொண்டிருக்கும் மேலாதிக்கப் போட்டியின் விளைவே.
சீன ஆதரவு கும்பலான ராஜபக்சே அரசை தூக்கியெறிந்துவிட்டு, தமது விசுவாச கும்பலை ஆட்சியில் அமர்த்துவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டே அந்நிய செலாவணி நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தின.
இலங்கையில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தில் தலையிட்டு செல்வாக்கு செலுத்துவமளவிற்கான மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சி இல்லை என்பதால், தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவின் செயல்திட்டம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ராஜபக்சே கும்பலுக்கு நெருக்கடி கொடுத்து பணியவைப்பதற்கு அமெரிக்கா இப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது.
000
சீனாவின் கடன் வலையில் சிக்கித்தான் இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது என்ற ஒரு தலைபட்சமான கருத்தை பெரும்பான்மையான ஆளும் வர்க்க ஊடகங்கள் இடைவிடாமல் கூவிக் கொண்டிருந்தன. அமெரிக்க விசுவாசிகளான எதிர்கட்சிகளும் மஹிந்த ராஜபக்சேவின் சீன ஆதரவு கொள்கைகளாலேயே நாடு இந்நெருக்கடியை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.
இடதுசாரிகள், லிபரல் ஜனநாயகவாதிகளைத் தவிர பெருந்திரளான மக்களிடம் புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வி பேசு பொருளாகவில்லை. பின்னிருந்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப் படவில்லை. எனவே “கோத்தபய அரசு பதவி விலக வேண்டும்” (Gota Go Home) என்ற கோரிக்கையோடு போராட்டம் வரம்புக்குட்படுத்தப்பட்டது. இதை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
ஒருகட்டத்தில், தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்சே அமெரிக்காவின் காலிலேயே விழுந்து சரணாகதி ஆகிவிட்டார். அமெரிக்கா கூறியதை தண்டனிட்டு ஏற்றார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் யோசனையை தொடக்கத்தில் ஏற்காத மஹிந்த ராஜபக்சே, பின்னர் தானே ஐ.எம்.எஃப்.யிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த சீன விசுவாசியும் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பருமான அஜித் நிவார்டு கப்ரால் வெளியேற்றப்பட்டு முன்னாள் ஐ.எம்.எஃப் நிர்வாகியான நந்தலால் வீரசிங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டார். நீக்கப்பட்ட அஜித் நிவார்டு கப்ரால் ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்குவதை கடுமையாக எதிர்த்தவர்; சீனாவிடம் கடன் பெறுவதை ஊக்குவித்தவர் ஆவார்.
“குடும்ப ஆட்சி”, “ஊழல் ஆட்சி” என்று மக்கள் மத்தியில் தமக்குள்ள அவப்பெயரை போக்குவதற்காக, ‘பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள’ என்ற பெயரில் ஏப்ரல் 18 அன்று அமைச்சரவையை புதுப்பித்தார் மஹிந்த. இதற்குமுன் அமைச்சர்களாக இருந்த சமல் ராஜபக்சே, மஹிந்தவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் நீக்கப்பட்டு 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில், ஐ.எம்.எஃப்.யிடம் கடன்பெற தாமதித்தது தவறுதான் என்றும் தம்முடைய சில தவறான முடிவுகள் காரணமாகவே நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சரணடைந்தார் மஹிந்த.
ஆனால், இந்த நாடகங்கள் எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பிரதமரும் அதிபரும் பதவி விலகக் கோரிய போராட்டங்கள் தொடர்ந்த படியே இருந்தன.
சரணடனைந்தாலும், ஆள்வதற்குரிய தார்மீக ஆதரவை மக்களிடம் இழந்துவிட்டபடியாலும் முழுமையாக ராஜபக்சே கும்பலை நம்பத் தயாராக இல்லாததாலும் அமெரிக்காவும் ராஜபக்சேவுக்கு உதவவில்லை. ஐ.எம்.எஃப் உடன் நடந்த பேச்சுவார்த்தையில், 300 முதல் 600 மில்லியன் டாலர்கள் வரை தருவதாக ஒப்புக் கொண்டாலும் ராஜபக்சே பதவி விலகி ஓடும் வரை நிதியை விடுவிக்கவில்லை. இதன் மூலம் நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தியது அமெரிக்கா.
000
தற்போது அமெரிக்க அடிவருடி ரணில் விக்ரம சிங்கே பிரதமராகப் பொறுப்பேற்றாலும் அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சே பதவி விலகவில்லை. புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணிலுக்கு மஹிந்தா ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது முக்கியமானது. இதையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, ஒரு முன் திட்டமிட்ட சூழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கோத்தபய குறிப்பிட்ட காலத்தில் பதவி விலகுவதாக ஒப்புக் கொண்டால், நான் இடைக்கால அரசமைக்க ஒப்புக் கொள்கிறேன் என்று கூறிய எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை கோத்தபய அரசமைக்க அழைக்கவில்லை; மாறாக தன்னுடைய கட்சியில் அவர் மட்டுமே எம்.பி.யாக உள்ள ரணில் விக்ரம சிங்கவை பிரதமராக்கியுள்ளார்.
இதனை எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்கவில்லை. ரணில் விக்ரம சிங் அரசுக்கு ஆதரவளிக்க முன்வருமாறு எதிர்கட்களுக்கு கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஏனெனில், கோத்தபய அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் கைவிடவில்லை. போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் மனநிலையைத் தாண்டி, சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்ளும் துணிச்சல் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனால் ஆட்டத்தின் சூத்திரதாரியான அமெரிக்கா, ரணில் விக்ரசிங்கை வரவேற்றிருக்கிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், “பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் ரணில் பிரதமராக பொறுப்பேற்றுள்ளது முதல் படி” எனக் கூறியுள்ளார். மேலும் ஐ.எம்.எஃப் மூலம் நீண்டகால கடன்களைப் பெற்றுக் கொடுக்க தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மட்டுமல்லாது பிராந்திய வல்லரசாக உள்ள இந்தியாவும் இந்நெருக்கடியைப் பயன்படுத்தி தமக்குரிய பலனை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. இந்த நோக்கத்திலேயே உணவுப் பொருட்கள், பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 3 பில்லியன் டாலருக்கு மேலாக இலங்கைக்கு கடன் கொடுத்துள்ளது.
தற்போது, ரணில் பதவியேற்ற மறுநாளே (13.05.2022), இந்தியாவின் சார்பில் கோபல் பாகலே என்பவர் அரசு தூதராக அனுப்பப்பட்டு ரணில் விக்ரம சிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது மோடி அரசு. தமது ‘உதவி’களுக்கு பிரதிபலனாக இலங்கையை சூறையாடுவதில் அம்பானி – அதானிகளுக்குரிய பங்கை ஒதுக்குவதற்கான பேரம் நடந்திருக்கலாம்.
எனவே, இலங்கையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதே தவிர, அரசுக்கட்டமைப்பிலோ ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை விற்பதிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கோத்தபயவை பதவி விலகச் சொல்லி மக்கள் போராட்டங்கள் தொடர்கிறதே என்று நாம் கேட்கலாம். ஆம், கோத்தபயவை பதவி விலகக் கோருவதோடு போராட்டங்களின் கோரிக்கை வரம்பிடப்பட்டுவிட்டது. என்றாலும்கூட இப்போராட்டங்களின் மூலம் இனவாதத்தை உடைத்துக் கொண்டு உறுதிபடுத்தப்படும் வர்க்க ஒற்றுமையைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கவே செய்கின்றன. அடக்குமுறை துரிதப்படுத்தப்படுகிறது.
போராட்டத்தின் தொடக்கத்தில், அரசுக்கு எதிரான அமைதியான போராட்டங்களை ‘ஆதரிக்கிறோம்’ என்று இலங்கை இராணுவம் தெரிவித்தது. அமெரிக்க தூதரும் மக்கள் போராட்டங்களை ‘ஆதரிப்பதாக’ தெரிவித்தார். ஆனால், காலி முகத்திடல் வன்முறைக்கு மக்கள் பதிலடி கொடுத்ததிலிருந்து ‘வன்முறையாளர்களை’ ஒடுக்க வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது செயல்திட்டம் வெற்றியடைந்துவிட்டதும் இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணம்.
ஆனால், இத்தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் ஒரு புரட்சியை நோக்கி முன்னேறப் போகிறதா என்பதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய கேள்வி. இல்லை என்பதுதான் அதற்கான பதில். ஒருவேளை போராட்டம் தீவிரமடைந்தால், அதைத் தணிப்பதற்காக கோத்தபய பதவி விலகலாம். அவ்வாறு விலகிவிட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும். இந்த அவலநிலைக்கு புரட்சிகர சக்திகள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
எகிப்து, துனிஷியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தமாக இருக்கட்டும், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக ஏற்பட்ட இளஞ்சிவப்பு அலையாக இருக்கட்டும் அவையாவும் ஆட்சி மாற்றத்தைத்தான் கொண்டுவந்தனவே அன்றி, நிலவுகின்ற அரசுக்கட்டமைப்பை அடித்து வீழ்த்திவிட்டு, மக்கள் அரசை நிறுவும் புரட்சியைக் கொண்டுவரவில்லை.
புறநிலை நெருக்கடிகள் எவ்வளவு முற்றி வெடித்தாலும், அவை புரட்சிக்கு சாதகமாகவே அமைந்தாலும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதையே இவை நமக்கு கற்பிக்கின்றன. எனவே மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர மார்க்சிய – லெனினியக் கட்சிக்காக உலகப் பாட்டாளி வர்க்கம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையும் கூட.
“மனித குலத்திற்கு சேவையாற்றுவதே என் நோக்கம் ! நோயாளியின் நலனும், ஆரோக்கியமுமே என் குறிக்கோள் ! நோயாளியின் தனிப்பட்ட பிரைவேசியை நான் பாதுகாப்பேன் ! அவர் உடல் தொடர்பான ரகசியங்களை கண்ணியமாக பாதுகாப்பேன் ! எந்த நோயாளியையும் வயது, நிறம், இனம், குலம், பாலினம், அரசியல், சமூக சார்புகள் ஆகியவை சார்ந்து அணுக மாட்டேன் !” என்பதே மருத்துவ மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் ஹிப்போகிராட்டின் உறுதி மொழியாகும்.
இதை தூக்கியெறிந்துவிட்டு பார்ப்பன மனுதர்மத்தை தூக்கிபிடிக்கும் ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதி மொழி மூலம் மருத்துவ கல்வியை துவங்க வைக்க எத்தனிக்கிறது மோடி அரசு.
மருத்துவம் என்பது கடவுள் சிந்தனைகளின் மறுதலிப்பு ஆகும். விஞ்ஞான பூர்வமானது. எப்போதும் ‘சோதித்தறிதல் – வளர்த்தெடுத்தல் – சோதித்தறிதல்’ என்று இயங்கிக் கொண்டிருப்பது. ‘இது அவ்வளவுதான்’ என்று எங்கும் எப்போதும் தேங்கி நிற்பதில்லை. அதனால்தான் எத்தகைய நாசகார தொற்று வந்த போதும் அதற்குரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனித குலத்தின் அழிவு நிறுத்தப்படுகிறது.
நவீன மனித சமுதாயத்தை ஒரு நூற்றாண்டுக்கு பின்னுக்கு தள்ளி மூடத்தனத்தில், மூடசிந்தனைகளில் ஊறிப்போன, ஒரு பார்ப்பன மேலாண்மை மனுதர்ம சமூக அமைப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அத்தனை அரசு நிறுவனங்களையும் அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொண்டிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில்தான் கல்வி நிறுவனங்களிலும் மாறுதலை செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நரித்தனமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில், ஒன்றுதான் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் உறுதியேற்பு நிகழ்ச்சியில் சமீபகாலங்களில் நடைபெறும் மாறுதல்கள்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு அகில இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India) கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையம் மருத்துவத் துறையை காவி – பார்ப்பன மயமாக்கும் வேலைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக கண்டனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேதான் உள்ளன.
அதற்கேற்ப மருத்துவ கல்லூரிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத உறுதிமொழி தேங்கிய குட்டையில் அழுகிப்போய் கிடக்கும் தண்ணீரில் அருமருந்து இருப்பதாக ஏமாற்றுகிறது. ‘எல்லாம் அவன் செயல்’ என்று மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆண், பெண் பாலின வேறுபாட்டை முக்கியத்துவமாக்குகிறது. பார்ப்பனிய மனுதருமத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிறது. மனிதகுல அழிவை சாத்தியமாக்குகிறது.
‘சாரக் ஷாபாத்’ என்ற மருத்துவ உறுதிமொழியை திணிப்பதற்கு ‘இந்திய மருத்துவ அசோஷேசியன்’ ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது ! காரணம், சாரக் ஷாபாத் உறுதிமொழியானது, ‘மருத்துவத்தை சாதிய மற்றும் பாலியல் கண்ணோட்டத்துடன் அணுகிறது’ என்று அது நம்பியது.
மொழி என்ற வகையில் மட்டுமல்ல உள்ளடக்கம் உணர்த்தும் பாடம் என்ற வகையிலும் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
பாராளுமன்றத்தால் இதற்காக நிறைவேற்றப்பட்டிருக்கும், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, மருத்துவத்துவ துறையின் சகலத்தையும் கட்டுப்படுத்ததக்க அதிகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கிறது. அதாவது, இதன்மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ பட்டங்களை கொடுப்பதும் தேசிய மருத்துவ ஆணைய சட்ட விதிகளின் படியாக கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரங்களை குவித்து ஒரு சர்வாதிகார ஆட்சிமுறையை பா.ஜ.க ஒன்றிய அரசு முன்னணுமானிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஹிப்போகிரடிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை ஏற்க பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வந்தது. இந்த நிலையில், இதற்கு பல மாநிலங்களிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அதனை தொடர்ந்து மக்களவையில் மார்ச் 25-ம் தேதி ஒரு கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் மருத்துவர் பாரதி பவார் அவர்கள் “தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ‘இப்போகிரடிக்’ உறுதிமொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை கட்டாயமாக்கும் எவ்வித பரிந்துரையும் தற்போதைக்கு இல்லை” என்று குறிப்பிட்டார்.
ஆனால், அதற்கு மாறாக தேசிய மருத்துவ ஆணையம் மார்ச் 31-ம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், “ஒவ்வொரு மாணவரும் மருத்துவக் கல்வியில் சேரும் பொழுது, மாற்றியமைக்கப்பட்ட ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது”. என் இருந்தது ! மேலும், இந்த சுற்றறிக்கையானது அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிற்காக வெளியிடப்படும் சுற்றறிக்கை என்றும், இதை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது”. இதன் மூலம் தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாக மருத்துவ கல்வி நிறுவனங்ளை வலியுறுத்தியது.
‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை MBBS மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்துடன் சேர்த்து இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு வெளியிடப்பட்ட மார்ச் 31-ம் தேதியிட்ட சுற்றறிக்கையானது, தமிழக அரசிற்கும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும். மேலும், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும்.
அப்போதே, இந்த ‘சரக் சப்த்’ உறுதி மொழியை யார் மாற்றியமைத்தார்கள்? இப்போது திடீரென உறுதிமொழியை மாற்றுவதற்கான தேவைகள் என்ன என்பதை பற்றியெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இது பற்றிய விளக்கங்களை கேட்டு இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கை வெளியானதிலிருந்து, கடந்த ஒரு மாதத்தில், ‘சர்ச்சைக்குரிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்க வேண்டாம்’ என்று எவ்வித சுற்றறிக்கையோ, ஆணையோ தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடமிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு (டீன்) எழுதப்பட்டதாக தெரியவில்லை. அதே போல தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமும், ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்கத் தேவையில்லை’ என்று மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தவில்லை.
குறைந்தபட்சம், தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடமிருந்தோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திடமிருந்தோ, தமிழக அரசின் சுகாதாரத் துரையிடமிருந்தோ, ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி ஒரு கடிதம் எழுதியிருந்தால் கூட இவ்வளவு பெரிய சர்ச்சை வந்திருக்காது.
மருத்துவக் கல்வியில் சமஸ்கிருத உறுதி மொழி விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக வெடிக்க, இது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, உரிய நேரத்தில் மறுப்பு தெரிவிக்காமல், கள்ளத்தனமாக அமைதி காத்த மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபுவும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யனும், சுகாதராத்துறை முதன்மை செயலாளர் இராதா கிருஷ்ணனுமே பொறுப்பாவர். குறைந்தபட்சம் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த சுற்றறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுடைய கவனத்திற்கு கொண்டு போய் விவாதித்து இருக்க வேண்டும்!
உயர்மட்டத்திலிருக்கும் பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து திராவிட மாடலுக்கு எதிராக செயல்பட்டு பார்ப்பன மேலாண்மையை நிறுவப் போகிறார்கள் என்பதே கண்கூடாக தெரியும் உண்மை. இதனால்தான் சத்தமில்லாமல் திருவள்ளூர் ராமநாதபுரம் மதுரை மருத்துவ கல்லூரி உட்பட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசின் எதிர்ப்பு முடிவிற்கு மாறாக ‘மகரிஷி சாரக் ஷாபாத்தின்’ சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டு உள்ளது! அதில் சில கல்லூரிகளில் சுகாதார அமைச்சரும் பங்கேற்றிருப்பதாக செய்திகள் உள்ளன. குறிப்பாக, திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில். அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் கிளம்பவில்லை. அப்படியென்றால் மக்கள் கவனத்துக்கு வராத வகையில் ஆர்.எஸ்.எஸ் வேலைத்திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆனால், இதில் திராவிட மாடல் ஆட்சி சம்பந்தபட்டிருப்பதால் கூட்டணி கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன. இதனுடைய விளைவு பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் வளரும் வாய்ப்புகளை தங்கத்தட்டில் வைத்து தருகின்றன. தமிழகத்தில் பெரியார் மரபை காப்பாற்றுபவர்கள் மிக நுணுக்கமாக கவனித்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
மதுரை மருத்துவ கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நிதியமைச்சர் இந்த வேறுபாட்டை கண்டுபிடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்ததால் இது வெளியுலகுக்கு தெரிந்தது பொதுவெளியீல் இதைப்பற்றி விவாதங்களும் வெடித்தன.
திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் மா.சுப்ரமணியன் அவர்கள் மருத்துவ கல்வியின் மனித நேயத்திற்கு முற்றிலும் மாறான, பிற்போக்குத்தனமான இந்த போக்கு குறித்து இத்தனை நாட்களாக அமைதி காத்தது ஏன்? தங்களது அரசின் கோட்பாடு தெரியவில்லையா? அல்லது இதிலிருக்கும் ஆபத்து புரியவில்லையா? அல்லது வழக்கம்போல ‘அதிமுக ஆட்சி முதற்கொண்டு முதன்மை செயலராக இருக்கும் ராதாகிருட்டிணன்’ ஆலோசனைப்படி பேசாமல் இருந்து விட்டாரா?
இதுவாவது பரவாயில்லை. இதைப்பற்றிய கேள்விக்கு மருத்துவக் கல்லூரி டீன் சொன்ன பதில் “மெடிகல் கவுன்சில் வெப்சைட்டில் ஆங்கிலத்தில் இருந்த்தால் அதுதான் சரியானது போலிருக்கிறது என்று மாணவர்தலைவர் எடுத்து டீனிடமோ மூத்த புரொபசர்களிடமோ (அதாவது நிர்வாகத்தில் யாரையும்) கலந்தோலாசிக்காமல் தன்னிஷ்டத்துக்கு அந்த மாணவர் தலைவர் வாசித்துவிட்டார். எங்களுக்கே பிறகுதான் தெரியும்” இதைவிட நிர்வாகத்தில் பார்ப்பன் மயம் வேரூன்றுவதை காட்ட சாட்சியம் வேண்டுமா?
இதைவிட பெரிய கேலிக்கூத்து ஐந்து மாணவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்பதாக விளக்கம் அளித்தது.
அதையடுத்து தனிப்பட்ட முறையில் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் மதுரை டீனுக்கு கொடுத்த தண்டனை ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்ததுதான் இது எல்லாவற்றுக்கும் மேலான வேடிக்கை..
இதன்மூலம் அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
தன்னுடைய அணியிலிருக்கும் ஒருவரை இழக்க விரும்பாமல் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் பின்னணியில் தகிடுதத்தங்கள் அரங்கேற்றி டீனை அதே இடத்தில் அமர வைத்துவிட்டன. எப்படி, சமஸ்கிருத மந்திரத்தை ஆங்கிலத்தில் மாற்றி எழுதி மாணவர்கள் மத்தியில் படிக்க வைத்தார்களோ அதைப்போலவே இனி ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் வெவ்வேறு வழிகளில் அரங்கேறப்போவது நிச்சயம்.
நமது முதல்வர் ‘தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகளில் நீட்டை ஒழிக்கப்போவதாக’ சபதமேற்கும் வேளையில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழியாம்!. திராவிட மாடல் ஆட்சியில் எறும்பு புற்றுகளுக்குள் கருநாகங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.. தலையெடுத்த ‘ஒரு பாம்பையும்’ நசுக்காமல், திராவிட மாடல் ஆட்சி வெற்று சபதங்களை மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறது.
“இதனை மேலும் சர்ச்சையாக ஆக்க வேண்டாம்” என்கிறார் அமைச்சர். பாவம் சுகாதார துறை அமைச்சர்! இவர் இரண்டாம் தலைமுறையாக இருக்க கூடும். பெரியாரின் மரபுகள் போராட்டங்கள் சமூகநீதிகள் ஆகியவற்றில் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கலாம். இதனால் வருகின்ற மருத்துவர்கள் ‘வந்தே மாதரம்; ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் சமுதாய அரங்கில் நுழைவதற்கான சாத்தியங்களை நினைத்து பாருங்கள்!
உயர்மட்டத்தில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் காவி – பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளை அம்பலப்படுத்தி பொதுவெளிகளில் போராட்டம் துவங்கி நடத்தப்பட வேண்டும்.
இவர்களை நம்பி ஸ்டாலின் சாதிப்பார் என்று சமூகநீதி போராளிகள் வெறுமனே இருக்காமல் விழிப்புணர்வோடு வீதியிலிறங்கி போராடவில்லையென்றால் பெரியார் மண் என்பது வெற்று கோஷமாகி விடும். இல்லையென்றால் அடுக்கடுக்கான பிரச்சினைகளை பொதுவெளியில் பரவவிட்டு விவாதங்களை திசைதிருப்பி தனது தளமாக மாற்றுவதில் ஆரிய – பார்ப்பன கூட்டம் வெற்றி அடைவதற்கான சாத்திய கூறுகளை மறுப்பதற்கில்லை.