Tuesday, June 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 216

மோடியின் வேளாண் சட்டங்கள் 30 ஆண்டுகளுக்கு முன்னரே வாஷிங்டனில் தீர்மானிக்கப்பட்டவை!

பார்ப்பன பாசிஸ்டுகளின் ட்ரோல்களும், தற்போது அந்த திருப்பணியில் இணைந்துள்ள சச்சின் போன்ற கிரிக்கெட், சினிமா பிரபலங்கள் பலரும் தமது சமூக வலைத்தள பக்கங்களில் மோடிக்கும் பார்ப்பன பாசிச பிஜேபி கும்பலுக்கும் ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். ஆனால் அதிர்ச்சியளிக்கும் செய்தி என்னவென்றால் வெளிநாட்டினர் யாரும் இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்ற இவர்களது வாதம்தான்.

இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாட்டவர்கள் மூக்கை நுழைப்பது தவறு என்று பொங்கி எழும் இவர்கள், வேளாண் சட்டங்கள் அனைத்துமே 30 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் வரைவாக உருவாக்கப்பட்டு தற்போது இங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்

மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் 18-ம் தேதி நடந்த ஒரு விவசாய மாநாட்டில் வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் மோடி பேசிய போது :

“25-30 ஆண்டுகளுக்கு முன்பு செய்யதிருக்க  வேண்டிய  காரியங்களை இப்போது செய்ய நாங்கள் நிர்பந்திக்கப்பட்டுள்ளோம்… விவசாயிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய சட்டங்கள் சில காலமாக செய்திகளில் உள்ளன.  இந்த விவசாய சீர்திருத்தங்கள் ஒரே இரவில் வரவில்லை. இந்த நாட்டின் ஒவ்வொரு அரசாங்கமும் கடந்த 20-22 ஆண்டுகளில் மாநில அரசுகளுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன”என்று கூறினார்.

ஆனானப்பட்ட மோடிக்கே நிர்பந்தமா! அதனால்தான் விவசாய திருத்த சட்டங்களைப் போட்டாரா? எங்கள் தலைவரை நிர்பந்தப்படுத்தும் ”தேச விரோதி” யார் என்று இந்த கிரிக்கெட் வீரர்களும் பாலிவுட் நடிகர்களும் இந்நேரம் பொங்கியிருக்க வேண்டும்  அல்லவா ?

மோடி சொன்னது உண்மையா? அல்லது மக்களை திசை திருப்ப சொன்ன பொய்யா?
வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்ப்போம். 1991-லேயே உலக வங்கி இந்தியாவின் பொருளாதார நெருக்கடி தீர என்று சில கட்டளைகளை இந்தியாவிற்கு இட்டுள்ளது. அதற்குப் பெயர் “இந்தியா: நாட்டின் பொருளாதார ஒப்பந்தத் தொகுதி” பகுதி1, 2.

அந்த கால கட்டத்தில் அதாவது, 1990-1991-களில் பன்னாட்டுக் கார்ப்பரேட்டுகளின் பகாசுர சுரண்டல் மற்றும் பங்குச் சந்தை சூதாட்டங்களால் நாடு திவாலாகி, பெரும் அன்னியச் செலாவணி நெருக்கடியில் சிக்கியிருந்தது. இழந்த பொருளாதாரத்தை மீட்டெடுக்கவென ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இயங்கும் உலகவங்கியுடன் இந்திய அரசு போட்டுக் கொண்டது.  யார் இந்தியப் பொருளாதாரத்தை படுகுழியின் தள்ளினார்களோ, அவர்களே அதனை ‘மீட்பதற்கான’ வழிமுறைகளையும் வகுத்துத் தந்தார்கள்.

அப்படி 30 ஆண்டுகளுக்கு முன்னர் வகுத்துத் தரப்பட்ட ’வழிமுறைகள்’ தான் இந்தியாவில் ஒவ்வொரு ஆட்சியாளர்களாலும் படிப்படியாக சட்டத் திருத்தங்களாகவும், புதுப் புது சட்டங்களாகவும் கொண்டுவரப்பட்டன. அப்படி நடைமுறைப்படுத்த ‘நிர்பந்திக்கப்பட்ட’ சட்டங்களைத் தான் தாம் இப்போது கொண்டுவந்திருப்பதாக மத்தியப் பிரதேசத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பேசியிருக்கிறார் மோடி. (மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது)

அப்படி, உலகவங்கியின் வழிகாட்டுதலின் கீழ் நிர்பந்திக்கப்பட்ட சட்டங்களில் ஒன்றுதான் இந்த வேளாண் சட்டங்கள்! இதே போல, தொழிற்சங்க சட்டத் திருத்தம், மின்சார சட்டத் திருத்தம், பொதுத்துறைகளை விற்பனை செய்யும் திட்டம், காப்பீட்டுத் துறையை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டம், உள்நாட்டுத் துறைகளில் அன்னிய மூலதனத்துக்கான ஒதுக்கீடு, வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் சட்டம், கல்வியில் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களை அனுமதிப்பதற்கான சட்டம் என தொடர்ந்து உலகவங்கியின் ஒப்பந்தத் தொகுதிகளை சட்டங்களாக அமல்படுத்தி வருகிறது மோடி அரசு.

இது குறித்து “கவுன்ட்டர்-கரண்ட்ஸ்” எனும் இணையதளம் விரிவாக ஒப்பிட்டு அம்பலப்படுத்தி எழுதியுள்ளது. இதனைப் படிக்கும் போதே நாட்டையும் மக்களையும் நேசிக்கும் யாருக்கும் ரத்தம் கொதிக்கும். ஆனால் மோடியோ எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை, உலக வங்கியின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதுதான் முக்கியமானது என்று கருதுகிறார்.

அப்படி உலக வங்கியின் ஓப்பந்தத் தொகுதியில் பரிந்துரைகள் என்ற பெயரில் போடப்பட்ட உத்தரவுகளில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.

1. உரங்கள், நீர், மின்சாரம், வங்கிக் கடன்களிலான விவசாய மானியங்களை வெட்டு – விவசாயத்தை வெளிநாட்டு வர்த்தகத்திற்குத் திறந்து விடு

அ) நான்கு ஆண்டுகளில் உரத்திற்கான அனைத்து மானியங்களையும் அரசாங்கம் அகற்ற வேண்டும். இந்தியாவின் உரத் தொழிலுக்கான பாதுகாப்பைக் ஒழிக்க வேண்டும், மேலும் உள்நாட்டு உரங்களின் விலையை உலகச் சந்தை விலைகளுக்கு நிகராக்க வேண்டும்; உரத் தொழிற்சாலைகளை “மறுசீரமைத்தல்” (அதாவது, உர ஆலைகளை மூட வேண்டும்). உரங்களை விற்பனை செய்வதில் அரசாங்கத்தின் தலையீடு மற்றும் ஒழுங்குபடுத்துதலை அகற்ற வேண்டும்.

ஆ) வங்கிக் கடனில் விவசாயத்திற்காக என்று ஒரு பங்கு ஒதுக்கி வைக்கப்படும் நடைமுறையை – அத்தகைய ‘முன்னுரிமைத் துறைக்கான’ கடன் ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும். மேலும் விவசாய கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வேண்டும். விவசாயத்திற்கான அனைத்து மானியங்களையும் ஒழிக்க வேண்டும்.

இ) நீர்ப்பாசனம், கால்நடை மற்றும் பிற விரிவாக்க சேவைகள் போன்ற விவசாயத்திற்கு வழங்கப்படும் எல்லா சேவைகளுக்கான கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டும். இவற்றில் அதிகளவில் தனியார் துறை ஈடுபாடு மற்றும் முதலீட்டை ஊக்குவிக்க முன்னுரிமை தந்து பட்டியலிட வேண்டும்.

ஈ) இந்திய விவசாயத்தைப் பாதுகாப்பதற்காக தற்போதுள்ள வெளிநாட்டிலிருந்து விவசாய விளைபொருட்களை இறக்குமதி செய்வதற்கான தடைகளை முற்றாக அகற்ற வேண்டும். ஒரு தொடக்கத்திற்காக சமையல் எண்ணெய் வித்துக்களின் இறக்குமதிக்கான தடையை உடனடியாக நீக்க வேண்டும். விவசாய விளைபொருள் ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளையும் அகற்ற வேண்டும்.

உ) விதைகளில் தனியார் ஆராய்ச்சியை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும், விதைகளை தனியார் விற்பனை செய்வதற்கான விதிமுறைகளை நீக்க வேண்டும், விதைகளுக்கான மானியங்களை அகற்ற வேண்டும்.

ஊ) விவசாயத்திற்கான மின்சார கட்டணங்களை வேளாண்மை அல்லாத மின் கட்டணங்களின் விலைக்கு உயர்த்த வேண்டும்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ பிரதம மந்திரி பயிர்க் காப்பீடு திட்டம் : கார்ப்பரேட்டுகளுக்கு நேரடி மானியம் !

2. பொது கொள்முதல் மற்றும் உணவு விநியோகம் முழுவதையும் முற்றாக அகற்றுவதை நோக்கி முன்னேறுதல் :

அ) “இந்திய உணவுக் கழகம் (எஃப்.சி.ஐ) உரிமம் பெற்ற முகவர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களுக்கு துணை ஒப்பந்தம் செய்வதன் மூலமும், தானியங்களை விவசாயிகள் சேமித்து வைப்பதற்கான விலை சலுகைகளை வழங்குவதன் மூலமும் தானியங்களை வாங்குதல், போக்குவரத்து மற்றும் சேமிப்பதில் இந்திய உணவுக் கழகத்தின் பெரிமளவிலான நேரடி பங்கைக் குறைக்க வேண்டும்.” (அதாவது கார்ப்பரேட் பதுக்கல்காரர்களுக்கும் (சேமிப்பாளர்கள்),  கார்ப்பரேட்  ‘விவசாயிகளுக்கும்’ சலுகைகள் வழங்கி எஃப்.சி.ஐ.யின் பணியை குறைக்க வேண்டும். சுருக்கமாக எஃப்.சி.ஐ.-ஐ ஒழிக்க வேண்டும் – மொழி பெயர்ப்பாளர் குறிப்பு).

ஆ) இந்தியா ஒரு சிறிய அளவில் மட்டுமே உணவு தனியங்களை சேமித்துப் பராமரிக்க வேண்டும். பற்றாக்குறை ஏற்படும் நேரங்களில் தேவையானவற்றை உலகச் சந்தையில் வாங்க வேண்டும். விளைச்சல் குறைந்து பற்றாக்குறை ஏற்படும் ஆண்டுகளில் உலக சந்தையில் வாங்குவதற்கு அந்நிய செலாவணியை கையிருப்பாக வைத்திருக்க வேண்டும். (அன்னிய செலாவணி பற்றாக்குறை நெருக்கடியில் இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது என்பதை இங்கு நினைவூட்ட கடமைப்பட்டுள்ளோம் – மொழிபெயர்ப்பாளர்)

இ) விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை அரசே நிர்ணயித்து வேளாண் விளைபொருளை வாங்கும் திட்டமான பொதுக் கொள்முதல் திட்டம் முற்றாக ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.

ஈ) ஏழைகள் என்று அதிகாரப்பூர்வமாக வரையறுக்கப்பட்டவர்களை மட்டுமே குறிவைத்து உணவு மானியங்களை குறைக்க வேண்டும். (வறுமைக் கோட்டுக்கு கீழுள்ளவர்களுக்கு மட்டுமே ரேசன் கடைகளில் பொருள் வழங்கும் திட்டம் – மொழி பெயர்ப்பாளர்)  “தேவையில்லாதவர்களுக்கு” அரசின் நலத் திட்டங்கள், ​​ரேசன் கடை மூலம் பொருட்கள் வழங்கப்படுவது மறுக்கப்பட வேண்டும். அரசாங்கம் “தனியார் துறை விநியோகம் உட்பட மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை அடைவதற்கான புதிய முறைகளைப் பயன்படுத்த வேண்டும்.” (குடும்ப அட்டையை ஆதாருடனும் வங்கிக் கணக்குடனும் இணைப்பது – அரசு உதவித் திட்டங்களுக்கான பணம் வங்கியில் நேரடியாக போடப்படுவது – எரிவாயு மானியம் ஆதார் மூலம் இணைக்கப்பட்டு வங்கியில் பணம் செலுத்தப்படுவது என சுற்றிவளைத்து செய்யப்படுபவற்றை இங்கு நினைவுகூரவும் – மொழி பெயர்ப்பாளர்)

உலக வங்கியின் இந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகையில், இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரங்கள், பெரும்பான்மையான மக்களின் ஊட்டச்சத்து தேவைகள் மற்றும் இத்தகைய விரிவான தாக்குதலை செயல்படுத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் எதிர்கொள்ளும் அரசியல் சிரமங்களை எல்லாம், உலக வங்கியின் பரிந்துரைக்கப்பட்ட கால அட்டவணை சிறிதும் பொருட்படுத்துவதில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் பொருளாதார இறையாண்மை குறித்து இம்மியளவும் கவலைப்படவில்லை. ஆயினும்கூட, இந்த வழிகாட்டுதல்கள் என்ற பெயரிலான உத்தரவுகளில் பெரும்பாலானவற்றை, அடுத்தடுத்த இந்திய அரசாங்கங்கள் செயல்படுத்த முனைவதும், மக்களின் எதிர்ப்பு அதிகரித்து ஓட்டு போய்விடுமோ எனத் தயங்கி நிற்பதும், எஜமானனின் உத்தரவை நடைமுறைப்படுத்தாவிட்டால் சிக்கல் என மீண்டும் செயல்படுத்த முனைவதும், மக்கள் அதிருப்தியையும் எதிர்ப்பையும் எதிர்கொண்டு அவ்வப்போது ஓரளவு பின்வாங்குவது எனவும் ஊசலாட்டமாகவே இருந்தன.

விவசாயம் சார்ந்த இத்தகைய ‘பரிந்துரைகளால்’ பின்வரும் விளைவுகள் ஏற்பட்டு, விவசாயிகளை அவை விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கின்றன.

* பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் உரங்களுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டு, அவற்றின் விலைகள் கட்டுப்பாடு அகற்றப்பட்டதானது, இவற்றை விவசாயிகளால் வாங்கி பயன்படுத்த முடியாமல் அவற்றின் பயன்பாட்டில் கூர்மையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. இதனால் மண்ணின் ஊட்டச்சத்து சமநிலைக்கு தீங்கு விளைந்து விவசாயம் அழிகிறது. (விளைச்சல் குறைந்து விவசாயம் கட்டுபடியாகாமல் தற்கொலைகள் அதிகரிப்பதை இங்கு நினைவு படுத்துகிறோம். – மொ.பெ.)

* விவசாயத்திற்கு வங்கிகள் கடன் தருவது மிகப்பெருமளவு குறைந்து போனது. இதனால் விவசாயிகள் கந்து வட்டிக்காரர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிப் போய் 1990-களின் பிற்பகுதியிலிருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலைகளுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

* விவசாயத்திற்கான பொதுத்துறை விரிவாக்க சேவைகள் 1990-களின் நடுப்பகுதியிலிருந்து 2000-களின் நடுப்பகுதி வரையில் சரிந்தன; அதன்பிறகு ஒரு பகுதி மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது, ஆனால் இந்த சேவைகள் இன்னும் போதுமானதாக இல்லை.

* விவசாய இறக்குமதிகள் மீதான அளவு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன, விவசாய இறக்குமதிகள் மீதான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, இந்தியா அதன் சமையல் எண்ணெய்களில் பாதி அளவை இறக்குமதி செய்கிறது. மற்ற உற்பத்திகளும் இறக்குமதி அச்சுறுத்தலை எதிர்கொண்டன. (இன்று சமையல் எண்ணெய் விலை உயர்ந்து கொண்டே போவதற்கு இறக்குமதியும் ஒரு காரணம்).

* ஒரு காலத்தில் ஆதிக்கம் செலுத்திய பொதுத்துறை விதை நிறுவனங்கள் விதைகளுக்கான சந்தையில் இருந்து அரசாங்கத்தால் படிப்படியாக விலக்கப்பட்டன; தனியார் துறை விதை நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. (விதைகளின் விலையை விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள். மயக்கமடைவீர்கள் – மொ.பெ)

* சமீபத்திய மின்சாரம் (திருத்தம்) மசோதா – 2020, அனைத்து மின்சார மானியங்களையும் ஒரேயடியாக அகற்ற முன்மொழிகிறது, இது ஏற்கெனவே நெருக்கடியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் பெரும் சுமையாக மாறுகிறது. (இலவச மின்சாரம் ரத்தாகுவதன் காரணமும் இதுதான்)

இந்தியாவின் உணவுப் பொருளாதாரத்தின் கடுமையான மறுசீரமைப்பை, இப்போது மோடி அரசாங்கம் கோவிட்-19 நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு செயல்படுத்த வெறித்தனமான முறையில் இயங்கி வருகிறது. பொது கொள்முதல் மற்றும் உணவு விநியோகத்தை அகற்றுவதற்காகவே விவசாயம் தொடர்பான மூன்று சட்டங்கள் சமீபத்தில் பாராளுமன்றத்தால் ‘நிறைவேற்றப்பட்டன’.

நிச்சயமாக, உலக வங்கியின் வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவது மிகவும் முன்பே தொடங்கிவிட்டது. 1997-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இலக்கு வைக்கப்பட்ட பொது விநியோக முறை “வறுமைக் கோட்டுக்கு மேலே” உள்ளவர்களை பொது விநியோக முறையிலிருந்து வெளியேற்றியது. இதன் மூலம் படிப்படியாக ரேசன் கடைகள் முழுவதையும் மூடுவதற்கு முனைகிறது. (ஆதார் இல்லாமல், குடும்ப அட்டையுடன் ஆதாரை இணைக்க முடியாமல், ரேசனில் பொருள் வாங்க முடியாமல் ஒரிசாவில் ஏழைகள் இறந்து போன செய்தியை இங்கு நினைவு கூரவும் – மொ.பெ)

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

செயல்படாத பிரதமர்! துடிப்பான முதல்வர் !

வாஜ்பாய் ஆட்சியில், கார்ப்பரேட்டுகளுக்கான கட்டுமானச் சேவையான தங்க நாற்கரச் சாலைகளை அமைத்து, அதையே ’ஒளிரும் இந்தியா’ என கூவிப் பார்த்தும் இருளில் தள்ளப்பட்ட விவசாயிகள் அந்த ஆட்சியை நம்பவில்லை. விளைவு! ஆட்சி போனது. பின்னர் வந்த காங்கிரசு, உலக வங்கி முன்தள்ளிய சீர்திருத்தங்களை தொடரப் பார்த்து, மக்களின், எதிர்க் கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக சற்று பின்வாங்கியது. இதனால்தான் கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்படாத பிரதமர் என மன்மோகன் சிங்கை சாடி நிராகரித்தன.

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் தனது இசுலாமிய வெறுப்பை படுகொலைகளாக அரங்கேற்றிய அன்றைய குஜராத் முதல்வர் மோடி, கார்ப்பரேட்டுகளுக்கு அள்ளிக்  கொடுத்து வந்ததைக் கொண்டாடி, அவரை ‘துடிப்பான முதல்வர்” எனப் புகழ்மாலை சூட்டிய கார்ப்பரேட்டுகள் பிரதமர் பதவியில் அவரை அமரச் செய்தன. தனது கட்சியின் நிகழ்ச்சி நிரலான இசுலாமிய வெறுப்பையும் நடைமுறைப்படுத்தலாம், அதே நேரம் தனது எஜமானர்களுக்கும் சேவை செய்யலாம் என்பதைத்தான் தனது நடைமுறை மூலம் மோடி செய்து வருகிறார்.

எஜமானர்களின் விசுவாசமான அடியாள் !

உலக வங்கித் திட்டங்களை வரிக்கு வரி வெறித்தனமாக செயல்படுத்துவதில் மோடிக்கு நிகர் மோடிதான். பணமதிப்பழிப்பு நடவடிக்கை முதல் தற்போதைய வேளாண் திருத்த சட்டங்கள் வரை இப்படி வெறித்தனமாக செயல்படுத்தி தனது கார்ப்பரேட் எஜமானர்களை மகிழ்வித்து வரும் மோடிக்கு ஆதரவாகத்தான் சினிமாக் கழிசடைகளும் கிரிக்கெட் பிரபலங்களும் இருக்கின்றனர்.

மோடியின் பொய்கள், அவதூறுகளையே இம்மி பிசகாமல் இவர்கள் தமது சமூக வலைத்தள கணக்குகளில் எதிரொலிக்கின்றனர். விவசாயிகளால் எதிர்க்கப்படும் இந்த வேளாண் சட்டங்களைப் பற்றிய மேற்கூறிய உண்மைகளை கிரிக்கெட் பிரபலங்களும், சினிமா நாயகர்களும் பேசுவார்களா என்ன? அதை மூடி மறைக்கதான் சர்வதேச சதி! காலிஸ்தான் ஊடுருவல்! மாவோயிஸ்டுகள் ஊடுருவல்! என நாளொரு பொய்யும் பொழுதொரு அவதூறையும் கிளப்பி விடுகின்றனர்.

வரலாறு திரும்பும் !

பிரெஞ்சுப் புரட்சிக்கு முன்பு ரொட்டியின்றி மக்கள் போராடிய போது ‘ரொட்டியில்லையென்றால் என்ன? கேக் சாப்பிடச் சொல்லுங்கள்!’ என்று அந்த ராணி கூறினாராம். அதற்கு பதிலாகத்தான் அந்த மக்கள் கில்லட்டினைக் கொண்டு வந்தார்கள்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் பிறந்தது. எங்கள் நிலம் எங்களுக்கு வேண்டும் என விவசாயிகள் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற அமைதியாக கோரிக்கை வைத்து போராடி வருகின்றார்கள். சட்டம் போட்டது போட்டதுதான் என அரியணையிலிருந்து கொக்கரிக்கிறார்கள் ஆட்சியாளர்களான கார்ப்பரேட் காவி பாசிஸ்டுகள்.

வரலாறு திரும்பும்! அப்போதுதான் இங்கு ஜனநாயகம் பிறக்கும்.

இராமையா
ஆதாரம் : countercurrents.org

அரச பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட தோழருக்கு அஞ்சலி செலுத்தினால் ஊபா சட்டமா ?

தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் தோழர் பாலன், சீனிவாசன், செல்வராஜ் ஊபா சட்டத்தில் கைது மக்கள் அதிகாரம் கண்டனம்

டந்த 2019-ம் ஆண்டு மாவோயிஸ்ட் தோழர் மணிவாசகம் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதற்காக சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழுத் தோழர் கோ.சீனிவாசன், தோழர் அனுப்பூர் செல்வராஜ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

தோழர்கள் பாலன், கோ. சீனிவாசன்

ரவுடிகளும் கொலைகாரர்களும் பகிரங்கமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்ய முடியாத போலீஸ், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தோழரின் இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்பதற்காக கைது செய்திருக்கிறது.

படிக்க :
♦ ஊபா கைதுகள் : விசாரணைக் காலம் என்பதே தண்டனைக் காலம்தான் !
♦ ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

அவர்கள் மீது Cr. 14/2020, IPC 188, 120b, 121, 121A (read with Unlawful Activities Prevention act), UAPA section 10, 13, 15 & 18IPC 188 – Disobedience to order duly promulgated by public servant ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அனைத்து முற்போக்கு ஜனநாயக இயக்கங்களும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.

ஏற்கெனவே பாசிச பாஜகவுக்கு எதிராக இருப்பவர்களை ஊபா சட்டத்தின்கீழ் கைது செய்து சித்திரவதை செய்கின்ற மோடியின் அடியாளான எடப்பாடி அரசு, தமிழகத்திலும் இப்படிப்பட்ட ஜனநாயக விரோத செயலை அரங்கேற்றி உள்ளது. இக்கைது நடவடிக்கையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை .
99623 66321

தமிழகத்தின் கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிப்பு!

1

த்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வருகிறது கேந்திர வித்யாலயா பள்ளிகள். தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 49 பள்ளிகள் உள்ளன.

இந்த பள்ளிகளில் தமிழ் கற்றுத் தரப்படுகிறதா, தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்களா, என்ற பல கேள்விகளை முன்வைத்து தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் 15-ஆம் தேதி 16 கேள்விகள் கேட்டிருந்தார். அதற்கு ஜனவரி 25-ஆம் தேதி கேந்திர வித்யாலயா நிர்வாகம் சார்பாக பதில்கள் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழிக் கட்டாயப்பாடம் இல்லை என்று கூறியிருப்பது, தமிழகத்தில் மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
♦ தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு

தமிழ் மொழிப் பாடமாக கற்பிக்கும் பள்ளிகள் இருக்கிறதா என்று கேட்டதற்கு, NIL ஏதுமில்லை என்றும் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் தமிழை மொழிப் பாடமாக தேர்வு செய்ய முடியுமா என்று கேட்டதற்கும் இல்லை என்று பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா.

தமிழகத்தில் இயங்கும் 49 கேந்திர வித்யாலயா பள்ளிகளிலும் 109 இந்தி ஆசிரியர்களும் 53 சமஸ்கிருத மொழி ஆசிரியர்களும் வேலை செய்கிறார்கள். இப்பள்ளிகளில் தமிழ் மொழி ஆசிரியர்கள் ஒருவர் கூட இல்லை என தனது பதில்களில் கூறியுள்ளது. மொழிப் பாடமாக தமிழ் நடத்தப்படுவதே இல்லை என்பதுதான் இதில் தெரியும் உண்மை.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை இந்தி, சமஸ்மிருதம் ஆகிய இருமொழிகளும் கட்டாயமான பாடம். பத்தாம் வகுப்பில் விருப்பப் பாடமாக தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என பதில் கூறியுள்ளது கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகம்.இது தனி ஒரு விவகாரம் அல்ல.

இதற்கு முன்னரே ஒவ்வொருமுறையும் தமிழை ஒழித்து இந்தியைத் திணிக்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஒவ்வொரு திணிப்பின் போதும் தமிழ்நாட்டில் அவ்வப்போது எதிர்ப்புகள் உருவெடுக்கும்.

தற்போது கேந்திர வித்யாலயா பள்ளிகளில் ஆர்.டி.ஐ தகவல் மூலம் இந்தி சமஸ்கிருதம் திணிக்கப்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கு பல்வேறு சமூக ஆர்வலர்கள், ஜனநாயக சக்திகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தி.மு.க-வும் இதற்கான கண்டனங்களை பதிவு செய்துள்ளது.

ஒரு வகுப்பில் படிக்கும் 20 மாணவர்கள் விரும்பம் தெரிவித்தால் மட்டுமே தமிழ் பாடம் எடுக்கப்படும் என்று சென்ற ஆண்டே கேந்திர வித்யாலயா நிர்வாகம் கூறுயது. இதற்கு தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தனர். தமிழ் விருப்ப பாடமாக வைக்கப்பட்டிருப்பதை ஏற்கமுடியாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையும் கூறியிருந்தது.

கடந்த 2017, 2018, 2019 ஆகிய மூன்று ஆண்டுகளில் மட்டும் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக நம் வரிப்பணதிலிருந்து ரூபாய் 643.84 கோடி செலவளித்திருக்கிறது மோடி அரசு. ஆனால், தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 22.94 கோடி மட்டுமே செலவு செய்துள்ளது. கடந்த 2004-ல் ஆண்டு செம்மொழி பட்டியலில் மத்திய அரசால் சேர்க்கப்பட்ட தமிழ்மொழிக்கே இந்த நிலை என்றால், இந்தியாவின் மற்ற மாநிலங்கள் உள்ள மொழிகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று சற்று யோசித்து பாருங்கள்.

கடந்த 1965-ஆம் ஆண்டு இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்தபோது அதனை ஏற்றுக் கொண்ட பல மாநிலங்களில் வட்டார மொழிகள் பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டன. தாய்மொழி தெரியாமல் அழிக்கப்பட்டு, திணிக்கப்பட்ட இந்தி மொழியை மட்டும் கற்கும் தலைமுறையும் உருவாகிவிட்டது.

அன்று இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டன. நடைபெற்ற மொழிப்போரில், தமிழகத்தில் பலரும் தியாகிகளானார்கள். அதன் விளைவாகவே, தமிழகத்தில் மோடி அரசு இந்தி திணிப்பு அரங்கேற்ற முயற்சித்தாலே போராட்டங்கள் துவங்கி விடுகின்றன.

படிக்க :
பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?
♦ ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?

கேந்திர வித்யாலயா முதல் ஐஐடி வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களில் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்க முயல்வது, சமஸ்கிருத பண்பாட்டை ஊட்டி வளர்க்க பாடத்திட்டங்களை புகுத்துவது, இந்தி, சமஸ்கிருத வளர்ச்சிக்கென மற்ற மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியை விட 22 மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குவது, சமஸ்கிருதத்திற்கு என்று ஒரு துறையையே உருவாக்குவது போன்ற வேலைகளை தீவிரமாக செய்து வருகிறது மத்திய மோடி அரசு.

இந்தி, சமஸ்கிருதம் திணிக்கும் மோடியரசின் கிரிமினல்தனத்தை எதிர்த்துப் போராடி முறியடிக்கத் தவறினால், தமிழ் மொழியை இன்னும் சில பத்தாண்டுகளில் மியூசியத்தில் மட்டும்தான் பார்க்க முடியும்.


சந்துரு

அண்ணா பல்கலை : M. Tech படிப்பிற்கான 69 % இட ஒதுக்கீட்டை அமல்படுத்து || CCCE

07.02.2021

M.Tech படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்

அண்ணா பல்கலைக்கழத்தின் உயிரிதொழில் நுட்பத் துறையில் 2020-21ம் ஆண்டிற்கான முதுகலைப் படிப்பு (M.Tech) மாணவர் சேர்க்கையை இடஒதுக்கீடு பிரச்சனைக் காரணமாக நிறுத்தி வைப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மாணவர்கள் தொடுத்துள்ள வழக்கில் வரும் திங்களன்று எழுத்துப் பூர்வமாகப் பதிலளிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக் கழகத்திலுள்ள உயிரி தொழில்நுட்பத்துறை சார்ந்த முதுகலை படிப்புக்கான (M.Tech/M.Sc) மாணவர் சேர்க்கை அகில இந்திய நுழைவுத் தேர்வான JNU-CEEB-ன் மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்து வந்தது.

படிக்க :
♦ 7.5 சதவீத இட ஒதுக்கீடு : புண்ணுக்குப் புனுகாகிவிடக் கூடாது || புதிய ஜனநாயகம்
♦ ஐ.ஐ.டி -யில் 10% இட ஒதுக்கீடு – ஒரு கேலிக் கூத்து !

இந்த ஆண்டு முதல் மத்திய உயிரி தொழில்நுட்பத் துறையின்(DBT) கீழ் இயங்கும் Regional center for Biotechnology(RCB) என்ற அமைப்பு நடத்துகின்ற GAT-B தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. மேலும் மாணவர் சேர்க்கை அந்தந்தக் கல்வி நிறுவனங்களே தங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் நடத்திக் கொள்ளலாம் எனவும் RCB அறிவித்துவிட்டது.

ஆனால், மத்திய இடஒதுக்கீடான 49.5 சதவீதம் அடிப்படையில் சேர்க்கை நடத்தினால் மட்டுமே மாணவர்களுக்கு வழங்கக் கூடிய ரூபாய் 12000/5000 மாத கல்வி உதவித் தொகையை வழங்க முடியும் என RCB தெரிவித்ததாக அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது. மாநில அரசோ 69 சதவீதம் இடஒதுக்கீட்டு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என ஆணை பிறப்பித்துள்ளது.

இந்த சிக்கலை தீர்க்க முயற்சிக்காமல், இந்த ஆண்டிற்கான M.Tech மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் ரத்து செய்துள்ளது. குறிப்பாக மாணவர் சேர்க்கைகான தேதி முடிந்த பிறகும் கூட இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது குறித்துப் பல்கலைக்கழக நிர்வாகம் வாய் திறக்கவில்லை. மாணவர்களின் அழுத்தம் காரணமாகவே பல்கலைக்கழகம் நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இப்பல்கலைக்கழகங்கள் M.Tech படிப்பிற்கான மாணவர் சேர்க்கையைக் கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசினுடைய 49.5 சதவீதம் அடிப்படையிலேயே நடத்தி வந்துள்ளன. RCB-ன் இந்த ஆண்டு அறிவிப்பில் அந்தந்த கல்வி நிறுவனங்களே தங்களின் விதிமுறைகளின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளது. மேலும் UGC-யோ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த மாநிலத்தில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையையே பின்பற்றலாம் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதற்குப் பிறகும் இப்பல்கலைக் கழகங்கள் 49.5 சதவீதம் இடஒதுக்கீட்டையே அமல்படுத்தியதோடு மட்டுமில்லாமல் கூடவே 10 சதவீதம் EWS அடிப்படையிலும் மாணவர் சேர்க்கை நடத்தியுள்ளன.

மாநிலப் பல்கலைக் கழகங்கள் அந்தந்த மாநில சட்டசபைகளில் இயற்றப்படும் மசோதாக்களின் அடிப்படையில் உருவாக்கப்படுபவை. நிர்வாகம், நிதி ஒதுக்கீடு, மாணவர் சேர்க்கை மற்றும் பேராசிரியர் பணிநியமனங்கள் ஆகியவை அந்தந்த மாநிலங்களுடைய முழுமையான பங்களிப்பிலும் கொள்கை முடிவுகளின் அடிப்படையிலும் இயங்குபவை.

ஆனால், இப்பல்கலைக்கழகங்கள் MTech/MSc மாணவர் சேர்க்கையில் தமிழகத்தில் கடைபிடித்து வரும் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தாமல் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டுள்ளன.

யாருடைய ஒப்புதலோடு 49.5 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது?

முறையான அறிவிப்பின்றி இந்தாண்டு மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் நிறுத்தியது ஏன்?

தமிழக அரசு EWS 10 சதவீதம் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவில்லை. ஆனால் EWS கோட்டாவில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறமுடியும்?

இவை குறித்து சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக நிர்வாகமும் தமிழக உயர்கல்வித்துறையும் முறையான விளக்கம் தரவேண்டும்.

படிக்க :
♦ அண்ணா பல்கலை : மாணவர் சேர்க்கையிலும் பல கோடி இலஞ்சம் – முறைகேடு !
♦ அண்ணா பல்கலை : மாணவர்களின் படிப்பை பாழாக்கும் புதிய தேர்வு முறையை இரத்து செய் !

மாணவர் சேர்க்கையில் 69 சதவீதம் இடஒதுகீட்டை அமல்படுத்துவதை உத்திரவாதப்படுத்துவதோடு, இம்மாணவர்களுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைப்பதையும் உறுதிபடுத்த வேண்டும். மேலும் அண்ணா பல்கலைகழக MTech உயிரிதொழிட்நுட்பப் பாடப்பிரிவில் நிறுத்தப்பட்டுள்ள இந்தாண்டு மாணவர் சேர்க்கையை தமிழக அரசு தலையிட்டு உடனடியாக நடத்த வேண்டும்.

முகநூலில் இருந்து : பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு, சென்னை.

disclaimer

பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொதுசுகாதாரம் என்பது அதிகம் பேசுபொருளான ஒன்றாக இருந்தது. குறிப்பாக பொதுசுகாதாரத்தை முற்றும் முழுதும் தனியார்வசம் ஒப்படைத்த அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளே கொரோனாவை கட்டுப்படுத்த திண்டாடியபோது பொதுசுகாதாரத்தை முறையாக பேணிக் காத்து வந்த கியூபா,வியட்நாம், வெனிசுலா போன்ற நாடுகள் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் கொரோனாவை சிறப்பாக கையாண்டதோடு ஏனைய நாடுகளுக்கும் தங்கள் உதவிக்கரங்களையும் நீட்டின.

பொது சுகாதாரத்திற்கு அதிமுக்கியத்துவம் நிறைந்த இந்தக் காலக்கட்டத்தில், பிப்-1 ஆம் தேதி மத்திய பட்ஜெட்டை முன்மொழிந்து உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சுகாதாரத் துறைக்காக பட்ஜெட்டில் கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதை விட 137 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று பெருமிதத்துடன் கூறினார். நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு ஒருபுறம் என்றால் “மக்களுக்கான மானியங்களை வெட்டு” என்ற உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் மிரட்டல் மறுபுறமிருக்க, எல்லாவற்றையும் மீறி எப்படி இந்த எண்களை சாத்தியப்படுத்தினார்கள் என்று பார்ப்போம்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !

♦ பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

இந்த பட்ஜெட்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.71,269 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஆயுஷ் மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கு அரசு ஒதுக்கிய தொகை ரூ.5,633 கோடியையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் ரூ.76,902 கோடி ஆகும். மொத்த பட்ஜெட்டில் இது வெறும் 2.21 சதவீதம் மட்டுமே என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், கடந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்கு மொத்தம் 2.27 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது; இதே (2020-21) நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடாக 2.47சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை ஒப்பிடும் போது கடந்த ஆண்டை விட மொத்த பட்ஜெட் தொகையிலிருந்து 0.26 சதவீதம் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது என்பதுதான் எதார்த்தம். ஆனாலும் எப்படி இந்த 137% அதிகரிப்பை மோடி அரசால் கொண்டு வர முடிந்தது ?

உலகம் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சூழலில் அதற்கு தடுப்பூசிக்கு ஏற்பாடு செய்வது என்பது தவிர்க்க முடியாதது. அதற்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ.35,000 கோடியையும் சேர்த்துத்தான் இந்த 137% அதிகரிப்பை பெருமை பீற்றிக் கொள்கிறது.

அதுமட்டுமல்ல, குடிநீர் மற்றும் கழிவு நீரகற்றுதலுக்கான நிதி ஒதுக்கீட்டை கிட்டத்தட்ட மும்மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ. 60,030 கோடி. மேலும் இத்துறைக்கான நிதிக் கமிசன் ஒதுக்கீடு என ரூ. 36,022 கோடியை ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட 1 லட்சம் கோடி ரூபாய், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்றுத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.திடீரென நான்கு மடங்கு அதிக நிதி இத்துறைக்கு ஒதுக்கியிருப்பது, இத்துறையை முழுமையாக தனியாரிடம் ஒப்படைத்து அவர்களிடமிருந்து அதிக பணத்தில் இந்த சேவைகளைப் பெற்றுக்கொள்ள மோடி அரசு முடிவெடுத்துள்ளதோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குடிநீருக்கும் கழிவுநீரகற்றுக்கும் ஒதுக்கப்பட்ட இந்த 1 இலட்சம் கோடியையும் சேர்த்துத்தான் மோடி அரசின் 137% அதிகரிப்பு.

பொதுவாக, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ஒதுக்கப்படும் தொகைதான் மக்களுக்கு மருத்துவம் என்ற அளவில் ஒதுக்கப்படும் தொகையாகும். அதுபோக ஊட்டச்சத்துக்காக ஒதுக்கப்படும் தொகையும் மக்களின் சுகாதார வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் தொகையாக எடுத்துக் கொள்ளப்படும். அந்தத் தொகையை குறைத்துள்ளது மோடி அரசு. கடந்த நிதியாண்டில் ரூ. 3700 கோடியாக இருந்த நிதி ஒதுக்கீடு இந்த நிதியாண்டில் ரூ. 2700 கோடியாக குறைந்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு போட்டியாக இந்தியா உள்ள நிலையில், இத்துறையில் கைவைத்துள்ளது, பெரும் ஆபத்தானது.

அதே போல, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டங்களுக்கு சென்ற ஆண்டு 2020-21 பட்ஜெட்டில் திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.2,900 கோடி ஆகும். இப்போதைய ஒதுக்கீடும் அதே ரூ.2900 கோடி தான். எவ்வித கூடுதல் ஒதுக்கீடும் இல்லை.

பிரதமர் ஸ்வஸ்திய சுரக்சா யோஜனா திட்டத்திற்கு கடந்த ஆண்டு திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.7,517 கோடி ஆகும். தற்போதைய பட்ஜெட் மதிப்பீடு ரூ.7000 கோடி மட்டுமே. இந்த வகையில் அடிப்படையான சுகாதார / மருத்துவ வசதிகளுக்கான ஒதுக்கீட்டைக் குறைத்துள்ளது மோடி அரசு.

பட்ஜெட்டிற்கு முன் நிர்மலா சீத்தாராமன் வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில், 2017 தேசிய சுகாதாரக் கொள்கையை மேற்கோள்காட்டி, நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1 சதவீதம் முதல் 2.5-3சதவீதம் வரை சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

ஆனால், தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) வெறும் 0.34 சதவீதம் மட்டுமே. தற்போது அவர்கள் காட்டியுள்ள பெரும் தொகையெல்லாம், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமானால் வெறும் ஜூம்லாதான்.

அதுமட்டுமல்ல, 15வது நிதி கமிஷன், 2021-22 நிதியாண்டில் சுகாதாரத்திற்கான ஒதுக்கீடு மத்திய பட்ஜெட்டில், ஜிடிபியின் அளவில் 1.92 சதவீதமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது. இது தேசிய சுகாதாரக் கொள்கை 2017 சுட்டிக்காட்டியதைவிட குறைவானது எனினும், இந்த இலக்கைக்கூட இந்த நிதிநிலை அறிக்கை எட்டவில்லை என்பதே உண்மை.

உலகமய தாரளமயத்திற்கு பின் பட்ஜெட்டில் அரசுகளின் செலவீனம் என்பது குறைக்கப்பட்டு கொண்டேதான் வந்துள்ளது. அவர்கள் மொழியில் இதை சொல்வதென்றால் மினிமம் கவர்மெண்ட் மேக்சிமம் கவர்னன்ஸ். அரசின் வேலை ஆலை நடத்துவதோ, சாலை போடுவதோ அல்ல! இவற்றையெல்லாம் தனியார்வசம் விட்டுவிட்டு, அவற்றை மேற்பார்வையிடுவதே அரசின் வேலையாம்.

இந்தப் பட்டியலில் இப்போது மக்களின் அத்தியாவசிய தேவைகளான உணவு, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றையும் சேர்த்துள்ளார்கள். அதன் விளைவாகத்தான் விவசாய இடுபொருட்களுக்கான மானியம் தொடங்கி, உணவுப்பாதுகாப்பு உட்பட எல்லாவற்றிற்குமான மானியங்கள் சுருங்கிக்கொண்டே வருகிறது. இதற்கு சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீடும், விதிவிலக்கல்ல.


மூர்த்தி
செய்தி ஆதாரம் : Scroll, The Wire

தமிழகமெங்கும் விவசாயிகள் சங்கம் சாலை மறியல் ! மக்கள் அதிகாரம் பங்கேற்பு !

விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாக டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் விவசாயிகள் மீது போலீஸ் பல்வேறு அடக்குமுறை, தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது. இதனால், நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருக்கிணைப்புக்குழு சார்பில் பிப்ரவரி 6-ம் தேதியன்று தமிழகத்தில் 3 மணி நேரம் சாலை மறியல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

• தொடர்சியாக விவசாயிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கு எதிராகவும்
• மாநில எல்லைகளில் தடுப்புகளை அதிகரிப்பதை எதிர்த்தும்
• போராட்ட தளங்களில் இணைய தளத்தை நிறுத்தி வைத்திருப்பது
• விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதாரவானவர்களின் ட்விட்டர் கணக்குகளை நிறுத்தி வைத்திருப்பது
• அரசாங்கத்தின் கட்டளையின் அடிப்படையில் சுயேட்சியான ஊடகவியலாளர்கள் மீது நடவடிக்கை
• வேளாண் துறைக்கு பட்ஜெட்டில் குறைவாக ஒதுக்கீடு
ஆகியவற்றை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் அதிகாரம் தோழர்களும் கலந்து கொண்டார்கள்.

சென்னை :

வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக தாம்பரம் பேருந்து நிறுத்தம் அருகே மறியல் போராட்டம் நடைபெற்றது. சி.பி.எம், மற்றும் ஜனநாயக அமைப்புகள் மற்றும் மக்கள் அதிகாரம், சென்னை மண்டல தோழர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கைதாகினர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை.

காஞ்சிபுரம் :

மோடி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரியும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறைக்கு எதிராகவும், AIKSCC ஒருங்கிணைப்பில் நாடு முழுவதும் பிப்ரவரி 6 அன்று சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். மறியலில் போராட்டத்தில் அனைத்து தோழர்கள், ஜனநாயக சக்திகளை கைது செய்து மண்டபத்தில் அடைந்தது போலீஸ்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம்.

 

கோவை :

புதிய முன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த டிசம்பர் 26-ம் தேதி இந்தியா முழுவதும் டிராக்டர் பேரணிகளை நடத்த வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் டிராக்டர் பேரணிகள், வாகன பேரணிகள் நடைபெற்றன. அன்றைய தினம் மட்டும் ஏறத்தாழ பத்தாயிரம் பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. அந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என 06.02.2021 கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கன்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மக்கள் அதிகாரம் தோழர் ராஜன் கண்ட உரை ஆற்றினர். மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
தோழர் ராஜன்,
பகுதி ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
கோவை.

புதுச்சேரி :

விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது தடியடி நடத்தி பொய் வழக்குகள் போட்ட டெல்லி போலீசையும் மோடி அரசையும் கண்டித்து விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வலியுறுத்தி புதுச்சேரியில் விவசாய சங்கம் சார்பில் நடந்த மறியல் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் தோழர்கள் பங்கேற்று கைதானார்கள்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

 

விருதாச்சலம் :

டெல்லியில் நடைபெற்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், மேலும் திருத்த சட்டத்தை ரத்து செய்ய கோரியும் அனைத்து கட்சி சார்பில் இன்று 6/2/2021 பாலக்கரையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு பூவனூர் மக்கள் அதிகாரம் தோழர் பாலு தலைமையில் தோழர்கள் வைத்தியநாதன், வினோத், காத்தவராயன் முருகானந்தம் இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

This slideshow requires JavaScript.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர்.

நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா

ஞசை, திருவாரூர் மாவட்டங்களில் வாழ்ந்த விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த தியாகி களப்பால் குப்புசாமியின் வரலாறு, அப்பகுதியின் செங்கொடி வரலாற்றோடு இணைந்தது. நிலப்பிரபுத்துவக் கோட்டையாக திகழ்ந்த தென்பறை, களப்பால் பகுதிகளில் வாழ்ந்து வந்த விவசாயக் கூலிகளை இணைத்து சங்கம் அமைக்கவும், கொடூரமும், வக்கிரமும் நிறைந்த பண்ணையார்களுக்கு எதிராக போராடவும் பெரிதும் காரணமாக இருந்தவர் களப்பால் குப்பு.

சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய போராளி தோழர் களப்பால் குப்பு.

களப்பாலை சேர்ந்த அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. களப்பால் கிராமத்தின் தலையாரியாகவும் இருந்த அருணாசலத்திற்கு தமது மகனை படிக்க வைக்க ஆசை. ஆனால் விவசாய கூலிகளின் குழந்தைகளுக்கு பள்ளியில் இடம் கிடையாது. பண்ணையாளுக்கு குழந்தை பிறந்தவுடன் பண்ணை முதலாளிக்கு தெரிவிக்க வேண்டும். அக்குழந்தை, ஆறு வயதில் மாடு மேய்க்கவும், பத்து வயதில் சாணம் அள்ளவும், பதினைந்து வயதில் வண்டி ஓட்டவும் வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா
♦ நூல் அறிமுகம் : சாம்பவான் ஓடை சிவராமன் || சுபாஷ் சந்திரபோஸ் || காமராஜ்

அதனால் தனக்கு மகன் பிறந்ததையே மறைத்து விடுகிறார். தலையாரியின் மகன் என்பதால் குப்புசாமியை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார் வாத்தியார். ஆனால் இவன் வாத்தியாரையோ, மற்ற உயர் சாதி குழந்தைகளையோ தொட்டுவிடக்கூடாது என்பதால் திண்ணையில் நின்று தான் படிக்க வேண்டும். சிறிய தவறு தெரிந்தாலும் பிரம்படிதான். எப்படியோ ஆறாம் வகுப்பு வரை படித்து விடுகிறான் குப்பு. அதன் பின்பு பண்ணையார் தொப்பையா முதலியாரின் தலையீட்டால் படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்படுகிறது. அவர் வீட்டில் பண்ணையாளாகி விடுகிறான்.

ஏழை சூத்திர கூலிகளுக்கு முதலாளி பண்ணை மானியம் போல்ட் ஐயரால் ஏற்படும் தொல்லைகள் சொல்லி மாளாது. ஒரு நாள் அந்தக் கொடுமைகளைக் கண்டு கொதித்து எழும் குப்பு , தன்னை அடிக்க வரும் பண்ணை ஆள் காதர் பாட்சாவின் சாட்டையை பிடுங்கி அவரை வெளுத்து வாங்குகிறான். ஆடிப்போய் விடுகிறது பண்ணை. அதனால் பண்ணையாரின் பிடியிலிருந்து தப்பிக்க குப்பு களப்பாலை விட்டு வெளியேறுகிறான்.

களப்பால் குப்புவின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, அவர் முதலில் ஓவரூரை சேர்ந்த குப்பம்மாளை திருமணம் செய்கிறார்; ஆனால், சிறிது காலத்திற்கு பிறகு அவர் குப்புவைவிட்டு பிரிந்து சென்று விடுகிறார். அதன் பின்பு தலை ஞாயிறுவை சேர்ந்த வாஞ்சாலையை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு சோலையம்மாள் என்ற மகளும், கணேசன், பக்கிரிசாமி மற்றும் சிவஞானம் என்ற மகன்களும் பிறக்கிறார்கள்.

அந்தக் காலகட்டத்தில், அதாவது, 1943-ம் ஆண்டில் தான் விவசாயிகள் சங்கம் தஞ்சைப் பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள்; வேதபுரம் ரெங்கசாமி, நரசிங்கபுரம் கொள்கை வீரர் பி.வெங்கடேச சோழகர் ஆவார்கள். அதன் பின்பு, தோழர் பி.சீனிவாசராவின் வருகை விவசாயிகளின் போராட்டத்தை எழுச்சியுடன் வழிநடத்தியது. அவ்வாறு தென்பறையில் துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தில் சேர்ந்து தமது சமூகப் பணியைத் துவக்கினார் களப்பால் குப்பு.

விவசாயச் சங்கத்தின் வீரம்செறிந்த போராட்டத்தினால் விவசாயக் கூலிகளின் மீது தொடுக்கப்பட்ட சவுக்கடி, சாணிப்பால் திணிப்பு ஒழிந்தது. அதனால், தஞ்சை மாவட்டத்தில் இருந்த கூலி உழவர்கள், பண்ணையாட்கள், குத்தகையாளர்கள், வார சாகுபடியாளர்கள், சிறுசிறு விவசாயிகள் ஆகியோர்களுக்கு தாரக மந்திரமாக “விவசாயச் சங்கம்” இருந்தது. களப்பால் குப்புவின் பங்களிப்பு சங்கத்திற்கு மிகப்பெரிய வலிமையைச் சேர்த்தது.

தோழர் பி.சீனிவாச ராவ் கலந்து கொண்ட விவசாய சங்க கூட்டங்களில் தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்களை போல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. “சாட்டையால் அடிக்காதே! சாணிப்பாலை நிறுத்து ! அடித்தால் திருப்பி அடிப்போம்! “வாடி போடி” என்றால் “வாடா போடா” என்போம் என்ற வார்த்தைகள் பண்ணையார்களின் மனதில் பயத்தை உருவாக்கின.

களப்பால் குப்பு , சீனிவாசராவை வைத்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வைத்தார். அதனால் அப்பகுதியில் எப்போதும் பதட்டம் நிலவியது. பிரச்சினையை முடிவிற்கு கொண்டுவர களப்பால் குப்புவை கொலை செய்ய திட்டமிட்டு பண்ணையார்கள் கூலிப்படையை நியமித்தனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தமது வீரத்தால் தப்புகிறார் குப்பு. ஒரு முறை இவரை கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி, அவர்களை மனம் மாற செய்வதும், அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு செல்வதும் களப்பால் குப்புவின் விவேகத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து களப்பாலில் பிரமாண்டமான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் குப்பு. அதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், குப்புவிற்கு தணடனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்த பண்ணையார்கள் கூலிப்படையை ஏவி குப்புவின் மூத்த மகன் கணேசனின் கையில் வெட்டி விடுகிறார்கள் (இவர் பிற்காலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினராக பணியாற்றி இருக்கிறார்). செய்தி கேள்விப்பட்ட குப்புவின் மனைவி அதிர்ச்சியிலும், ஏற்கனவே இருந்த பெரியம்மை பாதிப்பினாலும் இறந்து விடுகிறார்.

தகவல் அறிந்த குப்புசாமி மிகவும் துயரமடைந்தார்; ஆனாலும் ஒரேயடியாக குலைந்து போகவில்லை. “அவள் இறந்து விட்டாளா?” நொடி நேரம் அவர் அமைதியாக நின்றார்; பிறகு தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்: ” நான் வந்து என்ன செய்யப் போகிறேன்? நீங்களே அவளை அடக்கம் செய்யுங்கள்!” என்றார். அப்படிப்பட்ட மாவீரத்தையும், மன எழுச்சியையும் ஒரு பண்ணைத் தொழிலாளியின் மகனுக்கு செங்கொடிச் சங்கம் கொடுத்திருந்தது. இத்தகைய நெஞ்சுரம் கொண்ட இடதுசாரி தோழன் களப்பால் குப்பு.

இறுதியாக குன்னியூர் கிராமத்தில் சேரிவாசிகள் பண்ணையாட்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வீடுகளை இழந்தார்கள்; பெண்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். பொறுமை கடந்த சேரி மக்கள் வெகுண்டெழுந்தனர்; குண்டர்களை எதிர்த்து மோதினர். அந்தக் கைகலப்பில் கூலிப்படையினர் இருவர் இறந்தனர். ஆனால் கொலைப்பழி களப்பால் குப்புவின் மீது விழுந்தது. தஞ்சை அமர்வு நீதிமன்றம் அவருக்கு “தூக்குத் தண்டனை” விதித்தது.

படிக்க :
♦ சங்க பரிவாரத்தின் வரலாற்றுப் புரட்டுகளை தோலுறித்த வரலாற்றாசிரியர் டி.என்.ஜா மறைந்தார் !

♦ பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

களப்பால் குப்பு திருச்சி சிறையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கான “கண்டம்” எனப்படும் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அந்தச் சூழ்நிலையிலும் குப்புவை கொல்லத் திட்டமிட்ட பண்ணை முதலாளிகள் மற்றும் போலீசின் கூட்டுச் சதியால, அவருக்கு மருந்து கொடுக்கும் சாக்கில் விஷமுள்ள மாத்திரைகள் இராமன் என்ற கைதியால் கொடுக்கப்பட்டது. அதனால் 18/04/1948-ஆம் தேதி இரத்தவாந்தி எடுத்து களப்பால் குப்பு இறந்தார்; அந்த எரிமலையின் வாழ்வு சிறைச்சாலை கொட்டடி மரணத்தில் முடிந்தது.

கி.பி.1911-ஆம் ஆண்டு பிறந்த களப்பால் குப்பு, இந்த மண்ணில் 37 ஆண்டுகளே வாழ்ந்தார். அவரின் வாழ்வும், தியாகமும் வருங்கால சந்ததிகளுக்கு பாடமாகவே இருக்கிறது. களப்பால் குப்புவின் வாழ்க்கை கிராமப்புறங்களில் மட்டுமல்லாமல் நகரங்களிலும் பேசப்பட வேண்டும். இன்றைய காலகட்டத்தில் பண்ணை முதலாளிகளுக்கு எதிரானப் போராட்டங்கள் தேவை இல்லைதான்.

ஆனால் சாதியமும், ஆணவக் கொலைகளும், மதவாதமும் மீண்டெழுந்துள்ள இத்தருணத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களைப் பாதுகாக்க களப்பால் குப்புசாமி போன்ற தோழர்கள் நம் நாட்டிற்கு அதிகம் தேவைப்படுகிறார்கள்.

தமிழ் மண்ணின் ஆகச் சிறந்த ஒரு போராளியை அடையாளம் காட்டிய எழுத்தாளர் வாய்மைநாதனுக்கும், நூலை வெளியிட்ட NCBH நிறுவனத்திற்கும் நன்றி!.

தியாகி களப்பால் குப்பு
பிறப்பு : 1911;
இறப்பு: 18/04/1948

நூல் : தியாகி களப்பால் குப்பு
நூல்ஆசிரியர் : வாய்மைநாதன்
வெளியீடு : NCBH
பக்கங்கள் :147
விலை : ரூ 100/-

நூல் அறிமுகம் : சு. கருப்பையா


disclaimer

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, சென்னை பல்கலை மாணவர்களின் போராட்டம் வெற்றி உணர்த்துவது என்ன ?

2

டந்த 57 நாட்களாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் பிப்ரவரி 4, இரவு தமிழக அரசு கட்டணக் குறைப்பு தொடர்பான அரசாணையை வெளியிட்டது.

மாணவர்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி இது. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளில் பெறப்படும்  கட்டணத்தையே ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிக்கும் நிர்ணயித்துள்ளது.

எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு ரூ.13,610 ; பி.டி.எஸ். படிப்பிற்கு ரூ. 11,610 ; எம்.டி, எம்.எஸ். எம்.டி.எஸ் படிப்புகளுக்கான ரூ.30,000 ; முதுநிலை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு ரூ.20,000 ; பி.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கு ரூ.3000 கட்டணம்; எம்.எஸ்.சி நர்சிங் படிப்பிற்கு ரூ.5000 கட்டணம் என அரசால் ஏற்கெனவே நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. அதே கட்டணமே இந்த மாணவ்ர்களிடமிருந்தும் இனி வசூலிக்கப்படும். மேலும் அந்த அரசாணையில்  ஏற்கனவே மாணவர்கள் செலுத்தியக் கட்டணம் திரும்ப தரமுடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க :
♦ கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்து : சென்னை பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் !
♦ சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !

மாணவர்களின் இத்தனை நாள் போராட்டத்தின் போது ஏதும் செய்யாத அரசு தற்போது ஏன் அடிபணிந்தது?

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள், கடந்த 2 மாத காலமாக கல்லூரிக்குள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை சீர்குலைக்க மாணவர்களுக்குப் பல்வேறு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியது கல்லூரி நிர்வாகம். மூதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண்ணில் கை வைப்போம் என்று மிரட்டுவது, ஒழுக்கு நடவடிக்கையின் படி மதிப்பெண்ணை குறைத்துவிடுவோம், என்பது உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தியது கல்லூரி நிர்வாகம்.

இந்த அச்சுறுத்தல்களையும் மீறி முதலாம் ஆண்டு மாணவர்களும், இண்டர்ன்சிப் மாணவர்களும் போராட்டத்தில் மன உறுதியுடன் கலந்து கொண்டது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் தெரிவித்தனர்.

40 நாட்களுக்கும் மேலாகியும் தமது போராட்டத்திற்கு யாரும் செவிசாய்க்கவில்லை என்று மாணவர்கள் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்தனர். அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது. ஜனநாயக சக்திகள் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இந்தப் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்ததும், கல்லூரியை உயர்கல்வித் துறையில் இருந்து சுகாதாரத்துறைக்கு மாற்றிவிட்டோம் என்ற அரசாணையை வெளியிட்டு போராட்டத்தை முடிக்க நினைத்தது தமிழக அரசு. ஆனால், அரசாணையில் முக்கியமான கோரிக்கையான கல்விக்கட்டணம் தொடர்பாக எதுவும் குறிப்பிடவில்லை என்று, மாணவர்கள் கல்விக் கட்டணம் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்தனர். இந்த போராட்டம் மக்கள் மத்தியில் ஆதரவை அதிகரிக்கச் செய்தது.

இதன் விளைவாக பிப்ரவரி 4-ம் தேதி மாலையில் தமிழக அரசு கட்டணம் நிர்ணயம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. மாணவர்கள் எதிர்பார்த்த கட்டணத்தையே அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. இது கல்லூரி நிர்வாகம் மற்றும் தமிழக அரசின் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொண்ட மாணவர்களின் நெஞ்சுரமிக்கப் போராட்டத்தின் விளைவே ஆகும்.

இதே போல்தான், சென்னை பல்கலைக்கழகத்தில் மெரினா வளாக விடுதியில் முதுகலை மாணவர்கள் 27, 28, 29 மூன்று நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினர். விடுதி உணவகம் மூடல், ஊரடங்கில் கல்லூரி மூடப்பட்ட நாட்களில் விடுதி கட்டணம் உணவு கட்டணம் ஆகியவை வசூலிப்பதைக் கண்டித்து பல்கலைக்கழக வளாகத்தில் 3 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள்.

மாணவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெளியில் இருந்து பெற்றோர்கள், பிற மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைவர் மத்தியிலும் ஆதரவு அதிகமாவதை கண்டு வேறு வழியின்றி செவிசாய்த்தது கல்லூரி நிர்வாகம்.

ராஜா அண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டமாக இருக்கட்டும், அல்லது சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமாக இருக்கட்டும், இரண்டிலுமே அரசை அடிபணியச் செய்ததில் நெருங்கி வரும் தேர்தலுக்கு ஒரு பங்கு இருக்கிறது எனினும், மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு இடங்களில் இருந்து தொடர் ஆதரவு கிடைத்து வந்ததே முக்கியக் காரணமாகும்.

மத்திய மாநில அரசுகளின் மறு காலனிய கொள்கைகளால் சுரண்டப்படும் தொழிலாளர்கள், விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்,  மற்றும் மாணவர்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராட்டத்தை ஒருவருக்கொருவர் குரல் கொடுத்து தோளோடு தோள் சேர்த்து நிற்கும் போது வெற்றி நிச்சயம் என்பதை மாணவர்கள் போராட்டங்களின் இந்த வெற்றி நமக்கு எடுத்துக் காட்டுகிறது.


சந்துரு

உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?

1

ந்தியாவின் இறையாண்மையை விட்டுக் கொடுக்க முடியாது. அன்னிய சக்திகள் பார்வையாளர்களாக இருக்கலாமே தவிர பங்கேற்பாளர்களாக இருக்க முடியாது. இந்தியர்கள் இந்தியாவை அறிவார்கள். அவர்கள்தான் இந்தியாவின் முடிவை எடுப்பார்கள். ஒரு தேசமாக நாம் ஒன்றிணைந்திருப்போம்” என்று கிரிக்கெட் ‘கடவுள்’ சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டரில் ஒரு டிவிட்டை கடந்த 3-ம் தேதி வெளியிட்டார்.

சச்சின் மட்டுமல்லாமல், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள், இன்னாள் ‘வீரர்கள்’ அனைவரும் – ஒரு சிலரைத் தவிர – சச்சினின் மேற்கண்ட வாசகத்தை வெவ்வேறு வார்த்தைகளில் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதாவது இந்தியாவின் பிரச்சினையை இந்தியர்களே தீர்த்துக் கொள்வார்களாம். வெளிநாட்டினர் தலையிடக் கூடாதாம்.

இதைத் தொடர்ந்து கிரிக்கெட் ‘கடவுளின்’ ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் தோண்டித் துருவி கழுவி ஊற்றிவிட்டனர், இந்திய கிரிக்கெட் “பக்தர்கள்”.

படிக்க :
♦ சச்சினின் ‘சீக்ரெட் ஆஃப் எனர்ஜி’ !
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

அமைதியான புன்னகை நிறைந்த முகம் கொண்ட ‘நல்லவரான’ சச்சின் டெண்டுல்கருக்கே இவ்வளவு அர்ச்சனை கிடைத்திருக்கிறது என்றால் மற்றவர்களுக்கு சொல்லவா வேண்டும். இந்திய இறையாண்மை குறித்து கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்ல, பல்வேறு பாலிவுட் திரை நட்சத்திரங்களும் – ஒரு சிலரைத் தவிர – ஒரே சாயலில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினை, சி.என்.என் இணையதளத்தில் இந்திய விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி வெளியான ஒரு கட்டுரையிலிருந்து துவங்கியிருக்கிறது.

இந்திய விவசாயிகள் 60 நாட்களுக்கும் மேலாக போராடி வருவதையும், அவர்களுக்கான அடிப்படை வசதிகளைக் கூட செய்து தராமல், போராட்டக் களங்களின் அடிப்படை வசதிகளை பறித்ததோடு, இணையத்தை நிறுத்தி, விவசாயிகளின் போராட்டத்தை முறியடிக்க மோடி அரசு முயற்சிப்பதையும் மனித உரிமைகள் மீறலையும் பற்றி அந்தக் கட்டுரை பேசியிருக்கிறது.

இந்தக் கட்டுரையை தனது டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்கப் பாடகர் ரிஹானா, குறிப்பிட்டு, நாம் இதைப் பற்றி ஏன் பேசக்கூடாது? எனக் கேட்டுள்ளார். ரிஹானா அமெரிக்காவின் பிரபலமான பாடகராவார். கடந்த 2019-ம் ஆண்டுக் கணக்குப்படியே அவரது சொத்து மதிப்பு சுமார் 600 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

டிவிட்டரில் அவரை சுமார் 10 கோடியே 14 இலட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இந்த அளவை ஒப்பீட்டளவில் பார்த்தால் அவரது பிரபலம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் டிவிட்டர் கணக்கைப் பின் தொடர்வோரின் எண்ணிக்கை வெறும் ஆறரை கோடிதான். ஒரு நாட்டின் பிரதமரை விட அதிகமானோரால் பின் தொடரப்படும் ஒரு சர்வதேசப் பிரபலம் தான் ரிஹானா. ரிஹானா ஒரு கறுப்பினப் பெண்ணும் ஆவார்.

அத்தகைய செல்வாக்குள்ள ரிஹானாவின் டிவிட்டைத் தொடர்ந்து பல்வேறு அமெரிக்கப் பிரபலங்களும் இந்திய விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து பதிவிடத் துவங்கினர். சூழலியல் செயல்பாட்டாளரான க்ரெட்டாவும் விவசாயிகளின் போராட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என பதிவிட்டார்.

சமூக வலைத்தளங்களின் தாக்கம் சமீபத்தில் அமெரிக்க பங்குச் சந்தையையே ‘படுத்தி’ எடுத்துவிட்ட நிலையில், அமெரிக்கப் பங்குச் சந்தைக்குச் சேவகம் செய்யும் இந்திய அரசை மட்டும் விட்டுவைக்குமா என்ன?

ஏதேனும் தனிப்பட்ட நிறுவனங்கள் (டைட்டன், நெட்பிளிக்ஸ்) இந்திய அரசின் ஒடுக்குமுறைப் பொறியமைவை அம்பலப்படுத்தும் விதமாக ஏதேனும் விளம்பரம் வெளியிட்டால், அதற்கு வழக்கமாக சங்கிகளின் ட்ரால் படைதான் களத்தில் இறங்கி ட்ரால் செய்யத் துவங்குவார்கள். இந்தமுறை இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகமே களத்தில் இறங்கிவிட்டது.

வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முறையான விவாதங்களுக்கும், கலந்தாலோசனைகளுக்கும் பிறகுதான் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் இந்தச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இந்தப் போராட்டத்தில் அரசாங்கம் விவசாயிகளிடம் மிகவும் இறங்கி பேசிவருவதாகவும் முதல் பத்தியில் தெரிவித்து விட்டு இரண்டாவது பத்தியில் விவசாயிகள் போராட்டம் பற்றிய தமது அவதூறுகளை அடுத்த இரண்டு பத்திகளில் விசமாகக் கொட்டியுள்ளது.

மேலும் இந்தச் சட்டம் குறித்து முழு விவரம் தெரியாமல் சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் கருத்துத் தெரிவிப்பது துல்லியமானதாக இருக்காது என்றும் பொறுப்பற்ற செயல் என்றும் குறிப்பிட்டுச் சாடியுள்ளது.

இந்த அறிக்கையை #IndiaTogether #IndiaAgainstPropaganda ஆகிய இரண்டு ஹேஷ்டேக்குகளையும் போட்டு அறிக்கையாக வெளியிட்டது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

வெளிநாட்டு பிரபலங்கள் போட்ட டிவிட்டுகளுக்கு அஞ்சி மோடி அரசு தனது வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் அறிக்கை வெளியிட்டிருப்பதே அதன் இலட்சணத்தை காட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக அது செய்த காரியம்தான் இந்தியப் பிரபலங்களின் யோக்கியதையை உலகுக்கே பறைசாற்றியிருக்கிறது.

இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்கள், பாலிவுட் நட்சத்திரங்களையே தனது ட்ரோல் படையாக களத்தில் இறக்கி விட்டிருக்கிறது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம். கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், பாலிவுட் நடிகர்களும் ட்ரோல்களாக களத்தில் இறங்கி ‘மேலிருந்து’ சொல்லிக் கொடுக்கப்பட்ட பாடத்தை டிவிட்டுகளில் வாந்தியெடுத்துக் கொண்டிருந்தனர்.

குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தது போல, இந்த ட்ரோல் பணிகள் ஒழுங்காக நடக்கிறதா என்பதைச் சரிபார்க்கும் வேலையை பாலிவுட் நடிகர் கங்கனா ரணாவத் வசம் ஒப்படைக்கப்பட்டது போலும்.

அம்மையார் டிவிட்டரில் பாஜகவின் எதிரிகளைப் பந்தாடுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், விவசாயிகளுக்கு எதிரான டிவிட்டை ‘காட்டமாகப்’ போடாத கிரிக்கெட் ஆட்டக்காரர்களை உரிமையோடு கேவலமாகப் பேசியுள்ளார். கிரிக்கெட் ‘கடவுள்’ சச்சின் முதல் நேற்றுவந்த அல்லரை-சில்லரை வரை அனைத்தும் ஒரே குரலில், ஒரே வாசகத்தை வாந்திஎடுத்து வைத்த நிலையில், டிவிட் வாசகங்களில்  ‘வெரைட்டியில்லாத’ விரக்தியில் கொஞ்சம் காட்டமாகவே காட்டிவிட்டார் கங்கனா.

கிரிக்கெட் ‘வீரர்’ ரோஹித் சர்மாவின் ”காப்பி பேஸ்ட்” டிவிட்டுக்கு பதிலளித்திருக்கும் கங்கனா, “விவசாயிகளை பயங்கரவாதிகள் எனக் குறிப்பிட என்ன தயக்கம், மிகவும் மென்மையாக அணுகுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் ‘டர்ராக’ இருக்கிறதா?” என்றெல்லாம் கேட்டுவிட்டார். கிரிக்கெட் ரசிகக் கண்மணிகள் தங்களது ‘தலைவர்களை’ திட்டுவதை நிறுத்திவிட்டு, கங்கனாவை காறி உமிழத் துவங்கிவிட்டனர். இவையெல்லாம் சங்கபரிவாரத்தின் ட்ரோல்படைகளுக்குள் நடந்த ஊடல்கள்தான் என்றாலும் அன்றைய பொழுதை டிவிட்டர்வாசிகளுக்கு சுவாரசியமானதாக மாற்றியமைத்தன.

சினிமா, கிரிக்கெட் பிரபலங்கள் இப்படி தங்களது யோக்கியதையை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டிருந்த அதே சமயத்தில், இத்துறைகளில் முதுகெலும்புள்ளவர்களும் இருக்கிறோம் என்பதையும் ஒரு சில பிரபலங்கள் பதிவு செய்தனர்.

கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கொல்லப்பட்ட போது இந்தியா தனது கருத்தைத் தெரிவித்ததை சுட்டிக் காட்டினார். அதன் மூலமாக, வெளிநாட்டில் இருப்பவர்கள் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையை விடாதீர்கள் என்ற சங்கிகளின் ஓலத்தினிடையே ஒரு முட்டுக்கட்டையிட்டார்.

அதே போல இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, “நான் பொம்மலாட்டத்தைப் (puppet Show) பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். ஆனால் அதனைப் பார்ப்பதற்கு 35 ஆண்டுகள் ஆகிவிட்டது.” என்று தனது டிவிட்டில் குறிப்பிட்டிருந்தார். சங்க பரிவாரக் கும்பலின் ஆட்டுவித்தலில் தனது சகபாடிகள் இழிவான ஒரு செயலைச் செய்வதை குறிப்பின் மூலமாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்திய டென்னிஸ் வீரர் சோம்தேவ், ஒரே பாணியிலான, அதிலும் ஒரே வாசகத்தைக் கொண்ட டிவிட்டுகளை அப்படியே வாந்தியெடுத்து வைத்திருக்கும் பிரபலங்களை கிண்டல் செய்யும் விதமாக, “குறைந்தபட்சம் சொந்தமாகவாவது போடலாமே” என்று டிவிட் செய்திருந்தார்.

அதே போல பாலிவுட் சினிமாவில் நடிகர் டாப்ஸி பன்னுவும் பிரபலங்களின் இந்த இழிசெயலைச் சாடி டிவிட்டரில் எழுதியிருந்தார்.

“ஒரு டிவிட் உங்களது ஒற்றுமையை நடுநடுங்கச் செய்கிறதென்றால், ஒரு நகைச்சுவை உங்கள் நம்பிக்கையை உலுக்குகிறது என்றால், அல்லது ஒரு நிகழ்ச்சி உங்கள் மத நம்பிக்கையை உலுக்குகிறது என்றால், நீங்கள்தான் உங்களது மதிப்பு விழுமியங்களை உறுதிசெய்யப் பணியாற்ற வேண்டுமே தவிர மற்றவர்களுக்கான “பிரச்சார ஆசிரியராக” மாறக் கூடாது” என்று சூடு கொடுத்தார்.

அதே போல நடிகர் சித்தார்த், இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் வெளிநாட்டினர் தலையிடக் கூடாது என்ற கருத்தைச் சாடியும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தும்  எழுதியிருந்தனர்.

இவை ஒருபுறம் அரங்கேறிக் கொண்டிருக்கையில், அமெரிக்க பிரபலங்களின் சமூக வலைத்தளங்களின் ‘உள் டப்பிக்குள்’ (InBox) சென்று கொலை மிரட்டல், ஆபாசப் பதிவு என இந்திய சங்கிகள் தங்களது ‘வழக்கமான’ அருவெறுக்கத்தக்க இழிசெயல்களைச் செய்யத் துவங்கியிருக்கின்றனர்.

விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்துப் பேசிய ஆஸ்திரேலிய ஊடகவியலாளர் சியோபன் ஹியானு தனது இன் பாக்சில் கொலை மிரட்டல்கள் வந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். மரியா அபி ஹபீப் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையாளர், இந்திய ட்ரால்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். களை விட மோசமாக இருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

மொத்தத்தில் இந்தியாவின் மானத்தை சர்வதேச அளவில் கப்பலேற்றிவிட்டு வந்திருக்கின்றனர் சங்கிகள்.

இந்தக் கூத்துக்களின் தொடர்ச்சியாக, உலகின் பழைமையான ‘ஜனநாயக’ நாடான அமெரிக்கா, தனது நாட்டு பிரபலங்களுக்கும் இந்திய வெளியுறவுத்துறைக்கும் இடையில் நடக்கும் தகராறில் தலையை விடவேண்டிய கட்டாயத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.

“எந்த ஒரு ஊக்கமான ஜனநாயகத்திற்கும் அமைதியான போராட்டங்கள் ஒரு அடையாளங்கள் என்பதை நாங்கள் அங்கிகரிக்கிறோம். இதையே இந்திய உச்சநீதிமன்றமும் குறிப்பிட்டுள்ளதை நாங்கள் அறிவோம். இணையம் உள்ளிட்ட தகவல் தொடர்பு தடையின்றி கிடைக்கச் செய்வது கருத்துச் சுதந்திரத்திற்கும், முனைப்பான ஜனநாயகத்துக்கும் அடிப்படையானது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம்.” என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தது.

ஜனநாயகம் குறித்து சங்கிகளுக்கு அதாவது இந்திய அரசாங்கத்திற்கு வகுப்பெடுத்ததோடு மட்டும் அது நின்று விடவில்லை. தனது காரியத்திலும் கண்ணாக, தனது முத்தான கருத்தையும் உதிர்த்துவிட்டுச் சென்றது.

பிரச்சினையை அனைத்து தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலமாக தீர்த்துக் கொள்ள தாம் ஊக்குவிப்பதாகக் கூறிக் கொண்டே, “பொதுவில், இந்திய சந்தைகளின் திறனை அதிகரிக்கும் நடவடிக்கைகள் மற்றும் பெருமளவிலான தனியார்துறை முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்கிறது” என்று கூறியிருக்கிறது.

அமெரிக்காவின் இந்த அறிக்கை அதன் நோக்கத்தை மிகத் தெளிவாகக் காட்டியிருப்பதோடு, இந்திய அரசு வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதன் பின்னணியையும் பகிரங்கமாகச் சுட்டிக் காட்டியிருக்கிறது. வெறுமனே அதானி அம்பானியின் கைகளுக்குக் கிடைப்பதற்காக இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை என்பதையும் சர்வதேச நிதி மூலதனத்திற்கான ஒரு முக்கிய தளமாக இந்திய வேளாண் துறையை மாற்றுவதற்காகவே இச்சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

சச்சின் உள்ளிட்ட கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், ஹாலிவுட் நடிகர்களும் கண்ணை மூடிக் கொண்டு, தலையாட்டி பொம்மைகளாக மோடி கும்பலின் கோரிக்கைக்கு அடிபணிந்து இந்த டிவிட்டுகளை போடுவதன் பின்னணியில் இரண்டு விசயங்கள் இருக்கின்றன.

முதலாவது காரணம் சாதாரணமானதும் அனைவரும் அறிந்ததும்தான். சங்க பரிவார பாசிச கும்பலை எதிர்த்து ஏதேனும் பேசினால் தொழிலை நிம்மதியாகச் செய்ய முடியாது என்பதோடு, கடந்த கால வரி ஏய்ப்பு குட்டைகளை எல்லாம் கிளறி எடுக்க மறுநாள் காலையில் வருமான வரித்துறை வாசலில் வந்து நிற்கும் என்பதை அவர்கள் நன்கு அறிந்திருப்பது முதல் காரணம்.

இரண்டாவது காரணம் தான் முக்கியமானது. தனியார்மயத்தின் பங்குதாரர்களாகவே இந்தப் பிரபலங்கள் அனைவரும் இருக்கிறார்கள் என்பதுதான் அது. ஒவ்வொரு சினிமா நடிகரும், கிரிக்கெட் ஆட்டக்காரரும் நடிக்கும் விளம்பரத்தின் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற்று வருகிறார்கள்.

இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்க முடியாது என்று சவுண்டு விட்டிருக்கிறார், சச்சின். இந்த வேளாண் சட்டங்களே இந்திய இறையாண்மையை ஒழித்துக்கட்டும் விதமாக உலக வர்த்தகக் கழகத்தால் திணிக்கப்பட்டவைதானே. எனில் இவர்கள் உலக வர்த்தகக் கழகத்தை எதிர்த்துக் கலகம் செய்வாரா சச்சின் ?

போடும் ஜட்டியில் இருந்து, குடிக்கும் குளிர்பானம் வரை அனைத்து பன்னாட்டு பொருட்களுக்கும் இதே கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சினிமா நாயகர்களும்தான் விளம்பர மாடல்களாகவும் பிராண்ட் அம்பாசிடர்களாகவும் இருந்து வருகின்றனர். தங்களது நலனும் கார்ப்பரேட் நலனும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கவொன்னாதவை என இவர்கள் அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர்.

படிக்க :
♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !
♦ சச்சின் டென்டுல்கரின் 35லட்ச ரூபாய் இரத்தப் புத்தகம்! காறித்துப்புவோம் !!

அதனால்தான், “#IndiaStandsTogether” (இந்தியா ஒன்றிணைந்து நிற்கிறது) என இப்போது ஹேஷ்டேகில் டிவிட் போடும் இந்த ‘தேச பக்தர்கள்’, 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் கடும் குளிரிலும் மழையிலும் நடுங்கிக் கொண்டு டெல்லியைச் சுற்றி அமர்ந்து போராடிக் கொண்டிருந்த போது, அவர்களோடு ஒன்றிணைந்து நிற்காமல், மவுனிகளாக அனைத்தையும் ‘பொத்திக்’ கொண்டு இருந்தனர்.

அமெரிக்கப் பாடகர் ரிஹானா தனது சமுக வலைத்தளப் பதிவின் மூலம் அளித்த ஆதரவும் உலகம் முழுவதுமான ஜனநாயக சக்திகளின் ஆதரவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு மேலும் ஒரு உத்வேகத்தைக் கொடுத்திருப்பதோடு, மக்களின் தலைவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நடிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் உண்மையான முகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.

இந்திய விவசாயிகளின் போராட்டங்கள் அவர்களது வாழ்வாதாரப் பிரச்சினை மட்டுமல்ல, வருங்காலத்தில் நமக்கு உணவு கிடைப்பதை உத்திரவாதப்படுத்துவதற்குமான போராட்டமும் ஆகும் என்பதை பெருவாரியான மக்கள் உணரும் போது, தற்போது டிவிட்டரில் உருட்டப்படும் கிரிக்கெட் ஆட்டக்காரர்களும், சினிமா ஹீரோக்களும் வீதியில் உருட்டப்படுவார்கள்.


சரண்
செய்தி ஆதாரம் : The Wire, The Wire2

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் மோடி ஜி || மனுஷ்ய புத்திரன்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
உங்கள் தேசபக்தி நாடகத்தில்
ஏதேனும் புதிய சம்பவங்களையோ
வசனங்களையோ சேருங்கள்

நீங்கள் ஒவ்வொரு முறையும்
அதே நாடகத்தின்
அதே வசனத்தை பேசத் தொடங்கும்போது
குழந்தைகள் அடுத்த வசனத்தைச் சொல்லி
சிரிக்கிறார்கள்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
நீங்கள் ஜெயிக்க விரும்பும்போதெல்லாம்
தேச பக்தி
ஒரு மந்திரக்கோல் போலாகிவிடுகிறது
எல்லையில் நம் வீரர்கள் இறக்கிறார்கள்
உங்கள் விபரீத முடிவுகள் அம்பலமாகும்போது
தேச விரோதிகள்
நாட்டை ஊடுருவுகிறார்கள்

பயங்கர வாதிகள்
கருப்புப் பணத்தை
பயன்படுத்தாதிருக்கவே
எல்லாப் பணத்தையும் ஒழிக்கிறீர்கள்
ஒரு மாற்றமும் இல்லாமல்
இந்த நாடகம் அரங்கேறுகிறது

தலை நகரம் விவசாயிகளால்
முற்றுகையிடப்பட்டிருக்கிறது
உங்கள் வழக்கமான தந்திரங்களால்
அதை உடைக்க முடியவில்லை
அவர்கள் காந்தியின் பிள்ளைகள்
திடீரென உங்கள் அடியாள் ஒருவன்
உள்ளே ஊடுருவுகிறான்
குழப்பங்களை உருவாக்குகிறான்
உடனே அன்னிய சதிகாரர்கள்
ஊடுருவிவிட்டார்கள் என்று கதறுகிறீர்கள்
அது ஒரு போலிக்கதறல் என
எல்லோருக்கும் தெரியும்
எனக்கு மிகவும் அலுத்துவிட்டது

‘இதைப்பற்றி நாம் பேசினால் என்ன?’
என ஏதோ ஒரு தேசத்துப் பாடகி கேட்கிறாள்
உடனே இங்கிருந்து
ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரன்
தேசத்தின் இறையான்மைக்கு
ஆபத்து எனக் கதறுகிறான்
அது ஒரு போலிக் கதறல் என
எல்லோருக்கும் தெரியும்

போராட்டம் இப்போது
டெல்லி தெருக்களில் அல்ல
ட்விட்டரில் நடக்கிறது
இலட்சணக்கான விவசாயிகள்
குளிரில் வெட்ட வெளியில் கிடக்கிறார்கள்
சிலர் சாகிறார்கள்
அவர்களுக்கு முன்
முள்வேலிகளை அமைக்கிறீர்கள்
அவர்களுக்கு குடிக்க தண்ணீர் தர மறுக்கிறீர்கள்
அதனால் எல்லாம் இந்தியாவின் இறையாண்மைக்கு
எந்தப் பாதிப்பும் இல்லை
நீங்கள் சாவிகொடுத்த பொம்மைகள்
உங்கள் வாக்கியங்களை கக்குகின்றன

நீங்கள் வெட்கப்பட வேண்டும்;
விவசாயிகளுக்கு எதிராக
நீங்கள் ஒரு நடிகனை பயன்படுத்துவதற்கு
ஒரு நடிகையை பயன்படுத்துவதற்கு
ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரனை பயன்படுத்துவதற்கு
உண்மையில் நீங்கள்
இந்த தேசத்தையே
ஒரு நாடக மேடையாக்கி விட்டீர்கள்
ஒரு விளையாட்டு மைதானம் ஆக்கிவிட்டீர்கள்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
ஒரு அன்னியர் உங்களை விமர்சிப்பதால்
உங்களுக்கு கோபம்வருவதை
நான் நம்பவில்லை
விமானங்கள் ஓடிக்கொண்டிருந்தவரை
நீங்கள் அன்னியர்களுடன்தான்
உரையாடிக்கொண்டிருந்தீர்கள்
அவர்களுடன்தான்
எப்போதும் செல்ஃபி எடுத்துக்கொண்டீர்கள்
அவர்களிடம்தான் போர் விமானங்கள் வாங்கினீர்கள்
அவர்களிடம்தான் குண்டூசிகள்
இறக்குமதி செய்ய
ஒப்பந்தங்கள் போட்டீர்கள்
அன்னிய முதலீடுகளோடு ஒட்டிக்கொண்டு
கொஞ்சம் அன்னியக் கருத்துக்களும்
வந்துவிடுகின்றன
சிந்திக்கும் மனிதர்கள்
எல்லாவற்றிற்கும் கருத்துக்கள்
கூறவே செய்கிறார்கள்
சிந்தனையற்ற தேசபக்தி
புண்படுவதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது

இறையாண்மை என்பது
அதிகாரத்தில் இருந்தல்ல
நீதியிலிருந்தே பிறக்கிறது
உங்களிடம் நீதியைத்தவிர
எல்லாமே இருக்கிறது

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
தேச பக்திக்கூவலால்
உங்கள் எல்லாகுற்றங்களையும்
மறைக்க இயலாது
அந்த நாடகத்தை அதிகமாகவே
நிகழ்த்திவிட்டீர்கள்
ஒரு உண்மையான ஆபத்து
தேசத்திற்கு வந்தால்கூட
யாரும் நம்பமுடியாதபடி
அதைக் கேலிக்கூத்தாக்கிவிட்டீர்கள்

ஸ்க்ரிப்டை மாற்றுங்கள் ஜி
போரடிக்கிறது
பயங்கரமாக தலை வலிக்கிறது

நன்றி : மனுஷ்ய புத்திரன்

disclaimer

பட்ஜெட் 2021 : விவசாயத்திற்கு ‘பெப்பே’ காட்டிய மோடி அரசு !

விவசாயத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றத்தை அளித்திருப்பதாக வேளாண்- சந்தை சீர்திருத்தங்களுக்கு எதிராக கடந்த ஆறுமாதங்களாக போராடிக் கொண்டிருக்கும் முன்னணி விவசாய சங்கங்கள் தெரிவிக்கின்றன.
நிதிநிலை அறிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஆய்வினடிப்படையில் விவசாய சங்கத் தலைவர்கள் இந்த நிதிநிலை அறிக்கை குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

“திங்கள் அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மத்திய பட்ஜெட்டானது, இந்த அரசு விவசாயத்தை வலுவாக்குவதற்கு பதிலாக அதைக் கைவிடும் திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது” என்ற விவசாயிகளின் அச்சம் சரியானது என்பதை நிரூபித்திருக்கிறது என்று விவசாய சங்க தலைவர்கள் யோகேந்திர யாதவ், அவிக் சஹா, கவிதா குருகாந்தி, கிரன்விசா மற்றும் பிற விவசாயத் துறை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

”பெருமளவிலான விவசாயிகளின் போராட்டமும், அவர்களது பொருளாதார நிலைமைகள் குறித்த ஆழ்ந்த அதிருப்தியும் அதிகரித்திருக்கும் சூழலிலும் இந்திய அரசு இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் விவசாயத்திற்கு மிக குறைவான முக்கியத்துவமே கொடுத்துள்ளது,’’ என விவசாய சங்கத் தலைவர்கள் நிதிநிலை அறிக்கை குறித்து பகுப்பாய்வு அமர்வு முடிந்தபின்னர் தெரிவித்தனர்.

படிக்க :
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ தமிழகம் வெற்றி நடைபோடுகிறதா, கூழுக்கு அழுகிறதா?

சென்ற ஆண்டை ஒப்பிடுகையில், விவசாயத்திற்கும் அதன் துணை நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பங்கு 5.1% லிருந்து 4.3% ஆகக் குறைந்துள்ளது. துல்லியமாக கூறுவதென்றால் 1.54 லட்சம் கோடியிலிருந்து 1.48 லட்சம் கோடியாக நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கிறது.

போராடிவரும் விவசாய சங்கங்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த புள்ளிவிவரங்களை கோடிட்டு காட்டி, “விவசாயத்தை முதன்மைத் துறை என்று குறிப்பிடுவதன் மூலம் சமீபத்திய பட்ஜெட் உரைகள் விவசாயத்திற்கு உயர் முக்கியத்துவம் கொடுப்பது போன்ற தோற்றத்தை கொடுத்து வந்த அதே நேரத்தில், விவசாயத்திற்கு சொல்லிக் கொள்ளகூடிய அளவிற்கு அறிவிப்புகள் ஏதுமில்லாத காரணத்தால் இந்த முறை, பட்ஜெட் உரையின் பிந்தைய பகுதிக்கு விவசாயம் தள்ளிவிடப்பட்டுள்ளது,’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திவரும் AIKSCC-ல் அங்கம் வகிக்கும் ரைத்து ஸ்வராஜ்ய வேதிகா என்ற சங்கத்தைச் சேர்ந்த கிரண்குமார் விஸ்சா, ‘’குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்துவது, விளை பொருளை எளிதாக சந்தைப்படுத்தும் உட்கட்டமைப்பு, இயற்கை சீற்றங்களால் பயிர் பாதிப்படையும் போது நல்ல முறையிலான காப்பீடு மற்றும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட விவசாயிகள் சந்தித்துவரும் முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த பட்ஜெட் எதுவும் கூறவில்லை “ என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பிரதான் மந்திரி அன்னதத்த ஆய் சன்ரக்ஷன் அபியான் (PM-AASHA), சந்தை குறுக்கீட்டுத் திட்டம் மற்றும் விலை ஆதரவுத் திட்டம்(MIS-PSS ) ஆகிய இரண்டு திட்டங்களின் நோக்கமும் சந்தையில் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிபடுத்துவதுதான். ஆனால் பட்ஜெட்டில் அந்த திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு அதிக அளவில் குறைக்கப்பட்டு அத்திட்டதையே பொருளற்றதாக்கி விட்டது.

PM-AASHA திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, “நிதிஆண்டு – ஒதுக்கப்பட்ட தொகை” என்ற வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2019-20 – 1500 கோடி
2020-21 – 500 கோடி
2021-22 – 400 கோடி

MIS-PSS திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, “நிதிஆண்டு – ஒதுக்கப்பட்ட தொகை” என்ற வரிசையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

2019-20 – 3000 கோடி
2020-21 – 2000 கோடி
2021-22 – 1501 கோடி

“குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக விலை வீழ்ச்சியடைவதன் காரணமாக ஒரு ஆண்டில் ரூ. 50,000 கோடிக்கும் அதிகமாக விவசாயிகள் இழப்பை சந்திக்கின்றனர். ஆட்சியாளர்களின் வெட்டிப் பேரிரைச்சலைத் தாண்டி, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதிபடுத்த அரசிடம் எந்த பொறுப்புணர்வும் இல்லை என்பதையே இது காட்டுகிறது” என்று குறிப்பிடும் கிரண்குமார் விஸ்சா மேலே குறிப்பிட்ட புள்ளிவிவரங்களை ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“ஏன் குறைந்த பட்ச ஆதாரவிலையை உறுதிபடுத்தும் சட்ட உத்திரவாதம் பற்றி விவசாயிகள் கோரிக்கை வைக்கிறார்கள் என்றால் அதற்கு இதுவெல்லாம்தான் கூடுதலான காரணங்கள் ஆகும். பட்ஜெட் ஆதரவு மூலமூம் சந்தை தலையீடுகளின் மூலமும் அரசு, குறைந்தபட்ச ஆதரவு விலையை பாதுகாக்கவில்லை என்றால், அது (MSP) அர்த்தமற்றதாகிவிடும்” என்றார்.

ஜெய் கிஸான் அந்தோலன் சங்கத்தை சேர்ந்த அவிக் சஹா, “கோவிட்-19 காலத்தில் ஏற்பட்ட ஊரங்கு மற்றும் பொருளாதார மந்தத்தில் ‘ஆத்மநிர்பார் பாரத்’ தொகுப்பு பொருளாதார ஊக்கம் அளிக்கும் என்ற அரசின் கூற்று ஒரு பொய் என்பது விவசாயத்திலும் அதன் துணைத் தொழில்களிலும் நிரூபணமாகிவிட்டது” என்று விமர்சித்தார்.

படிக்க :
♦ யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

“எக்னாமிக் சர்வேயில் அத்தியாயம் 7, தொகுதி 2-ல் வெளியிடப்பட்டதன்படி, வேளாண் உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்ட்ட ஒரு லட்சம் கோடி அதற்காக செலவிடப்படவில்லை. அல்லது, கால்நடை வளர்ப்பு உள்கட்டமைப்புக்கு ஒதுக்கப்பட்ட 15,000 கோடியும் இதற்காக செலவிடப்படவில்லை. அந்த தொகுப்பு அறிவிக்கப்பட்டு 8 மாதம் கடந்த நிலையில் ரூ 2,991 கோடி மட்டுமே துவக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு, கொள்கை அனுமதியில் ஜனவரி 2021 நடுப்பகுதி வரை ஒதுக்கப்பட்டுள்ளது,’’ என்கிறார் சஹா.

விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கிக்கொண்டிருக்கும் ஸ்வராஜ் இந்தியா கட்சியின் தலைவரும் சம்யுக்தா கிஸான் மோர்ச்சா என்ற சங்கத்தின் உறுப்பினருமான யோகேந்திர யாதவ், “2022-ற்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்ற இலக்கை அறிவித்து 5 ஆண்டுகள் ஆன பிறகு, நாம் அந்த இலக்கை சந்திப்பதற்கான இறுதி ஆண்டுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறோம். ஆனால், இப்போது வரை எந்த அளவிற்கு விவசாயிகள் வருமானம் உயர்ந்துவருகிறது; இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது என்பது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை.”

திட்டங்களின் வளர்ச்சி ஏதாவது இருப்பின், அதை கண்காணிக்க, கடந்த சில ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட முக்கிய திட்டங்கள் மற்றும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறித்த அறிக்கை தயாரித்து வைக்காததற்காக அரசாங்கத்தை யாதவ் விமர்சித்தார்.

“இந்த அரசு, அடித்தட்டு மக்களுக்கு அரசு வளங்களை வருமானங்களை பிரித்து கொடுத்து உதவி செய்து, பொருளாதார மந்தநிலையை தீர்ப்பதில் கவனம் செலுத்தவில்லை. பதிலாக, இந்த நெருக்கடியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கார்ப்பரேட் இந்தியா கோரிக்கை வைத்து கேட்டுக் கொண்டிருக்கின்ற பொருளாதார சீர்த்திருத்தங்களை அமல்படுத்த உள்ளதையே, விவசாயிகளுக்கான இந்த வெற்று பட்ஜெட் காட்டுகிறது,”என்றார், யாதவ்.


தமிழாக்கம் : முத்துகுமார்
நன்றி : தி வயர்

 

யாருக்கான பட்ஜெட் : உரம், உணவு, பெட்ரோலிய மானியங்களில் வெட்டு !

லகப் பொருளாதார வீழ்ச்சி கடந்த 2008-ம் ஆண்டு ஏற்பட்டதை தொடர்ந்து மந்த நிலையிலேயே நீடித்து வந்த பொருளாதாரம், கடந்த மூன்றாண்டுகளில் தொடர் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

உலகம் முழுவதுமான பொருளாதார வீழ்ச்சி ஒருபுறமிருக்க, மறுபுறத்தில் திருவாளர் நரேந்திர மோடி அவர்களின் பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி உள்ளிட்ட நடவடிக்கைகள் உள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீரழித்து பெருவாரியான உழைக்கும் மக்களை வீதியில் நிறுத்தினார்.

படிக்க :
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

♦ திருவாரூர் : விவசாயிகளுக்கு ஆதரவாக போராடினால் கொலை முயற்சி வழக்கு !

இந்த நெருக்கடிகளோடு கொரோனா பெருந்தொற்றும் அதன் காரணமாக பெருமளவிலான வேலையிழப்பு மற்றும் வருமானயிழப்பு ஏற்பட்டு மக்கள் அல்லல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை துளியேனும் முன்னேற்றும் விதத்தில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கை இருக்குமா என்ற எதிர்பார்ப்பு பல தரப்பினருக்கும் இருந்துவந்தது.

விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு பல்வேறு போராட்டங்கள் நாடு முழுவதும் நடந்து வந்த நிலையில் மக்களை அமைதிப்படுத்தும் பொருட்டாவது இந்த நிதிநிலை அறிக்கை இருக்கும் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றத்தையே பதிலாகக் கொடுத்திருக்கிறது மோடி அரசு.

மக்களுக்கு அளித்துவந்த மானியங்களை கடுமையாக வெட்டிச் சுருக்கியிருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து ஒருபுறத்தில் விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்த்துவிட்டு, இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அவர்களுக்கான மானியத்தை வெட்டிச் சுருக்கியுள்ளது.

கடந்த 2020 – 2021-ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் உரத்திற்கான மானியங்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 1,33,947 கோடியாகும். ஆனால் இந்த ஆண்டு உர மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை வெறுமனே ரூ. 79,530 கோடி மட்டுமே. கடந்த ஆண்டை விட 40.62% அளவிற்கு உர மானியம் வெட்டப்பட்டுள்ளது.

விவசாயிகளின் உரத்திற்கானது மட்டுமல்லாமல், ஏழை மக்களின் உணவிற்கான மானியத்தையும் வெட்டிச் சுருக்கியுள்ளது மோடி அரசு. குறிப்பாக கடந்த 2020-2021-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் ரூ.4,22,618 கோடியை ஒதுக்கிய மத்திய அரசு இந்த ஆண்டுக்கான நிதிநிலையறிக்கையில் ரூ. 2,42, 836 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 42.54% அளவிற்கு மானியத்தை வெட்டிச் சுருக்கியுள்ளது. இந்தியாவின் மக்கள் தொகையில் சுமார் 67% பேர் ரேசன் கடைகளில் உணவு தானியங்களைப் பெற்று வரும் நிலையில், இந்த மானிய வெட்டு பெரும்பான்மை உழைக்கும் மக்களை பசி பட்டினிக்கு பலி கொடுக்கவிருக்கிறது.

உணவு மானியத்தை வெட்டியதோடு மட்டுமல்லாமல் அனைத்து பொருட்களின் விலையையும் நிர்ணயிக்கும் சக்தி கொண்ட பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களுக்கான மானியத்தையும் குறைத்துள்ளது. கடந்த 2020-21 நிதிநிலையறிக்கையில் ரூ. 38,000 கோடி பெட்ரோல் டீசல் மானியத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிதியாண்டில் வெறுமனே, ரூ. 12,995 கோடியை மட்டுமே ஒதுக்கியிருக்கிறது.

படிக்க:
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

ஒரு வர்க்கத்திடமிருந்து சுரண்டி மற்றொரு வர்க்கத்துக்கு செல்வத்தை தாரைவார்ப்பதுதான் ஒரு அரசின் பாத்திரம். அது யாருக்கான அரசு என்பதிலிருந்துதான் எந்த வர்க்கத்திடமிருந்து எடுத்து எந்த வர்க்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. அம்பானியும் அதானியும் இதர பெருமுதலாளிகளும் சிறப்பான பட்ஜெட் என இதனைப் புகழ்ந்திருக்கிறார்கள். மக்களின் மானியங்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன. இது கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்பது அப்பட்டமாகத் தெரிய வந்திருக்கிறது.

இந்த நிதிநிலை அறிக்கை மக்களுக்கு புதியதாக எதையும் அள்ளிக் கொடுக்கவில்லை என்பதை வேண்டுமானால் ஏமாற்றம் எனக் கூறலாம். ஆனால் ஏற்கெனவே நலிந்து கொண்டிருக்கும் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட மானியங்களையும் பறித்துக் கொண்ட செயலை என்னவென்று சொல்வது ? திமிர்த்தனம் தான் ! இடர்பாடு நிறைந்த சூழலிலும் கூச்சமின்றி மானியங்கள் பறிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில், “மக்கள் நம்மை என்ன செய்துவிட முடியும்?” என்ற திமிரும் தெனாவெட்டும்தான் வெளிப்பட்டிருக்கிறது ! இத்திமிரை இப்போதே அடக்கத் தவறினால், நம்மை அடக்கம் செய்துவிடும் என்பது மட்டும் உறுதி !


கர்ணன்

செய்தி ஆதாரம் : Gonewsindia

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் !

1

சிதம்பரம் அண்ணைமலை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியான ராஜா முத்தையா மருத்துக் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளில், அரசு மருத்துவக் கல்லூரிகளை விட 30 மடங்கு அதிகமாகக் கட்டணம் வசூலிப்பதாகவும், அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்விக் கட்டணத்தையே தங்கள் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர்ந்து இரண்டு மாத காலமாகப் போராடி வருகின்றனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி மற்றும் ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகியவை அடங்கும். இதில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 2,293 ஆகும்.

எம்.பி.பி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 5.5 லட்சம் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விடுதிக் கட்டணமும் சேர்ந்த்து ரூ. 6.3 லட்சம் வசூலிக்கப்படுகிறது; பி.டி.எஸ் படிப்புக்கு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதுகலை படிப்பிற்கு ரூ. 9.6 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

படிக்க :
♦ அண்ணாமலை பல்கலை : விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெறு ! மாணவர்கள் போராட்டம்
திருவள்ளுவர் பல்கலை கட்டண உயர்வைத் திரும்பப்பெறு ! தொடரும் கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

இந்த கல்விக் கட்டணங்களைக் குறைத்து அரசு கல்லூரிகளின் கட்டணத்தையே நிர்ணயக்க வேண்டும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி முதல் மருத்துவ மாணவர்கள் கல்லூரி வளாகத்திலேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தனை நாள் போராட்டத்திற்கு கல்லூரி நிர்வாகமோ, அரசோ எந்தவித பேச்சுவார்த்தைக்கும் முன்வராததால், காலவரையற்றப் போராட்டமாக அறிவித்தனர் மாணவர்கள். தற்போது அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளும் கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.

ராஜா முத்தையா கல்லூரியில் மாணவர்களின் போராட்டத்தை சீர்குலைக்கும் விதமாக கல்லூரி மூடபபடுவதாக அறிவிக்கப்பட்டு குடிநீர், உணவு, மின்சாரம் அனைத்தையும் நிறுத்தியிருக்கிறது நிர்வாகம்.

கடந்த ஜனவரி 20-ம் தேதி, “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும், இன்டர்ன்சிப் மாணவர்களுக்கும் மட்டும் வகுப்புகள் நடத்தப்படும், மற்ற மாணவர்களுக்கு கல்லூரி மூடப்படுகிறது. எனவே மாலை 4 மணிக்குள் கல்லூரி விடுதியை விட்டு வெளியேற வேண்டும்” என்று காலை 11 மணிக்கு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது கல்லூரி நிர்வாகம். அதற்குள் காலிசெய்யவில்லையென்றால் அடுத்தக்கட்ட நடவடிக்கை மிகவும் கடுமையாக இருக்கும் எனவும் மிரட்டல் விடுத்தது.

அதன் பின்பும் மாணவர்கள் போராட்டம் நீடித்ததால், ஜனவரி 21-ம் தேதி மீண்டும் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது கல்லூரி நிர்வாகம், அதில் அனைத்து மாணவர்களும் வெளியேறும் படியும் கல்லூரி காலவரையற்று மூடப்படுகிறது என்று மிரட்டியது.

“ ஜனவரி 23-ம் தேதி விடுதியின் உணவு, தண்ணீர் மற்றும் மின்சாரத்தை நிறுத்திவிட்டது கல்லூரி நிர்வாகம். உணவு தண்ணீர், வெளியில் இருந்து கைக்காசுகளைப் போட்டு சாப்பாடு வாங்கி வரச்சென்றார்கள். வாங்கி வந்த மாணவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை காவல்துறை. மிகுந்தப் போராட்டத்திற்கு பிறகு மாலை 4 மணிக்குதான் மதிய உணவு கிடைத்தது. அதற்குமுன் இரண்டு மருத்துவ மாணவர் மயங்கி விழுந்தார்கள். அவர்களுக்குப் போராட்டக்களத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. கணிசமான கர்ப்பிணி மாணவிகளும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தங்குமிடமும், கழிவறை வசதியும் இல்லாமல் மிகுந்த சிரமப்படுகிறார்கள் ” என்று வருந்துகிறார் ஓர் மருத்துவ மாணவி.

எத்தைனை இடையூறுகள் செய்தாலும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம், நாங்கள் நிதி சுமையால் அதிகம் பாதிக்கப்பட்டு விட்டோம் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்காமல் இங்கிருந்து செல்லமாட்டோம் என்று மாணவர்கள் உறுதியாகக் கூறுகின்றனர்.

“முதலாவதாக, வேலை செய்து கொண்டே போராட்டம் நடத்தினோம். அதன் பின் அவசர சிகிச்சை மட்டும் செய்து வந்தோம். யாரும் எமது போராட்டத்திற்கு செவிசாய்க்காததால் காலவரையற்றப் போராட்டத்தை அறிவித்தோம். அதன் பிறகு கல்லூரி மூடல், உணவு இல்லை, விடுதி மூடல் போன்ற நெருக்கடிகளை கொடுத்தனர்” என்கிறார்கள் மாணவர்கள்.

தொடர்ந்து போராட்டம் நடந்துவந்த நிலையில் கடந்த ஜனவரி 28-ம் தேதியன்று, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி தமிழக அரசின் சுகாதாரத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதாக அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இனி இது கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி என்று அழைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் கல்விக் கட்டணம் தொடர்பாக அரசாணையில் எதுவும் குறிப்பிடவில்லை. கல்விக்கட்டணம் தொடர்பாக அரசாணை வெளியிடப்படும் வரைப் போராட்டம் தொடரும் என அறிவித்துப் போராடி வருகிறார்கள் மாணவர்கள்.

“இது முழுமையான திருப்தி அளிக்கக்கூடிய ஒரு அரசாணையல்ல. ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியும், ராஜா முத்தையா பல்மருத்துவக் கல்லூரியும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழ் எந்த தேதிக்குள் கொண்டுவரப்படும், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறையோடு எப்போது இணைக்கப்படும் என்பதை அதில் கூறவில்லை.

இது உயர்கல்வி துறையில் இருந்து மாற்றுவதற்கான ஒரு அரசாணையாக இருக்கிறதே தவிர, அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் பதிவாளரும், தமிழ்நாடு சுகாதாரத்துறையும் இணைந்து இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, எந்த தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற கால வரம்பும் இல்லை. கட்டணத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என்ற அறிவிப்பும் இல்லை. இது மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.

எனவே, தமிழக முதல்வர் போராடும் மாணவர்களை அழைத்துப் பேச வேண்டும். உடனடியாகக் கட்டணத்தைக் குறைக்கிறேன் என்று அறிவிக்க வேண்டும். அதேபோல குறிப்பிட்டக் காலஅளவு வைத்து இந்த இரண்டு மருத்துவக் கல்லூரிகளையும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும் என்ற உறுதி மொழியை தமிழக முதல்வர் வழக்க வேண்டும்” என்கிறார் டாக்டர் ரவீந்தர நாத்.

ஒரு அரசாணை வெளியிட்டு மாணவர்களை ஏய்த்துவிடலாம் என்ற மாநில அரசின் பகல் கனவு பலிக்கவில்லை. மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றன. இவர்களது போராட்டத்திற்கு பிற அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களும்  ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்திற்கு ஆதரவாக, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம், தஞ்சை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், நெல்லை மருத்துவக் கல்லூரி மாணவர்கள், சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த ஜனவரி 28ஆம் தேதி போராட்டம் நடத்தினர்.

இதே போன்று, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியிலும் கட்டணம் அதிகமாக உள்ளது என்று மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. மற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டிற்கு ரூ. 13,610 மட்டும் வசூலிக்கப்படுவதாகவும், தங்களிடம் கல்லூரி நிர்வாகம் 3 லட்சத்து 85ஆயிரம் ரூபாய் வசூலிப்பதாகவும் இம்மாணவர்கள் கூறுகின்றனர். இம்மாதத்தில் இருந்து தொடர் போராட்டம் நடத்தவிருப்பதாக கூறியுள்ளார்கள். இந்த மருத்துவக் கல்லூரி முதலில் அரசு போக்குவரத்து துறையில் கீழ் இருந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இது அரசு கையகப்படுத்தி அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது.

ஏற்கெனவே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் முறைகேடுகள் கடந்த 2013-ம் ஆண்டு அம்பலமாகின. அதைத் தொடர்ந்து மாநில அரசு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசுடைமை ஆக்கியது.

MCI மற்றும் அண்ணாமலை யூனிவர்சிட்டி ACT பிரிவு 58,3,B,C-ன்படி ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி சுயநிதிக் கல்லூரி அல்ல. பிற அரசு மருத்துவக் கல்லூரிகளை போல இதுவும் அரசு மருத்துவக் கல்லூரியே, என்று அந்த பிரிவுகள் கூறுகிறது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு அரசாங்கம் நியமித்த கல்விக் கட்டணக் குழு முதுகலை மருத்துவக் கல்விக்கான கட்டணத்தை 9.6 லட்சமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்த கல்விக் கட்டணக் குழுவில், மாணவர்களின் கல்விக்கான செலவினங்களை மட்டுமே கணக்கிட்டு மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால், பல்கலைக்கழக நிர்வாக சீர்கேட்டின் காரணமாக ஏற்படும் நஷ்டம் மற்றும் நிதி சுமையை மாணவர்கள் மீது திணித்துக் கல்விக் கட்டணம் என்று நிர்ணயத்துள்ளது அரசாங்கம் நியமித்த கல்விக் கட்டணக்குழு.

இந்த பல்கலைக்கழகத்தில் நோயாளிகளுக்கு ஏற்படும் செலவினம், மருத்துவனையில் பணிபுரியும் ஊழியர்கள், செவிலியர்கள் ஆகியவர்களின் ஊதியங்களை மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் வசூலிக்கிறார்கள்.

பெயருக்கு மட்டுமே இது அரசால் எடுத்துக் கொள்ளப்பட்ட கல்லூரியாக குறிப்பிடப்பட்டு வருகிறதே ஒழிய, கல்விக் கட்டணக் கொள்ளையில் தனியார் கல்லூரிகளுக்கு நிகராகவே மாணவர்களிடமிருந்து பறித்து வருகிறது.

படிக்க :
♦ அண்ணாமலைப் பல்கலை: ஊழலை சமூகமயமாக்கும் அரசு !
விழுப்புரம் SVS ‘மருத்துவக் கல்லூரி’ மாணவர்கள் தற்கொலை முயற்சி !

அண்ணாமலை பல்கலைக் கழகத்தை அரசு கையகப்படுத்தியதில் இருந்து இன்றுவரை கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்று மட்டுமே இத்தனை ஆண்டுகாலமாக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராடி வந்திருக்கின்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ம் தேதி முதல் கல்விக் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் பிறகு கடந்த 2017 செப்டம்பரில், கல்விக் கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தியுள்ளார்கள் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மாணவர்கள். தற்போது 2020 டிசம்பரில் துவங்கிய போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.

ஒவ்வொரு போராட்டத்தின் போதும் ஏதேனும் கண் துடைப்பு வித்தைகளைக் காட்டியும், மாணவர்களை அச்சுறுத்தியும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்து வருகிறது தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும்.

இந்த முறை மாணவர்கள் ஏமாறத் தயாராக இல்லை. போராட்டக்களத்தில் இரண்டில் ஒன்று பார்க்கத் தயாராக இருக்கின்றன. மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழகமெங்கும் அனைத்து மாணவர்களும், சமூக ஜனநாயக சக்திகளும் களத்தில் இறங்கினால் மட்டுமே, தமிழக அரசை பணியச் செய்ய முடியும்.


சந்துரு

டிராக்டர் பேரணியை இழிவுபடுத்தும் ரதயாத்திரை கும்பல்

எல்.கே.அத்வானியின் தலைமையில் நாடு முழுவதையும் மனித ரத்தத்தால் நனைத்த ஒரு ரதயாத்திரையை நடத்தி ஆட்சியை பிடித்த பாஜக போன்ற ஒரு கட்சி, விவசாயிகளின் அமைதியான டிராக்டர் பேரணி டெல்லியில் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தியதை குற்றங்கூற முடியுமா?. அந்தப் பேரணியிலிருந்த சில உதிரிப் பிரிவினர் போலீசுடன் மோதியதும், செங்கோட்டை பகுதியில் நுழைந்ததும் உண்மைதான். அதே நேரத்தில், தேசிய கொடி எந்த இடத்திலும் யாராலும் கீழே இறக்கப்படவில்லை என்பதும், தேசியக் கொடிக் கம்பத்திலிருந்து சிறிது தூரத்தில் இருந்த ஒரு கம்பத்தில்தான் விவசாயிகள் கொடி ஏற்றப்பட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ரத யாத்திரையைத் தொடர்ந்து, ராமர் கோவில் கட்டவென்று  வெறித்தனமான ழுழக்கங்களுடன் கிளம்பிய கும்பல் (ஆர்.எஸ்.எஸ்., வி.இ.பரிஷத், பஜ்ரங் தள்….) பாபர் மசூதியை இடித்துத்  தரைமட்டமாக்கியது. இந்த இரண்டு யாத்திரைகளிலும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கையை பரிசீலித்தால் எந்த யாத்திரை நாட்டுக்கு அதிக சேதத்தை உண்டாக்கியது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

படிக்க :
♦ மோடியின் ஆட்சியில் இந்தியா கலவரங்களில் நம்பர் 1 நாடு
♦ டிராக்டர் பேரணி : விவசாயிகள் மீது போலீசு தடியடி ! கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சு !

பாபரி மசூதி தரைமட்டமாக்கப்பட்ட டிச. 6 1992-க்குப் பின்னர் நாடு முழுக்க பரவிய கலவரத்திற்கும் அதனால் கிட்டத்தட்ட 2000 பேர் கொல்லப்பட்டதற்கும் நேரடிக் காரணம் ரத யாத்திரையும், அது சென்ற வழியெங்கும் பரப்பிய வெறுப்புணர்வும்தான். அயோத்தியில் பாதுகாப்பு படைகளுக்கும் கரசேவகர்கள் என்ற பெயரில் இருந்த வி.இ.ப- வினருக்கும் முன்று நாட்கள் நீடித்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவித்தன. பாபர் மசூதி தரை மட்டமாக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி நடந்த அன்று அயோத்தியில் பஜனை செய்கிறோம் என்ற பெயரில்  கிட்டத்தட்ட 1,50,000 பேர் கூடியிருந்தனர்.

பாஜகவின் உயர்மட்டத்தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோரும் அந்த வரலாற்று இழிநிகழ்வின் சாட்சிகளாக இருந்தனர். அங்குதான் உமாபாரதியின் புகழ்பெற்ற “இன்னும் ஒரே தள்ளு மசூதியை கீழே தள்ளு” என்று முழக்கம்  கரசேவகர்களை வெறியூட்டியது.1998-1999 வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபோது அத்வானி துணை பிரதமராகவும் மற்ற இருவரும் அமைச்சர்களாகவும் அமர்த்தப்பட்டனர்.

26-01-2021-ல் நடைபெற்ற டிராக்டர் பேரணியின் போது ஒரே ஒருவர் மட்டுமே இறந்து போனார். 300 காவலர்கள் போராட்டக்காரர்களின் கல்வீச்சிலும் விவசாயிகளின் தடியடியாலும் காயமுற்றதாக அரசு தரப்பு செய்திகள் இருக்கின்றன. அன்றைக்கு டெல்லியில் 5000 டிராக்டர்களும் 1.5லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான மக்களும் விவசாயிகளும் கூடியிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தத்தில் நடந்திருக்கும் சேதத்தின் மதிப்பு தெரியாவிட்டாலும் ரதயாத்திரையை விட மிக மிக குறைந்தபட்சமானதாக இருப்பதை பார்க்கலாம். உணரலாம்.

விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியோடு பாஜக நடத்திய ரதயாத்திரையை ஒப்பிட்டுப் பாருங்கள்.

டிராக்டர் பேரணி நடத்தப்பட்டதற்கு என்ன காரணம்? சுமார் 65 நாட்கள் அரியானா, உ.பி-ஐ ஒட்டிய டெல்லி எல்லைப் புறங்களில் லட்சக்கணக்கான விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் அடுத்த கட்டமாகும். இந்தப் போராட்டம் எதற்காக? செப்படம்பர் 2020-ல் பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட குறைந்த பட்ச ஆதார விலைக்கு சாவுமணி அடிப்பதோடு விவசாய தொழிலை முழுதுமாக கார்ப்பரேட் கைகளில் ஓப்படைக்கும் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பபெற வலியுறுத்தி நடைபெற்ற போராட்டமாகும்.

விவசாயிகள் இந்தப் பிரச்சினையை இந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையாக பார்த்தனர். இந்த போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் போராட்டத்திற்கு ஆதரவாக தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டும் கடுங்குளிர் தாங்கமுடியாமலும் சரியான மருத்துவ வசதி கிடைக்காமலும் சுமார் 70 பேர் இறந்து போனார்கள். மோடியும் அவரது அரசும் போராட்டம் மற்றும் அதன் கோரிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ளக்கூட  அக்கறையில்லாமல் ஒரு எதிரியை அணுகும் முறையில் விவசாயிகளை அணுகியது.

அத்வானி நடத்திய ரதயாத்திரை எந்தவித மக்களின் பிரச்னைகளை முன்வைத்தோ பொருளாதார காரணங்களுக்காகவோ அல்லது நாட்டில் நிலவிய பணவீக்கம் அல்லது வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பசி, பட்டினிச் சாவுகள் குறித்த எதிர்ப்புணர்வோடோ நடத்தப்பட்டது அல்ல. அந்த யாத்திரை முழுதும் இவை சம்பந்தமான முழக்கங்கள் எங்கும் காணப்படவில்லை. காவிக்கொடிகள் மட்டும் பறந்து கொண்டிருந்தன.

பின்னர் எதற்கு ரதயாத்திரை? வி.பி.சிங் அரசு மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அரசு வேலைகளில் ஓபிசி மக்களுக்கு 27 சத இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கியதன் மூலம் தங்களுக்கான ஓட்டு வங்கி சிதறிப் போய்விடுமோ என்ற பதட்டத்தில் இந்து ஓட்டு வங்கியை நிலை நிறுத்திக்கொள்ளும் ஒற்றை நோக்கத்துடன் நடத்தப்பட்டதே ரத யாத்திரையாகும்.

உயர்சாதியினருக்கு இந்த ஒதுக்கீடு மறுக்கப் பட்டிருந்தாலும் ஓபிசி பிரிவினரை எதிரிகளாக பார்க்கமுடியாத நிலையில் இந்து ஓட்டு வங்கியை நிலைநிறுத்த முஸ்லீம்களை எதிரிகளாக்க திட்டமிட்டுக் களமிறங்கியது. இந்த ரதயாத்திரை நாட்டில் நிலவும் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கத்தோடும் மதப் பிரிவினரிடையே பதட்டத்தை உண்டாக்கி கலவரத்தை தூண்டும் வகையிலும் முஸ்லீம் மன்னர், ‘ராமர் பிறந்த இடத்தில்’ கோவிலை இடித்து மசூதி கட்டி விட்டதாகவும் அது ‘தேசிய அவமானம்’ என்ற பிரச்சாரங்கள் மூலமும் ரதயாத்திரை சென்ற வழியெங்கும் பாஜக தலைவர்களால் வெறியூட்டப்பட்டது.

ரதயாத்திரையின் இறுதிநோக்கமென்பது, பாபரின் படைத்தளபதியால் கட்டப்பட்ட, முகலாய அதிகாரத்தின் அடையாளமாக இருக்கும் பாபர் மசூதியைத் தரை மட்டமாக்குவதாகவே இருந்தது. இந்த ரதயாத்திரை முழுவதும் மதரீதியானதாக, வெளிப்படையாக சிறுபான்மை மதத்தினரின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலும் அவர்களை இழிவுபடுத்துவது மற்றும் தாக்குவது என்ற வகையிலும்தான் திட்டமிட்டு நடத்தப்பட்டது.

ஆனால் விவசாயிகள் போராட்டமோ ஒரு மதசார்பற்ற உழைக்கும் மக்களின் போராட்டமாகவே கடைசிவரை இருந்த்து. பேரணியில் இணைந்தவர்கள் சிலர் ‘நிசான் சாகிப்’ கொடியை ஏற்றிவிட்டதாலேயே இதை சிங் இனத்தவரின் போராட்டமாக சுருக்கி விடமுடியாது. இது அனைத்து விவசாயிகளின், உழைக்கும் மக்களின் போராட்டமாகவே கடைசிவரை நீடித்தது.

எந்த நிகழ்வென்றாலும் அடையாளத்தை தேடி அர்த்தம் கற்பிக்கும் பாஜக தங்களை எதிர்த்த போராட்டங்களை இந்துக்களுக்கு எதிரானது என்றும் ‘தேசவிரோத செயல்’ என்றும் முத்திரை குத்தி மடைமாற்றம் செய்து மக்களை ஏமாற்றுகிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகாவத் “இந்துக்கள் எப்போதும் தேசவிரோதிகளாகமாட்டார்கள்” என்று கூறியிருப்பது தேசவிரோத சிந்தனையெல்லாம் சிறுபான்மையினருக்கே உரியது என்ற கருத்தை வலிய இந்து மக்களிடம் திணித்து மதவெறியை ஊட்டி வெறுப்புணர்வை  வளர்க்கத்தான்.

விவசாயிகள் போராட்டம், நாட்டின் ஒட்டு மொத்த விவசாயத்தை நாசமாக்கும் மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. அதிகாரத் தோரணையில் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் சட்டங்களை எதேச்சதிகாரமான முறையில் போட்டு எவ்வித விமர்சனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தும் ஒரு அரசுக்கு எதிரான போராட்டமுமாகும்.

விவசாயிகளின் போராட்டமும் டிராக்டர் பேரணியும் நம்முன் ஒரு சமூக பிரச்சினையை எழுப்பியுள்ளது. ஆனால் ரத யாத்திரையோ அப்பாவி இந்துக்களிடம் மதவெறியை ஊட்டியது. மதம் சார்ந்த பிரச்சினைகள் மக்களை எப்படியிருந்தாலும் எதிரெதிராக பிளவுபடுத்தி நிறுத்திவிடும் என்பதைத்தான் நமது கண்ணெதிரே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன.

ஆனால் சமூக பிரச்னைகளோ மக்களை சாதி மதம் கடந்து ஓரணியில் நிற்க வைப்பவையாகும். இந்த அரசோ ஹிந்துத்வாவை அடிப்படையாக கொண்டது.எனவே பிரச்சினை என்று வந்தாலே அடையாள அரசியலைக் கொண்டு இந்துக்களுக்கும் மற்றவர்களுக்குமானதாக மாற்றி சமூக நோக்கத்தை சாகடித்து நீதி பற்றி கவலைப்படாமல் செயல்படும் அரசாக இருக்கிறது.

படிக்க :
♦ விவசாயப் போராட்டத்தை திசைத் திருப்பும் ஊடகங்கள்!!

♦ தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

மாரச் 2020-ல் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் மார்ச் 2020-ல் தொழிலாளர்கள் பிழைப்பு வாழ்வாதாரம் இழந்து தங்கள் வீட்டிற்கு ஆயிரக்கணக்கான மைல்களை நடந்தே கடந்து சென்றபோது போலீசாலும் அரசாங்கத்தாலும் சொல்லொணா துயரங்களை அடைந்தனர். மோடி அரசின் செயல்பாடு எந்தளவு மனித்தன்மையற்று இருந்த்து என்பதை நாம் ஒவ்வொருவரும் அப்போது உணர்ந்தோம்.

விவசாயிகள் போராட்டம், கடினமான பாதையில் பயணிக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆட்சியில், ஜனநாயகம் சொல்லளவில் கூட இல்லை என்பதையும் தேர்தல் வாக்குறுதிகள் என்பது மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க ஒரு தந்திரம் மட்டுமே என்பதையும்,  உண்மையில் ஆட்சியாளர்களின் நோக்கம் ஒரு இந்துத்துவா பாசிசத்தை அரங்கேற்றுவதுதான் என்பதையும் விவசாயிகளின் போராட்டப் பாதை தெள்ளத்தெளிவாக மக்கள் மத்தியில் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.


மூலக் கட்டுரை : ரவி ஜோஷி
தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : The Wire

தி கிரேட் இந்தியன் கிச்சன் || ஆணாதிக்கமும் மதமும் இங்கு தோலுரிக்கப்படும்

தி கிரேட் இந்தியன் கிச்சன் ஓரு பார்வை : ஆணாதிக்கமும் தான் சார்ந்த மதமும் பெண்களுக்கு எப்படியான உலகத்தையும் தருகிறது என்பதை துளியும் குறைவில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கிறது இப்படம்.

எப்போதும் இந்திய சினிமாவில் மலையாளத்திற்கு என்று என் திரைப்பட்டியலில் தனியிடம் உண்டு. இயல்பை இயல்பான மனிதர்களின் உணர்ச்சிகளையும், அவர்கள் அரசியலையும் காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமாவிற்கு தனியிடம் உண்டு.

“தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்றவுடன் சமையலையும் சுவையையும் தரும் படம் என்றுதான் பார்க்கத் துவங்கினேன். ஆனால் அது சுவையை தாண்டி பெண்ணின் சுமையையும், எந்தவித வன்முறையின்றி ஆதிக்கம் செலுத்தும் ஆணாதிக்க வன்மத்தையும் கேள்வி கேட்க வைத்திருக்கிறது என்பதே உண்மை.

படிக்க :
♦ என் பார்வையில் கில்ட்டி ! திரைவிமர்சனம்
♦ NGK : செல்வராகவன் – சூர்யா கூட்டணி Hangover-ல் ஒரு அரசியல் படம் !

படத்தின் துவக்கம் சமையலறையில் குக்கரின் விசிலும்,காய்கறி துண்டுகளை நறுக்கல், இனிப்பு பண்டங்கள் என தயார் ஆகிக்கொண்டு இருக்கிறது. கேரளத்தில் பெண் காணும் முறையைக் காட்டி அதன் பின் அடுத்தடுத்து காட்சிப்படுத்துகிறார் . இன்னொரு பக்கம் ஓரு பெண் அவளின் விருப்பமான நடனத்தை ரசித்து ஆடிக்கொண்டியிருக்கிறார் . பெண் காணும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாப்பிள்ளையும் பெண்ணை பேசச் சொல்ல, என்ன பேசுவது என்று தொடங்கும் முன் திருமணம் நடந்து முடிந்து விடுகிறது.

வீட்டில் பார்க்கும் பல திருமணங்கள் இப்படிதான் முடிகிறது. நாம் யார் என்பதை கூட அறியாமல் உடன் பயணிக்க ஓருவர்; அதுவும் அதற்கு இருமணம் இணையும் விழாவென்று பெயர். திருமணம் முடிந்து முதல் நாள் காலை அவளின் கணவர் யோகா செய்து மனதையும் உடலையும் ஆசுவாசப்படுத்திக்கொள்கிறார். அந்த பெண்ணின் மாமனார் பேப்பர் படித்திக் கொண்டே தனது மனைவி பேஸ்ட் தடவிய பிரஷ் எடுத்து வருவதற்குக் காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு ஆங்கிலத்தில் ஆர்தோடக்ஸ் குடும்பம் என்று பெயருமுண்டு.

அந்த பெண்ணோ கனவர் யோகா செய்யும் நேரத்தில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து, குளித்து விட்டு விளக்கு வைத்து, பின் காலை உணவை செய்ய ஆயுத்தம் ஆகிறார். காலையில் முதலில் எழுந்து பின் இரவு கடைசியாக படுக்கைக்குச் செல்வது, இதுதான் அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கை.

“நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை, ஞாயிற்றுக் கிழமையும் பெண்களுக்கு இல்லை”  என்று கவிஞர் கந்தர்வன் தனது கவிதையில் அழகாக சொல்லியிருப்பார்.

வீட்டில் சுவையாக உணவு செய்யும் அம்மாவை பலமுறை புகழ்ந்து இருப்போம். ஆனால் சில சமயம் சரியாக செய்யாத ஒன்றை பலமுறை சுட்டிக் காட்டியபடியே அந்த உணவை நாம் சுவைத்திருக்கிறோம். அங்கு அவர்களுக்கு தேவை புகழ்ச்சியல்ல, புரிதல் என்பதை புரிய வைத்திருக்கிறது இந்தப் படம்.

அந்த பெண்ணின் மாமனார் விறகு அடுப்பில் வைத்த சாதம், அம்மியில் அரைத்த சட்னி, கையால் துவைத்த உடுப்பு என கேட்கிறார். சட்னி கையால் அரைக்கும் பக்குவம் தனி சுவைதான். அதற்காக அவர்களின் விருப்பத்தையும் அம்மியில் வைத்து நசுக்குவதற்கு பெயர் என்ன? மின் சாதனங்கள் பெருகிய இக்காலத்திலும் விருப்பம் என்ற பெயரில் பிறரை கட்டாயப்படுத்தி செய்ய வைப்பது எது?

அதே சமயம் சமையலறை பைப்பில் தண்ணீர் கசிவால் தினந்தோறும் மன்றாடும் அந்த பெண்ணின் குரல் அவரின் கணவரின் காதுக்கு எட்டாது இருப்பதன் காரணம் என்ன? பிறர் வலியை தான் உணராதது மட்டுமல்ல, தண்ணீர் கசிவடைவதால் தனக்கு பெரும் பாதிப்பு ஏதும் இல்லாததாக நினைப்பது போலவே, தன் மனைவியின் வீட்டு வேலை இடர்பாடுகளை தனக்கான பாதிப்பாக கருதுவதில்லை.

யாரேனும் சாப்பிட்டுவிட்டு, மிச்ச எச்சத்தை அப்படியே சாப்பிட்ட தட்டிலேயே விட்டுச் சென்றால் அதை எடுக்க, பெற்ற தாயாக இருப்பினும் ஒருவித சங்கடம் இருக்கும். ஆனால் அதை பெரும்பாலான ஆண்கள் மனதில் கொள்வதில்லை. அவர்களுக்கு அது தங்களது வேலையல்ல என்பதாகவும், தனது தாயின் / மனைவியின் / சகோதரியின் வேலை என்பதாகவுமே மனதில் படுகிறதே ஏன்? ஓரு ஆண் தான் சாப்பிட்ட இடத்தையோ அல்லது சாப்பிட்ட தட்டையோ சுத்தம் செய்ய ஏன் துணிவதில்லை? சமையல் முதல் எச்சில் தட்டில் கழுவுவது வரை பெண்களின் வேலையாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதுதான்.

சமையலறை வேலை தொடங்கி கழிவறை சுத்தம் செய்யும் வேலை வரை முடித்துவிட்டு, படுக்கையறை சென்றாலும் அங்கும் பல பெண்கள் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். அங்கு அவர்களின் ஓய்வுகூட காணாமல் போகிறது.

காமமும் கூட காதலோடு சேரும் போது தான் முழுமையடைகிறது. ஆனால் வீட்டிலிருக்கும் பெண்களுக்கு பல சமயங்களில் விருப்பமின்றி தீண்டுதலும், தனது விருப்பங்களைக் கூட சொல்ல முடியாத நிலைதான் நீடிக்கிறது. காமம் மெல்லியது. அதை கட்டாயத்தில் கட்டிலில் கிடத்துவது எது போன்றது? அதுவும் ஓரு வன்முறையே.

ஆண்களுடைய தேவையின் நீட்சி மட்டுமே பெண் என்பதுபோல் இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது.  இங்கு பாலியில் விருப்பம் பற்றி யார் பேச வேண்டும்? யார் கேட்க வேண்டும்? என்பதும் கூட ஆண்தான் நிர்ணயிக்கிறான்.

இங்கு ஆண் தனது தேவையையும் விருப்பத்தையும் பேச இடமிருக்கிறது. ஆனால் அதையே ஒரு பெண் பேசினால் அது வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது. அந்தப் பெண் மட்டுமல்ல, பெரும்பாலான இல்லத்தரசிகளின் நாட்கள் இப்படித்தான் கழிகிறது.

இந்தப் படம் இந்தியக் குடும்பங்களின் பிரதிபலிப்பு என்பதால்தானோ என்னவோ, இந்த கதாபாத்திரங்களின் இடத்தில் எந்தக் குடும்பத்தையும் வைத்துப் பார்த்து இந்தக் காட்சிகளை நம் அன்றாட வாழ்வில் பொருத்திப் பார்க்க முடியும்.

குடும்பத்தின் அனைத்துப் பணிகளையும் செய்யும் பெண்ணுக்கு மாதத்தில் மூன்று நாட்கள் வரும் மாதவிடாயைத் தீட்டாகப் பார்ப்பதுதான் முட்டாள்தனத்தின் உச்சம். அதையும் கூட அந்த வேலைக்காரப் பெண், “அது தீட்டு என்றால் என் குழந்தைகளுக்கு யார் உணவளிப்பது?” என்று கேட்கும் கேள்வியே உழைக்கும் வர்க்கத்தின் வாழ்நிலையின் நிதர்சனம்.

அந்தப் பெண் அந்த மூன்று நாட்கள் தனிமையில் இருப்பது எப்படியான அசோகரியங்களை தருகிறது என்பதை கடந்து அது ஏதோ பெண்களுக்கான இழுக்காக பார்க்கும ‘தீட்டு’ எனும் பார்வை அவர்களை மேலும் பலவீனப்படுத்துகிறது.

நம் நாட்டில் அசாமில் உள்ள காமக்கியதேவி கோவிலில் ரத்தப்போக்குடன் பெண் கடவுள் காட்சியளிக்கிறார். ஆனால் சபரிமலை கடவுள் மாதவிடாயை தீட்டாகப் பார்க்கிறது. பெண்களை சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற பெண்களின் உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்துப் போடும் ஓரு முகநூல் பதிவுகூட, அந்தப் பெண்ணின் கணவரின் விருப்பத்தோடு மட்டுமேதான் பதிவிட முடிகிறது.

சமூக வலைத்தளத்தில் தனது கருத்தைத் தெரிவிக்கும் அடிப்படை உரிமையை முடக்குவது முதல், தான் கற்ற கலையை பிறருக்கு கற்றுத்தர விருப்பமிருந்தும் பிறரது கௌரவம் என்ற பெயரில் பெண்கள் மீது ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடுகள் வரை அனைத்தையும் மொழி எல்லைகளைக் கடந்து ஒட்டுமொத்த பெண்ணின் குரலாய் இயக்குனர் ஜூயோ பேபி படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

நிமிஷா சஜ்யன் இங்கே தனது நடிப்பை வளர்த்துக் கொண்டு ஒவ்வொரு படத்திலும் தனது திறமையை மெருகேற்றியிருக்கிறார். ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’, அவரது நரம்புகள் வழியாக பாய்ந்து பெயரிடப்படாத மனைவியின் ஒவ்வொரு களத்திலும் சுவாசிக்கிறார் நிமிஷா.

அவர் நடித்த முதல் படமான ”தோண்டிமுதலம் டிரிக்சஷிய”த்தின் மூத்த துணை நடிகரான சூரஜ் வெஞ்சராமுடு, “தி கிரேட் இந்தியன் கிச்சனி”ல் கணவராய் தனது நடிப்பின் மூலம் சிறப்பான கலை நுண்ணறிவைக் காட்டியிருக்கிறார்.

வெளிப்படையாக வெறுக்கத்தக்க மனிதராக அல்லாமல், ஒரு வித்தியாசமான – எல்லா மனிதர்களுக்குள்ளும் நல்ல நடத்தை கொண்ட வில்லன்கள் இருப்பதை அவரது கதப்பாத்திரம் வலியுறுத்துகிறது. அது நமது பக்கத்து வீட்டு வழக்கமான அத்தியாயமாகக் கூட இருக்கலாம்.

தி கிரேட் இந்தியன் கிச்சன், பாதிக்கப்பட்ட பெண்கள் முதல் பாதிப்பை உணராமல் இருக்கும் பெண்கள் வரை அனைவருக்கும் ஓரு பாடமாக அமைந்திருக்கிறது. இந்தப் படத்தில் மாமியாராக வரும் கதாபாத்திரத்துக்கு தனி பாராட்டு. தான் முதுகலை படிப்பு படித்தும்கூட, “ஆடை, ஆண் கொடுத்த சுதந்திரம்” என்பதன் மூலம் எதார்த்தத்தை காட்டியிருப்பார். எனினும் மருமகளின் வலியை ஓரு சகமனிதியாக பார்ப்பதுதான் தேவை என்ற அவரது கதாபாத்திரம், சமூக மற்றும் சினிமா ஸ்டீரியோடைப்களுக்கு மாறாக, மாமியாரும் ஓரு பெண் என்ற பார்வையை மனதில் பதிய வைத்திருக்கிறது.

படத்தின் இன்னொரு சிறப்பம்சம் – ஒலி வடிவமைப்பாளரான டோனி பாபுவின் ஸ்விஷ், ட்ரிக்கிள்ஸ், கடுகின் கடுகல், எண்ணையை குமிழியின் சிரிப்பு, பாத்திரங்களின் பீயோனா , உணவை சுவைக்கும் இசை என எல்லாம் நம்மை படத்தோடு அழைத்து செல்கிறது.

ஓளி வடிவமைப்பில் டிஓபி சலு கே தாமஸ், அந்தப் பெண்ணின் திருமண வாழ்க்கையை மங்கலான ஓளியுடன் பயணிப்பது போன்று காட்சிப்படுத்தி, பின் படத்தின் முடிவில் ஒளியை அதிகரித்து திருமண வாழ்க்கை என்ற சிறைச்சாலையிலிருந்து அவளை சிறகசைத்த பறவையைப்போல் காட்டுவதில் தொழில்நுட்ப யுத்தியை அழகாக கையாண்டுள்ளார்.

பெண்களை கடவுளாகப் பார்க்க வேண்டும் என யாரும் நினைக்கவில்லை. ஆனால் பெண்ணை ‘தேவி’ என்று சொல்லி தியாகம், வலி, பெருமை, கௌரவம் எல்லாம் அவளின் அங்கம் முழுக்க அணிகலன்களைப் பூட்டுவது விருப்பமற்ற வெற்று ஜோடனைப் பேச்சாகவே இருக்குமே ஒழிய உள்ளார்ந்த பொருளில் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

இங்கே ஆண்கள் பற்றி எதிர்மறையான கருத்துகளை மட்டும் முன் வைப்பது எனது விருப்பமல்ல. அதைச் செய்யவும் இல்லை. ஏனெனில் என்னை வளர்த்தெடுத்த சமூகத்தில் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் போன்ற தோழர்களால் பெண் விடுதலை சாத்தியமானது என்பதை என் நினனவில் கொள்கிறேன்.

படிக்க :
♦ ” தந்தையர் இல்லா காஷ்மீர் ” – திரைப்படம் | கண்ணீர் பள்ளத்தாக்கின் கதை !
♦ செம்படையில் பெண்கள் – திரைப்படம்

இப்போது எல்லாம் ஆண்கள் இப்படியில்லை என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால், சேர்ந்து உணவு சமைப்பது, வேலைகளை பகிர்ந்து செய்வது, வரதட்சணை வேண்டாம் எனக் கூறுவதெல்லாம், லட்சத்தில் ஓரு பகுதியே. அதுவும் கூட தேவையை சார்ந்து மட்டுமே இயக்குவிக்கப்படுகிறது. அதுவே ஆண்களின் புரிதலின் அடிப்படையில் இயங்குமாயின், கட்டாயம் அவர்களுக்கு எனது பாராட்டுகள். எனது பார்வையில் தவறு இருப்பின் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள். கட்டாயம் பரிசிலிக்கிறேன். ஆனால் ஆண்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

“மாற வேண்டியது மனம் மட்டுமே…   மாறக்கூடாது என்று தடுப்பது எதுவோ அதை தகர்த்து எறி ..”

தி கிரேட் இந்தியன் கிச்சன் என்பது ஒரு மிக மோசமான, ஆணாதிக்கத்தையும் அதற்கு ஆதாரமாக விளங்கும் மதத்தையும் கேள்வி கேட்டிருக்கிறது என்றால் அது மிகையாகாது. இயக்குனர் ஜியோ பேபி மிகவும் எளிமையான தனது கதைக் களத்தால், அதை சாத்தியப்படுத்தியிருக்கிறார். நம் வாழ்நாள் முழுவதும் எங்கோ ஏதோ ஒன்றில் அனுபவித்து கொண்டிருப்பதை நாம் அனைவரும் உணரும் வகையில் இப்படம் அமைந்திருக்கிறது !

சிந்துஜா
சமூக ஆர்வலர்disclaimer