Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 308

பகவத் கீதை Vs திருக்குறள் | சுபவீ – அருள்மொழி கருத்துரையாடல் | காணொளி

மிழ் மண்ணில் பகிரங்கமாக பெருமைப்பட்டுக் கொள்ள முடியாத வருணாசிரமத்தை மட்டுமே தனது வரலாறாகக் கொண்டிருக்கும் பார்ப்பனியம், திருக்குறளையும் திருவள்ளுவரையும் விழுங்க எத்தனிக்கிறது. வர்ணாசிரம தர்மத்தை எதிர்த்துச் சமர் புரிந்த திருக்குறள் கீதையின் சாரத்தைப் பேசுகிறது என்று வண்ண வண்ணக் கதைகளை அள்ளி விட்டுக் கொண்டிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இந்த வெட்டிக் கதைகளை ‘இந்துத்துவ’வாதிகளின் நூல்களில் இருந்து சான்றாதாரங்களை எடுத்து வைத்து விவாதிக்கின்றனர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், அருள்மொழி ஆகிய இருவரும். இந்த விவாதத்தின் போக்கில் சங்க பரிவாரத்தின் ஒவ்வொரு பொய்யையும் ஆதாரப் பூர்வமாக முறியடிக்கின்றனர்..

கடந்த 14.12.2019 அன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகம் அரங்கத்தில் நடைபெற்ற  “குறளும் கீதையும்” – கருத்துரையாடல் நிகழ்வில் பேராசிரியர் சுப.வீ மற்றும் அருள்மொழி பங்கேற்ற கருத்துரையாடலின் காணொளி – பாகம் 1

பாருங்கள் ! பகிருங்கள் !

அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! புதிய கலாச்சாரம் டிசம்பர் வெளியீடு

ந்தியா எதிர்பார்த்துக் காத்திருந்த பாபர் மசூதி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி விட்டது. ”இரு சமூகங்களுக்கு இடையே அமைதியைக் கொண்டுவரும் நடுநிலையான தீர்ப்பு” என்று ‘மதச்சார்பற்ற’ அரசியல் கட்சி களே இந்தத் தீர்ப்பின் மீது கருத்துக் கூறியுள்ளன.

“நள்ளிரவில் குழந்தை ராமன் சிலையை பாபர் மசூதியில் வைத்தது தவறு; மசூதியை இடித்தது தவறு. அந்த இடத்தில் ராமர் கோவில் இருந்ததற்கான ஆதாரம் இல்லை ; அங்குதான் ராமர் பிறந்தார் என்பது இந்துச் சமூகத்தின் நம்பிக்கை என்பதால், மத்திய அரசு ராமர் கோவில் கட்ட வேண்டும்.” – இதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் சாரம்.

இந்தத் தீர்ப்பின் மூலம் ”பாபர் மசூதியை வீழ்த்தி விட்டோம், அடுத்தது எங்கள் இலக்கு மதுரா, காசி” என்று சூளுரைத்த சங்க பரிவாரத்தினரின் கடப்பாரையை கூர்தீட்டிக் கொடுத்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

சனாதன பார்ப்பன மேலாதிக்கத்தின் அடிப்படையில் இந்து ராஷ்டிரத்தை கட்டியமைப்பதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம். அதனை செயல்முறைப் படுத்தவே பாபர் மசூதி விவகாரத்தைக் கையில் எடுத்தார் அத்வானி. அவர் 1990-ம் ஆண்டு துவங்கிய ரதயாத்திரை, இந்திய நகரங்களை இரத்தத்தால் நனைத்தது. நூற்றுக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்.

கடந்த 1992, டிசம்பர் 6 அன்று சங்க பரிவார கும்பலால் பாபர் மசூதி இடிக்கப் பட்டது. அதனைத் தொடர்ந்து நாடெங்கும் நடைபெற்ற கலவரங்கள், குண்டு வெடிப்புகளைக் காரணம் காட்டியே முஸ்லீம்களை இந்துக்களின் எதிரியாக சங்க பரிவாரம் சித்தரிக்கத் தொடங்கியது. காங்கிரசு ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியையும், முஸ்லீம் ‘பயங்கரவாத’ பீதியையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் கணிசமான தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

இவ்வாறு, ஆளும் கட்சியாக உருவெடுத்த சங்க பரிவாரம், இன்று ஜனநாயகத்தின் அத்தனைத் தூண்களையும் வளைத்து சுருட்டி தனிப்பெரும் பாசிச சக்தியாக வளர்ந்துள்ளது. ஏகாதிபத்திய நலனுக்காக, இந்துக்கள் உள்ளிட்டு அனைத்து உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதார அரங்கில் அழித்து வருகிறது.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சாதாரண இந்துக்களை பெரும்பான்மைவாத மயக்கத்தில் ஆழ்த்த சங்க பரிவாரம் செய்த சதித்தனங்களையும், தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் இலட்சணத்தையும் அம்பலப்படுத்துகிறது, இந்தத் தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

***

அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! – புதிய கலாச்சாரம் டிசம்பர் 2019 நூலை வாங்குவதற்கு ‘Add to cart’ பட்டனை அழுத்தவும் ! உள்ளூரில் அச்சு நூல் மற்றும் மின்னூல் வாங்குவதற்கான பட்டன் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ளவர்கள் அச்சுநூல் வாங்குவதற்கான வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் .


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூல் அல்லது மின்னூல் வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

மின்னிதழுக்கான பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சுநூலுக்கான பணம் அனுப்பிய பிறகு தாங்கள் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக இதழ் அனுப்பி வைக்கப்படும்.

“அயோத்தி தீர்ப்பு : சுப்ரீம் கரசேவை மன்றம் ! ” நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
  • ராமர் கோயில் கட்டும் பொறுப்பை தலைமேல் ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம்!
  • இந்துத்துவ சக்திகளுக்கு அயோத்தி முடிவல்ல; இது ஒரு ஆரம்பம்!
  • சதி – சூழ்ச்சி நிறைந்த பாபர் மசூதி வழக்கின் வரலாறு!
  • சங்க பரிவாரக் கும்பலின் இலக்கு இந்துமத பாசிச பயங்கரவாத ஆட்சி!
  • பாபர் மசூதி இடிக்கப்படவில்லை என்றால், அதை உச்ச நீதிமன்றமே இடித்திருக்குமா? – நீதிபதி ஏ.கே.கங்குலி
  • காசி – மதுரா மசூதிகளே காவிகளின் அடுத்த இலக்கு!
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கு: முரண் நிறைந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
  • பாபர் மசூதி வழக்கு: நடுவர் குழுவின் தந்திரங்கள்!
  • அயோத்தி தீர்ப்பு: சீராய்வு மனுதாக்கல் செய்ய முஸ்லீம் தரப்பு முடிவு!
  • ராமன் தொடுத்த வழக்கு குரங்கு எழுதியத் தீர்ப்பு!
  • அயோத்தி தீர்ப்பு: அரசியலமைப்புக்கு விழுந்த அடி!
  • பாபர் மசூதி விவகாரம்: வரலாற்றாசிரியர் டி.என்.ஜா நேர்காணல்
  • சுப்ரீம் கோர்ட்டும் ராமர் கோயிலும் எங்களுடையதுதான்! – பாஜக அமைச்சர்
  • பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா?

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

இணையம் மூலமாக ஆண்டுச் சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டுச் சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். நேரடியாக சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நெட் பேங்கிங் மூலமாகவும் அனுப்பலாம்.

வங்கி விவரங்கள் :
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி:
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்:
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

____________

புதிய கலாச்சாரத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

 

ஐ.ஐ.டி. இன்றைய நிலை | சாதி மறுப்பு காதலர்கள் | சாதியை ஒழிக்காது வர்க்கப் போராட்டம் சாத்தியமா ? | கேள்வி – பதில் !

கேள்வி : தற்போதைய ஐ.ஐ.டி.நிலை .. ஐய(ங்கார்)ர் இன்ஸடிடியூட் ஆப் டெக்னாலஜி என்று மாறி வருகிறதா …?

செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

இப்போது அல்ல, துவக்கம் முதலே அது அப்படித்தான் இருந்து வருகிறது. அந்த இருத்தலை எதிர்த்து வந்த போராட்டங்கள்தான் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடை, சூரஜ் மாட்டுக்கறி பிரச்சினை, ஃபாத்திமா தற்கொலை. இந்தப் போராட்டங்கள் நடந்த காலத்தில் மோடி அரசே பதவியிலிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் ஆளும் போது ஐயர் இன்ஸ்டிடியூட்டின் ஆட்டத்தை சொல்லவா வேண்டும்?

“ஐயர் உண்டு தீர்ப்பார்; கர்ணன் கொடுத்து அழிப்பான்.” என்ற பழமொழியைப் போல ஐஐடியில ஐயர் படிச்சா நல்ல வேலை! ஐஐடியில மற்றவர் படிக்கப் போனா படிப்பே காலி !

ஆனாலும் அம்பேத்கர் பெரியார் மாணவர் வாசகர் வட்டத் தடையில் இந்துத்துவக் கும்பல் கரிபூசிக்கொண்டு பின்னர் வேறு வழியின்றி தடையை நீக்கியது. ஆகவே இப்படிச் சொல்லலாம். ‘அமைதி’யான அக்ரஹாரமாக இருந்த ஐஐடி-யில் இன்று சூத்திர – பஞ்சமக் குரல் ஓங்கி இல்லை என்றாலும் சலசலப்பாகக் கூட ஒலிக்க ஆரம்பித்து விட்டது. இனிமேலும் அங்கே ‘அமைதி’ இருக்காது. ஆதிக்கத்தின் அமைதிக்கு எதிராக சமத்துவத்தின் குரல் ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது. அந்தக் குரலை வலுவாக்க வேண்டியது தமிழக மாணவர்கள் – மக்களது கடமை!

நன்றி!

படிக்க:
சென்னை ஐஐடி-யில் நிலவும் தீண்டாமை ! தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் !
♦ மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !

♦ ♦ ♦

கேள்வி : ஒருபுறம் கொல்லப்பட்டாலும் மறுபுறம் சாதி மறுப்பு காதலர்கள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள்… எப்படி இது?

சி. நெப்போலியன்.

ன்புள்ள நெப்போலியன்,

“ஒரு நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது காதல்” எனும் போது சாதி வெறி ஓநாய் பைரவர்கள் என்ன செய்து விட முடியும்? சாதியின் இருப்பை தனித்து வாழ்தலும், தனித்து வாழ்தலுக்கான பொருளாதாரமும், அகமண முறையும் தீர்மானிக்கின்றன.

இன்றைய காலத்தில் சீரான பொருளாதார வளர்ச்சியே இந்த தனித்து இருத்தலை மெல்ல மெல்ல ஒழித்து வருகிறது. முன்பெல்லாம் அந்தந்த சாதியில் பிறந்தவர்கள் முக்கியமாக பெண்கள் தமது கிராமம், வட்டாரத்தை தாண்டி வெளியே செல்ல வாய்ப்பில்லை. அப்படியே சென்றாலும் சாதியின் பாதுகாப்பு வளையம் கூடவே பவுன்சராய் வரும்.

இன்று கல்வி, வேலை தேடி மக்கள் நாடெங்கும் செல்கின்றனர். நகரங்களில் எந்த சாதியும் தனித்து வாழ முடியாத படி (பார்ப்பனர்கள் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு) நகரக் கட்டுமானம் செயல்படுகிறது. ஐ.டி துறையிலோ, உயர் கல்வித் துறையிலோ அப்படி வரும் மாணவர்கள், இளைஞர்கள் பழகுவதும், காதலிப்பதும் இப்போது சுலபமாகி விட்டது. இதற்கு மேல் சமூகவலைத்தளங்கள் இவர்களை பார்க்காமலே இணைப்பதற்கும் பின்னர் பார்த்து விட்டு காதலிப்பதற்கும் எண்ணிறந்த வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கின்றன.

ஆகவே சாதிவெறியர்கள் என்னதான் யுவராஜாவாக, பாமக ராமதாஸாக கம்பு சுழற்றினாலும் இன்றைய சமூக இயக்கம் அந்த இத்துப் போன கம்புகளைத் தட்டிப் போட்டு போய்க்கொண்டே இருக்கிறது. ஆகவே ஆணவக் கொலைகள் அதிகம் நடந்தாலும் காதல் இணைவு அதை விட அதிகம். சொல்லப் போனால் இந்த இணைவின் அதிகரிப்பே ஆணவக் கொலை வழியான மூர்க்கத்தினைக் காட்டுகிறது. அல்லது காதல் அதிகரிப்பே சாதிவெறியர்களை தூங்க விடாமல் செய்கிறது. ஆனாலும் பூனை கண்ணை மூடிக் கொள்வதால் உலகம் இருண்டு விடுவதில்லையே!

நன்றி!

♦ ♦ ♦

கேள்வி : சாதி ஒழியாமல் வர்க்க போராட்டம் சாத்தியமில்லை என்ற அம்பேத்கரிய கருத்துடன் வினவின் நிலைப்பாடு என்ன ?

மீரான்

ன்புள்ள மீரான்,

வர்க்கப் போராட்டம் இல்லாமல் சாதி ஒழிப்புக்கான போராட்டம் சாத்தியமே இல்லை. சாதி என்பது வெறுமனே மனதில் “நான் உயர்ந்தவன்/ள், நீ தாழ்ந்தவன்/ள்” என்றிருக்கும் கருத்து நிலை மட்டுமல்ல. அது பொருளாதார ரீதியாகவும் மக்களை ஏற்றத் தாழ்வாக பிரித்து வைத்திருக்கும் ஒரு பார்ப்பனிய ஏற்பாடு.

இந்தியாவில் வர்க்கங்கள் சாதிகளாகவும் இருக்கின்றன. நிலமற்ற விவசாயியாக இருக்கும் ஒரு தலித் தன் மீது நிகழ்த்தப்படும் தீண்டாமை – சாதிக் கொடுமைகளை எதிர்க்க முடியாமல் அடங்கிப் போகும்படியான நிலையை அவரது ஏழ்மையே ஏற்படுத்திக் கொடுக்கிறது. வட தமிழகத்தில், சென்னையின் சுற்றுப்புறங்களில் வன்னியர் – பறையர் சாதி மறுப்பு மணம் செய்தோர் அதிகம். இடைக்காலத்தில் பாமக வந்த பிறகும் இந்த நிலை மாறிவிடவில்லை.

வசதி வாய்ப்புடன் இருக்கும் மிகச்சில வன்னியர்களுக்கு இருக்கும் சாதிவெறி ஏழ்மை நிலையுடன் இருக்கும் பெரும்பான்மை வன்னியர்களுக்கு இருப்பதில்லை. ஆனால் சாதிவெறியர்கள் இந்தப் பெரும்பான்மையை குறிவைத்தே எல்லா சாதிகளிலும் சாதிவெறியை தூண்டி விடுகிறார்கள். வயிற்றுக்கு இல்லை என்றாலும் வைவதற்கு ஒரு சாதி இருக்கிறதே என்று அந்தப் பெரும்பான்மை அதற்கு பலியாகிறது. ஆனால் அந்த பலியாதலால் அவர்களது வாழ்வில் பொருளாதார வசந்தம் வீசப்போவதில்லை.

படிக்க:
கேள்வி பதில் : சொந்த வாழ்வில் சாதி ஒழிப்பு – அசைவ உணவுப் பழக்கம் – எதிர்காலக் கல்வி
♦ குடியுரிமை வழங்கு, இல்லையெனில் எங்களைக் கொன்று விடு – இலங்கைத் தமிழ் அகதிகள் !

வேலையின்மை, கல்வி தனியார் மயம், மருத்துவம் தனியார் மயம் அனைத்தும் அனைத்து சாதி ஏழைகளையும் நடுத்தர வர்க்கங்களையும் அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் வெற்று சாதிப்பெருமை அவர்களது பிரச்சினையை எப்படித் தீர்க்க முடியும்? எனவே ஏழ்மைக்கும், நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினைகளுக்கும் சாதி அடிப்படை இல்லை எனும் போது இவர்களை இணைத்து நடத்தப்படும் வர்க்கப் போராட்டங்கள் உருவாகித்தானே ஆக வேண்டும்?

அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ, தொழிலாளிகளோ, காவிரிப் பிரச்சினைக்காகப் போராடும் விவசாயிகளோ, ஹைட்ரோ கார்பனை எதிர்த்துப் போராடும் விவசாயிகளோ சாதி கடந்து போராடுவது உண்மையானால் இந்த இணைவின்மூலமே எதிர்காலத்தில் உழைக்கும் மக்கள் ஒன்றிணைந்து சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை வலுவாக நடத்துவார்கள். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த அனிதா நீட் தேர்வினால் தற்கொலை செய்தபோது முழு தமிழகமே அந்தச் சிறுமியை தனது மகள் என்று எண்ணி போராடவில்லையா? இந்த (‘கீழ்’) சாதி மகளுக்கு டாக்டர் படிப்பு எதற்கு என்று சாதிவெறியர் கூட கேட்க முடியாத நிலை வந்ததா இல்லையா?

வர்க்கப் போராட்டங்கள் சாதியை ஒழித்து விடாது. ஆனால் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை நிச்சயம் கட்டியமைக்கும். அந்த அடித்தளமில்லாமல் சாதி ஒழிப்பு சாத்தியமே இல்லை. மறுபுறம் சாதி ரீதியான அணிதிரட்டல்கள், அதாவது தாழ்த்தப்பட்டோர் மட்டும் சேர்ந்து நடத்தும் போராட்டங்கள் சாதி ஒழிப்பிற்கான அடித்தளத்தை உருவாக்க இயலாது.

இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மக்கள் சிறுபான்மையாக வாழும் கிராமங்களே அதிகம். அந்த கிராமங்களில் வர்க்கப் போராட்டம் தவறு என்று சித்தாந்தம் பேசும் அம்பேத்கரியவாதிகள் சென்று தங்கி தாழ்த்தப்பட்ட மக்களை சாதி ஒழிப்பிற்கான போராட்டத்திற்கு அணிதிரட்ட முயற்சித்துப் பார்க்கட்டும். அப்போது அவர்கள் வர்க்கப் போராட்டமே அன்றி அந்த மக்களை திரட்ட முடியாது என்று பட்டறிந்து உணர்வார்கள்.

கீழத்தஞ்சையிலோ, கேரளாவிலோ, தெலுங்கானாவிலோ, மேற்கு வங்கத்திலோ, பீகாரிலோ வர்க்கப் போராட்டத்தின் மூலம் சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி, பண்ணைக் கொடுமைகளை ஒழித்து இந்திய பொதுவுடமை இயக்கம் சாதித்திருக்கிறது.

இன்றைக்கு பீகாரில் ரன்வீர் சேனா, பூமிகார் சேனா, ரஜ்புத் சேனா போன்ற ஆதிக்க சாதிவெறி இராணுவங்களை ஒழித்ததும் கம்யூனிச இயக்கம்தான். இத்தகைய சாதனைகளை அம்பேத்கரியம் பேசும் அறிஞர் பெருமக்கள் எங்காவது சாதித்திருப்பதற்கு சான்றுகள் உண்டா? எதுவுமில்லை! வர்க்கப் போராட்டத்தை உடைப்பதற்கு பிரச்சாரம் செய்யப்படும் இந்த அடையாள அரசியலை நாம் புறந்தள்ள வேண்டும்.

நன்றி!

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

விழுப்புரம் 3 நம்பர் லாட்டரி : ஒரே குடும்பத்தில் 5 பேர் பலி

2

“இங்கே நியாயம் தர்மம் இல்லை… மனுசங்க கிட்ட நியாயம் இல்லை…”

“என் புள்ளைங்க மூனு பேருக்கும் சயனைடு குடுத்துட்டேன்.. இப்போ நாங்களும் சாப்பிட போறோம். என் பொண்ணு மூச்சு திணறுதுடா.. ஏன்டா என்னை இந்த மாதிரி வாழ்க்கையை வாழ வெச்சிட்டீங்க.. சரி.. விடு.. நாங்களும் சாகதான் போறோம் கொஞ்ச நேரத்துல…”

“மூச்சு திணறுதுடா இனிமேல் என்னால் ஒன்னுமே பண்ண முடியாது.. ஜாலியா இருங்க. நீங்களாவது நிம்மதியா வாழ்ந்துட்டு போங்க இந்த உலகத்துல. விழுப்புரத்துல லாட்டரி சீட்டை ஒழிச்சிடுங்கடா..ப்பா.. 3 நம்பரை ஒழிச்சிடுங்க.. என்னை மாதிரி 10 பேராவது உயிரோட பொழைப்பான்.. இங்கே எவனும் யோக்கியம் கிடையாது.. நானும் யோக்கியம் கிடையாது.”

“வாழ்க்கையில யாருக்கும் தொந்தரவு தர மாட்டோம்.. எவனுக்குமே தொல்லை இல்லாம செத்து போகணும்.. இங்க வாழ முடியல.. பட்டறை வேலை செஞ்சு ஒரு மயிரையும் புடுங்க முடியாது.. புரியுதா..”

இறப்பதற்கு முன் அருண் தன் நண்பர்களுக்கு அனுப்பிய வாட்சப் காணொளியில் பேசியதில் இருந்து சில பகுதிகள்.

***

நெஞ்சை உலுக்கும் இந்த உரையாடலை தன் கைபேசியில் பதிவு செய்த அருண், அதைத் தனது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு இறந்து போனார்.

விழுப்புரத்தில் உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சேர்ந்த அருண் நகை செய்யும் தொழிலாளி. தன் வீட்டிலேயே ஒரு பட்டறை நடத்தி சிறிய அளவில் தொழில் செய்து வந்தார். அருணின் மனைவி சிவகாமி. இவர்களுக்கு பிரியதர்ஷினி, யுவஸ்ரீ, பாரதி என்று 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தவள் பிரியதர்ஷினிக்கு ஐந்து வயது, அடுத்தவள் பாரதிக்கு 3 வயது. கடைக்குட்டி யுவஸ்ரீ நான்கு மாதமே ஆன பிஞ்சுக் குழந்தை. அருண் குமாருக்கு சொந்தமாக வீடும் அதில் ஒரு நகைப் பட்டறையும் இருந்துள்ளது.

தற்கொலை செய்து கொண்ட நகை பட்டறைத் தொழிலாளி அருண் மற்றும் அவரது மனைவி சிவகாமி.

ஆரம்பத்தில் நன்றாகச் சென்று கொண்டிருந்த நகைத் தொழில் கடந்த சில ஆண்டுகளில் மெல்ல மெல்ல நலிந்து போயுள்ளது. தொழில் வாய்ப்புகள் அருகி வந்த நிலையில் வேறு வேலைகளும் கிடைக்காமல் அந்தக் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளது. வறுமையில் இருந்து தப்பிக்க வழி தெரியாது தவித்த அருணுக்கு விழுப்புரத்தில் சட்ட விரோதமாக நடந்து வந்த மூன்று எண் லாட்டரி குறித்து தெரிய வந்துள்ளது. பல லட்சங்கள் வரை பம்பர் பரிசு விழும் என ஆசை காட்டியுள்ளனர். அதனை நம்பி கடந்த பல மாதங்களாக லாட்டரிச் சீட்டு வாங்கி வந்துள்ளார் அருண். 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படும் 3 எண்கள் மட்டுமே கொண்ட இந்த லாட்டரிச் சீட்டுகளில் பரிசு விழுந்தால் அன்றன்றைக்கே பணத்தைக் கொடுத்து விடுவார்கள் என்றெல்லாம் ஆசை காட்டி விற்கின்றது சட்ட விரோத கும்பல்.

எனினும், சொன்னபடி லாட்டரியில் எந்த பரிசும் விழாத நிலையில் கடனாளியாகி உள்ளார் அருண். இந்நிலையில் இம்மாதம் 12-ம் தேதி அன்று இரவு தனது குழந்தைகளுக்கு நகை செய்ய பயன்படுத்தும் சயனைடு விஷத்தைக் கொடுத்து கொன்றுள்ளார். அதன் பின் தனது கைபேசியில் தனது கடன் பிரச்சினைகள் குறித்தும்; அதனால் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விட்டதையும் பேசி பதிவு செய்துள்ளார். மேலும், தானும் மனைவியும் அடுத்து விஷம் அருந்த உள்ளதாகவும் பேசி பதிவு செய்து அதைத் தன் நண்பர்களுக்கு அனுப்பி உள்ளார்.

வீடியோவைப் பார்த்து பதறிப்போன நண்பர்கள் அருணின் வீட்டைத் தேடி ஓடோடி வந்துள்ளனர். பூட்டப்பட்டிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது அங்கே அருணும், அவரது மனைவியும், 3 குழந்தைகளும் சடலமாக கிடந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த விழுப்புரம் தாலுகா காவல்துறையினர் 5 பேரின் உடல்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நகைத் தொழில் நசிவு காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் லாட்டரிச் சீட்டிற்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அத்தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் கூறுகிறார்கள். 3 நம்பர் லாட்டரிச் சீட்டால் ஒரு குடும்பமே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

படிக்க:
♦ நெல்லை : இசக்கிமுத்துக்களின் மரணத்திற்கு எப்போது பழி தீர்ப்போம் ?
♦ அமித்ஷாவின் பச்சைப் பொய் : பாகிஸ்தானில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதா ?

***

மிழ்நாட்டில் குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் விற்க தடை உள்ளது. ஆனால், ஆளும் கட்சி அமைச்சர்கள் மற்றும் போலீசு அதிகாரிகள் ஆசீர்வாதத்தோடு எல்லா இடங்களிலும் இவை நீக்கமற நிறைந்துள்ளன. அதே போல் லாட்டரிக்கும் சட்டரீதியான தடை உள்ளது – என்றாலும் தமிழகம் முழுவதும் சட்டவிரோத லாட்டரிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மாதிரிப் படம்

சட்டவிரோத மூன்று எண் மற்றும் ஒற்றை எண் லாட்டரி சீட்டுகளை நடத்துபவர்கள் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மாஃபியா கும்பலாகச் செயல்பட்டு வருவதோடு போலீசார், உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வரை கீழிருந்து மேல் வரை முறையாக லஞ்சம் கொடுத்து விடுகின்றனர் (இது குறித்து விகடன் பத்திரிகையின் நிருபர்கள் நடத்திய கள ஆய்வை இந்த இணைப்பில் பார்க்கலாம்)

மக்கள் கூடும் இடங்களில் சட்ட விரோத லாட்டரி கம்பெனியின் ஏஜெண்டுகள் மக்களை அணுகுகின்றனர். ஒரு துண்டுச் சீட்டில் மக்கள் சொல்லும் மூன்று எண்களை எழுதி சீல் வைத்துக் கொடுத்து விட்டு அவர்களின் வாட்சப் எண்களை வாங்கிக் கொள்கின்றனர். மூன்று எண்கள் என்பது ஒரு செட் – இதன் விலை 60 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை இருக்கலாம். பம்பர் பரிசுத் தொகைக்கு ஏற்ப ஒரு செட்டின் விலையை நிர்ணயிக்கின்றனர். இவ்வாறு மூன்று எண்கள் கொண்ட நான்கு அல்லது ஐந்து செட்டுகளை அப்பாவி மக்கள் வாங்கிச் செல்கின்றனர். ஒரு தொழிலாளி இவ்வாறு நாளொன்றுக்கு ஏறத்தாழ 300 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரையும் கூட லாட்டரிக்காக செலவிடுகிறார்.

சீட்டில் கொடுக்கப்பட்ட மூன்று எண்களுக்கு பரிசு விழுந்தால் குறைந்தபட்சமான ஒரு தொகையும், கடைசி இரண்டு எண்களுக்கு பரிசு விழுந்தால் அதை விட கூடுதலான தொகையும், கடைசி எண்ணுக்கு விழுந்தால் மேலும் அதிகமான தொகையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மூன்று எண்களும் ”குலுக்கலில்” தெரிவானால் பம்பர் பரிசு என்கிறார்கள். இந்த “குலுக்கல்” ஆன்லைன் மூலமாக கேரளாவில் நடப்பதாக ஏஜெண்டுகள் சொன்னாலும், அது இங்கே தமிழகத்தில் தான் நடக்கிறது. ஒவ்வொரு நாள் மாலை, 6:00 மணிக்கு சீட்டுகளை வாங்கிச் சென்றவர்களின் வாட்சப் எண்ணுக்கு முடிவுகளை அனுப்புகின்றனர். பரிசு விழுந்தவர்கள் சீட்டைக் கொடுத்து பணத்தைப் பெற்றுச் செல்லலாம்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சட்டவிரோத லாட்டரிச் சீட்டு நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் இரண்டு அமைச்சர்களுக்கு இந்த சட்ட விரோத லாட்டரிச் சீட்டு கும்பலுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர்களுக்கும் பல்வேறு மட்டங்களில் உள்ள அதிகாரிகளுக்கும் முறையாக மாதா மாதம் கமிஷன் சென்று விடுவதாகவும் விகடன் பத்திரிகையின் செய்தி தெரிவிக்கிறது.

படிக்க:
இசக்கிமுத்து வழியில் தீக்குளித்த ஆசைத்தம்பி ! போலீசின் இலஞ்ச வெறிக்குப் பலி !
♦ மகன், மகள், தாயுடன் திருப்பூர் விவசாயி முத்துச்சாமி தற்கொலை !

***

ண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி வரி விதிப்பு என மத்தியில் ஆளும் மோடி அரசு நடத்திய பொருளாதார சர்ஜிக்கல் தாக்குதலின் விளைவாக சிறு குறு தொழில்கள் முற்றாக அழிந்து விட்டன. கிராமப்புற பொருளாதாரம் மொத்தமாக நலிந்து விட்டது. அதே நேரம் சிறு நகரங்களில் மக்கள் சொந்தமாக நடத்தி வந்த நகைப் பட்டறை உள்ளிட்ட சிறு பட்டறைத் தொழில்களும் முடங்கி விட்டன. இந்த சாதனைகளை எல்லாம் தனது முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றி முடித்து விட்ட பிரதமர் நரேந்திர மோடி, தனது இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் எஞ்சிய தொழில்துறைகளின் மேல் கவனத்தை திருப்பி உள்ளார். இதன் விளைவாக பெரும் ஆலைகளில் ஆட்குறைப்பு, வேலைப் பறிப்பு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பல கோடி தொழிலாளர்கள் பஞ்சைப் பராரிகள் ஆக்கப்பட்டு வருகின்றனர்.

மாட்டு வளைய மாநிலங்கள் என வருணிக்கப்படும் இந்தி பேசும் வட மாநிலங்களில் இவ்வாறு பிழைக்க வழியற்ற நிலையில் நிர்கதியாக்கப்பட்ட ஏழைகளுக்கு பசு பயங்கரவாதப் படைகள் வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது. பாகிஸ்தான் வெறுப்பு, இசுலாமிய வெறுப்பு என அந்த மாநிலங்களில் உதிரிகளாக்கப்படும் மக்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு “அரசியல்” நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதாவுக்கும் இந்துத்துவத்துக்கும் செல்வாக்கு இல்லை என்பதால் அவர்களின் அடிமைகளான எடப்பாடி பன்னீர் ஜோடியின் அடிமையரசு இது போன்ற சட்ட விரோத லாட்டரிகள் மூலம் தொழில் இழந்த வேலை இழந்த வாழ்க்கை இழந்த மக்களை “கவனித்து” கொள்ளும் பணியை ஆற்றி வருகின்றனர்.

அருணின் வாட்சப் வீடியோவைக் கேட்டால் நெஞ்சம் பதறுகின்றது. ஆசையாகப் பெற்று பார்த்துப் பார்த்து வளர்த்த ஒரு பெண் குழந்தையின் வாயில் அவளின் தந்தையே நஞ்சைப் புகட்டுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு நிலைக்கு அருணை தள்ளி விட்ட இந்த அடிமை அரசை என்ன செய்யலாம் நண்பர்களே?


சாக்கியன்
செய்தி ஆதாரம் : நியூஸ் 18.

மாட்டுக்கறி சாப்பிடலேன்னா நீ மனுசனே இல்ல – ஆய்வு முடிவு !

1

“வாழ்வு என்பது பொருள்கள் மற்றும் நிகழ்வுகளில் பொதிந்துள்ள முரண்பாடே ஆகும். அது தமக்குள்ளே தொடர்ச்சியாக உருவாகிக்கொண்டும் மறைந்து கொண்டும் இருக்கின்றது. முரண்பாடு தீர்ந்தவுடன் வாழ்வு முடிந்து, மரணம் அடியெடுத்து வைக்கிறது”. அண்மையில் இந்திய அரசாங்கம் வெளியிட்ட ‘விலங்குகள் மீதான கொடுமை தடுப்பு (கால்நடை சந்தைகளை ஒழுங்குபடுத்துதல்) விதிகள்- 2017’ பற்றி சிந்திக்கத் தொடங்கியபோது ஃபிரடெரிக் ஏங்கெல்ஸின் இந்த மேற்கோள் நினைவுக்கு வந்தது.

எனது சொந்த முரண்பாடுகள்: நடைமுறையில் இல்லையெனினும் பிறப்பால் நான் ஒரு இந்து. வலியுணர்ச்சி (nociceptors) கொண்டதாக அறியப்பட்ட விலங்குகளை சாப்பிடுவதைத் தவிர்க்கும் அதே நேரத்தில் இந்தியாவில் எந்தவொரு உணவுக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் திணிப்பதையும் நான் எதிர்க்கிறேன்.

எனவே இறைச்சியின் விஞ்ஞானத்தைப் பற்றி குறிப்பாக என்னுடைய இந்த இரட்டை நம்பிக்கைகளை பகுப்பாய்வு செய்வதை விட, நமது மூளை, பரிணாமம் மற்றும் எதிர்காலத்தில் இறைச்சியின் தாக்கம் குறித்து விவாதிக்க முடிவு செய்தேன்.

இறைச்சி இல்லாவிட்டால் நாம் மனிதர்களாக இருக்க மாட்டோம் :

மனித பரிணாம வளர்ச்சியின் முதல் ஆறு மில்லியன் ஆண்டுகளில் நம் முன்னோர்கள் அடிப்படையில் சைவ உணவு உண்பவர்களாகவே இருந்தனர். சுமார் 2 – 2.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான் நம்முடைய உணவு பழக்கத்தில் ஒரு மாற்றம் வந்தது. நாம் இறைச்சி உண்ணிகளாக மாறிய பின்னரே நமது மூளையின் அளவு அதிவேகமாக அதிகரித்துள்ளது என்பதையும் ஆராய்ச்சி இப்போது நிறுவியுள்ளது. இன்று நாம் மனிதர்களாக இருக்கவும் மேலும் மனிதக் குரங்குகள் போன்ற பிற விலங்குகளை விட மிகவும் அறிவாளிகளாக இருக்கவும் இறைச்சி எப்படி உதவியது என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

முதலாவது: இறைச்சியைப் போல திறனுள்ள வகையிலோ அல்லது அதிக அளவிலோ ஆற்றல் மற்றும் முதன்மையான ஊட்டச்சத்துக்களை காய்கறி உணவு வழங்கவில்லை. நவீன மனிதனின் மூளைக்கு மிக அதிக ஆற்றல் தேவையாக உள்ளது.

இரண்டாவது: ஆரம்பகால மனிதர்களின் இரைப்பைக் குழாய்கள் பழங்கள், இலைகள் மற்றும் வேர்களை செரிக்க உதவும் அளவுக்கு பெரிதாக இருந்தன, மேலும் ஆற்றலும் மிக அதிகமாக தேவையாக இருந்தன. ஆகவே, நாம் நம்முடைய உணவுப்பழக்கத்தை மாற்றியமைக்கும் போது, அதிக அளவில் ஆற்றலைப் பெறுவதற்காக நம்முடைய வயிற்றுப்பகுதி சிறியதாகி மூளை மிகப் பெரியதாக மாறியது. கருவிகளைப் பயன்படுத்துவதில் நாம் மிகவும் கைத்தேர்ந்தவர்களானதும், சமைக்கத் தொடங்கியதும் கூட இதற்கு உதவின.

படிக்க:
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
♦ பாரதமாதாவின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் | படக்கட்டுரை

சமீபத்திய வரலாறும் எதிர்காலமும்:

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் டி.என். ஜா சர்ச்சைக்குரிய ‘புனித பசுவின் கட்டுக்கதை’ என்ற பெயரில் நூலை 2002-ல் வெளியிட்ட பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. வேத காலங்களில் உணவு விருப்பத்தேர்வுகள் குறித்த அவரது கடுமையான அறிவார்ந்த ஆராய்ச்சியின் முடிவுகளை இந்த நூல் ஆவணப்படுத்தியது. அந்தக் காலங்களில் பசுக்கள் பலியிடப்பட்டதுடன் மாட்டிறைச்சியும் உணவாக உட்கொள்ளப்பட்டது என்று அவர் எழுதினார். நாம் அவரது கூற்றை நம்பினால், சற்றேறக்குறைய 30% இந்தியர்கள் அதற்கு பிறகு மரக்கறி உணவுக்கு மாறியுள்ளனர்.

இந்தியாவில் தான் உலகின் மிக அதிகமான மரக்கறி உண்பவர்கள் விகிதம் உள்ளது. முழுமையான எண்ணிக்கையில் உலகின் பிற பகுதிகளை விட அதிகமான மரக்கறி உணவு உண்பவர்களை இந்தியா கொண்டுள்ளது.

எனவே மனிதர்களின் சமீபத்திய ஊட்டச்சத்து வரலாறு சில கேள்விகளை எழுப்புகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறைச்சி உண்ணும் பழக்கம் நம் மூளையின் பரிணாம வளர்ச்சியை மேலும் தூண்டியதா? மனிதர்கள் நம் மூளையை மேலும் வளர்ப்பதற்கு இறைச்சி உண்ணும் பழக்கம் முதன்மையாக இருக்கிறதா? எல்லா இந்தியர்களும் நீண்ட காலம் இறைச்சி சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், இதன் விளைவாக நமது மூளையின் அளவுகளில் கணிசமான வேறுபாடு இருக்குமா? நம்முடைய அறிவுத்திறனை இறைச்சி உண்ணும் மற்றவர்களுடன் இன்னமும் ஒப்பிட முடியுமா? இந்திய அரசின் அறிவிப்பானது மாட்டிறைச்சிக்கும் அப்பாற்பட்டது. இது கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டால், மற்ற இறைச்சி உண்ணும் பழக்கத்தையும் இது பாதிப்பது மட்டுமல்லாமல், பால் போன்ற பிற விலங்கு புரத மூலங்களையும் தடை செய்யக்கூடும்.

மாதிரிப் படம்

இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் ஒன்று தெளிவில்லாமல் உள்ளன, அல்லது நன்கு ஆராயப்படவில்லை. ஒரு கற்பனையான மதிப்பீடு என்னவென்றால், ஒரு சில ஆயிரம் ஆண்டு பழக்கத்தை விட சில ஆயிரம் தலைமுறை உணவு பழக்கம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

பேறு காலத்தில் இறைச்சி சாப்பிடுவது கருவின் மூளையின் வளர்ச்சியை தூண்டுகிறதா என்பது குறித்து சமீபத்திய ஆராய்ச்சி சிறிது வெளிச்சம் காட்டுகிறது. வழக்கமான ஒரு பேறு காலத்தில் மூளை மெதுவாக உருவாகி மிகவும் சிக்கலானதாகவும் முதிர்ச்சியானதாகவும் மாறும். தாய்மார்களுக்கான இரும்புச்சத்து குறைபாடு பிறக்கும் சந்ததிகளின் மூளையின் சிக்கலை எதிர்மறையாக பாதித்ததை புதுமையான நரம்பு-படவியல் (neuroimaging) நுட்பங்களைப் பயன்படுத்தி சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டது.

படிக்க:
இறைச்சியை மறுக்கும் மோடியின் இந்தியாவில் குழந்தை இறப்பு அதிகம்
♦ சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

வேறு சொற்களில் கூறுவதானால், இரும்புச்சத்தின் சரியான அளவு பிறந்த குழந்தையின் சரியான அளவு மூளையுடன் தொடர்புடையது. இறைச்சியில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இறைச்சி சாப்பிடுவது கருவின் மூளைக்கு நன்மை பயக்கும் என்பதற்கு சில மறைமுக சான்றுகளை இந்த ஆய்வு வழங்குகிறது. கர்ப்பிணிப் பெண்களிடையே இரத்த சோகை அதிக அளவில் உள்ள இந்தியாவுக்கு இது இன்றியமையா தேவையாக இருக்கும்.

மூளை மற்றும் பரிணாம வளர்ச்சியில் உணவுப் பழக்கத்தின் மீதான கட்டுப்பாடுகளின் தாக்கமானது தற்போதைய பகிர்மான முறையின் ஒரு தவறாகவும் இருக்கலாம். இது வரலாறு மற்றும் அறிவியலை மட்டுமல்ல, பொருளாதாரத்தையும் கூட புறக்கணித்து சித்தாந்தத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

கட்டுரை : ஜெய் தேசாய் (நரம்பியல் மருத்துவர்)
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : தி வயர்.

சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் : மக்களவையில் சு.வெங்கடேசன் வாதம் !

க்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா இன்று (12.12.2019) தாக்கல் செய்யப்பட்டது. இதன் விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. சு.வெங்கடேசன், சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார்.

இதுகுறித்து மதுரை தொகுதி எம்.பி.யான சு.வெங்கடேசன் இன்று பேசியதாவது :

”இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் முன்வைத்த கருத்து கடும் அதிர்ச்சியை உருவாக்கியது, இந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாக சமஸ்கிருதத்தையும் உலக அறிவினுடைய ஆதாரமாக சமஸ்கிருதத்தையும் அவர் முன்வைத்தார்.

இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவார்கள்.

இது அடிப்படையில் ஆதாரமற்ற கருத்து, மட்டுமல்ல. நான் இங்கே சில புள்ளிவிவரங்களையும் எடுத்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாராவிலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகடிலும் கிடைத்துள்ளது. அந்த கல்வெட்டின் காலம் கிபி ஒன்றாம் நூற்றாண்டு. ஆனால், தமிழ் மொழியில் முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும், தேனியில் புலிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது.‌ இந்தக் கல்வெட்டின் காலம் கிமு ஆறாம் நூற்றாண்டு.

சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்க் கல்வெட்டு கிடைத்திருக்கிறது. சொல்லுங்கள் எது மூத்த மொழி. உங்களை விட 700 ஆண்டு வயதானவர்கள் நாங்கள்.

படிக்க:
கீழடி : ஆரிய – சமஸ்கிருத – பார்ப்பனப் புரட்டுகள் தவிடுபொடி !
♦ தேசிய இன அடையாளங்களை அழிக்கும் மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பு

தமிழ் மொழி மூத்ததா? சமஸ்கிருத மொழி மூத்ததா? என்ற கேள்வியை எழுத்துபூர்வமாக அறிவியல் கண்டுபிடிப்புகளிள் இருந்து நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

அதே போல இங்கே மிக முக்கியமாக குறிப்பிட்டுள்ளார்கள் இதுவரை இந்தியாவிலே கிமு 6-ம் நூற்றாண்டில் தொடங்கி 18-ம் நூற்றாண்டு வரை 60,000 தமிழ் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.

ஆனால், சமஸ்கிருதக் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை வெறும் 4000 மட்டும் தான் என்பதை இந்த அவையிலே எடுத்துச் சொல்ல கடமைப்பட்டுருக்கிறேன்.

தமிழ் தேவபாஷை அல்ல

இங்கே மீண்டும் மீண்டும் பலர் சொல்கிறார்கள் சமஸ்கிருதம் தேவ பாஷை என்று, அது அவர்களின் நம்பிக்கை. நான் அதை குறுக்கிடவில்லை, ஆனால் மிக முக்கியமாக இங்கே நாங்கள் சொல்லுவது தமிழ் தேவபாஷை அல்ல.

சமஸ்கிருதத்தில் பெண் புலவர் இல்லை

இது மக்களின் மொழி என்பதுதான் எங்களின் பெருமை. ஏன் தெரியுமா? இரண்டாயிரம் வருடத்திற்கு முன்பு சமஸ்கிருதத்திலே இவ்வளவு இலக்கியங்கள் இருக்கின்றது. ஒரு பெண்ணாவது சமஸ்கிருதப் புலவராக உதயமாகி இருக்கிறாரா?

40 பெண் தமிழ்ப் புலவர்கள்

ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் இலக்கியத்தில் ஒருவரல்ல, இருவரல்ல நாற்பதுக்கும் மேற்பட்ட பெண் புலவர்களைக் கொண்ட ஒரே உலக மொழி தமிழ்.

சமஸ்கிருதம் புழங்கு மொழி அல்ல

எனவே தான் தமிழை மக்களின் மொழி என்று இங்கே சொல்கிறோம். அதே போல மிக முக்கியமாக மீண்டும் மீண்டும் சமஸ்கிருதம், எந்தக் காலத்திலும் மக்களின் புழங்கு மொழியாக இருந்ததில்லை.

சமஸ்கிருதம் ஒரு சடங்கியல் மொழி

அது சடங்கியல் மொழி. ஆனால் தமிழ் அப்படியல்ல. எல்லாக் காலத்திலும் மூவாயிரம் ஆண்டுகளாக மக்களின் மொழியாக இருக்கிறது. இன்றைக்கும் இலங்கையில், சிங்கப்பூரில், மலேசியாவில், மொரீசியஸில், கனடாவில் அரசினுடைய அரசு மொழியாக இருக்கிறது.

தமிழர்களுடைய மொழி தமிழ்

தமிழ் தேவபாஷை என்று நாங்கள் சொல்லவில்லை. பூவுலகம் முழுக்க இருக்கிற பல நாடுகளில் இருக்கிற 10 கோடி தமிழர்களுடைய பாஷை என்று நான் இங்கே சொல்ல விரும்புகிறேன்.

புதிய மைல்கல்லாக கீழடி

அதே போல தமிழினுடைய பெருமை அது ஒரு சமயச் சார்பற்ற மொழி. இன்றைக்குக் கீழடியினுடைய ஆய்வு முடிவுகள் இந்திய தொல்லியல் வரலாற்றில் புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது.

நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள்

கீழடியில் 16,000 பொருட்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு பொருள் கூட பெரும் மதங்களும், மத நிறுவனம் சார்ந்த பொருள் கிடையாது. ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துகள் கிடைத்துள்ளன.

செழித்தோங்கிய மொழி தமிழ்

கிமு ஆறாம் நூற்றாண்டில் பெரும் மதங்களும் பெரும் மதங்களுடைய கடவுள்களும் உருவாவதற்கு முன்பே செழித்தோங்கிய மொழியாக தமிழ் இருந்தது.

சமஸ்கிருதத்திற்கும் தமிழுக்கும் போட்டி

அதே போல நம்முடைய நாடாளுமன்ற அமைச்சர் தலையிட்டு ‌இந்த விவாதத்தை சமஸ்கிருதத்திற்கும் தமிழிற்கும் நடக்கின்ற ஒரு போட்டியாக, யுத்தமாக மாற்றாதீர்கள் என்று சொன்னார். நிச்சயம் நாங்கள் அப்படி மாற்ற விரும்பவில்லை.

படிக்க:
ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் !
♦ குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

சமஸ்கிருதத்தை எதிர்க்கும் தமிழ்க் குரல்

எங்களை விட 700 வருடம் இளைய ஒரு மொழிக்கு எதிராக நாங்கள் ஏன் சண்டை போடப்போகிறோம் என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் சமஸ்கிருதம் தான் இந்திய பண்பாட்டின், அறிவின் அடையாளமாக, நீங்கள் மீண்டும் மீண்டும் முன்வைத்தால் அதை எதிர்க்கிற முதல் குரல் தமிழகத்தின் குரலாக இருக்கும்.

நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 4

இன்றைக்கு மத்திய அரசின் நிதி நிலையின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களாக நான்கு இருக்கிறது. இந்த நான்கையும் மத்திய அரசினுடைய பல்கலைக்கழகங்களாக மாற்றுவோம் என்று நீங்கள் சொன்னீர்கள்.

பிரச்சினை காந்தியா? தமிழா?

ஆனால் இன்றைக்கு மூன்று சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களை மட்டும் மாற்றிவிட்டு தமிழகத்திலே இருக்கிற காந்திகிராம பல்கலைக்கழகத்தை கைவிட்டு விட்டீர்கள். உங்களின் பிரச்சினை காந்தியா அல்லது தமிழா என்பதை இந்த அவையிலே நாங்கள் கேட்க விரும்புகிறோம்.

இயக்குனர் இல்லாத செம்மொழி நிறுவனம்

காந்தி கிராம பல்கலைக்கழகத்தை உடனடியாக மத்திய பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். இன்றைக்கு உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், உலக செம்மொழி நிறுவனம் பல ஆண்டுகளாக இயக்குனர் போடவில்லை. 150 இடங்கள் காலியாக உள்ளன.

நிதி கொடுக்க மறுப்பு

மொழி சார்ந்த பல பல்கலைக்கழகங்களுக்கு நீங்கள் நிதி கொடுக்க மறுக்கிறீர்கள். அது, மைசூரிலே இயங்கிக் கொண்டிருக்கிற இந்திய மொழிகளினுடைய ஆய்வு நிறுவனம்.

ஒரு மொழியை தூக்கிப் பிடிப்பவது தவறு

இந்த நிறுவனத்தை போன்று அனைத்து இந்திய மொழிகளினுடைய ஆய்வுக்கு, வளர்ச்சிக்குத்தான் ஒரு முக்கியத்துவம் தர வேண்டுமே ஒழிய, ஒரு மொழியை மட்டும் தூக்கிப் பிடிப்பது தவறு. அந்த மொழியையே இந்தியாவினுடைய அடையாளமாக மாற்றுவதுடன் அதை மனிதனுக்கு அப்பாற்பட்ட தேவபாஷை என்ற ஒரு புனிதத் தன்மையை கொடுப்பதும் ஒரு மதச்சார்பற்ற அரசுக்கு நல்லதல்ல.

அனைத்து மொழிகளும் இந்திய அடையாளம்

“இந்திய அடையாளம் அனைத்து மொழிகளிலும் இருக்கிறது அதை உயர்த்திப் பிடிப்போம்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

நன்றி : Saravana Kanth
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

நூல் அறிமுகம் : இந்து மத உருவாக்கம் – காலனியமும் தேசியவாதமும்

ந்தியாவில் மதம் குறித்த புதிய அக்கறைகள் காலனிய ஆட்சிக்காலத்திலிருந்து தீவிரப்பட்டன. மதம் குறித்த அந்தப் புதிய அக்கறைகள் உண்மையில் இந்தியர்களால் உருவாக்கப்பட்டவை அல்ல. இந்திய மக்கள் அப்படியொன்றும் மதம் சம்பந்தமாக குறிப்பான அக்கறைகள் கொண்டவர்கள் அல்ல. இந்தியர்களில் 70 – 80 சதவீதத்திற்கு மேலான மக்கள் மிக எளிய, சாதாரணமான மத நம்பிக்கைகளைக் கொண்டவர்கள். அந்த நம்பிக்கைகளும் ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், கூட்டத்துக்கு கூட்டம் வேறுபடக்கூடியவை. ஒரு சிறு குத்துக்கல், ஆண்டுக்கு ஒருமுறை பந்தல் போட்டு, ஆடு கோழி பலியிட்டு அல்லது பொங்கல் வைத்து, ஏதோ ஒரு பழைய நம்பிக்கையோடு, இரண்டு நாட்கள் கூடி இருந்து திருவிழா கொண்டாடிவிட்டு, அதோடு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியது, இப்படித்தான் இந்தியர்களின் மத நம்பிக்கைகள் காலம் காலமாக இருந்து வந்துள்ளன. இப்படிப்பட்ட நம்பிக்கைகளுக்கு பத்து ஊர் சனங்களைக் கூட்டி அல்லது தமிழ்நாட்டு அளவில், இந்திய அளவில் ஒரு பெயர்வைக்கவேண்டும் என்று கூட யாரும் நினைத்தது கிடையாது.

மாறாக, நம்மை ஆளவந்த ஆங்கிலேயர்களுக்கு இந்தியர்களின் மதம் குறித்து பல கேள்விகள் எழுந்தன. இந்தியர்களின் மதம் யாது? அவர்களின் புனித நூல் எது? பாவம், புண்ணியம் பற்றிய அவர்களின் கருத்துக்கள் என்ன? இந்திய மக்களின் கடவுளர்கள் யாவர்? இந்த மக்களின் வழிபாட்டு முறை யாது? அதன் இறையியல் யாது? போன்ற கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவர்களுக்கு உடனடியாகப் பதில் கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் கேட்ட கேள்விகளெல்லாம் அவர்களின் சொந்த மதம் குறித்தவை. காலனிய ஆட்சியாளர்கள் பெரும்பாலும் கிறித்தவ மதத்தைச் சார்ந்தவர்கள். ஐரோப்பாவில் குறிப்பிட்ட அக்காலத்தில் கத்தோலிக்கம் ஓரம் கட்டப்பட்டு, புரோட்டஸ்டன்ட் கிறித்தவம் நிலைகொண்டிருந்தது. அவர்களுக்குக் கிறித்தவ மதத்தைப் பற்றி நன்கு தெரியும். பிரச்சினை இங்குதான் ஆரம்பிக்கிறது. காலனிய ஆட்சிக்காலத்தில் இந்தியர்களின் மதம் பற்றி ஐரோப்பியர்கள் குறிப்பிட்ட சில கேள்விகளை எழுப்பினார்கள், ஆனால் அந்தக் கேள்விகளே ஐரோப்பியக் கேள்விகளாக இருந்தன. அல்லது அந்தக் கேள்விகள் கிறித்தவக் கேள்விகளாக இருந்தன.

இந்தியர்களின் தன்னிச்சையான மதநம்பிக்கைகளும் பல்வேறுவிதமான வழிபாட்டு முறைகளும் அந்த ஐரோப்பியக் கேள்விகளுக்குள், கிறித்தவ கேள்விகளுக்குள் அடங்க மறுத்தன. அடங்க மறுத்தால் விட்டு விடுவதா, என்ன? இந்தியர்களின் மதநம்பிக்கைகள் குறித்த தகவல்களையெல்லாம் திரட்டி அவற்றை ஐரோப்பியர்கள் ”ஒழுங்குபடுத்த ஆரம்பித்தனர். யாரிடமிருந்து தகவல்களைத் திரட்டினார்கள்? எந்தத் தகவல்களைச் சேகரித்தார்கள்? எப்படி ஒழுங்குபடுத்தினார்கள்? தகவல்களை ஒழுங்குபடுத்துதல் என்றால் என்ன? பிரச்சினை இப்போது பெரிதாகி விட்டது.

கடந்த 20-30 ஆண்டுகளாக இந்து மத உருவாக்கம் குறித்த மறுபரிசீலனைகள் தீவிரப்பட்டு வருகின்றன. காலனி ஆட்சிக் காலத்தில் காலனி ஆட்சியின் நிர்வாகத் தேவைகளுக்காக, ஐரோப்பியர்களால், கிறித்தவ மதத்தின் சாயையில் உருவாக்கப்பட்ட ஒரு மதமே இந்து மதம் என்ற கருத்து இப்போது வலுவடைந்து வருகிறது. அது புறத்தே இருந்து உட்செலுத்தப்பட்ட கருத்தாக்கமே தவிர சொந்த அடிப்படைகளிலிருந்தே சுயமாக உருவான பெயர் அல்ல என்று இப்போது எழுதுகிறார்கள். இந்து மதம் என்ற சொல், அதன் பயன்பாடு ஆய்வாளர்களிடம் மட்டுமே உள்ளது என்று சிலர் கருதுகிறார்கள்.  (நூலிலிருந்து பக்.4-5)

படிக்க :
நீரவ் மோடி – பஞ்சாப் தேசிய வங்கி மோசடியின் பரிமாணம் ரூ. 25,000 கோடி !
குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

… இந்து மதம் குறித்த மேற்குறித்த விவாதங்கள் மிக இயல்பாகவே இந்து மதம் குறித்த சில புதிய புரிதல்களுக்கு இட்டுச் செல்கின்றன. இந்து மதம் என்பது ஒரு காலனியக் கட்டுமானம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறது. காலனிய காலத்துக்கு முன்னால் இத்தனை ஒருங்கிணைந்த வடிவில், தத்துவார்த்த ‘பந்தா’க்களோடு இந்து மதம் எப்போதுமே அதன் வரலாற்றில் வழக்கில் இருந்தது கிடையாது என்பதை இப்போது ஆய்வாளர்கள் ஒத்துக்கொண்டு வருகிறார்கள். இன்றைய இந்து மதத்திற்கு முந்தியகால வரலாற்றோடு தொடர்புகள் இல்லாமலில்லை. ஆயின் அவை ஒற்றைப்படையானவை அல்ல, அவை பலதரப்பட்டவை. அது வேதங்களோடும் வேதாந்தத்தோடும் மட்டும் தொடர்பு கொண்டதல்ல. அது சிந்து வெளியோடும் தொடர்பு கொண்டது ; அது பக்தியோடும் புராணங்களோடும் தொடர்பு கொண்டது; அது தாந்திரிகத்தோடும் தொடர்பு கொண்டது.

இன்றைய இந்து மதம் என்ற கட்டுமானம் காலனிய மற்றும் இந்திய தேசிய அரசியல்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் தெளிவாகிவருகிறது. இந்து மதம் என்ற காலனிய ஒற்றை வடிவத்தில் மத அடிப்படைகளை விட அரசியல் அதிகார அடிப்படைகளே அதிகமாக அமைந்துள்ளன என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது. மட்டுமின்றி, நாட்டு விடுதலைக்குப் பிறகு, சமீபகாலங்களில் அது மிகவும் பிற்போக்குத்தன்மை கொண்ட பாசிச வடிவத்தை ஈட்டிவருகிறது என்பதையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.  (நூலிலிருந்து பக்.12-13)

இந்த நாட்டின் வரலாற்றில் உருவாகி வந்துள்ள எல்லா ஏற்றத்தாழ்வுகளும், குறிப்பாக சாதி அமைப்பும் ஆண்/ பெண் ஏற்றத்தாழ்வுகளும், இந்து மதத்தினுள் கலந்து புரண்டு கிடக்கின்றன. அந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு அது அங்கீகாரம் வழங்குகிறது, இன்னொரு புறம் அவற்றுக்கு எதிரான எதிர்ப்புகளையும் பதிவு செய்கிறது. பெருவிரல் துண்டிக்கப்பட்ட ஏகலைவன், ராமனால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்புகன், அரக்கு மாளிகையில் எரித்துக் கொல்லப்பட்ட பழங்குடிப் பெண்ணும் அவளது ஐந்து பிள்ளைகளும் என்பது போன்ற பல கதைகள் அதன் புராணங்களில் புதைந்து கிடக்கின்றன. பிராமணர்களுக்கு அது முதன்மையான இடம் வழங்குகிறது என்பது ஒருபக்கத்தில் உண்மைதான், ஆனால் பிரம்மனுக்கு இந்தியாவில் கோயில் கிடையாது, பிராமணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் பலரைப் பீடித்திருக்கிறது, சிவன், ராமன், பரசுராமன், இந்திரன், இன்னும் பலருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டு. பெண்களின் மீது விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகள் பற்றி இந்து மத நூல்களில் ஏராளமாக வாசிக்கலாம், உண்மைதான். ஆயின் சத்யவதி, அம்பா, அம்பிகா, அம்பாலிகா, குந்தி, மாதுரி போன்ற பல பெண்களை அங்கு சந்திக்கவும் முடியும். இந்து மதத்தை நான் தலித்துகள், பழங்குடிகள், பெண்கள் ஆகியோரின் நோக்கிலிருந்து வாசித்து ஒரு மாற்றுவரலாற்றை எழுதுவேன் என்கிறார் வெண்டி டொனிகர். (நூலிலிருந்து பக்.14)

நூல் : இந்து மத உருவாக்கம் (காலனியமும் தேசியவாதமும்)
ஆசிரியர் : ந.முத்துமோகன்

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
தொலைபேசி எண் : 044 – 2624 1288 | 2625 1968 | 2625 8410
மின்னஞ்சல் : info@ncbh.in

பக்கங்கள்: 16
விலை: ரூ 10.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam

ஆறு வயதுக் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 6 | பாகம் – 14

ஆறு வயதுக் குழந்தைகளின் நாளைய தினம் பற்றிய சிந்தனைகள்

னது பழைய, விசுவாசம் மிக்க மேசையே, வணக்கம்! அன்றாடம் குழந்தைகளை விட்டுப் பிரிந்ததும், அன்றைய தினம் நடந்ததைப் பற்றி எண்ணிப் பார்க்கவும் அடுத்த நாளைத் திட்டமிடவும் உன்னிடம் விரைந்து வந்தேன். உன் மேல் நோட்டுப் புத்தகங்கள், படங்களைப் பரப்பி வைத்து அவற்றில் மூழ்கினேன், சின்னஞ் சிறு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிகளை உருவாக்கினேன், இவர்களுடன் எம்மாதிரியான பேச்சுகள் வரும் என்று கற்பனையில் பார்த்தேன், மொத்தத்தில் அடுத்த நாளுக்கான பாடத் திட்டத்தைத் தீட்டினேன்.

ஒரு ஆற்றில் குச்சி அடித்துச் செல்லப்படுவதைப் போல் ஒரு நாள் ஆசிரியரை இட்டுச் சென்றால் அது ஆசிரியருக்கு ஏற்ற நாளாகாது; ஒரு ஆற்றில் ஒருவன் இலக்கை நோக்கி படகை ஓட்டுவது போல் ஆசிரியர் நாளைத் திட்டமிட்டுச் செலவிட்டால் தான் ஆசிரியருக்கேற்ற நாளாகும். இங்கே ஆற்றை வாழ்க்கையோடு ஒப்பிடலாம்.

எனது ஆறு வயதுக் குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நான் யோசித்துப் பார்த்தேன். அவர்களை டெஸ்கில் உட்கார வைத்ததன் மூலம் நான் அவர்களின் குழந்தைப் பருவத்தைப் பிடுங்கியதாகப் பல சமயங்களில் எனக்குப் பட்டது. ஆசிரியர்களும் குழந்தை வளர்ப்பாளர்களும் பெற்றோர்களும், குழந்தைகளுக்கு படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் சொல்லித் தருவதற்காகக் குழந்தைகளை எங்கே உட்கார வைத்தாலும் இந்த சின்னஞ் சிறியவர்களிடம் குழந்தைப் பருவத்தைப் பிடுங்கியதாக எனக்குத் தோன்றியது.

எனது சிந்தனைகளில் எனது சக ஆசிரியை நத்தாலியா மிஹைலவ்னா கார்ச்சாவுலியை நினைத்துப் பார்த்தேன்.

இருபது வருடங்களுக்கு முன் இவர் ஜார்ஜியாவில் முதன் முதலாக ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பும் ஆரம்பக் கணிதமும் நர்சரிப் பள்ளிகளில் சொல்லித் தர துவங்கிய போது இவருக்கு வயது எழுபதைக் கடந்திருந்தது. ஒரு முறை அவர் வகுப்பில் அமர்ந்து குழந்தைகளைக் கவனித்துக் கொண்டிருந்த போது நத்தாலியா மிஹைலவ்னா திடீரென என் காதில் மெதுவாகக் கூறினார்: “இக்குழந்தைகள் நிறைய சாதிப்பார்கள். ஆறு வயதுக் குழந்தைகளுக்கு உண்மையான குழந்தைப் பருவத்தைத் தர இவர்களுக்கு படிப்பு சொல்லித் தர வேண்டும்!”

அப்போது இந்தச் சொற்கள் முரணுரையாகத் தோன்றின. “குழந்தைகளின் குழந்தைப் பருவத்தில் ஒரு வருடத்தை ஏன் பிடுங்க வேண்டும்? எதற்கு அவசரம்?” என்று ஒரு சில விஞ்ஞானிகள் கூறினர். உண்மையான குழந்தைப் பருவத்தை இவர்களுக்கு அளிப்பதற்காகப் படிப்பு சொல்லித் தர வேண்டும் என்றார் ஆசிரியை.

இதற்குப் பின் பல்லாண்டுகள் உருண்டோடி விட்டன, பல விஷயங்கள் நடந்து விட்டன. ஒரு வருடம் முன்னதாக குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தர வேண்டுமா இல்லையா என்று யாரும் விவாதிப்பதில்லை. ஆறு வயதுக் குழந்தைகளின் படை பள்ளியை நோக்கிப் பாய்கிறது; இவர்களில் ஒரு பகுதியினர் ஏற்கெனவே பள்ளியில் நுழைந்து, மிகச் சிறந்த வகுப்பறைகளில் அமர்ந்து, ”படிப்பு சொல்லித் தாருங்கள்” என்று அன்பான, அறிவுக் கூர்மையுள்ள ஆசிரியர்களிடம் கோரினர்; இன்னொரு பகுதியினர் நர்சரிப் பள்ளிகளில் தமது சிறு மேசைகளின் முன் அமர்ந்து கொண்டு குழந்தை வளர்ப்பாளர்களிடம் நல்ல உணவைக் கேட்பதோடு, ”படிப்பு சொல்லித் தாருங்கள்” என்றும் கேட்கின்றனர்; மூன்றாவது பகுதியினர் சாக்லேட்டுகள், விளையாட்டு சாமான்களோடு கூடப் புத்தகங்கள், அரிச்சுவடிகள், ஸ்கேல்கள் முதலியவற்றையும் வாங்கித் தருமாறு தம் பெற்றோர்களிடம் நச்சரிக்கின்றனர்; இன்னுமொரு பகுதியினரோ ஒருவருக்கொருவர் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்வதன் மூலமும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் வரும் எழுத்துகளையும் கடைகள், பத்திரிகைகள், சஞ்சிகைகளில் உள்ள எழுத்துகளையும் படிப்பதன் மூலமும் தம் அறிவுத் தாகத்தை தீர்த்துக் கொள்வதென முடிவு செய்துள்ளனர்.

இன்றுள்ள குழந்தைகள் எப்படிப்பட்டவர்கள் பார்த்தீர்களா! இந்த ஆறு வயதுக் குழந்தைகள் யார்?

இவர்களுக்கு குழந்தைகளாக இருக்கப் பிடிக்க வில்லையா! இயற்கையன்னை இவர்களுடைய வயதிற்கு உரித்தான குணங்களை மாற்றி விட்டாளா என்ன!

இல்லை, இயற்கை ஒன்றையும் மாற்றவில்லை.

படிக்க:
கறி சாப்பிடாதே ! கோவை மாணவர்களிடம் சங்கிகள் விசமப் பிரச்சாரம் !
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !

இவர்கள் 80-ம் ஆண்டுகளின் புலப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றனர். இவர்கள் தம் குழந்தைப் பருவத்தை விட்டுப் பிரிய விரும்பவில்லை, மாறாக புத்திசாலித்தனமான குழந்தைப் பருவத்தைப் பெற முயலுகின்றனர். எனது முதிய ஆசிரியையின் வார்த்தைகளின் பொருள் அனேகமாக இதுவாகத்தான் இருக்க வேண்டும். புதிய புதிய தலைமுறைகளைச் சேர்ந்த ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தரவும் அவர்களை வளர்க்கவும் நான் துவங்கிய பின் இதை மேன்மேலும் அதிகமாக உணர்ந்தேன்.

குழந்தைப் பருவம் என்றால் என்ன? சந்தோஷமான, உற்சாகமான குழந்தைப் பருவம் என்றால் என்ன? “குழந்தைகளின் குழந்தைப் பருவத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற அறைகூவலை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? எனது ஆசிரியர் மனசாட்சியை சாந்தப்படுத்தி, ஊக்குவிக்க இக்கேள்விகளுக்குப் பதில்களைப் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

ஆறு வயதுக் குழந்தைகளைக் கவனித்த போது ஒன்று தெரிந்தது. குழந்தைப் பருவம் என்பது வெறும் குறிப்பிட்ட வயதுப் பருவம் மட்டுமல்ல. இப்பருவத்தில் இவர்களுக்கு விளையாட, குதிக்க, ஓடியாடப் பெரும் விருப்பமிருக்கும், இவர்கள் கவலையற்று, பல நேரங்களில் பொறுப்பற்றுத் திரிவார்கள் – என்பதெல்லாம் ஒருபுறம். ஆனால் உண்மையான குழந்தைப் பருவம் என்பது பெரியவர்களாகும் ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்; இதில் மனித வாழ்க்கை ஒரு குணாம்ச மட்டத்திலிருந்து வேறொரு உயர் மட்டத்திற்கு மாறுகிறது. குழந்தை தானாகவே இதைப் பற்றி யோசிப்பதில்லை. ஆனால் அவனுடைய வளர்ந்து வரும் சக்திகள் அவனை இத்திசையில் உந்தித் தள்ளுகின்றன. இச்சக்திகளால் பெரியவர்களாக்கும் நிகழ்ச்சிப் போக்கை முழுமையாக்க முடியாது. குழந்தைகளின் மீது அக்கறையுள்ள, பெரியவர்களாக வேண்டிய அறிவுத் தீனியையும் அனுபவத்தையும் தரவல்ல பெரியவர்களின் உதவி இக்குழந்தைகளுக்கு வேண்டும்.

குழந்தைகள் வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தின் மூல ஊற்று அவர்கள் இவ்வாறு பெரியவர்களாவதில் தான் உள்ளதென்று எனக்குத் தோன்றுகிறது. பரிசுகள், உலாவுதல் மூலம் மட்டும் குழந்தைகளுக்கு சந்தோஷம் தரலாமென சில நேரங்களில் நாம் நினைப்பது தவறாகும். 80-ம் ஆண்டுகளின் ஆறு வயதுக் குழந்தையை இப்படிப்பட்ட அதிசயங்களால் மட்டும் சந்தோஷப்படுத்த முடியாது என்பது எனக்குத் தெட்டத் தெளிவாகி வருகிறது. கதைகளைப் படிக்க அவனுக்குச் சொல்லிக் கொடு, யதார்த்தத்தை அறியும் வழிகளைச் சொல்லிக் கொடு, அவன் தனது எதிர்காலத்தோடு கலந்து பழகுவது குறித்து மகிழ்வான் என்று அனுபவம் காட்டுகிறது. பெரியவனாகும் பாதையில் இவன் பெரியவர்களின் உதவியோடு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் அவனுக்கு மகிழ்ச்சிகரமான மலர்ச்செண்டாகும்.

இவ்வாறாக நான் ஒரு “முதுமொழிக்கு” வந்தேன். ஒருவேளை அதை நியதியாகக் கருதலாம்.

குழந்தையின் வளர்ந்து வரும் சக்திகளுக்கேற்ப இவன் பெரியவனாக உதவுவது என்றால் இவனுடைய குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சிகரமானதாக, கவர்ச்சிகரமானதாக, உணர்ச்சிகள் நிறைந்ததாக ஆக்குவது என்று பொருள். மாறாக, குழந்தையின் குழந்தைப் பருவத்தைப் பறிக்கக் கூடாது என்ற மாயையான தர்க்கத்தைக் காட்டி குழந்தைக்கு முழு சுதந்திரம் அளித்து, பெரியவனாகும் இயக்கப் போக்கின் வேகத்தைக் குறைப்பது என்றால் குழந்தைப் பருவ மகிழ்ச்சிகளை அனுபவிக்கும் உண்மையான உணர்வை அவனிடமிருந்து பிரிப்பது என்றாகும்.

இவற்றிற்கெல்லாம் ஒரு விளக்கம் தரலாம்: குழந்தையின் இயல்பு மாறவில்லை, சூழ்நிலை மாறியுள்ளது, குழந்தையின் இயல்பு மீது தாக்கம் செலுத்தும் நமது வாழ்க்கை மாறியுள்ளது, நவீன வாழ்க்கையின் புதிய சூழ்நிலைகளில் குழந்தை வளருகிறான். இந்த மாற்றங்களின் ஒரு வெளிப் பாடாகத்தான் ஆறு வயதுக் குழந்தைகளுக்குப் படிக்கவும் எழுதவும் கணக்குப் போடவும் கற்றுக் கொள்ள வேண்டுமென விருப்பம் தோன்றியது. அதாவது இவர்கள் பெரியவர்களாக, மனித நடவடிக்கையின் அதிக சிக்கலான வடிவங்களை கிரகிக்க விரும்புகின்றனர்.

ஆறு வயதுக் குழந்தைகள் படிக்க ஆசைப்படுகின்றனர். இவர்களைத் தயாரிப்பு வகுப்பிற்கு அனுப்பும் பெரியவர்களாகிய நாம், இவர்களுக்கு பள்ளியில், கல்வியில் சலிப்பு ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். ஓராண்டு பூர்வாங்கத் தயாரிப்பு வகுப்பிற்குப் பின் பள்ளி வாழ்க்கையை இவர்கள் எப்படி அணுகுவார்கள், படிப்பை எப்படிப் பார்ப்பார்கள் என்பதெல்லாம் வீண் கேள்விகள் அல்ல, இவைதான் முக்கிய சாரமாகும்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

சீமான் பேச்சை அவர் தொண்டர்கள் நம்ப காரணம் என்ன ? | கேள்வி – பதில் !

கேள்வி : சீமான் பேச்சு பொய்யானதாய் இருக்கு, ஆனால் அவர் தொண்டர்கள் அப்படியே நம்புகின்றனர் என்ன காரணம்?

பால்ராஜ்

ன்புள்ள பால்ராஜ்,

ரஜினிக்கு தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் இருக்கின்றன, என்னென்ன நதிகள் ஓடுகின்றன, எந்தெந்த தொழில்கள் தமிழகத்தில் இருக்கின்றன, தமிழக மக்களின் வேலை வாய்ப்பு என்ன, விவசாயிகளின் பிரச்சினை என்ன, என்ன.. என்ன… என்பது கடுகளவு கூடத் தெரியாது. ஆனால் 2021 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக ஆவேன், அதிசயம் அற்புதம் நடக்கும் என்கிறார்.

அவரது வீட்டுக்கு வெளியே 24 மணிநேரமும் தொலைக்காட்சிகள் காத்திருக்கின்றன. அவர் வெளியே வரும் போதெல்லாம் உளறும் ‘அரிய’ கருத்துக்கள், செய்தி தொலைக்காட்சிகளில் ஒரு வார மாலை நேர விவாதத்தை எடுத்துக் கொள்கின்றன. இதற்கு மேல் குறிப்பிடத்தகுந்த அளவில் மக்கள் ரஜினியை, “ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாத நல்ல மனுஷன்” என்று நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையை திராவிட இயக்கத்தின் தோல்வி, இரண்டு கட்சிகளுக்கு புதிய மாற்று, ஆன்மீக அரசியல் அது இது என பார்ப்பனிய ஊடகங்களும் – ‘அறிவாளிகளும்’ ரஜினியை பிராண்டிங் செய்கின்றனர்.

அதே போன்று கமல். நான் இடதும் இல்லை, வலதும் இல்லை நடு சென்டர் என்று… எல்லாவற்றிலும் உளறுவதே இவரது வாடிக்கை. இவருக்கும் நகர்ப்புறங்களில் மூன்று சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. தற்போது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மாட்டோம், இத்தேர்தல் இரண்டு பெரிய கட்சிகள் நடத்தும் நாடகம் என்று ஏதோ தியாகம் செய்வது போல பிதற்றுகிறார் கமல்.

பாராளுமன்றத் தேர்தலில் ஊர் ஊராய் சுற்றி வந்து பேசியதில் ஒன்றையும் பிடுங்க முடியவில்லை எனும் போது உள்ளாட்சி தேர்தலுக்காக கிராமம் கிராமமாக சுற்ற ஒரு ‘கேரவன் சொகுசு’ நடிகர் தயாராக இருப்பாரா? அவரைப் பொறுத்தவரை ஜெயா போல நோகாமல் நொங்கெடுப்பதற்கு மட்டுமே தயார்.

விட்டால் ஐ.நா. சபை செயலராக அவரைத் தெரிவு செய்தால், அதற்கு தான் மட்டுமே தகுதியானவன் என்று அற்பத்தனமாக நம்புகிறவர் இந்த ‘நம்மவர்’. கமலையும் கூட “ஏதாச்சும் நல்லது செய்வார், ஊழல் செய்யாத உத்தமர்” என்று சிலர் நம்புகின்றனர். அதையும் பார்ப்பன ஊடகங்கள் – அறிஞர்கள் அடங்கிய வலைப்பின்னல் பாஜக-வின் நலன் கருதி பிரமோஷன் கொடுக்கின்றனர்.

படிக்க:
சீமான் சிங்கள ராணுவத்தின் தலையை உருவாமல் இட்லியை உருட்டியது ஏன் ? ஒரு சட்னிக் கதை !
♦ உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

இப்படி இருக்கும் போது சீமானை அவரது தொண்டர்கள் நம்புவதில் ஆச்சரியமில்லை. கமல், ரஜினி போல இல்லாமல் சீமான் எல்லாத் தேர்தல்களிலும் நிற்கிறார். ஊர் ஊராக சுற்றுகிறார். வந்தேறிகளை விரட்டி தமிழகத்தை காக்க நான் முதலமைச்சராக மாறவேண்டும் என்று முழங்குகிறார். கூடவே சப்பாத்தி முதல் வெள்ளைச் சீனி வரை எப்படி இந்திக்காரன் நம்மை கெடுத்து விட்டான் என்று உடல் நலம், மண் வளம், காட்டு வளம், மலை வளம், சூழல் வளம், பண்பாட்டு வளம் என்று ஒவ்வொரு வளத்திற்கும் பெரிய கதை, வரலாறு, புராணத்தை வைத்து அடித்து விடுகிறார். பேசும் போது கையை தூக்கியும், புஜங்களை உயர்த்தியும், கண்களை உருட்டியும், குரலை தெறிக்கச் செய்தும் பேசுகிறார். இவ்வளவு உழைப்பு போடுபவரை சாமானியர்கள் அந்த உழைப்பைப் பார்த்தாவது நம்பாமல் இருப்பார்களா என்ன?

என்ன, ரஜினி, கமல் போன்று ஊடக ஆதரவோ, பார்ப்பனிய அறிஞர்களின் ஆசியோ சீமானுக்கு இல்லை. அதே நேரம் முற்றிலும் இல்லை என்றும் சொல்லிவிட முடியாது. திராவிட இயக்கத்தை கொச்சைப்படுத்த குறிப்பாக தி.மு.க.விற்கு எதிராக சீமானை கொம்பு சீவி விட இவர்கள் ஆதரிக்கின்றனர். நாம் தமிழர் தம்பிகளோ தமிழனம் ஆண்ட இனமாக ஆட்சியில் இல்லை என்பதே அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே காரணம் என்று நம்புகின்றனர். அவர்களில் பலர் சீமானைப் போலவே பேசுகின்றனர். உடல் மொழியிலும் காட்டுகின்றனர்.

மக்களில் அரசியலற்றவர்கள், அவ்வப்போது வரும் பிரச்சினைகளுக்கேற்ப அரசியல் பேசுபவர்கள், முன்னணியாக அடிப்படை அரசியலை புரிந்து கொள்பவர்கள் என்று மூன்று வகையினர் இருக்கின்றனர். தோராயமாக இதில் முதல் வகையினர் 70%, இரண்டாவது வகையினர் 20%, மூன்றாவது வகையினர் 10% இருக்கக் கூடும். முதல் வகையினர்தான் சினிமாவில் ஏழைகளின் தோழனாக மேக்கப் போட்ட ராமாவரம் தோட்டத்து எம்ஜிஆரை சாகும் வரை முதலமைச்சராக அழகு பார்த்தார்கள். அதே போன்று ஜெயாவையும் மதித்தார்கள். தனது காலத்தில் அனைத்து தொழிலாளர் போராட்டத்தையும் ஒடுக்கி, அமைச்சர்கள் ஆதரவாளர்கள் பலரை இன்றைய சுயநிதிக் கல்லூரி நடத்துமளவு புறம்போக்கு நிலங்களை அள்ளிக் கொடுத்து ஒரு கோமாளி பாசிஸ்டைப் போன்று நடந்து கொண்ட எம்ஜிஆரை இந்த ஊர் நம்பும் போது ரஜினியை ஏன் நம்பாது?

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் போதும் முன்னர் கண்ட பத்துசதவீத மக்களின் அரசியல் வெகுமக்களின் பேசுபொருளாக இருந்தது. ஆனால் அதன் ஆயுள் குறைவு. அதனால்தான் அத்திவரதர் எனும் ஒரு புரட்டு, புராண லீலையிலும் இலட்சக்கணக்கான தமிழக மக்கள் கலந்து கொண்டனர். தமிழக மக்களை அரசியலற்ற வகையினராக இருக்கச் செய்வதில் இங்கிருக்கும் ஊடகங்கள், சினிமா, சீரியல்கள், இவைகளுக்கான நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகள், தன்னார்வக் குழுக்கள், நடுத்தர வர்க்க அறிஞர்கள் போன்று பல காரணங்கள் இருக்கின்றன.

இவையே அதிமுக, பாஜக, ரஜினி, கமல் போன்ற கட்சிகளுக்கு பலம். அரசியலற்ற முறையில் அரசியல் பேசுவது, பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, பாபர் மசூதி தீர்ப்பு போன்றவற்றை ஆதரித்துக் கொண்டே தம்மை தேசபக்தர்கள் என்று நம்பச் சொல்வது போன்றவற்றை செய்கிறார்கள். திமுக, சிபிஎம் போன்ற கட்சிகள் ஓரளவு அரசியல் பேசினாலும் அரசியலற்ற மக்களை பிரச்சாரம் செய்து மாற்றுவதற்கு பதில் சில நேரங்களில் அவர்களும் அதிமுக-பாஜகவோடு போட்டி போடுகிறார்கள். (அயோத்தி தீர்ப்பை வரவேற்றது ஒரு சான்று.)

படிக்க:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !
♦ விஜயகாந்த் – தே.மு.தி.க: “எங்கே செல்லும் இந்தப் பாதை?”

இந்தச் சூழ்நிலையில் இந்திய அளவிலான பொருளாதார நெருக்கடி தமிழகத்தையும் பாதித்திருக்கிறது. எட்டுமணிநேரம் ஆட்டோ ஒட்டிய ஓட்டுநர் தற்போது பதினைந்து மணி நேரம் ஓட்டினால்தான் வீட்டிற்கு படியளக்க முடிகிறது. ஐ.டி துறையிலோ வேலை நீக்கம் என்பது கணினி திரைக்கு வெளியே எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒரு தொழிலாளியோ, ஒரு ஐ.டி ஊழியரோ தெலுங்கர்கள்தான் தமிழக வேலை வாய்ப்பை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சீமான் பேசினால் அதை நம்புவதற்கான முகாந்திரம் இருக்கிறது. இத்தகைய இனவாதம் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு இல்லை என்றாலும் மக்கள் தமது பிரச்சினைகளுக்கு தொட்டத்தறியத்தக்க எதிரிகளை காட்டினால் நம்புகின்றனர். எனவே சீமான் தனது இனவாத அரசியலை மேலும் மேலும் உணர்ச்சிகரமாக முன்வைக்க முன்வைக்க அது சிறிதளவான மக்களை பற்றுவதும், தொண்டர்கள் அதை தீவிரமான இலட்சியவாதமாக ஏற்பதும் நடக்கிறது.

விஜயகாந்த அரசியலுக்கு வந்த போது அவரும் இரண்டு திராவிட கட்சிகளை திட்டி ஊர் ஊராக சுற்றி வந்தார். தனித்து போட்டியிட்டார். எட்டு அல்லது பத்து சதவீத வாக்குகளைக் கைப்பற்றினார். அப்போது அரசியல் அரங்கில் அவருக்கான செல்வாக்கு அதிகரித்து பின்னர் கூட்டணியில் சேர்ந்தார். எதிர்க்கட்சி தலைவராகவும் உயர்ந்தார். பின்னர் தனது தனித்துவத்தை இழந்து சென்ற தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய நாள் வரை அனைத்து கட்சிகளுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அம்பலப்பட்டு போனார்.

அவரது ஆரம்பகால அரசியலில் அப்போது வந்து சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், விஜயகாந்துடன் சுற்றுப்பயணம் சென்ற போது, ஆங்காங்கே திரண்டு நிற்கும் மக்களைப் பார்த்து எம்ஜஆருக்கு பிறகு இப்படி எல்லா இடங்களிலும் பெருங்கூட்டம் கூடி நிற்பது உங்களுக்குத்தான் என்று விஜயகாந்திடமே சொன்னாராம். (ஆனந்த விகடனில் வந்த செய்தி) அப்போது விஜயகாந்த் என்ன ஒரு மிதப்பில் இருந்திருப்பார்? இப்போது அவர் அனாதை  போல அரசியலில் ஓரங்கட்டுப்பட்டு விட்டதையும் அதையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

இன்றைக்கு ரஜினிக்கு என்ன தெரியும் – தெரியாதோ, அதேதான் விஜயகாந்திற்கு அன்று தெரியும் – தெரியாது. திரைப்படங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகளை பந்தாடி, நேர்மையான போலீஸ்காரனாக போராடி, நேர்மையான அதிகாரியாக பணியாற்றி, அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும் மக்கள் போராளியாக… இப்படியாக நடித்து உருவான விஜயகாந்தின் இமேஜை மக்கள் அப்போது நம்பினார்கள். அதாவது அரசியலற்ற பிரிவினரான அந்த 70% மக்களில் சிலர் இவர் நல்லவர், வல்லவர், நாட்டிற்கு ஏதாச்சும் செய்வார், ஊழல் செய்யாதவர் என்று வாக்களித்தார்கள்.

வாக்கு வங்கி அரசியல் முற்றிலும் அம்பலப்பட்டுப் போன நிலையில் இருக்கும்  பழைய பெருச்சாளிகளை மக்கள் முற்றிலும் நம்ப முடியாமல் வேறு வழியின்றி அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள். இதில் புதிய முதலைகள் வரும் போது அவர்களுக்கும் கொஞ்சம் வாக்களிப்போம் என்று யோசிக்கிறார்கள். இந்தப் பின்னணியில்தான் சீமானின் அரசியல் வாழ்க்கை துவங்குகிறது. அதே நேரம் அவர் முன்வைக்கும் மாற்று அரசியலின் அடிப்படை இனவாதத்தில் இருந்தாலும் அந்த மாற்று திட்டங்களை இன்றைய அரசியல் அமைப்பின் தோல்வியைக் கண்டு நொந்து போன சிலர் ஏற்கவும் செய்கின்றனர். ஏனெனில் இன்றைய அரசியல் கட்டமைப்பையும் அதன் தோல்வியையும் ஒரு சமூக அமைப்பு என்றில்லாமல் சில தனிநபர்கள் – கட்சிகளின் தோல்வி என அவர்கள் அரசியலற்ற முறையில் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் பாஜக தான் நம்பர் 1 !
♦ வெளிநாடு வாழ் இந்தியர்களின் பொருளாதார பங்களிப்பு | உலகத் தமிழர்கள் ஒருங்கிணைப்பு | கேள்வி – பதில் !

ஜெயா, கருணாநிதி மறைவிற்கு பிறகு தான் ஒரு ரவுண்டு வரலாம் என்று மனப்பால் குடித்த சீமானுக்கு இன்று கமல், ரஜினி என்று இரண்டு பால்பவுடர் பால்கள் வெறுப்பேற்றுகின்றன. எனவே சீமானை இன்னும் எத்தனை நாளைக்கு அவரது தொண்டர்கள் நம்புவார்கள் என்பதும் கூட மனப்பால்தான்.

அரசியலற்ற மக்களின் பெரும்பான்மையை வைத்து நாம் சோர்ந்து போகலாமா? தேவையில்லை. இன்றைக்கு இணையத்தில் அரசியலற்ற பிரிவினரை விட அரசியலை குறிப்பாக பேசும் முற்போக்கு பிரிவினர் அதிகரித்து வருகின்றனர். அதனால்தான் கோபேக் மோடி என்ற முழக்கம் இங்கே இணையத்தில் தொடர்ந்து வெற்றி பெறுகிறது. இணையத்தில் இருக்கும் இந்த முற்போக்கு விழிப்புணர்வு மெய்யுலகிலும் பரவவேண்டும். பரவும். அப்போது ரஜினி, கமல், விஜயகாந்துகளுக்கு இடமில்லை என்பதோடு உணர்ச்சிகரமாக இனவாத அரசியலை முன்வைக்கும் சீமானும் திண்டாட வேண்டியிருக்கும்.

அதாவது அரசியல்படுத்தப்பட்ட மக்களிடமிருந்து பிற்போக்காய் அனைத்தையும் நம்பும் தொண்டர் கூட்டம் கிடைப்பது கடினம். ஆனால் வரும் தேர்தலில் இத்தகைய சிரமங்கள் ஏதுமின்றி அவர் ஒரு ஓரமாய் பேசும் நிலைமையே இப்போதைய அரசியல் சூழலின் யதார்த்தம்.

♦ ♦ ♦

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

உள்ளாட்சித் தேர்தல் : பாஜக முகத்தில் கரியைப் பூசிய காஷ்மீர் !

டந்த ஆகஸ்டு 5-ம் தேதி அரசியல் சாசனத்தின் 370-வது சட்டப் பிரிவின் படி காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அக்டோபரில் உள்ளாட்சி மன்றங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது.

எங்கும் இல்லாத அளவிற்கு இந்த தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் சிறையில் இருக்கின்றனர். பிரதான கட்சிகளான மாநில கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டன. இதுவரை வரலாற்றிலேயே இல்லாத நிலைமை இது. அரசியல் கட்சி தலைவர்கள், அவர்களுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள், வியாபாரிகள், ‘பிரிவினைவாதிகள்’ என ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஆள் இல்லாத விளையாட்டு மைதானத்தில் தானே பந்துவீசி தானே பேட்டிங் செய்து ஸ்கோரைத் தட்டிவிடலாம் என கணக்கு போட்டது ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பல்.

Kashmir-Poll
துப்பாக்கி முனையில் ஓட்டு போடும் காஷ்மீரிகள். இதுவா ஜனநாயகம்…?

370 சட்டப் பிரிவின் படியான சிறப்பு அந்தஸ்த்தை நீக்கியதால் கிடைக்கும் ‘நன்மைகள்’ குறித்து இரண்டு மாதங்களாக காஷ்மீர் முழுவதும் பிரச்சாரம் செய்துள்ளது பா.ஜ.க. பா.ஜ.க.வின் ‘தொண்டர்கள்’ 24X7 என தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தனர். செல்வாக்கில்லாத காங்கிரசு கட்சி மட்டும் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டி இடப் போவதாக அறிவித்தது. இருப்பினும், செல்வாக்குள்ள மாநிலக் கட்சிகள் தேர்தலைப் புறக்கணிப்பதால் சுயேட்சைகளுக்கும் பி.ஜே.பி.-க்குமான தேர்தலாக இது மாறியது. தனது கட்சியில் கீழ்மட்டத்தில் இருக்கும் ரௌடிகள், குண்டர்கள், பண்டாரம் பரதேசிகளுக்கெல்லாம் கொள்ளையடிப்பதற்கு இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலை ஒரு நல்வாய்ப்பாகக் கருதியது.

ஆனால், “ஆயிரம் வசதிகள் இருந்தும் நோ பீஸ் ஆஃப் மைண்ட்” என்பது போல இத் தேர்தலில் பா.ஜ.க.வின் நிலை மோசமாகிவிட்டது. மொத்தமுள்ள 307 பஞ்சாயத்து தொகுதிகளில் 217 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். ஏறக்குறைய ஒரு மாத காலம் முழுவதும் பா.ஜ.க. மட்டுமே பெரும் பலத்துடன் பிரச்சாரம் செய்த பொழுதும் 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியவில்லை. 81 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது பா.ஜ.க.

குப்வாரா, பாண்டிபோரா, காண்டர்பால், ஸ்ரீநகர், குலகம் ஆகிய மாவட்டங்களில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. வெற்றி பெறவில்லை. பாரமுல்லா மாவட்டத்தில் பா.ஜ.க. ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது.

படிக்க:
காஷ்மீர் : இதன் பெயர்தான் இயல்பு நிலையாம் !
♦ ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

காஷ்மீரில் பா.ஜ.க.-விற்கு கிடைத்த ஒரே ‘வெற்றி’ ஷோபியன் மாவட்டம்தான். அங்குதான் எட்டு இடங்களையும் பா.ஜ.க. வென்றது. ஆனால், அதில் ஆறு இடங்களில் எதிர்த்து யாரும் போட்டி இடவில்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும்.

மற்றொருபுறம், இதுவரை இல்லாத வகையில் 98.3% வாக்குப் பதிவு நடந்ததாக மோடி அரசும், அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் கூறுகின்றன. சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்யப்பட்டது முதல் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்; பல எதிர்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ளன. ஆனாலும் இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 98.3% வாக்குப்பதிவு நடந்துள்ளதாக மோடி அரசு சொல்கிறது.

யாரையும் போட்டியிட விடாது தடுத்துவிட்டு, அதை ‘போட்டி’ என்கிறது பாஜக.

மோடி அரசு சொல்வது போல இது உண்மையாக இருந்தால் அதன் பொருள் என்ன? அதாவது, மாநிலக் கட்சிகள் அனைத்தும் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தனிப்பெரும் கட்சியாக பா.ஜ.க. மட்டும் போட்டி இட்டு, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் மக்களை நிறுத்தி நடத்தப்பட்ட தேர்தலில் கூட மக்கள் பா.ஜ.க-வை வெற்றி பெறச் செய்யவில்லை, சுயேட்சையைத்தான் தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மக்கள் தீர்ப்பு என்பது, பா.ஜ.க. முகத்தில் காஷ்மீர் மக்கள் காறி உமிழ்ந்திருப்பதையே காட்டுகிறது.

ஆனால், பா.ஜ.க. சொல்வது போல அங்கு தேர்தலில் 98.3% வாக்குப் பதிவு நடக்கவில்லை என்பதற்கு பல நிகழ்வுகளைச் சொல்ல முடியும். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட பல வேட்பாளர்கள் தொகுதி பக்கமே செல்லவில்லை. பாதுகாப்பு கருதி ஸ்ரீநகரில் ஓட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். வேட்பாளர் ஊருக்குள்ளே போய் ஓட்டு கேட்கவேமுடியாது என்ற நிலைமை பல இடங்களில் நிலவியது. இதுமட்டுமின்றி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள 137 வட்டாரங்களில் 19,582 இடங்களுக்கு 7,528 இடங்களில் மட்டும் தான் தேர்தல் நடந்துள்ளது. மீதமுள்ள 12,054 (61.5%) இடங்களுக்கு யாருமே வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுதான் எதார்த்த கள நிலைமை. இந்த நிலைமை இருந்தபோதிலும் மக்கள் 98.3% மக்கள் வாக்களித்ததாக பா.ஜ.க. சொல்வது எவ்வளவு பெரிய பொய்!

பொய்களின் மூலம் பாசிசம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஏனெனில், அதனிடம் உண்மை இல்லை. உண்மை அதனிடம் இருக்கவும் முடியாது. காஷ்மீரை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிட்டதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்திவிட்டதாகவும் பா.ஜ.க. தான் செல்வாக்காக இருக்கும் மாநிலங்களில் ஒரு பொய்யைப் பரப்பலாம். உண்மை அதற்கு நேரெதிரானது, அது அதற்குரிய வினையை ஆற்றியே தீரும். அது மோடியாலோ அவர்களை இயக்கும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிஸ்டுகளாலோ அந்த உண்மையை மறைத்துவிட முடியாது.

படிக்க:
காஷ்மீர் : கல்லறைகள் பொய் சொல்லாது !
♦ குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

இவ்வளவு பேர் சுயேட்சைகள் எப்படி வெற்றி பெற்றார்கள் என்ற கேள்விக்கு விடை தேட ஒரு சம்பவத்தை மட்டும் பார்ப்போம். குப்வாரா மாவட்டத்தில் உள்ள வட்டார வளர்ச்சி கவுன்சிலுக்கான தேர்தலில் ஷாடிகாம் கிராமத்தில் இருந்து 41 வயதுடைய நசீமா பானோ போட்டியிட்டார். அவரது ஒரே கோரிக்கை, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் (PSA) கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கின்ற தனது கணவரை விடுதலை செய்ய வேண்டும் என்பதே. இதுபோல நூற்றுக்கணக்கானோர் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர். சுயேட்சைகள் அதிக அளவில் வெற்றிபெற்றதற்கான காரணமும் இதுதான்!

***

ரோடு போடுதல், பள்ளிக்கூடம் கட்டுதல், தெருவிளக்குக் கம்பம் அமைத்தல், உயர்மட்ட நீர்த்தேக்கத் தொட்டி அமைத்தல், பாலம் கட்டுதல் போன்றவற்றில் காண்ட்ராக்ட் எடுத்து கமிசன் பார்ப்பது, டூவீலர் ஸ்டாண்ட், காய்கறி சந்தை போன்றவற்றில் வரும் வருவாயில் கமிசன் அடித்தல், நூறுநாள் வேலைத்திட்டம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு முகாம் போன்றவற்றிற்கு அரசு ஒதுக்கும் தொகையில் கமிசன் அடித்தல் என பலவகைகளில், உள்ளூர் அளவில் இருக்கும் பண முதலைகள், ரௌடிகள், ஆதிக்க சக்திகள், மாஃபியாக்கள், மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுதான் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்.

அதிகாரப் பரவலாக்கல், வேர்மட்ட ஜனநாயகம், பஞ்சாயத்து ராஜ் என்று பல அலங்காரச் சொற்களால் மறைக்கப்படும் இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வெற்றி என்பது சாதி பலம், பண பலம், குண்டர் பலம் ஆகியவைதான் தீர்மானிக்கின்றன. பல கட்சிகள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் போது, அது ஏதோ ஜனநாயகத் திருவிழா என்ற ஒரு பொய்யை தொடர்ந்து நிலைநாட்ட முடிகிறது. ஆனால், ஜம்மு காஷ்மீர் போன்ற இந்திய அரசின் ஆக்கிரமிப்பில் உள்ள இராணுவ ஆட்சி நடக்கும் பகுதிகளில் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என்பது ஜனநாயகத் திருவிழா என்று யாரும் சொல்வதில்லை. மாறாக, இவற்றை மக்கள் புறக்கணித்தே வந்துள்ளனர். இதுதான் வரலாறு.

இருப்பினும் தற்போது ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட உள்ளாட்சி மன்றத் தேர்தல் இதற்கு விதிவிலக்கில்லை என்றாலும், இது பா.ஜ.க.வால், பா.ஜ.க.வின் கீழ்மட்ட குண்டர்களுக்காக மோடி அரசு நடத்திய தேர்தல் என்பதுதான் முக்கியமானது. என்ன ஒரு வித்தியாசம் என்றால், இதில் வெற்றி கிடைத்தது காஷ்மீர் மக்களுக்குத்தான்.

யாழினி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அசாம் எதிர்ப்பது ஏன் ?

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேச நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளான இஸ்லாமியரல்லாதவர்கள் இந்தியாவில் குடியேறியிருந்தால், அவர்களை இந்தியக் குடிமக்களாக அங்கீகரிக்க இந்தச் சட்டம் வகை செய்கிறது.

இந்தச் சட்டம் மதரீதியில் மக்களைப் பிளவுபடுத்துகிறது, பிற அண்டை நாடுகளான இலங்கை, பர்மா ஆகியவற்றில் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களைப் பற்றி சட்டம் ஏதும் சொல்லவில்லை என்ற காரணத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை எதிர்க்கின்றன.

ஆனால், அசாமில் இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கான காரணமே வேறு..

1971-ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போர், வங்கதேச விடுதலை போர் ஆகியவற்றின்போது, ஒரு கோடிக்கும் அதிகமான வங்கதேச மக்கள் இந்தியாவின் அசாம், மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் குடியேறினர். காலப்போக்கில் அவர்களுக்கு இந்திய குடிமக்களுக்கு வழங்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் வழங்கப்பட்டன.

இந்தக் குடியேறிகளால் தங்களது வேலைவாய்ப்பு, அரசியல், கல்வி, பொருளாதாரம் உள்ளிட்ட உரிமைகள் பாதிக்கப்படுவதாக கூறி அசாமை பூர்விகமாக கொண்டவர்கள், பல்வேறு இயக்கங்களின் கீழ் பல வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, 1971-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதிக்கு முன்னதாக அசாமுக்கு வந்தவர்களுக்கு மட்டும் இந்திய குடியுரிமை அளிக்க முடிவு செய்து, 1951-ம் ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று, அதன் இறுதிப் பட்டியலும் சில மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது.

படிக்க:
குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !
♦ மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

இதையடுத்து, சட்டவிரோதமான முறையில் அசாமில் குடியேறிய வங்கதேசத்தவர்கள் வெளியேறுவார்கள் என்று அம்மாநிலத்தவர்கள் நினைத்திருந்தார்கள்.

இந்த நிலையில்தான் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் மூலம் வங்கதேசத்திலிருந்து குடியேறிய முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை கிடைத்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான், அம்மாநிலத்தில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

ஆக, பொதுவாக எதிர்க் கட்சிகள் காட்டும் எதிர்ப்பு என்பது குடியுரிமை வழங்குவதில் மதரீதியில் பாகுபாடு காட்டக்கூடாது என்பதற்காக. அசாமில் நிலவும் எதிர்ப்பு என்பது, யாருக்கும் குடியுரிமை கொடுக்கக்கூடாது என்பதற்காக.

இது முக்கியமான வேறுபாடு.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

மதுரை கருத்தரங்கம்

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 16-ம் ஆண்டு விழா கருத்தரங்கம் !

நாள் : 22.12.2019, ஞாயிறு, காலை 10.30 மணி.
இடம் : நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அரங்கம். (சோகோ அறக்கட்டளை), கே.கே. நகர், மதுரை.

தலைமை :

பேராசிரியர் அ. சீநிவாசன்
தலைவர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை.

கருத்தரங்க தலைப்பு :

அயோத்தி – காஷ்மீர் – சபரிமலை – தேசிய குடிமக்கள் பதிவேடு
பறிக்கப்படும் மனித உரிமைகள் தகர்க்கப்படும் அரசியல் சட்டம்.

கருத்தாளர்கள் :

வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன்
மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.

திரு ஆளூர் ஷாநவாஸ்
மாநில துணைப் பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் தியாகு
பொதுச் செயலாளர், தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.

நன்றியுரை :

திரு ம. லயனல் அந்தோணி ராஜ்
செயலாளர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை.

நூலரங்கம் :

கீழைக்காற்று வெளியீட்டகம், சென்னை

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.
தொடர்புக்கு : 73393 26807.

*****

Vinavu LIVE : தொழில்நுட்ப பிரச்சினை இல்லாத பட்சத்தில் இந்த நிகழ்வு மதுரையிலிருந்து நேரலையாக ஒளிபரப்பப்படும் – இணைந்திருங்கள்

பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சுதந்திரம், நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை மீதான மிகப்பெரிய தாக்குதல்.

1992, டிச.6-பாபர் மசூதி இடிப்பு “தேசிய அவமானம்” என்றது உச்சநீதிமன்றம். நவ.9, 2019 தீர்ப்போ மனித குலத்திற்கே அவமானம்! ஆக்கிரமிக்கப்பட்ட ஓர் “அசையாச் சொத்து” தொடர்பான சிவில் வழக்கை – இந்து-முசுலீம் பிரச்சினையாகக் கருதி, அகழாய்வு செய்து, அரசியல் சட்ட அமர்வு விசாரித்ததே அப்பட்டமான அரசியல் சட்ட விரோதம்!

1858-லிருந்து 1885 வரை பாபர் மசூதியின் வெளிப்பகுதி ஆக்கிரமிப்பிற்கு எதிராக 8 வழக்குகள் நடந்து தீர்ப்பு பாபர் மசூதி நிர்வாகத்திற்கு ஆதரவாக வந்துள்ளது. 1934-ல் பாபர் மசூதியின் டூம்கள் சேதப்படுத்தப்பட்டதை, சரிசெய்தது வெள்ளை அரசு. பாபர் காலத்திலிருந்து, வெள்ளை அரசுவரை மசூதிக்கு மானியம் வழங்கப்பட்டது.

1949, டிச.16-வரை பாபர் மசூதியில் தொழுகை நடத்தப்பட்டது; டிச.22-ல் சட்டவிரோதமாக சிலைகள் உள்ளே வைக்கப்பட்டது என்பதை ஏற்கும் நீதிமன்றம் இசுலாமியர்களிடம் தொடர்ந்து அனுபவம் இருந்ததற்கான ஆதாரம் இல்லை என்கிறது!

பிரிட்டிஷ் ஆட்சிவரையிலான பிரச்சினைகளை மட்டுமே இந்திய நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும் என்று சொல்லும் உச்சநீதிமன்றம், 1528-1858 வரை முசுலீம்கள் தொழுகை நடத்தியதற்கு ஆதாரம் கேட்பதேன்? 12-ம் நூற்றாண்டு ராமர் கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை ; 12-16 நூற்றாண்டுகள் (400 ஆண்டுகள்) வரலாறே இல்லை என்று சொல்லும் உச்சநீதிமன்றம், கோயிலை இடித்துவிட்டுத்தான் பாபர் மசூதி கட்டினார் என்று சொல்லி நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோரைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ் – விஎச்பி – பாஜக கூட்டத்தைக் கண்டிக்காததுடன், டிச.6, 1992 மசூதி இடிப்பு வழக்கு குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்காதது ஏன்?

பாபர் மசூதி பிரச்சனை இந்து-முசுலீம் பிரச்சினை அல்ல. பெரும்பான்மை இந்துக்கள் – பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமர் பிறந்தார் என நம்பவும் இல்லை. தென்னகம், வட கிழக்கு மாநிலங்களில் இராமனுக்கு கோயிலே இல்லை. 17-ம் நூற்றாண்டுவரை உத்தரப் பிரதேசத்திலேயே ராமனுக்குக் கோயில் இல்லை. இந்த நாட்டின் இந்துக்களும் இசுலாமியர்களும் அமைதியாக வாழவே விரும்புகின்றனர். கலவரம் – வன்முறை செய்வதை தனது தொழிலாகக் கொண்டிருக்கும் பாஜக – ஆர்.எஸ்.எஸ்-தான் பாபர் மசூதி பிரச்சனையை உருவாக்கி நாட்டை மதரீதியாக பிளவுபடுத்தியது. மசூதியை திட்டமிட்டு இடித்தது.

மசூதி இருந்திருந்தால், அகழாய்வு நடந்திருக்குமா? மசூதியை இடித்து கோயில் கட்டு, என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா? வழக்கு நடக்கும் போது, வழக்குச் சொத்து இடிக்கப்படுகிறது! எந்த நடவடிக்கையும் இல்லை ! வரலாற்றுக் குற்றத்தை சரிசெய்ய உச்சநீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட வாய்ப்பு வீணடிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பால் தோற்றது இசுலாமியர்கள் அல்ல! நாட்டின் அரசியல் சட்டம், சமத்துவம், மதச்சார்பிமை, உலக அரங்கில் இந்திய மதிப்பு! சாட்சியத்தை நிராகரித்து, நம்பிக்கையின் அடிப்படையிலான பாபர் மசூதி தீர்ப்பு இந்திய நீதித்துறை வரலாற்றில் கறுப்பு நாளே!

படிக்க:
Revoke Citizenship Amendment Act, 2019 ! People’s Right Protection Centre – Press Release
♦ குடியுரிமை மசோதா : இந்தியா மீது பொருளாதாரத் தடை கோரும் அமெரிக்க கூட்டாட்சி அமைப்பு !

அயோத்தி வழக்கின் தீர்ப்பை எல்லோரும் ஏற்றே தீர வேண்டும் எனப் பேசும் பாஜக – ஆர்.எஸ்.எஸ் சபரிமலை பிரச்சனையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை காலில் போட்டு மிதிக்கிறது. முத்தலாக் பிரச்சனையில் இசுலாமியப் பெண்களின் உரிமை பேசும் பாஜக, சபரிமலை செல்லும் இந்துப் பெண்களை அடித்து விரட்டுகிறது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்காதது தீண்டாமை என்று சொன்ன உச்சநீதிமன்றமோ மவுனம் காக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் உலகில் வேறெங்கும் இல்லாதவகையில் 75 லட்சம் காஷ்மீர் மக்களின் அடிப்படை உரிமைகள் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்டது. ஜம்முகாஷ்மீர் மாநிலம் துண்டாடப்பட்டு, காஷ்மீர் மக்களின் அரசியல் சட்டம் தூக்கி எறியப்பட்டது. காஷ்மீர் இந்திய அரசோடு இணைந்த போது வழங்கப்பட்ட வாக்குறுதி அப்பட்டமாக மீறப்பட்டது.

காஷ்மீர் மக்கள், அரசு, சட்டப்பேரவை, அரசியல் அமைப்பு அவை எல்லாம் மத்திய அரசின் கவர்னருக்குச் சமம் என்ற அரசியல் சட்ட மோசடி அரங்கேற்றப்பட்டது. கடந்த 5 மாதங்களாக காஷ்மீர் மக்கள் திறந்த வெளி சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அநீதிக்கும் உச்சநீதிமன்றம் வாய்திறக்க மறுக்கிறது.

பொருளாதாரம் பாதாளத்தில் சரிந்து, விலைவாசி உயர்ந்து, மக்கள் வேலையிழந்து, வாழ்விழந்து தவிக்கும்போது தேசிய குடிமக்கள் பதிவேடு என்று சொல்லி ஒரே இரவில் 20 லட்சம் அசாம் மக்களை “சட்டவிரோதக் குடியேறிகளாக்கி” நாட்டை விட்டு வெளியேறக் கெடு விதிக்கிறது மோடி அரசு. இப்பாசிசச் சட்டம் இசுலாமியர்கள், தமிழர்களைக் குறிவைத்து நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.

பாகிஸ்தான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் 6 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருந்தால் போதும் இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்கிறது பாஜகவின் புதிய குடியுரிமைச் சட்டம். 40, 50 ஆண்டுகள் இந்தியாவில் குடியிருக்கும் இசுலாமியர்கள், ஈழத்தமிழர்களுக்கு இச்சட்டம் பொருந்தாதாம்! எத்தனை பெரிய அயோக்கியத்தனம்? மத, இன அடிப்படையில் பிரிவினை செய்யக் கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம்! ஆனால் பாஜக மீறுகிறது, உச்சநீதிமன்றம் வேடிக்கை பார்க்கிறது.

மாற்றுக் கருத்து சொல்லும் அறிவுத்துறையினர், போராடும் மக்கள், அரசியல் சட்டத்தின் ஆட்சி கோருவோரை, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில், தேசிய புலனாய்வு முகமை மூலம் பல ஆண்டுகள் சிறையில் அடைக்கிறது மோடி – அமித்ஷா அரசு. பார்ப்பனீயத்தை எதிர்த்தால் கவுரி லங்கேஷ், கல்புர்க்கி போல சுட்டுத் தள்ளுகிறது. பேச்சுரிமை, கருத்துரிமை முற்றிலும் மறுக்கப்படுகிறது. பாஜக-வின் பாசிசம் ஒட்டு மொத்த சமூகத்தையும் இருள் போல் சூழ்கிறது.

எனினும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல பாஜக. வரலாறு மாபெரும் சர்வாதிகாரிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்துள்ளது. நாட்டின் பெரும்பான்மை மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இல்லை. மகாராஷ்டிரத்தில் மண்ணைக் கவ்வினார் மாவீரர் அமித்ஷா.

சனாதனத்தை வீழ்த்தி, சட்டத்தின் ஆட்சியை உருவாக்கும் சமரை பெரியாரின் சமத்துவ மண்ணான தமிழகத்தில் இருந்து தொடங்குவோம்! சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், மத நல்லிணக்கம், மதச்சார்பின்மை காப்போம்!

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டக் கிளை.

சோவியத் யூனியனின் வீரன் விருதுபெற்ற உண்மை மனிதன் !

உண்மை மனிதனின் கதை | ஆசிரியரின் பின்னுரை – 03

“நம்பிக்கைத் துரோகம் செய்து சோவியத் யூனியன் மீது நீங்கள் படையெடுத்தீர்கள். அதன் விளைவாக ஜெர்மனி முறியடிக்கப்பட்டுப் படுதோல்வி அடைந்தது. இவ்வாறு செய்ததன் மூலம் நீங்கள் மிகப் பெரிய குற்றம் இழைத்து விட்டீர்கள் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா?” என்று கோயெரிங்கிடம் கேட்டார் சோவியத் தரப்பு வழக்குரைஞர் ரொமான் ருதேன்கோ.

“இது குற்றம் அல்ல, அழிவு விளைவிக்கும் தவறு” என்று விழிகளைக் கடுப்புடன் தாழ்த்திக் கொண்டு கம்மிய குரலில் விடையிறுத்தான் கோயெரிங்க். ”ஒன்று மட்டும் நான் ஒப்புக் கொள்ள முடியும்: நாங்கள் ஆய்ந்தோய்ந்து பாராமல் காரியம் செய்துவிட்டோம். ஏனெனில் எத்தனையோ விஷயங்களை நாங்கள் அறியாதிருந்தோம், பலவற்றை அனுமானிக்கவே இயலாதிருந்தோம் என்பது போர் நடக்கையில் எங்களுக்கு விளங்கிற்று. முதன்மையாக சோவியத் ருஷ்யர்களை நாங்கள் அறியவும் இல்லை. அவர்கள் எங்களுக்குப் புதிராக இருந்தார்கள், இருக்கிறார்கள். சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலை மிக மிகச் சிறந்த உளவுநிறுவனம் கூடக் கண்டறிய முடியாது. நான் குறிப்பிடுவது பீரங்கிகள், விமானங்கள், டாங்கிகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை அல்ல. இதை நாங்கள் கிட்டத்தட்டச் சரியாக அறிந்திருந்தோம். இயந்திரத் தொழிலின் திறனையும் இயங்கு ஆற்றலையும் நான் குறிப்பிடவில்லை. நான் கூறுவது மனிதர்களைப் பற்றி. ருஷ்ய மனிதன் வெளி நாட்டினருக்கு எப்போதுமே விளங்காத புதிராக இருந்து வந்திருக்கிறான். நெப்போலியனும் ருஷ்யனை புரிந்து கொள்ளவில்லை. நெப்போலியன் செய்த தவற்றையே திரும்பச் செய்தோம், அவ்வளவுதான்.”

“விளங்காப் புதிரான ருஷ்ய மனிதனை”, “சோவியத் நாட்டின் உண்மையான போர் ஆற்றலைப்” பற்றி கோயெரிங் வேறு வழியின்றி வெளிப்படையாக கூறியதை நாங்கள் பெருமையுடன் செவிமடுத்தோம். எவனது திறமையும் மேதையும் தியாகமும் வீரமும் போர் நாட்களில் உலகம் அனைத்தையும் பிரமிக்கச் செய்தனவோ, அந்தச் சோவியத் மனிதன் இந்த கோயெரிங்க் போன்ற பேர்வழிகளுக்கு நாசம் விளைவிக்கும் புதிராக இருந்தான், இருந்து வருகிறான் என்பதை நம்ப முடிந்தது. ஜெர்மானியர் “ஆளும் வர்க்கத்தினர்” என்ற ”அவலச் சித்தாந்தத்தைக்” கண்டுபிடித்தவர்கள், சோஷலிச நாட்டில் பிறந்து வளர்ந்த மனிதனின் ஆன்மாவையும் ஆற்றலையும் புரிந்து கொள்வது எங்கே? அப்போது நான் சட்டென அலெக்ஸேய் மாரெஸ்யோவை நினைவு கூர்ந்தேன்.

ஓக் பலகை முகப்பிட்ட இந்த ஆடம்பரமற்ற ஹாலில் அவனது பாதி மறந்துவிட்ட உருவம் பளிச்சென, இடைவிடாது என் முன் ஒளிர்ந்தது. கெய்த்தலின் தரைப் படையையும் கோயெரிங்கின் விமானப் படையையும் தகர்த்து நொறுக்கி, ரேடரின் போர்க்கப்பல்களைக் கடலின் அடித்தரையில் புதைத்து, தங்கள் விறல்மிக்க அடிகளால் ஹிட்லரின் கொள்ளைக்கார அரசைத் தூள் தூளாக்கிய கோடானுகோடி சாதாரண சோவியத் மக்களில் ஒருவனைப் பற்றிய கதையை இங்கேயே, நாசிசத்தின் வளர்ப்புப் பண்ணையாக விளங்கிய இந்த நியூரம்பெர்க் நகரிலேயே எழுதிவிட எனக்கு ஆசை உண்டாயிற்று.

மஞ்சள் அட்டை போட்ட நோட்டுப் புத்தகங்களை (இவற்றில் ஒன்றின் மேல் “மூன்றாவது ஸ்குவாட்ரனின் போர்ப் பறப்புகள் பற்றிய நாட்குறிப்பு” என்ற தலைப்பு மெரேஸ்யெவின் கைப்பட எழுதப்பட்டிருந்தது) நியூரம்பெர்க் நகருக்கும் நான் உடன் கொண்டு வந்திருந்தேன் . விசாரணைமன்ற அமர்விலிருந்து திரும்பியதும் பழைய குறிப்புக்களைப் படித்துத் தெளிவுபடுத்திக் கொள்வதில் முனைந்தேன். அலெக்ஸேய் மெரேஸ்யெவின் கதையை அவனுடைய தோழர்களிடமிருந்து கேட்டு அறிந்தவற்றையும் அவனது சொற்களையும் ஆதாரமாகக் கொண்டு எழுத முயன்றேன்.

எத்தனையோ விவரங்களை உரிய காலத்தில் குறித்து வைத்துக் கொள்ள எனக்கு இயலவில்லை. இந்த நான்கு ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களை அலெக்ஸேய் மெரேஸ்யெவ் அப்போது சொல்லாமல் விட்டுவிட்டான். அரைகுறை விவரங்களை ஊகித்து இட்டு நிரப்ப நேர்ந்தது. அன்று இரவு அலெக்ஸேய் தன் நண்பகளைப் பற்றி எவ்வளவோ கனிவுடனும் விளக்கமாகவும் விவரித்தான். ஆனால் அவர்களது உருவச் சித்திரங்கள் காலப்போக்கில் நினைவிலிருந்து அழிந்து விட்டன. இவற்றைப் புதிதாக தீட்டவேண்டியிருந்தது. மெய் விவரங்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற இங்கே எனக்கு வாய்ப்பு இல்லாமையால் நான் கதாநாயகனின் குலப் பெயரைச் சிறிது மாற்றினேன். அவனுக்கு வழித்துணையாக இருந்தவர்களுக்கு, அருஞ்செயலை நிறைவேற்றும் கடினமான பாதையில் அவனுக்கு உதவி செய்தவர்களுக்குப் புதுப் பெயர்கள் இட்டேன். இந்த நவீனத்தில் தங்களை கண்டுகொண்டால் அவர்கள் என்மேல் மனத்தாங்கல் கொள்ளாதிருப்பார்களாக.

நவீனத்துக்கு “உண்மை மனிதனின் கதை” என்று பெயரிட்டேன். ஏனெனில் அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தான் உண்மையான சோவியத் மனிதன். எவனை கெர்மன் கோயெரிங்க் ஒருபோதும் புரிந்து கொள்ளவில்லையோ, வரலாற்றின் படிப்பினை மறந்து விடும் போக்குள்ளவர்கள், நெப்போலியனும் ஹிட்லரும் போன வழியில் செல்ல இப்போதுங்கூட இரகசியமாக ஆசைப்படுவர்கள் அனைவரும் எவனை இன்றளவும் புரிந்து கொள்ளவில்லையோ, அந்த சோவியத் மனிதனே அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.

படிக்க :
அம்பேத்கர் பவுத்தரானது | ஈரான் – அமெரிக்கா சண்டை | ரசிய பொருளாதாரம் | கேள்வி – பதில் !
மேட்டுப்பாளையம் : இது தீண்டாமைச் சுவர் இல்லை என்றால் வேறு எதுதான் தீண்டாமைச் சுவர் ?

இவ்வாறு பிறந்தது இந்த “உண்மை மனிதனின் கதை.” புத்தகம் எழுதப்பட்டு அச்சிடத் தயாரானதும், அது வெளியாவதற்க்கு முன் கதாநாயகனுக்கு அதைப் படித்துக் காட்ட எனக்கு விருப்பம் உண்டாயிற்று. ஆனால் முடிவற்ற போர்முனைப் பாதைகளின் சிடுக்குப் பின்னலில் எங்கோ அவன் காண முடியாதவாறு மறைந்து விட்டான். எங்கள் இருவருக்கும் பரிச்சயமான விமானி நண்பர்களிடமும் அதிகாரபூர்வமான வட்டாரங்களிலும் விசாரித்துப் பார்த்தேன். அப்படியும் அலெக்ஸேய் மெரேஸ்யெவைத் தேடிக் காண எனக்கு உதவ அவர்களால் முடியவில்லை .

நவீனம் சஞ்சிகையில் வெளியாகிவிட்டது. அப்போது ஒரு நாள் காலை என் வீட்டு டெலிபோன் மணி அடித்தது.

“நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்” என்றது கரகரத்த ஆண்மைக் குரல். அது பழக்கமானது போலிருந்தது, ஆனால் யாருடையது என்பது நினைவில்லை.

“பேசுவது யாரோ?”

“மேஜர் அலெக்ஸேய் மெரேஸ்யெவ்.”

சில மணி நேரத்துக்குப் பின் அவன் என் வீட்டுக்கு வந்தான். முன் போலவே குதூகலமும் சுறுசுறுப்பும் செயலார்வமும் அவனிடம் பொங்கின. ஒரு சிறிது சாய்ந்தாடும் கரடி நடை நடந்தான். நான்கு போர்க்கால ஆண்டுகள் அவனிடம் அநேகமாக ஒரு மாறுதலையும் விளைவிக்கவில்லை.

“நேற்று நான் வீட்டில் உட்கார்ந்து ஏதோ படித்துக் கொண்டிருந்தேன். வானொலி முழங்கிக் கொண்டிருந்தது. ஆனால் என்ன ஒலிபரப்பப்படுகின்றது என்று கவனிக்காமலே நான் படிப்பில் ஆழ்ந்திருந்தேன். திடீரென்று அம்மா கிளர்ச்சி பொங்க ஓடிவந்து வானொலிப் பெட்டியைக் காட்டி, “கேள் மகனே, உன்னைப் பற்றியது தான் இந்த நிகழ்ச்சி” என்றாள். நான் உற்றுக் கேட்டேன். உண்மைதான். இந்த நிகழ்ச்சி என்னைப் பற்றியதே. எனக்கு நேர்ந்தது எல்லாம் விரிக்கப்பட்டது. நான் வியப்படைந்தேன், என்னைப் பற்றி இதை யார் எழுதியிருக்க முடியும் என்று. இதைப் பற்றி நான் யாருக்குமே சொன்னதில்லையே என்று நினைத்தேன். சட்டென்று நினைவு வந்தது நாம் அர்யோல் நகருக்கு அருகே சந்தித்ததும், நிலவறையில் இரவு முழுவதும் உங்களை உறங்கவிடாமல் நான் பேசிக் கொண்டிருந்ததும்… இது எப்போதோ, அநேகமாக ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடந்ததாயிற்றே என்று எண்ணினேன். நவீனத்தின் ஒரு பகுதி படிக்கப்பட்டு, இயற்றியவர் பெயர் கூறப்பட்டதும் உங்களைத் தேடி காண்பது என்று தீர்மானித்தேன்……”

இவ்வாறு அவன் மளமளவென்று விவரித்தான். ஓரளவு கூச்சமுள்ள, மலர்ந்த புன்னகை, மெரேஸ்யெவுக்கு இயல்பான அதே புன்னகை அவன் முகத்தில் தவழ்ந்தது.

நெடுங்காலமாக ஒருவரையொருவர் காணாத இராணுவத்தினர் மறுபடி சந்திக்கும் போது பேசிக் கொள்வது போலவே நாங்கள் போர்களைப் பற்றியும் அதிகாரிகளைப் பற்றியும் இருவருக்கும் பழக்கமான இராணுவ அதிகாரிகள் பற்றியும் வெகு நேரம் உரையாடினோம். அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன்னைப் பற்றி முன்போலவே விருப்பமின்றி விவரித்தான். அவன் இன்னும் நிறைய வெற்றிகரமாகப் போர் புரிந்தான் என்பதைத் தெரிந்து கொண்டேன். 1943 முதல் 1945 வரை நடந்த தாக்குப் போர் நடவடிக்கைகளில் அவன் தன் ரெஜிமென்டுடன் பங்காற்றினான். எங்கள் முந்திய சந்திப்புக்குப் பிறகு அவன் அர்யோல் அருகே மூன்று பகை விமானங்களை வீழ்த்தினான். அப்புறம் பால்டிக் பிரதேசப் போரில் பங்கு கொண்டு இன்னும் இரண்டு பகை விமானங்களைச் சுட்டுத் தள்ளினான். சுருங்கச் சொன்னால், அவன் தன் கால்களின் இழப்புக்கு ஈடாகப் பகைவர்களிடம் வட்டியும் முதலுமாக கணக்குத் தீர்த்துக் கொண்டான். அரசாங்கம் அவனுக்கு “சோவியத் யூனியனின் வீரன்” என்ற பட்டம் அளித்து கௌரவித்தது.

அலெக்ஸேய் மெரேஸ்யெவ் தன் குடும்ப விஷயங்களையும் சொன்னான். இந்த அம்சத்தில் நவீனத்தை இன்பியலாக முடிக்க வாய்த்தது குறித்து மகிழ்கிறேன்.

போர் முடிந்த பிறகு அவன் காதலித்த மங்கையை மணந்து கொண்டான். அவர்களுக்கு வீக்தர் என்ற ஒரு மகன் இருக்கிறான். மெரேஸ்யெவின் முதிய தாய் கமீஷினிலிருந்து மகனிடம் வந்து இப்போது மகனையும் மருமகளையும் கண்டு ஆனந்தித்துக் கொண்டு, பேரன் வீக்தரைச் சீராட்டியவாறு வாழ்ந்து வருகிறாள்.

இவ்வாறு, உண்மையான சோவியத் மனிதன் மெரேஸ்யெவின் வரலாற்றை, அயல் நாட்டில் எழுதிய இந்த நவீனத்தை வாழ்க்கையே தொடர்ந்து எழுதிவிட்டது.

மாஸ்கோ , நவம்பர் 28, 1950.

* முற்றும் *

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

குடியுரிமை சட்ட திருத்தம் : ஹிட்லரின் இன அழிப்புத் திட்டம் !

7

நாம் அனைவரும் வரலாற்றை முழுவதுமாக அறிந்தவர்கள் அல்ல. நம்முடைய மறதி அல்லது அறியாமை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு மேலும் அதிக பலத்தைக் கொடுக்கிறது. ஹிட்லரை நாம் அறிவோம். அவருடைய இனவெறி நமக்கு மறந்துவிட்டது அல்லது இனவெறி எப்படிப்பட்டது என்பதை நாம் அறியவில்லை. தமிழ் தேசியம் என்னும் பெயரில் ஹிட்லரைக் கொண்டாடும் ஒரு கும்பல் உருவாகியிருக்கிறது. அது ஒரு சிறிய கும்பல்தான் என்றாலும், அது பெரிய பேரழிவு திட்டத்துடன் களமிறங்கியுள்ள இந்து தேசியம் என்ற இனவெறி – மதவெறி திட்டத்துக்கு நம்மை தயார்படுத்துவதாக உள்ளது. பாசிச அரசு அல்லது மதவெறி அரசு என உண்மையை எழுதுவது பலருக்கு உவப்பாக இல்லை. ஆனபோதும் வரலாற்றின் குறிப்புகளோடு பாசிசத்தின் நடைமுறையாக்கலில் நாம் எந்த இடத்தில் நிற்கிறோம் என நேர்மையாக பரிசோதித்துக் கொள்வோம்.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
நாசி கட்சியின் (தேசிய சோசலிச ஜெர்மன் தொழிலாளர் கட்சி என்பதன் சுருக்கமே ‘நாசி’) தலைவரான அடால்ஃப் ஹிட்லர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர். நாசி கட்சிக்கு சித்தாந்த பின்புலம் கொடுத்தது ‘துலே சமூகம்’ என்ற ரகசிய அமைப்பு. அதாவது தாங்களே ஆரிய இனத்தின் தூய வாரிசுகள் என அறிவித்துக் கொண்டவர்கள் இவர்கள். கிரேக்க புராண கதையில் வரும் துலே என்ற பிராந்தியத்தில் புனையப்பட்ட ‘ஹைபர்போரியா’ என்ற தலைநகரில் வாழ்ந்த ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்களின் வாரிசுகள் என நாசிக்கள் பரப்பினார்கள். தொடக்கத்தில் ரகசிய அமைப்பாக இருந்தது. பரப்புரை, பத்திரிகை போன்றவற்றின் துணையுடன் ஜெர்மானியர் ஏகபோக ஆதரவு பெற்றது. துலே அமைப்பால் வளர்க்கப்பட்டவர் ஹிட்லர். அதன் பின்னணியிலேயே ஸ்வஸ்திக் முத்திரையை நாசி கட்சியின் கொடியாக அவர் வரைந்தார்.

படிக்க :
♦ அரவிந்தன் நீலகண்டன் : ஹிட்லர் காதலை போற்றலாமா ?
♦ ஒரு தேசியத் தலைவரின் தோற்றம் – இது ஒரு ஜெர்மன் கதை !

1920-களில் ஜெர்மனியில் மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருந்தனர். ஹிட்லரின் எதிரிகளாக மார்க்சியர்களும் யூதர்களுமே இருந்தார்கள். அவர்கள் குறித்து அவதூறான அனல் தெறிக்கும் பேச்சுக்கள் மூலம் மக்களை கவர்ந்தார் ஹிட்லர். தனக்காக கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் செல்வாக்கைக் காட்டி, கட்சியில் இருந்த மூத்தவர்களை பின்னுக்குத்தள்ளி முன்னேறினார். கட்சியில் சேர்ந்த பத்தாண்டுகளில் அக்கட்சியின் தலைவரானார்.

ஹிட்லர் தலைமையிலான நாசி கட்சி, தீவிர தேசியவாதத்தை கொள்கையாக அறிவித்தது. தனது அனைத்து கொள்கை அறிக்கையிலும் யூதர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மீண்டும் மீண்டும் கொண்டு வந்து உறுதியுடன் நின்றது. அடுத்த பத்தாண்டுகளில் நாசி கட்சி படிப்படியாக தேர்தலின் மூலமாக முக்கியமான கட்சியாக வளர்ந்தது. பல்வேறு தகிடுதத்தங்களைச் செய்து 1933-ம் ஆண்டு ஜெர்மன் அதிபராக ஆனார் ஹிட்லர். இதெல்லாம் நடந்தது பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனே என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதுவரைக்குமான வரலாறுகூட நமக்கு இந்தியாவில் பதவியில் அமர்ந்திருக்கும் கட்சியை/பதவியில் அமர்ந்திருப்பவரை நினைவூட்டுவதாக இருக்கலாம். பதவியில் அமர்ந்த பிறகு, யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்தவை, சரியாக இந்தியாவில் முசுலீம்களுக்கு என்ன நடந்துக்கொண்டிருக்கிறதை என்பதை அப்படியே காட்டுகின்றன.

அதுவரை ஜெர்மானிய மக்களை பொதுவாகப் பார்த்த அரசியலமைப்பை மாற்றும் அதிகாரம், நாடாளுமன்றத்தில் இருந்த அதிகார பலத்தால் ஹிட்லருக்கு கிடைத்தது. யூதர்களின் மத சடங்கு அடிப்படையிலான விலங்குகளை பலியிடும் சடங்குக்கு பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டது. ஜெர்மானியர் தூய ரத்தத்தை காக்க, யூதர்களுக்கும் ஜெர்மானியர்களுக்கு இனக்கலப்பு அதாவது திருமணம் செய்துகொள்வது தடை செய்யப்பட்டது. மருத்துவர், ஆசிரியர், வழக்கறிஞர் உள்ளிட்ட பணிகளுக்கு யூதர்கள் வருவது தடை செய்யப்பட்டது. பள்ளிகளில் அனைவரும் படிக்கக்கூடாது என்பதற்காக சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. பள்ளிகளில் தூய இனவாதத்தை போதிக்கும் பாடங்கள் கொண்டுவரப்பட்டன.

உச்சமாக 1933-ம் ஆண்டு குடியுரிமை மற்றும் இயற்கைமயமாக்கல் சட்டம் என்ற பெயரில் யூதர்களை ஜெர்மன் சமூகத்திலிருந்து நீக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டது. எடுத்த எடுப்பிலேயே ஒன்றரை லட்சம் யூதர்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. யூதர்கள் விவசாயம் செய்வதைத் தடுக்கவும் சட்டம் கொண்டுவரப்பட்டது. நடிக்கவும் கலாச்சாரம் தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபடவும்கூட யூதர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

அதன்பின், ‘நூரெம்பர்க் சட்டங்கள்’ என்ற பெயரில் யூதர்களை முற்றிலுமாக அழிக்கும் சட்டங்களை 1935-ம் ஆண்டு கொண்டுவந்தார் ஹிட்லர். இதில் குடியுரிமை சட்டம் முக்கியமானது. ஜெர்மன் ரத்த முறையினர் மட்டுமே குடியுரிமை உள்ளவர்கள். யூதர்களுக்கு முற்றிலுமாக குடியுரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் சொந்த நாட்டிலேயே ‘வெளிநாட்டினர்’ என அழைக்கப்பட்டனர்.

இனியும் ஹிட்லரின் வரலாறு நமக்குத் தேவையில்லை. இந்திய யதார்த்ததுக்கு வருவோம். இங்கே என்ன நடக்கிறது? மதத்தின் பெயரால், முசுலீம்கள் மாட்டிறைச்சி உண்கிறார்கள் என்பதற்காகவே பல மாநிலங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டது. மாட்டிறைச்சியின் பெயரால் முசுலீம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள், முசுலீம் சமூகத்தை அச்சுறுத்தின; நடுங்க வைத்தன. தூண்டப்பட்ட கும்பலால் நடந்த படுகொலைகளுக்கு ஒன்றுக்குக்கூட நீதி கிடைக்கவில்லை. லவ் ஜிகாத் என்ற பெயரில் புனைகதை கட்டி, முசுலீம் ஆண்கள் இந்து பெண்களை கவர்ந்து திருமணம் செய்து மதமாற்றம் செய்வதாக பரப்பப்பட்டது. இந்தியாவின் ஒரு பகுதியான அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு செயலாக்கம் என்ற பெயரில் லட்சக்கணக்கான முசுலீம் மக்களுக்கு குடியுரிமை ரத்து செய்யப்பட்டது. முசுலீம்களுக்கு முழு உரிமை உள்ளது என்றபோதும், பெரும்பான்மை இந்து மனப்பான்மையின் அடிப்படையில் நாட்டின் உச்சநீதிமன்றமே பாபர் மசூதி உள்ள இடத்தில் கோயில் கட்டலாம் என தீர்ப்பு எழுதியது.

இப்போது முசுலீம்களை இரண்டாம்தர குடிமக்களாக மாற்றும் குடியுரிமை சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்துள்ளது ஆளும் இந்துத்துவ அரசு. இச்சட்டப்படி பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்து, கிறித்தவர், பார்சி, ஜெயின், புத்த மதங்களைச் சேர்ந்தவர்கள், டிச.31, 2014-க்குள் வந்து இந்தியாவில் குடியமர்ந்திருந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும். இச்சட்டம் பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இசுலாமிய மக்களுக்குப் பொருந்தாது. இலங்கையிருந்து வந்த ஈழத் தமிழர்கள், மியான்மரிலிருந்து வந்த ரோகிங்கியா முசுலீம்களுக்கும் பொருந்தாது.

குடியுரிமை சட்ட திருத்ததின் தொடர்ச்சியாக தேசிய அளவில் குடியுரிமை பதிவேடு செயலாக்கவிருக்கிறது அரசு. அசாமில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை பதிவேடு 20 லட்சம் மக்களை சட்டவிரோத குடியேறிகள் என்றது. இவர்களில் 12 லட்சம் மக்கள் இந்துக்கள். நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் குடியிரிமை திருத்தச் சட்டம் சான்றாவணங்கள் இல்லாத அனைத்து மக்களையும் சட்டவிரோத குடியேறிகள் என வகைப்படுத்தி வதை முகாம்களில் அடைக்கும். முசுலீம் மக்களோடு, வர்ணாசிரமத்தின் படிநிலைப்படி சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்களுமே இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள்.

ஒருவர் பெயர் குடியுரிமை பதிவேட்டில் இல்லாவிட்டால், சம்மந்தப்பட்டவர்தான் இந்தியக் குடிமகன் என தன்னை, குடியுரிமைத் தீர்ப்பாயம் சென்று நிரூபிக்க வேண்டும். இந்தியாவில் சாலை ஓரங்களில், நாடோடிகளாக, வெள்ளம், இயற்கைப் பேரிடர்களில் பாதிக்கப் பட்டவர்களாக, எவ்வித ஆவணங்களும் அற்ற பலகோடி மக்கள் உள்ளனர். இவர்கள் பிறந்த சான்றிதழ், படிப்புச் சான்றிதழ், வங்கி கணக்கிற்கு எங்கே போவார்கள்? ஆக, ஒடுக்கப்பட்ட அம்மக்களும் குடியுரிமையை இழப்பார்கள்.

பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த இந்துக்கள் அங்கு சிறுபான்மையினர் என்றால் இலங்கையில் இந்து-தமிழ் மக்களும், மியான்மர்-ரோகிங்கியா முசுலீம் மக்களும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவது ஆளும் அரசின் இனவாத நோக்கத்தைக் காட்டுகிறது.

படிக்க :
♦ குடியுரிமை திருத்தச் சட்டம் – 2019 : தமிழன் என்றால் எங்களுக்கு எதிரியே – பாசிச பாஜக !
♦ அஸ்ஸாம் : குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்தால் தேசதுரோக வழக்கு, கொலை மிரட்டல் !

“ஒரு கணம் அரசியலையும், சட்டப்படியான கேள்விகளையும் ஒதுக்கி விடுங்கள். மில்லியன்கணக்கான ஏழை மக்களுக்கு நீங்கள் இரக்கமில்லாமல் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என்பதை சிந்தியுங்கள். எந்தவொரு முடிவும் இருப்பதாகத் தெரியாத ஒரு பேரழிவை அரசு எவ்வாறு உருவாக்க முடியும்?” முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் மனித உரிமை செயல்பட்டாளருமான ஹர்ஸ் மந்தர் குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எழுப்பிய கேள்வி இது.

பற்றி எரிந்துக்கொண்டிருக்கும் விசயங்களாக மக்கள் தொகை பெருக்கமும் அதற்கேற்றபோல அடிப்படைவசதிகள் இல்லாதது, ஏழ்மை நிலை, வேலையில்லாத் திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல விசயங்கள் இருக்கும்போது ஹர்ஸ் மந்தர் கேட்பதுபோல குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவை என்ன நோக்கத்திற்காக, எந்த முடிவுக்காக கொண்டு வரப்படுகின்றன? ‘வளர்ச்சி…வளர்ச்சி..வளர்ச்சி…’ என ஓயாமல் முழங்கிய பாஜக சொல்லும் வளர்ச்சி யாருடையது? யாருக்கானது? 30, 40 ஆண்டுகளாக இந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் குடியுரிமை இல்லை. ஆனால், அமெரிக்கா உள்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் குடிபெயர்கிறவர்கள் இந்தியர்கள்தான் முதல் இடத்தில் இருக்கின்றனர். சமகால நிதர்சனத்தோடு ஆட்சியாளர்கள் உருவாக்கிய முரண்பாடு இது. 72 ஆண்டு காலம் சகோதர – சகோதரிகளாகப் பழகிய மக்களை மதத்தின் பெயரால் பிரிப்பது மதவெறி அன்றி வேறென்ன?

அரசியலமைப்பு தத்துவத்தை புதைத்துவிட்ட ஆளும் அரசு, மதவாத தத்துவத்தை கையிலெடுத்துள்ளது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. நாம் வரலாற்றிலிருந்து கொஞ்சமேனும் பாடம் கற்கவேண்டியுள்ளது. மேலும் ஒரு இன அழிப்பை நாம் அனுமதித்தால், வரலாறு நம்மை மன்னிக்காது என்பதை பெரும்பான்மை சமூகம் உணர வேண்டும்.

மு.வி.நந்தினி

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

disclaimer

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

ஜார்கண்ட் – சோட்டா நாக்பூர் : இந்தியாவின் மற்றுமொரு ஜம்மு – காஷ்மீர் ! | பகுதி 1

ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள முண்டாரி மொழி பேசும் முண்டா பழங்குடி மக்கள் இன்றும் நம்மோடு வாழுகின்ற வட இந்தியத் திராவிடர்கள். கி.பி 250 முதல் 575 வரை தமிழகத்தை ஆண்ட களப்பிரர் ஆட்சிக்காலத்தின் போதே முண்டா பழங்குடி மக்கள் சோட்டா நாக்பூர் பகுதியில் வாழ்ந்ததாக “களப்பிரர் ஆட்சியில் தமிழகம்” என்ற நூலை எழுதிய மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

இவர்களுடைய வரலாறு சுமார் 4000 ஆண்டு பழமை வாய்ந்தது. வட கிழக்கு இந்தியாவில் குறிப்பாக ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் அண்டை நாடான வங்காள தேசத்திலும் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். பல்வேறு உட்பிரிவுகளைக் கொண்ட இப்பழங்குடியினரின் மக்கள் தொகை சுமார் 22 இலட்சம்.

இராவணன் மற்றும் மகிசாசுரன் ஆகியோரை பேயாக சித்தரித்து அவர்களது உருவ பொம்மைகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என இந்துக்களுக்கு இவர்கள் இன்றும்கூட உத்தரவு பிறப்பித்து வருவது, அவர்கள் திராவிட முன்னோடிகள்தான் என்பதை பறைசாற்றுகிறது. அதே போல இராமாயணம், பகவத் கீதை மற்றும் மகாபாரதத்திற்கு எதிராகப் பேசியும் வருகின்றனர்.

இந்திய அரசு வெளியிட்டுள்ள அஞ்சல் தலையில் பிர்சா முண்டா.

இவர்களது வாழ்வாதாரம் காடுகளையும், மலைகளையும் அடிப்படையாகக் கொண்டது. பழங்குடி மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடிய பிர்சா முண்டா என்கிற பழங்குடித் தலைவரை ஆங்கிலேய அரசாங்கம் 1900 -ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைத்தது. தனது 24 வயதில் சிறையிலேயே அவர் மாண்டு போனார். அவரது போராட்டத்தின் விளைவாக பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க கொண்டு வரப்பட்டதுதான் “சோட்டாநாக்பூர் நிலக் குத்தகைச் சட்டம் 1908”. இன்றுவரை அவர்களது வாழ்வாதாரத்தை பாதுகாப்பதில் இச்சட்டம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சட்டம் கொண்டுவரக் காரணமாக இருந்ததால்தான் அம்மக்கள், இன்றும் பிர்சா முண்டாவை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

81 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டப் பேரவைத் தேர்தல் நவம்பர் 30 -இல் தொடங்கி டிசம்பர் 20 வரை ஐந்து கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகிறது. ஒரு சிறிய மாநிலத்தில் ஒரே நாளில் நடத்த வேண்டியத் தேர்தலை ஐந்து கட்டங்களாக நடத்த வேண்டிய அவசியம் என்ன? என்கிற கேள்வி எழுவது இயல்புதான். மாவோயிஸ்ட் பிரச்சனை  மட்டுமல்ல தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள முண்டா பழங்குடி மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளதும் ஒரு முக்கியக் காரணம்.

இந்த மக்களின் போராட்டமும் அவர்கள் மீது பா.ஜ.க அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்கு முறைகளும் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுகிறதா என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. இந்தக் கேள்விக்கான விடை தேடும் முயற்சியில் சுப்ரியா சர்மா தலைமையிலான ஸ்க்ரால் இணைய பத்திரிக்கையாளர் குழு ஜார்கண்ட் மாநிலத்திற்குச் சென்று, “மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?” என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தித் தொகுப்பை தமிழாக்கம் செய்து இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறோம். படியுங்கள்…

படிக்க:
ராவணனை எரிக்காதே – ஓங்கி ஒலிக்கும் அசுரர்களின் குரல் !
♦ டியுர்கோவின் வீழ்ச்சி : பிஸியோகிராட்டுகளுக்கு பேரிடி ! | பொருளாதாரம் கற்போம் – 47

பகுதி 1

மோடியின் ஆட்சியில் இந்திய ஜனநாயகம் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

நாடு ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற பிறகு சில ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, இந்தியாவை ஒரு ஜனநாயகம் பூத்துக் குலுங்கும் நாடாகக் காட்டிக் கொண்டது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் மூலம் பெரும்பான்மையினரின் ஆட்சி இங்கு நடக்கும்; இந்த ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையிலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், சிறுபான்மையினர் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கான பாதுகாப்பு, வரலாற்று மற்றும் கலாச்சார ரீதியாக வேறுபட்ட பிராந்தியங்களுக்கான ஒப்பீட்டளவிலான சுயாட்சி, இவை அனைத்தும் ஒரு சுதந்திரமான நீதித்துறையால் பாதுகாக்கப்படும்; பத்திரிக்கைத் துறை அதற்கு ஏற்ப துணை நிற்கும் என நம்பப்பட்டது.

ஆனால், கடந்த எழுபதாண்டுகளில், இந்திய ஜனநாயகம் விட்டுக் கொடுக்கும் தன்மையுடன் செயல்படவில்லை. 1970 -களில், இந்திரா காந்தி அரசாங்கம் அவசரநிலையை அறிவித்து மக்களின் சிவில் உரிமைகளை நசுக்கியது. மாநிலங்கள் மற்றும் குடிமக்களின் உரிமைகளை பறிப்பதற்கு இது வழிவகுத்ததாக அரசியல் – வரலாற்றாசிரியர்கள் கருதினர். இத்தகைய அதிகாரங்கள் இதற்கு முந்தி இருந்த அரசாங்கங்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அடிப்படை கட்டமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு,​​ ஜனநாயகத்தை ஒன்றுமில்லாததாக்கி வருகிறது என பலரும் விமர்சிக்கின்றனர். மோடி இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற இரண்டு மாதங்களுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை ஒருதலைப்பட்சமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் அதீத நடவடிக்கை எடுத்தது.

மோடி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை இந்தியா இந்துக்களின் தேசம் என்கிற; இந்தியாவை மாற்றியமைப்பதற்கான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் கருத்தியலுக்கு வழிவகை செய்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். மேலும் முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் அனைத்தும் அவர்களை திருப்திப்படுத்துவதற்கானவை எனப் பார்க்கிறது மோடி அரசாங்கம்.

பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருப்பதால், அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கையை எதிர்கொள்ளத் தவறி விட்டன. பிரதான செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் மோடியின் தேசியவாதக் கண்ணாடியை அணிந்து கொண்டுவிட்டன. முக்கிய தனியார் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசாங்க பிரச்சார சேனல்களாக செயல்படுகின்றன.

காஷ்மீரின் அரசியல் செயல்பாடுகள் முடக்கப்பட்டு, மொபைல் தகவல் தொடர்புகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், உச்சநீதிமன்றம் கூட விலகி நின்று வேடிக்கைப் பார்க்கிறது. இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஏழு மில்லியன் மக்கள் வெளி உலகத்தோடு உள்ள தொடர்பை இழந்து நிற்கின்றனர்.

படிக்க:
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
♦ பாபர் மசூதி இடிப்பு வழக்கு தீர்ப்பு : நம்பிக்கையின் ஆட்சி !

பெரும்பான்மைவாதம் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துகிறதா?

பிரதமர் மோடி தலைமையில் இந்தியா காஷ்மீரில் எடுத்துள்ள நடவடிக்கை, அதன் பிறகு அங்கு நடைபெறும் மாற்றங்கள் இந்துப் பெரும்பான்மை வாதத்தை நியாயப்படுத்தும் வகையில் இருப்பதாக ஜனநாயகத்தை நேசிப்போர் கருதுகின்றனர். இந்து தேசியவாத திட்டத்திற்கான மக்களின் ஆதரவு, 25 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைக் கொடுத்துள்ளதோடு; இந்திய மாநிலங்கள் பலவற்றில் பா.ஜ.க பெற்றுள்ள செல்வாக்கு என்பது, அடிப்படையில் இந்தியக் குடியரசை மாற்றியமைப்பதற்கான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக உள்ளது என அவர்கள் கருதுகின்றனர்.

மோடி அரசாங்கம் அரசியல் எதிரிகளையும், சுதந்திரமான ஊடகவியலாளர்களையும் அச்சுறுத்துவதாகவும், தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி நிறுவனங்களை பலவீனப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். உலகெங்கிலும் உள்ள ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தைக் கண்காணிக்கும் அமெரிக்காவில் உள்ள ஒரு அமைப்பு, இந்த ஆண்டு இந்தியாவிற்கான சுதந்திர மதிப்பெண்ணில் இரண்டு புள்ளிகளைக் குறைத்துள்ளது.

அதில் ஒன்று பசு வதை தொடர்பாக இஸ்லாமியர்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்கள்; மற்றொன்று ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மற்றும் துன்புறுத்தல்கள். ஆனால் இதுபோன்ற விமர்சனங்கள் நரேந்திர மோடியின் பிரபலத்தை பாதிக்கவில்லை. உண்மையில், அத்தகைய விமர்சனங்களை திறமையாகப் பயன்படுத்தி தன்னை ஒரு வெகுமக்கள் தலைரவராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும்.

2014 பிரச்சாரத்தில், அவர் குஜராத் மாநிலத்தை மாற்றியமைத்த ஒரு திறமையான நிர்வாகியாக காட்டப்பட்டு, அதே போன்ற பொருளாதார லாபங்களை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் கொண்டு வர முடியும் என்று ஊடகவியலாளர்களால் முன்வைக்கப்பட்டார். அதேசமயம், ஒரு சாதாரண, பின்தங்கிய சாதிப் பின்னணியில் இருந்து அவர் எழுந்த கதை, ஊழல் மோசடிகளால் சூழப்பட்டுள்ள பரம்பரைத் தலைமை கொண்ட காங்கிரசுக்கு அவரை ஒரு மாற்று என்று முன்வைவைத்தவர்கள்கூட மோடியின் கண்காணிப்பில் நடந்த முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையை குறைத்து மதிப்பிட்டனர்.

ஆனால் மோடி அரசாங்கத்தின் முதல் ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் பொருளாதார நலன்கள் எதுவும் மக்களுக்குக் கிடைக்கவில்லை. மாறாக  வேலையின்மை உயர்ந்தது, முதலீடுகள் மூச்சுத் திணறின. பசுப் பாதுகாப்பு, மாட்டிறைச்சி, முத்தலாக் பற்றிய சமூகப் பிரச்சனைகளால் மக்களின் பொருளாதார நலன்கள்  ஒரேயடியாக மூழ்கடிக்கப்பட்டன.

2019 தேர்தலில் தேசியவாதம், சமூக நலன் மற்றும் மோடி வழிபாடு என்பதில் மட்டுமே பா.ஜ.க அதிக கவனம் செலுத்தியது. சமூகத்தைப் பிளவுபடுத்தி பெரும்பான்மை இந்துச் சமூகத்தை தன்பக்கம் ஈர்ப்பதற்கு எடுத்த முயற்சி, ஊடகங்களிடையே பிளவை ஏற்படுத்தி தனக்கு ஆதரவாக செயல்பட வைத்தது மற்றும் கருத்தியல் ரீதியாக மோடியை எதிர்கொள்வதில் தோல்வி அடைந்த எதிர்கட்சிகள் ஆகிய காரணங்களால் 2014 தேர்தலில் பெற்ற வெற்றியைவிட 2019 இல் இரண்டாவது முறையாக பெரிய வெற்றியை பா.ஜ.கவால் பெற முடிந்தது.

படிக்க:
சிறுபொறி… பெருங்காட்டுத்தீ !
♦ ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

தற்போது நாம் தெரிந்து கொள்ள விரும்புவது என்ன?

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, ஜனநாயகத்தை நேசிப்போர் இந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் குறித்து அச்சத்துடன் உள்ளனர். ஆனால் பெரும்பாலான இந்தியர்கள் இந்த அச்சத்தைப் பகிர்ந்து கொள்கிறார்களா? அல்லது ஜனநாயகம் குறித்த முற்றிலும் மாறுபட்ட வேறு கருத்து ஏதேனும் அவர்களுக்கு இருக்கிறதா? உலகளவில், மோடி போன்ற பிரபலமான தலைவர்களின் வளர்ச்சி மற்றும் பெரும்பான்மைவாதம் பேசுவோரின் அரசாங்கங்களின் எழுச்சி குறித்து ஜனநாயகத்தை நேசிப்போர் பரிசீலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இதன் இந்தியத் தன்மை குறித்து நாம் என்ன செய்யப் போகிறோம்?

தேர்தல்கள் நெருங்க இருக்கும் மாநிலங்களுக்குச் சென்று இந்திய ஜனநாயகம் குறித்த பதில்களைத் தேட முயற்சிக்கிறோம். சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள ஜார்கண்டில் இதற்கான விடையைத் தேட முயன்றபோது கிடைத்த விவரங்கள் இதோ.

(தொடரும்)

தொடரின் அடுத்த பாகங்களுக்கு :


கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
தமிழாக்கம் :
ஊரான்
நன்றி : ஸ்க்ரால்.