அம்பேதகர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பட்டதால் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் கிருபாமோகன் நீக்கம்! ஆளுநர் மாளிகை உத்தரவு!
மாணவர்களே, இளைஞர்களே!
- சென்னைப் பல்கலைக் கழகத்தின் உத்தரவை திரும்பப் பெற குரல்கொடுப்போம்!
- பாதிக்கப்பட்ட மாணவருக்கு துணைநிற்போம்!
சென்னைப் பல்கலையில் கடந்த ஆண்டு முதுகலை இதழியல் படிக்கும் மாணவர் த.கிருபாமோகன். அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டம் என்னும் ஒரு அமைப்பில் இணைந்து சமூகப் பிரச்சினைகளுக்காக கடந்த ஆண்டுகளில் போராடி வந்துள்ளார். குறிப்பாக பல்கலைக்கழக ஆசிரியர் வெளியிட்ட வரலாற்று நூலைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி காவிகள் கல்லூரி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்தபோது, மாணவர்களை ஒன்றிணைத்து போராட்டம் நடத்தி காவிக்கும்பலை புறமுதுகிட்டு ஓடச் செய்தனர் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட மாணவர்கள்.
இந்த அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மீது கடும் வெறுப்பில் இருந்த சங்க பரிவாரக் கும்பல், மாணவர் கிருபா மோகம் முதுகலை தத்துவத்தில் – புத்திசம் (Budhism) என்ற பிரிவில் இந்த ஆண்டு பல்கலையில் சேர்ந்துள்ளார். இந்த ஆண்டு சேர்ந்து படிக்கத் தொடங்கிய பின்னர், அம்மாணவரை உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என ஆளுனர் மாளிகையிலிருந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தொடர் அழுத்தம் தரப்பட்டு, இறுதியில் அவரை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்துவிட்டதாக கடிதம் அளித்தது நிர்வாகம். அதனைத் தொடர்ந்து, இந்த ஜனநாயக விரோத நடவடிக்கையை அம்பலப்படுத்தி கல்லூரி முதல்வருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார் கிருபாமோகன். அவர் எழுதிய கடிதம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு மாணவரின் சேர்க்கை காவிகளுக்கு குலை நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பதையும், காவிகளுக்கு ஆளுனர் மாளிகையில் இருக்கும் செல்வாக்கையும் இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடியும்.
***
DATE: 04/09/2019
PLACE: Chepauk
அனுப்புநர்:
த. கிருபாமோகன்,
முதுகலை முதலாமாண்டு புத்திசம்,
NO:2A, ஜமீன் ராயப்பேட்டை,
சுகுணா காலனி விரிவு,
குரோம்பேட்டை,
சென்னை – 44.
பெறுநர்:
Thiru. Mangat Ram Sharma,
Principal Secratery To Government,
Higher Education Department secretariat,
Chennai – 600009.
பொருள் : எனது அட்மிஷனை ரத்து செய்த சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக்கோரி.
மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம்.
நான் சென்னைப் பல்கலைக்கழக தத்துவவியல் துறையில் முதுகலை முதலாமாண்டு M.A (BUDDHISM) பயின்று வருகிறேன். நான் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக இதழியல் (JOURNALISM) துறையில் பயின்றேன். கடந்த ஜூலை 31-ம் தேதி பல்கலைக்கழக விதிமுறையின் அடிப்படையில் தத்துவவியல் துறையில் முதுகலைக்கான பட்டப்படிப்பில் சேர்ந்தேன். அதைத் தொடர்ந்து கடந்த ஒருமாத காலமாக வகுப்புகளுக்குச் சென்று வருகிறேன்.

இந்நிலையில், கடந்த 21ம் தேதி தத்துவவியல் துறைத்தலைவர் பேராசிரியர் வெங்கடாஜலபதி என்னை அழைத்து, “ஆளுநர் மாளிகையில் இருந்து தொடர்ந்து பிரஷ்ஷர் வருவதால் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி, உங்களது அட்மிஷனை ரத்து செய்ய சொல்லி வற்புறுத்துகிறார். மாணவரிடம் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவரது சான்றிதழ்களும் சரியாக உள்ளது. எதைச் சொல்லி அவரது அட்மிஷனை ரத்து செய்வேன் என்று நான் துணைவேந்தரிடம் கூறினேன்” என்றார். இதைக் கேட்டதும் நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன். “எனது கல்வி சான்றிதழ்களிலோ, கல்வி சார்ந்த நடவடிக்கைகளிலோ எதாவது பிரச்சனை இருக்கிறதா, எதற்கு என்னுடைய அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள்” என்று கேட்டேன்.
அதற்கு துறைத்தலைவர் பேரா.வெங்கடாஜலபதி, “நீங்கள் அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டம் என்கிற மாணவர் அமைப்பில் ஏற்கனவே செயல்பட்டு இருக்கிறீர்களாமே. அதனால்தான், உங்களை நீக்கச் சொல்கிறார்கள். எதையாவது சொல்லி உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்கிறார்கள். தினந்தோறும் துணைவேந்தரிடம் இருந்தும் ஆளூநர் மாளிகையில் இருந்தும் எனக்கு பிரஷ்ஷர் கொடுக்கிறார்கள். எனக்கும் ஆளுநர் மாளிகைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தனிப்பட்ட விரோதமும் இல்லை. ஏன் இவ்வாறு நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை” என்றார். அதன்பிறகு ஒருவாரகாலம் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது.
படிக்க:
♦ கருத்துக் கணிப்பு : ஆளுநர் புரோகித்தின் எந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது ?
♦ அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம் தடை – ஆர்ப்பாட்டங்கள்
மீண்டும் கடந்த 29-ம் தேதி என்னை அழைத்த பேரா.வெங்கடாஜலபதி, “தொடர்ச்சியாக ஆளுநர் மாளிகை மற்றும் துணைவேந்தரிடமிருந்து உங்களது அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி பிரஷ்ஷர் கொடுக்கின்றனர். எனது 20 ஆண்டுகால பணி அனுபவத்தில் இதுபோன்ற பிரஷ்ஷரை எதிர்கொண்டதில்லை. எனவே, உங்களது அட்மிஷனை ரத்து செய்துள்ளேன். அதற்கான கடிதத்தையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்.
வகுப்புகள் தொடங்கி ஒருமாத காலத்திற்கு பிறகு இவ்வாறு செய்வது நியாயமா..? என்று கேட்டேன். அதற்கு “நீங்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்கவில்லை, இதை முன்னிட்டு உங்கள் அட்மிஷனை ரத்து செய்யச் சொல்லி துணைவேந்தர் கூறினார்” என்று புதிதாக ஒரு காரணத்தைக் கூறினார் பேரா.வெங்கடாஜலபதி. ஆனால், எனது அட்மிஷனின்போது “ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால், எலிஜிபிலிட்டி சான்றிதழ் தேவையில்லை, முதுகலை புரவீஷ்னல் சான்றிதழே போதுமானது என்று நீங்கள்தானே கூறினீர்கள்” என்றேன். அதற்கு அவர், “ஆளுநர் தரப்பில் இருந்து பிரஷ்ஷர், என்னால் ஒன்றும் செய்யமுடியாது” என்று கூறிவிட்டார். எனது அட்மிஷனையும் ரத்து செய்துள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக விதிகளின்படி, வேறு பல்கலைக்கழகத்தில் இருந்து சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்தால்தான் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டும். நான் ஏற்கெனவே சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளதால் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்க வேண்டிய தேவையில்லை. அவ்வாறு எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றாலும், அந்தந்த துறைகள் மூலமாகத்தான் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இருந்து சான்றிதழ் பெறமுடியும். தனிப்பட்ட ரீதியாக எலிஜிபிலிட்டி சான்றிதழ் பெற முடியாது.
மேலும், எனக்குப் பிறகு தத்துவவியல் துறையில் அட்மிஷனான இரண்டு மாணவர்கள் தற்போதுவரை எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காத நிலையில், என்னுடைய அட்மிஷன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னும் பல்கலைக்கழகத்தில் பல மாணவர்கள் எலிஜிபிலிட்டி சான்றிதழ் கொடுக்காமல் உள்ளனர். பிரச்சினை எலிஜிபிலிட்டி சான்றிதழ் பற்றியது அல்ல. எந்தக் காரணத்தையாவது சொல்லி எனது அட்மிஷனை நீக்க வேண்டும் என்பதுதான் சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் நோக்கமாக உள்ளது.
உரிய சான்றிதழ் கொடுத்து, கட்டணமும் செலுத்தி ஒருமாத காலம் வகுப்புகளுக்கும் சென்ற பிறகு சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்து பழிவாங்கியுள்ளது.
கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வந்தவர்களில் நானும் ஒருவன். முறையான எவ்வித காரணங்களும் இல்லாமல், ஏற்கெனவே அம்பேத்கர்-பெரியார் படிப்பு வட்டத்தில் இணைந்து செயல்பட்ட காரணத்திற்காக சென்னைப் பல்கலைக்கழக நிர்வாகம் எனது அட்மிஷனை ரத்து செய்துள்ளது எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் கடும் பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மறுக்கப்படும் எனது கல்வி வாய்ப்பை மீண்டும் பெறுவதற்கும், படிப்பை தொடர்வதற்கும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
(கிருபாமோகன்)
DATE: 04/09/2019
PLACE: Chepauk
COPY TO:
1. Higher Education Minister
2. Vice Chancellor, University Of Madras
3. Registrar, University Of Madras
4. HOD, Department Of Philosophy, University Of Madras
***
தகவல்: புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு



இந்நிலையில் நமது சங்கம் ஆலையில் செயல்படுவதை நிர்வாகத்திற்கு உறைக்கும் விதமாக, 04.09.2019 அன்று ஆலைவாயிலில் பெயர்ப்பலகை வைத்து, கொடியேற்றுவது என தொழிலாளர்கள் முடிவு செய்தனர். அதற்காக 26.08.2019 அன்றே, பகுதி போலிசு நிலையத்திலும், மாவட்ட கண்காணிப்பாளரிடமும் முறையாக அறிவிப்பு செய்து பாதுகாப்பு கோரி கடிதம் கொடுத்தனர். பொதுப்பணித் துறையிடமும் அனுமதிக் கடிதம் கொடுத்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்து வந்தனர். இதற்கு முன் வரை சங்கத்தை ஒரு பொருட்டாக மதிக்காத நிர்வாகம், கொடியேற்று நிகழ்ச்சியை அறிவித்தவுடன், அதைத் தடுப்பதற்கு பல்வேறு வழிகளில் குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தது.






அரைப்பாக்கெட் கோல்ட் பில்டர் சிகெரெட்டை வாங்கிக்கொண்டு அவர்கள் பாட்டுக்கு இறங்கிச் சென்றதைப் பார்த்த கடைப் பையனுக்கு அதிர்ச்சி. அருகில் நின்றிருந்த கடை முதலாளியைத் திரும்பிப் பார்த்தான். ‘போகட்டும் விடு எதுவும் கேக்காத’ என்பதைப்போல தலையசைத்தார் முதலாளி. அவரது சகிப்புத்தன்மைக்கு இரண்டு காரணங்கள் இருந்தது. முதலாவது அவர் மலையாளி. உள்ளூர் ரவுடிகளைப் பகைத்துக்கொண்டு அங்கே தொழில் செய்ய முடியாது. இரண்டாவது அவர் இஸ்லாமியர். இதற்கு விளக்கம் தேவையில்லை.
சத்தமில்லாமல் திருப்பிக்கொண்டு வந்தவழியே சென்றார் தள்ளுவண்டிக்காரர். என்ன நிறமென்றே கணிக்க முடியாத விசித்திர நிறத்தில் வாயிலும் மூக்கிலும் ஒழுகிய திரவத்தைக் காவி வேட்டியில் துடைத்துக்கொண்டு திரும்பி வந்தான் அண்ணன். தள்ளாடியபடி நடந்துவந்த அண்ணனை இரண்டுபேர் தழுவியபடி கைத்தாங்கலாக அழைத்து வந்ததைப் பார்க்க பத்தாசா நடனத்தைப் பார்ப்பதுபோல இருந்தது. (பத்தாசா நடனம் என்றால் என்னவென்று தெரியாதவர்கள் யூ டியூபில் சொடுக்கவும்)

சூத்திரன் என்றால் வேசிமகன் என்கிறது வேதம். மேலும் பார்ப்பன, ஷத்திரிய, வைசிய பெண்கள் தமக்கு கீழே உள்ள வர்ண ஆண்களோடு சேர்ந்து பெற்றுக் கொள்ளும் குழந்தைகள் சூத்திரர்கள் என்று வேதம் கூறுகிறது. சாதாரண மக்களின் குல தெய்வங்களான மாரியம்மன், இசக்கி, சுடலைமாடன், காத்தவராயன், மதுரை வீரன் போன்ற நாட்டுப்புற கடவுள்களை சிறு தெய்வம் என்று இந்துமதம் இழிவுபடுத்துகிறது. நாட்டுப்புற தெய்வ வழிபாட்டில் விலங்கு பலி, கறி படையல், அனைத்தும் உண்டு. இதையும் இந்துமதம் இழிவுடனே பார்க்கிறது.
இந்தியாவில் சட்டத்தை மீறி குழந்தைகள் திருமணம் நடைபெறுகின்றன. சமீபத்திய ஆண்டுகளில் குழந்தை திருமணங்கள் குறைந்தாலும் இந்தி பேசும் மாநிலங்களில் இன்னும் செல்வாக்கோடு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்திலேயே குழந்தைகள் திருமணம் தடை செய்யப்பட்டாலும் அது இன்னமும் தொடர்கிறது. பாஜக, காங்கிரசு போன்ற கட்சிகளே இந்தி பேசும் மாநிலங்களை ஆண்டு வருகின்றன. அங்கே இக்கட்சிகள் குழந்தைகள் திருமணத்தை தடை செய்ய போதிய முன்முயற்சி எடுப்பதில்லை. கூடவே கண்டுகொள்வதுமில்லை.
பிறகு ஒரு தலைப்பில் நீங்கள் எழுத நினைக்கிறீர்கள். அந்த தலைப்பு குறித்து உங்கள் குறிப்புகளில் ஏதும் கருத்துக்கள் உள்ளதா என்று பார்த்து அதன் வழியில் சிந்திப்பதும், சிந்தனை துளிகளை குறிப்புகளாக எழுதி வைத்துக்கொண்டு ஓரிரு நாள் அசை போடுங்கள். பிறகு அந்த குறிப்புகளை திரைக்கதை போல சுருக்கமாக எழுதுங்கள். இப்போது அந்த குறிப்புகள் மூலம் படிப்பவர் ஏதேனும் ஒரு புதிய விசயத்தை படிக்க முடியும் என உங்களுக்குத் தோன்றுகிறதா, பாருங்கள். அப்படி இருப்பின் பிறகு திரைக்கதை குறிப்புகள் உதவியுடன் எழுதுங்கள். ஆரம்பத்தில் சில பல தயக்கம், தடுமாற்றம் இருந்தாலும் மனந்தளராமல் திரும்பத் திரும்ப எழுதுங்கள். எழுத்து வரும்.
நேரடியாக முசுலீம்களுக்கு மிரட்டல் விடுவிக்கப்படுகிறது. பீம் சேனாவின் தலைவர் அவ்வப்போது கைது செய்யப்படுகிறார். காவலைரைக் கொன்ற இந்துமதவெறியர்கள் கூட பிணையில் எளிதாக வெளியே வருகிறார்கள். இந்து ராஷ்டிரத்தின் வகைமாதிரியாக உ.பி மாற்றப்பட்டு வருகிறது.
தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்றவை திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருப்பினும் வடமொழிக் கலப்பு அதிகம். ஆரிய, சமஸ்கிருத, பார்ப்பனிய எதிர்ப்பை சுட்டுவதற்காகவே திராவிடர், திராவிட இயக்கம், திராவிடர் கழகம் என்ற பெயர்கள் வைக்கப்பட்டன. அன்றைக்கு மதராஸ் மாகாணம் என்பது தென்னிந்தியாவை குறித்ததால் நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மக்களை அதாவது தென்னிந்திய மக்களின் நலனையும், அதற்கு எதிரான பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும் முன்வைத்தார்கள்.










ஆகவே இராபின்சனாதல் என்பது அவசியத்தின் காரணமாக எப்போதும் சமூகத் தன்மை கொண்டதும், வரலாற்று ரீதியான வளர்ச்சியில் ஸ்தூலமான ஒரு கட்டத்தோடு இணைக் கப்பட்டிருப்பதுமான உற்பத்தியின் விதிகளை, சமூகம் என்ற மிக முக்கியமான கூறை விலக்கியுள்ள சூக்குமமான மாதிரிப் படிவத்தைக் கொண்டு ஆராய்வதற்குச் செய்யப்பட்ட முயற்சியாகும். மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் இராபின்சனாதலை மார்க்ஸ் மிகவும் ஆழமாக விமரிசனம் செய்தார். இந்த விருப்பம் 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியைச் சேர்ந்த “மிகவும் சமீபமான அரசியல் பொருளாதாரத்துக்கு” நகர்ந்து விட்டது என்று அவர் கூறினார்; அது தனக்குச் சாதகமான முறையில் ”இயற்கையான மனிதனின்” கற்பனை உலகத்தில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவத்துக்கு உரித்தான பொருளாதார உறவுகளைப் 
வரலாற்று ரீதியாக காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ளும்போது கொடுத்த வாக்குறுதிகளைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளது இந்திய அரசு.

























