Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 418

இருள் படிந்த இடையறாத் துன்பம் கலந்த வாழ்வு

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 31

மாக்சிம் கார்க்கி
வன் வந்து சென்ற நாலாவது நாளன்று அவள் அவனுடைய வீட்டுக்குக் குடி போனாள். அவளது இரண்டு பெட்டிகளோடு அவள் ஏறிச் சென்ற வண்டி அந்தத் தொழிலாளர் குடியிருப்பை விட்டு வெளிவந்து, ஊருக்குப் புறம்பேயுள்ள வெம்பரப்புக்கு வந்து சேர்ந்தது. உடனே அவள் பின்னால் திரும்பிப் பார்த்தாள். எங்கே இருள் படிந்த இடையறாத் துன்பம் கலந்த வாழ்வை அவள் அனுபவித்தாளோ, எங்கே புதிய இன்பங்களும் துன்பங்களும் நிறைந்த வாழ்வுக்கு ஆளாகி, நாட்களை அவள் மின்னல் வேகத்தில் கழித்தாளோ அங்கிருந்து, அந்த இடத்தைவிட்டு நிரந்தரமாக, ஒரேயடியாகப் பிரிந்து விலகிச் செல்வது போன்று அவள் திடீரென்று உணர்ந்தாள்.

கரி படர்ந்த பூமியின் மேல் ஆகாயத்தை நோக்கி புகைபோக்கிகளை உயர நீட்டிக்கொண்டு கருஞ்சிவப்புச் சிலந்தியைப் போல நின்றது தொழிற்சாலை. அதைச் சுற்றிலும் தொழிலாளர்களின் மாடியற்ற ஒற்றைத்தள வீடுகள் மொய்த்துச் சூழ்ந்திருந்தன. அவை சிறிதும் பெரிதுமாக நிறம் வெளிறிக் குழம்பிப்போய், சேற்றுப் பிரதேசத்தை அடுத்து நின்றன. அந்த வீடுகள் தமது ஒளியற்ற சிறுசிறு ஜன்னல்கள் மூலம் அடுத்தடுத்த வீடுகளைப் பரிதாபகரமாகப் பார்த்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றியது. அந்த வீடுகளுக்கு மேலாக, தொழிற்சாலையைப் போலவே கருஞ்சிவப்பாகத் தோன்றும். தேவாலயம் உயர்ந்து நின்றது. அதனுடைய ஊசிக் கோபுரம் புகை போக்கிகளின் உயரத்தை விட குட்டையாயிருந்தது.

பெருமூச்செறிந்து கொண்டே தனது கழுத்தை இறுக்கி திணறச் செய்வதுபோலத் தோன்றி தனது ரவிக்கையின் காலரைத் தளர்த்திவிட்டுக் கொண்டாள் தாய்.

“போ இப்படி!” என்று முனகிக்கொண்டே வண்டிக்காரன் குதிரையின் கடிவாளத்தைப் பற்றி இழுத்தான். அவன் ஒரு கோணக்கால் மனிதன். குட்டையானவன், வயதை நிதானிக்க முடியாத தோற்றமுடையவன். அவனது தலையிலும் முகத்திலும் வெளிறிய மயிர்கள் சில காணப்பட்டன. கண்களில் வர்ண ஜாலம் எதுவுமே இல்லை. அவன் வண்டிக்குப் பக்கமாக நடந்து வரும்போது அசைந்து அசைந்து நடந்தான். வலப்புறம் போவதோ, இடப்புறம் போவதோ, அவனுக்கு எல்லாம் ஒன்றுதான் என்று தெளிவாகத் தெரிந்தது.

“சீக்கிரம் போ” என்று உணர்ச்சியற்ற குரலில் குதிரையை விரட்டிக் கொண்டே, தனது கோணல் கால்களைத் தூக்கித் தூக்கி வைத்து நடந்தான். அவனது பூட்சுகளில் சேறு ஒட்டி அப்பிக் காய்ந்து போயிருந்தது. தாய் சுற்றுமுற்றும் பார்த்தாள். அவளது இதயத்தைப் போலவே வயல்வெளிகள் அனைத்தும் வெறிச்சோடிக் கிடந்தன.

கொதிக்கும் மணல் வெளியில், குதிரை தலையை ஆட்டிக்கொண்டு கால்களை கனமாக ஊன்றி நடந்தது. மணல் சரசரத்தது; அந்த லொடக்கு வண்டி கிரீச்சிட்டது. வண்டிச் சக்கரத்தால் ஏற்படும் ஒலி புழுதியுடன் பின்தங்கிவிட்டது…..

நிகலாய் இவானவிச் நகரின் ஒரு கோடியில் ஒரு அமைதி நிறைந்த தெருவில் குடியிருந்தான். பழங்காலக் கட்டிடமான ஒரு இரண்டடுக்கு மாடி அருகில், பச்சை வர்ணம் அடிக்கப் பெற்ற சிறு பகுதியில் அவனது வாசஸ்தலம் இருந்தது. அந்தப் பகுதிக்கு முன்னால் ஒரு சிறு தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்திலுள்ள பன்னீர் பூ மரக்கிளைகளும், வேல மரக்கிளைகளும் வெள்ளிய இலைகள் செறிந்த இளம் பாப்ளார் மரக்கிளைகளும் அந்தப் பகுதியிலிருந்த மூன்று அறைகளின் ஜன்னல்களிலேயும் எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன. அறைகளுக்குள்ளே எல்லாம் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தன. மோன நிழல்கள் தரைமீது நடுநடுங்கும் கோலங்களைத் தீட்டிக் கொண்டிருந்தன. சுவரோரங்களில் புத்தக அலமாரிகள் வரிசையாக இருந்தன. அவற்றுக்கு மேல் சிந்தனை வயப்பட்டவர்கள் மாதிரித் தோன்றும் சிலரின் உருவப் படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

“இந்த இடம் உங்களுக்கு வசதியானதுதானே?” என்று கேட்டுக்கொண்டே நிகலாய் தாயை ஒரு சிறு அறைக்குள் அழைத்துக்கொண்டு சென்றான். அந்த அறையிலுள்ள ஒரு ஜன்னல் தோட்டத்தை நோக்கியிருந்தது. இன்னொரு ஜன்னல் புல் மண்டிக்கிடந்த முற்றத்தை நோக்கியிருந்தது. அந்த அறையின் சுவரோரங்களிலும் புத்தக அலமாரிகள் இருந்தன்.

”நான் சமையல் கட்டிலேயே இருந்து விடுகிறேன், சமையல்கட்டே வெளிச்சமாகவும் சுத்தமாகவும் நன்றாகவும் இருக்கிறதே…..” என்றாள் தாய்.

அவளது வார்த்தைகள் அவனைப் பயமுறுத்துவது போலிருந்தது. அதன் பிறகு அவன் அவளிடம் எப்படியெல்லாமோ சுற்றி வளைத்துப் பேசி, அவளை அந்த அறையில் வசிக்கச் சம்மதிக்கச் செய்த பிறகுதான், அவனது முகம் பிரகாசமடைந்தது.

அந்த மூன்று அறைகளிலுமே ஒரு விசித்திரமான சூழ்நிலை நிரம்பித் தோன்றியது. அங்கு நல்ல காற்றோட்டம் இருந்தது. சுவாசிப்பது லகுவாயிருந்தது. எனினும் அந்த அறையில் யாருமே உரத்த குரலில் பேசுவதற்குத் தயங்குவார்கள். சுவர்களில் தொங்கிக்கொண்டு குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சித்திரங்களிலுள்ள மனிதர்களின் அமைதி நிறைந்த சிந்தனையைக் கலைப்பது அசம்பாவிதமானது போலத் தோன்றியது.

“இந்தச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விட வேண்டும்” என்று ஜன்னல்களிலிருந்த பூந்தொட்டிகளின் மண்ணைத் தொட்டுப் பார்த்துவிட்டுச் சொன்னாள் தாய்.

”ஆமாம்” என்று வீட்டுக்காரன் தனது குற்றத்தை உணருபவன் போலச் சொன்னான். “எனக்கு அவையெல்லாம் ரொம்பப் பிடித்தமானவை. ஆனால் எனக்கு இதற்கெல்லாம் நேரமே இருப்பதில்லை.”

தனது விசாலமான அந்த வீட்டில்கூட நிகலாய் மிகவும் பதனமாகவும் நிதானமாகவும் யாரோ ஒரு அன்னியன் மாதிரி நடமாடித் திரிவதைத் தாய் கண்டாள். அவன் அந்த அறையிலுள்ள பல பொருள்களையும் குனிந்து உற்றுப் பார்த்தான்.

அப்படிப் பார்க்கும்போது தன் வலது கையின் மெல்லிய விரல்களால் தனது மூக்குக் கண்ணாடியைச் சரி செய்து கொண்டும், கண்களைச் சுருக்கிக் கூர்மையாக்கிக்கொண்டும் தனக்கு அக்கறையுள்ள பொருள்களைப் பார்த்தான். சில சமயங்களில் அவன் ஒரு சாமானைத் தன் முகத்தருகே கொண்டு போய்க் கண்களால் தொட்டு உணர்வதுபோலப் பார்த்தான். தாயைப் போலவே அவனும் அந்த அறைக்கு முதன் முதல் வந்திருப்பவன் போலவும், அதனால் அங்குள்ள பொருள்களெல்லாம் அவனுக்குப் புதியனவாக, பழக்கமற்றதாக இருப்பது போலவும் தோன்றியது. இந்த நிலைமை தாயின் மனநிலையைத் தளர்த்தி ஆசுவாசப்படுத்தியது. அவள் நிகலாயைத் தொடர்ந்து அந்த இடத்தை முழுதும் சுற்றிப்பார்த்தாள். எங்கு என்ன இருக்கிறது என்று கண்டறிந்தாள். அவனது பழக்க வழக்கங்களைக் கேட்டறிந்தாள். அவன் ஏதோ ஒரு குற்றவாளியைப் போல் கள்ளக் குரலில் பதிலளித்தான். அவன் பதில் சொல்லிய பாவனையானது, ஒரு காரியத்தை எப்படிச் செய்ய வேண்டுமோ அப்படி செய்யாமல் ஆனால் வேறுமாதிரியாகச் செய்யவும் தெரியாதவன் சொல்வது போலத் தொனித்தது.

அவள் பூஞ்செடிகளுக்குத் தண்ணீர் விட்டாள்: பியானோ வாத்தியத்தின்மீது சிதறிக் கிடந்த இசை அமைப்புத் தாள்களை ஒழுங்காக அடுக்கி வைத்தாள். தேநீர்ப் பாத்திரத்தின் மீது பார்வையைச் செலுத்தியவாறு பேசினாள்:

“இந்தப் பாத்திரத்தை விளக்க வேண்டும்.”

அவன் அந்த மங்கிப்போன பாத்திரத்தைத் தொட்டுத் தடவிப் பார்த்தான், தன் விரலை முகத்தருகே கொண்டுபோய்க் கவனித்தான். தாய் லேசாகச் சிரித்துக்கொண்டாள்.

அன்றிரவு அவள் படுக்கைக்குச் செல்லும்போது அன்றைய தினத்தின் சம்பவங்களை நினைத்துப் பார்த்தாள். தலையைத் தலையணையிலிருந்து உயர்த்தி, வியப்போடு சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டாள். வேறொருவருடைய வீட்டில் இரவைக் கழிப்பது என்பது அவளது வாழ்க்கையிலேயே இதுதான் முதல் தடவை. எனினும் அவளுக்கு அதனால் எந்தவிதச் சிரம உணர்ச்சியும் தோன்றவில்லை. அவள் நிகலாயைப் பற்றி அக்கறையோடு நினைத்துப் பார்த்தாள். அவனது வாழ்வை, முடிந்தவரை மேன்மையுடையதாக்கி, அவனது வாழ்க்கையின் மென்மையும் கதகதப்பும் சேருவதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றும் அவளுக்கு ஒரு உணர்வு தோன்றியது. அவனது லாவகமின்மை, வேடிக்கையான சாமர்த்தியமின்மை மற்ற மனிதர்களிடமிருந்து மாறுபட்ட அவனது விசித்திர நடத்தை, ஞான ஒளி வீசும். எனினும் குழந்தை நோக்குக் கொண்ட அவனது பிரகாசமான கண்கள் முதலியவெல்லாம் அவளது இதயத்தைத் தொட்டுவிட்டன.

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

பிறகு அவள் மனம் அவளது மகன்பால் திரும்பியது, மீண்டும் மே தின வைபவத்தின் சம்பவங்கள் அவள் கண் முன் நிழலாடிச் சென்றன. எனினும் அந்தச் சம்பவத்தின் நினைவுச் சித்திரத்தில் இப்போது ஒரு புதிய அர்த்தமும், புதிய குரலும் அவளுக்குத் தொனித்தன. அன்றைய தினத்தைப் போலவே, அந்த தினத்தைப் பற்றிய சோக உணர்ச்சியிலும் ஏதோ ஒரு விசேஷத் தன்மை இருந்தது என்றாலும் அந்தச் சோக உணர்ச்சி முஷ்டியால் ஓங்கிக் குத்தித் தரையிலே மோதி விழச் செய்யும் உணர்ச்சிபோல் இல்லை. அந்த உணர்ச்சி இதயத்துக்குள் பன்மடங்கு வேதனையோடு துளைத்துத் துருவிப் புகுந்து, கோப உணர்ச்சியை மெது மெதுவாகத் தூண்டி, முதுகை நிமிர்த்தி நேராக நிற்கச் செய்யும் உணர்ச்சியாக இருந்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மாவோவின் சீனாவில் மக்களை பட்டினியில் தள்ளிய முதலாளித்துவ பாதையாளர்கள்

சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் ஃபிரட் எங்ஸ்ட் – உடன் ஓர் நேர்காணல் | பாகம் – 3

ஒனுர்கன் உல்கர்: பல வளரும் நாடுகள் சந்தை அடிப்படையிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டன. ஆனால், இன்று சீனா மட்டுமே வெற்றிக்கதையாகப் பேசப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்களால் கூவி விற்கப்பட்ட மற்ற மாதிரிகள் முடங்கி விட்டன. இதன் முக்கிய காரணம் என்ன?

ஃபிரட் எங்ஸ்ட்: இது சுவாரசியமானது. வளர்ச்சி என்பதைப் பற்றி முதலாளித்துவப் பொருளாதார இயலாளர்களுக்கு ஒரு முழுமையான பார்வையே இல்லை. மூன்றாம் நாடுகள் வளர முடியாததற்குக் காரணம் ஏகாதிபத்தியம்தான். சீனாவால் வளர முடிந்ததற்கான ஒரே காரணம், இந்த ஏகாதிபத்திய சகாப்தத்திலும் தனது இறையாண்மையை சீனாவால் பாதுகாத்துக் கொள்ள முடிந்ததுதான்.

மாவோ காலத்தில் போடப்பட்ட பொருளாதார அடித்தளம் ஒரு சுயாதிபத்தியத்தியம் உள்ள முதலாளித்துவ வளர்ச்சிக்கு வழிகோலியது. இன்றைக்கும் உலக நாடுகளைப் பாருங்கள். அந்நிய படைகள் காலூன்றாத நாடு ஒன்று உண்டா? ரஷ்யாவும் சீனாவும் மட்டுமே அப்படியிருக்கின்றன. இந்தியாவை ஓரளவுக்குச் சொல்லலாம்.

ஒனுர்கன் உல்கர்: மாவோவிற்குப் பிந்தைய சீனாவில் உழைப்பு ஒரு பண்டமாக்கப்பட்டதனால் விளைந்த உள்நாட்டு முரண்பாடுகளைப் பற்றிக் கூறுங்கள். சீனாவின் புதிய உழைக்கும் வர்க்கத்தின், குறிப்பாகப் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்நிலை மற்றும் வேலைநிலைமைகள் இந்தப் பொருளாதார மாதிரியின் நிலைத்ததன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளனவா?

ஃபிரட் எங்ஸ்ட்: இந்த இடத்தில் மாவோ சகாப்தம் அளித்த மற்றுமொரு பெரிய பலன் குறித்துச் சொல்ல வேண்டும். இதை அறிஞர்கள் காண மறுக்கிறார்கள். மற்ற பல நாடுகளில் மிகவும் மலிவான உழைப்பு கிடைக்கிறது. இருந்தும் அதனை அந்நாடுகளால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. இது சீனாவால் மட்டும் எப்படி முடிகிறது? இந்தப் புதிருக்கு மேற்கத்திய அறிஞர்களும் ஊடகங்களும் அளிக்கும் விளக்கங்கள் பொருத்தமானவையாக இல்லை.

நான் பிலிப்பைன்ஸைப் பார்க்கும் வரை எனக்கும் இது புதிராகத் தான் இருந்தது. அங்கே மூன்று முறை போயிருக்கிறேன். மக்களிடம் பேசி அந்நாட்டின் சமூக எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். பிலிப்பைன்சிற்கும் சீனாவிற்கும் முக்கியமான வேறுபாடு நிலச்சீர்திருத்தம் தான். நிலச்சீர்திருத்தம் காரணமாக சீனாவில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு பங்கு நிலம் கிடைத்தது. சீனாவின் மலிவான உழைப்பை புரிந்து கொள்வதற்கான சாவி இங்கேதான் இருக்கிறது.

சீனாவின் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் பிலிப்பைன்சின் குறைந்தபட்ச ஊதியத்துக்கும் இடையில் பெரிய வேறுபாடு இல்லை. ஆனால், இந்த ஊதியத்தைப் பெறுகின்ற பிலிப்பைன்ஸ் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். சீனாவிலோ நல்லபடியாக வாழ்கிறார்கள்.

ஏனென்றால், சீனாவில் கிராமத்திலிருந்து நகரத்திற்குப் புலம்பெயரும் தொழிலாளி முழுக்க முழுக்க தனது சம்பளத்தை மட்டும் நம்பி இருப்பதில்லை. அவர்களுக்குக் கிராமத்தில் நிலம் இருக்கிறது. ஒரு தொழிலாளி குழந்தைப் பருவத்திலிருந்து இளைஞனாக வளர்வதும், முதியவர்களைப் பராமரிப்பதும் கிராமப்புறங்களிலேயே நடந்து விடுவதால், உழைக்கும் வர்க்கத்தின் மறுஉற்பத்தி கிராமப்புறத்திலேயே நடந்து முடிந்து விடுகிறது.

ஆனால், ஒரு நிலமற்ற விவசாயி நகர்ப்புறத்திற்கு வந்தால், மேற்கண்ட செலவுகளெல்லாம் நகர விலைவாசியின் அடிப்படையில் செய்ய வேண்டி இருக்கும். செலவு அதிகமாகும்.

படிக்க :
♦ சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
♦ விஞ்ஞானிகள் அறிக்கை : நவீன முதலாளித்துவம் ஒழியாமல் உலகைக் காப்பாற்ற முடியாது !

சீனாவின் கிராமப்புறத்தில் 80 வயதானவர்கள் கூட விவசாய வேலை செய்கிறார்கள். அவர்கள் சொந்த வீடு, நிலம், வருமானம் என்று இளைய தலைமுறைக்குப் பாரமாக இல்லாமல் தன்னிறைவாக இருக்கிறார்கள். இதனால்தான் சீனாவில் மலிவான உழைப்பு கிடைக்கிறது. இதைச் சாத்தியமாக்கியது 1949-இன் சீனப் புரட்சியே.

இன்று சீனாவில் ஊதியம் (உழைப்பின் விலை) அதிகரித்துக் கொண்டே போகிறது. இதற்குக் காரணம் நகரமயமாக்கம். அரசும், ரியல் எஸ்டேட் சூதாடிகளும் பல்வேறு தொழில் திட்டங்களுக்காக நிலத்தைக் கட்டாயமாகக் கையகப்படுத்தி விவசாயிகளை நிலங்களிலிருந்து அப்புறப்படுத்துகிறார்கள். விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பறித்த பின்னர், நகரமயமாக்கப்பட்ட சூழலில் அவர்களால் முந்தைய சம்பளத்தை நம்பி உயிர்வாழ முடியாது. ஊதியத்தை உயர்த்தித்தான் ஆகவேண்டும்.

சோசலிச சீனா சமூகத்தின் சேவைத்துறைகள்.

ஒனுர்கன் உல்கர்: மாவோவின் சீனத்தில் எல்லா அடிப்படை சேவைகளும் கிட்டத்தட்ட இலவசமாகக் கிடைத்த போதிலும், அந்த சேவைகள் தரமற்றவையாக இருந்தன என்று முதலாளித்துவ அறிஞர்கள் குறை கூறுகிறார்கள். அந்த சேவைகள் எப்படி இருந்தன?

ஃபிரட் எங்ஸ்ட்: ஒரு சிறு திருத்தம். எல்லாமே இலவசமில்லை. சில சேவைகள் நகரவாசிகளுக்கு மட்டுமே கிடைத்தன. கிராமப்பற மக்களுக்குக் கிடைக்கவில்லை. வீடு முற்றிலுமாக இலவசமில்லை. குறைந்த வாடகை இருந்தது. கல்வி கிட்டத்தட்ட இலவசம்தான். நூல்கள் மட்டும் விலைக்கு – குறைந்த விலைதான். இதனால்தான் மாவோ காலத்தின் நிகர உள்நாட்டு உற்பத்தியை (GDP) பின்னாளில் கணக்கிட்டபோது அது குறைவாக இருந்தது. ஏனென்றால், இலவச சேவைகள் உற்பத்திக் கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

தரம் இப்போது இருக்கும் அளவுக்கு இல்லைதான். ஆனால், அப்போது என்ன சாத்தியம் என்பதை வைத்துப் பார்க்குமிடத்து, அவை அளப்பரியவை. எடுத்துக் காட்டாக, கிராமப்புறங்களுக்கான வெறுங்கால் மருத்துவர்கள்! இது வெற்றிகரமான சேவை என்று உலகம் முழுவதிலும் அங்கீகரிக்கப்பட்டது.

ஒனுர்கன் உல்கர்: ஐ.நா.வின் சுகாதார அமைப்புகூட இதை மூன்றாம் உலக நாடுகளுக்குச் சிபாரிசு செய்தது.

ஃபிரட் எங்ஸ்ட்: ஆமாம். அது பெரிய ஆச்சரியம்தான். வெறுங்கால் மருத்துவர்களின் சேவை மருத்துவமனை மருத்துவர்களின் சேவை அளவுக்கு உயர்வானது இல்லைதான். அன்று தொலைதூர கிராமங்களில் வாழ்ந்த மக்களுக்கு மருத்துவமனைகள் எட்டாதவையாக இருந்தன. அத்தகைய நிலையில் வெறுங்கால் மருத்துவர்களுடைய சேவையின் தரத்தைக் குறை கூறுவது அபத்தமானது.

மாவோவின் கொள்கைகள் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தின. மக்களின் சராசரி ஆயுட்காலம் பன்மடங்கு அதிகரித்தது. மூன்றாம் உலக நாடுகளை மட்டுமல்ல, எந்த உலக நாட்டை ஒப்பிட்ட போதும் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருந்தது.

அவர் காலத்தின் மூன்று கடினமான வருடங்களில் கூட இறப்பு விகிதம் 2.5 விழுக்காடாகத்தான் இருந்தது. இந்தியாவைப் பொருத்தவரை இதுதான் மிக இயல்பான இறப்பு விகிதம்.

மாவோ சகாப்தத்தைக் குறை கூறுவதற்குப் பல பொய்கள் கூற வேண்டியிருக்கிறது. இயற்கை விஞ்ஞானத்தில், இயற்பியல், வேதியியல் போன்றவற்றில் நமக்கு சோதனைக்கூடங்கள் இருக்கின்றன. புறவய உண்மைகளை உள்ளது உள்ளபடி நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால், சமூக அறிவியலில், புறவய உண்மையைத் திரிப்பது எளிது. நாம் நமது நலன்களுக்குத் தகுந்தாற்போலத்தான் புறவுலகைப் பார்க்கிறோம்.

மூன்று கடினமான வருடங்களும் உட்கட்சிப் போராட்டமும்

ஒனுர்கன் உல்கர்: மாவோ ஒரு சர்வாதிகாரி என்றும் அவர் தனது கற்பனாவாத நோக்கங்களுக்காகப் பல பத்து இலட்சக்கணக்கான சீனர்களைப் பலியிட்டார் என்றும் மேற்கத்திய அறிஞர்கள் கூறுகின்றனர். இந்தக் கூற்றை நியாயப்படுத்த மீப்பெரும் முன்னோக்கிய பாய்ச்சலுக்குப் பின் ஏற்பட்ட பெரும் பஞ்சத்தைக் கூறுகின்றனர். இதைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள். மாவோ அந்த அளவுக்கு கற்பனாவாதியா?

ஃபிரட் எங்ஸ்ட்: கற்பனாவாதம் என்ற சொல்லை என்ன பொருளில் அவர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. ஒருவர் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றால், உடனே, அவரைக் கிறுக்கு என்றோ கற்பனாவாதி என்றோ சொல்லிவிடலாம். கற்பனாவாதம் என்பதற்கு என்ன வரையறை? என்ன இலக்கணம்? அவர்களைப் பொருத்தவரை மார்க்சியமே கற்பனாவாதம்தான்.

மாவோ மக்களைக் கொன்று குவித்தார் என்பது உண்மைக்குப் புறம்பானது. இதை நிரூபிக்கப் பல உதாரணங்கள் இருக்கின்றன. உட்கட்சிப் போராட்டத்தின் போது – பலருடைய நோக்கத்துக்கும் விருப்பத்துக்கும் மாறாக – யாரையும் தீர்த்துக்கட்ட மாவோ விரும்பவில்லை. சிறை வைக்கலாம். ஆனால் மரண தண்டனை கூடாது. ஏனென்றால், “முடிவு தவறென்றால், அதைச் சரிசெய்யவே முடியாது” என்று வலியுறுத்திய மிகச் சிலரில் அவரும் ஒருவர். புரட்சியின்போது ஏற்பட்ட அனைத்து இறப்புகளுக்கும் அவர் மேல் பழி போடுகிறார்கள். திரும்பத் திரும்பச் சொல்லப்படும் இந்தக் கூற்றுகள் நகைப்புக்குரியவை. கட்சியில் யாரேனும் ஒருவரைத் தீர்த்துக்கட்டுமாறு அவர் உத்தரவிட்டார் என்றோ, இரகசியமாகக் கொலை செய்ய உத்தரவிட்டார் என்றோ ஒரு சான்றைக்கூட யாராலும் காட்ட முடியாது.

மாவோவின் கொள்கைகளைக் குறை கூற முடியும் என்று ஏதேனும் ஒரு காலம் இருக்குமென்றால், அது மூன்று கடினமான வருடங்கள் தான். அப்போது மக்கள் இறந்ததற்கான காரணம் பட்டினி. இந்த பிரச்சனையில், சிறிது உள்ளே நுழைந்து பார்த்தால், மாவோ ஏன் சிலரை முதலாளித்துவ பாதையினர் என்று கூறினார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தங்களுடைய நலனைக் காப்பாற்றிக் கொள்ள உதவுமென்றால், எத்தனை மக்கள் செத்தாலும் அதைப் பற்றி முதலாளித்துவ வர்க்கத்தினர் கவலைப்படமாட்டார்கள் – ட்ரம்ப்பைப் போல. முற்றிலும் ஏகாதிபத்திய நோக்கங்களுக்காக சிரியா மீது குண்டு மழை பொழியுமாறு மிகவும் அலட்சியமாக டிரம்ப் உத்தரவிடுகிறார்.

ஜனநாயகம், சுதந்திரம் என்ற பெயரில் இந்தப் படுகொலைகளை அவர்கள் செய்கிறார்கள். அன்று சீனத்தில் இது போன்றவர்கள் கட்சியிலும், தலைமைப் பொறுப்பிலும் இருந்தார்கள். இந்த முதலாளித்துவப் பாதையினரால்தான் அந்த மூன்று கடினமான வருடங்கள் ஏற்பட்டன.

முதலில், 1950-களின் தொடக்கத்தில், அவர்கள் கூட்டுப் பண்ணைககள் உருவாக்குவதை எதிர்த்தார்கள். கூட்டுப்பண்ணைகள் வெற்றியடைந்தவுடனே, அவற்றை மேலும் தீவிரப்படுத்த விரும்பினார்கள்.

இதுதான் கம்யூனிசக் காற்று அல்லது மிகைப்படுத்தல் காற்று என்பதற்கான பின்புலம். அவர்கள் ஏன் அதைத் தீவிரப்படுத்தினார்கள்? ஏனென்றால், தனி விவசாயிகளிடம் இருந்து தானியத்தைக் கொள்முதல் செய்வதைவிடக் கூட்டுப் பண்ணைகளிடம் இருந்து திரட்டு வது எளிது. அதனால்தான் கம்யூனிசக் காற்று என்பதை அவர்கள் தீவிரப்படுத்தினார்கள். ஏனெனில், விவசாயிகளின் உபரியைக் கைப்பற்றுவதற்கு இதுதான் எளிய வழி என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதனால் எத்தனை விவசாயிகள் பட்டினி கிடந்து சாவார்கள் என்பதைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. இதுதான் இக்கட்டுநிலை தோன்றியதற்கான காரணம்.

ஒனுர்கன் உல்கர்: இன்று அதிகாரப்பூர்வ வரலாற்றில் இதைப் பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், உண்மையில் லியு ஷோ சி, டெங், பெங் ஜென், தாவ் சூ (Liu Shoqi, Deng, Peng Zhen, Tao Zhu) போன்றவர்கள் தான் இந்த கம்யூனிசக் காற்றை முழுமூச்சுடன் முன்தள்ளியவர்கள் இல்லையா?

ஃபிரட் எங்ஸ்ட்: ஆமாம். அவர்கள் தான் அதை வலியுறுத்தினார்கள். அவர்களின் பாதையை மாவோ கடுமையாக விமர்சித்தார். ஆனால், மாவோ சிறுபான்மையாக இருந்தார். விவசாயிகளின் நலன்களில் அவர்களுக்கு அக்கறை இல்லாததைக் கண்டு மாவோ அதிர்ந்தார்.

1958-இல் எல்லா இடங்களிலும் அமோக விளைச்சல். ஆனால், 59-ல் ஹெனானிலும் அன்ஹூயிலும் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டன. தானிய உற்பத்தி குறைந்தது. ஆனால், உள்ளூர் அதிகாரிகள் பற்றாக்குறையைக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. விவசாயிகள் விளைச்சலில் பாதியைத் தர மறுக்கிறார்கள் என்று அவர்கள் சொன்னார்கள்.

படிக்க:
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

அப்படி அவர்கள் தராமல் பதுக்கி வைத்தால் என்ன செய்வீர்கள்? இரண்டு வழிகள் உள்ளன. முதலாளித்துவப் பாதையினர் என்ன ஆனாலும் தானியத்தைக் கைப்பற்று என்பார்கள். “விவசாயிகள் தானியத்தை மறைக்கிறார்கள் என்றால், நாம் அவர்களைப் பகைத்துக் கொண்டோம்” என்று பொருள் என்பது மாவோவின் பார்வை. “நமது கணக்குப்பதிவுக்கான அலகாகப் பெரிய கம்யூனை வைத்துக் கொள்ளக் கூடாது. அளவைக் குறைக்க வேண்டும்” என்றார் மாவோ. கம்யூனுக்கு கீழே இரண்டு அலகுகள் கொண்ட மூன்றடுக்கு உடைமை முறையை அவர் வலியுறுத்தினார்.

லியு ஷோ சி, டெங் சியாபெங், ஜாவோ ஜியாங் (Zhao Ziyang) போன்றவர்கள் கம்யூன் அலகை வலியுறுத்தினார்கள். “நீங்கள் இவ்வாறு செய்தால்,மக்களைப் பட்டினி போடுவீர்கள்” என்றார் மாவோ. இதை உறுதி செய்வதற்கான ஆதாரமாக மெமோக்கள் உள்ளன.

இந்த நிகழ்வுக்குப் பிறகுதான் கட்சியில் இவர்கள் எந்தளவுக்கு ஆழமாக வேரூன்றியிருக்கிறார்கள் என்பதை மாவோ புரிந்து கொண்டார்.
மூன்று கடினமான வருடங்களுக்குப் பிறகு இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்கு அவர்கள் என்ன தீர்வை முன்வைத்தார்கள் என்பதை யூகிக்க முடிகிறதா? கூட்டுப் பண்ணைகளைக் கலைக்கச் சொன்னார்கள்.

அவர்கள் 1950-களின் ஆரம்பத்தில் கூட்டுப் பண்ணைகளை எதிர்த்தார்கள். பிறகு கம்யூனிசக் காற்று கொள்கையை கொண்டு வந்தார்கள். பஞ்சத்திற்கு பிறகு மறுபடியும் கூட்டுப்பண்ணைகளை ஒழிப்பதை வலியுறுத்தினார்கள். முதலாளித்துவப் பாதையாளர் என்போர் இவர்கள்தான்.

மக்களின் இறப்புகளுக்கு, குறிப்பாக சிச்சுவானில் (Sichuan) நடந்தவைகளுக்கு, அவர்கள் மாவோவின் மீது பழி சுமத்தினார்கள். ஆனால், சிச்சுவான் பஞ்சம் தானியப் பற்றாக்குறையால் உருவானதல்ல. அங்கே நல்ல விளைச்சல்தான். டெங் சியாபெங் சிச்சுவான்காரர் தான். டெங்தான் அப்பகுதியின் கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் லீ ஜிங்க்வானுக்கு (Li Jingquan) அங்கிருந்த தானியத்தை நகரத்திற்கு அனுப்புமாறு கட்டளையிட்டதாகச் சிலர் கூறுகின்றனர். சிச்சுவான் விவசாயிகள் பட்டினி கிடப்பார்கள் என்று லீ எச்சரித்திருக்கிறார்.

பெய்ஜிங் நகரத்தின் மக்கள் இறப்பதைவிட சிச்சுவான் மக்கள் இறப்பது பரவாயில்லை என்று நான் நினைக்கிறேன் என்ற ரீதியில் டெங் பதில் கூறினாராம். இது போன்ற தலைவர்களின் கொள்கைகளால்தான் 1960-61 இல் மக்களுக்கு மிகக் கொடூரமான துன்பங்கள் நேரிட்டன. 1989-இல் டெங்கினால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்த பிறகு, டியானன்மென் சதுக்கப் படுகொலையைப் பார்த்த பிறகு, டெங் இவ்வாறு சொல்லியிருப்பார் என்று என்னால் நம்ப முடிகிறது.

-தொடரும்
– புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

இத்தொடரின் முந்தைய இரண்டு பாகங்கள்:

♦ சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம் – ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஒரு நேர்காணல்
♦ அறிவின் சொந்தக்காரர்களை கண்டுபிடித்து எழுந்த தேசம் !

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

 

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

மோடியின் அரை உண்மைகளும் முழு பொய்களும்

பிரதமர் நரேந்திர மோடி 2017-ம் ஆண்டில் தொடர்ச்சியாக கூறிய வரலாற்று சிறப்புமிக்க கூற்றுகள் பெரும்பாலும் முழு பொய்களாலும் – அரை உண்மைகளாலும் நிறைந்தவையே. அதற்கான சான்றுகள் இதோ..

1. இந்தியாவின் முதல் மெட்ரோவில் பயணம் செய்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி-யும் ஒருவர்:

கல்கத்தா மெட்ரோ சேவையை அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கும் இந்திராகாந்தி.

டெல்லி மெஜந்தா மெட்ரோ வழித்தடத்தை டிசம்பர் 25-ம் தேதி துவக்கி வைத்த பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியாவின் முதல் மெட்ரோ சேவையான டெல்லி மெட்ரோவில் பயணம் செய்தவர்களில் முன்னாள் பிரதமர் வாஜ்பேயி-யும் ஒருவர் என்று பேசினார். இது தவறு.

இந்தியாவின் முதல் மெட்ரோ சேவையாக அடிக்கல் நாட்டப்பட்ட கல்கத்தா மெட்ரோ 1972-ம் ஆண்டு இந்திராகாந்தியால் தொடங்கப்பட்டு 1984-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. டெல்லி மெட்ரோ இந்தியாவின் இரண்டாவது மெட்ரோ சேவை.

2. முன்னாள் பிரதமர் மன்மோகனும் பாகிஸ்தான் ஹை-கமிசனரும் மணி சங்கர் ஐயர் இல்லத்தில் சந்தித்ததையும், குஜராத் தேர்தலையும் இணைத்து பேசியது:

குஜராத் தேர்தலை முன்னிறுத்தி நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி தீபக் கபூர் ஆகியோர் காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் ஐயரின் இல்லத்தில் பாகிஸ்தான் ஹை-கமிசனரிடம் சதியாலோசனை செய்ததாக மோடி கூறினார். அந்த சந்திப்பையும் குஜராத் தேர்தலையும் இணைத்து அவர் பேசியது ஒரு புயலையே கிளப்பி விட்டது.

குஜராத் தேர்தல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்று அந்த சந்திப்பில் பங்கேற்ற முன்னாள் இராணுவ தளபதி தீபக் கபூர் கூறியிருந்தார். தேர்தல் முடிவுக்கு பிறகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் முன்னாள் குடியரசுத்தலைவர் வி.பி.அமித் அன்சாரி ஆகியோரது அர்பணிப்பு உணர்வை பிரதமர் சந்தேகிக்கவில்லை என்று மேலவைத் தலைவரும் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி விளக்கம் கொடுத்தார்.

3. நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தை நாங்கள்தான் துவக்கினோம்:

நேரடி மானிய பரிமாற்ற திட்டத்தை தன்னுடைய அரசுதான் தொடங்கியதாக கர்நாடகாவில் நடத்திய ஒரு பேரணியில் பேசும்போது மோடி கூறினார். இதன் மூலம் இடைத்தரகர்களை அகற்றி 57,000 கோடி ரூபாய் வரை தன்னுடைய அரசு மிச்ச்சப்படுத்தியதாக கூறினார்.

ஆனால் இந்த கூற்றும் சறுக்கி விட்டது. நேரடி நன்மைகள் பரிமாற்ற திட்டமானது 2013-ம் ஆண்டே தொடங்கப்பட்டு விட்டது. 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இத்திட்டம் அமலுக்கு வருவதாக அந்த ஆண்டு வரவு செலவு அறிக்கையில் மத்திய அரசு குறிப்பிட்டது. மேலும் இத்திட்டமானது நடப்பாண்டு வரை வளர்ந்து வருவதை பிரதமர் அலுவலகம், 2017-ம் ஆண்டில் குறிப்பிட்டு இருந்தது.

4. காங்கிரசையும் முகலாயர்களையும் பற்றி மணி சங்கர் அய்யர் பேசியதை திரித்தது:

குஜராத் தேர்தலுக்கு முன்னதாக, பிரதம மந்திரி நரேந்திர மோடியின் மற்றுமொரு பொய்யான கூற்று வெளிவந்தது. காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர், காங்கிரசு கட்சியை முகலாய வம்சத்துடன் ஒப்பிட்டதாக மோடி தவறாக கூறினார். புகழ் பெற்ற காங்கிரசு தலைவர்கள் கூட கட்சிதான் குடும்பம், குடும்பம்தான் கட்சி என்பதை ஒப்புக்கொண்டு இருக்கிறார்கள் என்று மோடி தனக்கே உரிய சிறப்புடன் திரித்துக் கூறினார்.

ஆயினும், ஐயரின் கூற்று தவறாக திரிக்கப்பட்டது அம்பலமானது. மோடியும், சில வெகுஜன ஊடகங்களும் திரித்து கூறுவது போல காங்கிரசு தலைவராக இராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதை அவுரங்கசீப் அரசாட்சியுடன் அவர் ஒப்பீடு செய்யவில்லை. உண்மையில், முகலாயர்களின் வம்ச ஆட்சியையும் காங்கிரசு கட்சிக்குள் தலைவரை தேர்ந்தெடுக்க நடக்கும் தேர்தல் ஜனநாயக நடைமுறை ஆகியவற்றிற்கும் இடையேயான வேறுபாட்டையே அவர் கோடிட்டு காட்டியிருந்தார்.

5.  உபியில் ஈகைத் திருநாளின் போது தீபாவளியை விட அதிகமான மின்சாரம் வழங்கப்பட்டது:

சமாஜ்வாடி கட்சி தலைமையிலான உபி அரசு தீபாவளிக்கு வழங்கியதை விட ஈகைத் திருநாளில் அதிக அளவு மின்சாரத்தை வழங்கியதாக உத்திரப்பிரதேச உள்ளாட்சி தேர்தலுக்கு முன்னதாக நடந்த பேரணி ஒன்றில் மோடி கொளுத்தி போட்டார். ரமலானின் போது வழங்கப்படும் மின்சாரம் தீபாவளியின் போதும் வழங்கப்பட வேண்டும் அதில் பாகுபாடு எதுவும் காட்டக்கூடாது என்று கூறினார்.

ஆனால் அதிகாரபூர்வமான இணையதளத்திலுள்ள தகவல்கள் இந்த கூற்றை தவறாக்கி விட்டன. 2016, ஜூலை 6 –ம் தேதி ஈகைத்திருநாளின் போது 13,500 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டது . அதே நேரத்தில் 2016, நவம்பர், 28-ம் தேதி தீபாவளி பண்டிகையின் போது ஐந்து நாட்கள் தொடர்ந்து 24 மணி நேரமும் 15,400 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டது. தீபாவளி சமயத்தில் மின்சாரப் பற்றாக்குறை நிகழவில்லை. மேலும் ஈகைத் திருநாளை விட அதிக அளவு மின்சாரமும் வழங்கப்பட்டிருப்பதை புள்ளி விவரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

6. கான்பூர் இரயில் விபத்தும் ஐ.எஸ்.ஐ தொடர்பும்

கான்பூரிலுள்ள புகார்யாவுக்கு (Pukhraya) அருகே 2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தூர்-பாட்னா தொடர் வண்டி தடம் புரண்டதில் 14 பெட்டிகள் கவிழ்ந்து 150 பேர்கள் பலியானார்கள். உபி உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக நடைப்பெற்ற பேரணி ஒன்றில் பேசிய மோடி, தொடர்வண்டி தடம் புரண்டதற்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அடித்துவிட்டார். பின்னர் உபி போலிஸ் டி.ஜி.பி ஜாவீத் அகமதாலும் இரயில்வே பொது மேலாளராலும் இந்த பலூன் உடைக்கப்பட்டது. ஐ.எஸ்.ஐ-க்கும் தொடர் வண்டி விபத்துக்கும் இடையேயான தொடர்புக்கு ஆதாரம் எதுவுமில்லை என்று உபி போலீசு பதிவு செய்தது.

7. உபி மாநிலம் குற்றங்களில் முதலிடம்:

ஒவ்வொரு நாளும் 24 பாலியல் வன்முறைகள், 21 முறை பாலியல் வன்முறை முயற்சிகள், 13 கொலைகள், 33 ஆட்கடத்தல்கள், 19 கலவரங்கள் மற்றும் 136 கொள்ளைகள் என உத்திரபிரதேசத்தில்தான் நாட்டிலேயே அதிக அளவு குற்றங்கள் நடந்ததாக அங்கு நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் மோடி கூறினார்.

ஆயினும் ஒரு சிறு உண்மையே மோடியின் பொய்யை அம்பலப்படுத்தி விடுகிறது. தேசிய குற்ற பதிவுகள் ஆணையத்தின் படி 100,000 நபர்களுக்கு எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்று தான் பதிவு செய்யப்படுகிறதே தவிர நாள் அடிப்படையில் அல்ல. பெரிய மாநிலங்களில் அதிக குற்றங்கள் பதிவு செய்யப்பட்டாலும் சிறிய மாநிலங்களை அதோடு ஒப்பிட இலட்சம் பேரில் எத்தனை குற்றங்கள் நடக்கின்றன என்று கணக்கிடுவதுதான் சிறந்தது. ஆணையத்தின் 2015-ம் ஆண்டு அறிக்கையின் படி மோடி கூறியது பொய் என்பது அம்பலமானது. ஆணையத்தின் கணக்கீட்டின் படி ஒருநாள் குற்றங்கள் என்று கணக்கிட்டாலும் உபியை விடவும் வேறு மாநிலங்களில் குற்ற எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது. [அந்த மாநிலங்களிலும் பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது]

8. பருவ மழை பொய்த்ததால் ஏற்படும் இழப்புகளை சமாளிக்க காப்பீடு திட்டத்தை தொடங்கியது:

இயற்கை காரணங்களுக்காக பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளுக்கு காப்பீடு வழங்கும் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தை நாங்கள்தான் தொடங்கினோம். இது போன்ற காப்பீடு திட்டத்தை இதற்கு முன்பு யாரேனும் கண்டதுண்டா? என்று உத்திரபிரதேசத்தில் பாரபங்கியில் நடைபெற்ற ஒரு பேரணியில் மோடி பேசினார்.

மோடியின் கூற்று தவறாக இருந்தது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையின் படி அதற்கு முன்னரும் வானிலை அடிப்படையிலான காப்பீடுத் திட்டம் (Weather-Based Crop Insurance Scheme) இருந்தது. இந்த திட்டம் 2003-ம் ஆண்டு காரிஃப் (Kharif) பருவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதிகபடியான மழை, வறட்சி மற்றும் பனியால் ஏற்படும் பாதிப்புகளுக்காக இந்த காப்பீடு வழங்கப்பட்டது.

9. தலித்துகளுக்கு எதிராக உ.பியில் அதிகபடியான வன்முறைகள்:

இந்தியாவில் எங்கேனும் தலித்துக்களுக்கு எதிராக வன்முறைகள் அதிகம் நிகழ்கிறது என்றால் அது உபிதான் என்று பாரபங்கியில் 2017-ம் ஆண்டு பிப்ரவரியில் நடந்த ஒரு பேரணியில் மோடி கூறினார். ஹிந்துஸ்தான் டைம்ஸின் படி மோடியின் கூற்று தவறு. தேசிய குற்ற தகவல்கள் ஆணையத்தின் படி குற்றங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சம் பேருக்கு எத்தனை என்றுதான் கணக்கிடப்படும். மாறாக எத்தனை குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது என்ற அடிப்படையில் அல்ல.

உபியில் தலித்துகளுக்கு எதிராக ஒரு இலட்சத்திற்கு 20 குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் ஆணையத்தின் தகவலின் படி உபியை விட 11 மாநிலங்களில் தலித்துகளுக்கு எதிராக குற்றங்கள் மோசமாக நடக்கின்றன. ஒரு இலட்சத்திற்கு 57 குற்றங்கள் என பாஜக ஆளும் இராஜஸ்தான்தான் தலித்துக்களுக்கு எதிரான குற்றங்களில் முதலிடத்தில் இருக்கிறது.

10. இளநீர் விற்பனை மற்றும் உருளைக்கிழங்கு தயாரிப்பு ஆலை தொடங்க இருப்பதாக இராகுல் காந்தி கூறினார்:

இளநீரை இலண்டனில் விற்பனை செய்ய மணிப்பூர் விவசாயிகளுக்கு உதவி செய்வதாக காங்கிரசு தலைவர் இராகுல் காந்தி கூறியதாக உ.பியில் 2017-ம் ஆண்டு மார்ச் மதத்தில் நடைபெற்ற ஒரு பேரணியில் மோடி கூறினார். மேலும் விவசாயிகளுக்கு உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் ஆலை அமைத்து கொடுப்பதாகவும் இராகுல் காந்தி கூறியதாக மோடி கூறினார்.

படிக்க:
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

ஆனால் இராகுல் காந்தி இளநீரையோ அல்லது தேங்காயையோ குறிப்பிடவில்லை மாறாக அன்னாசி பழச்சாற்றைதான் குறிப்பிட்டார். அதே போல உருளைக்கிழங்கு உற்பத்தி செய்யும் ஆலை அமைப்பதாக கூறவில்லை மாறாக உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் ஆலையைதான் இராகுல் காந்தி குறிப்பிட்டார்.

தமிழாக்கம்:
நன்றி: altnews

2.0 : ரஜினி + ஷங்கரின் சிட்டுக்குருவி செல்பேசி லேகியம் !

23

ஜினி + ஷங்கர் + சுபாஷ்கரன் கூட்டணியில் வெளிவந்திருக்கும் 2.0 கதை என்ன? தத்துவம், உணர்ச்சி, டெக்னாலாஜியின் பார்வையில் செதுக்க முயற்சிப்போம்.

தத்துவம் 1: இயற்கையோடு செயற்கை போட்டி போட்டால் பூமி அழியும். கொஞ்சம் பாத்துச் செய்யுங்க!
தத்துவம் 2: ஆன்மீக அமைதியில்லாமல் அறிவியலின் தொழில்நுட்பத்தை வைத்து மட்டும் நிம்மதியை என்ஜாய் பண்ண முடியாது.

உணர்ச்சி 1: பீட்சா சாப்பிட்டுக் கொண்டே, தூதுவளை தோசையின் மகிமையை சொல்லிக் கொண்டே, இருக்கையை மீறி வரும் கீழ் வாயுவை கொஞ்சம் பாடிலாங்வேஜில் சரி செய்து கொண்டே, எதிரில் இருக்கும் அழகான பெண்ணை ஜொள்ளிக் கொண்டே, இடது கையிலிருக்கும் செல்பேசியை துழாவிக் கொண்டே இருக்குதடா இந்த உலகம்!

உணர்ச்சி 2: “சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து….” பாடலை டிக்டாக்கில் ஒரு அல்ட்ரா மாடர்ன் யுவதி பாடும் போது அதை லயிக்கிறீர்கள். அந்நேரம் ஓரக்கண் திசையில் ஒரு குயில் பறக்கிறது. அப்போது நீங்கள் கேட்பது பாடலா, பார்ப்பது பெண்ணா, கவனிப்பது குயிலா என்றால் அதுதான் இதுதான் எதுதான் எனும் உணர்ச்சி வருமே அதே!

டெக்னாலஜி 1: அவரவருக்கு அருளப்பட்ட பீட்டர் ஞான ஆங்கிலத்தில் விக்கிப்பீடியாவில் கொஞ்சம் ஹோமிபாபா, நிறைய சலீம் அலி, தம்மாத் துண்டு ஈர்ப்புவிசை – மின்காந்த விசை – வலிமையான அணுவிசை – பலவீனமான அணு விசை, இமயமலை பாபா – துறவிகளின் ஆரா அனைத்தையும் ஒரு காக்டெயில் குலுக்கலில் பிரசவித்தால் நீயும் ஒரு சயிண்டிஸ்ட்.

டெக்னாலஜி 2: படையெடுக்கும் ஈக்கள் – வௌவால்கள் – தேனிக்கள் – டயனோசர்களை செல்பேசிகளாக மாற்றி, ஸ்டார் வார்ஸ், டிரான்ஸ்ஃபார்மர், ஓநாய் மனிதர்கள், மார்வெல் ஸ்டூடியோவின் அயர்ன் மேன் இன்னபிற காமிஸ் படங்கள், உக்ரேன் ஆடை விளக்கு நடனங்களை ஆங்காங்கே கிராபிக்சில் ஏதோ நம்மளால முடிஞ்ச மட்டும் கோத்து ஒரு கதை சொல்ல முயன்றால் எத்தனை கோடி ரூபாய் செலவாகும்?

இனி மரபுவழியில் கதை கேட்டு கதை கேட்டு சதை போட்ட நாட்டிற்கு கதையெனும் வதையை சொல்வோம்.

பனித்துளியில் இருக்குதடா உலகமென இயற்கையோடு இயைந்து வாழும் பேறு பெற்றவர் பக்‌ஷி ராஜன். அவர் செத்துப் பிறந்தபோது இதயத்தைக் குத்திக் காப்பாற்றியது ஒரு சிட்டுக் குருவி. இது தற்செயலாக நடந்தது என்றாலும் பறவைகளோடு தனது வாழ்வை பிணைத்துக் கொள்கிறார் பக்‌ஷி. அது பொறுக்கவில்லை தொழில்நுட்பத்திற்கு. இந்தியாவில் 96-ம் ஆண்டில் வந்த செல்பேசிகளின் டவர்களும், கதிர்வீச்சுக்களும் பறவைகளின் மூளையில் இருக்கும் திறனை அழிக்கிறது. ஆத்திரமடைந்த பக்‌ஷி அமைச்சர், முதலாளிகள், அதிகாரிகள் என துரத்தி துரத்திப் பார்த்து வகுப்பெடுக்கிறார். தெருவில் ஆர்ப்பாட்டம் செய்கிறார். அனைவரும் சிட்டுக் குருவிகளுக்காக செல்பேசிகளை விட முடியாது என்கின்றனர்.

மனமுடைந்து தூக்கில் தொங்கியவர் தனது “ஆரா” சக்தியை வைத்து செல்பேசி வைத்திருக்கும் மக்களை பழிவாங்குகிறார்.

வசீகரனான ரஜினி விஞ்ஞானியாக நடித்து முந்தைய படத்தில் கழட்டி விடப்பட்ட சிட்டி எனும் எந்திரத்தை மீண்டும் ஒக்குப் போட்டு பக்‌ஷியை அழிக்கிறார். நிலாவாக நடித்த எமிஜாக்சன் எடுபிடி வேலை செய்யும் எந்திரமாக உதவுகிறார். செல்பேசி விற்பவர், தொலைத் தொடர்பு அதிபர், தொலைத் தொடர்பு அமைச்சர் ஆகியோரைக் கொல்லும் பக்‌ஷியை இறுதியில் சிட்டியின் 2.0 வெர்ஷனும், மைக்ரோ 3.0 வெர்ஷனும் இணைந்து அழிக்கிறார்கள். அனைவரும் நலம்.

சினிமா விமர்சன மரபில் கிளைமேக்சை தவிர்த்து விட்டு இறுதியில் ஹீரோ என்ன செய்தார் மீதிக் கதை என்ன? என்று சொல்வதை மரபாக வைத்திருக்கிறார்கள். முழுசா சொல்லி விட்டால் திரையரங்கிற்கு ரசிகர்கள் வரமாட்டார்கள் எனும் அறமாம் இது. வணிக சினிமாவின் ஆதாயங்களை ஏற்றுக் கொண்ட ஊடகங்களில் ஆஸ்தான வித்வான்களாக விமர்சனக் கடை விரித்திருப்போர் மட்டுமல்ல, சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் போதையால் வாயால் வடை போடுவோரும் கூட மேற்கண்ட மரபை கடைபிடிக்க முடியாத ஒரு சோகம் இப்படத்தில் இருக்கிறது.

சாம்பார் ஜெமினி கணேசன் காலத்தில் ஒரு பாத்திரம் அறிமுகமாகும் போது அவரது பின்னணி, நடப்பு, குண விசேசம் அனைத்தும் முதலிலேயே சொல்வார்கள். இடையில் இயக்குநர் வீ சேகர் படங்களிலும் இது தொடர்ந்தது. ’முன்னுரை’ காட்சியில் பாயாசம் பண்றோம் என்று சொல்லிவிட்டு, அடுத்த காட்சியில் பாயாசத்தை செய்முறைக் குறிப்போடு செய்து காட்டி, அதற்கடுத்த காட்சியில் அதே பாயாசத்தால் சண்டை வருவதைக் காட்டுவார்கள். இந்த சண்டை அறிவிப்பு அந்த ’பண்றோம்’ காட்சியிலேயே சொல்லப்பட்டு விடும்.

இன்று ஆன்ட்ராய்டு காலத்தில் வந்திருக்கும் ஷங்கரின் படத்தில் கூட அதே பாயாசம்தான். கதை என்ன, அடுத்து வரும் காட்சிகள் என்ன, உரையாடல்கள் என்ன, என்பதை, “இந்தியாவின் தேசிய விளையாட்டு எது?” எனக் கேள்வி கேட்டுவிட்டு, முதல் எழுத்து ஹா,  கடைசி எழுத்து கி, இரண்டு க்ளூக்களையும் வைத்து சொல்லுங்கள் என சன் + விஜய் தொகுப்பாளர்கள் சிணுங்கிக் கொண்டு உதவுவது போல படத்தின் காட்சிகள் எடுத்துக் கொடுக்கின்றன.

திரையரங்கின் ஹை-டெசிபல் ஒலிகளையும், கண் பறிக்கும் கிராபிக்ஸ் ஒளியையும் இது உதவியா உபத்திரவமா எனக் கேட்டால், “சிட்டுக்குருவி லேகியம்னு வந்தா கண் காதுகளை தானம் பண்ணாம மருந்து கிடைக்குமா?”-வென அவை கேலி செய்யும்.

முதல் காட்சியில் விஞ்ஞானி வசீகரனைக் காண ரோபோட்டிக்ஸ் மாணவர்கள் வருகிறார்கள். ஜெமினி கணேசன் காலத்தில் கல்லூரி படிப்பும், 80-களில் ஐ.ஏ.எஸ்-சும், சேரனின் ஆட்டோகிராஃப் காலத்தில் விளம்பரக் கம்பெனி வேலையாகவும், 96 படத்தில் புகைப்படக் கலைஞனாவும் தமிழ் நாயகர்கள் மாடர்னாக காட்டிக் கொண்டார்கள். தற்போது இந்த வேலைகள் கிடைக்குமளவு பொருளாதாரம் இங்கும் எங்கும் இல்லை என்பதால் ரோபோட்டிக்ஸ் படிப்பை பந்தாவாக காட்டுகிறார்கள் போலும்.

இனி அடுத்து என்ன? நாசா காஃபி ஷாப்பில் விஜய் செட்டி நாட்டு முட்டை தோசையை சாப்பிட்டுக் கொண்டு அடுத்த நாள் ராக்கெட்டில் பறப்பாரோ? இத்தகைய செயற்கைத்தனமே நமக்கு கிராபிக்சை விஞ்சிய ஒரு எரிச்சலை ஊட்டுகிறது.

இரண்டாவது காட்சியில் பக்‌ஷி ராஜனின் சக்திப்படி செல்பேசிகள் திடீரென்று கைகளை விட்டு வானத்தில் பறந்து போகின்றன. இதை ஓரிரண்டு காட்டி விட்டு போவார்கள் என்று பார்த்தால் இந்த செல் பறப்பு சேட்டு வீட்டில், செட்டு வீட்டில், ஓடும் காரில், நிற்கும் ரயிலில், வயல் பரப்பில், வரவேற்பறையில், தெருவோரத்தில், ட்ரெயினில், மூத்திரச் சந்து…. ஸ்… ஸப்பா… எப்படா முடியுமென அலுப்பூட்டுகிறது.

இரண்டு மணி நேரத்தில் பக்‌ஷி ராஜன் கிராபிக்சாக வரும்போதெல்லாம் எப்படியும் பத்து பதினைந்து நிமிடம் கொத்தப்படும் விருதுநகர் புரோட்டாக்களாக துண்டு துண்டாகிறோம். நாம் சாப்பிட இருக்கும் கொத்து புரோட்டாவை ரசிக்கலாம். நாமே கொத்தப்படும் புரோட்டாவாக மாறும்போது இங்கு ரசிக்க மட்டுமல்ல, அழவும் முடியவில்லை.

மெட்டுக்காக ஒரு பாட்டு எழுதலாம். கிராபிக்சுக்காக ஒரு கதை எழுதினால்?

சிட்டுக்குருவியை சென்டிமெண்டுக்காகவும், செல்பேசியை கிராபிக்சுக்காகவும் இழுத்து வந்து விட்டு இடையில் 2ஜி வழக்கின் விவரங்களை ஆடிட்டர் குருமூர்த்தியின் பார்வையில் இறக்கிவிடுகிறார்கள்.

செல்பேசி காணாமல் போனதால் தொழில் படுத்துவிட்டது என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சரின் வாயிலில் பல முதலாளிகள் காத்திருக்கின்றனர். ஒருவர் மட்டும் அதிகாரத் தோரணையில் நேரடியாக உள்ளே நுழைகிறார். வெளியே அமர்ந்திருப்பவர் இது 2ஜி என பொறுமிவிட்டு ஊழல் கதையை நினைவுபடுத்துகிறார். உள்ளே ஆ.ராசாவைப் போல வேட்டி கட்டிய தமிழர் ஒருவர் மந்திரியாய் செல்பேசி சேவையை மக்கள்மயமாக்கியதைக் கூறுகிறார். வந்த முதலாளியோ அவர் இந்தப் பிரச்சினையை தீர்க்காவிட்டால் அடுத்த விக்கிலீக்சில் நீதான் அம்பலம் என எச்சரிக்கை விடுத்துப் போகிறார்.

விக்கிலீக்ஸ் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அசாஞ்சேயும், ஸ்னோடனும் துணிவாக தம் உயிரை பணயம் வைத்து நடத்தும் ஒரு போராட்டம். அதனால்தான் அவர்களை கைது செய்து தண்டிப்பதற்கு அமெரிக்க அரசு துடிக்கிறது. அதை ஏதோ ஒரு ஏர்டெல் முதலாளியின் கைங்கரியம் என்று காட்டுவதற்கு பணமதிப்பழிப்பை நியாயப்படுத்தி எழுதிய ஒரு ஆன்மாவும், ரோட்டில் எச்சில் துப்பும் அப்பாவிகளை எண்ணெய்க் கொப்பறையில் போட்டு வறுக்கலாம் என படமெடுத்த மற்றொரு ஆன்மாவும் தேவைப்படுகிறது. அவ்வகையில் படத்தின் இயக்குநர் மற்றும் வசனகர்த்தா இருவரம் “மேட் ஃபார் ஈச் அதர்”தான்.

2ஜி வழக்கில் ஒன்னே முக்கால் இலட்சம் கோடி ஊழல் என எடுத்துவிட்ட ஸ்லீப்பர் செல்கள் அனைத்தும் பாஜகவுடையவை என வரலாறு நிரூபித்திருக்கிறது. அலைக்கற்றை ஊழல் என்பதை விட அது அரசின் கொள்கை முடிவு என்பதே சரி. அந்த வகையில் அதை தனியார்மயத்தின் தவறாக ஏற்கமறுத்து ஒரு பலிகடாவை காங்கிரசு கட்சியினர் மற்றும் ப.சிதம்பரம் தேடினர். ஆனாலும் ஆ.ராசா 2ஜி வழக்கிலிருந்து விடுதலையாகி புத்தகம் போட்ட பிறகும் குருமூர்த்தி வாயால் இதைப் பேசுவதற்கு ஒரு ஆழமான பாஜக மனம் வேண்டும். அது ஷங்கருக்கும், ஜெயமோகனுக்கும் இயல்பாகவே இருக்கிறது. ஜென்டில்மேனோ, விஷ்ணுபுரமோ இரு வேறு படைப்பு மனங்களின் உற்பத்தியல்ல.

ஒரு காட்சியில் பக்‌ஷிராஜன் அமைச்சரை பழிவாங்குவதற்கு இரண்டு கோடி மதிப்புள்ள அவரது வைரம் பதித்த செல்போனை, கண்ணாடியை உடைத்து அனுப்புகிறார். அதில் வரும் ’UnKnown’ அழைப்பை, உன்னி கிருஷ்ணன் அழைப்பு என்கிறாராம் அமைச்சர். இதை உதவியாளரான மயில்சாமி திருத்துகிறாராம். இப்படி அமைச்சர்கள் என்றால் அவர்களுக்கு அ, ஆ கூட எழுதத் தெரியாது என காட்டுவதிலேயே இவர்களின் மேட்டிமைத் திமிர் தெரிகிறது. சரி இவர்களின் யோக்கியதை என்ன?

வேற்றுகிரகங்களிலிருந்து எதுனாச்சும் வருதான்னு கண்காணிக்க ஒரு ஆய்வு மையத்தை 1964-ல் ஹோமி பாபா திறந்து வெச்சாராம். அதுல பாசிட்டிவ் சிக்னல் அனுப்பி திரும்ப பாசிட்டிவ் சிக்னல் வருதான்னு இரகசியமாக கண்காணிக்கிறார்களாம். இதை லேண்ட்லைனில் “நான் சொல்றது கான்பிடன்சியலான விசயமுன்னு” டாக்டர் சாம் சொல்றார். ரஜினி இன்னொரு லேண்ட் லைனில் அந்த ரகசியத்தை கேக்குறார். இதுக்கு அமைச்சரின் ‘உன்னிகிருஷ்ணன்’ அழைப்பே பரவாயில்லை!

சிட்டுக்குருவிகளைக் காப்பாற்ற தொலைத்தொடர்பு அமைச்சரை சந்திக்கிறார் பக்‌ஷி ராஜன். அப்போது ஜெயமோகனும், ஷங்கரும் விக்கிபீடியாவில் ஆள் போட்டு படித்த அரைகுறை விவரங்களைக் கொட்டுகிறார். அதாவது செல்பேசி டவர் அதிகமானதால் வேடந்தாங்கலில் பறவைகள் வரத்து குறைகிறது, முட்டை வலுவாக இல்லாமல் உடையுது, 50 கிராம் எடை உள்ள ஆர்டிக் தேசத்து பறவை 12,000 கி.மீட்டர் பறந்து வேடந்தாங்கல் வருகிறது அதுவும் ஜிபிஎஸ் ட்ராக்கிங், மேப் இல்லாமல். டவர்களின் கதிர்வீச்சால் பறவைகளுக்கு மட்டுல்ல, மனிதர்களுக்கும் மன அழுத்தம், மனச்சிதைவு, சிக்கல் அனைத்தும் வருகிறது என ஸ்ஸ்…..அப்பா………..

ஆகவே வெட்டிப் பேச்சுக்கு பயன்படும் செல்பேசி டவர்களில் 40% குறைப்போம் என்கிறார் பக்‌ஷிராஜன். அதற்கு ஆதாரமாய் அமெரிக்காவில் நான்கு நிறுவனங்கள், சீனாவில் மூன்று நிறுவனங்கள் மட்டும் செல்பேசி சேவை வழங்கும்போது இங்கு மட்டும் பத்து நிறுவனங்கள் தேவையா அதைக் குறை என ஆ.ராசாவிற்கு வகுப்பு எடுக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

அய்யா, செல்பேசி டவர்களும், அவற்றின் கதிர்வீச்சு அலைக்கற்றை அலைவரிசைகளும் பயன்படுத்தப்படும் செல்பேசிகளின் எண்ணிக்கையை வைத்தே அதிகரிக்கிறதே அன்றி அதிக எண்ணிக்கை நிறுவனங்களால் அல்ல. பத்து பெட்டிக்கடைகள் ஒரு சூப்பர் மார்கெட்டுக்கு ஈடாகாது.

அதை நியாப்படுத்த அமைச்சர் சிட்டுக்குருவிகளை வறுத்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் என்கிறாராம். இப்படி மனோரமாவின் விதவை நெற்றியை நோக்கி வீசப்படும் சிவப்புச்சாயத்தை தடுக்கும் விஜயகாந்துகள் இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் ஜெயமோகன்களால் வில்லனாக்கப்படுவது அயோக்கியத்தனமில்லையா?

படிக்க:
திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !
காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

செல்பேசிகளை பறிகொடுத்துவிட்டு புகார்கொடுக்கும் போது ஒரு பெரியவர் ரேடியேசனால் ஓசோன் படலம் ஓட்டையாவதாகச் சொல்கிறார். அருகாமையில் உள்ளவரோ ஏதோ ட்ரைனேஜ் ஓட்டை மாறி சொல்ற என்கிறார். ஓசோன் ஓட்டையை அடைக்கும் வேலைகளுக்கு ஷங்கர், ஜெயமோகன், ரஜினி பிள்ளைகள், பேரன் பேத்திகள் பேஷாக அமெரிக்காவின் நாசாவிற்குப் போவார்கள். ஆனால் பாதாளச் சாக்காடை அடைப்பிற்கு இவர்களுக்குத் தெரிந்த ஒரு குடும்பம் கூட தனது பிள்ளையை அனுப்புவதாக ஒரு கவிதை கூட எழுதாது. இதெல்லாம் இயல்பாக இவாளிடம் எழுவதை கனம் பொதுஜனம் அழுத்தமாய் குறித்துக் கொள்ள வேண்டும்.

உள்துறை அமைச்சரோடு கூட்டம் நடக்கிறது. படத்தில் இரண்டாவது வில்லனாக வரும் இளைய விஞ்ஞானி பார்ப்பதற்கு 6 பேக் ரிச் பாயாக இருப்பவர் செல்பேசி காணாமல் போவதற்கு தீவிரவாதிகள் காரணம் என்கிறார். இன்னொருவர் கடவுளின் கோபம் என்கிறார். உடனே ரஜினி “என்ன பிரச்சினைன்னு நமக்குத் தெரியலேன்னா உடனே கடவுள் மேலயும், தீவிரவாதிங்க மேலயும் பழிபோடுறது நம்ம வழக்கம்” என்கிறார். அப்ப தூத்துக்குடி சமூக விரோதி யார்? இல்லே நீங்கதான் யார், எங்கிருந்து வாறீங்க?

படத்தின் வசனங்களில் த்..தூ (ள்) கிளப்புகிறார் ஜெயமோகன்.

நிலாவிடம் சும்மா புகை விட்டேன், பார்பி குட்டி, என் செல்லம், நைட்டுக்கு ரசத்தை வைச்சு உருளைக்கிழங்கு வறுத்துடு போதும், புராஜக்ட் மானேஜருக்கும் அந்த பலாக்காய் ஆஷாவுக்கும் செம டீலிங், நாளைக்கு மகாவீர் ஜெயந்தின்றதால இன்னைக்கு நைட்டே சரக்க வாங்கி வெச்சுரு, வட போச்சே, நாலு பேருக்கு உதவினா எதுவுமே தப்பில்லை, மனுசனுக்கு சினிமா, டிவி, சாப்பாடு, காசு நாலும்தான் முக்கியம், இது கல்லில்லை செல்லு, சிட்டி-(ரோபோ)யை தயார் செய்றதை ஏதோ இரண்டு இட்லி வடை பார்சல் மாறி சொல்றீங்க, டெலிகாம் மினிஸ்டர் வாயில பூந்திருச்சு, எனக்கு எங்க பூரும்னு தெரியலை, செல் இல்லாத வாழ்க்கை நடுவில கொஞ்ச பக்கத்தை காணோம் மாறி…. போதுமா மக்களே?

இதில் ஜெயமோகனது மேட்டுக்குடி கண்ணோட்டம் தன்னையறியாமல் ஆங்காங்கே வெண்முரசு போல கொட்டுகிறது. செல்பேசியை சங்கிலியில் கட்டி வைத்திருக்கும் இளைஞரைப் பார்த்து மற்றவர் “என்ன ரயில்வே ஸ்டேசன் டம்ளர் மாறி கட்டி வெச்சிருக்கிற” என்கிறார். இதெல்லாம் மக்கள் இயல்பாக பேசுவதற்காக என்று நியாயப்படுத்தலாம். மெரினா பீச்சுல வாக்கிங் போற மயிலாப்பூர் மாமா, பாக்சர் நாய கட்டி வெச்சிருக்கிற மாறி என்று சொல்லாமல் டம்ளர், டிரைனேஜ் என்று எழுதுவதற்கு ஒரு கனமான மனம் வேண்டும்.

மேலும் செல்பேசிகளை பயன்படுத்தும் மக்களை எவ்வளவு இழிவுபடுத்த வேண்டுமோ அவ்வளவு படுத்த வேண்டியிருப்பதால் அவை முர்டோச் டி.வி கம்பெனிகளின் பிரச்சாரமாய்க் கொட்டுகின்றன. சூழலியல் பிரச்சினையில் ஏகாதிபத்தியங்களது பங்கை மறுத்து விட்டு ஏழை நாடுகளை குற்றம் சாட்டும் கனவான்களது பார்வைக்கு ஈடானது இப்படத்தின் படைப்பாளிகளது பார்வை.

அன்றாடம் வேலைக்கு போகும் மக்களைப் பொறுத்தவரை செல்பேசி என்பது தனது வேலை, வருமானம், கடன் அனைத்திற்கான கருவியாக பயன்படுகிறது. இன்னொருபுறம் நடுத்தர வர்க்கம் அதை வெட்டியாக பயன்படுத்துவதோட கூடவே மக்கள் அரசியல்மயமாவதும் நடக்கிறது. மோடி எதிர்ப்போ, கஜா புயல் பாதிப்போ, தன்னார்வலர்களின் நிவாரணப் பணிகளோ, கோவனின் பாடலோ அனைத்தும் உடனுக்குடன் பரவுவது ஆளும் வர்க்கத்திற்கே எரிச்சலை ஊட்டுகிறது. அத்தகைய எரிச்சலைத்தான் இங்கே வசனங்களாக, காட்சிகளாக காட்டி கதை சொல்கிறார்கள். வாட்சப் வதந்தியைக் காட்டி மோடி எதிர்ப்பை குறை சொல்வதும், பன்னாட்டு நிறுவனங்களின் குற்றங்களை மறைக்க மக்களை குற்றம் சொல்வதும் வேறு வேறு அல்ல.

படத்தில் யாருக்கும் நடிப்பிற்கு வேலையில்லை. ரஜினியின் கால்களும் உடலும் ஒருசேர நடிக்கும் காட்சியை நாம் உண்மையிலேயே இங்கு காண இயலாது. ஆகவே ரசிகர்களும் படையப்பா, பாட்சா மாறி வராது என அதே  பல்லவியைப் பாடிவிட்டு புலம்பலை கெத்தாக காட்டுகின்றனர். எமி ஜாக்சன் ஒரு ரோபோவிற்குரிய உடலமைப்பை பெற்றிருப்பதால் பிரச்சினை இல்லை. ரஜினி – அக்‌ஷய் குமாரின் அமைப்பை கணினி வரைகலை பார்த்துக் கொள்கிறது. மேலும் அடுத்து என்ன நடக்கும் என்ற ட்விஸ்ட்டை முன் காட்சியின் உணர்ச்சியிலேயே அனைவரும் செயற்கையாக காட்டுவதால் நாம் பார்ப்பது படமா, பாட்டியிடம் சுட்ட வடைக் கதையா என்று குழப்பம் வருகிறது.

இந்தபடத்திற்கான படைப்பு அவஸ்தையில் விக்கிபீடியாவிற்கு பெரும் பங்கிருக்கிறது. அந்த அளவுக்கு என்னவெல்லாம் சுட வேண்டுமோ அத்தனையையும் ஓசியில் சுட்டுத் தள்ளியிருக்கிறார்கள். கிராவிட்டி, புளூட்டான், புரோட்டான், பறவையியல் அறிஞர் சலீம் அலி, அணுசக்தி அறிஞர் ஹோமி பாபா இவை போக கூடுதலாக ஜெயமோகன் கைங்கரியத்தால் ’ஐந்தாவது எனர்ஜி’யான ‘ஆரா’ எனும் பார்ப்பனர் புரட்டு ஒன்றையும் எடுத்து விடுகிறார்கள். மொத்தத்தில் சிட்டுக்குருவி லேகியத்தை விற்கும் சேலம் சிவராஜரைக் கொண்டு இயக்கச் சொல்லியிருந்தால் கூட படம் ஒருமாறி தேறியிருக்கலாம்.

படத்தில் ரஜினி பேசும் பஞ்ச் டயலாக் இல்லையில்லை, வார்த்தை ‘டாட்’. ’மகிழ்ச்சி’. அநேகமாக இப்படத்துடன் ரஜினியின் இமேஜுக்கும் ‘டாட்’தான்.

தமிழ் சினிமாவில் பறந்து விழும் கார்களை பரிதாபத்துடன் பார்த்திருக்கிறோம். அந்த பரிதாப கார்களின் தலைநகரம் சென்னை சிந்தாரிப்பேட்டை. பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரிபாகங்களின் சொர்க்கம்.

படிக்க:
எந்திரன்: படமா? படையெடுப்பா??
லைக்காவின் மோசடி பணத்தில் கொழிக்கும் கமல் – ரஜினி – காலாக்கள் !

சிந்தாரிப்பேட்டையில் குவிந்து கிடக்கும் உதிரி பாகங்களை கொஞ்சம் வகைப்படுத்தி கொலுவாக வைத்தீர்கள் என்றால் அங்கிருந்து 2.0 படத்தின் டைட்டில் ஆரம்பிக்கிறது. லைக்கா புரொடக்சனில் ஆரம்பித்து, தயாரிப்பாளர் சுபாஷ்கரண் வரைக்கும் இந்த போல்ட் நட் படையெடுப்பே படத்தின் கதை  டைட்டா லூசா, என்னவென்பதைத் தெரிவித்து விடுகிறது.

சுபாஷ்கரண் பெயர் போன பிறகு பக்‌ஷிராஜா மாலை இருட்டில் நம்மாழ்வரின் திருவாய் மொழியைப் பாடிக்கொண்டே செல்பேசி டவர் ஒன்றில் தொங்குகிறார். இந்த கொடூரக் காட்சியோடு இயக்குநர் ஷங்கர் பெயரைப் போடுகிறார்கள். பொருத்தமான குறியீடுதான். என்ன இருந்தாலும் ரசிகர்களுக்கு இப்படி ஒரு எச்சரிக்கையை கொடுக்கும் ஒரு நல்ல உள்ளம் இயக்குநர் ஷங்கரைத் தவிர யாருக்கு வரும்?

வரலாறு : முகலாயர்கள் இந்தியர்கள் இல்லையா ?

“நன்மை, கருணை மற்றும் நான்” என்கிற பழைய பி.பி.சி நகைச்சுவை நாடகத்தில் ஒரு காட்சி நினவுக்கு வருகிறது. அந்த நாடகத்தில் ஒரு தந்தை தனது பிள்ளைகள் இயேசு மற்றும் சாண்டா கிளாசின் மேல்  கொண்டிருக்கும் அளவுகடந்த உற்சாகத்தை இந்தியத்தன்மை என விளித்து இகழ்வார். இன்றைய காலகட்டத்தில் கூர்மையடைந்து வரும் மேலாதிக்க மனப்போக்கை வெளிப்படுத்திக் காட்டும் நுட்பமான பகடி அது.

என்றாலும் இன்றைய சூழலில் அந்த தந்தையே திகைத்துப் போகக் கூடிய கேள்வி ஒன்று உள்ளது; முகலாயர்களை என்னவென்பது? இத்தனைக்கும் அவர் பகடி செய்த இந்திய அரசியலின் ஒரு அங்கம் முகலாயர்கள். ஆனால்,  எந்தளவுக்கு உலகத்தில் உள்ள நல்லவைகள் மற்றும் மேன்மையானவைகளின் கருவறையாக  இந்தியா கருதப்படுகின்றதோ அதே அளவுக்கு முகலாயர்கள் வெளிநாட்டினராகவே கருதப்படுகின்றனர்.

உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே பரந்து விரிந்து கிடக்கும் ஃபெர்கானா பள்ளத்தாக்கில் பாபர் பிறந்தார் என்பது உண்மை தான். அவரது வழித்தோன்றல்களால் நிறுவப்பட்ட பாபரின் ஓவியங்களிலும் கூட இடுங்கிய கண்களோடும், அரைகுறை தாடியோடும் தான் காட்சியளிக்கிறார். பின்னாட்களில் அவரால் கைப்பற்றப்படப் போகும் இந்திய சமவெளிக்குச் சொந்தமான எந்த அடையாளங்களும் அந்த ஓவியங்களில் தெரிவதில்லை.

பாபர்

பாபரும் சரி அவரது சகாக்களான பிரபுக்களும் சரி, ஹிந்துஸ்தானத்தில் வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் அல்ல.

தன்னுடைய மத்திய ஆசிய தளபதிகளின் நம்பிக்கையைப் பெறுவதற்காகவும் அவர்களைக் கொண்டு மாற்று மத நம்பிக்கை கொண்ட நிலப்பரப்பை ஆள்வதற்காகவும் ஒருவிதமான ஒழுக்கவாத கட்டுப்பாட்டை நிறுவும் விதமாக பாபர் தனது குடிப்பழக்கத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும் தனது மதுக் கோப்பைகளை உடைத்துப் போட்டார் என்பதும் உண்மை. அதே போல் தனது சொந்த ஊரில் விளையும் ஒருவகையான தர்பூசணிப் பழங்கள் வண்டிகளில் வந்து இறங்கியதைக் கண்டு பாபர் கண்ணீர் வடித்துள்ளார். அவரைப் பொறுத்தவரை இந்தப் பழங்கள் கிடைக்காமல் போனது மதுவருந்த முடியாமல் போனதற்கு இணையான சோகம்.

தனது சுயசரிதையில், ”மற்றவர்கள் மனம் வருந்திய பின் மது குடிப்பதில்லை என சங்கல்பம் செய்கின்றனர்.. நானோ மது குடிப்பதில்லை என சங்கல்பம் செய்தபின் மனம் வருந்தினேன்” என எழுதியுள்ளார் பாபர். ஆனால், வெறுமனே குடிப்பதற்கோ உண்பதற்கோ மாத்திரம் பாபர் இந்தியாவுக்கு வரவில்லை; இங்கேயே தங்கும் முடிவில் வந்து சேர்ந்தார். இங்கே எப்படி வாழ்ந்தார் என்பது அவரின் வழித்தோன்றல்களின் கையில்தான் இருந்தது. பாபர் இந்திய நிலப்பரப்பைக் கைப்பற்றிய ஐந்தாண்டுகளில் இறந்து போனார்; அவரது வாரிசுகளோ மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தினர்.

படிக்க :
♦ வரலாறு : ஷாஜகானை விஞ்சிய இந்து முஸ்லீம் காதலர்கள் !
♦ இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?

அந்த வெற்றியின் இரகசியத்தை அவர்களின் முகங்களில் இருந்தே கூட புரிந்து கொள்ளலாம். பாபரில் இருந்து அவுரங்கசீப் வரையிலான ஆறு முகலாய மன்னர்களின் படங்களை வரிசையாக வைத்துப் பாருங்கள்; நீங்கள் மிகத் தெளிவான வரலாற்று ரீதியிலான மாற்றங்களை அந்தப் படங்களில் பார்ப்பீர்கள். அவர்களுடைய பூர்வீக இடுங்கிய கண்களை மெல்ல மெல்ல இழந்து வாதுமைக் கொட்டை போன்ற கண்களைப் பெற்றனர். மூக்கு நீண்டு தனது வடிவத்தை மாற்றிக் கொண்டது. முகத்தில் வளரும் மயிர்கள் தடிமனாகவும் அடர்த்தியாகவும் ஆகின.

இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. முதலிரண்டு முகலாய மன்னர்களான பாபர் மற்றும் ஹுமாயுன் ஆகியோர் தான் மத்திய ஆசிய தாய்க்குப் பிறந்தவர்கள். அக்பர் மற்றும் அவுரங்கசீப் பெர்சிய பெண்களுக்குப் பிறந்தவர்கள். ஜஹாங்கீர் மற்றும் ஷாஜகான் ஆகியோர் ராஜபுத்திர பெண்களுக்குப் பிறந்தனர். தலைமுறைகள் செல்லச் செல்ல அவர்களின் அங்க லட்சணங்கள் மட்டும் மாறவில்லை; அவர்களின் உணவுப் பழக்கமும் மொழியும் கூட மாறின.

பாபர், ஹுமாயூன், அக்பர், ஜஹாங்கிர், ஷாஜஹான் மற்றும் ஔரங்கசீப் (இடமிருந்து வலமாக)

உதாரணமாக பாபர் தனது சுயசரிதையை தற்போது அழிந்து போய் விட்ட சாகதாய் எனும் துருக்கிய மொழி ஒன்றில் எழுதியுள்ளார். அதில் அந்த ஊர் தர்பூசணியைப் பற்றி நிறைய குறிப்பிடுகிறார். அவரது எள்ளுப் பேரன் ஜஹாங்கிர் தனது சுயசரிதையில் மாம்பழங்களைப் பற்றி நிறைய எழுதியுள்ளார். ஜஹாங்கீரின் சுயசரிதையான ஜஹாங்கீர்நாமா-வை ஹிந்துஸ்தானி கலந்த பெர்சிய மொழியில் எழுதியுள்ளார். காபூலுக்கு ஒருமுறை சென்ற ஜஹாங்கீர், அங்கே பாபர்நாமாவின் சில பக்கங்களைப் புரட்டி விட்டு அதைப் படிக்க முடிந்ததற்காக பெருமிதப்பட்டுக் கொள்கிறார். “என்னதான் நான் ஹிந்துஸ்தானத்தில் வளர்ந்திருந்தாலும், துருக்கிய மொழியை எழுதுவதையும் படிப்பதையும் இன்னும் மறக்கவில்லை” எனக் குறிப்பிடுகிறார் ஜஹாங்கீர்.

ஜஹாங்கிரின் வாரிசுக்கோ தனது பூர்வீக மொழியைப் பற்றி எந்த அக்கறையோ ஆர்வமோ கிடையாது. அதே போல் கடைசி முகலாய மன்னனான பகதூர் ஷா ஜாபர் இந்த துணைக்கண்டத்திலேயே உருவான உருது மொழியில்தான் புலமை பெற்றிருந்தார்.  அதே போல் இந்தியாவின் பண்டிகைகளும் முகலாய நாட்காட்டியில் முக்கிய இடங்களைப் பிடித்தன.  காஷ்மீரத்தைச் சேர்ந்த படகுகளையும், ஆற்றங்கரைகளையும், வீட்டுக் கூரைகளையும் தீபாவளிப் பண்டிகை நாளன்று விளக்குகளால் அலங்கரிக்க அக்பர் உத்தரவிட்டதைக் குறித்து அக்பர்நாமாவில் குறிப்புகள் உள்ளன.

அதேபோல் ஜஹாங்கிரின் ஓவியம் ஒன்றில் அவர் “ஏழ்மையை” ஒழிப்பதாக காட்டப்பட்டுள்ளது. அதில் ஏழ்மையின் குறியீடாக ஒரு வயதான மனிதர் வருகிறார் – அவரது பெயர் “தாலிதார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தாலிதார் என்பது இந்துக்கள் நம்பும் தரித்திராதேவி என்பதில் இருந்து உருவகம் செய்யபப்ட்டது. அதாவது தீபாவளி சமயத்தில் சிறீதேவியான லட்சுமியை வீட்டுக்கு அழைப்பதும், தரித்திரத்தை விரட்டுவது என்பதும் ஒரு நம்பிக்கை.

மற்றொரு ஓவியம் முகலாய பேரரசர் எந்தளவுக்கு இந்து நடைமுறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் என்பதை தெளிவாக விளக்குகிறது. அந்த ஓவியத்தில் பேரரசர் ஜஹாங்கீர் மேல்சட்டை அணியாமல், வெறும் கோவணம் போல் ஒன்றைக் கட்டிக் கொண்டு பத்மாசனத்தில் ஒரு இந்து துறவியைப் போல் அமர்ந்துள்ளார். இதைப் பற்றி சொல்லும் போது வரலாற்றாசிரியர் எப்பா கோச், “ஒரு இசுலாமிய மன்னனைக் குறித்த கற்பனை எந்தளவுக்கு இந்தியத்தன்மையோடு (தீவிரமானதும் கூட) இருக்க முடியும் என்பதற்கு இந்த ஓவியமே உச்சபட்ச அடையாளம்” என்கிறார்.

ஜஹாங்கீர்

எனினும், கோச்சின் சொந்த வார்த்தைகளிலேயே ஏன் ஜஹாங்கீரின் அரசு அடிப்படையிலேயே வெளியாருடையது எனக் கருதப்பட்டது என்பதற்கான சிறிய குறிப்பு உள்ளது. அவர்  “இந்திய” என்கிற வார்த்தைக்கு எதிராக “அந்நிய” என்கிற வார்த்தையை வைக்கவில்லை; மாறாக “இசுலாமிய” என்கிற வார்த்தையை வைக்கிறார். முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; தீபாவளி, தசரா, சிவராத்திரி, ராக்கி போன்ற படிகைகளைக் கொண்டாடி இருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம் – ஆனால் அவர்கள் ஒருநாளும் இந்துக்கள் ஆகிவிடமாட்டார்கள்.

படிக்க:
♦ ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !
♦ அல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் !

“நன்மை, கருணை மற்றும் நான்” நாடகத்தில் வரும் தந்தையைப் போல் சொல்வதானால்… “இதைப் பற்றிக் கொஞ்சம் யோசித்துப் பாரேன்”: தாஜ்மகாலை உடைத்து நொறுக்க வேண்டும் என்கிற அரசியலுக்கு ஃபெர்கானாவின் மேல் எந்த ஆத்திரமோ துவேஷமோ கிடையாது. சொல்லப் போனால், வெகு சில இந்தியர்களுக்குத் தான் அப்படி ஒரு நகரம் இருப்பதே தெரிந்திருக்கும். எனவே முகலாயர்களின் பூர்வீக நாட்டின் மீது எந்த வெறுப்பும் இல்லை; மாறாக அவர்களின் மதம்தான் சிக்கல் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அவர்கள் தங்களுக்குப் பின் இந்தியாவின் அடையாளமாக கலை, கலாச்சாரம், கட்டிடங்கள், உணவு என நிறைய விட்டுச் சென்றிருக்கலாம்; ஆனால், அவர்களது “இந்தியத்தன்மை” எப்போதும் சந்தேகிக்கப்பட்டு விவாதிக்கப்படும்; பல்வேறு நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டு, கட்டிடங்கள் இடிக்கப்படுவதன் மூலம் முகலாயர்களுக்குப் பாடம் புகட்டுப்படுவதற்குக் காரணம் அவர்களின் “இசுலாமியத்தன்மை”.

நவீன இந்தியாவின் மாபெரும் துயரம் என்பது நமது கடந்த காலத்திற்கு நிகழ்கால அரசியலின் மேல் இருக்கும் பிடிமானம் தான். ஆனால், இது போன்ற சின்னத்தனங்கள்தான் இந்தியனாக இருப்பதற்கான அடையாளமோ?

தமிழாக்கம்:

கட்டுரையாளர் : பார்வதி சர்மா
நன்றி  :
 scroll.in

இறைச்சித் தொழிலை அழிக்கும் பாஜக ! இறைச்சி சங்கத்தின் அன்வர் பாஷா நேர்காணல்

டந்த 17-ம் தேதி (17.11.2018) அன்றுதான் இந்த ‘நாய்க்கறி’ செய்தி வெளிவந்தது. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ராஜஸ்தான் ஜோத்பூரில் இருந்து சென்னை வந்த ஆட்டுக்கறியை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்திருக்கின்றனர். அதற்குள் அது நாய்க்கறி என்று சொல்லி வதந்தியை பரப்பினர்.

அதன் உண்மைத்தன்மையை அறியாமல்  ஊடகங்களும் அப்படியே வாந்தியெடுத்தன. அதனை பார்த்த/படித்த வாசகர்களும் வாட்சப் வாயிலாக பகிர ஒரே பரபரப்பானது.  கைப்பற்றிய இறைச்சியை கால்நடை மருத்துவமனைக்கு  சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் அந்த கறியை ஆர்டர் செய்த ஷகிலா என்பவரும் அது நாய்க்கறி இல்லை, ஆட்டு இறைச்சிதான் என்பதை ஆதாரங்களுடன் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்தார். முசுலீம்கள் மீது கட்டமைக்கப்பட்டிருக்கும் பொதுப்புத்தியால் முதலில் அதனை யாரும் நம்பவில்லை.  இறுதியில் சோதனைக்கு சென்ற இடத்தில் இது ஆட்டு இறைச்சிதான் என்று ஊர்ஜிதமானது. பிறகு அந்த இறைச்சியில் அனுப்புநர் முகவரி தெளிவாக இல்லை, இறைச்சி கெட்டுப் போய் இருந்தது, மீன் பெயரில் வந்தது என்று பல்வேறு காரணங்களை சொல்லி சமாளித்து, தற்பொழுது வழக்கும் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி சில்லறை வியாபரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரோஷி அவர்களிடம் எடுத்த நேர்காணல்.

ஆடு மாட்டிறைச்சிக்கு எதிராக தொடர்ச்சியான வதந்திகள் வருவதன் பின்னணி என்ன? தற்பொழுது நடந்ததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

“மனிதர்களுக்கு காய்ச்சல் என்றால் என்ன செய்வார்கள். மருத்துவமனைக்கு சென்று ரத்தப் பரிசோதனை செய்து பார்த்த பிறகுதான் அது என்ன காய்ச்சல் என்று தெரிய வரும். அதுபோல பறிமுதல் செய்த இறைச்சியை கால்நடை ஆய்வகங்களுக்கு அனுப்பி சோதனை செய்த பின்னரே அதிகாரிகள் முடிவை அறிவித்திருக்க வேண்டும். அப்படி செய்யாதது முதலில் தவறு. கண்டிக்கத்தக்கது.

சென்னை ஆட்டிறைச்சி கோழி இறைச்சி சில்லறை வியாபரிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்வர் பாஷா குரோஷி

அந்த பெட்டியில் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்று சொல்கிறார்கள், எனில், நாம் ஒரு நபருக்கு கொரியர் அனுப்புகிறோம். அதில் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்றால், கொரியர் நிறுவனம் ஏன் ஃப்ரம் அட்ரஸ் இல்லை என்று கேட்பது வழக்கம். அப்படி ரயிலில் அனுப்பும்போது புக் செய்த ரயில்வே நிர்வாகம் ஏன் அதை கவனிக்கவில்லை? அரசு இறைச்சிக் கூடத்தில் இருந்து அனுப்பியவை அல்ல என்கிறார்கள். இறைச்சிக் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை செய்வது வழக்கம். ஏற்றுமதி செய்யக்கூடிய அளவில் ஒரு கடை உள்ளது என்றால் அது அதிகாரிகளுக்கு தெரியாமலா இருக்கும்? ஏன் இதனை அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

இறைச்சிக்கு எதிராக இதுபோன்று வருவது புதிதல்ல. ஏறக்குறைய பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை இருந்து வருகிறது. எனக்கு சினிமா பார்க்கும் பழக்கம் அதிகம் என்பதால் நான் பார்த்த பல படங்களில் கொலை, கொடுஞ்செயல் செய்வது எல்லாம் முசுலீமாகத்தான் காட்டி வருகிறார்கள். அதிலே இதுவும் ஒருவகைதான். இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ்-ஸினுடைய அழுத்தம் இருக்கத்தான் செய்கிறது. மாடுதான் அவர்களுடைய பகவானாக இருக்கிறது. மற்றதில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை.”

தமிழகத்தில் ஆட்டிறைச்சி கிடைக்கும்போது வெளி மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதன் தேவை என்ன?

தமிழகத்தில் இன்றைக்கு ஆடு மிகவும் பற்றாக்குறையாகி விட்டது. கிராமத்தில் இருந்தவர்கள் எல்லாம் படித்து விட்டு நகரத்தை நோக்கி வந்துவிட்டதால் ஆடு வளர்ப்பும் குறைந்துவிட்டது. மேலும் விலையும் அதிகம். ஆனால் கறி சுவையாக இருக்கும். அதேபோல ஹைதராபாத், மகாரஷ்டிரா, குண்டூர், கூடூர், பெங்களூர் போன்ற இடங்களில் உள்ள ஆடுகள் கொஞ்சம் தரமானதாக இருக்கும். அங்கேயும் விலை அதிகம்.

படிக்க :
♦ ஆட்டுக்கறிய நாய்க்கறின்னு கூவுனவன் எவன்டா ?
♦ தென்னிந்தியாவின் உணவு இட்லி தோசையா – இறைச்சியா ? மு.வி.நந்தினி

ஆனால், ராஜஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆட்டிறைச்சியின் விலை மிகவும் குறைவாக இருக்கும். இந்தத் தொழிலில் மார்வாடிகள் உட்பட எல்லா ஜாதியினரும் இருக்கிறார்கள். ஆனால் அங்கே யாரும் சாப்பிடுவதில்லை. அதனால் வெறும் 300 ரூபாய்க்கு அனுப்பி விடுகிறார்கள். இது இன்னும்கூட விலை குறைவாக இருக்கும். அதனால் வாங்குகிறார்கள்.

மேலும், ஐந்து நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுபவர்கள் கேட்பது லெக் பீஸ்தான். அதுவும் 500 ரூபாய்க்கு கேட்கிறார்கள். எங்களுக்கு கிடைப்பதே அந்த விலைக்குத்தான் எனும்போது எப்படி அது கட்டுப்படியாகும். ஆக ராஜஸ்தான் ஆடு குறைந்த விலைக்கு கிடைக்கிறது. அவர்களுக்கு லெக் பீஸ் கொடுத்து விட்டு அதன் சதைக்கறி, மார்பு கண்டம், இடுப்பு பகுதிகளை மற்ற உணவகங்களுக்கு தருவார்கள். நட்சத்திர ஓட்டலில் சாப்பிடுபவர்களுக்கு உள்ளூர் கறியின் சுவை என்ன என்பதெல்லாம் தெரியாது. அவர்களுக்கு தேவை லெக் பீஸ். அதைக் கொடுத்தால் சாப்பிட்டுவிட்டு செல்வார்கள். அவ்வளவுதான்.

ராஜஸ்தான் ஆட்டையே உயிரோடு வாங்கி வந்தால் பிரச்சினையில்லை. அதனை வெட்டி ஐஸ் பெட்டியில் வைத்து அனுப்பி விடுகிறார்கள். அங்கிருந்து வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகிறது. அதற்குள் அது கெட்டு  விடுகிறது. அதனால்தான் அந்த மாதிரி தெரிகிறது. மற்றபடி நாய்க்கறியை வாங்கி போடுமளவிற்கு மோசமான மனிதர்கள் இல்லை. வெறுமனே வாலைப் பார்த்து சொல்வது மிகமிக தவறு.

அதேபோல் இறைச்சி இறக்குமதி செய்பவர்களும் இறைச்சிக்கடைகள் அரசால் அனுமதிக்கப்பட்டவையா, அதன் தரம், இறைச்சி கூடத்தின் அனுபவம் எல்லாவற்றையும் கவனித்து வாங்க வேண்டும். இல்லையெனில் தொழில் கடும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என்பதை உணரவேண்டும்.

ஒருவேளை அதிகாரிகள் இதனை பறிமுதல் செய்யாமல் இருந்திருந்தால் இந்த இறைச்சி விற்பனையாகி இருக்கும்தானே?

மனமுவந்து எப்படி செய்ய முடியும்? இறைச்சி கெட்டுவிட்டது என்று தெரிந்தாலே கொடுக்க மாட்டோம். கறிக்கு ஒரு தன்மை இருக்கிறது. ஆட்டுக்கறி, மாட்டுக்கறியை பத்து மணி நேரம் சூடு பண்ணினாலும் எந்த பிரச்சனையும் இல்லை. சூடு பண்ணித்தான் விற்க முடியும். மத்தக் கறியை அவ்வாறு சூடு பண்ணினால் கெட்ட வாடை அடிக்கும். அதிலிருந்து இது எந்தமாதிரியான கறி என்பதை கண்டுபிடித்து விடலாம்.

எல்லா உணவகங்களுக்கும்  அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள். அதில் நல்லதா, கெட்டதா என்பதை கண்டுபிடித்து விட முடியும். அதனால் கெட்டப் பெயர் வியாபரிகளுக்குத்தான். ஆக தொழிலில் நீண்டகால லாபத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். ஒருவேளை நீங்கள் சாப்பிடும் உணவு கெட்டுப் போனதாகவோ, வேறு கறி மாதிரி தெரிந்தால் நீங்கள் தாரளமாக புகார் அளிக்கலாமே!

சென்னையில் இருக்கும் நடைமுறை என்ன? எப்படி எல்லா இடங்களுக்கும் கறி கொண்டு செல்லப்படுகிறது?

சென்னையில் மொத்தம் மூன்று ஸ்லாடர் ஹவுஸ் (இறைச்சிக் கூடங்கள்) இருக்கின்றன. பெரம்பூர், வில்லிவாக்கம், சைதாபேட்டை ஆகிய இடத்தில் உள்ளன. இதனை நம்பி 2000 மட்டன் ஸ்டால்கள், 6000 தொழிலாளிகள் இருக்கின்றார்கள். அதுபோக தனிக்கடைகளாக நீலாங்கரை, குன்றத்தூர், போரூர், ஆகிய இடங்களில் இருக்கின்றது.

சென்னை சிட்டி லிமிட்டில் உள்ள பெரம்பூர் இறைச்சிக் கூடத்தில் சாதாரண நாட்களில் 1,500 ஆடுகளும், ஞாயிற்றுக் கிழமையில் 4,000 ஆடுகளும் வெட்டப்படும். இங்கிருந்து 300 மட்டன் ஸ்டால்கள் கறிவாங்கிச் சென்று விற்பனை செய்வார்கள்..

இறைச்சிக்கூடத்தில் உயிருள்ள ஆட்டை வெட்டுவதற்கு முன் எதாவது நோய் தொற்றியுள்ளதா என்று கால்நடை மருத்துவர்கள் சோதனை செய்வார்கள். அதன்பிறகே அறுப்பதற்கு அனுமதி வழங்குவார்கள். ஆட்டின் தொடையில் அதிகாரிகள் முத்திரை குத்திய பிறகே அவை வெளியே கொண்டு வரப்படும். இதுதான் நடைமுறை. அந்தக்கறி 100% தரமானது. இதனோடு ஒப்பிடும்போது ராஜஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்ட கறி தரமானதாக இருக்காது. அதற்கான காரணத்தை முன்னதாகவே சொல்லியிருப்பேன்.

அதேபோல் நம்மூரிலேயே சிலர் தனியாக கடைவைத்து வெள்ளாடு, செம்மறிஆடு வாங்கி வந்து அறுக்கிறார்கள். அது முழுக்க முழுக்க இல்லீகல். மருத்துவரின் ஒப்புதல் இல்லாமல் அறுக்கக் கூடாது. இருந்தாலும் கடைகள் தனியாக வைப்பதற்கு காரணம் போதுமான இறைச்சிக்கூடம் இல்லை. பெரம்பூர் ஆடுதொட்டி நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தது. அந்த காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகிறது. அப்புறம் வில்லிவாக்கம், சைதாபேட்டையில் இருக்கிறது. இது மட்டும் போதாது. நிறைய இறைச்சிக் கூடங்கள் அரசு சார்பாக திறக்க வேண்டும். அப்பொழுதுதான் தரமான கறி பஞ்சமில்லாமல் மக்களுக்கு கிடைக்கும். ஆனால், அரசு அதை ஏன் செய்ய மறுக்கிறது என்று தெரியவில்லை. நான் இதற்காக பல முயற்சியை எடுத்து விட்டேன். ஒன்றும் நடக்கவில்லை.

தற்போது பரவிய இந்த நாய்க்கறி வதந்தியால் விற்பனை பாதிக்கப்பட்டதா?

ஆமாம். மகாவீர் ஜெயந்தி, மகாவீர் நிர்வாண் டே என்று மொத்தம் 16 நாட்கள் ஸ்லாடர் ஹவுசுக்கு லீவு. இந்நாளில் ஆடு வெட்டக்கூடாது. வெட்டிய கறியும் விற்கக்கூடாது என்று தடை இருக்கிறது. இதனால் வியாபாரம் பாதிக்கப்படுகிறது.

கிருத்திகை, புரட்டாசின்னு வரும் நாட்களில் வீட்டில் செய்ய மாட்டார்கள். ஆனால் கடையில் வந்து சாப்பிடுவார்கள். இன்னொரு பக்கம், இன்றைக்கு ஆன்லைன் பிசினஸ் வந்து விட்டது. நல்லது கெட்டது என்றால் வீட்டில் சமைப்பது இல்லை. ஆர்டர் கொடுத்து பக்கெட்  பிரியாணி வாங்கிக்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். இதனால் கறி விற்பனையும் குறைந்து வருகிறது.

முன்பெல்லாம் தீபாவளிக்கு இரவு முழுவதும் கடை இருக்கும். இப்பொழுது இல்லை.   இந்த மாதிரி சமயத்தில் வதந்தி பரவினால் எப்படி விற்பனையாகும். சாப்பிடும்போது அந்த சிந்தனைதானே வரும். இந்த பிரச்சனைக்கு பிறகு 20% வரை விற்பனை குறைந்து விட்டது.

ஆடுகளை வெளியூரில் இருந்து கொண்டு வருவதற்கு எதாவது தடைகள் இருக்கிறதா?

தமிழகத்திற்குள் எதுவும் இல்லை. ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து கொண்டு வர சிரமம் இருக்கிறது. குண்டூர் ஆட்டின் கறி நன்றாக இருக்கும்.  ஆனால் இதனை கொண்டு வர பத்து இடத்தில் மாமூல் கொடுக்க வேண்டும்.  உதாரணமாக ஒரு லாரியில் அதிகபட்சம் 230 ஆடுகள் கொண்டு வரலாம். அப்படி கொண்டு வரும்போது செக் போஸ்டில் இருப்பவர்களுக்கு மாமூல் கொடுக்க வேண்டும்.

விலங்குகள் நல வாரியம் பிடித்தால், தண்ணீர் காட்டினியான்னு கேட்டு மிரட்டுவாங்க. காட்டிட்டோம்னு சொன்னா, எதுக்கு அதிக ஆடு ஏத்துனன்னு கேட்பாங்க. இதனாலதான் பிரச்சனையே. இந்த பிரச்சனைய தவிர்க்கக்கூட ரயில் மூலமா கொண்டு வருவாங்க. இதுலயும் மாமூல் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது.

சரி! இப்ப கொண்டு வந்த இறைச்சிப் பெட்டியில மீன் என்று குறிப்பிட்டு இருந்ததா சொல்றாங்களே?

நீங்க ஏர்போர்ட்டுக்கு போனிங்கன்னா வெளிநாட்டில் இருந்து கொண்டு வரப்படும் பொருளுக்கு ஏற்ற மாதிரி வரி வசூலிப்பாங்க. அதுபோல இங்க மீனுக்கு ஒரு வரி, மட்டனுக்கு அதிக வரின்னு வாங்குறாங்க. அதனை தவிர்க்கத்தான் இந்த மாதிரி எழுதி வருகிறது. எனவே இந்த தொழிலில் இருக்கின்ற நடைமுறை பிரச்சனைகளை எல்லாம் களைய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த பிரச்சினையால் மக்களுக்கு பெரும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி சரி செய்ய போகிறீர்கள்?

எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு நேர்மையாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் ரயில்வே, கார்ப்பரேசன் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அனைவரும் கூட்டாக சேர்ந்து நடந்த தவறு குறித்து பேட்டி அளிக்க வேண்டும். அதன்மூலம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கிற குழப்பத்தை போக்க வேண்டும். இது அவர்களின் கடமை.

தொடர்ந்து மாட்டிறைச்சிக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்பிஜேபி எதிர்ப்பு தெரிவித்து வருகிறதே?

அப்படியானால் குஜராத், ராஜஸ்தானில் இவர்கள் ஆட்சிதானே. ஆடு-மாடு வெட்டுவதை ஏன் இவர்கள் தடை செய்யவில்லை? ஏனெனில், குஜராத், ராஜஸ்தான் மார்வாடிகள்தான் இந்த தொழிலில் இருக்கிறார்கள். முசுலீம் பெயரில் கடை இருக்கும். ஆனால் உரிமையாளர் ஒரு மார்வாடியாக இருப்பார். இங்கிருந்து இறைச்சியை டன் கணக்கில் ஏற்றுமதி செய்கிறார்கள். அதை ஏன் தடை செய்யவில்லை. இவர்களோட ஆட்களுக்கு லாபம் எந்த விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். அவ்வளவுதான்.

படிக்க :
♦ விரைவில் பிரியாணிக்கு தடை – மோடி அரசு அடக்குமுறை
♦ குஜராத்தில் சிக்கிய நான்-வெஜ் பிராமின் !

மேலும், அசைவம் சாப்பிடக்கூடாது, மிருகத்தனமானவர்களா மாறிவிடுவார்கள் என்கிறார்கள். இந்தக் கருத்து முட்டள்தனமானது. எந்த உணவையும் சம அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கதிகமாக எதை உட்கொண்டாலும் ஆபத்துதான். எனக்கு தெரிந்து வீட்டில் அசைவம் சாப்பிடவில்லை என்றால் கடைகளில் வந்து சாப்பிடுகிறார்கள். சைவத்தில் இருந்து அசைவத்துக்கு மாறியவர்கள்தான் அதிகம். மனிதனே மனிதனை சாப்பிடும் (ஒருவனை ஒருவன் ஏமாற்றும்) காலத்தில் இருக்கிறோம், எனும்போது கறி சாப்பிடக்கூடாது என்பது தப்பு. இந்த விஷயத்தில் அரசியல் சதி-அதிகாரிகளின் சதி இருப்பதாகத்தான் பார்க்கிறேன்.

இனி வரும் காலத்தில் இறைச்சித் தொழில் சுமூகமாக நடக்குமா?

பிஜேபி – ஆர்.எஸ்.எஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தொழில் செய்ய முடியாது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதன் மூலம் அரசுக்கு  பெரும் இழப்பு ஏற்படும்.

காவிரி டெல்டா – துயரம் துரத்தும் நிலம் | வில்லவன்

0

வில்லவன்
சில ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சையில் ஒரு தோழரோடு உரையாடுகையில் அவர் குறிப்பிட்டார் “இது செத்துக்கொண்டிருக்கும் நகரம், இங்கு செட்டில் ஆவது குறித்து சிந்திக்காதீர்கள்”. அவை ஏதோ விரக்தியில் வெளிப்பட்ட வார்த்தைகள் அல்ல. பழைய தஞ்சாவூரை வேட்டையாட பல்வேறு பெருந்திட்டங்கள் காத்திருக்கின்றன.

நிலக்கரி, மீத்தேன், பாறை எரிவாயு, பெட்ரோல் என பல அகழ்வுத் தொழில்கள் முற்றுகையிடவிருக்கின்றன. மன்னார்குடி – முத்துப்பேட்டைக்கு இடையே உள்ள எங்கள் கிராமம் எப்போது வேண்டுமானாலும் நிலக்கரி அகழ்வுப் பணிகளுக்கு கைப்பற்றப்படலாம் (பத்திரப்பதிவின் போது அந்த எச்சரிக்கை தரப்படுகிறது). மீத்தேன், ஷேல் கேஸ், பெட்ரோல் வெயிட்டிங் லிஸ்ட் ஊர்கள் தனி.

தஞ்சை டெல்டா பன்னெடுங்காலமாக வளமான பூமிதான். ஆனால் அங்கிருந்த பெரும்பான்மை உழைக்கும் மக்கள் வறுமையில்தான் இருந்தார்கள். உழைப்பதைத்தவிர வேறெதையும் அறியாமல் வாழ விதிக்கப்பட்டவர்கள் அவர்கள். முப்போகம் விளையும் காவிரி வடிநிலத்தில்தான் என் அப்பாவும் மற்றவர்களும் மார்கழி மாதத்தின் பசியை வெறும் முருங்கைக்கீரையைத் தின்று சமாளித்திருக்கிறார்கள். என் ஒன்றுவிட்ட சகோதரர்களும் சகோதரிகளும் பாதி இடிந்த வீட்டில் பல வருடகாலம் வாழ்ந்திருக்கிறார்கள். இருபது வருடங்களுக்கு முன்பு சன்ன அரிசியில் சமைக்கப்பட்ட சாதத்தை எந்த உறவுக்காரர்கள் வீட்டிலும் சாப்பிட்டதாக நினைவில்லை. ஐ.ஆர்.20 அரிசியே அப்போது அரசு வேலையில் இருப்போர் வீடுகளில்தான் இருக்கும். அதிகம் தண்ணீர் கலக்காத காபி டீ முதல் அழுது வடியாத குண்டு பல்புகள் வரையான அல்பமான தேவைகள்கூட கடந்த சில ஆண்டுகளில்தான் சாத்தியமானது.

தஞ்சாவூரின் வளமும் அந்த மக்களின் உழைப்பும் எல்லா காலத்திலும் மிக சொற்பமானவர்களை மட்டுமே வசதியோடு வைத்திருந்தது. சமீபகாலத்தில் பரவலாக கிடைத்திருக்கும் மிகச்சொற்ப வசதிகளும்கூட வெளியூர், வெளிநாடுகளில் வேலைக்குப் போய் சம்பாதிக்கும் ஆட்களால் கிடைத்ததுதான். இன்னமும் விவசாயத்தை நம்பி வாழும் எங்கள் உறவுக்காரர்கள் வீடுகளில் தரித்திரம் மட்டும்தான் சவுகர்யமாக இருக்கிறது. வளைகுடா வேலைகளும் திருப்பூர் வேலைகளும் இல்லாவிட்டால் தஞ்சையில் பட்டினிச் சாவுகள்கூட தினசரி செய்தியாக இருந்திருக்கும். நேர்மையாக சொன்னால் விவசாயம் தஞ்சை மக்களை காப்பாற்றவில்லை மாறாக மக்கள்தான் வெளியே வேலைக்குப் போய் விவசாயத்தை காப்பாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

கஜா புயலுக்கு அடுத்தடுத்த நாட்களில் தொலைக்காட்சிகளில் பேசிய விவசாயிகளில் பலரும் ஆயிரக்கணக்கில் செலவிட்டு உரம் போட்டதாக சொல்லித்தான் அழுதார்கள். அவ்வப்போது பசுமை விகடன் வாசிக்கும் மத்தியதர வர்க்கம் விவசாயம் ஒரு இலாபகரமான தொழில் என்பதாக கற்பனை செய்துகொண்டிருப்பதை பார்த்திருக்கிறேன். ஆனால் உண்மையில் அடுத்த வெள்ளாமைக்கான கடனை இப்போதே பலர் வாங்கியிருப்பார்கள். தஞ்சாவூரில் இத்தனை குடிசைகள் இருக்கும் செய்தி தஞ்சையில் வசிக்கும் பல நகரவாசிகளுக்கே இப்போதுதான் தெரிந்திருக்கும். உங்கள் கிராமங்களில் இருந்து பாலை கொண்டுவருகிறோம் எனும் பழைய ஆரோக்யா பால் விளம்பரத்தை நீங்கள் பார்த்திருக்கக்கூடும், அதே கிராமங்கள்தான் இப்போது யாரேனும் தன்னார்வலர்கள் பால் கொண்டு வருகிறார்களா என காத்திருக்கிறார்கள்.

படிக்க:
மாற்று ஊடகத்திற்கான தேவை – வில்லவன்
நாங்க ஒடுக் பிராமணர்கள், எங்களுக்கு இங்க லைக்ஸ் கிடைக்கிறது கஷ்டம்தான் !

புயல் அபாயம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் எதற்கு தென்னை விவசாயம் என அதி புத்திசாலித்தனமான கேள்விகளையும் ஆங்காங்கே கேட்க நேர்கிறது. எதை விதைப்பது என்பதை விவசாயிகள் தெரிவு செய்யும் காலமெல்லாம் மலையேறிவிட்டது. பட்டுக்கோட்டையை தாண்டி காவிரித் தண்ணீர் பாய்வதெல்லாம் அதிசயமாக நடக்கும் சம்பவம். அதனை நம்பி நெல்லோ கரும்போ நடுவது தற்கொலை முயற்சி. தண்ணீர் இல்லாவிட்டாலும் பிழைத்துக்கொள்ளும் பயிர்களை நோக்கி மக்கள் தள்ளப்பட்டார்கள் என்பதுதான் யதார்த்தம். பெரும்பான்மை மாற்றுப் பயிர்களை அரசுதான் பரிந்துரை செய்கிறது (காவிரி நீரை பெற்றுத்தர முடியாத கையாலாகாத்தனத்தை மறைக்க). பாமாயில் உற்பத்திக்காக எண்ணைப் பனை விளைவிக்கச்சொல்லி அரசு ஊக்குவித்தது. நம்பி பலரும் நட்டார்கள், பிறகு அம்முயற்சி அப்படியே கைவிடப்பட்டது. நட்டவர்கள் நட்டாற்றில் நின்றார்கள் (மரங்களை அப்புறப்படுத்தி பிறகு அதே வயலில் சிறு பயிர்களை நட நீங்கள் மீண்டும் கணிசமாக செலவிட வேண்டியிருக்கும், பிறகு ஓரளவு விளைச்சலைக் காண நீங்கள் இரண்டொரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்).

வெளியே வேலை பார்த்து எதற்கு அவர்கள் விவசாயத்தை காப்பாற்ற வேண்டும்?

தென்னை விவசாயி ராஜேந்திரன் : வங்கி கடன், சிங்கப்பூர் உழைப்பு, தொழிலாளி சேமிப்பு – அத்தனையும் அழிந்தது !

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது (மேலும் சில காரணிகளும் இருக்கலாம்). நிலத்தின் மீது அவர்களுக்கு இருக்கும் பிடிப்பு முதல் காரணம். அதுதான் அவர்களை நிலத்தை சும்மா போட்டுவைக்க விடாமல் தடுக்கிறது. திருப்பூரில் குடியேறிய என் நண்பரின் மனைவி, வீட்டில் சில காய்கறிச் செடிகளை விளைவித்தார். கத்திரியில் பூச்சி அடித்துவிட்டது. உடனே பூச்சி மருந்து வாங்கி வரச்சொல்லி நண்பரை நச்சரித்தார். இந்த நாலு கத்திரியில் என்ன கிடைக்குமென்று இப்படி மெனக்கெடுகிறீர்கள் எனக் கேட்டேன். அவருக்கு சரியாக பதில் சொல்லத் தெரியவில்லை. ஆனால் ஒன்று புரிந்தது, அவரால் தன் பயிர்கள் நாசமாவதை பார்த்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதன் பலன்களுக்கும் செலவுக்கும் ஒத்துப்போகுமா என்பதைக்கூட அவர் கணக்கிட முயலவில்லை. அவருக்கு அவர் செடிகள் வீணாகிவிடக்கூடாது அவ்வளவே. மழை பொய்த்து, ஆறு வறண்ட காலங்களில் லாரியில் தண்ணீர் வாங்கி நெல்லுக்கு பாய்ச்சிய விவசாயிகளை நீங்கள் பார்த்திருக்கக்கூடும். வெறுமனே இலாப நட்டக் கணக்குப் பார்த்தால் முக்கால்வாசி விவசாயிகள் பயிர்தொழிலைவிட்டு என்றைக்கோ ஓடியிருக்க வேண்டும்.

இந்த பிணைப்பை ஓரளவுக்கு அர்த்தமுடையதாக்க பல விவசாயிகள் வெளிநாடுகளில் கடுமையாக உழைத்து, அந்தப் பணத்தை தென்னை போன்ற நீண்டகால பணப்பயிர்களில் முதலீடு செய்கிறார்கள். பத்து வருடங்கள் பெரிய வருவாய் இருக்காது என்றாலும்கூட வேலை செய்ய முடியாமல் ஓய்ந்துபோய் ஊருக்கு வரும்போது தம் வயலில் (தோப்பில்) கொஞ்சம் உழைத்து ஓரளவுவேனும் சம்பாதிக்கலாம் எனும் நம்பிக்கையில் அப்படி செய்தவர்கள் ஏராளம். பணப்பயிர்கள் முதலில் பயிரிடுவோருக்கு ஓரளவு இலாபம் கொடுக்கும். அதை நம்பி தென்னை பயிரிட்டவர்கள் ஏராளம். பாதுகாப்பற்ற எதிர்காலம், வங்கி முதலீட்டில் இலாபமின்மை மற்றும் பெரிய முதலீடுகளை செய்ய இயலாமை ஆகிய களச்சூழல் வெளியே வேலைக்குப் போன விவசாயிகளையும் வயலை நோக்கி தள்ளுகிறது.

தென்னையும் உத்திரவாதமான முதலீடல்ல, சில ஆண்டுகளுக்கு முன்னால் விலை வீழ்ச்சி மற்றும் வண்டு தாக்குதல் ஆகியவை அவ்விவசாயிகளை மரணத்தை நோக்கி விரட்டியது (பலர் எண்ணிக்கொண்டிருப்பதைப் போல தென்னையை நட்டுவிட்டு வானத்தைப் பார்த்து காயை எண்ண முடியாது. உரம் போட, மருந்து தெளிக்கவெல்லாம் வருடா வருடம் ஆயிரக்கணக்கில் அழ வேண்டும்). ஆகவே பெரும் பணம் சம்பாதிக்காத டெல்டாவில் வயல் உள்ள ஒரு குடிமகன் தமது ஓய்வுகால முதலீட்டை தம் நிலத்தில்தான் போட்டாகவேண்டும். அதுமட்டும்தான் அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை.

படிக்க:
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
விவசாயியை வாழவிடு – மக்கள் அதிகாரம் மாநாட்டுத் தீர்மானங்கள் !!

டெல்டா இப்போது ஒரு மரண முற்றுகையில் இருக்கிறது. அதன் எதிர்பாரா தாக்குதல்களில் ஒன்றுதான் இந்தப்புயல். சூனியமாகவிருக்கும் பல இலட்சக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை கொஞ்சம் முன்கூட்டியே வர வைத்திருக்கிறது இப்புயல். வீடு கட்டுவது என்பது சாதாரண மனிதனின் வாழ்நாள் கனவு. இப்போது வீடிழந்த மக்கள் பலருக்கும் அது வாழ்நாள் கனவாகவே இருக்கப்போகிறது. இழந்த தோப்புக்களும் படகுகளும் அவர்களுக்கு கடைசியாக இருந்த மூலதனம். அதனை கஜா நசுக்கி வீசியிருக்கிறது. அவர்கள் எல்லோரும் தம் வாழ்வை பூஜ்ஜியத்தில் இருந்து துவங்க வேண்டும். ஆனால் தினசரி வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் செலவு மிக்கதாக இருக்கிறது. பத்து நாள் ஆகியும் இன்றுவரை உணவுக்கு கையேந்துகிறது டெல்டா.

இரக்கம் சில காலம் மட்டுமே வாழக்கூடிய உணர்வு. டெல்டாவின் தேவையில் ஓரிரு சதவிகிதத்தைகூட அதனால் பூர்த்தி செய்ய இயலாது. பழைய தஞ்சாவூர் மாவட்டம் ஜீவித்திருக்க தேவையானவற்றின் பட்டியல் மிக பிரம்மாண்டமானது.

கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுத்த நிலையில், மழையில் நனைந்த நெல் முளைத்தது.

♦ விளை பொருளுக்கான நியாயமான விலை (அரசு நெல் கொள்முதல் மையங்கள் சாக்குப் பைகள் இல்லை எனும் காரணத்தால் நெல்லை வாங்க மறுக்கும் கதைகள்கூட இங்கே சாதாரணம்)

♦ உத்திரவாதமான தண்ணீர் பாசனம் (காவிரி நீரை பெறுவது மட்டும் பிரச்சினை அல்ல. பெங்களூர் முதல் திருச்சி – தஞ்சை வரையுள்ள பல பெரு நகரங்களின் சாக்கடை சங்கமிக்கும் இடம் காவிரி. திருப்பூர் ஈரோடு சாயக்கழிவுகளின் புகலிடமும் காவிரிதான்),

♦ சுற்றுச்சூழல் அபாயங்கள் அதிகரிக்கின்றன, அவற்றை எதிர்கொள்வதற்கான ஏற்பாடுகள் (அனேக கிராமங்களில் மக்களை தங்கவைக்க போதுமான அவசரகால இடங்கள்கூட இல்லை)

♦ இனி அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும் புயல்களை எதிர்கொள்ளத்தக்க கான்கிரீட் வீடுகள், மக்களின் பெருமளவு பணத்தை விழுங்கும் கல்வியை இலவசமாக்குதல் (புயலால் பாதிக்கப்பட்ட பலரும் எப்படிப் பிள்ளையை படிக்க வைப்பேன் என்றே அழுதார்கள். கடந்த கால் நூற்றாண்டில் தஞ்சை பகுதியில் ஓரளவு வசதியான வாழ்வை பெற்றவர்கள் படித்து வேலைக்கு சென்றவர் மட்டும்தான். ஆகவே எப்படியாவது பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்துவிட வேண்டும் எனும் பெருவிருப்பம் மாவட்டமெங்கும் மக்களிடையே வியாபித்திருக்கிறது. கல்வியும் மருத்துவமும்தான் மக்களின் பெருமளவு சேமிப்பைத் தின்கின்றன)

சம்பா பயிர் கருகியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட தஞ்சை ஆலக்குடியைச் சேர்ந்த விவசாயி முருகானந்தம். (கோப்புப் படம்)

♦ விவசாய கூலித்தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச வேலை உத்திரவாதம் (அடுத்த சில மாதங்களுக்கு விவசாய வேலை என்பது இங்கே சாத்தியம் இல்லை).

♦ மக்கள் மீதும் சூழல் மீதும் கொஞ்சமும் இரக்கம் காட்டாத பெருந்திட்டங்களை நிராகரிக்கும் உரிமை.

இவையெல்லாம் நம்மில் பலருக்கு நகைப்புக்குரிய கோரிக்கையாக தோன்றக்கூடும். ஆனால் இவற்றை முழுமையாக செய்யாவிட்டால் இந்த மண் சோமாலியாவைப்போல மாறுவதைத் தடுக்கவே முடியாது. மக்களை ஒருவேளை சோற்றுக்கு சாலையில் ஓடவிட்டதில் மேற்சொன்ன எல்லாவற்றுக்கும் ஓரளவு பங்கிருக்கிறது. அந்த மண்ணின் மீது அக்கறையிருப்பவர்கள் இவை எல்லாவற்றுக்காவும் பேசியாக வேண்டும். இல்லாவிட்டால் நாம் நிரந்தர நிவாரண முகாம்களை அமைத்து கொடையாளர்களை தேடி அலைய வேண்டியிருக்கும்.

வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

பூங்கொடிகள் வலிமையானவர்கள் !

ந்த வருடத்தில் நான் சந்தித்த இரண்டாவது பூங்கொடி இவர். முதல் பூங்கொடி, தோழர் முகிலனின் இணையர். சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் செல்லும் வண்டிகளில் பெண்கள் பெட்டியில் இவரை நீங்கள் பார்க்கலாம். ‘கடல..பட்டாணி சுண்டல் பத்து ரூபாஎன விற்றுக் கொண்டிருப்பார். எப்போதாவது அவரிடம் ஒரு பாக்கெட் சுண்டல் வாங்கினால் இனாமாகக் கொஞ்சம் புன்னகையைப் பெறலாம். பல நாள் இடைவெளிவிட்டுச் சந்தித்தால்எப்படி இருக்கிங்க?’ என்று பரஸ்பரம் கேட்டுக் கொள்வோம். எங்களது அதிக பட்ச உரையாடல் அவ்வளவுதான். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு இரவு பயணத்தில் அவருடன் ஆர அமரப்பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.

எங்கே?” என்றார்.

புகைப்படம் எடுக்க வெளியூர் பயணம்என்றேன்.

இந்த வேளையில வெளியூருக்கா? வீட்டுல அப்பா அம்மா ஏதும் சொல்லமாட்டாங்களா?” என்று அடுத்த கேள்வி.

இல்ல. அப்பாதான் எனக்கு பக்கபலமே!” என்றேன்.

! எத்தனை வயசு இப்போ?”

“28!”

நீங்க ஒரே பொண்ணா?”

இல்ல. குட்டி தம்பி இருக்கான்!”

ம்ம்ம். உங்க வயசுல எனக்கு கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைங்க இருந்துச்சு! ரொம்ப சின்ன வயசுலயே கல்யாணம் செய்துட்டாங்க. இப்போ பெரிய பையன் ஏழாவது படிக்கிறான். படிப்ப விட்டது எவ்வளவு தப்புனு இப்ப நினைச்சு பார்க்கறேன்

இரண்டு பிள்ளைங்களா? உங்களப் பாத்தா ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மான்னு நம்பவே முடியல! இப்போ என்ன வயசாகுது உங்களுக்கு?”

“33!”

அப்போ நான் உங்கள பூங்கொடி அக்கானே கூப்பிடலாம்!” ( சிரித்தபடி)

! கூப்பிடலாமே” (அவரும் சிரிக்கிறார்)

லவ் மேரேஜ்தானே? அழகா சிரிக்கறிங்க லவ் மேரேஜாதான் இருக்கும்!”

ஏன்டா நீங்க வேற! நானே டைவர்ஸ்க்கு கோர்ட்டுக்கு அலைஞ்சிட்டு இருக்கேன்..”

அத்தனை மகிழ்ச்சியான முகத்தின் வாழ்க்கை எத்தனை உயிர்ப்பானதாக இருக்கும் என்று அவரைப் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் மகிழ்ந்துகொண்ட எனக்கு அவரது அந்த பதில் எதிர்பார்க்காததாகவே இருந்தது.

ஏன்க்கா..!”

அந்த மனுசன் ஒரே குடிம்மா!. நாந்தான் குடும்பத்த காப்பாத்தியாகனும். இதுல நைட்ல இப்படி சுண்டல் வித்துட்டு வீட்டுக்குப் போனா, ‘எவன பாத்துட்டு வரன்னு சந்தேகப்படுது வேற. நம்மால முடியல! ரெண்டு புள்ள பெத்தாச்சு. இனிமே நா யாரப் பாத்து என்ன செய்யப்போறேன்?”

அப்போ.. பிள்ளைங்கள யாரு பாத்துக்கறாங்க?”

அம்மாதான்!”

அப்போ! உங்க வருமானம் தான் குடும்பத்துக்கா?”

ம்ம்ம். பிள்ளைங்க படிப்பு.. அம்மாவுக்கு உடம்பு சரியில்ல, அவங்களப் பாத்துக்கனும். எல்லாத்துக்கும் என் வருமானம்தான்!”

தாலி இல்லையா, இனி வீட்டுப் பக்கமே வராதே!நா உங்களுக்கு வேற வேல பாத்துத் தரவா?”

பத்தாவது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். எனக்கு என்ன வேல கெடைக்கப் போவுது?”

பத்தாவது படிச்சிருக்கிங்க!. அதெல்லாம் கெடைக்கும்..! தேடவா? சூப்பரா.. மனசுக்கு பிடிச்ச மாதிரி

(சிரிக்கிறார்..)

எங்கக்கா நீங்க எறங்கனும்?”

மவுண்டுடா…!..ஹ்ம்ம்ம்.உங்ககிட்ட இன்னிக்கு பேசுனது மனசுக்கு தெம்பா இருக்கு

அதெல்லாம் இல்ல. நீங்கதான் தெம்பானவங்க. உங்ககிட்டதான் நான்லாம் கத்துக்கனும்!”

யாரு..என்கிட்டயா?” என்றுவிட்டு சட்டென இரண்டு கன்னங்களிலும் முத்தமிட்டுவிட்டு தன் சுண்டல் பையைத் தூக்கிக் கொண்டு நகர்ந்தார். மவுண்ட் ரயில் நிலையம் வந்திருந்தது.

நா வரேன்!..” என்று உரக்கக் கூறிக்கொண்டே சென்றது ரயிலின் சத்தத்துக்கிடையே கேட்டது.

படிக்க:
பெண் : வலியும் வலிமையும் – புதிய கலாச்சாரம் மின்னூல் !
பெண்களின் பாதுகாவலர்கள் : அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் | வே.மதிமாறன் உரை

இங்கு எத்தனையோ போராட்டங்களுக்கு அடித்தளமாக ஒரு பெண்ணாக நாம் செய்ய வேண்டிய முக்கியப் பணி ஒன்று இருக்கிறது. அது நம் அருகிலிருக்கும் மற்றொரு பெண்ணை வலிமையாக்குவது. துரோகங்கள், சண்டைகள், சிக்கல்கள், சச்சரவுகள், புறங்கூறுதல் என சில்லரை விஷயங்களைக் கடந்து எவ்வளவு பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒரு பெண்ணாக வலிமையுடன் மற்றொரு பெண்ணுக்காக நாம் அறத்துடன் நிற்பது. அது நீங்கள் அறியாத பல வகைகளில் பூமியை உய்யச் செய்திருக்கும். பூங்கொடி அக்கா அவளது எத்தனையோ புன்னகைகளில் என்னை வலிமையாக்கியிருக்கிறாள். அன்பின் வெளிப்பாடு அருகில் இருப்பவர்களை வலிமையாக உணரச் செய்யும். வலிமைதான் வாழ்க்கை.

பூங்கொடிகள் வலிமையானவர்கள்!

முகநூலில்: Aishwarya Govindarajan

வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 30 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
“பாடுங்கள், அம்மா, என் அருமை அம்மா!” என்று கத்தினான் ஹஹோல். “அதுதான் வாழ்க்கை!”

அவன் முதலில் தானே பாடத் தொடங்கினான். அவனது குரல் பிற சப்தங்களையெல்லாம் விழுங்கி விம்மி ஒலித்தது. தாய் அவனைத் தொடர்ந்து சென்றாள். திடீரென அவள் தடுமாறினாள். கால் தவறி ஆழங்காணாத பாதாளக் குழிக்குள் விழுந்தாள். அந்தப் பிலத்தின் சூன்யத்தில் பயங்கரக் குரல்கள் கூச்சலிட்டு அவளை வரவேற்றன …..

மேலெல்லாம் நடுங்கிக் குளிர அவள் திடுக்கிட்டு எழுந்தாள். அவளது இதயத்தை ஒரு கனமான முரட்டுக் கை அழுத்திப் பிடித்து. கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கி முறுக்கிப் பிழிவதில் ஆனந்தம் காண்பதுபோல் தோன்றியது. ஆலைச்சங்கு இடைவிடாது அலறி முனகி, தொழிலாளர்களை அறைகூவி அழைத்துக்கொண்டிருந்தது. அது இரண்டாவது சங்கு என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். அந்த அறை முழுவதிலும் புத்தகங்கள் இறைந்து கிடந்தன; எல்லாம் நிலைகுலைந்து தலைகீழாய்க் கிடந்தன. தரையில் சேறுபடிந்த பூட்ஸ் கால்களின் தடங்கள் காணப்பட்டன.

அவள் எழுந்தாள்; முகங்கை கழுவவோ, பிரார்த்தனையில் ஈடுபடவோ எண்ணாமல், அங்குள்ள பொருள்களை எடுத்து அடுக்கி, அறையைச் சுத்தம் செய்வதில் முனைந்தாள். சமையலறையில் கிடந்த கம்பின் மீது – கொடியின் சிறு பகுதி இன்னும் ஒட்டிக்கிடந்த அந்தக் கம்பின் மீது – அவள் பார்வை விழுந்தது. அவள் அதைக் குனிந்து எடுத்து, அடுப்பில் வைக்கப் போனாள். ஆனால் திடீரென வேறொரு எண்ணம் தோன்றவும் அவள் பெருமூச்சு விட்டவாறே அதில் தொங்கிய கொடித் துணியை அகற்றி, அதை ஒழுங்காக மடித்து, தனது பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் அந்தக் கம்பை முழங்காலில் கொடுத்து முறித்து அடுப்புக்குள் எறிந்தாள். பிறகு ஜன்னல்களையும் தரையையும் தண்ணீர் விட்டுக் கழுவினாள். தேநீர்ப் பாத்திரத்தைக் கொதிக்க வைத்துவிட்டு உடை உடுத்திக்கொண்டாள். பின்னர் அவள் சமையலறையில் இருந்த ஜன்னல் அருகே அமர்ந்தாள். அவள் மனத்தில் அதே கேள்வி மீண்டும் எழுந்தது.

“இனி என்ன?”

தான் தனது காலைப் பிரார்த்தனையைச் சொல்லவில்லை என்பது ஞாபகம் வந்தவுடன் அவள் அங்கிருந்து எழுந்து விக்ரகங்களை நோக்கி வந்தாள். அவற்றின் முன்னே சில கணங்கள் நின்றாள். பிறகு மீண்டும் உட்கார்ந்தாள். அவள் இதயம் ஒரே சூன்ய வெளியாக வெறிச்சோடிக் கிடந்தது. நேற்றைய தினத்தில் தெருக்களிலே உற்சாக வெறியோடு கத்திச் சென்ற ஜனங்கள், இன்று தங்கள் தங்கள் வீடுகளுக்குள்ளே அடைந்து முடங்கிக்கிடந்து, இயற்கைக்கு மீறிய சம்பவங்களைப் பற்றி அமைதியாகச் சிந்தித்துக் கொண்டிருப்பதைப்போல, அதிசய மோனம் நிலவிக்கொண்டிருந்தது.

திடீரென அவள் தனது இளமைக் காலத்தில் கண்ட ஒரு விஷயத்தை நினைவு கூர்ந்தாள்; சவுசாய்லவ் குடும்பத்தினருக்குச் சொந்தமான பண்ணையில் பழம் பூங்காவனம். பூங்காவனத்தில் ஒரு பெரிய தடாகம். தடாகம் முழுவதிலும் நீரல்லிப்பூக்கள் நிறைந்து பூத்திருந்தன. இலையுதிர் காலத்தின் மப்பும் மந்தாரமுமான ஒரு நாளன்று அவள் அந்தக் தடாகக்கரை வழியாக நடந்து சென்றாள். செல்லும்போது அந்தத் தடாகத்தின் மத்தியில் ஒரு படகு நிற்பதைக் கண்டாள். குளம் கருநீலமாக இருண்டு நிச்சலனமாக இருந்தது. அந்தப் படகு அந்தக் கரிய நீர்த்தடத்தின் மீது, பழுப்பிலைகளின் கூட்ட அலங்காரத்தோடு ஒட்டிக் கிடப்பதாகத் தோன்றியது. காய்ந்து கருகிப்போன அந்த இலைகளுக்கு மத்தியில், அசைவற்ற மோன நீர்த்தடாகத்தில், தன்னந்தனியாக, துடுப்புக்களோ மனிதத் துணையோ இன்றி ஸ்தம்பித்துக் கிடந்த அந்தப் படகிலிருந்து ஏதோ ஒரு இனந்தெரியாத துக்கத்தின் சோகம் தோன்றுவதாக அவளுக்குத் தெரிந்தது. வெகுநேரம் வரையிலும் அவள் கரையருகிலேயே நின்றாள்; யார் அந்தப் படகை தடாகத்தின் மத்தியில் தள்ளிவிட்டார்கள். எதற்காகத் தள்ளிவிட்டார்கள் என்பதை எண்ணி எண்ணி அதிசயித்தாள். அன்று மாலையில் அவள் ஒரு விஷயம் கேள்விப்பட்டாள். அந்தப் பண்ணை நிலத்தில் வேலை பார்த்து வந்த ஒருவனின் மனைவி, குடுகுடுவென்று நடையும், சிக்குப் பிடித்த சிகையும் கொண்ட ஒரு சிறு பெண். அந்தக் குளத்தில் மூழ்கி இறந்துவிட்டதாக யாரோ சொன்னார்கள்.

தாய் தன் கரத்தால் நெற்றியை வழித்துவிட்டுக் கொண்டாள். அவளது மனத்தில் அன்றைய தினத்துக்கு முந்தின நாளன்று நடந்த சம்பவங்களின் நினைவுகளிடையே எண்ணற்ற சிந்தனைகள். நடுநடுங்கி மிதந்து சென்றன. வெகுநேரம் வரையிலும் அவள் அந்தச் சிந்தனைகளால் திக்பிரமையுற்று அமர்ந்திருந்தாள். அவளது கண்கள் குளிர்ந்து போய்விட்ட தேநீர்க் கோப்பையின் மீது நிலைகுத்திப் பதிந்து நின்றன. அதே சமயத்தில் தனது கேள்விகளுக்கெல்லாம் விடையளிக்கக்கூடிய யாராவது ஒரு படாடோபமற்ற புத்திபடைத்த மனிதனைக் காணவேண்டும்; கண்டு கேட்க வேண்டும் என்ற ஆவல் பெருகிக்கொண்டிருந்தது.

அவளது ஏக்கம் நிறைந்த ஆவலுக்குப் பதிலளிப்பது போல், நிகலாய் இவானவிச் மத்தியானத்துக்கு மேல் வந்து சேர்ந்தான். என்றாலும் அவனைக் கண்டதும் அவளுக்குத் திடீரென ஒரு திகிலுணர்ச்சி ஏற்பட்டது. எனவே அவன் செலுத்திய வணக்கத்துக்குக்கூடப் பதில் கூறாமல், அமைதியாகச் சொன்னாள்;

“நீங்கள் ஏன் வந்துவிட்டீர்கள்! இப்படிச் செய்வது ஒரு பெரிய முட்டாள்தனம். நீங்கள் இங்கிருப்பதைக் கண்டால் அவர்கள் உங்களையும் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள்!”

அவன் அவளது கையைப் பற்றி இறுக அழுத்தினான், தனது மூக்குக்கண்ணாடியைச் சரி செய்துகொண்டு, அவள் பக்கமாக நெருங்கிக் குனிந்து விறுவிறுவெனப் பேசினான்: ”பாவெல், அந்திரேய், நான் – எங்கள் மூவருக்குள்ளும் ஒரு ஒப்பந்தம். அவர்கள் கைது செய்யப்பட்டுவிட்டால், மறுநாளே நான் உங்களை இங்கிருந்து நகருக்குக் கொண்டு போய்விடுவது என்பது எங்கள் ஏற்பாடு” என்றான். அவனது குரல் பெருந்தன்மை நிறைந்ததாகவும், அவளது நலத்தில் அக்கறை கொண்டதாகவும் இருந்தது. ”சரி இங்கு ஏதாவது சோதனை நடந்ததா?”

”ஆமாம். அவர்கள் எல்லாவற்றையும் வெட்கமோ மனச்சாட்சியோ இன்றி உலைத்துக் கலைத்து எறிந்துவிட்டுப் போனார்கள்” என்றாள் அவள்.

“அவர்கள் எதற்காக வெட்கப்பட வேண்டும்?” என்று தன் தோளைக் குலுக்கிக்கொண்டு கேட்டான் நிகலாய். பிறகு அவள் என் நகருக்கு வீடு மாற்றிக்கொண்டு செல்ல வேண்டும் என்பதை விளக்கிச் சொன்னான்.

அவனது நட்பும் பரிவும் கலந்த நயவுரையை அவள் காது கொடுத்துக் கேட்டாள். லேசாகப் புன்னகை புரிந்து கொண்டான். அவன் கூறும் காரணங்களை அவள் புரிந்துகொள்ளாவிட்டாலும், அவள் மனத்தில் எழும்பிய அன்பு கனிந்த நம்பிக்கையைக் கண்டு அவளே வியந்து கொண்டாள்.

“பாஷாவின் விருப்பம் அதுவானால், உங்களை நான் ஏதும் சிரமத்துக்கு ஆளாக்காது இருந்தால்…..” என்றாள் அவள்.

“அதைப் பற்றி கவலையே வேண்டாம்” என்று குறுக்கிட்டான் அவன். “நான் தன்னந்தனியாகத்தான் வாழ்கிறேன். எப்போதாவது என் சகோதரி மட்டும் என்னைப் பார்க்க வருவாள்.”

”நான் சும்மா வந்து இருந்து கொண்டு உங்கள் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்க முடியாது” என்றாள் அவள்.

“விருப்பம் இருந்தால், அங்கு வேலை தேடிக்கொள்ளலாம்” என்றான் நிகலாய்.

வேலை என்ற எண்ணம். தனது மகனும் அந்திரேயும் பிற தோழர்களும் செய்யும் வேலையோடு எப்படியோ பிணைப்புற்றிருப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் நிகலாய்க்குப் பக்கமாக நெருங்கிச் சென்று அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தாள்.

”உண்மையாகவா? உங்களால் தேடித்தர முடியுமா?” என்று கேட்டாள்.

”என் வீட்டில் அதிகமான வேலை ஒன்றும் இருக்காது. நான்தான் பிரம்மச்சாரி ஆயிற்றே…”

‘நான் அதைப் பற்றி நினைக்கவில்லை – வீட்டு வேலையைப் பற்றியல்ல!” என்று மெதுவாகச் சொன்னாள் அவள்.

அவள் பெருமூச்செறிந்தாள்; தான் சொன்னதை அவன் புரிந்து கொள்ளாமல் போனதால் மனம் நொந்தாள். அவனோ அவளருகே குனிந்து பார்த்தவாறு புன்னகை புரிந்தான். சிந்தனை வயப்பட்டவனாகப் பேசினான்.

படிக்க:
நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?
சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

”நீங்கள் மட்டும் பாவெலைப் பார்ப்பதற்கு அனுமதி பெற்று அவனைச் சந்தித்து தமக்காக ஒரு பத்திரிகை வெளியிட வேண்டும் என்று நம்மைக் கேட்டுக்கொண்ட அந்த விவசாயிகளின் முகவரிகளை அவனிடமிருந்து எப்படியாவது தெரிந்துகொண்டு வரமுடிந்தால்…..”

“எனக்கே அவர்களைத் தெரியும்” என்று உவகையோடு கூறினாள் அவள். ‘நான் அவர்களைக் கண்டுபிடித்து, நீங்கள் என்ன செய்யச் சொல்கிறீர்களோ, அத்தனையும் செய்கிறேன். நான்தான் அவர்களுக்குச் சட்ட விரோதமான புத்தகங்களைக் கொடுத்து உதவுகிறேன் என்று எவரும் என்னைச் சந்தேகப்படமாட்டார்கள். கடவுள் கிருபையால் நான் தொழிற்சாலைக்குள்ளே கூடப் பிரசுரங்களைக் கொண்டு போகவில்லையா?”

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

”இந்த வேலைக்கு என்னை ஏற்பாடு செய்யுங்கள். உங்களை மிகவும் கேட்டுக்கொள்கிறேன். எல்லா பிரதேசத்திலுள்ள சகல ரோட்டு பாதைகளிலும் நான் செல்லுவேன். கோடையிலும் குளிர்காலத்திலும் – நான் சாகிற வரையில் – ஒரு காம யாத்திரிகளைப் போலச் சுற்றித் திரிகிறேன். எனக்கு இது ஒரு மோசமான வேலையென்று நினைக்கிறீர்களா?”

வீடு வாசலற்ற ஒரு தேசாந்திரியாக வீடு வீடாய், கிராமத்துக் குடிசை வாயில்களில் சென்று கிறிஸ்துவின் பெயரைச் சொல்லிப் பிச்சையெடுக்கின்ற ஒரு யாத்திரைவாசியாகத் தன்னைக் கற்பனை பண்ணிப் பார்த்ததால் ஏற்பட்ட சோக உணர்ச்சி அவள் இதயத்தில் நிரம்பி நின்றது.

நிகலாய் அவளது கரத்தை லேசாகப் பற்றிப்பிடித்து, தனது கதகதப்பான கையால் அதைத் தட்டிக்கொடுத்தான். பிறகு அவன் கடிகாரத்தைப் பார்த்துவிட்டுச் சொன்னான்.

“சரி, அதைப்பற்றி நாம் பின்னர் பேசிக்கொள்ளலாம்.

“நம்முடைய குழந்தைகள், நமது இதயத்தின் அன்புருவங்களான நம் குழந்தைகள், தங்களது வாழ்வையும் ஆசைகளையும் துறந்து, சுயநலத்தைப் பற்றிய எண்ணம் சிறிதுகூட இல்லாமல் பாடுபட்டுச் சாகும்போது நான் ஒரு தாய், சும்மா இருக்க முடியுமா?”

நிகலாயின் முகம் வெளுத்தது.

”இந்த மாதிரி வார்த்தைகளை நான் இதற்கு முன்பு கேட்டதேயில்லை” என்று அவளது முகத்தையே பரிவு கலந்த பார்வையோடு நோக்கியவாறே அமைதியாகச் சொன்னான் அவன்.

“நான் வேறு என்னத்தைச் சொல்ல?” என்று தன் தலையைச் சோகத்தோடு அசைத்துக்கொண்டும், கைகளை வெறுமனே ஆட்டிக் கொண்டும் கேட்டாள் அவள். “என் நெஞ்சுக்குள்ளே துடிதுடிக்கும் இந்தத் தாயின் இதயத் துடிப்பை எடுத்துக் கூறுவதற்கு மட்டும் எனக்கு வார்த்தைகள் இருந்தால் …”

அவள் எழுந்தாள். உத்வேகம் நிறைந்த எத்தனையோ சொற்கள் அவளது தலைக்குள்ளே பின்னி முடைந்து குறுகுறுப்பதால் அவளது இதயத்தில் ஏற்பட்ட பெரும் பலத்தினால் அவள் எழுந்து நின்றாள்.

“அந்த வார்த்தைகளைக் கேட்டு ஒவ்வொருவரும் அழுவார்கள். கடை கெட்டவர்கள்கூட, வெட்கமற்ற பிறவிகள்கூடக் கண்ணீர் சிந்துவார்கள்!”

நிகலாவும் எழுந்தான். மீண்டும் ஒருமுறை கடிகாரத்தைப் பார்த்தான்.

“சரி, அப்படியென்றால் இதற்கு ஒத்துக்கொள்கிறீர்கள். நகருக்கு – என் இடத்துக்கு – வருகிறீர்கள், இல்லையா?

அவள் தலையசைத்தாள்.

“சரி, எப்போ? கூடிய சீக்கிரத்தில், சரிதானே” என்று பரிவோடு கூறினான் அவன். “நீங்கள் வருகிற வரையில் எனக்குக் கவலைதான்.”

அவள் அவனை வியப்புடன் பார்த்தாள். அவள் அவனுக்கு என்ன வேண்டும்? அவள் முன் தலைகுனிந்தவாறு குழப்பமான புன்னகை செய்தவாறு, கரிய கோட்டணிந்து, சமீப நோக்குடன் கூனி நின்று கொண்டிருந்தான் அவன். அவனது தோற்றம் அவனது இயற்கைக்கு முரண்பட்டுத் தோன்றியது.

“உங்களிடம் ஏதாவது பணம் காசு இருக்கிறதா?” என்று கண்களைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான் அவன்.

”இல்லை.”

உடனே அவன் தன் பைக்குள் கையைவிட்டு, தன் மணிப்பர்சை எடுத்து, அதைத் திறந்து பணத்தை எடுத்து நீட்டினான்.

“இதோ, இதைத் தயைசெய்து பெற்றுக்கொள்ளுங்கள்” என்றான்.

தாய்க்குத் தன்னையறியாமலேயே இளஞ்சிரிப்பு வந்தது. அவள் தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள்;

தன் முதுகிலே ஒரு மூட்டையும் கையிலே ஒரு தடிக்கம்பும் தாங்கி, கிராமங்களையும், காட்டுப் பிரதேசங்களையும், சாலை வழிகளையும் கடந்து நடந்து திரிய வேண்டும் என்று ஒரு ஆவல் அவள் மனத்தில் திடீரென எழுந்தது.

“உங்களிடம் எல்லாமே புதுமாதிரியாகத்தான் தோன்றுகிறது. பணம்கூட உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை. சிலர் அந்தப் பணத்துக்காகத் தங்கள் ஆத்மாக்களையே விற்றுவிடுகிறார்கள். ஆனால் உங்களுக்கோ அது ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை. மற்றவர்களுக்கு உதவுவதற்காகவே நீங்கள் பணத்தை வைத்திருக்க ஒப்புவதுபோலத் தோன்றுகிறது.”

நிகலாய் மெதுவாகச் சிரித்தான்.

“பணமா, அது ஒரு நச்சுப்பிடித்த பொருள். வாங்குவதானாலும் சரி, கொடுப்பதானாலும் சரி. மனத்துக்கே பிடிப்பதில்லை. அவன் அவள் கையைப் பற்றி அதை லேசாகப் பிசைந்தான். பிறகு மீண்டும் சொன்னான்:

“சீக்கிரம் கிளம்பிவிடுங்கள்!”

பிறகு அவன் வழக்கம் போலவே அமைதியாகச் சென்றான். அவன் செல்வதை அவள் வாசல் வரை சென்று பார்த்தாள். அப்போது தனக்குள் நினைத்துக் கொண்டாள்.

“எவ்வளவு அன்பான மனம்! ஆனால் அவன் எனக்காகப் பரிதாபப்படவே இல்லை.”

இந்த எண்ணம் அவளுக்குப் பிடிக்கவில்லையா, அல்லது அதிசயத்தைத் தந்ததா என்பதை அவளால் உணரக்கூட முடியவில்லை.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மின் ஊழியத் தொழிலாளர்களுக்கு மண் நெகிழும் நன்றிகள் ! துரை சண்முகம்

0

வீசும் புயலுக்கும்
நம்
வேதனை தெரிவதில்லை!

ஒரு தென்னை
விழுந்தால்
எத்தனை
கனவுகள் நொறுங்கும்.

ஒரு வாழைத் தோப்பு
குலைந்தால்
எத்தனைப் பேர்
வாழ்க்கை குலையும்

மாந்தோப்பு
கலைந்தால்
எத்தனைக்
காரியங்கள் கலையும்

படகுகள்
உடைந்தால்
எத்தனை குடும்பங்கள்
உடையும்

ஒரு மரம்
வீழ்ந்தால்
எத்தனை நிழல் முறியும்
பல்லூயிர் தவிக்கும்

நெற்களஞ்சியம்
சரிந்தால்
நாகரிகம் அதிரும்.

அதிராம் பட்டினங்கள்
அதிர்கிறது…
உரத்த நாடு
உதிர்ந்து கிடக்கிறது.

பட்டுக் கோட்டையும்
புதுக் கோட்டையும்
பேரா ஊருனியும்
கண்ணீர் சுரக்கிறது

நாகப்பட்டினம்
சோகப் பட்டினமாய்
திருமறைக்காடு
புயலின்
வேட்டைக்காடாய்…

ப‍னிரெண்டு மாவட்டமும்
ஊர் முகம் சிதைந்து
உள் மனம்
ரணமாய் கிடக்கிறது.

எழும்ப
எத்தனை நாள் ஆகுமோ
இதயம்
எத்தனை
பாழாகுமோ?

உதிர்ந்தது
கண்ணீரல்ல
கண்கள்.
மீள முடியாத இருட்டில்
தவிக்கும் மக்களுக்கு
பற்றிக் கொள்ள
ஒரே நம்பிக்கை,

மீட்பு பணியில்
நிவாரணப் பணியில்
அங்கங்கே
துளிர்க்கும்
தொழிலாளர் கரங்கள்.

கடற்கோள் புகாரும்
கடல் கொண்ட தென்னாடும்
உருக்குலைந்த போதும்
உருக்கனைய உறுதியுடன்
உதவிய
அதே… தொழிலாளர் கரங்கள்.

ஆக்கும் சக்தி
தொழிலாளி வர்க்கம்
என்பதை
அறியத் தரும் தருணங்கள்.

புன்னையும்
புலி நகக் கொன்றையும்
தென்னையும்
சரிந்த போது
தாங்கிப் பிடித்த
வரலாற்றின் வர்க்கம்

சரிந்த மின் கம்பங்களை
சரி செய்யும் காட்சிகள்
தன் வர்க்கமே
தனக்கு உதவி
எனும்
தத்துவத்தின் சாட்சிகள்.

மின் ஊழியர்-
ஒப்பந்த தொழிலாளர் போராட்டம்
நமக்கு என்ன சம்மந்தம்
என நினைத்தவர்களே

மேலே பாருங்கள்…
உங்களுக்காக
தன் உயிரில்
மின்சாரத்தை கடத்துகிறான்
மின் ஊழிய தொழிலாளி

சிட்டுக் குருவிகளைப் போல
கட்டுக் கம்பிகளின் மீது
தொங்குகிறான்.

புயல்
இப்போது அவன்
இரத்தத்தில் அடிக்கிறது,

இழுக்கும் கம்பிகளில்
நிமிர்த்தும்
மின்கம்பங்களில்
முறுக்கும் நாடி நரம்புகளில்
நமக்கான பேருழைப்பும்
மனித மாண்பும்
மின்சாரமாய் பாய்கிறது.

உருக்குலைந்ததை
சரிசெய்யவும்,
உலகம் உருப்படவும்
உழைக்கும்
தொழிலாளர்கள் இல்லையேல்
என்ன ஆகும்
என்று நினைத்தாலே
உயிர் சிலிர்க்கிறது!

அடுத்து.. அடுத்து.. என
உங்கள் வீடு ஒளிர
இறங்கி ஏறினால்
இன்னும் தாமதமாகும்
என்று,
உண்ணும் வேலையையும்
மின் கம்ப உச்சியிலேயே
செய்கிறான்.

கைத்தோல் உரிகிறது
கண்கள் தீய்கிறது
இமைகளே குடைகளாகி
பெய்யும் மழை ஒதுக்கி
செய்யும் வேலையிலேயே
அவன்
ஜீவன் கரைகிறது

தன் வாழ்வில்
வெளிச்சமில்லை
தகுந்த ஊதியமில்லை
வேலை நிரந்தரமில்லை
தாழ்வாரம்
சொந்தமில்லை..
ஊருக்கு
வெளிச்சம் தர
உழைக்கும்
‍அந்த தொழிலாளர்க்கு
ஒராயிரம்.. நன்றிகள்!

நன்றியோடு
விடைபெற்றால் போதுமா?
அவர்க்கு ஒன்று எனில்
நம் வர்க்கம் என
நாம்
ஒன்றிணைய வேண்டாமா!


போற்றிப் பாதுகாக்கப்பட
வேண்டியவர்கள்
நமக்காக
புயலை சுமக்கும்
அந்த மனிதர்கள்

நீங்களும் வினவு புகைப்பட செய்தியாளராக வேண்டுமா ?

2

நண்பர்களே,
பார்வையாளர்கள் படைப்பாளிகளாக மாறும் வாய்ப்புகளை வழங்குகிறது இன்றைய தொழில் நுட்பம். உங்களிடம் இருக்கும் செல்பேசியை எடுங்கள்! உங்களைச் சுற்றியுள்ள வாழ்வின் பரிமாணங்களை படம் பிடியுங்கள்! வினவு புகைப்படக் கட்டுரைகளில் உங்கள் படங்களும் இடம்பெற வேண்டும். நமது காலத்தின் அழகை, போராட்டத்தை, மாற்றத்தை பதிவு செய்வோம்
அன்புடன் அழைக்கிறோம்
நட்புடன்
வினவு

காட்சியுலகம் கருத்துலகை விஞ்சி நிற்கும் காலமிது! கருத்துலகமே காட்சியுலகை தீர்மானிக்கிறது என்றாலும் காட்சியுலகமே அதிக பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒளிச்சுருள் காலத்தில் காமரா ஒரு தனிவகையான சிறப்புக் கருவி. செல்பேசி காலத்தில் செல்ஃபியாக மாறிய காமரா நம்முடன் எப்போதும் இருப்பது அவசியமாகி விட்டது.

ன்னையும் தம்மையும் சுற்றம் – நட்பையும், வார இறுதி மகிழ்ச்சிகளையும் படம் பிடிக்கும் ஆண்ட்ராய்டு செல்பேசியை ஒரு மக்கள் பத்திரிகையளராய் நாம் பயன்படுத்தலாம். கொஞ்சம் பார்வை, ஓரளவு திறன், பயண நாட்டம் இருந்தால் போதும். உங்களைச் சுற்றி இருக்கும் நிகழ்வுகள், மனிதர்கள், தருணங்கள் உங்களது கேமரா படமெடுப்பதற்காக எப்போதும் காத்துக் கொண்டிருக்கின்றன.

க்கள் பத்திரிகையாளர்கள் – இது இணையம் வளர்ந்த பிறகு தோன்றிய முன்னேற்றம். கார்ப்பரேட் ஊடகங்களே இப்படி செய்தி – படங்களை அனுப்புமாறு மக்களைக் கோருகின்றன. அப்படியானால் மக்கள் ஊடகமான வினவு தளத்தில் உங்கள் பங்கேற்பு வேண்டுமல்லவா?

நீங்கள் சென்னையில் இருக்கலாம். கொழும்புவில் இருக்கலாம். இலண்டனில் நடக்கலாம். சிங்கப்பூரில் வாழலாம். அரபுலகில் வசிக்கலாம். அமெரிக்காவில் வேலை செய்யலாம். உங்களைச் சுற்றி எண்ணிறந்த மனிதர்கள் இருக்கிறார்கள். வேறுபட்ட பண்பாட்டு சூழல் நிலவுகிறது. மொழி-மதம்-பாலினம்-வேலை என வேறுபட்டிருந்தாலும் மக்களை மனித சமூகமாய் ஒன்றிணைய வைக்கும் இழை ஒன்றிருக்கிறது. அதை கண்டுபிடிக்கலாம்.

ங்கள் செல்பேசியை எடுத்துக் கொள்ளுங்கள். புகைப்பட ஏற்பாடுகளை சரிபாருங்கள். வெளியே செல்லுங்கள். உங்களுக்கே தெரியாத ஒரு விசயம், மற்றவரிடம் தெரிவித்தே ஆகவேண்டிய ஒரு விசயத்தை முடிவு செய்யுங்கள். பிறகு அதை படமெடுங்கள்.

ஏதோ ஒரு நிலையில்தான் மக்கள் அழகாக இருக்கிறார்கள். அல்லது அவர்களது ஆளுமை தெரிய வருகிறது. மக்கள், காட்சிகளை நேருக்கு நேர் மையப்படுத்தி எடுக்காமல் ஏதாவது ஒரு ஓரத்தில் இருந்து எடுங்கள். அவர்கள் – அவற்றின் பக்கவாட்டில் இருந்து எடுங்கள். அதையும் நெருக்கமாக, தூரமாக, மையமாக என்று மூன்று நிலைகளில் எடுங்கள். அவர்களது சூழலை விளக்கும் பின்னணிக் காட்சியோடு எடுங்கள். பிறகு அந்த படத்தில் இருக்கும் காட்சிகள் – மனிதர்கள் பேசுவார்கள். அவ்வளவுதான். இதையே தொடர்ந்து செய்யும் போது நீங்கள் ஒரு புகைப்படச் செய்தியாளர்.

இந்த வாரம் உங்களுக்குரிய தலைப்பு – காத்திருப்பு!

து மக்கள் அன்றாட வாழ்க்கையின் பொருட்டு எங்கோ எதற்கோ காத்திருக்கிறார்கள். நீண்ட நேரமோ, குறுகிய நேரமோ, சலிப்புடனே, உற்சாகத்துடனோ காத்திருக்கிறார்கள். இந்த உலகின் எந்த இடத்திலும் மேன் மக்கள் காத்திருக்க தேவையில்லை. நாம்தான் காத்திருக்க வேண்டியிருக்கிறது. காத்திருத்தல் தவறல்ல. அது ஒரு ஒழுங்கு முறை. ஆனால் அந்த காத்திருத்தல் பல நேரம் மகிழ்வாக இருக்கிறதா? பேருந்து வருமா? ரேசனில் அரிசி கிடைக்குமா? இன்று சித்தாள் வேலை கிடைக்குமா? ரயிலில் அமர இடம் கிடைக்குமா? மருத்துவமனையில் உடன் வேலை முடியுமா? என்று ஏகப்பட்ட காத்திருப்புகள் இருக்கின்றன

வெளிநாட்டிலும் இத்தகைய காத்திருப்புகள் இருக்கலாம். விமான நிலையத்திலோ, பெட்ரோல் பங்கிலோ, உணவக விடுதிகளிலோ, திரையரங்குகளிலோ கூட இருக்கலாம். காத்திருப்பவர் ஒரு கேப் டிரைவர், ஒரு லாரி ஓட்டுநர், ஒரு தொழிலாளி, ஒரு மாணவர், பெற்றோர் யாராக வேண்டுமானால் இருக்கலாம். அங்கே பல்தேசிய மக்கள் இருப்பார்கள். அவர்களிடம் அன்றாட வாழ்க்கைக்காக ஏதாவது ஒரு இடத்தில் காத்து நிற்கும் போது என்ன தோன்றும் எனக் கேளுங்கள்! ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு கவிதை வரும்!

விதையை எழுத்தாக்குங்கள். காட்சியை படமாக்குங்கள்! இந்தக் கருவில் எத்தனை படம் வேண்டுமானாலும் எடுங்கள். எடுக்க எடுக்க உங்கள் பார்வை செதுக்கப்படும். செல்பேசியோடும் பிணைந்துள்ள வாழ்வை உற்சாகத்தோடும், பயனுள்ள முறையிலும் கழிக்கலாம்.

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு

காவலர்கள் என தமிழில் எழுத நினைத்தாலும் போலீசு என்று சொல்வது போல வராது. தமிழத் திரையுலகில் போலீசின் வீர பராக்கிரமங்களை துதிபாடி படங்கள் பல வந்துள்ளன. இன்னொருபுறம் தூத்துக்குடி மஞ்சள் சட்டை போலீசு சுடுவதும் மக்களிடையே வெறுப்புக்குரிய காட்சியாக பதிந்திருக்கிறது.

கடந்த 24.11.2018 அன்று சென்னை போலீசார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். வழக்கமாக ரோந்துப் பணி வண்டி போலீசார் ஏதாவது ஒரு கையேந்தி பவனில் நின்று பொட்டலங்களை வாங்கிச் செல்வர். அது இலவசமா, மாமூலா என்பது இரகசியமல்ல. பிறகு உலா முடிந்த பிறகு அதிகாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்ட காரில் தூங்குவர். வண்டிக்குள் ஒரு வாட்டர் கேன் இருக்கும். ஆங்காங்கே கிடைத்த பரிசுப் பொதிகளும் இருக்கும். இடையிடையே வாக்கி டாக்கியில் அறிவிப்பு வந்து கொண்டே இருக்கும்.

படிக்க:
♦ அனைத்துமாய் இருந்தது ஆறு : அழித்தது யார் ? | துரை சண்முகம் | காணொளி
♦ முறை பிறழ்ந்த உறவு குறித்து உச்சநீதிமன்றம் சொல்வதென்ன ? வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

அன்றைய தினம் அறிவிப்போடு ஒரு கவிதை வந்தது. என்ன கல்லுக்குள் ஈரம் என்கிறீர்களா? கவிதை படித்தவர் சென்னை உயர்நீதிமன்ற காவல் ஆய்வாளர் கணேசன். கவிதை என்ன?

முறுக்கு மீசை – கவிஞர் இன்ஸ்பெக்டர் கணேசன்

‘‘குடும்ப வாழ்வில் இனிமையை துறப்பாய்,
குழந்தைகளின் மழலை மொழி மறந்துபோகும்,
மனையாளையும் துறந்து வாடுவாய்,
பாசம் கொண்ட உற்றார் உறவினர்களையும் மறப்பாய்,
பண்பான காவல் பணியின் கடமையை செய்தால்
பலன் தானாக வருமடா.
முறுக்கு மீசையும், மிடுக்கு நடையும்
காவலனுக்கு மட்டுமே சிறப்படா.
நீ உடுக்கும் உடையும், உறவாடும் முறையும்
மக்களிடத்தில் உன் மாண்பை சொல்லும்.
மகராசன் நீ என்று மக்கள் உள்ளம் உன்னை போற்றும்.
செய்வதை திருந்த செய்யடா.
உன் நல்ல செயலால் உன் வாழ்வும் உயரும் என்பது மெய்யடா,
மக்களை காக்கும் காவலா, நீ மட்டுமே கடமை வீரனடா”

இந்தக் கவிதை நேரத்தைக் கேட்ட பலர் பாராட்டி வருகின்றனராம். அவர்களின் போலீசு அதிகாரிகளும் சமூகவலைத்தள அன்பர்களும் உண்டு.

பழைய காலத்து எம்ஜிஆர் பாடல் போல நீதிபோதனைகளை சொல்லும் இந்தப் பாடல் உண்மையில் எந்தக் காலத்திற்குரியதும் அல்ல. இருப்பினும் அந்தக் காலம் என்று வைத்துக் கொண்டாலும் இந்தக் காலத்தின் உணர்ச்சி என்ன?

ஜெயந்தி மற்றும் பார்த்திபன்

கோயம்பேடு காவல் நிலையத்தின் தலைமைக் காவலராக இருப்பவர்  பார்த்திபன். சூளைமேட்டில் இருக்கும் ஜெயந்தி எனும் விலைமாதுவுடன் பார்த்திபனுக்கு தொடர்பு ஏற்பட்டு அது தொழில் கூட்டணியாகவும் வளர்கிறது. கோயம்பேடு வட்டாரங்களில் ஜெயந்திக்கு மற்ற போலீசால் தொல்லை வராமலும், வாடிக்கையாளர்களை பிடிக்கவும், அந்த வாடிக்கையாளர்களை ஜெயந்தி ஏமாற்றி பணம் பறிப்பதற்கு போலீசாக உதவியும் செய்து வந்தார் பார்த்திபன்.

இந்த தொழில் கூட்டணி குறித்த அதிருப்தி கோயம்பேடு போலீசு நிலையத்திலேயே எழுந்திருக்கிறது. என்றாலும் இரு முறை எச்சரிக்கையோடு விட்டுவிட்டார்கள். என்ன இருந்தாலும் முறுக்கு மீசை போலீசை, கடமை குன்றா காவலரை விட்டுக் கொடுக்க முடியாதில்லையா?

கடந்த 25-ம் தேதி அன்று நள்ளிரவில் பெண் ஒருவர், காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு தன் வீட்டில் புகுந்து திருட முயன்ற ஒரு மர்மநபரை பிடித்து வைத்திருப்பதாக கூறினார். ரோந்து காவலர்கள் சென்று விசாரித்த போது அந்த பெண் ஜெயந்தி, பிடித்து வைக்கப்பட்டவர் விபச்சாரத்திற்கு வந்தவர். அவரிடம் காவலர் பார்த்திபன் பணம் பறித்துச் சென்றிருக்கிறார். பிறகு வேறு வழியில்லாமல் பார்த்திபன் லீலை வெளியே வந்தது. பிறகு அந்தப் பெண் மற்றும் பார்த்திபன் மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். ஆனாலும் தலைமைக் காவலர் என்பதால் பார்த்திபன் தனது கடமை உணர்ச்சியுடன் தலைமறைவாகிவிட்டார். தலையே மறைந்து போனதால் அவர் போலீசு அதிகாரிகளால் இடைநீக்கமும் செய்யப்பட்டிருக்கிறார்.

படிக்க:
♦ தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | போலீசு உருவாக்கிய பொய்க் கதை
♦ கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

சென்னை என்.எஸ்.கே நகரில் அந்தப் பெண்ணுக்கு வாடகை வீடு எடுத்து வரும் வாடிக்கையாளர்களை மிரட்டி ரெய்டு போர்வையில் பணம் வசூலித்து இந்த தொழில் வெகுகாலம் நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வரும் அப்பாவி பெண்களையும் மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக பார்த்திபன் மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் ஒரு தலைமைக் காவலர் மறைவாக செய்திருப்பார் என நம்ப முடியுமா?

திருவேற்காட்டைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் தனது புகாரை போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரித்தார் என தீக்குளித்திருக்கிறார். போதையில் அவர் இருந்ததாக கூறும் போலீசு அவரை சமாதானம் செய்து காப்பாற்றி அனுப்பி வைத்திருக்கிறது. இதே திருவேற்காடு போலீஸ் நிலையத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ரேணுகா எனும் பெண் தீக்குளித்து தற்கொலை செய்திருக்கிறார். போலீசார் ஒருதலைப்பட்சமாக விசாரிக்கிறார்கள் என்பதற்காகத்தான் இந்தத் தீக்குளிப்பு மரணம்.

துப்புரவு பணியாளர் பிறந்தநாளுக்கு கேக் வெட்டும் போலீசு

அதே திருவேற்காடு போலீசு நிலையத்தில் இரு வீட்டுக்காரர்களது பிரச்சினைக்காக ராஜ்குமார் என்பவரை கைது செய்து துணியைக் கழட்டி அடித்திருக்கிறார்கள். அதைக் கண்டித்து அவரது உறவினர்கள் போலீசு நிலையத்தை முற்றுகையிட்டு போராடியிருக்கிறார்கள்.

இப்படி வரும் செய்திகளை எப்படி மடை மாற்றுவது?

பழவந்தாங்கல் போலீசு நிலையத்தின் காவலர்கள் அப்பகுதியில் துப்புரவு பணியாற்றும் அனுசியா எனும் பெண்மணிக்கு கேக் வாங்கி, சேலை பரிசளித்து பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்கள். உடனே உயர் போலீசு அதிகாரிகள் பாராட்டியிருப்பதாக ஊடகங்கள் அனைத்தும் படத்தோடு செய்தி வெளியிட்டிருக்கின்றன.

போலீசு நடத்தும் வன்முறைச் செய்திகள் புதிதல்ல. போலீசு நிலையம் முன்பு தீக்குளித்த அவலங்களும் இதற்கு முன் நிறைய நடந்திருக்கின்றன. இவையெல்லாம் மக்களுக்கு கடந்து செல்லும் செய்திகளாக ஊடகங்களால் தரப்படுகின்றன. ஆனால் கவிதையோ பிறந்தநாள் கேக்கோ ஒரு தலைப்புச் செய்திக்குரிய முக்கியத்துவத்துடன் வலிந்து வெளியிடப்படுகின்றன.

போலீசு செய்யும் குற்றங்களை யாரும் தட்டிக் கேட்க முடியாது என்பதால் அவர்களது குற்றங்கள் அதிகரிக்கின்றன. இல்லையெனில் தலைமறைவான பார்த்திபன் இந்நேரம் பிடிபடாமல் இருந்திருக்க முடியுமா?

இப்போது நள்ளிரவில் அந்தப் போலீசு வாசித்த வாக்கி டாக்கி கவிதை குறித்து என்ன சொல்கிறீர்கள்?

சபரிமலைத் தீர்ப்பு : எது மத உரிமை ? வழிபடும் உரிமையா தடுக்கும் உரிமையா ? தோழர் மருதையன்

“அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது” – உச்ச நீதிமன்றத்தின் சபரிமலைத் தீர்ப்பு குறித்து அமித் ஷா தெரிவித்திருக்கும் கருத்து இது.

“இராமன் பாபர் மசூதி இருக்கும் இடத்தில் பிறந்தான் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இது குறித்து நீதிமன்றம் எப்படித் தீர்ப்பு வழங்க முடியும்?” என்பது அன்று அத்வானி எழுப்பிய கேள்வி. நீதிமன்றத்துக்கு அளித்த வாக்குறுதியை மீறித்தான் அன்று பாபர் மசூதியை இடித்தார்கள். சபரிமலை விசயத்தில் இன்று நடந்து கொண்டிருப்பதும் அதுதான்.

மத உரிமை மற்றும் மத நிறுவனங்களின் உரிமை (அரசமைப்பு பிரிவு 25, 26) தொடர்பாக இதுகாறும் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள பல தீர்ப்புகளை சபரிமலைத் தீர்ப்பு கேள்விக்குள்ளாக்குகிறது. அந்த வகையில் இத்தீர்ப்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

ஒரு குடிமகனின் வழிபாட்டுச் சுதந்திரம், சமத்துவ உரிமை ஆகியவை மதங்களின் மரபுகள், சாத்திரங்கள், மத நிறுவனங்களின் கட்டுப்பாடுகள் ஆகியவற்றோடு முரண்படும்போது, குடிமகனின் உரிமையைப் பின்னுக்குத் தள்ளி, மதம் மற்றும் மத நிறுவனத்தின் உரிமையை உயர்த்திப் பிடிக்கும் வகையிலான தீர்ப்புகளைத்தான் இதுவரை உச்ச நீதிமன்றம் அளித்திருக்கிறது.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவதைத் தடுக்கும் சேஷம்மாள் தீர்ப்பாகட்டும், 2015-இல் வழங்கப்பட்ட நீதிபதி கோகோய் தலைமையிலான அமர்வின் தீர்ப்பாகட்டும், சிதம்பரம் கோயிலை அறநிலையத்துறையிடமிருந்து பிடுங்கி தீட்சிதர்களின் கையில் ஒப்படைத்த தீர்ப்பாக இருக்கட்டும் – மேற்சொன்னவை உள்ளிட்ட பல தீர்ப்புகள் சட்டப்பிரிவு 25, 26-க்கு இதுகாறும் அளித்து வந்த விளக்கத்தை சபரிமலைத் தீர்ப்பு நிராகரித்திருக்கிறது.

ஐந்து நீதிபதிகளில் நால்வர் சபரிமலைமயில் பெண்களின் வழிபாட்டுரிமையைத் தடுக்கும் சட்டம், விதிகள் மற்றும் மரபுகளை அரசியல் சட்டத்துக்கு விரோதமானவை என்று கூறியிருக்கின்றனர் என்ற போதிலும், நான்கு நீதிபதிகளும் ஒரே கண்ணோட்டத்தில் அந்த முடிவுக்கு வரவில்லை. அவர்களுடைய முடிவில் ஒற்றுமை இருந்த போதிலும், முடிவை வந்தடைந்த அணுகுமுறையில் வேறுபாடுகள் இருக்கவே செய்கின்றன.

எனவே, சட்டப்பிரிவு 25, 26 ஆகியவை தொடர்பாக முரணற்ற, முழுமையான ஒரு விளக்கம் இந்தத் தீர்ப்பில் கிடைத்துவிட்டதாகவும் நாம் கருத முடியாது. எனினும், மதச்சார்பின்மை என்ற திசையில் ஒரு அழுத்தமானதொரு அடியெடுத்து வைத்திருக்கிறது இந்தத் தீர்ப்பு என்று கூறுவது மிகையாக இருக்காது.
சபரிமலைத் தீர்ப்பாக இருக்கட்டும், இ.த.ச. 377 (தன்பாலினச் சேர்க்கை) மற்றும் இ.த.ச. 497 (மண உறவுக்கு வெளியிலான பாலுறவு) ஆகியவை குறித்த தீர்ப்புகளாக இருக்கட்டும், இன்றைய அரசியல் சூழலில் இத்தகைய தீர்ப்புகள் வழங்கப்படுவது ஒரு நகைமுரண்.

படிக்க:
♦ உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !
♦ மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்

“அரசியலில் ஜனநாயகம், சமூகத்தில் ஜனநாயகமின்மை” என்கிற முரண்பட்ட சூழலில் நுழைகிறோம் என அன்று அரசியல் சட்டத்தை அறிமுகப்படுத்தும்போது கூறினார் அம்பேத்கர். இன்று, அரசியல் அரங்கில் மிச்சமிருந்த ஜனநாயக உரிமைகளைப் புதிய தாராளவாதக் கொள்கைகளும், பார்ப்பன பாசிசமும் ஒவ்வொன்றாக ஒழித்துக் கட்டி வருகின்றன.

ஆதார் முதல் பீமா கோரேகான் கைதுகள் வரையிலான வழக்குகளில் குடிமக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகளை அங்கீகரிக்கும் நீதிமன்றம், அந்த அணுகுமுறைக்குப் பொருந்தா வண்ணம் சமூகத்தை ஜனநாயகப்படுத்தும் நோக்கில்” இப்படியொரு தீர்ப்பினை வழங்கியிருக்கிறது.

விசித்திரம் தான்! இருப்பினும், சமூக அரங்கில் மட்டுமின்றி, அரசியல் அரங்கிலும் ஜனநாயகத்துக்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு, இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களை விளங்கிக் கொள்வது அவசியம்.

***

1987-ஆம் ஆண்டில் தன் கணவருடன் சென்று அய்யப்பனைத் தரிசித்ததாகவும், கூட்ட நெரிசலில் தள்ளப்பட்டுச் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் ஜெயமாலா என்ற கன்னட நடிகை 2006-இல் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவர் மீது கிரிமினல் குற்றவழக்கு பதிவு செய்யப்படவே, இப்பிரச்சனை நாடு தழுவிய விவாதப் பொருளாக மாறியது. “பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு சபரிமலை கோயிலில் அனுமதி இல்லை” என்பது ஒரு மரபாக மட்டுமில்லாமல், அது அதிகாரபூர்வமான விதியாக இருக்கிறது என்பதும், அது அரசமைப்புச் சட்டப்பட்டி செல்லத்தக்கதே என்று அதனைக் கேரள உயர் நீதிமன்றம் அங்கீகரித்திருப்பதும் இப்பிரச்சினையை ஒட்டித்தான் பரவலாகத் தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்தது. பெண்களைத் தடை செய்கின்ற மேற்கூறிய விதி, அரசமைப்பு சட்டத்தின் பிரிவு 14 (சமத்துவத்துக்கான உரிமை), பிரிவு 15 (மதம், இனம், சாதி, பாலினம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமை), பிரிவு 25 (மனசாட்சி சுதந்திரம் அல்லது மத சுதந்திரம்) பிரிவு 51அ (e) (இந்திய மக்கள் அனைவருக்கும் இடையில் சகோதரத்துவத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் கடமை) – ஆகியவற்றுக்கு எதிராக இருப்பதால், இதனை அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது என்று அறிவிக்க வேண்டும் எனக் கோரியது.

தீபக் மிஸ்ரா, பானுமதி, அசோக் பூசண் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த இவ்வழக்கு, அக்டோபர், 2017 இல் 5 நீதிபதிகள் கொண்ட (தீபக் மிஸ்ரா, கன்வில்கர், ரோகிந்தன் நாரிமன், சந்திரசூட், இந்து மல்கோத்ரா) அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

பெண்களுக்கேயுரிய உடற்கூறியல் ரீதியிலான நிலையைக் காரணம் காட்டிப் பெண்ணினத்தை ஒதுக்கும் நடைமுறை, பிரிவு 14, 15, 17 (தீண்டாமைக்கு எதிரான தடை)-க்கு எதிரானதாகாதா?

இவ்வாறு பெண்களை ஒதுக்குவதைப் பிரிவு 25 கூறுகின்ற இன்றியமையா மத நடவடிக்கை என்றும், ஒரு வகையறாவினர் (religious denomination) தமது மத விவகாரங்களை நிர்வகித்துக்கொள்ளும் உரிமை என்றும் இதனை ஒரு மத நிறுவனம் கோர முடியுமா?

அய்யப்பன் கோயிலை ஒரு மத வகையறாவினருக்கான கோயிலாக வகைப்படுத்த முடியுமா? அவ்வாறே ஆயினும், பெண்களை ஒதுக்கும் நடைமுறை, பிரிவு 14, 15, 39 (a), 51- அ(e) ஆகியவற்றில் பொதிந்துள்ள அரசமைப்புக் கோட்பாடுகள் மற்றும் ஒழுக்கத்தை மீறுவதாகாதா?

கேரள இந்து பொதுவழிபாட்டுத் தலங்களுக்கான விதி-3 பெண்களைத் தடை செய்யும் உரிமையை, மேற்கூறிய வகையறாவினருக்கு வழங்குகிறதா? எனில், அவ்வாறு பாலின அடிப்படையில் தடுப்பது பிரிவு 14 மற்றும் 15(3) க்கு முரணானதாகாதா?
இவை அரசியல் சாசன அமர்வு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட முக்கியமான கேள்விகள். இனி இவை குறித்து இத்தீர்ப்பு என்ன சொல்கிறது என பார்ப்போம்.

பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற மரபே பொய்

1972-இல் தி.மு.க. அரசால் கொண்டு வரப்பட்ட அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கும் சட்டத்துக்கு எதிராக அன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம்., ஆகம விதி, மரபு என்ற பெயரில் சில பார்ப்பனப் பண்டிதர்கள் கூறியதை எந்தவிதமான ஆதாரமும் இன்றி அப்படியே அங்கீகரித்தது.

இன்று சபரிமலை வழக்கின் சாதகமான அம்சம் என்னவென்றால், “மரபு என்ற பெயரில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு” என்பது கேரளத்தில் சட்டமாகவே ஆக்கப்பட்டிருந்ததால், இதனை தேவஸ்வம் போர்டும் பார்ப்பன தந்திரிகளும் நிரூபிக்க வேண்டியிருந்தது. அப்படி ஒரு நெடுநாள் மரபே இருந்ததில்லை என்பதும் அம்பலமாகிவிட்டது.

இப்போதும்கூட, பன்னெடுங்காலமாக நிலவி வந்த ஒரு மரபை இந்தத் தீர்ப்பு தலைகீழாக்கி விட்டதைப் போல சங்க பரிவாரம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால், குழந்தைகளுக்குச் சோறூட்டும் சடங்கிற்கு பெண்கள் மாதம் தோறும் 5 நாட்கள் வருவர் என்று 1991-இல் கேரள உயர் நீதிமன்றத்தில் தேவஸ்வம் போர்டு வாக்குமூலம் அளித்திருக்கிறது. “இளம்பெண்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுவதைப் பார்த்திருக்கிறேன்” என்று அய்யப்ப சேவா சங்கத்தின் செயலர் வாக்குமூலம் அளித்திருக்கிறார். திருவிதாங்கூர் மன்னரும் மகாராணியும் வழிபட்டதற்கான ஆதாரங்களும் உள்ளன.

எனவே, “பெண்களுக்கு அனுமதி இல்லை என்ற மரபுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை” என்றும் எதிர்மனுதாரர்கள் யாரும் அவ்வாறு நிரூபிக்கவில்லையென்றும் கூறுகிறது தீர்ப்பு. அப்படி ஒரு மரபே இல்லை எனும்போது, அந்த மரபை, பிரிவு 25-இன் கீழ் இன்றியமையாத மத நடவடிக்கை (essential practice) என்று கோருவதற்கான அடிப்படையும் இல்லாதொழிந்து விடுகிறது.

அய்யப்பன்மார் இந்து மதத்திலேயே ‘தனி ஒரு வகையறாவினர்’ அல்லர்!

ஒரு மதத்துக்குள்ளேயே தாங்கள் தனியொரு வகையறா என்று கூறிக்கொள்வதற்கும், அதன் அடிப்படையில் தங்கள் மதத்தினர் மீது சாதி, மத, பாலின ஆதிக்கம் செலுத்துவதற்கும் சட்டப்பிரிவு 26, ஆதிக்க சக்திகளுக்கு வாய்ப்பு வழங்குகிறது. “இதனை வகையறாவின் தனி உரிமை” என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் அங்கீகரித்தே வந்திருக்கிறது.

தில்லைக் கோயிலை தீட்சிதர்கள் தமது சொத்தாக மாற்றிக் கொண்டதும், அர்ச்சகர் பணியைப் பார்ப்பனர்கள் தமது ஏகபோகமாக வைத்திருப்பதும், வகையறாவின் தனியுரிமை” (denominational right) என்ற அடிப்படையில்தான்.

“தாங்கள் ஒரு தனி வகையறா” என்று அதற்குரிய வரையறைகளின் படியேகூட, அர்ச்சகர்களோ தீட்சிதர்களோ தங்களை எந்த சிவில் நீதிமன்றத்திலும் நிரூபித்துக் கொள்ளாத போதிலும், அப்படியொரு தகுதியை உச்ச நீதிமன்றம் இவர்களுக்கு வழங்கியிருக்கிறது. ஆனால், “அய்யப்பன்மார் ஒரு தனி வகையறா” என்ற வாதத்தை இந்து மல்கோத்ரா மட்டுமே ஏற்கிறார். மற்ற நீதிபதிகள் அதனை ஏற்கவியலாது என்று நிராகரித்து விட்டதால், பிரிவு 26 இன் கீழ் அவர்கள் கோரக்கூடிய தனியுரிமையையும் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மரபு, தனி வகையறா என்பது உண்மையெனக் கொண்டாலும், பெண்ணை ஒதுக்குவது பிரிவு 25(1) இன்படி செல்லத்தக்கதா?

மத நம்பிக்கையை அமல்படுத்துவதற்கு அனைவருக்கும் சமமான உரிமை உண்டு என 25(1) கூறுகிறது. ஐயப்பனை “வழிபடுவதன் மூலம் தனது நம்பிக்கையை அமல்படுத்த” உரிமை கேட்கிறாள் பெண். அவளைத் “தடுப்பதன் மூலம் தனது மத நம்பிக்கையை அமல்படுத்த” உரிமை கேட்கிறார் தந்திரி.

யாருடைய மத உரிமை முதன்மையானது? “எல்லா குடிமக்களுக்கும் சமமான உரிமை உண்டு” என்பதுதான் இந்த பிரிவின் சாரம் என்பதால், இன்னொருவரின் வழிபாட்டுரிமையை பறிக்கும் நடவடிக்கையை மத உரிமையாக அங்கீகரிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியிருக்கிறார் நாரிமன்.

அது மட்டுமல்ல, “ஒரு குடிமகனின் மத உரிமையைக் (25/1) காட்டிலும், மத நிறுவனத்தின் உரிமையே (26) பெரிது” என்பதுதான் இதுநாள்வரை பெரும்பாலான தீர்ப்புகள் அளித்து வந்த விளக்கம். அதையும் இந்த தீர்ப்பு நிராகரித்திருக்கிறது.
பிரிவு 25 ஒரு குடிமகனுக்கு மனச்சாட்சி சுதந்திரத்தை அளிக்கிறது. அது எந்த ஒரு மதத்தையும் நம்புவதற்கும், நம்பாமல் இருப்பதற்குமான உரிமை. “மனச்சாட்சி என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரியது. ஒரு மத நிறுவனத்துக்கு மனச்சாட்சி இருக்க முடியாது. எனவே, மத நிறுவனங்கள் பிரிவு 25 இன் கீழ் மனச்சாட்சி உரிமை கோரவியலாது” என வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் குறிப்பிடுவது இங்கே கருதிப் பார்க்கத்தக்கது.

சிறுபான்மைத் தீர்ப்பின் மதவாதப் பார்வை

பிரிவு 14 (சமத்துவத்துக்கான உரிமை), பிரிவு 15 (சாதி, பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமை) ஆகியவற்றோடு மத நிறுவனங்களின் உரிமை முரண்படும் சந்தர்ப்பங்களில் (2015 அர்ச்சகர் தீர்ப்பு உட்பட) மத நிறுவனங்களின் பக்கமே உச்ச நீதிமன்றம் நின்றிருக்கிறது.

இந்த வழக்கிலும் கூட , “பிரிவு 14-இன் கீழ் மனுதாரர்கள் சமத்துவ உரிமை கோர முடியாது” என்று தனது தீர்ப்பில் கூறுகிறார் சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கிய நீதிபதி இந்து மல்கோத்ரா. மனுதாரர்கள் அய்யப்ப பக்தர்கள் அல்ல என்றும், பக்தர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் மட்டும்தான் பிரிவு 14-இன் கீழ் சமத்துவ உரிமை கோர முடியும் என்றும், அந்த அடிப்படையில் வெளியாட்களான சில வழக்கறிஞர்கள் தாக்கல் செய்திருக்கும் இந்த மனுவையே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் இவர் கூறுகிறார்.

ஒரு இந்தியக் குடிமகன் சக குடிமகனுக்காக வாதாட முடியாது என்கிறார் மல்கோத்ரா. ஒரு குடிமகனின் முதன்மை அடையாளம் மதம், அதன் பின்னரே அரசமைப்பு சட்டம் என்பதுதான் இந்தக் கூற்றின் சாரம். இந்து ராஷ்டிரம் அரசியல் ரீதியாக அறிவிக்கப்படும் முன்னர், சட்டரீதியாக நீதித்துறை அறிவிக்கும் இந்து ராஷ்டிரம் என்றும் கொள்ளலாம்.

“அர்ச்சகர் பிரச்சினை, சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவது போன்றவற்றில் நாத்திகர்களான ம.க.இ.க. வினர் தலையிட உரிமை இல்லை” என்று ஆர்.எஸ்.எஸ். கூறுவதைத்தான் இந்து மல்கோத்ராவும் கூறுகிறார். அது மட்டுமல்ல, “பெண்கள் மீதான இந்த அடக்குமுறை என்பது ஒரு மதத்தின் உள்விவகாரம். இதை மதத்துக்கு வெளியில் உள்ளவர்கள் கேள்விக்குள்ளாக்க முடியாது” என்பதும் இந்து மல்கோத்ராவின் கூற்று.

படிக்க:
♦ சபரிமலையில் பெண்கள் நுழையலாமா ? ஆச்சரியமூட்டும் சர்வே முடிவுகள்
♦ அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

அவருடைய கூற்றுப்படி, ஒரு இந்துப் பெண் வழக்கு தொடுப்பதாகவே வைத்துக் கொள்வோம். அப்போது பிரிவு 14, 15-இன் கீழ் சமத்துவ உரிமையை அந்தப் பெண்ணுக்கு வழங்குவாரா இந்து மல்கோத்ரா? “மத நம்பிக்கைகள் மீது பகுத்தறிவுப் பார்வையை நீதிமன்றம் திணிக்கவியலாது” என்பதுதான் சபரிமலை பிரச்சினையில் அவரது தீர்ப்பு.

அவரைப் பொருத்தவரை, 14, 15, 25 உள்ளிட்ட எல்லா அரசியல் சட்டப்பிரிவுகளும் மத நிறுவனத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. இதனை மீறி மத நம்பிக்கையின் மீது நீதிமன்றம் தீர்ப்பளிப்பது “பன்மைத்துவத்துக்கு எதிரானது” என்கிறார் மல்கோத்ரா. சாதி என்பது படிநிலை ஆதிக்கமல்ல, பன்மைத்துவம் என்று சங்கபரிவாரம் எந்த கண்ணோட்டத்தில் நியாயப்படுத்துகிறதோ, அதையேதான் மல்கோத்ராவும் பிரதிபலிக்கிறார்.

பெரும்பான்மை – சிறுபான்மை தீர்ப்புகளின் தன்மை குறித்து…

மற்ற நான்கு பேருடைய தீர்ப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்து மல்கோத்ராவின் தீர்ப்பு அதிர்ச்சியூட்டுமளவு பிற்போக்கானதாகத் தெரியலாம். உண்மையைச் சொல்வதென்றால், பிரிவு 25, 26 தொடர்பாக இதுகாறும் உயர், உச்ச நீதிமன்றங்களால் வழங்கப்பட்டுள்ள பிற்போக்கான தீர்ப்புகளின் செறிவான சாரமே மல்கோத்ராவின் தீர்ப்பு.

“இந்திய அரசமைப்புச் சட்டத்தை அப்படியே வைத்துக்கொண்டு, அதனை வியாக்கியானம் செய்வதன் வழியாகவே பார்ப்பன பாசிச அரசியலைச் சட்டபூர்வமானதாக ஆக்கிவிட முடியும்” என்ற சாத்தியத்தைத்தான் மல்கோத்ராவின் தீர்ப்பு புரியவைக்கிறது.

தேர்தல் ஆணையம், சி.பி.ஐ., பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள் போன்ற நிறுவனங்களின் தலைமையில் தமது ஆட்களை நியமிப்பதன் மூலம், மதச்சார்பற்றவை என்றும் அரசியல் சித்தாந்த சார்பற்றவை என்றும் சொல்லப்படும் அந்த நிறுவனங்களைப் பார்ப்பன பாசிசத்தின் கூலிப்படையாக மாற்றிவிட முடியும் என்பதை சங்க பரிவாரம் நமக்குப் புரிய வைக்கிறதே, அதைப் போன்றதுதான் இத்தீர்ப்பு.

நான்கு பேருடைய பெரும்பான்மைத் தீர்ப்பில், தீபக் மிஸ்ரா, கன்வில்கர் ஆகியோரது தீர்ப்புகள், வேறு வழியே இல்லாத இடங்களில் மட்டுமே “முன்னோர் விதித்த வரம்புகளை” மீறுகின்றன. நீதிபதி நாரிமன், அரசமைப்பு சட்டத்தின் பிரிவுகளுக்குப் பொருள் கொள்ளும்போது, சட்டம் என்ற சட்டகத்துக்குள் தன்னை மட்டுப்படுத்திக் கொள்கிறார். பிரச்சினையின் அரசியல் – சமூக – பண்பாட்டுப் பரிமாணங்களையும் கணக்கில் கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் நீதிபதி சந்திரசூட்.

மத ஒழுக்கக் கேடும் அரசமைப்புச் சட்ட ஒழுக்கமும் !

பெண்களை ஒதுக்கும் விதி அரசமைப்பின் பிரிவு 25(1)-க்கு முரணானது என்ற முடிவுக்கு 4 நீதிபதிகளும் வருகின்றனர். சந்திரசூட் இதனை வேறு விதமாக விளக்குகிறார். “அந்தப் பிரிவில் குறிப்பிடப்படும் ‘ஒழுக்கம்’ என்பது தனிநபர் ஒழுக்கமோ, மத ஒழுக்கமோ அல்ல; அது அரசமைப்புச் சட்ட ஒழுக்கமாகும். ஆகவே, அந்த விதி அரசமைப்புக்கு முரணானது” என்கிறார்.

இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அவதானிப்பு ஆகும். சந்திரசூடின் தீர்ப்பின்படி, ‘மரபு’ என்ற பெயரில் கடைப்பிடிக்கப்படும் மத ரீதியான ஒழுக்கக் கேட்டின்மீது, அரசமைப்புச் சட்டம் ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது.

தேவதாசி ஒழிப்பு, பால்ய விவாகம், சதி, தீண்டாமை போன்றவற்றை அரசமைப்பு சட்டம் ‘ஒழித்து விட்டதாக’ப் பலர் புரிந்து கொண்டிருக்கலாம். “இவையெல்லாம் அரசமைப்புக்கு முரணான ஒழுக்கக் கேடுகள்” என்று தற்போது சந்திரசூட் கூறியிருப்பதைப் போலச் சொல்லி, அவை ஒழிக்கப்படவில்லை. மாறாக, இவையெல்லாம் “இந்து மதத்தின் இன்றியமையா நடைமுறைகள் அல்ல” என்ற ஒரு பொய்யைச் சொல்லி, அதன் அடிப்படையில் இவை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டுவிட்டன.

அதாவது, திருடனிடமிருந்து நகையைக் காவல்துறை பறிமுதல் செய்வதற்கும், “இது எனக்கு தேவையில்லை” என்று திருடனே வீசியெறிவதற்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது இது.

தற்போது சந்திரசூடின் தீர்ப்பின்படி, பார்ப்பன மதத்தின் ஒழுக்கக் கேட்டின் மீது, மதச்சார்பற்ற அரசியல் சட்டம் ஒழுக்கத்தை நிலைநாட்டியிருக்கிறது. அதாவது மதத்தின் மீது மதச்சார்பின்மையின் மேலாண்மை நிறுவப்பட்டிருக்கிறது.

பகுத்தறிவு இல்லையேல் ஜனநாயக உரிமையும் இல்லை

அது மட்டுமல்ல, “மத நம்பிக்கையை பகுத்தறிவுப் பார்வையில் நீதிமன்றம் ஆராயக்கூடாது” என்ற இந்து மல்கோத்ராவின் கருத்துக்கு நேர் எதிராக, “மூடநம்பிக்கையை மத உரிமை என்று அங்கீகரிக்க இயலாது” என்று கூறுகிறார் சந்திரசூட். அறிவியல் பார்வைக்கும் ஜனநாயக உரிமைக்கும் இடையிலான பிரிக்கவொண்ணா உறவை இது விளக்குகிறது.

அதேபோல, சாதி, பாலின அடிப்படையில் பாரபட்சம் காட்டப்படுவதற்கு எதிரான உரிமையை வழங்கும் பிரிவு 15, “மத உரிமையை வழங்கும் பிரிவு 25 ஐ விட மேலானது” என்றும் சந்திரசூட் கூறுகிறார். இதுவும் அர்ச்சகர் வழக்கின் தீர்ப்புக்கும் மதம் தொடர்பான வேறு பல தீர்ப்புகளுக்கும் நேரெதிரான பார்வையாகும்.

பிரிவு 25 கூறும் மத உரிமை என்பது ஒரு தனிநபர் தன்னளவில் கொண்டிருக்கும் நம்பிக்கை தொடர்பானது மட்டுமே. பாலின அடிப்படையில் ஒரு பெண்ணுக்கு எதிராகப் பாரபட்சம் காட்டுவது என்பது, ஒருவரது தனிப்பட்ட நம்பிக்கை தொடர்பான விசயமல்ல. அது அடுத்தவர் மீது திணிக்கப்படும் பாரபட்சமாகும். சபரிமலைப் பிரச்சனையில், மத நம்பிக்கை என்ற முகமூடியை விலக்கி, பிரிவு 25-இன் கீழ் அவர்கள் கோரும் நம்பிக்கையின் உண்மையான பொருள் ஆதிக்கமே என்பதை சந்திரசூடின் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.

மதத்தின் இன்றியமையா நடவடிக்கையா, குடிமக்களின் சமத்துவ உரிமையா?

ஒரு நடவடிக்கை அல்லது நம்பிக்கை, குறிப்பிட்ட ஒரு மதத்தின் இன்றியமையா அம்சம் என்று நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் பட்சத்தில், அது அடிப்படை உரிமைகள் தொடர்பான அரசமைப்பின் மற்ற பிரிவுகளின் மீது (14, 15 )மேலாண்மை செலுத்தலாம் என்றே உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளும் கூறுகின்றன.

“சமூக ரீதியில் பிறரை ஒதுக்குவதாகவோ, ஒரு குடிமகனின் கவுரவமான வாழ்வுக்குரிய ஆதாரங்களை மறுப்பதாகவோ இருக்கும் பட்சத்தில், அது ஒரு மதத்தின் இன்றியமையா நடவடிக்கை என்று அங்கீகரிக்கப் பட்டிருப்பினும், அதனை அனுமதிக்க முடியாது. அந்த வகையில் மத, தனிநபர் சட்டங்களை, அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு அப்பாற்பட்டவையாக வரையறுக்கின்ற முந்தைய தீர்ப்புகள் (தனிநபர் சட்டம் பற்றிய நரசு அப்பா மாலி தீர்ப்பு) மீளாய்வு செய்யப்படவேண்டும்” என்கிறார் சந்திரசூட்.

மதத்தின் இன்றியமையா நம்பிக்கை என்று கூறப்படுவது எத்தகைய ஆபாசமான முறையில் சமத்துவத்தை நிராகரிக்கிறது என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.

பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது “இந்துக்களின் இன்றியமையா நம்பிக்கை” “மசூதியில்தான் தொழுகை நடத்த வேண்டும் என்பது முஸ்லிம் மதத்தின் இன்றியமையா நம்பிக்கையல்ல” என்று சொல்லி பாபர் மசூதியின் இடத்தில் மூன்றில் இரண்டு பங்கை இந்துக்களுக்கு வழங்குகிறது அலகாபாத் உயர் நீதிமன்றத் தீர்ப்பு.

“ஆகம விதி என்ற இன்றியமையா நம்பிக்கை” காரணமாகத்தான் பார்ப்பனரல்லாதோருக்கு அர்ச்சகர் பணியில் சமத்துவ உரிமை மறுக்கப்படுகிறது.

மேற்சொன்னவை சில எடுத்துக் காட்டுகள் மட்டுமே. பன்மைத்துவம் என்ற பெயரில் இவற்றை நியாயப்படுத்துகிறார் இந்து மல்கோத்ரா. தனிமனிதனின் சுதந்திரத்தையும் கவுரவத்தையும் பாதுகாப்பதுதான் அரசமைப்பு சட்டத்தின் நோக்கம். அதனைப் பறிக்கின்ற எந்த நடவடிக்கையையும் பன்மைத்துவம் என்ற பெயரில் அனுமதிக்கவியலாது என்று கூறி அதனை மறுக்கிறார் சந்திரசூட்.

தீட்டு என்று பெண்ணை ஒதுக்குவதும் தீண்டாமையின் இன்னொரு வடிவமே!

இது மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கால் முன்வைக்கப்பட்ட வாதம். இதனை ஏற்றுக்கொண்டு தீர்ப்பளித்திருக்கிறார் சந்திரசூட்.

“தூய்மை, தீட்டு என்பவையே படிநிலை சாதி அமைப்பின் இதயமான கருத்தாக்கங்கள். மாதவிடாய் தீட்டு என்ற கருத்திலிருந்துதான் கோயிலில் மட்டுமல்ல, சமூகத்தின் எல்லா நடவடிக்கைகளிலும் பெண்கள் ஒதுக்கப்படுகிறார்கள். தூய்மை – தீட்டு என்ற அடிப்படையில் எந்தவொரு பிரிவு மக்களை ஒதுக்கி வைத்தாலும், அது தீண்டாமைதான். அரசமைப்பின் பிரிவு 17, தடை செய்ய விழைவது சாதி அடிப்படையிலான தீண்டாமையை அல்ல என்று இதற்குப் பொருள் அல்ல. சாதி அடிப்படையிலான தீண்டாமை என்பது எந்த கருத்தாக்கத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறதோ, அந்த தூய்மை – தீட்டு என்ற கருத்தாக்கத்தின் இன்னொரு வெளிப்பாடுதான் பெண்களை ஒதுக்குகின்ற இந்த நடவடிக்கையும். எனவே, சட்டப்பிரிவு 17, பெண்களையும் தீண்டாமையிலிருந்து பாதுகாக்க வேண்டும்” – என்பதே இது விசயத்தில் அவரது தீர்ப்பின் சாரம்.

அர்ச்சகர் வழக்கில் தீர்ப்பளித்த (டிச, 2015) உச்ச நீதிமன்றம் தீண்டாமைக்கு அளித்த விளக்கம் இங்கே பொருத்திப் பார்க்கத்தக்கது.

“ஆகம விதியின்படி பார்ப்பன அர்ச்சகர்கள் தவிர மற்றவர்கள் சிலையைத் தீண்டினால் கடவுள் சிலை தீட்டுப்பட்டுவிடும் என்று பார்ப்பன சிவாச்சாரியார்கள் கூறுவது பிரிவு 17-இன்படித் தீண்டாமைக் குற்றமே” என்று தற்போது சந்திரசூட் கூறுகின்ற இதே வாதம்தான் அர்ச்சக மாணவர்கள் சார்பாக முன்வைக்கப்பட்டது. இதனை மறுத்து தீண்டாமைக்கு புது விளக்கம் அளித்தது நீதிமன்றம்.

படிக்க:
♦ சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
♦ தெருவில் சூத்திர அர்ச்சகர்கள் : தமிழக அரசின் ” பிராமணாள் ஒன்லி ” பாடசாலை !

ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது என்று கூறியது அந்தத் தீர்ப்பு.

பார்ப்பனியத்தையோ மதத்தையோ கேள்விக்குள்ளாக்கும் வழக்குகளில், பிரச்சனையின் சாரத்தையும், அதன் சமூக வரலாற்றுப் பின்புலத்தையும் பரிசீலித்துத் தீர்வு கூறாமல், இத்தகைய அறிவுசார் ஏமாற்றுவாதங்களின் (intellectual sophistry) துணையோடு தப்பித்துக் கொள்வதையே பெரும்பாலான தீர்ப்புகளில் நாம் காண முடிகிறது.

இது பெண்ணின் மீதான சமூக ஒடுக்குமுறையா, மத ஒடுக்குமுறையா?

அப்படியின்றிப் பிரச்சனையை நேர்மையாக எதிர்கொள்கிறார் சந்திரசூட். “மத மரபு என்று சொல்லப்படும் இந்தப் பிரச்சினையை, சமூக வரலாற்றுப் பின்புலத்தில் வைத்துப் பார்க்க வேண்டும். சபரிமலை விவகாரம் முதன்மையாக ஒரு மதச்சிக்கல் அன்று. பிரம்மசரியத்தின் சுமையைப் பெண்களின் மீது வைக்கும் இந்தப் பிரச்சினையை முதன்மையாக ஒரு பாலின ஒடுக்குமுறை என்ற கோணத்திலேயே பார்க்க வேண்டும்” என்கிறார்.

தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் என்பது சமூக ஜனநாயகத்துக்கான போராட்டமேயன்றி, வெறும் மத உரிமைப் போராட்டமன்று. வீதியில் நடக்கக் கூடாது, செருப்பணியக் கூடாது என்பன போன்ற சமூக ஒடுக்குமுறைகளின் நீட்சிதான் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்ற ஆகம விதி. பார்ப்பனரல்லாதார் அர்ச்சகராகக் கூடாது என்ற தீண்டாமையும் மேற்சொன்ன சமூக ஒடுக்குமுறையின் மத வடிவம்தான். சாதி, பாலின, மொழி, இன ஒடுக்குமுறைகளையும் தீண்டாமையையும் நியாயப்படுத்தி சமூக ஒடுக்குமுறைக்கு மதப்புனிதம் கற்பிக்கும் சித்தாந்தமே பார்ப்பனியம்.

பிறப்பு முதல் இறப்பு வரை ஒரு இந்தியக் குடிமகனின் சமூக வாழ்க்கையை மதம் எப்படி கட்டுப்படுத்துகிறது என்பது குறித்து அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் அன்று அம்பேத்கர் கூறியதை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
“மரபு, பழக்க வழக்கம் மற்றும் தனிநபர் சட்டங்கள் போன்றவை ஒரு தனிநபருடைய சமூக வாழ்வின்மீது குறிப்பிடத்தக்க வகையில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த மரபுகள் மதத்துடனும் தொடர்புடையவையாக இருக்கின்ற காரணத்தினாலேயே, இவற்றுக்கு அரசமைப்பு சட்டத்திலிருந்து விலக்கு வழங்குவதென்பது, அரசமைப்பு சட்டத்தின் மேலாண்மையை மறுப்பதாகிவிடும்” என்கிறார் சந்திரசூட்.

நேற்று சன்னி லியோன், இன்று பிரம்மசரியம் – இரண்டிலும் பலிகடா பெண்!

அமல்படுத்த முடியாத தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கக் கூடாது என்று அமித் ஷா கூறியிருப்பது பார்ப்பன பாசிச அதிகாரத்தின் அச்சுறுத்தல் என்பது உண்மைதான். இருப்பினும், பெண்ணினத்தின் சம உரிமைய வலியுறுத்தும் இந்தத் தீர்ப்பை, இந்து மதத்துக்கு எதிரான தாக்குதலாகச் சித்தரித்து, அரசியல் ஆதாயம் பெறுவதற்கு ஏற்ற சமூகச் சூழல் நிலவுவதையும் நாம் மறுக்கவியலாது.

சங்கி அறிவாளிகளின் பத்திரிகையான ஸ்வராஜ்யா இப்படி எழுதுகிறது. சதையின் தூண்டுதலுக்கு ஆளாக விரும்பாத பிரம்மச்சாரிகள் அதிலிருந்து விலகி நிற்கவே விரும்புகிறார்கள். அவ்வளவு ஏன், நோன்பு நேரத்தில் இசுலாமியர்கள் பிரியாணிக் கடைகளை மூடி வைப்பதில்லையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அப்பத்திரிகை யின் ஆசிரியர் ஜெகன்னாதன்.

ஆர்.எஸ்.எஸ்.-க்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கும் இடையிலான சித்தாந்த ஒற்றுமை இதுதான். பெண்களை சதையாகவும், பிரியாணிப் பொட்டலமாகவும் சித்தரிப்பது குறித்து ஜெகன்னாதன் சிறிதும் கூச்சப்படவில்லை என்பது மட்டுமல்ல, சபரிமலையில் சங்கிகள் திரட்டி வந்த பெண்கள் கூட்டமும் நாங்கள் அனைவரும் பிரியாணிப் பொட்டலமே என்று அறிவித்துக் கொள்வதற்கு கூச்சப்படவில்லை.

ஆசிபாவைக் குதறிய மிருகங்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஜம்முவில் பேரணி நடத்தியவர்களும் இவர்கள்தான். பெண்களை அனுமதித்தால் எங்கள் பிரம்மசரியத்துக்கு ஆபத்து என்று சபரிமலையில் போராட்டம் நடத்துவதும் இவர்கள்தான்.

தீர்ப்புக்கு ஆதரவான பெருந்திரள் போராட்டங்கள் ஏன் நடக்கவில்லை? இதுதான் நாம் அக்கறை செலுத்த வேண்டிய கேள்வி.

ஜனநாயகத்துக்கான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில் மேலிருந்து இயற்றப்படும் சட்டங்களோ தீர்ப்புகளோ ஏட்டுச்சுரைக்காயாக மட்டுமே இருக்கும். தீண்டாமைக்கு எதிரான சட்டமானாலும் சரி, போலீசின் மனித உரிமை மீறலுக்கு எதிரான தீர்ப்புகளானாலும் சரி – அவை ஓரளவுக்கேனும் அமலாவதைத் தீர்மானிப்பவை சமூகத்தில் நடைபெறும் போராட்டங்களே.

இதே கேரளத்தில் சில மாதங்களுக்கு முன் கொச்சியில் ஏதோ ஒரு கடையின் திறப்பு விழாவுக்கு வந்த நீலப்பட நடிகை சன்னி லியோனைக் காண்பதற்குப் பல்லாயிரக்கணக்கில் கூட்டம் – போலீஸ் தடியடி. சபரிமலை விவகாரத்திலும் ஆயிரக்கணக்கில் கூட்டம். பெண்களை அனுமதித்தால் ஆண்களின் பிரம்மசரியத்துக்கு ஆபத்து என்று போராட்டம் – இங்கேயும் தடியடி.

ஸ்மார்ட் போனின் ஒரு ஆப்-இல் அய்யப்பன். இன்னொரு ஆப்-இல் சன்னி லியோன். இரண்டு ஆப்புகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

– மருதையன்
புதிய ஜனநாயகம், நவம்பர் 2018

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

தலைஞாயிறு : சொந்த நாட்டில் அகதிகளாய் தவிக்கும் மக்கள் !

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்கு உருக்குலைந்து சின்னாப்பின்னமாகிக் கிடக்கிறது.

லைஞாயிறு அருகில் உள்ள கிராமம் கோவில்பத்து. இங்குதான் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தானிய சேமிப்புக் கிடங்கு உள்ளது. இதில் 2 லட்சம் டன் வரை தானியங்களை சேமிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய கிடங்கான இதன் கட்டுமானச் செலவு 144 கோடி எனக் கூறப்படுகிறது. இந்த கிடங்கும் கஜாவிற்கு தப்பவில்லை. சின்னாபின்னமாகிக் கிடக்கும் தானியக் கிடங்கைப் பார்க்கும்போது, இந்த அரசின் ஊழல் முறைகேடுகளே விஸ்வரூபமாகத் தெரிகிறது.

வோடோபோன் செல்பேசி டவர் வயலில் விழுந்து நொறுங்கிக் கிடக்கிறது.

மண் தன்மை அறிந்து, இயற்கைச் சூழல் அறிந்து, சிறந்த கட்டுமானத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு கட்டப்பட்ட அரசின் கட்டிடத்திற்கே இந்த நிலைமையென்றால், சாதாரண கூலி விவசாயிகளின் வீடுகளைப் பற்றி சொல்லவா வேண்டும்!

அதே கோவில்பத்து கிராமத்தின் ஒரு தெருவில் இருநூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்கின்றன. இதில் பெரும்பாலும் மண் சுவற்றினாலான ஓலை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சில கான்கிரீட் வீடுகளுமே உள்ளன. சில விவசாயிகளே ஒன்றிரண்டு ஏக்கர் நிலபுலங்களை வைத்திருக்கின்றனர். ஏனையோர் அன்றாடக் கூலிகளே. இவர்கள் தலைஞாயிறு, முதலியான்கண்டி, பழையாற்றங்கரை போன்ற ஊர்களுக்குச் (7 / 8 கி.மீ தொலைவில் உள்ளது) சென்று வயல் வேலைகள் செய்து வருகின்றனர். 6 மாதங்கள் மட்டுமே இந்த வேலைகளும் இருக்கும். மற்ற நாட்களில் அருகாமையில் உள்ள மா, முந்திரி, சவுக்கு, தென்னை போன்ற தோப்புகளில் மரம் வெட்டுதல், கீற்று முடைதல், கட்டிட வேலை போன்றவற்றைச் செய்துவருகிறார்கள்.

கஜா புயல் இவர்களது வாழ்க்கையையும் தலைகீழாகப் புரட்டிப்போட்டுவிட்டது. முகாம் அமைத்து சமைத்துக்கொண்டிருக்கும் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது, “இந்த வீட்டைப் பாருங்க, அந்த வீட்டைப் பாருங்க” என்று அழைத்துச் சென்றார்கள்.

முத்துக்குமார் :

நாத்து பறிக்க, நடவு நட, களையெடுக்க, வரப்பு வெட்டன்னு போனா சாப்பாடு போட்டு ஆம்பளைங்களுக்கு 500 ரூபாயும் பொம்பளைங்களுக்கு 400 ரூபாயும் சம்பளம் கொடுப்பாங்க. அதுவுங்கூட 6 மாதந்தான் வேலை. மத்த நாள்ல வேல கெடச்சா லக்கு, கெடக்கலன்னா திண்டாட்டந்தான். அந்த மாதிரி சமயங்கள்ல என்னோட குடும்பத்த காப்பாத்துனது இந்த புளிய மரந்தான்.”

வேரோடு சாய்ந்து கிடக்கும் மரத்தை வேதனையோடு காண்பித்து தொடருகிறார்.

“150 வருச மரம். வருசத்துக்கு 20 ஆயிரம் ரூபா வரைக்கும் பழம் எடுப்போம். திடீர்னு கொழம்பு தண்ணிக்கு மொடையா இருந்தா கொஞ்சம் பழத்த உலுக்கி சந்தையில போட்டுட்டு காய்கறி, மளிகைன்னு வாங்கி வருவோம். அந்த ஒத்த மரமும் போயிருச்சு.

இன்னும் மழை தொடருமுன்னு சொல்றாங்க. வீடுங்கள்ல ஓலையுமில்ல, ஏற்கெனவே சேறும் சகதியுமா இருக்கு. இனி எங்கே போறதுன்னே தெரியல. சாப்பாட்டுக்கும் வழியில்ல. 6 நாட்கள்ல ஒரே ஒரு தடவதான் தலைக்கு அரை கிலோன்னு கெவர்ன்மென்ட்டிலேருந்து அரிசி போட்டாங்க, அதோட சரி. அதிகாரிகள், அமைச்சர்கள் யாருமே வரல, ஏன் வி.ஏ.ஓ. கூட எட்டிப் பாக்கல. கவர்னர் மட்டும் வந்தாரு, கடலையும் காட்டையும் சுத்திப் பாத்துட்டுப் போயிட்டாரு. ஊருக்குள்ள வர டைம் இல்லே போல” என்றார்.

முத்துக்குமார் ஒரு வகைமாதிரி. இவருக்கு ஒரு புளிய மரம் என்றால், முனியசாமிக்கு 4 தென்னை, ராமசாமிக்கு 2 மாமரம்.

ஆம், கூலி  வேலை தவிர, இந்த மக்களின் வாழ்வாதாரம் வீட்டைச் சுற்றியுள்ள ஓரிரு தென்னையும், மாவும், புளிய மரங்களுமே. இதுவன்றி, சில ஆடு, மாடுகள், கோழிகள் மட்டுமே.

கல்யாணம், காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா போன்ற தேவைகளுக்கு மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பெரும்பாலான பெண்கள் கடன் வாங்கியுள்ளனர். “அதை எப்படி அடைக்கிறதுன்னே தெரியல, இந்த அரசு கடன தள்ளுபடி செஞ்சா கொஞ்சம் செரமம் குறையும்” என்று கவலையோடு கூறுகின்றனர்.

கிழக்கு கடற்கரைச் சாலை நெடுகிலும் இரவுநேர வாகன வெளிச்சத்தில் திட்டுத் திட்டாக மக்கள் வெள்ளம். இவர்கள் அக்கம்பக்கத்தில் உள்ள ஆலங்காடு, பின்னத்தூர், நீர்முளை, சங்கந்தி, ஆட்காட்டிவேலி,  மன்னவன்கோட்டகம், தோலி… இன்னும் பல கிராமங்களைச் சேர்ந்த கூலி ஏழை விவசாயிகள். மழைக்கு ஒதுங்க வீடு இல்லை, குடிக்கத் தண்ணீர் இல்லை, மின்சாரம் இல்லை, கொசுக்கடியையும் குளிரையும் தாங்க முடியவில்லை. தற்போது, ரோட்டுக்கு வந்துவிட்டார்கள். நிவாரணப் பொருட்கள் கொண்டுச் செல்லும் தன்னார்வலர்கள், தனியார் நிறுவனங்கள், மனிதாபிமானிகளின் கண்களில் படமாட்டோமா, ஏதேனும் பொருட்கள் கிடைக்காதா என்று ஏக்கத்தோடு காத்திருக்கிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் மட்டுமல்லாது, கிளைச்சாலைகளிலும் பழைய ப்ளெக்ஸ் பேனர்களின் பின்புறம் அல்லது கிழிந்த வேட்டிகளில் “கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமம்” என்று எழுதி வைத்துக்கொண்டு, சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போல கையேந்தி நிற்கிறார்கள்.

அந்தக் கொடுமையான காட்சியைப் பார்க்கும்போது, அமெரிக்காவில் வேலைபார்த்த நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு தனது அனுபவங்களை சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது.

படிக்க:
தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?
அம்பானிக்காக காத்திருந்த திருப்பதி பாலாஜி – ராமேஸ்வரம் ராமநாதன் – குருவாயூர் கிருஷ்ணன் !

“அமெரிக்காவில் கருப்பின மக்கள் மட்டுமே வாழும் புறநகர் பகுதிகள் பல இருக்கின்றன. அங்கு வாழும் பெரும்பாலான மக்களுக்கு வீடு இல்லை, தெருக்களில்தான் படுத்துக்கொள்கிறார்கள். சொல்லிக்கொள்ளும் உறவுகளும் இல்லை, அனாதைகளே அதிகம். அந்த வழியில் செல்லும் கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை மடக்கி தங்களுக்குத் தேவையான பணம், உணவு, துணிமணிகளை கேட்டுப் பெறுகிறார்கள். யாரையும் அடித்துத் துன்புறுத்துவது இல்லை. ஆனாலும், அவர்கள் கேட்கும் தோரணையே, “இருப்பதை கொடுத்துவிட்டுத்தான் அந்த இடத்தைவிட்டே நகர முடியும்” என்ற பய உணர்வு ஏற்படும்” – என்றார்.

இரவு நேரங்களில்கூட கடற்கரைச் சாலைகளின் இருபுறங்களிலும் வீடுகள் – உடைமைகளை இழந்த விவசாயிகள், யாரேனும் தண்ணீர் கொடுக்க மாட்டார்களா, ரொட்டி, பிஸ்கெட், பால் கொடுக்க மாட்டார்களா, ஒரு மெழுகுவர்த்தி – கொசுவர்த்தியேனும் கொடுக்கமாட்டார்களா என கையேந்தி நிற்கிறார்கள். இன்னும் சில நாட்கள் இந்த நிலை தொடருமாயின், தஞ்சை டெல்டா மாவட்டங்களும் அமெரிக்காவின் புறநகர் பகுதியாக மாறுவதைத் தடுக்க முடியாது.

தேசிய பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு அறிக்கை – ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கு முன்னோட்டமா ?

தூத்துக்குடி கணேசம்மாள் – புற்று நோயால் இறந்தவர் சாவதற்கு முன் சென்னை வந்து போராடட்டுமா என்றார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் அறிக்கை நேற்றைய (28-11-2018) அமர்வில் வெளிவந்திருக்கிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட தருண் அகர்வால் தலைமையிலான குழு தனது ”ஆய்வறிக்கையை” தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்தது.

இவ்வறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது தவறான நடவடிக்கை என்றும், இந்த ஆலையால் எவ்வித சுற்றுச் சூழல் பாதிப்பும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் சில நிபந்தனைகளின் கீழ் மீண்டும் இந்த ஆலை இயங்கலாம் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 7-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வுக் குழு தலைவர்

கடந்த மே 22-ம் தேதியன்று வேதாந்தா அனில் அகர்வாலின் ஆசியோடு தமிழக அரசு நடத்திய தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகத்தையே உலுக்கியது. இந்தக் கொடூர செயலுக்கு உலகம் முழுவதும் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கண்துடைப்பு நடவடிக்கையாக, சட்டப்பூர்வமாக செல்லுபடியாகாத வகையிலான ஒரு மொக்கை அரசாணையை வெளியிட்டு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தது எடப்பாடி அரசு.

அதனை அப்போதே பல்வேறு ஜனநாயக மற்றும் புரட்சிகர அமைப்புகள் கண்டித்தன. இத்தகைய கண் துடைப்பு வேலைகளுக்கு நடுவே, ஸ்டெர்லைட் எதிர்ப்புக் கூட்டமைப்பை உருத்தெரியாமல் ஒடுக்கும் வேலையை முடுக்கி விட்டது அனில் அகர்வால் – எடப்பாடி – மோடி கூட்டணி.

ஒட்டுமொத்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் குற்றவாளியாக ”மக்கள் அதிகாரம்” அமைப்பைக் காட்டி வழக்கை முடித்து வைக்க முயற்சித்தது. தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், மக்கள் அதிகாரத்திற்கு ஆதரவாகவும் வலுவான குரல்கள் தொடர்ந்து கேட்கவே, அந்த முயற்சியை நீதித்துறை வலுவந்தமாக முறிக்க நேர்ந்தது.

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடவேண்டும் என்பதே மக்களது கோரிக்கை (பசுமைத் தீர்ப்பாய விசாரணைக் குழு வந்த போது நடந்த ஆர்ப்பாட்டம்)

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் கண் துடைப்பு ஆணைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது ஸ்டெர்லைட் நிறுவனம். கூடுதலாக ஊடகங்களின் வாயை அடைக்க அவர்களின் முதல் பக்கத்தில் அன்றாடம் விளம்பரங்களைக் கொடுத்தது ஸ்டெர்லைட். அதற்கேற்றாற் போல ஊடகங்களும், ஸ்டெர்லைட்டுக்கு ஊதுகுழல்களாய் செயல்பட்டன.

அதனைத் தொடர்ந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான ஆய்வுக்குழு ஒன்றை அமைத்து ஸ்டெர்லைட் ஆலை மற்றும் தூத்துக்குடி மக்கள் மத்தியிலும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது.

இந்த ஆய்வுக்குழு தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதியை நியமிக்கக்கூடாது என தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் முறையிட்டது ஸ்டெர்லைட் நிர்வாகம். ’எஜமானர்’ காலால் இட்ட உத்தரவை தலையால் ஏற்றுக் கொண்டது தேசிய பசுமைத் தீர்ப்பாயம். குற்றம்சாட்டப்பட்ட குற்றவாளி தனக்கு யார் நீதிபதியாக வரவேண்டும் என கருத்துச் சொல்லும் அளவிற்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ’ஜனநாயக’த்தில் திளைக்கிறது.

வழக்கறிஞர் அரிராகவன்

அதே போல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் கோயல், உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற நாளிலேயே தே.ப.தீர்ப்பாயத்தின் தலைவராக மோடியால் நியமிக்கப்பட்டார் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆய்வுக்குழு தலைவராக முதலில் பரிந்துரைக்கப்பட்ட ஓய்வுபெற்ற பஞ்சாப் உயர்நீதிமன்ற நீதிபதி, அனில் அகர்வால் – மோடி – கோயல் சம்பந்தப்பட்ட இவ்விவகாரத்தின் யோக்கியதை என்னவாக இருக்கும் என உணர்ந்தாரோ என்னவோ, அந்தப் பொறுப்பை கை கழுவினார். அவருக்கடுத்தபடியாக மேகாலயா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வாலைத் தலைவராக நியமித்தார். தருண் அகர்வால் தக்லைமையிலான மூவர் குழுவில், மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் விஞ்ஞானி சதீஷ் சி.கார்கோட்டி மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வரலட்சுமி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இந்தக் குழு விசாரணை என்ற பெயரில் தூத்துக்குடியில் செய்த கண் துடைப்பு வேலைகளும், சென்னையில் விசாரணைக் குழு கருத்துக் கேட்பின் போது பொதுமக்களை சந்திக்கவிடாத வண்ணம், விதவிதமான கண்டிசன்களைப் போட்டு ஸ்டெர்லைட் தரப்பு நபர்களை மட்டும் சந்தித்த கிரிமினல் வேலைகளும் ஏற்கெனவே நாம் அறிந்ததே.

அப்போதே இந்த ஆய்வுக்குழுவின் அறிக்கை எவ்வாறு வரும் என அனைவராலும் யூகிக்க முடிந்ததை, கடந்த 26-ம் தேதி அறிக்கையாகவே தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்திருக்கிறது தருண் அகர்வால் குழு.

முன்னதாக கடந்த மாதமே சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டிய இந்த ஆய்வறிக்கை முழுமையாக முடிவடையாத சூழலில் டிசம்பர் 10 வரைக்கும் கால அவகாசம் நீட்டித்து, விசாரணையை டிசம்பர் 10-க்கு தள்ளி வைத்தது, தேசிய பசுமைத் தீர்ப்பாயம்.

ஆனால் அனில் அகர்வாலுக்கு அவசரமோ அல்லது தருண் அகர்வாலுக்கு அவசரமோ தெரியவில்லை, ஆய்வறிக்கை நவம்பர் 26 அன்றே தே.ப.தீர்ப்பாயத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டது.

நவம்பர் 26-ல் அறிக்கை வந்தாலும் டிசம்பர் 10 அன்றுதான் வழக்கு என்ற நிலையில் தே.ப.தீர்ப்பாயத்துக்கு ’திடீரென’ வந்த ஞானோதயத்தின் பலனாய் நவம்பர் 28-ம் தேதியன்று விசாரணைக்கு திடீரென பட்டியலிடப்பட்டது. தே.ப.தீர்ப்பாயத்துக்கு என்ன ’அவசரமோ’? தெரியவில்லை.

விசாரணையின் போது தருண் அகர்வாலின் அறிக்கையின் கடைசிப் பக்கத்தை வாசித்தார் கோயல். அதில், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட பிறப்பித்த உத்தரவு நிலைக்கக் கூடியதல்ல என்றும், ஸ்டெர்லைட் ஆலையின் கருத்தைக் கேட்காமலேயே தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் தமிழக அரசின் இந்த முடிவு இயற்கை நீதிக்கு முரணானது என்றும் குறிப்பிட்டுள்ளனர் ஆய்வுக் குழுவினர். முதலாளித்துவத்தின் இயற்கை நீதிக்கு முரணானது என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தால் மக்களுக்கும் தெளிவாகப் புரிந்திருக்கும்.

இது போக சில நிபந்தனைகளின் அடிப்படையில் ஆலை இயங்குவதில் எவ்விதப் பிரச்சினையும் இல்லை எனக் கூறி துப்பாக்கிச் சூட்டில் உயிர்துறந்த 13 பேரின் உயிர்த் தியாகத்தில் மண்ணள்ளிப் போட்டிருக்கிறது தருண் அகர்வால் குழு.

தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டின் முதல் குற்றவாளியான வேதாந்தா தரப்புக்கும், இரண்டாவது குற்றவாளியான தமிழக அரசுக்கும் மட்டுமே தருண் அகர்வால் குழுவின் அறிக்கையின் நகல்களை வழங்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார், கோயல். பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கு அறிக்கையின் நகலைத் தர மறுத்துவிட்டார்.

இந்த வழக்கில், இந்த அறிக்கையின் மீது தமது சந்தேகங்கள் மற்றும் கருத்துக்களை தமிழக அரசு ஒரு வாரத்தில் நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்றும் இந்த வழக்கை வரும் டிசம்பர்-7 அன்று ஒத்திவைப்பதாகவும் கூறியுள்ளார் கோயல். எனினும் பின்னர் வழங்கப்படவிருக்கும் தீர்ப்பின் சாரத்தை தருண் அகர்வாலின் ஆய்வுக்குழு அறிக்கை வாயிலாக நமக்கு முன்னரே முன்னறிவித்திருக்கிறார் கோயல்.

காவிரி டெல்டாவில் அனில் அகர்வாலுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு ஹைட்ரோகார்பன் உரிமங்களுக்கும், மேக்கேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்ட மத்திய மோடி அரசு கொடுத்துள்ள அனுமதிக்கும் உள்ள தொடர்புக்கும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கும், தற்போது ஸ்டெர்லைட்டைத் திறக்க கோயல் வழங்கவிருக்கும் தீர்ப்புக்கான முன்னறிவிப்பிற்கும் உள்ள தொடர்புக்கும் பெரிய வேறுபாடு எதுவுமில்லை.

இரண்டுமே பாஜகவிற்கு அனில் அகர்வால் நன்கொடையாக அளித்த 36.5 கோடிக்காக மட்டுமே நடைபெறும் நிகழ்வல்ல. இந்த நாட்டின் உழைக்கும் மக்களின் மீதான, குறிப்பாக தமிழகத்தின் மீதான பாஜகவின் வன்மத்தின் வெளிப்பாடுகளே இந்நிகழ்வுகள்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்கள், தமிழகத்தை இயற்கையின் சீற்றங்கள் புரட்டிப் போடும் மாதங்களாகவே முடிகிறது. தொடர்ந்து தமிழகத்தைப் புறக்கணித்து வரும் இந்த அரசு இயந்திரத்தை தமிழகத்தின் சீற்றங்கள் புரட்டிப் போடும் ஆண்டாக அமைந்தால் மட்டுமே இனி உயிர்வாழ முடியும். தமிழகம் சீறுமா ?