Saturday, June 13, 2026
முகப்பு பதிவு பக்கம் 422

பாசிசத்தை வீழ்த்த நவம்பர் புரட்சி நாளில் சூளுரைப்போம் | கணேசன்

க்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து, ரசியப் புரட்சியின் நோக்கத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக நவம்பர் புரட்சிதின விழாவைக் கொண்டாடின, ம.க.இ.க., பு.மா.இ.மு., பெ.வி.மு. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள்.

சென்னையில், கடந்த நவம்பர் 11 அன்று நடைபெற்ற விழாவில், பு.மா.இ.மு. மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் பங்கேற்று ஆற்றிய உரையின் காணொளி!

இன்று உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு பலியாகி வருகின்றனர். இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்வதற்காக உலகம் முழுவதிலும் மதவெறி, இனவெறி பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது. அன்று இனவெறி பாசிஸ்டான கொடுங்கோலன் ஹிட்லரைக் கண்டு உலகமே அச்சத்தில் இருந்த போது, அந்த ஹிட்லரை ஓட ஓட விரட்டி இந்த பூமிப் பந்தை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம். இன்று இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை எவ்வாறு வீழ்த்தப்போகிறோம் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக உரையாற்றியிருக்கிறார்.

அவரது உரையின் காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர முடியும் | மருத்துவர் B.R.J. கண்ணன்

ர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது என்ன? சர்க்கரைக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன தொடர்பு? மாவுச்சத்துள்ள உணவுப் பொருட்களை சேர்த்துக்கொண்டாலும் சர்க்கரை கூடுமா? வாழ்க்கை முறையில் மேற்கொள்ளும் சில மாற்றங்களின் மூலமாகவே எவ்வாறு சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை விளக்குகிறார், மருத்துவர் B.R.J. கண்ணன்.

மருத்துவர் B.R.J. கண்ணன்.

ர்க்கரை கட்டுக்குள் வரவில்லையா ? மருத்துவர் சொன்ன அத்தனையும் பின்பற்றிய பின்னும் சர்க்கரை தொடர்கிறது எனில் உங்களுக்கு அவசியமான வீடியோ இது.

முதலில் சர்க்கரை நோய் / நீரிழிவு நோய் என்றால் என்ன ?

நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மாவுப்பொருள், கொழுப்பு, புரதம் ஆகியவை இருக்கின்றன. மாவுப் பொருளைப் பொருத்தவரையில், உடலில் சீரணிக்கப்பட்ட பிறகு அது சர்க்கரையாக மாறி இரத்ததில் சேரும். நமது உடல் அதை உபயோகிக்க வேண்டும். இந்த செயல்நடக்க நமது உடலில் இன்சுலின் சுரக்க வேண்டும். இன்சுலின் இருந்தும் அது உபயோகிக்கப் படவில்லை என்றாலோ, நம் உடலில் இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, இரத்ததில் சர்க்கரை தேங்கி நிற்கும். அதுதான் சர்க்கரை நோய்.

இதனடிப்படையில் பார்த்தால், உடலில் சர்க்கரை தேங்கினால்தான் சர்க்கரை நோய் வரும் என்பது தெரிகிறது. சர்க்கரை, நாம் உட்கொள்ளும் மாவுப் பொருளில் இருக்கிறது. ஒருவருக்கு மீன் சாப்பிட்டால் உடலில் தடிப்பு / அலர்ஜி வரும் எனில், அவரிடம் மீன் சாப்பிடாதீர்கள் என்போம். மீன் சாப்பிட்டால்தான் அவரது நோய் வெளிப்படும். மீன் சாப்பிடவில்லையெனில் வெளிப்படாது. அதுப்போலதான் இங்கும். நாம் உட்கொள்ளும் உணவில் சர்க்கரை அளவு இருந்தால் மட்டுமே இரத்தத்தில் சர்க்கரை ஏறும்.

ஒரு பிரச்சினை ஏற்படுகிறது என்றால், அதன் மூலத்தைக் கண்டறிந்து அதனை தடுத்து நிறுத்துவது போல, இங்கும் இரத்தத்தில் சர்க்கரை சேர்வதைத் தடுக்க, உட்கொள்ளும் உணவில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். பிரச்சினையின் அடிப்படைக் காரணத்தைக் கட்டுப்படுத்தாமல் இதற்கு தீர்வு கிடையாது.

”நான் காஃபி, டீ சர்க்கரை போடுவதில்லை, இனிப்பு சாப்பிடுவதில்லை” என பலர் சொல்கின்றனர். இனிப்பு யாரும் தினமும் சாப்பிடுவது கிடையாது. அதே போல காபி, டீயில் போடப்படும் சர்க்கரையும் உடலில் பெருமளவு சர்க்கரையை சேர்ப்பதில்லை. இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், சோறு, ரவை ஆகிய அனைத்திலும் சர்க்கரை இருக்கிறது.

நாம் காலையிலிருந்து இரவு வரை உண்ணும் உணவில் 50%தான் மாவுப்பொருள் இருக்க வேண்டும் என்ற ஒரு விதி இருக்கிறது. ஆனால் நடைமுறையில் என்ன நடக்கிறது?. காலையில் இட்லி தோசை, மதியம் சாதம், இரவு சப்பாத்தி என கணக்கிட்டால் மொத்தம் 85 – 90 % மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கிறோம்.

தென் இந்தியா, வட இந்தியா என அனைவரும் மாவுப் பொருட்களையே உணவாக எடுத்துக் கொள்கின்றனர். அதன் காரணமாகவே இந்தியாவில் பொதுவாகவே சர்க்கரை நோய் மக்களிடம் அதிகமாக இருக்கிறது. ஆகவே எப்படி இதைக் குறைப்பது?

முதலில் உணவில் சர்க்கரையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு குறைத்துக் கொள்ளவேண்டும். அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, திணை, குதிரைவாலி, வரகு, ஓட்ஸ் அனைத்தும் சர்க்கரைதான். அதாவது மாவுப் பொருட்கள்.

படிக்க:
அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு
அறிவியல் பார்வையில் ஹோமியோபதி – சித்தா – ஆயர்வேதம் – யுனானி

எனில் நாம் சாப்பிட ஒன்றுமே இல்லையா எனக் கேள்வி எழலாம். அப்படி கிடையாது. நாம் அத்தகைய உணவுகளை நினைத்துப் பார்ப்பது கிடையாது. காலையில் இரண்டு முட்டை, ஒரு கோப்பை பால். அல்லது பயிர்வகைகளில் ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளலாம். ஒரு கோப்பை பழவகைகள் அல்லது கட்டித் தயிர் ஒரு கோப்பை சாப்பிடலாம். இது போல நாமே நமது உணவுப் பழக்கத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம். அதில் மாவுப் பொருட்கள் குறைவாக உள்ளதா என்பதை மட்டும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

மதிய உணவிற்கு கீரை, காய்கறி, தயிர், போன்றவையே எடுத்துக் கொள்ள வேண்டும். வேண்டுமென்றால் ஓரத்தில் ஒரு தேக்கரண்டி சோறு வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் பொறியல், எண்ணெய் கத்தரிக்காய், தயிர் போன்றவை மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். முடியாது என நினைக்காமல், முயன்றால் இவ்வுணவிற்கு பழகி விடலாம்.

இரவுக்கு சுண்டல், பச்சைபட்டாணி, பட்டர் பீன்ஸ், பன்னீர், காளான் என நாமே திட்டமிட்டு உண்ண வேண்டும். தோசை, சப்பாத்தி எடுக்கக் கூடாது. அசைவம் சாப்பிட வேண்டுமெனில் அதுவும் எடுத்துக் கொள்ளலாம்.

கோழி சாப்பிடவேண்டும் என விரும்பினால், கோழி வாங்கி வெங்காயம் போட்டு சமைத்து சாப்பிடலாம். ஆனால் சோறு போட்டு சாப்பிடக் கூடாது.

அசைவ உணவு சாப்பிடுகிறோம் என சொல்லிக் கொண்டு ஒரு 100 கிராம் சிக்கன் சாப்பிட்டால், அரைக்கிலோ அல்லது ஒரு கிலோ சோறு சாப்பிடுகிறோம். நாம் சாப்பிடும் சோறு / பிரியாணிதான் நமக்கு நோயைக் கொண்டுவருகிறது. ஆனால் பழியை நாம் சிக்கன் மீது போடுகிறோம்.

வாரம் இருமுறை அசைவம் சாப்பிட வேண்டும் என தோன்றினால் சாப்பிடலாம். ஆனால் சோறு சேர்க்கக் கூடாது. இடையில் பசித்தால், வெள்ளரிப் பிஞ்சு கேரட், தேங்காய், உலர் பழங்கள், போன்றவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் பிஸ்கட், ரஸ்க், சிப்ஸ் போன்றவை எடுத்துக் கொள்ளக்கூடாது.

சமைக்க நெய் எண்ணெய் எதுவேண்டுமானாலும் உபயோகிக்கலாம். அது போதுமான கொழுப்புச் சத்தை கொடுக்கும். இதைத் தொடர்ந்தால் கண்டிப்பாக சர்க்கரை கட்டுப்பாட்டுக்குள் வந்து தீரும். இதைத் தொடங்கினால், முதலில் ஒரு வாரத்துக்கு கடினமாக இருக்கும். அதன் பிறகு சிறப்பாக உணர ஆரம்பிப்பீர்கள். உடல் இதனை எளிமையாக ஏற்றுக் கொள்ளும். ஆனால் மனம்தான் ஏற்றுக் கொள்ளாது.

இதில் முக்கியமான விசயம் என்னவெனில், எந்தெந்த வீட்டில் குடும்பத் தலைவியர் இதன் அருமையை உணர்ந்திருக்கிறார்களோ, அவர்கள் சரியாக உணவை மாற்றிக் கொடுக்கிறார்கள். அவர்களுக்கும் அவர்களது கணவருக்கும் சர்க்கரை குறைகிறது.

இதுபோன்ற உணவு முறையை பின்பற்றிவிட்டு, 100 – 110 யூனிட் இன்சுலின் போட்டவர்கள் 5 – 10 யூனிட்டுக்கு குறைத்திருக்கிறார்கள். 1-2 மாத்திரை போட்டவர்கள் மாத்திரையே இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். சர்க்கரை இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். இது அறிவியல் சார்ந்த தீர்வு.

காணொளியைக் காண

மருத்துவர் BRJ கண்ணன்,
இதயத்துறை மருத்துவர், (Senior Interventional Cardiology)
வடமலையான் மருத்துவமனை, மதுரை.

மன்னார்குடி கருவாக்குறிச்சி : என்னோட குலசாமி உயிரு என் கையிலயே போயிருச்சு | காணொளி | படங்கள்

புயலின்போது மரம் விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசன்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, கருவாக்குறிச்சி கிராமம் கஜா புயலால் பெரும் பாதிப்பு அடைந்துள்ளது. பல்வேறு வீடுகள் சேதமடந்துள்ளது. தென்னந்தோப்புகள் கடுமையான பாதிப்படைந்துள்ளன. மரங்களை அப்புறப்படுத்த முடியாமல், வீடுகளை சரிசெய்ய முடியாமல் தவிக்கின்றனர் மக்கள். புயலுக்குப் பின் அமைதி இன்னும் திரும்பவில்லை! அரசின் நிவாரணப்பணி எட்டாத மற்றுமொரு கிராமமிது.

இந்த கிராமத்தில் மரம் விழுந்ததில் அடிபட்டு இறந்துபோனான் சிறுவன் கணேசன். “என்னோட குல சாமி உயிரு என் கையிலேயே போயிருச்சு” என்று கதறுகிறார் சிறுவனின் தாய்.

புயலின்போது மரம் விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசன்.
புயலின்போது மரம்விழுந்து இறந்துபோன சிறுவன் கணேசனின் குடும்பம்.
தென்னை விவசாயத்தின் அழிவு.
புயலுக்கு பின் இத்தனை நாட்கள் கடந்தும் குடிசை வீடுகளை சரிசெய்ய முடியாத நிலை.

படிக்க:
புயல் எவ்வாறு தோன்றுகிறது ? காணொளி
அரசால் வஞ்சிக்கப்படும் காவிரி டெல்டா மக்களுக்கு தோள் கொடுப்போம் !

மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் ஊர் மக்கள்.

***

வாய்க்கா தண்ணிய வடிகட்டி குடிச்சிட்டிருக்கோம்

”சொந்த செலவில் 25,000 செலவு பண்ணி ரோட்டை சரி செஞ்சிருக்கோம். குடிக்க தண்ணியில்ல. வாய்க்கா தண்ணிய வடிகட்டி குடிச்சிட்டிருக்கோம். போர் தண்ணி ஒரு டேங்க் – ஆவது ரொம்பட்டுமேனு மணிக்கு ரெண்டாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஜெனரேட்டர் வாடகைக்கு வாங்கியாந்திருக்கோம். நாலு நாலுக்கு அப்புறம் இப்பத்தான் இ.பி. காரங்களே பத்து பேரு வந்துருக்காங்க. அதிகாரிங்க இதுவரைக்கும் யாரும் எங்கள வந்து பாக்கவுமில்லை. என்ன ஏதுனு கேக்கவுமில்லை.”

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, மூவர் கோட்டை கிராமத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்புகளையும் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளையும் விவரிக்கிறார், அக்கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்.

படங்கள், காணொளி:

கருணையுள்ள கடவுளே ! அவர்களுக்கு நல்லது செய் ! அவர்களைக் காப்பாற்று !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 25 (தொடர்ச்சி)

மாக்சிம் கார்க்கி
”பூமி எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி முஜீக்குக்குக் கவலை கிடையாது” என்று உரத்த பெருமூச்சுடன் பேசத் தொடங்கினான் ரீபின்: “அது கைக்குக் கை எப்படி மாறுகிறது என்பதும், மக்களிடமிருந்து பண்ணையார் எப்படி அதைத் தட்டிப் பறிக்கிறார் என்பதைப் பற்றியும்தான் அவனுக்குக் கவலை. பூமி சுற்றிக் கொண்டிருந்தாலும், சுற்றாமல் அப்படியே நின்றாலும் அவனைப் பொருத்தவரையில் ஒன்றுதான்.

அந்தப் பூமி அவன் காலடியிலேயே கிடந்தாலும் சரி, அல்லது ஆகாசத்தோடு போய் ஒட்டிக்கொண்டாலும் சரி. அவனுக்கு அது நன்றாகச் சாப்பாடு மட்டும் போட்டால் போதும்!

”அடிமை வாழ்வின் சரித்திரம்” என்ற ஒரு புத்தகத்தின் தலைப்பைப் பார்த்து வாசித்தான் எபீம். “இதென்ன, நம்மைப் பற்றிய புத்தகமா?”

“நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை.

”இந்தப் புத்தகத்தில் நமது ருஷ்ய அடிமை வாழ்வைப் பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது” என்று கூறிக்கொண்டே பாவெல் அவனிடம் வேறொரு புத்தகத்தை எடுத்து நீட்டினான். எபீம் அந்தப் புத்தகத்தைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். பிறகு அதைக் கீழே வைத்துவிட்டுச் சொன்னான்.

”இதெல்லாம் பழைய காலத்து விவகாரம்.”

“சரி, உங்களுக்குச் சொந்தமாக நிலம் ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்டான் பாவெல்.

“இருக்கிறது. எனக்கும் என் சகோதரர் இருவருக்கும் சுமார் பத்தரை ஏக்கர் நிலம் இருக்கிறது. எல்லாம் ஒரே மணல் வெளி. பாத்திரம் விளக்க உதவுமே ஒழிய, பயிர் செய்ய உதவாத மண்.”

ஒரு கணம் கழித்து மீண்டும் அவன் பேசத் தொடங்கினான்.

”நான் நிலத்தை விட்டுவிட்டேன். அதை வைத்துக் கொண்டு என்ன பிரயோஜனம்? சும்மா நம்மை வேலையில்லாமல் கட்டித்தான் போடும், உணவு தராது. நாலு வருஷ காலமாய், நான் பண்ணைக் கூலியாளாகத்தான் வேலை பார்த்து வருகிறேன். மழைக்காலத்துக்குப் பிறகு நான் ராணுவ சேவைக்கும் செல்ல வேண்டும். ‘பட்டாளத்துக்குப் போகாதே. இப்போதெல்லாம் சிப்பாய்களைக் கொண்டு ஜனங்களை அடிக்கச் சொல்லுகிறார்களாம்’ என்று மாமா மிகயீல் சொன்னார். ஆனால் நான் போய்ச் சேரத்தான் எண்ணியிருக்கிறேன். ஸ்திபான் ராசின், புகச்சோவ் முதலியவர்கள் காலத்திலும் கூட, பட்டாளத்துக்காரர்கள் ஜனங்களை அடித்து நொறுக்கத்தான் செய்தார்கள். இதுக்கொரு முடிவுகட்ட வேண்டும். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று அவன் பாவெலைக் கூர்ந்து பார்த்தவாறே கேட்டான்.

”ஆமாம். காலம் மாறத் தொடங்கிவிட்டது!” என்று இளம் புன்னகையுடன் சொன்னான் பாவெல். ”ஆனால் காலத்தைப் பரிபூரணமாக மாற்றுவது மிகவும் கடினமான காரியம். நான் சிப்பாய்களிடம் என்ன சொல்ல வேண்டும், எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.”

”நாங்கள் அதைக் கற்றுக் கொள்வோம்” என்றான் எபீம்.

“ஆனால், ராணுவ அதிகாரிகள் அதைக் கண்டுபிடித்து விட்டார்களோ, அப்புறம் உங்களைச் சுட்டுக் கொன்று விடுவார்கள்” என்று எபீமைக் குறுகுறுவென்று பார்த்துக்கொண்டே சொன்னான் பாவெல்.

“ஆமாம், அவர்களிடம் இரக்கச் சித்தத்தை எதிர்பார்க்க முடியாது” என்று அந்தப் பையன் அமைதியுடன் ஆமோதித்துக்கொண்டே மீண்டும் புத்தகங்களைக் கவனிக்கத் தொடங்கினான்.

“தேநீர் அருந்து, எபீம்” என்றான் ரீபின். ”நாம் சீக்கிரம் புறப்பட வேண்டும்.”

“அதற்கென்ன? போவோம். அது சரி, புரட்சி என்பது என்ன? பெருங்கலகமா?” என்றான் எபீம்.

அதற்குள் அந்திரேய் அங்கு வந்து சேர்ந்தான். குளித்துவிட்டு வந்ததால் அவனது உடம்பெல்லாம் சிவந்துபோய் ஆவியெழும்பிக் கொண்டிருந்தது. முகத்தில் சோர்ந்த பாவம் காணப்பட்டது. அவன் ஒன்றுமே பேசாமல் எபீமோடு கைகுலுக்கிவிட்டு ரீபினுக்கு அடுத்தாற்போல் உட்கார்ந்தான். ரீபினைப் பார்த்ததும் லேசாகச் சிரித்துக் கொண்டான்.

”நீ ஏன் உற்சாகமே அற்றுப் போயிருக்கிறாய்?” என்று அவனது முழங்காலில் தட்டிக்கொண்டே கேட்டான் ரீபின்.

“ஒன்றுமில்லையே” என்றான் ஹஹோல்.

“அவனும் ஒரு தொழிலாளிதானா?” என்று அந்திரேயைப் பார்த்துக் கேட்டான் எபீம்.

“ஆமாம். எதற்காகக் கேட்கிறாய்?” என்றான் அந்திரேய்.

“இல்லை. அவன் இதற்கு முன் எந்த ஆலைத் தொழிலாளியையும் பார்த்ததே இல்லை. அவனுக்கு அவர்களைப் பற்றி ஒரு தனி அபிப்பிராயம்” என்றான் ரீபின்.

“எப்படிப்பட்ட அபிப்பிராயம்?” என்றான் பாவெல்.

“உங்கள் எலும்புகள் கூர்மையானவை. ஆனால் விவசாயியின் எலும்புகள் மொட்டையானவை” என்று அந்திரேயைக் கூர்ந்து பார்த்தபடி சொன்னான் எபீம்.

“முஜிக் தன் கால்களை நிலத்தில் நன்றாகப் பதிய ஊன்றி நிற்கிறான் – நிலம் அவனுக்குச் சொந்தமில்லாவிட்டாலும், நிலத்தில் நிற்கும் உணர்ச்சி மட்டும் அவனை விட்டு நீங்குவதில்லை. அவன் பூமியைத் தொட்டு உணர்கிறான். ஆனால் ஆலைத் தொழிலாளியோ, அப்படியல்ல. அவன் ஒரு சுதந்திரமான பறவை. நிலம், வீடு என்று எந்தப் பற்றுதலும் அவனுக்கு கிடையாது. இன்றைக்கு இங்கே, நாளைக்கு எங்கேயோ? ஒரு பெண்ணின் ஆசைகூட, அவனை ஒரே இடத்தில் இருத்தி வைத்துவிட முடியாது. அவனுக்கும் அவளுக்கும் ஏதாவது ஒரு சின்னத் தகராறு வந்தாலும் போதும். உடனே அவளை விட்டு விலகி, வேறொரு இடத்தைத் தேடிப் புறப்பட்டுப் போய்விடுவான். ஆனால் முஜீக் அப்படியல்ல. இடத்திலிருந்து நகராமல் தன்னைச் சுற்றி மேன்மைப்படுத்திக் கொள்ள திரும்புவான். சரி, இதோ உன் அம்மா வந்துவிட்டாள்” என்று பேசி முடித்தான் ரீபின்.

நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அமைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து உழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்…”

“சரி, எனக்கு ஒரு புத்தகம் இரவல் கொடுப்பீர்களா?” என்று பாவெலிடம் நெருங்கி வந்து கேட்டான் எபீம்.

“தாராளமாய்” என்றான் பாவெல்.

அந்தப் பையனின் கண்கள் பிரகாசம் அடைந்தன.

”நான் திருப்பித் தந்துவிடுவேன்” என்று அவன் அவசர அவசரமாக பாவெலுக்கு உறுதி கூற முனைந்தான். “எங்களூர்காரர்கள் இந்தப் பிரதேசத்துக்குத் தார் எண்ணெய் ஏற்றிக் கொண்டு அடிக்கடி வருவார்கள். அவர்கள் மூலம் கொடுத்தனுப்புகிறேன்.”

“சரி, போக நேரமாச்சு” என்று தனது கோட்டையும் பெல்டையும் எடுத்து மாட்டிக்கொண்டு கூறினான் ரீபின் .

“இதோ, படிக்கப் போகிறேன்” என்று ஒரு புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு புன்னகையோடு கூறினான் எபீம்.

அவர்கள் சென்றவுடன் பாவெல் உணர்ச்சிவயப்பட்டவனாக அந்திரேயின் பக்கம் திரும்பினான்.

”இவர்களைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?” என்று மகிழ்ச்சி பொங்கக் கேட்டான்.

”ஹூம்” என்று முனகினான் ஹஹோல். ”இரண்டு புயல் மேகங்கள் மாதிரிதான்!”

“மிகயீல் இருக்கிறானே. அவனைப் பார்த்தால் தொழிற்சாலையிலேயே வேலை பார்த்தவன் மாதிரி தோன்றவில்லை – அசல் முஜீக் ரொம்பப் பயங்கரமான ஆசாமி” என்றாள் தாய்.

“நீ இங்கே இல்லாமல் போனது ரொம்ப மோசம்” என்று அந்திரேயை நோக்கி, பாவெல் சொன்னான். அந்திரேய் மேஜைக்கு எதிராக அமர்ந்து, தன் எதிரே இருந்த தேநீர்க் கோப்பையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். பாவெல் மேலும் பேசினான். ”நீ அடிக்கடி மனித இதயத்தைப் பற்றிப் பேசுகிறாயே. அவன் இதயத்தில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீ கொஞ்சமாவது பார்த்திருக்க வேண்டும். பின் கொஞ்ச நேரத்துக்கு முன்னால் படபடவென்று பொரிந்து தள்ளி, என்னைத் திணற அடித்துவிட்டான். அவனுக்குப் பதில் சொல்லக்கூட எனக்கு வாயெழவில்லை. அவன் இந்த மனித ராசியை எவ்வளவு கேவலமாக மதிக்கிறான்? மனித குலத்திடமே அவனுக்கு நம்பிக்கை இல்லை. அம்மா சொன்னது ரொம்ப சரி. ஏதோ ஒரு பயங்கரமான சக்திதான் அவனுள் குடிகொண்டிருக்கிறது!”

”நானும் அதைக் கவனித்தேன்” என்று உணர்ச்சியற்றுக் கூறினான் ஹஹோல். “ஆட்சியாளர்கள் மக்களின் மனத்தில் விஷத்தை ஏற்றிவிட்டார்கள். மக்கள் மட்டும் ஒன்றுதிரண்டு கிளர்ந்தெழுந்தால், எல்லாவற்றையும் நொறுக்கித் தள்ளிவிடுவார்கள். அவர்களுக்கு வெறும் நிலம்தான் வேண்டும்; அந்த நிலத்தை வெறுமனே போட்டிருக்கவும் அவர்கள் செய்வார்கள். எல்லாவற்றையும் கிழித்தெறிந்து விடுவார்கள்.”

அவன் மெதுவாகவே பேசினான்; அவன் மனதில் வேறு ஏதோ ஒரு சிந்தனை ஊடாடிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாகத் தெரிந்தது. தாய் வந்து அவனது தோளைத் தட்டிக் கொடுத்தாள்.

“தைரியமாயிரு, அந்தியூஷா” என்றாள் தாய்.

‘கொஞ்சம் பொறு, அம்மா’ என்று மிகுந்த பரிவோடு கூறினாள் அவன். திடீரென்று அவன் உத்வேக உணர்ச்சியோடு மேஜை மீது ஓங்கிக் குத்திக்கொண்டே பேசினான். ”அது உண்மைதான் பாவெல்! முஜீக் மட்டும் விழித்தெழுந்தால் அவனது நிலத்தைத் தரிசாகவே போட்டுவிடுவான். கொள்ளை நோய்க்குப் பிறகு மிஞ்சும் சாம்பலைப் போல, சகலவற்றையும் சுட்டெரித்துச் சாம்பலாக்கி, தான் பட்ட சிரமத்தின் வடுக்களையெல்லாம் தூர்த்துத் துடைத்துவிடுவான்!”

“அதன் பின் அவன் நம் வழிக்கு வந்து சேருவான்” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

”ஆனால் அந்த மாதிரி நடக்காதபடி பார்த்துக்கொள்வதுதான் நமது வேலை. அவனைச் சரியான பாதையில் செலுத்துவதற்கு அவனை இழுத்துப்பிடிப்பது நமது வேலை. மற்றவர்களைவிட நாம்தான் அவனுக்கு மிகவும் நெருங்கியவர்கள். அவன் நம்மை நம்புவான். பின்பற்றுவான்.”

‘ரீபின் கிராமத்துக்கென்று ஒரு பத்திரிகை வெளியிடும்படி சொன்னான்” என்றான் பாவெல்.

“செய்ய வேண்டியதுதான்”
”அவனோடு நான் விவாதியாமல் போனது பெருந்தவறு” என்று லேசாகச் சிரித்துக்கொண்டே சொன்னான் பாவெல்.

“பரவாயில்லை, இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது” என்று அமைதியாகக் கூறிக்கொண்டே, தன் தலைமயிரைக் கோதிக் கொடுத்தான் ஹஹோல். “நீ உன் வாத்தியத்தையே வாசித்துக் கொண்டிரு. பூமியில் அறைந்தாற்போல் அசைவற்று நிற்பவர்களைத் தவிர, மற்றவர்கள் உன் பாட்டுக்குத் தக்கபடி ஆட்டம் ஆடுவார்கள். நமக்குக் கீழே பூமி இருக்கிறது என்பதை நாம் உணரவில்லை என்று ரீபின் சொன்னதில் தவறில்லை. மேலும், நாம் பூமியில் காலூன்றி வெறுமனே நிற்கக்கூடாது. பூமியையே அசைக்க வேண்டும். நாம் அசைக்கிற அமைப்பில், அதனோடு ஒட்டிக்கிடந்து உழலுகின்ற மக்களை உலுக்கி, பிடி தவறச் செய்யவேண்டும். அப்படிச் செய்தால்தான் அவர்கள் அந்தப் பிடிப்பிலிருந்து விடுதலைப் பெறுவார்கள்…”

படிக்க:
எச்ச ராஜாவோடு ஒரு ’ ஆன்டி இந்தியன் ’ நேருக்கு நேர் ! காணொளி
#MeToo : உழைக்கும் வர்க்கப் பெண்களின் பகிர்வுகள் !

“உனக்கு எல்லாமே எளிதாக இருக்கிறது அந்தியூஷா” என்று சிரித்துக்கொண்டே சொன்னாள் தாய்.

“ஆமாம். வாழ்க்கையைப் போல்” என்றான் ஹஹோல்.

சில நிமிஷம் கழித்து அவன் பேசினாள்.

”சரி. நான் வயல் வெளியில் கொஞ்சம் உலாவி வரப்போகிறேன்.”

“குளித்த பிறகா? காற்று வேறு அடிக்கிறது. சளிப்பிடிக்கும்” என்று எச்சரித்தாள் தாய்.”

“கொஞ்சம் காற்றாடி வந்தால்தான் தேவலை” என்றான் அவன்.

“சளிப் பிடிக்காமல் பார்த்துக்கொள். கொஞ்சம் பாடேன்!” என்றான் பாவெல்.

“வேண்டாம். நான் போகிறேன்.”

அவன் தனது உடைகளை மாட்டிக்கொண்டு ஒன்றுமே பேசாமல் வெளிக் கிளம்பினான்.

“அவன் மனம் என்னவோ சங்கடப்படுகிறது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் தாய்.

“அந்தச் சம்பவம் நடந்ததிலிருந்து நீ அவன் மீது அதிகமான அன்போடு நடந்து கொள்கிறாய். அதைப்பற்றி எனக்கு மிகுந்த சந்தோஷம் என்றான் பாவெல்.

”நானா? எனக்கு அப்படியொன்றும் தெரியவில்லை. என்னவோ அவனை எனக்கு ரொம்பவும் பிடித்துப்போயிற்று. எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை.”

“உனக்கு மிகவும் அன்பான மனம், அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

”நான் மட்டும் உனக்கு – உன் தோழர்கள் அனைவருக்கும் – உதவ முடிந்தால், கொஞ்சமேனும் உதவி செய்ய முடிந்தால் எப்படி உதவுவது என்பது மட்டும் தெரிந்தால்?”

“கவலைப்படாதே, அம்மா நீ தெரிந்து கொள்வாய்.”

”எனக்கு அது மட்டும் தெரிந்துவிட்டால் அப்புறம் கவலையே இராது” என்று சிறு சிரிப்புடன் கூறினாள் தாய்.

“சரி, அம்மா. இந்தப் பேச்சை விட்டுவிடுவோம். ஆனால் ஒன்று மட்டும் ஞாபத்தில் வைத்துக்கொள். உனக்கு நான் மிகவும் நன்றி பாராட்டக் கடமைப்பட்டவன்.”

அவள் பேசாது சமையலறைக்குள் சென்றாள். தன் கண்களில் பொங்கும் கண்ணீரை அவன் பார்த்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பு அவளுக்கு.

அன்று இரவு ஹஹோல் வெகு நேரம் கழித்துத்தான் வீடு திரும்பினான். வந்தவுடனேயே அவன் படுக்கச் சென்றுவிட்டான்.

“நான் இன்றைக்குப் பத்து மைலாவது நடந்திருப்பேன்.”

“அதனால் பலன் இருந்ததா?” என்று கேட்டான் பாவெல்.

”தொந்தரவு பண்ணாதே, எனக்குத் தூக்கம் வருகிறது.”

அவன் அதற்குப் பிறகு எதுவுமே பேசவில்லை.

சிறிது நேரம் கழித்து, நிகலாய் வெஸோவ்ஷிகோவ் உள்ளே வந்தான். அவனது ஆடைகள் கிழிந்து கந்தல் கந்தலாயிருந்தன. ஒரே அழுக்குமயமாகவும் அதிருப்தி நிறைந்தவனாகவும் அவன் வந்து சேர்ந்தான்.

“இஸாயை யார் கொன்றார்கள் என்று கேள்விப்பட்டாயா?” என்று பாவெலிடம் கேட்டுக்கொண்டே அவன் அறைக்குள் நடக்க ஆரம்பித்தான்.

”இல்லை” என்று சுருக்கமாக விடையளித்தான் பாவெல்.

“எவனோ ஒருவன் வேண்டா வெறுப்பாக இந்தக் காரியத்தில் முந்திவிட்டான். நானே அந்தப் பயலைத் தீர்த்துக்கட்ட வேண்டும் என்று இருந்தேன். நான்தான் அதைச் செய்திருக்க வேண்டும். அதற்கு நான்தான் தகுந்த ஆசாமி.”

”அந்தப் பேச்சை விடு, நிகலாய்” என்று நட்புரிமை தொனிக்கும் குரலில் சொன்னான் பாவெல்.

“நான் நினைத்தேன்’ என்று அன்போடு பேச ஆரம்பித்தாள் தாய். ‘உனக்கு மிகவும் மிருதுவான மனம் இருக்கிறது. நீ ஏன் இப்படி விலங்கு மாதிரி கர்ஜிக்கிறாய்?”

அந்தச் சமயத்தில் நிகலாயைப் பார்க்க அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது அம்மைத் தழும்பு விழுந்த முகம் கூடக் கவர்ச்சிகரமாகத் தோன்றியது.

“இந்த மாதிரிக் காரியங்களுக்குத் தவிர, வேறு எதற்கும் நான் லாயக்கில்லை’ என்று தன் தோளைச் சிலுப்பிக்கொண்டே சொன்னான் நிகலாய். ‘நானும் நினைத்து நினைத்துப் பார்க்கிறேன். இந்த உலகில் என் இடம் எது என்று. ஆனால் எனக்கு ஒரு இடமும் இல்லை. ஜனங்களோடு பேசத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் எப்படிப் பேசுவது என்பது எனக்குத் தெரியாது. எல்லாம் எனக்குப் புரிகிறது மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எல்லாம் பார்த்து அனுதாபம் கொள்கிறேன். என்றாலும் அதை வாய்விட்டுச் சொல்லத் தெரியவில்லை. நான் ஒரு ஊமைப்பிறவி.”

அவன் பாவெலிடம் திரும்பினான்; உடனே தன் கண்களைத் தாழ்த்தி, மேஜையையே துளைத்துவிடுவது போல் வெறித்துப் பார்த்தான். பிறகு அவரது இயற்கையான குரலுக்கு மாறான மழலைக் குரலில் பேசத் தொடங்கினான்.

”தம்பி, எனக்கு ஏதாவது பெரிய வேலையாகக் கொடு. இந்த மாதிரி, எந்தவிதக் குறிக்கோளுமற்று என்னால் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. நீங்கள் அனைவரும் உங்கள் வேலைகளிலேயே மூழ்கியிருக்கிறீர்கள். உங்களது இயக்கம் எப்படி வளர்ந்து மலர்கிறது என்பதை நான் பார்க்கத்தான் செய்கிறேன். ஆனால் நான் மட்டும் ஒரு பக்கமாக ஒதுங்கி நிற்கிறேன். வெறுமனே மரங்களைச் சுமந்து திரிவதோடு முடிந்து விடுகிறது என் பிழைப்பு. இந்தப் பிழைப்பு ஒருவனுக்கு வாழ்வளித்துவிடாது. எனக்கு வேறு ஏதாவது கடினமான பெரிதான வேலை கொடு.”

பாவெல் அவனது கையை எட்டிப் பிடித்து அவனைத் தன்னருகே இழுத்தான்.

“சரி தருகிறேன்.”

இடையிலிருந்த மறைவுக்கு அப்பாலிருந்து ஹஹோலின் குரல் கேட்டது.

“நான் உனக்கு அச்சுக் கோக்கிற வேலை சொல்லித் தருகிறேன், நிக்லாய். உனக்கு அது பிடிக்குமா?”

நிகலாய் ஹஹோலிடம் பேசினான்:

“நீ மட்டும் எனக்குக் கற்றுக் கொடுத்துவிட்டால் – உனக்கு நான் என் கத்தியைப் பரிசளித்து விடுகிறேன்” என்றான் அவன்.

”உன் கத்தியைக் கொண்டு உடைப்பிலே போடு” என்று கடகடவென்று சிரித்தவாறே கத்தினான் ஹஹோல்.

“இல்லை, அது ஒரு நல்ல கத்தி” என்றான் நிகலாய். பாவெலும் சிரிக்க ஆரம்பித்தான்.

“நீங்கள் என்னைப் பார்த்துச் சிரிக்கவா செய்கிறீர்கள்!” அறையின் மத்தியில் நின்றவாறே கேட்டான் நிகவாய்.

“ஆமாம் அப்பா, ஆமாம்!” என்று படுக்கையை விட்டுத் துள்ளி யெழுந்தவாறே சொன்னான் ஹஹோல். “சரி வா. வயல்வெளிப் பக்கம் உலாவிவிட்டு வரலாம். நிலா அருமையாகக் காய்கிறது. வருகிறாயா?”

“சரி” என்றான் பாவெல்.

“நானும் வருகிறேன் என்றான் நிக்கலாய். ”ஹஹோல், உன் சிரிப்பு எனக்குப் பிடித்திருக்கிறது.”

“நீ பரிசு கொடுப்பதாகச் சொல்வது எனக்குப் பிடித்திருக்கிறது” என்றான் ஹஹோல் சிரித்துக்கொண்டே.

அவன் சமையலறைக்குள் சென்று உடை உடுத்திக்கொண்டான்.

“மேலே ஏதாவது போர்வையைப் போட்டுக்கொள்” என்று அவசர அவசரமாகச் சொன்னாள் தாய்.

அவர்கள் மூவரும் வெளியே சென்ற பிறகு அவள் ஜன்னலருகே சென்று அவர்கள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தாள். பிறகு சுவரிலிருந்த விக்ரகத்தை நோக்கி வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டாள்:

“”கருணையுள்ள கடவுளே! அவர்களுக்கு நல்லது செய் அவர்களைக் காப்பாற்று…”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

காற்று மாசுபாடு : தில்லியில் வாழ்வது தினசரி 20 சிகரெட் புகைப்பதற்கு சமம் !

லைநகர் தில்லியின் காற்று மாசுபாடு அபாயகரமான எல்லைக் கோட்டைத் தொட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனம் (WHO) 1600 உலக நகரங்களை உள்ளடக்கி நடத்திய ஆய்வு ஒன்றின்படி, பெருநகரங்களிலேயே ஆக மோசமான நிலையில் தில்லியின் காற்றுச் சூழல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 லட்சம் மக்கள் காற்று மாசினால் இறந்து போகின்றனர் என்றும் காற்று மாசுபாடு தான் ஐந்தாவது பெரிய ஆட்கொல்லி எனவும் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் 28-ம் தேதி நுரையீரல் பாதுகாப்பு மையம் (Lung Care Foundation) எனும் அரசுசாரா தொண்டு நிறுவனம் தில்லியில் மருத்துவர்கள் கருத்தரங்கு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இதில் உரையாற்றிய அவ்வமைப்பின் நிறுவனரும் கங்காராம் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவருமான அரவந்த் குமார், தில்லியின் காற்று மாசுபாட்டின் விளைவு சராசரியாக நாளொன்றுக்கு 14ல் இருந்து 20 சிகரெட்டுகளைப் புகைப்பதற்கு ஒப்பானது எனக் குறிப்பிட்டார்.

மேலும், அதே நிகழ்வின் போது சாதாரண நுரையீரல் ஒன்றின் படத்தையும் பாதிக்கப்பட்ட நுரையீரல் ஒன்றின் படத்தையும் ஒப்பிட்டுப் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளில் தில்லியைச் சேர்ந்தவர்களின் நுரையீரலின் நிறம் மாறி வருவதைக் குறிப்பிட்டார். பொதுவாக புகைப் பழக்கம் உள்ளவர்களின் நுரையீரல்களில் தெரியும் கருப்புத் திட்டுக்கள் புகைப்பழக்கம் இல்லாதவர்களின் நுரையீரல்களிலும் தெரிவதாக அவர் அப்போது தெரிவித்தார்.

தில்லியின் காற்று மாசுபாடு அளவு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பொதுவாக 101ல் இருந்து 200 புள்ளிகளாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் அதிகபட்சமாக 500 புள்ளிகள் வரை உயர்வதாகவும் பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காற்றில் உள்ள பி.எம் 2.5 மற்றும் பி.எம் 10 துகள்களின் அளவு ஒரு க்யூபிக் மீட்டருக்கு 999 மைக்ரோ கிராம் அளவுக்கு இந்த மாதங்களில் அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இதன் அனுமதிக்கப்பட்ட அளவு 60-ல் இருந்து 100 வரை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக வருடத்தின் பிந்தைய 3 மாதங்களில் தில்லியின் காற்று மாசுபாடு அதிகரிப்பதற்கான காரணமாக சூழலியல் ஆர்வலர்கள் குறிப்பிடுவது அண்டை மாநிலங்களான ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை. அதாவது இம்மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் நவம்பர் மாதத்தின் முதலிரு வாரங்களில் ஏற்கனவே அறுவடையான நெற்பயிரின் மீதங்களை மீண்டும் சாகுபடி செய்வதற்கு முன் தீயிட்டுக் கொளுத்துகின்றனர். அவ்வாறு கொளுத்தப்படும் போது எழும் புகை காற்றின் போக்கில் தில்லியின் மேல் கவிந்து அந்நகரின் காற்று மாசுபாட்டிற்கு காரணமாகி விடுகின்றது என்கின்றனர்.

சுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாட்டு மையத்தின் (Environment Pollution Control Authority (EPCA)) அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி பஞ்சாபில் சுமார் 60 ஆயிரம் ஏக்கர்களிலும், ஹரியாணாவில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர்களிலும் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றது. இவ்விரு மாநிலங்களிலும், நெல் அறுவடைக்குப் பின் மொத்தம் 32 மில்லியன் டன் பயிர்க் கழிவுகள் உருவாகின்றன. இந்தக் கழிவுகளை எரிப்பது தில்லியின் காற்று மாசில் சுமார் 30 சதவீத அளவுக்கு பங்களிப்பு செய்வதாக கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்கள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. அதே போல் தேசிய சூழற் பொறியியல் ஆராய்ச்சி மையம் (National Environment Engineering Research Institute) வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றின்படி, தில்லியின் காற்றில் கலந்துள்ள பி.எம் 2.5 துகள்கள் பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் இருந்தே 60 சதவீதம் வருவதாகத் தெரிவிக்கின்றது.

இந்த விவரங்களை வைத்துக் கொண்டு சூழலியல்வாதிகளும், தில்லி ஆம் ஆத்மி கட்சியினரும் வெளியிடும் கருத்துக்கள் அனைத்தும் பஞ்சாப் ஹரியாணா மாநில விவசாயிகளை வில்லன்களாக்குகின்றன. மேலும் பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளும் ஆணைகளும் பயிர்க்கழிவுகளை எரிக்கத் தடை விதிக்கின்றன. ஹரியாணா மற்றும் பஞ்சாப் அரசுகள் பயிர்க் கழிவுகள் எரிப்பதற்கு தடை விதித்துள்ளதோடு, மீறி எரிக்கும் விவசாயிகளுக்கு அபராதமும் விதிக்கின்றன. ஆனால், உண்மை என்ன?

மேலே அளிக்கப்பட்டுள்ள விவரங்களில் இருந்தே கூட, தில்லியின் காற்று மாசுபாட்டிற்கு விவசாயிகள் பிரதான காரணம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும். நகரமயமாக்கம், அதிகரித்து வரும் கார்கள் உள்ளிட்ட போக்குவரத்து சாதனங்களின் அதிகரிப்பு, ஆலைக் கழிவுகள் போன்றவை காற்று மாசுபாட்டிற்கும் இன்னபிற சூழலியல் மாசுபாட்டிற்கும் பிரதானமான காரணங்களாக விளங்குகின்றன. இவற்றிற்கு அடுத்த இடத்தில் தான் ஹரியாணா – பஞ்சாப் விவசாயிகள் பயிர்க் கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது வருகின்றது. எனினும், அந்த இரண்டாம்பட்ச காரணத்தின் கர்த்தாக்களுக்கு ஏதும் சதி நோக்கங்கள் உள்ளனவா?

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைச் சேர்ந்த நிருபர் ஒருவர், தடைகளை மீறியும் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிப்பது ஏன் என்பதைக் கண்டறிய நேரடியாக இம்மாநிலங்களுக்கு பயணம் செய்துள்ளார். அவரிடம் பேசிய ஹரியாணாவைச் சேர்ந்த கேரதி லால் (65 வயது) என்கிற விவசாயி, முன்பெல்லாம் விவசாயக் கூலிகளை பணிக்கமர்த்தி பயிர்க் கழிவுகளை அகற்றியதாகவும், பின்னர் கூலி விவசாயிகளை அமர்த்திக் கொள்வது செலவு பிடிக்கக் கூடியதான போது இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டது என்கிறார். இயந்திரங்கள் அறுவடையான பயிர்களின் மேற்பகுதியை மட்டும் வெட்டி நீக்கக் கூடியதாகவும், அதன் அடிப்புறத்தைப் பிடுங்கி எடுக்கும் தன்மையில் இல்லாமலும் இருக்கின்றன. பயிர்க் கழிவுகளை வேரோடு பிடுங்கி அகற்றும் இயந்திரங்களின் விலையோ நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விலை கூடியதாக இருக்கின்றது.

எனவே இருக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழிகள் இல்லை. பீகார் – உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து விவசாயக் கூலிகளாக பஞ்சாப் சென்று கொண்டிருந்த கூலித் தொழிலாளர்களின் சம்பளங்களும் உயர்ந்து விட்டன. விவசாயக் கூலியாகச் செல்வதை விட நகர்ப்புறங்களில் கூலி வேலைகளில் ஈடுபடுவதால் அதிக சம்பளம் கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் விவசாயக் கூலி வேலைகளைத் தவிர்க்கின்றனர்.

ஆக, வேறு வழியின்றி இருக்கும் இயந்திரங்களைப் பயன்படுத்தியே பயிர்க் கழிவுகளை வேர்ப் பகுதிக்கு சற்று மேலாக வெட்டி நீக்குகின்றனர். இயந்திரங்களால் அகற்ற முடியாத பயிர்க் கழிவுகளின் அடிப் பகுதி மற்றும் வேர்ப் பகுதிகளை எரியூட்டுகின்றனர். ஆக விவசாயிகளைப் பொருத்த வரை பயிர்க் கழிவுகளை எரியூட்டி தில்லி வாழ் மேன்மக்களைக் கொன்றொழிக்க வேண்டும் என்கிற சதித் திட்டம் ஏதுமில்லை. நிலத்தை சாகுபடிக்குத் தயாரிப்பதற்கான செலவை ஈடுகட்டும் அளவுக்கு விவசாயம் இலாபகரமாக இல்லாததே முதன்மைக் காரணம்.

இதில் , ஹரியானா – பஞ்சாபில் இருந்து கிளம்பும் புகை விவசாயத்தை அழிவுக்குத் தள்ளும் பொருளாதார முடிவுகளை எடுக்கும் கோமான்கள் வீற்றிருக்கும் தில்லியைச் சூழ்வது ஒரு முரண் நகை. அல்லது கவித்துவ நீதி என்றும் சொல்லலாம்.

எனவே புகைமூட்டத்தில் இருந்து தில்லியைக் காப்பாற்ற வேண்டும் என்றால் விவசாயத்தை இலாபகரமான தொழிலாக உயர்த்துவதைத் தவிர வேறு வழி ஏதும் இல்லை.

செய்தி ஆதாரம்:
‘Pollution in Delhi akin to smoking 15-20 cigarettes a day’
We didn’t start the fire

மோடி ஊழலை மறைக்கும் மீடியா | பெண்ணை வேட்டையாடும் ஓநாய்கள் | கேலிச்சித்திரம்

மோடி அரசின் ஊழலை மறைக்கும் மீடியா

கேலிச்சித்திரம்: சர்தார்

பெண் இனத்தை வேட்டையாடும் சமூக ஓநாய்கள்

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்

படிக்க:
போலீசு – ஊடகம் – ஹிப்ஹாப்களின் உண்மை முகம் – கேலிச்சித்திரங்கள்
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !

எது முன்னெச்சரிக்கை ? எது சிறந்த அரசு ? எது நிவாரணப் பணி ? குமுறுகிறார் ஒரு விவசாயி !

ட்டுக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் தொலைபேசி வழியாக வினவு செய்தியாளர் எடுத்த நேர்காணல், இது. பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இழப்பு, அதனைக் கண்டுகொள்ளாமல் நிவாரணப் பணிகளை ஆமை வேகத்தில் செய்யும் அரசு நிர்வாகம் ஆகியவை குறித்து தமது சொந்த அனுபவத்திலிருந்து விவரிக்கிறார் அவர்.

*****

எல்லா மரமும் போச்சு, ஒன்னு ரெண்டு மரம்தான் நிக்குது. எந்த மரமும் இல்ல.  புயல் கரையேறிய அதிராம்பட்டினத்தில் இருந்து பட்டுக்கோட்டை 15 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. பேராவூரணி 2 கிலோ மீட்டர்ல இருக்கு. இங்க பாதிப்பில்லாத வீடு எதுவுமில்லை. பட்டுக்கோட்டையில மட்டும் சுமாரா 12,000 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட போஸ்ட் கம்பம் விழுந்துடுச்சி. இது வந்து எங்கூர் மின்சார ஊழியர் சொன்னது. எங்க ஊரு அலிவளத்தில் மட்டுமே 60 போஸ்ட் மரம் விழுந்திருக்கு.

இங்க குட்டை ரக தென்னை மரம் எல்லாம் முறிஞ்சி போயிடுச்சி.  பழைய தென்னை எல்லாம் உறுதியா இருக்கும்.  இப்ப உள்ள தென்னையின் தண்டு பகுதி வலிமை இல்லாம இருக்கு. அதுல காய் காய்ப்பு திறனை அதிகப்படுத்தி இருக்காங்க.  அதுகிட்ட நோய் எதிர்ப்பு சக்தியே இல்லை. மொத்த மரமும் முறிஞ்சி ரெண்டா விழுந்திருச்சி. அதாவது இந்த தென்னை மரத்தை மட்டும் நம்பி இருந்த பல குடும்பங்கள் கண்ணீரோடு அமர்ந்திருக்கு.

குடி தண்ணிக்கு என்ன பன்றீங்க?

குடி தண்ணிக்கு பழைய டேங்குல  தண்ணிய சுட வச்சி குடிச்சி கிட்டு இருக்கோம். இப்பதான் இரண்டு பாட்டிலு 50 ரூபாய்க்கு வாங்கிட்டு வறேன். இரண்டு லிட்டர் தான். காசு இல்லாதவங்க இன்னா பன்றாங்கன்னா கும்பகோணத்துல போயிட்டு தண்ணி தூக்கிட்டு வராங்க.

நீங்க போயிட்டு வாங்கிட்டு வறிங்களா?

இல்ல. வாட்டர் ஏஜெண்ட் போயிட்டு வாங்கிட்டு வராரு. நான் போயிட்டு ஒரு கேன் அறுபது ரூபா கொடுத்து வாங்கிட்டு வரேன். இது உள்ளூர் கம்பனி. எங்க ஊர்ல 120 கிலோ மீட்டர் வேகத்துல புயல் அடிச்சிது. இன்னொரு விசயம் புயல் அடிக்கும்னு எச்சரிக்கை கொடுத்தாங்க. ஆனா அதோட எதிர் திசையில வெற்றிடத்தை நிரப்பு ஒரு புயல் வரும்னு எந்த மீடியாவும் சொல்லவில்லை. எல்லாம் அடிச்ச பிறகு தான் சொல்றாங்க.  எதிர் திசையில அடிச்ச காத்துதான் மிகபெரிய பாதிப்பை எற்படுத்தினது. மூன்றறை மணிக்கு அடித்த புயலின் பாதிப்பு கம்மி தான். எதிர் திசையில புயல் அடிக்கவும் இரண்டு பக்கத்து மரங்களும் முறிஞ்சிடுச்சி.

பஞ்சாயத்து போர்டுல யாருமெ இல்ல. அவங்கள எதுவ்மெ கேட்க முடியாது. ஏன்னா உள்ளாட்சி தேர்தலே நடக்கல. அதிகாரிகள் எல்லாருக்கும் ஒன்னாம் தேதி ஆனா சம்பளம் வந்துடும். அதனால் அவங்களால் இந்த வலியை உணர முடியல.  நம்ம ஏழை குடும்பத்துல பிறந்ததால் அந்த வலியை உணர்ந்து உங்ககிட்ட பேசுறேன்.

இப்ப கவர்ன்மெண்டு தான் சொல்லுதுல்ல எல்லா முன்னெச்சரிக்கையும் எடுத்துட்டோம்னு?

காவிரி டெல்டா மாவட்டங்களை அலட்சியப்படுத்திட்டாங்க. அது மிகப்பெரிய தவறு. ஏன்னா இதுவரை கடந்த காலங்கள் பாத்திங்கன்னா புயல் வர்ரதுக்கு முன்ன மழை பேஞ்சுக்குட்டுத்தா இருக்கும், அப்போ புயல்னு ஒரு பயம் இருக்கும், இப்போ முத நாள் சாயங்காலம் வரை வெயிலடிக்கிறதல அத நம்ப முடில. இதே பாலசந்தர் (வானிலை ஆய்வுமைய அதிகாரி) என்ன சொல்ராரு, பாம்பனுக்கும் ராமேஸ்வரத்துக்கும் நடுவுல கரைய கடக்கும்ன்றாரு, அவரு வேதாராண்யத்தயே கடைசில தான் சொன்னாரு, அதே பிரதீப் ஜான் என்ன சொல்ராரு வேதாராண்யத்துல கரையை கடக்கும்ன்றாரு, அப்போ வந்து ஒரு புரிதல் இல்லாம இருக்கு ஏன்னா காற்று வந்து திசை மாறிப் போய்டுச்சு, அப்படிம்பாங்க. இன்னோன்னு, இந்த அபிராமண்டலத்துல புயல் கடக்கலாம்ன்ர வாய்ப்பே சொல்லல அவுங்க. ஆனா, அபிராமண்டலத்துல ஒரு குறிப்பிட்ட அளவு காற்று கரைய கடந்துருக்கு. இப்போ வந்து வேதாராண்யம்தான் தனித்தீவாய்டுச்சுன்னு சொல்றாங்க, ஆனா பட்டுக்கோட்டையும் வந்து மிகப்பெரிய தனித்தீவா இருக்கு. பொருளாதார சேதமும் மிகப்பெரிய அளவுல ஏற்பட்டிருக்கு. ஏன்னா கரையை ஒட்டிதா நாங்க இருக்குறோம்.

புயலோட கண் பகுதில இருந்து 20 கி.மீ. ல இருக்குறோம். அதுனால மிகப்பெரும் பாதிப்பு, இன்னும் வந்து கரண்ட்டு வர்றதுக்கு 20 நாள் ஆகும்ன்றதுக்கு என்ன பண்றதுன்னே தெரியல!

படிக்க:
குஜராத் கலவரத்தில் மோடிதான் குற்றவாளி – விசாரணைக்கு வருகிறது வழக்கு !
சைவ உணவுப் பழக்கத்தால் உடல், மனநலக் குறைபாடு ஏற்படுமா ?

பட்டுக்கோட்டைல கரண்ட் இருக்கா?

இல்லை, பட்டுக்கோட்டைல கரண்ட் இல்லை, மூணு நாள் ஆவுது, எல்லோரும் வந்து குளத்துலதா குளிக்கிறாங்க. நகரத்துல இருந்து கிராமத்துக்கு வந்து குளுச்சுட்டு போறாங்க.  நான் போய் இப்பத்தா குளுச்சுட்டு வந்தேன்.

எங்க போய் குளுச்சுட்டு வந்தீங்க?

நான் போய் எங்க அம்மா ஊர்ல போய் குளுச்சுட்டு வந்தேன். அங்க குளத்துல பாத்திங்கன்னா ஒரே கும்பலா இருக்கு. ஆண்கள் பெண்கள் எல்லா குளிச்சுட்டு போராங்க. அங்கருந்து காரெடுத்துட்டு இங்க வந்து குளிச்சுட்டு போராங்க. ஏன்னா உள்ள தண்ணிக்கான வசதியே கிடையாது. ஜெனரேட்டர் வந்து வீட்டுக்கு 500 ரூபா போட்டு இப்பத்தா பம்பு செட் வச்சு தண்ணி ஏத்துறதுக்கு முயற்சி பண்ணீட்டிருக்காங்க.  தன்னார்வலர்களா வந்து வீட்டுக்கு 100 ரூபான்னு வசூல் பண்ணிட்டு போராங்க.

சரி இப்ப ஜெனரேட்டரை காசு போட்டு வாங்கிட்டு வந்துட்டாங்க எப்புடி தண்ணி ஏத்துவாங்க.?

ஊர் டேங்க்ல தண்ணி வண்டிய கூட்டிட்டு வந்து, ஜெனரேட்டர் மூலமா ஊர்ல இருக்க மோட்டார் வச்சு மேல ஏத்த முயற்சி பன்னீட்டு இருக்காங்க. இப்ப மிகப்பெரிய பிரச்சனை குடிதண்ணி.

அப்போ சமைக்கிரதுக்கு தண்ணீ?

அதுக்கு அரும்பாடு பட்டுட்டுதா இருக்கோம்.

சாப்பாடு உணவு பொருள் அதெல்லாம்?

எனக்காவது வீடு இருக்கு, தண்ணீய பத்தி யோசிக்கிறேன், நிறையா பேத்துக்கு வீடே இல்லையே. அவுங்கள்லா தூங்குறதுக்கே கஷ்டப்பட்டுட்டு இருக்காங்க. அருகிலுள்ள பள்ளிகளுக்கெல்லாம் அனுப்பிருக்காங்க, அங்க தண்ணி, அரிசி, பருப்புலாம் யாரு அனுப்புறது. பிரசிடெண்ட் இருந்தா யாரு அவரை கேக்கலாம், வார்டு மெம்பர் இருந்தா அவரை கேக்கலாம்.

ஒரு பள்ளிகூடத்துல சுத்தி உள்ள ஊர்ல பாதிக்கப்பட்ட மக்களைலா கூப்ட்டு அடைச்சு வச்சுருக்காங்க, அவுங்களுக்கு தண்ணீர், உணவெல்லாம் ஏற்பாடு பண்றதுக்கு பொறுப்பான நபர் இல்லை அந்த ஊருக்கான தலைவரை கேக்கலாம்னா அவருக்கு இதுல அக்கரயில்லை.

பொறுப்பான அதிகாரிகங்க இல்லை. அதிகாரிகள் என்னன்னா ஜீப்பவிட்டு இறங்கவே யோசிக்கிறாங்க. இப்ப எங்க ஊர்ல இருக்க பள்ளில சத்துணவுக்கு வெச்சுருந்ததைத்தான்  எல்லாரும் சாப்புட்டுட்டு இருக்காங்க, யாரை கேக்குரதுன்னு தெரியாம, அவுங்களாதா காலிகூடத்த திறந்து சமைச்சு சாப்புட்டுட்டு இருக்காங்க. எல்லா ஊர்லையும் இதான் நடக்குது.

தென்னை மரங்கள் பாத்தீனா மிகப்பெரிய அழிவ சந்திச்சுருக்கு. ஒரு தோப்புல 500 மரம் இருக்குன்னா, 75% மரங்கள் போய்டுச்சு, மீதி உள்ள மரத்துக்கும் குருத்து வந்து ரெண்டு பக்கமும் திருகியிருக்கு, அப்படி திருகிப் போச்சுன்னா அதுவும் நிலைக்கிரதுக்கான வாய்ப்பு கம்மீன்னு சொல்ராங்க. இப்ப விவசாயிகள் வந்து விழுந்து கிடக்குர மரங்களை அகற்றுனா போதும்ன்றாங்க. ஆனா உணவுப் பொருளுக்கு யாரும் கையேந்தல, தண்ணீருக்குத்தா மிகப்பெரிய பிரச்சனையாயிருக்கு.

மரங்களை அகத்துரதுல என்ன பிரச்சனை இப்ப?

ஒவ்வோரு மரமுமே வந்து அறுத்தான் தூக்கமுடியும், அருக்குறதுக்கான எந்திரமில்லையே.

ஒவ்வொடு ஊர்லையும் குறைஞ்சது எத்தனை மரம் அறுக்குற எந்திரமிருக்கு?

எந்த ஊர்லையும் எந்திரமில்லை, இது வந்து மரம் வெட்டுற நபர்கள் மட்டும்தா வெச்சுருந்தாங்க, மிஷின் இருந்தாலும் இங்க தேவை அதிகமா இருக்கு. அதுனால ஊர்ல இருக்க தன்னார்வலர்கள் சேர்ந்து வரிசையா யார் யார் வீட்டுக்கு பாதையில்லையோ அதை மட்டும் மிஷின்ன வெச்சு ஏற்படுத்தி குடுத்தாங்க. டூ வீலர் போறதுக்கான வழிகள், நானே இப்ப ரெண்டு நாள் கழுச்சு வண்டி எடுத்துட்டுப் போய் குளிக்க முடிஞ்சுது. ஏன்னா எங்க வீட்டை சுத்தி மரமா இருந்துச்சு. அந்த மரம் எல்லாமே மிகப்பெரிய மரங்கள், வீட்டை சுத்தி இவ்வளவு பெரிய மரம் இருக்கனால, ரம்பமே, அருவாளோ வெச்சு வெட்ட முடியலை. அதுக்கு இந்த மெஷின்தான் தேவைப்படுது. அதுக்கு இந்த பெட்ரோல், டீசல் ஊத்த வேண்டியிருக்கு. பல மரங்கள் கம்பில சுத்தி போஸ்ட் மரத்த சாச்சிருக்கு.

இப்போ உங்க ஊர்ல 70,80 போஸ்ட்டுமரம் விழுந்துருச்சுனா உங்க ஊர்ல இருக்க போஸ்ட்டு மரத்த மட்டும் நட்டு இந்த கம்பிய மாட்டிட்டா கரண்ட்டு வந்துருமா.?

வராது. ஏன்னா இப்ப வந்து பட்டுக்கோட்டைல இருக்கக்கூடிய மின் பகிர்மான இடத்துலையே பாதிப்பு ஏற்பட்டிருக்கு. அப்ப அந்த மின் பகிர்மான இடத்துல இருந்து ஒவ்வொரு ஸ்டெப்பா கொண்டு வரனும். ஏன்னா கொலாப்ஸ்ன்றது, ஒரு ஏரியா மட்டுமில்ல மொத்தமா ஒரு 20கி,மீ அருந்திறுக்கும் போது, புதுசா மறு நிர்மாணம்தான் பண்ண முடியும். பட்டுக்கோட்டை வந்து மிகப்பெரிய நகரம். பட்டுக்கோட்டைய சுத்தி ஒரு முப்பது, நாற்பது கிராமங்களுக்கு இதுதான் நடைமுறை. ஏன்னா சுத்தி நாற்பது ஊருன்னா நாற்பது ஊருக்குமான கனெக்ஷனும் கட்டாயிருக்கு. இனி எல்லாம் புதுசா போடுர மாதிரிதான்.

எல்லா டிரான்ஸ்பாரம்முமே குப்புற தரையில கிடக்குது. நெடுஞ்சாலைத்துறை வந்து ஈசியா வேலை பாத்துருக்கு. என்ன காரணம்ன்னா அவுங்க வந்து 3 பொக்லைன் வெச்சு பூரா ஒதுக்கி வெச்சுட்டு போய்ட்டாங்க, பஸ் போய்டுச்சு.  அவுங்க வேலை ஈசியா முடிஞ்சிருச்சு. பெருமாள் கோயில்ல மிகப் பெரிய ஒரு போராட்டம் ரோட்ல உக்காந்தாங்க. பட்டுக்கோட்டைலிருந்து 3 கி.மீ தள்ளி புதுக்கோட்டை போர வழில 2 மணி நேரமா போக்குவரத்து பாதிப்பு. இந்த போராட்டம் அடிப்படை வசதிக்கான போராட்டம். நேத்து வரை எனக்கு 300 தென்னை மரமிருக்குன்னு சொன்ன ஆளு இப்போ வந்து ஒன்னுமே இல்லாம இருக்காப்ல.

ஒரு ஒரு ஏக்கர் தென்னை மரம் ஒருத்தர்ட்ட இருக்குன்னா அவருக்கு வருஷத்துக்கு எத்தனை வெட்டு?

3 மாசத்துக்கு ஒரு வெட்டுன்னா, வருசத்துக்கு 4 வெட்டு.

ஒரு வெட்டுக்கு ஒரு ஏக்கருக்கு தோராயமா எவ்வளவு கிடைக்கும்?

தோராயமா 30,000 ரூபாய் கிடைக்கும்.  ஒருவெட்டுக்கு 30,000ன்னா, வருஷத்துக்கு சராசரியா 80,000 குறைஞ்சது கிடைக்கும்.

இங்க சராசரியா 4, 5 ஏக்கர் வெச்சுருக்காங்கள்ல?

ஆமா, எல்லாம் 4, 5 ஏக்கர்னு வெச்சுருக்க ஆளுங்கதா, நிறையா பாதிக்கப்பட்டிருக்காங்க..

தென்னை மரங்கள் நம்ம கவனத்துல இருக்கு மத்த மரங்களும் வந்து பாதிப்புதானே?

என்னன்னா நானே ஆச்சிரியப்படுறேன். அவ்வளவு ஸ்ட்ராங்கான தேக்கு மரமே வந்து வேரோட சாஞ்சு போச்சு. தேக்கு மரம் வேர் ஸ்ட்ராங்குன்னு நினைச்சேன். இன்னோன்னு முக்கியமா, பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகள்ல இந்த கூரையில போடுற சீட்டு போடுவோம்ல மேல, ஒரு 2 லட்ச ரூவா செலவு பண்ணி சீட்டு போட்டமோ, அங்கங்கெல்லாம் அனைத்து சீட்டுமே  போய்டுச்சு, எங்க வீடு உட்பட.

ஆனா அதிகாலையில புயல் அடிச்சதுனால அந்த டாட்டா சீட்டு தூக்கியெறியப்பட்டதுனால உயிர் சேதம் எதுவும் ஏற்படல. இதே புயல் வந்து பகல்ல அடிச்சிருந்ததுன்னா, டாட்டா சீட்டு, டாட்டா கம்பியினால, மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். அந்த சீட்டு, அந்த ஆங்கிள் எல்லாமே காஸ்ட்லி, எல்லா 4 கி.மீ.-க்கு தூக்கி எரியப்பட்டிருக்கு.

பட்டுக் கோட்டை மசூதி

பட்டுக்கோட்டையில மசூதி இடிஞ்சிருக்கு, அப்புறம், மின் டவர்லா காத்து உள்ள போய் வெளிய வர்றது மாதிரி இருக்கும். அதையுமே வந்து புயல் தாக்கிருக்கு. புயலுக்கு அப்பறம் ஒரு மழைகூடயில்லை. பட்டுகோட்டையில மிகப்புரிய தட்டுப்பாடு எதுக்குன்னா, மெழுகுவர்த்தி. எல்லாம் அந்த குத்து விளக்கத்தான் பயன் படுத்தீட்டிருக்காங்க எண்ணைய ஊத்தி. ஏன்னா இப்ப யாரு வீட்லையும் கரண்டில்லை.

விவசாயிங்களுக்கு ஒரு பத்து பதினைஞ்சு வருஷம் உழைச்சு வாங்குன சொத்தெல்லாம் போய்டுச்சு. இவுங்கள நம்பி வேலை பாக்குர கூலி தொழிலாளர்கள் அவுங்களோட நிலமை என்ன?

இப்ப என்னன்னா, ஒவ்வொரு தென்னந் தோப்புக்குள்ளையும், அம்பலக்கார் குடும்பம்தா தங்கியிருக்கும், அவுங்கதா மேக்சிமம் அந்த தோப்ப பாத்துகுவாங்க. அவுங்க வந்து அங்க இந்த மட்டையெடுத்து போட்டு அவுங்க குடுக்குர காசை வாங்கிட்டு அமைதியா வாழ்ந்துட்டிருந்தவுங்க. அவுங்களோட வாழ்க்கைதான், எதிர்காலமே இல்லாம நிக்கிது.

அவுங்கள்லா உள்ளூர சேர்ந்தவுங்கள்லா வெளியூர சேர்ந்தவங்களா ?

அவுங்கள்ல சில பேர் உள்ளூர்லயே தங்கியிருப்பாங்க, சில பேர் உள்ளுக்குள்ளையே ஆடு வளத்துக்குட்டு மாடு வளத்துக்குட்டு இருப்பாங்., அவுங்கள்லாம், அந்த முதலாளியையும் அந்த தென்னந்தோப்பையும் சார்ந்து வாழ்ரவங்கதான். அந்த குடும்பங்களுக்கு இப்ப எதிர்காலம் வந்து கேள்விக்குரிய நிக்கிது.

ஏன்ன டெல்டா விவசாயிகள் வந்து உணவுக்கு வந்து யாருகிட்டையும் கையேந்தல. ஏன்னா எல்லார்ட்டையும் உணவுப்பொருள் வந்து இருக்கு. ஆனா குடி தண்ணீருக்கு கையேந்தி நிக்குறாங்க. நம்ப சமூகத்துல என்னன்னா, மின்சக்தி இல்லைன்னா மாற்று எரிசக்தி என்னன்னு யாரும் யோசிக்கவேயில்லையே. அந்த நேரத்துல தான்னே யோசிக்கோம். நம்ம0 யூ.பி.எஸ் மட்டும்தா வாங்கி வச்சோம், அது ஒரு மணி நேரம் கூட நிக்கலையே.

செல்போன் சார்ஜ்க்கெல்லாம் என்ன பன்றாங்க?

நானே பவர் பேங்க வச்சு ரெண்டு நாள் போட்டேன், இங்க தனியார் பள்ளிங்கள்ல ஜெனேரேட்டர் இருக்கு. அங்கதா போய் போட்டுக்குறோம். முற்றிலும் தொலை தொடர்பு வந்து துண்டிக்கப்பட்டிருக்கு.

இப்ப ஒரு வாரம் கழுச்சு எல்லா துணி தொவைக்கனும், கரண்ட் வர்ரதுக்கு ஒருமாசம் ஆகும் போல இருக்கு?

அருகில் இருக்கிற, ஏரி குளங்கள்ளதான் மக்கள் துணி தொவச்சுட்டிருக்காங்க. அதுதா ஒரே சோர்ஸ். பட்டுக்கோட்டைல, நேத்து நால்ல டைல்ஸ் போட்ட பாத்ரூம்ல குளிச்சவன் பூராம், குளத்துல இறங்கி மேல் வரையும் சோப்பு போட்டு குளுச்சுட்டு, கரைல நின்னு துவட்டீட்டு போரான்.

படிக்க:
♦ மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?
கஜா புயல் : கலங்கி நிற்கும் மக்களுக்கு கை கொடுப்போம்

பட்டுக்கோட்டய சுத்தி குளத்துல இறங்கி குளிக்க வர்ராங்கன்னா எந்த ஊர் குளத்துல குளிக்கிறாங்க?

பட்டுக்கோட்டை மெயின், கரிக்காடு இங்க உள்ளவங்கெல்லாம் காட்டாற்று மஹாராஜா ஆற்றுல குளிச்சுட்டு போராங்க. புயல்ல பஸ் கூட விழுந்துச்சுல, அந்த ஆற போய் பாத்திங்கன்னா ஒரே ஜே ஜே ஜேன்னு இருக்கு கூட்டம்.

தண்ணி வருதா என்ன ஆத்துல?

ஆத்துல தண்ணி வருது. மழை பேஞ்ச தண்ணி சேர்ந்து ஓடியாருது, நான் போய் நரி மேட்ல குளுச்சேன், ஆண்களும், பெண்களும் சேர்ந்து ஒரே இடத்துல தான் குளிக்க வேண்டியிருக்கு. நகரத்து பெண்களுக்கு குளத்துல குளிக்கிறது பழக்கப்படாம இருக்கு, இங்க எங்க ஊரு பொண்ணுங்க பாவாடைய நெஞ்சுவர கட்டீட்டு குளிச்சுட்டு போவுது, இதுங்களுக்கு அது பழக்கப்படாம இருக்கு. டவுன் ஆண்களுக்கு நீச்சல் தெரியல, நம்ம போரோம் டைவ் அடுச்சுட்டு குளிச்சுட்டு வாரோம், அவுங்களுக்கு சிரமம். இப்புடி நிறையா இடர்பாடுகள் இருக்கு.  மீடியாக்கள் வந்து பட்டுக்கோட்டையில 20% பாதிப்புதா ஏற்பட்டிருக்குன்னு போட்டுறுக்காங்களே எவன் வந்து பாத்தான் இங்க. இது வந்து மன ரீதியா மக்களை வருத்துது. மக்கள் வந்து மீடியாக்கள் மேல கடும் கோவமா இருக்காங்க. ஏன்னா இந்த அடிப்படை தேவையான உணவு, உடை. இருப்பிடம் இதுல பாதிப்பு வரும் போது அடுத்த கட்டமா வந்து போராடத்தான் தோணும். அவனுடைய தேவை கிடைச்சா போராட மாட்டான்.

இந்த அடிப்படை தேவைகள் பால், தண்ணீர்லாம் விலை அதிகமா விக்கிறாங்களா?

ஆமா அது உண்மை. என்னன்னா, ஒரு சில பேர் ஒரு நல்ல எண்ணத்துல குடுக்குராங்க, இதுதா சந்தர்ப்பம்னு பஜ்ஜிய 10 ருவாய்க்கும், தண்ணிய 30 ரூவாய்க்கும் விக்கிர குரூப்புமிருக்கு.

இன்னோரு ஊர்ல இருக்க மக்கள், பிரச்சனை சரியாவுர வரைலயும் உள்ளூர்ல இருக்க மாட்லருந்து பால் கரந்து யாரும் விக்கக்கூடாது, நம்ம சொந்த பயன்பாட்டுக்கு மட்டும்தா பயன்படுத்தனும்னு கூட்டம் போட்டு முடிவெடுத்தாங்களா?

அது வந்து கிராமங்கள்ல ஒரு ஜாதியா இருக்க மக்கள்தான் அப்படி பன்னிக்குராங்க, ரெண்டு மூனு ஜாதிங்க கலந்திருக்க ஊர்ல இந்த மாதிரியானது நடக்க வாய்ப்பில்ல ஏன்னா, ஏ நம்ப ஊட்டினது அங்க போகனும்னு நினைக்கிரான். அதுவும் நல்லா உத்து பாத்திங்கன்னா ஒன்னு கள்ளர் ஊட்டு குடும்பமா இருக்கும் இல்லை தேவர் ஊட்டு குடும்பமா இருக்கும்.

எந்த கம்யூனிட்டி அங்க ஜாஸ்தி?

இங்க பட்டுக்கோட்டைய பொருத்தளவு மூணு ஜாதி அதிகமாயிருக்கு, வெள்ளாளர்தான், முஸ்லி33னு சொல்லுவாங்க அதுல அவுங்கதா அதிகம், ப்ளஸ் தேவரு, கள்ளரு, செட்டியூல்டு அப்புறம் அம்பலக்காரங்க, இடையர், கோனார் கொஞ்சம் அதிகமா இருக்காங்க.

பள்ளிகூடங்க நிலைமை என்ன?

எல்லா பள்ளிகளயுமே மரங்கள் வந்து உடைஞ்சு, ஆள் நுழைய முடியாமதா இருக்கு. பட்டுக்கோட்டைல வந்து கல்வித்துறையோ, மாவட்ட கல்வி அலுவலரோ, மாவட்ட முதன்மை கல்வு அலுவலரோ பள்ளி என்ன கண்டிசன்ல இருக்குன்னு யாரும் கேக்கல. பள்ளிகள்ல இருக்க மரங்கள்ல வெட்டியெடுக்க ஒருவாரம் ஆகும், அதுக்கான முன்னெச்சரிக்கைய யாரும் ஒன்னும் செய்யலை. இதுனால பள்ளிகள்லாம் துவங்குவதற்கு மினிமம் 15 நாள் ஆகும்.

மரங்களை வெட்டி யெடுக்க கலெக்ட்டர் என்ன பன்னாரு, இன்னும் சி.ஓ வே வந்து பாக்கலை. சி.ஓ வும் பாக்கலை, டி.ஓ வும் பாக்கல.  அனைத்து பள்ளிகள்ளயுமே அந்த ஊரு மக்கள்தான் தங்கியிருக்கு.

எடப்பாடி அரசு கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்ல நல்லா செயல்பட்டதா, ஸ்டாலின், தமிழிசையெல்லாம் பாராட்றாங்க அத பத்தி என்ன நினைக்கிறீங்க?

கஜா புயல் முன்னெச்சரிக்கை வந்து பாலசந்தர் வந்து ரெண்டு நாள் தூங்காம இருந்தாரு இதுலா வந்து சேட்டிலைட் மூலமா பாத்து சொன்னது, இவுங்க வந்து மனிதர்களாக, என்னத்த கொண்டு போய் சேர்த்தாங்கன்றது முதல் கேள்வி. உணவு பொருட்களாய் கொண்டு போய் சேர்த்தாங்களா, தண்ணீர்லா டேங்க்ல சேமிச்சு வெச்சாங்களா, உணவுப் பொருள்ல முகாம் மாறி அமைச்சு எல்லா இடங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்தாங்களா. இல்லை. இவுங்க வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைனு எதை சொல்றாங்கன்னா. வானிலைல டி.வில உக்காந்து வசிக்கிறத முன்னெச்சரிக்கைன்னு சொல்றாங்க. முன்னெச்சரிக்கைனா எந்தெந்த ஊர்ல கிராமங்கள்ள எச்சரிக்கையோ, அங்கங்கெல்லாம் மண்டபத்த புடுச்சு, மக்களை தங்கவெச்சு அவுங்களுக்கு உணவு பொருட்களை குடுத்து, அவுங்களுக்கு முழு வசதிய பன்னிக்குடுக்குறதுதான் சிறந்து செயல் படக்கூடிய அரசோட இலட்சணம். தவிற நீங்க வந்து டி.வில சொல்லக்கூடியத வெச்சு நேத்து வந்துவிஜயபாஸ்க்கர் வந்து 108 கண்ட்ரோல்லையும், பாலசந்தர் வந்து மெட்ராலஜிக்கள் டிப்பார்ட்மெண்ட்லையும் உக்காந்துக்குட்டு செயல் படுறது எப்படி வந்து சிறந்த அரசாக இருக்க முடியும்? மக்களோட இருக்கனும், மற்ற மாவட்டங்கள்ளையும் உள்ள அனைத்து விதமான ஊழியர்களையும் கொண்டாந்து புயல் பாதிக்கப்பட்ட இடத்துல சேர்க்கனும். சென்னைல நடந்த துரித நடவடிக்கைகள்ல 0.01% கூட டெல்டா மாவட்டங்கள்ல நடக்கலை.

வெளியூர்லருந்து மக்கள் யாராவது உதவுக்கு வர்ராங்களா?

வரலை, நாங்க வந்து உணவு எதிர்பாக்கலை முக்கியமா மரங்களை வந்து அகற்றனும், குடிதண்ணீருக்கான மின்சார வசதி, அதை சரி பன்னனும், 32 மாவட்டங்கள்ல 5 மாவட்டம் பாதிக்கப் பட்டிருக்கு, மத்த மாவட்டங்கள்ல உள்ள அனைத்து விதமான மின் ஊழியர்களையும் இங்க வந்து இறக்கி ஒரு போர்க்கால நடவடிக்கைல மீட்பு பணி நடக்கனும். பேரிடர் மீட்புக்குழுன்ரது கடல்ல போய் மீட்டுட்டு வர்ரது மட்டுமில்ல, மக்களோட அடிப்படை தேவை என்ன பாதிக்கப்பட்டிருக்கோ அதை சரி செய்யுரதுதான் பேரிடர் மீட்புக்குழு. பேரிடர் மீட்புக்குழு குறுக்க உள்ள கம்பியக்கூட இன்னும் அகற்றலையே.

பட்டுக்கோட்டைல ஆறாயிரத்துக்கு மேற்பட்ட மரங்களும் கம்பி வயர்களும் அறுந்து கிடக்கு, இது எதையுமே அகற்றல, அப்ப இது என்ன பேரிடர் மீட்புக்குழு? இது எப்படி சிறந்த அரசா செயல்படும்? விழுந்தது விழுந்த படிதாங்கிடக்கு. ஒன்னு கம்பிய தாண்டிப் போரான், இல்ல குனுஞ்சு போரான். அத அவுக்க கூட ஆளில்லையே. ரைட்டு ஒரு மாவட்டமே பாதிக்கப்பட்டிருக்குன்னு சொல்லுவீங்க, ஒரு அறிவிப்பு வெளியிடலாமே, இத்தனை ஆட்களை கூட்டிட்டு வந்து இந்த பணியை செய்யப்போரோம்னு, இத்தனாந் தேதிக்குள்ள சரி பன்னிடுவோம்னு சொன்ன அந்த நம்பிக்கையோட இருப்போமே, அத கூட செய்யாதத எப்புடி சிறந்த மீட்புப்பணினு சொல்ல முடியும் ? சொல்லவே முடியாது.

பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

பார்ப்பன பாசிசம்

பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம்

பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம் ! புதிய ஜனநாயகம் நவம்பர் 2018 இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்:

1. ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு: தொடருகிறது விடுதலைப் போராட்டம்!
தனியார்மயம் தாராளமயம் என்ற மறுகாலனிய கொள்ளைக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டிய தருணமிது.

2. “ஜனநாயகத்தின் நிறுவனங்களால் தேசத்துக்கு ஆபத்து!” – பார்ப்பன பாசிசத்தின் புதிய பிரகடனம்!

3. அம்பானி-அதானி-ஆர்.எஸ்.எஸ். கூட்டணி ஆக்கிரமிப்பில் ரிசர்வ் வங்கி: ரிசர்வ் வங்கியா, ரிலையன்ஸ் வங்கியா?
ரிசர்வ் வங்கியைத் தனது தலையாட்டி பொம்மையாக மாற்றுவதன் மூலம், பொதுத்துறை வங்கிகளை கார்ப்பரேட் முதலாளிகள் மொத்தமாக விழுங்கிவிடும் சூழலை உருவாக்கிடத் திட்டமிடுகிறது, மோடி அரசு.

4. எது மத உரிமை? வழிபடும் உரிமையா, தடுக்கும் உரிமையா?
ஜனநாயகத்துக்கான போராட்டம் கீழிருந்து நடக்காத வரையில், மேலிருந்து இயற்றப்படும் முற்போக்குச் சட்டங்களோ, தீர்ப்புகளோ ஏட்டுச் சுரைக்காயாக மட்டுமே இருக்கும்.

5. நரேந்திர மோடி: காவலாளியல்ல, கொள்ளையன்!
பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தன்னைக் காவலாளி எனக் கூறி வருகிறார். ஆனால், அவர் கொள்ளைக்கூட்டத் தலைவன் என்பதை எடுத்துக்காட்டுகிறது, வாராக் கடன் தள்ளுபடி.

6. கொள்ளையிடு இந்தியா! தப்பியோடு இந்தியா!
வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டு ஓடிப்போனவர்களுள் பலர் குஜராத்திகளாக உள்ளனர். இந்தக் களவாணித்தனத்தைத்தான் மோடியின் குஜராத் மாடல் என்பதா?

7. வல்லரசுக் கனவின் விபரீத விளைவுகள் !
அடிக்கட்டுமானத் துறையின் வளர்ச்சி நாட்டை எங்கோ கொண்டுபோய்விடும் என ஆளுங்கும்பல் வாதிட்டு வருவது மிகப்பெரும் மோசடி என்பதை நிரூபிக்கிறது ஐ.எல்.அண்ட் எஃப்.எஸ். (I.L.& F.S.) நிறுவனத்தின் திவால் நிலை.

8. உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!
மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களுக்குப் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி விடும் அறைகூவல்.

9. சோசலிச சமூகத்தை அமைப்பதற்கான போராட்டம்
– ஃபிரட் எங்ஸ்ட் உடன் ஓர் நேர்காணல்

மின்னூல்:

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

சமூக அநீதிகளுக்கு எதிராக இளந்தோழர்களின் கலை நிகழ்ச்சி !

க்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் புரட்சிதின விழாவைக் கொண்டாடின.

இந்நிகழ்ச்சியில், சென்னை ம.க.இ.க. இளந்தோழர்கள் பரவிவரும் பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராகப் பாடல், பேச்சு, நடனம், நாடகம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர். இக்கலை நிகழ்ச்சிகளின் தொகுப்பு காணொளி!

பாருங்கள்! பகிருங்கள்!!

யமஹா நிர்வாகத்தைப் பணிய வைத்த தொழிலாளர்கள்

டந்த 22.09.2018 முதல் நடந்துவந்த யமஹா தொழிலாளர்களின் போராட்டமானது ஐம்பது நாட்களைக் கடந்து தற்போது ஒரு முடிவை எட்டியுள்ளது.

நவம்பர் 9 அன்று மாவட்ட ஆட்சியரின் முன்னிலையில் யமஹா பிரச்சனை குறித்த சமரசப் பேச்சுவார்த்தை நடந்தது. தண்டனையாக, இடைநீக்கம் செய்யப்பட்ட இரண்டு தொழிலாளர்களையும் இடைநீக்க நிலைக்கு மாற்றி உள் விசாரணை நடத்துவதென்று நிர்வாகம் நிலையெடுத்ததாகவும், ஆனால், யூனியன் அமைக்கும் முயற்சிக்காக தண்டனை நடவடிக்கைக்கு ஆளான தொழிலாளர்களை எந்த தண்டனையும் இன்றி வேலைக்கு அனுமதிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொழிலாளர்கள் உறுதியாக நின்றனர்.

அடுத்த கூட்டம் நவம்பர் 14 அன்று நடந்தது. இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் அளிப்பதாகவும், அவர்களுக்கான உள் விசாரணையின் முடிவில் அவர்கள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் நிலையெடுத்த யமஹா நிர்வாகம், வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை இடைநீக்கம் செய்யப்பட்டவர்களாக மாற்றுவோம் என்று உறுதியாக நின்றது. இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் உள் விசாரணை முடிந்த பின்னர் ஆலை பணிக்கு திரும்புவர். மேலும், பெரும்பான்மை சங்கத்துடன் தொழில் பிரச்சனைகள் குறித்துப் பேசுவதாகவும், வேலைநிறுத்தம் செய்தமைக்காக தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்றும் நிர்வாகம் ஒப்புக்கொண்டது. நவம்பர் 16 அன்று தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள்.

இந்தப் போராட்டமானது முழு வெற்றியடையவில்லை என்றாலும் குறிப்பிட்ட அளவுக்கு யமஹா நிர்வாகத்தை தொழிலாளிகள் பணிய வைத்திருக்கின்றனர். இந்த போராட்டத்தின் சிறப்பம்சம் என்பது தொழிலாளிகள் இறுதிவரை உறுதியாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினர்.

தங்களது அடிப்படை உரிமைகளை மறுக்கப் படுப்பது, திறன்மிக்க தொழிலாளிகளை கழிவறையை சுத்தம் செய்யவைப்பது, சிறு தவறுகளுக்குக் கூட அவர்களை அவமானப்படுத்தி கூனிக்குறுக வைப்பது. ஆகிய கொடுமைகளுக்கெதிராக, சி.ஐ.டி.யு தலைமையில் தொழிற்சங்கம் துவங்கினர் யமஹா தொழிலாளிகள்.

அதன் விளைவாக தொழிற்சங்க நிர்வாகிகளான இரண்டு தொழிலாளிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். சகதொழிலாளிகள் அநியாயமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டதைக் கண்டித்து அவர்கள் தங்கள் போராட்டத்தைத் துவங்கினர். இது குறித்து ஏற்கனவே கட்டுரை வெளியிட்டுள்ளோம்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் யமஹா – என்ஃபீல்டு – எம்.எஸ்.ஐ : புஜதொமு ஆர்ப்பாட்டம்

அதன் பின்னர் தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தைப் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்தனர். மேலும் அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள், கட்சிகள் என அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருக ஆரம்பித்தது.

ஒரு பக்கம் மக்கள் மத்தியில் போராட்டங்கள் நிகழ்ந்துகொண்டிருந்த அதே நேரத்தில் சி.ஐ.டி.யு சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தொழிலாளர் நல ஆணையத்தில் பேச்சுவார்த்தை நடத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை துணை ஆணையாளர் முன்னிலையில் நடைபெற்ற பல்வேறுகட்ட பேச்சுவார்த்தையின் போது ஆலை நிர்வாகம் தனது தரப்பில் இருந்து முறையாக அதிகாரிகள் யாரையும் அனுப்பாமல் தொடர்ந்து ஏமாற்றி வந்தனர். அதன் பின்னர் தொழிலாளர் நலத்துறையின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக யமஹா தரப்பில் இருந்து பேச்சுவார்த்தைக்கு மனிதவளத்துறை அதிகாரிகள் வந்தனர்.

பேச்சுவார்த்தைக்கு வருகின்ற மனிதவள அதிகாரி பிடி கொடுக்காது இருப்பதும், பதில் கூறாமல் இழுத்தடிப்பதுமாக செயல்பட்டுள்ளார். அதையும் தாண்டி சமரசம் செய்துகொள்ளலாம் என போகிற போக்கில் தெரிவிப்பது. அதன் பின்னர் நான் மட்டும் முடிவு செய்ய முடியாது நிர்வாகத்திடம் பேச வேண்டும் என பேச்சுவார்த்தையை இழுத்தடிக்கும் வேலையை மட்டுமே செய்துவந்துள்ளார்.

இடையில் அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி தொழிலாளர்கள் பணிக்கு மீண்டும் செல்லலாம், என தொழிலாளர் துறை அதிகாரி அறிவித்தார், அதனடிப்படையில் வேலைக்கு சென்ற தொழிலாளர்களை மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தால் தான் பணியில் சேர்த்துக் கொள்வோம் என தெரிவித்தது நிர்வாகம்.

தங்கள் உரிமையைக் கேட்டதைத் தவிர வேறு எந்த குற்றமும் செய்யாத தொழிலாளிகள் நாங்கள் ஏன் மன்னிப்புக் கடிதம் எழுதித் தரவேண்டும் என கேட்டுள்ளனர். பின்னர் அவர்களை போலீசைக் கொண்டு அப்புறப்படுத்தியது ஆலை நிர்வாகம். கார்ப்பரேட்டுகளுக்காக காவிகள் நடத்தும் ஆட்சியில் உரிமை கேட்பது குற்றம்தான்.

இவ்வாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர்  தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்ந்து முடிவு எட்டப்படாத நிலையில் மீண்டும், அக்டோபர் 10-அன்று தாம்பரம்  வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அப்போது நிர்வாகத் தரப்பில் இருந்து வந்த மனிதவள அதிகாரி கிளிப்பிள்ளை மாதிரி மீண்டும், “யமஹா-வின் உலகளாவிய நிர்வாகிகளுடன் பேசிதான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறி இரண்டுநாள் அவகாசம் கேட்டார். அதற்கு அரசுத்தரப்பில் இருந்து அவகாசம் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் நடந்த பல்வேறு பேச்சுவார்த்தை முயற்சிகளும் தோல்வியை அடைந்தன. இந்நிலையில் யமஹா தொழிலாளர் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தலைமையில் காஞ்சிபுரத்தில் அக், 30, 2018 அன்று அனைத்துக் கட்சிகள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் விளைவாகப் மாவட்ட ஆட்சியர் தலைமையில் தாம்பரம் நகராட்சி அரங்கில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னர், 31.10.2018 அன்று ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர், தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள், சி.ஐ.டி.யு. தலைவர்கள் மற்றும் யமஹா தொழிற்சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தொடர்ந்து மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை என தொழிலாளர்கள் இழுத்தடிக்கப்பட்டனர். இந்த இழுத்தடிப்பு நடவடிக்கை என்பது தொழிலாளர்களின் போராட்ட உறுதியை குலைக்கும் என யமஹா நிர்வாகம் கருதியிருக்கலாம். ஆனால் தொழிலாளர்களின் உறுதி குலையாது தொடர்ந்து தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதன் விளைவாக இப்பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவரவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட சூழலில் மீண்டும் 14.11.2018 அன்று பேச்சுவார்த்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

அதில் தொழிலாளர்களின் கோரிக்கையான தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை யமஹா தரப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட்து.

மேலும் இரு தொழிற்சங்க நிர்வாகிகளின் டிஸ்மிஸ் உத்திரவை ரத்து செய்து அவர்களை இரண்டுமாதம் தற்காலிக பணி நீக்கத்துக்கு பிறகு பணியில் சேர்த்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளனர். மேலும் இந்த காலத்தில் அவர்களுக்கு இழப்பீடாக இரண்டுமாத சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவித்தனர். அந்த வகையில் தற்போது தொழிலாளிகள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

யமஹா தொழிலாளர்களின் இந்த போராட்டமானது ஒரகடம் பகுதி முழுக்க உள்ள தொழிலாளிகள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

வறுமை காரணமாக தேவதாசியாக்கப்பட்ட பெண்கள் | பொ.வேல்சாமி

1

நண்பர்களே….

பொ.வேல்சாமி
மிழ்நாட்டு தேவதாசி மரபின் வரலாறுக் குறித்து ஆய்வுச் சொற்பொழிவிற்கு என்னை அழைத்திருக்கின்றனர். இது தொடர்பான பல்வேறு வரலாற்றுத் தரவுகளைச் சேகரித்துக் கொண்டுள்ளேன். சங்க இலக்கியமான புறநானூற்றுப் பாடல்களிலேயே இதற்கான வித்துக்கள் காணப்படுகின்றன. தொடர்ந்து வந்த காலங்களில் களப்பிரர் காலம் தவிர்த்து மற்ற காலம் முழுமையும் தேவதாசி மரபு வேகமாக வளர்ந்து வந்துள்ளது. அந்த வளர்ச்சிக்கு தமிழ்நாட்டுக் கோவில்கள் நிலைக்களமாக இருந்துள்ளன.

இந்தக் காலங்களில் பல குடும்பத்தினர் தங்கள் பெண்களை தேவதாசிகளாக ஆக்கிய பதிவுகளும் வறுமையின் காரணமாக தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரையும் குறிப்பிட்ட கோவிலுக்கு விற்றுக்கொண்டு அடிமைகளாகி தேவதாசிகளாக மாறியவர்களின் வரலாறும் பதிவாகி உள்ளன. உச்சக்கட்டமாக 18, 19-ம் நூற்றாண்டுகளில் பச்சிளம் பெண்குழந்தைகளை கோவிலுக்கு விற்பனை செய்து அவர்களை தேவதாசிகளாக்கிய பதிவுகள் மோடி ஆவணங்களில் (மராட்டி மொழியை எழுதப் பயன்படும் சுருக்கெழுத்து முறைகளில் ஒன்று மோடி எழுத்துமுறை)  பதிவாகி உள்ளன.

படிக்க:
இந்த உலகம் பார்த்துப் பழகியதுதான் எங்கள் அம்மணம்
தேவதாசி முறை : நியாயப்படுத்தும் குற்றவாளிகள் !

கே.எம். வெங்கடராமையா

அப்படியான பதிவுகளில் ஒன்றில் இவ்வாறு தாசிகளாக ஆவதற்கு விற்கப்படும் குழந்தைகளின் தகுதிகளாகக் கூறப்பட்டுள்ள ஒரு தகுதியாக மேற்கண்ட வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தைப் படத்தில் கொடுத்துள்ளேன். இதுபோன்ற பல செய்திகளும் இன்னும் பல்வேறுபட்ட தமிழக வரலாறு குறித்த வியப்பான செய்திகளும் இந்நூலில் பல்வேறு இடங்களில் பேசப்பட்டுள்ளதால் ”தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்” என்ற இந்த நூலை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

நூலை பதிவிறக்க: தஞ்சை மராட்டிய மன்னர்கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

சென்னை – புதுச்சேரியில் மக்கள் கொண்டாட்டமாக நவம்பர் புரட்சி தின விழா !

சியப் புரட்சியின் 101-வது ஆண்டையொட்டிமக்களை மரணக் குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தை வீழ்த்துவோம் !” என்ற முழக்கத்தின் கீழ், புரட்சிகர அமைப்புகளின் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்  நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு  – பாகம் 5

சென்னை

டந்த நவம்பர் 7 ஆம் தேதி அன்று சென்னை மதுரவாயல் பகுதியில் நவம்பர் புரட்சி நாளையொட்டி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தம் அருகில் பறை இசையுடன் கொடியேற்றும் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சி நடைபெரும் இடம் ஆசான்களின் படங்கள், பலூன், தோரணங்கள் கட்டப்பட்டு கோலாகலமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பு.மா.இ.மு.-வின் சென்னை கிளை செயலாளர் தோழர் சாரதி நிகழ்ச்சியை தலைமை ஏற்று நடத்தினார். பறை இசையுடன் துவங்கிய நிகழ்ச்சியில் அமைப்பின் பாடல்கள் பாடப்பட்டது. பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் செங்கொடி ஏற்றி உரையாற்றினார். அதன் பின் இனிப்புகள் வழங்கப்பட்டு நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்சியில் 100-க்கும் மேற்பட்ட தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

காலை 10 மணிக்கு மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் நொளம்பூர் கிளை செயலாளர் தோழர் கணேசன் தலைமை தாங்கினார். பறையிசை இசைக்கப்பட்ட பின் செங்கொடியேற்றப்பட்டது. இனிப்புகள் வழங்கியதுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

மதியம் 2 மணிக்கு மதுரவாயல் பிள்ளையார்கோவில் தெரு பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி மற்றும் மாட்டுகறித்திருவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியை பிள்ளையார்கோவில் தெரு கிளை செயலாளர் தோழர் செந்தில் தலைமையேற்று நடத்தினார். கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. அதன் பின் மாட்டுக்கறி உணவு வழங்கப்பட்டது. உணவுத் திருவிழாவில் தோழர்கள் பகுதிமக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

நவம்பர் விழா நிகழ்ச்சிகள்

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகள் இணைந்து சென்னையில் நவம்பர் விழா நிகழ்ச்சியை நடத்தின.

நவம்பர் புரட்சியினை நினைவுகூரும் வகையில் நடத்தப்படும் குடும்பவிழாவை நடத்தக்கூட அனுமதி மறுத்தனர் போலீசார். மண்டப உரிமையாளரை மிரட்டுவது என்ற அளவிற்கு இறங்கி கீழ்த்தரமாக நடந்துகொண்டனர். இத்தகைய அரசின் அடக்குமுறைகளை கடந்து, திட்டமிட்ட படி நவம்பர் 11 ஆம் தேதியன்று சென்னையில் திருமண மண்டபம் ஒன்றில் நவம்பர் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தோழர் சாரதி தலைமை தாங்கி நடத்தினார். பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னைக் கிளை செயலாளர் தோழர் செல்வி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சமூக அநீதிகளுக்கு அதிராக இசை சமர் பறை இசைக்குழுவின் பறை முழங்கியது. சென்னை ம.க.இ.க. இளந்தோழர்கள் பரவிவரும் பாலியல் வன்கொடுமை, பார்ப்பன பாசிசம் போன்ற சமூக அநீதிகளுக்கு எதிராக பாடல், பேச்சு, நடனம், நாடகம் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தினர்.

“நவம்பர் 7 என்ற தினமின்று – மக்கள் விடுதலைக்கான தினமொன்று !” என்ற பாடலும் “நாங்க தொட்டா சாமி கெட்டா போகும் ? தொட்டால் என்னடா ? ” என்ற பாடலும்  “நீரில்லா நெல்வயலும் வெம்பி அழுகுதம்மா!” என்ற பாடலும் சேர்த்து மூன்று புதிய பாடல்களை தயாரித்து பாடினர்.

பு.மா.இ.மு.வின் பள்ளி மாணவிகள் “காடுகளைந்தோம்” என்ற அமைப்பின் பாடலுக்கு நடனமாடினர். கல்லூரி மாணவர்கள் “பாசிச பா.ஜ.க.வும் நாட்டுல பன்னுராங்க அராஜகமும்” என்ற கானா பாடலை எழுதி பாடினர். சட்டக்கல்லூரி மாணவி பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான “இது நீ வாழ அருகதை இல்லா பூமியோ” என்ற பாடலை எழுதி பாடினார்.

சென்னை சட்டக்கல்லூரி மற்றும் தியாகராயா கல்லூரி மாணவர்கள் இணைந்து சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக ஓர் நாடகத்தை அரங்கேற்றினர். சென்னை பெ.வி.மு தோழர்கள் சமரிமலைக்கு பெண்களை அனுமதிக்கக்கூடாது என சொல்லும் இந்துதுவக்கும்பலுக்கு எதிராக ஓர் நாடகம் அரங்கேற்றினர்.

தொழிலாளர்களுக்கு நடக்கும் அடக்குமுறைகளை பற்றி பு.ஜ.தொ.மு-வின் தோழர் தெய்வீகன் உரையாற்றினார். இறுதியில் “ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் முறியடிப்போம்” என்ற தலைப்பில் பு.மா.இ.மு.வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் சிறப்புரையாற்றினார்.

நூற்றுக்கணக்கான தோழர்கள் குடும்பத்துடன் பங்கேற்ற விழாவாக இது அமைந்திருந்தது.

***

புதுச்சேரி

துவெல்லாம் சாத்தியமற்றது என முதலாளிகளும், மதவாதிகளும் சொல்லி வந்தனரோ அதை எல்லாம் சாதித்துக் காட்டியது லெனின் தலைமையிலான ரசியப் பாட்டாளி வர்க்க அரசு.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்கள் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு பலியாகி வருகின்றனர். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல தான் உருவாக்கிய நெருக்கடியைத் தீர்க்க முயன்று, மீண்டும் நெருக்கடிகள் அதிகமாகி சிக்கித் தவிக்கிறது முதலாளித்துவம். இன்று முதலாளித்துவம் உயிர் வாழ்வதற்காக உலகம் முழுவதிலும் மதவெறி, இனவெறி பாசிஸ்டுகளை ஆட்சி அதிகாரத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

அன்று இனவெறி பாசிஸ்டான கொடுங்கோலன் ஹிட்லரைக் கண்டு உலகமே அச்சத்தில் இருந்த போது, அந்த ஹிட்லரை ஓட ஓட விரட்டி இந்த பூமிப் பந்தை மீட்டது ஸ்டாலின் தலைமையிலான மக்கள் ராணுவம். இன்று இந்தியாவின் மதவெறி பாசிஸ்டான மோடியை மட்டுமல்ல, உலகம் முழுதும் பல்வேறு நாடுகளை ஆக்கிரமித்துள்ள பாசிசத்தை வீழ்த்துவதற்கு தேவை மீண்டும் ஒரு மக்கள் புரட்சி.

எனவே, மக்களை மரணக்குழியில் தள்ளும் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தையும், பார்ப்பன பாசிசத்தையும் வீழ்த்துவோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து, ரசியப் புரட்சியின் நோக்கத்தை மக்கள் மத்தியில் தொழிலாளர் குடும்பங்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையில் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியுடன் இணைந்து தொழிலாளர்கள், பெண்கள், மாணவர்கள், குழந்தைகள் பங்கேற்கும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கி மாட்டுக்கறி விருந்துடன் குடும்ப தின விழாவாக கொண்டாடியது.

கடந்த நவம்பர் 11 அன்று புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்திற்கு பு.ஜ.தொ.மு. தலைவர், தோழர் சரவணன் தலைமை தாங்கினார். பு.மா.இ.மு. புதுச்சேரி அமைப்பாளர் தோழர் மோகன், பு.ஜ.தொ.மு. தமிழ்நாடு மாநில இணைச் செயலாளர் தோழர் பழனிச்சாமி, பு.ஜ.தொ.மு. புதுச்சேரி இணைச் செயலாளர் தோழர் ஆனந்தகுமார் ஆகியோர் உரையாற்றினர். கூட்டத்தில் ஆதரவாளர்கள், தொழிலாளர்களின் குடும்பங்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, நவம்பர் – 4 அன்று வாலிபால் போட்டியும், நவம்பர்-7 அன்று குழந்தைகளுக்கான ஓவியம், கதை போட்டிகளும், ஓட்டப்பந்தயம், சதுரங்கம் போன்ற போட்டிகளும் நடத்தப்பட்டது. கூட்டத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும், தனியார் கல்வியும், வேலையில்லாத் திண்டாட்டமும் என்பதை விளக்கும் வகையில் நாடகம் நடத்தப்பட்டது. தொழிலாளர்கள் ஆர்வத்துடன் நிகழ்ச்சியை பார்த்தனர். மாட்டுக்கறி விருந்துடன் விழா நிறைவு பெற்றது. வந்திருந்த அனைவர் மத்தியில் நவம்பர் புரட்சி தினத்தின் அவசியத்தை பதிவு செய்யும் வகையில் நிகழ்ச்சி அமைந்தது.

தொகுப்பு:

எடப்பாடி அரசுக்கு குவியும் ‘பாராட்டுக்கள்’ – டெல்டாவெங்கும் சாலை மறியல்கள் !

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கீரமங்கலம் ஆகிய கிராமங்களில் நிவாரணப்பணிகள் நடைபெறாததையும், சேதங்களை குறைத்து மதிப்பிட்டதையும் கண்டித்து கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் அங்கு வந்திருந்த வட்டாட்சியர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் படைகளைக் குவித்த போலீசு மக்களின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் வீட்டிற்குள் புகுந்து அப்பகுதி ஆண்கள் அனைவரையும் கைது செய்தது போலீசு.

கஜா புயலின் தாக்குதலில் மிகவும் சீர்குலைந்த பகுதிகளுல் ஒன்று கொத்தமங்கலம். இப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50,000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெல், வாழை, பலா, தென்னை, மலர்கள், அனைத்தும் நாசமடைந்துவிட்டன. புயல் முடிந்து 2 நாள் வரையில் அரசு அதிகாரிகளோ ஆட்சியாளர்களோ தலைகாட்டவில்லை. அடிப்படை வசதிகளும், எவ்வித நிவாரணமும் கூட இல்லாமல் மக்கள் தவித்துள்ளனர்.

ஆலங்குடி வட்டாட்சியர் ரத்தினாவதி தலைமையில் வருவாய்துறை அதிகாரிகள் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பார்வையிட கடந்த நவம்பர்17,2018 அன்று சென்றுள்ளனர். மேலும், அங்கு புயலால் ஏற்பட்ட சேதங்களைக் கணக்கிடுகையில் மிகக் குறைவான அலவுக்கே சேதக் கணக்கீடு எடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கொத்தமங்கலம் மக்கள் வட்டாட்சியர் வாகனத்தை சிறைபிடித்தனர்.

அங்கு உடனடியாக டி.எஸ்.பி. அய்யனார் தலைமையில் போலீசு குவிக்கப்பட்டது. மேலும் அங்கு முற்றுகையிட்ட மக்களை தாக்கியது போலீசு. இதன் மூலம் அப்பகுதியில் கலவரச்சூழலை உருவாக்கியது போலீசு.

மேலும் அரசு வாகனங்களை பொதுமக்கள் தீயிட்டுக் கொழுத்தியதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. இதையடுத்து திருச்சி டிஐஜி லலிதா லட்சுமி தலைமையில் அங்கு குவிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான போலீசு கும்பல், கொத்தமங்கலம் மக்களின் மீது கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளது. வீடுவீடாகச் சென்று கிராமத்திலிருக்கும் ஆண்கள் அனைவரையும் கைது செய்துள்ளது போலீசு. இதனை பதிவு செய்த ஜெயா நியூஸ் தொலைக்காட்சி நிருபரையும் தாக்கி அவரது புகைப்படக் கருவியை கைப்பற்றியது போலீசு.

நன்றி: புகைப்படம்: : ப.சிதம்பரம்  முகநூல்)

*****

தஞ்சை ஒரத்தநாடு, பாப்பாநாடு பகுதிகளிலும், புயல் முடிந்து 2 நாட்கள் ஆன நிலையில் எந்த ஒரு நிவாரண நடவடிக்கையும் செய்யாத அரசைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் அப்பகுதி மக்கள்.

நன்றி: செய்தி, புகைப்படம் – புலியூர் முருகேசன் (முகநூல்)

*****

புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் தங்களது பகுதிகளில், பெரிய பாதிப்பு எதுவுமில்லை என எழுதிய காரணத்தால் செய்தித் தாள்களை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர், செம்போடை மக்கள்.

நன்றி : செய்தி, புகைப்படம் – ஏழுமலை குட்டி (முகநூல்)

*****

வேதாரண்யத்தில் பெரிய அளவில் புயல் பாதிப்பில்லை, மக்கள் இயல்பாக இருக்கிறார்கள் என்று “பொய் செய்தி” வெளியிட்ட #தினத்தந்தி (தந்திTV) நாளிதழை மக்கள் கொழுத்தும் காட்சிதான் இது. மக்களுக்கு எதிரான பொய் செய்திகளை வெளியிடும் மானங்கெட்ட ஊடகங்களை மக்கள் தெளிவாக உணர்ந்து கொண்டதையே இந்த நிகழ்வு உறுதிப்படுத்துகிறது

நன்றி: அன்சாரி முஹம்மது

*****

40 ஆயிரம் மரங்கள் சாஞ்சி போச்சி எங்க ஊர்லே. ஆன, 4 ஆயிரம் மரந்தான் சாஞ்சி போச்சின்னு ஊருக்குள்ளே வரமல் கணக்கெடுத்த கலைக்டரை நேரில் வரவைக்க, புனல்வாசலில் சாலை மறியல். ஆரம்பம் இங்கிருந்தே தொடங்கட்டும்.

நன்றி : சங்கர் அஸ்வின் (முகநூலில்)

*****

புதுக்கோட்டைக்குப் பக்கத்தில் இருக்கும் அகதிகள் முகாமிலிருந்து கூக்குரல்கள் சிலவற்றைக் கேட்டேன். இதுவரை எந்த அதிகாரிகளும் அந்தப் பக்கம் வரவில்லை. அடிப்படை வசதிகள் என்பதே சுத்தமாக இல்லை. அவர்கள் இருக்கும் குடிசைகளைப் பார்த்தேன். சாக்குப் பையை வைத்து படல் எழுப்பியிருந்தார்கள். வீட்டில் பாதி ஓடுகளே உண்டு. மிச்சமெல்லாம் சாக்குப் படல்தான்.

மிக மோசமான தார்மீகமற்ற செயலை எந்தக் கூச்சமும் இல்லாமல் எல்லா அரசுகளும் செய்திருக்கின்றன. அப்போது கெடுபிடிகள் நிறைந்த நேரம். நினைத்த மாதிரி எல்லாம் அகதிகள் முகாமிற்குள் நுழைந்து விட முடியாது. இப்போதும் அப்படித்தானா என்று தெரியாது.

இந்தயிடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். ரெண்டு பிரசெண்ட் என்றெல்லாம் ஆயிரம் கிண்டலடிக்கலாம். இந்த மாதிரியான தார்மீகச் செயல்களுக்கெல்லாம் கம்யூனிஸ்ட்கள் ஓடி வந்து நிற்பார்கள். அப்படி அவர்கள் அநீதிகளின் போது குரல் கொடுக்கும் போதெல்லாம் எங்களை மாதிரியான பத்திரிகையாளர்களை மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்கள். அடியாழ உந்துதலோடு அக்காரியங்களில் ஈடுபடுவதைப் பக்கத்தில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அப்படித்தான் மதுரையில் எம்.பியாக இருந்த மோகன் மண்டபம் அகதிகள் முகாமிற்கு எங்களை அழைத்துச் சென்றார். அவரது சுமோவிற்குள் என்னையும் கானுயிர் புகைப்படத் துறையில் பல்வேறு விருதுகள் பெற்ற, புகைப்படக்காரர் மதுரை செந்தில் குமரனையும் மறைத்து ஒளித்துக் கொண்டு போய் முகாமிற்குள் கொண்டு போய் விட்டார்.

45 நிமிடத்தில் திரும்பி வந்து விட வேண்டுமென ஏற்பாடு. மோகன் வெளியே காவலர்களுடன் பேச்சுக் கொடுத்து நின்று தாக்காட்டிக் கொண்டிருந்தார். ஒரு பறவையின் வேகத்தில் முகாமிற்குள் பறந்தான் செந்தில். அவனது புகைப்படக் கருவிகளை வேகமாக கழற்றி மாட்டிய லாவகம் இன்றும் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது.

அதுவரை அப்படி ஒரு மோசமான மனிதக் குடியிருப்புகளை நான் பார்த்ததே இல்லை. என் சின்ன வயதில் பன்றிக் குடில்கள் சிலவற்றைப் பார்த்திருக்கிறேன். அவை அதைப் போலவே இருந்தன. உண்மையிலேயே மனதில் துயரம் உருள்வதை உணர்ந்தேன். அதற்குள்தான் தாம்பத்யம் துவங்கி எல்லாவற்றையும் முடித்துக் கொள்ள வேண்டும்.

வெளியில் சுதந்திரமாகப் போய் விட முடியாது. மிகச் சொற்பமான உதவித் தொகையே கிடைத்தது அப்போதும். அந்தக் கட்டுரை இந்தியாடுடேவில் வெளி வந்த பிறகு, அதை முன்னிறுத்தி ரவிக்குமார் சார் சட்டசபையில் பேசி அதன் காரணமாக, அவர் தலைமையில் என்று நினைக்கிறேன், குழுவொன்று போடப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலம்.

கொஞ்சம் தொகையை ஏற்றித் தந்தார்கள். அதை வைத்தெல்லாம் நிம்மதியாய்ப் பொங்கிச் சாப்பிட முடியாது. நம்மை நம்பி வந்தவர்களை அரைப் பட்டினியில் போடுவது முறைதானா? அங்குள்ள பெண்களை ரௌடிகள் மிரட்டுகின்றனர். மற்றவர்களை விட அவர்களுக்கு கூலி குறைவாகவே தரப்படுகிறது. அரசுத் தரப்பிலும் ஆயிரம் மிரட்டல்கள். எல்லா முகாம்களுமே பாம்புகள் குடியிருக்கும் புதர்களைச் சுற்றி அமைக்கப்பட்டவை.

இன்றைய மழையில் பார்த்த குடிசைகள் பதினைந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தனவோ, அப்படியே இருந்தன. தலைக்கு மேல் ஒரு நிம்மதியான கூரைக்காகத்தானே மனிதர்கள் உலகெங்கும் ஓடுகிறார்கள். அதை உறுதிப் படுத்துவது ஒரு அரசின் தார்மீகக் கடமையல்லவா? ஆயிரம் அரசியல் காரணங்கள் இருக்கலாம்.

அடிப்படையில் ஒரு மனிதனை எப்படி நடத்த வேண்டும். லண்டனில் ஒளிந்திருக்கும் மல்லையாவை அடைக்க நினைக்கும் சிறைச்சாலை எப்படி இருக்கிறது என லண்டன் கேட்கிறது. அவசர அவசரமாக தூசு தட்டிக் கட்டி வீடியோவைக் காட்டுகிறது இந்திய அரசு. அதைப் பார்த்தே இலண்டனில் சிரிக்கிறார்கள்.

சிறைச்சாலையையே சொர்க்க புரியாக்கிக் காட்டுகிற வல்லமை கொண்ட அரசிற்கு நம்மை நம்பி வந்த வாழ்ந்து கெட்டவர்களுக்கு தலைக்கு மேல் ஒரு நிம்மதியான கூரையை உண்டு பண்ணித்தர மனமில்லை. நேர்மையற்ற செயல்தானே இது? உள்ளூரிலேயே அகதிகளை உருவாக்கும் அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க?

அந்தப் பயணத்தில் தனுஷ்கோடி கடலடியில் ஒரு அதிகாலை நேரத்தில் நின்றிருந்தேன். சுழற்றி அடிக்கிற கடலலையையே அங்கேதான் முதல் தடவையாகப் பார்த்தேன். அந்தச் சத்தத்தை அருகில் இருந்து கேட்டேன். அந்தப் பேரோசை அந்நிய நிலத்தில் கால் வைக்கும் எல்லா அகதிகளின் நெஞ்சிலும் அறைந்து கொண்டே இருக்கும். மனிதர்களிடம் நீதியைக் கோரும் பேரோசை அது.

நன்றி: சரவணன் சந்திரன் (முகநூலில்)

*****

என் சொந்த கிராமம் சூரப்பள்ளத்தில் (பட்டுக்கோட்டை தாலுக்கா) விளை நிலங்கள் சுடுகாடு போல ஆகியிருக்கின்றன. மாத அருப்பு இருபதாயிரத்திற்கு தென்னையை நம்பி இருந்த பல சொந்தங்கள் அதிர்ச்சியில் தேங்கிப்போயிருக்கிறார்கள். கறவை மாடுகள் செத்துப்போயிருக்கின்றன. குடி நீர் இணைப்பு முற்றிலுமாக துண்டாகியிருக்கிறது. அரசு சாலைகளின் ஓரத்திலிருக்கும் வெள்ளை கோட்டு எல்லையை தாண்டி விழுந்த மரங்களை அப்புறப்படுத்தலில் மட்டுமே கவனம் கொள்கிறது. செத்த மரங்களை போக்குவரத்து இடையூறு என்ற அளவில் மட்டும் பார்க்கும் தொணியில் பணிகள் நடக்கின்றன என்று அறிகிறேன். குடி நீரையும் மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு ஒதுங்கிவிட்டால் இதைவிட மிக பெரிய துரோகம் எதுவுமே இருக்கமுடியாது. இன்றைய நிலைப்படி குடி நீரையும் ஊரில் டாங்கர் வைத்திருக்கின்ற அண்ணன் ஒருவர் சொந்த செலவில் எல்லோருக்கும் கொண்டுவந்திருக்கிறார்.

விழுந்த ஒவ்வொரு தென்னை மரமும் பல குடும்பங்களின் ஒரு வேளை சோறு. போர்க்கால அடிப்படையில் ரொட்டிகளையும், குடி நீரையும், மின்சாரத்தையும் கொடுத்துவிட்டு அரசு கிளம்பிய பின்னர் பட்டுக்கோட்டை, அதிராமப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவுர், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சார்ந்த கிராமங்களில் இனி வாரம் ஒரு விவசாய பட்டினி தற்கொலை நடக்கும். மீளவே முடியாத பெருந்துயரத்தில் தத்தளிக்கும் எங்கள் ஊர்களைப் பற்றி, நிழலுக்கு நின்ற மரங்களை வர்தாவில் பறிகொடுத்தவர்களுக்கு புரியவே புரியாது.

நான் உங்களிடம் இங்கு வந்து துணி, உணவு, பால், மருந்துகள் கேட்கவில்லை. அதை நீந்தி கடக்க எங்களுக்கு தெரியும். தோள்கொடுக்க நல்லுள்ளங்கள் இருக்கிறார்கள். நான் எனக்கு ஃபேஸ்புக்கில் சமுதாய பொறுப்புள்ள நண்பர்களை வைத்திருக்கிறேன் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அவர்களிடம் பிச்சை கேட்கிறேன். உங்களுக்கு சாத்தியமான களங்களில் எங்கள் ஊர்களைப் பற்றி கொஞ்சம் எழுதுங்கள். நீங்கள் அச்சு அல்லது காட்சி ஊடகத்தில் இருப்பவரெனில் அருள்கூர்ந்து உங்கள் கவனத்தை எங்கள் பக்கம் திருப்புங்கள். முதல்வரா எதிர்கட்சி தலைவரா என்று எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது பத்தாண்டு முதலீடான முறிந்து போன எங்கள் ஒவ்வொரு தென்னைக்கும் எங்களுக்கான நிவாரணம் வாங்கிக்கொடுக்க எங்களுக்காக குரல் கொடுங்கள். ஆம். ஒவ்வொரு தென்னைக்கும். செத்துப்போன மாடுகளுக்கும், சேதமான வீடுகளுக்கும் நிவாரணம் கோர எங்களுடன் நில்லுங்கள். உங்களால் முடிந்தால் குறைந்தது ஒரு தற்கொலையையாவது தடுத்து நிறுத்த உதவி செய்யுங்கள். நீங்களும் சேர்ந்து தட்டினால்தான் கதவுகள் திறக்கப்படும். நயந்தாராகளுக்கு அடுத்த வருடமும் பிறந்த நாள் வரும். கொஞ்சம் கருணை காட்டுங்கள்

நன்றி: மயிலன் சின்னப்பன் (முகநூலில்)

*****

திருச்சி மேலகொண்டையம்பேட்டை வடக்குதெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 30) விவசாயியான இவருக்குத்  திருமணமாகி இரண்டேகால் வயதில் தனுஷிகாஸ்ரீ என்ற பெண் குழந்தை உள்ளது. திம்மராயர் சமுத்திரம் பகுதியில் இவருக்குத் சொந்தமான விவசாய நிலம் உள்ளது. இதில் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்றுக் கடந்த ஜூன் மாதம் வாழை பயிரிட்டு இருந்தார்.

இதனிடையே தற்போது வீசிய கஜா புயலின் காரணமாக இவரது வாழை மரங்கள் முற்றிலும் சாய்ந்து நாசமானது. மேலும் தன்னுடைய நிலத்தைச் சென்று நேரில் பார்த்த செல்வராஜ் வாழைகளும் முழுவதும் சேதம் அடைந்தது கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன் ஏற்கனவே இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளநிலையில், தற்போது கூடுதல் சுமையாகக் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற எண்ணத்துடன் மனமுடைந்தார்.  தனது நண்பர்களுக்கு தொலைப்பேசியில் தற்கொலை செய்து வருவதாகத் தெரிவித்து விட்டு, பின்னர் நேற்று இரவு பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரயில்வே எஸ்.ஐ ஜான்சன் தலைமையிலான போலீசார் சுடலை செல்வராஜின் உடலைக் கைப்பற்றி நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல்வர் முதல்கட்ட விசாரணையில் செல்வராஜ் அந்த பகுதியில் வாட்டர் கேன் பிசினஸ் செய்ததாகவும் கூடவே அவருக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயி பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நன்றி : விகடன்

****

அடிப்படை உரிமைகளுக்காகவும், நியாயமான உரிமைகளுக்காகவும் போராடிய மக்களின் மீது வெறிகொண்டு தாக்குதல் நடத்தியிருக்கும் எடப்பாடி கும்பலோ ஊடகங்களின் துதிபாடலில் மெய்மறந்து லயித்துக் கொண்டே அரசு விழாக்களில் கலந்து கொண்டு வலம் வருகிறது. புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டு, இந்த அரசின் கண்டுங்காணாத போக்கால் இரண்டு நாட்களுக்குப் பின்னும் அடிப்படை வசதிகள்  கூட கிடைக்கப்பெறாமல் தவிக்கும் மக்களைத் தாக்குவதற்கு எவ்வளவு வக்கரிப்புள்ள மனம் வேண்டும் ?

பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம் !

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 25

மாக்சிம் கார்க்கி
வாசல் புறத்தில் யாரோ திடீரென வருவது கேட்டது. அவர்கள் இருவரும் திடுக்கிட்டு எழுந்து ஒருவரையொருவர் திருகத் திருகப் பார்த்துக்கொண்டனர்.

கதவை மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ரீபின்.

“வந்து விட்டேன்!” என்று புன்னகையோடு தலைநிமிர்ந்து சொன்னான் ரீபின். ”அங்கும் இங்கும் எங்கும் போனான் தாமஸ்; ஆடியோடித் திரும்பி வந்தான் தாமஸ்!” (1)

அவன் ஒரு கம்பளிக் கோட்டு போட்டிருந்தான். அதன் மீது தார் எண்ணெய் படிந்திருந்தது. காலிலே ஒரு ஜோடி கட்டைப் பாதரட்சைகள், தலையிலே ஒரு கம்பளித் தொப்பி. அவனது இடைவாரிலே இரண்டு கையுறைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

“புத்தகங்களைத் தவிர, இங்கு புதிதாக ஒன்றையும் காணோம். சரி, எனக்கு நீ எல்லா விவரத்தையும் சொல்லு.”

”உடல்நலம் எப்படி? பாவெல். உன்னை விடுதலை பண்ணிவிட்டார்களா? ரொம்ப நல்லது. என்ன பெலகேயா நீலவ்னா சௌக்கியமாயிருக்கிறாயா?” அவன் தன் வெள்ளைப் பல்லெல்லாம் தெரிய இளித்துச் சிரித்தான். அவனது குரல் முன்னைவிடக் கனிந்திருந்தது. அவனது முகத்தில் அளவுக்கு மீறி தாடி வளர்ந்து மண்டியிருந்தது.

அவனைப் பார்த்ததில் தாய்க்குச் சந்தோஷம். அவனது கருத்துப்போன அகன்ற கையைப் பற்றிப் பிடிப்பதற்காக அவள் அவன் அருகே சென்றாள்.

”அம்மாடி” என்று ஆழ்ந்த பெருமூச்சு விட்டாள் அவள். அப்படிப் பெருமூச்சு விடும்போது, தார் எண்ணெயின் கார நெடி அவளது சுவாசத்தில் நிரம்பிக் கமறியது. “உன்னைப் பார்த்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சி தெரியுமா?”

பாவெல் புன்னகை புரிந்தான். ரீபினைக் கூர்ந்து பார்த்தான்.

“நல்ல முஜீக்”

பிறகு ரீபின் தன் மேலாடையைக் களைய முனைந்தான்.

“ஆமாம் நான் பழையபடியும் முஜீக் ஆகிறேன். நீங்களெல்லாம் கனவான்களாகிக்கொண்டிருக்கிறீர்கள். நான் மட்டும் எதிர்மாறான திசையில் போய்க்கொண்டிருக்கிறேன்!”

அவன் தன் பலநிறச் சட்டையை ஒழுங்குபடுத்தியவாறு அறைக்குள் நடந்தான்; சுற்றுமுற்றும் பார்த்தான்.

“புத்தகங்களைத் தவிர, இங்கு புதிதாக ஒன்றையும் காணோம். சரி, எனக்கு நீ எல்லா விவரத்தையும் சொல்லு.”

அவன் தன் கால்களை அகட்டிப் போட்டவாறு உட்கார்ந்து முழங்கால்களைக் கைகளால் கட்டிக்கொண்டு, தனது கரிய கண்களால் பாவெலையே பார்த்தவாறு அவன் சொல்லப்போகும் பதிலை எதிர்நோக்கிப் புன்னகை செய்தபடி இருந்தான்.

“எல்லாம் நன்றாய்த்தானிருக்கிறது” என்றான் பாவெல்.

“உழுகிறோம், விதைக்கிறோம், கதிர்கண்டு களிக்கிறோம்; வடிக்கிறோம் பிரை, தூங்கிக் கழிக்கிறோம் நாளை – அப்படியா?” என்று கூறிச் சிரித்தான் ரீபின்.

“சரி. நீங்கள் எப்படிக் காலத்தைப் போக்குகிறீர்கள், மிகயில் இவானவிச்?” என்று அவனுக்கு எதிராக உட்கார்ந்தான் பாவெல்.

“நான் ஒழுங்காகத்தான் காலம் தள்ளுகிறேன். எகில்தேயவோ என்னும் ஊரில் வசிக்கிறேன். அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாயா? நல்ல ஊர்; சின்னப் பட்டணம். வருஷத்திலே இரண்டு சந்தை கூடும். சுமார் இரண்டாயிரம் பேர் வசிக்கிறார்கள். எல்லோரும் மோசமான ஜனங்கள். அவர்களுக்குச் சொந்தத்தில் நிலம் கிடையாது. எல்லாம் குத்தகை நிலம்தான். செழிப்பானதல்ல; அட்டை போன்ற ஒரு பண்ணைக்காரனிடம் நானும் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம். நிலக்கரியை எரித்து தார் எண்ணெய் வடிக்கிறோம். இங்கே சம்பாதித்ததில் அங்கே கால்வாசிதான் சம்பாத்தியம். வேலையோ இரண்டு மடங்கு கஷ்டம்! ஹூம்! எங்களை உறிஞ்சித் தீர்க்கிறானே நிலச்சுவான்தார் – அவனிடம் நாங்கள் ஏழுபேர் வேலை பார்க்கிறோம். அவர்கள் எல்லாரும் நல்லவர்கள், இளவட்டங்கள். என்னைத் தவிர மற்றவரெல்லாம் உள்ளூர் ஆட்கள். எல்லோருக்கும் எழுதப்படிக்கத் தெரியும். அவர்களில் ஒருவன் பெயர் எபீம். அவன் கொஞ்சம் தலைக்கனம் பிடித்த பயல். அவனோடு மாரடிப்பது எப்படி என்பது பெரிய பிரச்சினை!”

”உங்கள் வேலையெல்லாம் எப்படி? அவர்களோடு நமது கொள்கையை நீங்கள் விவாதிப்பதுண்டா?” என்று ஆர்வத்தோடு கேட்டான் பாவெல்.

”நான் ஒன்றும் பேசாமல் சும்மா இருக்கவில்லை. ஆமாம். நீயும் தெரிந்துகொள். நீ கொடுத்த பிரசுரங்கள் – முப்பத்திநாலா? – அத்தனையும் என் வசம் இருக்கின்றன. ஆனால், நான் பிரச்சாரம் செய்வதெல்லாம் பைபிளைத்தான். பைபிளிலும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. பெரிய புத்தகம்; மேலும் அரசாங்கச் சார்புள்ள புத்தகம். பாதிரி சைனாடின் அங்கீகாரம் பெற்ற புத்தகம். அதில் யாரும் லகுவில் நம்பிக்கை கொண்டுவிடுவார்கள்.”

அவன் சிரித்துக்கொண்டே பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டினான்.

“ஆனால், அதுமட்டும் போதாது. நான் உன்னிடம் புத்தகங்கள் வாங்கிக் கொண்டு போகத்தான் வந்தேன். என்னோடு எபீமும் வந்திருக்கிறான். அவர்கள் எங்களை ஒரு வண்டி தார் எண்ணெயைக் கொண்டு போகச் சொன்னார்கள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு உன் வீட்டுக்குப் பக்கமாக வந்தோம்; வந்து சேர்ந்தோம். சரி, எபீம் வருவதற்குள் நீ எனக்குப் புத்தகங்களை எடுத்துக் கொடு. அவனுக்கு இந்த விஷயமெல்லாம் ரொம்பத் தெரியக்கூடாது.”

“உழுகிறோம், விதைக்கிறோம், கதிர்கண்டு களிக்கிறோம்; வடிக்கிறோம் பிரை, தூங்கிக் கழிக்கிறோம் நாளை – அப்படியா?” என்று கூறிச் சிரித்தான் ரீபின்.

தாய் ரீபினையே பார்த்தாள். அவனது ஆடையணிகளின் மாறுதல்களைத் தவிர வேறு ஏதோ முறையிலும்கூட அவன் மாறிப்போயிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. அவனது பாவனைகூட முன்னை மாதிரி அழுத்தமுடையதாக இல்லை. கண்களில் ஏதோ கள்ளத்தனம் நடமாடியது. முன்னைப்போல் அவை விரிந்து நோக்கவில்லை.

“அம்மா, போய் அந்தப் புத்தகங்களை வாங்கி வருகிறீர்களா? அங்குள்ளவர்களுக்கு எந்தப் புத்தகங்கள் என்பது தெரியும். நாட்டுப்புறத்துக்கு அனுப்ப வேண்டிய புத்தகங்கள் என்று மட்டும் சொன்னால் போதும்” என்று சொன்னான் பாவெல்.

”அதற்கென்ன? தேநீர் கொதித்து முடிந்தவுடன் உடனே போகிறேன்” என்றாள் தாய்.

“என்ன பெலகேயா நீலவ்னா, இந்த விவகாரத்தில் நீயும் கலந்துவிட்டாயா?” என்று கேட்டுச் சிரித்தான் ரீபின்; “ஹூம். அங்குள்ள ஜனங்களில் எத்தனையோ பேருக்குப் புத்தகங்கள் தேவை. படிக்க வேண்டும் என்ற ஆர்வம். உள்ளூரில் ஓர் உபாத்தியாயர் இருக்கிறார். இது அவருடைய வேலை. ரொம்ப நல்லவர். அவரும் தேவாலய குருக்கள் வழியில் வந்தவர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். சுமார் ஏழு கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் ஓர் உபாத்தியாயினியும் இருக்கிறாள். ஆனால் அவர்கள் தடை செய்யப்பட்ட புத்தகங்களைத் தொடுவதில்லை. வேலை போய்விடும் என்ற பயம். ஆனால், எனக்கு அந்தத் தடை பண்ணப்பட்ட புத்தகங்கள்தான் தேவை. கொஞ்சம் காரசாரமான புத்தகங்கள்தான் நல்லது. நான் அவற்றைப் பையப்பைய அவர்கள் மத்தியில் பரப்பிடுவேன். போலீஸ்காரரோ, தேவாலயக் குருக்களோ அந்தப் புத்தகங்களைக் காண நேர்ந்தால், என்னைக் குற்றம் கூறுவார்களா? அந்த உபாத்தியாயர்கள் பாடுதான் ஆபத்து. அதற்குள் நான் சமயம் பார்த்து ஒதுங்கியிருந்துவிடுவேன்.”

அவன் தனது புத்திசாலித்தனத்தை எண்ணித் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டான்.

”கரடி போலப் பாவனை, குள்ள நரியைப் போல வாழ்க்கை” என்று நினைத்தாள் தாய்.

”இந்த மாதிரிச் சட்ட விரோதமான புத்தகங்களைப் பரப்பியதாக உபாத்தியாயர்கள் மீது சந்தேகப்பட்டால், அவர்களைச் சிறையில் போடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா?” என்று கேட்டான் பாவெல்.

”நிச்சயமாய்ப் போடத்தான் போடுவார்கள். அதனால் என்ன?” என்றான் ரீபின்.

”ஆனால் குற்றவாளி நீங்கள்தான், அவர்களல்ல. நீங்கள்தான் சிறைக்குப் போகவேண்டும்.”

“நீ ஒரு எமகாதகப் பேர்வழி!” என்று முழங்காலில் தட்டிக் கொடுத்துக் கொண்டு சிரித்துச் சொன்னான் ரீபின். “என்னை யார் சந்தேகப்படுவது? முஜீக்குகள் இந்த மாதிரி விவகாரங்களில் ஈடுபடமாட்டார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். புத்தகங்கள் என்பது படித்த சீமான்களின் விவகாரம். அவர்கள்தான் அதற்குப் பதில் அளிக்க வேண்டும்.”

ரீபின் சொல்வதை பாவெல் புரிந்து கொள்ளவில்லை என உணர்ந்தாள் தாய். பாவெல் தனது கண்களைச் சுருக்கி விழிப்பதை அவள் கண்டாள். அவன் கோபமுற்றிருப்பதை உணர்ந்தாள்.

”மிகயில் இவானவிச் இந்த வேலையைத் தானே செய்துவிட்டு, பிறர்மீது பழியைப் போடப் பார்க்கிறாரோ…” என்று மெதுவாகவும், எச்சரிக்கையாகவும் சொன்னாள் தாய்.

”அதுதான் சங்கதி!” என்று தன் தாடியைத் தட்டிவிட்டுக்கொண்டு கூறினான் ரீபின். ”தற்காலிகமாக

“அம்மா!” என்று வறண்ட குரலில் சொன்னான் பாவெல்: “நம்மில் யாராவது ஒருவன் – அந்திரேய் என்றுதான் வைத்துக் கொள்ளேன் – ஏதாவது ஒன்றைச் செய்துவிட்டு எனக்குப் பின்னால் வந்து ஒளிந்து கொண்டான் என்று வைத்துக்கொள், அப்புறம் அவனுக்குப் பதில் என்னைச் சிறைக்குக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்துப் பார், உனக்கு என்ன உணர்ச்சியம்மா உண்டாகும்?”

தாய் திடுக்கிட்டு, ஒன்றும் புரியாதவளாய் மகனைப் பார்த்தாள்.

”தோழனுக்குத் தோழன் இப்படித் துரோகம் செய்ய முடியுமா? சே! அது என்ன வேலை?” என்று தலையை அசைத்துவிட்டுச் சொன்னாள் அவள்.

”ஆஹா! பாவெல், உன்னை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்” என்று இழுத்தான் ரீபின். பிறகு அவன் தாயின் பக்கம் திரும்பி, கேலியாகக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டு, “இது ஒரு நாசூக்கான விவகாரம்தான், அம்மா” என்றான். மீண்டும் அவன் பாவெலை நோக்கித் திரும்பி, உபதேசம் பண்ணுகிற தோரணையில், பேச ஆரம்பித்தான். “தம்பி உன் எண்ணங்கள் எல்லாம் இன்னும் பிஞ்சாய்த்தானிருக்கின்றன, பழுக்கவில்லை. சட்டவிரோதமான காரியம் என்று வரும்போது, கெளரவத்தையோ, நாணயத்தையோ பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நீயே யோசித்துப்பார். முதன் முதல் அவர்கள் சிறையில் தள்ளப்போவது எவன் கையில் புத்தகம் இருந்ததோ அவனைத்தான்; உபாத்தியாயர்களை அல்ல. இது முதலாவது. இரண்டாவது, உபாத்தியாயர்கள் அங்கீகரிக்கப்பட்ட புத்தகங்களை மட்டுமே கற்றுக்கொடுக்கிறார்கள் என்றே வைத்துக்கொள். அந்தப் புத்தகங்களிலும் தடை செய்யப்பட்ட புத்தகங்களில் உள்ள உண்மைகள் இருக்கத்தான் செய்யும். வார்த்தைகள்தான் வித்தியாசமாயிருக்கும். விஷயம் ஒன்றுதான். வேண்டுமானால், நீ தரும் புத்தகங்களில் இருப்பதைவிட, அதில் உண்மை கொஞ்சம் குறைவாக இருக்கலாம். சுருங்கச் சொன்னால், நான் எந்தக் கொள்கைக்காக வாழ்கிறேனோ அதே கொள்கைக்காகத்தான் அவர்களும் வேலை செய்கிறார்கள். அவர்கள் சுற்றி வளைத்துத் திரிகிறார்கள். நான் நேர் பாதையில், விரைந்து முன்னேறிப் போகிறேன். அவ்வளவுதான்.

முதலாளிகளின் கண்ணோட்டத்தின்படி பார்த்தால், எங்கள் இருவரையுமே தண்டிக்க வேண்டியதுதான். சரிதானே? இது இரண்டாவது. மூன்றாவதாக ஒரு விஷயம் இருக்கிறது. அவர்களுக்கும் எனக்கும் தொடர்பே கிடையாது. நடந்து செல்லும் தரைப்படை குதிரைப்படையாட்களோடு சிநேகம் கொள்ள முடியாது. முஜீக்காயிருந்தால் நான் அந்த மாதிரி நடந்து கொள்ள மாட்டேன். ஆனால் அந்த உபாத்தியாயரோ ஒரு பாதிரியாரின் பிள்ளை, உபாத்தியாயினியோ ஒரு பண்ணையாரின் மகள். அவர்கள் இருவரும் ஜனங்களை ஏன் தூண்டிவிடப் போகிறார்கள்? என்னைப் போன்ற ஒரு முஜீக்குக்கு அந்தக் கனவான்களின் மனதில் இருப்பது எட்டாது.

எனக்கு நான் செய்கின்ற காரியம் நன்றாய்த் தெரியும். அவர்கள் – அந்தப் படித்த சீமான்கள் – எதை நோக்கிச் செல்கிறார்கள் என்பது எனக்குக் கொஞ்சம்கூடத் தெரியாத, புரியாத விஷயம். ஆயிரம் வருஷ காலமாக அந்தக் கனவான்கள் தங்கள் இடத்தில் சுகமாக வாழ்ந்து கொண்டு, முஜீக்குகளின் முதுகுத்தோலை உரித்தெடுக்கிறார்கள். இப்போது மட்டும் அவர்கள் திடுதிப்பென்று முஜீக்குகளின் கண்களை மறைத்திருக்கும் திரைகளைத் தங்கள் கைகளாலேயே விலக்கிவிடுவார்களா? எனக்கு அந்த மாதிரியான கட்டுக் கதைகளில் எல்லாம் நம்பிக்கை கிடையாது. அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று சொல்வது அபாரமான கற்பனை. ஆமாம்! சீமான்களுக்கும் எனக்கும் வெகு தூரம். நீ குளிர்காலத்தில் வயல்வெளி வழியாகக் குறுக்கே நடந்து செல்கிறாய் என்று வைத்துக்கொள். ரோட்டுக்கரைக்கு வந்தவுடன் உனக்கு எதிராக ஏதோ ஒன்று தெரிகிறது என்றும் நினைத்துப் பார். அதென்ன அது? ஒரு நரி, அல்லது ஓநாய்; இல்லாவிட்டால் ஒரு நாயாக இருக்கும். என்னவென்று தெரியவில்லை.”

தாய் தன் மகனைப் பார்த்தாள். அவன் மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டான்.

ரீபினின் கண்களில் ஒரு கரிய ஒளி பிரசாசித்தது. அவன் ஆத்ம திருப்தியோடு பாவெலையே பார்த்துக்கொண்டும் தாடியைத் தடவிக்கொடுத்துக் கொண்டும் இருந்தான்.

எல்லோரும் மோசமான ஜனங்கள். அவர்களுக்குச் சொந்தத்தில் நிலம் கிடையாது. எல்லாம் குத்தகை நிலம்தான். செழிப்பானதல்ல; அட்டை போன்ற ஒரு பண்ணைக்காரனிடம் நானும் வேலைக்குச் சேர்ந்திருக்கிறேன். பிணத்தை மொய்க்கும் ஈக்கள் போல அவர்கள் அங்கு ஏராளம்.

”நல்லொழுக்கத்தைப் பற்றி நினைப்பதற்கு இது காலமில்லை” என்று தொடங்கினான் ரீபின்; “வாழ்க்கையோ ஒரே சிரமமயமாயிருக்கிறது. நாய்கள் ஒன்று கூடினால் ஆட்டு மந்தையாகிவிடாது. ஒவ்வொரு நாயும் அதனதன் இஷ்டப்படி குலைத்துத்தள்ளும்.

“சாதாரண மக்களின் நலத்துக்காக, படித்த சீமான்களில் பல பேர் மரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்” என்று தனக்குத் தெரிந்தவர்கள் முகங்களையெல்லாம் மனக் கண் முன் கண்டவாறே பேசினாள் தாய்; “அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையுமே சிறையில் கழித்துவிடுகிறார்களே…..”

“அவர்களெல்லாம் ஒரு தனி ரகம்’ என்றான் ரீபின். ”முஜீக் பணக்காரனாகி, படித்த கனவான்களோடு சரிசமானம் பெறுகிறான். படித்த கனவான்கள் ஏழைகளாகி. முஜீக்குகளின் நிலைக்குத் தாழ்ந்துவிடுகிறார்கள். பணமில்லாவிட்டால் மனம் சுத்தமாயிருக்கும். பாவெல், நீ எனக்குச் சொன்ன விஷயம் ஞாபகம் இருக்கிறதா? ஒரு மனிதன் எப்படி வாழ்கிறானோ, அப்படியேதான் சிந்திக்கிறான் என்று சொன்னாயே, அதுதான் சங்கதி தொழிலாளி ‘இல்லை’ என்று ஒரு விஷயத்தைச் சொன்னால், முதலாளி அதே விஷயத்தை இருக்கிறது’ என்பான். தொழிலாளி ‘ஆம்’ என்று சொன்னால் முதலாளி தன் குணத்துக்கேற்ப ‘இல்லை’ என்று கத்துவான். இதே முரண்பாடுதான் முஜீக்குகளுக்கும் படித்த சீமான்களுக்கும் இடையில் நிலவுகிறது. முஜீக் ஒருவன் வயிறு நிறையச் சாப்பிடுவதைப் பார்த்தால் உடனே பண்ணையாருக்கு வயிற்றைக் கலக்கிவிடும். ஒவ்வொரு வர்க்கத்திலும் சில நாய்ப் பிறவிகள் இருக்கத்தான் இருப்பார்கள். நான் ஒன்றும் எல்லா முஜீக்குகளுக்காகவும் பரிந்து பேசவில்லை … ”

அவன் தனது பலம் பொருந்திய கரிய முகத்தைத் தொங்கவிட்டவாறே எழுந்து நின்றான். பற்களைப் பட்டென்று கடித்த மாதிரி, அவனது தாடி நடுங்கி அசைந்தது. எழுந்து நின்று கொண்டு அவன் மெதுவான தொனியில் மேலும் பேசினான்.

“ஐந்து வருஷ காலமாக நான் ஒவ்வொரு தொழிற்சாலையாய் இடம் மாறித் திரிந்தேன். கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன். புரிகிறதா? என்னால் வாழ முடியவே இல்லை. நீ இங்கே வாழ்கிறாய். அங்கு நடக்கின்ற அநியாயங்கள் எல்லாம் உனக்குத் தெரியாது. அங்கே பசிக் கொடுமை மக்களை நிழல் போலத் தொடர்ந்து வாட்டுகிறது. தின்பதற்கு ஒரு ரொட்டி, சீனி எதுவுமே – கிடைப்பதில்லை. கிடைக்கும் என்ற நம்பிக்கையும் இல்லை. பசிப்பேய் அவர்களது இதயங்களையே தின்று விழுங்குகிறது, முகங்களைக் கோரமாக்குகிறது. அந்த ஜனங்கள் வாழவில்லை; எட்டாத தேவைகளில் அழுகிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் அவர்களைச் சுற்றியுள்ள அதிகாரிகளோ, அவர்கள் கையில் ஒரு சிறு ரொட்டித் துண்டுகூடச் சிக்கிவிடாதபடி, கழுகுகளைப் போலக் கண்காணித்து வருகிறார்கள். அப்படியே தப்பித்தவறி ஒரு முஜிக்கின் கையில் கொஞ்சம் உணவு கிட்டிவிட்டால், உடனே அதனைத் தட்டிப் பறிப்பதோடு, அவனது கன்னத்திலும் அறைகிறார்கள்……..”

ரீபின் மேசை மீது கையைத் தாங்கியவாறு திரும்பி பாவெலை நோக்கித் தலையைச் சாய்த்தான்.

“அந்தக் கொடிய வாழ்க்கையைக் கண்டு என் வயிறுகூட உள்ளடங்கிப் போயிற்று. அந்த வாழ்க்கையை என்னால் தாங்க முடியாது என்று நினைத்தேன். அப்புறம் எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்: ‘இல்லை. நீ அப்படிச் செய்யக்கூடாது. மனதைத் தளரவிடக்கூடாது. இந்த வாழ்விலிருந்து நீ பிரிந்து செல்லக்கூடாது. உன்னால் அவர்களுக்கு உணவு அளிக்க முடியாமல் இருக்கலாம். ஆனால் நீ அவர்களைச் சிந்திக்க வைக்க வேண்டும்! அதனாலேயே அங்கு தங்கினேன். மக்களுக்காகவும், மக்களின் மீதும் எனக்கு ஏற்பட்டுள்ள பகைமை, வெறுப்பு எல்லாம் என் இதயத்துக்குள்ளே பொருமிப் புகைந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வெறுப்புணர்ச்சி இன்னும் என் மனதை ஏன் இதயத்தைக் கத்தி போல் குத்திக் கொண்டிருக்கிறது!”

படிக்க:
பரியேறும் பெருமாள் : சாதி ஒழிப்பு உரையாடலைத் துவக்குகிறதா ? மறுக்கிறதா ?
தருமபுரி சவுமியா படுகொலை | நேரடி ரிப்போர்ட் | வீடியோ

மெதுவாக அவன் பாவெலின் அருகே சென்று அவனது தோள் மீது கையைப் போட்டான். அவனது நெற்றியிலிருந்து வியர்வை வழிந்தது. கைகள் நடுங்கியது.

“பாவெல், எனக்கு உன் உதவி தேவை. நீ எனக்குப் புத்தகங்கள் கொடு ஒரு முறை படித்தாலும், இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்து, சிந்தித்துச் சிந்தித்து வெறி கொள்ளச் செய்யும் புத்தகங்களாகக் கொடு. அவர்களது மூளையிலே ஒரு முள்ளம் பன்றியைக் குடியேற்ற வேண்டும். தனது முட்களைச் சிலிர்த்துக்கொண்டு நிற்கும் முள்ளம் பன்றி! அப்போதுதான் அவர்கள் விழிப்படைவார்கள். உங்களுக்காக எழுதுகின்ற நகரவாசிகளிடம் கிராமாந்திர ஜனங்களுக்காகவும் ஏதேனும் புத்தகங்கள் எழுதச் சொல். அவர்கள் எழுதுகின்ற எழுத்துக்கள் ஒரே துடிப்பும் உணர்ச்சியும் உஷ்ணமும் பொருந்தியனவாக இருக்கட்டும். கொள்கைக்காகக் கொலை செய்யவும் தயாராகும் வெறியை அந்த நூல்கள் மக்களுக்கு உண்டாக்கட்டும்.”

அவன் தன் கையை உயர்த்தி, ஒவ்வொரு வார்த்தையையும் நிதானமாக நிறுத்தி, தெளிவோடு அழுத்தத்தோடு சொல்ல ஆரம்பித்தான்.

“ஐந்து வருஷ காலமாக நான் ஒவ்வொரு தொழிற்சாலையாய் இடம் மாறித் திரிந்தேன். கிராமப்புறம் எப்படி இருக்கும் என்பதே எனக்கு மறந்து போயிற்று. கிராமத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமையைப் பார்த்தபோது, அந்தச் சூழ்நிலையில் உயிரோடுகூட வாழ முடியாது என்று உணர்ந்தேன். புரிகிறதா?

“மரணம்தான் மரணத்தை வெல்லும்! அதாவது மக்களை மறுவாழ்வு எடுக்கச் செய்வதற்காக, மக்கள் சாகத்தான் வேண்டும்! பூமிப் பரப்பிலுள்ள லட்சோபலட்சமான மக்கள் புனர்ஜென்மம் எடுத்து, புதுவாழ்வு வாழ்வதற்காக, நம்மில் ஆயிரம் பேராவது சாகத் தயாராயிருப்போம்! அதுதான் சங்கதி. மக்களின் புனர்ஜென்மத்துக்காக, விழிப்புப் பெற்ற மக்கள் குலத்தின் எழுச்சிக்காகச் சாவது மிகவும் சுலபம்!”

தாய் தேநீர்ப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். ரீபினை ஏறிட்டுப் பார்த்தாள். அவனது பேச்சின் கனமும் வேகமும் அவளை அழுத்தி நசுக்கிக்கொண்டிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவனைப் பார்த்தவுடன் தனது கணவனை ஞாபகமூட்டும் ஏதோ ஓர் அம்சத்தை அவனிடம் காண்பது போலிருந்தது. அவளது கணவனும் இப்படித்தான். தன் பற்களைத் திறந்து காட்டிக் கொண்டிருப்பான், தனது சட்டைக் கைகளைச் சுருட்டி விடும்போது, இந்த மாதிரித்தான் கையை வீசிக்கொள்வான். அவனிடமும் இதே மாதிரிதான் பொறுமையற்ற கொடூரம் காணப்பட்டது. அது ஒரு ஊமைக் கொடூரம். ஆனால் இதுவோ ஊமையல்ல. இவனைக் கண்டு, அவளுக்குப் பயம் தோன்றவில்லை.

“நாம் இதைச் செய்யத்தான் வேண்டும்” என்று தன் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல். ”நீங்கள் எங்களுக்குச் சகல புள்ளி விவரங்களையும் கொடுங்கள். நாங்கள் உங்களுக்காக ஒரு பத்திரிகையை நடத்துவோம்.”

தாய்க்குத் தன் மகனைப் பார்த்ததும் உள்ளூர மகிழ்ச்சி பொங்கிச் சிரிப்புப் பிறந்தது. அவள் எதுவுமே பேசாமல் உடை உடுத்திக் கொண்டு வீட்டைவிட்டுக் கிளம்பிப் போனாள்.

”நல்லது! நாங்கள் உனக்குச் சகல விவரங்களும் அனுப்புகிறோம், வாண்டுப் பிள்ளைகளுக்குக் கூடப் புரியும்படியாக, அவ்வளவு எளிமையான நடையில் நீங்கள் புத்தகங்களை எழுதி வெளியிடுங்கள்” என்றான் ரீபின்.

சமையலறையின் கதவு திறந்தது. யாரோ உள்ளே வந்தார்கள்.

சமையலறைப் பக்கம் கண்ணைத் திருப்பிய ரீபின், “இவன்தான் எபீம்! இங்கே வா எபீம்! இவன்தான் எபீம்! இதுதான், பாவெல்! இவனைப்பற்றி உனக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று அறிமுகப்படுத்தி வைத்தான் ரீபின்.

பாவெலுக்கு முன்னால் உயரமாகவும் பரந்த முகமும் அழகிய கேசமும் உடையவனாயிருந்த எபீம் நின்றான். சின்னஞ்சிறு கம்பளிக் கோட்டு அணிந்திருந்தான். ஒரு கையில் தன் தொப்பியைப் பிடித்தவாறு, அவன் தன் கண்களைத் தாழ்த்திச் சுருக்கிப் பாவெலைப் பார்த்தான். அவனைப் பார்த்தால் அவன் மிகவும் பலம் பொருந்தியவனாயிருக்க வேண்டும் எனத் தோன்றியது.

”உங்களைச் சந்தித்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி” என்று கரகரத்த குரலில் கூறினான் அவன். பாவெலோடு அவன் கை குலுக்கிய பிறகு, இரு கைகளாலும் சிலிர்த்து நிற்கும் தன் தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். பிறகு அறையைச் சுற்றுமுற்றும் பார்த்தான். அங்குள்ள புத்தகங்கள் கண்ணில் பட்டதும், அவன் அவற்றை நோக்கி மெதுவாய்ச் செல்ல ஆரம்பித்தான்.

“அவற்றைப் பார்த்துவிட்டான்!” என்று பாவெலை நோக்கிக் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே சொன்னான் ரீபின். எபீம் திரும்பி ரீபினைப் பார்த்தான், பிறகு புத்தகங்களைக் கவனிக்க ஆரம்பித்தான்.

“படிப்பதற்கு எவ்வளவு விஷயம் இருக்கிறது!” என்று வியந்து கூறினான் அவன். “ஆனால் உங்களுக்குப் படிப்பதற்கு நேரமே கிடையாது. நீங்கள் மட்டும் கிராமத்தில் வாழ்ந்தால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைக்கும்…”

“ஆமாம். நிறைய நேரம். குறைய ஆசை! இல்லையா?” என்றான் பாவெல்.

“ஏன்? அங்குப் படிக்க வேண்டுமென்ற ஆசை அதிகம்தான்” என்று தன் மோவாயைத் தடவி விட்டவாறு சொன்னான் அந்தப் பையன். “அங்குள்ள மனிதர்களும் தங்கள் மூளைக்கு வேலை கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ‘புவி இயல்’ இதென்ன புத்தகம்?”

பாவெல் விளக்கினான்.

”எங்களுக்கு இது தேவையில்லை” என்று கூறிக்கொண்டே அந்தப் பையன் அந்தப் புத்தகத்தை மீண்டும் அலமாரியிலேயே வைத்துவிட்டான்.

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) இது ஒரு பாட்டு மாதிரியான பழமொழி. போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடு’ என்ற நம் நாட்டு வழக்கை ஒத்திருப்பது. (மொ -ர்.)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மாமனார் வீட்டில் விருந்துக்கு போன எடப்பாடி கஜா புயலில் கிழித்தது என்ன ?

ஜா புயல் மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு பிச்சு உதறுகிறதாம். சொல்வது யார்? தமிழக எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். ஸ்டாலின் அறிக்கை வெளியான அன்று எடப்பாடி பழனிச்சாமி, சேலத்தில் மாமனார் வீட்டில் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும் தத்தளித்துக் கொண்டிருக்கும் அடுத்த நாளும் கூட கோயில் கொடை விருந்து உண்டுவிட்டு, தன் புகழ்பாடும் மூன்று நிகழ்ச்சிகளில் சேலத்தில் பங்கேற்றுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், இவர்கள் சொல்கிறார்கள், தமிழ்நாடு அரசு புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் பின்னி எடுத்துவிட்டதாம்.

‘தி.மு.க.வே பாராட்டிவிட்டதே..’ என்று கமல்ஹாசன் பாராட்டுகிறார். ‘உலக நாயகனே பாராட்டிவிட்டாரே..’ என்று ரஜினிகாந்த் பாராட்டுகிறார். வரிசையாக பா.ம.க. ராமதாஸ், திருமாவளவன், முத்தரசன், பாலகிருஷ்ணன் எல்லோரும் உள்ளேன் அய்யா சொல்கின்றனர். ‘எடப்பாடியை பாராட்டிய ஸ்டாலினை பாராட்டுகிறேன்’ என்று நடுவில் சைக்கிள் ஓட்டுகிறார் தமிழிசை. இவர்கள் எல்லோரும் பாராட்டும் போது நாம் மட்டும் எப்படி சும்மாயிருப்பது என்று டி.டி.வி. தினகரன் வேறு பாராட்டுகிறார். சும்மா இருக்கும்போதே எடப்பாடியின் திருவடியில் பஜனை பாடும் தமிழக அமைச்சர்கள், ’கஜா புயலையே கூஜா தூக்க வைத்த எடப்பாடியார்’ என்று எதுகை மோனையில் குதூகலிக்கின்றனர்.

இப்படி ஆளாளுக்கு பாராட்டும் அளவுக்கு இந்த அரசு அப்படி என்ன செய்துவிட்டது என்று பார்த்தால், உண்மையிலேயே எதுவும் செய்யவில்லை. கடந்த கால புயல்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்களாம். கத்துக்கிட்டு? மக்கள் எல்லோரையும் அழைத்துச் சென்று நிவாரண மையங்களில் அடைத்து வைத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. மக்களை பிடித்து மண்டபத்தில் அடைத்து வைப்பதைத்தான் இவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சாலைகளில் வீழ்ந்து கிடக்கும் மரங்கள்

நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, தலைஞாயிறு, வேதாரண்யம், கோடியக்கரை, வாய்மேடு, முத்துப்பேட்டை, தம்பிக்கோட்டை, மதுக்கூர், பாப்பாநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், மசூதிப்பட்டினம்… என கீழத் தஞ்சையின் அடிப்பகுதி முழுக்க சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தின் கணிசமான பகுதிகள் இருந்த இடம் தெரியாமல் சிதைக்கப் பட்டிருக்கிறது. ஒரு மரம் மட்டை மிச்சமில்லை. எங்கு திரும்பினாலும் பெரிய, பெரிய மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. எந்த சாலையிலும் செல்ல முடியவில்லை. ஒரு ஊரையும் இன்னொரு ஊரையும் இணைக்கும் அனைத்து சாலைகளிலும் மரங்கள், மரங்கள், மரங்கள். உடைந்து தொங்கியபடி, வேறோடு பிடுங்கப்பட்டு… விதம்விதமாக வீழ்ந்து கிடக்கின்றன. மக்கள் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர முடியவில்லை.

பெரும்பாலான வீடுகள் உடைந்து தொங்குகின்றன. சமைக்க எந்தப் பொருளும் இல்லை. அடுப்பு பற்ற வைக்க விறகு இல்லை. குடிக்க நீரில்லை. நோய்க்கு மருந்தில்லை. அனைத்து பெட்ரோல் பங்குகளும் உடைந்து கிடக்கின்றன. பெட்ரோல் இல்லை என்பதால் வண்டிகளை இயக்க முடியவில்லை. மரங்களை வெட்டுவதற்கு உரிய கருவிகள் ஒற்றைப் படை எண்ணிக்கையில்தான் இருக்கின்றன. அவற்றை இயக்கவும் மின்வசதி இல்லை. ஜெனரேட்டர் வசதியுடன் இயக்கலாம் என்றால், அதற்கு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு.

மின்வசதி இல்லை என்பதால் குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு. செல்போன் சார்ஜ் செய்ய இயலாததாலும், ஏராளமான செல்போன் கோபுரங்கள் உடைந்து வீழ்ந்து விட்டதாலும் தொலைதொடர்பு துண்டிக்கப் பட்டிருக்கிறது. இறந்து கிடக்கும் கால்நடைகளை அப்புறப்படுத்த முடியவில்லை. ஆயிரக்கணக்கான வீடுகள், பல நூறு கடைகள் உடைந்து நொறுங்கிக் கிடக்கின்றன. ஒரு கோழிப் பண்ணையில் வளர்க்கப்பட்ட மொத்த கோழிகளும் செத்துவிட்டன. பல லட்சம் செலவு செய்து அமைக்கப்படும் பாலிஹவுஸ் என்ற நவீன வேளாண்மைக்கான கூரைகள் உடைந்து தொங்குகின்றன. எல்லா புயல்களிலும், எப்போதும் துயரத்தை சுமக்கும் மீனவர்கள், கஜா புயலிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வலைகள், படகுகளுக்கு கடும் சேதம். எந்தப் பக்கம் திரும்பினாலும் மின் கம்பங்கள் சரிந்து கிடக்கின்றன. மேலே சொன்ன அனைத்துப் பகுதிகளிலுமே மின் கம்பங்களும், அவற்றின் ஒயர்களும் அறுந்து கிடக்கின்றன. மறுபடியும் மின் இணைப்பு தருவதற்கு மாதக் கணக்கில் ஆகும்.

பிய்த்தெறியப்பட்ட ஓடுகள் – கூரைகள்

ஒரு புயல் ஏற்பட்டால் என்னென்ன துன்பங்கள் ஏற்படுமோ, அனைத்தையும் அதிக விழுக்காட்டில் மக்கள் சந்தித்து வருகின்றனர். ஆனால், அரசுத் தரப்பிலோ, எக்கச்சக்கமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவிட்டதாக பெருமை பட்டுக்கொள்கிறார்கள். குடிநீர், உணவு, பால், குழந்தைகளுக்கான மருந்துப் பொருட்கள்… இவற்றை உரிய எண்ணிக்கையிலும், அனைத்துப் பகுதிகளுக்கும் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடு செய்வதுதானே முன்னெச்சரிக்கை நடவடிக்கை? அதை ஒரு இடத்தில் கூட இவர்கள் செய்யவில்லை. புதுக்கோட்டை பகுதியில் ஒரு தண்ணீர் கேன் 200 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

படிக்க
ஒக்கி புயல் : இயற்கையின் பெயரால் இனப்படுகொலை
♦ செம்பரம்பாக்கம் ஏரி வெள்ளம் – பாசிச ஜெயா அரசின் குற்றம் !

புயல் என்றால் காற்று வீசி மரங்கள் விழும். அவற்றை உடனே வெட்டி அப்புறப்படுத்த நவீன கட்டிங் இயந்திரங்கள் தேவை. இது புயலுக்கு செய்ய வேண்டிய அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கை. ‘முந்தைய புயலில் இருந்து நாங்கள் பாடம் படித்தோம்’ என்று சொல்வது உண்மையானால், ’தானே’ ‘வர்தா’ புயலில் இருந்து, கட்டிங் இயந்திரங்களின் அவசியத்தை கற்றிருக்க வேண்டும். மக்களை பிடித்து மண்டபத்தில் அடைத்துவிட்டு, வானிலை ஆய்வு மைய அறிக்கையை ஊடகங்களிடம் படித்துக் காட்டுவதற்கு அமைச்சர் எதற்கு? ’நாங்கள் மட்டும் வழக்கம் போல் இருந்திருந்தால் பொருட்சேதத்துடன் சேர்த்து அதிக உயிர்ச்சேதமும் அல்லவா ஏற்பட்டிருக்கும்? அப்படி விடாமல் இந்தமுறை மண்டபத்தில் அடைத்து வைத்து பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கிறோம்’ என்பது அவர்களின் உள்மன எண்ணம். ’நீங்கள் உயிர் பிழைத்திருப்பது நாங்கள் போட்ட பிச்சை’ என்பது அதன் மறுபொருள்.

கொடுத்ததற்கும் மேலாக கூவும் ஊடகங்கள்

சாதாரண நாளிலேயே எடப்பாடி அரசுக்கு ஜால்ரா அடிப்பதில் தமிழ் தொலைக்காட்சி ஊடகங்களிடையே கடும் போட்டி நிலவும். ஸ்டாலின் முதல் தமிழிசை வரை எல்லோரும் பாராட்டி வேறு விட்டார்கள்… கேட்கவா வேண்டும்? இவர்கள் தங்கள் பங்குக்கு ஜால்ரா சத்தத்தை காது ஜவ்வு கிழியும் அளவுக்கு அடித்து கிளப்புகிறார்கள். நியூஸ் 7, புதிய தலைமுறை, தந்தி… என எந்த டி.வி.யும் தப்பவில்லை. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் இந்த எடப்பாடி அரசின் போலீஸ் மக்களை சுட்டு வீழ்த்தியபோது, கேமராவை வேறுபக்கம் திருப்பிக்கொண்ட இவர்கள், எட்டுவழிச் சாலை விவகாரத்தில் மக்கள் போராட்டங்களை போலீஸ் படை கொண்டு அடக்கி ஒடுக்கியபோது கேமராவை வேறுபக்கம் திருப்பிக் கொண்ட இவர்கள்… ’கஜா புயலில் தமிழக அரசின் புயல்வேக நடவடிக்கைகளை பாரீர்’ என்று இடைவிடாமல் நேரலை செய்கிறார்கள். அமைச்சர்கள் எந்தப் பக்கம் போனாலும் பின்னாலேயே செல்கின்றனர். எடப்பாடியை போற்றி புகழ்ந்து விவாத நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

‘ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் விழுந்து கிடப்பதால்தான் அரசின் உதவிகள் மக்களுக்கு சென்று சேர்வதில் தாமதம் ஏற்படுகிறது’ என்று மீண்டும், மீண்டும் ஒளிபரப்புகின்றனர். மரங்கள் இல்லை என்றால் தமிழக அரசு இன்னும் வேகத்துடன் செயல்பட்டிருக்கும் என்பது இதன் பொருள். ஆனால் மக்களோ, இந்த ஆபாசமான பாராட்டுரைகளை கண்டு கொந்தளிக்கின்றனர். 32-க்கும் அதிகான உயிரிழப்பு; 80 ஆயிரத்துக்கும் அதிகமானோர் முகாம்களில் வசிக்கும் நிலைமை. ஒரு சோத்துப் பொட்டலம் கூட கிடைக்கவில்லை என்ற உண்மையை நேருக்கு நேர் பார்க்கும் அவர்கள், ஊரே சேர்ந்து தமிழக அரசை பாராட்டுவதைப் பார்த்து ஆத்திரம் கொள்கின்றனர்.

மவுலிவாக்கம் கட்டிட விபத்து

மக்கள் துயரத்தில் வாடிக் கொண்டிருக்கும்போது தங்களைத் தாங்களே பாராட்டிக் கொள்ளும் இந்த ஆபாசமான பண்பு இவர்களின் தலைவியான ஜெயலலிதாவுக்கு உரியது. 61 உயிர்களை பலிகொண்ட சென்னை, மவுலிவாக்கம் கட்டட விபத்தின்போது, அந்த துயரத்தின் கண்ணீர் காயும் முன்பே அந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு பாராட்டுவிழா நடத்திய பெருமாட்டி அவர். அவர் வழி வந்தவர்கள், இழவு வீட்டில் மரியாதை தேடிக்கொள்ள துடிக்கின்றனர்.

ஒக்கி புயலை இதே எடப்பாடி அரசு எத்தனை கேவலமாக கையாண்டது என்று நமக்குத் தெரியும். இன்னும் சில தினங்களில் ஒக்கி புயல் அடித்து ஓராண்டு வரப்போகிறது. இப்போது வரை அந்த தென்முனை மீனவர்களின் துயரங்களுக்கு மருந்தில்லை. மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து மீனவர்களை திட்டமிட்டு கைவிட்டன. அவர்கள் இந்திய பெருங்கடலில் அவலத்திலும், அவலமாக செத்து மிதந்த கோரத்தை இன்னும் எத்தனை ஆண்டுகளாயினும் மறக்க இயலாது. அப்போது ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் கூத்தடித்துக் கொண்டிருந்த இந்த கொள்ளைக் கூட்ட கிரிமினல்கள் இப்போது கஜா புயலில் ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள்.

மக்களிடம் அனைத்து வகைகளிலும் நம்பிக்கையை இழந்துவிட்ட இந்த எடப்பாடி அரசே தமிழ்நாட்டுக்கு ஒரு இயற்கை பேரிடர்தான்.

– வழுதி