Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 202

Grownup history of RSS in Karnataka !

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire ! – Part 2
Part – 1
Brahminising folk deities
The RSS adopted the strategy of brahminising folk deities to bring non-Brahmins into the ‘Hindu’ fold. In Tamil Nadu, the RSS converted the village guardian deity Muniyappan into Muneeswaran; Mariamman, the goddess of rain, into a form of goddess Shakti; Kurinji thinai (hill area) god Murugan into Shanmukha and brahminised them. Likewise, it brahminised Karnataka’s folk deities.
In Karnataka, the history of the folk deities is narrated as oral stories during the annual festival. During this festival, chickens and animals were usually sacrificed. Women sing about the history of the folk deities not only during the festival, but also while working in the fields.
In the 1920s, due to changes in Karnataka’s feudal structure and the migration of large number of people to cities in search of work and the Land Reform Laws of 1974, large farms gradually disappeared and more small landowners emerged. Because of their poor economic conditions, after the 1970s, agriculture deteriorated and the folk deity worship also gradually began to decline. The Brahmin coterie made use of this period.
Read :
♦ Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
♦ R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
The places where deity worship (Daiva Aradhanay) took place were later termed as shelters of gods (Daiva Sana) and temples were built. And the Brahmins became priests of these temples. The Karnataka folk deity Bhootnaath Shiva was converted into an incarnation of Vishnu. The worship which took place annually was changed into worship on a daily basis. The sacrifice of animals and birds in the temple was prohibited.
In Tamil Nadu, Nandan, who was a Dalit, tried to worship Lord Shiva. He was set ablaze by the Chidambaram Dikshitar Brahmin bloc and was turned into “Nandanar”. Similarly, a tribal named Koraga Thaniya, who was murdered by the Brahmins for entering the temple, was worshipped by the tribes. Today, the RSS brahminised him into Koragajja, an incarnation of Lord Shiva.
The brahmin coterie also did not spare Babbarya, the deity of the Mogaveera fishermen. The fishermen used to worship Babbarya before entering into the sea. Babbarya was converted into a reincarnation of Babbruvahana, the son of Pandava Prince Arjuna and was brahminised.  The RSS did this by cooking up a story with a good screenplay that Babbarya was born to Arjuna and Queen Pramila of Kerala.
Even though the folk deities are brahminized, they are not treated according to the vedic or brahminical rituals like the Brahmin gods. Instead they are treated with untouchability.
Fascist soldiers in the name of Vigilante ‘Cow Protection’ Groups
In 1952, immediately after the formation of Bharatiya Jana Sangh (BJS),  the RSS picked up gauraksha (cow protection) as one of its primary action points. In 1952, in Udupi, a national call was given to observe October 26 as Anti-Cow Slaughter Day. A National Cow Weekly was organised by the RSS in the months of October and November. During a press conference, Sangh parivar organisations like Durga Vahini, Bajrang Dal and Vishva Hindu Parishad called for the formation of a ‘cow protection force’ in every village. At the same time, vigilante cow protection groups were formed in Dakshina Kannada (South Karnataka).
Anti-Muslim campaign was systematically propagated in the name of ‘cow protection’. “Since the Vedic period, one man has killed another; but never a cow. We can kill anyone; even our brother. But we should never kill a cow”. This is being preached as an anti-Muslim propaganda.
After this, mob attacks on Muslims began as planned by the RSS, similar to what’s happening in UP. In 2005, two Muslims, Hajjaba and Hassanabba were accused of smuggling cows and were publicly brutalised and murdered in Udupi district. But Udupi saw its first political mobilisation for gaurakshaks in 1952 itself.
In every meeting of the RSS, vicious campaigns were launched against Muslims, calling them ‘foreigners’, ‘consumers of beef which Indians are not used to’. Even before the establishment of the RSS, there have been anti-Muslim campaigns in Karnataka. In 1933, the Hindu Mahasabha organised its first mass meeting and the chief guest was RG Bhide. He expressed that “Muslims are anti-nationals; supporting the Khilafat movement is an anti-national activity” and a case had been registered against him for his hate speech. After the formation of the RSS, he became the chief editor of Kesari. The depiction of muslims as anti-nationals, which started in 1933, continues till date.
Ganesh Chaturthi and riot yatras
After brahminising the folk deities and nationalising the brahminical culture of Ganesh Chaturthi, the RSS created influence among the non-brahmins. Tilak took up Ganesha worship to hinduize ‘Hindus’ in Maharashtra. Golwalkar instigated the RSS cadres to take up Ganesha worship in Karnataka and thereby paving way to hold riot processions.
Till the 1960s, there was no Ganesha worship in Karnataka. It was only in the 1960s that Ganesh Chaturthi became popular among the people of Karnataka. Before this, there were Ganesha idols only in two places: one at the Kasturba Medical College established by Dr. Tonse Madhava Anantha Pai and other at the RSS’s Head Office Shanthi Nikethan. In the beginning, only Gaud Saraswat Brahmins worshipped Lord Ganesha. Other ‘Hindu’ Shudras did not participate in this. But the RSS attracted people from all walks of life in Karnataka to the Ganesh Chaturthi festival on the 25th anniversary of the festival.
‘Ram Janmabhoomi’ which stirred up religious fanaticism in Karnataka
After the Ganesh Chaturthi, it is the Ram Janmabhoomi movement that assisted the RSS in creation of a vast popular base. It is no exaggeration to say that Advani’s Rath Yatra, started in 1990, and the Ram Janmabhoomi movement had made Lord Rama the hero of ‘Hindu India’. Sri Ram Janmabhoomi Mukti Yagna Samiti was formed in Karnataka to establish roots to the Ram Janmabhoomi among the people. Through this organization, the RSS actively worked among the people in full swing until the demolition of Babri Masjid in 1992.
As happened across India, the RSS launched the ‘Kar Seva’ movement in Karnataka also. It asked the people to donate brick for the construction of a temple for Lord Rama at the Babri Masjid site. The brick was received only after performing the pujas in front of each house. This process of conducting pujas and receiving brick was a psychological measure to win over the people to the hindutva ideology.
The Ramayana and Mahabharata were broadcasted on television at the same time when the Ram Janmabhoomi movement was started. Through this, Lord Rama was introduced as a divine incarnation and a Hindu hero to people who did not even know who Rama was. The RSS was only confined to Mangaluru, located along the south coast of Karnataka. After the Ram Janmabhoomi movement, it started spreading in Bengaluru as well.
The poisonous campaign of  ‘Love Jihad’
Another poisonous campaign called ‘Love Jihad’, was  launched by the RSS to create anti-Muslim sentiment among the Hindus. It was only from 2005 that the term love jihad was widely introduced in Karnataka. In each meeting, the sanghis went berserk by preaching that the Muslim men were attracting hindu girl (through love jihad) and proselytizing.
BJP’s election victory in the 2008 Assembly elections added fuel to the fire. ‘Love jihad’ became a sensational issue in Karnataka. Between 2009 and 2012, the saffron thugs tore off the clothes of women in pubs in the name of ‘love jihad’. In 2009, a Habeas Corpus petition was filed in the Karnataka High Court, after a Hindu girl married a Muslim youth. The peak of the atrocity was that CB-CID inquiry was conducted for this ‘love jihad’ issue.
Read :
♦ Kashmir: Saffronisation obliterating constitutional freedom
♦ War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !
In 1998, there was a riot in Surathkal because a Muslim youth fell in love with a Hindu girl. Similarly, a Hindu girl named Anita married a Muslim youth. And the couple were killed in a car accident orchestrated by Mohan of the Sangh parivar gang.
Until the RSS set foot in Karnataka, Muslims and people of other religions had a cordial relationship. Karnataka has a delicious history of celebrating the friendship between the butchering Kadhar and the fishing Mogaveera community as a love story. After the RSS set foot in Karnataka, the historical friendship was split into two folds in the name of religion. RSS’s plan to portray Muslims as strangers gradually succeeded.
The Surathkal riots in 1968 was the first Hindu-Muslim riot in Karnataka after the 1947 ‘Regime change’ (i.e., – socalled Independence). It was followed by riots among fishermen at Mangaluru fishing port. Anti-Muslim mentality and the entry of Gaud Saraswat Brahmins into fishing was the basis of the riots. Six Muslims and two Hindus were killed. The oppressed Mogaveera people acted as stooges of the Brahmins in this riot.
After the demolition of the Babri Masjid in 1992, riots became a fashion in Karnataka. The 2006 anti-Muslim riots and the 2008 anti-Christian riots were planned and executed by the RSS thugs. Each and every communal riot in Karnataka shows us that the fascists have succeeded in saffronising the people of Karnataka. Thus, Karnataka has become the first breeding ground for ‘Hindurashtra’ in South India.
(to be continued)

Appu

இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 3
பாகம் 2
குஜராத் படுகொலையின் நாயகனான மோடி, உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் ரவுடி சாமியார் யோகி ஆகியோர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள முயன்று வருகிறார் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.
கடந்த அக்டோபர் மாதம் ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது’ என்ற பெயரில் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது அசாம் அரசு. வீடுகளை இடிப்பதற்கு முதல்நாள் இரவுதான் அப்பகுதி மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. மாற்று ஏற்பாடுகளை செய்து தராததோடு, காலி செய்வதற்கான அவகாசமும் அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இதைக் கேட்ட ‘குற்றத்திற்காக’ ஒரு அப்பாவி முஸ்லீம், போலீசு மிருகங்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறந்து கிடந்தவரின் மார்பின் மீது உடன் வந்த புகைப்படக்காரன் வன்மத்தோடு ஏறி குதிக்கின்ற காட்சி சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு நாடே அதிர்ச்சியடைந்தது. நெஞ்சைப் பதைபதைக்கவைத்த இச்சம்பவத்திலிருந்து முஸ்லீம் மக்களின் மீதான ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் வன்மத்தை புரிந்துகொள்ள முடியும்.
2021-ம் ஆண்டு மே மாதம் சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து டிசம்பர் மாதம் வரை அம்மாநிலத்தில் 31 போலி மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. “இந்த போலி மோதல் கொலைகள் காட்டுமிராண்டித்தனமானவை” என்று தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது. அம்மாநில போலீசின் கணக்கின்படி போலி மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 55 ஆகும். ஆனால், போலீசின் யோக்கியதை நமக்குத் தெரியும். எனவே உண்மை விவரம் இதைவிட மோசமாக இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
படிக்க :
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
♦ அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
இந்த போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களாவர். “அசாமை போதைப் பொருள் வியாபாரம், கால்நடைக் கடத்தல் போன்ற குற்றங்களை ஒழித்த மாநிலங்களாக்கும் வரை இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் அதிகரிக்கவே செய்யும்” என்று பாசிஸ்டுகளுக்கே உரிய திமிருடன் பதிலளித்துள்ள முதல்வர் சர்மா, முஸ்லீம்களையும் பழங்குடிகளையும் போதைப் பொருள் மற்றும் கால்நடை கடத்தல்களில் ஈடுபடுபவர்களாக சித்தரிக்கிறார்.
மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021 என்ற சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது பிஸ்வா சர்மா அரசு. இந்துக்கள், ஜெயின், சீக்கியர்கள் என ‘மாட்டுக்கறி உண்ணாதவர்கள்’ வாழும் பகுதிகள் மற்றும் இந்துக் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதிக்குள் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கு இச்சட்டம் தடைவிதிக்கிறது. இச்சட்டத்தின்படி, முறையான ஆவணங்கள் இல்லாமல் கால்நடைகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்வது கடத்தல் குற்றமாகும்.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் காவி கும்பல் முஸ்லீம்களை குறிவைத்து கலவரங்களையும் வெறியாட்டங்களையும் சட்ட உத்தரவாதத்துடன் நடத்துவதற்கான ஏற்பாடே இச்சட்டத்தின் நோக்கம்.
இவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றம், போதைப்பொருட்கள் கடத்தல், பசு கடத்தல் என்ற பெயர்களில் காவி கும்பல்களாலும் ஹிமாந்த பிஸ்வா சர்மா அரசாலும் அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எதுவும் இந்தியாவின் இதர மக்களை உலுக்குவதைப் போல அசாம் மக்களை உலுக்குவதில்லை. மாறாக அசாமியர்களிடையே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கான செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
பொதுவாக அசாமியர்களிடையே உள்ள “வங்கதேச குடியேறிகள்-அந்நியர்கள்” என்ற இன அடிப்படையிலான வெறுப்பும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கியிருக்கும் “முஸ்லீம்” என்ற மத அடிப்படையிலான வெறுப்பும் இணைந்து அசாமை முஸ்லீம்களை நான்காந்தர குடிமக்களாக நடத்தும் இந்து ராஷ்டிரமாக மாற்றியிருக்கிறது. இந்தநிலையை உருவாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். பல்லாண்டுகாலம் அசாமியர்களிடையே வேலைசெய்திருக்கிறது.
அசாமில் ஆர்.எஸ்.எஸ்-இன் பன்முக வடிவங்கள்
அசாமில் காவிமயமாக்கல் நடவடிக்கையானது, 1944-ஆம் ஆண்டு ராம் சிங் தாக்கூர் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அசாமிற்கு வந்ததிலிருந்து தொடங்குகிறது. அசாமிற்கு வந்த தொடக்க காலத்தில் பீகார் மற்றும் மராத்தி மாநிலங்களிலிருந்து சென்ற மார்வாடிகள்தான் ஆர்.எஸ்.எஸ்-க்கு புரவலர்களாக இருந்தனர்.
பழங்குடி இனமக்களை இந்துத்துவமயமாக்க, அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் திணிக்கும் சங்கபரிவாரக் கும்பல்.
1948-ம் ஆண்டு கவுகாத்தியில் தனது முதல் ஷாகாவைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அசாமில் 903 ஷாகாக்கள் இருக்கின்றன. இதைத் தவிர வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், பால்வாடிகள், விவேகானந்தா பள்ளிகள், படிப்பு வட்டங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சரி பள்ளிகள் என அசாமில் புற்றீசல்கள் போல பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
இவற்றுள் உள்ளூர் பழங்குடி மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்காக “வனவாசி கல்யாண் ஆசிரமம்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பழங்குடியின மக்களை இந்துத்துவமயமாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காக பழங்குடியின மக்களுக்கு ‘உதவி செய்வது’ என்ற பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை 3,200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் இவற்றின் மூலம் கிடைத்த ஐக்கியத்தைப் பயன்படுத்தி, படிப்படியாக வழிபாட்டிலும் பண்பாட்டளவிலும் பழங்குடி மக்களை ‘இந்துக்களாக’ மாற்றியது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை உற்பத்தி செய்த ஓராசிரியர் பள்ளிகள்
வடகிழக்கு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது காவிமய நடவடிக்கைகளை சுலபமாகச் செய்வதற்கு வழிசெய்துகொடுப்பது ஓராசிரியர் பள்ளிகள்தான். வழக்கமான பள்ளி  நேரம் முடிந்த பின்பு 3 மணி நேரம் இந்த ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன. இவை கிராமத்தினருக்கும் சங்கப் பரிவாரத்திற்கும் இடையேயான தொடர்புப் பாலமாக செயல்படுகின்றன. 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான் இதன் அடிப்படை. இங்கு ஆசிரியர் என்பவர் “குரு” அல்லது “ஆச்சார்யா” என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆசிரியர்கள் பட்டதாரி இளைஞர்களாவர்.
இப்பள்ளிகளில் 6 முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கு “ஐந்துவித கல்வி” கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆரம்பக் கல்வி; சுகாதாரக் கல்வி; கிராம வளர்ச்சி; விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது இளம் பிஞ்சுகளிடத்தில் இந்துத்துவ நஞ்சூட்டுவதற்கான ஒரு வடிவமாக இருக்கிறது.
விளக்கு ஏற்றி இந்து தெய்வங்களைப் புகழ்ந்து பாடும் சமஸ்கிருத பாடல்களை பாடிய பிறகே, வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இரண்டு மணிநேர வகுப்புக்குப் பிறகு ஒரு மணி நேரம் யோகா சொல்லித் தரப்படுகிறது. இப்பள்ளிகளில், பழங்குடியின மொழிகள் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழியிலேயே பாடங்கள் நடைபெறுக்கின்றன. மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதைத் தாண்டி வாரத்தின் இரண்டு நாட்கள் கிராமத்திலுள்ள பொது இடங்களில் பஜனை நடத்துவது, விநாயகர் வழிபாடு செய்வது மற்றும் அனுமன் பாடல்களை பாடுவது போன்ற வேலைகளும் இப்பள்ளிகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அசாமில் வேலை செய்யத் தொடங்கி 22 ஆண்டுகளில் 4,650 ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அசாமில் உள்ள 4,650 ஓராசியர் பள்ளிகளில் 70 சதவிகிதம் தேயிலை தொழிலாளர்கள், பழங்குடிகள் அதிகமுள்ள வட அசாமில் உள்ளன. வட அசாமும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளும் அசாமில் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு  அடிப்படையாக இருப்பதற்கான காரணத்தை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
அசாமின் வரலாற்றைத் திரித்து புரட்டிய காவிகள்
காஷ்மீர் மட்டுமல்லாமல் திரிபுரா, அசாம் உட்பட 7 வடகிழக்கு மாநிலங்களும் இராணுவத்தின் துப்பாக்கி முனையால்தான் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூலம்தான் இன்றளவும் ‘தேசிய ஒற்றுமை’ நிலைநாட்டப்படுகிறது. இம்மாநில மக்கள் இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து தனிநாடு கோரிக்கையின் கீழ் பல ஆண்டுகளாக போராடிய பாரம்பரியமிக்கவர்கள். எனவே அசாமியர்களை இந்து தேசியத்திற்குள் கொண்டுவர வேண்டுமென்றால் முதலில் அவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் கலக்க வைப்பது முன்நிபந்தனையாக இருந்தது.
அசாமியர்களிடையே ‘இந்திய தேசிய’ உணர்வூட்டுவதற்கும் அதன்வழியாக இந்து ராஷ்டிர இலட்சியத்தை ஏற்றுக் கொள்ள வைக்கவும் ஆர்.எஸ்.எஸ்-க்கு உதவியது “வித்யா பாரதி” என்ற அதன் சொந்த கல்வி நிறுவனமாகும்.
1944-ஆம் ஆண்டில் வெறும் 182 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது 115 நடுநிலைப் பள்ளிகளையும் 121 தொடக்க மற்றும் 341 இடைநிலைப் பள்ளிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றில் 1.4 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். பழங்குடி மக்களின் வரலாற்றிற்கும் பண்பாட்டிற்கும் சற்றும் தொடர்பில்லாத இராமாயணமும் மாகாபாரதமும் மாணவர்களுக்கு வகுப்புகளாக எடுப்படுகின்றன. மாணவர்களிடம் இந்திய தேசிய உணர்வை ஊட்டுவதற்காக “தாய்நாட்டில் படிப்பது” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை இந்தியாவின் பிற பகுதிகளில் படிக்க வைக்கிறது வித்யா பாரதி. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற தனது மாணவர் அமைப்பின் மூலம் இம்மாணவர்கள் மத்தியில் வேலைசெய்கிறது ஆர்.எஸ்.எஸ்.
000
அசாமை இந்து தேசியத்திற்குள் கொண்டுவர அசாமின் பண்டைய வரலாற்றை   தங்களுக்கு ஏற்ப திரித்துள்ளது இந்த காவி கும்பல். அசாமை ஆண்ட தனவா வம்சத்தை சேர்ந்த மகிரங்க தனவாவைத் தோற்கடித்து நரகாவின் பகுமா வம்சம் ஆட்சிக்கு வந்தது. நரகாவிற்கு பிறகு அவரது மகன் பகதத்தா ஆட்சிக்கு வந்தான் என்றும் கௌரவர்களுக்காக குருஷேத்திரப் போரில் கலந்து கொண்டான் என்றும் கலிகா புராணத்தில் கூறியுள்ளதாக அசாமின் வரலாற்றைத் திரித்தார்கள் காவி பாசிஸ்டுகள்.
அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் வேருன்றுவதற்கு அடிப்படையாக இருந்த ஓராசிரியர் பள்ளிகள்.
இந்த ‘நரகா’ என்பவன் மகாபாரதத்தில் வருகிற நரகாசுரன் என்ற கதாபாத்திரமாக சொல்லப்படுகிறது. அசாமின் வரலாற்றை இராமாயண மற்றும் மகாபாரதக் குப்பைகளுடன் கலந்து திரிப்பதன் மூலம் அசாம் இந்து-இந்திய தேசத்தின் ஒரு பகுதியே என்ற கருத்தை ஆழமாக பதியவைத்தார்கள்.
மேலும் அசாமியர்களின் உள்ளூர் திருவிழாக்களான துர்கா பூஜை மற்றும் பிகு ஆகியவற்றின்போது, பந்தல் அமைத்து பாரதமாதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
முஸ்லீம்கள் ‘சட்ட விரோத’ குடியேறிகள்
அசாமின் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிப்பவர்கள் வங்கதேச இந்துக்களும், முஸ்லீம்களுமாவர். இவர்கள் பெரும்பாலும் வங்கப் பிரிவினையின்போது அசாமில் குடியேறியவர்களாவர். 1979 மக்களவைத் தேர்தலில், அசாமில் வங்க தேசத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக அனைத்து அசாம் மாணவர் சங்கம் மற்றும் அசாம் கண பரிஷத் ஆகிய அமைப்புகள் “சட்ட விரோத குடியேறிகளை அசாமிலிருந்து வெளியேற்ற வேண்டும்” என்று போராட்டத்தைத் தொடங்கின. இது “அசாம் இயக்கம்” என்று அழைக்கப்படுகிறது.
1985-ஆம் ஆண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, இத்தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் நடந்த காலத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வங்க தேசத்தவர்களை ‘அந்நியர்கள்’ என்ற வெறுப்புடன் அணுகிவந்த அசாம் பூர்வகுடி மக்களின் வரலாற்றுரீதியான உணர்வை தன்னுடைய இந்து ராஷ்டிர நோக்கத்திற்கேற்ப வளைத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகள் ‘அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்ற’ அம்மக்களின் கோரிக்கையை இந்துக்கள் நம்மவர்கள், முஸ்லீம்கள் மட்டுமே இந்த தேசத்திற்கு தொடர்பில்லாத அந்நியர்கள்; ஆகவே அவர்களை மட்டும் வெளியேற்ற வேண்டும் என அசாம் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்.
படிக்க :
♦ அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
♦ அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
தனது முப்பதாண்டு கால பிரச்சாரத்தின் மூலம் முஸ்லீம்கள் மட்டுமே வெளியேற்றப்பட வேண்டிய அந்நிய சக்திகள் என்று சித்தரிப்பதில் வெற்றியடைந்து கொண்டு வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல். 2019-ஆம் ஆண்டில் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் வங்க தேசத்திலிருந்து வந்து அசாம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் குடியேறிய இந்துக்களுக்கு, அந்நாட்டில் அவர்கள் ‘மதச் சிறுபான்மையினர்’ என்ற அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குகிறது. தனது இந்து ராஷ்டிர நோக்கத்திற்கு அசாமில் மக்கள் அடித்தளத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், தேர்தலில் பாராக் பகுதியில் பெரும்பான்மையாகவுள்ள வங்க இந்துக்களின் ஓட்டைப் பெறுவதும் இதன் நோக்கமாகும்.
ஆனால், அசாம் இயக்கத்தின் மூலம் பூர்வகுடி மக்கள் போராடி கொண்டுவந்த அசாம் ஒப்பந்தமோ 1971 மார்ச் 24-க்குப் பிறகு, அசாமில் குடியேறிய வெளிநாட்டவர்கள் அனைவரையும் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துதான் அசாமில் பா.ஜ.க. ஆட்சியை வென்றது.
எனவே வங்க இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து 2019-ஆம் ஆண்டு, அசாமில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. வங்க இந்துக்களுக்கு குடியுரிமை அளிப்பதைப் பற்றி, “இந்தியா ‘இந்துக்களின் தேசம்’ என்பதால் இந்துக்களை பாதுகாப்பது நமது தார்மீகக் கடமை” என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அசாம் மாநிலத்தின் சுமையை – அதிக அளவிலுள்ள வங்கதேச குடியேறிகள் – இந்தியா முழுவதும் பகிர்ந்தளிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று பிரச்சாரம் செய்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகும் 2021-ஆம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, சில முரண்பாடுகள் இருந்தபோதும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.தான் தங்களுக்கான கட்சி என அசாம் மக்கள் ஏற்றுக் கொண்டுவருவதையே காட்டுகிறது. தனது நூற்றுக்கணக்கான அமைப்புகளின் மூலம் பல ஆண்டுகாலம் அசாம் மக்களிடையே வேலை செய்து உருவாக்கிய செல்வாக்கின் விளைவாலேயே ஆர்.எஸ்.எஸ்-ஆல் இந்த தேர்தல் வெற்றியை சாதிக்க முடிந்தது.
(தொடரும்)

பாகம் 4


அப்பு

பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாடல்கள் மற்றும் கருத்துக்களை கூறி வருகிறார் இளையராஜா.
அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர தாமோதரதாஸ் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.
பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின், அதை செயல்படுத்தி வரும் மோடி அரசின் பக்கவாத்தியமாக மாறிவரும் இளையராஜா. அதை விமர்சிக்கும் விதமாக இந்த கருத்துப்படங்களை வெளியிடுகிறோம்.
***
கருத்துப்படங்கள் : வேலன்

ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்: இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!

22, ஏப்ரல் 2022
பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்:
இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!
பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் அவர்களது 152-வது பிறந்த நாளை உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்திய தொழிலாளி வர்க்கமும் ஆசானை நினைவுகூர்கிறது.
ஆசான் லெனினது பாதையில் இந்திய தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி வழிநடத்தும் நோக்கத்தில் 1998-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’’ பு.ஜ.தொ.மு தனது துவக்கத்தில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலாளர்களை அமைப்பாக்கும் நோக்கத்தில் தொழிற்சங்க சட்டப்படி பதிவு செய்யப்பட்டு (பதிவு எண் 43/TVR) அம்பத்தூரை ஓட்டிய பாடி பகுதியில் அலுவலகம் அமைத்து இயங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு ஆலைகளில் சங்கங்களைக் கட்டியது. தொடர்ச்சியாக, தமிழகத்தின் கோவை, ஓசூர், திருச்சி பகுதிகளுக்கு விரிவடைந்த நிலையில் 2014-ல் புதிய மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில செயற்குழுவை கட்டியது. கொள்கை அறிக்கை மற்றும் அமைப்பு விதிகளை உருவாக்கி மா-லெ அரசியலை முன்னெடுத்தது. இதன் போக்கில் புதுச்சேரி மாநிலத்துக்கும் விரிவடைந்தது.

படிக்க :

♦ ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF

♦ பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி

20 ஆண்டுகளை கடந்த நிலையிலும் மாநில மாநாட்டை நடத்தி தலைமைக் குழுவை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்வதை இரண்டாம் பட்சமாகவே கருதிய நிலையில் புதிய ஜனநாயக அமைப்புகளில் சீர்குலைவுவாதமும், கலைப்புவாதமும் ஒரு பிளவுக்கு இட்டுச் சென்றது.
பு.ஜ.தொ.மு–வின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த திரு.சுப.தங்கராசு பாட்டாளி வர்க்க விரோத நடவடிக்கைகளுக்காக பு.ஜ.தொ.மு–வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் 20.12.2020 அன்று நடந்த மாநில செயற்குழுவால் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத் தவறியதற்காக ஒட்டுமொத்த நிர்வாகக்குழுவும் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 31,ஜனவரி 2022-க்குள் மாநில மாநாட்டை நடத்தி புதிய தலைமையை தேர்வு செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மேற்படி முடிவின் அடிப்படையில் மாநில மாநாட்டை நடத்துவது என்கிற பெயரில் கலைப்புவாதிகள் பல மாவட்டப் பகுதிகளை தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கி வைப்பதில் தீவிரமாக செயல்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகள் மற்றும் கோவையில் மட்டுமே இயங்கி வந்த சிறுபான்மை, புதுச்சேரி பகுதியுடன் இணைந்து ஏனைய மாவட்டப் பகுதிகளை ஒதுக்கி வைத்து தலைமையைக் கைப்பற்றும் திட்டத்தில் செயல்பட்டதால், பு.ஜ.தொ.மு-வுடன் துவக்க காலம் முதல் பொறுப்பேற்று இயங்கி வந்த முன்னணி தோழர்களும், மாவட்டக் குழுக்களும் இணைந்து, சீர்குலைவுவாதிகளிடமிருந்து பு.ஜ.தொ.மு–வை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 7 பேரைக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு ஒன்றினை 16.4.2021 அன்று அறிவித்தது. மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் இணையக் குரலாக “புதிய தொழிலாளி” என்கிற இந்த முகநூல் 22.4.2021 களமிறங்கியது.

கடந்த ஓராண்டில் உழைக்கும் மக்களது துயரங்கள், கார்ப்பரேட்டுகளது நவீன சுரண்டல் முறைகள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் நோக்கில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டுவதன் அவசியம், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பயணத்தை துவங்கியது. தினசரி 2 அல்லது 3 ஈ-சுவரொட்டிகள், அவ்வப்போது காணொளிகள், சிறு கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் புதிய தொழிலாளி முகநூல் தனது வர்க்கக் கடமையை நிறைவேற்றி வருகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்களை வென்றெடுத்துள்ளது.

காவி – கார்ப்பரேட் பாசிசம் முன்னேறி வருகின்ற சூழலில் உலக மேலாதிக்கத்துக்கான போட்டியில் ஏகாதிபத்திய நாடுகள் (குறிப்பாக, அமெரிக்கா) போர்முனைகளை உருவாக்கி வருவதும் பிரதான போக்காக மாறி வருகின்ற கட்டத்தை புதிய தொழிலாளி முன்னுணர்ந்து அம்பலப்படுத்துகிறது.
கடந்த ஓராண்டில் எமது அனைத்து நடவடிக்கைகளையும் ஊக்குவித்த தோழர்கள், நண்பர்கள் புதிய தொழிலாளி முகநூலை தங்களது நட்பு வட்டத்தில் அறிமுகம் செய்வது, பகிர்வது, விமர்சனங்கள், விவாதங்களை முன்வைப்பது, ஆலோசனைகள் தெரிவிப்பது, படைப்புகள் அனுப்புவது என தங்களால் இயன்ற அளவில் புதிய தொழிலாளி மேற்கொண்டு வரும் புரட்சிகர பணிக்கு உதவுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 8056386294.

சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!

23.04.2022
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ;
போலீஸ் மீது இடைநீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை நிறுத்து !
கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
பத்திரிகை செய்தி
சென்னை கெல்லீஸ் பகுதியில், கடந்த 18-ம் தேதி வாகனச் சோதனையின் போது காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, கட்டுமானத் தொழிலாளியான பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், காவல்துறையினரின் சித்திரவதை காரணமாக மரணமடைந்துள்ளார். இது காவல்துறை நடத்திய படுகொலையாகும்.
இந்த லாக்கப் கொலைக்கு எதிராக தொடர்ச்சியான பல்வேறு அமைப்புகளின் கடும் கண்டனங்களை அடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு இந்த வழக்கு மாற்றப்படுவதாகவும் கொலையில் தொடர்புடைய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
இளைஞரை லாக்கப்பில் சித்திரவதை செய்தது, மரணம் அடைந்த இளைஞரின் உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, உடலை அச்சுறுத்தி தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?
குற்றவாளிகளை வெளியில் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை என்ன எப்படிப்பட்ட விசாரணை நடத்தினாலும் நீதி கிடைக்கப்போவதில்லை.
ஒரே மாதிரியான குற்றத்திற்கு, பொதுமக்களுக்கு ஒரு தண்டனையும் போலீசுக்கு ஒரு தண்டனையும் வழங்கப்படுகின்ற இந்த முறைதான், போலீசு தொடர்ச்சியாக மக்கள் மீது நடத்துகின்ற அடக்குமுறைகளுக்கு அடிப்படையாக உள்ளது.
ஆகவே, இவ்வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்கு மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகியவை பதிவு செய்து உடனே சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire !

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire ! – Part 1
To turn minorities, including Christians, Muslims and the Dalits into fourth-class citizens, who should be oppressed, and turn them into refugees in their own country; to treat women according to Manu smriti, just as creatures created only to please men, and to treat as slaves of the Brahminical patriarchy; to project the democratic demands and needs of the working people, including farmers, workers and small traders as anti-nationals and to project the welfare of corporate capitalists like Ambani and Adani as national interests; to annihilate the revolutionary progressive democratic forces that voice for the interests of the working people; This is the ‘Hindurashtra’ that the RSS, the brahminical fascist organisation, tries to establish. This is what we call as Saffron – Corporate fascism!
In establishing such tyrannical hindurashtra, the RSS has been marching gradually and continuously. This is the threat that our country is facing today. We used to say that Uttar Pradesh and Gujarat are the laboratories of Hindurashtra and models of fascist tyranny. But it had become old news. Today, the Sangh parivar band has also turned Karnataka, Tripura and Assam into its new laboratories.
Recently passed anti-conversion bill in the Karnataka Legislative Assembly, places of Christian worship being regularly attacked by saffron thugs in the state; in Assam, the Himanta Biswa Sarma government demolished the settlements of poor Muslims in September in the name of clearing illegal occupation, rendering 800 families homeless and shot two people; in Tripura, the murderous attacks on Marxist party offices and cadres that were followed by attacks on Islamic places of worship and shops during a Vishwa Hindu Parishad rally and arson incidents can’t just be viewed as usual activities of the RSS or atrocities of the BJP. These are all obvious manifestations of saffron terrorism that has taken root in these states!
Like Gujarat and Uttar Pradesh, Karnataka, Tripura and Assam are also turning into laboratories of Hindurashtra.The meaning of this statement is that the majority of people in these states are coming under the influence of Brahminical-Hindutva ideology.
Read :
♦ Afghan people starving to death because of US hegemony !
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
How could the BJP win in a single election in Tripura, which has been CPM’s fortress for 25 years from 1993? The BJP, which did not even win a single seat in the 2013 assembly elections, won 43 seats in 2018 and assumed power. Their vote share increased from 1.5 percent in 2013 to 42.4 percent in 2018. Recently, in Tripura, the BJP won 217 seats out of 222 seats in the local body elections.
In Assam, in 2016, the BJP won the Assembly elections for the first time with a vote share of 29.5 percent, ending 15 years of Congress rule. In the 2016 Assam Assembly elections, the BJP formed alliance with the Asom Gana Parishad (AGP) and the Bodoland People’s Front and won 86 of the 123 seats. The BJP alone won 60 seats. The BJP was expected to lose in the 2021 assembly elections due to anti-CAA protests in Assam. But the BJP alliance won 75 seats and regained power. The BJP alone got 33.2 percent of the votes. When compared to 2016 elections, it may seem that the BJP alliance had lost 11 seats. But the increase in BJP’s vote share asserts the surge in BJP’s popularity among the people.
The only BJP ruled state in South India is Karnataka. Here, in the 2008 assembly elections, the BJP won 110 seats with 33.6 percent vote share and took power. In the 2018 assembly elections, the BJP’s tally had reduced to 104 seats, but its vote share increased to 36.2 percent.
The increase in vote share for the BJP in Karnataka, Assam and Tripura shows that the RSS-BJP’s foundation among people is widening in those states. This foundation was not created by winning elections. On the contrary, the election victory was the result of hindutva influence created by the Sangh Parivar by working for years among the people, according to the unique conditions of the political environment, history and culture of the people in each state. Opportunistic alliances, intimidation of other parties’ members, horse trading of MLAs, and populistic campaigns had only been secondary.
For example, even though the BJP allied with the subservient AIADMK in Tamil Nadu and reaped their votes, the BJP was able to win only in the constituencies, including Nagercoil, Coimbatore (South), Modakurichi and Tirunelveli, where it had already worked and gained influence. Otherwise the BJP will not be able to do so.
Therefore, the notions like “The BJP would not have won even a single seat without ADMK; In other states too, the BJP has only been able to do so through opportunist alliances, false promises and horse trading and it didn’t have any popular influence” are just refusing to look into the reality. And is also a very rude understanding of fascists.
All those who want to understand the Hindurashtra menace in Karnataka, Tripura and Assam, and free India from saffron-corporate fascism should change their innocent understanding that “the BJP is coming to power only through fraudulent means”. They should stop by saying, “by supporting viable alternatives in Legislative Assembly – Parliamentary elections, the RSS-BJP can be defeated”. Instead, they should open their eyes and look into the changes happening on the ground among the people.
Karnataka: South Indian gateway to saffron terrorism!
In Karnataka, the RSS-saffron mob has unleashed the worst ever terror attacks on minorities. The Christians are being targeted in the name of ‘fraudulently converting Hindus’; while the Muslims are being targeted in the name of ‘love jihad’ (accusing Muslim men of converting Hindu girl by marriage) by the Sangh Parivar organisations such as Bajrang Dal and Sri Ram Sena.
On November 30, a Christian prayer meeting in Belur town of Karnataka’s Hassan district was disrupted and the people were threatened and evicted. At Srinivasapura in Kolar district, the saffron thugs entered the Church and set Bible on fire. On 25th of last December, Christmas celebrations in a Christian school was stopped. In every church, Christians are even afraid to hold a meeting of worship. If complaint is lodged, the police openly act as the RSS’s subordinate force, saying, ‘don’t conduct prayer meetings; we can’t offer security’.
According to a fact finding team’s report, Karnataka ranks third among the most vulnerable states, for attacks on Christians in India. As of September this year, 66 of the 305 religious attacks on Christians across the country took place in Uttar Pradesh, 47 in Chhattisgarh and 32 in Karnataka.
The Muslims are also terrified. The Muslims are being attacked by the saffron thugs just because they reveal their religious identity. In Bagalkote district, two Muslim students, who went to a private tuition class, were assaulted for wearing skull caps by a gang of 15 saffron thugs. Muslim shops are also being vandalised.
Like Uttar Pradesh, Madhya Pradesh and Gujarat, BJP’s Basavaraj Bommai Government in Karnataka had also enacted the Anti-Conversion Law in the last winter session of the Assembly. All of this shows that Karnataka is becoming another Uttar Pradesh.
The Karnataka Brahmin coterie : The breeding ground of the RSS
 In Karnataka, the poisonous seed called RSS has grown and is now spreading its branches under different names including Durga Vahini, Bajrang Dal, Sri Ram Sena, Gau rakshaks (cow vigilantes), BJP. The fertile foundation for the growth of RSS were the Brahmins from coastal area of Mangaluru of South Karnataka.
The Chitpavan Brahmins were the foundation for the emergence of the RSS in Maharashtra. Likewise, in Karnataka it is the Konkani speaking Gaud Saraswat Brahmins, Chitrapur Saraswat Brahmins, Tulu speaking Shivalli Brahmins and Kannada speaking Havyaka Brahmins. Since they were concerned in brahminical domination and the prosperous vedic period, they naturally mingled with the currents of the RSS and its Hindurashtra plan. They were also the founders of Arya Samaj, Brahmo Samaj and Akhil Bharat Hindu Maha Sabha in Karnataka, which were formed before the formation of the RSS.
The Brahmo Samaj was formed against Christian missionaries proselytizing in the name of English education. Conversion is not entirely true. Even the brahmins had converted to Christianity. The truth is that in the 1860s, English Christian missionaries provided English education to the Dalits and Billavas. Thus, the Dalits served on par with the Brahmins in the English East India Company. The Brahmo Samaj was formed in Karnataka as a result of Brahmin supremacy against the Dalits. And it campaigned that “Hindus should not send their children to Christian missionaries”.
Read :
♦ The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra
♦ The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!
In 1935, after the formation of the RSS, Karnataka Brahmins became RSS cadres. In Karnataka, the first shakha was established in a small town in Belagavi district; and then in Mangaluru. Canara school established with the financial assistance of Saraswat Brahmins acted as the RSS’s office. This school provided English education along with Vedic culture.
Started in 1970, the RSS’s educational institution “Vidya Bharati” has now grown into a very big institution with 2,000 schools and 30 lakh students. Besides the starting of shakhas and the establishment of the Jana Sangh in 1951, the RSS remained only as an organisation of Brahmins and had no influence over the masses.
The RSS needed a hero called Rama and villain named Muslim to amass and mobilise non-brahmins beyond caste as ‘Hindus’. For this purpose, the RSS adopted various methods and organizational forms.
(to be continued)

Appu

தமிழகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஆசான் லெனினின் 152-வது பிறந்தநாள் விழா !

லகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தில் மகத்தான தலைவர் தோழர் லெனினில் 152-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்ச்சிகளின் செய்தி மற்றும் புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
000
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் பிறந்தநாள் மதுரையில் அரங்கக் கூட்டம்!
கூட்டத்தில் புமாஇமு தோழர் சேகரன் தலைமை தாங்கினார் அவர் பேசும்போது இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள், உழைப்பு  ஆகியவற்றை கைப்பற்றிக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் போடும் போட்டியையும், நமது நாட்டில் விவசாயம் எப்படி அளிக்கப்படுகிறது? தொழிலாளர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் எப்படி ஒட்ட சுரண்டப்படுகிறார்கள்? மக்கள் வாழ முடியாத சூழலை நோக்கி தள்ளப்படுகின்றனர். இதே நிலைமைதான் இலங்கையில் தனியார்மயம் – தாராளமயம் –  உலகமயம் போன்ற கொள்கைகளால் நாடு விற்கப்பட்டு மக்கள் உணவில்லாமல்; எரிபொருள் கிடைக்காமல்; வேலையில்லாமல் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டிதான் காரணம் என்பதை விளக்கி இதை நாம் முறியடிக்க மக்கள் படை உருவாக்க வேண்டும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக, தோழர் ரம்யா அவர்கள், லெனினின் வரலாற்றை பல்வேறு தரவுகளுடன் அதாவது ஆரம்பத்தில் லெனினுடைய குடும்பம் அதன் பின்னால் அவர்கள் வளர்ந்த விதம், அவர் மூலதனம் படிப்பதற்கான சூழல், தன் அண்ணனிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள், இளம் வயதில் பல்கலைக் கழக போராட்டங்களில் பங்கெடுத்தது, வழக்கறிஞர் தொழில், அதன் பின்பு புரட்சிப் பணிகள், மக்களை ஒன்றுபடுத்தியது போன்ற விஷயங்களை புதிய தரவுகளுடன் முன்வைத்தார். உணர்வுபூர்வமாக தனது கருத்தை முன்வைத்தார்.
அடுத்ததாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் அவர்கள் பேசும்போது, இவ்வளவு ஆண்டுகளாக மக்களை திரட்ட முடியவில்லை என்பது குற்ற உணர்வாக இருக்கிறது. லெனின் எப்படி மக்களை புரட்சிக்கு அணி திரட்டினார் என்பதை நாம்  அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மக்களை நேசித்தார்; தோழர்களை நேசித்தார். ஒரு கட்சி எப்படி கட்டப்பட வேண்டும் அதில் உள்ள உறுப்பினர்கள் என்னென்ன செய்ய வேண்டும்  என்பதை வரையறுத்தார். தோழர் லெனின் தன்னைப் போல பல தோழர்களை உருவாக்கினார். அதனால் நாம் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது பங்கேற்பாளர்களாக மாற வேண்டும். கட்டுக்கோப்புடன் நமது திறமைகளை புரட்சிக்காக வளர்த்துக் கொள்வது என மக்களுக்கு பயனுள்ளவர்களாக நாம் மாற வேண்டும் என்பதை அழுத்தமாகப் பேசினார்.
தோழர் பிரபு பேசும்போது, லெனினிடம் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சியவெறி இருந்தது. ஆரம்பத்தில் லெனினுடைய அப்பா நாட்டு சூழலைப் பற்றி கூறிய விஷயங்கள் தனது அண்ணன் நரோத்னிக்காக இருந்தது, அவரை தூக்கில் போடும்போது கூட அந்த செய்தி கேட்ட லெனினுடைய அம்மா தனது மகன் சரியான விஷயத்திற்காகதான் நின்றான் என்பதை பகிரங்கமாக கூறுவது போன்ற விஷயங்கள்தான் லெனினை உறுதியுடன் வளர்வதற்கு முக்கியமாக பங்காற்றின.
எப்படி எளிமையாக வாழ்ந்தார் மக்களுக்கு இருந்த அதே அபாயம் லெனினுக்கும் இருந்தது. எப்படி 16 முதல் 18 மணி நேரங்கள் வரை மக்களுக்காக உழைத்தார். குடும்பத்தை எப்படி பார்க்க வேண்டும் கட்சியை எப்படி பார்க்க வேண்டும் என்பதையெல்லாம் லெனின் இடமிருந்து கற்க வேண்டும். அதில்  முக்கியமாக கட்டுப்பாடு  என்ற விஷயத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலமே காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும். போன்ற விஷயங்களை எளிமையாக தோழர்கள் முன்பு எடுத்து வைத்தார்.
அடுத்ததாக தோழர் ராம் பேசும்போது, ரஷ்யாவில் ஒரு சாதாரண சமையற்கார அம்மா  நாட்டினுடைய பல்வேறு விஷயங்களையும் வரலாற்றையும் தெரிந்து வைத்திருந்தார். அதைப்போல நாம் ஒவ்வொருவரும் வரலாற்றை ஆழமாக தெரிந்து கொள்ள படிக்க வேண்டும் என்பது பற்றி பொதுவுடைமை கல்வி முறை லெனின் இளைஞர்களுக்கு அறிவுறுத்திய விஷயங்கள் குறித்துப் பேசினார்.
இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்கள்,  முதலாளித்துவம் எப்படி அழுகி நாறுகிறது போராட்டம் எப்படி தவிர்க்க முடியாதது, பாசிசம் என்பது என்ன என்பதை எளிமையாக விளக்கினார். இன்று வரை விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஒருபுறம் சட்டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு இப்போது ஆய்வு என்கிற பெயரில்  80 சதவீத விவசாயிகள் நாட்டில் மூன்று வேளாண் சட்டங்களையும் ஏற்றுக்கொண்டதாக பொய்யைப் பரப்பி அதன்மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை ஒப்படைக்க தீவிரமாக வேலை செய்கிறார்கள். மேலும் காவிக் கும்பல் எப்படி அரசு அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆதரவாளர்களை நிரப்புகிறார்கள். எப்படி காவி – கார்ப்பரேட் பாசிசமும், நம்மை அச்சுறுத்துகிறது இதை வீழ்த்த நாம் ஒன்று சேர வேண்டும் என்பதை விரிவாக எளிமையான உதாரணங்களுடன் மக்கள் மொழியில் எடுத்து வைத்தார்.
இறுதியாக கேள்வி பதில் விவாதம் நடந்தது அதில் பல்வேறு தோழர்களும் ஊக்கமாக பங்கெடுத்தனர். பலரும் விரிவாக பேசினர்.
இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
தகவல் :
புமாஇமு, தமிழ்நாடு.
000
ஏப்ரல் – 22 பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் 152-வது பிறந்தநாளில் மார்க்சிய – லெனினிய கொள்கைகளை உயர்த்தி பிடிக்கும் வகையில் நாடு முழுக்க அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக,
அமெரிக்க மேலாதிக்க போர் வெறியை முறியடிப்போம் ! இந்தியாவில் காவி- கார்ப்பரேட்  பாசிசத்தை முறியடிப்போம் !  என்ற தலைப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தோழர் லெனின் அவர்களின்   பிறந்தநாள் நிகழ்ச்சி கூட்டங்கள் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆலை வாயில் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக  சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா. விஜயகுமார் அவர்கள் சங்க  கொடியேற்றினார்.
கூட்டத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தனது தலைமையுரையில் லெனின் இன்றைக்கும் நமக்கு ஏன் தேவைப்படுகிறார். குறிப்பாக இன்று நாடு முழுவதும் அரங்கேறி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதற்கு தோழர் லெனின் வழியில் நாம் பயணிப்பது மிகவும் அவசியம் என்ற அடிப்படையில் தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அதன் பிறகு சங்கத்தின் சிறப்புத் தலைவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னாள் மாநிலப் பொருளாளருமான தோழர் பா. விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது சிறப்புரையில் ஒடுக்கப்படும் நாடு, ஒடுக்கப்படும் தேசம், ஒடுக்கப்படும் வர்க்கம் இப்படி யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களெல்லாம் லெனினை உயர்த்திப் பிடிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். சுரண்டும் வர்க்கம் – சுரண்டப்படும் வர்க்கம் என்ற வர்க்க வேறுபாடுகளை உடைத்தெறிந்து ஒரு பொதுவுடைமை சமுதாயம் படைப்பதற்கு, குறிப்பாக இந்தியாவில்  காவி – கார்ப்பரேட் பாசிசம் அரங்கேறி வருகின்ற சூழலை முறியடிப்பதற்கும், கார்ப்பரேட்டின் தீவிரமான சுரண்டலை ஒழித்து கட்டுவதற்கும் இன்று நமக்கெல்லாம் லெனின் ஒரு வழிகாட்டியாக விடிவெள்ளியாக இருக்கிறார். ஆகவே தொழிலாளர்கள் சாதிமத வேறுபாடுகளை கடந்து வர்க்கமாக ஒன்றினைந்து தோழர் லெனின் அவர்களை உயர்த்திப் பிடித்து தமக்கான விடுதலையே சாதிப்போம் என்று தனது  சிறப்புரையை நிறைவு செய்தார்.
இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
தகவல் :
டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
இணைப்பு- புதிய ஜனநாயக முன்னணி. (மாநில ஒருங்கிணைப்பு குழு) தமிழ்நாடு.
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையேற்று இயங்கிவரும் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி  சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி SRF ஆலையில் ஆசான் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல்:
தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி – SRF மணலி
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்தநாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆக்சில் இந்தியா கிளையில் ஆசான் லெனின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல்:
ஆக்சில் இந்தியா கிளை, காஞ்சிபுரம்.
000
பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் 153-வது பிறந்த நாள் விழா புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலூர் மாவட்ட பகுதியின் சார்பாக அடுக்கம்பாறை தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தில் விழா முன்னெடுக்கப்பட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் :
புஜதொமு, மாநில ஒருங்கிணைப்புக்குழு.
000
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின்,    அவர்களின் 152-வது பிறந்தநாளையொட்டி திருவாரூர்,  புதிய ரயில்வே நிலையம் எதிரில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக  22/4 2022, அன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அணிதிரள்வோம் ! என்றும் இன்றைய சூழலை விளக்கியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர், தோழர் தங்க. சண்முகசுந்தரம் திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் தோழர் ஜி. வரதராஜன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சீனி செல்வம், டாக்டர் ரகுநாதன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஆசாத், BSP கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் M. பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலம், திருவாரூர் – 6374741279
000
ஏப்ரல்-22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளில் சூளுரைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற தலைப்பின்கீழ் 22.4.2022 அன்று கோவை மக்கள் அதிகாரம் சார்பில் அறைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் ராஜன் கோவை மாவட்ட செயலாளர், தோழர் லூயிஸ் வழக்கறிஞர், போல்ஷிவிக் இந்திய IMT அமைப்பாளர் தோழர் கார்த்திக், உறுப்பினர் தோழர் சங்கர் ஆகியோர் உரையாற்றினர்கள். மக்கள் அதிகாரத்தின் பகுதி தோழர் கலந்து கொண்டனர். இறுதியாக இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், கோவை. 9488902202
000
ஏப்ரல்-22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளில் சூளுரைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் ! என்ற தலைப்பின்கீழ் 22.4.2022 அன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அறைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் சிவா வட்டார இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்புரையாக, தோழர் அருண் வட்டார செயலாளர் மக்கள் அதிகாரம், தோழர் கோபிநாத் மண்டலச் செயலாளர் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, நன்றியுரை வட்டாரப் பொருளாளர் தோழர் சத்தியநாதன் நிகழ்த்தினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம். 9790138614
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சார்பாக திருச்சி மண்டலத்தில் ஆசான் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு குடும்ப விழாவாக நடைபெற்றது. இனிப்புகள்  வழங்கியும் , கவிதை போட்டி , வினாடி வினா, ஒவியப்போட்டி , பாட்டு போட்டி, மேஜீக் நடத்தியும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.லெனின் பற்றிய ஆவணப் படமும் திரையிடபட்டது இரவு  உணவு வழங்கப்பட்டு முடிவுற்றது.
தகவல் :
புஜதொமு, மாநில ஒருங்கிணைப்புக்குழு.
000
ஆசான் லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சேத்துப்பட்டு கிளையில் மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ம.க.இ.க சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிய புரட்சி உழைக்கும் மக்களுக்கு என்ன சாதித்து கொடுத்தது. இலவச கல்வி, மருத்துவம் என மக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. நாமும் நம் நாட்டில் ஒரு புரட்சியை சாதிக்க வேண்டும். நம் நாட்டில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தோழர்கள் உரையாற்றினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம். 9176801656.
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்தநாள் விழா கடலூர் மக்கள் அதிகார அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தோழர் தீனதயாளன் தலைமை தாங்கி  புரட்சியாளர்  மாமேதை லெனின் புகழ் ஒங்குக என்று முழக்கமிட்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். தோழர் ராமலிங்கம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கிய பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஆய்வுக்குட்படுத்தி நவம்பர் 7 பாட்டாளி வர்க்க ஆட்சி நிறுவினார். அதன்பிறகு உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஈர்ப்பினால் சோவியத் யூனியனை உருவாக்கினார். பல ஆண்டுகளாக போர் முனையிலிருந்த ரஷ்யா, பொருளாதாரத்தில் பின் தங்கிய ரஷ்யா, உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி மூலமாக  எல்லோருக்கும் அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்தவர் லெனின். அதில் சிறு குறிப்பாக நினைவு படுத்துகிறேன். போரில் சிறை பிடிக்கப்பட்ட சிறைவாசிகளை நேரடியாக சந்தித்தபோது நீங்கள் அனைவரும் சாப்பிட்டீங்களா என்று கேட்டபோது, 75 கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் – நாங்கள் இன்னும் சாப்பிடவில்லை – என்று கூறினர். சிறை அதிகாரியை லெனின் கேட்டபோது உணவு ஏற்பாடு செய்வதற்கு பொருள் இல்லை என்று கூறியவுடன் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என உத்தரவிட்டார் லெனின். மேலும், பாட்டாளி வர்கக சர்வாதிகாரம் என்றால் என்ன? முதலாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் எனன? என்று தோழர்களுக்கு  விளக்கினார்.
தோழர் கார்த்திகேயன், அலெக்சான்ட்ரா கொலந்தாய் லெனினை பற்றி கூறும் அவர்  ஒரு சிந்தனையாளர், உழைக்கும் மக்களுக்காக பாடுபட்டவர்.. பிறமொழி படைப்புகளை மொழிபெயர்த்தார். எழுதினார் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதும் போதும், படிக்கும் போதும் தூக்கம் வந்தால் எழுந்து சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வார். தூக்கம் கலைந்ததும் மீண்டும் படிப்பார். இறுதி மூச்சு  வரை பாட்டாளி வர்க்கத்துக்காக உழைத்தவர் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கட்டிடத் தொழிலாளர்கள், பொது மக்கள் என 25 பேர் கலந்து கொண்டனர். வீடு வீடாக  இனிப்புகள், வழங்கி லெனின் பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது.
உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்சிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின்கீழ் அணி திரள்வோம் மார்க்சிய -லெனினிய – மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நம் நாட்டிலும் ஒரு புரட்சியை நடத்தி முடிப்போம். சமூக மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம்! என்று அனைவரும் லெனின் பிறந்தநாளில் உறுதியேற்போம்.
இறுதியாக முழக்கமிட்டு நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், கடலூர்.
000
விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்தநாளில் பொதுமக்களிடையே முழக்கமிட்டு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாரச் செயலாளர் அசோக் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், விருதை.

ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !

22.04.2022
ஜிக்னேஷ் மேவானி கைது !
பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போர்க்கு ஒரு எச்சரிக்கை !
பத்திரிகை செய்தி
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ள ஜிக்னேஷ் மேவானி மோடியை விமர்சித்தார் என்ற ஒரே காரணத்திற்காக அசாம் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்செயலை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் அவர் உடனே விடுவிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது. இக்கைது பாசிச மோடி – அமித்ஷா கும்பலை எதிர்ப்போரை ஒழித்துக்கட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிச கும்பலின் சதி நடவடிக்கையாகும்.
மோடியை, கோட்சேவுடன் தொடர்புப்படுத்தி அவர் குறிப்பிட்டதாகக் கூறி அசாம் மாநில பாஜக தலைவர் அரூப் குமார் டே அசாம் போலீசில் புகார் செய்கிறார். உடனே குஜராத் மாநில எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானியை கைது செய்துள்ளனர்.
படிக்க :
♦ விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி
♦ நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் !  | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
ஜிக்னேஷ் மேவானி வெளியிட்ட கருத்தானது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அப்போதே நீக்கம் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள ஜிக்னேஷ் மேவானி தனது கருத்தை ட்விட்டரில் பதிவு செய்கிறார். அதற்கு எதிராக அசாமில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார் என்றால் மேற்கொள்ளப்பட்ட இந்த கைது நடவடிக்கை மோடி – ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிச கும்பலை எதிர்ப்பாளர்களை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை ஆகும்.
அசாமின் கோக்ரஜார் மாவட்டத்தில் உள்ள பாபானிபூரில் வசிக்கும் அனுப் குமார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், 120 B (குற்றச்சதி), பிரிவு 153(A) 153(B) இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை தூண்டுதல், 295 (A) அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தளங்களை சேதப்படுத்துதல், 504 அமைதியைக் கெடுக்கும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல், 506 மிரட்டல் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் ஆகிய வழக்குகளின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கிறார் ஜிக்னேஷ் மேவானி.
மோடி, கோட்சேவின் சிலைக்கும், படத்திற்கும் மரியாதை செலுத்தவில்லையா? ஆர்.எஸ்.எஸ், இந்து மகாசபாவுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு ஊரறிந்த ரகசியம்.  கோட்சேவுக்கும் மோடிக்கும் தொடர்பு உள்ளதென்பது  என்பது எப்படி சதிக்குற்றச்சாட்டு ஆகும்?  இரு சமூகங்களுக்கிடையில் பகைமையை தூண்டுவது என்ற சட்டப்பிரிவினை வேறு சேர்த்துள்ளது அசாம் போலீசு. கோட்சேவை ஆதரிக்கும் சமூகம், கோட்சேவை எதிர்க்கும் சமூகம் என்று  பகைமை கொள்ளப்போகிறார்களா என்ன? மேவானி பதிவிட்ட கருத்துக்கும் வழிபாட்டு தலங்களை சேதப்படுத்துவதற்கும் ஏதேனும் தொடர்புண்டா என்ன? கைது செய்ய ஆணை பிறப்பித்த நீதிமன்றம் அப்பட்டமாக பாசிச நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.  ஆக,  மோடி அரசுக்கு எதிரானவர்களை சித்தரவதை செய்து துன்புறுத்தும் நோக்கத்துக்காகவே குஜராத்தில் உள்ளவர் மீது அசாமில் புகார் கொடுப்பது, அசாம் போலீசு கைது செய்வது போன்ற நடவடிக்கை.
படிக்க :
♦ சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
♦ தில்லையில் தமிழுக்குத் தடை : நெல்லை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
உண்மையில் இசுலாமியர்கள் மற்றும் தலித் மக்களுக்கு எதிராக பதிவிடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக – சங்கப்பரிவார் கும்பலைச்சேர்ந்த யாரையும் வேறொரு மாநில போலீசு கைது செய்ததில்லை. ஆனால். மோடி – சனாதன மதவெறியர்களுக்கு எதிராக சிந்திக்கும், செயல்படும் யாரையும் எந்த மாநில போலீசை வைத்தும் கைது செய்ய முடியும் என்று நமக்கு சவால் விடுகிறது மோடி அரசு.
இது ஏதோ குஜராத் பிரச்சினை அல்ல; ஜிக்னேஷ் மேவானியின் கைதினை எதிர்த்துப் போராடாவிட்டால் அடுத்து தமிழ்நாட்டிலும் மோடிக்கு எதிரானவர்களை வேறு மாநில போலீசை வைத்து கைது செய்யும் நிலை ஏற்படும். ஆகவே பாசிச மோடி – அமித்ஷா கும்பலின் நடவடிக்கைக்கு எதிராக நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச்செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்

டெல்லி ஜஹாங்கீர்புரி பகுதியில் முஸ்லீம் மக்களின் வீடுகள், கடைகள் கடந்த ஏப்ரல் 20 அன்று இடிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கக் கூடாது என்று உத்தரவிட்டப் பிறகும் டெல்லி முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் பல வீடுகள், கடைகளை சட்டவிரோதமாக இடித்துள்ளது.
இது தேர்தல் ஜனநாகத்திற்கு விரோதனாது என்ற வகையில் கார்டூனிஸ்டு சதீஷ் ஆச்சாரியா கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நன்றி : கார்டூனிஸ்ட் சதீஸ் ஆச்சாரியா
***
அதேபோல், டெல்லியில் முஸ்லீம் மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துக்கும் வகையில் கார்டூனிஸ்ட் அலோக் மோடி அரசின் மேக்கின் இந்தியா திட்டம் முஸ்லிம் மக்களின் வீடுகளை இடிக்கும் புல்டோசராக உருமாறியுள்ளது என்றவகையில் கார்டூன் வெளியிட்டுள்ளார்.
நன்றி : கார்டூனிஸ்ட் அலோக்
disclaimer

பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்? – தோழர் லெனின்

0
பொதுவுடைமைவாதப் பத்திரிகை கட்சியால் சோர்வின்றி பேரூக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும். கட்சியின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாத எந்தப் பத்திரிகையும் பொதுவுடைமைவாதப் பத்திரிகை என்று அங்கீகரிக்கப்படலாகாது.
கூடுதலான பத்திரிகைகளைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் சிறந்த, தரமான பத்திரிகைகளைப் பெற்றிருக்க கட்சி கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தரமானதொரு மையப் பத்திரிகையை – சாத்தியமானால் தினசரிப் பத்திரிகையைப் பெற்றிருக்க வேண்டும்.
முதலாளித்துவப் பத்திரிகைகளைப் போல, ஏன், “சோசலிஸ்ட்” பத்திரிகையைப் போல, பொதுவுடைமைப் பத்திரிகையானது முதலாளித்துவ நிறுவனமாக இருக்கக் கூடாது. முதலாளித்துவக் கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் நமது பத்திரிகை சுயேட்சையானதாக இருக்க வேண்டும். சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சிகள் நமது பத்திரிகை இருப்பதைத் தெரிந்து கொள்ள சாத்தியமாக்குகின்ற வகையில் தேர்ச்சியான விளம்பர ஏற்பாடுகள் அவசியம். ஆனால், இது எந்த விதத்திலும் நமது பத்திரிகை பெரிய விளம்பரதாரர்களைச் சார்ந்திருப்பதாக இருக்கக் கூடாது. மாறாக, சமூகப் பிரச்சினைகள் அனைத்திலுமான இதன் பாட்டாளி வர்க்க நோக்கு, இதற்கு மக்கள்திரள் கட்சிகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பொது மக்களின் பரபரப்பான அல்லது பொழுதுபோக்கான விருப்பங்களை நிறைவு செய்வதாக நமது பத்திரிகைகள் இருக்கக் கூடாது. “மதிப்புக்குரியதாக” ஆகும் முயற்சியில் அவை குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள் அல்லது பத்திரிகை நிபுணர்களின் விமர்சனங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.
படிக்க :
♦ மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்
♦ கட்சி அமைப்பில் இரகசியத் தன்மையின் அவசியம் பற்றி | லெனின்
ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் போராடும் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி அக்கறை கொள்வதைப் பொதுவுடைமைவாதப் பத்திரிகை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள வெண்டும். பத்திரிகையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மிகச் சிறந்த கிளர்ச்சியாளனாகவும் தலையாயப் பிரச்சாரகனாகவும் விளங்க வேண்டும்.
கட்சி உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளின் மதிப்பிடற்கரிய அனைத்து அனுபவங்களையும் சேகரித்து அவற்றைத் தோழர்களுக்கு எடுத்துக் காட்டி இந்த அனுவபங்களைக் கொண்டு பொதுவுடைமைவாத வேலைமுறையைத் தொடர்ச்சியாக மாற்றி முன்னேற்றத்தைக் கொண்டுவருவது நமது பத்திரிகையின் நோக்கமாகும். இவ்வாறு நமது புரட்சி வேலையின் மிகச் சிறந்த அமைப்பாளனாக பத்திரிகை விளங்கும்.
பொதுவுடைமைவாதப் பத்திரிகையின், குறிப்பாக நமது பிரதான பத்திரிகையின் அனைத்தும் தழுவிய நிறுவன வேலையின் மூலம்தான், நிச்சயமான இந்த நோக்கத்தினைக் கொண்டுதான், நாம் ஜனநாயக மத்தியத்துவத்தை நிறுவுவதும், பொதுவுடைமைக் கட்சியின் வேலைகளில் சிறப்பான பகிர்ந்தளித்தலைச் செய்வதும் முடியும். இவ்வாறுதான் பத்திரிகையானது, தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முடியும்.
ஒரு பொதுவுடைமைவாதப் பத்திரிகையை நிறுவுவது
பொதுவுடைமைவாதப் பத்திரிகை ஒரு பொதுவுடைமைவாத நிறுவனமாக ஆக முயற்சிக்க வேண்டும். அது ஒரு பாட்டாளி வர்க்கப் போரிடும் நிறுவனமாக இருக்க வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகையானது புரட்சிகரத் தொழிலாளர்களின், பத்திரிகைக்குத் தொடர்ச்சியாகப் படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் அனைவரின், ஆசிரியர்களின், அச்சுக் கோர்ப்பவர்களின், அச்சிடுபவர்களின், விநியோகிப்பவர்களின், உள்ளூர் விசயங்களைச் சேகரித்து பத்திரிகைக்குத் தந்து அவற்றைப் பற்றி பத்திரிகைகளில் விவாதிப்பவர்களின், பத்திரிகைக்காக நாள்தோறும் ஊக்கமாகப் பிரச்சாரம் செய்பவர்களின், இன்னும் பத்திரிகையோடு தொடர்புடையோரின் கூட்டு முயற்சியில் இயங்கும் நிறுவனமாகும். ஒரு பத்திரிகையை உண்மையான போரிடும் நிறுவனமாக, பொதுவுடைமையாளர்களின் பலமிக்க கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு பல நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகள் தேவை.
ஒரு பொதுவுடைமைவாதி தனது பத்திரிகையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதற்காக அவர் வேலை செய்யவும், தியாகங்கள் புரியவும் வேண்டும். பத்திரிகை அவரது அன்றாட ஆயுதமாகும். சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தகுதியுடையதாக்க அதை நாள்தோறும் உறுதிப்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகை நிலைத்திருக்க வேண்டுமானால், அதற்குத் தொடர்ச்சியாக அதிக அளவிலான பொருள் மற்றும் நிதியைத் தியாகம் செய்ய வேண்டும். அதன் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான சாதனங்கள் கட்சி உறுப்பினர்களான அணிகளிடமிருந்து இடையறாது அளிக்கப்பட வேண்டும். பத்திரிகையானது, உறுதியான நிறுவனமாக நிறுவப்படும் நிலைமைக்கு, சட்டபூர்வ மக்கள்திரள் கட்சிகளில் போதுமான எண்ணிக்கையில் பிரதிகள் விற்கப்பட்டு பொதுவுடைமை இயக்கத்திற்கு அதுவே ஒரு பலமிக்க ஆதரவு சக்தியாக வளரும் நிலையை அடையும்வரை இவ்வாறு கீழிருந்து ஆதரவு பெறுவது நீடிக்கும்.
ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.
தொழில் நிலையங்களில் நிகழ்கின்ற சமூக அல்லது பொருளாதார முக்கியத்துவமுடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் – ஒரு சாதாரண விபத்து முதல் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் வரை, ஒரு பயிற்சியாளரை மோசமாக நடத்துவது முதல் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வரை – பத்திரிகையில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சங்க பிராக்சன் தனது கூட்டங்கள் மற்றும் செயலாளர்களின் முக்கியமான முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் பற்றியும் நமது எதிரிகளின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைப் பற்றியும் செய்திகள் தர வேண்டும். வீதிகளிலும் கூட்டங்களிலும் நிகழ்கின்ற பொது வாழ்க்கை பற்றிய விவரங்கள் உன்னிப்பாக கட்சி உறுப்பினர்களுக்குச் சமுதாயத்தைப் பற்றி விமர்சிக்க வாய்ப்புகைள அளிக்கும். இந்த விவரங்கள் நமது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்படும்போது, அவை ஏற்கெனவே நாம் எவ்வாறு வாழ்க்கையின் அன்றாடத் தேவைகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்பதைப் பற்றி மேலோட்டமான வாசகர்களுக்குக்கூட தெளிவாகக் காட்டும்.
தொழிலாளர்களுடன் தொடர்புகள்
தொழிலாளர்களிடமிருந்தும் தொழிலாளர் வர்க்க அமைப்புகளிடமிருந்தும் தொழிலாளர்களது வாழ்க்கையைப் பற்றி வரும் செய்திகள் ஆசிரியர் குழுவால் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் கையாளப்பட வேண்டும். இந்தச் செய்திகள் சிறு தகவல்களாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பத்திரிகைக்கும் தொழிலாளர் வாழ்க்கைக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும். அல்லது தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையின் நடைமுறை உதாரணங்களில் இருந்து பொதுவுடைமைவாதக் கொள்கைகளை விளக்குவதற்காகப் பயன்படுத்த முடியும். ஆசிரியர் குழுவானது தம்மைச் சந்திக்க வரும் தொழிலாளர்களைச் சந்திக்க ஒவ்வொரு நாளும் வசதியான ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்போது அவர்களது விருப்பங்கள் அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றிய புகார்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைக் குறித்துக் கொண்டு கட்சிக்குத் தெளிவுபடுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.
“பிராவ்தா”வின் முன்னுதாரணம்
முதலாளித்துவக் கட்டமைவின் கீழ் நம்முடைய பத்திரிகைகள் முழுக்கவும் பொதுவுடைமைவாத ஊழியர்களின் கூட்டு நிறுவனமாக ஆவது சாத்தியமில்லை என்பது உண்மையே. எப்படி இருப்பினும் மிகமிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கூட இத்தகைய புரட்சிப் பத்திரிகை ஒன்றை நிறுவி அமைப்பதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி ஈட்டுவது சாத்தியமே. 1912-13 காலத்தில் ரஷ்யத் தோழர்களின் “பிராவ்தா”-வால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவினுடைய மிகமிக முக்கியமான மையங்களின் ஊணர்வுபூர்வமான புரட்சிகரத் தொழிலாளர்களின் நிரந்தரமான மற்றும் ஊக்கமான நிறுவனத்தை இது உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தியது. பத்திரிகையின் படைப்புகளை மேற்பார்வையிட்டுத் தீர்மானிப்பது, வெளியிடுவது, விநியோகிப்பது ஆகியவற்றைத் தோழர்கள் தமது கூட்டு முயற்சியில் செய்தனர். அவர்களில் பலர் தமது வேலையுடன் சேர்த்து இதைச் செய்ததுடன் தமது ஊதியத்திலிருந்து பணத்தையும் ஒதுக்கினர். இவற்றுக்குக் கைமாறாக, அப்பத்திரிகையானது, அவர்கள் விரும்பிய மிகச் சிறந்த படைப்புகளை அளித்தது. அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்பட்டவற்றையும் மேலும் அவர்கள் தமது வேலையிலும் போராட்டத்திலும் பயன்படுத்தக் கூடியவற்றையும் அவர்களுக்கு அளித்தது. இத்தகைய பத்திரிகை கட்சி உறுப்பினர்களாலும் பிற புரட்சிகர தொழிலாளர்களாலும் “நமது பத்திரிகை” என்று உண்மையாகவும் யதார்த்தமாகவும் அழைக்கப்பட்டது.
கட்சியால் இயக்கப்படும் இயக்கங்களில் நேரடியாகப் பங்கேற்பது போர்க்குணமிக்க பொதுவுடைமைவாதப் பத்திரிகையின் சரியான பண்பாகும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கட்சியின் நடவடிக்கை குறிப்பிட்டதொரு இயக்கத்தில் குவிந்திருக்குமானால், அந்தக் குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பணியாற்ற பத்திரிகை தனது அனைத்து துறைகளையும் – தலையங்கப் பக்கங்கள் மட்டுமல்ல – ஈடுபடுத்துவது அதன் கடமையாகும். இந்த இயக்கத்துக்கு உதவும்படியாக பத்திரிகை முழுவதிலும் – அதன் உள்ளடக்கம், உருவம் என்ற இரண்டிலும் – அதற்கான பொருளாயத மற்றும் மூலாதார விசயங்களைச் சேகரித்தளிப்பதை ஆசிரியர் குழு செய்ய வேண்டும்.
“நமது பத்திரிகை”க்காக சந்தாக்கள் சேகரிப்பது என்பது ஒரு கட்டமைப்பாக ஆக்கப்பட வேண்டும். தொழிலாளர்களைக் கொதித்தெழச் செய்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் (சந்தர்ப்பத்தையும்) தொழிலாளர்களின் அரசியல் மற்றும் சமூக உணர்வைத் தூண்டிவிடக் கூடிய விசேட நிகழ்ச்சியால் ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும் பயன்படுத்திக் கொள்வது முதலாவது விசயம். இவ்வாறாக, ஒவ்வொரு பெரிய வேலை நிறுத்த இயக்கம் அல்லது கதவடைப்பை அடுத்து – அப்போது பத்திரிகை பகிரங்கமாகவும், ஊக்கமாகவும் தொழிலாளர் நலன்களுக்காகக் குரல் கொடுத்திருக்கும் – போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மத்தியில் சந்தா சேர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும். பத்திரிகை சந்தா விண்ணப்பங்களையும் பொதுவுடைமையாளர்கள் ஊக்கமாக வேலை செய்யும் தொழில்களிலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிற்சங்க பிராக்சன்கள் பணியாற்றும் தொழில்களிலும் மட்டுமின்றி, எவ்வெப்போது சாத்தியமோ, அவ்வப்போதெல்லாம் விசேட குழுக்கள் அல்லது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யமு தொழிலாளர்கள் வீடுவீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும்.
இதுபோலவே, தொழிலாளர்களை எழுச்சியுறச் செய்த ஒவ்வொரு தேர்தல் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்தும் விசேட பிரச்சாரத்துக்கான குழுக்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தொழிலாளர்களின் பத்திரிகைக்காகத் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்த வேண்டும்.
மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பாதிக்கின்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் பிற இடர்ப்பாடுகள் வாயிலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது, பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழில் ரீதியில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களை வென்றெடுக்க வேண்டும். பத்திரிகைக்காக வீடு வீடாகச் சென்று திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துவதற்காக அவர்களை ஒழுங்கமைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரம் சந்தா சேர்ப்பு வேலைக்கு மிகமிகப் பொருத்தமான நேரமாகும் என்பதை அனுபவம் காட்டுகிறது. ஒரு மாதத்தின் கடைசி வாரத்தை பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலைக்குப் பயன்படுத்தத் தவறும் எந்த ஒரு உள்ளூர் குழுவும், பொதுவுடைமை இயக்கத்தைப் பரவலாக்குவதைப் பொருத்தவரை கடுமையான கேட்டை விளைவிக்கிறது என்று அர்த்தம். பத்திரிகைக்காகப் பிரச்சாரத்தை நடத்தும் வேலைக்கான குழு எந்தவொரு பொதுக் கூட்டத்திலும் அல்லது எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் இல்லாமல் இருக்கக் கூடாது. அதன் தொடக்கம், இடைவேளை, முடிவு ஆகியவற்றின் போது பத்திரிகைக்கான சந்தா பட்டியலுடன் தோன்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சங்கக் கூட்டத்தின் போது பிராக்சன்களும் ஒவ்வொரு பணிமனைக் கூட்டத்தின் போதும் குழு மற்றும் பிராக்சன்களும் இதே கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.
படிக்க :
♦ அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்
♦ லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
கட்சிப் பத்திரிகைக்காக உறுதியாக நிற்பது
கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சிப் பத்திரிகைக்காக இடையறாது வாதிட வேண்டும். அதன் எதிரிகளுக்கு எதிராக நின்று உறுதியாகப் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு எதிராக உத்வேகத்துடன் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகையின் அப்பட்டமான நச்சுத் தன்மையை, போலித் தனத்தை, செய்திகளை இருட்டடிப்பு செய்தலை, எல்லா வகையான இரட்டை மோசடிகளை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும்.
நாள்தோறும் மிகமிகக் கொடியதாகும் வர்க்க மோதல்களை மூடிமறைக்கும் சமூக ஜனநாயக மற்றும் சுயேட்சையான பத்திரிகையின் துரோகத்தனத்தை விடாப்பிடியாக அம்பலப்படுத்தி, அற்பமான விதண்டாவாதத்தில் ஈடுபடாமல், இடையறாத மற்றும் முன்னேறித் தாக்கும் விமர்சனத்தின் மூலம் இப்பத்திரிகைகளை வெற்றிகொள்ள வேண்டும். தொழிற்சங்கம் மற்றும் பிற தொழிலாளர்களது நிறுவனங்களின் உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தும், முடமாக்கும் சமூக ஜனநாயக பத்திரிகைகளின் செல்வாக்கிலிருந்து பிய்த்தெடுக்க தொழிற்சங்க மற்றும் பிராக்சன்கள் நிறுவன ரீதியிலான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வீட்டுக்கு வீடு நமது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் குறிப்பாக ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் செய்வதன் மூலம் சமூக ஜனநாயக பத்திரிகைக்கு எதிரான நமது போராட்டக் கூர்முனை சாதுரியமாகத் திருப்பிவிடப்பட வேண்டும்.
(கட்சி நிறுவனக் கோட்பாடுகள் நூலிலிருந்து…)
வி.இ.லெனின்

லெனினது குரல் – அலெக்சாந்த்ரா கொலந்தாய்

காதிபத்திய போர் 1914-ம் ஆண்டில் தொடங்கிவிட்டது. இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் மார்க்ஸின் கட்டளைகளைப் புறக்கணிக்து, தொழிலாளிவர்க்க நலன்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது. இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலின் இயக்கு சக்தியான ஜெர்மன் சோஷல்-டெமாக்ரடிக் கட்சி தனது சந்தர்ப்பவாத உள்ளியல்பை வெளிப்படுத்திவிட்டது. தனது நாட்டின் ஆளும் முதலாளி வர்க்கத்துடன் அது ஒத்துழைத்தது. வர்க்கங்களுக்கிடையே சமாதானம் நிலவ வேண்டும் என்ற போக்கை முழுமையாக மேற்கொண்டுவிட்டது.
புரட்சிகர வர்க்கப் போராட்டத்தை ஜெர்மன் சோஷல் – டெமாக்ரடிக் கட்சி வெட்கக்கேடான முறையில் கைவிட்ட நாளை நான் நேர்முகமாகக் கண்டு அனுபவித்தேன். 1914 ஆகஸ்டு 4ந் தேதி நான் ஜெர்மன் பாராளுமன்றத்தில் இருந்தேன். ஜெர்மன் சோஷல்டெமாக்ரடிக் கட்சித் தலைவர்களின் வீழ்ச்சி என்னும் அருவருக்கத்தக்க காட்சி யுத்த, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக அவர்களது வாக்களிப்பு பெத்மன் – ஹோல்வெக் சர்க்காரை ஆதரிப்பதாக அவர்கள் உறுதிமொழி கொடுத்தது எல்லாம் என் முன்னர் நிகழ்ந்தன.
படிக்க :
♦ புரட்சியின் தருணங்கள் ! காணொளித் தொகுப்பு !!
♦ ரசியப் புரட்சியாளர்களுக்கு வழிகாட்டிய மார்க்ஸ் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
ஏகாதிபத்திய யுத்தத்தின் கரும் புகை பலரது மூளைகளை மங்கச் செய்துவிட்டது. நிலைமை எந்த அளவுக்குப் போய்விட்டது என்றால் சமரசப் போக்கு, சந்தர்ப்பவாதம் என்னும் உள மயக்கம் அரசியல் காரணங்களுக்காகத் தாய்நாட்டுக்கு வெளியே இருந்த சில ரஷ்யர்களையும் ஆட்கொண்டுவிட்டது. தங்களது அரசியல் பாவங்களுக்காக கழிவிரக்கம் கொண்டு, இரண்டாம் நிக்கொலாய், அவனது கொத்தடிமைகள் ஆகியோரின் கொள்கைக்கு ஆதரவு அளிப்பதன்மூலம் ஜாராட்சித் தாய்நாட்டுக்குத் தொண்டு செய்யும் நோக்கத்துடன் அவர்கள் ரஷ்யாவுக்கு விரைந்தார்கள்.
நான் அச்சமும் மனச்சோர்வும் கொண்டு உழன்றேன். எல்லாம் பாழாகிவிட்டன என்று எனக்குத் தோன்றியது. சூழ்நிலை மூச்சு முட்டச் செய்வதாகவும் நம்பிக்கைக்கு இடமாற்றதாகவும் இருந்தது. என் எதிரே ஒரு சுவர் எழும்பிவிட்டது போலவும் மேலே செல்ல வழிஇல்லை போலவும் பிரமை உண்டாயிற்று. லீப்க்னெஹ்ட்டின் உதவியால் தான் ஜெர்மனியிலிருந்து வெளியேறி ஸ்டாக்ஹோம் சேர்ந்தேன். உலக இரத்தக் களறியை எதிர்ப்பதற்கு இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலைத் தூண்டி ஊக்க முடியும் என்று நான் இன்னும் நம்பினேன். ஆனால் எங்கள் கொள்கைகள் எத்தகையவையாக இருக்க வேண்டும் எதை ஆதாரமாகக் கொள்ள வேண்டும் என்பது எனக்கோ மற்றவர்களுக்கோ தெரியவில்லை. திக்குத் தெரியாத காட்டில் போல நாங்கள் வழிகெட்டு அலைந்தோம்.
அலெக்சாந்த்ரா கொலந்தாய்
ஒரே குழப்பம் இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலின் வீழ்ச்சியும் நிகழ்ந்த அந்தச் சமயத்தில் வர்க்க ஒற்றுமைக்கு புகழ்பாடிய முதலாளித்துவக் கட்சிகளின் எக்களிப்பு ஆரவாரத்துக்கு இடையே ஒலித்தது லெனினின் இடிக்குரல். உலகு அனைத்தும் எதிராகத் தன்னந்தனியே நின்று அவர் ஏகாதிபத்திய யுத்தத்தை நிர்தாட்சண்யமாகப் பகுத்தாய்ந்து அதன் உள்ளியல்பை உள்ளங்கை நெல்லிக்கனிபோலத் துலக்கமாக அம்பலப்படுத்தினார். இதைவிட முக்கியமாக, இந்த யுத்தத்தை உள்நாட்டுப் போராகவும் புரட்சியாகவும் மாற்றுவதற்கான வழிமுறைகளை அவர் தெளிவாகக் கோடிட்டுக் காட்டினார். அமைதியை விரும்புபவர்கள் சந்தர்ப்பவாதத்தின்மீது போர் தொடுக்க வேண்டும். சொந்த நாட்டு முதலாளி வர்க்கத்துடன் சமரசம் செய்து கொள்ளும் போக்கை நிராகாரிக்க வேண்டும் என்றார் அவர்.
கட்சியின் மைய வெளியீடான “ஸொத்ஸியால் – டெமாக்ராத்தின்” பல இதழ்கள் சுவிட்ஸர்லாந்திலிருந்து ஸ்டாக்ஹோம் வந்து சேர்ந்தன. யுத்தத்தைப் பற்றியும் எங்கள் கடமைகளைப் பற்றியும் லெனினது கொள்கைகள் அவற்றில் அடங்கியிருந்தன. எனது வாழ்க்கையின் மிக முக்கியமான கணங்களில் ஒன்றாக அது விளங்கிற்று. எந்தச் சுவற்றில் நான் தலையை மோதிக் கொண்டிருந்தேனோ அதை லெனினது கட்டுரைகள் சுக்கு நூறாகத் தகர்த்து விட்டன. இருள் அடர்ந்த ஆழ் கிணற்றுக்கு உள்ளிருந்து மறுபடி வெயிலொளிக்கு வந்துவிட்டது போல எனக்குத் தோன்றியது. மேலே செல்வதற்கான பாதையை நான் கண்டேன். அது தெளிவாக துலக்கமாக இருந்தது. நான் செய்ய வேண்டியதெல்லாம் புரட்சிகரத் தொழிலாளி வர்க்க அணிகளில் சேர்ந்து விளாதீமிர் இல்யீச் லெனினைப் பின்பற்றுவது மட்டுமே. ரஷ்யாவில் இருந்த மத்தியக் கமிட்டி பீரோ லெனினின் கருத்துக்களை ஏற்கனவே செயல்படுத்திவந்தது என்பது எங்களுக்கு வெகு காலத்துக்குப் பின்னரே தெரியவந்தது.
லெனின் மனிதகுலம் அனைத்துக்கும் மேலே நிற்கிறார், நமக்குப் புலப்படாத உண்மைகளைத் தமது அசாதாரண சிந்தனைத திறன் காரணமாகவே அவரால் காணமுடிகிறது என்று எனக்குத் தென்பட்டது. அவரது கங்கு கரையற்ற மன, ஆன்மிக அஞ்சாமையை அப்போது தான் நான் புரிந்து கொண்டேன். சந்தர்ப்பவாதிகளான காவுத்ஸ்க்கியும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் எவ்வளவு இழி நிலையில் வீழ்ந்தார்களோ, இந்த ரத்தக் களறி குழப்பமனைத்திலும் திட்டவட்டமாக வழிகாட்டிய மனிதரின் அச்சமற்ற, வளையா உறுதி வாய்ந்த உருவம் அவ்வளவு மேல் நிலைக்கு உயர்ந்தது.
தோழர் லெனின்
1914, அக்டோபரில் நான் லெனினுக்கு எனது முதல் கடிதத்தை எழுதினேன். அவருடைய பதில் ஒரு ரஷ்யத் தோழர் மூலம் எனக்குக் கிடைத்தது. உடனே வேலை தொடங்கும் படியும், தொழிலாளி வர்க்கத்தின் அடுத்த போராட்டம் பற்றிய தமது கொள்கையைச் செயல்படுத்த உதவக்கூடிய ஸ்காண்டினேவிய சோஷலிஸ்டுகளுடன் தொடர்பு கொள்ளும் படியும் அதில் லெனின் எனக்குக் கட்டளை இட்டிருந்தார். அந்தச் சமயம் முதல் நான் லெனினின் நேரான தலைமையில் வேலை செய்யலானேன்.
அதேசமயம், லெனினுக்கும் ரஷ்யாவிலிருந்த மத்தியக் கமிட்டி பீரோவுக்கும் ஸ்காண்டினேவியா வழியே நிலையான தொடர்பு ஏற்படுத்தும் பொறுப்பு எனக்கும் வேறொரு தோழருக்கும் கொடுக்கப்பட்டது. இந்தத் தொடர்பு உரிய முறையில் ஏற்படுத்தப்பட்டது, ஹாமர்ஷேல்டின் கன்சர்வேடிவ் சர்க்கார் “போல்ஷ்விக் மைய நிலையத்தை” மூடிவிடத் தீர்மானிக்கும் வரை தொடர்ந்து இயங்கியது. நான் கைது செய்யப்பட்டு குங்ஸ்ஹோல்மன் என்னும் இடத்தில் சிறைவைக்கப்பட்டேன்.
பினனர், ஸ்வீடனிலிருந்து வெளியேற்றப்பட்டேன். சில நண்பர்களின் உதவியால் நார்வேயில் ஓஸ்லோ நகரின் புறத்தே ஹோமென் கோலென் என்னும் வட்டாரத்தில் தங்கி வசிக்க எனக்கு வாய்த்தது. குறுங்குடாவுக்கு மேலே மலைமீதிருந்து எனது சிறு சிவப்பு வீட்டிலிருந்து எனது கேள்விகளும் உத்தரவுப்படி எழுதப்பட்ட பிரசுரங்களும் கட்டுரைகளும் லெனினுக்கு அனுப்பப்பட்டது. லெனினது கடிதங்களை இந்த வீட்டில்தான் நான் திறந்து பார்த்தேன். இதே சிறு சிவப்பு வீட்டில்தான் நார்வே இடதுசாரியினரின் தீர்மானம் உருவாக்கப்பட்டது. இடதுசாரி ஸிம்மெர்வால்டை ஆதரிக்கும் இந்தத் தீர்மானம் லெனினால் அங்கீகரிக்கப்பட்டது.
அந்த ஆண்டுகளில் நான் லெனினைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவர் எனக்கு வெறும் மனிதராக அல்ல, மனித குலத்தின் ஆயிரமாண்டுகாலச் சமூக பொருளாதாரப் படிவுகளைப் பெயர்த்துத் தள்ளும் இயற்கை விண்வெளி ஆற்றலின் உருவமாகவே என் கற்பனையில் காட்சி அளித்தார். சமூக உறவுகளில் யாவற்றிலும் பெரிய புரட்சிக்கு, புதிய கொள்கைகளின் அடிப்படையில் சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு உரிய திட்டம் முழுமையடைந்து வரையறுக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
படிக்க :
♦ ஒரு கம்யூனிஸ்ட்டாக பரிணமித்த இளம் எங்கெல்ஸ் || தோழர் லெனின்
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
ஏகாதிபத்தியப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. அது மட்டுமல்ல, லெனினது முயற்சியாலும் சமூகத்தின் சமுதாய அமைப்பில் பிளவுகள் ஏற்படத்தொடங்கிவிட்டன. இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் துணுக்குகளாகச் சிதறிவிட்டது. எனினும்  லெனின் மையமாகக் கொண்டு புதிய, பசிய முளைகள் கிளம்பலாயின. இந்த காரணத்தால் தான், பழிகேடு அடைந்த இரண்டாவது கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலிலிருந்து புரட்சி மனப்பான்மை கொண்ட சோஷலிஸ்ட் இளைஞர்களைத் தேடிப் பொறுக்கி இடதுசாரி ஸிம்மெர்வால்டைச் சுற்றி அணிதிரட்டுமாறு 1915-லும் 1916-லும் லெனின் எனக்கு உத்தரவிட்டபோது, இந்த வேலை எதிர்பார்த்ததைக் காட்டிலும் எவ்வளவோ எளிதாக எனக்குப்பட்டது.
ஏகாதிபத்திய யுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் இடதுசாரி ஸிம்மெர்வால்டின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு ஆதரவு அளிப்பதற்கும் போஸ்டனிலிருந்து ஸீட்டல் வரையிலும் சக்திகளைத் திரட்டும் பொருட்டு நான் அட்லான்டிக் மாகடலை இரண்டு தடவை கடக்க நேர்ந்தது.
(இவர் தான் லெனின் நூலிலிருந்து…)
அலெக்சாந்த்ரா கொலந்தாய்
புத்தகம் : இவர்தான் லெனின்
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ.140
தொடர்புக்கு : 9445123164

தோழர் லெனினின் சாதனைகள் ! வீடியோ

தோழர் லெனின் நடத்திக்காட்டிய ரசிய சோசலிசப் புரட்சி உலகெங்கிலும் பல்வேறு நாடுகளில் நடைபெற்றப் புரட்சிகளுக்கு அடிகோலிட்டது. இந்தியாவில், தனது இறுதி மூச்சு வரை ஆங்கிலேயர்களை தூங்க விடாமல் செய்த தோழர் பகத்சிங் தனது ஆதர்சன நாயகனாக குறிப்பிடுவது தோழர் லெனினை மட்டுமே.

இதோ லெனினின் சாதனைகள் – ரசியப் புரட்சி தோற்றுவித்த உலகளாவிய சாதனைகளை இந்தக் காணொளியில் காணுங்கள் …

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

(குறிப்பு : 2017-ம் ஆண்டு ரஷ்ய புரட்சியின் 100-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட காணொளியை தற்போது ஏப்ரல் 22, 2022-ம் ஆண்டு தோழர் லெனினில் 152-வது பிறந்தநாளில் மீள்பதிவு செய்கிறோம்!)

வேலையில்லாத் திண்டாட்டம் : பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !

வேலையில்லாத் திண்டாட்டம், தாளாத கடன்சுமைகளால் பெருகிவரும் தற்கொலைகள் :
பாசிசப் பேயாட்சியின் பிடியில் உழைக்கும் மக்கள் !
ந்தியாவிலுள்ள இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்காமல், சுயதொழில் தொடங்கி தொழில்முனைவோராக வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வட தமிழக பிரிவு தலைவர் கே.குமாரசாமி. இது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற அகில இந்திய பிரதிநிதிகள் கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
“ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வேலைவாய்ப்பைப் பற்றி கவலைப்படுவதெல்லாம் முதன்முறை” என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. இந்துமதம் ஆபத்திலிருப்பதாக பெரும்பான்மை மக்களை மதவெறியூட்டுவது, சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை மேற்கொள்வது, கலவரங்களை நடத்துவது, அரசு நிறுவனங்களில் சங்கிகளை நுழைப்பது – சுருக்கமாக, நாட்டை இந்துராஷ்டிரமாக கட்டமைப்பதைத் தவிர வெறெதையும் அறிய விரும்பாதது ஆர்.எஸ்.எஸ். இப்படிப்பட்ட ஒரு பாசிச அமைப்பு வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து கவலைப்படுது ஏன்?
ஏனென்றால், வேலையில்லாத் திண்டாட்டம் என்பது இன்று நம் நாட்டில் ஒரு கடுமையான பிரச்சினையாக முற்றி நிற்கிறது. வறுமை, உத்தரவாதமற்ற வாழ்நிலை, தாளாத கடன்சுமை ஆகியவற்றால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்பவர்களின் எண்ணிக்கையும் பெருகிவருகிறது. எனவே ஆர்.எஸ்.எஸ்.கூட இதுகுறித்து கருத்துசொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
000
“வறுமை காரணமாக அண்ணன் தங்கை தற்கொலை, பணியைவிட்டு நீக்கியதால் புகைப்படக் கலைஞர் தற்கொலை, கடன் தொல்லை அவதியால் விவசாயி பலி, வேலையின்மையால் மனமுடைந்த வாலிபர் தூக்கு” என தற்கொலைகளெல்லாம் அன்றாடச் செய்திகளாகிவிட்டன.
படிக்க :
♦ அமெரிக்க வல்லரசில் உச்சம் தொடும் வேலையில்லா திண்டாட்டம் !
♦ பக்கோடா புகழ் மோடி ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு !
உத்தரப் பிரதேசத்தில் ஷூ கடை வைத்திருந்தவர் 40 வயதான ராஜீவ் தோமர். மோடி அரசு அமல்படுத்திய ஜி.எஸ்.டி. வரிவசூலுக்கு பிறகு தனது தொழிலில் கடும் நெருக்கடியைச் சந்தித்தவர். 2020-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு, தொழில்நசிவை மேலும் தீவிரப்படுத்தி அவரை கடனாளியாக்கிவிட்டது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம், தனது தொழில் நட்டம் பற்றி முகநூல் நேரலையில் பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகிலிருந்த அவரது மனைவி தடுக்க முயன்றும் முடியாததால், அவரும் விஷம் குடித்துவிடுகிறார். இத்தற்கொலை முயற்சியில் அவரது மனைவி இறந்துவிட்டார்.
தற்கொலை செய்துகொள்வதற்குமுன் முகநூல் நேரலையில் அழுதுகொண்டே, அவர் இவ்வாறு பேசினார்: “நான் பேசுவதற்கு சுதந்திரம் இருக்கிறது என நினைக்கிறேன். நான் எனது கடனை நிச்சயம் அடைப்பேன். நான் செத்தாலும் அடைப்பேன். ஆனால் என்னுடைய இந்த காணொலியை முடிந்த அளவு எல்லோரும் பகிரவேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நான் தேசவிரோதி அல்ல. மோடி ஜியிடம் நானொன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் சிறுவணிகர்கள், விவசாயிகளின் நலன்விரும்பி அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ளுங்கள்.”
“ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம்” என்பதுபோல, இதுவொரு தனித்த நிகழ்வல்ல. 2018 முதல் 2020-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் மட்டும் வேலையின்மை, கடன் மற்றும் வியாபார நெருக்கடி ஆகிய காரணங்களால் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 25,000 ஆகும். பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய உள்துறை இணை அமைச்சரே தெரிவித்த புள்ளிவிவரம் இது.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அளித்த இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2018 – 2020 ஆண்டுகளுக்கு இடையில், வேலையின்மை காரணமாக 9,140 பேர், கடன் அல்லது வியாபார நஷ்டம் காரணமாக 16,091 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
2020-ஆம் ஆண்டில் மட்டும் அதிக அளவிலான தற்கொலைகள் நடந்துள்ளது. அந்த ஆண்டில்தான் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அக்காலத்தில் வேலையின்மை அல்லது வேலையிழந்த காரணத்தால் 3,548 பேரும் கடன் தொல்லையால் 5,213 பேரும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
000
மோடி அரசு 2016-ஆம் ஆண்டு மேற்கொண்ட பணமதிப்பழிப்பு நடவடிக்கை, அதைத்தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய ஜி.எஸ்.டி. வரிவசூல் முறை ஆகியவை பலரை சிறு வியாபாரத்தை விட்டே துரத்தியது. இனி வாழ்க்கையை எப்படி ஓட்டுவது, கடனை எப்படி கட்டுவது என்ற பயத்தால் பலர் தற்கொலை செய்துகொண்டனர். இக்காலக்கட்டத்தில் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் 2000 – 2010க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில், 2018-ஆம் ஆண்டில் (ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளால்) வேலையிழப்பு 6 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக இப்பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது.
ஆனால் கொரோனா ஊரடங்கால்தான் வேலையின்மை அதிகரித்தது. ஆனால் தற்போது நிலைமை சீராகிவிட்டது; அனைத்தும் ‘சுபிட்சமாகிவிட்டது’ என கதைக்கிறார்கள் பா.ஜ.க. ஆதரவாளர்கள்.
மத்திய உள்துறை இணை அமைச்சர் மாநிலங்களவையில் உண்மையை போட்டுடைத்த அதேநேரத்தில், “நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்பதே கிடையாது; வேலையில்லாமல் இருப்பதெல்லாம் காங்கிரஸ் தலைமைதான்” என்று நக்கலடிக்கிறார் கர்நாடக பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யா.
2020-ஆம் ஆண்டுக்கு முன்பே ரியல் எஸ்டேட் துறை வீழ்ச்சியடைந்துவருகிறது. அசோக் லேலாண்ட், டி.வி.எஸ். உள்ளிட்டு பல ஆட்டோ மொபைல் துறை வீழ்ச்சியை சந்தித்தது. நான்கு சக்கர வாகனங்கள் விற்காமல் தேங்கியிருந்த நிலையில், கார் கம்பெனிகளுக்கு உதிரிபாகங்கள் தயாரித்துவந்த பல சிறு நிறுவனங்கள் காலவரையின்றி மூடப்பட்டன; தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டார்கள், கட்டாய விடுப்பு, சம்பளக் குறைப்பு போன்றவை அமலாகின. ஐ.டி. துறை தொழிலாளர்களுக்கும் இதேநிலைதான். பார்லே ஜி பிஸ்கட் கம்பெனி தன்னுடைய ஊழியர்களில் 10,000 பேரை வேலையைவிட்டு நீக்கியது.
45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, வேலையில்லாத் திண்டாட்டம் என்பது 6.1 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக 2017-18 ஆம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வு அலுவலகத்தின் (National Sample Survey Office) அறிக்கை கூறுகிறது. ஆக, ஏற்கெனவே இருந்த இந்த நெருக்கடிகளை கொரோனா ஊரடங்கு தீவிரப்படுத்தியுள்ளது என்பதுதான் உண்மை.
000
வேலைக்காக காத்திருக்காமல் சுயதொழில் தொடங்கி பிழைத்துக் கொள்ளச் சொல்கிறது ஆர்.எஸ்.எஸ். இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாய்ச்சவடாலடித்து ஆட்சியைப் பிடித்த மோடி, அதிகாரத்திற்கு வந்தபின்பு “பகோடா விற்றுப் பிழைத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்னார். அதைத்தான் ஆர்.எஸ்.எஸ். வேறு வார்த்தையில் சொல்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெங்காயம் விலை திடீரென கடுமையாக உயரத்தொடங்கியது. அப்போது இதுபற்றி நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனோ “நாங்கள் பூண்டு, வெங்காயம் சாப்பிடுவதில்லை” என நடாளுமன்றத்திலேயே பார்ப்பனத் திமிரோடு பேசினார். பகோடா விற்பதற்குகூட வெங்காயம் வாங்க வேண்டுமே!
இதேபோலத்தான் சமீபத்தில், பெட்ரோல்-டீசல் விலையுயர்வு விவாதப் பொருளானபோது “இதையெல்லாம் பார்த்துக் கொள்ளவா மோடி பிரதமரானர்?” என்று கேட்கிறார் ஒரு பா.ஜ.க. எம்.பி. அப்போது யாருக்காகத்தான் மோடி பிரதமனார்? இதற்கான பதிலை “ஹுருன் இந்தியா” என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள 2022-ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியல் கொடுக்கிறது.
படிக்க :
♦ இரயில்வே பணிக்காக தேர்வெழுதிய மாணவர்கள், போராட்டம்! தீவிரமடையும் வேலையில்லாத் திண்டாட்டம்!!
♦ வேலையில்லா திண்டாட்டம் : 15 பணியிடங்களுக்கு 11000 பேர் விண்ணப்பம் !
அந்த அறிக்கையின்படி, கடந்த பத்தாண்டுகளில் அதானியின் சொத்து மதிப்பு மட்டும் 1830 சதவிகிதம் அதிகரித்துள்ளது; அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதம் அதிகரித்துள்ளது; கடந்த ஆண்டில் (2021) மட்டும் கௌதம் அதானி 4,900 கோடி அமெரிக்க டாலர் சொத்து சேர்த்துள்ளார்; அந்த ஆண்டில், உலகின் முதல் மூன்று பணக்காரர்கள் சேர்த்த சொத்துக்களைவிட இது அதிகமாகும் என்று அந்த அறிக்கையின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதற்காகத்தான் மோடி இரவும் பகலும் உழைத்தார்/உழைக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், இலட்சக்கணக்கான மக்கள் தங்களது வேலைவாய்ப்பை இழந்து ஒருவேளை சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமில்லாத நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களின் மறுவாழ்வுக்காக எந்த திட்டங்களையும் அறிவிக்காத மோடி அரசு, ‘ஆத்மநிர்பர்’ என்ற பெயரில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கியது. தற்போது பணமயமாக்கல், உள்கட்டமைப்பு திட்டம் என்ற பெயரில் பொதுத்துறைகளை தாரைவார்த்து வருகிறது. இதுதான் கார்ப்பரேட் முதலாளிகளின் தொப்பை பருத்துக் கொண்டே செல்வதற்கான காரணம்.
வேலைவாய்ப்பின்மை, வறுமை, கடன்சுமை ஆகியவற்றால் கோடிக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டு செத்து மடிகிறார்களே அதற்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் அசுர வளர்சிக்கும் தொடர்பு இல்லாமல் இல்லை.
நமது வரிப்பணம்தான் முதலாளிகளுக்கு மூலதனக் கடன்களாகவும் வரிச்சலுகைகளாகவும் கொட்டப்படுகிறது. நமது வியர்வையில் செழித்த பொதுத்துறைகளை அடிமாட்டு விலைக்கு வாங்கித்தான் அவர்களது மூலதனக் கட்டமைப்பு விரிகிறது. அரசு என்ற பெயரில் இதற்கெல்லாம் ‘ஏற்பாடு’ செய்துகொடுப்பது மோடி ஆட்சிதான். இந்த பாசிசப் பேயாட்சியை தூக்கியெறியாமல் இந்த துயரத்திற்கெல்லாம் விடிவில்லை.

வெண்பா

The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra

Twelve Rajya Sabha MPs from the opposition were suspended throughout the session for insulting the ‘non-existent democracy’ by indulging in ‘ruckus’ in the last concluded Winter Session of Parliament. The only possible thing the opposition could do was to cry out against the deprivation of parliamentary ‘freedom to debate’. The Modi government, which only has a trifle majority in the Rajya Sabha, (BJP alliance – 119 seats, opposition parties – 118 seats) with its suspension move this time, has reduced the noise of the cry. The Election Laws (Amendment) Bill, 2021 was passed in both the houses of the Parliament on December 20 and 21, even as the opposition parties continued to protest against the suspension.
“This amendment is being introduced to eliminate the ‘frauds’ by which a person votes twice. By linking Aadhaar card with voter id, we can eliminate bogus votes and create a ‘fair electoral system’. And the opposition parties are ‘hindering’ this” – This is the impression that the fascist Modi government has created.
Read :
♦ The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!
♦ Afghan people starving to death because of US hegemony !
Prior to the enactment of this Law, on December 18, the Prime Minister’s Principal Secretary held a meeting with the Election Commissioners of India. This proves that the Election Commission, like many other government agencies such as the CBI, the ED & the NIA, was a puppet of the saffron fascists. Election commissioners used to call other officials if they need any information. Though this unusual meeting stirred strong opposition, the Modi government was not bothered.
Aadhaar Linking: Legal History of Monitoring
What is Aadhaar? Why is it created? Aadhaar Act, 2016 – Aadhaar (Targeted Delivery of Financial and Other Subsidies, Benefits and Services) Act, 2016 – is said to be enacted for the following purpose: “Subsidies and benefits do not reach the poor people of the country properly. Therefore, Aadhaar was created to prevent corruption and malpractices.” This explanation makes it clear that Aadhaar is not something for all people.
The Unique Identification Authority of India (UIDAI) was formed by the then Congress government in 2009 with Nandan Nilekani, Co-founder of Infosys, as its Chairman. The question arose whether Aadhaar was legal, since UIDAI was established without any statutory backing. Later, Aadhaar Bill was introduced as a Money Bill in 2016.
Aadhaar became legally valid after the majority verdict of the Supreme Court in a public interest litigation that challenged the constitutional validity of Aadhaar. It was also ruled that Aadhaar should not be made mandatory for all; but only for subsidies and government schemes and no one should be affected by the lack of Aadhaar. Further the Court ruled that Aadhaar was not mandatory to open a bank account, enrollment in school and for getting a SIM card.
The same Court also passed a verdict in later days that made “Aadhaar mandatory” while responding for a PIL. Aadhaar had already brought 99% of the people within its purview by the time the court reached a verdict. Aadhaar, which was illegally mandated from 2010 to 2019, was legalised by the Supreme Court’s decision.
The key to our privacy in the hands of Saffron – Corporate coterie!
The question that whether Aadhaar is safe has not yet been answered. A link for obtaining BJP membership is sent to a person from Lawspet Assembly Constituency, Puducherry. As soon as he clicks on it, he learns that the link goes to the WhatsApp group that connects all the voters in Lawspet. How could the BJP knew which constituency and which booth he belonged? The question arose as to how the BJP knew his address from Aadhaar which he used to buy a SIM card. He belongs to the CPM’s Youth Organization (DYFI). He filed a PIL in March 2021. The court was ‘shocked’ and adjourned the case seeking clarification from the Aadhaar Authority.
Since its inception, the Aadhaar has several flaws and illegalities. The election laws have now been amended to link this flawed Aadhaar with the voter id. Voter id is a public document. Anyone including agents of all political parties can use the information in it. But Aadhaar includes personal biometrics like fingerprints and iris recognition scan. It is a private document containing a person’s identity and information. It is unconstitutional to make it a public document.
The Election Laws (Amendment) Bill, 2021 was tabled in the Parliament on the morning of December 20, 2021 and was passed by that evening itself. “Public opinion should be sought before introducing a law. We, the representatives of the people, were not consulted. The law has been enacted in the name of ‘Electoral Reforms’ without seeking feedback from any political party or people” said recognition T R Baalu, MP, parliamentary committee leader of DMK.
“It is not mandatory to link Aadhaar with voter id” the Modi government says. But this amendment, which does not have the details on when can the authorities ask for the Aadhaar and in what context people can refuse to provide Aadhaar, will make Aadhaar mandatory. The Supreme Court has already said that Aadhaar is not mandatory for availing essential services. But what’s happening in reality? Aadhaar is mandatory for buying SIM cards, registration of properties, buying gas cylinder, admission to school etc. Aadhaar card is being asked even for corona vaccine. Though the Modi government said that the Aadhaar is ‘not mandatory’, it has made Aadhaar mandatory for everything.
Everything, from groceries to cow dung, has been brought under e-commerce. If we search for a specific product on an Android phone, ads about that product chases us everywhere, irrespective of the site we surf. If we watch a video, videos relating to that come to our faces without our permission for days. When Aadhaar is linked with hospital, bank account, school, college, licenses, vaccine, credit card, G-mail, YouTube, Facebook etc, it becomes a linchpin to all the data about an individual.
With this, it is now easier for corporates to know a man’s wishes, needs and what should be talked to him to make him buy a product. With these details, the corporates could accurately conceptualise the voters through the media, the internet and social media in order to bring their henchmen to power.
Aadhaar – Voter id linking: A foundation to fascist tyranny!
The Modi-Amit Shah fascist clique, which works in a full swing in setting up a Hindurashtra by 2024, will use these electoral reforms to cut off the roots of the opposition and make them orphans. If Aadhaar containing personal information is linked with the voter id, the data will go into the hands of the BJP. By getting the details about the individuals who received benefits and subsidies from the government, they can even be intimidated to vote for the BJP. By knowing what a voter is looking for on Facebook, what he reads, and what he likes, he can be wooed to vote for a particular political party by targeting him with certain announcements.
This amendment will be used to intimidate the ‘unwanted’ voters who reject the BJP and to remove them from the electoral rolls. In particular, the amendment would serve to launch a precise attack on the electorate who did not vote for the BJP, just as the BJP planned to take away the citizenship of those it did not want through the National Population Register (NPR) and throw them into the fascist camps.
In 2015, the scheme to link voter id with Aadhaar was first implemented in the country in Andhra Pradesh and Telangana. The Election Commission, which had given up its responsibility to decide on who the voter was, said that the voter should prove himself by linking Aadhaar card with the voter id. Lakhs of voter ids which did not match with the Aadhaar details were removed. No verification was carried out in person or even through letters before the voter id was deleted. They were just removed as unwanted. The move to remove the voters was only dropped on the orders of the Supreme Court. Now many judgements, from Babri Masjid to Maridhas, are evidences for the judiciary’s morality. If someone goes to the Court, it is doubtful that justice will be served.
In 1935, citizenship was revoked for non-Aryans in Hitler’s Germany. Lakhs of Jews were made refugees and were sent to the detention camps. The world, in later years, was shocked to see how they were tortured and murdered. In 1938, a law was enacted forcing the compulsory registration of Jews. Through this, the population of Jews was counted and all their habitations and places of business were plundered. Hitler made only Jews to get registered in Germany. But Modi is making the entire country to register.
RSS – Sangh parivars, who killed thousands of Muslims during Gujarat riots, had electoral rolls. Using the electoral rolls, they identified the houses of the muslims and looted, killed and raped them.
If the BJP-RSS get the Aadhaar details, not only data about Muslims, but also Christians, Dalits, atheists, Communists and other political party members will be in their hands. Where are we working? In which school do our child study? What disease do we have? Who is our doctor? All these informations will be in their hands. We can’t escape anywhere. The fascist mob will follow us!
“Parliament is a pigsty”, said Comrade Lenin. Many people keep wallowing in this pigsty saying, ‘Parliament is sacrosanct’ and ‘The sewer should be cleaned’. Those who said so have lamented that they had not been given the right to comment on the Citizenship Amendment Act, the Farm laws and the Amendment to the Election Laws. They plead with the fascist Modi government to include in the act, a clause on who should not be allowed to use personal information, if aadhaar card is linked with voter id.
Read :
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
♦ Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
The aim of the Modi-Amit Shah fascist clique is to regain power in 2024 and fulfil its Hindurashtra dream. They are preparing for it through legal and illegal means. Modi is destroying the parliamentary democracy by bringing all voters into the surveillance ring and cutting off the roots of the opposition parties. The opposition parties are just lamenting and watching it.
Either we should kneel before the fascists or fight against them. There was no other way inbetween. We must stand firm in the reality that the fascists cannot be subjugated by parliamentary cries or court appeals. There is no history of fascists lasting for a very long time. It is a must of the times, for the fascists to kneel before the power of the people. The “Delhi Chalo” farmers’ agitation against the Farm laws is the latest evidence of that. And the only way to bring down the saffron – fascist mob including the RSS – BJP & Ambani – Adani is to fight against them by building an anti-fascist people’s alliance of all the working people.

Tamil

மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுக்கும் ஆர்.எஸ்.எஸ் ஆளுநர்கள் !

டந்த காலங்களில் புதுச்சேரி முதல்வர் நாரயாணசாமியும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆளுநர் மாளிகை வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டது நமக்கு நினைவிருக்கும். அங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அதிகாரம் ஆளுநர்களால் கேலிக் கூத்தாக்கப்பட்டது.
இந்த அதிகார குறுக்கீடுகள் யூனியன் பிரதேசங்களோடு நின்றுவிடல்லை, மாநிலங்களிலும் நடைபெறவே செய்கின்றன. தனது இந்துராஷ்டிரக் கனவிற்கான பாதையை செப்பனிடுவதற்காக, எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் தனது உளவாளிகளை “ஆளுநர்கள்” என்ற போர்வையில் அனுப்பிவைத்து கட்டுப்படுத்திவருகிறது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.
இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி முதல்வர்களுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் கங்காணிகளான ஆளுநர்களுக்கும் இடையில் வெளிப்படையான மோதல் வெடித்துள்ளது.
000
தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் அமர்ந்த சில மாதங்களிலேயே, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் ஐந்தாண்டு பதவிக்காலம் முடியாமலேயே வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, நாகலாந்தின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
படிக்க :
♦ பிரிட்டிஷால் உருவாக்கப்பட்ட கங்காணி பதவியே ஆளுநர் பதவி !
♦ ‘பாசிச படையெடுப்பின் கை தேர்ந்த உளவாளி’ ஆர்.என். ரவி !
உளவுத்துறை பின்புலம் கொண்ட இவர் அனைவரும் எதிர்பார்த்தபடியே தனது அதிகார வரம்புகளை மீறி மாநில ஆட்சியில் குறுக்கிட்டார். பதவியில் அமர்ந்தவுடன் வழக்கத்துக்கு மாறாக சட்ட ஒழுங்கு மற்றும் உளவுத்துறை டிஜிபிக்களை நேரில் அழைத்து பேசி முதல் பரபரப்பை ஏற்படுத்தினார். தலைமைச் செயலரை தனக்கு நேரடியாக அறிக்கையளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
வி.சி.க, தமிழக காங்கிரஸ் உள்ளிட்ட தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள்கூட அப்பொழுதே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமது எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கிவிட்டன. தொடக்கத்தில் அமைதி காத்த தி.மு.க.வும் ஆளுநரின் தொடர்ச்சியான அதிகாரத்துவப் போக்கால், பின்னர் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் நான்கு மாதங்களுக்கு மேலாக நிலுவையில் வைத்திருந்தார் ஆர்.என்.ரவி. இது தொடர்பாக அமித்ஷாவை சந்திக்க சென்று பத்துநாட்களுக்கு மேல் காத்திருந்தும் சந்திக்க மறுத்ததால் எரிச்சலுற்ற டி.ஆர்.பாலு, “தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும்” என்று கொதித்தார். அப்பொழுது தொடங்கி வெளியே தெரியாமல் நடந்துவந்த மோதல் வெளிப்படையாகிவிட்டது. இதுவரை 19 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வருவதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். குறிப்பிடுகிறார்.
மேற்கு வங்க சட்டசபையில், ஆளுநர் உரையை ஒரே வரியில் முடித்துவிட்டு வெளியேறும் ஜகதீப் தன்கருடன் வாக்குவாதம் செய்யும் முதல்வர் மம்தா.
மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவது மட்டுமின்றி, ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரனுக்கே உரிய வகையில் தனது சித்தாந்தத்தை பிரச்சாரமும் செய்துவருகிறார் ஆளுநர் ரவி. குடியரசு தினத்தன்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் “தெய்வீகம் கமழுகிற புனித திருக்குறள்”, “திருக்குறளில் இம்மைக்கும் மறுமைக்குமான ஞானம் காணப்படுகிறது”, “ஒவ்வொரு பாரதிய குடிமகனின் உளத்திலும் ஸ்ரீ ராமன் குடியிருக்கிறார்” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் நடைபெற்ற தென்மண்டல துணைவேந்தர்கள் மாநாட்டில் தலைமை வகித்து பேசியபோது, ‘பாரதத்தின்’ ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மீகங்களால் இந்தியா உருவானதாகவும் இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்தியாவை மாநிலங்களின் ஒன்றியம் என்று கூறுவதற்குமுன் அதை ‘பாரதம்’ என்றே விளிப்பதாகவும் பேசினார்.
000
அண்டை மாநிலமான கேரளாவில், ஆளுநர் ஆரிஃப் முகமது கானுக்கும் பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம். அரசுக்கும் இடையிலான முரண்பாடு இரண்டாண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது.
கேரள சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றபட்டபோது, “இவற்றையெல்லாம் நான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கமாட்டேன்; இது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது” என்று சீறினார் ஆளுநர்.
கடந்த பிப்ரவரி மாதம் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தனது கூடுதல் தனிப்பட்ட உதவியாளராக முன்னாள் பா.ஜ.க. மாநில நிர்வாகியை நியமித்ததற்கு பினராயி தலைமையிலான அரசு எதிர்ப்பு தெரிவித்தது. “ஆளுநர் மாளிகை விவகாரத்தில் தலையிடுவதற்கு கேரள அரசுக்கு அதிகாரமில்லை” என்றார் ஆரிஃப். அரசின் கொள்கை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்க மறுத்தார். கடைசியில், அரசின் சார்பில் ஆளுநருக்கு கடிதம் எழுதிய முதன்மைச் செயலர் கே.ஆர்.ஜோதிலால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட பிறகே அவ்வறிக்கையை சட்டமன்றத்தில் வாசித்தார்.
தமிழக ஆளுநர் ரவியைப் போலவே ஆர்ஃப் முகமதுகானும் தன்னை வெளிப்படையான சங்க பரிவாரமாகவே காட்டிவருகிறார். கர்நாடகத்தில் இசுலாமிய மாணவிகள் கல்விநிலையத்தில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடைவிதித்த உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்றுப் பேசினார். சமீபத்தில் காவி கும்பல் தனது முசுலீம் எதிர்ப்பு பயங்கரவாத நோக்கத்திற்காக கொண்டுவந்த, பொய்யை அடிப்படையாக கொண்ட “காஷ்மீர் ஃபைல்ஸ்” என்ற திரைப்படத்தையும் வரவேற்றார். ஆர்.எஸ்.எஸ். பின்னணி கொண்ட மத நிறுவனங்களின் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக சென்று பேசிவருகிறார்.
000
நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு வந்துள்ள மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி, அங்குள்ள கே.பி.ஹெட்கேவரின் சிலையை வணங்குகிறார்.
மாநிலத்தில் எந்த பிரச்சினை வந்தாலும் “சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது” என்ற மந்திரத்தை மறவாமல் ஓதுபவர் மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கர். அரசின் அன்றாட நடவடிக்கைகளில் குறுக்கிடுவதும் சிறுதுரும்பு காரணம் கிடைத்தாலும் அதைவைத்துக் கொண்டு மம்தா அரசுக்கு நெருக்கடி கொடுப்பதையும் அவர் திறம்பட செய்துவருகிறார்.
கடந்த 2021 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலில் மம்தா வெற்றியடைந்ததை அடுத்து, பல இடங்களில் பா.ஜ.க.வினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. இருதரப்புக்கும் இடையிலான மோதல் என்றபோதும் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசைக் குறிவைத்து அப்போதே “சட்டம்-ஒழுங்கு” போதனையை தொடங்கிவிட்டார் ஜெகதீப் தன்கர்.
அரசு அனுப்பும் எந்த கோப்புகளிலும் ஆளுநர் ஜெகதீப் தன்கர் கையெழுத்திடாமல் நிலுவையில் வைத்துள்ளதாக முதல்வர் மம்தா குற்றம்சாட்டிவருகிறார். இந்த மோதல் போக்கின் காரணமாக, ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி மம்தா பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது பற்றி மம்தா அரசு ஆலோசித்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி தனக்குள்ள சிறப்பு அதிகாரச் சட்டத்தைப் பயன்படுத்தி சட்டப் பேரவையை முடக்குவதாக ஆளுநர் அறிவித்தார். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் பின்பு ஆளும்கட்சி கேட்டுக்கொண்டதன் அடிப்படையிலேயே சட்டப்பேரவையை ஒத்திவைத்துள்ளதாக விளக்கமளித்தார்.
சமீபத்தில், பிர்பூம் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் கொல்லப்பட்டதை அடுத்து ஏற்பட்ட கலவரத்தில், வீடுகள் கொளுத்தப்பட்டதால் எட்டு பேர் பலியானர்கள். இச்சம்பவத்திற்கு பிறகு மேற்கு வங்கம் உச்சபட்ச கொதிநிலையில் உள்ளது. கடந்த 28-ஆம் தேதி சட்டப்பேரவையில் இதுதொடர்பாக எழுந்த பிரச்சினையில் பா.ஜ.க.வும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்தவர்களும் சரமாரியாக ஒருவரை தாக்கிக் கொண்டு காயமடைந்தனர். ஆளுநருக்கு ஆட்சிக் கவிழ்ப்பு வேளைகளில் ஈடுபடுவதற்கு இதுவொரு பொன்னான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
மம்தாவின் ஆட்சேபனையை நிராகரித்துவிட்டு பிர்பூம் கலவரம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது, அதற்கான முக்கியாமான நகர்வாக இருக்கப் போகிறது. இக்கலவரம் தொடர்பாக, நாடாளுமன்றத்தில் பேசிய பா.ஜ.க. எம்.பி. ரூபா கங்குலி, மே.வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என கூறியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
000
மகாராஷ்டிரத்தில் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறார். மே.வங்க, கேரள ஆளுநர்கள் செய்வதைப் போலவே அரசின் அன்றாட விசயங்கள் ஒவ்வொன்றிலும் தலையிட்டு எதிர்க்கருத்து சொல்லி வருகிறார்.
அயோத்தி இராமன் கோயிலுக்கு நிதி வழங்கும் கேரள ஆளுநர் ஆர்ஃப் முகமது கான்.
கொரோனா ஊரடங்கின்போது, மாநில அரசு கோயில்களைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீண்டினார். “மஹாராஷ்டிரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”, இதுகுறித்து சட்டமன்றத்தில் சிறப்பு விவாதம் நடத்த வேண்டும் எனப் பேசினார். மேலும் அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இன்றுவரை இழுத்தடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் மஹாராஷ்டிர அவைத் தலைவராக இருந்த நானா பட்டோல் தனது பதவியை துறந்துவிட்டு, மாநில காங்கிரஸ் தலைவராகிவிட்டார். அதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தி புதிய அவைத்தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு ஆளுநர் கோஷியாரி அனுமதி மறுத்துவருகிறார். மறைமுகத் தேர்தலுக்கு பதிலாக, நேரடித் தேர்தல் நடத்தி அவைத்தலைவரைத் தேர்ந்தடுப்பதற்காக உத்தவ் தாக்கரே கொண்டுவந்துள்ள சட்டத்திருத்தமே அதற்கான சப்பைக் காரணமாக சொல்லப்படுகிறது.
உண்மை என்னவெனில், மறைமுகத் தேர்தல் நடந்தால் குதிரை பேரம் மூலம் தங்கள் கூட்டணிக் கட்சியினரை விலைபேசி ஆட்சியைக் கவிழ்த்துவிடுவார்கள் என்ற பயம்தான் உத்தவ் தாக்கரே தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்யக் காரணம்.
படிக்க :
♦ ஆர்.என். ரவி : தமிழ்நாட்டைச் சுற்றிவளைத்துள்ள நச்சுப் பாம்பு !
♦ சூரப்பாவை இடைநீக்கம் செய்வாரா தமிழக ஆளுநர் ?
ஆளுநர் ஒதுக்கீட்டில் உள்ள 12 சட்ட மேலவை உறுப்பினர்களை நியமிப்பதற்காக ஆளும்கட்சி கொடுத்த பட்டியலையும் ஏற்க மறுத்துவருகிறார் கோஷியாரி. இன்றுவரை இந்த உறுப்பினர் பதிவிகள் காலியாக இருக்கிறது. எப்படியாவது சிவசேனா தலைமையிலான அரசை கவிழ்க்க வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக வேலைசெய்துவரும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வின் நோக்கத்திற்கு பொருத்தமாக ஆளுநர் பகத்சிங் கோஷியாரி செயல்பட்டுவருகிறார்.
000
ஆர்.எஸ்.எஸ். சார்பு ஆளுநர்கள் மாநில அரசுகளில் தலையிடுவது ஏதோ ஆளும் கட்சிகளுக்கு ஏற்படும் பிரச்சினையல்ல. சொல்லிக் கொள்ளப்படும் மாநில அரசுகளின் இறையாண்மை கேலிக்குள்ளாக்கப்படுவதோடு தொடர்புடையது. தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வை தோற்கடித்தாலும் தனது கங்காணிகளான ஆளுநர்களை வைத்து அரசு அதிகாரத்தை அவர்கள்தான் கைக்குள் வைத்துள்ளார்கள். அதன்மூலம் மாநில அரசுகளை சுயேட்சையாக இயங்க முடியாமல் முடக்குகிறார்கள்.
நீட் எதிர்ப்பு மசோதா, எழுவர் விடுதலை மசோதா உள்ளிட்ட மக்களுடைய கோரிக்கைகள் சட்டமாக்கப்படாமல் தடுக்கப்படுகிறது. ஹிஜாப் தடையை ஆதரிப்பது, நீட்-புதிய கல்விக் கொள்கையை ஆதரிப்பது, இந்துத்துவ நச்சுக் கருத்துக்களை பிரச்சாரம் செய்வது என சகிக்கமுடியாத அடாவடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள் ஆளுநர்கள். பெருந்திரள் மக்கள் போராட்டத்தின்மூலம் அவர்களை மாநிலத்தைவிட்டே துரத்தியடிக்க வேண்டும். போராட்டப்பாதையின் மூலம் மட்டுமே மாநில அதிகாரத்தில் தலையிடும் ஆர்.எஸ்.எஸ் -பா.ஜ.க.வின் கொட்டத்தை அடக்க முடியும்.

துலிபா