Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 203

புத்தகத்தின் சாரம் : பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி ஒரு காஷ்மீர பண்டிட்டின் பார்வை வழியிலான கதை !

தி காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற திரைப்படம் 1990-ல் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து பண்டிட்டுகள் வெளியேற்றம் பற்றி சொன்ன திரைக்கதை மிகப் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மிகப் பலரும் அது “உண்மை” என்று சொன்னதில் உள்ள பொய்களை மறுத்தனர்.
பிரதீப் மேகசின்-இன் புத்தகமான ‘கிரிக்கெட் மட்டுமல்ல : நவீன இந்தியாவின் வழியே ஒரு பத்திரிகை செய்தியாளனின் பயணம்’, விவேக் ரெய்னா என்பவர் பார்த்த அந்த சம்பவங்கள் பற்றிய ஒரு நுணுக்கமான பதிவாகும். பள்ளத்தாக்கில் போராளிகளின் நடவடிக்கைகள் உச்சத்தில் இருந்தபோது அங்கிருந்து விவேக்குடும்பம் வெளியேறியது. ஹார்ப்பர் கோலின்ஸ் பதிப்பகத்தாரின் ஒப்புதலுடன் மறுபதிப்பு செய்யப்படுகிறது.
000
நான் காஷ்மீருக்கு பலமுறை வருகை தந்தபோது, காஷ்மீர பண்டிட் என்ற எனது அடையாளம் முஸ்லீம்களுடன் பேசும்போது இடையூறாக இருந்ததில்லை. ஆனாலும், 1990களிலான பண்டிட்டுகள் ‘வெளியேற்றம்’ பற்றி விவாதம் திரும்பினால் அவர்கள் தற்காப்பு வாதத்திற்குச் சென்றுவிடுவார்கள். சிலர் பண்டிட்டுகள் பள்ளத்தாக்கிலேயே தொடர்ந்து வாழ்வதற்கு உத்தரவாதப்படுத்தும் செயல்களைப் போதுமான அளவு செய்யாததற்கு வருத்தங்களைக் கூடத் தெரிவிப்பார்கள்! தில்லியில் குடியேறிவிட்ட விவேக் ரெய்னா என்ற சக காஷ்மீரி பண்டிட் கூட இதுபோன்ற அனுபவத்தைப் பெற்றுள்ளார். ‘1988 – 1990-க்கு இடைபட்ட அதிர்ச்சியூட்டும் அந்த கால கட்டத்தில் எங்கள் இனத்திற்கு நேர்ந்தது பற்றிய குற்ற உணர்வு இல்லாத ஒரு காஷ்மீரி முஸ்லீம் கூட இல்லை’ என விவேக் கூறுகிறார்.
படிக்க :
♦ முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !
♦ ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : காவிகளின் வெறியாட்டத்தை மறைக்கும் அக்னிகோத்ரி !
விவேக் வளர்ந்த சூழலில் அவருக்கு இந்து நண்பர்களைவிட இசுலாமிய நண்பர்கள்தான் மிக அதிகம். அவர் ஸ்ரீநகருக்கு அருகில் உள்ள பல பிரிவினரும் கலந்து வசித்த சட்டாபால் எனும் பகுதியில் வாழ்ந்தார். அவர் குடும்பமும் இசுலாமிய குடும்பங்களுடன் ஆழமான உறவு கொண்டிருந்தது. அவர் 1989-ல் காஷ்மீரின் புகழ் பெற்ற நேஷனல் பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவன். இது நான் குழந்தைப் பருவத்தைக் கழித்த கரன் நகர் பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. அவரைச் சுற்றி உள்ள உலகம் மிக மோசமாக மாரிக் கொண்டிருந்த சூழலில், பள்ளியின் 50-ம் ஆண்டு விழாவை மிகப் பெரிய அளவில் பிரம்மாண்டமாகக் கொண்டாட, பள்ளிக் குழந்தைகள் சுறுசுறுப்பாக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த விழா நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டன. அடுத்த ஓராண்டிற்குள் தமது வீட்டையும் பொருட்களையும் விட்டு விட்டு, தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவரது குடும்பம் நள்ளிரவில் வெளியேறியது.
அவரைச் சுற்றி தொல்லை தரும் அமைதி நிலவுவதை அவர் உணர்ந்ததாக நினைவு கூர்ந்தார். 1987-ம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தல் நடந்தது. முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட்-டுக்கும் ஃபரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த காங்கிரசுக்கும் முரண்பாடு வந்தது. காங்கிரசு கூட்டணி தேர்தலில் தில்லு முல்லு செய்து வெற்றி பெற்றுவிட்டதாக முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட் குற்றம் சுமத்தியது. பெருவாரியான மக்கள் அதிருப்தி அடைந்தனர். தோற்றுப்போன சில முஸ்லீம் யுனைட்டெட் ஃப்ரன்ட் வேட்பாளர்கள் பாகிஸ்தானின் இராணுவப் பயிற்சி பெற எல்லை தாண்டிச் சென்றதாக செய்திகள் வந்தன. லால்சௌக் பகுதியில் ஒரு குண்டு வெடித்தது. போராளிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமான சண்டையில் இடையில் சிக்கி ஒரு பண்டிட் கொல்லப்பட்டார்.
இந்த சம்பவங்கள் பண்டிட்டுகளுக்கு கவலையளித்தது, ஆனால் அங்கு பீதி ஏதும் தோன்றவில்லை. எதிர்ப்பாளர்கள் முழங்கிய முழக்கம் நம்பிக்கை ஏற்படுத்தியது என்பதை விவேக் நினைவில் வைத்துள்ளார். ‘பண்டிட் – முஸ்லீம் பாய் பாய், பாரதிய ஃபௌஜ் கஹான் செ ஆயெ? (பண்டிட்டும் முஸ்லீம்களும் சகோதரர்கள், எங்கிருந்து வந்தது இந்திய இராணுவம்?)’ என்பதே அந்த முழக்கம்! ஆயினும், விரைவிலேயே மசூதிகளில் டேப் ரிக்கார்டரில் பதிவு செய்யப்பட்ட ஆசாதி முழக்கங்கள் காதுகளைப் பிளந்தன. அவை மிகக் கடுமையாக இந்திய எதிர்ப்புத் தன்மை கொண்டிருந்தன.
இதைத் தொடர்ந்து இரண்டு சமூகங்களைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் குறிவைக்கப்பட்டு, அடுத்தடுத்து அலையலையாக கொல்லப்பட்டனர். பண்டிட்டுகளில் உயர்நீதிமன்ற நீதிபதி நீலகாந்த் கஞ்ஜூ, பாஜக தலைவர் டிகா லால் டப்லூ மற்றும் தூர்தர்சன் டைரெக்டர் லாசா கௌல் கொல்லப்பட்டனர். முஸ்லீம்களில் காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் முஷிர்-உல்-ஹக் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
இப்போது சட்டாபால் பகுதியிலிருந்த ரெய்னாவினர் கவலைப்பட்டாலும், பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறுவது என சிந்திக்கவில்லை. விவேக்கின் அப்பா ஓம்கார் நாத் சுகாதாரத் துறையில், அரசாங்க மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்தார். அருகில் வசித்த முஸ்லீம்கள் ஆதரவும் நம்பிக்கையும் கொடுத்து, பீதியடைய வேண்டாம் என ஆதரவு தந்தனர்.
இதே காலகட்டத்தில்தான் ஒன்றிய உள்துறை அமைச்சராக இருந்த முஃப்தி சையீதின் மகள் ரூபையா-வைக் கடத்திய தீவிரவாதிகள் அவரை விடுவிக்க பேரம் பேசி மிக அபாயகரமான சில காஷ்மீர் போராளிகளை விடுவித்தனர். தமது மகிழ்ச்சியைக் கொண்டாட வீதிகளில் இறங்கிய வெறிகொண்டவர்கள் போட்ட முழக்கங்கள் முழுக்க கடுமையான இந்திய எதிர்ப்பு முழக்கங்களாக இருந்ததோடன்றி, இசுலாமியத் தன்மையையும் கொண்டிருந்தது. இதைத் தொடர்ந்து மசூதிகளில் டேப்பில் பதிவு செய்த இஸ்லாமிய முழக்கங்கள் ஒலிபெருக்கியில் அலற, நகரம் முழுதும் அது எதிரொலித்தது.
பிறகு, ஜக்மோகன் இரண்டாவது முறையாக மாநில கவர்னராக பதவியேற்றார். ஒரு நாள் தனது மூன்று மாடி வீட்டின் பால்கனியிலிருந்து விவேக் பார்க்கும்போது, ஸ்ரீநகரிலுள்ள காவ் கடல் பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் அவர்கள் பீதியடைந்து ஓடிக் கொண்டிருந்தனர். கட்டுப்பாடற்ற அந்தக் கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினர் சுட்டதில் குறைந்த்து 28 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள். (மீண்டும் இங்கே எண்ணிக்கை 300 பேர் வரை என வேறுபடுகிறது). இந்த நிகழ்வு ‘காவ் கடல் படுகொலை’ என அறியப்படுகிறது. இந்த நிகழ்வுக்கு சற்று பின்னர் கீழ்த் தளத்தில் குடியிருந்த விவேக்கின் மாமா ராம்ஜி பால் வாங்கச் சென்றபோது சி.ஆர்.பி.எஃப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் அவர்களிடம் நான் ஒரு பண்டிட் என கூறியபோது, அவரை அடித்தவர்கள் கூறியது: ‘காஷ்மீரில் ஒரு நாய் கூட பாகிஸ்தானி தான்’. (’காஷ்மிர் கா குட்டா பி பாகிஸ்தானி ஹை’).
இப்படிப்பட்ட கொலை நிகழ்வுகள் அடிக்கடியும் அதிகரிக்கவும் தொடங்கியது. அதில் மிக மோசமானதை விவேக் நினைவு கூர்ந்தார்: ஷெர்-இ-ஹாஸ்பிடலில் (மருத்துவனை) ஒரு நர்ஸ் (செவிலியர்) பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமாக சிதைக்கப்பட்டார். உடனடியாக யாரும் எதுவும் செய்யலாம் என தறிகெட்டு நடக்கத் தொடங்கியது. அதிகரிக்கும் அரசின் ஒடுக்கு முறைகளுக்கும், இதோ விரைவில் விடுதலை கிடைக்கப் போகிறது என நம்பும் முஸ்லீம் மக்களின் விருப்பங்களுக்கும் இடையில் பண்டிட்டுகள் சிக்கிக் கொண்டனர். இந்த எல்லா நேரங்களிலும் போராளிகள் அவர் முஸ்லீமா? இந்துவா? என்றெல்லாம் பார்க்காமல் இந்திய ஆதரவாளர் என சந்தேகப்படும் ஒரு ஹிட் பட்டியலை வைத்துக் கொண்டு கொடூரக் கொலைகளையும் குண்டு வீச்சுத் தாக்குதல்களையும் தொடர்ந்தனர். யார் ஒருவரும் பண்டிட் சாதியினரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தர முடியாது.
படிக்க :
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ : இசுலாமிய எதிர்ப்புணர்வை தூண்டும் பிரச்சார வாகனம் !
காஷ்மீர் : கருத்துரிமையை கல்லறைக்கு அனுப்பும் காவி பாசிசம் !
ஓர் இரவு பண்டிட் வீடுகளைத் தாக்கி சூறையாடவும் கொள்ளையடிக்கவும் ஒரு கும்பல் திட்டமிட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவியது. ரெய்னா குடும்பத்தினரின் வீட்டு முகப்பு வாயிற் கதவு இரும்பினால் ஆனது. அதில் மின்சாரத்தைப் பாய்ச்சி வைத்தனர். யாராவது அத்துமீறி நுழைய முயன்றால் மின்சார தாக்குதலுக்கு ஆளாகட்டும் என இந்த ஏற்பாடு. 14 வயதேயான விவேக் தன்னையும் தனது 4 வயது தங்கையையும் பாதுகாக்க ஒரு கிரிக்கட் மட்டையை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். சில மணி நேரங்கள் காத்திருந்த விவேக் எந்த பரபரப்பு நடவடிக்கையும் இல்லாமற்போகவே சலிப்புற்று, அவனது பெற்றோரிடம் ஏன் இன்னும் யாரும் வரவில்லை எனக் கேட்டு, செமத்தையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்.
பிற்பாடுதான் அண்டை வீட்டு முஸ்லீம்களும் தனது குடும்பத்தினர் போலவே தங்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு தயாரிப்பு செய்துகொண்டு இரவு முழுதும் பயபீதியில் கழித்ததாக விவேக் கண்டு பிடித்தார். இந்திய இராணுவம் அன்றிரவு இசுலாமியர் வீடுகளைத் தாக்கி, பெண்களைப் பாலியல் வன்முறைக்குள்ளாக்கி கொல்லப்போவதாக வதந்தி பரவியுள்ளது.
ரெய்னாவினருக்கு இறுதியாக ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அதில் அவர்கள் உடனடியாக வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப்போகவில்லை என்றால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என மிரட்டியிருந்துள்ளது. அவர்களும் மேலும் நான்கு பண்டிட் குடும்பங்களுடன் சேர்ந்து இரகசியமாக ஏற்பாடு செய்து, ஒரு லாரியின் பின்புறம் ஒளிந்து கொண்டு நள்ளிரவு 2 மணிக்கு அந்தப் பகுதியைவிட்டு வெளியேறிவிட்டனர்.

கட்டுரையாளர் : பிரதீப் மேகசின்
தமிழாக்கம் : நாகராசு
நன்றி : தி வயர்

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1
பாகம் : 2
பொது :
பெரும்பாலான அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சியில் இயற்றப்பட்டவை. நிச்சயமாகக் காலனித்துவ ஆட்சியாளர்களைத் துணிச்சலாக எதிர்த்துப் போராடிய லட்சக்கணக்கான தொழிலாளர்களின் போராட்டங்கள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தைப் பாதுகாப்பதற்காக, அவர்களின் நலனை தமக்கும் தமது சந்ததியினருக்கும் உறுதி செய்வதற்காகப் போராடிய தொழிலாளர்களின் சமாதிகளிலிருந்து உருவான சட்டங்கள் அவை. அந்த சட்டங்கள் மூலமாகத்தான் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வர்க்கத்தை தங்கள் பணி நிலையில் பாதுகாப்பதில் காலத்தின் சோதனையாகவும், தாவா, ஒப்பந்தங்களின் போது பேச்சுவார்த்தை என்கிற வகையில் முதலாளியுடன் எதிரெதிரே மேசையில் சமமாக அமர்ந்துதமது தரப்பை முறையிடுவதற்கான சமமான வாய்ப்பாகத் தொழிற்சங்கங்களுக்கு ஏற்கனவே உள்ள சட்டங்கள் இருந்து வருகின்றன.
ஆக்கிரமிப்பாளர்கள் கூட இந்த சட்டங்களை மதித்து தொழிலாள வர்க்கத்தின் உரிமைகளை உறுதிசெய்ததோடு, தொழிலாளர் நலனை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவைப்படும்போது அந்தச் சட்டங்களில் திருத்தங்களைச் செய்ய ஒப்புக் கொண்டனர்.
சுதந்திரத்திற்கு பிந்தைய ஆட்சியாளர்கள் விடுவிக்கப்பட்ட இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியின் நலனுக்காகச் சட்டங்களின் வீரியத்தைத் தொடர்ந்து வைத்திருந்தனர், அத்தகைய நிலை என்பது தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே சாத்தியமானது.
படிக்க :
♦ பெண் தொழிலாளர்களின் போராட்டத்தை எதிர்ப்பவர்களும் அவதூறு செய்பவர்களும்  யார்?
♦ ‘கிக்’ தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் அர்பன் நிறுவனம் !
ஆனால், இப்போது, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பழமையான சட்டங்களை ரத்து செய்வேதன்பது, தொழிலாளர்கள் தங்கள் சதை மற்றும் இரத்தத்தால் வென்ற தொழிலாளர்களின் உரிமைகளை ரத்து செய்வதற்கான வெளிப்படையான முயற்சியாகக் கருதி, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடமிருந்து எஞ்சியிருக்கும் உரிமைகளான நமது தாய் நிலத்தை மீட்டெடுக்கும் இறையாண்மை கடமையாகப் பார்க்க வேண்டியுள்ளது.
மத்திய அரசு இயற்றிய சட்டத் தொகுப்புகளில்
தொழிற்சாலைகளில், தொழில் நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் கட்டமைக்கப்பட்டால் 30 சதவீதத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளவர்கள் மட்டுமே பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும் (விதி 4 (சட்டப் பிாிவு 14(2)
தொழிற்தாவாக்கள் தொழிலாளர் ஆணையர் அலுவலக சமரச அலுவலர்கள் முன்பாக எடுத்துச் செல்லப் படுவதற்கு பதிலாக நிர்வாகம் பார்த்து நிர்ணயிக்கும் இசைவுத் தீர்ப்பாளர் (Arbitrator) முன் கட்டப் பஞ்சாயத்து செய்தபின்தான், நீதிமன்றம் செல்ல முடியும்
20 அல்லது அதற்கு மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களுக்குப் பொருந்தும் ஒப்பந்த தொழிலாளர் (ஒழிப்பு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1970 (CLA) இனிமேல் 50 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என இதில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பெரும் பகுதி தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு இல்லாமல் விடப்படுவதோடு அதீத சுரண்டலுக்கும் அவர்கள் ஆளாக நேரிடும்.
புலம் பெயர் தொழிலாளர்களின் நலன்கள் புறம் தள்ளப்பட்டுள்ளது
பணி நிரந்தரம் என்பது எட்டாக் கனியாகியுள்ளது
பொதுவாக வேலை நிறுத்த உரிமை என்பது டி.கே.ரெங்கராஜன் மற்றும் சிலர் -எதிர்- தமிழ்நாடு அரசு (2003 (6) SCC 581) என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக ஒருபுறம் கேள்விக்குறியதாக இருப்பினும்- தொழிற்தாவாச் சட்டத்திற்குட்பட்டு வரும் தொழிலாளர்கள் அந்த சட்டத்திற்கிணங்க 14 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளலாம்.
தவிர பணிச்சூழலில் பெரும் அசம்பாவிதம் நடந்து அது தொடா்பாக தொழிலாளர்கள் முறையிடுகிறபோது நிர்வாகம் அலட்சியம் காட்டினால் திடீர் வேலை நிறுத்தம் மூலம்தான் நிர்வாகத்தைப் பணிய வைக்க முடியும்.  பின்னர் பேச்சுவார்த்தையில் சமரச அலுவலர் முன்பாக அத்தகைய தவிர்க்க இயலாத வேலை நிறுத்தத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நிபந்தனை முடிவும் பல சந்தர்ப்பங்களில் நிகழ்ந்துள்ளது.  ஆனால் இனிமேல் இத்தகைய திடீர் வேலை நிறுத்தங்கள் (flash strike) எதையும் தொழிலாளர்கள் மேற்கொள்ள முடியாது. மேற்சொன்ன புதிய சட்டத் தொகுப்பின்படி இனிமேல் 60 நாட்கள் முன்பாக வேலை நிறுத்த முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். தவிர தாவா நடுவர் முன்பாக நிலுவையிலிருக்கும் போது நடைபெறும் வேலை நிறுத்தம் சட்ட விரோதம் என அறிவிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.   வேலை நிறுத்தம் செய்வதற்கு 60 நாள் முன்னறிவிப்புத் தேவை என்பதே வேலை நிறுத்தப் போராட்டமே செய்யக் கூடாது என்பதற்கான ஏற்பாடுதான். (பிரிவு: 62-64, தொழிலுறவு சட்டத் தொகுப்பு).
ஆலை மூடல், ஆட்குறைப்பிற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளது
தொழிற்சாலை என்பதன் வரையறைகள் மாற்றப்பட்டுள்ளது
குறிப்பிட்ட கால பணி நியமனம் (fixed term employment) என்பது நிலையாணை விதிகளில் உட்புகுத்தப்பட்டுள்ளது
தொழிற்சங்க உறுப்பினர் எண்ணிக்கை சரிபார்ப்பு என்பது முதலாளி நிர்ணயிக்கும் அலுவலரால் மேற்கொள்ளப்படும் என நிர்வாகத்தின் அதிகார வரம்பிற்குள் சென்றுள்ளது (விதிகள் பிரிவு 6 (பிரதான சட்டம் பிாிவு 14 (3), (4)
பொதுவாக தொழிற்சாலை சட்ட வரம்பிற்குள் வருகிற எந்த ஒரு தொழிற்சாலையையும் மூடுவதோ, கதவடைப்பு செய்வதோ மேற்கொள்வதற்கு முன்பாக தொழிலாளர் துறை மூலமாக அரசின் அனுமதி பெற வேண்டும்.  ஆனால் தற்போது மேற்சொன்ன புதிய சட்டத் தொகுப்பிற்கிணங்க (தொழிற்சாலைச் சட்டம் 1948ன் பிரிவு 2(எம்)ல் தொழிற்சாலை என வரையறுக்கப்பட்டுள்ள) எந்த ஒரு தொழிற்சாலையும் 300 தொழிலாளர்களுக்கு குறைவாக பணிபுரிவார்கள் எனில், அல்லது ஒரு ஆண்டில் சராசரியாக பணியில் ஈடுபடுத்தப்பட்ட தொழிலாளர்கள் என அரசு நிர்ணயிக்கும் எண்ணிக்கைக்கு குறைவாக இருப்பின் அந்த தொழிற்சாலையை மேற்படி முன் அனுமதி பெறாமல் முதலாளிமூடிக்கொள்ளலாம் (பிரிவு 77 தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
தொழிற்சங்கங்களுக்கிடையே தாவா என்ற நிலை வரும் போது தனியொரு நபர் புகாரளித்து அதைத் தாவாவாக விசாரிக்கலாம்.(விதிகள் பிாிவு 10)
பல வருடங்களுக்கு முன்பு வரை தொழிற்தாவாச் சட்டம் 1947ன் பிரிவு 2A (பணிநீக்கத்தை எதிர்க்கும் தாவா), மற்றும் பிரிவு 2K (பணி நிலைகள், பாரபட்சம், தண்டனைகள் போன்றவற்றை எதிர்க்கும் தாவா) ஆகிய இரண்டின் கீழான தாவாக்களும் முதலில் தொழிலாளர் அலுவலர் முன்பாக நடத்தி சமரச முறிவு பெற்று பின்னர் அரசின் பரிந்துரையின் பேரில்தான் தொழிலாளர் நீதிமன்றம் போன்றவற்றிற்கு செல்ல இயலும் என்றிருந்தது.  உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு சட்டப்பிரிவு 2A ன் கீழ் பணி நீக்கம் போன்றவற்றை எதிர்த்து தொடரப்படும் வழக்குகள் தொழிலாளியின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடையது என்பதால் தாமதங்களை தவிர்க்க வேண்டுகை விடப்பட்டதைத் தொடர்ந்து அத்தைகய தாவாக்கள் நேரடியாக தனியொரு தொழிலாளியாகவே தொழிலாளர் நீதிமன்றம முன்பாக வழக்காக தொடுக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டது (மருத்துவமனைத் தொழிலாளர் சங்கம் -எ- இந்திய அரசு 2003 I LLJ 1127 (S.C.).
ஆனால் தற்போது, சமரச அதிகாரியிடம் முறையிடுவதற்கு முன்பாக நடுவர்களை (arbitrator) ஏற்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாட்டை புதிதாகப் புகுத்தி உள்ளனர். தொழிற்தகராறு ஒன்றில் ஒரு முடிவைப் பெறுவதற்குப் பழைய நடைமுறையிலேயே தொழிலாளர்கள் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க வேண்டும். தற்போது தொழிற்தகராறை மேலும் இழுத்தப்படிப்பதற்கான ஏற்பாடாக இந்த நடுவர் முறை நுழைக்கப்பட்டுள்ளது. இது முதலாளிகளுக்குத்தான் சாதகம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.(பிரிவு 42: தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
சட்டத்தை  மீறிச் செயல்படும் ஒரு நிர்வாகத்தின் மீது பழைய சட்டங்களின்படி நீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்க முடியும். ஆனால் புதிய சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றங்களில்கூட இனி  நீதிமன்றங்கள் தலையிட முடியாது. மாறாக சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது மத்திய மாநில அரசு அதிகாரிகளே, அதுவும் அரசு சார்பு செயலாளர் அளவிலான ஒருவர் தான் விசாரணை செய்து தீர்ப்பு வழங்குவார்களாம்.
அரசு அலுவலர்கள் என்பவர்கள், அதுவும் ஒவ்வொரு ஆட்சி மாற்றத்தின் போது குறிப்பிட்ட துறைகளில் அமைகின்ற அரசிற்கு சாதகமான நபர்கள் என பணியிடமாற்றம் செய்யப்பட்டு நியமிக்கப்படுகிறவர்கள்.  அத்தகைய அரசுத் துறை அதிகாரிகளின் ஆசியோடுதான எல்லா முதலாளிகளும் சட்டத்தை மீறுகின்றனர். அத்தகைய அதிகாரியே நீதிபதியாக நியமிக்கப்பட்டால் யாருக்கு நியாயம் கிடைக்கும்? பலவீனப் பிரிவினரான தொழிலாளர்களைப் பொறுத்தவரை தற்போதைய புதிய நான்கு சட்டத் தொகுப்புகளிலும் நீதி தேவதையின் கண்களோடு காதுகளும் சேர்த்து மூடப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.(பிரிவு 85-89 தொழிலுறவு சட்டத் தொகுப்பு)
மேலோட்டமாக பார்க்கையில் இத்தகைய பாதகமான பிரிவுகள் மாநில அரசு உருவாக்கியுள்ள விதிகளில் இல்லை போல் தோன்றினாலும், அனைத்திலும் பிரதான மத்திய அரசின் சட்டத்தை சார்ந்து என்பது சொல்லப்பட்டுள்ளது.
படிக்க :
♦ பறிபோகும் கூலித் தொழிலாளர்களின் உரிமைகள் | லஜபதிராய் | வீடியோ
♦ தொழிலாளர்களை சுரண்டும் சொமாடோ – ஸ்விகி !
மேலும் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை அரசின் எந்த விதமான நடவடிக்கைகளிலும் தலையிடுவது என்பது நிறுத்தப்பட்டு அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட வேண்டியதில்லை என்கிற பொது குணாம்சம் நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே இந்த விதிகளை எதிர்த்து தொழிலாளி தரப்பில், தொழிற்சங்கத்தின் தரப்பில் நீதிமன்றம் சென்றால் சுவற்றில் அடித்த பந்தாக மறுநாளே தள்ளுபடி செய்யப்படும்.  அதே சமயம் பெருநிறுவன முதலாளிகள் சாா்பில் பிரதான சட்டத் தொகுப்புகளுக்கு முரணாக மாநில அரசின் விதிகள் உள்ளது என வழக்கு தொடரப்படுமானால், உடனே நீதிமன்றம் தலையிட்டு, முதன்மை சட்டத்தின் முக்கிய  அம்சங்களிலிருந்து விலகுவதாக மாநில விதிகள் அமையக் கூடாது என உத்திரவிட்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
தொழிலாளர் நலச் சட்டங்களின் இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு என்பது பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் என்பது போலிருப்பதாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.  முக்கியமான தொழிற்சங்கங்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் மாநில அரசுடன் தேர்தல் கூட்டணி என்கிற இணக்கத்தில் உள்ளது.  இந்த சூழலில் இத்தகைய தொழிற்சங்கங்கள் தற்போது அறிவிக்கை செய்யப்பட்ட விதிகளுக்கு எந்த அளவில் ஆட்சேபணைகள் சமா்ப்பிக்கப் போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் இடது சாரி அமைப்புகளாவது முறையான விரிவான ஆட்சேபணைகள் சமா்ப்பிக்காவிட்டால் வரலாறு அவர்களை மன்னிக்காது.

(முற்றும்).

சித்திர குப்தன்

The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!

In Punjab on January 5, Prime Minister Modi’s car, which was there to attend the BJP’s Ferozepur election rally, was stopped on the Moga-Ferozepur National Highway due to farmers’ agitation. As soon as this news broke out, saffron mobs and the puppet media blew up a nothing event as “Lapse in PM’s security” and “PM’s life in danger”.
UP rowdy ascetic Chief Minister Yogi gushed that “security lapse is a conspiracy to kill the Prime Minister”. BJP men across the country, including the Chief Ministers of Madhya Pradesh and Assam, added flavour to the screenplay by performing special pujas to prolong Modi’s life.
Modi cancelled his event and left because just 500 people were present at the BJP’s election meeting, which was scheduled to be attended by 70,000 people. Punjab Chief Minister Charanjit Singh Channi initially criticised Modi for playing “security lapse” drama to hide his humiliation. But after a round of BJP demonstrations, print and visual media debates that inflated the event, the same Charanjit Singh claimed responsibility for the security flaw and expressed regret, as the amplitude of the drama was high.
Read :
♦ Afghan people starving to death because of US hegemony !
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
The Supreme Court dissolved both the enquiry committees of the Punjab Government and the Union Government and set up a ‘neutral’ Inquiry Committee to probe the incident headed by former judge Justice Indu Malhotra.
The Modi’s puppet media and the Punjab farmers who were made into Khalistanis!
The jingoistic campaign in the wake of the Pulwama attack; the campaign of ‘Maoist conspiracy to kill Modi’, which whipped up on the occasion of Bhima Koregaon – These were the campaigns of the main stream media. In the present Punjab case, the media is doing the same. They have been propagating the ideas which the RSS-BJP fascists are planning to conceptualise among the people.
“When the head of a nuclear-weapons State is stuck on a highway for a quarter of an hour, while the police and his élite personal protection force cogitate on what to do next, something is horribly wrong. The last time India’s leadership failed to act on clear and present warnings of similar dysfunctions, a former prime minster was assassinated. That should be reason enough to be serious about finding out exactly what happened — and why” says ‘The Print’ (English digital news media).
“The office of the Prime Minister of India is one of the most important of our democratic institutions. When it comes under threat, it is India that comes under threat, not the individual who happens to occupy the post”, says the Indian Express.
“The office of Prime Minister should be given the utmost security in the country. It is an issue of national security… It is the duty of the state government to legally suppress, repress and eliminate the organizations which prevent PM’s propaganda” wrote ‘Dinamani’ (Tamil Newspaper).
“The PM’s car could easily have been targeted by a well-positioned sniper or grenade-launcher, or faced an attack from a drone, an IED, or some other similarly easily-procured weapon”. Further, “The PM’s security is not just a question of his personal security but of the security of an institution that has a crucial bearing on national security, and indeed, on the life of every citizen”, reported ‘India Today’.
On the whole, the media indirectly projected the protested Punjab farmers as “terrorists”. They did this by projecting the protests of the country’s own people against the anti-people Modi as “security lapse”, “conspiracy to kill PM” and “repeat of 1984” (the year Indira Gandhi was assassinated).
In addition, a report was circulated that the pro-Khalistan organisation “Sikhs for Justice” had claimed responsibility for the security flaw in Modi’s visit. A video containing the speech of the organisation’s leader from abroad was circulated on social media.
Modi’s visit was to the election campaign; Those who picketed the road were farmers; That too the protest was pre-announced – That’s what happened. The video of the leader of a pro-Khalistan organisation saying that he was ‘responsible’ being circulated, as if it was a terrorist attack, looks like someone is playing a game behind it.
The ‘Security Lapse’ drama
Modi’s travel plan was to attend a rally in Ferozepur. He was to fly by helicopter from Bathinda airport. But the helicopter ride was cancelled due to poor weather conditions. Suddenly the travel plan was changed and it was decided to travel by road from Bathinda to Ferozepur (nearly 100 km) by car.
However, Modi’s car was stopped in a village called Piyarena and had to wait for 15-20 minutes due to farmers’ agitation on the Ferozepur-bound national highway. Modi’s election rally was also cancelled as just 500 people attended the meeting, which was scheduled to be attended by 70,000 people.
“Say thanks to your CM for I could return to the Bhatinda airport alive” Modi told to the Punjab Airport Officials before he returned. This waved the flag for the RSS-BJP’s campaign plan.
Samyukta Kisan Morcha, the umbrella organisation of various farmer unions, had earlier declared that they would protest on the day of Modi’s arrival in Punjab. Modi’s car was stopped about 1 km from where the protest took place. A video on social media shows that a special security team stood around Modi’s car with machine guns and it was the BJP men who stood in groups shouting “Hail Narendra Modi” next to the car. So their claim that the farmers caused the security lapse is a filtered lie.
Moreover, it is not the first time that Modi’s visit has been disrupted, i.e., in the language of the BJP, there have been ‘security lapses’. Earlier in 2019, crowds breached the security cordon at the Prime Minister’s rally at Ashoknagar, in West Bengal. In 2018, an impersonator talked on his way past the Special Protection Group (SPG) on to the stage. In 2017, police escorts led the convoy into a traffic jam in Noida. The RSS-BJP, which did not cry as ‘security lapse’ at those times is now howling. We cannot just pass on this just as a simple matter.
Drama for five state elections! A means of repression!!
Various progressive forces and progressive-Liberal media, who knew about the BJP and Modi, know that the current ‘Security Lapse’ drama is similar to the strategy which raised a wave of ‘patriotism’ during the Pulwama attack during the 2019 parliamentary elections; Modi is trying to create a wave of sympathy for himself and reap the votes.
No one has any objection in the fact that in order to retain power, the RSS-BJP will go to any extent. But we can understand the fact that the saffron mob’s campaign on the Punjab issue has a purpose beyond elections, when we link certain things.
First, the BJP is unlikely to win the upcoming assembly elections even if they stand upside down. The BJP is also well aware of this. This is because the fight against the Modi government’s three Farm Laws had created an anti-Modi anti-BJP sentiment among the people of Punjab. Even a small child in Punjab would abuse Modi with derogatory words.
Though the three Farm Laws have now been repealed, the Punjab farmers are not convinced. The Modi government also did not withdraw the laws with the intention of pacifying them. The intent was to temporarily dissolve the farmers’ protest; The Modi government repealed the three Farm Laws so that the class unity of “farmers” would not expand further beyond Punjab as a result of this protest, transcending their Hindu polarization. It was done particularly by keeping Uttar Pradesh elections in mind.
Modi, servant of corporates, has no intention of permanently repealing the Farm Laws. It can be seen in Modi’s speech on the day the laws were repealed. “Three farm laws were in farmers’ benefit but we couldn’t convince section of farmers despite best efforts. And I apologise to the countrymen” he said. Subsequently, Agriculture Minister Narendra Singh Tomar said, “Some people did not like these laws. We moved a step back and we will move forward again”. So, the RSS-BJP is waiting and looking forward to the conducive situation for bringing these laws back.
To create such a situation, suppressing Punjab becomes a prerequisite. Because not only the farmers of Punjab and Haryana fought against the three farm laws. The farmers of Punjab and Haryana also made other agricultural organisations in the country to fight, even though they did not protest vigorously as them. They made the people of all the states to recognize and support their protests. Through their protesting methods, the farmers had brought out the corporate profit frenzy characteristics embodied within the three farm laws to a certain extent.
If the protest of the Punjab farmers is to be assessed shortly and correctly, we can say that “they acted as the engine for the struggle against the Modi government’s recolonization of the Indian farming sector”. Other states of the country are already dominated by private procurement. In this case, it is only states like Punjab and Haryana that depend on government procurement. This is the reason why these states play a leading role in the struggle against the farm laws.
This is well judged by the saffron fascists than we are. Therefore, they are moving with a plan to suppress the nationwide boil down against corporatization of the farming sector by suppressing the volatile Punjab with terrorist-separatist panic. The campaign ‘Modi’s life is not safe’ is an attempt to create justifications for it.
Read :
Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
In addition to this, in October last year, the BSF’s jurisdiction in Punjab and West Bengal was increased from 15 km to 50 km. This should be looked in synergy with the terrorist-separatist panic. As far as Punjab is concerned, nearly half the state is under the control of the BSF through this expansion drive. In this regard, we wrote in the December 2021 issue of “Puthiya Jananayagam’’ (New Democracy) under the title “The expansion of the Border Security Force: Military dictatorship in the name of ‘National Security’”.
The RSS-BJP’s campaign on Punjab is not merely an attempt to seek sympathy and votes for elections. It has a conspiratorial motive. This is not like Pulwama; Like Bhima Koregaon, its purpose is repression. Campaigning as “state near Pakistan” and “Khalistan separatist state” is an attempt to seek justice among the people for the repression it is about to unleash on Punjab.
Now, the RSS-BJP’s “conspiracy drama” has been rendered useless among the people by progressive-democratic forces. But the campaign had not been understood as a means of repression. It is necessary to understand it this way. Because the RSS-BJP’s attack on Punjab will occur in succession along this direction.

sevvandhi

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்

2018-லிருந்து மத்திய அரசு பெருமுதலாளிகள் / நிர்வாகிகளுக்கு சாதகமாக இருக்கும் விதத்தில் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒருங்கிணைத்து, 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை துவங்கியதிலிருந்தே தொடர்ந்து அகில இந்திய அளவிலான தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அதை எதிர்த்து வந்திருப்பது அனைவரும் அறிந்ததே.
குறிப்பாக 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றுவதை கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் கடுமையாக எதிர்த்து வந்தன. மேற்சொன்ன மாநிலங்களிலுள்ள சிபிஎம், சிபிஐ, தொமுச, திரிணமுல் காங்கிரஸ் போன்றவை சார்ந்த தொழிற்சங்கங்கள் மேற்சொன்ன நடவடிக்கையை எதிர்த்து கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்தங்களில் சக்தியாக பங்கேற்றதுடன், மேற்படி தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தாதே என்பதை பிரதான கோரிக்கையாக முன் வைத்திருந்தன.
சம்பிரதாயமாக நடத்தப்படும் இதுபோன்ற ஒரு நாள், இரு நாள் வேலை நிறுத்தங்களின் மூலம் மெஜாரிட்டி பலம் கொண்ட அரசின் தொழிலாளர் விரோதப் போக்கினை தடுத்து நிறுத்திவிட முடியுமா என்கிற சந்தேகம் தொழிலாளர்களுக்கு இருந்த போதிலும், தமிழகத்தில் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை, இடது சாரி சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி போன்ற சங்கங்களின் தலைவர்களின் வீராவேசப் பேச்சுக்களினால் ஈர்க்கப்படும் அப்பாவித் தொழிலாளர்கள் லட்சக் கணக்கில் இத்தகைய வேலை நிறுத்தங்களில் வருடந்தோறும் பங்கேற்பதும், அதன் தொடர்ச்சியாக ஊதிய இழப்பு, பதவி உயர்வில் பாதிப்பு போன்றவற்றை அனுபவித்து வந்தே உள்ளனர்.
படிக்க :
♦ கார்ப்பரேட் ஊடகங்களே ! உங்கள் தொழிலாளர் விரோதப் பிரச்சாரத்தை நிறுத்துங்கள் !
♦ தொழிலாளர்களின் உணவில் பாரபட்சம் காட்டும் அசோக் லேலண்ட் || புஜதொமு கண்டனம்
இந்த ஆண்டு பிப்ரவரி என முதலில் நிர்ணயிக்கப்பட்டு, பின்னா் பல மாநில தேர்தல்கள் மற்றும் தமிழகத்தின் உள்ளாட்சித் தேர்தல்கள் காரணமாக மார்ச் 28, 29 இரண்டு நாட்கள் அகில இந்திய வேலை நிறுத்தம் என நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு ஒரு மாதம் முன்பிருந்தே அரங்கக் கூட்டங்கள், ஆலை வாயிற் கூட்டங்கள், துண்டுப் பிரசுரங்கள், இணைய வழி சுவரொட்டிகள் என வழக்கம் போல் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பிரச்சாரங்கள் பொறி பறந்தது.
குறிப்பாக இது போன்ற வேலை நிறுத்த நடவடிக்கைகளில் பிரதானமாக பங்கேற்கும் (Organised sector) அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், ஆயுள் காப்பீடு, வங்கி போன்ற நிறுவனங்களின் தொழிலாளர்கள் முன்பாக ஏற்கனவே மத்திய அரசால் திருத்தப்பட்டு பல மாநிலங்களில் அமுலுக்கு வந்துவிட்ட தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான புதிய மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் 4 சட்டத் தொகுப்புகளாக மாற்றப்பட்ட 44 தொழிலாளர் நலச் சட்டங்கள் இவை அடியோடு ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கை முன்னிறுத்தப்பட்டு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டது.
இது ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் மத்திய அரசு மேற்படி 4 புதிய சட்டத் தொகுப்புக்களை நிறைவேற்றும் விதத்தில் மாநில அளவிலான விதிகளை ஏற்படுத்தாத மாநில அரசுகள் ஏப்ரல் மாதத்திற்குள் அவற்றை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதித்தது. தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு சி.வி.கணேசன் அவர்கள் தலைமையில் தொழிலாளர் நல ஆணையர் அலுவலக கூட்ட அரங்கில் மேற்படி சட்டத் தொகுப்புகளுக்கு இணையான விதிகளை உருவாக்குதல் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் 18 மாா்ச் 2022 மதியம் 3.30 மணிக்கு நடத்தப்பட்டது.
இதில் தொழிலாளர் துறைச் செயலாளர் திரு கிர்லோஸ்குமாா், இஆப., துறை ஆணையர் திரு அதுல் ஆனந்த், இஆப., மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகள், தொமுச தேசிய பொதுச் செயலாளர் திரு மு.சண்முகம், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர், எச்எம்எஸ் தேசியத் தலைவர் திரு சி.ஏ.ராஜா ஸ்ரீதர், ஏஐடியுசி திரு டி.எம்.மூர்த்தி, சிஐடியு திரு அ.செளந்திரராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், ஐஎன்டியுசி, ஏஐசிசிடியு, ஏஐயுடியுசி, பிஎம்எஸ், அண்ணா தொழிற்சங்கப் பேரவை, எல்டியுசி, எம்எல்எப், எல்எல்எப், டபிள்யுடியுசி சங்க தலைவர்கள் பங்கேற்றனர். (பிஎம்எஸ், ஏடிபி தவிர மற்ற சங்கங்கள் அனைவரும் மேற்சொன்ன சட்டத் தொகுப்புகள் / தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தவர்கள்)
இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு புதிதாக உருவாக்கியுள்ள 4 சட்டத் தொகுப்புக்களை தமிழகத்திலும் அமுல் படுத்த வேண்டிய அவசியம் குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது, தொழிற்சங்கத் தலைவர்களும் அவற்றில் பெரும்பாலானவை தொழிலாளர்களுக்கு விரோதமாக இருப்பதால் எங்களின் ஆட்சேபணைகள் / கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப திருத்தங்கள் மேற்கொண்டபின் அமுல் படுத்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என தெரிவித்திருக்கின்றனர்.  மிகச் சுருக்கமாக 2 மணி நேரத்தில் அந்தக் கூட்டம் முடிந்து விட்டது.
தற்போது தமிழ்நாடு மாநில அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் 11/04/2022 தேதியிட்டு 3 அரசிதழ் அறிவிப்புகள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.  அவற்றின் விபரம்:
TN Govt Gazette (Extraordinary) No.214, Dt.11 April 2022:
மத்திய சம்பளச் சட்டத் தொகுப்பு 2019ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு சம்பளப் பட்டுவாடா விதிகள், 1937, (2) தமிழ்நாடு சம்பளப் பட்டுவாடா (உரிமை கோரா தொகைகள்) விதிகள், 1949, (3) குறைந்தபட்ச சம்பளம் (தமிழ்நாடு) விதிகள், 1953 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் சம்பளச் சட்டத் தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது.  இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006-ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
TN Govt Gazette (Extraordinary) No.215, Dt.11 April 2022:
மத்திய தொழில் உறவுச் சட்டத் தொகுப்பு 2019ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு தொழிற்சங்க நெறிமுறைகள், 1927, (2) தமிழ்நாடு தொழிற்சாலை நிறுவனங்கள் (நிலையாணைகள்) விதிகள், 1947, மற்றும் (3) தமிழ்நாடு தொழிற் தகராறுகள் விதிகள், 1958 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் தொழில் உறவுகள் (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது.  இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
படிக்க :
♦ நீங்கள் தமிழீழத்துக்கு எதிரானவர்களா? : திப்பு, சித்திரகுப்தன்
♦ இந்துராஷ்டிரத்தை எதிர்ப்பவர்கள் அகற்றப்படுவார்கள் – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்
TN Govt Gazette (Extraordinary) No.216, Dt.11 April 2022:
மத்திய தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிபந்தனைகள் சட்டத் தொகுப்பு 2020ல் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கிணங்க தமிழகத்தில் ஏற்கனவே அமுலில் இருந்து வரும் (1) தமிழ்நாடு ஒப்பந்தத் தொழிலாளர்கள் (நெறிமுறைகள் மற்றும் ஒழித்தல்) விதிகள், 1975, (2) தமிழ்நாடு மாநிலங்களுக்கிடையிலான புலம்பெயர் தொழிலாளர் (நியமனம் மற்றும் பணி நிபந்தனை நெறிமுறைகள்) விதிகள், 1983, (3) தமிழ்நாடு பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகள், 1968, (4) தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் (நியமனம் மற்றும் பணி நிபந்தனை நெறிமுறைகள்) விதிகள், 2006, (5) தமிழ்நாடு தொழிற்சாலைகள் விதிகள், 1950, (6) தமிழ்நாடு பாதுகாப்பு அலுவலர்கள் (பணிகள், தகுதிகள் மற்றும் பணி நிபந்தனைகள்) விதிகள், 2005, (7) தமிழ்நாடு தொழிற்சாலைகள் (நல அலுவலர்கள்) விதிகள், 1953, (8) தமிழ்நாடு தொழிற்சாலை விபத்துக்கள் /பெரும் அபாயங்கள் விதிகள், 1994, (9) தமிழ்நாடு தேயிலைத் தொழிலாளர்கள் விதிகள், 1955, (10) தமிழ்நாடு மோட்டார் தொழிலாளர் விதிகள், 1965 ஆகியவற்றினை மேலோங்கும் விதத்தில் தொழில் பாதுகாப்பு, உடல்நலம் மற்றும் பணி நிபந்தனைகள் (தமிழ்நாடு) விதிகள், 2022 அமுல்படுத்த இருப்பது தொடர்பான வரைவு விதிகள் பொதுமக்கள் அறியும் வண்ணம் பின்வருமாறு அறிவிக்கை செய்யப்படுகிறது.  இவற்றின் மீதான ஆட்சேபணைகள் / கருத்துருக்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இந்த அறிவிக்கை மேற்கொள்ளப்பட்ட தேதியிலிருந்து 45 நாட்களுக்குள்ளாக அரசுச் செயலாளர், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600009 என்பவருக்கு தொழிலாளர் துறை ஆணையா், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006ன் வழியாக சமா்ப்பிக்கலாம் என அறிவிப்பு செய்யப்படுகிறது.
(தொடரும்…)

பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2

சித்திர குப்தன்

குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!

டந்த மார்ச் 28-ம் தேதி மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா நாடாளுமன்றத்தில் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா-2022-ஐ அறிமுகப்படுத்தினார். இதற்கு பல எதிர் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும் குற்றவியல் நடைமுறை மசோதா – 2022 குரல் வாக்கெடுப்பு மூலம் (120 உறுப்பினர்கள் ஆதரவு, 58 உறுப்பினர்கள் எதிர்ப்பு) நிறைவேற்றப்பட்டது. எதிர் கட்சிகளின் எதிர்ப்புகள் இருந்தும் அதையும் மீறி மசோதா நிறைவேற்றப்பட்டது. பொதுவாகவே மக்களுக்கு எதிரான சட்டங்களும் மசோதாக்களும் இப்படிதான் நிறைவேற்றியும் வருகிறார்கள் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதேவேளையில் இந்த மசோதவில் உள்ள அபாயத்தையும் பார்க்க வேண்டும்.
குற்றவியல் நடைமுறை மசோதா, 1920-ம் ஆண்டு அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நாட்டின் விடுதலைக்காகப் போராடுபவர்களை ஒடுக்குவதற்காக இந்தியாவில் கொண்டுவரப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குறைந்தபட்சம் ஓராண்டு தண்டனை பெற்றவர்கள், ஆயுள் தண்டனை பெற்றவர்கள், நீதிமன்றத்தால் விசாரணைக்கான அடையாளங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டவர்கள், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் நன்னடத்தைக்கான பிணை பெற்றவர்கள் உள்ளிட்டோரின் அடையாள மாதிரிகளை சேகரிக்க முடியும். குறிப்பாக, குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைதண்டனை விதிக்கப்பட்டவர்களின் ‘கைரேகைகள், கால் ரேகைகள்’ ஆகிய அடையாள மாதிரிகள் மட்டும் சேகரிக்கப்படுவது வழக்கமாக இருந்து வந்தது.

படிக்க :

நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!

குழந்தைத் திருமண தடுப்பு மசோதா : காவிகளின் ‘திடீர் அக்கறைக்கு’ப் பின்னுள்ள நோக்கம்!

ஆனால், இப்பொழுது இன்று இருக்கும் நெருக்கடி சூழலில், மக்கள் கொந்தளிப்புடன் இருக்கும் சூழலில் நம்மை ஒடுக்கவே அவசர அவசரமாக பல எதிர்கட்சி தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி எந்த விதமான பதிலும் அளிக்காமல் பல விதிகளை உள்ளடக்கி பல மாற்றங்களை செய்து இந்த மசோதாவை ஒன்றிய அரசு நிறைவேற்றி உள்ளது. அதிலும் குறிப்பாக இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர் மட்டும் அல்லாது, நீதிமன்றத்தினால் எந்த சட்டத்தின்கீழ் தண்டனை பெற்றவராக இருந்தாலும் அதாவது குற்றவியல் நடைமுறைச் சட்டம் – 1973ல் பிரிவு 53, 53A-யில் சொல்லப்பட்டுள்ள அவர்களின் கை விரல்ரேகை, உள்ளங்கை அச்சு பதிவுகள், பாதரேகை மட்டுமல்லாது, சளி எச்சில், கருவிழி மற்றும் விழித்திரை ஸ்கேன், உடல் மற்றும் உயிரியல் மாதிரிகளின் (குருதி, விந்தணு மாதிரிகள், தலைமுடி மாதிரிகள்) பகுப்பாய்வுகள். மேலும் கையொப்பம் மற்றும் கையெழுத்து, நடத்தை பண்புகள் உள்ளடக்கிய தனிப்பட்ட உயிரியல் தரவுகளையும் சேமித்து வைக்கும் அதிகாரத்தை போலீசுத்துறை மற்றும் சிறை அதிகாரிகளுக்கு வழங்கும் வகையில் வழிவகை செய்கிறது. மேலும் யாரை வேண்டுமானாலும் நீதித்துறையோ, போலீசுத்துறையோ சந்தேகப்படும் வேலையில், அவர்களுக்கும் உயிரியல் மாதிரிகளை எடுக்க கோரிக்கை வைக்கவும், அவற்றை சேகரித்து வைக்கவும் முடியும். இவற்றை எதிர்த்தால் கூட இந்திய தண்டணை சட்டத்தின்கீழ் குற்றமாக கருதப்படும்.
சேகரிக்கப்பட்ட இந்த தரவுகளை தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் 75 ஆண்டுகள் வரை பாதுகாத்து வைக்க வழி செய்கிறது. ஆனால், இந்தியாவின் கட்டமைப்பு என்பது இந்திய குடிமக்களின் இரகசியங்களை காக்கும் வகையில் இல்லை. அப்படியானால் இது எந்த வகையில் பார்த்தாலும் நாட்டு மக்களுக்கே எதிரானதாகதான் உள்ளது.
இந்த மசோதா குறித்து பதிலளித்துள்ள அமித்ஷா, “இந்த சட்டத்தால் ஒருவரின் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படாது, இரகசியங்கள் வெளியாகாது. போலீசு தடவியல் நிபுணர்களுக்கு உதவும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளன” என கூறுகிறார். ஆனால், இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே போலீசுத்துறையின் கையில் தூக்கி அதிகாரத்தை கொடுப்பதுதான்.
ஒன்றிய அரசின் இந்த குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 என்பது, ஒரு குறிப்பட்ட சமூகத்தை மட்டுமே குற்றப்பரம்பரை என்று சொல்லும் வகையில் வரலாற்றையே பிற்காலங்களில் மாற்றியமைக்கவும் முடியும். மேலும் அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் போராளிகளை ஒடுக்கவும் இந்த வழிமுறை அரசுக்கு துணை புரியும். அரசியல் ரீதியிலான போராட்டங்களில் கைது செய்யப்பட்டால் கூட அவர்களின் மாதிரிகளை எடுத்து வைத்து அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையோ, அமைப்பையோ கூட ஒடுக்க முடியும். யாரும் எதற்கும் வாய் திறக்க கூடாது, போராடக்கூடாது, கேள்வி கேட்க கூடாது என்ற வகையிலான அடக்குமுறை (பாசிச அபாயம்) நெருங்குகிறது. இவையும் பாசிசத்தின் அடுத்த அடியாக உள்ளது. அரசின் இந்த சட்ட ரீதியிலான அடக்குமுறை என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் மக்களுக்கு கொடுக்கப்பட்ட பிரிவு 20(3)ன் படி மனித உரிமைகளுக்கு எதிராகவே உள்ளது.
ஒட்டுமொத்த நாட்டு மக்களையும் தன்னுடைய பாசிச அடக்குமுறையின்கீழ் அடிபணிய வைப்பது, அதிலும் குறிப்பாக சட்ட ரீதியிலான அடக்குமுறையின்கீழ் அடக்கி யாரையும் போராடவிடாமல் தடுத்து ஒட்டு மொத்த நாட்டு மக்கள்மீதும் பாசிச காட்டாட்சியை மோடி தலைமயிலான ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் நிகழ்த்துகிறது. இத்தாலியில் முசோலினியும், ஜெர்மனியில் ஹிட்லரும் ஒரு குறிப்பிட்ட இனத்திற்காக பெரும்பாலான மக்களை கொன்று குவித்து பாசிசத்தை அரங்கேற்றி ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்ததை வரலாற்றில் படித்திருப்போம். அதேபாணியில் அதைவிட கொடுரமான முறையில், அதைவிட நாலுக்கால் பாய்ச்சலில் பாசிசமயமாக்கும் வேலையை செய்து வருகிறது என்பதற்கான சான்றுதான் குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022. மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் ஒட்டு மொத்த நாட்டையும் காவி – கார்ப்பரேட் பாசிசமயமாக மாற்றி மக்களை அடக்கி ஒடுக்கி இந்துராஷ்டிர கனவை நிறைவேற்றவும், ஒட்டுமொத்த மக்களின் உழைப்பை கார்ப்பரேட் முதலாளிகள் சுரண்டும் வகையில் நாட்டை மாற்றியமைக்கும், வேலையை இரத்த வெறிப்பிடித்த ஓநாயாக இந்த காவி கும்பல்கள் செய்து வருகிறது.

படிக்க :

♦ திருமண வயது 21 மசோதா : பெண்களை மேலும் அடிமைப்படுத்தும் சதித் திட்டம் !

♦ ஆதாரோடு வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் தேர்தல் சட்ட திருத்த மசோதா – 2021 !

நாடாளுமன்ற ஜனநாயகம் என்று இந்நாள் வரை பெயரளவில் பேசப்பட்டதை எல்லாம் ஒழித்துகட்டி அதனை பாசிசமாக்கும் வேலை அரங்கேறும் இந்த தருணத்தில், அந்த தேர்தல் ஜனநாயகத்தின் மூலமாகவே பாசிசத்தை வீழ்த்திவிடலாம் என நினைப்பதெல்லாம் வெறும் பகற்கனவு மட்டுமே. இதற்குமுன் நிறைவேற்றப்பட்ட பல மக்கள் விரோத சட்ட மசோதாக்களை நிறைவேற்றியபோது என்ன வேலையை செய்தார்களோ? அதேவேலை செய்து தங்களின் கடமையை முடித்துக் கொண்டனர். ஆனால், நாம் அவ்வாறு இருக்க முடியுமா? கண்டிப்பாக முடியாது. அப்படி இருப்பதால் நமக்கும் வாழ்வில்லை. எனவே காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் வகையிலான களப்போராட்டங்களை நடத்துவதே நமது பணி என்பதை நமக்கு உணர்த்துகிறது.

ஓவியா

இருளர் மக்களை பொய்வழக்கு போட்டு சித்திரவதை செய்யும் போலீசு!

ங்கள எப்பதான் வாழவிடுவீங்க! கொத்து கொத்தா புடிச்சி போடுறீங்களே இருளர்கள… இது என்ன ஜனநாயக நாடு” – விழுப்புரத்தில் இருளர்கள்மீதான போலீசின் அடக்குமுறையை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில், இருளர் சமூக பெண் ஒருவர் தன்னுடைய வேதனையையும் இயலாமையையும் இவ்வாறு வெளிப்படுத்தினார்.
கடந்த மார்ச் மாதம் 1-ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் சித்தலிங்கமடத்தைச் சேர்ந்த பாண்டியன், இராமச்சந்திரன் மற்றும் குமார் ஆகிய இருளர் சமூகத்தைச் சேர்ந்த மூவரை போலீசு கைதுசெய்தது. அம்மாவட்டத்தில் உள்ள சின்னவளவனூர் மாரியம்மன் கோவில் உட்பட 10 கோவில்களில் திருடினார்கள் என்பது வழக்கு.

படிக்க :

ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !

வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

இது இருளர் ஆண்களின்மீது போடப்பட்ட பொய்வழக்கு; எனவே கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட இருளர் மக்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
000
தமிழகத்தில் கோவை, ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் சித்தலிங்கமடத்தில் வாழும் இருளர் மக்கள் மூன்றாண்டுகளுக்கு முன்புவரை ஆந்திர மாநிலம் சித்தூரில் கரும்புத் தோட்டத்தில் கொத்தடிமைகளாக பணிபுரிந்தவர்கள். இவர்களை, தனது தீவிர முயற்சியால் மரக்காணத்தைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் மீட்டிருக்கிறார். இம்மக்களுக்கு சாதிச்சான்றிதழ் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் எதையும் அரசு செய்துகொடுக்கவில்லை.
தங்களது சாதி காரணமாகவும் வேறு வேலை கிடைக்காததாலும் தற்போதும் இவர்கள் சித்தலிங்கமடத்திற்கு அருகில் உள்ள செங்கல் சூளை ஒன்றில், கொத்தடிமைகள்போல்தான் வேலை பார்க்கின்றனர்.
கொத்தடிமைகளாக இருந்ததற்காக அரசாங்கத்தால் நிவாரண நிதி வழங்கப்படுகிறது. இந்நிதியைப் பெறவேண்டுமானால் கொத்தடிமையாக வேலை செய்த அனைவரின் விவரங்களும் காண்பிக்கப்பட வேண்டும். இதற்காக வெளியூரிலுள்ள கணேசன் என்பவரையும் சந்தித்து சான்றிதழ்களைப் பெறவேண்டியிருந்தது. பாண்டியன், இராமச்சந்திரன், குமார் ஆகிய மூவரும் கணேசனை சந்திப்பதற்காக விழுப்புரம் – சென்னைக்கு இடையிலிருக்கும் கூட்டேரிப்பட்டு என்ற ஊருக்கு இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.
வழியில் சின்னவளவனூரில் பாண்டியனும் குமாரும் மது அருந்துகின்றனர். அப்பொழுதுதான் அவர்களைக் கைதுசெய்கிறது போலீசு. இருளர்கள் என்பதால் கேட்க நாதியற்றவர்கள் என்று அவர்கள்மீது கோயிலில் திருடிவிட்டதாக பொய்வழக்கு போட்டிருக்கிறது.
இம்மூவர் மட்டுமின்றி கார்த்தி, சங்கர், விஜி, செல்வம் ஆகியோரும் திருட்டில் ஈடுபட்டதாகவும் பிடிக்கும்போது தப்பி ஓடிவிட்டதாகவும் கதைகட்டியது போலீசு. சம்பவம் நடந்த நாள் இரவில் இந்த நான்கு பேரும் செங்கல் சூளையில்தான் வேலை செய்தனர் என்று அச்சூளையின் உரிமையாளர் கூறியிருக்கிறார். இதிலிருந்தே இவ்வழக்கு ஒரு பொய்வழக்கு என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
“குற்றவாளிகளைப் பிடிக்க முடியாத வழக்குகளில், இருளர்கள்மீது பொய்வழக்கு போட்டு கைதுசெய்வதை ஒரு போக்காகவே வைத்திருக்கிறது போலீசு” என்று கூறுகிறார் இருளர் மக்களுக்காக சங்கம் நடத்திவரும் பேராசிரியர் கல்யாணி.
இருளர்கள் மீது தொடர்ச்சியாக ஒடுக்குமுறை செலுத்திவரும் போலீசின் மிருகத்தனத்தைக் கண்டித்து விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
இரவு நேரத்தில் கைதுசெய்த போலீசு, அவர்களிடமிருந்த கைப்பேசியைப் பறித்துக் கொண்டது. மேலும் ஸ்டேஷனுக்கு கொண்டுசெல்லாமல் வேறு இடத்தில் வைத்து மூவரையும் இரவு முழுக்க காட்டுமிராண்டித்தனமாக அடித்து சித்திரவதை செய்திருக்கிறது. கைது பற்றி அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச சட்டவிதிமுறையைக்கூட போலீசு கடைபிடிக்கவில்லை. கைதானவர்களே தங்கள் கைப்பேசியின் மூலமாக தகவல் தெரிவித்த பிறகுதான் அவர்களது குடும்பத்தினருக்கே தெரிந்திருக்கிறது.
மேலும் இருளர் மக்கள் வீட்டை சோதனையிடச் சென்ற போலீசு கும்பல், விருதாம்பாள் என்பவரின் வீட்டிலிருந்து பாட்டுக்கேட்கின்ற ஸ்பீக்கர்களையும் இரண்டு இணை காதணிகளையும் திருடிச் சென்றிருக்கிறது.
000
இதுவரை 50-க்கும் மேற்பட்ட ஆண்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் அவர்கள் அனைவரும் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சொல்கிறார் பேராசிரியர் கல்யாணி.
மேலும் 2012-ஆம் ஆண்டில் இருளர்கள்மீது புனையப்பட்ட பொய்வழக்கு ஒன்றைக் குறிப்பிடுகிறார் அவர். அப்போது கர்ப்பிணி உட்பட 4 இருளர் பெண்களைக் கடத்திச் சென்று அடித்துத் துன்புறுத்தியதோடு, பாலியல் வல்லுறவும் செய்திருக்கின்றனர் காக்கிப் பொறுக்கிகள்.
ஊழல் செய்யும் அமைச்சர்கள்-அதிகாரிகளை, மல்லையா போன்ற பெரும் பணக்காரர்களை, யுவராஜ் போன்ற சாதிவெறியர்களை கண்ணியமாக நடத்துகிற போலீசு, ஒடுக்கப்பட்ட மக்களை மனிதர்களாகக்கூட மதிப்பதில்லை.
ஒருசில போலீசார்கள்தான் இத்தகைய காட்டுமிராண்டிகளாக இருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ளக்கூடாது. இது அரசுக்கட்டமைப்பின் அங்கம் முழுவதும் வர்க்க ஒடுக்குமுறையும் சாதிவெறியும் புரையோடியிருப்பதன் வெளிப்பாடே. ஏனெனில் இருளர்கள்மீது பொய்வழக்கு போட்டதற்காக இதுவரை எந்த அதிகாரியும் எந்த ஆட்சியிலும் தண்டிக்கப்பட்டதாக வரலாறில்லை.
இருளர்கள்மீது போடப்பட்ட பொய் வழக்குகளின் உண்மைத் தன்மையை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. வர்க்கமும் சாதியும்தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.

படிக்க :

மாற்றுத் திறனாளி தலித் இளைஞரை கொலை செய்த போலீசு || மக்கள் அதிகாரம் கண்டனம்

இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !

ஒடுக்கப்பட்ட மக்கள்மீதான போலீசின் காட்டுமிராண்டித்தனமும் கொட்டடிக் கொலைகளும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாமல் தொடருகின்றன. மக்களுக்கு கட்டுப்படாத, மக்களை அடக்கி ஒடுக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இந்த போலீசுத்துறையையே கலைக்காமல் இதனை மாற்ற முடியாது.
ஜெய்பீம் படத்திற்குப்பின், தமிழக அரசு ஆங்காங்கே பழங்குடி மக்களுக்கு சில நலத்திட்டங்களை வழங்குவதைப் பார்த்து “ஆஹா எல்லாம் மாறிவிட்டது” என்று நினைப்பது தவறு. களத்தில் எந்த மாற்றமும் இன்றி அப்படியேதான் இருக்கிறது.
அத்திரைப்படம் ஓடியபோது, பழங்குடி மக்களைப் பற்றி விவாதித்த ஊடகங்கள் எதுவும் அம்மக்களது அன்றாடப் பிரச்சினைகளை செய்திகளாக்குவதில்லை. அப்படியே, அங்கொன்றும் இங்கொன்றும் செய்திகள் வந்தாலும் பல்வேறு பிரச்சினைகளோடு ஒன்றாக நாமும் அதைக் கடந்துசென்றுவிடுகிறோம்.
மூன்று மணிநேர படத்தைப் பார்த்துவிட்டு, கண்ணீர் சிந்தி முடித்துக்கொள்வதல்ல பிரச்சினை. கண்ணீர் சிந்துபவர்களுக்கு அற உணர்ச்சி இருக்குமாயின் அவர்களுக்காக நடைமுறையில் குரல் கொடுக்க வேண்டும்.


வாகைசூடி

NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

ரும்பாடுபட்டு நிலத்தை திருத்தி நீர் பாய்ச்சி வேளாண்மை செய்து வைத்திருக்கும் உங்கள் விளைநிலத்தில், திடீரென ஒருநாள் தங்களை அரசாங்க அதிகாரிகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வந்து, விளைந்து நிற்கும் பயிர்களுக்கு மத்தியில் சாலை அளவுகற்களை நட்டு வைத்து இந்த நிலத்தை நாங்கள் சாலை அமைக்க கையகப்படுத்துகிறோம் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? இது உங்கள் வாழ்வாதாரம் பறிக்கப்படும் செயல்தானே. இதற்கு எதிராக போராடுவதை தவிர உங்களுக்கு வேறு என்ன வழி இருக்கிறது? அது தான் தென்காசி மாவட்டத்தின் கடையநல்லூர், வாசுதேவநல்லூர் பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு நடந்திருக்கிறது. அவர்கள் தங்கள் விளைநிலங்களை காத்துக்கொள்ள போராடி வருகிறார்கள்.
தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டத்தின்கீழ், மதுரை மாவட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்த திட்டமிட்டிருப்பது குறித்த ஒரு பத்திரிகை செய்தி கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ராஜபாளையம் அருகே உள்ள சத்திரப்பட்டியில் தொடங்கி செங்கோட்டை வரையிலான 69 கி.மீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைய உள்ளது.
அந்த பகுதி மக்களை எந்த வகையிலும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி ஒரு திட்டத்தை அவர்கள்மீது அரசாங்கம் திணிக்கத் துணிந்திருக்கிறது. இதனால் தங்கள் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.  இந்த நான்கு வழிச்சாலை திட்டத்தால் முப்போகம் விளையும் விவசாய நிலங்கள் 1700 ஏக்கர், 3 லட்சம் தென்னைகள், 200 திறந்தவெளி கிணறுகள், 500 ஆழ்துளை கிணறுகள், 200 வீடுகள் பாதிக்கப்படும். மேலும், இந்த சாலை தென்காசி மாவட்டத்தில் நுழையும்போது, 7 கண்மாய்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட நீரோடைகள், ஆயிரக்கணக்கான வாழை, எலுமிச்சை, காட்டு மரங்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.
படிக்க :
எட்டு வழிச்சாலை : நிலத் திருட்டுக்குப் பெயர் வளர்ச்சி !
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
இந்த சாலை நேராக பயணிக்காமல் குறுக்கும் நெடுக்குமாக விளைநிலங்களில் பயணிப்பது போன்று ஏன் திட்டமிடப்பட்டிருக்கிறது? என்று அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏதோ உள்நோக்கத்துடன் இந்த சாலை போடப்பட உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட விவசாயிகள் தங்களது எதிர்ப்பை வெவ்வேறு விதங்களில் வெளிப்படுத்தினர்.  தங்கள் விளைநிலங்கள் பாதிக்காதவாரு சாலைக்கான மாற்றுப் பாதையின் வரைபடத்தையும் அவர்கள் சமர்பத்தினர்.
ஆனால், அரசாங்கம் அவர்களின் விளைநிலங்களின் வழியாக சாலை போடுவதில் உறுதியான இருந்ததால், இறுதியாக தங்கள் நிலங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு சாதி மத பேதமின்றி
NH 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” என்ற ஒரு அமைப்பை உருவாக்கி அதன்கீழ் போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். போராட்டங்களில் கலந்து கொள்ளும் பெரும்பாலானவர்கள் இந்த நிலங்களை மட்டுமே பிழைப்பாதாரமாக கொண்டவர்கள்.
இந்த சாலையால் தங்கள் விளைநிலங்கள் பாதிக்கப்படுவது குறித்து வாசுதேவநல்லூர் தொகுதியின் அப்போதைய சட்டமன்ற உறுப்பினர் மனோகரனை சந்தித்து முறையிட்டனர். அவர், “இது மத்திய அரசின் திட்டம் இதை எங்களால் எதிர்க்க முடியாது” என்று கூறிவிட்டார். அப்போதைய பாஜகவின் அடிமை அதிமுக ஆட்சியாளர்களால் அதற்குமேல் என்ன சொல்லிவிட முடியும்!! சாலை பற்றிய விவரங்களை அதிகாரிகளிடம் விவசாயிகள் கேட்டிருக்கின்றனர்.
முதலில் அதிகாரத் திமிரோடு தர  மறுத்திருக்கிறார்கள். பின்னர் வரைபடத்தை கொடுத்துள்ளார்கள். ஆனால், அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களுக்கு சாலை பயணிக்கும் வழித்தடம் முன்பே தெரிந்திருக்திறது. அதை பயன்படுத்தி சாலையின் வழித்தடத்தின் ஓரத்தில் இப்பொழுதே நிலங்கள் வாங்கி போட்டுவிட்டனர். சாலை வந்த பின்னர் அதை விற்று லாபம் பார்க்கவோ, சாலையோரத்தில் வணிக வளாகம் கட்டவோ இதை பயன்படுத்தி கொள்வார்கள் என்பது தெளிவு.
திருமங்கலம் முதல் செங்கோட்டை வரை செல்லும் பழைய பாதை பெரும்பாலும் பொது மக்கள் பயணிக்கவும் சுற்றுலா பயணிகள் பயணிக்கவும் பயன்படுவது. அதனால் ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, குற்றாலம் போன்ற  முக்கிய நகரங்களோடு அது இணைந்திருப்பது அத்தியாவசியமானது. ஆனால், இந்த பழைய சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசலை சரி செய்யவே போடப்படுவதாக சொல்லப்படும் இந்த புதிய சாலை ராஜபாளையம், திருவில்லிபுத்தூர், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி போன்ற முக்கிய நகரங்களை இணைக்காமல் செல்கிறது.
சாலையை அகலப்படுத்துவதற்காக விளைநிலத்தில் நடப்பட்டிருக்கும் அளவுக்கல்
இந்த சாலை அமைவதில் பல்வேறு விதிமீறல்கள் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. சுற்றுச்சூழல் அனுமதி வாங்குவதை தவிர்ப்பதற்காகவே இந்த சாலை, புதிய சாலை இல்லை, பழைய சாலையின் விரிவாக்கம்தான் என்று அப்பட்டமாக பொய் சொல்கிறார்கள் அதிகாரிகள். சிவகிரி முதல் உள்ளாறு வரை பயணிக்கும் இந்த NH 744 சாலைக்கும் நெல்லை வன உயிரின சரணாலயத்திற்கும் இடையே உள்ள தூரம் 6 கி.மீ எனவும், சாலை அமைப்பது தொடர்பாகவும் பாலம் கட்டுவது தொடர்பாகவும் எவ்விதமான அனுமதியும் வனத்துறையால் வழங்கப்படவில்லை எனவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் வனத்துறை தெரிவித்துள்ளது. வன உயிரின சரணாலயத்திலிருந்து 10 கி.மீ சுற்றளவிற்குள் எந்தவித திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என விதிமுறை இருக்கும்போது இந்த சாலை வன உயிரின சரணாலயத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைக்கப்படுவது எப்படி? என்று 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளனர்.
“வழக்கமாக நான்கு வழிச்சாலைகளுக்காக 27 முதல் 30 மீட்டர்கள் அகலத்திற்குதான் இடம் கையகப்படுத்துவது வழக்கம். ஆனால், 8 வழிச்சாலைக்குரிய 60 முதல் 63 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். சில இடங்களில் 140 மீட்டர்கள் அகலம் வரை கையகப்படுத்துகிறார்கள். இதை மக்கள் விபரீதமாக உணர்கிறார்கள். அதாவது நான்கு வழிச்சாலை என்று சொல்லிவிட்டு எட்டு வழிச்சாலைக்கு நிலம் எடுத்துள்ளார்கள் என்பதுதான் வேதனை” என்று நக்கீரன் பத்திரிகை செய்தி குறிப்பிடுகிறது.
தென்காசி மாவட்டத்தின் தலைநகரமான தென்காசியில் இருந்து திருநெல்வேலி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த NH-744 நான்கு வழிச்சாலை தென்காசி அருகில் கூட வரவில்லை. இதனால் அந்த நெல்லை முதல் தென்காசி நான்கு வழிச்சாலையையும் இந்த புதிய NH-744 சாலையையும் எப்படி இணைப்பீர்கள் என்று கேட்டால், அதற்கு தனி இணைப்புச் சாலை திட்டம் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அதிகாரிகள். எத்தனை கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் எதற்காக இப்படி விரயம் செய்யப்படுகிறது? எல்லாம் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப நோக்கத்திற்காகதான்.
முதலில் திமுகவை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின் தலைவர் மாடசாமியே ஒரு திமுக பிரமுகர்தான். இந்த  பாஜக அடிமை அதிமுக அரசு போய் திமுக ஆட்சி மலர்ந்தால் தமது நிலப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நம்பினார்கள்.
அந்நிலையில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வந்தபோது, தொகுதி வேட்பாளர் தனுஷ் குமார் “NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம்” ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொண்டு இந்த நான்கு வழிச்சாலையை எதிர்ப்பதாக உறுதியளித்துள்ளார். இதனை நம்பி வடகரை, அச்சன்புதூர் ஆகிய பகுதிகளில் போராட்ட சங்கத்தினர் வீடுவீடாக சென்று தங்கள் நிலங்களை மீட்க திமுகவிற்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
கனிமொழி அவர்கள் பேசுகையில், “இந்த நான்கு வழிச்சாலை தனியார்களுக்கும் முதலாளிகளுக்கும் சாதகமாக அமைக்கப்படுகிறது. வேண்டுமென்றே விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் தனியாருக்கு ஆதரவாக சாலை அமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். கமிஷன் வந்தால் போதுமென்ற நிலையில் அனைத்து துறைகளும் செயல்பட்டு வருகின்றன” என்றார்.
எல்லாம் தேர்தல் நாடகத்திற்காகதான்.
இந்நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி குறித்த ஆட்சேபனை மனு அளித்தவர்களிடம் விளக்கம் கேட்க வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், 150-ற்கும் மேற்பட்ட நில உரிமையாளர்கள் ஆட்சேபனை மனு அளித்துள்ள நிலையில் வெறும் 57 பேரை மட்டும் விசாரணைக்கு அழைத்திருந்தனர். இதனை சுட்டிக்காட்டி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.  அதாவது தங்கள் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள அதிகார வர்க்கம் எவ்வளவு கள்ளத்தனமாக நடந்துகொள்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டுதான் இது‌.

 

சட்டமன்ற ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, போராட்ட சங்கத் தலைவர் மாடசாமி அவர்கள் தலைமையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை சந்தித்துப் சாலைப் பிரச்சினை தொடர்பாக மணு கொடுத்துள்ளனர். திருமங்கலம் முதல் கொல்லம் வரை தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்க நிலமெடுப்பு செய்வதற்கு இந்திட்டத்தினை மாற்றுப்பாதையில் செயல்படுத்த போராட்டக் குழுவினர் கோரிக்கை வைத்திருந்த நிலையில், தமிழக பொதுப்பணித்துறை (கட்டிடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்) அமைச்சர்  போராட்டக் குழுவினரின் இந்த கோரிக்கையை ஆராய்வதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலை துறையை சேர்ந்த இரண்டு பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்திரவிடப்பட்டிருந்தது.
இதனால் சாலை எப்படியும் மாற்றுப்பாதையில் சென்றுவிடும் என்று நம்பி விவசாயிகள் தங்கள் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக நினைத்து மகிழ்ந்திருந்திந்தனர். ஆனால், அவர்கள் மகிழ்ச்சி நிலைக்கவில்லை.
அந்த உத்தரவின் படி, 30/10/21 மற்றும் 06/11/21 ஆகிய நாட்களில் இந்த குழு தனது கூட்டங்களை நடத்தியது. அதில் திருமங்கலம் முதல் கொல்லம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தின் சீரமைப்பு (Alignment) பற்றி விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட பாதையில் அதாவது முப்போகம் விளையும் விளைநிலங்கள் வழியாகவே சாலையை கட்டமைப்பது என்றும்; மேலும் புதிதாக கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்க தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு பரிந்துரைத்துள்ளது இந்த குழு.
இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழக முதன்மை செயலாளர் மற்றும் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் வரையறுக்கப்பட்ட பாதையில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவும் கொடிக்குறிச்சியில் இருந்து தென்காசிக்கு இணைப்புச் சாலை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
சில மாதங்கள் கழித்து, அமைச்சர் அமைத்த குழு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வரையறுத்த பாதை வழியாக சாலை போட முடிவெடுத்து விட்டதாக தகவல் வந்தது. இது பற்றி   விவசாயிகள் விசாரித்தபோது, குழுவில் இருந்த சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் இருவரும் இரண்டு கூட்டங்களில் ஒன்றில் கலந்து கொள்ளவில்லை என்பது தெரிய வருகிறது. ஏன் என்ற கேட்டால், “என்னை குழு கூட்டத்திற்கு போன் செய்து அழைத்தார்கள், நான் வரவில்லை என்று சொல்லிவிட்டேன்” என்று தெனாவெட்டாக பதில் சொல்லியுள்ளார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு “நான் உங்களில் ஒருவன் எனக்கு ஓட்டுப்போடுங்கள்” என்று கெஞ்சுவதும், தேர்தலில் வெற்றி பெற்று பதவியை பார்த்த பின்பு இப்படி தங்களை நம்பிய மக்களுக்கு பச்சையாக துரோகம் செய்வதும் அரசியல்வாதிகள் இயல்புதான். இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு எந்த வகையிலும் விதிவிலக்குகள் அல்ல.
மேலும் அமைச்சர் எ.வ. வேலுவிடம் இதுபற்றி விவசாயிகள் கேட்டபோது, அவர், “அன்று முதல்வர் சொன்னார், அதனால் கூட்டம் நடத்தினோம். ஆனால் இன்று முதல்வர் ஒன்றும் சொல்லவில்லை. இது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் திட்டம். என்னிடம் இதுபற்றி கட்சிக்காரர்கள் இப்படி கேட்டு வரவேண்டாம்” என்று கூறியுள்ளார்.
வயலில் இறங்கி போராட்டம் நடத்தும் விவசாயிகள்
NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின் தலைவர் மாடசாமி ஒரு திமுக பிரமுகர். அவர் கனிமொழி அவர்களிடம் சென்று, “சாலை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனால் நிலம் கையகப்படுத்துவது மாநில அரசு (திமுக அரசு) தானே. நமது கட்சி நினைத்தால் ஏதாவது செய்ய முடியுமே” என்று கேட்டிருக்கிறார். அதற்கு கனிமொழி அவர்கள், “என்னிடம் இப்படியெல்லாம் கேட்டு வராதீர்கள்” என்று மிரட்டலும் எரிச்சலும் கலந்த தொணியில் கூறியுள்ளார்.
இப்படி திமுகவின் மக்கள் விரோத சந்தர்ப்பவாதம் மக்களின் உணர்வுகளை மூலதனமாக கொண்டு ஆட்சியை பிடித்துவிட்டு பின்பு முதலாளிகளுக்கு விசுவாசமாக இருப்பது ஒருபக்கம் என்றால், திமுக அரசின் பிடியில் இருக்கும் போலீஸ் துறையினரின் அடக்குமுறை இன்னொரு பக்கம் மக்களை வதைக்கிறது.
போலீஸின் அடக்குமுறை கடுமையாக இருக்கிறது. போஸ்டர் ஒட்டினால் கூட வழக்கு போடுகிறார்கள். போராடினால் பயங்கரவாதிகள் என்று சொல்லி மக்களிடமிருந்து தனிமைப்படுத்தி, தங்களையும் அச்சுறுத்துகிறார்கள் இந்த போலீஸ் துறையினர் என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். அதிமுக அரசைவிட திமுக அரசு மிகமூர்க்கமாக நடந்து கொள்கிறது என்றார்கள் போராட்டக்காரர்கள். NH-744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தின்கீழ் போராடிய விவசாயிகள்மீது அதிமுகவைவிட திமுக அதிக வழக்குகள் பதிந்திருக்கிறது.
சாலை போடுவதற்கு 21/03/21 அன்று நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அதனால் 21/03/22-க்குள் நிலத்தை அளந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், தங்கள் விளைநிலங்களை, தங்கள் வாழ்வாதாரத்தை காத்துக்கொள்ளும் பொருட்டு நிலத்தை அளக்கவிடாமல் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். எல்லா வகையான போராட்ட முறைகளையும் கைகொள்கிறார்கள்.
திமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் என எவராயினும் அந்த பகுதியை கடந்து செல்லவிடாமல் மக்கள் போராட்டங்கள்மூலம் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நிலத்தில் அளவுக்கல் நட்டவரும் அதிகாரிகளிடம் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். அதற்காக கைது செய்யப்படுகிறார்கள்.
தனது நிலத்தில் அளவுக்கல் பதிக்க வந்த அதிகாரிகளை எதிர்த்து அந்த நிலத்தில் படுத்து போராடிய விவசாயி ஒருவரையும் அவருக்கு ஆதரவாக வந்த ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர். ஏன் கைது என்று கேட்கப்போன மற்றவர்களையும் கைது செய்துள்ளனர்.
போராட்ட சங்கத்தினர் பல்வேறு அதிகாரிகளிடம் பேசிப் பார்த்தனர். பெரும்பாலானவர்கள் சரியாக பதில் சொல்லவில்லை. ஒரு திட்ட மேலாளர் (Project Manager) கூறுகையில், “இந்த திட்டம் உங்களுக்கானது அல்ல. இது மாநிலங்களுக்கு இடையிலான சாலை (Inter State Connectivity Road). தூத்துக்குடி துறைமுகத்தையும் கொல்லம் துறைமுகத்தையும் இணைப்பதற்கானது. நடுவில் இருக்கும் யாரையும் நாங்கள் பொருட்படுத்துவதில்லை” என்கிறார். இப்போதுதான் நமக்கு பிடிபடுகிறது இந்த சாலை பாரத் மாலா, சாகர் மாலா ஆகிய திட்டங்களின் ஒரு பகுதியென்று.
இந்திய அரசு ஒவ்வொரு மாநில விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் வகையில் பாரத் மாலா என்னும் திட்டத்தின்கீழ் சாலைகளை அமைத்து வருகிறது. அதன்படி மதுரை – கொச்சி  விமான நிலையங்களை இணைக்கும் வகையில் நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. மதுரை விமான நிலையம் முதல் திருமங்கலம் வரை ஏற்கனவே நான்கு வழிச்சாலை இருக்கிறது. தற்போது திருமங்கலம் முதல் புளியரை வரை நான்கு வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் கேரளாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது புளியரை. அங்கிருந்து கொச்சி வரை பாதை விரிவுபடுத்தப்படுகிறது. தற்போது திருமங்கலம் முதல் சத்திரப்பட்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து சத்திரப்பட்டியில் இருந்து புளியரை பாதை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது” என்று குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2015-ம் ஆண்டில் சாகர் மாலா திட்டம் பாஜக அரசாங்கத்தால் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தியாவின் துறைமுகங்களை மிக நேர்த்தியாக இணைக்கவும் துறைமுகங்களை இயந்திரமயமாக்கவும், நவீனமயமாக்கவும் மிகப்பெரிய முதலீடுகளோடு தொடங்கப்பட்ட திட்டமாகும். இதன்படி திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குள் ஐந்து லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது. முக்கியமான துறைமுகங்களை ஒட்டி கடற்கரையோரங்களில் தொழிற்துறைகளை நிறுவுதல் மற்றும் 6 முக்கியமான துறைமுகங்களை கட்டுவதுதான் இதன் முக்கியமான இலக்காக வைக்கப்பட்டுள்ளது.
சாகர் மாலா திட்டம் கடல்வழி மற்றும் சாலைவழி கட்டுமானங்களை வளர்ப்பதன் மூலமாக பொருளாதார இலக்கை அடைய நிர்ணயிக்கப்பட்டது என்றால் பாரத் மாலா என்பது நாடு முழுவதும் சாலை இணைப்புகளை விரிவாக்குவது பற்றிய திட்டமாகும். பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இந்த திட்டத்தை கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அங்கீகரித்தது. அதன்படி முதற்கட்டமாக இதற்காக ரூ.5.35 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது‌. அதில் ரூ.20,000 கோடி துறைமுகங்களை சுற்றியுள்ள சாலைகளை மேம்படுத்த பயன்படுத்தப்படும்.  நாட்டின் 550 மாவட்டங்களை இணைக்கும் வகையில் சாலை கட்டுமானங்கள் இருக்கும். தற்போது உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் வெறும் 300 மாவட்டங்களை மட்டுமே இணைக்கிறது.
பாரத் மாலா திட்டத்தின் மூலமாக சாலைவழி சரக்கு போக்குவரத்தை தற்போதுள்ள 40 சதவீதத்தில் இருந்து 70 அல்லது 80 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. சாகர் மாலா திட்டத்தின்கீழ் 2,100 கி.மீ கடற்கரை சாலைகள் அமைப்பது இந்திய துறைமுகங்களையும் வணிக – வர்த்தக மையங்களையும் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
படிக்க :
தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !
இதன்மூலம் சாகர் மாலா மற்றும் பாரத் மாலா திட்டங்கள் தொழிற்துறை, வணிக – வர்த்தக மையங்களுக்கான துறைமுகங்களுக்கான சாலை வழித்தடங்களை விரிவுபடுத்தி பெருமுதலாளிகளின் லாபங்களை அதிகரிக்கதான் கொண்டுவரப்படுகிறது. இதற்காக மக்களின் வரிப்பணம் கொட்டிக்கொடுக்கப்படுகிறது. மேலும், இந்த சாலைகள் மற்றும் துறைமுகங்கள் கட்டுமான  திட்டங்களால் கடற்கரையோர மக்கள் மற்றும் விவசாயம் சார்ந்து வாழும் மக்கள் தங்கள் நிலங்களையும் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் இழக்க நேரிடுகிறது.
சென்ற அடிமை அதிமுக ஆட்சியில், வரைமுறையின்றி மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது. இது போன்ற பாரத் மாலா திட்டத்தின்கீழ் சாலைகளை அமைப்பதற்கும், அதன்மூலம் பெருமுதலாளிகளின் லாபங்களை பெருக்கிக் கொள்ளவும்,  மேலும் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் மக்கள் பணத்தை கொள்ளை அடிப்பதற்கும்தான்.
இப்படி உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு லாபத்தை உறுதி செய்ய உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் காவு கொடுக்கப்படுவதும், அவர்கள் திட்டத்தை மக்கள்மீது திணிக்க எந்தவகையான அதிகார அத்துமீறல்களும், சதிகளும், அரசியல் உள்ளடிகளும் செய்ய தயாராக இருக்கின்றனர் என்றும், அவர்களின் அடக்குமுறைகள் மையப்படுத்தப்பட்ட அளவில் உள்ளாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் மூலதனத்திற்கு சேவை செய்வதாக இருக்கிறது என்றும், NH 744 நன்செய் மீட்பு மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்.
இது அவர்கள் பகுதியில் மட்டும் நடக்கும் தனித்த நிகழ்வு அல்ல. தென்காசி, திருவண்ணாமலை, பாலியப்பட்டு என மூலதனத்தின் கைகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதி மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாடி வருகிறது. இதனை புரிந்து கொண்டு ஒருங்கிணைந்த போராட்டத்தை கட்டியமைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்

கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

டந்த ஏப்ரல் 11-ம் தேதி தமிழக அரசானது மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
“அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள், தேசிய தேர்வு முகமை நடத்தும் கியூட் எனப்படும், பொது பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு வழியாக மட்டும் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், பொது நுழைவித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
பெரும்பாலான மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள், மாநில பாடத்திட்டங்களில் படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவினர். எனவே இந்நுழைவுத் தேர்வானது பெரும்பாண்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும். இந்த நுழைவுத் தேர்வும் நீட் தேர்வைப் போன்றே பள்ளிக்கல்வி முறையை ஓரங்கட்டி, நீண்ட கால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.
படிக்க :
புதிய குலக்கல்வி கொள்கை : 41 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு !
கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !
மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க, பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் சூழலை ஏற்படுத்திவிடும். மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும்” என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்திற்கு வி.சி.க, இ.க.க, இ.க.க(மா), பாமக, காங்கிரஸ், ம.ம.க, கொ.ம.தே.க மற்றும் த.வா.க ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. பாஜக மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது.
இந்தியாவில் 54 மத்திய பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இவை ஒன்றிய அரசின் நேரடுக் கட்டுப்பாட்டில் வரும். இவை கலை – அறிவியல் பாடங்களில் இளங்கலையும், முதுகலையும் கற்பிக்கின்றன. ஆய்வுப் படிப்பும் உண்டு. ஜவாஹர்லால் நேரு, பனராஸ், அலிகார், ஜாமியா முதலானவை மத்திய பல்கலைக் கழகங்கள்தான்.
இவை அனைத்தும் இதுவரை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலும், கூடவே அவை நடத்தி வந்த நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையிலும் அனுமதி வழங்கி வந்தன. இனி அப்படி செய்ய முடியாது.
நாடு முழுவதும் கியூட் தேர்வு நடக்கும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிளஸ் 2 பாடங்களில் 50% வாங்கியிருந்தால் போதுமானது. தமிழகத்தில் (சென்னை, திருவாரூர்) மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. புதுவையில் ஒன்று உள்ளது.
ஏற்கெனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்து வருகிறது. இது தவிர கேட் என்ற நுழைவுத் தேர்வும் நடந்து வருகிறது; இது பொறியியல் முதுநிலைப் படிப்பிறக்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. தற்போது மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கியூட் என்ற தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நுழைவுத் தேர்வுகள் எல்லாம் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால், உண்மையான நிலைமை என்ன? நீட் தேர்வு அனுபவத்தில் இருந்து பார்ப்போம்.
ஆங்கில பயிற்றுமொழி வாயிலாக, நகர்ப்புறத்தில் பெரிய தனியார் பள்ளிகளில் படித்த, முக்கியமாகத் தனிப்பயிற்சி வகுப்புகளில் படிக்கும் வசதி படைத்த பிள்ளைகளால்தான் நீட் தேர்வை தாண்டி குதிக்க முடிகிறது.
பணவசதி இல்லாத மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இயல்பாகவே இத்தேர்வுகள் மூலம் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.
அதுமட்டுமில்லாமல் இத்தேர்வுகள்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கோச்சிங் செண்டர்கள் கட்டணக் கொள்ளையை நடத்துகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2.85 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 12.50 இலட்சம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.22 இலட்சம் வரை வசூலித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தபட்ச கட்டணம் 40 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டு தோறும் சராசரியாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் சரிபாதி பேர் கோச்சிங் செண்டர்களில் படித்தவர்கள் என வைத்துக் கொண்டாலும் கூட, பல்லாயிரம் கோடி இந்த வணிகத்தில் புரளுகிறது என்பது உறுதியாகிறது.
தொகுப்பாக சொல்ல வேண்டுமென்றால் நீட் மற்றும் கியூட் போன்ற நுழைவுத்  தேர்வுகள் பண வசதியில்லாத மற்றும் கிராமப்புற ஏழை மானவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றி தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கோச்சிங் செண்டர்களின் பணப்பையே நிரப்புகிறது.
இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள்மூலம் கல்வியின் தரமானது, அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து விலகி, காசு இருப்பவனுக்கே கல்வி என்று விலகிப் போய் நிற்கிறது.
ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையானது பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது. (பத்தி 4.42, பக்கம் 19)
அதனால்தான் ஒன்றிய அரசானது புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவத்திற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வுக்கு அடுத்து கலை – அறிவியலுக்கு கியூட் என்ற தேர்வை அறிவித்துள்ளது. புதியக் கல்விக் கொள்கையின் படி மற்ற படிப்புகளுக்கும் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவார்கள்.
சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் கூறுவதைப் போல “கியூட் தேர்வை மத்திய பல்கலைக் கழகங்களுக்குதான் அறிவித்து உள்ளார்கள். மாநிலப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் ஏற்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது”. அதனால் தமிழக அரசுக் கல்லூரிகளில் படிக்கும் நமக்கு கியூட் தேர்வினால் ஆபத்து இல்லை என இருந்துவிட முடியுமா?
படிக்க :
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
முடியாது. முதலில் மத்திய பல்கலைக் கழகங்களில் 9 பல்கலைக் கழகங்களுக்குதான் நுழைவுத் தேர்வு இருந்தது. தற்போது 54 பல்கலைக் கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களை பொறுத்தவரை விரும்பினால் ஆரம்பித்து பின்னர் கட்டாயப்படுத்துவார்கள் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தற்போது மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு நீட்டைப் போல கலை – அறிவியலுக்கு மாநிலக் கல்லூரிகள் உட்பட எல்லா கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறுவார்கள். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ளது. நீட் எதிர்ப்பு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய போதும், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கியூட் தேர்விற்கும் எதிராக தற்போது தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே திமுகவானது நீட் மற்றும் கியூட் தேர்வை தனது சட்டப் போராட்டத்தின்மூலம் ரத்து செய்யும் என இருந்துவிட போகிறோமா? அல்லது  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடங்கவில்லை. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதிலிருந்தே சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நீட்டுக்கு எதிரான தீர்மானங்கள் மற்றும் சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் அதை எல்லாம் மதிக்காமல் மோடி அரசானது இம்மாதிரி நுழைவுத் தேர்வுகளை திணித்து வருகிறது. எனவே சட்டப் போராட்டம் இம்மாதிரி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாது என்பதை உணர்ந்து மோடி அரசை பணிய வைக்கும் ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் போன்ற மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைத்து இத்தேர்வுகளை ரத்து செய்யப் போகிறோமா?

அமீர்

அயோத்தியா மண்டபம் : பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம் – தோழர் மருது | வீடியோ

மேற்கு மாம்பலம் என்பது தமிழ்நாடு பார்ப்பனர்களின் இதயம். அந்த இதயத்தின் ரத்தகுழாய்தான் அயோத்தியா மண்டபம். காரிய கொட்டைகைக்கு ஏசி போடும் அளவிற்கு சுரண்டி கொழுக்கும் பார்ப்பனர்கள். இது பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கான இடம்.
சாதித்தீண்டாமையை ஆதரிக்கக் கூடிய எல்லாக் கூட்டங்களும் நடத்தக்கூடிய இடம்தான் இந்த அயோத்தியா மண்டபம். இதை போன்று அயோத்தியா மண்டபத்தின் பல்வேறு பின்னணியையும், தற்போது ரவுடித்தனம் செய்யும் பாஜக குண்டர்களை பற்றி விரிவாக tamil mint என்ற யூடியூப் சேனல் ஏப்ரல் 13 அன்று வெளியிட்ட இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது.

காணொலியை பாருங்கள் பகிருங்கள்!

காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !

“இனிமேல் தமிழ்நாட்டுக்குள் காடுகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள எந்தப் பகுதிகளிலும் கால்நடைகள் மேய்க்க அனுமதிக்க கூடாது” என கடந்த மார்ச் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வைகை தோன்றும் இடமான மேக மலையில் மாடுகள் தொடர்ந்து மேய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டு ஆற்றில் வரவேண்டிய நீர் குறையும் என்றும்; வனத்துறை அதிகாரிகள் அதிக அளவில் மேய்ச்சல் அனுமதி சீட்டுகளை வழங்கி, காடுகளில் மாடுகளை  மேய்க்க உதவுகிறார்கள் என்றும்; இத்தகைய அனுமதி மேகமலை வனப்பகுதியை சீரழித்து இறுதியில் ஐந்து மாவட்டங்களுக்கு வரவேண்டிய தண்ணீரை வராமல் தடுத்துவிடும் என்றும்; இதனால், பாரம்பரியமாக இருந்துவரும் மாடுமேய்க்கும் வழக்கத்தை நிறுத்த ஆணையிடும்படி திருமுருகன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கின்றனர்.
இந்தத்தீர்ப்பால் பாதிக்கப்படப்போவது யார்? பலனடையப்போவது யார்? மாடுகள் மேய்ச்சலை நிறுத்திவிட்டால் வைகையில் தண்ணீர் வளம் பாதிக்காமல் இருக்கும் என்று யாராவது உறுதி கூறமுடியுமா? சரி, ஒருவர் ஒரு பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடுக்கிறார் என்றால், அவ்வழக்கில் எதிர் மனுதாரர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா இல்லையா?  அப்படி  எவ்வித அவசியமும் நீதிமன்றத்துக்கு இல்லாமல் போய்விட்டது.
000
மேக மலைப் பகுதியில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக பெருவாரியானவர்கள் செய்துவரும் தொழில் மேய்ச்சல்தொழில். ஏற்கெனவே, மாடு மேய்க்க அனுமதி கேட்பவர்களிடம் வனத்துறையினர் செய்யும் இடையூறுகள் மற்றும் வழக்குகள், அபராதங்கள்  என பலவித கெடுபிடிகள்.
படிக்க :
மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !
அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !
வைகை ஆற்றில் தண்ணீர் வரத்துக் குறைவதற்கு முதல் காரணம் நீர்ப்பாசனத் துறையின் தவறான நிர்வாகம். மேலும் வைகை அணைக்கு மேல் உள்ள ஆற்றின் இரு மருங்கிலும் நடக்கும் அதீதமான தண்ணீர் திருட்டு; தண்ணீரை தொடர்பில்லாத பகுதிகளுக்கு மடை மாற்றம்செய்யும் பாசனத்துறையின் முறையற்ற செயல்கள் என பல முக்கிய காரணங்கள் உண்டு.
தண்ணீர் திருட்டு தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்ப்பாசனத் துறையினர் தொகுத்த அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது. அதில், ஆற்று நீர் வைகை அணைக்கு வந்துசேரும் முன்பே நூற்றுக்கணக்கான பம்புகளை வைத்து, நீரை பல மைல் தூரம் கடத்திச்சென்று முறையற்ற பாசனத்தில் ஈடுபடுவதுதான் தண்ணீர் குறைவுக்கு காரணம் என்பது தெளிவாக்கப்பட்டது. இதையெல்லாம் கண்கொள்ளாத உயர்நீதிமன்றம் பாமர மக்கள் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு நியாயம் வழங்குகிறது.
நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்புக்கு ஆதாரமாக மேகமலை ஒரு பல்லுயிர் காப்பு பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி, அணில்களும் புலிகளும் வாழும் பகுதி; எனவே மாடுகளை உள்ளே விடக்கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்குக்காக நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட உயிரியல் பேராசிரியர் தனது அறிக்கையில், மேகமலைக் காடுகள் ஒரு சரணாலயப் பகுதி என்பதால் அங்கு வாழும் விலங்குகளுக்கு மலைமாடுகள் போன்ற வளர்ப்புக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி போன்ற நோய்கள் பரவக்கூடும்; மாடுகள் எழுப்பும் இரைச்சல் ஒலிகள் காட்டு விலங்குகளை துன்புறுத்தும்; எனவே மாடுகளை மேய்க்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேகமலை பல நூறு ஆண்டுகளாக விலங்குகள் சரணாலயம் என்பது போலவும், திடீரென்று சிலர் மாடுகளை மேய்ப்பது போலவும் அதனால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போலவும் கூறுவதெல்லாம் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதைதான்.
000
1947-க்கு முன்பு வரை மேகமலை, கண்டமனூர் ஜமீனுக்கு உட்பட்ட நிலப் பகுதியாகவே இருந்து வந்தது. இங்கு தனியாருக்கு சொந்தமான பல தேயிலை தோட்டங்கள், தனியார் சுற்றுலா விடுதிகள், செல்வந்தர்களுக்குரிய சொத்துகள் பல உள்ளன.
தனது கால்நடைகளை மேகமலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் மேய்ச்சல்காரர்.
தமிழ்நாடு அரசு பல சிக்கல்களுக்கிடையில் மேகமலையின் ஒரு பகுதியை 1978-ஆம் ஆண்டு உள்ளோர் உரிமைகளை (settlement rights)  வரையறுக்க சட்ட அறிவிப்புச் செய்தது. அந்த அறிவிப்பின்படி, 2௦1௦ ஆண்டு சுமார் 25,000 ஹெக்டேர் நிலங்களைக் காப்புக் காடுகள் என்று இறுதியாக அறிவித்தது. இடைப்பட்ட காலத்திலும் அங்கு வசிப்போர், சுற்றியுள்ள கிராம மக்கள், போக்கு மேய்ச்சல்காரர்கள் உட்பட பலரும்  மேய்ச்சல் நடத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.
வனத்துறையும் தான்தோன்றித்தனமாக அனுமதிதருவது, சில கட்டுப்பாடுகள் விதிப்பது, மேய்ச்சல்காரர்களை துன்புறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. ஆனாலும் முற்றிலும் தடுக்கவில்லை. சட்டரீதியாக அப்படி தடை செய்வது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படி சாத்தியம் இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த காப்புக் காடு (reserve forest) பகுதியை மேலும் மேலும் விரிவு செய்து சுமார் 63,000 ஹெக்டேர் நிலங்களை மேகமலை வன விலங்குகள் சரணாலயம் என்று அறிவிப்புசெய்தது. அதன் பின்னர் அருகில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூர் வனங்களையும் இணைத்து அணில்கள் மற்றும் புலிகள் சரணாலயம் என்று சமீபத்தில் அறிவித்தது. அப்போதும்கூட சுமார், 37,500 ஹெக்டேர் நிலங்களை மேய்ச்சலுக்கு பயன்படுத்தலாம் என்றும் 64,000 ஹெக்டேர் நிலங்களை மட்டும் யாரும் நெருங்கக் கூடாது என்றுதான் அறிவித்திருந்தது.
விலங்குகள் சரணாலயம் வரும் முன்பே மேய்ச்சல்காரர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு பாரம்பரிய உரிமை இருந்து வருகிறது என்ற உண்மையைப்பேசுவதற்கு தமிழ்நாடு அரசும் தயாராக இல்லை, அந்த உண்மையைப்பேசும் மேய்ச்சல் தொழில் செய்யும் மக்களின் கருத்துக்களைக் கேட்க நீதிமன்றமும் தயாராக இல்லை.
“யாரும் உட்புகாத வன விலங்கு சரணாலயங்கள்” என்ற கருத்து ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் அடிப்படை (unanimous scientific basis) அல்ல. உலகின் பல நாடுகள் இததகைய கருத்துகளை “மக்களிடம் இருந்து அலாதியாக நிற்கும் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகள்” என்று பிரகடனம் செய்துள்ளன.
காலனியாதிக்கச் சட்டங்களை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற நாடுகளில்தான் இப்படி வெறுமனே ஏட்டறிவை மட்டுமே நம்பும் ‘அறிவாளிகள்’, அனிமல் பிளாநெட், நேசனல் ஜியக்ராபி  போன்ற தொலைக்காட்சிகளைப் பார்த்து ஆர்வலர்களானவர்கள், பல நூறு ஆண்டுகளாக காடுகளில் ஆடு, மாடு மேய்த்த நமக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
000
வழக்கு தொடுத்தவர், மேகமலையில் ஆடு மேய்க்க தடை கேட்கிறார், நீதிமன்றமோ தமிழகம் முழுவதும் காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்க்க தடைவிதிக்கிறது. ஒரு தொழிலாளிக்கு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் இல்லாமல், ஒரு ஆலை நிர்வாகம் பணி நீக்க உத்தரவு அளித்துள்ளது எனில், இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் இது போன்று உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு சேர்த்து நீதி வழங்குமா என்ன? என்ற கேள்வியில்தான் நீதிமன்றத்தின் வர்க்கப்பார்வை ஒளிந்திருக்கிறது.
படிக்க :
தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
எட்டுவழிச்சாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, எட்டுவழிச்சாலை கூடாது என்பதல்ல; எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை  அரசு நிலமாக வகைமாற்றம் செய்ய மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுச்சூழல்  அனுமதிபெற்று, முறையாக  புதிய அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்பதே தீர்ப்பு.  இந்த அன்னிய மூலதனத் தேவைக்காக உருவாக்கப்பட்ட எட்டு வழிச்சாலை திட்டம் செல்லும் வழியில் வனவிலங்குகள் மலைகள், காடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லையா என்ன?
விவசாய நிலங்களையும் காடுகளையும் மலைகளையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதையே இலக்காகக் கொண்டு செயல்படும்  தனியார்மய-தாராளமய திட்டங்களை உயிர் ஆதாரமாகக்கொண்டு செயல்படும் அரசு, “காடுகளை அதிகரிக்க போகிறேன், இயற்கையைக் காப்பாற்றப் போகிறேன், சுற்றுச்சூழலை பாதுகாக்க போகிறேன்” என்று சொல்வது எவ்வளவு பெரிய நாடகம்! இந்த நாடகத்திற்கு நீதிமன்றங்கள்தான் மிகச்சிறந்த பக்கவாத்தியம்.
“முதலாளியா?, இயற்கையா?” என்ற கேள்வி எழும்போது முதலாளிகளின் பக்கம் நிற்கும் நீதிமன்றங்கள், “மக்களா? இயற்கையா?” என்ற கேள்வி வரும்போது இயற்கையின் பக்கம் நிற்பதாகக் கூறும் நீதியை மக்கள் யாரும் ஒருபோதும் நம்பத்தயாராக இல்லை.

கிருஷ்ணராஜ்

Afghan people starving to death because of US hegemony !

Following the withdrawal of NATO and US troops in August 2021, the Taliban took full control of Afghanistan. Subsequently, the bourgeois press and pro-imperialist intellectuals, who have been repeatedly crying ‘Danger to Democracy’ and ‘Taliban terrorism, Again!’, are now refusing to speak or just spreading the lie that the unprecedented food shortages and starvation deaths that Afghanistan is facing is because of the Taliban regime.
According to the UN, half of Afghan’s population, nearly 2.28 crore people, face acute food insecurity. Of these, 87 lakh people are projected to face emergency levels of food insecurity. Nearly 20 lakh children face severe acute malnutrition; of which 6 lakh children are in a serious condition.
It is heartrending to hear from the international activists that, by the end of this winter, nearly 10 lakh children are at risk of dying unless they receive immediate treatment for malnutrition. This is more than the death toll of the US orchestrated civil war in Afghanistan, which lasted for the past 20 years. The US is now responsible for today’s food shortage in Afghanistan.
After the US retreated its troops, it imposed sanctions on Afghanistan. The US has frozen $9 billion in assets that the Afghan government has in the US, belonging to the Afghan central bank “Da Afghanistan Bank” (DAB).
Read :
NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
While Afghanistan is unable to withdraw funds from its central bank, western countries like Germany, which exploit the third world countries on one hand and offer ‘financial help’ on the other, have also stopped funding Afghanistan after the Taliban seized power.
The World Bank and the International Monetary Fund (IMF) have suspended payments to Afghanistan owing to the political pressure from the US. This worsened Afghanistan’s crises. As a result of this, hundreds of thousands of daily wagers and more than 2 lakh teachers and doctors have not been able to receive their salaries for months.
Prices have also skyrocketed, while people are struggling with the loss of jobs and loss of income. For the past four months, the food of many Afghans has been tea and bread. Meat, vegetables and fruits became out of reach for ordinary people. Some NGOs are distributing wheat flour and other food products. Because of higher prices of cooking oil and other groceries, some people were forced to eat only the wheat flour.
A malnourished Afghan child receiving treatment at a hospital in Kandahar.
Because of chronic malnutrition, majority of the children are stunted. The World Food Programme (WFP) along with other NGOs is trying to feed nutritious food to such children at health facilities. But this aid is being provided only in a very few places.
Afghan mothers who can’t provide nutritious food to their starved children, carry them to health facilities located hundreds of kilometres away, hoping that their children will survive if they are given nutritious flour.
Many, who cannot get this, have been forced to sell their homes and furniture. Even more horrific is the news that the plight of selling their daughters for marriage is taking place in a big way. The pain of the Afghan mothers who are desperate to sell even their baby girl to feed their other children in the family can’t be just explained with words.
The sale of human organs for money is also happening in large numbers. If we walk through the streets of Afghanistan, we can see banners hanging, which say ‘Kidney for sales!’.
Famine and hunger are rapidly rising in Afghanistan mainly because the Afghan economy is entirely dependent on foreign aid. Before the US forces left last August, the foreign aid that Afghanistan was receiving from the West was up to $8.5 billion.
In general, on an average, a country receives foreign aid of upto 10 percent of its GDP. However, about 40 percent of Afghanistan’s GDP is from foreign aid. Three quarters of the government’s budget was dependent on foreign donations.
On the other hand, 70 percent of the Afghan population depends on agriculture. People are exiting from agriculture because of drought, rising prices of agricultural inputs, inability to feed livestock and lack of proper irrigational facilities. As a result of this, wheat production this year will fall by 25 percent when compared to last year, the UN predicted.
It was on August 15 last year, the US troops started withdrawal from Afganistan. All the foreign aids to Afghanistan stopped as soon as the US troops left. Not only this, foreign exchange from Afghans who work abroad accounts for 4 percent of its GDP. But that too is now out of the way. International money-transfer firms like Western Union and Moneygram have suspended their services in Afghanistan.
The few remaining doctors and nurses try urgently to treat babies and malnoridhed children.
Although Afghanistan has suffered many famines before, US imperialism is responsible for the current famine and the starvation deaths of the Afghan people. The US occupies other countries to plunder various mineral resources and keep those countries under its control. It destroys even their remaining self-reliant economy and thus consolidate its dominance. The same thing happened in Afghanistan.
The newly formed Taliban have close ties with China. The US could not tolerate the Taliban, which was created by the US for its hegemonic obsession, going into the hands of China which challenge its global hegemony. Therefore the US stopped all its financial aids which it provided earlier to its puppet regime in Afghanistan. In addition, the US cries, “There is no democracy in Afghanistan”, “No human rights in Afghanistan” and at the same time enforced economic sanctions. The US has also pressured and blocked other international assistance to Afghanistan.
Human rights organisations from all over the world demanded that ‘we should separate politics and humanitarian work’ and we should help Afghanistan, which is in dire scarcity, and relax sanctions on Afghanistan. Only then the US moved to provide $280 million of donation fund of the World Food Programme and UNICEF, thinking that it would be held responsible for the death of Afghans in clusters. But this was only a fraction of the frozen $1.5 billion.
Read :
Kashmir: Saffronisation obliterating constitutional freedom
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
This fund is not enough for Afghanistan, which is on a deathbed. The US super power is commiting genocide of the entire population of a country to establish its hegemony. The weapon of this war is hunger. Not only Afghanistan, but a large number of working people around the world are directly or indirectly suffering from the hegemonic rule of the imperialists in various forms.
The misery of hundreds of thousands of working people of Afghanistan cannot be overlooked. We, the working people, must carry out protests internationally demanding the lifting of US sanctions on Afghanistan and urge them to provide the Afghan people with basic necessities, including food, on a wartime basis.
Moreover, in order to permanently bring down the American super power, which consistently victimise other countries for its hegemonic intentions, working people all over the world must rally together to express their solidarity on all issues.

Sevvandhi

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !

ர்மபுரி மாவட்டம், பள்ளிப்பட்டி ஊராட்சி செக்காரப்பட்டி அருகே உள்ளது கருப்பனம்பட்டி என்கிற குக்கிராமம். இந்த கிராமத்தில் 30 சென்ட் நிலத்தை மட்டுமே வைத்திருக்கின்ற சிறிய விவசாயி கணேசன். ஏப்ரல் 13-ம் தேதியன்று  தனது  விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இந்த நிலத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டு விவசாயம் செய்துள்ளார். தனக்கு இருக்கும் குறைந்த பட்ச நிலத்தை வைத்துக் கொண்டுதான் வாழ்க்கையை தள்ளிக் கொண்டு வந்தார். கணேசனுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது இந்த 30 சென்ட் நிலத்தின்மீது கெயில் நிறுவனம் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் பதிக்க முயற்சித்து வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டத்தின் வழியாக குழாய் பதிக்கும் பணியை செய்து வருகிறது கெயில் நிறுவனம். இதனை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாய நிலத்தின் வழியாக கெயில் குழாயை பதிக்கக்கூடாது என்று போராடி வந்தனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 3 நாட்களாக போலீசை குவித்து விவசாயிகளை தாக்க முயற்சிப்பது, மிரட்டுவது, வழக்குப் போடுவேன் என எச்சரிப்பது என்ற வகையில் கடந்த 3 நாட்களாக மிரட்டி வந்தது மாவட்ட நிர்வாகம்.
எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை என்று இந்த போராட்டத்தில் மூன்று நாட்களும் கலந்து கொண்டார் கணேசன்.  நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார்.
இன்றும் (ஏப்ரல் 13) போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்று (ஏப்ரல் 13) காலை முதலே போலீசாரை குவித்து பயர் சர்வீஸ் வாகனம், விவசாயிகள் கைது செய்ய போலீஸ் வாகனம் பேருந்துகள் ஏற்பாடு செய்தது போலீசுத்துறை. இனி நம் நிலத்தை மீட்க முடியாது நம் குடும்பம் நடுத்தெருவில்தான் நிற்கும் என்று கண்ணீரோடு சென்ற விவசாயி கணேசன் நேரடியாக விவசாய நிலத்திற்கு மனவேதனையோடு சென்று, போலீசு விவசாயிகளை கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தபோதே தனது நிலத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்டார் என்பதைவிட போலீசும், மாவட்ட நிர்வாகமும் கெயில் நிறுவனமும் சேர்ந்து விவசாயி கணேசனை கொலை செய்தது என்பதே உண்மை. இதனையெடுத்து ஆத்திரப்பட்ட விவசாயிகள் பெரும் திரளாக ஒன்று திரண்டு தருமபுரி பென்னாகரம் சாலையில் மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் வெறும் பேச்சுவார்த்தை என்கிற கண் துடைப்பு நாடகத்தையே செய்து வருகிறது.
கணேசன் மட்டுமல்ல பல ஆயிரம் விவசாயிகள் என்னுடைய வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இந்த கையில் நிறுவனத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுடைய கோரிக்கையான கெயில் குழாய் பதிப்பு என்பதை நெடுஞ்சாலைகள் வழியாக, விவசாய நிலத்திற்கு பாதிப்பில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் அதுதான் விவசாயி கணேசனுக்கு அரசு வழங்கும் உண்மையான தீர்வாகும்.
மேலும் கணேசனுடைய இறப்பிற்கு உடனடியாக உரிய இழப்பீட்டை மாநில அரசு தலையிட்டு கொடுக்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டி கொலை செய்த, மாவட்ட நிர்வாகிகள் மீதும், போலீசுத்துறை மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.

சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

சாவர்க்கரை புணர்நிர்மாணம் செய்யும் [புனிதராக்கும்] திட்டம் தற்போது புதிய வடிவங்களை எடுத்து வருகிறது. “சாதிக் கொடுமை, சாதியத் தீண்டாமை மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதி போன்ற மோசமான சமூகக் கொடுமைகள் இல்லாத ஒரு தேசத்தை அவர் கற்பனை செய்திருந்தார்” (‘சாதியற்ற சமுதாயத்திற்காக சாவர்க்கர் எவ்வாறு போராடினார்’, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 28-02-2022) என்று சமீபகாலமாக சாவர்க்கரிஸ்டுகள் கூறிவருகிறார்கள். மேலும், “சமூக ஒருமைப்பாட்டுடன் இணைந்த சமூக நீதியின் அடிப்படையிலான சாதியற்ற சமூகத்தை அமைப்பதற்காக அவர் வாதாடினார். சாதிய கட்டமைப்பை வேரோடு அகற்றி, இந்து ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்க விரும்பினார், அங்கு தலித்துகள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்’’ என்றும் கூறுகிறது மேற்சொன்ன கட்டுரை. மேலும், “மனுஸ்மிருதி போன்ற சாதியை ஆதரிக்கும் வேதங்ககளுக்கு எதிராக அவர் பேசினார். சாவர்க்கரின் கூற்றுப்படி, இந்த வேதங்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் கருவிகளாகும். சமூகக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.’’ என்று கூறுகிறது அக்கட்டுரை.
படிக்க :
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
இந்து மகாசபாவின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சாவர்க்கரின் எழுத்துக்கள் மற்றும் ஆவணங்களுடன் இக்கட்டுரையின் வாதங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். சாவர்க்கர் இந்துத்துவத்தின் தீர்க்கதரிசியும், 1923-ல் அதே தலைப்பில் (இந்துத்துவா : இந்துக்கள் யார்? இந்துத்துவத்தின் அடிப்படைகள்) புத்தகத்தை எழுதியவரும் ஆவார். அந்த நூலில் அவர் சாதியத்தைப் பாதுகாத்ததோடு, ஒரு தேசத்தை உருவாக்குவதற்கு இந்து சமுதாயத்தில் சாதியம் என்பது அவசியமான இயற்கை அங்கமாக அவர் கருதினார். ‘தேசியத்திற்கு ஆதரவான நிறுவனங்கள்’ என்ற தலைப்பில் இந்த விவகாரத்தைப் பற்றிக் கூறும்போது, சாதிய அமைப்பு என்பது இந்து தேசத்தை அடையாளம் காண்பதற்கான ஒரு தனித்துவமான அடையாளம் [அதாவது சாதிய அமைப்பு இந்து தேசத்தின் தனித்துவமான அடையாளம்] என்று அவர் அறிவித்தார்.
“பௌத்தர்களின் ஆட்சியிலும் கூட அழிக்க முடியாத இந்த நான்கு வர்ணங்களின் அமைப்பானது, நான்கு வர்ணங்களின் அமைப்பை நிறுவியவர் என்று அழைக்கப்படுவதை மன்னர்களும், பேரரசர்களும் மிக பெரிய சாதனையாக   கருதும் அளவுக்குப் பிரபலமடைந்தது. இதன் விளைவாக இன்று சாதிய அமைப்பானது நமது தேசியத்தை [சாதியத்தோடு] அடையாளம் காணும் அளவிற்கு மிகவும் வலுவாக வளர்ந்துள்ளது’’.
சாவர்க்கர், இந்து தேசத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக சாதியைக் கருதியதோடு, அதை உறுதிபடுத்த ஒரு மேற்கோளையும் காட்டி (இது யாரால் கூறப்பட்டதென்று அவர் குறிப்பிடவில்லை) “நால்வர்ண அமைப்பு இல்லாத நிலம் மிலேச்ச நாடு. ஆரியவர்தம் [ஆரியர்கள் வாழும் பகுதி] அந்நிலத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.” என்று கூறினார்.
சாவர்க்கர் சாதியத்தைப் பாதுகாத்ததானது, உண்மையில் [தூய]இனவாத அணுகுமுறையின் அடிப்படையிலான இந்து தேசம் பற்றிய அவரது புரிதலின் நியாயமான முடிவுதான். சாதியானது இந்து சமுதாயத்தின் இரத்த ஓட்டத்தைத் [அதாவது இரத்தக் கலப்பை] தடை செய்கிறது என்ற விமர்சனத்தை மறுத்த அவர், இவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதாக ஒரு சுவாரஸ்யமான வாதத்தை முன்வைத்து, இந்து இனத்தின் தூய்மை பேணப்படுவதற்கு சாதியம் தான் காரணம் என்று வாதிட்டார்.
அவர் கூறினார் :
“சாதியக் கட்டமைப்பு செய்ததெல்லாம், புனிதத் தன்மை கொண்டவர்களும் தேசபக்தர்களுமாக நம்பப்பட்ட – அது உண்மையும் கூட – சட்டத்தை இயற்றுபவர்களாகிய நமது [பார்ப்பனர்களது] தூய உன்னத இரத்த ஒழுங்கைப் பாதுகாத்ததுதான். மேலும் தரிசு நிலத்தை உரமிட்டு செழுமைப்படுத்த அரசர்கள் மேற்கொண்ட முயற்சியானது, உன்னதமான செழிப்பான நிலத்தை இழிவுபடுத்தாமல் செய்யப்பட்டது.” [அதாவது மக்கள்தொகையைப் பெருக்க மன்னர்கள் மேற்கொண்ட முயற்சியானது, பார்ப்பனர்களின் ‘உன்னத’ இரத்தத்தை பாதுகாப்பாக வைத்தே இருந்தது என்ற பொருளில் சாவர்க்கர் இதைக் கூறுகிறார்.]
வியப்பு என்னவென்றால், சாதியத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்ற சாவர்க்கர், குறுகிய காலத்திற்கு இந்து சமூகத்தில் தீண்டத்தகாதவர்களின் நிலையை உயர்த்தவும் வாதிட்டார். இந்துக் கோவில்களில் உள்ள தீண்டாமைக்கு எதிராகவும் தீண்டப்படாதோர் கோயிலுக்குள் நுழைவதற்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தினார். இவை அவரின் சமத்துவக் கண்ணோட்டத்திலிருந்து நடத்தப்பட்டவை அல்ல. தீண்டப்படாதவர்களை சமத்துவமாக நடத்திய இசுலாம் மற்றும் கிறித்தவம் போன்ற மதங்களுக்கு தொடர்சியாக அவர்கள் மதம் மாறும் போது, இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதால் உண்டான கவலையிலிருந்தே நடத்தப்பட்டவை.
குறிப்பிட்ட சில சாதிகளைச் சார்ந்த இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதால், இந்தியாவில் இருந்த 7 கோடி (அப்போதைய மக்கள் தொகையின்படி) தாழ்த்தப்பட்ட “இந்து மக்கள் சக்தி”-யானது ‘எங்கள்’ பக்கம் (உயர் சாதி இந்துக்கள் பக்கம்) நிற்கவில்லை என்பதை சாவர்க்கர் ஒப்புக்கொண்டார். இந்து தேசியவாதிகள் முசுலீம்கள், கிறித்துவர்களுடன் கணக்குத் தீர்த்துக் கொள்வதற்கு, காலாட்படையாக உடல்பலமுள்ள இந்த தீண்டத்தாகாதவர்கள் மிகவும் தேவை என்பதை சாவார்க்கர் அறிந்திருந்தார். எனவே தீண்டத்தகாதவர்கள் தங்களது பிடியில் இருக்கவில்லை என்றால் உயர்சாதி இந்துக்களுக்கு மிகவும் பயங்கரமான நெருக்கடியைக் கொண்டுவரும் ஒரு காரணியாக மாறிவிடுவார்கள் என்று எச்சரித்ததோடு, “அவர்கள் நமக்கு சேவை செய்வதை நிறுத்துவது மட்டுமல்லாமல், நமது மதத்தை பிரிப்பதற்கான எளிதான வழிமுறையை உருவாக்குவதுடன், இதனால் நமக்கு ஏற்படப் போகும் எல்லையற்ற இழப்புக்கும் காரணமாகிவிடுவார்கள்’’ என்றும் புலம்பினார்.
இந்த பிரச்சினையில் சாவர்க்கரின் நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய மிகவும் அதிகாரப்பூர்வமான பதிவானது சாவர்க்கரின் செயலாளர் ஏ.எஸ்.பிடேயின் “விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சூறாவளி பிரச்சாரம்: தலைவரின் நாட்குறிப்பில் இருந்து டிசம்பர் 1937 முதல் அக்டோபர் 1941 வரையிலான பிரச்சார சுற்றுப்பயணங்களின் நேர்காணல்” என்ற புத்ததகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இது இந்து மகாசபையின் அணிகளுக்கான அதிகாரப்பூர்வமான வழிகாட்டி நூலாகும். அதன்படி “இந்து மகாசபா அமைப்பை அதன் விதிமுறை வரம்புகளில் உத்தரவாதம் அளிக்கப்படாத [அதாவது இந்து மத விதிகளுக்கு முரணான] சமூக மற்றும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல்” தனது தனிப்பட்ட முயற்சியில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை [கோயில் நுழைவை] மேற்கொள்வதாக சாவர்க்கர் அறிவித்தார். 1939 ஆம் ஆண்டு கோவில்களில் தீண்டத்தகாதவர்கள் நுழைவதை எதிர்த்த இந்து மகாசபையைச் சேர்ந்த சனாதான இந்துக்களிடம் அவர் பின்வருமாறு உறுதியளித்தார் :
“இன்று நடைமுறையில் உள்ள வழக்கப்படி இந்துக்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பைத் தாண்டி, தீண்டத்தகாதவர்கள் [பிற] கோவில்களில் நுழைவது தொடர்பான கட்டாய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டோம்”.
ஜூன் 20, 1941 அன்று, தீண்டத்தகாதவர்களை கோவில்களுக்குள் நுழைய அனுமதிக்கும் விவகாரத்தில், சனாதன இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தமாட்டேன் என்று மீண்டும் உறுதியளித்தார். இந்த முறை ஒருபடி மேலே சென்று
“பெண்களுக்கு எதிரான மற்றும் தலித் எதிர்ப்பு இந்து தனிச்சட்டங்களைத் தொடமாட்டேன். புராதன கோவில்களில் தீண்டத்தகாதவர்கள் நுழைவது தொடர்பான எந்த சட்டத்தையும் இந்து மகாசபை வலியுறுத்தவோ அல்லது அந்தக் கோவில்களில் நிலவும் புனிதமான பழமையான மற்றும் தார்மீக பயன்பாடு வழக்கத்தை மாற்ற சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். நமது சனாதன சகோதரர்கள் மீதான சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கும் எந்த தனிச்சட்டத்தையும் இந்துமகாசபை ஆதரிக்காது”
என்றும் வாக்குறுதியளித்தார்.
சாவர்க்கர் தனது வாழ்நாள் முழுவதும் சாதியத்தின் சிறந்த தலைவனாகவும், மனுஸ்மிருதியை வழிபடுபவராகவுமே இருந்தார். எந்த மனு நெறிமுறைகள் சாதிய அமைப்பும், தீண்டாமையும் தோன்றி வளரக் காரணமாக இருந்ததோ, அம்மனுஸ்மிருதியைப் பெரிதும் போற்றி அவர் எழுதியதாவது :
“மனுஸ்மிருதி என்பது இந்த இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படும் விதிகளாகும். இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாச்சாரம் -பழக்க வழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைகளின் அடிப்படையாக மாறியுள்ளது. இந்த புத்தகம் பல நூற்றாண்டுகளாக இந்த தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக உள்ளது. இன்றும் கோடிக்கணக்கான இந்துக்கள் தங்கள் வாழ்விலும், நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே உள்ளன. இன்று மனுஸ்மிருதியே இந்து சட்டம். அதுவே இந்து மதத்தின் அடிப்படை”
என்று குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கரை தீண்டாமைக்கு எதிரானவர் என்று நிறுவுவதில் முனைந்துள்ள சாவர்க்கரிஸ்டுகள், துரதிர்ஷ்டவசமாக டாக்டர் அம்பேத்கர், பிப்ரவரி 18, 1933 அன்று சாவர்க்கருக்கு எழுதிய கடிதத்தை தவறாக சித்தரிக்கவும் கூச்சப்படுவதில்லை. அக்கடிதத்தைக் கொண்டு சாவர்க்கரை தீண்டாமைக்கு எதிரான ஒரு போராளியாக நிலைநிறுத்த முயல்கின்றனர்.
அக்கடிதத்தைக் குறிப்பிட்டு சாவர்க்கரிஸ்டுகள் வாதிடுவதாவது :
“சமூக சீர்திருத்தத் துறையில் நீங்கள் ஆற்றிவரும் பணிக்கான எனது பாராட்டுக்களை உங்களுக்குத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றால், தீண்டாமையை நீக்கினால் மட்டும் போதாது; அதற்காக நீங்கள் ‘சதுர்வர்ணத்தை’ [நால்வர்ணத்தை] அழிக்க வேண்டும். இதை உணர்ந்த ஒரு சில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” [பிப். 18, 1933 அன்று சாவர்க்கருக்கு அம்பேத்கர் எழுதிய கடிதத்திலிருந்து சாவர்க்கரிஸ்டுகள் மேற்கோள் காட்டும் பகுதி]
சாவர்க்கரிஸ்டுகளின் நேர்மையின்மையை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காக அந்தக் கடிதம் முழுவதுமாக இங்கே கொடுக்கிறோம் :
“ரத்னகிரி கோட்டையில் உள்ள கோவிலை தீண்டத்தகாதவர்களுக்காகத் திறக்க என்னை அழைத்த கடிதத்திற்கு மிக்க நன்றி. முன்பே திட்டமிடப்பட்ட பணிகளின் காரணமாக உங்களது அழைப்பை என்னால் ஏற்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். எவ்வாறாயினும், சமூக சீர்திருத்தத் துறையில் நீங்கள் ஆற்றிவரும் பணிக்கான எனது பாராட்டுக்களை உங்களுக்குத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். தீண்டத்தகாதவர்களின் பிரச்சனை என்று அழைக்கப்படுவதை எனது பார்வையில் பார்க்கும்போது, அது இந்து சமூகத்தின் மறுசீரமைப்பு பிரச்சினையுடன் நெருக்கமாகப் பிணைந்திருப்பதாக உணர்கிறேன். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றால் தீண்டாமையை ஒழித்தால் மட்டும் போதாது, அதற்கு நீங்கள் சதுர்வர்ணத்தை அழிக்கவேண்டும். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாக இல்லாமல் பிற்சேர்க்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றால், கோவிலைப் பொருத்தவரை தீண்டாமை நிலைத்திருக்கலாம். இதை உணர்ந்த வெகு சிலரில் [அதாவது சதுர்வர்ணத்தை அழிக்க வேண்டும் என்று சாவர்க்கர் உணர்ந்திருந்தார் என்ற பொருளில் அம்பேத்கர் கூறவில்லை. ஆலயத் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென சாவர்க்கர் உணர்ந்திருந்தார் என்ற பொருளில் அம்பேத்கர் கூறுகிறார்.] நீங்களும் ஒருவர் என்பதை கண்டு மகிழ்கிறேன். ஆனால் இன்னும் நீங்கள் [சாவர்க்கர்] சதுர்வர்ணத்தின் வாசகங்களைப் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அடிப்படையில் நீங்கள் தகுதி பெற்றாலும் [உயர்ந்தவரென்றாலும்] அது துருதிருஷ்டவசமானது. இருப்பினும், காலப்போக்கில் இந்த தேவையற்ற மற்றும் விசமத்தனமான பிதற்றல்களைக் கைவிட உங்களுக்கு துணிச்சல் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்’’
படிக்க :
சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி
தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !
[அதாவது அம்பேத்கரின் கடிதத்திலிருந்து சில வாசகங்களை எடுத்து வெட்டி ஒட்டி, சாவர்க்கர் நால்வர்ண அமைப்புக்கு எதிராகப் போராடியவர் என்று அம்பேத்கரே பாராட்டியிருப்பதைப் போன்ற பொய்ப்பிரச்சாரத்தை செய்கிறார்கள் சாவர்க்கரிஸ்டுகள். ஆனால் அம்பேத்கர் அதேகடிதத்தில், சாவர்க்கர் நால்வர்ண அமைப்பை ஆதரித்ததை சாடுகிறார்.]
உண்மையில், டாக்டர் அம்பேத்கர் 1940 இல் [“பாகிஸ்தான் அல்லது தேசப்பிரிவினை” என்ற நூலில்] ஒரு முடிவுக்கு வந்தார். அது,
“இந்து ராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். அந்த வகையில் அது ஜனநாயகத்திற்குப் பொருந்தாது. எந்தவிலை கொடுத்தாயினும் இந்து ராஷ்டிரத்தைத் தடுத்தாக வேண்டும்”.
(குறிப்பு : சாவர்க்கரை சாதிய தீண்டாமைக்கு எதிரானவர் போல சித்தரிக்கும் கட்டுரை ஒன்று சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிளில் வெளியானது. அதை அம்பலப்படுத்தும் விதமாக இந்து மகாசபையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்தே ஆதாரங்களுடன் பேரா. சம்சுல் இசுலாமால் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் சாவர்க்கர் எந்தளவுக்கு சாதிவெறியராகவும், மனுதர்மத்தின் பாதுகாவலராகவும், ‘தூய’இந்து இரத்தம் என்ற கருத்தாக்கத்தின் பிதாமகனாகவும் விளங்கினார் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்தே தெளிவாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர். மேலும் இந்து தேசம், இந்துராஷ்டிரம் என்பது சாதியை ஒழித்த, சாதியைக் கடந்த இந்து தேசமல்ல சாதிய ஒடுக்குமுறையைப் பாதுகாப்பதின் அடிப்படையிலான இந்து தேசமே என்பதையும் சாவர்க்கரின் எழுத்துக்களிலிருந்தே வாசகர்கள் விளங்கிக் கொள்ள முடியும். பட்டை அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளவை மொழிபெயர்ப்பாளரின் வார்த்தைகள் ஆகும்.)

கட்டுரையாளர் : பேராசிரியர் சம்சுல் இசுலாம்
மொழியாக்கம் : இசாஸ் ரஹ்மான்
நன்றி : Countercurrents

அயோத்தியா மண்டபம் விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !

13.04.2022
அயோத்தியா மண்டபம் விவகாரம் :
ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன  கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !
தமிழ்நாடு அரசின் அதிகாரமா? பார்ப்பன பாசிஸ்டுகளின் அதிகாரமா?
எது உயர்ந்தது என்று முடிவு செய்வோம் !
தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும்
பார்ப்பன பாசிஸ்டுகளை தெருவில் இறங்கி முறியடிப்போம் !
பத்திரிகைச் செய்தி !
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தில் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களுடைய நச்சுக் கருத்துக்களை பரப்பி வந்தனர். தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு தில்லை நடராஜர் கோயிலைப்போல மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களுக்கு அயோத்தியா மண்டபம் பார்ப்பன பாசிஸ்டுகளின் புகலிடமாகவும் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் மையமாகவும்  அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
இப்படிப்பட்ட பார்ப்பன பாசிஸ்டுகளின் கூடாரமான இந்த அறக்கட்டளை பொதுமக்களிடம் நன்கொடை மற்றும் காணிக்கை பெற்றே செயல்பட்டு வருகின்றது. ஸ்ரீ ராம் சமாஜம் அறக்கட்டளை நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதன் முன்னாள் அறங்காவலர் உள்ளிட்ட பலர் புகார்கள் அளித்த நிலையில் அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

படிக்க :

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !

அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை கடந்த மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம். வேலுமணி, “இந்து சமய அறநிலையத்துறை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தலாம் எனவும், ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
மேற்கண்ட தீர்ப்பு வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து ஏப்ரல் 13 அன்று அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சென்றபோது, ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள், ரவுடிகள் மற்றும் பொறுக்கிகளோடு கும்பலாக சேர்ந்துகொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளையும் போலீசையும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் போலீஸ் மீதும் அதிகாரிகள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
அயோத்தியா மண்டபத்தில் பூட்டி அதனுள்ளே யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த சென்ற அதிகாரிகளை தடுத்து அவர்களை தாக்கி உள்ளே செல்லவிடாமல் தடுத்தது என்பது அரசுக்கு எதிரான குற்றமாகும்.
இச்செயலில் ஈடுபட்ட உமா ஆனந்தன் கவுன்சிலர், கரு. நாகராஜன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக நிர்வாகிகள் 75 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்பொழுது போலீசுடன் தள்ளுமுள்ளுவில்  ஈடுபட்டால்  உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது.
ஆனால், பார்ப்பன பாசிஸ்டுகள் காலையில் கைது செய்யப்பட்டு நன்றாக சோறுபோட்டு மாலையில் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை பாஜக கட்சிக்கு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பனக் கும்பலுக்கு எப்படி அயோத்தியா மண்டபத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமோ, அதைவிட அந்த அயோத்தியா மண்டபம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது முக்கியம்.
தமிழ்நாட்டில் யாருடைய அதிகாரம் உயர்ந்தது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கைது செய்வதுடன் அயோத்தியா மண்டபத்தில் உடனடியாக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வர வேண்டும்.
இப்பிரச்சினையை சாக்காக வைத்துக் கொண்டு தமிழகத்தில் கலவரம் நடத்த முயற்சி செய்த கோட்சேவின் பேத்தி என்று பெருமையாக பீற்றிக் கொண்ட உமா ஆனந்தன் கவுன்சிலர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன ரவுடிக் கும்பல் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பல் தெருவில் இறங்கிப் போராடுவது நீடித்தால் அதை முறியடிக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக, பெரியாரிய அமைப்புகளின் கடமையாகும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,

தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321.

தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !

த்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதி வழியே செல்லும் திம்பம் மலைப்பாதையில், வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போவதைத் தடுப்பதற்காக, 2019-ம் ஆண்டில் அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இரவுநேர போக்குவரத்துத் தடையை அமல்படுத்தினார். இத்தடைக்கெதிராக மக்களின் தொடர்ச்சியான போரட்டத்தால் அது நீக்கப்பட்டது.
இந்த நிலையில் 2012 முதல் 2021-ம் ஆண்டு வரை, 155 வனவிலங்குகள் மலைப்பாதையில் அடிபட்டு இறந்துள்ளன எனவும், 2019-ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் விதித்த போக்குவரத்துத் தடையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமெனவும் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிப்ரவரி 10 முதல் திம்பம் சாலையில் இரவு போக்குவரத்துத் தடையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இதன்படி கனரக வாகனங்களுக்கு மாலை 6 மணி முதலும், இலகுரக வாகனங்கள் – பயணிகள் வாகனங்களுக்கு இரவு 9 மணி முதலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலைப்பகுதியில் விளையும் விவசாய விளைபொருட்களை மேட்டுப்பாளையம் சந்தைக்கு எடுத்து செல்ல முடியாமல் வீணாகும் அவலமும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் அவசரத் தேவைகளுக்கும்கூட வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடையைக் கண்டித்து தாளவாடி விவசாயிகள், வியாபாரிகள், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர், வேன் ஓட்டுநர்கள் என பல தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கினர். எனினும் தடையை விலக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
படிக்க :
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
திம்பம் மலைப்பாதையில் வன விலங்குகள் இறந்துள்ளது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரப்பட்டதில், 2012-2021 காலகட்டத்தில், வாகனப் போக்குவரத்தால் 40 வனவிலங்குகள் மட்டுமே இறந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதிலும் தடை அமல்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே பண்ணாரி சாலையில் 7 விலங்குகள் இறந்துள்ளன. மீதமுள்ள 20 விலங்குகள் பகலிலும், 13 விலங்குகள் இரவிலும் இறந்துள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதன்மூலம், வழக்கு தொடுத்தவர் இந்தக் காலகட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இறந்து போன மயில்கள் உட்பட அனைத்தையும் கணக்கில் சேர்த்து 155 வனவிலங்குகள் இறந்துள்ளன என்ற பொய்யான தகவலை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
வாகனப் போக்குவரத்தால் வனவிலங்குகளுக்கு நேரும் துன்பத்திற்காக கண்ணீர் விடும் நீதிபதிகள், தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளைப் பிளந்து போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டு சாகும் விலங்குகள் குறித்தோ, விபத்துகளில் சாகும் மனிதர்கள் குறித்தோ என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?
2021-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நடந்துள்ள 55,713 சாலை விபத்துகளில் 14,912 பேர் இறந்துள்ளனர் என அரசே கூறுகிறது. இத்தனை ஆயிரம் பேரின் மீதும் அக்கறையில்லாத நீதிமன்றத்துக்கு, ஆண்டுக்கு இரண்டு விலங்குகள் இறந்து போகின்றன என்றதும் கருணை ஊற்றெடுப்பது ஏன்? இக்கருணைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது?
கொட்டமடிக்கும் வனத்துறை அதிகாரிகள்!
சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப் பாதை.
அப்பகுதியில் வாழும் பழங்குடியினர், ஒரு ஆண்டில் ஆறு மாதங்கள் நிலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை விவசாயம் செய்து தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். மீதமுள்ள ஆறு மாதங்கள் காடுகளில் சிறு வன மகசூல் சேகரிப்பான தேன், சீயக்காய், நெல்லிக்காய், சீமார் புல், கடுக்காய் போன்ற 35 வகையான பொருட்களை – ஒருமுறை எடுத்தால் மீண்டும் கிடைப்பவை – எடுப்பதன் மூலம் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். பழங்குடி அல்லாதோர் வனத்தில் கால்நடைகளை மேய்த்தும், கூலி வேலைகளை செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது சிறு வன மகசூல் செய்ய பழங்குடியினர் பெரும்பாலும் காடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை; சீமார் புல் மட்டும் எடுத்து வருகின்றனர். அதுவும்கூட வனத்துறை அதிகாரிகளின் ஊழலுக்காக அனுமதிக்கப்படுகிறது என்கின்றனர் பழங்குடி மக்கள். 10 பேர் கொண்ட கிராம வனக்குழு (VFC – Village Forest Council) ஊர் மக்களால் உருவாக்கப்படுகிறது. அக்குழுவிலிருந்து ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதே வனப்பகுதிக்கு உட்பட்ட வனகாவலர் செயலாளராக இருப்பார். சிறு வன மகசூல் மூலம் கிடைக்கும் பணம் இவ்விருவரின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி சேமித்து வைக்கப்படும்.
தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு கிராம வனக்குழுத் தலைவர் கூறுகையில், “சீமார் புல் அறுக்க கிலோவிற்கு ரூ.25 கூலி. குழுவிற்கும் புலிகள் காப்பகத்திற்கும் தலா ரூ.5 என பிரிக்கப்படும். வி.எஃப்.சி (VFC) மக்கள் கட்டுப்பாட்டில் இல்லை, வனத்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கு. குழுவில் சேமித்த பணம் 8 லட்சம் இருக்கு. ஆனால் அதனை எடுத்து எங்க அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யச் சொன்னால்கூட செய்வதில்லை. இந்தப் பணத்திலிருந்து வனக் போலீசுத்துறை அதிகாரி, வேட்டைக் காவல் தடுப்புப் படைக்கு சம்பளம் கொடுக்க எடுக்கிறாங்க. பணத்தைத் திரும்பக் கொடுக்கிறதில்லை. 5 டன் லோடு சீமார் புல் எடுத்திட்டு போய் விற்பனை செய்துவிட்டு வந்தால் இலாபமோ, நட்டமோ ரூ.50,000 வனத்துறையிடம் கொடுத்திடனும்” என்கிறார்.
இதுபோல் 28 கிராம வனக்குழுக்கள் கணக்கிலும், பழங்குடியினர் மக்களின் உழைப்பில் சேமித்த பணம் சுமார் 1 கோடி ரூபாய் இருக்கிறது. அதை வைத்து மின்சார வசதி, வீட்டு வசதி, தண்ணீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை மக்கள் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அவ்வாறு செய்யவிடாமல் வனக் போலீசுத்துறை அதிகாரிகள் பழங்குடி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பழங்குடியினர்மீது பொய் வழக்கு போடுவது, விசாரணை என்று கூட்டிச் சென்று அடித்துத் துன்புறுத்துவது என மக்களை அச்சத்திலேயே வைத்துள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
திம்பம் மலைப்பாதைப் பிரச்சினைக்கு மூலக்காரணமாக இருப்பது 2013-ல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். அதன் பின்னர்தான் மலைவாழ் மக்கள் மீதான வனத்துறையின் ஒடுக்குமுறை அதிகரிப்பதும், போக்குவரத்தைத் தடை செய்வதும் நடந்து வருகிறது. மைசூருக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் வலுக்கட்டாயமாக வசூல் செய்யும் வகையில், ‘சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அறக்கட்டளை’ என்ற பெயரில் அடாவடி வசூல் மையம் ஒன்றை அமைத்திருக்கிறது வனத்துறை. இதன் விளைவாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கே மலைவாழ் மக்கள் சோதனைச் சாவடியில் ரூ.50 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே வாழ்வாதாரம் இழந்து கொண்டிருக்கும் இம்மக்கள்மீது இன்னொரு இடியை இறக்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மார்ச் 4 அன்று வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்கத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கெதிராக, புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வனப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மசினக்குடி மக்கள் போராட்டத்தை நடத்தி கலெக்டரிடம் மனுக்களை கொடுத்துள்ளனர். “பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்பதற்கேற்ப எல்லா முனைகளிலும் தமது வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கின்றனர் தாளவாடி மலைவாழ் மக்கள்.
வன உரிமைச் சட்டம்: கண்ணைக் குத்தும் ‘தங்க’ ஊசி!
துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாளவாடி மலைப்பகுதி ராமரணை கிராம பழங்குடி மக்கள்.
மலையையும் காட்டையும் தெய்வமாகக் கருதுகின்ற, சூதுவாது அறியாதவர்கள் என்று பிறரால் சொல்லப்படுகின்ற பழங்குடி – மலைவாழ் மக்கள்மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன காரணம்? எந்த வனத்தை இத்தனை ஆண்டுகள் அவர்கள் பராமரித்தார்களோ, எந்த வனம் அவர்களை வாழ வைத்து வருகின்றதோ, அதை இம்மக்கள் அழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டி சிலர் கிளம்பியிருப்பதுதான். வன உரிமைச் சட்டம் – 2006 தங்களைப் பாதுகாக்கும் என இம்மக்கள் கருதியிருக்கையில், அதையே ஆயுதமாகக் கொண்டு அப்பாவிகளை அழித்தொழிக்க எத்தனிக்கிறது இந்த கார்ப்பரேட் ஆதரவு கும்பல்.
தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் தொடர் போராட்டங்களின் விளைவாக 2006-ம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்சட்டம் ஒப்பீட்டளவில் உதவும் தன்மையைக் கொண்டிருந்தது. பழங்குடி மக்களின் கிராம சபைகளுக்கு சில அதிகாரங்களையும் கொடுத்தது. விவசாயம் செய்துவரும் பழங்குடிகளுக்கு நில உரிமை, சிறு வன மகசூலை சேகரிக்கவும் விற்கவும் உரிமை, பாரம்பரியமாக பயன்படுத்திய பாதை – நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, ஆடு – மாடு மேய்ச்சலுக்கான உரிமை, காட்டு வளங்களைப் பாதுகாத்தல், மேலாண்மை செய்தல் போன்ற உரிமைகளை இச்சட்டம் அங்கீகரிக்கிறது. இவையெல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும், நடைமுறையில் எதிர்விளைவுகளே உருவாகியிருக்கின்றன.
இச்சட்டம் பல இடங்களில் அமலுக்கு செல்லவில்லை, அமல்படுத்தப்பட்ட இடங்களில் மக்களின் உரிமையை நிராகரிக்கவே பயன்படுத்தியிருக்கின்றன மாநில அரசுகள். இச்சட்டத்தின் அடிப்படையில் தனிப்பட்ட உரிமைக் கேட்பு மனுக்கள் இலட்சக்கணக்கில்  நிராகரிக்கப்பட்டுள்ளன. 2018 நவம்பர் புள்ளி விவரத்தின்படி முதல் மூன்று இடங்களில் சத்தீஸ்கர் (4,55,000), மத்தியப்பிரதேசம் (3,50,000), மகாராஷ்டிரா (1,20,000) ஆகியவை உள்ளன.
2005 டிசம்பர் 13-ம் தேதிக்குமுன் பழங்குடியினர் காடுகளில் வாழ்ந்திருக்க வேண்டும். பழங்குடி அல்லாதோர் 75 ஆண்டுகள் (மூன்று தலைமுறைகளாக) வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்துக்கொண்டே, அதிகார வர்க்கம் ஏதுமறியாத அப்பாவி பழங்குடிகளை, மலைவாழ் மக்களை அலைக்கழித்து வருகிறது. இந்தியா முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் இந்த அதிகார வர்க்கமே சிற்றரசர்கள், பண்ணையார்கள் போல ஆதிக்கம் செலுத்தி, பழங்குடி மக்களை விரட்டியடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்களை நெறியற்ற முறையில் நிராகரித்தும், நிராகரிப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டுமென்ற சட்ட விதிகளை மயிரளவுக்கும் மதிக்காமலும் வனத்துறை அதிகாரிகள் கொட்டமடித்து வருகின்றனர். சர்க்கரை என ஏட்டில் எழுதி வைத்துக் கொண்டால் இனிக்காது என்பதற்கு இந்தச் சட்டமே சான்று.
2008-ம் ஆண்டில், வனப்பகுதிகளில் இருக்கும் பழங்குடி மக்களை வெளியேற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த “வைல்ட் லைஃப் ஃபர்ஸ்ட்” என்ற அமைப்பு, வன உரிமைச் சட்டம் மூலம் நிலப்பட்டாக்கள் கொடுக்கக் கூடாது என வாதிட்டது. இதன்மூலம் பழங்குடிகள் காட்டை அழித்து விடுவார்கள் என்று அயோக்கியத்தனமாக வாதம் புரிந்தது. மேற்சொன்ன நிராகரிப்புகள் அடிப்படையில், பட்டா இல்லாத பழங்குடிகளை காடுகளைவிட்டு விரட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தது. இதற்கு மத்திய அரசு எந்த பதிலும் சொல்லாத நிலையில், 2019-ல் பட்டா இல்லாதவர்களை வெளியேற்றும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதன் பிறகு பரவலாக எதிர்ப்பு எழுந்த அடிப்படையில் மத்திய அரசு முறையீடு செய்தபின் தற்காலிகமாக தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் நோக்கம் காடு பாதுகாப்பா, கார்ப்பரேட் சேவையா?
“அந்தக் காலத்துல விலங்கு காட்டுலதான இருந்துச்சு, நாங்களும் இங்கதான இருக்கோம்; இப்போ என்ன புதுசா விலங்குகள் மேல அக்கறை வந்துச்சு?” “நாங்களும் விலங்குகளும் அனுசரித்துதான் வாழ்கிறோம், எந்தக் காப்பகமும் தேவையில்ல” “புலிகள் காப்பகம் வந்தபின் வனத்துறை ஒரு செடியைக்கூட நட்டதில்லை” “புலிகள் காப்பகத்துக்கு வெளியில் இருந்து பணம் வந்தாலும் இவங்க ஒன்னும் புலிக்கு உணவு கொடுக்கிறதில்ல” என்கின்றனர் பழங்குடி மக்கள்.
பழங்குடி மக்களால் வனத்துக்கும் வன உயிர்களுக்கும் ஆபத்து எனக் கூக்குரலிடும் அதிகாரிகள், ஆணையங்கள், தன்னார்வக் குழுக்கள் எவரும், அதற்கான ஆதாரங்கள் எதையும் காட்டுவதில்லை. இவர்கள் காட்டும் ஆதாரங்கள் எல்லாம் திம்பம் மலைப்பாதை தொடர்பாகக் காட்டப்படுவதைப் போன்ற பொய்கள்தானே தவிர வேறொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வனங்களில் வாழ்ந்து, வனத்தைப் பராமரிப்பதன் மூலமாக தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் பழங்குடிகள்மீது பழிபோடுவதன் நோக்கம் என்ன? அவர்களை விரட்ட நினைப்பது ஏன்?
களச்செய்தி சேகரிப்பின்போது, அப்பகுதி நிலைமையை நமக்கு விளக்கிய தாளவாடி பகுதி பழங்குடி மக்கள்.
2001 – 2006 கால கட்டத்தில் மட்டும் சுமார் 5 இலட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதியை அரசு ஆக்கிரமித்து அங்கிருந்த பழங்குடிகளை விரட்டியது. இந்த நிலங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. குறிப்பாக, மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதியினர் பழங்குடிகளாக இருக்கும் சத்தீஸ்கரில்தான் 4,55,000 பழங்குடிகளின் நிலப்பட்டா கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகமாகும். இதே சத்தீஸ்கரில்தான் ஏராளமான வனப்பகுதியை பெரும் சுரங்க நிறுவனங்களுக்கு அரசு அள்ளிக் கொடுத்திருக்கிறது என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, வனத்தின் மீதான அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் கோணத்தில் இருந்துதான், அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. 1980-ம் ஆண்டின் வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கோரும் மசோதா ஒன்றை 2019-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு. காடுகளையும் மலைகளையும் தனியார்மயமாக்கவும், மாவட்ட வன அதிகாரிக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கவும் இத்திருத்தம் வழிவகை செய்கிறது. கைது நடவடிக்கைக்கு ஆளாகும் பழங்குடிகள் தங்களை தாங்களே நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்பதோடு, அவர்கள் தடை உத்தரவை மீறினால் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுவதற்கான அதிகாரத்தையும் வனத்துறைக்கு அளிக்கிறது இத்திருத்தம்.
சரணாலயங்களின் நடுவே பல ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காடுகளை வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி வணிக நோக்கத்தில் பயன்படுத்த வழிவகுக்கிறது. மேலும், காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. வன உயிர் பூங்கா, வன உலாக்கள் போன்றவற்றை அனுமதிப்பதன்மூலம் காடுகளை தனியார் நிறுவனங்களின் இலாப வெறிக்கு இரையாக்குகிறது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத்தில் தனியார் மிருகக் காட்சிச் சாலை அமைத்து வருகிறார். 2020-ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது 160 வன உயிர் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் ஒப்பந்தமிட முடிவு செய்துள்ளது. மேற்சொன்ன இரு தகவல்களும், வனப்பகுதிகள் – வன விலங்குகள் பாதுகாப்பில் மத்திய அரசின் அதீத அக்கறைக்கும் பழங்குடிகளை விரட்டுவதற்கும் கார்ப்பரேட் நலனே காரணம் என்பதை அம்பலப்படுத்துகின்றன.
படிக்க :
அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
இது மட்டுமின்றி, கார்பன் வணிகம் என்ற நோக்கத்தில் தனியார் காடுகளை வளர்ப்பதில் கார்ப்பரேட்டுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வனப் பகுதிகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்து, ஒவ்வோராண்டும் பல்லாயிரம் கோடிகளை அள்ளிச்செல்ல அனுமதிப்பதே அரசின் திட்டம். இதற்காக வனப்பகுதிகளில் இருந்து பழங்குடிகளை விரட்டுவதற்கு புலிகள் காப்பகம் போன்ற முகமூடிகள் அரசுக்கு அவசியமாக இருக்கின்றன.
இந்த நோக்கங்களை அடையும் வகையில்தான் திம்பம் மலைப்பாதையில் தற்போது போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையால் வாழ்வாதாரம் இழக்கும் பழங்குடிகளும் விவசாயிகளும் வனத்தையும் காட்டையும் விட்டு தானாக வெளியேறுவார்கள் அல்லது அரசால் வெளியேற்றப்படுவார்கள்.
கார்ப்பரேட்டுகளின் இந்த நோக்கத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும், தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் மலைவாழ் மக்களோடு இணைந்து நிற்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை.

களச் செய்தியாளர்
புதிய ஜனநாயகம்.