ஆன்லைன் வகுப்புகள்: ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது மோடியின் டிஜிட்டல் இந்தியா!
நாமக்கல் மாவட்டம் பெரிய கோம்பை ஊராட்சியில் இணைய வழிக் கல்விக்கு சிக்னல் கிடைக்காமல் மரத்தில் ஏறி அமர்ந்து பாடத்தைப் படிக்கும் மாணவரகள்.
கடந்த 2020-ம் ஆண்டில் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, “’டிஜிட்டல் இந்தியா’ திட்டம் தற்போது மக்களின் வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது” என்று குறிப்பிட்டார். மேலும், “டிஜிட்டல் இந்தியாவுக்கு மக்கள் நன்றி தெரிவிக்கவேண்டும், ஏனெனில் வளர்ச்சிக்கு மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம் நாடு கண்டிருக்கிறது. நமது நிர்வாக மாதிரியில் ‘தொழில்நுட்பம்தான் முதன்மையானது” என்றும் தெரிவித்தார்.
மோடி கூறிய டிஜிட்டல் வளர்ச்சி யாருக்கானது ? நகர்ப்புறத்தைச் சேர்ந்த உயர் நடுத்தர வர்க்க, மேல்தட்டு வர்க்கத்தினருக்கு மட்டுமே சாத்தியமான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவே தொழில்நுட்ப மயமானதாக பீற்றிக் கொள்கிறது மோடி அரசு.
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பள்ளி, கல்லூரிக் கல்வியை ஆன்லைனில் ஏற்பாடு செய்து அதையே டிஜிட்டல் இந்தியாவாக அறிவித்த இந்த அரசாங்கத்திற்கு, கைபேசி வசதி கூட இல்லாத சாதாரண மக்கள் இன்னும் இந்த நாட்டில் நிறைந்திருப்பது தெரியாதா ? அவர்களது பிள்ளைகள் எல்லாம் திறன்பேசிக்கும், இணைய இணைப்பிற்கும் எங்கே செல்வார்கள் ?
ஓரளவு வளர்ச்சியடைந்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலேயே, கிராமப்புற மாணவர்களுக்கும், நகர்ப்புற உழைக்கும் வர்க்கப் பின்னணி கொண்ட மாணவர்களுக்கும் இணையவழிக் கல்வி சாத்தியமானதாக இல்லை.
இதனை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் ஏழை மாணவர்களின் கல்வியை பொசுக்கிக் கொண்டிருக்கிறது டிஜிட்டல் இந்தியா. இணையவழிக் கல்வியை ஏற்பாடு செய்த மத்திய மாநில அரசுகள் அதற்கான உபகரணங்களையும், உட்கட்டமைப்பையும் நாடு முழுவதும் உள்ள அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் ஏற்படுத்தித் தந்திருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இந்த அரசு செய்யத் தவறியது ஏன் ?
இந்தக் கேள்விக்கான பதிலில் தான் டிஜிட்டல் இந்தியா யாருக்கானது? என்ற கேள்விக்கான பதிலும் பொதிந்துள்ளது.
தென்கொரிய தூசான் நிர்வாகத்துக்கு சம்மட்டி அடி! தொழிலாளர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய அரசு அனுமதி மறுப்பு!
பத்திரிகைச் செய்தி
01.7.2021
பூவிருந்தவல்லி பைபாஸ் சாலையில் இயங்கி வந்த தென்கொரிய நிறுவனமான தூசான் பவர் சிஸ்டம்ஸ் இந்தியா பிரைவேட் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த நிரந்தரத் தொழிலாளர்கள் அனைவரையும் நட்டக்கணக்கு-பொய்க்கணக்கு காட்டி ஆட்குறைப்பு செய்ய தமிழக அரசின் அனுமதி கேட்டு மனு செய்திருந்தது. தூசான் தொழிலாளர் சங்கம், அதன் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் (பு.ஜ.தொ.மு) தலைமையில் இந்த சட்டவிரோத ஆட்குறைப்பை எதிர்த்து சட்டப்போராட்டங்களை முன்னெடுத்தது.
வழக்கறிஞர்கள் திரு.பாலன் ஹரிதாஸ் மற்றும் திரு.காமாட்சி சுந்தரேசன் ஆகியோர் சங்கத்தின் சார்பில் ஆஜரானார்கள். ஒவ்வொரு கட்டத்திலும் மிகச்சிறப்பாக வாதிட்டனர். இதன் தொடர்ச்சியாக, 23.6.2021 அன்று தலைமைச் செயலகத்தில் தொழிலாளர் துறை அரசு செயலாளர் திரு.கிர்லோஷ் குமார் I.A.S நடத்திய விசாரணையின் இறுதியில், தூசான் நிர்வாகத்தின் ஆட்குறைப்பு மனுவை நிராகரித்து அரசாணை (அரசாணை (டி) எண் : 261 தேதி: 30.6.2021) வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக, தூசான் நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது.
எமது சட்டப்போராட்டத்தில் துணைநின்ற வழக்கறிஞர்கள் திரு.பாலன் ஹரிதாஸ் மற்றும் திரு.காமாட்சி சுந்தரேசன், தொழிலாளர்துறை அதிகாரிகள், வழிநடத்திய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக்குழு (தமிழ்நாடு) ஆகிய அனைவருக்கும் தூசான் தொழிலாளர் சங்கம் தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. தூசான் தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தால் அச்சுறுத்தப்படும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவண்,
மா.செ.சந்திரமோகன்,
பொதுச்செயலாளர்,
தூசான் தொழிலாளர் சங்கம்.
தொடர்புக்கு : 8056048103
கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரையில் 1.45 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில், 30.06.2021 அன்று தமிழக சுகாதாரத் துறையின் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் போட்டு முடிக்கப்பட்டன. இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனா, தமது மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் மருத்துவக் கட்டமைப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன் அடிப்படை தோழர் மாவோ சீனாவில் ஏற்படுத்தியிருந்த சோசலிசக் கட்டமைப்பே ஆகும். மேலும் இன்று ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரும் சீனாவில், தடுப்பூசி உற்பத்தி என்பது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அதற்கான உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கியிருக்கிறது சீனா.
இத்தகைய உட்கட்டமைப்பைக் கொண்டுள்ள சீனா, கடந்த மாதத்தில் இருந்து தினமும் சராசரியாக 1 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. ஆனால் இத்தகைய உட்கட்டமைப்போ, தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் மீதான கட்டுப்பாடோ, அதனை அதிகமாக உற்பத்தி செய்யும் உட்கட்டமைப்போ எதையும் உருவாக்க வக்கற்ற மோடி அரசு, புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதையாக கடந்த ஜூன் மாதம் 21-ம் தேதியன்று ஒரே நாளில் அதிகமான தடுப்பூசி போட்டு இந்தியா சாதனை படைத்ததாக மோடி அரசு பெருமை கூறிக் கொண்டது.
அதற்கு முந்தைய இருநாட்களுக்கான தடுப்பூசிகளை மக்களுக்கு விநியோகிக்காமல் தேக்கி வைத்து குறிப்பான நாளில் அந்த தடுப்பூசிகளை எல்லாம் போட்டு சாதனை செய்ததாக பீற்றிக் கொண்டது அடுத்த சில நாட்களில் அம்பலமானது.
பிரதமர் மோடி, தனது மான்கிபாத் உரையில், 2021-ம் ஆண்டு இறுதிக்குள் 130 கோடி பேருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறினார். ஆனால் தடுப்பூசியை கூடுதலாக தயாரிப்பதற்கான திட்டமோ, தயாரிப்போ எதுவும் இல்லாமல் இப்படி வாயில் வடை சுடுவதில் மோடி கில்லாடி என்பதுதான் இன்று தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லாத நிலைமை எடுத்துக் காட்டுகிறது.
0-0–0-0-0
உலகச் சுகாதார அமைப்பில் சீர்திருத்தம் கோரும் ‘வேத புத்திஜீவி’ ஹர்ஷ்வர்தன்!
கடந்த ஜூன் 30-ம் தேதியன்று ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் இணையக் கூட்டம் ஒன்றில் இந்திய ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கலந்து கொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் பேசுகையில், உலக சுகாதார அமைப்பில் (WHO) ஒரு மிகப்பெரிய அவசர சீர்திருத்தம் தேவை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சீனா, ரசியா, இந்தியா, கஜகஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக நடந்த கூட்டத்தில்தான் இதனை ஹர்ஷ்வர்தன் பேசியுள்ளார்.
மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் கொரோனாவுக்கு மருந்தாகவும், “கோ..கோ.. கொரோனா” என்று கூவிக் கொண்டே தட்டையும் கரண்டியையும் தட்டுவதை கொரோனாவுக்கு எதிரான போராகவும் வெளிப்படையாகக் கூறிய மாபெரும் அறிவுஜீவிகளைக் கொண்ட கட்சி பாஜக.
ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரான ஹர்ஷ் வர்தன்
இத்தகைய அறிவார்ந்த ஒரு கட்சி ஆட்சி செய்யும் அரசாங்கத்தின் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர் ஹர்ஷ் வர்தன். அவரது அறிவியல் அறிவும் மேற்கூறிய அறிவுஜூவிகளுக்கு சற்றும் குறைந்தது அல்ல.
உலகப் புகழபெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் இறந்த பிறகு ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஹர்ஷ்வர்தன், பிரதமர் மோடியின் முன்னிலையில், “ஐன்ஸ்டீனின் E = mc2 கோட்பாட்டை விட வேதத்தில் உள்ள கோட்பாடு மேலும் சிறந்தது என ஆதாரத்துடன் ஸ்டீபன் ஹாங்கிங்ஸ் பதிவு செய்துள்ளார்” என்று கூறினார். பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வியெழுப்பியபோது, இப்போதாவது ஆதாரத்தை நீங்கள் தேடிக் கண்டுபிடியுங்கள், கிடைக்கவில்லை எனில் நான் தருகிறேன் என்று கூறினார்.
கடந்த 2015-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த ஒரு கூட்டத்தில், அல்ஜீப்ரா மற்றும் பித்தகோரஸ் தேற்றத்தையும் இந்தியாதான் கண்டுபிடித்தது என்றும், பின்னர், பிறர் அதை தங்களது கண்டுபிடிப்பாகஅறிவித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்து விட்டது என்றும் கூறியிருக்கிறார்.
சொந்த வகையிலும், கட்சிரீதியாகவும் இத்தகைய ‘அறிவியல்’ பின்புலம் கொண்ட ஹர்ஷ்வர்தன் உலக சுகாதார அமைப்பில் அவசரமான சீர்திருத்தத்தை கோரியிருக்கிறார். எவ்வகையிலான சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என ஹர்ஷ்வர்தன் சிந்தித்திருப்பார் ?
ஒருவேளை பிரக்யா சிங் உட்பட பாஜகவின் பல பிரமுகர்களும் கொரோனாவை ஒழிக்கும் மருந்தாக அறிவித்துள்ள மாட்டு மூத்திரத்தையும், மாட்டுச் சாணியையும் உலக சுகாதார அமைப்பு, சர்வதேச கொரோனா நிவாரணியாக அறிவிப்பதைத் தான் சீர்திருத்தம் என்று கூறியிருப்பாரோ ?
0-0-0-0-0
மோடி : ஜி.எஸ்.டி ஒரு மைல் கல் !
“இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஜி.எஸ்.டி, ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது. இது வெளிப்படைத்தன்மை, இணக்கம் மற்றும் ஒட்டுமொத்த வசூல் ஆகியவற்றை கணிசமாக அதிகரிக்கும். அதே வேளையில், சாதாரண மனிதர்கள் மீதான வரிகள், இணக்கச் சுமை மற்றும் ஒட்டுமொத்த வரிச்சுமை ஆகியவற்றைக் குறைத்துள்ளது” என்று தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மோடி.
கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ம் தேதி முதல் இந்தியா முழுவதும் சிறு வணிகத்தை உயிரோடு புதைத்த ஜி.எஸ்.டி வரி விதிப்பு முறை நாடு முழுவதும் அமலாக்கப்பட்டது. இந்த மாபெரும் அவலத்தின் 4-ம் ஆண்டு நிறைவு ‘நினைவு நாளை’ ஒட்டியே டிவிட்டரில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் மோடி.
உண்மையில் ஜி.எஸ்.டி. இந்தியப் பொருளாதார அமைப்பின் ஒரு மைல்கல் தான். இதில் நாம் கவனிக்க வேண்டியது ஒரே ஒரு விசயம்தான். இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிப் பாயத் துவங்கிய புள்ளியின் மைல்கல் தான் அது.
கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் நாள் இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி பணமதிப்பழிப்பு திட்டத்தை அறிவித்து இந்தியப் பொருளாதாரத்திற்கு மோடி தீவைத்த சம்பவம் நாம் அனைவரும் அறிந்ததே.
அன்று வீழத் துவங்கிய சிறு வணிகர்கள் மற்றும் சிறு, குறுந்தொழில் முனைவோரின் வாழ்க்கையை, மொத்தமாகக் கவிழ்த்துப் போட்டதில் முக்கியப் பங்கு ஜி.எஸ்.டி–யினுடையது.
பெரும் மூலதனத்துடன், பெருவித உற்பத்தியில் ஈடுபடும் கார்ப்பரேட் தயாரிக்கும் பொருளுக்கும் ஒரே வரி, சிறுவித அளவில் உற்பத்தி செய்யும் சிறு தொழில்முனைவோரின் உற்பத்திப் பொருளுக்கும் ஒரே வரி என ஜி.எஸ்.டி–யைக் கொண்டுவந்து அவர்களின் வாழ்க்கையை வீழ்ச்சிக்குத் தள்ளியவர் மோடி.
சிறு, குறு தொழில் முனைவோர், சிறு வியாபாரிகள் மற்றும் இத்தொழிலைச் சார்ந்து வாழும் தொழிலாளர்கள் என பலரது வாழ்வாதாரத்தைப் பறித்ததன் மூலம், மக்களின் ‘வாங்கும் திறனில்’ பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. அதன் விளைவாக உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் தேக்கம் ஒட்டுமொத்த இந்தியப் பொருளாதாரத்தை அதல பாதாளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.
வீழ்ந்த இந்தியப் பொருளாதாரத்திற்கு நினைவுநாளாக இன்றைய தினத்தை மோடி ‘கொண்டாடுகிறார்’.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான குழுவை கடந்த மாதம் ஒரு அரசாணை மூலம் நியமித்தது. ஏ.கே.ராஜன் குழுவின் நியமனத்திற்கு எதிராக பாஜகவின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்து உருவாக்கப்பட்ட தமிழக மருத்துவக் கல்லூரிகள் கட்டமைப்பை அபகரிக்கும் வகையிலும், ஏழை எளிய மாணவர்களை மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இருந்து விலக்கும் வகையிலும் நீட் தேர்வை கொண்டுவந்தது ஒன்றிய பாஜக அரசு.
நீட் தேர்வுக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நீட் தேர்வு முறை தொடரலாம் என உச்சநீதி மன்றத்தில் ஒரு இடைக்கால உத்தரவைப் பெற்று, நீட் தேர்வை தொடர்ந்து நடத்தி வருகிறது மோடி அரசு.
பொதுப்பட்டியலில் கல்வி இருக்கையில், அது தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு நீட்டிலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கும் சட்டத்தை இயற்ற முடிவு செய்தது. அதற்கான பரிந்துரைகளைப் பெறவும், நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்யும் வகையிலும் நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையிலான கமிட்டியை அமைக்க ஒரு அரசாணையை வெளியிட்டது. அந்தக் கமிட்டியும் மக்களிடமிருந்து கருத்துக்களைக் கேட்டு தொகுத்தது.
இந்நிலையில், பாஜகவின் பொதுச் செயலர்களில் ஒருவரான கரு நாகராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில், நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு நீட் தேர்வு தொடர்பாக சட்டம் இயற்றிய பின்னர், அதுகுறித்து ஒரு ஆய்வுக் கமிட்டியை அமைக்க திமுக அரசு வெளியிட்ட அரசாணை தவறானது என்றும் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது குறிப்பிட்டார். மேலும், அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
தனது மனுவை அதோடு நிறுத்தவில்லை. கூடுதலாக, நீட் தேர்வை ரத்து செய்துவிட்டால், சாதாரணர்களும் கூட மருத்துவர்கள் ஆகிவிடும் சூழல் அமைந்துவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான இருநபர் அமர்வு, இது குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டது.
தமிழ்நாடு அரசு தமது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில்தான், நீட் தேர்வு ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்ததாகவும், அது தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு என்றும் தெரிவித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசு எடுக்க முடியாது என்றும், நீட் தேர்வு பாதிப்புகளைக் கண்டறியும் குழுவை அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி பெறப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினர்.
கல்வி என்பது மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் பொதுப்பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்று. அந்த வகையில், கல்விச் சட்டங்களை இயற்றுவது குறித்து முடிவெடுக்கவும் ஆய்வு செய்யவும் ஒரு மாநில அரசுக்கு உரிமை உள்ளது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் குறித்து குறைந்தபட்ச அறிவு கொண்டவர்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம் தான்.
ஆனாலும் நமது உயர்நீதிமன்ற நீதிபதிகள் அது குறித்து மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர். ஆய்வு செய்வதற்கு உச்சநீதிமன்றத்திடம் அனுமதி வாங்கினீர்களா என்றும் அறிவார்ந்த கேள்வியை எழுப்பியுள்ளனர்.
ஒருவேளை இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மேலானதாக உச்சநீதிமன்றம் இருக்கும் பட்சத்தில் வேண்டுமானால், உச்சநீதிமன்றத்திடமிருந்து அப்படி ஒரு அனுமதி தேவைப்படலாம். ஆனால், அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள ஒரு அடிப்படை உரிமையை மாநில அரசு நிறைவேற்ற அப்படி ஒரு அனுமதி அவசியமில்லை.
இந்த வழக்கு தொடுத்திருப்பதன் மூலம் தனது உண்மையான முகத்தை மட்டுமல்ல, தனது மக்கள் விரோத வழிமுறைகளையும் காட்டியுள்ளது பாஜக.
கல்வி பொதுப்பட்டியலில் இருக்கையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு முழு உரிமை உள்ளது. அந்தச் சட்டமானது ஒன்றிய கேபினட்டில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றால் நடைமுறைக்கு வந்துவிடும். இதுவரையில் பொதுப்பட்டியலில் உள்ள பல்வேறு துறைகளில் மாநில அரசுகளால் இயற்றப்படும் சட்டங்கள் இந்த வகையில் தான் நிறைவேற்றப்பட்டன.
அதிகபட்சமாக, மாநில அரசு இயற்றும் சட்டங்களில் கூடுதல் விவரங்கள், சந்தேகங்கள் மற்றும் அரசியல்சாசனத்திற்கு எதிரான அம்சங்கள் ஆகியவை இருந்தால் மட்டும் ஒன்றிய அரசு அதுகுறித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொள்ளும். அதுதான் நடைமுறை. அப்படி பின்பற்றப்படுவதுதான் கூட்டாட்சித் தத்துவத்திற்கு அழகு.
பார்ப்பன சனாதனத்தையும் கார்ப்பரேட் கொள்ளையையும் கல்வியில் கொண்டுவந்தே தீரவேண்டும் என துடிக்கும் பாஜக அரசு, தமிழ்நாடு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதை தடுத்தே தீரவேண்டும் என துடித்துக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு நீட்டிலிருந்து விலக்கு பெறும் சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுப்பதற்கு, தனக்குச் சாதகமான உத்தியைக் கையாளத் துவங்கியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து இழுத்தடித்து, பிரச்சினையை நீர்த்துப் போகச் செய்து, அதற்குள் தமது நோக்கத்தை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதுதான் பாஜக அரசின் உத்தியாக கடந்த ஏழாண்டுகளாக இருந்துவருகிறது.
உதாரணத்திற்கு ஆதார் தொடர்பான வழக்கில், தனிமனிதர்களின் அந்தரங்க உரிமைக்கு எதிரானது எனத் தொடுக்கப்பட்ட வழக்கை கிடப்பில் போட்டு நீர்த்துப் போகச் செய்து, இடைக்காலத்தில் ஆதார் இருந்தால்தான் வாழ முடியும் என்ற நிலைமையை மறைமுகமாக ஏற்படுத்தி அதனை நடைமுறைப்படுத்தியதை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஆதார் எனும் தனி மனித அந்தரங்கத் தகவல் சேகரிப்புப் பணியை செய்வதற்கான மசோதாவை, நிதி மசோதா என ஒன்றிய அரசு கூறிய கித்தாப்புக் கதைகளை ‘அப்பாவியாக’ நம்பி, ஆதார் சட்டத்தை அனுமதித்தது உச்சநீதி மன்றம்.
நீட் தொடர்பாக தமிழ்நாடு தனிச்சட்டம் இயற்றினாலும், அதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து, மேலே சொன்னது போல கிடப்பில் போட்டு, பல ஆண்டுகளாக நீட்டை அமல்படுத்தி பிரச்சினை நீர்த்துப் போன பிறகு நீட்டுக்கு எதிரான தமிழக அரசின் சட்டம் செல்லுபடியாகாது என தீர்ப்பளிக்க வாய்ப்பிருக்கிறது.
மோடி அரசின் இந்த உத்தியைத் தான் – நீதிமன்ற உத்தியைத்தான் – தற்போது பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்திருக்கிறார் கரு நாகராஜன்.
மாநில அரசு மற்றும் ஒன்றிய அரசு ஆகிய இரண்டு தரப்புக்குமான பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வித் துறையில் சட்டம் இயற்றுவதற்கான மாநிலத்தின் உரிமையை நிலைநாட்டுவதற்கு சமீபத்தில் நம் கண் முன்னே கண்ட உதாரணம் இருக்கிறது.
அது ஜல்லிக்கட்டு போராட்டம் தான். பொதுப்பட்டியலின் கீழ் வரும் விலங்குகள் கொடுமை தடுப்புச்சட்டத்தில் மாநில அரசு வேண்டிய மாற்றத்தை ஏற்றுக் கொள்ள மத்திய அரசு மறுத்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற மெரினா எழுச்சி தான், ஒன்றிய மோடி அரசை அடிபணியச் செய்தது.
திமுக அரசு வெறுமனே சட்டத்தை மட்டும் இயற்றிவிட்டு அமைதியாக இருந்துவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கைக் காயப் போட்டு ஆதாரைப் போல நீட்டையும் அடுத்த தலைமுறையினர் மீது திணித்துவிடுவார்கள். இது தமிழக மக்களுக்குச் செய்யப்படும் துரோகமாகவே அமைந்துவிடும்.
ஆகவே நீதிமன்றத்தையும், ஒன்றிய அரசையும் அடிபணியச் செய்யும் வகையிலான மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பதும், அனைத்து மாணவர்கள் மற்றும் முற்போக்கு, ஜனநாயக சக்திகளின் போராட்டங்களுக்கு அனுமதியளிப்பது என்ற வகையில் தான் நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியும்.
ஆப்பிரிக்கா கண்டம் என்றதும், போர், பசி, வறுமை, குண்டுகளுக்கு பலி கொடுக்கப்படும் அப்பாவி உயிர்கள், பெற்றோரைஇழந்துநிற்கும்குழந்தைகள், சொந்த நாட்டை விட்டு வெளியேறும் அகதிகள் – ஆகியவைதான் நம் மனக் கண்களில் வந்து நிற்கின்றன. இவைஇயல்பாகிப்போன, வறுமையின்குறியீடாகநாம்பொதுவில்அறிந்துவைத்திருக்கும்ஆப்பிரிக்க கண்டத்தில்,இரண்டாவதுபெரியநாடானஎத்தியோப்பியா, அங்கு கடந்த8 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டுப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தில் பூகோள முக்கியத்துவம் வாய்ந்த நாடாக எத்தியோப்பியா இருக்கிறது. இந்நாடு பூகோள ரீதியாக கிழக்கு மற்றும் தெற்கு சூடான், சோமாலியா, எரித்திரியா, சிபூத்தி, கென்யா ஆகிய நாடுகளின் எல்லைகளோடு இணைக்கப்பட்டுள்ள –நிலத்தால் சூழப்பட்ட நாடாகும். 20-ம் நூற்றாண்டில் ஆப்பிரிக்க கண்டத்தில் முதல் தன்னாட்சி பெற்ற ஐ.நா வின் உறுப்பு நாடாகவும், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைநகரமாகவும் (அடிஸ் அபாபா – எத்தியோப்பியாவின் தலைநகர்) எத்தியோப்பியா விளங்குகிறது.
அதிக மக்கள்தொகை கொண்ட ஆப்ரிக்க நாடான இது, அக்கண்டத்தின் மூன்றாவது சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் (எரித்திரியா, எத்தியோப்பியா, சிபூத்தி, சோமாலியா) முதன்மையான இராணுவ வலிமை கொண்ட நாடாகவும் உள்ளது.
1992 வரை எத்தியோப்பியாவில், சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்பட்ட போலி கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்தது. அப்போது தனது அண்டை நாடுகளான சோமாலியா, எரித்திரியா மீது ஆக்கிரமிப்புப் போரை நடத்திய எத்தியோப்பிய அரசுக்கு, சோவியத் சமுக ஏகாதிபத்தியம் தனது பூகோள நலனுக்காக, ஆயுத உதவிகளைச் செய்து வந்தது. சோவியத் சமூக ஏகாதிபத்தியம் வீழ்ந்த பிறகு, இங்கிருக்கும் போலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி, ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்ட எத்தியோப்பியாவை தனது பேட்டை ரவுடியாக அமெரிக்க எகாதிபத்தியம் பயன்படுத்தி வந்தது.
எத்தியோப்பியா 10 தன்னாட்சி பிராந்தியங்களை கொண்ட கூட்டாட்சி அரசாகும். இந்நாட்டின் பிராந்தியங்களும், பிராந்திய கட்சிகளும் இனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. இந்நாட்டில் 80-க்கும் மேற்பட்ட இனங்கள் இருந்தாலும், ஒரோமியா, அம்ஹாரி, திக்ரின்யா போன்றவையே பெரும்பான்மை இனங்களாக இருக்கின்றன.
இவற்றில், தீக்ரே பிராந்தியத்தைச் சேர்ந்த இனவெறிக் கட்சியான “தீக்ரே மக்கள் விடுதலை முன்னணி”யின் (TPLF) தலைமையிலான கூட்டாட்சி அரசே 1992 முதல் 2018 வரை எத்தியோப்பியாவை ஆட்சி செய்தது. 2018 தேர்தலில் டி.பி.எல்.எஃப் தோற்கடிக்கப்பட்டு, “எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி”யின் (EPRDF) தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர், டி.பி.எல்.எஃப் கட்சி தீக்ரே பிராந்தியத்தை மட்டுமே ஆட்சி செய்யும் நிலைக்கு சென்றது.
தற்போது, எத்தியோப்பிய கூட்டாட்சி அரசின் இராணுவத்திற்கும், தீக்ரே பிராந்தியத்தை ஆளும் டி.பி.எல்.எப்.-க்கும் இடையே, கடந்த 8 மாதங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. 2018–இல் ஈ.பி.ஆர்.டி.எஃப். கட்சியைச் சேர்ந்த அபிஅகமது அலி என்பவரின்ஆட்சிஅமைத்ததும்,அந்நாட்டின் நீண்டகாலப்பகையாளியானஎரித்திரியாவுடன்சமாதானஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உயர்பதவிகளில்இருந்தும், இராணுவத் தலைமைப் பொறுப்புகளில் இருந்தும்டி.பி.எல்.எப்கட்சியைச்சேர்ந்தவர்களைநீக்கியதுபோன்றநடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதனால் அந்நாட்டில்ஒருபதற்றமானசூழல்இருந்துவந்தநிலையில், கொரோனாதொற்றுக்காரணமாகஆகஸ்ட்மாதத்தில்நடக்கவிருந்ததேர்தலும்ஒத்திவைக்கப்படுவதாகஅபிஅகமதுஅறிவித்தார். இதனைஎதிர்த்த டி.பி.எல்.எப். கட்சி, தான் ஆளும்தீக்ரேபிராந்தியத்தில்மட்டும்தேர்தலைநடத்தி, பிரச்சினையைத் தீவிரமாக்கியது.
இத்தேர்தலைச் சட்டவிரோதமானது என்று அபி அகமது அறிவித்திருந்த நிலையில், நவம்பர்4, 2020 அன்றுஅதிகாலையில்டி.பி.எல்.எஃப் கட்சி,தீக்ரேயில் உள்ள கூட்டாட்சி அரசு இராணுவமுகாம்கள்மீதுதாக்குதல்நடத்தியிருக்கிறது. டி.பி.எல்.எப்–இன் இத்தாக்குதலுக்குபதிலடிகொடுக்குமாறு இராணுவத்திற்குஉத்தரவிட்டார் பிரதமர்அபிஅகமது. இதனால்எத்தியோப்பியபடைகள்தீக்ரேபிராந்தியத்தைநோக்கிதாக்குதலைத்தொடர்ந்தன. இப்படிக் கடந்தநவம்பரில் தொடங்கிய இந்த உள்நாட்டுப்போர், 8 மாதங்களாக நடந்துவருகிறது.
இத்தைகைய பேரழிவை ஏற்படுத்தியுள்ள உள்நாட்டுப்போரை பற்றியும் அதனால் பாதித்த மக்களைப் பற்றியும் எழுதும் வலதுசாரி பத்திரிக்கைகளோ, அபிஅகமதுவின்அரசை மட்டுமே குற்றவாளியாகமுன்நிறுத்தி, டி.பி.எல்.எப்மீதுஒருபரிதாபபார்வையை ஏற்படுத்துமாறும்அவர்களுக்குநியாயம்கற்பித்தும் எழுதுகின்றன.அதன் மூலம், அமெரிக்காவும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் இந்த உள்நாட்டுப் போரைப் பற்றி சர்வதேச ரீதியில் உருவாக்க விரும்பும் கருத்தை பிரச்சாரம் செய்கின்றன.
ஆனால் இந்த உள்நாட்டுப் போரைப் பற்றி நாம் புரிந்துகொள்ள, டி.பி.எல்.எப்.ஐயும் அதன் பின்னணியையும் இப்போருக்குப் பின்னால் உள்ள அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் நோக்கங்களையும் புரிந்து கொள்வது அவசியமாகும்.
டி.பி.எல்.எப். அட்சி செய்த 2018-ம் ஆண்டு வரையில், எத்தியோப்பியாஅமெரிக்காவின்தீவீரஅடிவருடியாகவும், ஆப்பிரிக்ககொம்புநாடுகளில்அமெரிக்காவின்நலன்களைப்பாதுகாக்கும்பேட்டைரவுடியாகவும்இருந்து வந்தது. 1975 முதல்1991 வரைஅதில்சிக்கல்இருந்துவந்தாலும், 1991-ல்மெங்கிஸ்ட்ஹைலேமரியத்தின் போலி கம்யூனிஸ்ட்கட்சியைவீழ்த்தி, திக்கிரின்யா இனவெறிகட்சியான டி.பி.எல்.எப் ஆட்சியைப்பிடித்தது, அமெரிக்காவிற்கு ஒருவரப்பிரசாதமாகஅமைந்தது.
ஆட்சியமைத்த பின்னர், அமெரிக்காவின்பொருளாதார மற்றும் இராணுவ உதவியோடுதன்னுடையஇராணுவத்தைபலப்படுத்திக்கொண்ட டி.பி.எல்.எப்., அருகில் உள்ள எரித்திரியாவில் நடத்திய ஆக்கிரமிப்பு, சோமாலியாவின்மீதானபடையெடுப்பு, தெற்குசூடானில்மத்தியஸ்தம்என்றபெயரில்உள்நுழைவது– எனஅமெரிக்கஏகாதிபத்தியத்தின்அடியாள்படையாகவேசெயல்பட்டது. 2018-ல் டி.பி.எல்.எப்–ன் தேர்தல் தோல்வியை சூடான், சோமாலியா, எரித்திரியா, லிபியா ஆகிய நாடுகள் ஆதரித்ததே இதற்கு ஒரு முக்கியமான சான்றாகும்.
அதுமட்டுமன்றி1991 முதல்2018 வரைடி.பி.எல்.எப். ஆட்சிசெய்த30 ஆண்டுகளில் எத்தியோப்பியாவில் கொலை, இனப்படுகொலை, பெருமளவில்மக்கள்இடம்பெயர்வது, போர்கள், பாலியல் வன்முறை, ஊழல், மோசடி– எனமனிதஉரிமைமீறல்கோரத்தாண்டவம்ஆடியது. தீக்ரேபிராந்தியஇனமக்களின்நலன்களுக்காகஒதுக்கப்படும்நிதியைத்தன்னுடையைஇராணுவத்துக்காகபயன்படுத்துவதன்மூலம்சொந்தபிராந்தியமக்களின்நலன்களுக்குஎதிரான கட்சியாகவும் டி.பி.எல்.எப் இருந்தது. 2018-க்குப்பின்னும்இனமோதல்களைதூண்டும்வகையிலும், அபிஅகமதுவின்ஆட்சிக்குநெருக்கடிகொடுப்பதற்கும் பல்வேறுதக்குதல்களை நடத்தியது.
இப்படி சொந்த பிராந்திய மக்களுக்கே எதிரான, இனவெறி கொண்ட, அமெரிக்காவின் அடியாள் படையான டி.பி.எல்.எப் கட்சிக்கு ஆதரவாக, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் வலதுசாரிப் பத்திரிக்கைகளும் கருத்துருவாக்கம் செய்ய வேண்டியதன் பின்னணியை நாம் பார்க்கலாம்.
எத்தியோப்பியாவில் “மனித உரிமை மீறல்” எனக் கூச்சலிடும் அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் சதித்தனம்!
எத்தியோப்பியாவில்உள்நாட்டுப் போர்தொடங்கியதில் இருந்தே, ஐரோப்பியபிரஸ்ஸல்ஸ்கூட்டமைப்பு, அம்னஸ்டிஇண்டர்நேஷனலின் அறிக்கை(Amnesty International), யு.என்.எச்.சி.ஆர்.இன் அறிக்கை (UNHCR – United Nations High Commissioner for Refugees), அதனைஏற்றுக்கொண்டஅமெரிக்கவெளியுறவுசெயலாளர்ஆண்டனிபிளிங்கன்– எனஅனைவரும்இதனை ”இனஅழிப்புப்” போர்எனக்கூறினர்.
மேலும், “தீக்ரேமக்கள்பசியில்வாடுகின்றனர், அவர்களுக்குஇப்போதுஉதவிதேவைப்படுகிறது, பெரிய பஞ்சம் வரப்போகிறது, எத்தியோப்பியாவின் அருகில் உள்ள எரித்திரியபடைகளால்பெண்கள்பாலியல்வன்புணர்வுக்குஆளாக்கப்படுகின்றனர்” – என அடுக்கடுக்கான அறிக்கைகளின்மூலம், எரித்திரியாவையும்எத்தியோப்பியாவையும் கண்டித்தனர். எத்தியோப்பியாவிற்குபொருளாதாரமற்றும்பாதுகாப்புஉதவிகள் வழங்குவதில்கட்டுப்பாடுவிதித்துள்ளதுஅமெரிக்கா. இதன்மூலம், பொதுவெளியில்அபிஅகமதுவின்அரசுமற்றும்எரித்திரிய அரசை குற்றவாளிகளாகச் சித்தரிக்க முயற்சிப்பதன் மூலம் டி.பி.எல்.எப்.-ஐ நியாயப்படுத்துகின்றனர்.
அமெரிக்க தலையீட்டை எதிர்த்துப் போராடும் எத்தியோப்பிய மக்கள்
”எத்தியோப்பியாவுக்கு பராமரிப்பாளர் தேவையில்லை” ”நாங்கள் ஒருபோதும் மண்டியிடமாட்டோம்” என்ற முழக்கங்களைத் தாங்கிய பதாகைகளுடன் அந்நாட்டு மக்கள் 10,000 க்கும் மேற்பட்டோர் அமெரிக்காவை எதிர்த்து பேரணி நடத்தியுள்ளனர். “இது உள்நாட்டு விவகாரம் அமெரிக்கா இதில் தலையிடத் தேவையில்லை. அமெரிக்கா விதித்துள்ள தடைகளை நாங்கள் கண்டிக்கிறோம்” என்ற மக்களின் கருத்தில் நின்று அதனை ஆராயத் தொடங்குவோம்.
சமீபத்தில்,நைல்நதியில்அணைகட்டும்திட்டத்தினால்எத்தியோப்பியாவுக்கு எகிப்துடன் ஏற்பட்டுள்ளமுறுகல்நிலை, கிழக்குஆப்பிரிக்கா முழுவதும்வெட்டிக்கிளிபடையெடுப்பு, வேலையின்மை, பசி, பஞ்சம்– எனபல்வேறுநெருக்கடிகளைஎதிர்கொண்டுவரும்நிலையில், உள்நாட்டுப் போரின் மூலம்மேலும்கடுமையானநெருக்கடியையும், சர்வதேசஅளவிலானஅழுத்தத்தையும்அபிஅகமதுவின்அரசுக்குஏற்படுத்தவேண்டும்என்பதேடி.பி.எல்.எப்–ன்நோக்கமாகஇருக்கிறது.
கடந்த 2018-இல் அமைந்தஅபிஅகமதுவின்ஆட்சி, எரித்திரியாவுடனானசமாதானஒப்பந்தம், தற்போது நடக்கப்போகும் தேர்தல் வாக்குறுதிகளில் அபி அகமதுவின் கூட்டணி எரித்திரியாவைப் போல நிலங்களை தேசியமயமாக்கப் போவதாக அறிவித்திருப்பது – என இவையெல்லாம் டி.பி.எல்.எப்–க்குமட்டுமல்லஏகாதிபத்தியங்களின் நலன்களுக்கும் உகந்ததாக இல்லை.
டி.பி.எல்.எப் மற்றும் ஏகாதிபத்தியங்கள்எத்தியோப்பியாவுக்கு நிகராக எரித்திரியாவையும் கடுமையாக தாக்குகின்றன. உதாரணமாக, ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் தன்னுடைய அறிக்கையில், எரித்திரிய வீரர்கள் தீக்ரேயில் ”மக்களை கொடூரமாக கொல்கின்றனர்” என்றும் ”பெண்களை பாலியல் வல்லுறவு” செய்கின்றனர் என்றும் கூறுகிறது. அமெரிக்காவோ எத்தியோப்பியாவிலிருந்து எரித்திரிய படைகள் வெளியேற வேண்டும் என எச்சரிக்கிறது. இதை மறுத்த எரித்திரிய பிரதமர், எத்தியோப்பிய உள்நாட்டுப்போரின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாகக் கூறுகிறார்.
இவ்வளவு சிரமப்பட்டு எத்தியோப்பியாவோடு இணைத்து எரித்திரியாவையும் தாக்க முயற்சிப்பதற்குப் பின்னே நீண்டவரலாற்றுப்பின்னணிஇருக்கிறது.எனினும்,சுருக்கமாகப்பார்த்தால், 1896-இல் காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், கலானியாகாத ஒரே ஆப்பிரிக்க நாடு எத்தியோப்பியாதான். ஆனால் அந்த படையெடுப்பில் அருகாமை நாடான எரித்திரியா அடிமைப்படுத்தப்பட்டது. இந்த அவமானத்தை போக்க முசோலினியின் ஆட்சி காலத்தில் எரித்திரிய துருப்புகளின் உதவியோடு எத்தியோப்பியா மீது மீண்டும் போர் நடத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனாலும் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை.
இரண்டாம் உலகப்போரில் இத்தாலி தோற்கடிப்பட்டதால் எரித்திரியா, எத்தியோப்பியா ஆகிய இரு நாடுகளும் விடுவிக்கப்பட்டன. ஆனால் எரித்திரியா தனி நாடாக இல்லாமல், எத்தியோப்பியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்றிலிருந்து எத்தியோப்பியாவால் ஒடுக்கப்படும் எரித்திரிய மக்கள் தனி நாடுக்காக போராடி வந்த நிலையில், 1991-இல்ஐ.நா நடத்திய வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் தனிநாடு வேண்டுமென வாக்களித்தன் மூலம் எத்தியோப்பியாவிடமிருந்து விடுதலை அடைந்தது எரித்திரியா.
இந்த விடுதலைக்குப் பின் ஆப்பிரிக்கநாடுகளுக்கானமுன்மாதிரியாகஎரித்திரியாவிளங்கியது. இரண்டாம் உலாகப்போருக்கு பின் பிரிட்டன் எரித்திரியாவை விட்டு வெளியேறியதும், செங்கடல் கடற்கரையில் எரித்திரியா இருப்பதனாலும், அங்கு இருக்கும் தாதுப்பொருட்களின் வளம் காரணமாகவும், தனது 14-வது மாகாணமாக எத்தியோப்பியா எரித்திரியாவை இணைத்துக்கொண்டதுதான் வரலாறு.
எரித்திரியாவின் விடுதலையை ஏற்காத எத்தியோப்பியாவின்இராணுவம், எரித்திரிய விடுதலைக்குப் பின்பும்ஆக்கிரமிப்புப் போரை தொடர்ந்துநடத்தி வந்தது. ஏனென்றால் எத்தியோப்பியாவின் ஆட்சியின் கீழ் எரித்திரியா இருக்க வேண்டும் என்பது டி.பி.எல்.எப்–இன் நோக்கம் என்பதைத் தாண்டி ஏகாதிபத்தியங்களின் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களுக்கும் அவசியமானதாக இருக்கிறது என்பதே உண்மை.
இன்னொருபுறம், அமெரிக்காவின் நோக்கத்திற்கு எதிராக, கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கவில், குறிப்பாக எரித்திரியாமற்றும்எத்தியோப்பிய பகுதிகளில்சீனாவின் ஆதிக்கம் வளர்ந்துவருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு 16 பில்லியன் டாலரை சீனா கடனாக வழங்கியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் (2017-2018) ஆப்பிரிக்க நாடுகளில் சீனாவின் வர்த்தகம் 60 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் 2012-ல் 120 பில்லியன் டாலர்களாக இருந்த அமெரிக்காவின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான வர்த்தக மதிப்பு, 2017-2018 ஆண்டுகளில் 330 மில்லியன் டாலர்களாக சரிந்துள்ளது.
எத்தியோப்பியாதனதுபெரும்பாலானபொருட்களைச்சீனாவிலிருந்துதான்இறக்குமதிசெய்கிறது. போர்நடக்கக்கூடியதீக்ரேபிராந்தியத்திலும்அதிகஅளவிலானமுதலீட்டினை சீனாசெய்துள்ளது.அதேபோல்எரித்திரியாவிலும்எரிசக்தி, பொதுசுகாதாரம், உள்கட்டமைப்பு ஆகியதுறைகளில்தன்னுடையமுதலீடுகளைச்செலுத்திவருகிறது. மிகமுக்கியமாகசீனாவின்புதிய பட்டுப்பாதைத்(Belt and Road)திட்டத்தில்எரித்திரிய எத்தியோப்பிய பகுதிகள் முதன்மையான இலக்காகஇருக்கின்றன.
இப்படி இந்த இரண்டு நாடுகள் மட்டுமின்றி ஆப்பிரிக்க நாடுகளில் நடக்கும் சமாதான ஒப்பந்தம் போன்ற அமைதி காக்கும் பணிகளுக்கும் போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்றவற்றிற்கும் சீனா அதிக அளவிலான நிதியை செலவிடுவதன் மூலம் ஆப்பிரிக்க கண்டத்தில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது.
புதிய ஏகாதிபத்தியமாக வளர்ந்து வரி சீனாவின் ஆதிக்கத்திற்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். (அமெரிக்க அடிவருடியான டி.பி.எல்.எப் ஆட்சியில் இருந்தபோது அம்ஹாராமற்றும்எரித்திரியாஉள்ளிட்டபகுதிகளில்சீனாவின் திட்டங்களை குறிவைத்து எத்தியோப்பிய இராணுவம்போர்நடத்தியுள்ளதுகவனிக்கத்தக்கது.)
எனவே, சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தவும் ஆப்பிரிக்க கொம்பு நாடுகளில் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டவும் ஒரு பேட்டை ரவுடி அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்குத் தேவைப்படுகிறது. அதனால்தான் எத்தியோப்பியாவையும் எரித்திரியாவையும் மட்டுமே குற்றவாளிகளாக்கி, டி.பி.எல்.எப்.-இன் தாக்குதல்களை இனவுரிமைக்கான பிராந்தியப் போராட்டமாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர்.
உலகம் முழுவதிலும் ஆக்கிரமிப்புகளையும் ஆட்சிக் கவிழ்ப்புகளையும் நடத்தி, இலட்சக் கணக்கான மக்களைக் கொன்ற ஈவிரக்கமற்ற அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் “மனித உரிமை மீறல், இன அழிப்பு, போர், பஞ்சம்” எனக் கூச்சலிடுவதன் நோக்கம் என்ன?
“பயங்கரவாதத்துக்குஎதிரானபோர்” என்றபெயரில்ஆப்கான், ஈரான்போன்றநாடுகள்நேட்டோகூட்டணிப்படைகளால்ஆக்கிரமிக்கப்பட்டன. ஆனால், “மனித உரிமை மீறல்” என்னும் பெயரில், 2011-ல்லிபியாவில் சர்வாதிகாரிகடாபியின்ஆட்சிதூக்கியெறியப்பட்டதுஏகாதிபத்தியங்களின்ஒருபுதியவகையிலானஅணுகுமுறையாகஅமைந்தது.
அமெரிக்க சதியால் கொல்லப்பட்ட லிபியாவின் சர்வாதிகாரி கடாபி
இப்படி “மனித உரிமை மீறல்” என்ற பெயரில் தலையிடும் இந்தஅணுகுமுறைஅமெரிக்கமற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களுக்குவெற்றியைஏற்படுத்தியதோடு, ஆப்கான், ஈரான்போன்றநாடுகள்ஆக்கிரமிக்கப்பட்டபோதுஉலகெங்கும் போராட்டங்கள் நடந்தது போல, லிபியாஆக்கிரமிக்கப்பட்டபோதுபோராட்டங்கள் எதுவும் நடத்தப்படவில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.
மேலும், “இப்போரில் 200 கோடி டாலரை அமெரிக்கா செலவிட்டது. ஆனால் ஒரு அமெரிக்கன் கூடக் கொல்லப்படவில்லை. கடந்த காலங்களைப் போலன்றி நாங்கள் முன்னேறிச் செல்வதைக் குறிக்கும் முக்கியமான விசயம் இது.” எனக் கொண்டாடியவர்தான், அமெரிக்காவின் அப்போதைய துணை அதிபரும் இப்போதைய அதிபருமான ஜோ பைடன்.
தற்போது எத்தியோப்பிய உள்நாட்டுப் போரில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் தலையிட வேண்டும் என வலதுசாரி பத்திரிகைகள் கூறுவதும், “தீக்ரே மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது”, “மனித உரிமை மீறல் நடக்கிறது” என்ற அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் கூச்சலும் லிபியாவில் பின்பற்றிய ’மனித உரிமை மீட்பு’ முறையின் மூலம் எத்தியோப்பியாவை தமக்குக் கீழான நாடாகக் கொண்டுவரும் சதித் திட்டமே ஆகும்.
ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தற்போது பிரிக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் உள்ள பெருந்தோட்ட கிராமத்தில் பிறந்தவர் தோழர் அம்பிகாபதி. இவர் விவசாயத்தை பின்னணியாக கொண்ட நடுத்தர வர்க்க விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
இவர் சிறு வயதில் இருந்தே சுயமரியாதை, சாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான உணர்வு கொண்டவர். திராவிட இயக்க தோழர்களை வரவழைத்து கிராமத்தில் இலக்கியக் கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் போன்றவற்றை நடத்தி மக்கள் மத்தியில் பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை பிரச்சாரம் செய்தார்.
இளம் வயதில் தி.மு.க.வில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். 1983-ல் ஈழ ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். சிறையில்தான் அவருக்கு மார்க்சிய–லெனினிய–மாவோ சிந்தனை கொண்ட நக்சல்பாரிஇயக்கத் தோழர்களுடன் தொடர்பு கிடைத்தது. புதிய கலாச்சாரம் இதழ்களை படித்து மார்க்சிய–லெனினிய–மாவோ சிந்தனையால் ஈர்க்கப்பட்டு பிறகு சீர்காழி பகுதியில் புதிய கலாச்சாரம் இதழை விற்பனை செய்வது, புதிய கலாச்சாரம் வாசகர் வட்டம் நடத்துவது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்.
மக்கள் கலை இலக்கிய கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சீர்காழி பகுதியில் மக்கள் கலை இலக்கிய கழக அமைப்பைக் கட்டி, பகுதி உழைக்கும் மக்களிடம் மார்க்சிய–லெனினிய அரசியலை பிரச்சாரம் செய்தார். பிறகு தமிழக அளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பு துவங்கப்பட்டபோது நாகை மாவட்ட அமைப்பாளராக விவசாயிகள் மத்தியில் வேலை செய்து மக்களை அணி திரட்டினார்.
விவசாயிகளை பாதிக்கின்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் விவசாயிகள் மற்றும் பொது மக்களை அணி திரட்டி போராடி வந்தார். அதில் ஒரு முக்கியமான போராட்டம்தான் சீர்காழியில் நடைபெற்ற இறால் பண்ணை அழிப்பு போராட்டம். இந்த பேராட்டத்தை ஒடுக்குவதற்கு,இறால் பண்ணை முதலாளிகளால் பகிரங்கமாய் தோழர் அம்பிகாபதிக்கு கொலை மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள் மற்றும் தேவாரம் தலைமையிலான போலீசு படையின் பல்வேறு நெருக்கடிகள் வந்த போதும் அதையெல்லாம் எதிர்த்து உறுதியாக போராடியவர்தான் தோழர் அம்பிகாபதி. கடந்த 2015-ம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வந்தார்.
அதேபோல, கருவறை நுழைவுப் போராட்டம், வினோதகன் மருத்துவமனை கைப்பற்றும் போராட்டம், தேக்குப் பண்ணை அழிப்புப் போராட்டம், தில்லை நடராஜர் கோவிலில் தமிழில் பாடும் உரிமைக்கான போராட்டம், திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளுக்கு எதிரான போராட்டம்… இப்படி அமைப்பு முன்னெடுத்த அனைத்து போராட்டங்களிலும் ஒரு முன்னணி தோழராக தனது மரணம் வரை செயல்பட்டு வந்தார். பல்வேறு போராட்டங்களில் பல முறை சிறைக்கு சென்றுள்ளார்.
மரணமடைந்தபோது தோழர் அம்பிகாபதிக்கு வயது 69. ஆனாலும் ஒரு இளைஞரை போல சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார். 27.06.21 அன்று தனது வீட்டில் உள்ள மாமரத்தில் ஏறி கீழே விழுந்து அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனளிக்காமல் அன்று மாலை 6.30 மணிக்கே தோழர் மரணமடைந்தார்.
28.06.2021 அன்று கடலூர் மண்டலம் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமையில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஊர்ப் பொதுமக்கள், உறவினர்கள், நண்பர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள், 20-க்கும் மேற்பட்ட ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் கலந்து கொண்டனர்.
தோழர் அம்பிகாபதி தான் ஏற்றுக்கொண்ட மார்க்சிய–லெனினிய சித்தாந்தத்தில் சரியான திசை வழியில் உறுதியாக ஊன்றி நின்றார். 1980-களில் அமைப்பில் ஓடுகாலிகள் ஏற்படுத்திய பிளவு குழப்பத்தின் போதும் சரி, சமீபத்தில் 2020-ல் சீர்குலைவுவாதிகள் ஏற்படுத்திய பிளவு மற்றும் சதியின்போதும் சரி, அவர்களுக்கு எதிராக கறாராக போராடி மா–லெ–மா சிந்தைனையை உயர்த்தி பிடித்து அமைப்பின் பக்கம் நின்று அமைப்பை பாதுகாத்தார்.
1 of 5
இரங்கல் கூட்டத்தில் பேசிய தோழர்கள்,ஜனநாயக சக்திகள, மாற்று அமைப்புகளை சேர்ந்தவர்கள் அனைவரும் அவருடைய எளிமையான வாழ்க்கை, அவர் தாம் ஏற்றுக் கொண்ட மார்க்சிய–லெனினிய அரசியலை அனைவரும் ஏற்கும் வகையில் பிறருக்கு தெளிவாகவும் எளிமையாகவும் எடுத்துரைப்பது பற்றியும், அவரது கடினமான உழைப்பு பற்றியும் பேசினார்கள்.
‘புரட்சிதான் தீர்வு, மார்க்சிய–லெனினிய சித்தாந்தம்தான் சரியானது, இறுதியானது என்பதை கருத்து ரீதியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். அதற்கு மார்க்சிய–லெனினிய சித்தாந்தத்தைப் பற்றி எங்களுக்கு அறிமுகப்படுத்தி கற்றுக் கொடுத்தவர் தோழர் அம்பிகாபதி’ என்று பிற அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்த தலைவர்களும் பேசினர். பல பேர் நான் மக்கள் அதிகாரம் என்ற அமைப்பில் இல்லாமல் வேறு ஒரு அமைப்பில் செயல்பட்டாலும் மக்களை பாதிக்கின்ற சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவர் தோழர் அமபிகாபதி என்று கூறினர். தங்களைப் போல பல பேரை உருவாக்கியவர் அவர் என்பதையும் பதிவு செய்தார்கள்.
இரங்கல் கூட்டத்தில் பேசிய அனைவருமே “தோழர் அம்பிகாபதி விட்டுச்சென்ற பணியை நாம் எடுத்து செல்வதுதான் நாம் அவருக்கு செய்யும் மரியாதை – அதை தொடர்ந்து செய்வோம்” என்று உறுதியேற்றனர்.
இறுதியாக தோழருக்கு 2 நிமிடம் சிவப்பு அஞ்சலி செலுத்தி அவர் மேல் சிவப்புக் கொடி போர்த்தப்பட்டு ‘தோழர் அம்பிகாபதிக்கு சிவப்பஞ்சலி, நக்சல்பாரி இயக்கத் தோழர் அம்பிகாபதிக்கு வீர வணக்கம், மார்க்சிய–லெனினிய–மாவோ சிந்தனை வெல்லட்டும்’ ஆகிய முழக்கங்களோடு ஊர்வலமாக கொண்டு சென்று எந்த ஒரு பார்ப்பனிய சாதிய சடங்குகள் எதுவும் இல்லாமல் அமைப்பு முறைப்படி தாடாலம் காமராஜபுரம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
தகவல் : மக்கள் அதிகாரம், கடலூர் மண்டலம். தொடர்பு எண் : 9791286994.
புடவை என்றவுடன் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது திருவிழா, திருமணம், கோவில். இவை எல்லாம் தானே புடவையை பற்றி நாம் அதிகம் பேசும் இடம். ஆனால், ஆண்களுக்கு புடவை என்றவுடன் நினைவுக்கு வருவது பெண்களின் வெட்கமும், அழகும். இப்படி ஆடை ஒருவருக்கும் ஒரு விதமான பார்வையை தருகிறது. இந்த புடவை வரலாற்றறை புரட்டும் முன் ஆடையை பற்றி புகழ்ப்பெற்ற ஒரு நகைச்சுவையைப் பார்ப்போம்.
பிரான்ஸ்சில் ஒரு பள்ளியில் குழந்தைகளை ஓவியக் கண்காட்சிக்கு அழைத்து சென்றார்களாம். அங்கே ஆணும் பெண்ணும் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது போன்று ஒரு ஓவியம் இருந்தாம். அதைப்பார்த்த ஆசிரியர் குழந்தைகளிடம் இதில் ஆண் யார்? பெண் யார்? என்று கேட்டபோது, ஆடை அணியாமல் இருகிறார்களே எப்படி ஆணா பெண்ணா என்று கண்டுபிடிக்க முடியும் என்று குழந்தைகள் ஆசிரியரிடம் கேட்டார்களாம்.
நம்மைச் சுற்றி உள்ள சமூகம்தான் நமது ஆடையை கட்டமைகின்றது. அது ஆணுக்கு ஒருவிதமாகவும் பெண்ணுக்கு ஒரு விதமாகவும் ஆடை அணிவிக்கிறது. இதைப் பார்த்தே பழகிய கண்கள் ஆண் என்றால் ஒருவிதமாகவும் பெண் என்றால் வேறுவிதமாக பார்க்கிறது. ஆண் பெண் ஏற்றத்தாழ்வை அவர்களுக்கான உடையிலே பிரதிபலிக்கிறது. இதில் ஏதேனும் மாற்றத்தை நிகழ்த்தினால் , அதை உடனே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் எளிதில் வந்துவிடுவதில்லை.
ஆண், பெண் பேதம் தாண்டி, ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான ஆடைப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. இப்படி எல்லா நாடுகளின் கலாச்சாரத்திலும் ஆடை ஏதோ ஒரு இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்தியா என்றவுடன் நினைவுக்கு வருவது வேட்டி, புடவைதான். இதில் பெண்களின் புடவைதான் இந்தியாவின் கலாச்சார அடையாளமாக காட்டப்பட்டிருக்கிறது.
சேலை உலகின் மிகப் பழமையான ஆடை வடிவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வடமேற்கு இந்தியாவில் சிந்து சமவெளி நாகரிகத்தில் (3,300–1,300 B.C.E.) முதன் முதலில் சேலை பயன்படுத்தினார்கள் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அதன் பின்னர் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும் சேலை புழக்கத்தில் வந்தது.
இந்தியாவில் சேலை ஒவ்வொரு பகுதிலும் வெவ்வேறு பெயர்களை கொண்டு உள்ளது. இந்த saree என்ற வார்த்தை “satika” சமஸ்கிரத மற்றும் பாலி மொழியில் இடம்பெற்று உள்ளது. “satika” என்பது பெண்கள் அணியும் ஆடை என்று புத்த இலக்கியத்தில் ஜகர்தா கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பின் இந்த பெயர் புழக்கத்திலிருந்து எளிமையாக “saree” என்று மாறியது.
இன்றும் புத்த துறவிகள் உடுத்தும் தைக்கபடாத ஆடையே தூய்மையின் அடையாளமாக கருதுகின்றனர். இதைப் போன்றே இந்துமத நம்பிக்கையில் தைக்கப்படாத ஆடையை அணியும் பெண்களே தூய்மையானவர்களாக பார்க்கப் படுகின்றனர். இதனால் தான் பெண்கள் கோவில், திருவிழா, திருமணம் போன்ற நாட்களில் புடவை அணிய வேண்டும் என்ற பிம்பத்தை ஏற்படுத்த காரணம்.
முகலாயர்களின் வருகைக்குபின் சேலையில் கற்கள், ஜமிக்கிகள் கொண்ட வேலைபாடுகளும், முந்தியில் அன்னம், மயில், யானை போன்ற உருவங்கள் பொறிக்கப்பட்டும், புடவையின் ஓரங்களில் வேலைபாடுகளையும் கொண்டு வந்தனர். பிரிட்டிஷ் வருகைக்குப் பின் நீண்ட தைக்கபடாத ஆடையையுடன் தைக்கப்பட்ட ரவிக்கை மற்றும் பாவாடை இணைக்கப்பட்டது. பின்னாட்களில் புடவையுடன் இந்த இரண்டும் இணைந்து கொண்டன.
இந்த நாலரை முழம் முதல் எட்டு முழம் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகவே இருந்தது வந்துது. பின் நீள கால்சட்டைகளின் வருகைக்குபின் ஆண்களிடமிருந்து வேஷ்டி மறைந்தது. ஆனால், உடுக்க வசதியற்ற உடை என்றாலும் பாரம்பரியம், கலாச்சாரம் என்ற பெயரில் புடவை மீது பெண்களுக்கு ஒரு அதீத ஈர்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்த சாவித்திரி பூலே தான் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். அவர் தாழ்த்தப்பட்ட மக்களின் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லித்தர பள்ளிக்குச் செல்லும் வழியில் அதனைத் தடுக்க ஆதிக்கச் சாதியினர் அவரை கற்கள் மற்றும் சாணியை கொண்டு அவமதித்த போதும் மாற்று புடவையை எடுத்துச் சென்று மாற்றிக் கொள்வார் என்பது வரலாறு.
அதுமட்டுமா, வாராணசியில் ஜான்ஸி போரிலும் கூட புடவை அணிந்து சென்று போரிட்டார். தெலுங்கனாவில் ருத்ரமாதேவி என்ற பெண் அரசி, ஆணின் ஆடையை உடுத்தியே போர்களத்தை எதிர்கொண்டாலும், பின்னாளில் புடவையுடன் போர்க்களத்தில் வெற்றிகொண்டார். கல்விக் கூடம் முதல் போர்க்களம் வரை புடவை இந்தியாவில் பெண்களுக்கான உடையாக இருந்துள்ளது.
ஆனால், இந்தப் புடவையை கட்டக் கூடாது என தடை விதிக்கப்பட்ட பெண்களும் இந்தியாவில் இருக்கின்றனர். அவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களே. கேரளாவில் முளச்சிபரம்பில் முலைவரி சட்டத்தை எதிர்த்து நங்கேளி நடந்திய போராட்டம் இதற்கு ஒரு சாட்சி.
கிழத்தஞ்சையில் முழங்கால் சேலையை கணுக்காலுக்கு இறக்கி கொடுத்த மணலி கந்தசாமி போன்றோர்களின் போராட்டமும் மற்றொரு சாட்சி. விவசாயக் கூலிகளாகவும், பண்ணை அடிமைகளாகவும் வாழச் சபிக்கப்பட்ட பெண்கள் வரப்பில் நிற்கும் ஆண்டைகளின் வக்கிரப்பார்வைக்குத் தீனியாக்கப்படவும், வேலை வேகமாக செய்ய வைக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் தங்கள் சேலைகளை முழங்காலுக்கு மேலே தூக்கிக் கட்டிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டு இருக்கிறார்கள். செங்கொடி இயக்கத்தின் தலைமையில் போராடி தான் அந்த சேலை கணுக்கால் வரை இறங்கியது. இப்படி போரட்டங்களுடனே பெண்களின் புடவை பயணித்து வந்துள்ளது.
புடவையை சுமார் 80 வகையான புடவை ரகங்களை கொண்டு உள்ளது. மாநிலத்துக்கு மாநிலம் புடவையின் தரம், ரகம் மாறுபடும் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், குஜராத்தில் பாந்தினி, மகாராஷ்டா பைத்தானி, வாரணாசியில் பனராஸ், மைசூரில் மைசூர் பட்டு, கேரளாவில் செட் முண்டு, பெங்காலில் பல்சுரி பட்டு என நகரத்திற்கு எற்றவாரு புடவைகள் இருக்கக்கூடும்.
சேலை மூன்று பகுதிகளை கொண்டது பாவாடை, ரவிக்கை அல்லது மாராப்பு, சீலை. இதை வடமேற்கில் லேஹெங்கா, காக்ரா மற்றும் சோலி என சொல்கின்றனர். சோலி அல்லது சீலையை வடமேற்கில் தலைக்கும் தெற்கில் தோளில் பல்லுவாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இப்படிதான் 6-ம் நுற்றாண்டில் புடவையை வகைப்படுத்தி இருந்தனர்.
உலகம் முழுவதும் சுமார் 108 வகையாக புடவையை உடுத்துகின்றனர். புடவை சற்று உடுத்த கடினமான உடை என்றாலும் அதன் மீது மக்களுக்கு அதீத ஈர்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. ஏனெனில் புடவையை பலவிதமாக இன்றைக்கு வடிவமைக்கின்றனர். புடவை உலக அரங்கில் சுமார் 38,000 கோடி வர்த்தக மதிப்பை கொண்டுள்ளது. இது இன்னும் 6 ஆண்டுகளில் 60,000 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீராங்கனைகள் முதல் தற்போது இருக்கும் பெண் அரசியல் ஆளுமைகள் வரையில் மருத்துவர்கள், விஞ்ஞானிகள் என அனைத்து ஆளுமைகளும் புடவையைப் பயன்படுத்தியது, இந்த ஆடையின் மீதான பார்வையை மேம்படுத்தியிருக்கிறது. சேலை அணிவதற்கும், தமது சுயமரியாதையை காப்பாற்றுவதற்குமான போராட்டத்தை பெண்கள், புடவையை முன் வைத்து இந்தியாவில் முன்னெடுத்திருக்கின்றனர்
சாவித்ரிபாய் பூலே முதல் அருந்ததிராய் வரை பல பெரிய ஆளுமைகளும் சேலையை தங்களின் உடையாக தேர்ந்தெடுத்து இருகின்றனர். புடவை கடந்து வந்த பாதை துயரங்கள் நிறைந்து இருந்தாலும் உலகம் முழுவதும் பெண்களின் விருப்ப ஆடையாக இருந்து வருகிறது.
பெண்கள் பணிக்குச் செல்லும் இந்தக் காலகட்டத்தில், சேலை உடுக்கவும், அவசர உலகில் பயணிக்கவும் வசதியற்றதாக இருக்கிறது. ஆகையால் பெண்களின் உடையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆடையைப் பொறுத்தவரையில் ஒருவர் உடுக்கும் உடை, அவரவர் விருப்பத்திற்கு உட்பட்டது. அதை தேர்தெடுக்கும் உரிமை அவர்களுக்கானது மட்டுமே. தொடர்ந்து மாற்றத்தை நோக்கி பயணிப்போம் !!
பெட்ரோல் விலையைக் காட்டிலும் கடந்த ஓராண்டில் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது சமையல் எண்ணெய் விலை. பெட்ரோல் இல்லாமல் கூட வாழ்ந்துவிடலாம்; ஆனால், சமையல் எண்ணெய் பயன்படுத்தாத சாமானியர் இருந்துவிட முடியாது. கடந்த 2020-ம் ஆண்டு, தொடக்கத்தில் ரூ.100 விற்ற ஒரு லிட்டர் ரீ பைண்ட் சமையல் எண்ணெய், ஜூன் 2021-ல் ரூ.180-க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் எண்ணெய் விலை கடந்த ஆண்டு அதிகரித்துள்ளது. உதாரணமாக, டெல்லி நகரத்தில் கடுகு, வனஸ்பதி, சோயா மற்றும் பாமாயில் சில்லறை விற்பனை விலை சுமார் 30% அதிகரித்துள்ளது. சூரியகாந்தி எண்ணெய் 40% அதிகரித்துள்ளது.
இந்தியா தனது சமையல் எண்ணெயில் பெரும் பகுதியை இறக்குமதி செய்கிறது. தனது உள்நாட்டு தேவையில் சுமார் 70% அளவிற்கு இறக்குமதி செய்கிறது. இந்த நிலை எப்போதுமே அப்படி இருந்ததில்லை.
1990-களின் முற்பகுதி வரை, கடுகு எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற வழக்கமான சமையல் எண்ணெய்களால் இந்தியா தன்னிறைவு பெற்றது. அந்த நேரத்தில் அமல்படுத்தப்பட்ட தாராளமயமாக்கலுக்குப் பிறகு, சர்வதேச வர்த்தக ஒப்பந்தங்களுக்குச் சாதகமான கொள்கை முடிவுகளை ஆட்சியாளர்கள் எடுத்ததன் தொடர்ச்சியாகவும், தனிநபர் நுகர்வு கணிசமாக அதிகரித்ததன் காரணமாகவும் பற்றாக்குறை அதிகரித்தது.
இந்தியா கச்சா எண்ணெய் (பெட்ரோலியம்), தங்கத்துக்கு அடுத்த படியாக இறக்குமதிக்கு அதிகம் செலவிடும் பொருளாக சமையல் எண்ணெய் மாறியது.
இந்தியாவின் சமையல் எண்ணெய் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்கும் சூழலானது, சர்வதேச நிலைமைகளுக்கு ஏற்றவாறு எண்ணெய்களின் சில்லறை விற்பனை விலையை இந்தியாவில் மாறச் செய்தது.
கடந்த ஆண்டில், உலகம் முழுவதும் பல பயிர்களின் உற்பத்தி பெரும் சவால்களை எதிர்கொண்டன. மலேசியாவில் கோவிட் -19 பொதுமுடக்கத்தால் பனை பயிர் கொள்முதல் மோசமானது. 2020-ம் ஆண்டில் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் எஎற்பட்ட வறண்ட சூழல் உலக அளவிலான சூரியகாந்தி எண்ணெய் உற்பத்தியை 9% குறைத்தது. பயோடீசலுக்கான தேவை அதிகரித்ததன் காரணமாக சோயா பீன் எண்ணெய் விலை உச்ச அளவை எட்டியது.
தொடர் பொதுமுடக்கம் காரணமாக வீட்டில் சமைக்கும் உணவுகளின் நுகர்வு அதிகரித்ததால், வடமாநிலங்களில் கடுகு எண்ணெய்க்கான தேவை மேலும் அதிகரித்தது. இந்த காரணங்களால் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கடுகு எண்ணெய் போன்ற எண்ணெய்களின் விலையும் உயர்ந்தது.
உள்நாட்டு உற்பத்தி கைக்கொடுக்குமா?
இந்தியாவின் மொத்த எண்ணெய் வித்து உற்பத்தி கடந்த சில ஆண்டுகளில் ஓரளவு உயர்ந்துள்ளது. கொள்கை அளவில், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக அரசாங்கம் கூறிக் கொள்கிறது (இந்த நோக்கங்கள் பெரும்பாலும் பின்பற்றப்படாவிட்டாலும் கூட). அதிகரித்த உள்ளூர் உற்பத்தி, உணவுப் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. மேலும், விவசாய வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. இருப்பினும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பது விலையில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாரத் மேத்தா, இந்தியாவில் நடைமுறையில் உள்ள திறனற்ற விவசாய முறைகளால் உற்பத்தி தன்னிறைவற்ற நிலை ஏற்படுகிறது என விளக்குகிறார். “இந்தியாவில் உற்பத்தித்திறன் மிகக் குறைவு. எனவே இந்த குறைந்த உற்பத்தித்திறனில் விவசாயம் செய்தால், விலைகள் அதிகமாகவே இருக்கும்” என்கிறார்.
சிறிய அளவிலான பண்ணைகள் மற்றும் காலாவதியான விவசாய முறைகளால் இந்தியா வேளாண்மை உலக அளவில் திறமையற்ற ஒன்றாக மாற்றப்பட்டுள்ளது. உதாரணமாக, இந்தியாவைப் போலவே வளரும் நாடாக இருக்கும் பிரேசிலில், சோயாபீன்ஸின் மகசூல் இந்தியாவில் இருப்பதைவிட மூன்று மடங்கு அதிகம்.
எனவே விவசாயத்தை மிகவும் திறன்மிக்கதாக்குவதும், சமையல் எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதும், விலையைக் குறைப்பதற்கான வழிமுறைகளாக இருக்க முடியும்.
எண்ணெய் விலை உயர்வு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள நிலையில், ஒன்றிய பாஜக அரசைப் பொருத்தவரையில் அது தேர்தலில் மிகப்பெரும் பாதகத்தை அக்கட்சிக்கு ஏற்படுத்தும் என்றாலும், நிலவும் நிச்சயமற்ற பொருளாதார நிலைமைகள் இப்பிரச்சினையை தீர்க்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வில்லை.
இறக்குமதி வரிகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?
பாமாயில் இறக்குமதிக்கு இந்தியா 32.5% வரி விதிக்கிறது, அதே நேரத்தில் கச்சா சோயா பீன் மற்றும் சோயா எண்ணெய்களுக்கு 35% வரி விதிக்கப்படுகிறது. சில்லறை விலைகளை குறைக்க முடியும் என்பதற்காக இந்த வரிகளை குறைப்பதை மோடி அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.
கடந்த ஜூன் 16-ம் தேதி சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை 20% வரை குறைந்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பு தெரிவித்தது. சந்தையில் சமையல் எண்ணெய் விலை குறைந்ததும், வரியைக் குறைப்பதற்கான தனது திட்டங்களை மோடி அரசு நிறுத்தி வைத்திருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
5 விழுக்காடாக இருந்த கச்சா எண்ணெய் (சுத்திகரிக்கப்படாத பாமாயில், சூரியகாந்தி எண்ணெய்) இறக்குமதி வரி, இந்த ஆண்டு 17.5 விழுக்காடாக உயர்த்தியது மோடி அரசு. இதுதான் சமையல் எண்ணெயின் விலையேற்றம் உச்சத்தைத் தொடக் காரணமானது.
பெரும் கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான நடவடிக்கைகள் :
கடந்த 2017-ம் ஆண்டிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான சிறு இறக்குமதியாளர்களின் உரிமத்தை ஒன்றிய அரசு புதுப்பிக்கவில்லை. சிறு இறக்குமதியாளர்கள் உரிமம் இல்லாததால், பெருநிறுவனங்கள் ஏக போக உரிமையுடன் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து அதிக விலைக்கு இங்கு விற்பதாக சென்னையைச் சேர்ந்த எண்ணெய் இறக்குமதியாளர்கள் மற்றும் வணிகர் சங்கத்தைச் சேர்ந்த சுந்தர் கூறுகிறார்.
மோடியின் கார்ப்பரேட் நண்பரான அதானி, சிங்கப்பூரின் வில்மர் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் அதிகளவு விற்பனையாகும் ஃபார்ச்சூன் எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடுகிறார். இதைப் போலவே சமையல் எண்ணெயை இறக்குமதி செய்வதில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களை மட்டுமே அனுமதித்திருப்பதால், சமையல் எண்ணெயின் விலை மீதான கட்டுப்பாட்டை பேணுவதில்லை, மோடி அரசு.
90-களுக்குப் பிறகு, வேளாண்மையை இந்திய அரசு கைவிட்டதும், திறந்து விடப்பட்ட சர்வதேச சந்தையும், தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் இல்லாமல் விட்டதும் தான் சமையல் எண்ணெய் விலை உயர்வுக் காரணமாகியுள்ளது. மோடி தனது நண்பர்களுக்காக செய்துகொடுத்திருக்கும் கொள்கை மாற்றங்களின் காரணமாக சமையல் எண்ணெயின் விலை உயர்ந்து, பெரும்பான்மையினரது வயிற்றில் அடித்துள்ளது.
எமது சமூகத்தைக்காப்பதற்காகநியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்போலீஸ்,சந்தேகநபர்ஒருவரைக்கைதுசெய்ததன்பிறகு, போலீஸின்கட்டுப்பாட்டில்அவர்இருக்கும்வேளையில்போலீஸாரின்தாக்குதலில் அந்த‘சந்தேகநபர்‘ படுகொலைசெய்யப்படுவதுஎன்பதுஎந்தளவுபயங்கரமானதுஎன்பதைப்புரிந்துகொள்ளஅதிகம்யோசிக்கத்தேவையில்லை. மாறாக, சட்டத்தைசெயற்படுத்தவெனநியமிக்கப்பட்டிருக்கும்போலீஸ்பற்றிதான்யோசிக்கவேண்டியிருக்கிறது.
போலீஸ்எனப்படுவதுமக்களின்பாதுகாப்புக்காகநியமிக்கப்பட்டிருக்கும்ஒருகாவல்நிலையம். அந்தப்பாதுகாப்புசந்தேகநபருக்கும்உரித்தானது. காரணம், நாம்அனைவரும்அறிந்தவகையில்எந்தவொருசந்தேகநபரும்நீதிமன்றத்தால்குற்றவாளிஎனநிரூபிக்கப்படும்வரையில்அவர்சந்தேகநபர்மாத்திரம்தான். ஆகவேஅந்தசந்தேகநபருக்குஎந்தவொருஆபத்தும்நேராமல்அவரைஉயிரோடுபாதுகாப்பதுபோலீஸின்கடமைகளில்ஒன்றாகும்.
மக்கள் அதிகாரத்தின் சீர்காழி பகுதி தோழரும் நக்சல்பாரி புரட்சியாளருமான தோழர் அம்பிகாபதி மறைவுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பஞ்சலி செலுத்துகிறது!
மக்கள் அதிகாரம் சீர்காழி பகுதி தோழர் அம்பிகாபதி இன்று (27/06/2021) மறைவெய்துள்ளார். 37 ஆண்டுகளுக்கு மேலாக நக்சல்பாரி புரட்சியாளராக இருந்து இறுதிவரை ஆளும் வர்க்கத்துக்கும் எதிரிகளுக்கும் எதிராக மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையை உயர்த்திப் பிடித்தவர் அவர்.
பு.ஜ வாசகர் வட்டத்தை 37 ஆண்டுகளுக்கு முன் துவக்கிவைத்து சீர்காழி பகுதி மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளராக இருந்து பின்னர் விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாவட்ட அமைப்பாளராக பல ஆண்டுகள் இருந்து வந்தார்.
சீர்குலைவுவாதிகள், பிழைப்புவாதிகளுக்கு எதிராக உறுதியாக நின்று மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கையையும் கோட்பாட்டையும் உயர்த்திப் பிடித்தவர் அவர். விவசாயிகள் விடுதலை முன்னணி நடத்திய பல்வேறு போராட்டங்களில் தலைமையேற்று நடத்தி வாழ்ந்தவர் அவர். இறால் பண்ணைக்கு எதிரான போராட்டத்தினை நடத்தி ஆளும் வர்க்கத்தின் நெருக்கடிகளையும் போலீசின் அடக்குமுறையையும் எதிர்த்த போராட்டத்தில் தோழரின் பங்கு அளப்பரியது.
மார்க்சிய – லெனினிய மாவோ சிந்தனைக்கெதிராக சீர்குலைவுவாதிகள் சதி செய்தபோது உறுதியாய் எதிர் கொண்ட தோழர் அம்பிகாபதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் தலைமைக்குழு சிவப்பஞ்சலி செலுத்துகிறது .
கொரோனா இரண்டாம் அலை தீவிரத்தின் போது டாஸ்மாக் கடைகளை மூடிய திமுக அரசு, பின் கொரோனா சற்று குறைய ஆரம்பித்ததும் டாஸ்மாக்கை திறந்துவிட்டது. மக்களிடம் வருமானம் இல்லாத நேரத்தில் சாராயக் கடைகள் திறப்பது குறித்து பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்த பின்னர் அதற்குப் பதில் கூறிய தி.மு.க அரசு, கள்ளச்சாராயம் பெருகக்கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான் டாஸ்மாக் திறந்தோம் என்றது.
கொரோனா காலத்தில் எதற்கு டாஸ்மாக் கடைகள்? மூடு டாஸ்மாகை !! என்று மக்கள் அதிகாரம் அமைப்பு தொடர்ந்து தமது கண்டனத்தை பதிவு செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் தருமபுரி தோழர்கள் மூடு டாஸ்மாக்கை என்று பாடிய பாடலை தற்போது வெளியிடுகிறோம்
காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!
பாடல் வரிகள் :
மூடிடு மூடிடு டாஸ்மாக்கை மூடிடு!
சாகுது சாகுது சமுதாயம் சாகுது!
வருமானம் வருமென்று டாஸ்மாக்கை தொறந்தாயே
தமிழ்நாட்டை சீரழிக்க துணைநின்று போனாயே
டாஸ்மாக்கை தொறந்தாயே
கட்சிகளை நம்பி பயனேதுமில்லை|
போராட்டமில்லாமல் விடிவேதுமில்லை
பள்ளிகளை திறக்காமல் படிப்பேதுமில்லை
வேலையே இல்லாமல் விலைவாசி தொல்லை
வருகாலம் இருளாச்சி
வாழ்க்கையே சருகாச்சி
போராட்டம் ஒன்றுதான் முடிவான தீர்வாச்சி
வருங்காலம் நமக்கானதே – தோழா..!
எடப்பாடி ஸ்டாலினும் வெவ்வேறு இல்லை
சாராயக்கடை திறந்து அடிச்சாங்க கொள்ளை
மதுவாலே தொடருது தினமிங்கு தொல்லை
மதுகடையை மூடாமல் விடிவேதுமில்லை
மனுகொடுத்து மூடாது
மன்றாடி தீராது
போராடி வீழ்த்தாமல்
டாஸ்மாக்கு மூடாது
வாருங்கள் போராடுவோம்
ஒன்று சேருங்கள் நாம் வெல்லுவோம்..!
தேர்தலில் வாக்களித்து தீர்வேதும் இல்லை
வாய்க்கரிசி பணத்தாலே வாழ்வேதும் இல்லை
கருஞ்சட்டை போட்டு நீ கடை மூடு சொன்னாய்
அதிகாரம் வந்தவுடன் கடை திறந்து நின்றாய்
கொரோனா வந்தாச்சி
ஊரெல்லாம் பிணமாச்சி
மதுகடை தொறந்தாச்சி
நாடு சுடுகாடாச்சி
அஞ்சாமல் போராடுவோம் – தோழா
அஞ்சாமல் போராடுவோம்..!
பாடல் : மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்.
சமூக மாற்றத்திற்கான புரட்சிகர பாடல்களை தொடர்ந்து கொண்டுவர நிதி கொடுத்து ஆதரவு தாருங்கள் !
Gopinath.P A/C 6720415617. Indian Bank Pennagaram Branch IFSC NO : IDIB000P076.
பாடல் – இசை :
புரட்சிகர கலைக்குழு, தருமபுரி
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம்.
செல் : 9790138614
பாசிசம் என்றுமே தமது செயல்திட்டங்களை எவ்வித ஈவிரக்கமின்றியும் நடைமுறைப்படுத்துபவர்களையே அதிகாரத்தில் அமர வைக்கும். அந்த வகையில் இந்திய அளவிலான பாசிச சக்தியான ஆர்.எஸ்.எஸ்.-ஸால் பிரதமர் பதவிக்கு அமர வைக்கப்பட்டவர்தான் நரேந்திர மோடி.
இந்திய ஒன்றியத்தின் பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர், ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்கபரிவாரக் கும்பலின் கார்ப்பரேட் ஆதரவு இந்துராஷ்டிரக் கனவை நடைமுறைப்படுத்தும்வகையில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர அதற்குப் பொருத்தமான அதிகாரிகளின் மூலமாகவும், ஆளுநர்கள் மூலமாகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது.
அந்த வகையில் இலட்சத் தீவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பிரஃபுல் படேல் எனும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவரை அதன் நிர்வாகியாக நியமித்துள்ளது மோடி அரசு. பிரஃபுல் படேலை அந்தப் பதவிக்கு மோடி அரசு தேர்ந்தெடுத்தது ஏன்? அவரது பின்னணி என்ன ? என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.
யார் இந்த பிரஃபுல் படேல்?
குஜராத்தில் மோடியின் ஆட்சிக் காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்தவர், இந்த பிரஃபுல் படேல். இவர் மந்திரியான மிகக் குறுகிய காலத்தில் ஒரு கோடியாக இருந்த இவரது சொத்து மதிப்பு ஒன்பது கோடியாக உயர்ந்தது.
அடுத்து நடந்த தேர்தலில் மக்களிடம் மதிப்பிழந்து தோற்றுப் போனார் இந்த பிரஃபுல் படேல். மோடி மாநில அரசியலிலிருந்து விலகி தேசிய அரசியலில் புகுந்து 2014-ல் பிரதமர் ஆனதும் மக்களால் விரட்டப்பட்டு பதவியில் இல்லாதவர்கள் கவர்னர்கள் ஆக்கப்பட்டனர்.
இப்படியாக டிசம்பர், 2016-ல் தத்ரா – நாகர் ஹவேலி பகுதியின் நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார் இந்த பிரஃபுல் படேல். இங்கு பதவிக்கு வந்ததும் ஜனநாயக உரிமைகள் ஒன்று பாக்கியில்லாமல் ஒழிக்கப்பட்டு, தனது விருப்பத்திற்கேற்ப ஆட்டம் போட்டார் படேல். இதற்குப் பரிசு போல புதிய யூனியன் பகுதியாக ஒழுங்குபடுத்தப்பட்ட டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதியின் நிர்வாகி மற்றும் லெப்டினண்ட் கவர்னராக ஜனவரி 2020-ல் நியமிக்கப்பட்டார்.
டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதி வளம் மிக்க தொழில் பகுதியாக மட்டுமின்றி பிரபலமான சுற்றுலாத் தலமாகவும் உள்ளது. ரிலையன்ஸ், ஸ்டெர்லைட் உட்பட பல பகாசுர பன்னாட்டுக் கம்பனிகள் இங்கு தொழில் செய்து வருகின்றன. இராசயன நிறுவனங்கள், உயிர் காக்கும் மருந்துக் கம்பனிகள் உட்பட பல நிறுவனங்களின் உற்பத்திகள் இங்கு நடக்கின்றன. சுற்றுலா மையம் என்ற பெயரில் குடி, கூத்து, கும்மாளம் என சீரழிவுக் கலாச்சாரம் இங்கு சகஜமாக நடக்கிறது.
2% வரி குறைப்பு கூட பல கோடிகளை இங்கு மிச்சம் பிடிக்கும். இந்த யூனியன் பகுதியில் தாதாக்கள் வைத்ததே சட்டம் என மாஃபியா கும்பலின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. சிறு நிறுவனங்களிடம் மிரட்டிக் காசு பறிப்பது ஒரு வகை வசூல். உள்ளூர் ஆட்களிடம் மிரட்டி குறைந்த விலையில் நிலங்களைப் பறித்து, கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு கூடுதல் விலையில் விற்கும் ரியல் எஸ்டேட் இன்னொரு வகை வசூல் என எல்லா இடங்களிலும் நடப்பதைப் போலவே இங்கும் நடந்து கொண்டிருந்தது.
பிரஃபுல் நிர்வாகியாக, லெப்டினண்ட் கவர்னராக பொறுப்பேற்றதும், வீட்டு வரி, தொழில் வரி உள்ளிட்ட பல வரிகள் விசம் போல ஏறின. ஒன்றிரண்டு மடங்கல்ல, அதிகபட்சமாக 1000% வரை வரி உயர்வு. சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்வு சூறையாடப்பட்டது என்றால் மிகையல்ல. அப்பாவி மக்களுக்கு வரி உயர்வு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை என மோடியின் வழியில் தப்பாமல் நடந்தார் படேல்.
இதுவும் போதாது என்று ஹோட்டல்களில் உள்ள பார்களின் அனுமதியை மீண்டும் பரிசீலிப்பதாகக் கூறி ஏற்கெனவே அங்கு பார்கள் வைத்திருந்த மண்ணின் மைந்தர்களிடம் இருந்து அனுமதியை மறுத்து, தனக்கு வேண்டிய குஜராத் பணியாக்களுக்கு புதியதாக அனுமதி வழங்கினார்.
இவை பற்றி உள்ளூர் தலைவர்கள் கேள்வி எழுப்பலாம், போராடலாம் என்பதாலேயே குஜராத் மாநிலத்தின் 1985-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சமூக விரோத செயல் தடுப்புச் சட்டம் டையூ-டாமன் யூனியன் பகுதிக்கும் விரிவுபடுத்தப்பட்டது. யூனியன் பகுதியின் மொத்த ஜனநாயக உரிமைகளும் ஒழித்துக் கட்டப்பட்டன. அதன்பின் படேலின் ஆட்டம் தொடங்கியது.
ஏற்கனவே இங்கு சட்டமன்றம் இல்லாததால் வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அரசாங்கம் இயங்கி வந்தது. உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தைப் பறித்து தனக்கு வேண்டிய அதிகாரிகளின் கைகளில் அதிகாரத்தைக் கொடுத்தார் படேல். அவர்களின் உத்தரவுப்படி ஆட்சி நடக்கத் தொடங்கியது.
டையூ-டாமன் மற்றும் தத்ரா-நாகர் ஹவேலி யூனியன் பகுதி
இங்கிருந்து ஒரு எம்.பி தேர்வு செய்யப்படுவார். அவரும் அரசாங்கத்தின் ஒரு அங்கமாக இருப்பார். படேல் அதிகாரத்திற்கு வந்ததும் இந்த எம்.பி.-யும் ஓரம் கட்டப்பட்டார். கடைசியாக எம்.பி.-யாக இருந்த 58 வயதான மோகன் டெல்கர், இதற்கு முன்னர் 7 முறை எம்.பி.-யாக இருந்தவர். சுயேட்சையாகவே நின்று வெற்றி பெற்ற மக்கள் செல்வாக்குள்ளவர். இவர் மும்பையில் கடந்த பிப்ரவரி 22-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். 15 பக்க கடிதம் மூலம் நிர்வாகி பிரஃபுல் படேல், எஸ்.பி, கலெக்டர் ஆகியோர்தான் தனது தற்கொலைக்குக் காரணம் என விலாவரியாக எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்துயுள்ளனர். அவர் நடத்தி வந்த மருத்துவக் கல்லூரியின் ஒரு பகுதியை ‘நமோ’ என்ற மற்றொரு மருத்துவக் கல்லூரிக்கு தானமாகத் தர நிர்ப்பந்தித்து, தானமாகத் தந்தவுடன் எம்.பி-யின் மருத்துவக் கல்லூரியை படேலும் அவரது அதிகாரிகளும் புல்டோசர் கொண்டு வந்து தகர்த்துத் தரைமட்டமாக்குகிறார்கள். இந்த எம்.பி கட்டிய ‘ஆதிவாசி கல்யாண் பவன்’ என்ற கட்டிடத்தையும் தகர்த்தெறிகின்றனர்.
இந்த பகுதியில் உள்ளூர் மக்கள் நிரந்தரமாக்கப்படாமல் தற்காலிக அரசு ஊழியர்களாகவே பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் பகுதி மக்களின் வேலையைப் பாதுகாக்க எம்.பி முயல, பிரஃபுல் படேலோ அவர்களை வேலையிலிருந்து துரத்தவே முயல்கிறார். எம்.பி தமது பூர்வகுடி மக்களுக்கு சேவை செய்ய அனுமதி மறுத்து, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவரை அவமானப் படுத்துகிறார்கள். தமிழகத்தில் ஒரு அரசு விழாவுக்கு எதிர்க் கட்சி எம்.பி.யை அழைக்காவிட்டால் அதை மிகப்பெரும் பிரச்சனை ஆக்குவதோடு ஒப்பிட்டுப் பாருங்கள், அந்த தீவின் ஒரே ஒரு எம்.பி.க்கு எந்த அளவு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
எம்.பி-யின் கடிதப்படி பிரஃபுல் படேல் மற்றும் பிற அதிகாரிகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை இவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். ஆனால், இன்று வரை இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
இந்த டாமன் பகுதியின் எல்லா ஒப்பந்தங்களும் படேல் பதவியேற்ற நாள் முதல் சில குஜராத் ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே போகிறது. குறிப்பாக குஜராத்தின் கோத்ராவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் கமலேஷ்குமார், நவீன் சந்த்ரா ஷா என்பவரது ’ஆர்கேசி இன்ஃப்ரா பில்ட்’ என்ற நிறுவனத்திற்கே பெரிய ஒப்பந்தப் பணிகள் செல்கின்றன. இன்னும் குறிப்பாக சொல்வதென்றால் இரண்டு பெரிய ஒப்பந்தங்கள் அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச டெண்டர் தொகையை விட 41.8% மற்றும் 33% அதிகப்படியான டெண்டருக்கு இந்த நிறுவனங்களுக்குத் தரப்பட்டுள்ளது.
அரசு விதிகளின்படி அரசு நிர்ணயித்த தொகையை விட 30%க்கு அதிகமாக டெண்டர் கோரப்பட்டால் அவை மறு டெண்டர் விடப்பட வேண்டும். இந்த விதி மீறல் பற்றி படேலிடம் கேட்டதற்கு இதுவரை அவரிடமிருந்து பதில் இல்லை. இந்த விதி மீறலில் சம்பத்தப்பட்ட ’ஆர்கேசி இன்ஃப்ரா பில்ட்’ நிறுவனத்திடம் கேட்டதற்கும் இப்போது வரை பதில் இல்லை. இங்கும் குஜராத் போலவே வேறு யாரும் டெண்டர் கேட்கக் கூடாது என வாய் வழி உத்தரவு போடப்பட்டதாக செய்தி. இது பற்றி படேலிடம் கேட்டதற்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை. இந்தப் பின்னணியில்தான் இலட்சத் தீவில் நடப்பதைப் பரிசீலிக்க வேண்டும்.
இப்படி குஜராத் பணியா கும்பலுக்கு விசுவாசமாக சேவை செய்ததால்தான் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய இந்த படேலுக்கு இலட்சத் தீவு யூனியன் பகுதியின் லெப்டினண்ட் கவர்னர் பொறுப்பு கூடுதலாக தரப்பட்டது.
ஓரளவு ஜனநாயகமாகச் செயல்படும் பகுதிகளையும் மக்களையும் கண்டாலே இந்த பாசிச கும்பலுக்கு ஆகவே ஆகாது. தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் அன்றாடம் நடக்கும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்டாலே இதைப் புரிந்து கொள்ள முடியும். நாட்டிலுள்ள மக்களில் பெரும்பாலானோருக்கு இலட்சத் தீவு பற்றி இதுவரை பெரிய அளவு எதுவும் தெரியாது. இந்தியாவிலேயே குற்றங்கள் மிக மிகக் குறைவாக நடக்கும் பகுதி இந்த இலட்சத் தீவு யூனியன் பகுதிதான். இந்தப் பகுதி மக்கள் மீன் பிடித்தலும், சுற்றுலாவுமே தீவின் முதன்மை தொழில்கள்.
ஆனால், பிரஃபுல் படேல் பொறுப்பேற்றதும் முதலில் செய்த வேலை இப்பகுதியில் குண்டர் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது தான். கிரிமினல் குற்றம் இல்லாத பகுதிக்கு குண்டர் சட்டத்தின் தேவை என்ன? தன்னைப் போலவே பிறரையும் நேசி என்பது இதுதானோ? போகட்டும் ! தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தினால் மக்கள் போராடுவார்கள் எனத் தெரிந்தே குண்டர் சட்டம் போடப்பட்டது. அதுதான் இப்போது அங்கு நடந்து கொண்டிருப்பதும் கூட. மாடுக்கறிக்கு தடை, 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தேர்தலில் நிற்கத் தடை, உள்ளூர் மக்களின் மீன்பிடித் தொழிலை ஒழிப்பது என அடுத்தடுத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன.
தீவின் சுற்றுச்சூழல், ஜனநாயக – சமூக வாழ்வியலை ஒழித்துக் கட்டும் அதே வேலையில் டையூ-டாமன், தத்ரா-நாகர் ஹவேலியில் செய்தது போலவே வளர்ச்சி என்ற பெயரில் பல்வேறு கட்டுமானப் பணிகள், சேவைகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. ஏற்கனவே, இருந்த பல பழைய ஒப்பந்தங்கள் – அமுல் பால் வினியோகம், கப்பல் போக்குவரத்து என பலவும் – புதிய நிறுவனங்களுக்கு மாற்றி விடப்பட்டன. உள்ளூர் மக்களின் நிரந்தரமற்ற அரசு வேலைகள் ஒழிக்கப்பட்டன. 150 கோடிக்கு புதிய கட்டுமான, கட்டிடப் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் என்பதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
டையூ-டாமன், தத்ரா-நாகர் ஹவேலி தீவுகளில் இறக்கி விடப்பட்ட நிர்வாகிகள் தற்போது இலட்சத் தீவுகளுக்கு மாற்றப்படுகின்றனர். அங்கு செய்தது போலவே இங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் ஓரம் கட்டப்படுகின்றனர். தீவின் பூர்வகுடிகளின் உணவு, வேலை, பொருளாதாரம் என அனைத்தும் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. பாசிச கும்பலின் இந்துத்துவா நிகழ்ச்சி நிரல் வேகமாக நடைமுறைப் படுத்தப்படுகிறது.
கொரோனா முதல் அலையில் இங்கு ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. பிரஃபுல் படேல் பொறுப்பேற்ற ஒரே மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகளால் 65,000 மக்கள் தொகை கொண்ட இங்கு இன்று தினமும் 1,000 பேருக்கு மேல் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். தொற்று தொடங்கியதும் சாவு எண்ணிக்கை கூடிக் கொண்டுள்ளது.
அமைதியான அந்தத் தீவு மக்கள் தமது தீவின் சுற்றுச் சூழலைக் காப்பாற்ற மட்டுமல்ல, தமது வாழ்வை, வாழ்வாதாரத்தைக் காக்கவும் போராடி வருகின்றனர். வழக்கம் போல மக்கள் வாழ்வைப் பற்றி கொஞ்சமும் கவலையின்றி தமது இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை, கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கான சேவைகளை நடைமுறைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளது பார்ப்பன இந்து மதவெறி பாசிச கும்பல்.
மக்களின் போராட்டத்தைக் கண்டு கேரள உயர் நீதிமன்றம் தனது 22-06-’21 தேதிய தீர்ப்பு மூலம் பிரஃபுல் படேலின் அவசர சட்டங்களுக்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது. இதை மட்டும் நம்பி இருக்காமல் மக்கள் தமது விடாப்பிடியான உறுதியான போராட்டத்தினால் மட்டுமே வெற்றி பெற முடியும்!
நாகராசு செய்தி ஆதாரம் : The Wire, Countercurrents.
இந்தியாவில் கோவிட் தொற்றின் இரண்டாம் அலையில் பிணவறைகள் நிரம்பிக் கொண்டிருந்தபோது, தடுப்பூசி போடுவதை மாநிலங்களின் தலையில் கட்டிவிட்டு தொலைக்காட்சியில் தோன்றி நீலிக்கண்ணீர் வடித்தார் பிரதமர் மோடி. இரண்டாம் அலை ஓய்ந்த நிலையில், தடுப்பூசி போடுவதை மாநிலங்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டதோடு, ஒரே நாளில் அதிகபட்சமாக தடுப்பூசி போட்டு புதிய ‘உலக சாதனை’ படைத்ததாக தனக்குத்தானே பாராட்டு பத்திரம் வாசித்துக் கொண்டது மோடி அரசு.
கடந்த திங்களன்று (21.06.2021) மட்டும் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதாக பா.ஜ.க. அரசு கூறிக்கொள்ளும் ‘உலக சாதனை’யின் உண்மைத்தன்மை என்ன என்பதை ஸ்கரால் இணையதளம் தரவுகளுடன் தோலுரித்துள்ளது.
அனைத்து மாநிலங்களைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான தடுப்பூசிகளை மத்தியப் பிரதேச மாநிலம் போட்டது. திங்களன்று 16.9 லட்சம் தடுப்பூசிகள் மத்திய பிரதேசத்தில் போட்டப்பட்டன. ஆனால், அதற்கு முந்தைய நாள், வெறும் 692 டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே அங்கு போடப்பட்டதாக மத்திய அரசின் தடுப்பூசி தளமான கோவின் கூறுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் ஜூன் 17 முதலே தடுப்பூசி போடுவதில் மந்தநிலை தொடங்கியுள்ளது. ஜூன் 16 அன்று 338,847 தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டாலும், அடுத்த நான்கு நாட்களில் கடுமையாக வீழ்ச்சியடைந்து வருவதைக் காட்டிகிறது புள்ளி விவரம். ஜூன் 17 அன்று 124,226 டோஸ், ஜூன் 18 அன்று 14,862 டோஸ், ஜூன் 19 அன்று 22,006 டோஸ், மற்றும் ஜூன் 20 அன்று 692 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
முந்தைய நான்கு நாட்களுக்கான தடுப்பூசிகள் நிறுத்தப்பட்டு கணக்குக் காட்டுவதற்கென்றே, ஜூன் 21-ஆம் நாளன்று அதிக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இப்போது விமர்சனம் செய்யப்பட்ட பின்னர், தினசரி 17 லட்சம் தடுப்பூசிகளை போட வேண்டிய நிலைக்கு மத்தியப் பிரதேச அரசு தள்ளப்பட்டுள்ளது.
இப்படி அதிகப்படியான தடுப்பூசி போடப்படுவதற்கு முக்கியக் காரணம், 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளை 18-44 வயதினருக்கும் போடலாம் என மத்திய அரசின் அறிவித்ததுதான்.
ஒரே நாளில் 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டதுதான் உலகத்திலேயே அதிகளவு சாதனை என சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ட்வீட் செய்தார். ஆனால், ஜூன் 9-ம் தேதி அன்று நேச்சர் இதழ், சீனாவில் ஒரு வாரத்திற்கும் மேலாக நாளொன்றுக்கு இரண்டு கோடி மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியுள்ளது. இந்தச் செய்தியே மோடி அரசின் பொய்யை அம்பலப்படுத்தியுள்ளது.
இதே போன்ற உத்திகளைத்தான் பா.ஜ.க. ஆளும் பல மாநிலங்களில் கையாளப்பட்டிருக்கிறது. முந்தைய நாளான ஜூன் 20-ம் தேதி தடுப்பூசி மிகக் குறைவாகவே போடப்பட்டிருக்கிறது.
அதிகப்படியான தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களில் இரண்டாவதாக உள்ள கர்நாடகத்தில், ஜூன் 21-அன்று 11.21 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டன. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை ஜூன் 20 அன்று 68, 172 தடுப்பூசிகளே போடப்பட்டுள்ளன. இதைக்காட்டிலும் இதற்கு முந்தைய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் ஜூன் 6-ஆம் நாள் 1,26,386 பேருக்கும் ஜூன் 13-ஆம் நாள் 96,956 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம் திங்களன்று 7,25,898 தடுப்பூசிகளை போட்டது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை வெறும் 8,800 என்ற குறைந்த அளவிலேயே போட்டது. இது முந்தைய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் வழங்கப்பட்ட சராசரி அளவை விட 35% குறைவாக இருந்தது.
குஜராத் மாநிலத்தில் திங்களன்று 5,10,434 தடுப்பூசி போட்டப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை 1,89,953 தடுப்பூசிகளே போட்டப்பட்டன. இது 17 நாட்களில் மிகக் குறைந்த அளவாக உள்ளதாக புள்ளி விவரம் காட்டுகிறது.
தொடர்ந்து நான்கு நாட்கள் அசாமில் தடுப்பூசி வரைபடம் உயர்வில் இருந்துவந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூன் 20 அன்று 33,654 தடுப்பூசிகளே போடப்பட்டு கூர்மையான வீழ்ச்சியைப் பதிவு செய்தது. திங்களன்று 360,707 என்ற அதிகபட்ச சாதனையை எட்டியதாக பா.ஜ.க. அரசுகள் வெற்றிக் கூச்சலிட்டன.
பா.ஜ.க. ஆட்சிபுரியாத பல பெரிய மாநிலங்களும் ஜூன் 20 அன்று தடுப்பூசி அளவைக் குறைத்தன. ஆனால், இது ஞாயிற்றுக்கிழமைகளில் காணப்படும் வழக்கமான வீழ்ச்சிக்கு ஏற்ப இருந்தது. அதுபோல, ஜூன் 21 அன்று தடுப்பூசி அளவு முந்தைய நாட்களை விட மிக அதிகமாகவும் இல்லை.
உதாரணமாக, மகாராஷ்டிரா ஜூன் 21 அன்று 3,83,495 தடுப்பூசி மருந்துகளை வழங்கியது, ஜூன் 19 அன்று வழங்கப்பட்ட 3,81,765 அளவுகளை விட இது மிக அதிகமானது இல்லை. ஜூன் 20 அன்று 1,13,109 தடுப்பூசிகள் போடப்பட்டன. ஆனால், முந்தைய ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்ட 87,273 என்ற அளவுகளை விட அதிகமாக இருந்தது .
ராஜஸ்தானிலும் இதே நிலைதான், ஜூன் 11 அன்று செய்ததைப் போலவே, ஜூன் 21 அன்று 4.46 லட்சம் தடுப்பூசி மருந்துகளை வழங்கியது.
இந்தியாவின் தடுப்பூசி திட்டம் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையிலான அரசியல் போட்டியால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், மையம் உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாக தடுப்பூசிகளை வாங்கி மாநிலங்களுக்கு வழங்கியது. இருப்பினும், கோவிட்-19இன் கடுமையான இரண்டாவது அலையின்போது போதிய தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்காமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக மாநில அரசுகள் குற்றம்சாட்டின.
எனவே ஏப்ரல் மாதத்தில் மத்திய அரசு கொள்முதல் கொள்கையை மாற்றியது. மேற்கு வங்கத்தைத் தவிர்த்து, 18-44 வயதுடையவர்களுக்கு நேரடியாக தடுப்பூசிகளை வாங்க மாநிலங்களை அனுமதித்தது. இதற்கிடையில், மத்திய அரசு 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மாநிலங்களுக்கு தொடர்ந்து தடுப்பூசிகளை வழங்கியது.
உச்சநீதிமன்றம், இளைய வயதினருக்காக தடுப்பூசி போடும் முடிவைக் கைவிட்டு, 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசிகளை வழங்கும் மத்திய அரசின் கொள்கையை விமர்சித்துள்ளது.
“உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு அவற்றின் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசியை இலவசமாக வழங்கும் அரசு 18 – 44 வயதுடையவர்களுக்கு மட்டும் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்று முடிவெடுத்தது? எனவும் கேள்வி எழுப்பியது. இது தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது” எனவும் விமர்சித்திருந்தது.
ஜூன் 7-ம் தேதி, மத்திய அரசு தனது கொள்கையை பகுதியளவு மாற்றியமைத்தது; மாநிலங்களுக்கான தடுப்பூசிகளை வாங்குவதற்கான பொறுப்பை திரும்பப் பெற்றது. தடுப்பூசிகள் இப்போது அனைவருக்கும் இலவசமாக போடப்படும் என அறிவித்தது. இருப்பினும், தனியார் நிறுவனங்களுக்கு உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து நேரடியாக சேவை கட்டணமாக ஒரு டோஸுக்கு ரூ.150-ஐ மட்டுமே செலுத்தி தடுப்பூசிகளை வாங்க அனுமதித்தது.
இத்தனை குளறுபடிகளுக்கு மத்தியில், ஒரே நாளில் உலகின் உச்சபட்ச அளவாக தடுப்பூசி போடப்பட்டதாக இட்டுக்கட்டப்பட்ட பொய்யை பா.ஜ.க.-வினர் கூறி வருகின்றனர். பா.ஜ.க அரசின் இந்தப் பொய்யை எந்தவித ஆய்வும் இன்றி வெகுமக்கள் ஊடகங்களும் பரப்பிக் கொண்டிருக்கின்றன.
சேலம் : போலீஸ் நடத்திய படுகொலை ! போலீஸின் அதிகாரத்துக்கு எதிராக அணிதிரள்வோம் !
கண்டன அறிக்கை !
சேலம் மாவட்டம் கருமந்துறை அருகே பாப்பநாயக்கன் பட்டியில் ஏத்தாப்பூர் காவல் நிலைய தற்காலிக சோதனை சாவடியில் நேற்று போலீசால் ஒரு படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது.
இடையப்பட்டி முருகேசன் தன் இரு நண்பர்களோடு இரு சக்கர வாகனத்தில் வந்த போது மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு SSI பெரியசாமி தன் கையில் இருந்த லத்தியால் முருகேசனை கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறார்.
இதில் முருகேசனின் உடலெங்கும் அடிபட்டதோடு பின்மண்டை உடைந்துள்ளது. முருகேசன் தன்னால் வலிதாங்க முடியவில்லை அடிக்க வேண்டாம் என்று கதறியும் தடுத்தும் கூட கேட்காமல் எஸ்.ஐ.பெரியசாமி அடித்ததில் மிகவும் மோசமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார் முருகேசன்.
வலி தாங்க முடியாமல் மயங்கி விழுந்த முருகேசனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் செல்ல அவர்களை சேலம் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்திருக்கிறார்.
இச்சம்பவத்தில் சிறப்பு எஸ்.ஐ.பெரியசாமி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒவ்வொரு ஊருக்கும் டாஸ்மாக்கை திறந்து வைத்து விட்டு ஊத்திக் கொடுக்கிறது அரசு. குடித்துவிட்டு வருபவர்களை தாக்கிக் கொல்கிறது போலீஸ்.
எத்தனை படுகொலைகளை செய்தாலும் அரசு அதிகாரிகளும் நீதிமன்றமும் நம்மை காப்பாற்றும் என்ற சிந்தனைதான் போலீஸே மீண்டும் மீண்டும் குற்றச் செயல்களை செய்யத் தூண்டுகின்றன.
யாரையும் தாக்கி, சித்திரவதை செய்து கொலை செய்யும் போலீஸ் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்காமல் இனி வாழவே முடியாது என்ற சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது போலீஸ். மூடு டாஸ்மாக்கை என்ற முழக்கம் மீண்டும் மேலெழும் என்பதற்கு போலீஸின் இந்த படுகொலையே இன்னொரு எடுத்துக்காட்டு.
தமிழக அரசே!
கொலைக்கு உடந்தையாக இருந்த அத்தனை போலீஸ்காரர்களையும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பணி நீக்கம் செய் !
கொலை செய்யப்பட்ட முருகேசனின் குடும்பத்திற்கு உதவித் தொகை 25 லட்சம் ரூபாய் வழங்கு !
அவர் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கு !
தோழமையுடன் தோழர் வெற்றிவேல் செழியன் ,
மாநில ஒருங்கிணைப்பாளர் மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
நீட் பற்றி நீட் ஆதரவாளர்களுள் சிலர் வைக்கும் கேள்விகள் ; அனைவருக்கும் சமூக நீதி என்கிறீர்கள், ஆனால் இதற்கு முன்பு இருந்த நுழைவுத்தேர்வு இல்லாத முறையிலும் கூட நாமக்கல் மற்றும் அதைச்சுற்றியுள்ள ஊர்களில் உள்ள பள்ளிகள் தானே அதிகம் மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருந்தன. அப்போதும் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு தானே இருந்தனர் என்று கேட்கின்றனர்.
எனது பதில் இதோ, நமது சமூகத்தை பொதுவாக பொருளாதாரத்தை அடிப்படையாக வைத்து மூன்று தரநிலையாக பிரிக்கலாம்.
முதல் வகை : இவர்களால் தங்களது பிள்ளைகளுக்கு தேவையான கல்வியை அடைய எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய முடியும். பணம் ஒரு பிரச்சனை இல்லை. ஆனால், தங்களது பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் அது தான் இவர்களது ஆசை. க்ரீமி லேயரின் முதல் தட்டு இவர்கள். இவர்களுக்கு நீட் போன்ற பரீட்சை இருப்பது சாதகம் போன்று தோன்றினாலும் நீட் இல்லாமல் போனாலும் கூட இவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது.
இரண்டாவது வகை : இவர்கள் தங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க என்ன செலவு வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். அதற்காக தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்தை இழக்கத்துணிவார்கள். ஒரு சொத்தை விற்றாவது படிக்க வைப்பார்கள். இவர்களது பிள்ளைகளும் எளிதில் அனைத்து வகை கல்வி சார்ந்த வசதிகளை பெற்று விடும். இவர்கள் மேல்தட்டில் க்ரீமி லேயருக்கு அடுத்த வகையினர் நிச்சயம் இவர்கள் நீட்டினால் பாதிப்புக்குள்ளாகும் படிநிலையில் வருவர்.
மூன்றாவது வகை : மிடில் க்ளாஸ் எனப்படும் சமுதாயம் இவர்களுக்கு கல்விக்கு ஒதுக்க தனியே பெரும் சொத்தோ செல்வமோ இருக்காது. ஆனாலும் இவர்கள் பிள்ளை நன்றாக படித்தால் அதற்காக கடன் வாங்கியாவது படிக்க வைப்பார்கள். இவர்களால் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளின் கல்விக்கு தொகையை சீராக ஒதுக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்கள். தங்களிடம் இருக்கும் நகைகளை அடமானம் வைத்தோ அல்லது வங்கிகளில் வட்டிக்கு கடன் வாங்கி கல்விக்கு செலவு செய்வார்கள் நில்லுங்கள் இவர்களோடு கதை முடிந்து விடுவதில்லை.
நான்காவது படிநிலையில் ஒரு பெரும் கூட்டமே நமது நாட்டில் இருக்கிறது. இவர்களுக்கு கல்வி என்பது இலவசமாக கிடைத்தால் மட்டுமே உண்டு. அவர்களது சொந்த ஊரில் கிடைத்தாக வேண்டும். மேலும், கல்வியால் ஏற்படும் எந்த பொருள் செலவையும் இவர்களால் தாங்க இயலாது. கடன் யாரும் கொடுக்க மாட்டார்கள். வங்கிகள் இவர்களை மதிக்காது. இவர்களிடம் அடமானம் வைக்கவும் எதுவும் இருக்காது. இவர்கள் தான் நமது நாட்டில் பெரும்பான்மை மக்கள்.
இப்போது சொல்லுங்கள் நீட் என்பது நான் கூறிய இந்த படிநிலையில் யாரை பாதிக்கிறது என்று? பலரும் நான்காம் படிநிலை என்று கூறுவோம். ஆனால், கூர்ந்து நோக்கினால் தெரியும்.
நீட் என்பது முதல் தரத்தை தவிர மீதம் உள்ள மூன்று படிநிலைகளையும் பாதிப்புக்குள்ளாக்கும் ஒரு பரீட்சை. இதில் அதிகம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் – மிடில் க்ளாஸ் சமுதாயம் தான். இரண்டாம் தர மக்கள் தங்களிடம் உள்ள பொருளை சொத்தை வித்தாவது கல்வியை அடைவார்கள்
நான்காம் தரத்தில் உள்ள மக்களுக்கு அடுத்த வேலை சாப்பாட்டுக்கே பிரச்சனை எனும் போது நீட் பற்றி பெரிய கவலை எல்லாம் இருக்காது. ஆனால் மூன்றாம் படிநிலையான மிடில் க்ளாஸ் மக்கள் தான். நீட் வந்ததில் இருந்து பெரும் பிரச்சினைக்கு உள்ளானவர்கள்.
சரி.. இதற்கு முன்பு இருந்த சமச்சீர் கல்வி முறை மற்றும் அதன் மூலம் மருத்துவர்கள் தேர்வான முறை எப்படி இருந்தது? அந்த முறையில் நான்கு தரத்தில் உள்ள மக்களின் பிள்ளைகளும் ஒரே சிலபஸ் பயின்றார்கள். அவர்கள் பயின்ற பள்ளிகள் வேண்டுமானால் வேறு வேறாக இருக்கலாம்.
ஆனால், பயின்ற புத்தகங்கள் ஒன்று. அவர்கள் வாழும் இடங்கள் வேறு வேறாக இருக்கலாம். ஒருவர் சென்னையில் இருக்கலாம். மற்றொருவர் சிவகங்கை ; இன்னுமொருவர் கொடைக்கானல் அருகே உள்ள ஏதோ ஒரு மலைக்கிராமமாக கூட இருக்கலாம். ஆனால், அனைவரும் பனிரெண்டாம் வகுப்பு பயில அவர்களது ஊரிலேயே சமமான வாய்ப்புகள் கிடைத்தன.
பனிரெண்டாம் வகுப்பு அவர்கள் இடத்திலேயே பரீட்சை எழுதுவார்கள். பரீட்சை எழுதவென தனியே மெனக்கெட்டு எங்கும் செல்லத்தேவையில்லை. அவர்கள் ஊரிலேயே தேர்வு சென்டர் இருக்கும். பெரும்பாலும் அவர்களது பள்ளியிலேயே தேர்வு நடக்கும். தேர்வு முடிவுகள் வரும். பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் அவர்கள் எடுக்கும் மதிப்பெண் கொண்டு அவர்கள் மருத்துவராவது முடிவாகும்.
ஆனால், நீட் புகுத்தப்பட்ட பின் நிலைமை என்ன ? நீட் எனும் பரீட்சை என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தின் மூலம் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், சி.பி.எஸ்.சி. சிலபசில் எல்கேஜி முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட மீண்டும் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ ஸ்பெசல் கோச்சிங் சென்டரில் படித்தால் தான் நீட்டை க்ராக் செய்ய இயலும் என்ற நிலை இருக்கிறது. பிறகு என்.சி.இ.ஆர்.டி. சிலபசின் தேவை என்ன இருக்கிறது?
சரி.. என்.சி.இ.ஆர்.டி சிலபசில் பரீட்சை கேள்விகள் எடுக்கப்படுகின்றன என்றால், அதுதான் உலகிலேயே தலை சிறந்த பாடத்திட்ட முறையா என்றால் அதுவும் இல்லை. காரணம் அந்த சிலபசில் படித்த மாணவர்களால் கூட நேரே கோச்சிங் இல்லாமல் சிவில் சர்வீஸ் / பேங்கிங் ; ஏன் நமது டி.என்.பி.எஸ்.சி. வைக்கும் குரூப் 2 , 4 தேர்வுகளை சந்திக்க இயலாது எனும் போது இந்த நீட் தேர்வின் நோக்கம் தான் என்ன? என்.சி.இ.ஆர்.டி. சிலபசின் அவசியம் தான் என்ன?
சரி.. படிநிலையில் முதல் நிலையில் இருப்போர். தங்கள் பிள்ளைகளை ஒரு வருடமோ இரண்டு வருடமோ நீட் கோச்சிங் செய்ய வைக்க இயலும் அடுத்த நிலையில் உள்ள மக்கள் கூட சொத்தை வித்தாவது படிக்க வைக்க இயலும். மூன்று மற்றும் நான்காவது நிலை மக்களை யோசித்து பாருங்கள். இவர்கள் தான் பெரும்பான்மை. ஆனால், இவர்கள் நீட் கோச்சிங் மற்றும் இரண்டு வருடம் படிக்க வைப்பது பற்றி யோசிக்க முடியுமா?
மேலும், நீட் பரீட்சை என்பது அந்த மாணவன் எங்கு பயின்றானோ அங்கு நடப்பதில்லை. ஏதோ ஒரு இடத்தில்.. ஒரு நகரத்தில் பரீட்சை நடக்கும். இந்த பரீட்சை எழுத சென்றுவர தேவையான வசதிகள் மற்றும் பணம் கூட இல்லாத நான்காவது படிநிலை மக்களை யோசித்து பார்த்ததுண்டா?
அடுத்து ரிசல்ட் வருகிறது. பெர்சண்டைல்.. குவாலிஃபிகேசன்.. என்று ஒரு குழப்பு குழப்புவார்கள் பாருங்கள். நாம் நன்றாக பரீட்சை எழுதினோமா.. எழுதவில்லையா என்று எழுதியவனுக்கும் தெரியாது.
மேலும் பதினோறாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு ஆகிய இரண்டு வகுப்பில் எடுக்கும் மதிப்பெண்களுக்கு மதிப்பு இல்லை என்று கூறுவதால் பல பெரிய பள்ளிகள் நேரே நீட் பரீட்சைக்கு தங்கள் மாணவர்களை தயார் செய்கிறார்கள். இதுவும் நீட்டுக்கு முன்னர் நாமக்கல் பள்ளிகள் என்ன செய்ததோ அதை ஒத்தே இருக்குமாறு இருக்கிறது.
நீட் தேர்வால் என்ன பயன் ? தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ஒரு வரை முறை உருவாக்கப்பட்டுள்ளது. மினிமம் க்வாலிஃபிகேசன் என்பது நீட் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.
சரி.. அது ஓகே என்று ஏற்றுக்கொண்டால்.. அவர்களுக்கு மட்டும். அதாவது தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மட்டும் அந்த முறையை வைக்க வேண்டியது தானே. ஏற்கனவே வெளிநாடுகளில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு Foriegn medical graduate exam என்ற ஒன்று உள்ளது. அதைப்போல அவர்களுக்கும் அதே பரீட்சை வைத்து ரேங்கிங் போட்டு தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதிக்கலாம். எதற்கு அரசுகளின் சீட்டுகளில் கை வைக்க வேண்டும் ?
நீட் வருவதற்கு முன் அரசு மருத்துவ கல்லூரிகள் அனைத்து தரப்பு மக்களும் நுழைவதற்காக தங்கள் வாயிற் கதவுகளை திறந்து வைத்திருந்தன. தற்போது முதல் இரண்டு படிநிலை மக்களே பெரும்பான்மை நுழைந்துள்ளனர். மிடில் க்ளாஸ் மக்களின் நுழைவு குறைந்துள்ளது. நான்காம் நிலை மக்கள் இனி மருத்துவராவது பகற்கனவாகிவிட்டது.
முந்தைய அ.இ.அ.தி.மு.க. அரசானது அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கிய 7.5% இட ஒதுக்கீட்டின் பலனால் அரசு பள்ளி மாணவர்கள் கடந்த முறை நிறைய பேர் எம்.பி.பி.எஸ். சீட் பெற்றது குறிப்பிடத்தக்கது. இது நிச்சயம் வரவேற்கத்தக்க ஒன்று.
ஆனாலும், நீட் பரீட்சைக்கு குவாலிஃபை ஆகக்கூட சிறந்த கோச்சிங் பெற வேண்டிய நிலை அனைத்து படிநிலை மக்களுக்கும் வருகிறது. இது அனைவராலும் முடிந்த காரியமில்லை.
சமூக நீதி என்பது அனைவருக்கும் கல்வி என்ற பாதையை நோக்கி செல்ல வேண்டும். அதாவது, அவர்கள் வாழும் இடத்திலேயே கல்வி கிடைக்க வேண்டும். அதே இடத்தில் பரீட்சை நடக்க வேண்டும். இது தான் சமூக நீதி. நீட் என்பது சமூக நீதியை கொல்வதாகும்.
எனது கிளினிக்குக்கு வந்த மிக நன்றாக படிக்கும் மருத்துவராக ஆசைப்படும் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகளிடம் “நீ மருத்துவர் ஆவாய்” என்று நம்பிக்கை ஊட்டி வந்தேன். இப்போது நான் அவ்வாறு அவளிடம் கூறுவதில்லை. ஆனாலும், அவரது தந்தை ஒவ்வொரு முறை என்னிடம் வரும் போதும் தனது மகளும் மருத்துவர் ஆவார் என்றே கூறுகிறார். இவ்வாறு தான் அந்த நான்காம் படிநிலை இருக்கிறது. தனக்கு என்ன நேருகிறது என்றே அவர்களுக்கு தெரியாது. ஒன்று கூறுகிறேன்.
இன்று முதல் மற்றும் இரண்டாம் படிநிலையில் இருக்கும் மக்களே.. உங்கள் பாட்டனோ பூட்டனோ கண்டிப்பாக மூன்றாம் மற்றும் நான்காம் படிநிலையில் தான் இருந்திருப்பார்கள். நாளை உங்கள் கொள்ளுப்பேரனோ பேத்தியோ அடுத்த இரு பிரிவுகளுக்கு செல்ல மாட்டார்கள் என்ற எந்த உறுதியும் இல்லை. ஆகவே சமூக நீதிக்கு குரல் கொடுப்போம். எப்போதும் நீதி வெல்வதே எக்காலத்திற்கும் நல்லது.