Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 201

மே நாள் அன்று சிவந்தது ஆவடி | வீடியோ

ன்பார்ந்த தொழிலாளர்களே, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! இந்தியாவில் தீவிரமாகிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் ! என்ற தலைப்பில் சென்னை – திருவள்ளூர் மாவட்டக்குழுக்களின் சார்பாக மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடியில் நடைபெற்றது.

பேரணி, முழக்கம், தோழர்கள் உரை என ஆர்ப்பாட்டத்தின் தொகுக்கப்பட்ட காணொலியை இங்கு பதிவிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள் !!

அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் ! தமிழகம் முழுவதும் நடைபெற்ற மே தின விழா !

தமிழகம் முழுவதும் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு), மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக மே தினத்தன்று பேரணி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! என்ற தலைப்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் சார்பாக திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு மே தின ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதி தமிழர் கட்சி, தமிழ் புலிகள் கட்சி, வழக்கறிஞர் தோழர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றியனர்.  புரட்சிகர  பாடலுடன் ஆர்ப்பாட்டம் தொடங்கியது. தோழர் செல்வம் நெல்லை மண்டல செயலாளர் தலைமை உரையில் மே தினம் வரலாறு பற்றியும், மேதினம் கொண்டாட்டத்திற்கு  நாள் அல்ல,  நம்ம உரிமைகளை போராடி மீட்டெடுக்க வேண்டிய நாள் என்பதை வலியுறுத்திப் பேசினார்.
தோழர் வழக்கறிஞர் சிறப்புரை பிரபாகரன் தனது உரையில் மோடி ஆட்சி எந்த வந்த பின்னர் தொழிலாளர்கள் பெற்ற உரிமை அனைத்தும் இவ்வாறு கழிப்பறை காகிதமாக  வீசப்படுகிறது என்பதையும் தொழிலாளர்களுக்கான சட்டமாக நான்காக சுருக்கி  எவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்கிறது. அதை நாம் எவ்வாறு செங்கொடி ஏந்தி போராடி மீட்க வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு அறை கூவினார்.
ஆதித்தமிழர் கட்சி இரா.ராமமூர்த்தி மாவட்டச் செயலாளர் :  உழைக்கும் மக்களை பல்வேறு கட்சிகள் இயக்கங்கள் தங்களதுபிழைப்புக்காகபயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தியும் அதை முறியடிக்க மக்கள் அதிகாரம் போன்ற புரட்சிகர இயக்கங்களுடன் பயணிக்க வேண்டி உள்ளது என்பதையும் தனது உரையை ஆற்றினார்.
தமிழ் புலிகள் கட்சி தமிழரசு மாவட்ட செயலாளர், துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலையும் அவர்களை இந்த அரசு அதிகார வர்க்கம் சுரண்டுவதை பற்றியும் பல கட்டமாக மேல்மட்ட அதிகாரிகளை சந்தித்து பிரச்சினைகளை தீர்த்து வைக்கவில்லை. இந்த மே நாளில் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடுவது ஒன்றே தீர்வு என்று உரையாற்றினார்.
தோழர் கின்ஷன்  நெல்லை மண்டல இணை செயலாளர் மக்கள் அதிகாரம். ரஷ்யா அமெரிக்கா பனிப்போர் சீன அமெரிக்க மேலாதிக்க போட்டியாகும் மொத்த உலகமே எப்படி அபாயத்தில் சேர்க்க வைக்கப்பட்டு உள்ளது என்பது பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் இதைப் பயன்படுத்திக் கொண்டு பாசிசம் எப்படி முன்னுக்கு வருகிறது என்பதைப் பற்றியும் இந்தியாவில் பார்ப்பன பாசிச அபாயத்தை பற்றியும் உரையாற்றினார்.
முதலாளித்துவத்தை வீழ்த்தி சோசலிசத்தை கட்டி அமைப்பது இந்த மண்ணிலும் காவி கார்ப்பரேட் பாசித்தை வேறோடு பிடுங்கி எறிவது தொழிலாளர் வர்க்கத்தின் கடமை என்பதை இந்த மே நாள்  நமக்கு நினைவு படுத்துகிறது என்று பதிவு செய்தார்.
தோழர் பொன் மாடசாமி நெல்லை மண்டலப் பொருளாளர் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து : நம்பிக்கையற்ற சூழலில் நம்பிக்கை அளிப்பதற்காக அங்கு இருக்கும் கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை பற்றி தெரிவித்தனர்.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம் – 9385353605
000
தஞ்சை மண்டலம், மக்கள் அதிகாரம், அமைப்பின் சார்பாக திருவாரூர், அம்மையப்பன் பகுதியில்,  மே தினத்தையொட்டி கொடியேற்றப்பட்டது.
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !
ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம் என்று தியாகத்தைப் போற்றும் வகையில் மே தின, நிகழ்ச்சி நடைபெற்றது.
அதேபோல், தஞ்சையிலும்,  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கொடி ஏற்றப்பட்டது, மே நாளில் தியாகிகளின் தியாகத்தை நெஞ்சில் ஏந்துவோம்!  என முழக்கமிட்டு மே தின நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல் : 
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம், திருவாரூர் – தஞ்சை
000
மே நாள்  பேரணி ஆர்ப்பாட்டம்!
அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர்வெறியை முறியடிப்போம்!
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் மதுரை, உசிலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி  மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி  தோழர்கள் இணைந்து உசிலை பேருந்து நிலையம் அருகில் மாலை 4 மணி அளவில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.
இதில் மக்கள் அதிகாரம் மாநில இணைச் செயலாளர் தோழர் குருசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.
அவர் பேசும்போது இந்த சமூகம் வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது அதற்கு காரணம் இந்த முதலாளித்துவ சமூக அமைப்பு தான் என்பதை விளக்கி காவி கார்ப்பரேட் பாசிசமும் எப்படி மேலேறி தாக்கி ஒட்டுமொத்த மக்களின் வாழ்வை சூறையாடுகிறது எப்படி இங்கு இந்தியாவில் மக்கள் பசியிலும் பட்டினியிலும் வறுமையிலும் இருக்கிறார்கள் இதற்கு இந்த கட்டமைப்புக்குள் தீர்வு இல்லை மக்கள் மத்தியில் ஊன்றி நின்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டி அமைப்பதன் மூலமே காவி கார்ப்பரேட் பாசிசத்தை தூக்கி எறிய முடியும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக தோழர். கணேசன்,மக்கள் அதிகாரம்,போடி கம்பம். அவர் பேசும்போது ” பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் கேஸ் விலை ஏற்றம், மக்களை வாட்டி வதைக்கிறது. சட்டசபையின் அருகிலேயே ஏதும் அற்றவர்கள் பிளாட்பாரங்களில் தெருக்களிலும் அலைகிறார்கள். மக்கள் நன்றாகவா வாழ்கிறார்கள்? நரிக்குறவர் வீட்டுக்கு போய் முதல்வர் வேஷம் போடுகிறார். என்பதை தெளிவாக இன்றைய நடப்பு மக்கள் பிரச்சனைகளிலிருந்து பேசினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் பேசும்போது இன்று கல்வி பறிக்கப்படுகிறது கலாச்சாரம் என்ற பெயரில் குப்பைகளை திணிக்கிறார்கள் மதக் கலவரங்களைத் தூண்டுகிறார்கள்.   இத்தனையும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை மறைப்பதற்காக தான் செய்கிறார்கள்.
இன்று மக்கள் மத்தியில் வேர்விட்டு வளர்ந்து உள்ளார்கள் இவர்களை திமுகதான் வீழ்த்துமா? மக்கள் மத்தியில் அடித்தளத்தைக் கொண்டுள்ள ஒரு மார்க்சிய லெனினிய அமைப்புதான் இந்த காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு பேசும்போது தொழிலாளர்களும் விவசாயிகளும் நாடு முழுவதும் விசிறி யடிக்கப்படுகிறார்கள். விவசாயம் எப்படி கார்ப்பரேட் மயமாக மாறும் என்பதையும் எப்படி நாம் உரிமையிலந்து அடிமையாக வாழப்போகிறோம் என்பதை பல்வேறு விஷயங்களுடன் எளிமையாக எடுத்து வைத்தார்.
இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் ரவி பேசும்போது எப்படி நம் நாட்டில் காவி கார்ப்பரேட் பாசிசம்  வீரியமாக செயல்படுகிறது.
அது எப்படி உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியின் விளைவாக பல்வேறு நாடுகளிலும் பாசிசத்தை அரங்கேற்றி வருகிறது. மேலும் அமெரிக்க ரஷ்ய பதிலிப்போர், அமெரிக்கா-ரஷ்யா சீனா இடையிலான  மேலாதிக்க போட்டி, அதனால் ஏற்படும் விளைவுகள் போன்றவற்றை பதிவு செய்தார். இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிவடைந்தது. இதில் தோழர்கள் மற்றும் ஆதரவாளர்கள் 60 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.
தகவல் :
புமாஇமு, தமிழ்நாடு.
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்க போர் வெறியை முறியடிபோம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிபோம்! என்ற முழக்கத்தை முன் வைத்து மே நாள் ஆர்ப்பாட்டம் காலை  11 மணிக்கு மஞ்சக்குப்பம் கார் ஸ்டாண்டில்  மக்கள் அதிகாரம் தோழர்.கோ.பெருமாள் தலைமையில் மே நாள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தோழர்  மு.பெரியாண்டவர், மாவட்ட தலைவர் தமிழ்நாடு மின் வாரிய அலுவலர் தொழிலாளர் முன்னணி (வி.சி.க), தோழர் சி.குமார் (கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு), தோழர் மு.கார்திகேயன் (மக்கள் அதிகாரம்), தோழர் கஜேந்திரன் (மாநில செயலாளர் தமிழ்நாடு மீனவர் பேரவை), தோழர் வி.செல்வம் (அண்ணா தனியார் பேருந்து பணியாளர்கள் சங்கம் கடலூர்), தோழர் M.சண்முகம், மாவட்ட செயற்குழு  உறுப்பினர் (புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்) தோழர் கோ.சாய்ராம் (சமூக நீதி பாசறை) தோழர் சுகுமார் (கடலூர் பேருந்து  நிலைய உட்புற சிறு வியாபாரிகள் நல சங்கம்), தோழர் பரிதிவாணன் (கடலூர் வெள்ளி கடற்கரை சிறு வியாபாரிகள் நல சங்கம்), தோழர் திருவரசு (கடலூர் பொது நல சங்கம்) ஆகியோர் மே நாள் ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றினார்கள்.
தோழர் இராமலிங்கம் (புதிய ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்கம்) மற்றும் தோழர் முருகானந்தம் (மக்கள் அதிகாரம்) ஆகியோர் மே நாள் வரலாற்றையும், இந்திய  தொழிலாளி வர்க்கம் இழந்திருக்க கூடிய தொழிலாளர் உரிமையை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் தொழிலாளர்கள் சாதிரீதியாக பிளவுபடுத்துவதை அம்பலபடுத்தியும், உழைக்கும் மக்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சி தேவையை பற்றியும், அதனுடன் அணிதிரள வேண்டிய காலத்தின் கட்டாயத்தையும் உணர்த்தும் வகையில் கண்டன உரை நிகழ்த்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கார்ப்பரேட் முதலாளித்துவதையும், காவி – கார்ப்பரேட் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி உணர்ச்சி மிக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இறுதியில் தோழர் பஞ்சாச்சரம் (மக்கள் அதிகாரம் கடலூர்) நன்றி உரை நிகழ்த்தினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்
000
மே 1 மே நாள் சர்வதேச பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர் வெறியைத் முறியடிப்போம் காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்  இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற  காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட செயலாளர் தோழர். ராஜன் தலைமை தாங்கினார்.
உடுமலை பகுதி தோழர் சூர்யா உரையாற்றினார். கோவை மண்டல செயலாளர். தோழர்.சங்கர் உரையாற்றினார் மற்றும் பகுதி தோழர்கள் கலந்து கொண்டனர்.
தகவல்:
மக்கள் அதிகாரம்,
கோவை மண்டலம், 9488902202.
000
136வது மே நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையேற்று இயங்கி வரும் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி  சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி SRF ஆலை சங்கத்தின் தலைவரும், பு.ஜ.தொ.மு. முன்னாள் மாநில பொருளாளரும் தோழர் பா.விஜயகுமார் கொடியேற்றி  உரையாற்றினார்.
தகவல் :
தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி – SRF மணலி.
000
புதிய ஜனநாயகக் தொழிலாளர் முன்னணி கிருஷ்ணகிரி – தருமபுரி-சேலம் மாவட்டம் சங்கத்தின் சார்பாக ஓசூர் மாநகரில் கமாஸ் வெக்ட்ரா ஆலையில் மே நாள் கொடியேற்றுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கிளை சங்கத்தின் தலைவர் தோழர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மே நாள் வரலாற்றை விளக்கி அச்சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர் பரசுராமன் கொடியேற்றினார்.
அதனைத் தொடர்ந்து பாகலூரில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.
அதை தொடர்ந்து ஒசூர் பழைய நகராட்சி ஆபிஸ் முன்பு ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
தோழர் சங்கர் தலைமைத்தாங்கினார். தோழர்.சின்னசாமி புஜதொமு, தோழர் சந்தோஷ் ததொமு, தோழர் ரவிச்சந்திரன் மக்கள் அதிகாரம், தோழர் பரசுராமன் புஜதொமு, தோழர் சரவணன் மக்கள் அதிகாரம் ஆகியோர் ஆர்ப்பட்டத்தில் உரையாற்றினர்.
இறுதியாக தோழர் வெங்கடேஷ் புஜதொமு, நன்றியுரையாற்றினார்.
உலகத் தொழிலாளர் வர்க்கம் 8 மணிநேர வேலை உரிமைக்காக 80 ஆண்டுகள் போராடி, உயிர்த்தியாகம் செய்து உரிமையை நிலைநாட்டியது. காவி-கார்ப்பரேட் கும்பலோ 8 ஆண்டுகளில் இந்திய தொழிலாளர்களின் மொத்த சட்ட உரிமைகளையும் பறித்துவிட்டது.
குறிப்பாக இந்தியாவில் 36 ஆம் ஆண்டு மே நாளிலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு 8 வேலை நேரம், பணி நிரந்தரம், நியாயமான ஊதியத்திற்கு எந்த உத்திரவாதமுமில்லை.
பொதுமக்களுக்கு பெட்ரோல்-டீசல் விலை உயர்வு, GST வரிக் கொள்ளை, பொதுமக்களின் சொத்திற்கு கூட வரி உயர்வு, குடிநீருக்குக் கூட கட்டணம் என கழுத்து நெரிக்கப்படுகிறார்கள்.

மற்றொரு பக்கம், சர்வதேச அரங்கில் இலங்கை திவால், பாகிஸ்தானில் ஆட்சிக் கவிழ்ப்பு, பிரிட்டனில் 25% பணத்தின் மதிப்பு வீழ்ச்சி, உக்ரைன் மீதான போர் என உலகம் முழுவதும் கார்ப்பரேட்களின் இலாபவெறிக்கு மக்கள் உயிர், உடமை இழந்து படாதபாடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் குறிப்பாக அண்டை மாநிலத்தில் ஹூஜாப் அணியத்தடை என அரசி சூழலை மடைமாற்ற காவி பாசிசத்தை தூண்டிவிடுகிறது, RSS-BJP தலைமைகள்.
மொத்தத்தில் உலக உழைக்கும் மக்கள் முதலாளித்துவ சுரண்டல், அதன் வழியிலான சொத்துக்குவிப்பினை முறியடிக்காமல் தீர்வில்லை. அதேசமயம், இந்நிலைமைக்கு தீர்வுகாண உழைப்பினால் உண்டாகும் உபரியை பொதுவில் வைத்திடக் கோரி ரும் கம்யூனிஸ்டுகளிடமே தீர்வு உள்ளது சாரமாக தோழர்கள் பேசினர்.
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
அன்பார்ந்த தொழிலாளர்களே, அமெரிக்காவின் உலக மேலாதிக்கப்  போர்வெறியை முறியடிப்போம்! இந்தியாவில் தீவிரமாகிவரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற தலைப்பில் சென்னை – திருவள்ளூர் மாவட்டக்குழுக்களின் சார்பாக மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம் ஆவடியில்  நடைபெற்றது.
இதில் பேரணியை துவக்கி வைத்து தோழர் பா.விஜயகுமார் (பு.ஜ.தொ.மு. முன்னாள் மாநில பொருளாளர்) உரையாற்றினார். அதை தொடர்ந்து விண்ணதிரும் முழக்கத்துடன் பேரணி துவங்கியது. பேரணியின் இறுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு  தோழர் ஆ.கா.சிவா (மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, வேலூர்) தலைமை ஏற்று உரையாற்றினார். தொடர்ந்து புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் துணைவேந்தன், மற்றும் மக்கள் அதிகாரம் சென்னை மண்டலத்தை சேர்ந்த தோழர் புவனேஸ்வரன் ஆகியோர் உரையாற்றினார்கள் இடையிடையே முழக்கம் முழங்கப்பட்டது.
அடுத்து பு.ஜ.தொ.மு.- வின் சென்னை,திருவள்ளூர், காஞ்சி, வேலூர் மாவட்ட செயலாளர் தோழர் ம.சரவணன் மே நாள் உரையாற்றினார். இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் ப.சக்திவேல் நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது. மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் என  சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள அதிகாரம்.
000
அன்பார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கும் மேதின தியாகிகளுக்கும் செவ்வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம். வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிப்போம்!  காவி கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் மே 1 அன்று மாலை 4.30 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூர் மாவட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் தோழர் சுந்தர் தலைமை உரையாற்றினார்.
இன்றைய சூழலில் தொழிலாளிகள் முதலாளித்துவத்திற்கு அடிமையாகவும் இது இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க தொழிலாளி வர்க்கத்தின் நிலையும் அதுதான் என்றும் இதை தடுக்க வேண்டும், வேரறுக்க வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கம் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே தீர்வு என்றும் இந்து பாசிச கட்டமைப்பை தவிர்க்க வேண்டுமென்றால் ஜனநாயக அமைப்புகள் பாசிச ஏதிர்ப்பு ஐக்கிய முன்னணி கூட்டமைப்பை உருவாக்குவது போன்ற நிகழ்ச்சிகளில் நாம் முன்னெடுத்தால் மட்டுமே இன்று காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று தன்னுடைய தலைமையில் உரையாற்றினார்.
அடுத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது முழக்கத்திற்கு பிறகு ஆக்சில் இந்தியா கிளை பொருளாளர் தோழர் கே சௌந்தரராஜன் அவர்கள்  இன்றைய சூழ்நிலையில் தொழிலாளி வர்க்கம் என்ற தலைப்பில் இளம் தொழிலாளர்கள் இன்றைக்கு மே தினம் என்றால் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் போடுவது பேஸ்புக்கில் லைக் போடுவது ஷேர் செய்வது என்றுஆன்லைனில் ஆழ்ந்து மூழ்கி போவதும் தொழிலாளி உரிமை என்றால் என்ன என்ற விவரம் கூட இல்லாமல் இன்று இருப்பதாகவும் மேலும் இனி நவீன கொத்தடிமைகளாக தொழிலாளி வர்க்கம் மாற்றப்படுகிறது சட்டத்திருத்தம் என்ற பெயரில் 12 மணிநேர வேலை நேரமாக மாற்றுவது உரிமையை கேட்டால் வேலை நீக்கம் செய்வது என்று தொழிலாளர்களுடைய நிலைமையை பற்றி தோழர் விளக்கினார்.
பிறகு மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் மாவட்ட துணை செயலாளர் தோழர் சரவணன் தொழிலாளி வர்க்கத்திற்காக  ஒரு பாடலை பாடினார் அவரே இயற்றி பாடினர்.
அதன்பிறகு மேதின சூளுரையை தோழர் வெற்றிவேல்செழியன் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் தமிழ்நாடு கண்டன உரை பதிவு செய்தார். உக்ரைன் ரஷ்யா போர் எதற்காக நடத்தப்படுகிறது இன்றைய சூழ்நிலையில் முதலாளி வர்க்கத்தின் மற்றொரு தாக்குதல் என்பதையும் அதற்கும் இந்தியாவில் இருக்கும் மக்களுக்கும் சம்பந்தம் இல்லை. அதைப் பற்றி கருத்து சொல்வதற்கும் கம்யூனிஸ்டுகளுக்கு வேற வேலை இல்லை என்ற ஒரு பார்வை உள்ளது. ஏன் அதை எப்படி பார்க்க வேண்டும் என்றும் உலகம் முழுக்க முதலாளி வர்க்கம் தன்னுடைய வர்த்தகத்தை வைத்துள்ளான் அவன்  நினைப்பதும் நடப்பதும் தான் நடக்கிறது என்றும் ஊடகங்கள் முதல் அரசு அலுவலகங்கள் உயர்மட்ட ஆணைகள் அனைத்தும் முதலாளி வர்க்கத்திற்கு ஏற்ப இன்று செயல்படுகிறது.
இன்று ரஷ்யா உக்ரைன் போர் மட்டுமல்ல உலகம் முழுக்க இன்று போர்கள் அங்கங்கு நடப்பதும் அங்கு இருக்கிற இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதும் தான் முதலாளி வர்க்கத்தின் முதல் வேலை இந்தியாவில் தனியார்மயம் தாராளமயம் வந்தபிறகு வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிய அரசு இன்று நிலைமை என்ன ஹூண்டாய் போர்டுநிறுவனம் வந்துவிட்டது   தொழிலாளி வர்க்கம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது என்றும் ஆனால் ஒரு தலைமுறை 20 வருடங்கள் கூட ஆகவில்லை போர்டு நிறுவனம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது அது நிறுவனம் மூடினால் அதில் உள்ள தொழிலாளர்கள் மட்டும் அல்ல அதை சுற்றி இயங்கக்கூடிய துணை நிறுவனங்கள் மற்றும் அதை சுற்றி இருக்கிற உழைக்கும் மக்கள் வியாபாரிகள் சிறு குறு தொழில்கள் முற்றிலும் அழிந்துவிடும் இது ஏதோ ஃபோர்டு நிறுவனத்தின் பிரச்சினை மட்டுமல்ல ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கத்தின் பிரச்சனை தான் இந்த முதலாளித்துவம் தனியார் மயம் தாராளமயம் என்ற கொள்கையை மூலம் இயற்கை வளங்களை கொள்ளையடித்து தொழிலாளி வர்க்கத்தை நவீன கொத்தடிமைகளாக வைப்பது தான் முதல் வேலையாக உள்ளது அதற்கு இந்த காவி கும்பல் எடுபிடியாக வேலை செய்கிறது இது போதாதென்று இன்று இந்தியாவின் பொது துறைகள் முதலாளிக்கு தாரைவார்க்க படுகிறது பொதுத்துறை நிறுவனங்கள் விற்கப்படுகிறது ஆங்காங்கே போராட்டங்கள் வெடிக்கிறது டெல்லி விவசாயிகள் போல, விவசாய போராட்டம் போல, ஜல்லிக்கட்டு போராட்டம் போல இங்கு பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பை நிறுவுவதும் அதன் மூலம் தன்னுடைய வர்க்கத்தின் அடித்தளத்தை அமைத்துக் கொண்டு முதலாளி வர்க்கத்திற்கு சாவுமணி அடிக்கும்போது தான் தீர்வாக இருக்கும் என்று தோழர் அவர்கள் கண்டன உரையை பதிவு செய்தார் அதைத்தொடர்ந்து முழக்கமிட்டு நன்றியுரையை தோழர் மோகன் அவர்கள் மக்கள் அதிகாரம் காஞ்சிபுரம் மாவட்டம் அவர்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் தனது நன்றியை தெரிவித்து கூட்டத்தை நிறைவு செய்தார்
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கணைப்புக்குழு)
000
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி- கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்ற தலைப்பில் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மே தினத்தை முன்னிட்டு மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பென்னாகரம் வட்டக்குழு உறுப்பினர் தோழர் சி. வெங்கடேசன் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக பறையிசையும் அதனை தொடர்ந்து தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டனர்.
தலைமை உரையில் தோழர் வெங்கடேசன் மே தின வரலாற்றை விளக்கி பேசினார்.  ஆர்ப்பாட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மக்கள் அதிகாரம் தருமபுரி மாவட்டத்தின் கலைக்குழுவினர் கோடானு கோடி மக்களுக்காக என்ற தியாகிகளுக்கான வீரவணக்கப்பாடலை இசைத்தனர். இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் . பென்னாகரம் நகர செயலாளர் தோழர் இலட்சுமன் சனாதன பாசிசத்தை ஆட்சியிலிருந்து வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை விளக்கி பேசினார்.
இதன் பின்னர் உரையாற்றிய பென்னாகரம் வட்ட இணைச்செயலாளர் தோழர் சிவா தனது உரையில் இன்றைய முதலாளித்துவ சமூகத்தில் மது, கஞ்சா போன்ற போதை கலாச்சாரத்தால் இளைஞர்கள், மாணவர்கள் சீரழிவதையும், இதற்கு போலிசு மாமுல் வாங்கிக்கொண்டு அனுமதிப்பதையும் பொறுப்பற்ற அரசு நிர்வாகத்தையும், தனியார்மயம், தாராளமயம் உலகமயம்தான் இலங்கையை திவாலாக்கியுள்ளது. அதை நோக்கிதான் இந்தியா சென்றுகொண்டிருக்கிறது என்றும் இதற்கு ஒரே தீர்வு இந்த முதலாளித்துவ ஆட்சி முறைக்கு முடிவு கட்டுவதுதான எனப்பேசினார்.
இதன் பின்னர் சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல செயலாளர் தோழர் கோபிநாத், நாம் அணிந்திருக்கிற சிவப்பு உடை என்பது வெறும் நிறம் மட்டுமல்ல, அது இரத்தத்தில் தோய்ந்த தியாகத்தின் அடையாளம் என்பதையும், அவ்வாறுதான் மேதினம் உருவானது. ஆனால், இன்று அந்த உரிமைகள் எல்லாம் பறிபோய்கொண்டிருக்கிறது, நாடு முழுதும் கார்ப்பரேட் நலனிற்காக போலிசு அடியாள் வேலை செய்வதையும், இதனால் உழைக்கும் மக்கள் சொல்லொண்ணா துயரங்களை சந்தித்துவருவதையும் எடுத்துக்காட்டி பேசினார். இதை மறைக்க காவி பயங்கரவாதத்தை பாசிச பாஜக தீவிரமாக அமுல்படுத்தி வருவதையும், எனவே, காவி-கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டவேண்டும் என்பதையும் விளக்கி பேசினார்.
இடையிடையே வேலை வேணுமா வேலை வேணுமா என்ற இளைஞர்களுக்கு அறைகூவல் விடுக்கும் பாடலையும் ஏலையா ஏலோலையா எலையா ஏலோலையா ஏழ்மையை விரட்டிடவே ஏந்துவோம் துப்பாக்கியை என்ற பாடலையும் பாடினர். இறுதியில் சர்வதேச பாட்டாளி வர்க்க கீதத்தை தோழர்கள் பாடினர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் இபொக மா-லெ(விடுதலை) கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் கோவிந்தராஜ் மற்றும் பல அமைப்பினர், திரளான பொதுமக்கள் என சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம், 9790138614.

000

மே – 1 தொழிலாளர் தினத்தில் காவி கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த சூளுரைப்போம் என்று சேலம் மாவட்ட மக்கள் அதிகாரம் தோழர் கந்தம்மாள் தலைமையில் அப்பகுதி மக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு இனிப்பு வழங்கப்பட்டது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.

000
136 வது மே நாளையொட்டி  தூசான் தொழிலாளர் சங்கம் (இணைப்பு: புஜதொமு மாநில ஒருங்கிணைப்புக் குழு) சார்பாக கொடியேற்றப்பட்டது.
சங்கத்தின் தலைவர் தோழர் உதயகுமார் தலைமை தாங்கிய இந்த கொடியேற்றத்தில் சங்கத்தின் செயலாளர் ம.செ.சந்திரமோகன் உரையாற்றினார். சங்கத்தின் சிறப்புத்தலைவரும், பு.ஜ.தொ.மு முன்னாள் மாநிலப் பொருளாளருமான தோழர் விஜயகுமார் தூசான் நிர்வாகம் நட்டக்கணக்கு காட்டி ஆலையை மூட முயற்சி செய்வதோடு, ஏப்ரல் 2022 மாதத்துக்கான சம்பளத்தை வழங்காமல் தொழிலாளர்களை பட்டினிப் போட்டு பணிய வைக்க முயற்சி செய்வதை முறியடிக்க அறைகூவல் விடுத்தார்.மேதின போராட்டங்களுக்கான தேவை முதலாளித்துவம் நீடிக்கும் வரை தொடரும் என்பதை தொழிலாளர்களுக்கு உணர்த்தியும், நம்பிக்கையூட்டியும் பேசப்பட்டது.
தகவல் :
தூசான் தொழிலாளர்கள் சங்கம்,
பூவிருந்தவல்லி.
000
136 வது மே நாளையொட்டி ஏ சி என் ரெப்ரோகிராப் கிளையில் மாவட்டத் தலைவர் தோழர் ம. சரவணன் கொடியேற்றி இன்றைய சூழலில் தொழிலாளர்களின் நிலை குறித்து உரையாற்றினார்.
தகவல்:
ஏ சி என் ரெப்ரோகிராப் கிளை,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
136 வது மே நாளையொட்டி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாநில ஒருங்கிணைப்புக் குழு வின் இணைப்பு சங்கமான டி ஐ மெட்டல் பார்மிங் ஆலையில் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா.விஜயகுமார் கொடியேற்றி உரையாற்றினார்.
சங்கத்தின் தலைவர் தோழர் ம.சரவணன் தலைமை தாங்கினார்.
தகவல் :
டி ஐ மெட்டல் பார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
சென்னை, திருவள்ளூர், காஞ்சி,வேலூர் மாவட்டங்கள்
000
136 வது மே நாளில் TPI ஆலை ஆவடியில் மே நாள் கொடியேற்ற நிகழ்சி நடைபெற்றது.
தகவல் :
தொழிலாளர் ஜனநாயக அமைப்பு,
ஆவடி.
000
136வது மே நாளையொட்டி சாய்மிர்ரா கிளையில் மாவட்டத் தலைவர்
தோழர் ம. சரவணன் கொடியேற்றி உரையாற்றினார். சங்கத்தின் செயலாளர் தோழர் ராஜா தலைமை தாங்கினார்.
தகவல் :
சாய்மிர்ரா கிளை,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
000
136 வது மே நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ( மாநில ஒருங்கிணைப்புக்குழு ) தோழர் பா.விஜயகுமார் அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கி வரும் TPI IBP தொழிலாளர் சங்கம், ஆவடியில் இன்று காலை 6.15 மணிக்கு மேதின கொடியேற்றி உரையாற்றப்பட்டது.
தகவல்:
TPI IBP தொழிலாளர்கள் சங்கம்
ஆவடி
000
மே தின பிரசுரம் திருச்சியில் புஜதொமு மாநில ஒருங்கிணைப்பு குழு சார்பாக வீடு வீடாக சென்று மே தினத்தால் தொழிலாளிவர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் எல்லாம் இன்று மோடி அரசால் பறிக்கப்படுவது பற்றி திருவெறும்பூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.
தகவல் :
புதிய தொழிலாளி
000

புதிய தொழிலாளர் நல சட்டம் – 2022 யாருக்கானது?

0
ரண்டாவது தேசிய தொழிலாளர் ஆணையக் குழுவின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசு தற்போது நடைமுறையிலுள்ள 29 மத்திய தொழிலாளர் நல சட்டங்களை உள்வாங்கி கீழ்கண்ட 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை தயாரித்து அவற்றை அமல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
ஊதிய சட்ட தொகுப்பு – 2019
தொழில் உறவு சட்ட தொகுப்பு – 2020
சமூகப் பாதுகாப்பு சட்ட தொகுப்பு – 2020
பணியிட பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்ட தொகுப்பு – 2020
ஜூலை 01-ல் புதிய தொழிலாளர் நல சட்டத்தை அமல்படுத்த ஒன்றிய அரசு மிக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முக்கியமாக இதில் கூறப்படும் தகவல் என்னவென்றால் தொழிலாளிகளுக்கு பணிநேரம் அதிகரிக்கப்பட்டு, கூடுதல் வாரவிடுமுறை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர். மேலும் நாட்டில் முதலீடுகளையும், வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் என ஒன்றிய அரசு கூறுகிறது. குறிப்பாக இந்த புதிய சட்டத்தின் படி நிறுவனங்கள் ஊழியர்களின் 8 மணி நேர வேலை என்பது 12 மணி நேர வேலை என மாற்றியமைக்க வழிவகை செய்யும். அதை ஈடு செய்ய வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். அதேபோல் ஊழியர்களின் சம்பளம், வருங்கால வைப்புநிதி போன்றவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.
இவற்றில் ஊழியர்கள் வாங்கும் அடிப்படை சம்பளம் என்பதில் 50 சதவீதம்தான் கையில் தரப்படும் மீதம் வருங்காள வைப்பு நிதிக்காக பிடித்தம் செய்யப்படும். அப்படியானால் தொழிலாளிகளுக்கு ஓய்வூதியம் என்பது அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது என்கிறது அரசு.
படிக்க :
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… – பாகம் 1 | சித்திரகுப்தன்
பாலுக்கும் காவல்… பூனைக்கும் தோழன்… பாகம் – 2 | சித்திரகுப்தன்
இவை ஒவ்வொன்றிலுமே நாம் கவனமாக ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால் வெளியிலிருந்து கேட்கும்போது மிக இனிப்பாக இருக்கும். ஆனால் உண்மை என்ன? ஒட்டுமொத்த தொழிலாளிகளின் வயிற்றில் அடிப்பது மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தொழிலாளிகளையும் முழு அடிமைகளாக மாற்றி, குறைவான ஊதியத்தை கையில் கொடுத்து, பல மணி நேரம் உழைப்பை சுரண்டுவது என்பதுதான் முதலாளியின் நோக்கம். அதை சட்டத்தின் படி நிறைவேற்றுவதுதான் இந்த அரசின் பணி.
எப்படி இது முதலாளிக்கு இலாபம் என்று உங்களுக்கு இந்த சந்தேகம் வரலாம்? ஏனென்றால் ஏற்கனவே வேலை செய்த அதே நேரம் தானே செய்யப்போகிறோம். 12 மணி நேர வேலை கொடுத்தாலும் வாரத்தில் 4 நாள் தான் வேலை மீதி 3 நாள் விடுமுறை தானே கொடுக்கிறார்கள். இதில் தொழிலாளுக்கு தானே இலாபமாக உள்ளது என்று நீங்கள் யோகிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் கொஞ்சம் உள்ளே போய் யோசித்து பாருங்கள்.
4 நாள் வேலையும் ஒன்றாக செய்யப்போவதில்லை. முதல் நாள் வேலை 12 மணி நேரம் அதற்கான உங்களின் தயாரிப்புக்கான நேரம், போக்குவரத்து நேரம் நீங்கள் தூங்கும் நேரம் இவற்றை கணக்கிட்டு பாருங்கள் எவ்வளவு நேரம் தொழிலாளிகள் தங்கள் பணிக்காக செலவிடுகிறார்கள் என்பது புரியும். 3 நாள் விடுமுறை என்பதை நீங்கள் (தொழிலாளிகள்) அனுபவிக்க முடியுமா என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் சம்பளம் உயர்கிறதா? அதுவும் இல்லை. வைப்பு நிதிக்கான பிடித்தத்தை அதிகப்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே உள்ள வைப்பு நிதி (PF) எப்படி கிடைக்கிறது என்று நமக்கு தெரியும். அப்படியானால் இந்த 50 சதவீத வைப்பு நிதி என்பது முதலீட்டை பெருக்கி மேலும் முதலாளியை தான் வாழ வைக்கும். எந்த நிலையிலும் தொழிலாளிகளின் வாழ்க்கை என்பதில் மாற்றம் வரப்போவதில்லை.
அரசு நிறுவனங்களிலே இதுதான் நிலை எனும்போது தனியார் நிறுவன ஊழியர்களின் நிலையை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும். கையில் வாங்கும் அடிப்படை சம்பளம் பெரிய அளவில் குறையும். வேலைக்கும் உத்திரவாதம் கிடையாது. அவர்களின் குடும்பம் என்னவாகும். தொழிலாளிகளை நேரடியாக தற்கொலைக்கு தூண்டுவதையே இந்த ஒன்றிய அரசு செய்கிறது.
குறிப்பாக 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்பது சர்வ சாதாரணாக நமக்கு கிடைத்த உரிமை கிடையாது பல இலட்ச கணக்கில் தொழிலாளிகள் இந்த உரிமையை பெற இரத்தம் சிந்தி உள்ளனர். பலர் உயிர் தியாகம் செய்யப்பட்டுள்ளது. அப்படி தொழிலாளர்களின் குருதியால் கிடைத்த உரிமையை ஒரு பாசிச அரசு சட்ட திருத்தம் என்ற பெயரில் ஒரே அடியாக 29 சட்டங்களை 4 தொகுப்பாக மாற்றி அனைத்து உரிமைகளையும் பறிக்கிறது என்றால் இந்த அரசின் நோக்கம் என்பது முதலாளிகளை வாழ வைப்பது மட்டும்தான். ஏனென்றால் இது முழுமையாக கார்ப்பரேட் நல அரசாக உள்ளது. ஆனால் இந்த சட்ட திருத்தத்திற்கு பெயரோ தொழிலாளர் நல சட்டம்.
கடந்த மே 1, அன்று தொழிலாளர் தினம் பல நாடுகளில் விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் நாமும் தொழிலாளர் தினத்தை போராட்ட நாளாக கடைபிடிக்கும் வகையில் நமது பறிக்கப்பட்ட உரிமைகளை கோரிக்கையாக முன் வைத்து போராடினோம். ஆனால் அரசு ஏதேனும் செவி சாய்த்ததா, இல்லை. ஏனென்றால் ஒன்றாக இணைந்து போராட வேண்டிய நாம் அப்படி செய்யாமல் சிதறி கிடக்கிறோம். உழைப்பை மட்டுமே பலமாக கொண்டிருக்கும் உழைப்பாளிகளான நம்மிடத்தில் ஒற்றுமை இல்லை. இந்த ஒற்றுமையின்மைதான் அரசின் பலமாக உள்ளது.
அரசு முழுக்க முழுக்க கார்ப்பரேட் நலன் சார்ந்த அரசாக உள்ளது எனும்போது, தொழிலாளிகளின் நலன் காக்க நாம் ஒரு அரசை நமக்கான அரசை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அப்படியானால் அது சாதரணமாக சாத்தியமாகுமா? இல்லை. பாட்டாளி வர்க்கம் என்ற வர்க்க அடிப்படையிலான ஒற்றுமையே அதை சாத்தியமாக்கும்.
வர்க்கமாக ஒன்றிணைவோம். காவி – கார்ப்பரேட் பாசிசத்தை ஒழித்துகட்டுவோம்.

ஓவியா

மோடியின் பொய் உரைகள் : கூட்டாட்சி தத்துவம், பெட்ரோல் டீசல் வரிகுறைப்பு, மாநில அரசு மீதான குற்றசாட்டு !

0
பெட்ரோல் – டீசல் வரி குறைப்பு என்பது மோசடி, மோடி அரசின் பொய்யையும், சூழ்ச்சிகளையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி முறியடிக்க வேண்டும்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து இருப்பதை ஒட்டி, மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஏப்ரல் 27 அன்று காணொலி மூலம் உரையாற்றினார்.
“சர்வதேச நெருக்கடி (உக்ரைன் – ரஷ்யா போர்) பல சாவல்களை கொண்டு வந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் கூட்டாட்சியில் ஒத்துழைப்பையும், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பையும் மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. பொருளாதரம் தொடர்பான முடிவுகளில் மத்திய – மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என கூறியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு குறித்து பேசிய மோடி, “மக்களுக்கு ஏற்பட்டுள்ள சுமையைக் குறைப்பதற்கு, மத்திய அரசு கடந்த நவம்பா் மாதத்திலேயே கலால் வரியைக் குறைத்துவிட்டது. வரிக் குறைப்பின் பலன்கள் மக்களைச் சென்றடைவதற்காக பெட்ரோல், டீசல் மீதான வாட் வரியைக் குறைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு அப்போதே ஒன்றிய அரசு வலியுறுத்தியது. ஆனால், சில மாநிலங்கள் மட்டுமே வரியைக் குறைத்தன. சில மாநிலங்கள் வரியைக் குறைத்து அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. கர்நாடகா, குஜராத் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைத்துள்ளதால் அந்த மாநிலங்களுக்கு முறையே ரூ.5,000 கோடி, ரூ.3,500 கோடி – ரூ.4,000 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரம், கேரளம், மகாராஷ்டிரம், மேற்குவங்கம், ஜார்க்கண்ட் ஆகிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் வாட் வரியைக் குறைக்கவில்லை என்று எதிர்கட்சிகளின் மீது குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.
படிக்க :
பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்
ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
மோடியின் கருத்துக்கு எதிர்கட்சிகளின் மறுப்பு:
மோடியின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, “பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நிலக்கிரி தட்டுபாடு, ஆக்சிஜன் தட்டுபாடு” அனைத்துக்கும் மாநில அரசே காரணம் என்று கூறுகிறது மோடி அரசு. ஆனால் பெட்ரோல், டீசல் மீதான மொத்த வரி வருவாயில் 68 சதவீதம் பங்கை ஒன்றிய அரசே எடுத்துகொள்கிறது. மோடி அரசு “கூட்டாட்சிக்கு ஒத்துழைக்கவில்லை, மாறாக மாநிலங்களை கட்டுபடுத்துகிறது” என விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி “பிரதமருடனான கலந்துரையாடல் ஒரு பக்கச் சார்புடனும் தவறான தகவல்களைத் தருவதாகவும் இருந்தது. மேலும், எங்கள் மாநிலத்தில் பெட்ரோல், டீசலுக்கு மானியமாக ரூ.1 வழங்குகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ரூ.1500 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசு மேற்குவங்கத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி ரூ.97,000 கோடி வரி நிலுவை உள்ளது. பாக்கி தொகையை முதலில் மோடி வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநில அரசால் விலை உயர்ந்துவிட்டது என்பது உண்மையல்ல. ஒன்றிய அரசு, மகாராஷ்டிரா அரசுக்கு கொடுக்க வேண்டிய ரூ.26,500 கோடி வரி நிலுவை வைத்துள்ளது. மத்திய அரசு மாநிலங்களை சமமாக நடத்துவதில்லை என மோடி அரசின்மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
தெலங்கானா முதல்வர், கே. சந்திரசேகர ராவ் “மாநிலங்களிடம் வரியைக் குறைக்கச் சொல்லிக் கேட்பதற்குப் பதிலாக, மத்திய அரசே ஏன் வரியைக் குறைக்கக் கூடாது? மத்திய அரசு வரிகளை மட்டுமல்லாமல், ‘செஸ்’ஐயும் உயர்த்தியது. உங்களுக்குத் தைரியமிருந்தால் வரிகளை உயர்த்தியது ஏன் என்பதை விளக்குங்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்தபோதும் அதற்கேற்றாற் போல பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல், அந்த எண்ணெய் விலை வீழ்ச்சியால் கிடைத்த உபரி வருவாய் முழுமையும் தனதாக்கிக் கொண்டது” தற்போது மாநில அரசை குறை கூறுவது என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்க்கிறது ஒன்றிய அரசு என்று விமர்சித்துள்ளார்.
இதுவரை, தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்த வரி வருவாய், 2019 – 2020-ல் ரூ.1163.13 கோடி. ஆனால் 2020 – 2021-ல் மாநில அரசு பெற்ற வரிவருவாய் ரூ.837.75 கோடி. ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை குறைத்துவிட்டது. கலால் வரி குறைப்பால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,050 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மோடி அரசின் வரிகுறைப்பு உண்மையல்ல, நாடகம் :
2021-ம் ஆண்டு, நவம்பர் மாதம் கச்சாஎண்ணெய் விலை உயர்ந்த போதும், பெட்ரோல் ரூ.5-ம், டீசல் ரூ.10-ம் கலால் வரியை குறைத்துவிட்டோம், என்று ஒன்றிய அரசு பெருமை பீற்றிகொள்கிறது.
பாஜக ஆளும் 17 மாநிலங்கள் மற்றும் சில யூனியன் பிரதேசங்களிலும் வாட் வரியை குறைத்து பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.80 – ரூ.10 வரையிலும், டீசல் லிட்டருக்கு ரூ. 2.7 என்ற அளவில் குறைத்து இருகின்றன. இந்த வரி குறைப்பின் மூலம் ஒன்றிய அரசிற்கு பெருமளவு இழப்பு இல்லை. ரிசர்வ் வங்கியின் 2021 – 2022-ம் நிதிஆண்டிற்கான மாநிலத்திற்கான அறிக்கைப்படி, மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.08 சதவீதம் என மதிப்பிட்டுள்ளது.
இந்த வரி குறைப்பு என்பது ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டே ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தவில்லை. ஐந்து மாநில தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து 16 நாட்களில் ரூ.14 வரை விலையை உயர்த்தியது என்பதுதான் உண்மை. வாட்வரி குறைப்பு என்பது தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம்.
கடந்த மார்ச் மாதம் மட்டும் வீட்டு சமையல் எரிவாயுவின் விலை ரூ.50 ஆகவும், வணிக எரிவாயுவின் விலை ரூ.250 ஆகவும் உயர்த்தப்பட்டது. அப்பளம், வெல்லம் போன்ற 143 அத்தியாவசிய பொருள்களின் ஜி.எஸ்.டி வரியை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது மோடி அரசு. தீடிரென்று மோடி மக்கள் நலனை பற்றி பேசுவது, மக்கள் மீது கொண்ட அக்கறையினால் அல்ல.
மோடி அரசு ஒரு கொள்ளை நிறுவனம் :
2014-ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிபொறுப்பு ஏற்றுகொண்டதிலிருந்து, கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி மூலம் ரூ.27 லட்சம் கோடிகள் வருவாயாக பெற்றுள்ளது.
ஆகஸ்ட் 01, 2014 அன்று பெட்ரோல் அடிப்படை விலை, லிட்டருக்கு ரூ.48.55 விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.47.27 விலையிலும் இருந்தது.
நவம்பர் 04, 2021 அன்று பெட்ரோலின் அடிப்படை விலை ரூ.48.36 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.49.69 ஆகவும் இருந்தது.
ஆகஸ்ட் 01, 2014 அன்று மத்திய அரசின் வரிகள் ரூ.9.48 விலையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.3.57 விலையிலும் இருந்தது. அதே சமயத்தில் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி ரூ15.67 விலையிலும், டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.10.25 விலையிலும் இருந்தது.
மத்திய அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கலால் வரியை குறைப்பதற்கு முன்பு, கலால் வரி மற்றும் கூடுதல் கட்டண வரி விதிப்பு உட்பட, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 32.90 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.31.80 காசுகளாகவும் விலையை உயர்த்தி இருந்தது.
2014 மோடி பொறுப்பேற்று கொண்ட போது, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 108 அமெரிக்க டாலராக இருந்தது. அப்பொழுது பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.41 மற்றும் ரூ.55.49 ஆகவும் இருந்தது. இன்று கச்சா எண்ணெய் பேரலுக்கு 100.20 அமெரிக்க டாலராக உள்ளது. ஆனால் டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை முறையே ரூ.105.41 மற்றும் 96.67 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அடிப்படை எரிபொருள் விலை ஏறக்குறைய மாறாமல் இருக்கும்போது, மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.42 காசுகளாகவும், தோராயமாக 200 சதவீதம் வரியை அதிகரித்துள்ளது. அதுபோல டீசல் லிட்டருக்கு ரூ.18.23 கூடுதல் வரி விதிதுள்ளது. 2014 நடைமுறையில் இருந்து ஒப்பிட்டு பார்க்கும் போது டீசலுக்கான வரி 500 மடங்கு அதிகமாகும்.
2019 – 2020-ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த வருவாய் ரூ.2.23 லட்சம் கோடிகள். 2020 – 2021-ம் ஆண்டு ரூ.3.72 லட்சம் கோடியாக  ஒன்றிய அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. (செய்தி ஆதாரம்: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்)
ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் வரியின் மூலம் மக்களை ஒட்டச் சுரண்டும் ஒரு கொள்ளை நிறுவனமாக இருக்கிறது என்பதுதான் உண்மை.
மோடி அரசின் கூட்டாட்சி தத்துவம்:
மாநில அரசுகளின் நிதி ஆதாரத்தையையும், உரிமையையும் பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்தியது. அதன்பின் மாநிலங்கள் ஒன்றிய அரசை சார்ந்து நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதுவரை மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய ஜி.எஸ்.டி வரி இழப்பீட்டு தொகை, மார்ச் 2022-ம் ஆண்டு முடிவடைந்த நிலையில், ரூ.78,704 கோடி நிலுவை பாக்கி உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
மாநிலங்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பது என்பதுதான் கூட்டாட்சி தத்துவம் அடிப்படை. மாறாக மாநிலங்களின் அனைத்து அதிகாரங்களை பறித்து ஒற்றை சர்வதிகார அரசை நிறுவத்துடிக்கும் மோடி அரசு கூட்டாட்சி குறித்து பேசுவது வேடிக்கையானது.
மோடி, புதிய பொருளாதர கொள்கையின் தீவிர விசுவாசி:
மோடி அரசு, உலகமய – தனியார்மய – தாரளமய கொள்கையை தீவிரமாக அமுல்படுத்தி வருகிறது. அதன் விளைவாக சமூகத்தில் பெரும் ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்து வருகின்றன. தற்போது நாடு முழுக்க ஏற்பட்டிருக்கும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு என்பது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது பெட்ரோல் – டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு என்பது கொதிக்கும் எண்ணெயை, அள்ளி தெளித்தது போல மக்கள்மீது பெரும் சுமையை திணித்துள்ளது மோடி அரசு.
மோடி ஆட்சி காலத்தில் 2014 – 2015 முதல் 2019 – 2020 காலக் கட்டங்களில் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட, மொத்த வராக்கடனின் அளவு ரூ.18.28 லட்சம் கோடிகள். காங்கிரஸ் ஆட்சிகாலம் முடிய 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை இருந்த வராக்கடன் அளவு ரூ.5.04 லட்சம் கோடிகள் கடனாக இருந்தன.
படிக்க :
இலட்சத்தீவு : எதேச்சதிகாரமாக பள்ளி சீருடைகளை மாற்றும் பாசிச மோடி அரசு !
மருந்துகள் விலை உயர்வு : உழைக்கும் மக்களை வதைக்கும் மோடி அரசு !
மோடி ஆட்சியில், அதானி குழுமத்திற்கு மட்டும், 2020 வரை கொடுக்கப்பட்ட கடன் அளவு ரூ.2.25 லட்சம் கோடிகள் ஆகும். மோடி ஆட்சி முதலாளிகளுக்கு பொற்காலமாகும், மக்களுக்கு இருண்ட காலமாகும். இவ்வுண்மையை மறைத்து, மோடி அரசின்மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தை திசை திருப்பும் விதமாக, தன்னை நியாமானவனாக காட்டிக்கொள்ளவும், எதிர்கட்சிகளின் மீது நயவஞ்சகமாக பழியை சுமத்தியுள்ளது.
000
இன்று நிலவும் ஏகாதிபத்திய பொருளாதார கட்டமைப்பும், நம்நாட்டு சமூக பொருளாதர கட்டமைப்பும் மீள முடியாத நெருக்கடிக்களுக்குள் சிக்கி கொண்டுள்ளன. முதலாளிகளுக்கு உள்ள நெருக்கடியை தீர்ப்பதற்கு இப்பாசிச கும்பல் மேன்மேலும் மக்கள் மீதான வரிச்சுமையை அதிகரிக்கும் என்பதுதான் நிதர்சனம். இதனை திசைதிருப்பும் பொருட்டு பாசிஸ்டுகள் எல்லாவித சூழ்ச்சிகளையும், பொய் புரட்டுகளையும் அவிழ்த்துவிடுவார்கள்.
எதிர்கட்சிகள் மோடியின் குற்றச்சாட்டை வழமையாக கடந்து செல்லாமல், மோடி அரசின் ஒரே நாடு – ஒரே வரி, இந்தி மொழி திணிப்பு, நீட், போன்ற மாநில அரசின் உரிமை பறிப்புகளை எதிர்த்து, அரசியல் அரங்கில் கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவதும், மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி மோடி – அமித்ஷா பாசிச கும்பலை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

தங்கபாலு

நீட் தேர்வின் தரா‘தரம்’ என்ன?

ருத்துவ நுழைவுக்கான நீட் தேர்வு, தகுதியின் அடிப்படையில் மருத்துவ கல்விக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக நடத்தப்படுவது என பா.ஜ.க.வும் அதன் ஆதரவாளர்களும் நெடுங்காலமாக கூச்சலிட்டு வருகின்றனர். ஆனால் நீட் போன்ற தகுதிகாண் போட்டித் தேர்வுகள், வசதி படைத்த மாணவர்களுக்கு உதவுகிறது என்பதையும் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்க வசதிகள் செய்துகொடுகின்றன என்பதையும் பல தரவுகள் அவ்வப்போது அம்பலமாக்கி வருகின்றன.
ஆனாலும் இந்தியாவில் நீட் தேர்வு என்பது தகுதியுள்ள மாணவர்களை தேடிக்காண விழையும் பெரும் முயற்சி என்று இன்னமும் கதை அளந்து விடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது முகத்தில் காரி உமிழும் வண்ணம் தற்போது மற்றொரு தரவும் வெளியாகி இருக்கிறது.
கேரீயர்ஸ் 360 (Careers 360) என்ற நிறுவனம் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தியது. மார்ச் மாதத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ‘நீட் தேர்வு என்பதே சுயநிதி கல்லூரிகள் அதிகளவில் பணம் சம்பாதிப்பதற்கான எளிய வழிமுறை’ என்பதனை தரவுகளுடன் அம்பலமாக்கியுள்ளது.
படிக்க :
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
மேலும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்தாலும் அவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடுகிறது என்ற ஆதிக்க சாதி மனோபாவம் எத்தகைய முட்டாள்தனமானது என்பதையும் இந்த ஆய்வு விளக்குகிறது.
இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஐந்து மாநிலங்கல், மருத்துவப் பட்டப் படிப்பில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கடைசி மாணவருடைய தரவரிசை மற்றும் மதிப்பெண் என்ன என்பதை, வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் கடைசியிடம் பெற்ற (என்.ஆர்.ஐ – NRI) மாணவரின் தரவரிசை மற்றும் தகுதி மதிப்பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்துள்ளார்கள்.
அவ்வாறு ஒப்பிட்டு பார்த்ததில், வசதிப் படைத்த வெளிநாடுவாழ் இந்தியர் ஒதுக்கீட்டில் வரக்கூடிய மாணவர்கள், தரவரிசைகளிலும் மதிப்பெண்களிலும் மிகவும் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, தகுதியுள்ள மாணவர்களைத் பொறுக்கியெடுக்கிறோம் என்ற சாயம் வெளுத்துப்போய்விட்டது. எந்த நீட் வந்தாலும் தனியார் கொள்ளையர்கள் புகுந்து மேயலாம், தடையில்லை; காசு இருப்பவன் கல்வி பயிலலாம், தகுதி வெங்காயமெல்லாம் தேவையில்லை என்ற குட்டு வெளிப்பட்டுள்ளது.
ஆய்வின் சுருக்கத்தை கீழே பார்ப்போம்:
கடந்த 2020-ஆம் ஆண்டில் நீட் தேர்வு எழுத பதிவு செய்த 16 இலட்சம் மாணவர்களில், 13.6 இலட்சம் பேர் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் (ஜஸ்ட் பாஸ் ஆனவர்கள் உட்பட) சுமார் 7.7 லட்சம் பேர் தேர்வாகியுள்ளனர்.
பொதுவாக இவ்வாறு தேர்வாகிறவர்களில் முதல் தரத்தில், முதல் இடத்தில் தேர்வான மாணவர் தொடங்கி அவருக்கு அடுத்து வருபவர் என தரவரிசைப்படியும் மதிப்பெண்படியும்தான் எல்லா மருத்துவ இடங்களும் நிரப்பப்படும் என்று பலரும் நம்பி கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அப்படி நடப்பது இல்லை.
கேரியர்ஸ் 360 நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக் கொண்ட ஐந்து மாநிலங்களில், கர்நாடக மாநிலத்தின் யோக்கியதையை எடுத்துக்காட்டுக்காக கொடுத்துள்ளோம். கீழே பாருங்கள்
(இதர மாநில மருத்துவ கல்லூரிகள் குறித்த புள்ளிவிவரங்கள் மூலக்கட்டுரையில் உள்ளது – NEET: How NRI quota dilutes ‘merit’ but faces none of the flak reservation gets)
2020-ஆம் ஆண்டில், நாட்டிலுள்ள 80,000 இளநிலை மருத்துவ இடங்களில் சுமார் 4௦,௦௦௦ இடங்கள் அரசுக் கல்லூரிகளும் இதர 40,000 இடங்கள் தனியார் கல்லூரிகளும் கொண்டிருந்தன. இந்த தனியார் கல்லூரிகளில், NRI பிரிவிலுள்ள இடங்கள் மட்டும் 1,869.
ஏற்கெனவே, வகுக்கப்பட்ட கொள்கையின்படி NRI பிரிவினியாருக்கான கட்டணம் சுமார் 1௦ லட்சம். அவ்வளவு உயர்ந்த கட்டணத்தில் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் யாரும் சேர்வது இல்லை. முதல் இரண்டு மாணவர் சேர்க்கை சுற்றுகளில் (Counselling) NRI மாணவர்கள் சேராவிட்டால் இந்தக் கல்லூரிகள் தங்கள் விருப்பம் போல யாரை வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிச் சேர்க்கப்படும் மாணவர்களிடம் இருந்து சுமார் ஒன்று முதல் இரண்டு கோடி ரூபாய் வரை இக்கல்லூரிகள் வசூலிக்கின்றன.
படிக்க :
நீட் விலக்கு மசோதா : திருப்பி அனுப்பிய ஆளுநரின் கொட்டத்துக்கு முடிவு கட்டுவோம்!
நீட் : ஏ.கே.ராஜன் குழு அறிக்கையும் – சங்கிகளின் கட்டுக்கதைகளும் !
இதற்காகத்தான் தனியார் கல்லூரிகள் நீட் தேர்வை ஆதரிக்கின்றன. சான்றாக, நீட் தேர்வு வேண்டும் என்று முதன்முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சங்கல்ப் அறக்கட்டளை (Sankal Charitable Trust) மருத்துவக் கல்லூரிகள் நடத்துகிறது. நீதிமன்றமோ கொள்ளையடிப்பனுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது.
000
பா.ஜ.க.-வினர் மட்டுமின்றி சுமந்த் ராமன், பாலகுருசாமி போன்ற கழிசடை கருத்துசொல்லி பேர்வழிகளும் தரத்தை பற்றியும் தகுதியைப் பற்றியும் சொல்லக்கூடிய அத்தனை வாதங்களும் எப்படி பொய்யானது என்று பாருங்கள்.
இதே தனியார் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் சேரும் தாழ்த்தப்பட்ட பிரிவில் கடைசியில் வரும் மாணவர்களைவிட, தரவரிசையில் பல லட்சங்களுக்கு கீழே இருக்கும் ‘ஜஸ்ட் பாஸ்’ பெற்ற வசதிபடைத்த என்.ஆர்.ஐ. மாணவர்கள் எப்படி தரம் உயர்ந்தவர்களானர்கள். கிழிந்து தொங்குகிறது நீட் தேர்வின் தரா‘தரம்’!

தினகரன்

நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்மனசு-வின் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!

1993 முதல் நெல்லை மாவட்டத்தின் விவசாயிகள் விடுதலை முன்னணியின் அமைப்பாளரும், மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கப்பட்ட பின் அதன் சிவகிரி வட்ட அமைப்பாளராகவும் இருந்தார் தோழர் சம்மனசு. இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் 27/04/2022 அன்று மாலை 5 மணியளவில் நம்மை விட்டுப் பிரிந்தார்.
இரண்டாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்குச் சென்று, எழுத, படிக்கத் தெரியாத தோழர் சம்மனசு சிறு விவசாயி வர்க்கத்தைச் சேர்ந்தவர். இளம் வயது முதல் தவறுகளை தட்டிக் கேட்பது, நியாயத்தின் பக்கம் நிற்பது என தனது ஊரான தேவிப்பட்டனத்திலும் சுற்று பட்டிலும் செயல்பட்டுள்ளார்.
தோழர் துவக்கம் முதலே கைது, வழக்கு, சிறை என எதற்கும் அஞ்சாமல் தன் போராட்டங்களைத் தொடர்ந்துள்ளார். ஒரு பிரச்சினையில் போலீசும் தி.மு.க.வும் சமரசம் செய்து கொண்டதை தோழரால் பொறுக்க முடியவில்லை. அந்தப் பிரச்சினையில் தோழரை ஆதரித்த சி.பி.ஐ.(எம்)-ல் தன்னை இணைத்துக் கொண்டார்.
சி.பி.எம்-ல் செயல்படும் போதே தோழருக்கு நக்சல்பாரி இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. நடுவில் தன் காதல் மனைவி முத்துலெட்சுமியின் உதவியுடன் படிக்கக் கற்றுக்கொண்டார். மார்க்சிய – லெனினிய நூல்களை படித்து விவாதிப்பார். இந்திரா காந்தியின் அவசர நிலை பேயாட்சியில் தோழரும் கைது செய்யப்பட்டார். சிறை மீண்டதும் மீண்டும் நியாயத்திற்கான போராட்டங்கள். இப்போது நக்சல்பாரி கட்சியில் இருந்து செயல்படுகிறார். ‘அழித்தொழிப்புகள் நம்மை மக்களிடம் இருந்து அன்னியப்படுத்தும். மக்களை புரட்சிக்கு திரட்ட இந்தத் திட்டம் உதவாது!’ என கட்சியில் போராடுகிறார் தோழர் சம்மனஸ்.

படிக்க :

♦ இராஜபாளையம் காவல்துறை ராம்கோவின் அடியாளா ?

♦ ராஜபாளையத்தில் ஆட்டம் கண்ட ராம்கோ ராஜ்ஜியம்

தியாகிகள் மச்சக்காளை, இராயப்பன் போன்றோரோடு இணைந்து செயல்பட்டவர். பின்னர் ‘மக்கள் முன்னணி’ என்ற மக்கள் திரள் அமைப்பைத் துவங்கி, ஏகாதிபத்திய கைக்கூலிகளான தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து வலது சந்தர்ப்பவாத சகதியில் வீழ்ந்த வினோத் மிஸ்ரா குழுவை (சி.பி.ஐ.(எம்-எல்) விடுதலை) விட்டு விலகி முற்போக்கு இளைஞர் அணி (RYL) என்ற அமைப்பில் இணைந்து போராடத் துவங்கினார்.
அந்த அமைப்போ, இடது சந்தர்ப்பவாத சகதியில் சிக்கித் தவித்தது. மக்களின் எளிய கோரிக்கைகளுக்குக் கூட பேருந்தை எரிக்கப் போனது. தோழர் சம்மனஸ் மக்களைத் திரட்டுவதை முன் வைத்து போராடினார். அவரது குரலைக் கேட்க அங்கே யாரும் இல்லை. பேருந்து எரிக்கப்பட்டது.
தோழர் சம்மனசின் குடும்பமே போலீசு அடக்குமுறைக்கு ஆளானது. அதிகம் படிக்கத் தெரியாது. மார்க்சிய மூல நூல்கள் அனைத்தையும் படித்ததில்லை. அடிப்படையான நூல்களை மட்டுமே படித்துள்ளார். ஆனாலும் தன் வர்க்க உணர்வின் மூலம் வலது சந்தர்ப்பவாதமும், இடது சந்தர்ப்பவாதமும் தன் வர்க்கத்தின் விடுதலைக்கு உதவாது என்பதை தன் எளிய அறிவால் தன் தோழர்களுக்கு விளக்கினார்.
‘மக்கள் திரள் வழி’ (Mass Line) ஒன்றே இந்த மண்ணையும் மக்களையும் விடுவிக்கவல்ல ஒரே பாதை என முடிவெடுத்து, தன் உயிர்த் தோழர்கள் கணபதி (இராசபாளையம்), செல்வம் (தேவிப்பட்டனம்) மற்றும் சிலருடன் 1993-ல் விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்தார்.
போராட்டங்கள் தொடர்ந்தன. கைதுகளும் வழக்குகளும் கூடவே தொடர்ந்தன. குடும்பமே (மனைவி, 2 மகன்கள், ஒரு மகள்) சிறையில் கழித்த மாதங்கள் பல. நாட்டில் ஏதோ போராட்டம் என்றால் முன்னெச்சரிக்கை என சம்மனசு கைது செய்யப்படுவார். மனைவியும் மக்களும் முன் திட்டமிட்டபடி பகுதி மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாவார்கள். போலீசின் அடக்குமுறைகளை கண்டு ஒருபோதும் தோழர் சம்மனசும் அவர் குடும்பமும் துவண்டதில்லை.
‘போலீஸ் அடக்குமுறை’ என பொதுவாக கூறினால், அதன் உண்மையான பொருளை புரிந்து கொள்ள முடியாது. நள்ளிரவுக் கைதுகள்! நக்சலைட்! தீவிரவாதி! பயங்கரவாதி! என்ற பீதியூட்டும் பிரச்சாரங்கள். தோழர்கள் பற்றியும், அமைப்பு பற்றியும் தகவல் கூறினால், வசதியான வாழ்க்கை கிடைக்கும் என கொடுக்கப்பட்ட உத்திரவாதங்கள்! சாம, தான, பேத, தண்டங்கள் என எதிரிகள் விரித்த வலைகள் ஏராளம். எதிலும் சிக்காத உண்மைப் புரட்சியாளர் தோழர் சம்மனசு!
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கடும் இதய நோயால் பாதிக்கப்பட்டு தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்த தோழரை, தரகு முதலாளி ராம்கோ-வுக்கு எதிரான தோழரின் போராட்டங்களை முன்னிட்டு, வழக்கம் போல் நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்தது போலீசு.
“விலகிவிடு! இலட்சங்கள் கிடைக்கும்!” என்ற உபசித்திரவதைகள் தனிக் கதை.
அமைப்பு முன்னெடுத்த எல்லா போராட்டங்களிலும் கலந்து கொண்டு தமது கிராம மக்களையும் அதில் பங்கேற்க வைத்தார். தன் வட்டாரத்தில் இயங்கிய முற்போக்கு அமைப்புகளை ஒருங்கிணைத்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் தோழர் சம்மனசு.
இறுதியாக, அவர் கலந்து கொண்ட போராட்டம் திருமங்கலம் முதல் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வரை சுமார் 147 கி.மீ தூரத்துக்கு NH 744 என்னும் பெயரில் நான்கு வழிச்சாலை அமைக்க 1,863 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்துதான். இருதய நோயால் பாதிக்கப்பட்ட போதும் அங்கு சென்று விவசாயிகளை ஒருங்கிணைத்தார். இந்தப் போர்க் குணம்தான் தோழரிடம் இருந்து நாம் வரித்துக் கொள்ள வேண்டியது.
மக்கள் விரோதிகள், அதிகார வர்க்கத்தினர் போன்றோரை ஒருபோதும் மதித்ததே இல்லை தோழர் சம்மனசு. அவர்களைப் பற்றி பேசும் போது கூட மிக இயல்பாக அவரது புரட்சிகர வர்க்கக் கோபம் வெளிப்படும். அதே நேரம், மக்கள் மற்றும் தோழர்களை அணுகும்போது அவரது வர்க்க பாசம் வெளிப்படும்.
“ஆஸ்பத்திரியில் அது சரி இல்ல, இது சரியில்ல! ஏகப்பட்ட பிரச்சினை! போராட்டம் செய்யணும் தோழர்!” இதய நோய்க்கு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்பி உடன் தோழர் சம்மனசு பேசிய வார்த்தைகள் இவை. ஒரு வாரம் முன்னர் கூட மருத்துவமனையில் தனக்கு உதவி செய்ய வந்த இளம் தோழர்களை அன்புடன் வரவேற்று, செய்ய வேண்டிய புரட்சிகர பணிகள் பற்றி பேசி, உற்சாகமூட்டி உள்ளார்.
என்ன சொல்ல? எந்த இடத்திலும் மக்கள் நலனை, மக்கள் விடுதலையை, புரட்சியை உயர்த்திப் பிடித்தார். எந்த இடத்திலும் ஏகாதிபத்திய பன்னாட்டுக் கம்பெனிகள் நமது நாட்டை சூறையாடுவதை எதிர்த்து நின்ற தோழர் சம்மனசின் புரட்சிகர வர்க்க உணர்வை விளக்க வார்த்தைகள் இல்லை. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிறுத்தி தோழர் பேசியதே இல்லை. அமைப்பும், இலட்சியமும், நியாயமும் மட்டுமே தோழரால் எப்போதும் முன்னிறுத்தப் பட்டவை.

படிக்க :

♦ NH744 – தென்காசி நான்கு வழிச்சாலை : கார்ப்பரேட்டுகளுக்காக விவசாயிகளை அழிக்கும் திட்டம் !

♦ தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது

“வீட்டில் செய்த உணவை வந்த தோழர்களுக்கு பரிமாறிவிட்டு, எங்களை, ‘பள்ளிக்கூடத்தில் (சத்துணவு) சாப்பிடுங்க’ என கூறிவிட்டு ஒரு பீடியில் தன் வயிற்றை நிரப்பிக் கொண்ட நாட்கள் பல” என தன் தந்தையைப் பற்றி பெருமிதத்துடன் நினைவு கூறுகிறார் தோழர் சம்மனசின் மகன்.
“கொள்கையை வித்தவுகள பத்தி பேசாதீங்க தோழர்?, புரட்சிக்கு என்ன தேவையோ அத ஆக வேண்டியதப் பாப்போம்!” என தன் இயல்பான வர்க்க மொழியில் வழிகாட்டியதை என்னவென்று விளக்க இயலும்? “அரசியலைப் பாருங்க தோழர்! எவம் யோக்கியம்னு தெரிஞ்சி போவும்!” என ‘அரசியலை ஆணையில் வைத்தவர்’ தோழர் சம்மனசு.
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள தேவிப்பட்டனம் என்ற சின்னஞ்சிறிய கிராமத்திற்கு மட்டுமே உரியவர் அல்ல அவர். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் உலக உழைக்கும் மக்களுக்கு உரியவர் தோழர் சம்மனசு. உழைக்கும் மக்களின் கலங்கரை விளக்கம் தோழர் சம்மனசு.
தன் வாழ் நாள் எல்லாம் மக்கள் விடுதலைக்காகவும், புரட்சிக்காகவும் உழைத்த ஒரு உண்மை நக்சல்பாரி புரட்சியாளன் மறைந்து விட்டான். அதோ! அந்தப் பெருவெளியில் நகைத்தபடி நமக்கு வழிகாட்டுகின்றான்!
சிவப்பு அஞ்சலிகள்! தோழர் சம்மனசு!
உங்கள் புரட்சிகர உணர்வை நெஞ்சில் ஏந்தி நிற்போம்!
உங்கள் கனவை, உங்கள் வழி நின்று முடித்து வைப்போம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ராஜபாளையம்.

தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது

29.4.2022
தோழர் சம்மனஸ் அவர்களுக்கு மக்கள் அதிகாரம் சிவப்பு அஞ்சலி செலுத்துகிறது
நீண்ட நாட்களாக விவசாயிகள் விடுதலை முன்னணியின் ராஜபாளையம் பகுதியில் பொறுப்பாளராகவும், மக்கள் அதிகாரம் அமைப்பு தொடங்கிய பின் ராஜபாளையம் பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்ட தோழர் சம்மனஸ் 27/04/2022 அன்று மாலை 5 மணி அளவில் மரணம் அடைந்தார்.
தோழர் சம்மனஸ் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் நம்பிக்கையுடனும் நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்டு புரட்சிகர அரசியலில் தன்னையும் தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டவர்.
பல்வேறு காலகட்டங்களில் மார்க்சிய லெனினிய சித்தாந்தத்தில் ஊசலாடிய பேர்வழிகள் அமைப்பை பிளவுபடுத்த எண்ணிய போதெல்லாம் தளராது நின்று விவசாயிகள் விடுதலை முன்னணியையும், அதன்பின் மக்கள் அதிகாரத்தையும் ராஜபாளையம் பகுதியில் கட்டிக்காத்த மூத்த தோழர். அவருடைய இழப்பு மக்கள் அதிகாரம் அமைப்புக்கு பேரிழப்பாகும்.
நம்மை விட்டு பிரிந்த அருமைத் தோழருக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சிவப்பஞ்லி!

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!

25.04.2022
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம்
மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!
பத்திரிகை செய்தி
மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE), 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்திலிருந்து தற்போதைய அதன் பாடத்திட்டத்தில் பல கூறுகளை நீக்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடப்புத்தகத்தில், ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’, ‘மக்கள் போராட்ட இயக்கம்’ மற்றும் ‘ஜனநாயகத்திற்கான சவால்கள்’ ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் சாதி, இனம் மற்றும் பிற வழிகளில் சமூகப் பிளவுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்ததாகும். இந்த அத்தியாயங்களை நீக்கியிருப்பதன் நோக்கம், ஜனநாயகத்தின் வாசனையை கூட நுகராத மாணவர்களை உருவாக்குவதே.
படிக்க :
விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
11-ம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ‘மத்திய இஸ்லாமிய நிலங்கள்’ என்ற அத்தியாயம் நீக்கப்பட்டதன் மூலம் இஸ்லாமியர்களின் வரலாற்று தடத்தை சுவடின்றி அழிப்பதையே நோக்கமாக மோடி அரசு கொண்டிருக்கிறது.
கூடுதலாக, “விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம்” பற்றிய உள்ளடக்கம் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மற்றும் “பனிப்போர் காலம் மற்றும் அணிசேரா இயக்கம்” பற்றிய ஒன்று 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் புகழ்பெற்ற கவிஞர் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் எழுதிய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டு பகுதிகளையும் நீக்கியுள்ளது.
இந்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பாடப்புத்தகத்தின் 10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் ‘மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் – வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு’ என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன. இவை மதவாதமாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் இருப்பதாக பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருந்த ஒன்றிய அரசு, இப்போது அதை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளது. ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் எழுதிய கவிதை என்பது அடக்கு முறை மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரானது. ஒன்றிய அரசின் இந்த கவிதை பகுதி நீக்கத்தை அறிவுத்துறையினர் பலரும் கண்டித்துள்ளனர்.
இவ்வாறு காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு தோதாக மாணவர்களை உருவாக்கும் நோக்கோடு சதி வேலைகளை தீவிரமாக பாஜக அரசு செய்துவருகிறது. ஒருபுறம், சூத்திரர்கள் கல்வி கற்க கூடாது என்று நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் என்ற பெயரில் பல தடைகளை போடும் மத்திய அரசு, மறுபுறம் காவி பாசிசத்திற்கு ஏற்றபடி கல்வியை மாற்றியமைக்கின்றனர். மொத்தத்தில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைக்கு மெல்ல மெல்ல கொண்டுவருகின்றனர்.
ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து கல்வியில் திணிக்கப்படும் இந்த பாசிச நடவடிக்கையை தடுத்து நிறுத்த போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

குற்றவாளிகளை உருவாக்கும் அரசே, குற்றங்களைத் தடுத்துவிடுமா?

ண்மையில், விருதுநகரில் பட்டிலியன வகுப்பைச் சார்ந்த இளம்பெண்ணை, எட்டுபேர் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதேபோல வேலூரில் இரவு நேரத்தில் தன் நண்பருடன் ஆட்டோவில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரை, ஓட்டுநர் உட்பட ஐந்துபேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், குற்றவாளிகளைப் பிடித்து கடுமையான தண்டனை வழக்கு வேண்டும், ‘தூக்கில் போட வேண்டும்’, கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று பலரும் பேசுகிறோம்.
இந்த பொதுமனசாட்சியை அரசும் உணர்ந்துதான் இருக்கிறது. வேலூரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, அம்மாவட்ட போலீசுத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இரவு 12 மணிக்கு மேல் இயங்கும் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் தங்களின் பெயர், தொலைபேசி எண் முதலியவற்றை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுமென்றும்; ஓட்டுநர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆட்டோவின் பின்புறம் பயணிகளுக்குத் தெரியும்படி ஓட்டவேண்டுமென்றும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.
படிக்க :
♦ பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?
♦ நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி
ஏற்கெனவே, தெருமுழுக்க கண்காணிப்பு கேமராக்கள், காவலன் செயலி, இரவுநேர ரோந்து என பல திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் குற்றங்களை குறைக்க முடியவில்லையே ஏன்? மாறாக குற்றங்கள் பெருகியிருக்கிறது. இந்த நடவடிக்கைகளின் கருப்பொருளே ‘குற்றவாளிகளை எப்படி பிடிக்கலாம்’ என்றுதான் உள்ளதே தவிர போலீசோ, அரசு நிர்வாகமோ ‘குற்றங்களைத் தடுப்பது’ பற்றிப் பேசுவதில்லை.
விருதுநகர் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எட்டு பேரில், நான்கு பேர் பள்ளிச் சிறுவர்கள் என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாக உள்ளது. வேலூர் சம்பவத்திலோ 17 வயதான சிறுவன் ஒருவனையும் சேர்த்து, குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருமே 22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பள்ளி செல்லும் வயதில், இவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளாக மாற்றியது யார் அல்லது எது என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. மொத்த சமூகமே சீரழிக்கப்பட்டுவருகிறது, குற்றமயமாகிவருகிறது என்று சொல்வதற்கான சரியான எடுத்துக்காட்டுகள்தான் இவர்கள்.
வேலூரில் பெண் மருத்துவரை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்தார்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதானே குற்றங்களின் ஊற்றுமூலம். பெரும்பகுதி குற்றங்களுக்கு போதைக் கலாச்சாரமே காரணமாகிறது. கஞ்சா, டாஸ்மாக், ஆபாச இணையதளம் போன்றவை ஏவிவிடும் வக்கிரம்தானே இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு காரணம். அதுகுறித்து யாரும் பேசுவதாக இல்லை.
படிக்க :
♦ PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !
♦ பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !
ஏனெனில் இதையெல்லாம் அவர்களால் ஒழிக்க முடியாது. உள்ளூர் போலீசுக்கு மாமுல் கொடுக்காமல் ஒருவன் கஞ்சா தொழில் செய்துவிட முடியுமா, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை அரசே வைத்துள்ளதே மூடிவிடுவார்களா, ஆபாச இணையதளங்களை தடைசெய்துவிடுவார்களா – ஆக குற்றங்களைத் தோற்றுவிப்பதே இந்த அரசுக் கட்டமைப்புதான்.
அதையே சாக்காக வைத்து குற்றங்களை ஒழிக்கப் போவதாக மக்கள்மீது ஒடுக்குமுறை செய்துவருகிறது. சமூக குற்றங்களைத் தடுக்க மக்களே தங்களை அமைப்பாகிக் கொண்டு நடவடிக்கையில் இறங்குவதுதான் தீர்வு!

இளவரசி

மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !

மே 1, 2022 : தமிழகம் தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டங்கள் !
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
 அன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!
மே நாள் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். காலங்காலமாக பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டு வருகின்ற வேலையின்மை, வறுமை, பசி – பட்டினி, அடக்கு முறைகள் ஆகியவற்றுக்கு மூலகாரணமான முதலாளித்துவத்தை எதிர்த்து, அமெரிக்கத் தொழிலாளர்கள் மூட்டிய போராட்டத் தீ இன்னும் அணையவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த சுதந்திரச் சந்தை முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்திய முதலாளித்துவமாக மாறி, நூற்றாண்டுக்கும் மேலாக உலகையே தனது சுரண்டலின் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஏகாதிபத்தியமானது உலகம் முழுவதும் நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்வது, தமது சந்தைக்காக நாடு பிடிக்கும் போட்டிகளில் இறங்குவது, இதன் பொருட்டு உலகப்போர்கள் துவங்கி ஆக்கிரமிப்புப் போர்கள், படைக் குவிப்புகள், இனப்படுகொலைகளை நடத்துவது, மனித வளத்தையும் இயற்கை வளங்களையும் ஒட்டச் சுரண்டுவது என எண்ணற்ற மனிதகுல விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
முதலாளித்துவம் என்கிற வரலாற்று எதிரியை வீழ்த்தாமல் விடிவே இல்லை என்கிற நிலைமையில்தான் சர்வதேசப் பாட்டளி வர்க்கம் 2022-ம் ஆண்டின் மே நாளைச் சந்திக்கிறது. ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கப் போட்டியும், போர்களும் ஒருபுறம். இந்த மேலாதிக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 30 ஆண்டுகளில் திணிக்கப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கைகளால் பல நாடுகள் திவாலாகும் அவலம் மறுபுறம். இவற்றால் நோய்த்தொற்று, உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, வேலைப் பறிப்பு, உழைப்புச் சுரண்டல், இனம்-மொழி-சாதி-நிறம்-மதம்-பிராந்தியம் ஆகியவற்றின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகள், போர்களால் பல இலட்சம் மக்கள் மடிவதும், கோடிக்கணக்கில் அகதிகளாவதுமான துயர்மிகு சூழலில் சிக்கி சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் திணறி வருகிறது. இதுகுறித்த பார்வை, புரிதல், தீர்வு ஆகியவற்றைப் பாட்டாளி வர்க்கம் கற்றுத் தெளிந்தால்தான் தன்னுடைய விடுதலையைச் சாதிக்க முடியும்.
படிக்க :
♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மை எதிரி சர்வதேச – ஏகாதிபத்திய நிதி மூலதனமே. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ மேலாதிக்கம் தகர்வதும், அமெரிக்க – ரஷ்ய, அமெரிக்க – சீன போட்டிகள் முன்னிலைக்கு வருவதுமான புதிய நெருக்கடியை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க – ரஷ்ய ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டியே உக்ரைன் மீதான போராக வெளிப்பட்டுள்ளது. அதைப்போலவே அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டியின் வெளிப்பாடாகவே ஆப்கானிலும் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடியும், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியும் வெடித்துக் கிளம்பியுள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கும் போர்களால்தான் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், அந்தப் போர்களே ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டிகளால்தான் உருவாகின்றன. இதன் விளைவாக உலகம் பல்வேறு அணிகளாகப் பிரிவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டு பாசிச – நாஜி குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும், அரசை ஆட்டுவிப்பதிலும் முக்கியமான பங்காற்றுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவிலும் பார்ப்பனப் பாசிசம் தனது இலட்சியமான அகண்ட பாரதத்தை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த பாசிசக் குழுக்கள் ஏகாதிபத்திய நிதி மூலதனமும், உள்நாட்டுத் தரகுக் கார்ப்பரேட்டுகளும் சொந்த நாட்டு மக்களைக் கொள்ளையிட்டுச் சுரண்டுவதற்கு தீவிரமாக சேவை செய்து வருகின்றனர். இந்தியாவில் அதானி, அம்பானி வகையறாக்களின் வளர்ச்சியே இதற்கு உதாரணம்.
ஒருபக்கத்தில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை அதல பாதாளத்தை நோக்கிக் கிடுகிடுவெனச் சரிந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 116 நாடுகளில் 101-வது இடத்திலும், சர்வதேச மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் 146 நாடுகளில் 139-வது இடத்திலும் இந்தியா இருக்கிறது. குறிப்பாக, மோடி ஆட்சியில் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது
கொரோனா முடக்கக் காலத்தில் சுமார் 40% தொழிலாளர்கள் வேலையை இழந்துவிட்டனர். அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பது சவாலாகவே இருக்கிறது. நாடெங்கும் பட்டினியும், வறுமையும் கோரத்தாண்டவமாடும் நிலையிலும் கூட, 100 நாள் வேலைத்திட்டத்தில் வெறும் நான்கு ரூபாய் மட்டுமே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கத்தில், கடந்த ஓராண்டில்தான் அதானியும் அம்பானியும் பிரம்மாண்டமாக சொத்துக்களைக் குவித்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முறையே 10, 11-வது இடங்களைப் பிடித்திருக்கிறனர். மோடியின் செல்லப்பிள்ளை அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும், ஒரு நாளைக்கு ஆயிரம் கோடிகள் உயர்ந்து ரூ.3,67,500 கோடிகள் அதிகரித்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் குடும்பமோ நாள் ஒன்றுக்கு ரூ.163 கோடிகளைக் குவிக்கிறது. நாடும் நாட்டு மக்களும் நாசமாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் மட்டும் எப்படி வாரிக் குவிக்கிறார்கள்? மோடி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் பல இலட்சம் கோடிகள் வரிச்சலுகைகள், மானியங்கள், வாராக்கடன் தள்ளுபடிகளே இவற்றுக்கு மூல ஆதாரங்களாக இருக்கின்றன. இந்த இலட்சணத்தில், மக்களுக்கு மானியங்கள் கொடுப்பதால் இலங்கையைப் போல இந்தியாவும் திவாலாகிவிடும் என எச்சரிக்கிறது மோடியின் உயர்மட்ட ஆலோசனைக்குழு.
பெட்ரோல், டீசல், எரிவாயு, அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளும், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்து, உழைக்கும் மக்கள் வாழவே முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, ஈவிரக்கமற்ற வகையில் ஜி.எஸ்.டி வரி தாக்குதலை நடத்துகிறது மோடி – நிர்மலா கும்பல். மேலும் குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி ஆகிய சேவைகளைத் தனியார்மயமாக்கி, கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடுவதைத் தீவிரமாக்குகிறது. உழைப்புக்கேற்ற ஊதியமும், விளைபொருளுக்கேற்ற விலையும் இல்லாமல் தொழிலாளர்களும் விவசாயிகளும் அல்லல்படும் நிலையில், சிறு-குறுந்தொழில்களையும், சில்லரை வணிகத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு பலியிட்டுக் கொண்டிருக்கிறது.
நட்டக்கணக்கு காட்டி பொதுத்துறைகளை விற்பனை செய்த காலம் மலையேறி விட்டது. அரசின் செலவுகளுக்காக பொதுத்துறைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கூச்சநாச்சமின்றி விற்றுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்த அயோக்கியத்தனத்துக்கு “தேசிய பணமாக்கல் திட்டம்” என பெயரிட்டு, நாட்டைக் கூறுபோட்டுக் கூவி விற்கும் சேல்ஸ்மேன்களாக மாறியிருக்கின்றனர் பிரதமரும் அமைச்சரவையும்.
இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை மூடி மறைப்பதற்காகவும், அகண்ட பாரதம் என்னும் தமது கனவை நிறைவேற்றவும் நாடெங்கும் காவிவெறியைக் கிளப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பார்ப்பனப் பாசிசக் கும்பல். அதனால்தான், ஒரே நாடு – ஒரே சட்டம் – ஒரே பண்பாடு – ஒரே மதம் என்கிற இந்து இராஷ்டிர – பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறது. நீதித்துறையும், சட்டங்களும் இதற்கேற்ப தகவமைத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தட்டிக் கேட்பவர்கள், அம்பலப்படுத்துபவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தி, அடக்கிக் கொண்டிருக்கிறது மோடி – அமித்ஷா கும்பல்.
படிக்க :
மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !
மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !
மொத்தத்தில் உக்ரைன் மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டியும், இலங்கையின் திவால் நிலையும், பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடியும், இந்தியாவின் பாசிச அபாயச் சூழலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. இந்த நேர்க்கோடு சர்வதேச நிதி மூலதனத்தால் வரையப்பட்ட கோடு. அரைகுறை இறையாண்மை பறிப்பு, உழைப்புச் சுரண்டல், பசி-பட்டினி, இனவெறி-மதவெறியூட்டல்கள், அடக்குமுறைகள், இயற்கை வளங்கள் சூறையாடல், சுற்றுச்சூழல் அழிப்பு, ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்கப் போர்கள். இவை அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளித்துவம்தான் முன்நின்று நடத்துகிறது. அந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம். உலகையே அச்சுறுத்துகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்பவும், இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுக்க, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்கவும் மே நாளில் சூளுரைப்போம்!
மே நாள் சூளுரை
♠ அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
♣ அமெரிக்க – ரசிய பனிப்போரையும், அமெரிக்க – சீன ஆதிக்கப் போட்டியையும் முறியடிப்போம்!
♣ ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போரை ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மேலாதிக்கத்துக்கு எதிரான புரட்சிகர உள்நாட்டுப் போராக வளர்தெடுத்து, தேச விடுதலையைச் சாதிக்கப் போராடுவோம்!
♣ இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 9791653200, 9444836642, 8056386294, 9962366321

நாராயண குருவும் சங்கராச்சாரியும் | ராம் புனியானி

வ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். ஒன்றிய அரசாங்கமே மாநிலங்களின் அலங்கார வண்டிகளைத் தெரிவு செய்யும். இந்த 2022-ம் ஆண்டு மேற்குவங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் அலங்கார வண்டிகளை புறக்கணித்து விட்டது. 12 அலங்கார வண்டிகள் மட்டுமே இம்முறை அனுமதிக்கப்பட்டது. கேரள அலங்கார வண்டி வழக்கில், வேறு ஒரு அம்சமும் வெளிப்பட்டது. அலங்கார வண்டிகள் தேர்வுக்குப் பொறுப்பான ஜூரி (பாதுகாப்பு அமைச்சர்) கேரள அரசு நாராயண குரு பற்றிய அலங்கார வண்டிக்குப் பதில் அதே கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டியை தயாரித்துக் கொண்டு வந்தால் அனுமதிக்கிறோம் என ஆலோசனையும் வழங்கினார். ஆதி சங்கரர் இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்பதால் அந்த அலங்கார வண்டியை அணிவகுப்பிற்குக் கொண்டு வாருங்கள் என்று கருத்தும் தெரிவித்தார். 2017லிலிருந்து கேரள அலங்கார வண்டிக்கான அனுமதி மறுப்பு இது மூன்றாவது முறையாகும்.
நாராயண குருவுக்கு பதில் ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டி என்று பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ஆலோசனையின் பின்புலத்தில் மோடி அரசாங்கத்தின் ஆழ்ந்த திட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் குறிப்பாக இந்து ராஷ்ட்ரம் நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த மிக உயர்வான இந்த இருவருமே நேரெதிரான, முரண்பட்ட சமூகக் கருத்துக்களைக் கொண்டவர்கள். நாராயண குரு ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள்’ கொள்கைக்காக நின்றவர். சங்கராச்சாரியோ பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட பார்ப்பனிய மேலாதிக்கக் கொள்கைகளைக் கொண்டவர்.
ஆதி சங்கரர் 8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அக்கால கட்டத்தில் புத்த மதக் கொள்கைகள் சமூகத்தில் மேலோங்கியிருந்தன. சாதி சமத்துவக் கொள்கையையும், ‘இந்த உலகம் உண்மையானது’ எனவும் போதித்து, மக்களின் துயர் துடைக்கப் போராடியது. ஆதி சங்கரரோ இதற்கு நேரெதிராக ‘உலகே மாயம்’ எனவும் பிரம்மம் மட்டுமே உண்மை எனவும் வாதிட்டார். புத்த மதக் கொள்கைகளை கடுமையாக மறுத்து சவால் விட்டதோடு, அதை இழிவு படுத்தினார். புத்த மதத்தை, புத்த தத்துவங்களை இந்தியாவிலிருந்தே துடைத்தழித்ததில் இவரது கருத்துக்களுக்கும், இதை ஆதரித்தவர்களுக்கும் முக்கிய பங்குண்டு.
படிக்க :
♦ குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
♦ ‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
இவர் துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத பூரி மற்றும் சிரிங்கேரி என இந்தியாவின் நான்கு திசைகளிலும் திக்குக்கு ஒன்று என நான்கு மடங்களை நிறுவினார். (இதிலே காஞ்சி சங்கர மடம் இல்லையே என்பவர்களுக்கு! மற்ற நான்கு மடாதிபதிகளும் காஞ்சி மடத்தை சங்கரர் நிறுவவில்லை எனவும், அது திருட்டு மடம் எனவும் சொல்கிறார்கள்! சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த காஞ்சி மடத்துக்கு கும்பகோண மடம் எனத் திருநாமம்! இந்த மடங்கள் பற்றியே தனியே எழுத வேண்டும்!. புத்த மடாலயங்களைப் பின்பற்றி அதன் வடிவில் நிறுவப்பட்டவை. ஆனால் தத்துவ ரீதியாக நேரெதிரான கொள்கை கொண்டது. புத்த தத்துவம் பொருள் முதல்வாத அடிப்படையிலானது. ஆதி சங்கரரின் தத்துவமோ கருத்து முதல்வாத அடிப்படையிலானது. புத்த தத்துவம் சமத்துவத்திற்கானது. ஆதி சங்கரரின் தத்துவமோ பிறப்பிலேயே உயர்வு தாழ்வையும், சாதி அடுக்கையும் ஆணாதிக்கத்தையும் கொண்ட பார்ப்பன கொடுங்கோண்மையைக் கொண்டது.
நாராயண குரு ஆழ்ந்த மனிதாபிமானம் மிக்கவர். அவரது வளர்ச்சிப் போக்கில் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். யோகாவைக் கடைப்பிடித்தார். 1888-ல் தத்துவத்தைத் தேடிய பயணத்தில், அருவிப்புரம் வந்து, அங்கு தியானத்தில் ஆழ்ந்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில், ஆற்றிலிருந்து ஒரு பாறையை எடுத்து, அதை புனிதப்படுத்தி, அதை சிவனது சிலை என்றார். இந்த நடவடிக்கை பிற்பாடு அருவிப்புரம் பிரதிஷ்டை என அறியப்படுகிறது. அக்கால கட்டத்தில் இது மிகப்பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ‘உயர்’ சாதி பார்ப்பனர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.
பர்ப்பனர்கள் நாராயண குருவுக்கு சிலையை புனிதப்படுத்தும் தகுதியோ, உரிமையோ இல்லை எனக் கூறி ஏற்க மறுத்தனர். இதற்கு பதிலடியாக “இது பார்ப்பன சிவா இல்லை, ஈழவ சிவா” எனக் கூறினார் குரு. இந்த மேற்கோள் பிற்பாடு மிக பிரபலமானது. சாதியை எதிர்ப்பதற்குப் பயன்பட்டது. நாராயண குரு சாதிய அமைப்பை ஒழிக்க தனது வாழ்வை அர்ப்பணித்தார். இவரது நடவடிக்கைகள் ஆழப் பதிந்து போன சாதீய அமைப்பை ஒழிப்பதற்கான நடைமுறைக்கானதாகும்.
1904-ம் ஆண்டில் வர்காலா அருகில் உள்ள சிவகிரி என்ற இடத்திற்கு தனது இருப்பிடத்தை நாராயண குரு மாற்றிக் கொண்டார். இந்த இடத்தில் சமுதாயத்தில் ஆகக் கடைக்கோடி மட்டத்தில் வசிப்போரின் குழந்தைகள் இலவசமாகப் பயில பள்ளி ஒன்றை நிறுவினார். இது சாதிய ஒடுக்குமுறை நிலவும் பின்புலத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும். மகாராட்டிரத்தில் தலித் குழந்தைகள் பயில பள்ளிகளைத் தொடங்கிய ஜோதிராவ் பூலேயின் நடவடிக்கைகளுக்கு இணையானது. சாதிய முறைக்கு எதிரான போராட்டத்தில் நவீன கல்வியானது மிகப்பெரும் விடுதலைக்கான சக்தியாகும். அன்றைக்கு ஆதிக்க சாதியினர் மட்டுமே கல்வி கற்கும் சிறப்புரிமை பெற்றிருந்த நிலைமையில், இதற்கு நேரெதிராக எல்லா சாதியினரும் இவரது பள்ளியில் படிக்க வரவேற்கப்பட்டனர். 7 ஆண்டுகள் கடந்து 1911-ல் நாராயண குரு அங்கு ஒரு கோயில் கட்டினார். பின் 1912-ல் மடம் ஒன்றை கட்டினார். இவை அனைத்து  சாதியினருக்கும் திறந்து விடப்பட்டது. பிறகு திரிச்சூர், கன்னூர், அன்சுதெங்கு, தலசேரி, கோழிக்கோடு மற்றும் மங்களூரு போன்ற இடங்களிலும் கோயில்கள் கட்டினார். இது அம்பேத்கார் பிந்தைய காலத்தில் முன்னெடுத்த கலாரம் கோயில் நுழைவுப் போராட்டத்தை நினைவு படுத்துகிறது. ஆதிக்க சாதியினர் இக்கோயில் நுழைவுப் போராட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
நாராயண குருவின் நடவடிக்கைகள் பார்ப்பனியக் கொடுங்கோண்மைக்கு சவாலாக இருந்தது. அவர் சாதியத் தடைகளை உடைத்தெறிய முயன்றார். இவை நிலவும் சாதிய முறைகளுக்கு எதிரான முக்கிய இயக்கங்கள் ஆகும். தற்போது அதிகாரத்தில் உள்ள ஒன்றிய அரசாங்கமானது கடந்த காலத்தை, அப்போது நிலவிய சாதீய படிநிலையை, பார்ப்பனிய கொடுங்கோண்மையை புகழ்ந்து விதந்தோதுகிறது. பார்ப்பன மதத்தை இந்து மதம் என உயர்த்திப் பிடிக்கிறது. இதை வேத மதம் அல்லது சனாதன (எல்லா காலத்திற்குமானது, காலம் அறிய முடியாதது) தர்மம் எனப் புகழ்கிறது. ஆதி சங்கரர் இந்த உயர்ந்த ஆன்மீக பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற, மிகப் பெரும் ஆன்மீகப் பெரியவர் என புகழ்கிறது.
இந்திய வரலாறு என்பது புத்தர் முன்வைத்த சமத்துவத்துக்கும், வேத பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடித்த சாதீய அடுக்கு முறைக்கும் அல்லது அவர்கள் கூறும் சனாதன தர்மம் என்பதற்கும் இடையிலான இடைவிடாத பகைமையும் போராட்டமுமே என அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். தற்போது வலதுசாரிகள் ஆட்சியில் இருப்பதால் ஆதி சங்கரரை உயர்த்திப் பிடிப்பதும், அதே சமயம் பொருள்முதல்வாத பாரம்பரியத்தைக் கொண்ட புத்தா, சார்வாகா போன்றவர்களைப் புறக்கணிப்பதும் எனச் செய்கின்றனர். இதில் சுவாரசியமானது என்னவென்றால் அரசியல் தளத்தில் நாராயண குருவை பாஜக அங்கீகரிக்கிறது. ஆனால் இது முற்றிலும் ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும்தான், ஒரு அடையாளத்துக்கு மட்டும்தான். ஆனால், உண்மையான அங்கீகாரம் என வரும்போது நாராயண குருவை முற்றாகப் புறக்கணிக்கின்றனர். தற்போதைய நாராயண குருவைக் கொண்ட கேரள அலங்கார வண்டியைப் புறக்கணித்தது, இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஃப்ராண்டியர் வார இதழில் வந்த கட்டுரை  

தமிழாக்கம் : நாகராசு

15 workers massacred in Nagaland: ‘Indian unity’ established through military repression!

In Nagaland’s Mon district, on December 4, six coal-mine workers who were toiling hard and returning home after a six-day workweek were shot dead by the security forces from Assam Rifles. They indiscriminately opened fire on the civilians who intercepted the military vehicle after learning about the massacre. This killing of 15 civilians, in total, shocked the people of the country.
There were discussions and criticisms from various quarters about the brutal murder of the country’s people by its own military. In account of this situation, the Chief of Defence Staff Bipin Rawat died in Coonoor helicopter crash on December 8. All the media and television debates repeatedly broadcasted General Rawat’s death and drowned people with ‘patriotism’.
In this ‘patriotic’ singing of the mainstream media, the killing of innocent Nagaland workers and the struggle of the people of Nagaland for justice was intentionally blocked out.
Background of the heartrending massacre
On December 4 at 4:30 pm, villagers who heard the terrible gunfire, at first, thought that it was a armed clash between the security forces and the rebels. They did not know that the workers who were returning home in the pick-up van were being shot by the army. When the workers, who left the mine at 3:30 pm, did not return home until 8:00 pm, impatient villagers went looking for them. But only the empty vehicle in which the workers left was standing in that area.
Read :
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
♦ National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder
The vehicle was covered with blood and was bullet holed. Terrified people intercepted and questioned three passing military trucks. The army soldiers who were sitting on the truck over the tarpaulin, at first, said, ‘We don’t know anything about the workers.’ But when the tarpaulin was checked, the villagers were shocked to see the corpses of six half-dressed youths underneath. And the soldiers were sitting over those corpses.
The soldiers tried to disguise the killed civilians as rebels by altering their outfits and placed weapons near them. By seeing this, an altercation arose between the angered crowd and the soldiers. Enraged by this, the murderous army began indiscriminately shooting down the assembled villagers. Seven others were killed. The next day, two more people were killed in a protest against this massacre in front of the headquarters of the Army. The Indian Army has drowned the lives of 15 people in a pool of blood for no reason.
Issuing a statement in the Lok Sabha about the massacre, Amit Shah said, “The government of India expresses deep regret over the unfortunate incident. The vehicle was signalled to stop but it tried to flee. On suspicion of carrying extremists, it was fired upon.” He further added reasons for the next two firings following this massacre “Security forces had to resort to firing for self-defence and to disperse crowd”.
But a man who escaped the shooting said, “The army did not signal to stop the vehicle. When they saw us, they started shooting,” revealing the truth. Similarly, a BJP member who went to the spot said, “We were shot only because we saw the workers in the military vehicle”. These statements exposes the lies of Amit Shah.
It is not new for the military to shoot innocent civilians for no reason. A similar massacre took place in Nagaland on March 5, 1995. The Rashtriya Rifles army force was crossing the Kohima region of Nagaland when one of the tyres of a truck carrying soldiers exploded. Thinking of it as a bomb, the army indiscriminately attacked the people there. Seven people were massacred in that attack; Thirty-six people were injured.
We can’t even imagine such incidents. These are the conditions in which the people of the north-eastern states live. All these states have long been ruled under gun-point military dictatorship.
Armed Forces Special Powers Act (AFSPA) : Nationalities ruled by military repression
North East India covers – Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Tripura and Sikkim – eight states. Before India’s socalled ‘independence’, all the seven states except Sikkim were identified as a single state (Assam). That is why these states are called “seven sisters”. Different ethnic groups are living in these seven states. Nehru and Sardar Vallabhbhai Patel, known as the ‘Iron Man’, annexed these territories which functioned as separate nations with separate constitutions, flags and system of governments, to India by threatening with military forces.
The people of the north-eastern states never accepted this annexation to India through such repression. Protests began to erupt. They also took up arms against the Indian army. In 1977, an armed struggle was launched under the leadership of the United Liberation Front of Asom (ULFA) to liberate Asaam. In the 1980s, bodo tribes launched an armed struggle demanding a separate state. The Naga National Council (NNC), which includes representatives from Nagaland, also launched the struggle. Various organisations like National Liberation Front of Tripura (NLFT), All Tripura Tiger Force (ATTF) rallied “We shall establish an independent Tripura”. In 1961, the Mizo National Front (MNF) was formed to establish an independent Mizoram through armed struggle.
All these armed struggles shattered the ‘Indian national unity’ created through repression. In 1958, the Government of India enacted the Armed Forces Special Powers Act (AFSPA) to suppress the people and organisations who were fighting for their rights and against their forcible annexation to India. Various armed groups had emerged in the north-eastern states against it. This draconian law was first enacted in Nagaland.
During the Second World War, British imperialism granted special powers to the armed forces on August 15, 1942, to suppress the Indian independence movement through military actions. In 1958, ‘Independent India’ continued this draconian British law by giving legal recognition to this special authority of the armed forces in the Parliament. They were first introduced in Assam and Manipur. Later in 1972, it was extended to Meghalaya, Nagaland, Tripura, Mizoram and Arunachal Pradesh. It was enforced in Punjab in 1983 and in Jammu and Kashmir from 1990.
Under Section 3 of the AFSPA, if a part is declared as ‘disturbed area’, armed forces must be used to assist the civil rule.
Section 4 of the AFSPA gives sweeping powers to the armed forces. It allows them to open fire, even causing to death. It gives them powers to arrest individuals without warrants, on the basis of “reasonable suspicion”, and also search premises without warrants.
Section 6 of the Act further provides blanket impunity to security personnel involved in such operations: There can be no prosecution or legal proceedings against them without the prior approval of the Centre.

The Indian government is repressing various nationalities in the Northeast and ruling through military with the help of AFSPA.
63-year-long struggle against AFSPA
The massacres and the people’s struggle against them are not new to the north-eastern states, including Nagaland. These states have a long tradition of struggle that has continued for nearly 63 years. Some of these struggles were talking point all over the world.
In 2000, 10 people who were waiting at a bus stop in the town of Malom, Manipur were gunned down by the Armed Forces. Irom Chanu Sharmila (who was only 28 years old), one of the staunchest protestors against AFSPA, went on a hunger strike for nearly 16 years following this incident.
Thangjam Manorama, a woman arrested by Assam Rifles in July 2004, was found dead near her house the next morning. She had been sexually assaulted, shot in her private parts and was brutally killed. On July 15, 2004, “Mothers of Manipur” protested by stripping off their clothes in front of the headquarters of the 17th Assam Rifles and shouted “Indian army rape us!” “Drink our blood! Eat our flesh! Maybe this way you can spare our daughters!”. Action was taken only against the protestors and not against the Assam Rifles soldiers. These two struggles made the world look back.
Protests are still going on. The demand of all those who are now fighting the Oting massacre is the repeal of the AFSPA Act. On December 20, the Nagaland Legislature passed a resolution for the third time to revoke the AFSPA.
Addressing the annual session of the Indian Chamber of Commerce (ICC) through virtual mode, on November 25, Amit Shah said, “I appeal to ICC and its members to look at the northeast from a different perspective, understand the changes and invest”. The fraud in the exposed confidential Nagaland Peace Accord (Framework Agreement) showed us how Modi maintained peace in the north-eastern states.
Read :
♦ Uttar Pradesh : No ‘viable alternative’ within Hindurashtra !
♦ New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
The Modi-Amit Shah clique has been brutally suppressing protests by resorting to foxy work such as inviting them for talks in the event of protests while on the other hand arresting leaders of protesting organisations, creating clashes among different tribals and creating ethnic disparities.
The ruling class media is blacking out the struggle of the people of the north-eastern states, including Nagaland. It is the duty of revolutionary and democratic movements to expose this to the people of other states and fight together with them for justice. The military dictatorship that is trampling the voices of the north-eastern states is gaining a foothold in states like Punjab and West Bengal in the name of expansion of the jurisdiction of the Border Security Force (BSF). The saffron clique is already planning to turn Tamil Nadu into a military base. Moreover, there is a possibility to deploy military forces at any time by posing the so called “Chinese danger through Sri Lanka”.
Therefore, the working people of other nationalities, who are also being repressed by the Indian Union, should voice for the Naga people not only to recognise their right for justice, but also to fight for their right to self-determination.

Mathi

திரிபுரா காவிமயமான வரலாறு !

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 4
பாகம் 3

பிப்லவ் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் திரிபுராவை காவிமயமாக்குவதில் மூர்க்கமாக செயல்பட்டுவருகிறது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். தங்களுடைய முயற்சிகளில் பெரிய அளவில் வெற்றியையும் குவித்துவருகிறது. திரிபுரா இந்து மதவெறியர்களின் கூடாரமாகி வருகிறது என்பதற்கு 2018-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே ஆசான் லெனினின் சிலையை பெயர்த்தெறிந்தது தொடங்கி, சமீபத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டது; அக்கட்சியின் தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சென்ற அக்டோபர் மாதக் கடைசியில் முஸ்லீம்களின் குடியிருப்புகள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் மேல் காவி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் போன்றவற்றை சான்றுகளாகச் சொல்லலாம்.

திரிபுராவின் மக்கள் தொகையில் வெறும் 9 சதவிகிதத்தினரே முஸ்லீம்கள். மற்றவர்கள் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரும் வங்காளப் பிரிவினையின்போது குடியேறிய வங்காள இந்துக்களுமாவர். கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது, முஸ்லீம் மதவெறியர்களால் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதை தமது மதவெறி நிகழச்சி நிரலுக்கு கிடைத்த தீனியாக பயன்படுத்திக் கொண்ட விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜன் மார்ச் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த காவி குண்டர்கள் “முகமது, உன் தந்தை யார்?” “ஹரே ராம் ஹரே கிருஷ்ணா” என்று கொலைவெறியுடன் கத்திக் கொண்டே பேரணியாக சென்று, வட திரிபுராவின் பனிசாகர் பகுதியிலுள்ள ராவ் பஸார், ஜலிபாஷா, சம்டிலா போன்ற இடங்களில் உள்ள மசூதிகளைத் தீவைத்து எரித்ததோடு, கடைகளையும் சூறையாடினார்கள். இக்கொலைவெறித் தாக்குதலில் மொத்தம் 16 மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன.

படிக்க :

♦ சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

♦ எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்

மற்ற வட மாநிலங்களைப் போலல்லாமல், திரிபுராவில் இதுபோன்ற மதவெறிக் கலவரங்கள் நடப்பது இதுதான் முதன்முறையாகும். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பின்போது வட இந்தியா முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் மிகப்பெரிய அளவில் நடந்தபோது திரிபுராவில் அத்தகைய தாக்கம் எதுவும் இல்லை. முஸ்லீம்களும் வங்க தேச இந்துக்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்துவந்தனர். அந்த ஒற்றுமை தற்போது உடைக்கப்பட்டுவிட்டது என்பதற்கான அடையாளமாகத்தான் திரிபுராவின் மதக்கலவரத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பழங்குடிகளை ‘இந்து’க்களாக்குதல்..

1956-ஆம் ஆண்டிலிருந்து திரிபுரா காவிமயமான வரலாறு தொடங்குகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் (சுமார் 60 சதவிகிதம்) வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த இந்துக்களாவர். ஆகவே முஸ்லீம்களை எதிரியாக காட்டி அவர்களை மதவெறியூட்டுவது ஒப்பீட்டளவில் காவி கும்பலுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் 31 சதவிகிதமுள்ள பூர்வகுடி மக்களை இந்துத்துவமயப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் அதிகம். “ஒவ்வொரு பழங்குடியும் இந்து அல்லது சனாதன தர்மத்தின் ஒரு அங்கம்” என்று அவர்களிடையே பிரச்சாரம் செய்தன சங்கபரிவார அமைப்புகள்.

ஓராசிரியர் பள்ளிகள், பால்வாடிகள், சேவா பாரதி, வித்யா பாரதி விடுதிகள், கோயில்கள், பழங்குடியின சமூக குழுக்கள், விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜன சங்க சந்தன், மருத்துவ முகாம்கள் – என பழங்குடிகளை காவிமயமாக்க பல வழிகளில் சுற்றி வளைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பு. அதில், ஷாகாக்களுக்கு அடுத்தபடியான முக்கியத்துவமுடையாதாக இருப்பது ஓராசிரியர் பள்ளிகள்தான்.

000

திரிபுராவில் பெரும்பாலான ஓராசிரியர் பள்ளிகள் பழங்குடியின மக்கள் வாழும் தொலைதூர கிராமங்களில் நடைபெறுகின்றன. இங்கு ‘புனிதக் கல்வி’ என்ற பெயரில் இந்து வழிபாடு, இந்திய பெருமைகள் மற்றும் ‘தேசிய’ உணர்வை வளர்ப்பது என சிறுவயதிலிருந்து அம்மாணவர்களின் சிந்தனை காவிமயமாக்கப்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கு நன்கு பலனளித்தது. அரசுப் பள்ளிக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு தங்கள் காவிமய நோக்கத்திற்கு சேவை செய்வதற்காகவும்தான் இவ்வாறான முறைசாராக் கல்வியை புதிய கல்விக் கொள்கை 2019-இல் சேர்த்தது மோடி அரசு. அதைத்தான் தமிழகத்தில் ‘சமூக நீதி’ தி.மு.க. அரசு “இல்லம் தேடி கல்வி” என்ற மாற்றுப் பெயரில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஓராசியர் பள்ளிகளில் ஆசிரியராக வருபவர்களுக்கு முதலில் 5 நாட்கள் பயிற்சி பட்டறை, 3 மாதம் கற்பித்தல் பயிற்சி, கடைசியாக 10 நாட்கள் பயிற்சி பட்டறை என மூன்று கட்டங்களாக பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் சங்கப் பரிவாரத்தின் கண்களாக, காதுகளாக செயல்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை உருவாக்குவதற்கான காவித் தொழிற்சாலைகளே இப்பள்ளிகள். திரிபுராவில் மட்டும் 1,650 ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன என்பதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இம்மக்களிடம் எப்படி வேரூன்றியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஓராசிரியர் பள்ளி என்ற மாலை நேரப் பள்ளிகள் மட்டுமல்லாது “வித்யா பாரதி” என்ற பெயரில் தனது வழக்கமான பள்ளிகளையும் நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இந்திய தேசிய உணர்வை வளர்க்க அசாம் உள்ளிட்ட இதர வடகிழக்கு மாநிலங்களில் செய்ததைப் போல “இந்தியா என் தாய்நாடு” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று படிக்க வைக்கப்படுகிறார்கள். இப்பள்ளிகளில் காலையும் மாலையும் சமஸ்கிருத மந்திரங்களுடன் வழிபாடுகள் நடத்தப்படுவதோடு, காலை வழிபாடு முடிந்தவுடன் ஆர்.எஸ்.எஸ்-இன் காவி கொடிக்கு வணக்கம் செலுத்துவது தவறாமல் நடைபெறுகிறது.

“மார்க்சிஸ்டு கட்சியின் ஆட்சி காலத்தில் 15 ஆண்டுகளாக இடைநிலைப் பள்ளிக் கல்வியின் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை இப்பாடப்புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ், மாவோ மற்றும் ஹிட்லர் பற்றி உள்ளதே தவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பாடத்திட்டங்கள் இருந்தால் மாணவர்கள் இந்திய மன்னர்களை மறந்துவிடுவார்கள். எனவே பிரான்ஸ்-ரஷ்ய புரட்சிகளுக்கு பதிலாக இந்திய வரலாற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறிய முதல்வர் பிப்லவ் குமார், இந்த பாடத்திட்டங்களை மாற்றி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழு (என்.சி.ஆர்.டி) பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இளம்பிஞ்சுகளுக்கு காவி நஞ்சுட்டும் ஆர்.எஸ்.எஸ் கும்பல். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் புற்றீசல் போல் காணப்படும் ஷாகாக்கள்.

வித்யா பாரதி பள்ளிகளில் இந்த என்.சி.ஆர்.டி. பாடப் புத்தகங்கள்தான் வழக்கத்தில் உள்ளன. “2019-ஆம் ஆண்டு முதன்முதலில் மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்ட என்.சி.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் பழங்குடி மக்களின் வரலாறு, பண்பாடு பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. பழங்குடிகள் இயற்கையை வழிபடுபவர்கள். ஆனால், இராமன் மற்றும் அனுமனின் படங்கள்தான் இப்பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன” என்கிறார் பழங்குடி ஆர்வலர் லஸ்லு சோமா நகோடி.

மேலும் 20 அரசு பள்ளிகளை எடுத்து நடத்தவும் ‘அட்சய பாத்திரா’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும் சங்கப் பரிவார அமைப்பின் பல்வேறு முகங்களில் ஒன்றான “அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்” (ISKCON – International Society For Krishna Consciousness) என்ற அமைப்பிற்கு அனுமதியளித்திருக்கிறது, பிப்லவ் அரசு.

சங்கப் பரிவார அமைப்பான இஸ்கான் (ISKCON) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மூங்கில் குடிசைகளில் உள்ள பழங்குடியினர், “நாங்கள் இதற்குமுன் விலங்குகளைப் போல் வாழ்ந்தோம். பன்றிகளையும் சாராயத்தையும் விற்று வாழ்ந்து வந்தோம்” என்று கூறி வேத மந்திரங்களையும் இந்து மதப் பாடல்களையும் முணுமுணுக்கின்றனர்.

திரிபுராவில் 2015-ஆம் ஆண்டு 80-ஆக இருந்த ஷாகாகளின் எண்ணிக்கை, ஒரே ஆண்டில் (2016) 265-ஆக அதிகரித்தது. 2018-ஆம் ஆண்டு கவுகாத்தியில் “பிரம்மபுத்திராவின் மகன்கள்” என்ற பெயரில் இந்துக்கள் மாநாட்டை (இந்து சமிதி) நடத்தியது ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதிலிருந்து 35,000 ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது ஹாசிஸ், மிசிங், கஜோங், திவாஸ் போன்ற பழங்குடியினத் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பழங்குடியின மக்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ நீரோட்டத்தில் இரண்டறக் கலந்துவிட்டனர் என்பதை இம்மாநாட்டின் காட்சியே எடுத்துக்காட்டியது.

பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பை அறுத்தெறிவோம்!

இந்து ராஷ்டிரம் எனும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை நிலைநாட்டுவதற்காக வெறித்தனத்தோடு வேலைசெய்துகொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம், தன்னுடைய இலட்சியத்தை சாதிப்பதற்கான பல்வேறு கருவிகளுள் ஒன்றாகவே பா.ஜ.க. என்ற தனது அரசியல் கட்சியின் மூலம் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்கிறது.

அவ்வாறு தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வெற்றிபெறுவதும்கூட கீழே மக்களிடம் வேலைசெய்து தன்னுடைய சித்தாந்தத்திற்கு செல்வாக்கு தேடியிருக்கும்போதுதான் சாத்தியமாகிறது. கூட்டணி அமைப்பது, குதிரை பேரம் மூலம் பிற கட்சியினரை விலைக்கு வாங்குவது போன்ற தகிடுதத்தங்கள் எல்லாம் தங்களுடைய வெற்றிக்கு கூடுதலாக அவர்கள் கையாளும் தந்திரங்கள்தான் என்பதையே நாம் தொடர்ச்சியாக சொல்லிவருகிறோம்.

இன்று பா.ஜ.க. ஆளும் கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலைகளாக காட்சிதருவதை இந்த அடிப்படையில்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மாறாக, இன்று பா.ஜ.க. ஆட்சியிலிருப்பதுதான் அம்மாநிலங்களில் நடக்கும் மதவெறிக் கலவரங்களுக்கும் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்த முடிவதற்கும் காரணம். எனவே தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதன் மூலம் பாசிசத்தை தோற்கடித்துவிடலாம் என ஒருவர் கருதினால் அது காவி பாசிசத்தைப் பற்றிய மிகவும் பாமரத்தனமான புரிதலாகும்.

இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சித்தாந்தத்திற்கு பரந்த மக்கள் அடித்தளம் உருவாக்கப்பட்ட பின்னர்தான் அந்நாடுகளில் பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவ முடிந்தது என்பதே வரலாறு. முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்ற பிறகு உருவாகிய ஹிட்லரின் நாஜிக் கட்சி 1920-களில் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதபோதே அதிகாரத்தைக் கைப்பற்ற துணிந்தது, அப்போது ஹிட்லர் சிறையிலடைக்கப்பட்டான்.

1924-ஆம் ஆண்டு ஹிட்லர் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில், நாஜிக்கட்சி 3 சதவிகித ஓட்டுகளைப் பெற்று 14 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பிடித்தது. எனினும் கொஞ்சம் கொஞ்சமாக நாஜிக் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. 1933-ஆம் ஆண்டு 43.9 சதவிகித வாக்குகளைப் பெற்று 288 சீட்டுகள் பெற்றது நாஜிக் கட்சி. அன்றைய அதிபராக இருந்த ஹிண்டன்பர்க் தாமாக முன்வந்து பதவி விலகினான்; ஹிட்லர் அதிகாரத்தில் ஏற்றப்பட்டான். பாசிச குண்டர்படை, ஜெர்மன் மக்கள் மத்தியில் செய்த அடிமட்ட வேலைகளால்தான் பாசிச ஹிட்லர் அதிகாரத்திற்கு வர முடிந்தது.

1930-களில் உலகையே அச்சுறுத்திய ஹிட்லர், முசோலினி பாசிச ஆட்சி காலத்தில், பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்ட மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயலாளர் தோழர் டிமிட்ரோ கூறுவதைப் போல, “பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பு, அவர்களின் மக்கள்திரள் அடித்தளமாகும்”. அதனை அறுத்தெறிவது எப்படி என்பதுதான் பாசிச எதிர்ப்பு போராளிகள் ஒவ்வொருவரின் உளப்பாங்காக இருக்க வேண்டும்.

கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்ல, இந்து ராஷ்டிரத்தை நிர்மாணிப்பதற்காக நாடு முழுக்க அடிமட்ட அளவில் வேலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு மாநிலங்களுடைய வரலாற்றுவழி, தனிச் சிறப்பான சூழல்கள், மக்களின் பண்பாடுகள் ஆகியவைகளுக்கேற்ப தனது வேலைமுறையை அமைத்துக் கொள்கிறது.

படிக்க :

♦ திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்

♦ திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

சான்றாக, தமிழகத்தில் வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது; ராமனுக்கு பதில் முருக வழிபாட்டை கையிலெடுத்தது; கொங்கு மண்டலத்தில் கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்க சாதிகளுடனும் தென் தமிழகத்தில் “தேவேந்திர குல வேளாளர்” என புது அவதாரமெடுக்கும் பார்ப்பன கைக்கூலி கிருஷ்ணசாமி போன்ற பிழைப்புவாத சாதிச் சங்கத் தலைவர்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் தனக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ்.

எனவே பாசிச எதிர்ப்பு போராட்டத்தில், முதன்மையான அம்சம் என்னவென்றால் அடித்தளத்தில் (மக்களிடையே) ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிப்பதேயாகும். இதன் மூலமே காவி -கார்ப்பரேட் பாசிச அபாயத்தை எதிர்கொள்ள முடியும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகளை வீழ்த்த நினைக்கும் பல்வேறு புரட்சிகர, முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த அடிப்படையில் ஓர் ஒற்றுமையை கட்டியமைத்துப் போராட வேண்டும். இதற்குட்பட்டே தேர்தல் களத்தையும் அணுக வேண்டும்.

மாறாக, பாசிசத்தை முறியடிக்க தற்போதைக்கு ஒரு ‘சாத்தியமான மாற்று’ என்ற பெயரில் தேர்தல் களத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட ஆளும்வர்க்க ஓட்டுக் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக மாறினால், பற்றிப் பரவிவரும் பாசிச அபாயத்தை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

(முற்றும்)


அப்பு

ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !

பாசிசம் தனது நடவடிக்கைகளை, சங் பரிவார அமைப்புகளையும், அரசு எந்திரத்தை ஒருங்கிணைத்து கொண்டு தனது அரசியல் – சித்தாந்த கொள்கைக்களை நிலைநாட்டுகின்றது.
மத்தியப்பிரதேசம், குஜராத், டெல்லி, ராஜாஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், இந்து புத்தாண்டு தினம், ராம நவமி, அனுமன் ஜெயந்தி இந்து பண்டிகை நாளை ஒட்டி, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியில், மதவெறி ஊர்வலங்களை நடத்தி, திட்டமிட்ட வன்முறை கலவரவங்களை நிகழ்த்தியுள்ளனர் காவி பாசிஸ்டுகள்.
***
ஏப்ரல் 2-ம் தேதி, இந்து புத்தாண்டு பண்டிகையை ஒட்டி, ராஜஸ்தானின், கரௌலி நகரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தி, முஸ்லீம்கள் கல் வீசினார்கள் என்றுகூறி, அப்பகுதியில் உள்ள கடைகள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
படிக்க :
♦ ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி நாளன்று நடத்திய ஷோபா யாத்திரையின்போது பல்வேறு மாநிலங்களில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தேர்வு செய்து, மசூதிகளின் முன் ஊர்வலங்கள் நடத்த திட்டமிட்டார்கள் உள்ளூர் சங் பரிவார அமைப்புகள். அதற்குமுன் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு கோஷங்களை பரப்புவது, பெருந்திரளான மக்களை அழைப்பு விடுக்கும் வகையில் அப்பகுதி முழுக்க ஒலிபெருக்கி மூலம் பிராச்சாரம் செய்து என முஸ்லீம் ஏதிர்ப்பு உணர்வை விதைத்தார்கள். முஸ்லீம் எதிர்ப்பு பாடல்களை பாடினார்கள். பிறகு, ஆயிரக்கணக்கான காவி குண்டர்கள், கைகளில் தடியுடனும், வாள்கள், கோடாரிகள், கைத்துப் பாக்கிகளை ஏந்திகொண்டு, மசூதிகள் உள்ள பகுதியை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். மசூதியை நெருங்கி செல்லும்போது, மசூதிகளின் மீது காவிக் கொடிகளை ஏற்றி முஸ்லீம்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பிறகு முஸ்லீம்கள் கல் எறிந்தார்கள் என கூறி அப்பகுதி முழுக்க உள்ள கடைகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் காவி பாசிஸ்டுகள்.
மத்தியப்பிரதேசம், கார்கோன் பகுதியில், ராம நவமி ஊர்வலத்தின் போதான வன்முறை தாக்குதலில் 20 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன. மேற்குவங்கத்தில் பல்வேறு நகரங்களில் முஸ்லீம்கள் மீதும், அவர்களது கடைகள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜார்க்கண்டில் நடந்த வன்முறையில் 12 பேர் காயமுற்றனர் ஒருவர் உயிரிழந்தார். பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மசூதியின்மீது காவிக்கொடி ஏற்றி, இந்து மதவெறி குண்டர்களால் ஏராளமான கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. குஜராத்தின், ஹிம்மந்த்பூர், காம்பாத் நகரத்தில் பதிமூன்றுக்கும் மேற்பட்ட மசூதிகள், முஸ்லீம்களின் உடைமைகள், கடைகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் அசைவ உணவு உண்ண கூடாது என்று கூறி அங்குள்ள சமையலர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீதும் கம்புகள், ஆயுதம் கொண்டு தாக்கினார்கள். இப்பயங்கரவாத செயலை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.
இவ்வன்முறைச் செயல்கள் பல்வேறு மாநிலங்களில் சங் பரிவார அமைப்புகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட, ஒத்த தன்மையிலான நடவடிக்கையாகவே உள்ளது. முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலாகவே நடந்தேறியுள்ளது.
அதிகார வர்க்கத்தின் புல்டோசர் கரசேவை:
உத்தரப்பிரதேசம் தேர்தல் வெற்றிக்கு பிறகு யோகி ஆதியத்தியநாத், தனக்கெதிரான போரட்டக்காரர்களை ஒடுக்க “ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை” என்று கூறி புல்டோசர் கலாச்சரத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராம நவமி ஊர்வலத்தில் கலவரக்காரர்கள் மீது விசாரனை குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அடுத்த இடிப்பு சம்பங்களை தொடங்கி வைத்தார். அவரின் அறிவிப்பிற்கு பிறகு, உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “கற்கள் வீசப்பட்டவர்களின் வீடுகளை கற்குவியல்களாக மாற்றுவோம்” என்றும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்துவோம் என்று கூறினார்.
டெல்லியில் இடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் கடைகள்
அதன் பிறகு, அப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசை குவித்து இந்துமதவெறியர்கள் கைநீட்டிய இடமெல்லாம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது கார்கோன் மாவட்ட நிர்வாகம். புல்டோசர் இயந்திரங்களை கொண்டு 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இதுவரை இடித்துள்ளனர். இந்நடவடிக்கை குறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் அனுக்கிரகா சாலையோரங்களில் உள்ள வீடுகள் கடைகள் “ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை” என கூறி பதிலளித்தார். மேலும் இடிக்கப்பட்ட சிலவீடுகள் பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டவை என்பது குறிப்பித்தக்கவை.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்ட நிர்வாக ஆட்சியர் மனோஜ் தக்ஷினி, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுபடுவதாக கூறி, ராம நவமி ஊர்வலம் நடத்த பகுதிகளில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும், இருப்பிடங்கள், கடைகள் குறிவைத்து இடிக்கப்பட்டன. பாஜக செய்தி தொடர்பாளர் ரூத்விஜ் பட்டேல் இது சட்டபூர்வமான நடவடிக்கைதான் என்று இடிப்பு சம்பங்களை நியாப்படுத்தி பேசினார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றினோம் என்று அதிகாரிகள் விளக்கமளிக்கிறார்கள். கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினோம் என்று அமைச்சர் சொல்கிறார் இரண்டும் உண்மை அல்ல. இருவரும் இணைந்து மூஸ்லீம்கள் மீதும், அவர்களின் குடியிருப்புகள் மீதும் கரசேவையை நடத்தியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
அரசியல் சாசனம் சட்டம், மனுவாதிகளுக்கு அல்ல :
ஏப்ரல் 16 அன்று, வடமேற்கு டெல்லி மாநாகராட்சியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சங்பரிவார அமைப்புகளால் நடத்தப்பட்டது. பிறகு முஸ்லீம்கள் மீதான தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்நடவடிக்கைக்கு பிறகு ஏப்ரல் 20 அன்று பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா, வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளார்கள் என்று கூறி புல்டோசர் கொண்டு இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாநாகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கிறார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் டெல்லி மாநாகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கான போலீசை குவித்து, மசூதியை சுற்றியுள்ள முஸ்லீம்களின் வீடுகளையும், கடைகளையும் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினார்கள். 20-க்கும் மேற்பட்ட வீடுகளையும் கடைகளையும் இடித்து தள்ளினார்கள்.
வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இந்நடவடிக்கையை உடனே நிறுத்த உச்சநீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை வாங்கினார். உச்சநீதிமன்றம் தடை விதித்த பின்பும் தடை ஆணை இன்னும் வந்து சேரவில்லை எனக்கூறி இடிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அரசால், ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறியவர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வருபவர்கள். அவர்கள் முறையான ஆவணங்களை காட்டிய பிறகும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.க எழுதிய சட்டத்தைத்தான் அன்று அதிகாரிகள் அமுல்படுத்தினார்கள். மதவெறியர்களால் திட்டமிட்டு நடத்தபடுகின்ற கலவரங்கள், எப்போதும் அரசியல் சாசன சட்டத்தால், அதன் உத்தரவுகளால் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு இந்நிகழ்வு கூடுதல் ஆதாராமாக உள்ளது.
போலீசு சட்டப்பூர்வ பாசிச குண்டர் படை:
இந்து மதவெறியர்கள், வாள், கோடாரி ஆயுதங்களை வைத்து கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள். ஊருக்கு ஊர் மேடை போட்டு முஸ்லீம்களை கொலைசெய்யவேண்டும் என அறைகூவல் விடுத்தார்கள். இவை அனைத்தையும் போலீசுத்துறை அனுமதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. இந்து மதவெறியர்களின்மீது பெயரளவிலான வழக்குகளை போட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் பாதுகாத்து வருகிறது.
மாறாக, முஸ்லீம்கள் கல் எறிந்தார்கள் எனக்கூறி இதுவரை மத்தியப் பிரதேசத்தில் 168 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டுபேர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். டெல்லி, ஜஹாங்கீர்புரியில் முதல் தகவல் அறிக்கையில் பலபேர் முஸ்லீம்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 14 பேரை விசாரணை என்ற பெயரில் கைது செய்துள்ளனர்.
ஜிக்னேஷ் மேவானி
உத்தரகாண்ட் மாநிலத்தில், வன்முறையில் ஈடுப்பட்ட, இந்து மதவெறியர்கள்மீது எவ்வித வழக்கும் பதிவும் செய்யாமல் முஸ்லீம்கள் 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 11 பேரை கைது செய்துள்ளது அம்மாநில போலீசு. மேலும் நான்கு புல்டோசர் இயந்திரங்களை அப்பகுயில் கொண்டு நிறுத்தி, கல் எறிந்தவர்கள் சரணாடையாவிட்டால் வீடுகளை இடித்து தகர்ப்போம் என்று கூறி மிரட்டியுள்ளது.
இந்நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய, குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது அசாம் போலீசு. முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறை சட்டவிரோத குண்டர்களாலும், சட்டப்பூர்வ குண்டர்களாலும் இணைந்தே நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும்.
ராம நவமி முதல் அனுமன் ஜெயந்தி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மோடி அரசாங்கமும், அதிகார வர்க்கமும் முஸ்லீம்கள் மீது இணைந்து நடத்திய பகிரங்கமான பயங்கரவாத செயல்களாவே பார்க்க வேண்டியுள்ளது.
பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது :
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆட்சி பொறுப்பெடுத்து கொண்ட 2014 ஆண்டிலிருந்தே, தனது சங் பரிவார துணை அமைப்புகளை கொண்டு தனது அரசியல் சித்தாந்தக் கொள்களை தீவிரமாக அரங்கேற்ற முயற்சித்து வருகின்றன. தற்போது தனது பாசிச ஆதரவு தளத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருகின்றது. சமீபத்தில் நடந்த பாசிச நடவடிக்கைகளே இதற்கு சான்றாகும்.
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை, பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டம், ஹாலால் ஜிகாத், ஒலிபெருக்கி வைக்க தடை, லவ் ஜிகாத், பெண்களைப் பாதுகாக்க ரோமியோ படை, சைனிக் ராணுவ பள்ளி, முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு, கிறிஸ்துவர்களின் மீதான தாக்குதல், முஸ்லீம்கள் கோவில்களுக்குமுன் வியாபரம் செய்ய தடை, தற்போது புல்டோசர் காலாச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளனர். தங்களது தொடர்ச்சியான நடவடிக்கை மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அமையவிருக்கும், இந்துராஷ்டிர கொடுங்கோன்மை அரசு எப்படி அமையும் என்பதையும் நம் கண்முன்னால் நிகழ்த்தி காட்டுகிறார்கள்.
படிக்க :
♦ மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
எதிர் தாக்குதலுக்கு தாயாரிப்பு செய்வோம்:
இந்நிகழ்வு முஸ்லீம்கள் மீதான வன்முறை மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தனது சித்தாந்தாத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு குறுக்கே யார் வந்தாலும், கைது நடவடிக்கைகளும், புல்டோசரும் பாயும் என்று இந்துவவாதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
பாசிஸ்டுகளின் நடவடிக்கையை முறியடிக்க வேண்டுமானல், சொல்லளவில் மட்டும் இல்லாமல், பாசிசத்தின் ஒவ்வொரு மக்கள் விரோத நடவடிக்கைகளையும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் – விவாசாயிகள் – மாணவர்கள் மற்றும் பிற ஜனநாயக சக்திகளை பாசிச எதிர்ப்பு அடிப்படையில் ஒருங்கிணைத்து, பாசிச தாக்குதல்களுக்கு எதிராக, எதிர்தாக்குதல் தொடுக்க வேண்டியது அவசியமான கடமையாகும்.

தங்கபாலு

நியூஜே முகநூல் மூலம் தேர்தல்களின்போது பாஜகவிற்கு ஆதரவாக வெறுப்பு பிரச்சாரம் செய்த ரிலையன்ஸ் !

2019-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஒன்பது மாநில தேர்தல்களின் போது, பாஜக-விற்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பல விளம்பரங்களை வெளியிட்டது நியூ எமர்ஜிங் வேர்ல்டு ஆஃப் ஜெர்னலிசம் (New Emerging World of Journalism) நியூஜே (NewJ) என்ற முகநூல் பக்கம். இம்முகநூல் பக்கம், முஸ்லீம்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோர்மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக பல விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. மோடி மீண்டும் பிரதமரானதில் இத்தகைய விளம்பரங்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

ஆய்வு நிறுவனமான ஆட்.வாட்ச்-ம் (ad.Watch) மற்றும் தி ரிபோர்ட்டர்ஸ் கலெக்டிவ் (The Reporters Collective) இணைந்து, இந்தியாவில் அரசியல் விளம்பரங்களுக்காக –தேர்தலையொட்டி- மட்டும் ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமாக செலவழித்த விளம்பரதாரர்களைப் பற்றி ஆய்வு செய்தது. அதில், பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரை, நியூஜே முகநூல் பக்கத்தால் மட்டும் 718 அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவை 290 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை அடைந்துள்ளது என ஆய்வு கூறியது.

படிக்க :

♦ இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

♦ சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !

2018-ம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பா.ஜ.க.விற்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் மிகவும் நெருக்கமானது. இதன் நிறுவனர் ஷலப் உபாத்யாய்-ன் தந்தை உமேஷ் உபாத்யாய், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும், நெட்வொர்க் 18 குழுமத்தின் செய்தி தலைவராகவும் பணியாற்றியவர். அவரது உறவினரான சதீஷ் உபாத்யாய், டெல்லியின் முன்னாள் பாஜக தலைவர்.

2018-ல் ரூ.1 இலட்சம் முதலீட்டைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2020 வரை எந்த வருமானமும் ஈட்டவில்லை. 2019-ல் அதன் வருமானம் ரூ.33 லட்சத்து 70 ஆயிரம்; ஆனால், நட்டமோ ரூ.2 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம். இப்படி, பல மடங்கு நடத்தில் இயங்கும் இந்நிறுவனம் எப்படி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக விளம்பரம் செய்திருக்க முடியும் என்று கேள்வி எழலாம்?

அதாவது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், நியூஜே நிறுவனத்திற்கு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8 கோடியே 40 லட்சம் கடன் கொடுத்து, அதன் 75 சதவிகித பங்குகளை சிறிது காலத்திற்கு பின்பு வாங்கியது ரிலையன்ஸ். அடுத்த ஆண்டே, மீண்டும் ரூ.12 கோடியே 50 லட்சம் கடனை நியூஜே-வுக்கு கொடுத்தது.

மார்ச் 2020-ம் நிதியாண்டில் நியூஜே வருவாயை ஈட்டியதாக தரவுகள் இல்லை. இருந்தும் ரிலையன்ஸ் அளித்த கடன் மூலம் பாஜக ஆதரவு விளம்பரங்களுக்கு செலவு செய்த தொகை ரூ.2 கோடியே 73 லட்சம். இந்த காலக்கட்டத்தில்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிலின் பங்குகளை, ரிலையன்ஸ் குழுமத்தில் ஒன்றான ஜியோ நிறுவனம் வாங்கி கொண்டது. 2021-ம் ஆண்டு இறுதியில் ஜியோ நிறுவனமானது நியூஜே-வுக்கு 0.0001 சதவிகித ஆண்டு வட்டி விகிதத்தில், ரூ.8 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரம் கடனாக வழங்கியது.

நியூஜே-வினுடைய ரிலையன்ஸ் பங்கினை ஜியோ எடுத்துக் கொள்வதற்கு ஆறு நாட்களுக்கு முன்புதான் ‘ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷனை’ (Articles Of Association) என்று நிறுவனத்தில் பெயரை திருத்தியது நியூஜே. இதன் மூலம் நியூஜே-வின் செய்தி உள்ளடகத்தையும், அது என்ன பகிர வேண்டும் என்பதையும் ஜியோ தான் தீர்மானிக்கும்; கட்டுப்படுத்தும்.

இப்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் நியூஜே முகநூல் பக்கம் மூலம் பாஜக-வுக்கும் மோடிக்கும் ஆதரவாக பல கோடிகளை செலவு செய்து 2019 தேர்தலில் வெற்றிப் பெற வழிவகை செய்துகொடுத்திருக்கிறது.

பாஜக என்றாலே பொய்யும் புரட்டும் தானே !

இத்தகைய விளம்பரங்களில் அடிப்படையான விஷயம் உள்ளது. அது, தவறான மற்றும் பொய் தகவல்களைக் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான மத உணர்வினை தூண்டுவது, எதிர்க்கட்சிகளை இழிவுப்படுத்துவது, இதன்மூலம் பாஜக-வுக்கும் இந்துத்துவ சித்தாந்தத்துக்கும் ஆதரவினை திரட்டுவது என்பதுதான். முகநூலில் பதிவிடப்படும் இத்தகைய விளம்பரங்களுக்கும் வீடியோ பதிவுகளுக்கும் அதிக பணத்தை செலவுசெய்வதால் பல ஆயிரக்கணக்கான முகநூல் பயனர்களை சென்றடைகிறது.

அதுமட்டுமல்லாமல், பாஜக அல்லது இந்துத்துவ சித்தாந்தம் சார்ந்த கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய அரசியல்சாரா தகவல் என்ற போர்வைக்குள் பரப்பப்படுகின்றன. உதாரணத்திற்கு, கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனது கால்களால் தேர்வினை எழுதும் வீடியோ பகிரப்பட்டிருக்கும். ஆனால் அதனிடையில் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்தோ அல்லது முஸ்லீம் வெறுப்பு பிரச்சார செய்தியோ அடங்கியிருக்கும். ஆக, நியூஜே-வின் வீடியோக்கள், விளம்பரங்கள் அனைத்தும் சாதாரண மக்களை எளிமையாக சென்றடையும் விதத்தில் உருவாக்கப்படுகிறது. அதேபோல, முஸ்லீம்களுக்கு எதிரான இந்துத்துவ வெறுப்பு அரசியலை தாங்கிவரும் தவறான தகவல் மக்களிடையே வேகமாக பரவி குறிப்பிட்ட அளவிற்கு வினையாற்றுகிறது.

உதாரணத்துக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவ பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர், பாஜக சார்பில் போபால் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே, ‘மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரக்யாவுக்கும் குற்றத்துக்கும் சம்பந்தமில்லை; அவ்வழக்கில் இருந்து அவர் விடுதலைச் செய்யப்பட்டார்’ என பொய் செய்தி ஒன்றை வீடியோவாக வெளியிட்டது நியூஜே. இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டது; பிரக்யா சிங்கும் அத்தேர்தலில் வெற்றி கிட்டியது.

அதேபோல, 2019 தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக அரசாங்கம் ‘பயங்கரவாதத்தின்மீது மென்மையாக நடந்துகொள்கிறது’ என பேசிய ராகுல் காந்தி, அதற்கு ஆதாரமாக மசூத் அசார் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைவரை பாஜக ஆட்சியின்போது வாஜ்பாய் விடுவித்ததை எடுத்துக் காட்டினார். பயங்கரவாதத்தின்மீது பாஜக-வின் அணுகுமுறையை பற்றி வாய்திறக்காமல், மசூத் அசாரை ராகுல், ‘ஜி’ என்று அழைத்ததை பெரிதாக்கியது நியூஜே.

2019-ம் ஆண்டு இந்தியாவில் ரிலையன்ஸ்க்கு போட்டியாக வளர்ந்துவரும் அமேசான் நிறுவனம், சில பொருட்களை இந்து கடவுளின் படங்கள் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறது. இதற்கெதிராக, “BoycottAmazon” என்ற ஹேஷ்டாகை டிரண்ட் செய்தது இந்துமதவெறிக்கும்பல். நியூஜே இவ்விஷயத்தை கையிலெடுத்து வெறுப்பு அரசியலை தூண்டிவிட முயற்சித்தது.

2019 டிசம்பரில், முஸ்லீம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு எந்த எதிர்வினையும் காட்டாத நியூஜே, நவம்பர் 2020-ம் ஆண்டு வங்கதேசத்தில் இந்துத்துக்களை முஸ்லீம்கள் தாக்கும் வீடியோவை வெளியிட்டு, “சிறுபான்மை இந்துக்கள் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம்களால் தாக்கப்படுகிறார்கள். குடியுரிமை சட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று இப்போது புரிகிறதா” எனச் கேள்வியெழுப்பியிருந்தது.

இப்படி பாஜக-வுக்கு ஆதரவாகவும், முஸ்லீம் சிறும்பான்மையினருக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படுகிறது நியூஜே. ஆனால், தங்களுக்கும் பாஜக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லாததுபோலவும் தன்னை ஓர் செய்தி நிறுவனமாகக் காட்டி கொள்கிறது.

தேர்தல் கமிஷனும் முகநூல் நிறுவனமும் பாசிசத்தின் கூட்டுக் களவாணிகளே !

இந்திய தேர்தல் சட்ட பிரிவு 171H, வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது செலவிடும் பணத்தை வரம்பிடுகின்றது. வேட்பாளரல்லாது மூன்றாம் நபரால் விளம்பரம் செய்யப்படுமேயானால், அது வேட்பாளரின் செலவு, கணக்கில் சேர்க்கப்படும்.

அதேபோல, தேர்தல் நேரத்தின்போது, கட்சியாலும் வேட்பாளாராலும் நேரடியாக நிதியளிக்கபடாத விளம்பரங்களை வெளியிடுவது இந்திய அரசியல் சட்டத்தின்படி குற்றமாகும். அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் பதிவுகள் அல்லது விளம்பரங்களுக்கும் அந்தந்த கட்சிகள்தான் பொறுப்பாகும். ஆக, தேர்தல்கள் ஒட்டி கட்சிக்களுக்கு வெளியே வெளியிடப்படும் விளம்பரங்களைப் பயன்படுத்துவதை இந்த சட்டம் தடை செய்கிறது.

ஆனால், முகநூல் போன்ற சமூகவலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த தடைகளை நீட்டிக்கவில்லை. அதாவது கட்சி சார்பற்றவர்கள் (வேட்பாளர்கள் (அ) கட்சியின் நேரடியான தலையீடில்லாமல்) பணத்தை செலவழித்து விளம்பரங்கள் செய்யலாம் என்கிறது. இதனை நிழல் விளம்பரங்கள் (Surrogate Advertisements) என்பார்கள். முகநூல் நிறுவனமும் பாஜக மற்றும் அதன் வேட்பாளர்களை முன்னிறுத்தும் நிழல் விளம்பரங்களையும் செய்திகளையும் அமைதியாக அனுமதித்து வருகிறது.

பொதுவாக முகநூலில் உள்ள மென்பொருளே முகநூலின் சமூக விதிகள், அதன் வழிகாட்டுதலின்படி தவறான செய்திகளையும், வீடியோக்களையும் வன்முறை அல்லது ஒருதரப்பினரை குறிவைக்கும் பதிவுகளையும் தானாகவே நீக்கிவிடும். ஆனால் பாஜக தொடர்பாக நியூஜே வெளியிட்ட பொய் செய்திகளை முகநூல் நிர்வாகம் நீக்கவில்லை.

படிக்க :

♦ எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1

♦ மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வெளியாகும் இத்தகைய நிழல் விளம்பரங்களுக்கு எதிராக முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறதென்றாலும், அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியினரின் 687 முகநூல் பக்கங்களையும், கணக்குகளையும்தான் நீக்கியுள்ளது. ஆனால், பாஜகவை விளம்பரப்படுத்திய ஒரு முகநூல் பக்கம் மற்றும் 14 முகநூல் கணக்குகள் என மிகவும் சொற்பமானவற்றை மட்டுமே நீக்கியுள்ளது. இதுவும் சில்வர் டச் (Silver Touch) என்ற ஐடி நிறுவனத்துக்கு சொந்தமான கணக்குகள்.

சட்டம் இப்படியிருக்க, நாடாளுமன்ற தேர்தல்களின்போது தேர்தல் குறித்த நிழல் விளம்பரங்களை வெளியிட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தோடு முகநூல் நிறுவனத்தின் இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தைக் (Internet and Mobile Association of India) கொண்டு சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்று ஃபிரான்சிஸ் ஹவ்கன் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகிறது.

000

ஒவ்வொரு தேர்தலின் போது, உழைக்கும் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் தேர்தல் ஜனநாயம் என்ற பிம்மம் மேற்கண்ட நடவடிக்கைகளால் வேரும் மாயத்தோற்றம்தான் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதாவது, கார்ப்பரேட் முதலாளிகள் யாரை கைக்காட்டுகிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர போகிறார்கள். ஆக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை தேர்தல் களத்தில் வெற்றிக் கொள்ளலாம் என்று இனியும் எண்ணிக் கொண்டிருப்பது முட்டாள்தனம். நமது பாசிச எதிர்ப்பு என்பது தேர்தல் களம் அல்ல போராட்டக்களம்.


கல்பனா