Wednesday, July 1, 2026
முகப்பு பதிவு பக்கம் 298

குழந்தைகள் மரணங்கள் – இந்தியாவின் கட்டமைப்பு சிக்கல் !

0

 2019 டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி (2020 ஜனவரி 5-ம் தேதி வரையிலான காலகட்டத்தில்) இராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள 6 அரசு மருத்துவனைகளில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட கைக்குழந்தைகள் மரணித்துள்ளதாக ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை கூறுகிறது. மத்தியப்பிரதேசத்தின் ஷாடோல் (Shahdol) நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 13-ம் தேதி நள்ளிரவில் மட்டும் 6 பழங்குடி குழந்தைகள் இறந்ததுள்ளதாக தற்போது செய்தி வந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் எடுத்து பார்த்தால் 2018-ல் மட்டும் 7,21,000 கைக்குழந்தைகள் அதாவது, நாளொன்றுக்கு சராசரியாக 1,975 பிஞ்சுக்குழந்தைகள் மடிந்துள்ளனர்.

முதன்மை சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமை, சிறப்பு வசதிகள் கொண்ட மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பதில் உள்ள குறைபாடுகள், போக்குவரத்து வசதி குறைபாடுகள் போன்ற அடிப்படை கட்டமைப்பு சிக்கல்கள் சேர்ந்து அதிகப்படியான மரணங்களுக்கு வித்திட்டதாக மம்தா (MAMTA) அரசு சாரா தாய் சேய் நல நிறுவனத்தின் தலைமை அதிகாரியும் குழந்தைகள் நல மருத்துவருமான சுனில் மெஹ்ரா கூறுகிறார்.

அதிக கைக்குழந்தைகள் மரணங்கள் நிகழும் பீகார், ஜார்கண்டு, உத்திரப்பிரதேசம், உத்தர்காண்டு, இராஜஸ்தான், ஒடிசா, சத்திஸ்கர் மற்றும் அஸ்ஸாம் போன்ற பின்தங்கிய மாநிலங்களிலும், சமீப காலமாக கைக்குழந்தைகள் மரண செய்திகளில் அடிப்படும் மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களிலும், நாட்டிலேயே மிகக்குறைவான கைக்குழந்தைகள் மரணங்கள் நிகழும் கேரளா, தமிழ்நாடு மற்றும் கோவா மாநிலங்களிலும் ‘இந்தியா ஸ்பெண்ட்’ ஆய்வினை நடத்தியது.

சுகாதார உள்கட்டமைப்பு, மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, தாயின் உடல்நலம் பராமரிப்பு மற்றும் மகப்பேறுக்கு பிந்தைய பராமரிப்பு ஆகியவற்றின் மோசமான தரம் கைக்குழந்தைகளை ஆபத்தில் ஆழ்த்துவதை இந்த ஆய்வு காட்டுகிறது.

கைக்குழந்தைகளின் மரணம் என்பது வெறுமனே மருத்துவரீதியான அம்சங்களை விட, ஊட்டச்சத்து குறைபாடு, சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு போன்ற ஆழமான சமூக சிக்கல்களின் அறிகுறியாக இருப்பதாக டெல்லியில் உள்ள பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தீபா சின்ஹா ​​தெரிவித்தார். நுரையீரல் அழற்சி போன்ற எளிதில் சிகிச்சையளிக்கப்படக் கூடிய நோய்த்தொற்றுகளால் பெரும்பாலான குழந்தைகள் மரணிப்பது என்பது முதன்மையாக சிதிலமடைந்த சுகாதார கட்டமைப்பையே காட்டுகிறது என்று மேலும் அவர் கூறினார்.

கைக்குழந்தைகள் இறப்பில் உலக சாரசரியான 1000-க்கு 39 என்பதை விட சற்றே குறைவாக 1000-க்கு 37 ஆக இந்தியாவில் இருக்கிறது. அதே நேரத்தில் எண்ணிக்கை அடிப்படையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கிறது. 2017-ம் ஆண்டின் தரவுகள் படி 37 குழந்தைகளில் 33 குழந்தைகள் ஒரு வயதாகும் முன்பாகவே மடிகின்றன.

படிக்க:
சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !
சென்னை புத்தகக் காட்சியில் புதுப்பொலிவுடன் கீழைக்காற்று வெளியீட்டகம் !

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இறப்பு குறைந்து வந்திருந்தாலும் இந்தியா முழுவதும் அதனுடைய தாக்கம் என்பது சமூக பொருளாதார அடிப்படையில் ஏற்றத்தாழ்வாக இருக்கிறது. நாகலாந்தில் இறப்பு விகிதம் 7, கோவாவில் 9, கேரளாவில் 9 ஆக இருக்கும் அதே நேரத்தில் மத்தியப்பிரதேசத்தில் 47 ஆக இருக்கிறது. எளிதில் தடுக்கப்படக்கூடிய வயிற்றுப்போக்கு போன்ற நோய்த்தொற்றுகளால் பின்தங்கிய மாநிலங்களில் அதிக குழந்தைகள் மடியும் அதே நேரத்தில் கேரளா போன்ற முன்னேறிய மாநிலங்களில் மரபணு சிக்கல்களால் குறைந்த எண்ணிக்கையில் குழந்தைகள் மடிகின்றன.

மோசமான முதன்மை சுகாதார கட்டமைப்பும் நெரிசலில் தவிக்கும் சிறப்பு சுகாதார கட்டமைப்பும் :

மருத்துவமனையில் நடக்கும் மகப்பேறுகளின் எண்ணிக்கை 2015 (38.7%) லிருந்து இருமடங்காகியுள்ளதால் (78.9%) சிசு மரணங்கள் கணிசமாக குறைந்துள்ளன. ஆனால், அதே நேரத்தில் பிறந்த குழந்தைகளை பராமரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகளை அதற்கேற்றாற்போல அதிகப்படுத்தப்படவில்லை என்கிறார் குஜராத், ஆனந்திலுள்ள பிரமுக்ஸ்வாமி மருத்துவமனை குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் சோமசேகர் நிம்மல்கார்.

பெரும்பாலான அதாவது 57.9% கைக்குழந்தைகள் மரணங்கள் 28 நாட்களுக்குள்ளேயே நடப்பதாக மருத்துவ சஞ்சிகை லேன்செட் (Lancet) ஆய்வு கூறுகிறது. இந்த மரணங்களை கங்காரு கவனிப்பு (kangaroo care) அல்லது சருமத்துடன் சரும(ம்) கவனிப்பு மூலமாக எளிதில் தடுக்கப்பட முடியும். இது போன்ற சிக்கல்களை சமாளிக்க தேசிய கிராமப்புற சுகாதரா திட்டத்தின் அடிப்படையில் பச்சிளங்குழந்தை பாராமரிப்பு மையங்களை (Newborn Care Corners) ஏற்படுத்தினாலும் அங்கு மருத்துவர் பற்றாக்குறை, படுக்கை வசதியின்மை, மருத்துவக்கருவிகள் பற்றாக்குறை போன்ற சிக்கல்களால் சேவையை பெற முடியாத அளவிற்கு கூட்டம் அலை மோதுகிறது. 83% பராமரிப்பு மையங்களில் பச்சிளங்குழந்தைக்கான கருவிகள் இல்லை. எனவே நகர்புறங்களில் உள்ள மருத்துவமையங்களை நோக்கி மக்கள் ஓடுகிறார்கள்.

மகப்பேறுக்கு முன்னதான சிக்கல்:

இந்தியாவில் குழந்தை இறப்பில் சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வு முதன்மையான பங்காற்றுகிறது. நல்ல கல்வியும் வசதியும் கொண்ட மேல்மட்ட பணக்காரக் குடும்பங்களின் 20% குழந்தைகள் ஏழ்மையான கடைக்கோடி 20% குழந்தைகளை விட உயிர்பிழைப்பதற்கு 3 மடங்கு அதிமாக வாய்ப்பினை பெறுகின்றன என்று ‘இந்தியா ஸ்பெண்டின்’ 2019-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது.

குழந்தைகள் மரணம் அதிகம் கொண்ட மத்தியப்பிரதேசம், இராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பெண்களுக்கு படிப்பறிவு மிகக் குறைவாக உள்ளது. குழந்தை திருமணங்களும் மிக அதிகம். குழந்தைப் பிறப்புக்கு முன்னதாக 4 முறை (ANC visits – 12 வாரங்களில், 26 வாரங்களில், 32 வாரங்களில், 36-38 வாரங்களில்) மருத்துவமனை பரிசோதனைக்குச் செல்வது இன்றியமையாதது என்பது உலக சுகாதார மையத்தின் பரிந்துரை. ஆனால், இந்த மாநிலங்களில் பெரும்பாலான குடும்பங்கள் ஒருமுறை செல்வதே அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே குறைவாக பீகாரில் 14.4% பெண்கள் மட்டுமே நான்கு முறையும் மருத்துவ பரிசோதனைக்கு செல்கின்றனர்.

மகப்பேறின் போது ஏற்படும் சிக்கல்:

இந்தியாவில் 2.5 கிலோவிற்கும் குறைவான எடையுடன் ஐந்தில் ஒருக்குழந்தை பிறக்கிறது. 53.3% குழந்தைகள் மட்டுமே 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்கிறது என்கிறது 2019 செப்டம்பரில் லேன்செட்டில் வெளியான இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின் அறிக்கை. தாய்மார்களின் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பாலூட்டல் தொடர்பான சரியான அறிவுறுத்தல் இல்லாததும்தான் இதற்கு அடிப்படையான காரணம் என்கிறார் மும்பை இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தை (Indian Institute of Technology) சேர்ந்த கிராமப்புறங்களுக்கான தொழில்நுட்ப மாற்றுகளுக்கான மையத்தின்(Centre for Technology Alternatives for Rural Areas) குழந்தை நல மருத்துவரான ரூபல் தலால்.

குழந்தை பிறந்ததும் ஒரு மணி நேரத்திற்குள்ளேயே தாய்ப்பால் ஊட்டினால் பல சிக்கல்களை தவிர்க்க முடியும் என்கிறது யுனிசெஃப். உத்திரப்பிரதேசம் மற்றும் இரஜஸ்தானில் நான்கில் ஒரு குழந்தைக்கு மட்டுமே ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் ஊட்டப்படுகிறது என்று 2015-16-ம் ஆண்டு NFHS அறிக்கை கூறுகிறது. குழந்தைகள் மரணங்கள் குறைவாக உள்ள கேரளாவில் (63.3%), கோவாவில் (75.4%) மற்றும் தமிழ்நாட்டில் (55.4%) முதல் ஒரு மணி நேரத்தில் பாலூட்டுவது அதிகமாக இருக்கிறது.

தடுப்பூசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு:

2 வயதிற்குட்பட்ட தமிழ்நாட்டின் 69.7% மற்றும் கோவாவின் 88.4 விழுக்காடு குழந்தைகளுக்கு அனைத்து அடிப்படையான தடுப்பூசிகளும் போடப்படுகின்றன. அதுவே அஸ்ஸாமில் (47.1%), குஜராத்தில் (50.4%) மற்றும் உத்திரப்பிரதேசத்தில் (51.1%) குழந்தைகளுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படுகிறது.

ஒட்டுமொத்த குழந்தைகள் இறப்பில் ஊட்டச்சத்து குறைபாடு (68.2%) முதன்மையான பங்காற்றுகிறது என்று ‘இந்தியா ஸ்பெண்டின்’ 2019-ம் ஆண்டு அறிக்கை கூறுகிறது. வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் பீகாரில் மட்டும் 42% உள்ளனர். பின்தங்கிய மாநிலங்களில் ஐந்தில் இரண்டு குழந்தைகளுக்கு இந்த சிக்கல் உள்ளது. கேரளாவில் 20.5%, தமிழ்நாட்டில் 19.7% மற்றும் கோவாவில் 19.6% குழந்தைகளுக்கு குன்றிய வளர்ச்சி சிக்கல் உள்ளது.

நிமோனியா காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு :

ஒட்டுமொத்த குழந்தை இறப்புகளில் நிமோனியா (12.9%) மற்றும் வயிற்றுப்போக்கு (8.9%) போன்ற எளிதில் சரி செய்யப்படக்கூடிய நோய்த்தொற்றுகள் அதிக பங்கு வகிக்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள, தூய்மையான தண்ணீர் கிடைக்காத, காற்று மாசுபாட்டில் அகப்படும் குழந்தைகளுக்கு விலை குறைவான நுண்ணுயிர் கொல்லிகளால் (antibiotics) எளிதில் சரி செய்யப்படக் கூடிய நிமோனியா எளிதில் தொற்றுகிறது. 2018-ல் நிமோனியாவினால் 1,27,000 குழந்தைகள் மடிந்துள்ளனர்.

2017-ம் ஆண்டில் 90,000 குழந்தைகளை வயிற்றுப்போக்கு பலிவாங்கியிருக்கிறது. வெறுமனே 50.6% குழந்தைகளுக்கு மட்டுமே எளிய தீர்வான வாய்வழி மறுசீரமைப்பு திரவ சிகிச்சையும் (oral rehydration solution), 20.3% குழந்தைகளுக்கு மட்டுமே துத்தநாக மருந்தும் (zinc supplementation) கிடைத்திருக்கிறது. விலை அதிமான மருத்துவம் கூட தேவையில்லை. தூய்மையான தண்ணீருடன் உப்பு சர்க்கரை கரைசலே போதுமானது. ஆனால், எத்தனை குழந்தைகளுக்கு இது கிடைக்கிறது? என்று வினவுகிறார் பி.ஆர். அம்பேத்கர் கல்லூரி பேராசிரியர் சின்ஹா. 2019-ல் திட்டமிடப்பட்ட 41 விழுக்காட்டினரில் 73 விழுக்காட்டினருக்கு மட்டுமே ரோட்டா வைரஸ் (rotavirus) தடுப்பூசி போடப்பட்டதாக உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

அதேபோல திட்டமிடப்பட்ட 13% மக்களில் வெறுமனே 44% மட்டுமே நிமோனியா தடுப்பு மருந்து போடப்பட்டதாக 2018-ம் ஆண்டு ‘இந்தியா ஸ்பெண்ட்’ அறிக்கை கூறுகிறது. தற்போதைய நிலையில் 6 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.


செய்தி : indiaspend
தமிழாக்கம் :  சுகுமார்

அரைச்சீனி … கால் சீனி … முக்கால் சீனி … நீரழிவை கட்டுப்படுத்துமா ?

ந்த ரூபத்தில் இனிப்பு சுவை எடுத்தாலும், உங்கள் ரத்த சர்க்கரை அளவுகள்
கூடும் … கூடும் … கூடும் …

நாட்டு சர்க்கரை டீ வாங்கி பருகினால் சர்க்கரை ஏறாது என்று நம்பிக்கொண்டிருக்காமல் இனிப்பு ஏதுமில்லாமல் டீ/ காபி அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக டீ / காபியில் சீனி/ சர்க்கரை / வெல்லம் / கருப்பட்டி/ தேன் / பனங்கற்கண்டு எதுவும் போடாமல் பருகிவருகிறேன். என்னால் முடிந்தது, உங்களாலும் முடியும்.

Hba1c எனும் மூன்று மாத சர்க்கரை அளவுகளை அதன் கட்டுக்குள் வைத்திருக்க இது போன்ற எளிய நடவடிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. சில மாத்திரைகள் ஏ1சி அளவுகளை மூன்று மாதங்களில் 0.5 முதல் 1 கிராம் அளவு குறைக்கின்றன
என்று ஆய்வு செய்யப்பட்டு சந்தைக்கு வருகின்றன.

ஆனால் அதே 1கிராம் A1c ஐ நம்மால் இந்த எளிய சிறு நடவடிக்கை மாற்றம் மூலம் செய்ய முடியும். இன்று முதல் டீ/ காபிக்கு சீனி முதலிய எந்த இனிப்பையும் போடுவதில்லை என்று முடிவு செய்து பின்பற்றுவோம்.

நீரிழிவு / ரத்த கொதிப்பு உள்ள நோயர்கள் அடிக்கடி பால் டீ/ காபி அருந்துவதை தவிர்ப்பது சிறந்தது. காரணம் பாலில் உள்ள லேக்டோஸ் எனும் மாவுச்சத்து
நமது ஜீரண மண்டலத்தால் க்ளூகோஸ் மற்றும் கேலக்டோஸாக உடைக்கப்படும் Lactose in milk = galactose + glucose இந்த க்ளூகோஸ் ரத்தத்தில் கலந்ததும்
நமது கணையம் இன்சுலினை வெளியிட்டாக வேண்டும்.

டைப் டூ / டைப் ஒன்று நீரிழிவு நோயாளிகள், ரத்த கொதிப்பு நோயாளிகள் (hypertension) மெடபாலிக் சிண்ட்ரோம் (syndrome X) இருப்பவர்கள் உடல் பருமனாக (obesity) இருப்பவர்கள் PCOD (polycystic ovarian disease) கருமுட்டை நீர்க்கட்டி நோய் மேற்சொன்ன அனைவருக்கும் கீழ் உள்ள முதல் அல்லது இரண்டு அல்லது இரண்டும் சேர்ந்த குறைபாடு இருக்கும்.

படிக்க :
போலீசு வில்சன் கொலை : பாஜக-வின் கிறிஸ்தவ பாசம் ! உஷார்
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

ஒன்று, க்ளூகோஸ் உள்ளே வந்தால் கணையம் சுரக்க வேண்டிய இன்சுலினை முறையாக சுரக்காமல் போவது.. ஒன்று தேவைக்கு மீறி சுரப்பது அல்லது தேவைக்கும் குறைவாக சுரப்பது.

இரண்டு, சுரக்கப்பட்ட இன்சுலின் நமது செல்களில், தசைகளில், கல்லீரலில் முறையாக தனது பணியை செய்யாமல் போவது. இதை Insulin resistance என்கிறோம்.

இத்தகைய பிரச்சினைகளை நமது ரத்தத்தில் க்ளூகோஸ் கலக்கும் போதெல்லாம் நமது உடல் சந்திக்கும். எனவே, பால் பருகுவதை மேற்சொன்ன நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. முடியாதபட்சத்தில் ஒருநாளைய ஒட்டுமொத்த பால் கொள்முதலை 200 மில்லி என்ற அளவில் நிர்ணயம் செய்து அதையும் ஒரே வேளையில் எடுப்பது சிறந்தது.

பாலில் உள்ள இயற்கையான சர்க்கரையும் (lactose) நீரிழிவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க விடாது. அதிலும் அரைச்சீனி / கால் சீனி / முக்கால் சீனி / ஒரு பிஞ்ச் சுகர் என்று போட்டு பருகினால் இன்னும் பிரச்சனைகள்தான் கூடும் என்பதை பதிவு செய்கிறேன்.

முடிவுரை: நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க இரண்டு வழிகள் உள்ளன.

முதலாவது பாதை – மருந்துகளின் மூலம் குறைப்பது. இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் கூடும்.

இரண்டாவது பாதை – உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் குறைப்பது. இதில் பேலியோ உணவு முறை சிறந்தது. இந்த வழியில் நாம் உண்ணும் உணவுக்கு ஏற்ப மருந்துகள் குறையும்.

இரண்டில் எந்தப்பாதையில் நாம் இருக்க வேண்டும் என்பதை நாமே முடிவு செய்வோம். உலகத்தில் நம்மீது துளி இரக்கம் காட்ட விரும்பாத எதிரி கூட ஏதோ ஒரு நொடியில் நமக்காக இரக்கம் காட்டக்கூடும்.

ஆனால், இரக்கம் என்பதே சிறிதும் அறியாத இரு நோய்கள் உள்ளன. அவை
நீரிழிவும், ரத்த கொதிப்பும். இவை இரண்டையும் மருந்து மூலமாகவும் உணவுக் கட்டுப்பாட்டு மூலமாகவும் தொடர்ந்து கட்டுக்குள் வைக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது. விழித்துக்கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்..

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

காவி இருள் கிழிக்கும் நூல்கள் கீழைக்காற்று அரங்கில் !

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். வளர்ந்தது எப்படி?

”புதிய ஜனநாயகம்” இதழில் 2003 – ஜூலை முதல் நவம்பர் வரையிலான இதழ்களில் வெளியான தொடர்கட்டுரையின் மறுபதிப்பு.

… ”பித்தலாட்டக்காரர்களின் கடைசிப் புகலிடம் தேச பக்தி” என்று முதலாளிய அறிஞர் ஜான்சன் கூறினார். ஆர்.எஸ்.எஸ். போன்ற பாசிச – பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு இது முழுமையாகப் பொருந்தும். பார்ப்பன மற்றும் பார்ப்பனிய எதிர்ப்பு என்பது நாட்டிற்கு – தேசத்திற்கு எதிரான துரோகம் என்று சித்தரிப்பதன் மூலம் நாட்டுப்பற்று – தேசப்பற்று என்பதைக் கேடாகப் பயன்படுத்துவதைத் தமது மூல உத்தியாகக் கொண்டிருக்கிறார்கள். அதாவது, தேசதுரோக முத்திரை குத்தி தனது எதிராளிகளை ஒழிப்பது எளிய வழி என்று கண்டுள்ளனர். இதோடு கூடவே தனக்கு எதிரானவற்றை அந்நிய ஊடுருவல், அந்நிய ஆக்கிரமிப்பு, அந்நிய சதி என்று முத்திரை குத்தி தேசியவெறியூட்டுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

… ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன்னை ஒரு தேசியவாதப் பண்பாட்டு, சமூக இயக்கம் என்று கூறிக்கொள்கிறது. அதேபோல பாரதிய ஜனதா கட்சி தான் ஒரு சுயேட்சையான அரசியல் கட்சி என்று கூறிக்கொள்கிறது. இந்த இரண்டு கூற்றுமே உண்மை இல்லை. ஆர்.எஸ்.எஸ்-இன் ஒரு அரசியல் பிரிவுதான் பாரதீய ஜனதா கட்சி. இரண்டுக்குமே இந்து மதவெறி பாசிசக் கொள்கையான “இந்துத்துவம்” தான் வழிகாட்டும் சித்தாந்தம், இந்து ராஷ்டிரம்தான் இலட்சியம்.

… பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் முன்பு ஒருமுறை சொன்னார்:

”வெள்ளைக்காரன் ஒரு நல்ல காரியம் செய்தான். நெடுஞ்சாலைகளில் மைல் கல்லை நட்ட வெள்ளைக்கான் அதில் வெள்ளையடித்து ஊர், பேர், தூரத்தை எழுதி வைத்தான். இல்லையானால் நம்ம ஜனங்க அதற்குப் போய் பொட்டு வைத்து, மாலை போட்டு மைல்சாமி ஆக்கி இருப்பான்” நமது பாமர மக்களின் பக்தி எத்தகையது என்பது குறித்து கிண்டலாகப் பேசிய ஈ.வெ.ரா.தான் வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு, நாத்திகப் பிரச்சாரம் செய்து அந்த மூட நம்பிக்கையை ஒழிக்க அரும்பாடுபட்டார்.

ஆனால், ஆர்.எஸ்.எஸ். கும்பலோ அந்தப் பாமரப் பக்தர்களிடையே நிலவும் பக்தி உணர்வை மேலும் ஆழப்படுத்தி, பரவச்செய்து தமது பாசிச அரசியல் பேராசைகளை ஈடேற்றிக் கொண்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆகிய வகுப்புவாத மதவெறி சக்திகளை முறியடிப்பதே தமது நோக்கமென்று கூறிக்கொள்ளும் மதச்சார்பற்ற அல்லது மதநல்லிணக்க அரசியல் கட்சிகளும் கூட்டணிகளும் பாமர மக்களிடையே நிலவும் மதம், கடவுள், பக்தி உணர்வுகளை பாதித்து விடாமல் – வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போன்ற அணுகுமுறையின் மூலம் அதைச் சாதித்துவிட எத்தனிக்கிறார்கள்.

ஆனால், தேவையானது ஊசி – வாழைப்பழ அணுகுமுறை அல்ல; அறுவைச் சிகிச்சை!

பக்கங்கள்: 40
விலை: ரூ.30.00


ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தின்
ஆரிய – பார்ப்பன சாம்ராஜ்யக் கனவைத் தகர்த்தெறிவோம்!

டைக்க முடியாத கற்கோட்டையாக இருந்த தமிழகத்தை உடைத்து விட்டோம் என்று மார்தட்டுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல். நாம் என்ன செய்யப் போகிறோம்?

உடைக்க முடியாத இந்தக் கற்கோட்டையில் சாந்தாகப் பூசப்பட்டிருக்கிறது நம் முன்னோர்களின் ரத்தம். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவன் முதல் “இறைச்சி தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ? என்று பார்ப்பனியத்தின் மீது சாட்டையடி கொடுத்த சிவவாக்கிய சித்தர் வரையிலான அறிஞர்கள்; பர்ப்பன மதத்தை எதிர்த்த குற்றத்துக்காகவே கழுவிலேற்றப்பட்ட சமணர்கள், துரத்தியடிக்கப்பட்ட பவுத்தர்கள், ஆசீவகர்கள், தலைமறைவாய்க் காடுகளில் திரிய நேர்ந்த சித்தர்கள்; சாதிக்கெதிராகக் கலகம் புரிந்து கொலை செய்யப்பட்டு இன்றும் நாட்டார் தெய்வங்களாக நம்மை எச்சரிக்கும் மதுரை வீரன், முத்துப்பட்டன், ஒண்டிக் கருப்பு முதலானோர்; தமிழ் மக்களைத் தலைநிமிரச் செய்த தந்தை பெரியார்! இத்தகைய பெருமை மிக்க நீண்ட மரபின் வாரிசுகளாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

… “ஏதோ இயன்றதைச் செய்வோம் என்று முனகிப் பயனில்லை. இது போர்க்களம்; இங்கே எதைச் செய்ய வேண்டுமோ, அதைச் செய்தாக வேண்டும். பெரியாரை இனிமேல்தான் படிக்க வேண்டிய தமிழகத்தின் இளைய தலைமுறை முதல், பெரியாரைப் பார்த்தறிந்த முதியோர் வரை அனைவரும் இந்தப் போர்க்களத்தின் வீரர்களாக முடியும். போர்க்களத்தில் ஆயுதமேந்தி நிற்கும் முன்னணிப் படைக்கு ஆயிரம் வழிகளில் துணை நிற்க முடியும்.

எதிரியிடம் பணபலமும், பத்திரிகை பலமும், படைபலமும் கூட இருக்கலாம்; ஆனால் நீதி நம் பக்கமிருக்கிறது. இன்று எதிரியின் பின்னால் மக்கள் மயங்கி நடக்கலாம்; ஆனால் எல்லா மயக்கங்களையும் தெளிய வைக்கும் சித்தாந்தம் நம்மிடம் இருக்கிறது.

… இதோ, இங்கேதான் பார்ப்பனியம் புதைக்கப்பட்டிருக்கிறது என்ற வரலாற்றுப் பெருமையை தமிழ்மண் தன்மீது பொறித்துக் கொள்ளட்டும்!

பக்கங்கள் : 72
விலை: ரூ.50.00


கண்ணை மறைக்கும் காவிப்புழுதி

ருபதாம் நூற்றாண்டின் இறுதியில் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுமளவுக்கு பார்ப்பன இந்துமதவெறி பாசிஸ்டுகள் வளர்ந்து விட்டார்கள். இது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கட்சிகளோடு மட்டும் தொடர்புடையதல்ல. அதற்கு சமீபத்தில் வந்த அயோத்தி தீர்ப்பு ஒரு எடுத்துக்காட்டு.

… மக்களிடையே நிலவும் மத நம்பிக்கை என்பதை பயன்படுத்தி இந்து மதவெறியர்கள் ஏராளமான பொய் பிரச்சாரங்களை இலகுவாக கலக்கச் செய்து விடுகின்றனர். ஒரு சராசரி முசுலீம் குறித்து ஒரு சராசரி ‘இந்து’ இப்படித்தான் சிந்திக்கிறான். அப்படி பொது மக்களிடம் நிலவும் அவதூறுகளை பட்டியலிட்டு அதன் பொய்மையை இந்த நூல் போட்டுடைக்கிறது. சிறுபான்மையினர் மீதான இந்து மதவெறியரின் வெறுப்பு என்பது பெரும்பான்மையாக இருக்கும் சூத்திர, பஞ்சம மக்கள் மீதும் உள்ளது என்பதை இந்த நூல் நிரூபிக்கிறது.

… இந்தியாவில் நிலவும் பல்வேறு மொழி, மத, இன மக்களின் பண்பாட்டை அழித்து விட்டு இந்து மதவெறியர்கள் உருவாக்க நினைக்கும் பாரதப் பண்பாட்டின் அயோக்கியத்தனத்தையும் இந்த நூலின் கட்டுரைகள் அம்பலப்படுத்துகின்றன.

பக்கங்கள்: 160
விலை: ரூ.100.00


பொது சிவில் சட்டம்  – மாயையும் உண்மையும்

னது இந்து ராஷ்டிரக் கனவை நிறைவேற்றிக் கொள்வதற்கு அயோத்தி பிரச்சினைக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட பிரச்சினையாக “பொது சிவில் சட்டம்” குறித்த பிரச்சினையை பாரதீய ஜனதா எழுப்புகிறது. முசுலீம்களின் நான்கு தார மணமுறை மற்றும் மணவிலக்கு முறையை மட்டும் குறிவைத்துத் தாக்குவதன் மூலம் ‘இந்து தனிநபர் சட்டம் ‘ ரொம்பவும் முற்போக்கானது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.

“இந்திய உண்மையான மதச்சார்பற்ற நாடென்றால் எல்லா இந்தியர்களுக்கும் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டியதுதானே” என்ற பாரதீய ஜனதாவின் கேள்விக்கு, அதன் எதிர்ப்பாளர்களால் முகம் கொடுக்க முடியவில்லை. எனவே “இது முசுலீம்களுக்கு ஆதரவான போலி மதச்சார்பின்மை” என்ற பாரதீய ஜனதாவின் வாதம் பெரும்பான்மை ‘இந்து’க்களிடம் எடுபடுகிறது.

இது போலி மதச்சார்பின்மை என்ற கருத்தை இந்நூல் வேறொரு கோணத்திலிருந்து கூறுகிறது. “அரசு மற்றும் சிவில் சமூகத்தின் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தவியலாமல் மதத்தைத் துண்டிப்பது” என்ற மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்குப் பதிலாக, அனைத்து மதங்களையும் சமமாக நடத்துதல் என்ற மோசடியான விளக்கம் இந்திய மதச்சார்பின்மைக்குத் தரப்பட்டிருப்பதை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் மதம், மதச்சார்பின்மை ஆகியவை தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதுடன், மதம் – மத நம்பிக்கை குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள விளக்கங்கள் மதச்சார்பின்மைக் கோட்பாட்டுக்கே எதிரானவை என்பதை ஆதாரங்களுடன் நிறுவுகிறது இந்நூல்.

பக்கங்கள்: 64
விலை: ரூ.50.00


சென்னை புத்தகக்காட்சியில் கீழைக்காற்று !

நாள் : 09.01.2020 முதல் 21.01.2020 வரை
நேரம் : வேலை நாட்கள் : மதியம் 2 – இரவு 9 மணி
விடுமுறை நாட்கள் : முற்பகல் 11 – இரவு 9 மணி
இடம் : ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியியல் கல்லூரி மைதானம், நந்தனம், சென்னை–35

கடை எண் : 182, 183

அனைத்து முற்போக்கு நூல்களும் ஒரே கூரையின் கீழ் உங்களுக்காக காத்திருக்கிறது …

புதிய முகவரி :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

மார்க்சியம் – அறிவியல் ஒளியில் நாத்திகப் பிரச்சாரத்தை முன்னெடுப்போம் !

1
நா. வானமாமலை

இந்திய நாத்திகமும் மார்க்சியத் தத்துவமும் | நா. வானமாமலை – பாகம் – 08

மார்க்ஸ் தமது காலத்தில் உற்பத்திச்சக்திகளின் வளர்ச்சி நிலையை ஆராய்ந்தார். இவற்றின் வளர்ச்சி, வருங்காலத்தில் சமூகத்தை மாற்றியமைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது என்பதை உணர்ந்தார். இதனை உணர்ந்த காரணத்தால், வருங்காலத்தைப்பற்றி முன்னம் கூறி அதற்காகப் போராட வேண்டும் எனக் கூறினார். மனிதன் சமூக விடுதலை பெறும் காலத்தில், தற்காலிக ஊக்கியாகவோ (Stimulent – தேநீர், காபி போல), வேதனைக் குறைக்கும் மருந்தாகவோ மதம் இருக்க வேண்டியதில்லை என்று உறுதியாக அறிவித்தார்.

மார்க்ஸ் எழுதினார்:

“கடந்த காலத்தின், சமுதாய வரலாறு, வர்க்க முரண்பாடுகள், வர்க்கப் பகைமை இவற்றை, இவற்றின் வளர்ச்சி நிலைகளில் ஆராய்வதாகும். அவற்றின் வடிவங்களை அறிவதையும் வரலாறு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த சமுதாயங்களின் அமைப்புகளில் பல வேறுபாடுகள் காணப்பட்டாலும் அவையனைத்தும் ஒரு அடிப்படையான தன்மையில் ஒன்றாகவே இருக்கின்றன. அவையாவும் ஒரு சிறுபான்மைப் பிரிவினர், மற்றோர் பெரும்பான்மைப் பிரிவினரை சுரண்டுகிற அமைப்புகளே. இவ்வடிப்படைகளில் இருந்து தோன்றிய கருத்துக்களில் சில பொதுப்படையான கூறுகள் காணப்படுகின்றன. வர்க்கப் பகை ஒழியும் வரை இச்சிந்தனைகள் இருந்துதான் தீரும்.

கம்யூனிஸ்டுப் புரட்சி மரபு வழியான சொத்துரிமை உறவுகளை ஒழித்து மரபையே மாற்றுகிறது. எனவே மரபு வழியான கருத்துகளில் இருந்தும் ஒரு முறிவை உண்டாக்கிப் புதிய கருத்துக்களைப் படைக்கிறது.”

இப்புதிய கருத்துக்கள், வரலாறு முழுவதிலும் சிதறிக் காணப்படுகிற தீவிரமான, மனித நேயக் கருத்துக்களின் புதிய கால கட்டத்தின் வளர்ச்சியே.

ரஷ்யாவில் புரட்சி வெற்றி பெற்று ஐந்து ஆண்டுகள் கழித்து 1922-ல் லெனின் மதக்கருத்துக்களை எதிர்த்து நாத்திகத்தைப் பரப்ப வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மதக்கருத்துக்களின் அழுத்தம் மக்கள் மனதில், புதிய மனித நேயமும், முற்போக்கான கருத்துக்கள் வளராமல் தடைக் கல்லாக இருந்து, மக்களது விடுதலை பெற்ற உழைப்புச் சக்தி வளராமல் தடுப்பதையும் உணர்ந்து, மதக் கருத்துக்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்து விரிவான பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என அவர் எழுதினார். லெனின் எழுதினார்:

“எல்லா மொழிகளிலும் இப்பொருள் பற்றி (நாத்திகம்) எழுதப்பட்டிருக்கும் நூல்களை எல்லாம் கவனமாகப் படித்து அவற்றில் இருக்கும் முக்கியமான கருத்துக்களை விமர்சனம் செய்தல் வேண்டும். அல்லது மதிப்புரைகள் எழுத வேண்டும்,”

“எங்கெல்ஸ் தமது கால புரோலிட்டேரியன் தலைவர்களுக்கு, 18-ம் நூற்றாண்டின் தீவிரமான நாத்திக நூல்களை மொழி பெயர்க்கும்படி ஆலோசனை கூறினார். 18-வது நூற்றாண்டின் புரட்சிவாதிகளின் எழுத்துக்களில் அறிவியல் பூர்வமற்ற கருத்துக்களும், அப்பாவித்தனமான வாதங்களும் மிகுதியாக உள்ளன. ஆயினும் இவற்றையெல்லாம் சுருக்கி, அடிக்குறிப்புகள் கொடுத்து, அறிவியல் பூர்வமான மதம் பற்றிய விமர்சனங்கள் எழுத வேண்டும். 18-ம் நூற்றாண்டில் முன்னேற்றம் கண்டிருந்த மத எதிர்ப்புக் கருத்துக்களைச் சுட்டிக் காட்ட தற்காலத்தில் பதிப்பாளர்களுக்கு யாரும் தடை விதிக்கவில்லை. கோடிக்கணக்கான மக்கள் (முக்கியமாக விவசாயிகளும், தொழிலாளிகளும்) எழுத்தறியாமையிலும், மதங்கள் பிரசாரம் செய்யும் மூடத்தனத்திலும் ஆழ்ந்து கிடக்கும் பொழுது, மார்க்சீய கல்வியென்னும் நேர்வழியால் இவர்களது மனத்தில் அறிவொளி பாயச் செய்யலாம் என்று மார்க்சீயவாதிகள் கருதினால் அது பெருந்தவறாகும். இம்மக்கள் பெருங் கூட்டத்திற்கு பலவேறு விதமான நாத்திக எழுத்துக்களை அளித்தல் அவசியமானது. வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் இருந்து உண்மைகளை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் நாம் அவர்களைச் சந்திக்க வேண்டும். மத மயக்கத்தினின்றும் அவர்களை விழிப்புறச் செய்ய வேண்டும். அவர்கள் எழுச்சி பெறச் செய்வதற்கு பலவேறு முறைகளை நாம் கையாள வேண்டும். மார்க்ஸ், எங்கல்ஸ் இருவருடைய முக்கியமான நூல்களை நாம் (ரஷ்ய மொழியில்) மொழி பெயர்த்துள்ளோம். பழமையான நாத்திகம், பழமையான பொருள்முதல் வாதம் இவற்றிற்கு மார்க்ஸும், எங்கல்ஸும் அளித்த பிழைத்திருத்தங்கள் மக்கள் மனத்தைக் கவராமல் போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியதில்லை. மார்க்ஸிஸ்டுகளாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கம்யூனிஸ்டுகள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ளுவதில்லை. அறிவு வளர்ச்சி பெறாத மக்கள் மனங்களில் மதப் பிரச்சினைகள் பற்றி ஒரு அறிவுக் கூர்மையான போக்கை உண்டாக்கவும் மதம் பற்றிய அறிவுக் கூர்மையான விமர்சனம் செய்ய மக்கள் கற்றுக் கொள்ளவும் ஓர் எழுச்சியை உண்டாக்குவது தமது கடமை என்று கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும்.”

இக்கட்டுரை சில முக்கியமான விஷயங்களைச் சுட்டிக் காட்டியுள்ளது. அவையாவன:

1) இந்தியத் தத்துவங்கள் அனைத்துமே கடவுள் நம்பிக்கையைப் போதிக்கவில்லை. மாறாக, மிகப் பெரும்பான்மையானவை கடவுளை மறுக்கின்றன.

2) நமது பண்டைய நாத்திகவாதிகளின் பலவீனங்களை, மார்க்சீயம் தான் நிவர்த்தி செய்து அவர்களது நாத்திகவாதத்தை தருக்க நிலையில் இருந்து, கீழே கொணர்ந்து வாழ்க்கை நிலையோடுள்ள தொடர்பைச் சுட்டிக் காட்டுகிறது.

3) இன்று, மார்க்சியம் உலகெங்கும் பரவியுள்ள நிலையில் கூட, நமது பண்டைய நாத்திகவாதிகளின் கடவுள் மறுப்பு வாதங்கள், பயனுள்ள தர்க்க வாதங்களாகவே உள்ளன. அவற்றை முற்போக்காளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய மரபும் அதன் தற்கால வளர்ச்சியான மார்க்சீயமும் வளர்த்துள்ள நாத்திகத்தின் அடிப்படையில் பெரியாரின் நாத்திக வாதத்தை மதிப்பிட வேண்டும். மார்க்சீயவாதிகள் பெரியாரின் நாத்திகத்தை, சமூக வளர்ச்சிப் போக்கின் வெளிப்பாடாக ஆராய வேண்டும். இத்தகைய ஆராய்ச்சி இன்னும் துவங்கவில்லை.

ஆராய்ச்சி துவங்கு முன்னரே, முடிவுகளுக்கு வருவது மார்க்சீயவாதிகளின் மரபல்ல. ஆயினும் சில மேற்போக்கான கருத்துக்களை இங்கு கூறலாம்.

பெரியார் முரணற்ற நாத்திகர். “கடவுள் இல்லை, இல்லை. கடவுளை நம்புபவன் முட்டாள்” என்ற அவருடைய முழக்கங்களை, அவருடைய சிலைகளின் கீழ் செதுக்கி வைத்துள்ளார்கள். அவருடைய சுயமரியாதை இயக்கத்தில் இருந்து பிரிந்து வந்தவர்கள் கடவுளை ஒப்புக் கொண்டு நாத்திகத்தை கைவிட்டார்கள். “ஒன்றே குலமும், ஒருவனே தேவனும்” என்ற முழக்கத்தை அரசியல் சௌகரியத்துக்காக மேற்கொண்டார்கள்.

பெரியார் கடவுள் எதிர்ப்போடு, மூடநம்பிக்கைகளை எதிர்த்தும் பிரச்சாரம் செய்தார். தீமிதியின் தெய்வத் தன்மையை மறுத்து, எவ்வித விரதங்களும் இல்லாமல், கடவுள் இல்லை என்று முழங்கிக் கொண்டு அவருடைய மாணவர்கள் தீமிதி நடத்தினார்கள்.

கடவுளை, சமூகமும், அரசும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி நிலையில் படைத்தது என்ற மார்க்ஸிய சிந்தனையை அறியாமல் அவர் சமூகப் படைப்பின் ஒரு பிரிவினரான பிராமணரையே, கடவுளைப் படைத்தவர்களாகவும், தங்கள் பிழைப்புக்கு தாங்கள் படைத்த மாயையான கடவுளை பயன்படுத்தினார்கள் என்று கூறினார்.

பிராம்மணரையும், சூத்திரரையும் சமூக வரலாறு படைத்தது என்ற உண்மையை அவர் அறியவில்லை.

அவருடைய நாத்திகம் பொது அறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. அதில் விஞ்ஞானக் கொள்கைகளை அவர் பயன்படுத்தவில்லை. எனவே அது கரடுமுரடாக (Crude) இருந்தது.

அவருடைய காலத்தில் மார்க்சீயத்தைக் கற்றுணர வாய்ப்பு இருந்தது. ஆனால் அவருடைய நாத்திகத்தில் மார்க்சீயப் பொருள்முதல் வாதத்தின் தாக்கம் எதுவும் இல்லை. பண்டையப் பொருள்முதல்வாதிகள் வாதங்களின் சிலவற்றை அவர் பயன்படுத்திக் கொண்டார்.

அவருடைய நூற்றாண்டு விழாவில் ’நாத்திக சிந்தனையை மிகவும் துணிச்சலோடு மக்களிடையே பிரச்சாரம் செய்தார்’ என்பதை நினைவு கொள்வோம், அவருடைய பிரசாரம் பல நாத்திகர்களை உருவாக்கிற்று என்பதை ஒப்புக்கொள்ளலாம். ஆனால் வளர்ந்து வரும் அறிவியல் உண்மைகள், அவற்றின் அடிப்படையில் உருவாகும் அறிவியல் கொள்கைகள், இவ்வறிவியல் கொள்கைகளை கிரகித்துக் கொண்டு வளர்ச்சி பெற்று வரும் மார்க்சீய தத்துவம், இவற்றினின்று அவருடைய நாத்திகம் விலகியே நிற்கிறது. இதுவே அதனுடைய பலவீனம்.

தமிழக மார்க்சீயவாதிகள், முற்போக்காளர்கள் அவருடைய நூற்றாண்டின்போது, அவருடைய நாத்திகவாதத்தை ஆராய்ந்து, அதன் பலத்தையும் பலவீனத்தையும் அறிந்து, பெரியாரின் நாத்திகக் கருத்துக்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் கற்று, அறிவியல் அறிவின் முடிவுகளோடு இணைத்துப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

முதல் பாகம்

(முற்றும்)

« முந்தைய பாகம்

இந்திய நாத்திகமும்
மார்க்சீயத் தத்துவமும்

நா. வானமாமலை
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

2019-ம் ஆண்டு, 12 மாதங்களில் 12 நாடுகள் – புகைப்படங்கள்

0

ஜனவரி 29, 2019, பிரேசிலிய சுரங்க நிறுவனமான வேல் எஸ்.ஏ.பிரமடின் ஹோவுக்குச் (Vale SA Brumadinho) சொந்தமான தாதுக் கழிவுகள் நிரப்பும் அணை இடிந்து விழுந்த பிறகு அங்கிருந்து ஒரு மாடு மீட்கப்படுகிறது.

பிப்ரவரி 17, 2019, ஏமனின் வடமேற்கு பகுதியான ஹஜ்ஜாவில் (Hajjah) உள்ள அஸ்லம் (Aslam) மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒரு படுக்கையில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள வெறும் 10 கிலோ எடையுள்ள 12 வயதான பாத்திமா இப்ராஹிம் ஹாதி (Fatima Ibrahim Hadi) அமர்ந்திருக்கிறார்.

மார்ச் 23, 2019, மொசாம்பிக், புஜியில் உள்ள ரிங் மைதானத்தின் தங்குமிடத்தில் 11 வயதான எனியா ஜோவாகின் லூயிஸ் (Enia Joaquin Luis) 6 வயதான தன்னுடைய சகோதரி லூயிசாவுடன் (Luisa) மழையிலிருந்து பாதுகாக்கும் நெகிழித்தாள்களுக்கிடையே விழித்தெழுகிறார். மார்ச் 14, 2019 அன்று மொசாம்பிக்கின் சதுப்பு நிலங்களைத் தாக்கிய இடாய் புயலினால் (Cyclone Idai) பலி எண்ணிக்கை 417 ஆக உயர்ந்தது. ஆயிரக்கணக்கான சதுர கிலோமீட்டர் வெள்ளத்தில் மூழ்கியது. ஆறு வாரங்களுக்குப் பிறகு ஆப்பிரிக்க கண்டத்தை இதுவரை தாக்கிய புயல்களிலேயே வலிமையான புயலாக மாறிய “கென்னத்” புயலால்(Cyclone Kenneth) மறுபடியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஏப்ரல் 24, 2019, சூடானின் கார்ட்டூமில் (Khartoum) உள்ள பாதுகாப்பு அமைச்சக வளாகத்திற்கு வெளியே கை ஃபாக்ஸ் முகமூடி (Guy Fawkes mask) அணிந்த ஒரு சூடான் எதிர்ப்பாளர் தேசியக் கொடியை அசைக்கிறார்.

ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சமீபத்திய மோதல்களில் அழிக்கப்பட்ட காசா பகுதியைச் சேர்ந்த ஒரு கட்டிடத்திற்கு பக்கத்தில் பாலஸ்தீனிய குடும்பங்கள் முஸ்லீம்களின் புனித நோன்பு மாதமான 2019 மே 18 அன்று தங்களது நோன்பை முடித்துக் கொள்கின்றன.

ஜூன் 24, 2019 அன்று சால்வடோரை சேர்ந்த அகதியான ஆஸ்கார் ஆல்பர்டோ மார்டினெஸ் ராமிரெஸ் (Oscar Alberto Martinez Ramirez) மற்றும் அவரது அரவணைப்பில் இருக்கும் 23 மாத மகள் வலேரியா ஆகியோரின் உடல்கள் மெக்ஸிகோ, டமுலிபாஸ் மாநிலம், மாடமொரோஸில் உள்ள ரியோ பிராவோ (Rio Bravo) ஆற்றின் கரையோரத்தில் கிடக்கின்றன. ஒரு நல்ல வாழ்க்கையை தேடி தன்னுடைய சின்னஞ்சிறிய மகளை ராமிரெஸ் அமெரிக்கா அழைத்து செல்ல முயன்றார். ராமிரெஸ்ஸின் மனைவி டானியா வனேசா அவலோஸ் (Tania Vanessa Avalos), ஒரு நண்பரால் மீட்கப்பட்ட பின்னர் உயிர் பிழைத்ததாக டானியாவின் தாயார் தெரிவித்துள்ளார்.

ஜூலை 14, 2019 அன்று அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸில் நடைபெற்ற ஆப்பிரிக்கா நாடுகளுக்கான கோப்பையை வெல்லும் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிரான அரையிறுதி கால்பந்து ஆட்டத்தில் அல்ஜீரியா வெற்றி பெற்றதை அடுத்து அந்நாட்டின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர்.

ஆகஸ்ட் 11, 2019 அன்று, ஹாங்காங்கில் கைதிகள் பரிமாற்ற சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தின் போது பாதுகாப்பு கியர் அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலக தடுப்புப்பிரிவு போலீஸ்காரர்களை தெருவொன்றில் எதிர்கொள்கின்றனர்.

2019 செப்டம்பர் 24-ம் தேதி, பொலிவியா, காட்டுத்தீயினால் ரோபோரில் (Robore) உள்ள ராஞ்சோ கிராண்டே (Rancho Grande) கிராமத்தில் பல ஹெக்டேர் காடுகள் அழிந்த பகுதியில் பொலிவிய இராணுவத்தைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் ரோந்து செல்வதற்கு முன்பாக வரிசையில் நிற்கிறார்கள்.

ஸ்ரீநகரில் அக்டோபர் 11, 2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு தலையில் முள் கம்பியை தலையில் சுற்றிக்கொண்டு காஷ்மீரி ஒருவர் போராட்டத்தில் கலந்து கொள்கிறார். காஷ்மீருக்கான சிறப்பு அரசியலமைப்பு தகுதியை இந்திய அரசாங்கம் நீக்கியதை எதிர்த்து இந்த போராட்டம் நடந்தது.

படிக்க :
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

நவம்பர் 7, 2019 அன்று ஈராக், பாக்தாத்தில் உள்ள தஹ்ரிர் சதுக்கத்திற்கு (Tahrir Square) அருகே நடந்து வரும் போராட்டங்களின் போது “அவர்கள் எங்கள் பெண்கள்” என்ற அரபு சொற்களுடன் உள்ள சுவரோவியத்திற்கு அருகில் ஒரு பெண் அதைப்போல செய்கிறார்.

டிசம்பரில் சிலி அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது ஆர்ப்பாட்டக்காரர்களை போலீஸ்காரர் ஒருவர் துரத்தும் அதே நேரத்தில் ஒரு நபர் கோலாவைப் பருகிக் கொண்டிருக்கும் காட்சி.


நன்றி : அல்ஜசீரா
தமிழாக்கம் : சுகுமார்

சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல் ! பொன்.சேகர் உரை !

thiruvannamalai prpc Conferenceகுடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் PRPC மாநில அமைப்புச் செயலர் வழக்கறிஞர் பொன்.சேகர் ஆற்றிய உரை.

வழக்கறிஞர் பொன்.சேகர் உரை

னைவருக்கும் வணக்கம்,

“சட்டங்கெட்டச் செயல்களே சட்டமாகின்றன” என்பார் அம்பேத்கர். அதுதான் இன்று நடந்து கொண்டிருக்கிறது.

ஒரு நாட்டின் அரசியல் கட்டமைப்பு சரியாக இருந்து, சமூகக் கட்டமைப்பு சரியாக இல்லை என்றால் அது அந்த நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்.

இன்றைய அரசியல் கட்டமைப்பு மக்களுக்கு பயனளிக்கிறதா இல்லையா என்பது ஒரு பக்கம் இருந்தாலும் ஊராட்சித் தொடங்கி நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் வரை அரசியல் கட்டமைப்பில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஆனால் சமூகக் கட்டமைப்பு மட்டும் அப்படியே நீடிக்கிறது. தற்போது மோடி-அமித்ஷா கொண்டு வந்துள்ள சட்டத் திருத்தங்கள் தற்போதைய சமூகக் கட்டமைப்பை மேலும் கெட்டிப்படுத்தவே செய்யும்.

மக்களின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம்-மாண்பு ஆகியவை காக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசமைப்புச் சட்டம். ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச மனித உரிமைப் பிரகடனமும் இதைத்தான் வலியுறுத்துகிறது. 1993 மனித உரிமைகள் சட்டமும் இதைத்தான் சொல்கிறது. ஆனால் மோடி அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் இதற்கு நேர் எதிரானதாக உள்ளது.

வழக்கறிஞர் பொன்.சேகர்.

ஆர்.எஸ்.எஸ் கும்பல் நிலைநாட்டத் துடிக்கும் வருணாசிரம தர்மம் – சனாதன தர்மம் என்பது அடிப்படையிலேயே சக மனிதனின் வாழ்வுரிமை, சுதந்திரம், சமத்துவம், மாண்பு ஆகியவற்றை பறிக்கக் கூடியது. ரிக்-யஜூர்-சாம-அதர்வண எனும் நான்கு வேதங்கள், நாரதர்-யாக்ஞவல்கியர்-மனு உள்ளிட்ட பதினெட்டு ஸ்மிருதிகள்/சாஸ்திரங்கள், விஷ்ணு-பாகவதம் உள்ளிட்ட பதினெட்டு புராணங்கள், மகாபாரதம்-இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் அனைத்தும் வருணாசிரம தர்மம் மற்றும் சனாதன தர்மத்தைத்தான் வெவ்வேறு வடிவங்களில் வலியறுத்துகின்றன. கடந்த கால வரலாறும் அப்படித்தான் இருந்துள்ளது.

மனிதர்களை பிறப்பின் அடிப்படையில் வருணங்களாவும், சாதிகளாகவும் பிரித்து அவர்களிடையே ஏற்றத்தாழ்வை கற்பிப்பதுதான் வருணாசிரம தர்மம். பிரம்மாவின் தலையில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்றும், இதில் பார்ப்பானே உயர்ந்தவன், சூத்திரன் தாழ்ந்தவன் என்று பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வை கற்பிக்கிறது. மற்ற மூன்று வருணத்தாருக்கும் சேவை செய்வது சூத்திரர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. அவர்கள் வேறு எந்தத் தொழிலையும் செய்யக் கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இன்று சாதிகளுக்கிடையில் காதல் திருமணங்கள் நடப்பது போல அன்று வருணங்களுக்கிடையில் கலப்புகள் நடந்துள்ளன. மண்ணைத் தொட்டவனையும் பொண்ணைத் தொட்டவனையும் என வீர வசனம் பேசுகின்றனர் மஞ்சள் சட்டிக்காரர்கள். எத்தனை திரௌபதிகள் வந்தாலும் மனிதக் காதலை ஒருக்காலும் அழிக்க முடியாது. திரௌபதிகள் வேண்டுமானால் வீழ்வார்களேயொழிய ஒருக்காலும் காதல் வீழாது.

அன்று நான்கு வருணங்களுக்கிடையில் ஏற்பட்ட வருணக் கலப்பினால் பிறந்தவர்களை அனுலோம, பிரதிலோம, அந்தராள, பாகியா சாதிகள் என வகைப்படுத்தி அவர்களை ஊருக்கு வெளியே வாழும்படி நிர்பந்தித்தனர். இந்த சாதிகளுக்குள் ஏற்பட்ட சாதிக் கலப்பால் பிறந்தவர்களை மேலும் பல்வேறு சாதிகளாக்கி அவர்களை ஈனச் சாதிகளாக இழிபடுத்தியது பார்ப்பனியம்.

பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திர ஆணுக்கும் பிறந்தவனை சண்டாளன் என அடையாளப்படுத்தி அவனைத் தீண்டத்தகாதவனாக்கியது மனு தர்மம். இன்றைய பறையர்கள்தான் சண்டாளர்கள் எனப்படும் சேரி மக்கள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பெயர்களில் இருக்கும் சேரி மக்கள் என்பவர்கள் இவர்களே. தொழிலுக்காக இவர்கள் அலைந்து திரிய வேண்டும், கழுதை-நாயைத் தவிர வேறு சொத்துக்கள் எதையும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும், பிணத்தை எரிப்பதும் புதைப்பதும்தான் இவர்களது தொழில் எனவும் கட்டுப்பாடுகளை விதித்து அவர்களது வாழ்வுரிமையைப் பறித்தது பார்ப்பனியம்.

தீண்டத்தகாத மக்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் பிரவேசிக்கக் கூடாது என தடை விதித்தனர். பகல் நேரத்தில்கூட அரசன் கொடுத்த அடையாளத்தோடுதான் செல்ல வேண்டும். அன்றே ஆதாரை அறிமுகப்படுத்தியவர்கள் பார்ப்பனர்கள்தான். 200 ஆண்டுகளுக்கு முன்பு பேஷ்வாக்கள் ஆட்சிக் காலத்தில் புனே நகரத்திற்குள் மகர்கள் பிரவேசிக்க வேண்டுமானால் காலை 9 மணிக்குப் பிறகும் மாலை 3 மணிக்கு முன்னதாகவும்தான் வரவேண்டும் எனக் கட்டுப்பாடு விதித்தனர்.

காரணம் காலை மற்றும் மாலை நேரத்தில் நீண்ட நிழல் விழும், அந்த நிழல் பார்ப்பனர்கள் மேல்விழுந்தால் தீட்டாகிவிடும் என்பதற்காக இந்தக் கட்டுப்பாடு. மேலும் அவ்வாறு வரும் போது எச்சிலை கீழே துப்பக் கூடாது என்பதற்காக கழுத்தில் ஒரு பானையையும், பாதச்சுவடுகளை அழிப்பதற்காக முதுகுக்குப்பின்னால் நீண்ட மிலாரையும் கட்டிக் கொண்டுதான் வரவேண்டும் எனக் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. சுதந்திரமாக நடமாடக்கூட மகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்தக் கொடுமைகளுக்கு முடிவு கட்டத்தான் 200 ஆண்டகளுக்கு முன்பு ஆங்கிலேயனோடு மகர்கள் கைகோர்த்து பீமா கோரேகானில் பேஷ்வாக்களை வீழ்த்தினார்கள். இது வரலாறு.

நான்கு வருணங்களுக்கிடையிலேயே சமத்துவம் கிடையாது. நூறு வயது சத்திரியனும் பத்து வயது பார்ப்பானும் மகன்-தந்தையாகக் கருதப்பட வேண்டும் என்கிறது மனு தர்மம். தொன்னூறு வயதுக்கு மேல்தான் சூத்திரனுக்கு மரியாதை கிடைக்கும் என்கிறான் மனு. அதனால்தான் பார்ப்பனச் சிறுவர்கள்கூட பிற சாதி மக்களை அவர்கள் வயதில் மூத்தவர்களாக இருந்தாலும் பெயர் சொல்லி மரியாதைக் குறைவோடு அழைக்கிறார்கள். சாட்சி சொல்வதிலும் தண்டனை அளிப்பதிலும் சமத்துவம் இல்லை. சூத்திரன் மற்ற வருணத்தாருக்கு சாட்சி சொல்ல முடியாது. குற்றம் ஒரே தன்மையுடையதாக இருந்தாலும் பார்ப்பனர்களுக்கு குறைவான தண்டனையையும் பிற வருணத்தாருக்கு அதிகப்படியான தண்டனையையும் கொண்டதுதான் மனு தர்மம். இந்து மதத்தில் மக்களுக்கிடையில் சமத்துவம் எப்பொழுதும் இருந்ததே இல்லை.

வருண தர்மம் மக்களை கண்ணியமாக, மரியாதையாக நடத்துவதில்லை. புனிதம்-தீட்டு என்கிற கோட்பாட்டை உருவாக்கி ஒரு சாராரை தீண்டத்தகாத-பார்க்கத் தகாத மக்கள் என வகைப்படுத்துகிறது வருண தர்மம். பறையனை ஒரு பார்ப்பான் பார்த்துவிட்டால் தீட்டாகி விடுமாம். காயத்திரி மந்திரம் ஓதினால் பார்த்த தீட்டு கழிந்து விடுமாம். சண்டாளர்கள் தீண்டின பாத்திரம் எவ்வளவுதான் சுத்தம் செய்தாலும் அது சுத்தமாகாது. அதனால்தான் சேரி மக்களுக்கு குடிக்கத் தண்ணீர் கொடுக்கும் போது சொம்பில் கொடுக்காமல் படியில் கொடுப்பார்கள் அல்லது கையில் ஊற்றுவார்கள். இந்த நடைமுறை இன்றும் கிராமங்களில் இருக்கத்தானே செய்கிறது.

சேரி ஆட்கள் சாதி இந்துக்களின் வீடுகளில் சாப்பிட நேர்ந்தால் அவர்கள் சாப்பிட்ட இடத்தைத் தண்ணீர் தெளித்து மெழுகிக் கழுவுவார்கள். அதே போல கோவில் மற்றும் வீடு கட்டும் போது அது போன்ற இடங்களுக்கு சண்டாளர்கள் உள்ளிட்ட சேரி மக்கள் வேலை செய்வதற்காக வந்து போயிருப்பார்கள். அதனால் அந்த இடம் தீட்டுப்பட்டு இருக்குமாம். கிரகப் பிரவேசம் மற்றும் கும்பாபிஷேகத்தின் போது பசுமாட்டை உள்ளே ஓட்டுவது, கோமியம் தெளிப்பது, மெழுகுவது, கழுவுவது, புதுமண்ணை அள்ளிப் போடுவது இவை தீட்டுக் கழிப்புக்காக செய்யப்படும் சடங்குகளே.

சுடுகாடு, சுடுகாட்டுப் பாதை, பொதுக்கிணறு, கோவில் வழிபாடு, காதல் – சாதி மறுப்புத் திருமணங்கள் என பல்வேறு வழிகளில் இன்றும் இந்தத் தீண்டாமைக் கொடுமை இந்து மதத்தின் பெயரால் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இத்தகைய தீண்டாமைதான் ஒருசாராரை கண்ணியக் குறைவாகவும், மரியாதைக் குறைவாகவும் நடத்துவதற்கு வழி செய்கிறது. இது பார்ப்பன இந்து மதத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கம். இப்படி மதத்தின் பெயரால் ஒரு சாராரை கண்ணியக் குறைவாக நடத்தவதுதான் வருண தர்மம்-சனாதன தர்மம்.

ஒருவருடைய வாழ்வுரிமை-சுதந்திரத்தைப் பறிப்பதும், சமமாக நடத்தாததும், மாண்பைக் குறைக்கும் வகையில் கண்ணியக் குறைவாக நடத்துவதையும்தான் சட்டங்கெட்டச் செயல்கள் என்கிறார் அம்பேத்கர். இந்த சட்டங்கெட்ட செயல்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினால் இந்து தர்மத்திற்கு ஆபத்து என்கிற போர்வையில் சாதி இந்துக்கள் ஒன்று சேர்ந்து கொண்டு போராடுபவர்களை் மீது தாக்குதல் நடத்தி சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக நிலை பெறச் செய்கின்றனர். அதனால்தான் சட்டங் கெட்டச் செயல்களே சட்டமாகின்றன என்கிறார் அம்பேத்கர்.

படிக்க :
வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க !
NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

நான் எனது உரையின் துவக்கத்தில் சொன்னது போல அரசியல் கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்கள் நடந்திருந்தாலும், சமூகக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்கள் எதுவும் நடக்கவில்லை. கிராமங்களில் உள்ள ஊர்-சேரி என்கிற சமூகக் கட்டமைப்பு அப்படியேதான் நீடிக்கிறது. தீண்டாமை நீடிப்பதற்கு இந்தக் கட்டமைப்பு மிக முக்கியப் பங்காற்றுகிறது. இந்தக் கட்டமைப்பு நீடிக்கும் வரை சட்டங்கெட்டச் செயல்கள்தான் சட்டமாகிக் கொண்டிருக்கும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பவை மக்களை மத அடிப்படையில் பாகுபடுத்துகிறது. சமத்துவத்தைக் குலைக்கிறது. ஒரு சாராரின் வாழ்வுரிமையை, சுதந்திரத்தைப் பறிக்கிறது. முகாம்கள் என்ற பெயரில் புதிய வகைச் சேரிகளை உருவாக்கி அதில் அவர்களை அடைக்க முனைகிறது. முகாம்களில் கண்ணிமான வாழ்க்கைக்கு ஏது உத்தரவாதம்?

இதற்கு எதிராகப் பேசினால், போராடினால் வழக்கு, சிறை, படுகொலை  என அடக்கு முறைகளை ஏவுகிறது மோடி அரசு. ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் சாதி இந்துக்களைப் போல நேரடியாகத் தாக்குதல் தொடுக்கின்றனர். இதன் மூலம் சட்டங்கெட்டச் செயல்களையே சட்டமாக்க முனைகிறது மோடி-அமித்ஷா கும்பல்.

மீண்டும் பேஷ்வாக்கள் ஆட்சியை நிறுவ முயல்கிறது ஆா்.எஸ்.எஸ் கும்பல். எனவே ஜோதிராவ் புலே-அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளை நெஞ்சில் ஏந்துவோம். நாம் மகர்களாக அவதாரம் எடுப்போம். பீமா கோரேகான்களை நடத்திக் காட்டுவோம். சட்டங் கெட்டச் செயல்களுக்கு முடிவு கட்டுவோம்!

நன்றி! வணக்கம்.


உரை : பொன்.சேகர்

தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

சங்கிகளை வீழ்த்த வர்க்கமாய் ஒன்றிணைவோம் | காணொளிகள்

டதுசாரி இளைஞர்கள் ஒருங்கிணைப்பில், குடியுரிமைச்சட்டம் என்ற தலைப்பில் ”சகாக்களின் சங்கமம்” நிகழ்ச்சி கடந்த ஜனவரி-5 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், ”குடியுரிமை சட்டம்: ஏன், எதற்கு, எப்படி?” என்ற தலைப்பில் வழக்கறிஞர் தோழர் அருள்மொழி அவர்களும்; ”வெங்காய பொருளாதாரமும், குடியுரிமை மறுப்பும்…” என்ற தலைப்பில் தோழர் கனகராஜ் அவர்களும்; ”என்ன செய்ய வேண்டும்?” என்ற தலைப்பில் தோழர் மகிழ்நன் அவர்களும் உரையாற்றினர். இந்த சிறப்புரைகளின் காணொளிகள்!

பாஜக கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய திட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்.-ன் இலக்கான இந்து ராஷ்டிரத்தின் மனுதர்ம சட்டங்கள்தான் என்பதை வழக்கறிஞர் அருள்மொழி விவரித்துப் பேசினார்!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் மோடி அரசு எவ்வாறு தனது அரசின் தோல்விகளை மூடி மறைக்கிறது என்பதை தோழர் கனகராஜ் விளக்கினார்.

தரீதியாக நம்மை பிளவுபடுத்தும் பாஜக-வை வர்க்கமாய் ஒன்றிணைந்து எதிர்த்தால்தான் சி.ஏ.ஏ. – என்.ஆர்.சி போன்ற மக்கள் விரோத திட்டங்களை உடைக்க முடியும் என்பதை வரலாற்றுரீதியான அனுபவங்களிலிருந்து விரிவாக விளக்கினார் தோழர் மகிழ்நன்.

ன்றைய பாசிச அரசியல் சூழலை ஹிப் ஹாப் பாடல் வடிவில் பாடினார் இந்த இளைஞர்.



தொகுப்பு :
வினவு களச் செய்தியாளர்

இன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான் அக்காகிய் !

நிக்கொலாய் கோகல்

மேல்கோட்டு | The Overcoat | குறுநாவல் – பாகம் – 07

ந்த நாள்… நிச்சயமாக எந்த நாள் என்று குறிப்பிடுவது கடினம், எனினும், பெத்ரோவிச் கடைசியில் மேல் கோட்டைக் கொண்டுவந்து கொடுத்த அந்த நாள், அக்காக்கியின் வாழ்க்கையில் மிகப் பெரிய முக்கியத்துவமுள்ள நாள் என்பதில் சந்தேகமே இல்லை. பெத்ரோவிச் அதைக் கொண்டுவந்தது அதிகாலையில், அக்காக்கிய் அலுவலகம் புறப்படுவதற்குச் சற்று முன்பு. கடுங் குளிர்காலம் அப்போது தான் தொடங்கியிருந்தது, குளிரின் கடுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு போவதற்கான குறிகள் தென்பட்டன. ஆகவே, வேறு எந்தச் சமயத்திலும் மேல்கோட்டின் வருகை இப்போது போல இவ்வளவு உவப்பாக இருந்திராது. பெத்ரோவிச் நல்ல தையல்காரனுக்கு உரிய தோரணையில் தானே மேல்கோட்டை எடுத்துக்கொண்டு வந்து சேர்ந்தான். அவன் முகத்தில் அப்போது திகழ்ந்தது போன்ற ஆழ்ந்த கம்பீரத்தை அக்காக்கிய் முன்னர் கண்டதே இல்லை. தான் சாதித்த காரியம் சாதாரணமானது அன்று என்பதையும் பழங்கோட்டின் உள் துணியை மட்டும் மாற்றித் தைப்பவர்கள் அல்லது அதைப் பழுதுபார்ப்பவர்களான தையல்காரர்களிலிருந்து புதுக்கோட்டுக்கள் தயாரிக்கும் தையல் கலைஞர்களை வேறு பிரிக்கும் பெரிய வித்தியாசத்தைத் தான் வெளிப்படுத்திக் காட்டிவிட்டதையும் அவன் முழுமையாக உணர்ந்திருந்தது புலப்பட்டது.

மேல்கோட்டைப் பெரிய கைக்குட்டையால் சுற்றிக்கொண்டு வந்திருந்தான்; அப்போது தான் வெளுத்து வந்த கைக்குட்டை அது; பிரித்த அப்புறமே அதை மடித்து, உபயோகிப்பதற்காகப் பைக்குள் வைத்துக் கொண்டான். கோட்டை வெளியிலெடுத்து, கர்வந்தோன்றச் சுற்றுமுற்றும் பார்த்தான், இரு கைகளாலும் அதைப் பிடித்துக்கொண்டு அக்காக்கியின் தோள்கள் மீது லாகவமாகப் போட்டான்; பிறகு அதை இழுத்து விட்டுக் குனிந்து, பின் பக்கம் கையால் தேய்த்துச் சுருக்கங்களைப் பிரித்துச் சீர்படுத்தினான்; அப்புறம் அதை அக்காக்கிய் அக்காக்கியெவிச்சின் உடலைச் சுற்றி, முன்பக்கம் கொஞ்சம் போலத் திறந்திருக்கும்படி மாட்டினான். இளமை கடந்துபோன அக்காக்கிய், கரங்களைக் கோட்டுக் கைகளுக்குள் நுழைத்து அளவு பார்க்க விரும்பவே, பெத்ரோவிச் கைகளை நுழைக்க அவனுக்கு உதவி செய்தான். அவ்வாறு அணிந்து கொண்டபோதும் கோட்டு சரியாயிருந்தது. மேல்கோட்டு கச்சிதமாகப் பொருந்தியிருந்ததில் சந்தேகமே இல்லை.

பெத்ரோவிச் இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிடாமல், தான் விளம்பரப் பலகை மாட்டிக்கொள்ளாமல் சின்னத் தெருவில் குடியிருப்பதனாலும், அக்காக்கியை நெடுங்காலமாக அறிந்திருப்பதனாலுமே மேல்கோட்டு தைப்பதற்கு இவ்வளவு குறைவாகக் கூலி வாங்கியதாகச் சொல்லிக்கொண்டான். நெவ்ஸ்கிய் வீதியிலே கொடுத்திருந்தால் தையல் கூலி மட்டுமே எழுபத்தைந்து ரூபிள் வாங்கிக் கொண்டு விட்டிருப்பார்கள் என்றான். அக்காக்கிய் இந்த விஷயம் பற்றிப் பெத்ரோவிச்சுடன் விவாதிக்க விரும்பவில்லை. தவிர, பெருமையடிக்க பெத்ரோவிச் அள்ளிவீசிய பெரும் பெருந்தொகைகள் அவனுக்குக் கலவரமூட்டின. தையல்காரனுக்குக் கூலி கொடுத்து நன்றி கூறிவிட்டு, அக்கணமே புதிய மேல்கோட்டை அணிந்துகொண்டு அலுவலகத்துக்குக் கிளம்பினான். பெத்ரோவிச் வீதிவரை வந்து அவனை வழியனுப்பிவிட்டு, ஒரே இடத்தில் நின்று, தான் தைத்த கோட்டின் பின் அழகை நெடுநேரம் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு பிறகு, குறுக்குச் சந்து வழியாகப் பாய்ந்து சென்று தன் படைப்பான கோட்டை மீண்டுமொரு முறை வேறு கோணத்திலிருந்து, அதாவது முன்புறமிருந்து நோக்கும் பொருட்டு வீடு செல்லும் வழியை விட்டு வேண்டுமென்றே விலகி ஓடினான்.

இதற்கிடையில் அக்காக்கிய் இன்ப வெள்ளத்தில் திளைத்து களிப்பே உருவாய் நடந்தான். தான் புதிய மேல்கோட்டு அணிந்திருப்பதை அவன் கணமேனும் மறக்கவில்லை. உள்ளிருந்து பொங்கிய மன நிறைவால் பல முறை புன்முறுவல் பூத்தான். உண்மையாகவே கோட்டில் இரண்டு அனுகூலங்கள் இருந்தன: முதலாவது, கதகதப்பாயிருந்தது; இரண்டாவது, நன்றாகத் தைக்கப்பட்டிருந்தது. நடப்பதைக் கூட உணராமல் மிதந்து சென்றவன் திடீரென்று தான் அலுவலகம் சேர்ந்துவிட்டதைக் கண்டான். நடையில் மேல்கோட்டைக் கழற்றி, முன்னும் பின்னும் நன்றாகப் பார்வையிட்டுவிட்டு, வாயில் காப்போனின் விசேஷப் பொறுப்பில் ஒப்படைத்தான்.

அக்காக்கிய் புதிய மேல்கோட்டு தைத்துக்கொண்டு விட்டான், பழைய ‘கப்போத்’ காலாவதியாகிவிட்டது என்ற செய்தி எப்படியோ துறை முழுவதிலும் நொடியில் பரவிவிட்டது. அந்தக் கணமே எல்லாரும் அவனது மேல்கோட்டைப் பார்வையிடுவதற்காக வாயில் காப்போனருகே ஓடினார்கள். வாழ்த்துக்களும் வரவேற்பு மொழிகளும் அவன்மீது பொழியலாயின. முதலில் அக்காக்கிய் புன்னகை மட்டுமே புரிந்தான், பின்பு அவனுக்குக் கூச்சமாயிருந்தது. அப்புறம் எல்லாரும் அவனைச் சூழ்ந்துகொண்டு புதிய மேல்கோட்டு வந்ததைக் கொண்டாட வேண்டுமென்றும், தங்களெல்லாருக்கும் ஒரு விருந்தாவது கொடுக்க வேண்டுமென்றும் வற்புறுத்தத் தொடங்கவே அக்காக்கிய் ஒரேயடியாகக் குழப்பமடைந்து, என்ன செய்வது, என்ன சொல்வது, இந்த எக்கச்சக்கமான நிலைமையிலிருந்து எப்படி விடுபடுவது எனத் தெரியாமல் திகைத்தான். சில நிமிடங்களுக்கு அப்புறம் அவன், முகமெல்லாம் கன்றிச் சிவக்க, அது புதிய கோட்டே இல்லையென்றும், இப்படித் தான் எதோ என்றும், பழங்கோட்டே தான் என்றும் சிரித்து மழுப்பினான்.

கடைசியில் எழுத்தர்களில் ஒருவன், அதுவும் அலுவலகத்தின் உதவித் தலைமை எழுத்தன், தான் அகந்தை பிடித்தவனே அல்ல, கீழ்நிலையிலிருப்பவர்களையும் ஆளாக மதிப்பவன் எனக் காட்டிக்கொள்வதற்காகவே, “அப்படியே இருக்கட்டும்! அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்குப் பதிலாக நான் கொடுக்கிறேன் விருந்து. இன்று மாலை தேநீர் விருந்துக்கு என் வீட்டுக்கு வரும்படி எல்லாரையும் கேட்டுக்கொள்கிறேன். அதோடு கூட இன்று என் பெயர் நாளும் வாய்த்துக் கொண்டது” என்றான். எழுத்தர்கள் அனைவரும் இயல்பாகவே அவனுக்கு வாழ்த்துக் கூறி அவனது அழைப்பை விருப்புடன் ஏற்றுக் கொண்டார்கள். அக்காக்கிய் தனக்கு வசதிப்படாது என்று சொல்லிப் பார்த்தான், ஆனால் அது நடவாதெனவும், வெட்கக்கேடு, அவமானம் எனவும் எல்லாரும் சேர்ந்து ஒரே போடாய்ப் போடவே, அவன் தப்பிக்க வகையில்லாது போயிற்று. ஆயினும், இதைச் சாக்கிட்டுச் சாயங்காலமும் மேல்கோட்டைப் போட்டுக்கொண்டு நடக்கலாம் என்பது பிறகு நினைவுக்கு வந்ததும் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.

படிக்க :
நூல் அறிமுகம் : மார்க்சியம் இன்றும் என்றும் – (மூன்று நூல்கள்)
ஆளுங்கட்சி ஊழலை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் அன்பழகன் கைது ! மக்கள் அதிகாரம் கண்டனம் !

அன்று முழுவதுமே அக்காக்கிய் அக்காக்கியெவிச்சுக்கு மாபெருந் திருநாளாகத் திகழ்ந்தது. உவகை ஊற்றெடுத்துப் பொங்க வீடு திரும்பினான், மேல்கோட்டைக் கழற்றி நிதானமாகச் சுவரில் மாட்டினான், மேல்துணியையும் உள்துணியையும் பார்த்து மகிழ்ந்த வண்ணம் சிறிது நேரம் நின்றான், அப்புறம் நைந்து திரித்திரியாய்ப் போயிருந்த பழங்கோட்டை வேண்டுமென்றே வெளியிலெடுத்து, புதுக்கோட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தான். பழங்கோட்டைப் பார்த்ததும் அவனுக்கே சிரிப்பு வந்தது: புதிதற்கும் பழையதற்கும் அவ்வளவு வித்தியாசம்! சாப்பிடும் வேளை முழுவதும் தனது ‘கப்போத்’ இருந்த அவல நிலையை எண்ணி எண்ணி முறுவலித்த வண்ணமாயிருந்தான். சந்தோஷமாகச் சாப்பிட்டான், சாப்பாடு முடிந்த பிறகு நகல் எழுதவில்லை, ஓர் ஆவணங் கூட நகல் எடுக்கவில்லை, அந்தி சாயும் வரை கட்டிலில் படுத்துப் பேரின்பம் கண்டான். பின்பு வீண் காலங்கடத்தாமல் மளமள வென்று உடையணிந்து, மேல்கோட்டைத் தோளில் மாட்டிக்கொண்டு வீதிக்கு வந்தான்.

தேநீர் விருந்தளித்த எழுத்தன் திட்டமாக எங்கே வசித்து வந்தான் எனக் கூற முடியாததற்கு வருந்துகிறோம். நமது நினைவாற்றல் தீவிரமாகப் பிசகத் தொடங்கியிருக்கிறது; பீட்டர்ஸ்பர்க் நகரில் உள்ளவை எல்லாம், எல்லாத் தெருக்களும் வீடுகளும், நமது மூளையில் ஒன்றோடொன்று கலந்து குழம்பியிருப்பதால், அவற்றை ஒழுங்குபடுத்திக் காண்பது கொஞ்சம் கடினந்தான். அது எப்படியாயினும் விருந்து கொடுத்த எழுத்தன் நகரின் மிக நல்ல பகுதி ஒன்றில் வசித்தான் என்பது மட்டும், அதாவது, அக்காக்கியின் வீட்டு அருகாமையிலேயே வசிக்கவில்லை என்பது மட்டும் சந்தேகத்துக்கு இடமற்ற விஷயம்.

முதலில் அக்காக்கிய் ஆள் நடமாட்டமற்ற, விளக்கு வெளிச்சம் குறைந்த தெருக்கள் வழியே செல்ல நேர்ந்தது. ஆனால் அவன் உதவித் தலைமை எழுத்தனின் இல்லத்தை நெருங்க நெருங்க வீதிகள் கலகலவென்று மக்கள் நிறைந்து, பளிச்சிடும் விளக்கு வசதிகளோடு விளங்கின. ஆட்கள் அதிகமாக எதிர்ப்பட்டார்கள், ஒயிலாக உடையணிந்த மாதர் தென்பட்டனர். ஆடவர் பலர் விலையுயர்ந்த நீர்நாய்த்தோல் காலருடன் இலகினார்கள். பித்தளைக் குமிழ்கள் பதித்த மரக் கிராதி வடிவான வாடகை ஸ்லெட்ஜுகளுடன் எழைக் கிராம வண்டிக்காரர்கள் அரிதாகவே காணப்பட்டனர்; மாறாக, வண்டிக்காரர்கள் பெரும்பாலும் சிவப்பு மகமல் தொப்பியணிந்து எடுப்பான தோற்றத்துடன் விளங்கினார்கள், அவர்களது ஸ்லெட்ஜுகள் அரக்குச் சாயம் பூசப்பெற்று கரடித் தோல் மூடு போர்வையுடன் திகழ்ந்தன. பிரமாதமாக அலங்கரிக்கப்பட்ட பெட்டி வண்டிகள், வெண்பனி மீது சக்கரங்கள் கரகரக்க வீதிகளில் விரைந்தோடின.

அக்காக்கிய் இவற்றையெல்லாம் ஏதோ புதுமையைக் காண்பதுபோல வியந்து நோக்கினான். எத்தனையோ ஆண்டுகளாக அவன் மாலை நேரத்தில் அறையை விட்டு வெளிச் சென்றதே கிடையாது. விளக்கொளி நிறைந்த கடை சன்னல் ஒன்றின் எதிரே சில நிமிடங்கள் நின்று, அழகிய பெண்ணொருத்தி காலணியைக் கழற்றுவது போலத் தீட்டப்பட்டிருந்த வண்ண ஓவியத்தைக் கண் கொட்டாது பார்த்தான்; ஓவியப் பெண் காலணியைக் கழற்றிய விதத்தில் வடிவாக அமைந்த அவளது கால் முழுதும் தெரிந்தது; அவளுக்குப் பின்னே, கிருதாக்களும் வனப்பு வாய்ந்த குறுந்தாடியுமாக இலகிய ஆடவன் ஒருவன் பக்கத்து அறை வாயிலுக்கு வெளியே தலையை நீட்டி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அக்காக்கிய் தலையை அசைத்தான், புன்னகைத்தான், பின்பு தன் வழியே நடந்தான். எதற்காக அவன் புன்னகைத்தான்? எந்த விஷயத்தை இதற்குமுன் அவன் கண்டதே இல்லையோ, ஆயினும் எந்த விஷயத்தைப் பற்றிய ஆசை நம்மில் ஒவ்வொருவரது உள்ளத்தின் ஆழத்திலும் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ, அந்த விஷயத்தைக் கண்டதனால் நகைத்தானோ? அல்லது, வேறு பல எழுத்தர்களைப் போலவே அவனும், “அட இந்தப் பிரெஞ்சுக்காரன்கள் இருக்கிறான்களே! இவன்களை என்ன சொன்னாலும் போதாது. எதாவது அந்த மாதிரி வேண்டுமென்று ஆசை வைத்துவிட்டான்களோ, அந்த மாதிரித்தான்…” என்று நினைத்தானோ? ஒருவேளை அவன் இப்படி நினைக்கவே இல்லையோ என்னவோ. ஒருவன் உள்ளத்திலே புகுந்து அவன் எண்ணுவதை எல்லாம் தெரிந்து கொள்வது முடியாதல்லவா? கடைசியில் அவன் உதவித் தலைமை எழுத்தன் வசித்து வந்த வீட்டை அடைந்தான்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

வல்லரசுக் கனவு : முதல்ல மேல் பாக்கெட்டுல கை வச்சானுங்க ! இப்போ உள்பாக்கெட்டுல கை வச்சிட்டானுங்க !

சென்ற ஆண்டு சிறந்த அரசு நிர்வாகத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம், வேளாண்மை, தொழில்வளர்ச்சி, வணிகம், மனிதவளம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு என பத்து துறைகளில் 5.6 மதிப்பெண் தமிழகம் பெற்றுள்ளது. மத்திய மோடி அரசும், இந்தியா டுடே தேசிய ஊடகமும் 99 வகையான பதக்கங்களை எடப்பாடி அரசுக்கு வழங்கியிருக்கின்றன. மேலும் காலஞ்சென்ற ஏவுகணை மனிதர் அப்துல்கலாமின் கனவுகளும், இந்திய வல்லரசு உதயம் 2020-ம் இதில் சேர்ந்து கொண்டது. புத்தாண்டு பொங்கல் திருநாள் கொண்டாடங்களும் தமிழகத்தில் சேர்ந்து கொண்டது. அரசியல் தலைவர்களின் நல்வாழ்த்துக்கள், பழம் நழுவிப் பாலில் விழுந்து அது நழுவி வாயில் விழுந்தது போல் காட்சியளிக்கிறது.

மக்கள் உண்மையிலேயே ஆர்.எஸ்.எஸ். சங்கிகள் மற்றும் எடப்பாடி ஆட்சியின் திருப்பாற்கடலில் எப்படி மெய்மறந்து நீந்துகிறார்கள் என்பதையறிய சென்னையின் இரு முக்கிய தொழிற்பேட்டைகளைச் சுற்றி தொழிலாளர் மாணவர்களைப் பேட்டி கண்டோம்.

கிருஷ்ணமூர்த்தி, ஹரீஷ், மகேஷ், அப்துல், இராஜவேலு – கிண்டி அரசு ஐ.டி.ஐ மாணவர்கள்

”மோடி அரசு மொதல்ல நல்ல அரசே இல்ல, அப்பால எங்க நாடு வல்லரசாகும். மோடி இருக்குற வரைக்கும் இதுக்கு சான்சே இல்ல. வல்லரசா நம்ம சாதிக்கனும்னா நம்ம எல்லாரும் ஒத்துமையா வாழனும், அதுக்கு இங்க வழியில்ல. முசுலீம், இந்துன்னு நம்மள பிரிக்கிறாங்க, பொழப்புக்கு வழிசொல்லுங்கன்னு கேட்டா ‘ஆன்ட்டி இந்தியன்’னு பட்டம் கொடுக்குறாங்க.. ஆனா அவுங்க ஆட்சிக்கு நல்லாட்சி பட்டம் கெடைச்சிடுச்சுன்னு சொல்லுறாங்க, யார ஏமாத்துறதுக்கு” என்று சீறினார்கள் மாணவர்கள். அவர்களோடு நின்றுகொண்டிருந்த அப்துல் என்ற முசுலீம் மாணவனின் தோளில் தட்டி, ”இதோ இவன் முசுலீம்தான், நாங்க ஒன்னா தான் பழகுறோம், சாப்புடுறோம், அவுங்க வீட்டுக்குக் கூட நாங்க கும்பலா போவோம். இவனா எங்க எதிரி… நோ … நோ” என்று முசுலீம் நண்பனை உற்சாகமாகத் தட்டிக்கொடுத்தனர்.

ரேவதி பெருமாள், ரக்‌ஷா – எம்.பி.ஏ. மாணவர்கள் – புகைப்படம் தவிர்த்தனர்.

”இந்தியா வல்லரசாவுறது கடைசிவரைக்கும் பகல் கனவுதான். முதல்ல நம்ம எஜுகேஷன் சிஸ்டத்த அப்டேட் பண்ணச் சொல்லுங்க. வெறும் ஒன் வேர்டு ஆன்சர், ஃபில் இன் த பிளாங்கஸ்-ங்குற அப்ஜெக்டிவ் டைப்ல மனப்பாடம் பண்ணுற கல்வி முறையதான் இன்னும் தினிக்கிறாங்க. வேல தேடி வெளில போனா, தகுதி வாய்ப்பு இல்லன்னு தொரத்துறாங்க. ஆனா கையளவு ஃபோன்ல டிக்-டாக் பண்ணுற தகுதிக்குத் தான் ஸ்டூடண்ட்ச ரெடி பண்ணுறாங்க நம்ம அரசியல்வாதிங்க, ஆனா சீனாக்காரன் இந்த ஆப்-அ கொடுத்து நம்மள ஆஃப் பண்ணிட்டான். இவுங்க வேஸ்டு சார். இதோ நாங்க எம்.பி.ஏ படிச்சுட்டு புராஜெக்டுக்காக படிப்படியா ஏறி இறங்குறோம். இப்பவும் அதுக்குத்தான் அவசரமா போறோம்.”

நிகில், மங்கள் ரோஷ், ஆதேஷ், பவன் வட நாட்டு மாணவர்கள்

”இந்தியாவில் இப்போது நடக்கும் அனைத்தும் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானது. மக்களிடம் பிரிவினையைத் தூண்டி வளர்த்தால் நாடு எப்படி முன்னேறும், எங்கள் மாநிலங்கள் தமிழ்நாட்டோடு ஒப்பிடுகையில் கல்வியிலும் வளர்ச்சியிலும் மிகவும் பின் தங்கியிருக்கிறது. மோடியின் அரசியல் விரும்பத்தக்க வகையில் இல்லை. மதவெறி ஒன்று மட்டுமே இந்த நாட்டின் குறிக்கோளாக எப்படி இருக்க முடியும். வியாபார நிறுவனங்கள், விவசாயிகள் என எல்லாருமே பாதிக்கப்படும்போது இந்தியா வல்லரசாவது கனவிலும் நடக்காது.”

ராம்மோகன் – சூப்பர்வைசர் – ஹூண்டாய் நிறுவனம்

”ஹூண்டாய்-ன் கிளை நிறுவனம் ஒன்றில் நான் நிரந்தர ஊழியர். 5 வருசம் சர்விஸ்-ல 35,000 சம்பளம், ஆனா காண்டிராக்டு எம்பிளாயிக்கு இதே வேலக்கி வெறும் 15,000 தான் சம்பளம். என்ன மாதிரி பத்து பேற நிரந்தரமா வெச்சுக்கினு, 100 பேர காண்டிராக்டுக்கு எடுக்குறாங்க, இத கண்டுக்காத மாதிரி நடிக்கிறாங்க நம்ம அரசியல்வாதிங்க… இதுல வேற நாடு வல்லரசாயிடுச்சுன்னு கனவு காணச்சொல்றாங்க. எனக்கு 400 ரூபா கேஸ் சிலிண்டர் 850-க்கு விக்கிறாங்க….460 ரூபா நேரா கொடுத்து வாங்குனத விட்டுட்டு மானியம் தர்றோம்னு சொல்லி 850 ரூபாயா வெலைய ஏத்திவிட்டு இப்போ மாணியப்பணம் தர்றதே இல்ல. எனக்கே சிரமமா இருக்கும்போது காண்டிராக்டு லேபர்-லாம் எப்படி பொழக்கிறது. இப்போ அவனவன் உயிர் வாழுறதே கனவாயிடுச்சு. எதிர்காலத்த நெனச்சா பயமாயிருக்கு.”

விக்டர் – தனியார் நிறுவன ஊழியர்.

”எனக்கு இந்த பி.ஜே.பி. மேல நம்பிக்கை இல்ல. மக்களப் பிளவுபடுத்தி  மோதவிட்டு இரத்தம் குடிக்கிறது தான் பி.ஜே.பி-யின் விஷன் 2020. தற்போதைய அரசியல் நிலவரம் கலவரமாக இருக்கிறது. நாட்டுல அமைதியே நிச்சயிமில்லாத போது நீங்க பேசுறதே வேஸ்டு. ஒரு சின்ன உதாரணம், நமக்கு நம்ம வீட்டுல எப்போ மரியாத வரும், நாம சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்துனா தானே. அதுதான் நாட்டுக்கும். பி.ஜே.பி இருக்குற வரைக்கும் இதுக்கு வழியேயில்ல.”

நாகராஜ் – நாளிதழ் சூப்பர்வைசர்.

நாகராஜ், (வலது புறம்).

”நம்ம நாட்டு பொருளாதாரத்த ஐ.சி.யூ. வார்டுக்கு எடுத்துட்டு போயி சேத்துட்டாங்க. அது திரும்பவும் எப்போ ஆரோக்கியமா வெளில வரும்னு தெரியாது. வேலையில்லாத பிரச்சின இப்போ உச்சத்துக்கு போச்சு, இந்தியாவே இப்ப அத்துக்கூலி நாடா மாறிபோச்சு. ஜனங்க இப்ப உயிர்பிச்ச கேக்குறதே பெரிய போராட்டமா இருக்குது. இதுல வல்லரசு கனவு உங்களுக்கு வேடிக்கையா இல்லையா?”

ஸ்டீபன் – ஐ.டி ஊழியர்.

ஸ்டீபன்.

”என் சொந்த ஊர் தேவகோட்டை. எனக்கு வேலையில்லன்னு பிரச்சினையில்ல, போதுமான அளவுக்கு சம்பாதிக்கிறேன், தேவையானது கெடைக்கிது, அப்பா டெய்லர், அம்மா வடகம் வத்தல் போட்டு விக்கிறாங்க, என் சம்பளத்துல கொஞ்சம் அனுப்புறேன், படிச்ச கடன அடைக்கனும், எல்லா மதமும் கோபப்படாம பொறுமையா இருன்னு தான் சொல்லுது, அத வாழ்க்கையில கடைபிடிச்சா போதும். எனக்கு அரசியல் தெரிஞ்சுக்க விருப்பம் இல்ல. நான் வாட்சப், சோஷியல் மீடியா பக்கம் அதிகமா போறதில்ல, எனக்கு ஈஷா போதனைகள் பிடிக்கும், ஓய்வு நேரங்கள்-ல் ஸ்பிரிச்சுவல் கூட்டத்துக்குப் போவேன், எனக்கு நீங்க கேக்குற கேள்வி புரியல, எல்லாரும் ஒழுங்கா இருந்தா நாடும் நல்லா இருக்கும்… சிம்பிள்.”

ஆரோக்கியராஜ், கணேசன், சஞ்சீவி – திண்டுக்கல் பகுதி கட்டிட தொழிலாளர்கள்

”நாங்க செண்டிரிங் – கம்பி கட்டுற வேலையில ஸ்பெசலிஸ்டு. 700 ரூவா கூலிய இப்போ 600-ஆ குறைச்சுட்டாங்க. ஆள் அதிகமாயிடுச்சு, வேல கொறஞ்சிடுச்சு, போட்டியில நிக்க முடியல, 40 வயசு ஆனாலே இந்த வேலையில்லன்னு சொல்லுறான். சின்னப்பசங்களா கேக்குறான், வட நாட்டுக் காரனுங்களுக்கு 600-க்கு பதிலா 400 ரூவா கொடுத்துட்டு வேல வாங்குறான். ஊர்ல இந்த வேலைய செய்யாலுமுன்னு பாத்தா நாலு நாள் கூட வேலையில்ல. இங்க வந்த நம்ம பொழப்பு கல்லு மண்ணு மாதிரி ஒரு ஓரமா தகரக் கொட்டாயில போகுது. கொதிக்கிற வெயிலும் தூசியும் ஒடம்ப பாதியாக்கிடுச்சு. இதுல நாடு வல்லரசு ஆனா என்னா, ஆவலன்னா என்னா, பொங்கலுக்கு ஊருக்குப் போறதே பெரும் பாடா இருக்குது. 300 ரூவா மிச்சம் பண்ணுறதுக்காக பஸ்-ல போகாம டிரெயினுக்கு அரை நாள் ஒக்காந்து கெடக்குறோம், இதுதான் எங்க நிலம, நீங்க கேக்குற இந்திய நெலம பத்தி நாங்க என்னத்த சொல்ல….”

அன்பரசு, அபிஷேக் – கல்லூரி மாணவர்கள்

”நாங்கள் பி.பி.ஏ. படிக்கிறோம், எனக்கு (அன்பரசு) லா படிக்கனும்னு ஆசை, அவன் எம்.பி.ஏ படிச்சி ஐ.டி-யில் ஹெச்.ஆர் ஆகப்போறானாம். இப்போ எங்களுக்கு பசிக்கொடும, மத்தியானம் சாப்பாடு எடுத்துட்டு வரல, எங்கப்பா குடிகாரர், அம்மா தான் வேலைக்குப் போகுது, தங்கச்சி +2 படிக்குது. நான் ஸ்காலர்ஷிப் எழுதிப்போட்டு வரவேயில்ல. காலேஜ் லீவு நாள்ல நான் காசிமேடு போயி மீன் தூக்குற வேல, மீன் வெட்டுற வேலை செய்யுறேன். ஒரு நாளக்கி 500 ரூபா கொடுப்பாங்க. அந்த பணத்துல காலேஜுக்கு வந்து போறேன். இங்க அரசியல்வாதிங்க சரி கிடையாது, அவுங்க குடும்பம்தான் அவுங்களுக்குப் பெருசு, நாம அவுங்களுக்குத் தேவையில்ல. இதுக்கு மேல எங்கள எதுவும் கேக்காதீங்க.”

தாமோதரன் – அரசு ஊழியர்.

டி.வி, பத்திரிக்கை-ய பாக்குறதுக்கே இப்ப பயமாயிருக்குது, ஒரே கலவரம். இங்க அரசியல்வாதிங்க யாரயும் நாம தண்டிக்க முடியாது, நாடு வல்லரசாவலாம், இப்ப இருக்குற அரசியல்வாதிங்க அதுக்கு விடமாட்டாங்க, அரசுப்பணம் இவுங்க பாக்கெட்ட விட்டு வேற எங்கயும் போகக்கூடாது. மோடியும் எடப்பாடியும் மக்கள முழுசா ஏமாத்துறாங்க, நம்மள வெறுப்பேத்தி அவன் வேணா, இவன் வேணா, முசுலீம் வேணாம்னு நம்மள பிரிக்கிறாங்க, தெருவுல ரவுடித்தனம் பண்ணிக் கொள்ளையடிக்கிறவன் மாதிரிதான் இந்த அரசாங்கமும் நடந்துக்குது. கவர்மெண்ட் கணக்குப்படி மாசம் 10,000 ரூபா வருமானம் இல்லாதவன் தான் அதிகம் இருக்குறான். இந்த சாதாரண ஜனங்க இப்போ கவுரவமா பொழைக்க முடியுமா? பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, தேசிய குடியுரிமை சட்டத்திருத்தம், இது எங்க போயி நிக்கும்னு தெரியல, முதல்ல நம்ம மேல் பாக்கெட்டுல கைய வெச்சானுங்க, அடுத்து அடிப்பாக்கெட்டுக்குல கைய வெச்சானுங்க, இப்ப ஜட்டிக்குள்ளே கைய விட்டுத் துழாவுறானுங்க, வெட்கம் கெட்டவனுங்க…”


வினவு புகைப்படச் செய்தியாளர்


இதையும் பாருங்க …

BJP – RSS சோலிய முடி ! அதிர விட்ட மக்கள் அதிகாரம் முழக்கங்கள் !

SAY NO NRC ! SAY NO BJP ! Kovan Song | கோவன் பாடல் !

NRC : இந்து ராஷ்டிரத்தில் இரண்டாந்தரக் குடிமக்களாக வாழப்போகிறோமா ? | வாஞ்சிநாதன் உரை

thiruvannamalai prpc Conferenceகுடியுரிமை திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றுக்கு எதிராக மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் சார்பில் திருவண்ணாமலையில் 11.01.2020 சனிக்கிழமை அன்று மாலை நடைபெற்ற கருத்தரங்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆற்றிய உரை.

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை

னைவருக்கும் வணக்கம்,

எதிரிகளை சரியாகப் புரிந்து கொண்டால்தான் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியும். அதற்கான கூட்டம்தான் இது. 1965-ல் தொடங்கப்பட்ட ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக் கழகம் (JNU) என்பது இந்தியாவின் ஆக்ஸ்போர்டு. இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி, குறைந்த கட்டணத்தில் கல்வி அளிப்பதால்தான் அங்கு சாதாரண மக்களும் படிக்க முடிகிறது. முற்போக்கு சிந்தனையாளர்களின் குவி மையமாக JNU திகழ்கிறது. JNU-வை ஒழித்துவிட்டால் இந்துத்துவா அமைப்புகளை எதிர்க்கும் சக்திகளை ஒழித்துவிடலாம் என்கிற நோக்கத்தில்தான் 2014 முதல் JNU மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது மோடி – அமித்ஷா கும்பல். அதற்காகவே ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட எம்.ஜெகதீஷ் குமார் என்பவரை JNU துணை வேந்தராக நியமித்தது மோடி அரசு.

கல்வி மற்றும் விடுதிக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும், அவற்றைத் திரும்பப் பெறக்கோரியும், JNU மாணவர்கள் இந்த ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி பேரணி நடத்தினர். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாணவர் பிரிவான ABVP யைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்ட குண்டர்கள் போராடிய JNU மாணவர்கள் மீது ஐந்தாம் தேதி தாக்குதல் நடத்தினர். தடுக்க வந்த பேராசிரியர்களையும் தாக்கினர். இதில் JNU மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்ட பலரது மண்டைகள் உடைக்கப்பட்டன. மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறையினரின் கண் முன்னே சுமார் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக தாக்குதல் நடந்துள்ளது.  நான்காம் தேதி போராடிய மாணவர்கள் மீது வழக்கு தொடுத்த காவல்துறை, ஐந்தாம் தேதி தாக்குதல் நடத்திய ABVP குண்டர்கள் மீது எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உலகமே இந்தத் தாக்குதலை கண்டித்த போதும், முதல் தகவல் அறிக்கை எதுவும் ABVP குண்டர்கள் மீது பதிவு செய்யப்படவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக தனது ஐம்பத்தாறு இன்ச் மார்பைக் காட்டும் மோடிக்கு இது தெரியாதா? தெரியும். மோடி – அமித்ஷா கும்பலுக்குத் தெரிந்துதான் இது நடக்கிறது.

thiruvannamalai prpc Conference
வழக்கறிஞர் வாஞ்சிநாதன்

கல்வி, சிந்தனைக்கு வழி காட்டுகிறது. ஆனால், சிந்திக்கக் கூடாது என்கிறது இந்துத்துவா கும்பல். மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கச் சொல்கிறது பெரியார், காமராசர், அம்பேத்கர், கம்யூனிஸ்டுகளின் அரசியல். ஆனால், கல்வியை மறுக்கச் சொல்கிறது பார்ப்பனிய அரசியல்.

சங்க காலத்தில் கல்வியில் தமிழன் சிறந்து விளங்கியதாகக் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. சாதாரண மக்களும் கல்வி அறிவு பெற்றிருந்தனர் என்பதை கீழடி பானை எழுத்துக்கள் நிறுவுகின்றன. அதன் பிறகு நமது கல்வி எப்படி பறிபோனது? நமது பாட்டன்களும் முப்பாட்டன்களும் ஏன் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர்? இவர்கள் ஏன் படிக்கவில்லை? இவர்களது படிப்பை யார் பறித்தது? நமது மூதாதையரின் கல்வியைப் பறித்தது பார்ப்பனியம். அதனால் நமது முன்னோர்கள் சிந்தனையை இழந்தனர். அடிமைகளாக வாழ்ந்தனர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் பார்ப்பனர் அல்லாதார் ஒரு சிலர் கல்வி பெற்றனர். கல்வியால் சிந்தனை பெற்ற சிலர், பார்ப்பனியத்துக்கு எதிராகக் கேள்விகளை எழுப்பினர். சாமான்ய மக்களிடம் கல்வி பரவலாக்கப்பட்டால் சாதி – மதக் கொடுங்கோன்மை, ஏழை – பணக்காரன் ஏற்றத் தாழ்வுகள், அதானி – அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சுரண்டல் – கொள்ளைக்கு எதிராகக் கேள்விகள் எழும். இப்படிக் கேள்விகள் எழுவது ஆபத்து எனக் கருதுகிறது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.

முஸ்லீம்கள் பற்றி கேள்விகளை எழுப்பும் பா.ஜ.க., சிறு வணிகம் மற்றும் வியாபாரிகள் உள்ளிட்ட சகல தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை?

ஒப்பீட்டளவில் பிற மாநிலங்களைவிட தமிழ்நாடு கல்வியை பரவலாக்கி உள்ளது. அவர்களால் இதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனால்தான் நீட், புதிய தேசிய கல்விக் கொள்கை, ஐந்து – எட்டாம் வகுப்புகளுக்கு போதுத் தேர்வு, பின்தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு மறுப்பு உள்ளிட்ட திட்டங்கள் மூலம் சாதாரண மக்களுக்கான கல்வியை மறுக்க முனைகிறது மோடி கும்பல். பிறரது அறிவைக் கண்டு அஞ்சுகிறது பார்ப்பனியம். JNU-வைக் கண்டு அஞ்சுவதற்குக் காரணமும் அறிவுதான்.

தமிழறிஞர் நெல்லை கண்ணன் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மோடி ஒரு முட்டாள். மோடிக்கு மூளை இல்லை எனப் பேசினார். இது பொய்யா? மோடி என்றைக்காவது பத்திரிக்கையாளர்களை சந்தித்தது உண்டா? பேட்டி கொடுத்தது உண்டா? பேட்டி கொடுத்தால் மோடி ஒரு முட்டாள் என்பது தெரிந்து விடும்தானே. சாதாரண அறிவுகூட மோடிக்குக் கிடையாது. மோடி – அமித்ஷாவின் சோலிய முடி என நெல்லை கண்ணன் இயல்பாய்தான் பேசினார். அவர் பேசியதில் என்ன குற்றமிருக்கிறது.

பா.ஜ.க.காரன் ஒருவன் நெல்லை கண்ணன் மீது புகார் கொடுத்திருக்கிறான். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500 ஆகிய பிரிவுகளின் கீழ்தான் குற்றம் சுமத்தப்பட்டிருப்பதாக முதல் தகவல் அறிக்கை கூறுகிறது. இது ஒரு சாதாரண, மான நட்ட வழக்குப் பிரச்சினை. இதற்கு எதற்கு கைது? இந்த வயதில் அவர் என்ன ஓடிப் போகப் போகிறாரா? அல்லது சாட்சியங்களை கலைக்கப் போகிறாரா? அவர் பேசியதுதான் ஆதாரம். வேறு சாட்சியங்கள் பெரிதாக இதில் ஒன்றும் தேவைப்படாது. அவர் என்ன பேசினார் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு எதற்குக் கைது?

தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.-வினருக்கு எதிராகப் பேச அறிவாளிகளை அழைப்பதில்லை. முட்டாள்களைத்தான் அழைக்கின்றனர். என்னை அழைத்தால் கே.டி.ராகவன் போன்றவர்களின் சோலிய முடிச்சிருப்பேன் என்று பேசினார். இதில் என்ன குற்றமிருக்கிறது. சோலிய முடிச்சிருப்பேன் என்றால் அவனை வாதத்தால் வீழ்த்தி இருப்பேன் என்பதுதானே இதன் பொருள். இது ஒரு சாதாரண பாமரனுக்கும் புரிந்ததுதானே?

பெரியார் சிலையை உடைப்பேன் என்றும், ஐகோர்ட்டாவது மயிராவது என்றும், போராடுகின்ற மாணவர்கள் உள்ளிருந்து கல் எறிந்தால் நான் வெளியிலிருந்து வெடிகுண்டு வீசுவேன் எனப் பேசிய எச்.ராஜாவை ஏன் கைது செய்யவில்லை?

ஆண்டாள் ஒரு தேவதாசி எனக் கட்டுரை எழுதிய கவிஞர் வைரமுத்துவின் தலையை வெட்டி வா என்றும், வைரமுத்துவைக் கொலை செய்ய வேண்டுமா? வேண்டாமா, எனக் கேள்வி எழுப்பி அதற்காக பத்து இலட்சம் ரூபாய் தருவதாகப் பேசிய பா.ஜ.க வைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் மீது வழக்கு உண்டா? கைது உண்டா?

படிக்க:
ப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!

பெண் பத்திரிக்கையாளர்கள் பெரிய மனிதர்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டால்தான் உயர முடியும் எனப் பேசிய எஸ்.வி.சேகர் மீது வழக்கு உண்டா? கைது உண்டா?

அ.தி.மு.க. காரன்களெல்லாம் ஆம்பளைங்களா என ஓ.பி.எஸ்.-ஐப் பார்த்து நேருக்கு நேர் கேள்வி கேட்ட ஆடிட்டர் குருமூர்த்தி மீது புகார் உண்டா? வழக்கு உண்டா? கைது உண்டா?

இவர்கள் மீது ஒரு வழக்கும் இல்லை. இவர்களைப் பொருத்தவரை இந்தியன் பீனல் கோடு என்பது இந்தியன் பூணூல் கோடு. அவ்வளவுதான்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான அடக்குமுறை ஏவப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டால் பழி வாங்குவேன் என உத்தரப் பிரதேச முதல்வர் ஆதித்யநாத் பேசுகிறார். அங்கு 21 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஆனால் தாங்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை என காவல்துறை மறுப்பு தெரிவிக்கிறது. அப்படியானால் துப்பாக்கிச் சூடு நடத்தியது யார்? துப்பாக்கியால் சுட்டது ஆர்.எஸ்.எஸ்.காரர்கள்தான். அதற்காகவே அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் காவல் துறையினரே இஸ்லாமியர்களின் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி நகைகளைக் கொள்ளையடிக்கின்றனர். திருமணத்திற்காக வைத்திருந்த பணம் மற்றும் நகை உள்ளிட்டவற்றை ஒரு வீட்டிலிருந்து காவல்துறை கொள்ளையடித்ததை நாடே பார்த்தது. போராடிய இஸ்லாமியா ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களை நிர்வாணமாக்கி தாக்கி உள்ளது காவல்துறை. இப்படி காவல் துறையும் இந்துத்துவா கும்பலும், போராடும் மக்கள் மீதும் அப்பாவி இஸ்லாமியர்கள் மீதும் இருமுனைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

நீதி கேட்டு உச்ச நீதிமன்றம் சென்றால் முதலில் வன்முறை நிற்கட்டும் பிறகு பார்க்கலாம் என்கிறது. போராடுபவர்கள் எவரும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஆனால் காவல்துறைதான் பல இடங்களில் வன்முறையை அரங்கேற்றி உள்ளது.

சிதம்பரம் நடராசர் கோவிலில் தமிழில் பாடுவதற்குப் போராடிய போது காவல்துறையே கூட்டத்தில் கல்லெறிந்து வன்முறையைத் தூண்ட முயற்சி செய்தது. ஸடெர்லைட் எதிர்ப்பு, மெரினா – ஜல்லிக்கட்டு போராட்டங்களின் போது காவல்துறை எப்படி வன்முறையைத் தூண்டியது என்பதை உலகமே அறியும்.

10 வயது முதல் 50 வயதுவரை உள்ள பெண்களும் ஐயப்பனை வழிபடத் தடையில்லை என சபரிமலை வழக்கில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்பும் சபரிமலைக்குச் சென்ற பெண்கள் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்பட்டனர். அப்பொழுதாவது உச்சநீதிமன்றத்திற்குக் கோபம் வந்ததா? சபரிமலை வழக்கில் மிகச் சரியான விளக்கத்தைக் கொடுத்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாரிமன் போன்றவர்களை நீக்கிவிட்டு உச்ச புதியதொரு அமர்வை நீதிமன்றம் நியமிக்க வேண்டிய நோக்கம் என்ன?

காஷ்மீருக்கான 370 சிறப்புத் தகுதி நீக்கப்பட்ட பிறகு காஷ்மீர் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. திருமணம், இறுதிச் சடங்கு உள்ளிட்ட எதையும் நடத்த முடியாத அளவுக்கு அங்கு அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றால் கைவிரிக்கிறது. இதுதான் இன்றைய நாட்டு நிலைமை.

கோலம் போடுவதும், கடற்கரையில் மணற் சிற்பங்கள் வடிப்பதும் மிகச்சாதாரண நடவடிக்கையே. தமிழ் நாட்டில் கோலம் போட்டது ஒரு குற்றமா? கோலம் போடுவதற்குக்கூடவா அனுமதி வேண்டும்? காவல் சட்டம் 30(2) நடைமுறையில் இருந்தால் மட்டும்தான் நான்கு பேர் கூட, ஊர்வலம் போக, கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். காவல் சட்டம் 30(2) நடைமுறையில் இல்லாத போது எந்த அனுமதியையும் பெற வேண்டியத் தேவையில்லை. கோலம் போட்டப் பெண்ணுக்கு பாகிஸ்தானோடு தொடர்பு இருப்பதாக ஒரு காவல் ஆணையர் பேட்டி கொடுக்கிறார். இதுதான் கால்துறையின் இலட்சணம்.

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடைபெற்ற வன்முறை வருத்தமளிப்பதாக ரஜினி பேசுகிறார். போராடுகிற மக்களை வன்முறையாளர்களாகச் சித்தரிக்கிறார். ஆனால், இன்று காவல் துறையும், ABVP குண்டர்களும் வன்முறையில் ஈடுபடும் போது அமைதி காக்கிறார். அப்படியானால் இவர் யாருக்கானவர்? குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முதலில் கருத்துச் சொன்ன கமல், குருமூர்த்தியிடம் பேசிய பிறகு ஓடி ஒளிந்து கொள்கிறார்.

எதிரிகளை அறிந்து கொள்ள இந்த அரசியலை நாம் புரிந்து கொள்ள வேண்டாமா?

ஊடகங்கள் மோடி ஷூவை நக்கிப் பிழைக்கின்றன என்கிறார் கண்ணையா குமார். எதைப் பேச வேண்டும், எதைப் பேசக்கூடாது என்பதை BJP சிந்தனைக் குழாமே தீர்மானிக்கிறது. முதல் செய்தி மோடியைப் பற்றி என்றால் அதைச் செய்துவிட்டுத்தான் மற்றவற்றை செய்கின்றன ஊடகங்கள்.

இந்தச் சூழலில்தான் குடியுரிமைச் சட்டம் 1955 இல் சில முக்கியத் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது மோடி அரசு. சட்டவிரோதக் குடியேறிகள் யார் என்பதை இச்சட்டப் பிரிவு 2 வரையறை செய்கிறது. கடவுச் சீட்டு மற்றும் விசா அனுமதி இல்லாமல் இந்தியாவிற்கு வந்தவர்கள், விசா காலம் முடிந்த பிறகும் இந்தியாவில் தங்கி உள்ளவர்களைத்தான் சட்ட விரோதக் குடியேறிகள் என்கிறது சட்டம்.

சட்ட விரோதக் குடியேறிகள் பற்றி வரையறுக்க அகதிகள் சட்டம் கை கொடுக்காததால் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டுள்ளது. அதுதான் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019. இச்சட்டப்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து 2014, டிசம்பர் 31-க்கு முன்பாக இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், பார்சிக்கள், பௌத்தர்கள், ஜைனர்கள், சீக்கியர்கள் மற்றும் கிருத்தவ மதத்தைச் சார்ந்தவர்கள் இந்தியக் குடியுரிமை பெறத் தகுதி உள்ளவர்கள். மாறாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ள இஸ்லாமியர்கள் குடியுரிமை பெற முடியாது.

பூட்டான் நாட்டிலிருந்து வந்துள்ள கிருத்தவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது. இலங்கையிலிருந்து வந்துள்ள ஈழத்தமிழர்கள் அவர்கள் இந்துக்களே ஆனாலும் அவர்கள் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது. நேபாளத்திலிருந்து வந்துள்ள இந்துக்களுக்கும் இச்சட்டம் பொருந்தாது. திபெத்திலிருந்து வந்துள்ள பௌத்தர்களுக்குப் பொருந்தாது. இது மத அடிப்படையில் குடியேறிகளிடம் பாகுபாடு பார்ப்பதாகாதா?

படிக்க:
பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !

இந்தியாவில் உள்ள அனைவருக்கும், அவர்கள் வெளிநாட்டினராக இருந்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 17, 21 ஆகியவை பொருந்தும். இந்திய எல்லைக்குட்பட்ட எவரையும் (any person) சாதி-மத-இன அடிப்படையில் பாகுபடுத்திப் பார்க்கக் கூடாது என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறு. எந்த ஒரு புதிய சட்டமும் அரசமைப்புச் சட்டம் பிரிவு 14, 17, 21-ஐ மீறுகிறதா என்கிற கோணத்தில்தான் நீதிமன்றம் பரிசீலிக்க வேண்டும்.

பிரிவு 14-ன் படி ஒருவருக்கு சம பாதுகாப்பு அளிக்கப்படுகிறதா, சம உரிமை தரப்படுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும். மூன்று நாடுகளிலிருந்து மட்டும் குடியேறி உள்ள ஆறு மதத்தினருக்கு மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தும், மற்றவர்களுக்குப் பொருந்தாது என்பது சரியா? இது பிரிவு 14-ஐ அதாவது அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை மீறுகிறதா? இல்லையா?

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில்தான் மதச் சிறுபான்மையினர் துன்புறுத்தப்படுவதாகச் சொல்கிறது பா.ஜ.க. இலங்கையில் என்ன நடந்தது? பௌத்தத்தை அடிப்படையாகக் கொண்ட சிங்களப் பேரினவாதத்தால் சிறுபான்மை ஈழத் தமிழர்கள் துன்புறுத்தப்பட்டு கொன்று குவிக்கப்படவில்லையா? பௌத்த நாடான பூட்டானில் கிருத்தவர்கள் துன்புறுத்தப்படவில்லையா? மியான்மர் ஆட்சியாளர்களால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் துன்புறுத்தப்படுவதில் பௌத்தத்திற்கு பங்கில்லையா? அகதிகளைக் கையாள்வதில் மத – இன அடிப்படையில் பாகுபாடு பார்க்கிறது மோடி அரசு என்பதைத்தானே இது காட்டுகிறது.

தீண்டாமையை எந்த வடிவத்திலும் (in any form) கடைபிடிக்கக் கூடாது என்கிறது அரசமைப்புச் சட்டப் பிரிவு 21. இது பட்டியலின மக்களைப் பற்றி மட்டுமா பேசுகிறது? ஒருவரை பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைப்பதும் தீண்டாமைதான். புனிதம்-தீட்டு (purity-pollution) என்று சொல்லி மாதவிடாய் காலத்தில் பெண்கள் சபரிமலைக்கு வரக்கூடாது என ஒதுக்கி வைப்பது தீண்டாமைதான் என உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் அவர்கள் சபரிமலைத் தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளார்.

மூன்று நாடுகளிலிருந்து மட்டும் வந்துள்ள ஆறு மதப்பிரிவினருக்கு மட்டும் குடியுரிமை திருத்தச் சட்டம் பொருந்தும், மற்றவர்களுக்குப் பொருந்தாது என்பது ஒரு சாராரை ஒதுக்கி வைப்பதாகாதா?

பிராமணாள் ஓட்டல் என்று பெயர் வைத்திருந்தால், அங்கே மற்றவர்கள் நுழையக் கூடாது என்று பொருள். அன்று அப்படித்தான் இருந்தது. இது தமிழர்களையும், திராவிடர்களையும் கீழானவர்கள் என்று சொல்லவில்லையா? ஒரு தெருவில் பிராமணர்கள், செட்டியார்கள் மட்டும் நடந்து செல்லலாம் என்றால் அது மற்ற சாதியினரை ஒதுக்கி வைப்பதாகாதா? இந்தியர்களுக்கும், நாய்களுக்கும் அனுமதி இல்லை என்று வெள்ளைக்காரன் எழுதி வைத்திருந்தானே, அது ஒதுக்கி வைத்தல் இல்லையா? இழிவு இல்லையா?

பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் மேல்சாதி இந்துக்கள். அவர்களுக்கு குடியுரிமை உண்டு. ஆனால், இலங்கையிலிருந்து வந்தவர்கள் இந்துக்களாக இருந்த போதிலும் அவர்கள் தமிழர்கள், திராவிடர்கள், சூத்திர இந்துக்கள். பார்ப்பனர்களின் பார்வையில் கீழானவர்கள். அதனால்தானே ஈழத் தமிழர்கள் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டம் தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டது. எனவே மோடி – அமித்ஷா கும்பலை தீண்டாமை குற்றத்திற்காக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

குடியுரிமை என்பது அனைத்து உரிமைகளுக்கும் தாய். குடியுரிமை இல்லை என்றால் வாக்குரிமை, கல்வி, அரசு நலத்திட்டங்கள் உள்ளிட்ட வேறு எந்த உரிமைகளையும் சலுகைகளையும் பெற முடியாது. ஆப்பிரிக்க அடிமைகளைப் போல முகாம்களில்தான் வாழ நேரிடும். மோடி அமைக்கும் தடுப்பு முகாம்கள் தீண்டாமைச் சேரிகளாகவே இருக்கும். அங்கே கண்ணியமாக வாழ முடியுமா?

மன்னர் ஆட்சிக் காலத்தில் குடியுரிமை இல்லையா? ஆங்கிலேயர் காலத்தில் குடியுரிமை இல்லையா? அந்தக் காலத்தில்கூட அகதி முகாம்கள் அமைக்கப்பட வில்லையே? காட்டைத் திருத்தி, நாட்டைத் திருத்தி, இம்மண்ணை வளப்படுத்திய பூர்வகுடி மக்களாகிய நம்மிடம் கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு மாடுகள் மேய்த்துக் கொண்டு இந்தியாவிற்கு வந்த ஆரியப் பார்ப்பனக் கூட்டம் குடியுரிமைக்கான ஆதாரத்தைக் கேட்கிறது.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களுக்குத்தானே இச்சட்டம் பொருந்தும் என்கின்றனர் ஒரு சிலர். யாராய் இருந்தால் என்ன? யாதும் ஊரே யாவரும் கேளிர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதானே நமது மரபு. ஆப்ரிக்காவிலே, பாலஸ்தீனத்திலே, டெல்லியிலே, தூத்துக்குடியிலே என பாதிப்பு, எங்கே, யாருக்கு என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு குரல் கொடுப்பதுதானே மனித மாண்பு.

அரசமைப்புச் சட்டத்தின் நோக்கம் சமத்துவ சமுதாயம். இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு. அனைவரையும் கண்ணியமாக நடத்த வேண்டும். இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் அறநெறி (constitution morality). சபரிமலை வழக்கில் நீதிபதி சந்திரசூட் இதை வலியறுத்துகிறார். ஒருசிலர் பாகிஸ்தானோடு இந்தியாவை ஒப்பிடுகின்றனர். பாகிஸ்தானில் அரசு மதம் இஸ்லாம். அதனோடு மதச்சார்பற்ற இந்தியாவை ஒப்பிடுவது தவறானது. மதச்சார்பற்ற  அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, ஸ்வீடன், நார்வே போன்ற நாடுகளோடு ஒப்பிடுவதுதானே சரியாக இருக்க முடியும். அதை விடுத்து பாகிஸ்தானோடு ஒப்பிடுவது இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை உருவாக்க மட்டுமே உதவும்.

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் இந்தியா மதச் சாற்பற்ற நாடாக அறிவித்தது. இங்கு அனைத்து மதத்தினரும் சமமாக நடத்தப்படுவார்கள் என்பதால்தான் பெரும் எண்ணிக்கையிலான இஸ்லாமியர்கள் இந்தியாவையே தேர்வு செய்தனர். அன்று மதச்சார்பின்மை என்ற சர்க்கரையைக் காட்டிவிட்டு இன்று இந்து ராஷ்டிரம் என்ற நஞ்சைக் கக்குகிறார்கள். அன்றே நஞ்சைக் காட்டி இருந்தால் அவர்கள் தனியாகச் சென்றிருப்பார்களே?

காஷ்மீரிகளுக்கு கொடுத்த வாக்ககுறுதி என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரிந்ததுதானே!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு இவற்றுக்கிடையே தொடர்பு கிடையாது. இவை தனித்தனியானவை என்கிறது பா.ஜ.க. கும்பல். இது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு ஒப்பாகும். குடியுரிமைச் சட்டப் பிரிவு 3, 4-ன் படி மாவட்ட, மாநில, தேசிய அளவில் குடிமக்கள் பதிவேடு பராமரிக்கப்படும். முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பு (NPR). பிறகு தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC). இந்தப் பட்டியலில் உள்ள நபர்கள் மீது சந்தேகம் எழுந்தால் அதற்கான பட்டியல் ஒன்றை தயாரித்து வெளியிடுவார்கள். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் தாங்கள் இந்தியக் குடிமக்கள்தான் என்பதை ஆவணங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். தவறினால் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி(CAA) அவர்கள் குடியுரிமையற்றவர்களாக அறிவிக்கப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுவார்கள்.

முஸ்லிம்கள், கிருத்தவர்கள், முற்போக்காளர்கள், கம்யூனிஸ்டுகள் இவர்களில் எவர் ஒருவரையும் ஆவணங்கள் சரி இல்லை என்று கூறி சந்தேகத்திற்குரிய நபராக அறிவிக்க முடியும்.

இங்கே இருக்கிற உங்களில் எத்தனை பேருக்கு பிறப்புச் சான்றிதழ் இருக்கிறது? கையை உயர்த்துங்கள். நான்கு பேருக்கு மட்டுமே இருக்கிறது. இந்த நான்கு பேருடைய தாய் – தந்தையருக்குப் பிறப்புச் சான்றிதழ் இருக்கிறதா? இல்லை. உங்களது தாய் – தந்தையருக்கே இல்லை என்றால் உங்களது தாத்தா – பாட்டிகளுக்கு மட்டும் எப்படி இருக்கும்? எனவே உரிய ஆவணங்கள் உங்களிடம் இல்லை எனக்கூறி உங்களை சந்தேகத்திற்குரிய நபராக அறிவிப்பார்கள். 90 நாட்களுக்குள் உரிய ஆவணங்களைக் கொண்டு நீங்கள் நிரூபிக்க வேண்டும். ஒரு வேளை நீங்கள் நிரூபித்தாலும் பா.ஜ.க. வினர் யாரேனும் ஆட்சேபனை தெரிவித்தால் 30 நாட்களில் மறு விசாரைணக்கு உட்படுத்தப்படுவீர்கள். அதன் பிறகு நீங்கள் மாவட்டப் பதிவாளர், ஆணையம், நீதிமன்றம் என இங்கும் அங்கும் ஓட வேண்டும். இப்படி ஓடி ஓடியே உங்களது வாழ்க்கையும் முடிந்து விடும். பிறகு நீங்கள் எங்கே வாழ முடியும்? உங்களது வாரிசுகள்தான் எங்கே செல்ல முடியும்?

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேடு வந்த போது இதுதானே நடந்தது. அசாமில் வாழுகின்ற மூன்று கோடியே முப்பது இலட்சம் பேரில் பத்தொன்பது இலட்சம் பேர் குடியுரிமை அற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். அதில் 12 இலட்சம் பேர் இந்துக்கள். குடியுரிமை திருத்தச் சட்டத்தின்படி இந்த 12 இலட்சம் பேர் குடியுரிமை பெற்று விடுவார்கள். இந்த இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் ஒரு முக்கிய நோக்கம். மீதி 7 இலட்சம் பேர் எங்கே செல்வார்கள்? அரசு பதவி வகித்தவர்கள்கூட இதில் இருக்கிறார்களே. இவர்கள் இப்பொழுது இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க.

படிக்க:
சீமானும் அன்புத் தம்பிகளும் – ஒரு உளவியல் பார்வை | வில்லவன்
பீமா கொரேகான் : செயல்பாட்டாளர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல் !

மக்கள் மிகப்பெரிய பேராபத்தில் உள்ளனர். இதற்குப் பின்னால் ஓடினால் வேறு எதையும் நாம் செய்ய முடியாது. வேலை வாய்ப்பு, கல்வி, விவசாயம் உள்ளிட்ட நமது வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் குறித்து எதுவும் பேச முடியாது. காவிகளின் நோக்கம் இந்து ராஷ்டிரம். முஸ்லீம்களுக்கு நாடு இருப்பது போல நமக்கு ஒரு நாடு வேண்டாமா என்கிறது ஆா்.எஸ்.எஸ். கும்பல். பிரான்சிலே இருப்பவன் பிரெஞ்சுக்காரன். அமெரிக்காவிலே இருப்பவன் அமெரிக்கன். ரசியாவிலே இருப்பவன் ரசியன் என்பது போல இந்தியாவிலே இருக்கும் நாம் இந்தியர்கள்தானே. ஆனால், இந்துக்கள் என்கிறது ஆா்.எஸ்.எஸ். கும்பல்.

வருணாசிரம – சனாதன தருமமே இந்து தருமம் என்கிறார் கோல்வாக்கர்.

மோடி – அமித்ஷா கொண்டு வந்திருக்கும் இந்தச் சட்டத்திருத்தம் முஸ்லீம்களுக்கு மட்டும் எதிரானதா? எல்லோருக்கும் எதிரானதா? பணமதிப்பிழப்பு கொண்டு வந்தபோது அது பணக்காரர்களுக்கு எதிரானது என்றார்கள். சாதாரண மக்களுக்கானது என்றார்கள். ஆனால், என்ன நடந்தது? அப்பாவி மக்கள்தான் வங்கி வாசலிலே வரிசையில் நின்றார்கள். உயிரிழந்தார்கள். அம்பானி, அதானி, ரஜினி, சசிகலா, ஓ.பி.எஸ். இவர்களா வரிசையில் நின்றார்கள்? அல்லது கார்ப்பரேட்டுகளின் தொழில்தான் இதனால் பாதிக்கப்பட்டதா? சிறு தொழில்கள்தானே முடங்கின. அதனால் நாம்தானே வேலை இழந்தோம்.

ஜி.எஸ்.டி.-யால் இந்து வணிகர்கள் பாதிக்கப்படவில்லையா? இந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளவில்லையா? நீட் தேர்வால் இந்து மாணவர்களுக்கு பாதிப்பில்லையா? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற கோரிக்கையில் பயிற்சி பெற்ற அர்ச்சகர் மாணவர்களுக்கு அர்ச்சகர் வேலை மறுக்கப்படுவதால் இந்துக்கள் பாதிக்கப்படவில்லையா?  குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு என்பவை பணமதிப்பிழப்பு போன்றதுதான். இது மனித மதிப்பிழப்பு நடவடிக்கை. இதனால் முஸ்லீம்கள் மட்டுமல்ல சகல பிரிவினரும் பாதிக்கப்படுவார்கள்.

இஸ்லாமியர்களும், கிருத்தவர்களும் இந்த நாட்டிற்கு வேண்டாம் என்றால் அரபு பெட்ரோலை தவிர்த்து விட்டு நாம் மாட்டு வண்டியில்தான் போக வேண்டும். அமெரிக்கா உள்ளிட்ட அயல் நாட்டினரின் செருப்பு, மைக், பைக், கார், போன் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தக் கூடாது. இட்லி தோசைதான் சுட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

இந்த அரசு சிறுபான்மையினருக்கு எதிரானது மட்டுமல்ல பெரும்பான்மையினருக்கும் எதிரானது. வருணாசிரமம் மீண்டும் கோலோச்சினால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் மிகக்கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். மதுரை நீதிமன்றத்தில் பார்ப்பனர்களுக்கு என தனி குடிநீர் பானையும், மற்றவர்களுக்கு தனிப்பானையும் இருந்த காலம் மீண்டும் வரும்.

பார்ப்பனர் – பார்ப்னரல்லாதார் பிரச்சனையாக அது பரிணமிக்கும்.

வெளிநாட்டுத் தூதுவர்களில் 140 பேர், மாநில ஆளுநர்களில் 81% பேர், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் 90% பேர், உயர் நீதிமன்ற நீதிபதிகளில் 90% பேர் மற்றும் IB, RAW உள்ளிட்ட மிக முக்கியப் பதவிகளில் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். நாட்டின் மொத்த சொத்தில் பெரும் பகுதி குஜராத் பார்ப்பன – பனியா கும்பல் கையில்தான் உள்ளது. மோடி ஆட்சிக்காலத்தில் அம்பானியின் சொத்து பல மடங்கு உயர்ந்தது. சாமான்யர்களின் வாழ்நிலையோ தாழ்ந்து போனது. இது தொடர்ந்தால் இனி வரும் காலங்களில் குலத்தொழிலை செய்துதான் நாம் பிழைப்பு நடத்த வேண்டி வரும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறைப்படுத்தப்படும் போது குடியுரிமையற்றவர்களை அடைத்து வைக்க முகாம்கள் அமைக்க வேண்டும். இலட்சம் பேரை அடைத்து வைக்க முகாம்கள் அமைக்கவே ஒரு இலட்சத்து இருபத்து நாலாயிரம் கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும். அதன் பிறகு உணவு, பராமரிப்புச் செலவு. ஆணையங்கள் அமைக்க, நீதிமன்றங்கள் அமைக்க, அதற்கான கட்டடம், ஊழியர் சம்பளம் என ஒரு பெரும் தொகையை செலவழிக்க வேண்டும். தோராயமாக 15 இலட்சம் கோடி ரூபாய் தேவைப்படுமாம். இதற்கெல்லாம் என்ன செயயப்போகிறது அரசு? இதையும் சேர்த்துதான் நாம் சுமக்க வேண்டிவரும். நமது வாழ்க்கை மேலும் மோசமாகும்.

“ஈழத் தமிழர்கள் அந்நியர்களே” பாஜக-வின் பச்சை துரோகம்.

சட்டத்தைக் கொண்டு வந்ததும் அவர்கள்தான். நம்மைப் போராட வைத்ததும் அவர்கள்தான். அவர்களே நம்மைப் போராட வைத்து விட்டு இன்று நாம் போராடுவது குற்றம் என்கிறார்கள்.

மனித இடப்பெயர்வு உலகம் முழுதும் நடக்கிறது. ஆப்ரிக்காவிலிருந்துதான் மனித இனமே பல நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இடம் பெயர்ந்தவர்களை வெளியேற்றுவது என்று முடிவெடுத்து செயல்பட்டால் எல்லோரும் ஆப்ரிக்காவுக்குத்தான் செல்ல வேண்டும்.

குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு இவை மக்களுக்கு எதிரானவை. பணமதிப்பிழப்பின் போது அவர்களுக்குப் பின்னால் நாம் சென்றது போல் அல்லாமல் பெரியார் வழியில் ஒரு தாக்குதல் அரசியலை நாம் மேற்கொள்ள வேண்டும்.

2002-ல் குஜராத்தில் 3000 இஸ்லாமியர்களைப் படுகொலை செய்தார்கள். மௌனமாக இருந்தோம். கல்புர்கி, கௌரி லங்கேஷ், தபோல்கர், பன்சாரே போன்ற முற்போக்காளர்களைப் படுகொலை செய்தார்கள் வேடிக்கை பார்த்தோம். அடுத்து பொது சிவில் சட்டம், 2021-ல் இந்து ராஷ்டிரம் என எதிரி அடுத்தடுத்த தாக்குதலுக்குத் தயாராகிவிட்டான். நாமும் எதிரிகளுக்கு எதிராக குறிப்பாக சிறுபான்மையினர், பகுத்தறிவாளர்கள், முற்போக்காளர்கள் கம்யூனிஸ்டுகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் என அனைவரும் ஒன்றிணைவோம். ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட எதிரிகளை வீழ்த்தவில்லை என்றால் அவர்கள் அமைக்கப் போகும் இந்து ராஷ்டிரத்தில் நாம் இரண்டாந்தரக் குடிமக்களாகத்தான் வாழ நேரிடும். எனவே இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக அணி திரள்வோம்! முன்னேறுவோம்!

நன்றி, வணக்கம்!


உரை : சே.வாஞ்சிநாதன்.

தகவல் : மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

ப‌வ்லோவின் வீடு – ஸ்டாலின்கிராட் போரில் நடந்த உண்மைக்கதை

0

கலையரசன்

ர‌ண்டாம் உல‌க‌ப்போரில் முன்னேறிக் கொண்டிருந்த‌ ஜெர்ம‌ன் நாஸிப் ப‌டைக‌ள் ர‌ஷ்யாவின் உள்ளே ஸ்டாலின்கிராட் நக‌ர‌ம் வ‌ரை வ‌ந்து விட்டிருந்த‌ன‌. சோவியத் அதிபர் ஸ்டாலின் பெயர் சூட்டப்பட்டதால் மட்டும் அந்த நகரம் முக்கியத்துவம் பெறவில்லை. தெற்கே க‌வ்காஸ் பிராந்திய‌த்தில் இருந்து, வடக்கே ர‌ஷ்ய நகரங்களுக்கான எண்ணை விநியோக‌ம் ஸ்டாலின்கிராட் ஊடாக‌ ந‌ட‌ந்த‌ ப‌டியால் அது கேந்திர‌ முக்கிய‌த்துவ‌ம் வாய்ந்த‌ இட‌மாக‌வும் இருந்த‌து.

போரின் ஆரம்ப நாட்களில், நாஸிப் ப‌டைக‌ளுட‌னான‌ யுத்த‌த்தில் ஸ்டாலின்கிராட் நகரில் இருந்த‌ செம்ப‌டைக‌ள் பெரும்பாலும் வெளியேற்ற‌ப்ப‌ட்டு விட்ட‌ போதிலும், இருபது அல்லது முப்பது வீரர்களைக் கொண்ட 62- ம் ப‌டைப்பிரிவு ம‌ட்டும் உள்ளே சிக்கிக் கொண்ட‌து.

முற்றுகைக்குள் சிக்கிக் கொண்ட படையினர் “பின்வாங்காம‌ல் க‌டைசி ம‌னித‌ன் உயிருட‌ன் இருக்கும் வ‌ரை போரிட‌ வேண்டும்” என்ற‌ ஸ்டாலினின் க‌ட்ட‌ளைப்ப‌டி இறுதி மூச்சு உள்ள வ‌ரை போராடுவ‌து என்று முடிவெடுத்த‌ன‌ர். அவர்கள் ந‌க‌ர‌ ம‌த்தியில் இருந்த‌ நான்கு மாடிக் க‌ட்டிட‌ம் ஒன்றை த‌ம‌து க‌ட்டுப்பாட்டில் வைத்திருந்த‌ன‌ர். சுற்றிலும் பாதுகாப்பு அர‌ண்க‌ளை அமைத்து த‌ற்காப்பு யுத்த‌ம் ந‌ட‌த்திக் கொண்டிருந்த‌ன‌ர். அந்தப் போராட்டம் இரண்டு மாதங்கள் நீடித்தது. இறுதியில் மேலதிக படைகள் வந்து ஸ்டாலின்கிராட்டை விடுதலை செய்யும் வரையில் தாக்குப் பிடித்தனர்.

அந்த நான்கு மாடிக் கட்டிடம், 62-ம் ப‌டைப்பிரிவுத் த‌ள‌ப‌தி யாகோவ் ப‌வ்லோவின் பெய‌ரால் “ப‌வ்லோவின் வீடு” என்று அழைக்க‌ப்ப‌ட்ட‌து. அத‌னை நாஸிப் ப‌டைக‌ள் கைப்ப‌ற்ற‌ முடியாம‌ல் போன‌த‌ற்கு இர‌ண்டு கார‌ண‌ங்க‌ள் இருந்த‌ன‌. ஆர்ட்டில‌ரி போன்ற‌ க‌ன‌ர‌க‌ ஆயுத‌ங்க‌ளை பாவித்தால் ம‌றுப‌க்க‌ம் இருந்த‌ ஜெர்ம‌ன் ப‌டையின‌ர் மீதும் குண்டு விழ‌லாம்.

படிக்க :
அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !
குடியுரிமைச் சட்டம் : மோடியின் ஹிட்லர் திட்டம் ! அச்சுநூல்

அந்த வீட்டை நாஸிப் ப‌டைக‌ள் மூன்று ப‌க்க‌ங்க‌ளில் சுற்றிவ‌ளைத்திருந்த‌ன‌. ஒரு ப‌க்க‌ம் வோல்கா ஆறு ஓடியது. அத‌ன் ம‌று க‌ரையில் நின்ற‌ செம்ப‌டையின‌ர் தாக்குத‌ல் ந‌ட‌த்திக் கொண்டிருந்தார்க‌ள். அத்துட‌ன் ம‌று க‌ரையில் இருந்து ப‌வ்லோவின் வீட்டுக்கு உண‌வு, ம‌ருந்து, ஆயுத‌ங்க‌ள் விநியோக‌ம் செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌. அதுவும் ஜெர்ம‌ன் விமான‌ங்க‌ளின் குண்டு வீச்சுக்கு த‌ப்பிச் செல்ல‌ வேண்டும்.

ப‌வ்லோ.

ப‌வ்லோவின் வீட்டினுள் ஆயுத‌ங்க‌ள், தோட்டாக்க‌ள், உண‌வு, த‌ண்ணீர் எல்லாவ‌ற்றுக்கும் த‌ட்டுப்பாடு நில‌விய‌து. ப‌டைவீர‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, உரிய‌ நேர‌த்தில் வெளியேற‌ முடியாம‌ல் மாட்டிக் கொண்ட‌ பொது ம‌க்க‌ளும் அத‌ற்குள் இருந்த‌ன‌ர்.

அங்கிருந்த‌ ஒரு நிறைமாத‌க் க‌ர்ப்பிணி ஒரு பெண் குழ‌ந்தையை பிர‌ச‌வித்தாள். குழ‌ந்தையின் த‌ந்தை ஏற்க‌ன‌வே ந‌ட‌ந்த‌ போரில் கொல்ல‌ப்ப‌ட்டு விட்டார். அநேக‌மாக‌ அப்போதிருந்த‌ நிலைமையில் குழ‌ந்தையும் உயிர் பிழைப்ப‌து க‌டின‌ம் என்றே ந‌ம்ப‌ப்ப‌ட்ட‌து. ஆனால், செம்ப‌டை வீர‌ர்க‌ள் த‌ம‌து உயிரைத் துச்ச‌மாக‌ ம‌தித்து அத்தியாவ‌சிய‌ பொருட்களை கொண்டு வ‌ந்து சேர்த்து குழ‌ந்தையை காப்பாற்றி விட்ட‌ன‌ர்.

ப‌வ்லோவின் வீடு புக‌ழ் பெற்ற‌மைக்கு அன்று சோவிய‌த் அர‌சு ஊட‌க‌ங்க‌ளில் செய்ய‌ப் ப‌ட்ட‌ பிர‌ச்சார‌மும் ஒரு கார‌ண‌ம். ஸ்டாலின்கிராட் முற்றுகைக்குள் அக‌ப்ப‌ட்ட‌ செம்ப‌டைப் பிரிவின் வீர‌ஞ்செறிந்த‌ போராட்ட‌ம் ப‌ற்றிய‌ த‌க‌வ‌ல்க‌ள் உட‌னுக்குட‌ன் தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌ன‌. பிற்கால‌த்தில் த‌யாரிக்க‌ப்ப‌ட்ட‌ ஸ்டாலின்கிராட் யுத்த‌ம் ப‌ற்றிய‌ ஆவ‌ண‌ப்ப‌ட‌ங்க‌ளிலும் இந்த‌ ப‌வ்லோவின் வீடு த‌வ‌றாம‌ல் இட‌ம் பெற்ற‌து.

முகநூலில் கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி – ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!

பாபர் மசூதி  ராம ஜென்மபூமி : பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல் !

பிரபல வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா பண்டைக்கால இந்திய சமூகத்தின் வெவ்வேறு பரிமாணங்களை ஆய்வு செய்தவர்.

வரலாற்றாய்வாளர் ஜா.

மாட்டுக்கறி உண்ணும் பழக்கம் பண்டைய இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் நிலவி வந்ததை ஆதாரங்களுடன் நிறுவும் பசுவின் புனிதம்” என்ற அவரது நூல் வெளிவந்ததைத் தொடர்ந்து இந்துத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்த போதிலும் அவற்றை அச்சமின்றி எதிர்கொண்டவர் டி.என்.ஜா.

பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்தவர் ஜா.

உச்ச நீதிமன்றத்தின் அயோத்தி தீர்ப்பு வெளிவருவதற்கு இருமாதங்களுக்கு முன் (9.9.2019) தி வயர் இணைய தளத்துக்கு அவர் அளித்த பேட்டியினை இங்கே சுருக்கித் தருகிறோம்.

  • ஆசிரியர் குழு.

♦ அயோத்தி தீர்ப்பு வரவிருக்கிறது. ஒரு வரலாற்றாய்வாளர் என்ற முறையில் இப்பிரச்சனையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது நம்பிக்கைக்கும் பகுத்தறிவுக்கும் இடையிலான மோதல். ஏனென்றால், அந்த 2.77 ஏக்கர் நிலப்பரப்புக்கு உள்ளேதான் ராமன் பிறந்தான் என்பதை நிரூபிக்கவியலாது. நம்பிக்கைகளின் அடிப்படையில் வரலாற்றை எழுதவியலாது. இப்பிரச்சனை பற்றி இதுவரை எழுதப்பட்டது, பேசப்பட்டது அனைத்துக்கும் அடிப்படை வெறும் கற்பனைதான்.

♦ ராம ஜென்மபூமி – பாபர் மசூதி: வரலாற்றாய்வாளர்கள் நாட்டுக்கு வெளியிடும் அறிக்கை என்பதை வெளியிட்ட ஆய்வாளர் குழுவில் நீங்களும் இருந்தீர்கள். நீங்கள் கண்டுபிடித்தது என்ன?

நானும், சூரஜ் பான், அதர் அலி, ஆர்.எஸ்.சர்மா ஆகியோரும்தான் அந்த ஆய்வை செய்தோம். இந்தப் பிரச்சனையில் சம்மந்தப்பட்ட இரு தரப்பினர் மட்டுமின்றி, அரசுடனும் எங்களுக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை. நாங்கள் சுயேச்சையானவர்களாக இருந்த காரணத்தினாலேயே இவர்கள் யாருடைய ஆதரவும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. அனைத்து ஆவணங்களையும் தொல்லியல் சான்றுகளையும் ஆராய்ந்த பின்னர்தான் மசூதிக்கு அடியில் கோயில் ஏதும் இல்லை என்ற முடிவுக்கு நாங்கள் வந்தோம்.

♦ இந்த மோதலைத் தூண்டிவிடுவதில் இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் பாத்திரம் என்ன? மசூதிக்கு அடியில் சில தூண்களின் அடிப்பாகத்தைக் கண்டுபிடித்ததாகவும், கீழே கோயில் இருந்ததற்கு அதுவே ஆதாரம் என்றும் அவர்களது அறிக்கை கூறுகிறது. உங்கள் கருத்தென்ன?

இந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.

அயோத்தியில் முதன் முதலில் ஆய்வு நடத்திய இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் பி.பி.லால் தனது நிலைப்பாட்டை மாற்றிய வண்ணம் இருக்கிறார். அவருடைய முதல் அறிக்கையில் தூண்களின் அடிப்பாகம் பற்றி எதுவும் இல்லை. 1988 அவர் இந்திய வரலாற்றியல் ஆய்வுக் கழகத்தில் சமர்ப்பித்த அறிக்கையிலும் இது பற்றி ஏதும் இல்லை. இராமாயணத்தின் வரலாற்றுத் தன்மை குறித்து அவர் ஆற்றிய ஆய்வுரையிலும் இது பற்றி ஏதும் இல்லை. ஆனால், 1989 நவம்பரில் பாபர் மசூதிக்கு அருகே ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டவுடனே, அவர் தலைகீழாக மாறிவிட்டார். மசூதிக்கு அருகே கோயில் தூண்களின் அடிப்பாகத்தைத் தனது ஆய்வில் கண்டதாக அக்டோபர், 1990 அதாவது ஆய்வு நடந்து 15 ஆண்டுகளுக்குப் பின்னர், ஒரு ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையில் எழுதினார்.

இரண்டாவதாக, இஸ்லாம் சாராத உருவங்கள் பொறிக்கப்பட்டு, மசூதியின் நுழைவாயிலில் பதிக்கப்பட்டிருந்த 14 கருங்கல் தூண்கள் கட்டிடத்தைத் தாங்கி நிற்பவை அல்ல. அவை வெறும் அலங்காரத் தூண்கள். இதனை மேற்கொண்டு ஆய்வு செய்யும்பொருட்டு, அகழ்வாய்வுக் குறிப்புகளைக் கேட்டோம். தொல்லியல் ஆய்வு நிறுவனம் தர மறுத்துவிட்டது.

♦ அயோத்தி அகழ்வாய்வு அறிக்கை வரலாற்றாய்வாளர்களுக்கும் தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் தரப்பட்டதா? அவர்கள் அதனை மதிப்பீடு செய்தார்களா?

நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு அறிக்கையை நான் பார்க்கவில்லை. ஆனால், அதனைப் படித்த வரலாற்றாய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் அதனை வெறும் குப்பை என்று நிராகரித்து விட்டார்கள். முதலாவதாக, அந்த அகழ்வாய்வை நடத்தியவர்கள் அதற்குரிய அறிவியல்பூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றவில்லை. இரண்டாவதாக, மசூதிக்கு அடியில் ஒரு கோயில் இருந்தது என்ற முன்முடிவுடன்தான் அவர்கள் ஆய்வை நடத்தினார்கள். மூன்றாவதாக, தடயங்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. சான்றாக, மிருகங்களின் எலும்புகள், உருவங்கள் பொறித்த பானை ஓடுகள், பீங்கான் ஓடுகள் போன்றவை அகழ்வாய்வில் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவை குறித்து அறிக்கையில் ஏதும் இல்லை.

♦ ராமனுக்கு கோயில்கள் இருந்ததற்கான ஆவண ஆதாரங்கள் இந்திய வரலாற்றில் உள்ளனவா?

அயோத்தி வட்டாரத்தில் ராமன் பிறந்த இடம் இருப்பதாக முதன் முதலாக குறிப்பிடும் சமஸ்கிருத நூல் ஸ்கந்த புராணம். ஒன்றல்ல, பல ஸ்கந்த புராணங்கள் இருக்கின்றன. அது மட்டுமல்ல, இவற்றில் இடைச்செருகல்கள் ஏராளம். ஸ்கந்த புராணத்தில் இடம்பெறும் அயோத்தி மகாத்மியம் என்பதே பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும் இது கி.பி. 1600 முந்தையதல்ல.

ஸ்கந்த புராணம் நூலின் முகப்பு.

அந்த நூலில் குறிப்பிடப்படும் 30 புனிதத் தலங்களில் ஒன்றுதான் இந்த ஜென்மபூமி. வேடிக்கை என்னவென்றால், ஸ்கந்த புராணத்தில் வெறும் எட்டு பாடல்கள்தான் ராமன் பிறந்த இடம் பற்றிப் பேசுகின்றன. 100 பாடல்கள் ராமன் எந்த இடத்திலிருந்து சொர்க்கத்துக்குப் போனான் என்பதைப் பேசுகின்றன. அதாவது, விசுவ இந்து பரிசத் போன்றவர்கள் ஆதாரமாகக் கூறுகின்ற இந்த ஸ்கந்த புராணம், ராமனின் பிறந்த இடத்தைவிட, இறந்த இடத்துக்கே அதிக முக்கியத்துவம் தருகிறது.

அந்தப் புராணத்தைத் தொகுத்தவர்களுக்கு ராமனின் பிறப்பைவிட இறப்புதான் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அந்தப் புராணம் குறிப்பிடும் சுவர்க்கத் துவாரம் என்ற ராமன் இறந்த இடம், பாபர் மசூதிக்கு வெகுதொலைவில், சரயு நதிக்கரையில் இருக்கிறது.

சுமார் 1765 முன் அயோத்தி சென்றிருந்த பிரெஞ்சு ஜெசூட் பாதிரி டிஃபென்தாலர், மசூதி கட்டுவதற்காகக் கோயில் இடிக்கப்பட்டதாக முதன்முறையாகக் குறிப்பிடுகிறார். ஆனால், நீண்ட நாட்களுக்குப் பின்னர்தான் இந்தக் கருத்து பிரபலமாகிறது.

♦ அயோத்தி எப்போதுமே ஒரு புனிதத் தலமாக கருதப்பட்டிருக்கிறதா? அதற்கு வரலாற்றில் ஆதாரம் இருக்கிறதா? துளசிதாசரின் ராமசரித மானஸ் அயோத்தியைப் பற்றி என்ன சொல்கிறது?

பண்டைக்காலத்தில் அயோத்தி இந்துக்களின் புனிதத்தலமாகக் கருதப்பட்டதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 18 நூற்றாண்டில்கூட அயோத்தி ஒரு புனிதத் தலமாகக் கருதப்படவில்லை. துளசிதாசர் பிரயாகையைத்தான் (அலகாபாத்) முதன்மையான புனிதத்தலமாகக் குறிப்பிடுகிறாரேயன்றி, அயோத்தியை அல்ல.

♦ பவுத்தம், சமணம் போன்ற பிற மதங்களுக்கான மையமாகவும் அயோத்தி இருந்திருக்க வாய்ப்பு உள்ளதா?

மத்திய காலத்தின் முற்பகுதியில் அயோத்தி மிக முக்கியமான பவுத்த மையமாக இருந்திருக்கிறது. ஏழாம் நூற்றாண்டில் ஹர்ஷவர்த்தனனின் ஆட்சிக் காலத்தில் இங்கு வந்திருந்த யுவான் சுவாங் என்ற சீன யாத்திரீகர், அயோத்தியில் பவுத்தர்கள் இருந்ததைக் குறிப்பிடுகிறார். அயோத்தியில் 100 புத்த மடாலயங்கள் இருந்ததாகக் குறிப்பிடும் யுவான் சுவாங், தேவர்களுக்கான (அதாவது பார்ப்பனக் கடவுளர்களுக்கான) கோயில்கள் வெறும் பத்து மட்டுமே இருந்தன என்கிறார்.

பவுத்த, சமண நூல்கள் அயோத்தியை சாகேத் என்று அழைக்கின்றன. 24 சமணத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப நாதர் அயோத்தியில் பிறந்ததாகச் சமணர்கள் கூறுகிறார்கள். அக்பரின் வாழ்க்கை வரலாறான அக்பர் நாமாவை எழுதிய அபு பசல், யூத மதத்தைச் சேர்ந்த இரண்டு தீர்க்கதரிசிகள் அயோத்தியில் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஆகவே, அயோத்தி பல மதத்தினர்க்குப் புனிதத் தலமாக இருந்திருக்கிறது.

♦ உங்களுடைய பார்வையில் அயோத்தி பிரச்சனை எப்போது எப்படி மத முரண்பாடாக மாறியது? பாபர் மட்டுமல்ல, அவுரங்கசீப் முதல் திப்பு வரையிலான பல இசுலாமிய மன்னர்கள் பல இந்துக்  கோயில்களை இடித்து விட்டதாக இந்துத்துவக் குழுக்கள் கூறுகின்றரே!

இந்துக் கோயில்களை முஸ்லிம் மன்னர்கள் இடித்தார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். கோயில்களையோ பிற வழிபாட்டுத் தலங்களையோ இடித்துத் தள்ளுவதில் முஸ்லிம் மன்னர்களைக் காட்டிலும் இந்து மன்னர்கள்தான் மிகவும் கொடூரமான குற்றவாளிகள். எண்ணற்ற பவுத்த, சமண வழிபாட்டு இடங்களையும் மடங்களையும் இவர்கள் இடித்துத் தள்ளியிருப்பதை நிரூபிக்க முடியும். எனவே, யார் யார் எத்தனை வழிபாட்டு இடங்களை இடித்தார்கள் என்பதை நிச்சயமாக ஆராயலாம்.

இந்தியத் தொல்லியல் துறை அயோத்தியில் நடத்திய அகழாய்வு.
1949 பாபர் மசூதிக்குள் ராமர் சிலையோடு சேர்த்து
வைக்கப்பட்ட இந்துக் கடவுளர் படங்கள். (கோப்புப் படம்)

மத்திய கால இந்தியாவில் மதரீதியான மோதல்கள் இருந்ததற்கான சான்றுகள் இல்லை. ஆனால், அயோத்தியில் 1855 இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே மதரீதியான மோதல் நடைபெற்றது. அன்றைய அவத் சமஸ்தான நவாபின் அதிகாரிகள் அதனைத் தீர்த்து வைத்திருக்கிறார்கள். மசூதிக்கு வெளியே விக்கிரகங்களை வைத்துக் கொள்வதற்கு அனுமதியளித்து அந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறார்கள். இந்த இடத்தைத்தான் இன்று சீதா கி ரஸோய் (சீதையின் சமையலறை) என்று அழைக்கிறார்கள். இதற்கென ஒரு அறக்கட்டளையும் (வக்ஃப்) அன்று  உருவாக்கப்பட்டது.

1885 இந்த நிலப் பிரச்சனை இறுதியாகத் தீர்க்கப்பட்டது. மசூதி இருக்கும் இடம் முஸ்லிம்களுக்குச் சொந்தம் என்றும், சீதா கி ரஸோய் இந்துக்களுக்குச் சொந்தம் என்றும் பைசாபாத் சப் மற்றும் நீதித்துறை ஆணையர் ஆகியோர் தீர்த்து வைத்தனர். இதோடு இந்தப் பிரச்சனை முடிந்திருக்க வேண்டும். ஆனால், 1930 மதவெறி அரசியல் தலையெடுக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து நிலைமை மாறத்தொடங்கியது.

1949 மசூதிக்குள் ராமர் சிலை கள்ளத்தனமாக வைக்கப்பட்டது இந்தப் பிரச்சனையின் முக்கியமான திருப்புமுனையாகும். பின்னர் விசுவ இந்து பரிசத் உருவாக்கப்பட்டவுடன், பாபர் மசூதி இருக்கும் இடத்தில் ராமன் கோயில் கட்டுவோம் என்ற முழக்கத்தை அது எழுப்பியது. இதுதான் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்பிரச்சினை மதவெறி அரசியலாக மாறியதற்குக் காரணமாகும்.

♦ மசூதி இடிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட வழக்குகளில் வரலாற்றாய்வாளர்களையும் தொல்லியல்துறை ஆய்வாளர்களையும் நீதிமன்றங்கள் ஈடுபடுத்தியிருக்க வேண்டும் என்று  நீங்கள் கருதுகிறீர்களா?

விசுவ இந்து பரிசத் உருவாக்கி வைத்திருக்கும்
ராமர் கோயிலின் மாதிரி வடிவம்.

நிச்சயமாக. வரலாற்றாய்வாளர்களை நீதிமன்றங்கள் கலந்தாலோசித்திருக்க வேண்டும். என்னைக் கேட்டால், மசூதிக்கு அடியில் கோயில் இருந்ததா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும் பொறுப்பைத் துறைசார் வல்லுநர்களைக் கொண்ட ஒரு சர்வதேசக் குழுவிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். நீதிமன்றம் மட்டுமே ஒரு வரலாற்று உண்மை குறித்து ஆராய்ந்து முடிவு செய்துவிட முடியாது. ஆனால், வரலாற்றாய்வாளர்களும் தொல்லியல் ஆய்வாளர்களும் ஆராய்ந்து அளித்திருக்கும் அறிக்கையை, அது சிலரின் கருத்து என்று அலட்சியமாக நிராகரிக்கும் நீதிமன்றத்திடம் நாம் வேறு எதை எதிர்பார்க்க இயலும்?

♦ உங்களது குழு இந்தப் பிரச்சனை குறித்த உங்கள் அறிக்கையை இந்திய அரசிடம் அளித்தீர்களே, அதற்கு என்ன பதில் கிடைத்தது?

பிரதமர் அலுவலகத்தில் உள்ள அயோத்தி பிரிவு (ayodya cell) பொறுப்பதிகாரி வி.கே. தால் என்பவரிடம் அளித்தோம். ஆனால், அதற்கு எந்தவிதப் பதிலும் இல்லை.

♦ வரலாறு பற்றிய இத்தகைய முரண்பட்ட கண்ணோட்டங்களிலிருந்து சாதாரண மனிதன் ஒரு புரிதலுக்கு வருவது எப்படி? மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்று சொல்பவர்கள் எல்லாம் மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் மட்டும்தான் என்று இந்துத்துவ சக்திகள் கூறுகிறார்களே!

சாதாரண மனிதனுக்குப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்தில் இதனைப் புரிய வைக்க வேண்டும். இதைச் செய்வது மிகவும் கடினமான காரியம்தான். இதற்கு என்னிடம் எளிய பதில் எதுவும் இல்லை. ஆனால், மசூதிக்கு அடியில் கோயில் இல்லை என்பது மார்க்சியவாதிகளின் பிரச்சாரம் அல்ல. தங்கள் தரப்பை நிரூபிக்க முடியாத காரணத்தினால்தான் இந்துத்துவவாதிகள் மார்க்சியம் என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள்.

மொழியாக்கம் : தமிழ்

புதிய ஜனநாயகம், டிசம்பர் 2019

மின்னூல் :

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

ஃப்ரெஷ் ஜூஸ் தொடர்ந்து பருகுவது ஆபத்தானதா ?

🍌 தினமும் ஆரோக்கியம் என்று கருதி ஃப்ரெஷ் ஜூஸ் பருகுபவரா நீங்கள்?

🍋 ஜிம்முக்கு அல்லது வாக்கிங் சென்று விட்டு வரும் போது தினமும் ஜூஸ் பருகுபவரா நீங்கள்?

🍎 ஹோட்டல்களுக்கு சென்றால் கட்டாயம் கடைசியாக ஃப்ரெஷ் ஜூஸ் பருகும் பழக்கம் உள்ளவரா நீங்கள்?

🍇🍈🍉🍊🍋🍌🍍🥭🍎🍏🍐🍑🍒🍓🥝🍅

நம்மில் பலரும் தினமும் ஃப்ரெஷ் ஜூஸ் என்ற பெயரில் தினமும் தங்களுக்குப் பிடித்த பழத்தை சாறாக்கி பருகுவார்கள்.

மாதிரிப் படம்

குளிர்பானங்களை தவிர்த்து விட்டு தினமும் பழச்சாறு அருந்துவதை ஹாஸ்டலில் வசிக்கும் மாணவ மாணவிகள் செய்து வருவதை எனது கல்லூரி காலம் தொட்டுக் கண்டு வருகிறேன்.

நான் கல்லூரி காலங்களில் தினமும் பழச்சாறு அருந்தும் பழக்கத்தை ஆரோக்கியமானது என்று எண்ணி தினமும் கடைபிடித்து வந்தேன்.

பெற்றோர்கள் கூட குளிர்பானங்கள் எனும் sweetened sugar beverages குடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும், பழச்சாறு பருகுவது ஆரோக்கியமானது என்று எண்ணியே அதை ஊக்குவிப்பதைக் காண முடிகிறது.

நீரிழிவு நோயாளிகள் முதல் மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படும் நோயாளிகளுக்கு கூட பழச்சாறு தரப்படுவதைக் கண்டு வருகிறோம்.

சரி உண்மையில் மருத்துவ ஆராய்ச்சிகளின்படி பழச்சாறு அருந்துவது நல்லதா?
கெட்டதா? தொடர்ந்து பார்ப்போம்

மனிதன் பழங்களை வளர்க்க ஆரம்பித்த கடந்த ஏழாயிரம் வருடங்களில்
பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது.

மனிதன் கைப்பட்ட அனைத்தையும் தனக்கு பிடித்த மாதிரி மாற்றிக்கொள்வான் அல்லவா..

அதே போல பழங்களையும் இன்னும் அதிகம் இனிப்புள்ளதாக மாற்றி அமைத்தான்.

பழங்களின் மரபணுக்களில் மாற்றங்களைச் செய்து அதை இன்னும்
இனிப்புள்ளதாக மாற்றிக்கொண்டான்.

இதனால் பழங்களில் முன்பு எப்போதும் இல்லாத அளவு ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் எனும் மாவுச்சத்தை அதிகமாக்கினான்.

பழத்தில் ஃப்ரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் இரண்டையும் அதிகமாக்கினால் அதன் இனிப்பு சுவை கூடும்.

இன்றும் கூட மனிதன் பழங்களை விரும்பவதற்கு காரணம், அதில் இருக்கும் சத்துகள் அன்று. மாறாக பழங்களில் இருக்கும் இனிப்பு சுவையே ஆகும்.

இன்று ஒரே நாளில் அனைத்து பழங்களையும் கசப்பு சுவை உள்ளதாக மாற்றிவிட்டு அதில் இருக்கும் ஊட்டசத்துகளை அதிகப்படுத்தினால், பழங்கள் கொள்முதல் அதளபாதாளத்துக்கு சென்று விடும் என்பது கண்கூடு.

இன்று சந்தையில் அதிகமாக விரும்பி உண்ணப்படும் பழங்கள் : – வாழைப்பழம், ஆப்பிள்,மாதுளை, பலாப்பழம் ஆகியவை. மேற்சொன்ன அனைத்து பழங்களும் இனிப்பு சுவை நிரம்பியவை என்பது தெரிந்ததே!

சமீபத்தில் பதின்மூன்றே வயதான ஒரு பையனுக்கு ஸ்கேன் ரிப்போர்ட்டில் கல்லீரல் வீக்க நோய் (Fatty liver) இருந்தது. என்ன காரணம்?

அவன் மது / புகை வாசனையை நுகர்ந்தது இல்லை. அவனுக்கு என்ன பழக்கம் இருந்தது தெரியுமா? தினமும் அவனது தாய் அவன் பள்ளி முடித்து மாலை வீடு அடைந்ததும், பழச்சாறு கொடுப்பாராம். இதே போன்று சில வருடங்களாக பழச்சாறு அருந்தி வந்திருக்கின்றான் அச்சிறுவன்.

இன்னொரு 19 வயது பாலகனுக்கு கல்லீரல் ரத்தப் பரிசோதனை (Liver function test) செய்ததில் அவனது கல்லீரல் நொதிகள் அனைத்தும் அதிகமாக இருந்தன. அவன் சில வருடங்களாக ஹாஸ்டலில் இருக்கிறான். தினமும் பழச்சாறு அருந்தும் பழக்கம் கொண்டவன்.

பழங்களில் இருக்கும் ஃப்ரக்டோஸ் கல்லீரலால் மட்டுமே செரிமானம் ஆகும் மாவுச்சத்தாகும். ஃப்ரக்டோஸை அளவுக்கு மீறி எடுக்கும் போது நமது கல்லீரல் தடுமாறுவது திண்ணம். மேலும், ஃப்ரக்டோஸ் அளவுகள் அதிகமாக இருக்கும் போது கல்லீரல் அவற்றை கொழுப்புச்சத்தாக மாற்றி கல்லீரலில் சேமிக்கும். (De Novo Lipogenesis)

இதனால் கல்லீரல் ஸ்தம்பித்து கல்லீரல் வீக்க நோய் (Fatty Liver Disease) ஏற்படும். இந்த வீக்க நோய் முற்றி கல்லீரல் செயலிழக்கும் நிலை ஏற்படலாம். பதின்மூன்று வயதில் கல்லீரல் வீக்க நோய் இருந்தால் அது எந்த வயதில் கல்லீரல் சுருக்க நோயாக (cirrhosis) மாறும் என்று கற்பனை கூட செய்யமுடியவில்லை.

பழச்சாறுகளில் உள்ள அடுத்த பிரச்சனை அதில் கலக்கப்படும் “சீனி” பழங்களின் இனிப்பு போதாதென்று அதில் மூன்று முதல் நான்கு ஸ்பூன் சீனி கலந்து தான் அனைத்து பழச்சாறுகளும் போடப்படுகின்றன.

படிக்க:
சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது மட்டுமே இராணுவத்தின் பணி !
ஒரு மாயத் தோற்றம் மக்கள் மனத்தை வலுவாகக் கவர்ந்து கொண்டது ஏன் ?

மாம்பழ ஜூஸில் கூட சீனி கலந்து போடுவதை காண்கிறேன்.
சீனி = சுக்ரோஸ் (sucrose); பழங்கள் = ஃப்ரக்டோஸ் + சுக்ரோஸ் (fructose + sucrose); பழச்சாறு = சீனி + பழங்கள்; பழச்சாறு = சுக்ரோஸ்(sucrose) + ஃப்ரக்டோஸ் (fructose); ஒரே நேரத்தில் சுக்ரோஸும் ஃப்ரக்டோசும் ரத்தத்தில் ஏறினால், இன்சுலின் வேலை செய்யாமல் (Insulin Resistance) கொழுப்பு அதிகம் உடலில் சேர்ந்து உடல் பருமன்(Obesity) வருகிறது.

சீக்கிரம் டைப் டூ டயாபடிஸ்(Type II diabetes) வருகிறது. பெண்களுக்கு PCOD நோய் வருகிறது. சில ஆய்வு முடிவுகள் தினமும் சீனி கலந்த பழச்சாறு அருந்தினால் இதய நோய் மற்றும் மரணம் சீக்கிரம் நிகழ்கிறது என்று பயமுறுத்துகின்றன. இது அனைத்தையும் ஆரோக்கியமானது என்று பருகப்படும் பழச்சாறுகள் தான் செய்கின்றன.

மேலும் பழச்சாறாக அருந்தும் போது பழங்களில் உள்ள நார்ச்சத்து(Fibre) இல்லாமல் போகிறது.

பழச்சாறுகளை பெரியவர்கள்/ நோயாளிகள் பருகித்தான் ஆக வேண்டுமென்றால்
சீனி போடாமல் பருக வேண்டும். பழங்களை சாறாக்கி பருகாமல் உண்பதே சிறந்தது. அளவாக பழங்கள் உண்பது நல்லது. மூன்று வேளை உணவாக பழங்களை மட்டும் உண்டு வாழ்வது நல்லதல்ல.

பழச்சாறு / இனிப்பு சுவை நிரம்பிய பழங்கள் இவற்றை “ஆரோக்கியம்” என்று அதிகமாக உண்பது கல்லீரலுக்கு கேடு தரக்கூடியது என்பதை உணர வேண்டும். உடல் பருமன்/ டைப் டூ டயாபடிசை வரவழைக்கும்.

குழந்தைகளுக்கு பழங்கள் தர வேண்டுமென்றால் அவற்றை சீனி கலக்காத சாறாக்கி கொடுக்கலாம் அல்லது பழங்களை உண்ணக்கொடுக்கலாம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

எனவே ஆரோக்கியம் தரும் பழங்களாகவே இருப்பினும் அவற்றை மிகக் குறைவான அளவில் உண்பதே உடல் நலனுக்கு நல்லது.

REFERENCES
1. Fruit and veg are getting SWEETER – but are now ‘less nutritious and have fewer health benefits’, scientists claim
2. Amazing Graphics Show How Much Peaches Have Changed Since Humans Started Growing Them
3. Association of Sugary Beverage Consumption With Mortality Risk in US Adults
4. Added Sugar Intake and Cardiovascular Diseases Mortality Among US Adults
5. An Integrated Understanding of the Rapid Metabolic Benefits of a Carbohydrate-Restricted Diet on Hepatic Steatosis in Humans
6. No difference between high-fructose and high-glucose diets on liver triacylglycerol or biochemistry in healthy overweight men.
7. Carbohydrate intake and nonalcoholic fatty liver disease: fructose as a weapon of mass destruction

🍎🍐🍊🍋🍌🍉🍇🍓🍏

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

பொருளாதார மனிதன் | பொருளாதாரம் கற்போம் – 52

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 52

“பொருளாதார மனிதன்”

அ.அனிக்கின்

டம் ஸ்மித் 1765-ம் வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து 1766 அக்டோபர் மாதம் வரை ஒரு வருட காலம் பாரிஸ் நகரத்தில் இருந்தார். எனினும் அங்கேயுள்ள வரவேற்புக் கூடங்களில் அவருடைய நண்பர் ஹியூம் முந்திய மூன்று வருடங்களாகப் பெற்றிருந்த இடம் அவருக்குக் கிடைக்கவில்லை; அல்லது இனி பத்து வருடங்களுக்குப் பிறகு பிராங்கிளின் பெறப்போகின்ற இடம் அவருக்குக் கிடைக்கவில்லை. சமூகத்தில் நடுநாயகமாக விளங்குவதற்குரிய தனித் தகுதிகள் அவரிடம் இல்லை, அது அவருக்கே நன்றாகத் தெரியும்.

அவர் ஹெல்வெடியஸ் என்பவரிடம் கொண்டிருந்த நட்பு அவருடைய வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டதாகும். அதிகமான அளவுக்குத் தனிப்பட்ட கவர்ச்சியும் மிகச் சிறப்பான அறிவும் கொண்டவர் ஹெல்வெடியஸ். அவர் தன்னுடைய தத்துவஞானத்தில் அறவியலை அதன் மீது மாட்டப்பட்டிருந்த மத, நிலப்பிரபுத்துவ விலங்குகளிலிருந்து விடுவிக்க முயன்றார். தன் முனைப்பு என்பது இயற்கையான மனித குணம், சமூக முன்னேற்றத்தில் அது ஒரு காரணி என்று அவர் கூறினார். ஒவ்வொரு மனிதனும் இயற்கையாகவே தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பாடுபடுகிறான்; மற்ற மனிதர்களுடைய இதே போன்ற முயற்சிகள் மட்டுமே அதைக் கட்டுப்படுத்த முடியும் என்ற முன்னனுமானத்தின் பேரில் புதிய அறவியல் (சாராம்சத் தில் முதலாளித்துவ அறவியல்) வளர்ச்சியடைந்தது. சமூகத்தில் சுயநலத்தின் பாத்திரத்தை இயற்கையில் புவி ஈர்ப்புச் சக்தியின் பாத்திரத்துக்கு அவர் ஒப்பிட்டார். இயற்கையான சமத்துவம் என்ற கருத்தோடு இது தொடர்புடையது. அதாவது ஒவ்வொரு நபருக்கும் அவருடைய பிறப்பும் நிலையும் எப்படிப்பட்டதாக இருந்த போதிலும் – தன்னுடைய சொந்த லாபத்தைத் தேடுவதற்குச் சமமான உரிமை கொடுக்கப்பட வேண்டும், அதன் மூலம் மொத்த சமூகமுமே பயனடையும்.

ஸ்மித் இந்தக் கருத்துக்களை வளர்த்து அரசியல் பொருளாதாரத்தில் அவற்றைக் கையாண்டார். மனிதனுடைய இயல்பு, மனிதனுக்கும் சமூகத்துக்குமுள்ள உறவு பற்றிய அவருடைய கருத்து மூலச் சிறப்புடைய மரபின் கருத்துக்களின் மூலவேராக அமைந்தது. ”பொருளாதார மனிதன்” என்ற கருதுகோள் ஓரளவுக்குப் பிற்காலத்தில் தான் தோன்றியது; ஆனால் அதைக் கண்டுபிடித்தவர்கள் ஸ்மித்தைத் தங்களுக்கு அடிப்படையாகக் கொண்டார்கள். நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்தில் “கண்ணுக்குத் தெரியாத கரத்தைப்” பற்றிய சிறந்த பகுதி மிக அதிகமான அளவுக்கு மேற்கோள் காட்டப்பட்டிருக்கும் பகுதியாகும்.

ஸ்மித்தின் வாதத்தைப் பின் வரும் விதத்தில் சுருக்கிக் கூறலாம். மனிதனுடைய பொருளாதார நடவடிக்கைக்குப் பின்னால் உள்ள முக்கியமான நோக்கம் சுயநலமே. ஆனால் மற்றவர்களுக்குச் சேவை புரிவதன் மூலமாக, தன்னுடைய உழைப்பையும் அந்த உழைப்பின் உற்பத்திப் பொருள்களையும் பரிவர்த்தனை செய்ய முன் வருவதால் மட்டுமே அவன் தன்னுடைய சுய நலத்தைத் தொடர முடியும். ஆகவே உழைப்புப் பிரிவினை வளர்ச்சியடைகிறது. மக்கள் ஒவ்வொரு வரும் தன்முனைப்புக் கொண்டிருந்த போதிலும், தன்னுடைய சொந்த நலனுக்காக மட்டுமே பாடுபட்ட போதிலும், அவர்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்கிறார்கள், அப்படி உதவி செய்து கொள்ளும் பொழுது சமூகத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறார்கள். தன்னுடைய பொருளாயத நிலையை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற வகையில் மனிதன் இயற்கையாகச் செய்கின்ற முயற்சி மிகவும் வன்மையான தூண்டுதலாகும்; அதைத் தங்கு தடையில்லாமல் இயங்க அனுமதித்தால் அது சமூகத்தை வளப்பெருக்கத்தை நோக்கிக் கொண்டு செல்லக் கூடியதாகும்.

மேலும் எது முக்கியமென்றால், ஒரு ருஷ்யப் பழமொழி சொல்வதைப் போல ”கதவு வழியாக இயற்கையை விரட்டியடித்தால், அது சன்னல் வழியாக உள்ளே வந்துவிடும்”; இந்தத் தூண்டுதல் “குறைபாடுகளைக் கொண்ட மனிதனுடைய சட்டங்கள் அதன் நடவடிக்கைகளில் மிகவும் அடிக்கடி ஏற்படுத்துகின்ற வரம்புகடந்த நூறு தடைகளையும் கூட எதிர்த்துச் சமாளிக்கும்…” (1) தகுதியைக் கொண்டது. மனிதனின் “இயற்கையான சுதந்திரத்தைக்” கட்டுப்படுத்துகின்ற, வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும், வாடகைக்கு விடுவதற்கும் வேலைக்குச் சேர்த்துக் கொள்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் நுகர்வு செய்வதற்கும் மனிதனுடைய சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்ற வாணிப ஊக்கக் கொள்கையை ஸ்மித் இங்கே தாக்குகிறார்.

படிக்க :
♦  நான் பிறந்தபோது இந்தியா என்ற நாடில்லை பாகிஸ்தானுமில்லை பங்களாதேசுமில்லை !
கனமாகப் பஞ்சு வைத்து கிழியாதபடி தைத்த மேல்கோட்டுத்தான் அவனது தோழி !

ஒவ்வொரு தனி நபரும் தன்னுடைய மூலதனத்தை அதன் உற்பத்திக்கு அதிகமான மதிப்பு ஏற்படும் வகையில் உபயோகிக்க முயற்சி செய்கிறார் (ஸ்மித் பொதுவாக மனிதனைப் பற்றிப் பேசவில்லை, அடிப்படையில் முதலாளியைப் பற்றியே பேசினார் என்பதை நாம் காண முடியும்). வழக்கமாகவே பொது நன்மையைப் பற்றி அவர் சிந்திப்பதில்லை, தான் அதை எந்த அளவுக்கு ஊக்குவிக்கின்றோம் என்பதையும் உணர்ந்து கொள்வதில்லை. அவருடைய கருத்தில் தன்னுடைய சொந்த லாபம் மட்டுமே இருக்கின்றது; ஆனால் “அவருடைய உள்ளக் குறிப்பில் இடம் பெறாத ஒரு நோக்கத்தை நிறைவேற்றுமாறு காண முடியாத கரம் (அழுத்தம் கொடுத்திருப்பது நான்-ஆ-ர்) அவரை இட்டுச் செல்கிறது… அவர் தன்னுடைய சொந்த லாபத்துக்காகப் பாடுபடுவதன் மூலம் சமூக நலனை ஊக்குவிக்க உண்மையாகவே முடிவு செய்தால் ஏற்படுவதைக் காட்டிலும் அதிகமான பயனோடு அநேகமாக பெரும்பாலும் அதை ஊக்குவிக்கிறார்”. (2) 

இங்கே ”காண முடியாத கரம்’ என்பது புறவயமான பொருளாதார விதிகள் தாமாகவே இயங்குவதாகும். இந்த விதிகள் மனிதனுடைய விருப்பத்துக்குச் சம்பந்தமில்லாத வகையில், அடிக்கடி அதற்கு எதிராக இயங்குகின்றவையாகும். இந்த விஞ்ஞானத்தில் இத்தகைய வடிவத்தில் பொருளாதார விதிகளைப் பற்றிய கருதுகோளை அறிமுகம் செய்ததன் மூலம் ஸ்மித் முன்னேற்றப் பாதையில் முக்கியமான காலடி எடுத்து வைத்தார். அவர் அரசியல் பொருளாதாரத்தை விஞ்ஞான அடிப்படையில் ஏற்படுத்தினார். சுயநலனும் பொருளாதார வளர்ச்சியின் இயற்கையான விதிகளும் மிகவும் வெற்றிகரமாக இயங்கக் கூடிய நிலைமைகளை ஸ்மித் “இயற்கையான அமைப்பு” என்று குறிப்பிட்டார்.

ஸ்மித்துக்கும் அடுத்து வருகின்ற தலைமுறைகளைச் சேர்ந்த அரசியல் பொருளியலாளர்களுக்கும் இந்தக் கருதுகோள் இரட்டை அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் இது பொருளாதாரக் கொள்கையின் கோட்பாடாகவும் இலட்சியமாகவும் இருந்தது. அந்தக் கொள்கை உற்பத்தி சுதந்திரமாகும் (அடுத்துவரும் பகுதியைப் பார்க்கவும்). மறுபக்கத்தில் அது ஒரு தத்துவ ரீதியான அமைப்பாகவும் இருக்கிறது, பொருளாதார யதார்த்தத்தை ஆராய்வதற்கான “மாதிரிப் படிவமாக” இருக்கிறது.

பௌதிகத்தில் இலட்சிய வாயு, இலட்சிய நீர்மம் பற்றிய சூக்குமமான கருதுகோள்கள் அறிவைப் பெறுவதற்குப் பொருத்தமான வழியாகப் பயன்படுத்தப்படுகின்றன. உண்மையான வாயுக்களும் நீர்மங்களும் “இலட்சியத் தன்மையோடு” நடந்து கொள்வதில்லை அல்லது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் மட்டுமே அப்படி நடந்து கொள்கின்றன. எனினும் நிகழ்வுகளை “அவற்றின் பரிசுத்தமான வடிவத்தில்” ஆராய்வதற்கு இந்தத் திரிபுகளைப் புறக்கணிப்பது பயனுள்ளதாக இருக்கிறது. அரசியல் பொருளாதாரத்தில் ஓரளவுக்கு “பொருளாதார மனிதன்” மற்றும் சுதந்திர (முழு நிறைவான) போட்டி பற்றிய கருத்தாக்கங்கள் இதைப் போன்றவையே. உண்மையான மனிதனை வெறும் சுயநலம் என்று வகைப்படுத்திவிட முடியாது. இதைப் போல, முதலாளித்துவத்தின் கீழ் முற்றிலும் சுதந்திரமான போட்டி என்பது ஒருபோதும் இருந்ததில்லை, அப்படி இருக்கவும் முடியாது.

எனினும் இந்த விஞ்ஞானம் இப்படிப்பட்ட சில அனுமானங்களைச் செய்து கொள்ளாமல் பெருந்திரளான அளவில் நடைபெறுகின்ற பொருளாதார நிகழ்வுகளையும் நிகழ்வுப் போக்குகளையும் ஆராய முடியாது. ஏனென்றால் இந்த அனுமானங்கள் முடிவில்லாத அளவுக்குப் பன்முகத் தன்மையும் வேறுபாடுகளும் கொண்ட யதார்த்தத்தை எளிமைப்படுத்தி மாதிரிப் படிவமாக்குகின்றன, அதிலடங்கியிருக்கும் முக்கியமான கூறுகளுக்கு அழுத்தம் கொடுத்து வலியுறுத்துகின்றன. இந்தக் கருத்து நிலையிலிருந்து பார்க்கும் பொழுது “பொருளாதார மனிதன்” மற்றும் சுதந்திரமான போட்டி பற்றிய கருத்தாக்கங்கள் முற்றிலும் நியாயமானவையாகும், அவை பொருளாதார விஞ்ஞானத்தில் முக்கிய மானபாத்திரத்தை வகித்தன. 18, 19-ம் நூற்றாண்டுகளில் முதலாளித்துவத்தின் உண்மையான இயல்புக்கு அவை குறிப்பாகப் பொருந்திவந்தன.

மார்க்சியப் பொருளாதாரத் தத்துவத்திலிருந்து இரண்டு உதாரணங்களை மேற்கோள் காட்டுவோம்.

தனிச் சொத்துரிமையை ஆதாரமாகக் கொண்ட பண்டப் பொருளாதாரத்தில் உற்பத்தியின் தூண்டுவிசையாகவும் தானாகவே ஒழுங்குபடுத்துகின்ற சக்தியாகவும் மதிப்பு விதி இயங்குகின்றது. உதாரணமாக, ஏதாவதொரு தொழில்நுட்ப அபிவிருத்தியின் காரணமாக ஒரு பண்ட உற்பத்தியாளர் ஒவ்வொரு பண்ட அலகையும் உற்பத்தி செய்வதற்குரிய உழைப்பு நேரச் செலவைக் குறைத்துவிடுவதாக வைத்துக்கொண்டால் பண்டத்தின் தனிப்பட்ட மதிப்பு குறைந்துவிடும்; ஆனால் மற்ற எல்லா அம்சங்களும் சமமாக இருக்குமானால், உழைப்பு நேரத்தின் சராசரியான சமூகச் செலவால் நிர்ணயிக்கப்படுகின்ற சமூக மதிப்பு குறைவது கிடையாது. திறமையுள்ள பண்ட உற்பத்தியாளர் தன்னுடைய பண்டத்தின் ஒவ்வொரு அலகையும் அதன் முந்திய விலைக்கு கோட்பாட்டளவில் முந்திய விலையை நிர்ணயிப்பது அதன் சமூக மதிப்பு விற்பனை செய்து கூடுதலான வருமானத்தைப் பெறுவார். ஏனென்றால் அவர் ஒரு உழைப்பு நாளில் மற்ற எல்லோரையும் விட 25 சதவிகிதம் அதிகமான பண்ட அலகுகளை உற்பத்தி செய்வார் எனலாம். அவரோடு போட்டியிடுகின்ற பண்ட உற்பத்தியாளர்கள் இந்தப் புதிய தொழில் நுட்பத்தைப் பின்பற்றுவதற்கு முயற்சிப்பார்கள் என்பது தெரிந்ததே. “தொழில் நுட்ப முன்னேற்றத்தைத் தூண்டுதல்” என்ற அமைப்பியலின் முதல் கோட்பாடு இதுவே. தானாகவே செயல்படும் காரணிகளின் இயங்கு முறையை நாம் வர்ணித்தோம். இவை மனிதனுடைய விருப்பத்திலிருந்து தனித்து நிற்பவை. இவை பண்டத்தின் ஒவ்வொரு அலகையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான சமூகத்துக்கு அவசியமான உழைப்பு நேரச் செலவைக் குறைத்து அவற்றின் சமூக மதிப்பு கீழே இறங்கும்படி செய்கின்றன. இங்கே பண்ட உற்பத்தியாளர் தன்னுடைய வருமானத்தை உச்ச அளவுக்குக் கொண்டு போக விரும்புகின்ற நபராக, ”பொருளாதார மனிதனாக” இயங்குகிறார். இது சுதந்திரமான போட்டிச் சூழ்நிலைகளில் நடைபெறுகிறது.

படிக்க :
♦ கீழைக்காற்று வெளியீட்டகத்தின் புதிய நூல்கள் அறிமுகம் !
♦ அகமதாபாத் : NSUI மாணவர்களைத் தாக்கிய ABVP குண்டர்கள் !

அடுத்த உதாரணம் சுதந்திரமான முதலாளித்துவப் போட்டியில் சராசரி லாப விகிதத்தின் உருவாக்கத்தைப் பற்றியதாகும். ஏதாவதொரு நீண்ட காலப் பகுதியில் தொழிலின் வெவ்வேறு துறைகளில் லாப விகிதம் கணிசமான அளவுக்கு வெவ்வேறாக இருப்பதைக் கற்பனை செய்யமுடியாது. லாப விகிதத்தைச் சரிமட்டமாக்குவது ஒரு புறவயத் தேவையாகும். இந்தச் சரிமட்டமாக்குதலைச் செய்கின்ற அமைப்பு வெவ்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள போட்டியும் குறைவான லாபவிகிதம் உள்ள பிரிவுகளிலிருந்து அதிகமான லாபவிகிதம் உள்ள பிரிவுகளுக்கு மூலதனம் பாய்வதுமாகும். இங்கே முதலாளி ஒரு கோணத்திலிருந்து லாபத்தைப் பெறுவதற்கான முயற்சியின் உருவகம் என்பதாக மட்டுமே பார்க்கப்படுகிறார் என்பது தெளிவாகும். மூலதனம் தங்குதடையில்லாமல் பாய்வதற்கான சாத்தியத்தைப் பற்றிய நிபந்தனை சுதந்திரமான போட்டியைப் பற்றிய நிபந்தனையைப் போன்றது தான். உண்மையில் மூலதனத்தின் சுதந்திரமான பாய்ச்சலைக் கட்டுப்படுத்துகின்ற கூறுகள் எப்போதுமே இருந்து வந்திருக்கின்றன, மார்க்ஸ் அவற்றை நன்கு அறிந்திருந்தார். ஆனால் அந்த மாதிரியை “அதன் இலட்சிய வடிவத்தில்” ஆராய்ந்த பிறகு தான் அதற்குள் இக்கூறுகளை நுழைக்க வேண்டும்.

முதலாளி என்பவர் மூலதனத்தின் உருவகம் என்று மார்க்ஸ் கூறினார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் ஒரு தனிப்பட்ட முதலாளியின் சொந்த குணங்கள் அரசியல் பொருளாதாரத்துக்கு எத்தகைய முக்கியத்துவமும் கொண்டிருக்க முடியாது. அவர் மூலதனத்தின் சமூக உறவுகளை எடுத்துரைக்கின்றார் என்பதால், அந்த அளவுக்கு மட்டுமே அந்த விஞ்ஞானம் அவரைப் பற்றி அக்கறை எடுத்துக் கொள்கிறது. இங்கே மார்க்சுக்கும் ஸ்மித்தின் கருத்துக்களுக்கும் ஒரு வகையான உறவை நாம் உணர முடிகிறது. ஆனால் முடிவு முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது. முதலாளி தன்னுடைய சுயநலத்துக்காகப் பாடுபடுகின்ற பொழுது தன்னை அறியாமலேயே முதலாளித்துவத்தைப் பலப்படுத்துவதாக ஸ்மித் கருதுகிறார்.

ஆனால் மார்க்சின் முடிவு இப்படி இருந்தது: முதலாளி அதே போக்கில் இயங்குவதன் மூலம் முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திகளை வளர்ப்பது மட்டுமல்லாமல், புற நிலையில் அதன் தர்க்க ரீதியான வீழ்ச்சியையும் தயாரிக்கிறார். இதனோடு தொடர்புடைய வேறோரு அடிப்படையான வேறுபாடும் இருக்கிறது. மார்க்ஸ் மனிதனை ஒரு நீண்ட வரலாற்று ரீதியான வளர்ச்சியின் உற்பத்திப் பொருள் என்ற அடிப்படையில் வரலாற்றுப் பொருள்முதல் வாதத்தின் கருத்து நிலையிலிருந்து ஆராய்கிறார். இந்த மனிதன் அரசியல் பொருளாதாரத்தின் பொருள் என்ற வகையில் ஒரு குறிப்பிட்ட வர்க்க சமூகத்தின் சுற்றுவட்டத்துக்குள் மட்டுமே இருக்கிறான், அதன் விதிகளுக்கு ஏற்ப இயங்குகிறான். எனினும் ஸ்மித்துக்குப் பொருளாதார மனிதன் என்பது மனித இயல்பின் இயற்கையான தன்மையின், எக்காலத்துக்கும் உரிய தன்மையின் வெளியீடாகும். மனிதன் வளர்ச்சியினால் ஏற்பட்ட விளைவல்ல, அந்த வளர்ச்சியில் திருப்பு முனையாக இருக்கிறான். மனித இயல்பைப் பற்றிய இந்தக் கருத்து வரலாற்றுக்கு அப்பாற்பட்டது என்பதால் போலியான கருத்தாகும். ஆனால் ஸ்மித் காலத்தைச் சேர்ந்த சிறப்புமிக்க எல்லாச் சிந்தனையாளர்களும், குறிப்பாக ஹெல்வெடியசும் இந்தக் கருத்தைக் கொண்டிருந்தார்கள்; அவர்களோடு சேர்ந்து ஸ்மித்தும் இந்தக் கருத்துடையவராக இருந்தார்.

“பொருளாதார மனிதன்” என்ற கருதுகோளை உருவாக்கியதன் மூலம் தத்துவ ரீதியிலும் செய்முறையிலும் அதிகமான முக்கியத்துவம் கொண்ட ஒரு பிரச்சினையை ஸ்மித் எழுப்பினார். மனிதனுடைய பொருளாதார நடவடிக்கையின் நோக்கங்கள் என்ன? அதன் தூண்டுதல் எது என்பவை அந்தப் பிரச்சினையாகும். அவர் குறிப்பிட்ட “இயற்கையான மனிதன்” என்பவன் முதலாளித்துவ சமூகத்தின் உண்மையான மனிதனுடைய மாறு வேடத்தில் இருப்பதைக் கருத்தில் கொள்ளும் பொழுது, அவர் இந்தக் கேள்விகளுக்குக் கொடுத்த பதில் அவர் காலத்துக்கு ஆழமானது, பலன் மிக்கது என்பது தெரியும்.

சோஷலிசம் விஞ்ஞானத் தத்துவம் என்ற நிலையிலிருந்து சமூக பொருளாதார நடைமுறை என்ற நிலைக்கு மாறிய பொழுது, நோக்கங்களையும் தூண்டுதலையும் பற்றிய இந்தப் பிரச்சினை அங்கும் ஏற்பட்டது. முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து மனிதனை மனிதன் சுரண்டுகிற நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டதும் மனிதனுடைய பொருளாதார நடவடிக்கைகளுக்கு முதலாளித்துவத் தூண்டுதலும் ஒழிந்தது.

கடைசியாகப் பார்க்கும் பொழுது, பணக்காரனாக வேண்டும் என்று மக்களிடம் ஏற்படுகின்ற ஆசையே முதலாளித்துவ உற்பத்தியை இயக்குகின்றது என்று ஆடம் ஸ்மித் கூறினார்; அந்த ஆசைக்குப் பதிலாக இப்பொழுது ஏற்பட்டிருக்கும் தூண்டுதல் என்ன? அது சோஷலிஸ்ட் உணர்வு, உழைப்பில் உற்சாகத்தைக் காட்டுதல், தேசபக்தி ஆகியவை மட்டும் தானா? ஏனென்றால் அங்கே முதலாளிகள் இல்லை, வயல்களும் தொழிற்சாலைகளும் மக்களுக்குச் சொந்தம், மக்கள் தங்களுக்காகவே உழைக்கிறார்கள்…

ஆம், வேலைக்கும் உழைப்புக்கும் சோஷலிசம் புதிய வன்மையான தூண்டுதல்களை உற்பத்தி செய்கிறது. முதலாளித்துவத்தின் மீது சோஷலிசத்துக்குள்ள மாபெரும் சாதகம் இதுவே. எனினும் இந்தத் தூண்டுதல்கள் சூனியத்திலிருந்து உருவாகிவிடவில்லை; சமூகத்திலும் மக்களிடமும் சோஷலிச மாற்றம் ஏற்படுகிற பொழுது, அவர்களுடைய உளவியல், அறப் பண்புகள், உணர்வு ஆகியவை அந்த மாற்றத்துக்கு உட்படும் பொழுது இந்தத் தூண்டுதல்கள் வளர்ச்சியடைகின்றன. உழைப்புக்குத் தகுந்த வினியோகம் என்ற கோட்பாடு இயங்குகின்ற சமூகத்தில் பொருளாயத நலன் உழைப்புக்கு மிக முக்கியமான தூண்டுதலாக இருப்பது சரியானதே. லெனினுடைய கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருளாதாரக் கணக்கியல் கோட்பாடுகள் சோஷலிஸ்ட் பொருளாதார நிர்வாகத்தின் முக்கியமான முறையாகியிருக்கின்றன. சோவியத் யூனியனில் சமீப வருடங்களில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பொருளாதார சீர்திருத்தம் வளர்ச்சியடைந்த சோஷலிஸ்ட் சமூகம் என்ற புதிய நிலைமைகளில் இந்தக் கோட்பாடுகளை வளர்த்துச் சென்றிருக்கின்றது.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

 (1) A. Smith, The Wealth of Nations, Vol. II, London, 1924, p. 40.
 (2)  Ibid., Vol. 1, p. 400.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

ஜே.என்.யூ : அம்பலமான ஏ.பி.வி.பி – முட்டுக் கொடுத்த டில்லி போலீசு !

3

ஜே.என்.யூ வன்முறைக்கு இடதுசாரி மாணவ அமைப்புகளை டில்லி போலீசு குற்றம் சுமத்தியிருக்கும் அதே நேரத்தில் சபர்மதி மாணவ விடுதியில் வன்முறையை திட்டமிட்டு நடத்துவதற்கு ஏ.பி.வி.பி. -க்கு உதவி செய்ததாக முதலாமாண்டு படிக்கும் ஏ.பி.வி.பி தான்னார்வலர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

காவல்துறையோ ஜனவரி 4-ம் தேதி நடந்த இடையூறை மட்டுமே ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியது. மாறாக ஒரு நாள் பின்னதாக முகமூடி அணிந்த பெண்கள் உள்ளிட்ட கும்பல் கையில் லத்தி உள்ளிட்ட அயுதங்களுடன் வந்து வளாகத்தை தீவிரவாத அச்சத்தில் தள்ளியதை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

தொடர்ந்து இந்தியா டுடே தொலைக்காட்சி வெளியிட்ட ‘ஸ்டிங் ஆபரேஷன்’ காணொளியில் ஏ.பி.வி.பி. ஆர்வலர் என்று கூறிய ஒரு மாணவர் ஜனவரி 5 ம் தேதி வன்முறையில் ஈடுபட்டதாக சாட்சியமளித்தார். இதை நிரூபிக்க ஏ.பி.வி.பி.-யின் பேரணி ஒன்றில் அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை – ஒரு தேசிய செய்தித்தாளில்  இருந்து – அத்தொலைக்காட்சி வெளியிட்டது.

இந்தியா டுடே நிருபர் : “உங்களது கையில் என்ன இருக்கிறது?”

அக்ஷத் அவஸ்தி : “அது ஒரு கட்டை சார். அதை விடுதி பக்கத்திலிருந்த ஒரு கொடி கம்பத்தில் இருந்து எடுத்தேன்”

நிருபர் : யரையாவது நீங்க அடித்தீர்களா?

அவஸ்தி : குறுந்தாடியுடன் ஒருவனைப் பார்த்தேன். பார்க்க காஷ்மீரி போல இருந்தான். அவனை அடித்தப் பிறகு வாயிற்கதவை காலால் உதைத்து தள்ளினேன்.

மேலும் சபர்மதி விடுதி செல்லும் தெருவில் இருந்த வண்டிகளையும் பொருள்களையும் அடித்து உடைத்ததாகவும் கூறினார். “தாக்குதல் நடந்த போது அங்கிருந்த அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவிட்டனர். ஏ.பி.வி.பி இப்படி திரும்பி வந்து தாக்கும் என்று அவர்கள் நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்” என்றார் அந்த முதலாமாண்டு மாணவர்.

படிக்க :
ஜே.என்.யூ தாக்குதலைக் கண்டிக்கும் உலகளாவிய அறிவுத்துறையினர் !
♦ காஷ்மீர் – பண்டிட் குடும்பத்தை காப்பாற்றிய சுபைதா பேஹம் !

அந்த தாக்குதலின் பின்னணியில் தான் இருந்ததாக அந்த காணொளியில் குறிப்பிட்ட அவர், “அந்த கும்பலை அணி திரட்டியது நான்தான் என்று என்னால் கூற முடியும். அவர்களுக்கு அந்த அளவுக்கு அறிவு கிடையாது. என்ன நடத்தப்பட வேண்டும்; எங்கு நடத்தப்பட வேண்டும் என்று ஒரு காண்காணிப்பாளர் போலவோ அல்லது ஒரு படைத்தலைவர் போலவோ நாம் செயல்பட வேண்டும். அவர்கள் எங்கு செல்ல வேண்டும், எப்படி மறைந்து கொள்ள வேண்டும் என்று முறையாக அவர்கள் செயற்பட வழிகாட்டினேன். நான் எந்த பதவியிலும் இல்லை. இருப்பினும் நான் சொல்வதை காது கொடுத்து கவனமாக கேட்டார்கள்” என்று அவர் கூறினார். அவர்களை அணிதிரட்டியது மட்டுமல்ல அவர்களது கோபத்தை சரியான திசையில் செலுத்த உதவியதாகவும் அவர் கூறினார்.

அக்ஷத் அவஸ்தி மற்றும் ரோஹித்.

ரோஹித் ஷா என்ற மாணவரிடமும் இந்தியா டுடே பேசியது. அவர் தனது தலைக்கவசத்தை அவஸ்திக்கு கொடுத்ததாகக் கூறினார். “நீங்கள் கண்ணாடியை அடித்து நொறுக்கும்போது பாதுகாப்பிற்கு இது அவசியம்” என்று ஷா கூறினார். மேலும் ஏபிவிபி மாணவர்கள் தங்கும் அறைகளை அடையாளம் காட்டி அவர்களை வேறு பக்கம் விலகி செல்ல, செய்ததாக கூறினார்.

“இந்த தாக்குதல் மட்டும் நடக்காமல் இருந்திருந்தால், இடதுசாரிகளுக்கு ஏ.பி.வி.பி. -யின் பலம் தெரியாமலேயே இருந்திருக்கும்” என்ற அவர் மேலும் இதற்கு பெருமையடைவதாகவும் கூறினார்.

திருப்பி தாக்குவதற்கு போலிஸ் ஊக்கமளித்ததாகவும் அவர் கூறினார். “வளாகத்திற்குள் தான் போலிஸ்காரர்கள் இருந்தனர். விடுதியில் ஒரு மாணவன் காயமடைந்தவுடன் நானே போலிசுடன் பேசினேன்.” மணிஷ் என்ற மாணவனை சந்தித்த போலிஸ்காரர் “அவர்களை அடி, அவர்களை அடி” என்று கூறினார்.

தாக்குதல் நடக்கும் போது தெரு விளக்குகள் அணைக்கப்பட்டதன் பின்னனியை அவஸ்தி நிருபரிடம் விளக்கினார்,

நிருபர் : தெரு விளக்குகளை அணைத்தது யார்? உங்க ஆட்களா?

அவஸ்தி : நிர்வாகி… போலிஸ் என்று நான் நினைக்கிறேன்.

நிருபர் : போலீஸ் எதற்கு அதை செய்தார்கள்?

அவஸ்தி : கும்பல் வருவதை யாரும் கவனிக்க, அவர்கள் விரும்பவில்லை.

நிருபர் : போலிஸ் உங்களுக்கு, ஏ.பி.வி.பி. -க்கு உதவியிருக்கிறது?

அவஸ்தி : சார், இது யாரோட போலீஸ்னு நினைக்கிறீங்க ? (நம்ம போலீசு)

அதே போல ஜே.என்.யூ.-வின் முன்னாள் மாணவர் சங்க தலைவரும் AISA உறுப்பினருமான கீதா குமாரிடம் ஜனவரி 4-ம் தேதி சர்வர் அறையை மூடியது தொடர்பாக பேசிய மற்றுமொரு காணொலியையும் இந்தியா டுடே வெளியிட்டது.

படிக்க :
இந்தியாவில் வரலாறு காணாத குளிரால் அவதிப்படும் வீடற்ற மக்கள் !
தீவிரவாதிகளுடன் கைதான காஷ்மீர் போலிசு அதிகாரி தேவேந்தர் சிங் ! பின்னணி என்ன ?

“எங்களது கோரிக்கைகள் எதுவும் நிறைவேறவில்லை. ஜே.என்.யூ -யின் துணை வேந்தர் இன்னும் எங்களை பார்ர்க்கவில்லை. எனவே நாங்கள சர்வர் அறையை மூடுவதற்கு முடிவு செய்தோம்” என்று அவர் கூறினார்.

“எங்களது துணை வேந்தர் இணையத்திலேயே எல்லா வேலைகளையும் செய்கிறார். இணையத்திலேயே காதல் கடிதம் அனுப்புகிறார், புத்தாண்டு வாழ்த்தையும் அனுப்புகிறார், எச்சரிக்கையையும் அனுப்புகிறார். எனவே அவருக்கான வாய்ப்புகள் அனைத்தையும் கடந்து விட்டார். தேர்வுகள் கிடையாது, எங்களது கோரிக்கைகள் நிறைவேறவில்லை, அவர் எங்களை வந்து பார்க்க கூட இல்லை, எனவே நாங்கள் சர்வர் அறையை மூட முடிவு செய்வதன் மூலம் நிர்வாகத்தை முடக்க முடிவு செய்தோம்” என்று அவர் கூறினார்.

இந்த இரகசிய காணொளி வெளியானது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட போது, தன்னுடைய நடவடிக்கைகளை சரி என்றும் மறைப்பதற்கு தன்னிடம் ஒன்றுமில்லை என்றும் கூறினார் கீதா குமாரி.

“எங்களது கல்விக்கட்டணத்தை துணை வேந்தர் ஆயிரம் மடங்கு உயர்த்தியிருக்கிறார். கல்வியுரிமையை வலியுறுத்தியதற்காக தண்டனை கடிதங்களை அனுப்புகிறார். நான் கூட இது போன்ற ஏரளமான கடிதங்களை பெற்றிருக்கிறேன். எங்களது உரிமைக்காக நாங்கள் போராடுகிறோம். சட்ட ஒத்துழையாமையில் நாங்கள் இருக்கிறோம். இதை தான் நான் கூறினேன். மறைப்பதற்கு ஒன்றுமில்லை” என்று குமாரி தனது செயல்களை நியாயம் என்று கூறி ட்வீட் செய்தார்.

“எங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு காட்டிய எதிர்வினைக்கு ஏ.பி.வி.பி எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்? எங்களது போராட்டத்தினால் நிர்வாக வேலைகள் முடங்கியது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். அதற்கு எங்களிடம் வந்து அவர்கள் பேசியிருக்க வேண்டும். யார் இந்த ஏ.பி.வி.பி. -யினர், எதற்கு எங்களை தாக்க வேண்டும்?” என்று அவர் கூறினார்.

இடதுசாரிகள் நேர்மையாக பேசுகையில், வலதுசாரிக் கும்பல் வழக்கம் போல தொடர்புடைய நபர்களைக் கைவிட்டது. ஷா மற்றும் அவஸ்தி இருவருக்கும் ஏ.பி.வி.பி.-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஏ.பி.வி.பி. -யின் துணைத்தலைவர் நிதி திரிபாதி கூறியுள்ளார்.

முதலாமாண்டு மாணவர்களுக்கு என்று ஏ.பி.வி.பி.-யில் எந்த பொறுப்பும் கொடுக்கப்படவில்லை என்று பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் அமித் மால்வியாவும் கூறியிருந்தார். ஆனால் இந்தியா டுடே தொலைகாட்சியும் அப்படி எதையும் கூறவில்லை. அந்த காணொளியில் இருந்த மாணவர்களும் அப்படி கூறவில்லை. சபர்மதி விடுதியை சூறையாட ஏ.பி.வி.பி. -யினரை வழிநடத்தியதாக தான் அவஸ்வதி கூறினார்.

காணொளி வெளியான பின்னர் இந்தியா டுடேவின் புலனாய்வையும் சேர்த்து, அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி வழக்கை விசாரிக்க இருப்பதாக டெல்லி போலிஸ் கூறியிருக்கிறது. ஆனால், போலீசால் குற்றம் சுமத்தப்பட்ட 9 பேரில் 7 பேர் SFI, AISF, AISA மற்றும் DSF போன்ற இடதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய போலீசு துணை ஆணையர் ஜாய் டிர்கி மீதியுள்ள இரு மாணவர்களும் ஏ.பி.வி.பியை சேர்ந்தவர்கள் என்பதை கூறாமல் விட்டுவிட்டார்.

முழுக்க முழுக்க வலதுசாரி கிரிமினல்கள் திட்டமிட்டு நடத்திய ஒரு கொடூரத் தாக்குதலை, இடதுசாரி அமைப்புகள் நடத்தியதாக கதையளப்பதற்கு ஏற்ற வகையில் வழக்கை ஜோடித்து வருகிறது டில்லி போலீசு. பாசிஸ்டுகளின் ஆட்சியில் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?


சுகுமார்
நன்றி : தி வயர்