Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 340

ஈயம் பூசும் அஹமதுல்லா அண்ணனுடன் ஒரு சந்திப்பு

1

“ஈயம் பூசலையோ ஈயம், அம்மா… ஈயம் பூசலையோ ஈயம்…” இப்புடி ஒரு குரல கேக்காதவங்க இருந்துருக்க முடியாது. பெரும்பாலும் புருசன் பொஞ்சாதியா சேந்துதான் இந்த தொழிலுக்கு வருவாங்க. பல்லிளிச்ச பழய வெங்கல, பித்தள பாத்தரத்த ஊர் பொம்பளைங்க ஈயம் பூசித்தர சொல்லி அவங்ககிட்ட குடுப்பாங்க. பத்து பாத்திரத்துக்கு குறையாம சேந்ததும் அந்த தெருவுக்கு மத்தியிலேயே பட்டறைய போடுவாரு தொழிலாளி.

ஒரு சின்ன கை கடப்பாறையால ரெண்டுமூனடி தூரத்துல ரெண்டு குழிய தோண்டுவாரு. எலி பொந்துவளைப் போல செஞ்சு ரெண்டு குழியையும் இணைப்பாரு. ஒரு குழியில நெருப்பும் இன்னொரு குழியில ஆட்டுத்தோலால செஞ்ச காத்தடிக்கும் பையயும் பொருத்துவாரு. பக்கத்துல கொஞ்சம் தண்ணிய ஊத்தி சேறு கொழச்சு காத்து வெளிய போகம நெருப்புக்கு மட்டும் போறப்போல மண்ணு பூசுவாரு. பக்கத்து வீட்டுல கொஞ்சம் நெருப்பு வாங்கி குழியில போடுவாரு. பட்டறை ரெடியாயிரும்.

அக்கம்பக்கத்து வீட்டுக்காரம்மா குடுத்த அத்தன பழய பாத்தரமும் புத்தம் புதுசா பளபளக்கும். அதுக்காக அவரு பயன்படுத்துன ஈயம் சேதாரமாகி சின்னசின்ன நட்சத்திரமா மண்ணுல மின்னும். நீயா நானான்னு அடிச்சுகிட்டு விளையாட்டு பிள்ளையா அத பொறுக்குனத இன்னைக்கி நெனச்சாலும் அத்தன சந்தோசம். மன்னிச்சுக்குங்க, மறந்து போன ஒரு தொழில மறுபடியும் கண்ணுல பாத்ததும் சிறுபிள்ள விளையாட்டு பருவமும் சேந்தே ஞாபகத்துக்கு வந்துருச்சு.

தண்ணி பானைக்கி ஈயம் பூச சென்னை புறநகரத்துல உள்ள அஹமதுல்லா அண்ணன் கடைக்கி போயிருந்தேன். ஒரு பொட்டிக்கட சைசுல தம்மாத்துண்டு எடத்துல அகழ்வாராய்ச்சியில கண்டுபிடிச்சது போல தேஞ்சு, கருத்துப்போன நாலஞ்சு பண்டபாத்தரம் இருந்துச்சு. நடுவே இருக்கும் எடத்துல சாணை பிடிக்கும் எந்திரம் தரையோட சேத்து புதைக்கப்பட்டிருந்துச்சு. பாத்தரத்தோட துருவு அழுக்கச் சுரண்டும் துடுப்பு கத்திக்கி சாணை ஏத்திட்டுருந்தாரு அஹமதுல்லா.

copper vessel polishing workers photos (1)
அஹமதுல்லா

கடைக்கி வெளிய ஒரு பெரியவரு ஈயம் பூசும் நெருப்பு கணக்குற அடுப்புல பாத்தரத்த சூடேத்திட்டுருந்தாரு. சின்ன காத்தாடிய வச்சு கரண்டு மூலமா காத்த உள்ள அனுப்புற டெக்னாலஜியோட அந்த வேல நடந்துட்டு இருந்துச்சு. ஈயம் பூசுன மூணு பித்தளப் பாத்தரம் வெய்யில்ல காஞ்சுட்டுருந்தது.

இருசக்கர வண்டியில கணவன் மனைவி ரெண்டுபேரு ஒரு உருளி குண்டானுக்கு ஈயம் பூச வந்தாங்க.

“இதுக்கு ஈயம் பூசி மெருகு போடனும் எவ்வளோ கேப்பீங்க”

“ரெண்டுக்கும் சேத்து 900 ஆகும்மா”

இருதரப்புக்கும் கூலி படியல. பேரம் பேசுனத பாத்ததும் அவங்க பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் நம்ம பானைக்கி எம்புட்டு தரலாங்கற முடிவுக்கு வர தோதா இருக்குமேன்னு ஒதுங்கி நின்னுட்டேன்.

“இவ்ளோ காசு குடுத்து இத செய்றதுக்கு நானு புதுசாவே வாங்கிருவனே” வந்த அம்மா சொன்னத கேட்டதும் நெருப்புல போட்ட ஈயம் கணக்கா பொங்கிட்டாரு அஹமதுல்லாண்ணே.

படிக்க:
காஷ்மீர் : அரசியல் செயல்பாட்டாளர்களை விடுவிக்க ஹார்வர்டு பல்கலைக்கழகம் வலியுறுத்தல் !
♦ யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !

“வாங்கி பாருங்க. அந்த காலத்து சுத்தமான இந்த செம்பு இன்னைய விலைக்கி உங்களால வாங்க முடியுமான்னு பாருங்க.

மண்பாத்தரத்துல சமையல் செஞ்ச காலம் போயி வெங்கலம், செம்பு, பித்தளன்னு வந்ததும் இருக்கப்பட்டவங்க வீடுகள்ள இது மாதிரி உலோகத்துல ஆன பாத்தரமெல்லாம் இருந்துச்சு. சோறு சாப்புட வெங்கல கூம்பா, பித்தள தட்டுல்லாம் இருக்கும். இந்த பாத்தரங்களெல்லாம் அந்த காலத்துல எங்களப்போல பத்தருங்க செஞ்சு குடுப்பாங்க. எங்க அப்பா காலத்துல அதுக்கு ஈயம் பூசி பேரு வெட்டி குடுக்குற பழக்கமெல்லாம் இருந்துச்சு. அந்த பாத்தரத்தோட தரமே வேற புதுசா வாங்குறத ஈசியா சொல்றீங்க.”

“நீங்க சொல்றதும் சரிதான். இது எங்க அம்மா காலத்துலருந்து பொழங்குன பாத்தரம், ஈயம் மட்டும்தான் போச்சு. கையில அம்புட்டு பணமில்ல. அதனால மெருகு போட வேணாம், ஈயம் மட்டும் பூசி குடுங்க அதுக்கு எம்புட்டு கூலியோ அத வாங்கிக்கிடுங்க. நானு நல்லா புளி போட்டு பளபளப்பா தொலக்கிடுறேன்.”

copper vessel polishing workers photos (6)இது எதையுமே காதுல வாங்காமெ நெருப்போட போராடிட்டிருந்தாரு அந்த மனுசன். தகதகன்னு எரிஞ்ச அடுப்புல அந்த குண்டான எடுத்து குப்பற கவுத்தாரு பிறகு இடுக்கியால திருப்பி ஈயத்த ஒடச்சு குண்டாங்குள்ள போட்டு சுண்ணாம்பு போல ஒரு பொடிய எடுத்து போட்டதும் இதுவரைக்கும் உணராத ஒரு கெட்ட நாத்தம். ஈயம் உருகி திரவமாச்சு. ஒரு கையால பாத்தரத்த நெருப்புல சுத்திகிட்டே மறு கையால அடுப்புக்கு காத்தடிச்சாரு. அடுப்புல கொதிக்கிற ஈயத்த கந்த துணியால பாத்திரம் முழுக்க பூசினாரு. அந்த சூடு தாங்காமெ அந்த பெரியவரு மணல்ல கெடந்த புழுவா நெளியறத பாக்கும்போது கண்ணு கலங்கிருச்சு.

“என்னம்மா அங்க வேடிக்க பாத்துட்டே நிக்கிறிங்க உங்க பாத்தரத்த குடுங்க”

“பாவம் வயசானவரு. யாராச்சும் சின்ன வயசுக்காரங்களா வேலைக்கி வச்சுக்கலாமேண்ணே.”

“யாருக்கு இந்த வேல தெரியும். ஆந்திராவுல இருந்து அழைச்சுட்டு வந்து வச்சுருக்கேன். இந்த தொழிலையே ஊத்தி மூடிட்டாங்க. பாத்தரத்துக்குன்னு பெரிய பெரிய கடைங்க வந்துட்டு அவங்களே பாத்தரம் தயாரிக்கிற பட்டற வச்சுருக்காங்க. ஈயம் பூசுறதுக்கு ஆளும் வச்சுருக்காங்க. எங்களப்போல ஆளுங்களுக்கு வேலையே இல்லாம போச்சு. எங்க அப்பாவுக்கு பிறகு நான்.. இந்த வேலைய செய்றேன், எம்பிள்ள இந்த வேலை பாக்கல.

copper vessel polishing workers photos (3)இங்க சுத்த வட்டாரத்துல விசாரிச்சு பாருங்க. ஈயம் பூசவோ; மெருகு போடவோ; ஓட்ட ஒடச அடைக்கவோ தனியா கடையே கெடையாது. வெளி வேல போக பக்கத்துல உள்ள பாத்தர கடைக்கி வேல செஞ்சு குடுக்கறதால ஏதோ என் தொழில் ஓடுது. கும்பகோணம், தஞ்சாவூரு பக்கம் பித்தள பாத்தரம் செய்றதால அவங்கள நம்பி கொஞ்ச பேரு இந்த தொழில செஞ்சுட்டு இருக்காங்க. அதுவும் இன்னும் கொஞ்ச காலம்தான். இனிமே தனியா கடபோட்டு தொழில் செய்யிற வாய்ப்பு இல்ல. பெரிய நிறுவனமா இருக்கவங்க கிட்ட கூலியா வேல செய்ய வேண்டியதுதான்.

பாத்தரம் ஓட்ட ஒடசலாயிட்டா சனங்க போட்டுட்டுதானே வாங்க நெனைக்கிறாங்க. பழக்க வழக்கம் மாறிப்போச்சுண்ணே.

“வாங்குறதுக்கு தக்கன எல்லா மனுசங்க வாழ்கையிலயும் மாறிடலையே. இன்னமும் எத்தன பெத்தவங்க; பெத்த பொண்ணுக்கு சீர் செய்ய முடியாமெ பழய பாத்தரத்த மெருகு போட வர்ராங்கன்னு தெரியுமா?. நாங்க இல்லாட்டி இவங்க எல்லாம் பெரிய பெரிய பாத்தர கடைங்கள்ள கேட்டதுக்கு பாதியா பாத்தரத்த போட்டுட்டு புதுசு வாங்கி தானே ஆகனும். நாங்க மட்டும் இல்ல… எல்லா சிறு தொழிலுக்கும் இந்த நெலமதான்.”

படிக்க:
புல்லட்டு பைக் இல்லாம கல்யாண சீர்வரிசை இல்லை !
♦ தமிழ்நாடு மாதிரி குஜராத் இல்லக்கா ! சரிதாவின் வாக்குமூலம் !

“செம்பு, பித்தள, பாத்தரத்துல தண்ணி வச்சு குடிச்சா நல்லதுன்னு சொல்றாங்களே சரியாண்ணே?”

“செம்பு, பித்தள, வெங்கல பாத்தரத்த அப்புடியே சமயலுக்கோ சாப்புடுறதுக்கோ பயன்படுத்தினா சாப்பாடு கெட்டு போயிடும் அப்புடி பயன்படுத்த கூடாதுண்ணுதான் ஈயம் பூசுனாங்க. இப்ப பள்ளிக்கூடத்துக்கு தண்ணி கொண்டு போக செம்புல தண்ணி பாட்டுல வாங்குறாங்க. கைய உள்ள விட்டு நல்லா புளி போட்டு சுத்தமா தொலக்குற அண்டாவுலயே களிம்பு வாசன வரும். தண்ணி பாட்டிலெல்லாம் யோசிச்சு பாருங்க.

பொழங்குறதுக்கு ஈசியாருக்குன்னு எல்லாரும் கலர்கலரா பிளாஸ்டிக்குக்கு மாறுனீங்க. இப்ப பிளாஸ்டிக்கு கெடுதல்.. நோயி வருதுன்னு சொன்னதும் பழசுக்கு திரும்புரிங்க. பிளாஸ்டிக் நல்லது, செம்பு – பித்தள நல்லதுன்னு விக்கிறவங்க மார்கெட் பன்றாங்க. எது நமக்கு தோதுவாருக்கும்னு நீங்க முடிவு பண்ணுங்க.”

“சரிங்கண்ணே ஏதேதோ பேசிகிட்டு வந்த வேலையே மறந்து போச்சு. இதுக்கு ஈயம் மட்டும் பூசனும் பாத்தரம் சின்னதுதான், கொஞ்சம் பாத்து விலைய சொல்லுங்கண்ணே”

copper vessel polishing workers photos (7)

“ஒரு கிலோ ஈயம் மூணாயிரம், அடுப்பு கரி கிலோ அறுவது ரூவா, அப்புறம் நவச்சாரப்பொடி, கந்ததுணி, அதுபோக கடைவாடக, கரண்டு பில்லு பிறகு ஒரு கூலி ஆளு இம்புட்டு மொதலீடு போட்டு இந்த வேலைய செய்றேன். இப்ப நீயே பாத்து ஒரு விலைய சொல்லும்மா.”

“கோவிச்சுக்காதண்ணே.”

“நா.. என்னாத்துக்கும்மா கோவிச்சுக்க போறேன். ஒரு நாளைக்கி ஆளு சம்பளம், வாடக, பொருள் வாங்கன்னு எல்லாம் போக எனக்கு வருமானம்னு நாநூறு ஐநூறு வந்தாலே பெருசு. காலையில ஒம்பது மணிக்கு கடைய தொறந்து ராத்திரி ஏழு எட்டு மணிக்கி சாத்துறேன். நாப்பது வருசமா இந்த தொழில செய்றேன். ஒரு பொண்ண கட்டிக் குடுத்து; ரெண்டு பசங்கள படிக்க வச்சுருக்கேன். சொந்தமா சின்னதா ஒரு வீடு கட்டிருக்கேன்.

இந்த வேல பாத்து நான் ஒன்னும் காரு பங்களான்னு ஆயிடல. ஆனா எங்கிட்ட நூறுவா குடுக்க நூறு கேள்வி கேக்குறீங்க. ஆனா பெரிய கடைங்களுக்கு போயி, பாத்தரத்துல ஒட்டின ஸ்டிக்கர்ல உள்ள விலைய நயா பைசா கொறைக்காம அப்புடியே குடுத்துட்டு வாய பொத்திகிட்டு போறீங்க. அத நெனச்சாதான் வேதனையா இருக்கு.”

உழைத்து களைத்த உள்ளத்துக்கு பக்கபலமா பேசாமே பத்துருவா பணத்துக்கு பேரம் பேசிட்டோமேங்குற குற்ற உணர்வோட வெளியேறினேன்.

சரசம்மா

சாதிக் கயிறுகளால் என்ன பிரச்சினை ? கலவரமா வந்துவிட்டது ?

22
சாதிக் கயிறு

“தமிழகத்தில் உள்ள பல பள்ளிகளில் சாதிப்பிரிவுகளை குறிக்கும் வகையில் வண்ணக் கயிறுகளை மாணவர்கள் கட்டி வருவதை கண்காணிக்க வேண்டும்; அவ்வாறு கண்டறியும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்; பாகுபாடுகள் காட்டி பிரிவினைகளை தூண்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையிலான குறிப்பிட்ட வண்ணக் கயிறுகளையோ, வளையங்களையோ, மாணவர்கள் அணிந்துவரக் கூடாது; குறிப்பாக, சாதிய அடையாளத்தோடு நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு வருவதை அனுமதிக்கக்கூடாது” என கடந்த ஜூலை 31-ம் தேதியன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார், பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன்.

இதற்கு முன்னதாக, 2018 பேட்ச் பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சமீபத்தில் தமிழகப் பள்ளிகளை ஆய்வு மேற்கொண்ட போது, பள்ளி மாணவர்கள் சாதிய அடையாளத்தை குறிக்கும் வகையில் பச்சை, மஞ்சள், சிவப்பு, காவி நிறங்களில் கயிறு கட்டிக்கொண்டு பள்ளிக்கு வருவதையும் வகுப்பறைகளில், மதிய உணவு இடைவேளையில், விளையாட்டில் இந்த பாகுபாடு கடைபிடிக்கப்படுவதையும் கண்டறிந்த இவர்கள் இதனை தவிர்க்க வழிவகை செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கடிதம் ஒன்றை எழுதியிருந்தனர். இதனைத் தொடர்ந்தே மேற்கண்ட சுற்றறிக்கையை பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருக்கிறது.

இந்நிலையில், ”கையில் கயிறு கட்டுவது, நெற்றியில் திலகமிடுவது இந்து மதநம்பிக்கை தொடர்பானது. இவைகளை பள்ளிகளில் தடை செய்வது அப்பட்டமான இந்து விரோத செயலாகும். மாற்றுமத சின்னங்களை தடை செய்யும் தைரியம் பள்ளி கல்வித்துறை ஆணையருக்கு வருமா? இந்த ஆணை உடனடியாக வாபஸ் பெறப்பட வேண்டும்.” என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் எச்.ராஜா. செய்தியாளர்கள் சந்திப்பிலும் பொங்கினார் அவர்.

படிக்க:
தமிழகம் : சாதிவெறியர்களின் சொர்க்கபூமியாகிறது !
♦  2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்

எச்.ராஜாவின் டிவிட்டர் பதிவுக்கே அடிபணிந்த அடிமை எடப்பாடி அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ”இந்த சுற்றறிக்கை எனது கவனத்துக்கு வராமலேயே அனுப்பபட்டிருக்கிறது. பள்ளிகளில் பழைய நிலையே தொடரும்” என சுற்றறிக்கை அனுப்பி பதினைந்து நாள் கழிந்த நிலையில் ஆக-15 அன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அரசாங்கத்திலோ, இந்த அரசு இயந்திரத்திலோ எந்த ஒரு அதிகாரத்திலும் இல்லாத ஒரு நபர் மிரட்டுவதற்கு ஒரு அரசாங்கமே பணிந்து தாம் வெளியிட்ட சுற்றறிக்கையை திரும்பப் பெறுகிறது என்றால் இங்கு நடப்பது என்ன சட்டத்தின் ஆட்சியா ? இல்லை சங்கிகளின் ஆட்சியா?

பள்ளி மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கப்படுவதும்; குறிப்பாக மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வண்ணக் கயிறுகள் அணிந்து வருவதும் இதுவரை தமிழகம் அறிந்திராத அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்றுமில்லை.

h raja tweetகாப்புக் கயிறுகளோ, மந்திரித்துக் கட்டப்படும் கயிறுகளோ மஞ்சள், கருப்பு, சிகப்பு, பச்சை என்று தனித்தனி கயிறுகளாகத்தான் கட்டியிருப்பார்கள். எடப்பாடி, ஓ.பி.எஸ். தொடங்கி, பாண்டே போன்ற பத்திரிகையாளர்கள், சினிமா பிரபலங்கள் சிலரின் கைகளிலும் இத்தகையக் கயிறுகளைக் காண முடியும். ஆனால், பள்ளி மாணவர்கள் அப்பட்டமாக சாதிய அடையாளத்தைக் குறிக்கும் வகையில் இரண்டு வண்ணக் கயிறுகளைச் சேர்த்துக் கட்டியிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே கவனிக்கத்தக்கது.

தேவர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் மஞ்சளும்; நாடார் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சிவப்பும் நீலமும்; தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பச்சையும் சிவப்பும் மற்றும் நீலம்; வன்னியர் என்றால் மஞ்சள் கயிறு என்று ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு சாதிய அடையாளம் உண்டு.

இந்த சாதியக் கயிறுகளைத்தான், மத நம்பிக்கை தொடர்பான விசயம் என்றும் இதில் அரசு தலையிட உரிமையில்லை என்றும் கயிறு திரிக்கிறார் எச்.ராஜா.

”மாணவர்கள் கயிறு கட்டிவருவதால் என்ன பிரச்சினை வந்துவிட்டது? சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? கலவரம் நடந்துவிட்டதா?” என நியூஸ்18 தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கேற்றுப்பேசிய அ.தி.மு.க.வைச் சேர்ந்த சசிரேகா என்பவர் கேள்வியெழுப்புகிறார். ஏதோ, தேவையில்லாமல் இவ்விசயத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்பதுதான் இத்தரப்பின் வாதமாக இருக்கிறது.

இவர்களின் வாதப்படி, விதிவிலக்காகவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நிலவும் நடைமுறை என ஒதுக்கித்தள்ளிவிட முடியுமா?

Sengottaiyan
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

”மாணவர்களிடையே சாதிய பாகுபாடு கடைபிடிக்கும் போக்கு அங்கன்வாடி அளவிலேயே ஆரம்பித்துவிடுகிறது” என்கிறார் எவிடன்ஸ் கதிர். மதுரை மாவட்டங்களில் அங்கன்வாடிகளில் மாணவர்கள் தனித்தனியாக அமர வைக்கப்படுவதாகவும்; அங்கன்வாடியில் வழங்கப்படும் தட்டுக்களை பயன்படுத்த மறுத்து ஆதிக்கசாதியினர் வீட்டு பிள்ளைகளுக்கு கிண்ணம் கொடுத்து அனுப்புவதையும்; திருநெல்வேலியில் அங்கன்வாடி ஒன்றில் இரட்டைக்குடம் வைக்கப்பட்டிருந்ததும், ஆதிக்கச்சாதியினருக்கான குடத்தில் தாழ்த்தப்பட்டசாதியைச் சேர்ந்த சிறுவன் தண்ணீர் எடுத்துக் குடித்ததற்காக அங்கன்வாடி ஊழியர்களால் தாக்கப்பட்டதையும் இவ்விவகாரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டிருப்பதையும் ஆதாரங்களோடு குறிப்பிடுகிறார். மேலும், தென்மாவட்டங்களில் சாதிரீதியாக மாணவர்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் தொடர்பாக ஆண்டுக்கு சராசரியாக 60 வழக்குகள் பதிவாகிறது என்கிறார், அவர்.

படிக்க:
மோடியை கலாய்க்கும் ஹிந்து விரோதிகள் மீது எச்.ராஜா புகார்
♦ “காஷ்மீர் திறந்தவெளி சிறைச்சாலையாக மாறிவிட்டது” : உண்மையறியும் குழு அறிக்கை !

இதுபோன்று தென் மாவட்ட பள்ளிகளில் மாணவர்கள் சாதிரீதியாக மோதிக்கொள்ளும் போக்கு தொடர்பாக, கடந்த 2017-ம் ஆண்டில் தேசிய மனித உரிமை ஆணையம் இப்பிரச்சினையை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்ததோடு, இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸும் அனுப்பியிருந்தது.

அப்போதைய, நெல்லை மாவட்ட ஆட்சியர் கருணாகரன் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களையும் அழைத்து, ”சாதியை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகளை கட்டி வரும் மாணவர்களுக்கு முதலில் எச்சரிக்கை செய்ய வேண்டும். அதன் பின்னரும் கயிறு கட்டிவந்தாலோ, சாதிவெறியை தூண்டும் வகையில் செயல்பட்டாலோ பள்ளியிலிருந்து சம்பந்தப்பட்ட மாணவரை நீக்கவும்” அறிவுரை வழங்கியிருந்தார்.

தாக்கப்பட்ட மாணவன் மாரிமுத்து

சமீபத்தில் கோவில்பட்டி வ.உ.சி. அரசு மேநிலைப்பள்ளியில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுடன் நட்புரீதியில் பேசியதற்காக 11-ம் வகுப்பு மாணவன் மாரிமுத்துவை அவரது செவித்திறன் பாதிக்கும் அளவிற்குத் தாக்கியிருக்கிறார்கள் அவருடன் பயிலும் சக ‘உயர்’சாதி மாணவர்கள்.

விழுப்புரம் சேந்தநாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பா.ம.க. கொடி நிறத்தில் வளையம், விடுதலை சிறுத்தைகள் கட்சி வண்ணத்தில் வளையம் அணிந்து வந்த மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவையெல்லாம் ஊடகங்களில் வெளியான செய்திகள். ஊடக வெளிச்சத்துக்கு வராமல், போலீசு நிலையங்களில் வழக்காகக்கூடப் பதிவாகாமல் புதைக்கப்பட்ட சம்பவங்கள் பல உண்டு.

இரத்து செய்யப்பட்ட அரசாணையின் நகல்

மாணவர்களிடையே நிலவும் இத்தகைய சாதிய பாகுபாட்டை களையும் முயற்சிக்கு பதிலாக சாதிவெறிபிடித்த ஆசிரியர்கள் சிலரும் சாதிய பாகுபாட்டோடுதான் மாணவர்களை நடத்துகின்றனர் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. பொதுவில் பள்ளிச் சூழலே சாதியின்பால் பாழ்பட்டிருக்கிறது என்பதாகத்தான் இதனை பார்க்க முடியும்.

பொள்ளாச்சி அருகேயுள்ள பள்ளியொன்றில் சாதிவெறிபிடித்த ஆசிரியர் ஒருவர், உயர்சாதி மாணவர்களை பிளஸ் என்றும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவர்களை மைனஸ் என்றும் அழைத்தது பிரச்சினையாகியிருக்கிறது.

தருமபுரி பள்ளியொன்றில், ”பறபசங்களுக்கெல்லாம் படிப்பு வராது. டி.சி.-ய வாங்கிட்டு கிளம்பு”ன்னு சொல்லி தாழ்த்தப்பட்ட மாணவர் ஒருவரை சக மாணவர்கள் முன்பு அடித்து அவமானப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர் ஒருவர். இதனால் மனமுடைந்த அம்மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூரில் தனியார் பள்ளியொன்றில் 12-ம் வகுப்பு மாணவரை சாதிரீதியாக ஆசிரியரே இழிவுபடுத்தியதால்; மாணவர் சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடந்த பிப்-12, 2019 அன்று கடலூர் மாவட்டம் காரைக்காடு அரசுப்பள்ளி மாணவர்கள் சாதிய பாகுபாட்டோடு ஆசிரியர்கள் தங்களை இழிவாக நடத்துவதாகக் கூறி போலீசிடமும் முதன்மை கல்வி அலுவலரிடமும் முறையிட்டிருக்கின்றனர்.

உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதிவன்மத்திற்கு பலியான ரோஹித் வெமூலாவும், மருத்துவ மாணவி பாயலும் சந்திக்க நேர்ந்த கொடுமைகளை இந்த சம்பவங்கள் நினைவுபடுத்தவில்லையா?

கடந்த நவம்பர்-20, 2018 அன்று திருநெல்வேலியைச் சேர்ந்த இசக்கி சங்கர் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டதை மறந்திருக்க மாட்டீர்கள். கோனார் சாதியைச் சேர்ந்த இசக்கி சங்கரும், அகமுடையர் சாதியைச் சேர்ந்த சத்தியபாமாவும் காதலர்கள். இசக்கி சங்கர் வங்கி ஊழியர் என்பதாலும் இருவரும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலும் இரு குடும்பத்தினரும் கலந்துபேசி சம்பந்தம் வரை பேசியிருக்கின்றனர்.

சாதி பெருசுகளே சமாதானம் ஆனபின்னரும், ”அக்காவை கீழ்சாதிகாரனுக்கு கட்டிவைக்கிறியே” என ஊரார் இழிவாகப் பேசியதாகவும் சாதியின் கௌரவத்தை காக்கவே கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறான் பத்தாம் வகுப்பு மாணவனான அய்யப்பன். சக பள்ளி மாணவர்கள் 5 பேரோடு சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்கிறான். இப்பொழுது சொல்லுங்கள்… இதுவேறு அதுவேறு என்று ஒதுங்கி சென்றுவிட முடியுமா?

இதே தென்மாவட்டங்களில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு, சாதியப் பிரச்சினைகளின் போது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பகுதியில் உள்ள கிணற்றில் விசத்தைக் கலந்தனர் ஆதிக்க சாதிக் கிரிமினல்கள்.

அடுத்தடுத்து ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆணவக்கொலைகள் விழுந்த போதும், முகத்தில் தெரிக்கும் இரத்தத்தை துடைத்தெறிந்துவிட்டு கடந்து செல்வதைத்தான் “சமூகத்தின் இயல்பு” என்கிறார்கள். ”கயிறுகளால் என்ன பிரச்சினை? கலவரமா வந்துவிட்டது, சட்டம் ஒழுங்கா சீர்கெட்டது?” எனத் திரும்பத் திரும்பக் கேட்கிறார்களே அதுபோல, தீண்டாமையினால் என்ன பிரச்சினை, அறுவா எடுத்து வெட்டிகொள்ளட்டும் என்று அதுவரையில் காத்திருப்பார்களா?

பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியிருந்த சரியான உத்தரவு அறிக்கையை சாதிவெறிக்கு துணை போகும் எடப்பாடி அரசு ரத்து செய்திருக்கிறது, அதுவும் இந்துமதவெறியை வாயில் கக்கும் எச்.ராஜாவின் வேண்டுகோளின் பெயரில்.

தமிழகத்தை ஆளும் அடிமைக் கும்பல், தமிழகத்தின் நிலையை 70 ஆண்டுகள் பின்னோக்கி இட்டுச் சென்றுள்ளது. இச்சூழலை அப்படியே கடந்து செல்ல முடியுமா ? தமிழகத்தில் தலைவிரித்தாடும் சாதிவெறிதான் இந்துமதவெறியின் அடித்தளம் என்பதால் நாம் இரண்டு வெறியர்களையும் வேரறுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

– இளங்கதிர்

யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !

0
Climate-Change-Slider

ருவநிலை மாற்றம் குறித்து யூடியூப்பில் தேடுங்கள். அதை மறுக்கும் காணொளி ஒன்றை உடனடியாக நீங்கள் காணலாம். உண்மையில், பருவநிலை மாற்றம் குறித்து இணையத்தில் நடக்கும் விவாதங்களில் அறிவியலில் நம்பிக்கை கொண்டவர்களை விட மறுப்பாளர்கள் மற்றும் சதிக்கோட்பாட்டாளர்களின் கையே ஓங்கியிருக்கிறது என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. பருவநிலை மாற்றத்திற்கு மனித நடவடிக்கைகள்தான் முதன்மையான காரணம் எனும் அறிவியலின் ஒருமித்த கருத்தை பெரும்பாலான யூடியூப் காணொளிகள் எதிர்க்கின்றன.

விஞ்ஞானத்தைப் பற்றிய தவறான தகவல்கள் பரவுவதன் பின்னனியில் சமூக ஊடகங்களின் முதன்மையான பங்கை அந்த ஆய்வு எடுத்துரைக்கிறது. மேலும் விஞ்ஞானிகளும் அவர்களை ஆதரிப்பவர்களும் தங்களது கண்டுபிடிப்புகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆக்கபூர்வமான மற்றும் ஈர்க்கும் வழிகளை வளர்ப்பதில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று அது அறிவுறுத்துகிறது. ஆனால் அதைவிட இன்றியமையாததாக, அறிவியல் தகவல்களை தனி மனிதர்கள் மற்றும் சமூகத்தின் நடத்தையை பாதிக்கும் வகையில் கையாள்வது குறித்து நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.

Climate Change melting-glaciersபருவநிலை மாற்றம் குறித்து யூடியூபிலுள்ள தொடர்பின்றி எடுக்கப்பட்ட 200 காணொளிகளின் அடிப்படையில் இந்த ஆய்வினை ஜெர்மனியின் ஆர்.டபிள்யூ.டி.எச் ஆச்சென் பல்கலைக்கழகத்தை (RWTH Aachen University) சேர்ந்த ஜோகிம் ஆல்காயர் நடத்தியுள்ளார். அவற்றில் பெரும்பான்மையாக 107 காணொளிகள் பருவநிலை மாற்றம் மனிதர்களால் ஏற்பட்டது என்பதை மறுத்தோ அல்லது பருவநிலை மாற்றம் என்பதே ஒரு சதி என்றோ கூறுவதாக அவர் கண்டறிந்துள்ளார்.

சதிக்கோட்பாடுகளை தூண்டும் காணொளிகள் அதிக பார்வையை பெற்றிருக்கின்றன. மேலும் சதிக்கோட்பாடுகளை பரப்பும் காணொளிகள் அதற்கு அறிவியல் சாயமடிக்க பருவநிலை பொறியியல் (geo engineering) போன்ற குறிச்சொற்களையும் பயன்படுத்துகின்றன.

படிக்க:
குழந்தைகள் கலையின் வடிவத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்கள் !
♦ பூமி தட்டையானது – மூட நம்பிக்கைக்கு யூ டியூப் முதன்மையான காரணம்

உடல் நலம் குறித்த வதந்தி :

அறிவியல் உண்மைகளை பரப்புவதில் வெற்றி பெற முடியாமலிருப்பது பருவநிலை மாற்றம் குறித்த துறை ஒன்று மட்டுமல்ல. சான்றாக தொற்றுநோய்களை குறிப்பாக நமக்கு மிகவும் தெரிந்த ரூபெல்லா (measles-mumps-rubella or MMR) தடுப்பு மருந்தினை எடுத்துக்கொள்வோம். இந்த மருந்தின் பாதுகாப்பு குறித்து ஏராளமான தகவல்கள் இருந்த போதும் அது ஆபத்தானது என்ற தவறான தகவல் உலகின் பல்வேறு நாடுகளில் பரவலாக பரப்பப்பட்டது. விளைவு பல நாடுகளில் தடுப்பூசியின் அளவு குறைந்தது.

நன்கு அறியப்பட்ட சதிக்கோட்பாடுகள் தான் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றில்லை. தென்னிந்திய மாநிலமான கேரளாவில் 17 நபர்களின் உயிரை பறித்து நிபா (Nipah) வைரஸ் தாக்குதல் உச்சத்திலிருந்த போது ஒரு நபர் சொந்தமாக ஒரு சதிக்கோட்பாட்டை பரப்பினார். மாவட்ட மருத்துவ அதிகாரியின் அதிகார்பூர்வ கடிதம் போல போலியாக ஒன்றை உருவாக்கி கோழிக்கறி மூலமாக தான் நிபா வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியை பரப்பினார்.

நிபா வைரஸ் தாக்குதலால் மரணித்த ஒருவரது உடலை அடக்கம் செய்யும் மருத்துவ ஊழியர்கள். (கோப்புப் படம்)

உண்மையில் பழந்தின்னி வவ்வால்கள் தான் நிபா வைரஸின் மூலம் என்ற கருத்தினை அறிவியல் நிறுவியுள்ளது. வாட்ஸப்பில் பரவிய அந்த வதந்தி கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கோழிக்கறி உண்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கோழிக்கறி வியாபாரிகளுக்கு நட்டத்தையும் ஏற்படுத்தியது.

நம்முடைய நினைவுகள் இணக்கமானவை என்பதால் ரூபெல்லா தடுப்பு மருந்து மற்றும் நிபா வைரஸ் குறித்த வதந்திகள் மனித மனங்களிடையே ஏற்படும் பாதிப்புகள் குறித்து வியப்படைய ஒன்றுமில்லை. நம்முடைய அசலான நினைவுகளை புதிய மற்றும் தவறான நினைவுகளால் மாற்ற முடியும். தங்களது கைமீறிய நிகழ்வுகள் அல்லது சிக்கல்களை பற்றி தெரிந்து கொள்ள மக்களுக்கு வலிமையான கருவியாக சதிக்கோட்பாடுகள் காட்சியளிக்கின்றன.

சமுக ஊடகங்களின் தனிநபர் விருப்பங்கள் அடிப்படையிலான படிமுறைத்தீர்வுகள் (personalisation algorithms) இதனை மேலும் சிக்கலாக்குகின்றன. நமக்கு மன நிறைவு தருகின்ற, நம்பிக்கை சார்ந்த மற்றும் தேடி கிளிக் செய்யும் வடிவங்கள் அடிப்படையில் தகவல்களை நமக்கு சீராக படிமுறைத்தீர்வுகள் தருகின்றன. மனிதர்களால் பருவநிலை மாற்றம் நடப்பதில்லை என்று கூறும் காணொளிகள் தொடர்ந்து கிடைக்கும் போது பருவநிலை மாற்றம் குறித்த சந்தேகம் கொண்ட ஒருவருக்கு சொந்தமாக முடிவெடுக்கும் வாய்ப்பு குறைகிறது.

வதந்திகள், எதிர்பாராத வடிவங்கள் மற்றும் மாறுபட்ட அளவிலான நுணுக்கங்களுடன் வருவதை டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் விரைவான வளர்ச்சி மேலும் உறுதி செய்கிறது. ஒரு அதிகாரியின் கடிதத்தை நகலெடுப்பது அல்லது இணைய தேடுபொறிகளைக் கையாள திறன்சார்ந்த சொற்களைப் பயன்படுத்துவது என்பது அமிழ்ந்திருக்கும் பனிப்பாறையின் முனை மட்டுமே. டீப்ஃபேக்ஸ் (DeepFakes) போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் மூலம் வதந்திகளையே மிகவும் யதார்த்தமான அறிவியல் காணொளிகளாக காட்டும் போக்கு வளர்வது, வதந்திகளை கண்டறிவதை மேலும் கடினமாக்குகிறது.

படிக்க:
♦ கேள்வி பதில் : பெர்முடா முக்கோணம் மர்மம் உண்மையா ?
♦ திருப்பூர் கிருத்திகா மரணம் : ஹீலர் பாஸ்கரையும் பாரி சாலனையும் கைது செய் !

எப்படி இந்த சிக்கலை எதிர்கொள்ள போகிறோம்?

சரியான அறிவியல் தகவல்களை கொடுப்பது மூடநம்பிக்கைகள் பற்றிய மக்களின் விழிப்புணர்வை வலுப்படுத்தும். மேலும் மக்களது கருத்தியல்கள் மற்றும் சார்புநிலைகளையும் நாம் எதிர்கொண்டாக வேண்டும்.

நிறுவன கட்டமைப்புகளை உருவாக்கி வதந்திகளை கட்டுப்படுத்த சமூக ஊடக நிறுவனங்கள் முயல்கின்றன. “இந்த ஆய்வு நடத்தப்பட்டதிலிருந்து நூற்றுக்கணக்கான மாற்றங்களை எங்களது கட்டமைப்பில் செய்திருக்கிறோம். இன்று யூடியூப் எப்படி வேலை செய்கிறது என்பதை ஆய்வின் முடிவுகள் துல்லியமாக காட்டவில்லை…. அமெரிக்காவில் இந்த மாற்றங்கள் இது போன்ற காணொளி பரிந்துரைகளை 50 விழுக்காடு வரை ஏற்கனவே குறைந்துள்ளன” என்று யூடியூப் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

மற்ற நிறுவனங்கள் தரவு சரிபார்ப்பவர்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கின்றன. வதந்திகளை பற்றி ஆய்வு செய்ய என்னை போன்ற கல்வியாளர்களுக்கு நிதியொதுக்கீடும் செய்கின்றன. உடல்நலத்திற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய தலைப்புகளுக்கான தேடல் குறியீட்டு சொற்கள் தடுக்கப்பட்டுள்ளன.

ஆனால் தொடர்ந்து பரப்பப்படும் அறிவியல் வதந்திகளை பார்க்கும் போது இவ்வழிமுறைகள் போதாமையாக இருக்கின்றன. விளைவாக, உலகம் முழுதும் பல்வேறு நாடுகள் சட்டங்கள் உருவாக்கியும், இணையத்தை முடக்கும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றன.

அறிவியலாளர்கள் பங்களிக்க வேண்டும்:

உண்மையான அறிவியல் தகவல்களுக்கும் சதி கோட்பாடுகளுக்கும் இடையிலான வேறுபாட்டை தர்க்கபூர்வமாக புரிந்து கொள்ளும் திறனை மக்களிடம் வளர்ப்பது மற்றொரு சாத்தியமான தீர்வாகும். சான்றாக, உண்மையான தகவல் மற்றும் வதந்திகளை வேறுபடுத்திப் பார்ப்பதற்கான குழந்தைகளின் திறன்களை மேம்படுத்த தகவல் கல்வியறிவு முயற்சி ஒன்றை கேரளாவில் உள்ள ஒரு மாவட்டம் கிட்டத்தட்ட 150 அரசுப்பள்ளிகளில் தொடங்கியுள்ளது. இது தொடக்கமாக இருக்கலாம். ஆனால் ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தும் என்பதற்கு ஏராளமான சான்றுகள் ஏற்கனவே உள்ளன.

யூடியூப் பருவநிலை மறுப்பாளர்கள் புவி பொறியமைப்பியல் போன்ற தேடு பொறிச்சொற்களை தவறாக பயன்படுத்தியதை போல தங்களது உழைப்பு நிராகரிக்கப்படவோ அல்லது தவறாக பயன்படுத்தப்படவோ இல்லை என்பதை உறுதி செய்யும் போராட்டத்தில் அறிவியாலர்களும் தங்களை அதிகளவில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். சதிக்கோட்பாடுகள், வதந்தியாயினும் உறுதியான நம்பிக்கையின் அடிப்படையில் சவாரி செய்கின்றன. அதேசமயம் [எதையும்] சந்தேகிப்பது தான் அறிவியல் நடைமுறைக்கு இயல்பானது. ஆனால் பருவநிலை மாற்றத்தில் மனிதர்களின் பங்கை பொருத்தவரையில் 99 விழுக்காடு அறிவியலாளார்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

விஞ்ஞானிகள் இதனை அதிகளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் புதுமையான மற்றும் வசப்படுத்தும் உத்திகளைப் பயன்படுத்தி பொதுமக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும். இதில் மக்களது [அறிவியலற்ற] நம்பிக்கைகளை மாற்றுவதோடு நடத்தைகளையும் பாதிக்கும் வண்ணம் சொந்தமாக சமூக ஊடக உள்ளடக்கத்தை உருவாக்குவதும் அடங்கும். இல்லையெனில், அவர்களது குரல்கள் எவ்வளவு நம்பகமானவையாக இருந்தாலும், அறைகுறையான தரவுகளால் தயாரிக்கப்படும் அடுக்கடுக்கான தகவல்கள் மற்றும் அவற்றின் மூர்க்கத்தனத்தால் தொடர்ந்து அவை மூழ்கடிக்கப்படும்.


தமிழாக்கம் :
சுகுமார்
கட்டுரையாசிரியர் : சந்தோஷ் விஜய்குமார், நியூகேஸிலின் நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் சுகாதாரத்தில் மூத்த ஆராய்ச்சியாளராக உள்ளார்.
நன்றி : scroll

குடி கெடுக்கும் எடப்பாடி ! பெருகும் டாஸ்மாக் !

குடி கெடுக்கும் எடப்பாடி !

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற பழமொழிக்கு வாழும் உதாரணமாய்த் திகழ்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. ஜெயா இறந்துபோன 2016-ம் ஆண்டில் 26,995 கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் (வரி) வருமானம், கடந்த இரண்டாண்டு கால எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ரூ. 31,157 கோடியாக அதிகரித்திருக்கிறது. வருமானம் மட்டுமின்றி, டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையும் கடந்த ஒரு ஆண்டில் 3,866-லிருந்து 5,152 ஆகவும்; பார்களின் எண்ணிக்கை 1,456-லிருந்து 1,872 ஆகவும் அதிகரித்துள்ளன.

தமிழக மக்கள் நடத்திவந்த டாஸ்மாக் எதிர்ப்புப் போராட்டங்களின் வீரியம் குறைந்து போய்விட்டதைப் பயன்படுத்திக்கொண்டு டாஸ்மாக் கடைகள், பார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி, சாராய வருமானத்தையும் பெருக்கிக் கொண்டுவிட்டது, எடப்பாடி அரசு.

Edappadi-Palaniasamy_TASMACதமிழக மக்களில் 10-ல் நான்கு பேர் சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைகளுக்கு அடிமையாகியிருக்கும் புள்ளிவிவரங்கள் சமீபத்தில் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு போதை நாடு ஆகிவருவதை எச்சரிக்கும் செய்தி இது. இந்த அபாயத்திலிருந்து தமிழ்நாட்டை மீட்க வேண்டுமென்றால், முதல் நடவடிக்கையாக டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும். ஆனால், எடப்பாடி அரசு அதற்கு நேர்எதிராக, இந்தக் கோரிக்கை வாயளவில் எழுப்பப்படுவதைக்கூடச் சகித்துக் கொள்ள மறுத்து, டாஸ்மாக்கை எதிர்ப்பவர்களை நர வேட்டையாடி வருகிறது.

படிக்க:
பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !
♦ காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

♣ திருவாரூர் அருகேயுள்ள தேவர்கண்டநல்லூரில் டாஸ்மாக் கடைகளிலேயே கள்ளச் சீமைச் சாராயம் விற்பதை அம்பலப்படுத்தித் தட்டிகளை வைத்ததற்காக செல்லப்பாண்டி என்ற இளைஞரை மூன்று வழக்குகளின் கீழ் கைது செய்து சிறையிலும் அடைத்தது, தமிழக போலீசு.

♣ டாஸ்மாக் கடைகளை மூடக் கோரித் தொடர்ச்சியாகப் போராடிவரும் மதுரையைச் சேர்ந்த நந்தினியையும் அவரது தந்தை ஆனந்தனையும், அவர்கள் மீது ஐந்தாண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட வழக்கைக் காரணமாக வைத்துக் கடந்த ஜூன் மாத இறுதியில் அடாவடித்தனமாகக் கைது செய்தது, போலீசு. அவ்வழக்கு விசாரணையின்போது, “போதைப்பொருள் விற்பது ஐ.பி.சி. 328-ன்படி குற்றம். அந்தக் குற்றத்தை அரசே செய்யலாமா?” என நீதிபதியிடம் கேள்வி எழுப்பியதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அவர்கள் மீது பதியப்பட்டது.

அவ்விருவருக்கும் பிணை கொடுப்பதற்கு, “மது விற்பது குற்றமா என்பது போன்ற கேள்விகளை நீதிமன்றத்தில் இனி கேட்கக் கூடாது என எழுதிக் கையெழுத்திட வேண்டும்” என்றொரு நிபந்தனையையும் விதித்தது, நீதிமன்றம். இந்நிபந்தனைக்கு நந்தினியும் ஆனந்தனும் மறுக்கவே, அவர்களைச் சிறையில் அடைத்துவிட்டது நீதிமன்றம் – போலீசு கூட்டணி.

மனைவியின் இறந்த உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவர் ரமேஷ் (கோப்புப் படம்)
மனைவியின் இறந்த உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவர் ரமேஷ் (கோப்புப் படம்)

கோவை மாவட்டம்-ஆனைக்கட்டி பகுதியில் மருத்துவராகப் பணியாற்றி வரும் ரமேஷின் மனைவி ஷோபனா சாலை விபத்தொன்றில் அகால மரணமடைந்ததற்கு டாஸ்மாக் சாராயம்தான் காரணம் என்பது மறுக்கவியலாத உண்மை. எனினும், ஷோபனாவின் மரணம் குறித்த முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகள் மதுபோதையில் இருந்த விவரம் பதிவு செய்யப்படவில்லை. அதற்கான சோதனையே நடத்தப்படவில்லை எனக் குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது.

டாஸ்மாக் சாராயத்தால் நேர்ந்துவரும் இத்தகைய அவலங்கள் குறித்துத் தமிழகச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் விவாதிக்கப்படவில்லை. அதற்கு மாறாக, “டாஸ்மாக் கடைகள் கள்ளச் சாராயச் சாவுகளை ஒழித்துவிட்டதாக” வெட்கமின்றி பெருமை பாராட்டிக் கொண்டது அ.தி.மு.க. அரசு. மேலும், எடப்பாடி ஆதரவு எம்.எல்.ஏ. தனியரசு, “நடமாடும் டாஸ்மாக் கடைகளைத் திறக்க வேண்டும்” எனக் கோரியதை அமைச்சர் பெருமக்கள் அனைவரும் ரசித்துச் சிரித்திருக்கிறார்கள்.

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சட்டங்கள்!

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

நூல் அறிமுகம் : பணவீக்கம் என்றால் என்ன ?

கில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென் மண்டலத் துணைத்தலைவராக பதவிவகித்த இ.எம்.ஜோசப் அவர்கள், ”சங்க முரசு” இதழுக்காக எழுதிய பொருளாதாரம் தொடர்பான தொடர் கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டிருக்கிறது.

பணவீக்கம், விலைவாசி மற்றும் அதன் தொடர்பான அந்நிய மூலதனப் போக்குவரத்து, உள்நாட்டுப் பணப்புழக்கம், எரிபொருள் விலை உயர்வு, விவசாயம், முன்பேர வர்த்தகம், உணவு உரிமை, பொது விநியோகம் போன்ற சில அம்சங்களை புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான குறிப்புகளோடு அறிமுகப்படுத்தியிருக்கிறார், இந்நூலாசிரியர்.

ணவீக்கம் (Inflation) என்பது வேறு; பணவீக்க விகிதம் (Rate of Inflation) என்பது வேறு. முதலில் பணவீக்க விகிதம் குறித்துப் பார்ப்போம். ஏனெனில், இதுதான் ஊடகங்கள் அவ்வப்போது நமக்குத் தரும் தகவல். பண்டங்கள் மற்றும் சேவைகளின் (Goods and Services) விலை குறித்த விலைவாசிப் புள்ளி பற்றி நமக்குத் தெரியும். பணவீக்க விகிதம் என்பது அப்புள்ளிகளின் ஏற்ற இறக்கங்கள் குறித்த சதவீதமேயாகும். அதாவது, ஒரு குறிப்பிட்ட ஆண்டின் குறிப்பிட்ட காலத்தின் பணவீக்க விகிதம் என்பது, அதற்கு முந்தைய ஆண்டின் அதே காலத்தில் இருந்த விலைவாசிகளுடனான ஒப்பீட்டுச் சதவீதமேயாகும்.

பணவீக்க விகிதம் குறைகிறது என்றால், கண்டிப்பாக குறைகிறது என அடித்துக் கூற முடியாது. விலைகள் ஏறும் வேகம் குறைகிறது என்பதே நேரடி அர்த்தம். ஒரு சிறிய எடுத்துக்காட்டு. ஊரிலிருந்து பாத யாத்திரையாகச் செல்லும் ஒருவர் முதல் நாளில் 10 கிலோமீட்டர் வேகத்தில் நடக்கிறார். அதற்கு அடுத்த நாள் நடை வேகம் 7 கிலோ மீட்டர் எனக் குறைகிறது. அதற்கு அடுத்த நாள் 3 கிலோ மீட்டர் என மேலும் குறைகிறது. வேகம் இவ்வாறு தொடர்ந்து குறைந்தாலும், அவர் மூன்று நாட்களின் முடிவில் 20 கிலோ மீட்டர் கடந்து விட்டார். பணவீக்க விகிதமும் அது போன்றது தான். விலை ஏறும் வேகம் குறைந்தாலும், மொத்தத்தில் விலை ஏற்றம் அதிகமாகி விடுகிறது.

ஒரு சில வேளைகளில் சில பண்டங்களின் விலைகள் உண்மையில் குறையவும் கூடும். ஒட்டு மொத்தத்தில் அனைத்துப் பண்டங்களின் விலைகளும் குறையும் அரிய சந்தர்ப்பங்களில் அது எதிர்மறைப் பணவீக்கம் (Negative inflation) என்று அழைக்கப்படுகிறது. முந்தைய ஆண்டின் (Base year) விலைவாசிகளோடு ஒப்பீடு என்பதால், குறிப்பிட்ட ஆண்டின் பணவீக்க விகிதத்தின் ஏற்ற இறக்கங்கள், முந்தைய ஆண்டின் விலை நிலவரங்களைப் பொறுத்தே அமையும். இது அடிப்படை ஆண்டின் விளைவு (Base year effect) என அழைக்கப்படுகிறது.

நமது நாட்டில் பணவீக்க விகிதம் மொத்த விலைப்புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இது சரியல்ல. வளர்ச்சியடைந்த நாடுகள் பலவற்றில் இது சில்லறை விலைப் புள்ளிகளின் அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது. சில்லறை விலையே நுகர்வோர் கொடுக்கும் விலை என்பதால், அதுவே பணவீக்கத்தினை பிரதிபலிக்கும் சரியான அடிப்படையாக இருக்க முடியும்.

சரி, பணவீக்கம் எவ்வாறு ஏற்படுகிறது? மக்கள் மத்தியிலிருக்கும் பணப்புழக்கம் (Broad money) அதிகரிப்பதன் காரணமாக, சந்தையில் கிராக்கி (Demand) அதிகரிக்கிறது. அதன் காரணமாக விலைகள் உயருகின்றன. இது கிராக்கியினால் ஈர்க்கப்படும் பணவீக்கம் (Demand pull Inflation) எனப்படுகிறது. அதே வேளையில், இடுபொருள் விலை உயர்வு, வரி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பண்ட உற்பத்திச் செலவு (Cost) அதிகரித்து அதனாலும் விலைகள் உயரக்கூடும். இது செலவினால் உந்தப்படும் பணவீக்கம் (Cost-push Inflation) எனப்படுகிறது. இது தவிர, சில பண்டங்களின் / சேவையில் அளிப்பில் ஏற்படும் தட்டுப்பாடுகள் (Supply Constraints) காரணமாகவும், ஆங்காங்கு விலை உயர்வு ஏற்படக்கூடும். பொதுவாக இவைதான் பணவீக்கத்தின் அடிப்படை நாம் இப்போது விவாதித்த அனைத்துமே விலை வீக்கம் (Price Inflation) குறித்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். (நூலிலிருந்து பக்.7-8)

…. பணவீக்கம் என்றாலே அனைத்துப் பண்டங்களின் விலை உயர்வு என்பதுபோல, இன்றைய பணவாதப் (Monetarists) பொருளியல் வல்லுனர்கள் பேசி வருகின்றனர். அதே போன்று, பணவீக்க விகிதம் குறைந்து விட்டாலே, பணவீக்கத்திற்கு முந்தைய வாங்கும் சக்தியினை மக்கள் மீண்டும் பெற்று விடுவது போன்ற ஒரு பிரமையினையும் அவர்கள் தோற்றுவிக்கின்றனர். ஆனால், எதார்த்தத்தில் என்ன நடக்கிறது?

எல்லாப் பண்டங்கள் மற்றும் சேவைகளின் விலைகள் உயர்ந்தாலும், உழைப்புச் சக்தியின் விலை, அதாவது ஊதியம் மட்டும் அப்படியே தானாக உயர்ந்து விடுவதில்லை என்பது இங்கே மறைக்கப்படுகிறது. பணவீக்கக் காலத்தில், விலைப் புள்ளிகளுடன் இணைந்த ஊதியம் மட்டுமே உயர்வதற்கான சாத்தியம் கொண்டது. நம் நாட்டில், 93% வரை முறைசாராத் துறை எனும் போது, ஊதியம் எப்படி தானாகவே உயரும்?

எல்லாப் பண்டங்களின் விலையும் 10% உயர்கின்றன. அதே போன்று 10% உயர்கிறது என்றால், அதில் பிரச்சினை என்ன இருக்க முடியும்? மாறாக, அனைத்துப் பண்டங்களின் விலைகளும் 5% உயர்கின்றன. ஆனால், கூலி மட்டும் உயரவில்லை எனில், இந்த 5 சதவீதப் பணவீக்கம், 10 சதவீதப் பணவீக்கத்தினை விட மோசமானது. இதுதானே உண்மையில் பிரச்சினையாக இருக்க முடியும்?

உழைப்புச் சக்தியின் விலை (ஊதியம்) தவிர மற்ற அனைத்து பண்டங்கள் மற்றும் சேவைகளின் பண மதிப்பிலான விலைகள் உயரும் சூழ்நிலையே பணவீக்கம் என்பதன் உண்மையான விளக்கம். பணவீக்க விகிதம் குறைந்தாலும், அதாவது, விலையேற்றத்தின் வேகம் குறைந்தாலும், பணவீக்கத்திற்கு முன்பிருந்த பொதுவான விலைகளின் அளவிற்கும், கூலியின் அளவிற்கும் ஏற்கனவே இருந்த இடைவெளி குறைவதில்லை; மாறாக மேலும் அதிகரிக்கவே செய்கிறது. அதாவது, உழைப்பாளிகளின் கூலியாக இருந்த ஒரு பகுதிச் செல்வம், முதலாளிகளின் இலாபமாக கைமாற்றிக் கொடுக்கப்படுகிறது. எனவேதான், ஜான் மேனார்ட் கீன்ஸ், பணவீக்கத்தினை, இலாப வீக்கம் (Profit inflation) என்றே குறிப்பிட்டார், என்ன செய்ய வேண்டும்?

படிக்க:
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
Article 370 நீக்கம் : காஷ்மீர் பண்டிட்டுகள், டோக்ராக்கள், சீக்கியர்கள் கண்டனம் !

பணவீக்கத்தில் மிக முக்கிய அம்சம் உணவுப் பண்டங்கள் குறித்ததே அப்படியானால், என்ன செய்ய வேண்டும்? இதுதான் கேள்வி என்றால், உருவாகி இருக்கும் கிராக்கியின் அளவிற்கு உற்பத்தியினைப் பெருக்க வேண்டும் என்பதே நமது எளிமையான பதிலாக இருக்க முடியும். ஆனால், முதலாளித்துவம் அதைச் செய்யாது. விவசாய உற்பத்திக்குத் தேவையான நிலம் முதலாளிகளின் கைகளில் இல்லை. பூர்வ குடியினரை (செவ்விந்தியர்களை) விரட்டி அடித்து முதலாளிகள் ஆக்கிரமித்துக் கொண்ட அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலம் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனவே, அங்கு விவசாய விரிவாக்கத்தின் மூலம் பணவீக்கத்தினைச் சரிசெய்து விட முடியும்.

ஆனால், எந்த நாடுகளில் எல்லாம், விவசாயம் நீடித்து நிலை பெற்றுவிட்ட விவசாயிகளின் தளமாக (Peasant Agriculture) இருக்கிறதோ , அங்கு முதலாளித்துவம் விவசாயிகளுடன் கொண்டிருப்பது ஒரு வகையான வர்த்தக உறவுதான். இந்தியாவிலும் அதுவே நிலைமை எனவே, விவசாய விரிவாக்க வேலையினை முதலாளித்துவம் கையில் எடுப்பதில்லை, ”விவசாயத்தினை மேம்படுத்தும் வேலையினை முதலாளித்துவம் செய்யுமானால், அது முதலாளித்துவமே அல்ல” என மாமேதை லெனின் கூறியதை இங்கு நினைவு கூர்வது பொருத்தமாக இருக்கும். விவசாயிகளை அவர்களது நிலத்திலிருந்தும், அவர்களது உற்பத்தி உடைமைகளிலுமிருந்தும், பிரித்தெடுத்து வெளியேற்றுவது முதலாளித்துவத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கியமான ஒன்று என்பதை மறந்துவிடக் கூடாது. (நூலிலிருந்து பக்.60-62)

நூல் : பணவீக்கம் என்றால் என்ன ?
ஆசிரியர் : இ.எம். ஜோசப்

வெளியீடு : காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், சேலம் – உடன் இணைந்து
பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி எண் : 044 – 2433 2424 , 2433 9024.
மின்னஞ்சல் : thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 35.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : noolulagam | marinabooks

குழந்தைகள் கலையின் வடிவத்தில் தம்மை வெளிப்படுத்துகிறார்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 18

சூரியன் பிரகாசிக்கும் பகல் பொழுதையோ தனியான மரத்தையோ வரையும்படி குழந்தையிடம் சொல்லும்போது நான் அவனுக்கு என்ன சொல்லித் தருகிறேன்? “சூரியன் எப்போதும் ஒளிரட்டும்” என்ற பாடலைப் பாடும்படி சொல்லும் போது, அல்லது இதே தலைப்பில் வரையும் படியும் நடனமாடும்படியும் சொல்லும் போது குழந்தையின் கற்பனை உணர்ச்சியை எத்திசையில் செலுத்துகிறேன்? யதார்த்தம் என்பது எப்போதுமே ஒன்றுதான், ஆனால் இந்த யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் மொழிதான் வெவ்வேறானது என்று குழந்தை புரிந்து கொள்ளுமாறு செய்யவே நான் எல்லா சந்தர்ப்பங்களிலும் பாடுபடுகிறேன். இந்த மொழி வேறுபாடுதான் வெவ்வேறு கலைப் பிரிவுகளைத் தோற்றுவிக்கிறது.

குழந்தைகள் இன்றில்லாவிட்டாலும் நாளை இந்த யதார்த்தத்தைக் கண்டுபிடித்து, இதை வெவ்வேறு விதமாகப் பிரதிபலிக்கும் மொழிகளை கிரகிக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது அவர்கள் தம்மை நன்கு புரிந்து கொள்வார்கள், இசையில், படங்களில், நடனத்தில் தம்மை வெளிப்படுத்துவது அவர்களுக்கு அழகியல் இன்பத்தைத் தரும், அவர்கள் உலகை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள். எனவே, என் வகுப்புக் குழந்தைகளுடன் கூடுதல் பள்ளி நேரத்தில் கலந்து பழக இருப்பவர்கள் கலையின் இந்த முழுமையையும் ஒவ்வொரு குழந்தையின் மனநிலையின் முழுமையையும் மறந்துவிட வேண்டாமென வேண்டிக் கேட்டுக் கொள்வேன். மகிழ்ச்சி (துக்கம்) வெவ்வேறு ஒலிகளாலும் மலர்களாலும் இயக்கங்களாலும் அழுத்தந்திருத்தமான பேச்சுகளாலும் வெளிப்படுத்தப்பட்டாலும் இது ஒன்றேதான் என்பது குழந்தைகளுக்குப் புரியட்டும்.

எனது வகுப்புக் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது … விஷயம் அதுவல்ல. கலையினால் மகிழ்ச்சி உண்டாக, கலையினால் வளர்க்கப்பட மனித இதயத்தின், மனதின் எல்லாக் கதவுகளும் இதை ஏற்பதற்காக அகலத் திறக்கப்பட வேண்டும்.

நீங்கள் யாரை வளர்க்க விரும்புகின்றீர்கள், பாடகர்களையா, ஓவியர்களையா, பாலே கலைஞர்களையா, நாடக, பொம்மலாட்டக் கலைஞர்களையா என்று என்னிடம் கேட்கக் கூடும். எனது வகுப்புக் குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படியிருப்பார்கள் என்று எனக்குத் தெரியாது; இசையமைப்பாளர்களாவார்களா, பாடகர்களாக மாறுவார்களா, ஓவியர்களாகத் திகழுவார்களா, நடிகர்களாவார்களா என்று தெரியாது. விஷயம் அதுவல்ல. கலையினால் மகிழ்ச்சி உண்டாக, கலையினால் வளர்க்கப்பட மனித இதயத்தின், மனதின் எல்லாக் கதவுகளும் இதை ஏற்பதற்காக அகலத் திறக்கப்பட வேண்டும். மானுட உணர்வு, உணர்வுகளின் மனிதாபிமானம் அந்தந்த சூழ்நிலையில் தான், மானுடமயமாக்கப்பட்ட இயற்கையின் பயனாய் தோன்றும் என்று கார்ல் மார்க்ஸ் எழுதினார். இந்த ஆழ்ந்த சிந்தனையில் எனது குழந்தைகளின் கலைக் கல்வியையும் அழகியல் வளர்ப்பையும் எப்படி அணுக வேண்டுமென்பது தெரிகிறது.

பாலே வகுப்புகளும் நாடக வகுப்புகளும் எதற்கு என்று என்னைக் கேட்கக் கூடும். ஆனால் இக்கேள்வியைப் புரிந்து கொள்வது எனக்குக் கடினம். பெரும்பாலும் ஏன் குழந்தைகள் பாடலையும் சித்திரக் கலையையும் மட்டும் பயிலுகின்றனர், கலையின் மற்ற வகைகள் நிராகரிக்கப்படுகின்றன என்று நான் ஆச்சரியப்படுகிறேன். நடனம், நாடகத்தைக் கற்றுக்கொள்வதை விட பாடல், ஓவியத்தைக் கற்றுக்கொள்வது எளிதா என்ன? நாட்டியக் கலையும் நாடகமும் குழந்தையின் அழகியல் வளர்ச்சிக்கு அவ்வளவு முக்கியமானவையில்லையா என்ன? வெவ்வேறு கலை வகைகளை எடை போடும் சாதனம் ஒன்றிருந்தால் எல்லாம் சமமானவையாக இருப்பது தெரியுமென நான் உறுதியாக நம்புகிறேன்.

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
காஷ்மீர் துண்டாடப்பட்ட நாளின் முதல் பலி – 17 வயது சிறுவன் !

இவையெல்லாம் ஒரே மரத்தின் கிளைகள். குழந்தைகளுக்கு முழுமையான கலைக் கல்வியை அளித்து, இவர்களிடம் அழகியல் உணர்வுகளை வளர்க்க நான் விரும்பினால் இந்த மரத்தை இவர்கள் அடி முதல் உச்சி வரை பார்க்கவும் இதில் இவர்கள் ஏறவும் ஒரு கிளையிலிருந்து வேறு கிளைக்குச் செல்லும் மகிழ்ச்சியை இவர்கள் பெறவும் நான் உதவ வேண்டும். எனவே தான் கூடுதல் பள்ளி நேரத்தின்போது குழந்தைகள் இசை, பாலே நடனம், வரைதல், நாடகம் ஆகிய எல்லாவற்றிலும் ஈடுபாடு கொள்ள வேண்டுமெனக் கனவு காண்கிறேன். கலையின் வெவ்வேறு மொழிகளில் தம்மைத் தாமே வெளிப் படுத்திக் கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இதனால் குழந்தை வளர்ப்பில் கலையின் முழுமைக்கு வழிகோலப்படும்.

பாடங்கள் முடிந்தபின் என் வகுப்புக் குழந்தைகளின் பள்ளி வாழ்க்கை நான் மேலே கூறியவற்றுடன் முடிந்து விடுவதில்லை. வேறு காட்சிகளும் என் மனக் கண்ணில் தோன்றுகின்றன.

“யார் ’பிரதான படைத்தளபதியாக’ இருந்து துருப்புகளை வழிநடத்த விரும்புகின்றனர்?” சிறுவர்களும் சிறுமியரும் இரு சாராருமே “பிரதான படைத்தளபதியாக” இருக்க விரும்புகின்றனர்.

சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்வது இப்படித்தான் ஆரம்பமாகிறது. இந்த சுவாரசியமான விளையாட்டு எப்படி ஆரம்பமானது என்பது பற்றிய கதையை குழந்தைகளுக்குச் சொல்வேன். ஒவ்வொரு காயையும் எப்படி நகர்த்த வேண்டும், எளிய முறையில் எப்படி விளையாடுவது என்று விளையாடிக் காட்டுவேன். பின்னர் குழுக்களில் தீவிர சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்.

என்ன இது? தோற்றுவிட்டதற்காக தாத்தோ வருந்துகின்றானா? அழுகின்றானா? அவனை சமாதானப்படுத்த வேண்டும், நன்றாக விளையாட விரைவிலேயே அவன் கற்றுக்கொள்வான், கவனமாயும், பொறுமையாயும் விளையாடுவான் என்று சொல்ல வேண்டும். தனது எதிரியிடம் கை நீட்டி, வெற்றி பெற்றதற்காகப் பாராட்ட மறக்கவில்லையே என்று கேட்க வேண்டும். பாராட்டினாயா? மிக நல்லது!

ஏக்கா ஏன் இப்படி சந்தோஷப்படுகிறாள்? ஜெயித்து விட்டாளா? தோற்றுப்போன லாலி எப்படி மனம் சோர்ந்திருக்கிறாள் என்பதை கவனித்தாளா? அவளை நெருங்கி ஏதாவது அன்பாகப் பேசட்டும்.

“சதுரங்கத்திற்கு யாரைப் பிடிக்கும், குழந்தைகளே?” என்று ஒவ்வொரு முறை விளையாடத் துவங்கும் முன்னரும் இக்கேள்வியைக் குழந்தைகளிடம் கேட்க வேண்டும். அவர்கள் பின்வருமாறு பதில் சொல்வார்கள்:

“மனவுறுதி உள்ளவர்களை, பொறுமையானவர்களை!”

“வீரம் மிக்கவர்களை, துணிவானவர்களை!”

“முன்கூட்டியே கண்டு பிடிக்க வல்லவர்களை, கற்பனை செய்யக் கூடியவர்களை!”

“நேர்மையானவர்களை, நாசூக்கானவர்களை!”

“அழகை உணரக் கூடியவர்களை!”

“சதுரங்கம் உங்களை நேசிக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?”

ஆம், எல்லோருக்கும் விருப்பம் தான்.

“அப்போது வாருங்கள், விளையாடுவோம்!” தனது மகன் அல்லது மகளோடு சதுரங்கம் விளையாட சில தந்தையரும் தாய்மார்களும் நேரம் கண்டுபிடித்தாக வேண்டும். சில பெற்றோர்கள் தாமே சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொள்ள வேண்டும் (ஒருவேளை தம் குழந்தைகளிடமே கூட கற்றுக் கொள்ள நேரலாம்). அப்போது தான் தன் ஆறு வயதுக் குழந்தையுடன் சதுரங்கப் பலகையின் முன் அமர்ந்து ஒரு மணி நேரம் கடுமையாகப் போராட முடியும்.

இவையெல்லாம் வெறும் கற்பனையல்ல. ஒரு சில ஆண்டுகளுக்கு முன் ஆறு வயதுக் குழந்தைகளுக்கு முதன் முதலாக சதுரங்கம் சொல்லித் தந்த போதே இவற்றை நான் நடைமுறையில் சந்தித்தேன். அப்போது நான் ஒரு சில சதுரங்கப் பலகைகளையும் காய்களையும் மேசைகளில் வைத்தேன். குழந்தைகள் இந்த சதுரங்கக் காய்களைத் திருப்பித் திருப்பிப் பார்த்தனர், இவற்றின் பெயர்களைப் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர். சில சமயங்களில் யானை எப்படி நகரும், ராணிக்கும் சிப்பாய்க்கும் என்ன வித்தியாசம் என்று விவாதித்தனர், அடிக்கடி கேள்விகளோடு என்னிடம் ஓடி வந்தனர்.

மூன்று மாதங்களுக்குப் பின் கிட்டத்தட்ட எல்லா குழந்தைகளும் சதுரங்கம் விளையாடக் கற்றுக் கொண்டதைத் தெரிந்து கொண்டேன். ஒத்திவைத்த ஆட்டங்களை இடைவேளைகளில் தொடர்ந்தனர், என்னோடும் விளையாடினார்கள், கடுமையான போராட்டத்தில் என்னைத் தோற்கடித்து விட்டாலோ ஆனந்தக் கூத்தாடினார்கள். சதுரங்கம் ஒரு சுவாரசியமான விளையாட்டு, குழந்தைகளுக்கு ஏற்றது என்பதை நான் அப்போதே புரிந்து கொண்டேன். இந்த விவேகமான, அழகான, வீரமான விளையாட்டை விளையாட அவர்கள் கற்றுக் கொண்டால் எப்படிப்பட்ட முக்கிய தனிக்குண நலன்கள் அவர்களிடம் உருவாகும் என்று நிரூபிக்க வேண்டிய அவசியமேயில்லை.

….சமுதாய ரீதியாகச் சுறுசுறுப்பானவனாக எப்படி மாறுவது? வகுப்புகளில் குழந்தைகள் இதையும் கற்றுக் கொள்வார்கள். நர்சரிப்பள்ளியில் உள்ள சிறுவயதுக் குழந்தைகளுக்கு எடுத்துச் சென்று பரிசளிப்பதற்காக என் வகுப்புச் சிறுவர் சிறுமியர் விளையாட்டு சாமான்களைத் தயார்படுத்துவார்கள். சுவர் பத்திரிகைகளைத் தயாரிக்கக் கற்றுக்கொள்வார்கள், பின்னர் இவற்றை மற்ற வகுப்பு மாணவர்களுக்கு அனுப்புவார்கள். பத்திரிகையின் நோக்கமே மற்றவர்கள் படிக்க வேண்டும் என்பது தானே. பட அட்டைகளைத் தயார்படுத்துவார்கள். வகுப்பிற்கு விருந்தினர்கள் வரும் போது அவர்களுக்கு நினைவாகப் பரிசளிக்க வேண்டுமல்லவா! பல்வேறு உலக நாடுகளில் குழந்தைகளின் வாழ்க்கையைப் பற்றி வந்துள்ள படங்களைச் சேகரித்து ஆல்பம் தயாரிக்கலாம். தமது விழாக்களுக்கு அழைப்பிதழ்களையும் அறிவிப்புகளையும் தயார் செய்யலாம்.

ஒவ்வொரு குழந்தையும் தனது சொந்த படைப்புகளின் தொகுதியைத் தயாரிக்கலாம். இதில் முதல் வார்த்தைகள், வாக்கியங்களடங்கிய தாள்கள், முதல் கட்டுரை, கணக்குகள், வரைகணிதப் படங்கள், சித்திரங்கள், களிமண் வடிவங்கள், குறுக்கெழுத்துப் புதிர்கள் முதலியன இருக்கும்.

சித்திரக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்வது, புத்தாண்டு விழாக் கொண்டாடுவது, சுற்றுலாச் செல்வது, பள்ளிக்கருகே ஒவ்வொருவரும் ஒரு மரம் நடுவது போன்ற கருத்துகள் இந்தக் கூடுதல் பள்ளி நேரத்தின் போது பிறக்கும். அன்பை எப்படி வெளிப்படுத்துவது, எப்படி நட்புக்கொள்வது, இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்வது, பெற்றோர்கள் மீது மரியாதை செலுத்துவது என்பதைப் பற்றியெல்லாம் இங்கு விவாதங்கள் நடைபெறும். நான் அவர்களுக்கு சுவாரசியமான கதைகளைச் சொல்வேன், ஸ்லைடுகளையும் கார்ட்டூன் படங்களையும் காட்டுவேன்.

தம்மைப் பற்றி, தம் குழந்தைப்பருவம், வேலை பற்றிச் சொல்லவும் குழந்தைகளுடன் விளையாடவும் உலாவவும் பெற்றோர்களை அழைப்பேன். அடிக்கடி வருமாறு அழைக்கும் அழகிய அழைப்பிதழ்களைக் குழந்தைகள் அவர்களுக்கு வழங்குவார்கள். இவர்களைக் கௌரவிக்கும் முகமாக பத்திரிகையை வெளியிடுவார்கள், பரிசுகளை (படங்களுடன் கூடிய ஆல்பத்தை) தயார்படுத்துவார்கள்….

…இவையெல்லாம் நம்மை மிக முக்கியமானதற்கு, அதாவது ஒவ்வொரு குழந்தையின் மனநிலையையும் பன்முக ரீதியாக வளர்க்கும் நோக்கத்தோடு குடும்பத்திலும் பள்ளியிலும் குழந்தை வளர்ப்பின் முழுமைக்கு இட்டு வரும்.

கூடுதல் பள்ளி நேரம் எப்படியிருக்கும் என்று எனக்குத் தோன்றுவதை பெற்றோர்களுக்கு விளக்குவேன், என் அனுபவத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன், விவாதத்தின் போது நமது கூட்டு குழந்தை வளர்ப்புத் திட்ட நிறைவேற்றத்திற்குப் பொறுப்பானவர்களைப் பற்றி முடிவு செய்வோம். இரண்டு நாட்களுக்குப் பின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இது சம்பந்தமான டைப் செய்யப்பட்ட பிரதி அளிக்கப்படும்.

கூட்டத்தின் இறுதியில் நான் அவர்களுக்குப் பின்வருமாறு கூறுவேன்:

“அன்புசால் பெற்றோர்களே! நமது குழந்தை வளர்ப்புத் திட்டங்களின் நிறைவேற்றத்தில் பங்கேற்றதற்கும் உதவியதற்கும் நன்றி! ‘வளர்ப்பு வண்டியை’ எப்படி, எத்திசையில் இழுப்பதென நாம் முடிவு செய்துள்ளோம். இறுதிவரை இந்த விஷயத்தில் கருத்தொருமித்துச் செயல்படுவோம்!”

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
மாணவர்கள் என்றாலே ரவுடிகள் பொறுக்கிகள்தானா ? | பு.மா.இ.மு. கணேசன் நேர்காணல்

குழந்தைகள் எப்படி நடந்து கொள்வார்கள்? இப்படிப்பட்ட பள்ளி நாட்கள் அவர்களுடைய வாழ்வின் உட்பொருளாகுமா? ஒவ்வொரு குழந்தைக்கும் எல்லா வகுப்புகளுக்கும் வர வேண்டும், எல்லா விஷயங்களிலும் பங்கேற்க வேண்டுமென விருப்பமிருக்குமென நான் உறுதியாக நம்புகிறேன். ஏதாவது காரணங்களால் பள்ளிக்குச் செல்லாமலிருக்க நேரிட்டால் குழந்தைக்கு ஏமாற்றமாயிருக்கும். “அப்படித் தானே, குழந்தைகளே? தாத்தோ, நீ என்ன சொன்னாய்? பெரியவர்கள் தம் வார்த்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிறாயா? ஆம், நீ சொல்வது சரி! மாயா, நீ இன்னமும் ஏதாவது சொல்ல விரும்புகிறாயா? அப்படியெனில், உன் கருத்துப்படி எல்லாமே, பெரியவர்கள் உங்களுடன் எப்படிக் கலந்து பழகுவார்கள் என்பதைப் பொறுத்துள்ளதா? அதுதான் மிக முக்கியம்!”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

இசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் ! | பொ. வேல்சாமி

0
History-of-tamil-music---Abraham-Pandithar-Slider

இசைத் தமிழை மீட்டெடுத்த ஆப்ரஹாம் பண்டிதர் (1859 – 1919) நினைவாக

நண்பர்களே…

பொ.வேல்சாமி

ண்டிதரின் நூறாண்டு நினைவு நாளில், இசைத்தமிழை சிறப்பாக ஆராய்ந்த நூல்களின் PDF ஐ நண்பர்களுக்குக் கொடுத்துள்ளேன்.

இதில் ஆப்ரஹாம் பண்டிதருடைய புகழ்பெற்ற “கருணாமிருத சாகரம்” முதல் பகுதி (1359 பக்கங்கள்), இரண்டாம் பகுதியும் (369 பக்கங்கள்) அவருடைய வாழ்க்கை வரலாற்றையும் (98 பக்கங்கள்) தமிழறிஞர் மு.அருணாச்சலம் எழுதிய தமிழ் இசை இலக்கிய வரலாறு (766 பக்கங்கள்), தமிழ் இசை இலக்கண வரலாறு (666 பக்கங்கள்) கருநாடக சங்கீதம் தமிழிசை : ஆதி மும்மூர்த்திகள் (135 பக்கங்கள்) என்ற மூன்று நூல்களையும் சேர்த்து ஆக மொத்தம் 6 நூல்களின் PDF இணைப்பைக் கொடுத்துள்ளேன்.

தமிழ் இசை இலக்கிய வரலாறு : தொகுதி-1

தமிழ் இசை இலக்கண வரலாறு : தொகுதி-2

கருநாடக சங்கீதம் தமிழிசை : ஆதி மும்மூர்த்திகள்

கருணாமிர்தசாகரம் : இரண்டாம் புத்தகம் இராக இலக்கணம் கூறுவது

கருணாமிர்தசாகரம் : முதற் புத்தகம் சுருதிகளைக் குறித்து சொல்வது.

ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை வரலாறு

நண்பர் ஒருவர் யாழ் நூல் கிடைக்குமா ? என்று கேட்டிருந்தார். அந்த நூலின் இணைப்பையும் கொடுத்துள்ளேன்.

பொ.வேல்சாமி : தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

நல்லா தூங்கனும் ! அதுதான் ரொம்ப நாள் ஆசை | OLA ஓட்டுனர்

1-ola-uber-Car-Driver

“உங்களோட ரொம்ப நாள் ஆசை எது?”

“நல்லா தூங்கனும் சார்”

நேற்று ஒரு OLA ஓட்டுநரிடம் கேட்டபோது இப்படி சொன்னார். அதற்கு முன்பு ஒரு ஸ்விக்கி இளைஞரும் இதையேதான் சொன்னார். அதை சொல்லும்போதே அவர்களின் கண்களில் வழிந்தோடிய தூக்கத்தையும், குரலில் அதற்கான ஏக்கத்தையும் கண்டேன்.

“நேத்து மதுரவாயல் சவாரி முடிச்சுட்டு மடிப்பாக்கம் வீட்டுக்குப் போய் சேரும்போது மணி 1.30. இன்னிக்கு காலையில 7 மணிக்கு ‘ஆப்’ ஆன் பண்ணினேன். 7.10-க்கு முதல் சவாரி. இப்போ நைட் 9 மணியாச்சு. இன்செண்டீவ் பாய்ண்ட் ரீச் பண்ண இன்னும் ஒரு சவாரி எடுத்தாதான் முடியும்’’ என்று அந்த ‘ஓலா’ ஓட்டுனர் சொன்னபோது அவர் என்னை சாலிகிராமத்தில் இறக்கிவிட்டார்.

ola-uber“ஒரே ஒரு ஹெல்ப் சார். நீங்க ட்ராப் பாய்ண்ட் கிண்டி வரைக்கும் மாத்தி போட முடியுமா? அமவுண்ட் இப்போ என்ன வருதோ அதை குடுங்க. ட்ராப் பாய்ண்ட் மட்டும் மாத்தி போட முடியுமா?”

அப்படி மாற்றி போட்ட பிறகு, ‘ஏன் அப்படி?’ என்று கேட்டேன்.

“வழக்கமான சவாரில நீங்க குடுக்குற ரூபாய்ல பெருசா ஒண்ணும் மிஞ்சாது. 100 ரூபாவ் சவாரில கிடைச்சா, 30 ரூபாய் அவங்களுக்கு கமிஷன். (இது தொடக்கத்தில் 5% ஆகவும், பின்னர் 10%-ஆகவும் இருந்தது) மீதிதான் எங்களுக்கு. OLA Money-ன்னா, அது கைக்கு வந்து சேர ஒரு மாசமாயிடும். மத்தபடி இன்செண்டீவ்ல கிடைக்கிற அமவுண்ட்தான் எங்களுக்கு மிச்சம்’’

“அது என்ன இன்செண்டீவ்?”

“ஒவ்வொரு நாளும் மார்னிங் பீக் ஹவர்ல ரெண்டு சவாரி, ஈவினிங் பீக் ஹவர்ல ரெண்டு சவாரி எடுக்கனும். இது எடுத்தாதான் இன்செண்டீவ் கிடைக்கும். பீக் ஹவர் இல்லாத நேரத்துல எத்தனை சவாரி எடுத்தாலும் இன்செண்டீவ் கிடைக்காது. ஒவ்வொரு சவாரிக்கும் எங்க கணக்குல பாய்ண்ட் போட்டுக்கிட்டே வருவாங்க. இந்த பீக் ஹவர் சவாரி-யை முடிச்சு, ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாயையும் ரீச் பண்ணிட்டா இன்செண்டீவ் கிடைக்கும். அதுலயும் கம்பெனி கமிஷன் பிடிச்சுக்குவாங்க.

படிக்க :
♦ வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !
♦ ரோலக்ஸ் வாட்ச் – தூக்கக் கலக்கம் : ஓலாவில் இருவேறு அனுபவங்கள் !

இப்போ நீங்க ட்ராப் பாய்ண்டை மாத்தி போட்டுட்டதால, நான் ஸ்ட்ரைட்டா கிண்டி வழியா வீட்டுக்குப் போயிடுவேன். இன்செண்டீவ் பாய்ண்ட்டையும், அதுக்கான அமவுண்டையும் ரீச் பண்ணிருவேன். இல்லேன்னா, மிச்சம் இருக்கிற சின்ன அமவுண்டுக்காக இன்னொரு சவாரி எடுக்கனும். அது எங்க விழும்னு தெரியாது. எங்கயாவது அம்பத்தூர், ஆவடின்னு விழுந்துச்சுன்னா.. அப்புறம் வெறும் வண்டியை ஓட்டிக்கிட்டு வீடு போய் சேர மறுபடியும் நடு ராத்திரி ஆயிடும். இப்பவே உடம்பெல்லாம் அடிச்சுப் போட்டா மாதிரி வலிக்குது. கொஞ்சம் தூங்கிக்குவேன். அதான் சார்..’’

இத்தனை திட்டமிட்டு இதை செய்வதால் அவர் அடையப்போகும் ஆதாயம் மிக சொற்பம். ‘இன்றைக்காவது தூங்கிட முடியுமா?’ என்ற பரிதவிப்பே அதில் தெரிந்தது. அதற்கும் முந்தைய தினம், கார் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே ஒன்றும் முடியாமல் போக, காட்டாங்கொளத்தூர் அருகே சாலையோரம் காரை நிறுத்தி ஒரு மணி நேரம் ஓய்வு எடுத்த பிறகே ஓட்டியதாக சொன்னார். “தூங்கலை.. சும்மா ஒரு மணி நேரம் அப்படியே ஸ்ட்டியரிங்கில தலவெச்சு படுத்திருந்தேன்’’ என்றார்.

Car-Driver-Sleeping-1ஓலா, ஊபர் ஓட்டுனர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது, 16 மணி நேரம் ஓட்டுகின்றனர். அப்படி ஓட்டினால்தான் அவர்களால் காருக்கான தவணை கட்டியதுபோக வீட்டுக்கு கொஞ்சம் கொண்டுபோக முடியும். ஆறு லட்சம், எட்டு லட்சம் கொடுத்து கார் வாங்கி, அதை ஓலா, ஊபர் உடன் இணைத்து ஓட்டிக்கொண்டிருக்கும் ஒருவர் மாதம் ஒன்றுக்கு சராசரியாக 20 ஆயிரம் ரூபாய் தவணை கட்டுகிறார். பெரும்பாலும் 50 மாத தவணை.

“அஞ்சு வருஷம் கண்ண மூடிக்கிட்டு சமாளிச்சுட்டா, அதுக்குப் பிறகு தவணைக்காசு மிஞ்சும்’’ என்பது இவர்கள் போடும் கணக்கு. யதார்த்தம் என்னவெனில், பல மாதங்களில் இவர்கள் உரிய தேதிக்கு தவணை கட்ட முடியாமல் போகும். அதற்கு அபராதம் செலுத்த வேண்டும். எப்படியோ சமாளித்து ஐந்து ஆண்டுகளை ஓட்டினால், முடிவில் அந்த கார் காயலாங்கடை கண்டிஷனில்தான் இருக்கும். மேற்கொண்டும் இரண்டு ஆண்டுகள் ஓட்டலாம். விற்க சென்றால் டி-போர்டு வண்டிகளின் விலை அடிமாட்டு ரேட்டுக்குப் போகும். அப்புறம் இன்னொரு புது வண்டி, புது தவணை.. இதே சுற்று.

“நம்ம வண்டி… தொழில் நம்ம கைக்குள்ள இருக்கு…. நெனச்சா ஓட்டலாம். தேவைன்னா ‘ஆப்’பை ஆஃப் பண்ணிட்டு லீவ் எடுத்துக்கலாம்… இப்படி நினைச்சுதான் சார் வண்டியை வாங்கினேன். மூணு வருஷத்தை ஓட்டிட்டேன். ஆனா ஒவ்வொரு நாளும் நரகமா இருக்கு.

சேர்ந்தா மாதிரி 8 மணி நேரம் தூங்கி மாசக்கணக்காயிடுச்சு. பீக் ஹவர் சவாரி எடுத்தாதான் நாலு காசு பார்க்க முடியும். அதனால காலையிலயும் தூக்கம் இருக்காது, நைட்டுலயும் தூக்கம் இருக்காது. மதிய நேரத்துல எங்காவது ரெண்டு மணி நேரம் அப்படியே படுத்துக்குறது. சாப்பாடு எல்லாம் வண்டிலேயேதான். இதுல எவனாவது வந்து மோதிட்டா, இல்ல நம்ம மோதி வண்டிக்கு டேமேஜ் ஆயிட்டா அது தனி செலவு.

புலி வால் புடிச்ச கதையா இருக்கு. ஏழெட்டு லட்சம் கடன்ல கார் வாங்கியிருக்கோம். நடுவுல விட்டா, பேங்க்காரன் வண்டியை தூக்கிருவான். இத்தனை வருஷம் உழைச்சதெல்லாம் போயிடும். மீதி கிணறை எப்படியாச்சும் தாண்டிரலாம்’னு ஓட்டுறோம். தாண்டி முடிக்கும்போது வெறும் நடைபொணமாயிடுறோம். இதுக்கு பேசாம ஊர்லயே கழனி வேலை பார்த்துக்கிட்டு இருந்திருக்கலாம் போலருக்கு.’’
சவாரி அல்லது டெலிவரி-க்கு அடிப்படை தேவையான டூ-வீலர் அல்லது காருக்கான மூலதனத்தையும் தொழிலாளியின் சொந்த உழைப்பில் இருந்தே அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

படிக்க :
♦ தொழிலாளர் வாழ்க்கை : ஒரு பருந்துப் பார்வை !
♦ ஸ்விகி பாய்ஸ் போராட்டம் : சம்பளம் மட்டும்தான் பிரச்சினையா ?

ஓலா மற்றும் ஊபர் இரண்டு நிறுவனங்களில் மட்டும் இந்தியாவில் 15 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுனர்கள் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் இந்திய சந்தையில் உள்ளே நுழையும்போது, ‘ஒரு ஓட்டுனர் மாதம் ஒன்றுக்கு 1 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக சம்பாதிக்கலாம்’ என்று விளம்பரப்படுத்தினார்கள் என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும்.

“நாலஞ்சு நாள் சேர்ந்தா மாதிரி வேலை செஞ்சுட்டு ஒரு நாள் போன்.. கீன் எல்லாத்தையும் ஆஃப் பண்ணி போட்டுட்டு தூங்குவேன் பாருங்க, பேய் மாதிரி தூங்குவேன். நடுவுல எழுந்திருச்சு சாப்பிட போனா தூக்கம் போயிரும்னு ஒரு பிரியாணி பொட்டலத்தை வாங்கி வெச்சுக்கிட்டு தூங்குவேன். எழுந்திருச்சு சாப்பிட்டு அப்படியே படுத்துக்குறது. இப்போ எனக்கு கல்யாணம் ஆகலை. ஆனுச்சுன்னா, இன்னும் கொடுமையா இருக்கும்ல..’’

swiggyஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் இளைஞர்களின் நிலையும் இதுதான். “நினைச்சா வேலை பார்க்கலாம். நினைச்சா லீவு எடுத்துக்கலாம்’’ என்பதை இந்த வேலையின் நேர்மறை அம்சமாக இவர்கள் கருதுகின்றனர். அதுதான் இந்த வேலைக்கு நிச்சயமற்ற தன்மையை வழங்குகிறது. வேலை தருபவர், தன் தொழிலாளிக்கு வழங்க வேண்டிய மிக குறைந்த உரிமைகளும் இதில் அகற்றப்படுகின்றன. இவர்கள் ஒப்பந்த கூலிகளை விட மோசம். மாத ஊதியம், வரையறுக்கப்பட்ட வேலைநேரம் மற்றும் வேலை என எதுவுமின்றி, இலக்கு நிர்ணயித்து துரத்தப்படுகின்றனர்.

ஓர் ஒழுங்குப்படுத்தட்ட நிறுவன வரம்புகளின் கீழ் பணிபுரியும் மனோநிலை இவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல அகற்றப்படுகிறது. சொந்த வாழ்வின் உதிரித்தன்மையும், இந்த பணிவாழ்வின் உதிரித்தன்மையும் இணையும்போது, அது ‘இந்த கணத்தை வாழ்ந்து பார்க்கும்’ பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இடம், வலம் கவலை இல்லை. மேல் கீழ் கவலை இல்லை. உரிமை, உரிமை மறுப்பு கவலை இல்லை. மோடி, எடப்பாடி கவலை இல்லை. அக்கவுண்டில் பணம் கிரெடிட் ஆனால், நான் ராஜா. இல்லைன்னா? “அதுக்கு யார் என்னா பண்ண முடியும்? நம்ம உழைச்சாதான் துட்டு. சும்மா உட்கார்ந்துருந்தா துட்டு வருமா?”

தொழிலாளி வர்க்கம் உதிரி மனோபாவத்தில் இருப்பதன் ஆகப்பெரிய பலன், அவர்களே முதலாளிகளின் மனசாட்சியாய் மாறிவிடுவதுதான். வேறுமாதிரி சொல்வதானால், நிச்சயமற்ற தன்மையுடன் இருக்கும் தனது இருப்பை நீட்டித்துக்கொள்ள வேண்டுமானால் முதலாளிகளுக்கு தொழிலாளியும் நிச்சயமற்ற தன்மையுடன் இருக்க வேண்டும். அல்லது சமூகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதை ஊக்கப்படுத்த வேண்டும். “எல்லாரும் படிச்சுட்டு வேற வேலைக்குப் போயிட்டா ஊர்வேலை எல்லாம் யார் பார்க்குறது?’’ என்று ஆண்ட சாதி பீத்தைகள் பேசுவதைப் போன்றது இது.

ஆனால், நம்முடைய தொழிலாளிகளின் உடல்கள் சாறு எடுக்க பிழியப்படும் கரும்பைப் போல ஆகக்கடைசி சொட்டு வரையிலும் பிழியப்படுகிறது.

நன்றி : முகநூலில் பாரதி தம்பி

வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கை பிணிக்கான மருந்து !

communism

வர்க்க ஒற்றுமையே அவநம்பிக்கையின் மருந்து !

து ஒரு அகால மரணம். தோழர் ராமசாமியைப் போன்ற போராளிகள் 60 வயதுக்குள் இறக்க வேண்டுமா? 1947 முந்தைய காலத்தை ஒப்பிடுகையில் இன்று வாழ்நாள் அதிகரித்திருக்கிறது. வளர்ந்துவரும் அறிவியல் நூற்று ஐம்பது வயது வரை மனிதர்கள் உயிர் வாழ்வதைச் சாத்தியமாக்கப் போகிறது.

அதே நேரத்தில், சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சமூகத்தில் தற்கொலைகள் அதிகரித்து வருவதையும் காண்கிறோம். 12-ம் வகுப்பில் தோல்வியால் தற்கொலை, நீட்டில் தோல்வி-தற்கொலை, கல்விக் கடன் கட்டமுடியாத மாணவன் தற்கொலை, கடன் கட்ட முடியாத விவசாயி தற்கொலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் சிறு, குறு தொழில் உரிமையாளர்கள் தற்கொலை. இந்தத் தற்கொலைகளுக்கு எல்லாம் என்ன பொருள்? எதிர்காலம் குறித்த அவர்களது கனவு அழிந்துவிட்டது.

comrade vilavai ramasamy
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத் தலைவர் விளவை ராமசாமி. (கோப்புப் படம்)

தோற்றுவிட்ட கனவுகள் தற்கொலைகளில் முடிகின்றன. இருப்பினும் கனவு காண்பதை இளையதலைமுறை நிறுத்தவில்லை. இன்று கனவு என்பது ஒரு கிராமத்து இளைஞனின் கையில் உள்ள தொடுதிரை கைபேசியில் இருக்கிறது. அவன் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கைக்கும், அவனது கையிலேயே இருக்கும் வாழ்க்கைக்கும் மிகப்பெரிய தொலைவு இருக்கிறது. தொடுதிரையில் தொட முடிந்ததை வாழ்க்கையில் தொடமுடிவதில்லை. இதுதான் எதார்த்தம்.

பேருந்திலும், ரயில்களிலும் எல்லோரும் குனிந்து கைபேசியை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். “நாணும் குலமாதர் முகம் பார்த்ததில்லை, வீரர் விழி சாய்ந்து நிலம் பார்த்ததில்லை” என்பது ஒரு திரைப்படப் பாடல். இப்போது வீரர் சூரர் யாரும் குலமாதர் போலவே குனிந்த தலை நிமிர்வதில்லை. நிமிர்ந்து சமூகத்தை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. உங்கள் கனவு உங்கள் கையில்!

இந்த முகநூல், வாட்ஸ்அப் என எதுவாகினும், அவை ஏற்படுத்துகின்ற தனிநபர் வாதம், கண்ணோட்டம், ஆசை, விருப்பங்கள், ரசனை இவையெல்லாம் நான், எனது, என்னுடைய மகிழ்ச்சி என்று அதை நோக்கி மட்டுமே சிந்திக்க வைக்கின்றன. ராமசாமியைப் போன்ற தோழர்கள் தோற்றுப்போகும் இடம் இதுதான். வெளியே பல மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த மாற்றங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாம் பஞ்சாலைகள் நிறைந்த இந்த கோவை மாநகரில் நின்று பேசுகிறோம். ஆலைத் தொழிலாளி என்றால் ஒரு கூரையின் கீழே பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள். அவர்களை இணைத்துக் கட்டக்கூடிய சங்கங்கள். அந்தச் சங்கங்களின் போராட்டங்கள் வாயிலாக அவர்களது பொருளாதாரத்தை, உரிமைகளை நிலைநாட்டிக்கொள்ளக் கூடிய காலம் என்று ஒன்று இருந்தது.

comrade vilavai ramasamy remembrance meeting maruthaiyan Speech (3)
விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் தோழர் மருதையன்.

இன்று நடப்பது என்ன? சங்கம் வைக்க முதலாளி அனுமதிக்கவில்லை என்பது ஒரு பிரச்சினை. சங்கத்தில் சேர தொழிலாளி விரும்புகிறாரா என்பது முக்கியமான பிரச்சினை. தொழிலாளிகள் காரியவாதிகள் ஆகிவிட்டார்களா, கெட்டுச் சீரழிந்துவிட்டார்களா? இல்லை. இன்று நிலைமை எப்படி மாறிக்கொண்டிருக்கிறது?
இங்கே பேசினார்கள். ஒரு தொழிலாளி முருகன் மில்லில் வேலைக்குச் சேர்ந்தார், 30 ஆண்டுகளுக்குப் பின்பு பணிஒய்வு பெற்றார் என்று சொன்னார்கள். அந்தக் கதை இனி கிடையாது. மில் தொழிலாளிகள் மட்டுமல்ல, பி.எஸ்.என்.எல்.-லில் பணிபுரிந்தார், பணிக்கொடைகளைப் பெற்று ஒய்வு பெற்றார் என்ற நிலைமையும் இனி இல்லை.

***

பர் ஆட்டோ, கேப், ஊபர் ஈட்ஸ், சொமாட்டோ இதில் பணிபுரிபவர்கள் யார்? அவர்களை நிறுத்தி கேட்டுப் பாருங்கள். அவர்களில் 60 சதவீதத்தினர் இன்ஜினியரிங் படித்தவர்கள். ஏற்கெனவே ஐ.டி. அல்லது கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் பலர். முனைவர் பட்டம் பெற்றவர்களெல்லாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக விரிவுரையாளர்களாகப் பணிபுரிகின்றனர்.

வாழ்க்கை எப்படி மாறுகிறது? குழந்தைப் பருவம், பள்ளிப் பருவம், அதன்பிறகு கல்லூரிப் பருவம், அரசு வேலைவாய்ப்பு, திருமணம், பிறகு முதுமை, ஓய்வூதியம், மரணம். நாம் பார்த்திருந்த நவீன நகர்ப்புற வாழ்க்கை இப்படி இருந்தது. ஆனால், இன்றைக்கு 3 வயதில் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும்போதே வேலைக்குத் தயார்படுத்துகிறார்கள். இந்தப் படிப்பு சாகும் வரையில் முடிவதில்லை.

தனியார்மயம் உருவாக்கியிருக்கும் நவீன உதிரித் தொழிலாளர்கள் : இந்திய நகரங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் சொமாட்டோ பணியாளர்கள்.
தனியார்மயம் உருவாக்கியிருக்கும் நவீன உதிரித் தொழிலாளர்கள் : இந்திய நகரங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கும் சொமாட்டோ பணியாளர்கள்.

நான் சில ஆண்டுகளுக்கு முன் மேற்கு ஜெர்மனியிலிருந்து வந்த நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் பணிபுரிந்த ஐ.டி. நிறுவனத்தில் அவருக்கு பிளம்பர் வேலையும் டாக்சி ஓட்டும் பணியும் கற்றுத் தருவதாக அவர் கூறினார். ஏன் இந்தப் பயிற்சியை அந்த நிறுவனம் இவர்களுக்கு அளிக்கிறது என்றால், இவர்களுக்குப் பணி உத்தரவாதம் கிடையாதாம். மாற்றுத் தொழிலை, அந்தந்த முதலாளிகளைக் கொண்டு கற்றுத்தர அரசு உதவி புரிகிறதாம்.

ஒரு பொறியாளர் பிளம்பர் வேலை செய்வாரா என நாம் சிந்தித்திருப்போமா? ஆனால், இன்று நாம் அதை கண்கூடாகப் பார்க்கிறோம். அமெரிக்காவில் 20 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் அவர்களுடைய வாழ்நாளில் சுமார் 20% நேரத்தை ஏதாவது புதிய தொழிலைக் கற்றுக்கொள்ள செலவழிக்கிறார்களாம்.

சங்கத்தில் ஏன் தொழிலாளர்கள் சேர்வதில்லை? தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு விட்டார்கள். சங்கம் வைத்தால் வேலையை விட்டு நீக்கிவிடுவார்கள் போன்ற அடக்குமுறைகள் ஒரு காரணம். இவை ஒருபுறம் இருந்தாலும், தான் இன்ன தொழில் செய்பவன் என்று அடையாளப்படுத்திக் கொள்ள இயலாத நிலையில், ஒன்றிலிருந்து மற்றொரு தொழில் என எல்லோரும் மிதந்து கொண்டிருக்கிறார்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் இழுத்துக்கொண்டு போகப்படும் குப்பையைப் போன்ற நிலை. இப்படி இருப்பவர்களுக்கு தன்னுடைய சக தொழிலாளியின் மீது, அவன் துன்பங்களின் மீது எப்படி அனுதாபம் ஏற்படும்?

படிக்க:
நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

ஐ.டி. நிறுவனங்களைக் கூட நாம் எடுத்துக்கொள்ளலாம். ஐ.டி. நிறுவனங்களில் விப்ரோ, இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். என எதை எடுத்துக்கொண்டாலும் அங்கு இரண்டு விதிகள் உண்டு. ஒன்று உன்னுடைய சம்பளம், சம்பள உயர்வு என்ன என்பதை நீ பக்கத்தில் உள்ளவனுக்குச் சொல்லக்கூடாது. அடுத்து உன் சக ஊழியர் பணியை விட்டுத் துரத்தப்பட்டால், ஏன் அனுப்பினீர்கள் என்று கேட்கக்கூடாது. ஏன் இப்படி தீங்கு இழைத்தார்கள் என்று நான் கேட்டது நிர்வாகத்திற்குத் தெரிந்தால், எனக்கும் பணிப் பாதுகாப்பில்லாமல் ஆகிவிடும்.

பணியை இழந்தவர் தனக்குத் தகுதியில்லை என நினைப்பதற்கும், சக ஊழியர்கள் அவர் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவில்லை என்று கருதுவதற்கும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு படிப்பறிவற்ற தொழிலாளிக்கு இருக்கக்கூடிய அறிவும் உணர்வும், படித்த ஐ.டி. தொழிலாளிக்கு இல்லை. விலங்குகளைப் போலத் தன்னை மட்டும் தற்காத்துக்கொள்ளப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். இந்த ஆட்டத்தின் நீதி இதுதான் எனப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.

சாலையோரத் தள்ளுவண்டி உணவகங்கள்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் நடைபெற்ற சம்பவம் இது. ஹேம்பர்க் என்றொரு நகரத்தில் உள்ள பிரம்மாண்ட மால் ஒன்றிற்குள் தொழிலாளர்கள் நுழைகிறார்கள். தேவையான உணவுப் பொருட்களையெல்லாம் அள்ளி வண்டியில் போட்டுக்கொண்டு பில் போடும் இடத்துக்கு வருகிறார்கள். காசாளரான பெண்ணிடம் ஒரு சீட்டைக் கொடுக்கிறார்கள். அந்தச் சீட்டில், “நாங்கள் இந்த நகரத்தின் தொழிலாளர்கள். இந்த நகரத்தை உருவாக்கியவர்கள். இன்று நாங்கள் எங்களது தேவைகளை நிறைவு செய்துகொள்ள முடியாத நிலையில் வைக்கப்பட்டிருக்கிறோம். அதனால் நாங்கள் உருவாக்கிய செல்வத்தை நாங்களே எடுத்துக்கொண்டு போகிறோம்” என எழுதப்பட்டிருந்தது.

போலீசு வருவதற்குள் இவர்கள் அந்த உணவுப் பண்டங்களை இவர்கள் வசிக்கும் ஹேம்பர்க் நகரத்தின் சேரிக்குச் சென்று விநியோகித்து விடுகிறார்கள். அதை வீடியோ எடுத்துப் பதிவேற்றியும் விடுகிறார்கள்.

உலகமயமாக்கலுக்குப் பின் திடீரென்று 150 கோடி தொழிலாளிகள் உலகின் உழைப்புச் சந்தைக்கு வருகிறார்கள். ஒரு அமெரிக்கத் தொழிலாளி வாங்கக்கூடிய ஊதியத்தில் 30-இல் ஒரு பங்கை வாங்கிக் கொண்டு, அந்தப் பணியை முடிக்க ஒரு இந்தியத் தொழிலாளி அல்லது சீனத் தொழிலாளி உலகச் சந்தையில் தயாராக உள்ளார். இது அங்கே ஒரு நிலைகுலைவை, வேலையின்மையை ஏற்படுத்துகிறது.

இத்தாலியில் பிராக்டோ என்றொரு நகரம். நெசவுத் தொழிலுக்கும் கைவினைத் தொழிலுக்கும் பெயர் போன நகரம். ஏற்றுமதி செய்துகொண்டிருந்த நகரம். 1990-இல் உலகமயமாக்கல் வந்த போது, சீனர்கள் கணிசமானோர் அங்கே தொழிலாளிகளாகக் குடியேறிக் குறைந்த கூலிக்கு வேலை செய்தனர். சிறிது காலத்திற்குள் நெசவுத்தொழில் சீனர்கள் கைக்கு மாறுகிறது. 1990 வரை பிராக்டோ நகர மக்கள் கம்யூனிஸ்ட்களுக்கே வாக்களித்து வந்தார்கள். அவர்கள் 90-களுக்குப் பிறகு பாசிஸ்டுகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

“வெளிநாட்டிலிருந்து வந்த சீனத் தொழிலாளர்கள் என்ற புல்லுருவிகளை ஒழித்துக்கட்டுவேன்” என்று முழங்கிய பெர்லுஸ்கோனி என்ற பாசிஸ்டைத் தெரிவு செய்கிறார்கள். இப்படித்தான் ட்ரம்ப் வெற்றிபெற்றார், அமெரிக்காவில். வங்க தேசத்திலிருந்து வரும் கரையான்களை ஒழித்துக்கட்டுவேன் என அமித் ஷா பேசுவதை இங்கே நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

ola uber workers strike
பயணக் கட்டண விகிதத்தை மாற்றியமைக்கக் கோரி ஓலா மற்றும் ஊபர் ஓட்டுநர்கள் சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டம்.

வறுமை, வேலையின்மை பெருகும்போது சக உழைக்கும் மக்களை எதிரிகளாகக் காட்டி வன்முறையைத் தூண்டுகிறார்கள். நான் ஓட்டுநரா, பிளம்பரா, வியாபாரியா என்று எந்தக் குறிப்பான தொழிலோ அடையாளமோ இல்லாமல் தத்தளிப்பவர்களுக்கு, நீ ஒரு இந்து என்ற அடையாளத்தை வழங்குகிறார்கள். முஸ்லீம்களை ஒழித்தால்தான் தீர்வு என்கிறார்கள். நீ ஒரு தமிழன், டீக்கடையில் வேலைபார்க்கும் வட நாட்டுக்காரனை விரட்டினால்தான் உனக்கு வேலை என்பார்கள். இப்படித்தான் பாசிஸ்ட் இயக்கங்கள் மூளைச்சலவை செய்கின்றன.

இந்த மக்கள் மதவெறிக்கு ஆளாகி விட்டார்கள் என்று மட்டும் இதனைப்புரிந்து கொள்ளக் கூடாது. குஜராத்திலும், மும்பயிலும் வீதியில் இறங்கிக் கலகம் செய்பவர்கள் பார்ப்பன பனியாக்களா? இல்லை. இத்தகைய மக்களைத்தான் சக உழைக்கும் மக்களுக்கு எதிராக ஏவி விடுகிறார்கள். தொழிலாளி வர்க்கம், தன்னை விடுவிக்கக்கூடிய சங்கத்தில் சேராவிட்டால், தங்களுக்கு எதிரான பாசிஸ்டுகளால் தவிர்க்கவியலாமல் ஈர்க்கப்படுவர்.

தொழிலாளி வர்க்கத்தை விட முதலாளி வர்க்கம் என்றைக்கும் எண்ணிக்கையில் பெரியது அல்ல. ஆனால், அவர்களால் பெருவாரியான மக்களை எப்படி அடக்கியாள முடிகிறது? ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. “We have never been out numbered – we are out organised” எதிரிகள் ஒருபோதும் எண்ணிக்கையில் நம்மைத் தோற்கடித்ததில்லை. அமைப்பு ரீதியாகத் திரண்டு நிற்பதில்தான் நம்மைத் தோற்கடித்திருக்கிறார்கள்.

படிக்க:
இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !
♦ பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !

உலக முதலாளி வர்க்கம் அமைப்பாய்த் திரண்டு நின்று நம்மை முறியடிக்கிறான். ஆனால், நாம்? கூட்டுப் பேரம் பேசும் தொழிற்சங்க உரிமையையும் ஒழித்துத் தனித்தனியாகப் பிரித்து, நம் உழைப்பை விலை பேசவேண்டும் என்பதுதான் மோடி அரசு கூறும் லேபர் மார்க்கெட் டீ ரெகுலேஷன். 44 சட்டங்களை 4 வழிகாட்டும் கோட்பாடாக மாற்றுவது என்பது இதுதான். சம வேலைக்குச் சம ஊதியம் என்பதை ஒழித்து, பத்து ரூபாய் சேர்த்து வேண்டுமென்றால், அதை நீ தனியாகக் கேள், சங்கமாகச் சேர்ந்து கேட்கக் கூடாது என்கிறார்கள். இதில் முதலாளி வர்க்கத்தின் பொருளாதார ஆதாயம் மட்டும் இருப்பதாக நாம் புரிந்துகொள்ளக்கூடாது.

Minister for Loneliness
பிரிட்டனில் தனிமைத் துயரத்தை நீக்குவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் துறையின் அமைச்சர் ட்ரேஸி க்ரௌச்.

நாம் என்பதை உடைத்து நான் என மாற்றினால் என்ன நடக்கும்? விரக்தி, இயலாமை, மனச்சோர்வுஆகியவைதான் இதன் விளைவுகள். இன்றைக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலே 20-60 வயது வரை உள்ளவர்களில் 27% பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்கிறது ஒரு ஆய்வு. தொழிற்சங்கங்கள் இல்லாத இடங்களில்தான் தொழிலாளிகள் மனநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்றும் ஒரு ஆய்வு உள்ளது.

2018-ம் ஆண்டு முதல் பிரிட்டனில் புதிதாக ஒரு அமைச்சர் நியமிக்கப்பட்டிருக்கிறார். தனிமைத் துன்பத்தை அகற்றுவதற்கான அமைச்சர் (Minister for Loneliness). இது முதலாளித்துவ சமூகத்தின் நிலை குறித்த விளக்கம்.

ஆகவே, தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கின்ற ஒரே ஆயுதம் அமைப்பு. அது தொழிற்சங்கம் மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்துக்கான கட்சி. அது எப்படிப்பட்ட கட்சியாக இருக்கவேண்டும், அந்தக் கட்சியின் கீழ் திரளுகின்ற தொழிலாளி வர்க்கம் என்ன கோரிக்கைக்காகப் போராட வேண்டும் என்ற பார்வையைத்தான் என்ன செய்ய வேண்டும் என்ற நூலிலும், ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற நூலிலும் லெனின் கொடுக்கிறார்.

***

1980-ல் கிழக்கு ஐரோப்பிய, ரசிய வீழ்ச்சிக்குப் பிறகு கம்யூனிசம் வீழ்ந்துவிட்டது. இனிமேல் அப்படியொரு கட்சி உருவாக முடியாது என்று மீண்டும் மீண்டும் அவநம்பிக்கையை விதைக்கிறார்கள்.

நமது நாட்டில் 1969 நக்சல்பாரி எழுச்சியை ஒட்டி எண்ணற்ற மாணவர்களும், இளைஞர்களும் தங்களைக் கட்சியோடு இணைத்துக்கொண்டு கல்வியை இழப்பதற்கும், வேலையை இழப்பதற்கும் உயிரை இழப்பதற்கும் தயங்காமல் முன்வந்தார்களே, அது இன்றைக்கு நடக்குமா?

பொது நலனுக்காக ஒரு இழப்பையோ, மாற்றத்தையோ ஏற்றுக்கொள்ளத் தயாராகயில்லாத நாம், இன்ஜினியர், ஓட்டுனர், சுயதொழில் என முதலாளித்துவத்தால் ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குக் குப்பையைப் போல் விசிறி எறியப்படும்போது மாறிக்கொள்கிறோம். ஆனால், சுதந்திரமான விருப்பத்தின் அடிப்படையில் இழப்பை ஏற்றுக்கொள்வதற்கு நாம் தயாராக இருப்பதில்லை.

தோழர் விளவை ராமசாமி இழப்பதற்குத் தயாராக இருந்தார். வேலை போனால் பரவாயில்லை. மகன் கைதானால் பரவாயில்லை. அவற்றை எதிர்கொள்வோம் என்று கருதினார். தோற்றாலும் கவுரவமாகத் தோற்கவேண்டும் என்று அவர் கூறுவாரென ஒரு தோழர் இங்கே குறிப்பிட்டார். கவுரவமான என்ற உரிச்சொல் ஒரு மனிதனின் விழுமியத்திலிருந்து வருகிறது. தோற்கிறோமா, வெல்கிறோமா என்பதல்ல பிரச்சினை. நாம் எப்படி வாழவேண்டும் என்பது குறித்த விழுமியம் அது.

***

ன்று நாம் என்ன மாதிரியான அரசியல், சமூகச் சூழலில், வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம், வேதாந்தா நிறுவனத்துக்கு ஹைட்ரோ கார்பன் உரிமங்கள், எட்டுவழிச் சாலைக்கு நிலப்பறிப்பு – இதையெல்லாம் செய்வது யார்? மக்களின் வாழ்வாதாரத்தையும், சூழலையும் பாதுகாப்போம் என உறுதியேற்றுக்கொண்ட அரசுதான் இவற்றையெல்லாம் செய்கின்றது.

பூமிக்கடியிலும், கடலுக்கடியிலும், ஆர்ட்டிக் பகுதியிலும் இருக்கும் கனிமவளங்களை எல்லாம் கொள்ளையடிக்க உலகு தழுவிய அளவில் வேட்டை நடந்து கொண்டிருக்கிறது. இந்த உலக முதலாளித்துவத்தின் தாக்குதல் என்பது தொழிலாளி வர்க்கத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மனித குலமே வாழமுடியுமா என்ற கேள்வி இன்று எழுந்திருக்கிறது.

படிக்க:
மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்
♦ 19 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியில் வாகன விற்பனை !

தூத்துக்குடியில் ஒரு இலட்சம் பேர் தடைகளை மீறி திரண்டு வந்த காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள், வேன் ஓட்டுபவர்கள், மூட்டை தூக்குபவர்கள் இப்படிப் பல்வேறு பிரிவு மக்கள் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு இலட்சக்கணக்கில் ஏன் திரண்டு வந்தார்கள்? ஒரே காரணம், அங்கே யாரும் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது.

காற்று, நிலம், நீர் அனைத்தும் நஞ்சாகிவிட்டன. தூத்துக்குடியை விட்டு எங்கே ஓடுவது? அப்படி ஒரு நிலை ஏற்படும்பொழுது தங்கள் உயிரைத் துரும்பாக மதித்து மக்கள் போராடுவதற்குத் தயாராகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு நாடும் உலகமும் சென்று கொண்டிருக்கின்றன.

அதனால்தான் எதிர்த்துப் போராடும் உழைக்கும் வர்க்கத்திற்குச் சோர்வூட்டுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். கார்ல் மார்க்ஸின் மருமகன் பால்லபார்க், தன்னைச் சந்திக்க வந்த லெனினிடம் ஐரோப்பிய புரட்சி குறித்த தனது அவநம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார். விரக்தி பரவியிருந்த இந்தக் காலத்திற்குப் பிறகுதான் 1917- ரசிய சோசலிசப் புரட்சி நடக்கிறது.

இது ஒரு சவாலான காலம். இந்தச் சவாலை நாம் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சொந்த முறையிலேயே சிந்தித்துப் பாருங்கள். இந்த உரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டதை நினைவூட்டுகிறேன். ஒரே நேரத்தில் 5 அடையாளங்களுடன், 6 அடையாளங்களுடன், ஆறு தொழில்களுடன் நேற்று இந்த வேலை, நாளை அந்த வேலை, நாளை மறுநாள் இன்னொரு வேலை என்று மிதந்து கொண்டு இருக்கின்ற ஒரு உழைப்பாளியை எப்படிச் சங்கமாக சேர்ப்பது?

பாதி நாள் வேலை இருக்கிறது. பாதி நாள் வேலை இல்லை என்று அரை வேலைவாய்ப்புடன் இருக்கின்ற எண்ணற்ற மக்களை, “தண்ணீர் வந்தால் விவசாயி; தண்ணீர் வரவில்லை என்றால் தொழிலாளி” என்று நகரத்திற்கு ஓடுகின்ற ஒரு மனிதனை எப்படி அமைப்பாக்குவது?

காவி பாசிஸ்டுகளை முறியடிப்பது என்பது காவி அரசியலை எதிர்த்து பேசுவதனால் மட்டும் நடந்து விடுவது அல்ல. அதுவும் தேவை. தொழிலாளி வர்க்கத்தை உழைக்கும் வர்க்கத்தை இந்த வகையில் அணி சேர்ப்பதும் தேவை.

comrade vilavai ramasamy remembrance meeting maruthaiyan Speech (4)
விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் அவருக்குச் செவ்வணக்கம் செலுத்தும் தோழர்கள்.

தோழர் விளவை ராமசாமி தொண்ணூறுகளில் புரட்சிகர அரசியலுக்கு வந்தார். முப்பது ஆண்டுகளில் மறைந்து விட்டார். அவர் மறைகின்ற காலத்திலேயே புதிய தாராளவாதக் கொள்கையின் தீமைகள் தலைவிரித்து ஆடத் தொடங்கிவிட்டன. இன்றைக்குப் பள்ளிச் சிறுவர்களாக, கல்லூரி மாணவர்களாக இருக்கின்றவர்களுடைய எதிர்காலத்தை எண்ணும்போது கவலை ஏற்படுகிறது.

தண்ணீர் எங்கிருந்து வரும்? தெரியவில்லை. வேலை எங்கிருந்து வரும்? தெரியவில்லை. அவர்களுக்கு இதைப் புரியவைக்க வேண்டியிருக்கிறது. நம்முடைய கல்விமுறை என்பது ஏற்கனவே இருந்த அளவிற்குக்கூடச் சமூக உணர்வு இல்லாத அளவிற்கு, இருந்த சமூக உணர்வையும் அழிக்கின்ற அளவிற்குப் பாடத்திட்டங்கள் மாற்றப்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மாற்றப்படுகிறார்கள்.

அதில் நமக்கு இன்னும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. அவர்களுக்கு இந்தச் சமூக உணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே தோழர் விளவை ராமசாமி பழுத்த இலையாக இந்த மண்ணிலே உதிர்ந்தார். அவரை உரமாகப் பருகி வளரக்கூடிய புரட்சியாளர்களை உருவாக்குவதற்கு, இந்த அரசியல் கண்ணோட்டத்தை எடுத்துச் செல்வோம். நாம் மாற்றிக் கொள்ள வேண்டிய பண்புகளை எடுத்துச் சொல்வோம். நாமும் மாறிக் கொள்வோம். நன்றி.

– மருதையன்

(தோழர் விளவை ராமசாமியின் நினைவேந்தல் கூட்டத்தில் தோழர் மருதையன் ஆற்றிய உரையின் சுருக்கம்)

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

மந்திரம் கூறி மக்களை மிரட்டும் ஆரியம் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 21

னி, ஒரு சமயத்து ஒரு பார்ப்பனப் பெரியவர், “Hospitality” என்பதற்குத் தமிழில் சொல் இல்லை . எனவே “Hospitality”தமிழர்கட்கு இருந்ததே கிடையாது என்றார். நான் உடனே அவரைப் பார்த்து, “நீர் தமிழைப் படித்ததுண்டா ? ‘வேளாண்மை’ என்ற சொல்லையாவது கேள்விப்பட்டிருக்கின்றீரா?’’ என்று கடாவினேன். அவர் விழித்தார். ”தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு, வேளாண்மை செய்தற் பொருட்டு” (குறள்) என்றபடி பிறருக்கு உபகாரமாகும் பொருட்டே வாழ்பவன் தமிழன், துறவு என்பதென்ன? ஒரு குடும்பத்தில் மட்டும் அன்பு செலுத்தியவன், உலகத்தை ஒரு குடும்பமாக நினைத்து எல்லோரிடத்தும் அன்பு செலுத்துவதாகும். இதுதான் உண்மைத் துறவியின் கடமை. தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் தமிழன். ‘தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் உண்மையான். இவ்வுலகம் உண்டு’’ என்று கூறிப் போந்தார் தமிழ்ப்புலவர் ஒருவர்.

காதல் என்றால், உடல் அதாவது புலன் இன்பத்தில் தமிழர்கள் மூழ்கவில்லை. அன்று தமிழர்களிடத்தில் கொக்கோகம் கிடையாது. கேவலம் மெய் உணர்ச்சியை மட்டும் தமிழன் விரும்பவில்லை. ஒரு மொழியில் அமைந்து கிடக்கும் சொற்களை யாரும் மாற்ற முடியாது . Warm Reception என்று ஆங்கிலர் சொன்னால், நாம் Cool Reception என்றுதான் கூற வேண்டும்.

பல மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு தனிச் சிறப்பு – தமிழுக்குண்டு. உயர்திணை என்ற பிரிவுக் கொள்கை, தமிழில்தான் உண்டு. திணையென்றால் ஒழுக்கம் ஆகும். திணைக்கு இடம் எனப் பொருள் கூறுவர் அறிவில்லாதவர்கள். அகவொழுக்கம் புறவொழுக்கம் என்பதே அகத்திணை புறத்திணையாகும். ஒழுக்கம் என்பது மிகவும் கடினமானது. விருப்பம் செல்லும் வழி செல்லாமையே ஒழுக்கமாகும். அதாவது ஆள்வினை உடைமையாகும். விருப்பத்தைத் தணித்து அறிவால் ஆளுவது திட்டம்; திண்மை என்றும் கூறலாம். எனவே திண்மை பற்றித் திணை வந்ததோ என அனுமானிக்கின்றேன்.

நிற்க; ஆரியம் போன்ற மொழிகளில் பெண்ணைக் குறிக்கவரும் ஒவ்வொரு சொல்லும் ஒரு பாலைக் குறிக்கும். தமிழில் அப்படியில்லை. ஏன்? பொருள் அர்த்தம் பற்றிப் பெயர் வைப்பது தமிழ்முறை. ஆறறிவுடைமையால் மனிதன் உயர்ந்தவன். எனவே, உயர்திணையென்பது தவறு. பின்னும், ‘பேசும் திறமை மனிதனுக்கு மட்டுந்தான் உண்டு. ஆதலின் மனிதனை உயர்திணை’ என்றார் தோழர் இரா. இராகவய்யங்கார். இதையும் நான் மறுக்கிறேன். நாம் மட்டுந்தான் பேசுகிறோமா? எறும்பு கூடத்தான் பேசுகிறது. நமக்குப் புரியாமையால், அவை பேசவில்லை என்று கூறிவிட முடியுமா?

படிக்க:
தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்
ஒருநாடு ஒருதேர்தல் : இந்து ராஷ்டிரம் அணிந்துவரும் முகமூடி !

எனவே, ஒழுக்கமுடைமைதான் மனிதனை உயர்த்துகின்றது. விரும்புகிறபடி போகாமல் அறிவால் மனதை ஒரு வழி நிறுத்தலே ஒழுக்கமுடைமை. இது மக்களுக்குத்தான் உண்டு. எனவே, உயர்ந்த ஒழுக்கத்தை உடையது உயர்திணையாயிற்று. அஃறிணையென்றால், இழிந்த திணையில்லை; திணையில்லாதது. (ஒழுக்கமற்றது என்று பொருள்) அல்-திணை அஃறிணையாகும்.

ஆனால் ஒருவன், மக்கள் தேவர், நரகர் உயர்திணை என்றான். தொல்காப்பியரோ ‘உயர்திணையென்மனார் மக்கட் சுட்டே’ என்றார். ஒழுக்கத்தை உடைய மக்களெல்லாம் உயர்திணை. அல்லாதது மக்களேயாயினும் அஃறிணையின்பாற் சேர்க்கப்பட வேண்டியவரே, “மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரை யாம் கண்டதில்” (குறள்) என்றவிடத்து, ஒழுக்க உணர்ச்சி இல்லாதவர்களைக் கயவர் என்கிறார். மேலும், “தேவரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுகலான்” என்றவிடத்து, இருவருக்கும் ஒழுக்கமென்பதே கிடையாது; மனம் போன போக்கில் போகின்றவர்கள் என்கிறார். இந்தத் தேவனை ஒரு மடையன் உயர்திணை என்கிறான். எனவே, தொன்று தொட்டுத் தமிழன் ஒழுக்கத்தை விடாதவன். ‘ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்’ என்பது தமிழன் கொள்கை. எவ்வழி நோக்கினும், ஆரிய நாகரிகமும் தமிழர் நாகரிகமும் ஒன்றிற்கொன்று மாறுபட்டது.

தமிழன், அறம் வேறு இன்பம் வேறு என நினைப்பவனல்லன். இருவர், காதலால் அறத்தைக் கைப்பிடித்து இன்பத்துடன் வாழ்பவர் தமிழர்.

மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!

சரித ஆதாரங்களையும் சான்றோர் மொழிகளையும் சிந்தையுட்கொண்டு, சீரிய முறையிலே சுயமரியாதை உணர்வுடன் சூட்சுமத்தைத் தெரிந்து கொண்டு, சொந்த விருப்பு வெறுப்புகளை மாற்றிச் சோர்வின்றிப் பணிபுரிவோருக்கு, நிச்சயமாக ஆரிய மாயையிலிருந்து தாம் விலகவும், பிறரை விலகச் செய்யவும் வழி பிறந்தே தீரும். அனைவரும் ஒன்று என்று அழகாகக் கூறிவிட்டு, அடிமைகளாக நம்மை ஆக்கி வைத்திடுவது ஆரியம். அரசர்களை ஆண்டிகளாக்கியதும், ஆடு, மாடுகளுடன் வந்தோருக்கு வீடு வாசல் தந்து மற்றவருக்குக் கேடு செய்யும் மூட மதியினைப் பீடமேற்றியதும், ஆரியம், கற்பனையை ஊட்டிக் கருத்திலே துலங்கும் அறிவினை ஒட்டிப் பழங்குடி மக்களை வாட்டிப் பார்ப்பனீயம் எனும் பொறியிலே தமிழரை மாட்டியது ஆரியம். அந்த ஆரியம் தேவனைச் சாட்சிக்கு இழுக்கும்! மந்திரம் கூறி மக்களை மிரட்டும்! மகாதேவன் கட்டளை எனக் கூறி மயக்கும்! மட்டற்ற மடமைத்தனத்திலே மக்களை அழுந்தச் செய்து களிக்கும்! விளைநிலத்துக் களைபோலத் தமிழகத்திலே தோன்றி, வீறு கொண்டோரை விம்மிடச் செய்துவிட்டதும் ஆரியமே! தோள் தட்டி மார்தட்டி, வாழ்ந்த மறத்தமிழனை இன்று வயிறொட்டிக் கன்னத்தே குழிதட்டிப் பட்டினியில் வாழும் பாமரானாக்கியதும் ஆரியமே! அபினைக் கொடுத்து உடலைக் கெடுத்துப் பின்னர் அவ்வபின் கிடைக்காவிட்டால் எதைக் கொடுத்தேனும் அதே அபினைப் பெற்றே தீர வேண்டிய கேவலமான நிலைக்குக் கொண்டுவரப்பட்டவர்கள் போல், ஆரியம் பையப் பையத் தன் நஞ்சினை ஊட்டித் தமிழனைச் செயலற்றவனாக்கி விட்டது. ஆரியக்கலை தமிழ் இனப்பண்பை அழித்தது.

ஆரியம் வேறு தமிழ் வேறு என்பதற்கு இச்சிறு நூலிலே ஆராய்ச்சியாளர்களின் மொழிகளைத் தந்துள்ளேன். ஆரியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய குறிப்பும் பொறித்துள்ளேன். இது ஒரு பழம் பெருமை வாய்ந்த இனம். வேற்று இனத்தின் வெள்ளாட்டியாகிக் கிடப்பது சரியா? தமிழ் இன வீரர்களே! தன்மானத் தீரர்களே! வலிவில்லாதவன் வலிமையுள்ளவனை அடக்கிய விந்தையைப் பாரீர்! இந்தக் கேவல நிலையை மாற்றி அமைப்பதையே உமது வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு பணிபுரிய முன் வாரீர் என்று அழைக்கிறேன்.

நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்!

ஆரியராவது திராவிடராவது என்று பேசிடும் அறிவிலிகளானாலும் சரியே. ஆரியரை என்ன செய்ய முடியும் என்றுரைத்திடும் ஆணவக்காரராயினும் சரியே, ஆவது ஒன்றும் இல்லை நம்மால் என்று பேசிடும் ஆண்மையற்ற வராயினுஞ் சரியே, ஆரிய மாயையின் ஆதிநாள் வரலாறு பற்றியும், வளர்ச்சி பற்றியும் வரையப்பட்டுள்ள அறிவுரைகட்கு, நேரிய முறையிலே சீரிய பதிலுரைக்க முன் வருவாரா என்று கேட்கிறேன். மற்றவரின் மனப்போக்குப் பற்றித் தமிழ் இளைஞர்கள் உங்கட்குக் கவலை வேண்டாம். ஆரியத்தைக் குறித்து இங்கு திரட்டித் தொகுத்துத் தரப்பட்டுள்ள விஷயங்களைச் சற்றே பொறுமையுடன், அக்கறையுடன் சிந்தித்து ஒரு முடிவிற்கு வாருங்கள். வீழ்ச்சியுற்ற இனத்தினைக் காப்பாற்ற வீறு கொண்ட இளைஞர்களே தேவை. விலா ஒடிந்த வீணரல்ல!

இணையில்லாத வீரத்துடன் வாழ்ந்து வந்த இனத்திலுள்ள வீரர்களே! எடுப்பார் கைப்பிள்ளையாய் இருக்கலாமா? இமயத்திலே புலிக்கொடி பொறித்த கரிகாலன் வழி வந்த நாம் இதயத்திலே சூதே நிரம்பிய ஆரியத்திடம் அடிபணிவது கேட்டால் உலகு நகையாதோ? சேரன் புகழ், கனக விசயரின் சென்னியிலே சூடேற்றியதாம். அலைகளை ஆலவட்டமாகக் கொண்டு, மரக்கலத்தை ஆட்சி பீடமாகக் கொண்டு, அஞ்சா நெஞ்சுடன் அரசோச்சிய இராசேந்திரனின் பெயரைக் கூறவும் உரிமை இல்லாதவரானோம்! ஊமைகளானோம், குருடரானோம், அடிமையானோம்! பொன் ஒரு புறமும், மணி மற்றொரு புறமும் திகழப் பூங்காவிலே தூங்கா விளக்கென ஒளிவிடு கண்களுடன் ஓடி விளையாடிய குமரிகள், மணி என விளங்கினராம் இங்கு! வீரரின் வேலின் ஒளியும், வேல் விழியாரின் புன்னகைப் பாணமும் ஒன்றையொன்று எதிர்த் திடும் மாடசியினைத் திறம்பட உரைத்திடும் நாவலர் நடமாடிய நாட்டிலே, இன்று சோறு இல்லை. சோறு இல்லை என்று அழும் வேதனை வெண்பாவே மிகுந்திடக் காண்கிறோம். மாடமாளிகை மண்மேடாகி விட்டது; மதி கெட்டதால் நமது நிதி கெட்டது ; கதி கெட்டது. சதிகாரர் விட்ட சரங்கள் நமது உயிரைத் துடைத்திடக் காண்கிறோம். என்னே நம் நிலை! ஏனோ இன்னமும் நம்மவருக்குத் தெரியவில்லை ஆரியத்தின் வலை!

அகிலும் தேக்கும் அழியாக் குன்றம்
அழகாய் முத்துக் குவியும் கடல்கள்
முகிலும் செந்நெலும் முழங்கும் நன்செய்
முல்லைக் காடு மணக்கும் நாடு”

நமது தமிழகம்! முல்லைக்காடு இன்று முட்புதராகிக் கிடக்கிறது! மீண்டும் தமிழகம் பூங்காவாக வேண்டும். ஆரிய மாயையிலிருந்து விடுபட்ட அன்றே அறியாமையிலிருந்து நம் மக்கள் விடுபடுவர்! ஆண்மை பெறுவர்! உலகின் அணியாவர்! ஆரியம் ஒரு மாயை என்பதை விளக்க அறிஞர்கள் தந்துள்ள அரிய உண்மைகளைக் காண்மின்! பிறருக்குக் கூறுமின்! அறப்போர் தொடுமின்! வெற்றி நமதே!

முற்றும்.

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

அவன் உள்ளம் களி பொங்கியது ஒளி வீசியது !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 13-அ

ன்று இரவு அலெக்ஸேய் நிம்மதி இன்றி உறங்கினான். ஒரு தரம் வெண்பனிக் குவைகள் நிறைந்து கிடந்த விமானத்திடலும் பழக்கமற்ற அமைப்பு உள்ள “லா-5” ரக விமானமும் அவனுக்குக் கனவில் தோன்றின. இந்த விமானத்தின் இறங்கு சக்கரங்களுக்குப் பதில் பறவைக் கால்கள் அமைந்திருந்தன. விமானி அறைக்குள் ஏறி வந்தான் டெக்னீஷியன் யூரா. “அலெக்ஸேய் பறந்து தீர்த்துவிட்டான்” என்றும் இப்போது பறக்கும் முறை தன்னுடையது என்றும் ஏறி வந்ததுமே சொன்னான் அவன். மறுதரம் அலெக்ஸேயின் கனவில் தோன்றினார் மிஹாய்லா தாத்தா, வெள்ளைச் சட்டையும் ஈரக் கால் சட்டையும் அணிந்து, வைக்கோல் மேல் அலெக்ஸேய்க்கு வெந்நீர் ஸ்நானம் செய்வித்தவாறு, “கலியாணத்துக்கு முன் வெந்நீரில் குளிப்பது நல்லது” என்று கூறி இடைவிடாமல் சிரித்துக் கொண்டிருந்தார்.

பிறகு, விடியும் தறுவாயில் கனவில் தென்பட்டாள் ஒல்கா. வெயிலில் பழுப்பேறிய வலிய கால்களை நீரில் தொங்கவிட்டபடி லாவகமுள்ள கொடி போன்ற மேனி முழுவதும் ஏதோ சுடர் வீச, கவிழ்ந்த படகின்மேல் அமர்ந்திருந்தாள். வெயில் படாதவாறு உள்ளங்கையால் மறைத்தவாறு சிரித்துக்கொண்டே அவள் அவனைத் தன்னருகே வரும்படி சைகையால் அழைப்பது போல இருந்தது. அவன் அவள் பக்கம் நீந்திச் சென்றான். ஆனால் விசையும் கொந்தளிப்பும் உள்ள நீரோட்டம் அவனைக் கரையிலிருந்து, அவளிடமிருந்து பின்னே இழுத்துப் போயிற்று. கைகளையும் கால்களையும் எல்லாத் தசைகளையும் தீவிரமாக அசைத்து அடித்து அவன் நீந்தி அவளை மேலும் மேலும் நெருங்கினான். காற்று அவளுடைய மயிர்க் கற்றைகளை அலையடிக்கச் செய்வதும் அவளுடைய பழுப்பேறிய கால் தோல் மீது பளிச்சிடுவதும் ஏற்கனவே அவனுக்குத் தென்படலாயின….

ஆனால் அந்தச் சமயத்தில் அவன் விழித்துக் கொண்டான். அவன் உள்ளம் களி பொங்கியது, ஒளி வீசியது. உறக்கம் கலைந்த பிறகும் படுத்தவாறு மறுபடி உறங்கவும் இந்த இன்பக் கனவைத் தொடர்ந்து காணவும் முயன்றான். ஆனால் பிள்ளைப் பருவத்தில்தான் இவ்வாறு செய்வது இயலும். கனவில் தோன்றிய ஒடிசலான, பழுப்பேறிய நங்கையின் உருவம் சட்டென எல்லாவற்றையும் ஒளிமயமாக்கியது. எண்ணி எண்ணி ஏங்காமல், சோர்வு அடையாமல், ஓல்காவை எதிர் கொண்டு நீந்திச் செல்ல வேண்டும், நீரோட்டத்துக்கு எதிராக நீந்த வேண்டும், நீந்தி முன்னேற வேண்டும், என்ன விலை செலுத்த நேரினும் சரியே, வலிமையை எல்லாம் ஈடுபடுத்தி நீந்திக் குறிக்கோளை அடைய வேண்டும் என்று சங்கற்பம் செய்து கொண்டான். ஆனால் கடிதம்? கடிதம் தன்பாட்டில் போகட்டும். உண்மைக் காதலை இத்தகைய கடிதம் அச்சுறுத்திப் போக்கிவிடாது.

காலையில் கவைக்கோல்கள் இல்லாமல் நடந்து பார்த்தான். பதபாகமாகக் கட்டிலிலிருந்து இறங்கினான். நின்றான். கால்களை அகற்றி வைத்து, சமனிலை வருவிப்பதற்காகக் கைகளை இரு புறமும் நீட்டியவாறு சற்று நின்றான். அப்புறம் கைகளால் சுவற்றைப் பிடித்துக் கொண்டு ஓர் அடி எடுத்து வைத்தான். பொய்க்கால் தோல் கறுமுறுத்தது. உடல் ஒருபக்கமாகச் சாய்ந்தது, ஆனால் அவன் கைவீச்சால் அதைச் சமப்படுத்திக் கொண்டான். சுவற்றிலிருந்து கையை அகற்றாமல் இன்னொரு அடி எடுத்து வைத்தான். நடப்பது இவ்வளவு கடினமானது என்று அவன் ஒருபோதும் எண்ணியதில்லை. மூன்றாவது அடி வைப்பின்போது உடல் ஒருபுறம் சாய்ந்து கால் புரண்டு விடவே தொபுகடீர் என்று தரையில் குப்புற விழுந்துவிட்டான்.

படிக்க:
டெல்லிக்கு காஷ்மீர்தான் வேண்டும் – காஷ்மீரிகள் தேவையில்லை
உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கில் பாஜகவின் தொடர்புகள் : சிபிஐ அறிக்கையில் அம்பலம் !

வார்டுக்காரர்கள் சிகிச்சை அறைக்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கும் நேரத்தை அவன் தன் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். எவரையும் உதவிக்கு அழைக்காமல் சுவரோரமாய் ஊர்ந்துபோய், அதை ஆதரவாகப் பற்றிக் கொண்டு மெதுவாக எழுந்து நின்று அடிபட்ட விலாவைத் தொட்டுப் பார்த்தான், முழங்கையில் கன்றியிருந்த தழும்பை நோக்கினான். இந்தத் தழும்பு சிவப்பாகத் தொடங்கியிருந்தது. சுவரிலிருந்து விலகி, பற்களை இறுகக் கடித்துக் கொண்டு மீண்டும் ஓர் அடி முன்னே எடுத்து வைத்தான். இப்போது அவன் இதன் மர்மத்தைப் புரிந்து கொண்டுவிட்டான் போலும். சாதாரணக் கால்களுக்கும் அவனுடைய செயற்கைக் கால்களுக்கும் இருந்த வேறுபாடு இவற்றில் மீள் விசை இல்லாதது தான். இவற்றின் இயல்பை அவன் அறியவில்லை. நடக்கும்போது கால்களின் நிலையை மாற்றிக் கொள்ளவும், அடி எடுத்து வைக்கையில் உடற் சுமையைக் குதிகாலிலிருந்து உள்ளங்காலுக்குக் கொண்டு வரவும் மறுபடி உடற்சுமையை அடுத்த குதிகால் மீது வைக்கவும் தேவையான பழக்கத்தை, தனிவகை மறுவினையை அவன் பயிற்சியால் ஏற்படுத்திக்கொள்ளவில்லை. உள்ளங்கால்களை ஒருபோக்காக இன்றி, சிறிது சாய்வாக, நுனிகளை அகற்றி வைப்பதால் நடக்கையில் அதிக நிலையுறுதி ஏற்படும் என்பதையும் அவன் அறியவில்லை.

குழந்தை தனது தாயின் கண்காணிப்பில் குட்டையும் மென்மையுமான கால்களால் தத்தக்கபித்தக்கவென்று முதல் அடிகளை எடுத்துவைக்கும் பொழுது இந்தப் பழக்கங்கள் எல்லாம் அவனுக்கு ஏற்பட்டு விடுகின்றன. இந்தப் பழக்கங்கள் வாழ்நாள் முழுவதும் நிலையாக வேரூன்றிவிடுகின்றன, இயற்கைத் தூண்டல் ஆகி விடுகின்றன. மனிதன் பொய்க்கால்கள் அணிந்து கொண்டு, அவனது உடலின் இயல்பான ஒப்புநிலைமைகள் மாறியதும் குழந்தைப் பிராயத்திலிருந்து பெறப்பட்ட இந்தத் தூண்டல் நடைக்கு உதவியாக இருப்பதற்குப் பதில் இடைஞ்சல் ஆகி விடுகிறது. புதிய பழக்கங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்தத் தூண்டலை எப்போதும் அடக்கிவைத்திருப்பது அவசியம் ஆகிறது. கால்களை இழந்த சித்த வலிமை அற்ற பல மனிதர்கள், குழந்தைப் பருவத்தில் நமக்கு அவ்வளவு சுலபமாகக் கைவரும் நடைக்கலையை முதுமைவரையில் மீண்டும் பெற இயலாதவர்களாக இருக்கிறார்கள்.

மெரேஸ்யெவ் தன் குறிக்கோளை அடைய வல்லமை கொண்டிருந்தான். தன் தவறுகளைக் கருத்தில் கொண்டு அவன் மறுபடி சுவற்றிலிருந்து விலகி, செயற்கைக் கால் நுனியை ஒருபுறம் திருப்பி குதிங்காலை ஊன்றி நின்றான். பிறகு உடல் கனத்தை நுனிக்குக் கொண்டுவந்தான். பொய்க்கால் சினத்துடன் கிரீச்சிட்டது. கனம் நுனிமீது சார்ந்த கணத்தில் அலெக்ஸேய் மறுகாலைச் சட்டெனத் தரையிலிருந்து எடுத்து முன்னே வைத்தான். குதிகால் தொப்பென்று தரையில் அடித்தது. கைகளால் நிலையைச் சமப்படுத்தியவாறு இப்போது அவன் அறை நடுவே நின்றான். அடுத்த அடியை எடுத்து வைப்பது பற்றித் தயங்கியபடி ஓயாமல் சமனிலையை இழந்து தள்ளாடுவதும் கைகளால் நிலையைச் சமப்படுத்துவதுமாக நின்றான். மூக்குத் தண்டில் சில்லென்ற வியர்வை அரும்பியதை உணர்ந்தான்.

இந்தக் கோலத்தில்தான் வஸீலிய் வஸீலியெவிச் அவனைக் கண்டார். கதவருகே நின்று மெரேஸ்யெவைச் சற்று நேரம் கவனித்துக் கொண்டிருந்துவிட்டு அருகே வந்து கக்கத்துக்கு அடியில் கைகொடுத்துத் தாங்கிக் கொண்டார்.

“சபாஷ், ஊர்வான்! தாதியோ, மருத்துவ ஊழியனோ இல்லாமல் தனியாக ஏன் பாடுபடுகிறாய்? மனிதனுடைய ஆணவத்தைப் பார்… பரவாயில்லை. எந்தக் காரியத்திலும் முதல் அடி வைப்பதுதான் முக்கியமானது. எல்லாவற்றிற்கும் கடினமானதைச் செய்துவிட்டாய்” என்றார்.

“நீங்கள் எல்லோரும் போங்கள் உங்கள் காரியத்தைப் பார்த்துக்கொண்டு. இது சர்க்கஸ் அல்ல, வேடிக்கை பார்ப்பதற்கு. நான் இல்லாமலே வார்டுகளைச் சுற்றிப் பார்த்து முடியுங்கள்” என்று உடன் வந்தவர்களை அதட்டி அனுப்பி விட்டு, “எங்கே, மெரேஸ்யெவ், சேர்ந்து பயிலுவோம் வாருங்கள். வாருங்கள் தம்பீ, ஒன்று… என்னைப் பிடித்துக் கொள்ளுங்கள், இதில் என்ன கூச்சம்? பிடித்துக்கொள்ளுங்கள், நான் ஜெனரல், என் சொல்லுக்குக் கீழ்ப்படிய வேண்டும் நீங்கள். ஊம், இரண்டு, அப்படித் தான். இப்போது வலது கால் சபாஷ். இடது. அருமை!” என்று மெரேஸ்யெவை உற்சாகப்படுத்தினார்.

மனிதனுக்கு நடக்கப் பயிற்சி அளித்ததன் மூலம் ஏதோ மகத்தான மருத்துவச் சோதனையை நிறைவேற்றிவிட்டவர் போல மகிழ்ச்சியுடன் கைகளைத் தேய்த்துக் கொண்டார் அந்தப் புகழ்பெற்ற மருத்துவ விஞ்ஞானி. ஆனால் அவரது சுபாவத்தின் தன்மையே அப்படி; எந்தக் காரியத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் தன்னை மறந்து ஒன்றிவிடுவார்; தமது ஆற்றல்மிக்க பெரிய உள்ளம் அனைத்தையும் அதில் ஈடுபடுத்திவிடுவார். வார்டின் ஒரு கோடியிலிருந்து மறு கோடி வரை மெரேஸ்யெவை அவர் நடக்க வைத்தார். களைத்து சோர்ந்து போய் அவன் நாற்காலியில் சாய்ந்ததும் ஒரு நாற்காலியை அவனருகே இழுத்துத் தாமும் உட்கார்ந்து கொண்டார்.

“ஊம், விமானம் ஓட்டப் போகிறாய் அல்லவா? ஆம், ஆம். அப்பனே, இப்போதைய யுத்தம் அப்படிப்பட்டது. கை பிய்ந்து போனவர்கள் தாக்குதலுக்குத் தலைமை வகித்து படைப் பகுதியை நடத்திச் செல்கிறார்கள். மரணக் காயம்பட்டவர்கள் மெஷின்கன்களைத் தங்கள் மார்பினால் அடைக்கிறார்கள்…. ஆம், இறந்தவர்கள் மட்டுமே சண்டை செய்வதில்லை…” இவ்வாறு சொல்லுகையில் கிழவரின் முகத்தில் நிழல் படர்ந்தது, அவர் பெருமூச்செறிந்தார். “அவர்களுங்கூடத் தாம் போரிடுகிறார்கள், தங்கள் புகழினால். ஆம்… நல்லது, மறுபடி தொடங்குவோம், தம்பி” என்றார்.

இரண்டாவது முறை வார்டைச் சுற்றி வந்த பிறகு மெரேஸ்யெவ் இளைப்பாறுகையில் தலைமை மருத்துவர் க்யோஸ்தியேவின் கட்டிலைத் திடீரெனச் சுட்டிக் காட்டினார்.

“இந்த டாங்கி வீரன் எப்படி? சொஸ்தமாகி வெளியேறி விட்டானா?” என்று கேட்டார்.

அவன் குணமடைந்து வேறிடம் சென்று விட்டதாகவும் ஆனால் ஒரே சங்கடம் என்னவென்றால் அவனுடைய முகம், முக்கியமாகக் கீழ்ப்பகுதி தீப்பட்ட புண்ணினால் நேராக்க முடியாத படி விகாரமாகியிருப்பது தான் என்றும் மெரேஸ்யெவ் கூறினான்.

“அதற்குள் கடிதம் எழுதிவிட்டானா? அதற்குள் ஏமாற்றமா? பெண்கள் விரும்பவில்லையாமோ? மீசை தாடி வளர்க்கும் படி அவனுக்கு யோசனை சொல்லுங்கள். மெய்யாகவே, தோற்றம் சீர்படுவதுடன் அசாதரணமானவன் என்ற பெயரும் கிடைக்கும். பெண்களுக்கு இது மிகவும் உவப்பாயிருக்கக் கூடும்!” என்றார் மருத்துவர்.

அப்புறம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டவர் கதவருகே நின்று திரும்பிப் பார்த்து உற்சாகமாகக் கத்தினார்: “அவனுக்கு, அதுதான் உங்கள் நண்பனுக்கு, கட்டாயம் எழுதுங்கள்- நான் தாடி வளர்க்கச் சொன்னதாக, கை கண்ட மருந்து இது! பெண்களிடையே கோலாகலமான வெற்றி கிடைக்கும்!”

படிக்க:
காஷ்மீரா ? குஜராத்தா ? எது வளர்ச்சியடைந்த மாநிலம் ? | ஜீன் ட்ரீஸ்
தேங்கிக்கிடக்கும் கார்கள் ! வேலையிழக்கும் தொழிலாளர்கள் ! காரணம் என்ன ?

மாலையில் மருத்துவ நிலையத்தின் முதிய பணியாள் ஒருவர் மெரேஸ்யெவுக்கு ஒரு கைத்தடி கொண்டு வந்து கொடுத்தார். கருங்காலி மரத்தால் செய்த அருமையான பழங்காலக் கைத்தடி அது. வசதியான தந்தக் கைப்பிடி வைத்தது. ஏதோ கூட்டுக் கையெழுத்து முத்திரை அதில் பொறிக்கப்பட்டிருந்தது.

“தலைமை மருத்துவர் வஸீலிய் வஸீலியெவிச் கொடுத்தனுப்பினார். அவருடைய சொந்தக் கைத்தடியை உங்களுக்காகப் பரிசளித்தார். இதை ஊன்றிக் கொண்டு நடக்கும்படி சொன்னார்” என்றார் அந்தப் பணியாள்.

அந்த கோடைக்கால மாலையில் மருத்துவமனையில் எல்லோருக்கும் சலிப்பு ஏற்பட்டிருந்தது. எனவே நாற்பத்து இரண்டாம் வார்டுக்கு ஆட்கள் வரலாயினார்கள். வலப்புறமும் இடப்புறமும் இருந்த பக்கத்து வார்டுகளிலிருந்தும், மாடியிலிருந்தும் கூட ஆட்கள் தலைமை மருத்துவரின் பரிசைப் பார்ப்பதற்கு வந்தார்கள். கைத்தடி உண்மையாகவே நன்றாயிருந்தது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

இந்து ராஷ்டிரம் : நம் கண்முன்னேயே நெருங்கிக் கொண்டிருக்கிறது !

0

“நாடே துண்டாடப்படுவதற்கு இட்டுச்செல்லக் கூடிய …  இந்திய அரசியல் சாசன வரலாற்றிலேயே மிகவும் மோசமான நாள்” – வழக்கறிஞரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம் கூறிய இந்த வலிமையான வார்த்தைகள் எச்சரிக்கையூட்டும் முன்னறிவிப்பாகவே படுகிறது.

ஜம்மு காஷ்மீரின் நிலையையே மாற்றியமைக்கும் வகையில் சரத்து 370-ஐ ரத்து செய்த பிறகு, அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்த பிறகு, பிற மாநிலங்களின் நிலையும் கேள்விக்குறியாக்கப்பட்டிருக்கிறது.

சரியாகச் சொல்லப்போனால், பல மாநிலங்களை ஒருங்கிணைந்ததே இந்தியா என்ற மிக அடிப்படையான ஒன்று இன்று தடுமாற்றத்திற்குள்ளாகியிருக்கிறது.

படையணிகளைக் குவித்து, முன்னாள் முதல்வர்கள் இருவர் உட்பட எதிர்கட்சித் தலைவர்களைக் கைது செய்து, அனைத்து வகையான தொடர்புகளையும் துண்டித்து அங்கு இந்த நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்ட விதமானது, பாஜக அங்கு எவ்விலை கொடுத்தேனும், வன்முறையை ஏவியும் கூட, தனது காரியத்தை நிறைவேற்றத் தயாராயிருப்பது தெரிகிறது. மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கருத்துக்கள் அதற்கு ஒரு பொருட்டல்ல என்பதும் தெரிகிறது.

தற்போது தனது ஆசைக்குரிய திட்டங்களை எதிர்ப்புப் பயமின்றி நிறைவேற்றிக் கொள்வதற்கான தளம் பாஜகவிற்கு அமைந்துள்ளது. அயோத்தியில் இராமர் கோவில், பொது சிவில் சட்டம், அரசியல்சாசனத்தை மாற்றுவது, முசுலீம்களை திட்டமிட்ட வகையில் ஒதுக்குவது உள்ளிட்ட பலவும் அதன் விருப்பப் பட்டியலில் உள்ளது. சங்க பரிவாரத்தின் நீண்டநாள் கனவான சரத்து 370-ஐ நீக்குவது என்பது தற்போது நனவாகியுள்ளது.

எந்த எதிர்ப்புகளையும் கண்டுகொள்ளவில்லை, எந்த ஒரு சிறிய சட்டரீதியான அல்லது அரசியல் சாசன சட்ட குழப்பங்கள் குறித்தும் அக்கறை செலுத்தவில்லை. பொதுக் கருத்துபற்றியோ அல்லது நேரடியாக பாதிக்கப்பட்ட  மக்களின் கருத்து பற்றியோ கருத்துக் கேட்கத் தேவையில்லை. மொத்த நாடும் மிகப்பெரிய தேர்தல் வெற்றியை கொடுத்திருக்கும் போது, இவர்கள் யார் கருத்துச் சொல்வதற்கு ?

கேள்வி கேட்கத்தகுந்த எந்த விவகாரத்திலும், தனிப்பெரும்பான்மையில் தாம் வெற்றி்பெற்றதையே தமது ஒவ்வொரு முடிவுகளையும் நியாயப்படுத்துவதற்கு பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பயன்படுத்தப்படுகின்றனர்.  ஆனால் அரசாங்கமானது, அது எந்த அரசாங்கமாக இருந்தாலும் சரி (குடிமக்களால்) எதிர்கொள்ளப்படவும் கேள்வி கேட்கப்படவும் வேண்டும். மக்களுக்கு பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமாகும். இதை பாஜக புரிந்து கொள்வதில்லை.

படிக்க:
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !
காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் கேள்விகளுக்குப் பதில் அளிப்பதாக இருக்கட்டும், பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு மறுப்பு சொல்வதாக இருக்கட்டும், அல்லது, நிதித்துறை அமைச்சக விவகாரத்தில் சமீபத்தில் நாம் பார்த்தது போல், நிருபர்களைக் கேள்வி கேட்க விடாமல் தடுத்ததாக இருக்கட்டும், அதனை பொறுப்பாக்கக் கூடிய அனைத்து விவகாரங்களின் மீது அரசாங்கம் வெறுப்புக் கொள்கிறது.

தனது முதல் ஐந்தாண்டு ஆட்சியில் மோடி அரசாங்கம், பிரச்சினைக்குரிய சில முடிவுகளை எடுப்பதற்கான சில முயற்சிகளைச் செய்தது.  அவற்றுக்கு எவ்வித வருத்தமோ, விளக்கமோ கொடுக்கவில்லை. ஆனால், பிற அரசியல் கட்சிகளிடமிருந்தோ அல்லது கருத்தாளர்களிடமோ, இன்னும் சொல்லப்போனால் பாதுகாக்கப்பட்ட மக்களிடமிருந்தோ வரும் விமர்சனங்கள் சிறிய மாற்றத்தையாவது ஏற்படுத்தின என்பது தெளிவாகத் தெரிந்தது.

no-india-no-pakistan-we-want-free-kashmir
இந்தியாவும் வேண்டாம் ; பாகிஸ்தானும் வேண்டாம் ! சுதந்திரமான காஷ்மீர்தான் வேண்டும். (கோப்புப் படம்)

வணிகவியலாளர்களிடமிருந்து வரும் சிறு புகார்களின் அடிப்படையில் ஜி.எஸ்.டி-யிலும்கூட நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது மோடி அரசு. மோடி அரசாங்கத்தை “சூட்- பூட் போட்டவர்களின் அரசு” என ராகுல்காந்தி கூறியது மோடியை பெருமளவில் வெறுப்பேற்றியது. பொருளாதார கொள்கைகளில் தனது பிடிப்பை திடீரென மாற்றிக்கொண்டார். மன்னிப்பு எதுவும் கேட்கப்படவில்லை என்றாலும் அப்போது பொதுமக்கள் பார்வை முக்கியமாக பார்க்கப்பட்டது என்பது மட்டும் உறுதி.

ஆனால், இப்போது அப்படி இல்லை. சட்டங்கள் வேகமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஒன்று, எதிர்க்கட்சிகள் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர் அல்லது நிராகரிக்கப்படுகின்றனர். சில விவகாரங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் கூட முக்கியச் சட்ட மசோதாக்கள் வேகமாக அறிமுகப்படுத்துவதையும் நிறைவேற்றப்படுவதையும் ஆதரித்தன. நாம் அறிவதற்கு முன்னரே, நம் வாழ்வின் மீது தாக்கம் செலுத்துவதற்கான அதிகாரத்தை அரசுக்கு கொடுப்பதற்கான சட்டங்களை நாடாளுமன்றம் நிறைவேற்றிவிடுகிறது. இச்சட்டங்களின்படி விசாரணையின்றியே யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதியாக குற்றம்சாட்டப்படலாம். தகவலறியும் உரிமைச் சட்டம் அதற்குப் பல்லில்லாதவாறு திருத்தப்பட்டுள்ளது.

ஒருசில மாற்றுக் கருத்துள்ளவர்களாலும் கூட முடிவெடுக்கும் வழிமுறையில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. முன்னாள் தகவல் ஆணையர்கள், தகவலறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதால் வரவிருக்கும் அபாயங்கள் குறித்து எச்சரித்ததை யாரும் கவனம் கொடுத்துக் கேட்கவில்லை. இது அரசாங்கத்தின் மனதை மாற்றிவிடப் போவதில்லை.

நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மை இருக்கிறது என்ற வகையிலும் அரசாங்கம் செய்யவேண்டிய வேறுபல அவசர விசயங்கள் பல இருக்கின்றன என்ற அடிப்படையில் பார்த்தாலும், இந்த மசோதாக்களுக்கு இப்போது என்ன அவசரம்? மிகவும் அவசரமான அவசியமான காரியம் என்னவெனில், தற்போது மிகவும் மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்தை முன்னேற்றுவதுதான். நுகர்வோர் தேவைகள் மிகவும் கீழ்நிலைக்கு இறங்கிவிட்டன. வேலைவாய்ப்பு உருவாவதற்குப் பதில் குறைகின்றன. இது அரசாங்கத்தைக் கவலையுறச் செய்யவில்லையா ?

பொருளாதாரம்தான் முக்கியமானது. ஆனால் பாஜகவிற்கும் அதன் சித்தாந்த குருவான ஆர்.எஸ்.எஸ்.-க்கும் அதன் வெகுநாள் அரசியல் நிகழ்ச்சி நிரல்கள்தான் முக்கியமானவை. சங்க பரிவாரங்களுக்கு ஒரு இலக்கு உண்டு. பல பத்தாண்டுகளாக இடைவிடாமல் அவை அதை நோக்கி செயலாற்றிக் கொண்டிருக்கின்றன. தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு குறைந்தபட்ச வாய்ப்பையும் தனது இலக்கை நோக்கி முன்னேறுவதற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. ஜன்சங்கம் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் இணைந்து ஜனதா கட்சியின் ஒரு பகுதியாக மாறியது. வி.பி.சிங்கின் குறுகிய கால அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்தது உள்ளிட்டு அதிகாரத்தை நோக்கிய அனைத்துவிதமான செயல்தந்திர நகர்வுகளை முன்னெடுத்தது.

அவசரநிலை காலத்தில் ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப்பட்டு அதன் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். பாஜக எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டாகக் குறைந்தது. ஆனாலும் அதன் இலட்சியம் மாறவில்லை. வாஜ்பாயி அரசாங்கத்தின் காலத்தில் அது பிறரிடம் செல்வாக்கு செலுத்தும் நிலையில் இருந்தது. எனினும் அது கூட்டணி அரசாங்கமாக இருந்ததால், தனது பல்வேறு குறிக்கோள்களை அதனால் நிறைவேற்ற முடியவில்லை.

தற்போது மோடி தலைமையில் இருக்கையில் சங்கப் பரிவாரம் தனது இறுதி இலட்சியமான இந்து ராஷ்டிரத்தை சாதிக்கும் நிலையை நெருங்கிவிட்டது. அதன் ஒவ்வொரு அடியும் அதன் இறுதியிலக்கை நோக்கி அதனைக் கொண்டு செல்கிறது. இந்து இந்தியா அரசியல் அமைப்புச் சட்டத்தில் புனிதமாக்கப்பட வேண்டியதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் சட்டப்பூர்வமாக்கப்பட வேண்டியது மட்டும்தான் பாக்கி. அதற்குக் குறைவாக எதுவும் திருப்திகரமானதாக இருக்காது.

படிக்க:
காஷ்மீர் : பெல்லட் குண்டுகள்தான் அமைதிக்கான சாட்சியாம் !
காஷ்மீர் : பயங்கரவாதத்தையும் போர் சூழலையும் வளர்க்கும் இந்தியா !

அரசியல்சாசன சட்டம் அதனை அனுமதிக்கவில்லை எனில், அது மாற்றப்படலாம். ஆனால் அதன் ஒப்புதல் முத்திரை மட்டும் தேவைப்படும். அப்போது ஆர்.எஸ்.எஸ். பெருமையுடன் இது மக்களின் விருப்பம் என்று தெரிவிக்கும். சங்கபரிவார் விரைவில் அந்த இடத்தை நெருங்கிவிடும். – இந்திய சுதந்திரத்தின் 75-ம் ஆண்டான 2022 அல்லது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிறுவன நூற்றாண்டான 2025 ஆகிய இரண்டும் அதற்கான நல்ல தேதிகள்தான்.  ஆனால் நரேந்திர மோடியும், அமித்ஷாவும் அதற்காகக் காத்திருக்க விரும்பமாட்டார்கள். அவர்கள் வேகமாக முடிவெடுப்பவர்கள். நினைவிருக்கிறதா ?

♦ கார்ப்பரேட் காவி பாசிசம் – புதிய ஜனநாயகம் வெளியீடு ஆன்லைனில் வாங்க !

பாபர் மசூதி இடித்துத் தள்ளப்பட்டபோது திகிலுற்றிருந்ததைப் போல் இந்தியாவில் நிறைய பேர் சம்பவங்களின் இந்தச் சுற்றைக் கண்டு திகிலுறுவார்கள். அவர்கள் யாரும் எவ்வித மாயையிலும் இருக்க வேண்டாம். இந்த நகர்வு அதிகாரம், வசதி வாய்ப்பு மற்றும் தமது குரலைக் கேட்கச் செய்யும் திறன் கொண்ட பலருடைய ஆதரவைப் பெற்றிருக்கிறது. இந்த ஒப்புதல், பக்தாள்களிலிடமிருந்தும், பாஜக இணையதள பகடியாளர்களிடமிருந்தும் மட்டுமோ அல்லது சோரம் போன ஊடகங்களிடமிருந்து மட்டுமோ வரப்போவதில்லை. மற்றபடி பொறுப்புள்ள மக்கள் பலரும் பிற முயற்சிகள் எல்லாம் சரியாக நடக்கும்பட்சத்தில் இந்து ராஷ்டிரம் அறிவிக்கப்படும் சமயத்தில் இது நடப்பது குறித்து மகிழ்ச்சி அடைவர். சங்க பரிவாரம் தமது கனவு ராஜ்ஜியத்தில் அதுமட்டும் தனியாக இல்லை.

தமிழாக்கம் : நந்தன்
கட்டுரையாளர் : சித்தார்த் பாட்டியா
நன்றி : தி வயர்

 

NEP-2019 : கடலூர் பெரியார் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

மோடியின் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து கடலூர் பெரியார் அரசு கலை கல்லூரி மாணவர்கள் இன்று (14-08-2019) காலையில் வகுப்புப் புறக்கணிப்பு ஈடுபட்டனர்.

பெரும்பான்மையான மக்களின் கல்வி உரிமையை பறிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும்; 3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது ஏழை மாணவர்களை வடிகட்டும் நோக்கத்தை கொண்டது என்பதையும்; மும்மொழி கொள்கை திணிக்கும் முயற்சியையும் அம்பலப்படுத்தும் விதமாக கண்டன முழக்கங்களை மாணவர்கள் எழுப்பினர்.

படிக்க:
NEP 2019 : மனுநீதியின் புதிய பதிப்பு | பேராசிரியர் கருணானந்தன் நேர்காணல்
காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து மாணவர்கள் பெற்றோர்கள் பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டுமென்றும் அறைகூவல் விடுத்தனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி,
கடலூர் மாவட்டம்.
தொடர்புக்கு : 97888 08110.

பீகார் : குழந்தைகள் சோறின்றி மருந்தின்றி சாகிறார்கள் !

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதா தள் கூட்டணி நாற்பதில் முப்பத்தொன்பது தொகுதிகளை வென்றதற்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் முன்னெடுத்த வளர்ச்சித் திட்டங்களும் ஒரு காரணமென்று கூறப்பட்டது. சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சியின் அருகதை என்ன என்பதை அம்மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் நடந்த இளஞ்சிறார்களின் மரணம் அம்பலப்படுத்திவிட்டது.

கடந்த ஜூன் மாதத்தில் அம்மாநிலத்தைத் திடீரெனத் தாக்கிய ஒருவித மூளை அழற்சி நோயினால் ஏறத்தாழ 500 சிறுவர்கள் இறந்து போயிருக்கக்கூடும் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பீகார் மாநில அரசு இம்மூளை அழற்சி நோயினால் 824 சிறுவர்கள் பாதிக்கப்பட்டு, அவர்களுள் 157 சிறுவர்கள் மட்டுமே இறந்துபோனதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது. இம்மூளை அழற்சி நோயின் மையப் பகுதியாக இருந்த முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் 150- மேற்பட்ட சிறுவர்கள் இறந்து போனதைச் சமூக அக்கறையுள்ள மருத்துவர்கள் அம்பலப்படுத்திய பிறகும், அம்மாநில அரசு சாவு எண்ணிக்கையைத் துணிந்து குறைத்துக் காட்டிவருகிறது. உண்மையான புள்ளிவிவரங்களைத் தமக்குச் சாதகமாக மறைத்தும், கூட்டியும், குறைத்தும் காட்டுவது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கைவந்த கலை என்பதற்கு இது இன்னொரு எடுத்துக்காட்டு.

இம்மூளை அழற்சி நோய் மருந்து மாத்திரைகளுக்குக் கட்டுப்படாத கொள்ளை நோயும் அல்ல; குணப்படுத்த முடியாத மர்ம நோயும் அல்ல. ஒரு முப்பது ரூபாய் பெறுமான டெக்ஸ்ட்ரோஸ் என்ற திரவ மருந்தைப் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நரம்பு வழியாகச் செலுத்தியிருந்தால், பெருவாரியான சிறுவர்களை, ஏன் அத்துணை சிறுவர்களையும்கூடக் காப்பாற்றியிருக்க முடியும். அம்மலிவான மருந்தைக்கூட வாங்கிக் கையிருப்பில் வைத்திருக்காமல் இயங்கி வந்திருக்கின்றன அரசு மருத்துவமனைகள். எனவே, இச்சாவுகளை அரசின் அலட்சியத்தால் விளைந்த கொலைகள் என்றே கூறலாம்.

சிறுவர்கள் வெறும் வயிற்றில் லிச்சிப் பழங்களைச் சாப்பிட்டதால்தான் மூளை அழற்சி நோய் ஏற்பட்டு மரணமடைய நேரிட்டதாகக் கூறிவருகிறது நிதிஷ் குமார் அரசு. பன்றிக் காய்ச்சலுக்குப் பன்றிகளைக் குற்றஞ்சுமத்துவது எந்தளவிற்கு நகைக்கத்தக்கதோ, அது போன்றது பீகார் அரசு கூறியிருக்கும் காரணம்.

பா.ஜ.க. கூட்டணி மெச்சிக்கொள்ளும் பீகார் வளர்ச்சியின் இலட்சணம் : ஒரே படுக்கையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படும் அவலம்.

கடுமையான கோடைக் காலம், அப்பருவத்தில் பீகாரின் முசாஃபர்பூர் மாவட்டப் பகுதிகளில் விளையும் லிச்சிப் பழங்கள், சிறுவர்களின் அகால மரணங்கள் – இவை மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்றபோதும், இந்த மரணங்களுக்கான அடிப்படையான காரணம் முசாஃபர்பூர் மாவட்டத்தில் நிலவும் வறுமையும் ஏழ்மையும்தான்.

லிச்சிப் பழங்கள் உண்ணத் தகுந்தவைதான் என்றபோதும், அப்பழங்களை ஆரோக்கியமில்லாத குழந்தைகள், அதாவது தினந்தோறும் சத்தான உணவு கிடைக்காமல், அரைகுறைப் பட்டினியால் வாடும் குழந்தைகள் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது என்கிறது, மருத்துவ அறிவியல். அப்படி உண்டுவிட்டால், அப்பழங்களில் சுரக்கும் ஒருவித இரசாயனம் இரத்தத்திலுள்ள சர்க்கரை (குளுக்கோஸ்) அளவைக் குறைத்துவிடும். அரைகுறைப் பட்டினியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடல் இயக்கம் குறைந்த சர்க்கரையை ஈடுகட்டும் அளவிற்கான சர்க்கரையை வளர்சிதை மாற்றத்தின் மூலம் உற்பத்தி செய்ய முடியாது. இதன் காரணமாக அக்குழந்தைகளின் மூளை இயக்கம் பாதிக்கப்பட்டு, கோமா நிலைக்குச் சென்று மரணித்துவிடுகின்றன. இப்படிப் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நோயின் அறிகுறிகள் தென்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனையில் சேர்த்து, அவர்களுக்கு 10% டெக்ஸ்ட்ரோஸ் என்ற மருந்தை நரம்பு வழியாகச் செலுத்தித் தொடர்ச்சியாகக் கண்காணித்து வந்தால், அவர்களைச் சாவிலிருந்து காப்பாற்றிவிட முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பீகார் மாநில அரசு முசாஃபர்பூர் மாவட்டக் குழந்தைகளின் பட்டினியையும் போக்கவில்லை. அரசு மருத்துவமனைகளில் அம்மலிவான மருந்தையும் வாங்கி வைக்கவில்லை. விளைவு, கொத்துக்கொத்தாக சிறுவர்களின் அகால மரணங்கள்.

♦♦♦

பீகார் மாநிலமே மிகவும் பின்தங்கிய, வறுமை நிறைந்த மாநிலம் என்றாலும், ஜூன் மாதத்தில் நடந்த குழந்தைகளின் மரணங்கள் முசாஃபர்பூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் அதிகம் நடந்திருக்கின்றன. இதற்குக் காரணம் அம்மாவட்டத்தில் வறுமையும் பட்டினியும் தாண்டவமாடும் அளவிற்கு லிச்சித் தோட்டங்களும் நிறைந்துள்ளன.

லிச்சித் தோட்டங்கள் ஆதிக்க சாதியான பூமிகார் நிலப்பிரபுக்களுக்குச் சொந்தமானவை. லிச்சிப் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும் மே, ஜூன் மாதங்களில் பழங்களைப் பறிப்பது, அவற்றைத் தரம் பிரித்து வகைப்படுத்துவது ஆகிய வேலைகளைச் செய்வது மல்லா, சாஹ்னி, மஜ்ஹி, சமர், பஸ்வான் ஆகிய தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெண்கள். மூளை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு இறந்து போன சிறுவர்களுள் ஆகப் பெரும்பான்மையானவர்கள் இந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள்தான்.

இப்பெண்கள் லிச்சிப் பழங்களைப் பறிப்பதற்கு அதிகாலை நான்கு மணிக்குத் தோட்டத்திற்குச் சென்று காலை பத்து மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார்கள். இதற்கு இவர்களுக்குக் கிடைக்கும் கூலி அதிகபட்சமாக அறுபது ரூபாய்தான். அறுவடை முடிந்துவிட்டால் இந்தக் கூலியும் கிடைக்காது. உள்ளூரில் இருந்தால் வயித்தைக் கழுவக்கூட வருமானம் கிடைக்காது என்பதால், அம்மாவட்டத்தைச் சேர்ந்த ஆண் கூலித் தொழிலாளர்கள் வேலை தேடி டெல்லி வரையிலும் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். இதனால் அம்மாவட்டத்திலுள்ள அடித்தட்டு சாதிகளைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் குடும்பங்களில் மூன்று வேளை உணவு என்பது குதிரைக் கொம்பு போன்றது.

முசாஃபூர் மாவட்டத் தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகளைப் பார்க்க வந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமாரைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டம்.

பெண்கள் பழங்களைப் பறிப்பதற்குத் தோட்டங்களுக்குச் செல்லும்போது சிறுவர்களும் அவர்களோடு கூடவே செல்வதும், தோட்டத்தில் கீழே விழுந்து கிடக்கும் பழங்களை எடுத்து உண்ணுவதும் வழமையாக நடைபெறுகின்ற நிகழ்வு. ஆனால், காலையில் பழங்களைச் சாப்பிட்ட சிறுவர்களுள் யார் யாருக்கெல்லாம் அன்றிரவு போதிய உணவு கிடைக்கவில்லையோ, அச்சிறுவர்கள் மறுநாள் அதிகாலையில் மூளை அழற்சி நோயால் பாதிக்கப்படுவது உறுதி. இப்படித்தான் இந்நோய் முசாஃபர்பூர் மாவட்டத்தைத் திடீர்ச் சூறாவளி போலத் தாக்கியிருக்கிறது.

மருத்துவ அவசர ஊர்திப் பற்றாக்குறை, குழந்தை மருத்துவர் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை – இப்படிப் பல பற்றாக்குறைகளின் காரணமாகவே முசாஃபர்பூர் மாவட்டத்தில் மட்டும் கிட்டதட்ட 150 குழந்தைகள் அடுத்தடுத்து இறந்து போயுள்ளன. இந்நோய் தாக்கிய மற்ற பகுதிகளில் இறந்த சிறுவர்களின் எண்ணிக்கையையும் கணக்கிட்டால், அது 500- தொடும் என்பது மருத்துவர்களின் கணக்கு.
இவ்வகையான மூளை அழற்சி நோய் பீகார் மாநிலத்தைத் தாக்குவது இது முதன்முறையல்ல. 1995 ஆண்டு தொடங்கியே கடந்த 24 ஆண்டுகளாக இந்நோய் கோடைப் பருவத்தில், லிச்சிப் பழங்கள் அறுவடைக்குத் தயாராகும் வேளையில் சிறுவர்களைத் தாக்கிக் காவு கொண்டுவருவதாக மருத்துவர்கள் அருண்ஷா, ஜேகப் ஜான், முகுல்தாஸ் ஆகியோர் குறிப்பிடுகிறார்கள். 1995-க்கு முன்பாகவும் மரணங்கள் நடந்திருக்கலாம், ஆனால், அது தொடர்பாக எந்தவொரு பதிவுகளும் இல்லை என்கிறார்கள் அம்மருத்துவர்கள். 2012 தொடங்கி 2018 முடிவுள்ள ஏழு ஆண்டுகளில் இந்நோய்க்கு 292 சிறுவர்கள் பலியாகியிருப்பதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

படிக்க:
காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?
எதை இழந்தாலும் போராடும் துணிவு மட்டும் நம்முடன் இருக்கும் !

இந்த நோய்க்கு இப்படியொரு நீண்ட வரலாறு இருந்தாலும், பீகார் மாநில அரசு இந்நோய்க்கான அடிப்படைக் காரணம் என்ன, அதனை ஒழிப்பதற்கு சமூகரீதியாகவும் மருத்துவரீதியாகவும் என்னென்ன திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் எனும் விதத்தில் எந்தவொரு முயற்சியையும் இதுநாள்வரை எடுக்கவில்லை. அதேசமயத்தில் மருத்துவர்கள் அருண் ஷா, ஜேகப் ஜான், முகுல்தாஸ் ஆகிய மூவரும் தமது சொந்த முயற்சி மற்றும் நிதி ஆதாரங்களைக் கொண்டு இந்நோய்க்கும் பட்டினிக்கும், இந்நோய்க்கும் லிச்சிப் பழங்களுக்கும் இடையிலான தொடர்பைக் கண்டறிந்து, அதனை அறிக்கையாக மருத்துவ இதழ்களில் வெளியிட்டுள்ளனர். மைய அரசும் அமெரிக்க நிறுவனம் ஒன்றும் இணைந்து நடத்திய ஆய்வும் மேற்சொன்ன மருத்துவர்கள் நடத்திய ஆய்வு முடிவுகளை உறுதி செய்திருக்கிறது.

இந்நோயை ஒழிக்க வேண்டுமென்றால் முதலில் பட்டினியை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் இம்மருத்துவர்கள். குறிப்பாக, நோய் தாக்கக்கூடிய பருவத்திலாவது சிறுவர்களுக்கு இரவு நேரங்களில் சூடான, சத்தான உணவு கிடைப்பதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள். இரண்டாவதாக, நோய் தாக்கக்கூடிய பகுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மூன்றாவதாக, நோய்த் தாக்கக்கூடிய பருவத்தில் இந்நோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரத்தைத் தீவிரமாக நடத்த வேண்டும் எனக் கோரும் இம்மருத்துவர்களது அறிக்கை, இறுதியாகத்தான் மருத்துவ வசதிகளைப் பற்றிப் பேசுகிறது. அதிலும்கூட, மாவட்டத் தலைமை மருத்துவமனைகளைவிட ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டமைப்பை மேம்படுத்துவது, மருத்துவர் தொடங்கி காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் நிரப்புவது ஆகியவற்றைச் செய்ய வேண்டும் எனக் கோருகிறது.

பீகார் மாநில அரசோ இப்பரிந்துரைகளுள் எந்தவொன்றையும் உருப்படியாக நடைமுறைப்படுத்த வில்லை. குறிப்பாக, இந்த ஆண்டின் கோடைப் பருவத்தில் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தைக்கூட நடத்தவில்லை. காரணம், ஆளுங்கட்சிக் கூட்டணியும் அரசு இயந்திரமும் தேர்தல் வேலைகளில் இறங்கி, மக்களைக் கைவிட்டுவிட்டன.

தேசிய ஊரக சுகாதாரத் திட்டம், மதிய உணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், பொது விநியோகத் திட்டம், குழந்தைகளின் சத்துக் குறைவின்மை திட்டம் என விதவிதமான திட்டங்கள் ஏழைக் குழந்தைகளின் நலன்களுக்காக பீகாரில் நடைமுறைப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், ஒன்று அந்தத் திட்டங்கள் வெறும் ஏட்டளவில் உள்ளன அல்லது ஊழலுக்குப் பயன்படுகின்றன என்பதுதான் உண்மை.
எடுத்துக்காட்டாக, துணை சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்குச் சூடான உணவு வழங்குவதற்காக ஒதுக்கப்படும் நிதியில் 71 சதவீதமும்; இத்திட்டத்தின் கீழ் ஏழைக் குடும்பத்தினருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஒதுக்கப்படும் நிதியில் 38 சதவீதமும் சுருட்டப்படுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார் மும்பையைச் சேர்ந்த மருத்துவரும் இந்திய மருத்துவர் இதழின் ஆசிரியருமான சோஹம் டி.பாதுரி.

இந்நோய் கொத்துக்கொத்தாக பீகார் மாநிலக் குழந்தைகளைக் காவுவாங்கிக் கொண்டிருந்த வேளையில்தான் மைய அரசு தனது பட்ஜெட்டைத் தயாரித்துக் கொண்டிருந்தது. எனினும், ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இந்நோயை ஒழிப்பது குறித்து எந்தவொரு வார்த்தையும் கிடையாது.

மூளை அழற்சி நோயால் பீகார் மாநிலக் குழந்தைகள் கொத்துக்கொத்தாக இறந்துகொண்டிருந்த வேளையில் மோடி அரசும், பா.ஜ.க. கட்சியும் என்ன செய்து கொண்டிருந்தன என்பதை நினைவுப்படுத்திப் பாருங்கள். குழந்தைகள் மரணத்தைப் பேரிடராகவோ, உடனடியாகக் கவனம் கொடுக்க வேண்டிய முக்கியப் பிரச்சினயாகவோ அவர்கள் கருதவில்லை. மாறாக, அச்சமயத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு அரசு மருத்துவரை முசுலீம் நோயாளியின் உறவினர்கள் தாக்கியதைத் தேசியப் பிரச்சினையாக உருமாற்றி, மம்தா அரசிற்கு நெருக்கடி கொடுத்து வந்தார்கள். பீகார் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றுவதைவிட, மேற்கு வங்கத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் அவர்களின் நிகழ்ச்சி நிரலாக இருந்தது.

♦♦♦

2022-ஆம் ஆண்டில் இந்தியாவைச் சேர்ந்த ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுள் 31.4 சதவீதக் குழந்தைகள் நோஞ்சான் குழந்தைகளாக இருக்கும்.

த்தான உணவு கிடைக்காமல், அரைகுறை பட்டினியால் சவலைப் பிள்ளைகளாக வளரும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பீகார் முதலிடத்தில் இருந்தாலும், உண்மையில் இது நாடு தழுவிய பிரச்சினையாகும். இந்திய அரசும் ஐ.நா.சபையின் சர்வதேச உணவுத் திட்டக் கழகமும் இணைந்து சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2022-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட மூன்று குழந்தைகளுள் ஒரு குழந்தை, அதாவது இந்தியக் குழந்தைகளுள் 31.4 சதவீதக் குழந்தைகள் சத்தான உணவின்றி நோஞ்சான் குழந்தையாக வளரும் என்றும், இதனை 25 சதவீதமாகக் குறைக்க வேண்டுமெனில், தற்போது சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கும் தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறது.

அறிக்கையை வெளியிட்டிருக்கும் மோடி அரசு அதற்குப் பொறுப்பாக நடந்துகொள்ள மறுப்பதை, பட்ஜெட் ஒதுக்கீடுகளே எடுத்துக்காட்டுகின்றன. பீகார் உள்ளிட்டு, இந்திய நாட்டைச் சேர்ந்த குழந்தைகள் அனைவருக்கும் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்வதைப் பற்றிப் பேச மறுக்கும் மோடி, அதற்கு மாறாக, 2024-ல் 350 இலட்சம் கோடி ரூபாய் பெறுமானமுள்ள பொருளாதார வளர்ச்சி கொண்ட நாடாக இந்தியாவை மாற்றப் போவதாக உதார்விட்டு வருகிறார். கேக்கை எந்தளவிற்குப் பெரிதாகச் செய்கிறோமோ, அந்தளவிற்கு கேக்கின் பங்கு அனைவருக்கும் கிடைக்கும்” என இதற்கு உவமானம் சொல்கிறார்.

பிரெஞ்சு மக்கள் சாப்பிடுவதற்கு ரொட்டிகூடக் கிடைக்காமல் போராட்டத்தில் குதித்தபோது, அந்நாட்டு மகாராணியாக இருந்த மேரி அண்டாய்னேட், ரொட்டி கிடைக்கவில்லையென்றால் என்ன? கேக் சாப்பிடுங்கள்” எனத் திமிராகவும் வக்கிரமாகவும் கூறினாளாம். பீகார் மாநிலக் குழந்தைகள் இரவில் ஒரு கவளம் சோறு கிடைக்காமல் செத்துப் போய்க் கொண்டிருக்கும் தருணத்தில், பிரதமர் மோடியோ இதோ கேக் தயாராகிக் கொண்டிருக்கிறது” என்றவாறு பேசி வருகிறார்.
அம்மகாராணியின் தலையை கில்லட்டினில் வைத்துக் கொய்து எறிந்தது, பிரெஞ்சு புரட்சி. மோடியை வரலாறு என்ன செய்யக் காத்திருக்கிறதோ?!

குப்பன்.

புதிய ஜனநாயகம் ஆகஸ்ட் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

 

காஷ்மீர் பற்றிய கார்ட்டூனை பகிர்ந்த மக்கள் அதிகாரம் தோழர் கைது !

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக, மோடி – அமித்ஷா கும்பலை அம்பலப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டிருந்த கேலிச்சித்திரம் ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினரான போடியைச் சேர்ந்த தோழர் ஜோதிபாசு.

தோழர் ஜோதிபாசு.

அவர் பகிர்ந்திருந்த கேலிச்சித்திரப் பதிவை, முகநூலில் பார்வையுற்ற பி.ஜே.பி. போடி நகர செயலாளர் தண்டபாணி போலீசில் அளித்த புகாரின் பேரில், கடந்த ஆகஸ்டு 10 அன்று, மாலை தோழர் ஜோதிபாசுவை போலீசார் கைது செய்தனர். பி.ஜே.பி. கும்பலுக்கு ஆதரவாக தோழரை தரைக்குறைவாக பேசியும் கீழ்த்தரமான முறையிலும் நடந்துகொண்டார் போலீசு துணைக் காணிப்பாளர்.

போலீசு மற்றும் பி.ஜே.பி. கும்பலின் மிரட்டலைக் கண்டு பின்வாங்காமல், உறுதியோடு எதிர்கொண்டார் தோழர் ஜோதிபாசு. அவசரம் அவசரமாக ஐ.பி.சி.504, 505 (IB), IPC 2 OF, 66F-ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ரிமாண்ட் செய்வதற்காக அன்று இரவே தேனியில் உள்ள நீதிபதி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மேற்கண்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் தெளிவாக விளக்கப்படவில்லை என்று கூறி ரிமாண்டு செய்யாமல் திருப்பி அனுப்பிவிட்டார் நீதிபதி. அன்று இரவு முழுவதும் போலீசு நிலையத்திலேயே சிறை வைக்கப்பட்டார் தோழர் ஜோதிபாசு. பின்னர், நீதிபதி ஏற்கத்தக்க வகையில் போதுமான காரணங்களை புனைந்து எடுத்துக்கொண்டு மீண்டும் ரிமாண்ட் செய்யக்கோரி ஆக-11 அன்று காலை 11 மணிக்கு நீதிபதியின் முன் நிறுத்தினர் போலீசார். இம்முறை, தோழர் ஜோதிபாசுவை சிறையிலடைக்க உத்தரவிட்டார் நீதிபதி. இதனைத் தொடர்ந்து, கண்டமனூர் துணை சிறைக்கூடத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் தோழர் ஜோதிபாசு.

படிக்க:
காட்டுமிராண்டி தண்டனை முறைக்குத் திரும்புகிறதா சமூகம் ?
♦ அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

 கேலிச்சித்திரத்தை முகநூலில் பகிர்ந்ததற்காக ஒருவரை சைபர் பயங்கரவாதி என்று முத்திரைக்குத்தி சிறையிலடைக்க முடிந்திருக்கிறதென்றால், எந்த நிலையில் இருக்கிறது தமிழக அரசு ? எவ்வகையில் எதிர்வினையாற்றப்போகிறது, தமிழகம்?

தகவல்:
மக்கள் அதிகாரம்,
போடி.