‘வளர்ச்சி’க்கு ’உதாரணமான’ குஜராத்தில் மின்சாரம், சாலை, தண்ணீர் வசதியில்லாமல் தவிக்கும் மக்கள் !
குஜராத் சமீபமாக வரலாறு காணாத அளவுக்கு வறட்சியை சந்தித்து வருகிறது. 2018-ம் ஆண்டு பெய்த தென் மேற்கு பருவ மழையின் அளவு சராசரி அளவில் வெறும் 76% மட்டுமே அம்மாநிலம் பெற்றிருக்கிறது.
ஊடக கவனத்துக்கு அப்பால், குஜராத்தின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு மற்றும் மின்சாரம், சாலை வசதிகளற்ற கட்ச் பகுதியில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவாக பதிவு செய்திருக்கிறது தி வயர் இணையதளம். வளர்ச்சிக்கு முன்னுதாரணமாக காட்டப்படும் குஜராத் மாடலின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது இந்தக் கட்டுரை.
*****
கட்ச் பகுதியின் தொலைதூரத்தில் உள்ள கடுமையான நிலப்பகுதியான தோர்டோ-வை, ‘அசாதாரண வளர்ச்சி’ என்பதற்கு ‘மாதிரி கிராமமாக’ அந்த கிராம மக்கள் காட்டிக் கொள்கிறார்கள். கட்ச் பகுதியின் பிரசித்தி மிக்க வெள்ளை பாலைவனத்தில் வருடம்தோறும் நடக்கும் ‘ரான் உத்சவ்’ என்ற நான்கு மாத குளிர்கால விழாவைக் கொண்டாடுவதால் இப்பெருமையைப் பெற்றதாக இந்த கிராமம் கூறுகிறது.
முதல்முறை குஜராத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற நரேந்திர மோடி, 2005-ம் ஆண்டின் போது இந்தத் திருவிழாவை அறிமுகப்படுத்தினார். இப்போது ஆண்டுதோறும் இரண்டு லட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவில் கலந்துகொள்ள வருகிறார்கள். இந்த விழாவுக்கான எண்ணம், வடிவமைப்பு மற்றும் செயல்படுத்தியது அனைத்தையும் செய்தது தானேதான் என மோடி கூறுகிறார்.
பாலைவனத்தின் நடுவே போடப்படும் ஆடம்பர கொட்டகைகளில் தண்ணீர், குளிர்சாதன வசதி மற்றும் வெப்பமூட்டிகளும் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்ட தரைப்பகுதியும் துணி மாற்றும் அறைகளும் தனிப்பட்ட உணவு உண்ணும் பகுதிகளும், ‘ஆடம்பர’ கழிப்பறைகளும் செய்து தரப்படுகின்றன.
உணவுகளும் பானங்களையும் கோர்ட்யார்டு மெரியாட் என்ற பிரபல நட்சத்திர விடுதி செய்து தருகிறது. தோர்டோவில் உள்ள இந்தக் கொட்டகை நகரத்தில் பாரா கிளைடிங், ஏடிவி பைக் ரைடிங், நீச்சல் குளம், ஸ்பா, வில் வித்தை போன்ற மற்ற வசதிகளோடு, சில நேரம் மழை நடனம் ஆடவும் வசதி ஏற்படுத்தி தரப்படுகிறது.
இந்த தோர்டோவிலிருந்து மண் பாதையின் வழியாக நடந்து 15 கி.மீ. தள்ளி வந்தால் ஆயிரம் பேர் வசிக்கும் இரண்டு குக்கிராமங்கள் வருகின்றன. பாலைவனக் கொட்டகை வாழ்க்கையிலிருந்து மிகவும் வித்தியாசப்படுகிறது இவர்களுடைய வாழ்க்கை. ஏப்ரல் 23-ம் தேதி வாக்களிக்கப்போகும் இவர்கள், மின்சாரத்துக்காகவும் சாலைக்காகவும் தண்ணீருக்காகவும் வாக்களிக்க இருக்கிறார்கள்.
படிக்க:
♦ வாடகைக் கருப்பை : உலகில் முதலிடம் மோடியின் குஜராத் !
♦ நேர்மையாக தேர்தல் நடந்தால் 40 இடங்களில் கூட பாஜக வெல்லாது : பாஜக தலைவர் !
பூஜ் பகுதியின் வடக்குப் பிராந்தியமான பானியின் பிதாரா வந்த் மற்றும் நானா பிதாரா என்ற இந்த கிராமங்களில் மேற்கண்ட எந்த வசதியும் இல்லை. அருகில் இருக்கும் சாலையை அடைய அவர்கள் 10 கி.மீ. பயணித்தாக வேண்டும். 7 கி.மீ. நடந்து தங்களுடைய மொபைல் போன்களுக்கு இந்த ஊர்வாசிகள் சார்ஜ் ஏற்றிக்கொண்டு வருகிறார்கள். தண்ணீருக்காக அரசு விநியோகிக்கும் டேங்கரை நம்பியிருக்கிறார்கள். அதுவும் வராத நாட்களில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் குழி பறித்து அதில் சேகரிக்கப்பட்டிருக்கும் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள்.

“நிலநடுக்கம் வந்த பிறகு தோர்டோ முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. பூஜ்-ல் இல்லாத வசதிகள்கூட அங்கே உள்ளன. ஆனால், எங்கள் கிராமத்தில் எதுவும் இல்லை” என்கிறார் அப்துல் கரீம். தண்ணீருக்காக ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டுள்ள, அந்த இடத்துக்கு நடந்து செல்லும் அவர், “இதோ இங்கிருந்துதான் நாங்கள் குடிக்க தண்ணீர் எடுக்கிறோம்” என கைக்காட்டுகிறார்.
கட்ச் பகுதியில் உள்ள மேய்ச்சல் சமூகமான மால்தாரிக்கள், தண்ணீரை சேமிக்க பாரம்பரியமாக ‘விர்தா’ எனப்படும் இந்த முறையை ஆயிரம் ஆண்டுகாலமாக பயன்படுத்தி வருகிறார்கள். இந்தக் குழிகளில் மழைக்காலங்களில் சேரும் தண்ணீர், நிலத்தடியில் உள்ள உப்பு நீருக்கு மேலே ஒரு படலமாக சேகரமாகிறது. ஆரம்பத்தில் சுவையாக இருந்த இந்த நீர், நாளடைவில் பருவ மாற்றம் காரணமாக குறைந்துபோனதோடு, கருப்பு நிறமாகவும் மாறிவிட்டது.

“இப்போது இந்த தண்ணீர் உப்பு கரிக்கிறது. ஏனெனில் இந்த வருடம் மழை குறைவாகவே பெய்தது” என்கிறார் கரீம். கடந்த முப்பது ஆண்டுகளில் காணாத வறட்சியை குஜராத் சந்தித்து வருகிறது என்பதும், கட்ச் பகுதிதான் அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. முப்பது ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவில் 26% மட்டுமே மழையளவு பதிவாகியிருக்கிறது இந்தப் பகுதியில்.
“பிப்ரவரி மாதம் கொஞ்சமாக மழை பெய்தது. அதனால்தான் சிறிதளவாவது நல்ல தண்ணீர் இங்கே உள்ளது” என்கிற கரீம், தனது 6 வயது மகனின் துணையுடன் தண்ணீர் சேகரிப்பதாக சொல்கிறார். இந்தத் தண்ணீர் பார்ப்பதற்கு பச்சை கலந்த கருப்பு நிறமாகவும் சுவையில் கரிப்பாகவும் உள்ளது.
இந்தப் பகுதிக்கு குடிநீர் குழாய் வசதி செய்து தரப்படாத நிலையில், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை விநியோகிக்கிறது அரசு. ஆனால், அந்த விநியோகமும் முறையாக செய்யப்படுவதில்லை.
“ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு ஒருமுறைதான் டாங்கர் லாரிகள் வரும். சில நேரங்கள் இன்னும் தாமதமாகும். சில நேரங்களில் சாலை வசதி இல்லாததால் டேங்கர் சிக்கிக்கொள்ளும்.” என்கிறார் பிதாரா வந்த் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான முகமது காசிம். கட்ச் பகுதியின் துணை ஆட்சியரான நியாஸ் பதான் இதை மறுக்கிறார். “தண்ணீர் தேவை என்று கேட்டால் அதே நாளில் டேங்கர் லாரிகளை அனுப்பி வைக்கிறோம்” என்கிறார் இவர்.
பாலைவனத்திலிருந்து இந்த குக்கிராமங்களுக்குச் செல்லும் பாதைகள், வாகன இயக்கத்தின் மூலமாக உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. குறுகி, சமதளமற்ற, உப்பு சதுப்பு நிலத்தின் தாக்கம் காரணமாக வழுக்கும் தன்மையுடன் உள்ளன, இந்தப் பாதைகள்.
“இத்தகைய நிலப்பரப்பில் செல்லக்கூடிய ‘பொலிரோ’ போன்ற வாகனங்களில் மட்டுமே பயணிக்க முடியும்” என்கிறார் காசிம். துணை ஆட்சியரோ கட்சின் பெரும்பாலான கிராமங்கள் இணைக்கப்பட்டுவிட்டதாகவும், விரைவில் அனைத்து கிராமங்களும் சாலைகளால் இணைக்கப்பட்டுவிடும் என்றும் கூறுகிறார்.

இந்த இரண்டு கிராமங்களிலும் தலா ஒரு பொலிரோ உள்ளது. இவற்றை அனைவரும் பகிர்ந்துகொள்கிறார்கள். “இங்கிருந்து அருகே உள்ள கிராமங்களுக்கு பாலை எடுத்துச் சென்று விற்க இந்த வாகனத்தைத்தான் பயன்படுத்துகிறோம்” என்கிறார் காசிம்.
சுமார் 50 கி.மீ. தொலைவில் அருகில் இருக்கும் காவ்டா மற்றும் தயாபர் கிராமங்களைக்காட்டிலும் மிகவும் அருகில் இருக்கும் தார்டோவின் மக்கள் தொகை 500 மட்டுமே.
படிக்க:
♦ மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?
♦ சந்தி சிரிக்கும் குஜராத் மாடல் வளர்ச்சி !
கோதுமை-கம்பு மாவு அரைக்கவும், செல்போன்களை சார்ஜ் ஏற்றவுமே தங்களுக்கு மின்சாரம் அவசியமாகத் தேவை என்கிறார் காசிம். ஆனால், துணை ஆட்சியர் கட்ச் பகுதிகளுக்கு மின்சார வசதி செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும், சிலர் வீடுகளுக்கு இணைப்புக் கொடுக்க விண்ணப்பிக்காமல் இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார். ”மின்சாரம் வந்திருப்பதற்கான அறிகுறிகள் எதையுமே காணோம்” என தெரிவித்தபோது, “மீண்டும் உறுதிபடுத்திக்கொண்டு தெரிவிக்கிறேன்; சரி செய்கிறேன்” என்கிறார்.

2001-ம் ஆண்டு நடந்த நிலநடுக்கத்தில் பிதாரா கிராமத்தில் இருந்த தங்களுடைய வீடுகள் அழிக்கப்பட்ட நிலையில், இந்த இரண்டு குடியிருப்பு பகுதிகள் உண்டாக்கப்பட்டதாக கூறுகிறார் காசிம்.
கட்ச் பகுதியில் இதுபோன்ற குடியிருப்புகள் உருவாவது வழக்கமானதுதான் என்கிறார் பங்கஜ் ஜோஷி என்ற தன்னார்வலர். நாடோடிகளால் இதுபோன்ற குடியிருப்புகள் அவ்வப்போது உருவாவதால் அவர்களை கண்காணிப்பது கடினமாக உள்ளதாக கட்ச் மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகன் தெரிவிக்கிறார்.
ஆசியாவின் மிகச்சிறந்த புல்வெளிப் பிரதேசமாக 2500 சதுர கிலோமீட்டர்களில் பரந்து விரிந்திருந்த பூஜ்-ன் வடக்குப் பகுதியான பன்னி, இப்போது சீரழிவைக் கண்டு வருகிறது. இந்தப் பகுதியில் மட்டும் 110 புதிய குடியிருப்புகள் உள்ளன என்கிறார் ஒரு மூத்த அரசு அதிகாரி. இதில் உள்ளடங்கிய பகுதிகளாக பிதாரா வந்தும், நானா பிதாராவும் உள்ளன. இந்தக் குடியிருப்புகள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்கள் எதுவும் கிடைக்க பெறாதநிலையில், சில குடியிருப்புகளில் தண்ணீர், சாலை, மின்சார வசதிகள் எதுவும் இல்லை என்பதை நிர்வாகம் ஒப்புக்கொள்கிறது.
ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, கட்சில் உள்ள 918 வருவாய் கிராமங்களில் 11 கிராமங்களில் மின்சாரம் இல்லை. 49 கிராமங்களில் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்துக்கும் குறைவாகவே மின்சாரம் கிடைக்கிறது. 50% குறைவான வீடுகளில் மட்டுமே குடிநீர் குழாய் வசதி உள்ளது. 57 கிராமங்கள் மட்டுமே அனைத்து பருவநிலைக்கும் தாங்கும் சாலை வசதிகளைக் கொண்டுள்ளன என்கிறது அந்த அறிக்கை.
இது வருவாய் கிராமங்களுக்கான அறிக்கையே தவிர, குக்கிராமங்களுக்கான நிலவரம் அல்ல.
பிதாரா வந்த் மற்றும் நானா பிதாராவாசிகள் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இந்த நிலைமை மாறும் என நம்புகிறார்கள்.

1996-ம் ஆண்டு முதல் பாஜக இந்தத் தொகுதியை கைப்பற்றி வருகிறது. தற்போதைய எம்பி ஆன வினோத் சவ்டா, காங்கிரஸ் வேட்பாளரைவிட இரண்டரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், ஒருமுறைகூட இவரைப் பார்த்ததில்லை என்கிறார் சாஜன் உசைன். “அவரை விடுங்கள். தற்போது பிரதமராக உள்ளாரே… நரேந்திர மோடி, அவர் 12 ஆண்டு காலம் குஜராத் முதலமைச்சராக இருந்தார். தன்னுடைய இதயத்தில் கட்ச் -க்கு சிறப்பான இடம் உள்ளதாக சொல்லிக்கொண்ட இவர், எங்களுக்கு என்ன செய்தார்?” என கேள்வி எழுப்புகிறார்.
“இப்போதும்கூட மோடி டோர்தோ-வுக்கு ஆண்டுக்கு ஒரு முறையாவது வருகிறார். ஆனால், ரான் உத்சவு-க்கு மட்டுமே செல்கிறார். ஏன் அவர் இங்கே வருவதில்லை? இங்கே சாலை இல்லை; மின்சாரம் இல்லை; தண்ணீர் இல்லை. டோர்தோவில் அனைத்தும் உள்ளது” என சிரிக்கிறார் அப்துல் கரீம்.
“இந்த அடிப்படை வசதிகளை செய்துதருவது யாருடைய வேலை? இது மோடியின் வேலை இல்லையா? அவருடைய வேலையை அவர் செய்யவில்லை என்றால், ஏன் அவருக்கு வாக்களிக்க வேண்டும்” என வினவுகிறார் காசிம்.
கட்டுரையாளர் : கபீர் அகர்வால்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : தி வயர்



2008-ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர் எனக் கைது செய்யப்பட்டு தற்போது உடல்நிலையைக் காரணம் காட்டி வெளி வந்துள்ளவர் பிரக்யா சிங். மாலேகானில் மசூதி ஒன்றின் அருகில் இந்துத்துவக் கும்பல் வைத்த குண்டு, வெடித்ததில் ஆறு பேர் பலியாகி பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பிரக்யா சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் ஆர்.எஸ்.எஸ்-உடன் நெருங்கிய தொடர்புடைய அபினவ் பாரத் என்கிற இந்துத்துவ பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவ்வமைப்பைச் சேர்ந்தவர்கள் நிகழ்த்திய மற்றொரு கொடூரத் தாக்குதல், சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பாகும். அதில் 68 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.





லெனின் அவர்களின் சாதனைகளை விரிவாகப் பேசியும், இந்திய அரசின் தோல்வியையும், தேர்தல் ஆணையம் மோடி – அமித்ஷா கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதையும், மீண்டும் கார்ப்பரேட் – காவி கும்பல் மோடி பிஜேபி பாசிஸ்டுகளை ஆட்சியில் அமர்த்த துடிப்பதையும் விலக்கி தோழர் வெங்கடேஸ்வரன் உரையாற்றினார்.


கூட்டத்தில் ஆசான் லெனின் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டத்தை டி.ஐ. மெட்டல் பார்மிங் சங்கத்தின் தலைவர் தோழர் மகேஷ் குமார் தலைமையேற்று நடத்தினார்.
மேலும் லெனின் ரஷ்யாவில் பாட்டாளிகள் தலைமையில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சோஷலிச சமூகத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தினார். அதேபோல் நாம் இங்கு ஒரு சமூக மாற்றத்தை உருவாக்கி புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணி திரள்வோம், என்பதை விளக்கினார்.

இதற்காகத் தானே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன? சமுதாயத்தில் எந்த மாற்றமும் வந்து விடக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் குறியாக இருக்கிறார்கள். இதற்குள் ஓட்டுப் போட்டு விட்டு “ஒரு விரல் புரட்சி” செய்து விட்டதாக கூறும் சிலரது அலப்பறைகள் எரிச்சல் ஊட்டுகின்றன.
ஆனால், இந்த நோஞ்சான் முற்போக்குகளின் நிலைமை பரிதாபமானது. தாம் பேசி வந்த ஜாதி/மத அடிப்படைவாத எதிர்ப்பின் வழி நின்று, இந்துத்துவா + பாமக அபாயகரக் கூட்டணியை இந்நேரத்தில் விமர்சிக்க முடியாது.
ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மருத்துவராய் இருப்பதில் எனக்கு பெருமை வந்து சேர்ந்தது….. நீதி கட்சியை துவக்கிய நடேசனாரும், டி .எம். நாயர் அவர்களும் மருத்துவர்கள் என்று அறிந்த அன்றிலிருந்து நானும் அவர்கள் வகையறா, அதே கல்லூரி என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.
இந்தப் புகைப்படம் நெஞ்சை அறுக்கிறது.அந்தப் பாட்டி கையெடுத்துக் கும்பிட்டு விட்டு விடச் சொல்வது போல் இருக்கிறது. வாசல் முழுக்க உடைந்த மண்பானை ஓடுகளின் சில்லுகள்.
கல்விக்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் ஆகியவை திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ளவை. காங்கிரசோ நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, பொதுப்பட்டியலிலிருந்து பள்ளிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது (உயர்க்கல்வி பொதுப்பட்டியலிலேயே இருக்கும்) கல்விக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrollment Ratio-GER) 25.8%-லிருந்து 40%-மாக உயர்த்துவது போன்றவைகளை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.
இக்கல்விக் கடன்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம், நர்ஸிங், மேலாண்மை போன்ற படிப்பிற்கான கல்வி கட்டணங்களை செலுத்துவதற்காக பெறப்பட்டவை. இந்த 17,000 கோடி வாராக்கடனில் பெரும்பான்மை பகுதி தனியார் கல்வி முதலைகளின் பைகளுக்கே சென்றுள்ளது. மேலும் கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை பொது மக்களின் சேமிப்பு பணத்தைக் கொண்டு ஈடுகட்டுவார்கள்.
SWAYAM, NPTEL ஆகியவை இந்திய அரசு நடத்துகிற MOOCs. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இணைய வழியில் பட்டப்படிப்புகள் (online degrees) வழங்குவதற்கான ஒப்புதலை சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளது. MOOCs வாயிலாக பட்டம் பெறுவதற்கு ஆசிரியர்களோ, ஆய்வகங்களோ, கட்டிடங்களோ தேவையில்லை. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடங்களை இணையத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கொடுத்தால் போதும். தேர்வும் இணையத்தின் வழியே நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் மேலும் கொள்ளையடிப்பதற்கான வழிமுறையை மோடி அரசு உருவாக்கியுள்ளது எனக் கூறலாம். தற்போது NEET, JEE தேர்வுகளுக்கான பயிற்சி கூட இணையவழியில் வந்துவிட்டது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

2,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு, கடன் தவணைகளை முறையாகக் கட்டத் தவறிவரும் நிறுவனங்களுக்கு, தவணை தவறிய நாளில் இருந்து 180 நாட்கள் அவகாசம் கொடுத்து, வங்கிகள் அக்கடன் தவணைகளை வசூலிக்க வேண்டும். அக்கால அவகாசத்திற்குள் நிலுவையிலுள்ள தவணைகளைக் கட்டத் தவறும் நிறுவனங்களைப் புதிய திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் ஏலத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை. இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல கார்ப்பரேட் குழுமங்கள் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில்தான் வங்கிக் கடன்களைக் கட்டாமல் இழுத்தடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.


இந்த நிமிடம் வரையில் எந்த இயக்கமும் தாக்குதலுக்கு உரிமை கோரவில்லை. அதே நேரம் அரசும் யாரையும் குற்றம் சாட்டவில்லை. ஆனால், அங்கு நடந்த சம்பவங்களை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு சக்தி வாய்ந்த குழுவினரின் நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதலாகத் தெரிகிறது.





“குழந்தைகளே, வணக்கம்!” என்று எப்படி முகமன் கூறுவது எனும் பிரச்சினை ஒரு தீவிரமான ஆசிரியர் பிரச்சினையாகும். என்னைப் பொறுத்தமட்டில் எப்போது இதை எப்படி, எந்த முக பாவத்தோடு சொல்லுவது என்பது முக்கியமாகும். ஏனெனில் எனக்கு இப்படிப்பட்டதொரு உறுதி மொழி உண்டு:



புதிய திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ததன் மூலம் பொதுத்துறை வங்கிகள் அடைந்துள்ள நட்டம் 84,585 கோடி ரூபாய்.
அது தான் Subacute Sclerosing Panencephalitis (SSPE) எனப்படும் ஒரு வகை மூளை அழற்சி நோய். இதனால் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டு மெதுவாக அழிந்தும் வருகிறது. இனி இவன் எழுந்து நடப்பான், பேசுவான் என்பதெல்லாம் சந்தேகமே.
பிள்ளைகளில் மீசல்ஸ் தாக்கம் என்றால் என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அந்த நோய் தாக்கத்தினால் ஏற்படும் நோய் இலட்சணங்கள் எப்படிப்பட்டது என்று மருத்துவ புத்தகங்களில் படித்தவைகளையும், கண்டவைகளையும் கண்கூடாகக் கண்டு இது உண்மை, நிதர்சனம் என்பதை ஆகர்ஷிக்க கூடியதாக இருந்ததும் அந்த காலப்பகுதியில்தான். அந்தக் நேரத்தில் எங்களது மூத்த வைத்திய நிபணர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லி வைத்தார்கள்.
அதுபோல் ஒரு பெண் குழந்தை பெரியவளாகி திருமணம் செய்து வாழுகிறபோது தன் வயிற்றில் உருவாகும் குழந்தை ரூபல்லா நோய்தாக்கத்தினால் உடல் அவயங்களை இழந்து, இதயத்தில் துளை ஏற்பட்டு, பார்வைகள் குருடாகிப் பிறக்கப் போவதை அறிந்து ஏன் எனக்கு ருபெல்லா வக்சீன் போடவில்லை என்று கேட்டால் அந்த மகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.
ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் வங்கிக் கடன் வளர்ச்சி டிசம்பர் 23, 2016-ன் முடிவில் 5.1% வீழ்ச்சி கண்டதாக சொன்னது. கடன் பெறுவதும் தேவையும் குறைந்த நிலையில், இது 60 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும்.
பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து பயிர்களின் விலையும் வீழ்ச்சியைக் கண்டது. பல காய்கறிகளின் விலைகள் கடுமையாக வீழ்ந்ததால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தெருக்களில் கொட்டிவிட்டுச் சென்றனர். அடுத்த பருவத்திலும்கூட, ஒரு முழு ஆண்டே கடந்துவிட்ட பிறகும்கூட விலை நிலவரம் சரிசெய்யப்படவில்லை. அமைப்புசாரா துறை முழுவதுமே வீழ்ச்சி கண்டது.