Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 424

மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

துரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரையின்  நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் 13-08-2018 அன்று தீர்ப்பளித்து விட்டது.

“செல்லாத துரை” ஆன செல்லத்துரை, பத்திரிகையாளர் சந்திப்பில்…

செல்லத்துரையின் சார்பில் முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்கி, கிரி ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு தரப்பில் கே.கே.வேணுகோபால், வினோத் கன்னா ஆகியோரும், ஆளுநர் சார்பில் சேகர் நாப்தேயும் ஆஜராகி வாதாடினர்.

செல்லதுரையின் நியமனத்துக்கு எதிராக, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்பு கூட்டமைப்பு (Save MKU) ஆகியவற்றின் சார்பில் மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், கோவிலன், வாஞ்சிநாதன் ஆகியோர் ஆஜராகினர்.

“துணைவேந்தர் பதவிகள் ஏலமெடுக்கப்பட்ட பதவிகளே” என்று உலகத்துக்கே தெரிந்த போதிலும் அவையெல்லாம் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத உண்மைகள். எனவே “நிரூபிக்க முடிந்த” உண்மைகளின் அடிப்படையில்தான் வழக்கு நடத்தப்பட்டது.

முதலாவதாக செல்லத்துரையின் மீது ஒரு கொலைமுயற்சி வழக்கு இருக்கிறது. இதற்கு முந்தைய துணைவேந்தர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்துப் போராடிய பேராசிரியர் சீனிவாசன் மீது தாக்குதல் தொடுத்த வழக்கு 2014 முதல் நிலுவையில் இருக்கும்போதே இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது முதல் முறைகேடு.

துணைவேந்தராக நியமிக்கப்படுபவர் குறைந்தபட்சம் பத்து ஆண்டுகளாவது பேராசிரியராகப் பணியாற்றியிருக்கவேண்டும். இது துணை வேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேடுதல் குழு (Search committee) ஏற்படுத்தியிருக்கும் வரையறை. ஆனால் அந்த தகுதி செல்லத்துரைக்கு இல்லை என்பது இரண்டாவது முறைகேடு.

வழக்கின் மனுதாரர், லயனல் அந்தோணிராஜ், மதுரை மாவட்ட செயலர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தரை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட பேரா.மு.ராமசாமி செல்லத்துரையின் நியமனத்தை ஏற்க மறுத்த காரணத்தால் அவருக்கு நெருக்கடி தரப்பட்டு அதன் காரணமாக அவர் தேடுதல் குழுவிலிருந்தே ராஜினாமா செய்திருக்கிறார். இத்தகைய ராஜினாமா மதுரை பல்கலைக்கழகத்தில்தான் முதன்முறை நடந்திருக்கிறது. இது மூன்றாவது முறைகேடு.

மு.ராமசாமிக்குப் பின் தேடுதல் குழுவின் கன்வீனராக நியமிக்கப்பட்ட முருகதாஸ், “துணைவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்படுபவர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கக்கூடாது” என்ற விதியை நீக்குகிறார். இது நான்காவது முறைகேடு.

தேடுதல் குழுவில் நியமிக்கப்பட்ட  மூவரில்  ராமகிருஷ்ணன், ஹரிஷ் மேத்தா ஆகிய இருவரும் “நாங்கள் நிர்ப்பந்தம் காரணமாகத்தான் செல்லத்துரையை சிபாரிசு செய்தோம்” என்று பிரமாண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டனர். இவ்வாறு தேடுதல் குழுவினரே நிர்ப்பந்தம் என்று ஒப்புக்கொள்வதும் இதுதான் முதன்முறை. இது ஐந்தாவது முறைகேடு.

இவை அனைத்தையும் பரிசீலித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோரடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, தார்மீக ரீதியில் செல்லத்துரையின் நியமனம் தவறு என்ற அடிப்படையில் அவரது மேல் முறையீட்டு மனுவை நிராகரித்துள்ளது.

நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இது செல்லதுரை என்ற ஒரு நபருக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டமல்ல. மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் 2008- ‘11 காலகட்டத்தில், கற்பக குமாரவேல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட காலத்திலிருந்தே போராடி வருகிறது. பின்னர் 2011-‘14 காலத்தில் ஜெ ஆட்சியின் கீழ் கல்யாணி மதிவாணனின் முறைகேடுகளையும், அவர் துணைவேந்தராக நியமிக்கப்பட்டதையும் எதிர்த்து ம.உ.பா.மையம் போராடியது.

இந்த போராட்டத்தின் ஊடாகத்தான் “சேவ் எம்.கே.யு” (Save MKU)  என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது.   இதன் அமைப்பாளரான பேரா.சீனிவாசன் தாக்கப்பட்டார்.  இந்த தாக்குதல் தொடர்பாக கல்யாணி மதிவாணன் மற்றும் செல்லத்துரையின் மீது  கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வைப்பதற்கே நீண்டதொரு சட்டப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது.

பின்னர் கல்யாணி மதிவாணனின் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்து வெற்றி பெற்றோம். அதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்று ஜெ அரசின் ஆதரவோடு வெற்றி பெற்றார் கல்யாணி மதிவாணன். இருந்த போதிலும் எந்தவிதமான கொள்கை முடிவுகளையும் அவர் எடுக்க முடியாத வண்ணம் நீதிமன்றம் மூலம் தடை பெற்றோம்.

வழக்கறிஞர் பிரபு ராஜதுரை, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

கல்யாணி மதிவாணனின் பதவிக்காலம் முடிந்தவுடன் செல்லத்துரை நியமிக்கப்பட்டார்.  அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மதுரை அமர்வில் வழக்கு தொடுத்தோம். உடனே வழக்கு விசாரணையை சென்னைக்கு மாற்றினார்கள்.  மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரபு ராஜதுரை கட்டணமில்லாமல் வழக்கு நடத்திக் கொடுத்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை அக்டோபர் 2017-இல் முடிந்து விட்டது.  இருப்பினும்  தீர்ப்பு  6 மாத காலத்திற்குப் பிறகு, ஏப்ரல் 2018-ல்தான் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியால் வழங்கப்பட்டது. செல்லத்துரையின் நியமனம் ரத்து செய்யப்பட்டது.

உடனே உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வுக்கு மேல் முறையீடு செய்து, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரினார் செல்லத்துரை. உச்ச நீதிமன்றம் சென்று அதனைத் தடுத்து நிறுத்தினோம்.  (இந்த வழக்கை நடத்திவிட்டு டெல்லியிலிருந்து திரும்பி வரும்போதுதான் ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக சென்னை விமானநிலையத்தில் வைத்து வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்டார்.)

வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மாநில ஒருங்கிணைப்பாளர், ம.உ.பா.மையம்.

துணைவேந்தர் செல்லத்துரையால் லட்சக்கணக்கில் கட்டணம் வாங்கும் உச்ச நீதிமன்றத்தின் சூப்பர் ஸ்டார் வழக்கறிஞர்களை அமர்த்திக் கொண்டு வழக்கு நடத்த முடிந்தது. எமக்கோ உச்ச நீதிமன்றத்தில் எதிர்வழக்காட  லட்சக்கணக்கில் பணம் தேவைப்பட்டது. இன்னொருபுறம் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான வழக்குகள், போலீசு ரெய்டு, தேசிய பாதுகாப்பு சட்டம் என்ற அடக்குமுறைகளை ம.உ.பா மைய வழக்கறிஞர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

பலமுறை இந்த வழக்குக்காக டெல்லிக்கு அலைவதற்கான செலவுக்குரிய நிதி, மதுரைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியப்பெருமக்கள் நன்கொடையாக வழங்கினார்கள். வீமன், சீனிவாசன், முரளி விஜயகுமார், புவனேசுவரன் ஆகியோர் மதுரைப் பல்கலைக் கழகத்தைக் காப்பாற்றும் இந்தப் போராட்டத்தில் பெரும்பங்காற்றினார்கள்.

நியமிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழக துணைவேந்தரை வழக்கு தொடுத்து பதவி நீக்கம் செய்திருப்பது தமிழகத்தில் இது முதன் முறையாகும். ஒரு துணை வேந்தருக்கான தகுதி என்ன, அவரை தெரிவு செய்வதற்கு தேடுதல் குழு வகுத்திருக்கும் நெறிமுறை என்ன என்பது குறித்து எந்த வித வரையறையும் இதுவரை பின்பற்றப்படுவதில்லை என்பதால் தேர்வு முறையே மோசடியாக இருந்து வருகிறது.  துணைவேந்தர் நியமனம் தொடர்பாக சில நெறிமுறைகளை வகுத்து பின்பற்றியாக வேண்டும் என்ற கட்டாயத்தை இந்த வழக்கு அரசுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

காமராசர் பல்கலைக்கழகம் மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இதுதான் நிலை. நாடெங்கும் உயர் கல்வி நிறுவனங்கள் ஊழல்மயமாகியிருக்கின்றன. அவற்றை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரில் இந்துத்துவ சக்திகளையும் தனது கைப்பாவைகளையும் உயர்கல்வி நிறுவனங்களின் மீது திணித்து வருகிறது மோடி அரசு. இது நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து விடக் கூடிய பிரச்சினை அல்ல. ஆசிரியர்களும் மாணவர்களும் விடாப்படியாகப் போராடுவதும் எதிர்த்து நிற்பதும்தான் இதற்குத் தீர்வு.

இவண்:
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

தொடர்புடைய பதிவுகள்:

நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?

ரலாறு கற்றுத்தரும் பாடங்களை உள்வாங்குவது மிக அவசியம் ஆகும். இந்து மதவாதம் மற்றும் முஸ்லிம் மதவாதம் காரணமாக இந்திய தேசம் பிரிவினைக் கொடுமைக்கு ஆளாகியது. பிரிவினை துயரங்களும் அந்த பிரிவினையை எதிர்த்துப் போராடிய அனுபவமும் சோகமான, ஆனால் முக்கியமான படிப்பினையை உணர்த்தியுள்ளன. அந்த படிப்பினை விழலுக்கு இறைத்த நீராக வீணாகிவிடக்கூடாது.

பிரிவினையின் துயரங்கள் கணக்கற்றவை. உலகில் எத்தனையோ தேசங்கள் பிரிந்துள்ளன. செக்கோஸ்லேவாகியா செக் எனவும் ஸ்லோவாகியா எனவும் பிரிந்தன. சோவியத் ஒன்றியத்திலிருந்து பல குடியரசுகள் பிரிந்தன. யூகோஸ்லேவியா பல குடியரசுகளாக சிதைந்தது. சூடான் இரண்டாக பிரிந்தது. இந்த பிரிவினைகளில் சில பின்விளைவுகளை உருவாக்கின. ஆனால், எந்த பிரிவினையும் இந்திய பிரிவினையை போல துயரங்களை விளைவித்தது இல்லை…

பிரிவினையின் சில அம்சங்கள் திரும்ப திரும்ப இந்த தேசத்தின் மீது தாக்கத்தை உருவாக்கிக் கொண்டே வந்துள்ளன. குறிப்பாக இந்து – முஸ்லிம் மக்களின் உறவில் இது ஆழமான தாக்கத்தை உருவாக்குகிறது. எப்பொழுதெல்லாம் மதவாதம் தீவிரம் காட்டுகிறதோ அப்பொழுதெல்லாம் பிரிவினை தொடர்பான விவாதங்களும் வேகம் எடுக்கின்றன. குறிப்பாக முஸ்லிம் மக்களின் தேசபக்தி கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது…….

பிரிவினை ஏன் நிகழ்ந்தது? பிரிவினைக்கு சில தனிநபர்கள் மட்டும் காரணமா? அல்லது அதற்கான  புறச்சூழல்கள் இருந்தனவா? பிரிவினையைத் தூண்டிய கருத்தாக்கங்கள் எத்தகையவை? பிரிவினையை எதிர்த்த குரல்கள் குறிப்பாக முஸ்லிம் குரல்கள் இருந்தனவா? அவை ஏன் வெற்றிபெறவில்லை? பிரிவினை நமக்கு கற்றுத் தரும் பாடம் என்ன?

இதற்கான பதில்கள் கண்டு பிடிக்கும் சிறிய முயற்சிதான் இந்த நூல்.

– முன்னுரையிலிருந்து,

இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என்று கார்ல் மார்க்ஸ் அவர்களால் சித்தரிக்கப்பட்ட 1857 ஆயுத எழுச்சியில் மத – மொழி வேறுபாடின்றி தங்களை எதிர்கொண்டதை நன்கு உணர்ந்த நிலையில், ஏகாதிபத்தியம் தனது பிரித்தாளும் சூழ்ச்சியைத் தீவிரமாக்கியது. ஒருபுறத்தில் இந்து, முஸ்லீம், சீக்கிய மத வேறுபாடுகள்; பல்வேறுபட்ட மொழி வேறுபாடுகள்; அடுத்து தாழ்த்தப்பட்ட, பழங்குடிகள் உள்ளிட்டு சாதி அடிப்படையிலான வேறுபாடுகள் என ஒருவருக்கு எதிராக மற்றொருவரை தூண்டிவிட்டு காலனி ஆதிக்க வாதிகள் தமது பிரிவினை நாடகத்தை தொடர்ந்து செயல்படுத்தி வந்தனர்.

1930-களில் வெளிப்படத் துவங்கிய தனிநாடு கோரிக்கையைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காங்கிரஸ், முஸ்லீம் லீக் என இந்த இடைவெளியைப் பெருக்கிக் கொண்டே போனது. மறுபுறத்தில் இந்து மகாசபை, சமஸ்தான மன்னர்கள் என இந்து மத வெறியர்களும் இதற்குத் தூபம் போட்டுக் கொண்டேயிருந்தனர்.

முதலில் அது 1935-ஆம் ஆண்டில் பீகார் பகுதியிலிருந்து இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரிசா என்ற மாநிலத்தை மொழி அடிப்படையில் உருவாக்கியது. பின்பு 1936 ஆம் ஆண்டில் சிந்த் பகுதியை மும்பை ராஜதானியிலிருந்து பிரித்து மத அடிப்படையில் வடமேற்கு மாகாணத்தை உருவாக்கியது. அதைப் போன்று பலுச்சிஸ்தான் உள்ளிட்டு முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ஐந்து பகுதிகளையும், இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள எட்டு பகுதிகளையும் இந்த நேரத்தில் பிரிட்டிஷ் ஆட்சி படிப்படியாக உருவாக்கியிருந்தது.

இதைத் தொடர்ந்து 1937 இல் இந்தியாவிலிருந்து பர்மாவை முற்றிலுமாகப் பிரித்தது. இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் அதை தனியொரு பிரிட்டிஷ் காலனியாக பிரித்திருப்பதாகவும் அதற்குக் காரணம் கூறியது. இது பின்னாளில் மத அடிப்படையில் இந்தியாவைப் பிளவுபடுத்துவதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றே கூறலாம்.

– டி.கே.ரங்கராஜன், நாடாளுமன்ற உறுப்பினர்.

பிரிவினையின் பெரும் துயரங்கள்; பிரிவினையை இலட்சியமாக முன்வைத்த முஸ்லிம் லீக்; பிரிவினை கருத்துக்களை விதைத்த சங்பரிவாரம்; சவார்க்கரை அம்பலப்படுத்தும் அம்பேத்கர்; மத ஒற்றுமையைப் பறைசாற்றிய சில நிகழ்வுகள்; மத்திய காலம் – மத மோதலா? மத ஒற்றுமையா?; இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சி பற்றிய ஒரு சமூக மதிப்பீடு; பிரிட்டிஷாருக்கு எதிராக தென்னிந்திய போராட்டங்களும் மத ஒற்றுமையும்; இந்து – முஸ்லிம் மதவாத அரசியலின் தொடக்கம்; பாகிஸ்தான் பிரிவினையை எதிர்த்த இஸ்லாமிய அமைப்புகள்; பிரிவினை எதிர்ப்பு கருத்து ஏன் தோல்வி அடைந்தது? என்பது உள்ளிட்ட உட்தலைப்புகளில் அவசியமான புகைப்படங்களுடனும் விரிவான விளக்கங்களை அளிக்கிறார், நூலாசிரியர்.

  • வினவு செய்திப் பிரிவு

நூல்: தேசப்பிரிவினைக்கு காரணம் யார்?
முஸ்லீம மதவாதமா? இந்து மதவாதமா?
ஆசிரியர்: பாரத் கபீர்தாசன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 2433 2424, 2433 2924.

பக்கங்கள்: 112
விலை: ரூ.100

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்களை நாம் எப்படி கையாள வேண்டும் ?

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் – 3

பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.

110010001111

ந்த எண்களில் உங்களால் ஒரு pattern இருப்பதை கவனிக்கமுடிகிறதா? உங்களால் இதில் ஒரு pattern இருப்பதாய் நம்பவோ, உணரவோ, காணவோ, சந்தேகிக்கவோ முடிகிறதா? உண்மையில் நான் என்போக்கில் கோர்த்த எண்கள் அவை.

ஆனால் நமது மனம் ஏற்கனவே சொன்னதுபோல காணும் எல்லாவற்றிலும் pattern (படிவம்) தேடும் இயல்புடையது. இந்த இயல்புதான் சதியாலோசனை கோட்பாடுகளுக்கான மைய புள்ளி.

அதாவது எதைச்சையாக நடக்கும்/நடந்த நிகழ்வுகளுக்கு/சம்பவங்களுக்கு தொடர்பு ஏற்படுத்தி ஒரு சித்திரத்தை, கோர்வையான ஒரு கதையை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் ஏற்படுத்தி கொள்கிறார்கள். உண்மையில் பலநூறு பேர் சம்மந்தப்பட்ட ஒரு இரகசியத்தை வெளியில் கசியாமல் கட்டிக்காப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. இன்னும் சொல்லப்போனால் சாத்தியமே இல்லை.

இரண்டுக்கு மேற்பட்டவர்களுக்கு தெரிந்த இரகசியங்கள் எப்படி என்றாலும் வெளியில் கசிந்தே தீரும் என்பதை நிறுவ algorithm (படிமுறை) எழுதியிருக்கிறார்கள். truth alone நிஜமாகவே triumphs. அதாவது சதியாலோசனை என்று ஒன்று இருக்குமானால் அது வெளிப்பட்டே தீரும். சுபாஷ் சந்திரபோஸ் தப்பி பிழைத்தது உண்மையானால் அது இந்நேரத்திற்கு முழு ஆதாரங்களோடு வெளிப்பட்டிருக்கும்.

அப்படியென்றால் சதியாலோசனை என்றே ஒன்று உலகத்தில் இல்லையா? அரசாங்கங்கள் சொல்லும் எல்லாவற்றையும் நாம் நம்பித்தான் ஆகவேண்டுமா? நிச்சயம் இல்லை. நாம் எல்லாவற்றையும் சந்தேகிப்பதும், அலசி பார்ப்பதும் தவறே அல்ல. இன்னும் சொன்னால் நாம் அப்படித்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் சில சதியாலோசனை கோட்பாடுகள் உண்மை என்று பின்னால் வெளிப்படலாம்.

மோடியை கொலை செய்ய வந்த தீவிரவாதிகள் என போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்ட இஸ்ரத் ஜஹான்.

உதாரணத்திற்கு, குஜராத்தில் நடந்தவை திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பது ஒரு சதியாலோசனை கோட்பாடாகத்தான் முதலில் வெளிப்பட்டது. பின்னர் நமக்கு கிடைத்த ஆதாரங்கள் அதை உறுதி செய்தன. அப்படியென்றால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களுக்கும் நமக்கும் என்னதான் வித்தியாசம்? இருக்கிறது. மிக பெரிய வித்தியாசம் இருக்கிறது. அதுதான் emotional investment (உணர்ச்சிவயப்பட்ட முதலீடு).

” ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்” இந்த பாடலை இளையராஜாவின் பாடல் என்று நம்பி கொண்டுள்ளீர்கள். ஒரு நாள் உங்கள் நண்பர் மச்சி இந்த பாட்டு சங்கர் கணேஷ் போட்டது என்கிறார். அடுத்த நொடியிலிருந்து நீங்கள் உங்கள் எண்ணத்தை மாற்றி கொள்கிறீர்கள். ஏனென்றால் இது ஒரு தகவல் பிழை சம்பந்தப்பட்டது. அதை திருத்துவதில்/மாற்றிக்கொள்வதில் உங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதில் உணர்ச்சிவயப்பட்ட முதலீடு (emotional investment) செய்திருக்கிறார்கள்.

“மோதி” ஜி-க்கு முட்டுக்கொடுப்பதில் கில்லாடி கிழக்கு பதிப்பகம் பத்ரி. பொன். ராதாகிருஷ்ணனுடன்

பத்ரி, பானு கோம்ஸ் போன்றவர்கள் பி.ஜே.பி.க்கும்,மோடிக்கும் பணமதிப்பு நீக்கம் போன்ற நடவடிக்கையின் போது கூட யோசிக்காமல் மணியாட்டுவதற்கு காரணம் அவர்கள் பி.ஜே.பி.ன் மீதும் மோடியின் மீதும் emotional investment செய்திருக்கிறார்கள். மோடியை கோமாளி ஆக்குவது என்பது அவர்களையே அவர்கள் கோமாளி ஆக்கிக்கொள்வதை போன்றது அவர்களுக்கு.

சாதிவெறியர்களுக்கும்/மதவெறியர்களுக்கும் இதுவே பொருந்தும். அவர்கள் அதில் emotional investment செய்திருக்கிறார்கள். அவர்களிடம் எத்தனை ஆதாரம் கொடுத்தாலும். எத்தனை விளக்கம் கொடுத்தாலும், எத்தனை உதாரணங்கள் காட்டினாலும் அவர்களால் அவர்களுடைய நம்பிக்கைகளை மாற்றி கொள்ளமுடியாது.

உங்கள் சந்தேகங்கள்
உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.

அதுபோலத்தான் பாரிசாலன் அவருடைய சதியாலோசனை கோட்பாட்டு நம்பிக்கையின் மீது பெரும் emotional முதலீடு செய்துள்ளார். அவரை கட்டிவைத்து அடித்தாலும் மூளையில் கரண்ட் shock குடுத்தாலும் அவர் மாறப் போவதில்லை. அவருடைய emotional investmentயை தற்காத்துக்கொள்ள அவர் எந்த எல்லைக்கும் போவார்.

நாம் ஒரு விஷயத்தை சந்தேகிக்கும் பொழுது அந்த குறிப்பிட்ட விஷயத்தின் மீது emotional investment செய்யக் கூடாது. உண்மை எப்படி வெளிப்படுகிறதோ அதை அப்படியே ஏற்று கொள்ளும் மனத்தோடிருக்க வேண்டும். உங்கள் சந்தேகம் உண்மையென்றும் ஆகலாம் பொய்யென்றும் ஆகலாம்.

அதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும். உங்கள் சந்தேகங்கள் உண்மையாக இருக்க வேண்டும்/உண்மையாகத்தான் இருக்கும் என்று நீங்கள் நம்பத் தொடங்கும் புள்ளியில் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கும் உங்களுக்கமிருக்கும் வேறுபாடு மறைந்து விடுகிறது.

ஹீலர் பாஸ்கர், பாரிசாலன் போன்றவர்களுடைய பேட்டிகளை பார்த்தவர்களுக்கு அவர்கள் ரொம்பவும் ஆதாரப்பூர்வமாக பேசுவதை போன்ற எண்ணம் ஏற்படும்.

இதற்கு ஒரு காரணம் நம் ஊரில் இருக்கும் பெரும்பான்மையான ஊடவியலாளர்களுக்கு ஒருவரை பேட்டி எடுப்பது என்றால் என்னவென்றெ தெரியாத நிலையில் இருப்பதாலும், பேட்டி எடுப்பது என்றால் கோமாளித்தனமான நாலு template  கேள்விகளை கேட்பது என்கின்ற புரிதலில் இருப்பதாலும் ஏற்படுவது. அதை தாண்டி ஒரு முக்கியமான காரணமிருக்கிறது.

நிலவில் மனிதன் கால்பதித்தான் என்கின்ற தகவல் நமக்கு தெரியும். எந்த நாட்டை சேர்ந்தவர்கள், அவர்களின் பெயர், கால்பதித்த நாள் போன்ற அடிப்படை தகவல் தாண்டி நமக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாது. அது நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட சவால்கள், சோதனைகள், பயிற்சிகள், அதற்கு பின் உள்ள அறிவியல், விஞ்ஞானம் எதுவும் நமக்கு தெரியாது. அதை ஒரு தகவலாக பெற்றோம். விஞ்ஞானத்தையும், விஞ்ஞானிகளையும், ஊடகங்களையும் நம்பினோம். அந்த தகவலை நம்பி ஏற்றுக்கொண்டோம்.

ஆனால் நிலாவில் மனிதன் கால்பதிக்கவில்லை என்பதை நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் அதற்கு சம்மந்தமான ஆதாரங்களை, தகவல்களை திரட்டி தெரிந்து வைத்திருப்பார்கள். நாம் அவர்களிடம் உரையாடும்பொழுது நிலவில் எப்படி நிழல் தெரிந்தது, நிலவில் எப்படி அமெரிக்க கொடி அசைந்தது போன்ற கேள்விகளை எழுப்புவார்கள். அதற்கு நமக்கு பதில்தெரியாத பட்சத்தில் (விஞ்ஞானிகள் இயற்பியல் விதிகளை வைத்து எல்லா கேள்விகளுக்கும் விடை அளித்துவிட்டார்கள்) நமக்கு சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர் சொல்வதில் உண்மையிருப்பதாய் தோன்றும்.

சுருக்கமாக சொன்னால் ஒரு குருட்டுத்தனமான உணர்வு சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்கமுடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.

அதாவது சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும்.

கிட்டத்தட்ட 70 ஆண்டுக்கு மேலான அரசியல் வாழ்வை கொண்ட, பல்வேறு அரசியல் மாற்றங்களை/நிலைப்பாடுகளை முன்னெடுத்த பெரியாரை ஒருவர் தனிப்பட்ட முறையில் ஆய்வு செய்வதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும்.

ஒரு 24 வயது சிறுவன் அவருடைய 4,5 வரிகளை மேற்கோளிட்டு மாமா பிசுக்கோத்து வாங்கி குடு என்கின்ற தோரணையில் பெரியாரை இலுமினாட்டி என்கிறான். பாரிசாலன் பெரியாரை பற்றி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் யாழினிது குழலினிது என்பர் பாரியின் மழலை சொல் கேளாதவர் என்கின்ற வகைமைக்குள்ளேயே வரும்.

உதாரணத்திற்கு எல்லா கற்பிதங்களையும், எல்லா புனிதங்களையும், எல்லா சமூக நிறுவனங்களையும் கேள்விக்குட்படுத்திய/சோதனைக்கு உட்படுத்திய ஒருவரை பாரி தம்பி நிர்வாணமாக இருக்கும் ஒரு secret society இரகசிய சங்கத்தை பெரியார் அவருடைய ஐரோப்பா பயணத்தில் சந்தித்தார் அப்பனா அவரு இலுமினாட்டிதான என்கிறார்.

அதாவது to begin with he got no clue what periyar stood for in the first place. பெரியாரை பற்றிய, அவருடைய வாழ்வியல் முறைமை பற்றிய அடிப்படையான புரிதலே இல்லாத காரணத்தால்தான் பாரிசாலன் வகையறாக்களுக்கு பெரியார் இலுமினாட்டியாக தெரிகிறார். ஹீலர் பாஸ்கரை பொறுத்தவரை அவர் சொல்வதை அவரே நம்புகிறாரா என்பதில் எனக்கு தீவிரமான சந்தேகமிருக்கிறது.

அவருடைய பேச்சு என்பது சினிமா நடிகர்களின் புகைப்படங்களை வைத்து கிளி ஜோசியம் சொல்லுகிறவரை ஒத்துள்ளது. பத்து ரூபாய் குடுத்து விட்டு நகர்ந்து விடலாம், ஆனால் சிறுவன் பாரிக்கு அவர் சொல்வதில் அவருக்கு தீவிரமான நம்பிக்கையிருப்பதை உணரமுடிகிறது.

அவருடைய ஓவ்வொரு பேச்சிற்கும், பேட்டிக்கும் கிடைக்கும் கவனிப்பும், ஆதரவும் மிகுந்த அதிர்ச்சியாகவும், கவலையாகவும் உள்ளது. ஏற்கனவே சொன்னதைப்போல அடிப்படையான அறிவியலுக்கு, தர்க்கத்துக்கு (reasoning) ஒரு தலைமுறையே பயிற்றுவிக்கப் படவில்லை என்பதைத்தான் பாரிசாலன் அடிப்பொடிகள் நமக்கு உணர்த்துகிறார்கள்.

கோமாளி ரஜினியின் பாபா முத்திரையை மாபெரும் இலுமினாட்டி சதியாக கப்சா விடும் நாம் தமிழர் சீமான்!

ஒரு அரசியல் கட்சியை வழிநடத்தும் சீமான் ஒரு செய்தி தொலைக்காட்சியில் வந்து ரஜினிகாந்தை இலுமினாட்டி என்று சொல்லும் கோமாளித்தனத்தை நிகழ்த்தும் அளவிற்கு இந்த இலுமினாட்டியை நம்பும் பொடியன்கள் தாக்கம் வளர்ந்திருக்கிறது. இது மிகுந்த கவலைக்கும், அச்சத்திற்கும் உரியது.

இது போன்ற சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களும், cult group (வெறி ஈடுபாட்டு குழுக்கள்) போல செயல்படுபவர்களும் இதுவரை மானுட சமூகத்திற்கு பேரழிவையே விளைவித்திருக்கிறார்கள். இவர்களிடம் நாம் மிகுந்த கவனத்தோடும், விழிப்போடும், எச்சரிக்கையோடும் இருக்க வேண்டும்.

பாரிசாலன், பாஸ்கர் போன்ற ஆட்களை நாம் எப்படித்தான் கையாளுவது?

மனவியல் நிபுணர்கள் இவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் என்கிறார்கள். நீங்கள் எவ்வளவு தீவிரமாக அவர்களை மறுக்கிறீர்களோ அவர்கள் அதே தீவிரத்தோடு தங்களின் நம்பிக்கைகளை பற்றிக்கொள்வார்கள். அவர்களோடு நீங்கள் ஒருபோதும் விவாதித்து வெல்ல முடியாது. ஒரு போதும் அவர்களிடம் விவாதித்து அவர்களை மீட்க முடியாது. அவர்களிடம் நீங்கள் உரையாடும் நிலை வரும் பொழுது வெறும் அப்பட்டமான உண்மைகள்/தரவுகளை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்துவிடுங்கள்.

உதாரணத்திற்கு தடுப்பூசி போட தொடங்கியபின் இத்தனை சதவிகிதமாக இருந்த போலியோ நோயாளிகளின் எண்ணிக்கை இத்தனை சதவீகிதமாக குறைந்துள்ளது என்கின்ற plain fact-டை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து விடுங்கள். இது தொடர்ந்து நடக்கும் பொழுது ஒருவேளை சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்களுக்கு மனதில் ஒரு மாற்றம் நிகழலாம் என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

சுருக்கமாக சொன்னால் ஒரு கண்மூடித்தனமான உணர்ச்சி சார்ந்த நம்பிக்கையை நம்மால் ஒருபோதும் அறிவியலை கொண்டும், உண்மைகளை கொண்டும், தர்க்கங்களை கொண்டும் உடைக்க முடியாது. உண்மைகளை கொண்டு உணர்வுகளை வெல்ல முடியாது.

பாரிசாலன் தொடர்ந்து இலுமினாட்டிகளை கண்டுபிடித்து கொண்டேயிருப்பார். ஏனென்றால் இலுமினாட்டிகள் பரிசாலனுக்குள்தான் மாடு மேய்த்துக்கொண்டிருக்கிறார்கள், அங்கேயே வசிக்கிறார்கள்.

(முற்றும்)

பின் குறிப்பு : வெவ்வேறு சமயங்களில் நான் சதியாலோசனை கோட்பாடுகளை பற்றி பார்த்தவை,கேட்டவை,படித்தவை கொண்டும், why do people believe in conspiracy theories என்ற கேள்விக்கு google சுட்டிய முதல் 10 கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் இந்த கட்டுரை எழுதப்பட்டது.

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

முந்தைய பாகங்கள் :

  1. பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?
  2. பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

கருத்துக் கணிப்பு : கேரள மழை வெள்ளமும் – மத்திய அரசின் நிவாரணப் பணியும் !

ந்த ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று மழைக்காலம் கேரளாவிற்கு தாங்கவொண்ணா துன்பத்தை அளித்திருக்கிறது. ஒரே நாளில் 26 பேர் மரணம். ஒரே நேரத்தில் 27 அணைகள் திறப்பு! இடுக்கி அணையின் ஐந்து மதகுகளும் ஒரே நேரத்தில் திறக்கப்பட்டிருப்பது வரலாற்றில் முதன்முறை!

வயநாடில் பெய்த கனமழை அங்கிருக்கும் சாலைகளை அடித்துச் சென்றிருக்கிறது. ஆகஸ்டு 12 வரை மழை வெள்ள மரணம் 37 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 14 மாவட்டங்களில் உயர்நிலை எச்சரிச்சை விடுவிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் கோழிக்கோடு, இடுக்கி, மலப்புரம், கண்ணனூர், வயநாடு மாவட்டங்களில் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அறுபதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் 1,750 தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். 1,500 வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன. நிவாரண முகாம்களுக்கு மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். வெள்ளப் பகுதிகளில் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காத நிலை. மண் சரிவு, மழையால் பல நூறு வாகனங்கள் சேதம்! 10,000 கி.மீட்டர் சாலைகளும் சேதம்!

இந்தியாவிலேயே நெருக்கமான மக்கள் குடியிருப்பைக் கொண்ட மாநிலம் கேரளம். அதனாலும் சேதம் அதிகரித்து வருகிறது. அதே போன்று ஆண்டு தோறும் அங்கு பெய்யும் மழைப்பொழிவும் அதிகம். இப்போதோ பெருமழை, பெருத்த சேதம்.

வெள்ளப் பாதிப்புகளால் சுமார் 8,000 கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் முதலமைச்சர் பினரயி விஜயன், 1,200 கோடி ரூபாய் பேரிடர் நிவாரண நிதியாக வழங்க வேண்டுமெனவும், உடனடியாக 400 கோடி ரூபாய் வழங்க வேண்டுமென்றும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய வெள்ளம் சூழ்ந்த இடத்திற்கு மக்கள் போகவேண்டாம் என அமெரிக்க அரசு தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. ஒரு வல்லரசு நாட்டின் மனிதாபிமானத்தை பாருங்கள்! அவர்கள் நாட்டு மக்களைப் பற்றி மட்டும் கவலைப் பட்டுவிட்டு, கேரள மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்று கடந்து போகிறார்கள்.

நீரில் கால் படாமல் விமானத்திலேயே சுற்றி வந்த ராஜ்நாத் சிங்.

இந்திய அரசோ தற்போதுதான் மனமிறங்கி உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அனுப்பியிருக்கிறது. அவரும் நீரில் கால் படாமல் விமானத்திலேயே சுற்றி வந்து விட்டார். முதலில் ஒரு 85 கோடி ரூபாய், பிறகு ஒரு 100 கோடி ரூபாய் நிவாரணத்தை ‘மனமிறங்கி’ வழங்கியிருக்கிறார்கள்.

இனி மத்திய அரசின் அதிகாரிகள் குழு மெதுவாக சில பலநாட்கள் கழித்து கேரளா வரும்! வந்து நட்சத்திர விடுதிகளில் டீ, சம்சா சாப்பிட்டு விட்டு சில பல இடங்களை பார்த்ததாக செய்தி வரும். பிறகு கேரளாவிற்கு தேவையான இறுதி நிவாரணம் எப்போது வரும், எவ்வளவு வரும் என்பது யாருக்கும் தெரியாது. இதை வர்தா புயலின் போதே நாம் பார்த்திருக்கிறோம். ஒக்கி புயலின் போதும் இவர்கள் என்ன செய்தார்கள் என்பது சமீபத்திய வரலாறு.

“ஐக்கியத்தின் சிலை” என்ற பெயரில் குஜராத்தில் வல்லபாய் பட்டேலுக்கு சிலை வைக்கப் போகிறார்கள். உலகின் உயர்ந்த சிலை என்ற சாதனையை நிகழ்த்தப் போகும் இதற்கு செலவு எவ்வளவு தெரியுமா? குறைந்த பட்சம் ரூ. 2000 கோடி. இதை மத்திய – குஜராத் மாநில அரசுகள் வழங்குகின்றன. வரும் அக்டோபர் 2018-இல் மோடி திறந்து வைக்கப் போகிறார்.

இப்போது சொல்லுங்கள்!

கேரள மழை வெள்ள சேதங்களுக்கான மத்திய அரசின் நிவாரணப் பணியை எப்படி மதிப்பீடுவீர்கள்?

  • மிக மோசம்
  • மிக நன்று
  • பரவாயில்லை
  • தெரியவில்லை

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

ஃபேஸ்புக்கில் வாக்களிக்க:

  • வினவு செய்திப் பிரிவு

விஸ்வரூபம் 2 தோல்வி : சாருஹாசன் தம்பி கடும் அதிர்ச்சி !

5

மெரினாவில் கருணாதியை புதைச்சுண்டாளாமே, இனி எப்படி அங்கே காத்தாடறது என்று மயிலாப்பூர் ஆத்துல ‘மகா ஜனங்கள்’ சீதபேதியில் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்நேரம் பார்த்து ஆழ்வார்பேட்டை ‘ஆண்டவனுக்கு’ சோதனை மேல் சோதனை!

சோதனை மேல் சோதனை!

விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்று இந்திய வெண் திரை வர்த்தக நிபுணர்களிடம் கேட்ட போது பலரும் உதட்டை பிதுக்குகிறார்களாம். கலைஞரின் மரணத்தை ஒட்டி தென்னிந்தியாவில் வசூல் எப்படியிருக்கும்? கணிக்க முடியாது என்கிறார்கள். இந்தி மொழியில் ஏதோ முதல் நாள் ஓரிரண்டு கோடி ரூபாய் வந்தால் அதிகம் என்கிறார்கள்.

கடைசியில் கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா? ஒருவேளை இதுவும் திராவிட – பாகிஸ்தான் சதியாக இருக்குமோ?

மும்பை – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் “விஸ்வரூபம் – 2” விமர்சனத்தை இன்று மங்களகரமான வெள்ளிக்கிழமை ஆகஸ்டு 10 காலை 9:55:32-க்கு வெளியிட்டு விட்டது. என்னவென்று பார்த்தால் அது வெளியே – உள்ளே மற்றும் உள்ளுள்ளே எங்கு சொன்னாலும் கிசுகிசுத்தாலும் வெட்கக் கேடு!

“கமலஹாசனது படம் சம்பந்தமே இல்லாமல் ஒரு குழப்பம்” என்று சுப்ரா குப்தா நன்னா சுப்ரபாதம் போல தலைப்பு போட்டு எழுதியிருக்கிறார். குழப்பம் என்பதே பொருளற்றது என்றால் சம்பந்தமே இல்லாத ஒரு குழப்பம் என்றால் அது எப்பேற்பட்ட உலகமகாக் குழப்பமாக இருக்கும்?

இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று உலகளவில் பயணிக்கும் இப்படத்தில் கமலஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், அனந்த் மகாதேவன், வகீதா ரஹ்மான், ஜெய்தீப் அகல்வாத் ஆகியோர் நடித்திருக்க, சாருஹாசனது தம்பிதான் இயக்கியிருக்கிறார். இந்த மரணமொக்கைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏதோ பாவம் பார்த்து அளித்திருக்கும் ரேட்டிங் ஒன்றரை நட்சத்திரம்!

“விஸ்வரூபம்” பாகம் ஒன்றிலாவது ரா எஜெண்டான மேஜர் விஸம் அகமத் காஷ்மீரி, விஸ்வநாதன் என்ற பெயரில் கதக் நடனம் போட்டு ஏதோ கொஞ்சம் பொழுதை போக்க வைத்தாராம். இதை ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளத்தின் விமர்சகர் முன்தேதியிட்ட போனசாக ஆற்றுப்படுத்துகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகரோ முதல் பாகத்தை ஏதோ ஒரு பொழுது போக்கு காமிக்ஸ் புத்தகம் போலவாவது எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.

ஏன் இந்த ஃபிளாஷ்பேக் சீராட்டுக்கள்? கமலஹாசன் போன்ற ஞானிகளை, வணிக பொழுதுபோக்கு வி.ஐ.பி-களை முற்றிலும் வறுக்க முடியாதில்லையா? இருப்பினும் இரண்டாம் பாகத்தை அப்படி வணிகத்தின் பொருட்டும் இப்பத்திரிகைகள் சுமக்க முடியவில்லை! இது யதார்த்தம்! பிறகு இப்பத்திரிகை படிப்பவர்கள் அடுத்த இந்திப் பட விமர்சனங்களுக்கு இங்கு வராவிட்டால் சினிமா எக்ஸ்பிரஸ் சினிமா நகரப் பேருந்தாகி விடுமல்லவா?

ஆகவே, பாகம் இரண்டு ஒரு சோகமான சம்பந்தமே இல்லாத குழப்பம் என்கிறார் சுப்ரா குப்தா, இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.

ஓபனிங் சீனீல் ஒட்டு போட்ட தியாக விழுப்புண்களுடன் கமல் விமானத்தில் ஏற்றப்படுகிறார். கூடவே மனைவியான நிருபமாவும், அழகான உதவியாளரான அஷ்மிதாவும். முன்னவர் தன்னை அணுசக்தி விஞ்ஞானியாக கூறிக் கொண்டாலும், பெண் என்ற முறையில் ஆண்களை வீழ்த்தி உளவு பார்க்கவே விரும்புகிறாராம்.

பின்னவர் புத்திசாலித்தனமாக உளவாளியாக டமாரம் அடித்தாலும் அதை ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒரு மாடலிங் நடிகர் போல தேடுகிறாராம். இந்த அவியல் கூட்டணியில் பாத்திர வார்ப்பு எனும் சமையல் பொருத்தம் சகிக்கவே முடியவில்லையாம்.

ஆக இந்தக குழப்பக் கூட்டணி கதைக்களமான நம்பிக்கையற்று இருக்கும் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் பயணிக்கிறது. படத்தின் பாத்திரங்கள், உளவாளிகள், சதிகாரர்கள், மறந்து போகக் கூடிய அம்மாக்கள், சென்டிமெண்ட் மகன்கள், உள்ரூமில் உத்தரவு போடும் திறமையான உளவுத்துறை மேலதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்ட அழகான பெண்கள் – இவர்கள் ஒருவருக்கொருவர் கொல்லாமல், கைச் சண்டை, கத்திச் சண்டை போடுகிறார்கள். கத்திகள், துப்பாக்கிகளை கொண்டு செல்வதிலும், லோடிங் அன்லோடிங் செய்வதிலும் பிசியாக இருக்கிறார்கள்.

ஹெலிகாப்டர்கள் விண்ணில் பாய்கின்றன, ஏவுகணைகள் மண்ணில் சீறுகின்றன, கையெறி குண்டுகள் தூக்கி எறியப்படுகின்றன. (என்ன ஒரு உலகமகா கண்டுபிடிப்பு!) கடைசியில் கமல்ஹாசன் தரித்திருக்கும் பேராயுதங்களோடு அபாயகரமான முறையில் கிராபிக்ஸ் உதவியுடனும், சிறப்பு ஒலி மிக்சிங் தயவிலும் சண்டையிட்டு இந்திய தலைநகராம் புது தில்லி குண்டு போட்டு அழிக்கப்படும் அபாயத்திலிருந்ந்து காக்கிறார்.

சிறந்த வகை உளவுத்துறை புலனாய்வு படங்களில் இருக்கும் எனர்ஜி நிறைந்த அதிரடிக் காட்சிகள், வண்ணமயமான பாத்திரங்கள் – அதாவது நாயகன் – வில்லனுக்கு இடையே மங்கிய கோடுதான் இருக்கும், தடகள வீரனைப் போன்ற ஆண்கள், அவர்களுக்கு சமமாக இருக்கும் பெண்கள்…… இவை எவையும் எதுவும் விஸ்வரூபத்தில் லேது என புலம்புகிறார் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.

கமலின் வயதான தாயாக நடித்திருக்கும் வகீதா ரஹ்மான் படத்தில் அல்சைமர் எனப்படும் மறதி நோய் கொண்டவராக வருகிறார். இவரது பாத்திரத்தை தவிர ரா-வின் உயர் அதிகாரிகளாக அறைக்குள் டெக்னிக்கல் உத்தரவு போடும் சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன், அல்கைதா ராகுல் போஸ், துப்பாக்கியை விட்டுப் பிரியாத கைகளைக் கொண்ட ஜெய்தீப் அஹல்வாத் அனைவரும் தெண்டமாக வந்து போகிறார்களாம். ஆக மறதியாக நடிக்கும் ஒரு பாத்திரத்தை தவிர மற்றவை அனைத்தும் மறந்தும் கூட குறிப்பிடும்படியானவர்கள் அல்லவாம்.

charuhasanஇதற்காக கமல்ஹாசன் யாரைக் குற்றம் சாட்ட முடியும்? சாருஹாசனின் தம்பியைத் தவிர! ஏனெனில் இந்தக் குப்பையை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தவர் அந்தத் தம்பியேதான். நேரமும், பவுடரும் இருப்பதால் தசாவாதாரம் போட்டு விட்டு “தஸ்” பைசா கூட வசூலாகவில்லையே என்று எந்த அவதாரத்திடம் கேட்பது?

இவ்வளவிற்கும் இந்தப்படம் “இஸ்லாம் ஃபோபியா” எனப்படும் முசுலீம்களை அவதூறுடன் கருதும் உலகப் பொதுக் கருத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை ஆங்கில விமர்சகர்கள் போகிற போக்கில் சொல்கிறார்கள். அதை முதல் பாகத்திலேயே பார்த்து விட்டோம்.

முதல் பாகம் எடுக்கும் போது கமலுக்கு தோன்றியிருக்கும் – மூன்று நாடுகளில் எடுக்கிறோம், தெரிவு செய்யப்பட்ட ஷாட் போக கனதியான அடிகள் மீதியிருக்கின்றன, அதை வைத்து ஒட்டுப் போட்டு இன்னொரு பாகம் போட்டால் என்ன என்று……….!

முதல் விஸ்வரூபம் வரும் போது அம்மா காப்பாற்றினார். இரண்டாவதில் அய்யா கெடுத்து விட்டார்! இருப்பினும் இரண்டாவதில்தான் உலக நாயகன் அது ஏதோ மய்யமாமே, கட்சி ஆரம்பித்திருக்கிறார். பிக்பாஸ், பிக்பாஸ் சீசன் 2, விஸ்வரூபம் 2 ஆகியவற்றில் கமல்ஹாசனுக்கு கிடைக்கும் பெரும் பணத்திற்கான இலவசமான விளம்பரமே அவரது அரசியல் பில்டப்புகள்!

இந்தி விஸ்வரூப பிரமோஷனோடு என்.டி.டிவி.யில் பேட்டியளித்தவர், நீங்கள் மோடி ஆதரவா, எதிர்ப்பா? எனும் மாபெரும் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதை பதில் என்று சொன்னால் பல்லியே நம்மிடம் பிராது பறையும்!

அதாவது அவர் மோடி ஆதரவோ அல்லது மோடி எதிர்ப்போ இல்லையாம். தனிநபர்களை எப்போதும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசமாட்டாராம். சித்தாந்தத்தோடுதான் அவர் எப்போதும் உறவு கொள்வாராம்? இந்த உளறல்களை சகித்துக் கொள்கிறார்களே அந்த நெறியாளர்கள், அவர்களின் பொறுமை உண்மையிலேயே வேர்க்க் வைக்கிறது. சரிங்க கமல் ஆபிசர், அது என்ன சித்தாந்தம்? வறுமைக்குதான் அவர் எதிரே அன்றி, கட்சிகள் அல்லவாம். இந்தியா வளரவேண்டும் என்பதைத் தாண்டி அவருக்கு வேறு கொள்கையே இல்லையாம்? இதைத்தானய்யா மோடி முதல் நமது மக்கள் கட்சி கார்த்திக் வரை சொல்கிறார்கள்?

சரி இந்த எழவையெல்லாம் விட்டுத் தொலைப்போம். சகித்துக் கொள்வோம். ஆனா பாருங்க, இவரது அண்ணன் சாருஹாசன் அப்பைக்கப்ப ஒன்று சொல்வாரே, அதை மட்டும் எப்போது நினைத்தாலும் கிட்னி பதறுகிறது!

ரஜினிக்குத்தான் தமிழகத்தில் செல்வாக்கு, அவருக்குத்தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள், கமலுக்கு வாக்கு போட மாட்டார்கள் என்று எல்லா தொலைக்காட்சியிலும் சாருஹாசன் பேசித் தீர்த்து விட்டார். சரி இப்படி வெளிப்படையாக தம்பியை தரைமட்டமாக்குகிறாரே என்று பார்த்தால் அடுத்து ஒரு பன்ஞ் நைசாக வரும்.

அதாவது புத்திசாலிகளை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள், அதனால்தான் கமலை மறுத்து, ரஜினியை ஏற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ஒரு தினுசாக பார்ப்பார் இந்த பெரியவர்! பிக்பாசில் கூட தம்பியும் ஏதாவது பன்ஞ் மாதிரி சொல்லிவிட்டு ஆடியன்சை பார்ப்பார். பல நேரம் கை தட்டல்களில் டைமிங் தாமதமாகும். என்ன இருந்தாலும் செட்டப் செய்த கைகளிடம் செட்டப் செல்லப்பாவே இருந்தாலும் டக்கு டக்குனு கை தட்டல் வருமா என்ன?

காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் இன்ன பிற வாதங்களுக்காக கட்சியும், காட்சியும் நடத்தி வரும் கமல்ஹாசனை ஏதோ மாபெரும் புத்திசாலி, நல்லவர் வல்லவர் என்று போடுகிறாரே, சாருஹாசன்… இப்படி நாலு பேர் இருக்கும் போது ஏன் விஸ்வரூபம் 2 வெளிவராது?

– வேல்ராசன்

மேலும் :

தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ? மு.வி.நந்தினி

1

தி இந்துவுக்கு கேள்வி : ஊடக நெறி என்பது மக்கள் நலனை முன்னிறுத்துவதா?அல்லது ரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா?

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி

மிழக முன்னணி ஊடகங்களின் முதலாளிகளும் தலைமை பத்திரிகையாளர்களும் பிரதமர் நரேந்திர மோடியை ‘இரகசியமாக’ சந்தித்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையானது. சமூக ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொண்டு எந்தவொரு தமிழ் ஊடகமும் பதிலளிக்கவில்லை. தி ஹிந்து பத்திரிகையின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் இதுகுறித்து அந்தப் பத்திரிகையில் எழுதியிருந்தார். (இணைப்பு கீழே)

அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் பிரதமர் மோடி தமிழக பத்திரிகையாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்ததும் செய்தியாக்கப்படாததற்கு என்ன காரணம் என ஏ. எஸ். பன்னீர்செல்வம் விளக்கியிருந்தார். விளக்கத்தின் சாரம், (ஆஃப் த ரெக்கார்ட்) சந்திப்புகளை வெளியே சொல்வது சம்பந்தப்பட்டவர்களின் நம்பிக்கையை மீறுவதாகும் என்பதே.

ஏ. எஸ். பன்னீர்செல்வன்

லிபரலாகவும் ஜனநாயக தன்மையுடன் எழுதுவதாகக் காட்டிக்கொள்வது ஊடகங்களில் ஒருவகை. தி இந்து அப்படியாகத்தான் தன்னை முன்னிறுத்தி வருகிறது. இந்த முகத்திரையை பலரும் கிழித்தெறிந்துவிட்டார்கள். ரீடர்ஸ் எடிட்டரின் வழியாக மோடி சந்திப்பின் பின்னணி குறித்து ‘விளக்கம்’ அளித்து தனது நடுநிலையை தக்கவைக்க முயற்சிக்கிறது தி இந்து. ஆனால், உண்மை என்பது ஒருபோதும் நடுநிலையாக இருப்பதில்லை.

100 பெண் பத்திரிகையாளர்களை ராகுல் காந்தி சந்தித்த படங்கள், அவருடைய சமூக வலைத்தளத்திலேயே வெளியிடப்பட்டன. காங்கிரஸ் தலைவராக மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் ராகுல் காந்தி, ஊடகங்களுடனான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ள சந்திக்கிறார் என்கிற விளக்கம் காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டது. தேர்தலுக்கு முன் அனைத்து கட்சிகளும் இப்படியான ‘சந்திப்பு’களை நடத்துவதுண்டு. பொதுவாக ஆதரவான, எதிரான ஊடகங்களும் இந்த சந்திப்புகளுக்கு அழைக்கப்படுவார்கள்.

இது ஒருவகையில் ஊடகங்களை ‘வளைக்கும்’ செயல்பாடு என்றாலும் ராகுல் காந்தி சந்திப்பின் வெளிப்படைத்தன்மை, மோடி சந்திப்பில் இல்லை என்பதே சர்ச்சைகளையும் சந்தேகங்களை எழுப்பிக் கொண்டிருக்கிறது. ஊடகங்களின் தனிப்பட்ட சந்திப்பு செய்தியாக்குவதில்லை அல்லது சில நேரங்களில் படங்களை மட்டும் வெளியிடுவார்கள். ராகுலின் சந்திப்பு இணைய ஊடகங்களில் செய்தியாக பதிவானது. ராகுலுடன் என்ன பேசினார்கள் என்கிற விவரமும்கூட வெளியாகியிருக்கிறது. பிரபல பத்திரிகையாளர் சேகர் குப்தா ஆசிரியராக இருக்கும் தி பிரிண்ட் இணையதளம் இதை பதிவாக்கியிருக்கிறது.

தி இந்துவின் ரீடர்ஸ் எடிட்டர் ஏ.எஸ். பன்னீர்செல்வம், இணையதளங்களில் ராகுல் பத்திரிகையாளர் சந்திப்பு வெளியானதை குறிப்பிடுகிறார். ஆனால், மோடியுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு இரகசியமாக ஏன் வைக்கப்பட்டது என்கிற கேள்விக்கு அவரிடம் பதில் இல்லை. மோடி – ஊடகவியலாளர்கள் சந்திப்பு குறித்து பா.ஜ.க. தரப்பிலிருந்தும்கூட ஏன் விளக்கப்படவில்லை? நான்காண்டுகளில் பத்திரிகையாளர்களையே சந்திக்காத பிரதமர் என பெயர் பெற்ற மோடியை சந்திக்கும் வாய்ப்புப் பெற்ற தமிழக ஊடகவியலாளர்கள் ’பெருமை’யுடன் அதை பகிர்ந்திருக்கலாமே, அதை ஏன் செய்யவில்லை?  உள்நோக்கத்துடனான சந்திப்பு என சொல்ல அத்தனை வாய்ப்புகளையும் அள்ளிக் கொடுத்துவிட்டு, விளக்கமும் ஏன்? படங்களை வெளியிட்டு பிரதமரை சந்தித்தோம் என ஒற்றை வரி விளக்கத்தில் என்ன ’நம்பிக்கை இழப்பு’ ஏற்பட்டுவிடப்போகிறது?

மோடி – தமிழ் ஊடக பிரமுகர்களின் சந்திப்பு தனிப்பட்ட சந்திப்பு எனில், இது தொடர்பான புகைப்படங்கள் எப்படி வெளிவந்தன? மோடியின் அலுவலகத்தில் PMO (பிரதம அமைச்சரின் அலுவலகம்) புகைப்படக்காரர் மட்டும் எடுத்த படங்கள் தமிழக பா.ஜ.க பிரமுகர்கள் மூலம் கசிய விடவைத்தது ஏன்? ஆக அவர்கள் இவர்களை சந்திததார்கள். அதை அவர்களே ‘பெருந்தன்மையாக’ வெளியிடுகிறார்கள். பன்னீர் செல்வமோ இது தனிப்பட்ட சந்திப்பு என நமக்கு கிளாஸ் எடுக்கிறார்.

மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து பணிநீக்கம் செய்வது தொடர்ந்து பதிவு செய்யப்பட்டு வருகிறது. சமீபத்திய உதாரணம் ஏ.பீ.பி. ஊடகவியலாளர்கள் இருவரின் நீக்கம். தன்னுடைய மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி எப்படிப்பட்ட புரட்டுகளை சொல்கிறார் என தோலூரித்த செயலுக்காக அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள். இந்த விஷயம் இணைய ஊடகங்களில் பரபரப்பானபோது மோடியுடனான தமிழக ஊடகவியலாளர்களின் சந்திப்பு நிகழ்ந்தேறியது.

மோடியை சந்தித்த பெரும்பாலான ஊடகங்களின் சார்புதன்மை வெளிப்படையானது. சில ஊடகவியலாளர்கள் நடுநிலைமை பேண முயற்சிக்கலாம். அதை நடுநிலைமை என்பதைவிட சந்தர்ப்பவாதம் என சொல்வது பொருத்தமாக இருக்கும். இந்த நடுநிலையாளர்களின் ஊடக அறம் என்பது வலதுசாரித்தனத்துடன்  சமரசம் செய்துகொள்ள எப்போதும் தயாராகவே உள்ளது.

பி.ஜே.பி. கும்பலின் மிரட்டலுக்கு பயந்து ஏ.பி.பி. ஊடக முதலாளிகளால் பழிவாங்கப்பட்ட பத்திரிகையாளர்கள்: (இடமிருந்து) மிலிந்த் கொண்டேகர், புன்ய பிரசுன் பாஜ்பாய் மற்றும் அபிசார் சர்மா.

வலதுசாரி ட்ரால்களால் பாதிக்கப்படும் ஒரு செய்தியாளருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான நீதியைக்கூட இவர்களால் பெற்றுத்தர முடிவதில்லை. நடுங்கிக் கொண்டு பாதிக்கப்பட்ட செய்தியாளரை ”வீட்டிலேயே இருந்துகொள், பிரச்சினை முடிந்ததும் வெளியே வா” என்பார்கள். ”தாலி தேவையா” என்கிற விவாத சர்ச்சை முதல் சமீபத்திய எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த ஊடகவியலாளர்கள் விவகாரம், மிகச் சமீபத்திய பெண் கடவுள் கவிதை பகிர்வு சர்ச்சை வரை பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களை தொடர்புடைய ஊடக நிறுவனங்கள் திரையில் வரவேண்டாம் என தற்காலிக தடை விதித்தன. ட்ரால்கள் மட்டுமே இதற்கு காரணமென்றால், எந்தவொரு ஊடகவியலாளரும் பணியாற்ற முடியாது. முழுக்க முழுக்க இதன் பின்னால் இருப்பது ஊடகங்களை வெளிப்படையாக மிரட்டும் பா.ஜ.க.வினர் மீதான பயம். சார்புதன்மையுடனோ, சந்தர்ப்பவாத நடுநிலைமையுடனோ இயங்கும் ஊடகங்களால் எப்படி மக்கள் நலனை முன்னிறுத்த முடியும்?

மோடியுடனான தமிழக ஊடகவியலாளர் சந்திப்புக்கு சப்பையான விளக்கங்களை சொல்லும் ரீடர்ஸ் எடிட்டருக்கு கீழ்வரும் பத்தி எதிர் விளக்கம் தருமென நம்பலாம். “எட்வர்ட் ஸ்னோடனும் விக்கிலீக்ஸும் பரம இரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க ஆவணங்களை இணையத்தின் வழியாக மக்கள் பார்வைக்கு வைத்தார்கள். இந்த ஆவணங்களை வெளியிடக்கூடாதவை எனக் கருதி சர்வதேச ஊடகங்கள் ஒதுங்கிக் கொள்ளவில்லை. மாறாக, அந்த ஆவணங்களின் உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிட்டன. ஒரு அரசாங்கத்தால் இரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை ஏன் ஊடகங்கள் செய்தியாக்கின? ஏனெனில் அதில், மக்களின் நலன் அடங்கியிருந்தது” சமகால ஊடகங்கள் குறித்த கட்டுரை ஒன்றில் பத்திரிகையாளர் சித்தார்த் வரதராஜன் எழுதியது இது. மக்கள் நலனை முன்னிறுத்துவதா? அல்லது இரகசிய சந்திப்புகளை மூடி மறைப்பதா? எது ஊடக நெறி?

  • மு. வி. நந்தினி.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

நூல் அறிமுகம் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா – பிரச்சினையா?

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை ஜாலியா, பிரச்சினையா?” என்ற தலைப்பில் ஐ.டி துறையில் வேலை செய்யும் மென்பொருள், பி.பி.ஓ, கே.பி.ஓ, கால் சென்டர் ஊழியர்கள் எதிர்கொள்ளும் வேலை இழப்பு பிரச்சனை தொடர்பான சிறு நூலை பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

புத்தகத்தின் பெயர் : ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை : ஜாலியா, பிரச்சினையா?

இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஐ.டி துறையில் ஆட்குறைப்பு
  • நிறுவனம் நினைத்தவுடன் வேலையை விட்டு அனுப்ப முடியுமா?
  • தொழிலாளர் நலனும் நாட்டின் நலனும்
  • முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா?
  • எச்.ஆர் அதிகாரிகளே, திருந்துங்கள்!
  • ஆன்சைட்டும், அதிக சம்பளமும் பாதுகாப்பா?
  • அப்ரைசலை எப்படி கவனமாக கையாள வேண்டும்?
  • ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் ஏன் தேவை?
  • நிர்வாகங்களே, ஊழியர்களே யூனியனை ஆதரியுங்கள்!
  •  ஐ.டி ஆட்குறைப்பு – நாம் அறிவாளிகளா? அப்பாவிகளா?
  • இணைப்பு : சங்கம் வைக்கும் உரிமை ஐ.டி துறைக்கும் பொருந்தும் – தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை கடிதம்

பக்கங்கள் : 64
விலை : ரூ 60

இந்த நூல் ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளது.
ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை , ஐ. டி. ஊழியர்கள் பிரச்சினை , ஐ.டி. ஊழியர்கள் சிறு வெளியீடு , IT Employees problem , ஐ.டி ஆட்குறைப்பு
ஐ.டி ஊழியர்களும், மாணவர்களும் புத்தகத்தின் பிரதிகளை பெற்று நண்பர்களிடையேயும், சக ஊழியர்களிடையேயும் வினியோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ் தெரியாத பிற மாநில ஊழியர்களுக்கு ஆங்கில நூலை வினியோகிக்கலாம்.
உங்களுக்கு தேவையான பிரதிகளுக்கு தமிழ், ஆங்கிலம் எண்ணிக்கை குறிப்பிட்டு combatlayoff@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது 9003009641 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

பிரதிகளுக்கான விலையை புத்தகத்தை பெற்றுக் கொண்டு ரொக்கமாகவோ, எமது சங்கத்தின் வங்கிக் கணக்கிலோ செலுத்தலாம்.

தகவல் : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (ஐ.டி. ஊழியர் சங்கம்)
தொடர்புக்கு : +91 90030 09641

பாரி சாலன் – ஹீலர் பாஸ்கர் : பெரியார் ஒரு இலுமினாட்டி என்று ஏன் நம்புகிறார்கள் ?

பாரி சாலன் இலுமினாட்டிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் ? பாகம் 2

ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

ம்மில் சிலர் கூட சில சதியாலோசனை கோட்பாடுகளை நம்பக் கூடியவர்களாக இருப்போம். அல்லது ஒரு வேளை அது உண்மையாக இருக்குமோ என்கின்ற அளவிலாவது சிலவற்றை நம்புவோம். சதியாலோசனை கோட்பாடுகளை நாம் நம்ப விரும்புவதற்கு/நம்ப தொடங்குவதற்கு நமக்கென்று சில தர்க்கங்கள் இருக்கும்.

கடற்புலிகள், வான் புலிகள், கரும்புலிகள் என்று ஒரு ராணுவத்தை கட்டி 20 ஆண்டு காலத்துக்குமேல் சிம்ம சொப்பனமாக இருந்த புலிகளின் தலைமை மிக சாதாரணமாக ஒரு நேரடி சண்டையில் சுட்டு கொல்லப்பட்டார் என்ற தகவல் புலிகளின் ஆதரவாளர்களால் ஜீரணிக்க முடியாத தகவல். அப்பொழுது நக்கீரனில் வந்த ஒரு சிறுபிள்ளைத்தனமான கட்டுரையை நானும்கூட நம்பினேன் அல்லது நம்ப விரும்பினேன்.

Prabhakaranஏன் என்றால் தர்க்கரீதியாக அவ்வளவு சாதுர்யமான, புத்திசாலித்தனமான, வலிமையான, அனுபவமிக்க ஒரு போராளி இயக்கத்தின் தலைவர் 2 ஆண்டுகளுக்கு மேல் நடந்த சண்டையின் முடிவில் தப்பி செல்லவோ அல்லது குறைந்த பட்சம் தனது சடலம் கிடைக்காத வகையிலோ கூட செயல்படமுடியாமல் போனார் என்னும் நிகழ்வை என்னால் அப்பொழுது தர்க்கரீதியாக ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

இது போல நாம் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்பத் தொடங்குவதற்கு பின்னணியில் சில தர்க்கங்கள் இயங்குகின்றன. அந்த தர்க்கங்கள் எல்லா நேரங்களிலும் உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவை அல்ல. சில நேரங்களில் நமது தர்க்கங்கள் நமது உணர்வுகளால் உந்தப்படுபவை. மனவியல் நிபுணர்கள் அதை மூன்று முக்கிய வகைமைகளாக பிரிக்கிறார்கள்.

  • 1) விகிதசமன் சாய்வு (proportionality bias)
  • 2) உறுதியூட்டு சாய்வு (confirmation bias)
  • 3) முன்னிறுத்து சாய்வு (projection bias)

ஒரு கிளாசிக் example…(ஒரு செவ்வியல் சான்று)

உலகத்தின் சக்தி வாய்ந்த நாடு அமெரிக்கா. உலகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் அமெரிக்க ஜனாதிபதி. உலகத்தின் சக்தி வாய்ந்த இராணுவம் அமெரிக்க இராணுவம். உலகத்தின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பு அமெரிக்க உளவு நிறுவனம். அமெரிக்க இராணுவமும் உளவு அமைப்பும் தங்களது ஜனாதிபதிக்கென்று பிரத்யேக பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளன.

மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனதிபதியை சுட்டு கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன். ஆனால் சதியாலோசனை கோட்பாடுகளை நம்புவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

உலகிலேயே மிகவும் பாதுகாக்கப்பட்ட மனிதர் அமெரிக்க ஜனாதிபதிதான். இப்படி பட்ட அமெரிக்க ஐனாதிபதி தனது மனைவியோடு தெருவில் காரில் சென்று கொண்டிருக்கும் போது மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் 6-வது மாடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில் நகரும் காரில் சென்று கொண்டிருந்த கென்னடியை சரியாக இரண்டே தோட்டாக்களில் சுட்டு வீழ்த்தினார் என்பது proportionate ஆக இல்லை இல்லையா? அதாவது ஒரு நம்பமுடியாத ஆச்சர்யமான அதிர்ச்சியான சம்பவத்திற்கு காரணம் மிக மிக எளிமையான ஒன்றாக இருக்க முடியாது என்பது நமது மனதின் சாய்வு(bias).

இந்நிலையில் இந்த சதி செயலின் பின்னணியில் KGP, CIA (்சோவியத் ரசிய, அமெரிக்க உளவு நிறுவனங்கள்) எல்லாம் சம்மந்தப்பட்டிருக்கிறது என்னும் ரீதியில் உலவும் சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் நாம் உணரத் தொடங்குகிறோம். இதுதான் proportionate bias (விகிதப்படியான சாய்வு).

இரண்டாவது நமக்கு பரிச்சயமான ஒன்று. நாம் தினம் தினம் கடைபிடிக்கும் ஒன்று. திருமாவளவன் பாட்டாளி மக்கள் கட்சியை விமர்சித்து ஒரு மேடையில் பேசுகிறார். அவருடைய ஆதரவாளர்கள் அண்ணன் weight (கெத்து) காமிச்சுட்டாரு என்னும் ரீதியில் மகிழ்ச்சி அடைவார்கள்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அதற்கு பதில் சொல்லும் விதமாக ராமதாஸ் ஒரு மேடையில் பேசுகிறார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் பார்த்தில்ல…ஐயா ஐயாதான் என்பார்கள். அதவாது இரண்டு தரப்பு ஆதரவாளர்களுமே அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நம்பிக்கையை/ஆசையை/ சார்பை மேலும் பற்றிக்கொள்கிறார்கள். இதுதான் confirmation bias (உறுதியடைந்த சாய்வு).

தலைவர் பிரபாகரன் மரணச்செய்தியை தினமலர் மனமகிழ்வோடு சந்தேகத்துக்கு இடமின்றி நம்பி முதல் பக்க செய்தியாக்கிய போது அதன் ஆதரவாளர்கள் அதை முழுவதுமாக நம்பி ஏற்றுக் கொண்டார்கள். ஏனென்றால் அவர்கள் அது நிகழ வேண்டும் என்று பல வருடங்களாக காத்திருந்தவர்கள்.

ஆனால் நாம் அவர் தப்பி முக்கிய தளபதிகளோடு வேறு நாட்டில் நலமாக இருக்கிறார் என்பதையொத்த conspiracy theory-(சதிக் கோட்பாடு)களை நம்ப தொடங்கும் நிலையிலிருந்தோம். ஏனென்றால் அவர் தப்பித்திருக்க வேண்டும் என்று விரும்பினோம்.

பெரியாரின் கொள்கைகளால் மண்டை காய்ந்து போய் உள்ளவர்கள் பெரியார் இலுமினாட்டி என்னும் சதியாலோசனை கோட்பாடுகளை இயல்பாக நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே பெரியாருக்கு எதிரான சாய்வு இருக்கிறது.

அறிவியல் முறைகளை அறிந்திருக்காதவர்கள், அறிந்துகொள்ளும் திறனோ/வாய்ப்போ இல்லாதவர்கள் தடுப்பூசி தேவையில்லை என்பதை நம்புவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு ஏற்கனவே அறிவியலுக்கு எதிரான ஒரு சாய்வு இருக்கிறது. அந்த சாய்வை ஊக்கப்படுத்தும் / உறுதிப்படுத்தும் எல்லா தகவல்களும் அவர்களுக்கு உண்மையாக தெரியும். பெரியார் தமிழர் விரோதி என்னும் உண்மையை சீமான் உற்று பார்த்து கண்டுபிடிப்பது இந்த பின்னணியில்தான்.

இறுதியாக projection bias (முன்துருத்தும் சாய்வு). நாம் நினைப்பதைத்தான் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் அல்லது நான் நம்புவதைத்தான் எல்லோரும் நம்புகிறார்கள் அல்லது நான் செய்வதைத்தான் எல்லாரும் செய்கிறார்கள் என்று இருக்கும் ஒரு சாய்வு நிலை.

ஒருவர் வதந்திகளை பரப்புபவராக/நம்புபவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களைப் போன்றே இயல்புள்ளவர்கள் என்று நம்ப/கருதத் தோன்றும்.

இதன் காரணமாக அவர்களுக்கு தாங்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை மொத்த உலகமும் நம்புவதாக, மொத்த உலகமும் அதன் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாக, மொத்த உலகமும் அதனை பற்றி விவாதித்து கொண்டுள்ளதாக நினைத்துக் கொள்வார்கள். இதன் விளைவாக அவர்கள் நம்பும் சதியாலோசனை கோட்பாடுகளை அவர்கள் தீர்க்கமாக நம்புவார்கள்.

why-people-believe-in-conspiracy-theories jpg
ஒருவர் வதந்திகளை பரப்புவராக/நம்புவராக, கிசுகிசுக்களை நம்புவராக/பரப்புபவராக, புரணி பேசுபவராக/கேட்பவராக இருக்கும் பட்சத்தில் மற்றவரும் தங்களை போன்றே இயல்புள்ளர்கள் என்று நம்ப/கருத தோன்றும்.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். தேர்தலில் தோற்கும் எல்லா கட்சியினரும் எல்லா நேரத்திலும் ஒரு சதியாலோசனை கோட்பாட்டை முன்வைக்கிறார்கள். வென்றவர்கள் ஜனநாயகம் வென்றது என்கிறார்கள்.

விளையாட்டில் எந்த நாடு தோற்கிறதோ அந்த நாட்டின் ரசிகர்கள் மேட்ச் பிக்சிங் என்று சந்தேகிக்கிறார்கள். வென்ற நாட்டின் ரசிகர்கள் சூப்பரப்பு என்கிறார்கள். நாம் எப்பொழுது பலவீனமாக, தனிமையாக, குழப்பமாக, விரக்தியாக, தோல்வியுற்று நிற்கிறோமே அப்பொழுது தான் நாம் ஒரு சதியாலோசனை கோட்பாடை பற்றி கொள்கிறோம்.

14-ம் நூற்றாண்டை சேர்ந்த தத்துவ அறிஞர் வில்லியம் முன்வைத்த கோட்பாட்டின் பெயர் Occam’s razor principle. இந்த கோட்பாட்டின் படி எல்லா சிக்கலான கேள்விகளுக்கும் பெரும்பாலான சமயங்களில் மிக மிக எளிமையான பதிலே சரியான விடையாகியிருக்கும் என்பதே.

உதாரணத்திற்கு மிக மிக பாதுகாக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியை சுட்டுக் கொன்றவன் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவன் என்ற மிக சாதாரணமான சுவாரஸ்யமற்ற பதிலே சரியாக இருக்க வாய்ப்புகள் மிக அதிகம். ஆனால் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புபவர்களால் இதைத்தான் ஏற்றுக்கொள்ள முடிவதேயில்லை.

எளிமையாக சொன்னால் conspiracy theories are for losers (தோல்வியடைந்தவர்களுக்குத்தான் சதிக் கோட்பாடுகள்) என்று மனவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

பொதுவாக பல்வேறு சோதனைகளின் மூலம் அடிப்படையான கணிதம், தர்க்கம், அறிவியல் கோட்பாடுகள் போன்றவற்றில் இளம்பிராயத்திலேயே பயிற்றுவிக்கப்பட்டர்வர்கள் சதியாலோசனை கோட்பாடுகளை பெரும்பாலும் நம்புவதில்லை என்று மனவியல் ஆய்வுகள் நிறுவுகின்றன.

அதே நேரத்தில் மெத்த படித்த மேதாவிகள் பலரும் சதியாலோசனைக் கோட்பாடுகளை நம்புகிறவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனாலும் கல்வியறிவு பெற்றவர்கள் சதவிகித அடிப்படையில் சதியாலோசனைக் கோட்பாடுகளை குறைவாகவே நம்புகிறார்கள்.

குழந்தை பருவத்தில் ஏற்படும் மனரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள், புறக்கணிப்புக்குள்ளானவர்கள், தனித்து விடப்பட்டவர்கள் மத்தியிலும் சதியாலோசனை கோட்பாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. மேல் சொன்னவைகள் எல்லாம் ஏன் சிலருக்கு அல்லது நமக்கு சில நேரங்களில் நாம் ஏன் சில சதியாலோசனை கோட்பாடுகளில் ஒரு தர்க்கம் இருப்பதாய் உணர்கிறோம் என்பதை புரிந்து கொள்ள உதவியிருக்கும்.

எல்லா சதியாலோசனைக் கோட்பாடுகளும் பொய் என்று ஒதுக்குவது சரியா?
பாரிசாலனுக்கு ஏன் எளிமையான உண்மைகள் கூட புரிவதில்லை?

எப்பொழுதும் எல்லா பேட்டிகளிலும் பாரிசாலன் சொல்வதே சரி என்பது போன்ற தோற்றம் ஏன் ஏற்படுகின்றது?

ப. ஜெயசீலன், சமூக-அரசியல் விமர்சகர்.
நன்றி : தி டைம்ஸ் தமிழ்

முந்தைய பாகம் :
பாரிசாலன் – ஹீலர் பாஸ்கர்கள் இலுமினாட்டிகளை எப்படி சமைக்கிறார்கள் ?

காத்து வாங்க வருமிடத்தில் அவாளுக்கு கலைஞரைப் பார்த்தால் வியர்த்து வாங்காதா ?

மறையாத சூரியன்

போராட்டத்திற்கு
மெரினாவில் இடமில்லை
என்பதிலேயே புரிந்துவிட்டது
கலைஞருக்கு
மெரினாவில் இடமில்லை
என குரலெழுந்ததன்
காரணம்.

கலைஞர்
உயிர் வாழ போராடிய
காவேரி மருத்துவமனை – வாயிலில்,
குருமூர்த்தி  வாயி.. லில்,
”கலைஞர் நாட்டுக்கே உரியவர்
நல்லவர், பெரியவர்” என
சந்தியா வந்தன நடிப்பு!

அவர் இறந்த
அடுத்த நொடியே
கலைஞருக்கு மெரினாவில்
இடம் தரக் கூடாது என
கட்டுக்கடங்காத, கர்ப்பம் தாங்காத
பார்ப்பனக் கொழுப்பு!

பல முறை
வதந்திகளின் மலர் வளையத்தோடு
திரிந்த ஆரியப் பாம்புகள்
சந்துக்கு சந்து டுவிட்டரில் சிலிர்ப்பு!
முகநூலில்
பூநூல் முளைப்பு.

வெறுக்க வேண்டியதை
வெறுத்ததனால்
ரிஷிக்கோத்திரங்களுக்கு
கலைஞர் மீது வெறுப்பு!

விட்டாரா கலைஞர்?
பிறந்த குழந்தை
உதைப்பதில் என்ன பெருமை!
இறந்த குழந்தை
எட்டி உதைத்தது போல்
பார்ப்பன வெறுப்பின் முகத்தில்
காலை நீட்டிவிட்டு
கம்பீரமாய்
மெரினாவில் கலைஞரின் விதைப்பு!

இறந்தவர் முகத்திலோ
இன்னும் யோசிப்பதுபோல
ஒரு திளைப்பு.
வயிற்றெரிச்சல் குலங்களின்
முகத்திலோ
வற்றாத  சவக்களை,
செத்துப்பிழைத்த தவிப்பு.

மக்களுக்காக
தினையளவு சிந்திப்பவரையும்
மக்களுக்கு பிடிக்கும்.
கலைஞரை
மக்களுக்கு பிடிக்கும்
காரணம் இதுதான்.

அடிமைத்தனத்தை
எதிர்ப்பதே அறிவு
என தெளிந்த பருவம் முதல்
முதிர்ந்த பருவம் வரை,
உலகின் கொடிய
ஆரியப் பார்ப்பன
மனித விரோத மனுநீதியை
எதிர்த்துச் சமர் புரியும்
வலியை உணர்பவர்களுக்கு
வருகிறது
கலைஞருக்காக கண்ணீர்!

தனக்காக மட்டும்
சிந்திக்கும் வரம்பிருந்தும்
வாழ வாய்ப்பிருந்தும்
தமிழ் நரம்பெங்கும்
பார்ப்பன எதிர்ப்பு விசையை
பாய்ச்ச மறவாத
ஒரு கால நதியை
இழந்த சோகம் இது.

பிறருக்கானதாய்
இருக்க வேண்டும் வாழ்க்கை
தனக்கானதாய்
இருக்க வேண்டும் மரணம்
இந்த தகுதியுடையோரை
வெறுப்பதில்லை மக்கள்.

சமத்துவபுரத்தில்
அவாளுக்கும்
இடம் ஒதுக்கினாலும்,
சமத்துவம் என்றாலே
அவாளுக்கு வெறுப்பு
மயிலாப்பூர் தீர்த்தம் மட்டுமல்ல
வங்க கடலும்
அவாளது என்ற நினைப்பு!

பின்னே,
காத்துவாங்க வருமிடத்தில்
கலைஞரைப் பார்த்தால்
வியர்த்து வாங்காதா?

பாலம் கட்ட
ராமன் என்ன என்ஜினியரா?
குரங்கு என்ன கொத்தனாரா?
என்ற கரகரப்பு
தொண்டைக்கு வந்து படுத்தாதா!

கண்ணுக்கெட்டிய தூரம் வரை…
கலைஞர் மறைந்ததாய்
அவாள் நம்பவில்லை
தமிழர்களே!
தயவுசெய்து
அந்த நம்பிக்கையை
கெடுக்காதீர்கள்!

  • துரை. சண்முகம்

வெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்

மே நாள் சிலிர்ப்புகள் – துரை. சண்முகம்

நான்தாம்பா ரஜினிகாந்த்! | துரை.சண்முகம்

கனடாவில் எனது முதல் சம்பளம் | அ.முத்துலிங்கம்

வாழ்நாள் ஆசை என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று இருக்கும். என்னுடைய ஆசை கனடாவில் ஒரு நாளாவது வேலை செய்வது. வேலை என்றால் தொண்டு வேலை அல்ல; அது நிறையச் செய்துகொண்டிருக்கிறேன். சம்பளத்துக்கு வேலை.

என்ன வேலை என்றாலும் பரவாயில்லை. தோட்ட வேலை. சூப்பர் மார்க்கெட்டில் வண்டில் தள்ளும் வேலை. உணவகத்தில் கோப்பை எடுக்கும் அல்லது கழுவும் வேலை. மூளை உபயோகிக்கும் வேலை மட்டும் வேண்டாம். அதுவும் கணக்கு எழுதும் வேலை எனக்கு தேவையே இல்லை. வாழ்நாள் முழுக்க அதைத்தானே செய்தேன். சுப்பர்மார்க்கட்டில் வண்டி தள்ளும் வேலைக்கு முயற்சி செய்தேன்.

வாடிக்கையாளர்கள் சாமான்களை வண்டிலிலே வைத்து தள்ளிச் சென்று காரிலே சாமான்களை ஏற்றி வண்டியை விட்டுவிட்டு போவார்கள். அவற்றை சேகரித்து சூப்பர்மார்கட் உள்ளே கொண்டு போய் நிறுத்தவேண்டும்.

Supermarket-Trolleyஅதைக் கெடுத்தவர் புலம்பெயர்ந்த தமிழர்தான். அவர் அங்கே 30 வருடமாக வேலை செய்கிறாராம். 20 வண்டிகளை சேகரித்து ஒரேயடியாக உள்ளே தள்ளிக்கொண்டு போவதில் ஒரு சாதனை வைத்திருந்தார். அந்தச் சாதனையை நான் முறியடித்துவிடுவேன் என பயந்தாரோ என்னவோ, அந்த வேலை எனக்கு கிடைக்காமல் தடுத்துவிட்டார்.

வேறு பல வேலைகளுக்கு முயற்சிகள் செய்தாலும் அவை தோல்வியிலேயே முடிந்தன. இப்படி நான் சோர்ந்துபோய் இருந்த சமயம்தான் ஒரு நாள் அதிகாலை டெலிபோன் மணி அடித்தது. மற்றப் பக்கம் இருந்தவர் ஒரு நிமிடம் பேசிய பின்னர்தான் அவர் ஆங்கிலம் பேசுகிறார் என்று எனக்குப் புரிந்தது. அவர் சீனாக்காரராக இருக்கலாம்.

தமிழ் – ஆங்கில மொழிபெயர்ப்புக்கு வரமுடியுமா என்று என்னிடம் கேட்டார்.

எப்போது என்று கேட்டேன்.

இன்றைக்கு.

எத்தனை மணிக்கு?

காலை 9 மணி.

என்ன இடம்?

அவர் முகவரியை சொல்லச் சொல்ல எழுதினேன். தூரமான தேசம். தொலைந்துபோவதற்கான வாய்ப்ப்புகள் அதிகம். நான் அது பற்றி யோசிக்கும்போதே வாய் ’சரி வருகிறேன்’ என்று சொல்லிவிட்டது.

Translatorஒன்பது மணிக்கு ஒரு நிமிடம் இருக்கும்போது போய்ச் சேர்ந்தேன். நான் சந்தித்தது ஒரு யூதப் பெண்மணி. பெயர் எமூனா என்றார். அவர் உடையும், இருந்த தோரணையும், பேசிய விதமும் எனக்குப் பிடித்துக்கொண்டது. கருணை உள்ளவர் என்று உடனேயே என் மனதில் பதிந்தது.

காப்புறுதி நிறுவனம் சார்பில் விபத்தில் மாட்டிய ஒரு தமிழ் பெண்மணியின் உடல், மன நிலையை அவர் மதிப்பீடு செய்யவேண்டும். இவருடைய மதிப்பீட்டின் அளவுகோல் படி அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு வழங்கப் படும் என்பதை எமூனாவே என்னிடம் சொன்னார்.

விபத்தில் மாட்டிய பெண்ணின் பெயர் சின்னநாயகி என்று எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். பெரியநாயகி கேள்விப்பட்டிருக்கிறேன். சின்னநாயகி புதிதாக இருந்தது.

அவர் ஒரு திருமண விழாவுக்கு உறவுக்காரருடன் காரில் போய்க்கொண்டிருந்தபோது வேறு காருடன் மோதி விபத்து நடந்தது. மூன்று நாள் மருத்துவமனையில் நினைவு தப்பிக் கிடந்தார். உடம்பில் பல இடங்களில் முறிவு. தலையில் பலமான அடி. காரில் பயணம் செய்த மற்றவர்கள் சிறிய காயங்களுடன் தப்பிவிட்டனர். ஒருமாத காலமாக இவருக்கு சிகிச்சை நடந்தது. இப்பொழுது வீட்டில் இருந்து சிறிது சிறிதாக தேறி வருகிறார். இந்த விவரங்கள் நான் பின்னர் தெரிந்து கொண்டதுதான்.

சின்னநாயகி கட்டையாக உருண்டையாக இருந்தார். முகத்திலே நிரந்தரமான வலிபோன்ற தோற்றம். யாழ்ப்பாணத்தில் தமிழ் ஆசிரியையாக வேலை செய்து புலம்பெயர்ந்தவர். அவருக்கு கணவரும் ஒரு மகனும் மட்டுமே.

நோயாளியும் மொழிபெயர்ப்பாளரும் அவர்களுக்குள் பேசுவது தடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் சின்னநாயகி இடைவேளைகளில் தன் சரிதத்தை எனக்குச் சொல்லிவிடுவார். மகன் அவரை இங்கே இறக்கிவிட்டு வேலைக்கு போயிருக்கிறார். பின்னேரம் வந்து அவரை வீட்டுக்கு கூட்டிப் போவார். ‘என்ரை நிலைமையை எடுத்துச் சொல்லுங்கோ’ என்று அடிக்கடி எனக்கு நினைவூட்டினார்.

நான் மொழிபெயர்ப்பதற்கு தயாராக இருந்தேன். எமூனா ஆரம்பித்தார்.

இன்று எப்படி உடம்பு இருக்கிறது?

வலிதான். வலியில்லாத ஒரு நிமிடத்தைக்கூட நான் அனுபவித்தது கிடையாது.

இரவு தூங்கினீர்களா?

நித்திரை மாத்திரை போட்டுவிட்டு படுத்தேன். மூன்று மணி நேரம் தூங்கினேன். பின்னர் எழும்பி இன்னொரு வலி மாத்திரை போட்டேன். சிறிது நடந்தேன். சுடுதண்ணீர் வைத்துக் குடித்தேன். தூங்க முடியவில்லை.

உங்களுக்கு சொல்லித்தந்த உடல் பயிற்சிகளை செய்கிறீர்களா?

பயிற்சி செய்தால் வலி இன்னும் கூடுகிறதே. ஏதோ கொஞ்சம் ஏலக்கூடியதை செய்கிறேன்.

கல்யாணவீடு, பிறந்தநாள் கொண்டாட்டம் இப்படியான நிகழ்வுகளுக்கு போகிறீர்களா?

அப்படிப் போனால் உங்களுக்கு நல்லது என்று சொல்லியிருக்கிறேன். முகத்தில் சிரிப்பு வரும்.

போகிறேன். என்னுடைய அக்கா அதுகளுக்கு கூட்டிப் போவார்.

நல்லது. நல்லது. உங்கள் சுவாச…….

திடீரென்று சின்னநாயகி எழுந்து நின்று தாதி வெப்பமானியை உதறுவதுபோல கையை உதறினார். என்ன என்று கேட்டபோது மருத்துவருடைய குறிப்பை மறந்துவிட்டார் என்றும் அதை எடுத்துவர வெளியே போகவேண்டும் என்றார். சிறிது நேரத்தில் குறிப்பை எடுத்து வந்து எமூனாவிடம் நீட்டினார்.

உங்கள் மருத்துவரும் சுவாசப் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறார். இது என்ன புதிதாக இருக்கிறது?

மூச்சு விடக் கஷ்டம். பாதி மூச்சுத்தான் வருகிறது. சுவாசப்பை நிறைவதே இல்லை. உடனே களைப்பும் வருகிறது என்றுவிட்டு இளைத்தார்.

நீங்கள் உங்கள் சமூகக் கூட்டங்களில் பாடியுள்ளதாக முன்பு சொன்னீர்களே. எங்கே ஒரு பாட்டுப் பாடுங்கள் பார்ப்போம்.

உடனே சின்னநாயகியிடம் ஒரு மாற்றம் வந்தது. முகத்திலே சிரிப்பும் தோன்றியது. அழகாகக்கூட தெரிந்தார்.

சுவாசமே சுவாசமே
என்ன சொல்லி என்னை சொல்ல
காதல் என்னை கையால் தள்ள
இதயம்தான் சரிந்ததே உன்னிடம்
சுவாசமே சுவாசமே.

அவர் படித்த சங்கீதத்தில் கொஞ்சம் மீதி இன்னும் இருந்தது. இரண்டு மைல் ஓடியதுபோல அவருக்கு மேலும் கீழும் இழுத்தது. நான் திகிலுடன் மொழிபெயர்க்க வேண்டுமா என்பதுபோல பார்த்தேன்.

எமூனா வேண்டாம் என்றார்.

தொடர்ந்து சின்னநாயகி பேசினார். திடீரென்று வலி வருகிறது. சிவப்பு வலி மாத்திரை போட்டாலும் போகுதில்லை. மஞ்சள் போட்டாலும் போகுதில்லை. அது நினைத்த பாட்டுக்கு வருகிறது. நினைத்த நேரம் போகிறது.

கழுத்து வலியா?

இல்லை, கை வலி.

அங்கேயுமா? நடுச்சாமத்தில் வலி வந்தால் என்ன செய்வீர்கள்?

கையை நீட்டிக்கொண்டு சுடுதண்ணீர் பைப்பை திறந்துவிடுவேன். முதலில் குளிர்ந்த தண்ணீர் வரும். பின்னர் அது சூடாகி சுடுநீர் வரும். அதை மாறி மாறிப் பிடிப்பேன். வலி போகாது. கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

உங்கள் கணவரையும் நீங்கள்தான் பார்க்கவேண்டுமா?

வேறு ஆர்? நான்தான் பார்க்கவேண்டும். அவர் மறதி என்னிலும் மோசம். குளிர் பெட்டியை திறந்து தலையை நுழைத்து எதையோ தேடுவார். ஆனால் மறந்துவிடும். கதவு வந்து அவர் முதுகில் அடிக்கும். அப்படியே உறைந்த கல்லைப்போல நிற்பார்.

போனதடவை உங்களுக்கும் மறதி வருகிறது என்று சொன்னீர்களே.

அதுதான் மோசம். பக்கத்து கடைக்கு போனால் என்ன சாமான் வாங்க வந்தேன் என்பது நினைவில் இல்லை. ஒருநாள் எங்கே நிற்கிறேன் என்பது மறந்துவிட்டது. என்னுடைய வீட்டு முகவரியும் ஞாபகத்தில் இல்லை. 9 வயதுச் சிறுமி ஒருத்தி என்னப் பிடித்து அழைத்துப்போய் வீட்டில் சேர்த்தாள்.

உங்கள் பெயரையும் முகவரியையும் டெலிபோன் நம்பரையும் ஓர் அட்டையில் எழுதி அதை எந்நேரமும் கழுத்தில் தொங்க விடவேண்டும். அதை கடந்த தடவை சொன்னேனே.

அதுவும் எனக்கு மறந்துபோனது.

சரி, மருந்தாவது கிரமமாக எடுக்கிறீர்களா?

Tabletஎங்கே எடுக்கிறேன். எனக்கு அதைப் பார்த்து நேரத்துக்கு நேரம் தவறாமல் தர ஒருவரும் இல்லையே. சிலவேளை முற்றிலும் மறந்துபோகிறேன்.

இப்படி எங்கள் அறிவுரைகளை உதாசீனம் செய்தால் எப்படி உடம்பு சுகப்படும்?

திடீரென்று ஒரு பழைய பாடலை சின்னநாயகி சொன்னார். ’அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி/ எடுத்த கருமங்கள் ஆகா – கொடுத்த/ உருவத்தால் நீண்ட உயர் மரங்கள் எல்லாம்/ பருவத்தால் அன்றி பழா.

நான் அங்குமிங்கும் தலையை திருப்பினேன். அதையும் மொழிபெயர்ப்பதா என்பதுபோல பரிதாபமாக எமூனாவைப் பார்த்தேன். அவர் மொழிபெயர்க்கச் சொன்னார்.

சுருக்கமாக ’எது எது எப்போ நடக்கவேண்டுமோ அது அது அப்போ நடக்கும்’ என்றேன்.

உங்கள் கால்வலி எப்படி?

உடனேயே சின்னநாயகியின் முகம் மலர்ந்தது. சொல்லவேணும் சொல்லவேணும் என்று நினைத்து வந்தனான். எல்லாம் மறந்துவிட்டது. அந்த வலியை விளங்கப்படுத்தவே முடியாது. எலும்புக்குள் இருந்து தொடங்கும். வித்தியாசமானது.

அது என்ன வித்தியாசமான வலி?

வித்தியாசம் என்றால் வித்தியாசம்தான். அமெரிக்கா காசும் காசு. கனடா காசும் காசு. ஆனால் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

எமூனா சிரித்தார். நானும் சிரித்தேன்.

உடனேயே சின்னநாயகி உசார் வந்து இடது கால் சப்பாத்தை அதிகாரிக்கு காட்டுவதற்காக சட்டென்று குனிந்து அகற்றினார். ஒருவிதமான மோசமான நாற்றம் எழுந்தது. சதை அழுகிய மணம். காற்றின் நிறம்கூட மாறியதுபோல எனக்குப் பட்டது. எமூனா பார்க்கும் முன்னரே நான் அவர் பாதத்தை பார்த்துவிட்டேன்.

வீங்கி வரிவரியாக சிவந்துபோய் முயல்குட்டி போல உட்கார்ந்திருந்தது. அதற்குள் இருந்து என்னவோ வெளியே வரத் துடித்தது. கால் விரல்கள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப்போய் வாத்தின் விரல்கள்போல ஆகிவிட்டன.

’மூடுங்கள் மூடுங்கள்’ என்று எமூனா கத்தினார். நாங்கள் அங்கேயிருந்த ஒரு மணி நேரத்தில் முதல் தடவையாக எமூனா குரலை உயர்த்தினார்.

இப்பொழுது வலி எண் என்னவென்று அமைதியாக கேட்டார்.

எந்த வலி?

எது ஆகக்கூடிய வலியோ அது?

ஒன்று என்றார். நான் மொழிபெயர்க்காமல் அவரிடம் ஒன்றா என்று கேட்டேன். ஆமாம் முதல் நம்பர் வலி. இதை மீறியது இல்லை என்றார்.

நான் எமூனாவிடம் 10 என்று சொன்னேன். அதாவது ஆகக் கூடிய வலி. அவர் அதை எழுதிக்கொண்டார்.

சில நாட்கள் கழித்து அந்தப் பெண்ணுக்கு இழப்பீடு கிடைத்துவிட்டதாக அறிந்தேன். தொகை தெரியவில்லை. ஒரு லட்சம் டொலராக இருக்கலாம். ஒரு மில்லியன் கூட இருந்தாலும் அதிசயப்படக் கூடாது. அந்த இழப்பீட்டுப் பணத்தில் என் பங்கும் இருந்தது. எமூனா வைத்திருந்த கோப்பில் சின்னநாயகியின் படம் ஒன்று இருந்தது. விபத்துக்கு முன்னர் எடுத்ததாக இருக்கலாம். நான் அதை என் பக்கத்தில் இருந்து தலை கீழாகப் பார்த்தேன். சிரித்த முகம். ஒரு கணநேரத்தில் நடந்த விபத்தில் அவர் முகம் அப்படி மாறிவிட்டது. இனிமேல் அவருக்கு அதுதான் முகம். ஒரு மில்லியன் டொலர்கூட அந்த வலி முகத்தை மாற்றமுடியாது.

* * *

ன்று என்னுடைய சம்பளக் காசு வந்தது. மொழிபெயர்த்த வேலைக்காக சீனாக்காரர் அதை மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அது பேசாமல் போய் எனக்குத் தெரியாமல் என்னுடைய வங்கிக் கணக்கில் அமர்ந்துவிட்டது. காசு அனுப்பிய விவரம் குறுஞ்செய்தியாக வந்தது. ஒருவரும் எனக்கு மின்னஞ்சலில் பணம் அனுப்பியது கிடையாது. நான் கம்புயூட்டரை திறந்து என் வங்கிக் கணக்கில் சென்று பார்த்தேன். உண்மைதான், 50 டொலர் அங்கே புதிதாக உட்கார்ந்திருந்தது. என் முதல் சம்பளம். அப்படியே, அது என்ன வார்த்தை, உடம்பு எல்லாம் புளகாங்கிதம் அடைந்தது.

hands salary 1நான் மனைவியை வரச்சொல்லி கத்தினேன். நான் கீழே நிலவறையில் கம்ப்யூட்டருக்கு முன் அமர்ந்திருந்தேன். அவர் வேலையாக மேலே இருந்தார். 12 படிகளையும் ஒவ்வொன்றாகக் கடந்து கீழே வந்தார். நான் கம்புயூட்டரைக் காட்டினேன்.

அவர் நெடுநேரம் பார்த்தார். மிருகக்காட்சி சாலையில் நூதனமான ஒரு மிருகத்தைப் பார்ப்பதுபோல உற்றுப் பார்த்தார். தெரிகிறதா? என்றேன். ஓமோம் என்று அதிசயமாகத் தலையாட்டினார். 50 டொலர் அங்கே இருப்பதை அவரும் உறுதி செய்தார். என் முதல் சம்பளக் காசு.

மனம் குதித்தது. என்ன செய்வது? என்ன செய்வது? ஒரு காலத்தில் இலங்கையில் 19 வயது நடந்தபோது எனக்கு முதல் வேலை கிடைத்தது. அரசாங்க பஸ்களின் நூற்றுக்கணக்கான டயர் நம்பர்களை கணக்கெடுத்து எழுதிக் கொடுப்பது. என்னுடன் சேர்ந்து 50, 60 மாணவர்கள் வேலை செய்தார்கள். ஒரு வாரம் கழித்து வேலை முடிந்தபோது சம்பளம் தந்தார்கள். 150 ரூபா. முதல் சம்பளம். அத்தனை பெரிய காசை நான் பார்த்தது கிடையாது. என் அப்பாவும் பார்த்ததில்லை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. அன்றிரவு முழுக்க தூங்காமல் யோசித்தேன்.

மணிக்கு இரண்டு தடவை காசை எண்ணிப் பார்த்தேன். வீட்டிலேயே திருடர்கள் இருந்ததால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

அடுத்தநாள் கடைக்குப் போய் ஒரு கைக்கடிகாரம் வாங்கினேன். சரியாக 150 ரூபாய். வைலர் கைக்கடிகாரம். உடனேயே நேரத்தை பார்த்தேன். 10.11. சிறிது நேரம் கழித்து 10.12. இன்னும் கொஞ்ச நேரம் கழித்து 10.13. அன்று முழுக்க ஒவ்வொரு நிமிடமும் அதைப் பார்த்தேன். என் மனம் ஓடியதுபோலவே அதுவும் போட்டியாக ஓடியது.

அது அப்போது. இப்பொழுது கனடா நாட்டில் என்னுடைய முதல் சம்பளமாக கிடைத்த 50 டொலரை என்ன செய்வது? எத்தனை பெரிய காசு? இந்திய ரூபாயில் 2600. இலங்கை ரூபாவில் 6000. யப்பானிய யென்னில் 4200. இத்தாலியன் லீராவில் 64,150. இன்றிரவு தூங்காமல் இதைப் பற்றி யோசிப்போம். நாளை இரவும் யோசிப்போம். எத்தனை கொண்டாட்டமான நிகழ்வு. அதில் கொஞ்சம் வலியும் இருந்தது.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் 
முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

***
(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

போர் என்பது பணம் | கேலிச்சித்திரங்கள்

லகில் 2016-இன் கணக்குப் படி 1.69 டிரில்லியன் டாலர் பணத்தை அனைத்து நாடுகளும் செலவிட்டுள்ளன. இப்பணம் உலக ஜி.டி.பி. எனும் உலகின் மொத்த உள்நாட்டு வருமானத்தில் 2% ஆகும். உலக அளவில் வல்லரசு நாடுகளே பெருமளவு பணத்தை இராணுவத்தில் செலவழிக்கின்றன.

இரத்த வியாபாரம்

போர்தான் பணம்

போர்வெறியர்கள்

காரணமும் விளைவும்

ஆயுத முதலை

பயமுறுத்துதல்

ஆயுத கேக்

வழக்கொழிந்தது

சிசிபஸ் (கிரேக்க புராணத்தில் ஏவோலஸ்-ன் மகன் – இவர் செய்த தவறுகளுக்காக ஒரு பெரும் பாறையை கீழிருந்து மலை உச்சிக்கு உருட்டிச் செல்லும் தண்டனையை ஹேட்ஸ் கொடுத்தார்)

நன்றி: cartoonmovement.com

தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு மக்கள் அதிகாரம் அஞ்சலி

கருணாநிதி மரணம்
07-08-2018
லைஞர் மு கருணாநிதி மறைந்து விட்டார். கலைஞர் என்றழைப்பதில் உறவைச் சொல்லி அழைப்பதைப் போன்றதொரு நேசம் பழகி விட்டது.
காவிரி மருத்துவமனையின் வாசலில் நாம் கண்டது அப்போலோ வாசலில் பார்த்த கூட்டத்தை ஒத்ததல்ல, இவர்கள் வேறு. மூப்பும் மரணமும் இயற்கை என்ற போதிலும், அரசியல் விமரிசனங்கள் நினைவில் நிழலாடிய போதிலும், கண்ணீர் தன் போக்கில் கண்களில் திரண்டு நிற்கிறது.
 
தொலைக்காட்சிகளில் பராசக்தி வசனம் ஒலிக்கிறது.
 
“பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு, தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் என்ன விதிவிலக்கா?” என்ற கேள்வி அன்று முதல் இன்று வரை வயிற்றுப் பாட்டுக்காக நாடு விட்டு நாடு அலையும் உழைப்பாளி வர்க்கத்தின் குரலை ஒலிக்கிறது. அது அன்று தமிழன் என்ற அடையாளத்தைக் கடந்தும் ஒலித்த இயல்பான வர்க்க கோபம்.
 
“அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்?” என்ற கேள்வி பகுத்தறிவாளனின் அறிவு எழுப்பும் கேள்வியாக மட்டும் இல்லை. “கடவுளே உனக்கு கண்ணில்லையா” என்று கையறுநிலையில் நின்று கதறும் பக்தனின் இதயத்திலிருந்து வடியும் கண்ணீரும் அந்த வரிகளில் இருக்கிறது.
அந்த வசனங்களின் வாயிலாக, தாமே அறியாமலிருந்த தமது உள்ளக்குமுறலை தமிழ் மக்களின் காதுகளில் ஒலிக்கச் செய்த இளைஞன் கருணாநிதியின் முகம் நம் மனத்திரையிலிருந்து அகல மறுக்கின்றது.
 
கருணாநிதி மரணம்தமிழ்த்தாய் வாழ்த்தைக் கேட்கும்போது, இந்து இந்தியாவுக்கு எதிராக குமரியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கும் திருவள்ளுவரைக் காணும்போது, தமிழகம் முழுவதும் பரவியிருக்கும் சமத்துவபுரங்களைக் கடந்து செல்லும்போது, அண்ணா நூலகத்தில் அமர்ந்திருக்கும்போது, தேர்தல் அரசியலின் குறுகிய எல்லையை மீற விழையும் கலைஞர் தெரிகிறார்.
அவசர நிலையை எதிர்த்த கருணாநிதி, “மாநிலங்கள் என்ன உள்நாட்டு காலனியா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, இந்திய அமைதிப்படை எனும் ஆக்கிரமிப்புப் படையை வரவேற்க மறுத்த கருணாநிதி, “ராமன் என்ன எஞ்சினீயரா” என்று கேள்வி எழுப்பிய கருணாநிதி, தமிழை வடமொழியின் பிடியிலிருந்தும், தமிழ்ப்புத்தாண்டை பார்ப்பனியத்திடமிருந்தும் விடுவிக்கத் துடித்த கருணாநிதி – நம் நினைவில் நிற்கிறார்.
 
பெண்கள், திருநங்கைகள், குறவர்கள், புதிரை வண்ணார், ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், குடிசை வாழ் மக்கள், கட்டிடத்தொழிலாளிகள் போன்ற உதிரித் தொழிலாளிகள்.. என சமூகத்தின் புறக்கணிக்கப்பட்ட மக்கட்பிரிவினரின் பால் இயல்பான பரிவு கொண்டிருந்த கருணாநிதி, அத்தகைய அரசியல்வாதி வேறு யார் என்று நம்மை சிந்திக்கத் தூண்டுகிறார்.
 
*****
 
நினைவில் உறுத்தும் சமரசங்களும் சரணடைவுகளும் இருக்கத்தான் செய்கின்றன. அவை தேர்தல் அரசியலின் வரம்பும், பிழைப்புவாதக் கட்சியின் நிர்ப்பந்தங்களும் ஏற்படுத்திய தெரிவுகள்.
இந்திராவுடனும், பாஜக வுடனும் ஏற்படுத்திக்கொண்ட கூட்டணிகள், அபாண்டமாக சுமத்தப்பட்ட ராஜீவ் கொலைப்பழியை எதிர்த்து நிற்கத்தவறிய அச்சம், தில்லிக்குப் பணிந்து ஏவப்பட்ட அடக்குமுறைகள், ஈழத்தின் இனப்படுகொலையின் போதும் கூட துறக்க முடியாத பதவி மயக்கம், இன்னும் தேர்தல் அரசியல் கட்சிகளுக்குரிய சீரழிவுகள் பலவற்றைப் பட்டியலிடலாம்.
 
அவை, இந்த அரசியல் கட்டமைப்பின் வரம்புக்குள் நின்று இலட்சிய சமூகத்தைப் படைக்க விழையும் எந்த ஒரு தனிநபரும், அரசியல் கட்சியும் எதிர்கொள்ள வேண்டிய வீழ்ச்சிகள். “திமுக என்ற கட்சி வேறு விதமாக இருந்திருக்க இயலுமா” என்றொரு கேள்வியை எழுப்பினால், அதற்கான விடையை திமுக வின் வரலாற்றில் தேடுவதே பொருத்தமானது. அந்த அளவில், தான் ஆற்றிய பாத்திரத்துக்கு அவரும் பொறுப்பு.
 
அன்றி, “கலைஞர் நினைத்திருந்தால்” என்று பேசுவோரின் பார்வை பிழையானது, தனிநபரின் வழியாக அரசியலையும் வரலாற்றையும் பார்ப்பவர்கள் தனிநபரை வழிபடுகிறார்கள், அல்லது அவரைத் தனிப்பட்ட முறையில் குற்றப்படுத்துகிறார்கள்.
 
இவ்வீழ்ச்சிகள் அனைத்தும் திராவிட இயக்கமும் அதன் சமூக அடித்தளமாக அமைந்த மக்கட்பிரிவினரும், மெல்ல அரசதிகாரத்தில் நிறுவனமயமானதுடன் தொடர்பு கொண்டவை. இந்திய தேசிய அரசமைப்பில் நிறுவனமயமானவர்களுள் வெகு வேகமாக வீழ்ச்சியடைந்தவர்கள் திராவிட இயக்கத்தினரா, கம்யூனிஸ்டுகளா, சோசலிஸ்டுகளா, தலித் இயக்கத்தினரா என்றொரு ஒப்பாய்வு வேண்டுமானால் இவ்விசயத்தைப் புரிந்து கொள்ள நமக்கு உதவக்கூடும்.
 
*****
 
ஓர் அரசியல் ஆளுமை என்ற முறையில் கருணாநிதியோடு ஒப்பிடத்தக்க பன்முக ஆளுமை கொண்டவர் யார்? ஆக ஒடுக்கப்பட்ட, அவமதிக்கப்பட்ட ஒரு சமூகத்தில் பிறந்து, தன் போராட்டக் குணத்தால் ஆளுமைத் திறனையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டு, இந்த சாதி ஆதிக்க சமூகத்தில் சாதித்து நிற்பது சாதாரணமல்ல. இது வெறும் அரசியல் சாமர்த்தியம் அல்ல. கருணாநிதியை ஒப்பிடுகையில் இந்திய அரசியலில் பலரும் சித்திரக் குள்ளர்களே.
எனினும் தமிழர்களுக்கு எதிராக இந்து- இந்தி தேசியம் கொண்டிருக்கும் தனிச்சிறப்பான வெறுப்பின் முதன்மை இலக்காக இருந்தவர் கருணாநிதி.
 
டில்லியிடம் சரணடைந்து விட்டதாக அவரை யார் எவ்வளவு விமரிசித்தாலும், டில்லியும், பார்ப்பன ஆதிக்க சக்திகளும் கருணாநிதியையும் திமுகவையும் எல்லாக் காலத்திலும் எதிரியாகத்தான் கருதியிருக்கின்றனர் என்பது மறுக்கவியலாத உண்மை.
 
1971 தேர்தலில் திமுக பெற்ற வெற்றியைக் கண்டு அஞ்சிய காங்கிரசு எம்ஜிஆரை வைத்து திமுகவை உடைத்தது. பிறகு ராஜீவ் கொலைக்கு திமுக மீது பொய்ப்பழி சுமத்தி ஜெயலலிதாவை பதவியில் அமர்த்தியது. அடுத்து இந்தியாவின் ஏகபோகத் திருடர்களான பார்ப்பன பனியா கும்பலின் கட்சியான பாரதிய ஜனதா, ஒன்றே முக்கால் லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல் என்ற மாபெரும் சதி நாடகத்தை அரங்கேற்றி, நாட்டையே திமுக கொள்ளையடித்து விட்டதைப் போன்றதொரு பொய்மைக்குள் நம்மைப் புதைத்தது.
 
எந்த விதமான கொள்கையுமற்ற ஊழல் – கிரிமினல் கும்பலின் தலைவியான தண்டிக்கப்பட்ட குற்றவாளி ஜெயலலிதாவையும் அதிமுகவையும் தமது “இயற்கையான கூட்டாளிகள்” என்றே பாஜகவும் சங்க பரிவாரமும் கருதுகின்றன. அதாவது “அவர்களுடைய இயற்கையான எதிரி” கருணாநிதி. வாஜ்பாயியை ஜெயலலிதா கழுத்தறுத்த போதிலும், திமுக அவரது நம்பகமான கூட்டணிக் கட்சியாக நடந்து கொண்ட போதிலும், “நீரடித்து நீர் விலகாது” என்று போயஸ் தோட்டத்துடன்தான் இந்திய தேசியப் பார்ப்பனியர்கள் ஒட்டிக் கொண்டார்கள்.
ஆகவே, சங்கபரிவாரத்தின் இயற்கையான எதிரியை நாம் நமது இயற்கையான நட்பு சக்தியாகக் கொள்வது தவிர்க்கவியலாதது. “திமுகவுக்கும் அதிமுகவுக்கும் வேறுபாடு இல்லை” என்று யார் கூறினாலும் அவ்வாறு கூறுவோர் அதிமுக வை ஆதரிக்கின்றனர். அல்லது பாஜக வின் கருத்தைப் பேசுகின்றனர். இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்ப்பதாகப் பேசுபவர்களும் அத்தகையோரே.
“திராவிடத்தால் வீழ்ந்தோம்” என்று பேசும் தமிழ் பாசிஸ்டுகளும், “திராவிட இயக்கங்களின் ஆட்சி தமிழகத்தை குட்டிச்சுவராக்கி விட்டது” என்று பேசும் பார்ப்பன தேசியவாதிகளும் ஒரே சுருதியில் இணைகிறார்கள். உண்மையில் அவர்கள் உள்ளத்தில் இருப்பது வெறி பிடித்த கருணாநிதி துவேசம், திமுக வெறுப்பு.
 
கருணாநிதியோடு ஒப்பிட்டு ஜெயலலிதாவின் தைரியத்தை மெச்சுபவர்களும், எம்ஜியார் காட்டிய “ஏட்டிக்குப்போட்டி தமிழுணர்வை” சிலாகிப்பவர்களும் ஒரு வகையில் ஜனநாயக உணர்வற்ற அடிமை மனோபாவத்தையே வெளிப்படுத்துகிறார்கள்.
 
*****
 
கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
“கொடியவர்கள் கோயில்களைத் தம் கூடாரமாக்கிக் கொள்ள முனையும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“மாநிலங்கள் உள்நாட்டுக் காலனிகளாக மாற்றப்படும் காலத்தில்” கலைஞர் விடைபெற்றுக் கொள்கிறார்.
“இந்தியும் சமஸ்கிருதமும் மத மவுடீகங்களும் மீண்டும் கோலோச்சத் துடிக்கும் காலத்தில்” கலைஞர் விடை பெற்றுக் கொள்கிறார்.
இந்துத்துவப் பாசிசம் அச்சுறுத்தும் காலத்தில் அவர் விடைபெற்றுக் கொள்கிறார்.
காலத்தின் தேவைகள் அவற்றை அடைவதற்குப் பொருத்தமான பாதையைப் பின்பற்றுமாறு நம்மைக் கோருகின்றன.
கடந்து வந்த பாதையைக் காய்தல் உவத்தல் இன்றி மீளாய்வு செய்வதும், அதனடிப்படையில் இனி செல்ல வேண்டிய பாதையைத் தீர்மானிப்பதும், கண் கலங்கி நிற்கும் அனைவரின் கடமை.
கலைஞரின் குடும்பத்தினர்க்கும் தி.மு.க தொண்டர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
– மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

சிறைச்சாலைகள் சமூகத்தின் உறுப்பு ! தோழர் தியாகு

“காவல்துறைதான் கைதிகளின் விடுதலையை தீர்மானிக்கிறது!”:
அரசியல் செயல்பாட்டாளர் தியாகு நேர்காணல்

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, தன் வாழ்நாளில் 15 ஆண்டுகள் சிறையில் கழித்தவர் தியாகு. சிறைப்பட்டோரின் உரிமை, சிறைகளின் நிலைமை, அரசு எந்திரங்களின் மனோபாவம் பற்றி அரசியல் செயல்பாட்டாளர் தியாகு பேசுகிறார்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்டகால சிறைவாசிகளை விடுதலை செய்வதில் பாகுபாடு காட்டக் கூடாது என்ற கோரிக்கை எழுப்பப்படும் நேரத்தில் இந்த நேர்காணல் முக்கியத்துவம் பெறுகிறது. த டைம்ஸ் டாட் தமிழ் காமிற்காக நேர்காணல் செய்தவர் பீட்டர் துரைராஜ்.

எந்த மாநிலத்தில் சிறைச்சாலை சீர்திருத்தங்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கருதுகிறீர்கள்?

கேரளா. இதற்குக் காரணம் ஆட்சியாளர்கள் கம்யூனிஸ்டுகள் என்பதால் அல்ல. மேற்கு வங்காளச் சிறைகள் தமிழ்நாட்டை விட மோசமாக இருக்கும். ”போல்ஷ்விக்குகள் அதிகாரத்திற்கு வந்ததால் உருசியாவில் சிறைகள் நன்றாக இருந்தன. அதற்குக் காரணம் அவர்கள் போல்ஷ்விக்குகள் என்பதால் அல்ல; மாறாக அவர்கள் சிறைத் தண்டனை அனுபவித்தவர்கள் என்பதால்” என்று பகத் சிங் எழுதியுள்ளார்.

கேரளாவில் இ.எம்.எஸ்., ஏ.கே.கோபாலன் போன்றோர் சிறையில் இருந்தனர். வி்.ஆர். கிருஷ்ணய்யர் வழக்கறிராக, சட்டமன்ற உறுப்பினராக, சிறைத்துறை அமைச்சராக, நீதிபதியாக பல அனுபவங்களைப் பெற்றவர். எனவே கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி செய்தாலும், கம்யூனிஸ்டு ஆட்சி செய்தாலும் சிறைகள் நன்கு பராமரிக்கப்பட்டு இருக்கும்.

கேரளாவில் கைதிகளின் உழைப்பிற்கு தரும் ஊக்க ஊதியத்தை (incentive) அதிகப்படுத்தினார்கள். அதை வைத்து டோக்கன் கொடுத்து சிறை கேண்டீனில் வடை, தேநீர் போன்றவை கைதிகள் வாங்கிச் சாப்பிட முடியும். வெளியே போகும் போது பணமும் கிடைக்கும். அதே போல கேரளாவில்தான் வேலைக்கு மட்டும் சீருடை, அறையில் இருக்கும் போது வேட்டி அணிந்து கொள்ளலாம் என்று மாற்றம் கொண்டுவந்தார்கள்.

சி.ஏ.பாலன் எழுதிய தூக்குமர நிழலில் நூலைப் படித்தால் அப்போதைய சிறை எப்படி இருந்தது என்று புரிந்து கொள்ள முடியும். மொழிப் போராட்டம், கல்லக்குடி போராட்டம், விலைவாசிப் போராட்டம் என்று தி.மு.க. பெற்ற சிறை அனுபவத்தால் இயல்பாகவே தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் சிறைத்துறை சீர்திருத்தங்கள் ஓரளவு சிறப்பாக நடைபெற்றன.

1967-இல் தி.மு.க. ஆட்சி , கைதிகள் குல்லாய் அணியத் தேவை இல்லை என்று அறிவித்தார்கள். வாரம் ஒரு முறை கடிதம் எழுதலாம், 15 நாட்களுக்கு ஒருமுறை நேர்காணல் பார்க்கலாம் என்ற வசதிகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மேம்பாடு அடைந்தன. 1974 நாங்கள் நடத்திய சிறைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக 1977 எம்.ஜி.ஆர். ஆட்சியில் நீதிபதி நரசிம்மன் கமிசன் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையில்தான் புழல் சிறை கட்டப்பட்டது.

நெருக்கடி நிலைக்கால சென்னை சிறைக் கொடுமைகள் பற்றிய இசுமாயில் கமிசன் அறிக்கையும் சிறைச் சீர்திருத்தங்களுக்குப் பரிந்துரைகள் செய்தது. என்னுடைய சுவருக்குள் சித்திரங்கள், கம்பிக்குள் வெளிச்சங்கள் நூல்களில் இவை பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறேன். சிறைச்சாலைகளை எல்லா அரசுகளும் வைத்துள்ளன.

முதலாளித்துவ அரசாக இருந்தாலும் சரி; கம்யூனிஸ்டு அரசாக இருந்தாலும் சரி. ஈழத்தில் தலைவர் பிரபாகரன் நடத்திய ஆட்சியாக இருந்தாலும் சரி. சிறைகளற்ற சமூகம் இதுவரை அமையவில்லை. சிறைச்சாலைகள் ஒரு மனிதனின் நுரையீரல் போல. நுரையீரல் சரியாக இருந்தால்தான் மூளை, இதயம், கை, கால் போன்ற மற்ற உறுப்புகள் சரியாக இருக்கும்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நீண்ட கால சிறைவாசிகளை முன்விடுதலை செய்யப் போவதாக தமிழ் நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளாரே?

காந்தி நூற்றாண்டு விழா, அண்ணா நூற்றாண்டு விழா என்று ஏற்கெனவே கைதிகளை முன்விடுதலை செய்துள்ளனர். கைதிகளை முன் விடுதலை செய்வதில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்துள்ளது.

முன்னர் விடுதலை அறிவிப்பு வந்தால் குறிப்பிட்ட ஒரே நாளில் கைதிகளை விடுதலை செய்வார்கள். கைதிகள் குடும்பத்தினரோடு மகிழ்ச்சியாகப் போய்க் கொண்டாடுவார்கள். ஆனால் முதலமைச்சர் அறிவிப்பு வந்து சில மாதங்கள் ஆன பின்னரும் இதுவரை நூறு கைதிகள் கூட விடுவிக்கப்படவில்லை; அதுவும் பகுதி, பகுதியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசு விதித்த நிபந்தனைகளின் படியே விடுதலைக்கு தகுதியான 1500 பேர் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதில் பாகுபாடு காட்டக்கூடாது. மத மோதல் வழக்கு (communal cases) வழக்கு என்ற காரணத்தைக் காட்டி பல இசுலாமிய சிறைப்பட்டோர் விடுவிக்கப்படவில்லை.

அவர்களில் ஒரு சிலர் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே உள்ளனர். இப்படி முன்விடுதலை செய்யும் போது செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது; குற்றவாளியை மட்டும்தான் பார்க்க வேண்டும்.

நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது சாட்சி, ஆதாரம் உள்ளிட்ட குற்றத்தைப் பற்றி மட்டும்தான் பார்க்க வேண்டும்; குற்றத்திற்கான தண்டனையை முடிவு செய்யும் போது குற்றத்தையும், குற்றவாளியையும் (வயது, முதல் குற்றமா? எந்த சூழலில் குற்றம் நடந்தது போன்ற காரணிகள்) பார்க்க வேண்டும்; முன்விடுதலை செய்யும் போது குற்றவாளியை மட்டுமே பார்க்க வேண்டும்; செய்த குற்றத்தைப் பார்க்கக் கூடாது என்பவை எல்லாம் உலகம் முழுவதும் ஒத்துக் கொள்ளப்பட்ட நடைமுறைகள்.

எனவே முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை விடுதலை செய்யக் கூடாது போன்ற வாதங்கள் சரியல்ல. எத்தனை ஆண்டு கழிந்தாலும் அவர் முன்னாள் பிரதமராகத்தான் இருப்பார். குற்றத் தீர்ப்பு பெற்று தண்டனையும் விதிக்கப்பட்டு பல்லாண்டு காலம் சிறையில் கழித்த ஒருவரை விடுதலை செய்ய வேண்டிய நேரத்தில் குற்றத்தைச் சொல்லி விடுதலை மறுப்பது தண்டனையின் நோக்கத்தையே அபத்தமாக்கி விடும்.

குற்றத்திற்கு தண்டனை வழங்குவதற்கு நான்கு நோக்கங்கள் சொல்வார்கள்: ஆங்கிலத்தில் நான்கு R சொல்வார்கள்: Revenge, Retribution, Reformation, Rehabilitation! அதாவது Revenge – பழிக்குப் பழி; Retribution – வஞ்சம் தீர்த்தல்; Reformation – சீர்திருத்தம்; Rehabilitation – மறுவாழ்வு. வரலாற்று வழியில் இந்த நோக்கங்களின் முக்கியத்துவம் மாறியுள்ளது.

சீர்திருத்தத்துக்கும் மறுவாழ்வுக்கும் முக்கியத்துவம் தர வேண்டிய இக்காலத்தில் அரசே வஞ்சம் தீர்க்கும் உணர்ச்சியை வளர்ப்பதை ஏற்க முடியாது. சிறை என்பது சீர்திருத்தக் கூடமாக இருக்க வேண்டும். எவரையும் நிரந்தரமாகச் சிறையிலடைத்து வைத்து சீர்திருத்தம் செய்ய முடியாது. எந்த ஒருவரையும் கால் நூற்றாண்டு காலம் சிறையில் வைத்துக் கொண்டு விடுதலை செய்ய மறுப்பது சீர்திருத்தக் குற்றவியல் நெறிகளுக்கு முரணானது.

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே?

ன்னிப்பு, தண்டனை நீக்கம், தண்டனைக் கழிவு, தண்டனைக் குறைப்பு என்பதெல்லாம் சட்டத்தில் இருப்பவைதான். ஒரு கைதியைப் பற்றி, அவர் குடும்பச் சூழல் பற்றி சம்பந்தப்பட்ட மாநில அரசாங்கத்திற்கே தெரியும். சட்டம் ஒழுங்கும், சிறைகளும் மாநில அதிகாரப் பட்டியலில் உள்ளன.

இந்த அதிகாரங்களில் மாநில அரசு இறைமை (sovereign) கொண்டது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு 161-இன் கீழ் ஒரு கைதியை முன்விடுதலை செய்யும் முழு அதிகாரமும் மாநில அரசுக்கு உண்டு. இப்படித்தான் வி.ஆர். கிருஷ்ணய்யர் மத்திய அரசை எதிர்த்து சி.ஏ. பாலன் தூக்குத் தண்டனைக் குறைப்பில் நிலை எடுத்து வெற்றி பெற்றார். நமக்கு ஏன் வம்பு என்ற மனநிலையில் யாரும் முடிவு எடுக்கத் தயங்குகிறார்கள்; நீதிமன்றம் உட்பட!

நான் 15 ஆண்டுகள் சிறையில் இருந்து இருக்கிறேன். எனக்குத் தெரிந்து சாகும் நிலையில் உள்ள பல கைதிகளை சிறைக் கண்காணிப்பாளரே மாநில அரசுக்குத் தெரியப்படுத்தி விட்டு, அரசின் இசைவை எதிர்பார்த்து, விடுதலை செய்து இருக்கிறார். இறக்கும்போது ஒருவர் தன் வீட்டில் இறக்க வேண்டும் என்ற கருத்துப்படி (pleasure of dying at home) இதைச் செய்தார்கள்.

இப்போது அபு தாகீர் என்பவர் தீரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு கண்களும் பார்வை இழந்து விட்டன. அவரை விடுதலை செய்ய மாநில அரசு தயாராக இல்லை. நீதி மன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. அமைச்சருக்கு, அரசுச் செயலாளர்களுக்கே தங்கள் அதிகாரம் என்னவென்று தெரியவில்லை. முன்விடுதலை பற்றிய கோரிக்கை வந்தால் அதைக் காவல்துறைக்கு அனுப்புகிறார்கள்..

காவல்துறைக்கும் முன்விடுதலைக்கும் என்ன தொடர்பு? இதை யாரும் கேள்வி கேட்பதில்லை. இங்கு நடப்பது மக்களாட்சியா? காவல் துறை ஆட்சியா? அரசாங்கம் பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர்களை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விடுதலை செய்வதுதான் மனிதத் தன்மையுள்ள செயலாக இருக்கும். அதுவே நாகரிக சமுதாயத்திற்கான பண்பாக இருக்கும்.

 நீங்கள் சிறைத்துறை அமைச்சராக இருந்தால் என்ன நடவடிக்கைகள் எடுப்பீர்கள்?

கியூபா, தென்னாப்பிரிக்கா நாடுகளில் உள்ள சிறைகள் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்கள். அமெரிக்காவில் சிறைகள் மோசமாக உள்ளன. பிரான்சு நாட்டுத் தண்டனை முறையின் கொடுமையைப் பட்டாம்பூச்சி புத்தகத்திலிருந்து அறியலாம்.

நேற்றைய பாவி இன்றைய புனிதராகலாம்; இன்றைய பாவி நாளை புனிதராகக் கூடாதா என்ன? சிறைத் துறையை மேம்படுத்துவதில் அரசின் அங்கங்களான சட்டமியற்றும் பேரவைகள், நீதிமன்றங்கள், அரசு எந்திரம் என்ற அனைத்திற்கும் பங்கு உண்டு. நான்காவது கொற்றம் (Fourth estate ) என்று அழைக்கப்படுகிற ஊடகங்களுக்கும் இதில் பொறுப்பு உண்டு.

அமெரிக்காவில் சிறைப்பட்டவர்களை அரசின் அடிமைகள் (Slaves of States) என்று சொல்லும் காலம் ஒன்று இருந்தது. பிறகு நாகரிகம் வளர்ந்து ”சிறைக்குரிய கட்டெல்லைக்கு உட்பட்டு குடிமகனுக்குரிய எல்லா உரிமைகளும் சிறைப்பட்டோருக்கு உண்டு” என்ற கருத்து அங்கும் இங்கும் வளர்ந்துள்ளது.

சிறைப்பட்டோருக்கு வெளி உலகத்தோடு தொடர்பு கொள்ள எந்த தடையும் இருக்கக் கூடாது. நீதிமன்றம், அரசு, மனித உரிமை ஆணையம், ஊடகம் போன்றவற்றோடு தடையற்ற தொடர்பு கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். ஒரு சில வரையறைகளோடு, இணையதள வசதிகள் கூட ஏற்படுத்தலாம். இப்படிச் செய்தால் சிறைக்கைதிகள் மீது நடைபெறும் அடக்குமுறைகள் குறையும்.

கிருஷ்ணய்யர் சொல்லும் Sight Proof, Sound Proof prisons என்ற நிலை மாற வேண்டும். நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது எங்களைப் பார்க்க வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்.கல்யாண சுந்தரத்தைக் கூட பார்க்க அனுமதி மறுத்து விட்டார்கள். சிறைக் கண்காணிப்பாளர் தன்னை king of kings (அரசருக்கு அரசர்) என்றுதான் சொல்லிக் கொள்வார்.

நெருக்கடி காலகட்டத்தின் போது ஸ்டாலின், சிட்டிபாபு, ஆற்காடு வீராசாமி போன்ற தி.மு.க. தலைவர்களே இழிவுக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டார்கள் என்றால் சாதாரணக் கைதிகளுக்கு யார் பாதுகாப்பு? கோவைச் சிறையில் சினிமா அரங்கு போன்றவற்றைக் கட்டிக் கொடுத்த ஒரு கண்காணிப்பாளரே பின்பு பாம்புத் தோல் கடத்திய வழக்கில் சிறைக்கு வந்தார். நாளை யார் வேண்டுமானாலும் சிறைக்கு வர நேரிடும் என்பது அனைவருக்கும் நினைவிருக்க வேண்டும்.

கிரண் பேடி போன்ற அதிகாரிகள் சிறையில் நல்ல பணி ஆற்றியிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறதே?

ருக்கலாம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால் மேலிருந்து வரும் சீர்திருத்தம் பெரிய மாற்றம் கொண்டுவராது. இங்கு கூட நடராசன் என்ற அதிகாரி பற்றி பெருமையாகச் சொன்னார்கள். நான் சொன்னேன் அவரை ஒரே ஒரு மாற்றத்தைச் செய்யச் சொல்லுங்கள் என்றேன்.

அதாவது நேர்காணலின் போது கைதிகளைச் சந்திக்க வரும் உறவினர்கள் கும்பல், கும்பலாக இரும்புத் தடுப்பிற்கு வெளியே இருப்பார்கள். இதை மாற்றி கண்ணாடித் தடுப்பு வைப்பாரா? புல்லட் புரூப் கண்ணாடி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும் அவர்களும் இவர்களும் அமைதியாகப் பார்த்துப் பேசிக் கொள்ள வழி செய்யுங்கள் என்றேன். உறவினர்களும் கைதிகளும் தூதரகங்களில் இருப்பது போல மைக், கேட்கும் கருவி மூலம் தடையறப் பேசலாமே! செலவும் அதிகம் ஆகாதே! கைதிகளின் கண்ணியம் பற்றியெல்லாம் அக்கறை இல்லை என்றால் நல்லது எப்படி நடக்கும்?

நீதிமன்றங்களுக்கு இதில் பொறுப்பு இல்லையா ?

ற்கெனவே உச்ச நீதிமன்றம் பல நல்ல தீர்ப்புகளைத் தந்துள்ளது. கிருஷ்ணய்யர், சின்னப்ப ரெட்டி, சந்திரசூட், தேசாய், பகவதி போன்ற நீதிபதிகள் பல நல்ல தீர்ப்புகளை தந்துள்ளனர். இவை செயலாகின்றனவா என்று யார் பார்ப்பது?

வாரம் ஒரு முறை மாவட்ட நீதிபதி சிறைச்சாலையைப் பார்வையிட வேண்டும், புகார்ப் பெட்டி வைக்க வேண்டும், உயர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளிக்க வேண்டும் என்பதெல்லாம் இருக்கின்றன. இந்தியா முழுக்க ஒரே ஒரு மாவட்ட நீதிபதி கூட இதைச் செய்வதில்லை. நடைமுறையில் நிலைமை படுமோசமாக உள்ளது.

கைதிகளின் முன்விடுதலை பற்றி முடிவு செய்ய ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது அறிவுரைக் கழகங்கள் (Advisory Board) கூடி முடிவெடுக்க வேண்டும். ஆனால் அது கூட்டப்படுவதே இல்லை. அதனால்தான் முக்கியத் தலைவர்கள் பிறந்த நாளின் போது விடுதலை செய்யப்படும் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிகிறது. கடந்த காலங்களில் இந்த அறிவுரைக் கழகங்கள் வழமையாகச் செய்த பணிதான் இது.

இதைப் பற்றி எந்த பத்திரிகையாவது கேள்வி எழுப்புகிறதா? இப்போது கூட தினமலர் நாளிதழ் இந்த முன்விடுதலை பற்றி எள்ளலாகத்தான் செய்தி வெளியிடுகிறதே ஒழிய, 18 ஆண்டுகள், 20 ஆண்டுகள் சிறையில் இருப்போரின் உளவியல் பற்றியெல்லாம் அதற்கு அக்கறை இல்லை.

கைதிகளுக்கு சங்கம் வைக்கும் உரிமை வேண்டும். சிறைச்சாலையில் வெளி உலகத்தின் பார்வை வேண்டும். (Social oversight of Prisons), அதனால்தான் மரங்களின் மீதும், கட்டடங்களின் மீதும் போராட்ட சமயங்களில் கைதிகள் ஏறிக் கொண்டு பொது மக்களுக்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகிறார்கள். தரையில் இருந்து முழங்கினால் சிறைக் கைதிகளின் மண்டையைப் பிளந்து விடுவார்கள்.

1983 -இல் நாங்கள் திருச்சி சிறையில் இருந்த போது தேர்தல் நடத்தி எங்கள் பிரதிநிதிகள் மூலம் சிறை நிர்வாகத்தில் பங்கு எடுத்தோம். சிறை அதிகாரியை துரை என்று கூப்பிடுவதை நிறுத்தினோம். போதைப் பழக்கம், சீட்டு விளையாட்டு குறைந்தது; குறள் வகுப்புகள் நடத்தினோம். உணவின் அளவு, தரம் இவற்றைப் பார்த்துக் கொண்டோம். கண்காணிப்பாளர் வீட்டு நாய்க்குக் கூட சிறையிலிருந்து சாப்பாட்டு தர மாட்டோம் என்று ஊழலை எதிர்த்து நின்றோம்.

1974-ஆம் ஆண்டு தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரெங்கன் தலைமையில் சிறைப்படுத்தப்பட்டோர் நலவுரிமைச் சங்கம் என்ற ஒன்றை அமைத்து பத்து நாட்கள் உண்ணாவிரதம் இருந்து போராடினோம். போராட்டத்தால் கிடைத்த பலன் குறித்து ஏ.ஜி.கே. “அப்ப நீர்ல மோர் கலந்தாங்க; இப்ப மோர்ல நீர் கலக்குறாங்க” என்று சொல்வார். சிறைப்படுத்தப்பட்ட அனைவரும் ஒடுக்கப்பட்ட தோழர்கள் என்பார்.

நீங்கள் நீதிபதியாக இருந்தால் எஸ்.வி.சேகருக்கு பிணை கொடுத்திருப்பீர்களா?

கொடுத்திருப்பேன். எதிரியாக இருந்தாலும், குற்றவாளிக்குரிய உரிமைகளை மதிக்க வேண்டும். Bail is the rule, and jail is an exception (பிணை என்பது விதி; சிறை விதிவிலக்கு) என்பதுதான் கொள்கை, வழக்குகளை விரைவாக நடத்த வேண்டும். குற்றவாளியா இல்லையா என்பது விரைவில் முடிவு செய்யப்பட வேண்டும்.

 இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்?

ழக்கம் போல் இயக்கம், எழுத்து தவிர இப்போது சிறப்பாகச் செய்து கொண்டிருப்பதைச் சொல்கிறேன். சிறையிலிருந்த போது கார்ல் மார்க்சின் தாஸ் கேபிடல் மூன்று பாகங்களையும் தமிழில் மூலதனம் என்று மொழி பெயர்த்து அவை ஐந்து புத்தகங்களாக வெளிவந்தன. வெளிவந்து சில ஆண்டுகள் கழிந்து விட்டன.

இப்போது அதன் முதல் பாகத்தையே மூலமுதல் என்ற பெயரில் தூய தமிழில் மீள் மொழியாக்கம் செய்து வருகிறேன். முன்வெளியீட்டுத் திட்டம் அறிவித்துள்ளோம். வருகிற சென்னை புத்தகக் கண்காட்சியின் போது வெளியிடலாம் எனக் கடுமையாக உழைத்து வருகிறோம். நீங்கள் வரும் போது கூட அந்த வேலைதான் செய்து கொண்டிருந்தேன்.

பீட்டர் துரைராஜ், தொழிற்சங்க செயல்பாட்டாளர். த டைம்ஸ் தமிழ் இணையத்துக்காக பல்வேறு சமூக அரசியல் சார்ந்த செயல்பாட்டாளர்களை நேர்காணல் செய்து எழுதிவருகிறார்.

ஒளிப்படங்கள் நன்றி: தோழர் தியாகு முகநூல் பக்கம்.

நன்றி : த டைம்ஸ் தமிழ்

பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா 15

ங்க பரிவாரத்திற்கு எதிராக யார், என்ன பேசினாலும் அவர்களுக்குக் கிடைக்கும் பதில்களில் முதன்மையானது ”பாகிஸ்தானுக்குப் போ” என்பதுதான்.

சங்க பரிவாரத்தின் அட்ராசிட்டி தாங்க முடியாமல், “தேச விரோதி” பட்டமும், “சமூக விரோதி”பட்டமும் பெற்றாலும் பரவாயில்லை என ஒருவேளை நீங்கள் பொங்கியெழ நேர்ந்து, அதன் காரணமாக நீங்கள் சங்க பரிவாரத்தால் பாகிஸ்தானுக்கு நாடு கடத்தப்பட்டால்?

பாகிஸ்தானில் வாழ அந்நாட்டைப் பற்றி சிறிதேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டாமா ? இந்த வினாடி வினாவை முயற்சித்துப் பாருங்களேன் !

கேள்விகள்:

பாகிஸ்தான் : பொது அறிவு வினாடி வினா

  1. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பெயர் என்ன?
  2. 21 கோடி மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான் உலகநாடுகளில் எத்தனையாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடு?
  3. பரப்பளவில் 33-வது பெரிய நாடான பாகிஸ்தானின் கடற்கரை நீளம் என்ன?
  4. பாகிஸ்தான் கடற்பரப்பில் கீழ்க்கண்ட கடல் பிரிவுகளில் ஒன்றுக்கு தொடர்பில்லை
  5. கீழ்க்கண்ட நாடுகளில் ஒரு நாடு மட்டும் பாகிஸ்தானின் எல்லையை குறுகிய தூரத்தில் தொடுகிறது!
  6. பாகிஸ்தானின் தலைநகரம் எது?
  7. பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ நிர்வாக மொழி எது? பாகிஸ்தானின் தேசிய மொழி என்பது தனி.
  8. பாகிஸ்தான் மக்கள் தொகையில் 44.7% கொண்ட தேசிய இனம் எது?
  9. பாகிஸ்தான் தன்னை இசுலாமியக் குடியரசாக பிரகடனம் செய்த ஆண்டு எது?
  10. 2017 சென்சஸ் கணக்கீட்டின் படி பாகிஸ்தான் மக்கள் தொகை என்ன?
  11. பாகிஸ்தான் அரசு மற்றும் முசுலீம் மதவெறியின் கொடுமை காரணமாக வங்கதேசம் பிரிந்து சென்ற ஆண்டு எது?
  12. உலக நாடுகளின் நிலையான இராணுவத்தில் பாகிஸ்தான் இராணுவம் எத்தனையாவது பெரிய இராணுவம்?
  13. கீழ்க்கண்டவற்றில் எது தவறு?
  14. பாகிஸ்தானின் தலையான பிரச்சினை எது?
  15. பாகிஸ்தான் எனும் வார்த்தையின் உருது மற்றும் பெர்சிய மொழியின் பொருள் என்ன?
  16. பாகிஸ்தானின் தேசியக் கவிஞர் யார்?
  17. பாகிஸ்தான் மக்கள் அதிகம் அருந்தும் பானம் எது?
  18. பாகிஸ்தானின் தேசிய விளையாட்டு எது?

பதிலளிக்க:

– வினவு செய்திப் பிரிவு

இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

இந்திய மாதா – காதரீன் மேயோ

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா என்ற புத்தகம் 1928 இல் வெளியிடப்பட்டது. அமெரிக்கப் பெண்மணியான அவர் இந்தியாவை சுற்றிப் பார்த்து, தான் பார்த்ததையும் , கேட்டதையும் புத்தகமாய் எழுதி வெளியிட்டார். இந்தியத் துணைக்கண்டத்தின் பார்ப்பனிய முகத்தை புத்தகம் தொட்டுக் காட்டியதால் உலகம் அதிர்ச்சியுற்றது. அதில் அப்போது நடப்பில் இருந்த மகப்பேறு முறைகள் குறித்து அறியும் போது யாராலும் அதிர்ச்சியுறாமல் இருக்க முடியாது.

1. பிரசவம் என்பது ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வு. வழக்கம் போல தீட்டால் ஏற்படும் கொடுமைகள் அனைத்தும் நடந்தன.

2. பிரசவம் பார்ப்பது மருத்துவச்சி என்ற ஒரு தனி சாதி பெண்கள். தீண்டப்படாத சாதியினர்.

3. பிரசவம் ஒரு தீட்டான நிகழ்வாய் இருப்பதால், அது ஒரு தனியான, ஒதுக்குப்புறமான, உபயோகமற்ற, வெளிச்சமும் காற்று வசதியும் அற்ற ஒரு அறையில் தான் நடக்கும். தீட்டு காரணமாய் பெரும்பாலும் பழைய அழுக்கான துணிகளே பயன்படுத்தப்படும்.

4. பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகள் பாரம்பரியமாக தாங்கள் கேள்விப்பட்ட முறைகளையும், அப்போது தங்களுக்கு உதிக்கும் திடீர் யோசனைகளையும் பயன்படுத்தியே பிரசவம் பார்த்தனர்.

5. வலி வந்து நேரமாகி விட்டால் தங்கள் கைகளை உள்ளே விட்டு சிசுவின் கையோ காலோ எது கிடைக்கிறதோ அதைப் பிடித்து வெளியில் இழுப்பர். ஒருவரால் முடியாவிட்டால் இரண்டு மருத்துவச்சிகள் முயல்வர். நிச்சயம் இரண்டு உயிர்களில் ஏதாவது ஒன்றாவது போய் விடும்.

6. வலி வந்து தாமதமாகி விட்டால் பெண்ணை சுவர் ஓரமாய் நிறுத்தி வைத்து மருத்துவச்சி ஓடி வந்து பெண்ணின் வயிற்றில் முட்டுவர். அல்லது கைகளால் குத்துவர்.

காதரீன் மேயோ

7. பிரசவம் முடியும் வரையிலும் பெண்ணுக்கு எந்த ஆகாரமும் இல்லை. வலி நான்கு நாட்கள் இருந்தாலும் ஆகாரம் இல்லை.

8. பிரசவம் சீக்கிரம் நடக்க தேளைக் கொண்டு கொட்ட விடுவது, பாம்புத் தோலைக் காட்டி பயப்படுத்துவது போன்ற கொடுமைகளும் நடந்துள்ளன. சில சமயங்களில் பெண்ணை தலைகீழாக குலுக்குவதும் உண்டு.

9. தீட்டு காரணமாய் பிரசவம் அன்னியர் கண் படாமல் இருட்டறையில் ஒரு மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் நடக்கும். மூடிய அறையில் புகை நிறைந்திருக்கும் சமயத்தில் அன்னியர் யாராவது பார்த்து விட்டார்கள் என்ற சந்தேகம் எழுந்தால் மருத்துவச்சி உடனே சில துர்நாற்றம் தரும் புகையை உண்டாக்குவாள். துர்நாற்றம் தீட்டை போக்கி விடும்.

10. பிரசவத்தில் பெண்ணின் உயிர் போய் விடும் என்ற சந்தேகம் வந்தால் அந்த பெண்ணின் கண்களில் மிளகாய் தூள் நிரப்பப்படும். இறந்த பின் அவள் பேயாக மாறி வழி கண்டுபிடித்து வந்து பழி வாங்கலைத் தடுக்கவே இந்த முறை.

11. அதே போன்று பேயாய் மாறி பழி வாங்கலைத் தடுக்க பெண்ணின் கைகளை தரையில் வைத்து ஆணியடித்தலும் உண்டு. சற்று பிழைக்க வாய்ப்புள்ள பெண்களும் இதனால் இறந்து போயிருப்பார்.

12. தொப்புள் கொடி அறுக்க இரும்புத் தகடோ, கண்ணாடித் துண்டோ , மூங்கில் கழியோ உபயோகப் படுத்தப்படும்.

காதரீன் மேயோ எழுதிய இந்திய மாதா நூல்.

13. அறுபட்ட தொப்புள் மீது சாம்பலோ, சாணியோ, மண்ணோ தடவப்படும்.

மருத்துவம் வளர்ச்சியுறாத காலத்தில் உலகம் முழுதும் பிரசவங்கள் பாதுகாப்பாய் நடந்திருக்க வாய்ப்பில்லை. அரை குறை வைத்தியங்களே நடந்திருக்கும். ஆனால் இந்தியாவில் பிரசவம் ஒரு தீட்டு சம்பந்தப்பட்ட நிகழ்வாய் இருந்ததால் உலகில் எந்த பகுதியிலும் அனுபவிக்காத கொடுமைகளை இங்கே பெண்கள் அனுபவித்துள்ளனர்.

இதில் தீட்டு இல்லாதிருந்திருந்தால், சமூகத்தின் பொது அக்கறை இதில் இருந்திருக்கும். குறைந்தபட்சம் ஒரு வெளிச்சமுள்ள காற்றோட்டமுள்ள இடத்திலாவது பிரசவம் நடக்க வேண்டும் என்ற அறிவாவது பெற்றிருப்பர். தீட்டு பிரசவம் குறித்த ஒரு பொது அறிவை வளர விடாமல் தடுத்துவிட்டது.

சாதியத்தையும், பார்ப்பனியத்தையும், தீட்டையும், இந்து மதத்தையும் பிரித்துப் பார்ப்பது முடியாத ஒன்று.

– மூன்று வருடங்கள் முன்பு எழுதியது.

எங்கள் குடும்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு தண்ணீர் தர மாட்டார்கள்.

தாகம் எடுத்து உயிர் போவதாய் இருந்தாலும் தர மாட்டார்கள். ஒரு கால் டம்ளர் தண்ணீர் மட்டும் போனால் போகிறதென்று தருவார்கள். இந்த பத்தியம் இரண்டு வாரங்களுக்கு இருக்கும். சுத்தமற்ற தண்ணீர் குடித்தால் நோய் வரும் என்பதற்காக ஆரம்பத்தில் தவிர்த்திருப்பார்களோ என்னவோ. ஆனால் கடைசியில் அது ஒரு சடங்காகவோ கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்றாகவோ மாறி விட்டது .

முதல் குழந்தை பெற்ற போது ( 90 களில் ) தண்ணீர் தாகத்தால் என் பெரிய அக்கா பட்ட துன்பத்தை நேரில் பார்த்திருக்கிறேன். முதல் இரண்டு வாரங்கள். மிகப் பெரிய அவஸ்தை. ஒரு நாளைக்கு மீறிப் போனால் ஒரு டம்ளர் தண்ணீர் தான் கிடைக்கும்.

நாட்கள் கழிந்த பின் அவளிடம் மெதுவாய் கேட்டேன், எப்படி சமாளித்தாய் என்று. அம்மா குளிக்க வைக்கும் போது தலையோடு தண்ணீர் ஊற்றுவாள். அப்போது அதில் கொஞ்சம் தெரியாமல் குடித்துக் கொள்வேன் என்று சொன்னாள்.

நன்றி: ஃபேஸ்புக்கில் – துணைத் தளபதி மார்கோஸ்