“Let us live in peace; Struggle has become our life; We have fought against the Jindal Group, the agitation against the eight-lane expressway, the fight against the garbage dump. Now we are fighting against the setting up of SIPCOT Industrial Park by taking away our lands and driving us out of the village. We will never give up our land. We will not hesitate to die during the struggle”.
The SIPCOT Industrial Park referred by the protesting people is proposed to be setup in the rural areas in and around Paliyapattu panchayat – Chinna Paliyapattu, Pazhaya Colony, Puthiya Colony, Selvapuram, Anna Nagar, Mariamman Nagar, Chinna Punalkadu, Arunthathiyar Colony, Vaniyambadi – located 10 km from Chengam taluk of Tiruvannamalai district. SIPCOT will be set up by destroying farmlands and Kavuthi-Vediyappan hills and thereby destroying the environment and livelihood of the people. People from nine villages have engaged in a continuous agitation for over 54 days against setting up of SIPCOT Industrial Park, which will engulf roughly 1,500 acres of land and 500 houses, for the benefit of corporate bosses.
Chengam block of Tiruvannamalai district is the area where a variety of agricultural commodities including paddy, groundnut and flowers are grown. Realizing that the establishment of SIPCOT industrial park would result in the loss of agricultural land and the houses they had traditionally lived in, and that they will be turned into refugees in their own country, the nine villagers immediately convened a gram sabha meeting and decided to oppose the SIPCOT industrial park. Moreover, people from the villages around Paliyapattu panchayat came together by breaking caste barriers and formed a protest organisation called “SIPCOT Ethirpu Vivasaya Makkal Iyakkam” (Anti SIPCOT Peasant’s Movement). They declared that the agitation will continue until the plan for SIPCOT is completely abandoned. They convened a gram sabha meeting on the third day (24.12.2021) of the continuous protests and passed a resolution urging the government not to set up the SIPCOT industrial park in the area under the jurisdiction of their village to protect their interests.
SIPCOT Ethirpu Vivasaya Makkal Iyakkam has been organising many protests continuosly including demonstrations, hoisting black flags in the houses, picketing government offices, boycotting Pongal festival & announcing it as a black day, etc. The agitations have been going on for over 50 days but the TN government didn’t pay any attention. Majority of the media averted from this issue.
Lethargy and Arrogance of power
In an interview to BBC Tamil regarding this issue, Chengam DMK MLA M.P.Giri arrogantly said that “agriculture is not properly carried out in and around Paliyapattu; There are other things that take place by setting up huts; If SIPCOT industrial park comes up, proper relief will be provided to the affected lands and houses’’.
On the fifth day of the protest, Minister E.V. Velu said in Chengam East said that “a few fake farmers are wearing green towels and holding a fake demonstration; We will not give space to it; The SIPCOT industrial park will definitely be set up in that area”, he told reporters there.
On the ninth day of the ongoing agitation, the District Collector did not even bother to meet the people (more than 250 gathered) who had attended the farmers’ grievance redressal meeting at the Tiruvannamalai collectorate. Inviting only 10 people to his bungalow separately, he said “We will not hesitate to arrest you under the Goondas Act if you are doing something against the government”. Not only that, he also threatened the people by narrating the Sterlite shooting incident.
The Scenic beauty of Paliyapattu village
On the 36th day, when the gram sabha was to pass a resolution again that SIPCOT, the government cancelled the meeting. On the 45th day, more than 500 villagers came together to file 424 RTI petitions under the Right to Information (RTI) Act with 25 questions against the SIPCOT land acquisition. The Collector showed disrespect towards the people by receiving the petitions through his assistant.
The protesting history of the people
Earlier, in 2006, Jindal entered into an agreement with TIMCO (Tamil Nadu Iron Ore Mining Corporation Limited), belonging to the Tamilnadu government, to mine iron ore in an area of 23 hectares in the Kavuthi-Vediyappan hills for 10 years. Thus, the extraction of iron ore from the soil threatened to completely destroy the livelihood, water resources and agricultural lands of 55 villages in the vicinity of Kavuthi Hills.
In 2008, democratic forces along with the people of 55 villages, including the Paliyapattu area, formed the Tiruvannamalai Kavuthi and Vediyappan Hills Protection Association under the leadership of Balakrishnan and protested against the project given to Jindal. As a result, the contract was abandoned for the time being. Then, in 2014, another agreement was signed with Jindal. It was stopped as a result of series of campaigns and determined agitations by the association.
In 2018, the ADMK government brought in the Salem-Chennai eight-lane expressway project. It was suspended as a result of continuous protests organised by Movement Against Eight-Lane Expressway against the project.
In January 2022, more than 500 people of Paliyapattu panchayat staged a road blockade to protest against the dumping of urban garbage in the Periya Punalkadu area. Due to the continuous agitation by the people, the government has put on hold the landfill project. Thus, in the last few years alone, the people of the area have been engaged in a series of protests against various detrimental projects.
The Tamilnadu government has now resorted to a conspiratorial process of handing over the land and the Kavuthi-Vediyappan hills to the corporates in the name of SIPCOT, industrial development and employment opportunities, as the agreements with the corporates for direct mining of iron ore have faced stiff opposition. Wearing a mask called SIPCOT, the TN government is persuading to allow the corporates to chase away the villagers of Paliyapattu and surrounding areas and plunder the Kavuthi Hills. Highways Minister E.V.Velu’s speech also reveals that this project will be implemented in full swing.
Is Corporate land grabbing development?
Paliyapattu and the villages in its vicinity doesn’t even have proper road and bus facilities. Private minibus which came into village for a few years had now been stopped. Construction of roads in Selvapuram, Punalkadu, Arunthathiyar Nagar, Mariamman Nagar had been stopped halfway. The people are commuting through the rough sand roads. The students have to walk a distance of 3 km daily to reach the school. This locality doesn’t have any medical facility even for emergency care. Paliyapattu and its surrounding villages are isolated from the rest of Tamilnadu like an island. This area, which lacks even the basic amenities, relies on agriculture for its subsistence.
“We are filling our stomachs with goats and cows; If SIPCOT comes, the entire land will be destroyed; They will suck the entire groundwater; Our family would have to wander for drinking water; Where can we go and live if we are driven out of this place?” says a woman from Punalkadu, who participated in the protest.
The TN government is trying to displace the people for the benefit of the corporates and calls it as ‘growth’. A day after the people of Paliyapattu passed a resolution against the SIPCOT project, the government officials persuaded a group of people belonging to 10 villages to pass a resolution in favour of SIPCOT. The people of Paliyapattu have been monitored day and night by the police and the intelligence.
During a discussion in the 2021 assembly session, the DMK government had said that it would start such industrial parks not only in Tiruvannamalai but also in 10 other areas.
It is the practice of all the votebank parties to whip up against the recolonizational policies of privatization-liberalisation-globalization when they are in opposition and aggressively implement the same in the name of “development, progress and employment” when they come to power. The experience we gain from the actions of the DMK government is also the same.
The looting of the Kavuthi-Vediyappan hills is not just an issue related to the livelihood of the people of that locality. It is a part of the corporate fascistic assault on the country and crores of people, similar to the projects like eight-lane expressway, Sagarmala, Bharatmala, Koodankulam nuclear power plant, nuclear waste storage facility, neutrino laboratory, etc. The people of Dhinkia in Odisha continue to protest against the destructive Jindal. The people of Chhattisgarh are fighting against the looting of the mineral resources by the corporates. Today’s crucial task for the working people is to stand hand-in-hand with the people of Paliyapattu in their struggle and to launch united struggles of the working people from all walks of life against corporate looting.
“இப்போலாம் யாருங்க சாதி பாக்குறாங்க” என ஒரு கும்பல் எப்பொழுதும் பேசிக் கொண்டு இருக்கிறது. ஒருபுறம் சாதி ஆணவப் படுகொலை என்பதும் நடந்த வண்ணம் உள்ளது. பள்ளிகளில் சாதி தீண்டாமைகளினால் மாணவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஊராட்சித் தலைவர்கள் தலித்களாக இருந்தால் அவர்கள் அவமதிக்கப்படுவது மட்டும் இல்லாமல், அவர்கள் வேலைகளையே செய்யவிடாமல் தடுக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்கள் எதோ ஒரு இடத்தில் நடந்தது என்று மட்டும் விட்டுவிட முடியாது. தமிழகத்தின் பல பகுதிகளில் இன்னும் நடந்தேறிக் கொண்டுதான் இருக்கிறது.
நாம் சமூகநீதி ஆட்சி நடக்கிறது என்று பெருமை பீற்றிக் கொண்டு சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டுக் கொண்டு சிலாகித்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே வேலையில்தான் தமிழகத்தில் 445 ஊர்களில் தீண்டாமை கொடுமைகள் கடைப்பிடிக்கின்றன என்ற தகவல் ஆர்.டி.ஐ மூலம் வெளிவந்துள்ளது.
படம் : பி.பி.சி
அதிலும் மாவட்டம் வாரியாக எத்தனை கிராமங்கள் என்ற தகவலும் சேர்த்து வெளியாகி உள்ளது.
இந்த தகவல் என்பது தமிழ்நாடு அரசின் போலீசுத் துறையால் பதியப்பட்ட வழக்குகளில் இருந்து கொடுக்கப்பட்டதுதான். மேலும், பதியப்படாத வழக்குகளில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன என வி.சி.க.வின் சட்டமன்ற குழு தலைவர் சிந்தனைச் செல்வன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ‘எவிடென்ஸ்’ என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,’ என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர். அப்படியானால் இவற்றை ஒழிக்க அரசு என்ன வகையான முயற்சியை எடுக்கிறது? சாதி தீண்டாமையை ஒழிப்பதற்காக 2015 – 2016 ஆண்டு முதல் 2021 – 2022-ம் ஆண்டு வரை எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இதற்கு பெயர்தான் சமூக நீதி ஆட்சி.
சட்டங்களின் செயல்பாடு:
1955-ம் ஆண்டு இந்த சட்டம் இந்தியாவில் பட்டியலினத்தவர் எனப்படும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளை தடுக்க கொண்டுவரப்பட்ட சட்டமாகும். அதன் பிறகு 1976-ல் பி.சி.ஆர் சட்டம் (குடியுரிமை பாதுகாப்பு சட்டம்) என மாற்றப்பட்டது. இந்த சட்டம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதாலும், சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதாலும் இளைய பெருமாள் என்பவரது தலைமையில் பாராளுமன்றம் ஒரு கமிட்டியை அமைத்தது.
அந்த கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989-ல் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் (சட்டம் எண் 33/1989) கொண்டுவரப்பட்டது. ஆனால், இந்த சட்டம் மிகவும் தாமதமாக 1995-ல் தான் நடைமுறைக்கே கொண்டுவரப்பட்டது. ஆனால், அதன் பிறகு பழங்குடியினர் மீது போலீசுத்துறை நடத்திய வன்கொடுமை பலாத்காரம் சம்மந்தமாக போலீசுத்துறை, இராணுவத்திற்கு எதிராக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் இந்த சட்டம் போலீசுத்துறையினர் தங்களுக்கு எதிராக இருப்பதாக கருதி கிடப்பிலே போட்டு உள்ளனர். இந்தியா முழுக்க இதுதான் நிலை.
கீழ்க்காணும் செயல்களுக்கு இச்சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்படும்
சாதியை கொச்சைப்படுத்தி பேசுதல்,
சாதி பெயரை சொல்லி திட்டுவது,
சாதியின் பெயரால் விலக்கி கொள்வது
இதேதான் நம் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளிலும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கை பதிய சொன்னால் இந்த போலீசுத்துறையோ உயர் அதிகாரிகளோ சாதாரண சண்டையாகதான் பதிவு செய்து பிரச்சினை பெரிதாகாமல் பார்த்துக் கொள்கின்றனர். அப்படியானால் இந்த சட்டம் எந்த வகையில் யாருக்குதான் பயன்படும்?
ஆனால், சொல்லுவது என்னமோ பட்டியலினத்தவரை அவர் சாதி சொல்லி திட்டினாலும், அவரை அருவருப்பான பொருள்களை உண்ண சொல்லி கட்டாயப்படுத்துவதும், குறிப்பிட்ட இடத்தில் அவர்களை உட்காரக் கூடாது, வரக்கூடாது என்று சொல்வதும், அவர்களை சாதி பெயர்களை சொல்லி இழிவுபடுத்தி திட்டுவதும், அவர்களின் இடங்களிலோ, குடியிருப்புகளை அழித்தோ யாரேனும் ஆக்கிரமித்தாலோ, ஆதிக்க சாதியினரால் பலாத்காரம் செய்யப்பட்டாலோ இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யலாம் என அரசு சொல்கிறது.
ஆனால், தமிழகத்தில் 445 கிராமங்களில் சாதி வன்கொடுமை நடந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், பல கிராமங்கள் பதியப்பாடாமலும் உள்ளது. அப்படியானால் இவற்றை ஒழிக்க இந்த சமூக நீதி ஆட்சியில் என்னதான் திட்டம் உள்ளது. சமூகநீதி கூட்டம் மட்டும் நடத்தினால் போதுமா? அப்படியானல் இந்த திட்டங்கள் எல்லாம் ஒரு கண்துடைப்பு என்பது மட்டும் அப்பட்டமாக தெரிகிறது. குறிப்பாக சாதி தீண்டாமை அதிகமாக கடைபிடிக்கும் மாவட்டத்தில் முதலிடத்தில் மதுரை மாவட்டம்தான் உள்ளது. அதைத் தடுக்க அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா? அரசின் திட்டத்தினாலோ அல்லது சட்டத்தினாலோ இதை தடுக்க முடியுமா?
1955-ம் ஆண்டுகளுக்கு முன்பு சாதி தீண்டாமை படுகொலை என்பது மிகவும் அதிகமாக இருந்ததினால்தான் அதை தடுக்க சட்டங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்த சட்டங்களை அமுல்படுத்தவே அடுத்தடுத்து பல சட்டங்கள் கொண்டுவரப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால், சம்பவங்களோ தீண்டாமையோ ஒழிந்ததா? அல்லது குறைந்ததா? வடமாநிலங்களில் இன்னும் அதிகமாக இருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.
சாதிக் கட்சிகள் சொல்லும் தீர்வு என்ன?
இந்தியாவில் 1108 பட்டியல் சாதிகளும் 744 பழங்குடியின சாதிகளும் இருப்பதாக இந்திய அரசியலமைப்பு ஆணை 1950 குறிப்பிடுகின்றது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பட்டியல் பழங்குடியினரில் 36 சாதிகளும், பட்டியல் சாதிகளில் 76-ம் உள்ளது. இவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பல சிறிய சிறிய அமைப்புகளை வைத்து உள்ளனர். ஆனால், இவர்கள் மீதான கொடுமைகள் என்பதும் அதிகரித்துக் கொண்டுதான் உள்ளது. மேலும், பொது வழிகளை பயன்படுத்துவது, பிணங்களை அடக்கம் செய்ய இடம் கொடுக்கப்படாதது போன்ற தீண்டாமைகள் இன்னும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற உரிமைகளுக்கே போராடி வழக்கு போட்டுதான் பெற முடிகிறது.
ஆனால், வி.சி.க.வின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் சொல்வதுபோல பட்டியலினத்தில் உள்ளவர்களை இந்து மதம் என்பதிலிருந்து நீக்கி அனைவரையும் பெளத்த மதத்தில் சேர்த்து விட்டால் இந்த தீண்டாமையில் இருந்து அவர்கள் விடுபட்டு விட முடியுமா? பல நூறு ஆண்டுகளாக பழக்கப்படுத்தி வைக்கப்பட்ட அடிமைத் தீண்டாமை தனத்தை மதமாற்றத்தின் மூலம் சரி செய்ய முடியுமா? ஏன் கிறிஸ்துவ மதத்தில் சாதி தீண்டாமை இல்லையா? இந்த வர்ணாசிரம நிலப்பிரத்துவ பிற்போக்குதனமான சமூகக் கட்டமைப்புதான் மக்களைப் பிளவுபடுத்தி வைத்துள்ளது. இதன் உள்ளே நின்று கொண்டே இதை மாற்ற வேண்டும் என்றால் எப்படி மாற்ற முடியும்?
அவரவர் செய்யும் தொழில் அந்த அடிப்படையில்தான் இந்த ஏற்றத்தாழ்வுகள் என்பது அந்த காலத்தில் இருந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அப்படியானால் இதை மாற்ற வேண்டாமா? பொருளாதார ரீதியிலான பாகுபாட்டை போக்க வேண்டாமா? ஆனால், பல தலித் அமைப்பினர் தன் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதில் பெருமை உள்ளது என்று பேனர் அடித்து கூட வைத்துக் கொள்கிறார்கள். ஏனென்றால் ஆதிக்க சாதியினர் போட்டுக் கொள்ளும்போது நாங்கள் எங்கள் சாதி பெருமையை போட்டுக் கொள்கிறோம் என்கின்றனர். ஆனால் இதனால் சாதி ஒழிக்கப்படுமா? சாதிக் கட்டமைப்பைப் பலப்படுத்ததான் செய்யும்.
இதுவரை நடத்தப்பட்ட ஆணவக் கொலைகள் நமக்கு பாடம் கற்றுத்தரவில்லையா?, இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் மேலும் பலர்… தொடர்ந்து கொண்டே செல்கிறது. அப்படியானால் நாம் செய்ய வேண்டியது என்ன? சாதி ரீதியில் அமைப்பாக திரளாமல் வர்க்கம் என்ற அடிப்படையில் அமைப்பாக திரண்டு, ஒன்றிணைந்து சாதிய பிற்போக்கான நிலப்பிரபுத்துவ கட்டமைப்பிற்கு எதிராகப் போராடி தகர்ப்பது மூலமே உண்மையான சமத்துவ ஜனநாயகத்தை உருவாக்க முடியும்.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக மே 2 அன்று தமிழ் இந்து செய்தி வெளியிட்டு இருந்தது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தில் தினசரி 1440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கு 23 டன் நிலக்கரி தேவை. கடந்த சில தினங்களாக நிலக்கரி வரத்து குறைவு மற்றும் மின் தேவை அதிகமாக இருந்ததால் இருப்பில் உள்ள நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டதால் நிலக்கரி இருப்பும் வெகுவாக குறைந்தது. அதனால் மின் உற்பத்தி குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேட்டூர் அனல்மின் நிலையத்தை போல் சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியது.
நிலக்கரி தட்டுப்பாடானது தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. இந்தியா முழுவதும் உள்ளது. மற்ற மாநிலங்களில் (பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம்) நிலக்கரி தட்டுப்பாடானது தமிழ்நாட்டுடன் ஒப்பீடும் போது மிக அதிகமாக உள்ளது.
“நாடு முழுவதும் மொத்தமுள்ள 173 அனல்மின் நிலையங்களில் 100-க்கும் மேற்பட்டவற்றில் தேவையான நிலக்கரி கையிருப்பு 25%-க்கும் குறைவாக உள்ளது. 50-க்கும் மேற்பட்ட அனல்மின் நிலையங்களில் 10%-க்கும் குறைவாக உள்ளது” என தமிழ் இந்து 29.4.2022 அன்று தனது தலையங்க கட்டுரையில் எழுதியுள்ளது.
ஏப்ரல் 18-ம் தேதி நிலவரப்படி 66.72 மில்லியன் டன்களுக்கு இருக்க வேண்டிய நிலக்கரி கையிருப்பு 22.52 மில்லியன் டன்கள் தான் உள்ளது. இது பொதுவான கையிருப்பில் 34% மட்டுமே. அதன்படி 9 நாட்கள் மட்டுமே அனல்மின் நிலையங்கள் மின்சாரம் தயாரிக்க முடியும் என ஒன்றிய மின்சார ஆணைய அறிக்கை கூறுகிறது.
மேற்கூறியவாறு நிலக்கரி தட்டுப்பாடானது நாடு முழுவதும் நிலவுவதால், இந்தியா முழுவதும் மின்தடையும் அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் தேவையான மின்சாரத்தைவிட 6% குறைவாக மின்சார விநியோகமே உள்ளது. ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 27 வரை 1.88 பில்லியன் யூனிட் தட்டுப்பாடு நிலவியதாக கூறப்படுகிறது.
உ.பி.யில் 3 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 8 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. ஆந்திரப்பிரதேசத்தில் 2 ஆயிரம் மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 7 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பீகாரில் 300 மெகாவாட் மின் தட்டுப்பாடு காரணமாக 4 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது. பஞ்சாப்பில் 6 – 7 மணி நேரம், ராஜஸ்தானில் 7 மணி நேரம், உத்தரகாண்டில் 6 மணி நேரம், தெலுங்கானாவில் 6 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது.
குஜராத்தில் தொழிற்சாலைகள் வாரத்தில் 7 நாட்களும் இயங்கும். கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு இந்தியாவிற்கே முன்மாதிரி அல்லவா. ஆனால் அங்கேயே வாரம் 1 நாள் தொழிற்சாலைகள் விடுமுறை விடப்படுகிறது. தமிழ்நாட்டை பொருத்தவரை நாள்தோறும் 2 – 3 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள மின் தேவையில் 70% அனல்மின் நிலையங்களில் இருந்தே பெறப்படுகிறது. அனல்மின் நிலையங்களானது நிலக்கரி வைத்தே இயங்குகிறது. எனவே நிலக்கரி தட்டுப்பாடானது நாட்டின் மின் உற்பத்தியை பெரிதும் பாதிக்கிறது.
தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு கொள்ளை லாபம் – மக்களுக்கோ விலையேற்றம்
மே 5, 2022 அன்று ஒன்றிய அரசானது மின்சாரச் சட்டம் 11-வது பிரிவு படி, இறக்குமதி நிலக்கரியில் இயங்கும் அனைத்து அனல்மின் நிலையங்களையும் முழுத்திறனில் மின்சாரம் உற்பத்தி செய்ய உத்தரவிட்டுள்ளது. இறக்குமதி நிலக்கரியால் இயங்கும் அனல்மின் நிலையங்களில் பெரும்பாலானவை தனியார் அனல்மின் நிலையங்கள். எஸ்ஸார் பவர், கோஸ்டல் எனர்ஜென், டாடா பவர், அதானி பவர் போன்றவை முக்கியமானவை ஆகும்.
உக்ரைன் – இரஷ்யா இடையிலான போரினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி விலை 44% – 55% வரை அதிகரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆறு மடங்கு இறக்குமதி நிலக்கரியின் விலை அதிகரித்துள்ளது.
இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் மின் உற்பத்தியாளர்கள், அதிகப்படியான விலை வைத்து மின்சாரத்தை விற்று கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர்.
கடந்த 2021 அக்டோபர் மாதத்தில் இதேபோல் நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாடு ஏற்பட்ட போது, அதானி பவர், டாடா பவர், எஸ்ஸான் பவர் 3 மடங்கு அதிக விலைக்கு மின்சாரத்தை மாநில அரசுகளுக்கு விற்பனை செய்தன.
நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு முன்னால் ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.4 முதல் ரூ.6-க்கு விற்பனை செய்த நிலையில், நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி ரூ.16 முதல் ரூ.18 வரை பல மாநிலங்களுக்கு விற்பனை செய்ய ஒப்பந்தம் போட்டுக் கொண்டன. அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசானது ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.20 வரை விலை கொடுத்து வாங்கியதாக செய்திகள் வெளியாகின.
ஒன்றிய அரசானது தற்போது தனியார் மின் உற்பத்தி நிலையங்களை முழு வீச்சோடு மின் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கியதோடு மட்டுமில்லாமல், மாநில அரசுகளுக்கு கூடுதல் விலையை மக்களிடம் இருந்து வசூலிக்கவும் அனுமதி வழங்கி உள்ளது.
2022 ஏப்ரல் மாத தொடக்கத்தில் ஒன்றிய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படு மின்சாரத்திற்கான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூலிக்க மாநில அரசுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 அக்டோபரில் ஒரு யூனிட் ரூ.16 முதல் ரூ.18 வரை வைத்து விற்றவர்கள், தற்போது எவ்வளவு விலை வைத்து விற்பார்கள் என்பது தெரியவில்லை.
இப்படி நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி ஒருபுறம் தனியார் மின் உற்பத்தியாளர்கள் கொள்ளை இலாபம் சம்பாதிக்கின்றனர். மறுபுறம் மின்சார விலை ஏற்றமானது மக்களின் தலை மீது விழுகிறது.
கோடை காலமும், ஒன்றிய அரசின் முறையற்ற நிலக்கரி விநியோகமும் தான் காரணமா?
இந்தியாவில் 9 வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில், 122 வருடங்களில் இல்லாத அளவிற்கு 35.9 டிகிரி செல்சியஸ் முதல் 37.78 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகி உள்ளது.
அதனால் 2022 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் மின் தேவை 207.11 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 2021-ல் 182 ஜிகாவாட்டாகவும், ஏப்ரல் 2020-ல் 133 ஜிகாவாட்டாக தான் மின் தேவை இருந்தது. தற்போது மின் தேவையானது 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் கோடைக்காலம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் 220 ஜிகாவாட் வரை மின்சாரம் தேவைப்படும் என்றும் கூறப்படுகிறது.
பிபிசி செய்தி சேனலுக்கு பேட்டியளித்த ஒன்றிய மின்துறை அதிகாரிகள், “கோடை வெப்பம் எதிர்பார்த்ததை விட முன்கூட்டியே உச்சத்தை தொட்டுள்ளதால் நுகர்வோரின் மின்தேவை அதிவேகமாக அதிகரித்தது. இது தேவை – விநியோக இடைவெளியை அதிகமாக்கியிருக்கிறது” என்று கூறியுள்ளார்கள்.
மேற்கூறியவாறு அவர்கள் கூற்றுப்படி பார்த்தாலும், கோடை வெப்பச்சலனம் காரணமாக ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்து இருப்பது உண்மைதான். ஆனால், அதற்கேற்ப முன்கூட்டியே திட்டமிட்டு நாட்டின் மின்தேவையை பூர்த்தி செய்வது அரசின் கடமை. அதைச் செய்ய தவறியது பற்றி இந்த அதிகாரிகள் பேச மறுக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் நிலக்கரி கையிருப்பு குறைந்தற்கான காரணம் பற்றாக்குறை அல்ல. அவற்றை அனல்மின் நிலையங்களுக்கு கொண்டு சேர்ப்பதற்குப் போதுமான அளவில் ரயில் பெட்டிகள் கிடைக்காததுதான் என்று ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அமித்ஷா ஏப்ரல் 29 அன்று நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ரயில்வே, மின்சாரம் மற்றும் நிலக்கரித்துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பு உள்ள அனல்மின் நிலையங்களுக்கு நிலக்கரி ஏற்றிச் செல்ல போதுமான சரக்கு ரயில்களை ஏற்பாடு செய்ய ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக செய்தி வெளியானது.
ரயில் பெட்டிகளை முறையாக ஏற்பாடு செய்யாதது, கோடை காலத்தில் மின் தேவையை பூர்த்தி செய்ய முன்கூட்டியே திட்டமிடாதது எல்லாம் அரசின் நிர்வாக குறைபாடுகள் தான். அவை நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாட்டிற்கான உண்மையான காரணங்கள் அல்ல. ஆனால் அரசானது இவைகள் தான் உண்மையான காரணங்கள் என மக்களின் முன் நிறுத்த முயற்சி செய்கிறது.
நிலக்கரி மற்றும் மின் தட்டுப்பாடு – தனியார்மயமாக்கத்தின் விளைவே
ஒன்றிய அரசானது நிலக்கரி தட்டுப்பாட்டை தொடர்ந்து, இந்திய நிலக்கரி லிமிடெட் (கோல் இந்தியா) நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஏற்கெனவே மூடப்பட்ட 20 நிலக்கரி சுரங்கங்களை தனியார் மூலம் மீண்டும் இயக்க மே 6 அன்று முடிவு செய்துள்ளது.
இந்த 20 நிலக்கரி சுரங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் நிலக்கரியானது, சந்தையில் நடைமுறையில் உள்ள விலையின் அடிப்படையில் தனியார் மூலம் விற்பனை செய்யப்படும். அதில், ஒரு பகுதி இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த 20 நிலக்கரி சுரங்கங்களின் திறப்பு விழாவில் பேசிய ஒன்றிய நிலக்கரித் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, “நிலக்கரி உற்பத்தியில் தற்சார்பை அடையவும், இறக்குமதியை குறைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக இணைய தனியார் துறைகளை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.
அதாவது ஒன்றிய அரசு சொல்லும் தற்சார்பு என்றால், எல்லா நிலக்கரி சுரங்கங்களையும் தனியாருக்கு கொடுத்து, எல்லா விதிகளையும் தகர்த்து நிலக்கரியை ஒட்ட சுரண்டி உற்பத்தியை அதிகரிப்பதுதான் தற்சார்பு ஆகும். ஏன் தற்போது 20 நிலக்கரி சுரங்கங்களை அரசு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா மூலமே இயக்கலாமே? ஏன் தனியார் மூலம் இயக்க வேண்டும்? இங்குதான் ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கை அமல்படுத்துதல் உள்ளது.
ஒன்றிய அரசானது தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனப்படும் புதிய தாராளவாதக் கொள்கைகள் மூலம் இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனத்தை சீரழித்ததை சுருக்கமாக பார்ப்போம்.
1972 – 1973 காலகட்டத்தில் நிலக்கரி சுரங்க தேசியமயமாக்கல் சட்டத்தின் படி நாட்டில் உள்ள அனைத்து நிலக்கரி சுரங்கங்களும் தேசியமயமாக்கப்பட்டன. 1990-களில் தனியார்மய, தாராளமய மற்றும் உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, ஒன்றிய அரசானது 1993 – 2010 வரை ஐந்து முறை நிலக்கரி சட்டங்களில் தனியாருக்கு சாதகமாக திருத்தம் செய்துள்ளது. இதில், 2006-ல் நிறைவேற்றப்பட்ட 100% அந்நிய மூலதனத்தை அனுமதிக்கும் சட்ட திருத்தமும் அடங்கும்.
1993-ம் ஆண்டு இந்திய நிலக்கரி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான 200 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்டன. இந்த 200 சுரங்கங்கள் மூலம் ஆண்டுக்கு 500 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், 2021 வரை உற்பத்தியானது ஆண்டுக்கு 60 மில்லியன் டன்னை தாண்டவில்லை. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய கோல் இந்தியாவானது ஒரு நிர்பந்தத்திலேயே வைக்கப்பட்டது எனக் கூறுகிறார் முன்னாள் கோல் இந்தியா தலைவர் பார்த்தா பட்டாச்சார்யா.
இப்படி ஒருபுறம் ஒன்றிய அரசானது கோல் இந்தியா நிறுவனத்தை நிர்பந்தத்திலேயே வைத்த வேளையில், மறுபுறம் அந்நிறுவனத்தின் உபரி நிதியை சூறையாடியது.
2015-ம் ஆண்டு கோல் இந்தியாவானது 35 ஆயிரம் கோடி உபரி நிதியாக வைத்திருந்தது. அதைப் பயன்படுத்தி அந்நிறுவனத்தை மேம்படுத்தாமல் ஒன்றிய அரசானது அப்பணத்தை தன் பங்காக எடுத்துக் கொண்டது. 2019-ம் ஆண்டு உபரி நிதி 8 ஆயிரம் கோடியாக குறைந்தது என்கிறார் நிலக்கரி துறையின் முன்னாள் செயலர் அணில் ஸ்வரூப்.
மோடி அரசானது 2020-ம் ஆண்டு, வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரியை மின்சார உற்பத்திக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி, வணிக நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தலாம் என அனுமதித்தது. அதாவது தனியார் நிறுவனங்கள் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை, அதிக இலாபம் வைத்து எந்த துறை சார்ந்த நிறுவனத்துக்கும் விற்கலாம் என்பது தான் அத்தளர்வு கூறுகிறது.
மேற்கூறியவாறு கோல் இந்தியா நிறுவனமானது படிப்படியாக தனியார்மயமாக்கப்பட்டாலும், தொடர்ச்சியாக தன் உற்பத்தியை அதிகரித்து கோல் இந்தியா நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய போராடி வந்துள்ளது.
1990-க்குப் பிறகு 2021 வரை கோல் இந்தியாவிற்கு சொந்தமான 28 பில்லியன் டன் உற்பத்தி திறனுடைய நிலக்கரி சுரங்கங்கள் அதனிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள் முன்னாள் கோல் இந்தியா நிர்வாகிகள். ஆகவே ஒன்றிய அரசானது, நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயப்படுத்தாமல் முறையாக இயக்கி இருந்தாலே, நிலக்கரி தட்டுப்பாடு என்பது இந்தியாவில் இருக்காது.
ஆனால், ஒன்றிய அரசு அதற்கு மாறாக நிலக்கரி சுரங்கங்களை படிப்படியாக தனியார்மயமாக்கி, கோல் இந்தியாவை சீரழித்து, நாட்டில் நிலக்கரி தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் மூலம் நிலக்கரி சுரங்கங்களை தனியார்மயமாக்கும் வேகத்தை அதிகப்படுத்துகிறது. இதற்கு தற்போதைய நிலக்கரி தட்டுப்பாட்டை பயன்படுத்தி, 20 பழைய சுரங்கங்களை தனியாரிடம் ஒப்படைத்ததே சிறந்த உதாரணம்.
ஒன்றிய அரசின் தனியார்மயக் கொள்கைகள் மூலம் நாட்டில் உள்ள நிலக்கரி வளங்களை ஒட்ட சுரண்டி இலாபம் சம்பாதிக்கபோவது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள்தான். நாட்டில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் மக்களின் சொத்து. அதை உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்கையடிக்க மக்களாகிய நாம் அனுமதிக்கலாமா? கண்டிப்பாக முடியாது.
ஆகவே, உழைக்கும் மக்களாகிய நாம், நிலக்கரி துறையில் மட்டுமல்லாமல் எல்லாதுறைகளிலும் அமல்படுத்தப்படும் தனியார்மயக் கொள்கைகளை முறியடிக்க எல்லா ஒடுக்கப்படும் வர்க்கங்களை ஒன்றிணைத்து போராட்டங்களை கட்டியமைப்பதே, தனியார்மயக் கொள்கைகளை ஒழிப்பதற்கான தொடக்கமாக அமையும்.
தேசத் துரோக சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிய இடைக்கால உத்தரவை மே 11 அன்று பிறபித்துள்ளது உச்சநீதிமன்றம். இச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் தொடர்வதையும் நடவடிக்கைகள் எடுப்பதையும் ஒன்றிய – மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
1962-ம் ஆண்டு, தேசத் துரோக வழக்கு, கேதார்நாத் சிங் vs பீகார் வழக்கில் 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யகோரி பொதுநல இயக்கங்களால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இவ்வழக்கு கடந்த மே 10 அன்று விசாரணைக்கு வந்தபோது, “தேசத் துரோக வழக்கு தவறாக கையாளப்படுவதாக ஒன்றிய அரசே கவலை தெரிவித்துள்ளது. இதில் நடுநிலை ஏற்படுத்த வேண்டியது அவசியம். ஒன்றிய அரசிடமிருந்து இதற்கான தெளிவான விளக்கத்தை எதிர்பார்க்கிறோம். அதுவரையில் ஒன்றிய, மாநில அரசுகள் – 124-A பிரிவை – தேசத் துரோக சட்டத்தை பயன்படுத்தக் கூடாது என தனது அமைச்சகத்தின் மூலம் ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விசாரணையின் போது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான சொசிலிட்டர் ஜெனரல் தூஷார் மேத்தா, இது தொடர்பாக ஒன்றிய அரசிடம் அறிவுறுத்தல் கேட்ட பின்பு மே 11 அன்று கருத்து தெரிவிப்பதாக கூறினார்.
000
மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் மே 11 அன்று ஒன்றிய அரசின் கருத்தை பதிவு செய்தார் துஷார் மேத்தா. ஒன்றிய அரசின் சார்பில், இடைக்கால தடைவிதிக்க கோரும் மனுவுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். அதனோடு, ‘கடுமையான குற்றங்களுக்காக கடந்த 1962-ம் ஆண்டு அரசியல் சாசன அமர்வு மூலமாக உறுதி செய்யப்பட்ட இந்த சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுவதை தடுக்க முடியாது. தேவைப்பட்டால் இந்தச் சட்ட பிரிவின் கீழ் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கைகளை கண்காணிக்கும் அதிகாரத்தை காவல் கண்காணிப்பாளர் வரை பொறுப்புகளை உயர்த்தலாம் என கூறினார். மேலும், நிலுவையில் உள்ள தேசத் துரோக சட்டங்கள் குறித்த தீவிரம் அரசுக்கு தெரியாது. பதிவு செய்யப்பட்ட வழக்குகள் பயங்கரவாத செயல்களாகவும் இருக்கலாம். வேண்டுமென்றால் ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை விரைவுபடுத்தாலாம்” என ஒன்றிய அரசின் கருத்தை பதிவு செய்துள்ளார்.
துஷார் மேத்தா உச்சநீதிமன்றத்தில் 124-A பிரிவினை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளதாகவும் இந்த விசயத்தை அராசாங்கம் ஆராயும் வரை வழக்கை எடுக்க வேண்டாம் என்றும் ஒன்றிய அரசு கேட்டு கொண்டு உள்ளது. ஒன்றிய அரசு காலனித்துவ சட்டங்களை மாற்றி அமைப்பதற்கு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார்.
தலைமை நீதிபதி ரமணா, ‘இச்சட்டம் தவறாக மாநில அரசுகளால் பயன்படுத்தப்படுகிறது. அனுமன் சாலிசா கோசமிட்டதற்கு வழக்குபோடுவது போன்ற நடவடிக்கைகள் கவலை அளிப்பதாக அட்டர்னி ஜெனரல் கே.கே வேணுக்கோபால் கூறியிருந்தார் என்றார். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும், தேசத் துரோகம் சட்டம் தேவையா? என்று ஒன்றிய அரசிடம் கேள்வி எழுப்பினார். இச்சட்டம் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டது என்பதையும் கவனிக்க வேண்டும். காந்தி, பால கங்காதர திலகர் போன்ற சுதந்திர போராட்ட வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தபட்ட சட்டத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது என்றும் கேள்வி எழுப்பினார். இச்சட்டங்கள் தவறாக பயன்படுத்தப்படுவது கவலை அளிப்பதாகவும் கூறினார்.
அட்டர்னி ஜென்ரல் கே.கே.வேணுகோபால் இச்சட்டத்தை ரத்து செய்யக் கூடாது என்றும் ஆனால், இந்த பிரிவு குறித்த வழிகாட்டுதல்கள் தேவை அவசியமானது எது, அவசியமற்றவை எவை என்பதை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்றும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார். இச்சட்டம் தவறாக பயன்படுத்துவது குறைந்து வருகிறது என்றும் கூறினார்.
ஒன்றிய அரசின் கருத்து வரும் வரை மாத கணக்கில் ஒருவரை சிறையில் அடைக்க முடியாது. அதன்பிறகு விரிவாக ஆலோசனை செய்து ஒன்றிய அரசின் கருத்தை மூன்று பேர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு முழுமையாக ஏற்றுகொள்ளவில்லை. மேலும், 124-A சட்டப்பிரிவு மறுஆய்வு செய்யப்படும் வரை, தேசத்துரோக சட்டத்தின் கீழ் புதிதாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், விசாரணை தொடரவும், நடவடிக்கைகள் எடுக்கவும் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம். இச்சட்டப்பிரிவின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள், விசாரணைகள், மேல்முறையீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
000
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ,‘அரசு நிர்வாகம் – நீதித்துறை என ஒவ்வொரு நிர்வாகத்துக்குமான எல்லையை லட்சுமண ரேகை வழிகாட்டுகிறது. அதன்படி தெளிவான எல்லை வரையறை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் யாரும் அவரவர் எல்லையை மீறக் கூடாது. நீதிமன்றம் அரசையும் நீதிமன்றத்தையும் மதிக்க வேண்டும் என கருத்து கூறியுள்ளார்.
000
தேசத் துரோக வழக்கு சட்டம் 124-A பிரிவின் கீழ் இதுவரை 13,000 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என நீதிமன்றத்தில் கருத்தை பதிவு செய்துள்ளார் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில். கடந்த 2015 – 2020 வரை இச்சட்டப்பிரிவின் கீழ் 356 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. 2014 பிறகு 149 பேர் மீது மோடியை விமர்சனம் செய்ததற்காகவும், சிறுமைப்படுத்தும் விதமாக குறிப்புகள் எழுதியதற்காக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய நபர்கள் மீது பல்வேறு தேசத் துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசுக்கு எதிராக தனிநபராகவும், அமைப்பாகவும் பலரும் அரசியல் ரீதியான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளனர். காவி பாசிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை ஒடுக்கதான் பெரும்பாலும் இச்சட்டம் பயன்படுத்த படுகிறது. இதுவரை மோடி அரசுக்கு எதிராக போராடும் தனிநபர்களை, இயக்கத்தின் முன்னணியான நபர்களை இச்சட்டத்தின் மூலம் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
000
உச்ச நீதிமன்றம் காலனியகால சட்டங்களான தேசத் துரோக வழக்கிற்கு இடைக்கால தடைவிதித்தாலும், இதைவிட கொடூர சட்டங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இருக்கத் தான் செய்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊபா போன்ற கொடும் ஆள்தூக்கி சட்டங்களே அரசியல் ரீதியாக எதிர் கருத்து சொல்லும் அமைப்பாக இருந்தாலும், தனிநபர்களாக இருந்தாலும் கைது செய்ய முடியும் என்று 2019-ல் திருத்தம் கொண்டு வந்தது மோடி அரசு.
ஊபா சட்டத்தின் மூலம் இதுவரை 3005 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊபா போன்ற கடும் சட்டம் நடைமுறையில் இருக்கும்போது தேசப் பாதுகாப்பு சட்டம் இடைக்கால தடை உத்தரவு என்பதெல்லாம் ஒரு போலி முகத்திரை ஜனநாயகத்தை உருவாக்கும் தன்மை கொண்டதுதான்.
அடுத்து வரக்கூடிய தேசப் பாதுகாப்பு சட்ட திருத்தங்கள் என்பது காவி பாசிசத்திற்கு எதிராக கருத்து சொல்பவர்களை ஒடுக்கவதற்காகவும், மறுகாலணியக்கத்திற்கும், பாசிசத்திற்கும் சேவை செய்யும் வகையில்தான் அமையும். காவி பாசிஸ்டுகள் ஆட்சியில் இருக்கும் வரை ஜனநாயகத்திற்கான சட்டம் என்பதெல்லாம் எதிர்பார்க்க முடியாது.
தேசத் துரோக வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுவது என்பது அது காலனிய கால சட்ட என்பதால்தான் இல்லை, இந்திய மக்களை இந்த அரசாங்கம் கொடுமைப் படுத்துகிறது என்பதால்தான் என்று உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் மூலம் அறிய முடியும். மக்களை கொடுமைப்படுத்துகிறது என்று கருதி உச்ச நீதிமன்ற இந்த சட்டத்திற்கு தடை விதிக்கிறது என எடுத்துக் கொண்டால் ஊ.பா போன்ற கொடூரச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். ஆனால், உச்ச நீதிமன்றம் அவ்வாறு செய்யவில்லை. இதில் இருந்தே உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி நாம் புரிந்து கொள்ள முடியும்.
இந்த நீதித் துறையும், அரசு அதிகார வர்க்கமும் உழைக்கும் மக்களை ஒடுக்குவதற்கான சட்டங்களைதான் இயற்றும் என்பதை தவிர வேறென்ன செய்துவிட போகிறது.
In Tamilnadu, intellectuals and progressive-democratic forces have been consistently saying that “This is Periyar’s soil. The RSS-BJP won’t gain foothold even if they stand upside down”. We have the right to think high of Tamilnadu, which had incessantly fought the brahmanical ideology throughout its history. But, speaking like this is a dangerous trend and it underestimates the fascists and hides our inaction. It is because of this inaction that fascism is slowly taking root in Tamilnadu. To understand this, it is necessary to review the activities of the RSS-BJP with a little consideration.
The suicide of Lavanya, a student from Ariyalur, was a rare opportunity for the BJP, which was waiting like a hawk to incite communal riots in Tamil Nadu. Lavanya, a Class 12 student of Sacred Hearts Higher Secondary School in Michealpatti, in Thanjavur district committed suicide on January 19. The RSS-BJP claimed that Lavanya, a Hindu, committed suicide due to forced conversion and turned the student’s death into a trump card for its evil religious fanaticism.
This issue went viral after the BJP President Annamalai shared a video on his Twitter handle, in which Lavanya can be seen saying that conversion was the reason behind her suicide. Sangh Parivar organisations like Vishva Hindu Parishad (VHP), Hindu Munnani, Akhil Bharatiya Vidyarthi Parishad (ABVP), including the BJP, came together and protested to “close down the Christian school and bring in a law in Tamilnadu banning conversions”. Prayer houses and churches were attacked in Madurai, Coimbatore and Ramanathapuram.
The saffron mob bent Lavanya’s parents according to its intentions. For two days, they protested without even receiving the girl’s body from the hospital.
Lavanya’s father Muruganandam lodged a complaint with the police alleging that his daughter committed suicide because that she was forced to convert and filed a petition in the Madurai High Court seeking a CBI probe. But the saffron mob’s moves can be understood from the fact that the complaint lodged with the police on January 15 earlier did not mention “conversion”. The BJP had made the family to file a case in the Supreme Court by spending money.
In fact, it was later revealed that the girl had committed suicide because of her stepmother’s cruelty and the excessive workload imposed by the hostel warden. It was revealed that in an earlier video circulated by Annamalai, Muthuvel of VHP was the one who asked the girl whether she was forced to convert and that the video was cut and circulated as per their intent. Lavanya’s statement to the district magistrate also confirmed that conversion was not the reason. After getting all this evidence, the democratic forces exposed the RSS-BJP and tore their faces.
But the BJP-RSS’s attempt can’t be considered a complete failure. The RSS-BJP tried to turn Lavanya’s suicide into a tool to implement their saffron fascist agenda in Tamilnadu. For this, even their national leaders paid direct attention.
National President of BJP J.P. Nadda himself intervened and set up an enquiry committee. The saffron mob created the hashtag ‘Justice for Lavanya’ and made the incident a topic of discussion across the nation. The old Tamilnadu House in Delhi was besieged by the ABVP. Chief Minister Mk Stalin’s residence in Tamil Nadu was also under siege. The ABVP also staged protests in Shimla, Jammu, Gorakhpur, Bhopal and other parts of the country.
They tried to pressurize the DMK by creating attention at a national level. It is to be noted that the Madurai High Court and the Supreme Court helped in moving the case in the direction desired by the fascists. As a result, they have succeeded in their plan to transfer the case to their puppet, the CBI.
Justice G R Swaminathan of the Madurai High Court, who gave the Deshbhakt Award to Maridhas, handed over the case to the CBI and ordered an investigation. What he said during the trial was important.
The judge didn’t condemn the RSS-BJP, which protested under the false propaganda of forced conversions and attacked churches and tried to orchestrate a riot in Tamilnadu by using Lavanya’s death. Instead he condemned SP Ravali Priya who said there was no evidence to prove that conversion was the cause of the death. The news spreaded on the social media that Lavanya had earlier contacted the child protection centre as she could not bear the harassment of her stepmother, in the view that her stepmother might be responsible for the death. Pointing out at this, the judge condemned it as “an act of disrupting the investigation”.
The ABVP had protested across the country, blaming religious conversion for Lavanya’s suicide. The scene of burning an effigy against the Tamilnadu government.
But during the trial, the judge spoke like a member of the Sangh Parivar as if conversion was the reason behind the student’s suicide. Referring to the Conversion to Christianity in the Hindi film “Serious Men” and the Tamil film “Kalyana Agathigal”, he said, “while movies, particularly, Tamil movies are notorious for melodrama and exaggeration, they do contain a kernel of truth”. He also suggested that someone could undertake an exercise into how the area “Michaelpatti” acquired its name.
The DMK government which foresaw the danger appealed in the Supreme Court against the High Court verdict. The TN police argued that the girl’s suicide was being politicised. The police argued that it was not right to transfer the case to the CBI without giving adequate opportunity to the TN police. The Supreme Court insisted to not make this a “prestige issue”.
Annamalai declared that the transfer of the case to the CBI was a victory for the BJP’s struggle. Even though the disharmony campaign of conversion openly disrupted the peace in Tamilnadu, the DMK government did not dare to arrest and imprison the BJP leaders including Annamalai and H Raja. There has not been much debate among the intellectuals about the judiciary being a puppet of the saffron mob.
The recent incident in Coimbatore is a good testimony to the infiltration of saffrons not only in the judiciary but also in the police department. During a meeting organised by ‘Kovai Makkal Otrumai Medai’ at Sivananda Colony on the death anniversary of Gandhi (January 30), members of various outfits including CPM, VCK and TPDK planned to take a pledge under the theme “Let’s pledge to organise people against Hindu fanaticism”.
Coimbatore police, who entered the function, tried to remove the flex banner with the slogan “Gandhi was killed by Hindu fanatics”. There was an argument between the crowd and the police over the issue and then the meeting had to be held only after hiding the word ‘Hindu’ in the text.
In the function that followed, CPM Politburo member G Ramakrishnan recited that the father of the nation “was shot dead by Godse” and RSS “terrorists”. Rathinapuri Inspector Ramesh Khanna had argued that the the references to Godse and the RSS could lead to “law and order issues” and should not be used. Democracy is being denied by the police just because the well-known truth disturbs the minds of the saffron thugs.
But it was during this period that there was a thrilling debate over Chief Minister M K Stalin’s tweet — “No place in Indian soil for Godse’s heirs and their evil thoughts”.
It is the usual practice of the RSS-BJP to indulge in fascist rowdyism in the areas where they have their base. Mob lynchings in the northern states are a tragic form of fascist rowdyism. Though mob lynchings are not on the rise in Tamilnadu as of now, the question arises as to whether the fascist rowdyism is becoming a new normal.
When Modi visited Punjab, the BJP claimed that there was a “security lapse” and protested throughout India. Muthusamy, a trolley fruit vendor, was brutally attacked by the BJP functionaries in Palladam area of Tamilnadu till he fainted in front of the police for criticising Modi during a human chain protest. This incident can be seen as an expression of fascist rowdyism. Similar was the attack on the churches in areas like Ramanathapuram and Coimbatore on Lavanya issue.
We cannot forget that when farmers’ unions burnt an effigy of Modi and protested against the massacre of farmers in UP’s Lakhimpur Kheri, BJP disputed that “if Modi’s effigy is burnt, we will burn Lenin’s effigy in return”. During the local body elections, a Muslim woman wearing burqa in Madurai’s Melur area was threatened by a BJP booth agent and was asked to remove it. These are only significant activities of the RSS-BJP.
The saffron fascists are making efforts to gain a foothold in Tamilnadu more vigorously than ever before; They are growing gradually. But the DMK, which was supported by democratic forces as a force that will oppose the RSS-BJP in Tamilnadu, made no attempt to stop the activities of the RSS-BJP; except for the talk.
Apart from not stopping, the DMK is supporting the growth of fascism. The actions of the Hindu Religious and Charitable Endowments Department is a good example. The DMK has appointed RSS supporter Ramasubramanian as a non-official member to the Advisory Committee of the HR & CE Department.
Though he has been a vocal critic of the BJP, he always proudly identifies himself as a “RSS cadre”. In a media interview, he said, “Illam Thedi Kalvi scheme requires volunteers from the RSS”. From this one can understand what he will do with his office in the department of HR & CE. Moreover, on the Thillai Nataraja Temple issue, he said, “Thillai temple is the property of Dikshitars (brahmin priests) and it is right to throw her (Jayasheela) out of cithrambala medai”. It was him that the “Dravidian” DMK had appointed.
The latest evidence is the action of Sekar Babu, who organised Mahashivarathri celebrations on behalf of the HR & CE Department this time to compete with Jaggi Vasudev. Durga Stalin, wife of the Chief Minister, inaugurated the Shivarathri special programmes held at the Kapaleeswarar temple by lighting a kuthuvilakku (lamp). Rudraksha and Theertham are free for the devotees who attended.
Sekar Babu’s announcement was opposed by the DMK allies like VCK and CPM. “Organising religious functions and carrying out religious propaganda by the government itself is against dravidian ideology” the Deputy General Secretary of VCK Vanni Arasu condemned it. DK leader Veeramani, CPM’s K Balakrishnan and many others condemned this act.
During the local body election campaign, TN BJP President Annamalai said, “We are the opposition in Tamil Nadu. The DMK has been criticising the BJP for whatever they do. We are also criticising Dravidianism. This is an ideological fight”
It’s true. Ideologically, the fascists are on the rise. The DMK is a victim of it, not its competitor. If the danger of saffron fascism is to be defeated at the outset, both ideologically and practically, the revolutionary and democratic forces of Tamilnadu must act vigorously. On the contrary, it is a dangerous trend to stay afloat in the ‘golden age’ spell and just mocking at the RSS-BJP.
மக்கள் போராட்டங்களால் குலுங்கிக் கொண்டிருக்கிறது இலங்கை தீவின் வீதிகள். காலி முகத்திடலுக்கு தனது குண்டர்களை அனுப்பி, அமைதியாக போராடிக் கொண்டிருந்த போராட்டக்காரர்களை தாக்கி, போராட்ட முகாம்களை கொளுத்திய பாசிஸ்ட் மஹிந்த ராஜபக்சேவை பழிக்குப் பழி வாங்கிவிட்டார்கள் உழைக்கும் மக்கள். அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ராஜபக்சேவின் பாரம்பரிய வீடு, கொழும்பில் உள்ள அரசு இல்லம் உள்ளிட்டு பல இடங்கள் மக்களின் கோபத்தால் தீக்கிரையாக்கப் பட்டிருக்கின்றன. இராஜபக்சே கட்சியினர் நாடெங்கும் அடித்து துரத்தப்படுகிறார்கள்.
சிங்கள மக்களை இனவெறிக்கு பலியாக்கி, ஈழத் தமிழ் மக்களை கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்த மஹிந்த ராஜபக்சே பதவியைத் துறந்துவிட்டு ஓடியதோடு, தாம் எங்கிருக்கிறோம் என்றே கூற முடியாமல் தலைமறைவாகிவிட்டார்.
“இலங்கையில் இனப் பிரச்சினையைத் தாண்டி, வர்க்க ஒற்றுமை உருவாக வாய்ப்பே இல்லை” என்று கதையளந்தவர்கள், இன்று தமது இனவாத அரசியலின் எதிர்காலத்தை நினைத்து விழிபிதுங்கி நிற்கிறார்கள். சிங்களர், தமிழர், முசுலீம், கிறித்துவர் என அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் கைகோர்த்து போராடுகிறார்கள்.
தமது நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஆளும் வர்க்கம் பல்லாண்டு காலமாக பேணி வளர்த்த இனவெறி – மதவெறிக் கசடுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் போக்கில் துப்புரவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இவையெல்லாம் நமக்கு ஊக்கத்தைத் தந்தாலும், மக்கள் எழுச்சியை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி எடுத்துச் செல்ல புரட்சிகர கட்சி ஒன்றின் தலைமை இல்லாத காரணத்தால், ஏகாதிபத்தியங்கள் இதை தம்முடைய நோக்கத்திற்கேற்ப வரம்புக்குட்படுத்திவிட்டன என்பது கசப்பான மறுபக்க உண்மையாக இருக்கிறது…
000
இலங்கையின் இன்றைய அரசியல் – பொருளாதார நெருக்கடிக்கு காரணம், அந்நாட்டில் 1970-களில் அமல்படுத்தப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வி மட்டும் அல்ல; தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் நடந்து கொண்டிருக்கும் மேலாதிக்கப் போட்டியின் விளைவே.
சீன ஆதரவு கும்பலான ராஜபக்சே அரசை தூக்கியெறிந்துவிட்டு, தமது விசுவாச கும்பலை ஆட்சியில் அமர்த்துவதற்காக அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் திட்டமிட்டே அந்நிய செலாவணி நெருக்கடிகளைத் தீவிரப்படுத்தின.
இலங்கையில் தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தில் தலையிட்டு செல்வாக்கு செலுத்துவமளவிற்கான மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகரக் கட்சி இல்லை என்பதால், தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவின் செயல்திட்டம் வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருந்தது. ராஜபக்சே கும்பலுக்கு நெருக்கடி கொடுத்து பணியவைப்பதற்கு அமெரிக்கா இப்போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டது.
000
சீனாவின் கடன் வலையில் சிக்கித்தான் இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது என்ற ஒரு தலைபட்சமான கருத்தை பெரும்பான்மையான ஆளும் வர்க்க ஊடகங்கள் இடைவிடாமல் கூவிக் கொண்டிருந்தன. அமெரிக்க விசுவாசிகளான எதிர்கட்சிகளும் மஹிந்த ராஜபக்சேவின் சீன ஆதரவு கொள்கைகளாலேயே நாடு இந்நெருக்கடியை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.
இடதுசாரிகள், லிபரல் ஜனநாயகவாதிகளைத் தவிர பெருந்திரளான மக்களிடம் புதிய தாராளவாதக் கொள்கையின் தோல்வி பேசு பொருளாகவில்லை. பின்னிருந்து நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் அம்பலப்படுத்தப் படவில்லை. எனவே “கோத்தபய அரசு பதவி விலக வேண்டும்” (Gota Go Home) என்ற கோரிக்கையோடு போராட்டம் வரம்புக்குட்படுத்தப்பட்டது. இதை அமெரிக்கா பயன்படுத்திக் கொண்டது.
ஒருகட்டத்தில், தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்சே அமெரிக்காவின் காலிலேயே விழுந்து சரணாகதி ஆகிவிட்டார். அமெரிக்கா கூறியதை தண்டனிட்டு ஏற்றார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக, ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் யோசனையை தொடக்கத்தில் ஏற்காத மஹிந்த ராஜபக்சே, பின்னர் தானே ஐ.எம்.எஃப்.யிடம் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைத்தார்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த சீன விசுவாசியும் ராஜபக்சேவின் நெருங்கிய நண்பருமான அஜித் நிவார்டு கப்ரால் வெளியேற்றப்பட்டு முன்னாள் ஐ.எம்.எஃப் நிர்வாகியான நந்தலால் வீரசிங்கே ஆளுநராக நியமிக்கப்பட்டார். நீக்கப்பட்ட அஜித் நிவார்டு கப்ரால் ஐ.எம்.எஃப்.யிடம் கடன் வாங்குவதை கடுமையாக எதிர்த்தவர்; சீனாவிடம் கடன் பெறுவதை ஊக்குவித்தவர் ஆவார்.
“குடும்ப ஆட்சி”, “ஊழல் ஆட்சி” என்று மக்கள் மத்தியில் தமக்குள்ள அவப்பெயரை போக்குவதற்காக, ‘பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள’ என்ற பெயரில் ஏப்ரல் 18 அன்று அமைச்சரவையை புதுப்பித்தார் மஹிந்த. இதற்குமுன் அமைச்சர்களாக இருந்த சமல் ராஜபக்சே, மஹிந்தவின் மகன் நமல் ராஜபக்சே உள்ளிட்ட ராஜபக்சே குடும்பத்தினர் நீக்கப்பட்டு 17 பேர் கொண்ட புதிய அமைச்சரவையை அமைத்தார்.
நாடாளுமன்றக் கூட்டத்தில், ஐ.எம்.எஃப்.யிடம் கடன்பெற தாமதித்தது தவறுதான் என்றும் தம்முடைய சில தவறான முடிவுகள் காரணமாகவே நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் சரணடைந்தார் மஹிந்த.
ஆனால், இந்த நாடகங்கள் எதையும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பிரதமரும் அதிபரும் பதவி விலகக் கோரிய போராட்டங்கள் தொடர்ந்த படியே இருந்தன.
சரணடனைந்தாலும், ஆள்வதற்குரிய தார்மீக ஆதரவை மக்களிடம் இழந்துவிட்டபடியாலும் முழுமையாக ராஜபக்சே கும்பலை நம்பத் தயாராக இல்லாததாலும் அமெரிக்காவும் ராஜபக்சேவுக்கு உதவவில்லை. ஐ.எம்.எஃப் உடன் நடந்த பேச்சுவார்த்தையில், 300 முதல் 600 மில்லியன் டாலர்கள் வரை தருவதாக ஒப்புக் கொண்டாலும் ராஜபக்சே பதவி விலகி ஓடும் வரை நிதியை விடுவிக்கவில்லை. இதன் மூலம் நெருக்கடியை மென்மேலும் தீவிரப்படுத்தியது அமெரிக்கா.
000
தற்போது அமெரிக்க அடிவருடி ரணில் விக்ரம சிங்கே பிரதமராகப் பொறுப்பேற்றாலும் அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சே பதவி விலகவில்லை. புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள ரணிலுக்கு மஹிந்தா ராஜபக்சே வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது முக்கியமானது. இதையெல்லாம் இணைத்துப் பார்க்கும்போது, ஒரு முன் திட்டமிட்ட சூழ்ச்சி அரங்கேறிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
கோத்தபய குறிப்பிட்ட காலத்தில் பதவி விலகுவதாக ஒப்புக் கொண்டால், நான் இடைக்கால அரசமைக்க ஒப்புக் கொள்கிறேன் என்று கூறிய எதிர்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவை கோத்தபய அரசமைக்க அழைக்கவில்லை; மாறாக தன்னுடைய கட்சியில் அவர் மட்டுமே எம்.பி.யாக உள்ள ரணில் விக்ரம சிங்கவை பிரதமராக்கியுள்ளார்.
இதனை எதிர்க்கட்சிகள் யாரும் ஏற்கவில்லை. ரணில் விக்ரம சிங் அரசுக்கு ஆதரவளிக்க முன்வருமாறு எதிர்கட்களுக்கு கோத்தபய விடுத்த கோரிக்கையை அவர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். ஏனெனில், கோத்தபய அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் கைவிடவில்லை. போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மக்கள் மனநிலையைத் தாண்டி, சந்தர்ப்பவாதமாக நடந்து கொள்ளும் துணிச்சல் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை.
ஆனால் ஆட்டத்தின் சூத்திரதாரியான அமெரிக்கா, ரணில் விக்ரசிங்கை வரவேற்றிருக்கிறது. இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், “பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வு காணவும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் ரணில் பிரதமராக பொறுப்பேற்றுள்ளது முதல் படி” எனக் கூறியுள்ளார். மேலும் ஐ.எம்.எஃப் மூலம் நீண்டகால கடன்களைப் பெற்றுக் கொடுக்க தமது ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மட்டுமல்லாது பிராந்திய வல்லரசாக உள்ள இந்தியாவும் இந்நெருக்கடியைப் பயன்படுத்தி தமக்குரிய பலனை அடைவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தது. இந்த நோக்கத்திலேயே உணவுப் பொருட்கள், பெட்ரோல் – டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அந்நாட்டிற்கு அனுப்பி வைத்தது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் இதுவரை 3 பில்லியன் டாலருக்கு மேலாக இலங்கைக்கு கடன் கொடுத்துள்ளது.
தற்போது, ரணில் பதவியேற்ற மறுநாளே (13.05.2022), இந்தியாவின் சார்பில் கோபல் பாகலே என்பவர் அரசு தூதராக அனுப்பப்பட்டு ரணில் விக்ரம சிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது மோடி அரசு. தமது ‘உதவி’களுக்கு பிரதிபலனாக இலங்கையை சூறையாடுவதில் அம்பானி – அதானிகளுக்குரிய பங்கை ஒதுக்குவதற்கான பேரம் நடந்திருக்கலாம்.
எனவே, இலங்கையில் சீனாவுக்கு எதிராக அமெரிக்க ஆதரவு பொம்மை ஆட்சிப் பொறுப்பேற்றுள்ளதே தவிர, அரசுக்கட்டமைப்பிலோ ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டை விற்பதிலோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
கோத்தபயவை பதவி விலகச் சொல்லி மக்கள் போராட்டங்கள் தொடர்கிறதே என்று நாம் கேட்கலாம். ஆம், கோத்தபயவை பதவி விலகக் கோருவதோடு போராட்டங்களின் கோரிக்கை வரம்பிடப்பட்டுவிட்டது. என்றாலும்கூட இப்போராட்டங்களின் மூலம் இனவாதத்தை உடைத்துக் கொண்டு உறுதிபடுத்தப்படும் வர்க்க ஒற்றுமையைக் கண்டு ஆளும் வர்க்கங்கள் அஞ்சி நடுங்கவே செய்கின்றன. அடக்குமுறை துரிதப்படுத்தப்படுகிறது.
போராட்டத்தின் தொடக்கத்தில், அரசுக்கு எதிரான அமைதியான போராட்டங்களை ‘ஆதரிக்கிறோம்’ என்று இலங்கை இராணுவம் தெரிவித்தது. அமெரிக்க தூதரும் மக்கள் போராட்டங்களை ‘ஆதரிப்பதாக’ தெரிவித்தார். ஆனால், காலி முகத்திடல் வன்முறைக்கு மக்கள் பதிலடி கொடுத்ததிலிருந்து ‘வன்முறையாளர்களை’ ஒடுக்க வேண்டும் என்று கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது செயல்திட்டம் வெற்றியடைந்துவிட்டதும் இவ்வாறு பேசுவதற்கு முக்கிய காரணம்.
ஆனால், இத்தன்னெழுச்சியான மக்கள் போராட்டங்கள் ஒரு புரட்சியை நோக்கி முன்னேறப் போகிறதா என்பதுதான் நாம் பரிசீலிக்க வேண்டிய கேள்வி. இல்லை என்பதுதான் அதற்கான பதில். ஒருவேளை போராட்டம் தீவிரமடைந்தால், அதைத் தணிப்பதற்காக கோத்தபய பதவி விலகலாம். அவ்வாறு விலகிவிட்டால் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்படும். இந்த அவலநிலைக்கு புரட்சிகர சக்திகள்தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்.
எகிப்து, துனிஷியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட அரபு வசந்தமாக இருக்கட்டும், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் புதிய தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிராக ஏற்பட்ட இளஞ்சிவப்பு அலையாக இருக்கட்டும் அவையாவும் ஆட்சி மாற்றத்தைத்தான் கொண்டுவந்தனவே அன்றி, நிலவுகின்ற அரசுக்கட்டமைப்பை அடித்து வீழ்த்திவிட்டு, மக்கள் அரசை நிறுவும் புரட்சியைக் கொண்டுவரவில்லை.
புறநிலை நெருக்கடிகள் எவ்வளவு முற்றி வெடித்தாலும், அவை புரட்சிக்கு சாதகமாகவே அமைந்தாலும் மக்களுக்கு தலைமை தாங்கக்கூடிய புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி இல்லையேல் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது என்பதையே இவை நமக்கு கற்பிக்கின்றன. எனவே மக்கள் அடித்தளம் கொண்ட புரட்சிகர மார்க்சிய – லெனினியக் கட்சிக்காக உலகப் பாட்டாளி வர்க்கம் ஏங்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையும் கூட.
“மனித குலத்திற்கு சேவையாற்றுவதே என் நோக்கம் ! நோயாளியின் நலனும், ஆரோக்கியமுமே என் குறிக்கோள் ! நோயாளியின் தனிப்பட்ட பிரைவேசியை நான் பாதுகாப்பேன் ! அவர் உடல் தொடர்பான ரகசியங்களை கண்ணியமாக பாதுகாப்பேன் ! எந்த நோயாளியையும் வயது, நிறம், இனம், குலம், பாலினம், அரசியல், சமூக சார்புகள் ஆகியவை சார்ந்து அணுக மாட்டேன் !” என்பதே மருத்துவ மாணவர்கள் ஏற்றுக் கொள்ளும் ஹிப்போகிராட்டின் உறுதி மொழியாகும்.
இதை தூக்கியெறிந்துவிட்டு பார்ப்பன மனுதர்மத்தை தூக்கிபிடிக்கும் ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதி மொழி மூலம் மருத்துவ கல்வியை துவங்க வைக்க எத்தனிக்கிறது மோடி அரசு.
மருத்துவம் என்பது கடவுள் சிந்தனைகளின் மறுதலிப்பு ஆகும். விஞ்ஞான பூர்வமானது. எப்போதும் ‘சோதித்தறிதல் – வளர்த்தெடுத்தல் – சோதித்தறிதல்’ என்று இயங்கிக் கொண்டிருப்பது. ‘இது அவ்வளவுதான்’ என்று எங்கும் எப்போதும் தேங்கி நிற்பதில்லை. அதனால்தான் எத்தகைய நாசகார தொற்று வந்த போதும் அதற்குரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு மனித குலத்தின் அழிவு நிறுத்தப்படுகிறது.
நவீன மனித சமுதாயத்தை ஒரு நூற்றாண்டுக்கு பின்னுக்கு தள்ளி மூடத்தனத்தில், மூடசிந்தனைகளில் ஊறிப்போன, ஒரு பார்ப்பன மேலாண்மை மனுதர்ம சமூக அமைப்புக்காக போராடிக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க அத்தனை அரசு நிறுவனங்களையும் அதற்கேற்ற வகையில் மாற்றிக் கொண்டிருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது. அந்த வகையில்தான் கல்வி நிறுவனங்களிலும் மாறுதலை செய்துகொண்டிருக்கிறது. குறிப்பாக எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் நரித்தனமாக அமுல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில், ஒன்றுதான் மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களின் உறுதியேற்பு நிகழ்ச்சியில் சமீபகாலங்களில் நடைபெறும் மாறுதல்கள்.
பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பின்பு அகில இந்திய மருத்துவ கவுன்சில் (Medical Council of India) கலைக்கப்பட்டு, அதற்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) ஏற்படுத்தப்பட்டது. இந்த ஆணையம் மருத்துவத் துறையை காவி – பார்ப்பன மயமாக்கும் வேலைக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுவதாக கண்டனக் குரல்கள் தொடர்ந்து எழுந்து கொண்டேதான் உள்ளன.
அதற்கேற்ப மருத்துவ கல்லூரிகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சமஸ்கிருத உறுதிமொழி தேங்கிய குட்டையில் அழுகிப்போய் கிடக்கும் தண்ணீரில் அருமருந்து இருப்பதாக ஏமாற்றுகிறது. ‘எல்லாம் அவன் செயல்’ என்று மனித முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. ஆண், பெண் பாலின வேறுபாட்டை முக்கியத்துவமாக்குகிறது. பார்ப்பனிய மனுதருமத்தை கடைபிடிக்க வேண்டும் என்கிறது. மனிதகுல அழிவை சாத்தியமாக்குகிறது.
‘சாரக் ஷாபாத்’ என்ற மருத்துவ உறுதிமொழியை திணிப்பதற்கு ‘இந்திய மருத்துவ அசோஷேசியன்’ ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே கடும் எதிர்ப்பை தெரிவித்து இருந்தது ! காரணம், சாரக் ஷாபாத் உறுதிமொழியானது, ‘மருத்துவத்தை சாதிய மற்றும் பாலியல் கண்ணோட்டத்துடன் அணுகிறது’ என்று அது நம்பியது.
மொழி என்ற வகையில் மட்டுமல்ல உள்ளடக்கம் உணர்த்தும் பாடம் என்ற வகையிலும் இதை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
பாராளுமன்றத்தால் இதற்காக நிறைவேற்றப்பட்டிருக்கும், தேசிய மருத்துவ ஆணைய சட்டத்தின்படி, மருத்துவத்துவ துறையின் சகலத்தையும் கட்டுப்படுத்ததக்க அதிகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அளிக்கிறது. அதாவது, இதன்மூலம் தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளை நடத்துவதும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ பட்டங்களை கொடுப்பதும் தேசிய மருத்துவ ஆணைய சட்ட விதிகளின் படியாக கொண்டு வரப்பட்டு உள்ளது.
இதன்மூலம் மாநிலங்களின் அதிகாரங்களை பறித்து மத்தியில் அதிகாரங்களை குவித்து ஒரு சர்வாதிகார ஆட்சிமுறையை பா.ஜ.க ஒன்றிய அரசு முன்னணுமானிக்கிறது.
கடந்த பிப்ரவரி மாதம் ஹிப்போகிரடிக் உறுதிமொழிக்கு பதிலாக சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை ஏற்க பரிந்துரைக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையத்தில் விவாதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வந்தது. இந்த நிலையில், இதற்கு பல மாநிலங்களிலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
அதனை தொடர்ந்து மக்களவையில் மார்ச் 25-ம் தேதி ஒரு கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில், மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் மருத்துவர் பாரதி பவார் அவர்கள் “தேசிய மருத்துவ ஆணையத்திடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ‘இப்போகிரடிக்’ உறுதிமொழிக்கு பதிலாக ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை கட்டாயமாக்கும் எவ்வித பரிந்துரையும் தற்போதைக்கு இல்லை” என்று குறிப்பிட்டார்.
ஆனால், அதற்கு மாறாக தேசிய மருத்துவ ஆணையம் மார்ச் 31-ம் தேதியன்று வெளியிட்ட சுற்றறிக்கையில், “ஒவ்வொரு மாணவரும் மருத்துவக் கல்வியில் சேரும் பொழுது, மாற்றியமைக்கப்பட்ட ‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது”. என் இருந்தது ! மேலும், இந்த சுற்றறிக்கையானது அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிற்காக வெளியிடப்படும் சுற்றறிக்கை என்றும், இதை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது”. இதன் மூலம் தேசிய மருத்துவ ஆணையம் நேரடியாக மருத்துவ கல்வி நிறுவனங்ளை வலியுறுத்தியது.
‘மகரிஷி சரக் சப்த்’ உறுதிமொழியை MBBS மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்துடன் சேர்த்து இந்த ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டு வெளியிடப்பட்ட மார்ச் 31-ம் தேதியிட்ட சுற்றறிக்கையானது, தமிழக அரசிற்கும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கும் பொருந்தும். மேலும், தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை பொருந்தும்.
அப்போதே, இந்த ‘சரக் சப்த்’ உறுதி மொழியை யார் மாற்றியமைத்தார்கள்? இப்போது திடீரென உறுதிமொழியை மாற்றுவதற்கான தேவைகள் என்ன என்பதை பற்றியெல்லாம் தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக அரசு கேள்வி எழுப்பியிருக்க வேண்டும். இது பற்றிய விளக்கங்களை கேட்டு இதற்கு தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
இந்த சுற்றறிக்கை வெளியானதிலிருந்து, கடந்த ஒரு மாதத்தில், ‘சர்ச்சைக்குரிய மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்க வேண்டாம்’ என்று எவ்வித சுற்றறிக்கையோ, ஆணையோ தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனரகத்திடமிருந்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுக்கு (டீன்) எழுதப்பட்டதாக தெரியவில்லை. அதே போல தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகமும், ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை ஏற்கத் தேவையில்லை’ என்று மருத்துவக்கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தவில்லை.
குறைந்தபட்சம், தேசிய மருத்துவ ஆணையத்திற்கு தமிழக அரசின் மருத்துவக்கல்வி இயக்குனரகத்திடமிருந்தோ, டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திடமிருந்தோ, தமிழக அரசின் சுகாதாரத் துரையிடமிருந்தோ, ‘மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை நாங்கள் ஏற்கமாட்டோம்’ என்று அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி ஒரு கடிதம் எழுதியிருந்தால் கூட இவ்வளவு பெரிய சர்ச்சை வந்திருக்காது.
மருத்துவக் கல்வியில் சமஸ்கிருத உறுதி மொழி விவகாரம் இவ்வளவு பெரிய சர்ச்சையாக வெடிக்க, இது குறித்து தேசிய மருத்துவ ஆணையத்திற்கு, உரிய நேரத்தில் மறுப்பு தெரிவிக்காமல், கள்ளத்தனமாக அமைதி காத்த மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபுவும், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷைய்யனும், சுகாதராத்துறை முதன்மை செயலாளர் இராதா கிருஷ்ணனுமே பொறுப்பாவர். குறைந்தபட்சம் தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த சுற்றறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனுடைய கவனத்திற்கு கொண்டு போய் விவாதித்து இருக்க வேண்டும்!
உயர்மட்டத்திலிருக்கும் பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து திராவிட மாடலுக்கு எதிராக செயல்பட்டு பார்ப்பன மேலாண்மையை நிறுவப் போகிறார்கள் என்பதே கண்கூடாக தெரியும் உண்மை. இதனால்தான் சத்தமில்லாமல் திருவள்ளூர் ராமநாதபுரம் மதுரை மருத்துவ கல்லூரி உட்பட ஒன்பது மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசின் எதிர்ப்பு முடிவிற்கு மாறாக ‘மகரிஷி சாரக் ஷாபாத்தின்’ சமஸ்கிருத உறுதி மொழி ஏற்கப்பட்டு உள்ளது! அதில் சில கல்லூரிகளில் சுகாதார அமைச்சரும் பங்கேற்றிருப்பதாக செய்திகள் உள்ளன. குறிப்பாக, திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில். அப்போதெல்லாம் எந்த பிரச்சினையும் கிளம்பவில்லை. அப்படியென்றால் மக்கள் கவனத்துக்கு வராத வகையில் ஆர்.எஸ்.எஸ் வேலைத்திட்டம் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை. ஆனால், இதில் திராவிட மாடல் ஆட்சி சம்பந்தபட்டிருப்பதால் கூட்டணி கட்சிகளும் அடக்கியே வாசிக்கின்றன. இதனுடைய விளைவு பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் தமிழகத்தில் வளரும் வாய்ப்புகளை தங்கத்தட்டில் வைத்து தருகின்றன. தமிழகத்தில் பெரியார் மரபை காப்பாற்றுபவர்கள் மிக நுணுக்கமாக கவனித்து முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.
மதுரை மருத்துவ கல்லூரி விழாவில் கலந்து கொண்ட நிதியமைச்சர் இந்த வேறுபாட்டை கண்டுபிடித்து தனது எதிர்ப்பை பதிவு செய்ததால் இது வெளியுலகுக்கு தெரிந்தது பொதுவெளியீல் இதைப்பற்றி விவாதங்களும் வெடித்தன.
திராவிட மாடல் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் மா.சுப்ரமணியன் அவர்கள் மருத்துவ கல்வியின் மனித நேயத்திற்கு முற்றிலும் மாறான, பிற்போக்குத்தனமான இந்த போக்கு குறித்து இத்தனை நாட்களாக அமைதி காத்தது ஏன்? தங்களது அரசின் கோட்பாடு தெரியவில்லையா? அல்லது இதிலிருக்கும் ஆபத்து புரியவில்லையா? அல்லது வழக்கம்போல ‘அதிமுக ஆட்சி முதற்கொண்டு முதன்மை செயலராக இருக்கும் ராதாகிருட்டிணன்’ ஆலோசனைப்படி பேசாமல் இருந்து விட்டாரா?
இதுவாவது பரவாயில்லை. இதைப்பற்றிய கேள்விக்கு மருத்துவக் கல்லூரி டீன் சொன்ன பதில் “மெடிகல் கவுன்சில் வெப்சைட்டில் ஆங்கிலத்தில் இருந்த்தால் அதுதான் சரியானது போலிருக்கிறது என்று மாணவர்தலைவர் எடுத்து டீனிடமோ மூத்த புரொபசர்களிடமோ (அதாவது நிர்வாகத்தில் யாரையும்) கலந்தோலாசிக்காமல் தன்னிஷ்டத்துக்கு அந்த மாணவர் தலைவர் வாசித்துவிட்டார். எங்களுக்கே பிறகுதான் தெரியும்” இதைவிட நிர்வாகத்தில் பார்ப்பன் மயம் வேரூன்றுவதை காட்ட சாட்சியம் வேண்டுமா?
இதைவிட பெரிய கேலிக்கூத்து ஐந்து மாணவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி அதற்கு தாங்கள்தான் பொறுப்பு என்பதாக விளக்கம் அளித்தது.
அதையடுத்து தனிப்பட்ட முறையில் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் மதுரை டீனுக்கு கொடுத்த தண்டனை ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத் துறை அமைச்சர் அறிவித்ததுதான் இது எல்லாவற்றுக்கும் மேலான வேடிக்கை..
இதன்மூலம் அரசின் விருப்பத்துக்கு எதிராக நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்களுக்கு உணர்த்த வேண்டும்.
தன்னுடைய அணியிலிருக்கும் ஒருவரை இழக்க விரும்பாமல் ஆர்.எஸ்.எஸ்.சும் பா.ஜ.க.வும் பின்னணியில் தகிடுதத்தங்கள் அரங்கேற்றி டீனை அதே இடத்தில் அமர வைத்துவிட்டன. எப்படி, சமஸ்கிருத மந்திரத்தை ஆங்கிலத்தில் மாற்றி எழுதி மாணவர்கள் மத்தியில் படிக்க வைத்தார்களோ அதைப்போலவே இனி ஆர்.எஸ்.எஸ்-ன் கொள்கைகள் வெவ்வேறு வழிகளில் அரங்கேறப்போவது நிச்சயம்.
நமது முதல்வர் ‘தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவான மருத்துவக் கல்லூரிகளில் நீட்டை ஒழிக்கப்போவதாக’ சபதமேற்கும் வேளையில் சமஸ்கிருதத்தில் உறுதி மொழியாம்!. திராவிட மாடல் ஆட்சியில் எறும்பு புற்றுகளுக்குள் கருநாகங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன.. தலையெடுத்த ‘ஒரு பாம்பையும்’ நசுக்காமல், திராவிட மாடல் ஆட்சி வெற்று சபதங்களை மேடைகள் தோறும் முழங்கி கொண்டிருக்கிறது.
“இதனை மேலும் சர்ச்சையாக ஆக்க வேண்டாம்” என்கிறார் அமைச்சர். பாவம் சுகாதார துறை அமைச்சர்! இவர் இரண்டாம் தலைமுறையாக இருக்க கூடும். பெரியாரின் மரபுகள் போராட்டங்கள் சமூகநீதிகள் ஆகியவற்றில் போதிய அனுபவம் இல்லாமல் இருக்கலாம். இதனால் வருகின்ற மருத்துவர்கள் ‘வந்தே மாதரம்; ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கத்துடன் சமுதாய அரங்கில் நுழைவதற்கான சாத்தியங்களை நினைத்து பாருங்கள்!
உயர்மட்டத்தில் தமிழக மக்களின் வரிப்பணத்தில் சுகபோக வாழ்க்கையை அனுபவிக்கும் காவி – பார்ப்பன – ஆர்.எஸ்.எஸ் அதிகாரிகளை அம்பலப்படுத்தி பொதுவெளிகளில் போராட்டம் துவங்கி நடத்தப்பட வேண்டும்.
இவர்களை நம்பி ஸ்டாலின் சாதிப்பார் என்று சமூகநீதி போராளிகள் வெறுமனே இருக்காமல் விழிப்புணர்வோடு வீதியிலிறங்கி போராடவில்லையென்றால் பெரியார் மண் என்பது வெற்று கோஷமாகி விடும். இல்லையென்றால் அடுக்கடுக்கான பிரச்சினைகளை பொதுவெளியில் பரவவிட்டு விவாதங்களை திசைதிருப்பி தனது தளமாக மாற்றுவதில் ஆரிய – பார்ப்பன கூட்டம் வெற்றி அடைவதற்கான சாத்திய கூறுகளை மறுப்பதற்கில்லை.
4-ஜி சேவைக்காக CDOT/TCS நான்-குவாலிஃபைடு ட்ரயல் 4G கருவிகள் வாங்க BSNL நிறுவனம் வழங்கியுள்ள கண்துடைப்பு உத்தரவு, நீண்ட காலமாகப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட BSNL நிறுவனத்தின் வளர்ச்சி மாற்றத்தை நிச்சயமாகச் சிக்கலில் (இறுதியான வாட்டர்லூ போரில்) ஆழ்த்தப் போகிறது.
BSNL நிறுவனத்தின் ஊழியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் – விருப்ப ஓய்வுத் திட்டம் 2019 மற்றும் 4-ஜி உள்ளிட்ட – ரூ.70 ஆயிரம் கோடி BSNL புத்துயிர்ப்பு தொகுப்புத் திட்டத்தை 2019 அக்டோபரில் ஒப்புக்கொண்டனர். லாபம் ஈட்டும் ஆரோக்கியமான பொதுத்துறை நிறுவனமாக (எதிர்காலத்தில்) BSNL தழைக்கும் என்றும், அனைத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்கள் 3-வது ஊதிய மாற்றத்தைப் பெறுவார்கள் என்றும் ஒவ்வொருவரும் நம்பினர். துரதிருஷ்டவசமாக விருப்ப ஓய்வுத் திட்டம் மற்றும் ரூ.8500 கோடி அளவுக்கு BSNL-க்கு (அரசின்) இறையாண்மை உத்தரவாதம் தவிர வேறு எதுவும் நடைபெறவில்லை.
இப்போதும் கூட நிறுவனம் மிகவும் கடினமான காலத்தைக் கடந்து வருகிறது, கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. புத்துயிர்ப்புத் திட்டத்தால் கிடைத்த ஒரே ஆதாயம், நிதியாண்டு 2019 – 2020-ல் நிறுவனம் அடைந்த ரூ.15,000 கோடி நட்டத்திலிருந்து 2020 – 2021 நிதியாண்டில் நட்டம் ரூ.7,500 கோடி எனப் பாதியாக குறைந்ததுதான். நட்டத்தின் இந்த மேஜிக் வீழ்ச்சி, விருப்ப ஓய்வு திட்டம் 2019-ன் காரணமாக நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் சுமார் பாதி, அதாவது 78,569 ஊழியர்கள், விருப்ப ஓய்வைத் தேர்வு செய்ததே ஆகும். அப்படி அந்த 50% ஊழியர்கள் விருப்ப ஓய்வு குறித்து முடிவு செய்யாது இருந்திருப்பின், இந்நேரம் நிறுவனம் ஒரேயடியாக மூடப்பட்டிருக்கும்.
ஒரு நிறுவனத்தின் செயல்பாட்டுத் திறனை மதிப்பிடுவதற்கான நான்கு அளவுகோல்கள் 1) லாபம்/நட்டம் 2) வருவாய் 3) நிறுவனத்தின் நிகர மதிப்பு மற்றும் 4) அதன் கணக்கில் உள்ள கடன். அந்த வகையில் மதிப்பிட, மிகக் கடுமையாக ரத்தம் வடிக்கும் நிலையில் BSNL இருப்பதைச் சுட்டிக் காட்டுவதுடன் BSNL எதிர்காலமும் நம்பிக்கை தருவதாக இல்லை.
(1) நட்டம் : நிறுவனம் நாள் தோறும் 20 கோடிக்கு மேல் நட்டத்தில் நடக்கிறது; வி.ஆர்.எஸ் அமலாவதற்கு முன் தினசரி நட்டம் ரூ.40-லிருந்து ரூ50 கோடிக்கு மேல் இருந்தது.
(2) வருவாய் : நிறுவனத்தின் செயல் இயக்கங்களிலிருந்து வருமானம் (ஆப்பரேஷனல் ரெவின்யு) நிதியாண்டு 2019 – 2020-ன் வருமானமான ரூ.18,906.56 கோடியை ஒப்பிட, நிதியாண்டு 2020 – 2021-ன் வருவாய் மாதம் தோறும் 1500 கோடியுடன், 1.6% குறைந்து ரூ.18,595.12 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டு 2021 – 2022-ன் வருவாய் ரூ.17 ஆயிரம் கோடி மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. இது அபாயகரமான அளவு குறைவானதாகும்.
(3) நிகர மதிப்பு : BSNL நிறுவனத்தின் நிகர மதிப்பு அதற்கு முந்தைய நிதியாண்டில் இருந்த ரூ.59,139.82 கோடியிலிருந்து கீழே இறங்கி 2021 நிதியாண்டின்போது ரூ.51,686.8 கோடியாக குறைந்துள்ளது. நிறுவனத்திற்குப் புதிய மூலதனம் செலுத்துதல் எதுவும் இல்லை என்பதால், நிறுவன நிகர மதிப்பு நிதியாண்டு 2022-ன் இறுதியிலும் கூட மேலும் கீழிறங்கவே செய்யும்.
(4) கடன் : 2019 – 2020-ம் நிதியாண்டில் நிறுவனத்தின் கடன் ரூ.21,674.74 கோடி. இக்கடன் 2020 – 2021-ம் நிதியாண்டில் அதிகரித்து ரூ.27,033.6 கோடியாகியுள்ளது. இப்போது கடன் ரூ.32 ஆயிரம் கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 4-ஜி தொழில்நுட்ப சேவை:
இந்தியாவில் முதன் முதலாக 4-ஜி தொலைத்தொடர்பு வலைப்பின்னல் ஏர்டெல் நிறுவனத்தால் 2012-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மொபைல் நெட்ஒர்க்கில் 4-ஜி கிடைப்பதற்கு மேலும் இரண்டாண்டு ஆகி, ஏர்டெல் நிறுவனம் 2014-ல் 4-ஜி மொபைல் நெட்ஒர்க்கைத் தொடங்கியது. செய்தி நிறுவனங்களின் தகவல்களின்படி, நமது அரசு 5-ஜி அலைக்கற்றை ஏலத்தை 2022-ம் ஆண்டின் இரண்டாவது பாதியில் நடத்தத் திட்டமிட்டுள்ளது; மேலும், அடுத்த தலைமுறை கம்பியில்லா பிராடு பாண்டு நெட்ஒர்க்ஸ் 5-ஜியை பின்னர் 2023-ல் வெளிவிடவும் திட்டமிட்டுள்ளது. (இந்தியாவில்தான் டெட்டா மிகவும் குறைவான கட்டண விகிதத்தில் கிடைக்கிறது என நமது பிரதமர் வெளிநாடுகளில் பெருமிதத்துடன் கூறினார்.)
இந்நிலையில் இந்தக் காட்சி நகைமுரணாகத் தோன்றலாம், இந்தியாவில் புதிய தலைமுறை தொழில்நுட்பம் அறிமுகமாகி 10 ஆண்டுகள் கடந்த பிறகும், இந்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனமான BSNL நிறுவனத்திற்கு 4-ஜி சேவை அளிக்க இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை – அதே நேரம் தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் மற்றும் வெளிநாட்டு மொபைல் கேரியர்கள் இந்தியாவிற்கு 5-ஜியை திணிக்க தயாராக இருக்கிறார்கள். (ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு?)
உலகம் முழுமையும் 5-ஜி மற்றும் அதற்கு மேல் உள்ள தொழில்நுட்பங்களுக்கு மாறி நகர்ந்து வரும்போது, 4-ஜி என்பது காலம் கடந்த, வழக்கொழிந்த பழைய தொழில்நுட்பமாகி விடும். எனினும் 4-ஜி, BSNL நிறுவனத்திற்கு லாபம் அளிக்கும் செயல்பாட்டிற்குரிய களமாகவே இருக்கும்; ஏனெனில் இன்றைய நிலையில் 3-ஜி சேவையுடன் ஒப்பிட, சி.எம் வெர்ட்டிகல் சேவையிலிருந்து BSNL 15 மடங்கு வருவாயை பெற முடியும்: காரணம் 3-ஜி மாதிரியான தொலைபேசியால் இணைய தளத்தை அதிகபட்சம் 21Mbps வேகத்தில் மட்டுமே இணைக்க முடியும்; அதுவே 4-ஜி போன், தியரிபடி அதிகபட்சம் 300 Mbps வேகத்தில் இணைக்க முடியும்.
தற்போது BSNL 6 ஆயிரம் 4-ஜி BTS (பேஸ் டிரான்ஸ் – ரிசிவர் ஸ்டேஷன்) வாங்குவதற்காகப் பர்ச்சேஸ் ஆர்டர்ஸ் (PO) வெளியிட்டுள்ளது. இந்த BSNL உத்தரவு வெறும் கண் துடைப்பு என்பதைத் தவிர வேறில்லை? மார்ச் 2020-ல் டெலிகாம் கருவிகள் வாங்க ரூ.9,300 கோடி மதிப்புள்ள 4-ஜி டெண்டர் வெளியிட்டது; பின்னர் இந்த 4-ஜி டெண்டர் வெளிநாட்டு நிறுவனங்களுக்குச் சாதகமாகச் சாய்ந்து இருப்பதாகக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது.
அதிகாரத்தில் உள்ள சில தன்னலக் குழுக்கள், அரசு பொதுத்துறை நிறுவனம் 4-ஜிக்காக வெளிநாட்டு கருவிகளை நாடி செல்ல முடியாது என்ற கருத்தை முன்வைத்தன; அது நமது நாட்டிற்கு எதிரான மோசமான வணிகச் செயல்பாடு; சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக நமது நாட்டின் நலனைப் பாதுகாக்க… என்றெல்லாம் கதைத்த அதே அதிகார வர்க்கத் தன்னலக் குழு நமது நாட்டின் எல்லைகளில் 4-ஜிக்காக வெளிநாட்டுக் கருவிகளை வைத்துக் கொள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை அனுமதித்தது – அதுவும், யூ.எஸ்.ஓ நிதியிலிருந்து அரசு நிதி வழங்கி. இது, ரிலையன்ஸ் ஜியோவுக்கு ஆதரவான, அரசு பொதுத்துறை நிறுவனத்தின் நலன்களுக்கு எதிரான தன்னலக் குழுவின் அப்பட்டமான இரட்டை நிலைபாடு.
அடுத்து, 2020 அக்டோபர் 31-ல் உள்நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 4-ஜி சேவைக்காக, 57 ஆயிரம் சைட்களுக்குக் கருவிகள் வாங்க டெண்டர் வெளியிட்டது; அதில் உள்நாட்டுத் தொழில்நுட்பம் என்ற வகையில் (கோர் ஸ்விட்சுக்காக) CDOT, (மென் பொருளுக்காக) TCS மற்றும் (டிரான்ஸ்போர்டேஷனுக்காக) Tejas நிறுவனங்களிடமிருந்து ‘‘ஆத்மநிர்பார் பாரத்” (சுயசார்பு இந்தியா) திட்டத்தின்கீழ் டெண்டர் கோரப்பட்டது. இப்படி ‘‘ஆத்மநிர்பார் பாரத்” கீழ் 4-ஜி சேவை தருவதற்குக் கால்கோள் நடத்தப்பட்டதிலிருந்து நல்லது நடக்க வேண்டும் என நாம் நம்புவோம், அதற்காகப் பெருமையுடன் காத்திருப்போம்!
4–ஜிக்கான பர்ச்சேஸ் ஆர்டர் குறித்து நமது சில சந்தேகங்கள்
1. எலெக்ட்ரானிக் தொலைபேசியகங்களின் சகாப்தத்தின்போது, CDOT-டுடன் BSNL-ன் அனுபவம் பாராட்டும்படி இருந்தது, அதன் காரணமாகவே நாம் OCB 283, 5ESS போன்ற வெளிநாட்டு ஸ்விட்ச்களுக்காக சென்றோம். திறனற்ற CDOT NGN, ஹுவாய் மற்றும் யுடிஸ்டார்காம் போன்றவற்றை விட செயல்திறனில் பின்தங்கியே இருந்தது. வெளிநாட்டு ஸ்விட்ச்களுடன் ஒப்பிட CDOT ஸ்விட்ச்களின் மின் பயன்பாட்டு நுகர்வு மிகவும் அதிகம்.
2. உடனடியாக 6000 டவர்களுக்கும், பின்னர் மேலும் 6000 டவர்களும் BSNL உத்தரவிடும் நிகழ்முறையில் ஈடுபட்டுள்ளதாக அறிகிறோம். இப்படி இறுதியில் மொத்தம் ஒரு லட்சம் டவர்களுக்கும் அதிகமாக – அதாவது, 1.12 லட்சம் டவர்களுக்கான 4-ஜி பி.டி.எஸ்.கள் பெறுவதற்காக உத்தரவு வழங்கப்படும் எனத் தெரிய வருகிறது. (இவ்வாறு 1.12 லட்சம் 4-ஜி பிடிஎஸ்-கள் வாங்க உள்ள) BSNL-ல், அறிக்கைகளின்படி, சுமார் 70 ஆயிரம் டவர்கள் மட்டுமே உள்ளன. தேவைக்கும் அதிகமாக மீதம் உள்ள 4-ஜி பிடிஎஸ்களை என்ன செய்யப் போகிறோம், அவற்றைப் பயன்படுத்தி நிர்மாணிப்பதற்கான திட்டம் குறித்தும் எதுவும் தெரியவில்லை.
3. 4-ஜி சேவை அளிக்கும் டவர்கள் ஃபைபர்மயமாக்கப்படுவது கட்டாயமாகும். பெரும்பான்மையான BSNL டவர்கள் ஃபைபர் கேபிள் (கண்ணாடி இழை கேபிள்) இணைப்பு பெறாதவை மற்றும் ஒர்க் ஆன் இ-1 அல்லது மைக்ரோ வேவ் டவர்களாகும். அதற்கான மூலதனம் மற்றும் செயல் திட்டம் தற்போதைய திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.
4. தேவையான அடிப்படை கட்டமைப்பின் பற்றாக்குறை / குறைபாட்டின் காரணமாக நமது சில பிடிஎஸ்கள், மின்சாரம் தடைபடும்போது, ஏற்கனவே அணைக்கப்பட்டு விடுகின்றன; இதே நிலை 4-ஜி சேவைக்குப் பிறகும் தொடர்ந்தால், அது BSNL நிறுவனத்திற்கு அழகன்று, வாய்ப்புள்ள வருங்கால வாடிக்கையாளர்களும் BSNL-ஐ விட்டு விலகி விடுவர். அடிப்படை கட்டமைப்பு தர-மேம்பாட்டிற்குத் தேவையான மூலதனம் குறித்த யோசனை எதுவும் இதுவரை முன்வைக்கப்படவில்லை.
5. சண்டிகார் / அம்பாலா நகர்களில் பரிசோதனை முயற்சியாக நிறுவப்பட்டுள்ள CDOT/TCS தொழில்நுட்பத்தின் 4-ஜி ப்ரோடோ டைப் பிடிஎஸ் களிலிருந்து நூற்றுக் கணக்கான தொழில்நுட்ப / செயல்திறன் குறைபாடுகள் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தக் குறைபாடுகளில் எவ்வளவு குறைபாடுகளுக்குத் தீர்வு காணப்பட்டன என்பது யாருக்கும் எதுவும் தெரியாது.
6. CDOT/TCS சிஸ்டத்தில் CISCO ரௌட்டர்களுக்கான சிப்-கள் பெறுவதற்குச் சுமார் ஒரு வருடம் காத்திருப்புக் காலம் (வெயிட்டிங் டைம்) இருப்பதாக நம்பிக்கைக்குரிய வட்டாரங்களிலிருந்து தெரிய வருகிறது.
பல காரணங்களால் ஏற்கனவே வாடிக்கையாளர்கள் தற்போதைய BSNL சேவையில் அதிருப்தி அடைந்துள்ளர்; இந்நிலையில் 4-ஜிக்கு ஆர்வமாக காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் 4-ஜி சேவையை அனுபவிக்கத் தயாராக உள்ளபோது, BSNL தரமான 4-ஜி சேவையை வழங்க வேண்டும்; தாக்குப் பிடித்து நிலைத்து நிற்கும் 4–ஜி (சஸ்டைன்டு 4-ஜி), BSNL நிறுவனம் நிலைத்து நிற்கவும், BSNL வளர்ச்சி மாற்றத்திற்கும் நல்லது.
4-ஜி சோதனை சைட்டுகளுக்காகப் பர்ச்சேஸ் ஆர்டர் சமர்ப்பித்துள்ள BSNLன் செயல்பாடு புரிந்து கொள்ளக்கூடியது. 4ஜி/ 5ஜி மிகவும் நுட்பமான மேம்பட்ட தொழில்நுட்பம். எனவே CDOT/TCS 4G சிஸ்டங்களின் சேவைத் தரத்தை (க்வாலிட்டி ஆஃப் சர்வீஸ்) பரிசோதிக்காமல், தற்போது நெருக்கடியான காலத்திலும், 4-ஜிக்காக ஆர்வத்துடன் காத்துக் கொண்டுமிருக்கும் BSNL, பர்ச்சேஸ் ஆர்டர்ஸ் வழங்கி இருக்கக் கூடாது. சாதாரணமாக BSNL போன்ற எந்த அமைப்பும் தேசிய அல்லது சர்வதேசிய முகமைகளால் பரிசோதிக்கப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்படும் தரமான உற்பத்தி பொருட்களுக்கு மட்டுமே பர்ச்சேஸ் ஆர்டர்கள் வழங்கும். (ஆனால் BSNLல் தற்போது அவ்வாறு நடக்கவில்லை)
BSNL டவர்களுடன் BSNL கட்டமைப்பைப் பயன்படுத்தி தங்களின் பரிசோதனைகளை நடத்த CDOT/TCS நிறுவனங்களை அனுமதிக்கலாம்; அப்படிச் செய்வதற்குத் தேவையான காலத்தையும் அவர்கள் எடுத்துக் கொண்டு, 4-ஜியுடன் நிலைப்படுத்தி, தங்களின் 4-ஜி சிஸ்டம் தரமான உற்பத்திப் பொருள்தான் என நிரூபித்து அவற்றை BSNL-ல் புகுத்தலாம். சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் காலத்தில் ’CDOT/TCS நிறுவனங்களால் நடத்தப்படும் 4-ஜி பரிசோதனை’ என்ற பெயரைத் தவிர BSNL-ன் பெயர் எங்கும் பயன்படுத்தப்படக் கூடாது. (இந்தப் பரிசோதனை வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப தரமான சேவையாக இல்லாது போகுமானால் அதனால் ஏற்படும்) வாடிக்கையாளர்களின் அதிருப்தி BSNL நிலைத்திருப்பதற்கு கேடு நேர்வதாகிவிடும்; BSNL பெயரில் அவர்கள் அளிக்கும் இந்த 4-ஜி சேவை குறைபாட்டால் வாடிக்கையாளர்களின் கோபம் அதிகரிக்கத் தொடங்கும். பர்ச்சேஸ் ஆர்டர்களால் கிடைக்கும் தரமில்லாத 4-ஜி சிஸ்டத்தைப் பயன்படுத்தி அடுத்து BSNL அளிக்கும் 4-ஜி சேவை, எதிர்காலத்தில் நம்மை நாடிவர நினைக்கும் வாடிக்கையாளர்களையும் மேலும் அதிருப்தியுறச் செய்யும்.
மேலே விவரித்த காரணங்களால், உள்நாட்டு தொழில்நுட்ப மேம்படுத்துநர்களான CDOT/TCS நிறுவனங்கள், பரிசோதிக்கப்பட்ட தரமான மற்றும் சந்தையில் போட்டியிடத்தக்க 4-ஜி சிஸ்டத்தை BSNL நிறுவனத்திற்குத் தயாராக வழங்கும் வரையில், BSNL தற்போது வழங்கியுள்ள பர்ச்சேஸ் ஆர்டர்கள் வெறும் கண்துடைப்பே!
கட்டுரையாளர் : எஸ்.சிவக்குமார் மேனாள் பொதுச் செயலாளர், AIBSNLEA
தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நடத்தும் ஆட்சியை திராவிட மாடலா? தேசிய மாடலா? என்று ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விவாதங்களில் தேசிய மாடலாக ஒரு தரப்பினரும் திராவிட மாடலாக ஒரு தரப்பினரும் பிரிந்து விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தமிழகத்தில் கஞ்சா வியாபாரி, சத்குரு நடத்திய சிவராத்திரி போட்டியாக சென்னை மயிலாப்பூரில் தமிழக அரசு சார்பாக நடத்தப்பட சிவராத்திரி விழா, தருமபுர ஆதீன விவகாரத்தில் பல்லக்கு தூக்குவதற்கு அனுமதி அளித்தது, சென்னை ஆவடி அருகே பசுமடம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்தது, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவி ஹிஜாப் அணிந்து 11-ம் வகுப்பு பொது தேர்வு எழுத அனுமதி மறுத்தது போன்றவை சங் பரிவாதத்தின் திட்டங்கள் நடைபெற்றுள்ளது.
திமுக செய்யும் செயலைப் பார்க்கும் பொழுது திராவிட மாடல் போர்வையில் இந்துராஷ்டிரா நடைபெறுகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. அதை அம்பலப்படுத்தும் விதமாக இந்த கருத்து படம்.
‘திராவிட மாடல் ஆட்சி’யில் அரங்கேறும் சங் பரிவாரின் திட்டங்கள் ! | கருத்துப்படம்
2014-ல் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாக்குவதை நுட்பமாக செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல். 2025-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-இன் நூற்றாண்டாகும். அதற்குள் இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காய்களை நகர்த்தி வருகிறார்கள் காவி பாசிஸ்டுகள்.
மோடி ஆட்சியின்கீழ் போலீசு, சி.பி.ஐ, அமலாக்கத்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் – பேராசிரியர்கள் என அனைத்து துறைகளிலும் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் இதுவரை காணாத அளவிற்கு நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இராணுவமும் அதற்கு விதிவிலக்கல்ல.
கடந்த 2018-ல் பீகாரில் நடந்த கூட்டமொன்றில், “இக்கட்டான சூழலில் போருக்கு வீரர்களைத் தயார்படுத்த இராணுவத்திற்கு 6 அல்லது 7 மாதங்கள் ஆகும். நம்முடைய நாட்டிற்கு தேவையென்றால், அரசியலமைப்பு சட்டம் அனுமதித்தால், நம்மை கேட்டுக் கொண்டால் மூன்றே நாட்களில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களை இராணுவமாகத் தயார்படுத்திவிடுவோம் அதுதான் நம்முடைய திறமை” என்று பேசினார் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத். இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்த வேண்டும் என்ற தனது நோக்கத்தையே அவர் அவ்வாறு வெளிப்படுத்தியிருந்தார்.
ஆங்கிலேயரின் காலனியாதிக்க ஆட்சிக் காலத்திலிருந்தே இராணுவத்திற்குள் ஊடுருவி அதைக் கைப்பற்ற வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டமாக இருந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் நிறுவனர்களுள் ஒருவரான மூஞ்சே, 1935-ம் ஆண்டிலேயே இராணுவத்தை இந்தியமயப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பெயரில், மத்திய இந்து இராணுவக் கல்விக் கழகத்தை நாசிக்கில் நிறுவினார். 1937-ம் ஆண்டு பொன்சாலா இராணுவப் பள்ளியை நிறுவினார்.
போலி சுதந்திர காலத்திற்கு பின்பு, பல தருணங்களில், ஆர்.எஸ்.எஸ் இந்திய இராணுவத்தின் ஒரு துணைப்பிரிவாகவே கருதி நடத்தப்பட்டுள்ளது. 1948-ம் ஆண்டு நடைபெற்ற காஷ்மீர் போரில் பெரும்பாலான ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு இராணுவம் பயிற்சியளித்திருக்கிறது. 1962-ல் நடைபெற்ற இந்திய – சீனப் போர் மற்றும் 1965-ல் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் போர் ஆகியவற்றின் போது ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் சிவில், இராணுவ வேலைகளில் பங்குபெற்றிருக்கின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் பேரிடர் கால பணிகளின்போது இராணுவத்துடன் இணைந்து வேலை செய்திருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.
மூஞ்சே தொடங்கிய இராணுவப் பள்ளியைப் போல, கடந்த 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்திலும் ஆர்.எஸ்.எஸ் புதிதாக தனது இராணுவப் பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறது. கீழ்நிலை வீரர்களிலிருந்து இராணுவத் தளபதிகள் வரை ஏற்கெனவே ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள் ஊடுருவியிருக்கிறார்கள். தற்போது அடுத்த நிலைக்குச் சென்று, அலையலையாக இராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயப்படுத்துவதற்காக ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது மோடி அரசு.
நாடு முழுவதும் புதிதாக 100 இராணுவப்பள்ளிகள் தொடங்கப்படும் என்று ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். இதன் முதல்கட்டமாக, இந்தியா முழுவதும் புதிதாக 21 இராணுவப் பள்ளிகளைத் தொடங்க ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று அனுமதியளித்துள்ளது.
1961-ம் ஆண்டிலிருந்து இந்திய இராணுவத்திற்குரிய அதிகாரிகளை உருவாக்குவதற்காக ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின்கீழ் நாடு முழுவதும் இராணுவப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதுவரை 194 இராணுவப்பள்ளிகள் தொடங்கப்பட்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள இராணுவக் கழகத்தால் (Sainik Society) நிர்வகிக்கப்படுகிறது.
ஆனால், தற்போது புதிதாகத் தொடங்கப்படும் இராணுவப் பள்ளிகள் இதற்கு முன்னர் தொடங்கப்பட்ட பழைய பள்ளிகளிலிருந்து வேறுபட்டவையாக இருக்கும் என்று கூறியுள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சகம். இப்புதிய பள்ளிகளை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழுள்ள இராணுவக் கழகம் தொடங்கி நடத்தப்போவதில்லை. அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், குறிப்பிட்ட சில மாநில அரசுகளின் கைகளில் இப்பணியை ஒப்படைக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
முதல் கட்டமாக அனுமதியளிக்கப்பட்டுள்ள 21 பள்ளிகளில் 12 பள்ளிகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் அல்லது சமூகக் குழுக்களும், 6 பள்ளிகளை தனியார் பள்ளிகளும் மீதமுள்ள 3 பள்ளிகளைக் குறிப்பிட்ட சில மாநில அரசுகள் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இராணுவப் பள்ளிகளை நடத்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகள் ஆகியவை ஆர்.எஸ்.எஸ். சார்பு நிறுவனங்கள்.
அவை, கேரளாவில் சிருங்கேரி மடத்தின் கீழ் செயல்படும் ஆதி சங்கரா அறக்கட்டளையால் நடத்தப்படும் ஸ்ரீ சாரதா வித்யாலயா, மத்தியப் பிரதேசம் மற்றும் யூனியன் பிரதேசமான தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் வித்யா மந்திர், குஜராத்தில் பிரம்மச்சாரி பகவதி நந்த்ஜி அறக்கட்டளை, ஹிமாச்சலப் பிரதேசத்தில் சாத்வி ரிதம்பராவால் நடத்தப்படும் ராஜ்லட்சுமி குருகுலம், பஞ்சாபில் வித்யா பாரதியின் (ஆர்.எஸ்.எஸ்-இன் அதிகாரப்பூர்வ கல்வி நிறுவனம்) கிளை நிறுவனமான தயானந்த் பள்ளி மற்றும் உத்தரகாண்ட்டில் குரு ராம்தாஸ் பள்ளி ஆகியவைகளாகும்.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் நாஜி சித்தாந்தம் கொண்ட பாசிச கும்பல் இராணுவத்தில் ஊடுருவி வருகிறது. இரசியாவுக்கும் உக்ரைனுக்கும் நடக்கின்ற போரில், உக்ரைன் இராணுவத்தில் நவநாஜி ஆயுதப்படையான அசோவ் படைப்பிரிவு பங்குபெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இந்த அசோவ் பாசிசக் கும்பல் சொந்தநாட்டு சிறுபான்மையினரைக் கொல்வதையும், அவர்களது சொத்துக்களைக் கொள்ளையடிப்பதையும் செய்து வருகிறது.
உக்ரைனிலாவது அசோவ் படைப்பிரிவு இராணுவத்துடன் இணைத்து பணியாற்றுகிறது. மோடி அரசின் இத்திட்டம் அமலானால், இந்திய இராணுவமே ஆர்.எஸ்.எஸ்-ன் பாசிச படையணியாகிவிடும்.
ஹரித்துவார் மாநாட்டில், முசுலீம்களை இனப்படுகொலை செய்துவிட்டு இந்தியாவை இந்துராஷ்டிரமாக அறிவிக்க வேண்டும் என்று காவி கும்பல் அறைகூவல் விடுத்துள்ள நிலையில், இராணுவம் அலையலையாக ஆர்.எஸ்.எஸ் மயமாக உள்ளது.
2002 குஜராத் இனப்படுகொலை போல, நாடு தழுவிய அளவில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இனப்படுகொலையை நடத்த ஆர்.எஸ்.எஸ் எத்தனித்தால், இம்முறை அதை இராணுவமே அரங்கேற்றும். அது இந்துராஷ்டிரத்திற்கான இராணுவமாக இருக்கும்.
பாசிச எதிர்ப்புப் போராட்டங்களின் மூலம் நாம் மக்கள் இராணுவத்தைக் கட்டினால் மட்டுமே காவி பாசிஸ்டுகளை மோதி வீழ்த்த முடியும். களப்போராட்டங்களே நமது பயிற்சிப் பள்ளிகள். இந்துராஷ்டிரத்திற்கான இராணுவம் தயாராகிவருகிறது. நாமும் தாமதிக்காமல் தயாராவோம்!
புளு ஃகிராப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேசன் என்ற நிறுவனம், வெளியிட்டு இருந்த மோடியும் – அம்பேத்கரும் என்ற நூலுக்கு இளையராஜா தான் எழுதியதாக கூறும் அணிந்துரையில் மோடியோடு அம்பேத்கரையும் ஒப்பீட்டு மோடியை பாராட்டி எழுதி இருப்பது கடுமையான விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாக்கப்பட்டது அணைவரும் அறிந்ததே.
இளையராஜா என்பவர் இசையமைப்பாளர் மட்டுமல்ல, இசையில் ஆற்றலுள்ளவர். இசை ஞானியும் கூட. எனவே இவற்றை மறுப்பதற்கில்லை. அதே வேளையில், மேற்கண்ட நூலுக்கு அணிந்துரை எழுதியது நான் தான் என்று அவர் கூறுவதை ஏற்க முடியாது என்பதை ஊடகங்களுக்கு பேட்டி அளித்த சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் ஆட்சேபனைகளை பதிவு செய்துள்ளனர்.
ஏனெனில், ஒரு நூலுக்கு அணிந்துரையோ, முன்னுரையோ எழுதுவதற்கு முன்பு குறிப்பிட்ட நூலை முழுமையாக ஒரு முறைக்கு பலமுறை படித்துவிட்டு, அதிலிருந்து அந்த நூலைப் பற்றி ஒரு மதிப்பீட்டிற்கு வந்து, அதனடிப்படையில் தனது சொந்த கருத்தை, சொந்த எழுத்து பாணியில் எழுதுவதுதான் அணிந்துரை. ஆனால், இளையராஜாவின் அணிந்துரை அந்த அடிப்படையில் இல்லை.
நூலை எழுதியவரின் கருத்துகள் அடிப்படையிலேயே எழுத்து பாணியிலேயே அணிந்துரை அமைந்துள்ளது என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளனர். இளையராஜாவின் பெயரில் அணிந்துரை இல்லாமல் (இசையமைப்பாளர் என்ற பிரபலத்தின் அடிப்படையில் இல்லாமல்) வெளியிடப்பட்டிருந்தால் இந்த நூல் பற்றிய விவாதம் பொது வெளியில் வந்திருப்பதற்கே வாய்ப்பு இல்லை என்ற சமூக ஆர்வலர்களின் அரசியல் பிரமுகர்களின் கருத்துகள் ஏற்புடையதே.
இது ஒருபுறம் இருக்க, இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் இசையமைப்பாளர்கள் இருக்க தமிழக இசையமைப்பாளர் இளையராஜாவை தேர்வு செய்வதற்கான காரணம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கான காரணம் என்னவெனில், தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பாசிச கும்பல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க மீதான எதிர்ப்பு என்பது வலுவாக உள்ளது. இவற்றை உடைக்க பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.
எப்படியாவது தமிழகத்தில் தாமரையை மலரச் செய்ய வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் வேலைத் திட்டத்தின், நோக்கத்தின் அடிப்படையில் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களில் இருந்து தனக்கான சில கோடாரிக் கொம்புகளை உருவாக்கி களமிறக்கி வருவதுபோல, ரஜினி, கங்கை அமரன், இளையராஜா போன்ற சினிமா பேர்வழிகளை தெரிவு செய்து களமிறக்குகின்றன பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல்.
இதனடிப்படையில் தான் முதலில் ரஜினியை எப்படியாவது வளைத்துப் போட பாசிஸ்டுகளுக்கே உரிய பாணியிலான சாம, பேத, தான, தண்டம் என்ற முறையை கையாண்டுள்ளதை, அதாவது குறிப்பாக அரசின் அடியாள் படையான அமலாக்கத் துறையை, வருமான வரித்துறையை ஏவிவிட்டு பணிய வைத்ததை, சங்க பரிவாரங்களின் மூலம் மிரட்டி பணிய வைத்ததை பல்வேறு ஊடகங்கள் அமல்படுத்தி விட்டன.
இவை ரஜினியிடம் நிறைவேறாமல் போகவே, மேற்கண்ட பணியை இளையராஜாவிடம் நடைமுறைப்படுத்தி மோடியும் – அம்பேத்கரும் என்ற நூலுக்கான அணிந்துரை மூலம் சாதிக்க முயன்றது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்த விளைவை எட்ட இயலவில்லை. இருப்பினும் இவற்றை பேசும் பொருளாக, விவாதப் பொருளாக இன்று மாற்றிவிட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை.
முத்தலாக் முறைக்கு எதிரான சட்டம், குழந்தைகள் காப்போம், கற்பிப்போம் போன்ற திட்டம், இலவச கேஸ் இணைப்பு, வங்கியில் பணம் போன்ற திட்டங்கள் குறித்து, இவற்றில் பாசிச மோடியின் நோக்கம் குறித்து எவ்வித புரிதலும், அறிதலும், பரிசீலனையும் இல்லாமல், இதன் உண்மை நிலவரத்தை உணராமல் அணிந்துரை மூலம் பாராட்டுவது என்பது மோடியின் பாசிச நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிப்பதற்கு சமம்.
ஏனெனில், பாராட்டு என்பது ஒருவரின் (பாராட்டப்படக் கூடியவரின்) உண்மை முகத்தை, உண்மை குணத்தை, உண்மையான நோக்கத்தை சொல்லும். மோடியின் திட்டங்களாலும், சட்டங்களாலும் அதன் உண்மையான முகமும், குணமும், நோக்கமும் அன்றாடம் சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு நாறி வரும் நிலையை புரிந்துக்கொள்ள துப்பில்லாத – விரும்பாத – இளையராஜாவின் பாராட்டு என்பது பாசிஸ்டுகளுக்கு போடப்படும் புகழ் மாலையே.
இளையராஜா இசையில் ஞானியாக இருக்கலாம். ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நோக்கம் குறித்தும், அவர்களின் நம்பகமான, விசுவாசமான பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக, மோடி போன்ற கைக்கூலிகள் போடும் திட்டங்கள் குறித்தும் ஞானம் இருந்தால் தான் இவற்றைப் பற்றி கருத்தையோ, அணிந்துரையோ, முன்னுரையோ வழங்க முடியும் என்பதை இளையராஜா எழுதியதாகக் கூறும் அணிந்துரையே அம்பலப்படுத்தி விட்டது.
தமிழகத்தில் நிரந்தரமாக காலூன்ற சினிமா பேர்வழிகளான ரஜினி, கங்கை அமரன், இளையராஜா போன்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதுபோல, இன்னும் பல்வேறு துறையினரையும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல் தனது சதி வலையில் சிக்க வைக்க நெருக்கடி கொடுப்பது, கோடாரிக் கொம்புகளாக உருவாக்குவது, மிரட்டி பணிய வைப்பது போன்ற அனைத்து பாசிச நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். மலைப்பாம்பைப் போல தமிழகத்தை வளைத்து இறுக்கி தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரை ஓயாது.
இப்பாசிச கும்பலை தமிழகத்தில் வேறூன்றாமல், போராடி மண்ணோடு பிய்த்து எறிவது பாசிச எதிர்ப்பை மேற்கொள்ளும் அனைவரின் கடமையாகும். இக்கடமையை நிறைவேற்ற சட்டத்தையும், தேர்தலை மட்டும் நம்பியிராமல் களத்தில் இறங்கி போராடுவது காலத்தின் கட்டாயம்.
ஏனெனில், பாசிஸ்டுகள் களமிறங்கி விட்டனர். சான்றாக, கடந்த ஏப்ரல் 14 அன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை போடுகிறோம் என்ற பெயரில் வி.சி.க.வுடன் மோதலில் ஈடுபட்டு கலவரத்தை உருவாக்கினர். இந்த கலவரத்தை சென்னை சேத்துப்பட்டில் உருவாக்க முயன்ற பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை மக்கள் அதிகாரமும், இதர கட்சிகளுடன், பகுதி மக்களுடன் இணைந்து விரட்டியடித்தனர்.
எனவே, இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் பாசிச கும்பலின் எடுபிடியாக, ஊதுகுழலாக செயல்படும் பேர்வழிகளை விரட்டியடிப்பதோடு, இவர்களை மக்கள் வெறுத்து ஒதுக்கும் படியான நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும். மேலும், மக்களின் ஆதரவால் பிரபலமடைந்து, பின்பு பாசிஸ்டுகளுக்கு துணைபோகும், துதிபாடும் பேர்வழிகளின் புகழை – பெருமையை – செல்லா காசாக்க வேண்டும்.
இவர்களுக்கான சமூகப் பரப்பை பிடுங்கி எறிய, இவர்களை மக்களிடம் இருந்து தனிமைப்படுத்துவதை தொடர்ச்சியாக இடைவிடாமல் மேற்கொள்வது அவசியம். இவை மூலமே பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தமிழகத்தில் காலூன்றாமல் தடுக்க முடியும்.
உழைக்கும் மக்களை நகரத்திலிருந்து விரட்டிவிட்டு பசுமடம் அமைப்பதுதான் திராவிட மாடலா?
கண்டன அறிக்கை !
கொரோனா கொடுந்தொற்றில் மக்கள் ஆக்சிஜன் இன்றி தவிக்கும்போது மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாசிச செயல்பாடுகள் மக்களால் காரி உமிழப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் ஆளுகின்ற மாநிலங்களில் பசு மடங்கள் அமைப்பது, அசைவ உணவுக்கு தடைவிதிப்பது, சாமி சிலைகளுக்கு வைத்தியம் பார்ப்பது போன்ற பைத்தியக்காரத்தனமான, மூடத்தனமான வேலைகளை அரசே முன்னின்று செய்து வருகிறது.
தமிழ்நாட்டுக்கு என பார்ப்பன எதிர்ப்பு பாரம்பரியம் இருக்கிறது. தந்தை பெரியாரின் வாரிசாக திராவிட மாடலாக கருதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் இந்த திமுக அரசு, பசுமடம் அமைப்பதற்கு ஆவடி அருகில் 25 ஏக்கர் தேடும் பணியில் ஈடுபடும் செய்திகள் படத்துடன் நாளிதழ்களில் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே, மனிதனை மனிதன் சுமக்கும் இழிவான பட்டினப் பிரவேசத்துக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் கடும் எதிர்ப்பின் காரணமாக அனுமதி அளித்து பணிந்து போனது திமுக அரசு. வாயளவில் திராவிட மாடல் என்று சொல்லிக் கொண்டாலும், செயலளவில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு பணிந்து போவதே வழக்கமாக இருக்கிறது.
சென்னையின் உழைக்கும் மக்கள் பல இடங்களிலும் நகரத்தை விட்டு அராஜகமாக துரத்தப்படுகிறார்கள். அதற்கு ராஜா அண்ணாமலைபுரத்தில் இடிக்கப்பட்ட வீடுகளும் எரிந்து போன கண்ணையாவும் சமீபத்திய சாட்சி.
இந்த நிலையில், தமிழக அரசின் சார்பில் பசு மடம் 25 ஏக்கரில் அமைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திமுக அரசின் இந்த பசுமடம் அமைக்கும் நடவடிக்கைக்கு மக்கள் அதிகாரம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது.
பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பல் தங்கள் மாநிலங்களில் மக்களை பார்ப்பனிய மயமாக்க செய்துவரும் வேலைகளை திராவிட மாடல் என்ற பெயரில் செய்வதை ஒருபோதும் தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. எனவே, பசுமடம் அமைக்கும் வேலையை தமிழக அரசு உடனே நிறுத்த வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன், தோழர் மருது,
செய்தித் தொடர்பாளர், மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை. 99623 66321.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் இந்துப் புத்தாண்டு (நவ் சம்வத்ஸர்), இராம நவமி, அனுமன் ஜெயந்தி என வரிசையாக அடுத்தடுத்து வந்த இந்துப் பண்டிகைகளைப் பயன்படுத்தி, இசுலாமியர் மக்களுக்கு எதிராக, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது பாசிச வெறியாட்டங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது ஆர்.எஸ்.எஸ் காவி கும்பல்.
கடந்த ஏப்ரல் 2-ம் தேதி இராஜஸ்தானின் கரோலி நகரில் இந்துப் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட கலவரமானது, வரிசையாக நடைபெற்ற வெறியாட்டங்களின் தொடக்கமாக அமைந்தது. அன்றைய நாள் இசுலாமியர்கள் வசிக்கக்கூடிய பகுதியைக் குறிவைத்து காவி குண்டர்கள் மோட்டார் சைக்கிள் பேரணியொன்றை நடத்தினர். அப்போது கற்களை வீசியதாகக் கூறி இசுலாமிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்துள்ள காவி கும்பல், அப்பகுதியிலிருந்த இசுலாமிய மக்களின் கடைகள் மற்றும் வாகனங்களைக் தீயிட்டு கொளுத்தியது.
இதே பாணியில், ஏப்ரல் 10-ம் தேதி இராம நவமி நாளையொட்டி உத்தரகாண்ட், டெல்லி, மேற்கு வங்கம், குஜராத், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட், பீகார், மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா எனக் குறுக்கும் நெடுக்குமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இசுலாமியர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. ஏப்ரல் 16-ம் தேதி அனுமன் ஜெயந்தி அன்றும் டெல்லி ஜஹாங்கீர் புரியில் இசுலாமியர்களுக்கு எதிரான கலவரம் அரங்கேற்றப்பட்டது.
மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் நடந்த கலவரத்தில் 20 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. 30 வயது மதிக்கத்தக்க இப்ரிஸ் கான் என்ற இளைஞரை அடித்தே கொன்றுள்ளது காவி கும்பல். மேலும் 24-க்கும் மேற்பட்ட இசுலாமிய மக்கள் கலவரத்தில் காயமடைந்துள்ளனர்.
குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தின் கம்பத் நகரத்திலும், சபர்கந்தா மாவட்டத்தின் ஹிம்மத் நகரத்திலும் இசுலாமியர்கள் மீது தாக்குதல்கள் நடத்தியதோடு, அங்குள்ள கடைகளுக்கும் தீவைத்துள்ளார்கள். இக்கலவரத்தில் 65 வயதான முதியவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா நகரில் நடந்த கலவரத்தில், 10 இசுலாமியர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் ஜார்கண்ட் மாநிலத்தின் லோஹர்டகா மாவட்டத்தில் நடந்த கலவரத்தில், ஒரு இசுலாமியர் கொல்லப்பட்டுள்ளார். 12 இசுலாமியர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
சங்கப் பரிவாரக் கும்பல், இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த பெரும்பாலும் ஒரே மாதிரியான வழிமுறைகளையே கையாண்டுள்ளது. “ஜெய் ஸ்ரீராம்” என சத்தமிட்டபடியே கத்தி, வாள், துப்பாக்கி போன்ற கொலைகார ஆயுதங்களை ஏந்திக் கொண்டு ஊர்வலமாகப் புறப்படுகின்றனர். அந்த ஊர்வலங்கள் அனைத்தும் திட்டமிட்டே இசுலாமியர்கள் திரட்சியாக வசிக்கக் கூடிய பகுதிகளுக்குள் செல்கிறது. அங்குள்ள மசூதிகளுக்கு முன்பாக ஒன்றுகூடி நின்றுகொண்டு, ஒலிபெருக்கியில் இசுலாமிய மக்களை வசைபாடுகிறார்கள், வன்முறையைத் தூண்டும் முழக்கங்களை எழுப்புகிறார்கள். இதன் உச்சத்தில், அவர்களே ஏற்பாடு செய்த ‘இந்துவிரோதிகள்’ ஆர்ப்பாட்டங்களின் மீது கற்களை வீசினார்கள். அதன்பின் இசுலாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் தொடங்கப்பட்டது.
கலவரங்களை அரங்கேற்றுவதற்காக காவி கும்பல் மேற்கொள்ளும் வழமையான வழிமுறையே இது. இவை நமக்கு இரத யாத்திரைகளையும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களையும் நினைவுபடுத்தலாம். ஆனால், இதுவரை எந்த இராம நவமியிலும் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் கலவரங்கள் வெடித்ததாக வரலாறு இல்லை. இது புதிய போக்கு.
000
கலவரங்களை அரங்கேற்றும் முறையில் புதிய வேறுபாடுகள் இல்லையென்றாலும் இந்துப் புத்தாண்டு, இராம நவமி, அனுமன் ஜெயந்தி ஆகிய நாட்களில் தொடர்ச்சியாக நடைபெற்ற காவி வெறியாட்டங்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிச பயங்கரவாத நடவடிக்கைகளில் இதுவரை காணாத பண்புநிலை மாற்றமாக உள்ளது.
காவி பாசிஸ்டுகள் காலூன்றியுள்ள மாநிலங்களில் அடிக்கடி சிறுபான்மை மக்களுக்கு எதிராக, பல சிறிய அளவிலான கலவரங்கள் நடத்தப்படுகின்றன. இதைத்தவிர, விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், இரதயாத்திரைகள் போன்றவற்றின் மூலம் நாடெங்கும் பரவலாக கலவரங்களை – பாசிசப் படுகொலைகளை அரங்கேற்றுவது அவ்வப்போது அரிதாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆனால் இனி சிறுபான்மை இசுலாமியர்களுக்கு எதிரான பாசிச வெறியாட்டங்களும் படுகொலைகளும் தொடர் நிகழ்வுகளாகும் போக்கு தொடங்கிவைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு இந்துப் பண்டிகைகளையும் அதற்கான முகாந்திரங்களாகப் பயன்படுத்தப் போகின்றது காவி கும்பல்.
காவி பயங்கரவாதிகளின் பண்பாட்டுத் திணிப்பு
இராம நவமி அன்று டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருக்கும் காவேரி விடுதியில், “இறைச்சி சமைக்கக் கூடாது” எனக் கூறி ஏ.பி.வி.பி. குண்டர்கள் தகராறு செய்துள்ளனர். இறைச்சி எடுத்து வந்த கடைக்காரரை அடித்து உதைத்தது மட்டுமின்றி, விடுதிச் செயலாளரையும் அசைவ உணவு சமைக்கக் கூடாது என மிரட்டியுள்ளது ஏ.பி.வி.பி. கும்பல்.
இரவு 7:30 மணியளவில், அசைவ உணவு சாப்பிட்டதாகக் கூறி விடுதி மாணவர்களைச் சூழ்ந்துகொண்டு தாக்கியுள்ளது. இத்தாக்குதலில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.
ஹைதராபாத் பல்கலைக்கழக வளாகத்தில், சில கற்களை அடுக்கி இராமர் கோயிலை உருவாக்கியுள்ளது ஏ.பி.வி.பி. அதன் மேல் காவிக் கொடியை ஏற்றி, இராமன் மற்றும் ஹனுமன் படங்களை வைத்து பூஜை நடத்தியுள்ளார்கள். பல்கலைக்கழக வளாகத்தின் குருபக்ஷ் சிங் மைதானத்தில் ஏ.பி.வி.பி. ஏற்பாடு செய்த இராம நவமி பூஜையில் அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் கலந்து கொண்டுள்ளார்.
ஏ.பி.வி.பி. குண்டர்களால் தாக்கப்பட ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர்கள்.
இவ்விரண்டு நிகழ்ச்சிகளிலிருந்து கல்வி நிலையங்கள் காவி பயங்கரவாதிகளின் கூடாரமாகிவரும் அபாயத்தை புரிந்துகொள்ள முடிகிறது. மேலும் இராம நவமியன்று இறைச்சி சாப்பிடக்கூடாது என்று காவிகள் தாக்குதல் நடத்தியது பெரும்பான்மை மக்களின் உணவு உரிமை மீதான தாக்குதலாகவே அமைந்துள்ளது. இந்துக்கள் அல்லாதவர்களை விட்டுவிடலாம், இந்துக்களில் பெரும்பான்மையினரே இராம நவமியில் இறைச்சியைத் தவிர்க்கிறார்களா என்றால் இல்லை.
அவ்வாறிருக்க, டெல்லியின் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்டங்கள், உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத், கர்நாடகாவில் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் இராம நவமிக்கு இறைச்சி விற்கத் தடை விதித்துள்ளார்கள் காவி பாசிஸ்டுகள்.
நாம் எதை உண்ண வேண்டும், உடுக்க வேண்டும், பேச வேண்டும், விரும்ப வேண்டும் என்பதை ஒரு கும்பல் தீர்மானிப்பது தனியுரிமை மீதான கொடூரத் தாக்குதல். பார்ப்பனப் பண்பாட்டை ‘இந்துப் பண்பாடு’ என்ற பெயரில், பெரும்பான்மை மக்களின் மீது திணிப்பதைக் காலங்காலமாகவே காவிகள் திட்டமிட்டுச் செய்துவருகிறார்கள். தாக்கப்பட்ட ஜே.என்.யு. மாணவர்கள் இந்துக்களே; இந்துராஷ்டிரம் ஆகப் பெரும்பான்மை இந்துக்களுக்கே எதிரானது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
ஜனநாயக மாயைகளை தரைமட்டமாக்கிய புல்டோசர்
பண்டிகைகளையொட்டி நடைபெற்ற தொடர் கலவரங்களில் காவி குண்டர்கள் மட்டும் இசுலாமிய மக்கள் மீது வெறியாட்டங்களை நிகழ்த்தவில்லை. அரசு நிர்வாகமும் தன் பங்கிற்கு ‘கரசேவை’ செய்துள்ளது.
இராம நவமி கலவரம் நடைபெற்ற மறுநாளே (ஏப்ரல் 11) அதிகாலை 3 மணி அளவில், கார்கோன் பகுதியைச் சேர்ந்த இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளை இடிக்க ‘ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை’ என்று கூறி, புல்டோசர் உடன் வந்திறங்கியது உள்ளூர் நிர்வாகம். 50-க்கும் மேற்பட்ட இசுலாமியர்களின் வீடுகள், கடைகள் இடித்துத் தள்ளப்பட்டன.
முதலாவதாக, அங்கிருந்த பிலால் மசூதியின் வாயிலை அவர்கள் உடைக்க ஆரம்பித்தனர். அப்போது அந்த மசூதிக்கு அருகில் வசித்து வந்த மூதாட்டி அவர்களைத் தடுக்க முற்பட்டபோது, வயதானவர் என்றும் பாராமல் கடுமையாக தாக்கினார்கள் காக்கி குண்டர்கள் (போலீசு).
“எங்களது பொருட்களையாவது எடுத்துக் கொள்கிறோம், குறைந்தபட்சம் குரானையாவது வீட்டில் இருந்து எடுக்க விடுங்கள்” என கெஞ்சிய இசுலாமியர்களுக்கு சிறிதும் செவிமடுக்கவில்லை.
உள்துறை அமைச்சர் நரோத் மிஸ்ரா “எங்கிருந்து கற்கள் வீசப்பட்டதோ, அந்த வீடுகள் கற்குவியலாக மாற்றப்படும்” என்று வெளிப்படையாக வெறுப்பு நஞ்சைக் கக்கினார். ஆனால், கார்கோன் மாவட்ட நிர்வாகமோ இது சட்டப்படி நடக்கிற ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கைதான்; கலவரத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை என்று கூறியது. இடிக்கப்பட்ட சில வீடுகள் மோடி அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டவை. இதிலிருந்தே ‘ஆக்கிரமிப்பு’ என்பது வெறும் சாக்கு – பொய் என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும்.
ம.பி.யைத் தொடர்ந்து குஜராத்தின் ஆனந்த் மாவட்டம் கம்பாத் நகரிலும் இசுலாமியர்களின் கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டன. ம.பி. ஆட்சியர் சொன்னதைப் போலவே ஆனந்த் மாவட்ட ஆட்சியரும் இது ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கைதான் என்று சாதித்தார்.
டெல்லி பா.ஜ.க. தலைவர் ஆதேஷ் குப்தா, ஜகாங்கீர்புரியில் உள்ள ‘கலவரக்காரர்களின்’ கட்டுமானங்களைக் கண்டறிந்து அவற்றை இடித்துத் தள்ளுமாறு வடக்கு டெல்லி முனிசிபலுக்கு கடிதம் எழுதினார். அதைத்தொடர்ந்து ஏப்ரல் 20-ஆம் தேதி அன்று காலை எந்தவித முன்னறிவிப்புமின்றி, அப்பகுதி இசுலாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகள் புல்டோசர்களால் இடிக்கப்பட்டன.
வீடுகளை இடித்துக் கொண்டிருக்கும்போதே வழக்கறிஞர் துஷ்யந்த் தவே உச்சநீதிமன்றத்தில் அவசரமாக இப்பிரச்சினைகளை முன்வைத்து தடை ஆணை வாங்கினார். அதைச் சுட்டிக்காட்டி, இடிப்பதை நிறுத்தச்சொன்னபோது ‘எங்களுக்கு அறிவிப்பு வரவில்லை’ எனக் கூறி இரண்டு மணி நேரத்திற்கு மேலாக 20-க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகளை இடித்துத் தரைமட்டமாக்கியது முனிசிபல். காவி குண்டர்களின் தாக்குதல் ஒருபுறம் பாசிசமயமாகும் அரசு நிர்வாகத்தின் தாக்குதல் மறுபுறம். சிறுபான்மை மக்கள் இரட்டைத் தாக்குதலை எதிர்கொள்கிறார்கள்.
ஆக்கிரமிப்பு அகற்றம் என்பது கடைந்தெடுத்த பொய். இசுலாமியர்களின் வீடுகளைக் குறிவைத்து இடிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர்கள் பேசியது மட்டுமில்லை, சமூக வலைதளங்கள் முழுக்கவும் “கல்லெறிந்தால், வீடுகளுக்கு புல்டோசர் வரும்” என்ற வாசகத்தை சங்கிகளும் பகிர்ந்துகொண்டிருந்தார்கள்.
பா.ஜ.க. சொல்வதுபடி கலவரக்காரர்களாகவே இருந்தாலும் அவர்களின் வீடுகளையே தரைமட்டாக்கி, அகதிகளாகத் துரத்திவிடுங்கள் என்றா சட்டம் சொல்கிறது. இவை செரித்துக் கொள்ளவே முடியாத ஜனநாயக விரோத செயல், மனித உரிமை மீறலாகும். சொல்லிக்கொள்ளப்படும் ‘ஜனநாயக நாட்டின்’ உண்மை முகம் இது.
உத்தரப் பிரதேசத்தில் குடியுரிமைச் சட்டத்திற்கெதிராக போராடியவர்களின் வீடுகளை இடித்து இப்பயங்கரவாத நடவடிக்கையைத் தொடங்கிவைத்தது யோகி ஆதித்யநாத். அந்த மாடலை தற்போது ம.பி. பா.ஜ.க. முதல்வர் சிவராஜ் சிங் சவுகானும் கையிலெடுத்துள்ளார். அதனால் சங்கப் பரவாரத்தினர் யோகியை ‘புல்டோசர் பாபா’ எனவும் சிவராஜ் சிங் சவுகானை ‘புல்டோசர் மாமா’ என்றும் அழைக்கிறார்கள்.
புல்டோசர் என்பதே சிறுபான்மை மக்களை அச்சுறுத்தும் பாசிச பயங்கரவாதிகளின் சின்னமாகிவிட்டது. புல்டோசர்கள் இடித்துத் தள்ளியது கட்டிடங்களை மட்டுமில்லை, ஜனநாயக மாயையினையும்தான்.
கட்சிகளின் இரட்டைநிலை பாசிஸ்டுகளுக்கு வழங்கும் ஒத்துழைப்பே
நாடெங்கும் பாசிசப் போக்கு மேலெழும்பிவரும் நிலையில், பா.ஜ.க.வை எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகளும் அதன் இந்துத்துவா கொள்கையை மென்மையாகக் கடைப்பிடிக்கும் போக்கை நாம் தொடர்ச்சியாக விமர்சித்துவருகிறோம். இராமநவமி கொண்டாட்டங்களிலும் பல கட்சிகளிடம் அது தீவிரமாக வெளிப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் நகரில், இசுலாமிய மக்களின் வீடுகளை புல்டோசரால் இடித்துத் த்ரைமட்டமாக்கும் காட்சி.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரசும் பா.ஜ.க.வும் போட்டிப் போட்டுக்கொண்டு இராமநவமி கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழமையானதாகும். இந்த ஆண்டும் அது தொடர்ந்துள்ளது. மே.வங்கம் முழுவதும் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள், துர்கா வாஹினி ஆகிய அமைப்பு ஏற்பாடு செய்து நடத்திய பேரணிகளில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்ட கூத்தும் நடந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசின் சார்பில் இராம நவமி விழா ‘மிகச் சிறப்பாக’ கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ‘இராமர் வனவாச பாதை சுற்றுலாத் திட்டம்’ என்ற பெயரில் அரசு சார்பில் சிறப்புத் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இராமன் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றபோது வசித்ததாகச் சொல்லப்படும் சதீஷ்கர் மாநிலத்திலுள்ள ஒன்பது இடங்களைப் புதுப்பித்து, அப்‘புனித’ யாத்திரைத் தளங்களை இணைப்பதே இராமர் வனவாச பாதை சுற்றுலாத் திட்டத்தின் நோக்கமாம்.
இத்திட்டத்தில் ஒரு அங்கமாக உள்ள ஷிவ்ரி நாராயணன் கோயிலை இராம நவமியன்று திறந்துவைத்துப் பேசிய பூபேஷ் பாகல், ஷிவ்ரி நாராயணன் கோயிலை அயோத்தியைப் போலவே மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் ஆர்.எஸ்.எஸ்.ஐ விமர்சித்துப் பேசுவது வரவேற்கத்தக்க விசயம் என நம்மில் சிலர் சிலாகித்துவருகின்றனர். ஆனால் அவர் ஏன் சதீஷ்கர் முதல்வரைக் கண்டிக்கவில்லை என்பது நாம் எழுப்பும் கேள்வி.
இக்கலவரங்களுக்குப் பிறகு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., சி.பி.ஐ., சி.பி.எம் உட்பட 13 எதிர்க்கட்சித் தலைவர்கள், மத வன்முறைகளை மோடி அமைதியாக வேடிக்கைப் பார்ப்பது குறித்துக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கை வெளியிட்டார்களே தவிர இசுலாமிய மக்கள் மீது கலவரங்கள் அரங்கேற்றப்படும்போதும் வீடுகள் இடிக்கும்போதும் எந்தத் தலைவரையும் களத்தில் பார்க்க முடியவில்லை.
சி.பி.எம். கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரான தோழர் பிருந்தா காரத், அனைத்திந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளரான ஹன்னன் மொல்லா ஆகியோரே ஜஹாங்கீர் புரி வீடு இடிப்பின்போது களத்திற்கு வந்து எதிர்த்து நின்றனர். அதுதான் உண்மையான எதிர்ப்பு. மற்ற கட்சிகளின் மென்மையான இந்துத்துவமும் கலவரத்திற்குப் பின்பு பேச்சளவிலான எதிர்ப்பும் பாசிஸ்டுகளுக்கு வழங்கும் மறைமுக ஒத்துழைப்பே.
இசுலாமிய இனப்படுகொலைகளை நோக்கி
இந்துப் பண்டிகைகளை ஒட்டி நடைபெற்ற கலவரங்களை, பா.ஜ.க. வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்காகவே நடத்திவருகிறது என்று எதிர்க்கட்சிகளும் ஜனநாயக சக்திகளில் பெரும்பான்மையினரும் கூறிவருகின்றனர். ஒவ்வொரு முறை மதவெறிக் கலவரங்கள் நடைபெறும்போதும் இதையே மீண்டும் மீண்டும் கூறிவருகின்றனர்.
நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடு, சிந்தனைப் போக்கு முதலியவற்றை எல்லாம் இந்துராஷ்டிரத்திற்கு ஏற்றவாறு ஒவ்வொரு கலவரங்களின் போது உருக்கி வார்த்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சமூகத்தைச் சிதைத்து உருமாற்றம் செய்துகொண்டிருக்கும் நிகழ்வுப்போக்கை தேர்தல் வரம்போடு சுருக்கிப் பார்ப்பது மிக மோசமானதாகும். மற்ற ஓட்டுக் கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் வெற்றிகளே அனைத்துமாக இருக்கலாம். ஆனால், இந்துராஷ்டிரக் கனவுடைய ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.வுக்கு தேர்தல் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததும் மூலமுதலானதும் அல்ல.
யூதர்களை இனப்படுகொலை செய்வதற்கு முதல்படிநிலையில் ஹிட்லர் ‘கெட்டோமயமாக்கல்’ (ghettoisation) என்ற முறையைக் கையாண்டான். யூதர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்து, அவர்களின் குடியிருப்புகளை அழித்து, பொருளாதார ரீதியில் ஒடுக்கி ‘கெட்டோ’களில் (குறிப்பிட்ட இன/சமய மக்கள் நெருக்கமாக தனித்து வாழும் சேரிப்பகுதி) வாழும்படி தள்ளினான். இதன்மூலம் அவர்களை பொது சமூகத்திலிருந்துப் பிரித்து தனிமைப்படுத்தினான்.
இங்கு வாழ்ந்த யூதர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்டனர். உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எவையும் இல்லாத கெட்டோக்களில் வயதானவர்களும் குழந்தைகளும் நோய் வாய்ப்பட்டு மடிந்தார்கள்.
கெட்டோமயமாக்கலுக்கு ஒத்த போக்கையே காவி பாசிஸ்டுகள் நமது நாட்டில் உருவாக்கிவருகிறார்கள். ஹிஜாப் தடை, ஹலால் ஜிகாத், திருவிழாக்களில் முசுலீம்கள் வியாபாரம் செய்யத்தடை, மசூதிகளில் ஒலிப்பெருக்கிகள் பயன்படுத்த தடை என அண்மைக்காலமாக காவிகள் முன்தள்ளிவரும் நிகழ்ச்சிநிரல்கள் அதை நோக்கியே செல்கின்றன. ம.பி.யில் புல்டோசர்களைக் கொண்டு வீடுகளைத் தரைமட்டமாக்கிய பிறகு, நான்கு இசுலாமியக் குடும்பங்கள் தங்குவதற்கு இடமில்லாமல் மாட்டுக்கொட்டையில் குடியேறினார்கள் என்பதை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டும். சில இசுலாமியக் குடும்பங்களுக்கு நடந்தவை நாளை பெரும்பகுதி இசுலாமியர்களுக்கு நடத்தப்படலாம்.
இவையெல்லாம் பெரும்பான்மை இந்துக்களின் மத நம்பிக்கையின் பெயரால் நடத்தப்படுகிறது. சகோதரர்களைப் போல ஒன்றாக வாழ்ந்த இசுலாமியர்களைக் காவிக் கும்பல் இதுபோன்ற கொடூர நிலைக்கு ஆளாக்குவதை அமைதியாக சகித்துக் கொண்டிருத்தல் தகாது. இசுலாமிய மக்களின் இரத்தவாடைக்கு மத்தியில், இந்துக்கள் தங்கள் மதப் பண்டிகைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவது மனிதத்தன்மையும் அல்ல.
மத நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்துக்களின் மௌனமே மதவெறி கும்பலுக்கு ஊக்கமருந்தாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு, இசுலாமிய மக்களுக்கு ஆதரவாகவும் காவி வெறியர்களுக்கு எதிராகவும் களத்தில் இறங்க வேண்டிய தருணம் இது. அந்நோக்கத்தில், மக்களை அணிதிரட்டுவதும் போராட்டங்களைக் கட்டியமைப்பதும் புரட்சிகர – ஜனநாயக சக்திகளின் பொறுப்பு.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையானது விவாதப் பொருளாகி உள்ளது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவானது தனது தேர்தல் அறிக்கையின் 84-வது பக்கத்தில் 309-வது வாக்குறுதியாக பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு, ஏப்ரல் 1, 2022 முதல் தனது மாநிலத்தில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்ததிலிருந்து, தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற விவாதம் சூடுபிடித்தது.
இதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் மே 7 அன்று நடந்த நிதித்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அதை செயல்படுத்துவது சாத்தியமில்லை என்று கூறினார். மேற்கூறியவாறு தமிழக நிதி அமைச்சர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக நிறுவனர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
குறிப்பாக அமைச்சர் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த முடியாததற்கு இரண்டு காரணங்களை கூறியுள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் பெறப்பட்ட நிதி முழுமையாக அரசின் கணக்கில் இருந்தது. அதை அரசு எடுக்கலாம், வைக்கலாம், அனைத்து உரிமையும் அரசிடம் இருந்தது. தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தில் ஒவ்வொரு தனி நபரின் பணம் மற்றும் அரசின் பங்களிப்பு தனிநபரின் பெயரில் தனியாக கணக்கு வைக்கப்படுகிறது. அதை திரும்ப எடுத்து அரசு நிதியாக்க சட்டம் அனுமதிக்காது.
இந்த ஆண்டு ஓய்வூதியத் திட்டத்திற்காக 39,500 கோடி செலவிடப்படுகிறது. நிதிச்சுமை காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முடியாது என தெரிவித்தார்.
மேற்கண்ட அவர் கூறிய இரண்டு காரணங்களை நாம் பரிசீலிப்பதற்கு முன்னால் பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன என்பதை நாம் பார்ப்போம்.
பழைய ஓய்வூதியத் திட்டம் :
2003-க்குள் முன்னால் அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. பணி நிறைவு பெற்ற பிறகு கடைசியாக பெறப்பட்ட சம்பளத்தில், 50 சதவீத ஓய்வூதியம் அரசால் உத்தரவாதமாக வழங்கப்பட்டது.
அரசானது ஓய்வூதியத் திட்டத்திற்காக ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் ஏதும் செய்யவில்லை. ஓய்வூதியம் முழுவதும் அரசால் வழங்கப்பட்டது. பணிக்கொடை, மருத்துவக் காப்பீடு, ஓய்வூதியத் திரண்ட தொகை ஆகிய பலன்கள் உண்டு. இப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கான பொருப்புகள் அனைத்தும் அரசிடமே இருந்தது.
புதிய ஓய்வூதியத் திட்டம் :
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அதிகப்படியான நிதி செலவாகிறது மற்றும் அரசிடம் நிதி பற்றாக்குறை என்ற காரணத்தை காட்டி, வாஜ்பாய் தலைமையிலான அரசு 2004-ம் ஆண்டு புதிய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தியது.
இத்திட்டத்தின் படி, ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அரசு தனது பங்காக 14 சதவீதம் செலுத்தும். மொத்த 24 சதவீத தொகை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதைப்போல, அரசின் கணக்கில் அல்லாமல் தனிநபர் கணக்கில் சேரும்.
இப்பணமானது காப்பீடு நிறுவனங்களின் மூலம் பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்பட்டு பெருக்கப்படும். ஓய்வு வயதை எட்டியவுடன் வட்டியுடன் சேர்ந்திருக்கும் பணத்தில் 60 சதவீதம் ஊழியர்களிடம் கொடுக்கப்படும், மீதி 40 சதவீதம் மீண்டும் கட்டாயம் மறுமுதலீடு செய்யப்பட்டு, அதன்மூலம் வரும் வட்டி பணத்தில் ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என புதிய ஓய்வூதியத் திட்ட விதி கூறுகிறது.
இத்திட்டத்தில் ஓய்வூதியத்திற்கு அரசு பொறுப்பு என்ற விதி தளர்த்தப்பட்டு, தனியார் காப்பீடு நிறுவனங்கள் பொறுப்பாக்கப்படுகிறது. இச்செயலானது தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் சேமிப்பை பங்குச்சந்தை மற்றும் கடன் பத்திரங்களில் சூதாடி கொள்ளையடிக்கவே வழிவகை செய்கிறது.
மேலும் இவ்வோய்வூதிய திட்டத்தில், நிரந்தர ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் கிடையாது. ஓய்வூதியம் கிடைப்பதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தனியார் காப்பீடு நிறுவனங்களை தான் தொடர்பு கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அரசு ஊழியர்களுக்கு பணி முடிந்தவுடன் ஓய்வூதியம் மூலம் சமூகப் பாதுகாப்பை கொடுக்கும் பொறுப்பில் இருந்து அரசானது விலகுகிறது மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்களின் ஓய்வூதியத்தை கொள்ளையடிக்க திறந்துவிடுகிறது என்பதுதான்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இவ்வளவு அபாயங்கள் இருப்பதால்தான், அரசு ஊழியர்கள் 19 ஆண்டுகளாக புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என போராடி வருகின்றனர். ஆனால் அரசு ஊழியர் சங்கங்களின் கோரிக்கையானது செவிடன் காதில் ஊதிய சங்கைப்போலதான் உள்ளது.
***
மேற்கூறியவாறு புதிய ஓய்வூதியத் திட்ட விளக்கத்தின் படி, அமைச்சர் சொன்ன முதல் காரணத்தை புரிந்து கொள்ள முடியும். அதாவது ஓய்வூதியத் திட்டமானது அரசு பொறுப்பில் இருந்து, தனியார் காப்பீடு நிறுவனங்கள் பொறுப்பிற்கு சென்றுவிட்டது. எனவே அந்த நிதியை மீண்டும் அரசு நிதியாக்க சட்டம் அனுமதிக்காது என்பதுதான்.
அமைச்சர் கூறிய இரண்டாவது காரணம் மக்களுக்கான நலத்திட்டங்களை வெட்டி சுருக்க, எல்லா அரசுகளும் கூறும் வழமையான காரணம்தான், “நிதிப்பற்றாக்குறை”. இவர்களுக்கு மக்களுக்கு சேவை செய்யும்போது மட்டும் நிதிப்பற்றாக்குறை வந்துவிடும், ஆனால் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும்போது நிதிப்பற்றாக்குறை வராது.
புதிய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வந்த பிறகு, ஓய்வூதிய திட்ட வரம்பிற்குள் நாடு முழுவதும் உள்ள தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் கொண்டுவர அனுமதி வழங்கப்பட்டன.
ஒட்டுமொத்த நாடு தழுவிய அளவில் அமைப்புசாரா தொழிலாளர்களின் எண்ணிக்கையோ, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுதான்.
ஏன் அமைப்பு சாரா தொழிலாளர்கள் இப்புதிய ஓய்வூதிய திட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்கள் என்றால்? அவர்களுடைய ஓய்வூதிய பணத்தையும் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்கதான்.
அதாவது கார்ப்பரேட்டுகள் தங்களுடைய கொள்ளை அடிக்கும் எல்லையை விரிவுபடுத்துகிறார்கள். அதற்கு அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஏற்ற மாதிரி சட்டங்களை மாற்றி கொடுக்கிறது.
ஆனால், மத்திய அரசானது தன்னுடைய அடியாள் படையான இராணுவம், நீதித்துறையை புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டுவரவில்லை. அரசின் ஏவல் நாய்களை மக்கள் பணத்தில் குளிப்பாட்ட வேண்டும் அல்லவா?
நிதிப்பற்றாக்குறை என்றால், நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் நலன்களுக்காக, தனியார் கார்ப்பரேட்டுகள் மீது போடும் வரியை அதிகரித்து ஈடுகட்டலாமே? ஏன் செய்ய மாட்டிக்கிறார்கள்? மக்கள் மீதான சொத்து வரியை அதிகரிக்கும் திமுக அரசுக்கு, கார்ப்பரேட்டுகள் மீதான தொழிற்வரியை அதிகரிக்க துப்பு இருக்கா?
ஏனென்றால் மத்திய, மாநில ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் எல்லாம் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற புதிய தாராளவாதக் கொள்கைகள் பெற்றெடுத்த அரசியல் வாரிசுகள். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட்டுகளுக்குதான் சேவை செய்வார்கள்! மக்களுக்கு அல்ல! திமுக மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?
ஆகவே, இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அதை நிறைவேற்றுவோம், இதை நிறைவேற்றுவோம் என்று வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு கார்ப்பரேட் சேவர்களாக தங்களை காட்டிக் கொள்கிறார்கள்.
அரசு ஊழியர்கள் மத்தியிலும் தங்களுக்கு நல்ல வருமானம் உள்ளது. அதனால் நாட்டின் பிற பிரச்சனைகளால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற எண்ணம் உள்ளது. அது தவறானது.
அரசின் எல்லா துறைகளிலும் புதிய தாராளவாதக் கொள்கைகள் தீவிரமாக அமல்படுத்தப்படும் போது, அது அரசு ஊழியர்களை மட்டும் விட்டுவிடுமா என்ன?
8 மணி நேர வேலை என்பது 12 மணி நேரமாக உயர்வு, எங்கும் காண்ட்ராக்ட்மயம் என தொழிலாளர்கள் உரிமைகள் அனைத்தும் நசூக்கப்படும் சூழலில் அரசு ஊழியர்கள் தன்னை தொழிலாளர் வர்க்கத்தின் அங்கமாக கருதி, ஒடுக்கப்படும் எல்லா தொழிலாளர் பிரிவுகளுடன் ஒன்றினைந்து தொழிலாளி வர்க்கமாக போராடும் போது தான், மக்கள் விரோத மத்திய, மாநில அரசுகளை பணிய வைக்க முடியும். நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட முடியும்.
இந்திய சமூகத்தில் பெண்களின் நிலை என்ன என்பது பற்றி ஒரு அலசல் செய்ததில் நமக்கு பல தகவல்கள் அரசின் புள்ளிவிவரங்களில் இருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக நம் நாட்டில் ஓடும் ஆறுகளின் பெயர்கள் கூட பெண்களின் பெயர்களிலே இருக்கும். நாம் பேசும் மொழியை கூட தாய்மொழி என்று தான் கூறுவோம். நமது நாட்டை தாய்நாடு என்றுதான் அழைப்போம். அப்படி பார்க்கும்போது இந்திய நாட்டில் பெண்களுக்கான மதிப்பு என்பது பெரிய அளவில் இருப்பதாக தான் நாம் எல்லோரும் நம்புகிறோம். ஏன் சமூக வலைதளங்களில் பெருமிதமாக சொல்லிக்கொண்டும் உள்ளோம்.
ஆனால், சற்று நிதானித்து உண்மைகளை பரிசீலிக்க தவறுகிறோம். அதனால்தான் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்மந்தமான செய்திகளை பார்த்தால் கூட கடந்து செல்கிறோம் அல்லது ஒரு கருத்தை (கமெண்ட்) மட்டும் பதிவு செய்து எதிர்ப்பை காட்டுவதோடு கடமையை முடித்து விடுகிறோம். அதிலும் பலர் பெண்கள் தான் தன்னை பாதுகாத்து கொள்ள வேண்டும்; ஆண் நண்பர்களுடன் வெளியில் செல்லக்கூடாது, உடையை சரியாக போட வேண்டும் என்று கருத்து பதிவிடுகின்றனர். ஏதோ பெண்களுக்கு வெளியில் உள்ளவர்களால் மட்டுமே ஆபத்து இருப்பதுபோல கருத்து நிலவுகிறது. இது மிக ஆபத்தானது.
பாலியல் ரீதியிலான வன்முறை:
திருமணமான பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உறவினர்களால் தான் 82 சதவீதம் நடக்கிறது. திருமணமாகாத பெண்கள் மீதான பாலியல் வன்முறை என்பது உறவினர்களால் தான் 39.3 சதவீதம் நடக்கிறது. உறவுகளுக்கு அடுத்தபடியாக ஆண் நண்பர்களால் 16.1 சதவீதமும், குடும்ப நண்பர்கள் மூலம் 11.7 சதவீதமும் நடக்கிறது என தேசிய குடும்பநல ஆய்வின் 2021-ம் ஆண்டின் அறிக்கையின் புள்ளிவிவரம் சொல்கிறது. அப்படியானால் பெண்கள் யாரிடமிருந்து கவனமாக இருக்க வேண்டும் என்பதை நாம் இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.
தேசிய குற்றவியல் புலனாய்வு பிரிவின் புள்ளி விவரங்களின் படி, 1971 மற்றும் 1991-ம் ஆண்டுகளுக்கிடையில் 1,15,414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆண்டிற்கு 6074 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன் பிறகு 1992 மற்றும் 2001-ம் ஆண்டுகளில் 1,54,664 ஆக பதிவாகி உள்ளது. அதாவது ஆண்டிற்கு 15,466.4 பாலியல் பலாத்காரங்கள் நடந்துள்ளன. அதன் பிறகு 2012-ல் 24,923 பாலியல் வல்லுறவுகளும், 2013-ல் 33,707 பாலியல் வல்லுறவுகள் என அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இதில் 94 சதவீதம் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே இந்த வன்கொடுமை அறங்கேறி உள்ளது. இதே போல் தமிழகத்தில் மட்டும் 2012-ல் 737 ஆக இருந்த எண்ணிக்கை 2013-ல் 923 வழக்காக அதாவது ஓராண்டில் 19 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் 2020-ம் ஆண்டில் மட்டும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 3,71,503 பதிவாகியுள்ளது.
குடும்ப வன்முறை:
இந்தியாவில் மூன்று பெண்களில் ஒருவர் பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர் கொள்கின்றனர். அதில் பெரும்பாலானவை உடன் இருக்கும் வாழ்க்கைத் துணையால் ஏற்படுகின்றன. தேசிய குடும்ப உடல்நல ஆய்வின் (NFHSS) சமீபத்திய புள்ளி விவரங்கள் சொல்வது தான் நம்மை திடுக்கிட செய்கிறது. அதாவது குடும்பத்தில் நடக்கும் பிரச்சினைகளில் மாமியாரை ஒரு மனைவி அவமதிப்பது, சாப்பாடு சரியாக செய்யாமல் இருப்பது, குழந்தைகள்
பராமரிப்பு முறையாக இல்லை, உடலுறவுக்கு கணவனிடம் மறுப்பு தெரிவிப்பது போன்ற செயல்பாடுகளுக்காக மனைவியை கணவன் அடிப்பது தவறில்லை என 40 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களும், 38 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களும் அரசு கணக்கெடுப்பாளர்களிடம் கருத்து தெரிவித்து உள்ளனர். நான்கு மாநிலங்களில் 77 சதவீதத்திற்கும் அதிகமான பெண்களே மனைவியை கணவன் அடிப்பதை நியாயப்படுத்தி உள்ளனர்.
அதாவது உணவில் உப்பு அதிகமாக இருந்ததால் மனைவியை கொன்றதாக 46 வயது ஆடவரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர். இதுபோல் பல சம்பவங்கள் அறங்கேறி கொண்டேதான் இருக்கின்றன. ஆனால் இதில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் இந்தியாவில் மனைவியை கணவன்மார்கள் அடித்தல் என்பது மிகவும் குறைவாகவே பதிவாகிறது. இதற்கு காரணம் சொல்லும் பலர் வீட்டில் நடக்கும் பிரச்சினை வீட்டு உள்ளேதான் இருக்க வேண்டும் என்கின்றனர். அப்படியானால் பெண் என்பவள் தன் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டிருக்கும் ஒரு அடிமை என்பதுதான் அவர்கள் சிந்தனையில் உள்ளது. அப்படியே பெண்கள் வீட்டைவிட்டு வெளியேறினாலும் அவர்களுக்கான பாதுகாப்பு என்பது இந்த சமூகத்தில் இல்லை.
பொருளாதார ரீதியான வன்முறை:
இந்தியாவில் உள்ள இந்த பொருளாதார நெருக்கடி சூழலில் ஒரு குடும்பத்தில் ஆண், பெண் என அனைவரும் வேலைக்கு சென்றதால் வாழ முடியும் என்ற சூழல் ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் பெண்கள் தங்களின் குடும்ப நலனுக்காகவும், தன்னை பார்த்துக் கொள்ளவும் பொருளாதாரத்தை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். ஆனால், இந்த கொரோனா காலக்கட்டத்தில் 2017 மற்றும் 2022-ம் ஆண்டுக்கு இடையில் சுமார் 2.1 கோடி பெண்கள் நிரந்தரமாக தங்கள் வேலையை விட்டுள்ளனர். (வேலை தேடாமலே இருக்கின்றனர். நாட்டில் ஒட்டு மொத்த தொழிலாளர் பங்கேற்பில் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதில் இதன் பங்கும் உள்ளது.
சி.எம்.ஐ.இ. (CMIE) அறிக்கை, 2017-ம் ஆண்டில் 46 சதவீதத்தில் இருந்து 2022-ம் ஆண்டில் 40 சதவீதமாகக் குறைந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தில் 6 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை குறிக்கிறது. காலமுறை தொழிலாளர் படை கணக்கெடுப்பின் படி, (PLFS) 2018 – 2019-ம் ஆண்டில் இளம் நகர்புற பெண்களிடையே வேலையின்மை விகிதம் 25.7 சதவீதமாக இருந்தது. ஆண்களுக்கு வேலையின்மை விகிதம் 18.7 சதவீதமாக இருந்தது. ஜனவரி – ஏப்ரல் 2016-ல் 2.8 கோடி பெண்கள் வேலையில்லை ஆனால் வேலை செய்ய தயாராய் இருந்தனர். ஆனால் டிசம்பர் 2021-ல் வேலை செய்ய தயாராய் உள்ளவர்களின் எண்ணிக்கை 80 லட்சமாக குறைந்தது.
2011 மற்றும் 2017-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட மாநிலங்கள் அளவிலான குற்றத் தரவுகளில் செய்த பகுப்பாய்வு, பீகார், டெல்லி போன்ற பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கணிசமாக அதிகரித்துள்ளது. அதே வேலையில் பெண் தொழிலாளர்களின் பங்களிப்பு குறைந்துள்ளதையும் காட்டுகிறது.
இதற்கான முக்கிய காரணம் என்பது குடும்ப வேலைகளில் பெண்கள் அதிகம் செய்ய வேண்டி நிர்பந்திக்கப்படுகின்றனர். இந்தியாவிலுள்ள பெண்கள் ஒவ்வொரு நாளும் சுமார் 4 மணி நேரம் குடும்ப உறுப்பினர்களுக்காக ஊதியமில்லாமல் உழைக்க வேண்டி உள்ளது. புள்ளியல் அமைச்சகத்தின் ஆய்வுப்படி ஆண்கள் வெறும் 25 நிமிடங்களே ஊதியம் செலுத்தப்படாத வேலையை செய்கின்றனர். இந்த நெருக்கடி சூழல்தான், குடும்ப வேலைச்சுமை தான் பெண்களை வெளியில் சென்று நிதியீட்டும் வேலையில் பங்கேற்பை குறைக்கிறது.
இதனால் சமூக பணிகளிலும், தான் விருப்பப்பட்ட துறைகளில் சிறந்தோங்குவது என்பதை கூட இந்த வீட்டு வேலை சுமைதான் தடுக்கிறது. இது பெண்கள் அவர்களே ஏற்படுத்திக் கொள்வது இல்லை. அவர்களின் சுற்றத்தார்களினாலும், கணவனாலும் ஏற்படுகிறது. வீட்டு வேலை என்பது பெண்கள் மட்டுமே செய்ய வேண்டிய வேலையாக எல்லோரின் சிந்தனையிலும் ஊறிபோய் உள்ளது. குறிப்பாக இந்த ஆணாதிக்க சிந்தனைக்கு அதிகமாக ஆளாகி இருப்பது பெண்கள்தான். இது சரிதான் என்று ஏற்றுக் கொண்டும் உள்ளனர். இந்த நிலைமாற வேண்டும் என்றால் பெண்கள் சமூகமாற்ற பங்களிப்பில் ஈடுபட வேண்டும். அதற்கு பெண்கள் மட்டுமே முயற்சி செய்ய முடியாது குடும்பத்தின் வன்கொடுமையின் பிடியில் பெண்கள் வெளியே வர சமூகம் உதவி கரம் நீட்ட வேண்டும்.
ஆணாதிக்க சிந்தனைக்கு பெண்கள் அதிகமாக அடிமையாவதற்கு காரணம் இந்த சமூகம்தான். அதனால்தான் ஆண், பெண்ணை தன்னுடைய போகப்பொருளாக பார்க்கிறான். அடைய வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறான். ஏன் முற்போக்கு பேசும் பலரே பெண்களை தவறான கண்ணோட்டத்தில் அணுகுவது என்பதும் நடக்கிறது. அதற்கான முக்கிய காரணம் அவரவர்களிடத்தில் ஊறிபோய் உள்ள சமூகத்தில் நிலவும் ஆணாதிக்க சிந்தனைதான். பெண்கள் மீதான இதுபோன்ற எந்த வன்கொடுமையாக இருந்தாலும் சட்டத்தின் மூலமே தீர்த்துக் கொள்ளலாம் என்ற மாயையிலிருந்து விடுபட்டு பிற்போக்கான ஆணாதிக்க சமூக அமைப்பை தகர்த்தெறியும் களப்போராட்டமே இன்றைய தேவை. சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!