Saturday, May 24, 2025
முகப்பு பதிவு பக்கம் 340

பொன்பரப்பி வன்கொடுமை : முகநூல் கண்டனக் குரல் !

மீபத்தில் நடந்துமுடிந்த மக்களவை தேர்தல் வாக்குப் பதிவின்போது, சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் பாமக சாதி வெறி கும்பல், தலித் குடியிருப்புகளுக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுக்கியது.

இந்து முன்னணியும் பாமகவும் சேர்ந்து சாதிவெறியை தீர்த்துக்கொள்ளும் களமாக தேர்தல் பிரச்சினையை திட்டமிட்டு மாற்றினர். வீடுகளை அடித்து நொறுக்கியதோடு, குழந்தைகள், முதியவர்களை அடித்துள்ளது இந்த கும்பல். இந்த சம்பவம் குறித்து முகநூலில் எழுதப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு இங்கே…

கலையரசன்

பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில் சாதிவெறி வ‌ன்முறை : த‌மிழ்த் தேசிய‌வாதிக‌ள் க‌ள்ள‌ மௌன‌ம்.

ஒரு கால‌த்தில் ந‌க்ச‌லைட்டுகளுட‌ன் இருந்து பிரிந்து சென்ற, தமிழரசன் போன்றோர் த‌னித் த‌மிழ் நாடு காண்ப‌த‌ற்காக‌ ஆயுத‌ப்போராட்ட‌ம் ந‌ட‌த்திய‌ பொன்ப‌ர‌ப்பி கிராம‌த்தில், இந்த‌ சாதிவெறிக் கல‌வ‌ர‌ம் ந‌ட‌ந்துள்ள‌மை குறிப்பிட‌த்த‌க்க‌து. இந்த‌ ச‌ம்ப‌வ‌மான‌து, ஆளும் வ‌ர்க்க‌ம் ம‌க்க‌ளை பிரிப்ப‌த‌ற்கு, ஓட்ட‌ர‌சிய‌ல் எந்த‌ள‌வு ப‌ய‌னுள்ள‌தாக‌ இருக்கிற‌து என்ப‌தை எடுத்துக் காட்டியுள்ள‌து.

இத‌ற்காக‌த் தானே தேர்த‌ல்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌? ச‌முதாய‌த்தில் எந்த‌ மாற்ற‌மும் வ‌ந்து விட‌க்கூடாது என்ப‌தில் ஆட்சியாள‌ர்க‌ள் குறியாக‌ இருக்கிறார்க‌ள். இத‌ற்குள் ஓட்டுப் போட்டு விட்டு “ஒரு விர‌ல் புர‌ட்சி” செய்து விட்ட‌தாக‌ கூறும் சில‌ர‌து அல‌ப்ப‌றைக‌ள் எரிச்ச‌ல் ஊட்டுகின்ற‌ன‌.

தேர்த‌ல் முடிந்த‌ பின்ன‌ர், பாம‌க‌ க‌ட்சியை சேர்ந்த சாதிவெறிக் காடைய‌ர்க‌ள் குறிப்பிட்ட‌ ஒரு க‌ட்சிக்கு வாக்க‌ளித்த‌ ம‌க்க‌ளின் வீடுக‌ளை பார்த்து தாக்கியுள்ள‌ன‌ர். இது க‌ட்சி அர‌சிய‌லும் சாதிய‌வாத‌மும் எப்ப‌டி ஒன்றுட‌ன் ஒன்று பின்னிப் பிணைந்துள்ள‌து என்ப‌தை எடுத்துக் காட்டுகின்ற‌து.

த‌மிழின‌ ஒற்றுமையைக் குலைக்கும் இது போன்ற‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை, நாம் த‌மிழ‌ர் போன்ற‌ தீவிர‌ த‌மிழ்த்தேசிய‌ம் பேசும் க‌ட்சிக‌ள் எதுவும் க‌ண்டுகொள்ள‌வில்லை. இத‌ற்குள் தாம் ம‌ட்டுமே த‌மிழ‌ரின் மான‌ம் காப்ப‌தாக‌ அடிக்கும் வாய்ச் ச‌வ‌டால்க‌ளுக்கு ம‌ட்டும் குறைச்ச‌ல் இல்லை. த‌ன‌க்குள்ளே ஒரு ச‌மூக‌த்தை சாதியின் பெய‌ரால் ஒடுக்கும் ஓர் இன‌ம் எப்ப‌டி விடுத‌லை பெறும்?

இங்கே வேடிக்கை என்ன‌வெனில், தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌ ச‌மூக‌த்தின் க‌ட்சித் த‌லைவ‌ரும், தாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌மூக‌த்தை பிர‌திநிதித்துவ‌ப் ப‌டுத்தும் க‌ட்சித் த‌லைவ‌ரும், முன்ன‌ர் ஒரே மேடையில் தோன்றி த‌மிழ்த்தேசிய‌ம் பேசிய‌வ‌ர்க‌ள் தான். புல‌ம்பெய‌ர்ந்த‌ த‌மிழ‌ர்க‌ளின் நாடுக‌ளுக்கும் சென்று, பிர‌பாக‌ர‌ன் ப‌ட‌த்தை ஏந்தி, புலிச் சின்ன‌ம் பொறித்த‌ சால்வை போர்த்தி, த‌மிழீழ‌த்தை ஆத‌ரித்து அன‌ல் ப‌ற‌க்க‌ பேசிய‌வ‌ர்க‌ள்தான். அன்று அவ‌ர்க‌ளைக் கூப்பிட்டு பேச்சுக்க‌ளை கேட்டு ம‌கிழ்ந்த‌ ஈழ‌த்து புலி ஆத‌ர‌வாள‌ர் ஒருவ‌ர் கூட‌ இந்த‌ சாதிவெறி வ‌ன்முறையைக் க‌ண்டிக்க‌வில்லை.

த‌மிழின‌ம் த‌ன‌க்குள் இருக்கும் பிரிவினைக‌ளை பூசி மெழுகி விட்டு, “த‌மிழ‌ர் ஒற்றுமை” ப‌ற்றிப் பேசுவ‌தும் இன்னொரு அட‌க்குமுறைதான்.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ வன்னியன் நாடாளணும்னா அன்புமணி அமைச்சராகணும் – கார்ட்டூன்

மகிழ்நன் பா.ம

கம்யூனிஸ்டுகள் தங்களுடைய பல்வேறு தியாகத்தின் மூலம் சாதி கடந்து சாதித்து காட்டிய வர்க்க ஒற்றுமையை சிதைத்த ராமதாஸ் வகையறாக்களை “பிற்படுத்தப்பட்டவர்களின் காவலர்” என்று வரையறை செய்த சமூக நீதி புண்ணாக்குகள்…

பெரும் கதையாடல் எல்லாம் தவறு என்று சாதி, சாதியாக மக்களை மேலும், மேலும் பிளவுப்படுத்த ஆளும் வர்க்கத்திற்கு துணை போன அயோக்கியர்கள்… இவர்களைக் கண்டறிந்து அரசியல் தளத்தில் தனிமைப்படுத்துங்கள்…

இவனுக இன்னும், முற்போக்காளர்கள் கதாபாத்திரத்தை எந்த மன்னிப்பும் கேட்காம ஆத்த விடாம, அவனுக பர்னிச்சர உடைங்க. அதோடு, பொன் பரப்பியில் நடந்திருக்கும் சம்பவம், இந்து முன்னணி, பாமக கும்பல் பரப்பி வரும் விசத்தின் அடையாளம். அந்த கும்பல் முறியடிக்கப்பட வேண்டும்..

ஒட்டு மொத்த வன்னியர்களே சாதி வெறியர்கள், அவர்களில் எவரொருவரும் திருமாவுக்கு வாக்களிக்கவில்லை என்ற முடிவுக்கு தள்ளும்படியாக எழுதும் கிறுக்கர்களை புறந்தள்ளுங்கள். எனக்குத் தெரிந்தே ஏராளமான வன்னியர்கள் திருமாவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.

ராமதாஸ் வகையறா பதவி வெறி பிடித்த தரகர்களை, ஜனநாயக பண்போடு இருக்கும் வன்னிய சாதி உழைக்கும் மக்களோடு சேர்ந்துதான் முறியடிக்க முடியும்.

ஒட்டுமொத்தமாக ஒரு சாதி முற்றாக வெறி பிடித்ததென்றும், மற்ற சாதியில் புனிதர்கள் இருப்பதாக கட்டமைப்பதையும் நிறுத்துங்கள்.

அதேபோல, வன்னியர் சாதியை சார்ந்த ஜனநாயக சக்திகள், பொத்தாம் பொதுவாக கண்டன குரல்களை எழுப்பாமல், நான் சாதியால் வன்னியர்தான்… ஆனால், எனக்கு சாதிவெறியாட்டத்திலோ, ராமதாஸ் குடும்பத்தின் பதவி வெறியாட்டத்திலோ உடன்பாடில்லை என்று வெளிப்படையாக பதிவிடுங்கள்.

அப்பொழுதுதான்… இந்த தரகர்களை தேர்தலுக்கு அப்பாலும் வீழ்த்த முடியும்.

பாரதி தம்பி

சாதி வெறியின் பொலிவு தென்படும் இந்த முகங்களில் பொருளாதார மினுக்குகள் எதையும் காண முடியவில்லை. கஞ்சிக்கு வழியில்லை என்றாலும் சாதிப் பெருமிதத்துக்கு ஒன்றும் குறைவில்லை. ஆனா, தலைக்கு நாலு கேஸ் போட்டு நாலஞ்சு வருஷம் கோர்ட்டுக்கும் ஸ்டேஷனுக்கும் அலையவிட்டா, வக்காலத்து போடக்கூட சாதிக்காரன் வரமாட்டான். செத்தால் மாலையுடன் வரும் உன்னுடைய சாதி சங்கமும், கட்சியும், வாழ வழியில்லாமல் நடுரோட்டில் நிற்கும்போது பச்சைத் தண்ணீர் கூடத் தராது.

ஜீவகன்

பட்டியலினக் குடியிருப்புகள் அடித்து நொறுக்கப்பட்டு, குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் கூட தாக்கப்படுகையில் யார் பக்கம் நின்று பேசுவது என, ஜாதி இந்து முற்போக்குகள் தடுமாறிப் போகின்றனர்.

இவ்வளவுக்கும் ஊர்த்தெரு குடியிருப்பு சேதமாயிருக்காது. ஒருவர் கூட அடிபட்டிருக்க மாட்டார்கள். ஆனாலும், நட்ட நடுவில் நின்று கருத்துச் சொல்லி விட துடியாய்த் துடிப்பார்கள்.

ஊடகங்களுக்கு பிரச்சினையில்லை. இருதரப்பு மோதல் என்று தான் அவை முதலில் செய்தி போடும்.

ஆனால், இந்த நோஞ்சான் முற்போக்குகளின் நிலைமை பரிதாபமானது. தாம் பேசி வந்த ஜாதி/மத அடிப்படைவாத எதிர்ப்பின் வழி நின்று, இந்துத்துவா + பாமக அபாயகரக் கூட்டணியை இந்நேரத்தில் விமர்சிக்க முடியாது.

காரணம், தம் அமைப்புகளில் உள்ள ஜாதி இந்துக்களின் மனம் கோணாமல் பார்த்துக் கொள்வதில் அத்தனை கவனம். அவர்களுடன் முரண்பட்டால் பிழைப்புச் சிக்கல் வந்து விடும். அதே வேளை, முற்போக்கு அடையாள இமேஜையும் விட்டுக் கொடுக்க முடியாது. எனவே, விசிக-வும் பாமக-வும் ஒன்றுதான் என, நட்டநடுவில் நின்று நிறுவிட முயற்சிக்கின்றனர்.

இவர்கள்தான் தேர்தலில் அமமுக, மநீம, நாதக போன்றவற்றை ஆதரிப்போர் ஒருவகையில் பாஜக வெற்றிக்குத் துணை போவதாக எழுதியவர்கள்.

இப்போது, பொன்பரப்பியை வெறும் கட்சித் தகராறு என்று சுருக்குகையில், அது சனாதனத்திற்குச் சாதகமாவதை அறியாதவர்கள் போல காட்சி தருகின்றனர். இப்படி திருகுதாளம் அடிப்பவர்களிடம்… குறிப்பாக இடதுசாரி முகமூடிகளிடம் சொல்வதற்கு ஒன்று இருக்கிறது. மூடிக்கொண்டு அமரவும்.

இரண்டாயிரம் ஆண்டுகள் பார்ப்பன அடிமையாய், சத்திரியன் என்கிற போர்வையில் சூத்திரனாய் இருப்பது கூடத் தெரிந்துகொள்ளாமல், ‘பறப்பயலுகளா’ என்பதில் இருக்கிற சாதி வெறி வன்மம் ஒழியாமல் இந்த சமூகத்தில் வன்னியர்களுக்கு சாதி வெறியர்கள் என்கிற பட்டம் ஒழியப் போவதே இல்லை.

சுடரொளி வேல்

பொன்பரப்பி சாதியத் தாக்குதலில் சிறுவர்களும் கூட ஈடுபட்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது. வெறியர்களாகவும் மடையர்களாகவும் மூடர்களாகவும் ஒரு கூட்டத்தையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது சாதி. ஒருபுறம் சாதிய உணர்வோடு ஒரு அறிவற்ற சமூகம் உருவாகிக் கொண்டிருக்கிறது. மறுபக்கம் சாதியற்ற அறிவார்ந்த சமூகத்தை நாம் வளர்த்தெடுக்க வேண்டும்.

மகேந்திரன் கீழாமத்தூர்

சமூகத்தின் ஒழிக்கப்படவேண்டிய விஷம் டாக்டர் ராமதாசும், அவர் வளர்த்து வைத்திருக்கும் சாதி வெறி பிடித்த பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும். வளர்ந்து வரும் தமிழக ஆர்.எஸ்.எஸ் வன்னியர் சங்கம். பாட்டாளி மக்கள் கட்சி.

இரா. முருகவேள்

“வன்னிய இளைஞர்கள் நக்ஸலைட்டுகள் ஆகாமல் நாங்கள்தான் தடுத்து நிறுத்தினோம்” என்று காடுவெட்டி குரு ஒருமுறை கூறினார். தர்மபுரி, சேலம் மாவட்டங்களில் நக்ஸலைட் வேட்டை நடைபெற்ற போது போலீஸ் கிராமத்து இளைஞர்களிடம் வன்னிய இளைஞர் சங்கத்தில் சேரும்படி அறிவுறுத்தியது என்று Mohanasundara kali போன்ற மூத்த தோழர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தமிழரசன் கொல்லப்பட்ட பின்பு அந்த இயக்கத்தை முன்னெடுத்த தோழர்களுடன் காடுவெட்டி குருவுக்கு இருந்த பகைமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். அடிப்படையில் அனைத்து பொதுவுடமை இயக்கங்களுக்கும் எதிரானது பாமக. பாமகவின் அடிப்படையே உழைக்கும் மக்கள் இணைந்து நிற்பதையும், போராடுவதையும் தடுப்பதுதான்.

பாமக-வுக்கும் பாஜகவுக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில் பாரதிய ஜனதா கட்சி எல்லாவிதமான முற்போக்கு, மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்காரிய இயக்கங்களின் மீதான தனது விரோதத்தை ஒருபோதும் மறைப்பதில்லை. ஆனால் டாக்டர் ராமதாஸ் “நானும் ஒரு நக்சலைட்தான்” என்று கட்டுரை எழுதுவார்.

மனநல மருத்துவர் ஷாலினி

நான் ஒரு மருத்துவராய் இருப்பதில் எனக்கு எந்த பெருமையும் எப்போதும் இருந்ததில்லை. மருத்துவம் என்பது அதிலும் குறிப்பாக மனநல மருத்துவம் என்பது நிறைய சோகம் நிறைந்த பணி. இந்த நோய்களே இல்லாமல் இருந்திருக்க கூடாதா?! என்று எண்ணும் அளவிற்கு பல விதமான மனித துயரங்களை தினமும் பார்க்க வேண்டிய பணி. இதில் பெருமை எங்கிருந்து வரும்?!

ஆனால், ஒரே ஒரு விஷயத்தில் மருத்துவராய் இருப்பதில் எனக்கு பெருமை வந்து சேர்ந்தது….. நீதி கட்சியை துவக்கிய நடேசனாரும், டி .எம். நாயர் அவர்களும் மருத்துவர்கள் என்று அறிந்த அன்றிலிருந்து நானும் அவர்கள் வகையறா, அதே கல்லூரி என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஆனால், என் கல்லூரியில் தான் மரு. அன்புமணி ராமதாஸும் படித்தார். அவர் மட்டும் ஏன் இப்படி ஜாதி வெறியர்களை இன்னும் அடக்காமல் இருக்கிறார் என்று நினைக்கும் போது, கல்லூரி அல்ல, முக்கியம். கற்றவைதான் முக்கியம் என்றே தோன்றுகிறது.

படிக்க:
தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
♦ பாமக – வை ஏத்தி விட்ட பின் நவீனத்துவ பச்சோந்திகள் !

ராஜ் தேவ்

தமிழக அரசாங்கம் சாதி/மத வெறியர்களுக்கு வழங்கும் தைரியம் அசாத்தியமானது. தந்தை பெரியார் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன; கும்பல் வன்முறைக்கு தலித் மக்கள் இலக்காகின்றனர். இந்த தேர்தலை முன்னிட்டு சாதி/மத வெறி கட்சிகள் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு இந்த தாக்குதல் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது.

தந்தை பெரியார் சிலைகள் குறைந்த கால இடைவெளியில் இரண்டு இடங்களில் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இப்போது பொன்பரப்பியில் தலித் மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். அதிமுகவுடன் சாதி/மத வெறிக் கட்சிகளான பா.ஜ.கவும், பா.ம.கவும் வெளிப்படையான கூட்டு சேர்ந்திருப்பது புது வகை அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

இந்த அபாய நிலையை புரிந்து கொண்டு நாமும் கூட்டு சேர்ந்து இயங்க வேண்டும். ஆனால் இதற்கு ஊறு விளைவிக்கும் ரஞ்சித்ஸ்ட்களின் பதிவுகள் கவலை ஊட்டுகின்றன. வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்று பொதுவாக பேசுவதிலும் பயனில்லை.

சாதி/மத உணர்வு என்பது மக்களின் மனங்களில் காய்ந்த சருகுகளாக எப்போதுமிருப்பது. அதை பற்ற வைக்கும் அயோக்கியத்தனத்துக்கு எதிராக ஒன்றிணைவதே நம் முன் உள்ள பெருங்கடமை. அதன் மூலம் சாதி/மத வெறியாட்டங்களுக்கெதிராக பூஜ்ய சகிப்பை கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசின் பண்புநலனாக மாற்றும் போராட்டங்கள் வேண்டும்.

வேந்தன். இல

முற்போக்கு சிந்தனை புரிதல் உள்ள மக்களைக் கூட ஜாதிவெறி கட்சி தன் சுயலாபத்துக்காக ஜாதிவெறியை கிளப்பி பிளவை கூர்மைபடுத்துகிறது. தலித் மக்களின் மீது வன்முறையை ஏவுகிறது.

அன்று தோழர் அப்பு – பாலனின் நாயக்கன் கொட்டாய்.. இன்று தோழர் தமிழரசனின் பொன்பரப்பி.

பொன்பரப்பி மீதான தாக்குதல் காணொளி அங்குள்ள பெண்கள் குழந்தைகள், முதியோர் ஆகியோரின் மீதான பதற்றத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பாதுகாப்பு தரவேண்டிய அரசு பாமக-வின் இந்த செயலை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதின் மூலம்தான் ஒரு ஜாதிவெறியை ஊக்குவிக்கும் அரசு என்று நமக்கு உணர்த்துகிறது. பானையை உடைத்தால் பாமகவுக்கு லாபம்.. வன்னிய சொந்தங்களே பாமகவின் ஜாதிவெறிக்கு பலியாகாதீர்கள். காடுவெட்டி குருவுக்கே அந்த நிலையென்றால் நீங்கள் எம்மாத்திரம்?

கருப்பு நீலகண்டன்

வலுத்த இடத்தில் தாக்குதலை நடத்தும் ராமதாஸ் அன்புமணி போன்ற ஜாதிவெறியன்களை இனி எங்கு பார்த்தாலும் கேரோ செய்து வெளியேற்றும் போராட்டங்களை நாம் கையில் எடுத்தால் என்ன?

ஜாதிவெறியோடு உலாவும் எந்த விலங்கும் இனி பொதுவில் இயங்கவோ புழங்கவோ முழங்கவோ முடியாது என்கிற போராட்டங்களையும் நிர்பந்தங்களை நாம் முன்னெடுத்தால் நமது சமூகத்திற்கு நல்லது.

ஆனால் கண்டிப்பாக இதில் தலித்துகளை முன்னே தள்ளிவிடாது முற்றமுழுக்க ஜனநாயக சக்திகள் முன்னின்று நடத்தவேண்டிய போராட்டம்.

நறுமுகை தேவி

இந்தப் புகைப்படம் நெஞ்சை அறுக்கிறது.அந்தப் பாட்டி கையெடுத்துக் கும்பிட்டு விட்டு விடச் சொல்வது போல் இருக்கிறது. வாசல் முழுக்க உடைந்த மண்பானை ஓடுகளின் சில்லுகள்.

பக்கத்தில் சுவரில் ஒரு மனிதரின் நிழல் தெரிகிறது.அந்த நிழல் தாக்க வருவது போலொரு உடல்மொழியைக் கொண்டிருக்கிறது. அந்த நிழல் மனிதனிடம்தான்  பாட்டி இறைஞ்சுகிறாரா?

படிக்க:
மோடியின் வாழ்நாள் அடிமை பாமக ராமதாஸ் !
♦ ‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!

கொண்டல்சாமி

தோழர் திருமாவளவன் அவர்களின் முக்கியமான பேட்டியை ஏனோ பெரும்பாலான ஊடகங்கள் வெளியிடவில்லை.

அந்த பேட்டியில் அவர் தெளிவாக சில விசயங்களை சொல்லுகிறார். பொன்பரப்பி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சமீபகாலமாக வன்னியர்களுக்குள் இந்து முன்னணி புகுந்து கொண்டு சாதிவெறியை மேலும் தீவிரமாக்குகிறது. இப்போது நடந்த தாக்குதலை நடத்தியதும் இந்து முன்னணிதான். ஆகவே இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினரை கைது செய்ய வேண்டுமென்று பேட்டி கொடுத்திருந்தார்.

தென்மாவட்டங்களை குட்டிசுவராக்கிய இந்த இந்துத்துவ கும்பல்கள் இப்போது வட மாவட்டங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்து விட்டது. அதுவும் தமிழரசன் மண்ணிலிருந்து என்பதுதான் பெருத்த சோகம்.

இராமதாஸ் அவர்களே உங்களின் சுயநலத்திற்காக நீங்கள் ஊட்டி வளர்த்த சாதிவெறி இன்று உங்களை தாண்டி மதவெறி கும்பலிடம் சென்று சேர்ந்திருக்கிறது. அது உங்களையும் ஒரு நாள் பதம் பார்க்கும் அப்போது உங்களை சுற்றி ஒருவரும் இருக்கமாட்டார்கள்/ இருக்கவும் கூடாது.

என் கவலையெல்லாம் இதையெல்லாம் தாண்டி அப்பாவி வன்னிய மக்களை நினைத்துதான். இத்தனை காலமும் இராமதாஸ் அவர்களின் சுயநலத்திற்காக எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த அந்த சமூகம், இனி இராமதாசை விட நூறு மடங்கு கொடிய பாசிசவாதிகளான இந்துத்துவ கும்பல்களிடம் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடப்போகிறதோ தெரியவில்லை?

தொகுப்பு :

கல்விசார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

தேர்தல் வாக்குறுதிகள் : உண்மையும் பொய்யும் !

ஓட்டுக்கட்சிகளின் கல்விசார்ந்த வாக்குறுதிகள் அனைத்தும் தனியார்மயத்தை ஆதரிப்பவையே !

17 -வது மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. பண்டிகைக் கால விற்பனைக்காக நகைக் கடைகள் தள்ளுபடிகளை அறிவிப்பதைப் போல ஓட்டுக் கட்சிகளோ மக்களிடம் பல வண்ணமயமான வாக்குறுதிகளை வீசி வருகின்றனர்.

அதிமுக, திமுக, காங்கிரஸ், பிஜேபி, சிபிம், சிபிஐ, லிபரேசன் ஆகிய கட்சிகள் பல வாக்குறுதிகளை முன்வைத்திருந்தாலும் அக்கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் ஒருசில வாக்குறுதிகள் பொதுவாகவே உள்ளன. விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக்கடன் தள்ளுபடி, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சலுகைகள் ஆகியவைகளை குறிப்பாக சொல்லலாம்.

பிஜேபி-யின் தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் கடந்த ஐந்தாண்டுகளின் நீடிப்பாகவே உள்ளது. மூகமூடிகள் ஏதுமில்லாமல் வெளிப்படையாகவே ஏகாதிபத்திய மற்றும் தரகு முதலாளிகள் ஆதரவு என்றிருப்பதால் அதனைக் கணக்கில் கொள்ளவில்லை.

கல்விக்கடனை தள்ளுபடி செய்யவேண்டும், நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றவேண்டும் ஆகியவை திமுக மற்றும் அதிமுக தேர்தல் அறிக்கைகளில் உள்ளவை. காங்கிரசோ நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு, பொதுப்பட்டியலிலிருந்து பள்ளிக் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது (உயர்க்கல்வி பொதுப்பட்டியலிலேயே இருக்கும்) கல்விக் கடன்களுக்கான வட்டியை தள்ளுபடி செய்வது உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை (Gross Enrollment Ratio-GER) 25.8%-லிருந்து 40%-மாக உயர்த்துவது போன்றவைகளை தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளது.

எந்த கட்சியும் தங்களுடைய ஐந்து வருட ஆட்சியில் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றியதில்லை. வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் கேள்வி கேட்பதற்கான எந்த சட்டப்பூர்வமான வழிமுறைகளும் குடிமக்களுக்கு இல்லை. இருந்தாலும் கடவுள் நம்பிக்கையை போல கட்சிகளின் வாக்குறுதிகளை மக்கள் நம்புகிறார்கள். ஊடகங்களும் நம்பவைக்கும் வேலையை செய்கின்றன. ஆனால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறை என்ன? அவற்றை நிறைவேற்றுவதற்கான உண்மையான அதிகாரம் ஆட்சியாளர்களுக்கோ / நாடாளுமன்றத்திற்கோ உள்ளதா? வாக்குறுதிகளுக்குள் ஒழிந்துள்ள வர்க்க நலன் என்ன? என்பது பற்றியான விவாத்திற்குள் யாரும் செல்வதில்லை.

படிக்க:
பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto
♦ வருகிறது வேத கல்வி முறை : பாபா ராம்தேவ் அதன் தலைவராகிறார் !

உதாரணமாக கல்விக்கடன் தள்ளுபடியை எடுத்துக்கொள்வோம். ரிசர்வ் வங்கியின் தரவுகளின் படி 2018 நிதியாண்டில் (மார்ச் 2018 வரை) ரூ. 82,600 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பான்மையானவை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் வழங்கப்பட்டவை. மொத்த கல்விக்கடனில் 20 சதவிகிதக் கடன் தமிழ்நாட்டில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது கல்விக்கடன் வழங்கப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவர் தமிழ்நாட்டை சார்ந்தவர். அதேவேளையில் கல்விக்கடனை திருப்பி செலுத்தாதவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம் உள்ளனர். மொத்த கல்வி வாராக்கடனில் 36% வாராக்கடன் தமிழ்நாடு மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் மட்டும் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஏறத்தாழ 17,000 கோடி ரூபாய் கல்வி வாராக்கடன் உள்ளது. இவ்வளவு பெரிய தொகையை அரசு தள்ளுபடி செய்யவேண்டியிருக்கும். இத்தொகை கடந்த நான்கு ஆண்டுகள் உயர்கல்வித்துறைக்கு தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியை விட அதிகமாகும்.

ஆண்டு உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு(கோடியில்) கல்வி – வாராக்கடன்   (கோடியில்)
2015-16 3696.2 4777
2016-17 3679.01 5191
2017-18 3680 6434

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 2015-16 லிருந்து 2017-18 உயர்கல்விக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி மற்றும் கல்வி வாராக்கடன் பற்றிய விவரம் தரப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் உருவான கல்வி வாராக்கடன்களின் மொத்த மதிப்பு 16,402 கோடி ரூபாய். மேலும் ஒவ்வொரு ஆண்டிலும் வாராக்கடன்களின் அளவு அதிகரித்து கொண்டே செல்கிறது. வேலையின்மை காரணமாக வரும் ஆண்டுகளில் வாராக்கடனின் அளவு மேலும் அதிகரிக்கும் என்பது உண்மை.

இக்கல்விக் கடன்கள் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பொறியியல், மருத்துவம், நர்ஸிங், மேலாண்மை போன்ற படிப்பிற்கான கல்வி கட்டணங்களை செலுத்துவதற்காக பெறப்பட்டவை. இந்த 17,000 கோடி வாராக்கடனில் பெரும்பான்மை பகுதி தனியார் கல்வி முதலைகளின் பைகளுக்கே சென்றுள்ளது. மேலும் கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் வங்கிகளுக்கு ஏற்படும் இழப்பை பொது மக்களின் சேமிப்பு பணத்தைக் கொண்டு ஈடுகட்டுவார்கள்.

இந்நிதியை கொண்டு 60 -க்கும் மேற்பட்ட உலகத்தரம் வாய்ந்த அரசுக்கல்லூரிகளை (பொறியியல், மருத்துவம், கலைக்கல்லூரிகள்) உருவாக்கியிருக்க முடியும். ஆனால் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கைகளில் புதிய அரசு கல்லூரிகள் ஆரம்பிப்பதைப் பற்றி பேசவில்லை கல்விக் கடன் தள்ளுபடி பற்றியே பேசுகின்றன.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் GER தற்போதுள்ள 25.8% லிருந்து 40% உயர்த்தப் போவதாக கூறியுள்ளது. அடுத்த ஐந்து வருடங்களில் 40% மாணவர் சேர்க்கை எவ்வாறு அடையப் போகிறார்கள் என்பதை பற்றிய விளக்கங்கள் சொல்லப்படவில்லை.

2017-18-ம் ஆண்டிற்கான அகில இந்திய உயர்கல்வி கணக்கெடுப்பின் படி 3.66 கோடி பேர் உயர்கல்வி படிக்கின்றனர். இது 18-23 வயதிற்குட்பட்ட இந்திய இளைஞர்களின் எண்ணிக்கையில் 25.8% ஆகும். அதாவது 100 இளைஞர்களில் 26 பேர் மட்டுமே கல்லூரிகளுக்கு செல்கின்றனர். இதன் அளவை 40 ஆக உயர்த்துவதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. இவ்வாறு அதிகரிப்பதற்கு, 2017-18 கணக்கின் படி, ஏற்கெனவே உள்ள எண்ணிக்கையை விட 2.01 கோடி இளைஞர்கள் உயர்கல்வியில் புதியதாக சேர்க்க வேண்டும். அதற்காக 5,000 -க்கும் மேற்பட்ட புதிய கல்லூரிகளையும் அதற்கான உள்கட்டுமான வசதிகளையும் தகுதிவாய்ந்த பேராசிரியர்களையும் உருவாக்க வேண்டும்.

எவ்வாறு இதனை உருவாக்கப்போகிறார்கள்? இதற்கான பணம் எங்கிருந்து வரபோகிறது? 5000 கல்லூரிகளும் அரசு கல்லூரிகளா? அல்லது தனியார் கல்லூரிகளா? போன்ற எந்தக் கேள்விகளுக்கும் பதில் கிடையாது. ஆனால் பிஜேபி, காங்கிரஸின் கடந்த கால ஆட்சியிலிருந்து இதற்கானப் பதிலை ஓரளவிற்கு ஊகிக்க முடியும்.

ஆண்டு பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் GER% தனியாரின் பங்கு %
2000-01 256 12806 12.59 (2004-05)  25
2011-12 642 34852 20.08 70
2017-18 903 39050 25.8 78

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையிலிருந்து, 2004-05 ல் 12.6% உள்ள GER 2017-18 ல் 25.8% ஆக அதிகரித்துள்ளது. கூடவே உயர்கல்வியில் தனியார்மயத்தின் அளவும் 25% லிருந்து 78% அதிகரித்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில் உயர்கல்வித்துறையில் தனியார்மயத்தின் பங்களிப்பு மிக அதிகமாக வளர்ந்துள்ளதையே இது காட்டுகிறது. உலகவர்த்தகக் கழகத்தின் காட், காட்ஸ் – ஒப்பந்தங்களின் வழிகாட்டுதல் படியே கல்வி சார்ந்த கொள்கை முடிவுகளை இந்திய அரசு எடுத்துவருகிறது.

படிக்க:
உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
♦ நூல் அறிமுகம் : கல்வி – சந்தைக்கான சரக்கல்ல

மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம், UGC, AICTE, MCI போன்ற அமைப்புகளும் தனியார் கல்லூரிகளுக்கு சாதகமான திட்டங்களை அமல்படுத்துகின்றன. அதன் விளைவாகவே கடந்த 18 ஆண்டுகளில் 50% அளவிற்கு தனியார் கல்லூரிகள் பெருகியுள்ளன. தற்போது காங்கிரஸ் உறுதியளித்துள்ள 40% GER என்பதும் பல ஆயிரக்கணக்கான புதிய தனியார் சுயநிதி கல்லூரிகளை அனுமதிப்பதன் மூலமே சாத்தியமாக்க முடியும் அல்லது மோடி அரசு அமல்படுத்திய இணையவழி பாடங்கள் மூலம் (Massive Open Online Courses – MOOCs) உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்த முடியும்.

SWAYAM, NPTEL ஆகியவை இந்திய அரசு நடத்துகிற MOOCs. பல்கலைக்கழக மானியக் குழு (UGC) இணைய வழியில் பட்டப்படிப்புகள் (online degrees) வழங்குவதற்கான ஒப்புதலை சில தனியார் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கியுள்ளது. MOOCs வாயிலாக பட்டம் பெறுவதற்கு ஆசிரியர்களோ, ஆய்வகங்களோ, கட்டிடங்களோ தேவையில்லை. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பாடங்களை இணையத்தின் வாயிலாக மாணவர்களுக்கு கொடுத்தால் போதும். தேர்வும் இணையத்தின் வழியே நடைபெறும். இதற்கான கல்விக் கட்டணம், தேர்வுக்கட்டணம் மாணவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் மேலும் கொள்ளையடிப்பதற்கான வழிமுறையை மோடி அரசு உருவாக்கியுள்ளது எனக் கூறலாம். தற்போது NEET, JEE தேர்வுகளுக்கான பயிற்சி கூட இணையவழியில் வந்துவிட்டது. இதில் வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

கல்விக்கடன் தள்ளுபடியாகட்டும் அல்லது மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிப்பதாகட்டும் அனைத்துமே தனியார்மயக் கொள்கைகளின் அடிப்படையிலே தீர்க்கப்படுமென தேர்தல் வாக்குறுதிகள் கூறுகின்றன. கல்வித்துறையில் நெருக்கடிகளுக்கு காரணம் தனியார்மயம் தான்.

ஆனால் கட்சிகளோ கொள்கையளவில் தனியார்மயத்தை ஒப்புகொண்டே வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். இவை நம்மை மேலும் கடனாளிகளாகவும் வேலையில்லாதவர்களாகவும் ஆக்குமே ஒழிய அனைவருக்கும் தரமான கல்வியை ஒருபோதும் தராது. கல்வி மட்டுமல்ல விவசாயம் சார்ந்த வாக்குறுதிகளும் இதே தன்மையிலானவைதான். இதை விரிவாக பார்ப்போம்.

(தொடரும்)

உதவிய தரவுகள் :

– அருண் கார்த்திக், சங்கர்

உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !

ங்கிக் கடன்களைக் கட்ட முடியாமலும் திவாலாகிப் போகும் நிலையிலும் இருந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை நரேந்திர மோடி அரசு பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டிய அதேசமயத்தில், கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை விரைவாக வசூலிக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட்ட சுற்றறிக்கையை ரத்து செய்து பல தனியார் முதலாளிகளின் வயிற்றில் பாலை வார்த்தது, உச்சநீதி மன்றம்.

2,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கிவிட்டு, கடன் தவணைகளை முறையாகக் கட்டத் தவறிவரும் நிறுவனங்களுக்கு, தவணை தவறிய நாளில் இருந்து 180 நாட்கள் அவகாசம் கொடுத்து, வங்கிகள் அக்கடன் தவணைகளை வசூலிக்க வேண்டும். அக்கால அவகாசத்திற்குள் நிலுவையிலுள்ள தவணைகளைக் கட்டத் தவறும் நிறுவனங்களைப் புதிய திவால் சட்டத்தின் கீழ் வங்கிகள் ஏலத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கை. இந்தச் சுற்றறிக்கைக்கு எதிராகத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்ட பல கார்ப்பரேட் குழுமங்கள் உச்சநீதி மன்றத்தில் தொடுத்த வழக்கில்தான் வங்கிக் கடன்களைக் கட்டாமல் இழுத்தடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கிறது.

பொதுத்துறை வங்கிகள் 70 நிறுவனங்களுக்குக் கொடுத்திருந்த 3.8 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கடன்களை வசூலிப்பதற்கு எடுத்துவந்த நடவடிக்கைகளை, இத்தீர்ப்பால் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த 3.8 இலட்சம் கோடி ரூபாய் கடனில் 2 இலட்சம் கோடி ரூபாய் கடன் 34 தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும்.

“ரிசர்வ் வங்கி வெளியிட்ட சுற்றறிக்கைக்கு மைய அரசின் ஒப்புதல் பெறப்படவில்லை. வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் போனதற்கு இந்த 70 நிறுவனங்களுக்கும் வெவ்வேறு விதமான காரணங்கள், சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமது கடன்களைச் செலுத்த முடியாமல் போனதற்கு அரசின் கொள்கை முடிவுகள் உள்ளிட்டுப் பல காரணங்கள் உள்ளன. இவ்வாறிருக்கையில் பொத்தாம்பொதுவாக சுற்றறிக்கை வெளியிட ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் கிடையாது” எனக் குறிப்பிட்டு அச்சுற்றறிக்கையை ரத்து செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம்.

படிக்க :
♦ ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா ஏன் ? | காணொளி
♦ அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

இந்தச் சுற்றறிக்கையை வெளியிட்டதற்காகவும், வாராக் கடன்களை மறுசீரமைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சலுகை காட்டக்கூடாதென உத்தரவிட்டதற்காவும்தான் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்த உர்ஜித் படேலுக்கு நெருக்கடி கொடுத்து, அவரைத் தாமே பதவி விலக வைத்தது, மோடி அரசு.

இப்படிப்பட்ட கார்ப்பரேட் கைக்கூலி அரசிடமிருந்து இந்தச் சுற்றறிக்கைக்கு அனுமதி பெறச் சொல்வது என்பது, காமுகனிடம் சிக்கிக்கொண்ட இளம்பெண் அவனிடம் கெஞ்சிக் கூத்தாடித் தப்பிக்க யோசனை சொல்வதற்கு ஒப்பானது.

உர்ஜித் படேல்

பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளால் நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறு தொழில் நிறுவனங்கள் அழிந்துபோகும்படி கைவிடப்படுவதைக் கண்டும் காணாதது போல நடந்துவரும் நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் வறட்சி பாதித்திருக்கும் சூழ்நிலையையும் மீறி, விவசாயக் கடன்களையும், கல்விக் கடன்களையும் வசூலிக்க முயலும் வங்கி அதிகாரிகளின் அடாவடித்தனத்தைத் தடுத்து நிறுத்துங்கள் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன்.

அந்தக் கோரிக்கையைக் காது கொடுத்துக் கேட்கக்கூட நாதியில்லை. ஆனால், மின் உற்பத்தி நிறு வனங்களின் கடினமான சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் என வங்கிகளுக்குப் பரிந்துரைக்கிறார்கள் நீதிபதிகள்.

முதலாளிகளுக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்காமல்தான் கடன்களை வசூலிக்க வேண்டும் என்றால், வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்வதைத் தவிர வேறு வழியில்லை. இதனைத்தான் மோடி அரசு விரும்புகிறது. இதனை நோக்கித்தான் வங்கிகளைத் தள்ளிவிட்டிருக்கிறது, உச்சநீதி மன்றம்.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

இலங்கை குண்டுவெடிப்பு

22

கலையரசன்
  இல‌ங்கையில் இன்று (21.04.2019) ப‌ல‌ க‌த்தோலிக்க‌ தேவால‌ய‌ங்க‌ளிலும், ஐந்து ந‌ட்சத்திர‌ ஹொட்டேல்க‌ளிலும் ந‌ட‌ந்த‌ தொட‌ர் குண்டுவெடிப்புக‌ளில் 290 பேர் கொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஆயிர‌க்க‌ண‌க்கில் காய‌ம‌டைந்தோர் ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் அனும‌திக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ர். ஏராள‌மானோர் இன‌, ம‌த‌ பேத‌ம் க‌ட‌ந்து குருதிக் கொடை வ‌ழ‌ங்க‌ முன்வ‌ந்துள்ள‌ன‌ர்.

இல‌ங்கை ம‌க்க‌ள் அனைவ‌ரையும் ஒன்று திர‌ட்டியுள்ள‌ இந்த‌ த‌ருண‌த்தில், வ‌த‌ந்திக‌ளை கிள‌ப்பி பிரிவினையை தூண்டும் தீய‌ ச‌க்திக‌ள் குறித்தும் எச்ச‌ரிக்கையாக‌ இருக்க‌ வேண்டும். அர‌ச‌ கைக்கூலிக‌ளான‌ இந்த‌ தீய‌ச‌க்திக‌ள் இல‌ங்கையில் ஒரு பாஸிச‌ ச‌ர்வாதிகார‌ ஆட்சியைக் கொண்டு வ‌ருவ‌தை நோக்க‌மாக‌க் கொண்டுள்ள‌ன‌.

இந்த‌ நிமிட‌ம் வ‌ரையில் எந்த‌ இய‌க்க‌மும் தாக்குத‌லுக்கு உரிமை கோர‌வில்லை. அதே நேர‌ம் அர‌சும் யாரையும் குற்ற‌ம் சாட்ட‌வில்லை. ஆனால், அங்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளை வைத்துப் பார்க்கும் பொழுது, இது ஒரு ச‌க்தி வாய்ந்த‌ குழுவின‌ரின் ந‌ன்கு திட்ட‌மிட‌ப்ப‌ட்ட‌ தாக்குத‌லாக‌த் தெரிகிற‌து.

தாக்குத‌ல் ந‌ட‌த்திய‌வ‌ர்க‌ள், இத‌னால் ஏற்ப‌ட‌க் கூடிய‌ பின் விளைவுக‌ளை ஆராய்ந்து, த‌ம‌து இல‌க்குக‌ளைத் தெரிவு செய்துள்ள‌ன‌ர்.

1) குண்டுவெடிப்பில் ப‌லியான‌வ‌ர்க‌ள் பெரும்பாலும் க‌த்தோலிக்க‌ கிறிஸ்த‌வ‌ர்கள். த‌மிழ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்லாது சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் இதில் அட‌ங்குவார்க‌ள். ஈஸ்ட‌ர் நாள் விசேட‌ பூஜை என்ப‌தால் பெருந்தொகையின‌ர் ப‌லியாகியுள்ள‌ன‌ர்.

2) கொழும்பு, ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு என்று ஒரே நேர‌த்தில் ப‌ல‌ இட‌ங்க‌ளில் குண்டுக‌ள் வெடித்துள்ள‌ன‌. ச‌ரியான‌ திட்ட‌மிட‌ல், ஆட்ப‌ல‌ம், ஆயுத‌ ப‌ல‌ம், நிதி போன்ற‌ வ‌ள‌ங்க‌ள் இல்லாம‌ல் இது சாத்திய‌மில்லை.

3) மேற்க‌த்திய‌ ப‌ண‌க்கார‌ சுற்றுலாப் ப‌ய‌ணிக‌ள் வ‌ந்து த‌ங்கும் ஐந்து ந‌ட்ச‌த்திர‌ ஹொட்டேல்க‌ளில் குண்டுக‌ள் வெடித்து ப‌ல‌ வெளிநாட்ட‌வ‌ரும் கொல்ல‌ப் ப‌ட்டுள்ள‌ன‌ர். அத‌னால் ச‌ர்வ‌தேச‌ ச‌மூக‌த்தின், குறிப்பாக‌ மேற்க‌த்திய‌ நாட்ட‌வ‌ரின் க‌வ‌ன‌த்தை இல‌ங்கையின் ப‌க்க‌ம் ஈர்த்துள்ள‌து.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் கண்டனம் !
♦ இலங்கை : பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அனைவரும் இணைந்து எதிர்ப்போம் !

இந்த‌ குண்டுவெடிப்புக‌ளின் நேர‌டி விளைவுக‌ளைப் பார்த்தால், இத‌னால் ஆதாய‌ம‌டைவோர் யார் என அறிய‌லாம்.

♦ சிறில‌ங்கா குண்டுவெடிப்பின் எதிரொலியாக‌ நாளை ஆம்ஸ்ட‌ர்டாம் ந‌க‌ரில் தீவிர‌ வ‌ல‌துசாரிக‌ளின் ஆர்ப்பாட்ட‌ம் ஒன்று அறிவிக்க‌ப் ப‌ட்டுள்ள‌து. நெத‌ர்லாந்தில் உள்ள‌ அனைத்து தேவால‌ய‌ங்க‌ளுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வ‌ழ‌ங்க‌ வேண்டுமென‌ கோரிக்கை விடுக்கின்ற‌ன‌ர். இந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்தை ப‌ய‌ன்ப‌டுத்தி இஸ்லாமிய‌ வெறுப்புப் பிர‌ச்சார‌ங்க‌ள் ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்ற‌ன‌. பிற‌ ஐரோப்பிய‌ நாடுக‌ளிலும் இதே பாணியிலான‌ போக்குக‌ள் தென்ப‌டுகின்ற‌ன‌.

♦ இல‌ங்கையில் போர் முடிந்து, க‌ட‌ந்த‌ ப‌த்தாண்டுக‌ளாக‌ ஒரு துப்பாக்கிச் சூடு கூட‌ ந‌ட‌க்காம‌ல் அமைதியாக‌ இருந்த‌ கால‌த்தில் மீண்டும் இந்த‌ப் ப‌டுகொலைக‌ள் ந‌ட‌ந்துள்ள‌ன‌. அண்மைக் கால‌த்தில் அர‌சு கொண்டு வ‌ந்த‌ புதிய‌ ப‌ய‌ங்க‌ர‌வாத‌ எதிர்ப்பு ச‌ட்ட‌த்திற்கு க‌டும் எதிர்ப்பு கிள‌ம்பி இருந்த‌து. இனிமேல் அதை ந‌டைமுறைப்ப‌டுத்த எந்த‌த் த‌டையும் இல்லை.

♦ இல‌ங்கையில் மீண்டும் ஒரு போர்ச் சூழ‌ல் தோன்றினால், அது இந்தியாவையும் பாதிக்கும். டொமினோ க‌ட்டைக‌ள் விழுவ‌து மாதிரி தெற்காசிய‌ நாடுக‌ள் நீண்ட‌ நெடும் போர்க‌ளுக்குள் த‌ள்ள‌ப் ப‌ட‌லாம். ம‌த்திய‌ கிழ‌க்கிலும் அமைதியாக‌ இருந்த‌ நாடுக‌ளில் திடீர் போர்க‌ள் உருவான‌ வ‌ர‌லாற்றை நாம் ஏற்கென‌வே க‌ண்டுள்ளோம்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

வீழா திமிர் எங்கள் விளாதிமிர் ! | துரை சண்முகம்

சிவப்பை உயர்த்திப்பிடி லெனினை உணர்ந்து படி!

(ஏப்ரல் – 22 தோழர் லெனின் பிறந்தநாள்)

வீழா திமிர்
எங்கள் விளாதிமிர் !

மனிதப் பேரன்பின்
உலக இதயம்
எனின்,
அது லெனின் !

மார்க்சிய நாகரிகத்தின்
அறிவியல் தொடர்ச்சி
எங்கள் லெனின்.

உலகைப் பொதுமையாக்கும்
ஒவ்வொரு மகிழ்ச்சியிலும்
லெனின் பிறக்கிறார்,
உலகை அருமையாக்கும்
ஒவ்வொரு இயற்கை
மலர்ச்சியிலும்
லெனின் சிரிக்கிறார்.

தழுவிச் செல்லும் தருணத்தில்
புதிய சூழலை உணர வைக்கும்
மென்காற்றின் மெய்ப்பொருள்
எங்கள் லெனின்.

நழுவி விழும் வேகத்திலும்
நிலத்தில் உணர்வூட்டும்
அருவியின் பயன் மொழி
எங்கள் லெனின்.

என்ன ஒரு துல்லியம்!
என்ன ஒரு ஒத்திசைவு!
காற்றில் அடங்கா
புரட்சியின் இசையூற்று
எங்கள் லெனின்.

என்ன ஒரு கூர்மை
என்ன ஒரு ஓர்மை
சொற்களில் அடங்கா
மானுடப் புத்துணர்வின்
இயங்கியல் கவிதை
எங்கள் லெனின்.

இன்னும்
முன்னூறு ஆண்டுகளானாலும்
மனிதத் துயரங்களுக்கு
மாற்று காண வக்கில்லாதது
முதலாளித்துவம்

வெறும்
இருபதே ஆண்டுகளில்
மனித குலத்திற்கே
பாட்டாளி வர்க்க பலத்துடன்
மகிழ்ச்சிகுரிய
புது உலகை படைத்துக்காட்டியவர்
எங்கள் லெனின்.

புரட்சி எனும்
அருங்கலையின்
பெருவிசை
எங்கள் லெனின்…
பற்றிக்கொண்டது
பாட்டாளி வர்க்கம்
இனி விட்டு விலகாது,
கம்யூனிசமே… வெல்லும்!

உலகின் நாடி நரம்பெங்கும்
சிவப்பு.
உழைக்கும் வர்க்கத்தின்
ஒவ்வொரு களத்திலும்
திமிறி எழும்
எங்கள் லெனின் உவப்பு!

சிலைகளை சிதைக்கலாம்,
சிதைக்க சிதைக்க
சிவப்பே பெருகும்..
மறைக்க மறைக்க
மார்க்சிய – லெனினியம் பரவும்…

வெட்டிப் பிளந்துள்ளம்
தொட்டுப் பார்ப்பினும்
அங்கே
எட்டிப் பார்ப்பது
எங்கள் லெனினே!

தட்டிப் பறித்து
தத்துவப் புரட்டுகள் செய்யினும்
அதையும்
எட்டி உதைத்து
மீண்டும் எழுவது லெனினே!

உதிரம் மட்டுமல்ல
உலகின் விடியல் சிவப்புதான்
இதை உணர்த்தும் திசையெனில்
அது லெனின்.

எங்கள் லெனின்,
புரட்சிக்கு குறைவாக
வேறெதையும் விரும்பாதவர்
பொதுமை நலமன்றி
வேறெதற்கும் இணங்காதவர்.
லெனின்
அடிமையாய் வாழ
யாரையும் அனுமதிக்காதவர்
புரட்சியின் வழியன்றி
பிரிதொன்றும் படியாதவர்!

லெனின்
உறங்குவதில்லை
நம்மையும்
உறங்க விடுவதில்லை

புரட்சியின்
ஒவ்வொரு துடிப்பிலும்
உழைக்கும் வர்க்கத்தின் ஒவ்வொரு விழிப்பிலும்
மானுட விடியலின்
பெருங்காதல் அவரானவர்.

விழிப்போடிருப்போம்
லெனினைக் கற்போம்
கம்யூனிசம் படைப்போம்!

துரை. சண்முகம்


இதையும் பாருங்க:

இளைஞர்களிடம் அதிகரித்து வரும் அரசியல் ஆர்வம் | துரை சண்முகம்

பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்

தேதி : 21.4.2019

பத்திரிகைச் செய்தி

 

பொன்பரப்பி வன்கொடுமைக் குற்றத்துக்கு மருத்துவர் ராமதாசே முழுப்பொறுப்பு!

பொன்பரப்பி தாக்குதல் என்பது பா.ம.க-வின் சாதிவெறி அரசியலும், பா.ஜ.க-வின் இந்து மதவெறி அரசியலும் கூட்டுச் சேர்ந்து தலித் மக்களுக்கு எதிராக நடத்தியிருக்கும் வன்முறை. இது காட்டுமிராண்டிதனத்திற்கும் நாகரீக சமூகத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம்.

நமது சமூகத்தின் மீது உண்மையிலேயே அதிகாரம் செலுத்துபவை சாதி-மதவெறி அமைப்புகள்தானே தவிர, இங்கு நடப்பது சட்டத்தின் ஆட்சி அல்ல,  இது ஜனநாயகமும் அல்ல என்பதையே இந்த சாதிவெறித் தாக்குதல் தெளிவாக நிரூபிக்கிறது. தேர்தல் ஆணையம், காவல்துறை உள்ளிட்ட யாரும் இந்த தாக்குதலைத் தடுக்கவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இவர்கள் அனைவருமே சாதிவெறியர்களுக்கு ஆதரவாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது நாம் புரிந்து கொள்ளவேண்டிய உண்மை.

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் வி.சி.க தலைவர் திருமாவளவனை ஆதரிக்கக் கூடாது என பிள்ளை, வன்னியர், செட்டியார், பார்ப்பனர், நாயுடு என பிற ஆதிக்க சாதியினர் அனைவர் மத்தியிலும் பிரச்சாரம் நடந்திருக்கிறது. கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, சாதி உணர்வை மனதில் வைத்து பானை சின்னத்தை புறக்கணித்து அதிமுகவிற்கு வாக்களிக்குமாறு தீண்டாமை வெறியைத் தூண்டியிருக்கின்றனர். இந்த தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதை இதுதான்.

சிதம்பரம் நகரத்திலேயே நடைபெற்ற இந்த பிரச்சாரத்துக்கும், பொன்பரப்பி கிராமத்தில் பா.ம.க.-வினர் கையில் ஆயுங்களுடன் இந்து முன்னணி உடன் சேர்ந்து கொண்டு நடத்தியிருக்கும் தாக்குதலுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. இது வெறும் பொருட்சேதம் குறித்த  பிரச்சினை அல்ல, ஜனநாயகம் என்பது பெயரளவில் கூட இருக்கக் கூடாது என்பதுதான் இந்த தாக்குதல் மூலம் சாதி-மத வெறியர்கள் நமக்குக் கூறும் செய்தி. அனைத்து மக்களும் அமைதியாக வாழமுடியாமல் சாதி மத வெறி கருத்துக்களை விதைத்து அதன் மூலம் பாசிச அதிகாரத்தை அரசிலும் சமூகத்திலும் வேரூன்ற செய்வதுதான் இத்தகைய தாக்குதல்களின் நோக்கம்.

தீண்டாமை என்பது தலித் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினை அல்ல, சாதி இந்து சமூகம் இழைக்கின்ற குற்றச்செயல். இதில் தேர்தல் கட்சிகளும், பெரும்பான்மை சமூகத்தினரும் அமைதியாக இருப்பதும், பா.ம.க. – இந்து முன்னணியைக் கண்டிக்காமல் இருப்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் கேடாக முடியும்.

இது பொன்பரப்பி தலித் மக்களின் பிரச்சினை மட்டுமல்ல, நம் அனைவரின் பிரச்சினை. கொலை மிரட்டல் விடுத்து, கும்பலாக நமது வீட்டை அடித்து நொறுக்கினால், நாம் என்ன நீதியை அரசிடம், சமூகத்திடம் கோருவோமோ அந்த நீதி பொன்பரப்பி மக்களுக்கு கிடைப்பதற்கு நாம் அனைவரும் போராட வேண்டும்.

தமிழக அரசே!

  • தாக்குதல் நடத்திய சாதிவெறியர்களையும், வெறியூட்டி தூண்டி விட்ட பா.ம.க தலைமையையும் கைது செய் !
  • சாதி-மத வெறிக் கருத்துகளைப் பரப்பி, கலவரங்களைத் தூண்டிவிடும் அமைப்புகளைத் தடை செய்!
  • பானைக்கு வாக்களித்த தலித் மக்களை பாதுகாக்கத் தவறிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்!
  • ஆளை மாற்றும் தேர்தலால் அகன்று விடாது சாதி வெறி!
  • அரசுக் கட்டமைப்பை மாற்றுவதொன்றே சாதி வெறியை வீழ்த்தும் வழி!

பொன்பரப்பி வன்கொடுமையை கண்டித்து மக்கள் அதிகாரத்தின் சுவரொட்டிகள் :

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இவண்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்.
மக்கள் அதிகாரம்.


புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

பத்திரிகைச் செய்தி

அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியில் வன்னிய சாதி வெறியர்கள் கும்பலாக தலித் மக்கள் குடியிருப்பில் புகுந்து, அவர்களை தாக்கியும், உடைமைகளை சேதப்படுத்தியும் உள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். குடியிருப்புகள், உடைமைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதல் நடத்திய ஒருவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. சாதிவெறியர்களின் இந்த தாக்குதல்களை படம்பிடித்த நியுஸ் 18 நிருபர் கலைவாணன் மீது தாக்குதல் நடத்தியுள்ளதோடு, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

திட்டமிட்ட இந்த வன்னிய சாதிவெறித் தாக்குதலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உரிய இழப்பீடு வழங்கிடவும், தாக்குதல் நடத்திய வன்னிய சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.

முன்னதாக, வாக்குச்சாவடி அருகிலேயே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சின்னமான பானையை உடைத்து அக்கட்சியினரை வெறியேற்றியுள்ளது சாதிவெறி பிடித்த கும்பல். தொடர்ந்து விசி கட்சியினர் பாமகவை சேர்ந்த ஒருவரைத் தாக்க, இதற்காகவே காத்திருந்த வன்னிய சாதிவெறி கும்பல் அருகில் இருந்த காலனிக்குள் புகுந்து தலித் மக்களையும் அவர்களின் உடைமைகளையும் வேட்டையாடியுள்ளது. நடந்த வன்முறை வெறியாட்டத்தை அரசியில் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டு பலரும் கண்டித்து வருகின்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று மருத்துவமனையில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

தலித் மக்கள் மீதான இந்த வன்முறை, எதோ ஒரு கும்பலால் குடிபோதையில் எதேச்சையாக நிகத்தப்பட்டதல்ல. வன்னிய சாதி வெறியர்களால் நேரம் பார்த்துக் காத்திருந்து, அவர்களின் கோபத்தை தூண்டி, வேண்டுமென்றே நிகழ்த்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல். தேர்தல் அறிவித்த பின்னர் பாமக, அதிமுக, பாஜக கூட்டணி அமைக்கப்பட்டது முதலாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் மீது தீவிரமான அதிருப்தி நிலவத் துவங்கியது. சொந்த சாதி, கட்சித் தொண்டர்களே காறித்துப்பி, கட்சியிலிருந்தே வெளியேறும் நிகழ்வுகள் தொடர்ந்தது. ஒருபுறம் பணம் பதவி சுகம், மறுபுறம் சொந்தக் கட்சியிலேயே அம்பலப்பட்டு நிற்கும் தலைமை. இதிலிருந்தெல்லாம் தன்னை விடுவித்துக் கொண்டு இழந்த செல்வாக்கை நிலைநிறுத்த வேண்டுமெனில் சாதிவெறியைத் தூண்டுவதைத் தவிர்த்து பாமகவினருக்கு வேறு எதும் வழியில்லை என்பதை உணர்ந்ததன் பின்னணியில்தான், இந்தச் சாதிய வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

இசுலாமிய, கிறுஸ்துவ மக்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் ‘இந்துக்களின்’ மதவெறியைத் தூண்டி அதை தனது அரசியல் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா கட்சி எப்படி பயன்படுத்திக் கொள்கிறதோ, அதே சூத்திரத்தை பயன்படுத்தி தான் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலின் மூலன் சாதிவெறியைத் தூண்டி பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் ஆதாயமடைகிறது. தேசியக் கட்சியான மதவெறி பாஜகவும், மாநிலக் கட்சியான சாதிவெறி பாமகவும் இணையும் புள்ளி இதுவே! இந்த அடிப்படையில்தான் அந்த கூட்டணி அமைந்துள்ளது. தேர்தல் அரசியலுக்கு அப்பாற்றப்பட்ட இயற்கைக் கூட்டணி அது! சிறுபான்மையினரும், தாழ்த்தப்பட்ட மக்களும் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேர்தல் அரசியல் பாதை நிச்சயம் தீர்வல்ல!

திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலைக் கண்டித்து ஜனநாயக முற்போக்குவாதிகள் குரல் கொடுக்க வேண்டும். வன்னிய சாதி வெறியை அம்பலப்படுத்த வேண்டும். இன்னும் குறிப்பாக ஆதிக்க சாதியில் உள்ள ஜனநாயகவாதிகள் தாங்களாகவே முன்வந்து இந்த வன்முறையை கண்டிக்க வேண்டும். இந்த வன்முறையை எதிர்த்து போராடுபவர்களுடன் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி களத்தில் நிற்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு : 9444442374

கல்வியைத் திணிக்கும்போது அதன்பால் ஈர்ப்பு வராது !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பகுதி-01

எதிர்கால மனிதன்

“செப்டெம்பர் 1-ம் தேதி பள்ளிக்கு வந்து குழந்தைகளைச் சந்திக்கும் போது நான் சாகா வரம் பெற்றவள் என்று தோன்றுகிறது” என என் தோழியும் சக ஊழியருமான தினாதீன் மிஹைலவ்னா கிலாஷ்வீலி கூறினார். உண்மையில், ஆசிரியரால் தன் மாணவர்களின் மனதில் அன்பை ஊட்டி மனித நலன்களின்பால் இவர்களது இதயம் அக்கறை காட்டும்படி செய்ய முடிந்தால், சாகாவரம் பெறும் உரிமை இவருக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று நான் அப்போது நினைத்தேன். உண்மையான ஆசிரியர்கள் இறப்பதில்லை, இவர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், யுவதிகளில் கரைந்து அவர்களை உயர்ந்த லட்சியங்களை உடைய நபர்களாக மாற்றுகின்றனர்.

இன்று செப்டெம்பர் 1-ம் தேதி, நான் பெருமிதம் அடைகிறேன். 20-ம் நூற்றாண்டின் 80-ம் ஆண்டுகளின் சோவியத் ஆசிரியர் 21-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்; நாளைய தினத்தைப் பற்றிய கற்பனையை குழந்தைகளின் மனதில் மூட்டி விட்டு, நாளைய வாழ்க்கையின் தெளிந்த, ஒளிமயமான, மகிழ்ச்சிகரமான ஓடையை இன்றைய தினத்தின் மகிழ்ச்சியிலும் முயற்சிகளிலும் திறந்து விடுவதற்காக இவர் வந்துள்ளார் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்.

படிக்க :
♦ ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
♦ ரசியர்களிடம் அதிகரித்து வரும் ஸ்டாலின் செல்வாக்கு !

அதிகாலையில் நான் பள்ளிக்குக் கிளம்புகிறேன். பள்ளி என் வீட்டிற்கு அருகாமையில் உள்ளது. இன்று கால் நடையாகச் செல்வதே நல்லது. முதலில், இன்னமும் நேரமுள்ளது, இரண்டாவதாக, சிறிது சிந்திக்க வேண்டியுள்ளது.

நான் குழந்தைகளைப் பார்த்ததும் முதன் முதலாக உச்சரிக்க வேண்டிய சொற்கள் எவை? ”குழந்தைகளே, வணக்கம்!” என்று சொல்ல வேண்டுமென்பது நான் நீண்ட காலத்திற்கு முன்னரே கண்டுபிடித்த விஷயம். 170 பாட நாட்கள் என் வகுப்பில் உண்டு. ஒவ்வொரு நாளும் காலையில் வகுப்பறையில் நுழையும் போது ”குழந்தைகளே, வணக்கம்!” என்று சொல்வேன்.

”வணக்கம்” எனும் சொல்லை இரக்கமாக அல்லது அன்பை வெளிப்படுத்தும் முறையில் ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள், வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்ட ஒரே சொல் மனிதர்களின் உறவை எப்படி மாற்றுகிறது என்று நீங்கள் உணருவீர்கள்.

வெறும் வார்த்தைகள் ஒருபுறமிருக்க, நான் எப்படி இவற்றைச் சொல்லுகிறேன், என் முகபாவம் எப்படியுள்ளது என்பது முக்கியமானது. என் குரல் அன்பானதாக, கவர்ச்சிகரமானதாக இருக்க வேண்டும். என் முகபாவம் குரலுக்கேற்றபடி இருக்க வேண்டும். எல்லாம் புரியும்படி இருந்தாலும் நடைமுறையில் எல்லாமே இது போல் நடக்கிறதென்று நான் நம்பவில்லை. சில சமயங்களில் மிகக் கறாராக, காரியரீதியில் என் குரல் ஒலிக்கும், சில சமயம் மிதமிஞ்சிய உற்சாகத்துடன் ஒலிக்கும், சில நேரங்களிலோ ஏனோ தானோவென்று இருக்கும் (இதை ஒப்புக்கொள்ளக்கூட வெட்கப்படுகிறேன்). இந்த சமயங்களில் எனக்குத் திருப்தி இருக்காது.

முகமன் கூறும் சாதாரண வார்த்தைகளை உச்சரிப்பது சம்பந்தமாக வெறுமனே மண்டையை போட்டுக் குழப்பிக் கொள்வது ஒருவேளை அவசியமில்லையோ? ஒருவேளை இதில் ஆசிரியரின் பிரச்சினை எதுவுமே இல்லையோ? ”குழந்தைகளே, வணக்கம்!” என்று நான் அன்றாடம் எப்படிக் கூறுகிறேன் என்பது அவர்களுக்கு முக்கியமில்லையோ! ஒருமுறை இப்படிப்பட்டதொரு சம்பவம் நிகழ்ந்தது. நான் நடத்திய ஒரு வகுப்பிற்கு 15 ஆசிரியர்கள் வந்திருந்தனர்.

மேற்கூறியவாறு முகமன் கூறி நான் பாடத்தை துவக்கினேன், நான் விரும்பிய விசேசமான வகையில் இவ்வார்த்தைகளை உச்சரித்ததை உணர மகிழ்ச்சியாக இருந்தது. பாடம் முடிந்ததும் நான் ஒவ்வொருவரையும் அணுகி “குழந்தைகளே, வணக்கம்! என்பதை நான் எப்படிக் கூறினேன் கவனித்தீர்களா? இதைப் பற்றி உங்கள் கருத்தென்ன?” என்று கேட்டேன். அவர்களால் ஒன்றுமே கூற இயலவில்லை, நான் என்ன சொன்னேன் என்பதைக் கூட சரிவர நினைவுபடுத்திக் கொள்ள முடியவில்லை. ”சாதாரண முகமன், இதிலென்ன விசேசம்?…” என்று அவர்கள் புரியாமல் கேட்டார்கள். முகமன் கூறுவதில் உள்ள விசேசமான – கவர்ச்சிகரமான, அன்பான, மன உற்சாகத்தை அதிகப்படுத்தக் கூடிய, மகிழ்ச்சிகரமான தொனியை ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் முறையாகப் பயிற்றுவிக்க முடியாதா என்ன? என்று நான் ஆச்சரியப்பட்டேன். ”வணக்கம்” எனும் சொல்லை இரக்கமாக அல்லது அன்பை வெளிப்படுத்தும் முறையில் ஒருவரிடம் சொல்லிப் பாருங்கள், வெவ்வேறு விதமாக உச்சரிக்கப்பட்ட ஒரே சொல் மனிதர்களின் உறவை எப்படி மாற்றுகிறது என்று நீங்கள் உணருவீர்கள்.

“குழந்தைகளே, வணக்கம்!” என்று எப்படி முகமன் கூறுவது எனும் பிரச்சினை ஒரு தீவிரமான ஆசிரியர் பிரச்சினையாகும். என்னைப் பொறுத்தமட்டில் எப்போது இதை எப்படி, எந்த முக பாவத்தோடு சொல்லுவது என்பது முக்கியமாகும். ஏனெனில் எனக்கு இப்படிப்பட்டதொரு உறுதி மொழி உண்டு:

குழந்தைகளின் மீதான உண்மையான அன்பை வெளிப்படுத்த நான் விரும்பினால் நான் இதை மிகச் சிறந்த வடிவங்களில் செய்ய வேண்டும்.

தெருவில் போகும்போது நான் இதைப் பயிற்சி செய்ய முயலுகிறேன். ”குழந்தைகளே, வணக்கம்!” என்று முறுமுறுத்தபடியே இந்த முறுமுறுப்பைக் கேட்கிறேன். என் முன் குழந்தைகள், யாருமில்லாததால்தான் இது சரியாக வரவில்லை போலும். இவர்களைக் கற்பனை செய்து கொள்ள வேண்டும்: இதோ என் வகுப்பு, நான் இதில் நுழைகிறேன், குழந்தைகள் என்னை ஆர்வத்துடன் பார்க்கின்றனர், நான் அனைவரையும் பார்த்துப் புன்முறுவல் பூத்தபடியே ”குழந்தைகளே, வணக்கம்!” என்கிறேன். அது சரி, இந்த வழிப்போக்கர் ஏன் என்னை ஆச்சரியத்துடன் பார்க்கிறார்?…

முதல் பாடவேளையின் போது நான் என்ன செய்யப் போகிறேன்? ஒருவேளை இதுவும் பிரச்சினை அல்லவோ?

முதல் பாடவேளையின் போதும், பிந்தைய பாடங்களின் போதும் படிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் மக்களின் வாழ்க்கையில் ஞானத்தின் அவசியம் பற்றியும் நான் குழந்தைகளுக்கு ஒன்றும் சொல்லப் போவதில்லை. பள்ளியிலும் வகுப்பிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளை அவர்களுக்குச் சொல்லித் தரப் போவதில்லை. இப்போதுதான் பள்ளிக்கு வந்துள்ள குழந்தைகளுக்குப் படிப்பின் முக்கியத்துவம், ஞானத்தின் அவசியம் பற்றிச் சொல்வது தேவையில்லை. இதைப் பற்றிப் பொதுவில் சொல்வதே அவசியமா? சமுதாய வாழ்வில் ஞானம் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் தெட்டத் தெளிவாக இருக்கையில் இதை-அதுவும் ஆறு வயதுக் குழந்தைகளின் மத்தியில்-சந்தேகத்திற்கு உள்ளாக்க வேண்டுமா என்ன? கல்வி கற்க வரும்படி அவர்களுக்கு அறைகூவல் விடவேண்டாம், தம் இயல்பினாலேயே அவர்கள் கல்வியின் பால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்கள் மீது கல்வியைத் திணித்து, அதே சமயம் ”இது அவசியம்” என்று வற்புறுத்தும்போது இந்த ஈர்ப்புச் சக்தி பாதிக்கப்படும்.

கல்வி கற்க வரும்படி அவர்களுக்கு அறைகூவல் விடவேண்டாம், தம் இயல்பினாலேயே அவர்கள் கல்வியின் பால் ஈர்க்கப்படுகின்றனர். அவர்கள் மீது கல்வியைத் திணித்து, அதே சமயம் ”இது அவசியம்” என்று வற்புறுத்தும்போது இந்த ஈர்ப்புச் சக்தி பாதிக்கப்படும்.

பள்ளியிலும் வகுப்பிலும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பொறுத்தமட்டிலும் இப்பேச்சு எதைச் செய்யக் கூடாது, கடமைகள் என்ன என்ற பட்டியலுடன் முடியும்; மறுநாள் குழந்தை பள்ளிக்கு வராமலிருக்கத் தயங்கமாட்டான். எனது மாணவன் ஒவ்வொருவனும் தன் வயதையொத்த மாணவர்களின் மத்தியில் பழகும்போது எப்படிப் பழகுவது என்பதையும், சமுதாயத்தில் தன் நடத்தை முறைகளையும் தானே முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். தானே என்று நான் சொல்லும்போது நான் கடைப்பிடிக்கும் போதனா முறையை நான் குறிப்பிடுகிறேன்; இது சுயமான தார்மிக, அழகியல் முடிவுகளுக்கு குழந்தையை இட்டுச் செல்லும்.

சரி, அப்படியெனில், முதல் பாடவேளையின் போது நான் எதைப் பற்றிப் பேசுவேன்? என் பெயரைக் கூறுவேன், அவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலோடு காத்திருந்ததாகச் சொல்லுவேன். பின்னர், அவர்களும் பாடம் படிக்கத் துடிப்பதால், ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காது உடனடியாக விசயத்திற்கு வருவோம். பாடத்தின் இறுதியில் பரஸ்பரம் அறிமுகம் செய்து கொள்ளுமாறு முன்மொழிவேன். கடைசி பாடவேளையின் போது பின்வரும் கேள்விகளைக் கேட்பேன்: “உங்களில் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் இன்று என்ன முக்கிய சம்பவம் நடந்தது? பள்ளியில் உங்களை என்ன விசயங்கள் எதிர்நோக்கியுள்ளன?” இக்கடைசிக் கேள்வியை நான் கேட்டதும், பல்லாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் என் நெஞ்சில் நிழலாடும்; அப்போது ஒரு ஆறு வயதுச் சிறுவன் தன்னிடத்திலிருந்து துள்ளி எழுந்து உற்சாகமாக, கருத்தாழத்தோடு “பெரிய, மிகப் பெரிய விசயங்கள் எதிர்நோக்கியுள்ளன!..” என்று பதில் சொன்னான்.

படிக்க:
மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு!

என் சிந்தனைகள் அறுபடுகின்றன. திபிலிசி நகரில் உள்ள 1-வது எண் பள்ளியின் மூன்றாவது மாடிக்கு நான் ஏறிச் செல்கிறேன். அங்குதான் என் அறை உள்ளது. எனது ஆறு வயதுக் குழந்தைகள் அருகேயுள்ள வகுப்பறையில் உட்கார்ந்து படிப்பார்கள், மகிழ்வார்கள், கும்மாளம் அடிப்பார்கள்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !

மிகவும் வறிய நிலையிலுள்ள குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.72,000/- நிதியுதவி வழங்கும் அறிவிப்பை காங்கிரசு கட்சி வெளியிட்டவுடனேயே, “அது எப்படி சாத்தியம்? அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது? இதனால் நாட்டின் நிதிப்  பற்றாக்குறை அதிகரித்துவிடாதா?” என்றெல்லாம் பா.ஜ.க.வும், வலதுசாரி பொருளாதார நிபுணர்களும் மூக்கைச் சிந்தத் தொடங்கிய அதேசமயத்தில்தான், ஒரு தனியார் நிறுவனத்திற்கு ஏறத்தாழ 10,000 கோடி ரூபாயைச் சுளையாகத் தூக்கிக் கொடுத்தது, பா.ஜ.க. அரசு.

அத்தனியார் நிறுவனத்தின் பெயர் ஜெட் ஏர்வேஸ். அந்நிய நிறுவனம் என வரையறுப்பதற்குத் தகுதியான ஜெட் ஏர்வேஸுக்கு இவ்வளவு பெரிய தொகையை அரசாங்க மொய்யாகத் தூக்கிக்கொடுத்த கயவர்கள், இல்லையில்லை, காவலாளிகள் நரேந்திர மோடியும் அருண் ஜேட்லியும். மெல்லவும் முடியாமல் விழுங்கவும்  முடியாமல் இந்தச் சுமையை சுமந்து கொண்டிருப்பவை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகள்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பங்குதாரர்கள் : அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜேம்ஸ் ஹோகன் (இடது) மற்றும் வெளிநாட்டுவாழ் இந்தியரான நரேஷ் கோயல்.

பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் வாராக் கடன் பிரச்சினையால் ஏற்கெனவே பெரும் நட்டங்களைச் சந்தித்துவரும் வேளையில், ஒரு தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு, ஒன்றல்ல,  இரண்டல்ல, 10,000 கோடி ரூபாயைத் தூக்கிக் கொடுக்கலாமா என  எந்தவொரு பொருளாதார நிபுணனும் கேள்வி எழுப்பவில்லை.

ஏழைகளுக்கு நிதியுதவியோ, மானிய உதவியோ அளிக்கும்போதெல்லாம் நிதிப் பற்றாக்குறை என்ற பூச்சாண்டியைக் காட்டிப்  பயமுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் நிபுணர் கும்பல், கார்ப்பரேட் நிறுவனத்திற்குப் படையல் இடப்பட்ட இந்தக் கறி விருந்தை கண்ணை மூடிக்கொண்டு வரவேற்றிருக்கிறது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஏறத்தாழ 8,400 கோடி ரூபாய் அளவிற்குக் கடன்களைத்  திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. அதற்குரிய வட்டியைக்கூடக்  கட்டமுடியாமல் அந்நிறுவனம் திவால் நிலையை நோக்கிச் சென்று  கொண்டிருந்தது. கடன் தவணைகளை முறையாகச் செலுத்தத் தவறும்  நிறுவனங்களை வாராக் கடன் நிறுவனங்களாக வரையறுத்து, திவால் சட்டத்தின் கீழ் கொண்டுவந்து, அந்நிறுவனங்களை ஏலத்தில் விற்று வங்கிகள் தமது கடன் நிலுவைகளை வசூலித்துக் கொள்ளலாம் எனக்  கூறுகிறது, புதிய திவால் சட்டம்.

இந்தச் சட்டத்தைக் கொண்டுவந்தவரே மோடிதான். இப்புதிய திவால் சட்டத்தால் வங்கிகளின் வாராக்  கடனெல்லாம் வசூலாகிவிடும் எனத் தம்பட்டம் அடித்துவருவதும் பா.ஜ.க. அரசுதான். ஆனால், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவராமல் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறது, மோடி-அருண் ஜேட்லி கும்பல்.

இதுவொருபுறமிக்க, ஜெட் ஏர்வேஸ் நிர்வாகம் தனது நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அந்நிய நாடுகளுக்குக் கடத்தியது குறித்தெல்லாம் பிரதமர் அலுவலகமே ஒரு விசாரணையை நடத்தி வந்ததாகச் செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், அக்குற்றச்சாட்டுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, ஜெட் ஏர்வேஸுக்கு வங்கிப் பணத்தைத் தூக்கிக் கொடுத்திருக்கிறார்,  காவலாளி மோடி.

ஜெட் ஏர்வேஸுக்குச் சட்டவிரோதமாக அளிக்கப் பட்டிருக்கும் இந்தச் சலுகையை மோசடி, ஊழல் எனக் குற்றஞ்சுமத்த முடியும். ஆனால், ஒவ்வொரு குற்றவாளியும் தன்னை நியாயப்படுத்திக் கொள்ள ஒரு துயரக் கதையைச் சொல்லுவது போல, மோடி கும்பலும் சட்டத்தை மீறி அளிக்கப்பட்ட இந்தச் சலுகையை நியாயப்படுத்த தொழிலாளர் நலன் என்ற முகமூடியை மாட்டிக் கொண்டது.

பழைய திருடனும் புதுத் திருடனும் : விஜய் மல்லையாவுடன் நரேஷ் கோயல்.

ஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்தால், அதனை நம்பியிருக்கும் 16,000 பணியாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதால், அந்நிறுவனத்திற்குக் கடன்கொடுத்த ஸ்டேட் பாங்க் உள்ளிட்ட வங்கிகளையே அந்நிறுவனத்தைத் தத்தெடுக்கக் கட்டளையிட்டு, அந்நிறுவனத்தில் மேலும் 1,500 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடும் செய்ய வைத்து, அந்நிறுவனத்தை பா.ஜ.க. அரசு காப்பாற்றியிருப்பதாக ஒரு உருக்கமான கதையைப் புனைந்து  உலவவிட்டிருக்கிறது, மோடியின் கைக்கூலி கும்பல்.

காவலாளி மோடியின் இந்தக் கருணையால் நேர்ந்த  விளைவு என்ன? பொதுத்துறை வங்கிகள் ஜெட் ஏர்வேஸுக்குக் கொடுத்த கடன்கள் இப்பொழுது பங்குகளாக மாற்றப்பட்டு, அவ்வங்கிகளின் தலையில் சுமத்தப்பட்டுள்ளன. இதனால் இப்பொழுது  ஜெட் ஏர்வேஸின் பெரும்பான்மையான பங்குதாரர்கள், அதாவது முதலாளிகள் ஸ்டேட் பேங்க் உள்ளிட்ட வங்கிகள்தான். வங்கித் தொழில் செய்து வரும் வங்கி நிர்வாகிகள் இப்பொழுது ஜெட் ஏர் வேஸை இயக்கி, அதனை இலாபத்தில் நடக்க வைத்து, அதன் பின்னர் தமது கைவசமுள்ள பங்குகள் மற்றும் புதிதாகப் போட்ட முதலீடு, ஆக மொத்தம் 10,000 கோடி ரூபாயை வேறு முதலீட்டாளர்களுக்கு விற்றுத் தமது கடன்களையும் வட்டியையும் ஈடுகட்டிக் கொள்ள வேண்டும்.

வங்கிக் கடனைத் திருப்பித் தராமல் நாமம் போட்ட  விஜய் மல்லையாவையும், நிரவ் மோடியையும் வெளிநாடுகளுக்குத்  தப்ப வைத்து, அவர்களை மோடி கும்பல் காப்பாற்றினாலும், இன்னொருபுறத்தில், “தப்பி ஓடிய அந்த மோசடியாளர்களை விட்டேனா  பார்!” என்று நாடகமாடவும் வேண்டியிருந்தது. அவர்களும்கூட  வெளிநாடுகளில் வழக்கு, வாய்தா எனத் தொல்லைகளைச் சந்திக்க  வேண்டியிருந்தது. அப்படிப்பட்ட தொந்தரவுகள் எதுவும் நேர்ந்துவிடாமல், மிகச் சாதுர்யமாக ஜெட் ஏர்வேஸின் முதன்மைப் பங்குதாரர்களான நரேஷ் கோயலையும், எதிஹாட் நிறுவனத்தையும் வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்றிவிட்டார், காவலாளி மோடி.

படிக்க:
♦ கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி
♦ நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

வெளிநாட்டு வாழ் இந்தியரான நரேஷ் கோயலும்  அபுதாபியைச் சேர்ந்த எதிஹாட் நிறுவனமும் இப்பொழுது ஜெட்  ஏர்வேஸில் சிறுபான்மை பங்குதாரர்களாகிவிட்டனர். மேலும், நரேஷ் கோயல் ஜெட் ஏர்வேஸின் தலைவர் பதவியிலிருந்து விலகிவிட்டார்.  அவரது மனைவி அனிதா கோயல் இயக்குநர் குழுமத்திலிருந்து விலகி விட்டார். இவையெல்லாம் தண்டனையா, தியாகமா அல்லது  இரண்டும் கலந்ததா?

வங்கிக் கடனை வாங்கிப் போட்ட நரேஷ் கோயல் இலண்டனில் ஹாயாகப் பொழுதுபோக்கிக் கொண்டிருக்க, கடன் கொடுத்த வங்கிகளோ புதிய முதலீட்டாளர்களை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கின்றன.

***

விமான எரிபொருள் விலை உயர்வும், அத்துறையில் நடந்துவரும்  கழுத்தறுப்புப் போட்டியும்தான் ஜெட் ஏர்வேஸை நட்டத்தில் தள்ளிவிட்டுவிட்டதாகவும், இல்லையென்றால் நரேஷ் கோயலைப் போல யோக்கியமான முதலாளியைப் பார்க்கவே முடியாதென்றும் கூறி, நரேஷ் கோயலைக் கடனைத் திருப்பிச் செலுத்தாத குற்றத்திலிருந்து காப்பாற்றிவிடத் துடிக்கிறார்கள், பொருளாதார நிபுணர்கள்.

ஜெட் ஏர்வேஸ் மீது நிதிக் கையாடல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கும் நிலையில், ஜெட் ஏர்வேஸ் நட்டமடைந்ததற்கு நிபுணர்கள் கூறும் காரணம் நம்பத்தகுந்ததாக இல்லை. எனினும், இத்தகைய பாரதூரமான நிலையை எதிர்கொண்டது நரேஷ் கோயலின் ஜெட் ஏர்வேஸ் மட்டும்தானா?

ஜெட் ஏர்வேஸைப் பொதுத்துறை வங்கிகளின் தலைமையில் கட்டிய ‘காவலாளிகள்’ நரேந்திர மோடி மற்றும் அருண் ஜேட்லி.

நரேந்திர மோடி அரசு  ஏவிவிட்ட எரிபொருள் விலை உயர்வாலும், பணமதிப்பழிப்பு நடவடிக்கையாலும், ஆட்கொல்லி மிருகம் போன்ற ஜி.எஸ்.டி. வரி  விதிப்பாலும் ஆயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிவிற்குள் தள்ளப்பட்ட போதெல்லாம் மோடிக்கும் சரி, இந்த நிபுணர்  கூட்டத்திற்கும் சரி இரக்கம் கசிந்ததேயில்லையே! மாறாக, சந்தையின்  ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என வக்கணை  பேசியவர்கள், பாதிக்கப்பட்டிருப்பது கார்ப்பரேட் முதலாளி என்றவுடன் தட்டைத் திருப்பிப் போட்டுத் தட்டுகிறார்கள்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் பல்லாயிரக் கணக்கான சிறுதொழில்களும் விவசாயிகளும் அழிவின் விளிம்பில்  நிறுத்தப்பட்டபோது, அவர்களுக்கெல்லாம் நிதியுதவியோ, கடனோ,  நிவாரணமோ அளிக்க மறுத்த மோடி, நாடெங்குமுள்ள விரைவுச்  சாலைகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கக் குத்தகை எடுத்திருந்த  கார்ப்பரேட் நிறுவனங்கள் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் நட்டமடைகின்றன என்ற செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்நிறுவனங்களுக்கு நட்ட ஈடு அளிக்க உத்தரவிட்டார். ஏழை பங்காளன் என்றும், டீ வித்தவன் என்றும், காவலாளி என்றும் வேடம் போட்டுத்  திரியும் மோடியின் உண்மை முகம் இது.

16,000 பணியாளர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டுதான் ஜெட் ஏர்வேஸைக் கைதூக்கிவிட்டாராம் மோடி!  யாரிடம் காது குத்துகிறார்கள் இவர்கள்? இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர்  இந்தியா நிறுவனங்களை ஒன்றாக இணைத்தபோது, நூற்றுக்கணக்கான பணியாளர்களின் வேலை பறிபோகும் அபாயம் உருவானதே,  அப்பொழுது வராத கருணை, இப்பொழுது வந்ததன் காரணம் என்ன? பி.எஸ்.என்.எல். நிறுவனத்தைச் சேர்ந்த ஐம்பதாயிரத்துக்கும்  மேற்பட்ட தொழிலாளர்களுக்குக் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு  அனுப்பத் திட்டமிட்டு வரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்கள் மீது மட்டும் கருணை காட்டுவதன் இரகசியம் என்ன?

விவசாயிகளின் வாழ்வாதாரமான நிலத்தைப் பறித்து, அவர்களின் எதிர்காலத்தைச் சூனியமாக்கி எட்டுவழிச் சாலை அமைக்கத் துடித்தவர்கள், ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் எதிர்காலத்தின் மீது அக்கறை காட்டவேண்டிய அவசியம் என்ன? பன்னாட்டு மூலதனத்தின்  நலன்களுக்காக 13 மாருதி தொழிலாளர்களைத் தூக்கில் போட பரிந்துரைத்த பா.ஜ.க., நிரந்தர வேலைவாய்ப்பு என்பதே இருக்கக்கூடாது  என்ற நோக்கில் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்திவரும் மோடி அரசு, ஜெட் ஏர்வேஸ் பணியாளர்களின் பணிப் பாதுகாப்புப் பற்றிக் கவலை கொள்கிறதாம், அதனை நாம் நம்ப வேண்டுமாம்!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்படும் அபரிதமான வரிச் சலுகைகளும், மானியங்களும் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற சாக்குபோக்குகளைக் கொண்டு நியாயப்படுத்தப்படுவதைப் போல, தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு அரசுப் பணத்தை மொய்யாக எழுத பயிர்க் காப்பீடு,  மருத்துவக் காப்பீடு திட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதைப் போல, ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயலையும் எதிஹாட் நிறுவனத்தையும் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து காப்பாற்ற பணியாளர்களின் எதிர்காலம் என்ற சாக்கைக் காட்டுகிறார்கள்.

“பொது நலன் கருதி எடுக்கப்பட்ட புத்திசாலித்தனமான முடிவு இது” எனக் கூறிப் பொதுத்துறை வங்கிகளைப் பாராட்டியிருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜேட்லி. அது என்ன பொதுநலன்? ஜெட் ஏர்வேஸைத் திவாலாக அனுமதித்திருந்தால், விமான பயணக் கட்டணங்கள் அதிகமாகி, பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியிருப்பார்களாம். பொதுத்துறை வங்கிகளின் முடிவு அந்த துரதிருஷ்டமான நிலைமை உருவாகாமல் தடுத்துவிட்டதாம்.

படிக்க:
♦ ஐ.சி.ஐ.சி.ஐ. – வீடியோகான் அம்பலமாகும் தனியார் வங்கி ஊழல் !
♦ மோடியின் டிஜிட்டல் இந்தியா : ஒராண்டில் சூறையாடப்பட்ட வங்கிப் பணம் 41,000 கோடி ரூபாய் !

ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் பயணம் செய்யும் ரயில் கட்டணங்களைப் பகற்கொள்ளை அளவிற்கு உயர்த்தி வரும் மோடி அரசு, மேட்டுக்குடி மற்றும் கார்ப்பரேட் கும்பலுக்கு  மலிவான விமானப் பயணம் கிடைப்பதற்குப் பொதுப்பணத்தை  வாரியிறைக்கிறது. அதேசமயம், ஏழை, நடுத்தர மக்களிடம், “உரிய கட்டணம் செலுத்தித்தான் சேவைகளைப் பெற வேண்டும். எதையும்  இலவசமாகத் தர முடியாது” என உபதேசிக்கிறது.

மோடி ஆட்சியில் கார்ப்பரேட் முதலாளிகளுக்காகப் பொதுப் பணம் சூறையாடப்படுவது வாடிக்கையான ஒன்றாகவே மாறிவிட்டது. ஜெட் ஏர்வேஸுக்கு முன்பாக, ஐ.எல். எஃப். அண்ட் எஸ். என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனம் திவாலாகும் அபாயத்தில் சிக்கியிருந்தபோது, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பணம்  அந்நிறுவனத்தில் கொட்டப்பட்டது. வாராக் கடன் பிரச்சினையால் திவாலாகிப் போன ஐ.டி.பி.ஐ. வங்கியை ஆயுள் காப்பீட்டு நிறுவனம்தான் மூலதனத்தைப் போட்டுக் காப்பாற்றியது. கடந்த மூன்றாண்டுகளில் மட்டும் 2,41,000 கோடி ரூபாய் பெறுமான வாராக் கடன்களைப் பொதுத்துறை வங்கிகள் தள்ளுபடி செய்திருப்பதாக  நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்திருக்கிறது.

மோடி அரசு பதவியேற்றபோது 2,19,000 கோடி ரூபாயாக இருந்த வாராக் கடன், அவரது நான்கு ஆண்டு கால ஆட்சியின் முடிவில், அதாவது மார்ச் 2018-இல் 8,97,000 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. இந்த வாராக் கடன் சுமையைச் சமாளிக்கப் பொதுத்துறை வங்கிகள் தமது இலாபத்திலிருந்து 6,67,001 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளன.

புதிய திவால் சட்டத்தின் கீழ் ஏலத்திற்குக் கொண்டு வரப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களில் ஒரு பகுதியைத் தள்ளுபடி செய்ததன் மூலம் பொதுத்துறை வங்கிகள் அடைந்துள்ள நட்டம் 84,585 கோடி ரூபாய்.

இந்தக் கடன் தள்ளுபடிகளுக்கெல்லாம் அப்பால், கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வரிகள் தள்ளுபடி செய்யப்பட்டதன் காரணமாக, கடந்த ஐந்தாண்டுகளில் மைய அரசிற்கு  ஏற்பட்ட வருவாய் இழப்பு (revenue foregone) ஏறத்தாழ ஐந்து இலட்சம் கோடி ரூபாய். அரசின் இழப்பு, முதலாளிகளுக்கு வரவு!

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த உர்ஜித் படேல், 2,000 கோடி ரூபாய்க்கு மேல் நிலுவை வைத்திருக்கும் கார்ப்பரேட்  நிறுவனங்களைத் திவால் சட்டத்தின் கீழ் ஏலத்தில் விடவேண்டும்  என்றும் அந்நிறுவனங்களின் கடன்களை மறுசீரமைப்பு செய்யக்கூடாதென்றும் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவைத் திரும்பப் பெறக்  கோரிய மோடி அரசு, அவரைக் கட்டாயப்படுத்திப் பதவிவிலக வைத்தது.

அவர் வெளியேற்றப்பட்ட பிறகு, மோடியின் பண மதிப்பழிப்பு நடவடிக்கையைப் பலவாறாக முட்டுக்கொடுத்துவந்த சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். சக்திகாந்த தாஸின் நிர்வாகத்தின் கீழ் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களை மறுசீரமைப்பதையும் தாண்டி, திவாலாகக்கூடிய நிறுவனங்களைப் பொதுத்துறை வங்கிகளின் தலையில் சுமத்தும் திருப்பணி  தொடங்கப்பட்டிருப்பதை ஜெட் ஏர்வேஸ் விவகாரம் எடுத்துக் காட்டுகிறது.

நட்டத்தில் இயங்கிவரும் அல்லது திவாலாகக்கூடிய நிலையில் உள்ள தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் பொதுத்துறை வங்கிகளின் தலையில் கட்டப்படுவது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்தில் நல்ல இலாபத்தில் இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் மிக வேகமாகத் தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்கப்படுகின்றன. இந்த நிதியாண்டில் மட்டும் 85,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன என்றும், இது இலக்கை மிஞ்சிய சாதனையென்றும் ஆனந்தக் கூத்தாடி அறிக்கைவிட்டிருக்கிறார், அருண் ஜேட்லி.

நாட்டின் பொதுச் சொத்துக்களை, பொதுப் பணத்தைத் தனியார் முதலாளிகளுக்குப் பங்கு போட்டு பிரித்துக் கொடுக்கும் பா.ஜ.க. தலைவர்கள், தங்களைக் காவலாளிகள் எனத் தமக்குத்தாமே அடை மொழி போட்டு அழைத்துக் கொள்கிறார்கள். மோடியின் ஆட்சியில் திருடர்கள் காவலாளியாகிவிட்டார்கள்; எனவே, திருட்டு சட்டபூர்வமாகிவிட்டது. பொதுப் பணத்தைத் திருடுவது சட்டபூர்வமாகிவிட்டதால், ஊழலும் ஒழிக்கப்பட்டுவிட்டது!

ஆர்.ஆர்.டி.

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

தடுப்பூசிகள் உண்மையிலேயே நோய்களைத் தடுக்கின்றனவா ?

சிரிசேன, ஓடியாடித் திரியும் ஐந்து வயது சுட்டிப்பையன். நல்ல புத்திசாலி, அது போலவே மிகவும் குறும்புக்காரன். வழமையாக போய் வருகின்ற அவனது மொன்ரிஸரியிலே (மழலையர் பள்ளி) ஒருநாள் திடீரென மயங்கி விழுகிறான்.  அதனால் அவனை உடனே வைத்தியசாலையில் அனுமதிக்கின்றார்கள்.

அனுமதிக்கப்பட்ட நேரம் முதல் அவனுக்கு வலிப்பு (seizures)  வரத் தொடங்குகிறது. அந்த வலிப்புகளை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டும் அதனை நிறுத்த முடியவில்லை. பல மணிநேர அயராத போராட்டத்திற்குப் பின் நான்கு வகை வலிப்பு நிவாரணிகளை இரத்தம் வழியாக செலுத்தி அந்த வலிப்பு நிலைமை ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.

இப்படி எல்லா முயற்சிகள் செய்தும், இரண்டு நாட்கள் கடந்தும் அந்த துடிதுடிப்பான பையன் எழுந்திருக்கவேயில்லை, பேசவுமில்லை, கதைக்கவுமில்லை. ஒரு ஜடமாக  கட்டிலோடு ஆகிவிட்டான். இது என்னவாயிருக்கும் எதனால் வந்தது என்று வைத்தியர்கள் எல்லாம் மூளையை பிழிந்து விவாதித்து கொண்டிருக்கும் பொழுது அவனது  MRI, EEG போன்ற பரிசோதனை முடிவுகளும் வந்து கொண்டிருந்தன. எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். ஏனெனில் இவைகள்  எல்லாமே  எப்போதோ எங்கோ கேள்விப்பட்ட ஒரு நோயின் அறிகுறிகளை சுட்டி நின்றன.

அது தான்  Subacute Sclerosing Panencephalitis (SSPE)  எனப்படும்  ஒரு வகை மூளை அழற்சி நோய். இதனால் மூளை வெகுவாக பாதிக்கப்பட்டு மெதுவாக அழிந்தும் வருகிறது.  இனி இவன் எழுந்து நடப்பான், பேசுவான்  என்பதெல்லாம் சந்தேகமே.

இது என்ன நோய்?  எதனால் ஏற்பட்டது? என்ற காரணங்களை தெரிந்து கொள்ள ஆவலாய்  இருக்கும், உங்களுக்கு.  இந்த நோய் அச்சிறுவனுக்கு  ஏற்படக் காரணம் ஒன்பது மாதத்தில் போட வேண்டிய ஒரு தடுப்பூசி (வக்சீன்)  போடாததுதான் என்றால் ஆச்சரியமாக  இருக்கிறதல்லவா.?  சிறுவர்களுக்கு பொதுவாக ஏற்படுகின்ற மீசல்ஸ் Measles  எனப்படும் தட்டம்மை நோயின் தாக்குதலிற்கு பின்னால் மிக  நீண்ட காலத்திற்குப் பின் சுமார் நான்கு, ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெகு அரிதாக வருகிற  பாரிய தீர்க்க முடியாத சிக்கலான விளைவுதான் (complication) இந்த SSPE. இது ஒரு கொடிய நோய் நிலை, அதி பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது.

இதன் மூலம் முற்றாக மூளை அழற்சி  ஏற்பட்டு அந்த குழந்தை நடக்க முடியாமல்,  எழும்ப முடியாமல் அப்படியே ஒரு ஜடமாக மாறிவிடுவதும் அதன்பின் தீர்க்க இயலாத நிலையில் உயிரிழந்து விடுவதும்தான், இதில் உள்ள ஆகப்பெரிய ஆபத்தாக  இருக்கிறது. இன்றைய தேதி வரை இந்த நோய்க்கு எந்த விதமான குணப்படுத்தும் மருந்துகளும் கிடையாது என்பதுதான் மற்றுமொரு கவலையான விஷயம். ஆனால் இந்த நோய் வராமல் தடுப்பதற்கு ஒரே ஒரு உபாயம் உண்டு. அதுதான் மீசல்ஸ்  வராமல் தடுப்பது என்ற நம்பிக்கை ஊட்டும் செய்தி. இந்த மீசல்ஸ் வராமல் தடுப்பதற்கான மிகச்சிறந்த ஒரே வழி மீசல்ஸ் அல்லது MMR எனும் தடுப்பூசியை உரியகாலத்தில் போட்டுக்கொள்வது மாத்திரமே.

படிக்க:
தடுப்பூசி மருந்து தனியாருக்கு – பிஞ்சுக் குழந்தைகளின் உயிரோடு விளையாடும் வக்கிரம்
♦ நவீன மருத்துவம் எப்படி சரியானது ? | மருத்துவர் அர்சத் அகமத்

இன்றைக்கு சுமார்  ஐந்து வருடங்களுக்கு முன் இலங்கை முழுவதும் இந்த நோய் பரவியது. அதற்கு காரணம் இலங்கையில் அந்த மீசல்ஸ் வக்சீன் ஏற்றுவதில் ஏற்பட்ட ஒரு சிறு தாமதமும் குளறுபடியும் அதனால் ஏற்பட்ட வக்சீன் தட்டுப்பாடுமாக அறியப்படுகிறது. மீசல்ஸ் எனப்படும் இந்த நோய் இலங்கையிலே மிகவும் அரிதாகவே காணப்பட்ட ஒரு நோய்.

நான் மருத்துவ பீடத்தில் இருந்த காலத்திலோ அல்லது பயிற்சி வைத்தியராக ஆரம்பத்தில் இருந்த காலத்திலோ இந்த நோயை இலங்கையிலே கண்டது கிடையாது.  அப்பொழுது மீசல்ஸ் என்ற இந்த நோயின் இலட்சணங்களை நாங்கள் புத்தகங்களில் படங்களாக போட்டோக்களாகத்தான் பார்த்திருக்கிறோம். எங்களது மருத்துவ  ஆசிரியர்கள், விஷேட நிபணர்கள் தாங்கள் வைத்தியர்களாக இருந்த ஆரம்ப காலங்களில்  இந்த நோய்களை கண்டதாகவும், அதன்பின்னர் 1984-ம் ஆண்டில்  இந்த நோய்க்கான வக்சின் அறிமுகப்படுத்திய பின்னர் இது முற்றாக மறைந்து விட்டதாகவும் படிப்பித்தது இன்றும் ஞாபகம் இருக்கின்றது.

ஆனால் ஐந்து வருடங்களுக்கு முன், 2011-ம் ஆண்டின் இறுதிப்பகுதியில்  இலங்கையின் தடுப்பூசித் திட்டத்தில் ஏற்பட்ட ஒரு சிறு மாற்றத்தின் காரணமாக இந்த measles வக்சீனுக்கு நாட்டிலே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் அதைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் பிறந்த ஆறு மாதம் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகளுக்கு இந்த மீசல்ஸ் நோய் பரவத் தொடங்கியது. அதுதான் எனது வயதையொத்த வைத்தியர்கள் எல்லாம் முதன்முதலில் மீசல்ஸ் நோயை கண்களால் கண்ட காலப் பகுதியாகவும் இருக்கிறது. அப்பொழுது வைத்தியசாலையின் சிறுவர் வார்டுகள் எல்லாம் மீசல்ஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளால் நிரம்பியிருந்தது.

பிள்ளைகளில் மீசல்ஸ் தாக்கம் என்றால் என்ன ? அது எப்படி ஏற்படுகிறது ? அந்த நோய் தாக்கத்தினால் ஏற்படும் நோய் இலட்சணங்கள் எப்படிப்பட்டது  என்று மருத்துவ புத்தகங்களில் படித்தவைகளையும், கண்டவைகளையும் கண்கூடாகக் கண்டு இது உண்மை, நிதர்சனம் என்பதை ஆகர்ஷிக்க கூடியதாக இருந்ததும் அந்த காலப்பகுதியில்தான். அந்தக் நேரத்தில் எங்களது மூத்த வைத்திய நிபணர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஒரு விஷயத்தைச் சொல்லி வைத்தார்கள்.

அதுதான், இன்னும் நான்கைந்து வருடங்களில் இந்த நோயின் அடுத்த நிலையான இந்த SSPE-ஐ நாம் இலங்கையில் சில வேளைகளில் காணக்கூடியதாக இருக்கும் என்று. அந்த ஆருடம் இப்போது உண்மையாகி இருக்கிறது. இந்த வருடத்தில் மாத்திரம் நாங்கள் இதுவரை மூன்று SSPE நோயாளிகளைக் கண்டிருக்கிறோம். அதில் இருவர்  உயிரிழந்து விட்டனர்,  மற்றய மூன்றாவது பிள்ளை இன்றோ நாளையோ என உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும் நிலையில் கட்டிலோடு முடங்கிக் கிடக்கிறது .(முழு நாட்டிலும் இதன் தொகை இதை விட பலமடங்காக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்க)

தடுப்பூசிகள் எனப்படும் வக்சீன்கள்  உண்மையிலயே இவ்வாறான தொற்று நோய்களைக் கட்டுப்படுத்தும் என்பதை நான் முதன்முதலில் கண்கூடாக கண்டது இந்த மீசல்ஸ் வக்சீனூடாகத்தான். 2012, 2013-ல் இலங்கை அரசு உடனடியாக வெளிநாடுகளில் இருந்து இந்த தடுப்பூசியை வரவழைத்து குழந்தைகளுக்கு கொடுத்ததன் காரணமாக அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த மீஸல்ஸ் முற்றாகவே இல்லாமல் போனது. வக்சீன்கள் நோய்களைக் கட்டுப்படுத்தும், அதன் நன்மைகள் பற்பல என நிறையவே படித்திருந்தாலும், நிறைய விஞ்ஞான ரீதியான கட்டுரைகளை, புள்ளி விவரங்களை வாசித்திருந்தாலும் இவைகள் எல்லாம் எவ்வளவு உண்மை என்பதை விளங்கி கொள்ள  இந்த அனுபவம் ஒரு மிகச்சிறந்ததொரு முத்தாய்ப்பாக இருந்தது.

படிக்க:
50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !
♦ பிரசவகால மரணங்கள் : இலுமினாட்டி பைத்தியங்களுக்கு பதில் !

வக்சீன்களால் கட்டுப்படுத்தப்படக்கூடிய இதுபோன்ற பல்வேறு நோய்கள் காணப்படுகின்றன. இவைகள் இன்றைய மருத்துவப் புத்தகங்களில், பாடங்களில் மட்டுமே காணப்படுகின்ற நோய்களாக இருக்கின்றன. இந்நோய்களால் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கூட நான் எனது வாழ்நாளில் கண்டது கிடையாது.

கால்கள் இரண்டும் ஊனமாகிவிடுகின்ற, நடக்கமுடியாமல் போகின்ற போலியோ எனப்படுகின்ற நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தையைக் கூட கண்டது கிடையாது. போலியோ வக்சீன் கொடுப்பதன் காரணமாக அது இலங்கையிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. அது போல பிறந்த குழந்தைகளில் ஏற்படுகின்ற டெடனஸ் (Neonatal Tetanus) எனப்படும் வலிப்பு நோய். பால் குடிப்பதற்கு கூட வாயை திறக்க முடியாமல் இரும்புக் கட்டை போல் குழந்தைகளை ஆக்கி விடுகின்ற இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை கூட இப்பொழுது இலங்கையில் கிடையாது.

இன்னும் சொல்லப்போனால் விசர்நாய்க் கடியினால்  ஏற்படுகின்ற கொடிய நோயாகிய றேபிஸ் (Rabies ) எனப்படுகின்ற நாய் வெறி நோய். நாய் போலவே குரைத்து நாய்போலவே செத்து விடுகின்ற அந்த கொடிய பயங்கரமான நோய். அதனால் பாதிக்கப்பட்ட ஒருவரைக்கூட இது வரை நான் கண்டது கிடையாது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் நமது நாட்டில் நடைமுறையில் உள்ள மிகச்சிறந்த தடுப்பூசி திட்டம் (Extented Programme of Immunisation). இந்த திட்டத்தின் மூலமாக இவ்வாறான நோய்கள் நம்மை விட்டும் நமது சந்ததிகளை விட்டும் தூரமாகி இருக்கின்றன.

ஆனால் நாம் பல்லாண்டு முயற்சியில், பெரும் பொருட்செலவில், மனித உழைப்பில்  கட்டிக்காத்துவந்த இந்த நோய் தடுப்பு முறைமைகள் பாரிசாலன், ஹீலர்பாஸ்கர், பின்னூரி போன்ற வக்சீன் போத்தல்கள் கருப்பா வெள்ளையா என்று கூட தெரியாத,  அடிப்படை விஞ்ஞானம் தெரியாத இவர்களினால் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதுதான் விந்தையாக  இருக்கிறது.

ஒரு ஆறு மாத காலத்தில் நாட்டில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாட்டின் தாக்கம் எவ்வளவு பெரிய விலையை செலுத்தி இருக்கிறது என்பதற்கு மேலே கூறிய சம்பவம் நல்லதோர் எடுத்துக்காட்டு. அதன் விளைவுகளை, அந்த சாதாரண நோயின் கொடிய  விளைவுகளை இப்பொழுது நாங்கள் கண்டு கொண்டிருக்கிறோம்.

சில வேளைகளில் நீங்கள் சொல்லலாம் சில டொக்டர்மார் (Doctor), ஏன் விஞ்ஞானிகள் கூட வக்சீனுக்கு (Vaccine) எதிராக இருக்கிறார்கள் என்று. உண்மைதான் எந்த ஒரு கருத்திற்கும் இரண்டு கருத்துக்கள் இருப்பது என்பது இந்த உலக நியதி. மனிதன் நிலவில் கால் வைத்தது உண்மையா ? இல்லை ஏமாற்றும் பொய்யா ? பூமி உருண்டையா? இல்லை தட்டையா? இலுமினாட்டிகள் உண்டா? இல்லையா? செப்டம்பர் 11 திகதிய வர்த்தகக் கட்டிடத் தாக்குதலை செய்தது ஒசாமாவா? அமெரிக்காவா?

இப்படி இரண்டு பக்கத்திற்கும் நியாயமான கருத்துக்கள், இரண்டு பக்கதிற்கும் ஆதாரமான தரவுகள் என்பன இன்டர்நெட் முழுக்க பரவிக்கிடக்கின்றன. அதுதான் மனித இயல்பு. இது பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள உண்மை (truth) , உண்மைக்குப் பின்னாலுள்ள உண்மை (post truth) என்பவை பற்றிய புரிதல் அவசியமாக இருக்கிறது. அது போலத்தான் இந்த வக்சீன் பற்றிய எதிர்ப்பு வாதங்கள் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

ஆக அவர்கள் சொன்னார்கள், இவர்கள் சொன்னார்கள், அதில் இது இருக்கிறது, அது இருக்கிறது… என்ற கதைகளை எல்லாம் விட்டுவிட்டு  இது பற்றி நடுநிலையாக சிந்திப்பதற்கு ஒவ்வொரு பெற்றோரும் முன் வரவேண்டும். தடுப்பூசிகள் மிகவும்  பாதுகாப்பானவை. அதுபோல் மிகவும் வினைத்திறனானவை, நோய்களைக் கட்டுப்படுத்த வல்லவை என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். தடுப்பூசிகள், அதன் உருவாக்கம், வரலாறு, அது தொழிற்படும்முறை பற்றி தேவைப்படுவோர் நிறையவே வாசித்து விளங்கிக் கொள்ளலாம். (வேண்டுமானால் இது பற்றி தெளிவாக இன்னுமொரு பதிவில் கலந்துரையாடலாம்.)

உண்மையில்  நீங்கள் வக்சீன் எதிர்ப்புக் (Anti Vaccine ) கொள்கை உள்ளவராக இருந்தால் பின்வரும் வினாக்களுக்கு உங்களிடம் விடை இருக்கிறதா என்பதை உள்ளத்தை தொட்டு கேட்டுக் கொள்ளுங்கள். ஏனெனில் தடுப்பூசி கொடுக்காமல் விடுவதால் உங்கள் குழந்தையின் வாழ்க்கையை, எதிர்காலத்தை நீங்கள்தானே  கேள்விக்கு உட்படுத்துகிறீர்கள்.

ஒரு நாள் உங்கள் ஆண்மகன் குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கின்ற போது அவனுக்கு சிறு பிராயத்தில் ஏற்பட்ட மம்ஸ் (mumps) எனப்படுகின்ற கூகைக்கட்டு நோய்தான் தனது விந்தணு உற்பத்தியை தடை செய்திருக்கிறது என்று தெரியவந்து,  ஏன் எனக்கு MMR வக்சீன் போடவில்லை என அவன் கேட்டால் அவனிடம் நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ?

அதுபோல் ஒரு பெண் குழந்தை பெரியவளாகி திருமணம் செய்து வாழுகிறபோது தன் வயிற்றில் உருவாகும் குழந்தை ரூபல்லா நோய்தாக்கத்தினால் உடல் அவயங்களை இழந்து, இதயத்தில் துளை ஏற்பட்டு, பார்வைகள் குருடாகிப் பிறக்கப் போவதை அறிந்து ஏன் எனக்கு ருபெல்லா வக்சீன் போடவில்லை என்று கேட்டால் அந்த மகளுக்கு நீங்கள் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?

விசர் நாய்க்கடி பட்டு உங்கள் உறவினர்களில் ஒருவர் நாய் போல் குரைத்து கொண்டிருப்பதை பார்த்து ஏன் அவருக்கு ரேபிஸ் வக்சீன் (ARV) கொடுக்கவில்லையா என்று யாரும் கேட்டால் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் ?

இப்படி பதில் சொல்ல வேண்டிய நிறைய கேள்விகள்  இருக்கின்றன.
இதற்கெல்லாம் உங்களிடம் பதில் இருந்தால், நீங்கள் உறுதியான பதில்களை வைத்திருந்தால் நீங்கள் தாராளமாக தடுப்பூசிகளை கொடுக்காது விடலாம். அல்லது வக்சீன் எதிர்ப்பாளராக இருக்கலாம். இதற்கெல்லாம் பதில் இல்லை என்றால் பேசாமல் வக்சீனை போட்டு விட்டு நடையை கட்டுவதுதான் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

வக்சீன் கொடுக்கமறுத்த அமெரிக்க, தாய்லாந்து பெற்றோரரினால் இப்பொழுது  அந்த பிரதேசத்தில் பரவிவரும் நோய் பற்றி அறிந்து கொள்ள விரும்புவோர் இதை வாசிக்க முடியும்.

-மருத்துவர் பி.எம். அர்சத் அகமத் MBBS(RUH) MD PEAD (COL)
Senior Registrar in Peadiatrics, 
Lady Ridgeway Hospital for Children
Colombo, Srilanka

50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

1

மோடி அரசின் மிக மோசமான சீரழிவு அறிவிப்பான பணமதிப்பழிப்பு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்து ஏராளமான ஆய்வுகள் வந்தபடியே உள்ளன. சமீபத்தில் அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் பணமதிப்பு நீக்க அறிவிப்பால் 50 லட்சம் மக்கள் தங்களுடைய வேலையை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. 2000 – 2010-க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில் இல்லாத வகையில் 2018 -ம் ஆண்டில் வேலையிழப்பு 6% அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

கடந்த பத்தாண்டுகளில் வேலை வாய்ப்பின்மை படிப்படியாக உயர்ந்து மோடியின் சர்வாதிகார அறிவிப்பு வந்த 2016-க்கு பின் அது உச்சத்தை எட்டியதாக ஆய்வு கூறுகிறது. ‘இந்தியாவின் பணி நிலைமை 2019’ என்ற அந்த அறிக்கை, இந்தியாவின் பணி மற்றும் தொழிலாளர் நிலைமை ஆகியவற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. இதில், 20-24 வயது வரையான நகர்ப்புற ஆண் மற்றும் பெண்கள், ஊரக ஆண் மற்றும் பெண்களிடையே வேலைவாய்ப்பின்மை மிகவும் உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செயல் தலைவராக இருந்த பி. சி. மோகனன், அந்த ஆணையத்தின் உறுப்பினர் ஜே. மீனாட்சி ஆகியோர், வேலைவாய்ப்பு குறித்த புள்ளி விவரத்தை தொடர்புடைய அமைச்சகம் வெளியிட மறுப்பதாகக் கூறி, தங்களுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரை தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் மேற்கொண்ட ஆய்வில் 65 மில்லியன் (6.5 கோடி) இளைஞர்கள் வேலையில்லாமல் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது 45 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லாத் திண்டாட்டம் என ஊடகங்களில் கசிந்த அந்த ஆய்வறிக்கை சொன்னது.

நாட்டின்  வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்பின்மை குறித்து இதுவரை வெளிவந்த புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகளை பகுப்பாய்வு செய்துள்ளது அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு.

படிக்க:
மோடி அரசின் புள்ளிவிவர மோசடி ! எதிர்ப்பு தெரிவித்து 2 அதிகாரிகள் விலகல் !
தேர்தல் ஆணையமே … நடையைக் கட்டு !

“கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் தொழிலாளர் சந்தை கடுமையான நெருக்கடியில் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் கவனிக்கத்தக்க நான்கு அம்சங்கள்:

  1. எந்த புள்ளிவிவரத்தை ஆராய்ந்தாலும் 2011-ம் ஆண்டுக்குப் பின், பொதுவாக வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
  2. இளைஞர்களில் அதிகம் படித்தவர்கள் பணியில்லாமல் இருக்கிறார்கள்.
  3. இந்த காலக்கட்டத்தில் குறைவாக படித்தவர்கள் வேலையை இழந்திருக்கிறார்கள், வேலை வாய்ப்பு குறைக்கப்பட்டிருக்கிறது.
  4. ஆண்களைவிட, பெண்களின் வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகமாக உள்ளது. மேலும், இதனால் தொழிலாளர் ஆற்றல் பங்களிப்பும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

இந்தியாவின் பணியாற்றும் வயதுள்ள, அதாவது 15-க்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2016-ம் ஆண்டு 950.8 மில்லியனாகவும்(95.08 கோடி) 2018-ல் அது 983.1 மில்லியனாகவும் (98.31 கோடி) உயர்ந்துள்ளது.

2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அறிவிக்கப்பட்ட பணமதிப்பு நீக்கம் பரவலான பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியது. இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் ஆய்வின் படி, 3.5 மில்லியன் வேலை இழப்புகள் இதனால் ஏற்பட்டன. தொழிலாளர் ஆற்றல் இழப்பு 15 மில்லியனாகவும் குறைந்தது. நான்காண்டுகளைக் காட்டிலும் வளர்ச்சி 6.7% சரிந்தது. பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப் பின்பர் ரூ. 500, 1000 நோட்டுக்களை மாற்றும் பொருட்டு 100-க்கும் அதிகமான மக்கள் இறந்தார்கள். அதே ஆண்டு அக்டோபரில் பணம் செலுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏற்றுமதி 1.2% குறைந்தது என ரிசர்வ் வங்கியின் இணையதளம் கூறுகிறது.

பணக் கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட பல ஆயிரக்கணக்கான பணி இழப்புகளை ஏற்படுத்தியது பணமதிப்பு நீக்கம். ஒப்பந்த தொழிலாளர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். ரியல் எஸ்டேட் திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டன. சந்தைகளில் தேவை குறைவு காரணமாக வண்டிகளில் நிரப்பப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் அழுகி குப்பைக்குச் சென்றன. விலை குறைந்ததோடு, விவசாயிகளையும் அது பாதித்தது.

ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் வங்கிக் கடன் வளர்ச்சி டிசம்பர் 23, 2016-ன் முடிவில் 5.1% வீழ்ச்சி கண்டதாக சொன்னது. கடன் பெறுவதும் தேவையும் குறைந்த நிலையில், இது 60 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியாகும்.

பணமதிப்பு நீக்கம் மற்றும் தவறான ஜி.எஸ்.டி. அமலாக்கத்தால் சிறு மற்றும் குறு தொழில்கள் இன்னமும் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.  சமீபத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் இந்த நிறுவனங்களின் கடன் நிலுவைத் தொகை 2018-ம் ஆண்டு இரட்டிப்பாகியுள்ளதாக கூறுகிறது. 2017-ம் ஆண்டு கடன் நிலுவை ரூ. 8,249 கோடியாக இருந்தது. 2018-ம் ஆண்டு ரூ. 16,118 கோடியாக உயர்ந்துள்ளது.

“பண கையிருப்பை அடிப்படையாகக் கொண்ட துறைகள் பெரிய அளவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதமும் பணி ஆற்றலில் 80 சதவீதமும் பங்காற்றுகின்றன. இந்திய சுதந்திரத்துக்குப் பின், இந்தத் துறைகள்  இப்படிப்பட்ட கொள்கை அமலாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன” என பணமதிப்பு நீக்கம் குறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் பேராசிரியர் மைத்திரீஷ் கட்டக் தெரிவிக்கிறார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள், பணி வாய்ப்பு உருவாக்கத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. அதுபோல ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைக்கும் முக்கியமான பங்களிப்பைச் செய்கின்றன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களும் அவற்றை நம்பியுள்ள வர்த்தகமும் கடந்த நான்கரை ஆண்டுகளில் வேலை இழப்பு மற்றும் வருமான இழப்பை சந்தித்துள்ளதாக அனைத்திந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பின் புள்ளிவிவரம் சொல்கிறது.  இந்தத் தொழில்களின் நிலையை அபாய கட்டத்தில் இருப்பதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. குறு தொழில்களில் 32% வேலை இழப்பும், சிறு தொழில்களில் 35% வேலை இழப்பும், நடுத்தர தொழில்களில் 24% வேலை இழப்பும் ஏற்பட்டிருப்பதாக 34,000 மாதிரிகளில் எடுக்கப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தையல் கூடங்கள், தீக்குச்சி, பிளாஸ்டிக், பட்டாசு, வண்ணம் ஏற்றுதல், பதனிடும் நிலையங்கள், சில்லறை வேலை மற்றும் அச்சு நிறுவனம் போன்ற அமைப்பு சாரா தொழிலாளர்களைத்தான் அதிகமாக பாதித்துள்ளது.

படிக்க:
பணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா | அம்பலப்படுத்தும் காங்கிரஸ்
♦ பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !

கட்டுமான தொழிலாளர்களின் சுகாதாரம், கல்வி, உணவு நுகர்வு உள்ளடக்கிய பலவற்றில் பணமதிப்பு நீக்கம் தாக்கத்தை செலுத்தியிருக்கிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை பணத்தாள் பொருளாதாரத்தை முதன்மையாகக் கொண்ட வேளாண் தொழிற்துறையின் முதுகெலும்பை உடைத்துவிட்டது!  விவசாயிகளால் விதைகளை வாங்க முடியவில்லை. தினசரி பரிவர்த்தனைகள் செய்யவேண்டிய நிலையில் இருந்த அவர்கள், விரைவில் கெட்டுப் போகக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஏற்படும் இழப்புகளை தடுக்க முடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாராளுமன்ற நிலைக்குழு அளித்த நிதிநிலை அறிக்கையில் பணமதிப்பு நீக்கம் விவசாயிகளுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியதாக வேளாண் துறை அமைச்சகம் ஒப்புக்கொண்டது.

“லட்சக்கணக்கான விவசாயிகள் போதிய பணத்தை பெறமுடியாமல் குளிர்கால சாகுபடிக்குத் தேவையான விதைகள் மற்றும் உரங்கள் வாங்க முடியாமல் போனது. பெரும் விவசாயிகளும்கூட தங்களுடைய விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் தருவதிலும் விதை மற்றும் உரங்களை பெறுவதிலும் பிரச்சினைகளை சந்தித்தனர்” என அந்த அறிக்கை சொன்னது. “இந்தியாவின் 263 மில்லியன் விவசாயிகள் பணத்தாள் பொருளாதாரத்தை நம்பியுள்ளனர்” எனவும் பாராளுமன்ற நிதி நிலை அறிக்கை கூறியது.

பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, அனைத்து பயிர்களின் விலையும் வீழ்ச்சியைக் கண்டது. பல காய்கறிகளின் விலைகள் கடுமையாக வீழ்ந்ததால், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தெருக்களில் கொட்டிவிட்டுச் சென்றனர். அடுத்த பருவத்திலும்கூட, ஒரு முழு ஆண்டே கடந்துவிட்ட பிறகும்கூட விலை நிலவரம் சரிசெய்யப்படவில்லை. அமைப்புசாரா துறை முழுவதுமே வீழ்ச்சி கண்டது.

மாபெரும் பொருளாதார சீரழிவை ஏற்படுத்திய பணமதிப்பு நீக்கம், மோடி மற்றும் அவர் சார்ந்த பாஜக-வினர் லாபம் பெறுவதற்காகவே கொண்டுவரப்பட்டிருக்கிறது. தன்னுடைய மோசடி அறிவிப்பு குறித்து, தேர்தல் பிரச்சார மேடைகளில் மோடி மறந்தும்கூட உச்சரிப்பதில்லை. இத்தனை பேரழிவுகளை நிகழ்த்திவிட்டு, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவோம், தேசத்தின் பாதுகாப்பை உறுதிசெய்வோம் என்கிறார்கள் பாஜக-வினர்.

ஒருபக்கம் பெருமுதலாளிகளுக்கு நாட்டின் வளங்களை துடைத்து கொடுப்பது, இன்னொரு பக்கம் மக்களை வாட்டும் பணமதிப்பு நீக்கம் போன்ற சர்வாதிகார அறிவிப்புகள். இவற்றையெல்லாம் மறக்கடிக்க தேசியவாதம், பெரும்பான்மைவாத போதையைத் தூவி வாக்கு கேட்கிறது பாசிச பாஜக.


-அனிதா
செய்தி ஆதாரம் : நியூஸ்18, பிசினஸ் ஸ்டாண்டர்டு, த வயர்

மக்கள் அதிகாரம் கொள்கை அறிக்கை !

“மக்களால் மக்களுக்காக…, தேர்தல் திருவிழா, தேர்தல் போர், ஜனநாயக உரிமை, ஜனநாயக கடமை….” இத்யாதி இத்யாதி.., இந்த வார்த்தைகள் அனைத்தும் மக்களை ஏய்க்கும் மாய்மாலங்கள் என்பது ஊர் அறிந்த இரகசியம்தான்.

ஒருபுறத்தில் இந்த தேர்தலும், அரசமைப்பும் மக்கள் மத்தியில் அம்பலமாகும் நிலையில் இன்னொருபக்கம் இந்த அரசை நம்பமுடியாது என்பதை தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாய் நடைபெரும் விவசாயிகள், மாணவர், தொழிலாளர், சிறுதொழில் முனைவோர் ஆகியோரின் போராட்டங்கள் நிரூபித்து வருகின்றன.

எங்கு காணிலும் மக்கள் “எங்களை வாழவிடு” என மன்றாடி வருகின்றனர். அரசையும் ஆட்சியையும் அவர்களிடம் கொடுத்துவிட்டு மன்றாடுவதற்கு பதிலாக இனி “எங்களை ஆளவிடு” என்ற முழக்கத்தின் கீழ் போராட்டமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும், “நாங்கள் யார்.. எங்கள் கொள்கை என்ன?” என்பதையும் மக்கள் அதிகாரம் இதோ உங்கள் முன் வைத்துள்ளது. படியுங்கள்…

மக்கள் அதிகாரம் அமைப்பின் கொள்கை அறிக்கையை PDF கோப்பாக பதிவிரக்கம் செய்ய..

ஆளும் அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம் !

கொள்கை அறிக்கை

மக்கள் அதிகாரம் – People’s Power

குமுறிக் கொண்டிருக்கிறார்கள், இந்திய மக்கள்; அவர்கள் கொந்தளித்து வெடிப்பதற்கான தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஓட்டுக் கட்சிகள், அரசியல்வாதிகள் மீது மட்டுமல்ல, மக்கள் நல அரசு என்கிற முறையில் செயலிழந்துவரும் அரசுக் கட்டுமானங்கள் அனைத்தின் மீதும் மக்கள் அடியோடு நம்பிக்கையிழந்து விட்டார்கள். அதனால்தான் மக்கள் பிரச்சினை பற்றிப் பேசினாலே, “யார் ஆட்சிக்கு வந்தாலும், யாரும் எதுவும் செய்துவிட முடியாது“ என்கிறார்கள்.  சமூக ஒழுக்கம், சமூக நியதி, ஆக்கப்பூர்வமான திட்டங்கள், நேர்மறைக் கொள்கைகளுக்குப் பதிலாக வெறும் கவர்ச்சித் திட்டங்கள், அரசியல் மோசடிகள், கிரிமினல்மயமாதல்தாம் உள்ளன.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிகார வர்க்க இலஞ்ச ஊழல் – அத்துமீறல்கள், போலீசு அக்கிரமங்கள் அராஜகங்கள், நீதித்துறை முறைகேடுகள் – ஊழல்கள், அவற்றின் பிற சமூக விரோதக் குற்றங்கள், மொத்த அரசமைப்பும், சமூகமும் கடும் நெருக்கடியில் சிக்கி, நொறுங்கிச் சரிந்து வருவதைக் குறிக்கின்றன. பலவிதமான முயற்சிகளுக்குப் பின்னரும் அவற்றை முட்டுக் கொடுத்து நிறுத்த முடியவில்லை.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் அடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு கொள்கை – கோட்பாடு, சித்தாந்தம், சமூக ஒழுக்கம், சமூகப் பொறுப்பு ஆகியவை பற்றிப் பேசுவதெல்லாம் முட்டாள்தனம் என்ற கருத்து பரப்பப்படுகிறது. சுயநலம், இலாபவெறி, நுகர்பொருள் மோகம், வரைமுறையற்ற இன்பநாட்டம், சொகுசு வாழ்க்கை, தனிமனிதப் பேராசை, பாலியல் வக்கிரங்கள்,  போதை வாழ்க்கை, கிரிமினல் குற்றக் கும்பல் வாழ்க்கை போன்ற சமூகக் குற்றங்கள் தவறானவை அல்லவென்ற சமூக மதிப்பீடு பரப்பப்படுகிறது. கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல், கூலிக்குக் கொலை ஆகிய சமூக விரோதக் கிரிமினல் குற்றங்களையே ஒரு தொழிலாகக் கொண்டு, விலங்குகள் வாழும் காடுபோல சமூகமே மாறிவருகிறது.

அரசே தனது வருவாய்க்குரிய வழிமுறையாக, இலக்கு வைத்து சாராய வியாபாரம் நடத்தி மக்களைக் குடிகாரர்களாக்கி வருகிறது. அதிகரித்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், நிச்சயமற்ற உதிரித்தனமான தொழில்கள் ஆகியவை காரணமாக 15-25 வயது வாலிபர்களில் கணிசமான பேர் குடிகாரர்கள் – காமாந்தகர்கள் – கூலிப்படையினர்களாக மாறிவருகின்றனர். இதனால் சமூக விரோதக் குற்றங்கள் ஏராளமாக வெடிக்கின்றன.  சமூக விழுமியங்கள் சீரழிவதும் சமூகக் கட்டுமானங்கள் நொறுங்கிப்போவதும் பெருமளவு நடக்கின்றன. இவையெல்லாம் ஒரு சுனாமி போல சிவில் சமூகத்தைச் சூழ்ந்து வருகின்றன. இந்த நிலைமைகளைக் கண்டு அலரும் எதிர்க் கட்சிகளும் ஊடகங்களும், நடுத்தர வர்க்கத்தினரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டதாகவும், போலீசையும் பெருந்திரள் கண்காணிப்பையும் அதிகரிக்கக் கோருகின்றனர். உண்மையில் இது, ஒரு கன்னத்தில் அறையும் ஒடுக்குமுறை அரசிடமும் ஆட்சியாளர்களிடமும் போய் மறு கன்னத்தையும் காட்டும்படிச் சொல்வதாகும்.

இந்த நிலைமை எதைக் காட்டுகின்றது? நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத, மீளமுடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதாரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது,  திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து (bankrupted, failed, collapsed and turned into opposite) எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்டன. நாட்டிலுள்ள அரசுக் கட்டுமானங்கள் அனைத்தும்,மேலும் முன்னோக்கி நகர முடியாமல், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டன. ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகிப்போய் விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்?

மத்தியில் பிரதமர், மாநிலங்களில் முதலமைச்சர்கள், மத்திய − மாநில அமைச்சர்கள், மத்திய – மாநில போலீசு அதிகாரிகள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள் ஆகிய உயர் பதவி வகிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இவர்கள் அப்படி இருந்தும் தண்டிக்கப்படவில்லை; மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இவர்களிடமே அரசுப் பொறுப்புகளைக் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது. போலீசு, உளவுத்துறை, நீதித்துறை, இராணுவம், துணை இராணுவம், அதிகார வர்க்கம் போன்ற அரசு அதிகார அமைப்புகளையும் அதிகாரத்தையும் இவர்களே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.

நீதிபதிகளையும் அதிகாரிகளையும்  நியமிக்க வேண்டிய அதிகாரமும் இவர்களிடமே உள்ளது. இவை காரணமாக, இவர்களும் இவர்களைப் போன்ற குற்றவாளிகளும், பல ஆண்டுக் கணக்கில் தண்டனையின்றித் தப்பித்துக்கொள்வதோடு, இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இவர்கள் மேலும் பல குற்றங்கள் செய்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் உச்ச, உயர் நீதிமன்றங்களே தமது பொறுப்புகளைத் தட்டிக் கழித்துத் தாராளமாக நடந்து கொள்கின்றன. சான்றாக, ஏராளமான சாட்சியங்களும் ஆதாரங்களும் இருந்தாலும் குஜராத்தில் இசுலாமியரைப் பெருந்திரளாகக் கொலைசெய்த கிரிமினல் குற்றவாளி பிரதமர் மோடி, அமீத் ஷாவை போன்ற அப்பட்டமான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. ஏராளமாகச் சொத்துக்களைக் குவித்த ஜெயலலிதாவைப்போல, ஜெகன்மோகன் ரெட்டியைப்போல, சரத் பவாரைப் போல, மாயாவதி முலாயமைப்போல, லாலுவைப்போல, செளதாலாவைப்போல, எடியூரப்பாவைப்போல, சந்திரபாபுநாயுடுவைப்போல பல அரசியல்வாதிகள், இயற்கை வளங்களைச் சூறையாடுதல்  இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டுப் பல இலட்சம் கோடி ரூபாய் கள்ளப்பணத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள். இவர்கள் இப்போது ஒரு புது அரசியல் கலாச்சாரத்தைப் பரப்பி வருகிறார்கள். இவர்கள் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள், புகார்கள் வந்தால், அவை அரசியல் அவதூறுகள் என்றும் தண்டிக்கப்பட்டால், அவை தமக்கெதிரான அரசியல்  சதிகள் – சூழ்ச்சிகள் காரணமாகச் செய்யப்படுவதாகக் கூறி, கூலிப்படையை வைத்துப் போராட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

அம்பானி, அதானி, மிட்டல், பிர்லா, டாடா, ஜிண்டால், ரூயா போன்ற பெரும் தரகு முதலாளிகள் அரசுப் பொதுச்சொத்துக்களைக் கொள்ளையடித்தும் பலவித மோசடிகளில் ஈடுபட்டும், பல இலட்சக்கணக்கான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை அந்நியநாட்டு வங்கிகளில் குவித்துவைத்து, ஹவாலா மோசடிகளில் ஈடுபடுகிறார்கள். சட்டமுறைப்படியான நடவடிக்கைகள் எடுத்தால் முதலீடுகளை முடக்கிவிடுவதாக மிரட்டுகிறார்கள். உள்நாட்டு, அந்நியக் கார்ப்பரேட் நிறுவனங்களும், அவர்களின் தரகர்களும் பெருமளவிலான கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் கொள்ளையிலும் கனிமவளக் கொள்ளையிலும் ஈடுபட்டு, காடுகளையும் மலைகளையும் நீர்நிலைகளையும் அழித்து நாட்டையே பாலைவனமாக்கி வருகிறார்கள்.

அதே சமயம், அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் வன்முறை, அடக்குமுறை நிறுவனங்கள் நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாகவும், எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாகவும் உள்ளன.  இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகாரவர்க்க அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு உச்ச நீதிமன்றமே அஞ்சுகிறது. அவர்களுக்கு எதிரான வழக்குகளில் ஏராளமான ஆதாரங்கள் இருந்தும், சட்ட நியதிப்படி தண்டிப்பதற்குப் பதில் தாராளவாத நோக்கில் விடுவிக்கப்படுகின்றனர். காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில், குஜராத், உ.பி., மராட்டியம், பீகார், ஆந்திரா, ஜார்கண்ட், சட்டிஸ்கர் உட்பட பல மாநிலங்களில்  இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள் ஆகிய நிறுவனங்கள்  நடத்தும் போலி என்கவுண்டர் வழக்குகளில் இதற்கான சான்றுகளைக் காணலாம்.

பயங்கரவாத, பிரிவினைவாத பீதி கிளப்பி மக்களுக்கு எதிராக கடுமையான பெருந்திரள் கண்காணிப்பு, அடக்குமுறைகள் ஏவிவிடப்படுகின்றன. அரசியல் அமைப்பு முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள்  ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் – அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு சிவில் சமூகத்தின் மீது ஏறிமிதித்து, முற்றும் முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

நாட்டின் பொருளாதாரமோ அந்நிய, ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த சில பத்தாண்டுகளாக  உற்பத்திப் பின்டைவு, தேக்க – வீக்கம், ஏற்றுமதி – இறக்குமதி வர்த்தகப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாதவாறு கடும் நெருக்கடிக்குள்,  சிக்கலுக்குள் மாட்டிக்கொண்டு விட்டது. அரசே ஆட்குறைப்பும் செய்தும், கட்டணச் சுமையேற்றியும் விலைவாசியையும் வேலையின்மையையும் விண்ணை முட்டுவதாக எகிறச் செய்து ஏழை எளிய மக்களின் தலையிலேறி மிதிக்கின்றது. நாட்டு மக்கள் அனைவரின் குறைந்தபட்சத் தேவைக்கும் மிஞ்சியுள்ள  உணவு தானியங்கள் இந்தியக் கிடங்குகளில் குவித்து வைக்கப்பட்டு, அழுகிப் புழுத்துப் போய்க்கொண்டிருக்கிறது. இருந்தபோதும்,  நாட்டு மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதி மக்கள் பசி – பட்டினியால் வாடுகின்றனர். ஊட்டச் சத்துக் குறைவால் இறப்போரின் எண்ணிக்கை ஆப்பிரிக்க ஏழை நாடுகளுக்கு இணையாக உள்ளது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம் – மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு எல்லாம் கானல் நீராகவே உள்ளன.

அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித் தரக் கடமைப்பட்ட அடிப்படை வசதிகள், தேவைகளான கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிதண்ணீர், சாலைப் போக்குவரத்து, குடியிருப்பு, வீடு, வீட்டுமனை அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடிப்பதற்கான தொழில் செய்யும் வியாபாரச் சரக்குகளாக, சேவைத் தொழில்களாக மாற்றிக் கொடுக்கும் தரகு வேலையைச் செய்கிறார்கள். கொள்ளை இலாபத்துக்காக இடைவிடாது தமது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டே போகும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது கொள்ளைக்காக வங்கி, காப்பீட்டுத் துறை, பங்குச் சந்தைத் தரகுத் தொழில் போன்றவற்றையும் நிதிச் சேவைத் தொழில்கள் என்ற பெயரில் விரிபடுத்திக்கொண்டே போகிறார்கள்.

கார்ப்பரேட் முதலாளிகளின் தரகர்களான அரசும் ஆட்சியாளர்களும் தங்களை பொது ஊழியர்கள்/அரசு ஊழியர்கள் என்று நம்பச் சொல்லுகிறார்கள். ஆனால் நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் துரோகம் செய்து, தாம் ஆதாயம் அடைவதையே தொழிலாகச் செய்து கொண்டிருப்பவர்களை பொது ஊழியர்கள் என்று சித்தரிக்கும் மிகவும் தவறானதொரு, மோசமானதொரு கருத்தாக்கம் பரப்பப்படுகிறது. அவர்கள் மக்களுடைய அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகளைத் தாமே நிறைவேற்றித்தராதது மட்டுமல்ல, மக்களுக்கே சொந்தமான நீர், நிலம், கடல், மணல், பாறைகள், காடுகள், மலைகள், அவற்றுக்குள் புதைந்திருக்கும்  கனிம வளங்கள் அனைத்தையும் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்குத் தாரை வார்க்கிறார்கள்.  கார்ப்பரேட் முதலாளிகளின்  கொள்ளை வெறியால் இந்த இயற்கை வளங்கள் வரம்பில்லாமல் சூறையாடப்படுகின்றன.

கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக மலைவாழ் பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்கள், சிறுவியாபாரிகள், நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் உதிரிப்பாட்டாளிகள் நெசவாளிகள், கைவினைஞர்கள் ஆகியோரின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டுத் துரத்தப்படுகிறார்கள். நம் தொழிலாளர்களின் உழைக்கும் உரிமையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தயவிற்கு விடப்பட்டுவிட்டன. பல இலட்சக்கணக்கான சில்லரை வியாபாரிகளை விரட்டி விட்டு, சில்லரை வர்த்தகத்தை  கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். முன்பேர வர்த்தகம், இணையதள வர்த்தகம், பெரு விவசாயிகளுடன் ஒப்பந்த உற்பத்தி, பெரும் கிடங்குகளில் நவீன வசதிகளுடன் பதுக்கல் ஆகியவற்றின் மூலம் சந்தையைக் கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். நுகர்வோர் மற்றும் நாட்டின் சந்தையை ஆட்டிப் படைக்கும் வல்லமை மிக்கவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் ஆகிவிட்டார்கள்.

நாட்டின் ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்க முடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின்  உச்ச நிலையை எட்டிவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள் தொகையில் முக்கால் பங்குக்கும் மேலான இம்மக்கள் வாழத் தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச் சிறுபான்மையினர் மீது பாசிசப் பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் ஆகியவை பெருகி நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடக்கின்றன. அவற்றுக்கு வழமையான வழக்கு மன்றங்களில் நீதி கிடைக்காதென்பது உறுதியாகிவிட்டது.  புதிய சிறப்புச் சட்டங்களும் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களும் சிறப்பு விசாரனை ஆணையங்களும் அமைக்கப்பட்டு, அவையும் சம்பந்தப்பட்ட வழக்குகளைக் கிடப்பில் போட்டு, ஊற்றிமூடுவதற்கான குறுக்கு வழிகளாகிவிட்டன.

இந்தியாவின் அரைக்காலனிய, பின்தங்கிய அரை நிலவுடைமை சமூக அமைப்பிலும், தரகு அதிகாரவர்க்க முதலாளிய அரசியல் அமைப்பிலும் புகுத்தப்படும் இத்தகைய சீரழிவுப் போக்குகள் இங்கிருந்த அரசியல், பொருளாதார, சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கி விட்டன. இவை ஒரு உச்ச நிலையை எட்டி, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது. எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வுகாண முடியாதவாறு அரசும் சமூகமும் சிக்கித் திணறுகின்றன. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு சிக்கல்கள் எல்லாமே தீர்வு காணமுடியாதவாறு ஒரு முட்டுச்சந்தில் போய் நின்றுவிட்டன. ஒவ்வொரு பிரச்சினையும் இந்த நிலையை எட்டிவிட்டதால், முதலாளித்துவ அறிவாளிகளே  இப்போது ஒரு கட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டுவிட்டதை ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது தீர்வுகாண முடியாத சிக்கல்கள் என்று ஏதோ ஒரு சில மட்டும் இல்லை. எல்லா சிக்கல்களுமே தற்போதைய கட்டமைப்புக்குள் தீர்வுகாண முடியாதவையாக வளர்ந்து விட்டன. அதுமட்டுமல்ல, தற்போதைய கட்டமைப்பு நீடிக்கவும் முடியாத நிலையை எட்டிவிட்டதையே இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் காட்டுகின்றன.

ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியிழந்துவிட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய் மற்றும் நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்டன. ஆனால், அவை வீழ்த்தப்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் திரள் அமைப்புகளும் இயக்கங்களும் அவற்றை வீழ்த்தும் அளவுக்கு இப்போதைக்கு பலம்கொண்டவையாக இல்லை. இந்த நிலையில் மக்கள் செய்யவேண்டியது என்ன? அதற்கான பலத்தை திரட்ட வேண்டும். வேண்டாத அந்தச் சுமையை இனிமேலும் தூக்கிச்  சுமக்க வேண்டியதில்லை. கீழே இறக்கிப்போடவேண்டும். அதிகாரம் அனைத்தையும் மக்களே கைப்பற்றிக்கொள்ளும் மாற்று அரசியல் கட்டுமானங்களைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்!

நமது நாட்டை மீளமுடியாத அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூக நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில் நீடிக்கத் தகுதியற்றவை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தராத, மக்களின் உரிமைகளை மறுக்கும்  அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில்  நீடிக்கத் தகுதியற்றவை. நாட்டின் எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்கும் தீர்வாக மாபெரும்  மக்கள் எழுச்சிகளின் மூலம்  மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்போதுள்ள அரசுக் கட்டமைப்பைக் கலைத்துவிட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான, உண்மையில் ஜனநாயகத் தன்மையுடைய மாற்று அரசுக் கட்டமைவை நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்குப் பொருத்தமான மைய ஏற்பாடாக ஒரு பொது அமைப்பைக் கட்டி, அதற்குப் பொருத்தமான முழக்கங்களை வகுத்து, மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் புதிய, சரியான அவசியமான, அரசியல் கடமையாக அமையும்.

இப்போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஒர் உச்ச நிலையை எட்டிவிட்டதையும், அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்துவிட்டதையும் நமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத்  தட்டிக்கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு எதிராக சவால் விடவும் மக்கள் ஒன்று திரள வேண்டும். அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக்கொள்ளும் அவசியத்தை வலியுறுத்தவேண்டும். இச்செய்தியை மையமாகக் கொண்ட மக்கள் இயக்கங்கள் கட்டி அமைக்கப்பட வேண்டும். அதைவிட்டு தனித்தனி சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளையும் கோரிக்கைகளையும் முழக்கங்களையும் முன்வைத்து, தனித்தனி இயக்கங்களுக்கும் மக்களைத் திரட்டினால் போதாது. இவற்றைச் செய்யக்கூடாது என்று நாம் சொல்லவில்லை. இவை மட்டும் போதாது என்றுதான் கூறுகிறோம். ஆகவே, எல்லாச் சிக்கல்களுக்குமான, கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக மக்களே  அதிகாரத்தைக் கைப்பற்றும் இயக்கமாக மக்கள் அதிகாரம்  – People’s Power என்ற ஒரு பொது அரசியல் அரங்கத்தை, ஒரு பொது அரசியல் அமைப்பைக் கட்டி, அதற்கான முழக்கங்களை வகுத்து, புதிய, சரியான அவசியமான, மைய இயக்கத்தை முன்னெடுக்கவேண்டும். அவ்வாறு செய்வதுதான் நாட்டின் இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் எந்தவொரு முற்போக்கான இயக்கத்திற்குரிய பொறுப்பும் கடமையுமாக இருக்கிறது. 

இந்த உண்மையை மக்களிடையே சொல்லி தற்போதைய கட்டுமானங்களை முழுவதுமாக கலைத்துவிட்டு, நீக்கிவிட்டு புதியஅரசுக் கடடுமானங்களை, மக்கள் அதிகாரத்தைத் தாமே நிறுவிக்கொள்வதற்கான எழுச்சிக்கு மக்களைத் தயாரிக்கவேண்டும். தற்போதைய அரசுக் கட்டுமானங்களுக்கு எதிராக அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள்,  அரசியல் எழுச்சிகளைக் கட்டமைக்க வேண்டும்.  இந்த வளர்ச்சிப்போக்கில் மக்களின் தயார்நிலை, அமைப்பு பலம் ஆகியவற்றைப் பொருத்து பல்வேறு போராட்டங்களை வளர்த்தெடுக்கப்படவேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கும் எழுச்சிக்கும் தலைமை தாங்கும் உறுப்புகள்தாம் தற்போதைய கட்டுமானங்களுக்கு மாற்றாக அமையும்.

அதாவது தற்பேதைய அரசுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தையும் மக்கள் சொத்தையும் தின்றுகொழுப்பவை. இவை நமது நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத பெருஞ்சுமையாக மாறிப்போய்விட்டன. அவை இனிமேலும் நீடிக்கக் கூடாதவையாகி விட்டன. அவற்றை முழுமையாக  மாற்றி அமைப்பதற்கான அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள், அரசியல் எழுச்சிகளை அனைத்துக் கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் நடத்தவேண்டும். அதன் மூலம் தற்பேதைய அரசின் வன்முறை அமைப்புகள் உட்பட அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தையும் செயலிழக்கச் செய்யவேண்டும்.

ஆளும் அருகதை இழுந்துவிட்ட இன்றைய அரசுக் கட்டமைப்புக்கு எதிரான போராட்டங்களினூடாக, அவற்றைத்  தலைமையேற்று நடத்தும் அமைப்புகளை எல்லா கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளாகப் பரிணமிக்கச் செய்யவேண்டும். இந்த மக்கள் அதிகார அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு தொடரும் மக்கள் எழுச்சியின் வளர்ச்சிப்போக்கில் “இடைக்கால (தற்காலிக மாற்று) மக்கள் அரசு” போன்ற பல்வேறு வடிவங்களை உருவாக்க வேண்டும்.

தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க  போலீசு நிர்வாக அமைப்புக்கும் பதிலாக, நேரடியாக மக்கள் பங்கேற்கும் அதிகார, நிர்வாக அரசியல் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக யாரோ சிலர் அரசு நிர்வாகம் உட்பட ஏதாவது நல்லது செய்வார்கள் என்று பொறுப்புகளை ஒப்படைக்க முடியாது. அரசு நிர்வாகத்தை மக்கள் நேரடியாகக் கண்கானிக்கும், தவறுசெய்பவர்களை மக்களே தண்டிக்கும் முறைகள் வேண்டும். அப்பொழுது தான் இலஞ்சஊழல், அதிகார முறைகேடுளைத் தடுக்கமுடியும். இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் “சட்டத்தையும் அதிகாரத்தையும் மக்கள் தம் கையிலெடுத்து கொள்ளக்கூடாது, அதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று ஆளும் வர்க்கத்தினரும் அரசு அதிகார வர்க்க  போலீசு நிர்வாகத்தினரும் திரும்பத் திரும்ப கொதித்துப் போகிறார்கள். அதிகாரம் பற்றிய பிரச்சினைதான், அது யாரிடமிருக்கவேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அதிகாரம் மக்களிடம் தான் இருக்கவேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். இது ஒரு புதிய அரசியல். தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க  போலீசு நிர்வாக அமைப்புக்கும் பதிலாக உருவாக்கப்படவேண்டிய புதிய அரசியல்.

அரசியல் கட்டமைப்பு  நெருக்கடியால் எழும் பிரச்சினைகளுக்கு தேர்தலை இன்னமும் ஒரு தீர்வாக ஆட்சியாளர்கள் நம்பச்சொல்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்று வாய் ஓயாது வாதிடுகிறாகள். ஏன் உறுதியான தன்மை அவசியம், ஏன் உறுதியான தலைமை தேவை, யார் அதைத் தர முடியும் என்றும் வித்தாரம் பேசுகிறாகள். தோற்று, காலாவதியாகிவிட்ட இந்திக் கட்டமைப்புக்குள்ளாகவே தாங்கள் ஆளத் தேர்ந்தெடுக்கப்பட்டால் எல்லாம் சரியாக நடக்கும் என்று ஒவ்வொரு கட்சியும் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றன. தற்போதுள்ள அரசியல் கட்டமைப்பு நெருக்கடிக்கு இவர்களோ, தேர்தலோ தீர்வு அல்ல. கட்டமைப்புக்கு பதிலாக, முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை; ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம்தான் அதை உருவாக்க முடியும்.

இப்பொழுது மக்களுக்கு அண்மையிலுள்ள பிரச்சினைகளுக்கும், மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கும் என்ன தீர்வு? மக்கள் போராட்டங்கள் முன்@னற முன்@னற தற்போதைய அரசுக் கட்டமைப்பைக் கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக என்னென்ன கட்டுமானங்களை வைப்பது என்ற கேள்விகள் எழும்போது, விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற வர்க்க ரீதியிலும் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், மீனவர்கள், பழங்கடியினர், சிறு வணிகர்கள் என்று வெவ்வேறு பிரிவு மக்கள் திரளுக்கான அமைப்புகள் போதாதவையாக உள்ளன. இந்தப் பிரிவுகளைக் கடந்து பெருந்திரளான மக்களைத் திரட்டும் அரசியல் அமைப்பு தேவை. அது அரசியல் ரீதியிலான புதிய அமைப்பாக,  மக்களின் அதிகாரத்திற்காகப் போராடும் அமைப்பாக இருக்கவேண்டும். தற்போதைய கட்டமைப்பு தீராத நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டு விட்டது. இதை நீக்கிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை. அதை ஏற்கும் மக்கள் அனைவரையும் ஓர் பொதுமேடையாகிய மைய அமைப்புக்குள் கொண்டு வந்து, மக்களுக்கான அதிகாரத்தைப் பெற்றுத்தரும், அரசியல் ரீதியிலான இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டியுள்ளது. இவ்வாறுதான் இன்றைய அரசியல் நெருக்கடிகளுக்கான தீர்வுகளை நோக்கி மக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

இப்போதிருந்து ஆளும் வர்க்கங்களின் அரசையும், ஆட்சி உரிமையையும் எதிர்த்து கேள்விக்குள்ளாக்குவதாக, சவால்விடுவதாக மாற்றியமைப்பதாக மைய அரசியல் இயக்கம் மேற்கொள்ள வேண்டும். ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை மாற்றும் வேலையை ஓட்டுக்கட்சி அரசியல் மூலம் செய்யமுடியாது. போர்க்குணமிக்க மக்கள் போராட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சி மூலம் அதனைச்  செய்யவேண்டும் இது மக்களுக்கு எளிதாகப் புரியக்கூடியதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமாகும்

1. நெருக்கடிகள் முற்றி, பொருளாதாரம் வெடித்துச் சிதறும் நிலையை எட்டியுள்ளது :

பிரிட்டிஷ் காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து 1947 அதிகார மாற்றத்துக்குப் பிறகு, 1962 இந்தியா – சீனப் போரைத் தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்திய அரசியல், பொருளாதார அமைப்பின் பலவீனங்கள் அப்பட்டமாக வெளிப்படத் தொடங்கிவிட்டன. ஒரு குறுகிய காலத்திலேயே இந்தியப் பொருளாதாரம் தேக்க வீக்க நிலையை எட்டியது. 1990-களின் தொடக்கத்தில் பொருளாதார நெருக்கடி மேலும் கடுமையாகியது. வளைகுடாப் போர், பெட்ரோலிய எண்ணெய் இறுக்குமதிச் செலவு ஊதிப்பெருகியது, ஏற்றுமதி வீழ்ச்சி, அன்னியச் செலாவணி வற்றிப்போனது, முதலீட்டாளர்கள் சந்தையிலிருந்து மூலதனத்தைத் திருப்பி அள்ளிக்கொண்டு போனது ஆகியவை காரணமாக நடப்பு நிதிப் பற்றாக்குறை மிகையளவுக்குப் பெருகியது. இந்தியப் பொருளாதாரமே திவாலாகிவிடும் நிலையை எட்டியது. மத்திய அரசுபுதிய கடன்கள் பெறுவதற்கு ரிசர்வ்வங்கி தடையும் விதித்தது.

நாடு முழுவதும் பீதியும் ஆத்திரமும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. இந்தியாவைப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்பதற்காக மேலும் கடனை வாங்கியது. அதோடு நாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்துக்கான பாதை என்கிற பெயரில் ஏகாதிபத்தியம், உலக வங்கி, மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியவை திணித்த உலகமயமாக்கம், மறுகாலனியாக்கம், பொருளாதார சீரமைப்பு, கட்டுமானச் சீரமைப்பு முதலிய நிபந்தனைகளை காங்கிரசின் நரசிம்மராவ் அரசாங்கம் தண்டனிட்டு ஏற்றது. அப்போது புகுத்தப்பட்ட தனியார்மயமாக்கம், தாராளமயமாக்கம், உலகமயமாக்கம் ஆகிய புதிய பெருளாதாரக் கொள்கை, அந்நிய, உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளியக் கொள்ளை மற்றும் மறுகாலனியாக்கம்  ஆகியவை மூன்று பத்தாண்டுகளுக்குள் முன்பைவிட மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவந்து விட்டன. 2007ஆம் ஆண்டு தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் முழு வீச்சில் இந்தியாவையும் எட்டியது.

அதே சமயம், ரூபாய் மதிப்பின் கடும் வீழ்ச்சி, அந்நிய செலாவணிக்  கையிருப்புச் சரிவு, தொழில் வளர்ச்சிப் பின்னடைவு, நிதிப் பற்றாக்குறை பெருகியது; அந்நிய மூலதனத்துக்கு நாட்டைப் பெருமளவு திறந்து விட்டும் வெளிநாடுகளுக்குக் காவடி தூக்கியும் பொருளாதாரத் தேக்கநிலை மாறவில்லை. இது குறித்து அப்போது நாட்டை ஆண்ட மன்மோகன் – மான்டேக்சிங் – சிதம்பரம் கும்பல் அப்பட்டமாக ஒப்பாரி வைத்தது. இவை அனைத்தும் புதிய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கிய இந்தோனேசியா, மெக்சிகோ, கிரீஸ் முதலான பல நாடுகளின் பொருளாதாரம் திவாலாகிப் போனதைப் போல இந்தியாவிலும் நடப்பதற்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்று காட்டின. பொருளாதார வளர்ச்சியில் சீனத்துடன் போட்டி போடுவதாகக் கூறப்பட்ட இந்தியாவின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடும் வீழ்ச்சி கண்டது. அதைத் தொடர்ந்து பொதுவில் ரூபாய் மதிப்பைக் குறைக்கும்படி நிர்பந்திக்கப்பட்டும், இந்தியப் பொருளாதாரமே திவாலாகி விடும் நிலையை எதிர் நோக்கியிருந்தது.

இந்தியப் பொருளாதாரத்தில் நீடித்த தேக்க – வீக்கம், பணவீக்கம் காரணமாக விலையேற்றம், ஏற்றுமதி இறக்குமதி சமன்பாட்டில் டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, உற்பத்தித் துறையில் கடும்வீழ்ச்சி, ஆலை மூடல்கள் ஆகிய நெருக்கடிகள் தொடங்கிய போதே பெரும் ஊழல் விவகாரங்கள் அம்பலப்பட்டு நாடே நாறியது. இந்த ஊழல் விவகாரங்கள் பலவும் மூடிமறைக்கப்பட்டன அல்லது அவை தொடர்பான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டன. இவற்றினிடையே நாட்டு மக்கள் எதிர்த்தபோதும் மறுகாலனியாக்கம் மற்றும் புதியபொருளாதாரக் கொள்கைளை அமலாக்குவதில் சோனியா – மன்மோகன் – மான்டேக்சிங் – சிதம்பரம் கும்பல் அழுந்தி நின்றது. இதன் விளைவாக அக்கும்பலின் அரசியல் வீழ்ச்சியை நாடே கண்டது.

அடுத்து வந்த ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க மோடி கும்பலின் ஆட்சியில் அன்னிய, உள்நாட்டு முதலீடுகளைத் தாராளமாக அனுமதித்து, வரி வட்டிக் குறைப்பு செய்து, சந்தையைப் பரவலாக்கினால் தமது தொழில்வளர்ச்சி சீராகும், அதற்கான அரசியல், பொருளாதார நிலைமைகள் உறுதியானதாக அமையும் என்று மார்வாரி, பார்சி, சிந்தி, குஜராத்தி பனியா தரகு முதலாளிகள் நம்புகின்றனர். ஆனால், கார்ப்பரேட் தரகு முதலாளிகளை இழுவை எந்திரமாகக் கொண்டு இயங்கும் பொருளாதாரத்தில் இலாபவெறியும் லஞ்சம் – ஊழலுமே அதன் எரிசக்தியாக இருக்கிறது. முதலீட்டுக்கான ஊழலைச் சாதகமாக்கி விடுவதனால், அந்நிய முதலீடுகளுக்கான தாராள அனுமதி வழங்குவதனால் பொருளாதாரச் சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதனால் பொருளாதாரத்தில் நேர்ந்துள்ள பின்னடைவை சரிசெய்து, முன்னேற்றி விடமுடியும் என்கிறார்கள். சீனாவைப்போல நுகர்பொருள் உற்பத்தியைப் பன்மடங்கு பெருக்குவதன் மூலம் நாட்டின் மொத்த உற்பத்தியை சாதனையளவுக்கு அதிகப்படுத்தி, நாட்டை பொருளாதார வல்லரசாக்கிவிட முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள்.

ஆனால், உலகச் சந்தையில் சீனா, வங்கதேசம், மற்றும் கிழக்காசிய, தென்அமெரிக்க நாடுகளின்  மலிவான உழைப்புச் சக்தி, மேலைநாடுகள் பின்பற்றிய வர்த்தகக் காப்புக்கொள்கை, உலகப் பொருளாதார நெருக்கடி ஆகியவை காரணமாக ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் விரைவில் வற்றிப்போயின. இனி உள்நாட்டுச் சந்தையை நம்பியே இந்தியப்  பொருளாதாரம் சுழலவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் தொகையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருந்தபோதும், புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்டபோது அமெரிக்காவைப் போன்று இந்தியாவில் வாங்கும் சக்தி குறிப்பிடத்தக்க அளவு இருந்தபோதும், விரைவிலேயே அது வற்றிப்போய்விட்டது. குறிப்பாக, இந்த நாட்டின் பெரும்பான்மை மக்கள் விவசாயிகள். அவர்களின் பொருளாதார வலிமையைத்தக்க வைத்து, வளர்ப்பதற்குப் பதிலாக, புதிய பொருளாதாரக் கொள்கை விவசாயத்தைத் திவாலாக்கியது. பெருமளவிலான மக்களை விவசாயத்திலிருந்து கிராமப்புறங்களில் இருந்தும் வெளியேற்றியது. இலட்சக்கணக்கான சிறு, குறு, நடுத்தர விவசாயிகள் மட்டுமல்ல பணக்கார விவசாயிகளும்கூட தீராக்கடனில் சிக்கிக்கொண்டு, பலர் தற்கொலை செய்துகொண்டனர். கூலி, ஏழை விவசாயிகள் விவசாய வேலையின்றி கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்பட்டனர். இலாபகரமாக இல்லையென்றால், விவசாயிகள் தமது நிலத்தை விற்றுவிட்டு நகர்ப்புறங்களுக்கு வந்துவிடவேண்டும் என்றும், நகர்ப்புறங்கள் பெருகுவதே பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம் என்றும் நாட்டின் பிரதமர்கள் உபதேசித்தார்கள்.

அரசு, கார்ப்பரேட் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகிய அமைப்பு ரீதியிலான மாதச் சம்பளக்காரர்களுக்கு ஊதியம் பன்மடங்கு உயர்த்தப்பட்டது. ஏராளமாகக் கடன்கள் வாரிவழங்கப்பட்டன. இவ்வாறு குறுகிய அளவு விரிவாக்கப்பட்ட வாங்கும் சக்தியை, உலகமயமாக்கம் காரணமாக இந்தியச் சந்தையை நிரப்பிய அந்நியக் கார்ப்பரேட் நிறுவனங்களின் நுகர்பொருட்கள், அவர்களே பரப்பிய கலாச்சாரத்தின் விளைவாகக் கபளீகரம்செய்துவிட்டன. இந்தியச் சந்தை விரைவிலேயே ஒரு நிறைவு நிலையை எட்டியது. நாட்டில் 10, 15 சதவீதமேயுள்ள அரசு ஊழியர்கள்,  மேல்தட்டு வர்க்கத்தினரையே பெரும்பாலும் சார்ந்த  நுகர்பொருட்களுக்கான பொருளாதாரமாக சிதைக்கப்பட்டிருந்த நிலையில், இந்திய உற்பத்திப் பொருட்களுக்கான வெளிநாட்டு, உள்நாட்டு சந்தைகள் இரண்டுமே சுருங்கிப்போய் விட்டது. இதன் விளைவாக பொருளுற்பத்தியில் தேக்கமும் பின்னடைவும் எற்பட்டு, கூடவே, பணவீக்கம், அந்நியச் செலாவணிப் பற்றாக்குறை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கம் ஆகியவையும் சேர்ந்து இந்தியப் பொருளாதாரம் தீவிர நெருக்கடியில் சிக்கிக்கொண்டது.

இந்த அடிப்படைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாற்று வழி எதுவுமின்றியே மோடி தலைமையிலான பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். கும்பல் நாட்டின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் சாதிக்கப்போவதாக வாக்களித்தது. ஆனால், அக்கும்பல்  ஆட்சிக்கு வந்ததிலிருந்து “மன்மோகனாமிக்சின்” மறுஅவதாரம்தான் “மோடினாமிக்ஸ்” என்பதை நிரூபிக்கும் வகையில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவ ஆயுத உற்பத்தி, வங்கி, காப்பீடு, சில்லறை வணிகம் ஆகியவற்றில் அன்னிய முதலீடு, தொழில் கூட்டுக்கு  இருந்த தாமதங்களை. தடைகளை நீக்கி மக்கள் வாழ்வுரிமைகளை மேலும் பறிப்பதற்கான இலக்குகளை குறித்துவிட்டது.

 2. தேர்தல் அரசியல் கட்டுமானச் சீரழிவு :

இப்போது எந்த தேர்தல் அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டாலும்,தேசியம், திராவிடம், சோசலிசம், முற்போக்கு, சமூகநீதி, காந்தியம், மனிதநேயம் முதலான கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் எதுவும் கிடையாது. அவை எல்லாவற்றிலும் பிழைப்புவாதமும் இலவசங்களும்தாம் செல்வாக்கு செலுத்துகின்றன. தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் வந்த பிறகு, உள்நாட்டு, தேசங்கடந்த தரகு முதலாளிகள், ஏகாதிபத்திய ஏகபோக கார்ப்பரேட் முதலாளிகளைச் சார்ந்த பொருளாதாரமே வளர்ச்சி, முன்னேற்றத்துக்கான ஒரே பாதை என்பதாக நாடாளுமன்றக் கம்யூனிசக் கட்சிகள் உட்பட எல்லாத் தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கை, கோட்பாடாகி விட்டது. முன்பு இராஜாஜி  – காமராசர் காலத்தில் சாதி, மதத் தலைவர்கள்  தேர்தல் அரசியல் கட்சிகளில் ஆதிக்கம் வகித்தனர்; அவர்களோடு இப்போது, எந்தவழியிலாவது பணம் – செல்வம் – சொத்துச் சேர்ப்பது, சுகபோகங்களில் புரள்வது, ஆடம்பரங்களில் மூழ்கித் திழைப்பது, பதவிகளில் ஒட்டிக்கொண்டிருப்பது என்பதையே வாழ்வின் இலட்சியமாகக் கொண்டவர்களே எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளின் தலைவர்களாகவும் பிரமுகர்களாகவும் உள்ளனர். இதற்கேற்ப ஒட்டுமொத்த சமுதாயத்தையே பண்பாட்டு ரீதியில் சீரழிக்கிறார்கள். இவற்றுக்காக எல்லாவிதக் கிரிமினல் குற்றச் செயல்களிலும் ஈடுபடுகிறார்கள்.தற்போது நிலவும் கட்டமைபுக்குள் இதைத் தகர்ப்பதற்கான வழிவகையின்றி நாடு திணறுகிறது.

தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கும் தொகையைத்தான் வேட்பாளர்கள் செலவுசெய்யவேண்டும், வாக்காளர்களுக்குப்பணம் கொடுப்பதோ, தேர்தல் தில்லுமுல்லுகளில் ஈடுபடுவதோ, சாதி, மத அடிப்படையில் வாக்குச் சேகரிப்பதோ கூடாது போன்ற கட்டுப்பாடுகள் எல்லாம் வெறும் கண்துடைப்புகள்தாம் என்பதை இப்போது மக்கள் அனைவரும் அறிவர். உள்ளூராட்சித் தலைவர்கள் முதல் பிரதமர் வரை எல்லாமட்டங்களிலும் உள்ளவர்கள் அரசு ஒப்பந்தக்காரர்கள், மணல் கொள்ளையர்கள், அலைக்கற்றை, நிலக்கரி முதலிய இயற்கை வளக்கொள்ளையர்கள் மற்றும் அந்நிய, உள்நாட்டுக் கார்ப்பரேட் கொள்ளையர்களுடன், கிரிமினல் குற்றக்கும்பல்களுடன் நெருங்கிய கள்ளக்கூட்டு வைத்துள்ளவர்கள். “மக்கள் பிரதிகள்” மட்டுமல்ல போலீசு, நீதிபதிகள் என எல்லோருமே விலைபோகப் கூடியவர்கள். ஜெயலலிதா முதல் நரசிம்மராவ், மன்மோகன்சிங் வரை எம்.பி.களை விலைக்கு வாங்குவதற்குக் கொடுக்கப்பட்ட கோடி கோடியான பணம் நாடாளுமன்றத்தில் பகிரங்கமாகக் கொட்டப்பட்டபோதும், சர்வ கட்சியினரும் ஹவாலாப் பணம் பெற்றதாக ஜெயின் டயரி பிடிபட்டபோதும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. ஹெலிகாப்டர், நீர்மூழ்கிக் கப்பல், பீரங்கிகள், போர் விமானங்கள் என்று இராணுவக் கொள்வனவுகள் முதல் அரசுத் திட்டங்கள் எவையும் இலஞ்ச – ஊழல், அரசுச் சொத்துக்களைச் சூறையாடப்படாதவை இல்லை. அரசியல்வாதிகள் – அதிகாரிகள் – போலீசுக்காரன்கள் அடங்கிய முக்கூட்டு நாட்டின் பேராபத்துக்களில் ஒன்றாகிப் பல ஆண்டுகளாகிவிட்டன.

தேர்தல் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும், தேர்தல் அரசியல் கட்டுமானங்கள் மட்டுமே சீரழிந்து போயுள்ளதாகவும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளதாகவும் பலர் எண்ணுகிறார்கள். ஆனால், இவை மட்டுமின்றி, அரசின் ஒட்டுமொத்தக் கட்டுமானங்களுமே சீரழிந்து போயுள்ளன. கட்டமைப்பு முழுவதுமே நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. அவை இனிமேலும் நீடிக்க முடியாதனவாகவும் சீர்திருத்தி, நாட்டின் தேவைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளவே முடியாத நிலையையும் எட்டிவிட்டன. அரசும் ஆட்சியாளர்களும் ஆளும்வர்க்கங்களும் ஆளமுடியாமல் போனதையும், ஆளும் நியாயவுரிமையை இழந்துவிட்டதையும், ஆளத்தகுதியிழந்து போயுள்ளதையும் காண்கிறோம். ஆளும் வர்க்கங்களுக்குள்ளும் கட்டமைப்புக்குள்ளும்கூட கடுமையான சிக்கல்களும் நெருக்கடிகளும் வந்துவிட்டன. இரண்டு இலக்கப்  பொருளாதார வளர்ச்சியை எட்டிவிட வேண்டும், அதை நீடித்திருப்பதாகச் செய்யவேண்டும், அந்நிய முதலீடுகளை பெருமளவு ஈர்க்க வேண்டும் என்பது ஆளும்வர்க்கங்களின் நோக்கம். ஆனால் அதை அடைவதிலும் சிக்கல்களும் தடைகளும் ஏற்பட்டுள்ளன.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் முதலான புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாகத் தோன்றிய ஏராளமான புதிய தரகு முதலாளிகள் எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளிலும் செல்வாக்குச் செலுத்துபவர்களாகவும் முக்கியப் பிரமுகர்களாகவும் உள்ளனர். இவர்களில் சிலர் சொந்தமாக அரசியல் கட்சிகளையும் வைத்துக் கொண்டுள்ளார்கள். இப்படிப்பட்ட புதிய தரகு முதலாளிகளும் தாம் குவித்து வைத்திருக்கும் கருப்புப் பணத்தை வாரி இரைத்து தங்களுக்கும், தமது பினாமிகளுக்கும் நாடாளுமன்ற  சட்டமன்ற வேட்பாளர் சீட்டுக்களையும், மேலவை உறுப்பினர், மற்றும் மந்திரி பதவிகளையும் விலைக்கு வாங்குகிறார்கள். தேர்தல் அரசியல் கட்சிகள் மூலமாக இல்லாமல் நேரடியாகவே, புதிய தரகு முதலாளிகள் மட்டுமல்லாமல் காப்பரேட் முதலாளிகளும் இவ்வாறு செய்கிறார்கள். எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளுமே தமது வேட்பாளர் தேர்வின்போது இலஞ்சம் வாங்கிக்கொள்வதோடு, தேர்தல்களில் ஒவ்வொருவரும் எவ்வளவு செலவு செய்யமுடியும் என்ற அடிப்படையிலேயே சீட்டுகள் தருகின்றன. அதனால், இப்போது வேட்பாளர்கள் அறிவிக்கும் தமது சொத்து மதிப்பு பிரமிப்பூட்டுமாறு கோடிக்கணக்குக்கு எகிறிவிட்டது. அடுத்து இப்போது தேர்தல்களில் போட்டியிடுவதற்கான முக்கியத் தகுதிகளாக பணத்தோடு சாதி, மதச் செல்வாக்கும் அடியாள் பலமும் கிரிமினல் குற்றவழக்குகளின் எண்ணிக்கையும் உள்ளன.

எல்லா தேர்தல் அரசியல் கட்சிகளுமே  பிழைப்புவாத, மறுகாலனியாக்க அடிமைக் கட்சிகளாகவும், புதிய தரகு முதலாளிகளாகவும் உள்ளதால் அவர்களிடையே குறிப்பிட்டுச் சொல்லும்படியான கொள்கை வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஆனால், தேர்தல்களில் வெல்லவும் பதவிகளைக் கைப்பற்றவும் தீராத நாய்ச் சண்டையில் ஈடுபடுகின்றன. இதனால் சாதி, மத, இன, மொழி ரீதியாகப் பிளவுபட்டுள்ள இந்திய சமூகத்தில் அனைத்து மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாக எதுவும் நீடித்திருக்க முடியவில்லை. அதனால், தேர்தல் அரசியல் கட்சிகள். சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொள்கின்றன. சாதி, மத வெறியைத் தூண்டி அல்லது ரவுடிகள் பலம், பணபலம் (வோட்டுக்குப் பணம்) ஆகியவற்றை வைத்து ஆட்சியைப் பிடிக்கின்றனர்.  அதேசமயம் நாடாளுமன்றமும், சட்ட மன்றங்களும், நகரவைகளும் தேர்தல் அராஜகங்களால் நிரம்பி ஜனநாயகம் என்பதே கேலிக்கூத்தாகவும், திவாலாகிப் போனவையாகவும்  உள்ளன.

3. கட்டுமானச் சீரமைப்பு என்ற பெயரில் புதிய அதிகார மையங்களாக சிந்தனைக் குழாம்கள், அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், குடிமைச் சமூக அமைப்புகள்

நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களும் மற்றும் பிற மக்கள் பிரதிநிதித்துவப் போலி ஜனநாயக அமைப்புகளும்கூட ஓரங்கட்டப்பட்டு, கட்டுமானச் சீரமைப்பு என்ற பெயரில் ஆளும் வர்க்கங்கள் தற்போதைய அரசியல் கட்டுமானங்களுக்குப் புதுப்புது மாற்றுக்களை உருவாக்கி வருகின்றன. ஏகாதிபத்திய உலகமயமாக்கம் திணித்த புதிய தாராளமயப் பொருளாதாரக் கொள்கை, அரசியல் கட்டுமானச்  சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இந்த மாற்றங்கள்  கொண்டுவரப்பட்டன. இதனால்தான், இந்தியாவில் ஆட்சிகள் எவையானாலும் அவை அமலாக்கிவரும் புதிய பொருளாதார, புதிய கட்டுமானச் சீரமைப்பின் முக்கியமான கூறாக அரசின் முறைசாரா அமைப்புகள் உருவாக்கப்படுகின்றன.

அதேசமயம், அரசின்முறை சார்ந்த அமைப்புகளின் மிக முக்கிய அங்கமாகவும் ஊழலின் ஊற்றுக் கண்ணாகவும் இருக்கும் அதிகார வர்க்கத்தை இந்தக் கட்டுமானச் சீரமைப்பு ஒழிப்பதில்லை. மாறாக, அதற்கு மேலும் மேலும், அதிகாரம் கொடுக்கப்படுகிறது. ஓய்வுபெற்ற அதிகார வர்க்க நபர்களை ஒழுங்குமுறை ஆணையங்கள், சிறப்பு ஆலோசகர்கள், நிபுணர் குழுக்கள் என்ற பெயரில் சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்துக்கு மேல்நிறுத்தப்படுகிறார்கள். மேலும்பலமுன்னாள் அரசு அதிகாரவர்க்கத்தினர் தரகு முதலாளிகளின், பன்னாட்டுத் தொழிற்கழகங்களின் கார்ப்பரேட் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளாகவும், ஆலோசகர்களாகவும்பதவியளிக்கப்படுகிறார்கள். இவ்வாறு ஓய்வுபெற்ற பிறகும் அரசுக்குள்ளும் வெளியிலும் இருந்து   கார்ப்பரேட் தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்தியப் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஊழியம் செய்து எல்லா இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகளுக்குமான ஊடகமாகச் செயல்படுகிறார்கள்.

மத்திய, மாநில அரசுகளின் அரசியல், பொருளாதாரம், சமூக, மருத்துவம் சுகாதாரம், கல்வி – பண்பாடு உட்பட அனைத்து அரசுத் துறைகளிலும் ‘கொள்கை’ முடிவெடுக்கவும் ‘திட்டங்கள்’ வகுக்கவும் பொறுப்பேற்கும் வகையில் புதிய கட்டுமானங்கள் உருவாகியிருக்கின்றன. அவற்றில் முக்கியமானதாக சிந்தனைக் குழாம்கள் (‘திங்க் டாங்க்ஸ்’): அதாவது ஆலோசனை வியாபாரிகள். சிந்தனைக் குழாம்கள் (அல்லது ஒரு கொள்கை வகுப்புக் கழகம், ஆய்வுக் கழகம் மற்றும் பிற) என்பவை சமூகக் கொள்கைகள், அரசியல் போர்த்தந்திரம், பொருளாதாரம், இராணுவம், தொழில்நுட்பம், பண்பாடு முதலான துறைகளில் ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் செய்யும் ஒரு அமைப்பாகும். அரசுக்கும், தொழிலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தேவையான ஆய்வுகளும், ஆலோசனைகளும் கட்டணம் பெற்றுக்கொண்டு வழங்கும்  சேவை நிறுவனங்கள். இந்திய அரசின் அயலுறவுத்துறை, போலீசு, இராணுவத்துறை, பல்கலைக் கழகக் கல்வி, உணவுப் பதனிடும் திட்டங்கள், வேலைவாய்ப்புத் திட்டங்கள், சட்டச் சீர்திருத்தங்கள், தொழிலுறவு, அரசு நிர்வாக சீர்திருத்தங்கள், அவற்றைக் கனினிமயமாக்கம்நவீனமயமாக்கம் செய்தல் இப்படிப்பன்முகப்பணிகளில் ஆலோசனைகள் வழங்குவதில் இந்தச் சிந்தனைக் குழாம்கள் ஈடுபடுகின்றன.

சிந்தனைக் குழாம்கள் எப்போதும் தனித்துச் செயல்படுவதில்லை. சிந்தனைக் குழாம்களும் அரசுசாராதொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமை சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் செயல்படுகின்றன. சிந்தனைக் குழாம்களுக்குத் தேவையான கள ஆய்வுகள் செய்வது, தகவல்களைத் திரட்டித் தருவது, அவை பரிந்துரைக்கும் கொள்கைளையும், திட்டங்களையும் அரசே ஏற்கச் செய்யும் அழுத்தம் கொடுக்கும் இயக்கங்களைக் கட்டமைப்பது, அவற்றின் அமலாக்கத்தில்  பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது என்று பலவாறு அரசுசாராத் தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமை சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

பல்வேறு பிரிவு மக்களுடைய அடையாள அரசியல் சார்ந்த பகுதிக் கோரிக்கைகள், வாழ்வியல் உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் பிற சமூகச் சீர்திருத்தங்களுக்கான செயல் திட்டங்களைத்தாம்  அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள்(NGOs) முதன்மையாகக் கொண்டிருந்தன. பொதுவில் அரசியல் மற்றும் அரசியல்வாதிகளுக்கு எதிராக மக்களிடையே நிலவும் அரசியலுக்கு அப்பாற்பட்ட பிழைப்புவாத நோக்கிலான கருத்தாக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முன்பு மக்களைத் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் திரட்டி வந்தனர். ஆனால், இவை அவற்றின் ஏகாதிபத்திய எஜமானர்களுடைய பன்னாட்டு அரசியல் நலன்களுக்கு இப்போது போதுமானவையாக இல்லை. எனவே, அரசுசாராத் தொண்டு நிறுவனங்களையும் உள்ளடக்கிய குடிமைச் சமூகங்கள் (Civil Society Organisations) என்ற புதிய மேடைகளை ஏகாதிபத்தியக் கொள்கை வகுப்பாளர்கள் கையிலெடுத்துக் கொண்டார்கள். அவர்கள் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள் கடந்த காலத்தில் செயல்படுத்தி வந்த அரசியல் வரம்புகளைத் தாண்டி, தற்போதுள்ள நிலைமைகளுக்குத் தகுந்தாற்போன்ற அரசுக் கட்டுமானங்களுக்கு அரசியல் மாற்றை ஏற்படுத்திக் கொடுக்கவும், அரசு அமைப்புக்குள்ளாகவே நுழைந்து அதன்கொள்கை வகுப்பு அமலாக்க அமைப்புகளில்பங்கேற்கவும் குடிமைச் சமூகங்கள் என்ற அரசியல்அமைப்புக் கருவியை ஏற்படுத்திக் கொண்டார்கள். குறைவளர்ச்சியுள்ள நாடுகளில் ஆட்சி மாற்றம் (Regime Changes) என்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்  உலகப் போர்த் தந்திரத்தில் குடிமைச் சமூகங்கள் முக்கிய அரசியல்அமைப்புக் கருவிகளாக உள்ளன.

தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்கிற புதிய பொருளாதாரக் கொள்கையும், அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்க நோக்கிலான மறுகாலனியாக்கம் என்கிற அரசியல் கொள்கையும் திணிக்கப்பட்ட பிறகு, இந்நாடுகளில் அரசின் சமூக, அரசியல், பொருளாதாரப் பாத்திரம் குறித்து புதிய விளக்கங்களும் வரையறைகளும் அளிக்கப்படுகின்றன.  “பொதுவில் நாட்டின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு  முதலான சிலவிவகாரங்கள் தவிர சமூகம், மதம், கல்விமருத்துவம், பண்பாடு போன்றவற்றிலோ, குறிப்பாக மக்கள் நலன், திட்டமிடுதல், வளர்ச்சி என்ற பெயரில் நாட்டின் பொருளாதார விவகாரங்களில் அரசு தலையீடு செய்யக்கூடாது. இந்த விவகாரங்களைச் சந்தையும் சமூகமும் மூலதன நிர்வாகிகளும் (அதாவது கார்ப்பரேட் முதலாளிகளும்) கவனித்துக்கொள்வார்கள்.”

சாரமாகச் சொல்வதானால், அரசின், கடமைகள், பணிகள், வரம்புகள் குறித்த ஏகாதிபத்திய கைக் கூலிகளது பிரச்சாரம் பின்வருமாறு: “கார்ப்பரேட் தரகு முதலாளிகள், ஏகாதிபத்தியப் பன்னாட்டுத் தொழிற் கழகங்களின் நலன்களுக்கேற்ப செயல்படும் எலும்புக் கூடு போன்றதாக மட்டுமே அரசு அமைப்பு இருக்க வேண்டும். இந்த வரம்பைத் தாண்டி அவற்றின் செயல்பாடுகளில் தலையிடுவதும் குடிமை சமூகத்தின் பொருளாதார  தொழில் உரிமைகளை மறுப்பதும் எதேச்சதிகாரமும் ஆகும்.”  அரசியல் கட்சிகளின், தலைவர்களின் இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகள், நம்பிக்கை துரோகங்கள், கிரிமினல் குற்றங்கள்முதலான சீரழிவுகள், அவர்களுக்கெதிரான மக்கள் வெறுப்பு ஆகியன மேற்படிப் பிரச்சாரத்துக்கு சாதகமாக அமைகின்றன. இவ்வாறு அரசும், அரசியல்கட்சித் தலைவர்களும் இழிவுற்று, சிறுமைப்பட்டுப் போகும் நிலையில், நாட்டின் அரசியல், பொருளாதார வாழ்வில் சிந்தனை குழாம்கள், குடிமைச் சமூகங்களின் பங் குபாத்திரம் அதிகரித்தன.

சிந்தனைக் குழாம்கள், குடிமை சமூகங்கள்,  அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் முதலான இவையெதுவும் பலரும் நம்புவதுபோல தனிநபர் முன்முயற்சியால் தன்னியல்பாக உருவானவை அல்ல. பன்னாட்டு தொழிற்கழகங்கள், உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற நிறுவனங்கள், ஏகாதிபத்திய அரசுகளின், உள்நாட்டுவெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் அரசியல், இராணுவ உளவு, சமூக, கல்விபண்பாட்டு ஆய்வு நிறுவனங்களால் திட்டமிட்டு உருவாக்கி, நெறிப்படுத்தி, இயக்கப்படுபவை. அவற்றின் அமலாக்கத்தில் பங்கேற்பது மற்றும் அந்த அடிப்படையிலான அரசின் சட்ட திட்டங்கள் மக்களுக்கு ஏற்புடையவைதானா, இல்லையென்றால் மாற்றுக்களைப் பரிந்துரைப்பது என்று பலவாறு அரசுசாரா தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய குடிமைச் சமூக அமைப்புகளும் சேர்ந்துதான் இயங்குகின்றன.

கார்ப்பரேட் அறக்கட்டளைகளின் பண மூட்டைகளால் ஊட்டிவளர்க்கப்பட்ட இந்தச் சிந்தனைக் குழாம்கள், என்.ஜி.ஓக்கள், குடிமைச் சமூகங்கள் ஆகியவை உலகின் மூலை முடுக்கெல்லாம் ஊடுருவியிருக்கின்றன. இவை புரட்சியாளர்களாக உருவாகும் ஆற்றல் கொண்டவர்களை சம்பளம் வாங்கும் களப்பணியாளர்களாக, ஆய்வாளர்களாக மாற்றின. கலைஞர்கள், அறிவுஜீவிகள், பேராசிரியர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் திரைத்துறைக் கலைஞர்களை பெருநிதியால் வருடிக்கொடுத்து, முற்போக்கான கருத்துகள், விவாதங்களில் இருந்து திசை திருப்பின. அடையாள அரசியல், மனித உரிமைகள் என்னும் பெயரில் முன்வைக்கப்படும் பன்மைப் பண்பாட்டுவாதம், பின்நவீனத்துவம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச்சூழல், பொதுவான சமூக முன்னேற்றம் போன்ற கருத்தாக்கங்களை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லுகின்றன. போர்க்குணமிக்க போராட்டங்களிங் ஈடுபடும் இளைஞர்களை அரசுக்கும் ஆளும் வர்க்கங்களுக்கும் ஆதரவாக அறவழி, காந்தியவழி என்று முடக்குகிறார்கள்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான டாலர்கள் பணம் புரளும் பல லட்சம் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், அவற்றில் நமது நாட்டில் மட்டும் பலபத்தாயிரம் அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், குடிமைச் சமூகங்கள் உள்ளன. அவை மிகப்பெரும்பாலும் ஐரோப்பியஅமெரிக்க ஜப்பானிய அரசு மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து பெருந்தொகையை ஆண்டுதோறும் பெறுபவை. பெரிய சிந்தனைக் குழுமங்களின், அரசுசாராத் தொண்டு நிறுவனங்களின், குடிமைச் சமூகங்களின் நிர்வாகிகள் எல்லாம் கொள்ளை இலாபமடிக்கும் ஏகபோகக் கார்ப்பரேட் தொழில் கழகங்களின் தலைமை நிர்வாகிகளுக்குச் சமமான ஊதியம், சொகுசுக் கார், அடுக்குமாடி பங்களாக்கள் வசதிகளும் பெறுகிறார்கள். அவர்கள் பல்வேறு நாடுகளில் நடக்கும் சர்வதேச மாநாடுகளுக்கு விமானங்களில் பறக்கிறார்கள்; பன்னாட்டு கார்ப்பரேட், நிதி நிறுவனங்களின் உயர்அதிகாரிகளின் தோளோடு தோள் உரசிக் கொண்டு உலகின் பல நாட்டு அரசுகளின்கொள்கை முடிவுகளை விவாதிக்கிறார்கள், அவற்றுக்கு ஆலோசனைகள் வழங்குகிறார்கள். இந்தக்கொள்கை முடிவுகள் பெரும்பாலும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாகவும் அந்நாடுகளின் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு எதிரானவையாகவும் இருக்கின்றன.

அதனால்தான் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் ஆகிய புதிய பொருளாதாரக் கொள்கைகளையோ, உள்நாட்டு வெளிநாட்டுக் கார்ப்பரேட் கொள்கைகளையோ, மறுகாலனியாக்கம் என்ற ஏகாதிபத்திய மேலாதிக்கத்தையோ எதிர்த்து சிந்தனைக் குழாம்கள், அரசுசாராத் தொண்டு நிறுவனங்கள், குடிமைச் சமூகங்கள் பேசுவதோ, எழுதுவதோ கிடையாது. அரசியல் சித்தாந்த உந்துதல் ஏதுமற்ற, வெறும் பிழைப்புக்கான, வேலைவாய்ப்புக்கான இன்னொரு ஏற்பாடாக அரசுசாராத் தொண்டு அமைப்புகளையும், குடிமைச் சமூகங்களையும் பல நடுத்தர வர்க்க அறிவுஜீவிகள் தெரிந்தெடுத்துக் கொண்டுள்ளார்கள். ஆகவே, தேர்தல் அரசியல் உறுப்புகளைப் போலவே, அரசுசாராதொண்டு அமைப்புகளும், குடிமைச் சமூகங்களும் லஞ்ச ஊழலிலும், மோசடிகளிலும் கருப்புப் பணக் குவிப்பிலும் மூழ்கிச் சீரழிந்து போயுள்ளன. மக்கள் சேவை என்பது போய், அரசு அதிகாரவர்க்கத்தைப் போலவே சிகப்பு நாடாவிலும் சிக்கிமுடங்கிப்போய் விடுகின்றன.

4. நீதிபதிகளே இலஞ்ச, ஊழல், பாலியல் கிரிமினல் குற்றவாளிகளாக ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக நீதியே விற்பனை சரக்காக – நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை

கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீமன்ற நீதிபதிகள் வரை மேலும் அவர்கள் ஓய்வுபெற்ற பிறகு விசாரணை ஆணைய நியமனங்கள் வரை எல்லா மட்டங்களிலும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், அநீதிகள், அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். இவை இல்லாத நீதித்துறை விவகாரங்கள் இல்லவே இல்லை. போலீசையும் சமூக விரோதக் கிரிமினல்களையும் கொண்ட கூட்டணியின் ஒருமுக்கிய உறுப்பாகவே கீழமை நீதிமன்றங்கள் இயங்குகின்றன. கீழமை நீதிமன்றங்களுக்கும் சமூக விரோதக் கிரிமினல்களுக்கும் இடைத் தரகர்களாகப் போலீசு செயல்படுகிறது. நீதித்துறையின் இந்தச் சீரழிவின் சிகரமாக உச்சநீதிமன்றம் விளங்குகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூன்றிலொரு பகுதிக்கும் மேலான தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள்; என்ற என்ற பட்டியல் புகார் விவரம் உச்சநீதிமன்றத்திலேயே நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மீதான மக்கள் நம்பிக்கை போய்விடும் என்ற காரணத்தைச் சொல்லி இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுப்பது மறுக்கப்படுகிறது. அதன்பிறகு, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது பெண் வழக்குரைஞர்களாலேயே பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டது. இதேபோலத் தான் பல மாநிலங்களின் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை கடுமையான, வக்கிரமான பாலியல், ஊழல் குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன. பெங்களூருவில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட 867 நீதிபதிகளுக்கும் லோக்ஆயுக்தா அதிகாரிகளுக்கும் எதிராகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார், ஒரு சமூக ஆர்வலர். அதற்காக அவர்தான் கைது செய்யப்பட்டார். உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றங்களின் தலைமை நீதிபதிகள் உட்பட மொத்தம் 120 பேர்மீது பல்வேறு கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுகள் உச்ச நீதிமன்றத்தில் உள்ளன. இதுவரை அவற்றின் மீது எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்குத் தண்டனை கொடுக்காது தட்டிக் கழிக்கப்படுகின்றன; அல்லது பூசி மெழுகப்படுகின்றன.

நீதிமன்றத் தீர்ப்புகளை அரசின் பிற உறுப்புகளோ, ஆட்சியாளர்களோ, கார்ப்பரேட் முதலாளிகளோ மதிப்பதே இல்லை. நெய்வேலியில் தற்காலிகத் தொழிலாளர்களை நிரந்தமாக்கவும் மக்கள் நலப் பணியாளர்களையும் சாலைப் பணியாளர்களையும் மீண்டும் பணிய மர்த்தவும் நீதிமன்றங்கள் தீர்ப்புச் சொல்லியும் அரசாங்கம் அமலாக்க மறுக்கிறது. அதேசமயம், தமது கோரிக்கையை வலியுறுத்தித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றம் தடைவிதிக்கிறது. அவர்களை நிரந்திரமாக்கும்படி உச்ச நீதிமன்றம் உட்பட எல்லா நீதிமன்றகளும் முன்பு அளித்த தீர்ப்பை அரசாங்கம் மீறிவருவது குறித்து நீதிமன்றங்கள் ஒன்றும் செய்யவில்லை. கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளைகளுக்காக என்று சொல்லிக்கொண்டு அரசுப் புறம்போக்குகள், ஏரிகுளங்கள், பொதுச்சொத்துகள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கும்படி நீதிமன்றஙகள் உத்திரவுகள் போடுகின்றன. அரசு வாகன விபத்துகளுக்கும் அரசுகையகப்படுத்திய நிலங்களுக்கும் ஈட்டுத்தொகை அளிக்கும்படியான நீதிமன்றத் தீர்ப்புகள் போன்ற பலதையும் அரசாங்கம் அமலாக்க மறுக்குகிறது. நீதிமன்ற அவமதிப்புவழக்குப் போட்டு அரசு வாகனங்களையும், அரசு அலுவலங்களையும் பறிமுதல் செய்யும் உத்திரவுகள் போடப்படுகின்றன. இம்மாதிரியான நீதிமன்றத் தீர்ப்புகளை அரசுகளும் ஆட்சியாளர்களும் மதிக்காத, அமலாக்க மறுக்கும் விவகாரம் சிலநூறு அல்ல, ஆயிரக்கணக்கானவை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் பலமுறை எச்சரிக்கை விட்டும், அரசு அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை விட்டும் இதே நிலைதான் நீடிக்கிறது. தலைமைச் செயலாளரையே நேரில் அழைத்து எச்சரிக்கை விட்டு, நிபந்தனையின்றி மன்னிப்புக் கேட்க வைத்தும் இதே நிலைதான் நீடிக்கிறது. உச்ச நீதிமன்றத்திலும் இப்படித்தான் நடக்கிறது. தமிழ் நாட்டில்மட்டும் இந்த நிலை என்றில்லை. நாடுமுழுவதும் இத்தகைய போக்குகள் பன்மடங்கு அதிகமாக நடக்கின்றன. நீதிமன்றத் தீர்ப்புகளை மீறுவதற்கும் அமலாக்காமல் இருப்பதற்கும் ஆட்சியாளர்களை வழிநடத்துவதே அரசு வழக்கறிஞர்கள் அதிகாரிகளின் வேலையாக உள்ளது.

இந்த மாதிரியான பிரச்சினைகள் வரக்கூடாது என்பதற்காகவே மனித உரிமை, நுகர்வோர், தொழிலுரிமை நீதிமன்றங்கள், விரைவு நீதிமன்றங்கள், லோக் ஆயுக்தா அமைப்புகள் முதலான பலவற்றிற்கும் பல மாநில அரசாங்கங்கள் நீதிபதிகளையே நியமிக்காது, காலியாக வைத்திருக்கின்றனர். ஆண்டுகள் பலவாகியும் தமிழகம் உட்பட  பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா எனப்படும் அதிகாரத்தில் உள்ளவர் மீதான புகார்களை விசாரிப்பதற்கான நீதிமன்றங்களே அமைக்கப்படவில்லை. நீதிபதிகள் இருந்தாலும் அதற்குரிய ஊழியர்களோ, அலுவலகத்துக்குத் தேவையான பொருட்களோ கூட ஏற்பாடு செய்யாமல் செயலிழக்கச் செய்துவிடுகின்றனர். நாட்டிலுள்ள நீதிபதிகளுக்கு என்று ஏராளமான வசதிகள், சலுகைகள், பாதுகாப்புகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. உச்சநீதி மன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் தவறுகள் செய்தார்கள் என்றால் அவர்களுக்கு எதிராக பதவி நீக்கமோ, வேறுபிற தண்டனை நடவடிக்கைகளையோ அவ்வளவு எளிதில் எடுத்து விட முடியாது. அவர்கள் மீது வழக்குப் போடவும் தண்டிக்கவும் வேண்டுமானால் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பங்கு ஒப்புதல் பெற்றுத்தான் பதவிநீக்கம் செய்ய முடியும். அவர்களை விமர்சிப்பவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு என்ற ஆயுதங்கொண்டு தண்டிக்கும் எதேச்சதிகார அதிகாரம் பெற்றிருக்கிறார்கள். இவ்வளவு இருந்தும் நாற்காலிகளைத் தேய்த்துக் கொண்டிருக்கும் நீதிபதிகள், இலட்சக்கணக்கான அல்ல, கோடிக்கணக்கான வழக்குகளை விசாரித்து முடிக்காமல் குவித்து வைத்திருக்கிறார்கள். பல வழக்குகளை பல ஆண்டுகளாக வேண்டுமென்றே நிலுவையில் வைப்பதன் மூலம் குற்றவாளிகளைக் காப்பாற்று கிறார்கள். ஆனால், சாதாரண மக்கள் விசாரணையின்றி இலட்சக்கணக்கில் பல ஆண்டுகள் சிறைவைக்கப்படுகின்றனர். பல வழக்குகளில் குற்றவாளிகளும் சாட்சிகளும் இறந்தே போகின்றனர்.

கிரிமினல் குற்றவாளிகளையே நீதிபதிகளாகக் கொண்டுள்ள அமைப்பில் நீதி விலைபோகும் சரக்காக உள்ளதில்வியப்பில்லை. அதனால், அதிக விலைகொடுக்கும் நபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் சாதகமாக “நீதி” விலைபேசி விற்கப்படுவதுதான் நீதி மன்றங்களில் நடக்கிறது. நீதிமன்ற நியமனங்கள் இருட்டில் இரகசியமாக நடப்பதைப்போலவே, தீர்ப்புகளும் விசாரணைகளின்றி, சட்டபூர்வ நியாயங்களின்றி, விளக்கங்களின்றி விற்கப் படுகின்றன. கொலை, திருட்டு, பாலியல் வன்முறை முதலிய குற்றங்களைத் தற்செயலாகச் செய்பவர்களைத் தவறாது தண்டிக்கும்  நீதிமன்றங்கள், அதே குற்றங்களைச் கிரிமினல் குற்றக் கும்பல்களாகத் திரண்டு, திட்டமிட்டு செய்துவிட்டு அதிகாரத்துடனும் அதிகாரத்தின் துணையோடும் இருப்பவர்களைத் தீண்டுவதேயில்லை. அதுவே, மக்கள் சமூகத்தையும் நாட்டையும் கொள்ளையடிப்பதற்கு எதிரான வழக்குகளானால் ஏகாதிபத்திய  பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமான தீர்ப்புகளையே நீதிமன்றங்கள் வழங்குகின்றன. தனியார்மயதாராளமயஉலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்க்கும் வழக்குகளிலும் அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள், உழைக்கும் மக்களின் வாழ்வுரிமைகளை, தொழிலுரிமைகளைக் கோரும் வழக்குகளிலும், குறிப்பாக கிரானைட், தாதுமணற் கொள்ளை, இயற்கைக் கனிம வளங்களை சூறையாடல், சுற்றுச்சூழலை நாசமாக்குதல் முதலானவற்றுக்கு எதிரான வழக்குகளிலும் மக்கள் எதிரிகள் நேரடியாகவே நீதிபதிகளை அணுகித் தமக்குச் சாதகமான தீர்ப்புகளைவிலைக்கு வாங்குகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் தண்டிக்கப்படுபவர்கள் தாமாகவே பதவியிழப்பார்கள் / பதவிபறிக்கப்படும் என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தும் அதைக் கழிப்பறைக் காகிதத்தைவிடக் கேவலமாக மதிக்கின்றன மத்திய, மாநில அரசுகள். ஆனால், அத்தீர்ப்புகளை அமலாக்குவதற்கு அத்தீர்ப்புகளை வழங்கிய உச்சநீதி மன்றம் உட்பட எந்தவொரு அரசு அமைப்பும் அது குறித்து அக்கறைப்படவேயில்லை. இவ்வாறு உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற உத்திரவுகளை மதியாதது, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை அரசும் அதிகாரிகளும் சந்திக்கவேண்டி வருவதும், நீதிமன்றங்கள் எச்சரிக்கை விடுவதும், அதிகாரிகள் மன்னிப்புக் கோருவதும், அரசுச் சொத்துகளையே பறிமுதல் செய்யும்படி நீதிமன்றங்கள் உத்திரவு போடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இப்படி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளின் தீர்ப்புகளை தமிழக அரசுஅமலாக்க மறுத்து, எச்சரிக்கை பெற்றுள்ளது. கன்னியாகுமரியில் உண்ணாமலை கிராமத்தில் அரசின் டாஸ்மாக் சாராயக்கடையை மூடச்சொல்லி சென்னை உயர்நிதிமன்றம் போட்ட உத்திரவை ஓராண்டுக்கு மேலாகியும் அமலாக்கத்தவறின அரசும், நீதிமன்றமும். ஆனால், டாஸ்மாக் சாராயக்கடையை மூடக்கோரிப் போராடிய மக்களைத் தாக்கி கைதுசெய்து வழக்குப்போட்டன. இதற்குமேல் எதுவும் செய்ய இயலாத, மக்களின் நீதிக்கான கடைசிப் புகலிடமாகச் சொல்லப்படும் நீதித்துறையே கடும்நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதையே இவையெல்லாம் காட்டுகின்றன.

ஏற்கெனவே சாதி, மதவெறித் தீர்ப்புகளை வழங்கும் நீதிமன்றங்கள் ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜக. ஆட்சிக்கு வந்த பிறகு, அரசியல் சட்டத்துக்கு மாறான, புறம்பான இந்துத்துவா தீர்ப்புகளையும் உத்திரவுகளையும் பகிரங்கமாகவே போடுகிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும், தீண்டாமை எதிர்ப்பு அரசாணைக்கும் எதிராக பார்ப்பனர்களையே நிரந்தர அர்ச்சகராக்கும். அவர்களிடமே கோவில்களையும், அதன் சொத்துக்களையும், ஒப்படைக்கும் தீர்ப்புகளைப் போடுகிறது. பாபரி மசூதி இடிப்புக்கு எதிரான இசுலாமியர்களின் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை, மாட்டுக்கறி உணவுக்குத் தடை, பசுப் பாதுகாப்பு, கோயில்களில் ஆடைக்கட்டுப்பாடு ஆகிய இந்துத்துவா தீர்ப்புகளையும் தான்தோன்றித்தனமாகப் போடுகிறது. நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் வழக்கறிஞர்களை நீதிமன்றங்களின் மாண்புகளைக் காப்பதற்காகக் களையெடுப்பது என்ற பெயரில் பழி வாங்குகிறது. போராடும் வழக்கறிஞர்களைப் பணியாற்ற விடாமல் பார் கவுன்சிலில் இருந்து வெளியேற்றவும் தகுதியற்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜ.க. ஆட்களைக் கொண்டு நீதிமன்றங்களை நிரப்பி கொள்கிறது.

5. கார்ப்பரேட் கொள்ளைக்கூட்ட ஆதிக்கத்தின் கீழ் மருத்துவம்

மருத்துவ மனைகளும் மருத்துவக் கல்வி நிலையங்களும் இனிமேலும் சேவை நிறுவனங்களாக இல்லை. அவை அறநெறிகள் ஏதுமற்ற கார்ப்பரேட் கொள்ளைக் கூடங்களாகவே உள்ளன. இப்போது அவை தகுதியுள்ள மருத்துவர்களாலும் கல்வியாளர்களாலும் நடத்தப்படவில்லை. நோயாளிகளையும், மருத்துவ மாணவர்களையும் பணயக் கைதிகளாக வைத்துக் கொள்ளையடிக்கும் கிரிமினல் குற்றக் கும்பல்களால் நடத்தப்படுகின்றன. மருத்துவ மனைகள் மட்டுமல்ல, மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்களும், மருந்துகள் உற்பத்தி செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகளும் இப்படித்தான் இருக்கின்றன. அதனால்தான் மக்கள் மாற்றுமருத்துவ முறைகளுக்கு மாறிவருகிறார்கள். மாற்று மருத்துவ முறைகளும் கார்ப்பரேட்மயமாகி மேற்கண்டவாறுதான் மாறிக்கொண்டிருக்கிறன.

இப்போது நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் இவ்வளவு நாட்கள் இருக்கவேண்டும் என்பதை மருத்துவர்கள் முடிவு செய்வதாக இல்லை. வசூல் இலக்குகளை எட்டுவதற்காக, நோயாளிகள் மருத்துவமனைகளில் கட்டாயமாகத் தங்க வேண்டும், நவீனக் கருவிகளைக் கொண்டு சோதனைகளையும் அறுவைச் சிகிச்சைகளையும் செய்ய வேண்டும் என்பதை மருத்துவமனைகளின் முதலாளிகளே முடிவு செய்கிறார்கள். பணம் பிடுங்குவதற்காக  நோயாளிகள் ஈவிரக்கமின்றி நடத்தப்படுகிறார்கள். இறந்துபோன பிறகும் பிணங்களுக்குச் சிகிச்சை அளிப்பதாக நாடகமாடிக் கொள்ளையடிப்பதை அப்போலா போன்ற நட்சத்திர மருத்துவமனைகளின் கார்ப்பரேட் முதலாளிகள் செய்கிறார்கள்.

மருத்துவமனைகளிலும் நோய்க் கூறு ஆய்வுக்கூடங்களிலும் மருத்துவப் பரிசோதனை என்னும் பெயரில் பில்கேட்ஸ் பவுண்டேசன் உட்பட பல மருந்துக் கம்பெனிகளின் சோதனைக் கூடங்களாகவும் இந்தியப் பழங்குடிகள், பெண்கள் சோதனைப் பிராணிகளாக மாற்றப்பட்டுள்ளனர். ஆந்திராவில் இளம்பெண்கள் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான தடுப்பூசி போட்டு சோதித்துள்ளனர். இதில் பல பெண்கள் இறந்துபோயுள்ளனர். சட்டிஸ்கரில் அடிப்படை வசதிகளின்றி கருத்தடை அறுவைச் சிகிச்சைகள் நடத்தி பல பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். இலவச மருத்துவ முகாம்கள் நடத்திப் பலர் பார்வையிழக்கின்றனர்; பலர் உயிரிழக்கின்றனர். மனித உயிர் இங்கே அவ்வளவு மலிவாகிப்போயுள்ளது.

அரசும் ஆட்சியாளர்களும் பின்பற்றும் மக்கள் விரோத கார்ப்பரேட் கொள்ளைக்குச் சாதகமான மருத்துவக் கொள்கையும்பொதுச் சுகாதாரப் புறக்கணிப்புக் கொள்கையும் தாம் இதற்குக் காரணம். நமது மக்கள் ஒவ்வொருவரும் தமது வருமானத்தில் 52 விழுக்காடு மருத்துவத்திற்காக செலவழிக்கின்றனர். சுற்றுப்புறச் சுகாதாரச் சீர்கேடு, பெருகிவரும் தொற்றுநோய்கள் – ஆட்கொல்லி நோய்கள் மருந்து விலையேற்றம், ஏறிவரும் மருத்துவச் செலவு  ஆகியவற்றால் நடுத்தர வர்க்கத்தினரும் அவதிப்படுகின்றனர். குடும்பத்தில் ஒருவர் ஏதாவது நெடுநாள் அல்லது ஆட்கொல்லி நோயால் தாக்குண்டால் அக்குடும்பமே திவாலாகிப் போகிறது. மருத்துவச் செலவுகளைச் சமாளிக்கமுடியாமல் நோயாளியைப் பலிகொடுப்பதோடு, உயிரோடிருப்பவர்களும் வாழ்நாள் கடனாளிகளாகிறார்கள்.

பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், சாக்கடை குப்பை கழிவுநீர் அகற்றுதல், நோய்பரப்பும் உயிரினங்களை ஒழித்தல் போன்ற பொதுச் சுகாதாரமும் அடிப்படை மருத்துவ வசதிகளும் தொண்டு நிறுவனங்களிடமும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் விடப்படுகின்றன. பொதுச் சுகாதாரம் கழிப்பறை வசதிகூட இல்லாதது, குடிநீர் ஊட்டச்சத்து பற்றாக்குறை காரணமாக குழந்தைகளும் முதியோர்களும் பலியாவது அதிகரித்துக் கொண்டே போகிறது. நகர்ப்புறச் சாக்கடை, தொழிற்சலைகளின் இரசாயனக் கழிவுகள் திறந்தவெளி நிலத்திலும் குடிநீர் ஆதாரங்களிலும் கலப்பதாலும் அனல்மின், அணுமின் நிலையங்களின் கழிவுகள், தடைசெய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளைப் பயன்படுத்துவதாலும் புற்று நோய், தைராய்டு, மரபணுக்குறைகளுடன் குழந்தைப் பிறப்பு போன்ற கொடிய நோய்களையும் அழிவுகளையும் மக்கள் சந்திக்கின்றனர். நச்சுக் காய்ச்சல், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், சிக்கன்குனியா, டெங்கு போன்ற புதிய புதிய நோய்கள் வருகின்றன. அவற்றோடு, முன்பு ஒழிக்கப்பட்டவையாக சொல்லிக்கொண்ட காசநோய், போலியோ, காலரா போன்ற நோய்கள் மீண்டும் பரவுகின்றன.

நோய்த் தடுப்பு, உயிர்க்காப்பு மற்றும் மலிவுவிலை சிகிச்சைக்குரிய மருந்துகளை உற்பத்தி செய்யும் அரசுத் தொழிற்சாலைகளை மூடிவிட்டு, இவற்றிடத்தில் அந்நியக் கார்ப்பரேட் மருந்துக் கம்பெனிகளிடம் கொள்ளை விலையில் அரசு கொள்முதல் செய்கிறது. போதுமான சுகாதாரப் பணியாளர்களையும் மருத்துவர்களையும் நியமிப்பதோ, சுற்றுப்புறத்தை சுகாதாரமாகப் பராமரிக்கவோ, தொற்று நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதோ, மக்களுக்குத் தொற்று நோய்த்தடுப்பு விழிப்புணர்வுகூட ஏற்படுத்துவதில்லை. தொற்று நோய்கள் வருவதையும் பரவுவதையும், பஞ்சைப்போட்டு நெருப்பை அணைக்க முயலுவதைப்போல மூடிமறைக்கிறது. சுகாதாரச் சீர்கேட்டாலும் அரசின் அலட்சியத்தாலும் பொதுமக்களைத் தாக்கும் உயிர்க்கொல்லி, தொற்று நோய்களைத் தடுக்கவோ முற்றாக ஒழிக்கவோ வக்கற்றுப் போயுள்ளது இந்த அரசு.

6. கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் கல்வி

ஒருபுறம் தனியார்மயமும் மறுபுறம் அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக் கல்வி உரிமையும் எப்படி இணைந்து போக முடியும்? ஆரம்பக் கல்வியில் மட்டுமல்ல, கல்வியின் எல்லா மட்டங்களிலும் இதுதான் தற்போது ஏற்பட்டிருக்கும் கல்வி நெருக்கடிக்கு அடிப்படைப் பிரச்சினை. தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கையே நாட்டின் எல்லாத் துறைகளிலும் இன்றைய ஆளும் கொள்கையாக உள்ளது. அது கல்வித்துறையை மட்டும் விட்டுவைக்குமா என்ன!

முதலீட்டுக்கு ஏற்ற இலாப விகிதம் கிடைப்பதில்லை என்பதால் அனைவருக்கும் அடிப்படைக் கல்வியை போதிக்கும் பணி அரசுக்கு விடப்பட்டுள்ளது. அதிலும் ஏற்கெனவே பெருமளவு நிலங்களைக் கொண்டுள்ள அரசுப் பள்ளிகளைத் தனியார் கைப்பற்றிக்கொள்ளும் வகையில் பொதுத்துறை தனியார்துறைக் கூட்டுத் திட்டம் புகுத்தப்படுகிறது. தனியார் கல்விக் கொள்ளையர்களைப் போலவே அரசே அனைவருக்கும் கல்விச் சட்டங்களை அமலாக்க மறுப்பதோடு, பல மறைமுகத் தடைகளைப் போடுகிறார்கள். நாட்டிலுள்ள பெரும்பான்மையான பள்ளிகளுக்குத் தேவையான கட்டிடங்களோ, உருப்படியான மேற்கூரைகளோ, குடிநீர் கழிப்பிட வசதிகளோ, கருவிகளோ, ஆசிரியர்களோ கிடையாது. நாட்டின் மொத்த வருவாயில் கல்விக்காக செலவிடும் அளவு குறைந்து கொண்டே போகிறது. போதிக்கும் கல்வித் திட்டமும் தரக்குறைவாகவும் குழப்பமாகவும் உள்ளதாக கல்வி ஆய்வாளர்கள் பலரும் இடித்துரைக்கின்றனர். இருந்தாலும் அரசு கண்டுகொள்வதில்லை.

ஒருபுறம் கொள்ளையடித்தாலும் மேல்சாதி, மேட்டுக்குடி பெற்றோர்களை ஈர்ப்பதற்காகவே பலவசதிகளையும் கொண்ட தனியார் பள்ளிகள். மறுபுறம் ஏழை, ஏளிய வர்க்கத்தினருக்கான அடிப்படை வசதிகளற்ற அரசுப் பள்ளிகள். இவ்வாறு அரசும் ஆட்சியாளர்களும் கல்வியில் இருவேறு துருவங்களை உருவாக்குகிறார்கள். முன்பு கல்வி ஒருசமூகத் தொண்டு என்று கருதப்பட்டது; ஆகவே, கல்வி நிலையங்களை நடத்தும் அறக்கட்டளைகளுக்கு பலசலுகைகளை அரசு வழங்கியது. அதனால் சாதி, மதப்பிரமுகர்களும் நிலப்பிரபுக்கள் தரகு முதலாளிகளும் அறக்கட்டளைகளின் பெயரில் பள்ளி, கல்லூரிகளை வைத்து சாதி, மத ஆதிக்கங்களும் தொழில்ரீதியான ஆதாயங்களும் அடைந்து வந்தனர். கல்வியில் தனியார்மயம், தாராளமயம் புகுத்தப்பட்ட பிறகு, கல்வி ஒரு சமூகத் தொண்டு முகமூடி விலக்கப்பட்டு, கல்வி பகற் கொள்ளைக்கான மற்றுமொரு தொழிலாக  மாறியது. அரசியல் பிரமுகர்கள், திடீர் பணக்கார அரசியல் ரௌடிகள், கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள், பழைய, புதிய தரகு முதலாளிகள் நூற்றுக்கணக்கில் கல்வி வியாபாரத்தில் நுழைந்தனர். இவர்களோடு, உலகமயமாக்கம் காரணமாகவும் ஏராளமான அந்நியக் கல்விக் கொள்ளையர்களும் நுழைந்தனர்.

இந்தத் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் மூலம் மற்ற பிற துறைகளைப் போலவே, கல்விச் சந்தையிலும் உலகத்தரம் பெறுவோம் என்று சொன்னார்கள். ஆனால் தற்போது, அது மேற்கண்ட கல்விக் கொள்ளையர்களிடம் சிக்கி நாட்டின் கல்வித்துறையே திணறுகிறது. தனியார் கல்வி நிறுவனங்கள் வரைமுறையற்ற கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் கொள்ளைக் கூடாரங்களாக மட்டுமல்ல; மாணவர்களின் உயிரையும் காவு வாங்கும் கொலைக் கூடங்களாகவும் மாறி வருகின்றன என்பதைத்தான் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள தனியார் பள்ளி, கல்லூரி மாணவர்களின் மர்ம மரணங்களும் தற்கொலைச் சாவுகளும் உணர்த்துகின்றன.  அவர்கள் பெற்றோர்களிடம் வழிப்பறிகள் நடத்துகிறார்கள்; மாணவர் மாணவிகளை பலவகையிலும் தற்கொலைக்கும், இருண்ட எதிர்காலத்துக்கும் தள்ளுகிறார்கள். தமது கொள்ளையில் ஒரு பகுதிப் பணத்தை ஆட்சியாளர்களுக்கு இலஞ்சமாக வாரி இறைத்து, பள்ளியோ, கல்லூரியோ, ஆய்வுக்கூடங்களோ, பல்கலைக் கழகங்களோ நடத்துவதற்கான எந்த அடிப்படை வசதியும் தகுதியான ஆசிரியார்களோ இல்லாமலேயே, அரசிடமிருந்து அனுமதிகள் வாங்கிவிடுகிறார்கள். அல்லது அனுமதிகூட வாங்காமலேயே மாணவர்  மாணவிகளைச் சேர்த்து மோசடிகளும்செய்கிறார்கள். தமிழகத்தில், அரசிடம் அனுமதிஅங்கீகாரம் பெறாமலேயே மாணவர் – மாணவிகளைச் சேர்த்து மோசடி செய்து ஏமாந்த நூற்றுக்கணக்கான மாணவர் – மாணவிகள் தொலைத்துவிட்ட வாழ்க்கையை மீட்கப் பல மாதங்களாகப் போராடினார்கள். மோசடியில் சிக்கிய மூன்று மருத்துவக் கல்லூரிகள் நீதிமன்றத்துக்குப்போய் இலஞ்சம் கொடுத்து மீள முயற்சிப்பதையும் கண்டோம். பிற மாநிலங்களில் இவ்வாறு நூற்றுக்கணக்கான விவகாரங்கள் உள்ளன.

மொத்தத்தில், கல்வித்துறையும் மோசடியாளர்களின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ளது. நாட்டிலுள்ள பெரும்பான்மையான தனியார் சுயநிதி பொறியியல் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாளர்களோ பேராசிரியர்களோ கிடையாது. இவர்களில் 80 சதவிகிதமானவர்கள் ஒரே சமயம் பல கல்லூரிகளில் பணிபுரிவதாக பட்டியல்களில் இடம் பெற்றுள்ளனர். நாடு முழுவதும் பல போலிப் பொறியியல் கல்வி மற்றும் மருத்துவக் கல்லூரிகளும் பல்கலைக் கல்லூரிகளும் உள்ளன. போலியான பட்டச் சான்றிதழ்களைக் கொண்டு பல ஆயிரம் பேர் ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களாகவும் உள்ளனர். இதுதான் நாட்டின் கல்வி நிலை!

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு,கல்வியில் அந்நிய ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தையும் கொள்ளையையும் விரைவு படுத்தும் அதே வேளையில் சமஸ்கிருத மயமாக்கத்தையும் இந்துத்துவ மயமாக்கத்தையும் திணித்து வருகிறது. கல்விப் பாடத்திட்டங்களில் மட்டுமல்லாது அறிவியல் மற்றும் வரலாற்று ஆய்விலும் இவ்வாறே செய்கிறது.

7. கட்டுக்கடங்காத சமூக சீரழிவுகள் , பண்பாட்டு வக்கிரங்கள், கிரிமினல் குற்றங்கள் , பெண் சமூகத்திற்கு எதிரான கொடூரங்கள்

2012 டிசமபர், 16 அன்று, புதுடில்லியில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்குப் பலியான “நிர்பயா”-வின் மரணத்தைத் தொடர்ந்து பொங்கியெழுந்த பல்லாயிரக்கணக்கான மக்களில் ஒருவர் சொன்னார்: “அரசு மற்றும் சமூகத்தின் அனைத்து உறுப்புகளும் தோற்றுப்போனதையே இது குறிக்கின்றது.” இது இந்நாட்டின் அரசியல், சமூக நெருக்கடியை மிகச்சரியாகவும், துல்லியமாகவும், தெளிவாகவும் வெளிப்படுத்துகிறது. அப்போது, நடந்த சம்பவங்களும் வெளியான தகவல்களும் இதை அப்பட்டமாகத் தெளிவுபடுத்தின. 3 வயதுச் சிறுமிகள் முதற்கொண்டு 60,70 வயதுப் பெண்கள் வரை பாலியல் வன்கொடுமைகளுக்குப் பலியாகின்றனர். அக்கொடுமைகளுக்கு இலக்கானவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கெனவே தெரிந்தவர்களால், நெருக்கமான குடும்ப உறவுக்காரர்களால் இழைக்கப்படுகின்றன. இது குடும்ப, சமூக உறவுகளின் சீரழிவையும் நெருக்கடிகளையுமே காட்டுகின்றன. சமூக அமைப்புகளும் விழுமியங்களும் பெண்களுக்கு எதிராகவே கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. இதனாலேயே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பலவும் வெளி உலகுக்கு தெரியவருவதோ, பதிவு செய்யப்படுவதோ இல்லை. அவற்றுக்குப் பலியானவர்கள் வெளியே சொல்லவே முடியாதவாறு பலவழிகளிலும் மிரட்டி வைக்கப்பட்டுள்ளனர். போலீசு நிலையங்கள் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்ய மறுக்கின்றன. பலசமயங்களில் பாலியல் வன்கொடுமைக்குப் பலியானவர்கள் மீதே பழிபோடப்படுகின்றது. குற்றவாளிகள் அரசியல், அதிகாரம், சாதி, மதம் பிற சமூகச் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கிறார்கள். போலீசுக்காரன்கள்  தம் ஆளுகையின் கீழுள்ள பகுதியில் குற்றங்கள் நடப்பதே இல்லை என்றோ அல்லது குற்றங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவோ காட்டுவதற்காக வழக்கு பதிவு செய்யவே மறுக்கின்றனர். பதிவு செய்தாலும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் மீது சாதிய, ஆணாதிக்க மனப்பான்மையோடும் அக்கறையில்லாமலும், வேண்டாத வீண் வேலைச் சுமையாகவும் கருதி வழக்குகளை நீர்த்து போகச் செய்கிறார்கள்.

நாட்டின் கீழமை நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை பாலியல் வன்கொடுமை வழக்குகளில் பொதுச்சட்ட நெறிமுறைகளும் தீர்ப்புகளும் கிடையாது. ஒவ்வொரு நீதிபதியும் தான்தோன்றித்தனமாகவும் வெவ்வேறு அணுகுமுறையைக் கொண்டு தீர்ப்பு வழங்குகின்றனர்.  பாலியல் வன்கொடுமை வழக்குகளில் அதற்குப் பலியானவர்களை மேலும் துன்புறுத்துவதாகவும் அவமதிப்பதாகவுமே குற்றவாளிகளைத் தப்புவிப்பதாகவுமே சட்ட, நீதி முறைமைகள் உள்ளன. இவற்றைப் பயன்படுத்தி போலீசு நிலையங்களிலும் நிதிமன்றங்களிலும் பலியான பெண்கள் மேலும் கொடுமைப் படுத்தப்படுகின்றனர். சட்டப்படி பதினெட்டு வயதுக்குக் கீழான பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் வன்புணர்ச்சி வகையினதாகக் கொள்ளமுடியாது; பதினெட்டு வயதுக்குக் கீழான ஆண்கள் புரியும் பாலியல் குற்றங்கள் சிறார்களின் தவறாகவும் வன்புணர்ச்சி அல்லாதவையாகவும் சட்டப்படி எடுத்துக் கொள்ளவேண்டும்; எனவே, சட்டப்படியே இவ்வழக்குளில் கடும் தண்டனை வழங்க முடியாது. ஆனால் இயல்பாகவே, பாலியல் வன்கொடுமைகளை போலீசுக்காரன்களும், நீதிபதிகளும் மட்டுமல்ல, ஆணாதிக்க சமூகமே ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. பெண்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையே இவ்வாறானதுதான் என்று சமூகமும் கருதுகிறது. பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி, அவை அதிகரித்து வருவதைப் பற்றி சாதி,மத, அரசியல், சமூகப்பிரமுகர்கள் மட்டுமல்ல ஒருபிரிவுப் பெண்களும் கூறும் கருத்துக்களும் இதையே காட்டுகின்றன.

“நிர்பயா”விவகாரத்தில், புதுடில்லியில் பல நாட்கள் நடந்த மக்கள் எழுச்சிகளுக்குப் பிறகு, அவற்றைச் சமாளிப்பதற்காக நீதிபதி வர்மா தலைமையிலான கமிசனை மத்திய அரசு அமைத்தது. மிகப் பெரும்பாலான மாநில அரசுகள் வர்மா கமிசனுக்குத் தம் கருத்துக்களை, பரிந்துரைகளை, அறிக்கைகளை அனுப்பவே இல்லை. அதற்காக வர்மா கமிசன் தெரிவித்த கண்டனங்களையும் அவை மதிக்கவும் இல்லை. இதற்காகவும் நீதிகேட்டும் போராடிய இளைஞர்கள் மாணவர்களைக் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி விரட்டியதற்காகவும் புதுடில்லி தலைமைப் போலீசு இயக்குநர் உட்பட அனைத்து மாநில தலைமைப் போலீசு இயக்குநர்களின் நியமனங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று வர்மா கமிசன் பரிந்துரைத்தது. இதையும் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவேயில்லை.

பெண்களுக்கு எதிராகப் பெரும்பாலான வன்கொடுமைகள் இழைக்கும் முதன்மைக் குற்றவாளிகள் சீருடையணிந்த போலீசும், துணை இராணுவமும் மற்றும் இராணுவத்தினரும்தாம்; அவர்களைப் பாதுகாக்கும் ஆயுதப்படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தையும் அதையொத்த அடக்குமுறைச் சட்டங்களையும் நீக்கவேண்டும்; மேலும், ஒரு இராணுவ சிப்பாய் பாலியல் வல்லுறவுக் குற்றமிழைத்தால் அவரது மேலதிகாரியையும் சேர்த்து இராணுவ ஆணைமீறல் குற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது முதலான பல பரிந்துரைகளை அக்கமிசன் வைத்தது. இதுவும் இதைப் போன்ற பலபாரிய பரிந்துரைகளில் 90 விழுக்காடு கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, கண் துடைப்புக்குச் சில சில்லரைத் திருத்தங்கள் செய்யும், போலீசுக்கு மேலும் அதிகாரத்தைக் குவிக்கும் சட்டம் ஒன்று அனைத்துக் கட்சிகள் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. புதுடில்லியில் கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு “நிர்பயா” பலியானவுடன் கொதித்துப் போனவர்களைப்போல  குற்றவாளிகளுக்கு மரண தண்டனை, ஆண்மையை நீக்கச் சிகிச்சை என்றெல்லாம் குத்தாட்டம் போட்ட நாடாளுமன்ற அரசியல்வாதிகளும், ஊடக ஊதுகுழல்களும் “ஒப்புதலுடன் உடலுறவு,” பாலியல் வன்கொடுமைகள் புரியும் சிறார் குற்றவாளிகளுக்கு வயது வரம்பைக் குறைப்பது போன்ற விளிம்பு விஷயங்களில் கவனத்தைத் திருப்பிவிட்டனர்.

அதேசமயம், அரசியல், சமூகத் தலைவர்கள்  வெளியில் என்ன நீதிபோதனை சொல்கிறார்களோ அதற்கெதிரான போக்குகளே நாட்டில் அரங்கேறி வருகின்றன.  உழைப்புச் சந்தையில் பெண்களின் பங்கைக் மிகமிக அதிகரித்த வகையில் கோரும் உலகமயமாக்கமும் மறுகாலனியாக்கமும் திணிக்கப்படுகின்றன. அவை பெண்கள் உடலைச் சந்தைப்படுத்தும் பண்பாட்டுச் சீரழிவைக் கொண்டு வருகின்றன. ஆண்களிடையே பாலியல் வெறியைப் பரப்பும்தொழில்களும் (விபச்சாரத்தை சட்டபூர்வமாக்குதல், பாலியல் சுற்றுலா முதல் சினிமா, வானொளி, இணையம் ஆகிய ஊடகங்கள் வரை) பெருகி வருகின்றன.   ஆணாதிக்கப் பெண்ணடிமைத்தனத்தை அடிப்படையாகக் கொண்ட அரை நிலவுடைமை சமூக அமைப்பில் மேலைப் பண்பாட்டைப் புகுத்துவது காரணமாக பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பெருகுகின்றன.

ஆனால், போலீசு ரோந்து சுற்றுவது (போலீசும் கண்காணிப்பும் பெண்களுக்குப் பேராபத்து விளைவிப்பதாக உள்ளன!), பேருந்து மற்றும் பொது இடங்களில் காமிராக்களைப் பொருத்துவது, உயர் போலீசு அதிகாரிகளின் மேற்பார்வை, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குகளைவிரைந்து நடத்தித் தண்டனையைக் கடுமையாக்குவது போன்ற யோசனைகள் அள்ளிவீசப்படுகின்றன. கூடவே, பெண்கள் பாரதப் பண்பாட்டை மதிக்கவும் கடைப்பிடிக்கவும் வேண்டும், ஆபாச உடையணியக் கூடாது, இரவு குறிப்பட்ட நேரத்துக்குப் பிறகு வெளியில் “சுற்றக் கூடாது. ஆண்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது இயல்பானது” என்பது போன்ற பெண்ணடிமைத்தனத்தைப் பேணும் “உபதேசங்களும்” வழங்கப்படுகின்றன. இதனாலெல்லாம் பெண்களுக்கெதிரான குற்றங்கள், குறிப்பாக பாலியல் குற்றங்கள் குறையவில்லை. மாறாகப் பன்மடங்கு அதிகரித்திருக்கின்றன. பாலியல் வன்முறையோடு அதற்குப் பலியாகும் பெண்கள் படுகொலை செய்யப்படுவதும், சாதிப் பஞ்சாயத்துக்களில் கும்பல் பாலியல் வன்முறைக்குத் தீர்ப்புகள் வழங்கப்படுவதும் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, தாழ்த்தப்பட்டவர்கள் இம்மாதிரியான இழிசெயல்களுக்குப்பலியாவதும் என்ற காட்டு மிராண்டித்தனங்கள் மிகையாக நடக்கின்றன. அதிலும்முக்கியமாக நாட்டின் உச்சநீதிமன்றமே இம்மாதிரியான கேடுகெட்ட நடவடிக்கைகளுக்கு உடந்தையாக செயல்படுகின்றது. இந்தியா பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கும் பயணம் செய்வதற்கும் தகுதியுள்ள நாடு அல்லவென்ற கருத்து உலகம் முழுவதும் பரவியிருக்கிறது.   இந்நாட்டின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சிக்கலுக்குத் தீர்வெதுவும் காண முடியாத இந்தவொரு விவகாரமேபோதும் ஆளும் வர்க்கங்களும் அதன் அரசும் ஆளத் தகுதியற்றுப் போயுள்ளதைத் தெளிவாகவும் காட்டுவதற்கு!

8. இணை அதிகார மையங்களாக வளர்ந்துவிட்ட சாதி, மதவெறி எதேச்சதிகார அமைப்புகள்

ஒடுக்கப்படும் சாதியினர், சாதிவெறிக் கும்பல்களால் கோரமாகத் தாக்கிப் படுகொலைகள் செய்யப்படுவதும் நாடு முழுவதும் தொடர்ந்தும் தடையின்றியும் அப்பட்டமாகவும் அடிக்கடியும் நடக்கின்றன. சாதி கடந்து மணம் புரிந்து கொள்ளும் இளைய இணையினருக்கு சாதிப் பஞ்சாயத்துக்களில் பகிரங்கமாகவே, மரண தண்டனைத் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. அவர்களின் நெருங்கிய உறவினர்கள் கரங்களாலேயோ அல்லது அவர்கள் கண் முன்பாகவோ குரூரமாகக் கொல்லப்படுகின்றனர். அவற்றுக்குப் போலீசும் அரசு நிர்வாகமும் பார்வையாளராகவோ, உடைந்தையாகவோ இருக்கின்றன. உச்ச நீதிமன்றம் உட்பட நீதிமன்றங்களோ கண்டுகொள்வதில்லை. அவற்றில் தலையீடு செய்வதற்கு அஞ்சுகின்றன அல்லது அவை தாங்களே பிற்போக்குச் சாதிவெறி சகதியில் மூழ்கிப்போயுள்ளன. இம்மாதிரியான படுகொலைகளுக்குக் “கௌரவக் கொலைகள்”என்ற நாகரிகமான பெயர் சூட்டியதே நீதிமன்றங்கள்தாம்!

தாழ்த்தப்பட்டவர்கள், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான கொடூரக் குற்றங்கள் அதிகரித்து கொண்டே போகின்றன. சிறு குழந்தைகள் உட்பட தாழ்த்தப்பட்டவர்களை கட்சி வேறுபாடின்றி ஆதிக்க சாதியினரால் உயிரோடு எரித்தும், வெட்டியும் படுகொலைகள் செய்யப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் வன்கொடுமைகள் செய்து, கொன்று மரத்தில் தொங்க விடுகிறார்கள். இக்குற்றங்களுக்கு போலீசே துணை நிற்கிறது. நீதிமன்றங்கள் கண்டு கொள்வதில்லை. இளவரசன், கோகுல்ராஜ் என்று படுகொலைகள் தொடர்கின்றன. இம்மாதிரியான குற்றங்கள் புரிவோர் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிகிறார்கள்.

மேலவளவு, கயர்லாஞ்சி, சுண்டூர், பதனித்தோலா, லச்சுமண்பூர்பதே, துலியானா போன்ற இடங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான கும்பல் கொலைவெறியாட்டங்கள் புரிந்த சாதிவெறிக் கொலை குற்றவாளிகள் அனைவரும் தண்டனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறான குற்றங்களுக்காக ஆதிக்க சாதிவெறியர்கள் ஒருவர்கூடத் தண்டிக்கப்பட்டதே கிடையாது. மதிப்புக்குரிய மேல்சாதிக்காரர்கள், செல்வந்தர்கள் இப்படிச் செய்திருக்க மாட்டார்கள் என்பது போன்ற அற்பத்தனமான, வக்கிரமான காரணங்களை கொஞ்சமும் வெட்கமின்றிக் கூறி உயர்நீதி, உச்சநீதி மன்றங்களே கொலையாளிகளை விடுவிக்கின்றன. பெண்களுக்கும் தாழ்த்தப்பட்டவருக்கும் எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்கள் இருந்த போதும், அக்குற்றங்கள் அதிகரித்தபோதும் அச்சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவுசெய்யப்படுவதும் தண்டிக்கப்படுவதும் இல்லை. போலீசுக்காரன்களால், சாதிவெறியர்களால், நீதிமன்றங்களால் அச்சட்டங்கள் காலில்போட்டு மிதிக்கப்படுகின்றன.

தாழ்த்தப்பட்டோருக்கான கட்சிகள், அமைப்புகள் என்போரும் இவற்றுக்கு எதிராகப் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துவதில்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற மற்றும் இடஒதுக்கீடுப் பதவிகளைக் குறிவைத்து அறவழிப் போராட்டங்களோடு நின்றுவிடுகிறார்கள். சாரமாகச் சொல்வதானால் சாதிய அடையாளங்களைத் தகர்ப்பதுதான் சாதியத்தை ஒழிப்பதாகும். சாதிய அடையாளங்களை வைத்து ஓட்டு வங்கிகளைத் திரட்டுவது சாதியத்தை நிரந்தரமாக்கும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேண்டுவது சமூகச் சீர்திருத்தங்கள் அல்ல. அவற்றால் ஒரு பலனுமில்லை.சமூகப் புரட்சி, அதனால்தான் சமுதாய மாற்றங்களைக் கொண்டுவர முடியும்.

பயங்கரவாத, பிரிவினைவாத, பிளவுவாதப் பீதியூட்டி அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வது என்பது பார்ப்பன பாசிச மதவெறியர்களின் உத்தியாக இருப்பதைப் பற்றி பலஆண்டுகளாகக் கூறிவருகிறோம். சமூகத்தை சாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்துவதன் மூலம் ஒரு முனைவாக்கம் செய்து, அரசியல் ஆதாயம் தேடிக்கொள்வது பல ஆண்டுகளாகப் பார்ப்பன பாசிச மதவெறியர்களின் உத்தியாக இருக்கிறது. இதனால் பல இலட்சம் இசுலாமியர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இக்குற்றங்களுக்காக இதுவரை யாரும் தண்டிக்கப்பட்டதே கிடையாது. ஆனால், குற்றம் நிரூபிக்கப் படாமலேயே அப்சல் குரு போன்ற நிரபராதிகள் தூக்கிலிடப்படுகின்றனர். போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்படுகின்றனர். இதைப்போன்றே இன்னொரு கொடுமை, பார்ப்பன பாசிச மதவெறியர்கள் தாமே சதிசெய்து  நிறை வேற்றிய குற்றங்களுக்காக, நூற்றுக்கணக்கான அப்பாவி இசுலாமிய இளைஞர்கள் பத்துப் பதினைந்து ஆண்டுகள் விசாரணையின்றிச் சிறையிலடைக்கப் படுகிறார்கள்; இதனால் இவர்களின் இனிமையான இளமைக்கால வாழ்வு முழுவதும் பறிக்கப்படுகின்றது.

இசுலாமியர் மீது பழிபோடவும் இசுலாமியர்களைப் பலிவாங்கவும் நடத்தப்பட்ட மாலேகான், ஐதராபாத் மக்காமசூதி, அஜ்மீர் தர்க்கா, பாகிஸ்தான் செல்லும் சம்ஜுதா துரிதரயில் குண்டு வெடிப்பு ஆகியவை பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாத கும்பல்களால் நடத்தப்பட்டன.   இச் சம்பவங்களில் பல இசுலாமியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்து மதவெறியர்கள் இந்து வழிபட்டுத் தலங்கள்மீது தாங்களே பயங்கரவாதத் தாக்குதல்களை ஏற்பாடு செய்துவிட்டு “குற்றங்களுக்குக் காரணமானவர்கள்” என்று பல இசுலாமிய இளைஞர்களைப் பிடித்து, சித்திரவதை செய்கிறார்கள். உண்மையான குற்றவாளிகள் கிடைக்காதபோது அல்லது வேண்டுமென்றே அந்த அப்பாவி இசுலாமிய இளைஞர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல்செய்து, பொய்ச் சாட்சியங்களை உருவாக்கி (நிரந்தரமாக தொழில் முறை பொய்ச் சாட்சி சொல்லும் கும்பல்களையே போலீசும் நீதிமன்றங்களும் உருவாக்கி வைத்திருக்கின்றன) அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். தடா, பொடா முதலான பாசிச சட்டங்களின்படி எவர் சொல்லும் சாட்சியமும் இல்லாது, குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்திரவதை செய்து பெறும் வாக்குமூலங்களும் போலீசே எழுதிக் கொள்ளும் வாக்குமூலங்களும் கூடச் செல்லுபடியாகும். பல ஆண்டுகளுக்குப்பிறகு குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள் அல்லது போலீசும் நீதிமன்றங்களும் தமது “தவறுக்குப் பிராயச்சித்தமாக” வேறுசில பொய் வழக்குகளையும் அவர்கள் மீது போட்டு தொடர்ந்து சிறையிலேயே அடைத்து வைத்து வதைக்கிறார்கள்.

செய்யாத குற்றங்களுக்காக பல ஆண்டு சித்திரவதை, சிறைத்தண்டனைக்குப் பிறகு, கல்வி – இளமை பறிக்கப்பட்ட இளைஞர்கள்; வீடு, வாசல், தொழில் மற்றும் வாழ்வாதாரங்களையும் குடும்பத் தலைவர்களையும் இழந்த குடும்பங்கள் ஏராளம். இந்த நிலைக்குத் தள்ளப்படும் இசுலாமியர்களுக்கெல்லாம் எவ்வித நிவாரணங்களும் கிடையாது. “வேண்டுமானால் சிவில் நீதிமன்றங்களுக்குப் போங்கள்”என்று கைகாட்டும்/கைவிரிக்கும் நீதியரசர்களிடம் நீதி கிடைக்குமா? இவை தவிர, இசுலாமியப் பயங்கரவாதிகளால் நாளும் பார்ப்பனத் தலைவர்கள் கொல்லப்படுவதாகப் புளுகி, பீதியூட்டி, அதற்காகவே போலி என்கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. போலீசும் உளவுத்துறையுமே உளவாளிகள் எதிர் உளவாளிகள், பயங்கரவாதிகள் எதிர் பயங்கரவாதிகளை உருவாக்குகின்றனர்; இராணுவமும், துணை இராணுவமும் விருதுகள், பரிசுகளுக்காக போலி என்கவுண்டர்களை அரங்கேற்றுகின்றன. பயங்கரவாதிகளை, தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக என்று சொல்லி அரசே இரகசியக் கொலைப்படைகளை உருவாக்கி வைத்திருக்கின்றது.

இந்தச் சூழலில் இன்னொரு பக்கம் இசுலாமிய மத அடிப்படைவாதக் குழுக்கள் தோன்றுவதும் நிகழ்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகத்தின்மீது பயங்கரவாதச் சாயம் பூசப்பட்டு, இசுலாமியர் என்றாலே சந்தேகக் கண்கொண்டு ஒதுக்கும் நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் துணைப்பிரதமர் அத்வானிமுதல் இன்னாள் பிரதமர் மோடி வரை பார்ப்பன பாசிச இந்து மதவெறியைக் கக்கும் பிரச்சாரங்களை அப்பட்டமாகவே செய்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சங்கக் குடும்பத்தின் (பரிவாரின்) கீழ் நூற்றுக்கணக்கான பெயரில் இந்து மதவெறிக் கும்பல்களை, கொலைக் குழுக்களை உருவாக்கி வெறியாட்டங்கள் போடுகின்றன. இவற்றுக்கு எதிராகவோ தடுப்பதற்கோ முந்தைய காங்கிரசு அரசு மட்டுமல்ல, சில மாநிலங்களை ஆண்ட/ஆளும் முலாயம், மாயாவதி, நிதீஷ், ஜெயா, கருணாநிதி, மம்தா, அகாலிதளம், தெலுங்குதேசம் போன்ற மதச்சார்பின்மை பேசும் பிராந்தியக் கட்சிகளுமேகூட எதையும் செய்வதில்லை. மாறாக, “மதச் சார்பற்ற” ஓட்டுக்களைப் பொறுக்கிக் கொள்வதற்காகவும் “மதச் சார்பு”ஓட்டு வங்கியைத் தக்கவைத்துக் கொள்ளவுமே சதித்தனமான வேலைகளில் அவை ஈடுபடுகின்றன.  மறுபுறம், பயங்கரவாதத் தாக்குதலை எப்போதும் எதிர்கொண்டுள்ள தியாகிகளைப்போல எங்கும் கருப்புப்பூனைப் படைசூழப் பவனி வருகின்றனர். இதையே தாங்கள் ஓட்டுப்பொறுக்குவதற்கான கௌரவமாகவும் தகுதியாகவும் மாற்றிக்கொண்டு விட்டார்கள். நாடு முழுவதும் தானியங்கித் துப்பாக்கிகள் ஏந்திய போலீசும் உளவுப்படையும் கண்காணிப்புக் கேமராக்களும் சோதனைச் சாவடிகளும் நிறைந்த நாடாகவும், திடீர்ச் சோதனைகளும் கண்காணிப்புகளும் எப்பொழுதும் நடக்கின்ற நாடாகவும் உள்ளது. நாட்டையும் மக்களையும் நிரந்தர குண்டுவெடிப்புப் பயபீதியில் மூழ்கடித்து ஆதாயத்தை அறுவடை செய்து கொள்கிறார்கள்.

9. பெரும்பான்மை மக்களுக்கே எதிரான கட்டமைப்பு

சென்னை  முகலிவாக்கம் ஏரியில் கட்டப்பட்ட பதினோரு மாடிக் கட்டிடம் இடிந்து நொறுங்கி விழுந்ததில் அதில் சிக்கி கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் கீழ்நிலை மேலாளர்கள் உட்பட 71 பேர் உயிரிழந்தனர்; அடுத்த வாரமே சென்னை பொன்னேரியில் ஒரு கிடங்கின் சுற்றுச்சுவர் இடிந்து பதினோரு கட்டுமான தொழிலாளர்கள் மாண்டனர். இராணிப்பேட்டையில் தோல் தொழிற்சாலை கழிவுநீர்த் தொட்டி வெடித்து, அதில் மூழ்கி, மூச்சுத் திணறி 10 தொழிலாளர்கள் பரிதாபமாக மாண்டனர். ஆந்திராவின் ராஜமுந்திரியில் அரசு எரிவாயு எண்ணெய் நிறுவனத்தின் எரிவாயுக் குழுாய் வெடித்து, கிராமமே தீப்பற்றி 17 பேர் எரிந்து சாம்பலாகினர். ஆந்திராவில் செம்மரக் கடத்தலுக்கு மரம்வெட்டியதாக போலி என்கவுண்டர் நடத்தி 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அணைகள், ஏரிகள் எச்சரிக்கையின்றித் திறந்துவிடப்பட்டு, நூற்றுக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் மூழ்கி மடிகிறார்கள்; அவர்களின் குடியிறுப்புகள், தட்டு முட்டுக்கள் கூட அடித்துச் செல்லப்படுகின்றன.  உத்திரகாண்டில் எச்சரிக்கை விடுக்காமல் பெரும் நீர்த்தேக்கம் திறந்து விடப்பட்டு, அங்கே சுற்றுலாப்போன 25 பொறியியல் கல்லூரி மாணவர்கள் நீரில்மூழ்கிச் செத்தார்கள். பள்ளிச் சிறுவர்களை வரை முறையில்லாமல் வேன்களில் ஏற்றிக்கொண்டுபோய் ஆளில்லா ரயில்வே கேட்களில் ரயில்களோடு மோதியும், பள்ளங்களில் வீழ்த்தியும் சத்துணவுக் கூடங்களில் விஷமாகிப்போன உணவைக் கொடுத்தும் பல புதிய மருந்துகளைக் கொடுத்து மருத்துவச் சோதனைகள் நடத்தியும்  ஆதிவாசி, தாழ்த்தப்பட்ட பெண்களுக்குக் கருத்தடை முகாம்கள் நடத்தியும் ஏழை, எளிய மக்களுக்கு இலவசக் கண்சிகிச்சை முகாம்கள் நடத்தியும் பிற வகைகளிலும்  உழைக்கும் மக்கள் கொல்லப்படுகின்றனர். இவை தற்செயலாகவோ, இயற்கையிலோ ஏற்படும் விபத்துக்கள் அல்ல. இலாப வெறிபிடித்த முதலாளிகள் விளைவிக்கும் விபத்துக்கள், உயிர்ப்பலிகள்தாம். இவ்வாறு நடக்கும் கொலைகள் நாளும் பெருகி வருகின்றன.

இனியும் இவைபோன்ற குற்றங்கள் நிகழாமல் தடுப்பதற்குரிய ஏற்பாடுகள், வழிவகைகள், அதற்கான அறிகுறிகள்கூட ஏதும் இல்லை. இம்மாதிரியான குற்றங்கள் மீதான விசாரணைகள், வாதப்பிரதிவாதங்கள், பரிசீலனைகள் எல்லாமுமே முட்டுச்சந்து நோக்கிப்போய் மோதி நின்றுவிடுகின்றன. இம்மாதிரியான குற்றங்கள் மீண்டும் நிகழாவண்ணம் சட்டங்களும், விதிமுறைகளும் கடுமையாக்கப்பட வேண்டுமென்று ஒருபிரிவும், அதற்கெல்லாம் போதிய சட்டங்களும், விதிமுறைகளும் உள்ளன, அவற்றை அமலாக்கவேண்டியவர்கள்தாம் தவறு செய்கின்றனர் என்று மற்றொரு பிரிவும் அறிவாளித்தனமாகப் பேசுகின்றனர். அமலாக்க வேண்டியவர்களுக்கு சிறப்புக் “கவுன்சிலிங்குகள்”, பயிற்சிகள், மேலதிகாரிகளின் கண்காணிப்புகள் வேண்டுமென இன்னும் சிலர் அதிமேதாவித்தனமாக வலியுறுத்துகின்றனர். இவை எதுவானாலும் அவையெல்லாம் ஏற்கெனவேயுள்ள அதிகார வர்க்கம், போலீசு, நீதித்துறை முதலிய அரசுக் கட்டுமானங்களிடம் மக்களை அடக்கும் அதிகாரங்களை குவிக்கவும் ஊழலைப் பெருக்கவும் மட்டுமே செய்கின்றன.

ஒடுக்கப்படும் சாதியினர், மதச் சிறுபான்மையினர், பெண்கள் மட்டுமல்ல, இவர்களையும் உள்ளடக்கிய மிகமிக அதிகமான மக்களின் உயிருக்குப் பாதுகாப்பில்லை, சாலையில் பாது காப்பில்லை, சமூக வாழ்க்கையில் பாதுகாப்பில்லை, சகல முனைகளிலும் பாதுகாப்பில்லை. கிரிமினல் குற்றங்களும், கொலைகளும், பட்டப்பகல் கொள்ளைகளும் பாலியல் வன்முறைகளும் பல்கிப் பெருகி வருகின்றன. ஒரு பொட்டுத் தங்கத்துக்காக காதும் மூக்கும் கழுத்தும் அறுத்துக் கொல்லப்படுகிறார்கள். ஒருவருக்குத் தமது சொந்த வீட்டிலேயே உயிருக்குப் பாதுகாப்பில்லை. பாலியல் வன்கொடுமைக்காக பெண்களும், பணத்துக்காக ஆண்களும் ஏதுமறியாத சிறுவர்களும்கூடக் கடத்தப்படுகிறார்கள். சாதனை படைக்கும் அளவுக்குப் பெருகிவரும் சாலை விபத்துகளில் நிகழும் சாவுகளும் தற்கொலைகளும் குடும்பக் கொலைகளும் சாதிவெறிக் கொலைகளும் தனிப்பட்டவர்களின் தவறுகள் – பிரச்சினைகள் என்பதாகச் சொல்லிக் கொண்டே அரசு மற்றும் சமூகத்தின் பொறுப்புகள் தட்டிக் கழிக்கப்படுகின்றன.

பொருளாதார, சமூக, சுகாதார, அறிவியல் மற்றும் கலாச்சார உரிமைகளையும், போதிய அளவு தரமான வாழ்க்கைக்கான உரிமை, வாழ்விட உரிமை, கல்வி, மருத்துவ உரிமை போன்ற மனித உரிமைகளை நிறைவேற்றித் தருவதும் அவற்றை உறுதிப்படுத்துவதும் ஒருஜனநாயக அரசின், மக்கள் நல அரசின் கடமைகள். பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் அங்கீகரிக்கப்பட வேண்டும்; சர்வதேச மற்றும் பிராந்திய மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்; அவற்றை மதிக்கவும் பாதுகாக்கவும் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளை நிறைவேற்றித் தருவதும் ஐ.நா. அவையின் உறுப்பு நாடுகளின் சட்டபூர்வ, கட்டாயக் கடமை.  உடனடியாக இல்லையானாலும் அவற்றை நிறைவுசெய்வதை நோக்கி “முற்போக்கான நடவடிக்கை” எடுக்க வேண்டும் என்று அது எதிர்பார்க்கிறது.

ஐ.நா. அவையின் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை (ஐ.சி.ஈ.எஸ்.சி.ஆர்) அதன் உறுப்பு நாடுகளில் பொருளாதார, சமூக, கலாச்சார உரிமைகளுக்கு முதன்மையான சர்வதேச சட்ட ஆதாரமாக உள்ளது. அது  தொழிலாளர்களுக்கு சாதகமான பணி நிலைமைகள், மற்றும் பிற வேலை உரிமைகளை அங்கீகரித்துப் பாதுகாக்கக் கோருகின்றன. தொழிலாளர்கள் தொழிற் சங்கமாகச் சேரவும், கூட்டு நடவடிக்கைகள் எடுக்கவும் தொழில் மற்றும் பாதுகாப்பு உரிமை,  தாய்மார்கள்மற்றும் குழந்தைகள் உட்பட குடும்பப் பாதுகாப்பு,  உணவு உரிமை மற்றும் வீட்டு உரிமை ஒரு நபருக்கும் அவரது குடும்பத்திற்கும் போதுமான வாழ்க்கைத் தரத்திற்கான உரிமை, சுகாதார உரிமை, கல்வி மற்றும் கலாச்சார வாழ்வில் பங்குபெறும் உரிமை ஆகியவற்றை உறுதி செய்கின்றது. இந்த உரிமைகள் இதுவரை இரத்து செய்யப்படவும் இல்லை, ஆனால் அவற்றை ஏற்றுக் கையொப்பமிட்டுள்ள இந்திய அரசும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் முதலாளிகளுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு இந்த உரிமைகளை தமது காலில் போட்டு மிதிக்கின்றனர்.

எதன் அடிப்படையில் அரசும் ஆட்சியாளர்களும்  தமது அதிகாரத்தைப் பெறுகிறார்கள்? மக்களுக்குக் குடியிருப்பு வாழ்விடம், குடிதண்ணீர், சாக்கடை வசதி, கழிப்பிடம், இடுகாடு, சாலை, மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, உணவு, உடை ஆகிய அடிப்படை வசதிகள் – தேவைகள்; வேலைவாய்ப்பு உரிமை, மனித உரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மக்களின் வாழ்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகள்; இவை மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய அரசும் ஆட்சியாளர்களும் கடமைப்பட்டவர்கள். இந்தப் பொறுப்பு, புரிதல், ஒப்புதல், உடன்படிக்கை அடிப்படையில்தான் அரசும் ஆட்சியாளர்களும் நாட்டையும் மக்களையும் ஆளும் அதிகார உரிமை பெறுகிறார்கள். மக்களின் அடிப்படை வசதிகள்  தேவைகளை நிறைவேற்றித் தருவதாகச் சொல்லித்தான் வரி வசூலிக்கும் உரிமையைப் பெறுகிறார்கள். இந்த தேவைகளை நிறைவேற்றுவதற்கு மட்டுமல்லாமல், அரசினுடைய செலவுகளுக்கும் அதன் இருப்பு மற்றும் பராமரிப்பிற்கும் மக்களிடமிருந்து அரசு வரிவசூல் செய்கிறது. ஆனால், அதில் பெரும்பங்கை மக்களுக்கே எதிராக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிவழங்குகிறது.

மக்களின் அடிப்படை வசதிகள் தேவைகளையும் உரிமைகளையும் நிறைவேற்றித்  தருவதாக நாட்டு மக்களிடம் மட்டுமல்ல, உலக நாடுகளின் அவையிலும் அரசும் ஆட்சியாளர்களும் வாக்குறுதியளித்து ஒப்புக்கொண்டுள்ளனர். எனவே, அவற்றை நிறைவேற்றத் தவறும் அரசின் அதிகாரத்தை ஏற்கவும் மறுக்கவும் மீறவும் எதிர்க்கவும் மக்களுக்கு உரிமையுண்டு. அவற்றை நிறைவேற்றத் தவறும் அரசும் ஆட்சியாளர்களும் ஆளத் தகுதியற்றவர்கள்; தூக்கியெறியப்பட வேண்டியவர்கள். ஆனால், நடப்பது என்ன? அரசும் ஆட்சியாளர்களும் கடமைப்பட்டு, ஒப்புக்கொண்ட அடிப்படை வசதிகளைமறுத்துவிட்டு, தர்மசீலர்களைப் போல இலவசங்களை வீசி மக்களின் விசுவாசத்தை அள்ளிக் கொள்கிறார்கள். ஒரு அரசு விளம்பரத்தில் வருவதைப்போல, “சும்மாவா ஓட்டுப்போட்டீர்கள், அதுக்குத்தான் விலையை வாங்கிக் கொண்டீர்களே, அப்புறம் என்ன அடிப்படை வசதிகேட்டுப் போராட்டம்”என்று அரசும் ஆட்சியாளர்களும் சவால் விடுகிறார்கள். “இலவசங்களுக்கு விலைபோகும் இவர்களுக்கு, அடிப்படை உரிமை கேட்கும் அருகதை ஏது?” என்று திமிரோடு கேட்டு மக்களை ஒடுக்குகிறார்கள்.

அடிப்படை உரிமைகளைக் கோரி மக்கள்  தன்னெழுச்சியாகத் தெருவில் இறங்கி நாளும் போராடுகிறார்கள். இதற்கெல்லாம் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல வேண்டிய ஆட்சியாளர்கள்  அடிப்படை வசதிகளையும் அடிப்படை உரிமைகளையும் கேட்டு மறியல் செய்யும் மக்களை போலீசே ஏவிவிட்டு ஒடுக்குகிறார்கள். வேறு சட்டபூர்வ வழிகளில் பலவகைப் போராட்டங்கள் நடத்தினாலும், எத்தனை தடவை நடத்தினாலும், உங்களால் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் என்று ஏளனமாகப் பார்த்து, திமிரோடு நடந்து கொள்கிறார்கள்.

பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பது, கிரிமினல் குற்றங்களைக் குறைப்பது, அல்லது புலன் விசாரனைகளைத் துரிதப்படுத்துவது என்கிற பெயரில் பொதுமக்கள் மீதே பெருந்திரள் கண்காணிப்பும் அரசபயங்கரவாதமும் கட்டவிழ்த்து விடப்படுகிறது.  இப்படி ஒட்டுமொத்த சமூகத்தின்மீது பயபீதியைக் விதைப்பதன் மூலம் கிரிமினல் குற்றங்களைக் குறைத்துவிட முடியும் என்பது அரசுக்கொள்கையாகவே உள்ளது. சாதாரனத் திருட்டுக் குற்றங்களுக்காக சந்தேகத்தின் பேரில் பிடித்துச் செல்லப்படும் உழைக்கும் மக்களையே குற்றப் பரம்பரையினராகக் கருதி நடத்தும் இந்த சமூகம் பாடுபட்டு உழைக்கின்ற, நேர்மையான மக்கள் வாழத் தகுந்ததாக இல்லை.

10. இயற்கைப் பேரிடர், பேரழிவுக்கு வழிவகுக்கும் சுற்றுச்சூழல் நாசம்

அ) குளிர்க்காற்று அலை, மூடுபனி, பனி புயல்கள் மற்றும் பனிச்சரிவு; ஆ) கல்மாரி இடியுடன் கூடிய மழை மற்றும் புழுதிப் புயல்; இ) வெப்பக் காற்று அலை; வெப்பமண்டல சூறாவளிகள் மற்றும் கடல் சீற்றம்,சுனாமி ஆழிப்பேரலைகள்; ஈ) வெள்ளம், கன மழை மற்றும் மலைகளில் பாறை – மண்சரிவு மற்றும் வறட்சி  இவற்றால் பலரும் மரணமடைவது நாட்டில் தொடரும் துயரமாக உள்ளன. பெரும்வெள்ளம், கடும் வறட்சி ஆகிய மாறிமாறி வரும் இரண்டு கடைக்கோடி பருவநிலை மாறுதல்களால் பேரிடர்கள்  பேரழிவுகள், பேரிழப்புகள் ஏற்பட்டு மிக மோசமாகப் பாதிக்கப்படும் உலக நாடுகளின் முதல்வரிசையில் இந்தியா இருக்கிறது. இவை எல்லாம் இயற்கையின் சீற்றங்கள் என்றெண்ணி மக்கள் மறந்து போகிறார்கள்.  ஆனால் இவை சுற்றுச்சூழல் நாசமாக்கப்படுவதால் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தாம்.

21ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகள் வடமேற்கு இந்தியா அடுத்தடுத்து கடும் வறட்சியைக் கண்டது. நிலத்தடி நீர்மட்டம் அதளபாதாளத்துக்குக் கீழே போனது. ஒரிசா 2000 – 2002 ஆகிய அடுத்தடுத்த மூன்றாண்டுகளில் மிகமோசமான வறட்சியைக் கண்டது. அவற்றின் விளைவாக பயிர், பச்சைகள் கருகிப்போயின. அப்பஞ்சம் 1.1 கோடி மக்களைப் பாதித்து பெருந்திரளான மக்களைப் பட்டினியில் தள்ளியது. பருவமழை தவறியதால் 2006-இல் வடகிழக்கு இந்தியா மீண்டும் ஒரு வறட்சியையும் பஞ்சத்தையும் சந்தித்தது. அதே வடகிழக்கு இந்தியாவை 2003, 2004 ஆகிய ஆண்டுகளில் பெருநாசம் விளைவித்த பெருவெள்ளம் தாக்கியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு மத்தியில் மும்பையில் 944 மி.மீ. மழைகொட்டி, 1000 பேரைக் காவுகொண்டு, 1,25,000 கோடி ரூபாய் சொத்துக்களை நாசமடையச் செய்தது. இப்போது வங்காள விரிகுடாக் கடலில் அடிக்கடி  புயல் வீசுவது குறைந்தாலும் வீசுகின்ற புயல்களின் சீற்றம் மூர்க்கமாகவும் பெரும் நாசத்தை விளைவிப்பதாகவும் இருக்கின்றது. புயலினால் ஏற்படும் வெள்ளத்தின் அளவு கடுமையாகவும் மாறியிருக்கிறது.

இமயமலை மீதுள்ள பனி உருகுவதும் வெள்ளப் பெருக்கெடுப்பும் கங்கை, பிரமபுத்திரா ஆறுகளின் படுகைகளை ஆண்டுதோறும் வெள்ளக் காடுகளாக்கி, கோடிக்கணக்கான மக்களின் வாழ்வைப் பாதித்து, ஆயிரக்கணக்கான மக்களைக் காவுகொள்வதும் வளமான விவசாய நிலங்களைப் பாழ்படுத்துவதும் வழமையாகிவிட்டது. ஆலைக் கழிவுகளால் கங்கையைச் சாக்கடையாக மாற்றிவிட்டதோடு, புவி வெப்பமடைவது அதிகரித்து வருவதால் பூமியின் வட, தென் இருதுருவங்களை அடுத்து மிகப் பெரிய அளவில் பனிக்கவசம் மூடிய இமயமலை மேலும் உருகுவதும் வேகமாகி வருகிறது. இதனால் பெருமழை, பெருவெள்ளத்தாலும் உத்திரகாண்ட், காஷ்மீர்  ஆகிய மாநிலங்கள் வரலாறு காணாத பேரழிவுகளை அண்மையில் கண்டன.

இந்தியத் துணைக் கண்டத்தைச் சுற்றியிருந்த கடற்கரை அலையாத்திக் காடுகளும் கடந்த சில ஆண்டுகளில் 40 சதவீதம் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் கிரமமான முறையில் கடும் வறட்சிகள் வந்து போகின்றன. ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட் தொழிற் கழகங்கள் புவிப்பரப்பை நஞ்சாக்குவது, மலைகளைச் சிதைப்பது, காடுகளை அழிப்பது போன்ற செயற்பாடுகளால் சுற்றுச் சூழல் நாசமாகிறது. இதனால் புவிவெப்பமடைந்து பெருங்கடற் பிரதேசங்களின் வெப்பநிலை உயர்ந்து வருகிறது; அதைத் தொடர்ந்து கடுங்குளிர்நிலை ஏற்படுகிறது. இது “எல் நினோ” மற்றும் அதற்கு எதிர் நிலையான “எல் நினா”என்று  தட்ப வெப்ப நிலை ஆய்வாளர்களால் குறிக்கப்படுகிறது. இவ்விரண்டு கடைக்கோடி பருவநிலை மாறுதல்களினால் பெரும்வெள்ளம், கடும் வறட்சி ஆகிய இருவகை தாக்குதல்களும் மாறி மாறி நடக்கின்றன. திடீரென்று கடல் சீற்றங்களும் கடல் உள்வாங்குதல்களும் நிகழ்கின்றன. முக்கியமாக நமது நாட்டில் அழையா விருந்தாளியாக ஆண்டு தோறும் வந்துபோகும் “எல் நினோ” மற்றும் “எல் நினா” எனப்படும் பாதிப்புகளால் முறையே கடும் குளிர் அலையும், கடும் வெப்ப அலையும் பல ஏழை, எளிய மக்களைக் காவுவாங்கி வருகின்றது.

காட்டு விலங்குகள் நீர்நிலைகளைத் தேடிக் கிராமங்களில் அலைய வேண்டியுள்ளது. மனிதர்களும் காட்டு விலங்குகளைப் போல நீர் நிலையைத் தேடி குட்டைகளை நோக்கி படையெடுக்கிறார்கள். நன்ணீர் மழை பெய்து நிலத்தை வளமாக்கிக் கொண்டிருந்த நிலை போய் அமிலமழையால் கருகிப்போகின்றன விளை நிலங்கள். வளர்ச்சி என்கிற பெயரில் இயற்கை வளங்களைக் கபளீகரம் செய்வதால் ஏற்படும் மீளவியலாத சுற்றுச்சூழல்கேடுகள், அதனால் தலைமுறையைத் தாண்டிய பாதிப்புகள் நிகழ்கின்றன. மரபீனிமாற்றம் செய்யப் பெற்ற பயிர்களால் மலடாகிப் போன விளைநிலங்கள், அதன் விளைவாய் விவசாயிகளின் தற்கொலை. அணுக் கதிர்வீச்சினால் மனிதர்களுக்கு ஏற்படுகிற நோய்கள் என ஒட்டுமொத்தச் சமூகமே சுற்றுச்சூழல் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது.

இயற்கை வளங்களை அழித்து கபளீகரம் செய்துவருகிற நிலையில் அதன் பாதிப்பாக சூற்றுச்சூழல் முழுவதும் நஞ்சாகி அவற்றை மீட்க இயலாத கையறு நிலையில் இருக்கிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பல சட்டங்கள் இருந்தாலும் அவையனைத்தும் மீறப்பட்டு இயற்கையைக் கபளீகரம் செய்யும் அவலநிலை தொடர்ந்து நீடித்துவருகிறது. கார்ப்பரேட் தரகு முதலாளிகள் நலனுக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டங்களை நெளிக்கவும், வளைக்கவும், செய்யும் நிலையே இருக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க பல திட்டங்களும் சட்டங்களும் இருப்பதைப்போலக் காட்டிக் கொண்டாலும் உண்மையில், கார்ப்பரேட் முதலாளிகளுக்காக நிலம், நீர், காற்று, காடு, மலை என அனைத்து வளங்களையும் அழித்து சுற்றுச்சூழலை நஞ்சாக்கும் நிலையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. மாறிமாறி ஆட்சிக்கு வரும் எல்லா கட்சிகளின் ஆட்சிகளும் ஆண்டாண்டுகளாக இதையே செய்துவருகின்றன. இவற்றிலிருந்து நமது மக்களைப் பாதுகாக்கும் கடமையை அரசும் ஆட்சியாளர்களும் கண்டுகொள்வதே கிடையாது.

பன்னாட்டுக் கம்பெனிகள் தாங்கள் விரும்பிய வளங்களை, விரும்பிய கணமே சூறையாடுவதற்கேற்ப பல சட்டங்கள் திருத்தப்படுகின்றன. இதற்குத் தடையாக இருந்த சில அமைச்சர்கள், அதிகாரிகள் தூக்கியெறியப்பட்டு, திட்டங்களுக்கான அனுமதியை விரைந்து வழங்கும் வகையில் சட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் அமைச்சகம் அதற்கொப்பவே மாற்றியமைக்கப்பட்டது. வேதாந்தா அலுமினியம், போஸ்கோ இரும்பு எஃகு உள்ளிட்ட பல திட்டங்களுக்கு சாதகமாக அனுமதியளித்தனர். அதுமட்டுமல்லாது, மரபீனி மாற்றம் செய்த பல பயிர்களை நேரடியாக விளைநிலத்தில் சோதனை செய்யும் மகாபாதக முடிவும் அமலாக்கப்படுகிறது.

மோடி கும்பல் பல சுற்றுச்சூழல் விதிகளை, தடைகளைமீறி 144 திட்டங்களை அனுமதித்த மக்கள் விரோத முடிவுகளால் அதிர்ச்சியில் நாடே உறைந்து போயுள்ளது. அவ்வாறான முடிவெடுப்பதற்கு மோடி தலைமையிலான சுற்றுச்சூழல் குழுவுக்கு உச்சநீதிமன்றம் தடை வித்துள்ளது. ஆனாலும், பெரும் திட்டங்களுக்குள்ள முட்டுக்கட்டையைத் தவிர்க்க, தொழிலதிபர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தாலே அனுமதியளிக்கப்படும் என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார், சுற்றுச்சூழல் அமைச்சர். யார் ஆட்சியிலிருந்தாலும், சுற்றுச்சூழலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டாலும் பன்னாட்டு, தரகு முதலாளிகளின் லாப வேட்டைக்கான நலன் காக்கப்படும் என்றே இவர்கள் கூறுகிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளுக்காக நிலம், நீர், காற்று, காடு, மலை என அனைத்து வளங்களையும் அழித்து சுற்றுச்சூழலை நாசமாக்கும் நிலையே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

விளை நிலங்களின் தனித்தன்மையையும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் கபளீகரம் செய்யும் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் நமக்குத் தெரியாமலேயே சந்தைகளில் பரப்பும் வேலையும் இங்கு நடந்து வருகிறது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, ஆமணக்கு, பருத்தி உள்ளிட்ட 200 வகையான பயிர்களுக்கு, மரபீனி மாற்றம் செய்த உடனேயே அவற்றை விளை நிலத்தில் விளைவிக்க அனுமதியளித்தது காங்கிரசு அரசு. தகுந்த பாதுகாப்பு நெறிகளையும், சோதனைகளையும் செய்யாமல் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை அனுமதிக்கக்கூடாது என்று 2012-ல் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை கூறியது. மேலும் இது சம்பந்தப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கை வரும்வரை மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை விளைவிக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதை மாற்றி அமைக்கும் மோடி அரசின் அறிவிப்பு உயிரித் தொழில்நுட்பக் கம்பெனிகளுக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தந்தது.

இது போன்ற திட்டங்களால்  காலங்காலமாக அப்பகுதிகளில் விளையும் பயிர்களில் பேரழிவு மகரந்தக் கலப்பு ஏற்பட்டு அவற்றை மீளப்பெறமுடியாத அளவிற்கான பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக அமெரிக்க தனியார் விதை நிறுவனமான மான்சாண்டோ இந்தியாவில கால்பதித்த பின்னர் ஏற்பட்ட பாதக விளைவுகள் அதிகம். மான்சாண்டோ அறிமுகப்படுத்திய பி.டி. பருத்தியின் விளைவிலிருந்து இன்னும் மீளாமல் உள்ளனர் மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர விவசாயிகள். அங்கு விவசாயப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டதோடல்லாமல் அப்பயிர்களைத் தின்ற ஆயிரக்கணக்கான கால்நடைகளும் மடிந்து போயின. இன்னும் அந்நிலங்கள் பயிரிடத் தகுதியில்லாத மலட்டு நிலங்களாகவும், அப்பகுதியில் நிலத்தடி நீர் இல்லாத நிலையும் நீடிக்கிறது. மான்சான்டோவின் தயாரிப்புகளான பி.டி. வகை விளை பொருட்களால் உடல்நல பிரச்சினைகள், மரபணு ரீதியான பிரச்சினைகள் வருகின்றன என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. பி.டி. பருத்தி, கத்தரிக்காய் உள்ளிட்ட மான்சாண்டோவின் மரபீனி மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ அல்லது போராடினாலோ ஓராண்டு சிறைத்தண்டனை என ஒரு மசோதாவை நிறைவேற்றி தனது உண்மை முகத்தைக் காட்டியது அரசு. மான்சாண்டோ மட்டுமல்லாது பல பன்னாட்டு உயிரித் தொழிநுட்ப நிறுவனங்களும் இந்தியாவிற்குள் தங்கள் விதைச் சந்தையை விரிவுபடுத்தி நிலம், நீர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரத்தையும் காவுகொள்ளத் தயாராகி வருகிறது.

மலைகளில் உள்ள காடுகளின் இயற்கைத் தன்மை அழிக்கப்பட்டு கனிம வளங்கள் சூறையாடப்படுகின்றன; கார்ப்பரேட் கம்பெனிகளின் பெருந்தோட்டங்களாகவும், இயற்கை சூழல் கொண்ட சுற்றுலாத் தளங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. காடுகளும் மலைப்பகுதிகளும் புலிகள், சிறுத்தைகள், யானைகள் முதலிய வனவிலங்குகள் வாழமுடியாத அளவிற்கு அங்கே சுற்றுச் சூழல் சூறையாடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே மிருகங்கள் சமவெளிப் பிரதேசங்களை நோக்கிப் படையெடுக்கின்றன. உண்மை இப்படியிருக்க பழங்குடிகள் மற்றும் மலையோரக் கிராமங்களில் வாழும் ஏழை மக்கள் மீதும் அரசும் ஆட்சியாளர்களும் பழிசுமத்துகின்றனர். இக்காடுகளின் விரோதிகள் எனக் குற்றஞ் சுமத்தி பழங்குடிமக்களை வனங்களிலிருந்தும் நிலங்களிலிருந்தும் வெளியேற்றியும் வாழ்வுரிமையைப் பறித்தும் அவர்களின் வளங்களைச் சூறையாட எத்தணிக்கின்றன, ஆளும் வர்க்கங்கள்.

இப்படித் தொடர்ச்சியாக இயற்கைச் சூழலைக் கெடுக்கும் திட்டங்கள் வந்த வண்ணமிருக்கின்றன.  தமிழக டெல்டா மாவட்டங்களிலிருந்து மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம், எண்ணெய் எரிசக்திக் குழாய்கள் பதிக்கும் திட்டம், வேடியப்பன் – கௌத்தி மலை இரும்புக் கனிமக் கொள்ளைத்திட்டம், கூடங்குளத்தில் அணு உலைகள் என்று நீண்டுகொண்டே செல்கின்றன. இவற்றுக்கு எதிராகப் போராடும் மக்களை ஒடுக்கும் வேலையை செய்து வருகிறது, இவ்வரசு. சுற்றுச்சூழல் சட்டங்களைச் சுட்டிக்காட்டி நீதிமன்றங்களுச் சென்றாலும் அவை சுவற்றிலடித்த பந்தாய் மக்கள்மீதே பாய்கின்றன.

11. இந்திய அரசே ஒரு கார்ப்பரேட் கொள்ளை நிறுவனம்; பிரதமரே அதன் தலைமை நிர்வாக அதிகாரி

நாட்டு மக்களுக்கு அடிப்படை வசதிகளும் வாழ்வுரிமைகளும் அப்பட்டமாகவே மறுக்கப்படும், ஒடுக்கப்படும் அதேசமயம், ஏகாதிபத்திய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும் உள்நாட்டுநாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களும் இந்திய அரசாலும் ஆட்சியாளர்களாலும் செல்லப் பிள்ளைகளாக வளர்க்கப்படுகிறார்கள். அவர்கள் கேட்கும் அனைத்தும் ஈடேற்றிக் கொடுக்கப்படுகின்றன. இந்திய அரசே “கார்ப்பரேட் இந்தியா” என்ற ஒரு தொழில் நிறுவனம் போலாகி விட்டது. இந்தியப் பிரதமர் மக்களுக்குப் பொறுப்பான அரசியல் தலைவராக அல்லாமல், இலாபவெறி பிடித்த “கார்ப்பரேட் இந்தியா” என்ற தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பிரதமரும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களாக மாநில முதல்வர்களும் செயல்படுகிறார்கள்.

நாட்டிலேயே மிகப்பெரிய சுரண்டல் அமைப்பாக அரசுதான் உருவாகியிருக்கிறது. என்னென்ன வழிகளிலெல்லாம், என்னென்ன காரணங்களைச் சொல்லி மக்களைக் கொள்ளையடிக்கலாம் என்று சதாகாலமும் அரசு அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையிலேயே யோசித்து அரசுத் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன. தனியார் கார்ப்பரேட் கம்பெனியைப் போல, அரசு கட்டுமான அமைப்புகளும் அரசுத் தொழில்களும் இலாப – நட்டக் கணக்குச் சொல்லி, நேரடியாக வரிச் சுமைகள் மக்கள் தலையில் ஏற்றப்படுவதோடு, மக்களது அடிப்படை வசதிகள் தேவைகளுக்காக செய்யப்படும் சேவைகளுக்கே கட்டணங்கள் அதீதமாக ஏற்றப்படுகின்றன.  பொதுநலன் என்ற பெயரைச் சொல்லி பொதுமக்களுக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் சொந்தமான விவசாய நிலங்கள், வாழ்விடங்கள், வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் எல்லாம் அரசு பறித்துக்கொள்கிறது. பிறகு, வளர்ச்சிக்கு அவசியமானது என்றுகூறி கார்ப்பரேட் முதலாளிகளுக்கு குறைந்த விலையிலோ, இலவசமாகவோ அவை தாரைவார்க்கப்படுகின்றன.

அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித்தரக் கடமைப்பட்ட அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை இலாபம் அடைவதற்கான வியாபாரச் சரக்குகளாக மாற்றித்தரும் தரகுவேலையைச் செய்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் தரகர்களான இவர்களைத்தான் பொது ஊழியர்கள்/அரசு ஊழியர்கள் என்று நம்பச் சொல்லுகிறார்கள். நாட்டுக்கும் மக்களுக்கும் எப்போதும் துரோகம் செய்து ஆதாயம் அடைவதையே தொழிலாகச் செய்துகொண்டிருக்கும் அரசையும் ஆட்சியாளர்களையும் பொது  ஊழியர்கள் என்று மிகவும் தவறானதொரு, மோசமானதொரு கருத்தாக்கம் உருவாக்கப்படுகிறது. அவர்கள் மக்களுடைய அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகளைத் தாம் நிறைவேற்றித் தராதது மட்டுமல்ல, மக்களுக்கே சொந்தமான நீர், நிலம், கடல், மணல், பாறைகள், காடுகள், மலைகள், அவற்றுக்குள் புதைந்திருக்கும்  கனிமவளங்கள் அனைத்தையும் அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்குத் தாரை வார்க்கிறார்கள்.  கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை வெறியால் இந்த இயற்கை வளங்கள் வரம்பில்லாமல் சூறையாடப் படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்காக மலைவாழ் பழங்குடிகள், விவசாயிகள், மீனவர்கள், சிறுவியாபாரிகள், நகர்ப்புறக் குடிசைப் பகுதிகளில் வாழும் உதிரிப் பாட்டாளிகள் ஆகிய நமது மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு, வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்டுத் துரத்தப்படுகிறார்கள். நம்தொழிலாளர்களின் உழைக்கும் உரிமையும் கார்ப்பரேட் முதலாளிகளின் தயவிற்கு விடப்பட்டு விட்டன.

அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித்தரக் கடமைப்பட்டு, ஒப்புக்கொண்ட அடிப்படை வசதிகள் – சேவைகள் – தேவைகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை, மானியங்களை முற்றாக நிறுத்தி விடும்படி கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களுடைய பன்னாட்டுப் பங்காளிகளும் தொடர்ந்து அரசை நிரப்பந்திக்கிறார்கள். விவசாயிகளுக்குத் தரப்படும் கடன்கள் வீணென்று கரித்துக் கொட்டிப் பிரச்சாரம் செய்யும் அதேசமயம், அவர்கள் அதைப்போல பலமடங்கு அதாவது கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏழு இலட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வாராக்கடன் என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகள் சுருட்டிக் கொண்டுள்ளனர். விவசாயிகளுக்கான அரசுக் கடன், மானியங்கள் போன்றவைகளைக்கூட கார்ப்பரேட் முதலாளிகள்தாம் கொள்ளையடித்து விடுகிறார்கள். அதாவது, குறைந்த விலைவைத்து விவசாயிகளுக்கு இடு பொருட்களை விற்கும்படி விவசாயத்துக்கு மானியம் என்று ஒதுக்கப்படும் தொகை ஆலை முதலாளிகளிடம் தரப்படுகிறது. ஆனால், அவற்றுக்கு விலைக்குறைப்பு செய்யாது தாங்களே அதை விழுங்கி விடுகிறார்கள்.

விவசாயிகளிடமிருந்து வாங்கிய கரும்புக்கான நிலுவைத் தொகையை அவர்களுக்கு ஆண்டுக்கணக்கில்  ஆலைமுதலாளிகள் தருவதே கிடையாது. விவசாயிகளின் போராட்டங் களுக்குப் பிறகு ஆலை முதலாளிகளுக்கு அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்கள் கடன் கொடுக்கிறது. அதையும் ஆலை முதலாளிகள் விழுங்கி விடுகிறார்கள். புதியபொருளாதாரக் கொள்கை புகுத்தப்படும் முன்பு தனியார் ஆலைகள் நட்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதாகக் கூறித்தான் அவற்றை அரசுடைமையாக்கினார்கள். புதிய பொருளாதாரக் கொள்கை புகுத்தப்பட்ட பிறகு அரசுடமைத் தொழில்கள் நட்டத்தில் இயங்குவதாகவும், அரசு ஊழியர்களின் திறமையின்மைக்குத் தனியார்மயம்தான் தீர்வு, ஏராளமான முதலீடும் முன்னேறிய தொழில் நுட்பமும் தேவை என்றெல்லாம் வாதிட்டு அரசுத்துறைத் தொழில்களை அடிமாட்டு விலைக்கு அந்நிய மற்றும் உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரைவார்த்தார்கள். 2007-க்குப் பிறகு உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் இந்தியாவில் அதன் தாக்கம் விளைவாகவும் கார்ப்பரேட் நிறுவனங்கள் திவாலாகும் நிலையை எட்டியதாகக்கூறி அரசு நிதி ஏராளமாகக் கொட்டப்படுகிறது. பல இலட்சம் கோடி ரூபாய்கள் சுமையை மக்கள்மீது அரசும் ஆட்சியாளர்களும் சுமத்துகின்றனர்.

பார்ப்பன பாசிச மோடியின் குஜராத்தை நாட்டின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் மாதிரியாகக் காட்டி ஏய்த்ததைப் போல, அமெரிக்காவை மாதிரியாகக் காட்டி புதியபொருளாதாரக் கொள்கை என்ற பெயரில் புகுத்தப்பட்ட தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம், உண்மையில் இந்த நாட்டை மறுகாலனியாக்கும் அரசியலை, பெருளாதாரத்தைக் கொண்டதாகும். ஏகாதிபத்திய – பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களையும் உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களையும் இழுவை இயந்திரமாகக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை வழி நடத்துவதாகும்.

இதன் நேரடி விளைவாக இந்த நாட்டின் இறையாண்மை பறிக்கப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்திய மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்க நலன்களுக்கு தொண்டூழியம் செய்வதாக மாற்றப்பட்டுவிட்டது. இந்த உண்மையை இந்தியாவின் எல்லாப் பொருளாதார, அயலுறவுக் கொள்கைகளிலும் காணலாம். இந்த நாட்டின் பொருளாதாரம் அமெரிக்க டாலருடன் பிணைக்கப்பட்டு, அமெரிக்க எடுபிடியான உலக வர்த்தக நிறுவனத்தின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து, ஏகாதிபத்திய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களுக்கும் சேவை செய்வதாகவும் மாற்றப்பட்டுவிட்டது. ஏகாதிபத்திய – பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்கள் வழியே தனியார் திறமை, முன்முயற்சியில் நாட்டின் பொருளாதாரம் நாலுகால் பாய்ச்சலில் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடைந்து விடும் என்று அரசும் ஆட்சியாளர்களும் “பயாஸ்கோப்பில்” படம் காட்டினார்கள். ஆனால், நடந்ததோ வேறுதான்! தனியார் திறமை, முன்முயற்சி என்பது உண்மையில் இலாபவெறியை நோக்கமாகவும் அடிப்படையாகவும் கொண்டது. எனவே, அவர்கள் இலாபவெறியைக் கொள்ளை இலாபவெறியாக வளர்த்து, முன்னேற்றி நாட்டை இலஞ்ச – ஊழல், அதிகார முறைகேடுகளுக்குள் தள்ளினார்கள். நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் முன்பைவிடக் கடுமையான, தீராத நெருக்கடிக்குள் மூழ்கடித்தார்கள். அதன்மூலம் அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் தாம் ஆளவே அருகதையற்றவர்கள், உடனடியாகத் தூக்கியெறியப்பட வேண்டியவர்கள் என்று காட்டிவிட்டார்கள்.

விவசாயத் துறையை அடுத்து, கார்ப்பரேட் முதலாளிகளின் கண்களை மிகவும் உறுத்தியவை சினிமா, தொலைக்காட்சி முதலான ஊடகங்கள், சில்லரை வர்த்தகம் ஆகியவை. இவற்றில் மட்டும்  கோடி கோடியான ரூபாய் பணம் புரளுவதால் கொள்ளை இலாபமடிக்க முடியும் என்பதைக் கண்டுகொண்டுவிட்ட பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களுக்கும் இவற்றைக் கைப்பற்றுவதில் இறங்கின. சினிமா, தொலைக்காட்சி முதலான ஊடகங்களை இவர்கள் கைப்பற்றிக் கொண்டது விரைவாகவும், எளிதாகவும் நடந்துவிட்டது. இவற்றில் சினிமா ஏற்கெனவே வட்டி லேவாதேவிப் பண முதலைகளின் பிடியில் இருந்தது. புதிதாக வந்த தொலைக்காட்சித் துறை முதலில் ஒரு சிலரின் ஏகபோகமாக இருந்தது. ஆகவே, பெரும் மூலதனத்துடன் நுழைந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அவற்றைக் கைப்பற்றி கொள்ள முடிந்தது. இப்போது தயாரிப்பு, விநியோகத்திலிருந்து பல சினிமாக் கொட்டைகைகளுடன் பலநோக்கு அங்காடிகள் நிறைந்த பிரம்மாண்டமான வளாகங்கள் (Malls and Multiplexes) வரை எழுப்பிப்  பெருங்கொள்ளையடிக்கிறார்கள். ஊடக மயக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் இந்தியாவில் தங்களுக்குச் சாதகமான கருத்துக்களைப் பிரச்சரம் செய்வதற்கும் மன்மோகன், மோடி போன்ற “தமது ஆட்களை” அதிகாரத்தில்  அமர்த்துவதற்கும் இந்த ஊடக ஆதிக்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் பிரதிநிதிகளை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதை அவர்களின் ஊடகங்கள் பார்த்துக் கொள்கின்றன. ஆகவே மக்களுக்கு ஏற்புடையவர்கள் அதிகாரத்துக்கு வந்துவிட முடியாது

12. விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிமக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிப்பு – கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதாயம் குவிப்பு!

விவசாயிகள், மீனவர்கள், பழங்குடிமக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள் என்று பலபிரிவு மக்களின் வாழ்வாதாரங்களைப் பிடுங்கிப் பஞ்சைப் பராரிகளாக்கிய கார்ப்பரேட் முதலாளிகள் பல இலட்சக்கணக்கான சில்லரை வியாபாரிகளின் வாழ்வாதாரங்களைத் தட்டிப் பறிக்கிறார்கள். அடித்தட்டு மக்களின் வாங்கும் சக்திக்குட்பட்டு ஐம்பது காசு, ஒரு ரூபாய்க்கும்கூட “பாக்கெட் போட்டு”  சில்லரை வியாபாரிகளை விரட்டி விட்டு, சில்லரை வர்த்தகத்தை  கார்ப்பரேட் முதலாளிகள் கைப்பற்றிக் கொள்கிறார்கள். முன்பேர வர்த்தகம், இணையத்தள வர்த்தகம் (futures trade, online trade etc) பெரு விவசாயிகளுடன் ஒப்பந்த உற்பத்தி, பெரும் கிடங்குகளில் நவீன வசதிகளுடன்பதுக்கல் ஆகியவற்றின் மூலம் சந்தையைக் கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். நுகர்வோர், மற்றும் நாட்டின் சந்தையை ஆட்டிப்படைக்கும் வல்லமை மிக்கவர்களாக கார்ப்பரேட் முதலாளிகள் ஆகிவிட்டார்கள்.

இவை போதாதென்று பல வர்த்தக முத்திரைப் பொருட்களை விற்கும் (மல்டி பிராண்டு) சில்லரை வர்த்தகத்தில் ஏகாதிபத்திய – பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சிகப்புக் கம்பளம் விரிக்கப்படுகிறது. இது, சிறு, பெரு வர்த்தகத்தில்  இந்தியாவை உலகச் சந்தையுடன் பிணைப்பதாகும், உலகத் தரம் என்ற பெயரில் அந்நியப் பொருட்களைக் கொண்டுவந்து குவிப்பதாகும். ஒருபுறம் உலகமயமாக்கம் பேசிக்கொண்டே வர்த்தகக் காப்புக்கொள்கைகளை மேலை ஏகாதிபத்திய நாடுகளே பின்பற்றும் இன்றைய காலத்தில், ஏகாதிபத்திய – பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களை பலவர்த்தக முத்திரைப் பொருட்களை விற்கும் (மல்டிபிராண்டு) சில்லரை வர்த்தகத்தில் அனுமதிப்பது ஏற்றுமதி – இறக்குமதி, அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கச் செய்து, இந்திய நாணயத்தின் மதிப்பை வீழ்ச்சி அடையச்செய்து பொருளாதார நெருக்கடியைக் கடுமையாக்கவே செய்கிறது.

தம் கொள்ளை இலாபத்துக்காக இடைவிடாது தமது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டேபோகும் கார்ப்பரேட் முதலாளிகள், அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்கு நிறைவேற்றித் தர வேண்டிய  அடிப்படைத் தேவைகளான  கல்வி, மருத்துவம், சுகாதாரம், குடிதண்ணீர், சாலைப்போக்குவரத்து, வீடு – வீட்டுமனை முதலானவற்றைத் தமது சேவைத் தொழிலாக மாற்றிக் கைப்பற்றிக் கொண்டதோடு, வங்கி, காப்பீட்டுத் துறை, பங்குச் சந்தைத் தரகுத் தொழில் போன்றவற்றை நிதிச் சேவைத் தொழில்கள் என்ற வகையில் விரிவுபடுத்திக் கொண்டார்கள். அது மட்டுமல்ல, அரசு மற்றும் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து மேற்கண்ட எல்லாத் தொழில்களுக்கும் “சேவைவரி” என்ற பெயரில் அவற்றைப் பயனாளிகளிடமிருந்து வசூலித்துக் கொள்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்புதான் புகுத்தப்பட்ட இந்த “சேவை வரி” நாட்டின் வருவாயில், வரிவசூலில் முக்கிய இடத்தைப் பிடித்துக்கொண்டு விட்டது. நாட்டு மக்களுடைய பன்முக வாழ்க்கை மீதும் “வரி” வசூல்முறையைப் புகுத்தி, மக்கள் அனைவரையும் வரிவசூலின் கீழ்கொண்டு வந்து விட்டது, அரசின் சாதனை என்று கார்ப்பரேட் முதலாளிகள் பாராட்டுகின்றனர். சொந்த வீட்டில் குடியிருந்தால் சொத்துவரி, வாடகை வீட்டில் குடியிருந்தால் வாடகைக் குடியிருப்பு சேவை வரி, உணவு விடுதியில் சாப்பிட்டால் ஒவ்வொரு உணவுப் பண்டத்தின் பேரிலும் வரி. “வாட் வரி” என்பது மதிப்புக் கூட்டு வரி என்பது உண்மையில் ஒரு சரக்கின் மதிப்பைக் கூட்டும் தொழிலாளியின் உழைப்பு மீதான வரி. இனிக் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் “சேவைக்கும்” வரி வசூலிப்பதுதான் பாக்கி. அப்புறம் அரசும் ஆட்சியாளர்களும் மக்களுக்காக என்னதான் செய்கிறார்கள்? ஒன்றுமே செய்வதில்லை என்றும் கூறிவிட முடியாது; அரசும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் முதலாளிகளும் மக்களுக்கு எதிராகச் செய்யும் கேடுகளை எதிர்த்துப் போராடினால் ஒடுக்குவதைச் செய்கிறார்கள்!

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசும் ஆட்சியாளர்களும் செய்துவரும் சேவைகளுக்கும் முறைகேடுகளுக்கும் சட்டப்படியான வரிவசூலிக்கவில்லைதான், வேறுவகை வசூல்களை (இலஞ்ச ஊழல்) நடத்திக்கொள்கிறார்கள்! அவை, சதித்தனமானவை, துரோகத்தனமானவை. அத்தகைய வசூல்களுக்காக பன்னாட்டு, உள்நாட்டுக் கார்ப்பரேட் முதலாளிகளுடன் கூட்டுச்சேர்ந்து இந்த நாட்டின் விவசாயத்தை சீரழித்து வருகிறார்கள்; பலகோடி விவசாயிகளின் வாழ்வையும் வாழ்வுரிமையையும் பலிகொடுத்து வருகிறார்கள். பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி என்ற பெயரால் விவசாயிகளின் நிலங்களைப் பறித்து, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள்; கார்ப்பரேட் நலன்களுக்காக அடிப்படைக் கட்டுமான நிர்மாணங்களுக்காக என்று சொல்லி  போக்குவரத்துச் சாலைகள் போடவும், உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் நடவும்,  எண்ணெய்க் குழாய் பதிக்கவும், எரிவாயு எடுக்கவும் அரசே நிலங்களைக் கைப்பற்றிக்கொடுக்கிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரால் விவசாயிகளின் விளை நிலங்களைப் பிடுங்கி முந்தைய காலச் சீனத்தைப்போல தனித்தனிக் காலனிகளை அமைக்கிறார்கள். வீடு – வீட்டு மனைத் தொழில் முதலைகள் கவ்விக்கொள்ள விடுகிறார்கள்.

இது போதாதென்று எஞ்சியுள்ள விவசாய விளை நிலங்களையும் பாழடிக்கும், நாசமாக்கும் வேலையையும் விவசாயத் தொழில்களை நடத்தும் மாண்சான்டோ, பேயர்  போன்ற அந்நிய கார்ப்பரேட் நலன்களுக்காக அரசும் ஆட்சியாளர்களும், செய்கிறார்கள். விவசாயத் தொழிலாளர்களின் வயிற்றிலடிக்கும் நவீன விவசாயத் தொழிற் கருவிகளைப் புகுத்துகிறார்கள். நமது நாட்டிலுள்ள விவசாயப் பல்கலைக் கழகங்கள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள், விவசாயக் கல்லூரிகள் பெரும்பாலும் விவசாயத் தொழில்களை நடத்தும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் எடுபிடிகளாகவே செயல்படுகின்றன. நமது நாட்டின் பல்லாயிரக்கணக்கான ஆண்டு மரபுவழி விதைகள், நமது நாட்டு மண்வளம், விவசாயம், பயிர்களைப் பற்றிய விவரங்களைத் திரட்டித் தருகிறார்கள்; இல்லை, அவற்றைத் திருடி விவசாயத் தொழில்களை நடத்தும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கிறார்கள். விவசாயத்தில் உலகுதழுவிய அளவில் நடக்கும் இம்மாற்றங்களை “உணவுயுத்தம்” என்று தமது கணிப்பாக விவசாயத் துறை ஆய்வாளர்கள் முன்வைக்கிறார்கள். நாட்டின் துரோகிகளாகிவிட்ட விவசாய ஆராய்ச்சியாளர்களின் பரிந்துரையின் பேரில் விவசாயத் தொழில்களை நடத்தும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளைக்காக நவீன மரபணு மாற்ற விதைகளையும் அதற்கான உரங்கள், பூச்சி மருந்துகளையும் திணிக்கிறார்கள். அவை நமது நாட்டு மரபுவழி விதைகளைப் பயன்படுத்த முடியாதவாறு செய்து விடுகின்றன. நமது நிலங்களைப் பாழ்படுத்துகின்றன; நிரந்தரமாகத் தரிசாக்குகின்றன. நமது மக்களை நீண்ட காலக் கொடிய நோய்களில் வீழ்த்துகின்றன. தீராக்கடனுக்கும் தற்கொலைக்கும் தள்ளுகின்றன. நமது மக்களை விவசாயத்தில் இருந்தும் கிராமப்புறங்களில் இருந்தும் நாடோடிகளாக்கி விரட்டுகின்றன.

இவ்வாறு விரட்டப்படும் பெரும் எண்ணிக்கையிலான  உழைக்கும் மக்கள், ஒன்று தமது சொந்த மாநிலங்களில் நகர்ப்புற நவீனச் சேரிகளான குடிசைப் பகுதிகளில் குவிகிறார்கள்; அல்லது குடிபெயரும் தொழிலாளர்களாகிறார்கள். உழைப்புச் சந்தையில் மலிவாகக் குவியும் இம்மக்களை ரிசர்வ் படையாகக் கொண்டு கார்ப்பரேட் முதலாளிகள் ஈவிரக்கமின்றிக் கடுமையாகச் சுரண்டுகிறார்கள்.  ஏறக்குறைய முக்கால் நூற்றாண்டு காலமாக தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற தொழிலுறவு, மனிதவுரிமைகள் எல்லாம் மறுகாலனியாக்கமும் உலகமயமாக்கமும் புகுத்தப்பட்ட பிறகு கார்ப்பரேட் முதலாளிகளால் காலில் போட்டு மிதிக்கப்படுகின்றன. பல ஆலைகளில் பத்துப் பேருக்கு ஒருவர்கூட நிரந்தரத் தொழிலாளி கிடையாது. அவர்களுக்கும் தொழிற்சங்க உரிமைகள் கிடையாது. எஞ்சியவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்; அடிப்படைத் தொழிலுரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் நவீனக் கொத்தடிமைகளாக, அன்றாடக் கூலித் தொழிலாளர்களாகவே நடத்தப்படுகிறார்கள். உள்ளூர் சாதிப்பிரமுகர்கள் இந்தக் கொத்தடிமைத் தொழிலாளர்களைப் பிடித்துத் தரும் தரகர்களாக செயல்படுகிறார்கள். வேலையின் போது அடிபட்டால் இவர்களுக்கு உயிர்காக்கும் முதலுதவி கூடக் கிடையாது. குடிபெயர்ந்த தொழிலாளர்கள் செத்தால் உறவினர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அனாதைப் பிணமாக அப்புறப்படுத்தி விடுகிறார்கள். ஆனால், பன்னாட்டுக் கார்ப்பரேட் தொழிலகங்களில் நவீன “ரோபோ” இயந்திரங்களோடு போட்டி போடும் உற்பத்தியில் தள்ளிக் கசக்கிப் பிழியப்படுகிறார்கள். தாமும் பெரும் ஊதியம் பெறும் வகையில் பின்னாளில் தமது பணி நிரந்தரம் ஆகிவிடும் என்ற மாயையில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆலையில் சிக்கிய கரும்புபோல பிழியப்பட்டு வெளியே வீசியெறியப்படுகிறார்கள்.

13. ஊதிப்பெருக்கப்படும் அடக்குமுறை அரசு எந்திரம் நாட்டுக்கு வேண்டாத புற்றுநோய்ச் சதைப்பிண்டம்

அடித்தட்டு மக்களின் அடிப்படைத் தேவைகள், வாழ்வுரிமைகள், உழைக்கும் மக்களின் தொழிலுரிமைகள் முதலானவற்றை நிறைவேற்றித் தராதது மட்டுமல்ல, சமூகக் கிரிமினல் குற்றங்கள், விலைவாசி ஏற்றம், வேலையில்லாத் திண்டாட்டம், உயிர்க்கொல்லி நோய்கள், பெரும் விபத்துக்கள், வறட்சி பஞ்சம் பசி பட்டினிச் சாவுகள், வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து நாசம் விளைவிப்பது, பேரிடர் சாவுகள் ஆகியவற்றுக்கும் தமக்கும் தொடர்பில்லை, பொறுப்பில்லை; அவற்றுக்கு நிவாரணங்கள் செய்து தரவேண்டிய கடமை தமக்கு இல்லை என்பதாக அரசு ஒதுங்கிக்கொள்கிறது. சற்று ஆழமாகப் பார்த்தால் இத்தகைய கேடுகளுக்கு அரசுதான் நேரடியாகவோ மறைமுகமாகவோ காரணமாகும். அரசின் தவறான பொருளாதார, சமூக, சுற்றுச்சூழல், பண்பாட்டுக் கொள்கைகளின் விளைவுகளால் இவை ஏற்படுகின்றன. நேரடி, மறைமுக வரிவசூல் மூலமும் மக்களின் சொத்துகள் இயற்கை வளங்களை விற்பதன் மூலமும் ஏராளமான நிதியைத் திரட்டிக்கொள்ளும் இந்த அரசு, மக்களின் அடிப்படைத் தேவைகளையும் அவசியமானபோது தக்க நிவாரணங்களை வழங்கவும், வாழ்வுரிமைகளையும், வாழ்வாதாரங்களையும், சுற்றுச்சூழலையும், பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளது.

ஆனால், மக்களுக்கு நேரும் எல்லா கேடுகளையும் அரசும் ஆட்சியாளர்களும் கண்டு கொள்வதே இல்லை. அதாவது மக்களுக்காக செயல்படாத இந்த அரசு, ஏகாதிபத்திய பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய உள்நாட்டு மற்றும் நாடு கடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிய நிறுவனங்களுக்கு ஒரு பாதிப்பு இழப்பு என்றால் ஓடோடிச் சென்று உதவுகிறது. தங்களின் வளர்ச்சி, முன்னேற்றத்தைக் கட்டுப்படுத்தும் எந்த வகையிலான நடவடிக்கையிலும் அரசு தலையிடக்கூடாது; “சிறிய, சிக்கனமான அரசாங்கம், கூடுதலான நிர்வாகம்” என்பதை திறமையான அரசுக்குரிய இலக்கணமாக கார்ப்பரேட் சிந்தனையாளர்கள் தமது தாரக மந்திரமாக ஓதுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே மக்கள் நலப் பணிகளுக்கான, சேவைக்கான அரசு கட்டுமானங்களைக்  கலைக்க வேண்டும் என்பது அவர்களின் நிர்ப்பந்தமாக உள்ளது. மக்கள் சேவைக்காக ஆசிரியர், மருத்துவர், துப்புரவுப் பணியாளர், சுற்றுச்சூழல் பாதுகாப்பாளர்கள், குடிநீர் மற்றும் பாசனநீர் பராமரிப்பாளர்கள் போன்ற வேலைகளுக்கு ஆள் சேர்ப்பது இல்லை. ஆட்குறைப்புதான் செய்கிறார்கள். மாறாக, மக்களை ஒடுக்குவதற்காக போலீசு, ஆயுதப்படைகள், துணை இராணுவம், உளவு கண்காணிப்பு அமைப்புகள், வழக்காடு மன்றங்கள், சிறைச்சாலைகள், பல துறை ஒழுங்குமுறை அதிகாரவர்க்க அமைப்புகள் போன்ற அரசு வேலைகளுக்குத்தான் ஆள் சேர்க்கப்படுகிறது. அவற்றை ஊதிப்பெருக்குவதோடு, நவீன ஆயுதங்கள் கருவிகளைக் கொண்டு மேலும் பலப்படுத்துவதற்காக கூடுதலான அரசு நிதி திருப்பிவிடப் படுகிறது. இப்போது பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மக்கள் சமூகத்தின்மீது பெருந்திரள் கண்காணிப்பு ஏற்பாடுகளும் அடையாளத் தகவல் சேகரிப்புகளும், நவீன வாகனங்கள் – செய்தித் தொடர்பு – விரைவான போக்குவரத்து வசதிகளும் என்று அரசு எந்திரம் ஊதிப்பெருக்கப்படுகிறது. அரசுக்கு எதிரான மக்கள் திரள் எழுச்சி எதுவும் வந்துவிடக்கூடாது; வந்தாலும் அதை ஒடுக்குவதற்கான முன்தயாரிப்பாகவே இவ்வாறு அரசு எந்திரம் கட்டமைக்கப்படுகிறது.

உலக ஏழைநாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்தாலும், உலகில் மிகப் பெரிய பணக்கார நாடாகிய அமெரிக்காவின் அரசு ஊழியர் எண்ணிக்கையை விட இந்திய மைய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 2% மட்டுமே குறைவு. 2008-ஆம் ஆண்டிலேயே இந்திய மைய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 31.12 இலட்சம் பேராக இருந்தது. இவை தவிர, சிறியதும் பெரியதுமாக உள்ள எல்லா மாநில அரசுகளின் போலீசு, ஆயுதப்போலீசு, அதிகாரவர்க்கம், நீதித்துறை சட்டத்துறை, வாரியங்கள் கழகங்கள், ஆணையங்கள் எனப்பெருகி வருகின்றன. இவை வேண்டாத சதைப்பிண்டமெனக் கூறப்பட்ட போதிலும், கட்டுமான மறுசீரமைப்பு அமலாக்கப்பட்ட போதிலும் 25 ஆண்டுகளில் 0.42% தான் இந்திய மைய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்தது. அதிலும், மக்கள் சேவைக்கான அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைக்கப்பட்டு விட்டன. மக்களை ஒடுக்கும் இராணுவம், போலீசு முதலிய ஒடுக்குமுறை அமைப்புகளோ அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்திய மைய அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் இராணுவம், போலீசு மற்றும் அவற்றுக்கான சிவில் ஊழியர்களின் பங்கு மட்டும் 20 சதவீதமாகும்.

அதேசமயம், அவர்களின் சம்பளம் மற்றும் வசதிகளைப் பெருக்குவதற்கான செலவு எகிறிக் கெண்டே போகிறது. அது 2011-12 ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் கீழிருந்தது. அதுவே 2012-13 இல் 1,13, 785 கோடி ரூபாயாகவும், 2013-14 இல் 1,24,646 கோடி ரூபாயாகவும் உயர்ந்தது. இந்த விவரங்களில் உள்ளதைவிட பன்மடங்கு அதிகமான அளவில் உள்ள மாநில அரசுகளின் ஊழியர்கள் போலீசு எண்ணிக்கையும், செலவும் சேர்க்கப்படவில்லை. பல மாநிலங்களின் வரவைவிட செலவு மிகையாகி அவற்றின்பொருளாதாரமே திவாலாகிவிட்ட நிலையை எட்டியுள்ளது. மாதக் கணக்கில் அவர்களுக்கு சம்பளம்கூட தரப்படுவதில்லை. மையமாநில அரசுகளின் ஊழியர்களும் அதிகார வர்க்கத்தினரும் போலீசும் உளவுப்பிரிவினரும் இவ்வாறு ஊதிப் பெருக்கப்படுவதால், அதே விகிதத்தில் இலஞ்ச ஊழலும் பல்கிப் பெருகுகிறது. மக்களை ஒடுக்குவதையே பயிற்சியாகவும் பணியாகவும் கொண்டு தனிவகை சாதியாக வளர்க்கப்படும் இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்துக்கே வேண்டாத, தூக்கியெறியப்பட வேண்டியபகை சக்தியாக உள்ளது.

இந்திய இராணுவத்தின் மீது மனித உரிமை மீறல் உட்பட பல கடும் குற்றச்சாட்டுக்கள் உள்ளன. ஆண்டுகள் பலவான பிறகும் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  போலீசுக் கமிசன்கள், சட்டத்துறைக் கமிசன்கள், நீதித்துறைக் கமிசன் எனப்பல ஆணையங்கள் அமைத்து பரிந்துரைகள் பெற்றபோதும், அவை அமலாக்கப்பட்டதே கிடையாது. ஆனால், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கும்படி கோருவது தேசதுரோகச் செயல் என்று குற்றம் சாட்டப்படுகிறது. 1962 போரில் சீனாவிடம் இந்திய ரானுவம் தோற்றது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. ஒப்பீட்டளவில் மிகச் சிறிய பாகிஸ்தானிய படைகளை சமாளிக்க சிரமப்படுவதும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் அவை எதுவும் கவனிக்கப்படவேயில்லை.

பெரும்பாலும் ஏழை இளைஞர்களை இணைத்துக் கொண்டுள்ள இந்திய இராணுவத்தில் அவர்களுக்கு உரிய மதிப்பு மரியாதையும் கிடையாது. இந்திய படைத்துறையில் பெண்களுக்கு சம உரிமைகளும் வாய்ப்புக்களும் வழங்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. 23 பெரும்பான்மை உயர் பதவிகளில் அனைத்திலும் மேல்சாதியினரையும், ஆண்களையும், வைத்திருப்பது இதற்கு இன்னுமொரு சான்றாகும். இந்திய படைத்துறையில் குறிப்பாக, வட இந்திய சீக்கிய, இராச புத்திர இனத்தைச் சார்ந்தவர்கள் பெரும் தொகையில் உள்ளார்கள். ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்தோரும், சிறுபான்மையினரும் மிகக் குறைவே. தலித்துக்கள், பழங்குடிகள் போன்றோருக்குச் சம பங்களிப்பு மறுக்கப்படுகிற இந்திய படைத்துறை இயங்கிய, இயங்குகின்ற பல தளங்களில் பாரிய மனித உரிமை மீறல் செயற்பாடுகளுக்காக இராணுவம் துணை இராணுவத்தின்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. படுகொலைகள், கொள்ளை, சித்திரவதை, பாலியல் வன்முறை எனப் பல தரப்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கை, காசுமீர், அசாம், மணிப்பூர் எனப்பல இடங்களில் இவர்கள் மனித உரிமைகளை மீறிச்செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. பெரும்பான்மை மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழான ஏழைகளாக இருக்க, போலீசுக்கு மிகப்பெரும் தொகை நிதி, இராணுவம்  ஆயுதங்களுக்காக செலவிடப்படுகிறது. இந்திய படைத்துறைப் போர் வானூர்திகள், கப்பல்கள், கவச வாகனங்கள், எரிபொருள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்தே பெரிதும் வாங்கப்படுகின்றன. இது ஒரு பெரிய செலவு ஆகும். எனினும் பாகிஸ்தான், பயங்கரவாதம், சீனா எனப் பலதரப்பட்ட ஆபத்துக்கள் இருப்பதால் இவை அவசியம் என நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், ஊழல்கள்தாம் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக ஆயுதக் கொள்வனவுக்காக மட்டும் பல ஆயிரம்கோடி ரூபாயும் அதே அளவு பணம் மோசடியும் செய்யப்படுகிறது.

இந்திய அரசுக் கட்டுமானம் இந்திய மக்களின் சேவைக்கும் தேவைக்கும் உருவாக்கப்பட்டது அல்ல. இதன் தோற்றமும் பரிணாமமுமே இதைத் தெளிவுபடுத்துகிறது. பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள்,  இந்திய காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சமுதாயத்தின்மீது தனது காலனிய இரும்புப் பிடியையும் அரசாதிக்கத்தையும் இருத்தி வைத்துக் கொள்வதற்காகப் பல்வேறு அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டார்கள்;  தனது  ஆளுகைக்குத் தேவையான பழைய சமூக, பண்பாட்டுக் கட்டுமானங்களைத் தக்கவைத்துக் கொண்டார்கள்.  இந்த இரண்டும் கலந்த தொகுப்பானதொரு கட்டமைப்பை நிறுவிக்கொண்டார்கள். 1947 ஆதிகார மாற்றத்துக்குப் பிறகு, இந்த நாடு பல்வேறு ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக்கப்பட்டு அரைக்காலனிய, அரைநிலப்பிரபுத்துவ சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பாக மாறியது. அதற்குப் பொருத்தமானதாக, முன்பு பிரித்தானிய ஏகாதிபத்தியம் உருவாக்கியிருந்த கட்டுமானங்கள் மாற்றியமைக்கப்பட்டன. உலகின் பல புதிய காலனிய நாடுகளில் பின்பற்றப்பட்ட ஏகாதிபத்திய சார்பு தரகு அதிகார வர்க்க முதலாளியமும் காந்தியப் பழமைவாதமும் நேருவிய “சோசலிசப் பாணியிலான மக்கள் நலவாதமும்” கலந்த தரகு முதலாளியத் தேர்தல் ஜனநாயகத்துக்கு ஏற்ற அரசியல், பொருளாதாரக் கட்டமைப்பாக இது இருந்தது. ஒரு இருபதாண்டுகளில் அது கடும் நெருக்கடிகளைக் கண்டது. உறுதியற்ற அரசியல் நிலையையும் நெருக்கடிகளையும் பொருளாதாரத் தேக்கத்தையும் பின்னடைவையும் கண்டது. அந்தச் சிக்கல்களுக்குத் தீர்வு என்பதாகக் கூறிக்கொண்டு உலக வங்கி, சர்வதேச நிதி நாணயம், மற்றும் உலக வர்த்தகக் கழகம் மூலமாக ஏகாதிபத்தியங்களால் உலகு தழுவிய அளவில் திணித்த தனியார்மயம் – தாராளமயம் – உலகமயமாக்கம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை இந்தியாவிலும் திணிக்கப்பட்டது. உலகமயமாக்கத்திற்கும் மறுகாலனியாக்கத்திற்கும் பொருத்தமாக இந்த நாட்டின் கட்டமைப்பையும் அதற்கான கட்டுமானங்களையும் மறுசீரமைக்கும் வேலையை ஏகாதிபத்திய எடுபிடிகளான அரசும் ஆட்சியாளர்களும் ஆளும்வர்க்கத்தினரும் மேற்கொண்டனர்.

இதில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சோவியத் யூனியனைப் பின்பற்றி அரசுத்துறைத் தொழில்கள், “மக்கள் நலவாதம்” நாட்டின் அடிப்படைக் கட்டுமானங்களை அரசே நிர்மாணிப்பது ஆகியவற்றை ஐந்தாண்டுக் கணக்கில், மையரீதியில் திட்டமிடுவதற்காக அமைக்கப்பட்டிருந்தவை மத்திய, மாநிலத் திட்டக் கமிசன்கள். இவை நாட்டின் தொழில்வளர்ச்சிக்குத் தடையாக உள்ளதாகக்கூறி, இனி நாட்டின் தொழிற்துறையை அரசு கட்டுப்படுத்தக் கூடாது, கார்ப்பரேட் முதலாளிகளே கட்டுப்படுத்திக் கொள்வார்கள் என்ற வகையில் மையரீதியில் திட்டமிடுவது கைவிடப்படுகிறது; திட்டக் கமிசன் கலைக்கப்படுகின்றது. இனி, கார்ப்பரேட் முதலாளிகள் கூலிக்கு அமர்த்திக்கொண்டுள்ள சிந்தனைக் குழுமங்கள் வகுத்துக்கொடுக்கும் திட்டங்களை, ஏகாதிபத்தியம் மற்றும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளான நிதி அமைச்சக அதிகாரவர்க்கத் தலைவர்களும் அதிகார வர்க்கத்தினரும் வழிநடத்துவார்கள். இனி மக்கள் நலத்திட்டங்களையும் அதிகாரவர்க்க அமைப்புகளுக்கு மாற்றாக, அரசுசாராத் தொண்டு நிறுவனங்களே அமலாக்கும்; அதற்கான நிதியை அந்தந்த அமைச்சகங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களும் அவற்றின் சமூகப்பொறுப்பு என்ற முறையில் நேரடியாகவே அந்நிறுவனங்களுக்கு ஒதுக்கும்.

இந்த ஏற்பாட்டில் ஏதாவது தவறுகள், இலஞ்ச- ஊழல் அதிகார முறைகேடுகள் நிகழ்ந்தால் இவற்றை போலீசு, கிரிமினல் குற்றத்தடுப்பு உளவுப்போலீசு, சி.பி.ஐ. போன்றவை விசாரித்துத் தண்டிப்பது என்ற வழக்கமான முறைக்கு மாறாக சிவில் சமூக அமைப்புகள் தலையிட்டு சரிசெய்யும். இந்த சிவில் சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கும் மாற்றாகவும், மக்கள் இயக்கங்களாகவும் செயல்படும். இவை சட்டபூர்வமாக்கப்பட்டு அதற்குரிய அதிகாரங்களும் பாதுகாப்புகளும் தரப்படும். ‘சிவில் சமூக அமைப்புகள், அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் இயக்கங்கள்’  ஆகிய சொற்களில் மயங்கிவிடக் கூடாது. இந்தச் சீரமைப்பின் நோக்கம் கல்வி, சமூகத் தகுதி, தேர்வு மூலம் வரும் அரசு ஊழியர்கள் என்கிற அதிகார வர்க்கத்தின் இடத்தில் ஏகாதிபத்தியத் தரகர்களால் நேரடியாகத் தெரிவுசெய்யப்படும் குட்டி முதலாளிகள் இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுகின்ற, எவ்விதக் கண்காணிப்புமில்லாத அதிகாரத்துக்கு வருகிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். முழுக்க முழுக்க சுயநலமிகளான இவர்கள், மக்களுக்குப் பொறுப்பாக பதில் சொல்ல வேண்டியதில்லை; வேலைநேரம் கூடக் கிடையாது; தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியதில்லை; எந்தக் கணக்கும் காட்டத் தேவையில்லை; தங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழேயும் கொண்டு வரமுடியாது என்று சண்டித்தனம் செய்யும் இவர்கள், புதுவகை வெள்ளுடைக் கிரிமினல்களாக உருவெடுக்கிறார்கள். ஏகாதிபத்தியங்களும் ஆளும் வர்க்கங்களும் கொண்டுவரும் கட்டுமானச் சீர்திருத்தம் எத்தகைய சிக்கலையும், நெருக்கடியையும் அதன் தோற்றத்திலேயே கொண்டுள்ளது என்பதை இவை காட்டுகின்றன.

ஏற்கெனவே, இந்திரா காலத்திய ஏகபோகத் தடுப்புச் சட்டம், அந்நியச் செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் முதலிய போலி சோசலிசப் பொருளாதாரச் சட்டங்கள் மற்றும் லைசென்சு – கோட்டா – உரிமம் என்ற அரசுக் கட்டுப்பாட்டு ஒழுங்கு முறைகள் தளர்த்தப்பட்டு விட்டன. வெளிநாடுகளில் இந்தியத் தரகு முதலாளிகள் குவித்து வைத்திருந்த கருப்புப் பண முதலீட்டிற்கும் அந்நிய மூதனத்துக்கும் இருந்த தடைகள் அகற்றப்பட்டன. அரசுத் துறைத் தொழில்கள், ஆலைகள், அரசுவங்கி மூலதனம் ஒட்டுண்ணித் தரகு முதலாளிகளுக்கு வாரிவழங்கப்பட்டன. இவை மற்றும் அமெரிக்கா முதலிய மேலை நாடுகளிலிருந்து பெறப்பட்ட மலிவான கூலிக்கு வெளியாருக்கு வேலை ஒதுக்கீடுகள் காரணமாகவும் தனியார்மயம் தாராளமயம் உலகமயமாக்கம் புகுத்தப்பட்ட ஆரம்ப ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் இதுவரை கண்டிராத ஏறுமுகத்தில் நுழைந்து விட்டதாகத் தோன்றியது.

இந்தியாவின் அரைக்காலனிய, பின்தங்கிய அரை நிலவுடைமை சமூக அமைப்பின் மீதும், தரகு முதலாளிய அரசியல் அமைப்பின்மீதும் திணிக்கப்படும் இத்தகைய கட்டுமானமாற்றங்கள் இங்கிருந்த அரசியல், பொருளாதார, சமூகச் சிக்கல்களை மேலும் கடுமையாக்கிவிட்டன. மேற்கண்ட போக்குகள் ஒரு உச்ச நிலையை எட்டி, ஒட்டு மொத்தக் கட்டமைப்பும் கடும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டு விட்டது. எந்தவொரு சிக்கலுக்கும் தீர்வுகாண முடியாதவாறு அரசும் சமூகமும் சிக்கித் திணறுகின்றன. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு சிக்கல்கள் எல்லாமே தீர்வு காணமுடியாதவாறு ஒரு முட்டுச்சந்தில் போய் நின்றுவிட்டன. ஒவ்வொரு பிரச்சினையும் இந்த நிலையை எட்டிவிட்டதால், முதலாளித்துவ அறிவு ஜீவிகளே இப்போது ஒரு கட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டு விட்டதை ஒப்புக்கொள்கிறார்கள். இப்போது தீர்வுகாண முடியாத சிக்கல்கள் என்று ஏதோ ஒரு சில மட்டும் இல்லை. எல்லா சிக்கல்களுமே தற்போதைய கட்டமைப்புக்குள் தீர்வுகாண முடியாதவையாக வளர்ந்து விட்டன. அதுமட்டுமல்ல; தற்போதைய கட்டமைப்பு நீடிக்கவும் முடியாத நிலையை எட்டிவிட்டதையே இன்றைய அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் காட்டுகின்றன.

ஆனால், அவை வீழ்த்தப்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் திரள் அமைப்புகளும் இயக்கங்களும் அவற்றை வீழ்த்தும் அளவுக்கு இப்போதைக்குப் பலம்கொண்டவையாக இல்லை. என்றாலும், ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய் மற்றும் நிலைகுலைந்து, எதிர்மறை சக்திகளாக (bankrupted, failed collapsed and turned into opposite) மாறிவிட்டன. இந்த நிலையில் புரட்சிகர மக்கள் செய்ய வேண்டியது என்ன? அவற்றுக்குப் பதிலாக அதிகாரம் அனைத்தையும் மக்களே கைப்பற்றிக் கொள்ளும் மாற்று அரசியல் கட்டுமானங்களைக் கட்டமைக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயல்படுவதுதான்!

ஆகவே, நாம் சொல்கிறோம் நமது நாட்டை மீளாத அரசியல், பொருளாதார, பண்பாட்டு, சமூக நெருக்கடிக்குள் தள்ளியுள்ள அரசும் ஆட்சியாளர்களும் ஆளும்வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில்  நீடிக்கத் தகுதியற்றவை. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித்தராத மக்களின் உரிமைகளை மறுக்கும்  அரசும் ஆட்சியாளர்களும் ஆளும் வர்க்கங்களும் அரசு அதிகாரத்தில்  நீடிக்கத் தகுதியற்றவை. நாட்டின் எல்லாச் சிக்கல்களுக்கும், கட்டமைப்பு நெருக்கடிக்கும் தீர்வாக மாபெரும்  மக்கள் எழுச்சிகளின் மூலம்  மக்களே அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு தற்போதுள்ள அரசுக் கட்டமைப்பைக் கலைத்துவிட்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான, உண்மையில் ஜனநாயகத் தன்மையுடைய மாற்று அரசுக் கட்டமைவை நிறுவிக்கொள்ள வேண்டும். அதற்குப்  பொருத்தமான மைய ஏற்பாடாக ஒரு பொது அமைப்பைக் கட்டி, அதற்குப் பொருத்தமான முழக்கங்களை வகுத்து, மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு செய்வதுதான் புதிய, சரியான அவசியமான, அரசியல் கடமையாக அமையும்.

14. நொறுங்கி நிற்கும் கட்டமைப்பிற்கு முட்டுக் கொடுக்கும் குருட்டுத்தனமான தேசபக்தி

அந்தக் காலத்தில் கடவுளின் அவதாரம்தான் அரசர்கள் என்ற மூடநம்பிக்கை அடிப்படையில்  “ராஜபக்தி”, “அரசவிசுவாசம்” ஆகிய கருத்தாக்கங்களால் கட்டமைக்கப்பட்டு எதேச்சதிகார ஆட்சி நடத்தினார்கள்; இப்போது குருட்டுத்தனமான தேசபக்தியை மக்களிடையே பரப்பி, பாசிச அதிகாரத்தை நியாயப்படுத்துகிறார்கள். அதனால்தான் ‘தேசியம் பாசிஸ்டுகளின் புகலிடம்’ என்ற வரையறை எல்லா ஜனநாயகவாதிகளாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. “தேசிய”த்தின் பெயரால்தான் இட்லரும், முசோலினியும் இரண்டாவது உலகப்போரையும் யூத இனப் படுகொலைகளையும் நடத்தி கோடிக்கணக்கான உலக மக்களைக் கொன்றார்கள். அதைப்போல இல்லாதவொரு இந்திய தேசியத்தின்மீது குருட்டுத்தனமான தேசபக்தியை உருவாக்கி அரசும் ஆட்சியாளர்களும் கார்ப்பரேட் தரகு முதலாளிகளும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிரான தமது எல்லா துரோகங்களையும் கொள்ளைகளையும் நடத்துகிறார்கள். இந்திய தேசியத்தின் சாரம், உள்ளடக்கம் என்னவாக இருக்கிறது? இந்திய தேசியப் பெருமிதம், கௌரவம், நம்பிக்கை விசுவாசம், சாதனை, வல்லமை, வளர்ச்சி – முன்னேற்றம் என்று ஒவ்வொன்றையும் எடுத்துப் பரிசீலித்தால் இவை நமது நாட்டுக்கும் மக்கள் அனைவருக்கும் எதிரானதாகவே கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

பல தேசிய இனங்களையும் சமூகப் பிரிவுகளையும் மொழிகளையும் மதங்களையும் பண்பாடுகளையும் கொண்ட இந்திய நாட்டில் அனைத்து மக்களையும் ஜனநாயக ரீதியில், சமத்துவ அடிப்படையில் ஒருங்கிணைக்கும் கொள்கைக்கு மாறாக இந்து – இந்தி – இந்தியா என்கிற பார்ப்பன பாசிசக் கொள்கையைப் பின்பற்றி, சாதி, மத ரீதியில் இந்திய சமுதாயத்தை முனைவாக்கம் செய்கிறார்கள். அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளிலும் கிரிமினல் குற்றங்களிலும் மூழ்கிக் கிடக்கின்ற இவர்களை வெறுக்கும் மக்கள் இவர்கள் பரப்பும் குருட்டுத்தனமான இந்திய தேசபக்தியையும் நிராகரிக்க வேண்டும்.

இந்திய மக்கள் மீது பெருந்திரள் மரணங்களை விளைவித்து விட்டு, உரிய நட்டஈடுகள் வழங்கத் திமிர்த்தனமாக மறுக்கிறார்கள். இந்திய மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை, இத்தாலியக் கொலைகாரர்களையும் தண்டிக்காது தப்புவிக்கிறார்கள். மேலும் பெருந்திரள் மரணங்களை விளைவிக்கும் அணு, இரசாயன ஆலைகளை இறக்குமதி செய்கிறார்கள். அணு, இரசாயன, மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுகிறார்கள். இந்திய விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் நிரந்தரமாக நாசம் செய்வதோடு, புதுப்புது உயிர்க்கொல்லி நோய்களையும் விளைவிக்கும் மரபணு மாற்று விதைகளையும் அவற்றுக்கான உரம், பூச்சிமருந்துகளையும் கொல்லைப் புறவழியாகவும் சதித்தனமாகவும் வலுக்கட்டாயமாகவும் திணிக்கிறார்கள். கேடுகள் விளைவிக்கும் புதுப்புது மருந்துகளை, குறிப்பாக நோய்த்தடுப்பு மருந்துகளை சதித்தனமாகக் கொண்டுவந்து, இங்குள்ள சில மருத்துவர்களையும் ஊழல்படுத்தி  நமது மக்கள்மீது மருத்துவ ஆய்வுகளை நடத்திப் படுகொலைகளைச் செய்கிறார்கள். இதனால் குறிப்பாக, குழந்தைகளின்  இறப்பு விகிதம் எகிறிக்கொண்டே போகிறது. நாட்டுக்கும் மக்களுக்கும் இவ்வளவு துரோகத்தனங்களைப் புரியும் அரசும் ஆட்சியாளர்களும்தான் இந்திய தேசியப்பெருமிதம், கௌரவம், நம்பிக்கை – விசுவாசம், சாதனை,  வல்லமை, வளர்ச்சி – முன்னேற்றம் என்று பித்தலாட்டங்கள் செய்கிறார்கள்.

இந்திய அமைச்சர்களையே நிர்வாணப்படுத்தி சோதனை போட்டுத்தான் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கிறார்கள்; இந்தியப் பிரதமர் அலுவலகமும் இந்திய அமைச்சர்கள் முதல் முக்கிய எதிர்க் கட்சித் தலைவர்கள் வரையிலானோரும் ஒட்டுக்கேட்டு, உளவு பார்க்கப்படுகிறார்கள். அமெரிக்க அதிபர் இந்தியாவுக்கு வந்தால் இந்தியாவை நம்பாது, அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகளைக் கூட்டி வருகிறார்கள்; அவர்களுக்கு அரசமரியாதை தரப்படுகிறது. இப்படி எத்தனை நேர்ந்தாலும் அவையெல்லாம் தேசிய அவமானங்களாகக் கருதப்படுவதில்லை. இந்திய தேசியத்தின் வெளியுறவுக் கொள்கை, பாகிஸ்தான் சீன எதிர்ப்பு தேசியவெறியையும், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் மீதான விசுவாசத்தையும் நாடு கடந்த இந்திய தரகு முதலாளிகளின் நலன்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்கிறது. இதனாலேயே அது ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கையின் சிங்கள பேரினவாதப் பாசிசத்தையும் பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலிய ஜியோனிசத்தையும் ஆதரிக்கிறது. ஆப்கான், ஈராக் போர்களில் அமெரிக்க, பிரித்தானிய ஆக்கிரமிப்பாளர்களின் எடுபிடியாகவே செயல்படுகிறது. அமெரிக்காவுடனான இராணுவ, அணு ஆயுத ஒப்பந்தங்களை சதித்தனமாகப் போட்டுக் கொண்டுள்ளது. உலகச் சந்தையில் ஆதிக்கம் வகிக்கும் “டாலர்” பொருளாதாரத்துடனும் அமெரிக்க மேல்நிலை வல்லரசின் உலக மேலாதிக்கப் போர்ச் சக்கரத்திலும் “இந்திய தேசியம்” தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.

இந்திய அயலுறவுத் துறைதான் நாட்டிலேயே மிகமோசமான பொய்யும் புனைச் சுருட்டும் பரப்பும் துறை. உலகின் பலநாடுகளும் பல உலக விவகாரங்களிலும் இந்தியாவின் நிலைப்பாடுகளை ஆதரிப்பதாக அது புளுகுகிறது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராகும் இந்தியாவின் கோரிக்கையை உலக நாடுகளில் பெரும்பான்மையானவை ஆதரிப்பதாகப் புளுகுகிறது. ஆனால், அந்த நாடுகளின் அறிக்கைகளில் அவ்வாறான நிலை எதுவும் குறிப்பிடப் படவில்லை. ஐ.நா. சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராகும் தேர்தல்களில் இந்தியா தோற்றுப்போவதே அதிகமாக நடக்கிறது. உலகச் சுற்றுச்சூழல் விவகாரங்களில், பின்தங்கிய நாடுகளில் ஏகாதிபத்தியங்களின் தலையீடு போன்றவற்றில் இந்தியாதான் பிற்போக்கான நிலையெடுத்து கடும் எதிர்ப்புக்குள்ளாகிறது. உள்நாட்டு விவகாரங்களில் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள், கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டு மக்கள் வெறுப்புக்கு ஆளாகும் இந்திய அரசுத் தலைவர்கள், அயலுறவுகளில் சரியாகவும் சாதனையாளர்களாகவும் இருப்பதாக ஊடகங்கள் சித்தரிக்கின்றன. உண்மையில் தேசவிரோதச் செயல்கள்மூடி மறைக்கப்படுகின்றன.

15. கட்டமைப்பு நெருக்கடிக்கு தீர்வுகள்தாம் என்ன?

இப்போது நாம் காணும் தேர்தல் கட்டுமானச் சீரழிவு தனியானதொரு அரசியல் சீரழிவல்ல. அனைத்து அரசுக் கட்டுமானங்களிலும் ஏற்பட்டுள்ள சீரழிவுகளின், நெருக்கடிகளின் ஒரு பகுதிதான். தேர்தல் அரசியல் மட்டுமின்றி அரசின் மற்ற அனைத்துக் கட்டுமானங்களும்கூடச் சீரழிந்து போயுள்ளன. நாட்டின் அனைத்துக் கட்டுமானங்களையும் நியாயப்படுத்தும் கோட்பாடாகத்தான் தேர்தல் அரசியல் முறையும் அதைச் சீர்திருத்துவதும் முன்வைக்கப்பட்டன. ஏற்கெனவே உள்ள கட்டுமானங்கள் அனைத்தும் சீரழிந்து போனவாறுதான் தேர்தல் அரசியலும் சீரழிந்துபோயுள்ளது. இந்தச் சமூகத்தை ஆளுவதற்கு அரசியல், பொருளாதாரம் என ஒவ்வொரு துறைக்கும் ஒரு கட்டுமான அமைப்பை ஆளும் வர்க்கங்கள் வைத்துள்ளன. இந்த அமைப்புகளெல்லாம் சிதைக்கப்பட்டு, சீரழிந்து நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டுள்ளதைப் போலவே, அரசியல் கட்சிகள் சார்ந்த நெருக்கடிகள் தேர்தல் அரசியலில் வெளிப்பட்டுள்ளன. ஆகவே, தேர்தல் சார்ந்த கட்டுமானங்களைப் போலவே மேற்படி எல்லா கட்டுமானங்களும் சீரழிந்து போயுள்ளன.

இவ்வாறு எல்லா அரசுக் கட்டுமானங்களும் சீரழிந்து போனதைச் சொல்லும்போது அரசியல் கட்சிகளும் அரசுக் கட்டுமானங்களும் மக்களுக்கு எதிரானவை என்பதை வலியுறுத்தினால் போதாது. அதோடு, ஏற்கெனவே உள்ள அதிகாரக் கட்டுமானங்கள் ஆளமுடியாமல், ஆளத்தகுதியிழந்து கடும் நெருக்கடிகளுக்குள் சிக்கிக்கொண்டுள்ளதையும் சொல்ல வேண்டும்; அவை மக்களுக்கு எதிரானவையாகவுள்ளது மட்டுமல்ல, ஆளும் வர்க்கங்களுக்கே முறைப்படி பயன்படாதவாறான நெருக்கடிகளில் சிக்கிக்கொண்டுள்ளன. போலீசும் அதிகார வர்க்கமும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது மட்டுமல்ல, மேட்டுக் குடிமக்களையும் தாக்கும் தன்மையுடையவையாக உள்ளன. எல்லா அரசு, பொருளாதார, சமூக, பண்பாட்டுக் கட்டுமானங்களும் இப்படித்தான் சீரழிந்தனவாக உள்ளன. ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்டபோதும் அவை வீழ்த்தப்படாமல் இருப்பதற்குக் காரணம் மக்கள் அமைப்புகளும் போராட்டங்களும் எழுச்சிகளும் அவற்றை வீழ்த்தும் அளவுக்கு இப்போதைக்குச் சக்தி வாய்ந்தவையாக இல்லை.

இப்போது அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றுவதன் வெளிப்பாடாக, மக்கள் பல தனித்தனிப் போராட்டங்களில் தன்னெழுச்சியாக ஈடுபடுவது பெரிதும் அதிகரித்து வருகின்றது. அவர்களும் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும், தொடர்பையும் ஒருங்கிணைந்த முறையிலானவையாக தொகுத்துப் பார்க்க இயலாதவர்களாக மக்கள் இருக்கிறார்கள். அன்றாட வாழ்க்கைத் தேவைக்கான போராட்டங்களிலேயே அவர்கள் மூழ்கிப்போய்க் கிடக்கிறார்கள். ஆளும் வர்க்கங்களும் ஊடகங்கள் மூலமும் பல்வேறு வகைகளில் மக்களின் கவனத்தை சிதறடிக்கின்றது. தாது மணற்கொள்ளை,  ஆற்று மணற்கொள்ளை, வேடியப்பன்  கௌத்திமலை, மீத்தேன் எரிவாயு எடுப்பு, எரிவாயுக் குழாய் அமைப்பு, காவிரி நீர்  முதலான பல்வேறு தனித்தனிப் பிரச்சினைகளுக்காகத் தன்னெழுச்சியாக போராட்டங்களில் ஈடுபடும் மக்களை ஒருங்கிணைக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறான தனித்தனிப் பிரச்சினைகளுக்கிடையிலான பொதுத் தன்மையையும் உறவையும் தொகுத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தையும், அவற்றுக்கான தனித்தனித் தீர்வுகளை நாடும் போராட்டங்களுக்குப் பதிலாக, பொதுவான முழக்கங்களை முன்வைத்துப் போராடவேண்டியதன் முக்கியத்துவத்தையும் மக்களுக்குப் புரியவைக்க வேண்டும். அதோடு, செய்தி ஊடகங்கள் தரும் அன்றாடச் செய்திகளை மக்கள் தாமே தொகுத்து முழுமையான கண்ணோட்டத்துக்கு வரவியலாத நிலையில் மக்கள் உள்ளார்கள். மக்கள் முந்தைய அனுபவங்களை, தகவல்களை நினைவில் வைத்துக்கொண்டு, முழுமையான கண்ணோட்டத்துக்கு வருவதில்லை. அப்படி வரக்கூடாது என்ற வகையிலேயே பரபரப்பூட்டும் தனித் தனியான அன்றாடச் செய்திகளுக்குள் மூழ்கிக் கிடக்குமாறுசெய்யும் வேலையை ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் பார்த்துக் கொள்கின்றன. மோடி போன்றவர்கள் அன்றாடம் ஒரு சர்ச்சைக்குரிய பேச்சுமூலம், அறிவிப்பு மூலம் நாட்டு மக்களிடையே விவாத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை எழுப்பிக் குழப்புகிறார்கள். இத்தகைய அணுகுமுறைக்கு மாறாக, கட்டமைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளதென்ற அடிப்படையிலான, முழுமையானதொரு பார்வையை மக்களுக்குக் கற்றுத்தர வேண்டும். இதன் மூலம் புதிய, அவசியமான, விவாத்திற்குரிய நிகழ்ச்சி நிரலை மக்கள் முன்பு நாம் வைக்கிறோம்.

இன்றைய அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நெருக்கடி, சிக்கலுக்கு தனித்தனியான தத்தமது கோரிக்கைகள், முழக்கங்கள், போராட்டங்களுக்காக மக்கள் ஒன்று திரண்டால் மட்டும் போதாது. அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேரடியாய் ஒருங்கிணைந்த முறையில் மக்கள் ஒன்று திரண்டு போராடி வெல்வதுதான் அவசியமானது, சாத்தியமானது. அதனால்தான் வெவ்வேறு பிரிவு மக்கள், வெவ்வேறு அமைப்புகளின் கீழ், அவர்களின் தனித்தனியான, தன்னியல்பான, தன்னெழுச்சியான பிரச்சினைகளை, பகுதி அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளையும் அடையாள அரசியலையும் கையிலெடுத்தால்தான், அவற்றினூடாகத்தான் மக்களை அணுகவும் அணிதிரட்டவும் முடியும் என்ற சீர்திருத்தவாதிகளின் கருத்துக்களை ஏற்கமுடியாது. “நிலவும் கட்டமைப்புக்கு வெளியிலான பொதுவான, மையமான அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டுப் பிரச்சினைகளுக்கு மக்களைத் திரட்ட முடியாது; மக்களும் அவற்றுக்கு வர மறுக்கிறார்கள்” என்ற அவர்களின் கருத்துக்கள் அடிப்படையில் தவறானவை. அடிப்படை உழைக்கும் மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், சிறுபான்மை மக்களின் தன்னியல்பான, பகுதி அன்றாடப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்காக மக்கள் போராடக் கூடாது என்பதல்ல. இப் பிரச்சினைகளுக்காகவும் அவர்களின் அடையாள அரசியலுக்காகவும் போராடுவதுதான் ஒரேமுறை, முக்கியமான அணுகுமுறை என்பதுதான் எப்போதும் ஏற்புடையதல்ல. தனித்தனியான கோரிக்கைகளைக் கையிலெடுத்து ஓரளவுக்குச் சாதித்துக் கொடுத்து, அவர்களின் நம்பிக்கையைப்பெறுவதும் இன்றைய அரசியல் நிலைமைகளில் சாத்தியமல்ல. வெவ்வேறு பிரிவு மக்களை வெவ்வேறு அமைப்புகளின் கீழ், திரட்டுவதும் அவற்றின் மூலம் கோரிக்கைகளை ஓரளவுக்கு மேல் சாதித்துக்கொடுக்க முடியாமல் போவதும் அடக்குமுறைகள் காரணமாக அவை கலைந்து போவதும் அல்லது தேக்கநிலையை அடைவதும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. இத்தகைய அணுகுமுறை அரசின் ஒடுக்கு முறைகள் காரணமாக  தேக்கநிலையை எட்டிவிட்டன.

மக்களிடையே, அதுவும் தனிநபர்களிடையே நிலவும் கருத்து பின்தங்கியதாகவும் ஆளும் வர்க்கம் உருவாக்கும் “இந்தியா ஒளிருகிறது, வல்லரசாகிறது, முன்னேறிவிட்டது, செல்ஃபோன்கள் போன்ற வசதிகள் வந்துவிட்டன“. என்பது போன்ற மாயைகளுக்கு பலியாவதாகவும் இருக்கும். இப்படித்தான் மோடி அலையும் உருவாக்கப்பட்டது. அதேசமயம்,  நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகள் சிக்கலும் நெருக்கடியும் மிக்கதாக இருக்கின்றன. சமூக விழிப்புணர்வு பெறாத மக்களும் தனிநபர்களும் என்ன நினைக்கிறார்களோ, அதற்கு வெளியே உண்மை இருக்கிறது! சமூக விழிப்புணர்வு என்பது மக்களும் தனிநபர்களும் என்ன நினைக்கிறார்களோ அதை மட்டும்வைத்து வந்தடைவதில்லை. சமூக விழிப்புணர்வு என்பது மக்களும் தனிநபர்களும் என்ன நினைக்கிறார்களோ அதோடு நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு நிலைமைகளையும் சிக்கலையும் நெருக்கடியையும் சேர்த்தே புரிந்து கொள்வதாகும். நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுச் சிக்கலும் நெருக்கடியும் தாமே மக்களிடம் சமூக விழிப்புணர்வைத் தோற்றுவிப்பதில்லை; இந்நெருக்கடிகள் முற்றும் அளவிற்கு மக்களின் சமூக விழிப்புணர்வு மட்டம் நேர் விகிதத்தில் உயர்வதுமில்லை. மக்கள் சமூக விழிப்புணர்வு பெறும்வரையிலும் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு சிக்கலும் நெருக்கடியும் காத்திருப்பதுமில்லை.

இப்போது நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஓர் உச்ச நிலையை எட்டிவிட்டதையும், அரசு மற்றும் ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியை இழந்து விட்டதையும் நமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆளும் வர்க்கங்களின் அதிகாரத்தைத்  தட்டிக்கேட்கவும், அவர்களின் அதிகாரத்துக்கு சவால்விடவும் மக்கள் ஒன்று திரள வேண்டும். அதிகாரத்தை மக்கள் தாமே கையில் எடுத்துக் கொள்ளும் காலகட்டம் வந்துவிட்டது. ஆகவே, எல்லாச்  சிக்கல்களுக்குமான, கட்டமைப்பு நெருக்கடிக்குமான தீர்வின் தொடக்கமாக மக்களே  அதிகாரத்தைக் கைப்பற்றும் இயக்கமாக மக்கள் அதிகாரம் – People’s Power என்ற ஒரு பொது அரசியல் அரங்கத்தை, ஒரு பொது அரசியல் அமைப்பைக் கட்டி, அதற்கான முழக்கங்களை வகுத்து, புதிய, சரியான அவசியமான, மைய இயக்கத்தை முன்னெடுக்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்.

நாட்டின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் திவாலாகி, ஆளும் வர்க்கங்கள் ஆளும் தகுதியற்றுப்போய் விட்டதால் தற்போதைய கட்டுமானங்கள் முழுவதுமாக நொருங்கி விழும் நிலையை எட்டிவிட்டன. தோற்றுப்போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக (bankrupted. Failed collapsed, and turned into opposite) மாறிவிட்ட நிலையில், தற்போதைய கட்டுமானங்களை முழுவதுமாக கலைத்துவிட்டு, நீக்கிவிட்டு புதிய அரசுக் கடடுமானங்களை, மக்கள் அதிகாரத்தைத்  தாமே நிறுவிக் கொள்வதற்கான எழுச்சிக்கு மக்கள் தயாராக வேண்டும். தற்போதைய அரசுக் கட்டுமானங்களுக்கு எதிராக அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள்,  அரசியல் எழுச்சிகளைக் கட்டமைக்க வேண்டும்.  இந்த வளர்ச்சிப்போக்கில் மக்கள் தயார்நிலை, அமைப்பு பலம் ஆகியவற்றை பொருத்து பல்வேறு போராட்டங்களை வளர்த்தெடுக்க வேண்டும். அத்தகைய போராட்டங்களுக்கும் எழுச்சிக்கும் தலைமை தாங்கும் உறுப்புகள்தாம் தற்போதைய கட்டுமானங்களுக்கு மாற்று அரசமைப்பாக அமையும்.

அதாவது தோற்றுப்போய், நிலைகுலைந்து எதிர்நிலைச் சக்திகளாக மாறிவிட்ட தற்போதைய அரசுக் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தையும் மக்கள் சொத்தையும் தின்றுகொழுப்பவை. இவை நமது நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத பெருஞ்சுமையாக மாறிப்போய்விட்டன. அவை இனிமேலும் நீடிக்கக் கூடாதவையாகி விட்டன. அவற்றை முழுமையாகத் துடைத்தெறிவதற்கான அரசியல் போராட்டங்கள், அரசியல் வேலை நிறுத்தங்கள், அரசியல் எழுச்சிகளை ஒவ்வொரு கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் நடத்த வேண்டும். அதன்மூலம் தற்போதைய அரசின் வன்முறை அமைப்புகள் உட்பட கட்டுமான உறுப்புகள் அனைத்தையும் அகற்றிவிட வேண்டும்.

இத்தகைய புரட்சிகர எழுச்சிகளை நடத்தி, அப்புரட்சிப் போராட்டங்களினூடாக அவற்றைத் தலைமையேற்று நடத்தும் அமைப்புகளே ஒவ்வொரு கிராமங்களிலும் சிற்றூர்களிலும் பேரூர்களிலும் வட்டங்களிலும் மாவட்டங்களிலும் சிறுநகரங்களிலும் மாநகரங்களிலும் மக்கள் அதிகாரத்துக்கான அமைப்புகளாகப் பரிணமிக்கச் செய்யவேண்டும்.இந்த மக்கள் அதிகார அமைப்புகளின் பிரதிநிதிகளைக் கொண்டு தொடரும் மக்கள் எழுச்சியின் வளர்ச்சிப்போக்கில் “இடைக்காலப் (தற்காலிகப்) புரட்சி அரசு” போன்ற பல்வேறு வடிவங்களை உருவாக்க வேண்டும்.

தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகாரவர்க்க  போலீசு நிர்வாக அமைப்புக்கும் வெளியே, நேரடியாக மக்கள் பங்கேற்கும் அதிகார, நிர்வாக அரசியல் அமைப்புகள் தோற்றுவிக்கப்பட வேண்டும். மக்களுக்காக யாரோ சிலர் அரசு நிர்வாகம் உட்பட ஏதாவது நல்லது செய்வார்கள் என்று பொறுப்புக்களை ஒப்படைக்க முடியாது. அரசு நிர்வாகத்தை மக்கள் நேரடியாகக் கண்காணிக்கும், தவறு செய்பவர்களை மக்களே தண்டிக்கும் முறைகள் வேண்டும். அப்பொழுது தான் இலஞ்ச – ஊழல், அதிகாரமுறைகேடுளைத் தடுக்க முடியும். “இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் சட்டத்தையும் அதிகாரத்தையும் மக்கள் தம் கையிலெடுத்து கொள்ளக்கூடாது, அதற்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்” என்று ஆளும் வர்க்கத்தினரும் அரசாங்கமும் அதிகாரவர்க்க போலீசு நிர்வாகத்தினரும் திரும்பத் திரும்பக் கூறிக் கொதித்துப் போகிறார்கள். அரசு அதிகாரம் பற்றிய பிரச்சினைதான், அது யாரிடமிருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமான பிரச்சினை. அரசு அதிகாரம் மக்களிடம் தான் இருக்கவேண்டும். அதுதான் மக்கள் அதிகாரம். இது ஒரு புதிய அரசியல். தற்போதைய சட்டமன்ற, நாடாளுமன்ற அரசியலுக்கும் அரசு அதிகார வர்க்க போலீசு நிர்வாக அமைப்புக்கும் வெளியே, உருவாக்கப்பட வேண்டிய புதிய அரசியல்.

புதிய அரசியலுக்குப் பொருத்தமான முறையில் பழைய அரசியல் அமைப்பு வடிவங்களுக்குப் பதிலீடாக புதிய புதிய வடிவங்களை வகுத்து முன்கொண்டு செல்ல வேண்டும். இயக்கங்கள் முன்போகும்போது, களப்போராட்டம் பெரிதாக முன்னேறும்போது மாற்று அரசமைப்புக்கள் பற்றிய பிரச்சினைகள் முன்னுக்கு வருகிறது. இயக்கங்கள் புதுப்புது வடிவங்களை எடுக்கும். அழிவு இல்லாமல், சேதாரம் இல்லாமல் மாற்றம் வராது. மாற்று என்பது பழைய அமைப்பைத் தகர்க்காமல் வராது. இதெல்லாம் எல்லோருடைய பங்களிப்புடன் பருண்மையாக்கப்பட வேண்டும். பல்வேறு உள்நாட்டு  வெளிநாட்டு அனுபவங்களிலிருந்து இருந்தும் மக்களிடையிலான விவாதங்களின் மூலமும்  மாற்று அரசியல் அமைப்பு பற்றிய  முடிவுக்கு வரமுடியும்.

16. புதிய அரசியல் மாற்றுஅரசமைப்புகள் அவற்றை நிறுவதற்கான புதிய போராட்டகளின் அவசியம்

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் அடங்கிய புதிய பொருளாதாரக் கொள்கை  புகுத்தப்பட்ட பிறகு நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. உலகமயமாக்கமும் மறுகாலனியாக்கமும் விரைவாக நடக்கின்றன. குறிப்பாக, மூலதனமும், உழைப்புப் பிரிவினையும், சந்தையும் சர்வதேச மயமாவதனால் உலக அளவில் ஏற்படும் மாற்றங்கள் நமது நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நாட்டின் மொத்த உற்பத்தியில் மிகுநிலை பெற்றிருந்த விவசாயம் பின்னிலைக்குத் தள்ளப்பட்டு, நகரமயமாக்கல் விரைந்து நடக்கிறது. கிராமப்பகுதிகளில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் நகரப்புறங்களுக்கு இடம் பெயர்வதும் பின்தங்கிய மாநிலங்களில் இருந்து  தொழிலாளர்கள் அலைஅலையாக முன்னேறிய மாநிலங்களுக்குப் புலம் பெயர்வதும் பெரிய அளவில் நடக்கிறது. இது மக்கள் வாழ்விலும் சமூக உறவுகளிலும் பல பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அரசும் ஆளும் வர்க்கங்களும் பழைய முறைகளில் ஆளமுடியவில்லை; ஆளப்படும் மக்களும் பழைய முறைகளில் வாழமுடியாதவாறு இன்றைய புறநிலையில் ஏற்பட்டுள்ளன. மாற்றங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் அதற்கேற்ப புதிய அரசியல் அவசியமாகவுள்ளது.

தேர்தல் அரசியல் கட்சிகளும் சரி,  அதற்கு வெளியிலுள்ள அரசியல் அமைப்புகளும் சரி தற்போது நிலவும் கட்டமைப்பு நெருக்கடியை சரியாக மதிப்பீடு செய்யவில்லை என்பதோடு, அதனால் எழும் சிக்கலையும், பிரச்சினைகளையும் தமது வழக்கமான போராட்டங்கள் வடிவங்கள் மூலமே தொடந்து எதிர்கொண்டு வருகிறார்கள். புறநிலை மாற்றங்களை அவதானிக்கத் தவறுவதாலேயே முறையே போலி முற்போக்குவாதிகளும் சீர்திருத்தவாதிகளும் ஆளும் வர்க்களுடன் சமரச, சந்தர்ப்பவாத அணுகுமுறையைக் கொண்டுள்ளார்கள். இதே தவறுகளால் சில இயக்கங்கள் தீவிரவாத செயல்பாட்டுத் தவறுகள் இழைக்கின்றனர்.

இவ்விரு பாதைகளுக்கும் மாறாக தற்போதைய அரசுக் கட்டமைப்புக்கு வெளியில் புதிய அரசியல் மாற்றை நிறுவுவதற்கான மக்கள் திரள் எழுச்சியையும் போராட்டங்களையும் நடைமுறையாகக் கொண்ட புரட்சிகர இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். கடந்த காலப் போராட்டங்கள், இயக்கங்களில் இருந்து அனுபவங்களைக் கற்றுக்கொண்டு, தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு வெளியே நாம் நேர்மறையில் அரசியல், அமைப்புப் போராட்டங்களை மாற்றுத் தீர்வாக முன்வைக்க வேண்டும். நாம் வைக்கும் மாற்றும் இதை நோக்கியதாகத்தான் இருக்க வேண்டும். இவ்வாறான மாற்றை முன்வைக்காத வரை எந்தத் தீர்வும் தற்போதைய கட்டமைப்புக்குள்தான் இருக்கிறது என்றாகிறது.

ஏற்கெனவே உள்ள கட்டமைப்புக்குள்ளாகவே தீர்வுகளை முன்வைத்தால் அதனை மாற்றாக மக்களால் பார்க்க முடியாது. அதற்கு வெளியே ஒரு மாற்றை உருவாக்குவதன் அவசியத்தைச் சொல்லவேண்டும். ஏற்கெனவே உள்ள அமைப்பைக் கலைத்தால்தான் புதிய அமைப்பை நிறுவ முடியும். புதியதொரு கட்டமைப்பை ஒட்டுமொத்தாக நிர்வகிக்கும் தலைமையை முன்வைப்பதைத்தான் மக்கள் மாற்று அரசாங்க அமைப்பாகப் பார்க்கின்றனர்.  மாற்று ஒன்றை நிறுவுவதற்கு தற்போதுள்ள கட்டமைப்பைக் கலைத்தல் என்பது ஒரு முன்நிபந்தனை. ருசிய, சீனப் புரட்சிகளில் பழைய கட்டுமானங்களைத் தகர்த்துத்தான் அதனிடத்தில் புதியனவற்றை வைத்தனர்.

ஏற்கெனவேஉள்ள அதிகாரத்தைக் கலைப்பதற்கான அமைப்புகள்தாம், அந்தப் போராட்டத்துக்கான உறுப்புகள்தாம் அதிகாரத்துக்கான அமைப்புகளாக மாறக் கூடியவை. இவை மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்கும் அமைப்புகளாக மாறும் வகையிலே இருக்க வேண்டும். ஏற்கெனவே பிழைப்புவாதிகளாக மாறியுள்ள  தலைமையைத்தான் மக்கள் பார்த்துள்ளனர். இதற்கு மாறாக தகுதியுள்ள நபர்களைக் கொண்டதாக, நடைமுறையில் மக்கள் சோதித்தறியக் கூடிய வகையில் பணியாற்றியவர்களை முன்நிறுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள அதிகாரக் கட்டுமானங்களைப் பற்றியும் அவை ஒரு பிற்போக்கான கட்டமைப்பாக இயங்குவதையும் மக்களுக்குப் புரிய வைக்க வேண்டும். அதனைத் தகர்ப்பது குறித்து நடுத்தர வர்க்கத்தினர், குட்டி முதலாளிகளுக்குப் பயம் இருக்கிறது, ஏற்கெனவே உள்ள அதிகாரக் கட்டுமானத்தை அவர்கள் இன்னமும் நம்புகின்றனர். ஏனெனில் அவர்களது நலன்கள் இதில் உள்ளன. உழைக்கும் மக்களுக்கு அப்படியில்லை.

ஆளும் வர்க்கங்களின்  அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள்  அவற்றின் அடிப்படையிலான கட்டுமானங்கள் அவற்றுக்கு ஏற்படும் தோல்விகள், பின்னடைவுகள், நெருக்கடிகள் ஆகியவற்றை அவதானித்து எதிர்க் கோட்பாடுகளை முன்வைப்பதன் மூலம் மக்களை அணிதிரட்டி புரட்சிப் போராட்டங்களினூடாக மாற்றுக்களை உருவாக்கி வளர்த்தெடுக்க வேண்டும். தற்போதைய இந்திய அரசுக் கட்டுமானங்கள் ஆங்கிலேயக் காலனியக் காலத்திலிருந்து நீண்ட வரலாற்றைக் கொண்டது. அதன் பிரதிபலிப்பாகவோ, இணையானதாகவோ புரட்சியினூடாகப் பிறக்கும் அரசமைப்பு இருக்காது.

ஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் தாமே உருவாகியவை இல்லை. ஆளும் வர்க்கங்களால் அவற்றின் வர்க்க நலன்களுக்கேற்ற கோட்பாடுகளின் அடிப்படையில் திட்டமிட்டு உருவாக்கப்படுகின்றன. அல்லது காலனிய ஆக்கிரமிப்பாளர்கள், ஏகாதிபத்தியங்கள் போன்ற அந்நிய சக்திகளால் புகுத்தப்படுகின்றன. நமது நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் முதலில் ஆங்கிலேயக் காலனியவாதிகளால் உருவாக்கப்பட்டவை மற்றும் நெறிப்படுத்தப்பட்டவை. அதிகார மாற்றத்துக்குப் பின்னரும் கூட அவற்றின் தொடர்ச்சியாகவே தரகு முதலாளிய, நிலப்பிரபுத்துவ மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களுக்கேற்ற கோட்பாடுகளின் அடிப்படையில் திட்டமிட்டு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் மறுசீரமைக்கப்பட்டன. அந்த பழைய சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் அரசியல், மற்றும் அதைச் சார்ந்த அரசியல், பொருளாதாரக் கட்டுமானங்கள் காலாவதியாகிப் போய்விட்டன. அவை நாடு எதிர்கொண்டுள்ள எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியாமல் நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டுவிட்ட பிறகு, நாமும் அதே பாதையில் பயணப்படுவதால் எதையும் சாதிக்க முடியாது.

அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்ல,  சில புரட்சிகர இயக்கங்களும்கூட பல்வேறு மக்கள் பிரச்சினைகளைக் கையிலெடுத்து, மக்களுடன் நின்று போராடிய போதும், அப்போராட்டங்கள் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தேக்கநிலையை எட்டிய பிறகும் கட்டமைப்புக்கும் அதன் அரசியல் நெருக்கடிக்குமான மாற்றுத் தீர்வையும் முன்வைக்கவில்லை.

மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கான தீர்வுகள் தற்போதைய கட்டமைப்புக்கு வெளியே உள்ளதைக் காணவேண்டியது இன்றைய தேவையாக உள்ளது. இவ்வாறான பார்வைதான் உண்மையில் புரட்சிகரமானது. தன்னெழுச்சியாகப் போராடும் மக்களும் தற்போதைய கட்டமைப்புக்குள்ளாகவே தீர்வைத் தேடுகின்றனர். போலி முற்போக்குகளும் அரசுசாரா தொண்டு நிறுவனங்களும் சிலமாற்றுச் சீர்திருத்தங்களை முன்வைத்தாலும், அவர்கள் தற்போதைய கட்டமைப்புக்குள்ளாகவே தீர்வுகளை அடைய முடியும் என்ற கருத்திலேயே நிற்கிறார்கள். இவர்கள் இந்த வரம்புக்குள் நிற்பதில் வியப்பில்லை. நாம் அவற்றையும் தாண்டி, பகுதி மற்றும் வர்க்கப் போராட்டங்களைக் கீழிருந்தும், கட்டமைப்பு நெருக்கடிக்கு மாற்று அரசியல் அமைப்புகளை முன்வைத்து இயக்கங்களை மேலிருந்தும் (ஒடுக்கப்படும் வர்க்கங்களிடையே கூட நிலவுகின்ற வேறுபாடுகளைக் கடந்த ஒரு பொது அமைப்பின் தலைமையின்கீழ்) இந்த இரண்டு தளங்களிலும் திரண்டு போராட வேண்டும்.

புதிய பொருளாதாரக் கொள்கை நமது நாட்டில் புகுத்தப்பட்டு கால் நூற்றாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அதன் மூலம் நமது மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டிருந்த எதிர் பார்ப்புகள் பொய்த்துப் போய்விட்டன. அவை நமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராகக் கடுமையான நாசகர விளைவுகளையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி விட்டன. 2007 இன் உலகப் பொருளாதார நெருக்கடி, அதன் தாக்கம் மக்களிடையே ஏமாற்றத்தையும் அதீத ஆத்திரத்தையும் தோற்றுவித்துள்ளது. அரசியல், பொருளாதார, சமூக, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு அரசும் ஆளும்வர்க்கங்களும் முன்வைத்து, அமலாக்கும் தீர்வுகள் அந்நெருக்கடிகளைத் தீர்ப்பதற்குப் பதிலாகப் பன்மடங்கு அதிகரிக்கவே செய்கின்றன.

அரசியல் கட்டமைவு  நெருக்கடியால் எழும் பிரச்சினைகளுக்கு தேர்தலை இன்னமும் ஒரு தீர்வாக ஆட்சியாளர்கள் நம்பச்சொல்கிறார்கள். யாரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நெருக்கடிகளைத் தீர்க்க முடியும் என்று பேசுகிறார்கள். ஏன் ஸ்திரத் தன்மை அவசியம், ஏன் உறுதியான தலைமை தேவை, யார் அதைத் தர முடியும் என்றும் பேசுகிறார்கள். ஒரு துணிச்சலான தலைமை தேவை,  பழைய தலைமை அப்படி இல்லை எனவும் தாங்கள்தாம் மாற்று எனவும் ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொருவாறாகப் பேசுகிறார்கள். ஆனால் தற்போதைய கட்டமைப்பு நெருக்கடிக்குத் தீர்வு தேர்தல் அல்ல. தற்போதுள்ள அரசுக் கட்டமைப்புக்கு வெளியே தான், முற்றிலும் வேறான மாற்று அரசியல் கட்டமைப்புதான் நாட்டுக்குத் தேவை; ஒரு மாபெரும் மக்கள் எழுச்சியின் மூலம்தான் அதற்குத் தீர்வு காண முடியும்  என மக்கள் அதிகாரம் முன்வைக்கிறது.

இப்போதிருந்து ஆளும் வர்க்கங்களின் அரசு, ஆட்சி உரிமையை எதிர்த்து கேள்விக்குள்ளாக்கும், சவால்விடும், அதை வீழ்த்தும் அரசியல் பணியாற்ற அழைக்கிறது, மக்கள் அதிகாரம். ஏற்கெனவே உள்ள கட்டமைப்பை மாற்றியமைக்கும் வேலையை  ஓட்டுக் கட்சி அரசியல் மூலம் செய்ய முடியாது. போர்குணமிக்க போராட்டங்களை உள்ளடக்கிய மாபெரும் மக்கள் திரள் எழுச்சி மூலம் அதனைச் செய்யமுடியும். இப்போதைய அரசுக் கட்டமைப்பு தோல்வியடைந்து விட்டது. மீளமுடியாத நெருக்கடியில் சிக்கிக்கொண்டு விட்டது, அதை அகற்றிவிட்டு, புதிய கட்டமைப்பை நிறுவவேண்டியதன் அவசியத்தை  ஏற்பவர்கள்; வழக்கமான தேர்தல் அரசியல் கூட்டுகள் மீது நம்பிக்கை வைப்பதற்கு மாறாக, புதிய புரட்சிகர நடைமுறையில் நம்பிக்கை கொள்ளும் மக்கள், மக்கள் அதிகாரம் அமைப்பின் கீழ் ஒன்று திரள வேண்டும். இப்போது பல்வேறு பிரச்சினைகளுக்காகப் போராடும் சமூக அமைப்புகள், முற்போக்கு, புரட்சிகர மக்கள் திரள் அமைப்புகளில், இயக்கங்களில் அரசியல் வேலை செய்பவர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பில் ஒன்று திரள வேண்டும். இதன் வளர்ச்சிப் போக்கில் ஒத்த கருத்தின் அடிப்படையிலான ஐக்கிய முன்னணியாக ஒருங்கிணையவேண்டும். வெறுமனே ஒரு அமைப்பைத் தோற்றுவிப்பதல்ல பிரச்சினை. நிலவுகின்ற  அரசு அமைப்புக்கு சவால்விட்டு, இந்த அரசுக் கட்டமைப்புநெருக்கடிக்கு புரட்சித் தீர்வை  நோக்கி மாற்று வழியில் வழிநடப்போம்.

தற்போதைய கட்டமைப்பு ஏன் நொறுங்கிவிழும் நிலைக்கு வந்திருக்கிறது என்பது பற்றிய பருண்மையான புரிதலை ஏற்படுத்துவோம். மாற்றைப் பருண்மையாக, எதிர் நிலையில் எப்படி இருக்காது என்பதை வைப்போம். தற்போதைய அரசியல் அமைப்புக்கு மாற்று என்பதாக, நிலவும் கட்டமைப்பை நிராகரித்தலில் மாற்றுத் திட்டம் தொக்கி நிற்கிறது. தற்போதைய கட்டமைப்பின் தோல்வி, நெருக்கடி மற்றும் அதன் எதிமறை அனுபவங்கள், படிப்பினைகளைத் தொகுத்து, தற்போதைய அரசியல் கட்டமைப்பின் மீதான விமர்சனத்துக்குள்ளே மாற்றுத் திட்டம் இருக்கிறது என்பதாக புதிய அரசுக் கட்டமைப்புக்கான கோட்பாடுகளை உருவாக்குவோம்.

ஆளும் வர்க்கங்கள் ஆளத் தகுதியிழந்துவிட்ட நிலையில், அரசின் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலைச் சக்திகளாக (bankrupted, failed, collapsed and turned into opposite) மாறிவிட்ட நிலையில், அவற்றைக் கலைத்துவிட்டு,  அதிகாரம் அனைத்தையும் மக்களே கைப்பற்றி மாற்று அரசியல் கட்டுமானங்களைக் கட்டமைக்க வேண்டும்.

“மக்கள் அதிகாரம்”(People’s Power) கட்டமைப்போம்!

நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

அப்சல் குரு-க்குத் தூக்கு ! அசீமானந்தாவுக்கு விடுதலை !! நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !

“இந்துக்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்த காங்கிரசைத் தண்டிக்க இந்துக்கள் முடிவு செய்துவிட்டனர்” எனத் தனது  தேர்தல் பரப்புரையில் பேசி வருகிறார், மோடி. காங்கிரசை இந்துக்களின் விரோதியாகவும் முசுலீம்களின் நண்பனாகவும் சித்தரிப்பது பா.ஜ.க.வின் பழைய பல்லவிதான் என்றபோதும், இப்பொழுது,  குறிப்பாக நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இப்புளுகுணி ஆட்டத்தை அக்கட்சி ஆடக் காரணம், கடந்த மார்ச் மாத இறுதியில் சம்ஜௌதா ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு.

தில்லியில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு வாரம் இருமுறை இயக்கப்பட்டு வந்த சம்ஜௌதா விரைவு ரயிலில், கடந்த  2007, பிப்ரவரி 18 -ம் தேதியன்று நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பெட்டிகள் எரிந்து போயின. அத்தொடர் வண்டி அரியானா மாநிலம், பானிபட் அருகே சென்றுகொண்டிருந்தபோது நடந்த இத்தாக்குதலில் 68 பேர் கொல்லப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலோர்  பாகிஸ்தான் குடிமக்கள்.

இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த  ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த அசீமானந்தா உள்ளிட்ட நான்கு  பேரை விடுதலை செய்த சிறப்பு நீதிமன்றம், “இவ்வழக்கை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) போதுமான  ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை; குற்றஞ்சாட்டப் பட்டவர்களுக்கு எதிராக எந்தவித ஆதாரங்களும் இல்லை” எனத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

“இந்து பயங்கரவாதம் என்ற ஒன்றே கிடையாது. அது காங்கிரசு புனைந்த பொய்க் குற்றச்சாட்டு” எனக் கூறிவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு, இந்தத் தீர்ப்பு வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த கதையாகிவிட்டது.

***

ம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பின் பின்னணியையும் அக்குண்டுவெடிப்பு நடந்த காலச்சூழ்நிலையையும் தெரிந்து கொண்டால்தான் இத்தீர்ப்பு நீதியைக் கேலிக்கூத்தாக்கியிருப்பதைப்  புரிந்துகொள்ள முடியும்.

68 பேரை பலிகொண்ட சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு ( கோப்புப் படம்)

2007-ம் ஆண்டில் சம்ஜௌதா ரயில் குண்டுவெடிப்பு மட்டும் நடக்கவில்லை. ஒன்றுபட்ட ஆந்திரத் தலைநகராக  இருந்த ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதியில் 2007, மே மாதம்  நடந்த குண்டுவெடிப்பில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அதனைத்  தொடர்ந்து அக்டோபர் 2007-ல் இராசஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டு வெடிப்பில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். மகாராஷ்டிரா மாநிலம்-மாலேகானில் உள்ள மசூதி ஒன்றில் 2006-ல் குண்டு வெடித்ததைத் தொடர்ந்து அக்டோபர் 2008-ல் மீண்டும் அந்நகரில் குண்டு வெடித்தது.

வழமை போலவே, இச்சம்பவங்கள் அனைத்திற்கும்  முசுலீம் தீவிரவாத /அடிப்படைவாத இயக்கங்களின் மீது குற்றஞ்சுமத்தப்பட்டது. சம்ஜௌதா குண்டுவெடிப்பிற்கு சிமி அமைப்பு  காரணமாக இருக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டதோடு, பாகிஸ்தானைச் சேர்ந்த முசுலீம் ஒருவர் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டதும் முசுலீம்கள். அச்சம்பவத்திற்காகக் கைது செய்யப்பட்டதும் முசுலீம்கள். இவை மட்டுமின்றி, அக்குண்டுவெடிப்பு நடந்த மறுகணமே, அம்மசூதிக்கு அருகே முசுலீம்கள் நடத்தி வந்த கடைகளை ஆந்திர போலீசு தாக்கியதில் தமது அற்ப உடமைகளை இழந்ததும்  முசுலீம்கள். அக்கடை வீதியில் போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  பலியானதும் முசுலீம்கள்.

படிக்க:
♦ அசீமானந்தா – ஒரு காவி பயங்கரவாதியின் வரலாறு
♦ கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி

அஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்ததற்கு முசுலீம்  மதகுருமார்களும், மதரசா ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டு,  தொடர்ந்து 25 நாட்கள் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டனர்.

2006-ல் மகாராஷ்டிராவில் மாலேகான் நகரில் உள்ள மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கும் முசுலீம் தீவிரவாத அமைப்புகள்தான் காரணம் எனக் கூறப்பட்டு, அந்நகரைச் சேர்ந்த ஒன்பது அப்பாவி முசுலீம்கள் உள்ளூர் போலீசால் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது தடா, பொடா சட்டங்களுக்கு இணையான  கருப்புச் சட்டமான அமைப்புரீதியான குற்றச்செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அத்ராபாத் நகரில் உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு (கோப்புப் படம்)

மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட  இந்த ஒன்பது பேரும் தம்மைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கக்  கோரித் தொடர்ந்த வழக்கில், குற்றவியல் நடுவர் மன்றமும், மும்பய் உயர்நீதி மன்றமும் அத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர்ந்தது சரியென்று தீர்ப்பளித்தன. இத்தீர்ப்புகளுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில், அவர்களைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கவில்லை என்றாலும், அக்குண்டுவெடிப்பை மறுவிசாரணை செய்யுமாறு தேசியப்  புலனாய்வு முகமைக்கு உத்தரவிடப்பட்டது.

2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட முசுலீம்கள் நீதிமன்றப் படிக்கட்டுகளில் ஏறி இறங்கிக் கொண்டிருந்த அதேவேளையில், 2008-ல் அதேநகரில் மீண்டும் நடந்த குண்டுவெடிப்பை மகாராஷ்டிரா தீவிரவாதத் தடுப்புப் போலீசு பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே விசாரிக்கத் தொடங்கினார். அந்த  விசாரணையில்தான் இத்தொடர்குண்டுவெடிப்பு வழக்குகளில் எதிர்பாராத திருப்பமும் உடைப்பும் ஏற்பட்டது.

அவ்விசாரணையில் அக்குண்டு வெடிப்புக்குப்  பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் பிரக்யா சிங் தாக்கூர் என்ற  இந்து பெண் சாமியாரின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தார், கர்காரே. இதனைத் தொடர்ந்து இக்குண்டுவெடிப்பு அபிநவ் பாரத் என்ற பெயரில் இயங்கிவரும் இந்து மதவெறி  அமைப்பின் சதிச்செயல் என்ற உண்மை வெளியுலகிற்குத் தெரிய வந்ததோடு, 2006 மாலேகான் குண்டுவெடிப்பும் இந்து மதவெறிக்  கும்பலின் சதிச்செயலாக இருக்கக்கூடும் என்ற சந்தேகமும் எழுந்தது.

ஏனெனில், 2006-ல் மாலேகான் நகர மசூதியில் குண்டுவெடிப்பதற்கு முன்னரே மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், இந்து மதவெறி அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் வீடுகளில் இருந்து வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன. நந்தேட் நகரில் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டிருந்த இரண்டு பஜ்ரங் தள் உறுப்பினர்கள், எதிர்பாராதவிதமாக அக்குண்டு வெடித்ததில் கொல்லப்பட்டிருந்தனர். பர்பானி, புர்னா, ஜல்னா ஆகிய பகுதிகளில் நடந்த  மர்மமான குண்டுவெடிப்புகளுக்கும் இந்து மதவெறி அமைப்புகளுக்கும் தொடர்பிருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டிருந்தது.

இவற்றையெல்லாம் புலனாய்வு செய்துகொண்டிருந்த கர்காரே 2008 நவம்பரில் நடந்த மும்பய்த் தாக்குலின்போது சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் சந்தேகம் இருப்பதாக கர்கா ரேயின் மனைவியே குற்றஞ்சுமத்தினார். இந்து பயங்கரவாதிகளின் சதிகளைக் கண்டுபிடித்த காரணத்தாலேயே இவர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகம் இன்றுவரை இருந்துவருகிறது.

இவை ஒருபுறமிருக்க, 2007-ல் நடந்த அஜ்மீர்  தர்கா குண்டுவெடிப்பு தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த தேவேந்தர் குப்தாவும், சந்திரசேகரும் இராஜஸ்தான் தீவிரவாதத் தடுப்புப் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், சம்ஜௌதா, அஜ்மீர், மெக்கா மசூதி குண்டு  வெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பான வனவாசி கல்யாண் மையத்தின் முக்கியத் தலைவரான அசீமானந்தாவிற்கும் பங்கு இருப்பது தெரிய வந்தது.

குண்டுக்குக் குண்டு எனக்கூறித் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்திய இந்து பயங்கரவாதிகள் (இடமிருந்து) அசீமானந்தா, பிரக்யா சிங் தாக்கூர், கர்னல் புரோகித் மற்றும் சுனில் ஜோஷி

தலைமறைவாக இருந்த அசீமானந்தா 2010-ல் கைது செய்யப்பட்ட பின், அவர் டெல்லி தீஸ் ஹஸாரி குற்றவியல் நீதிமன்ற நடுவரிடம் அளித்த வாக்குமூலத்தின் வழியாக காவி பயங்கரவாதத்தின் முழுச் சித்தரமும் தெரிய வந்தது. “2002 குஜராத் கலவரத்திற்குப் பின் அக்சர்தாம் கோவில் உள்ளிட்ட சில இந்து வழிபாட்டுத் தலங்களில் தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் நடந்ததைத் தொடர்ந்து, அதற்குப் பழிக்குப் பழி வாங்கும் அடிப்படையிலேயே, குண்டுக்குப் பதில் குண்டு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையிலேயே சம்ஜௌதா, அஜ்மீர், மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளை  நடத்தியதாகவும், ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த பலருக்கும் இக்குண்டு  வெடிப்புகளில் தொடர்பிருப்பதையும்” குறிப்பிட்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருந்தார், அசீமானந்தா.

அசீமானந்தா இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை போலீசு கொட்டடியில் கொடுக்கவில்லை. மேலும், “நானும் எனது  சகாக்களும் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலீம் என்ற இளைஞரை எதேச்சையாகச் சந்தித்ததே, நாங்கள் செய்த குற்றத்தை வெளிப்படையாகக் கூறத் தூண்டியது; நிர்பந்தம், அச்சுறுத்தல் அடிப்படையில் இந்த ஒப்புதல் வாக்குமூலத்தை அளிக்கவில்லை” என்றும் குறிப்பிட்டிருந்தார் அசீமானந்தா.

***

2002 தொடங்கி 2008-க்குள் நடந்த மாலேகான், சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி உள்ளிட்ட குண்டு  வெடிப்புகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பரப்புரையாளர் சுனில்  ஜோஷி கொலை வழக்கு ஆகியவற்றில் குற்றம் சுமத்தப்பட்ட / கைது  செய்யப்பட்டவர்களின் பட்டியலை எடுத்துப் பார்த்தாலே, ஒருவரே பல குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவரும்.

எடுத்துக்காட்டாக, அசீமானந்தா, லோகேஷ் ஷர்மா மற்றும் கொல்லப்பட்ட சுனில் ஜோஷி ஆகிய மூவரும் சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர்.

பரத் மோகன்லால் ரத்தீஷ்வர் அஜ்மீர் தர்கா மற்றும்  மெக்கா மசூதி குண்டுவெடிப்புகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தான்.

ராஜேந்தர் சௌத்ரி, சந்தீப் டாங்கே, ராமச்சந்திர கல்சங்க்ரா, அமித் சௌஹான் ஆகியோர் மெக்கா மசூதி மற்றும் சம்ஜௌதா குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய குற்றவாளிகள்.

பிரக்யா சிங் தாக்கூர் என்ற பெண் சாமியார் மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கிலும், ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். மெக்கா மசூதி குண்டு வெடிப்பில் தொடர்புடைய லோகேஷ் ஷர்மாவுக்கு மாலேகான் குண்டு வெடிப்பிலும் தொடர்பிருக்கிறது.

அபிநவ் பாரத், ராஷ்டிரிய ஜாக்ரான் மஞ்ச், சனாதன்  சன்ஸ்தா என்ற அமைப்புகளின் பெயரால் இக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டிருந்தாலும், இந்த அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ். வளர்ப்புப் பிராணிகள்தான்.  மாலேகான் குண்டு வெடிப்பை நடத்திய அபிநவ் பாரத்தைச் சேரந்த் பிரக்யா சிங் தாக்கூர், ஆர்.எஸ்.எஸ்.-ன் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்தி பரிஷத் மற்றும் பெண்கள் அமைப்பான துர்கா வாஹினி ஆகியவற்றில் செயல்பட்டவர். அதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கர்னல் புரோஹித், ஆர்.எஸ்.எஸ். நாசிக்கில் நடத்திவரும் போன்ஸ்லா இராணுவப் பள்ளியோடு தொடர்புடையவர்.

சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ்.-ன் கிளை அமைப்பான வனவாசி கல்யாணின் முக்கியத் தலைவர்களுள் ஒருவர். இம்மூன்று குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய சுனில் ஜோஷியும், அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த தேவேந்தர் குப்தா, படேல் ஆகிய இருவரும் ஆர்.எஸ்.எஸ்.-ன் பரப்புரையாளர்கள்.

மேலும், அசீமானந்தா சிறையில் இருந்தபோது கேரவன் என்ற  இணைய தள இதழுக்கு அளித்த நேர்காணலில், தமக்கும் மாலேகான்  குண்டு வெடிப்பு குற்றவாளியான பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் சுனில்  ஜோஷி ஆகியோருக்கு இடையேயான உறவு பற்றி மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். தலைமையின் ஒப்புதலோடுதான் இந்தக் குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டதையும் கூறியிருந்தார்.

இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும் இத்தொடர் குண்டு வெடிப்பு வழக்குகளில் ஆர்.எஸ்.எஸ்.-ன் உயர்மட்டத் தலைவர்களுள் ஒருவர்கூடக் கைது செய்யப்படவில்லை. மறுபுறம் ஆர்.எஸ்.எஸ்., தமது அமைப்போடு நேரடியாகத் தொடர்புடைய குற்றவாளிகளை, “அவர்கள் ஆர்.எஸ்.எஸ்.-ல் இருந்து விலகி விட்டதாகவும், இந்துத்துவா பெயரில் இயங்கும் மற்ற இயக்கங்களுக்கும் தமக்கும் தொடர்பில்லை” என்றும் கூறி, இக்குற்றங்களில்  தனக்குள்ள தொடர்பை மூடிமறைத்தது. காந்தி கொலை வழக்கில்  ஆடிய அதே நாடகத்தை இந்த வழக்குகளிலும் ஆடியது,  ஆர்.எஸ்.எஸ்.

***

ட்லரின் நாஜிக்கள் நடத்திய இன மற்றும் போர் படுகொலைகள் அனைத்தையும் ஒரே நீதிமன்றம் விசாரித்ததைப் போலவே, இந்து மதவெறிக் கும்பல் நடத்திய இக்குற்றங்களையும் விசாரித்திருக்க வேண்டும். ஆனால், இவைத் தனித்தனி வழக்குகளாகவும், ஆந்திரா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா போலீசு மற்றும் அம்மாநிலங்களைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்புப் போலீசு படை, சி.பி.ஐ., தேசியப் புலனாய்வு அமைப்பு எனப் பல விசாரணை அமைப்புகள் நேரத்துக்கு ஒன்றாகவும், ஒன்றோடு ஒன்று தொடர்பின்றியும் தனித் தனியாகவும் விசாரணை செய்ததால், இவ்வழக்குகளை நீர்த்துப் போகச் செய்து, குற்றவாளிகளை விடுவிப்பது மிகவும் எளிதாக அமைந்தது. அதிலும் குறிப்பாக, 2014-ல் மோடி அரசு பதவியேற்ற பிறகு, மாலேகான், சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்புகளை விசாரித்து வந்த தேசியப் புலனாய்வு முகமை குற்றவாளிகளுக்குச் சாதகமாக நடந்துகொண்டு நீதியைக் குழிதோண்டிப்  புதைத்தது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களுக்குச் சட்ட உதவி வழங்கிய அப்துல் ஹமீது அஸாரி (இடது ஓரம்) மற்றும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட சல்மான் ஃபார்ஸி, டாக்டர் பரூக் ம்க்துமி, நூருல்ஹூடா, ரயீஸ் அகமது மன்சுரி.

சம்ஜௌதா, அஜ்மீர் தர்கா, மெக்கா மசூதி குண்டு வெடிப்பு வழக்குகளில் முக்கிய சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறியதால், இம்மூன்று வழக்குகளிலும் சம்பந்தப்பட்டிருந்த முக்கிய குற்றவாளியான அசீமானந்தா இந்த மூன்று வழக்குகளில் இருந்தும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

அஜ்மீர் தர்கா வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒன்பது பேரில் மூன்று பேரைத் தவிர, மீதமுள்ள ஆறு குற்றவாளிகளும், அசீமானந்தா உட்பட விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.  தண்டிக்கப்பட்ட இந்த மூன்று பேரில் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்டுவிட்டார். கீழமை நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பேரின் தண்டனையை உயர்நீதி மன்றம் நிறுத்திவைத்து சலுகை காட்டியிருக்கிறது.

மெக்கா மசூதி வழக்கில் 10 இந்து தீவிரவாதிகள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இவர்களுள் இன்று வரை இருவர் தலைமறைவாக உள்ளனர். ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த சுனில் ஜோஷி கொல்லப்பட்டுவிட்டார். மீதமுள்ள ஏழு பேரில் வழக்கை எதிர் கொண்ட அசீமானந்தா உள்ளிட்ட ஐந்து பேரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர். அஜ்மீர் தர்கா வழக்கில் தண்டனை பெற்ற தேவேந்தர் குப்தா இந்த வழக்கில் நிரபராதியாகிவிட்டார்.

சம்ஜௌதா குண்டு வெடிப்பு வழக்கில் எட்டு இந்து தீவிரவாதிகளின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்களுள் மூன்று பேர் தலைமறைவாக உள்ளனர். சுனில் ஜோஷி கொல்லப் பட்டுவிட, வழக்கை எதிர்கொண்ட அசீமானந்தா உள்ளிட்ட நான்கு  குற்றவாளிகளும் நிரபராதிகளாக விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

இந்து மதவெறிக் கும்பல் நடத்திய அனைத்துக் குண்டுவெடிப்புகளின் இணைப்புக் கண்ணியாகவே செயல்பட்டவர் ஆர்.எஸ்.எஸ்.-ஐச் சேர்ந்த சுனில் ஜோஷி. இந்த முக்கிய சாட்சியை ஒழித்துக்கட்டுவதன் மூலம், அனைத்து வழக்குகளையும் நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இவர் கொலை செய்யப்படுகிறார். இப்படிப்பட்டதொரு முக்கியமான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளும் விடுதலை செய்யப்பட்டுவிட்டனர்.

***

சொராபுதின் போலிமோதல் கொலை வழக்கிலிருந்து அமித் ஷா விடுவிக்கப்பட்ட தீர்ப்பு, மெக்கா மசூதி மற்றும்  அஜ்மீர் தர்கா வழக்குகளில் இருந்து இந்து மதவெறிக் குற்றவாளிகளை விடுதலை செய்த தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக இதுநாள்  வரையிலும் மேல்முறையீடு செய்யாமல் அவ்வழக்குகளைக் காலி செய்துவிட்ட என்.ஐ.ஏ., சம்ஜௌதா வழக்கில் மட்டும் நாணயமாக நடந்து கொள்ளுமா?

விடுதலை செய்யப்படும் இந்து பயங்கரவாத  குற்றவாளிகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யக்கூடாது என்பதை மோடி அரசு எழுதப்படாத சட்டமாகவே மாற்றிவிட்டது. இது மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். தொடர்புடைய பயங்கரவாத வழக்குகளைச் சீர்குலைக்கும் சதிகளையும் மோடி அரசு செய்துவருகிறது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான பிரக்யா சிங் தாக்கூருக்கும் இக்குற்றத்திற்கும் தொடர்பில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவித்துவிட்டது, என்.ஐ.ஏ. மற்றொரு முக்கிய குற்றவாளியான கர்னல் புரோகித், தனது இராணுவ உளவுப் பணி நிமித்தமாகவே அபிநவ் பாரத் அமைப்பில் ஊடுருவி வேலை செய்து வந்ததாக விசாரணை அமைப்பும் இந்திய இராணுவமும் நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கின்றன.

இவ்வழக்கில் அரசு வழக்குரைஞராகப் பணியாற்றிவரும் ரோஹினி சாலியன், மோடி அரசு பதவியேற்றவுடன், இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராகத் தீவிரமாக வாதாட  வேண்டாம் எனத் தன்னை என்.ஐ.ஏ., கேட்டுக் கொண்டதாகக் குற்றஞ்சுமத்தியதோடு, இவ்வழக்கை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிகளில் என்.ஐ.ஏ. ஈடுபடுவதாகக் கூறி, அதற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடுத்தார்.

2008 மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்கள் நீதிமன்றத்திலிருந்தே “காணாமல்” போய்விட்டன. அந்த ஆவணங்களை இன்னமும்  தேடிக் கொண்டிருக்கிறது, என்.ஐ.ஏ.

படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளை விடுவிக்க மோடி அரசு திட்டம்
♦ குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை !

குற்றவாளிகள் போலீசிடம் அளிக்கும் வாக்கு மூலங்களை, அவர்கள் அதனை நீதிமன்ற விசாரணையின்போது மறுத்தால், அம்மறுப்பை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளும். ஏனெனில், அவ்வாக்குமூலங்கள் நிர்பந்தம் காரணமாக அளிக்கப்பட்டிருக்கலாம் எனக்கருத இடமுண்டு. ஆனால், சம்ஜௌதா வழக்கிலோ,  அசீமானந்தா நீதிபதி முன்னிலையில் அளித்த வாக்குமூலத்தையே ஏற்கமறுத்து முதன்மைக் குற்றவாளியான அவரை விடுதலை செய்திருக்கிறது, என்.ஐ.ஏ. நீதிமன்றம். மேலும், “போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் மக்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டோ அல்லது குற்றம் நடைபெற்ற காலத்தில் நிலவிய அரசியல் சூழலை அடிப்படையாகக் கொண்டோ எந்த வழக்கிலும் தீர்ப்பளிக்க முடியாது” என உபதேசமும் செய்திருக்கிறார், நீதிபதி.

இப்படிப்பட்ட சலுகைகளையும் நியாயங்களையும்  குண்டுவெடிப்பு வழக்குகளில் கைது செய்யப்பட்ட முசுலீம்களிடம்  நீதிமன்றங்கள் காட்டியதுண்டா? நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுக்கு ஆதாரங்கள் அடிப்படையிலா தூக்கு தண்டனை  அளிக்கப்பட்டது? பொது மனசாட்சியைத் திருப்திபடுத்துவதற்காகத்தான் தூக்கு தண்டனை அளிப்பதாகப் பச்சையாகவே கூறியது உச்சநீதி மன்றம்.

அக்சர்தாம் கோவில் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி முசுலீம்களைச் சித்திரவதை செய்து பெறப்பட்ட வாக்குமூலங்களையும், மோசடியாகத் தயாரிக்கப்பட்ட சாட்சியங்களையும் கொண்டுதான் அந்த அப்பாவிகளுக்குத் தண்டனைகளை வழங்கியது, குஜராத் உயர்நீதி மன்றம்.

கோத்ரா ரயில் எரிப்பில் கரசேவகர்கள் கொல்லப்பட்டது பாகிஸ்தானின் சதி என மோடியும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் திரும்பத் திரும்பச் சொன்ன பொய்யை வைத்துத்தான், அவ்வழக்கில் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. அதனையொத்த சம்ஜௌதா ரயில் பெட்டி எரிப்பு வழக்கிலோ, அசீமானந்தா அளித்த ஒப்புதல் வாக்குமூலம் மறுக்கப்பட்டு, அவர் விடுதலை செய்யப்படுகிறார்.

முசுலீம் படுகொலையை நடத்தித் தன்னை குஜராத்தின் நிரந்தர முதல்வராக முடிசூட்டிக் கொண்ட நரேந்திர மோடி, அதன் பிறகு, பாகிஸ்தான் ஏவிவிடும் முசுலீம் தீவிரவாதிகளால் எந்நேரமும் தனது உயிருக்கு ஆபத்திருக்கிறது என்ற பொய்யைச் சொல்லிச் சொல்லியே பல போலி மோதல்கொலைகளை குஜராத்தில் அரங்கேற்றினார். குஜராத் அக்சர்தாம் கோவில் தாக்குதலை நடத்தியவர்கள் யார் என்பதை இன்றுவரை எந்தவொரு புலனாய்வு அமைப்பும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், அத்தாக்குதலைக் காரணமாகக் காட்டி நாடெங்கும் தொடர்குண்டுவெடிப்புகளை நடத்திய ஆர்.எஸ்.எஸ். கும்பல், அவ்வழக்குகளிலிருந்து விடுதலையும் பெற்றுவிட்டது.

மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, குஜராத்தில் நடந்த போலி மோதல்கொலைகளுக்காகக் கைது செய்யப்பட்ட ஒவ்வொரு போலீசு அதிகாரியும் அவ்வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர் அல்லது பிணையில் விடப்பட்டுவிட்டனர். அசீமானந்தா உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறி பயங்கரவாதிகள் குண்டு வெடிப்பு வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டு வருவதையும் இதன் தொடர்ச்சியாகவே கருத முடியும்.

மோடி – அமித் ஷா கும்பலின் இந்தச் சதித் திட்டங்களுக்கு உடந்தையாக நடந்துகொள்ளும் நீதிபதிகளுக்குத் தக்க சன்மானங்கள் அளிக்கப்படுவதை, உச்சநீதி மன்ற நீதிபதி சதாசிவம் ஓய்வுபெற்ற பிறகு, கேரளா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதில் கண்டோம். இதற்கு உடன்படாத நீதிபதிகள் தமது உயிரைக்கூட இழக்க வேண்டியிருக்கும் என்பதை நீதிபதி லோயா விடயத்தில் கண்டோம். இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதைத்தான் இந்த விவகாரங்கள் அம்பலப்படுத்துகின்றன.

செல்வம்

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2019

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

கார்ப்பரேட்டுகளின் காவலன் பாஜக | தோழர் ராஜு லால்குடி உரை | காணொளி

டந்த பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் நடைபெற்ற கார்ப்பரேட் காவி பாசிசம் – எதிர்த்து நில் ! மாநாட்டின் அறைகூவல் விளக்க அரங்கக் கூட்டம் லால்குடியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆற்றிய உரையின் காணொளி..

இந்த அரசுக் கட்டமைப்பின் தோல்வியையும், தேர்தல் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் மோசடியும் அம்பலப்படுத்தி பேசுகிறார் தோழர் ராஜு !

பாருங்கள் ! பகிருங்கள் !

– வினவு செய்திப் பிரிவு

தேர்தலுக்கு அப்பால்… | புதிய ஜனநாயகம் | ஏப்ரல் 2019

தேர்தலுக்கு அப்பால்… புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2019

  1. கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் !
  2. உச்சநீதி மன்றம் : வங்கி மோசடியாளர்களின் காவலாளி !
    பணமதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி., உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளால் நாடெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் அழிந்துபோகும்படி கைவிடப்படுவதைக் கண்டும் காணாது போல நடந்துவரும் நீதியரசர்கள், அரசின் கொள்கை முடிவுகளால் கார்ப்பரேட் நிறுவனங்கள் துன்பப்படக்கூடாது எனக் கண்ணீர் உகுக்கிறார்கள்.
  3. ஜெட் ஏர்வேஸ் பெயில் அவுட் : ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே !
    ஜெட் ஏர்வேஸ் அரசு வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 8,400 கோடி ரூபாய் கடனை நரேந்திர மோடி மிகச் சாதுர்யமாகத் தள்ளுபடி செய்திருப்பது, அடிமடியிலேயே கைவைக்கும் திருட்டுக்கு ஒப்பானது.
  4. தேர்தலுக்கு அப்பால்… அரசுக் கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
    தனித்தனியான சிக்கல்களுக்குத் தனித்தனி தீர்வுகளை இந்த அரசமைப்புக்குள்ளேயே பெற்றுவிட முடியும் என்ற பிரமையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும்.
  5. தேர்தல் ஆணையமே… நடையைக் கட்டு !
    சுதந்திரமான, வெளிப்படையான தேர்தல்கள் என வியந்தோதப்படும் கொள்கையைத் தேர்தல் ஆணையமே கைகழுவிவிட்டது.
  6. “இருப்பதைப் பிரித்துக் கொடு என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாகவே மாற வேண்டும் !” – அருந்ததி ராய்
    மக்கள் அதிகாரம் பிப்ரவரி 23, 2019 அன்று திருச்சியில் நடத்திய “கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்” மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததி ராய் ஆற்றிய தொடக்கவுரையின் சுருக்கம்.
  7. அப்சல் குருக்குத் தூக்கு ! அசீமானந்தாவுக்கு விடுதலை ! நீதித்துறையை ஆளுகிறது இந்து மனசாட்சி !
    இந்து மதவெறி பாசிசக் கும்பல் விசாரணை அமைப்புகளையும், நீதிமன்றங்களையும் தமது காலாட்படையாக மாற்றி வருவதை அசீமானந்தா விடுதலை மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டுகிறது.
  8. தியாகத் தோழர்கள் ரோசா லக்சம்பர்க், கார்ல் லீப்னெக்டை நினைவு கூர்வோம் ! பாசிச அபாயத்தை முன்னுணர்ந்து முறியடிப்போம் !!
  9. பி.எஸ்.என்.எல்.-க்கு மூடுவிழா ! மோடி அரசின் சதிகள் !
    பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் கட்டமைப்பு முழுவதையும் தனியாருக்கு, அதாவது அம்பானிக்குத் தாரைவார்க்கும் சதிகள் அரங்கேறி வருகின்றன.
  10. வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !
    மக்களின் விருப்பப்படி பொருளாதார, அரசியல் கொள்கைகளை வகுக்க விரும்பினால், அரசும் மக்களும் ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போருக்கு தயாராக வேண்டும் என்பதுதான் வெனிசுவேலா விடுக்கும் செய்தி.

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

 

அதானிக்கு ரூ.100 கோடி அள்ளிக் கொடுக்கும் மோடியின் சதி அம்பலம் !

அதானிக்கு 100 கோடியை அள்ளிக் கொடுக்கும் மோடி டெண்டருக்குத் தடை ! மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கில்  மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு !

தூத்துக்குடியில் உள்ள தமிழக அரசின் என்.எல்.சி. நிறுவனம், நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின் நிலையமாகும். கடந்த 10 ஆண்டுகளாக ஒடிசாவில் உள்ள மகாநதி நிலக்கரி சுரங்கத்திலிருந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கப்பல் மூலமாகக் கொண்டு வரப்படுகிறது.

மகாநதி நிலக்கரி சுரங்கத்தில் வெட்டியெடுக்கப்படும் நிலக்கரி, ரயில் மூலம் ஒரிசாவில் உள்ள மத்திய அரசின் பாரதீப் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து கப்பலில் ஏற்றப்பட்டு, கடல் வழியாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டு, அனல்மின்நிலையம் வந்து சேரும். இவ்வாறு நிலக்கரியை கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பிற்கு, என்.எல்.சி  நிறுவனம், தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கும். இதற்காக டெண்டர் கோரப்படுவது வழக்கம்.

கடந்த 2010-ல் கோரப்பட்ட டெண்டரில் மத்திய அரசின் பாரதீப் துறைமுகம் வழியே நிலக்கரியைக் கொண்டு வர வேண்டும் என்பதே நிபந்தனை. காரணம் போக்குவரத்துச் செலவை என்.எல்.சி-தான் வழங்கும். அச்செலவு நம் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படும்.

ஒடிசாவில் அதானிக்கு சொந்தமான தாம்ரா என்ற துறைமுகம் உள்ளது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தபின், கடந்த 25.01.2017-ல் கோரப்பட்ட ஒப்பந்தத்தில் நிலக்கரியை மத்திய அரசின் பாரதீப் அல்லது அதானியின் தாம்ரா வழியாகக் கொண்டுவரலாம் என்ற நிபந்தனை சேர்க்கப்படுகிறது. அதன்பின் 22.09.2018-ல்  கோரப்பட்ட ஒப்பந்தத்தில் அரசின் பாரதீப் துறைமுகம் வழியாக 70% நிலக்கரியும் (28,73,360 மெட்ரிக் டன்) மற்றும் அதானியின் தாம்ரா துறைமுகம் வழியாக 30%(12,31,440 மெட்ரிக் டன் ) நிலக்கரியும் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இந்த நிபந்தனையை ஏற்பவர்கள் மட்டுமே டெண்டரில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்படுகிறது. இதனால் செலவு அதிகமாகும் எனப் பலர் எதிர்ப்பு தெரிவிக்க, இந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் மீண்டும் தேர்தலுக்கு முன் அவசரமாக 10.04.2019 அன்று மீண்டும் அதே நிபந்தனையுடன் டெண்டர் பிறப்பிக்கப்படுகிறது.

அரசின் பாரதீப் துறைமுகம், மகாநதி நிலக்கரி சுரங்கத்திற்கு அருகில் உள்ளது. ஒப்பீட்டளவில் பாரதீப் துறைமுகம், தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு பக்கம் (1213 நாட்டிகல் மைல்). ஆனால் அதானியின் தாம்ரா துறைமுகம் 1276 நாட்டிகல் மைல் தூரத்தில் உள்ளது. அதானி துறைமுகத்தில் கட்டணமும் சிலவற்றில் வெளிப்படையாக இல்லை. இவ்வாறு, ரயில் மற்றும் கடல் வழி தூரம் அதிகமாக உள்ளதால் என்.எல்.சிக்கு ஆகும் அதிக செலவு 101 கோடி. இந்தத் தொகை முழுவதும் அதானிக்கு நேரடியாகச் செல்கிறது. இது தவிர இந்த டெண்டரிலும் அதானி நிறுவனம் பங்கேற்கிறது. எனவே நிலக்கரியை கொண்டு வருபவர், துறைமுக கட்டணத்தை நிர்ணயிப்பவர் எல்லாம் அதானியே.

கடைசியில் இந்த 101 கோடியும் நம் மீதான மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்படும். அடுத்த சில ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் போல அரசின் பாரதீப் ஒழிக்கப்படும். அதானி துறைமுகம் வழியே மட்டும் நிலக்கரி கொண்டுவரும் நிலை உருவாகும்.

படிக்க:
♦ ஆதிவாசி நிலத்தை அபகரிக்க அதானிக்காகவே ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் !
♦ மோடி ஆட்சி நன்னாத்தான் இருக்கு .. மோடியே வரட்டும் …

இந்த அநீதியை எதிர்த்து மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டச் செயலர் ம. லயனல் அந்தோணிராஜ் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க, 16.04.2019 அன்று நீதிபதிகள் திரு.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்திற்காக மூத்த வழக்கறிஞர் திரு.டி.செல்வராஜ், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் ஆஜராகினர்.

அதானிக்கு ஆதரவான என்எல்சி-யின் நிலையை அறிந்த நீதிபதிகள், அரசுத் துறைமுகத்தை விட்டுவிட்டு, தனியாருக்கு முக்கியத்துவம் கொடுப்பதேன்? இதற்கான காரணம் என்ன? எனக் கேட்டு, அதானியின் துறைமுகம் வழியாக கட்டாயம் நிலக்கரியைக் கொண்டுவர வேண்டும் என்ற நிபந்தனைக்குத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

நிலக்கரி, துறைமுக ஊழல்கள் நூற்றுக் கணக்கில் உள்ளன. நமக்குத் தெரிந்தது ஒன்று, தெரியாதது ஓராயிரம். அதானியின் சொத்து மதிப்பு உயர்வதன் ரகசியம் இப்போது தெரிகிறதா?

அதானி டெண்டர் ரத்து செய்யப்பட்டது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் படங்கள் :

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றிம் மீது அழுத்தவும் )


தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை. தொடர்புக்கு : 94434 71003.