சிலவற்றைப் படித்து முடித்தவுடன் அவற்றைப்பற்றிய கருத்துகளை மற்றவர்களுடன் பகிராமல் இருக்க முடிவதில்லை. அப்படியொரு நுால் சிவா சின்னப்பொடி அவர்களின் நினைவழியா வடுக்கள்.
இதில் எழுதப்பட்ட சம்பவங்கள் நடந்தது மிகத் தொலைவான ஒரு காலத்திலல்ல. நாம் அறியாத ஓர் ஊரிலல்ல. நாகரிகமும் அறிவும் வளர்ந்ததாகவும் சொல்லி, பண்பும் கலாசாரமும் எனப் பெருமை பேசிக் கொண்டிருக்கும் நம் சனங்களிடம் இருந்த அயோக்கியத்தனங்களை – அழுக்குகளை இப்புத்தகம் பதிவு செய்துள்ளது.
1962-ம் ஆண்டு. எட்டு வயதான சிறுவன் தான் பள்ளிக்கூடம் போன நாளை நினைவுக்குக் கொண்டு வருவதோடு தொடங்குகிறது நினைவழியா வடுக்கள். ஆறுமுகநாவலர் வழிவந்த சைவ சற்சூத்திரப்பாரம்பரியமும் அதையொட்டிய சாதியக் கட்டமைப்பும்… என்று முதற்பக்கத்திலேயே ஆரம்பமாகிறது இந்தத் தன்வரலாறு.
சாதியவெறி செய்த கொடுமைகள் ஒரு சிறுவனாக மனதைப் பாதித்தவை – அதை எதிர்கொண்ட துணிச்சல் என சிறுவயதின் சில ஆண்டுகளின் நினைவுப்பதிவு தான் இப்புத்தகம். அந்தச் சில ஆண்டுகளில் பட்ட துன்பங்களும் போராட்டங்களும் இன்றும் அவர் மனதை ரணப்படுத்துகின்றன.
யாழ்ப்பாணத்தின் மந்திகை என்ற ஊரிலுள்ள பள்ளிக்கூடத்தில் சாதி காரணமாக நிலத்தில் இருத்தப்பட்டுத்தான் படிக்கவேண்டியிருந்தது. புதிய சீருடைகளையணிந்து தான் நிலத்தில் இருத்தப்பட்டால் அழுக்காகக்கூடாது என கீழே விரித்து அமர்வதற்காக, வீட்டில் தந்தை படிக்க வாங்கிய நாளிதழான வீரகேசரியின் ஒரு பக்கத்தை தன் கையில் எடுத்துச்செல்கிறார். அதையும் அனுமதிக்க முடியாத கதிர்காமன் என்ற வாத்தியார் வாழைமட்டையால் அடித்துக் கறைபிடிக்கச் செய்ததை இவ்வாறாக எழுதியிருக்கிறார்…
‘நீங்களே ஊத்தையன்கள். நிலத்தில இருந்தா உங்கடை கால்சட்டை ஊத்தையாப்போயிடுமோ? நீங்கள் இருக்கிறதால நிலம் தான்ரா ஊத்தையாப் போகுது’ என்றவர் விறுவிறென்று வெளியே போய் பாடசாலைக் கிணற்றடியில் நின்ற வாழை மரத்திலிருந்து மொத்தமான பச்சைத் தடலொன்றை வெட்டிக்கொண்டு வந்தார். அந்த வாழைத்தடலால் எனது உடம்பில் பத்துப்பதினைந்து சாத்தல்கள் விழுந்த பின்பு தான் எனக்கு எல்லாமே புரிந்தது’
அவர்களது உடைகள் அழுக்காக வேண்டுமென்று பள்ளிக்கூடப் பற்றைகளை வெட்டித் துப்பரவு செய்ய வைக்கப்படுகின்றனர். ஏன் இப்படி என அச்சிறுவன் தனக்குள் பல கேள்விகளைக் கேட்கிறான். பதில் சாதி… பள்ளிக்கூடத்தில் சமமாக இருந்து படிக்கமுடியாது.
தண்ணீர் அள்ள முடியாது. சக மாணவர்கள் சாதிப்பெயர் சொல்லி ஏளனம் செய்வது என ஒரு குழந்தையைக் கூட வதைத்த சாதி, பெரியவர்களை என்ன செய்திருக்கும்?
இணுவில் உணவகமொன்றில் தந்தையாருடன் மேசையில் உணவருந்திய காரணத்தால் தந்தைக்கு விழுந்த அடிகளும் ஆடையவிழ்ப்பும் நாள் முழுதும் விறகு கொத்துவதுமாகத் தண்டனை கிடைக்கிறது. அதை உடனிருந்து பார்த்ததுமின்றி நீரின்றி உணவின்றி அந்த விறகுகளை இச்சிறுவன் ஓடியோடி அடுக்கவும் வேண்டும். இதைப் போல பல சம்பவங்களை வெள்ளாள ஆதிக்கசாதியின் வெறித்தனத்தை எதிர்கொண்ட சம்பவங்கள். சுயதொழிலும் பொருளாதாரமும் நிலமும் கொண்டவராக வாழ்ந்தாலும் சாதி என்பது அடங்கிப் போகச் சொல்கிறது.
படிக்க:
♦ நூல் அறிமுகம் : கோவில்கள், மசூதிகள் அழிப்பு உண்மையும் புரட்டும் !
♦ பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !
தீண்டாமைக்கொடுமைகளுக்கு ஆளானதை இன்னுமொருவருக்கு நடந்தது, அறிந்தது என இல்லாமல். தன் வாழ்விலிருந்து இரத்தமும் கண்ணீரும் பெருகியவற்றை எழுதியிருக்கிறார் சிவா சின்னப்பொடி. பொருளாதார ரீதியாகவும் சொந்தக்காலில் நின்ற போதும் சாதி என்பது காரணமாக கோயிலில் நுழையவோ பொதுக்கிணற்றில் நீரள்ளவோ படிக்கவோ கல்வீடு கட்டவோ மேலாடை- காலணி- புதிய ஆடைகளை உடுத்தவோ கூடாது என மிரட்டப்படுவதும் கொல்லப்படுவதும் நடக்கிறது. சாதிய மனிதர்கள் எவ்வளவு குரூரமானவர்கள்!
தந்தையாரின் பெயர் தான் சின்னப்பொடியன். பிறப்புச் சான்றில் பெயர்களை எழுதுவதும் திட்டமிட்ட வகை. அதைப்போல சாதி என்ற இடத்தில் 1957-ல் பாராளுமன்றத்தில் சமூகக்குறைபாடுகள் சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்பு அது இனம் என மாற்றப்படுகிறது. அப்போது இலங்கைத் தமிழர் எனக் குறிப்பிடப்படவேண்டும். ஆனால் சாதியப்படியைப் பொறுத்து இலங்கைத் தமிழர், இலங்கைத் தமிழ், இலங்கைத் தமிழன் என்று வேறுபடுத்தி எழுதி வித்தியாசப்படுத்தியதும் நடந்தது. பொதுவுடமைச் சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் இவ்வாறான இழிவுகளை எதிர்த்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நிற்கின்றனர்.

பாராளுமன்ற உறுப்பினர் பொன். கந்தையாவின் தீண்டாமைக்கு எதிரான செயற்பாடுகளும் சமூக முன்னேற்ற வேலைகளும் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது இவர் போன்றவர்களை எமக்கு ஏன் யாரும் சொல்லித்தரவில்லை என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இந்நுாலாசிரியர் மூன்று மாதங்கள் பயின்ற திண்ணைப் பள்ளிக்கூடமும் அதன் ஆசிரியர் கந்தமுருகேசனார் கற்பித்த முறையும் மிகுந்த ஈர்ப்பையும் பிரமிப்பையும் ஏற்படுத்தியது. முதல் நாள் அழுத சிறுவனை துாக்கி மடியில் வைத்த காரணத்தால் வெள்ளாளர்கள் அடுத்த நாள் தங்களது பிள்ளைகளை அங்கு படிக்க அனுப்பவில்லை. ஆனால் இவருக்கு அடுத்த நாளும் தனியாக இருத்தி வைத்துக் கற்பிக்கிறார். கந்த முருகேசனாரின் கேள்விகளும் அணுகுமுறைகளும் இயற்கையோடிணைந்த வாழ்வு முறையும் தொடர்ந்து ஏன் நம்மிடமில்லாமல் போனது? இவரைப் போன்றவர்கள் பற்றிப் பரவலாக எம் காலத்தில் அறியமுடியவில்லை. யாழ்ப்பாணத்துப் புலவர்களையும் சைவப் சமயப்பெருமைகளையும் படிப்பித்தது போல, சமுதாய மாற்றத்திற்காக உழைத்தவர்களைப் பற்றிய பாடங்கள் வேண்டும். இக்கொடுமைகளும் போராட்டங்களும் இலக்கியத்தின் வழியாகவே வெளிக்கொண்டு வரப்படுகின்றன.
படிக்க:
♦ ஐயாவின் கணக்குப் புத்தகம் | அ. முத்துலிங்கம்
♦ சென்னையின் ஷாகீன் பாக் – தொடரும் வண்ணாரபேட்டை போராட்டம் !
நினைவழியா வடுக்கள், அகாலம் (சி.புஷ்பராணி), தீண்டாமைக்கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் (யோகரட்ணம்) போன்ற புத்தகங்களும் கே.டானியல், டோமினிக் ஜீவா போன்றவர்களது எழுத்துகளுமாக வரலாறில் பதிவாகின்றன.
யாழ்ப்பாணச் சாதியடுக்கு முறைகள், 1961 லிருந்து 1964 வரை இங்கு நடைபெற்ற தீண்டாமை ஒழிப்புப்போராட்டங்களும் அவற்றின் பலன்களும் எனப் பல சம்பவங்களும் அவை தொடர்பான பெயர்களுமென ஒரு பதிவாக இதுவொரு கவனிக்கப்படவேண்டிய புத்தகம். மேலும் சாதிய ஒடுக்குமுறைகளுடன்; சிவா சின்னப்பொடியவர்களது அவதானிப்பில் அப்போதைய அரசியல் நிலமைகள், மொழிப்போராட்டங்கள், இனக்கலவரம், பற்றிய விடயங்கள் பலவும் எழுதப்பட்டுள்ளன. ஒடுக்கப்பட்டவர்கள் ஆயுதங்களோடு துணிச்சலாக நின்று சண்டை போடுவதும் போராடுவதும் கல்வியில் கவனங்கொள்வதுமான அதே வேளையில் மெதுமெதுவாகச் சில சட்டங்களும் வருகின்றன. ஆனாலும் அவை இன்றுவரை வெவ்வேறு வடிவங்களாக மறைந்து கிடக்கின்றன. தீண்டாமை என்பது வேறுவேறு வழிகளாக; தேர் இழுக்கவும் காணி-நிலங்கள் வாங்கவும் கல்யாணத்திற்குமாக… எனப் பல விதமாகவும் தொடர்கின்றது.
கம்யூனிஸ்ட் தோழர்களும் தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர்களும் ஏற்படுத்திய மாற்றங்களும் பொன்.கந்தையா பாராளுமன்ற உறுப்பினராகச் செய்த பணிகளும் ஓரளவுக்குச் சாதியக் கொடுமைகளை ஒழித்ததைப் பதிவு செய்துள்ளார். ஆனாலும் உண்மையாகவே மக்கள் மனந்திருந்தினார்களா? சாதிய ஏற்றத்தாழ்வின் அநாகரிகம் பற்றிய பிரக்ஞையுடன் தான் தமிழீழப்போராட்டத்தைச் செய்தனரா? சாதிப்பெயர் சொன்னாலே பச்சை மட்டையடி என்ற பயம் இருந்ததேயொழிய மனதளவில் அது உள்ளே பதுங்கியிருந்தது. இல்லையென்றால் இப்போது இன்னும் அது இளையவர்களிடம் கூட எப்படி நிலை கொண்டிருக்கிறது? புலம்பெயர்ந்து அகதிகளாக வந்த நாடுகளிலும் ஃபேஸ்புக்கில் கூட சாதிப்பெயர் சொல்லித் திட்ட எப்படி முடிகிறது? கேள்விகளுக்கும் சுயவிசாரணைகளுக்கும் நினைவழியா வடுக்கள் போன்ற புத்தகங்கள் இன்னுமின்னும் வரவேண்டும்.
வெளியீடு: விடியல் பதிப்பகம்
இணையத்தில் வாங்க : udumalai
நன்றி : ஃபேஸ்புக்கில் – Dharmini Ni










அல்பேனியா குறைந்தது இரண்டு தசாப்த காலமாக உலகில் ஒரேயொரு நாத்திக நாடாக இருந்தது. கவனிக்கவும்: “ஒரேயொரு”. அதாவது உலகில் வேறெந்த நாட்டிலும் மதம் முற்றாகத் தடைசெய்யப் பட்டு, அனைத்து மத வழிபாட்டுஸ்தலங்களும் மூடப்படவில்லை. புரட்சி நடந்த காலங்கள் விதிவிலக்கு. பிரெஞ்சுப் புரட்சி முதல் ரஷ்யப் புரட்சி வரையில் மத நிறுவனங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சி காரணமாக உண்டான விளைவுகள் வேறு விடயம்.
உலகப் புகழ் பெற்ற கத்தோலிக்க பெண் துறவியான தெரேசா மாசிடோனியாவில் பிறந்தவர். ஆனால் அவரது சிறுவயதில் பெற்றோருடன் அல்பேனியாவுக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்தார். தெரேசா கன்னியாஸ்திரியான பின்னர் இந்தியா சென்று தங்கிவிட்ட போதிலும், அவரது தாயாரும் பிற குடும்ப உறுப்பினர்களும் அல்பேனியாவில் வாழ்ந்து கொண்டிருந்தனர். அவரது தாயார் மரணப் படுக்கையில் இருந்த நேரம் தெரேசா விசா கேட்டு விண்ணப்பித்து இருந்தார். அந்தக் காலத்தில் எந்த நாட்டுடனும் சேராமல் தனிமைப் படுத்தப் பட்டிருந்த அல்பேனியா யாரையும் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கவில்லை. அதே போல யாரையும் உள்ளே வர அனுமதிக்கவில்லை. (விதிவிலக்குகள் இருந்தன.) அதனால் தெரேசா அம்மையாருக்கும் உள்நுழையும் விசா கிடைக்கவில்லை, அவரது அம்மாவுக்கும் வெளியேற அனுமதி கொடுக்கவில்லை.
அல்பேனிய தேசிய இனம் மொழி அடிப்படையில் உருவானது. ஒரே மொழி (அதிலும் இரண்டு பிரிவுகள்) மட்டுமே அவர்களை ஒன்றிணைக்கிறது. அல்பேனியர்களை மத அடிப்படையில் மூன்று வகையாகப் பிரிக்கலாம். இஸ்லாமியர்கள் பெரும்பான்மை. கிறிஸ்தவர்கள் சிறுபான்மை. ஆனால், கிறிஸ்தவர்களும் கத்தோலிக்கர்கள், (கிரேக்க) ஒர்தொடக்ஸ் என இரண்டாகப் பிரிந்துள்ளனர். துருக்கி ஓட்டோமான் படையெடுப்புகளுக்கு முன்னர் அனைத்து அல்பேனியர்களும் கிறிஸ்தவர்களாக இருந்தனர். ஓட்டோமான் ஆட்சியில் பதவிகள், வசதி வாய்ப்புகள், மற்றும் வரிச்சலுகைகள் காரணமாக பெரும்பாலானோர் இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.
நான் ஒரு மலைப் பகுதி கிராமத்தில் ஒரு குடும்பம் நடத்தும் விடுதியில் தங்கியிருந்தேன். அன்று நான் மட்டுமே ஒரேயொரு விருந்தாளி என்பதால் காலை உணவு சாப்பிட அழைத்திருந்தார்கள். அப்போது அவர்கள் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள் என்பது தெரிய வந்தது. அவர்களது மகன் மட்டுமே ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்த படியால், அந்தப் பகுதி மக்களின் இனம், மதம் பற்றி விசாரித்தேன். அந்தக் குடும்பத்தினர் மதத்தால் ஒர்தொடக்ஸ் கிறிஸ்தவர்கள், மொழியால் அல்பேனியர்கள். கிரேக்க மொழி பேசும் மக்களும் அங்கு வாழ்கிறார்களாம். அவர்கள் பரம்பரை பரம்பரையாக அல்பேனியாவில் வாழ்ந்து வருகின்றனர். அண்மைக் காலமாக சிலர் கிரேக்க பாஸ்போர்ட் எடுத்து வைத்திருக்கிரார்களாம். அதன் மூலம் ஐரோப்பாவுக்கு இலகுவாக பயணம் செய்ய முடியும்.
அது சரி, கத்தோலிக்கர்கள் எவ்வாறு இத்தாலியர் (லத்தீனியர்) ஆவார்கள் என்று நீங்கள் கேட்கலாம். கத்தோலிக்க மதத்தவர்கள் கரையோரப் பகுதிகளில் பெருமளவில் வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு டூரேஸ் (Durres) பட்டினத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அது தலைநகர் திரானாவில் இருந்து முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடற்கரைப் பட்டினம். எனது பயணத்தின் கடைசி நாள் அங்கு தங்கியிருந்து தான் விமான நிலையத்திற்கு சென்றேன்.
இன்றைய டூரேஸ் நகரத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும் பங்கினர் இத்தாலியர் என்பது குறிப்பிடத் தக்கது. அதனால் அங்குள்ள ரெஸ்டாரன்ட் வணிகம் பெரும்பாலும் இத்தாலிய பயணிகளை குறிவைத்தே இயங்கி வருகின்றது. காணும் இடமெங்கும் பீட்சா கடைகள். உண்மையில் அங்கே மிகவும் மலிவான, தரமான பீட்சா உணவு கிடைக்கிறது. நான் அங்கு சென்றிருந்த நேரம் கடற்கரையில் திருத்த வேலைகள் நடந்து கொண்டிருந்தன. புதிதாக நடைபாதைகள் கட்டப் பட்டுக் கொண்டிருந்தன. கடற்கரை மணல் கூட இனிமேல் தான் கொண்டு வந்து தான் கொட்டுவார்கள் போலிருந்தது. அது வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வரும் காலம் அல்ல. அநேகமாக கடற்கரையில் பொழுதுபோக்க வந்தவர்கள் அனைவரும் உள்நாட்டவர் தான்.


















அதே போல இன்னொரு எதிர்மறையான அம்சத்தையும் இங்கே குறிப்பிட வேண்டும். நகரத் தெருக்களில் சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்தாலும் வாகனம் ஓட்டுகிறார்கள். இதை ஏற்கனவே சென்னைத் தெருக்களில் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு வித்தியாசம். சென்னையில் பாதசாரிகள் பச்சை விளக்கில் பாதையை கடக்கும் நேரத்திலும் வாகனத்தை மிக வேகமாக ஓட்டிக் கொண்டு வருவார்கள். ஆனால் அல்பேனியாவில் பாதசாரிகளுக்கு வழிவிட்டு மெதுவாக ஓடுகிறார்கள். மற்றும்படி இரண்டு நாடுகளிலும் வீதிப் போக்குவரத்து விதிகளை மீறும் பண்பு ஒரே மாதிரியாக உள்ளது. திரானாவில் நிறையப் பேர் சைக்கிள் பாவிக்கிறார்கள். சைக்கிள் ஓடுவதற்கு தனியான பாதை ஒதுக்கி இருக்கிறார்கள்.




அல்பேனியாவில் Tirana Times, Albanian Daily News என்று இரண்டு ஆங்கில வாரப் பத்திரிகைகள் வெளிவருகின்றன. இரண்டிலும் வரும் செய்திகளில் பெரியளவு வித்தியாசம் இல்லை. அந்த நேரத்தில் ஒரு மாபியா குழு செய்த கொலை பற்றிய செய்தி முக்கிய இடம் பிடித்திருந்தது.
“சாவர்க்கர் சகோதரர்கள் சிறைச்சாலைக்கு எதிராக கிளர்ச்சி செய்ய எங்களை ரகசியமாக தூண்டிவிடுவார்கள். ஆனால் எங்களுடன் வெளிப்படையாக இணைந்து கொள்ள சொன்னால் பின்வாங்கிவிடுவார்கள். சாவர்கர் சகோதரர்களுக்கு கடின உழைப்பு கொண்ட வேலைகள் வழங்கப்படவில்லை” என்று பரிந்திர கோஷ் என்ற மற்றொரு கைதி பின்னர் ஒரு சமயம் தெரிவித்தார்.










ஒருமுறை என்னிலும் அந்தக் கோபம் திரும்பியது. எனக்கு சைக்கிள் ஓட்டுவதற்கு ஆசை. ஆனால் வீட்டில் இருந்த ஐயாவின் சைக்கிளை பார்க்கலாமே ஒழிய தொடமுடியாது. ஐயாவை பார்க்க ஒருத்தர் தொலை தூரத்திலிருந்து அடிக்கடி வருவார். அவர் தன் சைக்கிளை யானை கட்டுவதுபோல பெரிய சங்கிலியால் கட்டி ஒரு மரத்துடன் இணைத்துவிடுவார். ஒருநாள் அவர் வந்தபோது ஐயா இல்லை. வழக்கம்போல சைக்கிளை கட்டாமல் சாய்த்துவிட்டு திண்ணையில் உட்கார்ந்தார். அந்தத் தருணம் கடவுளால் அருளப்பட்டது. அதை தவறவிட்டால் வாழ்நாள் முழுவதும் துக்கிப்பேன். நான் சைக்கிளை மெதுவாக உருட்டி வெளியே கொண்டுவந்து ஏறி ஓட்டினேன். எங்கள் கிராமத்தில் எங்கே சுற்றினாலும் 3, 4 தெருக்கள்தான். நான் பல சாகசங்கள் செய்தபடி தெருக்களில் ஓட்டினேன். இருந்தும், எழும்பியும், குனிந்தும், குனியாமலும், கையை விட்டும், விடாமலும், நின்றும், நில்லாமலும், மிதித்தபடியும், மிதிக்காமலும் வேகமாக ஓட்டினேன். தூரத்தில் ஐயா வருவது புழுதியில் தெரிந்தது. சைக்கிளை திருப்பினேன்; அது திரும்பவில்லை. பிரேக் பிடித்தேன் , அது பிடிக்கவில்லை. என் சைக்கிள் ஐயாவின் சைக்கிளோடு மோதி, ஐயா மல்லாக்காக விழுந்தார். நான் குருவிபோல சட்டென்று எழும்பி மறைந்துவிட்டேன்.


இராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) 1940 முதல் 1973 வரை வழிநடத்திய கோல்வால்கர், முடிவில்லாத ஒரு இனப்போரைக் கனவு காண்கிறார். அவர் இன உணர்வை வரையறுப்பதற்காக ஒரு விலங்கியல் உருவகத்தை தன்னுடைய இந்து தேச கருத்தாக்கத்துடன் இணைக்கிறார். எதிரியை ஒழிப்பதற்கு இனத்தின் ஆன்மா தூக்கம் கலைய வேண்டும். தற்செயலாக, கடந்த ஆண்டு சிகாகோவில் மோகன் பகவத்தின் சர்ச்சைக்குரிய உரையில் அதே சிங்க உருவகம் மீண்டும் எழுந்தது.
“ஜெர்மனியர்கள் பரம்பரையாக வைத்திருந்த, அரசியல் மோதல்களால் பிரிக்கப்பட்ட தேசத்தின் பகுதிகளை ஒரு குடையின் கீழ் மீண்டும் கொண்டுவர நவீன ஜெர்மனி முயன்றது.” என்று நாஜி ஜெர்மனியை கோல்வால்கர் புகழ்ந்துரைக்கிறார்.
மனதுக்கும் இனத்துக்கும் ஒரு அடிப்படை வேறுபாடு உள்ளது. இனம் என்பது ஒரு உயிரியல் கருத்தாக்கம். இது நிறம் பற்றிய கருத்தாக்கமாகும். இது ஓரளவு மற்ற (இனரீதியாக வேறுபட்ட) மக்களின் நிற ரீதியிலான பாரபட்சமான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. மனம் என்பது ஒருவரின் இன அடையாளத்துடன் முற்றிலும் அடையாளம் காண முடியாத – அல்லது தாழ்ந்து போகாத சிந்தனை மற்றும் அனுபவத்தின் கலவையாகும். உடல் அனுபவிப்பதை மனம் செயலாக்குகிறது, மேலும் அதைப் எதிரொளிக்கிறது. மனதின் வாழ்க்கை, பல வழிகளில், கலாச்சாரத்தின் வாழ்க்கையை குறிக்கிறது. மனமும் உடலும், எதிரொளிப்பு மற்றும் அனுபவமாக நமது கலாச்சார நினைவகத்தின் ஒரு பகுதியாகும். இதிலிருந்து தான் இனக் கோட்பாடுகள், வரலாற்று மற்றும் கலாச்சார மோதல்களிலிருந்து எடுக்கப்பட்ட மிகைப்படுத்தல்களின் அடிப்படையில் வேற்றுமையை உருவாக்கி, (மற்றவரின்) அறிவையே போராக மாற்றுகின்றன.
கோல்வால்கரைப் பொறுத்தவரை மக்களாட்சி என்பது பிடிபடாமல் உள்ள அதே நேரத்தில் ஒரு இந்து தேசம் அவரை பொருத்த வரையில் சாத்தியமானது மற்றும் விரும்பத்தக்கதாக உள்ளது. ஒரு மக்களாட்சியை விட ஒரு மதவாத அரசு (இந்து ராஷ்டிரா) என்ற கருத்தை அவர் விரும்புகிறார். ஒரு மக்களாட்சியின் விருப்பம் ஏன் ஒரு காட்டு வாத்து துரத்தல் என்பதற்கான காரணங்களை அவர் முன்வைக்கவில்லை. ஆனால் இந்து ராஷ்டிரத்தை அடைவதில் இருந்து ஒரு மக்களாட்சி விலகுகிறது என்ற கருத்தை அவர் முன்வைக்கிறார். சமுதாயத்தின் (மக்களாட்சி) நிர்வாகத்தை விட அல்லது நமது சமூக மற்றும் மத வேறுபாடுகளை விட ஒரு நாடு போரை நிர்வகிப்பதில் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்கிறார்.
இப்பெண்ணிற்கான அறுவைச் சிகிச்சைக்காக நான் அறுவை அரங்கம் சென்றதும் ஒரு செவிலியர் பதறிக்கொண்டு ஓடிவந்தார் என்னிடம். “மேடம் அவர் கணவர் இப்பவரை வரல மேடம்” என்றார். ”கணவர் எதுக்கு இதுக்கு, சட்டமே கணவர் தேவையில்லை எனும் போது நீங்கள் ஏன் அந்த கணவருக்காக காத்து இருக்கீங்க, அதுவும் மனைவிக்கு இன்று அறுவைச் சிகிச்சை எனத் தெரிந்தும் மருத்துவமனை பக்கம் எட்டிப் பார்க்காத கணவரெல்லாம் ஒரு ஆளா, யாரும் தேவையில்லை எனக்கு, அப்பெண் மட்டும் கையொப்பம் போட்டால் போதும், நான் அப்பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து நுண்துளை (laparoscopic sterilisation) குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வேன்” என்று சொல்லி அப்பெண் போட்ட ஒற்றைக் கையெழுத்து கொண்டு கருக்கலைப்பும் நுண்துளை குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சையும் செய்தேன்.
முகநூலைத் திறந்தாலே முற்போக்கு சிந்தனைகள்தான் அதிகம் பேசப்படுகிறது. ஆனால் இதில் மட்டும் தொய்வு ஏன்? வாசக்டமி செய்தால் தாம்பத்ய உறவில் ஈடுபட முடியாது என்று நினைப்பதும் ஓர் மூடநம்பிக்கை தான். வெற்றிகரமாக இன்றைய பணியினை நிறைவு செய்த போது குரூப் போட்டோ எடுக்கலாம் வாங்க என மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பணியாளர்கள் அழைத்தனர். அருமையான புகைப்படம் இது. மருத்துவமனையின் வெளித் தோற்றம் மட்டுமல்ல மருத்துவமனையின் உள் தோற்றமும் அவ்வளவு சுத்தமாக பசுமையாக பராமரிக்கப்படுகிறது. உள்ளே அப்பல்லோ ஆஸ்பத்திரி மாதிரி இருக்கு என சிலர் சொல்வதையும் இன்று கேட்டேன். அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை மருத்துவர் ராஜேஷ் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் பயணம் இதேபோல் என்றும் தொடரட்டும்.