பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான 2 கட்டுரைகளின் மொழிபெயர்ப்பை ஏற்கனவே வெளியிட்டிருக்கிறோம்.
- ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்
- நெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்
மேலே சொன்ன கட்டுரைகளை எழுதிய அதே கட்டுரையாளர் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு இரு தரப்புக்கும் இடையே சுங்க மற்றும் ஒற்றைச் சந்தை தொடர்பாக எத்தகைய உடன்பாடு இருக்க வேண்டும் என்பதில தொடரும் இழுபறி குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
இந்தக் கட்டுரையில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் உயர் பதவியில், செல்வாக்குடன் பணி புரிந்த ஒரு மேனேஜர் அந்த வேலையை ராஜினாமா செய்வதாக அறிவித்து விட்ட பிறகு, வெளியில் அதற்கு இணையான செல்வாக்குடனும், வசதிகளுடனும் வேறு வேலை கிடைக்காமல் தவிப்பதுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். கட்டுரையின் மொழிபெயர்ப்பு கீழே.
கடந்த 25 ஆண்டுகளாக அமல்படுத்தப்பட்டு வரும் கார்ப்பரேட் உலகமயமாக்கலின் விளைவான வேலை வாய்ப்பின்மை, வேலை இழப்புகள், பொது சேவைகள் ரத்து இவற்றை எதிர்த்து உழைக்கும் வர்க்கம் போராடுகிறது. அதற்கு தீர்வாக இனவாத, மதவாத அரசியலை முன் வைக்கும் கட்சிகள் உழைக்கும் மக்கள் மத்தியில் செல்வாக்கு ஈட்டுகின்றன. அத்தகைய ஒரு நிகழ்வில், 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி நடைபெற்ற ஒரு கருத்துக் கணிப்பில் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது 51.9% வாக்குகளை பெற்றது.
ஆனால், ஸ்காட்லாந்தில் 62% வாக்காளர்கள் வெளியேறுவதை எதிர்த்தனர், வட அயர்லாந்தில் 55.8% எதிர்த்து வாக்களித்தனர். கார்ப்பரேட்டுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய கட்சிகளோ தொடர்ந்து உலகமயமாக்கல் கொள்கைகளை ஆதரிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதை உறுதி செய்ய விரும்புகின்றன. இந்த இழுபறியின் ஒரு வெளிப்பாடாக பிரெக்சிட் தொடர்பான நாடகங்கள் அரங்கேறி வருகின்றன.
அட்லாண்டிக் பெருங்கடலின் மறு பக்கத்தில் அமெரிக்க முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக டிரம்ப் கார்ப்பரேட் உலக மயமாக்கலை கேலிக் கூத்தாக்கி வருகிறார். உலக வங்கி, ஐ.எம்.எஃப், உலக வர்த்தகக் கழகம் வழிகாட்டலில் அமல்படுத்தப்பட்ட உலகமயமாக்கல் தீர்க்க முடியாத முரண்பாடுகளில் சிக்கி, முதலாளித்துவம் நெருக்கடியை எதிர்கொண்டிருப்பதை இவை காட்டுகின்றன.
முதலாளித்துவ உலகம் இதை விவாதிக்க மட்டும் செய்கிறது. இதற்கான தீர்வு பாட்டாளி வர்க்க சித்தாந்தத்திலும், பாட்டாளி வர்க்க அரசியலிலும்தான் உள்ளது.
பிரெக்சிட் – ஒரு சொதப்பலான கேரியர் (பணி வாழ்வு) நகர்வு
ஐரோப்பிய ஒன்றியம் (EU) பிரிட்டனைக் கொடுமைப்படுத்துவதாகவும் தண்டிப்பதாகவும் மிக அதிகமாக கூச்சலிடுபவர்கள் மத்தியில் சுதந்திர சந்தையை ஆதரிப்பதாக சொல்லிக் கொள்பவர்களும் உள்ளனர். இது கொஞ்சம் வேடிக்கையானதுதான். ஏனெனில், பிரெக்சிட் என்பதே பிரிட்டன் தனது சந்தை வலிமையையும் செல்வாக்கையும் நடைமுறையில் சோதித்து பார்ப்பதற்கான நடவடிக்கைதான். அந்த சோதனையின் விளைவாக ஐரோப்பிய ஒன்றியம் நம்மை அலட்சியப்படுத்துகிறது என்றால் சுதந்திர சந்தை விதிப்படி அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்
பிரெக்சிட்-ஐ நோக்கி நம்மை வழிநடத்திச் சென்றவர்கள், “பிரிட்டன் ஒரு பெரிய சக்தி, உலகின் மிகப்பெரிய வர்த்தக கூட்டமைப்பை விட்டு வெளியேறுவது உண்மையில் நமக்கு இன்னும் அதிக நன்மைகளை கொண்டு வரும்” என்று உறுதி அளித்தனர். அதாவது, “நமக்கு ஏற்கனவே கிடைத்து வரும் நன்மைகளை தொடர்ந்து பெறுவோம்; ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் உள்ள மற்ற நாடுகள் நம்முடன் வர்த்தக உடன்படிக்கைகள் செய்து கொள்ள அதிக ஆர்வம் காட்டும்; ஐரோப்பிய ஒன்றியமோ தனது மிகப்பெரிய உறுப்பினர்களில் ஒன்றான பிரிட்டன் வெளியேறுவதைக் கண்டு அஞ்சி, பிரிட்டனுக்கு மிகச் சாதகமான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டி வரும்” என்றெல்லாம் ஆசை காட்டினார்கள்.
ஆனால், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், நடப்பவை அவர்கள் எதிர்பார்த்தது போல இல்லை. இந்த வாரம் அடுத்தடுத்த வெளிவந்த செய்தி அறிக்கைகள் கூறுவது போல, பிரெக்சிட் எந்த வழியில் அமல்படுத்தப்பட்டாலும் அது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தபோது இருந்ததை விட மோசமான நிலைக்குத்தான் பிரிட்டனைத் தள்ளும்.
பிரெக்சிட்-டுக்கு பிறகு பிற நாடுகளுடன் போட்டுக் கொள்ளும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் பிரிட்டனின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) மிகச் சிறிய அளவு மாற்றத்தையே கொண்டு வரும் என்று பிரிட்டன் கருவூலத்துறையின் (Treasury) பிரெக்சிட் பற்றிய பகுப்பாய்வில் மிக வெளிப்படையாகவே காட்டப்பட்டுள்ளது. நாம் வர்த்தக ஒப்பந்தங்கள் செய்து கொள்வதற்கு சாத்தியமான நாடுகள் பற்றிய மிகச் சாதகமான அனுமானங்களின்படியே கூட அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்தப் போகும் அதிகரிப்பு 0.2 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த அதிகரிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக உராய்வுகளினால் ஏற்படவிருக்கும் இழப்புக்களை சிறிதளவு கூட ஈடுகட்டப் போவதில்லை.
பிரெக்சிட்டுக்கான அனைத்து பாதைகளும் மோசமாக இருக்கின்றன; ஐரோப்பிய ஒற்றை சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் நாம் எவ்வளவு தூரம் விலகிப் போகிறோமோ அவ்வளவு தூரம் நிலைமை மோசமாக இருக்கும். பிரெக்சிட் ஆதரவாளர்கள் நம்மிடம் பிரச்சாரம் செய்து நம்ப வைத்ததை விட வெளியுலகம் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது.
“இது நியாயமில்லை, ஐரோப்பிய ஒன்றியம் நாஜிகளைப் போல நடந்து கொள்வதோடு, ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக பிரிட்டனை தண்டிக்கிறது” என்றெல்லாம் பேசுபவர்கள், தனக்கு இதைவிட நல்ல வேலை கிடைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நினைத்துக்கொண்டு, வேலையை ராஜினாமா செய்த ஒருவர் தான் எதிர்பார்த்த, தனக்குக் கிடைத்தே ஆக வேண்டும் என்று விரும்பிய, நல்ல வேலை கிடைக்கா விட்டால் குழந்தைத்தனமாக புலம்புவதை போல நடந்து கொள்கின்றனர்.
என்னுடைய அனுபவத்தில் இத்தகைய நபர்கள் பலரை நான் அறிவேன். வேலையை விடும் அவர்களின் முடிவு பெரும்பாலும் சொதப்பலாகவே முடிகிறது. பெரும்பாலானவர்கள் புற உலக யதார்த்தத்தை பார்த்து பெரும் அதிர்ச்சியடைகிறார்கள்.
அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பது என்னவென்றால், அவர்கள் வாங்கி வந்த சம்பளத்தின் ஒரு பகுதி ஒரு பெருநிறுவன (கார்ப்பரேட்) அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படுவதற்கானதாகும். ஒரே நிறுவனத்தில் சிறிது காலமாக வேலை செய்தால், அவர்களின் வளர்ச்சியின் ஒரு பகுதி அந்த நிறுவன நடைமுறைகளைப் பற்றிய அவர்களது அறிவையும் அதற்குள் வேலை செய்வதற்கான அவர்களின் திறமையையும் அடிப்படையாகக் கொண்டது.
மற்றவர்கள் அவர்ளுக்கு கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் அவர்களின் கார்ப்பரேட் பதவியை அடிப்படையாகக் கொண்டது. பிற நிறுவனங்களின் உயர் பதவி வகிப்பவர்கள் அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்குகின்றனர்; அவர்கள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்கிறார்கள்; கருத்தரங்குகளில் எல்லோரும் அவர்களுடன் பேச முயற்சிக்கிறார்கள். இவை எல்லாம் “ஆள் திறமையானவர்” என்பதால் இல்லை, மாறாக அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் செல்வாக்கினால் கிடைப்பவை.
கார்ப்பரேட் வேலையை ராஜினாமா செய்து விட்டு தனிப்பட்ட முறையில் வேலை செய்ய போகிறவர்கள் அடிக்கடி இந்த அதிர்ச்சியை சந்திக்கிறார்கள். “பெரிய கார்ப்பரேட்” நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கும் போது உங்களோடு தொடர்பை பராமரிக்க எல்லோரும் விரும்புகிறார்கள். “நானும் நண்பர்களும்” நிறுவனத்தின் எம்.டியாகவே நீங்கள் இருந்தாலும் அதே அளவிலான அங்கீகாரத்தை பெறுவது மிகவும் கடினம்.
எனவே, கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை செய்து விட்டு வெளியேறிய நமது நிர்வாகி அவர் நினைத்தது போன்ற அதிக சம்பளத்தில் வேலை கிடைப்பது புற உலகில் கடினமாக இருப்பதை எதிர்கொள்கிறார்.
ஆனால், அவர் அந்த நிதர்சனத்தை உடனே ஏற்றுக் கொள்வதில்லை. தனது தகுதிக்கு பொருத்தமில்லாத வேலை வாய்ப்புகள் வழங்கும் முட்டாள்களை பற்றி அவர் குடித்து விட்டு புலம்புவதை நீங்கள் கேட்டிருக்கலாம். “என்னுடைய மதிப்பு இதை விட அதிகம்” என்று அவர் உளறுகிறார். “எனக்கு என் மதிப்பு என்னவென்று தெரியும். அதற்கு தகுந்த வேலை கிடைப்பது வரை நான் காத்திருப்பேன்.”
நாம் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளா விட்டாலும் பிரிட்டனின் இன்றைய மதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருப்பதோடு தொடர்புடையது என்பதை பிரெக்சிட் முயற்சி வெளிப்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் இருக்கும் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தகத்துக்குத்தான் முன்னுரிமை அளிக்கின்றன. காமன்வெல்த் நாடுகள் கூட, பிரிட்டன் உடனான வர்த்தக உறவுகளை விட ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உறவுகளை வளர்ப்பதிலேயே ஆர்வம் காட்டுகின்றன. அதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ஏனென்றால், பொருளாதார ரீதியாக ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனை விட மிகப்பெரியது.
“நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால் உங்களது செல்வாக்கை இழக்க நேரிடும்” என்ற அவர்கள் நம்மை எச்சரிக்கத்தான் செய்தார்கள்.. ஆனால், அவர்களின் எச்சரிக்கையை நாம் புறக்கணிக்க முடிவு செய்தோம்.
இன்றும் பிரிட்டன் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்று என்பது உண்மைதான், ஆனால், அதன் மதிப்புக்கும் செல்வாக்கும் மேற்கத்திய இராணுவ கூட்டணி, ஆங்கிலம் பேசும் நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை இணைக்கும் புள்ளியில் நாம் இருப்பது பெரும்பகுதி காரணமாக உள்ளது. இவற்றில் முக்கியமான ஒரு இடத்தை கைவிடுவது பிறருக்கு நம்முடனான உறவில் இருக்கும் அக்கறையை குறைப்பதில்தான் முடியும்.
பிரெக்சிட்டை வேலையை ராஜினாமா செய்து விட்டு புதிய வாய்ப்பை தேடுபவருடன் ஒப்பிடுவதை மேலும் தொடர்ந்தால் , இதுவரையில் கிடைத்த அனைத்து புதிய வாய்ப்புகளும் பழைய பதவியை விட மோசமாக இருக்கின்றன. எல்லாவற்றிலும் ஏற்கனவே இருந்த வேலையை விட குறைந்த ஊதியம், குறைந்த பாதுகாப்பு மட்டுமே கிடைக்கிறது.
படிக்க:
♦ உங்கள் விருப்பம் | கொஞ்சம் நிமிரு தல | வாசகர் புகைப்படங்கள்
♦ ஆந்திரா – காக்கிநாடா : இயற்கை பேரிடர் ஆபத்தும் அரசின் அலட்சியமும் !
தற்போது உள்ளதில் சிறந்த வழி பழைய முதலாளியிடமே திரும்பிச் சென்று, முன்பு வாங்கியதை விட குறைந்த ஊதியத்தில், காண்டிராக்டராக சேருவதுதான். மேல்மட்ட நிர்வாகக் குழுவில் ஏற்கனவே வகித்த இடம் கிடைக்காது. இன்னும் மோசமான நிலை என்னவென்றால், முன்பு தன்னை விட ஜூனியர் என்று கருதிய நபர்களின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டிய நிலையும் ஏற்படும்.
ஆனால், அந்த அளவு கூட நிலைமை மோசம் இல்லை. ஆச்சரியம் என்னவென்றால், அவருடைய பழைய நிறுவனம் இன்னும் அவர் வேலைவாய்ப்பை அப்படியே வைத்திருக்கிறது. அதே ஊதியம், பிற சலுகைகள், நிர்வாகக் குழுவில் இடம் ஆகியவற்றுடன் எப்போது வேண்டுமானாலும் திரும்பிச் செல்லலாம்.
ஆனால், அவர் திரும்பிச்செல்ல மாட்டார், ஏனெனில் அது அவரை ஒரு முட்டாளாகக் காட்டும். அவர் இன்னும் மதுக்கடையில் அமர்ந்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் தன்னம்பிக்கையையும், பேரம் பேசும் திறமையையும் வளர்த்துக் கொண்டால் அந்த மதிப்புமிக்க பெரும் வாய்ப்பு கூடிய விரைவில் தன்னை வந்தடையும் என்று அடித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அவரது நண்பர்கள் அவரது பேச்சுக்களை அனுதாபத்தோடு கேட்டு விட்டு அவருக்குப் பின்னல் கேலி செய்து விட்டு கடந்து போகிறார்கள்.
ஆதாரம் : Brexit as a bad career move
தமிழாக்கம் : மணி
நன்றி : new-democrats



































கடந்த டிசம்பர்-17ம் தேதி வீசிய பெய்ட்டி புயலால் இந்த கடற்கரை சாலையும், அதனையொட்டிய நெல் வயல்களும், மீனவர்களின் படகுகளும் பாதிக்கப்பட்டிருந்ததாகக்கூறி அதனைக் காண்பிக்க அழைத்துச் சென்றார் இந்திய பொதுவுடைமைக் கட்சி (மாலெ) நியு டெமாக்ரசி கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் துர்கா பிரசாத்.



கடல் அலையின் சீற்றம் காரணமாக ஒவ்வொரு முறையும் சாலை அறுத்துக்கொண்டு செல்வது வழக்கம்தான், எனினும் இந்த புயலில் கரையையொட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் சாலையில் புரட்டிப் போடப்பட்டிருந்தது.
இரண்டாவது, கிருஷ்ணா-கோதாவரி டெல்டாவுல கடற்கரையோரம் ரிலையன்சும்-குஜராத் பெட்ரோலியமும் இணைந்து எண்ணெய் துரப்பன கிணறு அமைச்சிருக்காங்க. கடலுக்குள்ள எண்ணெய் எடுக்கிறாங்க. ஏனம் அருகே கடற்கரையையொட்டி அதற்கான இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.









இந்த பின்னணியில்தான் ஆசியாவின் டெட்ராய்டு என்று பீற்றிக்கொள்ளப்பட்ட திருப்பெரும்புதூர் ஒரகடம் தொழிற்பேட்டைப் பிராந்தியத்தில் யமஹா, ராயல் என்ஃபீல்ட் போன்ற மோட்டார் வாகன உற்பத்தி ஆலைகளில் போராட்டம் வெடித்தது. சுமார் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த போராட்டங்கள் சில தற்காலிக வெற்றிகளோடும், சமரசங்களோடும் முடிவுக்கு வந்துள்ளன. ஆனாலும், தினசரி விரிவடைந்தும், புதிய புதிய உற்பத்திகளைக் கையாண்டும், நவீனமாகியும் வருகின்ற மோட்டார் வாகனத்துறையில் நீடித்த தொழில் அமைதி ஒருபோதும் சாத்தியமில்லை. சமீபத்திய யமஹா, என்ஃபீல்ட் போராட்டங்களை முன்வைத்து இந்த கள உண்மையை பரிசீலிக்கலாம்.








‘‘நம் முன்னோர்’ பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைத்திருக்கிறார்களே? நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை’’ என்கிறார் மருத்துவர் நாராயணரெட்டி. ஆம், கோயில்களில் யார் நுழைந்தார்கள், யாருக்காக கோயிலில் பால் உறவு சிற்பங்கள் செதுக்கி வைக்கப்பட்டன. அத்தனையும் அரசர்களுக்காகவும் அதிகார வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்காகவுமே. அங்கேயும் பெண் ஒரு காட்சி பொருள். புணர்வதற்கென்றே பிறந்த உடல். விதவிதமாக புணர்வதற்குப் படைக்கப்பட்ட பண்டம்.
இணையத்தில் இரவு பதினொரு மணிக்கு முன்னர் ஒரு பொருளை வாங்கினால் அடுத்த நாள் வீடு தேடி வரும் என்று விளம்பரம் செய்கிறார்கள். அது மந்திரத்தால் நடக்கும் விடயமா? அதற்காக சில மனிதர்கள் இரவிரவாக வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் காலையில் வீடுகளுக்கு கொண்டு சென்று கொடுக்கலாம்
முன்பு ஈராக் மீது பொருளாதாரத் தடை கொண்டு வந்து, பின்னர் ஒரு இனப்படுகொலை யுத்தம் நடத்தி, ஈராக் என்னைக் கிணறுகள் அனைத்தையும் அமெரிக்கா கைப்பற்றிய வரலாற்றை உலகம் மறந்து விடவில்லை. வரலாறு திரும்புகிறது. ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதித்து பலவீனப் படுத்தி விட்டு, இறுதியில் படையெடுத்து ஈரானின் எண்ணை வளத்தை முழுமையாகக் கைப்பற்றுவது அமெரிக்காவின் நீண்ட காலத் திட்டம்.
பிரெஞ்சு மன்னராட்சி காலத்தில் சமூக அந்தஸ்துக்கு ஏற்ப குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் அணியும் விதி இருந்திருக்கிறது. அந்த காலத்தில் ஆண்கள் குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகளை அணிந்தார்கள். சாமானியர்கள் அரை இன்ச் உயர்த்தப்பட்ட செருப்புகளையும் அரச மரபினர் இரண்டரை இன்ச் உயர்த்தப்பட்ட காலணிகளை அணிய வேண்டும் என விதிகள் போடப்பட்டிருந்ததாக வரலாறு சொல்கிறது. குதிகால் உயர்த்தப்பட்ட செருப்புகள் ‘பெண் தன்மை’ இருப்பதை கண்டுபிடித்த சிலர், அதை பெண்களுக்கு பரிந்துரைத்தார்கள்.
வலி என்பது பெண்களுக்கு சாதாரணமானதென்ற மூடநம்பிக்கை அநேகமானோரிடம் இருக்கிறது. “மாதவிடாய் மிகுந்த வலியுடன் தொடர்புடையதுதானே, இதற்கெல்லாம் தொண தொணத்துக் கொண்டிறாதே”, என்றே பலநேரம் பெண்கள் நினைக்கிறார்கள்.
ஒரு தனிமனிதன் என்ன உண்ண வேண்டும் என தீர்மானிக்க நினைக்கிறது ஓர் அரசு. உலகின் எந்த ஒரு அரசும் செய்யாத திணிப்பை இந்திய அரசு செய்துகொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சொல்லிக்கொள்ளும் அரசு ஊக்கப்படுத்தி வளர்க்கும் கும்பல் குண்டர்கள், அம்மக்கள் எதை உண்டுகொண்டிருக்கிறார்கள் என சதா கண்காணித்தபடியே இருக்கிறார்கள்.
பதின்மூன்று வயது மாணவி ஒருவரது டைரியை வாசித்தபோது, அதில் 6 மாத கால இடைவெளியில் அவர் 3 பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டிருப்பதை அறிய முடிந்தது. ஒன்று வகுப்பறையில், இன்னொன்று அவரது நெருங்கிய உறவுக்காரரால் நடந்திருக்கிறது. சம்பவங்களைவிட மோசமான செய்தி என்னவென்றால் அந்த சிறுமி இந்த சம்பவங்களை சாதாரண டிராஃபிக் விதிமீறலைப்போல சகஜமான குற்றமாக கருதிக் கொண்டிருக்கிறார்.
அண்மையில் தமிழகத்தில் இயற்கை முறையிலான பிரசவம் குறித்து யூ-டியூப் இணையதளத்தில் வீடியோ பார்த்து வீட்டில் மனைவிக்குப் பிரசவம் பார்த்து மனைவி இறந்த நிகழ்வை விமர்சிக்கும் கட்டுரைகளுக்கு வந்த பதில்களைப் பாருங்கள். பலர் ”இது அரிதாக நடக்கும் ஒரு செயல்; கிராமப்புறங்களில் பல பிரசவங்கள் இவ்வாறே ஒரு பிரச்சனைகளுமின்றி நடக்கிறது; நீங்கள் யாரும் மருத்துவமனைகளில் நடக்கும் மரணங்களைக் குறிப்பிடுவதில்லை” போன்ற கருத்துகளை எழுதியிருந்தனர்.
ஆங்கிலத்தின் மீதான பிடிவாதமான மோகம் (அப்சஷன்) ஒரு மதத்தைப் போல நம்மை பீடித்திருக்கிறது. அதற்காக எதையும் தியாகம் செய்யும் மனநிலையில்தான் பெரும்பான்மை பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
ஒரு பசுவையும், முசுலீமையும் ஒன்றாக பார்த்த மாத்திரத்தில் கொல்லப்படுவதால் பசு தொடர்பாக – பசுவை வளர்ப்பது, பால் கறப்பது, உழவுப் பயன்பாடு என்று – எந்த உரிமை கோரலும் ஓர் முசுலீமுக்கு எதார்த்தத்தில் மறுக்கப்படுகின்ற கால நிலைமையை நாம் அடைந்திருக்கிறோம்.
நிஜவாழ்வில், நிஜ உலகில் நடப்பவை எல்லாம் நமது மூளையின் புரிதலுக்கு உட்பட்டேதான் நடக்குமா? நம்மால் எல்லா தரவுகளையும், தகவல்களையும் ஒரு படிவமாக்க முடியுமா? ஒரு படிவத்திற்குள் அடங்காத ஒரு தகவலை, ஒரு நிகழ்வை, ஒரு உணர்ச்சியை நமது மூளை எப்படி அணுகும்?
சதியாலோசனை கோட்பாடுகளை நம்புகிறவர்கள் தங்களுடைய emotional investmentயை பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு சாதகமான தகவல்களை மட்டும் சேகரித்து வைத்துக்கொண்டு தங்களுடைய நம்பிக்கையை இறுக பற்றிக்கொள்வார்கள். அவர்களுக்கு தங்களுடைய நம்பிக்கைக்கு எதிரான தகவல்களை பற்றி எந்த அக்கறையோ முனைப்போ இல்லை. இதனால்தான் பாரி பேசுவதை கேட்கும் ஒரு அப்பாவிக்கு, ‘தம்பி நல்லா கருத்தா பேசறாப்ல’ என்று தோன்றும்.
மரண தண்டனை மனிதாபிமானமற்றதென்பதைத் தாண்டி மரண தண்டனையால் உண்மையில் பலன் ஏதாவது இருக்கிறதா என யோசித்துப் பாருங்கள். குற்றங்கள் சமூகத்தில் குறைகின்றனவா என்பது முக்கியமா அல்லது குற்றவாளியைக் கொன்று போடுவது முக்கியமா? குற்றம் செய்தவன் கொடூரமான முறையில் பழிவாங்கப்படுவது தான் முக்கியம் என்று நினைக்கிறீர்களா? மரண தண்டனையால் சமூகத்தில் மிகச் சாதாரணமாக இருக்கும் பெண் வெறுப்பும் பாலியல் வன்முறையும் முடிவுக்கு வந்து விடுமா? குறைந்தது மரண தண்டனை கொடுக்கும் சட்ட வல்லுநர்களும் நீதிபதிகளும் நியாயமாகச் செயற்படுகிறார்களா?
எஸ்ஸார் ஸ்டீல் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால், திவாலான கம்பெனி என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. திவாலான கம்பெனிகளை ஏலம் விட்டு கடனை திரும்பப்பெற 2016-இல் புதிதாக ஒரு சட்டம் கொண்டுவரப்பட்டது, அது தான் Insolvency and Bankruptcy Code, சுருக்கமாக IBC. இந்த IBC-படி திவாலான கம்பெனிகள் ஏலம் விடப்பட்டு ஏலத்தில் வரும் பணம் கடன் தந்த வங்கிகளுக்கு பிரித்து தரப்படும். (இந்த IBC இந்திய சொத்துக்களை வெளிநாட்டு முதலாளிகளுக்கு அடிமாட்டு விலையில் விற்பதற்காக கொண்டுவரப்பட்டது என்று விமர்சனங்கள் உள்ளன).
கள்ளக்காதல் பற்றியல்ல பிள்ளைகள் கொல்லப்படுவது பற்றியே நான் கவலைப்படுகிறேன் என சொல்பவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோர்களுக்கு இருக்கும் கடுமையான மனஅழுத்தம் குறித்துத்தான். சிறார்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை அதுதான். கடுமையான தண்டனைகள் தொடங்கி கூட்டுத் தற்கொலைகள் / கொலைகள் வரை அதன் தாக்கம் பிரம்மாண்டமானது. இந்தவகை மன அழுத்தம் ஒரு தனிநபர் பிரச்சினை அல்ல, அதில் சமூக – பொருளாதார -கலாச்சார – அரசியல் காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. அவற்றை சீர்செய்ய முயல்வதே ஒரு நாகரீக சமூகத்திற்கு அழகு.
நாம் அறிந்தவையெல்லாம் பசும்பால், எருமைப் பால், ஆட்டுப் பால், ஒட்டகப் பால் போன்றவையே. அது என்ன A1, A2 பால்? A2 பால் நாட்டுப் பசுவின் பாலென்றும், A1 பால் சீமை மற்றும் கலப்பினப் பசுவின் பால் என்றும் கூறப்படுகின்றதே? உண்மையா? A2 பால் சிறந்ததென்றும், A1 பால் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சொல்லப்படுகின்றதே. ஏன்?
ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.
‘நாட்டுப்புற நடனத்தில் பெண்கள் தலைக்குமேல் பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து நடனமாடுவார்கள். அதை மூச்சைப் பிடித்துக்கொண்டு பதற்றத்தோடு பார்த்து ரசிப்போம். ஒரு தவறான அடி பானைகளைச் சிதற அடித்துவிடும். ஆனால் இந்த மொழிபெயர்ப்பில் கவிதைகள் மீண்டும் மீண்டும் ஒரு நர்த்தனம் செய்து வெற்றியை எட்டிவிடுகின்றன.’ பானையும் தப்பிவிடுகிறது, கவிதையும் தப்பி விடுகிறது. இந்த வர்ணனைகூட நூலுக்கு பற்றாது என்றே எனக்கு தோன்றுகிறது.
பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.
பேனர் வைப்பதையோ சாலைகள் பராமரிப்பு இல்லாமல் குண்டு குழிகளில் இறங்கி இரு சக்கர வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி மக்கள் கொல்லப்படுவதையோ எல்லாம் நீதி மன்றங்கள் கேட்பது இல்லை. இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்லக் கூடாது! ஹெல்மெட் அணியாமல் செல்லலாம் என்று நான் கூறுவதாக எண்ண வேண்டாம்! நீதிமன்றங்கள் யாரிடம் கடுமையாகவும் யாரிடம் நீக்கு போக்காகவும் உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக சொல்கிறேன்!
மேற்கு தொடர்ச்சி மலையில் காரணகாரியம் சார்ந்து கேள்விகள் இருந்தாலும் அதன் திரைஅனுபவம் மார்க்சிய அழகியலாக இருப்பதை மறுப்பதற்கில்லை. இயக்குநர் ஜனநாதனின் புறம்போக்கு என்ற பொதுடமை அடிப்படையில் காந்திய சிந்தனையை முன்வைக்கின்ற திரைப்படம் தான் என்றாலும் அது மக்கள் போராளிகள் எல்லாம் அரசு சித்தரிப்பது போல அவ்வளவு மோசமானவர்களில்லை என்ற குறைந்தபட்ச உண்மையை உரத்து கூறுகிறது.
பாலியல் குற்றச்சாட்டுக்களுக்கு கொடுக்கப்படும் அதீத கவனம் ‘அவன் எப்படி அவளை வளைத்தான்’ என்கிற விதத்தில் இதை செய்தியாக நுகரும் பெரும்பான்மை ஆண்களின் விருப்பத்திலிருந்து வருகிறது. பாலியல் ஒடுக்குமுறையால் அல்லது அத்துமீறலால் எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கை திசை திரும்புகிறது அல்லது வாழ்க்கையே இல்லாமல் போகிறது என்கிற கோணத்தில் ஆண் மனம் பொதுவாக சிந்திப்பதில்லை.
மரக்கிளையில் துயிலெழுந்து காடுகளில் சுற்றித் திரிந்து புற்புழுக்களை உண்டுவந்த வண்ண காட்டுக் கோழியை (Red Jungle Fowl) ஊருக்குள் கொண்டு வந்து நாட்டுக் கோழியாக்கியதும், நாட்டுக் கோழியை ’அறிவியல் தொழில்நுட்பம்’ துணை கொண்டு வணிகக் கோழியாக்கியதுமே மனிதனின் மாபெரும் சாதனை.
எங்கள் பிள்ளை கோட்சேவை கொஞ்சி மகிழ முடியவில்லை. தொட்டால் பட்டுக்கொள்ளும் அம்பேத்கரை எல்லாம் பாராட்டித்தொலைய வேண்டியிருக்கிறது. சொந்தப் பிள்ளைக்கு இன்ஷியல் கொடுக்க முடியாமல் ஊரான் பிள்ளையை தன் பிள்ளையென கொஞ்ச வேண்டிய துரதிருஷ்டம் வேறு ஜாதிக்கு வாய்த்திருக்கிறதா? மஹாராஜாக்களை காலடியில் விழுந்து கிடக்க வைத்த சமூகம் இன்று காமெடியன்களை ஐகான்களாக வைத்திருக்க வேண்டிய அவல நிலையில் இருக்கிறது. இன்று இருக்கும் பிராமண தலைவர்களை பாருங்கள், சுப்ரமணிய சாமி, எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நிர்மலா சீதாராமன்…
ஜனவரி 4-ம் தேதி, குழந்தைகளுக்கான அறிவியல் மாநாட்டில் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த கண்ணன் ஜகத்தள கிருஷ்ணன் ஐன்ஸ்டீன், நியூட்டன், ஹாக்கிங் எல்லாம் அறிவியலாளர்களே கிடையாது என்கிறார். மேலும் 20-ம் நூற்றாண்டு ஐன்ஸ்டீனின் நூற்றாண்டு என்றால், இது தன்னுடைய நூற்றாண்டு என்கிறார். தமிழ்நாட்டிலிருந்து இப்படியொரு ‘மேதை’ இருப்பதே இத்தனை நாள் தெரியாமல் போய்விட்டதே என பின்னணியைத் தேடினால், வியப்பு…வியப்பு!


“நம்முடைய வேதங்களிலிருந்துதான் அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் டைனோசர்கள் என்ற பதத்தை உருவினார்கள். 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் அழிந்து போனபோது, பிரம்மா கண்களை மூடி வேதம் எழுதிக் கொண்டிருந்தார். அந்த இமைப் பொழுதில் டைனோசர்கள் அழிந்துவிட்டன. இந்த உலகத்தில் உள்ள எவரும் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஆனால், வேதங்களில் டைனோசர்கள் குறித்து சொல்லப்பட்டிருப்பது உண்மை. டைனோ- சர் என்பதே சமஸ்கிருத சொல். டைனோ என்றால் சூனியக்கார என பொருள்; சர் என்றால் ராட்சசன் என பொருள். எனவே, இந்த பூமியில் உள்ள அனைத்தும் வேதங்களில் சொல்லப்பட்டிருக்கிறது” என புராண ஆராய்ச்சியை அவிழ்த்து விடுகிறார்.