Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 412

நூல் அறிமுகம் : வகுப்புவாதம் ஒர் அறிமுக நூல் – பிபன் சந்திரா

குப்புவாதம் அடிப்படையில் ஒரு கருத்தியலாகப் பார்க்கப்படுகின்றது. இந்நூலில் நான் வாதிட்டுள்ளதைப்போல, வகுப்புவாதத்தை மண்ணைக் கவ்வச் செய்து, அடியோடு அழிக்க வேண்டுமானால், மக்கள் மனங்களில் இருந்து வகுப்புவாத எண்ணங்களை வேரோடு கிள்ளியெறிய வேண்டியதும், இதற்கென வகுப்புவாத கருத்தியலுக்கு எதிரான தொடர் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. நமது சொந்த அனுபவங்கள் மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் அனுபவங்களும் நமக்கு இதையே உணர்த்துகின்றன. உதாரணமாக, ஹிட்லர் தன் சுயசரிதையை எழுதியபோதே அவரது இன அடிப்படைவாதக் கொள்கைகள் முழுமையாக இடம் பெற்றுவிட்டன. ‘மெயின் கெம்ப்’ என்ற அந்தப் புத்தகம் ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு வெகுகாலம் முன்பாகவே வெளியிடப்பட்டுவிட்டது. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதே அவர் நோக்கம். அவரும் மற்ற வலதுசாரித் தலைவர்கள் போலத்தான் என்று பலரும் நினைத்தார்கள். ஆனால், தனது இன அடிப்படைவாதக் கொள்கைகள் மூலம் தனது கருத்தியல் உள்ளடக்கத்தை அலட்சியப்படுத்துவது எத்தகைய ஆபத்தாக முடியும் என்பதை நிரூபித்து விட்டார். (இதேபோல, இந்த மத வகுப்புவாதத்தைப் புரிந்து கொள்ள, எம்.எஸ். கோல்வால்கர் எழுதிய ‘தி வி. (The We), வி.டி. சவார்க்கர் எழுதிய ‘இந்துத்துவா’ ஆகிய புத்தகங்களையும், இஸ்லாமிய வகுப்புவாதத்தைப் புரிந்து கொள்ள முகமது அலி ஜின்னாவின் 1937க்குப் பிந்தைய ‘உரைகளையும் வாசிக்க வேண்டும்.)

இதேபோல், கருத்தியல் ரீதியாகத் தோற்கடிக்காமல் இனவாதம், வகுப்புவாதங்களை அகற்ற முடியாது என்று, மற்றொரு உதாரணம் அமெரிக்கா. அங்கு 1864 லேயே ஆபிரகாம் லிங்கனால் அடிமைமுறை ஒழிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும், அங்கு அடிமை – உடைமையாளர்களின் கருத்தியல் தொடர்ந்ததுடன், அங்கு அடிமைகளாக வாழ்ந்த கருப்பின மக்களுக்கு ஏராளமான துயரங்கள் தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டில் குறிப்பாக, 1945-க்குப் பிறகு, கருப்பின மக்களுக்கு மேலும் பல உரிமைகள் வழங்கப்பட்ட பின்னர்தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்தது. கருப்பினத்தவர் – வெள்ளையர், அறிவு ஜீவிகள் – பொதுமக்கள் என இன ஒதுக்கலுக்கு எதிராக ‘அமெரிக்கர்கள் ஒன்றிணைந்து மேற்கொண்ட கடுமையான கருத்தியல் போராட்டங்களுக்குப் பின்னர்தான் இது சாத்தியமாகியது. அந்த நாட்டில் இன ஒதுக்கல் முறை மங்கத் தொடங்கி, கருப்பின மக்களின் சமூக நிலை மேம்படத் தொடங்கிவிட்டபோதும், இன ஒதுக்கலை முற்றிலும் அகற்ற மேற்கொள்ள வேண்டியவை இன்னும் மீதமுள்ளன.

‘இனவாதம், வகுப்புவாதம், சாதியம் போன்ற கருத்தியல்கள் அகற்றப்படுவதற்கு மிகவும் விரிவான, நீண்டகால நோக்கில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். சோவியத் யூனியனில் யூதர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் (anti-semitism) ஒழிக்கப்பட்டதை ஒரு நல்ல உதாரணமாகக் கொள்ளலாம். ஜார் ஆண்ட ரஷ்யாவில் யூதர்களுக்கு எதிரான இனவெறி கடுமையாகப் பின்பற்றப்பட்டது. இதற்கு எதிராக, கம்யூனிச இயக்கம் போராடியது. இதன் முக்கியத் தலைவர்களில் பலர் யூதர்கள். 1917க்குப் பிறகு, சோவியத் புரட்சி நடந்து புதிய அரசு உருவானதும், லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் இதர முக்கியத் தலைவர்கள் பள்ளிகளிலும், ஊடகங்களிலும், கலை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்து வடிவங்களிலும் யூத இன ஒதுக்கலைக் கடுமையாகத் தாக்கினர். என்றாலும் அவ்வப்போது நெருக்கடி ஏற்படும் தருணங்களில் வெடித்துக் கிளம்புகிறது, சோவியத் சமூகத்தின் ஒரு சக்தியாக நிலைத்து விட்டது.

கேலிச்சித்திரம்: ஓவியர் முகிலன்.

துரதிர்ஷ்டமாக, இந்த உண்மையை நமது மதச்சார்பற்ற சக்திகள் போதுமான அளவுக்கு உணர்ந்து கொள்ளவில்லை. அவர்கள் வகுப்புவாதச் சக்திகளையும், கட்சிகளையும் அரசியல் ரீதியாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். ஆனால், வகுப்புவாதக் கருத்தியலை அம்பலப்படுத்தவோ, எதிர்க்கவோ இல்லை. வகுப்புவாதக் கட்சிகள் ஒவ்வொரு முறை அரசியல் பின்னடைவைச் சந்திக்கும்போதும் அவர்கள் பெரும் திருப்தி அடைகிறார்கள். ஆனால், உதாரணமாக, 2004 இல் பா.ஜ.க. தோற்கடிக்கப்பட்டுவிட்டபோதும், வகுப்புவாதம் 2004-க்கு முன்பிருந்ததைப் போன்றே இன்றும் வலுவாக நீடிக்கிறது. – கடந்த காலத்திலிருந்து மேலும் சில உதாரணங்களை நோக்கும்போது இந்த அம்சம் மேலும் மேலும் தெளிவாகிறது. – காந்திஜியின் உயிர்த்தியாகம், 1951-52 பொதுத் தேர்தலில் நேரு மேற்கொண்ட வலுவான பிரச்சாரம் ஆகியவற்றின் காரணமாக 1950களின் தொடக்கத்தில் தேர்தல் ரீதியாக வகுப்புவாதக் கட்சிகள் பலவீனமடைந்திருந்தன. தேர்தல் ரீதியாக அவர்கள் இருப்பு காலியானது. நாடாளுமன்றத்திலும் இடதுசாரிக் கட்சி முக்கிய எதிர்க்கட்சியாக அமர்ந்தது. இதைப்பார்த்து நேருவும், இடதுசாரிகளும் பெரும் திருப்தி கொண்டனர். ஆனால், 1959 இல் ஜபல்புர் கலவரம் மூலம் வகுப்புவாதிகள் தமது சுயரூபத்தைக் காட்டினர். 1960-62 காலகட்டத்தில் ஏற்பட்ட இந்திய-சீன நெருக்கடி மற்றும் போர்களின் விளைவாக வகுப்புவாத சக்திகள் மங்கத் தொடங்கியபோது மீண்டும் ஆழ்ந்த தூக்கத்தில் மூழ்கினர். இதேபோல, 1984 தேர்தலில் பாஜக ஒன்றிரண்டு இடங்களைக் கூடப் பெற முடியவில்லை . ஆனால், வகுப்புவாத கருத்தியல் தொடர்ந்து வளர்ந்தது. 1980களின் தொடக்கத்தில், பா.ஜ.க. மேற்கொண்ட காத்மண்டு முதல் கன்னியாகுமரி வரை கங்கை நீர் யாத்திரை முயற்சி வெற்றிபெறவில்லை . 1984 இல் இராமர் பிறந்த இடப்பிரச்சினை தொடர்பாக உ.பி.யிலும், பீகாரிலும் சிறு சிறு ரத யாத்திரைகளை மேற்கொண்டது. இவற்றை மதச்சார்பற்ற சக்திகள் அலட்சியப்படுத்தின. ஆனால், இந்த யாத்திரைகள் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து 1988 இல் ராமர் பிறந்த இடம் தொடர்பாக அகில இந்திய அளவில் ஒரு ரத யாத்திரை மேற்கொள்ளும் துணிச்சலை பாஜக பெற்றது. வகுப்புவாதக் கருத்தியல் பரவலாக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது என்றபோதும் நாடு இப்போதுதான் விழித்துக் கொண்டுள்ளது.

ஒருவகையில், வகுப்புவாதக் கருத்தியலை அலட்சியப்படுத்தியதன் விளைவாகவே, 1947இல் தேசப் பிரிவினை ஏற்பட்டது. 1936-37 தேர்தலில் அகில இந்திய அளவில் 3 விழுக்காடு இடங்களும் சட்டமன்றங்களில் 11 விழுக்காடு இடங்களும் முஸ்லீம் லீக் பெற்றிருந்தது. இந்த வகுப்புவாதம் தோற்றத்தை அப்போது மதச்சார்பற்ற சக்திகள் அலட்சியப்படுத்தின. 1945 இல் இது அச்சுறுத்தத்தக்க அளவு வலுவாக வளர்ச்சியடைந்தபோதுதான் அவர்கள் ஆழ்துயலில் இருந்து விழித்தனர். ஆனால், இது காலம் கடந்த விழிப்பு.

படிக்க:
ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !
இந்துத்வா கும்பலின் சுதேசிப் பித்தலாட்டம்!

இதேபோல, 1940களிலேயே பஞ்சாபிலும், வட இந்தியாவிலும் ஆர்.எஸ்.எஸ். துளிர்விடத் தொடங்கியிருந்தது. ஆனால், இது குறைந்த அளவிலான மக்கள் கவனத்தையும், அரசியல் வெளியையும் கொண்டிருந்ததால், ஒரு அழிவு சக்தியாக இது வளர்ச்சியடையும் என்று பார்க்கப்படவில்லை. 1946-47ஆம் அண்டுகளில் ஏற்பட்ட இனப்படுகொலைகளிலும், தொடர்ந்து காந்திஜி படுகொலையிலும் இந்த சக்திகளின் கைவரிசையைக் காண நேர்ந்தபோது, எத்தகைய அளவுக்கு ஆர்.எஸ்.எஸ். வளர்ந்துவிட்டது என்பதை நாடு உணர்ந்தது.

தற்காலத்திலும் மூன்று உதாரணங்களைக் காட்டலாம். 2002 இல் குஜராத் படுகொலைகளைக் கண்டு ஒட்டுமொத்த நாடே நிலை குலைந்தது. இந்த படுபாதகச் செயல்களுக்கு நரேந்திர மோடிதான் காரணம் என்று சரியாகக் குற்றமும் சாட்டியது. ஆனால், இதன் மூல வேர் மோடியிடம் இல்லை . மாறாக, நீண்ட காலமாக, 1970 களிலிருந்தே குஜராத் சமுதாயம் வகுப்புமயப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதன் விளைவுகளை அறுவடை செய்தவர் மட்டுமே மோடி.

இதேபோல, 1950களின் தொடக்கத்திலிருந்தே பஞ்சாபில் வகுப்புச் சாயம் தோய்க்கப்பட்டு வந்துள்ளது. 1980 கள், 90 களில் பிந்தரன்வாலேக்கள் உருவானது, வகுப்புக் கலவரங்கள் வெடித்தது ஆகியன முந்தைய பஞ்சாபில் வகுப்புவாதக் கருத்தியல் பரவத் தொடங்கியதன் கூட்டு விளைவுகளே.

இறுதியாக, கேரளாவைக் குறிப்பிட விரும்புகிறேன். கடந்த 15-20 ஆண்டுகளில் இங்கு பா.ஜ.க. ஒரு இடம்கூட பெற முடிந்ததில்லை. ஆனால், அங்கும் நடுத்தர மக்கள் மனதில் வகுப்புவாதம் பரவி வருவதையும் நாம் அலட்சியப்படுத்தப் போகிறோம் என்றால், இதற்கு நாமே பொறுப்பு. (பிபன் சந்திரா, 2008 இல் எழுதியுள்ள இந்நூலுக்கான முன்னுரையிலிருந்து…)

பிபன் சந்திரா, இமாசலப்பிரதேசத்தின் காங்ராவில் பிறந்தவர். லாகூரின் ஃஃபார்மன் கல்லூரி மற்றும் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றவர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராக இருந்தவர். நேஷனல் புக் டிரஸ்டின் தலைவராக பதவி வகித்தவர். அரசியல் பொருளாதாரம், தேசியம், காலனியம், வகுப்புவாதம் ஆகிய துறைகளில் பல நூல்களை எழுதியிருக்கிறார்.

நூல்: வகுப்புவாதம் – ஓர் அறிமுக நூல்

ஆசிரியர்கள்: பிபின் சந்திரா
தமிழில்: மூ. அப்பணசாமி

வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா,
நேரு பவன், 5, இன்ஸ்டிடியூஷனல் ஏரியா பேஸ் – 2, வஸந்த் குஞ்ச், புது தில்லி – 110070.

பக்கங்கள்: 134
விலை: ரூ.60.00

வினவு மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

 

ஆஸ்திரேலியா நிலக்கரிச் சுரங்கத்தில் சொந்தப் பணத்தை போடுவாராம் அதானி !

ந்திய சுரங்க பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமம், ஆஸ்திரேலியாவின் கலிலீ படுகையில் உள்ள தனது சிறிய நிலக்கரிச் சுரங்கத்திற்கு தன் சொந்த நிதியையே பயன்படுத்திக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கிகள் மற்றும் கடன் நிறுவனங்கள், கடன் தர மறுத்துள்ள சூழலில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலிய கூட்டாட்சியின் வளங்கள் துறை அமைச்சர் ’மாட் கானவன்’, அதானி குழுமத்தை ஆஸ்திரேலியாவின் சிறிய போர்வீரன் என்று வர்ணித்திருக்கிறார். அக்குழுமத்தின் தற்போதைய சுருக்கப்பட்ட புதிய செயல்திட்டத்தின் பொருளாதார ஆதாயங்களையும் அவர் பாராட்டியிருக்கிறார்.

அதானி சுரங்க நிறுவனம் தனது செயல்திட்டத்தைச் சுருக்குவது என்பது முதன்மையாக நடந்துள்ளது. அதானி சுரங்க நிறுவனத்தின் தலைமைச் செயலர் ’லூகாஸ் டவ்’ கூறுகையில், “இந்த புதிய சுரங்கம் அமைக்க சுமார் 2 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் செலவு பிடிக்கும். துவக்கத்தில் இச்சுரங்கத்தில் இருந்து ஆண்டுக்கு 15 மில்லியன் டன் அனல் நிலக்கரி எடுக்கப்படும். பின்னர் திட்டம் படிப்படியாக ஆண்டுக்கு 27.5 மில்லியன் டன் எடுக்கும் அளவுக்கு விரிவாக்கப்படும்” என்று தெரிவித்தார்.

அதானியுடனான மோடி

முன்னதாக, கடந்த 2010-ம் ஆண்டில் இந்நிறுவனம், ஆண்டுக்கு 60 மில்லியன் டன் அனல் நிலக்கரி தோண்டி எடுக்கும் வகையில் திட்டமிட்டிருந்தது. அதற்காக சுமார் 16.5 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் முதலீடு செய்யவும் திட்டமிட்டிருந்தது. அதை ஒப்பிடும் போது தற்போதைய முதலீடு மிகவும் குறைவானது. எடுக்கப்படும் நிலக்கரியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்காகவே அதானியின் அப்பாட் நிலக்கரி துறைமுக முனையம் உருவாக்கப்பட்டது. துறைமுகத்திற்கு நிலக்கரி எடுத்துச் செல்லும் வகையில், சுமார் 388 கிமீ தூரத்திற்கு புதிய ரயில்பாதை அமைக்கப்படுவதற்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய சுருக்கப்பட்ட திட்டத்தின் படி ஏற்கனவே இருக்கும் ரயில்வே உட்கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள அதானி குழுமம் அனுமதி பெற வேண்டும்.

ஆனால், இரண்டு பில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்பு கொண்டதாக இருந்தாலும், சுரங்க வேலைகள் கண்டிப்பாக முன்னேறும் என்பதற்கு இப்போது வரையிலும் எந்தவித உத்தரவாதமும் இல்லை. ஒரு புதிய நிலக்கரி சுரங்கத்தை திறப்பது என்பது சமூக அளவிலும், சுற்றுச் சூழல் அடிப்படையிலும் பொறுப்பற்ற தன்மையுடையதே ஆகும். ஏற்கனவே பருவநிலை மாறுபாடு குறித்த சர்வ அரசுகளின் குழு அளித்துள்ள அறிக்கையின்படி ஆஸ்திரேலியா தமது மாசுபாட்டு அளவைக் குறைக்கும் நடைமுறையில் எதிர்பார்த்த வகையில் முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்பது கண்கூடு. நடப்பு 2018-ம் ஆண்டு நான்காவது மிகச் சூடான ஆண்டாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாதாரம் எவ்விதத்திலும் மேலேறாத சூழலில், சமீபத்திய ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி ஆய்வு நிறுவனத்தின் (IEEFA) அறிக்கை, நிலக்கரி பொருளாதாரம் மிகப்பெரும் சரிவை சந்தித்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுகிறது. ஆசியச் சந்தைகள் மலிவான அதிக திறன்மிக்க மாற்று எரிசக்தியை நோக்கி மாறிக் கொண்டிருக்கின்றன என்பதையும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் அனல் நிலக்கரி சக்தியின் உற்பத்திச் செலவு ஒரு மெகாவாட்டுக்கு 60-80 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. புதிய வகை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திச் செலவை விட நிலக்கரி சக்தி உற்பத்தி இருமடங்கு அதிக செலவு கொண்டதாகும். அதானி குழுமத்தின் நிலக்கரிகள் வாங்கப்படும் குஜராத்தில் உள்ள முந்திரா நிலக்கரி ஆற்றல் நிலையம், ஏற்கனவே குறைவான உற்பத்தி திறனோடு இயங்கிவருகிறது. கூடுதலாக குறிப்பிடத்தக்க காலகட்டத்திற்கு மூடப்பட்டிருந்தது.

அதானி குழுமம் ஆரம்பத்தில் போடப்பட்ட 388 கிமீ ரயில் பாதை இணைப்புத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளது. அதோடு ஏற்கனவே உள்ள ஆரிசோன் ரயில் கட்டமைப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். எனினும் சுரங்கத்திற்கும் ஆரிசோன் ரயில் கட்டமைப்பிற்கும் இடையில் இருக்கும் சுமார் 200 கிமீ இடைவெளியை இணைக்கச் செலவு செய்ய வேண்டியது வரும். ஆரிசோன் குழுமத்துக்கு, அதானி குழுமத்தின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் கடப்பாடு இருந்தாலும், அதன் கோரிக்கை மனுவை பார்வையிடவோ, ஏற்றுக் கொள்ளவோ இல்லை.

சுற்றுச் சூழல் மற்றும் தனிச்சிறப்பான பிரச்சினைகள் :

அதானி குழுமத்தின் சுற்றுச்சூழல் மேலாண்மைப் பிரச்சினைகள் ஏற்கனவே நீடிக்கும் குறிப்பிடத்தக்க பிரச்சினையாகும். குறிப்பாக அப்பாட் பாயிண்ட் முனையத்துக்கு அருகில் உள்ள காலெய் பள்ளத்தாக்கின் சதுப்பு நிலங்களில் உள்ள நீர் கெடுதல் போன்ற பிரச்சினைகள் நீடிக்கின்றன. இந்த செயல்திட்டம் மாற்றப்பட்டதன் காரணமாக இவை எதுவும் இல்லாமல் போகப் போவதும் இல்லை.

எதிர்ப்பு தெரிவிக்கும் ஆஸ்திரேலிய மக்கள்.

பாரம்பரிய உடைமையாளர்களின் ஒப்புதலைப் பெறுவதும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கிறது. 12 பேர் கொண்ட பூர்வீகக் குழு இரண்டாக பிரிந்து கிடக்கிறது. ஏற்கனவே இருக்கும் அதானியின் தனிச்சிறப்பான நில உபயோக ஒப்பந்தத்தை எதிர்த்து வங்கன் மற்றும் ஜகலின்காவ் மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அங்கிருக்கும் குழுவினர் இந்த ஒப்பந்தத்திற்கு உண்மையில் ஒப்புதல் தராத நிலையில், பூர்வீக மக்களின் கருத்தை ஒதுக்கித் தள்ளி சுரங்கத்திற்கு அனுமதி பெறுவது என்பது சமூக ரீதியிலும், கலாச்சார ரீதியிலும் மோசமான நிலையையே ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தத்தை நீதிமன்றம் செல்லாததாக அறிவித்து விட்டால், இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவது கடினம்.

படிக்க:
மோடி அரசு: அதானி குழுமத்தின் ஏஜென்சி!
மோடி – முதலாளிகளின் தலைவன் தொழிலாளிகளின் பகைவன்

ஆகவே, அதானி குழுமம் இந்த சுருக்கப்பட்ட குயின்ஸ்லாந்து நிலக்கரி சுரங்கத்தில், தானே முதலீடு செய்வது என்பது அவரது உறுதியைக் காட்டுகிறது. அதே நேரம், வேகமாக மாறிவரும் காலநிலை மாற்றம் மற்றும் மாறி வரும் ஆற்றல் துறை மற்றும் அவை கோரும் விரிந்த சமூக மற்றும் சுற்றுச் சூழல் பொறுப்புகளை புரிந்து கொள்ளாமல் அதனை எதிர்க்கவும் செய்கிறது என்பதையே காட்டுகிறது.

சமந்தா ஹெப்பர்ன், டீக்கின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டீக்கின் சட்டப் பயிலகத்தில், ஆற்றல் மற்றும் இயற்கை வளச்சட்டத்திற்கான மையத்தின் இயக்குனராக பணி புரிகிறார்.

அதானியின் ஆஸ்திரேலிய சுரங்கம் செயல்படுவதில் செய்யப்பட்டுள்ள சுற்றுச் சூழல் வரம்புமீறல்கள், சட்டரீதியான வரம்பு மீறல்கள் ஒருபுறமிருக்க, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், குறைந்து வரும் நிலக்கரி சந்தையை கணக்கில் கொண்டும் பல வங்கிகளும் கடன் நிறுவனங்களும், நிதி வழங்க மறுத்துள்ளன. அதானி குழுமமும் தனது பணத்தைப் போடுவதாகக் கூறியுள்ளது.

அதானி குழுமத்தின் பணம் என்பது அதானியின் இந்திய நிறுவனங்களின் பெயரில் வாங்கியுள்ள இந்திய வங்கிகளிலிருந்து பெற்ற பணமாகவோ, அல்லது இந்திய வங்கிகளுக்குத் திருப்பிச் செலுத்தப்பட வேண்டிய பணமாகவோதான் இருக்க முடியும். கேப்பையிலும் நெய் வடிக்கும் திறன் கொண்ட நிதிமூலதன நிறுவனங்களே அதானியின் நிலக்கரிச் சுரங்கத்திற்கு பணம் தர மறுத்துள்ளன என்றால், இந்திய வங்கிகளில் உள்ள நமது சேமிப்புப் பணத்தை வைத்தே ஆஸ்திரேலியாவில் அதானி சூதாட இருக்கிறார்.

சூதாட்டத்தில் ஜெயித்தால் லாபம் அதானிக்கு, தோற்றால் நாமம் நமக்கு !

தமிழாக்கம்: நந்தன்
மூலக்கட்டுரை: The Conversation

கேள்வி பதில் : யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா ?

யோகி ஆதித்யநாத் பற்றி ஒரு சரியான அலசலை தருவீர்களா …?

– எஸ். செல்வராஜன்

ன்புள்ள செல்வராஜன்,

யோகி ஆதித்நாத் காவிப் படையில் இருக்கும் ஒரு ரவுடி சாமியார். அவரைப் பற்றி வினவு தளத்தில் நிறைய கட்டுரைகள் உள்ளன. அவற்றிலிருந்து சில இணைப்புகளைத் தருகிறோம், படியுங்கள்!

*****

படிக்க: மோடி ஆசியுடன் போட்டியிடும் சன்னியாசி ரவுடி

“கோரக்பூரை கடந்த பதினைந்து ஆண்டுகளாக கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது யோகி ஆதித்யநாத். 1999-ம் ஆண்டிலிருந்து அவர் கோரக்பூர் பாராளுமன்றத் தொகுதியில் தொடர்ந்து வென்று வருகிறார். இம்முறையும் அவரே வேட்பாளர், அவரே வெற்றி பெறுவார் என்று பரவலாக கருதப்படுகிறது. கோராக்நாத் மடத்தின் தலைமை பூசாரியாகவும் இருக்கும் ஆதித்யநாத், ஹிந்து யுவ வாஹினி என்கிற குண்டர் படை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகிறார்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஹிந்து யுவ வாஹினியின் மூலமாக சிறு சிறு உள்ளூர் தகராறுகளில் தலையிடும் ஆதித்யநாத் கடந்த பத்தாண்டுகளில் சிறிதும் பெரிதுமாக சில பத்து கலவரங்களை நடத்தியிருக்கிறார். தானே முன்னின்று 2007-ம் ஆண்டு கோரக்பூரில் கலவரம் ஒன்றை ஒருங்கிணைத்து நடத்தி அதற்காக சிறை சென்றும் திரும்பியிருக்கிறார். கலவரங்களின் ஊடாக இந்து முசுலீம் மக்களிடையே பிளவுண்டாக்கி இந்துக்களின் காப்பாளராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார். தற்போது கிழக்கு உத்திரபிரதேசத்தின் சில பல சட்டமன்றத் தொகுதிகளது வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் அளவிலான செல்வாக்கையோ ஆதிக்கத்தையோ அவர் அடைந்துள்ளார்.”

*****

படிக்க: ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

“அவர்கள் (முஸ்லீம்கள்) ஒரு இந்துப் பெண்ணை எடுத்துக் கொண்டால், நாம் நூறு முசுலீம் பெண்களை எடுத்துக் கொள்வோம்” – இது கண்களில் கொலை வெறியும் கைகளில் சூலாயுதமும் காவி உடையும் காதில் கடுக்கனும் போட்டுக் கொண்டு திரியும் ஒரு சாமியாரின் பிரச்சார உரை. சுவாமி அசிமானந்தா, சாத்வி ஜோதி, சாத்வி ப்ரக்யா, சுவாமி சாக்‌ஷி மகராஜ் உள்ளிட்ட சாமியார்களைப் பற்றி உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தால், இந்த சாமியாரைக் குறித்து அதிர்ச்சி அடைய மாட்டீர்கள். ஆனால் மேற்சொன்ன சாமியார்களை விட அபாயகரமான சாமியாரைக் குறித்து தான் நாம் இப்போது பேசிக் கொண்டிருக்கிறோம். அவர் வேறு யாருமல்ல,  கடந்த ஞாயிற்றுக் கிழமை 19.03.2017 உத்தரப் பிரதேசத்தின் முதல்வராகப் பதவியேற்றிருக்கும் யோகி ஆதித்யநாத் தான் அவர்.

*****

படிக்க: உ.பி முதல்வரின் ஹிந்து யுவவாகினி மீது பாலியல் வன்முறை வழக்கு

“ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்தவுடன், திடீர் பசுப் பாதுகாவலர்களாக மாறிய இந்தக் கும்பல், மாநிலத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மாடு வெட்டும் தளங்களையும் இழுத்து மூடியது. ஆண், பெண் இருவர் ஒன்றாக அருகில் நின்று பேசிக் கொண்டிருந்தாலே உடனடியாக அங்கு சென்று அவர்களைத் துன்புறுத்துவதும், போலீசில் ஒப்படைப்பதும் என ரோமியோ எதிர்ப்புப் படையாக ரவுடித்தனம் செய்து வந்தது. இந்த ரோமியோ எதிர்ப்புப் படைதான் தற்போது ஒரு பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளது.”

*****

படிக்க: கோராக்பூர் குழந்தைகள் படுகொலை – மரணத்தின் நிறம் காவி

நாளை ஆகஸ்டு 15 -ம் தேதி. இந்தியா “சுதந்திரமடைந்து” நாளையோடு 70 ஆண்டுகள் நிறைவடைகின்றன. எழுபது ஆண்டு இந்திய சுதந்திரத்தை எழுபது பிஞ்சுக் குழந்தைகளைப் பலியிட்டுக் கொண்டாடி உள்ளது பாரதிய ஜனதா. கடந்த ஒரு வாரத்திற்குள் பாரதிய ஜனதா ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தின் கோரக்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் எழுபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

படிக்க: காவி பயங்கரவாதிகள் ஆட்சியில் காவி மயமாகும் உத்திரப்பிரதேசம் !

இந்த காவி மயமாக்கும் செலவுகளை வைத்து பல ஆயிரம் விவசாயிகளின் விவசாயக் கடனை ரத்து செய்திருக்கலாம். ஆனால் பார்ப்பன பாசிச பாஜக அரசுக்கோ விவசாயிகளை விட காவி மயம் தான் முக்கியம் என்பதற்கு இதை விட வேறு சான்றுகள் தேவையில்லை.

செத்துப் போன ஜெயா ஆட்சி அமைத்தவுடன் ஜோசியக்காரக் கூட்டம் சொன்னபடி அவருக்கு ‘ராசியான’ பச்சை உடையை அணிவதை வழக்கமாக்கினார். பிறகு தமிழகத்தின் பல்வேறு அரசு இடங்களில் பச்சை திணிக்கப்பட்டது. அதே போன்று ‘இந்து ராஷ்டிரத்தை’ நிலை நாட்டுவதற்கு கொலைகள் போக இப்படி காவி பெயிண்ட் அடிக்கும் வேலையை யோகி செய்து வருகின்றார். பெயிண்ட் அடிப்பதில் கூட பாசிஸ்டுகள் எப்படி ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள் பாருங்கள்!

*****

படிக்க: உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை

இந்து ராஷ்டிரம் எப்படி இருக்கும் என்பதை இரத்த சாட்சியங்களுடன் சொல்கிறது உத்திரப் பிரதேசம். ஆட்சிக்கு முன் கலவரங்களின் மூலம் அச்சுறுத்திய பாஜக இப்போது கைது, கொட்டடிக் கொலை மூலம் தொடர்கிறது. திகைக்க வைக்கும் விவரங்கள், கைதுகள், கதைகள்….!

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும்  கேட்கலாம்:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

நூற்றாண்டு கால சுடுகாட்டு பிரச்சினையைத் தீர்க்க வழிகாட்டிய மக்கள் அதிகாரம் !

100 ஆண்டு காலமாக  சுடுகாடு இல்லாத  கிராமம் ! மக்கள்  அதிகாரத்தை கையிலெடுத்ததால் அடிப்படை பிரச்சினை தீர்ந்தது !

ருமபுரி மாவட்டம் 7-வது மைல் கிராமத்தை சேர்ந்த  தாழ்த்தப்பட்ட மக்கள்  100 ஆண்டு காலமாக இறந்தவர்களை  புதைப்பதற்கு  இடம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் அந்த கிராமத்துக்கு அருகாமையில் உள்ள வழித்தடத்தில் உடலை அடக்கம் செய்து வந்தனர்.

அவ்வாறு அடக்கம் செய்யும் போது, அருகாமையில் உள்ள ஆதிக்கசாதியினர் பிரச்சினை செய்து  உடலை புதைக்கவிடாமல்  தடுத்து வந்தனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் அதிகாரம் தோழர்கள் அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று வட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர். அதனை பெற்றுக்கொண்ட துணை வட்டாட்சியர் அப்பகுதி மக்களின் குடும்ப அட்டை  நகலை எடுத்து வந்து கொடுத்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார்.

அவ்வாறு  குடும்ப அட்டை  நகலை  கொடுத்து ஒருவாரம் ஆகியும்  எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அக்கிராம மக்கள் மீண்டும்  வட்டாட்சியரை   சந்தித்து கேட்கும் போது, அந்த நகலை சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு அனுப்பாமல் அந்த மனு கிடப்பில் போடப்பட்டிருந்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அருகில் இருந்த அதிகாரியை அழைத்து இந்த மனுவை சம்பந்தப்பட்ட  விஏஓ-விடம் அனுப்பி வைக்குமாறு கூறிவிட்டு, எதற்கும் கலெக்டரை பாருங்கள் என்று கூறினார்.

அவருடைய  பேச்சிலே  அலட்சியம்  மேலோங்கி இருந்ததை பார்த்த கிராம மக்கள் “நாம்  ஏன்  கலெக்டரை  சந்திக்க  வேண்டும். கலெக்டர் நமது கிராமத்தை  நோக்கி வரவேண்டும்” என்று  முடிவு செய்து, “இவருடைய வார்த்தையே பிரச்சினையை  தீர்ப்பதாக இல்லை, இனியும்  அதிகாரிகளை நம்பினால் பிரச்சினை தீராது; இதனால்  அலட்சியம் காட்டும் அதிகாரிகளை அம்பலப்படுத்துவது..” என்று  முடிவு  செய்தனர். அதனடிப்படையில் மக்கள் சார்பில் 10.11.2018 அன்று அப்பகுதி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

அடுத்த நாளே பி.டி.ஒ, தாசில்தார், வி.ஏ.ஒ  என அதிகாரிகள் அலறி  அடித்து கிராமத்திற்கு படையெடுத்தனர். அப்போது அப்பகுதி மக்களிடத்தில், கிராம மக்கள்  முடிவு செய்து இடத்தை காட்டினால் அந்த இடத்தை அளந்து பட்டா போட்டு  தருவதாகக் கூறிவிட்டு சென்றனர். அன்று மாலையே அந்த கிராம மக்கள், மற்றும் மக்கள் அதிகாரத் தோழர்கள் என ஒன்று கூடி சுடுகாட்டிற்கு  இடத்தை ஒதுக்குவதற்காக ஜனநாயகப் பூர்வமாக முடிவு எடுத்து அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.  பிடிஒ-யும்  உங்களுக்கான பிரச்சினையை உடனடியாக  தீர்த்து வைக்கிறோம் என்று கூறிய வகையில் அதற்கான பணி நடந்து வருகிறது.

பிறகு அக்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் தருமபுரி மண்டல குழு உறுப்பினர், தோழர் சிவா  பேசும்போது “மக்கள்  அனைவரும்  ஒற்றுமையாக  இருந்து  அதிகாரத்தை  கையிலெடுத்தால்  அனைத்து  அடிப்படை  பிரச்சினைகளும்  தீரும், அதிகாரிகளைத் தேடி  நாம்  செல்லத் தேவையில்லை;  மக்களுக்காகதான் அதிகாரிகள். எனவே  நம்மை  தேடி  அவர்கள் வரவேண்டும்” என்று பேசினார். நாம்  ஒற்றுமையாக  இருந்ததால்தான் சாதிக்க முடியும் என்பதை  இந்த  போராட்டத்தில் அப்பகுதி மக்கள் அனுபவப் பூர்வமாக உணர்ந்துள்ளனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம். தொடர்புக்கு; 97901 38614

வாசகர் புகைப்படம் – இந்த வாரத் தலைப்பு : ஆட்டோ இலக்கியம் !

1

லுவலகத்திற்கு இருசக்கர வாகனங்களிலோ, பேருந்திலோ சென்று கொண்டிருக்கும் போது நம்மைக் கடந்து செல்லும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், லாரிகளின் பின்னால் எழுதப்பட்டிருக்கும் கவித்துவமான வாசகங்களைக் கண்டிருப்போம். வாசித்ததும் ’அட.. செமையா இருக்கே..’ என நம்மை துள்ளச் செய்யும் வாசகங்கள் பல அவற்றில் கண்டிப்பாக இருக்கும். இலக்கியங்களில் பல வகை உண்டு. அதில் நாட்டார் இலக்கியத்தோடு தொடர்புடை வாய்மொழி இலக்கியம் தொட்டு நவீன சமூகவலைத்தள மீம்கள் வரை பழமையும் புதுமையும் இருக்கின்றன. அதில் அதிகம் கவனிக்கப்படாத ஒன்றுதான் ஆட்டோ இலக்கியம்.

ஒருமுறை மதுரையில் ஒரு ஆட்டோ வாசகம் இன்ப அதிர்ச்சியை தந்தது. அதில் வழக்கமாக சாமி, அம்மன் பெயரில் துணை என்று இருக்கும் இடத்தில் பொது மக்களே துணை என்று இருந்தது. சில பல வருடங்களுக்கு முன்பு வரை ஆட்டோவில் “சீறும் பாம்பை நம்பலாம், பெண்ணை நம்பாதே” போன்ற பிற்போக்கு வாசகங்களே அதிகம் இருந்தன. இடையில் அவை மாறியிருந்தால் இன்னமும் அத்தகைய சாயல் கொண்ட வாசகங்கள் இருக்கத்தான் செய்கின்றன.

ஆட்டோக்களில் ”மெதுவாகப் போ ரோட்டில் ! காத்திருக்கிறாள் மனைவி வீட்டில்!” என்பது போன்ற அக்கறையுடன் எச்சரிக்கும் வாசகங்கள் தொடங்கி, ”சுமக்க நானிருக்க நடைபயணம் ஏன் ?” என்பது போன்ற மார்கெட்டிங் வாசகங்களும் எழுதப்பட்டிருக்கும்.  இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டு பல்வேறு வாகனங்களில், “தொடர்ந்து வா தொட்டு விடாதே”, ”சத்தமிடு, முத்தமிடாதே” போன்ற வாகனக் காதல் எச்சரிக்கை வாசகங்களும் இடம்பெற்றிருக்கும்.

வாகனத்தின் பின்னால் எழுதியிருக்கும் வாசகங்களைப் போல லாரிகள், பேருந்துகளின் பக்கவாட்டிலுள்ள பேட்டரி பெட்டியில், “தினமும் என்னைக் கவனி” என்பது போன்ற கவன ஈர்ப்புத் தீர்மானங்களும் இடம் பெற்றிருக்கும்.

படிக்க:
காத்திருப்பு | வினவு வாசகர்களின் புகைப்படங்கள் !
♦ உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்

இந்த வாரம் நமது வாசகர் புகைப்படங்களுக்கான தலைப்பு “ஆட்டோ இலக்கியம்.” ஆட்டோ என்பது ஒரு குறியீடுதான். இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டு அனைத்து வாகனங்களிலும் எழுதப்பட்டுள்ள ஈர்க்கத்தக்க வாசகங்களை, அந்த வாகனத்தோடு சேர்த்து புகைப்படம் எடுத்து அனுப்புங்கள். வாகனங்களோடு வாகன ஓட்டுநர்களையும் இணைத்து எடுக்கலாம். வாகனங்களில் சே குவேரா, அம்பேத்கர், பெரியார் முதல் ஏசுநாதர் வரை படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அதிலும் அரிதாக மார்க்ஸ், லெனின் படங்களையும் பார்க்க  முடியும்.

மாமூலான வாசகங்கள் பல இருந்தாலும் முடிந்த அளவிற்கு வித்தியாசமான, கவித்துவமான வாசகங்களை, தேடிப்பிடித்து புகைப்படம் எடுத்து அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் அங்கே இருக்கும் வாகனங்களில் காணப்படும் வாசகங்களை – படங்களை – வித்தியாசமான வடிவமைப்பை படம் எடுத்து அனுப்புங்கள். எந்த ஊர் வாசகங்கள் சிறப்பாக வருகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் !

படங்கள் எங்களை வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25-12-2018

vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!

புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 38a

மாக்சிம் கார்க்கி
”ஏதாவது தின்னக் கொடுங்களேன் – எனக்கு இருக்கிற அகோரப் பசியை உங்களால் கற்பனை கூடப் பண்ண முடியாது” என்று திடீரெனச் சொன்னான் நிகலாய்.

”அம்மா. அதோ அரங்கிலே கொஞ்சம் ரொட்டி இருக்கிறது” என்றான் இகோர். “அப்புறம் வெளியே ஹாலுக்குப் போய், இடதுபுறம் இருக்கும் இரண்டாவது கதவைத் தட்டுங்கள். ஒரு பெண் வந்து திறப்பாள். அவளை இங்கே வரச் சொல்லுங்கள். வரும்போது தின்பதற்கு என்னென்ன இருக்கிறதோ, அதையெல்லாம் கொண்டுவரச் சொல்லுங்கள்.”

“எல்லாவற்றையும் ஏன் கொண்டுவரச் சொல்கிறாய்?” என்று கேட்டான் நிகலாய்.

“நீ ஒன்றும் கவலைப்படாதே. அப்படி ஒன்றும் அதிகமிராது.”

தாய் வெளியே சென்றாள். கதவைத் தட்டினாள். பதிலில்லை. அந்த அமைதியில் அவள் இகோரைப் பற்றி நினைத்தாள்.

”அவன் செத்துக்கொண்டுதான் இருக்கிறான்…”

“யாரங்கே?” என்று அறைக்குள்ளிருந்து யாரோ கேட்டார்கள்.

”இகோர் இவானவிச்சிடமிருந்து வந்திருக்கிறேன்’’ என்று அமைதியாகப் பதில் சொன்னாள் தாய். “அவன் உங்களை அவனது அறைக்கு வரச் சொன்னான்.”

”இதோ வருகிறேன்” என்று கதவையே திறக்காமல் உள்ளிருந்தவாறே பதில் சொன்னாள் அந்தப் பெண். தாய் ஒரு கணம் நின்றாள். பிறகு மீண்டும் கதவைத் தட்டினாள். உடனே கதவு திறக்கப்பட்டது. ஒரு நெட்டையான மூக்குக் கண்ணாடியணிந்த ஸ்திரீ ஹாலுக்குள் வந்தாள். தனது உடுப்பிலுள்ள மடிப்புக்களை விரித்துத் தடவிவிட்டுவிட்டு வெடுக்கென்று தாயைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

“உங்களுக்கு என்ன வேண்டும்?”

“இகோர் இவானவிச் என்னை அனுப்பினான்.”

“சரி, புறப்படுங்கள். உங்களை நான் பார்த்திருக்கிறேனே” என்று அமைதியாகக் கூறினாள் அவள். “சௌக்கியமா? இங்கே ஒரே இருட்டாகயிருக்கிறது.”

தாய் அவளைப் பார்த்தாள். இதற்கு முன் அவளைச் சில தடவை நிகலாய் இவானவிச்சின் வீட்டில் பார்த்திருப்பதாக அவளுக்கு ஞாபகம் வந்தது.

“இவர்கள் எல்லாம் நம்மைச் சேர்ந்தவர்கள்!” என்று நினைத்துக் கொண்டாள்.

அந்தப் பெண் பெலகேயாவைத் தனக்கு முன்னால் போகச் சொன்னாள்.

“அவனுக்கு ரொம்ப மோசமாக இருக்கிறதா?” என்று கேட்டாள் அவள்.

“ஆமாம். அவன் படுத்திருக்கிறான். அவன் தின்பதற்கு ஏதாவது கொண்டு வரச் சொன்னான்.”

“அது ஒன்றும் அவசியமில்லை.”

அவர்கள் இகோரின் அறைக்குள் நுழைந்ததுமே அவனது கரகரத்த சுவாசம் அவர்கள் காதில் விழுந்தது;

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“நான் என் மூதாதையர்களிடம் போய்ச் சேரப்போகிறேன். தோழா…! லுத்மீலா வசீலியெவ்னா. இந்த ஆசாமி கொஞ்சங்கூட மரியாதையில்லாமல், அதிகாரிகளிடம் உத்தரவு வாங்காமல், சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டான். முதலில் இவனுக்கு ஏதாவது தின்னக் கொடுங்கள். அப்புறம் இவனை எங்காவது கொண்டுபோய் மறைத்து வைக்க வேண்டும்.”

அந்தப் பெண் அவன் கூறியதை ஆமோதித்துத் தலையை அசைத்தாள், நோயாளியைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே சொன்னாள்:

“இவர்கள் வந்தவுடனேயே எனக்குச் சொல்லியனுப்பியிருக்க வேண்டும். இகோர், அது சரி நீங்கள் இரண்டு பொழுது மருந்தைக்கூடச் சாப்பிடாமல் விட்டிருக்கிறீர்களா? வெட்கமாயில்லை? தோழரே, என்கூட வாருங்கள். இகோரை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போவதற்குச் சீக்கிரமே ஆட்கள் வந்துவிடுவார்கள்.”

“அப்படியென்றால், நீங்கள் என்னை ஆஸ்பத்திரியில் கொண்டு போடுவது என்றே தீர்மானித்துவிட்டீர்களா?”

“ஆமாம். நான் அங்கு வந்து உங்களுக்குத் துணையிருப்பேன்”

“அங்கே கூடவா! அட கடவுளே!”

“உஷ்! போதும் அசட்டுத்தனம்.”

அவள் பேசிக்கொண்டே இகோரின் மார்பின் மீது கிடந்த போர்வையை இழுத்துச் சரி பண்ணினாள். நிகலாயைக் கூர்ந்து கவனித்தாள். மருந்து பாட்டில்களைத் தூக்கிப் பார்த்து எவ்வளவு மருந்து மிஞ்சியிருக்கிறது என்பதைப் பார்த்தாள். நிதானமாக அடக்கமான குரலில் பேசினாள். லாவகமாக நளினத்தோடு நடமாடினாள். அவளது முகம் வெளுத்திருந்தது. புருவங்கள் மூக்குக்கு மேலே கூடியிருந்தன. தாய்க்கு அவளது முகம் பிடிக்கவே இல்லை. அந்த முகத்தில் அகந்தை தொனிப்பதாக அவளுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணின் கண்களில் களிப்போ பிரகாசமோ இல்லை. மேலும் அவள் அதிகார

தோரணையிலேயே பேசினாள்.

“சரி, நாங்கள் இப்போதைக்கு உங்களை விட்டுச் செல்கிறோம்” என்று தொடங்கினாள் அவள். ஆனால் நான் சீக்கிரமே திரும்பிவந்து விடுவேன். இகோருக்கு இந்த மருந்தில் ஒரு கரண்டி கொடுங்கள். அவனைப் பேசவிடாதீர்கள்.”

நிகலாயைக் கூட்டிக்கொண்டு அவள் வெளியே சென்றாள்.

”அதிசயிக்கத்தக்க பெண் அவள்!” என்று பெருமூச்சுடன் சொன்னான் இகோர். “அதிசாமர்த்தியமான பெண்: அம்மா. நான் உங்களையும் அவளோடு சேர்த்துவிட வேண்டும். அவள் அடிக்கடி களைத்துச் சோர்ந்து விடுகிறாள்.”

“பேசாதே. இந்த மருந்தைச் சாப்பிடு” என்று மிருதுவாகச் சொன்னாள் தாய்.

அவன் மருந்தைச் சாப்பிட்டுவிட்டு ஒரு கண்ணை மூடிக் கொண்டான்.

“எப்படியும் நான் சாகத்தான் போகிறேன். வாயை மூடிப் பேசாதிருந்தாலும் சாகத்தான் போகிறேன்” என்றான் அவன்.

அவன் தனது அடுத்த கண்ணால் தாயைப் பார்த்தான். அவனது உதடுகள் மட்டும் லேசாகப் புன்னகை புரிந்தன. தாய் அவனது தலைப் பக்கமாகக் குனிந்து பார்த்தாள். திடீரென்று நெஞ்சில் பாய்ந்த அனுதாப வேதனையில் அவளது கண்களில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

“எல்லாம் சரிதான் – இது இயற்கைதானே! வாழ்வதிலுள்ள இன்பத்தோடு சாவதின் அவசியமும் சேர்ந்துதானே வருகிறது’ என்றாள் அவன்.

தாய் அவனது நெற்றியின் மீது கை வைத்துப் பார்த்துவிட்டு மெதுவாகச் சொன்னாள்:

“உன்னால் கொஞ்ச நேரம்கூடச் சும்மா இருக்க முடியாதா?”

அவன் தன் கண்களை மூடி, தனது நெஞ்சுக்குள் கரகரக்கும் சுவாசத்தைக் கேட்பதுபோல் இருந்தான். பிறகு உறுதியோடு பேசத் தொடங்கினான்.

”சும்மா இருப்பதில் அர்த்தமே இல்லை, அம்மா. அதனால் எனக்கு என்ன லாபம்? என்னவோ இன்னும் கொஞ்ச விநாடி கால வாதனை. அப்புறம் உங்களைப் போன்ற அற்புதமான பெண்மணியோடு சில வார்த்தைகள் பேசும் ஆனந்தம்கூட எனக்கு அற்றுப்போய்விடும். அடுத்த உலகத்திலுள்ளவர்கள், இந்த உலகத்தில் உள்ளவர்களைப்போல் அவ்வளவு நல்லவர்களாயிருக்க முடியாது. அது மட்டும் நிச்சயம்.

தாய் ஆர்வத்தோடு குறுக்கிட்டுப் பேசினாள்:

”அந்த சீமாட்டி திரும்பவும் வருவாள். வந்து நான் உன்னைப் பேச விட்டதற்காக, என்னைக் கண்டிப்பாள்.”

“அவள் ஒன்றும் சீமாட்டியில்லை. அவள் ஒரு புரட்சிக்காரி. நம் தோழி. ஒரு அதிசயமான பெண். அவள் கோபிக்கப் போவது என்னவோ நிச்சயம். அவள் எல்லோரையும்தான் கோபித்துப் பேசுகிறாள்.”

அவன் மிகுந்த சிரமத்தோடு உதடுகளை அசைத்துக் கொண்டு தனது அண்டை வீட்டுக்காரியின் வாழ்க்கையைப் பற்றிப் பேச ஆரம்பித்தான். அவளது கண்கள் களிப்பெய்தி நகைத்தன. அவள் வேண்டுமென்றே அவளைக் கேலி செய்ததாகத் தாய் கருதினாள். அவனது நீலம் பாரித்த ஈரம் படிந்த முகத்தைப் பார்த்துவிட்டு, பயபீதியோடு தனக்குத்தானே நினைத்துக் கொண்டாள்.

”இவன் செத்துக் கொண்டிருக்கிறான்.”

லுத்மீவா திரும்ப வந்தாள். உள்ளே நுழைந்தவுடன் அவள் கதவை ஜாக்கிரதையாகத் தாழிட்டுவிட்டுத் தாயின் பக்கம் திரும்பினாள்.

“உங்களுடைய தோழர் சீக்கிரமே உடை மாற்றிக்கொள்ள வேண்டும். என் அறையை விட்டுக் கூடிய சீக்கிரம் போக வேண்டும். எனவே நீங்கள் உடனே போய் அவனுக்கு மாற்று உடைகள் வாங்கி வாருங்கள். இந்தச் சமயத்திலே சோபியாவும் இல்லாது போய்விட்டாள். அது ஒரு பெரிய சங்கடம். ஆட்களை இனம் மாற்றி வேஷம் போடுவதில் அவள்தான் மிகவும் கைதேர்ந்தவள்.”

”அவள் நாளைக்கு வருகிறாள்” என்று கூறிக்கொண்டே சவுக்கத்தை எடுத்துத் தோளின் மீது போட்டுக்கொண்டாள் தாய்.

அவளுக்கு எப்போதெப்போதெல்லாம் வேலை செய்யச் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அவளது இதயத்தில், அந்த வேலையைச் சீக்கிரமாகவும் திறம்படவும் முடிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிரம்பித் ததும்பும். அந்த வேலையைத் தவிர அந்தச் சமயத்தில் வேறு எதைப் பற்றியுமே அவள் சிந்திக்கமாட்டாள்.

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்…”

”அவனை எந்த மாதிரி உடை தரிக்கச் சொல்ல உத்தேசம்?” என்று காரியார்த்தமான குரலில் தனது புருவங்களைச் சுழித்துக்கொண்டே கேட்டாள் தாய்.

“அதைப் பற்றிக் கவலையில்லை. அந்தத் தோழர் இன்றிரவு போயாக வேண்டும்.”

“இராத்திரிவேளைதான் மோசமானது. தெருவிலே ஜனநடமாட்டமே இருக்காது. போலீசாரும் விழிப்பாயிருப்பார்கள். இவனும் அப்படியொன்றும் கெட்டிக்காரப் பேர்வழியில்லை – உங்களுக்குத் தெரியாதா?”

இகோர் கரகரத்துச் சிரித்துக் கொண்டான்.

“நான் உன்னை ஆஸ்பத்திரியில் வந்து பார்க்கட்டுமா?” என்று கேட்டாள் தாய்.

இருமிக்கொண்டே தலையை அசைத்து ஆமோதித்தான் அவன்.

“நீங்களும் நானும் இவனது படுக்கையருகே மாறி மாறித் துணைக்கு இருக்கலாமா?” என்று தனது கரிய கண்களால் தாயைப் பார்த்துக் கொண்டே கேட்டாள் லுத்மீலா. ”உங்களுக்குச் சம்மதம்தானே? சரி, இப்போது எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாகப் போய்வாருங்கள்.”

அவள் அதிகாரம் கலந்த அன்போடு தாயின் கரத்தைப் பற்றி அவளை வாசல் நடைக்குக் கூட்டிச் சென்றாள். வாசல் நடையைக் கடந்து வெளியே வந்ததும், லுத்மீலா நின்றுகொண்டே பேசினாள்:

“நான் உங்களை இப்படி வெளியே விரட்டியடிக்கிறேன் என்பதை எண்ணி மனம் புண்பட்டுப்போகாதீர்கள். அவனோடு பேசிக் கொண்டிருப்பது அவனுக்கு ரொம்ப ஆபத்து. அவன் பிழைக்கக்கூடும் என்றே நான் இன்னும் நம்புகிறேன்…”

படிக்க:
மோடி ஆட்சியில் வேலை இழப்பு – சிறுதொழில் அழிவு அபாய கட்டத்தை எட்டியது !
எட்டு வழிச் சாலைன்னு நிலத்த பிடுங்குறான் ராமர் சிலைன்னு வீட்ட இடிக்கிறான் !

அவள் தன் கரங்களை இறுகப் பற்றி அழுத்தினாள். அவள் பிடித்த பிடியில் எலும்புகளே நொறுங்கும் போலிருந்தது; கைகளைப் பிடித்தவாறே அவள் கண்களை மூடினாள். இந்தப் பேச்சு தாயைக் கலவரப்படுத்தியது.

”அட கடவுளே என்ன சொல்லுகிறீர்கள்?” என்று குழறினாள் தாய்.

”சரி போகிற போது எங்கேயாவது ஒற்றர்கள் நிற்கிறார்களா என்று பார்த்துக்கொண்டு போங்கள்” என்று மெதுவாகச் சொன்னாள் லுத்மீலா. அவள் தன் கரங்களைத் தன் முகத்துக்கு நேராக உயர்த்தி நெற்றிப் பொருத்துக்களைத் தேய்த்துவிட்டுக்கொண்டாள். அவளது உதடுகள் துடித்தன, முகம் காந்தமடைந்தது.

“எனக்குத் தெரியும்’’ என்று பெருமிதத்தோடு சொன்னாள் தாய்.

வெளிவாசலுக்குச் சென்றவுடன் அவள் ஒரு நிமிஷம் அங்கேயே நின்று தன்னுடைய துப்பட்டியைச் சரி செய்துகொண்டே சுற்றுமுற்றும் கூர்மையோடு, எனினும் வெளிக்குத் தெரியாமல் கவனித்துக் கொண்டாள். கூட்டத்தில்கூட ஒற்றர்களை அடையாளம் கண்டு தீர்மானிப்பதில் அவள் அநேகமாக தவறுவதே இல்லை. அவர்களது எடுப்பாய்த் தெரியும் கவனமற்ற நடை, அவர்களது அசாதாரணமான பாவனைகள், சோர்வும் எரிச்சலும் நிறைந்த அவர்களது முகபாவம், இவற்றிற்கெல்லாம் பின்னால் மோசமாக ஒளிந்து கொண்டிருக்கும் அவர்களது கூரிய கண்களிலே மறைந்து கிடக்கும். குற்றம் நிறைந்த அச்சம் கொண்ட நோக்கு – யும் அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள்.

ஆனால் இந்தத் தடவையோ அவள் அந்த மாதிரி முகங்கள் எதையும் காணவில்லை. எனவே தெரு வழியாக அவசர அவசரமாக நடந்து சென்றாள். அவள் ஒரு வண்டியை வாடகைக்குப் பிடித்துக்கொண்டு, வண்டிக்காரனை மார்க்கெட்டுக்கு ஓட்டிச் செல்லும்படி உத்தரவிட்டாள். மார்க்கெட்டில் அவள் நிகலாய்க்காக வாங்க வேண்டிய துணிமணிகளைத் தேர்ந்தெடுப்பதில் விடாப்பிடியாய் பேரம் பேசி விலையைக் குறைத்துக் கேட்டாள். அத்துடன் தன்னுடைய குடிகாரக் கணவனால்தான் இந்த மாதிரியான நிலைக்குத் தான் வந்துவிட்டதாகவும், அவனுக்கு மாதாமாதம் ஒவ்வொரு புதுச்சட்டை துணிமணி எடுத்துக் கொடுக்க நேர்ந்துவிட்டதாகவும் ஒரு பொய்க்கதையையும் கடைக்காரனிடம் கூறினாள். அவளது கட்டுக்கதையைக் கேட்டு, கடைக்காரர்கள் கொஞ்சம்கூட மசியவில்லை. இருந்தாலும் அதுவே அவளுக்கு ஒரு பெரும் ஆனந்தத்தைத் தந்தது. வழியிலே அவளுக்கு இன்னொரு எண்ணம் உதித்தது. நிகலாய்க்குப் புதிய துணிமணிகள் வாங்க வேண்டிய அவசியத்தைப் போலீஸ்காரர்களும் உணரக் கூடுமென்றும், எனவே அவர்கள் தங்களது ஒற்றர்களை மார்க்கெட்டுக்கும் அனுப்பியிருக்கக் கூடுமென்றும் அவள் நினைத்தாள். எனவே புறப்பட்டுச் சென்றது போலவே மிகுந்த ஜாக்கிரதையோடும் கவனத்தோடும் அவள் இகோரின் அறைக்குத் திரும்பி வந்தாள். பிறகு அவள் நிகலாவுடன் நகரின் எல்லை வரை காவலாகச் சென்றாள்.

அவர்கள் தெருவில் ஆளுக்கொரு பக்கமாக நடந்து சென்றார்கள். நிகலாய் தலையைத் தாழ்த்திக்கொண்டு தத்தித் தத்தி நடந்து செல்வதையும், அவன் அணிந்திருந்த நீளமான பழுப்பு நிறக் கோட்டினால், அவனது கால்கள் அடிக்கடி முட்டிக்கால் தட்டிக் கொள்வதையும், மூக்கின் மீது வந்து விழுந்து மறைக்கும் தொப்பியை அவன் அடிக்கடி பின்னால் தள்ளிவைத்துக் கொள்வதையும் கண்டு தாய்க்குச் சிரிப்பாயும் மகிழ்ச்சியாயும் இருந்தது. ஆள் நடமாட்டமே அற்ற ஒரு சந்தில், அவர்கள் சாஷாவைச் சந்தித்தார்கள். நிகலாயைப் பார்த்துத் தலையை அசைத்து விடைபெற்றுக்கொண்டு தாய் வீட்டுக்குத் திரும்பினாள்.

“ஆனால் பாவெல் மட்டும் இன்னும் சிறையிலேயே இருக்கிறான் …. அந்திரேயும்…” என்று துக்கத்தோடு நினைத்துக்கொண்டாள் அவள்.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

மாற்று ஊடகம் இல்லையே என்று கவலைப்படும் நண்பர்களுக்கு….. | மு.வி. நந்தினி

3

“நாய் மனிதர்களை கடித்தால் செய்தியல்ல, மனிதன் நாயைக் கடித்தால்தான் செய்தி” எதைச் செய்தியாக்க வேண்டும் என ஊடக பாடம் எடுப்பவர்கள் தவறாமல் சொல்லும் உதாரணம் இது.

பாராமுகம் பார்ப்போம் – மு.வி.நந்தினி
அதாவது செய்தி படிப்பவர்களுக்கு சுவாரஸ்யமாக இருக்க வேண்டும்; படிப்பவர்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக அமைய வேண்டும். தினத்தந்தி, தினமலர் போன்ற அதிகம் விற்பனையாகும் நாளிதழ்கள் மேற்கூறிய ஊடக பாடத்துக்கு மிகச் சிறந்த உதாரணங்கள். படிக்கும் வாசகருக்காக அவை செய்திகளை சுவாரஸ்யமாக்கி தருன்றன.

ஒரு பெண்ணை நால்வர் பாலியல் வன்புணர்வு செய்த செய்தி, படிக்கிறவர்களுக்கு கவலையையோ, கோபத்தையோ உண்டாக்காமல் வெறுமனே அந்த நேர அரட்டைக்குரிய பொருளாகிறது. முதலாளித்துவம் இதைத்தான் விரும்புகிறது. ஒரு செய்தி படிக்கிறவர்களின் சிந்தனையை தூண்டிவிடக்கூடாது என்பதில் அது கண்ணும்கருத்துமாக இருக்கிறது.

தமிழ் செய்தி ஊடகங்களைப் பொறுத்தவரை அடுத்தவர் துயரம், படிப்பவருக்கு நுகர்வாக பறிமாறப்படுவது ஒரு புறம் நடக்கிறது. இன்னொரு புறம், கட்சி செய்திகள், அரசு தரப்பு செய்திகள், பத்திரிகை சந்திப்புகள் இவை மட்டுமே செய்திகள் ஆகின்றன. அதாவது, இந்தச் செய்திகளைப் படிக்கும் பெரும்பாலான மக்களின் துன்பங்கள், துயரங்கள், இன்னல்கள் ஒருபோதும் செய்தியாவதில்லை.

உதாரணத்துக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து எத்தனை செய்தி ஊடகங்கள் களத்துக்குச் சென்று செய்தி சேகரித்து வெளியிட்டன என ஆராய்வோம்.  ஒரு சில புலனாய்வு பத்திரிகைகள் மட்டுமே நேரடியாக மக்களைச் சந்தித்து செய்தி சேகரித்த வெளியிட்டன. செய்தி ஊடகங்களின் களச் செய்தி சேகரிப்பு என்பது, துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை அமைச்சர்கள் சந்தித்தபோது உடன் போனது, பிரபலங்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது அவர்கள் பின்னால் போனது என்பதாகத்தான் இருந்தது.

துப்பாக்கிச் சூட்டால் பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள், எதனால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என துப்பாக்கிச்சூட்டின் பின்னணி, விளைவுகள் குறித்து எந்த செய்தி ஊடகமும் களத்திலிருந்து மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை. அப்போதும் வினவு களத்திலிருந்து செய்திகளை வழங்கியது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களைக் கூட பார்க்க விடாமல் அரசு மருத்துவமனை முன்பு மக்களை போலீசு தடுத்து நிறுத்திய போது (23.05.2018) எங்களையும் சுடு என மார்பைக் காட்டி நிற்கும் ஒருவர். – படம் : வினவு செய்தியாளர்

தமிழகத்தை மாறி மாறி ஆளும் இரண்டு கட்சிகளும் தங்களுக்கு எதிராக செயல்படும் ஊடகங்களை துடைத்தெறிவதை கடந்த காலங்களில் தீவிரமாகப் பின்பற்றின. காலப்போக்கில் தன்னைத்தானே தணிக்கை செய்துகொண்டு ஊடகங்கள் எப்படியாவது பிழைத்திருந்தால் போதும் என்கிற நிலைக்கு வந்துவிட்டன.

இன்றைய நிலையில் மத்திய – மாநில அரசுகளின் பி.ஆர். ஓக்களாக செயல்படுவது லாபகரமானது என்பதை ஊடகங்கள் கண்டுகொண்டுவிட்டன. விளம்பர வருவாய், கணிசமான வாசகர்கள் என லாபம் கொழிக்கும் ஊடகங்கள்கூட அரசு மூலம் கிடைக்கும் விளம்பர வருவாயையும் மறைமுகமாகக் கிடைக்கும் இன்னபிற சலுகைகளையும் இழக்கத் தயாராக இல்லை.

இந்த நிலையில் ஒரு மாற்று ஊடகத்தின் தேவை பெருவாரியான மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. பெரும் ஊடகங்கள் செய்தியை நுகர்பவர்களாக மக்களை மாற்றிவிட்டபோதும்கூட, அதே மக்கள் ‘உண்மைக்காக’ ஏங்குகிறவர்களாகவும் இருக்கின்றனர். மக்களின் உண்மைக்கான ஏக்கத்தை தீர்த்து வைக்கும் முன்னெடுப்பாக ‘வினவு’ தளத்தை நான் பார்க்கிறேன். சமீபத்தில் வினவு நடத்திய கருத்து கணிப்பில் கலந்துகொண்ட பெரும்பாலானவர்கள் இந்தக் கருத்தை பிரதிபலித்திருந்தார்கள்.

படிக்க:
தமிழக தொலைக்காட்சிகளும் அடிமை பத்திரிகையாளர்களும் !
♦ கஜா புயல் : கதவுல தொத்திகிட்டிருக்கும் போதே கடலோட போயிருக்கலாம் !

ஒரு குறிப்பிட்ட சித்தாந்ததை பேசும் வலைத்தளமாக தொடங்கப்பட்ட பத்தாண்டுகளில் மாற்று ஊடகமாக, மக்கள் ஊடகமாக வினவு பரிணமித்திருக்கிறது. இது திட்டமிட்ட வளர்ச்சியா என்றெல்லாம் தெரியாது; ஆனால், தமிழ்ச் சமூகத்துக்கு தேவையான வளர்ச்சியாகவே நான் பார்க்கிறேன்.

ஊடகத்துறையில் பதினான்கு ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவருகிற வகையில், நாளிதழ்கள்-காட்சி ஊடகங்கள்-இதழ்கள்-இணைய இதழ்களை கவனித்துக் கொண்டிருக்கிறேன். தமிழ் ஊடகங்கள் உள்ளடக்கத்தில், குறிப்பாக அச்சு இதழ்கள் மிக பின்தங்கிய நிலையில் இருக்கின்றன. தமிழ் ஊடகங்களுக்கு மறுமலர்ச்சி தேவை. அதை அவர்கள் உணர்ந்து செய்கிறார்களோ இல்லையோ, வினவு அதைச் செய்து கொண்டிருக்கிறது.

படம் – வினவு செய்தியாளர்

எப்போதெல்லாம் சமூகம் புதிய மாற்றத்துக்கு தயாராகிறதோ அப்போது ஊடகம் மறுமலர்ச்சி காண்கிறது. சமூக நீதி பேசி தமிழ் சமூகத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட பெரியார், கொள்கைகளை பரப்புவதற்காக பயன்படுத்திய ஊடகத்தின் தமிழ் ஊடக மொழிக்கு புத்துயிர் கொடுத்தார்.  பார்ப்பனர் மொழியில் இயங்கிக்கொண்டிருந்த தமிழ் ஊடகங்களை பெரியார் மீட்டார்; சீர்திருத்தம் செய்தார். ஊடக மொழியை அனைவருக்குமானதாக மாற்றினார். இன்றளவும் இது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த சீர்திருத்தமும்கூட தன்னை புதுப்பித்துக்கொள்ள கோருகிறது. ஆனால், பெருமுதலாளிய ஊடகங்களில் அதைச் செய்வாரில்லை. வினவு அதைச் செய்ய முனைந்திருக்கிறது.

அறிவியல், மருத்துவம், சமூகவியல், வரலாறு, பொருளாதாரம், கல்வி, பண்பாடு என முக்கியமான, ஆழமான கருத்துக்களையுடைய கட்டுரைகளை வினவு வெளியிட்டுவருகிறது. ஆங்கிலம் வழியே படிக்க முடியாத பல கட்டுரைகள், புரிகிற மொழியில் வினவில் காணமுடியும். சிறுபத்திரிகைகளும்கூட ஆழமான கட்டுரைகளை வெளியிடுகின்றன. மொழிநடைதான் அவற்றில் முக்கியமான பிரச்சினை. சிறுபத்திரிகை கட்டுரைகள் அறிவுஜீவிகளுக்காக எழுதப்படுபவை. அதுமக்களுக்கான ஊடகம் அல்ல. சிக்கலான கருத்தையும் எளிய மக்கள் புரிந்துகொள்ளும் விதமாக வினவு எழுதுகிறது.

வெகுஜென ஊடகங்களில் பணியாற்றிய எனக்குத் தெரியும்…வினவில் வெளிவரும் பல கட்டுரைகளை தமிழ் இதழ்களில் பார்க்கவே முடியாது. இதையெல்லாம் படிக்க மாட்டார்கள் என ஒதுக்கித் தள்ளிவிடுவார்கள். ஆனால், வினவில் படிக்கிறார்கள். இதைத்தான் சீர்திருத்தம் என்கிறேன்.

ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழில் நம்பர் ஒன் நாளிதழான தினத்தந்தியில் தலையங்க பகுதியே கிடையாது. அதுபோல, நடுப்பக்க கட்டுரைகளும் வராது. தினமணியைத் தவிர, சமீப ஆண்டுகளில்தான் தமிழ் நாளிதழ்களில் நடுப்பக்க கட்டுரைகளும் தலையங்கமும் வரத் தொடங்கியிருக்கிறது.

பெரிய கட்டுரைகளையெல்லாம் யார் படிக்கப் போகிறார்கள் என படிப்பவர்களை குறைத்து மதிப்பிட்டன ஊடகங்கள். அல்லது அவர்களுக்கு அறிவூட்ட இவர்கள் தயாராக இல்லை. இந்த லட்சணத்தில் ஆழமான அறிவியல் கட்டுரையோ, வரலாற்றுப் பதிவோ அச்சேற இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம். அதற்குள் அச்சு ஊடகங்கள் காலாவதியாகிவிடும்.

கஜா புயல் பாதிப்பால் குடிநீர் இன்றி அவதிப் பட்டுவந்த பட்டுக்கோட்டை, கறம்பயம், ஜீவா காலனி மக்கள் சாலை மறியல். படம் – வினவு செய்தியாளர்

அதுபோல, நூறாண்டுகால வரலாற்றைக் கொண்ட தமிழ் நாளிதழ்கள் செய்யத் துணியாத மற்றொரு விசயம், களச்செய்தி சேகரித்தல். கஜா புயலுக்கு பின் வந்த நாளிதழ்களைப் புரட்டிப்பாருங்கள். களத்திலிருந்து மக்கள் பிரச்சினையை சொன்ன செய்திகள் மிக மிக சொற்பமாகத்தான் இருக்கும். புயல் போன்ற பேரிடர் பாதிப்பு செய்தியிலும்கூட, சுவரஸ்யமானது மட்டுமே செய்தியாக்கும் அவலத்தை தமிழ் ஊடகங்கள் செய்து வருகின்றன.

ஒரு ஊரில் நான்கு பேர் இறந்தால் செய்தியாகும், நானூறு பேர் பட்டினி கிடப்பது சுவாரஸ்யமற்ற செய்தி. அது அச்சேறாது. நான்கு லட்சம் மரங்கள் வீழ்ந்தது தலைப்புச் செய்தியாகாது, வீழ்ந்த மரத்தை பிடுங்கி நடலாம் என்பது தலைப்புச் செய்தியாகும். அரசு என்ன செய்கிறது என மக்கள் கேட்பது செய்தியாகாது;  ‘இவர்கள்தான் ஹீரோக்கள்’ என தன்னார்வலர்களுக்கு கூடுதல் கவரேஜ் தரப்படும். எளிமையாக சொல்வதென்றால் தி இந்து ஆங்கில பதிப்புக்கும் தி இந்து தமிழ் பதிப்புக்கு உள்ள வேறுபாடு.

அரசுக்கு நோகக்கூடாது என நினைக்கிறார்களா அல்லது தமிழ் ஊடக ஆசிரியர்களின் சட்டியில் உள்ள சரக்கே அவ்வளவுதானா அல்லது இரண்டுமே கூடவா என்பதை ஊடக மாணவர்கள் யாராவது ஆராய்ந்து பட்டம் வாங்கலாம்.  கஜா புயல் தொடர்பாக வினவு களச்செய்தியாளர்கள் சேகரித்த செய்திகளை படித்த உந்துதலே, தமிழ் ஊடகங்களின் நிலையை எழுதக் காரணம். ஆங்கில ஊடகங்களுக்கு இணையாக (வேறு உதாரணங்கள் இல்லை என்பதால்) வினவின் களச்செய்திகள் தரத்துடன் அமைந்துள்ளன.  சொல்லப்போனால் பல களச்செய்திகள் வினவு தளத்தில் வெளியாகி ஒரு வாரம் கழித்து ஆங்கில ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

 

கஜா புயலில் சேதமான மாமரங்கள் – இடம் : வெங்கடாபுரம். படம் – வினவு செய்தியாளர்

உதாரணத்துக்கு  கஜா புயலில் சாய்ந்த மாமரங்கள் குறித்த செய்தி வினவு தளத்தில் வெளியாகி, ஐந்து நாட்கள் கழித்து இந்து ஆங்கில பதிப்பிலும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழிலும் வெளியானது. உண்மையை, மக்களின் உணர்வுகளை, இன்னல்களை ஆதாரத்துடன் சொன்ன விதத்தை தரம் என்கிறேன். உண்மையைச் சொல்லத்தான் ஊடகங்கள் தேவை. புனைவுகளை சேர்த்து சுவாரஸ்யம்கூட்டி தரப்படுவது செய்தியாக இருக்காது. அதில் தரமும் இல்லை; அறமும் இல்லை. வினவு இந்த இரண்டையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது.

அதிகாரத்தில் இருப்பவர்களை சிவில் சமூகத்தின் பிரதிநிதியாக கண்காணிப்பதே ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகத்தின் பணி என அறிவுஜீவிகள் வரையறுத்தார்கள். இன்றைய ஊடகங்கள் சிவில் சமூகத்தை கைகழுவிட்டு, அதிகாரத்தோடு நெருக்கமாகிவிட்டன. மாற்று ஊடகத்தின் தேவையை அவை தானாக உருவாக்கியிருக்கின்றன.

மக்களின் பிரதிநிதியாக, மாற்று ஊடகமாக தன்னுடைய பணியைச் செம்மையாக செய்துகொண்டிருக்கிறது வினவு. ஆறு களச்செய்தியாளர்களை வைத்துக்கொண்டு, கஜா புயல் தொடர்பாக 40-க்கும் மேற்பட்ட செய்திப்பதிவுகளை தந்திருக்கிறது வினவு. லாபநோக்கத்தோடு செயல்படும் வெகுஜென ஊடகத்தால் இதை நிச்சயம் செய்யமுடியாது. மக்களுக்காக செயல்படுகிறவர்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.

மு.வி.நந்தினி
மாற்று ஊடகம் இல்லையே என்கிற பெருங்கனவைப் பற்றி பெருமூச்சோடு பேசிவிட்டுச் செல்கிற நாம், வினவு தொடர்ந்து இயங்க உதவ வேண்டும். மக்களின் ஊடகம் மக்களின் நிதியால், ஆதரவால்தான் இயங்க முடியும். அதை உணர்ந்து வினவு இயங்க நிதி கொடுங்கள். நமக்கான ஊடகத்தை கட்டியெழுப்புவோம்.

மு.வி.நந்தினி கடந்த 14 ஆண்டுகளாக தமிழின் பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றியிருக்கிறார். தற்போது டைம்ஸ் தமிழ் டாட் காம் இணையதளத்தின் ஆசிரியராக இருக்கிறார். சுற்றுச்சூழல், சமூகம், இந்துத்துவ அரசியல், பெண்ணியம் சார்ந்து எழுதிவருகிறார். வினவு கருத்தாடல் பகுதியில் பாரமுகம் பார்ப்போம் எனும் தலைப்பில் எழுதுகிறார்.

உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை | வாசகர் புகைப்படங்கள்

”உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை” என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பு !

அயராது உழைத்து ஓய்ந்தப் பின் இரவு  பதினொரு மணிக்கு கடைக்குச் சென்றாலும் வாங்க தம்பி காபி வேணுமா டீ வேணுமானு கேக்குற அந்த குரல் ஒட்டு மொத்த சோர்வையும் நீக்கி புத்துணர்வளிப்பதாக இருக்கும்..
இடம் – எஸ்.ஆர்.பி. டூல்ஸ் பஸ் ஸ்டாப், தரமணி, சென்னை.
படம் – கோகுலன் கிருஷ்ணமூர்த்தி

மனோகர் அண்ணன். எங்கள் கம்பெனி அருகில் இருக்கும் டீக்கடை மாஸ்டர். ஸ்டைலாக டீ போடுவார். புகைப்படம் எடுக்கவா எனகேட்ட போது வெட்கத்துடன் கொடுத்த போஸ். 
– படம்
@el_profesor_KK, சென்னை)

பால் டீ. மதுரையின் சிறப்பு. தமிழகத்தின் பல ஊர்களைப் போல தேனீர் டிகாஷனில் பாலை கலக்காமல், நேரடியாக பாலில் தேத்தூளை போட்டு கொதிக்க விடுவர். முன்னதாகவே தண்ணீர் பாலில் கலக்கப்பட்டு விடும் என்பது “தொழில் நுணுக்கம்”… படம்: இரணியன், மதுரை

தேநீர் அருந்துபவர்களும், தேநீர் போடுபவர்களும் சுறுசுறுப்பாக இருக்கும் அலீஃப் டீஸ்டால், தில்லை நகர், திருச்சி.
படம்: செழியன், திருச்சி

கம்பிகள் தடுத்தாலும் தேநீர் கிடைக்கும். சென்னை பல்கலை வளாகம், சென்னை. படம்: இளவேனில் துரை, சென்னை

ஞாயிறு, செவ்வாய், வெள்ளி – பருத்திப்பால்; திங்கள், வியாழன் – சிறுபருப்பு பாயாசம்
புதன், சனி – சம்பா கோதுமை. இடம் : மேற்கு தாம்பரம் மார்க்கெட், சென்னை.
படம்: சாக்ரடீஸ், சென்னை

நயமான தேநீரை நீங்கள் சுவைப்பதற்கு காத்திருக்கிறது, பாலாடை போர்த்திய பால் பாத்திரம்.
படம்: பிரதிவ், திருச்சி

வெறிச்சோடிப்போன தெருவால் வாடும் பலகாரங்கள்
படம்: பிரதிவ், திருச்சி

சவுதி அரேபியா, அல் ஜுபைல் எனும் தொழில் நகரத்திலுள்ள டீ கடை. இந்தக் கடை பணியாளர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இங்கே, டீயுடன் சேர்த்து வழங்கப்படும் முட்டை புரோட்டா மற்றும் சான்ட்விச் ரொம்ப பிரபலம். நாளொன்றுக்கு 3000 ரியால் அல்லது 54,000 ரூபாய்க்கு வியாபாரம் நடைபெறுகிறது.
படம்: அபுபக்கர் சித்திக், சவுதி அரேபியா

கிராமத்து தேநீர்க்கடைதான் எவ்வளவு அழகாக இருக்கிறது!
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுகா, ஆலக்குடி கிராமத்து டீக்கடை.
கஜா புயல் செய்தி சேகரிப்பின் போது எடுக்கப்பட்டது.
படம்: வினவு புகைப்பட செய்தியாளர்

காலியான டம்ளர்… காத்திருக்கிறது அடுத்த சுற்றில் மற்றொருவரின் களைப்பாற்ற… படம்: எழில், சென்னை

பிரிவினையை எதிர்த்த மன்டோவின் படத்தை வெளியிட உதவுவேன் : பாகிஸ்தான் அமைச்சர்

டிகரும் இயக்குநருமான நந்திதா தாஸ் இயக்கத்தில் எழுத்தாளர் சதக் அசன் மண்டோவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு வெளியான படம் ‘மண்டோ’.

பிரிட்டீஷ் ஆட்சியின் ஒன்றுபட்ட இந்தியாவில் பிறந்த சதக் அசன் மண்டோ, மத அடிப்படையில் நாடுகள் பிரிவதை எதிர்த்தார். தன்னுடைய படைப்புகளில் மதங்களின் அடிப்படையில் பாகிஸ்தான், இந்தியா என நாடுகள் பிரிந்தபோது ஏற்பட்ட படுகொலைகள், அது ஏற்படுத்திய உளவியல் அழுத்தங்களை பதிவு செய்தவர் மண்டோ. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் வசித்த மண்டோ, மத அடிப்படைவாதிகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளானவர்.

மாண்டோவின் வாழ்க்கையின் சில முக்கியமான சம்பவங்களை வைத்து நந்திதா தாஸ் இயக்கிய ‘மண்டோ’ படம் இந்தியாவில் வெளியானது, விமர்சன ரீதியாக வரவேற்பையும் பெற்றது. நவாசுதீன் சித்திக் மற்றும் ரசிகா துகால் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மண்டோ மும்பையில் வசித்த நாட்களைப் பதிவு செய்வதோடு, பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்றதையும் இந்தப்படம் பேசுகிறது.

ஆனால், பாகிஸ்தானில் மண்டோ படம் வெளியிட அனுமதிக்கப்படவில்லை. இதுகுறித்து நந்திதா தாஸ் அளித்த பேட்டி ஒன்றியில், “பிரிவினைக்கு எதிரான கருத்துக்கள், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் பாகிஸ்தானின் சமூக கட்டுப்பாடுகளுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பாகிஸ்தான் சென்ஸார்போர்டு மண்டோ படத்தை வெளியிட அனுமதிக்கவில்லை” என தெரிவித்திருந்தார். மேலும், “கேட்க வேண்டிய குரல்களை ஒடுக்குவது எங்கு நடந்தாலும் ஆபத்தானதே” எனவும் விமர்சித்திருந்தார்.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : தேசப்பிரிவினைக்கு காரணம் யார் ?
♦ இந்தியா குறித்து பாகிஸ்தான் மக்கள் என்ன நினைக்கிறார்கள் ?

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், “பாகிஸ்தானில் மண்டோ படம் வெளியாகதது வருத்தம் அளிக்கிறது” என நந்திதா தாஸ் தெரிவித்திருந்தார். இந்தப் பதிவுக்கு பதிலளித்திருக்கும் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி, “பாகிஸ்தானில் இந்தப் படத்தை வெளியிட முயற்சிக்கிறேன். கமர்ஷியல் தன்மை குறைவாக மண்டோ படத்தை அவருடைய நாட்டில் வெளியிட நிச்சயம் எவராவது முன்வருவார் என நம்புகிறேன்” என எழுதியுள்ளார்.

மண்டோ படம் வெளியாவது குறித்து பாகிஸ்தானின் சென்ஸார் போர்டின் தலைவர் தன்யால் கிலானி, ‘மண்டோ படத்துக்கு சென்ஸார் போர்டு சான்றிதழ் இன்னும் தரப்படவில்லை. பாகிஸ்தானில் வெளியிட விரும்பும் விநியோகஸ்தர்கள், சென்ஸார்போர்டு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம்’ என தெரிவித்துள்ளார்.

இதனிடைய மண்டோ படத்தை வெளியிட கோரி செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், மண்டோவின் மகள்கள் உள்ளிட்ட பலர் இணைந்து கையெழுத்திட்ட கடிதம் ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஒடுக்குமுறைக்கும் மதவாத அடிப்படைவாதத்துக்கும் பெயர் பெற்ற பாகிஸ்தான், எதிர்க் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள தயாராகி வருகிறது. ஜனநாயக நாடாக சொல்லிக் கொண்ட இந்தியா இந்துத்துவாதிகளில் கையில் சிக்கி, எதிர்க்கருத்துக்களை சொல்லவே கூடாது என அடிப்படைவாதத்துக்கு தயாராகி வருகிறது.

தமிழாக்கம்: கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

ஸ்டெர்லைட்டை திறக்காதே ! தூத்துக்குடியில் கருப்புக் கொடி எதிர்ப்பு | தஞ்சை – விழுப்புரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்க எடுக்கப்படும் முயற்சிகளைக் கண்டிக்கும் விதமாக நாளை (19-12-2018) தமிழகமெங்கும் கருப்புக் கொடி ஏற்றி எதிர்ப்பைத் தெரிவிக்க ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு அறைகூவல்.

எதிர்வரும் 21-12-2018 அன்று தூத்துக்குடி மாவட்ட மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருப்பதாக பத்திரிகையாளர் சந்திப்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் அரிராகவன் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் சந்திப்பின் காணொளி:

*****

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதியளிக்கப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நேற்று (17.12.2018) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

*****

விழுப்புரத்தில்…

டெல்லி பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது, “ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனி சட்டம்  இயற்று !” என்று மக்கள் அதிகாரம் சார்பாக தடையை மீறி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் 17.12.2018 அன்று காலை 11 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் தோழர் ஒருவரை கழுத்தைப் பிடித்து தள்ளும் போலீசார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.

*****

தஞ்சையில்…

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டமியற்று !” என்ற முழக்கத்தை முன்வைத்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக தஞ்சை ரயிலடியில் 17.12.2018 அன்று காலை 11:00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னதாக இந்த ஆர்ப்பாட்டம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், போலீசு அனுமதி மறுத்து கடிதம் ஒன்று அளித்திருந்தது. இருப்பினும் மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகளுக்காக போலீசின் அனுமதிக்காக காத்திருக்க முடியாது என்ற அடிப்படையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தை நடத்தினர். இதில் சிபிஐ கட்சித் தோழர்கள் மற்றும் சில ஜனநாயக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத போலீசு டிஎஸ்பி தலைமையில் வந்து ஆர்ப்பாட்டத்தை தடுத்து நிறுத்தியது. மேலும் “நீங்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது தவறு..” என போராடுபவர்களை மிரட்டப்பார்த்தது. “மக்கள் தங்கள் கோரிக்கைக்களுக்காக போராடுவது உங்களுக்கு சட்டவிரோதமா..” என கேட்டதும் “நீங்கள் நீதிமன்றம் சென்று கேளுங்கள்.. எங்களுக்கு மேலிடத்து அழுத்தம்..” எனக் கூறினார் டிஎஸ்பி.  “ஒவ்வொரு பிரச்சினைக்கும் நீதிமன்றத்தை எப்படி அணுக முடியும். கருத்துச்சுதந்திரம் என்பதற்கே இது விரோதமானது அல்லவா…” என தோழர்கள் கேட்டதற்கு பதில் சொல்ல இயலாமல் அனைவரையும் கைது செய்தது போலீசு. அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்திருந்து பின்னர் மாலை விடுவித்தது போலீசு.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை மண்டலம்.

கேள்வி பதில் : ஐந்து மாநில தேர்தலில் வாக்களிக்காத மக்களின் மனநிலை என்ன ?

தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் மொத்த வாக்காளர்களில் எத்தனை சதம் மக்கள் இக்கட்சிகளுக்கு வாக்களித்துள்ளார்கள் ? வாக்களிக்காதவர்களை என்ன கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்? அவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?

– அழகிரிசாமி.

ன்புள்ள அழகிரிசாமி,

ஐந்து மாநில தேர்தல்களில் வாக்களித்தோர் சதவீதம் பின்வருமாறு :
மத்தியப் பிரதேசம் 75%, தெலுங்கானா 73.20%, இராஜஸ்தான் 74%, சட்டிஸ்கர் 76% மிசோரம் 80%

இந்திய தேர்தல் நிலவரங்களை பார்க்கும் போது மேற்கண்ட ஐந்து மாநிலங்களில் பதிவாகியிருக்கும் வாக்கு சதவீதம் கொஞ்சம் அதிகம்தான். வழக்கமாக 65 சதவீத அளவிலான வாக்குப்பதிவே இங்கு அதிகம். மிசோரம் மாநிலம் ஒரு பாராளுமன்ற தொகுதியை மட்டும் கொண்டிருப்பதால் அங்கே 80% வாக்கு பதிவை விதிவிலக்காக வைத்துக் கொள்ளலாம். இதை தவிர்த்து விட்டு பார்த்தால் மற்ற நான்கு மாநிலங்களிலும் சராசரியாக 75 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மீதம் உள்ள 25 சதவீத மக்கள் வாக்களிக்கவில்லை

பொதுவில் தேர்தல் காலத்தில் கிராமப்புறங்களில் வாக்களிக்கும் விகிதம் அதிகமாகவும், நகரப்புறங்களில் குறைவாகவும் இருக்கும். நகர்ப்புறங்களிலும் நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தோர் மத்தியில் வாக்களிக்காதவர்கள் கணிசமாக இருப்பார்கள். வாக்களிக்காத இவர்கள் யாரும் அரசியல் பூர்வமாக தேர்தலை புறக்கணிப்பார்கள் அல்ல. ஒருவகையில் வாக்குச்சாவடி சென்று எந்த வேட்பாளருக்கும் ஆதரவில்லை என நோட்டா பட்டனில் வாக்களிக்கும் மக்கள் கூட கொஞ்சம் அரசியல்ரீதியாக எதிர்ப்பை காட்டுகிறார்கள் என்று சொல்லலாம்.

மேலும் வாக்களிக்காத இப்பிரிவினர் தேர்தலன்று வாக்களிப்பதை கூட ஒரு சுமையாகவும் சிரமமாகவும் கருத கூடியவர்களே!

கிராமப்புறங்களில் சாதி மத பிடிமானம் மற்றும் உள்ளூர் பிரமுகர்களின் செல்வாக்கு காரணமாக அதிகமான மக்கள் வாக்களிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் அத்தகைய நிலை இல்லை. பொதுவில் அரசியல் என்றாலே சாக்கடை, அரசியல்வாதிகள் என்றாலே கழிசடை என்ற கருத்து நடுத்தரவர்க்கத்தின் மத்தியில் ஆழமாக பதிய வைக்கப்பட்டிருக்கிறது.

இன்னொருபுறம் கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் வாக்களிக்கும் மக்கள் யாரும் இந்த ஜனநாயக அமைப்பின் மீது தீராத நம்பிக்கை கொண்டிருப்பதால் வாக்களிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது. அவர்களை பொருத்தவரை இந்த அமைப்பின் மீது எந்த நம்பிக்கையும் இல்லை என்பதை அவர்களது வாழ்வியல் அனுபவமே சொல்கின்றன. அதிகபட்சம் ரேசன் கார்டு, சாதிச்சான்றிதழ், நலத்திட்டங்களை பெறுவது தவிர அவர்களுக்கு இந்த அரசியல் அமைப்பில் இடமில்லை. அந்த அளவைத் தாண்டி இம்மக்கள் உலகில் அரசியல் பிடிமானம் இல்லை.

படிக்க:
♦ தேர்தல் புறக்கணிப்பு ஏன் ? தீர்வுதான் என்ன ?
♦ தேர்தல் புறக்கணிப்பால் என்ன பயன் ? வாசகர் விவாதம்

மேலும் வாக்களிக்கும் மக்கள் அதை ஒரு சடங்காகவும் காலம் காலமாக செய்ய வேண்டிய கடமையாகவும் கருதுகிறார்கள். சில நேரம் அந்தந்த காலகட்டத்தின் தேவைகள் விருப்பங்கள் எதிர்பார்ப்புகள் காரணமாக கூட அவர்கள் வாக்களிக்கலாம். இதே காரணங்களை வைத்து அவர்கள் தேர்தலை சில நேரம் புறக்கணிக்கவும் செய்யலாம். அல்லது காசு வாங்கிக்கொண்டு வாக்கு அளித்தாலும் அந்த மக்களும் தேர்தல் மற்றும் அரசியல் அமைப்பின் மீது நம்பிக்கை கொண்டு வாக்களிப்பதில்லை. அது ஒரு நாள் கூத்து, விழா என்ற வகையில் வாக்களிக்கிறார்கள். தேர்தல் முடிந்து தமது தொகுதியில் தேனாறும் பாலாறும் ஓடும் என்ற கனவெல்லாம் அவர்களிடம் இல்லை. வாக்களிப்பது என்பது கோவிலுக்கு சென்று வழிபடுவது போல ஒரு சடங்காக மாறிவிட்டது.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தேர்தலில் வாக்களிக்காத மக்கள் அரசியல் அற்ற முறையிலும், வாக்களித்தவர்கள் தேர்தலைத் தாண்டி அரசியல் ரீதியாக இந்த அமைப்பை ஓரளவிற்கேனும் புரிந்தவர்களாவும் இருக்கிறார்கள். வாக்களிக்காத நபர்களுக்கு இந்த அமைப்பு வழங்கியிருக்கும் இடம் உரிமை சலுகை எவையும் வாக்களிக்கும் மக்களுக்கு இருப்பதில்லை. எதிர்காலத்தில் நோட்டாவின் விகிதம் அதிகரித்தாலும் அதை தூக்குவதற்கு கட்சிகளும், அரசும் கண்டிப்பாக முயலும். மேலும் நோட்டா என்பது இந்த தேர்தல் அரசியல் அமைப்பின் மீதான நம்பிக்கையை தக்கவைக்கும் நோக்கிலும் வைத்திருக்கிறார்கள். தனிப்பட்ட வேட்பாளரின் குணநலன்கள் காரணமாக தொகுதியில நல்ல வேட்பாளர் இல்லை என்றே நோட்டாவை தெரிவு செய்யச் சொல்லி பிரச்சாரம் நடக்கிறது.

ஆகவே தேர்தலை அரசியலற்று புறக்கணிக்கும் மக்களிடமும், தேர்தலை அரசியலற்று ஆதரிக்கும் பெரும்பான்மை மக்களிடமும் நாம் தொடர்ந்து பிரச்சாரத்தை செய்ய வேண்டியிருக்கிறது. மக்களுக்கான உரிமைகள், ஜனநாயகம் இந்த தேர்தல் அமைப்பில் இல்லை என்பதை அவர்களது சொந்த அனுபவத்தினூடாகவும், அதற்கான மாற்றுக்களை முன்வைத்தும் நடக்கும் அந்த பிரச்சாரத்தினூடாக மக்கள் விழிப்புணர்வு அடைவார்கள்.

உங்கள் கேள்விகளை அனுப்ப:

தங்களின் கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அவனது கண்கள் மட்டும் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளிவீசிக் கொண்டிருந்தன !

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 38

மாக்சிம் கார்க்கி
ப்போதும் வேலையிலிருந்து குறிப்பிட்ட நேரத்துக்கு வீடு திரும்பி வரும் நிகலாய், ஒரு நாள் வழக்கத்துக்கு மாறாக நேரம் கழித்துத் திரும்பி வந்தான். வந்தவன் தன்னுடைய உடுப்புகளைக்கூட களையாமல் கைகளைப் பதறிப்போய் பிசைந்து கொண்டே சொன்னான்:

“நீலவ்னா! நம்முடைய தோழர்களில் ஒருவன் சிறையிலிருந்து தப்பி ஓடி விட்டானாம். யாராயிருக்கலாம்? என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை …..”

தாயின் உடம்பு ஆட்டம் கண்டு அசைந்தது.

”பாவெலாயிருக்குமோ?” என்று ஓர் ஆசனத்தில் உட்கார்ந்துக் கொண்டே மெதுவாகக் கேட்டாள் அவள்.

”இருக்கும்!” என்று தோளை அசைத்துக் கொண்டே சொன்னான் நிகலாய்: “ஆனால் அவனை மறைத்து வைப்பதற்கு நாம் என்ன செய்வது? அவனை எங்கே கண்டுபிடிப்பது? அவனைக் கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கையோடு நான் தெருத் தெருவாய்ச் சுற்றி அலைந்தாய்விட்டது. அலைந்தது முட்டாள்தனம்தான். ஆனால், நாம் ஏதாவது செய்தாக வேண்டுமே. நான் பழையபடியும் போகிறேன்……”

‘நானும் வருகிறேன்” என்று கத்தினாள் தாய்.

“பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான். சௌக்கியமாயிருக்கிறான். அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்; பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.”

“நீங்கள் இகோரிடம் போய், அவனுக்கு ஏதாவது விஷயம் தெரியுமா? என்று தெரிந்து கொண்டு வாருங்கள்” என்று சொல்லிவிட்டு, அவன் அவசர அவசரமாக வெளியேறினான்.

தாய் தன் தலைமீது ஒரு சவுக்கத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டு அவனைத் தொடர்ந்து தெருவுக்கு விரைந்து சென்றாள். அவள் மனத்தில் நம்பிக்கை நிறைந்திருந்தது. அவளது கண்கள் செவ்வரி படர்ந்து அசைந்தன; அவளது இதயம் படபடத்துத் துடித்து, ஓடுகின்ற மாதிரி அவளை வேகமாக விரட்டியடித்தது. அவள் தன் தலையைக் குனிந்தவாறே எதிரிலுள்ள எவற்றையுமே பார்க்காமல் நான் எதிர்பார்த்துச் செல்வதை எதிரே கண்டுவிடலாம் என்ற எண்ணத்தோடேயே சென்று கொண்டிருந்தாள்.

”நான் அங்கே அவனைக் கண்டுவிட்டேன் என்றால் — அவளது இந்த நம்பிக்கையே அவளை விரட்டி விரட்டி முன்னேறச் செய்தது.

பொழுது உஷ்ணமாயிருந்தது. அவளும் களைத்துப்போய் மூச்சுவிடத் திணறினாள். இகோரின் வீட்டுப் படிக்கட்டுக்குச் சென்றவுடன் அவளால் ஒரு அடிகூட முன்னே செல்ல முடியவில்லை. அவள் நின்றாள். சுற்றுமுற்றும் பார்த்தாள். திடீரென ஒரு கூச்சலிட்டுக் கண்களை மூடிக்கொண்டுவிட்டாள். அந்த வீட்டு வாசலில், தனது பாக்கெட்டுக்குள் கைகளை விட்டுக் கொண்டு நிகலாய் வெஸோவிஷிகோவ் நிற்பது போலத் தோன்றியது. அவள் மீண்டும் பார்த்தபோது அங்கு யாரையுமே காணோம்.

“இது என் மனப் பிராந்திதான்!” என்று நினைத்துக்கொண்டே படியேறினாள். காதுகளைத் தீட்டிக் கேட்டாள். வெளிமுற்றத்தில் யாரோ மெல்ல மெல்ல நடக்கும் காலடியோசை அவள் காதில் விழுந்தது. அவள் படியேறி மேலே சென்று கீழே பார்த்தாள். மீண்டும் அதே முகம். அதே அம்மைத் தழும்பு. விழுந்த முகம் தன்னைப் பார்த்ததும் புன்னகை புரிந்தவாறு நிற்பதைக் கண்டாள்.

“நிகலாய்! நிகலாய்!” என்று கத்திக்கொண்டே ஏமாற்றத்தால் வேதனையடைந்த இதயத்தோடு அவனை நோக்கி ஓடினாள். “நீ போ, போ” என்று தன் கையை ஆட்டிக்கொண்டே அமைதியாகச் சொன்னான் அவன்.

அவள் விடுவிடென்று மாடிப் படியேறி இகோரின் அறைக்கு வந்தாள். அங்கு அவன் ஒரு சோபாவில் படுத்திருப்பதைக் கண்டாள்.

“நிகலாய் ஓடி வந்துவிட்டான் – சிறையிலிருந்து” என்று அவள் திக்கித் திணறினாள்.

”எந்த நிகலாய்?” என்று கரகரத்த குரலில் கேட்டுக்கொண்டே தலையணையிலிருந்து தலையைத் தூக்கினான்; “இரண்டு நிகலாய் இருக்கிறார்களே”

“வெஸோவ்ஷிகோவ் அவன் இங்கே வந்து கொண்டிருக்கிறான்.

“சபாஷ்!”

இந்தச் சமயத்தில் நிகலாய் வெஸோவ்ஷிகோவே அறைக்குள் வந்து விட்டான். உள்ளே வந்ததும் அவன் கதவைத் தாழிட்டான்; தன் தொப்பியை எடுத்துவிட்டு, தலையைத் தடவிக் கொடுத்தான். லேசாகச் சிரித்துக்கொண்டே நின்றான். இகோர் முழங்கைகளை ஊன்றி எழுந்து கொண்டு, தலையை அசைத்தவாறு சொன்னான்.

”வருக வருக ……”

நிகலாய் பல்லைக் காட்டிப் புன்னகை புரிந்தவாறே தாயிடம் நெருங்கி அவள் கையைப் பற்றினான்.

‘நான் மட்டும் உன்னைச் சந்தித்திராவிட்டால், மீண்டும் சிறைக்கே திரும்பி போயிருப்பேன். எனக்கு நகரில் யாரையுமே தெரியாது. தொழிலாளர் குடியிருப்புக்குத் திரும்பிப் போயிருந்தாலோ ஒரே நிமிஷத்தில் அவர்கள் என்னைப் பிடித்திருப்பார்கள். ஏனடா முட்டாள்தனமாய் சிறையிலிருந்து தப்பியோடி வந்தோம் என்று நினைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றித் திரிந்தேன். திடீரென்று நீலவ்னா தெரு வழியாக ஓடிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். உடனே அவளுக்குப் பின்னாலேயே நானும் ஓடி வந்தேன்.

”சரி, நீ எப்படி வெளியே வந்தாய்?” என்று கேட்டாள் தாய்.

அவன் அந்தச் சோபாவின் ஓரத்தில் உட்கார்ந்துகொண்டு தோளைக் குலுக்கிக் கொண்டு பேசத்தொடங்கினான்.

”சந்தர்ப்ப விசேஷம்தான்! கிரிமினல் கைதிகள், சிறையதிகாரியைப் பிடித்து உதைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது நான் காற்று வாங்கியவாறு வெளியே உலாவிக் கொண்டிருந்தேன். அந்தச் சிறையதிகாரி ஒரு தடவை எதையோ திருடினான் என்பதற்காக, அவனுக்கு போலீஸ் படையிலிருந்து கல்தா கொடுத்தார்கள். இப்போதோ இந்தப் பயல் ஒவ்வொருத்தனையும் நோட்டம் பார்த்துத் திரிவதும், உளவு சொல்வதுமாகவே இருந்தான். இவனால் யாருக்குமே நிம்மதி கிடையாது. எனவேதான் அவர்கள் அவனைப் பிடித்து மொத்தினார்கள். ஒரே குழப்பமாக இருக்கவே, சிறையதிகாரிகள் விசில்களை ஊதிக்கொண்டு நாலாபக்கங்களிலிருந்தும் ஓடி வந்தார்கள். நான் சிறைக் கதவுகள் திறந்து கிடப்பதைப் பார்த்தேன். அதற்கு அப்பாலுள்ள மைதானச் சவுக்கத்தையும் ஊரையும் பார்த்தேன். மெதுவாக கனவில் நடப்பது மாதிரி நடந்து வெளியே வந்தேன். தெருவுக்குள் பாதி தூரத்துக்கு மேல் வந்த பிறகுதான் எனக்கே நினைவு தெரிந்தது. உடனே யோசித்தேன், எங்கே போவது? திரும்பிப் பார்த்தேன். அதற்குள் சிறைக் கதவுகள் மூடிவிட்டதைக் கண்டேன்…”

“ஹும் என்றான் இகோர். “ஏன் ஐயா நீங்கள் பேசாமல் திரும்பிப் போய்க் கதவைத் தட்டி, அவர்களைக் கூப்பிட்டு, “ஐயா. என்னை மன்னியுங்கள், கனவான்களே நான் ஏதோ சிறு பிழை செய்துவிட்டேன். பொறுத்தருளுங்கள்’ என்று சொல்லி பழையபடியும் உள்ளே போயிருக்கலாமே.”

“ஆமாம்” என்று கூறிச் சிரித்தான் நிகலாய். ”அது முட்டாள்தனம். யாரிடமும் எதுவும் சொல்லாமல் நான் இப்படி ஒடிவந்துவிட்டதானது, என்னுடைய தோழர்களுக்குச் சரியென்று பட்டிராது. சரி. அப்படியே போய்க்கொண்டிருந்தேன். எதிரே ஒரு சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. ஒரு குழந்தையைப் புதைப்பதற்காகப் போய்க் கொண்டிருந்தார்கள். அவர்களோடு நானும் சேர்ந்து, சவப்பெட்டிக்குப் பக்கமாகச் சென்று என் தலையைத் தொங்கவிட்டவாறு, யாரையுமே நிமிர்ந்து பார்க்காமல் நடந்துவந்தேன். இடுகாட்டில் நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து காற்று வாங்கினேன். அப்புறம் திடீரென எனக்கு ஒரு யோசனை வந்தது……”

“ஒரே ஒரு யோசனைதானே?” என்று கேட்டுவிட்டு, பெருமூச்செறிந்தான் இகோர். “உன் தலையிலே பல யோசனைகளுக்குத்தான் இடமிருக்காதே என்று நினைத்தேன்.”

வெஸோவ்ஷிகோவ் வாய் நிறைந்து சிரித்தான். தலையை அசைத்துக் கொண்டு பேசினாள்.

“ஓ! என் மூளை முன்னை மாதிரி காலியாய் இல்லை! என்ன இகோர் இவானவிச் உனக்கு இன்னும் சிக்குக் குணமாகவில்லையா?”

படிக்க:
ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !
இந்தியாவிலிருந்து 45 இலட்சம் கோடி டாலரை பிரிட்டன் திருடியது எப்படி ?

”ஒவ்வொருவரும் தம்மால் முடிந்ததைச் செய்கிறார்கள்” என்று ஈரமாய் இருமியவாறு பதிலளித்தான் இகோர்: சரி உன் கதையை ஆரம்பி.”

“அப்புறம் நான் இங்கே இருக்கிற பொதுஜனப் பொருட்காட்சி சாலைக்குள்ளே நுழைந்தேன். உள்ளே சென்று அங்குமிங்கும் சுற்றிப் பார்த்தவாறே யோசித்தேன். இனிமேல் எங்கே போவது என் மீது எனக்குக் கோபம்கூட வந்தது. அத்துடன் பசி வேறே, மீண்டும் தெருவுக்கு வந்தேன். மனமே கசந்துபோய், எரிச்சலோடு நடந்து வந்தேன். போலீசார் ஒவ்வொருவரையும் கூர்ந்து கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். “சரிதான், என்னை மாதிரி மண்ணுப் பிறவியாக இருந்தால்…! நான் சிறிது நேரத்தில் எவனாவது ஒரு நீதிபதி முன்னால்தான் இழுத்துப் செல்லப்படுவேன் என்று நினைத்தேன். இந்தச் சமயத்தில் திடீரென்று என்னை நோக்கி நீலவ்னா ஓடிவருவது தெரிந்தது. நான் ஒரு பக்கமாக ஒதுங்கி நின்றேன்; பிறகு அவளைப் பின் தொடர்ந்தேன். இவ்வளவுதான் விஷயம்.”

”நான் உன்னைப் பார்க்கவில்லையே” என்று குற்றம் செய்து விட்டவள் மாதிரிக் கூறினாள் தாய். அவள் நிகலாயைக் கூர்ந்து பார்த்தாள். அவள் முன்னைவிட மெலிந்துபோய் இருப்பதாக அவளுக்குப்பட்டது.

அங்குள்ள தோழர்கள் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்கள் என்று தலையைச் சொறிந்துக்கொண்டே சொன்னான் நிகலாய்.

“சரி. சிறை அதிகாரிகளைப் பற்றி உனக்குக் கவலை இல்லையா? அவர்கள் மீது உனக்கு அனுதாபம் கிடையாதா? அவர்களும்தான் கவலை பட்டுக்கொண்டிருப்பார்கள்” என்றான் இகோர். அவன் வாயைத் திறந்து உதடுகளை அசைத்தான். காற்றையே கடித்துச் சுவைத்துத் தின்பது மாதிரி இருந்தது அவனது வாயசைப்பு. ‘சரி, வேடிக்கைப் பேச்செல்லாம் இருக்கட்டும், முதலில் உன்னை எங்காவது ஒளித்து வைக்க வேண்டுமே. அது ரொம்ப நல்ல காரியம்தான். ஆனால் லேசில் நடக்கிற காரியமா? நான் மட்டும் எழுந்து நடக்க முடிந்தால் அவன் பெருமூச்சு விட்டவாறே தன் கைகளை மார்பின் மீது வைத்து, நெஞ்சைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.

”நீ ரொம்பச் சீக்காயிருக்கிறாய், இகோர் இவானவிச்!” என்று தலையைத் தாழ்த்திக்கொண்டே கூறினான் நிகலாய். தாய் பெருமூச்சு விட்டாள். அந்த அடைசலான சிறு அறையை கவலையோடு பார்த்தாள்.

”அது என் சொந்த விஷயம்” என்றான் இகோர். “அம்மா, நீங்கள் அவனிடம் பாவெலைப் பற்றிக் கேளுங்கள். சும்மா இன்னும் பாசாங்கு செய்து கொண்டிராதீர்கள்.”

நிகலாய் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

“பாவெல் நன்றாகத்தான் இருக்கிறான். சௌக்கியமாயிருக்கிறான். அவன்தான் எங்களுக்குத் தலைவன் மாதிரி இருக்கிறான்; அதிகாரிகளோடு பேசுகிறான்; பொதுவாக, அவன்தான் உத்தரவு போடுகிறான். எல்லோரும் அவனை மிகவும் மதிக்கிறார்கள்.”

நிகலாய் வெஸோவ்ஷிகோவ் சொல்வதைக் கேட்டவாறே தலையை அசைத்துக்கொண்டாள் தாய். நீலம் பாரித்து உப்பியிருந்த இகோரின் முகத்தையும் கடைக்கண்ணால் பார்த்தாள். அந்த முகமே அசைவற்று, உணர்ச்சியற்றுத் தட்டையாயிருப்பது போலத் தோன்றியது அவளுக்கு. அவனது கண்கள் மட்டும்தான் உணர்ச்சியோடும் உவகையோடும் ஒளி வீசிக்கொண்டிருந்தன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

ரஃபேல் ஊழல் : உச்சநீதிமன்றம் பார்க்க மறுத்த உண்மைகள் !

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டஸால்ட் நிறுவனத்திடமிருந்து 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையே கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் முடிவானது. இதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால்,  நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் உச்ச நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி தள்ளுபடி செய்தது.

முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, அருண் சோரி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் ஆகியோரும் ரஃபேல் போர் விமானங்களை வாங்கியதில் நடந்துள்ள முறைகேட்டை விசாரிக்கக் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர். உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருக்கும் நிலையில், அவர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், ‘உச்சநீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்திருப்பதால், மோடி அரசு முறைகேடு செய்யவில்லை என அர்த்தமாகிவிடாது’ என தெரிவித்துள்ளனர்.

கூட்டறிக்கையில், “ நீதிமன்றத்தின் சுதந்திரமான மேற்பார்வையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை  கோரிய  எங்கள் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பது எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. நாங்கள்  ஒப்பந்தம் தொடர்பான பல்வேறு புகார்களை சிபிஐ-யிடம் சமர்பித்த பிறகு,  உச்சநீதிமன்றத்தை அணுகினோம்” எனக் கூறியுள்ள இவர்கள், அந்த விவரங்களை தந்துள்ளனர்.

1. பிரதமர் மோடி, 36 ரஃபேல் ஜெட் விமானங்களை வாங்க, ஏப்ரல் 10, 2015 அன்று கையெழுத்திட்டார். இந்திய விமானப் படையின் தலைமையகங்களில் இருந்தும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதி பெறாமலேயே 36 ஜெட் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போட்டப்பட்டது. பாதுகாப்பு தொடர்பான கொள்முதலுக்கு இந்த இரண்டு அனுமதிகளும் கட்டாயம் தேவை. ஆனால், அந்த விதி மீறப்பட்டிருக்கிறது.

2. பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் அனுமதியுடன் இந்திய விமானப் படை 126 போர் விமானங்கள் வேண்டும் என நீண்ட காலமாக கோரி வருகிறது. அதற்கான டெண்டர்கள் அறிவிக்கப்பட்டு, ஆறு நிறுவனங்கள் பங்கேற்று, அதில் இரண்டு நிறுவனங்கள் தேர்வாகின. குறைந்த அளவிலான டெண்டர் தொகை அடிப்படையில் டஸால்ட் என்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் போனது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் 126 விமானங்கள் வாங்கப்படும் என்றும் இதில் 18 விமானங்கள் பறக்கும் நிலையில் வாங்கப்படும் என்றும் மீதியுள்ள விமானங்களை ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனம் மூலம் தொழில்நுட்ப பரிமாற்றத்தின் படி தயாரித்துக் கொள்ளலாம் என ஒப்பந்தம் சொன்னது.

3. மார்ச் 25, 2015-ல், டஸால்ட் நிறுவனத்துடனான ஒப்பந்த பேச்சுவார்த்தை 95% நிறைவடைந்துவிட்டதாகவும் விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் டஸால்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி, இந்திய விமானப் படையின் உயர் அதிகாரிகள் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் அதிகாரிகள் உள்ளிட்டோர் அறிவித்தனர். இந்த ஒப்பந்தம் குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் அப்போது சொல்லப்படவில்லை. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் மோடி பிரான்சு அதிபருடன் 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் தன்னிச்சையாக கையெழுத்திட்டார். அதாவது, 126 விமானங்கள் 36 விமானங்களாக குறைப்பட்டன. 36 விமானங்களும் பறக்கக்கூடிய நிலையில் கொள்முதல் செய்யப்படும் எனவும் ஒப்பந்தம் சொன்னது. ‘உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர்’ என்கிற புதுவிதி உள்ளே சொருகப்பட்டு தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வதும் ‘மேக் இன் இந்தியா’ முழக்கமும் கைவிடப்பட்டன.

அதே நேரத்தில் அனில் அம்பானி, ‘ரிலையன்ஸ் டிபன்ஸ்’ என்ற புது நிறுவனத்தை தொடங்கி, ரஃபேல் ஒப்பந்தத்தில் கூட்டாளியாக நுழைகிறார். உள்நாட்டு உற்பத்தி பங்குதாரர் என்ற பெயரில் மொத்த ஒப்பந்தமும் ரிலையன்ஸ் நிறுவனத்து தரப்படுகிறது.  இந்த ஒப்பந்தத்தில் அப்போதைய பிரான்ஸ் அதிபராக கையெழுத்திட்ட ஹோலாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில், முன் அனுபவம் இல்லாத புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ஒப்பந்தத்தை அளிக்கும் முடிவை எடுத்தது முழுக்க முழுக்க இந்தியாவே என்றார்.  பிரான்ஸ் அரசுக்கும் இதற்கு தொடர்பில்லை என்றும் கூறினார்.

4. அதன் பிறகு, 36 ரஃபேல் விமானங்களின் அதிகபட்ச விலை 5.2 பில்லியன் யூரோக்கள் என பேச்சுவார்த்தை குழுவின் மூன்று மூத்த அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பிரதமர் தலைமையிலான பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவை குழு விமானங்களின் விலை 8. 2 பில்லியன் யூரோக்கள் என தன்னிச்சையாக உயர்த்தியது. இறுதியாக இந்த ஒப்பந்தம் 7.2 பில்லியன் யூரோக்களில் வந்து முடிந்தது. ஒப்பந்தப்படி, ஒரு விமானத்தின் விலை ரூ. 1650 கோடியாக உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், 2015 ஏப்ரல் 10-ம் தேதி அளித்த பேட்டியில், 126 விமானங்கள் 90 ஆயிரம் கோடிக்கு வாங்கப்படுவதாக, (அதாவது ஒரு விமானத்தின் விலை ரூ. 715 கோடி) சொல்லியிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது.

மேலே குறிப்பிட்ட இந்த உண்மைகளின் அடிப்படையில் எங்களுடைய புகாரை, நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரிக்கக் கோரி சிபிஐ-யிடம் அளித்தோம். ஆனாலும் எங்களுடைய புகாரின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்யவில்லை.

நீதிமன்றம் டிசம்பர் 14-ம் தேதி அளித்திருக்கும் தீர்ப்பு, நாங்கள் மனுவில் அளித்த, ஆவணப்படுத்தியிருந்த உண்மைகளை கணக்கில் கொள்ளவே இல்லை. விசாரணை கோரும் எங்களுடைய கோரிக்கையையும் அது பரிசீலிக்கவில்லை.

முரண்பாடாக, நாங்கள் இந்த ஒப்பந்தத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக அணுகி, அரசு சீல் வைக்கப்பட்ட உறைகளில் கொடுத்த தகவல்களின் அடிப்படையில், அதுகுறித்து எங்களுக்கு தெரிவிக்கப்படாமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  உண்மையில், தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கும் சில விசயங்கள் ஆவணங்களில் இல்லை என்பதோடு முழுவதுமாக தவறானவை.

சிஏஜி அறிக்கை குறித்த தவறு

நீதிமன்றம் தனது ஆணையின் 25-வது பத்தியில் இப்படி சொல்லியிருக்கிறது,

“விமானங்களின் விலை விவரங்கள், மத்திய தணிக்கை ஆணையத்திடம் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. மேலும், மத்திய தணிக்கை ஆணையத்தின் அறிக்கை பொது கணக்கு கமிட்டியால் ஆய்வு செய்யப்பட்டது.  சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே நாடாளுமன்றத்தில் தரப்பட்டது, பொது பார்வைக்கும் வந்தது…”

மேலே குறிப்பிட்ட அனைத்து தகவல்களும் ஆவணங்களிலோ, உண்மையில் சரியானதாகவோ இல்லை. பொது கணக்கு கமிட்டி ஆய்வு சமர்பிக்கப்படவில்லை என்பதோடு, சிஏஜி அறிக்கையின் ஒரு பகுதி நாடாளுமன்றத்திலோ, பொது பார்வைக்கோ வைக்கப்படவில்லை.  இந்த தவறான கூற்று மத்திய அரசு அளித்த தகவலின் அடிப்படையில்(எங்கள் பார்வைக்கு வராதது) கூறப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட மூன்று விவகாரங்களிலும் ஆதாரமற்ற பொய்கள் சொல்லப்பட்டிருக்கும் நிலையில் மூடப்பட்ட உறைகளில் அளிக்கப்படும் தகவல்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்படுவது எந்த அளவுக்கு ஆபத்தானவை என்பதற்கு இந்த கூற்று எடுத்துக்காட்டுகிறது.

தனது சுருக்கமான தீர்ப்பில் அடிப்படையிலேயே தவறான தகவல்களை நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்திய விமானப் படை அதிகாரிகளின் சாட்சியங்களில் உள்ள தவறுகள்

நீதிமன்றம் அதே பத்தியில் இந்திய விமானப் படையின் தலைவர், விமானத்தின் விலையை வெளிப்படையாக கூறுவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கூறியதாக குறிப்பிட்டுள்ளது.  இந்த கூற்று ஆவணப்படுத்தப்படவில்லை. அதோடு இதை நீதிமன்றம் எங்கிருந்து பெற்றது என்பதும் புரியவில்லை. அதோடு, விமானப்படை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடைமுறைகள் மற்றும் விலை குறித்து நீதிமன்றத்தின் முன் சாட்சியம் அளித்ததாக நீதிமன்றம் கூறுகிறது.

இந்த கூற்றும் உண்மையில்லை, விமானப்படை அதிகாரிகளிடம் நீதிமன்றம் ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு பதிலைப் பெற்றது. ரஃபேல் விமானங்கள் 3வது,  4வது,  5வது தலைமுறையை சேர்ந்தவையா என்பதும் எப்போது கடைசி பேச்சுவார்த்தை நடந்தது என்பது மட்டும்தான் கேட்கப்பட்டது.  பேச்சுவார்த்தை குறித்தோ, விலை குறித்தோ எந்தவொரு கேள்வியும் கேட்கப்படவில்லை. அவர்களும் பதில் சொல்லவில்லை. நீதிமன்றத்தில் அப்படியொரு விசாரணை நடைபெறவே இல்லை.

கொள்முதல் நடைமுறையில் இருந்த முதன்மையான விசயங்களை கண்டுகொள்ளவே இல்லை

126 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் நிறுத்தப்பட்டு, 36 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் போடப்படுவதாக அரசு தெரிவித்த தகவலை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. டஸால்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி, பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிவடைந்துவிட்டதாகவும் ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் எனவும் 2015, மார்ச் 25-ம் தேதி நேர்காணல் அளித்தார். மேலும் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் தாங்கள் நிறைவும் மகிழ்ச்சியும் பெறுவதாகவும் தெரிவித்திருந்தார். அவர் அளித்த வீடியோ நேர்காணலை நீதிமன்றத்தில் ஆதாரமாக அளித்திருந்தோம். அதை நீதிமன்றம் முற்றிலுமாக புறக்கணித்துவிட்டது.

மேலும் கொள்முதல் செய்வதில் விதிமீறல் செய்யப்பட்டிருப்பது குறித்து நாங்கள் எழுப்பிய புகாரை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஏப்ரல் 10-ம் தேதி பிரான்ஸ் அரசுடன் 36 விமானங்கள் வாங்கப்போவதாக பிரதமர் ஒப்பந்தம் செய்துகொண்டார். இந்திய விமானப்படை 36 விமானங்கள் வேண்டுமென கேட்கவுமில்லை, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ஒப்புதலையும் பெறவில்லை. விதிமுறைகள் பின்பற்றவில்லை என்பதை நாங்கள் சுட்டிக்காட்டியிருந்தோம். புதிய ஒப்பந்தம் செய்யப்பட்டதாக பிரதமர் தன்னிச்சையாக அறிவித்தார்.

36 விமானங்கள் விலை பற்றி நீதிமன்றம் கூறுகையில், இந்த விலை நிர்ணயம், புதிய விமானங்களின் அடிப்படை விலை மற்றும் அதன் இதர கூடுதல் விலை பற்றிய ஒப்பீட்டு விபரங்களை நாங்கள் கவனமாக ஆய்வு செய்ததில் அது RFP, IGA எனப்படும் ஒப்பந்த நடைமுறைகளின் வழி காட்டுதல்படியே செய்யப்பட்டுள்ளது என்கிறது.

விதிமுறைகளைப் பற்றி கண்டுகொள்ளாமல், நீதிமன்றம் அபாயகரமான முடிவை எடுக்கிறது. 75-வது பிரிவில் இப்படி கூறுவதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது, “பரிந்துரைக்கப்பட்ட நடைமுறையிலிருந்து ஏதேனும் விலகல் நேரிட்டால் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலுக்கு பாதுகாப்பு கொள்முதல் நடைமுறை மூலம் ஒப்புதல் தர அனுப்ப வேண்டும்”.  அதாவது அரசு நினைத்தால் என்ன வேண்டுமானால் செய்துகொள்ளலாம், (இந்த விசயத்தில் பிரதமர்) இறுதியில் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலின் ரப்பர் ஸ்டாம்ப் குத்தப்பட்டால் முடிந்தது என்பதைத்தான் நீதிமன்றம் சொல்கிறது.

விலை மாற்றத்தை கண்டுகொள்ளவில்லை !

விலை குறித்து நீதிமன்றம் இப்படிச் சொல்கிறது…

நாங்கள் விலை குறித்தும் விலைகளின் ஒப்பீடு குறித்தும் முழுமையாக ஆராய்ந்தோம். அதிகாரிகள் அளித்த தகவல்களையும் ஆராய்ந்தோம். 36 ரஃபேல் விமானங்களை வாங்குவதில் பராமரிப்பு மற்றும் ஆயுதங்களை உள்ளடக்கிய தொகுப்பில் வணிக லாபங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தார்கள். விலைகளை ஒப்பீடு செய்வது நீதிமன்றத்தின் பணியல்ல. மேலும் இதுபற்றி மேலதிக தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது அது பற்றி மேற்கொண்டு கூற இயலாது

விமானத்தின் விலை திடீரென 5.2 பில்லியனிலிருந்து 8. 2 பில்லியன் யூரோவாக விலை உயர்த்தப்பட்டது குறித்து நாங்கள் அளித்த விவரங்களை நீதிமன்றம் விசாரிக்கவில்லை.  பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று அதிகாரிகள்,  இந்த ஒப்பந்தத்தை எதிர்த்த காரணத்துக்காக இடமாற்றம் செய்யப்பட்டார்கள். ஆனால், இல்லாத சிஏஜி அறிக்கை குறித்து மீண்டும் மீண்டும் நீதிமன்றம் மேற்கோள் காட்டுகிறது.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துடன்
அனில் அம்பானியின் நிறுவனத்தை சேர்த்து குழப்பிக்கொள்கிறது !

2012-ம் ஆண்டிலிருந்தே ரிலையன்ஸ் நிறுவனம் டஸால்ட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக அனில் அம்பானியின் நிறுவனத்துடன் நடந்த ஆப்செட் ஒப்பந்தம் குறித்து நீதிமன்றம் சொல்கிறது.  டஸால்டுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது முற்றிலும் வேறுபட்ட முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம்.  அந்த பேச்சுவார்த்தைக்கும் 2015-ம் ஆண்டு ரஃபேல் ஒப்பந்தத்தின் போது தொடங்கப்பட்ட அனில் அம்பானியின் நிறுவனத்துக்கும் தொடர்பு இல்லை.

பாதுகாப்பு கொள்முதல் நடைமுறையின் படி, பாதுகாப்பு அமைச்சரின் ஒப்புதலின் கீழ் ஆப்செட் ஒப்பந்தங்கள் போடப்படவேண்டும் என்பதையும் நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை.

இந்த தகவல்களின் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த 36 ரஃபேல் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை என நீதிமன்றம் முடிவுக்கு வருகிறது.  “தனிநபர்களின் முன்முடிவுகளை வைத்து நீதிமன்றம் விசாரிக்க முடியாது” என அது சொல்கிறது.

நாங்கள் நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என கோரவில்லை. சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் சுதந்திரமான விசாரணையை கோரினோம்.  உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு லலிதா குமாரி வழக்கில் இதற்கான வழிமுறைகளை கூறியுள்ளது. அதாவது குற்றம் நடந்திருக்கிறது என கருதப்பட்டால், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, விசாரிக்கப்பட வேண்டும்.  இந்த ஒப்பந்தத்தின் மூலம் பெரும் பகுதியான பணம் ஆப்செட் ஒப்பந்தம் என்ற பெயரில் கமிஷனாக தரப்பட்டுள்ளது என்பது எங்களுடைய புகார். இந்த பணம் கைமாறுவதற்கென்றே ஆப்செட் ஒப்பந்தம் என்கிற புதிய வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவே எங்களுடைய குற்றச்சாட்டு.

அரசு குற்றமற்றது என சொல்லவில்லை

நிலைமை இப்படியிருக்க, நீதிமன்றம் அளித்த தீர்ப்பு எங்களை அதிர்ச்சியடைய வைத்தது; ஏமாற்றம் தந்தது. நீதிமன்றம் நாங்கள் அளித்த சான்றுகளை ஆராயவில்லை; ஆராய்ந்ததாகவும் சொல்லவில்லை. அரசின் ஒப்பந்தங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற அரசியலமைப்பு சட்டத்தின் 32-வது பிரிவைக் காரணம் காட்டி, எங்கள் மனு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது.  எனவே, இந்த தீர்ப்பை ஒப்பந்தத்துக்கு உச்சநீதிமன்றத்தின் நற்சான்று என எடுத்துக்கொள்ள முடியாது.

நாங்கள் அளித்த புகாரில் கூறியுள்ளது போல, இது ஒரு மோசடி ஒப்பந்தம்.  இந்த ஒப்பந்தம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பதோடு, பொதுமக்களின் பணத்தையும் வீணடிக்கக்கூடியது. ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்துக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தக்கூடியது.  அனில் அம்பானியின் நிறுவனத்துக்கு ஒரு பெருந்தொகையை கமிஷனாக கொடுப்பதற்கென்றே இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதுகுறித்து விசாரிக்கப்பட வேண்டும்.

பரிமாறப்படும் புன்னகைகளின் பொருள் என்ன ?

பெருந்தலைகளின் தொடர்பிருந்த போபர்ஸ் மற்றும் பிர்லா சஹாரா வழக்குகளில் வழங்கப்பட்டதைப் போல, இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சுதந்திரமான விசாரணையை நீதிமன்றம் இந்த வழக்குகளை நிறுத்தி வைத்ததோடு, வழக்குகளை மூடவும் உதவியது. அதுபோல இந்த வழக்கின் தீர்ப்பும் உள்ளது.

படிக்க:
இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?
மோடி அரசின் பாசிசத்திற்கு பச்சைக் கொடி காட்டும் உச்சநீதி மன்றம்

ஆனால் மக்களின் மனதில் உள்ள ஐயங்களைப் போக்க வேண்டுமானால் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியம். ஆனால், பொதுமக்கள் மனதில் எழுந்துள்ள சந்தேகங்களை போக்கும் விதமாக முழு விசயங்களும் வெளியே வர வேண்டும். அதற்கு சுதந்திரமான விரிவான விசாரணை தேவை.

ரஃபேல் ஒப்பந்தத்தின் முறைகேடுகளை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டிய பிறகும் உச்சநீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு தீர்ப்பு எழுதியதன் மூலம், மோடியின் ஊழலுக்கு துணைபோயிருக்கிறது. மோடி கும்பல் அம்பானிகளுக்கு நாட்டை தாரைவார்க்க தயாராகிவருகிறது.

தமிழாக்கம்: அனிதா
நன்றி: தி வயர்

ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு பசுமைத்தீர்ப்பாயம் அனுமதி வழங்கியுள்ளது. அவ்வாறு அனுமதி அளிப்பதற்கு தமிழக அரசும் துணைபோயுள்ளது. மக்களை பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றம் என அலைகழிப்பதன் மூலம் ஒரு முட்டு சந்துக்குள் நிறுத்தப்பார்கிறது எடப்பாடி அரசு.

இதனை கண்டிக்கும் விதமாகவும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் தனிச்சட்டமியற்ற வலியுறுத்தியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் இன்று (17.12.2018) தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது அதன் பதிவுகள்.

*****

திருச்சியில்…

மிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஸ்டெர்லைட்டை ஆலையை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

அதனடிப்படையில் திருச்சியில் தலைமை தபால் நிலையம் முன்பாக சிக்னல் பகுதியிலிருந்து 60 -க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர் செழியன் தலைமையில் தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் சின்னதுரை, மகஇக செயலர் தோழர் ஜீவா, ம.க.இ.க பாடகர் தோழர் கோவன் உட்பட பலர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்தில் பங்கேற்ற தோழர்கள் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் படுகாலை செய்யப்பட்ட 14 பேர் உருவ படத்தை அணிந்து ஊர்வலமாக நடந்து வந்ததும், ஆர்ப்பாட்ட இடத்தில் துப்பாக்கியால் சுட்டு வீழ்ந்து கிடப்பது போன்று காட்சி படுத்தியதும், பொது மக்கள் மத்தியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது.

இதனால் திருச்சியின் முக்கிய சிக்னல் பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. அருகில் இருந்த BSNL ஊழியர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் நமது போராட்ட பிரசுரங்களை கேட்டு வாங்கிப் படித்தனர் மற்றும் இந்த போராட்டத்திற்கு ஆதரவும் தெரிவித்தனர்.

போலீசு மத்திய அரசின் அலுவலகம் ழுன்பு போராட்டம் நடத்த அனுமதி இல்லை எனக்கூறி மறுத்து அனைவரையும் கைது செய்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
திருச்சி மண்டலம். தொடர்புக்கு : 94454 75157.

*****

தர்மபுரியில்…

“ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச் சட்டம் இயற்று !” என்ற முழக்கத்தின் அடிப்படையில் தருமபுரி காமராஜர் சிலை அருகில் டிசம்பர் – 17, 2018 அன்று காலை 11 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

‘ஸ்டெர்லைட்டை மூடுவதுதான் எங்கள் நோக்கம்’ என பசப்பு வார்த்தை பேசும் தமிழக அரசின் போலீசு இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்தது. மேலும் போராட்டத்தில் ஈடுப்பட்ட தோழர்களை மிகவும் கேவலமாக ஆபாச வார்த்தையில் திட்டி, தரதரவென்று இழுத்து குண்டர்களை  கைது செய்வது போல் இழுத்துச் சென்றது.

அதிலும் குறிப்பாக இன்ஸ்பெக்டர் இரத்தினக் குமார் போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களின் கழுத்தை கொலைவெறியுடன் நெருக்கினார். “உங்களை விடமாட்டேன்டா…” என கத்திக் கொண்டே ஆபாசவார்த்தைகளில் திட்டத் தொடங்கினார் இன்ஸ்பெக்டர் இரத்தின குமார்.

போராடும் தோழர்களை வாகனத்தில் அடைத்து ஏற்ற முற்பட்ட போது ஒரு காரில் எப்படி 40 பேர் ஏறமுடியும் என கேட்டதும்; “ஏறுங்கடா தே….பசங்களா” என ஒரு ரவுடியைப் போல நடந்துகொண்டார் இந்த இன்ஸ்பெக்டர்.

போலீசு தாக்கியதில் இரண்டு தோழர்களுக்கு கையில் கடுமையான காயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்ட போலீசு தற்போது தோழர்களை தருமபுரி B1 காவல் நிலையத்தில் அடைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம், தொடர்புக்கு : 97901 38614.

*****

கோவையில்…

கோவை மண்டல மக்கள் அதிகாரம் சார்பாக கோவை டாடாபாத் பவர்ஹவுஸ் அருகில் இன்று(17.12.2018) காலை 11 மணி அளவில் டெல்லி பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவு அநீதியானது! ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட தனிச்சட்டம் இயற்று ! என்ற முழக்கத்தை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம், எட்டு மணிநேர தொழிலாளர் இயக்கம் உட்பட பல அமைப்புகள்  பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் நாசகர ஸ்டெர்லைட் ஆலையை விரட்ட தமிழக அரசு  உடனடியாக தனி சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும் தூத்துக்குடி மக்கள் மட்டும் போராடி வெல்ல முடியாது. அவர்களோடு தமிழக மக்கள் கரம் கோர்த்து வீதியில் இறங்க வேண்டிய நேரமிது.! என அறைகூவல் விடுக்கப்பட்டது !

தமிழக அரசுக்கும் ஆலையை விரட்டுவது தான் நோக்கம் என சொல்கிறது, ஆனால் அதே நோக்கத்திற்க்காக போராடிய மக்கள் அதிகாரத்தினர் 26 பேரை தற்போதுவரை கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பபட்ட முழக்கங்கள் :

தமிழக அரசே! தமிழக அரசே !
கொலைகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டியடிக்க
தனிச்சட்டம் இயற்றிடு!

ஏற்காதே! ஏற்காதே!
ஸ்டெர்லைட்டை திறக்கச்சொல்லும்
பசுமைத் தீர்ப்பாயத்தின்
அநீதியான உத்தரவை
ஏற்காதே ஏற்காதே!

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
நாசகார ஸ்டெர்லைட்டை
ஆதரிக்கும் பா.ஜ.க. அரசை
வன்மையாகக் கண்டிக்கிறோம்.

விடமாட்டோம் ! விடமாட்டோம்!
ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக
விரட்டாமல் ! விடமாட்டோம் !

ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில்
கொல்லப்பட்ட தியாகிகளுக்கு
பதில் சொல்! பதில் சொல் !
தமிழக அரசே பதில் சொல்

தடுக்காதே தடுக்காதே
தூத்துக்குடி மக்களின்
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை
தடுக்காதே! தடுக்காதே!

கோயலும் அகர்வாலும் கூட்டாளி!
கார்ப்பரேட்டும் மோடியும் பங்காளி!
நம்பாதே! நம்பாதே!
இந்த அரசைமைப்பையே நம்பாதே!

இங்கிலாந்து கம்பெனிக்காக
சொந்த நாட்டு மக்களை
சுட்டுக்கொன்றது போலீசு !
வாழ்வை அழிக்குது தீர்ப்பாயம்
இதுக்கு பெயரா ஜனநாயகம்?

ஓயாது ! ஓயாது !
கொலைகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டாமல்
மக்கள் போராட்டம் ஓயாது !

சட்டமியற்று ! சட்டமியற்று  !
நாசகார ஸ்டெர்லைட்டை
நிரந்தரமாக விரட்டியடிக்க
தமிழக அரசே சட்டமியற்று !

தகவல் :
மக்கள் அதிகாரம்
கோவை, தொடர்புக்கு : 95858 22157

*****

விருத்தாச்சலத்தில்…

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் ஆணையத்தை கண்டித்தும்! சட்டமன்றத்தில் கொள்கை முடிவெடுத்து சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தியும்! மக்கள் அதிகாரம் சார்பில் விருதையில் இனறு அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் 150-க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர்…

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர் முருகானந்தம் தலைமை தாங்கினார்.

அவரைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தோழர் முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர ஒருங்கிணைப்பாளர் தோழர் வே.மா.அருள், இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியைச் சார்ந்த தோழர் கோகுல் திருஷ்டிபன், CPM.(ML) மக்கள் விடுதலை அமைப்பைச் சார்ந்த தோழர் ராமர், CPM-விடுதலை அமைப்பைச் சார்ந்த தோழர் தனவேல், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பின் மாவட்ட செயலாளர் தோழர். மணியரசன், மாணவர்களின் கல்வி உரிமைகான பெற்றோர் சங்கத்தின் செயலாளர் வ.அன்பழகன், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் தோழர் புஷ்பதேவன் மற்றும் மக்கள் அதிகாரம் கடலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் பாலு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்
விருத்தாசலம், தொடர்புக்கு : 97912 86994.

*****

மதுரையில்…

ஸ்டெர்லைட் திறக்க அனுமதித்த டெல்லி பசுமை தீர்ப்பாயம் உத்தரவு அநீதியானது ஸ்டெர்லைட்டை மூட தனி சட்டம் இயற்றக் கோரி தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் சார்பில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

அதன் ஒரு பகுதியாக மதுரை மண்டலத்தில் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் மதுரை ரயில்வே சந்திப்பில் இன்று (17.12.2018) ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்திற்காக பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்றார்கள். அவர்களை ஆர்ப்பாட்டம் செய்யவிடாமல் வழிமறித்த போலீசு கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
மக்கள் அதிகாரம்
மதுரை.

அங்கன்வாடி பணியாளர்களை வதைக்கும் சதிகார அரசு !

ரசுப்பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் அதாவது எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். நீட் தேர்வு பிரச்சனை உச்சத்தில் இருந்த நேரத்தில் பள்ளிக் கல்வி துறையில் அதிரடி மாற்றங்களை உருவாக்க போகிறோம் என்று இவர்கள் ஆடிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று. இது தொடர்பாக சில காலங்களுக்கு முன்பு இன்னொரு அறிவிப்பும் வந்தது. அதாவது முதல் வகுப்பில் ஒரு குழந்தை சேர வேண்டும் என்றால் மழலையர் வகுப்பில் கலந்து கொண்டதற்கான சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

சரி.. இந்தத் திட்டம் எங்கிருந்து தொடங்கியது என்று பார்ப்போம். இந்தத் திட்டமானது தமிழக அரசால் தொடங்கப்பட்ட திட்டம் கிடையாது. 2016-ம் ஆண்டில் மோடி அரசால் உருவாக்கப்பட்ட கல்விக் கொள்கை திட்ட வரைவுக்குழுவின் அறிக்கையில் சொல்லப்பட்ட பரிந்துரைகளில் இதுவும் ஒன்று. அதாவது 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மழலையர் கல்வியை வழங்குவது. அதாவது நன்கு வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்தினைக் கொண்ட ஒரு கல்வியை வழங்குவது. சரி, இது இந்தக் குழுவால் தான் முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்டதா என்றால், அதுவும் கிடையாது. இளம் குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்விக்கான கொள்கை (Early Child Care and Education policy – ECCE) 12-10-2013 அன்று மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டது. இந்தக் கொள்கைப்படி 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் கல்வியினை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். இந்தத் திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (Ministry of women and child development) கீழ் இயங்கும் என்று சொல்கிறது இந்த அரசாணை.

இந்த அரசாணை வெளியிடப்பட்டுச் சில மாதங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதன் பிறகு இந்த அரசானை கிடப்பில் போடப்பட்டது. 2016-ம் ஆண்டில் இந்த அரசாணையை அடிப்படையாகக் கொண்டுதான் 6 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளுக்கு மழலையர் கல்வி வழங்குவது தொடர்பாகப் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டது. இன்னும் அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படாத வரைவு திட்டத்தின் பரிந்துரைகளை ஏற்கெனவே மோடி அரசு அமல்படுத்த தொடங்கி விட்டது. அதன் வெளிப்பாடுதான் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பும்.

சரி.. குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பது நல்ல செயல் தானே என்று கேட்கலாம். அது நல்லதா கெட்டதா என்பதைக் கூறும் அளவுக்கு நான் மருத்துவரோ மனோதத்துவ நிபுணரோ கிடையாது. ஒரு வேலை இந்தப் பரிந்துரைகளை கூறியவர்கள் அனைத்தும் அறிந்த மகான்களாக இருக்கலாம். இங்கு கூறவரும் முக்கியமான விசயம் என்னவென்றால், இந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படப் போகிறது என்பதைப் பற்றித்தான்.

ஏற்கனவே கூறி இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மற்றுமொரு முக்கியான திட்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை திட்டம் (Integrated Child Development Service). கிராமப் புறங்களில் காணப்படும் அங்கன்வாடி மையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ்தான் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைத்தல், மகப்பேறின் போது நடக்கும் இறப்புகளின் விகிதம் குறைத்தல் போன்றவற்றில் ஆரம்பச் சுகாதார மையத்திற்கு இணையாகப் பங்காற்றியவர்கள் இந்த அங்கன்வாடி பணியாளர்கள். அது மட்டுமல்லாது, போலியோ ஒழிப்பு, மக்களிடையே சுகாதார விழிப்புணர்வு என இவர்களின் பங்களிப்பு நீண்டு கொண்டே செல்லும். ஆனால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் அல்ல இவர்கள். மற்ற அரசு அதிகாரிகளைப் போல எந்தச் சலுகையும் இவர்களுக்கு வழங்கப்படுபவது கிடையாது. இது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடும். தமிழக்தில் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இவர்கள் சில சலுகைகளைப் பெற்று உள்ளனர். அதே வேளையில் மற்ற மாநிலங்களில் இவர்களுக்கு மாத ஊதியம் என்பது கூட கிடையாது. மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட பணம் வெகுமானமாக வழங்கப்படும். அதாவது இவர்கள் ஊழியர்களாக மதிக்கப்படுவது கிடையாது. தன்னார்வலர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். இந்த அங்கன்வாடி பணியாளர்கள் மேற்சொன்ன பணிகளைத் தாண்டி, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்தல் பணிகள் என மற்ற வேலைகளையும் செய்யப் பணிக்கப்படுகிறார்கள்.

மழலையர் கல்வி அறிவிப்புக்கும் இந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரும். ஆம்.. இந்தத் திட்டம் அங்கன்வாடி பணியாளர்களைக் கொண்டுதான் செயல்படுத்தப்படப் போகிறது. ஏற்கனவே அவர்களுடைய உழைப்புக்கான ஊதியத்தைக் கொடுக்காமல் அவர்கள் உழைப்பைச் சுரண்டி வரும் அரசு மேலும் அவர்களின் பணிச்சுமையை அதிகரிக்கப் போகிறது.

2015-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 0-6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16 கோடி. அதில் 3-6 வயது உள்ள குழந்தைகள் 7.54 கோடி. அதில் 3.6 கோடி குழந்தைகள் 13.47 இலட்சம் அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ளனர். அதாவது ஒரு மையத்திற்கு 27 குழந்தைகள். ஒரு அங்கன்வாடி மையம் என்று எடுத்துக் கொண்டால் அதில் இரு ஊழியர்கள் இருப்பார்கள். ஒருவர் சமையல் பணியாளர் இன்னொருவர் குழந்தைகளைக் கவனித்துக் கொள்பவர். சமையல் பணியாளருக்குக் கல்வித் தகுதி தேவையில்லை. குழந்தை பராமரிப்பில் உள்ளவருக்குக் குறைந்தபட்ச கல்வித்தகுதியாகப் பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் ஒரு அங்கன்வாடி ஊழியர் 10 முதல் 14 ஆயிரம் வரை ஊதியம் பெறுகிறார். சமையல் பணிகளைப் புரிபவருக்கு மாதம் 7 ஆயிரம் ஊதியம் தரப்படுகிறது. இது தமிழத்தில் மட்டும்தான், உ.பி, பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் மாதம் 1000 முதல் 2000 ருபாய் வரை இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம். ( கோப்புப் படம்)

தமிழகத்தைப் பொறுத்த வரை மாத ஊதியம் என்று வழங்கப்பட்டாலும் அதைப் பெறுவதற்குப் பல போராட்டங்கள் செய்துள்ளனர். எனக்குத் தெரிந்த ஒரு அங்கன்வாடி ஊழியர் பணியில் சேர்ந்தது 1998-ம் வருடம். இப்போது அவர் பெறும் ஊதியம் 12,000 அவருக்கு இன்னும் ஒரு பதவி உயர்வு கூட வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 20 ஆண்டு காலப் பணியில் அவருடைய ஊதியம் 1000-ல் இருந்து 12000 ஆக உயர்ந்து இருக்கிறது. இதில் இருந்தே இவர்களை அரசு எவ்வாறு நடத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

சில வருடங்களுக்கு முன்பு, தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியது. எங்கள் ஊரில் அதற்கு முன்பு இருந்த ஒரு அங்கன்வாடி மையம் இப்பொழுது மூன்றாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பினை செய்த அரசு அதற்குத் தேவையான கட்டிடங்களையோ, புதிய ஊழியர்களையோ பணியமர்த்தவில்லை. புதிதாகத் தொடங்கப்பட்ட மையங்கள் பெரும்பாலும் வாடகை வீடுகளில் நடந்து வருகிறது. புதிதாக ஊழியர்கள் இல்லாத காரணத்தால், அருகில் உள்ள மையத்தில் ஏற்கனேவே பணிபுரியும் ஊழியர்கள் இரண்டு மையத்தினையும் சேர்த்து கவனிக்கும் படி பணிக்கப்பட்டார்கள். அப்படிக் கவனிப்பதற்கு கூடுதல் ஊதியம் ஏதும் வழங்கப்படவில்லை. இரண்டாவது மையத்திற்குத் தேவையான உணவுகளை முதல் மையத்தில் இருந்து தயாரித்து எடுத்துச் செல்ல வேண்டும். இன்றளவும் அனைத்து மையங்களுக்கும் ஊழியர்கள் நிரப்பப்படவில்லை. அனைத்து மையங்களும் அரசு கட்டிடத்தில் இயங்காமல், இன்றும் பல மையங்கள் தனியார் இடங்களில் வாடகைக்கு இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் இந்த புதுத் திட்டமானது அமல்படுத்தப்படப்போகிறது.

புதுக்கோட்டை – கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு வடக்கு கிராமத்தில் சிதிலமடைந்துக் கிடக்கும் அங்கன்வாடியின் அவலக்காட்சி.

தமிழகத்தைப் பொறுத்த வரை அங்கன்வாடி ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிப்பது என்பது இது முதல் முறை அல்ல. தமிழக அரசு சில ஆண்டுகளுக்கு முன்பு இளமகளிருக்கு இலவச சானிடரி நாப்கின் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் திட்டம் அங்கன்வாடி மையங்கள் மூலமே செயல்படுத்தப்படுகிறது.

அங்கன்வாடி பணியாளர்கள் சரியான முறையில் நடத்தப்படாததற்கு முக்கியக் காரணம், இந்த ஊழியர்கள் அனைவரும் பெண்கள். இரண்டாவது இவர்கள் பெரிய அளவு கல்வித்தகுதி இல்லாதவர்கள். மேற்கண்ட காரணிகளால் இவர்களின் குரல் வெகுவாக வெளியே வருவதில்லை.

இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள மழலையர் கல்வித்திட்டம் அமல்படுத்தப்படுமானால் இவர்களின் பணிச்சுமை வெகுவாக அதிகரிக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அது மட்டுமல்லாது இதற்குத் தனிப் பாடத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதால், கல்வி தகுதி அற்ற ஊழியர்கள் வேலை இழக்கவும் நேரிடலாம். எந்த வித கட்டமைப்பு வசதிகளும் செய்யாமல் இந்த ஊழியர்களுக்கான சரியான ஊதியம் அளிக்காமல் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவது என்பது மிகப்பெரிய அநீதி ஆகும்.

இதில் இன்னும் ஒரு விசயத்தையும் கவனிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் பல இலட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். ஆனால் அதை விடுத்து ஏற்கனவே உள்ள ஊழியர்களின் பணிச்சுமையை அதிகரித்து வருகிறது இந்த அரசு. அதேவேளையில், பெரும் பண முதலைகளுக்குப் பல சலுகைகள் அளித்து இங்கே வந்து தொழில் தொடங்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு என்று கேட்டு நாடகம் நடத்திக் கொண்டு இருக்கிறது இந்த அரசுகள்.

படிக்க:
அங்கன்வாடி
இந்தியாவிலிருந்து ரூ. 45 லட்சம் கோடியை பிரிட்டன் திருடியது எப்படி ?

அங்கன்வாடி என்றாலே உடனே நினைவுக்கு வருவது சத்துப்பாப்பாதான். கிராமப்புற மாணவர்களுக்கு இது நன்றாக தெரிந்து இருக்கும். ஊருக்கு ஊர் இதன் பெயர் மாறுபடலாம். அங்கன்வாடிப் பணியாளர்கள் நடத்தும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு முகாம்களில் முட்டைகோஸ் தலையுடன், முட்டை கண்ணுடன், கேரட் மூக்கையும், பீன்ஸ் காதுகளையும், பப்பாளி வயிறையும், முருங்கை கை கால்களையும் கொண்டு முகாமின் நாயகியாக அமர்ந்து இருப்பவர்தான் சத்துப்பாப்பா. இந்த சத்துப்பாப்பாவை உருவாக்கும் அங்கன்வாடி பணியாளர்களின் உழைப்பையும் உயிரையும் சேர்த்து உறிஞ்சும் வேலையைத்தான் இந்த சதிகார அரசுகள் செய்து வருகின்றன.

– சக்திவேல்