Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 202

சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம் மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!

25.04.2022
சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் இருந்து ஜனநாயகம், பன்மைத்துவம்
மதச்சார்பின்மை உள்ளிட்ட பகுதிகள் நீக்கம்!
பத்திரிகை செய்தி
மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம்!
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE), 2022-2023-ம் கல்வியாண்டுக்கான பாடத்திட்டத்திலிருந்து தற்போதைய அதன் பாடத்திட்டத்தில் பல கூறுகளை நீக்கியுள்ளது.
பத்தாம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடப்புத்தகத்தில், ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’, ‘மக்கள் போராட்ட இயக்கம்’ மற்றும் ‘ஜனநாயகத்திற்கான சவால்கள்’ ஆகிய அத்தியாயங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயங்களில் முதல் அத்தியாயம் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் சாதி, இனம் மற்றும் பிற வழிகளில் சமூகப் பிளவுகள் மற்றும் ஏற்றத்தாழ்வுகள் குறித்ததாகும். இந்த அத்தியாயங்களை நீக்கியிருப்பதன் நோக்கம், ஜனநாயகத்தின் வாசனையை கூட நுகராத மாணவர்களை உருவாக்குவதே.
படிக்க :
விவசாயிகளின் நிலங்களை இழப்பீடு வழங்காமல் அபகரித்த பவர்கிரிட் நிறுவனம் ! | மக்கள் அதிகாரம் தருமபுரி
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
11-ம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடத்திட்டத்தில் இருந்து ‘மத்திய இஸ்லாமிய நிலங்கள்’ என்ற அத்தியாயம் நீக்கப்பட்டதன் மூலம் இஸ்லாமியர்களின் வரலாற்று தடத்தை சுவடின்றி அழிப்பதையே நோக்கமாக மோடி அரசு கொண்டிருக்கிறது.
கூடுதலாக, “விவசாயத்தில் உலகமயமாக்கலின் தாக்கம்” பற்றிய உள்ளடக்கம் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது மற்றும் “பனிப்போர் காலம் மற்றும் அணிசேரா இயக்கம்” பற்றிய ஒன்று 12-ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
மேலும், பாகிஸ்தானின் புகழ்பெற்ற கவிஞர் ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் எழுதிய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டுள்ள இரண்டு பகுதிகளையும் நீக்கியுள்ளது.
இந்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) பாடப்புத்தகத்தின் 10-ம் வகுப்பு ஜனநாயக அரசியல் II பாடத்தில் ‘மதம், வகுப்புவாதம் மற்றும் அரசியல் – வகுப்புவாதம், மதச்சார்பற்ற அரசு’ என்ற பிரிவின் ஒரு பகுதியாக, அந்த இரண்டு பகுதிகளும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தன. இவை மதவாதமாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும் இருப்பதாக பிரச்சினையை கிளப்பிக் கொண்டிருந்த ஒன்றிய அரசு, இப்போது அதை பாடப்புத்தகத்திலிருந்து நீக்கியுள்ளது. ஃபைஸ் அஹ்மத் ஃபைஸ் எழுதிய கவிதை என்பது அடக்கு முறை மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரானது. ஒன்றிய அரசின் இந்த கவிதை பகுதி நீக்கத்தை அறிவுத்துறையினர் பலரும் கண்டித்துள்ளனர்.
இவ்வாறு காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு தோதாக மாணவர்களை உருவாக்கும் நோக்கோடு சதி வேலைகளை தீவிரமாக பாஜக அரசு செய்துவருகிறது. ஒருபுறம், சூத்திரர்கள் கல்வி கற்க கூடாது என்று நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகள் என்ற பெயரில் பல தடைகளை போடும் மத்திய அரசு, மறுபுறம் காவி பாசிசத்திற்கு ஏற்றபடி கல்வியை மாற்றியமைக்கின்றனர். மொத்தத்தில் புதிய கல்வி கொள்கையை நடைமுறைக்கு மெல்ல மெல்ல கொண்டுவருகின்றனர்.
ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து கல்வியில் திணிக்கப்படும் இந்த பாசிச நடவடிக்கையை தடுத்து நிறுத்த போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

குற்றவாளிகளை உருவாக்கும் அரசே, குற்றங்களைத் தடுத்துவிடுமா?

ண்மையில், விருதுநகரில் பட்டிலியன வகுப்பைச் சார்ந்த இளம்பெண்ணை, எட்டுபேர் சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு செய்துள்ளனர். அதேபோல வேலூரில் இரவு நேரத்தில் தன் நண்பருடன் ஆட்டோவில் பயணம் செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பெண் மருத்துவரை, ஓட்டுநர் உட்பட ஐந்துபேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
நெஞ்சை உலுக்கும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம், குற்றவாளிகளைப் பிடித்து கடுமையான தண்டனை வழக்கு வேண்டும், ‘தூக்கில் போட வேண்டும்’, கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டும் என்று பலரும் பேசுகிறோம்.
இந்த பொதுமனசாட்சியை அரசும் உணர்ந்துதான் இருக்கிறது. வேலூரில் நடந்த சம்பவத்திற்கு பிறகு, அம்மாவட்ட போலீசுத்துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுந்தர மூர்த்தி உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார். இரவு 12 மணிக்கு மேல் இயங்கும் ஆட்டோக்களின் ஓட்டுநர்கள் தங்களின் பெயர், தொலைபேசி எண் முதலியவற்றை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டுமென்றும்; ஓட்டுநர்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆட்டோவின் பின்புறம் பயணிகளுக்குத் தெரியும்படி ஓட்டவேண்டுமென்றும் அந்த உத்தரவில் சொல்லப்பட்டுள்ளது.
படிக்க :
♦ பத்ம சேஷாத்திரி பள்ளி பாலியல் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்ததன் பின்னணி என்ன? தீர்வு என்ன?
♦ நெல்லை அரசு சட்டக்கல்லூரியில் ஒரு பாலியல் பொறுக்கி – ராஜேஷ் பாரதி
ஏற்கெனவே, தெருமுழுக்க கண்காணிப்பு கேமராக்கள், காவலன் செயலி, இரவுநேர ரோந்து என பல திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் குற்றங்களை குறைக்க முடியவில்லையே ஏன்? மாறாக குற்றங்கள் பெருகியிருக்கிறது. இந்த நடவடிக்கைகளின் கருப்பொருளே ‘குற்றவாளிகளை எப்படி பிடிக்கலாம்’ என்றுதான் உள்ளதே தவிர போலீசோ, அரசு நிர்வாகமோ ‘குற்றங்களைத் தடுப்பது’ பற்றிப் பேசுவதில்லை.
விருதுநகர் கூட்டுப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட எட்டு பேரில், நான்கு பேர் பள்ளிச் சிறுவர்கள் என்பது நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செய்தியாக உள்ளது. வேலூர் சம்பவத்திலோ 17 வயதான சிறுவன் ஒருவனையும் சேர்த்து, குற்றம்சாட்டப்பட்ட ஐந்து பேருமே 22 வயதுக்கு உட்பட்டவர்கள்.
பள்ளி செல்லும் வயதில், இவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றவாளிகளாக மாற்றியது யார் அல்லது எது என்பது பற்றி யாரும் பேசுவதில்லை. மொத்த சமூகமே சீரழிக்கப்பட்டுவருகிறது, குற்றமயமாகிவருகிறது என்று சொல்வதற்கான சரியான எடுத்துக்காட்டுகள்தான் இவர்கள்.
வேலூரில் பெண் மருத்துவரை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்கள் கஞ்சா போதையில் இருந்தார்கள் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுதானே குற்றங்களின் ஊற்றுமூலம். பெரும்பகுதி குற்றங்களுக்கு போதைக் கலாச்சாரமே காரணமாகிறது. கஞ்சா, டாஸ்மாக், ஆபாச இணையதளம் போன்றவை ஏவிவிடும் வக்கிரம்தானே இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு காரணம். அதுகுறித்து யாரும் பேசுவதாக இல்லை.
படிக்க :
♦ PSBB முதல் சிவசங்கர் பாபா வரை : பள்ளியில் நடக்கும் பாலியல் அத்துமீறலை ஒழிக்க என்ன வழி !
♦ பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறையும் நிறப் பாகுபாடும் !
ஏனெனில் இதையெல்லாம் அவர்களால் ஒழிக்க முடியாது. உள்ளூர் போலீசுக்கு மாமுல் கொடுக்காமல் ஒருவன் கஞ்சா தொழில் செய்துவிட முடியுமா, தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடையை அரசே வைத்துள்ளதே மூடிவிடுவார்களா, ஆபாச இணையதளங்களை தடைசெய்துவிடுவார்களா – ஆக குற்றங்களைத் தோற்றுவிப்பதே இந்த அரசுக் கட்டமைப்புதான்.
அதையே சாக்காக வைத்து குற்றங்களை ஒழிக்கப் போவதாக மக்கள்மீது ஒடுக்குமுறை செய்துவருகிறது. சமூக குற்றங்களைத் தடுக்க மக்களே தங்களை அமைப்பாகிக் கொண்டு நடவடிக்கையில் இறங்குவதுதான் தீர்வு!

இளவரசி

மே தினம் : அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம் !

மே 1, 2022 : தமிழகம் தழுவிய பேரணி – ஆர்ப்பாட்டங்கள் !
அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
 அன்பார்ந்த தொழிலாளர்களே, உழைக்கும் மக்களே!
மே நாள் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட நாள். காலங்காலமாக பாட்டாளி வர்க்கம் எதிர்கொண்டு வருகின்ற வேலையின்மை, வறுமை, பசி – பட்டினி, அடக்கு முறைகள் ஆகியவற்றுக்கு மூலகாரணமான முதலாளித்துவத்தை எதிர்த்து, அமெரிக்கத் தொழிலாளர்கள் மூட்டிய போராட்டத் தீ இன்னும் அணையவில்லை. அன்றைய காலகட்டத்தில் இருந்த சுதந்திரச் சந்தை முதலாளித்துவம் வளர்ந்து ஏகாதிபத்திய முதலாளித்துவமாக மாறி, நூற்றாண்டுக்கும் மேலாக உலகையே தனது சுரண்டலின் பிடிக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த ஏகாதிபத்தியமானது உலகம் முழுவதும் நிதிமூலதனத்தை ஏற்றுமதி செய்வது, தமது சந்தைக்காக நாடு பிடிக்கும் போட்டிகளில் இறங்குவது, இதன் பொருட்டு உலகப்போர்கள் துவங்கி ஆக்கிரமிப்புப் போர்கள், படைக் குவிப்புகள், இனப்படுகொலைகளை நடத்துவது, மனித வளத்தையும் இயற்கை வளங்களையும் ஒட்டச் சுரண்டுவது என எண்ணற்ற மனிதகுல விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
முதலாளித்துவம் என்கிற வரலாற்று எதிரியை வீழ்த்தாமல் விடிவே இல்லை என்கிற நிலைமையில்தான் சர்வதேசப் பாட்டளி வர்க்கம் 2022-ம் ஆண்டின் மே நாளைச் சந்திக்கிறது. ஏகாதிபத்தியங்களின் உலக மேலாதிக்கப் போட்டியும், போர்களும் ஒருபுறம். இந்த மேலாதிக்கத்தின் ஒரு பகுதியாக கடந்த 30 ஆண்டுகளில் திணிக்கப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கைகளால் பல நாடுகள் திவாலாகும் அவலம் மறுபுறம். இவற்றால் நோய்த்தொற்று, உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, வேலைப் பறிப்பு, உழைப்புச் சுரண்டல், இனம்-மொழி-சாதி-நிறம்-மதம்-பிராந்தியம் ஆகியவற்றின் பெயரால் அரங்கேற்றப்படும் வன்முறைகள், போர்களால் பல இலட்சம் மக்கள் மடிவதும், கோடிக்கணக்கில் அகதிகளாவதுமான துயர்மிகு சூழலில் சிக்கி சர்வதேசப் பாட்டாளி வர்க்கம் திணறி வருகிறது. இதுகுறித்த பார்வை, புரிதல், தீர்வு ஆகியவற்றைப் பாட்டாளி வர்க்கம் கற்றுத் தெளிந்தால்தான் தன்னுடைய விடுதலையைச் சாதிக்க முடியும்.
படிக்க :
♦ தொழிலாளர்களுக்கு இது ஒரு கடினமான மே நாள் !
♦ மே நாள் சூளுரை : மனிதகுலத்தை அச்சுறுத்தும் கொரானா – தோற்றது முதலாளித்துவம் ! மாற்று சோசலிசமே !
சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்தின் முதன்மை எதிரி சர்வதேச – ஏகாதிபத்திய நிதி மூலதனமே. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒற்றைத்துருவ மேலாதிக்கம் தகர்வதும், அமெரிக்க – ரஷ்ய, அமெரிக்க – சீன போட்டிகள் முன்னிலைக்கு வருவதுமான புதிய நெருக்கடியை உலகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்க – ரஷ்ய ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டியே உக்ரைன் மீதான போராக வெளிப்பட்டுள்ளது. அதைப்போலவே அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டியின் வெளிப்பாடாகவே ஆப்கானிலும் இலங்கையிலும் பொருளாதார நெருக்கடியும், பாகிஸ்தானில் அரசியல் நெருக்கடியும் வெடித்துக் கிளம்பியுள்ளன.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கும் போர்களால்தான் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால், அந்தப் போர்களே ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டிகளால்தான் உருவாகின்றன. இதன் விளைவாக உலகம் பல்வேறு அணிகளாகப் பிரிவதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக் கொண்டு பாசிச – நாஜி குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலும், அரசை ஆட்டுவிப்பதிலும் முக்கியமான பங்காற்றுகின்றன. இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவிலும் பார்ப்பனப் பாசிசம் தனது இலட்சியமான அகண்ட பாரதத்தை உருவாக்கும் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த பாசிசக் குழுக்கள் ஏகாதிபத்திய நிதி மூலதனமும், உள்நாட்டுத் தரகுக் கார்ப்பரேட்டுகளும் சொந்த நாட்டு மக்களைக் கொள்ளையிட்டுச் சுரண்டுவதற்கு தீவிரமாக சேவை செய்து வருகின்றனர். இந்தியாவில் அதானி, அம்பானி வகையறாக்களின் வளர்ச்சியே இதற்கு உதாரணம்.
ஒருபக்கத்தில் உழைக்கும் மக்களின் வாழ்க்கை அதல பாதாளத்தை நோக்கிக் கிடுகிடுவெனச் சரிந்து கொண்டிருக்கிறது. உலகளாவிய பட்டினிப் பட்டியலில் 116 நாடுகளில் 101-வது இடத்திலும், சர்வதேச மகிழ்ச்சி நாடுகள் பட்டியலில் 146 நாடுகளில் 139-வது இடத்திலும் இந்தியா இருக்கிறது. குறிப்பாக, மோடி ஆட்சியில் மிக மோசமான நிலையை அடைந்திருக்கிறது
கொரோனா முடக்கக் காலத்தில் சுமார் 40% தொழிலாளர்கள் வேலையை இழந்துவிட்டனர். அவர்களுக்கு மீண்டும் வேலை கிடைப்பது சவாலாகவே இருக்கிறது. நாடெங்கும் பட்டினியும், வறுமையும் கோரத்தாண்டவமாடும் நிலையிலும் கூட, 100 நாள் வேலைத்திட்டத்தில் வெறும் நான்கு ரூபாய் மட்டுமே சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்னொரு பக்கத்தில், கடந்த ஓராண்டில்தான் அதானியும் அம்பானியும் பிரம்மாண்டமாக சொத்துக்களைக் குவித்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முறையே 10, 11-வது இடங்களைப் பிடித்திருக்கிறனர். மோடியின் செல்லப்பிள்ளை அதானியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும், ஒரு நாளைக்கு ஆயிரம் கோடிகள் உயர்ந்து ரூ.3,67,500 கோடிகள் அதிகரித்திருக்கிறது. முகேஷ் அம்பானியின் குடும்பமோ நாள் ஒன்றுக்கு ரூ.163 கோடிகளைக் குவிக்கிறது. நாடும் நாட்டு மக்களும் நாசமாகிக் கொண்டிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் இவர்கள் மட்டும் எப்படி வாரிக் குவிக்கிறார்கள்? மோடி ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேட்டுகளுக்கு வழங்கப்படும் பல இலட்சம் கோடிகள் வரிச்சலுகைகள், மானியங்கள், வாராக்கடன் தள்ளுபடிகளே இவற்றுக்கு மூல ஆதாரங்களாக இருக்கின்றன. இந்த இலட்சணத்தில், மக்களுக்கு மானியங்கள் கொடுப்பதால் இலங்கையைப் போல இந்தியாவும் திவாலாகிவிடும் என எச்சரிக்கிறது மோடியின் உயர்மட்ட ஆலோசனைக்குழு.
பெட்ரோல், டீசல், எரிவாயு, அத்தியாவசிய மருந்துகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றின் விலைகளும், சுங்கச்சாவடி கட்டணமும் உயர்ந்து, உழைக்கும் மக்கள் வாழவே முடியாத நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கூட, ஈவிரக்கமற்ற வகையில் ஜி.எஸ்.டி வரி தாக்குதலை நடத்துகிறது மோடி – நிர்மலா கும்பல். மேலும் குடிநீர், மின்சாரம், மருத்துவம், கல்வி ஆகிய சேவைகளைத் தனியார்மயமாக்கி, கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்குத் திறந்து விடுவதைத் தீவிரமாக்குகிறது. உழைப்புக்கேற்ற ஊதியமும், விளைபொருளுக்கேற்ற விலையும் இல்லாமல் தொழிலாளர்களும் விவசாயிகளும் அல்லல்படும் நிலையில், சிறு-குறுந்தொழில்களையும், சில்லரை வணிகத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு பலியிட்டுக் கொண்டிருக்கிறது.
நட்டக்கணக்கு காட்டி பொதுத்துறைகளை விற்பனை செய்த காலம் மலையேறி விட்டது. அரசின் செலவுகளுக்காக பொதுத்துறைகளையும் அவற்றின் சொத்துக்களையும் கூச்சநாச்சமின்றி விற்றுக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்த அயோக்கியத்தனத்துக்கு “தேசிய பணமாக்கல் திட்டம்” என பெயரிட்டு, நாட்டைக் கூறுபோட்டுக் கூவி விற்கும் சேல்ஸ்மேன்களாக மாறியிருக்கின்றனர் பிரதமரும் அமைச்சரவையும்.
இந்தக் கார்ப்பரேட் கொள்ளையை மூடி மறைப்பதற்காகவும், அகண்ட பாரதம் என்னும் தமது கனவை நிறைவேற்றவும் நாடெங்கும் காவிவெறியைக் கிளப்பி வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பார்ப்பனப் பாசிசக் கும்பல். அதனால்தான், ஒரே நாடு – ஒரே சட்டம் – ஒரே பண்பாடு – ஒரே மதம் என்கிற இந்து இராஷ்டிர – பாசிச சர்வாதிகாரத்தை நோக்கி நாட்டை இழுத்துச் செல்கிறது. நீதித்துறையும், சட்டங்களும் இதற்கேற்ப தகவமைத்துக் கொண்டிருக்கிறது. இதைத் தட்டிக் கேட்பவர்கள், அம்பலப்படுத்துபவர்கள் மீது தேசவிரோத முத்திரை குத்தி, அடக்கிக் கொண்டிருக்கிறது மோடி – அமித்ஷா கும்பல்.
படிக்க :
மே நாள் – உரிமைகளை மீட்டெடுக்க உத்தியை வகுக்க வேண்டிய தருணம் !
மே நாள் : உழைப்பின் அழகு – படங்கள் !
மொத்தத்தில் உக்ரைன் மீதான ஏகாதிபத்திய மேலாதிக்கப் போட்டியும், இலங்கையின் திவால் நிலையும், பாகிஸ்தானின் அரசியல் நெருக்கடியும், இந்தியாவின் பாசிச அபாயச் சூழலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றன. இந்த நேர்க்கோடு சர்வதேச நிதி மூலதனத்தால் வரையப்பட்ட கோடு. அரைகுறை இறையாண்மை பறிப்பு, உழைப்புச் சுரண்டல், பசி-பட்டினி, இனவெறி-மதவெறியூட்டல்கள், அடக்குமுறைகள், இயற்கை வளங்கள் சூறையாடல், சுற்றுச்சூழல் அழிப்பு, ஆக்கிரமிப்பு மற்றும் மேலாதிக்கப் போர்கள். இவை அனைத்தையும் ஏகாதிபத்திய முதலாளித்துவம்தான் முன்நின்று நடத்துகிறது. அந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை வீழ்த்தி, ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டியமைக்கும் போதுதான் மே நாள் தியாகிகளின் கனவு நிறைவேறும். மே நாள் தியாகிகளது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் நெஞ்சில் ஏந்துவோம். உலகையே அச்சுறுத்துகின்ற ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை சவக்குழிக்கு அனுப்பவும், இந்தியாவில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வேரறுக்க, பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைக்கவும் மே நாளில் சூளுரைப்போம்!
மே நாள் சூளுரை
♠ அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்வெறியை முறியடிப்போம்!
♣ அமெரிக்க – ரசிய பனிப்போரையும், அமெரிக்க – சீன ஆதிக்கப் போட்டியையும் முறியடிப்போம்!
♣ ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போரை ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், மேலாதிக்கத்துக்கு எதிரான புரட்சிகர உள்நாட்டுப் போராக வளர்தெடுத்து, தேச விடுதலையைச் சாதிக்கப் போராடுவோம்!
♣ இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டியமைப்போம்!
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)
மக்கள் அதிகாரம், தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 9791653200, 9444836642, 8056386294, 9962366321

நாராயண குருவும் சங்கராச்சாரியும் | ராம் புனியானி

வ்வொரு குடியரசு நாளிலும் ஒன்றிய அரசு அலங்கார, ஆடம்பர அணிவகுப்பினை நடத்தும். ஒருபுறம் இராணுவ அணுவகுப்பு, இராணுவ தளவாடங்களுடனும் மறுபுறம் பல்வேறு மாநிலங்களின் அலங்கார வண்டிகளும் கலை நிகழ்ச்சிகளும் அணிவகுப்பில் பங்கேற்கும். ஒன்றிய அரசாங்கமே மாநிலங்களின் அலங்கார வண்டிகளைத் தெரிவு செய்யும். இந்த 2022-ம் ஆண்டு மேற்குவங்கம், தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் அலங்கார வண்டிகளை புறக்கணித்து விட்டது. 12 அலங்கார வண்டிகள் மட்டுமே இம்முறை அனுமதிக்கப்பட்டது. கேரள அலங்கார வண்டி வழக்கில், வேறு ஒரு அம்சமும் வெளிப்பட்டது. அலங்கார வண்டிகள் தேர்வுக்குப் பொறுப்பான ஜூரி (பாதுகாப்பு அமைச்சர்) கேரள அரசு நாராயண குரு பற்றிய அலங்கார வண்டிக்குப் பதில் அதே கேரளாவைச் சேர்ந்த ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டியை தயாரித்துக் கொண்டு வந்தால் அனுமதிக்கிறோம் என ஆலோசனையும் வழங்கினார். ஆதி சங்கரர் இந்தியாவை ஒருங்கிணைத்தவர் என்பதால் அந்த அலங்கார வண்டியை அணிவகுப்பிற்குக் கொண்டு வாருங்கள் என்று கருத்தும் தெரிவித்தார். 2017லிலிருந்து கேரள அலங்கார வண்டிக்கான அனுமதி மறுப்பு இது மூன்றாவது முறையாகும்.
நாராயண குருவுக்கு பதில் ஆதி சங்கரரைப் பற்றிய அலங்கார வண்டி என்று பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய ஆலோசனையின் பின்புலத்தில் மோடி அரசாங்கத்தின் ஆழ்ந்த திட்டம் ஒன்று உள்ளது. அவர்கள் குறிப்பாக இந்து ராஷ்ட்ரம் நோக்கி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கேரளாவைச் சேர்ந்த மிக உயர்வான இந்த இருவருமே நேரெதிரான, முரண்பட்ட சமூகக் கருத்துக்களைக் கொண்டவர்கள். நாராயண குரு ‘ஒரு சாதி, ஒரு மதம், ஒரு கடவுள்’ கொள்கைக்காக நின்றவர். சங்கராச்சாரியோ பிறப்பிலேயே ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட பார்ப்பனிய மேலாதிக்கக் கொள்கைகளைக் கொண்டவர்.
ஆதி சங்கரர் 8-10ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். அக்கால கட்டத்தில் புத்த மதக் கொள்கைகள் சமூகத்தில் மேலோங்கியிருந்தன. சாதி சமத்துவக் கொள்கையையும், ‘இந்த உலகம் உண்மையானது’ எனவும் போதித்து, மக்களின் துயர் துடைக்கப் போராடியது. ஆதி சங்கரரோ இதற்கு நேரெதிராக ‘உலகே மாயம்’ எனவும் பிரம்மம் மட்டுமே உண்மை எனவும் வாதிட்டார். புத்த மதக் கொள்கைகளை கடுமையாக மறுத்து சவால் விட்டதோடு, அதை இழிவு படுத்தினார். புத்த மதத்தை, புத்த தத்துவங்களை இந்தியாவிலிருந்தே துடைத்தழித்ததில் இவரது கருத்துக்களுக்கும், இதை ஆதரித்தவர்களுக்கும் முக்கிய பங்குண்டு.
படிக்க :
♦ குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
♦ ‘குடியரசு’ அல்ல; கொலை அரசு!
இவர் துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத பூரி மற்றும் சிரிங்கேரி என இந்தியாவின் நான்கு திசைகளிலும் திக்குக்கு ஒன்று என நான்கு மடங்களை நிறுவினார். (இதிலே காஞ்சி சங்கர மடம் இல்லையே என்பவர்களுக்கு! மற்ற நான்கு மடாதிபதிகளும் காஞ்சி மடத்தை சங்கரர் நிறுவவில்லை எனவும், அது திருட்டு மடம் எனவும் சொல்கிறார்கள்! சென்ற நூற்றாண்டு தொடக்கத்தில் இந்த காஞ்சி மடத்துக்கு கும்பகோண மடம் எனத் திருநாமம்! இந்த மடங்கள் பற்றியே தனியே எழுத வேண்டும்!. புத்த மடாலயங்களைப் பின்பற்றி அதன் வடிவில் நிறுவப்பட்டவை. ஆனால் தத்துவ ரீதியாக நேரெதிரான கொள்கை கொண்டது. புத்த தத்துவம் பொருள் முதல்வாத அடிப்படையிலானது. ஆதி சங்கரரின் தத்துவமோ கருத்து முதல்வாத அடிப்படையிலானது. புத்த தத்துவம் சமத்துவத்திற்கானது. ஆதி சங்கரரின் தத்துவமோ பிறப்பிலேயே உயர்வு தாழ்வையும், சாதி அடுக்கையும் ஆணாதிக்கத்தையும் கொண்ட பார்ப்பன கொடுங்கோண்மையைக் கொண்டது.
நாராயண குரு ஆழ்ந்த மனிதாபிமானம் மிக்கவர். அவரது வளர்ச்சிப் போக்கில் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டார். யோகாவைக் கடைப்பிடித்தார். 1888-ல் தத்துவத்தைத் தேடிய பயணத்தில், அருவிப்புரம் வந்து, அங்கு தியானத்தில் ஆழ்ந்தார். அங்கு தங்கியிருந்த காலத்தில், ஆற்றிலிருந்து ஒரு பாறையை எடுத்து, அதை புனிதப்படுத்தி, அதை சிவனது சிலை என்றார். இந்த நடவடிக்கை பிற்பாடு அருவிப்புரம் பிரதிஷ்டை என அறியப்படுகிறது. அக்கால கட்டத்தில் இது மிகப்பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் ஏற்படுத்தியது. குறிப்பாக ‘உயர்’ சாதி பார்ப்பனர்களிடமிருந்து கடும் எதிர்ப்பை எதிர் கொண்டது.
பர்ப்பனர்கள் நாராயண குருவுக்கு சிலையை புனிதப்படுத்தும் தகுதியோ, உரிமையோ இல்லை எனக் கூறி ஏற்க மறுத்தனர். இதற்கு பதிலடியாக “இது பார்ப்பன சிவா இல்லை, ஈழவ சிவா” எனக் கூறினார் குரு. இந்த மேற்கோள் பிற்பாடு மிக பிரபலமானது. சாதியை எதிர்ப்பதற்குப் பயன்பட்டது. நாராயண குரு சாதிய அமைப்பை ஒழிக்க தனது வாழ்வை அர்ப்பணித்தார். இவரது நடவடிக்கைகள் ஆழப் பதிந்து போன சாதீய அமைப்பை ஒழிப்பதற்கான நடைமுறைக்கானதாகும்.
1904-ம் ஆண்டில் வர்காலா அருகில் உள்ள சிவகிரி என்ற இடத்திற்கு தனது இருப்பிடத்தை நாராயண குரு மாற்றிக் கொண்டார். இந்த இடத்தில் சமுதாயத்தில் ஆகக் கடைக்கோடி மட்டத்தில் வசிப்போரின் குழந்தைகள் இலவசமாகப் பயில பள்ளி ஒன்றை நிறுவினார். இது சாதிய ஒடுக்குமுறை நிலவும் பின்புலத்தில் ஒரு புரட்சிகர நடவடிக்கையாகும். மகாராட்டிரத்தில் தலித் குழந்தைகள் பயில பள்ளிகளைத் தொடங்கிய ஜோதிராவ் பூலேயின் நடவடிக்கைகளுக்கு இணையானது. சாதிய முறைக்கு எதிரான போராட்டத்தில் நவீன கல்வியானது மிகப்பெரும் விடுதலைக்கான சக்தியாகும். அன்றைக்கு ஆதிக்க சாதியினர் மட்டுமே கல்வி கற்கும் சிறப்புரிமை பெற்றிருந்த நிலைமையில், இதற்கு நேரெதிராக எல்லா சாதியினரும் இவரது பள்ளியில் படிக்க வரவேற்கப்பட்டனர். 7 ஆண்டுகள் கடந்து 1911-ல் நாராயண குரு அங்கு ஒரு கோயில் கட்டினார். பின் 1912-ல் மடம் ஒன்றை கட்டினார். இவை அனைத்து  சாதியினருக்கும் திறந்து விடப்பட்டது. பிறகு திரிச்சூர், கன்னூர், அன்சுதெங்கு, தலசேரி, கோழிக்கோடு மற்றும் மங்களூரு போன்ற இடங்களிலும் கோயில்கள் கட்டினார். இது அம்பேத்கார் பிந்தைய காலத்தில் முன்னெடுத்த கலாரம் கோயில் நுழைவுப் போராட்டத்தை நினைவு படுத்துகிறது. ஆதிக்க சாதியினர் இக்கோயில் நுழைவுப் போராட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தனர்.
நாராயண குருவின் நடவடிக்கைகள் பார்ப்பனியக் கொடுங்கோண்மைக்கு சவாலாக இருந்தது. அவர் சாதியத் தடைகளை உடைத்தெறிய முயன்றார். இவை நிலவும் சாதிய முறைகளுக்கு எதிரான முக்கிய இயக்கங்கள் ஆகும். தற்போது அதிகாரத்தில் உள்ள ஒன்றிய அரசாங்கமானது கடந்த காலத்தை, அப்போது நிலவிய சாதீய படிநிலையை, பார்ப்பனிய கொடுங்கோண்மையை புகழ்ந்து விதந்தோதுகிறது. பார்ப்பன மதத்தை இந்து மதம் என உயர்த்திப் பிடிக்கிறது. இதை வேத மதம் அல்லது சனாதன (எல்லா காலத்திற்குமானது, காலம் அறிய முடியாதது) தர்மம் எனப் புகழ்கிறது. ஆதி சங்கரர் இந்த உயர்ந்த ஆன்மீக பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிற, மிகப் பெரும் ஆன்மீகப் பெரியவர் என புகழ்கிறது.
இந்திய வரலாறு என்பது புத்தர் முன்வைத்த சமத்துவத்துக்கும், வேத பார்ப்பனர்கள் உயர்த்திப் பிடித்த சாதீய அடுக்கு முறைக்கும் அல்லது அவர்கள் கூறும் சனாதன தர்மம் என்பதற்கும் இடையிலான இடைவிடாத பகைமையும் போராட்டமுமே என அம்பேத்கர் சுட்டிக் காட்டுகிறார். தற்போது வலதுசாரிகள் ஆட்சியில் இருப்பதால் ஆதி சங்கரரை உயர்த்திப் பிடிப்பதும், அதே சமயம் பொருள்முதல்வாத பாரம்பரியத்தைக் கொண்ட புத்தா, சார்வாகா போன்றவர்களைப் புறக்கணிப்பதும் எனச் செய்கின்றனர். இதில் சுவாரசியமானது என்னவென்றால் அரசியல் தளத்தில் நாராயண குருவை பாஜக அங்கீகரிக்கிறது. ஆனால் இது முற்றிலும் ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும்தான், ஒரு அடையாளத்துக்கு மட்டும்தான். ஆனால், உண்மையான அங்கீகாரம் என வரும்போது நாராயண குருவை முற்றாகப் புறக்கணிக்கின்றனர். தற்போதைய நாராயண குருவைக் கொண்ட கேரள அலங்கார வண்டியைப் புறக்கணித்தது, இதை மேலும் உறுதிப்படுத்துகிறது.
ஃப்ராண்டியர் வார இதழில் வந்த கட்டுரை  

தமிழாக்கம் : நாகராசு

15 workers massacred in Nagaland: ‘Indian unity’ established through military repression!

In Nagaland’s Mon district, on December 4, six coal-mine workers who were toiling hard and returning home after a six-day workweek were shot dead by the security forces from Assam Rifles. They indiscriminately opened fire on the civilians who intercepted the military vehicle after learning about the massacre. This killing of 15 civilians, in total, shocked the people of the country.
There were discussions and criticisms from various quarters about the brutal murder of the country’s people by its own military. In account of this situation, the Chief of Defence Staff Bipin Rawat died in Coonoor helicopter crash on December 8. All the media and television debates repeatedly broadcasted General Rawat’s death and drowned people with ‘patriotism’.
In this ‘patriotic’ singing of the mainstream media, the killing of innocent Nagaland workers and the struggle of the people of Nagaland for justice was intentionally blocked out.
Background of the heartrending massacre
On December 4 at 4:30 pm, villagers who heard the terrible gunfire, at first, thought that it was a armed clash between the security forces and the rebels. They did not know that the workers who were returning home in the pick-up van were being shot by the army. When the workers, who left the mine at 3:30 pm, did not return home until 8:00 pm, impatient villagers went looking for them. But only the empty vehicle in which the workers left was standing in that area.
Read :
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
♦ National Monetization Pipeline (NMP): An arrangement for re-colonization and plunder
The vehicle was covered with blood and was bullet holed. Terrified people intercepted and questioned three passing military trucks. The army soldiers who were sitting on the truck over the tarpaulin, at first, said, ‘We don’t know anything about the workers.’ But when the tarpaulin was checked, the villagers were shocked to see the corpses of six half-dressed youths underneath. And the soldiers were sitting over those corpses.
The soldiers tried to disguise the killed civilians as rebels by altering their outfits and placed weapons near them. By seeing this, an altercation arose between the angered crowd and the soldiers. Enraged by this, the murderous army began indiscriminately shooting down the assembled villagers. Seven others were killed. The next day, two more people were killed in a protest against this massacre in front of the headquarters of the Army. The Indian Army has drowned the lives of 15 people in a pool of blood for no reason.
Issuing a statement in the Lok Sabha about the massacre, Amit Shah said, “The government of India expresses deep regret over the unfortunate incident. The vehicle was signalled to stop but it tried to flee. On suspicion of carrying extremists, it was fired upon.” He further added reasons for the next two firings following this massacre “Security forces had to resort to firing for self-defence and to disperse crowd”.
But a man who escaped the shooting said, “The army did not signal to stop the vehicle. When they saw us, they started shooting,” revealing the truth. Similarly, a BJP member who went to the spot said, “We were shot only because we saw the workers in the military vehicle”. These statements exposes the lies of Amit Shah.
It is not new for the military to shoot innocent civilians for no reason. A similar massacre took place in Nagaland on March 5, 1995. The Rashtriya Rifles army force was crossing the Kohima region of Nagaland when one of the tyres of a truck carrying soldiers exploded. Thinking of it as a bomb, the army indiscriminately attacked the people there. Seven people were massacred in that attack; Thirty-six people were injured.
We can’t even imagine such incidents. These are the conditions in which the people of the north-eastern states live. All these states have long been ruled under gun-point military dictatorship.
Armed Forces Special Powers Act (AFSPA) : Nationalities ruled by military repression
North East India covers – Arunachal Pradesh, Assam, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Tripura and Sikkim – eight states. Before India’s socalled ‘independence’, all the seven states except Sikkim were identified as a single state (Assam). That is why these states are called “seven sisters”. Different ethnic groups are living in these seven states. Nehru and Sardar Vallabhbhai Patel, known as the ‘Iron Man’, annexed these territories which functioned as separate nations with separate constitutions, flags and system of governments, to India by threatening with military forces.
The people of the north-eastern states never accepted this annexation to India through such repression. Protests began to erupt. They also took up arms against the Indian army. In 1977, an armed struggle was launched under the leadership of the United Liberation Front of Asom (ULFA) to liberate Asaam. In the 1980s, bodo tribes launched an armed struggle demanding a separate state. The Naga National Council (NNC), which includes representatives from Nagaland, also launched the struggle. Various organisations like National Liberation Front of Tripura (NLFT), All Tripura Tiger Force (ATTF) rallied “We shall establish an independent Tripura”. In 1961, the Mizo National Front (MNF) was formed to establish an independent Mizoram through armed struggle.
All these armed struggles shattered the ‘Indian national unity’ created through repression. In 1958, the Government of India enacted the Armed Forces Special Powers Act (AFSPA) to suppress the people and organisations who were fighting for their rights and against their forcible annexation to India. Various armed groups had emerged in the north-eastern states against it. This draconian law was first enacted in Nagaland.
During the Second World War, British imperialism granted special powers to the armed forces on August 15, 1942, to suppress the Indian independence movement through military actions. In 1958, ‘Independent India’ continued this draconian British law by giving legal recognition to this special authority of the armed forces in the Parliament. They were first introduced in Assam and Manipur. Later in 1972, it was extended to Meghalaya, Nagaland, Tripura, Mizoram and Arunachal Pradesh. It was enforced in Punjab in 1983 and in Jammu and Kashmir from 1990.
Under Section 3 of the AFSPA, if a part is declared as ‘disturbed area’, armed forces must be used to assist the civil rule.
Section 4 of the AFSPA gives sweeping powers to the armed forces. It allows them to open fire, even causing to death. It gives them powers to arrest individuals without warrants, on the basis of “reasonable suspicion”, and also search premises without warrants.
Section 6 of the Act further provides blanket impunity to security personnel involved in such operations: There can be no prosecution or legal proceedings against them without the prior approval of the Centre.

The Indian government is repressing various nationalities in the Northeast and ruling through military with the help of AFSPA.
63-year-long struggle against AFSPA
The massacres and the people’s struggle against them are not new to the north-eastern states, including Nagaland. These states have a long tradition of struggle that has continued for nearly 63 years. Some of these struggles were talking point all over the world.
In 2000, 10 people who were waiting at a bus stop in the town of Malom, Manipur were gunned down by the Armed Forces. Irom Chanu Sharmila (who was only 28 years old), one of the staunchest protestors against AFSPA, went on a hunger strike for nearly 16 years following this incident.
Thangjam Manorama, a woman arrested by Assam Rifles in July 2004, was found dead near her house the next morning. She had been sexually assaulted, shot in her private parts and was brutally killed. On July 15, 2004, “Mothers of Manipur” protested by stripping off their clothes in front of the headquarters of the 17th Assam Rifles and shouted “Indian army rape us!” “Drink our blood! Eat our flesh! Maybe this way you can spare our daughters!”. Action was taken only against the protestors and not against the Assam Rifles soldiers. These two struggles made the world look back.
Protests are still going on. The demand of all those who are now fighting the Oting massacre is the repeal of the AFSPA Act. On December 20, the Nagaland Legislature passed a resolution for the third time to revoke the AFSPA.
Addressing the annual session of the Indian Chamber of Commerce (ICC) through virtual mode, on November 25, Amit Shah said, “I appeal to ICC and its members to look at the northeast from a different perspective, understand the changes and invest”. The fraud in the exposed confidential Nagaland Peace Accord (Framework Agreement) showed us how Modi maintained peace in the north-eastern states.
Read :
♦ Uttar Pradesh : No ‘viable alternative’ within Hindurashtra !
♦ New Democracy || Puthiya Jananayagam in English || Magazine
The Modi-Amit Shah clique has been brutally suppressing protests by resorting to foxy work such as inviting them for talks in the event of protests while on the other hand arresting leaders of protesting organisations, creating clashes among different tribals and creating ethnic disparities.
The ruling class media is blacking out the struggle of the people of the north-eastern states, including Nagaland. It is the duty of revolutionary and democratic movements to expose this to the people of other states and fight together with them for justice. The military dictatorship that is trampling the voices of the north-eastern states is gaining a foothold in states like Punjab and West Bengal in the name of expansion of the jurisdiction of the Border Security Force (BSF). The saffron clique is already planning to turn Tamil Nadu into a military base. Moreover, there is a possibility to deploy military forces at any time by posing the so called “Chinese danger through Sri Lanka”.
Therefore, the working people of other nationalities, who are also being repressed by the Indian Union, should voice for the Naga people not only to recognise their right for justice, but also to fight for their right to self-determination.

Mathi

திரிபுரா காவிமயமான வரலாறு !

கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 4
பாகம் 3

பிப்லவ் குமார் தேவ் தலைமையிலான பா.ஜ.க.வின் ஆட்சியின் கீழ் திரிபுராவை காவிமயமாக்குவதில் மூர்க்கமாக செயல்பட்டுவருகிறது ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல். தங்களுடைய முயற்சிகளில் பெரிய அளவில் வெற்றியையும் குவித்துவருகிறது. திரிபுரா இந்து மதவெறியர்களின் கூடாரமாகி வருகிறது என்பதற்கு 2018-ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே ஆசான் லெனினின் சிலையை பெயர்த்தெறிந்தது தொடங்கி, சமீபத்தில் மார்க்சிஸ்டு கட்சியின் அலுவலகங்கள் சூறையாடப்பட்டது; அக்கட்சியின் தோழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் சென்ற அக்டோபர் மாதக் கடைசியில் முஸ்லீம்களின் குடியிருப்புகள், கடைகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகியவற்றின் மேல் காவி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் போன்றவற்றை சான்றுகளாகச் சொல்லலாம்.

திரிபுராவின் மக்கள் தொகையில் வெறும் 9 சதவிகிதத்தினரே முஸ்லீம்கள். மற்றவர்கள் மண்ணின் மைந்தர்களான பழங்குடியினரும் வங்காளப் பிரிவினையின்போது குடியேறிய வங்காள இந்துக்களுமாவர். கடந்த அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது, முஸ்லீம் மதவெறியர்களால் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதை தமது மதவெறி நிகழச்சி நிரலுக்கு கிடைத்த தீனியாக பயன்படுத்திக் கொண்ட விஷ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜன் மார்ச் உள்ளிட்ட சங்கப் பரிவார அமைப்புகளைச் சேர்ந்த காவி குண்டர்கள் “முகமது, உன் தந்தை யார்?” “ஹரே ராம் ஹரே கிருஷ்ணா” என்று கொலைவெறியுடன் கத்திக் கொண்டே பேரணியாக சென்று, வட திரிபுராவின் பனிசாகர் பகுதியிலுள்ள ராவ் பஸார், ஜலிபாஷா, சம்டிலா போன்ற இடங்களில் உள்ள மசூதிகளைத் தீவைத்து எரித்ததோடு, கடைகளையும் சூறையாடினார்கள். இக்கொலைவெறித் தாக்குதலில் மொத்தம் 16 மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன.

படிக்க :

♦ சமூக ஊடகங்களில் பதிவிட்ட 102 பேர் மீது ஊபா : திரிபுரா பாசிச பாஜக அரசு வெறியாட்டம் !

♦ எதிர்த்துக் கேட்டால் ஊபா : பாசிஸ்டுகளின் சோதனைக் களமாகும் திரிபுரா || மக்கள் அதிகாரம்

மற்ற வட மாநிலங்களைப் போலல்லாமல், திரிபுராவில் இதுபோன்ற மதவெறிக் கலவரங்கள் நடப்பது இதுதான் முதன்முறையாகும். 1992-இல் நடந்த பாபர் மசூதி இடிப்பின்போது வட இந்தியா முழுவதும் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்கள் மிகப்பெரிய அளவில் நடந்தபோது திரிபுராவில் அத்தகைய தாக்கம் எதுவும் இல்லை. முஸ்லீம்களும் வங்க தேச இந்துக்களும் ஒற்றுமையாகத்தான் வாழ்ந்துவந்தனர். அந்த ஒற்றுமை தற்போது உடைக்கப்பட்டுவிட்டது என்பதற்கான அடையாளமாகத்தான் திரிபுராவின் மதக்கலவரத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பழங்குடிகளை ‘இந்து’க்களாக்குதல்..

1956-ஆம் ஆண்டிலிருந்து திரிபுரா காவிமயமான வரலாறு தொடங்குகிறது. மாநிலத்தின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் (சுமார் 60 சதவிகிதம்) வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த இந்துக்களாவர். ஆகவே முஸ்லீம்களை எதிரியாக காட்டி அவர்களை மதவெறியூட்டுவது ஒப்பீட்டளவில் காவி கும்பலுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் 31 சதவிகிதமுள்ள பூர்வகுடி மக்களை இந்துத்துவமயப்படுத்த அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள்தான் அதிகம். “ஒவ்வொரு பழங்குடியும் இந்து அல்லது சனாதன தர்மத்தின் ஒரு அங்கம்” என்று அவர்களிடையே பிரச்சாரம் செய்தன சங்கபரிவார அமைப்புகள்.

ஓராசிரியர் பள்ளிகள், பால்வாடிகள், சேவா பாரதி, வித்யா பாரதி விடுதிகள், கோயில்கள், பழங்குடியின சமூக குழுக்கள், விஷ்வ ஹிந்து பரிஷத், பாரதிய ஜன சங்க சந்தன், மருத்துவ முகாம்கள் – என பழங்குடிகளை காவிமயமாக்க பல வழிகளில் சுற்றி வளைத்துள்ளது ஆர்.எஸ்.எஸ். நச்சுப் பாம்பு. அதில், ஷாகாக்களுக்கு அடுத்தபடியான முக்கியத்துவமுடையாதாக இருப்பது ஓராசிரியர் பள்ளிகள்தான்.

000

திரிபுராவில் பெரும்பாலான ஓராசிரியர் பள்ளிகள் பழங்குடியின மக்கள் வாழும் தொலைதூர கிராமங்களில் நடைபெறுகின்றன. இங்கு ‘புனிதக் கல்வி’ என்ற பெயரில் இந்து வழிபாடு, இந்திய பெருமைகள் மற்றும் ‘தேசிய’ உணர்வை வளர்ப்பது என சிறுவயதிலிருந்து அம்மாணவர்களின் சிந்தனை காவிமயமாக்கப்படுகிறது. இது ஆர்.எஸ்.எஸ். வளர்ச்சிக்கு நன்கு பலனளித்தது. அரசுப் பள்ளிக் கட்டமைப்பை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு தங்கள் காவிமய நோக்கத்திற்கு சேவை செய்வதற்காகவும்தான் இவ்வாறான முறைசாராக் கல்வியை புதிய கல்விக் கொள்கை 2019-இல் சேர்த்தது மோடி அரசு. அதைத்தான் தமிழகத்தில் ‘சமூக நீதி’ தி.மு.க. அரசு “இல்லம் தேடி கல்வி” என்ற மாற்றுப் பெயரில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்த ஓராசியர் பள்ளிகளில் ஆசிரியராக வருபவர்களுக்கு முதலில் 5 நாட்கள் பயிற்சி பட்டறை, 3 மாதம் கற்பித்தல் பயிற்சி, கடைசியாக 10 நாட்கள் பயிற்சி பட்டறை என மூன்று கட்டங்களாக பயிற்சியளிக்கப்படுகிறது. இந்த ஆசிரியர்கள் சங்கப் பரிவாரத்தின் கண்களாக, காதுகளாக செயல்படுகின்றனர். ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை உருவாக்குவதற்கான காவித் தொழிற்சாலைகளே இப்பள்ளிகள். திரிபுராவில் மட்டும் 1,650 ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன என்பதிலிருந்து ஆர்.எஸ்.எஸ். இம்மக்களிடம் எப்படி வேரூன்றியிருக்கும் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஓராசிரியர் பள்ளி என்ற மாலை நேரப் பள்ளிகள் மட்டுமல்லாது “வித்யா பாரதி” என்ற பெயரில் தனது வழக்கமான பள்ளிகளையும் நடத்துகிறது ஆர்.எஸ்.எஸ். இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களிடம் இந்திய தேசிய உணர்வை வளர்க்க அசாம் உள்ளிட்ட இதர வடகிழக்கு மாநிலங்களில் செய்ததைப் போல “இந்தியா என் தாய்நாடு” என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று படிக்க வைக்கப்படுகிறார்கள். இப்பள்ளிகளில் காலையும் மாலையும் சமஸ்கிருத மந்திரங்களுடன் வழிபாடுகள் நடத்தப்படுவதோடு, காலை வழிபாடு முடிந்தவுடன் ஆர்.எஸ்.எஸ்-இன் காவி கொடிக்கு வணக்கம் செலுத்துவது தவறாமல் நடைபெறுகிறது.

“மார்க்சிஸ்டு கட்சியின் ஆட்சி காலத்தில் 15 ஆண்டுகளாக இடைநிலைப் பள்ளிக் கல்வியின் பாடத்திட்டம் மாற்றப்படவில்லை இப்பாடப்புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ், மாவோ மற்றும் ஹிட்லர் பற்றி உள்ளதே தவிர இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற பாடத்திட்டங்கள் இருந்தால் மாணவர்கள் இந்திய மன்னர்களை மறந்துவிடுவார்கள். எனவே பிரான்ஸ்-ரஷ்ய புரட்சிகளுக்கு பதிலாக இந்திய வரலாற்றில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறிய முதல்வர் பிப்லவ் குமார், இந்த பாடத்திட்டங்களை மாற்றி தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழு (என்.சி.ஆர்.டி) பாடப்புத்தகங்கள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

இளம்பிஞ்சுகளுக்கு காவி நஞ்சுட்டும் ஆர்.எஸ்.எஸ் கும்பல். வடகிழக்கு மாநிலங்கள் முழுவதும் புற்றீசல் போல் காணப்படும் ஷாகாக்கள்.

வித்யா பாரதி பள்ளிகளில் இந்த என்.சி.ஆர்.டி. பாடப் புத்தகங்கள்தான் வழக்கத்தில் உள்ளன. “2019-ஆம் ஆண்டு முதன்முதலில் மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்ட என்.சி.ஆர்.டி. பாடப் புத்தகங்களில் பழங்குடி மக்களின் வரலாறு, பண்பாடு பற்றி எந்த குறிப்புகளும் இல்லை. பழங்குடிகள் இயற்கையை வழிபடுபவர்கள். ஆனால், இராமன் மற்றும் அனுமனின் படங்கள்தான் இப்பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ளன” என்கிறார் பழங்குடி ஆர்வலர் லஸ்லு சோமா நகோடி.

மேலும் 20 அரசு பள்ளிகளை எடுத்து நடத்தவும் ‘அட்சய பாத்திரா’ என்ற திட்டத்தின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும் சங்கப் பரிவார அமைப்பின் பல்வேறு முகங்களில் ஒன்றான “அகில உலக கிருஷ்ண பக்திக் கழகம்” (ISKCON – International Society For Krishna Consciousness) என்ற அமைப்பிற்கு அனுமதியளித்திருக்கிறது, பிப்லவ் அரசு.

சங்கப் பரிவார அமைப்பான இஸ்கான் (ISKCON) வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், மூங்கில் குடிசைகளில் உள்ள பழங்குடியினர், “நாங்கள் இதற்குமுன் விலங்குகளைப் போல் வாழ்ந்தோம். பன்றிகளையும் சாராயத்தையும் விற்று வாழ்ந்து வந்தோம்” என்று கூறி வேத மந்திரங்களையும் இந்து மதப் பாடல்களையும் முணுமுணுக்கின்றனர்.

திரிபுராவில் 2015-ஆம் ஆண்டு 80-ஆக இருந்த ஷாகாகளின் எண்ணிக்கை, ஒரே ஆண்டில் (2016) 265-ஆக அதிகரித்தது. 2018-ஆம் ஆண்டு கவுகாத்தியில் “பிரம்மபுத்திராவின் மகன்கள்” என்ற பெயரில் இந்துக்கள் மாநாட்டை (இந்து சமிதி) நடத்தியது ஆர்.எஸ்.எஸ். நாடு முழுவதிலிருந்து 35,000 ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் அந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இவர்கள் மட்டுமல்லாது ஹாசிஸ், மிசிங், கஜோங், திவாஸ் போன்ற பழங்குடியினத் தலைவர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். பழங்குடியின மக்கள் ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துத்துவ நீரோட்டத்தில் இரண்டறக் கலந்துவிட்டனர் என்பதை இம்மாநாட்டின் காட்சியே எடுத்துக்காட்டியது.

பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பை அறுத்தெறிவோம்!

இந்து ராஷ்டிரம் எனும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை நிலைநாட்டுவதற்காக வெறித்தனத்தோடு வேலைசெய்துகொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரம், தன்னுடைய இலட்சியத்தை சாதிப்பதற்கான பல்வேறு கருவிகளுள் ஒன்றாகவே பா.ஜ.க. என்ற தனது அரசியல் கட்சியின் மூலம் தேர்தலைப் பயன்படுத்திக் கொள்கிறது.

அவ்வாறு தேர்தல்களில் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. வெற்றிபெறுவதும்கூட கீழே மக்களிடம் வேலைசெய்து தன்னுடைய சித்தாந்தத்திற்கு செல்வாக்கு தேடியிருக்கும்போதுதான் சாத்தியமாகிறது. கூட்டணி அமைப்பது, குதிரை பேரம் மூலம் பிற கட்சியினரை விலைக்கு வாங்குவது போன்ற தகிடுதத்தங்கள் எல்லாம் தங்களுடைய வெற்றிக்கு கூடுதலாக அவர்கள் கையாளும் தந்திரங்கள்தான் என்பதையே நாம் தொடர்ச்சியாக சொல்லிவருகிறோம்.

இன்று பா.ஜ.க. ஆளும் கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் இந்து ராஷ்டிரத்தின் புதிய சோதனைச் சாலைகளாக காட்சிதருவதை இந்த அடிப்படையில்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

மாறாக, இன்று பா.ஜ.க. ஆட்சியிலிருப்பதுதான் அம்மாநிலங்களில் நடக்கும் மதவெறிக் கலவரங்களுக்கும் பல்வேறு மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்த முடிவதற்கும் காரணம். எனவே தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிப்பதன் மூலம் பாசிசத்தை தோற்கடித்துவிடலாம் என ஒருவர் கருதினால் அது காவி பாசிசத்தைப் பற்றிய மிகவும் பாமரத்தனமான புரிதலாகும்.

இத்தாலியிலும் ஜெர்மனியிலும் பாசிச சித்தாந்தத்திற்கு பரந்த மக்கள் அடித்தளம் உருவாக்கப்பட்ட பின்னர்தான் அந்நாடுகளில் பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவ முடிந்தது என்பதே வரலாறு. முதல் உலகப் போரில் ஜெர்மனி தோற்ற பிறகு உருவாகிய ஹிட்லரின் நாஜிக் கட்சி 1920-களில் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாதபோதே அதிகாரத்தைக் கைப்பற்ற துணிந்தது, அப்போது ஹிட்லர் சிறையிலடைக்கப்பட்டான்.

1924-ஆம் ஆண்டு ஹிட்லர் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தலில், நாஜிக்கட்சி 3 சதவிகித ஓட்டுகளைப் பெற்று 14 நாடாளுமன்ற இடங்களை மட்டுமே பிடித்தது. எனினும் கொஞ்சம் கொஞ்சமாக நாஜிக் கட்சிக்கு மக்களிடையே செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்கியது. 1933-ஆம் ஆண்டு 43.9 சதவிகித வாக்குகளைப் பெற்று 288 சீட்டுகள் பெற்றது நாஜிக் கட்சி. அன்றைய அதிபராக இருந்த ஹிண்டன்பர்க் தாமாக முன்வந்து பதவி விலகினான்; ஹிட்லர் அதிகாரத்தில் ஏற்றப்பட்டான். பாசிச குண்டர்படை, ஜெர்மன் மக்கள் மத்தியில் செய்த அடிமட்ட வேலைகளால்தான் பாசிச ஹிட்லர் அதிகாரத்திற்கு வர முடிந்தது.

1930-களில் உலகையே அச்சுறுத்திய ஹிட்லர், முசோலினி பாசிச ஆட்சி காலத்தில், பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வழிகாட்டியாக செயல்பட்ட மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயலாளர் தோழர் டிமிட்ரோ கூறுவதைப் போல, “பாசிஸ்டுகளின் குதிகால் நரம்பு, அவர்களின் மக்கள்திரள் அடித்தளமாகும்”. அதனை அறுத்தெறிவது எப்படி என்பதுதான் பாசிச எதிர்ப்பு போராளிகள் ஒவ்வொருவரின் உளப்பாங்காக இருக்க வேண்டும்.

கர்நாடகா, அசாம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமல்ல, இந்து ராஷ்டிரத்தை நிர்மாணிப்பதற்காக நாடு முழுக்க அடிமட்ட அளவில் வேலை செய்து வருகிறது ஆர்.எஸ்.எஸ். ஒவ்வொரு மாநிலங்களுடைய வரலாற்றுவழி, தனிச் சிறப்பான சூழல்கள், மக்களின் பண்பாடுகள் ஆகியவைகளுக்கேற்ப தனது வேலைமுறையை அமைத்துக் கொள்கிறது.

படிக்க :

♦ திரிபுரா : முஸ்லீம்கள் மீதான சங் பரிவாரின் தாக்குதல்களை முறியடிப்போம் | மக்கள் அதிகாரம்

♦ திரிபுராவில் இந்துவெறி குண்டர்களின் வெறியாட்டம் !

சான்றாக, தமிழகத்தில் வள்ளுவருக்கு காவிச் சாயம் பூசியது; ராமனுக்கு பதில் முருக வழிபாட்டை கையிலெடுத்தது; கொங்கு மண்டலத்தில் கவுண்டர், வன்னியர் போன்ற ஆதிக்க சாதிகளுடனும் தென் தமிழகத்தில் “தேவேந்திர குல வேளாளர்” என புது அவதாரமெடுக்கும் பார்ப்பன கைக்கூலி கிருஷ்ணசாமி போன்ற பிழைப்புவாத சாதிச் சங்கத் தலைவர்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் தனக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ்.

எனவே பாசிச எதிர்ப்பு போராட்டத்தில், முதன்மையான அம்சம் என்னவென்றால் அடித்தளத்தில் (மக்களிடையே) ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகள் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும் எதிர்த்து முறியடிப்பதேயாகும். இதன் மூலமே காவி -கார்ப்பரேட் பாசிச அபாயத்தை எதிர்கொள்ள முடியும். ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிஸ்டுகளை வீழ்த்த நினைக்கும் பல்வேறு புரட்சிகர, முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த அடிப்படையில் ஓர் ஒற்றுமையை கட்டியமைத்துப் போராட வேண்டும். இதற்குட்பட்டே தேர்தல் களத்தையும் அணுக வேண்டும்.

மாறாக, பாசிசத்தை முறியடிக்க தற்போதைக்கு ஒரு ‘சாத்தியமான மாற்று’ என்ற பெயரில் தேர்தல் களத்தை மட்டுமே முதன்மைப்படுத்தி பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட ஆளும்வர்க்க ஓட்டுக் கட்சிகளின் பிரச்சார பீரங்கிகளாக மாறினால், பற்றிப் பரவிவரும் பாசிச அபாயத்தை கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.

(முற்றும்)


அப்பு

ராம நவமி வன்முறை : பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது !

பாசிசம் தனது நடவடிக்கைகளை, சங் பரிவார அமைப்புகளையும், அரசு எந்திரத்தை ஒருங்கிணைத்து கொண்டு தனது அரசியல் – சித்தாந்த கொள்கைக்களை நிலைநாட்டுகின்றது.
மத்தியப்பிரதேசம், குஜராத், டெல்லி, ராஜாஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா, மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், பீகார், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், இந்து புத்தாண்டு தினம், ராம நவமி, அனுமன் ஜெயந்தி இந்து பண்டிகை நாளை ஒட்டி, முஸ்லீம்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதியில், மதவெறி ஊர்வலங்களை நடத்தி, திட்டமிட்ட வன்முறை கலவரவங்களை நிகழ்த்தியுள்ளனர் காவி பாசிஸ்டுகள்.
***
ஏப்ரல் 2-ம் தேதி, இந்து புத்தாண்டு பண்டிகையை ஒட்டி, ராஜஸ்தானின், கரௌலி நகரில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தி, முஸ்லீம்கள் கல் வீசினார்கள் என்றுகூறி, அப்பகுதியில் உள்ள கடைகள், வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.
படிக்க :
♦ ஜிக்னேஷ் மேவானி கைது ! பாசிச மோடி – அமித்ஷா கும்பலை விமர்சிப்போருக்கு ஒரு எச்சரிக்கை !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி : முஸ்லீம் மக்களின் வீடுகள் காவி அரசால் இடிப்பு | கேலிச்சித்திரங்கள்
ஏப்ரல் 10-ம் தேதி ராம நவமி நாளன்று நடத்திய ஷோபா யாத்திரையின்போது பல்வேறு மாநிலங்களில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை தேர்வு செய்து, மசூதிகளின் முன் ஊர்வலங்கள் நடத்த திட்டமிட்டார்கள் உள்ளூர் சங் பரிவார அமைப்புகள். அதற்குமுன் முஸ்லீம்கள் மீதான வெறுப்பு கோஷங்களை பரப்புவது, பெருந்திரளான மக்களை அழைப்பு விடுக்கும் வகையில் அப்பகுதி முழுக்க ஒலிபெருக்கி மூலம் பிராச்சாரம் செய்து என முஸ்லீம் ஏதிர்ப்பு உணர்வை விதைத்தார்கள். முஸ்லீம் எதிர்ப்பு பாடல்களை பாடினார்கள். பிறகு, ஆயிரக்கணக்கான காவி குண்டர்கள், கைகளில் தடியுடனும், வாள்கள், கோடாரிகள், கைத்துப் பாக்கிகளை ஏந்திகொண்டு, மசூதிகள் உள்ள பகுதியை நோக்கி ஊர்வலம் சென்றார்கள். மசூதியை நெருங்கி செல்லும்போது, மசூதிகளின் மீது காவிக் கொடிகளை ஏற்றி முஸ்லீம்களை ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள். பிறகு முஸ்லீம்கள் கல் எறிந்தார்கள் என கூறி அப்பகுதி முழுக்க உள்ள கடைகள், வீடுகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினார்கள் காவி பாசிஸ்டுகள்.
மத்தியப்பிரதேசம், கார்கோன் பகுதியில், ராம நவமி ஊர்வலத்தின் போதான வன்முறை தாக்குதலில் 20 வீடுகள் தீக்கரையாக்கப்பட்டன. மேற்குவங்கத்தில் பல்வேறு நகரங்களில் முஸ்லீம்கள் மீதும், அவர்களது கடைகள்மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜார்க்கண்டில் நடந்த வன்முறையில் 12 பேர் காயமுற்றனர் ஒருவர் உயிரிழந்தார். பிகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் மசூதியின்மீது காவிக்கொடி ஏற்றி, இந்து மதவெறி குண்டர்களால் ஏராளமான கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. குஜராத்தின், ஹிம்மந்த்பூர், காம்பாத் நகரத்தில் பதிமூன்றுக்கும் மேற்பட்ட மசூதிகள், முஸ்லீம்களின் உடைமைகள், கடைகள், வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் விடுதியில் அசைவ உணவு உண்ண கூடாது என்று கூறி அங்குள்ள சமையலர்கள், ஊழியர்கள் மாணவர்கள் மீதும் கம்புகள், ஆயுதம் கொண்டு தாக்கினார்கள். இப்பயங்கரவாத செயலை முன்னின்று நடத்தியது ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.
இவ்வன்முறைச் செயல்கள் பல்வேறு மாநிலங்களில் சங் பரிவார அமைப்புகளால் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட, ஒத்த தன்மையிலான நடவடிக்கையாகவே உள்ளது. முஸ்லீம்கள் மீதான திட்டமிட்ட தாக்குதலாகவே நடந்தேறியுள்ளது.
அதிகார வர்க்கத்தின் புல்டோசர் கரசேவை:
உத்தரப்பிரதேசம் தேர்தல் வெற்றிக்கு பிறகு யோகி ஆதியத்தியநாத், தனக்கெதிரான போரட்டக்காரர்களை ஒடுக்க “ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை” என்று கூறி புல்டோசர் கலாச்சரத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து, மத்தியப்பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ராம நவமி ஊர்வலத்தில் கலவரக்காரர்கள் மீது விசாரனை குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறி அடுத்த இடிப்பு சம்பங்களை தொடங்கி வைத்தார். அவரின் அறிவிப்பிற்கு பிறகு, உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா, “கற்கள் வீசப்பட்டவர்களின் வீடுகளை கற்குவியல்களாக மாற்றுவோம்” என்றும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்துவோம் என்று கூறினார்.
டெல்லியில் இடிக்கப்பட்ட முஸ்லீம் மக்களின் கடைகள்
அதன் பிறகு, அப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசை குவித்து இந்துமதவெறியர்கள் கைநீட்டிய இடமெல்லாம் வீடுகளை இடிக்க உத்தரவிட்டது கார்கோன் மாவட்ட நிர்வாகம். புல்டோசர் இயந்திரங்களை கொண்டு 50-க்கும் மேற்பட்ட வீடுகளை இதுவரை இடித்துள்ளனர். இந்நடவடிக்கை குறித்து விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் அனுக்கிரகா சாலையோரங்களில் உள்ள வீடுகள் கடைகள் “ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை” என கூறி பதிலளித்தார். மேலும் இடிக்கப்பட்ட சிலவீடுகள் பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் கட்டப்பட்டவை என்பது குறிப்பித்தக்கவை.
குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்ட நிர்வாக ஆட்சியர் மனோஜ் தக்ஷினி, சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றுபடுவதாக கூறி, ராம நவமி ஊர்வலம் நடத்த பகுதிகளில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும், இருப்பிடங்கள், கடைகள் குறிவைத்து இடிக்கப்பட்டன. பாஜக செய்தி தொடர்பாளர் ரூத்விஜ் பட்டேல் இது சட்டபூர்வமான நடவடிக்கைதான் என்று இடிப்பு சம்பங்களை நியாப்படுத்தி பேசினார்.
ஆக்கிரமிப்புகளை அகற்றினோம் என்று அதிகாரிகள் விளக்கமளிக்கிறார்கள். கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினோம் என்று அமைச்சர் சொல்கிறார் இரண்டும் உண்மை அல்ல. இருவரும் இணைந்து மூஸ்லீம்கள் மீதும், அவர்களின் குடியிருப்புகள் மீதும் கரசேவையை நடத்தியுள்ளார்கள் என்பதுதான் உண்மை.
அரசியல் சாசனம் சட்டம், மனுவாதிகளுக்கு அல்ல :
ஏப்ரல் 16 அன்று, வடமேற்கு டெல்லி மாநாகராட்சியில் உள்ள ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் சங்பரிவார அமைப்புகளால் நடத்தப்பட்டது. பிறகு முஸ்லீம்கள் மீதான தாக்குதலும் நடத்தப்பட்டது.
இந்நடவடிக்கைக்கு பிறகு ஏப்ரல் 20 அன்று பா.ஜ.க தலைவர் ஆதேஷ் குப்தா, வன்முறையில் ஈடுபட்டவர்கள் சமூக விரோதிகள், ஆக்கிரமிப்பாளார்கள் என்று கூறி புல்டோசர் கொண்டு இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாநாகராட்சி அதிகாரிகளிடம் கடிதம் கொடுக்கிறார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் டெல்லி மாநாகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கை என்ற பெயரில், ஆயிரக்கணக்கான போலீசை குவித்து, மசூதியை சுற்றியுள்ள முஸ்லீம்களின் வீடுகளையும், கடைகளையும் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கினார்கள். 20-க்கும் மேற்பட்ட வீடுகளையும் கடைகளையும் இடித்து தள்ளினார்கள்.
வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, இந்நடவடிக்கையை உடனே நிறுத்த உச்சநீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை வாங்கினார். உச்சநீதிமன்றம் தடை விதித்த பின்பும் தடை ஆணை இன்னும் வந்து சேரவில்லை எனக்கூறி இடிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தன. அரசால், ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறியவர்கள் நீண்ட காலமாக அப்பகுதியில் வசித்து வருபவர்கள். அவர்கள் முறையான ஆவணங்களை காட்டிய பிறகும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.க எழுதிய சட்டத்தைத்தான் அன்று அதிகாரிகள் அமுல்படுத்தினார்கள். மதவெறியர்களால் திட்டமிட்டு நடத்தபடுகின்ற கலவரங்கள், எப்போதும் அரசியல் சாசன சட்டத்தால், அதன் உத்தரவுகளால் தடுத்து நிறுத்த முடியாது என்பதற்கு இந்நிகழ்வு கூடுதல் ஆதாராமாக உள்ளது.
போலீசு சட்டப்பூர்வ பாசிச குண்டர் படை:
இந்து மதவெறியர்கள், வாள், கோடாரி ஆயுதங்களை வைத்து கொண்டு ஊர்வலம் நடத்தினார்கள். ஊருக்கு ஊர் மேடை போட்டு முஸ்லீம்களை கொலைசெய்யவேண்டும் என அறைகூவல் விடுத்தார்கள். இவை அனைத்தையும் போலீசுத்துறை அனுமதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தது. இந்து மதவெறியர்களின்மீது பெயரளவிலான வழக்குகளை போட்டு எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் பாதுகாத்து வருகிறது.
மாறாக, முஸ்லீம்கள் கல் எறிந்தார்கள் எனக்கூறி இதுவரை மத்தியப் பிரதேசத்தில் 168 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இரண்டுபேர் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். டெல்லி, ஜஹாங்கீர்புரியில் முதல் தகவல் அறிக்கையில் பலபேர் முஸ்லீம்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். இதுவரை 14 பேரை விசாரணை என்ற பெயரில் கைது செய்துள்ளனர்.
ஜிக்னேஷ் மேவானி
உத்தரகாண்ட் மாநிலத்தில், வன்முறையில் ஈடுப்பட்ட, இந்து மதவெறியர்கள்மீது எவ்வித வழக்கும் பதிவும் செய்யாமல் முஸ்லீம்கள் 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்து 11 பேரை கைது செய்துள்ளது அம்மாநில போலீசு. மேலும் நான்கு புல்டோசர் இயந்திரங்களை அப்பகுயில் கொண்டு நிறுத்தி, கல் எறிந்தவர்கள் சரணாடையாவிட்டால் வீடுகளை இடித்து தகர்ப்போம் என்று கூறி மிரட்டியுள்ளது.
இந்நடவடிக்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய, குஜராத் எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளது அசாம் போலீசு. முஸ்லீம்கள் மீதான ஒடுக்குமுறை சட்டவிரோத குண்டர்களாலும், சட்டப்பூர்வ குண்டர்களாலும் இணைந்தே நடத்தப்பட்ட நிகழ்வுகளாகும்.
ராம நவமி முதல் அனுமன் ஜெயந்தி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்கள், மோடி அரசாங்கமும், அதிகார வர்க்கமும் முஸ்லீம்கள் மீது இணைந்து நடத்திய பகிரங்கமான பயங்கரவாத செயல்களாவே பார்க்க வேண்டியுள்ளது.
பாசிசம் தனது நடவடிக்கைகளை துரிதப்படுத்துகிறது :
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆட்சி பொறுப்பெடுத்து கொண்ட 2014 ஆண்டிலிருந்தே, தனது சங் பரிவார துணை அமைப்புகளை கொண்டு தனது அரசியல் சித்தாந்தக் கொள்களை தீவிரமாக அரங்கேற்ற முயற்சித்து வருகின்றன. தற்போது தனது பாசிச ஆதரவு தளத்தை விரிவுபடுத்த முயற்சித்து வருகின்றது. சமீபத்தில் நடந்த பாசிச நடவடிக்கைகளே இதற்கு சான்றாகும்.
கர்நாடகத்தில் ஹிஜாப் அணிய தடை, பாஜக ஆளும் மாநிலங்களில் பசுவதைத் தடைச்சட்டம், ஹாலால் ஜிகாத், ஒலிபெருக்கி வைக்க தடை, லவ் ஜிகாத், பெண்களைப் பாதுகாக்க ரோமியோ படை, சைனிக் ராணுவ பள்ளி, முஸ்லீம்களை இனப்படுகொலை செய்ய அழைப்பு, கிறிஸ்துவர்களின் மீதான தாக்குதல், முஸ்லீம்கள் கோவில்களுக்குமுன் வியாபரம் செய்ய தடை, தற்போது புல்டோசர் காலாச்சாரத்தை தொடங்கி வைத்துள்ளனர். தங்களது தொடர்ச்சியான நடவடிக்கை மூலம் அடுத்த சில ஆண்டுகளில் அமையவிருக்கும், இந்துராஷ்டிர கொடுங்கோன்மை அரசு எப்படி அமையும் என்பதையும் நம் கண்முன்னால் நிகழ்த்தி காட்டுகிறார்கள்.
படிக்க :
♦ மோடியை விமர்சித்து ட்விட் செய்த ஜிக்னேஷ் மேவானி கைது !
♦ டெல்லி ஜஹாங்கீர்புரி முஸ்லிம் மக்களின் வீடுகள் இடிப்பு : இந்துராஷ்டிரத்திற்கான பாதை செப்பனிடப்படுகிறது !
எதிர் தாக்குதலுக்கு தாயாரிப்பு செய்வோம்:
இந்நிகழ்வு முஸ்லீம்கள் மீதான வன்முறை மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தனது சித்தாந்தாத்தை மக்கள் மத்தியில் அமல்படுத்தி கொண்டு இருக்கிறது. இதற்கு குறுக்கே யார் வந்தாலும், கைது நடவடிக்கைகளும், புல்டோசரும் பாயும் என்று இந்துவவாதிகள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
பாசிஸ்டுகளின் நடவடிக்கையை முறியடிக்க வேண்டுமானல், சொல்லளவில் மட்டும் இல்லாமல், பாசிசத்தின் ஒவ்வொரு மக்கள் விரோத நடவடிக்கைகளையும் பரந்துபட்ட மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் – விவாசாயிகள் – மாணவர்கள் மற்றும் பிற ஜனநாயக சக்திகளை பாசிச எதிர்ப்பு அடிப்படையில் ஒருங்கிணைத்து, பாசிச தாக்குதல்களுக்கு எதிராக, எதிர்தாக்குதல் தொடுக்க வேண்டியது அவசியமான கடமையாகும்.

தங்கபாலு

நியூஜே முகநூல் மூலம் தேர்தல்களின்போது பாஜகவிற்கு ஆதரவாக வெறுப்பு பிரச்சாரம் செய்த ரிலையன்ஸ் !

2019-ம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்ற மற்றும் ஒன்பது மாநில தேர்தல்களின் போது, பாஜக-விற்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பல விளம்பரங்களை வெளியிட்டது நியூ எமர்ஜிங் வேர்ல்டு ஆஃப் ஜெர்னலிசம் (New Emerging World of Journalism) நியூஜே (NewJ) என்ற முகநூல் பக்கம். இம்முகநூல் பக்கம், முஸ்லீம்கள், எதிர்க்கட்சிகள் ஆகியோர்மீது வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக பல விளம்பரங்களை வெளியிட்டிருந்தது. மோடி மீண்டும் பிரதமரானதில் இத்தகைய விளம்பரங்கள் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

ஆய்வு நிறுவனமான ஆட்.வாட்ச்-ம் (ad.Watch) மற்றும் தி ரிபோர்ட்டர்ஸ் கலெக்டிவ் (The Reporters Collective) இணைந்து, இந்தியாவில் அரசியல் விளம்பரங்களுக்காக –தேர்தலையொட்டி- மட்டும் ரூ.5 இலட்சத்திற்கும் அதிகமாக செலவழித்த விளம்பரதாரர்களைப் பற்றி ஆய்வு செய்தது. அதில், பிப்ரவரி 2019 முதல் நவம்பர் 2020 வரை, நியூஜே முகநூல் பக்கத்தால் மட்டும் 718 அரசியல் விளம்பரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவை 290 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை அடைந்துள்ளது என ஆய்வு கூறியது.

படிக்க :

♦ இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

♦ சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !

2018-ம் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பா.ஜ.க.விற்கும் ரிலையன்ஸ் குழுமத்திற்கும் மிகவும் நெருக்கமானது. இதன் நிறுவனர் ஷலப் உபாத்யாய்-ன் தந்தை உமேஷ் உபாத்யாய், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவராகவும், நெட்வொர்க் 18 குழுமத்தின் செய்தி தலைவராகவும் பணியாற்றியவர். அவரது உறவினரான சதீஷ் உபாத்யாய், டெல்லியின் முன்னாள் பாஜக தலைவர்.

2018-ல் ரூ.1 இலட்சம் முதலீட்டைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், 2020 வரை எந்த வருமானமும் ஈட்டவில்லை. 2019-ல் அதன் வருமானம் ரூ.33 லட்சத்து 70 ஆயிரம்; ஆனால், நட்டமோ ரூ.2 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம். இப்படி, பல மடங்கு நடத்தில் இயங்கும் இந்நிறுவனம் எப்படி தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக விளம்பரம் செய்திருக்க முடியும் என்று கேள்வி எழலாம்?

அதாவது, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட், நியூஜே நிறுவனத்திற்கு கடன் பத்திரங்கள் மூலம் ரூ.8 கோடியே 40 லட்சம் கடன் கொடுத்து, அதன் 75 சதவிகித பங்குகளை சிறிது காலத்திற்கு பின்பு வாங்கியது ரிலையன்ஸ். அடுத்த ஆண்டே, மீண்டும் ரூ.12 கோடியே 50 லட்சம் கடனை நியூஜே-வுக்கு கொடுத்தது.

மார்ச் 2020-ம் நிதியாண்டில் நியூஜே வருவாயை ஈட்டியதாக தரவுகள் இல்லை. இருந்தும் ரிலையன்ஸ் அளித்த கடன் மூலம் பாஜக ஆதரவு விளம்பரங்களுக்கு செலவு செய்த தொகை ரூ.2 கோடியே 73 லட்சம். இந்த காலக்கட்டத்தில்தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிலின் பங்குகளை, ரிலையன்ஸ் குழுமத்தில் ஒன்றான ஜியோ நிறுவனம் வாங்கி கொண்டது. 2021-ம் ஆண்டு இறுதியில் ஜியோ நிறுவனமானது நியூஜே-வுக்கு 0.0001 சதவிகித ஆண்டு வட்டி விகிதத்தில், ரூ.8 கோடியே 49 லட்சத்து 60 ஆயிரம் கடனாக வழங்கியது.

நியூஜே-வினுடைய ரிலையன்ஸ் பங்கினை ஜியோ எடுத்துக் கொள்வதற்கு ஆறு நாட்களுக்கு முன்புதான் ‘ஆர்ட்டிகல்ஸ் ஆஃப் அசோசியேஷனை’ (Articles Of Association) என்று நிறுவனத்தில் பெயரை திருத்தியது நியூஜே. இதன் மூலம் நியூஜே-வின் செய்தி உள்ளடகத்தையும், அது என்ன பகிர வேண்டும் என்பதையும் ஜியோ தான் தீர்மானிக்கும்; கட்டுப்படுத்தும்.

இப்படி முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் நியூஜே முகநூல் பக்கம் மூலம் பாஜக-வுக்கும் மோடிக்கும் ஆதரவாக பல கோடிகளை செலவு செய்து 2019 தேர்தலில் வெற்றிப் பெற வழிவகை செய்துகொடுத்திருக்கிறது.

பாஜக என்றாலே பொய்யும் புரட்டும் தானே !

இத்தகைய விளம்பரங்களில் அடிப்படையான விஷயம் உள்ளது. அது, தவறான மற்றும் பொய் தகவல்களைக் கொண்டு முஸ்லீம்களுக்கு எதிரான மத உணர்வினை தூண்டுவது, எதிர்க்கட்சிகளை இழிவுப்படுத்துவது, இதன்மூலம் பாஜக-வுக்கும் இந்துத்துவ சித்தாந்தத்துக்கும் ஆதரவினை திரட்டுவது என்பதுதான். முகநூலில் பதிவிடப்படும் இத்தகைய விளம்பரங்களுக்கும் வீடியோ பதிவுகளுக்கும் அதிக பணத்தை செலவுசெய்வதால் பல ஆயிரக்கணக்கான முகநூல் பயனர்களை சென்றடைகிறது.

அதுமட்டுமல்லாமல், பாஜக அல்லது இந்துத்துவ சித்தாந்தம் சார்ந்த கருத்துக்கள் பெரும்பாலும் இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றிய அரசியல்சாரா தகவல் என்ற போர்வைக்குள் பரப்பப்படுகின்றன. உதாரணத்திற்கு, கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தனது கால்களால் தேர்வினை எழுதும் வீடியோ பகிரப்பட்டிருக்கும். ஆனால் அதனிடையில் மோடியின் தேர்தல் பிரச்சாரம் குறித்தோ அல்லது முஸ்லீம் வெறுப்பு பிரச்சார செய்தியோ அடங்கியிருக்கும். ஆக, நியூஜே-வின் வீடியோக்கள், விளம்பரங்கள் அனைத்தும் சாதாரண மக்களை எளிமையாக சென்றடையும் விதத்தில் உருவாக்கப்படுகிறது. அதேபோல, முஸ்லீம்களுக்கு எதிரான இந்துத்துவ வெறுப்பு அரசியலை தாங்கிவரும் தவறான தகவல் மக்களிடையே வேகமாக பரவி குறிப்பிட்ட அளவிற்கு வினையாற்றுகிறது.

உதாரணத்துக்கு, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்துத்துவ பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர், பாஜக சார்பில் போபால் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். வழக்கு நடந்துகொண்டிருக்கும் போதே, ‘மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த பிரக்யாவுக்கும் குற்றத்துக்கும் சம்பந்தமில்லை; அவ்வழக்கில் இருந்து அவர் விடுதலைச் செய்யப்பட்டார்’ என பொய் செய்தி ஒன்றை வீடியோவாக வெளியிட்டது நியூஜே. இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டது; பிரக்யா சிங்கும் அத்தேர்தலில் வெற்றி கிட்டியது.

அதேபோல, 2019 தேர்தல் பிரச்சாரத்தின்போது, பாஜக அரசாங்கம் ‘பயங்கரவாதத்தின்மீது மென்மையாக நடந்துகொள்கிறது’ என பேசிய ராகுல் காந்தி, அதற்கு ஆதாரமாக மசூத் அசார் என்ற பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைவரை பாஜக ஆட்சியின்போது வாஜ்பாய் விடுவித்ததை எடுத்துக் காட்டினார். பயங்கரவாதத்தின்மீது பாஜக-வின் அணுகுமுறையை பற்றி வாய்திறக்காமல், மசூத் அசாரை ராகுல், ‘ஜி’ என்று அழைத்ததை பெரிதாக்கியது நியூஜே.

2019-ம் ஆண்டு இந்தியாவில் ரிலையன்ஸ்க்கு போட்டியாக வளர்ந்துவரும் அமேசான் நிறுவனம், சில பொருட்களை இந்து கடவுளின் படங்கள் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறது. இதற்கெதிராக, “BoycottAmazon” என்ற ஹேஷ்டாகை டிரண்ட் செய்தது இந்துமதவெறிக்கும்பல். நியூஜே இவ்விஷயத்தை கையிலெடுத்து வெறுப்பு அரசியலை தூண்டிவிட முயற்சித்தது.

2019 டிசம்பரில், முஸ்லீம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது, நாடுமுழுவதும் எதிர்ப்புகள் எழுந்தன. இதற்கு எந்த எதிர்வினையும் காட்டாத நியூஜே, நவம்பர் 2020-ம் ஆண்டு வங்கதேசத்தில் இந்துத்துக்களை முஸ்லீம்கள் தாக்கும் வீடியோவை வெளியிட்டு, “சிறுபான்மை இந்துக்கள் எப்போதும் பெரும்பான்மை முஸ்லீம்களால் தாக்கப்படுகிறார்கள். குடியுரிமை சட்டத்தை ஏன் ஆதரிக்க வேண்டும் என்று இப்போது புரிகிறதா” எனச் கேள்வியெழுப்பியிருந்தது.

இப்படி பாஜக-வுக்கு ஆதரவாகவும், முஸ்லீம் சிறும்பான்மையினருக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படுகிறது நியூஜே. ஆனால், தங்களுக்கும் பாஜக-வுக்கும் எந்த தொடர்பும் இல்லாததுபோலவும் தன்னை ஓர் செய்தி நிறுவனமாகக் காட்டி கொள்கிறது.

தேர்தல் கமிஷனும் முகநூல் நிறுவனமும் பாசிசத்தின் கூட்டுக் களவாணிகளே !

இந்திய தேர்தல் சட்ட பிரிவு 171H, வேட்பாளர் தேர்தல் பிரச்சாரத்தின் போது செலவிடும் பணத்தை வரம்பிடுகின்றது. வேட்பாளரல்லாது மூன்றாம் நபரால் விளம்பரம் செய்யப்படுமேயானால், அது வேட்பாளரின் செலவு, கணக்கில் சேர்க்கப்படும்.

அதேபோல, தேர்தல் நேரத்தின்போது, கட்சியாலும் வேட்பாளாராலும் நேரடியாக நிதியளிக்கபடாத விளம்பரங்களை வெளியிடுவது இந்திய அரசியல் சட்டத்தின்படி குற்றமாகும். அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் பதிவுகள் அல்லது விளம்பரங்களுக்கும் அந்தந்த கட்சிகள்தான் பொறுப்பாகும். ஆக, தேர்தல்கள் ஒட்டி கட்சிக்களுக்கு வெளியே வெளியிடப்படும் விளம்பரங்களைப் பயன்படுத்துவதை இந்த சட்டம் தடை செய்கிறது.

ஆனால், முகநூல் போன்ற சமூகவலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த தடைகளை நீட்டிக்கவில்லை. அதாவது கட்சி சார்பற்றவர்கள் (வேட்பாளர்கள் (அ) கட்சியின் நேரடியான தலையீடில்லாமல்) பணத்தை செலவழித்து விளம்பரங்கள் செய்யலாம் என்கிறது. இதனை நிழல் விளம்பரங்கள் (Surrogate Advertisements) என்பார்கள். முகநூல் நிறுவனமும் பாஜக மற்றும் அதன் வேட்பாளர்களை முன்னிறுத்தும் நிழல் விளம்பரங்களையும் செய்திகளையும் அமைதியாக அனுமதித்து வருகிறது.

பொதுவாக முகநூலில் உள்ள மென்பொருளே முகநூலின் சமூக விதிகள், அதன் வழிகாட்டுதலின்படி தவறான செய்திகளையும், வீடியோக்களையும் வன்முறை அல்லது ஒருதரப்பினரை குறிவைக்கும் பதிவுகளையும் தானாகவே நீக்கிவிடும். ஆனால் பாஜக தொடர்பாக நியூஜே வெளியிட்ட பொய் செய்திகளை முகநூல் நிர்வாகம் நீக்கவில்லை.

படிக்க :

♦ எதிர்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளின் செயல்பாட்டை முடக்கும் மோடி அரசு | பாகம் 1

♦ மாநில அரசுகளை முடக்குவதே மோடி அரசுக்கு முழுநேர பணியாம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு வெளியாகும் இத்தகைய நிழல் விளம்பரங்களுக்கு எதிராக முகநூல் நிறுவனம் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறதென்றாலும், அதில் பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியினரின் 687 முகநூல் பக்கங்களையும், கணக்குகளையும்தான் நீக்கியுள்ளது. ஆனால், பாஜகவை விளம்பரப்படுத்திய ஒரு முகநூல் பக்கம் மற்றும் 14 முகநூல் கணக்குகள் என மிகவும் சொற்பமானவற்றை மட்டுமே நீக்கியுள்ளது. இதுவும் சில்வர் டச் (Silver Touch) என்ற ஐடி நிறுவனத்துக்கு சொந்தமான கணக்குகள்.

சட்டம் இப்படியிருக்க, நாடாளுமன்ற தேர்தல்களின்போது தேர்தல் குறித்த நிழல் விளம்பரங்களை வெளியிட கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தோடு முகநூல் நிறுவனத்தின் இந்திய இணையம் மற்றும் மொபைல் சங்கத்தைக் (Internet and Mobile Association of India) கொண்டு சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறது என்று ஃபிரான்சிஸ் ஹவ்கன் வெளியிட்ட ஆவணங்கள் கூறுகிறது.

000

ஒவ்வொரு தேர்தலின் போது, உழைக்கும் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்படும் தேர்தல் ஜனநாயம் என்ற பிம்மம் மேற்கண்ட நடவடிக்கைகளால் வேரும் மாயத்தோற்றம்தான் என்பதை புரிந்துகொள்ள முடியும். அதாவது, கார்ப்பரேட் முதலாளிகள் யாரை கைக்காட்டுகிறார்களோ அவர்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் அமர போகிறார்கள். ஆக, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின், காவி – கார்ப்பரேட் பாசிசத்தை தேர்தல் களத்தில் வெற்றிக் கொள்ளலாம் என்று இனியும் எண்ணிக் கொண்டிருப்பது முட்டாள்தனம். நமது பாசிச எதிர்ப்பு என்பது தேர்தல் களம் அல்ல போராட்டக்களம்.


கல்பனா

Grownup history of RSS in Karnataka !

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire ! – Part 2
Part – 1
Brahminising folk deities
The RSS adopted the strategy of brahminising folk deities to bring non-Brahmins into the ‘Hindu’ fold. In Tamil Nadu, the RSS converted the village guardian deity Muniyappan into Muneeswaran; Mariamman, the goddess of rain, into a form of goddess Shakti; Kurinji thinai (hill area) god Murugan into Shanmukha and brahminised them. Likewise, it brahminised Karnataka’s folk deities.
In Karnataka, the history of the folk deities is narrated as oral stories during the annual festival. During this festival, chickens and animals were usually sacrificed. Women sing about the history of the folk deities not only during the festival, but also while working in the fields.
In the 1920s, due to changes in Karnataka’s feudal structure and the migration of large number of people to cities in search of work and the Land Reform Laws of 1974, large farms gradually disappeared and more small landowners emerged. Because of their poor economic conditions, after the 1970s, agriculture deteriorated and the folk deity worship also gradually began to decline. The Brahmin coterie made use of this period.
Read :
♦ Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
♦ R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
The places where deity worship (Daiva Aradhanay) took place were later termed as shelters of gods (Daiva Sana) and temples were built. And the Brahmins became priests of these temples. The Karnataka folk deity Bhootnaath Shiva was converted into an incarnation of Vishnu. The worship which took place annually was changed into worship on a daily basis. The sacrifice of animals and birds in the temple was prohibited.
In Tamil Nadu, Nandan, who was a Dalit, tried to worship Lord Shiva. He was set ablaze by the Chidambaram Dikshitar Brahmin bloc and was turned into “Nandanar”. Similarly, a tribal named Koraga Thaniya, who was murdered by the Brahmins for entering the temple, was worshipped by the tribes. Today, the RSS brahminised him into Koragajja, an incarnation of Lord Shiva.
The brahmin coterie also did not spare Babbarya, the deity of the Mogaveera fishermen. The fishermen used to worship Babbarya before entering into the sea. Babbarya was converted into a reincarnation of Babbruvahana, the son of Pandava Prince Arjuna and was brahminised.  The RSS did this by cooking up a story with a good screenplay that Babbarya was born to Arjuna and Queen Pramila of Kerala.
Even though the folk deities are brahminized, they are not treated according to the vedic or brahminical rituals like the Brahmin gods. Instead they are treated with untouchability.
Fascist soldiers in the name of Vigilante ‘Cow Protection’ Groups
In 1952, immediately after the formation of Bharatiya Jana Sangh (BJS),  the RSS picked up gauraksha (cow protection) as one of its primary action points. In 1952, in Udupi, a national call was given to observe October 26 as Anti-Cow Slaughter Day. A National Cow Weekly was organised by the RSS in the months of October and November. During a press conference, Sangh parivar organisations like Durga Vahini, Bajrang Dal and Vishva Hindu Parishad called for the formation of a ‘cow protection force’ in every village. At the same time, vigilante cow protection groups were formed in Dakshina Kannada (South Karnataka).
Anti-Muslim campaign was systematically propagated in the name of ‘cow protection’. “Since the Vedic period, one man has killed another; but never a cow. We can kill anyone; even our brother. But we should never kill a cow”. This is being preached as an anti-Muslim propaganda.
After this, mob attacks on Muslims began as planned by the RSS, similar to what’s happening in UP. In 2005, two Muslims, Hajjaba and Hassanabba were accused of smuggling cows and were publicly brutalised and murdered in Udupi district. But Udupi saw its first political mobilisation for gaurakshaks in 1952 itself.
In every meeting of the RSS, vicious campaigns were launched against Muslims, calling them ‘foreigners’, ‘consumers of beef which Indians are not used to’. Even before the establishment of the RSS, there have been anti-Muslim campaigns in Karnataka. In 1933, the Hindu Mahasabha organised its first mass meeting and the chief guest was RG Bhide. He expressed that “Muslims are anti-nationals; supporting the Khilafat movement is an anti-national activity” and a case had been registered against him for his hate speech. After the formation of the RSS, he became the chief editor of Kesari. The depiction of muslims as anti-nationals, which started in 1933, continues till date.
Ganesh Chaturthi and riot yatras
After brahminising the folk deities and nationalising the brahminical culture of Ganesh Chaturthi, the RSS created influence among the non-brahmins. Tilak took up Ganesha worship to hinduize ‘Hindus’ in Maharashtra. Golwalkar instigated the RSS cadres to take up Ganesha worship in Karnataka and thereby paving way to hold riot processions.
Till the 1960s, there was no Ganesha worship in Karnataka. It was only in the 1960s that Ganesh Chaturthi became popular among the people of Karnataka. Before this, there were Ganesha idols only in two places: one at the Kasturba Medical College established by Dr. Tonse Madhava Anantha Pai and other at the RSS’s Head Office Shanthi Nikethan. In the beginning, only Gaud Saraswat Brahmins worshipped Lord Ganesha. Other ‘Hindu’ Shudras did not participate in this. But the RSS attracted people from all walks of life in Karnataka to the Ganesh Chaturthi festival on the 25th anniversary of the festival.
‘Ram Janmabhoomi’ which stirred up religious fanaticism in Karnataka
After the Ganesh Chaturthi, it is the Ram Janmabhoomi movement that assisted the RSS in creation of a vast popular base. It is no exaggeration to say that Advani’s Rath Yatra, started in 1990, and the Ram Janmabhoomi movement had made Lord Rama the hero of ‘Hindu India’. Sri Ram Janmabhoomi Mukti Yagna Samiti was formed in Karnataka to establish roots to the Ram Janmabhoomi among the people. Through this organization, the RSS actively worked among the people in full swing until the demolition of Babri Masjid in 1992.
As happened across India, the RSS launched the ‘Kar Seva’ movement in Karnataka also. It asked the people to donate brick for the construction of a temple for Lord Rama at the Babri Masjid site. The brick was received only after performing the pujas in front of each house. This process of conducting pujas and receiving brick was a psychological measure to win over the people to the hindutva ideology.
The Ramayana and Mahabharata were broadcasted on television at the same time when the Ram Janmabhoomi movement was started. Through this, Lord Rama was introduced as a divine incarnation and a Hindu hero to people who did not even know who Rama was. The RSS was only confined to Mangaluru, located along the south coast of Karnataka. After the Ram Janmabhoomi movement, it started spreading in Bengaluru as well.
The poisonous campaign of  ‘Love Jihad’
Another poisonous campaign called ‘Love Jihad’, was  launched by the RSS to create anti-Muslim sentiment among the Hindus. It was only from 2005 that the term love jihad was widely introduced in Karnataka. In each meeting, the sanghis went berserk by preaching that the Muslim men were attracting hindu girl (through love jihad) and proselytizing.
BJP’s election victory in the 2008 Assembly elections added fuel to the fire. ‘Love jihad’ became a sensational issue in Karnataka. Between 2009 and 2012, the saffron thugs tore off the clothes of women in pubs in the name of ‘love jihad’. In 2009, a Habeas Corpus petition was filed in the Karnataka High Court, after a Hindu girl married a Muslim youth. The peak of the atrocity was that CB-CID inquiry was conducted for this ‘love jihad’ issue.
Read :
♦ Kashmir: Saffronisation obliterating constitutional freedom
♦ War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !
In 1998, there was a riot in Surathkal because a Muslim youth fell in love with a Hindu girl. Similarly, a Hindu girl named Anita married a Muslim youth. And the couple were killed in a car accident orchestrated by Mohan of the Sangh parivar gang.
Until the RSS set foot in Karnataka, Muslims and people of other religions had a cordial relationship. Karnataka has a delicious history of celebrating the friendship between the butchering Kadhar and the fishing Mogaveera community as a love story. After the RSS set foot in Karnataka, the historical friendship was split into two folds in the name of religion. RSS’s plan to portray Muslims as strangers gradually succeeded.
The Surathkal riots in 1968 was the first Hindu-Muslim riot in Karnataka after the 1947 ‘Regime change’ (i.e., – socalled Independence). It was followed by riots among fishermen at Mangaluru fishing port. Anti-Muslim mentality and the entry of Gaud Saraswat Brahmins into fishing was the basis of the riots. Six Muslims and two Hindus were killed. The oppressed Mogaveera people acted as stooges of the Brahmins in this riot.
After the demolition of the Babri Masjid in 1992, riots became a fashion in Karnataka. The 2006 anti-Muslim riots and the 2008 anti-Christian riots were planned and executed by the RSS thugs. Each and every communal riot in Karnataka shows us that the fascists have succeeded in saffronising the people of Karnataka. Thus, Karnataka has become the first breeding ground for ‘Hindurashtra’ in South India.
(to be continued)

Appu

இந்து ராஷ்டிரத்தோடு இணைக்கப்பட்ட அசாம் !

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக அசாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)
கர்நாடகா, திரிபுரா, அசாம் : பற்றிப் படர்ந்து வரும் ‘இந்துராஷ்டிர பேரபாயம்’ ! – பாகம் 3
பாகம் 2
குஜராத் படுகொலையின் நாயகனான மோடி, உத்தரப் பிரதேசத்தின் முதல்வர் ரவுடி சாமியார் யோகி ஆகியோர் வரிசையில் தன்னையும் இணைத்துக் கொள்ள முயன்று வருகிறார் அசாம் மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மா.
கடந்த அக்டோபர் மாதம் ‘ஆக்கிரமிப்புகளை அகற்றுவது’ என்ற பெயரில் முஸ்லீம்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது அசாம் அரசு. வீடுகளை இடிப்பதற்கு முதல்நாள் இரவுதான் அப்பகுதி மக்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டது. மாற்று ஏற்பாடுகளை செய்து தராததோடு, காலி செய்வதற்கான அவகாசமும் அம்மக்களுக்கு வழங்கப்படவில்லை.
இதைக் கேட்ட ‘குற்றத்திற்காக’ ஒரு அப்பாவி முஸ்லீம், போலீசு மிருகங்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இறந்து கிடந்தவரின் மார்பின் மீது உடன் வந்த புகைப்படக்காரன் வன்மத்தோடு ஏறி குதிக்கின்ற காட்சி சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு நாடே அதிர்ச்சியடைந்தது. நெஞ்சைப் பதைபதைக்கவைத்த இச்சம்பவத்திலிருந்து முஸ்லீம் மக்களின் மீதான ஹிமாந்த பிஸ்வா சர்மா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் வன்மத்தை புரிந்துகொள்ள முடியும்.
2021-ம் ஆண்டு மே மாதம் சர்மா தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றதிலிருந்து டிசம்பர் மாதம் வரை அம்மாநிலத்தில் 31 போலி மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளதாக அதிகாரப் பூர்வமான தகவல்கள் தெரிவிக்கின்றன. “இந்த போலி மோதல் கொலைகள் காட்டுமிராண்டித்தனமானவை” என்று தேசிய மனித உரிமை ஆணையமும் கண்டித்துள்ளது. அம்மாநில போலீசின் கணக்கின்படி போலி மோதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 55 ஆகும். ஆனால், போலீசின் யோக்கியதை நமக்குத் தெரியும். எனவே உண்மை விவரம் இதைவிட மோசமாக இருந்திருக்கும் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
படிக்க :
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
♦ அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
இந்த போலி மோதல் கொலையில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் முஸ்லீம்கள் மற்றும் பழங்குடியினத்தவர்களாவர். “அசாமை போதைப் பொருள் வியாபாரம், கால்நடைக் கடத்தல் போன்ற குற்றங்களை ஒழித்த மாநிலங்களாக்கும் வரை இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகள் அதிகரிக்கவே செய்யும்” என்று பாசிஸ்டுகளுக்கே உரிய திமிருடன் பதிலளித்துள்ள முதல்வர் சர்மா, முஸ்லீம்களையும் பழங்குடிகளையும் போதைப் பொருள் மற்றும் கால்நடை கடத்தல்களில் ஈடுபடுபவர்களாக சித்தரிக்கிறார்.
மேலும் கடந்த ஆகஸ்டு மாதம் கால்நடை பாதுகாப்புச் சட்டம் 2021 என்ற சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது பிஸ்வா சர்மா அரசு. இந்துக்கள், ஜெயின், சீக்கியர்கள் என ‘மாட்டுக்கறி உண்ணாதவர்கள்’ வாழும் பகுதிகள் மற்றும் இந்துக் கோயில்கள் அமைந்துள்ள பகுதிகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 5 கிலோமீட்டர் பகுதிக்குள் மாட்டுக்கறி விற்பனை செய்வதற்கு இச்சட்டம் தடைவிதிக்கிறது. இச்சட்டத்தின்படி, முறையான ஆவணங்கள் இல்லாமல் கால்நடைகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டுசெல்வது கடத்தல் குற்றமாகும்.
பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் காவி கும்பல் முஸ்லீம்களை குறிவைத்து கலவரங்களையும் வெறியாட்டங்களையும் சட்ட உத்தரவாதத்துடன் நடத்துவதற்கான ஏற்பாடே இச்சட்டத்தின் நோக்கம்.
இவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றம், போதைப்பொருட்கள் கடத்தல், பசு கடத்தல் என்ற பெயர்களில் காவி கும்பல்களாலும் ஹிமாந்த பிஸ்வா சர்மா அரசாலும் அப்பாவி முஸ்லீம் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் எதுவும் இந்தியாவின் இதர மக்களை உலுக்குவதைப் போல அசாம் மக்களை உலுக்குவதில்லை. மாறாக அசாமியர்களிடையே ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.விற்கான செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
பொதுவாக அசாமியர்களிடையே உள்ள “வங்கதேச குடியேறிகள்-அந்நியர்கள்” என்ற இன அடிப்படையிலான வெறுப்பும் ஆர்.எஸ்.எஸ். காவி கும்பல் திட்டமிட்டு உருவாக்கியிருக்கும் “முஸ்லீம்” என்ற மத அடிப்படையிலான வெறுப்பும் இணைந்து அசாமை முஸ்லீம்களை நான்காந்தர குடிமக்களாக நடத்தும் இந்து ராஷ்டிரமாக மாற்றியிருக்கிறது. இந்தநிலையை உருவாக்குவதற்காக ஆர்.எஸ்.எஸ். பல்லாண்டுகாலம் அசாமியர்களிடையே வேலைசெய்திருக்கிறது.
அசாமில் ஆர்.எஸ்.எஸ்-இன் பன்முக வடிவங்கள்
அசாமில் காவிமயமாக்கல் நடவடிக்கையானது, 1944-ஆம் ஆண்டு ராம் சிங் தாக்கூர் என்ற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் அசாமிற்கு வந்ததிலிருந்து தொடங்குகிறது. அசாமிற்கு வந்த தொடக்க காலத்தில் பீகார் மற்றும் மராத்தி மாநிலங்களிலிருந்து சென்ற மார்வாடிகள்தான் ஆர்.எஸ்.எஸ்-க்கு புரவலர்களாக இருந்தனர்.
பழங்குடி இனமக்களை இந்துத்துவமயமாக்க, அவர்களுக்கு சற்றும் தொடர்பில்லாத இராமாயணத்தையும் மகாபாரதத்தையும் திணிக்கும் சங்கபரிவாரக் கும்பல்.
1948-ம் ஆண்டு கவுகாத்தியில் தனது முதல் ஷாகாவைத் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். தற்போது அசாமில் 903 ஷாகாக்கள் இருக்கின்றன. இதைத் தவிர வித்யா பாரதி, வனவாசி கல்யாண் ஆசிரமம், ஓராசிரியர் பள்ளிகள், பால்வாடிகள், விவேகானந்தா பள்ளிகள், படிப்பு வட்டங்கள், தொழிற்பயிற்சி நிலையங்கள், நர்சரி பள்ளிகள் என அசாமில் புற்றீசல்கள் போல பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
இவற்றுள் உள்ளூர் பழங்குடி மக்களின் செல்வாக்கைப் பெறுவதற்காக “வனவாசி கல்யாண் ஆசிரமம்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. பழங்குடியின மக்களை இந்துத்துவமயமாக்குவதே இதன் நோக்கமாகும். இதற்காக பழங்குடியின மக்களுக்கு ‘உதவி செய்வது’ என்ற பெயரில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை 3,200 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பின்னர் இவற்றின் மூலம் கிடைத்த ஐக்கியத்தைப் பயன்படுத்தி, படிப்படியாக வழிபாட்டிலும் பண்பாட்டளவிலும் பழங்குடி மக்களை ‘இந்துக்களாக’ மாற்றியது ஆர்.எஸ்.எஸ். கும்பல்.
ஆர்.எஸ்.எஸ். ஊழியர்களை உற்பத்தி செய்த ஓராசிரியர் பள்ளிகள்
வடகிழக்கு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ். தங்களது காவிமய நடவடிக்கைகளை சுலபமாகச் செய்வதற்கு வழிசெய்துகொடுப்பது ஓராசிரியர் பள்ளிகள்தான். வழக்கமான பள்ளி  நேரம் முடிந்த பின்பு 3 மணி நேரம் இந்த ஓராசிரியர் பள்ளிகள் செயல்படுகின்றன. இவை கிராமத்தினருக்கும் சங்கப் பரிவாரத்திற்கும் இடையேயான தொடர்புப் பாலமாக செயல்படுகின்றன. 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதான் இதன் அடிப்படை. இங்கு ஆசிரியர் என்பவர் “குரு” அல்லது “ஆச்சார்யா” என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆசிரியர்கள் பட்டதாரி இளைஞர்களாவர்.
இப்பள்ளிகளில் 6 முதல் 14 வயதுடைய மாணவர்களுக்கு “ஐந்துவித கல்வி” கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதாவது ஆரம்பக் கல்வி; சுகாதாரக் கல்வி; கிராம வளர்ச்சி; விழிப்புணர்வு மற்றும் சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் கற்றுக் கொடுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இது இளம் பிஞ்சுகளிடத்தில் இந்துத்துவ நஞ்சூட்டுவதற்கான ஒரு வடிவமாக இருக்கிறது.
விளக்கு ஏற்றி இந்து தெய்வங்களைப் புகழ்ந்து பாடும் சமஸ்கிருத பாடல்களை பாடிய பிறகே, வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இரண்டு மணிநேர வகுப்புக்குப் பிறகு ஒரு மணி நேரம் யோகா சொல்லித் தரப்படுகிறது. இப்பள்ளிகளில், பழங்குடியின மொழிகள் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழியிலேயே பாடங்கள் நடைபெறுக்கின்றன. மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதைத் தாண்டி வாரத்தின் இரண்டு நாட்கள் கிராமத்திலுள்ள பொது இடங்களில் பஜனை நடத்துவது, விநாயகர் வழிபாடு செய்வது மற்றும் அனுமன் பாடல்களை பாடுவது போன்ற வேலைகளும் இப்பள்ளிகளின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். அசாமில் வேலை செய்யத் தொடங்கி 22 ஆண்டுகளில் 4,650 ஓராசிரியர் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அசாமில் உள்ள 4,650 ஓராசியர் பள்ளிகளில் 70 சதவிகிதம் தேயிலை தொழிலாளர்கள், பழங்குடிகள் அதிகமுள்ள வட அசாமில் உள்ளன. வட அசாமும் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளும் அசாமில் பா.ஜ.க-வின் தேர்தல் வெற்றிக்கு  அடிப்படையாக இருப்பதற்கான காரணத்தை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள முடியும்.
அசாமின் வரலாற்றைத் திரித்து புரட்டிய காவிகள்
காஷ்மீர் மட்டுமல்லாமல் திரிபுரா, அசாம் உட்பட 7 வடகிழக்கு மாநிலங்களும் இராணுவத்தின் துப்பாக்கி முனையால்தான் இந்தியாவோடு இணைக்கப்பட்டன. ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் மூலம்தான் இன்றளவும் ‘தேசிய ஒற்றுமை’ நிலைநாட்டப்படுகிறது. இம்மாநில மக்கள் இந்திய அரசின் மேலாதிக்கத்தை எதிர்த்து தனிநாடு கோரிக்கையின் கீழ் பல ஆண்டுகளாக போராடிய பாரம்பரியமிக்கவர்கள். எனவே அசாமியர்களை இந்து தேசியத்திற்குள் கொண்டுவர வேண்டுமென்றால் முதலில் அவர்களை இந்திய தேசிய நீரோட்டத்தில் கலக்க வைப்பது முன்நிபந்தனையாக இருந்தது.
அசாமியர்களிடையே ‘இந்திய தேசிய’ உணர்வூட்டுவதற்கும் அதன்வழியாக இந்து ராஷ்டிர இலட்சியத்தை ஏற்றுக் கொள்ள வைக்கவும் ஆர்.எஸ்.எஸ்-க்கு உதவியது “வித்யா பாரதி” என்ற அதன் சொந்த கல்வி நிறுவனமாகும்.
1944-ஆம் ஆண்டில் வெறும் 182 மாணவர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது 115 நடுநிலைப் பள்ளிகளையும் 121 தொடக்க மற்றும் 341 இடைநிலைப் பள்ளிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. அவற்றில் 1.4 இலட்சம் மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். பழங்குடி மக்களின் வரலாற்றிற்கும் பண்பாட்டிற்கும் சற்றும் தொடர்பில்லாத இராமாயணமும் மாகாபாரதமும் மாணவர்களுக்கு வகுப்புகளாக எடுப்படுகின்றன. மாணவர்களிடம் இந்திய தேசிய உணர்வை ஊட்டுவதற்காக “தாய்நாட்டில் படிப்பது” என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை இந்தியாவின் பிற பகுதிகளில் படிக்க வைக்கிறது வித்யா பாரதி. அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ABVP) என்ற தனது மாணவர் அமைப்பின் மூலம் இம்மாணவர்கள் மத்தியில் வேலைசெய்கிறது ஆர்.எஸ்.எஸ்.
000
அசாமை இந்து தேசியத்திற்குள் கொண்டுவர அசாமின் பண்டைய வரலாற்றை   தங்களுக்கு ஏற்ப திரித்துள்ளது இந்த காவி கும்பல். அசாமை ஆண்ட தனவா வம்சத்தை சேர்ந்த மகிரங்க தனவாவைத் தோற்கடித்து நரகாவின் பகுமா வம்சம் ஆட்சிக்கு வந்தது. நரகாவிற்கு பிறகு அவரது மகன் பகதத்தா ஆட்சிக்கு வந்தான் என்றும் கௌரவர்களுக்காக குருஷேத்திரப் போரில் கலந்து கொண்டான் என்றும் கலிகா புராணத்தில் கூறியுள்ளதாக அசாமின் வரலாற்றைத் திரித்தார்கள் காவி பாசிஸ்டுகள்.
அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் ஆர்.எஸ்.எஸ் வேருன்றுவதற்கு அடிப்படையாக இருந்த ஓராசிரியர் பள்ளிகள்.
இந்த ‘நரகா’ என்பவன் மகாபாரதத்தில் வருகிற நரகாசுரன் என்ற கதாபாத்திரமாக சொல்லப்படுகிறது. அசாமின் வரலாற்றை இராமாயண மற்றும் மகாபாரதக் குப்பைகளுடன் கலந்து திரிப்பதன் மூலம் அசாம் இந்து-இந்திய தேசத்தின் ஒரு பகுதியே என்ற கருத்தை ஆழமாக பதியவைத்தார்கள்.
மேலும் அசாமியர்களின் உள்ளூர் திருவிழாக்களான துர்கா பூஜை மற்றும் பிகு ஆகியவற்றின்போது, பந்தல் அமைத்து பாரதமாதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்துவதை ஆர்.எஸ்.எஸ். கும்பல் வழக்கமாகக் கொண்டிருக்கிறது.
முஸ்லீம்கள் ‘சட்ட விரோத’ குடியேறிகள்
அசாமின் மக்கள் தொகையில் பெரும்பங்கு வகிப்பவர்கள் வங்கதேச இந்துக்களும், முஸ்லீம்களுமாவர். இவர்கள் பெரும்பாலும் வங்கப் பிரிவினையின்போது அசாமில் குடியேறியவர்களாவர். 1979 மக்களவைத் தேர்தலில், அசாமில் வங்க தேசத்தவர்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டதற்கு எதிராக அனைத்து அசாம் மாணவர் சங்கம் மற்றும் அசாம் கண பரிஷத் ஆகிய அமைப்புகள் “சட்ட விரோத குடியேறிகளை அசாமிலிருந்து வெளியேற்ற வேண்டும்” என்று போராட்டத்தைத் தொடங்கின. இது “அசாம் இயக்கம்” என்று அழைக்கப்படுகிறது.
1985-ஆம் ஆண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட அமைப்புகளுக்கும் ராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய அரசுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தத்திற்கு பிறகு, இத்தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டம் நடந்த காலத்தில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வங்க தேசத்தவர்களை ‘அந்நியர்கள்’ என்ற வெறுப்புடன் அணுகிவந்த அசாம் பூர்வகுடி மக்களின் வரலாற்றுரீதியான உணர்வை தன்னுடைய இந்து ராஷ்டிர நோக்கத்திற்கேற்ப வளைத்துக் கொண்டது ஆர்.எஸ்.எஸ். வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகள் ‘அனைவரையும் வெளியேற்ற வேண்டுமென்ற’ அம்மக்களின் கோரிக்கையை இந்துக்கள் நம்மவர்கள், முஸ்லீம்கள் மட்டுமே இந்த தேசத்திற்கு தொடர்பில்லாத அந்நியர்கள்; ஆகவே அவர்களை மட்டும் வெளியேற்ற வேண்டும் என அசாம் மக்களிடம் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்துவருகிறது ஆர்.எஸ்.எஸ்.
படிக்க :
♦ அசாம் : புதிய கால்நடை பாதுகாப்பு மசோதா – 2021
♦ அசாம் துப்பாக்கிச்சூடு : முஸ்லீம் மக்கள் மீதான காவி பயங்கரவாதம் !
தனது முப்பதாண்டு கால பிரச்சாரத்தின் மூலம் முஸ்லீம்கள் மட்டுமே வெளியேற்றப்பட வேண்டிய அந்நிய சக்திகள் என்று சித்தரிப்பதில் வெற்றியடைந்து கொண்டு வருகிறது சங்கப் பரிவாரக் கும்பல். 2019-ஆம் ஆண்டில் மோடி அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம் வங்க தேசத்திலிருந்து வந்து அசாம் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் குடியேறிய இந்துக்களுக்கு, அந்நாட்டில் அவர்கள் ‘மதச் சிறுபான்மையினர்’ என்ற அடிப்படையில் இந்திய குடியுரிமை வழங்குகிறது. தனது இந்து ராஷ்டிர நோக்கத்திற்கு அசாமில் மக்கள் அடித்தளத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், தேர்தலில் பாராக் பகுதியில் பெரும்பான்மையாகவுள்ள வங்க இந்துக்களின் ஓட்டைப் பெறுவதும் இதன் நோக்கமாகும்.
ஆனால், அசாம் இயக்கத்தின் மூலம் பூர்வகுடி மக்கள் போராடி கொண்டுவந்த அசாம் ஒப்பந்தமோ 1971 மார்ச் 24-க்குப் பிறகு, அசாமில் குடியேறிய வெளிநாட்டவர்கள் அனைவரையும் கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்கிறது. இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்துதான் அசாமில் பா.ஜ.க. ஆட்சியை வென்றது.
எனவே வங்க இந்துக்களுக்கு குடியுரிமை வழங்குவதை எதிர்த்து 2019-ஆம் ஆண்டு, அசாமில் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. வங்க இந்துக்களுக்கு குடியுரிமை அளிப்பதைப் பற்றி, “இந்தியா ‘இந்துக்களின் தேசம்’ என்பதால் இந்துக்களை பாதுகாப்பது நமது தார்மீகக் கடமை” என்று கூறும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. அசாம் மாநிலத்தின் சுமையை – அதிக அளவிலுள்ள வங்கதேச குடியேறிகள் – இந்தியா முழுவதும் பகிர்ந்தளிப்பதன் மூலம் குறைக்க முடியும் என்று பிரச்சாரம் செய்தது.
குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகும் 2021-ஆம் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மீண்டும் வெற்றிபெற்றிருப்பதைப் பார்க்கும்போது, சில முரண்பாடுகள் இருந்தபோதும் ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க.தான் தங்களுக்கான கட்சி என அசாம் மக்கள் ஏற்றுக் கொண்டுவருவதையே காட்டுகிறது. தனது நூற்றுக்கணக்கான அமைப்புகளின் மூலம் பல ஆண்டுகாலம் அசாம் மக்களிடையே வேலை செய்து உருவாக்கிய செல்வாக்கின் விளைவாலேயே ஆர்.எஸ்.எஸ்-ஆல் இந்த தேர்தல் வெற்றியை சாதிக்க முடிந்தது.
(தொடரும்)

பாகம் 4


அப்பு

பாசிச மோடி அரசுக்கு பக்கவாத்தியமாக மாறிய இளையராஜா ! | கருத்துப்படம்

மோடியை அண்ணல் அம்பேத்கருடன் ஒப்பிட்டு தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. அதற்கு பல்வேறு கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாடல்கள் மற்றும் கருத்துக்களை கூறி வருகிறார் இளையராஜா.
அண்ணல் அம்பேத்காரின் சமூகநீதி போராட்டங்களின் நேர் எதிரான, பார்ப்பனிய இந்துமதவெறியை தனது சித்தாந்தமாக கொண்ட, ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக செயல்பட்ட நரேந்திர தாமோதரதாஸ் மோடியை, அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது அயோக்கியத்தனம்.
பரவி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தின், அதை செயல்படுத்தி வரும் மோடி அரசின் பக்கவாத்தியமாக மாறிவரும் இளையராஜா. அதை விமர்சிக்கும் விதமாக இந்த கருத்துப்படங்களை வெளியிடுகிறோம்.
***
கருத்துப்படங்கள் : வேலன்

ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்: இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!

22, ஏப்ரல் 2022
பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் 152-வது பிறந்த நாள்:
இரண்டாம் ஆண்டில் “புதிய தொழிலாளி”!
பாட்டாளி வர்க்க ஆசான் லெனின் அவர்களது 152-வது பிறந்த நாளை உலகெங்கும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களும், தொழிலாளர்களும் நினைவுகூர்ந்து வருகின்றனர். இந்திய தொழிலாளி வர்க்கமும் ஆசானை நினைவுகூர்கிறது.
ஆசான் லெனினது பாதையில் இந்திய தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டி வழிநடத்தும் நோக்கத்தில் 1998-ல் உருவாக்கப்பட்ட அமைப்பு “புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’’ பு.ஜ.தொ.மு தனது துவக்கத்தில் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலாளர்களை அமைப்பாக்கும் நோக்கத்தில் தொழிற்சங்க சட்டப்படி பதிவு செய்யப்பட்டு (பதிவு எண் 43/TVR) அம்பத்தூரை ஓட்டிய பாடி பகுதியில் அலுவலகம் அமைத்து இயங்கியது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல்வேறு ஆலைகளில் சங்கங்களைக் கட்டியது. தொடர்ச்சியாக, தமிழகத்தின் கோவை, ஓசூர், திருச்சி பகுதிகளுக்கு விரிவடைந்த நிலையில் 2014-ல் புதிய மாநில நிர்வாகக்குழு மற்றும் மாநில செயற்குழுவை கட்டியது. கொள்கை அறிக்கை மற்றும் அமைப்பு விதிகளை உருவாக்கி மா-லெ அரசியலை முன்னெடுத்தது. இதன் போக்கில் புதுச்சேரி மாநிலத்துக்கும் விரிவடைந்தது.

படிக்க :

♦ ஏப் 22 : லெனின் பிறந்த தினத்தில் ”புதிய தொழிலாளி” இணையதளம் உதயம் || NDLF

♦ பு.ஜ.தொ.மு-வின் மாநில ஒருங்கிணைப்புக் குழு உருவானது || பத்திரிகைச் செய்தி

20 ஆண்டுகளை கடந்த நிலையிலும் மாநில மாநாட்டை நடத்தி தலைமைக் குழுவை ஜனநாயக முறைப்படி தேர்வு செய்வதை இரண்டாம் பட்சமாகவே கருதிய நிலையில் புதிய ஜனநாயக அமைப்புகளில் சீர்குலைவுவாதமும், கலைப்புவாதமும் ஒரு பிளவுக்கு இட்டுச் சென்றது.
பு.ஜ.தொ.மு–வின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்த திரு.சுப.தங்கராசு பாட்டாளி வர்க்க விரோத நடவடிக்கைகளுக்காக பு.ஜ.தொ.மு–வின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் 20.12.2020 அன்று நடந்த மாநில செயற்குழுவால் நீக்கப்பட்டார். அவரை கண்காணிக்கத் தவறியதற்காக ஒட்டுமொத்த நிர்வாகக்குழுவும் பதவி நீக்கம் செய்யப்பட்டது. 31,ஜனவரி 2022-க்குள் மாநில மாநாட்டை நடத்தி புதிய தலைமையை தேர்வு செய்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
மேற்படி முடிவின் அடிப்படையில் மாநில மாநாட்டை நடத்துவது என்கிற பெயரில் கலைப்புவாதிகள் பல மாவட்டப் பகுதிகளை தேர்தல் நடவடிக்கைகளிலிருந்து ஒதுக்கி வைப்பதில் தீவிரமாக செயல்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் சில பகுதிகள் மற்றும் கோவையில் மட்டுமே இயங்கி வந்த சிறுபான்மை, புதுச்சேரி பகுதியுடன் இணைந்து ஏனைய மாவட்டப் பகுதிகளை ஒதுக்கி வைத்து தலைமையைக் கைப்பற்றும் திட்டத்தில் செயல்பட்டதால், பு.ஜ.தொ.மு-வுடன் துவக்க காலம் முதல் பொறுப்பேற்று இயங்கி வந்த முன்னணி தோழர்களும், மாவட்டக் குழுக்களும் இணைந்து, சீர்குலைவுவாதிகளிடமிருந்து பு.ஜ.தொ.மு–வை மீட்டெடுக்கும் நோக்கத்தில் 7 பேரைக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக்குழு ஒன்றினை 16.4.2021 அன்று அறிவித்தது. மாநில ஒருங்கிணைப்புக்குழுவின் இணையக் குரலாக “புதிய தொழிலாளி” என்கிற இந்த முகநூல் 22.4.2021 களமிறங்கியது.

கடந்த ஓராண்டில் உழைக்கும் மக்களது துயரங்கள், கார்ப்பரேட்டுகளது நவீன சுரண்டல் முறைகள், அதிகார வர்க்கத்தின் அடக்குமுறை, காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்தும் நோக்கில் பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியைக் கட்டுவதன் அவசியம், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் கடமைகள் ஆகியவற்றை முன்னிறுத்தி தனது பயணத்தை துவங்கியது. தினசரி 2 அல்லது 3 ஈ-சுவரொட்டிகள், அவ்வப்போது காணொளிகள், சிறு கட்டுரைகள் ஆகியவற்றின் மூலம் புதிய தொழிலாளி முகநூல் தனது வர்க்கக் கடமையை நிறைவேற்றி வருகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்களை வென்றெடுத்துள்ளது.

காவி – கார்ப்பரேட் பாசிசம் முன்னேறி வருகின்ற சூழலில் உலக மேலாதிக்கத்துக்கான போட்டியில் ஏகாதிபத்திய நாடுகள் (குறிப்பாக, அமெரிக்கா) போர்முனைகளை உருவாக்கி வருவதும் பிரதான போக்காக மாறி வருகின்ற கட்டத்தை புதிய தொழிலாளி முன்னுணர்ந்து அம்பலப்படுத்துகிறது.
கடந்த ஓராண்டில் எமது அனைத்து நடவடிக்கைகளையும் ஊக்குவித்த தோழர்கள், நண்பர்கள் புதிய தொழிலாளி முகநூலை தங்களது நட்பு வட்டத்தில் அறிமுகம் செய்வது, பகிர்வது, விமர்சனங்கள், விவாதங்களை முன்வைப்பது, ஆலோசனைகள் தெரிவிப்பது, படைப்புகள் அனுப்புவது என தங்களால் இயன்ற அளவில் புதிய தொழிலாளி மேற்கொண்டு வரும் புரட்சிகர பணிக்கு உதவுமாறு தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

புரட்சிகர வாழ்த்துக்களுடன்,
மாநில ஒருங்கிணைப்புக்குழு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தொடர்புக்கு : 8056386294.

சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ; போலீஸ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!

23.04.2022
சென்னை இளைஞர் விக்னேஷ் காவல் கொட்டடி சாவு ;
போலீஸ் மீது இடைநீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை நிறுத்து !
கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடை!
பத்திரிகை செய்தி
சென்னை கெல்லீஸ் பகுதியில், கடந்த 18-ம் தேதி வாகனச் சோதனையின் போது காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட, கட்டுமானத் தொழிலாளியான பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர், காவல்துறையினரின் சித்திரவதை காரணமாக மரணமடைந்துள்ளார். இது காவல்துறை நடத்திய படுகொலையாகும்.
இந்த லாக்கப் கொலைக்கு எதிராக தொடர்ச்சியான பல்வேறு அமைப்புகளின் கடும் கண்டனங்களை அடுத்து வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு இந்த வழக்கு மாற்றப்படுவதாகவும் கொலையில் தொடர்புடைய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும் டி.ஜி.பி தெரிவித்துள்ளார்.
இளைஞரை லாக்கப்பில் சித்திரவதை செய்தது, மரணம் அடைந்த இளைஞரின் உறவினர்களை சட்டவிரோதக் காவலில் வைத்தது, உடலை அச்சுறுத்தி தகனம் செய்தது என தொடர் குற்றங்களில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர், ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் உள்ளிட்ட 3 பேருக்கும் பணியிடை நீக்கம் என்பதுதான் தண்டனையா?
குற்றவாளிகளை வெளியில் பாதுகாப்பாக இருக்க வைத்துவிட்டு சி.பி.சி.ஐ.டி விசாரணை என்ன எப்படிப்பட்ட விசாரணை நடத்தினாலும் நீதி கிடைக்கப்போவதில்லை.
ஒரே மாதிரியான குற்றத்திற்கு, பொதுமக்களுக்கு ஒரு தண்டனையும் போலீசுக்கு ஒரு தண்டனையும் வழங்கப்படுகின்ற இந்த முறைதான், போலீசு தொடர்ச்சியாக மக்கள் மீது நடத்துகின்ற அடக்குமுறைகளுக்கு அடிப்படையாக உள்ளது.
ஆகவே, இவ்வழக்கில் தொடர்புடைய அனைவர் மீதும் கொலை வழக்கு மற்றும் பட்டியல் சாதி மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் ஆகியவை பதிவு செய்து உடனே சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்,
தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321.

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire !

Karnataka, Tripura, Assam : ‘The Hindurashtra menace’ spreading like wildfire ! – Part 1
To turn minorities, including Christians, Muslims and the Dalits into fourth-class citizens, who should be oppressed, and turn them into refugees in their own country; to treat women according to Manu smriti, just as creatures created only to please men, and to treat as slaves of the Brahminical patriarchy; to project the democratic demands and needs of the working people, including farmers, workers and small traders as anti-nationals and to project the welfare of corporate capitalists like Ambani and Adani as national interests; to annihilate the revolutionary progressive democratic forces that voice for the interests of the working people; This is the ‘Hindurashtra’ that the RSS, the brahminical fascist organisation, tries to establish. This is what we call as Saffron – Corporate fascism!
In establishing such tyrannical hindurashtra, the RSS has been marching gradually and continuously. This is the threat that our country is facing today. We used to say that Uttar Pradesh and Gujarat are the laboratories of Hindurashtra and models of fascist tyranny. But it had become old news. Today, the Sangh parivar band has also turned Karnataka, Tripura and Assam into its new laboratories.
Recently passed anti-conversion bill in the Karnataka Legislative Assembly, places of Christian worship being regularly attacked by saffron thugs in the state; in Assam, the Himanta Biswa Sarma government demolished the settlements of poor Muslims in September in the name of clearing illegal occupation, rendering 800 families homeless and shot two people; in Tripura, the murderous attacks on Marxist party offices and cadres that were followed by attacks on Islamic places of worship and shops during a Vishwa Hindu Parishad rally and arson incidents can’t just be viewed as usual activities of the RSS or atrocities of the BJP. These are all obvious manifestations of saffron terrorism that has taken root in these states!
Like Gujarat and Uttar Pradesh, Karnataka, Tripura and Assam are also turning into laboratories of Hindurashtra.The meaning of this statement is that the majority of people in these states are coming under the influence of Brahminical-Hindutva ideology.
Read :
♦ Afghan people starving to death because of US hegemony !
♦ NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
How could the BJP win in a single election in Tripura, which has been CPM’s fortress for 25 years from 1993? The BJP, which did not even win a single seat in the 2013 assembly elections, won 43 seats in 2018 and assumed power. Their vote share increased from 1.5 percent in 2013 to 42.4 percent in 2018. Recently, in Tripura, the BJP won 217 seats out of 222 seats in the local body elections.
In Assam, in 2016, the BJP won the Assembly elections for the first time with a vote share of 29.5 percent, ending 15 years of Congress rule. In the 2016 Assam Assembly elections, the BJP formed alliance with the Asom Gana Parishad (AGP) and the Bodoland People’s Front and won 86 of the 123 seats. The BJP alone won 60 seats. The BJP was expected to lose in the 2021 assembly elections due to anti-CAA protests in Assam. But the BJP alliance won 75 seats and regained power. The BJP alone got 33.2 percent of the votes. When compared to 2016 elections, it may seem that the BJP alliance had lost 11 seats. But the increase in BJP’s vote share asserts the surge in BJP’s popularity among the people.
The only BJP ruled state in South India is Karnataka. Here, in the 2008 assembly elections, the BJP won 110 seats with 33.6 percent vote share and took power. In the 2018 assembly elections, the BJP’s tally had reduced to 104 seats, but its vote share increased to 36.2 percent.
The increase in vote share for the BJP in Karnataka, Assam and Tripura shows that the RSS-BJP’s foundation among people is widening in those states. This foundation was not created by winning elections. On the contrary, the election victory was the result of hindutva influence created by the Sangh Parivar by working for years among the people, according to the unique conditions of the political environment, history and culture of the people in each state. Opportunistic alliances, intimidation of other parties’ members, horse trading of MLAs, and populistic campaigns had only been secondary.
For example, even though the BJP allied with the subservient AIADMK in Tamil Nadu and reaped their votes, the BJP was able to win only in the constituencies, including Nagercoil, Coimbatore (South), Modakurichi and Tirunelveli, where it had already worked and gained influence. Otherwise the BJP will not be able to do so.
Therefore, the notions like “The BJP would not have won even a single seat without ADMK; In other states too, the BJP has only been able to do so through opportunist alliances, false promises and horse trading and it didn’t have any popular influence” are just refusing to look into the reality. And is also a very rude understanding of fascists.
All those who want to understand the Hindurashtra menace in Karnataka, Tripura and Assam, and free India from saffron-corporate fascism should change their innocent understanding that “the BJP is coming to power only through fraudulent means”. They should stop by saying, “by supporting viable alternatives in Legislative Assembly – Parliamentary elections, the RSS-BJP can be defeated”. Instead, they should open their eyes and look into the changes happening on the ground among the people.
Karnataka: South Indian gateway to saffron terrorism!
In Karnataka, the RSS-saffron mob has unleashed the worst ever terror attacks on minorities. The Christians are being targeted in the name of ‘fraudulently converting Hindus’; while the Muslims are being targeted in the name of ‘love jihad’ (accusing Muslim men of converting Hindu girl by marriage) by the Sangh Parivar organisations such as Bajrang Dal and Sri Ram Sena.
On November 30, a Christian prayer meeting in Belur town of Karnataka’s Hassan district was disrupted and the people were threatened and evicted. At Srinivasapura in Kolar district, the saffron thugs entered the Church and set Bible on fire. On 25th of last December, Christmas celebrations in a Christian school was stopped. In every church, Christians are even afraid to hold a meeting of worship. If complaint is lodged, the police openly act as the RSS’s subordinate force, saying, ‘don’t conduct prayer meetings; we can’t offer security’.
According to a fact finding team’s report, Karnataka ranks third among the most vulnerable states, for attacks on Christians in India. As of September this year, 66 of the 305 religious attacks on Christians across the country took place in Uttar Pradesh, 47 in Chhattisgarh and 32 in Karnataka.
The Muslims are also terrified. The Muslims are being attacked by the saffron thugs just because they reveal their religious identity. In Bagalkote district, two Muslim students, who went to a private tuition class, were assaulted for wearing skull caps by a gang of 15 saffron thugs. Muslim shops are also being vandalised.
Like Uttar Pradesh, Madhya Pradesh and Gujarat, BJP’s Basavaraj Bommai Government in Karnataka had also enacted the Anti-Conversion Law in the last winter session of the Assembly. All of this shows that Karnataka is becoming another Uttar Pradesh.
The Karnataka Brahmin coterie : The breeding ground of the RSS
 In Karnataka, the poisonous seed called RSS has grown and is now spreading its branches under different names including Durga Vahini, Bajrang Dal, Sri Ram Sena, Gau rakshaks (cow vigilantes), BJP. The fertile foundation for the growth of RSS were the Brahmins from coastal area of Mangaluru of South Karnataka.
The Chitpavan Brahmins were the foundation for the emergence of the RSS in Maharashtra. Likewise, in Karnataka it is the Konkani speaking Gaud Saraswat Brahmins, Chitrapur Saraswat Brahmins, Tulu speaking Shivalli Brahmins and Kannada speaking Havyaka Brahmins. Since they were concerned in brahminical domination and the prosperous vedic period, they naturally mingled with the currents of the RSS and its Hindurashtra plan. They were also the founders of Arya Samaj, Brahmo Samaj and Akhil Bharat Hindu Maha Sabha in Karnataka, which were formed before the formation of the RSS.
The Brahmo Samaj was formed against Christian missionaries proselytizing in the name of English education. Conversion is not entirely true. Even the brahmins had converted to Christianity. The truth is that in the 1860s, English Christian missionaries provided English education to the Dalits and Billavas. Thus, the Dalits served on par with the Brahmins in the English East India Company. The Brahmo Samaj was formed in Karnataka as a result of Brahmin supremacy against the Dalits. And it campaigned that “Hindus should not send their children to Christian missionaries”.
Read :
♦ The Election Laws (Amendment) Act, 2021 : People under the legal supervision of Hindurashtra
♦ The conspiratorial desperate motive to suppress Punjab behind the ‘security lapse’ outcry!
In 1935, after the formation of the RSS, Karnataka Brahmins became RSS cadres. In Karnataka, the first shakha was established in a small town in Belagavi district; and then in Mangaluru. Canara school established with the financial assistance of Saraswat Brahmins acted as the RSS’s office. This school provided English education along with Vedic culture.
Started in 1970, the RSS’s educational institution “Vidya Bharati” has now grown into a very big institution with 2,000 schools and 30 lakh students. Besides the starting of shakhas and the establishment of the Jana Sangh in 1951, the RSS remained only as an organisation of Brahmins and had no influence over the masses.
The RSS needed a hero called Rama and villain named Muslim to amass and mobilise non-brahmins beyond caste as ‘Hindus’. For this purpose, the RSS adopted various methods and organizational forms.
(to be continued)

Appu

தமிழகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஆசான் லெனினின் 152-வது பிறந்தநாள் விழா !

லகம் முழுவதும் பாட்டாளி வர்க்கத்தில் மகத்தான தலைவர் தோழர் லெனினில் 152-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய புரட்சிகர அமைப்புகள் சார்பாக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்நிகழ்ச்சிகளின் செய்தி மற்றும் புகைப்படங்களை இங்கே பதிவிடுகிறோம்.
000
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின் பிறந்தநாள் மதுரையில் அரங்கக் கூட்டம்!
கூட்டத்தில் புமாஇமு தோழர் சேகரன் தலைமை தாங்கினார் அவர் பேசும்போது இன்றைக்கு மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள், உழைப்பு  ஆகியவற்றை கைப்பற்றிக் கொள்ள ஏகாதிபத்தியங்கள் போடும் போட்டியையும், நமது நாட்டில் விவசாயம் எப்படி அளிக்கப்படுகிறது? தொழிலாளர்கள் விவசாயிகள் தொழிலாளர்கள் எப்படி ஒட்ட சுரண்டப்படுகிறார்கள்? மக்கள் வாழ முடியாத சூழலை நோக்கி தள்ளப்படுகின்றனர். இதே நிலைமைதான் இலங்கையில் தனியார்மயம் – தாராளமயம் –  உலகமயம் போன்ற கொள்கைகளால் நாடு விற்கப்பட்டு மக்கள் உணவில்லாமல்; எரிபொருள் கிடைக்காமல்; வேலையில்லாமல் நடுத் தெருவில் நிற்கின்றனர். இதற்கு அமெரிக்க – சீன மேலாதிக்கப் போட்டிதான் காரணம் என்பதை விளக்கி இதை நாம் முறியடிக்க மக்கள் படை உருவாக்க வேண்டும் என பேசி முடித்தார்.
அடுத்ததாக, தோழர் ரம்யா அவர்கள், லெனினின் வரலாற்றை பல்வேறு தரவுகளுடன் அதாவது ஆரம்பத்தில் லெனினுடைய குடும்பம் அதன் பின்னால் அவர்கள் வளர்ந்த விதம், அவர் மூலதனம் படிப்பதற்கான சூழல், தன் அண்ணனிடம் கற்றுக் கொண்ட விஷயங்கள், இளம் வயதில் பல்கலைக் கழக போராட்டங்களில் பங்கெடுத்தது, வழக்கறிஞர் தொழில், அதன் பின்பு புரட்சிப் பணிகள், மக்களை ஒன்றுபடுத்தியது போன்ற விஷயங்களை புதிய தரவுகளுடன் முன்வைத்தார். உணர்வுபூர்வமாக தனது கருத்தை முன்வைத்தார்.
அடுத்ததாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ராமலிங்கம் அவர்கள் பேசும்போது, இவ்வளவு ஆண்டுகளாக மக்களை திரட்ட முடியவில்லை என்பது குற்ற உணர்வாக இருக்கிறது. லெனின் எப்படி மக்களை புரட்சிக்கு அணி திரட்டினார் என்பதை நாம்  அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். மக்களை நேசித்தார்; தோழர்களை நேசித்தார். ஒரு கட்சி எப்படி கட்டப்பட வேண்டும் அதில் உள்ள உறுப்பினர்கள் என்னென்ன செய்ய வேண்டும்  என்பதை வரையறுத்தார். தோழர் லெனின் தன்னைப் போல பல தோழர்களை உருவாக்கினார். அதனால் நாம் பார்வையாளர்களாக இருக்கக் கூடாது பங்கேற்பாளர்களாக மாற வேண்டும். கட்டுக்கோப்புடன் நமது திறமைகளை புரட்சிக்காக வளர்த்துக் கொள்வது என மக்களுக்கு பயனுள்ளவர்களாக நாம் மாற வேண்டும் என்பதை அழுத்தமாகப் பேசினார்.
தோழர் பிரபு பேசும்போது, லெனினிடம் பாட்டாளி வர்க்க விடுதலையை சாதித்துக் காட்ட வேண்டும் என்ற இலட்சியவெறி இருந்தது. ஆரம்பத்தில் லெனினுடைய அப்பா நாட்டு சூழலைப் பற்றி கூறிய விஷயங்கள் தனது அண்ணன் நரோத்னிக்காக இருந்தது, அவரை தூக்கில் போடும்போது கூட அந்த செய்தி கேட்ட லெனினுடைய அம்மா தனது மகன் சரியான விஷயத்திற்காகதான் நின்றான் என்பதை பகிரங்கமாக கூறுவது போன்ற விஷயங்கள்தான் லெனினை உறுதியுடன் வளர்வதற்கு முக்கியமாக பங்காற்றின.
எப்படி எளிமையாக வாழ்ந்தார் மக்களுக்கு இருந்த அதே அபாயம் லெனினுக்கும் இருந்தது. எப்படி 16 முதல் 18 மணி நேரங்கள் வரை மக்களுக்காக உழைத்தார். குடும்பத்தை எப்படி பார்க்க வேண்டும் கட்சியை எப்படி பார்க்க வேண்டும் என்பதையெல்லாம் லெனின் இடமிருந்து கற்க வேண்டும். அதில்  முக்கியமாக கட்டுப்பாடு  என்ற விஷயத்தை நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலமே காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியும். போன்ற விஷயங்களை எளிமையாக தோழர்கள் முன்பு எடுத்து வைத்தார்.
அடுத்ததாக தோழர் ராம் பேசும்போது, ரஷ்யாவில் ஒரு சாதாரண சமையற்கார அம்மா  நாட்டினுடைய பல்வேறு விஷயங்களையும் வரலாற்றையும் தெரிந்து வைத்திருந்தார். அதைப்போல நாம் ஒவ்வொருவரும் வரலாற்றை ஆழமாக தெரிந்து கொள்ள படிக்க வேண்டும் என்பது பற்றி பொதுவுடைமை கல்வி முறை லெனின் இளைஞர்களுக்கு அறிவுறுத்திய விஷயங்கள் குறித்துப் பேசினார்.
இறுதியாக பேசிய மக்கள் அதிகாரம் தோழர் சிவகாமு அவர்கள்,  முதலாளித்துவம் எப்படி அழுகி நாறுகிறது போராட்டம் எப்படி தவிர்க்க முடியாதது, பாசிசம் என்பது என்ன என்பதை எளிமையாக விளக்கினார். இன்று வரை விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது ஒருபுறம் சட்டத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு இப்போது ஆய்வு என்கிற பெயரில்  80 சதவீத விவசாயிகள் நாட்டில் மூன்று வேளாண் சட்டங்களையும் ஏற்றுக்கொண்டதாக பொய்யைப் பரப்பி அதன்மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு விவசாயத்தை ஒப்படைக்க தீவிரமாக வேலை செய்கிறார்கள். மேலும் காவிக் கும்பல் எப்படி அரசு அலுவலகங்களில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக ஆதரவாளர்களை நிரப்புகிறார்கள். எப்படி காவி – கார்ப்பரேட் பாசிசமும், நம்மை அச்சுறுத்துகிறது இதை வீழ்த்த நாம் ஒன்று சேர வேண்டும் என்பதை விரிவாக எளிமையான உதாரணங்களுடன் மக்கள் மொழியில் எடுத்து வைத்தார்.
இறுதியாக கேள்வி பதில் விவாதம் நடந்தது அதில் பல்வேறு தோழர்களும் ஊக்கமாக பங்கெடுத்தனர். பலரும் விரிவாக பேசினர்.
இறுதியாக நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
தகவல் :
புமாஇமு, தமிழ்நாடு.
000
ஏப்ரல் – 22 பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் அவர்களின் 152-வது பிறந்தநாளில் மார்க்சிய – லெனினிய கொள்கைகளை உயர்த்தி பிடிக்கும் வகையில் நாடு முழுக்க அவரது பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – மாநில ஒருங்கிணைப்பு குழுவின் சார்பாக,
அமெரிக்க மேலாதிக்க போர் வெறியை முறியடிப்போம் ! இந்தியாவில் காவி- கார்ப்பரேட்  பாசிசத்தை முறியடிப்போம் !  என்ற தலைப்பின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தோழர் லெனின் அவர்களின்   பிறந்தநாள் நிகழ்ச்சி கூட்டங்கள் நடத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக டி.ஐ. மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக நடத்தப்பட்ட ஆலை வாயில் கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக  சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் பா. விஜயகுமார் அவர்கள் சங்க  கொடியேற்றினார்.
கூட்டத்தின் தலைவர் தோழர் சரவணன் அவர்கள் தனது தலைமையுரையில் லெனின் இன்றைக்கும் நமக்கு ஏன் தேவைப்படுகிறார். குறிப்பாக இன்று நாடு முழுவதும் அரங்கேறி வரும் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதற்கு தோழர் லெனின் வழியில் நாம் பயணிப்பது மிகவும் அவசியம் என்ற அடிப்படையில் தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.
அதன் பிறகு சங்கத்தின் சிறப்புத் தலைவரும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி முன்னாள் மாநிலப் பொருளாளருமான தோழர் பா. விஜயகுமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது சிறப்புரையில் ஒடுக்கப்படும் நாடு, ஒடுக்கப்படும் தேசம், ஒடுக்கப்படும் வர்க்கம் இப்படி யாரெல்லாம் பாதிக்கப்படுகிறார்களோ அவர்களெல்லாம் லெனினை உயர்த்திப் பிடிப்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம். சுரண்டும் வர்க்கம் – சுரண்டப்படும் வர்க்கம் என்ற வர்க்க வேறுபாடுகளை உடைத்தெறிந்து ஒரு பொதுவுடைமை சமுதாயம் படைப்பதற்கு, குறிப்பாக இந்தியாவில்  காவி – கார்ப்பரேட் பாசிசம் அரங்கேறி வருகின்ற சூழலை முறியடிப்பதற்கும், கார்ப்பரேட்டின் தீவிரமான சுரண்டலை ஒழித்து கட்டுவதற்கும் இன்று நமக்கெல்லாம் லெனின் ஒரு வழிகாட்டியாக விடிவெள்ளியாக இருக்கிறார். ஆகவே தொழிலாளர்கள் சாதிமத வேறுபாடுகளை கடந்து வர்க்கமாக ஒன்றினைந்து தோழர் லெனின் அவர்களை உயர்த்திப் பிடித்து தமக்கான விடுதலையே சாதிப்போம் என்று தனது  சிறப்புரையை நிறைவு செய்தார்.
இறுதியாக சங்கத்தின் துணைத் தலைவர் தோழர் தனசேகரன் அவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் தொழிலாளர்கள் பெருவாரியாக கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
தகவல் :
டி.ஐ.மெட்டல் ஃபார்மிங் தொழிலாளர்கள் சங்கம்.
இணைப்பு- புதிய ஜனநாயக முன்னணி. (மாநில ஒருங்கிணைப்பு குழு) தமிழ்நாடு.
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) தலைமையேற்று இயங்கிவரும் தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி  சார்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணலி SRF ஆலையில் ஆசான் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல்:
தொழிலாளர் ஒருங்கிணைப்பு அணி – SRF மணலி
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்தநாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சென்னை, திருவள்ளூர், காஞ்சி மாவட்டத்தில் இயங்கிவரும் ஆக்சில் இந்தியா கிளையில் ஆசான் லெனின் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
தகவல்:
ஆக்சில் இந்தியா கிளை, காஞ்சிபுரம்.
000
பாட்டாளி வர்க்க பேராசான் தோழர் லெனின் 153-வது பிறந்த நாள் விழா புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலூர் மாவட்ட பகுதியின் சார்பாக அடுக்கம்பாறை தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தில் விழா முன்னெடுக்கப்பட்டு கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் திரளான தோழர்கள் கலந்துகொண்டனர்.
தகவல் :
புஜதொமு, மாநில ஒருங்கிணைப்புக்குழு.
000
பாட்டாளி வர்க்கத்தின் ஆசான் தோழர் லெனின்,    அவர்களின் 152-வது பிறந்தநாளையொட்டி திருவாரூர்,  புதிய ரயில்வே நிலையம் எதிரில், மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக  22/4 2022, அன்று மாலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தியாவில் தீவிரமாகி வருகின்ற காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிக்க அணிதிரள்வோம் ! என்றும் இன்றைய சூழலை விளக்கியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்டச் செயலாளர், தோழர் தங்க. சண்முகசுந்தரம் திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் தோழர் ஜி. வரதராஜன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் சீனி செல்வம், டாக்டர் ரகுநாதன், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட இணைச் செயலாளர் தோழர் ஆசாத், BSP கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் தோழர் M. பத்மநாபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல் :
மக்கள் அதிகாரம் தஞ்சை மண்டலம், திருவாரூர் – 6374741279
000
ஏப்ரல்-22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளில் சூளுரைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம் ! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம்! என்ற தலைப்பின்கீழ் 22.4.2022 அன்று கோவை மக்கள் அதிகாரம் சார்பில் அறைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் ராஜன் கோவை மாவட்ட செயலாளர், தோழர் லூயிஸ் வழக்கறிஞர், போல்ஷிவிக் இந்திய IMT அமைப்பாளர் தோழர் கார்த்திக், உறுப்பினர் தோழர் சங்கர் ஆகியோர் உரையாற்றினர்கள். மக்கள் அதிகாரத்தின் பகுதி தோழர் கலந்து கொண்டனர். இறுதியாக இனிப்பு வழங்கப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், கோவை. 9488902202
000
ஏப்ரல்-22 பாட்டாளி வர்க்க ஆசான் தோழர்.லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளில் சூளுரைப்போம்! காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியை கட்டியமைப்போம் ! என்ற தலைப்பின்கீழ் 22.4.2022 அன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் அறைக் கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டத்திற்கு தோழர் சிவா வட்டார இணைச் செயலாளர் மக்கள் அதிகாரம் அவர்கள் தலைமை தாங்கினார்.
சிறப்புரையாக, தோழர் அருண் வட்டார செயலாளர் மக்கள் அதிகாரம், தோழர் கோபிநாத் மண்டலச் செயலாளர் மக்கள் அதிகாரம் தர்மபுரி மண்டலம் ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக, நன்றியுரை வட்டாரப் பொருளாளர் தோழர் சத்தியநாதன் நிகழ்த்தினார்.
தகவல் :
மக்கள் அதிகாரம், தருமபுரி மண்டலம். 9790138614
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்த நாளில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (மாநில ஒருங்கிணைப்புக்குழு) சார்பாக திருச்சி மண்டலத்தில் ஆசான் லெனின் பிறந்தநாள் நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு குடும்ப விழாவாக நடைபெற்றது. இனிப்புகள்  வழங்கியும் , கவிதை போட்டி , வினாடி வினா, ஒவியப்போட்டி , பாட்டு போட்டி, மேஜீக் நடத்தியும் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு பொருள்களும் வழங்கப்பட்டது.லெனின் பற்றிய ஆவணப் படமும் திரையிடபட்டது இரவு  உணவு வழங்கப்பட்டு முடிவுற்றது.
தகவல் :
புஜதொமு, மாநில ஒருங்கிணைப்புக்குழு.
000
ஆசான் லெனின் அவர்களின் 152-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை சேத்துப்பட்டு கிளையில் மக்கள் அதிகாரம், பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, ம.க.இ.க சார்பாக நிகழ்ச்சி நடைபெற்றது. ரசிய புரட்சி உழைக்கும் மக்களுக்கு என்ன சாதித்து கொடுத்தது. இலவச கல்வி, மருத்துவம் என மக்களின் நலனில் அக்கறை கொண்ட கட்சியாக போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. நாமும் நம் நாட்டில் ஒரு புரட்சியை சாதிக்க வேண்டும். நம் நாட்டில் காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம் என தோழர்கள் உரையாற்றினர்.
தகவல் :
மக்கள் அதிகாரம், சென்னை மண்டலம். 9176801656.
000
பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் 152-வது பிறந்தநாள் விழா கடலூர் மக்கள் அதிகார அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், தோழர் தீனதயாளன் தலைமை தாங்கி  புரட்சியாளர்  மாமேதை லெனின் புகழ் ஒங்குக என்று முழக்கமிட்டு கூட்டத்தை தொடங்கி வைத்தார். தோழர் ராமலிங்கம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உருவாக்கிய பாட்டாளி வர்க்க சித்தாந்தத்தை ஆய்வுக்குட்படுத்தி நவம்பர் 7 பாட்டாளி வர்க்க ஆட்சி நிறுவினார். அதன்பிறகு உலகம் முழுவதும் பாட்டாளி வர்க்க ஈர்ப்பினால் சோவியத் யூனியனை உருவாக்கினார். பல ஆண்டுகளாக போர் முனையிலிருந்த ரஷ்யா, பொருளாதாரத்தில் பின் தங்கிய ரஷ்யா, உலகத்திற்கே முன்மாதிரியாக திகழ்ந்தது.
பாட்டாளி வர்க்க சர்வாதிகார ஆட்சி மூலமாக  எல்லோருக்கும் அடிப்படை வசதிகளை உருவாக்கித் தந்தவர் லெனின். அதில் சிறு குறிப்பாக நினைவு படுத்துகிறேன். போரில் சிறை பிடிக்கப்பட்ட சிறைவாசிகளை நேரடியாக சந்தித்தபோது நீங்கள் அனைவரும் சாப்பிட்டீங்களா என்று கேட்டபோது, 75 கைது செய்யப்பட்ட போர் வீரர்கள் – நாங்கள் இன்னும் சாப்பிடவில்லை – என்று கூறினர். சிறை அதிகாரியை லெனின் கேட்டபோது உணவு ஏற்பாடு செய்வதற்கு பொருள் இல்லை என்று கூறியவுடன் அனைவரையும் விடுதலை செய்யுங்கள் என உத்தரவிட்டார் லெனின். மேலும், பாட்டாளி வர்கக சர்வாதிகாரம் என்றால் என்ன? முதலாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் எனன? என்று தோழர்களுக்கு  விளக்கினார்.
தோழர் கார்த்திகேயன், அலெக்சான்ட்ரா கொலந்தாய் லெனினை பற்றி கூறும் அவர்  ஒரு சிந்தனையாளர், உழைக்கும் மக்களுக்காக பாடுபட்டவர்.. பிறமொழி படைப்புகளை மொழிபெயர்த்தார். எழுதினார் எழுதிக் கொண்டே இருந்தார். எழுதும் போதும், படிக்கும் போதும் தூக்கம் வந்தால் எழுந்து சில நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வார். தூக்கம் கலைந்ததும் மீண்டும் படிப்பார். இறுதி மூச்சு  வரை பாட்டாளி வர்க்கத்துக்காக உழைத்தவர் என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கட்டிடத் தொழிலாளர்கள், பொது மக்கள் என 25 பேர் கலந்து கொண்டனர். வீடு வீடாக  இனிப்புகள், வழங்கி லெனின் பிறந்தநாள்  கொண்டாடப்பட்டது.
உழைக்கும் வர்க்கத்தின் வாரிசுகளாகிய நாம் மார்க்சிய ஆசான் லெனின் வழியை பின்பற்றுவோம். பாட்டாளி வர்க்கத் தலைமையின்கீழ் அணி திரள்வோம் மார்க்சிய -லெனினிய – மாசேதுங் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம்! நம் நாட்டிலும் ஒரு புரட்சியை நடத்தி முடிப்போம். சமூக மாற்றத்தை நிகழ்த்தி காட்டுவோம்! என்று அனைவரும் லெனின் பிறந்தநாளில் உறுதியேற்போம்.
இறுதியாக முழக்கமிட்டு நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், கடலூர்.
000
விருத்தாசலம் மக்கள் அதிகாரம் சார்பாக ஏப்ரல் 22 தோழர் லெனின் பிறந்தநாளில் பொதுமக்களிடையே முழக்கமிட்டு இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி வட்டாரச் செயலாளர் அசோக் குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது.
தகவல் :
மக்கள் அதிகாரம், விருதை.