Tuesday, October 21, 2025
முகப்பு பதிவு பக்கம் 427

அனிதாவின் மரணத்திற்கு இன்று ஒரு வயது | மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

னிதாவின் மரணத்திற்கு
இன்றோடு ஒரு வயதாகிறது
அனிதாவின் மரணத்தின்
முதல் பிறந்த தினத்தில்
ஆயிரம் இரவுகளைப் பிழிந்த
அடர் கறுப்பு வண்ணத்தில்
புத்தாடை வாங்குகிறோம்
ஆயிரம் கசப்புகளின்
சாரத்தாலான
பிறந்த நாள் கேக் ஒன்றை வாங்குகிறோம்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
மெளனமாக நம்மையே
உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது
நம் கையாலாகாததனத்தை
கேலி செய்வதுபோல
ஒரு வறண்ட புன்னகையை உதிர்க்கிறது
நீதியின் தந்திகள் அறுபட்ட வீணைகளிலிருந்து
சிலேட்டில் ஆணியால் எழுதுவது போன்ற
சங்கீதங்கள் எழுகின்றன
என் பற்கள் கூசுகின்றன
அதிலிருந்துதான் நாம் அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தின வாழ்த்துப் பாடலை
இசைக்க இருக்கிறோம்

பத்ம வியூகத்தில்
அபிமன்யுவை கொன்றதுபோலவே
அனிதாவைக் கொன்றீர்கள்
நீங்கள் தந்திரமாக
உருவாக்கிய சக்கர வளையங்களை உடைக்க
கடைசிவரை போராடினாள்

கடைசியில் மலைமுகட்டில் மோதி
உயிரைவிடும் ஒரு பறவைபோல
தன்னை அழித்துக்கொண்டாள்
அது துரோகத்திற்கு எதிரான
கடைசி எதிர்ப்பு
அது அநீதிக்கு எதிரான
கடைசிக் கண்டனம்
வரலாற்றின் அரண்களை
தாண்ட முயன்றவர்கள்
வரலாற்றின் பலிபீடங்களில்
ரத்தம் சிந்துகிறார்கள்

ஒரு வயதாகும் அனிதாவின் மரணம்
ஒரு குழந்தை வளர்வதுபோல
நம் நெஞ்சில் வளர்கிறது
ஒரு குழந்தையைவிட வேகமாக வளர்கிறது
ஒரு வனத்தில் மூண்ட நெருப்பைவிட வேகமாக வளர்கிறது

அனிதாவின் மரணத்தின்
முதலாம் பிறந்த தினத்தில்
அதற்கு நீங்கள் என்ன பரிசு தருவீர்கள்?
ஒரு ஸ்டெதாஸ்கோப்?
ஒரு ரத்த அழுத்தம் அளக்கும் கருவி?
ஒரு சிரிஞ்ச்?
ஒரு அறுவை சிகிட்சை கத்தி?
ஒரு பிரிஸ்க்ரிப்ஷன் காகிதம்?
இல்லை
தலைமுறைகளின் பூட்டை உடைக்கும் ஒரு சுத்தியல்
அடிமைச் சங்கிலியறுக்கும் ஒரு வாள்
அன்று கொல்லும் அரசை நின்றுகொல்லும் ஒரு முழக்கம்
நீதியின் இருண்ட வீட்டில் ஏற்ற ஒரு விளக்கு
சீசஸருக்கு உரியதை சீஸருக்கு அளியுங்கள்
அனிதாவிற்கு உரியதை அனிதாவுக்கு அளியுங்கள்

நன்றி: மனுஷ்ய புத்திரன்

இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !

1

துரையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, – ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் “உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவர் பேரா.விஜயகுமார்; மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், பேராசிரியர் இரா. முரளி, மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு ஆகியோர் ஆற்றிய உரை.

பேரா.விஜயகுமார், துணைத்தலைவர், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழு.

கல்வியாளர்களை விரட்டும் உயர் கல்வி ஆணைய மசோதா!

பேரா.விஜயகுமார்

இன்று நாம் பேச வேண்டிய முக்கியமான பிரச்சினையை சரியாக ஆராய்ந்து இந்த மசோதாவை முறியடிக்க அறைகூவி உள்ளார்கள்.  ஏனெனில் கல்வி பறிபோய்விட்டால் அவ்வளவு தான்.  நாம் நம்மை அறியாமலேயே அடிமையாக அதுவே போதும்.  நான் மூன்று விசயங்களை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவது, பல்கலை மானியக்குழு என்பது கல்வியாளர்களால் நிரம்பிய ஒரு அமைப்பு.  நிதி ஒதுக்கீட்டைத் தவிர அரசுக்கு அதில் வேலை இல்லை.  ஆனால் இந்த மசோதாவின் படி உயர்கல்வி ஆணையத்தில் கல்வியாளர்களுக்கு இடமே இல்லை.  சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தொழில் அதிபர்களும் தான் ஆணையத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனில் இதன் யோக்கியதையை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.  ஏற்கனவே வாஜ்பாய் காலத்தில் அம்பானி-குமாரமங்கலம் பிர்லா தலைமையில் கல்வி வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டது.  அதே போல், இனி தொழிலதிபர்கள் எல்லாம் ஒன்று கூடி தங்களது நிறுவனங்களுக்கு திட்டமிடுவதைப் போல, நம்முடைய கல்வியின் மூலமாக எப்படி இலாபம் பார்க்கலாம் என திட்டமிடுவார்கள்.

இரண்டாவதாக, பொதுவாவே ஒரு சட்டம் உருவாக்கப்படும்போதே, அதிலிருந்து தப்பிக்க ஒரு ஓட்டையை விட்டுவைப்பது போல், இந்த மசோதாவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை படித்துப் பார்த்தால் – அந்த ஆணையம் ஒரு ஆய்வு செய்யும் அமைப்பாக மட்டும் இருக்குமே ஒழிய, தற்போதைய மானியக் குழு போல நிர்வகிக்கும் அமைப்பாக இருக்க முடியாது.  உதாரணத்திற்கு தங்களுடைய தேவைக்கு ஒத்துவராத பாடம் ஒன்றை அதைத் தடுப்பதற்கு மட்டுமே இந்த ஆணையத்தை பயன்படுத்த முடியும்.  மற்றபடி, ஒரு தொழில் நிறுவனத்தின் நிர்வாகத்தில் எப்படி அரசு தலையிட முடியாதோ அதே போல் நம் கல்வி அமைப்பை கார்ப்பரேட் பல்கலைக்கழகங்கள் தம் விருப்பம் போல் இலாப நோக்கோடு நடத்திக் கொள்ளும்.மூன்றாவதாக, வர்க்கம் சார்ந்த ஒரு அரசு, தம்முடைய வர்க்கம் சார்ந்த கோட்பாடுகளை கொண்டு செல்ல பயன்படுத்துவது, முதலும் கடைசியுமாக கல்வி அமைப்பு தான்.

தற்போது உள்ள மனுதர்ம வாதிகள் தமது இந்துத்துவ காவி கொள்கைகளை கொண்டு செல்ல இந்த ஆணையத்தை பயன்படுத்துவார்கள். ஏற்கனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுவுக்கு சிலை இருக்கிறது, ரோஹித் வெமுலா ஹைதராபாத்தில் கொல்லப்பட்டார், தமிழகத்தில் மூன்று கல்வி நிலையங்களில் ஆர்.எஸ்.எஸ். சார்பானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1998-இல் வாஜ்பாய் காலத்திலும் தங்களுடைய கோட்பாடுகளை கொண்டுவர முயற்சி செய்தார்கள்.  அதாவது, கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் இனி கல்வி நிலையங்களில் சரஸ்வதி வந்தனம் பாட வேண்டும் என கூறினார்கள்.  அப்போதைய கல்வி அமைச்சரும் தி.மு.க. வின் பொதுச்செயலருமான திரு.க.அன்பழகன் இதை எதிர்க்கவும், உடனே பின்வாங்கி விட்டார்கள்.  ஏனெனில், அப்போது அவர்களுக்கு பெரும்பான்மை பலம் கிடையாது.  இப்போது இருக்கிறது.  எனவே, செய்கிறார்கள்.  இன்னொரு புறம், ஆர்.எஸ்.எஸ்.- இல் கல்வியாளர்கள் என்று ஒருவரும் கிடையாது.  ‘கல்வியாளர்கள்’ என்று சொல்லி அவர்கள் அழைத்து வருபவர்கள் எல்லோரும் அடி முட்டாள்களாகவே இருப்பார்கள்.  தங்களுடைய கோட்பாடுகளை நம் மீது தினித்து நம்மை முட்டாளாக்க முயற்சிப்பதை நாம் முறியடிக்க வேண்டும்.

இறுதியாக,  மாநில பட்டியலில் இருந்து, மத்திய பட்டியலில் கல்வியை கொண்டு சென்று நம் கல்வி அமைப்பை சீர்குலைப்பது இந்திராகாந்தி அவசர நிலை காலத்தில் இருந்தே ஆரம்பித்து விட்டது.  எனவே இந்த மசோதாவை முறியடித்தே ஆக வேண்டும்.

***

பேராசிரியர் இரா. முரளி, மாநிலப் பொதுச்செயலாளர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்.

தனியார் கல்வியை வளர்த்து இலவச கல்வியை ஒழிக்க போகிறார்கள்!

பேராசிரியர் இரா. முரளி

யு.ஜி.சி. ஆரம்பிக்கப்பட்ட போது அனைவருக்கும் ஒரு கனவு இருந்தது. இந்த நாட்டை ஒரு நாகரீக சமுதாயமாக மாற்றப் போகிறோம் என்று. அது 1956- இல். மாலைநேரக் கல்லூரி எல்லாம் முழுமையாக சேவை மனப்பான்மையோடு ஆரம்பிக்கப்பட்டது. காலையில் வேலை பார்த்துவிட்டு படிக்க வருபவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தது. அதையேதான் தற்போதும் கொண்டு வருகிறார்கள். ஆன்லைன் கோர்ஸ், பார்ட் டைம் கோர்ஸ்- வீக்லி, மந்த்லி கோர்ஸ் என்று – ஆனால் காசுக்காக.

இதை நீங்கள் பேராசிரியர்கள் ஊதிய – வேலை வித்தியாசத்திலேயே பார்க்கலாம். அரசு பேராசிரியர்கள் வாரத்திற்கு பதினைந்து மணிநேரம் வகுப்பெடுத்து அறுபதாயிரம் சம்பளம் வாங்குவார். ஆனால் ஒரு சுயநிதிக் கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் 36 மணிநேரம் வகுப்பெடுத்து 12 ஆயிரம் சம்பளம் வாங்குவார். இதுதான் இந்த மசோதா இந்தியாவெங்கும் உண்மையாக்க முயற்சி செய்கிறது – செய்யப் போவது.

இந்த தனியார் கல்வி அமைப்புகளுக்கு தமிழகத்தில் பிள்ளையார் சுழி போட்டதே எம்.ஜி.ஆர். தான்.  தன்னை மகானாக காட்டிக்கொள்ள சாராய வியாபாரிகளுக்கு எல்லாம் கல்லூரி துவங்க அனுமதி கொடுத்தார்.  உதாரணம், சாராய உடையார், ஜே.பி.ஆர். சத்யபாமா கல்லூரி. பொதுவாக உலக பொருளாதார அமைப்பு இன்று கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ளது. அவர்கள் எல்லாத் துறையையும் தொழில்துறையாக மாற்றி இலாபம் பார்க்க முயற்சித்து GATT ஒப்பந்தத்தை கொண்டு வந்தார்கள். அதில் கல்வியையும் சேர்த்து இலாபம் பார்க்கலாம்– இனி அதுவும் ஒரு தொழில்துறைதான் – அத்தியாவசிய தேவை கிடையாது என்று அந்த GATT இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தனை நாடுகளும் சத்தமே இல்லாமல் அந்த சட்டத்தை கடனுக்காக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இந்திய அரசு உட்பட. எனவே தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களை பிசினஸ் பீஃல்டாக கல்வி அமைப்பு மாற்றியுள்ளது.

அமெரிக்காவின் முன்முயற்சியில் உருவாக்கப்பட்ட அந்த GATT ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டதிலிருந்து நாட்டின் மொத்த வருமானத்தில் 6% – இருந்த கல்விக்கான பங்கு தற்போது 3% க்கும் கீழ் வந்துவிட்டது. இந்த ஆணையத்தை உருவாக்க காங்கிரஸ்  ஆட்சியிலேயே முயற்சி செய்தார்கள். ஆனால் தோல்வி அடைந்தவுடன் GATT -இல் குறிப்பிட்டதைப் போல கம்பெனிச் சட்டத்தில் கல்வியைக் கொண்டு வந்தார்கள். விளைவு, இஷ்டம் போல் வெளிநாட்டு மாணவர்களை அதிக கட்டணத்தில் சேர்த்துக் கொள்ளலாம் என்று வந்துவிட்டது. இதை முதலில் செய்தது மெட்ராஸ் கிரிஸ்டியன் காலேஜ் மற்றும் மதுரைக் கல்லூரி( மெஜீரா) .

யு.ஜி.சி. -யை கலைத்து புதிய ஆணையத்தை அமைக்க என்ன செய்தார்கள் என்றால், முதலில் புதிய வேலை வாய்ப்பு அதிகம் உள்ள எந்த கோர்ஸையும் அரசுக் கல்லூரிகளில் கிடைக்கவிடாமல் செய்து அனைத்தையும் சுயநிதிக் கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கும்படி செய்தார்கள். இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எல்லாம் பணம்தான் –  என்ன சும்மாவா கொடுக்கிறார்கள் என்ற மனநிலை –  விரக்தி வந்துவிட்டது. இதை தற்போது அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே ஆர்.எஸ்.எஸ். –  பி.ஜே.பி.- யை பொருத்தவரை காவிமயம் என்பது வெறும் மேற்பூச்சு. கல்வியை வியாபாரமயமாக்குவதுதான் பிரதான நோக்கம்.

எனவே நம்முள் உள்ள தற்போதைய கேள்வி என்னவென்றால் வணிகமயம் மற்றும்  உலகமயத்தில் நம்முடைய அடையாளத்தை இழந்து நாம் கரையப் போகிறோமா? அல்லது இதை எதிர்த்து முறியடித்து நம்முடைய அடையாளத்தை மீட்கப் போகிறோமா? என்பதுதான்.

***

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு, அரசியல் அறிவியல் துறை, தொலைநிலைக் கல்வி இயக்ககம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா?

பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு

1830 -இல் கிழக்கிந்தியக் கம்பெனியின் இந்திய வைசிராயாக இருந்த லார்டு என்பவர்தான் இந்தியாவில் நவீனக் கல்வி அமைப்பை உருவாக்குகிறார். அப்போது இரண்டு அதிகாரிகளிடம் இதற்கான வரைவு அறிக்கையை அவர்களுடைய கண்ணோட்டத்தில் உருவாக்கிக் கொடுக்க ஆணையிடுகிறார். இருவரின் வரைவு அறிக்கையும் ஒரு கமிட்டியில் வைத்து விவாதிக்கப்படுகிறது. அப்போது காரசாரமாக விவாதம் நடைபெறுகிறது. ஒருவர் வில்லியம் ஆடம், இந்தியாவில் உயர்கல்வி என்ற ஒன்று இருந்தது என்றால் அது மடங்கள்தான். எனவே நாம் அதை எதையும் மாற்றாமல் மடங்களுக்கு நிதி தந்து விடலாம் என்கிறார். கூடுதலாக வேண்டுமானால் நமக்கு எத்தகைய கல்வி கற்ற ஆட்கள் வேண்டும் என்பதை வேண்டுமானால் கேட்டுப் பெறலாம் என்கிறார். ஆனால் நாம் மெக்காலேயை இப்போது திட்டினாலும் அப்போது அவர் சொல்லியதுதான் இன்று நாம் பெயரளவிற்காவது பெற்றுள்ள இந்த நவீன கல்வி.

மெக்காலே அரசுதான் கல்வியைக் கொடுக்க வேண்டும். நமக்கு எப்படிப்பட்ட கல்வியைக் கற்றவர்கள் வேண்டும் என்பது நமக்குத் தான் தெரியும். மேலும் அது நம்முடைய நாட்டில் நாம் செய்வது போலவே நம்முடைய கடமை என்கிறார். பின் கவர்னர் தன் அமைச்சரவையில் பேசுகிறார். வருமானம் எப்படி இதற்கு? அதனால் முடியாது என்கிறார். பிறகு கல்வி வரி போடுவோம் என்கிறார். அன்று வரி யாருக்கு  போட முடியும்? ஜமீன்தாருக்கு தானே. எனவே அவர்கள் அதை எதிர்த்தார்கள். பிறகு ஜமீன்தார்கள், அந்தப் பணத்தை எங்களிடம் கொடுங்கள் நாங்கள் கல்வி கொடுக்கிறோம் என்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இதுதான் நடக்கிறது.

யார் கல்வி கொடுப்பது? அரசா? பணக்காரர்களா? அதிலிருந்துதான் தற்போதைய அரசு – தனியார் கூட்டு (public-private partnership) பற்றி பேசுகிறார்கள். இதிலிருந்து நீங்கள் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இரயத்துவாரி வரி வசூல் முறையும் கல்கத்தா போன்ற மாநிலங்களில் இருந்த ஜமீன்தாரி வரி வசூல் முறையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை அன்றிலிருந்தே அதிகம் என்பது புரியும்.

பின் ‘ மாடர்ன் யுனிவர்சிட்டி சிஸ்டம்’  வந்த போது ‘ ‘மாடர்ன் அக்ரிகல்ச்சர்’ சொல்லிக் கொடுங்கள். அவன் படித்து எங்கள் நிலத்தில் அதை அப்ளை செய்யட்டும் என்றனர். அன்று ஜமீன்தார் இன்று கேப்பிட்டலிஸ்ட்.

பொதுவாக உயர்கல்வியில் மூன்று அடுக்குகள் உள்ளன.

  1. Formulation university courses.
  2. Professional university courses.
  3. Research university courses.

இதில் புரஃபசனல் கோர்சஸ் மட்டும் குறிப்பாக தம்மிடம் கோருகிறார்கள். ஏனெனில் அதுதான் பணம் சம்பாதிக்கும் வழி.

ஆனால் நான் கேட்பது என்னவென்றால், ஒரு முதலாளி என்றாலும் நாராயணசாமி போன்ற கார்ப்பரேட் ஆளுமைகளை உருவாக்கியது கூட நம்முடைய அரசு சார்ந்த கல்வி அமைப்புதானே. அரசு செய்ய முடியாது என்று அதே நாராயணசாமியே கோருகிறாரே ஏன்? இதுதான் பிசினஸ்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம் ! மதுரை – விழுப்புரம் பு.மா.இ.மு. செய்தி !

0

கல்வி கற்கும் உரிமையைப் பறிக்கும் மோடி அரசின் உயர்கல்வி ஆணைய மசோதா-விற்கு எதிராக தமிழகமெங்கும் மாணவர்கள் மத்தியில் பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு, மாணவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வூட்டி வருகிறது, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் கருத்தரங்கம் மற்றும் விழுப்புரத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளது.

மதுரையில், கடந்த ஆகஸ்ட் 28 அன்று, -ஆம் தேதி, மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் “உயர்கல்வி ஆணைய மசோதாவை முறியடிப்போம்!” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.கருத்தரங்கத்திற்கு தலைமை தாங்கிய தோழர் ராஜ்குமார் தனது உரையில், “உயர்கல்வி ஆணைய மசோதாவைப் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் – தனியார்மயம் என்பது தான்.  இந்த நாட்டில் இருக்கும் – இயங்கக்கூடிய அனைத்துக் கல்வி அமைப்புகளையும் உலக கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிக்க திறந்து விட வழி செய்யும் ஒரு மசோதா.

இந்த மசோதாவைக் கூட சட்டப்படி எந்த அவகாசமும் கொடுக்கப்படாமல் நம் மீது திணிக்கப் பார்க்கிறது மோடி அரசு.  கடந்த ஜூன் 27-ஆம் தேதி, அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இதற்கான அறிவிப்பை திடீரென வெளியிட்டு, பத்து நாளில் மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று சாதாரணமாக முடித்து விட்டார்.  உடனே கல்வியாளர்கள், முற்போக்காளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது தொழிலுக்கு உடனே இலாபம் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

ஆனால், இங்கோ ஸ்டெர்லைட் முதல் மீத்தேன் வரை அத்தனை திட்டங்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது.  விளைவு, அடக்குமுறை.  நாம் கண்டனம் தெரிவிக்க முடியாது.  கைது, குண்டாஸ், NSA என மக்களின் குரல்வளையை நெறிக்கிறார்கள்.  அதன் ஒரு பகுதி தான் இந்த மசோதா.  வரும் 2020-க்குள் இந்திய கல்விச் சந்தையின் மதிப்பு 9.5 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது.  அதை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திறந்துவிட இந்த மசோதா மூலம் வழி அமைத்துக் கொடுக்கிறார்கள்.  தற்போது மதுரை ‘தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரியில்’ எஸ்.சி. என்றால் விண்ணப்ப படிவம் கூட கொடுப்பதில்லை. இந்த நிலையில் இந்த மசோதாவும் நிறைவேறிவிட்டால் நிலைமை மிகவும் மோசமாகும்.  எந்த சாதி ஆனாலும், காசு இல்லாதவனுக்கு கல்வி கிடைக்காது என்ற நிலை ஆகிவிடும்.” என பேசினார்.இக்கருத்தரங்கில், மதுரை காமராசர் பல்கலைக்கழக பாதுகாப்புக் குழுவின் துணைத்தலைவர் பேரா.விஜயகுமார்; மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர்,   பேராசிரியர் இரா. முரளி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், தொலைநிலைக் கல்வி இயக்ககத்தின், அரசியல் அறிவியல் துறைப் பேராசிரியர் இரா.பவணந்தி வேம்புலு ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

இறுதியாக, பு.மா.இ.மு. – வின்  மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் த.கணேசன் தனது உரையில்,  ”ஒரு மாதத்தில் யாரிடமும் கேட்காமல் இந்த மசோதாவை நிறைவேற்றத் துடிக்கும் இந்த அரசு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு முறையாக எப்போதும் பதில் சொன்னதில்லை. தரமான கல்வி என்றால் அது தனியார் அமைப்பால்தான் தரமுடியும் என்கிற கருத்துக்கு பெற்றோரே விளம்பரங்களின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு தள்ளிவிட்டதே இந்த அரசுதான்.

இரண்டு வருடத்திற்கு முன் கோவையில் கல்வி கட்டணம் கட்ட முடியாததால் ஒரு தாய் தன்னுடைய குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.

இன்னொருபுறம் நம்மீது நீட் திணிக்கப்பட்டது. ஆடை கிழித்து மாணவ மாணவிகள் அவமானப் படுத்தப்பட்டார்கள். 1150 மார்க் எடுத்தவர்கூட நீட்டில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பீகாரில் +1, +2 வகுப்பறைக்கு செல்லாமலே ஒருவர் நீட்டில் தேர்வு எழுத முடிகிறது. இதுதான் உங்களுடைய தேர்வு –  தரம் – இலட்சணம்.

என்ன தரம்? சென்னை சுந்தரவள்ளி என்ற தனியார் பள்ளி திடீரென்று பெற்றோர்களிடம் 2 இலட்சம் டெபாசிட் கேட்கிறான். கேள்வி கேட்டால் இது என்னோட ஸ்கூல் என் இஷ்டம் அரசாங்கம் என்ன கேட்கிறதுன்னு திமிரா பதில் சொல்றான் அதனுடைய ஓனர். இது பெற்றோருடைய தனியார் பள்ளி மோகம் கொடுத்த தைரியம் அவருக்கு.

இன்னொரு பள்ளியில் இரண்டாது படிக்கிற பையனுக்கு நீட் தேர்வு கோச்சிங் ஆரம்பிக்க ஐம்பதாயிரம் கட்டணம் இப்போதே கேட்கிறார்கள். ஏதோ வலது மூளை –  இடது மூளை வித்தியாசத்தை சரி செய்தாதான் இப்பவே படிக்கிறது மனசுல தங்க ஆரம்பிக்குமாம். அதுக்கு இப்ப இருந்தே பயிற்சி கொடுக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், அரசு +1 மாணவர்களுக்கு சென்ற வருடம் ரெண்டு மாதமாகியும் புத்தகம் கொடுக்கப்படவில்லை. ஆனால் அனைத்துப் புத்தகங்களையும் தனியார் பள்ளிகளுக்கு பாக்கி வைக்காமல் தந்து விட்டார்கள். அப்ப அரசு பள்ளி மாணவர்கள் நிலை?

இப்போது புதிதாக இந்த கல்வி ஆணையம். ஏற்கனவே இங்கே என்ஜீனியரிங் காலேஜ் நிலைமை என்ன? 50%  க்கும் அதிகமான கல்லூரிகளில் 30% க்கும் குறைவான மாணவர் சேர்க்கை. இலவச கல்வி என கவுன்சிலிங் அன்று ஆள் பிடிக்கிறான். அரசாங்கம் இவனுக்கு நம்மோட கட்டணத்தைக் கொடுக்குமாம். நாம் பிறகு அரசிற்கு கடன திருப்பி கட்டணுமாம். ஏற்கனவே கடனை திருப்பி வசூல் செய்கிறேன் என்று எத்தனை மாணவர்களை இவர்கள் கொன்றுவிட்டார்கள். இனி அது உயர்கல்வியிலும் தொடரப் போகிறது. இனி அண்ணா பல்கலைக்கு அரசு நிதி கிடைக்காது. இனி  நம்மிடம் அதிக கட்டணத்தை வாங்கினால் மட்டுமே பல்கலை நடத்த முடியும் என்ற நிலை வரப் போகிறது. எனவே முன்பு சூத்திர- பஞ்சமருக்கு இருந்த கல்வி உரிமை கிடையாது என்கிற நிலை காசில்லாத அனைவருக்கும் வரப்போகிறது.

இதை எதிர்க்க அதிகாரிகளை நம்பி பயனில்லை. பெற்றோர்கள்- மாணவர்கள்- இளைஞர்கள்- ஆசிரியர்கள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே தடுக்க முடியும்.  நம் உயிரைக் கொடுத்தேனும் இந்த உயர் கல்வி ஆணைய மசோதாவை முறியடித்தே ஆகவேண்டும்.  முறியடிப்போம்.” என எழுச்சி மிக்க உரையாற்றினார்.

கருத்துரைகளுக்கு இடையிடையே கம்பம் பகுதி மாணவர்கள் புரட்சிகர பாடல்களை பாடினார்கள். உசிலம்பட்டி தோழர் பகத்சிங் உயர்கல்வி ஆணையம் பற்றியும் மோடியின் சதிகள் பற்றியும் அம்பலப்படுத்தி கவிதை வாசித்தார். தோழர். ரவி நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.

கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களின் உரை தனிப்பதிவாக வெளியிடுகிறோம்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மதுரை.

_______________________________________

விழுப்புரத்தில், கடந்த ஆகஸ்டு 23 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பு.மா.இ.மு.  விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர். ஞானவேல் தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில் ”பல்கலைக்கழக மானிய குழுவை கலைத்து விட்டு உயர் கல்வி ஆணையம் மசோதாவை கொண்டுவருவதன் மூலம், பெரும்பான்மை ஏழை, எளிய மாணவர்கள் தற்குறியாகவும், உயர்கல்வியில் இருந்து பெரும்பான்மை மாணவர்கள் துரத்தி அடிக்கப்படுவார்கள். ஒட்டு மொத்த கல்வியும் கார்ப்பரேட் பிடியில் போகும். இதை முறியடிக்க வேண்டும்.” என்றார்.பு.மா.இ.மு. – வின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தனது உரையில், ”60-வது வருடத்திற்கு மேலாக செயல்படும் யூ.ஜி.சி.யைக் கலைப்பது ஒரு சமூகத்தையே  தற்குறியாக்குவதற்கு சமம். 1956 – ஆம் ஆண்டு முதல் உயர்கல்வியை விரிவுபடுத்த கொண்டுவரப்பட்டு இன்றைக்கு தராமான உயர்கல்வி அரசு தருகிறது. மேலும் அடித்தட்டு மக்களும் அவர்களின் பிள்ளைகளும் பட்ட படிப்புகள் படிக்க முடிந்து இருக்கிறது. என்றால் அதற்குக் காரணம் இந்த பல்கலைக்கழக மானிய குழு இருந்ததால்  தான். இப்படி எண்ணற்ற பணிகளை கல்வி மேம்பாட்டிற்கு  யூ.ஜி.சி. ஆற்றியிருக்கிறது. தரத்தின் பெயரால் யூ.ஜி.சி.-யைக் கலைத்துவிட்டு உயர்கல்வி ஆணையம் கொண்டு வருகிறார்கள். இந்த தரத்தின் இலட்சணத்தை நீட் தேர்வில் நாம் பார்க்கிறோம். தேர்வில் முறைகேடு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு  தேர்ச்சி பெறாத உ.பி., பீகாரை சேர்ந்த  மாணவர்கள்  தேர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பல்கலைக்கழகங்கள்,   கல்லூரிகளில் 2500 இருந்து 5000 ரூபாய் இருந்தால் ஒரு டிகிரி படித்து  விடலாம். ஆனால் இந்த ஆணையம் அமைக்கப்பட்டால் ஒரு இலட்சம், இரண்டு இலட்சம் செலவு செய்து படிக்கக்கூடிய நிலை உருவாகும்.

இதனை, நாம் அனுமதிக்கக் கூடாது. நேர்மையான பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அடங்கிய குழுவை அமைப்போம். உயர்கல்வியை பாதுகாப்போம்.” என்று பேசினார் இந்த கூட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இறுதியாக தோழர் திலீபன் நன்றி உரை கூறினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, விழுப்புரம்.

ரோபோக்கள் வருகை : முறைசாரா வேலைதான் எதிர்கால வேலைகளின் யதார்த்தமா ?

புதிய தொழில்நுட்பங்களை அனைத்து தொழிலாளர்களுக்கும் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்துவது முதலாளித்துவத்தின் சாத்தியமாகாத விஷயம். கார்ப்பரேட்டுகள் தொழில்நுட்பங்களின் மூலம் சாத்தியமாகும் தானியக்கத்தை தமது லாபத்தை அதிகரிக்க பயன்படுத்துகின்றனர்; மேலும் மேலும் அதிக தொழிலாளர்களை வேலையிழக்கச் செய்து, நிச்சயமற்ற எதிர்காலத்துக்குள் தள்ளுகின்றனர்.

இது தொடர்பாக த வயர் இணைய பத்திரிகையில் வெளியான ஆய்வு கட்டுரை
ஒன்றின் சுருக்கமான தமிழாக்கத்தை தருகிறோம்.

*****

இதற்கு என்னதான் தீர்வு? மனிதகுலத்தின் மகத்தான சாதனைகளை பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் பயன்படுத்துவதற்கு என்னதான் வழி?

விஸ்டாரா ஏர்லைன்ஸின் பயணிகள் , ‘ரடா’ என்னும் ரோபாட் மூலம் வரவேற்கப்படுவார்கள். ‘ராடா’ , வாடிக்கையாளர் கருத்துக்களைச் சேகரிப்பது , அவர்களது கேள்விகளுக்கு பதில் தருவது, போர்டிங் பாஸ் ஸ்கேன் செய்தல் போன்ற சேவைகளைக் கொடுக்க வல்லது.

ராடா ஒரு ‘இந்திய தயாரிப்பாகும் (Made in India). இது டாடா இன்னோவேஷன் மையம் வடிவமைத்தது. அடிப்படை மனித செயல்பாடுகளைச் செய்ய எளிய, விலையுயர்ந்த ரோபோவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் செயல்படுகிறது. இது போன்ற புதுமைகள், நிச்சயமாக நுகர்வோர் அனுபவத்தை மேம்படுத்துவதோடு, உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும்.

விஸ்டாரா ஏர்லைன்ஸில் பயணிகளை வரவேற்கும் , ‘ரடா’ என்னும் ரோபாட்.

ஆனால், இவை, குறிப்பாக நுழைவு நிலை, குறைந்த-நடுத்தர வேலைகள் செய்துவரும் பணியாளர்களின் வேலையைப் பறிக்கும். புதிய தனித் திறன் தேவைப்படும் வேலைகளை குறைந்த அளவில் மட்டுமே உருவாக்கும்.

உதாரணமாக, இந்தியாவில், பெரும்பாலான தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத துறைகளில் வேலை செய்கின்றனர். பல கோடி தொழிலாளர்கள் இன்னும் பழைய, அடிப்படைத் தொழில்நுட்பங்களிலேயே வேலை செய்கிறார்கள். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களின் தாக்கம் உலகெங்கிலும் வளர்ந்து வரும் ஒரு சிக்கலாகும். எனினும், உலகளாவிய விளக்கங்கள், ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும். அவை தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கங்களாலும், உள்ளூர் சமூக-பொருளாதார நிலைமைகளாலும் வடிவமைக்கப்படும்.

நான்காவது தொழில்துறைப் புரட்சியில் (4IR) தொடர்புடைய தொழில்நுட்பங்கள் இந்தியாவின் எதிர்கால உழைப்புச் சந்தையை என்ன செய்யும்?

இந்தத் தொழில்நுட்பங்கள் இப்போது தான் வளர்ந்து வருவதால், அவற்றின் தாக்கம் பற்றிய முழுமையான ஆய்வுகள் தற்போது சாத்தியம் இல்லை. தொழில் துறை, அரசு துறை, குடிமை சமூகம், கல்வியாளர்கள் போன்ற பல தரப்பு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

4IR தொழில்நுட்பங்களை கைக்கொள்வது, நிகர வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் குறைந்தபட்ச தாக்கத்தையே ஏற்படுத்தும் என எமது ஆய்வு கூறுகிறது, குறிப்பாக, இந்தியாவின் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒழுங்கமைக்கப்படாத துறையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆயினும்கூட, தொழில்நுட்பத்தின் தலையீடு, இந்தியாவின் ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் சந்தைகளின் இன்றைய நிலையை மேம்படுத்தப் போவதில்லை, இதே நிலையிலேயே இருத்தி வைக்கும். அது சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்கான புதிய அணுகுமுறைகளை கோருகிறது.

4IR தொழில்நுட்பங்கள், முதன்மையாக ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையிலும், சேவைத் துறையிலும், அதாவது உழைப்பு செலவினமும், உட்கட்டமைப்பு செலவும் அதிகமாகத் தேவைப்படும் துறைகளில் கைக்கொள்ளப்படும்

பெரு மூலதனம் தேவைப்படும் உற்பத்தித் தொழில்கள், 4IR தீர்வுகளை அதிகம் பயன்படுத்த தொடங்கும். உதாரணமாக, வாகன உற்பத்தித் துறை, இந்தியாவில் விற்கப்படும் அனைத்து தொழிற்துறை ரோபோக்களில் 60%-ஐ வாங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதனால், இந்த உற்பத்தித் துறைகளில் தொழிலாளர் எண்ணிக்கை ஏற்கனவே கணிசமாகக் குறைந்துவிட்டது.

சேவைத் துறைக்குள்ளேயே, ஒரே மாதிரியான பணிகளைத் தொடர்ந்து செய்ய, 4IR அதிகம் பயன்படும். நிதி, சட்டம், ஐ.டி, பி.பி.ஓ சேவைகள் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளில் பயன்பாட்டு வீதம் மிக அதிகமாக இருக்கும்.

Comprising small enterprises, daily wage and self-employed workers, the unorganised sector lacks the financial capital, supporting infrastructure and requisite skills to support the adoption of advanced technologies.

ஐ.டி., பி.பி.ஓ பிரிவுகளில் வேலைவாய்ப்பு ஏற்கனவே குறைந்துள்ளது.
2021-ம் ஆண்டில் இந்தியா வேலைவாய்ப்புகள் 14% வீழ்ச்சியை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவைத் துறைகள் எப்போதுமே பெரிய அளவிலான வேலைவாய்ப்பை வழங்கவில்லை. எடுத்துக்காட்டாக, ஐ.டி. துறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கிய போதிலும், அதில் 37 லட்சம் ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர். 4IR தொழில்நுட்பம் வழங்கும் நிகர வேலைவாய்ப்பு இன்னும் குறைவாகவே இருக்கும்.

ஆனால், இந்தியாவின் தொழிலாளர்களில் 80% க்கும் மேலாக ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் ஈடுபட்டுள்ளனர். இதனால், உலகச் சந்தையில் போட்டியிடத் தேவையான 4IR தொழில்நுட்பம் அவர்களுக்கு எட்டாமலே போய்விடும்.

எந்தவொரு குறிப்பிடத்தக்க விதத்திலும் 4IR உடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களின் தாக்கத்தை, ஒழுங்கமைக்கப்படாத துறைகள் உணர முடியாது என்று எங்கள் ஆய்வு கூறுகிறது.

இந்தியாவின் தொழிலாளர்களில் 80% க்கும் மேலாக ஒழுங்குபடுத்தப்படாத துறைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கூலி மட்டத்துடன் ஒப்பிடும் போது 4IR தொழில்நுட்பங்களின் செலவை பார்க்கும் போது அவை ஒழுங்குபடுத்தப்படாத துறைகளுக்கு எட்டாக்கனியாகவே இருக்கும். ஏனெனில், அவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் இன்னும் மிக அடிப்படையான, பழைய தொழில்நுட்பங்களையே பயன்படுத்துகின்றன.

அவற்றில் பணி புரியும் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்கள் எந்திரங்களில் அல்லாமல், உடலுழைப்பையே சார்ந்துள்ளனர். சிறிய நிறுவனங்களில், தினசரி ஊதியம் பெறும், அல்லது சுய தொழில் செய்யும் தொழிலாளர்கள், போன்ற ஒழுங்கமைக்கப்படாத துறைகளிலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களைக் கையாளத் தேவையான மூலதனமோ, உள்கட்டமைப்போ இல்லை.

இருப்பினும், எதிர்கால உழைப்பு உலகத்தில் ஒழுங்கமைக்கப்படாத வேலை வாய்ப்பு மேலும் மேலும் அதிகரிக்கும். ஏற்கனவே, ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்குள்ளேயே, 68% க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு முறையான ஒப்பந்தமோ, சமூகப் பாதுகாப்போ, பணிப் பாதுகாப்போ இல்லை. எங்களது ஆய்வின் படி, ஒழுங்கமைக்கப்பட்ட துறைகளிலேயே, நிலையற்ற வேலை ஒப்பந்தங்கள் அதிகரித்து, அவையும் ஒழுங்கமைக்கப்படாத துறை போலவே செயல்படத் துவங்கும்.

உற்பத்தி துறை, தானியங்கித் தொழில்நுட்பத்துக்கு மாறி உற்பத்தியை அதிகப்படுத்தும்போது, ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். சமீபகால ஆய்வுகள் இது ஏற்கனவே நிலவும் போக்கு என்கின்றன.

ஒழுங்கமைக்கப்பட்ட உற்பத்தித் துறையில் 47% ஒப்பந்தத் தொழிலாளர்களே உள்ளனர்.

சேவைகள் துறையிலும் ஒப்பந்த அடிப்படையிலான வேலை அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் தளங்கள், புதிய தகவல்தொடர்பு, தரவு பகிர்வுத் துறை ஆகியவை
வேலைகளைப் பிரித்து, குறைந்த செலவில் முடித்துத் தரும் நாடுகளுக்கு அனுப்புகின்றன.

குறிப்பிட்ட துறை சார்ந்த பொருளாதாரமும், ஒழுங்கமைக்கப்படாத தொழில் முறையிலேயே இயங்குகின்றன. ஓலா, ஊபர் போன்ற வாடகைக் கார்
சேவை வழங்கும் நிறுவனங்களும் சேவைத் துறையின் கீழ் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பும், பணிச்சூழல் பாதுகாப்பும் இன்றி தொடர்ந்து நிச்சயமற்ற நிலையில் இருக்கின்றனர்.

தொழில்மயமான பொருளாதாரங்கள் போலல்லாது, இவ்வகைப் பொருளாதாரங்கள் முறையான வேலைவாய்ப்புகளை முறைசாரா வேலைகளாக (ஒப்பந்தத் தொழில்களாக) மாற்றுகின்றன. உண்மையில், இவ்வகைப் பொருளாதாரம், புதிய சுய தொழில் வாய்ப்புகளை உருவாக்குகின்றது என்றாலும், அவை கோரும் தகுதி, திறமை, சமூகப் பாதுகாப்பு கொண்டோர் மட்டுமே ஆதாயமடைகின்றனர்.

ஒழுங்கமைக்கப்படாத வேலை வாய்ப்புகளிலிருந்து வெளியேறி ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் வேலை பெறுவதற்கான வாய்ப்புகள் மேலும் சுருங்கும். தானியங்கித் தொழில்நுட்பம், தொழில்நீக்கத்தை துரிதப்படுத்துவதால், இந்தியா உற்பத்தித் துறை வழியிலான முன்னேற்றத்தை பயன்படுத்த இயலாமல் போகும். இந்தியாவின் குறைதிறன் கொண்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பது மேலும் கடினமாகிவிடும்.

ஒழுங்கமைக்கப்பட்ட சேவைத் துறையில் உள்ள நுழைவு நிலை வேலைகள், ஒழுங்கமைக்கப்படாத துறையில் உள்ள முறைசாரா வேலைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழியாகும். ஆனாலும், புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு தொழிலாளர்கள் தங்கள் பணிச்சூழலை மாற்ற வேண்டியுள்ளதால், அந்த வழியும் மூடப்படுகிறது. பாரம்பரியமாக, ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் கிடைக்கும் நிரந்தர வேலை வாய்ப்பு, வறுமையிலிருந்தும், ஒப்பந்த வேலைகளிலிருந்தும் பாதுகாப்பு அளித்தன. ஆனால் இப்போது, முறையான வேலைவாய்ப்புகள் தொடர்ந்து குறைந்து, ஒப்பந்த வேலைவாய்ப்பு அதிகரிப்பது ஒரே நேரத்தில் நிகழ்கின்றது.

அதிகரித்து வரும் முறைசாரா வேலை நிலைமைகளால் ஏற்படும் சமூக விளைவுகளைக் கையாள விரைவான தீர்வுகள் காண்பது அவசியம்.
முறைசாராத தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதற்கு புதிய தளங்கள் உருவாக்கப்பட வேண்டும். அதே சமயம், வேலைச் சந்தைக்குள் நுழையும் இளைஞர்களுக்குப், புதிய தொழில்நுட்பக் கல்வியும், அதைத் தொடர்ந்து திறன் மேம்பாடும் வழங்கக் கணிசமான முதலீடுகள் தேவைப்படும்.

இந்தியாவைப் பொறுத்தவரை, உழைப்பாளர்கள் குறித்த பழைய சவால்கள், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் கொண்டு வரும் புதிய சவால்களைவிட மிக அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டியவை. இல்லையெனில், புதிய தொழில்நுட்பத்தைக் கையாளத் தெரிந்து பயனடைவோருக்கும், குறைந்தபட்ச வாழ் நிலையைத் தக்க வைக்கப் போராடுவோருக்கும் இடையிலான ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும்.

– ஊர்வஷி அனேஜா

This article is based on Tandem Research’s report, Emerging Technologies & the Future of Work in India, supported by the International Labour Organisation. Urvashi Aneja is Founding Director, Tandem Research and Associate Fellow, Chatham House. @tandem_research; @urvashi_aneja

தீயதைப் பார்க்காதே – கேட்காதே – எழுதாதே ! கேலிச்சித்திரங்கள்

விளாடிமிர் கசனேவ்ஸ்கி, உக்ரைன்.
சிலுவையில் அறையப்படும் பத்திரிகை சுதந்திரம் ! கேலிச்சித்திரங்கள் – பாகம் 2

ல்புர்கி, தபோல்கர், கௌரி லங்கேஷ் போன்ற உண்மையை துணிச்சலோடு எழுதும் எழுத்தாளர்கள் மர்மமான முறையில் இந்துமதவெறியர்களால் கொல்லப்படுகிறார்கள்.  மேலும் மோடி ஆட்சிக்கு வந்தபின், தங்கள் சித்தாந்தத்துக்கு ஒத்துப் போகாத பத்திரிகையாளர்களை நிறுவனங்களிலிருந்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ அழுத்தம் கொடுத்து வெளியேற்றப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. மறுபுறம் பா.ஜ.க. விற்கு ஆதரவான ஊடகங்களின் முறைகேடுகளும் அம்பலமாகின்றன. உலகெங்கும் இதே நிலைதான். சமூகவலைத்தளங்கள் பெருகி வருவதாகக் கூறப்படும் நிலையில் பத்திரிகைச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் கேள்விக்குள்ளாக்கப்படுவதை உலகெங்கும் உள்ள கார்ட்டூனிஸ்ட்டுகள் அம்பலப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு……..

உலக பத்திரிகை சுதந்திர நாள் 2013

ஜூலியோ காரியன், க்யுவா – பெரு.

_____________________________________________________________________

சொட்டு சொட்டாக வடிக்கப்படுகிறது

ஆர்லந்தோ க்யுலர், கொலம்பியா.

_____________________________________________________________________

தணிக்கையின் கருப்புப் பட்டை

ஹஜோ, நெதர்லாந்து.

_____________________________________________________________________

குறிவைக்கப்படும் பத்திரிகை சுதந்திரம்

விளாடிமிர் கசனேவ்ஸ்கி, உக்ரைன்.

_____________________________________________________________________

தீயதைப் பார்க்காதே, தீயதைக் கேட்காதே

செர்கெய் டூனின், ரசியா.

_____________________________________________________________________

பத்திரிகை சுதந்திரம்

ஓமர் டர்சியோஸ், ஸ்பெயின்.

_____________________________________________________________________

ஆட்டுவிக்கும் கம்பிகள்

ஜெஃப் ட்ரீவ்ஸ், துருக்கி.

_____________________________________________________________________

பத்திரிகை சுதந்திரத்தின் உச்சங்கள்

ஸ்டீவ் க்ரீன்பெர்க், அமெரிக்கா.

_____________________________________________________________________

மெக்சிகோவில் பத்திரிகை சுதந்திரத்திற்கான போர்

டாரியோ காஸ்டில்லேஜோஸ், மெக்சிகோ.

_____________________________________________________________________

நன்றி: cartoonmovement.com

பாசிசம்: அச்சமும் அச்சுறுத்தலும் ! தோழர் மருதையன்

7

ச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்றபோதிலும், அச்சுறுத்துபவனைத் தைரியசாலி என்று என்று நாம் கருதவேண்டியதில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில் கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.

மோடியைக் கொல்ல சதி என்ற பெயரில் ‘மாநகர நக்சல்கள்’ கைது செய்யப்படாதிருந்தால், இந்த நாட்களின் அரசியல் விவாதப்பொருளாக எது இருந்திருக்கும்?

வரவிருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து  பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுடனான மோடியின் சந்திப்பும், பா.ஜ.க. வின் தோல்வி குறித்த கருத்துக் கணிப்புகளும் கைது நடைபெற்ற அதேநாளில் வெளியான செய்திகள். கைது நடக்காமலிருந்தால், அவை விவாதப்பொருளாக இருந்திருக்கலாம்.

மோடியின் இழிபுகழ்பெற்ற பணமதிப்பழிப்பு நடவடிக்கை படுதோல்வியடைந்து விட்டது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்ததே, அது மிகப்பெரிய விவாதப் பொருளாகியிருக்கலாம்.

அல்லது ரஃபேல் விமான பேர ஊழலை ஊறுகாய்ப் பானைக்குள் ஒளிக்க முயன்று நிர்மலா சீதாராமன் தோற்றுப்போக, அதற்கு முட்டுக்கொடுக்க வந்த அருண் ஜெட்லியின் வாதங்களும் அடிபட்டுப் போனதால், போபர்ஸை விஞ்சிய ரஃபேல் ஊழல், விவாதப் பொருளாகிவிடுமோ என்று ‘ஊழல் கறை படியாத உத்தமர்’ அஞ்சியிருக்கலாம்.

ரஃபேல் விமான பேர ஊழல்

கைது செய்யப்பட்ட சனாதன் சன்ஸ்தாவின் பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய அனைவரின் கொலையிலும் தொடர்பிருப்பதை மறைக்க முடியாமல், மகாராட்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு போலீசே வெளியிட்டுவிட்ட காரணத்தினால், சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட காவி பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்  என்ற கோரிக்கை விவாதப் பொருளாகியிருக்கலாம்.

“மோடியைக் கொல்ல சதி” என்று கூச்சல் எழுப்பினால், இவற்றில் எதுவும் விவாதத்துக்கு வந்து விடாமல் தடுத்துவிட முடியுமென்று மோடி-அமித் ஷா கும்பல் கனவு கண்டிருக்கிறது. அந்தக் கனவு பேய்க்கனவாகிவிட்டது.

“பாலம் கட்டியதில் ஊழல்” என்று கூறி நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தார் ஜெயலலிதா. அதன் விளைவாக, ஜெ.வின் குரூர முகம் அம்பலமானது மட்டுமின்றி, கருணாநிதியின் மீதான அனுதாபமும் அதிகரித்தது. அவ்வளவு அடாவடியாகக் கைது செய்யப்பட்ட அந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லை. இதன் விளைவாக ஜெயா – சசி கும்பலின் அடிமுட்டாள்தனமும் சந்தி சிரித்தது.

மோடி – அமித் ஷா கும்பலானது,  ஜெ-சசி கும்பலுக்கு இணையானது மட்டுமல்ல, அதனினும் கிரிமினல் தன்மை வாய்ந்தது. சோரபுதீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவித்தால், அந்த தீர்ப்பு வெளியாகும் நாளில் வேறொரு செய்தி தலைப்புச் செய்தியாக இருக்கும்படி, இதனைப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்று லோயாவிடம் கூறியிருக்கிறார் அமித் ஷாவின் இடைத்தரகராக செயல்பட்ட ஒரு நீதிபதி. லோயாவுக்குப் பின் நியமிக்கப்பட்ட கோசாவி என்ற நீதிபதி அமித் ஷாவை விடுவித்து தீர்ப்பளித்த நாள் டிச, 30, 2014. அன்றைக்கு “தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது” முதன்மைச் செய்தியாக இருக்க, “அமித் ஷாவின் விடுதலை” முக்கியத்துவமற்ற ஸ்குரோலிங் செய்தியாக யார் கண்ணிலும் படாமல்போனது.

தற்போது கைது நடவடிக்கைக்கு குறிக்கப்பட்டிருக்கும் தேதியும் மோடி அரசுக்கு இத்தகைய உள்நோக்கங்கள் இருப்பதைப் புலப்படுத்துகிறது. தீயைத் தீயால் அணைக்கும் நடவடிக்கையைப் போல, ரிசர்வ் வங்கி அறிக்கையிலிருந்து மோடியின் மானத்தையும், தடை செய்யப்படுவதிலிருந்து சனாதன் சன்ஸ்தாவையும் காப்பாற்றும் பொருட்டு அவசரம் அவசரமாக இந்தக் கைது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

முனைவர் ஆனந்த் தெல்தும்டே

புனே போலீஸ் கைதுக்குரிய சட்டபூர்வ முறைகளைப் பின்பற்றவில்லை. கைது செய்யப்படுபவர்களுக்கு அது தொடர்பான ஆவணங்களை ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டுமென்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை. இந்தக் கைது நடவடிக்கையை ஒட்டி ஆனந்த் தெல்தும்டெ போன்றோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் அனைத்தும் சட்டவிரோதமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றன.

அறிவுத்துறையினரை ‘அச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்ற போதிலும், இதில் வெளிப்பட்டிருக்கும் அவசரமும் மூர்க்கமும் மோடி அரசின் அச்சத்தை அடையாளம் காட்டுகின்றன. அச்சுறுத்துபவனை தைரியசாலி என்று என்று நாம் கருதவேண்டியதில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில்  கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.

வரவர ராவ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா ஆகியோரை  உபா சட்டத்தின் கீழ் சிறை வைக்கவேண்டுமென்பதற்கு அரசு வழக்கறிஞர்  புனே நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களை மேற்கோள் காட்டி அஜய் சகானி (Institute for Conflict Management) இப்படி எழுதுகிறார்:

“இந்த வழக்கின் பின்புலம் தெரியாமல் அரசு தரப்பின் வாதங்களை நான் படித்திருந்தால், மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளரின் படைப்பாக அதனைக் கருதியிருப்பேன். ’இந்து வெறியர்கள் நடத்திய கும்பல் கொலைகளை புகைப்படக் காட்சி வைத்து மாவோயிஸ்டு கட்சிக்கு ஆள் சேர்த்தார்’ என்பது ஒரு குற்றச்சாட்டு. கும்பல் கொலையை அம்பலப்படுத்துவது மாவோயிஸ்டுகளுக்கு ஆள் சேர்க்கும் குற்றமாகுமா?” என்று கேட்கிறார் சகானி.

அருந்ததிராய்
அருந்ததிராய்

“நாம் சமீப காலமாக விவாதித்து வரும் ஒரு விசயத்திற்கு இன்றைய நாளேடுகளில் விடை கிடைத்திருக்கிறது. ’பாசிச எதிர்ப்பு முன்னணி அமைத்து இந்த அரசையே தூக்கி எறிய சதி செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக’ போலீஸ் கூறுகிறது. எனவே போலீசாலேயே “பாசிஸ்டு” என்று அழைக்கப்படும் ஒரு அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் அருந்ததி ராய்.

மோடி அரசு தனக்குத்தானே பாசிசப் பட்டம் சூட்டிக் கொண்டது ஒரு நகைச்சுவை. இது ஒருபுறமிருக்க, கைது செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய “மாநகர நக்சல்” என்ற சொற்றொடர் “நானும் மாநகர நக்சல்தான்” என்று சமூக ஊடகங்களில் பூமராங் ஆகிவிட்டது.

“சமூகவிரோதி, நக்சல், ஆன்டி இண்டியன்” போன்ற சொற்களுக்கு தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் என்ன நடந்ததோ, அது இப்போது நாடு முழுவதும் நடக்கிறது. “மோடியே வெளியேறு” என்று  தமிழகம் எழுப்பிய முழக்கமும் விரைவிலேயே “தேசிய முழக்கமாக” மாறக்கூடும்.

 – மருதையன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.

பெட்டிச் செய்தி: ‘பத்மஸ்ரீ’ பார்ப்பன பயங்கரவாதி!

பீமா கோரேகானில் கலவரத்தை தூண்டிய முதன்மைக் குற்றவாளியின் பெயர் சம்பாஜி பிடே (85). “சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” என்ற அமைப்பின் நிறுவனர். நீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர். பீமா கோரேகான் கலவரத்துக்காக பதிவு செய்யப்பட்ட முதல் எப்.ஐ.ஆரிலேயே பிடேவின் பெயர் இருக்கிறது. எனினும், பிடே கைது செய்யப்படவில்லை.
பிடே ஒரு வெறி பிடித்த பார்ப்பன பாசிஸ்டு. ” கிறித்தவனும் முஸ்லிமும் மட்டுமல்ல, இந்துவாக இருந்து கொண்டு நம்மை ஆதரிக்காதவனும் நமது எதிரியே” என்றும் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்” என்றும் பேசும் மராத்திய மாநிலத்தின் எச்.ராஜா.
“குழந்தையில்லாத தம்பதிகள் 130 பேருக்கு என்னுடைய தோட்டத்து மாம்பழத்தைச் சாப்பிட்டுக் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பிரகடனம் செய்த இந்த கோமாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தே தீரவேண்டுமென 2016-இல் பத்து மராத்திய அமைச்சர்கள் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.
தபோல்கர், கவுரி லங்கேஷ் கொலைகள், குண்டு வெடிப்புகளுக்காக, சமீபத்தில் மகாராட்டிர பயங்கரவாத தடுப்பு போலீசால் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சுதன்வா காண்டலேகர், அவினாஷ் பவார் ஆகியோருக்கு  மட்டுமல்ல மோடிக்கும் பிடேதான் குருநாதர். இதை 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சாங்லி நகரில் அவர் பகிரங்கமாகவே அறிவித்தார்.
அதற்காக மோடியை உபா சட்டத்தில் கைது செய்ய முடியுமா, அவர் பிரதமராயிற்றே!

கோலமாவு கோகிலா : அறத்தின் கழுத்தை அறுக்கும் நயன்தாரா !

21

ம்மாவுக்கு கேன்சர்.. காப்பாற்ற 15 லட்சம் வேண்டும்.. கையில் பணம் இல்லை. விற்க சொத்து இல்லை. நேர்மையாக வேலை செய்து சம்பாதிக்கலாம் என்றால், பார்ப்பவன் எல்லாம் ‘படுக்க வர்றியா?’ என்று கூப்பிடுகிறான். என்ன செய்வாள் நாயகி? போதைப் பொருள் கடத்துகிறாள். நான்கைந்து முறை தனியாக கடத்தி கிடைத்த அனுபவத்தில் மெருகேறி, பிறகு குடும்பத்தோடு கடத்துகிறாள். எந்தக் குடும்பம்? கேன்சர் வந்த அம்மா, வாட்ச்மேன் வேலை செய்யும் அப்பா, கல்லூரி படிக்கும் தங்கை. மொத்த குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு போதைப்பொருள் கடத்தி அம்மாவின் கேன்சர் செலவுக்கு பணம் சேர்க்கிறாள். இதுதான் ’கோலமாவு கோகிலா’படத்தின் கதை.

“அறம்”  படத்தில் சமூகத்தின் ஒட்டுமொத்த அற மதிப்பீடுகளையும் ஒரு கலெக்டராக தன் தோளில் தூக்கிச் சுமந்த நயன்தாரா இதில் மாஃபியா ராணியாக வந்து, அறத்தின் கழுத்தைப் பிடித்து கரகரவென அறுக்கிறார். தியேட்டரே கைகொட்டி சிரிக்கிறது.

“அது வேற ஜானர்; இது வேற ஜானர்”  என்பது சினிமாக்காரர்களின் பொழிப்புரை. ஏதாவது ஒரு தமிழ் இயக்குநரை முற்போக்காக படம் எடுத்திருக்கிறீர்கள் என்று பாராட்டி விட்டு ஒரு மசாலா தமிழ்ப்படத்தை விமர்சித்தீர்கள் என்றால் அவர்களுக்கு கோபம் வரும். பிறகு மேற்படி இந்த ஜானர் எனப்படும் சினிமாக்களின் வகைகளை விளக்கி எல்லாமும் வேண்டுமென படுத்தி எடுப்பார்கள்.

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா?

ஆனால், “அறம்”  படத்தில் நயன் தாராவின் சீற்றத்தை கண்டு கை தட்டிய அதே சினிமா ரசிகன்தான், “கோலமாவு கோகிலா” வையும் ரசிக்கிறான் என்றால், இது நமக்கு புரியாத ஜானராக இருக்கிறது. அவன் உண்மையா? இவன் உண்மையா? பின்நவீனத்துவம் சொல்வதைப் போல, உண்மை என்ற ’பெருங்கதையாடலை’புரிந்து கொள்ளாத ’வன்முறை மனங்களுக்கு’ இந்த வேறுபாடு புரியாதா? எனில் எழவு வீட்டில் பாயாசம் வைக்கவில்லை என்று மக்களை திட்ட முடியுமா?  இல்லை எழவு வீட்டில் பாயாசம் வைக்கக் கூடாது என்பதை மனித நேயம் உருவாக்கிய இயல்பான நேசமாக ஏற்பதில் என்ன சிக்கல்?

போதைப்பொருள் பயன்படுத்தி சீரழியும் மனித உயிர்கள், சித்தரவதைப்படும் குடும்பங்கள், போதையின் பிடியில் நிகழும் வன்முறைகள், போதையில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்கொடுமைகள், போதையில் வாகனம் ஓட்டி கொல்லப்படும் மனித உயிர்கள், வீணாகும் மதிப்புமிக்க மனித ஆற்றல்… இவை எதுபற்றியும் இயக்குனருக்கு எந்த கவலையும் இல்லை. தப்பித்தவறி சின்னஞ்சிறு குற்றவுணர்ச்சி கூட திரைக்கதையின் எந்த இடத்திலும் எட்டிப் பார்ப்பதை அவர் அனுமதிக்கவில்லை. அப்படி ஒரு நீதியுணர்ச்சி பார்வையாளனின் மனதில் துளிர்விடுமானால், கோலமாவு கோகிலா காலி. அவன் கைதட்ட மாட்டான். அதனால் கோட்டின் அந்தப் பக்கமாக திட்டவட்டமாக ஒதுங்கி நிற்கிறார் இயக்குனர்.

போதைப்பொருள் கடத்தல் என்பது மாபெரும் மாஃபியா நெட்வொர்க். இதனால் பாதிப்படுவதுதான் ஏழைக் குடும்பங்களேத் தவிர, இப்படத்தில் சித்தரிக்கப்படுவதைப் போல இதில் ஈடுபடுவோர் அல்ல.

“நீ போதைப்பொருள் கடத்தி உன் அம்மாவை கேன்ஸரில் இருந்து காப்பாற்றிவிட்டாய்.. நீ விற்ற போதைப்பொருளால் பல்லாயிரம் பேர் நோய் வந்து சாவார்களே… போதையில் பலரை சாகடிப்பார்களே”  என்பது இயல்பாக நமக்குள் எழும் கேள்வி. ஆனால் இந்த கேள்விக்கு, தான் பதில் சொல்ல வேண்டியது இல்லை என்று நினைக்கிறார் இயக்குனர் நெல்சன். ஏனெனில் ரசிகனின் மனதில் இதற்கான பதில் தயாராக இருக்கிறது. “தனக்கு காரியம் ஆக வேண்டும் என்றால்; தன் பிரச்னையை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எந்த எல்லைக்கும் போகலாம்’ என்ற பொதுப்புத்தியை நம்பும் இயக்குனரின் கணிப்பு வீண்போகவில்லை என்பதை தியேட்டரில் ஒலிக்கும் கை தட்டல்களே சொல்கின்றன.

எளிமையாகச் சொல்வதென்றால் ஊழலை ஒழிக்க ஊழல் வாங்கு, திருடனைப் பிடிக்க திருடு, பொய்யை மறுக்க பொய்யுரை, கருப்புப் பணத்தை பிடிக்க கருப்புப் பணம் வாங்கு என்று பட்டியலிடலாம். இதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றால் போதை பொருள் விற்பதையே கேன்சரின் மருந்தாக மக்கள் ஏற்பார்களா என்ன?

அப்படி ஏற்கமாட்டார்கள் என்பது தெரிந்தேதான் இயக்குநர் மலிவான நகைச்சுவையை திரைக்கதையில் இயல்பாக சொருகுகிறார். அதனால்தான் மக்கள் கேன்சரை விட கொடிய விசயமான போதை பொருளை, மெய் மறந்து கடத்தும் நாயகியோடு சேர்ந்து சிரிக்கிறார்கள். நாயகி போதை பொருளை விற்பதையும் ஏற்கிறார்கள். ஒரு முக்கியமான மக்கள் பிரச்சினையை இப்படி நகைச்சுவையில் கடத்தி மறைப்பது என்பது கலையின் பெயரால் செய்யப்படும் கொலையே அன்றி வேறென்ன? வாழைப்பழம் வழுக்கி விழுபவனைப் பார்த்து எவ்வளவு தூரம் சிரிக்க முடியும்? விழுந்தவன் பெரிய அடிபடாமல் பின்புறத்தை தட்டி விட்டு எழுந்து சிரித்தால் மற்றவர்கள் கொஞ்சம் சிரிப்பார்கள். விழுந்தவன் இடுப்பெலும்பு முறிந்து பின் மருத்துவமனையில் செத்தே போனான் என்றாலும் அதை எப்படி சிரிக்க வைப்பது என்று யோசித்திருக்கிறார் இயக்குநர்.

ஆம். இந்த கலைக் கொலைக்கு இயக்குநருக்கு கை கொடுத்த அந்த நகைச்சுவையும் கூட தர்க்க ரீதியாக நாற்றமெடுக்கும் அநாகரீகமாகவே அமைந்திருக்கிறது.

இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே.

“கோலமாவு கோகிலா”  படத்தின் கேவலமான, அருவருப்பான மற்றொரு விசயம் நகைச்சுவை என்ற பெயரில் வரும் உருவ கேலி. சொல்லப் போனால், படத்தின் ஒட்டுமொத்த கதையோட்டமும் இந்த உருவகேலியின் மீதுதான் நகர்கிறது. யோகிபாபுவை கேலிக்குரியவராக சித்தரிக்க எந்த காட்சி அமைப்பும், தர்க்க நியாயமும் கதையில் இல்லை.  அப்படி ஒரு தர்க்கத்தை சிரிப்புக்காக வைத்தாலே கூட அது பிழைதான்.

சமூக உளவியலில் ஏற்கெனவே கேலிக்குரியதாக நிருவப்பட்டிருக்கும் உருவ தோற்றமே யோகிபாபுவை கிண்டல் செய்வதற்குப் போதுமானதாக இருக்கிறது. சொல்லப்போனால், இன்று தமிழ் சினிமாவில் யோகிபாபு என்ற நடிகருக்கு கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளுமே அவரது உருவத்தின் நிமித்தம் கிடைப்பவையே. அவரது நடிப்புக்கு கிடைக்கும் வரவேற்பு அனைத்துமே அந்த உருவகேலிக்கு ரசிகர்கள் வழங்கும் அங்கீகாரமே. நிஜத்தில் இந்த உருவங்கள், அதன் அழகியல் அனைத்தும் திட்டமிடப்பட்டு பெரும் வணிகமாக இறக்கப்படும் சூழலில்தான் கருப்பு நிறம், ‘அவலட்சணமான’ முகங்கள், பெரும் தலைகள், கறைபடிந்த பற்கள் என்பவை மக்களிடையே அழகின் மேன்மைக்கான எதிர்மறைப் பிரச்சாரங்களாக விதைக்கப்படுகின்றன.

இன்றைய தொலைக்காட்சி விளம்பரங்களை ஒரு குழந்தை ஒரு நாளில் பார்த்தாலே போதும், மேற்கண்ட உருவம், வண்ணமுடையவரை பிடிக்காது என்று ஒரே வார்த்தையில் கூறிவிடும். இத்தகைய அநாகரீக அழகைத்தான் யோகிபாபுவை கிண்டல் செய்யப்படுவதற்கான களமாக கட்டியமைத்து புகுந்து விளையாடுகிறார் இயக்குநர். நமக்கு குமட்டுகிறது.

இந்தப் படத்திலும் யோகிபாபு, நயன்தாராவை காதலிக்கிறார் என்ற தகவலே நகைச்சுவையாக மாறுகிறது. அதே இடத்தில் சிவகார்த்திகேயன் இருந்திருந்தால் அது ஹீரோயிசம். யோகி பாபு இருப்பதால் நகைச்சுவை. செய்யும் செயல்களால் அல்ல, செய்யும் நபர்களால் இங்கு நகைச்சுவையா, ஹீரோயிசமா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஆனால், ’கோலமாவு கோகிலா’ படக் கதையின்படி, யோகிபாபு, உழைத்து முன்னேறி மளிகை கடை வைத்திருப்பவர். நயன்தாராவோ, போதைப்பொருள் கடத்தும் ‘குடும்பப் பெண்.  இதை ரசிக மனம் கேள்விகளின்றி ஏற்கிறது. ’அடிடா அவளை, கொல்றா அவளை  என பொறுக்கித்தனம் செய்பவனைக் கூட ஹீரோவாக ஏற்போம்… உழைத்து முன்னேறியிருந்தாலும் தாங்கள் கேலிக்குரியதாக நம்பும் உருவத்தில் இருந்தால் கிண்டல் செய்வோம் என்ற ஊடகங்கள் கட்டியமைத்த பொதுப்புத்தி இது. இத்தகைய காட்சிகளுக்கு தியேட்டரில் இடைவிடாமல் கிடைக்கும் கைத்தட்டல்  என்பது, பொதுப்புத்தியின் பொறுக்கித்தனம் என்பதன்றி வேறில்லை. இதை மலிவாக பயன்படுத்தியிருப்பதால் ரசிகர்களை விட இயக்குநரே முதன்மைக் குற்றவாளியாகிறார்.

யோகி பாபுவின் உருவம் கேலிக்குரியதாக… நயன் தாராவின் அப்பாவி முகத் தோற்றம் சந்தேகம் வராத வகையில் போதைப்பொருள் கடத்த ஏற்றதாக… சரண்யாவின் நோய்வாய்ப்பட்ட தோற்றம்… போதைப்பொருள் கடத்தும்போது போலீஸிடம் பரிதாபத்தைக் கோருவதற்காக… – என பல வகைகளில், தனது திரைக்கதையில் மனித வெளித்தோற்றங்களை கையாள்கிறார் இயக்குனர். ஆனால் அதே கதையில் நேர்மையாக இருக்க முயன்று அடிவாங்கி வரும் நயன்தாராவின் வாட்ச்மேன் அப்பா, கேலிக்குரிய ஏமாளியாக சித்தரிக்கப்படுகிறார். மிக திட்டவட்டமாக அறம், நேர்மை, நீதி ஆகியவற்றை எதிர்வரிசையில் நிறுத்தி வைக்கிறார் இயக்குனர். சிரிப்பு எனும் போர்வையில் வரும் இந்த அற்பத்தனங்கள் ஒரு படைப்பாளியின் எழுத்தில் நுழையும் வித்தையை தனியாக ஆய்வு செய்ய வேண்டும் போல!

படத்தின் இறுதிக் காட்சி இதன் உச்சம். வில்லன், நயன் தாராவை வன்புணர்ச்சி செய்ய ஓர் அறைக்கு அழைத்துச் செல்கிறான். நாயகியோ, தான் ரேப் செய்யப்படும்போது தன் குடும்பமும் தன்னைச்சுற்றி இங்கே இருக்க வேண்டும் என்கிறாள். குடும்பம் அழைக்கப்படுகிறது. பிறகு, நயன் தாராவை ரேப் செய்வதற்காக வில்லன்களை ஒவ்வொருவராக அறைக்குள் வரவழைத்து குடும்பம் சகிதமாக கொலை செய்கிறார்கள். உள்ளே சென்ற ஒருவர் கொல்லப்பட்டதும், நயன் தாராவின் தங்கை வெளியில் வந்து ‘தண்ணீ… தண்ணீ’ என்கிறார். உடனே அடுத்த ஆள் உள்ளே செல்கிறார். தியேட்டரே சிரித்து மாய்கிறது.

“பெண் என்றாலே உலகம் செக்ஸுக்கான பண்டமாக பார்க்கிறது. அதையே பயன்படுத்திக்கொண்டு, ஒவ்வொருவராக தன்னை ரேப் செய்ய வரவழைத்து, குடும்பம் சகிதமாக சேர்ந்து கொலை செய்கிறார்கள். இதில் என்ன தப்பு?’ என இதற்கு வேறொரு கோணம் சிலர் சொல்கின்றனர். அது கற்பு என்ற புனித கண்ணோட்டத்தில் இருந்து இதை அணுகுவோருக்கான பதில். மாறாக, ஒரு பெண் பாலியல் வல்லுறவு செய்யப்படும் கொடூரத்தை சிரித்து ரசிப்பதற்கு உரிய காட்சியாக அமைத்திருக்கும் வக்கிரத்தை எப்படி ஏற்க முடியும்? ஒரு பெண் அடுத்தடுத்து பல ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுவதை ஒரு நகைச்சுவை காட்சியாக்கி சிரிக்கச் சொல்கிறார்கள். ஒரு பெண்ணை இதைவிட வக்கிரமான காட்சி அமைப்புகளால் கேவலப்படுத்த முடியாது.

“பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

ஆனால், இந்தப் படத்துக்கு மிகவும் நேர்மறையில் பாராட்டித் தள்ளி விமர்சனம் எழுதியிருக்கும் பி.பி.சி., “படத்தில் முக்கிய முடிவுகளை பெண்கள் எடுக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. “நான் போதைப்பொருள் கடத்துகிறேன்” என்ற முடிவை நயன்தாரா எடுக்கிறார்.  “ஓ.கே., வா, என்னை ரேப் பண்ணு” என வில்லனை அறைக்குள் செல்லும் முடிவை நயன் தாரா எடுக்கிறார். “குடும்பத்தோடு கொலை செய்யலாம்” என்ற முடிவை நயன் தாரா எடுக்க, முதல் ஆளாய் ஆயுதத்தை பயன்படுத்தும் முடிவை எடுக்கிறார் கேன்சர் நோயாளியான சரண்யா. இத்தகைய முடிவுகளை  “பெண்களின் முடிவெடுக்கும் திறன்” என புகழும் பி.பி.சி., போதைப்பொருள் கடத்துவதை மிகவும் நேர்மறையில் சித்தரிப்பது குறித்தோ, அருவருப்பான உருவகேலி குறித்தோ ஒரு வார்த்தையும் குறிப்பிடவில்லை. நரகலில் நல்ல நரகலைத் தேடும் நல்லவர்களாக பிபிசியை வாழ்த்துவோம்!

உண்மையில் கோலமாவு கோகிலா என்ற இந்தப் படத்தின் கதையைவிட, இதை ரசித்து பார்க்கும் ரசிகர்களின் மனநிலைதான் அச்சம் தருவதாக இருக்கிறது. இந்த மனநிலைதான் அனைத்தையும் எளிமைப்படுத்தி உணர்ச்சிவசப்பட்டு கரணம் தப்பினால் மரணம் என பிற்போக்கில் சிக்கிக்கொள்ளும்.

லைக்காவின் தயாரிப்பில் வந்திருக்கும் இத்திரைப்படம் தயாரிப்பாளர் சுபாஷ்கரண் அல்லிராஜாவின் ’பெருமை மிகு’ ஐரோப்பிய தொழில் மோசடிகளுக்கு பொருத்தமானதுதான்.

கோலமாவு கோகிலா வாழ்க்கை எனும் பெருங்கோலத்தை அலங்கோலமாக்கும் ஒரு அயோக்கியத்தனமான அற்பத்தனம் என்பதே இதற்கு நாம் அளிக்கும் அதிகபட்ச நாகரீக விமரிசனம்!

– வழுதி

நானும் ஒரு நகர்ப்புற நக்சல்தான் – அருந்ததி ராய் !

அருந்ததிராய்
அருந்ததிராய்

ன்றைய செய்தித்தாள்கள் (ஆகஸ்டு 30, 2018) தாங்கி வந்துள்ள செய்திகள் குறித்து நாம் சில காலமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்க செய்தியின் தலைப்பு: “நீதிமன்றத்தில் போலீசு : அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான பாசிச எதிர்ப்புத் திட்டத்தின் பகுதியாக இருந்தவர்கள்”.

சொந்த போலீசாலேயே பாசிசவாதி என அழைக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிராக நாம் இருக்கிறோம் என்பதை இப்போது அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய இந்தியாவில், ஒருவர் சிறுபான்மையினராக இருப்பது ஒரு குற்றம்; கொலை செய்யப்படுவது ஒரு குற்றம்; அடித்து கொல்லப்படுவது ஒரு குற்றம்; ஏழையாக இருப்பது ஒரு குற்றம். வறியவர்களை ஆதரிப்பது அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான திட்டமிடல்.

அறியப்பட்ட செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள், மத போதகர்களின் வீடுகளை புனே போலீசு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை இட்டது; ஐவரை கைது செய்தது.  முக்கியமான சிவில் உரிமைப் பாதுகாவலர்கள், இரண்டு வழக்கறிஞர்கள்  நகைப்புக்குரிய குற்றச்சாட்டுகளில், சிறு அல்லது ஒன்றுமேயில்லாத ஆதாரங்களின் அடிப்படையில் கைதாகியிருக்கிறார்கள். அரசு இது கடுமையான எதிர்வினைகளைக் கிளறிவிடும் என அறிந்திருந்தும் செய்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, கைதுக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்கள் உள்ளிட்ட நம்முடைய எதிர்வினைகளையெல்லாம் அரசு  இந்த நடவடிக்கையை எடுக்கும் முன் கணக்கில் கொண்டிருக்கும். எனவே, ஏன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

அருந்ததிராய்
அருந்ததிராய்

வாக்காளர்களின் தகவல்களை வைத்து  லோக்நீதி – CSDS-ABP செய்த சமீபத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்களுடைய செல்வாக்கை கணிசமான அளவில் இழந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், நாம் ஆபத்தான காலத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே.  இந்த செல்வாக்கு குறைவு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு பெருகுவதை மறைக்க இனி தொடர்ச்சியான கருணையற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம்.  கைதுகள், படுகொலைகள், அடித்துக் கொல்லுதல், வெடிகுண்டு தாக்குதல், கொடியை முன்வைத்து கொலை, கலவரங்கள், இனப்படுகொலைகள் என தேர்தல் முடியும்வரை இந்த சர்க்கஸ் தொடரும். அதுதான் பிரித்தாள்வது. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், திசைதிருப்பி ஆள்வது. இப்போதிலிருந்து தேர்தல் வரை, எப்போது, எங்கிருந்து நெருப்பு பந்து நம்மேல் விழும் என நம்மால் கணிக்க முடியாது; அந்த நெருப்பு பந்து எப்படிப்பட்டது என்பதும் தெரியாது.  வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் கைது குறித்து பேசும் முன்னர்,  நெருப்பு மழையும், வினோதமான சம்பவங்களும் நம்மீது விழும் முன், நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.

  1. நவம்பர் 8, 2016 அன்று டிவியில் தோன்றி மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க அறிவிப்பு முடிந்து ஒரு வருடம், ஒன்பது மாதங்களாகிறது. இந்த அறிவிப்பால் அவருடைய அமைச்சரவையே வியப்படைந்தது. 99 % சதவீத பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாக இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகை, இந்த பண மதிப்பழிப்பு நடவடிக்கை நாட்டின் 1 % பொருளாதார வளர்ச்சியை குறைத்ததோடு, 1.5 மில்லியன் வேலையிழப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறது. அதே நேரத்தில், புதிய பணத்தை அச்சடிக்க பல ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டது. பண மதிப்பழிப்பால் அல்லாடிக்கொண்டிருந்த சிறு மற்றும் குறுந்தொழில்களை அது முற்றிலுமாக அழித்துவிட்டது.
மக்களை வீதியில் நிற்கச் செய்த பணமதிப்பழிப்பு

சிறு தொழில்கள், வர்த்தகர்கள் குறிப்பாக ஏழைகள் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டனர். அதே சமயம், பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள் தங்களுடைய சொத்து மதிப்பை பன்மடங்காக உயர்த்திக்கொண்டன. அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றோர் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட அனுமதிக்கப்பட்டார்கள்.

எத்தகைய பொறுப்புத்தன்மையை இவர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியும்? ஒன்றுமில்லை? பூஜ்ஜியம்?

இவற்றின் ஊடாக, 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக நாட்டிலேயே பணபலம் மிக்க கட்சியாக உருவெடுத்துவிட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நன்கொடைகளை பத்திரங்களாக வாங்கும் முறையிலும் அரசியல் கட்சிகளின் நன்கொடையாளர்கள் குறித்த விவரங்கள் மூடியே பாதுகாக்கப்படுகின்றன.

  1. 2016-ம் ஆண்டு மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி மோடியால் தொடங்கி வைக்கப்பட்டபோது நடந்த கேலிக்கூத்து நினைவிருக்கலாம். முக்கிய அரங்கின் கலாச்சார நிகழ்வு நடந்த இடத்தில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், நிஜமான தீப்பிழம்பு, மேக் இன் இந்தியாவின் நோக்கமான ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து வெளிப்பட்டது. தன் சொந்த பாதுகாப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாமலேயே, தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு பிரதமரால் பாரிசில் ரஃபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இது அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறிய செயல்பாடாகும்.
    modi-ambani-rafale-jet-scam
    தேசப் பாதுகாப்பை அடகு வைத்த ரஃபேல் ஊழல்

    இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் கூட்டணி அரசில் 2012-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, இந்துஸ்தான் எரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) என்ற இந்திய அரசு நிறுவனம் விமானங்களின் பாகங்களை ஒன்றிணைக்கும் பணியை செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குப்பையில் கிடத்தப்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் குறிவைத்து தாக்கப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட பலர் மோடியின் ஒப்பந்தத்தில் கற்பனைக்கெட்டாத ஊழல் நடந்திருப்பதையும் ஒரு விமானத்தைக் கூட இதுநாள் வரை உருவாக்கியிராத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் தலையீடு மற்றும் திரைமறையில் நடந்த பேரங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.

எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோரின. நாம் ஏதாவது ஒன்றை எதிர்ப்பார்க்க முடியுமா? அல்லது அவை அனைத்தையும் ஒரு மடக்கில் விழுங்கிவிட வேண்டுமா?

  1. கர்நாடக போலீசார் பத்திரிகையாளர் மற்றும் செயல்பாட்டாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டு, சனாதன் சன்ஸ்தா போன்ற வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தன.

நிழல் உலகில் இயங்கும், தீவிரவாத வலைப்பின்னலும் யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்ற அவர்களுடைய ஹிட் லிஸ்டும் அவர்களுடைய மறைவிடங்கள்,  மக்களை கொல்லும் ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் விசாரணையில் வெளிவந்தன.  இந்த குழுக்களைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம்? எத்தனை பேர் இன்னும் ரகசியமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்?  அதிகாரத்தின் ஆசியுடன், காவல்துறையின் ஒத்துழைப்புடன்  அவர்கள் என்ன திட்டங்களை நமக்காக வைத்திருக்கிறார்கள்? தவறான கொடிக்காக தாக்குதல் நடத்தப்படுவது என்பது என்ன? அப்படியெனில் எது உண்மையானது? இது எங்கே நடக்கும்? காஷ்மீரிலா? அயோத்தியிலா? கும்ப மேளாவிலா?  எப்படி எளிதாக அனைத்து தாக்குதல்களும் குழையும் ஊடகங்களால்  மடைமாற்றம் செய்யப்படுகின்றன?  இந்த உண்மையான அச்சுறுத்தல்களிலிருந்து திசை திருப்பத்தான், சமீபத்திய கைதுகளுக்காக நம்மை கண்ணீர் சிந்த வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

  1. கல்வி நிறுவனங்கள் அழிக்கப்படும் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மதிப்பிற்குரிய தடம் பதித்த பல்கலைக்கழகங்களின் அழிவையும் பேப்பரில் மட்டுமே உள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கான உயர்வையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் இதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இது பல வழிகளில் நிகழ்ந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நம் கண்முன்னே சீரழிக்கப்படுவதை பார்க்கிறோம். மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.  பல தொலைக்காட்சி சானல்கள் பொய்களை, ஜோடிக்கப்பட்ட வீடியோக்களை பரப்பி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. பொய்களால் இரக்கமற்று துரத்தப்பட்ட இளம் ஆய்வாளரான உமர் காலித் மீது படுகொலை முயற்சி நடக்கிறது.
இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட தபோல்கர், பன்சாரே, கவுரிலங்கேஷ், கல்புர்கி

பிறகு, அவர்கள் வரலாற்றை திரிக்கும் வேலைகளையும் பாடத்திட்டங்களை கேலிக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள்.  சமீப சில ஆண்டுகளில் ஒருவகையான குணப்படுத்த முடியாத முடத்தன்மையை கல்வி புலத்தில் உண்டாக்கியிருக்கிறார்கள். இறுதியாக, தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, இடஒதுக்கீடு செய்த சிறு நன்மையைக் கூட செய்யவில்லை. பெருநிறுவனங்களின் முகமூடியோடு கல்வி பார்ப்பனமயமாக்கப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் கட்டணங்களை கட்டத் திணறி கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.  இது நிகழத் தொடங்கிவிட்டது. இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாதது.

  1. மிகப்பெரும் துயரத்தில் இருக்கிறது வேளாண் துறை. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தபடியே உள்ளன. முசுலீம்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள், தலித்துகள் இரக்கமற்று தாக்கப்படுகிறார்கள். பொதுவெளியில் ஏவப்படும் கும்பல் வன்முறை, உயர்சாதிகளின் தாக்குதலுக்கு எதிராக எழுந்து நின்ற பீம் ஆர்மியின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்படுகிறார். பட்டியல் இன மற்றும் பழங்குடிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக வைக்கச் செய்யப்பட்ட முயற்சி என சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்ல இத்தனை இருக்கின்றன. சமீபத்தில் நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வருகிறேன்.

நேற்று கைது செய்யப்பட்ட வெர்னான் கோன்சால்ஸ், அருண் ஃபெரைரா, சுதா பரத்வாத், வரவர ராவ், கௌதம் நவ்லாகா ஆகிய ஐவரில் ஒருவர் கூட டிசம்பர் 31-ம் தேதி நடந்த எல்கர் பரிஷத் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. இந்தப் பேரணியின் முடிவில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள், பெரும்பான்மையினர் தலித்துகள், 200-ம் ஆண்டின் பீமா கொரேகான் வெற்றியைக் கொண்டாடுவதற்காக குழுமினார்கள். (தங்களை சுரண்டிக்கொண்டிருந்த பேஷ்வாக்களுக்கு எதிராக பிரிட்டிஷாருடன் இணைந்து தலித் மக்கள் போராடி வெற்றி கண்டனர். தலித்துகள் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சில வெற்றிகளில் இதுவும் ஒன்று)

ஓய்வுபெற்ற நீதிபதிகளான P.B.சாவந்த் மற்றும் கோல்சே பட்டீல் ஆகியோரின் தலைமையில் எல்கர் பரிசத் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணியில் பங்கெடுத்தவர்கள் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் சில நாட்கள் பதற்றம் உண்டானது. மிலிந்த் எக்போடே மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் இதில் முதன்மை குற்றவாளிகள். இன்னும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களுடைய ஆதரவாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, செயல்பாட்டாளர்கள் ரோமா வில்சன், சுதிர் தாவ்லே, ஷோமா சென், மிஹிர் ராட், அவர்களுடைய வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங் ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள்.  அவர்கள் மீது பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டது என்கிற குற்றச்சாட்டோடு மோடியை கொல்ல திட்டம் திட்டினார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அவர்கள் உஃபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இப்போதும் காவலில்தான் உள்ளார்கள்.  நல்லவேளையாக, இஷ்ரத் ஜஹான், சொராபுதீன், கவுசர் பீ போன்றோரை போல் அல்லாது அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இதே காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்குக்கூட உயிருடன் இல்லை.

தனது மனைவியுடன் பேராசிரியர் சாய்பாபா

காங்கிரஸ் அரசாங்கமானாலும் பாஜக அரசானாலும் தங்கள் அரசின் பழங்குடியினர்களுக்கு எதிரான தாக்குதலை மறைக்க, (இப்போதைய அரசு தலித்துகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது) அவற்றை ‘நக்சல்கள்’ அல்லது ‘மாவோயிஸ்டுகள்’ மீதான தாக்குதலாகக் கூறின. முசுலீம்கள் ஏறக்குறைய வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் பழங்குடிகள் மற்றும் தலித் மக்கள் வாழும் தொகுதிகளை முக்கியமான வாக்கு வங்கியாக பார்ப்பதன் விளைவு இது. செயல்பாட்டாளர்களை கைது செய்து ‘மாவோயிஸ்டுகள்’ என அழைப்பதன் மூலம் அரசு , தலித் எழுச்சியை கொச்சைப்படுத்துகிறது; குறைத்து மதிப்பிடுகிறது.  அதே சமயம் தலித் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதாகவும் தோற்றத்தை உருவாக்குகிறது.  இன்று ஆயிரக்கணக்கான  வறிய, பின்தங்கிய மக்கள் தங்களுடைய உறைவிடத்துக்காகவும் நிலத்துக்காகவும் மரியாதைக்காகவும் போராடி சிறையில் இருக்கிறார்கள். தேச விரோத சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு,  வழக்கு விசாரணைக்குக் கூட ஆட்படுத்தப்படாமல் சிறையில் கும்பலாக அடைக்கப்பட்டுள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட மூன்று வழக்கறிஞர்களும், நன்றாக அறியப்பட்ட ஏழு செயல்பாட்டாளர்களும் நீதி மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.  சில ஆண்டுகளுக்கு முன்பாக, சல்வா ஜுடும் என்றகூலிப்படை, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உருவாக்கப்பட்டது. மக்களை கொல்வது, ஒரு கிராமத்தையே எரிப்பது என வன்முறைகளில் ஈடுபட்டது. பியூசிஎல் அமைப்பின் அப்போதைய பொதுச் செயலாளரான டாக்டர் பினாயக் சென் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசினார். பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டபோது, தொழிலாளர் சங்க தலைவராகவும் வழக்கறிஞராகவும் இருந்த சுதா பரத்வாஜ் அவருடைய பணிகளை செய்தார். பஸ்தாரில் துணை ராணுவப்படையின் தாக்குதல்களுக்கு எதிராக அயராது பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் சாய்பாபா. கைது செய்யப்பட்ட பினாயக் சென்னுக்கு ஆதரவாகவும் அவர் நின்றார். சாய்பாபா கைதுசெய்யப்பட்டபோது ரோனா வில்சன் வந்து நின்றார். சுரேந்திர கட்லிங் சாய்பாபாவின் வழக்கறிஞர். ரோனா வில்சன், சுரேந்திர கட்லிங், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா ஆகியோர் கைது செய்யப்பட்டபோது மற்றவர்கள் அவர்களுக்காக நின்றார்கள். இது இப்படியே போய்க்கொண்டிருக்கும்.

அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதும் அமைதியாக்கப்படுவதும் கொடூரமானது.

கடவுளே எங்கள் நாட்டை திரும்பப் பெற எங்களுக்கு உதவுங்கள்.

  • எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதி த வயரில் வெளியான கட்டுரை
  • தமிழாக்கம் : கலைமதி

நான் ஒரு பயங்கரவாதி போல நடத்தப்பட்ட சோதனைகள் ! முனைவர் ஆனந்த் தெல்தும்டே

0
முனைவர் ஆனந்த் தெல்தும்டே

முந்தைய நாள் விமானம்  தாமதமாக வந்திறங்கியதால் ஏற்பட்ட களைப்பின் காரணமாக நான் சற்று காலந்தாழ்ந்து துயில் எழுந்தேன். நான் பணிபுரிகின்ற கோவா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநரும், சக ஊழியருமான பேராசிரியர் அஜித் பாருலேகரின் தவற விட்ட அலைபேசி அழைப்புகளை பார்த்தேன். எங்கள் நிறுவனத்தின் வளாகத்துக்குள் பூனே போலீஸ் நுழைந்து என்னை தேடுவதாக அவர் கூறியதை கேட்டு அதிர்ந்தேன். அங்கே செல்ல விரைவதாக கூறி விட்டு மேலதிக விவரங்களை பின்னர் தெரிவிப்பதாக கூறினார். அந்த நிறுவனத்தில் பெருந் தரவு பகுப்பாராய்ச்சித் துறையின் தலைவராகவும், முதுநிலை பேராசியராகவும் நான் பணியாற்றுகிறேன்.

காலை பத்து மணிக்கு ஒரு அலுவலக கூட்டம் இருந்ததால் நான் அதற்கு செல்ல வேண்டிய அவசரத்தில் இருந்தேன். கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்திலே பல அழைப்புகள் எனது அலைபேசிக்கு வந்தன. ஓசையற்ற பாங்கில் எனது அலைபேசி இருந்தது. அதற்குள்ளாக எல்லா தொலைக்காட்சிகளும் அறிவுத்துறையினர், அரசியல் செயற்பாட்டாளர்கள் இல்லங்களில் நடந்த சோதனைகளையும், அவர்களில் சிலரின் கைதையும் ஒளிபரப்ப தொடங்கியிருந்தன. நான் எனது மனைவியை அலைபேசியில் அழைத்தேன். எங்கள் வீடும் திறக்கப்பட்டு, சோதனை நடப்பதை தொலைக்காட்சிகள் செய்தியிடுவதாக அவர் தெரிவித்தார்.

எனது மனைவி மிகவும் பயந்து போயிருந்தார். மூன்றே முக்கால் மணிக்கு திரும்பி செல்ல வேண்டி ஏற்கனவே பயணச்சீட்டுகள் எடுக்கப்பட்டு விட்டன. நான் மனைவியை தொலைபேசியிலேயே சற்று காத்திருக்க சொல்லி விட்டு வழக்கறிஞர் நண்பர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டேன். போலீஸ் சோதனையின் போது யாராவது ஒருவர் இருப்பது நல்லது என்றும் இல்லையேல் சோதனை என்ற சாக்கில் வீட்டில் எதையாவது வைத்து விடுவர் என்றும் வழக்கறிஞர் நண்பர் கூறினார். காவல் நிலையத்தில் புகார் ஒன்றை பதிவு செய்திடவும் சொன்னார். எனக்கு மும்பையில் சில பணிகள் தொடர்பாக திட்டமிருந்ததால் மனைவியிடம் எனது பயணச்சீட்டை ரத்து செய்து விட்டு கோவா செல்லுமாறு கேட்டுக்கொண்டேன். அதன்படி அவர் கோவா சென்று வழக்கறிஞர் நண்பர் ஒருவரின் துணையுடன் போலீசில் புகார் அளித்தார்.

பின்னர் எனது இயக்குநரை அலைபேசியில் அழைத்து என்னுடைய வீட்டின் சாவியை போலீசிடம் யார் வழங்கியது என்று கேட்ட போது,  நிறுவனத்தின் வளாகத்துக்கு அவர் செல்லும் முன்பே போலீஸ் அனைத்தையும் முடித்து விட்டதாக கூறினார். அவரிடம் என் மீதான குற்றப்பத்திரிகையை வழங்கியுள்ளனர். அதன் ஒளி நகலை அவருடைய செயலாளர் அனுப்பி வைத்தார். அவர் அதை படித்ததாகவும், அதில் ஒன்றுமில்லை எனவும் கூறினார்.

என்னுடைய சக ஊழியர்களுள் ஒருவரான பேராசிரியர் கிருஷ்ணா லத்தா பார்த்தவற்றை கூறினார். போலீசை சந்தித்தவர்களில் ஒருவர் அவர். போலீஸ் அங்கு நின்றிருந்த பாதுகாப்பாளரை மிரட்டி, சாவியை எடுத்து வரச்செய்து பூட்டை திறந்துள்ளனர். இயக்குநர் வரும் வரை போலீசை காத்திருக்க பேராசிரியர் கிருஷ்ணா கேட்டுக் கொண்டுள்ளார். தங்களுடன் வந்திருப்பவருக்கு சோதனையை மேற்கொள்ள அதிகாரமிருப்பதாக மிகக்கடுமையாக தெரிவித்துள்ளனர். அங்கிருந்த  பாதுகாப்பாளர் தான் வீட்டை திறந்ததாகவும் சொன்னார்.

ஒன்றிரண்டு போலீஸ் அதிகாரிகள், பாதுகாப்பாளர் மற்றும் ஒரு வீடியோகிராஃபருடனும் வீட்டுக்குள் நுழைந்து, நான்கைந்து நிமிடங்களிலெல்லாம் வெளியே வந்து, பாதுகாப்பு பணியாளரிடம் கதவை பூட்ட சொல்லி உள்ளனர். முக்கியமான அலுவல் கூட்டம் இருந்ததால் பேராசிரியர் லத்தா அங்கிருந்து அகன்றுள்ளார். அதன் பிறகு வீடு திறக்கப்பட்டதா என்று தெரியவில்லை.

எனது வீட்டின் எதிர்புறம் வசிக்கும் பேராசிரியர் விஷ்ணுவுடன் பேசினேன். அவரும் இதே கதையை தான் சொன்னார். கூடுதலாக, துப்புரவு தொழிலில் ஈடுபடும் பெண்மணி ஒரு பிளாஸ்டிக் பெட்டியை போலீஸ் தூக்கி சென்றதை பார்த்ததாக கூறியதையும் சொன்னார்.

எனது மனைவி கோவா சென்று எங்கள் வீட்டின் பாதுகாப்பாளருடன் பேசிய போது போலீஸ் சோதனையில்  நடந்தவற்றின் மிகப் பயங்கரமான பரிமாணத்தை அவர் விளக்கி உள்ளார். காலையில், ஒரு போலீஸ் ஊர்தி அதனுடன் கூடவே மேலும் இரண்டு போலீஸ் வாகனங்கள் எங்கள் நிறுவன வளாகத்தின் வாயில் கதவை இடித்து கொண்டு வந்து நின்றுள்ளது. பாதுகாப்பாளர்கள் அனைவரின் அலைபேசிகளையும் பிடுங்கியதோடு தொலைபேசி இணைப்புகளை துண்டித்து விட்டு எங்கள் வீட்டை அடைந்திருக்கிறார்கள். பின்னர் பாதுகாப்பாளரை மிரட்டி சாவிகளை எடுத்து வர பணித்துள்ளனர். அவரிடமிருந்த படி சாவிகளை பெற்றுக் கொண்டு மேலே விவரித்த முறையில் வீட்டை திறந்துள்ளனர்.

ஒட்டுமொத்த நிகழ்வும் நடந்த முறை நான் ஏதோ அச்சம் கொள்ளத்தக்க ஒரு பயங்கரவாதி அல்லது கிரிமினல் போன்ற சித்தரிப்பை கொண்டிருந்தது. தங்களுக்கு வேண்டியதை போலீஸ் என்னிடம் நேரடியாகவோ, அல்லது ஒரு போலீஸ் அதிகாரியை அனுப்பியோ அல்லது காவல் நிலையத்துக்கு என்னை வரவழைத்தோ கேட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் நடவடிக்கையின் முழு நோக்கமும் என்னவென்றால் ஒரு அச்சம் கலந்த சூழலை உருவாக்குவதும், நான் ஏற்கனவே பயங்கரமான குற்றத்தை இழைத்து விட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதும் தான். என்னிடமுள்ள தகவல் அனைத்தும் மக்கள் மத்தியில் இருப்பவை.

நான் ஒரு சிறந்த மாணவனாக கற்றல் காலம் முழுவதிலும் இருந்து வந்துள்ளேன். இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயின்றவன். புகழ் பெற்ற ஆமதாபாத் மேலாண்மை நிறுவனமும் அதில் ஒன்று. சைபர்நெட்டிக்சில் (மனிதர்களுக்கும் இயந்திரங்களுக்கும் இடையேயான தானியங்கி தொடர்பாடலின் அறிவியல் – மொர்.) முனைவர் பட்ட ஆய்வு செய்து ஒட்டுமொத்த பணிவாழ்வையும் கார்ப்பரேட் நிறுவனங்களில் கழிப்பவன். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராகவும், அதனை தொடர்ந்து பெட்ரோநெட் இந்தியா லிமிடட் என்ற சார்புவைப்புக் குழுமத்தில் (holding company) மேலாண்மை இயக்குநராகவும், முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் (CEO) உயர்வு பெற்றவன்.

வழக்கத்துக்கு மாறானதாக என்னுடைய கார்ப்பரேட் வாழ்க்கையை வாழ்ந்த போது 20க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளை மதிப்புமிக்க இதழ்களில் எழுதினேன். என்னுடைய கார்ப்பரேட் கால வாழ்க்கைக்கு பிறகு காரக்பூர் ஐ.ஐ.டி.யில் பேராசிரியர் வேலைக்கு அழைக்கப்பட்டேன். அங்கு தொழில் மேலாண்மை பாடங்களை ஐந்து வருடங்களுக்கு மேலாக கற்பித்தேன். அதன் பிறகு ஜுலை 2016-லிருந்து கோவா மேலாண்மை நிறுவனத்தில் (Goa Institute of Management) முதுநிலை நிர்வாகவியல் பேராசிரியராக உள்ளேன். பெரு தரவு பகுப்பராய்ச்சித் துறையின் தலைவராகவும் இருக்கிறேன். இந்தியாவிலேயே முதன்முறையாக இந்த பாடப்பிரிவில் முதுநிலை கல்வி இந்த வருடம்  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

என்னுடைய இந்த தொழில்முறை வாழ்க்கை வசீகரிக்கிற வகையில் ஒரு நீதியான சமூகத்தை படைக்கின்ற நோக்கத்துக்கு உதவுகின்ற முறையில் இருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய அறிவுசார் பங்களிப்பை கடந்த முப்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்திலும், பேச்சிலும் வழங்கி வந்துள்ளேன். இந்த வழிமுறையில் 26 நூல்கள் எழுதியுள்ளேன். அவற்றை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருக்கும் முன்னணி வெளியீட்டு நிறுவனங்கனான ஜெத் புக்ஸ், ரூட்லஜ் மற்றும் பென்க்வின் ரேண்டம் ஹவுஸ் ஆகியவை வெளியிட்டுள்ளன.  இது போக நூற்றுக்கணக்கான கட்டுரைகள், ‘விளிம்பு உரை’ என்ற தலைப்பில் தொடர் பத்திகள் பெருமதிப்புமிக்க  ‘எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி’ என்ற இதழில் எழுதி வந்துள்ளேன். என்னுடைய எழுத்துகள் அனைத்தும் தொடர்ச்சியாக இந்திய மொழிகளிலும், வெளிநாடுகளிலும் மொழிபெயர்க்கப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலானவை இணையத்தில் படிக்கக் கிடைக்கின்றன; மக்கள் மன்றத்தில் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான விரிவுரைகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வழங்கி உள்ளேன். அமெரிக்கப் பல்கலைக்கழகங்களால் இரு முறை விரிவுரை நிகழ்த்து சுற்றுப்பயணங்களுக்காக அழைக்கப்பட்டுள்ளேன். ஒரு பொது அறிவுஜீவியாக இந்த பணிகளை நான் இவ்வளவு காலமும் செய்து வருவது பல பாராட்டுக்கள், விருதுகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் கவுரவ முனைவர் பட்டங்கள் ஆகியவற்றை பெற்று தந்துள்ளன.

என்னுடைய புகழ் நிர்வாகவியல் சார்ந்த எனது சொந்த துறையில் தனித்துவமான ஒரு சான்றோனாகவும்; தொழில் ரீதியில் என்னுடைய புகழ் முதன்மை நிர்வாக அதிகாரியையொத்த கார்ப்பரேட் நிர்வாகியாகவும், ஒரு நூலாசிரியராக என்னுடைய புகழ் அனைவராலும் விரும்பித் தேடப்படும் ஒரு எழுத்தாளராகவும், ஒரு பொது அறிவுஜீவியாக என்னுடைய புகழ் அனைவராலும் விரும்பி அழைக்கப்படுகின்ற மனிதராகவும் நாடு முழுக்க இருக்கிறது. மாணவர் பருவத்திலிருந்தே நான் ஒரு சமூக செயல்பாட்டாளன். மாணவர் தலைவராகவும், பின்னர், குடிமை உரிமை செயல்பாட்டாளனாகவும் அது இருக்கிறது. கால ஓட்டத்தில் பல அமைப்புகளுடன் எனக்கு தொடர்பேற்பட்டது. அவை எதுவும் வன்முறையை போதிப்பதுவோ அல்லது சட்டவிரோத காரியங்களை செய்வதோ கிடையாது. உதாரணத்துக்கு ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு குழுவின் செயலாளராகவும், ஜனநாயக உரிமைகள் ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்வாக உறுப்பினராகவும், கல்வி உரிமைக்கான அகில இந்திய அமைப்பின் அவை உறுப்பினராகவும் உள்ளேன்.

நிச்சயமாக, ஒரு பொது அறிவுஜீவியாக என்னுடைய விமர்சனங்கள் இந்த அரசின் திட்டங்களை விமர்சிப்பதாக தான் இருக்கின்றன. அவை மேலோட்டமாக அல்லாமல் ஒரு அறிவுத்துறை ஒழுங்குடன் இருப்பவை. நான் சந்தேகம் இல்லாமல் இந்த அரசு மீது கடுமையான விமர்சனத்தை கொண்டுள்ளவன். அதே நேரத்தில் வேறு பலரை போலல்லாது, இந்த அரசின் தோற்றத்துக்கு காரணமான பின்-காலனிய அரசு கட்டமைப்பை பழிப்பவன்.

பீமா-கோரேகான் அல்லது எல்கர் பரிஷத்தில் எனது தொடர்பு குறித்து கூறப்படுவனவற்றின் மீது சொல்ல வேண்டும் என்றால் பீமா – கோரேகான் நிகழ்வு தொடர்பாக நான் எழுதிய கட்டுரை வயரில் ([https://thewire.in/caste/myth-bhima-koregaon-reinforces-identities-seeks-transcend) வெளிவந்து நாடு முழுவதுமுள்ள  தலித்களின் கோபாக் கணைகளுக்கு தான் ஆளானேன். மாவோயிஸ்ட் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக சொல்வதென்றால் வன்முறை மீது அவர்கள் கொண்டிருக்கின்ற சாய்வு மற்றும் அவர்கள் கடைபிடிக்கின்ற வழிமுறை ஆகியவற்றை விமர்சித்து எழுதி உள்ளேன். ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் சாதியொழிப்பு, லெஃப்ட் வேர்ட் வெளியிட்ட அம்பேத்கரின் இந்தியாவும், கம்யூனிசமும் என்ற நூலுக்கு எழுதிய முன்னுரை, நவயானா வெளியிட்ட சாதியின் குடியரசு ஆகிய நூல்களை உதாரணம் காட்ட முடியும்.

இப்போது குறி வைக்கப்பட்டிருக்கும் மற்ற பலரை போல நான் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவும் கூட இல்லை. இந்த கற்பனையின் விரிவிலிருந்து பார்த்தால் இப்போது பகிரப்படும் செய்திகள் விவரிக்கும் சம்பவங்களில் எனக்கு ஏதாவதொரு தொடர்பிருக்கும் என்று நம்ப முடிகிறதா? இதன் மொத்த அத்தியாயமும் போலீஸ் சமர்ப்பித்த ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டது. அதன் உண்மைத்தன்மை இன்னும் நிலைநாட்டப்படவில்லை. அதன் வாய்மை நிலை குறித்து பலத்த சந்தேகங்களை பலர் எழுப்பி விட்டனர். இதனை அடிப்படையாக கொண்டு நாட்டில் வாழ்கின்ற அனைத்து அறிவுத்துறையினரையும் குறி வைத்துள்ளது போலீஸ். ஊபா போன்ற கொடுஞ்சட்டங்கள் மூலம் மக்களை பீதிக்குள்ளாக்கி மவுனமாக்கி விட்டு, தேர்ந்தெடுத்த சில அறிவுத்துறையினரையும், செயல்பாட்டாளர்களையும் தாக்குதல் இலக்கில் கொண்டு வருவது தான் திட்டம்.

நான் நீதித்துறையை வேண்டுவது ஒரு படுபயங்கரமான மன உளைச்சலுக்கும், சித்திரவதைக்கும் ஆளாகியிருக்கிறோம். எந்த சிறு குற்றமும் இழைக்காத என்னை போன்ற அப்பாவி மனிதர்களின் நிலையை நீதித்துறை கணக்கில் கொள்ள வேண்டும். அதே போல இந்த நாட்டு மக்களிடமும் நான் வேண்டுவது இப்போது நான் நடத்தப்படுகின்ற விதத்தில் நடத்தப்பட வேண்டியவனா என்பதை சிந்திக்க கேட்டுக் கொள்கிறேன்.

Dr. ஆனந்த் தெல்தும்டே

BE (Mech), PGDM (IIM, ஆமதாபாத்), Ph D (Cybernetics), FIE (I), FACS (USA), D.  Litt (Hon)
முன்னாள் நிர்வாக இயக்குநர், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிமிடட், முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் CEO, பெட்ரோநெட் இந்தியா லிமிடட், மும்பை.
முன்னாள் பேராசிரியர், ஐ.ஐ.டி காரக்பூர்.
முதுநிலை பேராசிரியர் மற்றும் துறை தலைவர்- பெருதரவு பகுப்பாய்வுத் துறை, கோவா நிர்வாகவியல் நிறுவனம்.

தமிழாக்கம்: ராஜ்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் : உணவிலும் முரண்படும் மத்திய கிழக்கு ! ஆவணப்படம்

”இந்த சூப்பின் செய்முறை பைபிளில் விளக்கப்பட்டுள்ளது. யாக்கோபு செய்த அதே சூப்பை நானும் செய்கிறேன். ஆனால், நான் யாக்கோபு செய்ததைப் போன்றே செய்கிறேனா எனத் தெரியவில்லை. சுவையாக இருக்க வேண்டுமென்பது தானே முக்கியம்? ” எனக் குறிப்பிடும் சார்கிஸ் யாக்கோபின், “பொதுவாக இங்கே மக்கள் கத்தியைப் பயன்படுத்துகின்றனர்.. கொல்வதற்காக. நாங்களும் கத்தியைத் தான் பயன்படுத்துகின்றோம்; கொல்வதற்கல்ல, சமைப்பதற்கு” எனச் சொல்கிறார்.

hamas
ஹமாஸ்

அது இசுரேலின் ஜெருசலேம் நகரில் அமைந்திருக்கும் யூகலிப்டஸ் உணவகம். இசுரேலில் உள்ள அனைத்துமே மதத்தோடும், கலாச்சாரத்தோடும், அரசியலோடும், அங்கே தொடர்ந்து கொண்டிருக்கும் இனப் பகைமையோடும் முடிச்சிட்டுப் பார்க்கப்படுவதைத் தவிர்க்கவே முடியாது. எனில், உணவு? அதைக் குறித்து தனது 22 நிமிட ஆவணப்படத்தில் ஆராய்கிறார் அல்ஜசீராவின் செய்தியாளர். இசுரேலைச் சேர்ந்த பாலஸ்தீனர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் என எல்லா மதப் பிரிவைச் சேர்ந்தவர்களின் உணவுக் கலாச்சாரங்களையும் ஒரு பருந்துப் பார்வையில் காட்சிப்படுத்தியிருக்கும் இந்த ஆவணப்படத்தில், ஆர்மீனியர்கள் துவங்கி எத்தியோப்பியர்கள் வரை பல்வேறு இனக்குழுக்களின் உணவுக் கலாச்சாரத்தையும் நேரில் சென்று நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.

இசுலாமியர்களுக்கு இருப்பதைப் போன்றே யூதர்களுக்கும் மத ரீதியான உணவுச் சட்டங்கள் உள்ளன. கஷ்ரூட் என்று அழைக்கப்படும் அந்தச் சட்டங்களை அரசே முன்னின்று கடுமையாக அமல்படுத்துகின்றது. யூத மதச் சட்டங்களின் படி பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டது. அதே போல் செதில் மற்றும் இறக்கை இல்லாத மீன்களும், இரால் மீனும், விபத்தில் அடிபட்ட விலங்குகளின் இறைச்சியும் தடை செய்யப்பட்டவையே. தனது ஆவணப்படத்திற்காக பாரம்பரிய யூத மதக் கடுங்கோட்பாடுகளைப் பின்பற்றும் குடும்பம் ஒன்றைச் சந்திக்கிறார் செய்தியாளர்.

“எங்கள் யூத மதத்தில் ஏராளமான சட்டங்கள் இருக்கின்றன. ஆனால், அவையெல்லாம் எதற்காக இருக்கின்றன, என்ன சொல்ல வருகின்றன என்பதைப் பற்றியெல்லாம் எங்களுக்குத் தெரியாது. அந்தச் சட்டங்களை ஏன் கடவுள் உண்டாக்கினார் என்பதும் தெரியாது. ஆனால், அவற்றையெல்லாம் கடவுளே ஏற்படுத்தியுள்ளார் என்பதால் அப்படியே பின்பற்றி வருகின்றோம்” என்கிறார் அக்குடும்பத் தலைவி. ஜெருசலேம் தங்களுக்காக வாக்களிக்கப்பட்ட நிலம் என யூதர்களும், ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என இசுலாமிய பாலஸ்தீனர்களும் கருதுகின்றனர். இசுரேல் என்கிற தேசமே குடியேறிகளால் செயற்கையாக கட்டப்பட்ட தேசம் என்பதால் பாலஸ்தீனர்களின் கூற்றில் நியாமில்லாமல் இல்லை.

கீகே ரொட்டி

பாலஸ்தீனர்களின் உணவில் அரேபிய கலாச்சாரத்தின் தாக்கம் அதிகம். அவித்த சுண்டலை நசுக்கி மாவாக்கி அதோடு கோதுமை மாவு, எள், பூண்டு மற்றும் ஆலிவ் எண்ணையைக் கலந்து இறுதியில் எலுமிச்சை சாறைச் சேர்த்து செய்யும் ஒரு விதமான நொறுக்குத் தீனி பாலஸ்தீனர்களிடையே பிரபலம் – அந்த தின்பண்டத்தின் பெயர் ஹமாஸ். ஈராக், லெபனான், சிரியா, ஜோர்டான் மற்றும் எகிப்து போன்ற நாடுகளிலும் இதே தின்பண்டம் பிரபலம் என்றாலும், பாலஸ்தீனர்கள் அதில் சேர்க்கும் எலுமிச்சை சாறு இசுரேலில் கிடைக்கும் ஹமாசை வேறுபடுத்திக் காட்டுகிறது என்கிறார் அபு அலி எனும் உணவகத்தின் உரிமையாளர். தற்போது ஹமாஸ் யூதர்களிடையேயும் பிரபலமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போல் பாலஸ்தீனர்களிடையே பிரபலமாக இருக்கும் இன்னொரு உணவு கீகே எனும் ரொட்டி. ஒரு அடி அளவுக்கு நீள் வட்டமாக (நம்மூரில் கிடைக்கும் பன் – ஆனால், நடுவே ஓட்டையுடன் நீள் வட்டமாக) இருக்கும் இதை ஸாடார் எனும் ஒருவகைக் காட்டுக் கீரையில் செய்யப்படும் சட்னியில் தொட்டுச் சாப்பிடுகிறார்கள். ஸாடார் இலைகளைப் பறித்து காய வைத்துப் பொடியாக்குகிறார்கள். பின்னர் அந்தப் பொடியுடன் கொஞ்சம் உப்பும், எள் பொடியும் சேர்த்து அரைத்துக் கொள்கின்றனர். இந்தப் பொடியுடன் ஆலிவ் எண்ணையைக் கலந்து அதைச் சட்னி போல் வைத்துக் கொண்டு கீகே ரொட்டியைச் சாப்பிடுகின்றனர்.

சமீபத்தில் ஸாடார் தாவரம் அழிவின் விளிம்பில் இருப்பதாகச் சொல்லி அதைப் பறிப்பதையும் உணவுக்காக பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது இசுரேல் அரசு. இந்நிலையில் காலேலி பகுதியைச் சேர்ந்த எலியாஸ் கெனானி என்பவர் தனது 86 வயது தாயாருடன் அருகில் தனது நிலத்தில் விளைந்திருந்த ஸாடார் செடியைப் பறித்த ‘குற்றத்திற்காக’ கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதோடு 660 ஷாக்கால் (இசுரேல் செலாவணி) அபராதமும் விதிக்கப்பட்டதைக் கண்டு அவரது தாயார் ஆத்திரமுற்று, “நீங்கள் அபராதம் விதித்துக் கொள்ளுங்கள், நான் அந்த தொகைக்கு ஈடான ஸாடாரை பறித்துக் கொள்கிறேன்” என போலீசாரிடம் வாதாடியுள்ளார்.

இசுரேலின் ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த பாலஸ்தீனப் பெண்கள் காட்டுக் கீரைகளைப் பறிப்பதற்கு விதிகப்பட்டுள்ள தடையைச் சமாளிப்பதற்காக தங்கள் சொந்த நிலத்தில் ஸாடார் சாகுபடி செய்து வருகின்றனர். எப்படி தங்கள் கிராமங்களை யூதர்கள் ஆக்கிரமித்தார்களோ அதே போல் தங்களது உணவுப் பழக்கத்தையும் ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார்கள் என பாலஸ்தீனர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். ஒன்று, பாலஸ்தீனர்களின் இயல்பான உணவுப் பழக்கத்தை சட்டப்படி தடுப்பது அல்லது அதை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்வது என்கிற போக்கில் யூதர்கள் செயல்படுவதாக பாலஸ்தீனர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால், இதற்கு இன்னொரு பக்கமும் இருப்பதைக் காட்டுகின்றது இந்த ஆவணப்படம். இசுரேல் குடியேறி யூதர்களின் தேசமாக இருப்பதால் அவர்களின் உணவு, ஓய்வு நேர விளையாட்டுக்கள், கலாச்சாரம் என சகலத்தையும் அவர்களின் மூதாதையர்கள் வாழ்ந்த நாடுகளில் இருந்தே சுவீகரித்துக் கொண்டுள்ளனர். விசயம் என்னவென்றால் 20-ம் நூற்றாண்டில் குடியேறிய யூதர்கள் மொராக்கோ, லெபனான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் அராபியர்களோடு அக்கம் பக்கமாய் வாழ்ந்தவர்கள். எனவே அவர்களது கலாச்சாரக் கூறுகள் பெரும்பாலும் அராபியர்களை ஒத்தே இருக்கின்றன.

நவீன இசுரேலின் கலாச்சாரம் மத்திய கிழக்கு, வட ஆப்ரிகா, ஐரோப்பா, இரசியா மற்றும் எத்தியோப்பாவின் கலாச்சாரங்களின் கூறுகளைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கோல்ட்பெர்க் எனும் யூத சமையல் கலை நிபுணர் “யூதர்களும், அரேபியர்களும் ஒரே விதமான மசாலாப் பொருட்களையே பயன்படுத்துகின்றனர்” என்பதை ஒப்புக் கொள்கிறார். அதே போல் ஜெருசலேமில் கிடைக்கும் கருவாடைப் பதப் படுத்தும் முறைகளில் இரசிய, ஐரோப்பிய மற்றும் துருக்கிய பாணிகள் இருப்பதையும் சுட்டிக் காட்டுகின்றார்.

எனினும், பாலஸ்தீனர்களிடையே தனித்துவமான உணவுப் பழக்கத்தை ஒன்று தமதாக்கிக் கொள்வது அல்லது தமக்கு ஏற்புடையதல்ல எனும்பட்சத்தில் ஏதாவது ஒரு முறையில் தடுத்து அவர்களுக்கு ஆத்திரமூட்டுவது என்கிற போக்கிலேயே இசுரேலிய அரசு செயல்பட்டு வருகின்றது. தங்கள் நிலத்தைப் பறிகொடுத்த பாலஸ்தீனர்கள் உணவு உள்ளிட்ட தங்களது ஒவ்வொரு கலாச்சார அடையாளத்தையும் பிடிவாதத்துடன் பற்றிக் கொண்டிருக்கின்றனர். என்றேனும் ஒரு நாள் தங்களுக்கான நிலமும் தேசமும் வாய்க்கும் வரை இந்த அடையாளங்கள் மட்டுமே அவர்களுக்கான ஆறுதல்.

  • வினவு செய்திப் பிரிவு

கேரளா : ஆர்.எஸ்.எஸ் வெள்ள நிவாரண பணிகள் ! ஒரு அனுபவம் !

வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா : ஆலப்புழா செங்கனூரிலிருந்து நேரடி ரிப்போர்ட் ! பாகம் 10

கேரளா ஆலப்புழா மாவட்டம் சங்கனாசேரியில் உள்ள NSS இந்து கல்லூரிக்கு எதிரில் மாலை 7 மணியளவில் நடந்து சென்றோம். காலம் ஆகஸ்டு மாதத்தின் நான்காம் வாரம். அந்த ஏரியாவில் கண்ணில் பட்ட சில இடங்களில் காக்கி டவுசர் அணிந்த ஒரு சில இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். என்னவென்று கண்களை சற்று உயர்த்தி மேல பார்த்ததும் ஆ.எஸ்.எஸ் அலுவலகம்.

சேவாபாரதியின் அலுவலகம்

வெள்ள நிவாரணப் பணிக்காக அங்கயே முகாம் அமைத்து அமர்ந்திருந்தார்கள். வெளியில் நின்றிருந்த லாரியில் இருந்து சில மூட்டைகளை இறக்கிக் கொண்டிருந்தனர். அருகில் காக்கி டவுசர் அணிந்த ஒருவர் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தார்.

அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். அவரோ, சற்று தொலைவில் நாற்காலியில் அமர்ந்திருந்த ஒருவரை கை காமித்து விட்டார். அவரிடம் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

மேலும் கீழும் உற்றுப் பார்த்து விட்டு, கொஞ்சம் வெயிட் பன்னுங்க… வரேன்னு சொல்லிட்டு விட்டு போனவர், கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து…… நீங்க உள்ள வாங்க என்று அழைத்து சென்று வேறு ஒருவரை காட்டி விட்டு சென்றார். அவர் பெயர் ஹரிதாஸ். அவர் நம்மை கண்களால் ஸ்கேன் செய்ய ஆரம்பித்தார்.

யூனியன் மினிஸ்டர் அல்போன்ஸ் கண்ணாந்தனம்.

எங்களைப் பற்றி ஹரிதாஸ் விசாரிக்க ஆரம்பித்தார். எங்கள் மலையாளம் அவருக்கு புரியவில்லை, அவரின் தமிழ் எங்களுக்கு புரியவில்லை. எனவே தமிழ் தெரிந்த ஒருவரின் பெயரை சொல்லி அழைத்தார்கள்… அவர் வருவதற்கு கொஞ்சம் தாமதமானதால் இப்போதைக்கு நாங்க பதில் சொல்லுற நிலைமையில இல்ல.. நீங்க கெளம்புங்க என்று அரைகுறை தமிழில் நம்மை விரட்டினார் அவருடன் இருந்த மற்றொருவர்.

அந்த நேரம் மத்திய இணை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணாந்தனம்- இவர் கேரளாவின் சி.பி.எம். ஆதரவால் 2006 முதல் 2011 வரை கஞ்சிராபள்ளி-யில் எம்.எல்.ஏ-வாக இருந்து பின்னர் தற்போது பாஜக-வின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்ஜியசபா எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மின்னணு, தகவல் தொழில்நுட்பம், கலாச்சாரம், மற்றும் சுற்றுலாத்துறைக்கான மத்திய துணை அமைச்சராகவும் பணியாற்றுகிறார்.-  இவர் வருகையால் நம்மை மறந்து பிசியாகினர்.

நமக்கு தமிழில் தகவல்களை சொல்லி உதவிய சுயம் சேவக் (வலது)

நாங்கள் ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்த போது ஒருவர் வந்து, “நீங்க தான் தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கிங்களா?” எனக் கேட்டு விட்டு “அதிகம் சொல்ல முடியாது.. குறைந்த பட்சம் சொல்லுறோம்”… என்று அழைத்துச் சென்று நாற்காலியில் அமர்த்தினார். அவர் எங்களை பற்றிய அறிமுகத்தை அதிகம் கேட்டுக் கொண்டே விஷயத்திற்கு வந்தார்….

“ஆலப்புழா, பத்தினம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டத்துல கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. தொடர்ந்து இந்த பகுதியில தான் வேலைகள், நிவாரண உதவிகள் செஞ்சிட்டு இருக்கோம். ஒரு நாளைக்கு 17,000 பேருக்கு எங்கள் சார்பாக பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று உணவு மற்றும் தண்ணீர், உடைகள் ஆகியவைகளை வழங்குகிறோம். இதற்காக வெளி மாநிலத்துல இருந்து பல உதவிகளை பெறுகிறோம். அவர்களும் எங்களுக்கு வழங்குகிறார்கள். நேற்று முதல் தண்ணீர் வடிய ஆரம்பித்துள்ளது. அந்த பகுதிகளுக்கு சென்று வீட்டை சுத்தம் செய்வது போன்ற பணிகளை செய்து வருகிறோம்.” என்று சொல்லி முடிப்பதற்குள்… ஒருவர் எங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

அவரால் சரிவர போட்டோ எடுக்க முடியாததால் இளைஞர் ஒருவரை அழைத்து புகைப்படம் எடுக்கச் சொன்னார். அதுமட்டுமில்லாமல், ”உன்னோட செல்போன்லயும் எடுத்துக்கொள்” என்று சொல்லி விட்டு போனார்.

அதற்குள் உள்ளே சென்ற அல்போன்ஸ் வெளியே வந்ததால் முழுக் கூட்டமும் அவரை காணச்சென்றது. வந்தவரோ அனைவருக்கும் நமஸ்காரம் சொல்லி கைகுலுக்கினார். எங்களுக்கும் கைகொடுத்தார். அவரிடம், நிவாரணப்பணிகள் பற்றி கேட்டபோது “அதைப் பற்றி பேச நேரமில்லை” என்று சொல்லி விட்டு கிளம்பினார்.

நாங்களும் அருகில் இருந்தவர்களிடம் கிளம்புகிறோம் என்று சொல்லி விட்டு ஒரு அடி எடுத்து வைத்ததும், ஹரிதாஸ் ஓடிவந்து, இந்த தம்பிகளை போட்டோ பிடிச்சிட்டிங்களான்னு கேட்டுவிட்டு…. எங்களிடம் பார்வையை எங்களிடம் திருப்பி “ஒன்னுமில்ல தம்பி…. பைல் பன்னி வச்சிக்கிறதுக்கு தான் போட்டோ” என்றார். நாங்களும் வேறு வழியில்லாமல் சரி என சொல்லிவிட்டு கிளம்பினோம்.

நடக்க ஆரம்பித்த சில விநாடியில்…

“தம்பி..நில்லுங்க … நீங்க தமிழா? என்று ஒரு குரல் ஒலித்தது. திரும்பி பார்த்தால் அறுபது வயதைக் கடந்த ஒருவர் நம்மை நெருங்கி…….. இங்க இப்ப பார்த்திங்க இல்ல.. அவரு தான் யூனியன் மினிஸ்டர்…. உங்க ஊர்ல இந்த மாதிரி எந்த மினிஸ்டரயாவது சாதாரணமா வருவாரா? பார்க்க முடியுமா? அதெல்லாம் இங்க தான் முடியும். திராவிட கட்சிகள் தமிழநாட்ட குட்டி சுவராக்கிடுச்சி. நீங்க எல்லாம் நம்ம அர்னாப் கோஸ்வாமிய பாக்கனும். அவரை மட்டும் தான் பார்க்கனும். நம்ம பாரத பிரதமர் மோடிக்காக நீங்க எல்லாம் நெரயா பன்னனும்பா…

நீங்க மலையாளம் கத்துக்கிறது ரொம்ப நல்லது. இந்த பக்கம் அடிக்கடி வந்தா சமாளிக்க முடியும். மலையாளத்துல பாஜகவோட சேனல் ஒன்னு இருக்கு.. அதையும் அடிக்கடி பார்க்கனும்.” என்று தனது பிரச்சாரத்தை பரப்புவதிலேயே கவனம் செலுத்தினார். ஆக வெள்ளம் குறித்துப் பேசச் சென்றால் அவர்கள் அர்னாப் கோஸ்வாமியின் பொய்ப் பிரச்சாரங்களுக்கு விளம்பரம் செய்கின்றனர். பிறகு கிளம்பினோம்.

உண்மையில் கேரளாவில் எங்களுக்கு மொழியோ, இடங்களோ பிரச்சினையாக இருக்கவில்லை. புது இடம் என்பதால் வரும் பதட்டம் கூட சில மணித்துளிகளில் மறைந்துவிட்டது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் கேம்பானது எங்களது முன் முடிவுகளைத் தாண்டி, சூழலே அச்சத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது. புகைப்படம் எடுப்பது, முறைத்து பார்ப்பது, நோட்டம் விடுவது போல் பார்ப்பது என திகிலூட்டுவதாக அமைந்திருந்தது. அப்போது தான் புரிந்துகொள்ள முடிந்தது உண்மையில் “பாசிஸ்ட்கள் தங்கள் நிழலைக்கூட நம்புவதில்லை.”

*****

டவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவில் பாஜகவின் இந்துத்துவ அரசியல் எடுபடுவதில்லை என்பதால், சபரிமலை ஐய்யப்பனின் கோபமும், மாடு தின்னும் பாவத்தாலும் தான் இந்த பேரழிவு என ஒருபக்கம் தங்களின் வெறுப்பை கக்குகின்றனர் வட இந்திய சங்கிகள்.

இன்னொருபுறம் ஆர்.எஸ்.எஸ் உள்ளூர் தலைகள் எப்படியாவது நமது இருப்பை நிலைநாட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்கான ஒரு நல்வாய்ப்பாக இந்த நிவாரணப் பணியை பார்கிறார்கள். அதனால் தான் தாங்கள் மட்டும் ஈடுபாட்டோடு வேலைகள செய்து வருகிறோம் என்பது போல ஒரு பிம்பத்தை மக்களிடம் பதிய வைக்க முயற்சி செய்கின்றனர்.

சேவாபாரதியின் நிவாரண வாகனம் ( இடம் – செங்கனூர் )

குறிப்பாக, சில இடங்களில் முகாம்களை அமைத்து அதன் மூலம் உதவி செய்வது ஒருபுறம், மற்றொருபுறம் நேரடியாக இந்துக்கள் யாரும் கம்யூனிஸ்ட் அரசுக்கு உதவி செய்ய வேண்டாம் என்று சமூக வலைதளங்கலில் அறைகூவல் விடுவது என்று தீவிரமாக இருக்கிறார்கள். இந்தத் தீவிரம் பாதிக்கப்பட்ட மக்களை பாதுக்காக்க வேண்டும் என்பதல்ல….. தமிழகத்தில் 2015 வெள்ள நிவாரணப் பணிக்கு வந்த பொருட்களின் மீது ஜெயலலிதா தன் படத்தை ஒட்டி பெயர் வாங்கிய பார்முலாதான் இதுவும்.

சி.பி.எம் தோழர்கள் ஐம்பது பேர் ஒரு வாகனத்தில் நிவாரணப் பணிக்கு செல்கிறார்கள் என்றால், ஆர்.எஸ்.எஸ் சேவக்குகள் ஐம்பது பேரை ஐந்து வாகனங்களில் பிரித்து அனுப்புகிறார்கள். அதன் மூலம் நாங்கள் நிவாரணப் பணிகளை பிரம்மாண்டமாக செய்துவருகிறோம் என ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறர்கள்.

ஆர்.எஸ்.எஸ்-இன் சேவா பாரதிக்கு வட இந்தியாவில் இருந்து நிறைய பொருட்கள் வந்திருக்கின்றன. அவர்களிடன் வாகனங்களும் நிறைய இருந்தன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருட்கள் வழங்குவது அவர்களின் பிரதானமான பணியாக இருந்தது. அவற்றை பதிவு செய்வது, ஊடகங்களுக்கு அளிப்பது அனைத்தும் திட்டமிட்ட வகையில் செய்தனர். அவர்களது நிவாரண பொருள் வழங்கும் பணி அனைத்து இடங்களுக்கும் பெரும் ஊர்வலமாக சென்றது என்றே சொல்ல வேண்டும்.

ஒரு சிலர் வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியையும் செய்தனர். மக்களைப் பொறுத்த வரை அரசியல் ரீதியான கருத்துக்களையும் இந்த சேவைகளையும் பிரித்தே பார்க்கின்றனர். சி.பி.எம் மற்றும் மற்ற கட்சிகள், தன்னார்வலர்கள் யாரும் இத்தகைய விளம்பர நாட்டமில்லாமல் அமைதியாக பணி செய்து வந்தனர். சி.பி.எம் கட்சியினரின் தொண்டர் படை அதிகம் என்றால் பொருட்கள் வைத்திருப்பதில் சேவா பாரதி முந்தியது (நாம் இருந்த இடத்தில்) எனலாம்.

எனினும் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் தனது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கு இந்த வெள்ள நிவாரண பணிகளை பயன்படுத்திக் கொண்டது. மீனவர்கள், அரசு ஊழியர்களை விடுத்து ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மட்டும் கேரளாவில் நிவாரணம் செய்வதாக டிவிட் போட்டார் மோடி. அத்தகைய அழுகுணி வேலைகள், விளம்பரங்களை கேரள மக்கள் ரசிக்கவில்லை என்பதே யதார்த்தம். மீனவர்கள் காப்பாற்றியது குறித்த நிறைய வீடியோக்கள் கேரள தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியாகின. வரலாற்றை மறைத்து விட முடியுமா என்ன?

– வினவு களச் செய்தியாளர்கள்.

தூத்துக்குடி சதி வழக்கு : சிறை சென்ற போராளிகளின் உரை !

தூத்துக்குடி சதி வழக்கு: தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டாஸ், சிறை சென்ற போராளிகளுக்கு வரவேற்பு !  விடுவித்த வழக்கறிஞர்களுக்கு நன்றி ! என்ற தலைப்பின் கீழ் 26.08.2018 அன்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் அரங்கக் கூட்ட நிகழ்வு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் மற்றும் குண்டாசில் கைதான தோழர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இக்கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக தூத்துக்குடி படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

தூத்துக்குடி படுகொலையில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

அதை தொடர்ந்து மக்கள் அதிகாரம் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தோழர். மருது அவர்கள் கூட்டத்தின் வரவேற்புரையாற்றினார். அவரது உரையில்;

“தூத்துக்குடி சதி வழக்கில் கைது செய்யப்பட்ட மக்கள், தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதற்கான வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெற்றுகொண்டிருக்கிறது.

தோழர் மருது

இங்கு நாம் எதை வரவேற்க வேண்டி உள்ளது..? தூத்துக்குடி போராட்டத்தில் போர்குணமாக நின்று போராடிய மக்களை வரவேற்க வேண்டி உள்ளது. உயிரே போனாலும் மக்களின் உயிரை குடிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடாமல் ஓய்வதில்லை என்ற மக்களின் போர் குணத்தை வரவேற்க வேண்டும்.

இறுதிவரை போராடியும் துளியும் சலைக்காமல் நின்ற பெண்களின் வீரத்தை வரவேற்க வேண்டி உள்ளது. வழக்கில் கைதான தோழர்களின் குடும்பத்தை எதற்கும் சலைகாத இவர்களின் உறுதியை வரவேற்க்க வேண்டி உள்ளது. இவைதான் இங்கு வரவேற்க்க வேண்டியவை” என்று கூறி தனது வரவேற்பு உரையை கூறி முடித்தார்.

அதன் பின்னர் தலைமை உரையாற்றிய மக்கள் அதிகாரம் சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தனது உரையில்;

“மக்கள் அதிகாரத்தை எப்படியாவது ஒழித்து கட்டிவிட வேண்டும் என்பதில் மத்திய அரசு கங்கனம் கட்டி கொண்டு செயல்பட்டு வருகிறது. ஒழித்துகட்டியே தீர வேண்டும் என்பதில் தான் வேலை செய்து வருகிறது. தூத்துக்குடி போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் எல்லோருமே பெரிய பணக்காரர்களோ. பெரிய வேலையில் இருபவர்களோ அல்ல சாதாரண குடும்பத்தை சார்ந்தவர்கள் தான். குறிப்பாக பெண்கள் மிகவும் வீரமானவர்களாக இருந்தனர். துப்பாக்கி சூட்டின் போதும் துளியும் மணம் தளராமல் போராடினார்கள்.

ஒரு பெண்மணியிடம் போலீசு ஒருவர் சென்று “ஏம்மா உன் மகன் எங்க அவன் கொலை பண்ணிருக்கான் அவன் மேல கேசு” இருக்கு என்ற உடனே அந்த பெண்மணி துளியும் அஞ்சாமல் காவல் துறை என்ற அச்சம் இல்லாமல். என் பையனா கொலை பன்னினான். போங்க சார் எங்களுக்கு எல்லாம் தெரியும் யாரு கொலை பன்னினாங்கனு டி.வி ல தான் எல்லாத்தையும் பார்த்தோமே என்று துனிவாக கூறி உள்ளார். இங்கு அந்த தாயின் வீரத்தை பார்க்க முடிந்தது. இதை தான் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

தோழர் வெற்றிவேல் செழியன்

மக்களை பொருத்த வரையிலும் அரசின் மீதான கோபம் என்பது மிகவும் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தான் ஒரு பேராசிரியர் ஒருவர் நமக்கு தொடர்பு கொண்டு, “தொடர்ச்சியா செய்திகள்ள பாத்துட்டு இருக்குறேங்க… மக்களுக்காக நிக்குறிங்க போராடுறிங்க நிறைய வழக்குகள் போடுராங்க என்னால பெரிய அளவுல உதவி செய்ய முடியல அணில் மாதிரி என்னால முடிஞ்ச சிறிய உதவி” என்று கூறி ரூ.5000 நிதி அளித்தார்.

அதே போல் ஓய்வு பெற்ற  இராணுவ வீரர் ஒருவர் எனக்கு உடல் நிலை சரியில்லை அதனால உங்க கூட வந்து நிக்க முடியல என்னால் முடிந்த சிறிய உதவி என்று கூறி ரூ.10,000 நிதி அளித்தார். இது போல் உள்ள நபர்களின் ஆதரவினால் தான் வழக்கில் இருந்த தோழர்களின் குடும்பத்தை நம்மால் பராமரிக்க முடிந்தது.

வழக்கறிஞர்களும் இலவசமாக வழக்கு நடதியதும் தான் தோழர்களை விரைவில் வெளியில் கொண்டு வர காரணமாக இருந்தது.

மக்கள் நம்முடன் இருக்கிறார்கள். ஜனநாயக சக்திகள் நமக்காக குரல் கொடுக்கிறார்கள், இவைதான் நாம் மீண்டு வருவதற்கான காரணம் என்பதை ஆணித்தரமாக பதிவு செய்கிறேன். போராளிகளுக்கும்,அவர்களின் குடும்பத்தார்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.” என தனது தலைமை உரையை நிறைவு செய்தார்.

தலைமை உரையை தொடர்ந்து ம.க.இ.க கவிஞர் தோழர் துரை.சண்முகம் அவர்களின் கவிதையை மக்கள் அதிகாரத்தின் மாநில தலைமை குழு தோழர் காளியப்பன்  வாசித்தார்.

அதை தொடர்ந்து நினைவு பரிசு வழங்கும் விதமாக சிறை சென்று வந்த தோழர்களுக்கும், பொய் வழக்குகளை தவிடுபொடியாக்கி விடுவித்த வழக்கறிஞர்களுக்கும் “தூக்குமேடை குறிப்பு” , “பகத்சிங்” புத்தகம் பேராசிரியர் கருணானந்தம் அவர்களால் வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பேராசிரியர். ஐயா கருணானந்தன் உரையாற்றினார். அவரது உரையில் “போராடுவதற்க்காக வாழ்கிறோம். வாழ்வதற்க்காக போராடுகிறோம். இந்த கூட்டத்தில் பேச வாய்ப்பு அளித்தமைக்குக்கு நன்றி.

பத்திரிக்கைகளும் ஊடகங்களும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள், அப்படி இருந்தால் நல்லது என்று தான் நாமும் நினைக்கிறோம். மன்னர் ஆட்சியில் மக்களுக்கு கடமை மட்டுமே இருக்கும் உரிமைகள் என்பது கிடையாது. உரிமை என்று கேட்டால் அது ராஜ துரோகம். ஆனால் இப்பொழுது நடப்பது மக்கள் ஆட்சி இங்கும் நமக்கு உரிமைகள் கிடையாது.

ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இருந்த அடக்குமுறை சட்டங்கள் தான் இன்னும் நடைமுறையில் உள்ளது. உரிமைகள் இருந்தால் தான் நாம் மக்களாக இருப்போம். இல்லையென்றால் நாம் மாக்களாக தான் இருப்போம்.

இந்த அரசு பொறுப்பில் இருந்து விலகி முதலாளிகளின் அடியாள் படையாக மாறும் போது தான் நமக்கு எதிராக உள்ளனர்.  குண்டர்கள் ஆட்சி செய்யும் போது மற்ற அனைவருமே அவர்களுக்கு குண்டர்களாக தான் தெரிவார்கள். உரிமை என்பது கெஞ்சி பெறுவதல்ல ஜனநாயக உணர்வு தான் நம்மை காப்பாற்றும்,சிறு துளிகள் மீதும் நாம் அக்கறை காட்ட வேண்டும். காவலர்களையும் நமக்கானவர்களாக மாற்ற வேண்டும். இந்த நிலை மாறும். போராளிகளுக்கு வாழ்த்துக்கள். என தனது உரையை நிறைவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து சிறை சென்ற தோழர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

தோழர் முகம்மது அனஸ்

தோழர் அனஸ்

“தோழர்களுக்கு வணக்கம். என் மீது NSA போட்ட காவலர்களுக்கு நன்றி. நான் பயந்து ஓடிவிடுவேன், படிப்பு கெட்டு போய்விடும் என்று நினைத்து நான் போராட்டங்களில் ஈடுபட மாட்டேன் என்று எண்ணி தான் காவல் துறையினர் என் மீது NSA போட்டனர். ஆனால் நேர் மாறாக மாறியது. எனக்கு இது புதிய உணர்வை ஏற்படுத்தி உள்ளது. என் பெயர் பின் கூட NSA என்று போட்டு தான் எழுதுகிறேன். இது எனக்கான அடையாளம் பட்டமாக கருதுகிறேன். அடுத்த போராட்டத்திற்கு தயாராக உள்ளேன்.”

தோழர் வேல்முருகன்

தோழர் வேல்முருகன்

“அனைத்து தோழர்களுக்கும், நண்பர்களுக்கும் வணக்கம். எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளில் 1 மெய் 17 பொய் தெரிந்தும் கையொப்பம் இட்டோம். ஏன் என்றால் அவை எல்லாமே படிக்கும் போதே பொய் என்று எல்லோருக்கும் தெரிந்து விடும் என்ற அடிப்படையில் தான். சொல்லுங்கள் இந்த ஜனநாயகத்தை தூக்கி நிறுத்த முடியுமா? நன்றி”.

தோழர் மகேஷ்

தோழர் மகேஷ்

“தொடர்ச்சியாக மக்கள் உரிமைக்காக போராடி வரும் தோழர்களுக்கு எங்கள் ஊர் சார்பாக புரட்சிகர வணக்கம். இந்த தூத்துக்குடி போராட்டம் என்பது முதலில் இளைஞர்களாக தொடங்கினோம். பிறகு இது ஒரு நாசகர ஆலை என்பதை உணர்ந்த வகையில் பெண்கள் குழந்தைகள், தாய்மார்கள் என குடும்பங்களாக சேர்ந்து போராடினோம்.

எங்கள் பெயரை ஒவ்வோரு முறை வாசிக்கும் போதும் தெரியும் பல வழக்குகள் போடுகின்றனர் என்று. தெரிந்து கொண்டோம். 3 நாட்களிலே குண்டர் சட்டத்தை உடைத்த பெருமை வழக்கறிஞர்களையே சாரும். நாங்கள் அதிகமாக போராடி உள்ளோம், பல உயிர்களை பலி கொடுத்து உள்ளோம். இந்த நாசகர ஸ்டெர்லைட் ஆலையால் பல பெண்களுக்கு கரு சிதைவு ஏற்பட்டு உள்ளது. இறுதிவரை போராட தயாராக உள்ளோம். இந்த ஆலையை முழுமையாக மூடும் வரை போராடுவோம்.” என்று உணர்ச்சி பொங்க உரையாற்றினார்.

தோழர் கெபஸ்டின்

“தோழர்களுக்கு புரட்சிகர வணக்கம். இந்த போராட்டம் என்பது பல ஆண்டுகளாக நடத்தப்பட்டது, அப்போதெல்லாம் எங்கள் போராட்டங்கள் பணம், சாதி ஆகியவற்றால் தோற்கடிக்கப்பட்டது.

ஆனால் இளைஞர்கள் நாங்கள் இப்போராட்டத்தை கையில் எடுத்தோம். ஜல்லிகட்டு போராட்டத்தைப் போல் செய்யவேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். அந்த அடிப்படையில் தான் குடும்பமாக எல்லோரும் போராட்டத்தில் கலந்து கொண்டோம். நாங்கள் பேரணியாக செல்லும் போதே காவல் துறையினரால் தடுத்த நிறுத்தியிறுக்க முடியும். ஆனால் திட்டமிட்டு எங்களை உள்ளே விட்டு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் சுட ஆரம்பித்தனர்.

தோழர் கெபஸ்டின்

சமூக விரோதிகள் உள்ளே நுழைந்து விட்டனர் என்று சொல்கிறார்கள். ஆம் சமூக விரோதிகள் உள்ளே நுழைந்தனர். நான் என் கண்ணால் பார்த்தேன் அந்த சமூக விரோதிகளை இன்றும் என்னால் அடையாளம் காட்ட முடியும்.

அவர்கள் காக்கி சட்டை அணிந்து இருந்தார்கள், காலில் ஷூ அணிந்து இருந்தார்கள். இவர்கள் தான் அமைதியான பேரணியில் உள்ளே நுழைந்தார்கள். கலகம் செய்தார்கள்.

காலில் தான் சுடுவார்கள் என்று நினைத்தேன் ஆனால் எடுத்த உடனேயே தலையில் சுட்டனர். மார்பினில் சுட்டனர். என் அருகில் ஒருவர் ஐயோ நான் பொழைப்பேனா என்று கூறி தலையை பிடித்து கொண்டே கீழே சரிந்து விழுகிறார். எதற்காக இந்த கொலைவெறி ஆலையை எப்படியாவது திறக்க வேண்டும் என்பதுதான்.

ஏன் என்றால் இது போல பல தொழிற்சலைகள் அந்த பகுதியில் உள்ளது. அவற்றையும் நாங்கள் இது போல் போராட்டத்தை கையில் எடுத்து மூடிவிடுவோம் என்பதால் தான். கட்டாயமாக மூடும் வரை போராட்டம் ஓயாது. பல நபர்களுக்கு புற்று நோய் வாந்து உள்ளது. எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்ல தயாராய் இருக்கிறேன். ஒன்று சேர்ந்து போராடுவோம்.” என்று கூறி மற்ற அனைத்து நபர்களின் உணர்வுகளையும் தட்டி எழுப்பினார்.

தோழர் கலீல் ரஹ்மான்

தோழர் கலீல் ரஹ்மான்

“வரலாற்றில் மீரட் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு பற்றி படித்து உள்ளோம். ஆனால் இப்போழுது தூத்துக்குடி சதி வழக்கு புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்.

என்னிடம் பல நபர்கள் நண்பர்கள் சிறைக்கு சென்ற போது கேட்டனர், ஏன் நீங்கள் தான் இப்படி செய்றிங்க..? போராடுறிங்க என்றால் படிக்கிற பசங்கள எதுக்கு இதுல கொண்டுவரிங்க என்றனர்.

அவர்களிடம் கேட்டது ஒரே வார்த்தைதான் என் மகன் படித்து முடித்து வந்தால் வேலைக்கு உத்திரவாதம் இருக்கா? வேலைக்கு உங்களால் உத்திரவாதம் தர முடியுமா? யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

இருப்பது சமூகத்திற்கு சரியாக இருக்காது என்ற வகையில் பதில் சொன்னேன். சிறையில் உள்ளவர்கள் எங்களுக்கு கை கொடுத்து வரவேற்றனர். இது போன்ற போராட்டங்கள் இருந்தால் எங்களுக்கும் சொல்லவும் என்றனர்.

அந்த வகையில் இந்த NSA எங்களுக்கு கிடைத்த டிகிரி ஆகும். இது போல இன்னும் பல டிகிரிகளை வாங்க தயாராக உள்ளேன்.” என்று போராட்டமே ஒரு மகிழ்ச்சி என்று அனைவரும் உணரும் வகையில் பேசினார்.

நவனீதா- தோழர் கோட்டையன் மகள்

நவனீதா- தோழர் கோட்டையன் மகள்

“நான் 12ம் வகுப்பு படித்து வருகிறேன். என் அப்பா போல் போராட வேண்டும் என்பது தான் எனக்கு விருப்பமாக உள்ளது. என்னை கைது செய்யவில்லை என்பது கஷ்டமாகவும் உள்ளது. நான் ஏன் 12ம் வகுப்பு படிக்கிறேன் என்று கோபமாக வருகிறது. நான் போகும் இடங்களில் எல்லாம் என்னை திட்டுகிறார்கள் படிக்கிற பிள்ளைக்கு இதெல்லாம் தேவையா என்று. திட்டிற்க்கு பயந்தும் காவல் துறைக்கு பயந்து என் அம்மா என்னை பெரியம்மா வீட்டில் தங்க வைத்து படிக்க வைத்தார்.

நாம ஏன்..? பயப்பட வேண்டும் நாம தப்பு எதும் பன்னலயே, போராடினால் தப்பா என்று கேட்டாலே அதிகம் பேசுகிறென் என்கின்றனர். ஏன் பெண்கள் என்றால் போராடக் கூடாதா? நாங்களும் போராடுவோம்.” என்று இளைமைக்கான துடிப்புடன் உரையாற்றினார்.

வழக்கறிஞர் அரிராகவன்

வழக்கறிஞர் அரிராகவன்

“எங்கள் மீது போடப்பட்டு உள்ள இந்த NSA எங்களுக்கு கிடைத்த லாட்டரி மாதிரி தான் நினைக்கிறேன். ஏன் என்றால் அந்த இடத்தில் யார் இருந்தாலும் இதுதான் நிலை. பல வழக்கறிஞர்கள் நம்முடன் இணைந்து செயல் பட்டனர். நிதி வாங்கும் வழக்கறிஞர்கள் நமக்காக இலவசமாக வாதாடினார்கள்.

நம்முடைய நோக்கம் என்பது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற ஒரு நோக்கம் மட்டும் தான். நான் சிறைக்கு சென்ற உடன் தோழர்கள் குடும்பத்தை நன்கு பராமரித்து உள்ளனர். சிறையில் மக்களிடம் நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டோம். நாங்கள் அடுத்த கட்ட போராட்டத்திற்கு தயாராக உள்ளோம்.” என்று உணர்வூட்டி பேசினார்.

சிறை சென்ற தோழர்களின் அனுபவங்களைத் தொடர்ந்து வழக்கறிஞர் தோழர் மில்டன் பேசினார். அவரது உரையில்;

வழக்கறிஞர் தோழர் மில்டன்

“ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் லட்சக்கணக்கில் ஈடுபட்ட மக்களுக்கு வணக்கம். போராளிகளுக்கு வரவேற்பு கொடுப்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்வதில் எனக்கு உடன் பாடு இல்லை. ஏன் என்றால் இது எங்கள் கடமை.

போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்ல மக்கள் உயிரை பணயம் வைத்தார்கள், உடல்களை வாங்க மறுத்து உறுதியாக நின்றனர். நாம் கைது சிறை NSA போன்றவற்றை வரவேற்க வேண்டும். சாதாரண மக்கள் பெரிய பெரிய போராட்டங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

சமூக விரோதி என்றால் என்னவென்றே தெரியாதவர்கள் எல்லாம் அதை பற்றி பேசுகிறார்கள் திருமுருகன் காந்தி மீது 27 வழக்குகள். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டினால் தேச துரோகம். அப்படியானல் நமக்கான அரசை நாம் தான் உருவாக்க வேண்டும்.” என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலை இயக்கத்தின் தோழர் தியாகு சிறப்புரையாற்றினார்.

தோழர் தியாகு

“சிறை சென்ற தோழர்கள் சிறைக்கு அஞ்சவில்லை இதுவே நமது போராட்டத்திற்க்கு கிடைத்த வெற்றி. வழக்கறிஞர்களுக்கு நன்றி சொல்வதல்ல செய் நன்றி, அதாவது இது போல் இன்னும் அதிகமான பணி இருக்கிறது என்பதை கூறுவதற்காகதான். அடக்கு முறை சட்டம் ஒரு புறம், சட்ட அடக்கு முறை ஒரு புறம்.

ஸ்டெர்லைட் மாடல் அடக்குமுறையை இப்பொழுது அரசு தொடர்ந்து செய்கிறது. சிறைகளை வெல்லவும் முடியும் மீறவும் முடியும், இதை நாம் ஜூலியஸ் பூசிக்கிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சிறை பற்றிய அச்சம் முதலில் நீக்கப் பட வேண்டும்.. நமக்கு உலகெங்கும் தோழர்கள் உள்ளனர். எனவே நாம் தொடர்ந்து போராட வேண்டும்.” என பேசியமர்ந்தார்.

இறுதியாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ உரையாற்றினார்;

“மக்கள் அதிகாரம் என்பதே மக்கள் தலைவர்களாக வர வேண்டும் என்பதுதான். வீரம் என்றால் என்ன என்பதை நாம் தூத்துக்குடி பெண்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். காவல் துறையை நேரடியாக எதிர் கொள்கின்றனர்.

தோழர் ராஜூ

எந்த நெருக்கடியாக இருந்தாலும் நாம் அதை எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும். போராட்டம் யார் நடத்தினார்கள் என்று மக்களே சொல்கிறார்கள், மக்களுக்கு அரசு என்பது நம் எதிரி என்பதை மட்டும் புரிய வைத்தால் போதும் மற்ற அனைத்தையும் மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

ஏனெனில் இன்று அனைத்து விவாதங்களிலும் நம்மை தவிர்க்க முடியாதவர்களாக மாற்றியது போலீசும், அரசும் தான். அதே வேலையில் நமக்கான தொண்டர்கள் அதிக அளவில் தேவை. நாம் நமது அரசியலை இன்னும் வேகமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.”என தனது உரையை நிறைவு செய்தார்.

தகவல் :
மக்கள் அதிகாரம் – தமிழ்நாடு
தொடர்புக்கு : 99623 66321

எனக்கு ஒரு புதிய பெயர் – மாநகர நக்சலைட் ! மனுஷ்ய புத்திரன்

மாநகர பயங்கரவாதி ! – மனுஷ்ய புத்திரன்

மனுஷ்ய புத்திரன்

ன்று எனக்கு ஒரு புதிய பெயர் கிடைத்தது
மாநகர நக்சலைட்
மாநகர பயங்கரவாதி

இந்த நகரம் எனக்கு
இதற்குமுன் ஏராளமான
பெயர்களைக் கொடுத்திருக்கிறது
நான் ஒரு மாநகர கவிஞன்
நான் ஒரு மாநகர அன்னியன்
நான் ஒரு மாநகர குடிகாரன்
நான் ஒரு மாநகர வந்தேறி
நான் ஒரு மாநகர சிறுபான்மையோன்
நான் ஒரு மாநகர உல்லாசி
நான் ஒரு மாநகர தொழிலாளி
நான் ஒரு மாநகர பெண்பித்தன்
நான் ஒரு மாநகர அனார்கிஸ்ட்
நான் ஒரு மாநகர பைத்தியம்
நான் ஒரு மாநகர தெய்வ நிந்தனையாளன்

அவர்கள் இப்போது சொல்கிறார்கள்
நான் ஒரு மாநகர பயங்கரவாதி என்று
நான் ஒரு மாநகர நக்சலைட் என்று
இந்தப் பெயர் புதுமையாக இருக்கிறது
கவர்ச்சியாக இருக்கிறது
எனது பிற மாநகர பெயர்கள் போல் இல்லாமல்
இந்தப் பெயர் கம்பீரமாக இருக்கிறது
அவர்கள் கோழைகள்
எல்லா அதிகாரமும்
அவர்கள் கையில் இருந்தும்
என்னைக்கண்டு அவர்கள்
பயந்து சாகிறார்கள்
எனக்கு ஒரு அபாயகரமான
பெயரைச் சூட்டிவிட்டால்
என்னை அழிப்பது
சுலபம் என்று நினைக்கிறார்கள்
நான் கரையானைப்போல
பூமிக்கடியில் பரவியிருக்கிறேன்
அவர்கள் அதிகாரத்தை
கண்ணுக்குத் தெரியாமால் அரித்துக்கொண்டிருக்கிறேன்

இன்று ஐந்து
மாநகர பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்

அதில் ஒருவன்
எரிமலைகளை
உற்பத்தி செய்யும் கவிஞன்

அதில் ஒருவன்
புனித முகமூடி அணிந்த திருடனின்
மூடு துணியை அகற்றும்
பத்திரிகையாளன்

அதில் ஒருத்தி
விவசாயிகளின் நிலத்தைக் காக்க
தெருவுக்கு வந்தவள்

அதில் ஒருவன்
நீதியைக் கற்பித்த
ஆசிரியன்

அதில் ஒருவன்
ஒடுக்கப்பட்டவர்களின் குரலை
நீதி மன்றங்களில் உரத்து முழங்கியவன்

எல்லோருக்கும் இப்போது
ஒரே பெயர்
மாநகர பயங்கரவாதி
மாநகர நக்சலைட்

இதற்கு முன்பும்
பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்
நரேந்திர தபோல்கர் என்றொரு பயங்கரவாதி
கோவிந் பன்ஸாரே என்றொரு பயங்கரவாதி
கல்புர்கி என்றொரு பயங்கரவாதி
கெளரி லங்கேஷ் என்றொரு பயங்கரவாதி
அவர்கள் ரத்தவெள்ளத்தில் மெளனமாக்கப்பட்டார்கள்

உங்களுக்கு எல்லா வாய்ப்புகளும்
தரப்படுகின்றன
முதலில் மென்மையாக எச்சரிக்கப்படுகிறீர்கள்
நீங்கள் மெளனம் காப்பதில்லை
நீங்கள் அவதூறு செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் வாயை மூடுவதில்லை
நீங்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் அபாயமற்ற விஷயங்களை நோக்கி நகர்வதில்லை
நீங்கள் பொய்வழக்கில் கைது செய்யப்படுகிறீர்கள்
நீங்கள் உங்கள் நாவை துண்டித்துக்கொள்வதில்லை
எல்லா வாய்ப்புகளும் உங்களுக்கு தரப்படுகின்றன
நீங்கள் எதையும் பயன்படுத்திக்கொள்வதில்லை
அவர்கள் என்னதான் செய்வார்கள்
கடைசியில் உங்கள் நெஞ்சில்
இரண்டு துப்பாக்கி ரவைகளை
செலுத்துகிறார்கள்
உங்களை மெளனமாக்க
அதுதான் ஒரே வழி

ஒருவரை
பயங்கரவாதியாக்க
எந்த குற்றமும் தேவையில்லை
ஒருவரை நக்சலைட்டாக்க
எந்த ஆதாரமும் தேவையில்லை
ஒரு போலி சதிக்கடிதத்தை
நூறு பிழைகளுடன் தயாரிக்கவேண்டும்
அதில் அழிக்கவிரும்புகிறவர்களின் பெயரை
வரிசையாக எழுத வேண்டும்
அதை எங்காவது தானே தெருவில்போட்டு
தானே கண்டெடுக்க வேண்டும்
இப்படித்தான் மாபெரும் தேசவிரோத குற்றங்கள்
கண்டுபிடிக்கப்படுகின்றன
மாநகர நக்சலைட்டுகள் கண்டுபிடிக்கப்படுகிறார்கள்

மாநகரத்தின் பேரிருள்
எல்லோர் முகங்களிலும் படிகிறது
அந்த இருளில் ஒளிந்திருக்கிறார்கள்
வழிபாட்டு தலங்களை இடிக்கும் பயங்கரவாதிகள்
மாட்டு மாமிசம் உண்பவர்களைக் கொல்லும்
பயங்கரவாதிகள்
உங்கள் பணத்தை செல்லாமலாக்கி
ஒரே இரவில் உங்களை தெருவில்
பித்துப் பிடித்து அலையச் செய்த பயங்கரவாதிகள்

இந்த நகரமெங்கும்
வாழ்வின் சங்கீதங்கள் இறந்துவிட்டன
பேய்களின் ஊளைச் சத்தம் மட்டுமே
எங்கெங்கும் கேட்கிறது
நள்ளிரவு சோதனைகள்
நள்ளிரவு கைதுகள்
ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள்
எதிர்த்துப் பேசும்
ஒவ்வொரு குரல்வளையாக நெறிக்கப்படுகின்றன

இந்த நாட்டில் காந்தி என்றொரு
பயங்கரவாதி இருந்தார்
இந்த நாட்டில் பகத்சிங் என்றொரு
நக்சலைட் இருந்தான்
அவர்கள் கொல்லப்பட்டார்கள்
நாங்கள் கொல்லப்படுகிறோம்
நீதியின் பாதை எப்போதும் ஒன்றுதான்
ஒடுக்குமுறையின் பாதை
எப்போதும் ஒன்றுதான்

நிராயுதபாணிகளின் கைகளில்
விலங்குகள் பூட்டப்படுகின்றன
நிராயுதபாணிகளின் நெஞ்சில்
துப்பாக்கிக்குண்டுகள் இறங்குகின்றன
இந்தக் காலம் கொடுமையானது
இதுவரை இருந்ததிலேயே
இதுதான் இதயமற்றது

எங்கும் பொழிகிறது
இரத்தத்தை உறையச் செய்யும்
கொடும் பனி

நன்றி : மனுஷ்ய புத்திரன் 

ஏன் மார்க்ஸ் புத்தகம் படிக்கிறாய் ? ஏன் பொட்டு இடவில்லை ?

பேராசிரியர் சத்யநாராயணா

“உங்கள் கணவர் ஒரு தலித். அதனால் அவர் எந்த ஒரு கலாச்சாரத்தையும் பின்பற்றுவதில்லை. ஆனால் நீங்கள் ஒரு பிராமணர்தானே, பின்னர் ஏன் நீங்கள் எந்த ஒரு நகையோ பொட்டோ அணிவதில்லை? நீங்கள் ஏன் ஒரு பாரம்பரிய மனைவியைப் போன்று உடையணிவதில்லை? மகளும் தந்தையைப் போலவே இருக்க வேண்டுமோ?”

இவை அனைத்தும் ஐதராபாத்தில் உள்ள ’ஆங்கிலம் மற்றும் அயல் மொழிகள் பல்கலைக்கழகத்தின்’ (EFLU, Hyderabad) கலாச்சாரக் ஆய்வுத்துறையின் துறைத்தலைவர் சத்திய நாராயணாவின் மனைவி பவனாவிடம் போலீசு அதிகாரி கேட்ட கேள்விகளில் சில. பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைந்திருந்த அவர்களது வீட்டில் கடந்த செவ்வாய்க் கிழமையன்று (28.08.2018) தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது நடந்த சம்பவம் இது.

எல்கர் பரிஷத் கருத்தரங்கத்திற்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலிருப்பதாகக் கூறப்படும் தொடர்பு குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த செவ்வாய்க்கிழமை 5 சமூகச் செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களுல் ஒருவரான பிரபல எழுத்தாளர் மற்றும் சமூகச் செயற்பாட்டாளருமான வரவரராவின் மகள்தான் பவனா.

புனே போலீசாலும், தெலுங்கானா சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசாலும் தமது வீட்டில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கை குறித்து சத்யநாராயணா (பவனாவின் கணவர்) கூறுகையில் அதனை ஒரு அதிர்ச்சியூட்டக்க்கூடிய அவமானப்படுத்தக்கூடிய அனுபவமாகக் குறிப்பிட்டார். போலீசு தம்மிடமும் தமது மனைவியிடமும் ஆத்திரமூட்டக்கூடிய மற்றும் முட்டாள்தனமான பல கேள்விகளைக் கேட்டதாகக் கூறுகிறார்.

இது குறித்து சத்தியநாராயணா கூறுகையில்,

”முதலில் அவர்கள் எனது மாமனாரான வரவரராவைத் தேடி வந்திருப்பதாகக் கூறினர். அவர் இங்கு இல்லாததை அறிந்த பிறகு, அவர்கள் புத்தக அலமாரிகள், அலமாரிகள் மற்றும் பரண்களிலும் தேட ஆரம்பித்தனர். என்னை மாவோயிஸ்டுகளோடு தொடர்புபடுத்தக்கூடிய ஏதேனும் கிடைக்குமா எனத் தேடுவதாக அவர்கள் கூறினர். வரவரராவ் எனது வீட்டில் எதையாவது மறைத்து வைத்திருக்கிறாரா எனக் கேட்டனர். புனே மற்றும் தெலுங்கானா போலீசைச் சேர்ந்த 20 போலீசார், காலையில் 8.30 மணியிலிருந்து, மாலை 5:30 மணி வரையில் வீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு அனைத்தையும் வாரி இறைத்தனர்.”

”ஏன் உங்கள் வீட்டில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன? அனைத்தையும் நீங்கள் படித்துவிட்டீர்களா? ஏன் இத்தனை புத்தகங்களை வாங்கியிருக்கிறீர்கள்? ஏன் இத்தனை புத்தகங்களை வாசிக்கிறீர்கள்? மாவோ மற்றும் மார்க்ஸ் குறித்த புத்தகங்களை ஏன் படிக்கிறீர்கள் ? சீனாவில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்களை ஏன் படிக்கிறீர்கள்? கத்தாரின் பாடலை ஏன் வைத்திருக்கிறீர்கள்? பூலே, அம்பேத்கரின் புகைப்படங்கள் ஏன் உங்கள் வீட்டில் இருக்கின்றன ? கடவுள் படங்கள் எதுவும் உங்கள் வீட்டில் இல்லையே ஏன்? என்று கேட்டனர்”

ஒரு போலீசு அதிகாரி புத்தகங்களைச் சுட்டிக்காட்டி, “நிறைய புத்தகங்களைப் படித்து மாணவர்களை கெடுக்கிறீர்கள்” எனக் கூறியதாகக் கூறுகிறார் சத்யநாராயணா.

மேலும் கூறுகையில் ”ஒரு தலைசிறந்த பல்கலைக்கழகத்தின் கல்வியாளராக, ஒரு பேராசிரியராக நான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் கேலிக்குள்ளாக்கப்பட்டதாகவும் உணர்கிறேன். கல்வியாளர்களாக நாங்கள் பல்வேறு வகையான புத்தகங்களைப் படிக்கிறோம். அது இடதுசாரி, வலதுசாரி, தலித் பற்றிய புத்தகங்களாக இருக்கலாம். அவர்கள் தலித் சம்பந்தப்பட்ட புத்தகங்கள், சிவப்பு அட்டை கொண்ட ஒவ்வொரு புத்தகங்கள் குறித்தும் கேள்வி கேட்டனர்.” என்று கூறினார்.

தலித் இலக்கியங்கள் குறித்த தமது ஆராய்ச்சித் தரவுகள், இணையத்தில் தாம் வாங்கிய மின்னூல்கள், இலக்கிய ஆய்வறிக்கைகள், தமது புதிய இரண்டு நூல்களுக்கான முன்வரைவுகள் உள்ளிட்டு தமது புற சேமிப்பு வன்தட்டு (External Hard Disk) மற்றும் கணிணி, மடிக்கணிணி ஆகியவற்றை எல்லாம் சேர்த்து தமது இருபதாண்டு இலக்கியப் பணிகளை மொத்தமாக போலீசு வாரிச் சென்றுவிட்டது என்று கூறினார்.

”அவர்கள் எனது கல்விப் பணியை இருபது – இருபத்தைந்து ஆண்டுகளுக்கு பின்னால் தள்ளிவிட்டனர். இதிலிருந்து நான் மீண்டுவரமுடியுமா என்பது எனக்குத் தெரியாது. கணினியில் சேமிக்கப்பட்ட அனைத்தையும் அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். அதன் பிரதி எதுவும் என்னிடம் கிடையாது. அவர்கள் எடுத்துச் சென்ற எனது ’மேக் புக் ப்ரோ’ மடிக்கணிணியில், தென்னிந்தியாவைச் சேர்ந்த 40 தலித் எழுத்தாளர்களின் எழுத்துக்களைத் தொகுத்து நான் கொண்டு வரவிருக்கும் புத்தகங்களான “No Alphabet In Sight” மற்றும் “Steel Nibs Are Sprouting” ஆகியவற்றின் மேம்படுத்தப்பட்ட முன்வரைவுகள் இருந்தன. அதனை எப்போது திரும்பத் தருவார்கள் எனக் கேட்டபோது, அதற்காக மனுச் செய்து பின்னர்தான் அதனைப் பெற்றுக் கொள்ள முடியும் எனக் கூறிவிட்டார்கள்” என்று சத்திய நாராயணா கூறினார்.

மேலும், ”கலாச்சாரப் படிப்பில் ஆய்வு முறைகளைப் பற்றிய ஒரு புதிய பாடப் பிரிவை நான் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். இதுகுறித்த கற்பித்தலுக்காக சுமார் 50 புத்தகங்களை எனது மாணவர்களுடன் மின்னஞ்சல் மூலமாகவும், இணையதள சேவைகள் மூலமாகவும் பகிர்ந்து வந்து கொண்டிருந்தேன். அத்தனை தரவுகளும் அடங்கிய வன்தட்டை (Hard Disk) அவர்கள் எடுத்துச் சென்று விட்டனர். நான் அவை அனைத்தையும் மீண்டும் திரட்டி மாணவர்களுக்குக் கற்பிக்கவே சில மாதங்கள் எடுக்கும்.” என்றார்.

போலீசாரிடம் தனது வீட்டை ஏன் அவர்கள் சோதனையிடுகிறார்கள் எனக் கேட்டபோது, தாம் வரவரராவின் மருமகன் என்பதால்தான் என போலீசு கூறியதாகக் கூறினார்.

“ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் ஒரு மதிப்புமிக்க பேராசிரியராக என்னுடைய சொந்த அடையாளத்தை அவர்கள் உதறித் தள்ளிவிட்டார்கள். என்னை வீட்டில் எதையோ மறைத்து வைத்துள்ள ஒரு குற்றவாளியைப் போல் உணரச் செய்தனர். அவர்கள் எனது மின்னஞ்சல் முகவரிகளின் கடவுச் சொற்களைக் கூறும்படி என்னை வற்புறுத்தினார்கள். அவர்கள் கேட்பதையெல்லாம் நான் செய்யவில்லையெனில், தேடுதலுக்கு நான் ஒத்துழைக்கவில்லை என அறிக்கை கொடுக்கப் போவதாகவும் திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருந்தனர். மாவோயிச சித்தாந்தத்தை ஆதரிக்கவோ அல்லது பின் தொடர்வோ வேண்டாம் என எனது மாமனாருக்கு நான் ஏன் உபதேசம் செய்யக் கூடாது எனக் கேட்டு எனக்கு வகுப்பெடுத்தனர். அவர்கள் வரவரராவுக்கு வயதாகிவிட்டதால் அவர் தற்போது ஓய்வெடுத்து சந்தோசமாக வாழ வேண்டும் எனக் கூறினர்.” என்றார் சத்யநாராயணா.

போலீசாரால் கேட்கப்பட்ட இத்தகைய கேள்விகள் குறித்து புனே இணைக் கமிஷனர் சிவாஜி போட்கேவிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் கேட்டபோது, இவையனைத்தும் தவறான குற்றச்சாட்டுகள் என்றும் இத்தகைய கேள்விகள் எதுவும் கேட்கப்படவில்லை என்றும், முறைப்படியே இந்த தேடுதல் நடவடிக்கை நடைபெற்றது என்றும் கூறினார்.

போலீஸ் கமிஷனர் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இதில் மட்டுமல்ல இந்த கைது விசாரணை நடவடிக்கை அனைத்திலும் இருப்பதை நாடே பார்த்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் அம்பேத்கர், மார்க்ஸ் படம் வைத்திருப்பதைக் கூட குற்றமாக கருதுகிறது போலீசு. பொட்டு வைக்காததையும், நகை அணியாததையும் குற்றமென கேள்வி கேட்கிறது. இது எமர்ஜென்சியை விடவும் அதிகப்படியான அடக்குமுறை! கணவர் தலித், மனைவி பார்ப்பனர் என்பதெல்லாம் இவர்களது கண்ணை உறுத்துகிறது. ஏனெனில் பார்ப்பன இந்துமதவெறியிரின் பார்வையில் சூத்திர-பஞ்சம மக்கள் மட்டுமல்ல, சாதி மறுப்பு மணம் புரிந்தோரும் கூட குற்றவாளிகள்தான். மோடி அரசின் காட்டு தர்பாரை முறியடிக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டிய தருணமிது!

– வினவு

மோடி அரசின் எமர்ஜென்சி : அருந்ததி ராய் – பிரசாந்த் பூசன் – ராமச்சந்திர குஹா கண்டனம் !

டந்த செவ்வாய் (28-08-2018) அன்று புனே போலீசு குழு பல்வேறு சமூகச் செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்று தேடுதல் நடவடிக்கை மற்றும் கைது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
இடமிருந்து, சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், வரவர ராவ், கவுதம் நவ்லகா, அருண் ஃபெரெய்ரா

சமூகச் செயற்பாட்டாளர்கள் வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கௌதம் நவ்லகா, சுதா பரத்வாஜ், ஸ்டான் சுவாமி மற்றும் வரவர ராவ், க்ராந்தி தெகுலா, நசீம், பேராசிரியர் ஆனந்த் தெல்டும்பே ஆகியோரது வீட்டில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட போலீசு, செவ்வாய் அன்று மாலையில், சுதா பரத்வாஜ், வெமோன் கான்சால்வேஸ், அருண் ஃபெரெய்ரா, கவுதம் நவ்லகா, வரவரராவ் ஆகியோரைக் கைது செய்துள்ளது போலீசு.

இந்த தேடுதல் நடவடிக்கைக்காக பெறப்பட்டுள்ள தேடுதல் ஆணையின் நகலைப் பெற்ற ஸ்க்ரோல் இணையதளம், தேடுதல் அனுமதிக்கான முகாந்திரமாக, அந்த ஆணையில் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம், ஊபா மற்றும் மக்களுக்கிடையே பகைமையைத் தூண்டிவிடுதல் ஆகிய பிரிவுகளை போலீசு குறிப்பிட்டுள்ளதை சுட்டிக் காட்டியிருக்கிறது.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
இடமிருந்து, பிரசாந்த் பூசன், மனோஜ் ஜோஷி, ராமச்சந்திர குஹா, அருந்ததி ராய், ஜூலியோ ரிபெய்ரோ, ஆகார் படேல், அஜாய் சாஹ்னி (படம்: நன்றி: Scroll.in)

இந்த தேடுதல் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

அருந்ததி ராய், எழுத்தாளர் மற்றும் செயற்பாட்டாளர்:

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்தனது இருப்பின் அவசியத்தை இழந்துவிட்டோமோ என்று அச்சத்திலும் பீதியிலும் இருக்கிற ஒரு அரசாங்கத்தின் அபாயக் குறியீடுதான், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெறும் இந்தக் கைது நடவடிக்கைகள். பசுவின் பெயரில் அடித்துக் கொல்லும் கூட்டத்தை உருவாக்குபவர்களும், மக்களை பட்டப்பகலில் கொலை செய்பவர்களும், மிரட்டுபவர்களும் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கையில், அந்த வழக்கறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், தலித் உரிமைப் போராளிகள் மற்றும் அறிவுஜீவிகள் பரிகாசிக்கத்தக்க குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பதானது, இந்தியா எதை நோக்கிச் செல்கிறது என்பதை நமக்கு சுட்டிக் காட்டுகிறது. கொலைகாரர்கள் மரியாதை செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். நீதிக்காகவோ அல்லது இந்து பெரும்பான்மைவாதிகளுக்கு எதிராகவோ யாராவது குரல் எழுப்பினால் அவர் குற்றவாளியாக்கப்படுகிறார். நடைபெற்றுக் கொண்டிருப்பவை முழுவதும் ஆபத்தானவை. தேர்தல் வரும் நேரத்தில், இது இந்திய அரசியல் சாசனத்துக்கும், நாம் அனுபவித்து வரும் அனைத்து சுதந்திரங்களுக்கும் எதிரான கவிழ்ப்பு முயற்சியே”

பிரசாந்த் பூசன், வழக்கறிஞர் மற்றும் செயற்பாட்டாளர்:

“இது முழுக்க பாசிசத் தன்மை கொண்ட நடவடிக்கை. மாற்றுக் கருத்துக்களை இல்லாமல் செய்வது மற்றும் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்துவதற்கான முயற்சி இது. இந்த செயற்பாட்டாளர்கள் அனைவருமே பொதுப் பிரச்சினைகளுக்காக அவர்கள் செலுத்திய பங்களிப்பிற்காக நன்கறியப்பட்டவர்கள். இந்த வழக்கில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்த கேள்விக்கே இடமில்லை. இது இந்த மோடி அரசாங்கத்தின் ஆணைக்கிணங்க நடத்தப்படுகிறது. இது உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

ராமச்சந்திர குஹா, எழுத்தாளர் மற்றும் வரலாற்றாளர்:

இது முற்றிலும் பயங்கொள்ளச் செய்வதாக இருக்கிறது. இது கைது செய்யப்பட்டவர்களை அச்சுறுத்துவதற்காகவும் அவர்களை அமைதிப்படுத்துவதற்காகவும் மட்டும் இவ்வாறு நடப்பதாகத் தெரியவில்லை.

சமூக செயற்பாட்டாளர்கள் கைது , அறிவிக்கப்படாத எமர்ஜென்சி , அருந்ததி ராய் கண்டனம்
ராமச்சந்திர குஹா
படம் : தாஷி தொப்க்யால்

அவர்களுக்காக சட்டரீதியான உதவி செய்ய வருபவர்களையும் அச்சுறுத்தி ஒடுக்குவதற்காகவும் செய்யப்படும் நடவடிக்கையாகத் தெரிகிறது. நீதிமன்றங்கள் இதில் தலையிட்டு சுதந்திரக் குரல்களின் மீதான இந்த துன்புறுத்தல்களையும் தலையீடுகளையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். வன்முறை மற்றும் சட்டவிரோதத்திற்கு அமித்ஷா எந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறாரோ அந்த அளவிற்கு அதிலிருந்து வெகுதொலைவில் இருப்பவர் சுதா பரத்வாஜ். ஒரு வேளை மகாத்மா இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவர் தனது வழக்கறிஞர் உடுப்பை மாட்டிக் கொண்டு சுதா பரத்வாஜுக்காக நீதிமன்றத்தில் வழக்காடியிருப்பார் என்பதில் காந்தியின் சரிதையை எழுதியவனாக எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. இதுவும் கூட மோடி அரசு காந்தியின் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்யாமல் இருந்திருக்கும் என்ற உத்தேசத்தில்தான்.

அஜாய் சாஹினி, மோதல் மேலாண்மை நிறுவனத்தின் செயல் இயக்குனர்:

பீமா கொரெகான் வன்முறை குறித்த விசாரணையில் போலீசின் தரப்பில் போடப்பட்ட வழக்குகளும், குறிப்பாக கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் மாவோயிஸ்ட் தலைவர்களுடனான தகவல் தொடர்பு ’கடிதமும்’ இட்டுக்கட்டப்பட்டவையாகவே தோன்றுகின்றன.  மத்திய ஆட்சியாளர்களிடம், இடது சாரி செயற்பாட்டாளர்களை மாவோயிஸ்டு ஆதரவாளர்களாகக் காட்டி அவர்களை அச்சுறுத்துவது அவசியம் என்ற கருத்து நிலவுகிறது. தற்போது முன்னணிக்கு வரும் நகர்ப்புற மாவோயிஸ்டுகள் என்னும் கருத்தாக்கத்தின் தயாரிப்பும் இத்தகைய பரப்புரையின் ஒரு அங்கமாகவே இருக்கிறது. இந்த வழக்குகள் எவையுமே நீதித்துறை விசாரணையில் நிற்காது. ஆனால் இந்த வழக்குகளின் நோக்கமே நீதித்துறை நடைமுறைகள்தான். இது ’விசாரணைக் காலகட்டத்தின்’ மூலம் தண்டிக்கும் ஒரு வழிமுறை. இறுதி முடிவைக் கணக்கில் கொள்ளாமல், நெடிய நீதிமன்ற நடைமுறையின் வேதனை இந்த செயற்பாட்டாளர்களைச் சிறிதுகாலம் அமைதி கொள்ளச் செய்யும். பிற செயற்பாட்டாளர்களுக்கும் சொல்லப்படவேண்டிய ‘செய்தி’ (மிரட்டல்) போய்ச் சேரும். போலீசு தொடுத்துள்ள இந்த வழக்குகள் தோல்வியடையும்போது, வழக்கம் போல, யாரும் இதற்கு பொறுப்பானவர்களாக்கப்பட மாட்டார்கள்.

இது சட்டீஸ்கரில்  மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வெகுநாட்களாக எடுக்கப்பட்டு வந்த நடவடிக்கைகளின் ஒரு நீட்சியே. இதன் தொடர்ச்சி கண்டிப்பாக எதிர்பலனளிக்கக் கூடியவையே. கருத்துரீதியான நடுநிலைக் களத்தைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. சார்பூட்டப்பட்ட சமூகம் என்றும் அமைதிக்கான வழியைக் கண்டதில்லை. எங்கு கிரிமினல் கூட்டுகளுக்கான அல்லது கிரிமினல் நடவடிக்கைகளுக்கான தெளிவான ஆதாரம் கிடைக்கிறதோ அங்கு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல, இந்த வழக்கு அத்தகைய நோக்கத்திற்காக போடப்பட்ட வழக்கு அல்ல.

மனோஜ் ஜோஷி, கண்காணிப்பாளர் ஆராய்ச்சி நிறுவனம்:

கொள்கை மற்றும் நடைமுறைப்படி யாரையேனும் கைது செய்வதற்கு  முன்னால், போலீசு முதலில் விசாரித்து, வழக்கை கட்டமைக்க வேண்டும். இங்கு வழக்கம் போல கைதுகள் விசாரணைக்கு முன்பாகவே நடக்கின்றன. சட்டத்தில் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருக்கிறதென்றால், அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரணைக்கு உதவச் சொல்லியிருக்கவேண்டும், ஆனால் இந்திய போலீசின் ’மரபை’ப் பின்பற்றி முதலில் சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்துவிட்டு, வழக்கைக் கட்டமைக்க ஏதேனும் தரவு கிடைக்குமா என தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

இங்கு கண்டிப்பாக அரசியல் விவகாரம் இருக்கிறது. பீமா கொரேகானில் தலித்துகள் மீது வலதுசாரிகள் நடத்திய தாக்குதல்கள் வன்முறைகள் தான் இதற்குக் காரணம். மராட்டிய அரசு குற்றவாளிகளைக் காப்பது போல தெரிகிறது. மாவோயிஸ்டுகள் மனித உரிமைப் பிரச்சினைகளை தங்களது நடவடிக்கைகளுக்கான கவசமாக அடிக்கடி உபயோகிப்பார்கள் என்பது குறித்து அறிந்திருக்கிறேன். எனக்கு அவர்கள் மீது பெரிய அளவிலான கரிசனம் ஏதும் கிடையாது. ஆனால் இந்த மண்ணின் சட்டத்தின் முதன்மை அனைவருக்கும் ஒன்றுதான். விசாரணை செய், குற்றம் சாட்டு, அதன் பின்னர் கைது செய்.”

ஆகார் படேல், அம்னெஸ்டி இண்டர்நேசனலின் இந்திய செயல் இயக்குனர்:

இன்றைய கைதுகளும், தேடுதல்களும், இந்த செயற்பாட்டாளர்கள், அவர்களது போராட்டங்களுக்காக குறிவைக்கப்படுகின்றனரா என்பது குறித்த குறுகுறுக்கும் கேள்வியை எழுப்புகிறது. இது தொடர்ச்சியாக நீடிக்க முடியாது. அரசாங்கம் பயமுறுத்தும் சூழலை உண்டாக்காமல், கருத்துச் சுதந்திரம், அமைதியாகக் கூடுவது, சங்கமாகத் திரள்வது ஆகியவற்றிற்கான மக்களின் உரிமையைக் காக்க வேண்டும்.

நன்றி: Scroll.in
தமிழாக்கம் : வினவு செய்திப் பிரிவு