Thursday, June 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 226

கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 5

பாகம் – 4

III. இயக்க மறுப்பியல் வகைப்பட்ட, மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்தின் பிரதிபலிப்புகள்

தோழர்களே!

இன்று உட்கட்சிப் போராட்டத்தில் காணப்படும் மூன்று திரிபுகளில் முதல் திரிபான தாராளவாதம் என்னும் திரிபை நான் விவாதிக்கப் போவதில்லை. இன்று கட்சிக்குள் தாராளவாதத் திரிபு அவ்வளவு பிரமாதமாகவில்லை என்றோ, அல்லது தாராளவாதத்தை எதிர்த்துச் சண்டையிடுவது முக்கியமானதல்ல என்றோ நான் நினைக்கவில்லை. தாராளவாதப் போக்கைப் பற்றியும் ஸ்தூலமான பிரச்சினைகளில் அதன் பிரதிபலிப்பை பற்றியும் நமது தோழர்கள் நன்கு தெளிந்திருக்கிறார்கள் என்று நான் எண்ணவில்லை என்றபோதிலும் – ஏன் பல தோழர்கள் இன்னும் முழுவதும் தெளிவுபடவில்லை என்று எண்ணியபோதிலும் நான் இன்று அந்த விசயத்தைப்பற்றி பேசப்போவதில்லை.

எனக்கு சந்தர்ப்பம் வாய்க்கும் பொழுது பிறிதொரு சமயம் பேசுகிறேன். இங்கு, தாராளவாதப் போக்கு கட்சிக்குள் சமீப காலத்தில் கொஞ்சம் வளர்ந்திருக்கிறது என்றும், சில இடங்களில் உட்கட்சிப் போராட்டத்தில் அது பிரதான போக்காக ஆகியிருக்கிறதென்றும், கட்சிக்குள் உட்கட்சிப் போராட்டம் போதிய அளவுக்கு வளர்க்கப்படவில்லை என்று மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்தக் காரணத்தினால் பல தவறான போக்குகளும் விரும்பத்தகாத வளர்ச்சிகளும் காலாகாலத்தில் திறம்பட திருத்தப்படவில்லை. கட்சிக் கட்டுப்பாடு மெள்ள மெள்ள தளரத் தொடங்கி விட்டது. இது வெகு மோசம்.

இது ஏனெனில், நமது கட்சி சமீபத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளையும், புதிய கட்சி அங்கத்தினர்களையும் கட்சிக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது; இவர்கள் பூர்ஷ்வா தாராளவாதத்தில் ஊறிப் போனவர்கள்; சித்தாந்த ரீதியிலும், அரசியல், அமைப்பு ரீதியிலும் தொழிலாளி வர்க்கத்தின் உருக்குப் போன்ற கட்டுப்பாட்டில் புடம் போடப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் அதற்கிடையில் சென்ற காலத்தில் “இடதுசாரி” தவறுகள் செய்தவர்கள். மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்திற்கு நின்றவர்கள்.

இப்பொழுது நேரெதிர் முகமாகத் திரும்பி, வலதுசாரி தாராளவாதத்தை செய்திருக்கிறார்கள். நீண்டகால ஐக்கிய முன்னணி சூழ்நிலையில், கட்சிக்குள் பூர்ஷ்வா வர்க்கம் தனது செல்வாக்கை பிரயோகிப்பதற்கு சந்தர்ப்பம் அதிகரித்திருக்கிறது. கட்சிக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் எதிர்ப்புரட்சிக்காரர்கள், கட்சியில் தாராளவாதத்தை வளர்ப்பதற்கு எல்லா முறைகளையும் கையாண்டுள்ளார்கள். கட்சி உணர்வை உறுதிப்படுத்தும் வேலைக்கு நாம் நிகழ்த்தும் போராட்டத்தில் இந்த போக்கு பலமாக எதிர்க்கப்பட வேண்டும்.

உதாரணமாக, சில தோழர்கள் திருப்பிக் குற்றஞ் சாட்டப்படுவர் என்பதற்காக பயந்து கொண்டு மற்ற தோழர்களின் குறைகளைப் பற்றி ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறார்கள். ஒருவருடைய தவறை ஒருவர் மறைத்து வைக்கும் பொருட்டு தங்கள் நெருங்கிய நண்பர்களின் குற்றங்களை சுட்டிக் காட்ட மாட்டார்கள்; ஒருவரைப் பற்றி நேருக்கு நேர் பேச மாட்டார்கள்; ஆனால் அவருக்குத் தெரியாமல் பிறரிடம் பொறுப்பில்லாத முறையில் பலதும் பேசுவார்கள். பொறுப்பற்ற முறையில் விமர்சிப்பது, முணுமுணுப்பது, வம்பளப்பது முதலான போக்குகள் கட்சிக்குள் நிறைய இருந்து வருகிறது.

மேலும் சமீப காலத்தில் கட்சிக்குள் இன்னுமொரு மிக மோசமான போக்கு தலை தூக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கோஷ்டியைச் சேர்ந்த நபர்கள், தங்கள் குறைபாடுகளையும், குற்றங்களையும் கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களிடத்திலோ மற்றவர்கள் புகார் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றச்சாட்டுகள் கொண்டுவந்துவிடுவார்களோ என்று குலை நடுங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒருபுறத்தில் அவர்களுக்கே தெரிந்திருக்கும் அதே தவறுகளை அவர்களால் செய்யாமலிருக்க முடியவில்லை ; மறுபுறத்தில் அவர்கள் குற்றங்குறைகளைப் பற்றி கட்சிக்கு, அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கு மற்ற தோழர்கள் தெரிவிப்பதையோ, கூட்டங்களில் விமர்சனம் செய்வதையோ தடுக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் சில தவறான, முறையற்ற காரியங்களைச் செய்திருக்கிறார்கள். பிழைகள் செய்திருக்கிறார்கள்; குற்றங்குறைகளைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதற்கு இஷ்டமில்லை! தங்கள் வியாதியை மறைத்துக் கொள்ளுகிறார்கள்; தங்கள் வியாதியை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்; தங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதின் மூலம்தான் அத்தகைய குற்றங்களைத் திருத்த முடியும் என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை . அவர்கள் தங்கள் குற்றங்களை பூலோகத்திலுள்ள பொக்கிஷங்களைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது போல, மேல் பூச்சுப்பூசி, மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.

இக்காரணத்தினால் தங்கள் குற்றங்களை மற்றவர்கள் சரியாகப் பார்க்காமல் தடை செய்வது மட்டுமல்ல, அவர்களுக்கு வாய்ப்பூட்டு போடவும் முயலுகின்றனர். கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கோ தங்கள் தவறுகளைப் பற்றி புகார் செய்யவிடாமல் தடை போடுகின்றனர்; முற்றிலும் முறையான அமைப்பு வழிகள் மூலம் கட்சிக்குள் விமர்சனம் செய்யவும், எடுத்துப் பேசவும் மற்றவர்களுக்குள்ள உரிமையை இவ்வாறு இழக்கச் செய்கின்றனர். “மேலுள்ளவர்களுக்கு நீ புகார் செய்வாயாகில் பின் நீ கவலைப்பட வேண்டி வரும்; சரியான உதை கொடுப்பேன். ஜாக்கிரதை! ஏ! அடி தாங்கி” என்று மற்ற தோழர்களை பயமுறுத்துகிறார்கள். மேலுள்ளவர்களுக்கு இவர்களது குற்றங்களைப் பற்றி புகார் செய்து பேசிய தோழர்களை ஒரேயடியாக வெறுக்கின்றனர். அதை எண்ணி மனம் நோகின்றனர். பழிக்கு பழி வாங்க வேண்டுமென்று சிந்திக்கின்றனர். இவையெல்லாம் கட்சி அங்கத்தினரின் உணர்வை அறவே இழந்து நிற்கும் நிலையின் தீய அறிகுறிகளாகும். கட்சிக்குள் தாங்கள் தீய காரியங்களை செய்யும் பொருட்டு கட்சியின் தலைமைக் கமிட்டிகளுக்கும் சாமானிய கட்சி அங்கத்தினர்களுக்கும் உள்ள இணைப்பைத் துண்டிக்க முயலுகின்றனர். கட்சியிலிருந்து இந்தப்போக்கு கண்டிப்பாக விலக்கப்பட வேண்டும்.

படிக்க :
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
♦ வர்க்கப் போராட்டத்தின் பிரதிபிம்பமே உட்கட்சிப் போராட்டம்

மற்ற கட்சி அங்கத்தினர்கள் தவறுகள் செய்தாலும் அல்லது கட்சிக்கு பாதகமான காரியம் ஏதும் செய்தாலும் சரி, கட்சி அங்கத்தினர் அதை காண நேர்ந்தால் கட்சிக்கும் அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கும் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இத்தகைய அறிக்கை கொடுக்காமலிருப்பது தவறு; அறிக்கை கொடுப்பது முற்றிலும் சரியானது.

கட்சிக்கோ அல்லது மேலுள்ளவர்களுக்கோ மற்றவர்கள் அறிக்கை கொடுப்பதை தடுப்பது என்பது சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது; கட்சியில் என்றுமே அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய அறிக்கைகள் கிடைத்தால், மேல் கமிட்டிகள், என்ன நடந்தது என்பதை நுட்பமாகத் துருவி ஆராய்ந்து, வழக்கை வெகு கவனமாக விசாரிக்க வேண்டும்; சம்பவத்தைப் பற்றிய ஒருதலைப்பட்சமான தகவலை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு தீர்ப்பு செய்யாமலிருக்க வேண்டும்.

இன்று கட்சிக்குள் சித்தாந்த ரீதியான போராட்டம் முறையாகத் துவக்கப்பட வேண்டும் என்று நாங்கள் ஏற்கெனவே முடிவு செய்துள்ளோம். அதனால் நாம் தாராளவாதத்தை எதிர்க்க வேண்டும். குறிப்பாக பெரும் தாராளவாதத் தவறுகள் இழைக்கப்பட்ட சில கட்சி உறுப்புகளில், அத்தகைய தவறுகளைத் திருத்திக் கொள்வதற்கு, உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தாராளவாதத்திற்கு எதிராக நாம் ஸ்தூலமான போராட்டம் நடத்த வேண்டும்.

பல வருஷங்களுக்கு முன்பு தாராளவாதத்தைக் கண்டித்து தோழர் மாசேதுங் ஒரு கட்டுரை எழுதினார்; அதில் கட்சிக்குள் காணப்படும் பதினேழுவிதமான தாராளவாதப் பிழைகளை விவரித்துள்ளார். இன்றைக்கும் அவரது கட்டுரை பொருந்தும்; அதை நீங்கள் வெகு கவனமாக படிக்க வேண்டும். அந்தக் கட்டுரையின்படி தாராளவாதத்தை எதிர்த்துப் போராடவும், திருத்திக் கொள்ளவும் முயல வேண்டும். அதே சமயத்தில் கட்சி கட்டுவது பற்றிய வகுப்பிலும் தாராளவாதம் பற்றி பூரண விவாதம் நடத்தப்படும். அதனால்தான் இன்று அந்த விசயத்தை நான் எடுத்துக் கொள்ளவில்லை; நான் பேசப்போவது இரண்டாவது, மூன்றாவது திரிபுகளாகும்; ஏனெனில் இந்த இரண்டு திரிபுகளையும் கட்சிக்குள் யாருமே இதுவரை முறைப்படுத்தி விவாதித்ததில்லை.

(தொடரும்)

நவம்பர் 7 : வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை || புரட்சிகர கலை நிகழ்ச்சிகள் !

சென்னை – திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு, பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் நவம்பர் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

தோழர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என சுமார் 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் மற்றும் தோழர்கள் பங்கு கொண்டு பாஜகவின் வேல் யாத்திரை முதல் வேளாண் மசோதா வரை அனைத்தையும் அம்பலப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பாருங்கள் ! பகிருங்கள் !!

செயற்பாட்டாளர்களை சிறையில் நீர் பருகக் கூட விடாமல் துன்புறுத்தும் மோடி அரசு !

பீமா கொரேகான் வழக்கில் மாவோஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி சிறையிலடைக்கப்பட்டிருக்கும் பழங்குடி மனித உரிமை செயற்பாட்டாளரும் 83 வயது முதியவருமான பாதிரியார் ஸ்டான் சுவாமிக்கு பிணை தர ஏற்கெனவே சிறப்பு நீதிமன்றம் மறுத்திருந்த நிலையில், அவரது உடல்நிலை கருதி அவருக்கு தண்ணீர் குடிப்பதற்கான உறிஞ்சியை வழங்குவதற்குக் கூட  அனுமதியளிக்காமல் இழுத்தடிக்கிறது என்.ஐ.ஏ.

83 வயதாகும் ஸ்டான் பாதிரி கடந்த 40 ஆண்டுகளாக ஜார்கண்ட் காடுகளில் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடி வந்தார். பீமா கொரேகான் வழக்கு தொடர்பாக அக்டோபர் 8-ம் தேதி அவரது வீட்டிலிருந்து கைது செய்யப்பட்டு தற்போது சிறை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அக்டோபர் 22-ம் தேதி அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு பிணை கோரிய வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.

நடுக்குவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் கிட்டத்தட்ட கேட்கும் திறனை இழந்து விட்டிருக்கிறார். சிறையிலும் பலமுறை கீழே விழுந்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை சிகிச்சை மேற்கொண்டிருப்பதால் அடிவயிற்றுப்பகுதியில் இதனால் அவருக்கு வலி ஏற்பட்டிருக்கிறது.

அதை தொடர்ந்து, நடுக்குவாத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதால் தன்னால் தண்ணீரை கூட கையால் பிடித்து குடிக்க முடியவில்லை என்றும், உறிந்து குடிப்பதற்கு உறிஞ்சி (Straw) மற்றும் சிப்பர் வேண்டும் என்று கேட்டு ஸ்டான் சுவாமி விண்ணபித்திருந்தார். இது குறித்து தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில், இது குறித்து முடிவெடுக்க 20 நாள் காலக்கெடு கேட்டுள்ளது.

படிக்க :
♦ இன்று ஸ்டான் சுவாமி, நாளை நாம் !
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !

ஒரு உறிஞ்சி (Straw) வழங்குவது குறித்து முடிவெடுக்க 20 நாட்கள் கேட்பது குறித்து துளியும் யோசிக்காமல், 83 வயது முதியவரின் உயிர்வாழ்வதற்கான உரிமையைக் கூட உறுதிபடுத்துவதைப் பற்றி யோசிக்காமல், அதற்கு அனுமதியளித்துள்ளது நீதிமன்றம்.

இது குறித்துக் கூறியுள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி, “கொரொனா நோய் தொற்றுப்பரவலை முன்னிட்டு விசாரணைக் கைதிகளை விடுவிக்கலாம் என்று சட்டப்படி மாநில அளவில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரை, ஊபாவின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கும் ஸ்டான் பாதிரிக்கு பொருந்தாது” என்றும் கூறியிருக்கிறார். “சிறையில் அளிக்கப்படும் சிகிச்சை சரியில்லை என்று அவரது விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை மாறாக, அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுவதற்கான விண்ணப்பத்தையே கொடுத்திருக்கிறார் ” என்று நீதிமன்றம் வியாக்கியானமும் அளித்திருக்கிறது.

“விண்ணப்பதாரர் வயதானவர் என்ற காரணத்தால் சிறை மருத்துவமனையில் தனியறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறைச்சாலையில் சிகிச்சை கிடைக்காத அளவிற்கு அப்படி என்ன நோயினால் விண்ணப்பதாரர் பாதிக்கப்படுகிறார் என்பதை கற்பனையாக கூட விண்ணப்பத்தில் குறிப்பிடவில்லை” என்று எகத்தாளமாகவும் நீதிமன்றம் கருத்து கூறியிருக்கிறது.

பாதிரியார் ஸ்டான் சுவாமி

உடல் ரீதியான கடுமையான பிரச்சினைகளோடு வாழ்ந்துவரும் பேராசிரியர் சாய்பாபா, வரவரராவ் உள்ளிட்டவர்களுக்கும் முறையான சிகிச்சையையும் அடிப்படை வசதிகளையும் மறுத்துள்ளது நீதிமன்றம்.  சமூகச் செயற்பாட்டாளர்களை, மனித உரிமைப் போராளிகளை ஆதாரமற்ற வழக்குகளில் ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்து, விசாரணைக் கைதிகளாகவே அவர்களை வாழ்நாள் முழுவதும் சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதையேசெயற்பாட்டாளர்களை முடக்குவதற்கான உத்தியாகவும், பிற சமூகச் செயற்பாட்டாளர்களை இதனைக் காட்டி மிரட்டும் உத்தியாகவும் செய்து வருகிறது.

பாசிசம் என்பது வெறும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கீழ் உள்ள இந்துத்துவக் கும்பலிடம் மட்டுமல்ல, அது அரசின் அத்தனை உறுப்புகளிலும் பரவி நீக்கமற நிறைந்திருப்பதையே என்.ஐ.ஏ-வின் 20 நாள் கோரிக்கையும், அதை அனுமதித்த நீதிமன்றத்தின் நடவடிக்கையும் காட்டுகிறது.

நம் அடிப்படை உரிமைகளுக்காக போராடும் சமூகச் செயற்பாட்டாளர்களை, தீவிரவாதிகளாகச் சித்தரித்து சட்டவிரோதமாகச் சித்திரவதை செய்யும் இந்தக் கும்பலின் அடுத்த தாக்குதலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள என்ன செய்யப் போகிறோம் ?


ஆறுமுகம்
நன்றி : The Wire

உட்கட்சிப் போராட்டத்தின் 3 முக்கியத் திரிபுகள் || லியூ ஷோசி

உட்கட்சிப் போராட்டம் || பாகம் – 4

பாகம் – 3

மது உட்கட்சிப் போராட்டம், கோட்பாடு பற்றிய போராட்டம்; இந்தக் கோட்பாட்டுக்கு அல்லது அந்த கோட்பாட்டுக்கு நிகழ்த்தும் போராட்டம்; இந்த போராட்டத்தின் அல்லது அந்த போராட்டத்தின் இலட்சியத்தை வரையறுத்துக் கூறும் போராட்டம். இலட்சியத்திற்கு இட்டுச் செல்ல இந்த அல்லது அந்த போராட்ட வடிவத்தை தேர்ந்தெடுப்பதற்கான போராட்டம் என்று நமது தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை.

அவ்வப்போதைய கொள்கை விசயத்தில், பூரணமாக நடைமுறைத் தன்மை கொண்ட பிரச்சினைகளில் கட்சிக்குள் இருக்கும், நம்முடன் மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களுடன் நாம் ஒப்பந்தத்திற்கு வரமுடியும்; வரவும் வேண்டும் என்று இந்தத் தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை. கோட்பாடு சம்பந்தப்பட்ட  – பிரச்சினைகளில், நமது போராட்டங்களின் இலட்சியத்தை வரையறுத்துக் கூறும் பிரச்சினைகளில், அத்தகைய இலட்சியத்தை அடைவதற்கு முடிவு கட்ட வேண்டிய போராட்ட வடிவ விசயத்தில், கட்சிக்குள் தங்களுடன் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களை எதிர்த்து வளைந்து கொடுக்காமல் போராட வேண்டும் என்றும், ஆனால் வழக்கிலிருந்து வருகின்ற கொள்கைப் பிரச்சினைகளிலும், பூரணமாக செயல்முறைத் தன்மை படைத்த பிரச்சினைகளிலும், அவை பொறுத்தமட்டில் கோட்பாடு சம்பந்தப்பட்ட மாறுபாடு எழாதமட்டிலும் கட்சிக்குள் அவ்விசயங்களில் தங்களுடன் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களுடன் விட்டுக் கொடுக்காமல் போராடுவதற்கு பதிலாக அவர்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்றும் அவர்களுக்கு தெரியவில்லை; புரியவுமில்லை.

லெனின், ஸ்டாலின் கட்சியில் குறிப்பாக இதுதான் பரம்பரையான வேலைமுறை; ஆயினும் நமது தோழர்கள் பலர் இதை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. ஒத்துப் போகவேண்டிய பிரச்சினைகளில் விடாப்பிடியாகப் போராட்டம் நடத்துகின்றனர்; இதன் விளைவாக அவர்கள் சண்டை போடாத பிரச்சினையே கிடையாது; அவர்கள் சண்டை போடாத நேரம் கிடையாது; அவர்கள் சண்டை போடாத ஆள் கிடையாது. அவர்களுடன் மாறுபட்டவர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடினார்கள்; எல்லோரையும் ஒரேவிதமாக எதிர்த்தார்கள்; எதிலும் விட்டுக் கொடுப்பதில்லை; எப்பேர்ப்பட்ட நிலைமையானாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்; எவ்வித மாறுபாடானாலும் அதை விரோதமானதாகவே பாவித்தார்கள்; எதிர்ப்பதுதான் எல்லாம் என்று நம்பினார்கள்; அவர்களுடைய வரையறையற்ற தன்மை இதில்தான் அடங்கியிருக்கிறது.

கோட்பாடு என்றால் என்ன? எந்த பிரச்சினைகள் கோட்பாடு சம்பந்தப்பட்டவை? கட்சியின் போர்த்தந்திர, செயல்தந்திரக் கொள்கைகள் என்ன என்பதை பல தோழர்கள் புரிந்து கொள்ளவில்லை. கோட்பாடு, போர்த்தந்திரத் திட்டம், செயல்தந்திரக் கொள்கை சம்பந்தப்பட்ட மாறுபாடுகளை உள்வாங்கிக் கொண்டு எப்படி போராட்டத்தை நடத்துவது என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை; தத்துவத்தில் அவர்களுடைய பயிற்சி மிகவும் குறைவாக இருந்தது; அரசியல் அனுபவமும் குறைவே. பெரிய அளவு முக்கியத்துவம் கொண்ட பிரச்சினைகளை அவர்களால் இன்னும் உள்வாங்கிக் கொண்டு, அந்த பிரச்சினைகள் மீது போராட்டம் நடத்த முடியவில்லை.

ஆயினும் உட்கட்சிப் போராட்டம் இருந்தாக வேண்டும். முக்கியமான பிரச்சினைகள் பற்றி போராட்டம், வாக்குவாதம் நடத்தாமலிருப்பதும் சம்பந்தப்பட்ட கோட்பாட்டின் அடிப்படையிலும்; கண்ணோட்டத்திலும் பிரச்சினைகளை கிளப்பாமலிருப்பதும் தவறு என்ற விசயத்தை மட்டும், ஒரே வறட்டுத்தனமாக மனப்பாடம் செய்து கொண்டு அதோடு அவர்கள் போராட விரும்பினார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட சம்பவங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் மட்டுமே அவர்கள் கண்ணில் படுவதினாலும், மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களுடன் கட்சிக்குள் அர்த்தமற்ற, கோட்பாடற்ற போராட்டங்கள், வாக்கு வாதங்கள் நடத்துவதினாலும் தோழர்கள் மத்தியில் வேற்றுமை, பரஸ்பரப் பூசல், அமைப்பு பிளவுகள் முதலியன ஏற்பட நேருகிறது. இத்தகைய தீய போக்குகள் நமது உட்கட்சிப் போராட்டத்தில் இருந்தன.

மேலே குறிப்பிட்டது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்டத்தில் உள்ள ஒருவகை திரிபு; சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் காணும் படு மோசமான திரிபு; (இத்தகைய திரிபு மற்ற நாட்டுக் கட்சிகளில் காணப்பட்ட போதிலும்) வரம்பின்றி, அளவுக்கு மிஞ்சி அதிதீவிரமாக நடத்தப்படும், மற்றொரு கோடிக்கு இழுத்தும் செல்லும் – அதாவது உட்கட்சிப் போராட்டத்திலும், கட்சி அமைப்பு விசயத்திலும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதத்திற்கு இட்டுச் செல்லும் – உட்கட்சிப் போராட்டமாக அமையும் (அது கட்சிக்குள் ஜனநாயகத்தை மறுக்கிறது. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் ஒற்றுமையின் அடிப்படையில் உட்கட்சி சமாதானத்தை நிராகரிக்கிறது, தொழிற்சங்கங்களின், மற்ற பொதுமக்கள் அமைப்புகளின் ஓரளவு சுயேச்சையையும் மறுக்கிறது; கட்சி அங்கத்தினர்களின் தனிப்பட்ட குண சிறப்பு, முன்கை எடுக்கும் குணம், ஆக்கல் திறமை முதலியன மறுக்கப்படுகிறது.) இந்தத் திரிபு சீனக் கட்சியின் விசேஷ சுற்றுச் சார்பினாலும் நிலைமையினாலும் எழுந்துள்ளது.

பல சீனத்தோழர்கள் தோழர் லெனின், அக்டோபர் புரட்சிக்குப் பின் தோன்றிய “இடதுசாரி” சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து நிகழ்த்திய கோட்பாடுள்ள போராட்டத்தை கவனிக்கவில்லை என்ற விசயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து ரஷ்யக் கட்சியில் “இடதுசாரி ” கம்யூனிஸ்டு கோஷ்டி தோன்றிற்று. இந்த கோஷ்டி பிரெஸ்ட் – லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கையை, எதிர்த்தது; பின்னர் தொழிற்சங்க விசயத்திலும் தகராறு இருந்தது. அக்டோபர் புரட்சிக்கு முன்பு “இடதுசாரி” தோற்றத்துடன் ஆட்ஸேவிஸ்டுகள் கோஷ்டி ஒன்று போல்ஷ்விக் கட்சிக்குள் இருந்து வந்தது. ஆனால் இந்த கோஷ்டி விரைவில் தோற்கடிக்கப்பட்டது; பிரெஸ்ட் – லிட்டோவ்ஸ்க் சமாதான உடன்படிக்கை ஏற்பட்ட சமயத்தில் “இடதுசாரி” கம்யூனிசத்தினால் சிருஷ்டிக்கப்பட்ட நிலைமையைப் போன்று அன்று நிலைமை அவ்வளவு மோசமாகப் போய்விடவில்லை; ஆனால் “இடதுசாரி” கம்யூனிசத்தையும் லெனின் கொஞ்ச காலத்தில் தோற்கடிக்கத்தான் செய்தார்.

ஆனால் “இடதுசாரி” கம்யூனிசம் மீண்டும் மேலைய ஐரோப்பிய நாடுகளில் தலைதூக்கிற்று. “சமரசமில்லை ” என்ற கோஷத்தைக் கிளப்பிற்று; பார்லிமெண்டுகளில் பங்கு எடுத்துக் கொள்வதை எதிர்த்தது; எல்லாவிதமான சட்டப்பூர்வமான போராட்டங்களையும் எதிர்த்தது; சமூக ஜனநாயகக் கட்சிகளின் “இடதுசாரி” பகுதிகளுடன் அவசியமான ஒப்பந்தங்கள் செய்து கொள்வதை எதிர்த்தது; இந்த சூழ்நிலையில்தான், 1920ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இத்தகைய போக்குகளைத் திருத்துவதற்கு “இடதுசாரி கம்யூனிசம்; இளம்பிள்ளைக் கோளாறு“ என்ற புத்தகத்தை லெனின் எழுதினார்.

அக்டோபர் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு, தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்பதில் இதற்கு முன்னர் நம்பிக்கை இல்லாதவர்கள் கண்முன் உண்மையான யதார்த்தம் நின்றது. இந்த விசயம் வலதுசாரி சந்தர்ப்பவாதத்திற்கு மரண அடி கொடுத்தது.

இந்த சூழ்நிலையில்தான் “இடதுசாரி” சந்தர்ப்பவாதம் பிறந்தது; இதன் வாதமென்னவெனில் புரட்சி சுற்றி வளைத்த பாதைகள் வழியே போக வேண்டியதில்லை; வெற்றி நினைத்த மாத்திரத்தில் கைகூடும் என்பதேயாகும்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகைய கருத்துக்கள் நிலவின; சில கால கட்டங்களில் கட்சியில் மேலோங்கி நின்ற கருத்துக்களாகவும் விளங்கி வந்துள்ளன. அத்தகைய தவறுகள் செய்பவர்கள், “இடதுசாரி கம்யூனிசம்; இளம் பிள்ளைக் கோளாறு” எனும் லெனின் எழுதிய முக்கிய நூலை அறவே அலட்சியம் செய்தார்கள். அரசியல் ரீதியில் வளைந்து நெளிந்து போவதையும் காத்திருப்பதையும் எதிர்க்கிறார்கள். முன்னணியிலுள்ள ஒரு சிறுபான்மையினர், பரந்த பொதுமக்கள் இன்னும் இவர்கள் அடைந்த நிலைமையை எட்டிப் பிடிக்கவில்லை என்ற விஷயத்தை பொருட்படுத்தாமல் வீரச் செயல் வாதமுறையில் முன்னேறித் தாக்கும் தாக்குதலை தொடுக்கலாம் என்று அவர்கள் ஒரே சாதனையாக சாதித்தார்கள், இதை மற்றவர்கள் எதிர்த்ததால் அவர்களை “வலதுசாரி சந்தர்ப்பவாதத்தில் ” மூழ்கிக் கிடப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.

அமைப்பு விசயங்களில் எழும் வலதுசாரி, “இடதுசாரி” திரிபுகள், அரசியல் பிரச்சினைகளிலுள்ள வலதுசாரி, “இடதுசாரி” திரிபுகளிலிருந்து தோன்றுகிறது; சீனக் கம்யூனிஸ்ட் கட்சி சில கால கட்டங்களில் வலதுசாரி, “இடதுசாரி” அரசியல் தவறுகள் செய்திருப்பதினால், அமைப்பு விசயத்திலும் கட்சி அதே தவறுகளைச் செய்திருக்கிறது. குறிப்பாக உள்நாட்டு யுத்த காலகட்டத்தில், நமது “இடதுசாரி வீரச்செயல்”வாதத் தவறுகளுக்குக் காரணமாயிருந்த அம்சம் அமைப்பு விசயத்தில் மிதமிஞ்சிய ஆவேசத்துடன் நிகழ்ந்த உட்கட்சிப் போராட்டமேயாகும்.

ஆதலின் சீனக் கம்யூனிஸ்ட் உட்கட்சி போராட்ட விசயத்தில் மூன்று விதமான திரிபுகள் உள்ளன. இந்த முறையில் அவர்களை தொகுப்பது தவறில்லையென்றும் சொல்லலாம். முதலாவது, கட்சிக்குள் தாராளவாதம் சமரசவாதமும்; இரண்டாவது இயந்திரகதியான மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டமும், அமைப்பு விசயத்திலும் உட்கட்சிப் போராட்டம் பற்றியும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதம்; மூன்றாவது, கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகளும் போராட்டங்களும்.

இந்த மூன்று திரிபுகளுக்கு இடையே உள்ளடக்கத்தில் ரொம்ப வித்தியாசம் ஒன்றுமில்லை; ஏனெனில் கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகள், போராட்டங்கள், மிதமிஞ்சிய போராட்டங்கள், தாராளவாதம் எதுவுமே மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் முறையாகாது. இவையெல்லாம் மார்க்சிய லெனினியத்திற்கு எதிர்ப்பை பிரதிபலிப்பனவேயாகும். அவற்றின் வெளித் தோற்றத்தை வைத்துத்தான் மேலே கூறிய மூன்றுவிதமாக அவை பிரிக்கப்படுகின்றன.

கம்யூனிஸ்ட் கட்சி இத்தகைய விசேசச் சூழ்நிலையில்தான் உருவாக்கப்பட்டது; அதன் உட்கட்சிப் போராட்டத்தில் எழுந்துள்ள திரிபுகளும் இத்தகைய விசேச சூழ்நிலையில்தான் எழுந்துள்ளன.

(தொடரும்)

இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

கொரானா ஊரடங்கை பயன்படுத்தி பல்வேறு ‘கல்விச் சீர்திருத்தங்களை’ மோடி அரசு செய்து வருகிறது. அதில் மிக முக்கியமானது இணையவழிக் கல்வித் திட்டமாகும். தேசியக் கல்விக் கொள்கையை ஒட்டி மே மாதம் பேசிய பிரதமர் மோடி இணையவழிக் கல்வி, இந்த கல்விக் கொள்கையின் மையமாக இருக்கும் என்றும் இணையவழிக் கல்வி, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதோடு இந்தியாவின் கல்வியை உலகத் தரத்திற்கு மேம்படுத்தும் என்றும் கூறினார்.

அதன் தொடர்ச்சியாக கடந்த ஏழு மாதங்களாகவே UGC, MHRD, NCERT மற்றும் AICTE போன்ற உயர் அமைப்புகளிலிருந்து வரும் சுற்றறிக்கைகள் பள்ளி மற்றும் உயர் கல்வியில் இணையவழிக் கல்வி முறையை முன்தள்ளுவதையே நோக்கமாக கொண்டுள்ளன. இணையவழிக் கல்வி முறைதான் மாற்றுக் கல்விமுறை என்று ஆளும்வர்க்க பிரதிநிதிகளும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். ஆனால் எதார்த்தமோ இவர்கள் கூற்றுக்கு மாறாக உள்ளது.

படிக்க :
♦ புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் என்ன ? | பேராசிரியர் அனில் சத்கோபால் | CCCE
♦ கல்வியில் பறிக்கப்படும் மாநில உரிமைகள் | பேரா. கருணானந்தன் | CCCE

பீகார், சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வு அரசுப் பள்ளிகளில் படிக்கக் கூடிய கிராமப்புற மாணவர்களில் 80% மாணவர்களுக்கு, ஊரடங்கு காலத்தில், கல்வி கிடைக்கவில்லை எனக் கூறுகிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்புகள் நடக்காததாலும் அவர்களின் குடும்ப வறுமை காரணமாகவும் கணிசமான அளவு மாணவர்கள் வேலைக்கு செல்வதாக ‘தி வயர்’ பத்திரிகை கூறுகிறது.

ஒரிசா மாநில பள்ளிக் கல்வி அமைச்சரோ, அம்மாநிலத்திலுள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் 33.33% மாணவர்கள் மட்டுமே இணையவழியில் கல்வி பெறுவதாகவும் மீதமுள்ள 66.67% மாணவர்கள் ஊரடங்கு காலகட்டத்தில் கல்வி கிடைக்கவே இல்லை என்றும் கூறுகிறார். உயர்கல்வியின் நிலையோ இன்னும் கேலிக்கூத்தானது. அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழி கல்விக்கான எவ்வித கட்டமைப்பு வசதிகளும் இல்லை. இவற்றில் மாணவர்களின் வருகைப் பதிவே 40% க்கும் குறைவுதான். தனியார் கல்லூரிகளின் நிலையை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறோம்.

இவையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக தெரியவருகின்ற செய்திகள். இணையவழிக் கல்விமுறை பயன்படுத்தி கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களை கல்வியிலிருந்தே விலக்கி வைத்துள்ளது மோடி அரசு. கணிணிகளும் இணையவசதிகளும் இந்தியக் குடும்பங்களில் பரவலாக இல்லை என்பது அரசுக்குத் தெரியும். தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.

கடந்த எட்டு மாதகால அனுபவமோ மோடியின் கூற்றைப் பொய் என நிருபித்துள்ளது. இணையவழிக் கல்வி கிராமப்புற-ஏழை மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றி இருக்கிறதே ஒழிய அது கல்வியின் தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் ஆளும் வர்க்கமோ இணையவழிக் கல்வியை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறது.

உதாரணமாக இணையவழியில் பட்டப்படிப்புகளை வழங்குவதற்கான அனுமதியை சில கல்லூரிகளுக்கு UGC சமீபத்தில் வழங்கியுள்ளது. இதற்குப் பின்னால் தனியார் கல்வி முதலாளிகள், இணையதள நிறுவனங்கள், கல்வி தொழில் நுட்ப நிறுவனங்கள் மற்றும் நிதி மூலதனங்களின் நலன்களே ஒழிந்துள்ளன.

இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் என்ற தலைப்பில் மேனாள் மதுரைக் கல்லூரி முதல்வர் பேரா.இரா. முரளி அவர்கள் பொதுக் கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழுவின் முகநூல் பக்கத்தில் 10.11.2020 அன்று மாலை 6.30 மணிக்கு நேரலையில் சிறப்புரையாற்றுகிறார்.

Zoom Meeting ID : 857 3356 3148
Passcode : 921647
Facebook ID : Cordination Commitee for Common Education- Tamil Nadu

பங்கேற்கத் தவறாதீர்கள் !

பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – தமிழ்நாடு
உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் – தமிழ்நாடு
9444380211, 9600582228, 9443852788

முதலாளித்துவ சுரண்டலுக்குத் தீர்வு சோசலிசமே | தோழர் ஆ.கா. சிவா உரை

திருவள்ளூர் மேற்கு மாவட்ட புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைமையில் நடைபெற்ற நவம்பர் புரட்சி தினத்தை முன்னிட்டு, பட்டாபிராமில் நவம்பர் 7 அன்று மாலை 6 மணியளவில் ரஷ்ய சோசலிசப் புரட்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் திரளான தோழர்கள், தொழிலாளர்கள், பொதுமக்கள் என சுமார் 250-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் காண்ட்ராக்ட் தொழிலாளர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் ஆ.கா. சிவா சிறப்புரையாற்றினார்.

தனது உரையில், முதலாளித்துவம் கொல்லும்; கம்யூனிசமே வெல்லும் என்கிற முழக்கத்தை தற்போதைய பேரழிவுகளோடு பொருத்தி விவரித்தார்.
முதலாளித்துவம் சொர்க்கமல்ல; அது ஒரு நரகம் என்பதை கொரோனா பெருந்தொற்று மீண்டும் ஒருமுறை நிரூபித்திருப்பதையும், முதலாளித்துவ பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட சோசலிசம்தான் ஒரே மாற்று – ஒரே தீர்வு என்பதையும் எடுத்துரைத்த தோழர் சிவா, சோசலிச இலட்சியத்தை நோக்கி நமது பாதையை வகுக்க அறைகூவல் விடுத்தார்!!

பாருங்கள் ! பகிருங்கள் !!

நிருபர் மோசஸ் படுகொலை : கஞ்சா வியாபாரிக்கு துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு || மக்கள் அதிகாரம்

PP Letter head09.11.2020

கஞ்சா வியாபாரிகளால் தமிழன் தொலைக்காட்சி
நிருபர் மோசஸ் படுகொலை!

துணை போன போலீசு மீது நடவடிக்கை எடு!
மக்கள் அதிகாரம் கண்டனம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியில் நடைபெறும் கஞ்சா வியாபாரம் குறித்து செய்தி வெளியிட்ட தமிழன் தொலைக்காட்சியின் நிருபர் மோசஸ் கஞ்சா வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கஞ்சா பற்றிய செய்தி வெளியிட்ட பின்னர் பல கஞ்சா வியாபாரிகளும் ரவுடிகளும் நிருபர் மோசஸ்க்கு போன் செய்து கொலை மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதுபற்றி போலீசில் புகார் அளித்த போதும் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருந்திருக்கிறது. இதன் விளைவாக நேற்று அவர் கொல்லப்பட்டிருக்கிறார். நிருபர் மோசஸ் உயிருக்குப் பாதுகாப்பு அளிக்காததன்மூலம் கொலையாளிகளுக்கு போலீசு துணை போயிருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட மோசஸ்

உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

மோசஸ் அவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நட்ட ஈடு வழங்க வேண்டும்.

மக்கள் நலன் கொண்டு தன்னலம் பாராமல் செய்திகளை அச்சமின்றி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் ரவுடிகளாலும் போலீசாலும் தொடர்ச்சியாக பல இடங்களில் தாக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள். இதற்கு எதிராக அனைத்து கட்சிகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்துப் போராட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்களின் உயிருக்கும் உடைமைக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய சமூக விரோதிகளையும் ரவுடிகளையும் மக்கள் ஒன்றிணைந்து விரட்டியடிக்க வேண்டும்.


தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 9962366321

கடலூர் செல்வமுருகன் படுகொலை : கொலைகார போலீசை கைது செய் || மக்கள் அதிகாரம்

PP Letter headபத்திரிகை செய்தி

07-11-2020

கடலூர் மாவட்டம் செல்வமுருகன் படுகொலை!
கொலைகார போலீசை கொலை வழக்கில் கைது செய் !
மாஜிஸ்திரேட்டை பணி நீக்கம் செய் !

கடலூர் மாவட்டம் காடாம்புலியூரைச் சேர்ந்த செல்வமுருகன் என்பவர் திருட்டு வழக்கு ஒன்றிற்காக நெய்வேலி போலீசால் அழைத்துச் செல்லப்பட்டு லாட்ஜ் உட்பட பல இடங்களில் அடைத்து வைக்கப்பட்டு கொடும் சித்திரவதைகள் செய்யப்பட்டு இருக்கிறார். சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் இறந்திருக்கிறார்.

போலீசால் கொலைசெய்யப்பட்ட செல்வமுருகன்

கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருக்கக் கூடிய செல்வ முருகன் 10 பவுன் நகையை திருடினார் என்று கூறி, உடனே 10 பவுன் நகையை கொடுத்து விடு உன் கணவனை விட்டுவிடுகிறோம் என்று செல்வமுருகனின் மனைவியை மிரட்டியிருக்கிறது போலீசு.

உச்சநீதிமன்றம் ஒரு நபரை கைது செய்வதற்கு 11 கட்டளைகளும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால் எங்கேயும் அந்த கட்டளைகள் பின்பற்றப்படுவதில்லை. ஏழு ஆண்டுகளுக்குள் தண்டனை இருக்கக்கூடிய குற்ற வழக்குகளில் ரிமாண்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கூறியிருந்தாலும் பெரும்பாலான மேஜிஸ்ட்ரேட்டுகள் அதை பின்பற்றுவதில்லை .

காவல் நிலைய கொட்டடி படுகொலைகளில் இந்தியாவிலேயே தமிழகம்தான் முதலிடத்தில் இருக்கையில், ஒருபுறம் காவல்துறை உங்கள் நண்பன் என்பது யாரை ஏமாற்றுவதற்காக?

படிக்க :
♦ சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

♦ கர்ப்பிணிப் பெண் உஷாவைப் படுகொலை செய்த திருச்சி போலீசு !

சாத்தான்குளம் இரட்டை படுகொலைகளுக்கு எதிராக தமிழகமே கொதித்து எழுந்தது. ஆனாலும் இன்றுவரை போலீஸின் கொட்டடி படுகொலைகள் நின்றபாடில்லை என்பதைத்தான் செல்வமுருகனின் சித்திரவதைப் படுகொலை நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

ஒரு காவல் நிலையத்தில் சித்திரவதை – படுகொலை நடைபெறுகிறது என்றால் அந்தக் காவல் நிலையத்தில் பணி புரிந்த அனைத்து காவலர்களும் தண்டிக்கப்பட வேண்டும்.
தொடர்புடைய போலீஸ்காரர்கள் உடனே கொலை வழக்கில் கைது செய்யப்பட வேண்டும். ஆனால் கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் எட்டி உதைத்து படுகொலை செய்த ஒரு போலீசை கைது செய்வதற்கே மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டிய மோசமான ஒரு சூழலில் தான் நாம் இருக்கிறோம் .

செல்வமுருகன் படுகொலையில் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று அரசு ஒப்புக் கொள்வதற்கு நான்கு நாட்கள் போராட வேண்டியதாகிறது.

பன்னாட்டு ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிராக போராடிய தூத்துக்குடி மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி அவர்களை கொன்ற போலீசு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் உண்மை.

செல்வமுருகனை கொலை செய்த போலீஸ்காரர்கள் அனைவரும் உடனடியாக கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வேண்டும். பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

குற்றுயிரும் குலையுயிருமாக வந்த செல்வமுருகனை பரிசோதிக்காமல் சிறைக்கு அனுப்பிய நீதித்துறை நடுவர் உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போலீஸின் அராஜகங்களுக்கு முடிவு கட்டாமல் மக்கள் ஒருபோதும் உயிர் வாழவே முடியாது! அதற்கான போராட்டங்களை முன்னைவிட இன்னும் தீவிரமாக நடத்த வேண்டும் என்பதுதான் இந்த காவல் கொட்டடி படுகொலையும் நமக்கு உணர்த்துகின்ற உண்மை.

தோழமையுடன்
தோழர் மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
தொடர்புக்கு : 9962366321

வேல் யாத்திரை – அனுமதியும் கைதும் : பாஜகவும் அதிமுகவும் ஒன்னு || மக்கள் அதிகாரம்

PP Letter head

பத்திரிக்கைச் செய்தி

06.11.2020

நேற்றையதினம் உயர்நீதிமன்றத்தில் பாஜக நடத்தக்கூடிய வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று கூறிய தமிழக அரசு இன்று திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்துவிட்டு பின்னர் கைது செய்வதாக நாடகமாடி இருக்கிறது.

மக்கள் தங்களுடைய பிரச்சனைக்கு கூடக்கூடாது, அமைதியான முறையில் போராட கூடாது ,கொரானா ஏற்படும் என்றெல்லாம் மக்களை ஏமாற்றி அடக்குமுறை செலுத்துகிறது எடப்பாடி அரசு.

தமிழர்களுக்கும் தமிழ் இனத்திற்கும் தீங்கு விளைவிப்பதை ஒரே நோக்கமாக கொண்டு செயல்படும் பாரதிய ஜனதா கட்சி தற்போது நடத்தியிருக்கும் வேல் யாத்திரை என்பது, சாதி மதக் கலவரங்களைத் தூண்டுவதற்காக நடத்தப்படும் ஒன்றாகும்.

படிக்க :
♦ டானிஷ்க் விளம்பரம் : பிறக்காத அந்தக் குழந்தை நான்தான் !
♦ டானிஷ்க் விளம்பரம் : இந்துத்துவக் கும்பல் கதறுவது ஏன் ?

இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று பல்வேறு கட்சித் தலைவர்களும் அமைப்புக்களும் தொடர்ச்சியாக கண்டனக் குரல் கொடுத்து வந்தனர். இந்த எதிர்ப்புக்களில் இருந்து ஆர்எஸ்எஸ் – பிஜேபியை காப்பாற்றும் பொருட்டு வேல் யாத்திரைக்கு அனுமதி இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு இன்று திருத்தணி வரை செல்ல அனுமதி அளித்திருக்கிறது.

தமிழக அரசும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் ஆர்எஸ்எஸ் – பிஜேபியை காப்பாற்றுவதையே ஒரே நோக்கமாக கொண்டு செயல்படுகின்றன. மனுநீதியை நடைமுறைப்படுத்த வேல் யாத்திரைக்கு அனுமதி அளித்திருக்கிறது அரசு என்பதுதான் இதன் பொருள் .

மக்களிடையே சாதி, மத வெறியைத் தூண்டி வன்முறையை ஏற்படுத்த திட்டமிட்ட பிஜேபி நிர்வாகிகளை தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் தமிழகம் சாதி, மத வெறியர்களின் வன்முறைக் களமாக மாறுவதை தடுக்கவும் முடியாது. அதற்கு எதிரான மக்களின், கட்சிகளின் போராட்டங்களையும் தடுக்கவும் முடியாது.


தோழமையுடன்
மருது
செய்தித் தொடர்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

தமிழகம் முழுவதும் விவசாயிகள் சாலைமறியல் போராட்டம் : மக்கள் அதிகாரம் பங்கேற்பு

த்திய மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் உள்ள சுமார் 500-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஒன்றிணைந்து நேற்று (05-11-2020) சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்திற்கு தமிழகத்தில் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு முற்போக்கு ஜனநாயக அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன.

நாடாளுமன்றத்தில், 3 விவசாயிகள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டத் திருத்தங்களை நிறைவேற்றியதைக் கண்டித்து நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநில விவசாயிகள் கடுமையான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலைஇல் அனைத்திந்தைய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் கீழ் நாடுமுழுவதும் உள்ள விவசாய அமைப்புகள் ஒன்று கூடி நவமர்ப் 5-ம் தேதி நாடு தழுவிய சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தன.

இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் விவசாய சங்கங்கள் தமிழகமெங்கும் நடத்திய சாலை மறியல் போராட்டங்களில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர். சென்னை, கோவை, காஞ்சிபுரம், தருமபுரி, விருதாச்சலம், கடலூர், பாண்டிச்சேரி ஆகிய மண்டலங்களில் உள்ள தோழர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

சென்னை :

பாண்டிச்சேரி :

காஞ்சிபுரம் :

தருமபுரி :

கோவை :

விருதாச்சலம் :

கடலூர்:

தகவல் :
மக்கள் அதிகாரம்

தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ் || தோழர் லெனின்

0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 2

பாகம் – 1

ங்கெல்ஸ் பிரஷ்ய முடியரசில் ரைன் மாகாணத்தைச் சேர்ந்த பார்மென் என்ற ஊரில் 1820-ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய தகப்பனார் ஓர் ஆலைச் சொந்தக்காரர். உயர்நிலைப் பள்ளியில் தமது கல்வியை முடிக்காமலே குடும்ப நிலைமைகளின் நிர்ப்பந்தம் காரணமாக 1838-ல் எங்கெல்ஸ் பிரெமனில் ஒரு வர்த்தக நிலையத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். வர்த்தக விவகாரங்கள் விஞ்ஞான – அரசியல் கல்வியைப் பயில்வதினின்று எங்கெல்சைத் தடுத்து விடவில்லை. உயர்நிலைப் பள்ளியில் இருந்த காலத்திலேயே யதேச்சதிகாரத்தையும் அரசாங்க அதிகாரிகளின் தான்தோன்றித்தனத்தையும் எங்கெல்ஸ் வெறுக்கலானார்.

தத்துவஞானப் பயிற்சி அவரை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்றது. அந்தக் காலத்தில் ஜெர்மன் தத்துவஞானத்தில் ஹெகலின் போதனை ஆதிக்கம் வகித்தது. எங்கெல்ஸ் ஹெகலைப் பின்பற்றிச் சென்றார். பிரஷ்ய அரசின் சேவகத்தில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த ஹெகல் யதேச்சாதிகாரத்தனமான பிரஷ்ய அரசை நடப்பில் மெச்சிக் கொண்டாடி வந்தபோதிலும் ஹெகலின் போதனை புரட்சிகரமானது. மனித அறிவின் மீதும் மனித உரிமைகள் மீதும் ஹெகல் நம்பிக்கை கொண்டிருந்தார். உலகம் இடையறாத மாறுதலுக்கும் வளர்ச்சிக்கும் உட்பட்டது என்பது ஹெகல் தத்துவஞானத்தின் அடிப்படையான ஆய்வுரையாகும்.

இந்தப் பெர்லின் தத்துவஞானியின் சீடர்களிலே, நடப்பு நிலைமையை ஏற்க மறுத்தவர்கள் இருந்தார்கள். நடப்பு நிலைமையை எதிர்த்துப் போராட வேண்டும், நடப்பிலிருந்த அநீதியையும் மேலோங்கியிருந்த தீமையையும் எதிர்த்துப் போராட வேண்டும் என்பதும் முடிவின்றி நிரந்தரமாய் வளர்ந்து செல்வதென்ற அனைத்துலகத்துக்கும் பொதுவான விதியிலே வேர்கொண்டுள்ளது என்ற கருத்தை ஹெகலின் மேற்கூறிய நம்பிக்கையும் ஹெகலின் தத்துவஞானத்தின் மேற்கூறிய அடிப்படை ஆய்வுரையும் இச்சீடர்களின் மனத்திலே உருவாகச் செய்தன.

படிக்க :
♦ எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்
♦ மார்க்ஸ் – எங்கெல்ஸ் : இணைபிரியா இரட்டையர்கள் !

எல்லாமே வளர்ச்சியுறுகின்றன என்றால், சில நிறுவனங்கள் மறைந்து அவையிருந்த இடத்தில் வேறு நிறுவனங்கள் அமைகின்றன என்றால், பிரஷ்ய மன்னனின் யதேச்சாதிகாரமோ, ரசிய ஜார் மன்னனின் யதேச்சாதிகாரமோ, மிகப் பெரும்பான்மையோராய் உள்ளவர்களைச் சுரண்டி அற்பசொற்பமான ஒரு சிறுபான்மைக் கூட்டத்தார் செல்வர்களாவதோ, மக்களின்மீது முதலாளி வர்க்கம் ஆதிக்கம் வகிப்பதோ ஏன் நிரந்தரமாக நீடிக்க வேண்டும்? ஹெகலுடைய தத்துவஞானம் ஆன்மாவின் வளர்ச்சியைப் பற்றி, கருத்துக்களின் வளர்ச்சியைப் பற்றிப் பேசிற்று. இந்தத் தத்துவஞானம் கருத்து முதல்வாத ரீதியானது.

ஆன்மாவின் வளர்ச்சியிலிருந்து அது இயற்கையின் வளர்ச்சியையும், மனிதனின் வளர்ச்சியையும், மனித, சமுதாய உறவுகளின் வளர்ச்சியையும் அனுமானித்தது. மார்க்சும் எங்கெல்சும் வளர்ச்சியின் நிரந்தரமான இயக்கப் போக்கு பற்றிய ஹெகலின் கருத்தை மட்டும் ஏற்றுக் கொண்டு* முன் சிந்தனைப்படி அமைந்த கருத்துமுதல்வாதக் கருத்தை நிராகரித்து ஒதுக்கி விட்டார்கள். வாழ்வின் உண்மைகளை ஆராய்ந்து, இயற்கையின் வளர்ச்சியை விளக்குவது மனதின் வளர்ச்சியல்ல என்றும், அதற்கு மாறாக மனதைப் பற்றிய விளக்கமே இயற்கையிலிருந்துதான், பருப்பொருளிலிருந்துதான் பெறப்பட வேண்டும் என்றும் அவர்கள் கண்டார்கள்.

ஹெகலையும், ஹெகலைப் பின்பற்றும் மற்றவர்களையும் போலல்லாமல், மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல்வாதிகள். உலகத்தையும் மனித குலத்தையும் அவர்கள் பொருள்முதல்வாத நிலையிலிருந்து பார்த்து இயற்கையின் நிகழ்ச்சிகளுக்கெல்லாம் அடிப்படையாகப் பொருளாயதக் காரணங்கள் எப்படி அமைந்துள்ளனவோ, அதேபோல் மனிதச் சமுதாயத்தின் வளர்ச்சியும் பொருளாயத வகைப்பட்ட உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியினால் வரையறுக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டனர்.

ஹெகல்

மனிதத் தேவைகளை நிறைவு செய்வதற்குரிய பொருட்களை உற்பத்தி செய்வதிலே மனிதர்கள் பரஸ்பரமாக ஏற்படுத்திக் கொள்ளும் உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பொறுத்திருக்கின்றன. சமுதாய வாழ்வின் எல்லாத் தோற்றங்களுக்கும், மனித ஆவலாதிகளுக்கும், கருத்துக்களுக்கும், சட்டங்களுக்கும் உரிய விளக்கம் இந்த உறவுகளிலேதான் பொதிந்திருக்கிறது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியானது தனிச்சொத்தின் அடிப்படையில் அமைந்த சமுதாய உறவுகளைப் படைக்கிறது. ஆனால், உற்பத்திச் சக்திகளின் அதே வளர்ச்சி பெரும்பான்மையானவர்களின் சொத்தைப் பறித்து அற்ப சொற்பமான சிறுபான்மையோரிடம் அதைச் சேர்த்துக் குவித்து வைக்கிறதை நாம் இன்று காண்கிறோம்.

நவீன காலத்திய சமுதாய அமைப்பு முறைக்கு அடிப்படையாக உள்ள சொத்து என்பதை அது அழிக்கிறது; சோசலிஸ்டுகள் தங்களுக்கென்று வகுத்துக் கொண்ட அதே இலட்சியத்தை நோக்கி அதுவும் தானாகச் செல்ல முயற்சிக்கிறது. சோசலிஸ்டுகள் செய்ய வேண்டியிருப்பதெல்லாம் – சமுதாயச் சக்திகளில் எது நவீன சமுதாயத்தில் தான் வகிக்கும் நிலையின் காரணமாக, சோசலிசத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் அக்கறை கொண்டிருக்கின்றது என்பதை அறிந்து கொண்டு அந்தச் சக்திக்கு அதன் நலன்களைப் பற்றிய உணர்வையும், அதன் வரலாற்று வழிப்பட்ட கடமையைப் பற்றிய உணர்வையும் ஊட்டுவதேயாகும். இந்தச் சக்திதான் பாட்டாளி வர்க்கம்.

அதை இங்கிலாந்தில், பிரிட்டிஷ் இயந்திரத் தொழிலுக்குக் கேந்திரமாயிருந்த மான்செஸ்டரில், எங்கெல்ஸ் அறியலானார். மான்செஸ்டரில் அவர் 1842-ம் ஆண்டில் குடியேறி, தமது தகப்பனார் பங்குதாரராகச் சேர்ந்திருந்த வர்த்தக நிலையத்தில் வேலையில் அமர்ந்தார். அங்கே சும்மா அலுவலகத்தில் எங்கெல்ஸ் உட்கார்ந்துவிடவில்லை. தொழிலாளர்கள் அடைந்து கிடந்த ஆபாசமான சேரிகளில் சுற்றி அலைந்தார். அவர்களின் வறுமையையும் துன்பதுயரங்களையும் கண்கூடாகக் கண்டார். ஆனால் சுயமாகக் கண்டறிவதோடு அவர் நின்றுவிடவில்லை. பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றி ஏற்கெனவே வெளியாகியிருந்த விசயங்களையெல்லாம் அவர் படித்தார்; கைக்கு அகப்பட்ட அதிகாரப் பூர்வமான எல்லா ஆவணங்களையும் அவர் கவனமாகப் பரிசீலித்துப் படித்தார். இப்படிப் பார்த்தவற்றின், படித்தறிந்தவற்றின் பலனாக விளைந்ததுதான் 1845-ம் ஆண்டில் வெளியான இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்னும் நூலின் ஆசிரியர் என்ற முறையில் எங்கெல்ஸ் ஆற்றிய முக்கியமான பணியைப் பற்றி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம்.

(தொடரும்)

*– தங்களுடைய அறிவு வளர்ந்து விரிவடைவதிலே மகத்தான ஜெர்மன் தத்துவ ஞானிகளுக்கு – ஹெகலுகு – தாங்கள் மிகவும் கடன்பட்டிருப்பதாக மார்க்சும் எங்கெல்சும் அடிக்கடி குறிப்பிட்டுள்ளனர். “ஜெர்மன் தத்துவஞானம் இல்லாமல் விஞ்ஞானரீதியான சோசலிசம் தோன்றியேயிருக்காது” என்கிறார் எங்கெல்ஸ்.

நூல் : பிரெடரிக் எங்கெல்ஸ்
ஆசிரியர் : வி.இ.லெனின்
வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ. 15
தொடர்பு : 73 9593 7703

எங்கெல்ஸ் 200 : நாம் ஏன் எங்கெல்ஸை பயில வேண்டும் | தோழர் லெனின்

1

மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானத்திற்கு தோழர்கள் மார்க்சும் எங்கெல்சும் மாபெரும் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள்.  தோழர் எங்கெல்ஸ் பிறந்து 200-வது ஆண்டில்  இன்று, முதலாளித்துவத்தின் அனைத்து சுரண்டல்களும், இழிவுகளும் மக்களிடையே வெகுவாக அம்பலமாகியிருக்கின்றன. ஆனாலும் இதற்கு மாற்று வேறு இல்லை என்ற எண்ணமே மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. அத்தைகயதொரு கருத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வதில் மிகவும் மும்முரமாக வேலை பார்க்கின்றது முதலாளித்துவம்.

இந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்காகவே பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அவர்களுக்கும் படியளந்து வருகிறது. இத்தகைய என்.ஜி.ஓ.க்கள், மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதரித்து அவற்றை ஆளும் அரசாங்கங்களுக்கு எதிராகத் திசை மாற்றி விடும் வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கின்றன. மக்களின் கோபம், முதலாளித்துவ சமூக அமைப்பின் மீது திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றன. பல்வேறு சீர்திருத்தங்களைக் கோருகின்றன. அவற்றில் சில பல வெற்றிகளை காணச் செய்து அவர்களை அதற்குள் திருப்தியுறச் செய்து விடுகின்றன.

நாம் இன்று எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அதன் ஆணிவேரைத் தேடிச் சென்று  அதனைக் களைய வேண்டுமெனில், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மீதான சமூக அறிவியல் பார்வையைப் பெற வேண்டியதும், அந்த அறிவியல் பார்வையிலிருந்து, இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைப்பதற்கான பணியில், முழுமையான சமூக மாற்றத்திற்கான பணியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. அதனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே செய்ய முடியும். ரசியாவில் அத்தகையதொரு கட்சியைக் கட்டி அங்கு ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டிய தோழர் லெனின், எங்கெல்சின் பணிகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எங்கெல்ஸ் இறந்த 1895-ம் ஆண்டில் எழுதினார். அதனை இங்கே ஒரு தொடராக வாசகர்களுக்குத் தருகிறோம். தொடர்ந்து படியுங்கள் !

தோழமையுடன்
வினவு

0*0*0

பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 1

எத்தகைய அறிவுச்சுடர் விளக்கவிந்தது;
எத்தகைய அன்பு மலர் நெஞ்சு நின்றது !

1895-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883-ம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் விதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்சின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !

தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன்முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். சோசலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல; நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலாக விளக்கினர்.

இதுவரை ஏட்டிலேறியுள்ள வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான், ஒன்றன் பின்னொன்றாய்த் தொடர்ந்து சில சமுதாய வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களின் மீது வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதின் வரலாறுதான். வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்கத்திற்குரிய ஆதிக்கத்துக்கும் அடிப்படைகளாயுள்ள தனிச்சொத்தும், அராஜகமான சமுதாய உற்பத்தியும் மறைந்தொழிகிற வரையில் இது நீடித்தே தீரும். இந்த அடிப்படைகளை அழித்துவிட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் கோருகின்றன. எனவே, ஓர் அணியில் திரண்ட தொழிலாளிகளின் உணர்வுபூர்வமான வர்க்கப் போராட்டம் இவ்வடிப்படைகளுக்கு எதிராகச் செலுத்தப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமேயாகும்.

இவை மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களாகும். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் பாட்டாளிகள் அனைவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், 1840-50-ம் ஆண்டுகளில், இவ்விரு நண்பர்களும் அந்தக் காலத்திய சோசலிஸ்டு இலக்கியத்திலும் சமுதாய இயக்கங்களிலும் பங்கு கொண்ட பொழுது இப்படிப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் புதியனவாயிருந்தன. அந்தக் காலத்தில் திறனுள்ளவர்களாயும் திறனற்றவர்களாயும், நேர்மையுள்ளவர்களாயும் நேர்மையற்றவர்களாயும் இருந்த பல பேர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில், ஜார் மன்னர்களின், போலீசின், பாதிரிமார்களின் யதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் முழுக்க ஈடுபட்டிருந்தபோதிலும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையேயுள்ள பகைமையைப் பார்க்கத் தவறினார்கள்.

சுதந்திரமான சமுதாயச் சக்தியாகத் தொழிலாளர்கள் செயல்புரிவதென்ற கருத்துக்கு அவர்கள் இடங்கொடுக்க மறுத்தார்கள். மற்றொரு பக்கத்தில் கனவு காண்போர் பலர் இருந்தார்கள்; அவர்களில் சிலர் மேதைகள்கூட; நவீன சமுதாய அமைப்பு முறை அநியாயமானது என்று ஆட்சியாளர்களுக்கும் ஆட்சி செலுத்தும் வர்க்கங்களுக்கும் புரிய வைப்பது ஒன்றுதான் வேலை, அதைச் செய்துவிட்டால் பிறகு இந்த மண்ணுலகில் அமைதியையும் பொதுவான நல்வாழ்வையும் நிறுவுவது சுலபம் என்று அவர்கள் எண்ணினார்கள். போராட்டமில்லாமலே சோசலிசம் வரும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். கடைசியாக ஒன்று. அந்தக் காலத்தைச் சேர்ந்த அநேகமாக எல்லா சோசலிஸ்டுகளும், பொதுவாகத் தொழிலாளி வர்க்கத்தின் நண்பர்களும், பாட்டாளி வர்க்கம் ஒரு சீழ்வடியும் புண் என்று கருதினர்; இயந்திரத் தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தப் புண்ணும் வளர்ந்து கொண்டே போவதை அவர்கள் பீதியுடன் கவனித்தார்கள்.

ஆகவே, இயந்திரத் தொழிலின் வளர்ச்சியையும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியையும் எப்படித் தடுத்து நிறுத்துவது, “வரலாற்றின் சக்கரத்தை” எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நிலவிய பயபீதிகளுக்கு ஆளாவதற்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்தின் இடைவிடாத வளர்ச்சியின்மீதே தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் வைத்தார்கள்.

பாட்டாளிகளின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு புரட்சிகரமான வர்க்கம் என்ற வகையிலே அவர்களின் வலிமை அதிகமாகும், அவ்வளவுக்கவ்வளவு சோசலிசம் நெருங்குவது சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய பணியைப் பற்றி ஒருசில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம் : தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள்.

ஆகவேதான் எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். நமது எல்லா வெளியீடு களையும் போலவே இந்தச் சஞ்சிகையின் நோக்கமும் ரசியத் தொழி லாளர்களிடையே வர்க்க உணர்வைத் தூண்டுவதேயாகும். அதனால் தான் இச்சஞ்சிகையில் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் எங்கெல்சின் வாழ்க்கையையும் பணியையும் நாம் சித்திரித்துக் காட்ட வேண்டும்.

(தொடரும்)

நூல் : பிரெடரிக் எங்கெல்ஸ்
ஆசிரியர் : வி.இ.லெனின்
வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ. 15
தொடர்பு : 73 9593 7703

 

பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதை ஸ்ட்ரோக் என்று அழைக்கிறோம்
இதயத்தில் இருந்து மூளைக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்படும் பழுது மற்றும் மூளைக்குள் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் பழுது ஆகியவற்றால் ரத்த ஓட்டத்தில் சுணக்கம் ஏற்படுகின்றது.

எப்படி இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் தடையை “ஹார்ட் அட்டாக்” (இதய ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கிறோமோ அதைப்போல இந்த ஸ்ட்ரோக்கை “ப்ரைன் அட்டாக்” ( மூளை ரத்த ஓட்ட முடக்கம்) என்று அழைக்கலாம்.
“மூளை” என்பது நமது தலைமைச்செயலகம் என்பதை அனைவரும் அறிவோம். நமது இச்சை செயல்கள் அனைத்திற்கும் பிறப்பிடம் மூளைதான்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
♦ பள்ளிக் கல்வியை உலகவங்கியிடம் ஒப்படைக்கும் மோடி அரசு !

நமது எண்ணங்கள் செயல்பாடுகள் அனைத்திற்கும் மூல காரணம் மூளை.
மூளைக்குத்தான் நமது ரத்த ஓட்டத்தின் பெரும்பங்கு செல்கிறது. இப்படிப்பட்ட மூளையையும் முடக்கும் விதமாக ரத்த ஓட்ட சுணக்கம் இரண்டு வகைகளில் நடக்கும்.

முதல் வகை : ரத்த ஓட்டத்தில் ஏற்படும் அடைப்பு (ISCHAEMIC STROKE)
இதுதான் அரிதி பெரும்பான்மை பேருக்கு ஏற்படும்.
இரண்டாவது வகை : ரத்தக்குழாய்களில் ஏற்படும் கசிவு (HAEMORRHAGIC STROKE) மேற்சொன்ன இரண்டில் இதுதான் அதிக ஆபத்தானது.

இந்த அடைப்பு மூளைக்குள் உள்ள ரத்த குழாய்களில் மெல்ல மெல்ல அடைப்பு ஏற்படுவதால் இருக்கலாம். இதை THROMBOTIC STROKE என்று அழைக்கிறோம்
அல்லது வேறெங்கோ ரத்தக்கட்டி ஏற்பட்டு அது உடைந்து மூளைக்கான ரத்த நாளங்களுக்குள் வந்து அடைப்பு ஏற்படுத்துவது இதை EMBOLIC STROKE என்று அழைக்கிறோம்.

மூளையில் ரத்த ஓட்டம் தடைபடுகிறது என்பதற்கான அறிகுறிகள் யாது????
இதை சுருக்கமாக BE FAST என்று கூறுவோம்.

Balance
நடையில் தள்ளாட்டம்
சரியாக நேர்க்கோட்டில் நடக்க இயலாமல் போவது.
Eye sight
திடீரென ஒரு அல்லது இரு கண்ணிலும் பார்வை பறிபோவது அல்லது பார்வைக்குறைபாடு ஏற்படுவது
Facial palsy
ஒரு பக்க முகம் தொங்கிப்போவது.
வாய் ஒரு பக்கமாக இழுத்துக்கொள்வது
Arm down
ஒரு பக்க கை அல்லது ஒரு பக்க கை மற்றும் கால் இயங்காமல் தொங்கி விடுவது.
Speech
நன்றாகப்பேசிக்கொண்டிருந்தவர்
பேச்சு குளறுவது அல்லது பேச இயலாமல் போவது
Time
இத்தகைய அறிகுறிகள் தோன்றினால் உடனே குறித்த நேரத்தில் மூளை நரம்பியல் சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்.

எவ்வளவு நேரத்தில் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைய வேண்டும்???
ஒருவருக்கு மூளை ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்பட்டதும் அந்த குறிப்பிட்ட இடத்தைச்சுற்றி உள்ள அளவில் குறைவான மூளையின் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபட்டு அங்கிருக்கும் செல்கள் முற்றிலும் இறந்து விடும். இதை CORE AREA என்று கூறுகிறோம்.

இது ஐந்தே நிமிடங்களில் நிகழ்ந்து விடும். ஆனால் அடைப்பு ஏற்பட்ட அந்த மையப்பகுதியைச்சுற்றி இருக்கும் பெரும்பான்மை பகுதிகளுக்கு இன்னும் ரத்த ஓட்டம் முழுமையாக தடைபட்டிருக்காது. மிகக்குறைவான ரத்த ஓட்டத்தில் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அந்த பகுதியின் மூளை செல்கள் காத்திருக்கும். அந்த பெரும்பகுதியை ISCHAEMIC PENUMBRA என்று அழைக்கிறோம். இந்த காத்திருப்பு காலம் தான் GOLDEN PERIOD FOR STROKE என்று அழைக்கப்படுகின்றது.
இது வெறும் மூன்று மணிநேரம் மட்டுமே.

எனவே ஒருவருக்கு பக்கவாதம் ஏற்பட்ட நிமிடத்தில் இருந்து 180 நிமிடங்களுக்குள் எவ்வளவு சீக்கிரம் அடைய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மூளை சிறப்பு மருத்துவமனையை அடைந்தால் அவருக்கு ரத்தக்கட்டியை கரைக்கும் மருந்து கொடுக்கப்பட்டு மீண்டும் மூளையின் பெரும்பகுதிக்கு ரத்த ஓட்டம் பாய்ச்சப்பட்டு காப்பாற்றப்படும்.

ஆனால் போதிய விழிப்புணர்வு இன்றி முக்கியமான இந்த மூன்று மணிநேரங்களை
வீட்டிலேயோ அல்லது பயணத்தில் கழித்து விட்டு தாமதமாக கொண்டு செல்லும் போது ரத்தக்கட்டி நன்றாக உறைந்து கரைக்கும் தன்மை இல்லாமல் போய் விடுகிறது.
அதற்குப்பிறகும் ரத்தக்கட்டியை கரைக்கும் ஆஞ்சியோப்ளாஸ்டி சிகிச்சை முயன்று பார்க்கப்பட்டாலும் முதல் மூன்று மணிநேரங்களுக்குள் செல்பவர்களுக்கு கிட்டத்தட்ட முழுமையாக வாதம் சரியாகும் விந்தையைக் காண முடியும்.

60 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு பெண்களை விட அதிக ரிஸ்க் உண்டு.
தெற்காசியாவைச் சேர்ந்த நமக்கு ஸ்ட்ரோக் ரிஸ்க் அதிகம்.

உயர் ரத்த அழுத்தம், போதிய உறக்கமின்மை, புகை பழக்கம், உடல் பருமன், உடல் உழைப்பின்மை போன்றவை இதற்கான வேறு சில சரிசெய்யக்கூடிய காரணங்கள் ஆகும். தற்போது பல இளைஞர்களுக்கும் பக்கவாதம் வருவதை காண முடிகின்றது
மன அமைதியுடன் ரத்த அழுத்தத்தை முறையான சிகிச்சை மூலம் பேணி
புகை பழக்கத்தை விட்டொழித்து உடல் பருமன் குறைத்து உடலை வளைத்து உழைப்பு செய்து வாழ்ந்தால் இந்த பக்கவாதம் வருவதை தடுக்க இயலும்.

பக்க வாதம் வந்தவர்களுக்கு முறையான பேச்சு பயிற்சி, இயன்முறை மருத்துவம்,
சுய வேலைகளுக்கான பயிற்சி போன்றவற்றை சரியான நேரத்தில் கொடுத்தால் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும்.

பக்கவாதம் வந்த முதியோர்களை கவனிக்கும் போது தண்ணீர் மெத்தையில் வைத்து பராமரிக்க வேண்டும் அல்லது அவர்களை இருபக்கவாட்டிலும் திரும்பி திரும்பி அரை மணிநேரத்திற்கு ஒருமுறை படுக்கச்செய்ய வேண்டும். முதுகில் அழுத்தம் தராத துணிகளை போடவேண்டும். அவர்களால் அசைய முடியாமல் போவதால் முதுகுப்பகுதியில் அழுத்தம் ஏற்பட்டு பெரிய புண்கள் ஏற்பட்டு சீழ் பிடித்து பெரும் பிரச்சனையாக மாறும் வாய்ப்பு உண்டு.

பக்க வாதம் குறித்த விழிப்புணர்வையும் GOLDEN HOUR மூன்று மணிநேரம் குறித்த விழிப்புணர்வையும் நாமும் பெற்று பிறர்க்கும் எடுத்துக்கூறுங்கள். நன்றி !!

முகநூலில் : Dr.A.B.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்,
சிவகங்கை

மோடியின் தமிழ் காதல் : தேர்தல் நெருங்க நெருங்க ஒரே கவித மழ தான் !

தேர்தல் நெருங்க நெருங்க மோடி தமிழ் இலக்கிய மழையாக பொழிகிறார் !!
தமிழர்களின் கோவணத்தை உருவிவிட்டு, தமிழ் கவிதைகள் வாசிக்கிறார் !!
ஜாக்கி வைத்து தூக்கினாலும், தாமரை ஹைகோர்ட்டில் கூட மலராது !

கருத்துப்படம் : வேலன்

நிலக்கரி சுரங்கங்களை குறிவைக்கும் அதானி நிறுவனம் !

0

கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை ஈடுகட்டுவதற்காக வணிக ரீதியான உற்பத்திக்காக நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதாக இந்திய அரசு அறிவித்த நிலையில், அதிக எண்ணிக்கையிலான  சுரங்கங்களை ஏலத்தில் கோரியுள்ளது அதானி நிறுவனம்.

கடந்த மே மாதம், பெருந்தொற்று பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சுயசார்பு இந்தியா திட்டம் என்ற பெயரில் பெருநிறுவனங்களை கொழுக்க வைக்கும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பணியிழந்து, வருமானம் இழந்து லட்சக்கணக்கில் ஊர் திரும்பிய இடம்பெயர் தொழிலாளர்களுக்கு கைவிரித்துவிட்டு,  நிலக்கரி சுரங்கத்துறையில் வருவாய் பங்கீட்டில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படும், நிலக்கரிச் சுரங்கங்களை யார் வேண்டுமானாலும் ஏலம் எடுத்து பொதுச் சந்தையில் விற்பனை செய்யலாம்; இதை வைத்து பொருளாதாரத்தை நிமிரச் செய்வோம் என நிர்மலா அறிவித்தார். வெளிப்படையான முறையில் 500 சுரங்கங்கள் விரைவில் ஏலம் விடப்படும் எனவும் அலுமினிய உற்பத்தித் துறையில் போட்டியை ஊக்குவிக்க பாக்சைட் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் சேர்த்து ஏலம் விடப்படும் எனவும் அறிவித்தார்.

சுரங்கங்களிலிருந்து நிலக்கரியைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த ரூ.50,000 கோடி ஒதுக்கப்படும் என்றும் ஏலம் எடுக்க இருக்கும் நிறுவனங்களை ‘ஊக்குவித்தார்’ நிர்மலா சீத்தாராமன்.

படிக்க :
♦ இந்தியா சீனா முறுகல் போக்கு : மோடி அரசின் சவடாலும் சரணாகதியும் !
♦ ஆரோக்கிய சேது செயலி குறித்த விவரங்கள் மத்திய அரசுக்கே தெரியாது !

ஜூன் மாதம் தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக  41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதற்கான நடைமுறைகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் நிலக்கரி துறையை தனியாருக்கு அளிப்பது இந்தியா தற்சார்பை நோக்கி முன்னேறும் திசையை நோக்கிய முன்னெடுப்பு என பெருமிதப்பட்டார்.

அடுத்த 5-7 ஆண்டுகளில் இது சுமார் ரூ.33,000 கோடி முதலீட்டை வரவேற்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தக் கொரோனா காலக்கட்டத்தை நல்வாய்ப்பாகப் பயன்படுத்தி இந்தியா இதிலிருந்து மீண்டு சுயசார்பு அடையும் என்று பிரதமர் மோடி பேசினார். தனியார்மயம் மூலம் நிலக்கரி ஏற்றுமதியில் இந்தியா 4வது பெரிய நாடாகும் எனவும் மோடி பேசினார்.

இந்த நிலையில், இந்தியாவின் முதல் வணிக ரீதியிலான சுரங்க ஏலம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இந்த ஏலத்தில் எதிர்ப்பார்க்கப்பட்டதைப் போலவே, குஜராத்தைச் சேர்ந்த உள்கட்டமைப்பு நிறுவனமான அதானி நிறுவனம், 19 சுரங்கங்களில் 12 சுரங்கங்களுக்கான ஏலத்தில் பங்கெடுத்துள்ளது.  ஆதித்யா பிர்லா குழுமமும் ஜெ எம் எஸ் மைனிங் என்ற நிறுவனமும் தலா ஐந்து ஏலங்களிலும் நவீன் ஜிந்தால் குழுமம் நான்கு ஏலங்களிலும் பங்கெடுத்துள்ளன.

இந்த ஏலங்கள் மூலம், இந்தியா ஐந்து தசாப்தங்களுக்குப் பிறகு வணிக ரீதியாக நிலக்கரிச் சுரங்கத்தை தனியார் துறைக்குத் திறக்கிறது. இந்த துறை 1970-களில் தேசியமயமாக்கப்பட்டது. 1990-களில் கொள்கை மாற்றம் காரணமாக எஃகு, சிமெண்ட் மற்றும் தெர்மல் தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் தங்கள் தொழில்துறை பிரிவுகளில் பயன்படுத்த நிலக்கரியை சுரங்கங்களில் இருந்து எடுக்க அனுமதித்தது. ஆனால் நிறுவனங்கள் தன்னிச்சையாக செயல்பட்டன எனக்கூறி சுரங்க ஒதுக்கீடுகள் 2014-ம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டன.

2015-ம் ஆண்டில், இந்தியா நிலக்கரி சுரங்கங்களுக்கான போட்டி ஏலங்களை அறிமுகப்படுத்தியது; ஆனால் இறுதி பயன்பாட்டு கட்டுப்பாடுகள் அப்படியே இருந்தன: வெற்றியாளர்கள் தங்கள் தொழில்துறை பிரிவுகளில் மட்டுமே நிலக்கரியைப் பயன்படுத்த முடியும். இந்த ஆண்டு, இந்த கட்டுப்பாடுகளை நீக்கி வணிக ரீதியில் நிலக்கரி சுரங்கத்தை அனுமதிக்க அரசாங்கம் சட்டத்தை திருத்தியது – அதாவது, ஏலம் வென்றவர்கள் இப்போது எந்தவொரு தடையும் இன்றி உள்நாட்டிலும் உலக அளவிலும் நிலக்கரியை சுரங்கத்திலிருந்து எடுத்து விற்கவும் முடியும்.

ஒளிவுமறைவான ஏல முறைகள்

முதலில், நிலக்கரி அமைச்சகம் 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட திட்டமிட்டிருந்தது, ஆனால் அந்த பட்டியல் பின்னர் 38 ஆக குறைக்கப்பட்டது. தொழில்நுட்ப ஏலங்கள் (இதில் நிறுவனங்கள் தகுதிகளை பூர்த்தி செய்வதற்கான விவரங்களை அளிக்க வேண்டும் ) செப்டம்பர் 29 அன்று மூடப்பட்டது. ஆனால் அடுத்த நாளே, அமைச்சகம் 23 சுரங்கங்களுக்கான ஏலங்களை மட்டுமே பெற்றதாக அறிவித்தது.

பதினைந்து சுரங்கங்கள் ஒரு தொழில்நுட்ப ஏலத்தைக்கூட பெறவில்லை. நான்கு சுரங்கங்கள் தலா ஒரு முயற்சியைப் பெற்றன. இதன் காரணமாக 19 சுரங்கங்கள் ஏல செயல்பாட்டில் இருந்து வெளியேறின. ஒளிவுமறைவான ஏல முறைகள் குறித்து 38 சுரங்கங்களை தனது மாநிலத்தில் வைத்துள்ள ஜார்க்கண்ட் அரசு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கவலை தெரிவித்திருந்தது. பெருந்தொற்று காலத்தில் ஏலம் வைத்திருப்பது பங்கேற்பை குறைத்து ஏல விலையையும் குறைக்கும் என அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

எரிசக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனத்தில் எரிசக்தி நிதி ஆய்வுகள் இயக்குனர் டிம் பக்லி, ஏலங்களில் உலகளாவிய நிறுவனங்கள் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கிறார். நிலக்கரி மீதான பெருநிறுவன மற்றும் நிதி ஆர்வம் குறைந்து வருவதையும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக வீழ்ச்சிகள் குறித்த அதிகரித்து வரும் கவலைகள் காரணமாகவும் சர்வதேச நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க வாய்ப்பில்லை எனக் கூறியிருந்தார். அவர் சுட்டிக்காட்டியதைப் போலவே, ஒரேஒ ரு வெளிநாட்டு நிறுவனம்கூட இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை.

அவர் கணித்தபடி, ஒரு வெளிநாட்டு நிறுவனம் கூட ஏலம் எடுக்கவில்லை.

உள்நாட்டு நிறுவனங்கள் கூட சுரங்கங்களுக்காக வரிசையில் நிற்க வாய்ப்பில்லை என்பதை பலர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக பொருளாதாரம் சுருங்கிய இந்த நேரத்தில், நிலக்கரி தேவை வீழ்ச்சியடைந்துள்ளதை அவர் குறிப்பிட்டார். மேலும் சில நிறுவனங்களிடம் மட்டுமே முதலீடு செய்ய மூலதனம் உள்ளது எனவும் கூறுகின்றனர்.

பங்கேற்பின் மோசமான தரம்

வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம் வெளிநாட்டு முதலீடு மற்றும் உலகளாவிய நிபுணத்துவத்தை கொண்டு வரலாம் எனவும்  இது இந்திய சுரங்கத் துறையை மாற்றும் எனவும் நிலக்கரி அமைச்சர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூறியிருந்தார்.  ஆனால் ஏலத்தில் பங்கேற்கும் பெரும்பாலான நிறுவனங்களுக்கு சுரங்க அனுபவமே இல்லை. ஏலதாரர்களின் பட்டியலில் பல பங்கு வர்த்தக நிறுவனங்கள், ஒரு கட்டுமான நிறுவனம், ஒரு மருந்து உற்பத்தியாளர், ஒரு குளிரூட்டல் எரிவாயு நிரப்பு நிறுவனம்கூட பங்கெடுத்துள்ளது.

அதானி குழுமம் ஏன் ஏலத்தில் ஆர்வம் கொள்கிறது?

ஆகஸ்ட் மாதத்தில், அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி நிலக்கரி சுரங்க ஏலத்தில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறிய நிலையில், இந்தக் குழுமம் 12 ஏலங்களை கோரியுள்ளது.

ஆயினும், இந்த குழுமம் 12 சுரங்கங்களுக்கான ஏலங்களை வழங்கியது: குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் ஏழு ஏலங்கள், துணை நிறுவனமான ஸ்ட்ராடடெக் மினரல் ரிசோர்சஸ் பிரைவேட் லிமிடெட் மூன்று ஏலங்கள், துணை நிறுவனங்களான அதானி பவர் ரிசோர்சஸ் லிமிடெட் மற்றும் செண்டிபாடா கோலியரீஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவை தலா ஒரு ஏலத்தை கோரியுள்ளன..

அதானி நிறுவனம் ஏற்கெனவே நிலக்கரி சுரங்கத்தில் கணிசமான அனுபவத்தைக் கொண்டுள்ளது. இது தற்போது மூன்று இந்திய மாநிலங்களில் ஒன்பது நிலக்கரி சுரங்கங்களை சுரங்க உருவாக்குனராகவும், செயல்படுத்துனராகவும் உள்ளது, அதாவது சுரங்க உரிமங்களை வைத்திருக்கும் அரசு நிறுவனங்கள் உண்மையான சுரங்க நடவடிக்கைகளை அதானிக்கு துணை ஒப்பந்தம் செய்துள்ளன.

தனியார் துறையில் இந்தியாவின் மிகப்பெரிய வெப்ப மின் உற்பத்தியாளராகவும் இது உள்ளது. தற்போதுள்ள நான்கு வெப்ப மின் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் மூன்று திட்டங்கள் உள்ளன. தற்போது, ​​அதானி பவர் தனது நிலக்கரி தேவைகளை அரசாங்கத்தால் நடத்தப்படும் கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்திடமிருந்து உள்நாட்டு கொள்முதல் மற்றும் இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது.

ஏலங்களை வெல்வது அதானி குழுமத்திற்கு நிலக்கரி இருப்புக்களை நேரடியாக எடுத்து, தனது வெப்ப மின் நிலையங்களில் பயன்படுத்தலாம். நிலக்கரி சுரங்கங்கள் அதானியின் எரிபொருள் பாதுகாப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதன் சொத்துக்களின் பட்டியலிலும் சேர்க்கும். இது உள்நாட்டு வங்கிகளிடமிருந்து அதிக மூலதனத்தை திரட்ட உதவும்.

படிக்க :
♦ பட்டினிச் சாவுகளின் மீதேறி ஆசிய பசிபிக் பிராந்திய ஆதிக்கம் பெற்ற இந்தியா !
♦ விவசாய மசோதாக்கள் : பஞ்சாப் விவசாயிகளின் உள்ளக் குமுறல் …

சமீபத்திய ஆண்டுகளில் வருமான இழப்பை சந்தித்துள்ள பிற உள்கட்டமைப்பு நிறுவனங்களைப் போலல்லாமல், அதானி குழுமம் பாரிய விரிவாக்கத்தைக் கண்டது. பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த ஆறு ஆண்டுகளில் அதானி குழுமம், தனது வணிகங்களை விரிவுபடுத்தி, பன்முகப்படுத்தியதால், மின் உற்பத்தி, எரிவாயு விநியோகம், துறைமுகங்கள், விமான நிலையங்கள், வேளாண் பொருட்கள் என இந்திய பொருளாதாரத்தின் முக்கிய துறைகளில்  ஆதிக்கம் செலுத்தும் நிலையை அடைந்துள்ளது.

அதானி நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகளில் குழுமம் வளர்ச்சியை ஆதரிக்க போதுமான பணத்தை உருவாக்கவில்லை என்றாலும்கூட அரசியல் அதிகாரத்திற்கு அருகாமையில் இருப்பது, மூலதனத்திற்கான அணுகல் மற்றும் உள்கட்டமைப்பில் போட்டி நிறுவனங்களின் வாய்ப்புகளை குறைத்தல் போன்ற பிறவழிகளின் மூலம் ஆதிக்கத்தை நீட்டித்துக்கொண்டிருக்கிறது.

இந்த பின்னனியில்தான் நிலக்கரி சுரங்க ஏலங்களில் அதானி குழுமத்தின் ஆக்கிரோஷமாக பங்கேற்பு இருக்கிறது. ஒரு பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தில் மலிவான விலையில் கனிம சொத்துக்களை மற்ற நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு முந்திக்கொள்ள அதானி குழுமம் நினைக்கிறது. ஆட்சியாளர்களின் ஆதரவு இருப்பதால் அது மிக எளிதாகவே கைக்கூடும். நவம்பர் 11-ம் தேதி ஏல முடிவுகள் வெளியாக உள்ளன.

ஏலம் எடுக்க வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களே ஆர்வம் காட்டாத நிலையில், இதனால் கிடைக்கக்கூடும் என மோடி அரசு சொல்லிக்கொண்ட பொருளாதார பயன்கள் வெற்று அறிவிப்புகளாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

குறைந்த விலைக்கு வளங்கள் விற்கப்படுவது சுரங்கங்கள் உள்ள மாநிலங்களை பாதிக்கும் எனவும் ஆனால் மோடி அரசு அதன் பெருநிறுவன கூட்டாளிகளுக்கு அனைத்தையும் எழுதி கொடுத்துவிட்டு எனக்கென்ன என அமர்ந்திருக்கும் எனவும் விமர்சிக்கின்றனர்.

நன்றி : ஸ்க்ரால்
கட்டுரையாளர் : சுப்ரியா சர்மா
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : அனிதா