Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 403

மோடியின் பெருமைமிகு குஜராத் சிங்கங்களை வைரஸ் மட்டுமா அழித்தது ?

சிய சிங்கங்கள் குஜராத் மாநிலத்தின் கிர் வனப்பகுதிகளில் மட்டுமே. இவற்றின் எண்ணிக்கை 600க்குள் இருக்கலாம். சிங்கங்கள் வாழ்வதற்கேற்ப உயிர்ச்சூழல் உள்ள மத்திய பிரதேச மாநில வனப்பகுதியில் வளர்க்க, சில ஆண்டுகள் முன் முயற்சி நடந்தது. ‘கிர் சிங்கங்கள் குஜராத்தின் பெருமை’ எனக்கூறி அப்போது அம்மாநில முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி மறுத்துவிட்டார்.  2013-ஆம் ஆண்டு நீதிமன்றம் தலையிட்டு சிங்கங்களை மத்திய பிரதேசம் கொண்டு செல்ல அனுமதித்தது. ம.பி.யில் ஆட்சி மாற்றம் நடந்ததும் குஜராத் சிங்கங்களை கொண்டு செல்ல இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

குஜராத்தின் பெருமை மிகு சிங்கங்களை காத்த நவாப்!

வரலாற்றின்படி ஆசிய நிலப்பரப்பில் சிங்கங்களே இல்லை என்கிறார் ரோமிலா தாப்பர். ஆசிய நிலப்பரப்புக்குள் படையெடுத்து வந்தவர்களால் கொண்டுவரப்பட்டவை என்பது அவருடைய வாதம். அதன்பின், மொகலாய மன்னர்கள் சிங்கங்களையும் சிறுத்தைகளையும் (சிவிங்கிப் புலி அல்ல) செல்லப்பிராணிகளாக தங்கள் ஆட்சிக்குட்பட்ட வனப்பகுதிகளில் வளர்த்திருக்கிறார்கள்.  அக்பர் 9000 சிறுத்தைகளை வளர்த்ததாக மொகலாய வரலாற்று அறிஞர் யூசுப் அன்சாரி கூறுகிறார்.  வளர்த்த செல்லப்பிராணிகளை பொழுதுபோக்குக்காக வேட்டையாடி தீர்த்தார்கள்.  18-ஆம் நூற்றாண்டில் ஜுனாகட்டின் நவாப்-ஆக இருந்த முகமது ரசூல் கஞ்சி-2, தனது பெருமைமிகு சிங்கங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கருதி, கிர் வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியான அறிவித்தார்.  ஒரு நவாப்பின் முயற்சியால் காப்பாற்றப்பட்ட சிங்கங்களை தனது மாநிலத்துக்கு மட்டுமே உரிய பெருமை என குறுகிய மனப்பான்மையுடன்  வெறுப்பரசியல் செய்யும் இந்துத்துவ கும்பல் பார்க்கிறது. விளைவுகள் இன்று மோசமாகியுள்ளன. கிர் சிங்கங்கள் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி கொத்தாக பலியாகியுள்ளன. கடந்த மாதம் மட்டும் 23 சிங்கங்கள் பலியாகியுள்ளன.

குஜராத் அரசின் அலட்சித்தால் பலியான சிங்கங்கள்!

கடந்த செப்டம்பர் மாதம் நடுவில் 10 சிங்கங்கள் இறந்தபோது, குஜராத் அரசு சிங்கங்களின் இறப்புக்கு எல்லை சார்ந்த பிரச்சினையே காரணம் என்றார்கள். அக்டோபர் 1-ஆம் தேதி இந்த இறப்புகள் இரண்டு மடங்கானபோது, இந்த விவகாரம் சர்வதேச அளவில் பேசுபொருளானது. ஆசிய சிங்கங்களை அழிவிலிருந்து காப்பாற்றியதாக தம்பட்டம் அடித்துக்கொண்ட குஜராத் அரசு, அதே சிங்கங்களில் கொத்தான மரணங்களுக்கு என்ன காரணம் என தெரியாமல் விழித்தது. அறிவியலாளர் குஜராத் அரசு பொறுப்பில்லாமல் நடந்துகொண்டதாக குற்றம்சாட்டுகிறார்கள்.

“எல்லை பிரச்சினை காரணமாகத்தான் சிங்கங்கள் இறந்ததாக முதலில் எங்களுக்குச் சொன்னார்கள். பொதுவாக எல்லை பிரச்சினை தொடர்பாக எழும் சண்டையில் குட்டிகளும், பருவத்தில் உள்ள ஆண் சிங்கங்களும் கொல்லப்படும். ஆனால், இங்கே பெண் சிங்கங்கள் இறந்துள்ளன. சிங்கங்கள் ஏன் கொல்லப்பட்டன என்கிற உண்மையை மறைக்கத்தான் பலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது, அறிவியல்பூர்வமாக இந்த பிரச்சினையை தாங்கள் அணுகவில்லை என ஒப்புக்கொள்கிறார்கள்” என்கிறார் உயிரியலாளர் ரவி செல்லம்.

படிக்க:
விலங்குகளில் செயற்கைமுறை கருவூட்டல் தொழில்நுட்பம் – ஒரு வதையா ?
நீலகிரி : வனவிலங்குகளை பாதுகாப்பது எப்படி ?

‘கேனைன் டிஸ்டம்பர் வைரஸ்’ என்ற தொற்று தாக்கி உயிரிழந்த 7 சிங்கங்களின் அழுகிய உடலைக் கண்ட பிறகே, இந்த விவகாரம் குஜராத் வனத்துறையின் கவனத்துக்கு வந்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் கண்கள் மற்றும் மூக்கில் நீர் ஒழுகும். இருமலும் இருக்கும். கண்காணிப்பின் மூலம் வன விலங்குகளின் நோய்க்கூறுகளை கண்டறிய முடியும். கடந்த பல வருடங்களாக கிர் வனப்பாதுகாப்பு பணியாளர்கள் ஒருவர்கூட, வனமேலாண்மை பயிற்சிக்கு அனுப்பப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. சிங்கங்களை காப்பாற்ற கிர் வனப்பகுதிக்குள் போதுமான மருத்துவ வசதிகள் எதுவும் இல்லை என்கிறார் வனப்பணியாளர் ஒருவர். அடிப்படையான மருத்துவ வசதிகள் இல்லை; வனப்பாதுகாவலர்களுக்கு பயிற்சி தரப்படவில்லை. ஆனால், கிடைக்கிற சந்தர்ப்பத்திலெல்லாம் பிரதமர் மோடி, தனது பெருமைமிகு சிங்கங்கள் குறித்து பேசுகிறார்.

“600 சிங்கங்கள் மட்டுமே உள்ள வனப்பகுதியை கண்காணிப்பது அவ்வளவு கடினமான பணி அல்ல. ஆனால் கிர் வனப்பகுதியில் கண்காணிப்புகள் முறையாக இல்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. உண்மையில் அறிவியல்பூர்மான கண்காணிப்பு தேவை. அது இப்போதைக்கு சாத்தியமற்றதாகவே தெரிகிறது” என்கிறார் விலங்கின சூழலியலாளர் அபி.டி. வனக்.

படிக்க:
குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
குஜராத் : இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்தக்கூடியவர்கள் யார் ?

சர்வதேச கவனம் பெற்று சர்ச்சைகள் எழுந்தநிலையில், மீதியுள்ள சிங்கங்களை காப்பாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது குஜராத் அரசு. நோய் தாக்குதலுக்குள்ளான சிங்கங்களிடமிருந்து நோய்க்கூறின் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.  உண்மையில் கிர் சிங்கங்களுக்கு வைரஸ் மட்டும் அச்சுறுத்தலாக இல்லை என்கிறது தி இந்து ஆங்கில இதழில் வந்த சிறப்புக் கட்டுரை.

சிங்கங்களை அச்சுறுத்தும் மிதமிஞ்சிய சுற்றுலா மற்றும் சுரங்க நடவடிக்கைகள்!

குஜராத் அரசு கிர் வனப்பகுதியை குறைக்க முயற்சித்தபோது, பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. கடந்த மார்ச் மாதம் முதல் கிர் வனப்பகுதிக்கு அருகே சுண்ணாம்புக்கல் எடுக்க அனுமதி வழங்கியிருக்கிறது குஜராத் அரசு. இப்போது நடந்துகொண்டிருப்பதை அதிகாரத்தில் இருக்கிறவர்கள் தருவித்தவையே என்கிறார் வன அதிகாரி ஒருவர். சிங்கங்கள் குறித்தோ வனப்பாதுகாப்பு குறித்தோ குஜராத் அரசுக்கு ஒரு அக்கறையும் இல்லை. துணை வனப் பாதுக்காப்பாளர் சாசன் கிர் ராம் ரட்டன் நல்லா என்ற அதிகாரி, கிர் வனத்துக்குள் இருக்கும் சிங்கோட அணையை ஆழப்படுத்தும் பணியை அனுமதிக்கவில்லை. குஜராத் முதல்வர் வனப்பகுதியில் இருந்த கோயில் வழிபாடு நடத்தவிருந்ததையும் இவர் அனுமதிக்கவில்லை. இதனால் கடந்த மே மாதம் பணிமாற்றம் செய்யப்பட்டார். முரண்பாடாக, சிங்கங்களின் கொத்தான மரணத்துக்குப் பின், மீண்டும் இந்த இடத்திற்கு பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

கிர் வனப்பகுதியை ஒட்டி டஜனுக்கு மேலான ரிசார்ட்டுகள், ஹோட்டல்கள் முளைத்துள்ளன. சட்டவிரோதமாக சிங்கங்களை வைத்து காட்சிகளை நடத்துவதும் அதிகமாக நடக்கிறது. சுற்றுலா வருகிறவர்கள் சிங்கங்களுக்கு கறித்துண்டுகளை அளித்து வேடிக்கை பார்ப்பதும், அதை வீடியோவாக சமூக ஊடகங்களில் பகிர்வது நடக்கிறது. போதிய கண்காணிப்பு இல்லாததாலேயே இத்தகைய அத்துமீறல்கள் நடப்பதாக உயிரிலாளர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

படிக்க:
சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி !
பேரிடர் மேலாண்மை : உலகமே ! க்யூபாவிடம் கற்றுக் கொள் !

23 சிங்கங்கள் இறந்துவிட்டன; 21 சிங்கங்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மங்குனி இந்துத்துவ முதலமைச்சர் விஜய் ரூபானி, நிலைமை கட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், கிர் வனப்பகுதியில் முழுமையான பாதுகாப்பில்  சிங்கங்கள் இருக்கின்றன.  அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய தேவை இல்லை என்கிறார்.

ஆனால், நோய்தாக்குதல் இல்லாத ஆரோக்கியமான நிலையில் உள்ள சிங்கங்களை வேறு பொருத்தமான இடத்துக்கு அனுப்ப வேண்டும் என்கிறது இந்திய மருத்துவ கவுன்சில்.  30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிய சிங்கங்கள் குறித்து ஆய்வு செய்து வரும் ரவி செல்லம், “கிர் சிங்கங்களை வேறு இடத்தில் வளர்க்க அனுமதித்த உச்சநீதிமன்ற தீர்ப்பை அமலாக்குவது குறித்து சிந்திக்க வேண்டிய நேரம் இது. அதோடு, அறிவியல் துறை சார்ந்தவர்களை சுதந்திரமாக பணியாற்றவும் குஜராத் அரசு அனுமதிக்க வேண்டும்” என்கிறார்.

தனது மாநிலத்தின் பெருமையென வாய்ச்சவடால் அடிக்கும் மோடி – பா.ஜ.க. கும்பலின் நிலை அழுகி நாறிக்கொண்டிருக்கிறது. மதவாதிகளால் எந்த பெருமையையும் காப்பாற்ற முடியாது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

செய்தி ஆதாரங்கள்:

என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும் | அ.முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்

நான் ஆப்பிரிக்காவுக்கு போய்ச் சேர்ந்த அந்த வருடம்தான் உலகத்தின் மூன்றாவது பெரிய வைரக்கல்லைக் கண்டுபிடித்தார்கள். உலகத்தின் வைரம் விளையும் நாடுகளில் சியாரோ லியோன் பிரசித்தமானது. அந்த ஆண்டு சியாரோ லியோனில் கண்டுபிடிக்கப்பட்ட வைரம் 969 காரட்டில், அரை றாத்தல் எடை இருந்தது என்று பத்திரிகைகள் வர்ணித்தன. பெரிய வைரம் கிடைத்த நாளை அரசாங்கம் கொண்டாடியது. அதுவும் பொருத்தமாக காதலர்கள் தின நாளில் கண்டுபிடிக்கப்பட்டிருந்ததால் ‘உங்கள் காதலிக்கு வைரம் பரிசளியுங்கள்’ என்று விளம்பரம் வேறு செய்தார்கள். சாப்பிடுவதற்கு வழியில்லாத ஏழை மக்கள் வைரத்துக்கு எங்கே போவார்கள்.

அரசாங்கம் வைரம் கிடைத்ததை நினைவுகூரும் விதமாக ஒரு தபால்தலை வெளியிட்டது. முக்கோண வடிவத்தில் புது வைரத்தின் படத்துடன் வெளிவந்த அபூர்வமான தபால்தலையை வாங்கி தபால்தலை சேகரிக்கும் இலங்கை நண்பர்களுக்கு நான் அனுப்பிவைத்தேன். புதிதாகக் கண்டுபிடித்த வைரத்தை வெட்டுவதற்கு உலகத்திலேயே தலைசிறந்த வைரம் வெட்டும் நிபுணரான Lazane Kaplan என்பவரை நியமித்தார்கள். அவர் ஒரு வருடகாலமாக அந்த வைரத்தின் முன் உட்கார்ந்து அதைப் பல கோணங்களிலும் படித்து ஆராய்ந்து திட்டமிட்டார். இறுதியில் அமெரிக்க தொலைக்காட்சியின் முன் கோடிக்கணக்கான மக்கள் பார்க்க அதை வெட்டினாராம். The Star of Sierra Leone என்ற அந்த வைரமும், சியாரா லியோனும் உலகப் பிரபலமானது அப்படித்தான்.

சியாரோ லியோனின் கிழக்குப் பகுதிகளில் வைரம் விளைந்தது. ஆற்றோரங்களில் சனங்கள் கும்பல் கும்பலாக ஆற்று மணலை அரித்து வைரம் தேடுவது சாதாரண காட்சி. உரிமம் இல்லாமல் வைரம் அரிப்பவர்களுக்கு அரசாங்கம் கடுமையான தண்டனை விதிக்கும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ஒருவரும் அந்த புதுச் சட்டத்தை பொருட்படுத்தவில்லை. வைரம் கிடைத்தால் அதனால் வரும் லாபம் எக்கச்சக்கமாக இருக்கும். சாதாரண விவசாயம் செய்துவந்த ஏழை மக்கள் அந்த தொழிலை துறந்துவிட்டு வைர வேட்டையில் இறங்கினார்கள். ஒரு நல்ல விவசாய நாடு வைரம் தேடும் பேராசைக்காரர்களால் நிறைந்துகொண்டு வந்தது.

வைரம் தேடுபவர்களைப் பற்றி ஏராளமான கதைகள் உலாவின. யெங்கிமா, ரொங்கோ போன்ற இடங்களில் மழை பெய்து தண்ணீர் அடித்துப் போனபிறகு கற்கள் கிளம்பி மேலே வந்துவிடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே குனிந்து நிலத்தைப் பார்த்தபடி நடப்பது வேடிக்கையாக இருக்கும். ஒருநாள் ஒரு பெண் ஆற்றிலே குளித்துவிட்டு திரும்பும்போது காலில் ஏதோ தட்டுப்பட குனிந்து பார்த்தாள். ஒரு கையிலே அடக்க முடியாத அளவுக்கு பெரிதான  வைரக்கல். அதை இரண்டாம் ஆளுக்கு தெரியாமல் கொண்டுபோய் ஒரு லெபனிஸ் வைர வியாபாரியிடம் விற்றிருக்கிறாள். அவர் அவளுக்கு 5000 லியோன் காசு கொடுத்தார். பெரும் தொகை. அடுத்தநாள் அந்த வியாபாரி அதே வைரக்கல்லை ஐந்து லட்சம் லியோனுக்கு விற்றது அவளுக்கு தெரியாது.

படிக்க:
ஆப்பிரிக்காவில் எமது வேர்களைத் தேடி…
♦ மத்தியத் தரைக்கடல் : ஏழை அகதிகளின் இடுகாடு
♦ சிலி விபத்தும் உலகின் சுரங்கத் தொழிலாளர் அவலமும்!

இன்னொரு நாள் ஒருவர் வேலைக்கு போய்விட்டு வரும் வழியில் ஏதோ மினுங்குவதைக் கண்டு தூக்கிப் பார்த்தார். அவரால் நம்பமுடியவில்லை. பெரிய வைரக்கல். அதை அவருடைய இரண்டு நண்பர்களுக்குக் காட்டி ஆலோசனை கேட்டிருக்கிறார். அவர்கள் அதை அங்கேயுள்ள வியாபாரிகளுக்கு விற்கவேண்டாம், அவர்கள் ஏமாற்றிவிடுவார்கள். நேரே தலைநகரத்துக்கு எடுத்துப்போய் விற்றால் நல்ல விலைகிடைக்கும் என்று கூறினார்கள். அவரும் அடுத்தநாள் காலை போவதென்று முடிவு செய்தார். அன்றிரவு அந்த நண்பர்கள் அவரைக் கொலை செய்துவிட்டு வைரத்தை திருடிக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறினார்கள்.

இந்தக் கதைகள் எல்லாம் ஒரு லெபனிஸ் வைர வியாபாரி எனக்கு சொன்னவைதான். இவர் அங்கேயிருந்த வியாபாரிகளில் நேர்மையானவர் என்று பெயரெடுத்திருந்தார். வைரக்கற்களை மதிப்பீடு செய்வதில் வல்லவர். இவர் வீட்டு வாசலில் ஒரு காவல்காரன் எப்போதும் நிற்பான். அவனைத் தாண்டிப் போனால் பெரிய இரும்புத் தூண்கள் போன்ற கதவு.  உள்ளே இருந்து கடவு எண்களைப் பதிந்தால்தான் அது திறக்கும். திருடர்கள் அதிகமாக இருந்ததால் தன் வியாபாரத்துக்கு பாதுகாப்பு அவசியம் என்பார்.

ஒரு நாள் நான் அவரைப் பார்க்கப் போயிருந்தபோது ஓர் இளைஞன் வந்தான். சுற்றுமுற்றும் கண்களை சுழலவிட்டபடியே நின்றான். நாங்கள் பார்க்கும்போதே கொடுப்புக்குள் இருந்து புளியங்கொட்டை அளவு வைரக்கல் ஒன்றை எடுத்துக் கொடுத்தான். அவர் அந்தக் கல்லைப் பரிசோதித்தார். அவரிடம் பலவித கருவிகள் இருந்தன. வைரத்துக்கு எடையும், உருவமும் முக்கியம். எடை கூடி இருந்தாலும் உருவம் சரியாக அமையாவிட்டால் வெட்டுவதில் சேதாரம் உண்டாகி வைரத்தின் மதிப்பைக் குறைத்துவிடும். இளைஞன் கொண்டுவந்த வைரம் அளவில் பெரிதாக இருந்தாலும் மதிப்பு குறைந்தது என்றார். அதிலே மோசமான கறுப்பு புள்ளி விழுந்திருந்தது. பணத்தை எண்ணிக் கொடுக்கும்போது அவனிடம் ஒரேயரு கேள்விதான் கேட்டார். ‘எங்கே கிடைத்தது?’ அதற்கு அவன் ‘ரொங்கோ’ என்று பதில் சொன்னான்.

ரொங்கோவுக்கு என் நண்பர்களைப் பார்க்க நான் அடிக்கடி போவதுண்டு. ஓர் இடத்தில் ஆறு மெல்லிய ஓடைபோல பிரிந்து நிலம் தெரிய ஓடும். அந்த இடம் மனதைக் கவரும் விதத்தில் அமைந்திருக்கும். ஒரு நாள் அந்தப் பாதையில் போனபோது தூரத்து மலை பூக்களால் மூடப்பட்டுக் கிடந்தது. நெடிதுயர்ந்த மரங்கள், நீலமான ஆகாயம், தெளிந்த நீர். வாழ்க்கையில் ஒருமுறைதான் அந்தக் காட்சி பார்க்கக்கிடைக்கும் என்று எனக்குப் பட்டது. ஒரு புகைப்படம் பிடிக்கலாம் என்று காரை விட்டு இறங்கினேன். ஆற்று மட்டத்துக்கு இறங்கிய பிறகுதான் நான் எடுக்க வந்த படத்திலும் பார்க்க இன்னும் அரிய காட்சி ஒன்று கிட்டியது.

இரண்டு பெண்கள் வெகு சிரத்தையாக வைரத்துக்காக மண்ணை அரித்துக் கொண்டிருந்தார்கள், எங்களுக்கு முதுகைக் காட்டியவாறு. நானும் சாரதியும் வந்ததை அவர்கள் கவனிக்கவில்லை. அவர்களைப் பார்த்தால் சிநேகிதிகள் போலவும் இருந்தது; சகோதரிகள் போலவும் தெரிந்தது. இருவரும் ஒரே மாதிரியான உடை தரித்திருந்தார்கள். கீழே பூப்போட்ட லப்பா உடுத்தி மேலே மஞ்சள் ரீசேர்ட் அணிந்திருந்தார்கள். பெரியவளுக்கு 25 – 26 வயதிருக்கலாம்; சின்னவளுக்கு 12 -13 மதிக்கலாம். அவர்கள் மென்டே மொழியில் கலகலவென்று பேசுவதும், பின்பு சிரிப்பதுமாக முழங்கால் தண்ணீரில் குனிந்தபடி நின்று  வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

படிக்க:
♦ கோலார் சுரங்க வரலாறு !
கோலார்: தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள் !
♦ உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை

எங்களுடன் வந்த சாரதி மென்டே மொழியில் வணக்கம் சொன்னான். திடுக்கிட்டு திரும்பிய அவர்கள் கண்களில் வியப்பும், பயமும், வெட்கமும் ஒரே அளவில் கலந்திருந்தது. நான் ஒரு படம் பிடிக்கலாமா என்று கேட்டேன். அதைச் சாரதி மொழிபெயர்த்தான். அதற்கு அவர்கள் பதில் சொல்ல அவன் என்னவோ சொன்னான். அவர்கள் அதற்கும் ஏதோ சொல்லிவிட்டு சிரிசிரியென்று சிரித்தார்கள். இப்படி என்னை விட்டுவிட்டு அவர்கள் பாட்டுக்கு நீண்ட உரையாடலில் இறங்கினார்கள். நான் ஒருவன் அங்கே நட்ட மரம் மாதிரி நிற்கிறேன் என்பதே அவர்களுக்கு மறந்துவிட்டது.

‘சரி, சரி என்ன சொல்கிறார்கள்’ என்றேன். அவன் சிரித்தபடி சொன்னான் அவர்கள் இருவரும் தாயும் மகளுமாம். பக்கத்து கிராமத்தில் வாழ்கிறார்கள். இந்த ஒதுக்குப்புறமான இடத்தை அவர்கள் பிடித்திருக்கிறார்கள். தினமும் காலையிலிருந்து இரவு வரைக்கும் அரிப்பார்கள். இன்னும் ஒரு வைரமும் அகப்படவில்லை. ‘கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?’ இது என் கேள்வி.’ஏழைகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கக்கூடாதா?’ இது அவர்கள். ‘வைரம் கிடைத்ததும் அந்தப் பணத்தை என்ன செய்வதாக உத்தேசம்?’ இதற்கு சின்னப்பெண் மறுமொழி கூறினாள். ‘அதோ, அங்கே தெரிகிறதே ஒரு பெரிய பளிங்குவீடு. அதைச் சொந்தமாக்குவேன்.’ அவள் வெடிப்பதுபோல வாயைத் திறந்து சிரித்தாள். தாயை கலந்து ஆலோசிக்காமல் அவளாகவே சிந்தித்து அந்தப் பதிலை கொடுத்ததில் தாய்க்கு பெருமை தாங்க முடியவில்லை.

நான் காமிராவை தயார் செய்தேன். அவர்கள் இருவரும் ஏதோ தங்களுக்குள் பேசினார்கள். பிறகு சாரதியிடம் பேசியபோது முகம் வாடி அவர்கள் உற்சாகம் எல்லாம் எங்கேயோ போய்விட்டது. என்னவென்று கேட்டால் அவர்களுக்கு கூச்சமாக இருக்கிறதாம். எனக்கு ஆச்சரியம். கூச்சம் என்ற வார்த்தையே மென்டே மொழியில் இல்லை. சாரதி தொடர்ந்தான். அழுக்கான  ரீசேர்ட்டை அணிந்து படம் பிடிக்க அவர்களுக்கு விருப்பமில்லை; ரீசேர்ட்டை கழற்ற அனுமதித்தால்தான் சம்மதிப்பார்களாம். இப்பொழுது எனக்கு சிரிப்பாக வந்தது. யாராவது இந்த உலகத்தில் மறுப்பு சொல்வார்களா. மகிழ்ச்சியை முகத்தில் காட்டாமல் ஒப்புக்கொண்டேன்.
அது பொத்தான் வைத்து முன்னுக்கு பூட்டும் ரீசேர்ட். அது முடிந்த இடத்தில் கழுத்து தொடங்கி மேலே போனது. ஒரே இழுவையில் இருவரும் தலைக்கு மேலால் ரீசேர்ட்டைக் இழுத்துக் கழற்றி வீசிவிட்டு ஒருவர் தோளை ஒருவர் அணைத்தபடி நின்றனர்.  இருவரும் ஒரே அச்சாக  இருந்தனர். பூக்கள் நிறைந்த மலையும், மரங்களும், ஆறும் பின்னணியாக அமைந்தது. படம் எடுத்து முடிந்தபிறகும் அது தெரியாமல் அவர்கள் சிரித்தபடி காமிரா முன்னால் நின்றார்கள்.

தங்களுக்கு ஒரு படம் வேண்டுமென்று கேட்டாள் சின்னவள். அவள் இந்தக் கேள்வியைக் கேட்டபோது அழுக்கான ரீசேர்ட்டை மறுபடியும் மாட்டிக்கொண்டிருந்தாள். அவளுடைய தலையும், ஒரு கையும் ஒரு மார்பும் ரீசேர்ட்டுக்கு உள்ளேயும், மற்ற மார்பு வெளியேயும் இருந்தது. அடுத்தமுறை இந்த வழியால் போகும்போது கொடுப்பேன் என்றேன். ஆனால் அவர்களை எங்கே தேடுவது? மறுபடியும் சிறியவளே பதில் கூறினாள். ‘இந்த ஆற்று தண்ணீரிலேயே நிற்போம். இல்லாவிட்டால் அதோ அந்தப் பளிங்கு வீட்டில் இருப்போம்’ என்றாள். மறுபடியும் அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள். அந்தச் சிரிப்பு அலை அலையாக எழும்பியது.
அந்த அலையுடன் நான் காருக்கு திரும்பியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை, எனக்கு ஒரு கேள்வி இருந்தது. ‘இது சட்டவிரோதமான காரியம் அல்லவா?’ அவ்வளவு குறைந்த நேரத்தில் முழுச் சிரிப்பில் இருந்து முழுக் கோபத்துக்கு ஒருவர் மாறியதை அன்றுதான் கண்டேன். அம்மாக்காரி சொன்னாள், ‘சட்டவிரோதமா? அவர்கள் என்னைக் கொல்லட்டும், என்னை உதைக்கட்டும். நானும் என் மகளும் இன்று காலை உணவு சாப்பிட்டோமா என்று ஒருவருமே கேட்பதில்லை. என்னுடைய ஆற்றுத் தண்ணீரில் நான் நிற்கக்கூடாதா?’

நான் அந்தப் பெண்களை எடுத்த படம் அருமையாக விழுந்திருந்தது. பார்த்தால் தாயும் மகளும் என்று சொல்லவே முடியாது. அக்காவும் தங்கையும் போலவே தோளுக்கு மேல் கைபோட்டபடி நின்றார்கள். நான் பெரிய புகைப்படக்காரன் அல்ல; என்னுடைய காமிராவும் பெரிய விலையுயர்ந்த காமிரா என்று சொல்வதற்கில்லை. ஆனால் அந்தப் படத்தில் எல்லா அம்சங்களும்  பொருந்தியிருந்தன. பூச்சொரிந்த மலையும், உயர் மரங்களும், படிகம் போன்ற ஆற்று நீரும், அடக்கமுடியாமல் எழும்பிய சிரிப்பை கொஞ்சமாக வெளியே விடும் பெண்களும். அவர்களின் அழகு அப்படி அபூர்வமாக அமைந்ததற்கு காரணம் அந்தக் கண்களில் துள்ளிய சூரிய ஒளிதான்.

அடுத்து வந்த சில வாரங்களில் மழை பிடித்துக்கொண்டது. மழை என்றால் ரொங்கோ போகும் ரோட்டுப்பாதை சேறும் சகதியுமாக மாறிவிடும். கார் உருளுவதற்குப் பதிலாக மிதக்கவும், சறுக்கவும் செய்யும். மழைப் பருவம் முடிந்து போனபோது வழக்கமான இடத்தில் காரை நிறுத்திவிட்டு அந்தப் பெண்களைத் தேடினால் அவர்களைக் காணவில்லை. அவர்கள் வேலைசெய்த அதே இடத்தில் வேறு  இரண்டு நடுத்தர வயது ஆண்கள் இடுப்பளவு தண்ணீரில் நின்று ஆற்று மணலை அரித்தார்கள். அந்தப் பெண்களைப் பற்றி விசாரித்தபோது அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. புகைப்படத்தை எடுத்துக் காட்டினதும் புரிந்துகொண்டார்கள். அவர்களை சில வாரங்களுக்கு முன்னால் பொலீஸ் பிடித்துச் சென்றுவிட்டது. எதற்காக என்று கேட்டபோது உரிமம் இல்லாமல் வைரம் அரித்த குற்றத்திற்காக என்றனர்.

‘உங்களிடம் உரிமம் இருக்கிறதா?’

‘இல்லை, ஆனால் மறுபடியும் பொலீஸ் இந்தப் பகுதியில் திடீர்சோதனை நடத்த ஆறுமாதம் பிடிக்கும்.’

நான் அவர்களிடம் படத்தைக் கொடுக்கப் போனபோது மனைவி தடுத்துவிட்டார். திரும்பவும் காருக்குள் ஏறியதும் இன்னொரு தடவை அந்தப் படத்தை வெளியே எடுத்துப் பார்க்கத் தோன்றியது. மனைவி ‘கண்கள் என்ன பளபளப்பாக இருக்கின்றன’ என்றார். உண்மைதான், எப்படியும் ஒரு பளிங்குவீடு வாங்கவேண்டும் என்ற கனவு அந்தப் பெண்களின் கண்களில் மினுமினுத்தது. உற்றுப் பார்த்தபோதுதான் அது சூரிய ஒளி இல்லை, வைரக் கற்கள் என்பது தெரிந்தது.

நன்றி :அ.முத்துலிங்கம்
எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு:
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

பகத்சிங் பிறந்தநாளை மீண்டும் கொண்டாடுவோம் ! திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் !

0

காதிபத்திய எதிர்ப்புப் போராளியான பகத்சிங் பிறந்த நாளை, கோவை அரசு கலைக்  கல்லூரியில்  கொண்டாடியதற்காக முதுகலை முதலாமாண்டு மாணவி மாலதி, கல்லூரி நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதைக் கண்டித்து, பகத்சிங்கின் பிறந்தநாளை மீண்டுமொருமுறை கொண்டாடியுள்ளனர் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள். முன்னரே இக்கல்லூரி மாணவர்கள் பகத்சிங் பிறந்தநாளை கடந்த செப்-28 அன்று பு.மா.இ.மு. சார்பாக கடைபிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

”கல்லூரி வளாகத்திற்குள் அரசியல் பேசுவதும், மாணவர்கள் ஒன்றுகூடுவதும் மாணவர்களின் ஜனநாயக உரிமை. என் வழியாக மாணவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்த பார்க்கிறது அரசு. நான் வரலாற்றுத்துறை மாணவி. பகத்சிங் பிறந்தநாளை கொண்டாடுவதில் நான் ஆர்வமாக இருந்தேன். நான் கல்லூரியில் பிறந்தநாள் விழா கொண்டாடியதற்கும் போலீஸ் ஸ்டேசனுக்கும் என்ன சம்பந்தம்? என்னை  இடைநீக்கம் செய்ததற்கான உத்தரவு நகல் ஒன்றை கோவை சி-2 போலீஸ் ஸ்டேசனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். கல்லூரி வளாகங்களில் அரசியல் பேசுவதும், கூட்டம் நடத்துவதும் என்ன தவறு? மறைமுகமான ரௌலட் சட்டம் ஏதும் இருக்கிறதா? இல்லை 144 ஏதும் பிறப்பிச்சிருக்கீங்களா?’’ என தனியார் தொலைக்காட்சி பேட்டியொன்றில் கேள்வி எழுப்பியிருந்தார், இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவி மாலதி.

“பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடினால் சஸ்பெண்ட் செய்வீர்கள் என்றால், பகத்சிங் வாரிசுகளான நாங்கள் பகத்சிங்கை உயர்த்திப் பிடிப்போம் எங்களையும் சஸ்பெண்ட் செய்யுங்கள்” என்று பகிரங்கமாகவே சவால் விடுக்கும் வகையில் கேக் வெட்டி கொண்டாடியிருக்கின்றனர், பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

பிறந்தநாள் விழாவிற்கு தலைமையேற்று பேசிய பு.மா.இ.மு.வைச் சேர்ந்த தோழர் சுரேஷ் ”மாணவி மாலதியை சஸ்பெண்ட் செய்துள்ளது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும். கண்டிக்கத்தக்கது என்பதைத் தாண்டி உச்சகட்ட பாசிசத்தின் வெளிப்பாடே’’ என்ற அவர் மேலும், ”கல்லூரியில் ரதயாத்திரை நடத்தலாம், ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடலாம் ஆனால்  மக்களின் விடுதலைக்காக போராடிய பகத்சிங் பிறந்த நாளை கொண்டாடக் கூடாதா? இன்று மாலதியை சஸ்பெண்ட் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்களிடம் பகத்சிங்கை கொண்டு சென்றுள்ளது அரசு. நாளை நம்மை சஸ்பெண்ட் செய்தால் அச்செய்தி இலட்சக்கணக்கான மாணவர்களிடம் பகத்சிங்கை கொண்டு செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்’’ என்றார்.

படிக்க:
பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !
♦ தம்பி தங்கைகளே ! உங்களுக்கு தோழர் பகத்சிங்கை தெரியுமா ? காணொளி

”பகத்சிங் சாகவில்லை. எங்களது ஒவ்வொருவரின் மனதிலும் வீரனாக வாழ்கிறான். நாங்கள் பகத்சிங்கின் வாரிசுகள்.’’ என்பதை தங்களது செயலின் வழியே அறிவித்திருக்கிறார்கள், திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி.
திருச்சி. 9943176246.

திருமணப் பரிசாக ‘ புதிய கலாச்சாரம் ’ வழங்குங்கள் !

வாழ்க்கையில் திருமணம் என்பது ஒரு மகிழ்ச்சியான தருணம். திருமணத்தில் கலந்து கொள்பவர்கள், மணமக்களுக்கு பரிசளித்து வாழ்த்திச் செல்வதும், மணமக்கள் வீட்டார், வந்தவர்களுக்கு சுவையான விருந்தளித்து வாசல்வரை தாம்பூலப் பை கொடுத்து வழியனுப்பி வைப்பதும் இன்றைய திருமணங்களின் வழக்கமான நடைமுறை.

வழக்கமாக தாம்பூலப்பை வழங்கப்படும் இத்தகைய திருமணங்களில் கலந்து கொள்வோருக்கு புத்தகங்களையும்கூட பரிசாகக் கொடுக்கலாமே. முற்போக்கு முகாமில் மணம் செய்வோருக்கு இந்த முறை அறிமுகமாகியிருக்கலாம். அதிலும் மண நிகழ்வில் கலந்து கொள்வோர் மணமக்களுக்கு பரிசளிக்கும் விதமாக புத்தக விற்பனை செய்யப்படும். கூடவே வருவோர் அனைவருக்கும் முற்போக்கு நூல்களை வழங்குவது இன்னும் சிறப்பு.

ஏனெனில் பெரும்பாலான மக்கள் அனைவரும் இன்னும் நேரடியான அரசியல் அமைப்புக்கள், கருத்துக்கள், நூல்களுக்கு வெளியேதான் இருக்கின்றனர். அவர்களுக்கு ஏதோ ஒரு வகையில் புரட்சிகர அரசியல் மற்றும் பண்பாட்டை அறிமுகம் செய்யும் வண்ணம் புதிய கலாச்சாரம் நூல்களை வழங்கலாம்.

குறிப்பிட்ட தலைப்பில் புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம், வினவு கட்டுரைகளை தொகுத்து அழகிய நூலாக்கி மாதந்தோறும் வெளியிட்டு வருகிறோம்.

முப்பது ரூபாய் விலையில் எண்பது பக்கங்களில் மேப்லித்தோ தாளில், ஃபெர்பெக்ட் பைண்டிங், மேட் லேமினேசன் ஆர்ட் பேப்பர் அட்டையுடன் அழகிய புத்தகமாக வெளிவருகிறது புதிய கலாச்சாரம். இத்தகைய கட்டமைப்பில் ஒரு நூலை இந்த விலையில் நீங்கள் எங்கேயும் வாங்க முடியாது. அச்சிடும் செலவை மட்டும் விலையாக வைத்து இந்த நூல் வெளியாகிறது என்றால் மிகையல்ல. தற்போது தாள்கள் விலை, அச்சக கட்டணங்கள் உயர்ந்திருந்தாலும் அதே முப்பது ரூபாயில் தொடர்ந்து வெளிவருகிறது புதிய கலாச்சாரம்.

இது வரை வெளிவந்த நூல்கள் பல்வேறு தலைப்புகளில் செறிவான கட்டுரைகளை கொண்டிருக்கின்றன. சினிமா விமரிசனம், பெப்சி கோக், குப்பை உணவு, எது காதல், மீடியாவை நம்பலாமா, விவசாயத்தின் அழிவு, மாட்டுக்கறி துவேசம் என சமகால அரசியல் பண்பாட்டு நிகழ்வுகளில் முக்கியமானவற்றை இந்த நூல்கள் பேசுகின்றன.

ஆகவே தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம். கைவசம் இருக்கும் நூல்களின் இருப்பை வெளியிட்டுள்ளோம். அதிலிருந்து உங்கள் தலைப்புக்களை தெரிவு செய்யலாம். அவை ஒரே தலைப்பாக மட்டும் இருக்க வேண்டும் என்பதல்ல. எவ்வளவு வேண்டுமானலும் (இருப்பைப் பொறுத்து) வாங்கிக் கொள்ளலாம்.

ஏற்கனவே வெளிவந்த நூல்களில் குறைந்தபட்சம் 500 படிகள் வாங்குவதாக இருந்தால் அதை மீண்டும் அச்சடித்து தருவோம். சில நூல்களை திருமணங்களைத் தாண்டி பள்ளிகள், கல்லூரிகள், ஊர்க்கூட்டங்களிலும் விநியோகிக்கலாம். தேவைப்படுவோர் உடன் தொடர்பு கொள்க.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

 

 

குற்றங்களின் அம்மா

புதிய கலாச்சாரம்
ஜூன் 2015

விலை: ரூ.20

கையிருப்பு : 95 புத்தகங்கள்

 

   

அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ?
புதிய கலாச்சாரம்
ஜுலை 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 100 புத்தகங்கள்

ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா…
ஹீரோவா ஜீரோவா…?

புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2016விலை: ரூ.20 கையிருப்பு : 330 புத்தகங்கள்
காஷ்மீர் : இந்தியாவின் பாலஸ்தீனம் !

புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 116 புத்தகங்கள்

 

விடாது கருப்பு – மோடியின் கபட நாடகம்
புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2016

விலை: ரூ.20

கையிருப்பு : 33 புத்தகங்கள்

 
   

மோடியின் டிஜிட்டல் பாசிசம்
புதிய கலாச்சாரம்
சனவரி 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 30 புத்தகங்கள்

   

எதிர்த்து நில் !
புதிய கலாச்சாரம்
மார்ச் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 56 புத்தகங்கள்

 

கோக் – பெப்சி : கொலைகார கோலாக்கள் !

புதிய கலாச்சாரம்
ஏப்ரல் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 118 புத்தகங்கள்

 

 

 

மருத்துவ எமன் !

புதிய கலாச்சாரம்
மே 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 34 புத்தகங்கள்

 

கல்வி வியாபாரம் : வாங்க சார்வாங்க ! 

புதிய கலாச்சாரம்
ஜூன் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 51 புத்தகங்கள்

 

 

 

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம்

புதிய கலாச்சாரம்
ஜூலை 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 39 புத்தகங்கள்

 

ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள்

புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 110 புத்தகங்கள்

 

 

 

நீட் : ஏழைகளுக்கு எதிரான மனுநீதி !

புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 210 புத்தகங்கள்

 

ஊழல் பரிவார் உத்தமர்மோடி  ! 

புதிய கலாச்சாரம்
நவம்பர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 218 புத்தகங்கள்

 

 

 

போர்னோ : இருளில் சிக்கும் இளமை

புதிய கலாச்சாரம்
டிசம்பர் 2017

விலை: ரூ.20

கையிருப்பு : 245 புத்தகங்கள்

 

பேரிடர் : புயலா அரசா ?

புதிய கலாச்சாரம்
ஜனவரி 2018

விலை: ரூ.20

கையிருப்பு : 96 புத்தகங்கள்

 

 

 

ரஜினி : வரமா சாபமா ?

புதிய கலாச்சாரம்
பிப்ரவரி 2018

விலை: ரூ.20

கையிருப்பு : 212 புத்தகங்கள்

 

காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் !

புதிய கலாச்சாரம்
மார்ச் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 212 புத்தகங்கள்

 

 

 

காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் !

புதிய கலாச்சாரம்
ஏப்ரல் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 421 புத்தகங்கள்

 

இதயத்தை மீட்பது எப்படி ?

புதிய கலாச்சாரம்
மே 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 416 புத்தகங்கள்

 

 

 

தூத்துக்குடி முதல் நியமகிரி வரை :
வளர்ச்சியின் பெயரில்
கொல்லப்படும் மக்கள் !

புதிய கலாச்சாரம்
ஜுன் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 436 புத்தகங்கள்

 

ஆன்மீகக் கிரிமினல்கள் !

புதிய கலாச்சாரம்
ஜுலை 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 460 புத்தகங்கள்

 

 

தாய்மார்களைக் காப்பாற்றுவது
நவீன மருத்துவமா
?
இலுமினாட்டி பைத்தியமா ?புதிய கலாச்சாரம்
செப்டம்பர் 2018விலை: ரூ.30கையிருப்பு : 500 புத்தகங்கள்
 

மீடியாவை மிரட்டும் மோடி !

புதிய கலாச்சாரம்
அக்டோபர் 2018

விலை: ரூ.30

கையிருப்பு : 235 புத்தகங்கள்

 

புத்தகங்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்க:

இதழ்களுக்கான தொகையை அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC. NO. – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

இதழ்களுக்கான தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

பிரெக்சிட் : நெருங்கும் பொருளாதாரம் – பிரியும் அரசியல் !

நெருங்கும் பொருளாதாரம், பிரியும் அரசியல் : முதலாளித்துவ திண்டாட்டம்

28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்திருக்கும் பிரிட்டன் அதிலிருந்து வெளியேறுவதாக வாக்கெடுப்பில் முடிவு செய்ததைத் தொடர்ந்து அந்நாடு எதிர்கொண்டிருக்கும் சிக்கல்கள் குறித்து “ஐரோப்பாவிலிருந்து விலகல் : ஆப்பசைத்த பிரிட்டன்” –  என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை செப்டம்பர் மாதம் வெளியிட்டிருந்தோம்.

என்னதான் பிரச்சனை?

பிரெக்சிட் என்று அழைக்கப்படும் பிரிட்டனின் விலகல் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியமும், பிரிட்டனும் (ஐக்கிய அரசு – UK) எதற்காக பேச்சு வார்த்தை நடத்துகின்றனர்? வரப்போகும் சிக்கல்களின் அடிப்படை என்ன என்று கூடுதல் விபரங்களை அந்தக் கட்டுரை வெளியான அதே தளத்தில் வெளியான Why is the EU in no hurry for a trade deal? என்ற கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

முதலாளித்துவ உலகமயம் பெரிய நாடுகளின் கார்ப்பரேட்டுகளை ஒரு நாட்டு எல்லைகளை தாண்டி பல்வேறு நாடுகளில் பரவியிருக்கும் உற்பத்தி சங்கிலிகளை சார்ந்திருக்க செய்திருக்கின்றன. இதை சாத்தியமாக்குவதற்கும், எளிமையாக்குவதற்குமான வர்த்தக உடன்படிக்கைகள், சுதந்திர வர்த்தக மண்டலங்களை அரசுகள் உருவாக்கியிருக்கின்றன.

நாடுகளின் பகுதிகளும், வெவ்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியாக மேலும் மேலும் நெருக்கமாக பிணைக்கப்படுகின்றன. எனவே, ஒரு பொருளாதார ரீதியில் ஒரு நாட்டின் ஒரு பகுதி பிரிந்து செல்வது என்பது முதலாளிகளுக்கு மிகவும் நஷ்டம் ஏற்படுத்தக் கூடியதாக மாறியிருக்கிறது.

ஆனால், இந்த கார்ப்பரேட் உலகமயம் தோற்றுவிக்கும் நெருக்கடிகளால் உழைக்கும் வர்க்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதை எதிர்த்த போராட்டங்களை இனவாதமாக திசை திருப்பி பிரிவினை அரசியல் செய்வதும் முதலாளித்துவ அரசியலுக்கு தேவையாக இருக்கிறது. டிரம்பின் காப்புவாதம், பிரெக்சிட், “மண்ணின் மைந்தர்கள்” அரசியல் எல்லாம் இந்த வகையில் சேர்கின்றன.

ஒரு பக்கம் பொருளாதார ரீதியாக உலக நாடுகள் மேலும் மேலும் நெருங்கி வர வேண்டும். இன்னொரு பக்கம் அரசியல் ரீதியாக உழைக்கும் வர்க்கத்தை எதிர்கொள்வதற்கு பிரிவினைவாதமும், காப்புவாதமும் தேவைப்படுகிறது. இந்த இரட்டைக் கிடுக்கியில் சிக்கிக் கொண்டு திணறுகிறது, உலக முதலாளித்துவம்.

பிரிட்டனுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையேயான பொருளாதார உறவுகள் எப்படி இருக்கின்றன? பிரிட்டன் தனியாக பிரிந்து செல்வதாக கூறுவது அவற்றை எப்படி பாதிக்கும்? என்பதற்கான அடிப்படைகளை இந்தக் கட்டுரை விளக்குகிறது. 

கட்டுரையில் ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், ஐக்கிய அரசு என்று பேசப்படும் இடங்கள் அந்தந்த பகுதி கார்ப்பரேட்டுகளை குறிப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். உள் தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன.

*****

பிரெக்சிட்டுக்கு பிந்தைய வர்த்தக உடன்படிக்கை ஒன்றை பிரிட்டனுடன் ஏற்படுத்திக் கொள்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஏன் அவசரம் காட்ட மறுக்கிறது? [அதே நேரம் பிரிட்டன் அப்படி ஒரு ஒப்பந்தத்துக்காக தவியாக தவிக்கிறது]

  1. பிரிவதற்கு முன்னால் ஒப்பந்தம் போடுவதில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு ஆர்வம் இல்லை

பிரிட்டன் உடனான வர்த்தக பேச்சு வார்த்தைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக ஆணையர் இன்னும் தயாராக இல்லை” என்று தெரிவிக்கிறார் பி.பி.சி.யின் ஆடம் பிளெமிங்.

பிரஸ்ஸல்சின் பிரெக்ஸிட் வட்டங்களில் நிலவும் குழப்பமான சூழ்நிலைக்கு இது மற்றொரு காரணம். ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றியம் (EU)-ஐக்கிய அரசு (UK) இடையிலான எதிர்கால உறவுகள் பற்றியும், அதை நிர்வகிப்பது பற்றியும் குறித்த விவரங்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பிறகே முடிவு செய்யப்படும் என்று கருதுகின்றனர்” என்று கட்யா ஆட்லேர் தெரிவிக்கிறார்.

“அரசாங்கத்துக்கான கழகம்” என்ற சிந்தனை குழாம் சென்ற மாதம் வெளியிட்ட EU27-ன் கண்ணோட்டம் பற்றிய அறிக்கையில் இது தொடர்பான குறிப்புகள் இருக்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 27 நாடுகளின் அரசுகளுக்கு ஐக்கிய அரசின் (UK) சந்தையை விட ஐரோப்பிய ஒற்றைச் சந்தை அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அவை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும் அதன் ஒற்றைச் சந்தைக்கும் முன்னுரிமை என்று கூறும்போது இதையே குறிப்பிடுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றும் UK-உடன் ஒரு நெருக்கமான எதிர்கால உறவு வேண்டும், அதில் தங்கள் நலன்கள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று நினைக்க பல காரணங்கள் உள்ளன. இருந்தாலும் அதற்காக, இதுவரை நிலவி வரும் ஒற்றைச் சந்தை பற்றிய ஒருமித்த கருத்தை அவை கைவிட்டு விடப் போவதில்லை. ஒற்றைச் சந்தையையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் திடமாக பாதுகாப்பது என்ற நோக்கத்தைப் பொறுத்தவரையில் அனைத்து உறுப்பு நாடுகளும் ஒத்த கருத்தை கொண்டுள்ளன.

ஒற்றைச் சந்தையின் முழுமை என்னும் பதத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அடிக்கடி நாம் கேட்டாலும் நம் நாட்டு அரசியல்வாதிகள் அதற்கு போதுமான கவனம் செலுத்தியதாக தெரியவில்லை. அதன் உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை பாதுகாத்து பராமரிப்பதற்கு பல தேவைகள் உள்ளன. ஒற்றைச் சந்தை சுங்க ஒன்றியத்துடன் இணைந்து இயங்கும்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுக்கிடையே உலகத்தில் வேறெந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு தடையின்றி வர்த்தகம் நடப்பதை அது உறுதி செய்கிறது.

நாடுகளுக்கிடையே வர்த்தக காப்புவாதமும், முதலாளித்துவ சுதந்திர வர்த்தகமும்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே நாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மிகவும் சிக்கலானது. “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்வது நமக்கு அதிக சுதந்திரத்தை தரும்” என்றும் “வெளியே பல்வேறு நாடுகள் தங்களிடையே சுதந்திர வர்த்தகம் செய்துகொள்வதாகவும்” பலரும் நினைக்கின்றனர்.

ஆனால், உண்மை என்னவென்றால், சர்வதேச வர்த்தகத்தில் பொதுவான நிலைமை மோசமானது, மிருகத்தனமானது. வரலாற்று ரீதியாக, நாடுகள் எப்போதுமே வர்த்தகத்தை தமக்கு சாதகமாக கட்டுப்படுத்தி வந்துள்ளன. உள்நாட்டுச் சந்தைகளை பாதுகாத்து, பிற நாட்டு பொருட்களின் மீது இறக்குமதி வரிகளையும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் சுமத்தி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் இறுதியில் வர்த்தக ஒப்பந்தங்கள் மூலமாகவும் உலக வர்த்தக் கழகத்தின் மூலமாகவும் இந்தத் தடைகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டன.

இந்த நிகழ்முறை ஐரோப்பிய ஒன்றியத்தில் வேறு எந்த ஒரு ஒப்பந்த பகுதியையும் விட அதிக முன்னேற்றம் கண்டது. ஐரோப்பிய சுங்க ஒன்றியம், சரக்குகள் மற்றும் சில சேவைகளின் மீது சுங்கவரிகளை நீக்கியது. ஐரோப்பிய ஒற்றைச் சந்தை இணக்க விதிகளை செயல்படுத்துகிறது. இந்த இரண்டு அமைப்புகளின் சேர்க்கை எல்லை கட்டுப்பாடுகளுக்கான தேவையை நீக்குகிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளே ஒரே மாதிரியான வரிகள், ஒரே மாதிரியான தரநிர்ணயங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதால், ஒரு முழுமையாக தயார் செய்யப்பட்ட பொருளோ அல்லது மற்றொரு உற்பத்திக்கான உதிரி பாகமோ ஐரோப்பிய ஒன்றிய எல்லைக்குள் வந்தவுடன் அது எந்தத் தடையுமின்றி உறுப்பு நாடுகளுக்கிடையே நகர முடியும்.

உதாரணமாக, மான்செஸ்டரில் ஒரு டிரக்கில் பொருட்களை ஏற்றி நாடுகளின் எல்லைகளை கடந்து மூனிச்சிற்குள் ஓட்டி வந்து இறக்கி விட்டு, மேலும் பொருட்களை ஏற்றிக்கொண்டு எந்தத் தடையும் இல்லாமல் திரும்ப வந்துவிட முடியும். சர்வதேச வர்த்தகத்தில் வழக்கமான தடைகள் இல்லாத ஒரு நடைமுறையை உறுப்பு நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்குகிறது. இது வழக்கமான சர்வதேச வர்த்தக நிலைமைக்கு ஒரு விதிவிலக்கான அமைப்பாகும்.

ஒரு நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிவிட்டால் ஒன்றியத்தில் இருப்பதால் கிடைக்கும் சலுகைகளை இழந்துவிடும் என்றுதான் பிரெக்சிட்டுக்குப் பிறகு பிரிட்டனின் நிலையை புரிந்து கொள்ள வேண்டும். மாறாக, பிரெக்சிட்டுக்குப் பிறகு ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டன் மீது தடைகளைத் விதிக்கும் என்ற பரவலாக பேசப்படுவது தவறான சிந்தனை.

பிரிட்டன் வெளியேறிய பிறகு என்ன நடக்கும்?

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறினால், சர்வதேச வர்த்தகத்தில் இயல்பாக நடைமுறையில் இருக்கும் தடைகளை, ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளுடனான வர்த்தகத்திலும் அது எதிர்கொள்ள ஆரம்பிக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய அமைப்புக்கு வெளியே தன்னை நகர்த்துவதன் மூலம், வரிகளும் ஒழுங்குமுறைகளும் தடைகளாக இல்லாத ஒரு அமைப்பின் பயனை பிரிட்டன் இழக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக்கு வெளியில் பிரிட்டன் போய் விட்டால், பிற நாடுகளின் ஏற்றுமதிகளைப் போலவே பிரிட்டன் பொருட்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் கட்டுப்பாடு விதிக்கப்படும்.

ஆனால் நமது எல்லையை கடந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு செல்லும் பொருட்களை சோதனை செய்ய வேண்டாம் என்று நாம் முடிவு செய்தோமே? ஐரோப்பிய ஒன்றியம் வகுத்த அதே விதிமுறைகளைத் தானே நாமும் பின்பற்றுகிறோம். எனவே, மார்ச் 29-ல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகு என்ன மாறி விடும்? இது அயர்லாந்து தொடர்பான பிரச்சனையையும் தீர்த்து விடும் அல்லவா?

துரதிருஷ்டவசமாக அது அவ்வளவு எளிதல்ல. உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளின்படி அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரே மாதிரியான வர்த்தக விதிமுறைகளைத்தான் ஒரு நாடு கடைப்பிடிக்க முடியும். உறுப்பு நாடுகளுக்கிடையே பாரபட்சம் காட்ட முடியாது. பிராந்திய ஒப்பந்தங்களின் கீழோ, சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களின் கீழோ மட்டும்தான் ஒரு சில நாடுகளுக்கு மட்டும் சலுகை அளிக்கும் விதிமுறைகளை வகுத்துக் கொள்ளலாம்.

உலக வர்த்தகக் கழக விதிமுறைகள் எப்படி செயல்படுகின்றன?

இதை “அரசாங்கத்துக்கான கழகம்” இவ்வாறு விளக்குகிறது:

விதிமுறைகளை கடுமையாக அமல்படுத்த வேண்டாம் என்று ஒரு தலைபட்சமாக பிரிட்டன் முடிவு செய்தாலும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அது தனது எல்லைகளை முழுமையாக திறந்துவிட முடியாது.
முதலாவதாக, உலக வர்த்தகக் கழகத்தின் (WTO) விதிமுறைகளின் படி, ஐரோப்பிய ஒன்றிய பொருள் ஒன்றின் மீது இறக்குமதி தீர்வையை ரத்து செய்தால் அதே பொருள் பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் போதும் அதன் மீது வரி விதிக்க முடியாது. அப்படி வரி விதித்தால், ஐரோப்பிய ஒன்றிய பொருட்களின் மீதும் இறக்குமதித் தீர்வை விதிக்க வேண்டும்.

இரண்டாவதாக, உலக வர்த்தக கழகத்தின் பல்வேறு உடன்படிக்கை அமைப்புகளின் உறுப்பினராக இருக்கும் வகையிலும், TBT (வர்த்தகத்திற்கு தொழில்நுட்ப தடைகள்) மற்றும் SPS (சுகாதார மற்றும் தாவர சுகாதார நெறிமுறைகள்) உடன்படிக்கைகளில் கையெழுத்திட்ட வகையிலும், பிரிட்டன் உறுப்பு நாடுகளுக்கிடையே பாகுபாடு காட்டாத ஒழுங்குமுறை விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும்.

வேறு வார்த்தைகளில் சொன்னால், நீங்கள் ஒரு நாட்டிற்கு (ஐரோப்பிய ஒன்றியத்துக்கு) சுங்க வரியை கைவிடுகிறீர்கள் என்றால், எல்லா நாடுகளுக்கும் அதை கைவிட வேண்டும். இது பிற ஒழுங்குமுறை விதிகளுக்கும் பொருந்தும்.

பிரெக்சிட்டும் உலக வர்த்தகக் கழகமும்

அயர்லாந்து எல்லையில் பிரிட்டன் கட்டுப்பாடுகளை விதிப்பதை கைவிட்டு விட்டால் விரைவில் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதிப்பதையும் நிறுத்த வேண்டியிருக்கும் இல்லாவிடில் ஏதாவது ஒரு நாடு இது தொடர்பாக உலக வர்த்தக அமைப்பில் சட்டரீதியான வழக்கு ஒன்றை எழுப்பும்.

FT (Financial Times)-ன் ஆலன் பீட்டி இதை இவ்வாறு விளக்குகிறார்:

இங்கிலாந்து இந்த வகையிலான பாகுபாடு காண்பித்தால், உலக வர்த்தக கழகத்தில் பெரும் எண்ணிக்கையிலான வழக்குகளுக்கு அது வழிவகுக்கும்.

உலக வர்த்தகக் கழகத்தில் இது வரை ஐரோப்பிய ஒன்றியத்தால் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு வந்த பிரிட்டன் ஒன்றியத்திலிருந்து விலகி தன்னைத் தானே பிரதிநிதித்துவப்படுத்திக் கொள்ளப் போகிறது. இந்த அமைப்பில் தனது அந்தஸ்தை அது நிலைநாட்டிக் கொள்ள வேண்டியிருக்கும்.

உணவுப் பொருட்கள் இறக்குமதியில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கிடையே இப்போது இருக்கும் ஒதுக்கீடுகளைப் பிரித்துக் கொள்வதில் மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவு பிரிட்டனுக்கு தேவைப்படும். தன் நாட்டு நிறுவனங்களுக்கு வெளிநாட்டு டெண்டர்களில் பங்கு பெற உரிமையை வழங்கும் உலக வர்த்தகக் கழகத்தின் அரசு கொள்முதல் ஒப்பந்தங்கள் தொடர்பாகவும் பிரிட்டன் தனது நலன்களை புதிதாக உறுதி செய்து கொள்ள வேண்டியிருக்கும்.

இந்த நேரத்தில் உலக வர்த்தகக் கழகத்தின் அடிப்படை சட்டத்தில் மிகப்பெரிய மீறலை உருவாக்குவது, மற்ற நாடுகளை தனக்கு ஆதரவாக முடிவெடுக்க வைப்பதற்கு நிச்சயம் உதவி செய்யாது.

இதற்கு என்ன தீர்வு?

பிரிட்டன் பிற நாட்டு இறக்குமதிகளுக்கு விதிக்கும் அதே கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றிய இறக்குமதிகளுக்கு விதிக்க வேண்டும் என்று சொன்னால் எதிர் திசையியிலும் இது பொருந்தும். ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனின் ஏற்றுமதிகளை மற்ற நாடுகளின் ஏற்றுமதிகளைப் போலவே சுங்க சோதனைகளுக்கும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தியாக வேண்டும்.

இதன் பொருள் ஐரோப்பிய ஒன்றியமானது பிரிட்டிஷ் பொருட்களின் மீது புதிதாக கட்டணங்களையும் சோதனைகளையும் விதிக்கும் என்று இல்லை. சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் நாம் வெளியேறியதன் தர்க்கரீதியான விளைவாக அவை இருக்கும்.

சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் எதுவும் இந்தத் தடைகளை மாயமாக மறைந்து போகச் செய்யப் போவதில்லை. ஒழுங்குமுறைகளும் பொருட்களின் ஆரம்ப இடம் பற்றிய விதிகளும் அமல்படுத்தப்பட்டே தீர வேண்டும். சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் பிரிட்டன் வெளியேறிய பின்னர், எல்லை சோதனைகள் எல்லா நாடுகளுக்கும் ஒரே போல அமல்படுத்தப்பட வேண்டும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மட்டும் தனியாக விலக்கு அளிக்க முடியாது.

அதனால்தான் ஒற்றைச்சந்தையில் எந்த அளவுக்கு பங்கேற்பது என்று தன் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் பிரிட்டனின்’ அணுகுமுறையை அனுமதிக்க ஐரோப்பிய ஒன்றியம் மிகவும் தயக்கம் காட்டுகிறது. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தனித்து மற்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை செய்ய ஆரம்பித்தவுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தரநிலைகளை எட்டாத பொருட்கள் பிரிட்டனுக்குள் வர ஆரம்பிக்கும். அந்தப் பொருட்கள் பிரிட்டனின் எல்லையை கடந்து ஐரோப்பாவுக்குள் செல்வதை தடுப்பதற்கு எல்லை சோதனைகளை அமல்படுத்த வேண்டும்.

ஒரு நாடு சுங்க ஒன்றியத்திற்குள்ளும், ஒற்றைச் சந்தையிலும் பாதி உள்ளே பாதி வெளியே இருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய ஒரு ஏற்பாடு ஒட்டு மொத்த அமைப்பு முறையையும் குலைத்து விடும். அதாவது ஒரு சுங்க ஒன்றியம் அல்லது ஒற்றைச் சந்தைக்குள் அனுமதிக்கப்படும் எல்லா பொருட்களும் அதற்குள் எங்கு வேண்டுமானாலும் தடை இன்றி நகர முடிய வேண்டும். இதன் மறுதலை என்னவென்றால் அதற்கு வெளியிலிருந்து வரும் எல்லா பொருட்களும் சோதனைக்குள்ளாக்கப்பட வேண்டும்.

சுதந்திர சந்தை முதலாளிகளுக்கு தேவை

பொருட்களை இவ்வாறு தடைகளின்றி இடம் விட்டு இடம் அனுப்புவது கார்ப்பரேட்டுகள் ஐரோப்பிய ஒன்றிய அளவிலான உற்பத்தி/மதிப்பு சங்கிலிகளை உருவாக்கி பயன்படுத்துவதை சாத்தியமாக்குகிறது. கீழே உள்ள எரிபொருள் உட்செலுத்துவான் (fuel injector) ஒன்றின் நகர்வுகளை காண்பிக்கும் ஃபைனான்சியல் டைம்ஸ் வரைபடம், இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பொருள் எப்படி வேறெங்கோ தயாரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உற்பத்தி பொருளின் பகுதியாக சேர்கிறது என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும்.

பிரிட்டன்தான் ஏற்றுமதி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்யத் தேவையான துணை பாகங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. மற்ற நாடுகள் ஏற்றுமதி செய்யும் பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான துணை பொருட்களை தான் அவற்றுக்கு அனுப்புகிறது. மார்க் கார்னி சுட்டிக்காட்டியுள்ளபடி, கடந்த வருடம் பிரிட்டனின் ஏற்றுமதியின் மொத்த மதிப்பில் 30 சதவீதத்துக்கும் மேல், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற இடங்களில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான துணை பொருட்கள் ஆகும்:

ஐக்கிய அரசு (UK) ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றிய மதிப்புச் சங்கிலி இடைநிலைப் பாகங்களின் மதிப்பு 1995-இல் மொத்த ஏற்றுமதியில் 5-இல் ஒரு பங்காக இருந்தது 2014-இல் 3-ல் ஒரு பங்கு என்று அதிகரித்துள்ளது. ஐரோப்பா வழியாக ஏற்றுமதி செய்யும் அளவுக்கு பிரிட்டன் ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்வது இல்லை; கண்டத்திற்கு அப்பால் ஏற்றுமதி செய்யப்படும் இறுதி பொருட்களுக்கான விநியோகஸ்தராக பிரிட்டன் இருக்கிறது.

முதலாளிகளின் கத்தி எந்தப் பக்கம் சாயும்?

பிரிட்டன் ஒற்றைச் சந்தையிலிருந்தும் சுங்க ஒன்றியத்திலிருந்தும் விட்டு விலகினால் இந்த வர்த்தகம் முழுமையும் எல்லை சோதனைகளுக்கு உட்படுத்தப்படும். இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும், கால தாமதத்தை பொறுதுதக் கொள்ள முடியாத கார்ப்பரேட் உற்பத்தி செயல்முறைகளுக்கு இடையூறாக மாறும். சில சந்தர்ப்பங்களில், இந்த விநியோக சங்கிலிகளை இடமாற்றம் செய்யும் அளவுக்கு இந்த இடையூறுகள் இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களை விட ஐக்கிய அரசு நிறுவனங்களை இது அதிகம் பாதிக்கும், ஏனென்றால் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் பிரிட்டனைத் தவிர்த்து வேறு நாடுகளை எளிதில் தேர்ந்தெடுத்து விட முடியும். ஆனால் பிரிட்டிஷ் நிறுவனங்கள் தங்களுடைய தேவைகளை பிரிட்டனுக்கு உள்ளேயே பெறும்படி மாறுவது சிரமமான ஒன்றாக இருக்கும்.

நிதிக் கட்டமைவு ஆய்வுகளுக்கான கழகம் இதை இவ்வாறு சொல்கிறது.

பிரிட்டிஷ் நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களின் சார்பு நிலை குறைவானது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிட்டன் தவிர்த்த உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் உள்ளீடுகளில் 1.5%-ஐ மட்டுமே பிரிட்டனிலிருந்து பெறுகின்றன.

விநியோக சங்கிலிகளில் ஏற்படும் சீர்குலைவு பிரிட்டனை விட மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு மிகவும் குறைவாகவே இருக்கும்.

மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பார்வையில் பிரெக்ஸிட் (Brexit) உடன் தொடர்புடைய பெரும்பாலான பிரச்சினைகள் பிரிட்டன் சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் வெளியேறுவது தொடர்பானவை. ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒரு அளவிற்கு அதை குறைக்கலாம் ஆனால் அது விநியோக சங்கிலிகளின் சுமுகமான ஓட்டத்தை மீட்டெடுக்காது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் துறை இயக்குநரான இயன் ராபர்ட்சன், “உலக வர்த்தக அமைப்பு விதிகளை விட சுதந்திர வர்த்தக உடன்படிக்கை (FTA) பெரிய அளவு மேம்பட்டது இல்லை. ஒருமுறை விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டு விட்ட பிறகு, ஏற்படும் சேதத்தை சரிக்கட்டுவது எளிதல்ல” என்கிறார்.

இதை பிரிட்டிஷ் துறைமுக சங்கமும் ஒப்புக்கொள்கிறது. உலக வர்த்தக அமைப்பின் விதிகளின் கீழ் இருப்பதை விட, ஒரு சுதந்திர வர்த்தக உடன்படிக்கை(FTA)யின் கீழும் துறைமுக நடைமுறைகள் பெரிய அளவு வேறுபடாது என்கிறது அது. அதன் தலைமை நிர்வாகி கூறும்போது:

பிரெக்ஸிட் (Brexit)-க்குப் பிந்தைய ஏதாவது ஒரு விதமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை இத்துறையில் பலரும் வரவேற்பார்கள், ஆனால் அது எல்லை கட்டுப்பாடுகளை இல்லாமல் செய்து விடப் போவதில்லை. எல்லை கட்டுப்பாடுகளை பொறுத்தவரை சுங்க ஒன்றியத்திலிருந்தும் ஒற்றைச் சந்தையிலிருந்தும் விலகுவதின் தாக்கம் துறைமுகங்களை பொறுத்தவரை ஒப்பந்தம் போட்டாலும், போடாமல் போனாலும் ஒரே விளைவுதான் என்று மாறியிருக்கிறது.

உண்மையில் இது ஐக்கிய அரசுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தில் புதிய எல்லை கட்டுப்பாடுகளை தவிர்க்க முடியாததாக மாற்றி விடும். துறைமுகங்களிலும் முக்கிய வர்த்தக நுழைவு புள்ளிகளிலும் ஏற்படவிருக்கும் தாமதங்கள் தவிர்க்க முடியாத சாத்தியம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றிய முதலாளிகள் இதை எப்படி பார்க்கிறார்கள்?

இதனால் தான் ஐரோப்பிய ஒன்றியம் வர்த்தக ஒப்பந்தங்களைப் பற்றி பேசுவதற்கு அவசரப்படவில்லை எனத் தோன்றுகிறது. ஐரோப்பிய ஒன்றிய விநியோக சங்கிலிகளுக்கான சேதத்தை மட்டுப்படுத்தி, சுங்க ஒன்றியத்தையும் ஒற்றைச் சந்தையையும் பிரிட்டன் இன்றி செயல்படும் வகையில் மாற்றி அமைப்பது அதன் முதன்மையான குறிக்கோள். பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம் போடுவது வெறும் “இருந்தால் நல்லது” என்ற அளவில்தான் பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஒரு எறும்புப் புற்றை தொந்தரவு செய்தால் என்ன நடக்கும்? எறும்புகள் எவ்வளவு சீக்கிரம் உடைப்பை அடைக்க முடியும் என்று அதற்கான முயற்சிகளில் இறங்குகின்றன. பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவனமாக கட்டப்பட்ட அமைப்பை சிதைக்கும்போது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அதைத்தான் செய்கின்றன. எந்தவொரு துளையையும் விட்டு வைக்காத வகையில் உடைப்பை அடைக்க அது மீண்டும் முயற்சிக்கிறது. ஒரு இரண்டு ஆண்ட காலம் மாறிச் செல்லும் கட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்குள் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தங்களுடைய விநியோக சங்கிலிகளை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும், அதனால் பிரிட்டனின் இறுதி விலகல் அவற்றுக்கு ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது.

கடைசியாக இது எப்படி போய் முடியும்?

ஐரோப்பிய ஒன்றியம், பொருட்களுக்கான ஒற்றைச் சந்தையில் மட்டும் பிரிட்டனை அனுமதிக்கும் புதிய சுங்க ஒன்றியம் பற்றிய பேச்சுவார்த்தைக்கு முன்வருவதற்கான சாத்தியம் உள்ளது. சாம் லோ மற்றும் ஜான் ஸ்ப்ரிங்போர்ட் வாதிடுவதைப் போல, இது ஜெர்சி தற்போது ஏற்பாடு செய்வதை ஒத்திருக்கும். பிரிட்டன் அதன் குடியேற்றக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கும் இது உதவுகிறது.

“ஜெர்சி முறை தேர்வு” பொருட்களின் மீதான பரிசோதனையின் தேவைகளை அகற்றும், இதன் மூலம் விநியோக சங்கிலிகள் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும், இது அயர்லாந்துடன் எல்லைக் கோடு பற்றிய பிரச்சனையையும் தவிர்த்து விடும். இதுவரை, நான் பார்த்தவற்றில் இந்த ஒரு திட்டம்தான், பிரிட்டன் தான் மீற முடியாத நிலைப்பாடுகளை பராமரித்துக் கொள்ளும் அதே நேரம் அயர்லாந்து தொடர்பாக அதன் வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவதை சாத்தியமாக்கும். அதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தையும் ஏற்றுக் கொள்ள வைக்கும்.

இது நடக்கவில்லை என்றால் 2021-ல் வர்த்தக ஒப்பந்தம் எதுவும் போடாமலேயே ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டனை கழற்றி விடுவது நடக்கலாம். அதற்குள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது விநியோகச் சங்கிலிகளை மாற்றியமைத்து, நாடுகளின் துறைமுக உள்கட்டமைப்புகளை சீரமைத்துக் கொண்டிருக்கும். அந்த நிதி ஆண்டின் இறுதி வரைக்கான வரவு செலவு திட்டத்தில் பிரிட்டனின் பங்களிப்பையும் பெற்றுக் கொண்டிருக்கும். அவ்வாறு, அதன் தங்கு தடையில்லாத வர்த்தக அமைப்பை பாதுகாத்துக் கொண்ட பிறகு வேண்டுமானால் ஐரோப்பிய ஒன்றியம் அதற்குள் அலங்கோலப் பட்டுப் போய் விட்ட அண்டை நாடான ஐக்கிய அரசுடன் வர்த்தக உடன்படிக்கை பற்றி பேச்சு வார்த்தை நடத்த முன்வரலாம்.

மூலக் கட்டுரை : Why is the EU in no hurry for a trade deal?

நன்றி : new-democrats இணைய தளத்தில் வெளியான கட்டுரை.

சைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா ? பேரா. வீ.அரசு உரை | காணொளி

“ஜே.என்.யு. முதல் சென்னைப் பல்கலைக் கழகம் வரை – அறிவுத் துறையினரைத் தாக்கும் இந்து மதவெறிக் கும்பல் ! தமிழ்ச் சமூகமே ஆர்த்தெழு !” என்னும் முழக்கத்தின் கீழ் சென்னையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பினர் நடத்திய கருத்தரங்கத்தில் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் வீ. அரசு கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவரது உரையில், “பேராசிரியர் பத்மாவதி எழுதிய புத்தகத்திற்கு எதிர்ப்பு என்பது இந்துத்துவக் கும்பலைப் பொறுத்தவரையில் ஒரு எடுகோள்தான். அவர்களது உண்மையான நோக்கம் பேராசிரியர் சரவணனுக்கு சிக்கல் கொடுக்க வேண்டும் என்பதுதான். அதற்குக் காரணம், அவர், “சைவ சமயத்திற்கும் இந்து மதத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் இல்லை என்பதை ஆய்வுகளில் தெளிவுபடுத்தியிருப்பதைத் தான்.

ஸ்மார்த்த பார்ப்பனர்களான சங்கராச்சாரிகள், சதித்தனமாக சைவத்தையும், வைணவத்தையும் பார்ப்பனமயமாக்கி அதனை இந்துமதத்திற்குள் திணித்தார்கள். ஆனால் சைவமும் வைணவமும் இந்து மதத்திற்குள் சேர்த்தியானவை அல்ல. இவ்விரு சமயங்களுக்கும் இந்து மதத்துக்கு துளி சம்பந்தமும் இலை என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட போது, அங்கு கிடைத்த ஏராளமான முத்திரைகளில் முக்கியமானது லிங்கம். லிங்க வழிபாடு என்பது இயற்கையான வழிபாட்டு முறைகளில் ஒன்று.

படிக்க:
கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

மக்கள் பொதுவாக இயற்கையை புரிந்து கொள்ள இயலாதவர்களாகவே இருந்தார்கள். இன்றும் பெரும்பான்மையினர் அந்நிலையிலேயே இருக்கிறார்கள். தங்களது அறியாமையை “நம்பிக்கை”யைக் கொண்டுதான் நிரப்புகிறார்கள். அந்த நம்பிக்கை எனும் நிழலில்தான் இன்று கடவுள், பக்தி ஆன்மீகமும் நீடிக்கின்றன.

உலகில் உயிர் உற்பத்தியை அடையாளப்படுத்தும் குறியீடுதான் லிங்கம். சிந்து சமவெளி நாகரிகத்தில் இவ்வகை வழிபாடுதான் இருந்தது. தமிழர் நாகரிகம் என்பது இயற்கை வழிபாடுதான் என்பதை நமது சங்க இலக்கியங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.

நமது சங்க இலக்கியங்களைப் பாடிய காலம் ஒன்று, தொகுத்த காலம் இன்னொன்று. அதற்கு விளக்க உரை அதன் பின்னர் எழுதப்பட்டது. கிபி 8-ம் நூற்றாண்டில்தான் சங்க இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. பரிபாடலையும், திருமுருகாற்றுப் படையையும், கலித்தொகையையும் பழைய சங்க இலக்கியங்களோடு சேர்த்துத் தொகுத்துவிட்டனர். சங்ககால இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகியவற்றில் இயற்கை சார்ந்த வழிபாட்டு முறைகளே காட்டப்படுகின்றன. பின்னர் இணைக்கப்பட்ட பரிபாடல், கலித்தொகை, திருமுருகாற்றுப்படை போன்றவை அனைத்தும் வைதீக வழிபாட்டு முறைகளைப் பற்றி பேசுகின்றன.

இயற்கை சார்ந்த வழிபாட்டு முறையான லிங்க வழிபாட்டு முறைதான், சைவ வழிபாட்டு முறை. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், அனைத்து சமயங்களைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு மதச்சார்பற்றவராகவே அந்நூலை எழுதியுள்ளார். சைவம், வைணவம் எல்லாம் தனித்து செயல்படவல்ல சமயங்களாக இருந்தும், பிற்காலங்களில் பிராமணர்களின் வைதீக மதத்திற்குள் சதித்தனமாக இணைக்கப்பட்டன.

தீயை சார்ந்துதான் பிராமண மதத்தின் வேதங்கள், உபநிடதங்களும் எழுதப்பட்டன. அவர்கள் இயற்கையை வழிபடவில்லை. கிபி 4 – 5 ஆகிய நூற்றாண்டுகளில் மவுரிய சாம்ராஜியத்தின் வழியில் வந்த புத்தமதம், சமண மதம் உள்ளிட்டு அனைத்து சமயங்களும் குப்தர்கள் ஆட்சிக் காலத்தில் அழிக்கப்பட்டு வைதீக, பார்ப்பனிய, ஆரிய மரபுகள் சமஸ்கிருத மொழியின் மூலமாக உள்நுழைகின்றனர். அவர்கள் மன்னர்களை தங்களது கைகளுக்குள் வைத்துக் கொண்டார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில், பல்லவர்கள் சமஸ்கிருதத்தை ஆட்சி மொழியாக்குகிறார்கள். திராவிட மொழிக் குடும்பங்கள் வாழ்ந்த இப்பகுதியில் பல்லவர் காலம் தொடங்கி, பிற்காலச் சோழர்கள் வரையில் வைதீக மரபுகள் உட்புகுத்தப்பட்டன. அக்கிரகாரங்கள், வைதீக பாடசாலைகள் கோவில்கள் பல கட்டப்பட்டன. இவர்கள் சமஸ்கிருந்தத்தை ஆட்சி மொழியாக்கினார்கள்.

வைதீக சமயத்தினர், சைவ மரபையும், வைணவ மரபையும் வைதீகமயப் படுத்தினர். இடைக்காலத்தில் மாணிக்கவாசகர், திருமூலர், இராமலிங்க அடிகள் உள்ளிட்டோர் இதனை அம்பலப்படுத்தினர். ஆனால் சைவ மரபைச் சேர்ந்த மடாதிபதிகளை வைதீகர்கள் வென்றெடுத்தனர்.

பின்னர் சைவ மடங்களில் சமஸ்கிருத வைதீக மரபுகளே அன்றாட மரபாக கட்டியமைக்கப்படுகிறது. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பு இந்து மதம் என்ற சொல் இங்கு இல்லை. பிராமண மதம் என்பது மட்டும்தான் இருந்தது.

படிக்க:
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்
பார்ப்பனியம் – ஒரு விவாதம்!

தமிழக மரபை இவர்கள் படிப்படியாக மாற்றியது குறித்தும் நாம் பார்க்கவேண்டும். கிபி 7-ம் நூற்றாண்டில் தமிழுக்கு துளியும் சம்பந்தம் இல்லாத விநாயகனை இங்கு கொண்டு வந்து கடவுளாக சொருகுகிறார்கள்.

சாதாரண மக்கள் தங்களை ஒத்த தலைவனாக கொண்டாடும் முருகனை கி.பி. 8-ம் நூற்றாண்டில் ஸ்கந்தனாக மாற்றுகிறார்கள். 13-ம் நூற்றாண்டில் சைவர்களைக் கொண்டே ஸ்கந்த புராணத்தை எழுத வைத்தார்கள். ஸ்கந்த புராணத்தின் ஆபாசம் ஊரறிந்த ஒன்றே.

பிற்காலத்தில் தமிழ் இசை மரபை மாற்றி கர்நாடக இசையை உருவாக்குகிறார்கள். பின்னர் 18-ம் நூற்றாண்டில் வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு ஆட்சி செய்ய வசதியாக, கிறுஸ்தவர்கள், முசுலீம்களைத் தவிர்த்து மீதமுள்ளவர்களை இந்து என்ற சொல்லைக் கொண்டு பெயரிடுகிறார்கள். இங்குதான் வைதீக மதத்தை இந்து மதமாக உருவாக்குகிறார்கள். இதில் திலகரின் பங்கு முக்கியம்.

சொல்லளவில் இருந்த ’இந்து’-க்கு ஒரு தேசியம் வேண்டும் என்பதற்காக வேலை பார்க்கிறார் திலகர். பிள்ளையார் வழிபாட்டு முறையை பொதுமைப் படுத்துகிறார். 19-ம் நூற்றாண்டில் மனோன்மனியம் சுந்தரம் பிள்ளை போன்றவர்கள் இதனை அம்பலப்படுத்துகின்றனர். இந்து மதத்திலிருந்து சைவ மரபை வேறுபடுத்திக் கட்டமைக்கிறார். நல்லசாமி, சுப்பிரமணியம், மறைமலை அடிகள், திருவிக, ஆகியோர் சைவத்திற்கும் இந்து மதத்திற்கு எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை எனக் கூறியிருக்கிறார்கள்.

இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற கருத்தாக்கத்தை நாம் முன் வைக்க வேண்டும்.

தமிழகத்தில் தமிழை ஒழித்துக்கட்ட எடுக்கப்படும் முயற்சிகளை முடக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்று உரையாற்றினார்.

முழு உரையைக் காணொளியில் காண …

பாருங்கள் ! பகிருங்கள் !

தாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 4

ரு நாள் இரவு பாவெல் சாப்பாட்டுக்குப் பின், ஜன்னலின் திரையை இழுத்து தன் தலைக்கு மேலாகவுள்ள ஆணியில் தகர விளக்கை மாட்டினான். பிறகு ஒரு மூலையில் அமர்ந்து படிக்க ஆரம்பித்தான். அவனது தாய் பண்ட பாத்திரங்களைக் கழுவிவிட்டு சமையலறையிலிருந்து வெளியே வந்தாள்; மெதுவாக அவன் பக்கம் சென்றாள். அவன் தலையை உயர்த்தி தன் தாயிடம் வந்த காரியத்தை வினவும் முகபாவத்தோடு அவனை ஏறிட்டுப் பார்த்தான்.

மாக்சிம் கார்க்கி

“ஒன்றுமில்லை, பாஷா! ஒன்றுமில்லை!” என்று முனகிவிட்டு, அவள் மீண்டும் சமையலறைக்குச் சென்றாள்; அவளது புருவங்கள் மட்டும் தைரியமற்று நெளிந்து கொடுத்தன. பிறகு அவள் தனது சிறிது நேரச் சிந்தனைப் போராட்டத்திலிருந்து விடுபட்டு, கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட்டு மீண்டும் தன் மகனை நெருங்கினாள்.

”நீ எப்போது பார்த்தாலும் எதையோ படித்த வண்ணமாயிருக்கிறாயே. அதைத்தான் கேட்க எண்ணினேன்” என்று அமைதியாகச் சொன்னாள் அவள்.

நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.

அவன் புத்தகத்தை மூடினான்.

”உட்கார், அம்மா !”

அவனது தாய் சிரமப்பட்டுக் கீழே உட்கார்ந்து, முதுகை நிமிர்த்தினாள்; ஏதோ ஒரு முக்கிய விஷயத்தைக் கேட்பதற்குத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டாள்.

பாவெல் அவளைப் பார்க்காமலேயே பேச ஆரம்பித்தான். அவனது குரல் தணிந்திருந்தபோதிலும், அது ஏனோ உறுதி வாய்ந்ததாக இருந்தது.

‘நான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா? இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன. இவையெல்லாம் ரகசியமாக யாருக்கும் தெரியாமல் அச்சிடப் பெறுகின்றன. இந்தப் புத்தகங்களோடு அவர்கள் என்னைக் கண்டுபிடித்தால் என்னைச் சிறையில் தான் போடுவார்கள். சிறையில்தான்! ஏன் தெரியுமா? நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேனே, அதனால்தான், புரிந்ததா?”

திடீரென அவளுக்கு மூச்சு முட்டியது. அவள் தன் கண்களை அகலத் திறந்து மகனைப் பார்த்தாள். அவன் ஒரு அன்னியன் போலத் தோன்றியது அவளுக்கு, அவளது குரல் கூட மாறிப்போயிருந்தது, அந்தக் குரலின் ஆழமும் அழகும் செழுமையும் நிறைந்து இருப்பதாகத் தோன்றியது. அவன் தனது அரும்பு மீசையைத் திருகினான். குனிந்து நின்ற புருவங்களுக்கு மேலாக, ஒரு மூலையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தன் மகனைக் கண்டு பயந்தே போனாள். மகனுக்காகப் பரிதாபப்பட்டாள்.

“நீ ஏன் இப்படிச் செய்கிறாய், பாஷா?” என்று கேட்டாள்.

” ஏன் என்றால் — நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று அவன் அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னான்.

அவனது குரல் மிருதுவாக இருந்தது. எனினும் உறுதி வாய்ந்திருந்தது. அவனது கண்களில் அசைவற்ற ஒரு ஒளியும் நிறைந்திருந்தது. தன் மகன் ஏதோ ஒரு பயப்படக்கூடிய ரகசியமான காரியத்துக்குத் தன்னைப் பரிபூரணமாக அர்ப்பணித்துவிட்டான் என்ற உணர்ச்சி அவளது இதயத்தில் கிளர்ந்தது. வாழ்க்கையில் எதுவுமே தடுக்க முடியாதவைதாம் என்றே அவள் கருதினாள். எனவே அதைப்பற்றி அவள் மேலும் கேட்காமல் அடங்கிப் போனாள். துன்பமும் துக்கமும் இதயத்தை அழுத்த வார்த்தையின்றி அமைதியாக அழுதாள் அவள்.

இந்தப் புத்தகங்களோடு அவர்கள் என்னைக் கண்டுபிடித்தால் என்னைச் சிறையில் தான் போடுவார்கள். சிறையில்தான்! ஏன் தெரியுமா? நான் உண்மையைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேனே, அதனால்தான், புரிந்ததா?

“அழாதேயம்மா” என்று அன்பும் ஆதரவும் நிறைந்த குரலில் சொன்னான் பாவெல்; ஆனால் அவளுக்கோ அவன் பிரிவதற்கு விடைபெறுவது போலத் தோன்றியது.

”நாம் எந்த மாதிரி வாழ்கிறோம் என்பதைக் கொஞ்சமாவது எண்ணிப்பார், அம்மா. உனக்கு நாற்பது வயதாகிறது. இதுவரை நீ என்னத்தைக் கண்டுவிட்டாய்? அப்பா உன்னை அடித்தார். அவரது தொல்லைகளையெல்லாம் வாழ்வின் கசப்பையெல்லாம் உன்னையடிப்பதன் மூலம் அவர் தீர்த்துக்கொண்டார் என்று இப்போது உணர்கிறேன் நான். கசப்புணர்ச்சிதான் அவரை ஆட்கொண்டிருந்தது. ஆனால் இந்த மாதிரிக் கசப்பும் தொல்லையும் எங்கிருந்து வருகின்றன என்பதை அவர் அறிந்து கொள்ளவே இல்லை. அவர் முப்பது வருஷகாலமாய் உழைத்தார். இந்தத் தொழிற்சாலை இரண்டு கட்டிடங்களாக இருந்த காலத்திலிருந்து அவர் வேலை பார்த்தார். இப்பொழுதோ அவை ஏழு கட்டிடங்களாகப் பெருகிவிட்டன.”

படிக்க:
ஆயுதம் செய்யுங்கள் – நீங்களே ஏந்துங்கள் !
மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

அவன் சொல்வதை ஆர்வத்தோடும் பயத்தோடும் அவள் கேட்டாள். மகனின் கண்கள் அழகாகப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. தன் மார்பை மேஜையின் மீது சாய்த்தவாறு கண்ணீர் படிந்து ஈரம் பாய்ந்த அவளது முகத்துக்கு நேராகக் குனிந்து, தான் புரிந்து கொண்டுள்ள உண்மையைப் பற்றி பிரசங்கத்தைத் தொடங்கினான் பாவெல். இளமையின் முழுப்பலத்தோடும், மாணவன் ஒருவனது அறிவின் அகந்தையோடும் உண்மையின் மீதுள்ள பரிபூரண விசுவாசத்தோடும் தனக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்த விஷயங்களைப் பற்றி அவன் பேசினான்.

தாய்க்காகப் பேசியதை விடத் தன்னைப் பரீட்சித்துக் கொள்ளவே அவன் பேசினான். சில வேலைகளில் அவன் வார்த்தைகள் கிடைக்காமல் பேச்சை நிறுத்தினான். அப்போது கண்ணீர்த் திரைக்கு அப்பால் ஒளி செய்யும் அன்பான கண்களைக் கொண்ட தன் தாயின் வேதனை நிறைந்த முகம் தன்னெதிரே இருப்பதை உணர்ந்து கொண்டான். அந்தக் கண்கள் அவனைப் பயத்தோடும் வியப்போடும் பார்த்தன. அவனோ தன் தாய்க்காக அனுதாபப்பட்டான். மீண்டும் பேச ஆரம்பித்தான். இப்போதோ, அவன் அவளைப் பற்றியும் அவளது வாழ்வைப் பற்றியுமே பேசினான்.

”இதுவரை நீ என்ன சுகத்தைத்தான் அனுபவித்திருக்கிறாய்? நீ சிந்தித்து மகிழ்வதற்கு சென்றுபோன உன் வாழ்க்கையில் என்ன இருக்கிறது?” என்று கேட்டான்.

மீண்டும் அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். தலையை மட்டும் சோர்வாய் ஆட்டினாள். இதுவரை அறியாத புதுமையான உணர்ச்சி. இன்பமும் துன்பமும் கலந்த ஏதோ ஒரு உணர்ச்சி தனது நொந்து போன இதயத்துக்குள் குடிபுகுந்து அதை இதப்படுத்திச் சுகமூட்டுவது போல அவளுக்குத் தோன்றியது. அவளைப் பற்றியும் அவளது வாழ்க்கையைப் பற்றியும் யாரேனும் பேசுவதைக் கேட்பது, இதுதான் அவளுக்கு முதல் தடவை. மகனது வார்த்தைகள் அவளது மங்கி மக்கிப்போன பழைய நினைவுகளை, எந்தக் காலத்திலேயோ செத்தொழிந்து தேய்ந்து போன பழைய இளமைக் கால சிந்தனைகளை நினைவுக்குக் கொண்டுவந்தான். வாழ்க்கையின் மறைந்து போன மங்கலான அதிருப்தி உணர்வுகள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தன. அப்போது அவள் தன் தோழிமாரோடு வாழ்க்கையைப் பற்றி, அனைத்தையும் பற்றி எவ்வளவோ பேசியிருக்கிறாள். ஆனால் அவளது தோழிகளும், ஏன் அவளும் கூட, தங்களது வாழ்க்கையின் துன்ப துயரங்களைப் பற்றிக் குறைப்பட்டுத்தான் பேசிக் கொண்டார்களேயன்றி, அதற்குரிய காரணத்தை ஆராய முனையவில்லை. ஆனால் இப்போதோ அவளது மகன் அவளெதிரே உட்கார்ந்திருந்தான். அவனது கண்களும் முகமும் பேச்சும் வெளியிடுவதெல்லாம் அவனது இதயத்தின் அடித்தளத்தையே தொட்டன. தன் தாயின் வாழ்க்கையை நன்றாகப் புரிந்து, அவளது துன்ப துயரங்களைப் பற்றி அவளிடமே அனுதாபத்தோடு பரிந்து பேசும் தன் மகனைக் கண்டு அவளது மனத்தில் பெருமை உணர்ச்சி நிரம்பித் ததும்பியது.

ஆனால் தாய்மார்கள் என்றும் அனுதாபத்துக்குரியவராகவே ஆவதில்லை…

அதுவும் அவளுக்குத் தெரியும். அவன் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொன்னவை அனைத்தும் கசப்பான எனினும் ஊரறிந்த உண்மைகள் தான். எனினும், அவளது இதயத்தில் பலவிதமான உணர்ச்சிகள் கிளர்ந்தெழுந்து, இயல்புக்கு மீறிய அன்போடு இதம் செய்து சுகமூட்டுவதாகத் தோன்றியது.

“நீ என்னதான் செய்ய விரும்புகிறாய்?’ என்று அவனது பேச்சில் குறுக்கிட்டுக் கேட்டாள் அவள்.

”முதலில் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்; பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். தொழிலாளர்களான நாம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும். நம்முடைய வாழ்க்கை ஏன் இவ்வளவு கஷ்டம் நிறைந்ததாக இருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்துத் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும்!’

உறுதியும் அழுத்தமும் நிறைந்த அவனது நீலக் கண்களில் அப்போது மென்மையும் அன்பும் கலந்த ஒரு ஒளி நிறைந்திருப்பதைக் காண, அவளுக்குக் குதூகலமாயிருந்தது. அமைதி நிறைந்த இளம் புன்னகை அவளது இதழ்களில் நெளிந்தது. எனினும் அவளது கன்னச் சுருக்கங்களில் கண்ணீர்த் திவலைகள் இன்னும் துடிதுடித்துக் கொண்டுதானிருந்தன. வாழ்க்கையின் கசப்பைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்துவிட்ட தன் மகனைப் பற்றிய அவளது பெருமை உணர்ச்சி ஒரு புறம்; மற்றவர்கள் பேசுவதற்கு மாறாக அவன் பேசுவது, அவன் உட்பட்ட இச்சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் பழகிக் காய்த்துப்போன வாழ்க்கையை எதிர்த்து அவன் தன்னந்தனியனாகப் போராட முனைந்து நிற்பது. அவன் இன்னும் இளைஞனாக இருப்பது —  முதலிய விஷயங்களால் ஏற்பட்ட அவளது நிதான புத்தி ஒரு புறம் இவ்வித இரு உணர்ச்சிகளுக்கிடையிலகப்பட்டு அவள் தடுமாறினாள், எனவே, அவள் அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்லிவிட நினைத்தாள்.

‘கண்ணே, நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும்?”

ஆனால், திடீரென்று, சற்றே அன்னியனாக, ஆனால் பெரும் அறிவாளியாகத் தன் முன்னே தோன்றும் மகனைப் பற்றிய பரவசத்திலிருந்து விடுபட அவள் விரும்பவில்லை.

‘சரி. நான் இதில் தலையிடவில்லை” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள். “நீ மட்டும் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்பா. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”.

பாவெல் தன் தாயின் இதழ்களில் தோன்றிய புன்னகையை, அவளது முகத்தில் தெரிந்த கவன உணர்வை, அவளது கண்களில் மிதந்த அன்பை – எல்லாம் கண்டான். உண்மையை அவள் உணர வைத்துவிட்டோம் என்று தோன்றியது. தனது வார்த்தைகளின் சக்தியால் ஏற்பட்ட இளமைப் பெருமிதம் அவனுக்குத் தன் மீதுள்ள நம்பிக்கையை வெகுவாக உயர்த்தியது. அவன் சிரித்துக்கொண்டும், முகத்தைச் சுழித்துக் கொண்டும் உணர்ச்சிமயமாகப் பேசினான்: சமயங்களில் அவனது பேச்சில் பகைமை உணர்ச்சி ஒலி செய்தது. ஆனால் இந்த மாதிரிக் கடுமை கலகலக்கும் வார்த்தைப் பிரயோகத்தைக் கண்டு அவனது தாய்க்கு நெஞ்சில் பயம்தான் அதிகரித்தது. எனவே அவள் தலையை மட்டும் ஆட்டிக்கொண்டு தன் மகனை நோக்கி மெதுவாகக் கேட்டாள்.

“இதெல்லாம் உண்மையா, பாஷா?”

“ஆமாம்!” என்று உறுதியோடு பதிலளித்தான் அவன். மனிதர்களுக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்தினால் மனிதர்களிடையே உண்மையைப் பரப்பியவர்களைப் பற்றியும் அப்படிச் செய்தவர்களை மக்களின் எதிரிகள் மிருகங்களைப் போல் வேட்டையாடி, சிறையில் தள்ளியதையும் சித்திரவதை செய்ததையும் அவன் தாயிடம் சொன்னான்.

”நான் அந்த மாதிரி ஆட்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் தான் இந்த உலகம் செழித்து வளர்வதற்கான உரம்!” என்று ஆர்வத்தோடு கத்தினான் பாவெல்.

இந்த மாதிரி மனிதர்களைப் பற்றிய எண்ணம் அவனது தாய்க்குப் பயத்தைக் காட்டியது எனினும் “நிலைமை இப்படித்தானா இருக்கிறது’ என்பதை அவள் மீண்டும் கேட்க விரும்பினாள்; ஆனால் கேட்கத் துணியவில்லை. தனக்குப் புரியாத மனிதர்களைப் பற்றிய – எனினும் தன் மகனை இந்த மாதிரியான பயங்கரமான விஷயங்களைப் பற்றிப் பேசவும் சிந்திக்கவும் கற்றுக் கொடுத்த அந்த மனிதர்களைப் பற்றிய – கதைகளை மகன் சொல்லும்போது திணறிப்போன மூச்சோடு அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்தாள். கடைசியாக அவனைப் பார்த்துச் சொன்னாள்,

”சரி, பொழுது சீக்கிரம் விடியப்போகிறது. நீ போய்ப் படு. கொஞ்ச நேரமாவது தூங்கு போ.”

“நான் இப்போதே படுக்கப் போகிறேன் என்றான் அவன். பிறகு அவளை நோக்கிக் குனிந்து கொண்டே நான் சொன்னதையெல்லாம் புரிந்து கொண்டாயா?” என்று கேட்டான்.

அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

”ஆமாம் என்ற ஒரு பெருமூச்சுடன் பதில் சொன்னாள் அவள். மீண்டும் அவளது கண்ணில் கண்ணீர் சொரிந்து வழிய ஆரம்பித்தது. “இதெல்லாம் உன் அழிவு காலத்திற்குத்தான்!” என்று தேம்பினாள்.

அவன் எழுந்து அறைக்குள் நடமாடினான்.

”சரி, இப்போது நான் எங்குப் போகிறேன். என்ன செய்கிறேன் என்பது உனக்குத் தெரியும். உனக்கு எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீ என்னை நேசிப்பது உண்மையானால், இனிமேல் இதில் தலையிடாதே அம்மா’ என்றான் அவன்.

“கண்ணே என் கண்ணே! இதை நீ என்னிடம் சொல்லாமல் இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் போலிருக்கிறதே’’ என்று கத்தினாள் அவள்.

அவன் தாயின் கரத்தை எடுத்து இறுகப் பிடித்து அழுத்தினான்.

அவன் அன்போடு ‘அம்மா’ என்று அழைத்த சொல்லாலும், அவளது கரத்தை இதுவரை இல்லாத இனிய வாஞ்சையோடு அழுத்திப் பிடித்ததால் ஏற்பட்ட சுக உணர்ச்சியாலும் அவள் மெய்மறந்து போய்விட்டாள்.

‘சரி. நான் இதில் தலையிடவில்லை” என்று தட்டுத் தடுமாறிச் சொன்னாள் அவள். “நீ மட்டும் உன்னை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளப்பா. ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்”. தனது மகனுக்கு எந்தவிதமான ஆபத்து காத்து நிற்கிறது என்பதை அறிய முடியாமல், மீண்டும் அவள் வருத்தத்தோடு சொன்னாள். “நீ நாளுக்கு நாள் மெலிந்து கொண்டே வருகிறாய்!’

அவனது நெடிய பலம் பொருந்திய உருவத்தை அவள் அன்போடு ஏற இறங்கப் பார்த்துக்கொண்டாள்.

உறுதியும் திண்மையும் உரமும் பாய்ந்திருந்த அவனது பிடிவாதத் தோற்றம் கொண்ட பழுப்பேறிய, கடுமையான முகம், வெள்ளை நிறமான தலையணையில் துலாம்பரமாகத் தெரிந்தது.

“உன் இஷ்டப்படியே நீ வாழப்பா, அதெல்லாம் நான் தலையிடக் கூடிய விவகாரம் இல்லை. நான் கேட்பது ஒன்றே ஒன்றுதான். நீ மற்ற மனிதர்களோடு பேசும்போது இவ்வளவு தீவிரமாகப் பேசாதே. மனிதர்களைப் பற்றிய பயம் உனக்கு எப்போதும் இருக்க வேண்டும். அவர்கள் ஒருவரையொருவர் வெறுக்கிறார்கள்: பேராசையிலும் பொறாமையாலுமே வாழ்கிறார்கள். அடுத்தவனைத் துன்புறுத்துவதில் ஆனந்தம் கொள்கிறார்கள். நீ அதை எடுத்துக்காட்டி, அவர்களைக் குறை கூறத் தொடங்கினால், உடனே அவர்கள் உன்னையும் பகைப்பார்கள். உன்னை அழித்தே விடுவார்கள்’’.

அவளது சோகமயமான வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டு அவளது மகன் வாசல்படியருகே நின்றான். அவள் பேசி முடித்ததும் அவன் லேசாக நகைத்தான்.

“நீ சொல்வது சரிதான். மனிதர்கள் கெட்டவர்களாகத் தானிருக்கிறார்கள்” என்றான் அவன். “ஆனால் உலகத்தில் நியாயம் என்று ஒன்று இருப்பதாக நான் அறிந்து கொண்டேனே, அதைப் பார்க்கும்போது இந்த மனிதர்கள் எவ்வளவோ தேவலை!” மீண்டும் அவன் நகைத்தான்: பிறகு சொன்னான்: ”இதெல்லாம் எப்படி ஏற்பட்டது என்பது எனக்கே தெரியாது. சிறு பிள்ளையாயிருக்கும் போது நான் யாரைக் கண்டாலும் பயப்படுவேன். பெரியவனான பிறகு எவரைக் கண்டாலும் வெறுக்கவே செய்தேன். சிலரை அவர்களது படுமோசத்தனத்தைக் கண்டு வெறுத்தேன். ஆனால் மற்றவர்களை அது ஏன் என்று எனக்கே தெரியாது; என்னவோ வெறுக்க வேண்டும் என்பதற்காக வெறுத்தேன். ஆனால் இப்போதோ எல்லாமே எனக்கு வேறுபட்டுத் தோன்றுகிறது. இது நான் மனிதர்களுக்காக அனுதாபப்படுவதால் ஏற்பட்டிருக்கக்கூடும். எப்படியானாலும், மனிதர்கள் மோசமாய் நடந்து கொள்வதற்கு எல்லா மனிதர்களும் காரணம் அல்ல என்பதை நான் உணர்ந்துகொண்டதால், என் இதயம் நெகிழ்ச்சியுற்றுவிட்டது….”

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

அவன் பேசுவதை நிறுத்திவிட்டு, தன் இதயத்துக்குள் கேட்கும் ஏதோ ஒரு குரலைக் கேட்டது போல நின்றான். பிறகு அமைதியும் சிந்தனையும் நிறைந்தவாறு அவன் சொன்னான்,

”எனவே – உனக்கு நான் சொல்ல விரும்பிய உண்மை இதுதான்”

”கிறிஸ்து ரட்சகரே… நீ மிகவும் பயங்கரமாகத்தான் மாறிவிட்டாய்” என்று சொல்லி அவள் மகனை லேசாகப் பார்த்தாள்.

அவன் நன்றாக தூங்கிய பிறகு, அவள் தன் படுக்கையிலிருந்து மெதுவாக எழுந்து அவனருகே சென்றாள். பாவெல் மல்லாக்கப் படுத்திருந்தான். உறுதியும் திண்மையும் உரமும் பாய்ந்திருந்த அவனது பிடிவாதத் தோற்றம் கொண்ட பழுப்பேறிய, கடுமையான முகம், வெள்ளை நிறமான தலையணையில் துலாம்பரமாகத் தெரிந்தது. அவனது தாய் காலில் ஜோடு எதுவும் அணியாமல் இரவு ஆடையில் அங்கு நின்றாள். அவளது கைகள் மார்பை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தன; உதடுகள் சப்தமின்றி அசைந்தன. கன்னங்களில் பெருகும் கண்ணீர்த்துளிகள் மெதுவாக உருண்டு வழிந்து கொண்டிருந்தன.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்

போலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து ?

போலியோ சொட்டு மருந்து கலப்பட விவகாரம் நடந்தது என்ன ?

ந்த விவகாரத்தில் தமிழர்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை. ஏன்? விரிவாகப் பார்ப்போம் :

இந்த பிரச்சனையை பற்றி முழு விபரமும் அறிய முதலில் போலியோ தடுப்பு மருந்து குறித்து அறிய வேண்டும். இந்தியாவில் போலியோ தடுப்பு மருந்துகள் இரண்டு விதங்களாக குழந்தைகளுக்கு கிடைக்கின்றது.

  • ஒன்று – வாய் வழி அளிக்கப்படும் சொட்டு மருந்து (Oral polio vaccine) .
  • மற்றொன்று – ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பூசி (injectable polio vaccine )

முதல் டைப் போலியோ தடுப்பு மருந்து – வாய் வழியாக கொடுக்கப்படுவதால் அது குழந்தையின் குடலில் சென்று அந்த குழந்தைக்கு போலியோ நோய்க்கு உண்டான எதிர்ப்பு சக்தியை அளித்து மலத்தின் வழியே அந்த வைரஸ் வெளியேறும்.

அதுவே இரண்டாவது வழியான ஊசி ஊசி மூலம் போடப்படும் போலியோ தடுப்பூசியானது அந்த குழந்தைக்கு எதிர்ப்பு சக்தி அளிக்கும் ஆனால் ஊசி மூலம் செலுத்தப்படுவதால் மலத்தின் வழி வெளியேறாது.

சொட்டு மருந்தாக போடப்படும் போலியோ மருந்தின் மூலம் அந்த குழந்தைக்கு மற்றுமின்றி அந்த சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
ஆம். அந்த இறந்த கிருமிகள்(killed vaccine derived virus) மலத்தின் மூலம் வெளியேறுவதால், அந்த சமூகத்தில் wild virus -ன் இருப்பு குறைந்து ஒட்டுமொத்தமாக அந்த வைரஸ் ஒழிக்கப்பட்டும்.

இப்படித்தான் நாம் 1995 -இல் இருந்து போலியோ சொட்டு மருந்து நாள் என்ற பெயரில் வருடம் இருமுறை ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்த தடுப்பு சொட்டு மருந்து வாய் வழியாக ஐந்து வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போடப்பட்டு வருவதை அனைவரும் அறிவோம்.

இதற்கு Pulse Polio Immunisation என்று பெயர். தேசம் தழுவிய அளவில் ஒரே நேரத்தில் வைரஸ் கிருமிக்கான தடுப்பு மருந்து தரப்படுவது என்பது அந்த வைரஸ் முற்றிலும் நமது சமுதாயத்தை விட்டு துரத்தப்பட ஏதுவாக அமையும்.

அவ்வாறு நாம் தொடர்ந்து போலியோ தடுப்பு மருந்துகளை கொடுத்து வந்ததால்
2011 -ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் புதிதாக போலியோ பாதிக்கப்பட்டவர்கள் இல்லை எனும் நிலையை அடைந்தோம்.

படிக்க :
♦ இந்தியா – மருந்து உற்பத்தியிலும் முதலிடம் ! நோயிலும் முதலிடம் !!
♦ பில் கேட்ஸ் இலாபத்திற்காக தடுப்பூசி சோதனைச் சாலையான இந்தியா

அதற்கடுத்த மூன்று வருடங்களும் போலியோ இல்லாத நாடாக திகழ்ந்த நம்மை உலக சுகாதார நிறுவனம்”போலியோ இல்லாத நாடாக ” அறிவித்தது.

ஆனாலும் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போலியோ நோய் இன்னும் உயிர்ப்புடன் இருந்ததால், நாடு விட்டு நாடு விமானங்கள் மூலம் பயணம் செய்பவர்களால் அந்த கிருமிகள் நமக்கு கடத்தப்பட வாய்ப்பு இருப்பதாலும்..

நாம் இன்னும் வருடம் ஒருமுறை தரும் Pulse Polio Immunisation சொட்டு மருந்து தரும் நாட்களை கடைபிடித்து வருகிறோம். போலியோ நோயை மூன்று வைரஸ்கள் உருவாக்கும். அவை டைப் 1 , டைப் 2, டைப் 3. இவற்றில் உலகம் முழுவதும் இந்த டைப் 2 வைரஸை ஒழித்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு செய்ததை அடுத்து..

இந்திய தேசமும் 25 ஏப்ரல் 2016-ம் ஆண்டு முதல் “national switch over day” என்று அறிவித்து அதுவரை போலியோ தடுப்பு சொட்டு மருந்தாக போட்டு வந்த முத்தடுப்பு ( மூன்று வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு மருந்து) சொட்டு மருந்தை இருதடுப்பு சொட்டு மருந்தாக மாற்றியது. (switch over from trivalent to bivalent vaccine) ஆகவே.. இப்போது தடுப்பு சொட்டு மருந்து உருவாக்கும் அனைத்து உற்பத்தியாளர்களையும் தங்களிடம் வைத்திருக்கும் டைப் இரண்டு வகை போலியோ வைரஸ் கிருமிகளை உடனே அழித்துவிடுமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டது.

இதன்படி, 25 ஏப்ரல் 2016 -க்கு பிறகு கொடுக்கப்பட்டு வரும் அனைத்து சொட்டு மருந்துகளிலும் டைப் ஒன்று மற்றும் டைப் மூன்று போலியோவுக்கு எதிரான தடுப்பு மருந்து மட்டுமே இருக்கும்.

இருப்பினும் , சமூகத்தில் டைப் இரண்டு வைரஸ் எங்கேனும் காணப்பட்டு அதனால் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்பட்டால் பாதுகாக்க என்ன செய்வது?

அதற்காகவே பிரத்யேகமாக ஊசி மூலம் செலுத்தப்படும் போலியோ தடுப்பூசிகளை அரசாங்கம் உற்பத்தி செய்து 26 ஏப்ரல் 2016 -க்கு பிறகு குழந்தைகளுக்கு இலவசமாக கொடுத்து வருகிறது .

இந்த தடுப்பூசியில் டைப் 1, டைப் 2 , டைப் 3 ஆகிய மூன்று வைரஸ்களுக்கும் தடுப்பு மருந்து இருக்கும். இதில் உள்ள தடுப்பு மருந்துகள் அதை எடுப்பவருக்கு மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை தரும். மலத்தின் மூலம் கிருமிகள் வெளியே வராது. ஆகவே.. இந்த முறையை இந்திய அரசு கையாண்டது.

இப்போது என்ன தவறு நேர்ந்தது?

உத்தர பிரதேசத்தில் உள்ள காசியாபாத் எனும் இடத்தில் இயங்கும் பையோ மெட் எனும் தனியார் தடுப்பு மருந்து உற்பத்தி சாலையில் இருதடுப்பு( டைப் ஒன்று மற்றும் மூன்றை தடுக்கும்) போலியோ சொட்டு மருந்துகள் உற்பத்தி செய்கையில் தலா ஐம்பதாயிரம் எண்ணிக்கை கொண்ட மூன்று பேட்ச் தடுப்பு மருந்து வயல்களில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்ட டைப் இரண்டு வைரஸ்களும் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மூன்று பேட்ச் மருந்துகளும் மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளன. இதனால் தமிழகத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆகவே தமிழர்கள் கவலை கொள்ள தேவையில்லை.

இப்போது இந்த டைப் இரண்டு வைரஸ் கலப்படமான தடுப்பு சொட்டு மருந்தில் என்ன பிரச்சனை?

இந்த மருந்தை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு மூன்று வைரஸ்களுக்கு எதிராகவும் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும். ஆனால் வாய் வழி உட்கொள்வதால் அந்த வைரஸ்கள் குடல் வழி சென்று மலம் வழி வெளியேறி சமூகத்தில் கலந்திருக்கும்.

படிக்க :
♦ உயிர்காக்கும் மருந்துகளுக்கு தடை போடும் மோடி அரசு
♦ நோய்கள் விற்பனைக்கு! மருந்து கம்பெனிகளின் மோசடி!! ஆவணப்படம்

இப்போது 26 ஏப்ரல் 2016-க்கு பிறகு பிறந்த குழந்தைகளில் யாருக்கேனும் சரியாக போலியோ தடுப்பூசி மற்றும் தடுப்பு சொட்டு மருந்து கொடுக்காமல் விட்டிருந்தால் அவர்களுக்கு அந்த டைப் இரண்டு கிருமியால் போலியோ வரும் வாய்ப்பு இருக்கிறது.

இதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஆகவே யாரும் பெரிய அளவில் கவலை கொள்ளவோ அச்சப்படவோ தேவையில்லை. இந்த கலப்படம் நடந்ததற்கு காரணமான அந்த பையோமெட் உற்பத்தி சாலைக்கு சீல் வைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

முடிவுரை :

போலியோவை இந்தியாவை விட்டு நாம் துரத்தி ஏழு ஆண்டுகள் கடந்தோடி விட்டன. இனியும் போலியோ வராமல் தடுக்க நமது அரசாங்கம் பரிந்துரைக்கும் வரை தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்தை கொடுப்பது நமது கடமை.

இந்த சிறிய பிரச்சனை என்பது ஒன்றரை லட்சம் வயல்கள் சென்ற தெலுங்கானா, மஹாராஷ்ட்ரா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மட்டுமே. தமிழகத்திற்கு யாதொரு சிக்கலும் இல்லை.

மேலும் பாதிக்கப்பட்ட அந்த மாநிலங்களிலும் 25 ஏப்ரல் 2016 -க்கு பிறகு பிறந்த குழந்தைகளுக்கு உடனடியாக போலியோ தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் போலியோ மீண்டும் வராமல் தடுக்கப்படும்.

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க தொடர்ந்து பாடுபடுவோம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் – Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., சிவகங்கை.

குறிப்பு: தமிழகத்திற்கு பாதிப்பில்லை என்ற வகையில் நாம் நிம்மதி அடைந்துவிட முடியாது. எந்த மாநிலமாயினும் அவர்களும் நமது மக்கள்தான். தனியார்மயத்தின் பிடியில் இன்று மருத்துவம் என்பது இலாபம் தரும் தொழிலாக மாறிவிட்ட நிலையில் இது போன்ற பிரச்சினைகள் தொடரும் என்பதில் ஐயமில்லை.

ஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா ?

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி இவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் இவர்களது கருவிகள் இவர்களது உடலின் உறுப்புகள்.

ம்ப்யூட்டருக்குப் பொட்டு, கல்லாப் பெட்டிக்கும் பொட்டு; டீக்கடை பாய்லருக்குப் பொட்டு, ஹெவி பாய்லருக்கும் பொட்டு; வில்வண்டிக்குப் பொட்டு, விமான‌த்துக்கும் பொட்டு.. புரிந்திருக்குமே ஆயுத பூசைதான். அவல், பொறி, கடலை, வாழைப்பழ‌ம், வெல்லச் சர்க்கரையுடன் ஆயுதபூசை பட்டியலில் தொழிலாளியும் சேர்ந்து விட்டதனால்தான் இதை எழுத வேண்டியிருக்கிறது.

 

விவசாயிக்குப் பொங்கலைப் போல, தொழிலாளிக்கு ஆயுதபூசையா? அப்படியானால் மே தினம்?

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை.

விண்ணில் உயர்ந்து பறக்கும் செங்கொடி, முதலாளிகளைக் கிலி கொள்ள வைக்கும் போர்க்குணம், அடிவயிற்றிலிருந்து வெடித்துக் கிளம்பும் முழக்கங்கள், நெருப்புத் துண்டுகளாய் சொலிக்கும் கண்கள், கண்ணுக்கு எட்டியவரை கடல் போல விரிந்து அலைபோல ஆர்த்தெழும் அணிவகுப்பு – மே தினம். யதார்த்தம் இல்லையென்றாலும் எதிர்பார்ப்பு. ஏன் ஈடேறவில்லை இந்த எதிர்பார்ப்பு?

ஒவ்வொருவராகத் தேடிச்சென்று காகிதத்தில் கையெழுத்து வாங்கும் அக்கறை, பின்னர் கையெழுத்துப் போட்டவர்களைக் காசு போட வைப்பதில் உள்ள திறமை – மே தினத்தில் இல்லையே. பூசை போட்டு பூசணிக்காய் உடைப்பதில் இருக்கும் நம்பிக்கை ஊர்வலத்தில் இல்லையே. பொரி, கடலை விநியோகத்தில் இருக்கும் பொறுப்புணர்வு பிரசுர விநியோகத்தில் இல்லையே, தோரணம் கட்டுவதில் உள்ள ஆர்வம் கொடி கட்டுவதில் இல்லையே. ஏன்?

இதுதான் நமது முதுகில் ஏற்றப்பட்டிருக்கும் ஆயிரமாண்டு கலாச்சாரச் சுமையோ!

ஒரு கொல்லரோ, தச்சரோ, வண்டிக்காரரோ பயபக்தியுடன் ஆயுதபூசை செய்வதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. கொல்லனுக்குத் துருத்திதான் மூச்சு. தச்சனுக்கு உளி தான் கைவிரல். வண்டிக்காரருக்குச் சக்கரம் தான் வாழ்க்கை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற பழமொழி இவர்களுக்கு வேண்டுமானால் பொருந்தும். ஏனென்றால் இவர்களது கருவிகள் இவர்களது உடலின் உறுப்புகள்.

சங்கு ஊதினால் உள்ளே போக வேண்டும். அடுத்த சங்கிற்கு வெளியே போக வேண்டும்.

ஆனால் தொழிலாளிக்கு? சங்கு ஊதினால் உள்ளே போக வேண்டும். அடுத்த சங்கிற்கு வெளியே போக வேண்டும். ஆலையின் தூசு எதுவும் சட்டையில் ஒட்டி யிருந்தால் கூட அதைத் தட்டிப்பார்த்து, தடவிப் பார்த்து வெறும் ஆளாக வெளியே அனுப்புவதற்கென்றே வாயிற்காவலர்கள்.

துருத்தியும் சம்மட்டியும் கொல்லனுக்கு சொந்தம்; வெல்டருக்கு? ”உனக்குச் சொந்தமில்லாததை உடைத்தெறி” என்று சொல்லவில்லை. ”போய்த் தொலையட்டும் – மூடநம்பிக்கை” என்று வைத்துக் கொண்டாலும் தனக்குச் சொந்தமானதை ஒருவர் பூசிப்பதில் அர்த்தமிருக்கிறது. ஆனால் கல்யாண சடங்குகளில் ‘அதிகாரம்’ செலுத்தும் பெண்களைப் போல ஆயுத பூசை ஏற்பாடுகளை கவனித்து நடத்த ‘அதிகாரமளிக்கப்பட்ட’ தொழிலாளிகள் தலை கால் புரியாமல் போகிறார்களே, அதுதான் விநோதம்.

ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ‘இது என்னுடைய ஆலை’ ‘இது என்னுடைய எந்திரம்’ என்று மண்டையில் அடிக்காத குறையாக முதலாளி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும் போது கூட, தலைவாரி, பூச்சூடி, பொட்டிட்டு பிள்ளையை அழகு பார்க்கும் தாயைப்போல – எந்திரத்திற்கு எண்ணெய் முழுக்காட்டி, பொட்டு வைத்து, சாம்பிராணிப் புகை போட்டு அழகு பார்க்கும் ‘பாசம்’ தொழிலாளிக்கு எப்படி வந்தது ? பாசமா, பெருந்தன்மையா, மூடநம்பிக்கையா? வெறும் மூடநம்பிக்கை மட்டும்தானா?

போனசுக்கும், கூலி உயர்வுக்கும் போராடும் போது முதலாளியின் பிரதிநிதியாகத் தொழிலாளியின் கண்ணுக்குத் தென்படும் எந்திரம் ஆயுத பூசையன்று மட்டும் தன்னுடைய அவதாரமாகத் தெரிவது ஏன்? சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவைதான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள்தான்.

அதனால் தான் ஆத்திரம் கரை புரண்டாலும் கூட தான் வேலை செய்யும் எந்திரத்தை நொறுக்கவோ நாசம் செய்யவோ தயங்குகிறான் தொழிலாளி [மாறாக அதை மதித்து கொண்டாடி பூசை செய்கிறான்].

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் கைத்தறி முதல் கம்ப்யூட்டர் வரை எல்லா எந்திரங்களும் தொழிலாளிகள் பெற்றெடுத்தவை தான். அவர்களது உழைப்பின் விளைபொருட்கள் தான்

இன்சூரன்சு பண‌த்தை ஏமாற்றி வாங்க நினைக்கும் முதலாளியோ ஆயுத பூசையன்றே கூட ஆலைக்குத் தீ வைக்கத் தயங்குவதில்லை. விலை சரிந்து விட்டால் உற்பத்தியாகிக் கிடங்கில் குவிந்துள்ள பொருட்களைக் கடலில் கொட்டவும் தயங்குவதில்லை. முதலாளி நேசிக்கும் ஒரே எந்திரம் அவனுடைய பணப்பெட்டிதான். அதற்கு மட்டும் ஆயுதபூசையன்று மட்டுமல்ல; அன்றாடம் பொட்டு வைத்துப் பூசை போட அவன் தவறுவதில்லை.

ஆனால் தொழிலாளியால் அது முடிவதில்லை. ஏனென்றால் அவர்கள் ஆக்க வேலைக்காரர்கள், அழிக்க மறுக்கிறார்கள். அவசியம் நேரும்போது கூட அழிக்க தயங்குகிறார்கள்; அவர்களது கரங்களும், அவற்றின் உள்ளேயிருந்து ஊற்றெடுக்கும் உழைப்பும் மட்டுமே அவர்களுக்குச் சொந்தமானவை. உழைப்புதான் அவர்களது ஒரே ஆயுதம்.

இந்த ஆயுதத்துக்கு சந்தனப் பொட்டும் வைக்க முடியாது; சாம்பிராணி புகையும் போட முடியாது. பூசை போடவேண்டியவற்றின் பட்டியலில் முதலாளி இதைச் சேர்க்கவும் மாட்டான். ஏனென்றால் அது அவனுடைய ஆயுதமல்ல; அவனுடைய எதிரிகளின் ஆயுதம் – தொழிலாளி வர்க்கத்தின் ஆயுதம்.

அந்த ஆயுதத்தை – உழைப்பைப் போற்றும் நாள்தான் மே நாள். ஆலையையும் தொழிலையும் உழைப்பாளியின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக்கக் குரல் கொடுக்கும் நாள், அதுதான் தொழிலாளிகளின் திருநாள்.

எனவே, சாம்பிராணிப் புகை மயக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

உண்டியல் சாவி தருமகர்த்தாவின் கையில் இருக்கும் போது, பூசாரியாய் இருப்பதில் என்ன பெருமை?

புதிய கலாச்சாரம் இதழ் ஒன்றிலிருந்து

மகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு !

மீபமாக திருநெல்வேலி குறித்து உறவினர்கள், நண்பர்கள் யாரிடமேனும் பேச்செடுத்தால், மறுவார்த்தையே “ஓ.. உங்க ஊரில் ‘தாமிரபரணி மகா புஷ்கரணி’ ரொம்ப பேமஸாச்சே? ஊருக்குப் போறீங்களா புஷ்கரணிக்கு?” என்று தான் தொடர்கிறார்கள்.

அது என்ன புஷ்கரணி – புஷ்கரம் ?

இந்தியாவில் தென்கோடியில் தாமிரபரணி துவங்கி, சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா, ராபி, பியாஜ், ஜீலம், சென்னாப் என வற்றாத நதிகள் வெகுசில உண்டு. இவற்றில், சிந்து, கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, கிருஷ்ணா, கோதாவரி, காவிரி, பிரம்மபுத்ரா, துங்கபத்ரை, பிராணகிதா போன்ற ஆறுகளைப் புண்ணிய தீர்த்தங்கள் என புராணங்கள் வாயிலாகவும், மத நம்பிக்கைகளின் அடிப்படையிலும் நீராடி, மலர்த்தூவி, தீபாராதனை காட்டி, வழிபடுகிற சடங்கிற்கு புஷ்கரம் என்று பெயர் சூட்டி வழங்குகின்றார்கள்.

ஆறுகளை வழிபடுவது இந்த நிலத்தின் தொன்மம். ‘ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் தாமிரபரணி’ என்பது வழக்கு. திருநெல்வேலியின் பூர்வாங்கம் தாமிரபரணியின் படித்துறைகளில் பொதிந்து கிடக்கிறது.

ஆறும் ஊறும் கலந்துகிடக்கிற மக்களை இன்றும் நீங்கள் அங்குசென்றால் கண்ணாரக் கண்டடைய முடியும். மேல் தட்டு கீழ்தட்டு என்ற பாகுபாடுகள் எதையும் தனக்குள் கொள்ளாமல் அநேக மக்களின் அன்றாடப் பாடுகளுக்குள் கலந்துகிடக்கிற நதி அது.

அப்பேர்பட்ட தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்குப் பிறகு புஷ்கர விழா நடைபெற இருக்கிறது. ஆனால், இன்று சொல்லப்படும் 144 ஆண்டுகளுக்கு முந்தைய, விருச்சிகத்தில் இருந்து கடகத்திற்கு இடம்பெயரும் நாட்களில் நடைபெறும் ‘தாமிரபரணி புஷ்கரம்’ எனும் இந்து மதக் கட்டுக் கதைகள் உண்மையானதா?

தாமிரபரணியில் இந்தப் புஷ்கர நிகழ்வை ஏற்பாடு செய்ய முன்னின்று உழைப்பவர்கள் காஞ்சி காமகோடி பீடத்து நிர்வாகிகள். இவர்கள்தான் “இந்த 144 ஆண்டுக்குப் பிறகு” என்ற போலி வரலாற்றைத் தாமிரபரணி ஆற்றின் மீது கட்டமைப்பவர்கள்.

படிக்க :
♦ அமெரிக்க கோக்கை அடித்து விரட்டு ! – நெல்லை ஆர்ப்பாட்டம்
♦ தண்ணீர் தாகத்திற்கா… லாபத்திற்கா…?

கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இயங்குகிற மடம் தங்களுடையது என்று காஞ்சி மடத்தின் தோற்றக்கதையிலே அடித்து விடுகிற இவர்களுக்கு இந்தக் காலகட்டப் பிரச்சனை ஒன்றும் பெரிய விஷயமில்லை.

இது 2018 -ம் ஆண்டு. இவர்களின் கணைக்குப்படி, 144 ஆண்டுகளுக்கு முன் புஷ்கரம் நடைபெற்றது என்றால் 1874 -ம் ஆண்டில் அப்படி ஓர் நிகழ்வு நடைபெற்றிருக்க வேண்டும். சற்றும் முன் அல்லது பின்னாக 1870 முதல் 1875 வரையிலான திருநெல்வேலி வரலாற்றைச் சரியாக அமர்ந்து வாசித்தால் இவர்களது முழுப் புரட்டும் பொய்யும் அம்பலம் ஏறிவிடும்.

1870 -ம் ஆண்டு அக்டோபர் முதல் நவம்பர் வரை திருநெல்வேலி ஜில்லாவில் ஆக்டிங் கலெக்டராக இருந்தவர் ஜே.ஆர்.அற்புத நாத். அவரையடுத்து மாவட்ட கலெக்ட்டராகப் பொறுப்பேற்ற ஆர்.கே.பக்கிள் 16 நவம்பர் 1870 முதல் 27 பிப்ரவரி 1874 வரை திருநெல்வேலி மாவட்ட கலெக்டராகப் பணிபுரிந்தவர். பின், நிர்வாக காரணங்களுக்காக அதே ஆண்டில் மட்டும் டபிள்யு.ஏ.ஹெப்பள், டபிள்யு.எச்.காமின் இருவரும் ஆக்டிங் கலெக்டராக மாற்றி மாற்றிப் பொறுப்பேற்றனர்.

1875 அக்டோபரில் 5 -ம் தேதியில் ஒருநாள் கலெக்டராக இருந்த ஹெப்பள்-க்குப் பிறகு, ஜே.பி.பென்னிங்டன் மாவட்ட கலெக்டராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அவரின் நேரடிப் அதிகாரத்திற்கு வருவதற்காக அடுத்த 13 நாட்களும் திருநெல்வேலி கலெக்டர் இல்லாத மாவட்டமாகவே இயங்கியது. 18 அக்டோபர் 1875 -ல் ஏ.ஜே.ஸ்டூவர்ட் மீண்டும் ஆக்டிங் கலெக்டராக வந்தபோதும் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு சீரான நிலைக்குத் திரும்பவில்லை.

மேற்சொன்ன மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எவருடைய குறிப்புகளிலும் தாமிரபரணி ஆற்றில் இப்படி ஒரு விழா நடைபெற்றதற்கான அறிவிப்புகளோ அல்லது அனுமதி வழங்கின குறிப்புகளோ கிடையாது. மாறாக, 1869, 1874, 1877 ஆகிய அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையே மூன்று தடவை தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, கரைகள் உடைந்தன.

1869 – 74-ம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் அன்றைய ஒருங்கிணைந்த திருநெல்வேலியின் ஆழ்வார் திருநகரி, திருவைகுண்டம், ஆத்தூர் தென்பகுதிகள் அளவிட முடியாத பாதிப்புகளைச் சந்தித்தன. 77 -ல் கொற்கை, கோரம்பள்ளம் நீர்த்தேக்கங்கள் உடைந்து விழுந்தன.

1868 முதல் 74 வரையிலான ஆண்டுகளைத் தாமிரபரணியின் சங்கடமான விளைவுகளை ஏற்படுத்திய ஆண்டுகள் என்றே வருணிக்கிறது கெஸட்ஸ் ஆஃப் திருநெல்வேலி வால்யூம் ஒன்று.

அதில் 1874 -ம் ஆண்டின் வெள்ளச்சேதம் பற்றிய குறிப்பு ஒன்று, “நவம்பர் 24 -ம் நாள் பாளையங்கோட்டை திரும்பவும் ஒரு பெரு வெள்ளத்துக்குத் தயாராகிவிட்டது. 1869 -ம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் இது மூன்று அடி தான் குறைவு. திருநெல்வேலி கிருஷ்ணப்பேரி தேக்கங்கள் நிறைந்துவிட்டன.

நயினார்குளம் நிரம்பி வழிந்து பயமுறுத்துகிறது. நெல்லையும் பாளையங்கோட்டையும் ஒன்றிலிருந்து ஒன்று முழுமையாகத் துண்டிக்கப் பட்டிருக்கின்றன. இடைப்பட்ட பகுதிகளில் இருநூறுக்கு மேற்பட்ட வீடுகளும், மக்களும் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். உயிர்ச்சேதம் ஏதும் இல்லை.” என்று தெரிவிக்கிறது.

படிக்க :
♦ மாஞ்சோலை : தேர்தலுக்குப் பயன்படாத பிணங்கள் !
♦ தமிழக தண்ணீர் தட்டுப்பாட்டிற்கு காரணம் யார் ?

ஆனால், இந்தக் காலகட்டத்தில் தான் தாமிரபரணி மகா புஷ்கரம் நடைபெற்றதாகக் காஞ்சி காமகோடி பீடம் தன் பொய்யான பரப்புரையை மேற்கொள்கிறது.

சரி மாவட்ட கெஸட் தான் பொய் சொல்லுகிறது என்றால், அதே காலகட்டத்தில் காஞ்சி பீடத்தில் ஆறாவது மடாதிபதியாகப் பொறுப்புக்கு வந்த சுதர்சன மகா தேவேந்திர சரசுவதி (1851-லிருந்து 1891)யாவது உண்மையைச் சொல்லி இருக்கலாம்.

ஆனால் அவர், கணக்கு வழக்கில்லாமல் செலவு செய்த காரணத்தால் மடத்தின் கணக்குகளைக் கண்காணித்து வந்த அவரது சித்தப்பா கணபதி சாஸ்திரியால், தஞ்சை மன்னரின் உதவியோடு சிறை வைக்கப்பட்டது துவங்கி சிறையில் உண்ணாநோன்பிருந்தது வரைக்கும் அவரது அத்தனை கதையும் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது.

அதில் காஞ்சி பீடத்தினரால், தாமிரபரணியில் மகா புஷ்கரம் நடைபெற்றதாக எங்கும் குறிப்பிட்டிருக்கவில்லை. ஏன்? உண்மையில் அப்படியோர் நிகழ்வு நடந்திருந்தால் தானே?

விவரங்கள் இப்படி இருக்க இவர்கள் எப்படி 144 ஆண்டுகள் முந்தைய புனித அடையாளத்தைத் தாமிரபரணி மீது புகுத்த முயல்கிறார்கள்? ஏன்? இங்கேதான் மதவாத விஷ்வ இந்து பரிஷத் உட்பட்ட அனைத்து காவி அடையாளங்களின் கரங்கள் வேலை செய்யத் துவங்குகின்றன.

இவர்கள் முதலில் பொய்யை உண்மையென அறிவிப்பார்கள். அனைத்து பிராமணிய ஊடகங்களும் அவர்களுக்கு உறுதுணையாக மேற்படி பொய்யை உண்மை உண்மை என்று அறைகூவும். பிறகு மக்கள் வாய்மொழியில் இது நிஜம் தான் போல என்ற நம்பிக்கை உருவாகத் துவங்கும்.

இந்த மகா புஷ்கர நிகழ்விற்காக நதியின் கரைகளையும், துறைகளையும் கோயில் சாலைகளையும் புனரமைக்க மக்கள் வரிப்பணம் தான் செலவிடப்படும் என்றாலும் இவர்களது கைங்கரியத்தால் தங்களது மத அடையாளங்களை மக்களின் தொன்மங்களுக்குள் விசமமாகப் புகுத்தத் துவங்குவார்கள்.

எளிய மக்களின் அடையாளமாக விளங்கும் நாட்டார் தெய்வங்களை, ஆற்றங்கரைப் பள்ளிவாசல்களை, தேவாலயங்களை, எளிய மக்களின் இயற்கை வழிபாடுகளை அடையாளமிழக்கச் செய்து, அவற்றுக்கு காவிநிறம் பூசுவார்கள். எங்கள் அய்யனார் கோயில்களில் பின்னே நவக்கிரகங்கள் புகுந்ததெப்படி?

தாமிரபரணி ஆற்றங்கரை உலகின் தொன்மையான நாகரிக வெளி. ஆதிச்சநல்லூர் அதன் கண்டெடுக்கப்பட்ட எச்சம். அங்கே காவி மத அடையாளத்தின் பெயரால் தங்கள் அரசியல் தேவைகளை நிவர்த்தி செய்துகொள்ளும் பிராமணியச் சிந்தனையின் யுக்தியை, அதன் முன்பின்னுள்ள சக்திகள் எளிய மக்களின் பண்பாட்டுத் தொடர்ச்சியோடு பொருத்தி விளையாட்டுக் காண்பிக்கின்றன.

நம் மக்களிடம் இதுகுறித்து எதிர்க்கருத்தைச் சொன்னால், “என்னம்ன்னாலும் நம்மூருக்கு நல்லதுதான்ல செய்தான்” என்பார்கள். அவர்களிடம் விளங்கச் சொல்லிப் புரியவைப்பதில் சங்கடம்தான் எஞ்சும். ஊரின், நகரத்தின், தேசத்தின் முக்கியமான அடையாளங்கள் மீது கல்லெறிந்து, அந்த சலசலப்பிலே தங்களை வளர்க்கத் துடிக்கும் புத்திசீவிகள் காவிகள். கங்கை முதல் கன்னியாகுமரி வரை அவர்கள் அதைத்தான் செய்தார்கள் செய்வார்கள்.

தாமிரபரணி ஆறும், திருநெல்வேலி ஊரும் நம்முடையது. எனில், இந்தப் பொய்யும் புரட்டு செய்து கொண்டாடும் விழா யாருக்கானது. யாரோ ஒருத்தனாவது எதிர்த்து எழுதியதாக இருக்கட்டும் என்று இதை எழுதுகிறேன். இந்த மகா புஷ்கரம் குறித்து எழுதச் சொல்லிக் கேட்ட நண்பன் பிரகாஷ்க்கு நன்றி.

-கார்த்திக் புகழேந்தி,
பத்திரிகையாளர், பதிப்பாளர்.

நன்றி : தி டைம்ஸ் தமிழ் இணைய தளத்தில் வெளியான கட்டுரை.

பஸ்பாஸ் எங்கே ? திருச்சி ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் (12.10.18) அன்று முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்காத எடப்பாடி அரசை கண்டித்து கல்லூரிக்குள் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராடினர். போக்குவரத்து அதிகாரி கல்லூரிக்கு வந்து பதில் சொன்னால்தான் நாங்கள் இந்த இடத்தை விட்டு கலைந்து செல்வோம் என்று விடாப்பிடியாக நின்று போராடினர்.

கல்லூரி தொடங்கி ஏறத்தாழ நான்கு மாதங்களாகியும் இன்றுவரையில் பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. அன்றாடம் நடத்துனரோடு மாணவர்கள் மல்லுக்கட்டும் நிலைதான் நீடித்து வருகிறது. ஓ.சி. பயணம் என்பதாகக்கூறி மாணவர்களை அவமானப்படுத்தி பாதிவழியில் இறக்கிவிடும் சம்பவங்களும் நடக்கின்றன.

குறிப்பாக, கல்லூரி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் கல்லூரி அருகே நிறுத்தப்படுவதுமில்லை. அதற்கடுத்த பேருந்து நிறுத்தத்தில்தான் நிறுத்துகின்றனர். கல்லூரி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் போதுமான எண்ணிக்கையில் கல்லூரி வழியே செல்லும் வகையில் பேருந்துகளை திருப்பி விட வேண்டுமென்று நீண்டகாலமாகவே கோரி வருகின்றனர். குறிப்பிட்ட அந்த ஒன்றிரண்டு பேருந்துகளையும் தவற விட்டால், கல்லூரியில் முதல் இரண்டு வகுப்புகளை இழக்க வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே, மன்னார்புரம் மற்றும் டி.வி.எஸ்.டோல்கேட் பகுதிகளிலிருந்து சுமார் இரண்டு முதல் மூன்று கி.மீ. தூரம் வரை நடந்தே கல்லூரிக்கு செல்கின்றனர் மாணவர்கள்.

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பெரும்பாலும் தொலைதூரங்களிலிருந்து குறிப்பாக கிராமப்புறங்களிலிருந்து கல்லூரிக்கு வரும் முதல் பட்டதாரி மாணவர்கள். அன்றாடம் 40 கி.மீ. தூரம் வரை பயணித்து கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். கல்லூரியிலிருந்து 30 கி.மீ. தூரம் வரையில் அரசின் இலவச பஸ்பாஸை பயன்படுத்தியும் அதற்கு மேல் உள்ள தூரத்தை தமது சொந்தக் காசை போட்டும்தான் அன்றாடம் கல்லூரிக்கு வந்து செல்கின்றனர்.

படிக்க:
சோறு கேட்டா குத்தமா ? உரிமைய கேளு சத்தமா ! குடந்தை ஆதிதிராவிடர் விடுதி மாணவர் போராட்டம்
பு.மா.இ.மு (RSYF) : சென்னை மாணவர்களின் புதிய ‘தல’!

வாரநாட்களில் இவ்வாறு கல்லூரிக்கு வந்து போகும் செலவுகளுக்காக, வார விடுமுறை நாட்களில் விவசாயக்கூலிகளாகவும், பெட்ரோல் பங்க், ஓட்டல் வேலை, கேட்டரிங் என கிடைத்த வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப காசைக் கொண்டுதான் ஈடு செய்கின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகளை இவ்வளவு தூரம் கல்லூரிக்கு படிக்க அனுப்புவதே பெரிய விசயம். அதிலும் அன்றாடம் பஸ்க்கு காசுனு கேட்டா கல்லூரிக்கே போக வேணாம். வேலைக்கு போ என்று முடக்கிவிடுவார்கள்.

இந்தப் பின்னணியிலிருந்தே, பஸ்பாஸ் வழங்கக்கோரி வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். மாணவர்களின் உறுதியான போராட்டத்தையடுத்து, போக்குவரத்து அதிகாரி கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பஸ்பாஸ் கொடுக்கும் வரை கல்லூரியில் வழங்கியுள்ள அடையாள அட்டையை பயன்படுத்தி பயணம் செய்து கொள்ளலாம் என்றும், இது தொடர்பாக ஆறு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து கிளைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவிட்டதாகவும் தமது தரப்பில் எல்லாம் சரியாகவே நடக்கிறது என்பதைப் போல பேசினார்.

ஆனால், நாள்தோறும் பேருந்து பயணத்தின்போது மாணவர்கள் அவமானப்படுத்தப்படுவதையும், நடத்துனர்களால் வலுக்கட்டாயமாக கீழே இறக்கிவிடப்படும் சம்பவங்களையும் எடுத்துரைத்தனர். கரூர் மாவட்டத்திலிருந்து அன்றாடம் நூறு ரூபாய் பேருந்துக் கட்டணம் செலுத்தி கல்லூரிக்கு வர இயலாத நிலையில் கல்லூரி படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு திருப்பூர் பணியன் கம்பெனிக்கு வேலைக்கு செல்லும் அவலத்தை சொன்னார் மாணவி ஒருவர்.

”எங்கள் வீட்டில் நாலு பொம்பள பிள்ளைங்க. எங்கப்பா அன்றாடம் கூலி வேலைக்குப் போறவரு. எங்கப்பாவால எங்க நாலு பேத்துக்கும் பஸ்க்கு காசு கொடுக்க முடியுமா, சார்?… ஏழைங்க வாழ்வு கண்ணீரிலே முடியனும்னு அதிகாரிங்க நீங்க நினைக்கிறீங்களா?” என்று மற்றொரு மாணவி எழுப்பிய கேள்விதான் அரசுக்கல்லூரி மாணவர்களின் ஒட்டுமொத்த நிலைமை.

கல்லூரி அடையாள அட்டையைப் பயன்படுத்தி பயணம் செய்யுமாறும்; தாம் மீண்டும் ஓட்டுநர் நடத்துனர்களுக்கு அறிவறுத்துவதாகவும்; அவ்வாறு விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுநர் நடத்துனர் குறித்து குறிப்பான புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கிறோம் என்றும் வாக்குறுதியளித்தார்.

இனிமேல் மாணவர்களின் மீது நடத்துநர்கள் யாராவது கைய வச்சா, பஸ்ஸை விட்டு கீழே இறக்கினால் அடுத்தமுறை ஒட்டு மொத்த மாணவர்களும் ரோட்டுக்கு வருவோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று மாணவர்கள் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

தகவல்: பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி மாணவர்கள்,
திருச்சி – 9943176246.

இங்கு உட்காரக் கூட போராடத்தான் வேண்டும் !

மது நாட்டில் காலில் செருப்பு போடுவதற்கு போராட்டம், தெருவில் நடப்பதற்கு போராட்டம், சட்டை போடுவதற்கு போராட்டம், ஏன் மாராப்பு போடுவதற்குக் கூட போராட்டம் என்று கடும் போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது ஒவ்வொரு அடிப்படை மனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது.

இன்றைக்கும் உணவகங்கள் முன்பும், பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியிலும் வாடிக்கையாளர்களை வரவேற்று கடைக்குள் அனுப்பும் வேலை செய்யும் செக்யூரிட்டியில் இருந்து கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை வேலை நேரத்தில் உட்காருவதற்கு அனுமதி இல்லை. அப்படி உட்காருவது எஜமானர்களாகிய முதலாளிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மரியாதை குறைவு என்று அதட்டப்படுவார்கள்.

அதாவது, இன்று முதலாளித்துவ முறையிலான கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் “முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமின்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலையினாலும் அவதிப்படுகின்றனர். நவீன காலத் தீமைகளோடு கூடவே, பாரம்பரியமாய் வந்த அவலங்களின் முழு வரிசையும் நம் நாட்டு தொழிலாளர்களை வருத்துகிறது.. வாழ்பவற்றால் மட்டுமின்றி செத்துப் போனவற்றாலும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.” (காரல் மார்க்ஸ், மூலதனம் முதல் பதிப்புக்கு முன்னுரையிலிருந்து)

துணிக்கடைகள், நகைக்கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்க வந்திருக்கும் பொருட்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்களேயன்றி அவற்றைத் தங்களுக்கு எடுத்துக் காட்டும் கடை ஊழியர்களைப் பற்றி எதுவும் கவனிக்க மாட்டார்கள். வாடிக்கையாளர் எத்தனை முறை துணிகளை மாற்றி மாற்றிக் கேட்டாலும் முகம் சுளிக்காமல் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துத் தரும் பணியாளர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டு வேலை செய்வது பற்றி யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடி, கேரளாவின் துணிக்கடை மற்றும் நகைக்கடைகளில் வேலை செய்யும் பெண் பணியாளர்கள், அமர்ந்து வேலை செய்யும் உரிமையை வென்றிருக்கிறார்கள். கேட்கும் போது ஏதோ சாதாரண விசயம் போன்று தோன்றினாலும், இந்த வெற்றியானது அந்தத் தொழிலாளர்களுக்கு அவர்களது பணியிடத்தில் அனுபவித்து வந்த நரக வேதனையிலிருந்து, விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளது.

படிக்க:
♦ அவள் விகடன் அறிய விரும்பாத சாதனைப் பெண்கள் – படக்கட்டுரை
♦ கென்யாவின் பாக்சிங் பெண்கள் – படக்கட்டுரை

நாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள் சிறுநீர் கழித்துக் கொள்ளவேண்டும். வாரத்தின் ஏழு நாளும், ஏன் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட இதுதான் நிலைமை. வாடிக்கையாளர் வந்தாலும் வராவிட்டாலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும்.

திருவிழாக் காலங்களிலோ வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல இவர்களது துயரமும் பலமடங்காகிவிடும். பணியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவோ, சுவற்றில் சாய்ந்து ஓய்வெடுக்கவோ கூடாது. எல்லா நேரமும் கடைக்குள் இருக்கும் கேமரா இவர்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருக்கும்.
தப்பித் தவறி உட்கார்ந்து விட்டாலோ, தாங்க முடியாமல் கழிப்பறைக்குச் சென்று விட்டாலோ காது கூசும் அளவுக்கான வசவுகளை சூப்பர்வைசர் என்ற கங்காணியிடமிருந்து கேட்க வேண்டி வரும்.

இப்படிப்பட்ட பணிச்சூழலில் தினமும் 10 முதல் 12 மணிநேரம் வரை உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய எந்தவொரு தொழிலாளர் சட்டமும் கிடையாது. நடைமுறையில், அவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது.

இதனால் பெண் பணியாளர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகிறார்கள். அதிக நேரம் நிற்பதாலும், தண்ணீர் குடிக்காததாலும், கடுமையான கால் வலி, நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌ய் (Varicose Veins), சிறு‌நீ‌ர்‌ப்பாதை நோ‌ய்‌த்தொற்று (Urinary Tract Infection) ஆகிய உடல் உபாதைகளுக்கும், மாதாவிடாய் காலங்களில் கடுமையான வலியை அனுபவிப்பதுடன், கருப்பை சம்பந்தமான நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

கேரளாவில் துணிக்கடை பெண் ஊழியர்கள் போராட்டம்

இதனை எதிர்த்து முதலில் கலகம் செய்தவர் கேரளாவைச் சேர்ந்த மாயாதேவி என்ற தொழிலாளிதான். இவர் பணியிடத்தில் அமரவும், கழிப்பறை இடைவேளைகள் வேண்டுமெனவும் புகார் அளித்த போது, கேரள வணிகர் சங்கமும், கடை உரிமையாளர்களும், அவரின் கோரிக்கைகளைக் கண்டு கேலி செய்ததோடு மட்டுமன்றி, ‘உட்காரவும், கழிப்பறைகளைப் பயன்படுத்தவும் வேண்டுமெனில், பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்’, என்று ஏளனம் செய்தனர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய மற்ற தொழிற்சங்கங்கள் பெண்களின் பிரச்சனையைக் கையிலெடுக்க மறுத்துவிட்ட நிலையில், ‘பெண்கூட்டு’ என்ற பெண்கள் அமைப்பின் உதவியை நாடினார் மாயாதேவி. இந்த ‘பெண்கூட்டு’ அமைப்பு ஏற்கெனவே 2010-ம் ஆண்டு பெண்களுக்கு போதிய கழிப்பறைகள் வேண்டும் என்று போராடியிருக்கிறது. பெண்கூட்டு அமைப்பின் தலைவர் விஜியும் மாயாதேவியும் இணைந்து பெண் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தங்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார்கள்.

அவர்களது தொடர் போராட்டத்திற்குப் பிறகு அவர்களது கோரிக்கைகளுக்கு கேரள மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் செவிசாய்த்தது. ஏற்கனவே, பாலியல் வன்முறையைத் தவிர்க்கவும், பணியிடத்தில், வேலை செய்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்கவும் இயற்றப்பட்ட ‘கேரள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான’ சட்டத்தைத் திருத்தி பெண்கள், வேலை நேரங்களில் உட்காருவதற்கும், போதிய இடைவெளிகளை எடுப்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று புதிதாக ஒரு விதியை, கேரள அரசு சேர்த்துள்ளது.

தொழிலாளர் சட்டம் வந்துவிட்டாலும் அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பெண் தொழிலாளர்களுக்கு தங்களது உரிமை குறித்த புரிதலை ஏற்படுத்த, அவர்களைச் சங்கமாக அணிதிரட்டப் போவதாக விஜி கூறுகிறார். கேரள மாநில தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து துணிக்கடை, நகைக்கடைத் தொழிலாளர்களும் தங்களது உரிமைகளுக்காகப் போராடினால் இந்த கொடுமையிலிருந்து வெளிவர முடியும் என்ற உத்வேகத்தை தருகிறது கேரள தொழிலாளர்களது இந்தப் போராட்டம்.

படிக்க:
♦ செம்படையில் பெண்கள் – திரைப்படம்
♦ அழகு – சில குறிப்புக்கள் !

இந்தப் போராட்டம் கேரளத்து பெண் தொழிலாளர்களது போராட்டமாக சுருங்கவிடக் கூடாது. நாடு முழுவதும் இன்னும் சொல்லப் போனால், உலகம் முழுவதும் பணியிடத்தில் வழங்கப்பட வேண்டிய அற்ப, சொற்ப பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக போராடித்தான் ஆக வேண்டும் என்கிற நிலையைத்தான் முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. பணியிட பாதுகாப்பற்ற சூழல்,  ஆண் – பெண் என்கிற பேதமின்றி ஒவ்வொரு ஆலையிலும், ஒவ்வொரு தொழிலிலும் அவற்றுக்கே தனித்தன்மையுடன் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தொழிலாளி வர்க்கம் தன்னை “சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அதே போது சமுதாயம் முழுவதையுமே எல்லாவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப் பாகுபாடுகளிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் முற்றாகவும் முடிவாகவும் விடுவித்தே ஆக வேண்டும்” என்று பாட்டாளி வர்க்க பேராசான் எங்கெல்ஸ், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னுரையில் சொல்வதை நினைவு கூர்வோம்.

பெண்கள் மீதான ஆணாதிக்க சுரண்டல், நிலப்பிரபுத்துவ சாதிய முறையிலான சுரண்டல் உட்பட அனைத்து விதமான சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டத்தை ஆதரித்து அவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையின் ஒரு பகுதியாகும்.

வின்சென்ட்
புதிய தொழிலாளி செப்டம்பர் 2018
நன்றி: புஜதொமு – ஐ.டி. ஊழியர்கள்

நூல் அறிமுகம் : தென்பறை முதல் வெண்மணி வரை

1968 டிசம்பர் 25. இந்த நாளுக்குப் பல நாட்கள் முன்பிருந்தே… கிராமம் குமுறி கொண்டிருந்தது. போராட்டத்தால் அறுவடை நிறுத்தி வைக்கப்பட வயல்களில் கதிர்கள் தலைசாய்ந்துகொண்டிருந்தன. அதேபோல், நிலச்சுவான்தார்களின் கைக்கூலிகளின் ஆர்ப்பாட்டத்திற்குப் பயந்த பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும் பூட்டிய குடிசைக்குள் தலை சாய்ந்து கிடந்தனர். ஆனால் நிலச்சுவான்தாரர்களிடம் சவால்களைச் சந்திக்க, அறுவடைக்குத் தயாரித்த அரிவாள்களைப் போல, செங்கொடி இயக்கத் தோழர்கள் கிராமங்களைப் பாதுகாத்தனர்.

மார்கழிப் பனி கவிந்த அந்த இரவில், நிலச்சுவான்தாரர்களின் ஆட்கள் 100-200 பேர் ஒரு பெரும்படையாக அந்தக் கிராமத்தில் புகுந்தனர். அவர்களை எதிர்கொள்ள அங்கு நின்ற தோழர்கள் ஒரு சிலர். அங்கு நடந்த மோதல் ஒரு பொலி காளைக்கும் கன்றுக்குட்டிக்கும் நடந்த மோதலாக இருந்தது. துப்பாக்கிக் குண்டு பட்டு சிதறியவர்கள். வீச்சரிவாள் வெட்டுப்பட்டுச் சாய்ந்தவர்கள் எனத் தோழர்களின் பலத்தைக் குறைத்துக் கொண்டு எதிரிகள் முன்னேறினர்.

அன்று, எதிரிகளை எதிர்கொண்டு நின்ற தோழர்களில் ஒருவர் தோழர் கோபால், முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முந்தைய (1968) அந்தக் கொடூரமான இரவை நினைவுகூர்கிறார்.

‘’என் பேரு கோபாலு அப்பா ரத்னம், அம்மா அஞ்சலை. சம்பவம் நடந்தப்போ 19 வயது இருக்கும். கரெக்டா பெறந்த தேதியெல்லாம் தெரியாது. நந்தனார் புயலுனு பெரிசா அடிச்சது அப்போது நான் சின்னப் பயல். புயலில் விழுந்த தேங்காயெல்லாம் பொறுக்கியிருக்கேன். இத வச்சுப் பாக்கும்போது எனக்கு அப்போ , 19 முதல் 20 வயது இருக்கும்.

சம்பவம் நடக்கும்போது எனக்கு 19வயது இருக்கும். நெல்லுற்பத்தியாளர்கள் சங்கம் என்ற பெயரில் அப்போது இங்கே கிட்டத்தட்ட 50 கிராமங்களைச் சேர்ந்த மிராசுதார்கள் இருந்தனர். இங்கு நாயுடு வகையறாக்கள் கையில்தான் நிலம் இருந்தது. நெல் உற்பத்தியாளர் சங்கத்திலும் நாயுடுக்கள் அதிகம் இருந்தனர். அதுக்குத் தலைவர் கோபால கிருஷ்ண நாயுடு, இருக்கை, வண்டலூர், கோட்டூர், திருக்கண்ணங்குடி, பாலக்குறிச்சி போன்ற பெரிய கிராமங்கள் இப்பகுதியில் உள்ளன. இங்கெல்லாம் நாயுடு வகையறாதான் இருந்தனர்.

நாங்கல்லாம் ஏழைங்க – தொழிலாளிங்க எல்லாம் செங்கொடிச் சங்கத்தில் இருந்தோம். செங்கொடிச் சங்கத்து மூலமாத்தான் எங்களுக்கு வேண்டியதக் கேட்டு வாங்கிக் கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. இது பொறுக்க முடியாம, ‘நீங்கள்ளாம் செங்கொடி சங்கத்துல இருக்கவேண்டாம் நெல்லுற்பத்தியாளர் சங்கத்துல சேர்ந்துடுங்க. உங்களுக்கு வேண்டிய நில புலம் வசதி எல்லாம் நாங்க செய்து தரோம்’னு அவங்க சொல்ல ஆரம்பிச்சாங்க. எங்க கிராமப்புறத்துக்குக் கோபாலகிருஷ்ண நாயுடுவே வந்து பேசினாரு.

இங்கேயே கொஞ்சம் பேரு நாயுடு வகையறாக்கள் இருக்காங்க. ரோட்டிலிருந்து கிராமத்துக்குள்ள வர்ற தெருவில அவங்க இருக்காங்க. அங்க வந்து இருந்துக்கிட்டு பேசினார்கள். ஆனால் நாங்க ஒத்துக்கல. நாங்க செங்கொடிச் சங்கத்துல இருக்கோம். சுத்துப்பட்டுல இருக்கற ஏழை பாழைகளெல்லாம் இதுல தான் இருக்காங்க. நல்லது கெட்டதுன்னா அவங்கதான் வராங்க. அதனால் உங்க சங்கத்துக்கு வரமாட்டோம்னு திட்டவட்டமாச் சொல்லிட்டோம். அப்போ நா இங்க செயலாளராக இருந்திருக்கிறேன். 13 வருசம் கிளைச்செயலாளராக இருந்திருக்கிறேன். அதுக்கு முன்னாடி செல்லமுத்து மாமனார் முத்துசாமி இங்க லீடரா இருந்தாரு.

எங்க கொடி செங்கொடி. அவங்க கொடி மஞ்சள் கொடி. செங்கொடியை இறக்கிட்டு மஞ்சக் கொடியை ஏத்தணும்னு பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு. இந்தச் சமயத்துல கூலிப்பிரச்சனையும் வந்தது, அப்போது எங்களுக்கு அறுவடையில் ஒரு கலம் (24 பட்டணம் படிக்கு) அறுவடை செய்தால் கலத்திற்கு சின்னப்படியில் 5-51/2 யாக கீவளூர் பகுதி முழுவதும் கூலியாக இருந்தது. இதை உயர்த்தி அரைப்படியைச் சேர்த்து ஆறுபடியாக தரவேண்டும் என்று போராடிக் கொண்டிருந்தோம்.

சம்பவம் நடக்கறதுக்கு ரெண்டு வருடமாக இந்தப் பிரச்சனை இருந்துகிட்டு இருந்துச்சு. அப்போ அவங்க அரைப்படி நெல்லு சேர்த்துத் தர முடியாதுன்னுகிட்டு இருந்தாங்க. நான் முன்னாடி சொன்ன கிராமத்துலயெல்லாம் இந்தப் பிரச்சனை இருந்தது. எங்களை அடக்க மிராசுதாருங்க என்ன செஞ்சாங்கன்னா ராத்திரியோட ராத்திரியா கொட்டாயை (குடிசையை) கொளுத்துறது; ஆளுவச்சு தூக்கிட்டுப் போறதுன்னு செஞ்சுட்டு இருந்தாங்க.

இப்படியெல்லாம் நடந்துகிட்டு இருந்துச்சு. எங்க கிராமத்துல ஒண்ணும் இல்ல. அதனால ‘நமக்கு ஒண்ணும் இல்ல. வந்தா பார்த்துக்குவோம்னு யதார்த்தமாவே இருந்தோம்’.

படிக்க:
வெண்மணிச் சரிதம்
ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்

ஒருநாள் பத்து இருபது வேத்து ஆளுங்க கிள்ளிக்குடி சந்திரன் நாயுடுக்கு அறுப்பு அறுக்கப் போனாங்க. முன்ன எங்களக் கூப்பிட்டாங்க. நாங்க போனோம். அரைப்படி சேத்துக் கேட்டோம். முடியாதுனுட்டாங்க. நாங்க வந்துட்டோம். அப்புறம் வேத்து ஆளுங்கள வைச்சு அறுப்பு நடத்துனாங்க. எல்லாம் அறுத்து முடிச்சு களமெல்லாம் முடிஞ்சுட்டு பத்து இருபது பேரும் கிளம்புனாங்க.

அப்படி வரையில்ல (வரும்போது) இங்க எங்க மாமா முத்துசாமிங்கறவரு டீக்கடை வச்சிருந்தாரு. அதுக்கும் பக்கத்துல வெத்தலபாக்குக்கடை, நாடாரு வச்சிருந்தாரு. அப்ப நம்ம ஆளுங்களச் சேர்ந்த சீனிவாசன், இவரு இந்த சம்பவத்துலதான் இறந்தாரு. 50 – 55 வயசு இருக்கும். அவங்க கூட்டம் வந்ததும், இருக்கை ஊரச்சேர்ந்த சீனிவாசன்ற இன்னொரு பையன். நாயுடு இப்படி, வெத்தல பாக்கு வாங்கயில, ‘என்னல பக்கத்துல பக்கத்துல இடிக்கறேன்னு நம்ம சீனிவாசன்ட்ட வம்பு பிடிச்சாரு. பேச்சு வளர்ந்தது. அந்த நாயுடு ‘வாடா போடான்னு பேச ஆரம்பிச்சாரு. “எங்க ஊருல வந்து எங்க இடத்துல நின்னுகிட்டு வாடா போடான்னு மரியாதை இல்லாம பேசறீங்களே”னு நம்ம தோழர் கேட்டாரு.

அப்போ பக்கத்துல கிடந்த விறகுக் கட்டையத் தூக்கி நம்ம தோழர் சீனிவாசனைச் சடார்னு அடிச்சுப்புட்டான். ரத்தம் சொட்டுது இதான் தலைப்பே (தொடக்கம்).

டீக்கடையில இருந்த மாமா முத்துசாமியையும் அடிச்சு, உதைக்க டீக்கடைய நாசம் பண்ணி, கட்டி இழுத்துட்டுப் போய் ராமானுசம் நாயுடுங்கற மிராசுதார் வீட்டுக்குள்ளே போட்டு பூட்டிட்டாங்க. இதமாதிரி நம்ம நாட்டாமை முனியன்ங்கறவரையும் அடிச்சு இழுத்துக்கிட்டுப் போய்க் கட்டி வைச்சிட்டாங்க.

இதக் கேள்விப்பட்டு என்னடா செய்யறதுன்னுட்டு நாங்கள்லாம் ஒண்ணாத் திரண்டோம். தேவூரில் இருந்தும் தோழர் கோபால் கொஞ்சம் ஆளுகளத் திரட்டிக் கொண்டு வந்தாரு. கொண்டு வந்து வீடு கீடெல்லாம் அடிச்சு நொறுக்கினாங்க. உடனே அவங்கள்லாம் ஓடிப்போயி எஸ்கேப் ஆயிட்டாங்க. நானும் ஸ்பாட்டில் இருந்தேன். இதுக்கும் பெறகு நான் திரும்பிட்டேன். மணி ராத்திரி ஏழு இருக்கும்.

அப்ப என்னன்னா, அவங்களச் சேர்ந்த ஒருத்தரு தப்பிச்சு இந்தப்பக்கம் வந்துருக்காரு. இங்க வந்தவர் தோழர் கோபாலுதான் வரச்சொன்னாருன்னு சொன்னாரு இப்படிப் பேசிக் கிட்டு இருக்கையில் இங்கதான் (வெண்மணி சம்பவம் நடந்த ராமையாவின் வீடுமுன்) பேசிக்கிட்டு இருக்கையிலேயே சட்டுனு சுளுக்கியால் குத்திப்புட்டாரு. இந்த இடத்துல இன்னமும் காயம் இருக்கு. (காட்டுகிறார்). உடனே இது நம்ம ஆளு இல்லன்னு சட்டுனு புடிச்சி கட்டிப் போட்டாச்சு. அதுக்கும் பெறகு அமைதியாயிருச்சு. போலீசுல புகார் கொடுத்து வேன் வந்து ஏத்திக்கிட்டு இருக்கு.

கலவரம் செய்ய வந்தவங்கள நாங்க வெரட்டினோமில்ல அதுல அடிபட்ட ஆளுங்கள போலிஸ் வேனில் ஏத்திக்கிட்டுப் போனாங்க. எங்க மேல போலீஸில் கம்ப்ளெய்ன்ட் ஆயிருக்கு. அதனால நம்மாளுங்க பல பேரு அங்கங்க ஓடிட்டாங்க.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : விவசாயிகளை ஒழிக்கப் போகும் கார்ப்பரேட் சந்தை !
சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

இப்படி இருக்கையில ராத்திரி மணி ஒம்பதுக்கு மேல இருக்கும். இங்க கிராமத்துல பொம்பளப் பிள்ளைக, வயசானவங்கனு 40-50 பேரு. இந்தக் குடிசைக்குள்ள ஒளிஞ்சு இருந்துருக்காக. இந்தச் சமயத்துல 100-200 பேர் அவங்க ஆளுங்க திரண்டுட்டாங்க. கையில் வெளக்கு, கம்பு, கத்தி, மொசல் சுடற துப்பாக்கின்னு வச்சிருக்காங்க. அந்த தார்ச்சாலையிலிருந்தே சுட ஆரம்பிச்சுட்டான். இந்த இடத்துக்கு நாலாபக்கமும் சூழ்ந்து வர்றதுக்குப் பாதை இருக்கு. அது வழியா சூழ்ந்து தூரத்துல இருந்தே சுட்டுகிட்டு வந்தாச்சு. முனியன்ங்கறவருக்கு 30 முதல் 40 குண்டுகள் இருக்கு. பாளையம்ங்கற தோழரோட அப்பாவுக்குத் தொடையில் ஒரே இடத்துலயே 40 முதல் 50 குண்டு இருக்கும். டார்ச் லைட்டை அடிச்சு அடிச்சு சுடறான். இப்படியே நெருங்கீட்டாங்க,

என்ன ஒருத்தன்; அரிவாள வீசி எறிஞ்சு அடிச்சான். அறுபட்டு இந்த இடத்துல வெட்டிருச்சு. நான் அந்த அரிவாளால திரும்பி அவன அடிச்சேன். அவன் திருப்பிக் கல்லால் அடிச்சான். அடிச்சதுல அப்படியே ரத்தம் கொட்டி கண்ணே பூத்துப்போச்சு. எனக்கு எங்க ஓடறதுனு யோசனை புரியல. கொட்டாய்க்குள்ள (குடிசைக்குள்ள) ஒடறதா? (கொட்டாய்க்குள்ள போயிருந்தா அன்றே தீயில் எரிந்து கருகியிருப்பார்) எங்க ஓடறதுனு புரியல. சர்ன்னு அப்படியே மூங்கில் குத்துக்குப் பக்கத்துல மறஞ்சுக்கிட்டேன்.

அப்புறம் அதோட கிட்ட நெருங்கிட்டான் அவன். அப்புறம் அங்கேருந்து, தலைப்புல (ஆரம்பத்தில்) இருந்து வீட்டக் கொளுத்திக்கிட்டு வறான். யார் யாரு எங்க இருக்காங்கன்னு தெரியல. ஆம்பளங்க ஓடிட்டாங்க. 40 முதல் 50 பொம்பளப் பிள்ளைக இந்தக் கொட்டாய்க் குள்ள இருந்தது. அதுல எங்க அம்மாவும் தங்கச்சியும் இருந்திருக்கு. அதுகூட எனக்குப் புரியல.

அடியோட போன எனக்கு அடுத்து என்ன நடந்ததுன்னு புரியல. நான் அப்படியே மண்சாலை வழியாப் போயி ஒரு பெரிய மாமரத்துப் பக்கத்துல மலைச்சுப் போயி உக்கார்ந்துட்டேன். அப்போ வீடு எரியுது.

கொட்டாய்க்குள்ள இருந்தவங்க பூட்டிட்டாங்க. வந்தவன் கதவ முடிஞ்சமட்டும் அடிச்சு நொறுக்கிப்பார்த்துட்டு வெளிப்பக்கமாத் தாப்பா போட்டிட்டு நாலாப்பக்கமும் கொளுத்திட்டான்.

இந்த வூடு மட்டுமல்ல. எல்லா வீடுகளும் எரியுது. ஆணிகளெல்லாம் பட்பட்னு தெறிக்குது. அந்தச் சத்தம் எனக்குக் கேட்குது. யாரு எங்க இருக்காங்கனு ஒண்ணும் புரியல. அப்போ ராத்திரி 10 மணி இருக்கும். அதோட போனவந்தான் நான். அப்படியே தேவூர் போயிட்டு, அதும்பிறகு கீவளூர் போய் கம்ப்ளெயின்ட் கொடுத்து, எனக்குக் காலுல குண்டு பாய்ஞ்சிருந்திருச்சு. அது ஒண்ணும் பண்ணாதுனுட்டு 10 ரவைய எடுத்தாங்க. மிச்சம் இன்னமும் இருக்கு. பத்து இருவது நாள் ஆஸ்பத்திரியில இருந்தேன்.

அதுக்குப் பிறகு எங்கப்பா வந்தப்புறம்தான் யார் யார் செத்தாங்க போனாங்கன்ற வெவரம் தெரிஞ்சுது. செத்ததுல எங்கம்மா, தங்கச்சியும் மாட்டிக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. அப்புற என்ன செய்ய, கட்டிக்கிட்டு அழுதோம்.

அப்புறம் நாகப்பட்டினம் தனிகோர்ட்டில் வழக்கு நடந்துச்சு. அதுல மிராசுதார் ஆளுங்க பத்துபேரு. நம்மள்ள பத்துபேருக்குத் தண்டனை. நம்மாளு கோபாலுக்கு ஆயுள் தண்டனை. ராமையனுக்கு ஐந்து வருஷம், வானமாமலை, மன்னார்குடி ரங்கன் எல்லாரும் எங்களுக்காக வாதாடுனாங்க.

படிக்க:
#MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !
நக்கீரன் கோபால் கைது ! மரணப்படுக்கையில் ஜனநாயகம் !

1968 வருஷம் டிசம்பர் 25 ஆம் தேதி மார்கழி மாசத்துக்கு 10ம் தேதி இந்தச் சம்பவம் நடந்தது. இதுக்குப் பல நாள் முன்னாலேயே பிரச்சனை இருந்ததுனால நான், எல்லாரும் உஷாரா இருந்தோம். அங்க கொளுத் திட்டாங்க, இங்க கொளுத்திட்டாங்கன்னு சேதி வரும். ராத்திரியெல்லாம் கண் முழிச்சுப் பாத்துக்குவோம். இருந்தாலும் இங்க ஒண்ணும் இல்லேல்ல, வந்தா பாத்துக்குவோம்னு யதார்த்தமாவே இருந்துட்டோம். சம்பவம் நடந்த அன்னிக்கு எல்லாம் மீறிப் போச்சு. அவங்க 100-200 பேர் திட்டம் போட்டு குறியாவே வந்திருக்காங்க. பிற்பாடு நம்மாளுக்கு வேண்டப்பட்ட ஒரு மிராசுதாருட்ட நாங்க என்ன செஞ்சோம் இப்படி செஞ்சுட்டீங்களேனு கேக்கும்போது எல்லாம் குடிச்சிட்டு, திட்டம் போட்டுத்தான் வந்தாங்கன்னு சொன்னாரு. (நூலிலிருந்து : பக்கம் 12 – 15 வரை)

நூல்: ‘தென்பரை முதல் வெண்மணி வரை
(தஞ்சை மாவட்ட தலித் விவசாயத் தொழிலாளர் போராட்டங்களின்
வாய்மொழி வரலாறு)
ஆசிரியர்: அப்பணசாமி

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 24332424, 24332924
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 108
விலை: ரூ.40.00 (டிச-2007 பதிப்பு)

இணையத்தில் வாங்க:  nhm.in

மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

தாய் பாகம் 3 : உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 3

ந்தை காலமாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று பாவெல் விலாசவ் மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தான். வீட்டுக்குள் தள்ளாடித் தடுமாறி நடந்தான். மேஜை மூலையிலிருந்த ஆசனத்தை நோக்கித் தொட்டுத் தடவி நகர்ந்து சென்றான்; தன் அப்பன் செய்தது போலவே மேஜைப் பலகை மீது முஷ்டியால் ஓங்கிக் குத்தியவாறு தன் தாயைப் பார்த்துச் சத்தமிட்டான்.

மாக்சிம் கார்க்கி

“கொண்டா சாப்பாடு!”

அவனது தாயோ தன் மகனுக்கருகே வந்து உட்கார்ந்தாள். தன் கரங்களால் அவனை அணைத்து அவனது தலையைத் தன் மார்பகத்தில் புதைத்துக்கொண்டாள். அவனோ அவளை விலக்க முயன்றான்.

”அம்மா, கொண்டா சீக்கிரம்!”

“முட்டாள் பயலே!” என்று தாய் கவலையோடும் அன்போடும் அவனது கையை விலக்கிக்கொண்டே சொன்னாள்.

“நான் புகை பிடிக்கவும் போகிறேன். அப்பாவின் குழாயை எடுத்துக் கொடு” என்று சொல்லுக்கு வளையாத நாக்கினால் குழறினான் பாவெல்.

அவன் குடித்துவிட்டு வந்தது இதுதான் முதல் தடவை. ஓட்கா அவனது உடம்பைத் தளர்வுறச் செய்திருந்தது. எனினும் அவனது பிரக்ஞையை, போதை முற்றும் துடைத்துவிடவில்லை. எனவே அவனது மூளைக்குள்ளே ஒரே ஒரு கேள்வி மட்டும் முட்டி மோதிக்கொண்டிருந்தது

“குடித்திருக்கிறேனா? குடித்திருக்கிறேனா?”

அவன் தன் தாயின் அன்பைக் கண்டு தடுமாறினான். அவளது கண்ணில் மிகுந்த சோகம் அவன் உள்ளத்தைத் தொட்டது. அவன் அழ நினைத்தான். எனினும் அந்த உணர்ச்சியை அமுக்கடிப்பதற்காக, தன்குடிவெறியை அதிகமாக வெளிக்காட்டிக் கொண்டான்.

ஈரம் படிந்து கலைந்து போயிருந்த அவனது தலைமயிரைக் கோதிக் கொடுத்தாள் அவனது தாய்.

”நீ இப்படிச் செய்யக் கூடாது” என்று அமைதியாகச் சொன்னாள்.

அவள் திரும்பி வருவதற்குள்ளாக, பாவெல் நன்றாகத் தூங்கிப் போய்விட்டான்.

அவனுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. பிறகு பலமாக வாந்தியெடுத்தான். அதன் பின்னர் தாய் அவனைப் படுக்கையில் கொண்டு போய்ப் படுக்க வைத்து, வெளிறிப் போன அவனது நெற்றியின் மீது ஒரு ஈரத்துணியைப் போட்டாள். அது அவனுக்கு ஓரளவு தெளிவைக் கொடுத்தது. எனினும் அவனைச் சுற்றியுள்ள பொருள்கள் எல்லாம் நீச்சலடித்து மிதப்பது போலிருந்தன. அவனது கண்ணிமைகள் கனத்துத் திறக்க முடியாதபடி அழுத்திக் கொண்டிருந்தான். தன் வாயில் உறைத்துக் கொண்டிருக்கும் அந்தக் கார நெடியின் உணர்ச்சியோடு, அவன் தன் கண்ணிமைகளை லேசாகத் திறந்து பெரிதாகத் தெரியும் தன் தாயின் முகத்தைப் பார்த்தான். ஏதோ தொடர்பற்று நினைத்தான்;

”நான் இன்னும் சின்னப் பிள்ளைதான். இதற்குள் குடித்திருக்கக் கூடாது. ஆனால், மற்றவர்கள் குடிக்கிறார்களே, அவர்களுக்கு ஒன்றும் செய்வதில்லை. நான் மட்டும் இப்படியாகிவிட்டேன்…..

எங்கிருந்தோ அவனது தாயின் இனிமையான குரல் ஒலித்தது.

“இப்படிக் குடிக்க ஆரம்பித்தால் நீ என்னை எப்படிக் காப்பாற்றப் போகிறாய்?”

“எல்லோரும்தான் குடிக்கிறார்கள்’ என்று கண்களை மூடிக்கொண்டே பதில் சொன்னான் பாவெல்.

அவனது தாய் பெருமூச்சு விட்டாள். அவன் சொன்னது சரி, சாராயக் கடை ஒன்றில் மட்டும்தான் ஜனங்கள் ஓரளவேனும் சந்தோஷமாக இருக்க முடிகிறது என்பதை அவளும் அறிவாள்.

”ஆனால், நீ மட்டும் குடிக்காதே என்று சொன்னாள் அவள். ”உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார். அவர் என்னைப் படாதபாடு படுத்தினார். உன் தாய் மீது கொஞ்சமாவது நீ பரிவு காட்டக் கூடாதா?”

படிக்க:
ட்ரம்போவும் நானும் – மு.வி. நந்தினி
பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?

துக்கமான இந்த இனிய வார்த்தைகளைக் கேட்டதும், தந்தை உயிரோடிருந்த காலத்தில் வீட்டிலிருப்பதே தெரியாது. எப்போதும் மெளனமாய், அடிக்குப் பயந்து சாகும் துயர வாழ்வையே தன் தாய் வாழ்ந்து வந்தாள் என்பது பாவெலுக்கு ஞாபகம் வந்தது. தன் தந்தையைச் சந்திக்கக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக, பாவெலும் எப்போதும் வீட்டை விட்டு வெளியேதான் திரிந்து கொண்டிருந்தான். எனவே அவன் தன் தாயிடம் கூட அதிகமாகப் பழகியதில்லை. ஆனால், இப்போது அவனுக்கு அறிவு தெளியத் தெளிய அவன் தன் தாயை ஆர்வத்தோடு கவனிக்க ஆரம்பித்தான்.

அவள் உயரமாக இருந்தாள். எனினும் ஓரளவு கூனிப் போயிருந்தாள். ஓயாத உழைப்பினாலும், கணவனின் அடி உதைகளாலும் உடைந்து கலகலத்துப் போன அவளது உடம்பு அரவமே செய்யாமல் ஒரு பக்கமாகச் சாய்ந்தே நடமாடியது. எதனோடாவது மோதிவிடுவோமோ என்ற அஞ்சி நடப்பதைப் போலத் தோன்றியது. அகன்று நீள் வட்டமாக இருந்த அவளது முகம் உப்பியதாய், சுருக்கம் கண்டு போயிருந்தது. அந்த முகத்தில் குடியிருப்பிலுமுள்ள பெரும்பான்மையான பெண்களுக்கிருப்பது போலவே பயபீதியும் சோகமும் தோய்ந்து படிந்த இருண்ட இரு கண்கள் ஒளி செய்து கொண்டிருந்தன. அவளது வலது புருவத்துக்கு மேலாக ஒரு ஆழமான வடு தெரிந்தது, அந்த வடுவினால், அவளது புருவம் ஓரளவு உயர்ந்து போயிருந்தது. இதனால் அவளது வலது செவியும் இடது செவியைவிட ஓரளவு உயர்ந்து போய்விட்டது போல் பிரமை தட்டியது. இதனால், அவள் எப்போதுமே ஒரு பயங்கரச் செய்தியைக் கேட்டு அஞ்சுவது போலத் தோன்றியது. அவளது அடர்ந்த கரிய கூந்தலில் ஒன்றிரண்டு நரை மயிர்கள் மின்னிக் கொண்டிருந்தன. அவள் இதமும், சோகமும் பணிவுமே உருவாக இருந்தாள்…

அவளது கன்னங்களின் வழியே கண்ணீர் மெதுவாக வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.

“அழாதே” என்று அவளது மகன் அமைதியாகச் சொன்னான். ”எனக்கு இன்னும் கொஞ்சம் குடிக்கக் கொண்டா?”

“உனக்கு நான் கொஞ்சம் ஐஸ் போட்ட தண்ணீர் கொண்டு வருகிறேன்.’

”உன் அப்பா உனக்கும் சேர்த்துக் குடித்துத் தீர்த்துவிட்டார்”

ஆனால் அவள் திரும்பி வருவதற்குள்ளாக, அவன் நன்றாகத் தூங்கிப் போய்விட்டான். அவள் அவனையே ஒரு நிமிஷம் குனிந்து பார்த்தாள். அவளது கையிலிருந்த குவளை நடுங்கியது. அதனால் தண்ணீரில் கிடந்த ஐஸ் துண்டுகள் குவளையோடு மோதி ஓசையுண்டாக்கின. பிறகு அவள் குவளையை மேஜை மீது வைத்துவிட்டு, சுவரில் இருந்து தெய்வ விகாரங்களை நோக்கி முழங்காலிட்டு அமைதியாகப் பிரார்த்தனை செய்யத் தொடங்கிவிட்டாள். ஜன்னலுக்கு வெளியே குடிகாரர்களின் கும்மாளம் ஒலித்து மோதிக்கொண்டிருந்தது. இலையுதிர்கால இரவின் இருளையும் குளிரையும் பிளந்து கொண்டு ஒரு ஆர்மோனியம் எங்கோ ஏங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. யாரோ உரத்த முரட்டுக் குரலில் பாடிக் கொண்டிருந்தார்கள். யாரோ வாய்க்கு வந்தபடி சரமாரியாக ஆபாசமாக வைது தீர்த்தார்கள், எரிச்சலும் களைப்பும் நிறைந்த பெண் பிள்ளைகளின் உரத்த குரல்கள் இடையிடையே ஒலித்துக்கொண்டிருந்தன.

விலாசவின் அந்தச் சின்னக் குடிலில் வாழ்க்கை அமைதியாக முன்னைவிட ஒழுக்கமாக ஓடிக்கொண்டிருந்தது. மற்ற வீடுகளிலுள்ள வாழ்க்கைக்கு மாறுபட்டிருந்தது. அவர்களது வீடு, குடியிருப்பின் ஒரு மூலையில், ஒரு சரிவு நிலத்துக்கு மேலாக இருந்தது என்றாலும் சேற்றுக் குட்டையிலிருந்து மிகவும் உயர்ந்திருக்கவில்லை. வீட்டின் மூன்றிலொரு பாகத்தை சமையலறை ஆக்கிரமித்திருந்தது. சமையலறையைப் பிரிந்து நிற்கும் ஒரு சின்ன அறையில் தாய் படுத்துத் தூங்குவாள். மீதியுள்ள இரண்டு பாகத்தில் ஒரு சதுரமான அறை இருந்தது. அதில் இரு ஜன்னல்களும் இருந்தன. ஒரு மூலையில் பாவெலின் படுக்கையும், இன்னொரு மூலையில் ஒரு மேஜையும், இரண்டு பெஞ்சுகளும் கிடந்தன. மீதியுள்ள இடத்தில் சில நாற்காலிகளும், ஒரு அலமாரியும் அதன் மீது ஒரு கண்ணாடியும் இருந்தன. அவர்களது துணிமணிகளை வைத்திருந்த ஒரு டிரங்குப் பெட்டி, சுவரில் தொங்கும் ஒரு கடியாரம், மூலையிலுள்ள இரண்டு விக்ரகங்கள் – – – இவையே இதர சாமான்கள்.

மற்ற இளைஞர்களைப் போலவே தானும் வாழ விரும்பினான் பாவெல். தனக்கென ஒரு ஆர்மோனியப் பெட்டி, கஞ்சி போட்டுத் தேய்த்த சட்டை பளபளப்பான ஒரு கழுத்து ‘டை’ ரப்பர் ஜோடுகள். ஒரு பிரம்பு முதலியவற்றை வாங்கி வைத்து, இளவட்டப் பிள்ளையின் ஆசைகளைப் பூர்த்தி செய்திருந்தான். மாலை வேளைகளில் அவன் மது விருந்துக்குச் செல்வான்; அங்கு நடனம் ஆடப் பழகிக் கொண்டான். ஞாயிற்றுக் கிழமைகளில் நன்றாக குடித்துவிட்டு வீடு திரும்புவான். ஆனால் ஓட்கா அவனுக்கு ஒத்துக்கொள்ளவே இல்லை, அதனால் மிகவும் சிரமப்பட்டான். திங்கட்கிழமை காலை நேரங்களில் அவன் தலைவலியோடும் நெஞ்செரிச்சலோடும் எழுந்திருப்பான், அப்போது அவனது முகம் வெளித்துப் பரிதாபமாயிருக்கும்,

”நேற்று நாள் இன்பமாய்க் கழிந்ததா?” என்று அவன் தாய் ஒரு முறை கேட்டாள்.

“நரகம்தான்!” என்று புகைந்து போன எரிச்சலோடு பதில் சொன்னான் பாவெல். “இதைவிட மீன் பிடிக்கப் போயிருக்கலாம். அல்லது ஒரு துப்பாக்கி வாங்கி, வேட்டையாடியாவது பொழுதைப் போக்கலாம்.”

மற்றவர்கள் எல்லாம் சாதாரணமாகத்தானே நடந்து கொள்கிறார்கள். இவன் மட்டும் சந்நியாசி மாதிரி இருக்கிறானே. அதிலும் இவ்வளவு கண்டிப்பாகவா? இவன் வயதுக்கு இது கூடாது.

அவன் நேர்மையோடு உழைத்தான். ஒருநாள் கூட ஊர் சுற்றியதில்லை, அபராதம் கட்டியதில்லை. அவன் எப்போதுமே அமைதியான ஆசாமி. எனினும் தன் தாயின் கண்களைப் போன்ற அவனது அகன்ற நீலக் கண்களில் மட்டும், அதிருப்தி பிரதிபலித்துக் கொண்டிருக்கும். அவன் தனக்கென ஒரு துப்பாக்கி வாங்கவும் இல்லை; மீன் பிடிக்கப் போகவுமில்லை. ஆனால், மற்றவர்கள் யாரும் செல்லாத ஒரு புதிய பாதையிலேயே அவன் சென்று கொண்டிருக்கிறான் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. அவன் இப்போதெல்லாம் கூட்டாளிகளோடு கூத்தடிக்கச் செல்வதில்லை. பண்டிகை நாட்களில் அவன் எங்கேயோ காணாமல் போய்விடுவான். திரும்பி வரும்போது குடிக்காமலே சுவாதீனமான புத்தியோடு வந்து சேருவான்.

அவனது தாயின் கூர்மையான பார்வையில், தன் மகனது பழுப்பேறிய முகம் வரவர மெலிந்து வருவதாகவும், கண்களில் அழுத்த பாவம் குடி புகுந்து விட்டதாகவும் உதடுகள் இணைந்து இறுகி உறுதி பாவம் பெற்றது போலவும் தோன்றியது. அவன் எதையோ நினைத்துத் துயரப்படுவது போலவோ, அல்லது ஏதோ ஒரு நோய் அவனை உருக்கி உருக்குலைத்துக் கொண்டிருப்பது போலவோதான் தோன்றியது.

இதற்கு முன்பெல்லாம் அவனது நண்பர்கள் பலர் வீட்டுக்கு வருவார்கள். இப்போதோ பாவெலை வீட்டில் காண முடியவில்லையாதலால், வீட்டிற்கு வருவதையே அவர்கள் நிறுத்திவிட்டார்கள். தொழிற்சாலையிலுள்ள மற்ற இளைஞர்களைப் போல் இல்லாது பாவெல் மாறுபட்டு இருப்பது தாய்க்கு ஆனந்தம் தந்தது. எனினும் தன்னைச் சுற்றியுள்ள இருண்ட வாழ்விலிருந்து விலகி வேறொரு புதிய பாதையில் கவனமாகவும் பிடிவாதமாகவும் சென்று கொண்டிருக்கிறான் என்ற உண்மை, புரியாத ஒரு அச்சத்தைத் தந்தது.

“பாஷா! (1) உனக்கு என்ன , உடம்பு சரியில்லையா?” என்று சமயங்களில் அவனை அவள் கேட்பாள்,

“இல்லையே சரியாகத்தானே இருக்கிறேன்” என்று அவன் பதில் சொன்னான்.

”நீ மிகவும் மெலிந்து விட்டாய்!” என்று கூறி அவள் பெருமூச்சுவிடுவாள்.

அவன் வீட்டுக்குப் புத்தகங்கள் கொண்டுவர ஆரம்பித்தான். அவற்றை இரகசியமாகப் படிப்பான்; படித்து முடித்ததும் அவற்றை ஒளித்து வைத்துவிடுவான். சமயங்களில் அந்தப் புத்தகங்களிலிருந்து ஏதாவது ஒரு விஷயத்தை நகல் செய்து கொள்வான். அந்த நகலையும் ஒளித்து வைத்துவிடுவான்.

தாயும் மகனும் அநேகமாகப் பேசுவதே இல்லை . அதிகமாக ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதும் இல்லை. காலையில் அவன் வாய் பேசாமல் தேநீர் அருந்திவிட்டு வேலைக்குப் போவான். மத்தியானத்தில் அவன் சாப்பிடுவதற்காகத் திரும்பி வருவான். அப்போதும் அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக எதுவும் பேசிக்கொள்வதில்லை. மாலை வரை அவன் மீண்டும் எங்கேயோ போய்விடுவான். மாலையில் சீராய்க் குளித்துவிட்டு தனது புத்தகங்களை நீண்ட நேரம் படிப்பான், பண்டிகை நாட்களில் அவன் காலையிலேயே வீட்டை விட்டுக் கிளம்பிவிடுவான். மீண்டும் திரும்பிவருவது இரவு அகாலத்தில்தான்.

அவன் நகருக்குச் சென்று அங்கு டிராமா பார்த்துவிட்டு வருகிறான் என்று அவளுக்குத் தெரியும். ஆனால் நகரத்திலிருந்து யாருமே அவனைப் பார்க்க வரக் காணோம். நாளாக நாளாக தன் மகன் தன்னிடம் வரவரப் பேச்சைக் குறைத்துக் கொண்டு வருவதாக அவளுக்குப் பட்டது. என்றாலும், அவன் சமயங்களில் அவளுக்குப் புரியாத புதுப்புது வார்த்தைகளைப் பிரயோகித்துப் பேசுவதை அவள் உணர்ந்திருந்தாள். மேலும், அவனிடம் முன்னிருந்த கொச்சையான, கூர்மையான பேச்சு மறைந்து வந்தது என்பதை அவள் அறிவாள். அவனது நடவடிக்கைகளில் தோன்றிய பல புதுமைகள் அவளது கவனத்தைக் கவர்ந்தன. அவன் அலங்காரமாக உடை உடுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டான்; தன் உடை, உடல் இவற்றின் சுத்தத்தில் அவன் அதிகம் கவனம் செலுத்தினான். அவனது அசைவுகள் மிகவும் லாவகமாகவும், நாசூக்காகவும் இருந்தன. பழகும் முறையும் எளிமையும் மென்மையும் நிறைந்ததாக இருந்தது. அவை அனைத்தும் தாயின் உள்ளத்தைக் கவலைக்குள்ளாக்கின. அவளோடு அவன் பழகும் முறை கூடப் புதிய வகையாக இருந்தது. சமயங்களில் அவனே வீட்டைப் பெருக்குவான். ஞாயிற்றுக்கிழமைகளில் அவனே தன் படுக்கையைச் சீர்படுத்திக் கொள்வான். பொதுவாக அவளது வேலைகளுக்கு அவனும் உதவ முன் வந்தான். அந்தக் குடியிருப்பிலுள்ள எவருமே அது மாதிரி என்றும் செய்வதில்லை.

அவனது நடவடிக்கைகளில் தோன்றிய பல புதுமைகள் அவளது கவனத்தைக் கவர்ந்தன. அவன் அலங்காரமாக உடை உடுத்திக் கொள்வதை நிறுத்திவிட்டான்; தன் உடை, உடல் இவற்றின் சுத்தத்தில் அவன் அதிகம் கவனம் செலுத்தினான்.

ஒரு நாள் அவன் ஒரு படத்தைக் கொண்டுவந்து சுவரில் மாட்டிவைத்தான். அதில் மூன்று மனிதர்கள் உரையாடியபடியே பாதை வழியே ஹாயாக நடப்பது சித்திரிக்கப்பட்டிருந்தது.

“இது தான் உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து: எம்மாஸை நோக்கிச் செல்கிறார்” என்றான் பாவெல்.

அந்தப் படம் தாய்க்கு ஆனந்தம் தந்தது. எனினும் அவள் தனக்குள் நினைத்துக்கொண்டாள்.

“கிறிஸ்துவிடம் உனக்கு இவ்வளவு பக்தியிருந்தால், நீ ஏன் தேவாலயத்துக்கே போகமாட்டேன் என்கிறாய்?”

பாவெலுக்கு நண்பனான ஒரு தச்சன் கொடுத்திருந்த அலமாரியில் புத்தகங்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருந்தது. அந்த அறை மங்களகரமாகக் காட்சியளித்தது.

அவன் தன் தாயை வழக்கமாக பன்மையில் தான் அழைப்பான், ஆனால் சமயங்களில் மிகுந்த அன்போடு அவளை ஒருமையில் அழைப்பதுமுண்டு.

‘என்னைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்பட்டுக் கொண்டிராதே அம்மா. இன்று ராத்திரி நான் நேரம் கழித்துத்தான் வீட்டுக்கு வருவேன்’

அவன் பேச்சு அவளுக்குப் பிடித்திருந்தது. அவனது வார்த்தைகளில் ஏதோ ஒரு பலமும் அழுத்தமும் இருப்பதாக அவளுக்குப் பட்டது.

படிக்க:
பகத்சிங்கின் நண்பர் யஷ்பால் எழுதிய நாவல் – காம்ரேட்
பகத்சிங்கை நினைவு கொள்ளச் சம்மதமா?

ஆனால் அவளது பயவுணர்ச்சிகள் அதிகரித்தன. அதன் காரணம் அவளுக்குப் புலப்படவில்லை. அவளது இதயம் அசாதாரணமான ஏதோ ஒரு முன்னுணர்ச்சியால் குறுகுறுத்தது. சமயங்களில் அவளுக்குத் தன் மகனது நடவடிக்கையைக் கண்டு அதிருப்தி கூட ஏற்படுவதுண்டு.

அப்போது அவள் நினைத்துக்கொள்வாள்.

”மற்றவர்கள் எல்லாம் சாதாரணமாகத்தானே நடந்து கொள்கிறார்கள். இவன் மட்டும் சந்நியாசி மாதிரி இருக்கிறானே. அதிலும் இவ்வளவு கண்டிப்பாகவா? இவன் வயதுக்கு இது கூடாது.”

மறுபடியும் அவள் சிந்திப்பாள். “ஒரு வேளை ஏதாவது பெண் பிடித்திருக்கிறானோ?”

ஆனால், பெண்களுடன் திரிவதற்கெல்லாம் பணம் நிறைய வேண்டும்; அவனோ தன் சம்பளத்தில் அநேகமாக முழுவதையும் தாயிடம் கொடுத்துவிடுகிறான்.

இப்படியாக வாரங்களும் மாதங்களும் ஓடிக்கழிந்து வருடங்களும் இரண்டு முடிந்தன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சந்தேகமும் தெளிவற்ற சிந்தனைகளால் உள்ளுக்குள்ளாக மருகி மருகி வாழும் மோன வாழ்வும் கொண்ட இரண்டு வருடங்கள்..

அடிக்குறிப்பு:
(1) பாஷா – பாவெல் என்ற பெயரைச் செல்லமாக அழைப்பது. (மொ-ர்.)

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

முந்தைய பகுதிகள்:
(பகுதி – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பகுதி – 2) தாய் நாவல் : அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம் | அம்பேத்கர்

நன்றி : கார்ட்டூன் மூவ்மெண்ட்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 3)

III

பொருளாதார இயல் பற்றிய காந்தியப் பகுப்பாய்வில் புதிதாக எதாவது உண்டா? காந்தியத்தின் பொருளாதார இயல் பழுதற்றதா? சாதாரண மனிதனுக்கு, வறுமை மிஞ்சித் தாழ்வுற்றவனுக்கு காந்திய வழிதரும் நம்பிக்கை என்ன? இன்னும் சிறந்த வாழ்க்கை, மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை, பண்பாடு, சுதந்திர வாழ்க்கை, வறுமையிலிருந்தான சுதந்திரம் மட்டுமல்ல, தம் ஆற்றல்களைக் கொண்டு அடையக்கூடிய முழு உயர்வைச் சென்று அடைவதற்கான அதை நோக்கி வளர்வதற்கான சுதந்திரமும் கூட காந்தீயத்தால் அவருக்கு உறுதிசெய்யப்படுகிறதா?

பொருளாதாரத் தீமைகள் தொடர்பான காந்திய ஆய்வானது இயந்திர சாதனங்களையும் அவற்றின் அடிப்படையிலான நாகரிகத்தையும் இந்தத் தீமைகளுக்குக் காரணமாகக் குறிப்பிடுகிறது என்ற அளவில், அதில் புதுமையானது எதுவுமில்லை. இயந்திர சாதனங்களும் நவீன நாகரீகமும் ஒப்பளவில் ஒரு சிலரது கையில் மேலாண்மையும் கட்டுப்பாடும் குவியப் பயன்படுகின்றன, வங்கி மற்றும் கடன் – செலாவணியின் துணை கொண்டு எல்லா மூலப் பொருட்களையும் தொழிற்சாலைகளையும் ஆலைகளையும் மிகச் சிலரது கைக்கு எளிதில் மாற்றிவிடுகின்றன. இந்த ஆலைகளில் கோடிக்கணக்கானவர்கள் அவர்களது குடிசையிலிருந்து ஆயிரக்கணக்கான மைல் தொலைவில் இருக்கும் பெருந்தொழில்களுக்கு முட்டுக் கொடுப்பதற்காக இரத்தம் சொட்ட கசக்கிப் பிழியப்படுகிறார்கள்.

இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் போரினால் ஏற்படும் காயங்களைக் காட்டிலும் அதிகமான அளவில் மரணங்களையும் உறுப்புச் சிதைவுகளையும் ஊனங்களையும் தோற்றுவிக்கின்றன. புகையும் கூச்சலும் அழுக்கும் மாசடைந்த காற்றும் சூரிய ஒளி போதாமையும் வெளிப்புற வாழ்க்கையும் சேரிகளும் விபச்சாரமும் இயற்கைக்கு மாறான வாழ்வும் கொண்டிருக்கிற இந்த நகரங்கள்தான் நேரடியாகவும் சுற்றடியாகவும் நோய்க்கும் உடல்நலச் சீர்கேட்டுக்கும் காரணம் – இந்த வாதங்கள் எல்லாம் தேய்ந்து போன பழையவாதங்கள். இவற்றில் புதிதாக எதுவுமில்லை. ரூசோ, ரஸ்கின், டால்ஸ்டாய் மற்றும் அவர்களது மரபில் வந்தவர்களின் கருத்துக்களைத்தான் காந்தியம் திருப்பிச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

காந்தியமாகச் சேர்ந்தமையும் கருத்துகள் கற்றுக்குட்டித் தனமானவை என்பதற்கு மேல் ஒன்றுமில்லை. இயற்கைக்கு, மிருக வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதாகும் காந்தியம். ஒரே ஒரு சிறப்பு அந்தக் கருத்துகளின் எளிமைதான். இந்த எளிய கருத்துகளால் எளியவர்கள் ஏராளமாய் இருப்பதால், இந்தக் கருத்துக்கள் மடிவதில்லை; எப்போதுமே அவற்றை எடுத்துச் சொல்வதற்கு யாராவது ஒரு பாமரன் இருப்பான். ஆனால் மனிதர்களின் நடைமுறை உள்ளுணர்வுகள் – இவை தவறாகிப் போவது அரிதே – அவற்றைப் பயனற்றவை எனக் கண்டுள்ளன; முன்னேற்றத்தைத் தேடிச் செல்லுகிற சமுதாயம் அவற்றை நிராகரிப்பதே நன்றெனக் கருதியுள்ளது.

காந்தியத்தின் பொருளாதார இயல் கடைத்தேற வழியில்லை என்னுமளவுக்குப் பித்தலாட்டத்தனமானதாகும். இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் பல தீமைகளைத் தோற்றுவிக்கின்றன என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தக் தீமைகள் அவற்றுக்கு எதிரான வாதம் அல்ல. ஏனென்றால் இந்தத் தீமைகளுக்கு இயந்திர சாதனங்களும் நவீன நாகரிகமும் காரணமல்ல. தனிச் சொத்தையும் சொந்த ஆதாயம் தேடுவதையும் முழுமுதலாய்ப் புனிதம் கொண்டவை ஆக்கியுள்ள அநீதியான சமூக அமைப்பே காரணம். இயந்திர சாதனமும் நாகரிகமும் ஒவ்வொருவருக்கும் நன்மை பயக்கவில்லை என்றால் இயந்திர சாதனத்தையும் நாகரிகத்தையும் ஒதுக்கித் தள்ளி விடுவது அல்ல பரிகாரம்; இந்த நன்மைகள் ஒரு சிலரால் அபகரித்துக் கொள்ளப்படாமல் அனைவருக்கும் போய்ச் சேரும் விதத்தில் சமூக அமைப்பை மாற்றியமைப்பதே பரிகாரம்.

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு

காந்தியத்தில் சாதாரண மனிதனின் வருங்காலத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. அது மனிதனை ஒரு பிராணியாகக் கருதுகிறது. அதற்கு, மேல் ஒன்றுமில்லை. ஊட்டம், மறு இன விருத்தி போன்றவற்றில் பிராணிகளின் அமைப்பையும் பணிகளையும் மனிதன் பகிர்ந்து கொள்வது மெய்தான். ஆனால் இவை மனிதனின் பணிகள் மட்டுமே என்று வேறுபடுத்திச் சொல்லக் கூடிய மானுடப் பணி என்பது பகுத்தறிவாகும்; பிரபஞ்சத்தின் வனப்புகளைக் கண்ணுறுவதும் அவற்றோடு உறவாடுவதும் அவை குறித்து ஆழ்ந்து சிந்திப்பதும் அவற்றைப் பயில்வதும் கண்டுபிடிப்பதும் மனிதனுக்குச் சாத்தியமாகச் செய்வதே பகுத்தறிவின் நோக்கமாகும்; இவ்விதம் மனிதனின் வாழ்க்கையை வளப்படுத்துவதும், அவனது வாழ்க்கையிலிருக்கும் பிராணிக் கூறுகளைக் கட்டுப்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.

இயந்திர சாதனத்தையும் நவீன நாகரிகத்தையும் கண்டிப்பவன் அவற்றின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, மனித சமுதாயம் அடைய முயற்சி செய்ய வேண்டிய இறுதி நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவுதான்.

இந்த முறையில்தான் உயிர் வாழ்வனவற்றின் அமைவுத் திட்டத்தில் மனிதன் மிகவுயர்ந்த இடத்தை வகிக்கிறான். இது உண்மை என்றால் இதிலிருந்து பெறப்படும் முடிவு என்ன? ஒரு மிருக வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் அவனுடைய பெளதிக வேட்கைகள் நிறைவு செய்யப்படும் போது அடையப்பட்டு விடுகிறது என்னும் அதே போது, மனித வாழ்க்கையின் இறுதிக் குறிக்கோள் அவன் தன் மனத்தை முழுமையாகப் பக்குவப்படுத்தாவிட்டால் அப்படிப் பக்குவப் படுத்தும் வரை அடைந்திட முடிவதில்லை. சுருங்கச் சொல்லின், மனிதனிடமிருந்து மிருகத்தை வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடாகும். பண்பாடு என்பது மனிதனுக்கு இன்றியமையாதது, மிருகத்துக்கு இயலாதது. இந்நிலையில் மனித சமுதாயத்தின் நோக்கம் ஒவ்வொருவரும் பண்பட்ட வாழ்க்கை வாழ்வதற்கு உதவி புரிவதாய் இருக்க வேண்டும்; இதன் பொருள் வெறும் உடல் தேவைகளை மட்டும் நிறைவு செய்வதற்கு மாறாக மனத்தைப் பண்படுத்துதல் ஆகும். இது எவ்வாறு நிகழ முடியும்?

காலனி ஆட்சியின் கீழ் கூலித் தொழிலாளர்கள்.

சமுதாயத்திற்கும் சரி, தனி மனிதனுக்கும் சரி, வெற்று வாழ்க்கைக்கும் உருப்படியான வாழ்க்கைக்கும் எப்போதுமே இடைவெளி இருக்கிறது. ஒருவர் உருப்படியாக வாழ வேண்டுமானால் முதலில் அவர் வாழ்ந்தாக வேண்டும். வெற்று வாழ்க்கைக்காக, பிழைப்பு தேடுவதற்காக செலவிடப்படும் நேரமும் ஆற்றலும் தனிச் சிறப்பான விதத்தில் மானுட இயல்புக்குரிய செயற்பாடுகளுக்குக் கிடைக்கக் கூடியதிலிருந்து திருப்பி விடப்படுகிறது; இந்தச் செயற்பாடுகள் சேர்ந்துதான் பண்பாட்டு வாழ்க்கை ஆகின்றன. அப்படியானால் பண்பாட்டு வாழ்க்கையை எவ்வாறு சாத்தியமாக்க முடியும்? போதுமான ஓய்வு இல்லா விட்டால் அது சாத்தியமில்லை. ஏனென்றால் ஒய்வு நேரம் இருக்கும் போதுதான் ஒருவன் பண்பாட்டு வாழ்க்கைக்குத் தன்னை அர்பணித்துக் கொள்ளத் தடையில்லாது போகிறது. மனித சமுதாயம் சந்திக்க வேண்டிய பிரச்சினைகளுக்கெல்லாம் பிரச்சினையாக இருப்பது ஒவ்வொரு தனியாளுக்கும் எவ்வாறு ஒய்வு கிடைக்கச் செய்வது என்பதே.

ஓய்வு என்றால் என்ன? ஓய்வு என்பது வாழ்க்கையின் உள்ளார்ந்த தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு அவசியமான உழைப்பையும் முயற்சியையும் குறைத்துக் கொள்வதை குறிக்கும். எவ்வாறு ஓய்வு கிடைக்க செய்வது? மனித தேவைகளை நிறைவு செய்து கொள்வதற்கு சரக்குகளை உற்பத்தி செய்யத் தேவைப்படும் உழைப்பு குறையும்படி செய்வதற்கான சில சாதனங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் ஓய்வே சாத்தியமில்லை. இத்தகைய உழைப்பை எதனால் குறைக்க முடியும்? இயந்திரம் மனிதனின் இடத்தை எடுத்துக் கொள்ளும் போதுதான் குறைக்க முடியும்.

ஓய்வைத் தோற்றுவிப்பதற்கு வேறு வழியே இல்லை. இயந்திர சாதனமும் நவீன நாகரிகமும் மனிதன் மிருக வாழ்க்கையிலிருந்து விடுபடுவதற்கும் அவனுக்கு ஓய்வு கிடைக்கச் செய்வதற்கும், பண்பாட்டு வாழ்க்கையைச் சாத்தியமாக்குவதற்கும் இன்றியமையாதவை ஆகும். இயந்திர சாதனத்தையும் நவீன நாகரிகத்தையும் கண்டிப்பவன் அவற்றின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, மனித சமுதாயம் அடைய முயற்சி செய்ய வேண்டிய இறுதி நோக்கத்தைப் புரிந்து கொள்ளவில்லை, அவ்வளவுதான்.

காந்தியத்தில் சாதாரண மனிதன் அற்பக் கூலிக்காக ஓயாமல் பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், மிருக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேண்டும்.

காந்தியமானது ஜனநாயகத்தைத் தன் இலட்சியமாக ஏற்றுக் கொள்ளாத ஒரு சமுதாயத்துக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஜனநாயத்தில் நம்பிக்கை வைக்காத ஒரு சமுதாயத்தில் இயந்திர சாதனம் குறித்தும் இதன் அடிப்படையிலான நாகரிகம் குறித்தும் அலட்சியமாய் இருக்கலாம். ஆனால் ஒரு ஜனநாயக சமுதாயத்தில் அப்படியிருக்க முடியாது. ஒரு சிலர் ஓய்வும் பண்பாடுமான வாழ்க்கையை அனுபவிக்கும் போதே மிகப் பலர் மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்து வாழும் நிலை குறித்து ஜனநாயத்தில் நம்பிக்கை வைக்காத ஒரு சமுதாயம் மனநிறைவு கொண்டுவிடலாம். ஆனால் ஒரு சமுதாயம் ஜனநாயக சமுதாயம் அதன் குடிமக்களில் ஒவ்வொருவருக்கும் ஓய்வும் பண்பாடுமான வாழ்க்கைக்கு உறுதியளித்தாக வேண்டும். மேற்கண்ட பகுப்பாய்வு சரியானால், ஒரு ஜனநாயக சமுதாயத்தின் முழக்கம் இயந்திர சாதனம், மேலும் இயந்திர சாதனம், நாகரிகம், மேலும் நாகரிகம் என்பதாகத்தான் இருக்க வேண்டும். காந்தியத்தில் சாதாரண மனிதன் அற்பக் கூலிக்காக ஓயாமல் பாடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும், மிருக வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்க வேண்டும். சுருங்கச் சொல்லின் காந்தியமானது இயற்கையிடம் மீண்டும் திரும்பிச் செல்வோம் என்ற முழக்கத்தை கொண்டிருப்பதால், பரந்துபட்ட பெருந்திரளான மக்களைப் பொறுத்தவரை மீண்டும் ஆடையற்ற நிலைக்கு, மீண்டும் வறுமைக்கு, மீண்டும் இல்லாமைக்கு மீண்டும் அறியாமைக்குத் திரும்பிச் செல்வதைக் குறிப்பதாகும்.

படிக்க:
கீழடி : மண்ணிட்டு மூடப் பார்க்கிறது பார்ப்பன பாஜக அரசு
சென்னை மாநகராட்சி : சுடுகாடு முதல் சுகாதாரம் வரை தனியார்மயம் !

வாழ்க்கையைத் தனித்தனிப் பகுதிகளாகப் பிரிப்பதும் சமூதாயத்தை தனித் தனி வகுப்புகளாகப் பிரிப்பதும் அறவே அழிந்து போகாமல் இருக்கலாம். சமூக, பொருளாதார மாற்றங்கள் பலவும் நடைபெற்றிருந்த போதிலும், சட்ட வழிப்பட்ட பண்ணையடிமை முறை, சட்ட வழிப்பட்ட அடிமை முறை ஆகியவை ஒழிக்கப்பட்டு விட்ட போதிலும், ஜனநாயகம் என்ற கருத்து பரவி நூல்கள், செய்தி ஏடுகள், பிரயாணம், பள்ளிகளிலும் தொழிற்சாலைகளிலுமான உறவாடல் ஆகியவற்றின் மூலமாக ஜனநாயகம் என்னும் கருத்து பரவி விஞ்ஞானம் மூலமாக விரிவடைந்து பொதுக் கல்வி பரவலாகி இருந்த போதிலும், ஒரு கற்றறிந்த வர்க்கமாகவும் அறியாத வர்க்கமாகவும், ஓய்வு அனுபவிக்கும் வர்க்கமாகவும், உழைக்கும் வர்க்கமாகவும் சமுதாயத்தில் போதுமான பிளவு இருந்து கொண்டே இருக்கும்.

ஆனால் காந்தியம் கருத்தளவிலான வர்க்க வேற்றுமைகளோடு மட்டும் மனநிறைவு கொள்ளவில்லை. காந்தியம் வர்க்கக் கட்டமைப்பை வலியுறுத்துகிறது. அது சமுதாயத்தின் வர்க்கக் கட்டமைப்பையும், மேலும் வருமானக் கட்டமைப்பையும் புனிதமானவையாக மதிக்கிறது; இவற்றின் விளைவாகப் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலும் உயர்ந்தவர்களுக்கும் தாழ்ந்தவர்களுக்கும் இடையிலும், உடைமையாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலும் ஏற்படும் வேறுபாடுகளை சமுதாய அமைப்பின் நிரந்தரப் பகுதிகளாக அது கருதுகிறது. சமூக விளைவுகளின் கண்ணோட்டத்தில் இதைக் காட்டிலும் நச்சுத்தனமானது வேறு எதுவும் இருக்க முடியாது. மனோதத்துவ அளவில், வர்க்கக் கட்டமைப்பானது இரு வர்க்கங்களுக்குமே ஊறு பயக்கக் கூடிய தாக்கங்களை இயங்கச் செய்கிறது. உரிமை பெற்ற வர்க்கமும் அடிமைப்பட்ட வர்க்கமும் சந்திக்கக்கூடிய பொதுவான தளம் எதுவுமில்லை. ஊடு பரவல் எதுவுமில்லை. வாழ்க்கையின் நம்பிக்கைகளையும் அனுபவங்களையும் கொடுத்துப் பெறும் பரிமாற்றம் எதுவுமில்லை.

அடிமைப்பட்ட வர்க்கத்துக்கு இந்தப் பிரிவினையால் ஏற்படும் சமூக, அறிவியல் தீமைகள் உண்மையானவை, கண்கூடானவை என்பதில் சந்தேகமில்லை. அது அவர்களை அடிமைகளாகப் பயிற்றுவிக்கிறது, அடிமை மனநிலையிலிருந்து வரக் கூடிய மனப்பான்மை அனைத்தையும் தோற்றுவிக்கிறது. ஆனால் உரிமை பெற்ற வர்க்கத்தை பாதிக்கும் தீமைகள் முக்கியத்துவத்தில் குறைந்தவையாகவும், அவ்வளவு வெளிப்படையான விதத்தில் தெரியாதவையாகவும் இருந்த போதிலும் அதே போல் உண்மையானவை. வர்க்கக் கட்டமைப்பைத் தொடர்ந்து எற்படும் ஒதுக்களும் ஒதுங்களும் உரிமை பெற்ற வர்க்கங்களிடையே ஒரு கும்பலுக்குரிய சமூக விரோத உணர்வைத் தோற்றுவிக்கிறது. அது “தனக்கென்றமைந்த” நலன்கள் இருப்பதாகத் கருதுகிறது; ஒவ்வொருவருக்கெதிராகவும் அரசின் நலன்களுக்குக்கெதிராகவும் கூட தன் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே அதற்கு தலையாய நோக்கமாகிறது. அது அவர்களது பண்பாட்டை மலடாக்குகிறது, அவர்களது கலையை டாம்பீகமாக்குகிறது, அவர்களது செல்வத்தை வெளிச்சம் போட்டுக் காட்டச் செய்கிறது. அவர்களின் பழக்க வழக்கம் எளிதில் நிறைவு காண முடியாததாகிறது.

காந்தியமானது தர்மகர்த்தா முறை என்ற கருத்தை சர்வரோக நிவாரணியாக முன்மொழிகிறது… வேறு யாராவது இப்படியொரு கருத்தை முன்மொழிந்திருந்தால், அவரை அற்ப முட்டாள் என்று எள்ளி நகையாடியிருப்பார்கள்; வாழ்க்கையின் கடினமான மெய்நடப்புகளை அறியாதவர் என்றும் அடிமைப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுகிற அற்பர் என்றும் கூறியிருப்பார்கள்.

நடைமுறையளவில் சொல்வதானால் ஒரு வர்க்கக் கட்டமைப்பில் ஒரு பக்கத்தில் கொடுங்கோன்மையும் தற்பெருமையும் அகந்தையும் கர்வமும் பேராசையும் சுயநலமும் காணப்படுகின்றன. மறு பக்கத்தில் அச்சமும் வறுமையும் இழிவும் காணப்படுகின்றன. சுதந்திரமும் தற்சார்பும் சுயேச்சைத் தன்மையும் கண்ணியமும் தன்மானமும் பறிபோன நிலை காணப்படுகிறது. ஒரு ஜனநாயக சமுதாயம் இத்தகைய விளைவுகள் குறித்து அலட்சியமாய் இருக்க முடியாது. ஆனால் காந்தியம் இந்த விளைவுகளைப் பற்றிச் சிறிதும் கவலைப்படவில்லை. காந்தியம் வர்க்க வேற்றுமைகளோடு மட்டும் மனநிறைவு கொள்ளவில்லை என்று கூறினால் போதாது. காந்தியம் ஒரு வர்க்கக் கட்டமைப்பில் நம்பிக்கை வைத்துள்ளது என்று கூறினால் போதாது. காந்தியம் அதற்கு மேலும் பலவற்றைக் குறிக்கிறது. காந்தியம் விரும்புவது வாடி வதங்கிய, களைத்துச் சோர்ந்த. நலிந்து மெலிந்த வர்க்கக் கட்டமைப்பை அல்ல – வெறும் உணர்ச்சி நிலையாக, வெறும் எலும்புக் கூடாக இருக்கும் வர்க்கக் கட்டமைப்பை அல்ல. வர்க்கக் கட்டமைப்பு ஓர் உயிர்ப்பான பற்றுறுதியாகச் செயல்பட வேண்டுமென அது விரும்புகிறது. இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை, ஏனென்றால் காந்தியத்தின் பார்வையில் வர்க்கக் கட்டமைப்பு என்பது வெறும் தற்செயல் அல்ல. அது காந்தியத்தின் அதிகார பூர்வக் கோட்பாடாகும்.

காந்தியமானது தர்மகர்த்தா முறை என்ற கருத்தை சர்வரோக நிவாரணியாக முன்மொழிகிறது; இந்த முறையின்படி பணம் படைத்த வர்க்கங்கள் தங்கள் உடைமைகளை ஏழை எளியவர்களுக்கான அறப்பொறுப்பில் வைத்துக் கொண்டிருக்குமாம். இந்தக் கருத்துதான் காந்தியத்தின் மிகவும் கேலிக்குரிய பகுதியாகும். இது பற்றி ஒருவரால் சொல்ல முடிந்ததெல்லாம், வேறு யாராவது இப்படியொரு கருத்தை முன்மொழிந்திருந்தால், அவரை அற்ப முட்டாள் என்று எள்ளி நகையாடியிருப்பார்கள்; வாழ்க்கையின் கடினமான மெய்நடப்புகளை அறியாதவர் என்றும் அடிமைப்பட்ட வர்க்கங்களை ஏமாற்றுகிற அற்பர் என்றும் கூறியிருப்பார்கள். சொத்து படைத்த வர்க்கங்களுக்கு-தணியாத மோக வெறியாலும் அடங்காத அகத்தையாலும் இந்த உலகத்தைக் கோடானுக்கோடி உழைக்கும் மக்களுக்குக் கண்ணீர் கடலாக மாற்றியிருக்கிற, எப்போதும் இப்படியே செய்யப் போகிற இவ்வர்க்கங்களுக்கு – சற்றே அறநெறிக் கவசம் அணிவிப்பது அவற்றைத் திருத்தி ஒழுங்குபடுத்தும், வர்க்கக் கட்டமைப்பு அடிமை வர்க்கங்கள் மீது அவற்றுக்குத் தருகிற பேரதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தும் ஆசையை அடக்கிக் கொள்ளுமாறு செய்யும் என்று சொல்லி அடிமைப்பட்டவர்களை ஏமாற்றிக் கொண்டிருப்பவர் என்று ஏளனம் செய்திருப்பார்கள்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2: தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.