Wednesday, July 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 405

காந்தியம் சாதியத்தின் மீதான சவுக்கடி | மஞ்சள் நாடகம்

“ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்” அரங்கக் கூட்டத்தில் அரங்கேற்றப்பட்ட “மஞ்சள்” நாடகம்.

பள்ளிகளில் வெறும் வாயளவில் சொல்லப்படும் தீண்டாமைக் கெதிரான முழக்கங்கள் நடைமுறையில் குப்பைத் தொட்டியில் தூக்கியெறியப்படுவதை அம்பலப்படுத்துகிறது இந்நாடகம்.

படிக்க:
தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்
காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்

காந்தியத்தின் உண்மை முகம் எவ்வாறு சனாதன தர்மத்தை ஆதரிக்கிறது என்பதை அம்பேத்கரின் எழுத்துக்களிலிருந்து அம்பலப்படுத்துகின்றனர் இந்நாடகக்குழுவினர்.

சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிக்க முடியாது என்பதை  உரக்கச் சொல்கிறது இந்த 10 நிமிட நாடகம்.

காணத் தவறாதீர்கள் !

பாரதமாதா பத்திரமா இருந்துக்கமா | கலை நிகழ்ச்சி

“வன்முறையற்ற இந்தியாவை உருவாக்க, ஜனநாயகம் மற்றும் அமைதிக்கான பெண்களின் பரப்புரை பயணம்”  அரங்கக் கூட்டம் கடந்த 26-09-2018 அன்று சென்னையில் நடைபெற்றது.

படிக்க:
தாய்மை அடையாளத்தை போருக்கான ஆயுதமாக மாற்றுவோம் ! பெண்கள் உரைகள் – படங்கள்
ஆலையில் சிறுநீர் கழிப்பதற்கே அனுமதியில்லை ? பெண் விடுதலை எப்போது ?

இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலைநிகழ்ச்சிகள் நடத்தினர்.

“பாரதமாதா – நீயுமம்மா.. பத்திரமா இருந்துக்கமா !” – எனும் பாடல் பெண்கள் விடுதலை முன்னணி தோழர்களால் பாடப்பட்டது. தப்பாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட வீர விளையாட்டுகள் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டன.

போராட்டக்களத்தில் யமஹா தொழிலாளர்களை சந்தித்த பெ.வி.மு. தோழர்கள்

மஹா, ராயல் என்ஃபீல்ட், எம்.எஸ்.ஐ. ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், தங்கள் மீதான நிர்வாகத்தின் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலைக் கண்டித்தும், தொழிற்சங்கம் வைத்த காரணத்துக்காக தொழிலாளிகள் இருவர் நிரந்தர வேலை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு தொடர்ச்சியாக தீரமுடன் 18 நாட்களுக்கு மேல் போராடி வருகிறார்கள்.

8.10.2018 அன்று பெண்கள் விடுதலை முன்னணி சார்பில் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவையும் வாழ்த்தையும் தெரிவிக்க சென்றோம்.

அன்றைய போராட்டத்தை முறைப்படுத்தி தலைமை தாங்கிய யமஹா தொழிலாளர் சங்கத்தின் நிர்வாகி வேல்முருகன் அவர்களிடம் அறிமுகப்படுத்தி கொண்டிருந்தோம், அப்போது மதிய உணவு நேரம். தொழிலாளர்கள், தோழர்களை பார்த்து உற்சாகத்துடன் “சாப்பிட வாங்க” என்றார்கள். “பரவாயில்லை தோழரே” என்ற போது “நீங்கள் எங்களை பார்க்க வந்திருங்கீங்க சாப்பிடாமல் இருக்க கூடாது” என்று கட்டளை போட்டார்கள்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
பதினான்காவது நாளாக யமஹா தொழிலாளர் போராட்டம் !

தோழர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவை ஒரு தொழிலாளரிடம் கொடுத்துவிட்டு உணவு வாங்க வரிசையில் நிற்க சென்ற போது “வேண்டாம் தோழரே நாங்கள் வாங்கி தருகிறோம்” என்று கூறி, அவர்கள் வாங்கி வந்த உணவு தட்டை எங்களிடம் கொடுத்துவிட்டு மீண்டும் நீண்ட வரிசையில் சென்று நின்றார்கள்.

உணவு இடைவேளை முடிந்தவுடன் தொழிலாளர்களை உணர்வூட்டும் விதமாக ம.க.இ.க.வின் புரட்சிகர பாடல்களான “உலகத்தை விடிய வைத்தது நீதானடா”, “மூஞ்சப்பாரு மூஞ்சப்பாரு முதலாளி வர்க்கம்”, “மானத்தை இழந்து வாழ்க்கை வேணுமா” ஆகிய பாடல்களை பாடினோம்.

தொடர்ந்து போராட்டத்தை ஆதரித்து பெ.வி.மு. இணை செயலாளர் தோழர் திலகவதி, “தொழிலாளி வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக முன்னுதாரணமிக்க போராட்டத்தை யமஹா தொழிலாளர்கள் முன்னெடுத்திருப்பது ஒரகடம் SEZ பகுதியில் மாற்றத்திற்கான அறிகுறி.

இந்த போராட்டம், ஆலை கடந்து சங்கம் கடந்து தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைய வேண்டும். அத்தகைய போராட்டமே தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைக்கு முடிவுகட்டும்” என்று போராட்டத்தை வாழ்த்தி பேசினார்.

போராட்டக்களத்தில் 8 பெண் தொழிலாளர்களும் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பிறகு இயற்கை உபாதைக்காக போலாமா? என்றார்கள். சரி என்று தோழர்களும் அவர்களுடன் சென்றோம். யமஹா தொழிற்சாலைக்கு உதிரி பாகங்களை சப்ளை செய்யும் பல ஆலைகளை தாண்டி சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கும் மேல், குடியிருப்புப் பகுதியில் இருக்கும் ஒரு தொழிலாளரின் வீட்டிற்கு கூட்டி சென்றார்கள். தினமும் இவ்வளவு தூரம் வருவது சிரமமாக இல்லையா? என்றதற்கு “தொழிற்சாலையில் படும் சிரமத்திற்கு இது எவ்வளவோ தேவலை” என்று கூறிவிட்டு சிரித்தார்கள்.

போராடும் தொழிலாளிகள் பல்வேறு இன்னல்களை தாங்கிக் கொண்டு உறுதி குலையாமல் போராடி வருகிறார்கள். அவர்களைச் சென்று சந்தித்து ஆதரவு தெரிவிப்பது நமது கடைமை!

தகவல்: பெண்கள் விடுதலை முன்னணி,
சென்னை, தொடர்புக்கு – 94990 38982

பெண்கள் மீதான பாலியல் வன்முறை | தியாகு | ஓவியா உரை

பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை கிளை சார்பில், “பெண்கள் – குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள்: போராடாமல் விடிவில்லை!” என்ற தலைப்பில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஓர் அங்கமாக பாலியல் குற்றங்களை யார் செய்வது? யார் தூண்டுவது? எப்படி குறைப்பது? என்கிற பல்வேறு கேள்விகளோடு, சமூக ஆர்வலர்களிடம் கருத்துக் கேட்டு அதனைப் பதிவு செய்து வருகிறது, பெ.வி.மு. இப்பதிவில், தோழர் தியாகு மற்றும் ஓவியா ஆகியோரது கருத்துரைகள் இடம்பெறுகிறது.

பெண்ணை சக  உயிராக மதிக்கும் தன்மை, மனித சமூகத்தில் எழும்போதுதான்
பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும். – தோழர் தியாகு

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் நிறுவனர் தோழர் தியாகு உரையாற்றினார்.

அதில், “இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் முதல் குற்றவாளியாக இருப்பது அரசுதான். இந்தியாவில் வட கிழக்கு மாநிலங்கள், காஷ்மீர் உள்ளிட்ட இராணுவம் குவிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை ஆயுதமாகப் பயன்படுத்துகிறது இராணுவமும் போலீசும்.

படிக்க:
பாலியல் வன்கொடுமை : போராடாமல் விடிவில்லை ! பெ.வி.மு
போர்ன் படங்களை ஆண்கள் ஏன் விரும்புகிறார்கள் ? மு.வி.நந்தினி

முதலாளித்துவ சமூகத்தின் சிந்தனை முறையிலேயே பெண்ணை ஒரு பொருளாகப் பார்க்கும் வழக்கம் ஊறியிருப்பதால்தான் பொதுவுடைமைச் சமூகத்தில் பெண்களும் பொதுவாக்கப்படுவார்கள் என்ற அவதூறைப் பரப்பினர் முதலாளித்துவவாதிகள். அதற்கு தக்க முறையில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் பதிலளித்தார் மார்க்ஸ்.

இங்கு ஒட்டுமொத்த சமூகத்தின் சிந்தனையிலேயே மாற்றம் தேவைப்படுகிறது. பெண்ணை சக  உயிராக மதிக்கும் தன்மை மனித சமூகத்தில் எழும்போதுதான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் ஒழியும்.” என்று கூறினார்.

தோழர் தியாகுவின் முழுமையான உரையைக் காணத் தவறாதீர்கள்.

ஆணாதிக்க சிந்தனையே பாலியல் வன்முறைகளின் அடிப்படை – தோழர் ஓவியா

பெண்களின் மீது தொடுக்கப்படும் பாலியல் வன்முறைகள் குறித்து “புதிய குரல்” அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் ஓவியா பேசுகையில் “சாதிய சமூகமாக இருக்கும் இந்தியாவில், தாழ்த்தப்பட்ட பெண்களின் உடல் என்பது உயர்சாதி ஆண்களின் உடைமைகளாக கருதப்படும் நிலை பல்லாண்டுகளாக நீடித்து வந்திருக்கிறது. இன்று இது குறைந்திருக்கலாம். ஆனால், இதன் அடிப்படை காரணத்தை நாம் பார்க்க வேண்டும்.

படிக்க:
மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்

சமூகத்தில் பொதுவாகத் திகழும் ஆணாதிக்க சிந்தனை பெண்களை ஒடுக்குவதற்கு அவர்கள் உடலை சிதைப்பது, முகத்தில் திராவகம் வீசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு ஆண்களைத் தூண்டுகிறது. போலீசின் கையில் சிக்கிய பெண்ணின் நிலையும் மோசமானதாகவே இருக்கிறது. பெண்ணின் பாதுகாப்பு ஒரு ஆணின் ஆளுகையில் இருப்பதாகவே நிலைமை இருக்கிறது. பெண் என்பவள் ஆளுமையுள்ளவளாக இங்கு கருதப்படுவதில்லை. இந்நிலை மாறும் போதுதான் பெண் விடுதலை சாத்தியமாகும்” என்று கூறினார்.

அவரது முழு உரையை காணொளியில் காணத் தவறாதீர்கள்

தியேட்டரில் குண்டுவைத்தது எப்படி ? சனாதன் சன்ஸ்தா பயங்கரவாதிகள் ஒப்புதல் வாக்குமூலம் !

பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். ஆட்சியில் குண்டுவெடிப்புகளையும் படுகொலைகளையும் செய்துவிட்டு சுதந்திரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவ தீவிரவாத அமைப்பு. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை வழக்கில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். முற்போக்காளர்கள் கோவிந்த் பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகளுக்கும் இந்த அமைப்பே காரணம் என விசாரணை தெரிவிக்கிறது. மகாராஷ்டிரத்தில் 2008-ஆம் ஆண்டு அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த வழக்கில் சனாதன் சஸ்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கைதானவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பு குறித்து இந்தியா டுடே டி.வி. சிறப்பு புலனாய்வு ஒன்றை நடத்தியிருக்கிறது. அதில், சனாதன் சன்ஸ்தா தீவிரவாதிகள் எப்படி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினார்கள் என்பதை விவரிக்கிறார்கள். இந்தியா டுடே வெளியிட்ட வீடியோ ஆதாரத்தின் வெளியான முக்கியமான தகவல்கள் இங்கே…

***

னாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த ஹரிபாவ் கிருஷ்ண திவேகர் மற்றும் மங்கேஷ் தின்கர் நிவாம் 2008-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் தானே, பன்வெல், வாஷி ஆகிய இடங்களில் உள்ள தியேட்டர்களில் குண்டு வைத்ததை ஒப்புக்கொள்கிறார்கள்.  இந்துத்துவம் தொடர்பான ஆட்சேபணைக்குரிய கருத்துக்களை சில சினிமாக்களும் நாடகங்களும் சொல்வதாக சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்தவர்கள், 2008-ல் குண்டு வெடிப்புகளை நடத்தியதாக  மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் சொல்லப்பட்டிருந்தது.

சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த ஹரிபாவ் கிருஷ்ண திவேகர் (இடது) மற்றும் மங்கேஷ் தின்கர் நிவாம்.

ஏழு வருட விசாரணைக்குப் பின் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட மங்கேஷ் தின்கர் நிவாம், 2008-ஆம் ஆண்டு தானே, பன்வெல், வாஷி ஆகிய இடங்களில் குண்டு வைத்ததாக ஒப்புக்கொண்டார். சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த பிரச்சாரகராக கருதப்படும் மங்கேஷ், வாஷி தியேட்டரில் நடத்தப்பட்ட நாடகம் ஒன்றில் இந்துக் கடவுள்கள் தவறாக சித்தரிக்கப்பட்ட காரணத்தால் அந்த தியேட்டரில் குண்டு வைத்ததாக சொல்கிறார்.

“நான் வாஷியின் அந்த இடத்தில் குண்டு வைத்துவிட்டு வந்துவிட்டேன். இதுதான் எனக்கு தரப்பட்ட வேலை” என்கிறார் இந்தியா டுடே புலனாய்வில்.

“இந்து கடவுள்களுக்கு எதிராக அவர்கள் நாடகம் போடுவதை போராட்டத்தின் மூலம் தடுக்கப் பார்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. எனவே பயமுறுத்துவதற்காக நாங்கள் குண்டு வைத்தோம்” என்கிற மங்கேஷ், தான் சனாதன் சன்ஸ்தா அமைப்பில் இருப்பதை ஒப்புக் கொள்கிறார். 2000-ஆண்டிலிருந்து இந்த அமைப்பில் இருப்பதாக குறிப்பிடுகிறார்.

படிக்க:
இந்து பயங்கரவாதத்தின் நிரூபணங்கள்: மாலேகான், அஜ்மீர், மெக்கா மசூதி, சம்ஜவ்தா குண்டு வெடிப்புகள்!
குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!

மகாராஷ்டிர மாநிலம் பன்வெல்லில் உள்ள சனாதன் சன்ஸ்தா ஆசிரமத்தில்தான் குண்டு வைப்பதற்கான திட்டம் போடப்பட்டதாகவும் அவர் சொல்கிறார்.

சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த மற்றொருவரான ஹரிபாவ் கிருஷ்ண திவேகர், மூன்று வருட விசாரணைக்குப் பின், இந்த குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து போதிய ஆதாரங்கள் இல்லை எனக்கூறி விடுவிக்கப்பட்டவர். இந்தியா டுடே புலனாய்வு குழுவிடம் வெடிப்பொருட்களை தான்தான் உருவாக்கியது என ஒப்புக் கொண்டிருக்கிறார். மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவினரிடம் தன்னிடமிருந்த வெடிபொருட்களை தந்ததாகவும் இவர் சொல்கிறார்.

“அப்போது என்னிடம் இரண்டு துப்பாக்கிகளும் டெட்டனேட்டர்களும் இருந்தன. ஜெலட்டின் குச்சிகள், டிஜிட்டல் மீட்டர்களையும் அவர்களிடம் கொடுத்தேன். 20 ஜெலட்டினும் 23 டெட்டனேட்டர்களும் கொடுத்திருப்பேன். அவர்கள் அனைத்தையும் எடுத்துச் சென்றார்கள்” என்கிறார்.

தீவிரவாத தடுப்புப் பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், ரமேஷ் ஹனுமந்த கட்காரி, மங்கேஷ் தின்கர் நிகாம், விக்ரம் வினய் பவே, சந்தோஷ் சித்தாராம் அங்ரே, ஹரிபாவ் கிருஷ்ண திவேகர், ஹேமந்த் துகாராம் சால்கே ஆகிய ஆறு பேர் மீது ஜனவரி 2008 முதல் ஜூன் 2008 வரை நடந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டவர்கள் என கூறப்பட்டிருந்தது. பாலிவுட் படமான ஜோதா அக்பர் மற்றும் மராத்திய நாடகமான ‘அம்ஹி பாச்புட்’ (பாச்புட் என்பது ஒரு சாதியைக் குறிக்கிறது) நிகழ்த்தப்பட்ட தியேட்டர்களில் குண்டு வைப்பது இவர்களுடைய நோக்கம்.

படிக்க:
ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
காவி பயங்கரவாதம் : ஒரு நினைவூட்டல் ! புதிய கலாச்சாரம் மின்னூல்

2011-ஆம் ஆண்டு கட்காரி மற்றும் பவே இருவரையும் குற்றவாளிகள் என சொன்னது. மற்ற நால்வரும் விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட நால்வரில் இருவர் குண்டுவைத்தது நாங்கள்தான் என ஒப்புக் கொண்டுள்ளனர்.

இந்தியா டுடே புலனாய்வு ஆதாரங்களுடன் வெளியான பின், மராட்டியத்தை ஆளும் பா.ஜ.க. அமைச்சர் இதுகுறித்து மத்திய அரசுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் என்கிறார். சனாதன் சன்ஸ்தா அமைப்பை தடை செய்வீர்களா என்கிற கேள்விக்கும் அதே பதில்.

முன்னாள் மராட்டிய முதல்வர் பிருத்வி சிங் சவுகான், சனாதன் சன்ஸ்தா அமைப்பை உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என சொல்கிறார். “நான்கு படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளன. தானே மாவட்டத்தில் ஒரு குண்டு உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவாவில் சனாதன் சன்ஸ்தா அமைப்பு குண்டு செய்யும்போது பிடிபட்டுள்ளது. படுகொலைகள் செய்யும் ரகசிய அமைப்பாக உள்ள ஒரு அமைப்பு எப்படி இத்தனை பகிரங்கமாக இயங்க முடிகிறது? யார் இந்த அமைப்பை காப்பாற்றுகிறார்கள்? இத்தனை விஷயங்களையும் பின்னணியில் இருந்து இயக்கும் நபரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?” என கேள்வி எழுப்புகிறார்.

படிக்க:
கல்புர்கி கொலை தொடங்கி அக்லக் கொலை வரை…இந்து ராஷ்டிரம்?

சனாதன் சன்ஸ்தா குறித்து எழுதியதற்காக மிரட்டலுக்கு ஆளான நிகில் வாக்லே, “இந்தியா டுடே முக்கியமான ஆதாரத்தை கொண்டு வந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சனாதன் சன்ஸ்தாவின் தீவிரவாத நடவடிக்கைகளை நான் அறிவேன். இது ஆன்மிக அமைப்பல்ல, இது ஒரு பயங்கரவாத அமைப்பு” என்கிறார்.

வழக்கம்போல, இந்தியா டுடே வெளியிட்ட வீடியோ ஆதாரங்களை ஜோடிக்கப்பட்டவை எனக் கூறுகிறது சனாதன் சன்ஸ்தா. குற்றவாளி எப்போதும் குற்றத்தை ஒப்புக்கொள்வதில்லை.

காங்கிரஸ் கட்சியும் செயல்பாட்டாளர்களும் குண்டுவெடிப்பு வழக்கு மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார்கள். இந்துத்துவ சர்காரின் பூரண ஆசி கிடைத்திருக்கிறது என்பதாலேயே இத்தனை ஆதாரங்கள் வெளியான பின்னும் சனாதன் சன்ஸ்தா அமைப்பு தீவிரவாத ஆன்மீக சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது. அவர்களிடமே ‘தடை செய்யுங்கள்; கைது செய்யுங்கள்; விசாரியுங்கள்’ என கேட்பது, வெறும் புலம்பலாகத்தான் இருக்க முடியும்!

செய்தி ஆதாரம்:
Exclusive: Video tapes reveal how Sanatan Sanstha workers planted bombs

புறாக்களுக்கு ஒரு சேட்டு இருக்கிறார் – கோவிந்தசாமிக்கு ஒரு பெட்டிக்கடை இருக்கிறது !

சென்னை மெரினா கடற்கரையின் காலை நேரம், மழைச்சாரலின் குளிர்ந்த காற்று. எதிரே நூற்றுக்கணக்கான புறாக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. ஒரு சிறு பையை தரையில் விரித்து, பத்மாசனத்தில் இரு கைகளையும் விரைப்பாக நீட்டி வயிறு குலுங்க மூச்சுப் பயிற்சி செய்து கொண்டிருக்கிறார், 70 வயது மதிக்கத்தக்க உக்கம்ராஜ் ஜெயின்.

உக்கம்ராஜ் ஜெயின்

அருகில் வரலாமா என்ற சைகை மொழி காட்டி மெல்ல அடிவைத்துச் செல்கிறோம். ஆனாலும், பறவைகள் படபடத்தன. “மெதுவா வா சார்” என்று கண்டிக்கிறார்.

“இவன் வெறும் க்ரெய்ன்ஸ் (தானியங்கள்) மட்டுமே சாப்டும், ரொம்ப நல்லவன். அதுவும் ஒரு ஜீவன்தானே. அதான் ராகி, கோதுமை, கம்புன்னு டெய்லி 4 கிலோ கொண்டு வருவேன். இப்ப நீ பாக்குறது கம்மி சார். பத்தாயிரத்துக்கும் மேல வருவான். காலையில அஞ்சரை மணிக்கல்லாம் வந்து பாரு.

விரும்புறவங்க யார்னாலும் வாங்கி போடலாம். பக்கத்துல இருக்குற பெட்டிக்கடையில நெறைய மூட்டை கொடுத்து வச்சிருக்கேன். அவங்காளல முடிஞ்ச டொனேசன் கொடுத்து தானியம் வாங்கிக்குவாங்க. அதுக்கு ரெசிப்ட்கூட கொடுத்துடுவோம். இது எனக்கு ஆத்ம திருப்தியை கொடுக்குது.

சௌகார்பேட்டையில தாமஸ் குக் (சர்வதேச சுற்றுலா நிறுவனம்), பிரான்சசைஸ் ( கிளை உரிமம்) எடுத்து டூர்ஸ் & டிராவல்ஸ் வச்சிருக்கோம். இப்ப என்னால கம்பெனிய பாக்க முடியாது, சன்னுதான் பாக்குறார். ஆண்டவன் அருளால என்னால் முடிஞ்சத இந்த வாயில்லா ஜீவராசிகளுக்கு செஞ்சிகிட்டிருக்கேன்.

பாவம் அவனுக்கு யாரு சாப்பாடு போடும்?” என்றார் அந்த பறவை அபிமானி.

*****

புறாக்களுக்காக கருணை உள்ளத்தோடு கடமையாற்றும் உக்கம்ராஜ் ஜெயின் இருந்த இடத்திற்கு சற்று அருகே ஒரு மனிதர். அந்த முதியவரின் முகத்தில் ஓராயிரம் கதைகள் முகச் சுருக்கமாக வரி வரியாக காட்சியளிக்கின்றன.

கோவிந்தசாமி

“பத்து வருஷத்துக்கு முன்னாடியே போயிருக்க வேண்டிய உசுரு இது. நிம்மதியா போயி சேர மாட்டோமான்னு காத்துகிட்டிருக்கேன்” என்கிறார் மெரினா கடற்கரையில் பெட்டிக்கடை நடத்தும் 80 வயது முதியவர் கோவிந்தசாமி.

இருபது தண்ணீர் பாட்டில்கள், இருபது கூல்டிரிங்க்ஸ் பாட்டில்கள், ஒன்றிரண்டு சாக்லெட் டப்பாக்கள், கொஞ்சம் பீடி, சிகரெட்டுகள்… – இதுதான் கோவிந்தசாமியின் கடையை நிரப்பியிருக்கும் மொத்தப் பொருட்கள். காலை 7 மணிக்கு திறக்கும் கடையை மாலை 5 மணிக்கு மூடுகிறார்.

“பத்து வருஷமா இந்த கடையை நடத்திகிட்டிருக்கேன். இந்த பெட்டி அடிச்சது மட்டும்தான் என்னோட காசு, இருக்குற சரக்கெல்லாம் கம்பெனியிலிருந்து போடுவாங்க, வித்தபெறகு காசு வாங்கிப் போவாங்க. ஒரு நாளைக்கு 200, 300 ரூபா கெடைக்கும். அதுலதான் என்னோட வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு.

புள்ள கார்ப்பரேஷன்ல வேலை செஞ்சிகிட்டிருக்கான். தனிக்குடித்தனம் போயிட்டான். கடைப்பக்கம் எட்டியே பாக்க மாட்டான். பேரன்தான் எப்போதாவது சாயந்திரத்துல கடையைப் பாத்துக்க வருவான். எனக்கு ஓய்வும் வாழ்வும் இந்தக் கடைதான்.

கடை வக்கிறதுக்கு முன்னே, மீனு புடிக்கிறதுதான் என்னோட தொழில்.

பத்து வருஷத்துக்கு முன்னாடி எப்போதும் போல கடலுக்குப் போனோம். நெறைய சங்கு கெடச்சது. திரும்பும்போது திடீர்னு பலமான காத்து. வெயிட்டு தாங்காம போட்டு கவுந்து போச்சு. கடல்ல தத்தளிச்ச எங்கள இன்னொரு போட்டுலேருந்து வந்து காப்பத்தி கரை சேர்த்தாங்க.

ஒரே கூட்டம். போலீசுகூட வந்துருச்சு. ஒரு போலீஸ்காரம்மா என்ன கோஸா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போகச் சொல்லி ஏற்பாடு பன்னுனாங்க. அதெல்லாம் ஒன்னும் வேணாம்மா. எனக்கு குளிரு தாங்க முடியல, கோச்சுக்காம ஒரே ஒரு பீடி வாங்கிக் கொடுத்தீங்கன்னா போதும்னு நடுங்கிக்கொண்டே சொன்னேன். அந்தம்மாவும் என்ன அப்பா மாதிரி நெனச்சு ஓடிப்போயி பீடி வாங்கிக் கொடுத்தாங்க. அப்பகூட ஆஸ்பத்திரி பக்கம் போனதில்ல.

அப்போ நெலம வேற (70 வயதுக்கு முன்). இப்ப வயசாகுது, ஒரு வேல செய்ய முடியல. எப்பதான் இந்த உசுரு நிம்மதியா போயி சேருமோன்னு காத்துகிட்டிருக்கேன்.

மீனவர் கோவிந்தசாமிக்கு வாழ்க்கையே போராட்டம்தான். கடலில் துவங்கிய வாழ்க்கை கரை ஒதுங்கினாலும் அங்கே அவரைக் காப்பவரோ, காப்பதோ எதுவுமில்லை. முதுமையின் துயரத்திற்காக இங்கே வருந்துவதற்கு யாருமில்லை! முதுமையோடு வறுமையும் சேர்ந்தால் அது ஒரு பெட்டிக்கடையைப் போல யாருடைய கவனத்தையும் பெறப் போவதில்லை!

பரவாயில்லை இந்நாட்டில் சில புறாக்களுக்காவது தீனி கிடைக்கிறதே!

உ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் ? பொ.வேல்சாமி

1

நண்பர்களே….

பொ.வேல்சாமி
31.08.18 தமிழ் இந்துவில் ”களப்பிரன்” எழுதிய கட்டுரையில் 1892 இல் உ.வே.சாவின் முன் முயற்சியால் சிலப்பதிகாரம் அச்சு வடிவம் ஏறியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தத் தகவல் குறைபாடு உடையது.

சிலப்பதிகாரத்தின் புகார்காண்டம் 1872, 1876, 1880 களில் அச்சில் வெளிவந்து விட்டது. உ.வே.சா 1892 இல்தான் சிலப்பதிகாரத்தை முழுமையாக வெளியிட்டார். அந்த நூலில் அரும்பத உரை பின்னிணைப்பாகத்தான் சேர்க்கப்பட்டுள்ளது. அந்தக் காலகட்டத்தில் (1872, 1876, 1880) சிலப்பதிகாரத்தின் புகார்காண்டம் முழுமையும் ஆங்கில அரசாங்கத்தால் சென்னைப் பல்கலைக் கழகத்தின் B.A. மாணவர்களுக்கு பாடமாக வைக்கபட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 1880 நூலில் புகார்காண்டம் மட்டும் அடியார்க்கு நல்லார் உரையுடனும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமான பக்கங்களை இணைத்துள்ளேன்.

உ.வோ.சாதான் தமிழ்நூல்களை “எல்லாம்” அச்சுக்கு கொண்டு வந்தார் என்ற பிம்பத்தை பலரும் பறைசாற்றி வந்ததின் விளைவுதான் ”களப்பிரன்” போன்ற படித்தவர்களும் இத்தகைய பிழையில் விழ நேர்ந்தது . உ.வே.சா., மற்றவர்களை விட பலபடி மேலே போய் மிகச் சிறப்பாகத் தன் நூல்களை ஆராய்ச்சியாளர்களுக்கு பெரிதும் பயன்படும்படி பதிப்பித்தார் என்பதை எவராலும் மறுக்கமுடியாது. அதே நேரத்தில் மற்ற பதிப்பாசிரியர்களின் பங்களிப்புகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

படிக்க:
கும்பகோணம் யாருக்குச் சொந்தம் ? சிறப்புக் கட்டுரை
கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே – மாவோ !

ஏற்கனவே வெளிவந்த ஒரு நூலை மீண்டும் கண்டுபிடிப்பதும் அதையே ஒரு ஆய்வாக பலரும் கருதுவதும் தமிழ்க் கல்வி உலகின் அவலநிலையாக உள்ளது. இத்தகைய நிலை நீடித்தற்கான காரணங்களும் சில உண்டு. ஆனால் இன்றைய கணினி யுகத்தில் எந்த அரிய நூலையும் சிறிது முயன்றால் யார் வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளமுடியும். அதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட வேண்டும்.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

குடந்தை : உயிர்பலி கேட்கும் சாலை – மக்கள் போராட்டம்

குடந்தை, கொரநாட்டு கருப்பூர் ஊராட்சியை சேர்ந்த நத்தம் என்னும் கிராமத்தில், முதன்மைச் சாலையிலிருந்து, ஊரின் உள்ளே வரை 1,500 மீட்டர் நீளத்திற்கு சாலை உள்ளது. (இவ்வூரில் தான் குடந்தை பள்ளி தீ விபத்தில் இறந்த குழந்தைகள் அதிகம்).

இப்பகுதியில் உள்ள சுவாமிநாதன் என்ற தனிநபர் அந்த ரோட்டில் மூன்று இடங்களில், தன் விவசாய நிலத்திலிருந்த நீர் வடிய, பள்ளத்தை வெட்டியுள்ளார். அதை ஒழுங்காக மூடாமல், சேற்றை கொண்டு மூடியுள்ளார். சில தினங்களுக்கு முன் அக்கிராமத்திலிருந்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அந்த ரோட்டின் வழியாக கொண்டு சென்ற போது, பள்ளத்தில் வாகனம் மாட்டிக் கொண்டது மட்டுமல்லாமல் அந்த பெண்ணுக்கு அங்கேயே குழந்தையும் பிறந்தது.

மேலும், அந்த சாலையால் நிறைய வாகன விபத்து நடக்கின்றது. மக்கள் ஊராட்சி மன்றத்திடம் பல முறை முறையிட்டும், ஊராட்சி மன்ற அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், மக்கள் ஆத்திரத்திலிருந்தனர். இந்த நேரத்தில் தான் அக்-06 அன்று, சமையல் எரிவாயுவை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று, அந்த சாலையில் உள்ள பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்துவிட்டது.

படிக்க:
திமிர், ரவுடித்தனம், அலட்சியம், அதிகாரம்…..!
சாலை வேண்டுமா ? தெருவில் இறங்கி போராடு – பாகலூர் போராட்டம்

இதைப்  பார்த்த கிராம மக்கள் அன்று இரவு 8 மணிக்கு குடந்தை – சென்னை  சாலையில் மறியல் செய்தனர். தகவல் அறிந்ததும், மக்கள் அதிகார குடந்தை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் ஜெயபாண்டியன், போராட்ட இடத்திற்கு சென்று, மக்களுக்கு ஆதரவாக முன்னின்று, அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.  இப்பிரச்சனையை உடனடியாக உரிய நேரத்திற்குள் தீர்த்து வைக்கவில்லை என்றால், அடுத்த கட்டமாக போராட்டம் தொடரும் என மக்கள் எச்சரித்துள்ளனர்.


குடந்தை, பேச: 9789261624.

தொழிற்சங்க உரிமையைப் பறிக்கும் யமஹா – என்ஃபீல்டு – எம்.எஸ்.ஐ : புஜதொமு ஆர்ப்பாட்டம்

செப்டம்பர் 23 – ஆம் தேதியில் இருந்து உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கின்ற யமஹா, ராயல் என்பீல்டு மற்றும் எம்.எஸ்.ஐ. தொழிலாளர்கள் மீதான ஒடுக்குறைக்கு எதிராகவும், சிறப்பு பொருளாதார மண்டலம் என்கிற பெயரில் தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிராகவும் 08.10.2018 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக திருவொற்றியூர் மற்றும் பூந்தமல்லி – குமணன்சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பூந்தமல்லி

குமணன் சாவடியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் தூசான் கம்பனி தொழிலாளர்கள், TI மெட்டல் கம்பனி தொழிலாளர்கள் மற்றும் பு.ஜ.தொ.மு. இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பு.ஜதொ.மு. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் தோழர் முகிலன் தனது உரையில், “யமஹா, ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதற்கான கோரிக்கை மனுவை கொடுத்தற்காக இரண்டு தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யபட்டுள்ளார்கள். திருவொற்றியூர் பகுதியில் இருந்த ராயல் என்பீல்டு கம்பனியில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வேலைக்கு வைத்தார்கள். மூன்று ஆண்டுகளில் நிரந்தரம் செய்வதாக சொன்னார்கள். கிட்டதட்ட அந்த காலம் முடிந்து விட்டது. இன்னும் அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஏமாற்றி வருகிறது.

தென்கொரிய நிறுவனமான எம்.எஸ்.ஐ.-யில் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரிக்கை கேட்டு போராடி வருகிறார்கள். ஆனால் நிர்வாகம் திமிர்த்தனமாக மறுத்து வருகிறது. தொழிலாளர் நலத்துறை பேச்சு வார்த்தைக்கு அழைத்தால் பேச்சு வார்த்தைக்கே வர மறுக்கிறார்கள். தென்கொரியாவின் தூதரகத்தை முற்றுகையிட்டு போராடிய தொழிலாளர்களை கைது செய்து இருக்கிறார்கள்.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !

சிறப்பு பொருளாதார மண்டலம் வந்தால் வேலை வாய்ப்பு பெருகும் என்றார்கள். மாறாக தொழிலாளர்கள் வேலை பறிப்பு நடந்து வருகிறது. சொந்த வேலைக்காக தொழிலாளர்கள் லீவு போட்டால்கூட அப்பாவை கூட்டி வர வேண்டும். அப்படி வந்தால்தான் வேலை மீண்டும் கிடைக்கும் என்ற நிலைதான் உள்ளது. தொழிலாளர்கள்  கொத்தடிமைகளைப் போல நடத்தப்படுகிறார்கள். தொழிலாளர் துறை ”தொழிலாளர்கள் வேலை நீக்கம் தவறு அவர்களை வேலைக்கு சேர்த்துக்கொள்ள” சொன்னால். ”முடியாது. நாங்கள் ஜப்பான் நாட்டு சட்டதிற்கு தான் கட்டுப்படுவோம்” என்று திமிராக சொல்கிறார்கள். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எல்லா ஆலைகளிலும் தொழிலாளர்கள் போராட்டம் நடைபெறுகிறது” என்பதை தனது தலைமையுரையில் பேசினார்.

தொடர்ந்து கண்டன உரையாற்றிய பு.ஜ.தொ.மு. மாநில தலைவர் தோழர் முகுந்தன், “ சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்பட்ட பிறகு ஒரகடம் சிப்காட் பகுதியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திரண்டு நடத்தும் போராட்டம் இது. ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கிண்டி உள்ளிட்ட பகுதியில் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடினார்கள். அதுபோல இப்பொழுது யமஹா, என்பீல்டில் நடந்து வருகிறது. இந்த கம்பனியை எங்களுக்கு எழுதி தர வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் போராடவில்லை. நியாயமான சம்பளம் வேண்டும், உரிமை வேண்டும் என்று கேட்டு போராடுகிறார்கள். ஆனால் இந்த நிறுவனம் “உன்னால் முடிந்ததை பார்” என்று சொல்கிறது.

தொழிலாளர்கள் லீவு போட்டால் “நான் லீவு போட்டது தவறு” என்று கழுத்தில் போர்டு மாட்டிக்கொண்டு தொழிலாளர்கள் அனைவரும் பார்க்குமாறு நிற்க வேண்டும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் உரிமையை மறுப்பது, தொழிலாளியை மிரட்டுவது, அச்சுறுத்துவது, மிரட்டுவது, பணிய வைப்பது. இதுதான் முதலாளித்துவ பயங்கரவாதம். நியாயமான உரிமையை கேட்டால் மிரட்டுகிறான். யமஹா, என்பீல்டு, எம்.எஸ்.ஐ. தொழிலாளர்களின்  இந்த போராட்டதிற்கு சங்கங்களை கடந்து ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த போராட்டத்தில் தோல்வியடைந்தால் எதிலும் வெற்றி பெற முடியாது.

1926 தொழிற்சட்டத்தில் 7 பேர் சேர்ந்தால் சங்கம் வைக்கலாம். ஆனால் சங்கம் வைக்கும் உரிமையை மறுக்கிறான். கேட்டால் எங்க நாட்டு பாலிசி என்கிறான். ஆங்கிலேயன் காலத்தில் தான் இது போல் இருந்தது. இன்றும் இருக்கிறது. இதைத்தான் மறுகாலனியாக்கம் என்று 20 ஆண்டுகளாக சொல்லி வருகிறோம்.

படிக்க:
ரேசன் மானியம் இரத்து – மறுகாலனியாக்கத்தின் கோர முகம்
மறுகாலனியாக்கத்திற்காக மாற்றப்படும் அரசுக் கட்டமைப்பு

இந்த நாட்டின் சட்டம் ஜனநாயகம், பேச்சுரிமை எதுவும் இல்லை. இதுதான் மறுகாலனியாகிக் கொண்டிருக்கிறது. ACl, DCL யாருடைய பேச்சையும் மதிக்காமல் நடந்து கொள்கிறான். மாவட்ட கலெக்டரோ “தொழிலாளி உள்ளே செல்லவில்லையா” என்று கேட்கிறார். ஆனால் முதலாளியைப் பார்த்து கேட்பதில்லை. ஆக இது முதலாளிக்கான சட்டமாக இருக்கிறது. அதனை முறியடிக்க அனைத்து தரப்பு மக்களும் அணிதிரள வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து தொழிலாளர்களின் உரிமையைப் பறிக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கு எதிராகவும், அவற்றுக்கு துணைபோகும்  அரசை அமபலப்படுத்தும் விதமாகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

திருவொற்றியூர்

திருவொற்றியூர், பெரியார்நகர், பெரியார்சிலை அருகில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திற்கு தலைமை வகித்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் தோழர் இரா.சதீஷ் அவர்கள் தனது தலைமை உரையில் கூட்டத்தின் நோக்கத்தை அதாவது தற்போது திருபெரும்புதூரில் யமஹா, என்பீல்டு, MSI ஆகிய ஆலைகளில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்தும், உரிமையை கேட்டால் வேலையைப் பறிக்கும், கார்ப்பரேட் அதிகாரத்திற்கெதிராக தொழிலாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

அதன்பின் உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் SRF மணலி கிளை, இணைச்செயலாளர் தோழர் வெங்கடேசன் அவர்கள், தற்போது நிலவிக் கொண்டிருக்கும் தொழிலாளர்களின் அவலநிலையை விளக்கி பேசினார். தொழிலாளி வர்க்கத்தின் முன்னோர்கள் இரத்தம் சிந்தி, உயிரை கொடுத்து போராடிப் பெற்ற உரிமைகளை கூட தற்போது அனுபவிக்க முடியவில்லை. தொழிலாளிகளுக்கு என்ன என்ன உரிமைகள் இருக்கின்றன என்று கூட தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு முதலாளிகளால் அடக்கப்படுகின்றனர்.

இயல்பாக கிடைக்கக் கூடிய 8 மணி நேர வேலை, விலைவாசி ஏற்றத்திற்கு ஏற்ப ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் ஆகியவற்றிற்குக் கூட பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்பதையும், இன்று ஓரளவு வசதி வாய்ப்புகளோடு இருப்பவர்கள் அதிக பணம் செலுத்தி தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து விட்டால் போதும் வாழ்க்கையில் முன்னேறி விடுவான் என்கிற பகல் கனவில் இருப்பதை சுட்டிக்காட்டி, எமது முன்னோர்கள் அனுபவித்த உரிமைகள் தற்போதைய தலைமுறைக்கே மறுக்கப்படுகிறது, அடுத்த தலைமுறை எப்படி வாழப்போகிறது? எனக் கேள்வி எழுப்பி நமது நாடு ஒட்டு மொத்தமாக அடிமையாகிக் கொண்டிருக்கிறது என்பதை வலியுறுத்தி பேசினார்.

அவரைத் தொடர்ந்து உரையாற்றிய CPM கட்சியை சார்ந்த திருவொற்றியூர் முன்னாள் நகராட்சி தலைவர் தோழர் ஜெயராமன் அவர்கள் தனது உரையில், ”கடந்த தலைமுறையை சேர்ந்த தொழிலாளர்கள் எப்படி சங்கமாக சேர்ந்து உரிமைகளுக்காக போராடினார்கள் என்பதையும், தொழிற்சங்க தலைமை எப்படி வலிமை வாய்ந்ததாக இருந்தது என்பதையும் தன்னுடைய சொந்த அனுபவங்களில் இருந்து விளக்கி பேசினார்.

படிக்க:
தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி | அண்ணல் அம்பேத்கர்
மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!

தொழிற்சங்க தலைமையின் அனுமதி இல்லாமல் எந்த ஒரு செயலையும் முதலாளியால் நடைமுறைபடுத்த முடியாத நிலை இருந்தது. அப்போது தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட்டது. அதன் பிறகு சிறுக சிறுக தொழிலாளர்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தி ஒற்றுமையாக இருந்த தொழிலாளி வர்க்கத்தை பல்வேறு கோஷ்டிகளாக பிரித்து அதில் தனக்கு ஆதரவான பிரிவினரை ஆதரித்து சலுகைகளை அள்ளி வீசியது.  மற்றவர்களை அடக்கி ஒடுக்கி பழிவாங்கியது. இன்று முதலாளிகளின் அடக்குமுறை மேலும், மேலும் அதிகரித்து தொழிற்சங்கமே கூடாது என்கிற நிலை எட்டியுள்ளது என்பதை விளக்கி, அதற்கு எதிராக வலுவான போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும், அதற்கு இடதுசாரி அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.

இறுதியாக கண்டன உரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் அவர்கள் தனது உரையில் ”சினிமா நடிகர்கள் சங்கம் அமைக்கின்றனர்; முதலாளிகளே கூட சங்கம் அமைக்கின்றனர். ஆனால் தொழிலாளர்கள் சங்கம் அமைக்கக்கூடாது. இதுதான் கார்ப்பரேட்டுகளின் அதிகாரம்” என்பதையும், பல்வேறு ஆலைகளில் நடைபெற்ற முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் அம்பலப்படுத்தினார்.

படிக்க:
இணைய வணிகத்தின் பின்னால் வதைபடும் அடிமைத் தொழிலாளர்கள் !
கல்வி உரிமையை பறிப்பது நீட் – தொழிலாளியின் தொழில் உரிமையைப் பறிப்பது நீம் !

குறிப்பாக சிறப்புப் பொருளாதார மன்றங்கள் வந்தால் வேலைவாய்ப்பு பெருகும் என்றும், நாடு வல்லரசாகும் என்றும் நம்பச் சொன்னார்கள். தற்போது நிலைமை அப்படியே மாறியுள்ளது. விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டு, விவசாயத் தொழிலாளர்கள் எல்லாம் கூலித் தொழிலாளர்களாக மாற்றப்பட்டு கார்ப்பரேட் கம்பெனிகளில் கொத்தடிமைகளாக பணிசெய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எந்த ஒரு சட்டப்படியான உரிமையும் வழங்கப்படுவதில்லை. உரிமை என்று வாயை திறந்தாலே வேலைபறிப்பு! இது அரசும், ஆளும் வர்க்கமும் இணைந்து நடத்துகின்ற அடக்குமுறை. இந்த நிலையை மாற்ற வேண்டுமென்றால் வர்க்கமாக ஒன்றிணைவது மட்டும் போதாது. புரட்சிகர தலைமையின் கீழ் இன்றிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

தகவல்:

திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம்.

***

ஓசூர் :

மஹா, என்ஃபீல்டு, எம்.எஸ்.ஐ ஆலைத்தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவை தெரிவிக்கும் வகையில்… அவ்வாலை நிர்வாகத்தையும், அதற்குத் துணைபோகும் தொழிலாளர் நலத்துறையை அம்பலப்படுத்தியும், தொழிலாளர்கள் பிற ஆலைத்தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்துப் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி அறைகூவல் விடுக்கும் நோக்கத்தோடு ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் அக்-10 அன்று ஓசூர் ராம்நகரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி தோழர் ரவிச்சந்திரனின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இவ்மைப்பின் மாவட்டச் செயலாளர் தோழர் பரசுராமன் கண்டன உரையாற்றினார். இறுதியாக, இவ்வமைப்பின் கமாஸ் வெக்ட்ரா ஆலையின் கிளைச் சங்கத் தலைவர் தோழர் செந்தில்  நன்றியுரையாற்றினார். வர்க்க உணர்வோடு திரண்டிருந்த தொழிலாளர்கள் பன்னாட்டுக் கம்பெனிகளின் தொழிலாளர் விரோத போக்கிற்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர்.

இதற்கு முன்னதாக, ஓசூர் நகரின் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டியும், துண்டறிக்கை அச்சிட்டும் ஆலைவாயில்களிலும், மக்கள் திரளாக கூடும் இடங்களான தர்கா, சிப்காட் போன்ற பகுதிகளிலும் பிரச்சாரத்தை நடத்தினர், பு.ஜ.தொ.மு. தோழர்கள்.

இவர்கள் வெளியிட்டிருந்த துண்டறிக்கையில், ” சென்னை : யமஹா என்ஃபீல்டு ஆலைத் தொழிலாளர்கள் போராட்டத்தை கலைக்க அரசு – முதலாளிகள் கூட்டுச்சதி!

தொழிலாளர்களே!

யமஹா , என்ஃபீல்டு  ஆலையில் நேரடி உற்பத்தியில் பல ஆயிரம் பயிற்சி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் திணிக்கப்பட்டு, சட்டவிரோதமாக சுரண்டப்படுவது அரசுக்கு தெரியாதா?

பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட சட்டபூர்வ கோரிக்கைகளுக்காக போராடும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கங்களையும் அழைத்துப் பேச மறுத்து சட்டம் தன் மயிருக்குச் சமம் என்பதை காட்டுகிறார்கள். பன்னாட்டுக்  கம்பெனிகளுக்கு எங்கிருந்து வந்தது இந்த தைரியம்?

இலாபவெறியில் சட்டவிதி முறைகளை மீறி ஆலை நிர்வாகங்கள் பகிரங்கமாக செயல்பட துவங்கிவிட்டது. சட்டமும், சுதந்திரமும் கேள்விக்குறியாகிவிட்டது!

யமஹாவில் போலீசை ஏவி, தொழிலாளர்களை சட்ட விரோதமாக கைது செய்ததன் மூலம், முதலாளித்துவமும் அரசும் தான் வகுத்துப் பேசி வந்த சட்ட உரிமைகள்  என்ற முகமூடியை கிழித்தெறிந்து விட்டார்கள். தாங்கள் கூட்டுக் களவாணிகள்தான் என்பதை காட்டிவிட்டார்கள். இன்னும் என்ன மயக்கம்?

பணி நிரந்தரம் செய்யாமல் காண்ட்ராக்ட் தற்காலிக எஃப்.டி.இ, பயிற்சித் தொழிலாளி, நீம் என்ற பெயர்களில் இளைஞர்கள் சுரண்டப்படுவதைத் தடுப்போம்!

தொழிற்சாலைகள் ஆண்டு முழுவதும் இயங்குமாம்! பல கோடி லாபம் ஈட்டுவார்களாம்! தொழிலாளர்களுக்கு மட்டும் எட்டுமாதம் வேலையாம்! இது என்னநீதி? முதலாளிகளின் லாபவெறிக்காக தொழிலாளர் வர்க்கம் நாடோடியாக அலையவேண்டுமா?

அரசும் போலீசும் கார்ப்பரேட் கம்பெனிகளின் பக்கம் என்றால் ஓட்டுரிமை மக்களாட்சி என்பது கண்துடைப்பு வேலைதான் அல்லவா?

பணிநிரந்தரமில்லை, பெட்ரோல் – டீசல் விலை உயர்வு , ஜி.எஸ்.டி. வரி, விலைவாசி உயர்வு இப்படிப்பட்ட நாட்டில் பாதுகாப்பாக எப்படி வாழமுடியும்?

தட்டினால் திறக்காது! கெஞ்சினால் கேட்காது! மூடிய கதவுகளை உடைக்க ஒரே வழி வர்க்க ஒற்றுமையே! ஆட்டோமொபைல் துறையின் அசைக்க முடியாத சக்தியாக, ஓரமைப்பாக திரள இதுவேதருணம்!

நிரந்தரம் – பயிற்சி காண்ட்ராக்ட் என்ற பிரிவினைகளைக் கடந்து அணிதிரள்வோம்!  பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டலை, அரசு அடக்கு முறையை முறியடிப்போம் வாரீர்! ” என்ற அறைகூவல் விடுத்திருந்தனர்.

தகவல்:

கிருஷ்ணகிரி – தர்மபுரி – சேலம் மாவட்டங்கள்.
செல் –  9788011784.

இசுலாமிய பயங்கரவாதமா ? இசுலாமியவாத பயங்கரவாதமா ?

muslim militants

மெரிக்கவில் நடந்த செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின் ஆஸ்திரேலியாவில் நிகழும் சமூக ஒட்டுறவு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்த விவாதங்களில் இசுலாம் மையப்புள்ளியாக விளங்குகின்றது.

இசுலாமிய குடியேறிகளுக்கு கட்டுப்பாடுகள் குறித்து வெளிப்படையாகவே விவாதிக்கப்படுகின்றது. சமீபத்தில் தனது பாராளுமன்ற கன்னிப் பேச்சில் செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங் இது குறித்துப் பேசியுள்ளார். பலர் இசுலாத்தின் பெயரில் இன்னொரு பயங்கரவாத தாக்குதல் நிகழக்கூடும் என்று நம்புகின்றனர்.

செனேட்டர் ஃப்ரேஸர் அன்னிங்

இந்த எதார்த்த சூழலில் இசுலாம் குறித்து நமக்கு செய்தியளிக்கவும் அந்த செய்திகளுக்கு நமது எதிர்வினைகள் எவ்வாறு இருக்கும் என்பதைத் தீர்மானிப்பதிலும் ஊடகங்கள் முக்கியமான பங்கு வகிக்கின்றன. ஆனால் இசுலாத்தைக் குறித்த போதிய அறிவின்மையிலோ அல்லது இசுலாமியர்களை விரோதித்துக் கொள்வோம் என்கிற அச்சத்தின் விளைவாகவே மிக அடிப்படையான ஒன்றை ஊடகங்கள் தவற விடுகின்றன. அதாவது, பயங்கரவாத அச்சுறுத்தலின் வேர் இசுலாத்தில் இருந்து கிளைக்கவில்லை. மாறாக, அது இசுலாமிய மயமான அரசியலில் தான் உள்ளது.

இவ்விரண்டு பதங்களும் கேட்பதற்கு ஒன்று போலத் தெரிவியலாம்.  ஆனால், இசுலாமும் இசுலாமியமயமாதலும் ஒன்றல்ல. இசுலாம் என்பது சுமார் 1.6 பில்லியன் மக்களால் பின்பற்றப்படும் நம்பிக்கை. மாறாக, இசுலாமியமயம் என்பது சில குறுங்குழுக்களின் அரசியல் சித்தாந்தம். இவர்கள் இசுலாத்திடம் இருந்து ஷரியா, ஜிகாத் போன்ற கருத்துக்களை கடன் வாங்கி அவற்றைத் தங்கள் அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப மறுவிளக்கம் அளிக்கின்றனர்.

பயங்கரவாதிகளின் லட்சியங்களை ஊடகங்கள்  எவ்வாறு உத்திரவாதப்படுத்துகின்றன?

அல்கைதா அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் போன்ற இயக்கங்கள் முசுலீம் அல்லாதவர்களின் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் ஷரியா சட்டத்தின் அடிப்படையிலான ஒரு அரசியல் அமைப்புமுறையை (கலீபேட்) நிறுவ  முனைகின்றனர். இதற்கான அடிப்படை குரானிலோ அல்லது ஹதீஸிலோ கிடையாது.

கவனமாக தெரிவு செய்யப்பட்ட இசுலாமிய பாடங்களை மறுதொகுப்பு செய்து அவற்றையே மதச் சட்டங்களாக நிறுவும் தந்திரமே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் வெற்றிக்கான அடிப்படை.

குறிப்பாக, இசுலாமியவாதிகள் ஜிஹாது என்கிற கருத்தாக்கத்திற்கு மறுவிளக்கம் ஒன்றை அளித்து அதையே முசுலீம் அல்லதவர்களின் மீது தாங்கள் கட்டவிழ்த்து விடும் ”புனிதப் போருக்கான” நியாயமாக முன் வைக்கின்றனர். ஆனால், போர் மற்றும் அமைதி குறித்த குரானின் அடிப்படைக் கோட்பாடுகளும்  இவர்களின் விளக்கங்களும் கடுமையாக முரண்படுவதாக ஏராளமான ஆய்வுகள் முன்வைக்கின்றன.

படிக்க :
♦ பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
♦இஸ்லாத்தின் பெயரில் இன்னுமொரு அமெரிக்க கூலிப்படை!

உதாரணமாக சிவிலியன்களின் மேல் தாக்குதல் நடத்துவதை இசுலாமியக் கல்வி தடை செய்கிறது. மேலும் உலகளவில் இசுலாமியத் தலைவர்களும் மார்க்க அறிஞர்களும் தொடர்ச்சியாக பயங்கரவாத தாக்குதல்களைக் கண்டித்து ஃபத்வா (மதக் கட்டளை) பிறப்பித்துள்ளனர்.

ஜிஹாது குறித்த தவறான விளக்கங்களை விரிவாக பதிவு செய்து செய்தியாக்குவதும், அதைக் குறித்த இசுலாமிய தலைவர்களின் கண்டனங்களைப் போதிய முக்கியத்துவமின்றி வெளியிடுவதன் மூலம் இசுலாத்துக்கும் பயங்கரவாதத்திற்குமான தொடர்பு குறித்த பொதுபுத்திக்கு வலு சேர்க்கின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

சில சந்தர்பங்களில் ஊடக அறிவுஜீவிகள் பயங்கரவாதிகள் தங்களது செயல்களுக்கான அடிப்படையாக இசுலாத்தை முன்வைப்பதைக் குறிப்பிட்டு வெளிப்படையாகவே மதத்தையும் பயங்கரவாதத்தையும் தொடர்பு படுத்துகின்றனர்.

பயங்கரவாதிகளின்  கூற்றையும் அவர்கள் இசுலாத்திற்கு அளிக்கும் விளக்கத்தையும் விமர்சனமற்ற முறையில் ஏற்றுக் கொள்வதன் மூலம் இசுலாமியவாதிகளின் நோக்கங்களுக்கு இவர்கள் சேவை செய்கின்றனர்.

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், தங்களையே இசுலாத்திற்கும் இசுலாமியர்களுக்குமான பிரதிநிதிகளாக காட்டிக் கொள்ளும் பயங்கரவாதிகளின் திட்டங்களுக்கு ஊடகங்கள் துணை போகின்றன.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் ஆள்சேர்ப்பு முறை

இசுலாத்திற்கும் மேற்கத்திய உலகத்திற்கும் இடையே ஒரு மனித நாகரீகப் போர் நடப்பதாக மேற்கொள்ளப்படும் நச்சுப் பரப்புரைகளில் இசுலாமியவாத பயங்கரவாதிகளின் போர்தந்திர ரீதியிலான நலன்கள் இருக்கின்றன.

“மேற்குலகில் வாழும் இசுலாமியர்கள் வெகு விரைவில் தங்களுக்கு இரண்டு தேர்வுகளே இருப்பதை உணர்வார்கள்”  என்கிறது ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிப்ரவரி 2015ல் வெளியிட்ட செய்திக் குறிப்பு ஒன்று.

அதாவது பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க மேற்கத்திய முசுலீம்கள் தாம் சந்தேகத்தோடும் அவநம்பிக்கையோடும் நடத்தப்படுவதை உணர்வார்கள். இதன் மூலம் “சிலுவைப் போர் நாடுகளின் கடுமையான தண்டனைகளில் இருந்து தப்பிக்க ஒன்று அவர்கள் தங்களை மதம் மாற்றிக் கொள்ள வேண்டும் அல்லது ஐ.எஸ்.ஐ.எஸ் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு குடியேறியாக வேண்டும்” என்கிறது அந்த செய்திக் குறிப்பு.

படிக்க :
♦ நைஜீரியா போகோ ஹராம்: அமெரிக்க ஆசியுடன் ‘ஜிகாத்’!
♦ ஆப்கான் – மத்திய ஆசியா – எண்ணெய் – இஸ்லாமிய தீவிரவாதம் !

நடந்து கொண்டிருக்கும் போரில் ஏற்படும் மனித இழப்புகளை மேற்கத்திய இசுலாமியர்களைக் கொண்டு ஈடுகட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் பிரித்துக் கைப்பற்றும் (Divide and conquer) உத்தியைக் கையாள்கின்றது. விளிம்பு நிலையில் இருக்கும் பாதிக்கப்பட்ட மேற்கத்திய இசுலாமியர்களைக் குறிவைத்து தங்கள் பிரதேசத்தில் சகோதரத்துவமும், பாதுகாப்பும் ஆதரவும் கிடைக்கும் எனப் பரப்புரை செய்கின்றது.

மறுபுறம், இசுலாமிய சமூகத்தை பயங்கரவாதத்தோடு வெளிப்படையாகவே தொடர்புபடுத்தி எழுதுவதன் மூலமும், இசுலாமிய நம்பிக்கையையும் இசுலாமியவாத அரசியலையும் வேறுபடுத்திப் புரிந்து கொள்ளாததன் மூலமும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களை மறைமுகமாக முன் தள்ளுகின்றன மேற்கத்திய ஊடகங்கள்.

உதாரணமாக இங்கிலாந்தில் சிரிய அகதிகளின் முதல் குடியேற்ற அலை நிகழ்ந்த 2015 -ல். உடனடியாக இங்கிலாந்தின் டெய்லி மெய்ல் பத்திரிக்கை “பிரிட்டனின் உள்விரோதிகளின் மோசமான அச்சுறுத்தல்” என்கிற கட்டுரையை வெளியிட்டு அகதிகளை ‘இசுலாமிய தீவிரவாதிகளாக’ சித்தரித்தது.

அதே போல் 2014 -ல் சிட்னியில் நடந்த தாக்குதலின் போது துப்பாக்கி முனையில் பணயக்கைதிகளை பிடித்து வைத்திருந்த இசுலாமியரை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தோடு தொடர்புபடுத்தி செய்தி வெளியிட்டது டெய்லி டெலிகிராப் பத்திரிகை. பின்னர் இது உண்மையல்ல என பயங்கரவாதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் வல்லுநர்கள் தெளிவுபடுத்தினர்.

பொறுப்பற்ற ஊடகச் செய்திகளால் உண்டாகும் விளைவு

இம்மாதிரியான எளிமைப்படுத்தப்பட்டு, பரபரப்புக்கான ஊடகச் செயல்பாடுகள் இசுலாமியர்களுக்கு எதிராக முசுலீமல்லாதவர்களை தூண்டி விடுவதன் மூலம் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கங்களுக்கே சேவை செய்கின்றன.

இசுலாமியர்களுக்கும் இசுலாமியவாத பயங்கரவாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் செய்தி வெளியிடுவது இசுலாமிய மக்களுக்கு எதிராக பிற மக்களைத் தூண்டி விடும் என்கிறது வியன்னா பல்கலைக்கழகம் 2017 -ல் நடத்திய ஆய்வு ஒன்று.

இம்மாதிரியான செய்திகள் குறித்து ஓரளவுக்கு விழிப்புணர்வு வளர்ந்து வருவதால் சி.என்.என் போன்ற சில ஊடகங்கள் “மிதவாத இசுலாம்” “தீவிரவாத இசுலாம்” மற்றும் “இசுலாம்”, “இசுலாமிய தீவிரவாதம்” போன்றவைகளை வேறுபடுத்தி எழுதுகின்றன. எனினும், இவர்களும் கூட இசுலாமியவாத அரசியல் கண்ணோட்டம் குறித்த புரிதலின்றி மத நோக்கங்களை முன்தீர்மானமாக கொண்டே எழுதுகின்றனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் செயல்பட்டு வரும் சுமார் 1200 வெளிநாட்டுப் போராளிகளிடம் நடத்திய ஆய்வு ஒன்றின் படி, அவர்களில் 85 சதவீதம் பேர் முறையான மதக் கல்வி பெற்றவர்கள் இல்லை என்பதோடு அவர்கள் இசுலாமிய கோட்பாடுகளைப் பின்பற்றுபவர்களும் இல்லை என்பது தெரியவந்தது. “இவர்கள் தமது இயக்கம் முன்வைக்கும் ஜிஹாது குறித்த விளக்கங்களை கேள்விக்கு உட்படுத்த மாட்டார்கள்” என்பதாலேயே ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் விரும்பிச் சேர்த்துக் கொண்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

இசுலாமியவாதம் என்பது மதத்தை ஒரு முகமூடியாக கொண்டிருக்கிறது. ஆனால், முகமது நபியின் போதனைகளுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவர்கள் பின் காலனிய சூழலின் அரசியல் அதிருப்திகளின் வெளிப்பாடுகளே. ஷரியா சட்டங்களின் அடிப்படையிலான ஒரு கலீபாவை (இசுலாமிய தேசம்) உருவாக்குவதே லட்சியங்களாக இசுலாமிய பயங்கரவாதிகள் சொல்கின்றனர். எனினும், ஒரு முசுலீமாக இருப்பதற்கு இவை அவசியமே இல்லை. இப்படி ஒரு முசுலீம் அல்லாதவர் சொல்வது இசுலாத்தின் மீதான தாக்குதலும் இல்லை.

அரசியல்-சரியா அல்லது நுட்பமான விவாதமா?

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கான நியாயம் கற்பித்தலை மட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக அவ்வியக்கத்தைக் குறிப்பிடும் போது “இஸ்லாமிக் ஸ்டேட்” என்பதற்கு பதில் “டேயிஷ்” என குறிப்பிட வேண்டும் என இங்கிலாந்து மற்றும் பிரான்சில் உள்ள ஊடகங்களுக்கு அந்நாட்டு அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. எனினும், இது எல்லா நேரங்களிலும் பின்பற்றப்படுவதில்லை.

இசுலாமிய சமூகங்களைச் சேர்ந்த இசுலாமியவாத கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டவர்களைக் குறிப்பிட இசுலாமியவாத பயங்கரவாதம் (Islamist Terrorism) என்கிற பதத்தைப் பயன்படுத்துகிறார் மால்கம் டர்ன்புல்.

ஆனால், டொனால்ட் டிரம்ப் போன்ற பல அரசியல்வாதிகள் “கடுங்கோட்பாட்டுவாத இசுலாமிய பயங்கரவாதம்” என குறிப்பிட்டு அந்த எல்லைக் கோட்டை தெளிவற்றதாக்குகின்றனர்.

சிலர் நமது அரசியல் சரி நிலைப்பாடுகளே பிரச்சினைக்கு முகம் கொடுப்பதில் இருந்து நம்மைத் தடுக்கின்றது என்கிறார்கள்.

ஆனால், இசுலாமிய மதமே பிரச்சினைகளுக்கான வேர் எனச் சொல்பவர்கள் பெரும் தவறிழைக்கின்றனர். இசுலாத்தின் அடிப்படை கோட்பாடுகள் என்னவென்பதைக் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். குறிப்பாக ஒரு கலீபேட்டை உருவாக்குவதும், முசுலீம் அல்லாதவர்களின் மேல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுவதும் இசுலாமிய மதக் கட்டளைகளா, அவ்வாறு செய்வதற்கு இசுலாமிய மதம் கோருகின்றதா என்பதை விவாதிக்க வேண்டும்.

மூலக்கட்டுரை : Why the media needs to be more responsible for how it links Islam and Islamist terrorism
தமிழாக்கம்:

நெல்லை மனோன்மணியம் பல்கலை மாணவர்களைத் தாக்கிய போலீசு

0

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழகம் – உறுப்புக் கல்லூரிகளில் போராடும் மாணவர்கள் மீதான தாக்குதலை நிறுத்து!
தமிழில் தேர்வெழுத அனுமதி கொடு!

பு.மா.இ.மு. கண்டன அறிக்கை!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அதன் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் இளம் கலை, அறிவியல் படிப்புகளில் ஆங்கிலப் பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் தமிழிலும் தேர்வெழுதலாம் என்ற முறையை தற்போது மாற்றி ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத நிர்பந்திக்கப்படுகிறார்கள். மேலும் வருகைப்பதிவு குறைவு என காரணம் காட்டி ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.500 அபராதம் விதித்து கொள்ளையடிக்கிறார்கள். இதனை ஏற்க முடியாது என மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

இந்த போராட்டங்களை சீர்குலைப்பதற்காக நேற்றைய தினம் (9.10.2018) நெல்லையில் மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கெதிராகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.

போலீசின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை எமது புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது. இதற்கெதிராகவும், மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் தமிழகம் முழுவதும் அனைத்துக்கல்லூரி மாணவர்களும் வகுப்பை புறக்கணித்து போராட வேண்டும் என அறைகூவல் விடுக்கிறோம்.

தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பெருகி கொள்ளையடிக்கும் வகையில் கல்வி வணிகமயமாகிவிட்ட இன்றைய சூழலில் அரசுப்பள்ளியில் படித்துவிட்டு வரும் கிராமப்புற பின்னணி கொண்ட ஏழை மாணவர்கள் பட்டப்படிப்புகளுக்காக இன்று வரக்கூடிய ஒரே இடம் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள்தான். ஒவ்வொரு ஆண்டும் +2 முடித்துவிட்டு இலட்சக்கணக்கில் மாணவர்கள் அனைவருக்கும் இடம் கொடுக்கும் வகையில் போதிய அரசுக்கல்லூரிகள் இல்லை. வெறும் 90 அரசுக்கல்லூரிகள் மட்டுமே உள்ளன. இந்த மாணவர்கள் யாரும் ஆங்கில பிரிவில் விரும்பி சேர்வதில்லை, வேறு வழியில்லாமல் சேர்கிறார்கள். இது நன்கு தெரிந்துதான் இதுகாலம் வரை அனைத்து பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகள் அனைத்திலும் ஆங்கில பிரிவு மாணவர்கள் தமிழில் தேர்வெழுத அனுமதிக்கப்படுகிறார்கள்.

படிக்க:
ஆங்கில மோகத்திற்கு பலியிடப்படும் அறிவுத்திறன் – ஒரு கள ஆய்வு !
மதுரை காமராசர் பல்கலை : செல்லாத துரை ஆனார் செல்லத்துரை !

ஆனால், மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு திடீர் ஞான உதயம் வந்ததைப்போல் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என்று கட்டளையிடுகிறார். தகுதியான மாணவர்களை உருவாக்கத்தான் இப்படி செய்வதாக நியாயப்படுத்துகிறார். ஆங்கில பிரிவில் பாடம் நடத்தும் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்திலா பாடம் நடத்துகிறார்கள். இல்லையே. தமிழில்தான் நடத்துகிறார்கள். அதற்கு தகுதியான ஆசிரியர்களே இல்லை. அடிப்படை வசதிகளும் இல்லை, போதிய ஆசிரியர்கள் உள்ளிட்ட கட்டுமான வசதிகளும் இன்று அரசு பல்கலைக்கழகங்களில் இல்லை. துணைவேந்தர்கள் கோடிகளை கொடுத்து பதவியை வாங்குகிறார்கள்     (மனோன்மணியம் பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கர் ஜெயலலிதா உயிரோடு இருந்த போது 30 கோடியை கொடுத்து பதவி வாங்கியவர் என்ற புகார் உள்ளது) இதையெல்லாம் செய்து மாணவர்கள் படிக்கும் சூழலை உருவாக்க வக்கில்லாதவர்கள் தான் இப்போது ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வெழுத வேண்டும் என திணிக்கிறார்கள்.

இது ஏழை மாணவர்களை உயர்க்கல்வியில் இருந்து விரட்டும் சதி. இதனை மாணவ சமூகம் அனுமதிக்கக் கூடாது. மாணவர்களை தமிழில் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். அபராதம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை நிறுத்த வேண்டும். கல்லூரிகள் திறந்து 5 மாதங்களாகியும் இதுவரை வழங்கப்படாமல் இருக்கும் இலவச பஸ்பாஸ், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை உடனடியாக வழங்க வேண்டும். அரசு மாணவர் விடுதிகளில் போதிய அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். உரிமைக்காக போராடும் மாணவர்கள் ரவுடிகள், கிரிமினல்கள் அல்ல. அவர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பதற்கு பதில் போலீசை ஏவி மண்டையை பிளப்பதை மாணவ சமூகம் ஒருபோதும் அனுமதிக்காது, தமிழ்ச்சமூகமும் அனுமதிக்கக் கூடாது. கல்லூரிகள் சிறைச்சாலையும் அல்ல, மாணவர்கள் அடிமைகளும் அல்ல. போராடும் மாணவர்களுக்கு RSYF என்றும் துணை நிற்கும். மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக அனைத்து மாணவர் அமைப்புகளும், ஆசிரியர் சங்கங்களும், ஜனநாயக சக்திகளும் குரலெழுப்ப வேண்டுமென கோருகிறோம்.

இவண்,
த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
பு.மா.இ.மு, தமிழ்நாடு. தொடர்புக்கு; 9445112675

தஞ்சை : கரை உடைந்த கல்யாண ஓடையில் கரைந்து போன விவசாயிகளின் கண்ணீர் !

நீர் நிலைகளின் புனிதம் பாதுகாக்கப் படனுமுன்னு சொல்லி தாமிரபரணி புஷ்பகர விழா (புனித நீராடலாம்) தமிழ்நாட்டுல கோலாகலமா கொண்டாடப்படுது. நாலாயிரம் போலீசுக்கு மேல பலத்த பாதுகாப்போட சிறப்பு பயண வசதிகளோட தடபுடலா நடந்துட்டு இருக்கு. நம்ம கவர்னர் கூட காவி வேட்டி கட்டிக்கிட்டு போகப்போறாராம்.

தண்ணிய மையமா வச்சு புஷ்பகரம் புனிதமுன்னு தீவிரமா நடக்குற இந்த கூத்துக்கு மத்தியில அதே தண்ணியால வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு செய்வதறியாது கையறு நிலையில் நிக்கிறாங்க தஞ்சை டெல்டா விவசாயிகள்.

ஒரத்தநாடு பக்கத்துல உள்ள மேல உளூர் என்ற கிராமத்துல கல்லணை கால்வாயின் பிரிவான கல்யாண ஓடை ஆற்றின் இடது புற கரையில் நேற்று (8.10.2018) உடைப்பு ஏற்பட்டது. சுமார் பத்து மீட்டர் அளவுல ஏற்பட்ட உடைப்பினால் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கியுள்ளது.

 

உடைப்பு ஏற்பட்ட மேல உளூர் கிராமத்தைச் சுற்றி உள்ள மற்ற கிராமங்களான பருத்திக்கோட்டை, தும்பத்திக்கோட்டை, கீழஉளூர், பொண்ணாப்பூர், ஒரத்தநாடு மேலும் சில கிராமங்களின் நிலங்கள் பாதிக்கப்பட்டு உள்ளது.

காலதாமதமாக காவிரியில் தண்ணீர் வந்ததாலும் நீர் நிலைகளின் பராமரிப்பு சரியில்லாததாலும் சம்மா பயிர் சாகுபடி பின்தங்கிப் போனது. ஏறக்குறைய நடவுப்பணிகள் இந்த ஒரு மாத இடைவெளியில் தான் நடந்துள்ளது. பயிர் வேர் பிடிக்க தொடங்கும் இந்த நேரத்தில் ஆற்றில் உடைப்பு ஏற்பட்டு பயிர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

படிக்க:
சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
வாழ வழி காட்டுயான்னா பேள வழி காட்டுறாரு மோடி!

ஒரு மாதம் கடந்துவிட்ட பயிர்களுக்கு போடப்பட்ட உரம் மருந்தும் தண்ணீரோடு கலந்துவிட்டது. உடைப்பு சரிசெய்யப்பட்டு வயல்களில் தண்ணீர் வடிந்த பின் மிஞ்சியுள்ள பயிர்களுக்கு மீண்டும் உரம் போட்டு சற்றேனும் பயிரைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலையில் உள்ளனர் சில விவசாயிகள்.

ஆற்றின் கரையில் நின்ற மரம் சாய்ந்து இருந்ததாகவும் தொடர்ந்து ஒரு வாரம் மழை பெய்த காரணத்தால் மரம் விழுந்து விட்டது. மண் அரிப்பு ஏற்பட்டு கறை உடைந்து விட்டது என்கின்றனர் அப்பகுதி மக்கள்.

ஆனால் நீர்நிலைகளின் பராமரிப்பு செலவுகளுக்கு ஒதுக்கும் நிதியில் இருந்து தஞ்சாவூர் கல்லணை கால்வாயின் குடிமராமத்து பணிக்காக ரூ 2.78 கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது.

அரசின் எந்த நிர்வாகச் சீர்கேட்டையும் அறியாத அப்பாவி விவசாயிகள் உயிரைக் கொடுத்து விவசாயம் செய்துள்ளனர். நடவு நட்டு சில தினங்களே ஆன பயிர்கள் மட்டும் பாதிக்கவில்லை. ஆள்துளை கிணற்று தண்ணீரை கொண்டு நடவு பணி செய்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நெல்பயிரும் பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் தரையோடு சாய்ந்துள்ள நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி முளைத்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த உடைப்பு ஏற்பட்டதால் ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டு விட்டது. உடைப்பு ஏற்பட்ட பகுதியையும் தாண்டி மதுக்கூர் வரை பல ஊர்களுக்கு இந்த கல்யாண ஓடை ஆற்றில் இருந்துதான் விவசாயத்துக்கு தண்ணீர் பாய்கிறது. ஆற்றில் தண்ணீர் நிறுத்தப்பட்டால் உயிர் விட்டு துளிர்க்கும் நிலையில் இருக்கும் சம்பா பயிர்கள் பாதிக்கப்படும். பயிர் வேர் விடாத நிலையில் மழை பெய்தால் பயிர் சாய்ந்துவிடும். இந்த நேரத்தில் ஆற்றுத் தண்ணீர் கட்டாயம் தேவைப்படும்.

இதனால் உடைப்பு ஏற்பட்ட பகுதி நிலங்களுக்கு மட்டும் பாதிப்படைவதோடு அல்லாமல் கல்யாண ஓடை ஆற்றின் கடைசி எல்லை வரை பாதிப்பு இருக்கும். இந்த ஆற்றின் தண்ணீரை நம்பி நடவுப்பணி செய்த விவசாயிகளின் நிலை என்ன? ஆற்றில் தண்ணிவந்த உற்சாகத்தில் கடன வாங்கி நடவு வேலைகளை செய்தவர்கள் திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்க பணத்துக்கு எங்கேப் போவது, ஏற்பட்ட இழப்பை எப்படி சரிகட்டுவது என புலம்புகின்றனர்.

படிக்க:
காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் ஏன் ? நேரடி ரிப்போர்ட்
மீத்தேனுக்காக டெல்டாவைக் காயப்போடும் எடப்பாடி – மோடி அரசுகள் !

காவிரி பிரச்சனை அதையும் தாண்டி தண்ணீர் வந்தால் பராமரிப்பு பணிகள் நடப்பதில்லை. உரம் விலை உயர்வு. விவசாய கடன்கள் கிடைப்பதில் முறைகேடு. விளைந்த நெல்லை விற்க முடியவில்லை. வறட்சி நிவாரணம் வெள்ள நிவாரணம் எதை எடுத்தாலும் துன்பத்தில் உழல்கிறான் விவசாயி.

அகண்ட காவிரியை வறண்ட காவிரியாக்கி உலகுக்கே சோறுபோட்ட உழவனுக்கே பசியையும் பஞ்சத்தையும் ஏற்படுத்தி விவசாயத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் மண்டலமாக்குவதே அரசின் நோக்கம்.

சபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு

பரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னர் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. தீர்ப்பை முதலில் வரவேற்பதாக அறிவித்த காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தற்போது தீர்ப்புக்கு எதிராக போராடி வருகிறார்கள். பந்தள அரச குடும்பத்தின் வேண்டுகோளை ஏற்று தீர்ப்பை எதிர்த்து பெண்கள் கலந்துகொண்ட பேரணி கேரளாவில் நடத்தப்பட்டது.

சென்னையில் நடைபெற்ற பேரணி.

தமிழகத்திலும் ஆர்.எஸ்.எஸ். போராட்டத்தைத் தூண்டி வருகிறது. நாங்கள் சபரிமலைக்கு போகமாட்டோம் என பெண்கள் சத்திய பிரமாணம் எடுப்பதாக சில செய்திகள் வெளியாகி உள்ளன. தீர்ப்பு குறித்து பேட்டி கொடுத்துள்ள அரச குடும்பத்தின் வாரிசு ஒருவர் பெண்களை அனுமதித்தால் தீங்கு நிகழும் என்ற தனது அச்சத்தை தெரிவித்துள்ளார். இது போன்று பய பீதி ஊட்டப்பட்டு தான் பெண்கள் போராட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார்கள். கேரள வெள்ளத்திற்கு சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற வழக்கு தான் காரணம் என துக்ளக் குருமூர்த்தி கருத்து தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம். பல ஆண்டுகளாக பிற்போக்கு தனத்தில் ஊறிய பெண்களும் இது போன்ற கருத்துக்களை நம்பி போராட்டத்திற்கு அப்பாவியாக வருகிறார்கள். அச்சத்தின் மூலம் மக்களை அடிமையாக வைத்திருக்க முயற்சிக்கிறார்கள் பந்தள அரச குடும்பமும், சங்க பரிவாரமும்.

ஒரு வேளை மக்களிடம் அப்படியாக கருத்துக்கள் இருந்தால் அதை மாற்றுவது தான் அனைத்து இந்துக்களுக்குமான அமைப்பின் கடமையாக இருக்க முடியும். ஆனால் ஒரு புறம் சக்தி என்று பேசிக்கொண்டே பெண்களை அடிமைகளாக கருதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடம் இதை எதிர்பார்க்க முடியாது.

மக்களிடம் பீதியூட்டும் இவர்கள் அறிவுத்தளத்தில் மத விவகாரத்தில் அரசு தலையிடக்கூடாது என்று வாதிடுகிறார்கள். ஒரு பக்கம், மக்களுக்கு பயபீதீயூட்டி கலவரத்தை தூண்டுகிறார்கள்; போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

வரலாற்றில் இது புதிது அல்ல. மதத்தில் அரசு தலையிடலாமா? என்ற கேள்வி வில்லியம் பெண்டிங் உடன்கட்டை ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த காலத்திலிருந்து பேசப்படுகிறது. குழந்தை திருமண தடுப்பு சட்டம், பொட்டுகட்டுதல் என்ற பெயரில் நடந்த தேவதாசி ஒழிப்பு சட்டம், கோவில் நுழைவுப் போராட்டங்கள் அதற்கு சட்டம், சமீபத்தில் அனைத்து சாதியினர் அர்ச்சகர் சட்டம் என எல்லா சீர்திருத்தங்களிலும் எழுப்பபட்டவைதான் இக்கேள்விகள். இன்று நாம் அனுபவிக்கும் பெரும்பாலான உரிமைகள் அனைத்தும் இக்கும்பல்களை எதிர்த்து நடந்த போராட்டத்தின் விளைவுகள் தான். எதுவும் தாமாக கிடைத்துவிடவில்லை.

தற்போது சபரிமலைக்கு எதிராக பேசுபவர்களின் முன்னோர்கள் குழந்தை திருமணம் மற்றும் கோவில் நுழைவு விசயங்களில் என்ன பேசினார்கள். வரலாற்றில் யார் வென்றார்கள் என்பதை பற்றி சிறு அறிமுகம்.

1 உதாரணமாக Age of Consent Act, 1891 என்று ஒரு சட்டத்தை ஆங்கில அரசு கொண்டு வந்தது. இது எதற்கு தெரியுமா? 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுடன் கணவர்கள் உடலுறவு கொள்வதை தடை செய்யும் சட்டம். சட்டம் திருமணத்தை தடை செய்யவில்லை குறைந்தபட்சமாக உடலுறவைத் தடை செய்கிறது.

12 வயதுக்குட்பட்ட சிறுமியுடன் உடலுறவு கொள்வதை தடுக்க சட்டம் போட வேண்டிய நிலைமை இருந்ததா? நினைத்து பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது அல்லவா. அதைவிட முக்கியமானது இச்சட்டத்தை லோகமானிய பாலகங்காதர திலகர் கடுமையாக எதிர்த்தார். இன்று நீதிபதி இந்து மல்ஹோத்திராவும், பிற இந்துத்துவ அறிவுஜீவிகளும் சொல்லும் அதே வாதத்தை வைத்தார் திலகர். இந்து மத விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது என்றார். இவ்விவகாரம் குறித்து மேலும் படிக்க: குழந்தை திருமணம் – ஆர்.எஸ்.எஸ்ஸோடு மோதும் பெரியார்

பின்னர் 1929-ல் திருமணத்திற்கு வயது வரம்பு நிர்ணயித்த போது 10 வயதுக்குள் பெண்களுக்கு திருமணம் செய்யாவிட்டால் பாவம் நேரும் என சத்தியமூர்த்தி உள்ளிட்ட இந்துமதவாதிகள் பிரச்சாரம் செய்தார்கள்.

இப்போது பெண்கள் நுழைவுக்கு பிரச்சாரம் செய்யப்படுவது போலவே பாவம் வரும், வெள்ளம் வரும், அழிவு நேரும் என மக்களிடத்தில் பீதியூட்டுவதும்; அறிவுஜீவி தளத்தில் இந்துமத விவகாரத்தில் தலையிடக் கூடாது என பேசுவதும் அந்த காலத்திலிருந்தே செய்திருக்கிறார்கள்.

அதைக் கண்டித்து பெரியாரும் சுயமரியாதை இயக்கத்தினரும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அறிவுஜீவிவாதத்திற்கு பதிலடி கொடுத்ததோடு மக்கள் மத்தியில் பீதி உண்டாக்குவதையும் தடுத்துள்ளார். “எவ்வளவு குற்றம் செய்தாலும் தலைமுடியை வெட்டுவது, நான்கு பார்ப்பனர்களுக்கு உணவளிப்பது மூலம் அதைத் தீர்த்துக்கொள்ளலாம் என்கிறீர்கள் அல்லவா? உங்கள் பிள்ளைகளுக்கு பதினாறு வயதிற்கு பிறகு திருமணம் செய்வதற்கு மட்டும் பரிகாரம் இல்லாமலா போகும். கண்டிப்பாக பாலும், பழமும் மட்டும் அருந்தி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்பதாகத்தான் அந்தப் பரிகாரம் இருக்கும். அதனால் சீர்திருத்தத்திற்கு கவலைப்படாதீர்கள்” என்பதாக பெரியார் எழுதியிருப்பதை குடியரசு வாயிலாக அறிய முடிகிறது.

படிக்க:
மணஉறவுக்கு வெளியே நிகழும் பாலுறவு குற்றமல்ல ! – தீர்ப்பின் சமூக விளைவுகள்
பெண் விடுதலை கானல் நீரல்ல !

2 இப்பொழுது எப்படி பெண்கள் சபரிமலையில் நுழைந்தால் தீட்டு என்கிறார்களோ அது போல நாடார்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதாக நம்ப வைக்கப்பட்டிருந்தார்கள். இதற்கு எதிராக சுயமரியாதை இயக்கத்தினரும், பாதிக்கப்பட்ட சமூகங்களில் இருந்த முற்போக்கு சக்திகளும் போராடினர். சபரிமலையில் பெண்கள் நுழையக்கூடாது என தடை சொல்லும் இந்து மத ஆண்களுக்கு தாங்கள் எப்படி கோவிலுக்குள் நுழைந்தோம் என்பதை நினைவுபடுத்த தமிழகத்தில் கோவில் நுழைவு போராட்டத்தின் சுருக்கம்.

சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் 18. 01.1926 இல் கோவில் நுழைவுக்கென்று சுசீந்திரம் கோவிலில் தான் கிளர்ச்சி துவக்கப்பட்டது.

• முதல் கோவில் நுழைவுப் போராட்டத்தைத் தொடங்கியவர் ‘திராவிடன்’ இதழின் ஆசிரியர் ஜே. எஸ். கண்ணப்பர். இவர் 07.02.1927 இல் திருவண்ணாமலை கோவிலில் ஆதிதிராவிடர்களை அழைத்துச் சென்றார். அவரை கோவிலுக்குள் வைத்து பூட்டினர். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக வழக்கு நடைபெற்றது. வழக்கு விசாரணையில் கண்ணப்பருக்குச் சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. (‘குடிஅரசு’ 6. 5. 1928)

• 1927 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜே. என். இராமநாதன் தாழ்த்தப்பட்டோரை அழைத்துக்கொண்டு திருச்சி தாயுமானவர் மலைக்கு படியேறிச் சென்றபோது அவர்கள் குண்டர்களால் தடியால் அடித்து பாறைப் படிகளில் உருட்டிவிடப்பட்டார்கள். (கேசரி)

• அன்றைய சுயமரியாதை இயக்க செயற்பாட்டாளர் கி.ஆ.பெ.விசுவநாதம் தலைமையில்1927 இல் சுமார் 1000 பேர் அனைத்துச் சாதியினருடன் மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோவிலில் நுழையச் சென்றனர். நுழைவாயிலையும் கருவறையையும் கோவில் நிர்வாகிகள் பூட்டிவிட்ட போதிலும் பக்கவாட்டுக் கதவுகள் வழியாகச் சென்று ‘மணிக்கதவம் தாழ் திறவாய்’ என்ற திருநாவுக்கரசர் பாடலை பாடினார்.

• 25.06.1928 இல் திருச்சி மலைக்கோயிலிலும், 12. 08. 1928 இல் திருவானைக்கோவிலிலும் அத்தகைய முயற்சிகள் நடத்தப்பட்டன.

• தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு திருப்பூர் காங்கிரசு மாநாட்டில் கோவில் நுழைவு – பொது உரிமைகள் வேண்டுமெனத் தீர்மானம் கொண்டு வந்தார்.

• 1929 மார்ச் 12-ந் தேதி “ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குள் ஆதிதிராவிடர் தோழர்களையும் அனுமதிக்க வேண்டும்” என்று தேவஸ்தானகமிட்டி ஒரு தீர்மானத்தைக் கொண்டுவர தேவஸ்தான கமிட்டித் தலைவரான தந்தைபெரியார் முன்னின்றார். தேவஸ்தானக் கமிட்டியின் தீர்மானத்தை குத்தூசிகுருசாமி நடைமுறைப்படுத்தத் துணிந்தார்.

கோயில் நுழைவுப் போராட்டத்தில் அம்பேத்கர்.

பெரியாரின் துணைவியார் நாகம்மையாரின் துணையோடு குத்தூசி குருசாமி, பொன்னம்பலனார் மற்றும் ஈரோடு கச்சேரி வீதி ஈஸ்வரன், மஞ்சமேட்டான் மகன் பசுபதி, கிருஷ்ணம் பாளையம் கருப்பன் ஆகிய 3 தாழ்த்தப்பட்ட தோழர்களை நெற்றியில் திருநீறு பூசச் செய்து முக்கிய தெருக்களின் வழியாக அழைத்துக் கொண்டுச்சென்று தேங்காய், பழம், பூ ஆகியவை அடங்கிய தட்டுடன் கோவிலுக்குள் நுழைந்தார்கள். குத்தூசிகுருசாமியும் தோழர்களும் கோவிலுக்குள் இருக்கும்போதே வெளிக்கதவை இழுத்து மூடிவிட்டனர். இரண்டு நாள்கள் பூட்டிய கதவைத் திறக்க மறுத்து விட்டனர். இரண்டு நாள்களுக்குப் பின் பெரியார் வந்த பிறகே கோவில் கதவு திறக்கப்பட்டது. குத்தூசி குருசாமி மற்றும் தோழர்கள் மீது வழக்கு போடப்பட்டது.

இது தொடர்பான வழக்குகள் குறித்த செய்திகளை ‘குடிஅரசு’ (21. 4. 1929) பதிவு செய்துள்ளது. 9 மாதங்கள் நடந்த விசாரணைக்குப் பிறகு ஈசுவரன், பசுபதி,கருப்பன் ஆகியோருக்கு ரூ.60 அபராதம் விதிக்கப்பட்டது. ஈசுவரன் மட்டும் அபராதம் கட்டமறுத்து சிறை ஏகினார். ‘குடிஅரசு’ இதைப்பாராட்டி, ஆலயப் பிரவேச சரித்திரத்தில் தோழர் ஈசுவரன் பெயர் முதல் பெயராக இடம் பெறும் என்று பாராட்டி எழுதியது.

படிக்க:
சிறப்புக் கட்டுரை : இந்து அறநிலையத்துறையை ஒழிக்கும் பார்ப்பனிய சதி !
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வீதியில் இறங்கு ! தோழர் மருதையன் உரை

ஈரோடு கோவில் நுழைவு வழக்கில் ஈரோடு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் சுசீந்திரத்தில் கோவிலைச் சுற்றியிருந்த தெருக்களில் நடந்து சென்றதற்காக திருவாங்கூர் நீதிமன்றத்தால் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த 12 பேர் தண்டிக்கப்பட்டிருந்தனர். அந்த வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வழக்குகளிலும் தண்டனையைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு இடங்களில் கோயில் நுழைவுப் போராட்டங்களைச் சுயமரியாதை இயக்கத் தோழர்கள் மேற்கொண்டனர். ஈரோட்டில் கண்ணப்பரும், காரைக்குடியில் சொ.முருகப்பாவும் தலைச்சேரியில் டபிள்யூ. பி. ஏ. சவுந்தரபாண்டியனும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலை கபாலீசுவரர் கோவில்களில் ‘திராவிடன்’ ஆசிரியர் சுப்ரமணியன், பண்டிதர் திருஞானசம்பந்தன் தலைமையிலும், ஆதி திராவிடர்கள்‘ஆலயப் பிரவேசம்’ செய்து கைதானார்கள்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலும் பண்டிதர் அயோத்திதாசர் மகன் பட்டாபிராமன் தலைமையில் ஆதிதிராவிடர்கள் கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்திவிட்டு வந்தனர்.

சென்னைச் சட்டமன்றத்தில் 01. 11. 1932 இல் டாக்டர் சுப்பராயன் அவர்கள் கோவில் நுழைவு மசோதாவைக் கொண்டு வந்தார். அந்த மசோதாவை ஆதரிக்க வேண்டியது நீதிக் கட்சியினரின் கடமை என்று மசோதா வருவதற்கு முன்பே பெரியார் 30. 10. 1932 ‘குடிஅரசில்’ தலையங்கம் எழுதினார். “

– ( நன்றி தலித் முரசு மற்றும் பெரியார் முழக்கம்)

பின்னர் 1939-ல் வைத்தியநாதய்யர் நாடார்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் அழைத்து சென்ற மதுரை மீனாட்சியம்மன் ஆலய பிரவேசம்.

இந்த போராட்டங்கள் எதுவும் தமிழகமே கொந்தளித்து எழுந்த போராட்டங்கள் அல்ல. சுயமரியாதை இயக்கத்தினர் முன்னின்று நடத்தியவை. கோவிலில் நுழைந்தால் தீட்டு என்பதை இன்று சபரிமலைக்கு போகமாட்டோம் என்று சொல்லும் பெண்களைப் போல அன்றும் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். இன்று கோயில் கருவறைக்குள் எப்படி செல்வதில்லையோ அது போல தங்கள் இழிவை தாங்களே அன்று ஏற்றுக் கொண்டிருந்தார்கள்.

ஒரு வேளை மீறிப்போனால் என்ன நடக்கும். கோவில் நுழைவுப் போராட்டத்தில் சுயமரியாதை இயக்க தோழர்களுக்கு நேர்ந்தது தான் நடக்கும். மேலும் கேரள சி.பி.எம். அரசு இத்தீர்ப்பு குறித்து மேல்முறையீடு இல்லை என்று முடிவு எடுத்து உறுதியாக இருப்பது வரவேற்கதக்கது.

படிக்க:
லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு
இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்

பக்தியின் பெயராலும் மதத்தின் பெயராலும் கடைவிரிக்கப்படும் அனைத்து அடக்குமுறைகளுக்கும் வரலாறு நெடிகிலும் முற்போக்கு சக்திகள் போராடி தான் வெற்றி கண்டிருக்கின்றன. சபரிமலை சமரிலும் பெண்கள் வெற்றி பெறுவார்கள்.

தரமற்ற இடுப்பெலும்பு மாற்று உபகரணங்கள் : மூடி மறைத்த ஜான்சன் & ஜான்சன்

ருத்துவக் கருவிகள் மற்றும் மருந்து தயாரிப்பில் உலகப் புகழ்பெற்ற கார்ப்பரேட் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் மற்றுமொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் முற்றிலும் தரக்குறைவான மற்றும் பயன்படுத்தத் தகுதியில்லாத ஆபத்தான கருவிகளைத் தயாரித்து, சந்தையில் விற்று காசு பார்த்து விட்டது. தங்களின் தயாரிப்புக்கள் தரமற்றவை என்பது நன்கு தெரிந்தும் அதை கமுக்கமாக மூடி மறைத்து சந்தையில் விற்பனை செய்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் இப்போது கையும் களவுமாகச் சிக்கி, சில இந்திய ஊடகங்களில் அம்பலப்பட்டு பின்னர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தால் தயாரிக்கபட்ட உபகரணம் ஏற்படுத்தும் பாதிப்பு

இது குறித்து விசாரிக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தால் கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு நிபுணர் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு கடந்த 12 மாதங்களுக்கும் மேலாக விசாரணையில் ஈடுபட்டு தயாரித்த அறிக்கையில் தரக்குறைவான இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள் குறித்த தகவல்கள் தவிர கூடுதலான வேறு பல தகவல்களும் இணைக்கப்பட்டு, அந்த அறிக்கை 23.08.2018 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும், லைவ் மிண்ட் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில் ’செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள்’ பொருத்தப்பட்ட 4,700 நோயாளிகளில் 3,600 பேரைப் பற்றிய தகவல்களைப் பெற முடியவில்லை என்றும், மேலும் இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட 4 பேர் இதுவரை மரணமடைந்துள்ளதும் பதிவாகியுள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தரக்குறைவான இடுப்பெலும்புக் கருவிகளைப் பொருத்தியதன் காரணமாக, பெரும்பான்மையினருக்கு மீள் அறுவை சிகிச்சை செய்யவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அதிலும் சிலருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட 5 ஆண்டிற்குள்ளாகவே மீள் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இதுவரை 254 பேருக்கு இடுப்பெலும்பு மீள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

படிக்க:
இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?
பன்னாட்டு மருந்து கம்பெனிகள்: நாஜிகளின் வாரிசுகள்!

கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவில் இதே இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகளால் பாதிப்படைந்த 8,000 நோயாளிகளுக்கு ரூ.17 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக (2.47 பில்லியன் அமெரிக்க டாலர்) கொடுப்பதற்கு ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் ஒப்புக் கொண்டது. தரக்குறைவான மருத்துவக் கருவிகளுக்கான இழப்பீடு வழங்குவதில் வரலாற்றிலேயே இதுதான் மிக அதிகப்படியானது என லைவ்மின்ட் ஊடகம் கூறுகிறது.

ஆனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விரும்பவில்லை என்று நிபுணர் குழுவின் அறிக்கை கூறுகிறது. மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திடமிருந்து இதுவரை எந்த உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை என்றும் செலவு செய்த பணத்தைத் திரும்ப கொடுப்பதையே இழப்பீடு என்பதாகக் காட்ட முனைகிறது அந்நிறுவனம் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் ரூ. 20 இலட்சம் இழப்பீடு கொடுப்பதோடன்றி 2025-ம் ஆண்டு வரைக்குமான மருத்துவச் செலவுக்கான சலுகைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை எதுவும் நடந்தபாடில்லை.

‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு மாற்று உபகரணம்

ஜான்சன் & ஜான்சனின் தரக்குறைவான ‘ASR XL’ ஏஸ்டேபுலர் இடுப்பு அமைப்பு (ASR XL Acetabular Hip System) மற்றும் ‘ASR’ இடுப்பு மீள்பொருத்துதல் அமைப்பு (ASR Hip Resurfacing System) ஆகிய இந்த இரண்டையும் தயாரித்தது அதன் துணை நிறுவனமான ‘டெப்யூ ஆர்த்தோபீடிக்ஸ்’ (DePuy Orthopaedics Inc). அமெரிக்காவில் உணவு மற்றும் மருந்து துறையால் 2005-ம் ஆண்டில் இந்தக் கருவிகள் அங்கீகரிக்கப்பட்டன. உலக அளவில் 93,000 நோயாளிகளுக்கு இந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கூறுகிறது.

இந்தக் கருவிகள் பொருத்தப்பட்ட பல்வேறு நோயாளிகளுக்கு சுகவீனம் ஏற்பட்டு மற்றுமொரு அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதையொட்டி இந்தக் கருவிகளின் பக்கவிளைவுகள்  குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு இக்கருவிகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

படிக்க:
நெஸ்லே : ஒரு குழந்தைக் கொலையாளியின் வரலாறு !
கார்ப்பரேட் உணவு நிறுவனங்களின் அமெரிக்கத் தரம் எப்படி ?

இந்திய அரசால் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் உண்மைகளை மூடி மறைப்பதிலேயே குறியாக இருக்கிறது எனவும் இந்தக் கருவிகளை உபயோகிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து அந்நிறுவனம் கொடுத்துள்ள விவரங்களை, நடைமுறையில் ஏற்பட்ட பாதிப்புக்களுடன் ஒப்பிடுகையில் அவை பெரிதும் முரண்படுகின்றன என்றும் குறிப்பிடுகிறது.

உயிருக்கே எமனாய் மாறிய இடுப்பெலும்பு மாற்றுக் கருவிகள்

தரமற்ற இந்த செயற்கை இடுப்பெலும்புக் கருவிகள் ஏற்படுத்திய பாதிப்புக்களால் நூற்றுக்கணக்கான மக்கள் மீண்டுமொருமுறை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது மட்டுமன்றி இந்தக் கருவிகளில் உபயோகப்படுத்தப்பட்ட கோபால்ட் மற்றும் குரோமியம் அமிலங்கள் எலும்புகளிலும், இரத்தத்திலும் கசிந்து நச்சுத்தன்மையை ஏற்படுத்தி அதில் சிலருக்கு உறுப்புச் சிதைவுகள் ஏற்பட்டுள்ளது. மற்றும் சிலர் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்ததால் உயிரிழந்தனர்.

இப்படியாக இடுப்பெலும்பு மாற்றுக்கருவிகள் உயிரைப் பறித்தது ஒருபுறமிருக்க, மறுபுறம் இந்த அறுவைச் சிகிச்சை மேற்கொண்டவர்களுக்கு உளவியல் ரீதியிலான பாதிப்புக்களும் ஏற்பட்டுள்ளது. அதாவது மாற்றுக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதன் மூலம் நோயிலிருந்து, வலியிலிருந்து மீண்டு விடுவோம் என்ற நம்பிக்கையுடன்தான் இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் அந்தக் கருவிகளே தங்களுக்கு எமனாய் மாறும்போது அந்த மனிதனின் சமூக வாழ்க்கையும், குடும்ப வாழ்க்கையும் கேள்விக்குரியதாகிவிடுகிறது. பாதிக்கப்பட்டவரின் மன உறுதியை சுக்கு நூறாக்கி விடுகிறது.  நடையற்று செயல்படாமல் முடங்கிய நிலையில், அத்தனையையும் சகித்துக்கொண்டு வாழ்நாள் முழுவதும் வலி மற்றும் வேதனையுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

முகப்பூச்சு பவுடரால் ஏற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏவா எசெவர்ரியா

அமெரிக்காவில் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் முகப்பூச்சு பவுடரைப் பயன்படுத்தியதால் கருப்பை புற்றுநோய் ஏற்பட்டதாக புகார் எழுப்பிய 22 பெண்களுக்கு, 32 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அந்நிறுவனத்திற்கு கடந்த 2018, ஜூலை மாதம் உத்தரவிடப்பட்டது.  மேலும் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தன்னுடைய முகப்பூச்சு பவுடரில் கல்நாரை (asbestos) 40 ஆண்டுகளாகப் பயன்படுத்தியதை மூடி மறைத்ததாக அப்பெண்கள் கூறுகின்றனர். இந்த பிரச்சினையில் 9,000க்கும் மேற்பட்ட பெண்கள் ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் மேல் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அமெரிக்காவில் இழப்பீட்டை வழங்கத் தயாராக இருக்கும் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம், இந்தியாவில் அதனைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட முயற்சிக்கிறது. ஆண்டை அமெரிக்கா தனது குடிமக்களின் நலனையும் உரிமையையும் சிறிதேனும் பாதுகாக்கிறது. ஆனால் அடிமை இந்தியாவோ தனது எஜமானனின் இலாபத்தை உறுதி செய்ய குடிமக்களின் நலனையும் உரிமைகளையும் காவுகொடுக்கிறது. அது அணு விபத்து கடப்பாடு மசோதாவாக இருக்கட்டும் அல்லது மரபணு மாற்றப் பயிர்களாகட்டும் அல்லது இந்திய மக்களை மருந்துக் கம்பெனிகளின் சோதனைச் சாலை எலிகளாக்குவதாகட்டும் இந்தியர்களின் உயிர் கார்ப்பரேட்டுகளின் முடிக்குச் சமானமாக மதிக்கப்பட்டு வந்ததே வரலாறு.

நன்றி : தி வயர்
தமிழாக்கம்:

#MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் ? கருத்துக் கணிப்பு

பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளை எதிர்க்கும் நோக்கத்துடன் அமெரிக்காவில் துவங்கியது #MeToo இயக்கம். தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது. குறிப்பாக பணியிடங்களில் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் அத்துமீறல்கள், அதைச் செய்யும் பொறுப்பிலுள்ள ஆண்களை, சமூகவலைத்தளங்களில் அம்பலப்படுத்தி வருகிறார்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள்! ஈவ்டீசிங் எனும் பதமே பாலியல் துன்புறுத்தலின் தீவிரத்தை தளர்த்துவதாக இருக்கிறது. ஏனெனில் முன்னர் சொன்னது ஒரு தவறு, பின்னதோ ஒரு தண்டனைக்குரிய குற்றம்!

இந்த #MeToo இயக்கத்தின் மூலம் இந்தியப் பெண்களுக்கு அவர்களது பணியிட உரிமை, பாதுகாப்பாக பணியாற்றும் உரிமைகள் கற்றுத் தரப்படுகின்றது. போலவே படித்த ஆண்களுக்கும் இப்பிரச்சினையின் பரிமாணத்தை அறிமுகம் செய்கிறது.

தற்போது ஊடகம், சினிமா, தொலைக்காட்சி, தனியார் நிறுவனம் என பல துறைகளில் பணியாற்றும் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட துன்புறுத்துல்களை தைரியமாக பேசுவதோடு தொடர்புடைய குற்றவாளிகளையும் அம்பலப்படுத்துகின்றனர். இவற்றில் சில பொய்யான குற்றச்சாட்டுக்கள், தனிப்பட்ட பகையை தீர்த்துக் கொள்வதற்கு பயன்படுகிறது எனவும் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். இது உண்மையாகவே  இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் உண்மையாகவே தமது மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர். முக்கியமாக இதுவரை பேசாமல் பேச முடியாமல் இருந்த துன்பத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் பார்ப்பனிய பண்பாட்டின் படி பாலியல் சமத்துவமும் இல்லை, மக்களிடையே சமூக சமத்துவமும் இல்லை. அதனால் அதிகாரத்தில் உள்ள ஆண்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் தம் கீழ் பணியாற்றும் பெண்களை துன்புறுத்துகின்றனர்.

இன்றைய கேள்வி: #MeToo எந்த துறையில் பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம்?
(மூன்று பதில்களைத் தெரிவு செய்யலாம்)

சினிமா
ஊடகம்
தனியார் நிறுவனங்கள்
அரசு நிறுவனங்கள்
அரசியல் கட்சிகள்
இலக்கியம்
பல்கலைக் கழகங்கள்

 

ட்விட்டரில் வாக்களிக்க:

யூடியூபில் வாக்களிக்க:

https://www.youtube.com/user/vinavu/community

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் : பொது அறிவு வினாடி வினா 13