Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 204

கியூட் நுழைவு தேர்வு – 1 முதல் 12 வகுப்பு வரை படித்ததற்கு மதிப்பில்லையா?

டந்த ஏப்ரல் 11-ம் தேதி தமிழக அரசானது மத்திய பல்கலைக் கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
“அனைத்து மத்திய பல்கலைக் கழகங்களிலும், இளங்கலை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளுக்கான சேர்க்கைகள், தேசிய தேர்வு முகமை நடத்தும் கியூட் எனப்படும், பொது பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு வழியாக மட்டும் நடத்தும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண்ணை கணக்கில் கொள்ளாமல், பொது நுழைவித் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.
பெரும்பாலான மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான மாணவர்கள், மாநில பாடத்திட்டங்களில் படித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் விளிம்புநிலை பிரிவினர். எனவே இந்நுழைவுத் தேர்வானது பெரும்பாண்மையினருக்கு பாதகமான நிலையை ஏற்படுத்தும். தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கும். இந்த நுழைவுத் தேர்வும் நீட் தேர்வைப் போன்றே பள்ளிக்கல்வி முறையை ஓரங்கட்டி, நீண்ட கால கற்றல் முறைகளை வெகுவாக குறைத்து மதிப்பிட வழிவகுக்கும்.
படிக்க :
புதிய குலக்கல்வி கொள்கை : 41 மத்தியப் பல்கலைக் கழகங்களில் பொது நுழைவுத் தேர்வு !
கலைக் கல்லூரிகளுக்கும் இனி நுழைவுத் தேர்வு ! ஏழைகளின் உயர்கல்விக்கு ஆப்பு !
மாணவர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை அதிகரிக்க, பயிற்சி மையங்களை சார்ந்திருக்கும் சூழலை ஏற்படுத்திவிடும். மாணவர்களுக்கான பயிற்சி மையங்கள் புற்றீசல் போன்று வளர மட்டுமே இது சாதகமாக அமையும்” என்று அத்தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்திற்கு வி.சி.க, இ.க.க, இ.க.க(மா), பாமக, காங்கிரஸ், ம.ம.க, கொ.ம.தே.க மற்றும் த.வா.க ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. பாஜக மட்டும் தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது.
இந்தியாவில் 54 மத்திய பல்கலைக் கழகங்கள் இருக்கின்றன. இவை ஒன்றிய அரசின் நேரடுக் கட்டுப்பாட்டில் வரும். இவை கலை – அறிவியல் பாடங்களில் இளங்கலையும், முதுகலையும் கற்பிக்கின்றன. ஆய்வுப் படிப்பும் உண்டு. ஜவாஹர்லால் நேரு, பனராஸ், அலிகார், ஜாமியா முதலானவை மத்திய பல்கலைக் கழகங்கள்தான்.
இவை அனைத்தும் இதுவரை பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையிலும், கூடவே அவை நடத்தி வந்த நுழைவுத் தேர்வு அல்லது நேர்காணலின் அடிப்படையிலும் அனுமதி வழங்கி வந்தன. இனி அப்படி செய்ய முடியாது.
நாடு முழுவதும் கியூட் தேர்வு நடக்கும். அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே அனுமதி வழங்கப்படும். பிளஸ் 2 பாடங்களில் 50% வாங்கியிருந்தால் போதுமானது. தமிழகத்தில் (சென்னை, திருவாரூர்) மத்திய பல்கலைக் கழகங்கள் உள்ளன. புதுவையில் ஒன்று உள்ளது.
ஏற்கெனவே மருத்துவக் கல்லூரியில் நுழைய நீட் தேர்வு நடந்து வருகிறது. இது தவிர கேட் என்ற நுழைவுத் தேர்வும் நடந்து வருகிறது; இது பொறியியல் முதுநிலைப் படிப்பிறக்கான தேர்வு என்பதால் பரவலாக அறியப்படவில்லை. தற்போது மத்திய பல்கலைக் கழகங்களுக்கு கியூட் என்ற தேர்வும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாதிரி நுழைவுத் தேர்வுகள் எல்லாம் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்கிறது ஒன்றிய அரசு. ஆனால், உண்மையான நிலைமை என்ன? நீட் தேர்வு அனுபவத்தில் இருந்து பார்ப்போம்.
ஆங்கில பயிற்றுமொழி வாயிலாக, நகர்ப்புறத்தில் பெரிய தனியார் பள்ளிகளில் படித்த, முக்கியமாகத் தனிப்பயிற்சி வகுப்புகளில் படிக்கும் வசதி படைத்த பிள்ளைகளால்தான் நீட் தேர்வை தாண்டி குதிக்க முடிகிறது.
பணவசதி இல்லாத மற்றும் கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு இயல்பாகவே இத்தேர்வுகள் மூலம் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட அனிதா இதற்கு ஓர் சிறந்த உதாரணம்.
அதுமட்டுமில்லாமல் இத்தேர்வுகள்மூலம் தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கோச்சிங் செண்டர்கள் கட்டணக் கொள்ளையை நடத்துகின்றன.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 2.85 இலட்சம் முதல் 4 இலட்சம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 12.50 இலட்சம் வரை ஆண்டுக் கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் ஆண்டுக் கல்விக் கட்டணமாக ரூ.22 இலட்சம் வரை வசூலித்துக் கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நீட் தேர்வுக்கான தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தபட்ச கட்டணம் 40 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆண்டு தோறும் சராசரியாக 10 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில் சரிபாதி பேர் கோச்சிங் செண்டர்களில் படித்தவர்கள் என வைத்துக் கொண்டாலும் கூட, பல்லாயிரம் கோடி இந்த வணிகத்தில் புரளுகிறது என்பது உறுதியாகிறது.
தொகுப்பாக சொல்ல வேண்டுமென்றால் நீட் மற்றும் கியூட் போன்ற நுழைவுத்  தேர்வுகள் பண வசதியில்லாத மற்றும் கிராமப்புற ஏழை மானவர்களை படிப்பில் இருந்து வெளியேற்றி தனியார் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் கோச்சிங் செண்டர்களின் பணப்பையே நிரப்புகிறது.
இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள்மூலம் கல்வியின் தரமானது, அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலிருந்து விலகி, காசு இருப்பவனுக்கே கல்வி என்று விலகிப் போய் நிற்கிறது.
ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையானது பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு போவதற்கு மாணவர்கள் நாடு தழுவிய நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்கிறது. (பத்தி 4.42, பக்கம் 19)
அதனால்தான் ஒன்றிய அரசானது புதியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் மருத்துவத்திற்கு நீட் என்ற நுழைவுத் தேர்வுக்கு அடுத்து கலை – அறிவியலுக்கு கியூட் என்ற தேர்வை அறிவித்துள்ளது. புதியக் கல்விக் கொள்கையின் படி மற்ற படிப்புகளுக்கும் இது போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவார்கள்.
சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் கூறுவதைப் போல “கியூட் தேர்வை மத்திய பல்கலைக் கழகங்களுக்குதான் அறிவித்து உள்ளார்கள். மாநிலப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் விரும்பினால் ஏற்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது”. அதனால் தமிழக அரசுக் கல்லூரிகளில் படிக்கும் நமக்கு கியூட் தேர்வினால் ஆபத்து இல்லை என இருந்துவிட முடியுமா?
படிக்க :
நீட் தேர்வு : சட்டப் போராட்ட அனுபவம், களப்போராட்ட அவசியத்தை போதிக்கிறது!
போலி ஜனநாயகத்தை அம்பலப்படுத்தும் நீட் விவகாரம் !
முடியாது. முதலில் மத்திய பல்கலைக் கழகங்களில் 9 பல்கலைக் கழகங்களுக்குதான் நுழைவுத் தேர்வு இருந்தது. தற்போது 54 பல்கலைக் கழகங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக் கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக் கழகங்களை பொறுத்தவரை விரும்பினால் ஆரம்பித்து பின்னர் கட்டாயப்படுத்துவார்கள் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
தற்போது மத்திய பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் கியூட் கட்டாயம் என்று கூறியுள்ளார்கள். அதன்பிறகு நீட்டைப் போல கலை – அறிவியலுக்கு மாநிலக் கல்லூரிகள் உட்பட எல்லா கல்லூரிகளுக்கும் கியூட் கட்டாயம் என்று கூறுவார்கள். அதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் உள்ளது. நீட் எதிர்ப்பு தீர்மானத்தை ஆளுநர் திருப்பி அனுப்பிய போதும், மீண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கியூட் தேர்விற்கும் எதிராக தற்போது தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே திமுகவானது நீட் மற்றும் கியூட் தேர்வை தனது சட்டப் போராட்டத்தின்மூலம் ரத்து செய்யும் என இருந்துவிட போகிறோமா? அல்லது  திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடங்கவில்லை. அதிமுக ஆட்சியில் இருக்கும் போதிலிருந்தே சட்டப் போராட்டம் நடந்து வருகிறது. நீட்டுக்கு எதிரான தீர்மானங்கள் மற்றும் சிறப்புச் சட்டங்கள் இயற்றப்பட்ட போதும் அதை எல்லாம் மதிக்காமல் மோடி அரசானது இம்மாதிரி நுழைவுத் தேர்வுகளை திணித்து வருகிறது. எனவே சட்டப் போராட்டம் இம்மாதிரி நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாது என்பதை உணர்ந்து மோடி அரசை பணிய வைக்கும் ஜல்லிக்கட்டு மற்றும் ஸ்டெர்லைட் போன்ற மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைத்து இத்தேர்வுகளை ரத்து செய்யப் போகிறோமா?

அமீர்

அயோத்தியா மண்டபம் : பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்கும் இடம் – தோழர் மருது | வீடியோ

மேற்கு மாம்பலம் என்பது தமிழ்நாடு பார்ப்பனர்களின் இதயம். அந்த இதயத்தின் ரத்தகுழாய்தான் அயோத்தியா மண்டபம். காரிய கொட்டைகைக்கு ஏசி போடும் அளவிற்கு சுரண்டி கொழுக்கும் பார்ப்பனர்கள். இது பார்ப்பன பயங்கரவாதிகளை உருவாக்குவதற்கான இடம்.
சாதித்தீண்டாமையை ஆதரிக்கக் கூடிய எல்லாக் கூட்டங்களும் நடத்தக்கூடிய இடம்தான் இந்த அயோத்தியா மண்டபம். இதை போன்று அயோத்தியா மண்டபத்தின் பல்வேறு பின்னணியையும், தற்போது ரவுடித்தனம் செய்யும் பாஜக குண்டர்களை பற்றி விரிவாக tamil mint என்ற யூடியூப் சேனல் ஏப்ரல் 13 அன்று வெளியிட்ட இந்த காணொலியில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் தோழர் மருது.

காணொலியை பாருங்கள் பகிருங்கள்!

காட்டில் மாடு மேய்க்க மக்களுக்குத் தடை, நாட்டையே ஏய்க்க முதலாளிகளுக்கு தடை இல்லை !

“இனிமேல் தமிழ்நாட்டுக்குள் காடுகள் என்று அரசால் அறிவிக்கப்பட்டுள்ள எந்தப் பகுதிகளிலும் கால்நடைகள் மேய்க்க அனுமதிக்க கூடாது” என கடந்த மார்ச் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வைகை தோன்றும் இடமான மேக மலையில் மாடுகள் தொடர்ந்து மேய்வதால், நீர்ப்பிடிப்பு பகுதியில் சேதம் ஏற்பட்டு ஆற்றில் வரவேண்டிய நீர் குறையும் என்றும்; வனத்துறை அதிகாரிகள் அதிக அளவில் மேய்ச்சல் அனுமதி சீட்டுகளை வழங்கி, காடுகளில் மாடுகளை  மேய்க்க உதவுகிறார்கள் என்றும்; இத்தகைய அனுமதி மேகமலை வனப்பகுதியை சீரழித்து இறுதியில் ஐந்து மாவட்டங்களுக்கு வரவேண்டிய தண்ணீரை வராமல் தடுத்துவிடும் என்றும்; இதனால், பாரம்பரியமாக இருந்துவரும் மாடுமேய்க்கும் வழக்கத்தை நிறுத்த ஆணையிடும்படி திருமுருகன் என்பவர்  உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கில்தான் மேற்கண்ட தீர்ப்பை நீதிபதிகள் வழங்கி இருக்கின்றனர்.
இந்தத்தீர்ப்பால் பாதிக்கப்படப்போவது யார்? பலனடையப்போவது யார்? மாடுகள் மேய்ச்சலை நிறுத்திவிட்டால் வைகையில் தண்ணீர் வளம் பாதிக்காமல் இருக்கும் என்று யாராவது உறுதி கூறமுடியுமா? சரி, ஒருவர் ஒரு பிரச்சினை தொடர்பாக வழக்கு தொடுக்கிறார் என்றால், அவ்வழக்கில் எதிர் மனுதாரர்களின் கருத்து என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டுமா இல்லையா?  அப்படி  எவ்வித அவசியமும் நீதிமன்றத்துக்கு இல்லாமல் போய்விட்டது.
000
மேக மலைப் பகுதியில், வேளாண்மைக்கு அடுத்தபடியாக பெருவாரியானவர்கள் செய்துவரும் தொழில் மேய்ச்சல்தொழில். ஏற்கெனவே, மாடு மேய்க்க அனுமதி கேட்பவர்களிடம் வனத்துறையினர் செய்யும் இடையூறுகள் மற்றும் வழக்குகள், அபராதங்கள்  என பலவித கெடுபிடிகள்.
படிக்க :
மாட்டு கொட்டகையாக மாறிய அரசு பள்ளிக்கூடம் : ஆதித்யநாத் ஆட்சியின் சாதனை !
அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா !
வைகை ஆற்றில் தண்ணீர் வரத்துக் குறைவதற்கு முதல் காரணம் நீர்ப்பாசனத் துறையின் தவறான நிர்வாகம். மேலும் வைகை அணைக்கு மேல் உள்ள ஆற்றின் இரு மருங்கிலும் நடக்கும் அதீதமான தண்ணீர் திருட்டு; தண்ணீரை தொடர்பில்லாத பகுதிகளுக்கு மடை மாற்றம்செய்யும் பாசனத்துறையின் முறையற்ற செயல்கள் என பல முக்கிய காரணங்கள் உண்டு.
தண்ணீர் திருட்டு தொடர்பாக, தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் நீர்ப்பாசனத் துறையினர் தொகுத்த அறிக்கை கடந்த ஆண்டு வெளியானது. அதில், ஆற்று நீர் வைகை அணைக்கு வந்துசேரும் முன்பே நூற்றுக்கணக்கான பம்புகளை வைத்து, நீரை பல மைல் தூரம் கடத்திச்சென்று முறையற்ற பாசனத்தில் ஈடுபடுவதுதான் தண்ணீர் குறைவுக்கு காரணம் என்பது தெளிவாக்கப்பட்டது. இதையெல்லாம் கண்கொள்ளாத உயர்நீதிமன்றம் பாமர மக்கள் என்றவுடன் கண்ணை மூடிக்கொண்டு நியாயம் வழங்குகிறது.
நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்புக்கு ஆதாரமாக மேகமலை ஒரு பல்லுயிர் காப்பு பகுதி, பாதுகாக்கப்பட்ட பகுதி, அணில்களும் புலிகளும் வாழும் பகுதி; எனவே மாடுகளை உள்ளே விடக்கூடாது என்று கூறியுள்ளது.
மேலும் இந்த வழக்குக்காக நீதிமன்றத்திற்கு உதவி செய்ய நியமிக்கப்பட்ட உயிரியல் பேராசிரியர் தனது அறிக்கையில், மேகமலைக் காடுகள் ஒரு சரணாலயப் பகுதி என்பதால் அங்கு வாழும் விலங்குகளுக்கு மலைமாடுகள் போன்ற வளர்ப்புக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி போன்ற நோய்கள் பரவக்கூடும்; மாடுகள் எழுப்பும் இரைச்சல் ஒலிகள் காட்டு விலங்குகளை துன்புறுத்தும்; எனவே மாடுகளை மேய்க்க அனுமதிக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.
மேகமலை பல நூறு ஆண்டுகளாக விலங்குகள் சரணாலயம் என்பது போலவும், திடீரென்று சிலர் மாடுகளை மேய்ப்பது போலவும் அதனால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது போலவும் கூறுவதெல்லாம் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைத்த கதைதான்.
000
1947-க்கு முன்பு வரை மேகமலை, கண்டமனூர் ஜமீனுக்கு உட்பட்ட நிலப் பகுதியாகவே இருந்து வந்தது. இங்கு தனியாருக்கு சொந்தமான பல தேயிலை தோட்டங்கள், தனியார் சுற்றுலா விடுதிகள், செல்வந்தர்களுக்குரிய சொத்துகள் பல உள்ளன.
தனது கால்நடைகளை மேகமலைப் பகுதியில் மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் மேய்ச்சல்காரர்.
தமிழ்நாடு அரசு பல சிக்கல்களுக்கிடையில் மேகமலையின் ஒரு பகுதியை 1978-ஆம் ஆண்டு உள்ளோர் உரிமைகளை (settlement rights)  வரையறுக்க சட்ட அறிவிப்புச் செய்தது. அந்த அறிவிப்பின்படி, 2௦1௦ ஆண்டு சுமார் 25,000 ஹெக்டேர் நிலங்களைக் காப்புக் காடுகள் என்று இறுதியாக அறிவித்தது. இடைப்பட்ட காலத்திலும் அங்கு வசிப்போர், சுற்றியுள்ள கிராம மக்கள், போக்கு மேய்ச்சல்காரர்கள் உட்பட பலரும்  மேய்ச்சல் நடத்திக் கொண்டுதான் இருந்தார்கள்.
வனத்துறையும் தான்தோன்றித்தனமாக அனுமதிதருவது, சில கட்டுப்பாடுகள் விதிப்பது, மேய்ச்சல்காரர்களை துன்புறுத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது. ஆனாலும் முற்றிலும் தடுக்கவில்லை. சட்டரீதியாக அப்படி தடை செய்வது நடைமுறையில் இருக்கும் சட்டங்களின் படி சாத்தியம் இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளுக்குள் இந்த காப்புக் காடு (reserve forest) பகுதியை மேலும் மேலும் விரிவு செய்து சுமார் 63,000 ஹெக்டேர் நிலங்களை மேகமலை வன விலங்குகள் சரணாலயம் என்று அறிவிப்புசெய்தது. அதன் பின்னர் அருகில் அமைந்துள்ள திருவில்லிபுத்தூர் வனங்களையும் இணைத்து அணில்கள் மற்றும் புலிகள் சரணாலயம் என்று சமீபத்தில் அறிவித்தது. அப்போதும்கூட சுமார், 37,500 ஹெக்டேர் நிலங்களை மேய்ச்சலுக்கு பயன்படுத்தலாம் என்றும் 64,000 ஹெக்டேர் நிலங்களை மட்டும் யாரும் நெருங்கக் கூடாது என்றுதான் அறிவித்திருந்தது.
விலங்குகள் சரணாலயம் வரும் முன்பே மேய்ச்சல்காரர்கள் அங்கே இருந்தார்கள். அவர்களுக்கு பாரம்பரிய உரிமை இருந்து வருகிறது என்ற உண்மையைப்பேசுவதற்கு தமிழ்நாடு அரசும் தயாராக இல்லை, அந்த உண்மையைப்பேசும் மேய்ச்சல் தொழில் செய்யும் மக்களின் கருத்துக்களைக் கேட்க நீதிமன்றமும் தயாராக இல்லை.
“யாரும் உட்புகாத வன விலங்கு சரணாலயங்கள்” என்ற கருத்து ஒருமுகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அறிவியல் அடிப்படை (unanimous scientific basis) அல்ல. உலகின் பல நாடுகள் இததகைய கருத்துகளை “மக்களிடம் இருந்து அலாதியாக நிற்கும் அறிவியலுக்கு ஒவ்வாத கருத்துகள்” என்று பிரகடனம் செய்துள்ளன.
காலனியாதிக்கச் சட்டங்களை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கும் நம்மைப் போன்ற நாடுகளில்தான் இப்படி வெறுமனே ஏட்டறிவை மட்டுமே நம்பும் ‘அறிவாளிகள்’, அனிமல் பிளாநெட், நேசனல் ஜியக்ராபி  போன்ற தொலைக்காட்சிகளைப் பார்த்து ஆர்வலர்களானவர்கள், பல நூறு ஆண்டுகளாக காடுகளில் ஆடு, மாடு மேய்த்த நமக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கின்றனர்.
000
வழக்கு தொடுத்தவர், மேகமலையில் ஆடு மேய்க்க தடை கேட்கிறார், நீதிமன்றமோ தமிழகம் முழுவதும் காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்க்க தடைவிதிக்கிறது. ஒரு தொழிலாளிக்கு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் இல்லாமல், ஒரு ஆலை நிர்வாகம் பணி நீக்க உத்தரவு அளித்துள்ளது எனில், இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் உயர்நீதிமன்றம் தமிழ்நாடு முழுவதும் இது போன்று உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கு சேர்த்து நீதி வழங்குமா என்ன? என்ற கேள்வியில்தான் நீதிமன்றத்தின் வர்க்கப்பார்வை ஒளிந்திருக்கிறது.
படிக்க :
தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
எட்டுவழிச்சாலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, எட்டுவழிச்சாலை கூடாது என்பதல்ல; எட்டு வழிச்சாலைக்காக விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட நிலத்தை  அரசு நிலமாக வகைமாற்றம் செய்ய மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் சுற்றுச்சூழல்  அனுமதிபெற்று, முறையாக  புதிய அறிவிப்பை அரசு வெளியிடலாம் என்பதே தீர்ப்பு.  இந்த அன்னிய மூலதனத் தேவைக்காக உருவாக்கப்பட்ட எட்டு வழிச்சாலை திட்டம் செல்லும் வழியில் வனவிலங்குகள் மலைகள், காடுகள் ஏதும் பாதிக்கப்படவில்லையா என்ன?
விவசாய நிலங்களையும் காடுகளையும் மலைகளையும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரை வார்ப்பதையே இலக்காகக் கொண்டு செயல்படும்  தனியார்மய-தாராளமய திட்டங்களை உயிர் ஆதாரமாகக்கொண்டு செயல்படும் அரசு, “காடுகளை அதிகரிக்க போகிறேன், இயற்கையைக் காப்பாற்றப் போகிறேன், சுற்றுச்சூழலை பாதுகாக்க போகிறேன்” என்று சொல்வது எவ்வளவு பெரிய நாடகம்! இந்த நாடகத்திற்கு நீதிமன்றங்கள்தான் மிகச்சிறந்த பக்கவாத்தியம்.
“முதலாளியா?, இயற்கையா?” என்ற கேள்வி எழும்போது முதலாளிகளின் பக்கம் நிற்கும் நீதிமன்றங்கள், “மக்களா? இயற்கையா?” என்ற கேள்வி வரும்போது இயற்கையின் பக்கம் நிற்பதாகக் கூறும் நீதியை மக்கள் யாரும் ஒருபோதும் நம்பத்தயாராக இல்லை.

கிருஷ்ணராஜ்

Afghan people starving to death because of US hegemony !

Following the withdrawal of NATO and US troops in August 2021, the Taliban took full control of Afghanistan. Subsequently, the bourgeois press and pro-imperialist intellectuals, who have been repeatedly crying ‘Danger to Democracy’ and ‘Taliban terrorism, Again!’, are now refusing to speak or just spreading the lie that the unprecedented food shortages and starvation deaths that Afghanistan is facing is because of the Taliban regime.
According to the UN, half of Afghan’s population, nearly 2.28 crore people, face acute food insecurity. Of these, 87 lakh people are projected to face emergency levels of food insecurity. Nearly 20 lakh children face severe acute malnutrition; of which 6 lakh children are in a serious condition.
It is heartrending to hear from the international activists that, by the end of this winter, nearly 10 lakh children are at risk of dying unless they receive immediate treatment for malnutrition. This is more than the death toll of the US orchestrated civil war in Afghanistan, which lasted for the past 20 years. The US is now responsible for today’s food shortage in Afghanistan.
After the US retreated its troops, it imposed sanctions on Afghanistan. The US has frozen $9 billion in assets that the Afghan government has in the US, belonging to the Afghan central bank “Da Afghanistan Bank” (DAB).
Read :
NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !
Mekedatu Dam : In racist politics – BJP and Congress are in the same array
While Afghanistan is unable to withdraw funds from its central bank, western countries like Germany, which exploit the third world countries on one hand and offer ‘financial help’ on the other, have also stopped funding Afghanistan after the Taliban seized power.
The World Bank and the International Monetary Fund (IMF) have suspended payments to Afghanistan owing to the political pressure from the US. This worsened Afghanistan’s crises. As a result of this, hundreds of thousands of daily wagers and more than 2 lakh teachers and doctors have not been able to receive their salaries for months.
Prices have also skyrocketed, while people are struggling with the loss of jobs and loss of income. For the past four months, the food of many Afghans has been tea and bread. Meat, vegetables and fruits became out of reach for ordinary people. Some NGOs are distributing wheat flour and other food products. Because of higher prices of cooking oil and other groceries, some people were forced to eat only the wheat flour.
A malnourished Afghan child receiving treatment at a hospital in Kandahar.
Because of chronic malnutrition, majority of the children are stunted. The World Food Programme (WFP) along with other NGOs is trying to feed nutritious food to such children at health facilities. But this aid is being provided only in a very few places.
Afghan mothers who can’t provide nutritious food to their starved children, carry them to health facilities located hundreds of kilometres away, hoping that their children will survive if they are given nutritious flour.
Many, who cannot get this, have been forced to sell their homes and furniture. Even more horrific is the news that the plight of selling their daughters for marriage is taking place in a big way. The pain of the Afghan mothers who are desperate to sell even their baby girl to feed their other children in the family can’t be just explained with words.
The sale of human organs for money is also happening in large numbers. If we walk through the streets of Afghanistan, we can see banners hanging, which say ‘Kidney for sales!’.
Famine and hunger are rapidly rising in Afghanistan mainly because the Afghan economy is entirely dependent on foreign aid. Before the US forces left last August, the foreign aid that Afghanistan was receiving from the West was up to $8.5 billion.
In general, on an average, a country receives foreign aid of upto 10 percent of its GDP. However, about 40 percent of Afghanistan’s GDP is from foreign aid. Three quarters of the government’s budget was dependent on foreign donations.
On the other hand, 70 percent of the Afghan population depends on agriculture. People are exiting from agriculture because of drought, rising prices of agricultural inputs, inability to feed livestock and lack of proper irrigational facilities. As a result of this, wheat production this year will fall by 25 percent when compared to last year, the UN predicted.
It was on August 15 last year, the US troops started withdrawal from Afganistan. All the foreign aids to Afghanistan stopped as soon as the US troops left. Not only this, foreign exchange from Afghans who work abroad accounts for 4 percent of its GDP. But that too is now out of the way. International money-transfer firms like Western Union and Moneygram have suspended their services in Afghanistan.
The few remaining doctors and nurses try urgently to treat babies and malnoridhed children.
Although Afghanistan has suffered many famines before, US imperialism is responsible for the current famine and the starvation deaths of the Afghan people. The US occupies other countries to plunder various mineral resources and keep those countries under its control. It destroys even their remaining self-reliant economy and thus consolidate its dominance. The same thing happened in Afghanistan.
The newly formed Taliban have close ties with China. The US could not tolerate the Taliban, which was created by the US for its hegemonic obsession, going into the hands of China which challenge its global hegemony. Therefore the US stopped all its financial aids which it provided earlier to its puppet regime in Afghanistan. In addition, the US cries, “There is no democracy in Afghanistan”, “No human rights in Afghanistan” and at the same time enforced economic sanctions. The US has also pressured and blocked other international assistance to Afghanistan.
Human rights organisations from all over the world demanded that ‘we should separate politics and humanitarian work’ and we should help Afghanistan, which is in dire scarcity, and relax sanctions on Afghanistan. Only then the US moved to provide $280 million of donation fund of the World Food Programme and UNICEF, thinking that it would be held responsible for the death of Afghans in clusters. But this was only a fraction of the frozen $1.5 billion.
Read :
Kashmir: Saffronisation obliterating constitutional freedom
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
This fund is not enough for Afghanistan, which is on a deathbed. The US super power is commiting genocide of the entire population of a country to establish its hegemony. The weapon of this war is hunger. Not only Afghanistan, but a large number of working people around the world are directly or indirectly suffering from the hegemonic rule of the imperialists in various forms.
The misery of hundreds of thousands of working people of Afghanistan cannot be overlooked. We, the working people, must carry out protests internationally demanding the lifting of US sanctions on Afghanistan and urge them to provide the Afghan people with basic necessities, including food, on a wartime basis.
Moreover, in order to permanently bring down the American super power, which consistently victimise other countries for its hegemonic intentions, working people all over the world must rally together to express their solidarity on all issues.

Sevvandhi

கார்ப்பரேட் முதலாளிகளின் இலாப வெறிக்காக விவசாயிகளை கொலை செய்யும் கெயில் நிறுவனம் !

ர்மபுரி மாவட்டம், பள்ளிப்பட்டி ஊராட்சி செக்காரப்பட்டி அருகே உள்ளது கருப்பனம்பட்டி என்கிற குக்கிராமம். இந்த கிராமத்தில் 30 சென்ட் நிலத்தை மட்டுமே வைத்திருக்கின்ற சிறிய விவசாயி கணேசன். ஏப்ரல் 13-ம் தேதியன்று  தனது  விவசாய நிலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது இந்த நிலத்தில் சின்ன வெங்காயம் பயிரிட்டு விவசாயம் செய்துள்ளார். தனக்கு இருக்கும் குறைந்த பட்ச நிலத்தை வைத்துக் கொண்டுதான் வாழ்க்கையை தள்ளிக் கொண்டு வந்தார். கணேசனுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். தற்போது இந்த 30 சென்ட் நிலத்தின்மீது கெயில் நிறுவனம் மூலம் எரிவாயுவை கொண்டு செல்ல குழாய் பதிக்க முயற்சித்து வருகிறது.
கேரளா மாநிலம் கொச்சியில் இருந்து தமிழகத்தின் 7 மாவட்டத்தின் வழியாக குழாய் பதிக்கும் பணியை செய்து வருகிறது கெயில் நிறுவனம். இதனை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து விவசாய நிலத்தின் வழியாக கெயில் குழாயை பதிக்கக்கூடாது என்று போராடி வந்தனர்.
இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக கடந்த 3 நாட்களாக போலீசை குவித்து விவசாயிகளை தாக்க முயற்சிப்பது, மிரட்டுவது, வழக்குப் போடுவேன் என எச்சரிப்பது என்ற வகையில் கடந்த 3 நாட்களாக மிரட்டி வந்தது மாவட்ட நிர்வாகம்.
எனக்கு 30 சென்ட் மட்டுமே நிலம் உள்ளது என் நிலத்தை இழந்தால் எனக்கு வாழ்வு இல்லை என்று இந்த போராட்டத்தில் மூன்று நாட்களும் கலந்து கொண்டார் கணேசன்.  நிலம், கிணறு, வீடு அனைத்தும் பறிபோகிறது எங்களை வாழவிடுங்கள் எனது நிலத்தின் வழியாக குழாய் பதிக்க வேண்டாம் என்று போராடி வந்துள்ளார்.
இன்றும் (ஏப்ரல் 13) போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. இந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக இன்று (ஏப்ரல் 13) காலை முதலே போலீசாரை குவித்து பயர் சர்வீஸ் வாகனம், விவசாயிகள் கைது செய்ய போலீஸ் வாகனம் பேருந்துகள் ஏற்பாடு செய்தது போலீசுத்துறை. இனி நம் நிலத்தை மீட்க முடியாது நம் குடும்பம் நடுத்தெருவில்தான் நிற்கும் என்று கண்ணீரோடு சென்ற விவசாயி கணேசன் நேரடியாக விவசாய நிலத்திற்கு மனவேதனையோடு சென்று, போலீசு விவசாயிகளை கைது செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தபோதே தனது நிலத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொண்டார் என்பதைவிட போலீசும், மாவட்ட நிர்வாகமும் கெயில் நிறுவனமும் சேர்ந்து விவசாயி கணேசனை கொலை செய்தது என்பதே உண்மை. இதனையெடுத்து ஆத்திரப்பட்ட விவசாயிகள் பெரும் திரளாக ஒன்று திரண்டு தருமபுரி பென்னாகரம் சாலையில் மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். ஆனால், மாவட்ட நிர்வாகம் வெறும் பேச்சுவார்த்தை என்கிற கண் துடைப்பு நாடகத்தையே செய்து வருகிறது.
கணேசன் மட்டுமல்ல பல ஆயிரம் விவசாயிகள் என்னுடைய வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இந்த கையில் நிறுவனத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். விவசாயிகளுடைய கோரிக்கையான கெயில் குழாய் பதிப்பு என்பதை நெடுஞ்சாலைகள் வழியாக, விவசாய நிலத்திற்கு பாதிப்பில்லாமல் கொண்டு செல்ல வேண்டும் அதுதான் விவசாயி கணேசனுக்கு அரசு வழங்கும் உண்மையான தீர்வாகும்.
மேலும் கணேசனுடைய இறப்பிற்கு உடனடியாக உரிய இழப்பீட்டை மாநில அரசு தலையிட்டு கொடுக்க வேண்டும். தற்கொலைக்கு தூண்டி கொலை செய்த, மாவட்ட நிர்வாகிகள் மீதும், போலீசுத்துறை மீதும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்,
9790138614.

சாவர்க்கர் ஒரு அதிதீவிர சாதிவெறியர் : இந்துத்துவ ஆவணங்களிலிருந்து ஆதாரம் !

சாவர்க்கரை புணர்நிர்மாணம் செய்யும் [புனிதராக்கும்] திட்டம் தற்போது புதிய வடிவங்களை எடுத்து வருகிறது. “சாதிக் கொடுமை, சாதியத் தீண்டாமை மற்றும் பெண்களுக்கு எதிரான அநீதி போன்ற மோசமான சமூகக் கொடுமைகள் இல்லாத ஒரு தேசத்தை அவர் கற்பனை செய்திருந்தார்” (‘சாதியற்ற சமுதாயத்திற்காக சாவர்க்கர் எவ்வாறு போராடினார்’, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், 28-02-2022) என்று சமீபகாலமாக சாவர்க்கரிஸ்டுகள் கூறிவருகிறார்கள். மேலும், “சமூக ஒருமைப்பாட்டுடன் இணைந்த சமூக நீதியின் அடிப்படையிலான சாதியற்ற சமூகத்தை அமைப்பதற்காக அவர் வாதாடினார். சாதிய கட்டமைப்பை வேரோடு அகற்றி, இந்து ஒற்றுமையின் அடிப்படையில் ஒரு தேசத்தை உருவாக்க விரும்பினார், அங்கு தலித்துகள் கண்ணியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்’’ என்றும் கூறுகிறது மேற்சொன்ன கட்டுரை. மேலும், “மனுஸ்மிருதி போன்ற சாதியை ஆதரிக்கும் வேதங்ககளுக்கு எதிராக அவர் பேசினார். சாவர்க்கரின் கூற்றுப்படி, இந்த வேதங்கள் பெரும்பாலும் அதிகாரத்தில் இருப்பவர்களின் கருவிகளாகும். சமூகக் கட்டமைப்பைக் கட்டுப்படுத்தவும், அவர்களின் மேலாதிக்கத்தைத் தக்கவைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன.’’ என்று கூறுகிறது அக்கட்டுரை.
படிக்க :
வ.உ.சிதம்பரனாரும் மன்னிப்புக் கடித மாமேதை சாவர்க்கர் வாரிசுகளும் | மு இக்பால் அகமது
பல்கலை பாடத்தில் சாவர்க்கர், கோல்வால்கர் நூல்களை அனுமதிப்பது ஜனநாயகமா ?
இந்து மகாசபாவின் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சாவர்க்கரின் எழுத்துக்கள் மற்றும் ஆவணங்களுடன் இக்கட்டுரையின் வாதங்களை ஒப்பிட்டுப் பார்ப்போம். சாவர்க்கர் இந்துத்துவத்தின் தீர்க்கதரிசியும், 1923-ல் அதே தலைப்பில் (இந்துத்துவா : இந்துக்கள் யார்? இந்துத்துவத்தின் அடிப்படைகள்) புத்தகத்தை எழுதியவரும் ஆவார். அந்த நூலில் அவர் சாதியத்தைப் பாதுகாத்ததோடு, ஒரு தேசத்தை உருவாக்குவதற்கு இந்து சமுதாயத்தில் சாதியம் என்பது அவசியமான இயற்கை அங்கமாக அவர் கருதினார். ‘தேசியத்திற்கு ஆதரவான நிறுவனங்கள்’ என்ற தலைப்பில் இந்த விவகாரத்தைப் பற்றிக் கூறும்போது, சாதிய அமைப்பு என்பது இந்து தேசத்தை அடையாளம் காண்பதற்கான ஒரு தனித்துவமான அடையாளம் [அதாவது சாதிய அமைப்பு இந்து தேசத்தின் தனித்துவமான அடையாளம்] என்று அவர் அறிவித்தார்.
“பௌத்தர்களின் ஆட்சியிலும் கூட அழிக்க முடியாத இந்த நான்கு வர்ணங்களின் அமைப்பானது, நான்கு வர்ணங்களின் அமைப்பை நிறுவியவர் என்று அழைக்கப்படுவதை மன்னர்களும், பேரரசர்களும் மிக பெரிய சாதனையாக   கருதும் அளவுக்குப் பிரபலமடைந்தது. இதன் விளைவாக இன்று சாதிய அமைப்பானது நமது தேசியத்தை [சாதியத்தோடு] அடையாளம் காணும் அளவிற்கு மிகவும் வலுவாக வளர்ந்துள்ளது’’.
சாவர்க்கர், இந்து தேசத்தின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக சாதியைக் கருதியதோடு, அதை உறுதிபடுத்த ஒரு மேற்கோளையும் காட்டி (இது யாரால் கூறப்பட்டதென்று அவர் குறிப்பிடவில்லை) “நால்வர்ண அமைப்பு இல்லாத நிலம் மிலேச்ச நாடு. ஆரியவர்தம் [ஆரியர்கள் வாழும் பகுதி] அந்நிலத்திலிருந்து விலகியிருக்க வேண்டும்.” என்று கூறினார்.
சாவர்க்கர் சாதியத்தைப் பாதுகாத்ததானது, உண்மையில் [தூய]இனவாத அணுகுமுறையின் அடிப்படையிலான இந்து தேசம் பற்றிய அவரது புரிதலின் நியாயமான முடிவுதான். சாதியானது இந்து சமுதாயத்தின் இரத்த ஓட்டத்தைத் [அதாவது இரத்தக் கலப்பை] தடை செய்கிறது என்ற விமர்சனத்தை மறுத்த அவர், இவை ஒன்றையொன்று சார்ந்திருப்பதாக ஒரு சுவாரஸ்யமான வாதத்தை முன்வைத்து, இந்து இனத்தின் தூய்மை பேணப்படுவதற்கு சாதியம் தான் காரணம் என்று வாதிட்டார்.
அவர் கூறினார் :
“சாதியக் கட்டமைப்பு செய்ததெல்லாம், புனிதத் தன்மை கொண்டவர்களும் தேசபக்தர்களுமாக நம்பப்பட்ட – அது உண்மையும் கூட – சட்டத்தை இயற்றுபவர்களாகிய நமது [பார்ப்பனர்களது] தூய உன்னத இரத்த ஒழுங்கைப் பாதுகாத்ததுதான். மேலும் தரிசு நிலத்தை உரமிட்டு செழுமைப்படுத்த அரசர்கள் மேற்கொண்ட முயற்சியானது, உன்னதமான செழிப்பான நிலத்தை இழிவுபடுத்தாமல் செய்யப்பட்டது.” [அதாவது மக்கள்தொகையைப் பெருக்க மன்னர்கள் மேற்கொண்ட முயற்சியானது, பார்ப்பனர்களின் ‘உன்னத’ இரத்தத்தை பாதுகாப்பாக வைத்தே இருந்தது என்ற பொருளில் சாவர்க்கர் இதைக் கூறுகிறார்.]
வியப்பு என்னவென்றால், சாதியத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக நின்ற சாவர்க்கர், குறுகிய காலத்திற்கு இந்து சமூகத்தில் தீண்டத்தகாதவர்களின் நிலையை உயர்த்தவும் வாதிட்டார். இந்துக் கோவில்களில் உள்ள தீண்டாமைக்கு எதிராகவும் தீண்டப்படாதோர் கோயிலுக்குள் நுழைவதற்கு ஆதரவாகவும் நிகழ்ச்சிகளை நடத்தினார். இவை அவரின் சமத்துவக் கண்ணோட்டத்திலிருந்து நடத்தப்பட்டவை அல்ல. தீண்டப்படாதவர்களை சமத்துவமாக நடத்திய இசுலாம் மற்றும் கிறித்தவம் போன்ற மதங்களுக்கு தொடர்சியாக அவர்கள் மதம் மாறும் போது, இந்துக்களின் எண்ணிக்கை குறைகிறது என்பதால் உண்டான கவலையிலிருந்தே நடத்தப்பட்டவை.
குறிப்பிட்ட சில சாதிகளைச் சார்ந்த இந்துக்கள் தீண்டத்தகாதவர்களாக நடத்தப்படுவதால், இந்தியாவில் இருந்த 7 கோடி (அப்போதைய மக்கள் தொகையின்படி) தாழ்த்தப்பட்ட “இந்து மக்கள் சக்தி”-யானது ‘எங்கள்’ பக்கம் (உயர் சாதி இந்துக்கள் பக்கம்) நிற்கவில்லை என்பதை சாவர்க்கர் ஒப்புக்கொண்டார். இந்து தேசியவாதிகள் முசுலீம்கள், கிறித்துவர்களுடன் கணக்குத் தீர்த்துக் கொள்வதற்கு, காலாட்படையாக உடல்பலமுள்ள இந்த தீண்டத்தாகாதவர்கள் மிகவும் தேவை என்பதை சாவார்க்கர் அறிந்திருந்தார். எனவே தீண்டத்தகாதவர்கள் தங்களது பிடியில் இருக்கவில்லை என்றால் உயர்சாதி இந்துக்களுக்கு மிகவும் பயங்கரமான நெருக்கடியைக் கொண்டுவரும் ஒரு காரணியாக மாறிவிடுவார்கள் என்று எச்சரித்ததோடு, “அவர்கள் நமக்கு சேவை செய்வதை நிறுத்துவது மட்டுமல்லாமல், நமது மதத்தை பிரிப்பதற்கான எளிதான வழிமுறையை உருவாக்குவதுடன், இதனால் நமக்கு ஏற்படப் போகும் எல்லையற்ற இழப்புக்கும் காரணமாகிவிடுவார்கள்’’ என்றும் புலம்பினார்.
இந்த பிரச்சினையில் சாவர்க்கரின் நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய மிகவும் அதிகாரப்பூர்வமான பதிவானது சாவர்க்கரின் செயலாளர் ஏ.எஸ்.பிடேயின் “விநாயக் தாமோதர் சாவர்க்கரின் சூறாவளி பிரச்சாரம்: தலைவரின் நாட்குறிப்பில் இருந்து டிசம்பர் 1937 முதல் அக்டோபர் 1941 வரையிலான பிரச்சார சுற்றுப்பயணங்களின் நேர்காணல்” என்ற புத்ததகத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இது இந்து மகாசபையின் அணிகளுக்கான அதிகாரப்பூர்வமான வழிகாட்டி நூலாகும். அதன்படி “இந்து மகாசபா அமைப்பை அதன் விதிமுறை வரம்புகளில் உத்தரவாதம் அளிக்கப்படாத [அதாவது இந்து மத விதிகளுக்கு முரணான] சமூக மற்றும் மத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தாமல்” தனது தனிப்பட்ட முயற்சியில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகளை [கோயில் நுழைவை] மேற்கொள்வதாக சாவர்க்கர் அறிவித்தார். 1939 ஆம் ஆண்டு கோவில்களில் தீண்டத்தகாதவர்கள் நுழைவதை எதிர்த்த இந்து மகாசபையைச் சேர்ந்த சனாதான இந்துக்களிடம் அவர் பின்வருமாறு உறுதியளித்தார் :
“இன்று நடைமுறையில் உள்ள வழக்கப்படி இந்துக்கள் அல்லாதவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள வரம்பைத் தாண்டி, தீண்டத்தகாதவர்கள் [பிற] கோவில்களில் நுழைவது தொடர்பான கட்டாய சட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ மாட்டோம்”.
ஜூன் 20, 1941 அன்று, தீண்டத்தகாதவர்களை கோவில்களுக்குள் நுழைய அனுமதிக்கும் விவகாரத்தில், சனாதன இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தமாட்டேன் என்று மீண்டும் உறுதியளித்தார். இந்த முறை ஒருபடி மேலே சென்று
“பெண்களுக்கு எதிரான மற்றும் தலித் எதிர்ப்பு இந்து தனிச்சட்டங்களைத் தொடமாட்டேன். புராதன கோவில்களில் தீண்டத்தகாதவர்கள் நுழைவது தொடர்பான எந்த சட்டத்தையும் இந்து மகாசபை வலியுறுத்தவோ அல்லது அந்தக் கோவில்களில் நிலவும் புனிதமான பழமையான மற்றும் தார்மீக பயன்பாடு வழக்கத்தை மாற்ற சட்டத்தின் மூலம் கட்டாயப்படுத்தவோ முயற்சிக்காது என்று நான் உத்தரவாதம் அளிக்கிறேன். நமது சனாதன சகோதரர்கள் மீதான சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைக்கும் எந்த தனிச்சட்டத்தையும் இந்துமகாசபை ஆதரிக்காது”
என்றும் வாக்குறுதியளித்தார்.
சாவர்க்கர் தனது வாழ்நாள் முழுவதும் சாதியத்தின் சிறந்த தலைவனாகவும், மனுஸ்மிருதியை வழிபடுபவராகவுமே இருந்தார். எந்த மனு நெறிமுறைகள் சாதிய அமைப்பும், தீண்டாமையும் தோன்றி வளரக் காரணமாக இருந்ததோ, அம்மனுஸ்மிருதியைப் பெரிதும் போற்றி அவர் எழுதியதாவது :
“மனுஸ்மிருதி என்பது இந்த இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படும் விதிகளாகும். இது பண்டைய காலங்களிலிருந்து நமது கலாச்சாரம் -பழக்க வழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைகளின் அடிப்படையாக மாறியுள்ளது. இந்த புத்தகம் பல நூற்றாண்டுகளாக இந்த தேசத்தின் ஆன்மீக மற்றும் தெய்வீக பயணத்தின் குறியீடாக உள்ளது. இன்றும் கோடிக்கணக்கான இந்துக்கள் தங்கள் வாழ்விலும், நடைமுறையிலும் பின்பற்றும் விதிகள் மனுஸ்மிருதியின் அடிப்படையிலேயே உள்ளன. இன்று மனுஸ்மிருதியே இந்து சட்டம். அதுவே இந்து மதத்தின் அடிப்படை”
என்று குறிப்பிட்டுள்ளார்.
சாவர்க்கரை தீண்டாமைக்கு எதிரானவர் என்று நிறுவுவதில் முனைந்துள்ள சாவர்க்கரிஸ்டுகள், துரதிர்ஷ்டவசமாக டாக்டர் அம்பேத்கர், பிப்ரவரி 18, 1933 அன்று சாவர்க்கருக்கு எழுதிய கடிதத்தை தவறாக சித்தரிக்கவும் கூச்சப்படுவதில்லை. அக்கடிதத்தைக் கொண்டு சாவர்க்கரை தீண்டாமைக்கு எதிரான ஒரு போராளியாக நிலைநிறுத்த முயல்கின்றனர்.
அக்கடிதத்தைக் குறிப்பிட்டு சாவர்க்கரிஸ்டுகள் வாதிடுவதாவது :
“சமூக சீர்திருத்தத் துறையில் நீங்கள் ஆற்றிவரும் பணிக்கான எனது பாராட்டுக்களை உங்களுக்குத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றால், தீண்டாமையை நீக்கினால் மட்டும் போதாது; அதற்காக நீங்கள் ‘சதுர்வர்ணத்தை’ [நால்வர்ணத்தை] அழிக்க வேண்டும். இதை உணர்ந்த ஒரு சில தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” [பிப். 18, 1933 அன்று சாவர்க்கருக்கு அம்பேத்கர் எழுதிய கடிதத்திலிருந்து சாவர்க்கரிஸ்டுகள் மேற்கோள் காட்டும் பகுதி]
சாவர்க்கரிஸ்டுகளின் நேர்மையின்மையை வாசகர்களுக்குத் தெரியப்படுத்தவேண்டும் என்பதற்காக அந்தக் கடிதம் முழுவதுமாக இங்கே கொடுக்கிறோம் :
“ரத்னகிரி கோட்டையில் உள்ள கோவிலை தீண்டத்தகாதவர்களுக்காகத் திறக்க என்னை அழைத்த கடிதத்திற்கு மிக்க நன்றி. முன்பே திட்டமிடப்பட்ட பணிகளின் காரணமாக உங்களது அழைப்பை என்னால் ஏற்க முடியாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன். எவ்வாறாயினும், சமூக சீர்திருத்தத் துறையில் நீங்கள் ஆற்றிவரும் பணிக்கான எனது பாராட்டுக்களை உங்களுக்குத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன். தீண்டத்தகாதவர்களின் பிரச்சனை என்று அழைக்கப்படுவதை எனது பார்வையில் பார்க்கும்போது, அது இந்து சமூகத்தின் மறுசீரமைப்பு பிரச்சினையுடன் நெருக்கமாகப் பிணைந்திருப்பதாக உணர்கிறேன். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் என்றால் தீண்டாமையை ஒழித்தால் மட்டும் போதாது, அதற்கு நீங்கள் சதுர்வர்ணத்தை அழிக்கவேண்டும். தீண்டத்தகாதவர்கள் இந்து சமுதாயத்தின் ஒரு அங்கமாக இல்லாமல் பிற்சேர்க்கையாக மட்டுமே இருக்க வேண்டும் என்றால், கோவிலைப் பொருத்தவரை தீண்டாமை நிலைத்திருக்கலாம். இதை உணர்ந்த வெகு சிலரில் [அதாவது சதுர்வர்ணத்தை அழிக்க வேண்டும் என்று சாவர்க்கர் உணர்ந்திருந்தார் என்ற பொருளில் அம்பேத்கர் கூறவில்லை. ஆலயத் தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென சாவர்க்கர் உணர்ந்திருந்தார் என்ற பொருளில் அம்பேத்கர் கூறுகிறார்.] நீங்களும் ஒருவர் என்பதை கண்டு மகிழ்கிறேன். ஆனால் இன்னும் நீங்கள் [சாவர்க்கர்] சதுர்வர்ணத்தின் வாசகங்களைப் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த அடிப்படையில் நீங்கள் தகுதி பெற்றாலும் [உயர்ந்தவரென்றாலும்] அது துருதிருஷ்டவசமானது. இருப்பினும், காலப்போக்கில் இந்த தேவையற்ற மற்றும் விசமத்தனமான பிதற்றல்களைக் கைவிட உங்களுக்கு துணிச்சல் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்’’
படிக்க :
சாவர்க்கர், இரு தேசக் கோட்பாடு மற்றும் இந்துத்துவா | ராம் புனியானி
தன் மீது கருணை காட்டுமாறு மன்றாடிய சாவர்க்கர் !
[அதாவது அம்பேத்கரின் கடிதத்திலிருந்து சில வாசகங்களை எடுத்து வெட்டி ஒட்டி, சாவர்க்கர் நால்வர்ண அமைப்புக்கு எதிராகப் போராடியவர் என்று அம்பேத்கரே பாராட்டியிருப்பதைப் போன்ற பொய்ப்பிரச்சாரத்தை செய்கிறார்கள் சாவர்க்கரிஸ்டுகள். ஆனால் அம்பேத்கர் அதேகடிதத்தில், சாவர்க்கர் நால்வர்ண அமைப்பை ஆதரித்ததை சாடுகிறார்.]
உண்மையில், டாக்டர் அம்பேத்கர் 1940 இல் [“பாகிஸ்தான் அல்லது தேசப்பிரிவினை” என்ற நூலில்] ஒரு முடிவுக்கு வந்தார். அது,
“இந்து ராஷ்டிரம் உண்மையாக அமைந்தால், அது இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அது சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். அந்த வகையில் அது ஜனநாயகத்திற்குப் பொருந்தாது. எந்தவிலை கொடுத்தாயினும் இந்து ராஷ்டிரத்தைத் தடுத்தாக வேண்டும்”.
(குறிப்பு : சாவர்க்கரை சாதிய தீண்டாமைக்கு எதிரானவர் போல சித்தரிக்கும் கட்டுரை ஒன்று சமீபத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழிளில் வெளியானது. அதை அம்பலப்படுத்தும் விதமாக இந்து மகாசபையின் அதிகாரப்பூர்வ ஆவணங்களிலிருந்தே ஆதாரங்களுடன் பேரா. சம்சுல் இசுலாமால் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் சாவர்க்கர் எந்தளவுக்கு சாதிவெறியராகவும், மனுதர்மத்தின் பாதுகாவலராகவும், ‘தூய’இந்து இரத்தம் என்ற கருத்தாக்கத்தின் பிதாமகனாகவும் விளங்கினார் என்பதை அவரது எழுத்துக்களிலிருந்தே தெளிவாக அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர். மேலும் இந்து தேசம், இந்துராஷ்டிரம் என்பது சாதியை ஒழித்த, சாதியைக் கடந்த இந்து தேசமல்ல சாதிய ஒடுக்குமுறையைப் பாதுகாப்பதின் அடிப்படையிலான இந்து தேசமே என்பதையும் சாவர்க்கரின் எழுத்துக்களிலிருந்தே வாசகர்கள் விளங்கிக் கொள்ள முடியும். பட்டை அடைப்புக்குறிக்குள் கூறப்பட்டுள்ளவை மொழிபெயர்ப்பாளரின் வார்த்தைகள் ஆகும்.)

கட்டுரையாளர் : பேராசிரியர் சம்சுல் இசுலாம்
மொழியாக்கம் : இசாஸ் ரஹ்மான்
நன்றி : Countercurrents

அயோத்தியா மண்டபம் விவகாரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !

13.04.2022
அயோத்தியா மண்டபம் விவகாரம் :
ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன  கும்பலை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்திடுக !
தமிழ்நாடு அரசின் அதிகாரமா? பார்ப்பன பாசிஸ்டுகளின் அதிகாரமா?
எது உயர்ந்தது என்று முடிவு செய்வோம் !
தமிழ்நாட்டில் கலவரம் செய்ய துடிக்கும்
பார்ப்பன பாசிஸ்டுகளை தெருவில் இறங்கி முறியடிப்போம் !
பத்திரிகைச் செய்தி !
சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954-ம் ஆண்டு கட்டப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த மண்டபத்தில் தொடர்ச்சியாக ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள் தங்களுடைய நச்சுக் கருத்துக்களை பரப்பி வந்தனர். தீட்சிதப் பார்ப்பனர்களுக்கு தில்லை நடராஜர் கோயிலைப்போல மேற்கு மாம்பலம் பார்ப்பனர்களுக்கு அயோத்தியா மண்டபம் பார்ப்பன பாசிஸ்டுகளின் புகலிடமாகவும் இந்து மதவெறி பயங்கரவாதிகளின் மையமாகவும்  அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல.
இப்படிப்பட்ட பார்ப்பன பாசிஸ்டுகளின் கூடாரமான இந்த அறக்கட்டளை பொதுமக்களிடம் நன்கொடை மற்றும் காணிக்கை பெற்றே செயல்பட்டு வருகின்றது. ஸ்ரீ ராம் சமாஜம் அறக்கட்டளை நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக அதன் முன்னாள் அறங்காவலர் உள்ளிட்ட பலர் புகார்கள் அளித்த நிலையில் அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது.

படிக்க :

கோவில்கள், அகாராக்கள், சாதுக்கள், கொலைகள் !

அயோத்தி இராம ஜென்மபூமி : வரலாறும் புனைசுருட்டும்

இதனை எதிர்த்து, ஸ்ரீ ராம் சமாஜ் அமைப்பு சார்பில் கடந்த 2014-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கை கடந்த மாதம் விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.எம். வேலுமணி, “இந்து சமய அறநிலையத்துறை சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தலாம் எனவும், ஸ்ரீ ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.
மேற்கண்ட தீர்ப்பு வெளியாகி மூன்று வாரங்கள் கழித்து ஏப்ரல் 13 அன்று அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வருவதற்காக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சென்றபோது, ஆர்எஸ்எஸ் – பாஜக பார்ப்பன பாசிஸ்டுகள், ரவுடிகள் மற்றும் பொறுக்கிகளோடு கும்பலாக சேர்ந்துகொண்டு அறநிலையத்துறை அதிகாரிகளையும் போலீசையும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் போலீஸ் மீதும் அதிகாரிகள் மீதும் கல்வீச்சில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
அயோத்தியா மண்டபத்தில் பூட்டி அதனுள்ளே யாரும் உள்ளே நுழைய முடியாதபடி அவர்கள் முற்றுகையிட்டுள்ளனர். உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த சென்ற அதிகாரிகளை தடுத்து அவர்களை தாக்கி உள்ளே செல்லவிடாமல் தடுத்தது என்பது அரசுக்கு எதிரான குற்றமாகும்.
இச்செயலில் ஈடுபட்ட உமா ஆனந்தன் கவுன்சிலர், கரு. நாகராஜன் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக நிர்வாகிகள் 75 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். உழைக்கும் மக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடும்பொழுது போலீசுடன் தள்ளுமுள்ளுவில்  ஈடுபட்டால்  உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு பிணை மறுக்கப்படுகிறது.
ஆனால், பார்ப்பன பாசிஸ்டுகள் காலையில் கைது செய்யப்பட்டு நன்றாக சோறுபோட்டு மாலையில் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதுதொடர்பாக தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய கண்டனத்தை பாஜக கட்சிக்கு தெரிவித்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பனக் கும்பலுக்கு எப்படி அயோத்தியா மண்டபத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமோ, அதைவிட அந்த அயோத்தியா மண்டபம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட வேண்டும் என்பது முக்கியம்.
தமிழ்நாட்டில் யாருடைய அதிகாரம் உயர்ந்தது என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு, நிதி முறைகேட்டில் ஈடுபட்ட அந்த அறக்கட்டளை நிர்வாகிகள் கைது செய்வதுடன் அயோத்தியா மண்டபத்தில் உடனடியாக இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் முழுமையாக கொண்டு வர வேண்டும்.
இப்பிரச்சினையை சாக்காக வைத்துக் கொண்டு தமிழகத்தில் கலவரம் நடத்த முயற்சி செய்த கோட்சேவின் பேத்தி என்று பெருமையாக பீற்றிக் கொண்ட உமா ஆனந்தன் கவுன்சிலர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன ரவுடிக் கும்பல் உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டு அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் – பாஜக பார்ப்பன கும்பல் தெருவில் இறங்கிப் போராடுவது நீடித்தால் அதை முறியடிக்க வேண்டியது புரட்சிகர, ஜனநாயக, பெரியாரிய அமைப்புகளின் கடமையாகும் என்றும் மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
தோழமையுடன்,

தோழர் மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321.

தாளவாடி வனப்பகுதி : பழங்குடி மக்களை அச்சுறுத்தும் புலிகள் காப்பகமும் – கார்ப்பரேட் நலனும் !

த்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள வனப்பகுதி வழியே செல்லும் திம்பம் மலைப்பாதையில், வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து போவதைத் தடுப்பதற்காக, 2019-ம் ஆண்டில் அப்போதைய ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவன் இரவுநேர போக்குவரத்துத் தடையை அமல்படுத்தினார். இத்தடைக்கெதிராக மக்களின் தொடர்ச்சியான போரட்டத்தால் அது நீக்கப்பட்டது.
இந்த நிலையில் 2012 முதல் 2021-ம் ஆண்டு வரை, 155 வனவிலங்குகள் மலைப்பாதையில் அடிபட்டு இறந்துள்ளன எனவும், 2019-ம் ஆண்டில் மாவட்ட ஆட்சியர் விதித்த போக்குவரத்துத் தடையை மீண்டும் அமல்படுத்த வேண்டுமெனவும் சொக்கலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பிப்ரவரி 10 முதல் திம்பம் சாலையில் இரவு போக்குவரத்துத் தடையை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. இதன்படி கனரக வாகனங்களுக்கு மாலை 6 மணி முதலும், இலகுரக வாகனங்கள் – பயணிகள் வாகனங்களுக்கு இரவு 9 மணி முதலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் மலைப்பகுதியில் விளையும் விவசாய விளைபொருட்களை மேட்டுப்பாளையம் சந்தைக்கு எடுத்து செல்ல முடியாமல் வீணாகும் அவலமும், சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் அவசரத் தேவைகளுக்கும்கூட வெளியே செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடையைக் கண்டித்து தாளவாடி விவசாயிகள், வியாபாரிகள், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தினர், வேன் ஓட்டுநர்கள் என பல தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கினர். எனினும் தடையை விலக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
படிக்க :
கவுத்தி – வேடியப்பன் மலை : கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகத் தொடரும் போராட்டம்!
சிபிஎம் கருத்துக்கு மறுப்பு : பாலியப்பட்டு சிப்காட் எதிர்ப்பு போராட்டத்தை ஆதரிப்போம் ! | மக்கள் அதிகாரம்
திம்பம் மலைப்பாதையில் வன விலங்குகள் இறந்துள்ளது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரப்பட்டதில், 2012-2021 காலகட்டத்தில், வாகனப் போக்குவரத்தால் 40 வனவிலங்குகள் மட்டுமே இறந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. அதிலும் தடை அமல்படுத்தப்பட்ட வனப்பகுதிக்கு வெளியே பண்ணாரி சாலையில் 7 விலங்குகள் இறந்துள்ளன. மீதமுள்ள 20 விலங்குகள் பகலிலும், 13 விலங்குகள் இரவிலும் இறந்துள்ளன என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதன்மூலம், வழக்கு தொடுத்தவர் இந்தக் காலகட்டத்தில் ஈரோடு மாவட்டம் முழுவதிலும் இறந்து போன மயில்கள் உட்பட அனைத்தையும் கணக்கில் சேர்த்து 155 வனவிலங்குகள் இறந்துள்ளன என்ற பொய்யான தகவலை நீதிமன்றத்தில் கொடுத்துள்ளார் என்பது அம்பலமாகியுள்ளது.
வாகனப் போக்குவரத்தால் வனவிலங்குகளுக்கு நேரும் துன்பத்திற்காக கண்ணீர் விடும் நீதிபதிகள், தமிழகம் முழுவதும் வனப்பகுதிகளைப் பிளந்து போடப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டு சாகும் விலங்குகள் குறித்தோ, விபத்துகளில் சாகும் மனிதர்கள் குறித்தோ என்ன நடவடிக்கை எடுத்துள்ளனர்?
2021-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் நடந்துள்ள 55,713 சாலை விபத்துகளில் 14,912 பேர் இறந்துள்ளனர் என அரசே கூறுகிறது. இத்தனை ஆயிரம் பேரின் மீதும் அக்கறையில்லாத நீதிமன்றத்துக்கு, ஆண்டுக்கு இரண்டு விலங்குகள் இறந்து போகின்றன என்றதும் கருணை ஊற்றெடுப்பது ஏன்? இக்கருணைக்குப் பின்னால் ஒளிந்திருப்பது எது?
கொட்டமடிக்கும் வனத்துறை அதிகாரிகள்!
சத்தியமங்கலம் வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப் பாதை.
அப்பகுதியில் வாழும் பழங்குடியினர், ஒரு ஆண்டில் ஆறு மாதங்கள் நிலத்தில் கம்பு, சோளம், கேழ்வரகு போன்ற சிறு தானியங்களை விவசாயம் செய்து தங்களது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கின்றனர். மீதமுள்ள ஆறு மாதங்கள் காடுகளில் சிறு வன மகசூல் சேகரிப்பான தேன், சீயக்காய், நெல்லிக்காய், சீமார் புல், கடுக்காய் போன்ற 35 வகையான பொருட்களை – ஒருமுறை எடுத்தால் மீண்டும் கிடைப்பவை – எடுப்பதன் மூலம் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். பழங்குடி அல்லாதோர் வனத்தில் கால்நடைகளை மேய்த்தும், கூலி வேலைகளை செய்தும் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போது சிறு வன மகசூல் செய்ய பழங்குடியினர் பெரும்பாலும் காடுகளில் அனுமதிக்கப்படுவதில்லை; சீமார் புல் மட்டும் எடுத்து வருகின்றனர். அதுவும்கூட வனத்துறை அதிகாரிகளின் ஊழலுக்காக அனுமதிக்கப்படுகிறது என்கின்றனர் பழங்குடி மக்கள். 10 பேர் கொண்ட கிராம வனக்குழு (VFC – Village Forest Council) ஊர் மக்களால் உருவாக்கப்படுகிறது. அக்குழுவிலிருந்து ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அதே வனப்பகுதிக்கு உட்பட்ட வனகாவலர் செயலாளராக இருப்பார். சிறு வன மகசூல் மூலம் கிடைக்கும் பணம் இவ்விருவரின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி சேமித்து வைக்கப்படும்.
தாளவாடி மலைப்பகுதியைச் சேர்ந்த ஒரு கிராம வனக்குழுத் தலைவர் கூறுகையில், “சீமார் புல் அறுக்க கிலோவிற்கு ரூ.25 கூலி. குழுவிற்கும் புலிகள் காப்பகத்திற்கும் தலா ரூ.5 என பிரிக்கப்படும். வி.எஃப்.சி (VFC) மக்கள் கட்டுப்பாட்டில் இல்லை, வனத்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கு. குழுவில் சேமித்த பணம் 8 லட்சம் இருக்கு. ஆனால் அதனை எடுத்து எங்க அடிப்படை தேவையைப் பூர்த்தி செய்யச் சொன்னால்கூட செய்வதில்லை. இந்தப் பணத்திலிருந்து வனக் போலீசுத்துறை அதிகாரி, வேட்டைக் காவல் தடுப்புப் படைக்கு சம்பளம் கொடுக்க எடுக்கிறாங்க. பணத்தைத் திரும்பக் கொடுக்கிறதில்லை. 5 டன் லோடு சீமார் புல் எடுத்திட்டு போய் விற்பனை செய்துவிட்டு வந்தால் இலாபமோ, நட்டமோ ரூ.50,000 வனத்துறையிடம் கொடுத்திடனும்” என்கிறார்.
இதுபோல் 28 கிராம வனக்குழுக்கள் கணக்கிலும், பழங்குடியினர் மக்களின் உழைப்பில் சேமித்த பணம் சுமார் 1 கோடி ரூபாய் இருக்கிறது. அதை வைத்து மின்சார வசதி, வீட்டு வசதி, தண்ணீர் வசதி போன்ற அடிப்படைத் தேவைகளை மக்கள் பூர்த்தி செய்துகொள்ள முடியும். ஆனால் அவ்வாறு செய்யவிடாமல் வனக் போலீசுத்துறை அதிகாரிகள் பழங்குடி மக்களை ஏமாற்றி வருகின்றனர். பழங்குடியினர்மீது பொய் வழக்கு போடுவது, விசாரணை என்று கூட்டிச் சென்று அடித்துத் துன்புறுத்துவது என மக்களை அச்சத்திலேயே வைத்துள்ளனர் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
திம்பம் மலைப்பாதைப் பிரச்சினைக்கு மூலக்காரணமாக இருப்பது 2013-ல் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். அதன் பின்னர்தான் மலைவாழ் மக்கள் மீதான வனத்துறையின் ஒடுக்குமுறை அதிகரிப்பதும், போக்குவரத்தைத் தடை செய்வதும் நடந்து வருகிறது. மைசூருக்கு செல்லும் வாகன ஓட்டிகளிடம் வலுக்கட்டாயமாக வசூல் செய்யும் வகையில், ‘சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அறக்கட்டளை’ என்ற பெயரில் அடாவடி வசூல் மையம் ஒன்றை அமைத்திருக்கிறது வனத்துறை. இதன் விளைவாக தன் சொந்த ஊருக்கு செல்வதற்கே மலைவாழ் மக்கள் சோதனைச் சாவடியில் ரூ.50 நுழைவுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவலநிலையும் ஏற்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே வாழ்வாதாரம் இழந்து கொண்டிருக்கும் இம்மக்கள்மீது இன்னொரு இடியை இறக்கியுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். மார்ச் 4 அன்று வனப்பகுதிக்குள் கால்நடைகளை மேய்க்கத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கெதிராக, புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டியுள்ள தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வனப்பகுதி மக்கள் போராட்டத்தை நடத்தியுள்ளனர். தமிழகத்தில் மசினக்குடி மக்கள் போராட்டத்தை நடத்தி கலெக்டரிடம் மனுக்களை கொடுத்துள்ளனர். “பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்” என்பதற்கேற்ப எல்லா முனைகளிலும் தமது வாழ்வாதாரத்தை இழந்து கொண்டிருக்கின்றனர் தாளவாடி மலைவாழ் மக்கள்.
வன உரிமைச் சட்டம்: கண்ணைக் குத்தும் ‘தங்க’ ஊசி!
துடைப்பம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாளவாடி மலைப்பகுதி ராமரணை கிராம பழங்குடி மக்கள்.
மலையையும் காட்டையும் தெய்வமாகக் கருதுகின்ற, சூதுவாது அறியாதவர்கள் என்று பிறரால் சொல்லப்படுகின்ற பழங்குடி – மலைவாழ் மக்கள்மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு என்ன காரணம்? எந்த வனத்தை இத்தனை ஆண்டுகள் அவர்கள் பராமரித்தார்களோ, எந்த வனம் அவர்களை வாழ வைத்து வருகின்றதோ, அதை இம்மக்கள் அழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டி சிலர் கிளம்பியிருப்பதுதான். வன உரிமைச் சட்டம் – 2006 தங்களைப் பாதுகாக்கும் என இம்மக்கள் கருதியிருக்கையில், அதையே ஆயுதமாகக் கொண்டு அப்பாவிகளை அழித்தொழிக்க எத்தனிக்கிறது இந்த கார்ப்பரேட் ஆதரவு கும்பல்.
தமது வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் தொடர் போராட்டங்களின் விளைவாக 2006-ம் ஆண்டில் வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இச்சட்டம் ஒப்பீட்டளவில் உதவும் தன்மையைக் கொண்டிருந்தது. பழங்குடி மக்களின் கிராம சபைகளுக்கு சில அதிகாரங்களையும் கொடுத்தது. விவசாயம் செய்துவரும் பழங்குடிகளுக்கு நில உரிமை, சிறு வன மகசூலை சேகரிக்கவும் விற்கவும் உரிமை, பாரம்பரியமாக பயன்படுத்திய பாதை – நீர்நிலைகளைப் பயன்படுத்தும் உரிமை, ஆடு – மாடு மேய்ச்சலுக்கான உரிமை, காட்டு வளங்களைப் பாதுகாத்தல், மேலாண்மை செய்தல் போன்ற உரிமைகளை இச்சட்டம் அங்கீகரிக்கிறது. இவையெல்லாம் கேட்க நன்றாக இருந்தாலும், நடைமுறையில் எதிர்விளைவுகளே உருவாகியிருக்கின்றன.
இச்சட்டம் பல இடங்களில் அமலுக்கு செல்லவில்லை, அமல்படுத்தப்பட்ட இடங்களில் மக்களின் உரிமையை நிராகரிக்கவே பயன்படுத்தியிருக்கின்றன மாநில அரசுகள். இச்சட்டத்தின் அடிப்படையில் தனிப்பட்ட உரிமைக் கேட்பு மனுக்கள் இலட்சக்கணக்கில்  நிராகரிக்கப்பட்டுள்ளன. 2018 நவம்பர் புள்ளி விவரத்தின்படி முதல் மூன்று இடங்களில் சத்தீஸ்கர் (4,55,000), மத்தியப்பிரதேசம் (3,50,000), மகாராஷ்டிரா (1,20,000) ஆகியவை உள்ளன.
2005 டிசம்பர் 13-ம் தேதிக்குமுன் பழங்குடியினர் காடுகளில் வாழ்ந்திருக்க வேண்டும். பழங்குடி அல்லாதோர் 75 ஆண்டுகள் (மூன்று தலைமுறைகளாக) வாழ்ந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகளை வைத்துக்கொண்டே, அதிகார வர்க்கம் ஏதுமறியாத அப்பாவி பழங்குடிகளை, மலைவாழ் மக்களை அலைக்கழித்து வருகிறது. இந்தியா முழுவதிலும் எல்லா மாநிலங்களிலும் இந்த அதிகார வர்க்கமே சிற்றரசர்கள், பண்ணையார்கள் போல ஆதிக்கம் செலுத்தி, பழங்குடி மக்களை விரட்டியடிப்பதில் முனைப்பு காட்டி வருகிறது.
பட்டா கேட்டு வரும் விண்ணப்பங்களை நெறியற்ற முறையில் நிராகரித்தும், நிராகரிப்புக்கான காரணத்தை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டுமென்ற சட்ட விதிகளை மயிரளவுக்கும் மதிக்காமலும் வனத்துறை அதிகாரிகள் கொட்டமடித்து வருகின்றனர். சர்க்கரை என ஏட்டில் எழுதி வைத்துக் கொண்டால் இனிக்காது என்பதற்கு இந்தச் சட்டமே சான்று.
2008-ம் ஆண்டில், வனப்பகுதிகளில் இருக்கும் பழங்குடி மக்களை வெளியேற்ற வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த “வைல்ட் லைஃப் ஃபர்ஸ்ட்” என்ற அமைப்பு, வன உரிமைச் சட்டம் மூலம் நிலப்பட்டாக்கள் கொடுக்கக் கூடாது என வாதிட்டது. இதன்மூலம் பழங்குடிகள் காட்டை அழித்து விடுவார்கள் என்று அயோக்கியத்தனமாக வாதம் புரிந்தது. மேற்சொன்ன நிராகரிப்புகள் அடிப்படையில், பட்டா இல்லாத பழங்குடிகளை காடுகளைவிட்டு விரட்ட வேண்டுமென கோரிக்கை வைத்தது. இதற்கு மத்திய அரசு எந்த பதிலும் சொல்லாத நிலையில், 2019-ல் பட்டா இல்லாதவர்களை வெளியேற்றும் உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்தது. அதன் பிறகு பரவலாக எதிர்ப்பு எழுந்த அடிப்படையில் மத்திய அரசு முறையீடு செய்தபின் தற்காலிகமாக தனது உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
அரசின் நோக்கம் காடு பாதுகாப்பா, கார்ப்பரேட் சேவையா?
“அந்தக் காலத்துல விலங்கு காட்டுலதான இருந்துச்சு, நாங்களும் இங்கதான இருக்கோம்; இப்போ என்ன புதுசா விலங்குகள் மேல அக்கறை வந்துச்சு?” “நாங்களும் விலங்குகளும் அனுசரித்துதான் வாழ்கிறோம், எந்தக் காப்பகமும் தேவையில்ல” “புலிகள் காப்பகம் வந்தபின் வனத்துறை ஒரு செடியைக்கூட நட்டதில்லை” “புலிகள் காப்பகத்துக்கு வெளியில் இருந்து பணம் வந்தாலும் இவங்க ஒன்னும் புலிக்கு உணவு கொடுக்கிறதில்ல” என்கின்றனர் பழங்குடி மக்கள்.
பழங்குடி மக்களால் வனத்துக்கும் வன உயிர்களுக்கும் ஆபத்து எனக் கூக்குரலிடும் அதிகாரிகள், ஆணையங்கள், தன்னார்வக் குழுக்கள் எவரும், அதற்கான ஆதாரங்கள் எதையும் காட்டுவதில்லை. இவர்கள் காட்டும் ஆதாரங்கள் எல்லாம் திம்பம் மலைப்பாதை தொடர்பாகக் காட்டப்படுவதைப் போன்ற பொய்கள்தானே தவிர வேறொன்றுமில்லை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வனங்களில் வாழ்ந்து, வனத்தைப் பராமரிப்பதன் மூலமாக தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் பழங்குடிகள்மீது பழிபோடுவதன் நோக்கம் என்ன? அவர்களை விரட்ட நினைப்பது ஏன்?
களச்செய்தி சேகரிப்பின்போது, அப்பகுதி நிலைமையை நமக்கு விளக்கிய தாளவாடி பகுதி பழங்குடி மக்கள்.
2001 – 2006 கால கட்டத்தில் மட்டும் சுமார் 5 இலட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதியை அரசு ஆக்கிரமித்து அங்கிருந்த பழங்குடிகளை விரட்டியது. இந்த நிலங்களை பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்தது. குறிப்பாக, மக்கள் தொகையில் மூன்றில் ஒருபகுதியினர் பழங்குடிகளாக இருக்கும் சத்தீஸ்கரில்தான் 4,55,000 பழங்குடிகளின் நிலப்பட்டா கோரிக்கை மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவிலேயே மிக அதிகமாகும். இதே சத்தீஸ்கரில்தான் ஏராளமான வனப்பகுதியை பெரும் சுரங்க நிறுவனங்களுக்கு அரசு அள்ளிக் கொடுத்திருக்கிறது என்பதை இத்துடன் இணைத்துப் பார்க்கும்போது, வனத்தின் மீதான அரசின் அக்கறையைப் புரிந்து கொள்ள முடியும்.
இந்தக் கோணத்தில் இருந்துதான், அரசு கொண்டுவரும் சட்டத்திருத்தங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. 1980-ம் ஆண்டின் வனப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கோரும் மசோதா ஒன்றை 2019-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது மோடி அரசு. காடுகளையும் மலைகளையும் தனியார்மயமாக்கவும், மாவட்ட வன அதிகாரிக்கு உச்சபட்ச அதிகாரத்தை வழங்கவும் இத்திருத்தம் வழிவகை செய்கிறது. கைது நடவடிக்கைக்கு ஆளாகும் பழங்குடிகள் தங்களை தாங்களே நிரபராதி என்று நிரூபிக்க வேண்டும் என்பதோடு, அவர்கள் தடை உத்தரவை மீறினால் துப்பாக்கிச்சூடு நடத்த ஆணையிடுவதற்கான அதிகாரத்தையும் வனத்துறைக்கு அளிக்கிறது இத்திருத்தம்.
சரணாலயங்களின் நடுவே பல ஹெக்டேர் பரப்பளவில் உள்ள தனியாருக்குச் சொந்தமான காடுகளை வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்து நீக்கி வணிக நோக்கத்தில் பயன்படுத்த வழிவகுக்கிறது. மேலும், காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. வன உயிர் பூங்கா, வன உலாக்கள் போன்றவற்றை அனுமதிப்பதன்மூலம் காடுகளை தனியார் நிறுவனங்களின் இலாப வெறிக்கு இரையாக்குகிறது.
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி குஜராத்தில் தனியார் மிருகக் காட்சிச் சாலை அமைத்து வருகிறார். 2020-ம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது 160 வன உயிர் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் ஒப்பந்தமிட முடிவு செய்துள்ளது. மேற்சொன்ன இரு தகவல்களும், வனப்பகுதிகள் – வன விலங்குகள் பாதுகாப்பில் மத்திய அரசின் அதீத அக்கறைக்கும் பழங்குடிகளை விரட்டுவதற்கும் கார்ப்பரேட் நலனே காரணம் என்பதை அம்பலப்படுத்துகின்றன.
படிக்க :
அசாம் : 70 ஆண்டுகளாக வீடு, சாலை, மின்சாரம் இல்லாமல் வாழும் பழங்குடிகள் !
சத்தீஸ்கர் : துணை இராணுவப் படையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடும் பழங்குடியின மக்கள் !
இது மட்டுமின்றி, கார்பன் வணிகம் என்ற நோக்கத்தில் தனியார் காடுகளை வளர்ப்பதில் கார்ப்பரேட்டுகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வனப் பகுதிகளைக் கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்த்து, ஒவ்வோராண்டும் பல்லாயிரம் கோடிகளை அள்ளிச்செல்ல அனுமதிப்பதே அரசின் திட்டம். இதற்காக வனப்பகுதிகளில் இருந்து பழங்குடிகளை விரட்டுவதற்கு புலிகள் காப்பகம் போன்ற முகமூடிகள் அரசுக்கு அவசியமாக இருக்கின்றன.
இந்த நோக்கங்களை அடையும் வகையில்தான் திம்பம் மலைப்பாதையில் தற்போது போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையால் வாழ்வாதாரம் இழக்கும் பழங்குடிகளும் விவசாயிகளும் வனத்தையும் காட்டையும் விட்டு தானாக வெளியேறுவார்கள் அல்லது அரசால் வெளியேற்றப்படுவார்கள்.
கார்ப்பரேட்டுகளின் இந்த நோக்கத்தை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதும், தங்களின் வாழ்வாதார உரிமைக்காகப் போராடும் மலைவாழ் மக்களோடு இணைந்து நிற்பதும் நம் ஒவ்வொருவரின் கடமை.

களச் செய்தியாளர்
புதிய ஜனநாயகம்.

குறிஞ்சாங்குளம் படுகொலை : சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு !

குறிஞ்சாங்குளம் படுகொலை :
சூத்திர – ஆதிக்க சாதிவெறியை பாதுகாக்கும் அரசமைப்பு!
சாதிவெறியை இனப் பகையாக சித்தரிக்கும் தமிழ்த்தேசிய துரோகிகள்!

முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. தங்கள் வழிபாட்டு உரிமைக்காகப் போராடி ஆதிக்க சாதி வெறியர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட குறிஞ்சாங்குளம் தியாகிகளுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இன்னமும் நீதி கிடைக்கவில்லை. “சமூகநீதி படைத்த தமிழ்நாடு” என்று பெருமை பொங்கும் நமது எருமைத்தோல்களை நெருப்பாய் சுடுகிறது இவ்வுண்மை.

கொலைகாரர்கள் ‘நீதி’மன்றத்தால் விடுவிக்கப்பட்டு சுதந்திரமாக உலவிக்கொண்டிருக்கிறார்கள். கோயிலினுள் வைக்கப்படுவதற்காக தாழ்த்தப்பட்ட மக்களால் கொண்டுவரப்பட்ட காந்தாரி அம்மன் சிலை, முப்பதாண்டுகளாக அரசு நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தடுப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.

இதையெல்லாம் காணும்போது போலீசு, நீதித்துறை என மொத்த அரசுக்கட்டமைப்பே எப்படி ஆதிக்க சாதிவெறியர்களுக்கு ஆதாரத்தூணாக இருக்கிறது என்பது அம்பலப்படுகிறது. மேலும் சூத்திர சாதிவெறியை பாதுகாப்பதுதான் இதுவரை தமிழ்நாட்டை ஆண்ட கட்சிகளின் சமூகநீதியா என்ற கேள்வியையும் நம்முன் எழுப்புகிறது.

குறிஞ்சாங்குளம் படுகொலையின் முப்பதாம் ஆண்டினை ஒட்டி, பல அமைப்புகள் கோயிலில் காந்தாரி அம்மனுக்கும் கோயிலுக்கு வெளியில் தியாகிகளுக்கும் சிலை வைக்கப்போவதாக அறிவித்தன. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டியும் வருகிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.

படிக்க :

இனப் படுகொலைக்கான பாதையில் ஏற்கெனவே பயணிக்கும் இந்தியா !

சாத்தான்குளம் படுகொலை : காவலர்களல்ல, கிரிமினல்களே !

இன்னொரு முனையில், குறிஞ்சாங்குளம் படுகொலைகளை தற்போது கையில் எடுத்து போராடுவதாகக் கூறிவரும் சிலநபர்களோ கொஞ்சம் ‘விசித்திரமானவர்கள்’. தமிழ்த்தேசியவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் இவர்கள், குறிஞ்சாங்குளம் படுகொலை என்பது ஆதித்தமிழர்களுக்கும் வந்தேறி வடுகர்களும் இடையிலான மோதல் என்று சித்தரிக்கின்றனர்.

குறிஞ்சாங்குளம் படுகொலையின் சுருக்கமான வரலாறு!

அன்றைய நெல்லை மாவட்டத்தின் கோவில்பட்டி, சங்கரன் கோயில் ஆகிய இரு ஊர்களின் எல்லையில் அமைந்துள்ள ஒரு பஞ்சாயத்துதான் குறிஞ்சாங்குளம். வழக்கமாக ஆதிக்க சாதியினர் ஊருக்குள்ளும் தாழ்த்தப்பட்ட மக்கள் ஊருக்கு வெளியேயும் வாழும் வகையில்தான் கிராமங்கள் அமைந்திருக்கும்.

அதற்கு மாறாக, குறிஞ்சாங்குளத்திலோ ஊர் சாலையின் மேற்கு திசையில் நாயுடு ஆதிக்க சாதி மக்களும் மறுபுறமான கிழக்கு திசையில் பறையர், சக்கிலியர், பள்ளர் ஆகிய தாழ்த்தப்பட்ட சாதி மக்களும் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு சாதி ஆதிக்க இலக்கணங்களுக்கு ஒவ்வாத நில அமைப்பே – தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் கண் முன்பு வாழ்வதே – நாயுடு சாதிவெறியர்களின் கண்களுக்கு உறுத்தல்.

தாழ்த்தப்பட்ட மக்களின் பயன்பாட்டில் இருந்த பெரும்பான்மையான புறம்போக்கு நிலங்களை நாயுடு சாதியினர் படிப்படியாக அபகரித்துக்கொள்கின்றனர். குறிப்பாக பறையர் சாதி மக்களின் காளி மற்றும் அய்யனார் கோயில்களை நாயுடு சாதியினர் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கென சொந்தமாக இருந்தது காந்தாரி அம்மன் கோயில் நிலம்தான்.

நத்தம் புறம்போக்கில் உள்ள 8 சென்ட்டுக்கும் குறைவாக உள்ள இடத்திலேயே தங்கள் குலதெய்வமான காந்தாரி அம்மனுக்கு ஆண்டுக்கு ஒருமுறை நிகழ்ச்சி நடத்திவந்தனர் பறையர் சாதி மக்கள். ஒவ்வொரு முறையும் அந்த நிலத்தில் உள்ள மண்ணை எடுத்து அதிலே சிலைசெய்து 4 நாட்கள் நிகழ்ச்சி நடத்திவிட்டு சென்றுவிடுவார்கள். மீண்டும் அடுத்த ஆண்டுதான் வருவார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் அக்கோயிலுக்கு முதல் மரியாதை நாயுடு சாதியை சேர்ந்த ஊர்த் தலைவருக்கே கொடுக்கப்படும். ஊர்த் தலைவரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று, அவர் “சாமி கும்புடுங்கடா” என்று உத்தரவு அளித்தப் பின்னர்தான், பறையர் பூசாரிக்கு அருள் வரும். இதுதான் அப்போது இருந்த நிலைமை.

தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் கட்ட வேண்டும் என்று சொன்ன போது, அவ்வூரைச்சேர்ந்த நாயுடு சாதி நபர் ஒருவரே கல்தூணையும் அன்பளிப்பாக கொடுத்துள்ளார். மேலும் சிலை செய்யவும் உதவி இருக்கின்றார். எனினும் நாயுடு சாதியினர் அந்த இடத்தை அபகரிக்க தொடர்ச்சியாக முயற்சித்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தண்ணீர் தொட்டி அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வந்தபோது காந்தாரி அம்மன் கோயில் நிலத்தையே நாயுடுகள் காட்டியுள்ளனர். தலித்துகளோ தாங்கள் பயன்படுத்தி வந்த புறம்போக்கு நிலத்தை அளித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் தண்ணீர் தொட்டிக்கும் பறையர்களின் பகுதிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால் இனியும் பறையர்களை விட்டுவைக்கக்கூடாது என்ற முடிவுக்கு நாயுடு சாதிவெறியர்கள் வந்தனர்.

000

90களின் தொடக்கத்தில், தங்கள்மீதான சாதிக்கொடுமைகளுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று நினைத்த தாழ்த்தப்பட்ட இளைஞர்கள், இனி ஆதிக்க சாதியினருக்கு முதல் மரியாதை இல்லை; பூசாரி அவர்களின் காலில் விழக்கூடாது; தனியாக கோயில் கட்ட வேண்டும் என்ற முடிவுகளை எடுத்து தலித் மக்களை திரட்டுகிறார்கள். அதன்படி 08.08.1990 அன்று காந்தாரி அம்மன் சிலையை எடுத்துக்கொண்டு சென்றனர்.

நாயுடு ஆதிக்க சாதிவெறியர்களால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யபட்ட குறிஞ்சாங்குளம் தியாகிகள்.

காந்தாரி அம்மன் சிலையை ஊரில் வைக்கக்கூடாது என்று தகராறு செய்தனர் ஆதிக்க சாதிவெறியர்கள். “காந்தாரி அம்மன் ‘துஷ்ட தெய்வம்’; அதை ஊரில் வைத்தால் நமது ஊருக்கு தீங்கு நேரும்” என்று தங்கள் சாதி மக்களை அணிதிரட்டினர். இக்காரணத்தால் “துப்பாக்கிச்சூடு நடத்துவோம்” என்று மிரட்டி தாழ்த்தப்பட்ட மக்களை சிலை வைத்து வழிபடவிடாமல் திருப்பி அனுப்பியது போலீசுப் படை.

தங்கள் சாதி ஆதிக்கத்தையே கேள்வி கேட்கத் துணிந்துவிட்டபடியால், தாழ்த்தப்பட்ட மக்களை தண்டிப்பதற்காக அவர்களுக்கு தங்கள் நிலங்களில் வேலை கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் போட்டனர் நாயுடு சாதிவெறியர்கள். நிலம் வைத்துள்ள ஒருசில தாழ்த்தப்பட்ட மக்களை, தங்கள் நிலங்களுக்குப் போகவிடாமல் பாதையை மறித்தனர்.

குறிஞ்சாங்குளம் நாயுடுகள் பக்கத்து ஊர்களிலுள்ள நாயுடு சாதியினரிடமும் இவ்வூர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வேலை கொடுக்கக்கூடாது என்று கேட்டுக் கொண்டதால், அம்மக்கள் வேலையில்லாமல் பட்டினியால் துயரப்பட்டனர். வெகுதூரம் சென்று விவசாய மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை வேலைகளுக்கு சென்றனர்.

காந்தாரி அம்மன் கோயில் நிலத்தை குப்பைக் கொட்டுவதற்கும் மலம் கழிக்கவும் பயன்படுத்தத் தொடங்கினர் நாயுடுகள். இதற்கெதிராக அளித்த புகார்களால் பயனேதும் இல்லை. நடவடிக்கை எடுக்க முயன்ற ஒரு இன்ஸ்பெக்டரும் அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டார் என்றால், சாதிவெறியர்களின் செல்வாக்கை உணரமுடியும்.

அமைதிப்பேச்சு வார்த்தைகள் பல முறை நடத்தியும் நாயுடு சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் கோயில் உரிமைக்கு அனுமதி கொடுக்கவே இல்லை. கடைசியில் அம்பேத்கர் மக்கள் இயக்கத்தலைவர் வை.பாலசுந்தரம், 11.01.1991க்குள் சிலையை வைக்காவிடில் தானே முன் நின்று காந்தாரி அம்மன் சிலையை வைக்கப்போவதாக அறிவித்து பிரச்சாரம் செய்தார்.

இச்சூழலை தடுப்பதற்காகவே அமைதிப்பேச்சுவார்த்தை குழு உருவாக்கப்பட்டு, 05.01.1991 அன்று கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு வை.பாலசுந்தரம் வரவேண்டாம் என்று தாழ்த்தப்பட்ட மக்களை வற்புறுத்தி தந்தி அடிக்க வைத்தனர் அதிகாரிகள்.

அக்கூட்டத்தில் நாயுடுகளின் சார்பாக, அன்று தி.மு.க. தலைவர்களில் ஒருவராக இருந்த வை.கோபால்சாமியின் தம்பி வை.ரவிச்சந்திரன் கலந்து கொண்டார். தாழ்த்தப்பட்ட மக்களின் சார்பில் கலந்து கொண்ட வழக்குரைஞர் ராமராஜ் (முன்னாள் நீதிபதி), ரவிச்சந்திரனின் ஆட்சேபனையால் வெளியேற்றபட்டார். அக்கூட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான, அந்த இடத்தில் பாதியை நாயுடு சாதியினருக்குக் கொடுக்க வேண்டும் என்று கலெக்டர் உட்பட அனைவரும் கட்டப்பஞ்சாயத்து செய்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் அதற்கு உடன்படவில்லை.

இதற்குப் பழிவாங்கும் விதமாக, வேலைக்குச் சென்றுவிட்டு திரும்பிய தாழ்த்தப்பட்ட மக்கள்மீது வெடிகுண்டுகளை வீசினர் நாயுடு சாதிவெறியர்கள். அம்மக்களின் வீடுகளை சூறையாடி ஊரைவிட்டே துரத்தினர். போலீசோ இரு தரப்பின் மீதும் பெயருக்கு வழக்கு பதிவுசெய்துவிட்டு அமைதியாக இருந்தது. நாயுடு சாதிவெறியர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைக் கொல்வதற்காக தங்கள் சாதியினரிடம் பணவசூல் செய்தது போலீசுக்கு தெரிந்தபோதும் அமைதியாகவே இருந்தது.

14.03.1992 அன்று  தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலரையும் கொல்வதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு அவர்களை பின்தொடர்ந்து தாக்குதல் நடத்தினர். அதில் சுப்பையா, சக்கரைப்பாண்டி, அன்பு, அம்பிகாபதி ஆகியோர் மட்டும் தப்பிக்க முடியவில்லை. அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு கழுத்தறுத்து கொல்லப்பட்டார்கள்.

சாதிவெறியர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடலை வலுக்கட்டாயமாக வீடுகளில் கொண்டு வந்து ஒப்படைத்த போலீசு, தனித்தனியாகக்கூட புதைக்கவிடவில்லை. இரண்டு, இரண்டு உடல்களாகப் புதைத்தனர். பல்வேறு கட்சிகளின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நாயுடு சாதியைச் சேர்ந்த கொலைகாரர்கள் கைது செய்யப்பட்டபோதும் 2001-ம் ஆண்டு நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.

இச்சம்பவங்களின்போது, நாயுடு சாதி வெறியர்களுக்கு ஆதரவாக வை.இரவிச்சந்திரனும் தற்போது தி.மு.க.வில் உள்ள கே.எஸ்.ராதாகிருஷ்ணனும் செயல்பட்டனர் என்று வழக்குரைஞர் இராமராஜ் தனது பேட்டிகளில் தெரிவிக்கிறார்.

இச்சம்பவத்தில், குறிப்பிட்டுச் சொல்வதற்கு ஒன்று உள்ளது. காந்தாரி அம்மன் கோயில் சிலைநிறுவ முயன்றதற்காக ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் மட்டுமே இந்து. மற்ற மூவரும் கிறித்துவர்கள். ‘இந்து’ கோயில் உரிமைக்காக கிறித்தவர்கள் பலியானர்கள்.

ஆனால் அப்போதும் சரி, இப்போதும் சரி பா.ஜ.க-ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள் யாரும் ‘இந்துக்களுக்காக’ வரவில்லை. மாறாக, இதே காலகட்டத்தில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை நோக்கி, “ஹரியின் புதல்வர்களே அயோத்திக்கு வாருங்கள், இராமனுக்கு கோயில் கட்டலாம்!” என்று அறைகூவினர்.

‘தமிழ்த்தேசியத்திற்குள்’ ஒளிந்திருக்கும் ஆதிக்க சாதிவெறி!

முதுகுளத்தூர், விழுப்புரம், உஞ்சனை, புளியங்குடி, கொடியன்குளம், பரமக்குடி போன்ற ஊர்களில் நடைபெற்ற தாழ்த்தப்பட்ட மக்கள்மீதான தாக்குதல்கள் போல ஒன்றுதான் குறிஞ்சாங்குளம் படுகொலையும்.

தமிழ் மிண்ட் யூடியூப் சேனலில், தன்னுடைய சுயசாதி வெறியை வெளிக்காட்டிக் கொண்ட ‘தமிழ்த்தேசியவாதி’ வ.கவுதமன்.

இதைத் தற்போது வந்தேறிகளுக்கும் ஆதித்தமிழருக்குமான போராட்டமாக சித்தரிக்கின்றனர் செந்தில் மள்ளர், களஞ்சியம், வ.கவுதமன், சீமான் போன்ற ‘தமிழ்த்தேசியவாதிகள்’. இதன்மூலம் வரலாற்று அறிவும் நடைமுறை அனுபவமும் இல்லாத இணையவாசிகளிடம் தங்களை தமிழ்த்தேசிய தளபதிகளாக வெளிச்சம் போட்டுக் கொள்கிறார்கள்.

தெலுங்கையும் கன்னடத்தையும் தாய்மொழியாகக்கொண்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதே மொழிபேசும் ஆதிக்க சாதியினராலேயே ஒடுக்குப்படுகின்றனர். சாதிவெறிக்கு இனப் பற்றெல்லாம் கிடையாது.

இளவரசன் – திவ்யா ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட வன்னிய ஆதிக்க சாதிவெறியர்களுக்கு இளவரசனும் தன் சகத் தமிழனம் என்ற இன உணர்வா இருந்தது. சமீபத்தில், வீரளூரில் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட அருந்ததியர் மக்களின் வீடுகளை, தமிழை தாய்மொழியாகக் கொண்ட வன்னியன் ‘இன உரிமை’ காரணமாகவா சூறையாடினான்!

ஒவ்வொரு இடங்களிலும் ஆதிக்க சாதிவெறியர்களைக் காப்பாற்றுவதற்குதான் இப்படிப்பட்ட ‘தமிழ்த்தேசியவாதிகள்’ புற்றீசலாக கிளம்பி இருக்கின்றனர். சாதியத்தை தமிழ்த்தேசியத்தோடு பிரிக்க முடியாதபடி பூணூலால் கட்டி வைத்திருக்கிறார்கள்.

குறிஞ்சாங்குளம் சம்பவத்தை ஒட்டி வ.கவுதமனிடம் தமிழ் மிண்ட் என்ற யூடியூப் சானல் சார்பாக, ஒரு நேர்காணல் நடைபெற்றது. அதில் நெறியாளரான கரிகாலன், “நீங்கள் ஏன் தமிழ்பேசும் மக்களிடம் உள்ள ஆதிக்க சாதிவெறியை கண்டிப்பதில்லை?” “தமிழர்கள் ஒன்றுபடத் தடையாக இருப்பது எது?” போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்.

இவைகளுக்கு நேர்மையாக பதில் சொல்லமுடியாமல் அம்பலப்பட்டுப்போன வ.கவுதமன், “நான் படையாச்சி சமூகத்தைச் சார்ந்தவன்” என்று வெளிப்படையாக தன் சாதிப் பெருமையை அடையாளப்படுத்திக் கொண்டதோடு, நெறியாளரான கரிகாலனைப் பார்த்து “நீ பறையர் குடியைச் சேர்ந்தவன்; அதனால்தான் இப்படி உள்நோக்கத்தோடு கொடூரமான கேள்விகளை கேட்கிறாய்” என்று இழிவாக பேசியிருக்கிறார்.

இவர்கள் சாதி ஒழிப்பில் தமிழ்த்தேசியத்தை காண்பவர்கள் அல்ல. சாதி ஆதிக்கத்தை எதிர்க்காமல் “வடுகன்”, “மலையாளி” என்று பிற தேசிய இன மக்களை பகைவர்களாக காட்டி இனவெறி தூபம் போடும் நச்சுகள். தாங்கள் சொல்லிக் கொள்ளும் தமிழ்த்தேசியத்திற்கே துரோகிகள் இவர்கள்.

சூத்திர சாதிவெறியைப் பாதுகாப்பதுதான் சமூகநீதியா?

“தலித்துகள் குறிஞ்சாங்குளத்தில் காந்தாரி அம்மன் கோயில் கட்டக்கூடாது; அதற்கு அனுமதிக்கமாட்டோம்” என சாதிவெறியன் காமாட்சி நாயுடு வெளிப்படையாக சமூக ஊடகங்களில் கொக்கரிக்கிறான். நான்கு பேரைக் கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றபின்னரும் அடங்காத சாதிவெறியுடன் சவால் விட்டுக்கொண்டிருக்கின்றனர் நாயுடு சாதிவெறியர்கள். அவர்கள் யாரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

குறிஞ்சாங்குளத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று தனியாக தொடக்கப்பள்ளி உள்ளது. அங்கு குழந்தைகளுக்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவதற்குக்கூட கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீசு அனுமதி அளிக்கவில்லை. இதுதான் இந்த அரசின் யோக்கியதை.

“இந்த அரசின் யோக்கியதை” என்று சொல்லும்போது தற்போதைய மு.க.ஸ்டாலின் அரசை மட்டுமல்ல. இந்த முப்பதாண்டு காலமாக “சமூகநீதி ஆட்சி” என்ற பதாகையின் கீழ் தமிழகத்தை ஆண்ட தி.மு.க, அ.தி.மு.க. அரசாங்கங்களையும் அதிகார வர்க்கத்தையும் சேர்த்தே சொல்ல வேண்டியிருக்கிறது.

மிகப்பெரிய அளவு மக்கள் போராடியதால் கைது செய்யப்பட்ட கொலைக் குற்றவாளிகளை நீதிமன்றம் சுலபமாக விடுதலை செய்திருக்கிறது. இனியும் நீதிமன்றங்கள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயமா? சாதிவெறியன் யுவராஜ் மேல்முறையீட்டில் விடுதலை செய்யப்படமாட்டான் என்று நம்பாமல்தான் இருக்கமுடியுமா?

ஆதிக்க சாதிவெறிக்கு ஆப்பு அறைவது வர்க்கப் போராட்டமே!

இத்தனை ஆண்டுகளில், தலித் மக்கள்மீதான தாக்குதல்கள், ஆணவப்படுகொலைகள், தீண்டாமைக் குற்றங்கள் எதுவும் குறையவில்லை எல்லாம் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன. குறிஞ்சாங்குளம், வீரளூர் மட்டுமல்ல நாடு முழுமையும் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை இதுதான்.

தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் நடைமுறையில் நீதி வழங்கியதாக வரலாறு இல்லை. இடஒதுக்கீடு உள்ளிட்ட சீர்திருத்தங்களின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒரு சமூகம் என்ற வகையில் அதிகாரம் பெறவுமில்லை. அதில் பலன்பெற்ற ஒரு சிலரும் தம் மக்களின் கோரிக்கைகளுக்காக நேர்மையாக நிற்பது கிடையாது.

ஆதிக்க சாதிவெறிக்கு ஒட்டுமொத்த இந்த அரசமைப்பே தூணாக இருந்து செயல்படும்போது இதற்குள் நின்று மட்டுமே தீர்வைத் தேடுவதும் போராடுவதும் மடமையல்லவா?

படிக்க :

வீரளூர் சாதிவெறியாட்டம் : அணையா நெருப்பாக தமிழகத்தை தகிக்கும் சாதிவெறி !

தமிழ்நாட்டில் தொடரும் சாதி ஆணவப் படுகொலைகள் : என்ன செய்யப் போகிறது அரசு ?

“ஆதிக்க சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்.” “வன்கொடுமை செயல்களில் ஈடுபட்ட சாதிவெறியர்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட வேண்டும்.” இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பிடம் மண்டியிட்டு இதுபோன்றதொரு ஜனநாயகத்தை நிலைநாட்ட முடியாது. இந்த கட்டமைப்புக்கு வெளியே, ஒரு புதிய ஜனநாயகத்திற்கான வர்க்கப் போராட்டத்தை நடத்தும் போதுதான் இவை சாத்தியம்.

தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கும் இதே அரசமைப்புதான் பார்ப்பன மேலாதிக்கமாக பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டையும் பறிக்கிறது. எட்டுவழிச்சாலையாக, சிப்காட்டாக ஆதிக்க சாதி விவசாயிகளின் நிலத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு படையல் போடுகிறது. மீத்தேன் வாயுவாக எரிக்கிறது. காசு உள்ளவனுக்குத்தான் கல்வி என்று நீட்-புதிய கல்விக் கொள்கையாக திணிக்கப்படுகிறது. பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வாக நம் தலையில் இறங்குகிறது.

ஆளும் வர்க்கம் உழைக்கும் மக்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்கையில், ஒட்டுண்ணியாய் அதில் பங்குபெறுபவர்கள்தான் சாதிவெறியர்கள். நம்மையும் சேர்த்து ஒருவன் உறிஞ்சிக் கொண்டிருக்கையில், அடுத்தவனை ஒடுக்க பீற்றுப் பெருமை தேடுகிறது ஆதிக்க சாதிவெறி. இதை ஆதிக்க சாதி உழைக்கும் மக்கள் உணர வேண்டும்.

சாதி ஆதிக்கத்தை எதிர்ப்பதும் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதும் வேறுவேறல்ல. சாதி ஆதிக்கத்திற்கு ஆப்பு அறையாமல் வர்க்க ஒற்றுமை சாத்தியப்பட்டதில்லை. வர்க்க ஒற்றுமை சாத்தியமான இடத்தில் சாதிவெறி கொட்டமடிப்பதில்லை. இதற்கு மாறாக, வர்க்கப் பார்வையற்ற ‘சாதி ஒழிப்பு’, அடையாள அரசியலாக சென்று சாதியை மேலும் இறுக்கப்படுத்தியதுதான் வரலாறு.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்தபோதும் பின்பு அது கைவிடபட்டபோதும் காணப்படும் தர்மபுரி, வட ஆற்காடு மாவட்டங்களே இரண்டுக்கும் சாட்சி!


மருது

ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !

ந்த நாட்டின் நீதிபதிகளை என் வழக்கறிஞர்களாக மாற்றிவிட்டேன்” ஹிட்லர் இப்படி சொன்னதாக ஒருசெய்தி இணையத்தில் உலா வருகின்றது. ஹிட்லர் அப்படி சொன்னானா இல்லையா என்பதல்ல விசயம். மோடியும் ஆர்.எஸ்.எஸ்-ம் அவ்வாறே செய்துவிட்டார்கள் என்பதைத்தான் ஹிஜாப் தீர்ப்பு நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.
கடந்த பிப்ரவரி மாதம் கர்நாடக மாநிலம், உடுப்பி பி.யூ.கல்லூரியில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு ஹிஜாப் அணிய கல்வி நிறுவனத்தால் தடை விதிக்கப்பட்டதால், ஆறு முஸ்லீம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இதைத்தொடர்ந்து மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே தடுத்து நிறுத்தப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைக் கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவித் துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர்.
ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லான் என்ற மாணவியை கெரோ செய்த ஏபிவிபி மாணவர்களுக்கு எதிராக அவர் கூறிய அல்லாஹூ அக்பர் என்ற முழக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. அப்போதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் பின்வாங்கவில்லை.
படிக்க :
ஹிஜாப் தீர்ப்பு : பின்னணி என்ன? | தோழர் சுரேசு சக்தி முருகன்
ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!
கர்நாடகாவின் கடற்புறங்களில் தொடங்கிய ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. ஏபிவிபி மாணவ அமைப்பினர் முஸ்லீம் மாணவிகளை சூற்றிவளைத்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கம் எழுப்பினர். ஹிஜாப் அணிந்த இருந்த மாணவிகளின் அறைக்கதவுகளை உடைத்துக் கொண்டு காவி மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். மேலும், தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியையும் கட்டினர். அம்மாநில அமைச்சர் ஒருவர் காவிக்கொடியை தேசியக்கொடிக்கம் பத்தில் ஏற்றியது தவறில்லை என்றார்.
மேலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளின் முகவரிகளை வெளியிடுவோம் என்றும் அவர்களை எல்லாம் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்றார். எல்லாப் பிரச்சினைக்கும் காரணமான கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தார். ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி முஸ்லீம் மாணவிகள், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
ஹிஜாப் தடைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாதென்றும் ஹிஜாப் அரசியல் அமைப்புக்கு உட்பட்டதா என்று ஆராய உள்ளதாக அறிவித்தது கர்நாடக உயர்நீதிமன்றம். வழக்கு விசாரணைகளை ஊடகங்கள் வெளியிடக்கூடாதென்று கூறி மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அறிவித்தது. மார்ச் 15-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் எதிர்பார்த்தபடியே தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
தீர்ப்பு வருவதற்கு முந்தைய நாள் மாநில அரசு கர்நாடகாவில் கொண்டாங்களுக்கு தடைவிதித்தது. போலீசைப் பாதுகாப்பு என்ற பெயரில் குவித்தது. பாபர் மசூதி தீர்ப்புக்கு முன்னர் என்ன நடைபெற்றதோ அதுபோன்ற நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கும்போதே அது முஸ்லீம்களுக்கு எதிரானதாக இருக்கும் என்றே பலராலும் யூகிக்க முடிந்தது.
ஆனால் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை வாசிக்கும்போது எப்படி இந்துராட்டிரம் படிப்படியாக, சட்டப்பூர்வமாக அமைக்கப்படும் என்ற மனக்காட்சியை காட்டிவிட்டது. ஹிஜாப் அணிவது தனிமனித சுதந்திரத்துக்கு உட்பட்டது அதில் அரசு தலையிட முடியாது என்பதே மாணவிகளில் மையமான வாதம்.
அதற்கு நீதிமன்றம் அளித்த பதிலோ, “ஹிஜாப் அணிவது இசுலாம் மதத்தில் அத்தியாவசியமான பழக்கம் அல்ல”. அன்றைய தினம், “சீக்கியர்கள் விமான பயணத்தின்போது சிறிய அளவிலான கத்தியை கொண்டு செல்லலாம்” என்ற அறிவிப்பு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டதை பார்க்கும்போது திட்டமிட்ட முசுலீம்களுக்கு எதிரான நடவடிக்கை என்பதை உணரமுடியும்.
***
பாசிஸ்டுகளின் தீர்ப்பு
1. ஹிஜாப் அணிவது இஸ்லாம் மத நம்பிக்கையின்படி அத்தியாவசியமான பழக்கவழக்கம் அல்ல. மேலும், இது அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவு 25 வழங்கும் மத உரிமையின்கீழ் வரவில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும். மனுதாரர்களான இசுலாமிய மாணவிகள் ஹிஜாப் தங்கள் மத உரிமை என்றும் அதில் கல்லூரி நிர்வாகம் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தனர். இத்தீர்ப்பின்படி, இசுலாமியர்கள் ஹிஜாப் அணிவது தடைவிதிக்கப்படுமே தவிர சீக்கியர்கள் அணியும் டர்பன் உள்ளிட்ட இதரவைகளுக்கு தடைவிதிக்கப்படாது. எது அத்தியாவசியம்? எது அத்தியாவசியம் இல்லை என்பது சம்பந்தப்பட்ட மதம் முடிவு செய்ய முடியாது. பெரும்பான்மை மதவாதமே அதை முடிவு செய்யும் என்பதைத்தான் இத்தீர்ப்பு கூறுகிறது. ஆனால் தில்லைக்கோயிலின் தீட்சிதப் பார்ப்பனர்கள் தங்களை இப்பிரிவின்கீழ்தான் தற்காத்துக் கொண்டு கோயிலை தனதாக்கிக் கொண்டனர்.
2. பள்ளிகள் கல்வி கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட தகுதிவாய்ந்த பொதுஇடங்கள். அத்தகைய பொது இடத்தில் தனிநபர் உரிமையை செயல்படுத்தும் முயற்சிகள் செல்லுபடியாகாது. பள்ளிகள் போன்ற பொது இடங்களில் தனிநபர் உரிமை என்பது கூட கல்வி நிலையம், மாணவர்கள் என இருதரப்புக்கும் ஏற்புடைய உரிமையாக உருமாறிவிடுகிறது. தேசியகீத வழக்கு என்றழைக்கப்படும் புகழ்பெற்ற வழக்குத் தீர்ப்பானது, தேசியகீதத்தின்போது அமைதியாக எழுந்து நிற்கும் உரிமையும் தனிநபர் உரிமைதான் என்று கூறியது. இனி அந்தத் தீர்ப்பும் மாற்றப்படலாம். பள்ளிகள் பொது இடங்கள் அங்கே மதவெறியை வளர்க்கும் ஷாகாக்கள் நடத்தப்படலாம்; ஆனால் ஹிஜாப் போடக்கூடாது.
3. பள்ளிகளில் மாணவர்களுக்கு சீருடை வழங்குவது அரசியல் சாசன சட்டப்பிரிவு சட்டப்பிரிவு 19(1) (a) வழங்கும் பேச்சுரிமையோ அல்லது சட்டப்பிரிவு 21 வழங்கும் தனிநபர் உரிமையையோ பறிப்பது ஆகாது. மேலும், கல்வி நிலையங்கள் ஹிஜாப் அணியத் தடை விதிப்பது என்பது அரசியல் சாசனப்படி அனுமதிக்கத்தக்க தடையே. இதை மாணவர்களால் எதிர்க்க முடியாது. ஆகையால், ஹிஜாபுடன் ஒரு சீருடை, ஹிஜாப் இல்லாத சீருடை என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. சீருடை ஒன்றுதான், ஒரேமாதிரியானதுதான். ஆனால் இதை சபரிமலைக்கு மாலை போட்டுபவர்களுக்கு ஒருபோதும் நீட்டிக்க மாட்டார்கள். ஏனெனில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கம் அல்ல என்பதே தீர்ப்பின் சாரம்சம்.
4. இந்த வழக்கை மொத்தம் 11 நாட்கள் நீதிமன்றம் விசாரித்துள்ளது. 23 மணி நேரம் விசாரணை நடைபெற்றிருக்கிறது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பு வழங்கப் படுகிறது. கர்நாடக அரசு, கல்வி நிலையங்களுக்கு மாணவ, மாணவியர் ஹிஜாப், புர்கா, பர்தா, காவித் துண்டு போன்ற மத அடையாளங்களுடன் வரக் கூடாது என்று விதித்த உத்தரவு செல்லுபடியாகும். இதில் ஹிஜாப் தவிர மற்ற மத அடையாளங்கள் அத்தியாவசியமானவையா என்பது கூறப்படவில்லை. பாபர் மசூதி ராமனுக்கு சொந்தம் என்று வழங்கப்பட்ட தீர்ப்பானது எவ்வித ஆதாரங்களுமின்றி நம்பிக்கையின் பாற் வழங்கப்பட்டது. அந்த நம்பிக்கைபாற் தீர்ப்பை முஸ்லீம்களுக்கு இந்த நாடு ஒருபோதும் வழங்காது.
5. ஹிஜாப் விவகாரம் திடீரென பூதாகரமாக வெடித்ததைப் பார்க்கும்போது அதில் கண்ணுக்குத் தெரியாத சில கரங்களின் வேலை இருக்கிறது என்பது புரிகிறது. சமூக நல்லிணக்கத்தைக் கெடுத்து அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் சூழலில் செயல்பட்டுள்ளனர். கல்வி ஆண்டின் நடுவில் உருவான இந்த சர்ச்சை சில சக்திகளால் ஊதிப் பெரிதாக்கப்பட்டிருக்கிறது என்றும் இது தொடர்பாக அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. ஹிஜாப் அணிந்த மாணவிகளை கெரோ செய்தும் அச்சுறுத்தியும் வந்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மணவர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறாத நீதிமன்றம் போராடிய மாணவிகளை விசாரணை செய்ய வேண்டும் என்றுகூறி இருப்பது என்பது திட்டமிட்ட இசுலாமியர்களுக்கு எதிரான நடவடிக்கை.
6. இந்த வழக்கில் விவாதத்திற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது. ஹிஜாப், பர்தா போன்ற உடைகள் பெண் விடுதலைக்கு குறிப்பாக முஸ்லீம் பெண்களின் விடுதலைக்கு எதிரானதாக இருக்கிறது என்றும் வாதிடலாம். பள்ளிகளில் ஹிஜாப் அணிய தடை விதிப்பது பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் செயல் அல்ல. மேலும், கல்வி நிலையம் தாண்டி பெண்கள் எந்த மாதிரியான உடையையும் அணியலாம் என்று அத்தீர்ப்பு கூறுகிறது. கர்நாடக பள்ளிகளில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த தடை படிப்படியாக அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படும். ஏனெனில் பள்ளி பொது இடம் என்றால், சாலை, மருத்துவமனை, காய்கறி – மளிகைக் கடைகள், பேருந்துகள் – புகைவண்டிகள் எனை அனைத்தும் பொது இடங்கள்தான். பால்யவிவாகம் என்ற பெயரில் சிறுவதில் குழந்தைகளுக்கு திருமனம் செய்வது, உடன்கட்டை ஏறுவது, மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுப்பது போன்ற இழிவான பழக்க வழக்கங்களை மேற்கொள்ளும் பார்ப்பன சனாதனத்தின் நோக்கம் பெண் விடுதலையா என்ன?
7. இளமைப் பருவம் என்பது எளிதில் தாக்கத்துக்கு உள்ளாகக் கூடிய பருவம். இந்தப் பருவத்தில் மாணவர்களின் அடையாளமும், சிந்தனையும் மாறக்கூடியது. இளம் மாணவர்கள் தங்கள் சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறதோ அதன்பால் எளிதில் ஈர்க்கப்படுவார்கள். அவர்கள் இனம், மதம், மொழி, சாதி, இடம் சார்ந்த தங்கள் சுற்றுப்புறக் கருத்துக்களால் ஈர்க்கப்படலாம். அதனால், இத்தகைய தடை உத்தரவு என்பது பிரிவினையைத் தூண்டும் நிலவரங்களில் இருந்து பாதுகாப்பான சூழலை உருவாக்கித்தர அவசியமாகிறது. இந்தச் சூழலில் மாணவர்களுக்கு சீருடை என்பது கட்டாயமாகிறது என்கிறது இத்தீர்ப்பு.
இந்நாட்டில் பல்வேறு மதங்கள், இனங்கள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரங்கள் இருக்கின்றன. அனைத்து சிறுபான்மை மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என்பதுதான் அரசியலமைப்பு கொடுக்கும் உரிமை. அந்த உரிமையை பறித்து பார்ப்பன சனாதன இந்து மதத்துக்கு உட்பட்டே அனைவரும் வாழ வேண்டும் என்பதைத்தான் இத்தீர்ப்பு அறிவிக்கிறது. பார்ப்பனர்கள் வேட்டிக்கட்டிக்கொண்டு வருவதும், பூணூல் அணிவதும் சட்டை இல்லாமல் அரை அம்மணமாக தெருக்களில் திரிவது எல்லாம் அவர்களுக்கு அத்தியாவசியம். இத்தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தால் இசுலாமிய ஆண்கள் தலையில் குல்லா அணிவதையும் அடுத்து தடுப்பதற்கான அடுத்த வாய்ப்புக்கள் உள்ளன.
***
தீர்ப்பை வரவேற்றுள்ள முதல்வர் பசவராஜ் பொம்மை, “மாணவர்களுக்கு எல்லாவற்றையும்விட கல்வியே முக்கியம். ஆகையால் உயர் நீதிமன்ற உத்தரவை ஏற்று மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு திரும்ப வேண்டுகிறேன். ஆயத்தத் தேர்வுக்கு முன்னதாக செய்ததுபோல் போராட்டங்களில் ஈடுபட வேண்டாம்” என்று மாணவர்களுக்கும்  பெற்றோர்களுக்கும் அவர் வேண்டுகோள் விடுத்து அரசுடன் ஒத்துழைக்க வேண்டியுள்ளார்.
காஷ்மீர் மாநிலத்தை மூன்று துண்டாக்கினார்கள், பாபர் மசூதியை இசுலாமியர்களிடமிருந்து பறித்தார்கள், சிஏஏ சட்டத்திருத்தம் கொண்டுவந்து இசுலாமியர்கள் அகதிகளாக்க முடிவெடுத்தனர், இதுபோன்று பல எண்ணிலடங்கா துரோகங்களையும்  அக்கிரமங்களையும் செய்துவிட்டு  அமைதிகாக்கவும் அரசுக்கு ஒத்துழைக்கவும் உத்தரவிடுகின்றனர் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிசக் கும்பல். இதைமீறிப் போராடினால் என்ன நடக்கும்? சிஏஏ எதிப்புப் போராட்டங்களை சீர்குலைக்க நடத்தப்பட்ட கலவரங்கள் மீண்டும் நடைபெறும் என்பதை முஸ்லீம்களும் சிறுபான்மை மக்களும் நன்கு அறிவர்.
படிக்க :
ம.பி : பத்திரிகையாளர், நாடகக் கலைஞர்கள் கைது – சித்திரவதை செய்த போலீசு !
இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !
பெரும்பான்மை வாதத்துக்கு கட்டுப்பட்டே சிறுபான்மை மக்கள் வாழ வேண்டும் என்பதுதான் இத்தீர்ப்பு உட்பட சிறுபான்மை மக்களுக்கு எதிராக வந்திருக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மையமான நோக்கம். இப்படிப்பட்ட சட்டங்கள், தீர்ப்புகள் மூலம் இசுலாமிய மற்றும் சிறுபான்மை மக்களை அடக்கி ஒடுக்கி தனிமைப்படுத்தி ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் இந்துராட்டிரம் அமைக்கப்படும்.
இப்படி நீதிமன்றம், தேர்தல் ஆணையம் – நிர்வாகத்துறை என  அரசின் அனைத்துத் துறைகளையும் காவி பாசிஸ்டுகள் தங்களுடையதாக மாற்றிவிட்டனர். உ.பி.யில் சரியான கூட்டணி  இருந்திருந்தால் பாஜக தோற்றிருக்கும் என்று அப்பாவித்தனமாக நம்புவதுடன் நம்மையும் நம்பச் சொல்கிறார்கள் சிலர். அதனால்தான் இந்த காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்துவதற்கு பிரஷாந்த் கிஷோர்களை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்துராட்டிரம் நம் கதவை ஏற்கனவே தட்டத் தொடங்கிவிட்டது. நாம் திறக்காவிட்டாலும் கதைவை உடைத்துக் கொண்டு வருவது திண்ணம். எதிர்த்து நிற்பதா? சரணடைவதா? முடிவு நம்முடைய கையில்தான் இருக்கிறது.
மருது
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.

இந்தியை திணிக்கும் மோடி அரசு : இந்துராஷ்டிர அஜண்டாவை தகர்ப்போம் !

0
டந்த வாரம் டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. இதற்கு தலைமை வகித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தியர்கள் ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
மேலும், “பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வு தன்மையுடையதாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால் இந்தி மொழியைப் பரப்ப முடியாது. ஒன்றிய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் மேற்பட்ட இந்தி ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம். இந்தி தேர்வுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.  அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்’’ என்று பேசியுள்ளார்.
அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அமித்ஷா பேசி இருப்பது இந்திய இறையான்மையை குழிதோண்டி புதைக்கும் செயல். இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் வேலையில் பா.ஜ.க தொடர்ந்து செய்கிறது. இந்தி பேசும் மாநிலம் போதும், இந்திய மாநிலங்கள் தேவையில்லை என்று அமித்ஷா நினைக்கிறாரா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
படிக்க :
இந்தி – வடமொழித் திணிப்பிற்காக ஆர்.எஸ்.எஸ் கொண்டு வரும் புது டிசைன் !
சொமாட்டோ மட்டுமல்ல – வங்கி முதல் இரயில்வே வரை அனைத்திலும் இந்தி திணிப்பு !
கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்தி மொழி திணிப்பை எக்காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தேசிய ஒருமைப்பாட்டையும், ஒற்றுமையும் சிதைக்கும் முயற்சி என்று கூறியுள்ளார்.  இதேபோல் கர்நாடகா எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடகா எம்.பி ஜெய்ராம் ரமேஷ், தெலுங்கானா அமைச்சர் கே.டி. ராமராவ் போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் இந்தி மொழி திணிப்பிற்கான அமித்ஷாவின் பேச்சுக்கு தனது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்தி மொழி குறித்து அமித்ஷாவின் பேச்சு பற்றிய பத்திரிகையாளரின் கேள்விக்கு பதிலளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இந்தியாவின் இணைப்பு மொழி தமிழ் தான் என்று கூறியுள்ளார். இதேபோல் நடிகர் பிரகாஷ்ராஜ், “இந்தி கற்றுக்கொள்வதில் பிரச்சினை இல்லை. அதை யார் சொல்கிறார்கள் என்பதும், `ஒரே மொழி, ஒரே தேசம், ஒரே மதம்’ என்ற அவர்களின் சித்தாந்தம் தான் இங்கு பிரச்சினை. அதனால்தான் அதை எதிர்க்கிறேன். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு மொழியும் இங்கு தனித்துவமானது அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் தாய் மொழி வாழும். அதிகமான மக்கள் இந்தி பேசுவதால் இந்தியா முழுவதும் அதை பேசவேண்டியக் கட்டாயமில்லை. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் உள்ளது. எனவே எந்த மொழி தேவைப்படுகிறதோ அதைக் கற்றுக் கொள்வோம். நான் என்ன சாப்பிட வேண்டும், என்ன உடை அணிய வேண்டும், எந்த மதத்தை சார்ந்திருக்க வேண்டும் என்று சொல்வதற்கு நீங்கள் யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
000
hindi-amit-shah-sliderமத்தியில் ஆட்சி செய்யும்போதும் இந்தியை முதலில் நேரடியாக திணித்த காங்கிரஸ் கட்சி, தமிழக மக்களின் கடுமையான எதிர்பின் காரணமாக மறைமுகமாக இந்தியின் ஆதிக்கத்தை திணித்து கொண்டு வந்தது. ஆனால், 2014–ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பாசிச பா.ஜ.க சமஸ்கிருதம், இந்தி மொழிகளை காங்கிரஸ் கட்சியைவிட நேரடியாகவும் தீவிரமாகவும் திணித்து வருகிறது. அந்த வகையில் புதிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம், மத்திய அரசின் திட்டத்தின் பெயரை இந்தி மொழியில் மட்டும் வைப்பது, மத்திய அரசு போட்டி தேர்வுகளை இந்தி மொழியில் நடத்துவது போன்ற பல்வேறு வழிகளில் இந்தியின் ஆதிக்கத்தை இந்தியாவில் வாழும் பல்வேறு தேசிய இனங்களின் மீது திணிப்பதை செயல்படுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.
மோடி, அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் போன்ற காவி பாசிஸ்டுகள் சமஸ்கிருதம் மற்றும் இந்தி மொழியை இந்தியாவின் மொழியாக மாற்ற வேண்டும் என்று நேரடியாக பேசுவது மட்டும்மல்ல; அதை நிகழ்ச்சி நிரலுக்கும் கொண்டு வந்துள்ளனர். கடந்த 2019-ம் ஆண்டு இந்தி மொழியை இந்தியாவின் மொழியாக மாற்ற வேண்டும் என்று அமித்ஷா கூறினார். அதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி இருந்த போதிலும் காவி பரிவாரங்கள் தனது இந்தி மொழி செயலூக்கத்தை வேகப்படுத்தியே வருகின்றனர்.
பெட்ரோல், டீசல், மருந்து பொருள் மற்றும் அத்தியாவசிய உணவு பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வை மறைப்பதற்காகவும், மக்களை அந்த பிரச்சினையில் இருந்து திசைதிருப்புவதற்காகவும்தான் அமித்ஷா தற்போது இந்தி மொழியை பற்றி பேசுகிறார் என்று சிலர் விமர்சனம் செய்கிறார்கள். அமித்ஷா இவ்வாறு பேசியது விலைவாசி உயர்வில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்புவது என்பது ஒரு அம்சமாக இருந்தாலும் அதுவே முழுகாரணமும் அல்ல.
படிக்க :
இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ் ஃபேஸ்புக் !
குடியரசு விழா : சாதிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளைக் கண்டு அஞ்சும் மோடி அரசு !
2024-க்குள் இந்தியாவை, இந்து – இந்தி – இந்தியா என்ற இல்லக்கை கொண்ட இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும் என்பதுதான் இந்துத்துவ பாசிஸ்டுகளின் நோக்கம். அதற்காக முஸ்லீம்கள், கிறித்துவர்கள் போன்ற சிறுபான்மையினரை இரண்டாம் தர குடிகளாக மாற்றுவது, தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற தேசிய இனங்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அழித்து ஒற்றை மொழி, பண்பாடு, கலாச்சாரமாக மாற்றுவதும்தான் இவர்களின் நோக்கம். அதற்காகதான் சிறுபான்மையினர், தலித்துக்களை ஒடுக்குவது, இந்தி மொழியை கட்டாயமாக்கி பிற தேசிய இன மொழிகளை அழிப்பது போன்ற வேலைகளை செய்து வருகிறது.
000
உலகில் இதுவரை பல ஆயிரம் மொழிகள் தோன்றி இருக்கிறது. அழிந்தும் இருக்கிறது. இந்தியாவில் கடந்த காலங்களில் பாலி மொழி போன்ற பல மொழிகள் தலைசிறந்து விளங்கி இருக்கிறது. தற்போது அந்த மொழிகள் எல்லாம் அழிந்து வழக்கொழிந்து போய்விட்டன.
ஒரு இனத்தையும் அவர்களின் பண்பாடு கலாச்சாரத்தையும் அழிக்க வேண்டும் என்றால் முதலில் அவர்களின் மொழியை அழிக்க வேண்டும். ஒரு மொழியை அழித்தால் அந்த தேசிய இனத்தை அழித்து விடலாம் என்பது வரலாறு மட்டுமல்ல உண்மையும் கூட. அந்த கேடு கெட்ட செயலை செய்வதற்குதான் இந்தி மொழி திணிப்பை கையிலெயெடுத்திருக்கிறது காவிக் கும்பல்.
இந்தியாவில் பார்ப்பனிய பண்பாடு, கலாச்சாரத்தை உள்ளடக்கிய இந்துராஷ்டிரத்தை நிறுவ அனைத்து வழிகளிலும் ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக காவி பாசிஸ்டுகளின் நோக்கத்தை முறியடிக்காவிட்டால் பல்வேறு மொழிகளும், தேசிய இனங்களும் அழிந்துபோகும்.
வினோதன்

ஸ்டெர்லைட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் : தூத்துக்குடி மக்கள் போராட்டம் !

0
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள், மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஏப்ரல் 11 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பின்னர் கடந்த நான்கு ஆண்டுகளாக தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் வேலையில் வேதாந்தா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. தூத்துக்குடி நகரப்பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் தனது கைக்கூலிகளை வைத்துகொண்டு விளையாட்டு போட்டி நடத்துவது; சில கிராமங்களில் ஆங்காங்கே பசுமை இட உருவாக்கம் என்ற பெயரில் கண் துடைப்புக்காக சில மரக்கன்றுகளை நடுவது; மருத்துவமனை போன்றவற்றுக்கு சில உபகரணங்களை வாங்கி கொடுத்தல், போன்ற ஏமாற்று வித்தைகளை செய்து வருகிறது.
துத்துக்குடியை சுற்றியுள்ள கிராமங்களில் கோவில் கொடைவிழாவிற்கு நன்கொடை வழங்குவதன் மூலம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தீவிரமாக போராடிய மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்த முயன்று வருகிறது ஸ்டெர்லைட் நிர்வாகம். ஆலைக்கு ஆதரவாக செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிடுதல் மற்றும் பொதுமக்களிடையை அவர்களின் வறுமையை காரணம்காட்டி தன் பக்கம் இழுத்துக்கொள்ளுதல் போன்ற வேலைகளும் செய்து வருகிறது. ஆலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தால் மாவட்ட நிர்வாகமோ போலீசோ எதுவும் கண்டுகொள்வதில்லை. ஆனால் ஆலைக்கு எதிராக பேசினால், போஸ்டர் ஒட்டினால், அவர்களிடம் வழக்கு போட்டுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு செல்கிறார்கள் தூத்துக்குடி போலீசு.
படிக்க :
நாசகார ஸ்டெர்லைட் ஆலையின் சதித்தனத்தை முறியடிப்போம் ! | மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்
மக்களை நம்ப வைத்து கழுத்தறுக்காதே ! சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடு !
கடந்த மார்ச் 28-ம் தேதியன்று இரவு 8 மணியளவில் நாசகார ஸ்டெர்லைட் நிறுவனம் தனது அடியாட்களை வைத்து பாத்திமா நகர் பகுதியில் மக்களுக்கு காசு கொடுப்பதற்காக ஆதார் கார்டுகளை வாங்கியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமககள் ஸ்டெர்லைட் ஆலையின் அடிமைகள்மீது வழக்குபதிவுசெய்து கைதுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்த பின்பு ஆலைக்கு உள்ளே உள்ள கழிவுகளையும், வேதிப் பொருட்களையும் அகற்றுவதற்கு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது உயர் மட்ட கமிட்டியை கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அமைத்தது. அதன் அடிப்படையில் உயர்மட்ட கமிட்டி ஆய்வு செய்து 11 வகையான கழிவுகள் மற்றும் வேதிப்பொருட்களை 90 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என்றுகூறி 250 பேர் ஆலைக்குள் செல்ல அனுமதி அளித்தது. ஆனால், ஆலையின் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் தற்போது (4ஆண்டுகளாக) வரை ஸ்டெர்லைட் ஆலைக்கு வேலை செல்கின்றனர்.

This slideshow requires JavaScript.

அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்திப் நந்தூரி அவர்கள் ஸ்டெர்லைட்டின் கழிவுகள் மற்றும் வேதிப்பொருட்கள் 95 சதவீதம் அகற்றப்பட்டுவிட்டதாக கடந்த 2018-ம் ஆண்டு கூறினார். பணியாளர்கள் தற்போதுவரை ஆலைக்குள் சென்றுவர எவ்வித உரிய அனுமதியும் இல்லை. ஆனால், ஆலைக்குள் ஆட்கள் சென்றுவருவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், போலீசுத்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு அதிகாரிகள் ஸ்டெர்லைட் நிறுவனத்தோடு நயவஞ்சகமாக கூட்டுசேர்ந்துகொண்டு சட்டவிரோத செயலுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் பொது அமைதியை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்தை சிப்காட் வளாகத்தில் இருந்து அகற்ற வேண்டும்; கழிவுகளை அகற்றுவதற்காக ஆலைக்கு உள்ளே செல்ல பணியாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று கூறி ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள், ஸ்டெர்லையிட்டின் ஆணிவேரை அறுக்காமல் விடமாட்டோம் என்று முழக்கமிட்டு ஏப்ரல் 11 அன்று மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தின்முன் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.
***
தூத்துக்குடியில் 14 பேர் தன்னுடைய இன்னுயிரை இழந்தும், பலபேர் படுகாயம் அடைந்தும், பல நுறு வழக்குகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்து நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூடியுள்ளனர். ஆலையின் கொடூரத்தால் இன்று வரை அந்த பகுதிமக்கள் ஆலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
படிக்க :
ஸ்டெர்லைட் திறப்பை நீட்டிக்க உச்சநீதிமன்றம் செல்லும் வேதாந்தா : என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?
ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்
துப்பாக்கிச்சூட்டை பயன்படுத்தி வெற்றி பெற்ற தூத்துக்குடி எம்.பி கனிமொழியோ, எம்.எல்.ஏ கீதா ஜீவனோ ஆலை நிறந்தரமாக மூட எந்த முயற்சியும் எடுக்காமல் ஆலைக்கு ஆதரவான மனநிலையிலே இருந்து வருகின்றனர். தாங்கள் ஆட்சி வந்தால் சிறப்பு சட்டம் இயற்றி ஸ்டெர்லைட் ஆலையை அகற்றுவோம் என்று கூறிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீட்டுக்கு எதிரான சிறப்பு சட்டம் என்ன ஆனதோ அதுதான் ஸ்டெர்லைட் ஆலைக்கும் எதிரான சிறப்பு சட்டமும் ஆன கதை..
அரசையோ, அரசு அதிகாரிகளையோ நம்பாமல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தூத்துக்குடி மக்களின் தொடர்ச்சியான போட்டத்திற்கு நாம் துணைநிற்க வேண்டும்.
வினோதன்

புகைப்படங்கள் : மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம்

NEET Exam : The experience of legal struggle teaches the need for field struggle !

The DMK came to power on an election promise that “once it assumes power, Tamil Nadu is sure to get permanent exemption from NEET”. Once it ascended the throne, understood the ‘reality’ and changed it to “we’ll try as much as possible and continue the legal battle”.
Initially, many believed that NEET would somehow be cancelled by the DMK. But NEET and the legal battle continue together and are not yet over. It is true that the DMK is waging the legal battle aggressively when compared to ADMK. But this alone will not be enough to cancel NEET. We are not saying this; it is the experience of legal struggle that teaches us this lesson!
The Modi government announced that NEET would be held as scheduled in September last year. Health Minister M. Subramanian announced that NEET coaching would be held as usual for government school students. When criticized for DMK’s promise on cancellation of NEET, he asked, “Did we promise that NEET would be cancelled in 24 hours?”.
On the other hand, a committee headed by Justice A. K. Rajan to review the impact of NEET submitted its report to the Government of Tamil Nadu. NEET exam and submission of Justice A. K. Rajan committee report took place at the same time.
Read :
R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion
War on Ukraine : Russian troops, getout from Ukraine and Crimean Peninsula !
Passing just a Bill against NEET like the previous ADMK regime would not be enough for defeating NEET. Learning from that experience, the DMK had constituted a review committee before passing the Bill.
Later, Dhanush, a student from Salem district, committed suicide due to fear of examination even before appearing for NEET. In the face of the turmoil of the people of Tamil Nadu against NEET, the NEET Exemption Bill (The Tamil Nadu Admission to Undergraduate Medical Degree Courses Bill) was passed in the Assembly next day with the support of all parties excluding BJP.
Subsequently, on October 1 (2021), Stalin wrote to the Chief Ministers of 12 states including West Bengal, Kerala, Andhra Pradesh and Delhi attaching the Justice A.K. Rajan committee saying that NEET would deprive social justice.
Meanwhile, protests began against Governor R. N. Ravi, who had kept the NEET Exemption Bill passed by the Assembly for months without sending it to the President.
It’s been more than 4 months. But till date the Bill has not reached the President’s office. Also the Bill has not been returned to the Tamil Nadu Legislative Assembly. Stalin met the Governor in person and urged him to send the NEET Exemption Bill to the President for approval once on October 13 and another on November 27. But nothing moved.
As happened in the last regime, at the day of the exam and the days that followed, the news is full of suicide by students. The NEET exam usually faces stiff opposition in Tamil Nadu every year. It is noteworthy that the NEET, held in September last year, was held without any major opposition.
Most of the democratic forces that fought against NEET during the ADMK’s Edappadi regime, now ended their duty by just supporting the DMK’s legal battle.
When compared to the AIADMK’s “ritualistic legal battle”, we were possessed by the delusion that the “emotional legal battle” being waged was enough to cancel NEET. Because of this, we could not stop the unjust NEET exam from drinking our students’ blood this time either.
With the NEET exam went over “well”, all party members, led by DMK Parliamentary party leader T. R. Baalu, went to Delhi to meet Amit Shah.
On December 28, they submitted a memorandum to the President’s office and waited at the residence of Home Minister Amit Shah to meet him on December 29, according to a tip-off from Rashtrapati Bhavan. Amit Shah cancelled the meeting at the last moment. He did not allot time for the meeting even after waiting for nearly 10 days; nor was it reported that it was not possible to meet.
Speaking on the issue, T. R. Baalu said, “This approach of Amit Shah is condemnable”. “Refusing to meet people’s representatives is anti-democratic”, said MK Stalin.
It was while these things were going on, the DMK made R. N. Ravi read out their policy statement as “Governor’s speech” on the opening day of the first assembly session of the year on January 5. In his speech R.N. Ravi says, “The government is determined that NEET is not needed for Tamil Nadu”. Pro-DMK media and social media activists exaggerated the “ritualistic” Governor’s address, as if the TN Governor had been subjugated by the DMK and praised, “Did you see, how powerful DMK is!!”
In the same assembly session, VCK walked out ignoring the Governor’s speech, saying that delaying the NEET bill without sending it to the President was an insult to the sentiments of the people of Tamil Nadu and condemned the governor’s anti-Tamil Nadu attitude.
On the same day, representatives of seven parties from Tamil Nadu were waiting in Delhi for seven days to meet Home Minister Amit Shah for the third time. Addressing a press conference on that day, T. R. Baalu said, “The Governor who does not respect the Constitution should step down.”
Next, the DMK again convened an all-party meeting on January 8, to put further pressure on the Governor. A resolution was passed condemning the Governor for not sending the NEET Exemption Bill to the President and also condemning Amit Shah for continuously refusing to meet the Tamil Nadu MPs. And when talking about cancellation of the NEET, they concluded the resolution by saying that, “The legal battle will continue”.
Here we have to consider one thing. Justice A.K. Rajan Committee report on impact of NEET; Anti-NEET Bill; All Party Meeting Resolution; meeting the Governor and the President in person and urging them – These were fierce legal battles being fought in different ways. Does this legal battle story continue to go on like a serial ?
“We will consult experts on the methods of legal battle and take a further decision”, says Minister M. Subramanian. What can we achieve by waging a legal battle against the fascists who do not even respect the law atleast in par with a toilet paper. So far, 13 students have been killed during this legal battle path. How many more people are we going to sacrifice along the path of legal battle? What are we going to do now? Where is the Tamil Nadu which erupted when Anita died?
The legal efforts of the DMK were being continuously blocked and insulted by Amit Shah and the fascist brigade spy R. N. Ravi. It is not just an insult to the DMK alone. It is a disgrace to the people of Tamil Nadu and the sovereignty of Tamil Nadu. The fact that we will continue only the path of legal battle implies that we will carry further these indignities with us.
The DMK has even tried to fight these legal battles because of the pressure of parties in their alliance like CPI, CPM, VCK, TVK; the mindset of the people of Tamilnadu opposing th NEET till today; and the continuous student suicides during examinations.
Read :
Kashmir: Saffronisation obliterating constitutional freedom
Hindu fanatic goons go berserk in Tripura ! Need An Anti-Fascist People’s Front and Protests!
But even this situation cannot be expected to continue like this. As far as the DMK is concerned, everything is subject to driving its rule without any problem.
Like NEET, the DMK had initially shouted, “We will reject the New Education Policy”. But later, School Education Minister Anbil Mahesh Poyyamozhi said, “Let’s accept the good aspects of the NEP”.
“We will reject the eight lane highway”, the DMK said, and when Union Road Transport Minister Nitin Gadkari was angry that the Tamil Nadu government was not cooperating with the highway projects, the DMK government replied, “Come on, we will cooperate”. In Paliyapattu village of Tiruvannamalai district, people are driven out and the DMK government is desperate to bring about ‘development’ through SIPCOT.
Therefore, the progressive-democratic forces in Tamil Nadu should give up pushing the DMK on the path of legal battle and take up the field struggle. Protests should be along the paths of Jallikattu, Thoothukudi and Delhi Chalo. That’s what makes Tamil Nadu special!

Tulipa

பள்ளி மேலாண்மை குழு : திராவிட மாடல் போர்வையில் கார்ப்பரேட் மாடல் !

மிழகத்தில் பள்ளி கல்வியில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டுவருவதற்கு தமிழக அரசு பள்ளி மேலாண்மை குழுவை மறுகட்டமைப்பு செய்வது முக்கியத்துவம் வாய்ந்தது என கூறி மார்ச் 9 அன்று ஒரு அறிவிப்பை அறிவித்து நம் பள்ளி, நம்பெருமை என்ற புதிய செயலியை தொடங்கி செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் “அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யவும், மேலாண்மை குழு குறித்தும், அதன் செயல்பாடு குறித்தும் பேசி இதில் அரசியல் தலையீடு இருக்காது, அவ்வாறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக பள்ளி மேலாண்மை குழு குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், பள்ளிக் கல்வி துறை ஆணையர் நந்தகுமார் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் “அரசுப் பள்ளிகளின் முன்னேற்றத்திற்காகவும், பள்ளிச் செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்காகவும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி ஏற்படுத்தப்பட்டதே  பள்ளி மேலாண்மைக் குழு எனவும், அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின்கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளின் வளர்ச்சியில் மேலாண்மைக் குழு முக்கிய பங்காற்றுகிறது எனவே அதனை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தி உள்ளார்.
படிக்க :
பள்ளிகளை மூடிவிட்டு டாஸ்மாக் திறப்பது சமூக நீதி அல்ல !
உ.பி : பள்ளி மாணவர்கள் இந்து மதவெறி உறுதிமொழி !
இதன் தொடர்ச்சியாக மார்ச் 20 அன்று அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர்களின் பெற்றோர்களை ஒருங்கிணைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் முன்னிலையில் அனைத்து பெற்றோர்களுக்கும் பள்ளி மேலாண்மை குழு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி – அதில் பெற்றோர்களின் பங்களிப்பை வலியுறுத்தி பேசப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாடு குறித்தும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், பாராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறி குறிப்பாக பெண்கள் தலைமை பொறுப்புக்கு வரவேண்டும் எனவும், சமூக பங்களிப்புடன் இந்த பணியை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. ஏனெனில் அரசு பள்ளி நமது பள்ளி , நமது பெருமை, நமது குழந்தைகள் என பெற்றவர்களை பொறுப்பாக்கும் வேலையை அரசு தொடங்கியுள்ளது.
சமூக பங்களிப்புடன் பள்ளியை மேம்படுத்தப்போவதாக கூறும் அரசு அதற்கான எந்த வரையறையும் சொல்லாமல் இருப்பது உள்ளூர் அளவில் செல்வாக்குள்ள நபர்கள் மற்றும் பணம் படைத்தவர்களின்  கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும் என்பதே உண்மை. இதற்கு சான்று ஏற்கனவே செயல்படும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் செயல்பாடுகளை பார்த்தாலே போதும். பல இடங்களில் ஓட்டு கட்சி பிரமுகர்கள் செல்வாக்கில் இருந்து கொண்டு மாணவர்கள் – பெற்றோர்களிடம் கட்டண கொள்ளை அடித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளின் மேன்மையை சமூகத்திற்கு உணர்த்தும் வேலையை இந்து நாளிதழ் ’நம் கல்வி, நம் உரிமை’ என்பதை செய்து அரசுப் பள்ளியை பராமரிக்கும் பொறுப்பை பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் சதித் திட்டத்தை ஆரவாரமாக வரவேற்று வருகிறது.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளையும் பெற்றோர்களின் பங்களிப்புடனும், சமூக பங்களிப்புடனும் பள்ளிகளின் அடிப்படை வசதிகள், நூலக வசதிகள், கழிவறை வசதிகள், மாணவிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது போன்ற பொறுப்புகளை தட்டிகழிக்கும் வேலை செய்து வருகிறது. இப்போது பள்ளி மேலாண்மை குழுவை பொறுப்பாக்கி அதன் தொடர்ச்சியாக மொத்த சுமையையும் பெற்றோர்கள் தலையில் சுமத்திவிட்டு படிப்படியாக அரசு, தன் பொறுப்பை கைக்கழுவி விடும் வேலை அரங்கேறும். அதன் பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்குமேல், பள்ளி மேலாண்மை குழுவால் பராமரிக்க முடியாத சூழலில் இயல்பாகவே தனியார் பங்களிப்புடன், நடத்த வாய்ப்பு ஏற்படுத்தி அதன் பிறகு கார்ப்பரேட்டுகளிடமே ஒப்படைப்பதற்கான நிலைமை உருவாகும் என்பதில் சந்தேகம் இல்லை. அரசு கல்வி கொடுப்பதில் இருந்து படிப்படியாக வெளியேறும் அபாயம் உள்ளது.
பள்ளி மேலாண்மை குழுவானது கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி ஏற்படுத்தப்பட்டதாகும். 6 முதல் 14 வயது வரை உள்ள அனைவருக்கும் கல்வி வழங்குவதில் இந்த பள்ளி மேலாண்மை குழு என்பது ஒரு மைல் கல் என பேசப்பட்டு வருகிறது. கல்வி உரிமைச் சட்டம் – 2009-ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி – ஏப்ரல் 1, 2010-ல் நடைமுறைக்கு வந்தது. கடந்த 12 ஆண்டுகளில் பள்ளி கட்டமைப்பு மாறியுள்ளதா, அனைத்து குழந்தைகளுக்கும் தரமான, சமமான கல்வி கிடைத்ததா? பள்ளிகளில் மகிழ்ச்சியான கற்றல் சூழல், அரசுப் பள்ளிக்கும் தனியார் பள்ளிக்கும் இடைவெளி குறைந்ததா? இல்லை கல்வியில் தனியார் பள்ளிகளின் கொள்ளை தடுக்கப்பட்டதா? அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தரமான, சமமான கல்வி என்பது எட்டாக்கனியாகவே உள்ளது.
இப்படிபட்ட சூழலில்தான் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை நிர்வகிக்க கூடிய பொறுப்பை பெரும்பான்மையாக பெற்றோர்கள் 15 பேர் (அதாவது 4-ல் 3 பங்கு) ஆசிரியர் 2 பேர் (தலைமை ஆசிரியர் – ஆசிரியர்) மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி உறுப்பினர் 2 பேர், கல்வியாளர் ஒருவர் என்ற அடிப்படையில் மொத்தம் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவிடம் (அதாவது  பள்ளியை அந்த ஊரே பராமரிப்பது) பள்ளியை ஒப்படைத்திருக்கிறது தமிழக அரசு.
இதற்கு இவர்கள் கூறும் காரணம் “பள்ளியை நிர்வகிப்பது தலைமை ஆசிரியர் மட்டுமே என்ற பிம்பம் களையப்பட்டு, ஒரு ஊரில் உள்ள பள்ளிக்கு, அந்த ஊரையே பொறுப்பாக்குவது. குறிப்பாக, அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை முதன்மை அலகாக கொண்டு மாற்றியமைக்கப்படுகிறது. இதில் தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் வழிகாட்டும் அங்கத்தினர் மட்டுமே என்பதை சமூகத்திற்கு உணர்த்த வேண்டும் என்று கூறுவதன்மூலம் அரசு, கல்வி கொடுக்கும் கடமையிலிருந்து தன்னை விலகுவதற்கான வழியே ஏற்படும்.
பள்ளியின் அனைத்து தேவைகளையும் அறிந்து கூட்டாகவும், சமுதாய பங்களிப்போடும் குழந்தைகளுக்கு தரமான கல்வியை அளிப்பதை உறுதி செய்வது மூலம் பள்ளி சேர்க்கை அதிகரித்தல், இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு மீண்டும் வர வைப்பது. அடிப்படை கட்டமைப்பை உறுதிப்படுத்துவது, குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படச் செய்வது ஆகியவற்றை பள்ளி மேலாண்மை குழுவின் கடமையாக சொல்லப்படுகிறது. இது நடைமுறையில் சாத்தியமாக்குவதற்கு ஏற்ற வகையில் நிலமைகள் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இந்த குழு சுயமாக இயங்கும், அரசியல் தலையீடு இருக்காது. அவ்வாறு தலையீடு இருந்தால் – உடனடியாக நடவடிக்கை பாயும் என கூறுவது வெறும் வாய்ச்சவடால் மட்டுமே!
ஏற்கனவே பெற்றோர் – ஆசிரியர் கழகம் எவ்வாறு செயல்படுகிறது? உள்ளூர் ரவுடிகளும், ஓட்டு கட்சி பிரமுகர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதால் பெற்றோர்களிடம் கட்டண கொள்ளையடிக்கவே செய்கிறது. இதனை எதிர்த்து பல பள்ளிகளில் மாணவர்கள் போராடி தடுத்து நிறுத்தியுள்ளனர். சில பள்ளிகளில் ஆசிரியர்கள் – தலைமை ஆசிரியர் இணைந்து பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த அரும்பாடுப்பட்டு அரசு பள்ளியை தக்கவைத்து வருகின்றனர்.
இந்த லட்சணத்தில், ஒட்டுமொத்தமாக கல்வி சுமையையும் பெற்றோர்கள் மீது சுமத்திவிட்டு அதிலிருந்து வெளியேறவே இது வழிவகுக்கும். இதற்கு “நம் பள்ளி நம் உரிமை, நம் பெருமை என்ற கவர்ச்சி முழக்கத்தை வைத்து பெற்றோர்கள் அடங்கிய பள்ளி மேலாண்மை குழுவிடம் ஒப்படைத்துவிட்டு அரசு வெளியேறும் நிலை ஏற்படும். முதலில் சமுதாய பங்களிப்புடன் செயல்பட தொடங்கினாலும், அதை தொடர்ச்சியாக செய்ய வாய்ப்பு இல்லாமல்போகும்.  குறிப்பாக, அரசின் நிதி ஒதுக்கீடு முற்றிலும் வெட்டப்படும். இதனை பயன்படுத்தி கொண்டு  தனியார் கல்விக் கொள்ளையர்கள் கல்லா கட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அரசுதான் கல்வியை சேவையாகவும், அனைவருக்கும் இலவசமாகவும் வழங்க வேண்டும். இதற்கான நிதியை அரசுதான் ஒதுக்கீடு செய்ய வேண்டும். வருமானம் இல்லை என்பதால் கல்வியை தனியார்மயமாக்கும் அதேவேளையில் குடியை கெடுக்கும் “டாஸ்மாகை’’ அரசே எடுத்து நடத்தி மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் வேலையை மட்டும் அரசே செய்யுமாம். இதைவிட கேடுகெட்ட அயோக்கிய தனம் எதாவது இருக்க முடியுமா?
பள்ளி மேலாண்மை குழுவானது 2009 அனைவருக்கும் இலவசக் கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவந்தபோதே ஏற்படுத்தப்பட்டதுதான். பள்ளியை பெற்றோர்கள்தான் மேலாண்மை செய்ய வேண்டும். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்த பள்ளி மேலாண்மை குழு. இதற்கான அரசாணை  2011, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைமுறைக்கு வந்தது. இது அமலுக்கு வந்த பிறகு இழுத்து மூடப்பட்ட அரசுப் பள்ளிகள் ஏராளம். அரசுப் பள்ளி கட்டிடங்கள் இடிந்து விழுந்து பலியான மாணவர்கள் பலர். அதன் பிறகு அது என்னவானது என்பது யாருக்கும் தெரியாது. சட்டப் போராட்டம் என்பது எல்லாம் வெறும் கழிப்பறை காகிதம் மட்டுமே.
படிக்க :
பட்ஜெட் : பள்ளிக்கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் புதியக் கல்விக்கொள்கை !
கொரோனாவை காரணம் காட்டி பள்ளிகளை மூடுவது நியாயமில்லை
அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்த அரசின் முன்னெடுப்பை புரிந்து கொள்ள ஒரு உதாரணம், சமீபத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சரின் நிதி நிலை அறிக்கையில் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் வகுப்பறை கட்டிடங்களுக்கு ரூ.7500 கோடி (28,000 வகுப்பறைகள்) ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 37,391 அரசுப் பள்ளிகளுக்கு பிரித்து கொடுத்து கட்டமைப்பை மேம்படுத்த முடியுமா? ஒரு பள்ளிக்கு ஒரு கோடி என்றாலும் ரூ. 37,391 கோடி தேவைப்படும் அல்லவா?
ஒருபக்கம் கல்விக்கு வழங்க வேண்டிய நிதியை வெட்டி சுருக்கிவிட்டு, சமூகத்தின் பொறுப்பு அதிலும் குறிப்பாக பெற்றோர்களின் தலையில் சுமத்திவிட்டு அரசு, கல்வியில் இருந்து விலக வேண்டும் என்பதே தனியார்மய கல்விக் கொள்கையின் நோக்கம். இந்த கொள்கையை முறியடிப்பதன் மூலமே அனைவருக்கும் இலவச – தரமான – கட்டாய  கல்வி உரிமையை நிலைநாட்ட முடியும்.
இனியன்

வடமாநில தொழிலாளியோ, தமிழக தொழிலாளியோ, போலீசு முதலாளிகளின் பக்கம்தான் !

0
மிழக போலீசு மீது வடமாநிலத் தொழிலாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தமிழக ஊடகங்களில் ஏப்ரல் 7 அன்று செய்திகள் மிகவேகமாக வெளிவந்தன. இதேபோல் சமூக வலைத்தளப் போராளிகள், “வடக்கன்ஸ், பீகாரிகள் இன்று தமிழக போலீசை தாக்குகின்றனர். நாளை தமிழக மக்களையும் தாக்குவார்கள். இது ஒரு எச்சரிக்கை. விழித்துக் கொள்ளுங்கள் தமிழக மக்களே” என்று சமூக வலைத்தளங்களில் பரப்பினர். ஈரோட்டில் நடந்த ஒரு வடமாநில தொழிலாளியின் மரணம்தான் இந்த செய்திகளுக்கு எல்லாம் அடிப்படை.
ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துகுளியில் எஸ்.கே.எம் பூர்ணா என்ற எண்ணெய் ஆலை உள்ளது. இங்கு வடமாநிலத் தொழிலாளர்கள் உட்பட பல ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலம் ராம்குருவா பகுதியை சேர்ந்த காமோத்ராம் என்பவர் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி இரவு லாரியில் ஆயில் லோடு ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் அவர்மீது ஏறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானர்.
இதையடுத்து அங்கு இருந்த வடமாநில தொழிலாளர்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்போதுதான் உடலை எடுத்து செல்வோம் என்றும் கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த போலீசு, ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டனர். இதனால் போலீசுக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
படிக்க :
தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் பண்பாட்டுச் சீரழிவுகள் || புஜதொமு
சத்தீஸ்கர் : போராடும் இளைஞர்களை பொ­ய் வழக்கில் கைது செய்த போலீசு!
தமிழக தொழிலாளர்கள் தங்களின் உரிமைக்காகப் போராட்டம் நடத்தினால் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசுத்துறை, வடமாநில தொழிலாளர்களுக்கு ஆதரவாக எப்படி செயல்படும்? போலீசுத்துறை எப்போதுமே ஆளும் வர்க்கத்திற்கும் அதிகார வர்க்கத்திற்கும் மட்டும்தான் சேவை செய்யும்.
தமிழக போலீசுத்துறையும் ஊடகமும் எவ்வாறு தொழிலாளர் விரோதப் போக்கை கையாளுகிறார்கள் என்பது சமீபத்தில் நடந்த ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில் தனது உரிமைக்காக அங்கு பணிபுரிந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் என்பது துலக்கமான சான்று.
***
பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் இருந்து வாழவே வழியற்றுதான் தமிழகத்தில் உள்ள ஆலைகளிலும் ஓட்டல்களிலும் அடிமாடுபோல் வேலை செய்கின்றனர் வடமாநிலத் தொழிலாளர்கள். குறைந்த ஊதியத்திற்கு அதிகமான உடல் உழைப்பை வாங்கி உழைப்பு சுரண்டலில் ஈடுபடுகின்றனர் தமிழக முதலாளிகள். மாட்டு தொழுவத்தில் அடைத்து வைப்பதைபோல்தான் வடமாநில தொழிலாளர்களையும் மோசமான இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள்.
வடமாநிலத் தொழிலாளிகள் என்பவர்கள் திருடர்கள், கொலைகாரர்கள் என்ற பொதுபுத்தி இங்கு நிலவுகிறது. அதை பயன்படுத்திக்கொண்டு ஈவிரக்கமற்ற முறையில் வடமாநிலத் தொழிலாளர்களை சுரண்டுகிறார்கள் இங்குள்ள முதலாளிகள்.
ஈரோட்டில் வடமாநிலத் தொழிலாளர்களின் போராட்டம் என்பது நியாயமான ஒன்று. அந்த தொழிலாளர்களின் கோரிக்கைக்கு ஆதரவாக இருப்பதுதான் நமது கடமை. ஆனால், தமிழ்த்தேசியவாதிகள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக விசமத்தனமாக பிரச்சாரத்தை கட்டமைத்து, இனவெறியை அவர்களுக்கு எதிராக தூண்டி விடுகிறார்கள்.
வட மாநிலத்தை சேர்ந்த ஒரு முதலாளி தமிழகத்தில் ஒரு ஆலையை வைத்திருந்து, அந்த ஆலையில் தமிழக தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினால் தமிழக போலீசுத்துறை தமிழக தொழிலாளர்களின் உரிமைக்காக ஒருபோதும் நிற்காது. வடமாநில முதலாளியின் பக்கம்தான் நிற்கும். அதற்கு சான்றுதான் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.
அனில் அகர்வால் என்ற வட மாநில முதலாளியின் நாசகாரத் தொழிற்சாலையான ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தூத்துக்குடி மக்கள் வீரம் செறிந்தப் போராட்டம் நடத்தினர். அப்போது தமிழக அரசும், போலீசுத்துறையும் அனில் அகர்வால் எனும் வடமாநில முதலாளிக்கு ஆதரவாக நின்று, தூத்துக்குடி மக்களை சுட்டுக்கொன்றது. ஆகவே ஒன்றிய மற்றும் மாநில அரசும், போலீசுத்துறையும், எந்த மாநிலத்தை சார்ந்த தொழிலாளிகளாக இருந்தாலும், அவர்களை மட்டும்தான் அடித்து ஒடுக்கும்.
படிக்க :
இந்துத்துவக் கும்பலுக்கு ஆதரவாக முசுலீம் வீட்டை இடித்த காவி போலீசு !
மணிகண்டன் படுகொலை : போலீசுக்கு கொல்லும் அதிகாரத்தை வழங்கியது யார் ?
சீமான், மணியரசன் போன்ற தமிழ்த் தேசியவாதிகள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக வாய்கூட திறக்கமாட்டார்கள். அவர்கள் தமிழக முதலாளிகளின் நலன்களையும் பாதுகாப்பையும் மட்டுமே பேசுவார்கள். தமிழக போலீசுத்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநில தொழிலாளர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக போஸ்டர் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் வடமாநிலத் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநிதியை எதிர்க்காமல் தமிழக முதலாளிகளின் பின் நிற்பவர்கள்.
சாதி, மத, மொழி, இன, தேச வேறுபாடின்றி எங்கெல்லாம் தொழிலாளர் வர்க்கம் சுரண்டப்படுகிறதோ, அங்கெல்லாம் அதற்கு எதிராக போராடவும், எங்கெல்லாம் முதலாளி வர்க்கத்துக்கு எதிராக தொழிலாளர் வர்க்கம் போராடுகிறதோ, அங்கெல்லாம் அதற்கு துணை நிற்பதுதான் உழைக்கும் வர்க்கமாகிய நமது முதல் கடமை.

வினோதன்