Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 234

கருவறைத் தீண்டாமைக்கு முடிவு கட்டு ! சங்கிகளைக் கதறவிட்ட தமிழக டிவிட்டர் டிரண்டிங் !!

னைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்றுவரை ஆகம கோவில்களில் தகுதிபடைத்த பார்ப்பனர் அல்லாதா அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழக அரசால் கடந்த 2006 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உரிய முறையில் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இன்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளனர். இதனை எதிர்த்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்டு 22, 2006 அன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில், ஜனநாய சக்திகள் மற்றும் சமூகநீதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் #SaveTemplesFromBrahmanism #கருவறையில்_தீண்டாமை என்ற ஹேஸ்டேக்களை முன்வைத்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர் அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம். இம்முழக்கங்களை டிவிட்டரில் மட்டுமல்லாது தெருவெங்கும் எடுத்துச் செல்வோம்! கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்ட அணிதிரள்வோம் வாரீர்…

***

மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும் | லெனின்

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 11

முதல் பாகம்

மத்தியக் கமிட்டியும் அரசியல் தலைமைக் குழுவும்

  1. கட்சியின் மத்தியக் கமிட்டி, கட்சியின் பேரவையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மத்தியக் கமிட்டி பேரவைக்குப் பொறுப்பானதாகும். மத்தியக் கமிட்டி தனது உறுப்பினர்களிலிருந்து அரசியல் நடவடிக்கைக்காக இரு துணைக் கமிட்டிகளைத் தெரிவு செய்கிறது. இவ்விரு துணைக் கமிட்டிகளும் கட்சியினுடைய அரசியல் மற்றும் அன்றாட வேலைகளுக்குப் பொறுப்பானவையாகும். இத்துணைக் கமிட்டிகள் அல்லது குழுக்கள் கட்சியின் மத்தியக் கமிட்டியின் முறையான கூட்டுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும். இக்கூட்டங்களில் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும். பொதுவான மற்றும் அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்யவும் கட்சியில் உள்ள நிலைமைகள் – நடப்புகள் பற்றித் தெளிவான முடிவுக்கு வரவும், இதுபோலவே கட்சி முழுவதன் வாழ்வைத் தீர்மானிக்கக் கூடிய முடிவுகள் எடுக்கப்படும்போதும் மத்தியக் கமிட்டியில் பல்வேறு பகுதிகளும் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அவசியம். இதே காரணங்களால் செயல்தந்திரங்கள் பற்றிய கருத்து வேறுபாடுகளை – அவை மிகப் பாரதூரமான இயல்புடையவையாக இருக்கும் பட்சத்தில் – மத்தியக் கமிட்டி ஒடுக்கக் கூடாது. மாறாக, இந்தக் கருத்துக்கள் மத்தியக் கமிட்டியில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். ஆனால், சிறு குழு (அரசியல் தலைமைக் குழு) சீரானதாக அமைக்கப்பட்டு இயங்க வேண்டும். உறுதியான மற்றும் நிச்சயமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் தலைமைக் குழுவானது தனது சொந்த அதிகாரத்தை மத்தியக் கமிட்டியின் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையைச் சார்ந்திருக்க வேண்டும்.

இத்தகைய அடிப்படையில் கட்சியின் மத்தியக் கமிட்டியானது குறிப்பாக சட்டபூர்வமான கட்சிகளில், கட்சி உறுப்பினர்களின் நிபந்தனையற்ற நம்பிக்கைக்கு அவசியமான கட்டுப்பாட்டு உறுதியான அடித்தளத்தை மிகவும் குறைந்த காலத்திலேயே அமைக்க இயலும். அதேவேளையில் எழுகின்ற ஊசலாட்டங்கள் மற்றும் தெரிய வருகின்ற விலகல்களை முறியடிக்க முடியும். கட்சியில் இத்தகைய மாறுபட்ட போக்குகள் ஒரு கட்டத்துக்கு வளர்ச்சி அடையும் முன்பு, கட்சிப் பேரவையில் முடிவெடுக்கக் கொண்டுவரப்பட்டு நீக்கப்படக் கூடும்.

வேலைப் பிரிவின், துணைக் கமிட்டிகள்

  1. வேலைகளின் பல்வேறு கிளைகளில் தேர்ச்சியை அடைவதற்கு ஒவ்வொரு மேல்மட்டக் கமிட்டியும் தனது உறுப்பினர்களுக்குள் வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பல்வேறு விசேடக் கமிட்டிகள் – எடுத்துக்காட்டாக, பிரச்சாரத்துக்கானவை, பத்திரிகைகளுக்கானவை, தொழிற்சங்க இயக்கங்களை நடத்துவதற்கானவை, செய்தித் தொடர்புகளுக்கானவை, இன்னும் பிறவற்றுக்கானவை என்று கமிட்டிகள் – அமைப்பது அவசியம். ஒவ்வொரு விசேடக் கமிட்டியும் கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ, மாவட்டக் கமிட்டிக்கோ கட்டுப்பட்டதாகும்.

அனைத்து கமிட்டிகளின் நடவடிக்கைகள் மற்றும் சேர்க்கையின் (Composition) மீதான கட்டுப்பாடு குறிப்பிட்ட மாவட்டக் கமிட்டிகளின், இறுதியாகப் பார்க்கப்போனால், கட்சியின் மத்தியக் கமிட்டியின் கரங்களில் இருக்க வேண்டும். பத்திரிகை ஆசிரியர்கள், அமைப்பாளர்கள், பிரச்சாரகர்கள் இன்னும் இவை போன்ற பல்வேறு கட்சிப் பணிகளை ஆற்றுபவர்களின் வேலைகள் மற்றும் அலுவலகங்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்றுவது – கட்சி வேலைகளில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தாதிருக்கும் பட்சத்தில் – உசிதமாகலாம். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் ஏதாவது ஒரு கட்சிக் குழுவில் இருந்துகொண்டு முறையான கட்சிப் பணிகளில் பங்கேற்க வேண்டும்.

கட்சியின் மத்தியக் கமிட்டி

  1. கட்சியின் மத்தியக் கமிட்டியும் இதுபோலவே பொதுவுடைமை அகிலமும் எந்த நேரத்திலும் தமது எல்லா பொதுவுடைமைவாத நிறுவனங்களிலிருந்து உறுப்புகள் மற்றும் அவற்றின் தனிப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து முழுமையான அறிக்கைகள் பெற உரிமை பெற்றுள்ளன. மத்தியக் கமிட்டியின் பிரதிநிதிகளும் அதனால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்களும் தீர்மானிக்கும் உரிமையுடன் எல்லாக் கூட்டங்களிலும் கூட்டத் தொடர்களிலும் அனுமதிக்கப்படுவர். கட்சியின் மத்தியக் கமிட்டி சர்வ அதிகாரமும் பொறுப்பும் உள்ள பிரதிநிதிகளை எப்போதும் தன்வசம் வைத்திருக்க வேண்டும். (அதாவது, பல்வேறு மாவட்ட மற்றும் பிராந்திய தலைமை நிறுவனங்களுக்குப் பொறுப்புள்ள அமைப்புகளுக்கும் தமது சுற்றறிக்கைகள், கடிதங்கள் மூலமாக மட்டுமின்றி நேரடியாகவும் வாய்வழியாகவும் அரசியல் – அமைப்புப் பிரச்சினைகள் பற்றி அறிவுறுத்தவும், அறிவிக்கவும் அனுப்பப்படும் கமிசார்களே இப்பிரதிநிதிகள்)

எந்தவொரு நிறுவனமும் கட்சியின் எந்தக் கிளையும், தனிப்பட்ட உறுப்பினரும் கூட தனது விருப்பங்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள் அல்லது புகார்களை நேரடியாக, எந்த நேரத்திலும் கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ அல்லது பொதுவுடைமை அகிலத்துக்கோ அனுப்ப உரிமை உண்டு.

படிக்க:
அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?
எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்

கீழ்மட்ட நிறுவனங்கள் மேல்மட்ட நிறுவனங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்

  1. கட்சியின் மேல்மட்ட நிறுவனங்களினுடைய அறிவுறுத்தல்கள் மற்றும் முடிவுகளுக்குக் கீழ்மட்ட நிறுவனங்களும், தனிப்பட்ட உறுப்பினர்களும் கட்டுப்பட வேண்டும். தலைமை நிறுவனங்களின் பொறுப்புகளும், கடமை தவறுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை ஒரு பகுதி அளவுக்கு மட்டுமே அதிகார பூர்வமாகத் தீர்மானிக்க முடியும். அவர்களது அதிகார பூர்வமான பொறுப்பு எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ (உதாரணமாக, சட்டவிரோதக் கட்சிகளில்) அந்த அளவுக்குத் தலைமைக்குக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஆய்வு செய்வது என்ற கடமை அதிகமாக உள்ளது. தலைமை, முறையான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற்று முதிர்ச்சி மற்றும் தெள்ளத் தெளிவான பரிசீலனைக்குப் பின், தமது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டுவது அதன் பொறுப்பாகும்.
  2. கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமது நடவடிக்கைகள் அனைத்திலும் எப்போதும் ஒரு போர்க்குணமிக்க நிறுவனத்தின் உறுப்பினர்கள் போல கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.

பொருத்தமான நடவடிக்கை பற்றி கருத்து வேறுபாடு ஏற்படுமானால், சாத்தியமான அளவு கட்சிக்குள் நடந்த விவாதங்களில் வந்தடைந்த முடிவுகளின்படி, கட்சி நடவடிக்கையானது தீர்மானிக்கப்பட வேண்டும். பிற உறுப்பினர்களின் கருத்துப்படி கட்சியின் அல்லது கட்சிக் கமிட்டியின் முடிவு தவறாக இருந்தாலும் கூட ஒன்றுபட்ட முன்னணியின் ஐக்கியத்துக்குத் தடங்கல் ஏற்படுத்துவதோ, அல்லது முழுமையாக உடைப்பதோ கூடாது. அது கட்டுப்பாடற்ற நடவடிக்கையின் மிகமிக மோசமான உதாரணமாகும். இராணுவ ரீதியில் ஆக மிகப் பெரும் தவறாகும். இந்த உண்மையை தமது பொது நடவடிக்கையில் மாறுபட்ட கருத்துடைய தோழர்கள் காணத் தவறக் கூடாது.

பொதுவுடைமைவாதத்தின் எதிரிகள் அனைவருக்கும் எதிராக பொதுவுடைமைக் கட்சிக்காக எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுவுடைமை அகிலத்துக்காகப் போராடுவது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரின் அதி உயர்ந்த கடமையாகும். மாறாக, இதை மறந்து பகிரங்கமாகக் கட்சியையோ, பொதுவுடைமை அகிலத்தையோ கண்டனம் செய்பவர் ஒரு மோசமான பொதுவுடைமைவாதியாவார்.

  1. கட்சியின் அமைப்பு விதிகள் பொதுவான கட்சி நிறுவனங்களின் பொதுவுடைமைவாத வளர்ச்சியில் தலைமைக் கட்சி நிறுவனங்களுக்கு உதவக் கூடியதாக – தடையேற்படுத்துவதாக அல்ல – கட்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவக் கூடியதாக – தடையேற்படுத்துவதாக அல்ல – வகுக்கப்பட வேண்டும். பொதுவுடைமை அகிலத்தின் முடிவுகள் அதில் சேர்ந்துள்ள கட்சிகளால் உடனுக்குடன் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே ஏற்கெனவே உள்ள நிறுவன அமைப்பு விதிகளிலும் கட்சி முடிவுகளிலும் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டுமானாலும் பின்னர் செய்து கொள்ளலாம்.

(தொடரும்)


முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

அர்ச்சகர் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார் ?

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் –  தமிழ்நாடு (PEOPLE’S RIGHT PROTECTION CENTRE – TAMILNADU)

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு (TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)


14 ஆண்டுகளாய் நீதி இல்லை! அர்ச்சக அரசுப் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார்?

நாள்:22.08.2020

பத்திரிகைச் செய்தி

ந்திய அளவில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பலவற்றில் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழகம் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையிலே ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டம் இயற்றப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை. இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறை நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.

“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக சட்டம் நிறைவேற்றி இன்றுடன் (ஆகஸ்ட் 22 ) 14 ஆண்டுகள் முடிவடைகிறது.

28-2-2007 , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.

திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.
கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.

ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது.

பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.

படிக்க:
மதுரை நாகமலை கோவிலுக்கு அர்ச்சகராக முடியுமென்றால் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு முடியாதா ?
அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தலைவர் அரங்கநாதனை  மிரட்டும் பார்ப்பனர்கள் !

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.

அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு.மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது.

பேருந்து நிலைய கழிவறையைவிட மோசமான நிலையில் கலைஞர் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்

தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி, ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பதுபோல, தனியாக உள்ள சிறு கோவில்களில் பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது.

சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான்”– எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.

பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 200-க்கும் மேலான மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.

படிக்க:
வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்
காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !

பணிநியமன நிகழ்வு இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.

எனவே கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும், அனைத்து முற்போக்கு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வலியுறுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

எனவே, தமிழக அரசிடம் !

  • தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் 38,000 கோயில்கள் உள்ளன. அதில் தகுதி திறமை உள்ள அனைத்து சாதியினரையும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும்
  • சைவ-வைணவ வழிபாட்டு முறையில் முறையாக பயிற்சி பெற மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களை அரசு மீண்டும் திறக்க வேண்டும்.

என்று கோருகிறோம்.

வழக்கறிஞர்.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு

வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு

தகவல் :
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் –  தமிழ்நாடு
தொடர்புக்கு : 90474 00485

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு ! வழக்கறிஞர்கள் போராட்டம்

“வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் மீதான நடவடிக்கையை கைவிடு!” என்ற முழக்கத்தை முன்வைத்து இந்தியாவின் பல பகுதிகளில் உள்ள வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினர். அதே போல தமிழகத்திலும் பல இடங்களில் நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அவற்றின் தொகுப்பு இங்கே…

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

கோவை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

நெல்லை வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம்.

திருவண்ணாமலை வழக்கறிஞர்கள் போராட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

மதுரை வழக்கறிஞர்கள் போராட்டம்.

***

ஒடிசா மாநில வழக்கறிஞர்கள் போராட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பஞ்சாப் மற்றும் ஹரியாணா வழக்கறிஞர்கள் போராட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 99623 66320

காவி பயங்கரவாதிகளால் சிதைக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் கதை !

பிப்ரவரி 24, இந்தியத் தலைநகரின் ஒருபகுதி கலவரக்காரர்களால் பற்றி எரிந்து கொண்டிருந்தது…

டெல்லியிலிருந்து வீடு திரும்பாத தன் கணவரின் நிலை குறித்து பயத்தாலும், பதட்டத்தாலும், தவித்துக்கொண்டிருந்தார் அந்தப் பெண்மணி..

திடீரென ருக்க்ஷனா பனோவுக்கு அறிமுகமில்லாத எண்ணிலிருந்து வந்த அழைப்பு ஒரு கணம் அவரை எரிச்சலுறச் செய்தது. அவர் எதிர்பார்த்த அழைப்பு இதுவல்ல. ஒருவழியாக அழைப்பொலியின் இறுதிக் கட்டத்தில் பதிலளித்தவருக்கு எதிரில் ஒலித்த அந்தக் குரல், இத்தனை நேரமாய் கலவரமடைந்த இதயம் கேட்க நினைத்த குரல். அது அவர்தான், அவருடைய கணவர் ஃபிரோஸின் குரலேதான். அவரைத் தாக்கிய கும்பலிடமிருந்து தப்பித்து பாதுகாப்பாக இருப்பதாக ருக்க்ஷனாவிற்கு  நம்பிக்கை அளித்து அழைப்பை துண்டித்தார்.

ருக்க்ஷனா பனோ தனது குழந்தைகளுடன்.

நிம்மதிப் பெருமூச்சுவிட்டவாறே, பதட்டத்திலிருந்த தனது குடும்பத்தினரை அமைதிப்படுத்தினார் ருக்க்ஷனா. ஆனால், அவர் ஒருபோதும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார் இதுதான் அவரது கணவருடனான இறுதிப் பேச்சாக இருக்குமென்று.

குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பின் முகமாக இருந்த டெல்லியின் ஷாஹின்பாக்கை பின்பற்றி நாடே எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த தருணத்தில் வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 24 அன்று மதிய வேளையில் காவிகளின் வன்முறை வெடித்தது. கடைகளும், வீடுகளும் சூறையாடப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டன.  20 -க்கும் மேற்பட்டோர் கும்பல், இரும்பு ராடுகளாலும், தடிகளாலும் நீளமான வாள்களுடன் “ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஸ்ரீ ராம்” முஸ்லீம்களை கொல்லுங்கள் என்று கத்திக்கொண்டே பலரையும் காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொண்டிருந்தார்கள். மசூதிகளின் மாடங்கள் தகர்க்கப்பட்டு காவிகளின் கொடிகள் பறந்தது, இரவில் தீ வைத்து கொளுத்தப்பட்ட வீடுகளிலிருந்து இஸ்லாமியர்கள் வீதிகளில் வெட்டப்படும் பிணங்களாக ஓடிக் கொண்டிருந்தார்கள். பயந்து வீடுகளை பூட்டிக் கொண்டவர்களின் கதவுகளை பெரிய கட்டைகளாலும் இரும்பு ராடுகளாலும் தகர்த்து அவர்களை  வீதிகளில் வீசியெறிந்து கம்பிகளாலும் கட்டைகளாலும் தாக்கினர்.

அன்று குஜராத் டெல்லியில் இருந்தது.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்

நாடெங்கும் அனைவரின் மனதையும், பற்றியெரிந்த டெல்லியின் சாம்பல் மட்டுமே கவ்வியிருந்தது. கலவரம் தொடங்கியபோது பலரும் நாட்டின் தலைநகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.

என்ன நடக்கிறது என்றே தெரியாமல் காசியாபாத்தின் லோனியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார் ஃபிரோஸ் அகமது. அவரை  வழியிலேயே  ஆயுதங்களுடன் ஒரு கும்பல் தடுத்து நிறுத்தியது, அவரது அடையாள அட்டைகளை காட்டும்படி மிரட்டினார்கள். அவர் ஒரு “முஸ்லீம்” என்று தெரிந்தவுடன் ஃபிரோஸை கடுமையாகத் தாக்கத் துவங்கியது அந்த கும்பல். தேசத்தின் தலைநகரில் இஸ்லாமியன் என்பதால் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்று அவர் எண்ணியிருக்க மாட்டார்.

அவரது கால்கள் உடைக்கப்பட்டது, கைகள் உடைந்து நொறுங்கியது ஒருவழியாக அந்த கும்பலிடமிருந்து தப்பித்து புஷ்தா சாலையின் கரவால் நகர் ஷாஹீத் பகத் சிங் காலனிவரை  உடைந்த கால்களால் ரத்தம் ஒழுகும் உடலின் மிச்ச உயிரையும் காப்பற்றிகொள்ள தன்னைத் தானே இழுத்துச் சென்றார் அவர்.

கலவரக்காரர்களிடமிருந்து தப்பிக்க அங்கு நின்ற ஆட்டோவில் பதுங்கிகொண்டவரை அருகில் இருந்த தௌசீஃப் ஆலமின் (Tauseef Alam) குடும்பத்தினர் மீட்டு தங்களது வீட்டில் அடைக்கலம் கொடுத்தபோதுதான் உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே அவருக்கு பிறந்தது. உடனே, கலவரத்தின் அச்சத்தால் பயந்துகொண்டிருக்கும் கர்ப்பிணி மனைவியான ருக்க்ஷனாவிற்கு, தான்  உயிரோடு இருப்பதாகவும் ஆபத்திலிருந்து தப்பித்து விட்டதாகவும் கூறி அவரை தேற்றினார். ருக்க்ஷனாவிற்கு அவரிடமிருந்து வந்த இறுதியான அழைப்பு இதுதான் அதன் பிறகு அவரது குரலை அவர் கேட்கவேயில்லை.

அச்சத்தால் ஒடுங்கியிருந்த ருக்க்ஷனாவின் குடும்பத்திற்கு ஃபிரோஸின் அழைப்பு அவர் தப்பித்துவிட்டார் உயிரோடு இருக்கிறார் என்றளவில் மட்டுமே தெரியும். அவரது நரம்புகள் அறுபட்டு வழியும் உதிரத்தையோ, கை கால்களின் எலும்புகள் இரும்பு ராடுகளால் அடித்து உடைக்கப்பட்டதோ தெரியாது. தங்களின் அன்புக்குரிய தந்தை எப்படியும் வந்துவிடுவார் என்றே அந்த நான்கு குழந்தைகளும் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

படிக்க:
ஜாமியா பெண் மாணவர்களை அந்தரங்க உறுப்புகளில் தாக்கிய டெல்லி போலீஸ் !
பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

மரணத்திலிருந்து தப்பிப் பிழைத்த அந்த நாளில் தனது குடும்பத்தை பார்த்துவிட முடியும் என்று நம்பிக்கை துளிர்விட்ட நேரத்தில் அவரது வாழ்க்கையை  முடிவுக்கு கொண்டு வந்தது அந்த சம்பவம்.

கலவரம் தொடங்கிய மறுநாள் பிப்ரவரி 25 அன்று, வீடு வீடாக இஸ்லாமியர்களைத் தேடித் தேடி  கொன்றுகுவித்து வந்த கலவரக்காரர்களின் கும்பல் ஆலமின் வீட்டிற்குள் நுழைந்தது. அவரது வீட்டை கொள்ளையடித்து பொருட்களை அடித்து உடைத்துக்கொண்டிருந்த கும்பல் வீட்டின் படுக்கையின் பின்னால் உயிருக்கு அஞ்சிப் பதுங்கிகிடந்த ஃபிரோஸை பார்த்துவிட்டது.

அவ்வளவுதான் அச்சத்தால் மிரண்டுபோயிருந்த ஃபிரோஸின் உடைந்த காலைப் பிடித்து ஈவிரக்கமின்றி தர தரவென்று இழுத்து  வீதியின் வெளியே வீசியெறிந்த அந்த கும்பல் அவரை பைப்புகள், இரும்பு ராடுகளாலும் அடித்து நொறுக்கி ஆட்டோவில் வீசி தீ வைத்து எரித்துக் கொன்றது. ஆலமின் குடும்பத்திற்கு முன்னால் எல்லாம் கணநேரத்தில் நடந்து முடிந்தன.

அந்தக் கலவரத்தில் ஃபிரோஸ் கொல்லப்படுவதற்கு ஒரு இஸ்லாமியனாக இருந்ததே போதுமானதாக இருந்தது அந்த கும்பலுக்கு.

இப்பெண் பார்த்துக் கொண்டிருக்கும் வாய்க்காலில் இருந்து சில பிணங்கள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.

கலவரத்தில் சிக்கிய கணவரைப் பற்றி எந்த தகவலும் தெரியாத கர்ப்பிணி ருக்க்ஷனாவிற்கு  ஐந்து நாட்களுக்குப் பிறகுதான் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்ட அந்த துயரச் சம்பவம் ஆலமின் மூலம் தெரிய வந்ததது.

ஃபிரோஸ் கொல்லப்பட்டதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவர்கள், ஃபிரோஸின் உடலையாவது பார்த்துவிடத் துடித்தனர். டெல்லியின் எல்லா மருத்துவமனைகளின் பிணவறைகளிலும் ஒவ்வொரு நாளும் தேடி அலைந்தார்கள். ஆனால், அவர்களுக்கு கிடைத்ததோ ஆலமின் வீட்டில் இருந்த ஃபிரோஸின் காலணி மட்டும்தான்.

பாதி எரிந்த நிலையில் அவர்களது தந்தையின் உடல் புஷ்டா சாலைக்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து பதிமூன்று நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டபோது அந்தக் குழந்தைகளின் பிஞ்சு மனம் எத்தகைய வேதனையை சுமந்திருக்கும்… அப்போது காவிகளின் வன்முறை வெறி ஃபிரோஸ் உள்பட 53 பேரை கொன்றிருந்தது.

வாழ்க்கை அடியோடு பெயர்த்தெடுக்கப்பட்டு, தனது கணவனை இழந்து  குழந்தைகளை எவ்வாறு காப்பாற்றுவது என்று தெரியாமல் கையறு நிலையில் தவித்து வருகிறார் அந்த கர்ப்பிணித்தாய். தந்தையை இழந்து தவிக்கும் அவரின் குழந்தைகள் தினமும் அழுதுகொண்டிருக்கிறார்கள்.

14 வயதேயான டினா, தானும் கலவரத்தில் தந்தையோடு இருந்திருக்க வேண்டுமென்று கூறியழுகிறாள். அந்தச் சிறுமியின் துயரத்தை எவ்வாறு வார்த்தைகளில் அடக்குவது ?

இந்த வழக்கில் ஃபிரோஸைக் கொன்ற கொலைகார கும்பலை போலிசுக்கு அடையாளம் காட்டியும் அவர்கள் வீதிகளில் சுதந்திரமாக சுற்றிவருகிறார்கள். கொலையை கண்ணால் கண்ட நேரடி சாட்சியங்கள் இருந்தும் போலிசு எந்தவித நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கவில்லை.

மூன்று நாட்களாக நடந்தேறிய வன்முறையில் இஸ்லாமியர்களை ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் தெருக்களில் விரட்டி விரட்டி கொன்றபோது போலிசு வேடிக்கை பாரத்ததை நாடே பார்த்திருந்தும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்களின் சதித்திட்டம்தான்  இந்த கலவரம் என்று கூசாமல் பொய் சொல்கிறது டெல்லி போலிசு.

டெல்லி சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திலேயே பா.ஜ.க-வின் தலைவர்கள் கபில் மிஸ்ரா, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா ஆகியோர் போராடிய இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக மதமோதலை தூண்டும் விதமாக மிரட்டல் விடுத்தார்கள். அவர்கள் மீது வழக்கு பதிய டெல்லி காவல்துறைக்கு அறிவுறுத்திய நீதிபதிகளோ இடமாற்றம் செய்யப்பட்டார்கள். வடகிழக்கு டெல்லியின் இஸ்லாமிய இளைஞர்களை கலவரக்காரர்கள் என்று கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டர்கள். உரிமைகளுக்காகப் போராடிய ஜாமிய மிலியா, டெல்லி JNU பல்கலைக்கழக மாணவர்களையோ ஆர்.எஸ்.எஸ்  குண்டர்களோடு சேர்ந்தே  தாக்குதல் நடத்தியது போலிசு. கர்ப்பிணி மாணவியான சஃபூரா சரக்காரை பயங்கரவாதி என சிறையில் தள்ளியது போலிசும் நீதித்துறையும்.

அரசின் அனைத்து அங்கங்களிலும் மிச்சமிருக்கும் ஜனநாயகத்தின் ரத்தம் உறிஞ்சி வெளியேற்றப்பட்டு பாசிசத்தின் ரத்தம் பாய்ச்சப்பட்டுள்ளது.

குஜராத் இந்துத்துவ சோதனைச்சாலையின் நுழைவு வாயில், இந்தமுறை நாட்டின் தலைநகரிலேயே  திறந்திருக்கிறது. இது ஒட்டுமொத்த இந்தியாவையும் விழுங்கக் காத்திருக்கிறது.

நாம் என்ன செய்யப்போகிறோம்..?


பாலன்

செய்தி ஆதாரம் : த வயர்.

கொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு  | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ம் மனித இனத்துக்கு கடந்த 12000 ஆண்டுகளாக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த ஒரு கொள்ளை நோய் “பெரியம்மை” (Small pox) ஆகும். பெரியம்மை என்பது கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்தே மனித இனத்தை அச்சுறுத்தும் கொள்ளை நோயாகும். கிமு 300 ஆம் ஆண்டு எகிப்த்தை ஆட்சி செய்த பாரோ மன்னனுக்கு இருந்தது என்பதை அவனது பதப்படுத்தப்பட்ட மம்மியில் இருந்த அம்மைத் தழும்புகள் உறுதி செய்தன.

இப்போது கோவிட்-19 எப்படி இருமுவதால் தும்முவதால் பரவுகிறதோ அதே போன்று எளிதில் பரவும் நோயாக இருந்தது. இந்த நோய் தாக்கிய பத்து பேரில் மூன்று பேர் இறந்து வந்தனர். குழத்தைகளை தாக்கினால் 80 சதவிகிதம் மரணம் தான். தப்பிப்பிழைத்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவு தழும்புகளை பரிசாகத்தந்து விடும் கொடிய நோய் அது.

பெரியம்மை. மாதிரிப் படம்.

உலகில் முதன் முதலாக அறியப்பட்ட தடுப்பூசி வைத்தியம் “பெரியம்மையை” தடுப்பதற்காக செய்யப்பட்ட “வேரியோலேசன்” (Variolation) எனும் முறையாகும்.
இந்த முறையில் பெரியம்மை வந்து குணமடைந்தவரின் உடலில் ஏற்பட்ட புண், காய்ந்த பின் அந்த சருகை (Scabs) எடுத்து மூலிகையுடன் சேர்த்து இடித்து பொடியாக்கி விடுவார்கள். அந்த பொடியை தோள்களில் புண் உண்டாக்கி அதில் தேய்ப்பது அல்லது சுவாசக்காற்று மூலம் உள்ளே இழுத்துக்கொள்வது என்ற முறையில் மக்களுக்கு கொடுத்து வந்தனர்.

இதன் மூலம் வேரியோலேசன் செய்யப்பட்ட மக்களுக்கு சிறிது நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், உடல் முழுவதும் படை தோன்றும். ஆனாலும் பெரியம்மை தாக்கி மரணமடையும் மக்களை விட வேரியோலேசன் செய்யப்பட்ட மக்கள் குறைவாகவே இறந்தனர்.

பெரியம்மை வந்து 30% பேர் இறந்தார்கள் என்றால் வேரியோலேசன் செய்யப்பட்டவர்களில் மரண விகிதம் 2% என்று குறைந்தது. இதற்கடுத்தக்கட்ட முயற்சியாக 1796 ஆம் ஆண்டு இங்கிலாந்து மருத்துவரான எட்வர்ட் ஜென்னர்(1749-1823) அவர்கள் பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் ஆயத்தப்பணிகளில் இறங்கினார்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்
கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பால் பீய்ச்சும் பெண்ணான சாரா நெல்ம்ஸ் மற்றும் தனது தோட்டப்பணியாளரின் ஒன்பது வயது மகனான ஜேம்ஸ் ஃபிப்ஸ் இருவரையும் தனது ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தார். நெல்ம்ஸ்க்கு வந்திருந்த பசு அம்மை நோயினால் ஏற்பட்ட புண்ணில் இருந்து சலத்தை எடுத்து சிறுவனான ஃபிப்ஸின் தோள்களில் செலுத்தினார். சிறிது நாட்களுக்கு பிறகு ஃபிப்ஸை பெரியம்மை நோய் வந்தவர்களுடன் பலமுறை நெருங்கி இருக்கச்செய்தார். அத்தனை முறையிலும் ஃபிப்ஸ்க்கு பெரியம்மை நோய் தாக்கவில்லை. இந்த ஆராய்ச்சியை முறைப்படுத்தி 1801ஆம் ஆண்டு தனது அறிவியல் ஆய்வை வெளியிட்டார்.

உலகின் முதல் தடுப்பூசி கண்டறியப்பட்டு விட்டது. கண்டறியப்பட்ட தடுப்பூசி முறை பழைய வேரியோலேசன் முறையை பின்னுக்குத் தள்ளி உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுமார் 12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை 1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது.

என்னதான் வளர்ந்த நாடுகளில் ஒழிக்கப்பட்டாலும் வளரும் நாடுகள் இருக்கும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தொடர்ந்து பெரியம்மை நிலைத்து வந்தது. வளர்ந்த நாடுகளில் கிடைத்த நம்பிக்கையான முடிவுகளை ஒட்டி பெரியம்மை நோயை உலகை விட்டு ஒழிக்க முடியும் என்று சபதம் எடுத்து உலக சுகாதார நிறுவனம் (World health organisation) 1959ஆம் ஆண்டு பெரியம்மை ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தது. தொடக்கத்தில் பெரிய அளவில் ஆதரவும் இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லாமல் தோல்வி முகத்தில் இருந்த இந்த இயக்கமானது, 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் பிஹார், ஒரிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஏற்பட்ட பெரிய்மமை கொள்ளை நோய்க்கு பிறகு வீரியமடைந்தது.

இதற்கு காரணம் அந்த கொள்ளை நோயில் மட்டும் இந்தியாவில் 15,000 பேர் மரணமடைந்தனர். உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து
ஜனவரி 1975ஆம் ஆண்டில் “இலக்கு பூஜ்யம்” (TARGET ZERO) என்ற இயக்கத்தை ஆரம்பித்து இந்திய மக்கள் அனைவருக்கும் பெரியம்மை தடுப்பூசியை கொடுக்க ஆரம்பித்தார்கள்.

படிக்க:
எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்
கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

இந்திய மக்கள் அனைவரும் பெரியம்மை தடுப்பூசிகளை தேடித்தேடி போட்டுக்கொண்டனர் என்கிறது வரலாறு. இதன் விளைவாக 1975 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி பெரியம்மை நோய் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட்டது.
உலகின் கடைசி கொடிய பெரியம்மை (wild variola major) நோயாளியாக 1975ஆம் ஆண்டில் பங்களாதேஷைச் சேர்ந்த ரஹிமா பானு என்ற மூன்று வயது குழந்தை அமைந்தாள்.

ரஹிமா பானு

உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சியான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 1980ஆம் ஆண்டு பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி சேதப்படுத்தி வந்த பெரியம்மை நோய் உலகை விட்டு ஒழிக்கப்பட்டு விட்டது என்று
அறிவித்து மகிழ்ந்தது.

இப்போதே உங்களின் வீட்டில் இருக்கும் 1980க்கு முன்பு பிறந்தவர்களின் இடது தோள்களில் இருக்கும் பெரியம்மை தடுப்பூசி தழும்பை ஒருமுறை தொட்டுப்பாருங்கள். அறிவியல் பாதையில் பயணித்தால் எத்தனை பெரிய சுகாதார அச்சுறுத்தலில் இருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

தாங்கள் காணும் இந்த புகைப்படத்தில் இருப்பது உலகின் கடைசி கொடிய பெரியம்மை தொற்று பெற்ற சிறுமி – ரஹிமா பானு புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு -1975,வங்கதேசம். (ஆனந்தவிகடன் இதழில் நான் எழுதிய “மீண்டும் மீள்வோம்” எனும் தொடரின் ஒரு பகுதியில் இருந்து பகிர்ந்திருக்கிறேன்)

அன்பார்ந்த பெற்றோர்களே,

21ஆம் நூற்றாண்டில் 2K கிட்ஸ்களுக்கு என்னவென்றே தெரியாத இந்த நோய் குறித்தும் தடுப்பூசிகளின் தேவை குறித்தும் ஒரு சிறு உரை நடத்துங்கள்.
நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில்Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் “ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து !!” என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 19.08.2020 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றின் செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்.

***

மதுரை

ரடங்கிற்கு முடிவு கட்டு! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு மதுரை ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமை வகித்தார்.

மேலும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் நடராஜன், சமூக, மக்கள் நல ஆர்வலர் எம்.பி ஹிதாயத்துல்லா, மக்கள் அதிகாரம் உசிலை பகுதி தோழர் ஆசை ஆகியோர் இந்நிகழ்வில் கண்டன உரையாற்றினர்.

மத்திய மாநில அரசுகளுக்கு கொரோனாவை ஒழிக்கவும் துப்பில்லை, நிவாரணம் வழங்கவும் வக்கில்லை, என்ன வெங்காயத்துக்கு ஊரடங்கு! அரசு ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவராது! மக்கள் போராடித்தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு : 78268 47268.

படிக்க:
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை

***

காஞ்சிபுரம்

ரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதாரத்தை மேம்படுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஒரு நிமிடம் கூட நின்று முழக்கமிடவோ, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க கூட அனுமதிக்காமல் அராஜகமாக போலீசு நடந்துகொண்டது. தோழர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியது. இந்தியா ஒரு ‘ஜனநாயக நாடாம்!’ ஆனால், கருத்து சொல்லவும் போராடவும் மட்டும் உரிமையில்லை.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம்.

***

விழுப்புரம்

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதாரத்தை மேம்படுத்து! என்ற முழக்கத்தி அடிப்படையில் 19.08.2020 அன்று கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

விக்கிரவாண்டி வட்டம் தொரவி கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

கானை ஒன்றியம் பள்ளியந்தூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவெண்ணைநல்லூர் வட்டம், பொய்கை அரசூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.

***

தருமபுரி

ரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து! என்ற தலைப்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஊரடங்கு என்ற பெயரில் பாசிச அடக்கு முறை சட்டங்களை கொண்டு வருவது, EIA 2020, சட்டத் திருத்தம், புதிய கல்வி கொள்கை போன்ற உழைக்கும் மக்கள் மீதான பல்வேறு அடக்கு முறை சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. கொரோனா போன்ற கொள்ளை நோயை ஒழிப்பதற்கு சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு பதிலாக, கார்ப்பரேட் நல சட்டங்களை இயற்றி மக்களை கொள்ளையடித்து வருகிறது மோடி அரசு.

இவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் ராஜா தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து திவிக மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார், புமாஇமு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன், தமிழ்புலிகள் கட்சி தோழர் MR. பீமாராவ் விஜய், பென்னாகரம் மக்கள் அதிகாரம் மண்டல குழு உறுப்பினர் தோழர் அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக அப்பகுதி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா நன்றியுரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 97901 38614

***

தஞ்சை

கொரோனா ஊரடங்கிற்கு முடிவுகட்டு! கொரோனாவை தடுப்பதற்கு பொதுச்சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தஞ்சை அதிகாரம் சார்பில் 19-08-2020 அன்று காலை 10.30 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர செயலர் தோழர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, CPML(மக்கள் விடுதலை) மாவட்டசெயலர் தோழர் அருணாச்சலம், ஏ. ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் தோழர் சேவையா, ஆதித்தமிழர் பேரவை தோழர் நாத்திகன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் தோழர் சதா. முத்துகிருஷ்ணன், வணிகர் சங்க பேரவை மாவட்டத்தலைவர் திரு கணேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளன செயலர் தோழர் துரை. மதிவாணன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவுனர் தலைவர் தோழர் திருநாவுக்கரசு,  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஐம்பதிற்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

***

ஊரடங்கிற்கு முடிவு கட்டு! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து! என்ற முழக்கத்தின்கீழ் மக்கள் அதிகாரம் நடத்திய தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின்  ஒரு பகுதியாக 19/08/2020 அன்று மாலை 5 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் மற்றும் பொது மக்கள் என பலரும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு ராமச்சந்திரன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் திரு. வனவேந்தன், தோழர் சொன்னப்பா (IYF), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன். ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சார்ந்த தோழர் சங்கர் நன்றி உரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ஓசூர்.

எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 10

முதல் பாகம்

8. கட்சி நிறுவனக் கட்டமைப்பு பற்றி

43. பரந்து விரிந்ததாக எஃகுறுதி வாய்ந்ததாக கட்டியமைக்கப்படும் கட்சி நிறுவனமானது, வெறும் புவியியல் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படக் கூடாது. மாறாக, குறிப்பிட்ட மாவட்டத்தின் யதார்த்தமான பொருளாதார, அரசியல் மற்றும் போக்குவரத்து நிலைமைகளுக்குப் பொருத்தமாக அமைக்கப்பட வேண்டும். பிரதானமான மாநகரங்கள், பெரிய தொழிற்சாலை மையங்கள் கட்சி நிறுவனத்தின் ஈர்ப்பு மையமாக்கப்பட வேண்டும்.

ஒரு புதிய கட்சியைக் கட்டியமைக்கும்போது எடுத்த எடுப்பிலேயே நாடு முழுவதும் பரந்து விரிந்த கட்சி நிறுவனத்தைக் கட்டியமைக்கும் போக்கு தோன்றுவதுண்டு. கட்சியின் வசம் உள்ள ஊழியர்கள் வரம்புக்குட்பட்டிருப்பதையும், மிகச் சிலவாக உள்ள இந்த ஊழியர்கள் எல்லா திக்குகளிலும் சிதறி இருப்பதையும் புறக்கணிப்பதாக உள்ளது இப்போக்கு. இது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் திறனையும் வளர்ச்சியையும் பலவீனப்படுத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பரந்த அளவில் கட்சி அலுவலகங்கள் தோன்றுகின்றன. ஆனால், கட்சியானது மிகமிகப் பிரதானமான எந்தவொரு தொழில் நகரத்திலும் வேர்விட்டு வளர்வதில் வெற்றி பெறுவதில்லை.

மாநில மற்றும் மாவட்ட நிறுவனங்கள்

44. கட்சி நடவடிக்கை அதிகபட்ச அளவு மையப்படுத்துவதை சாத்தியமாக்குவதற்கு ஒன்றுக்கொன்று கீழ்படிதலுள்ள மேலிருந்து கீழ்வரை கிரமமான பல குழுக்களைக் கொண்டதாக கட்சித் தலைமை பிரித்து அமைப்பது உசிதமானதல்ல. ஒரு பொருளாதார, அரசியல் அல்லது போக்குவரத்து மையமாக விளங்கும் ஒரு மாநகரை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதையும் – அடுத்தடுத்த மாவட்டங்களை உள்ளடக்கி – அரசியல் பொருளாதாரத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு விரிந்து பரந்ததாக வலைப்பின்னல் போன்ற நிறுவனங்களை அமைக்க வேண்டும். பெரிய மையத்தைச் சேர்ந்த கட்சிக் கமிட்டி, கட்சியின் பொதுப் பேரவைக்குத் தலைமை அமைப்பாக விளங்க வேண்டும். அங்கிருந்து மாவட்டத்தின் நிறுவன நடவடிக்கையை நடத்த வேண்டும். பகுதி உறுப்பினர்களின் நெருங்கிய தொடர்புடன் தனது கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.

மாவட்ட மாநாட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சி மத்தியக் கமிட்டியால் உறுதி செய்யப்பட்ட இத்தகைய ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள் உள்ளூர் நிறுவனங்களின் கட்சி வாழ்க்கையில் ஊக்கமான பாத்திரமாற்ற கடமைப்பட்டவர்கள் ஆவர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அம்மாவட்டத்தினுடைய கட்சிக் கமிட்டிக்கு இடையறாது சேர்க்கப்பட வேண்டும். இதனால் அந்தக் கமிட்டிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெரு எண்ணிக்கையிலான மக்கள் திரளினருக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஏற்படும். வளர்ந்துவரும் போக்கில் மாவட்டத்தின் தலைமைக் கமிட்டியானது அப்பகுதியின் அரசியல் தலைமை உறுப்பாக வளர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மாவட்டக் கமிட்டியானது மத்தியக் கமிட்டியுடன் இணைந்து பொதுவான கட்சி நிறுவனத்தில் உண்மையான தலைமைப் பாத்திரத்தை ஆற்றும் உறுப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இயல்பாகவே கட்சி மாவட்டங்களின் எல்லைகள் அப்பகுதியுடனேயே வரம்பிட்டுக் கொள்வதாக இராது. ஒரு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள உள்ளூர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் சீரான முறையில் வழிநடத்துகின்ற நிலையில் மாவட்டக் கமிட்டி இருப்பதே இதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க வேண்டும். இந்த நிலை சாத்தியமற்றதானவுடன் மாவட்டமானது பிரிக்கப்பட்டு, புதிய கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பெரிய நாடுகளில் மத்தியக் கமிட்டியையும் உள்ளூர் நிறுவனங்களையும் இணைப்பதற்கான குறிப்பிட்ட இடைநிலை நிறுவனங்களை அமைப்பதும் அவசியமாகும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் இந்த இடைநிலையிலுள்ள நிறுவனங்களுக்கு, எடுத்துக்காட்டாக மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாநகரத்துக்கு முக்கிய இடம் கொடுப்பது அவசியமாகும். மையப்படுத்தலைப் பலவீனப்படுத்தும் என்பதால் ஒரு பொதுவிதி என்ற முறையில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

உள்ளூர் நிறுவனங்கள்

45. நாட்டுப்புற குழுக்கள், சிறு நகரக் கமிட்டிகள், மாவட்டக் கமிட்டிகள், மாநகரத்திலேயே பல்வேறு பகுதிக் கமிட்டிகள் ஆகிய உள்ளூர் நிறுவனங்களில் இருந்து பெரிய இடைப்பட்ட நிலையிலுள்ள நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சட்டபூர்வமான கட்சியாக இருக்கையில் உள்ளூர் கட்சி நிறுவனம் ஒன்று தனது உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கக் கூடிய பொதுக்கூட்டங்களை நடத்த இயலாத நிலையை அடையும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்குமானால், அந்த உள்ளூர் நிறுவனம் பிரிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு கட்சி நிறுவனத்திலும் அதனுடைய உறுப்பினர்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கான குழுவாக அமைக்கப்பட வேண்டும். பெரிய நிறுவனங்களில் பல்வேறு குழுக்களைச் சேர்த்து கூட்டு அமைப்புகளாக நிறுவுவது உசிதமானது. பொதுவாக, இத்தகைய உறுப்பினர்கள் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு குழுவுக்குள் சேர்க்கப்பட வேண்டும். அல்லது வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களானால், தமது அன்றாட நடவடிக்கையில் ஒருவரையொருவர் சந்திக்கும்படியான குழுவாக அமைக்கப்பட வேண்டும். இத்தகைய கூட்டுக்குழுவின் நோக்கம் பல்வேறு சிறிய அல்லது வேலைக்கான குழுக்களுக்கிடையில் கட்சி வேலைகளைப் பகிர்ந்தளிப்பது, பல்வேறு நிர்வாகிகளிடமிருந்து வேலை அறிக்கைகளைப் பெறுவது மற்றும் தேர்வுநிலை உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பது ஆகியவையாகும்.

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்
தமிழக அவலம் : இந்தி தெரிந்தால்தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் !

பொதுவுடைமை அகிலத்தின் செயற்குழு

46. கட்சி முழுவதுமே பொதுவுடைமை அகிலத்தினுடைய வழிகாட்டுதலின் கீழ் இருக்க வேண்டும். அகிலத்தில் இணைந்துள்ள கட்சிகளின் வேலைகளை நெறிப்படுத்துகின்ற அகிலத்தினுடைய செயற்குழுவின் அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் 1. கட்சியின் மத்தியக் கமிட்டிக்கு அல்லது 2. மத்தியக் கமிட்டியின் வாயிலாக விசேடமான கமிட்டிக்கு அல்லது 3. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் என்று அனுப்பப்பட வேண்டும்.

அகிலத்தினுடைய அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் கட்சியை, இயல்பாகவே கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் கட்டுப்படுத்தும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!

தீர்ப்புக்கு பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு !

யர்நீதிமன்றத்தில் இன்று (18.08.2020) வந்த தீர்ப்பு…. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலட்சக்கணக்கில் கலந்துகொண்ட மக்களுக்கும், உயிர்நீத்த போராளிகளுக்கும் கிடைத்த வெற்றி !

தீர்ப்பு வந்த பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு.

ஸ்டெர்லைட்டை உடனடியாக‌ தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து அகற்றவேண்டும்.

ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் !
நாமும் நமது போராட்டத்தை
இறுதிவரை தொடர்வோம் !

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

***

ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்கிறோம்! – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

மிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து அகற்ற வேண்டும்! ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் வரவேற்கிறோம். இதற்காக உழைத்த அனைத்து பொதுமக்களுக்கும், கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு இந்த தீர்ப்பினை பயன்படுத்தி தூத்துக்குடி மக்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

  1. ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து பிரித்து அகற்ற வேண்டும்.
  2. ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  3. பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
  4. மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்யக்கூடாது.
  5. உயிர் தியாகம் செய்த 15 தியாகிகளுக்கு தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும்.

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
9443584049, 7811940678,
8122275718, 7305172352,
9787195783, 9952763686,
9965345695, 9894574817.

***

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போரில் முன்னணியில் நின்று போராடி, கொல்லப்பட்ட தியாகிகளுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சமர்ப்பணம்!!

1. ஸ்நோலின்
2. கிளாஸ்டன்
3. தமிழரசன்
4. ரஞ்சித்
5. ஜான்சி
6. கார்த்திக்
7. அந்தோணி செல்வராஜ்
8. கந்தையா
9. ஜெயராமன்
10. மணிராஜ்
11. காளியப்பன்
12. சண்முகம்
13. செல்வசேகர்
14. பரத்ராஜ்
15. ஜஸ்டின்

ஸ்டெர்லைட் உச்சநீதி மன்றம் சென்றாலும், இறுதிவரை போராடுவோம்.
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

***

ஸ்டெர்லைட் வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையானது மேல்முறையீடு செய்ய இருப்பதால், அதற்கு முன்னர் நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் கெ. அரி ராகவன் பெயரில் இன்று (19.08.2020) காலை 10.30 மணிக்கு கேவியட் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

இதன் மூலம் நமது தரப்பு வாதத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

***

ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!

சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

***

இன்றைய தீர்ப்பு வரை அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு மடத்தூரில் உருவாகியது முதல்…

தொடர் போராட்டங்கள், கூட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டம், மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, மறு பிரேதப் பரிசோதனை வழக்கு, சட்ட உதவி வழக்கு, தலைமறைவு வாழ்க்கை, சென்னை ஏர்போர்ட்டில் கைது, பாளையங்கோட்டை சிறை, வீடு, அலுவலகம் ரெய்டு, 273 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றியது, தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், 100-க்கும் மேலான வழக்குகளை உடைத்தது, பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், இன்றுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் நுழைய நீடிக்கும் தடை, இன்றைய தீர்ப்பு என அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

வாஞ்சிநாதன்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 09

முதல் பாகம்

7. கட்சிப் பத்திரிகை பற்றி

பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்?

36. பொதுவுடைமைவாதப் பத்திரிகை கட்சியால் சோர்வின்றி பேரூக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும். கட்சியின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாத எந்தப் பத்திரிகையும் பொதுவுடைமைவாதப் பத்திரிகை என்று அங்கீகரிக்கப்படலாகாது.

கூடுதலான பத்திரிகைகளைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் சிறந்த, தரமான பத்திரிகைகளைப் பெற்றிருக்க கட்சி கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தரமானதொரு மையப் பத்திரிகையை – சாத்தியமானால் தினசரிப் பத்திரிகையைப் பெற்றிருக்க வேண்டும்.

37. முதலாளித்துவப் பத்திரிகைகளைப் போல, ஏன், “சோசலிஸ்ட்” பத்திரிகையைப் போல, பொதுவுடைமைப் பத்திரிகையானது முதலாளித்துவ நிறுவனமாக இருக்கக் கூடாது. முதலாளித்துவக் கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் நமது பத்திரிகை சுயேட்சையானதாக இருக்க வேண்டும். சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சிகள் நமது பத்திரிகை இருப்பதைத் தெரிந்து கொள்ள சாத்தியமாக்குகின்ற வகையில் தேர்ச்சியான விளம்பர ஏற்பாடுகள் அவசியம். ஆனால், இது எந்த விதத்திலும் நமது பத்திரிகை பெரிய விளம்பரதாரர்களைச் சார்ந்திருப்பதாக இருக்கக் கூடாது. மாறாக, சமூகப் பிரச்சினைகள் அனைத்திலுமான இதன் பாட்டாளி வர்க்க நோக்கு, இதற்கு மக்கள்திரள் கட்சிகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொது மக்களின் பரபரப்பான அல்லது பொழுதுபோக்கான விருப்பங்களை நிறைவு செய்வதாக நமது பத்திரிகைகள் இருக்கக் கூடாது. “மதிப்புக்குரியதாக”  ஆகும் முயற்சியில் அவை குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள் அல்லது பத்திரிகை நிபுணர்களின் விமர்சனங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.

38. ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் போராடும் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி அக்கறை கொள்வதைப் பொதுவுடைமைவாதப் பத்திரிகை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள வெண்டும். பத்திரிகையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மிகச் சிறந்த கிளர்ச்சியாளனாகவும் தலையாயப் பிரச்சாரகனாகவும் விளங்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளின் மதிப்பிடற்கரிய அனைத்து அனுபவங்களையும் சேகரித்து அவற்றைத் தோழர்களுக்கு எடுத்துக் காட்டி இந்த அனுவபங்களைக் கொண்டு பொதுவுடைமைவாத வேலைமுறையைத் தொடர்ச்சியாக மாற்றி முன்னேற்றத்தைக் கொண்டுவருவது நமது பத்திரிகையின் நோக்கமாகும். இவ்வாறு நமது புரட்சி வேலையின் மிகச் சிறந்த அமைப்பாளனாக பத்திரிகை விளங்கும்.

பொதுவுடைமைவாதப் பத்திரிகையின், குறிப்பாக நமது பிரதான பத்திரிகையின் அனைத்தும் தழுவிய நிறுவன வேலையின் மூலம்தான், நிச்சயமான இந்த நோக்கத்தினைக் கொண்டுதான், நாம் ஜனநாயக மத்தியத்துவத்தை நிறுவுவதும், பொதுவுடைமைக் கட்சியின் வேலைகளில் சிறப்பான பகிர்ந்தளித்தலைச் செய்வதும் முடியும். இவ்வாறுதான் பத்திரிகையானது, தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முடியும்.

ஒரு பொதுவுடைமைவாதப் பத்திரிகையை நிறுவுவது

39. பொதுவுடைமைவாதப் பத்திரிகை ஒரு பொதுவுடைமைவாத நிறுவனமாக ஆக முயற்சிக்க வேண்டும். அது ஒரு பாட்டாளி வர்க்கப் போரிடும் நிறுவனமாக இருக்க வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகையானது புரட்சிகரத் தொழிலாளர்களின், பத்திரிகைக்குத் தொடர்ச்சியாகப் படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் அனைவரின், ஆசிரியர்களின், அச்சுக் கோர்ப்பவர்களின், அச்சிடுபவர்களின், விநியோகிப்பவர்களின், உள்ளூர் விசயங்களைச் சேகரித்து பத்திரிகைக்குத் தந்து அவற்றைப் பற்றி பத்திரிகைகளில் விவாதிப்பவர்களின், பத்திரிகைக்காக நாள்தோறும் ஊக்கமாகப் பிரச்சாரம் செய்பவர்களின், இன்னும் பத்திரிகையோடு தொடர்புடையோரின் கூட்டு முயற்சியில் இயங்கும் நிறுவனமாகும். ஒரு பத்திரிகையை உண்மையான போரிடும் நிறுவனமாக, பொதுவுடைமையாளர்களின் பலமிக்க கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு பல நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகள் தேவை.

ஒரு பொதுவுடைமைவாதி தனது பத்திரிகையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதற்காக அவர் வேலை செய்யவும், தியாகங்கள் புரியவும் வேண்டும். பத்திரிகை அவரது அன்றாட ஆயுதமாகும். சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தகுதியுடையதாக்க அதை நாள்தோறும் உறுதிப்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகை நிலைத்திருக்க வேண்டுமானால், அதற்குத் தொடர்ச்சியாக அதிக அளவிலான பொருள் மற்றும் நிதியைத் தியாகம் செய்ய வேண்டும். அதன் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான சாதனங்கள் கட்சி உறுப்பினர்களான அணிகளிடமிருந்து இடையறாது அளிக்கப்பட வேண்டும். பத்திரிகையானது, உறுதியான நிறுவனமாக நிறுவப்படும் நிலைமைக்கு, சட்டபூர்வ மக்கள்திரள் கட்சிகளில் போதுமான எண்ணிக்கையில் பிரதிகள் விற்கப்பட்டு பொதுவுடைமை இயக்கத்திற்கு அதுவே ஒரு பலமிக்க ஆதரவு சக்தியாக வளரும் நிலையை அடையும்வரை இவ்வாறு கீழிருந்து ஆதரவு பெறுவது நீடிக்கும்.

ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.

தொழில் நிலையங்களில் நிகழ்கின்ற சமூக அல்லது பொருளாதார முக்கியத்துவமுடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் – ஒரு சாதாரண விபத்து முதல் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் வரை, ஒரு பயிற்சியாளரை மோசமாக நடத்துவது முதல் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வரை – பத்திரிகையில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சங்க பிராக்சன் தனது கூட்டங்கள் மற்றும் செயலாளர்களின் முக்கியமான முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் பற்றியும் நமது எதிரிகளின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைப் பற்றியும் செய்திகள் தர வேண்டும். வீதிகளிலும் கூட்டங்களிலும் நிகழ்கின்ற பொது வாழ்க்கை பற்றிய விவரங்கள் உன்னிப்பாக கட்சி உறுப்பினர்களுக்குச் சமுதாயத்தைப் பற்றி விமர்சிக்க வாய்ப்புகைள அளிக்கும். இந்த விவரங்கள் நமது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்படும்போது, அவை ஏற்கெனவே நாம் எவ்வாறு வாழ்க்கையின் அன்றாடத் தேவைகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்பதைப் பற்றி மேலோட்டமான வாசகர்களுக்குக்கூட தெளிவாகக் காட்டும்.

தொழிலாளர்களுடன் தொடர்புகள்

தொழிலாளர்களிடமிருந்தும் தொழிலாளர் வர்க்க அமைப்புகளிடமிருந்தும் தொழிலாளர்களது வாழ்க்கையைப் பற்றி வரும் செய்திகள் ஆசிரியர் குழுவால் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் கையாளப்பட வேண்டும். இந்தச் செய்திகள் சிறு தகவல்களாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பத்திரிகைக்கும் தொழிலாளர் வாழ்க்கைக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும். அல்லது தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையின் நடைமுறை உதாரணங்களில் இருந்து பொதுவுடைமைவாதக் கொள்கைகளை விளக்குவதற்காகப் பயன்படுத்த முடியும். ஆசிரியர் குழுவானது தம்மைச் சந்திக்க வரும் தொழிலாளர்களைச் சந்திக்க ஒவ்வொரு நாளும் வசதியான ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்போது அவர்களது விருப்பங்கள் அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றிய புகார்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைக் குறித்துக் கொண்டு கட்சிக்குத் தெளிவுபடுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

“பிராவ்தா”வின் முன்னுதாரணம்

முதலாளித்துவக் கட்டமைவின் கீழ் நம்முடைய பத்திரிகைகள் முழுக்கவும் பொதுவுடைமைவாத ஊழியர்களின் கூட்டு நிறுவனமாக ஆவது சாத்தியமில்லை என்பது உண்மையே. எப்படி இருப்பினும் மிகமிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கூட இத்தகைய புரட்சிப் பத்திரிகை ஒன்றை நிறுவி அமைப்பதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி ஈட்டுவது சாத்தியமே. 1912-13 காலத்தில் ரஷ்யத் தோழர்களின் “பிராவ்தா”-வால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யாவினுடைய மிகமிக முக்கியமான மையங்களின் ஊணர்வுபூர்வமான புரட்சிகரத் தொழிலாளர்களின் நிரந்தரமான மற்றும் ஊக்கமான நிறுவனத்தை இது உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தியது. பத்திரிகையின் படைப்புகளை மேற்பார்வையிட்டுத் தீர்மானிப்பது, வெளியிடுவது, விநியோகிப்பது ஆகியவற்றைத் தோழர்கள் தமது கூட்டு முயற்சியில் செய்தனர். அவர்களில் பலர் தமது வேலையுடன் சேர்த்து இதைச் செய்ததுடன் தமது ஊதியத்திலிருந்து பணத்தையும் ஒதுக்கினர். இவற்றுக்குக் கைமாறாக, அப்பத்திரிகையானது, அவர்கள் விரும்பிய மிகச் சிறந்த படைப்புகளை அளித்தது. அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்பட்டவற்றையும் மேலும் அவர்கள் தமது வேலையிலும் போராட்டத்திலும் பயன்படுத்தக் கூடியவற்றையும் அவர்களுக்கு அளித்தது. இத்தகைய பத்திரிகை கட்சி உறுப்பினர்களாலும் பிற புரட்சிகர தொழிலாளர்களாலும் “நமது பத்திரிகை” என்று உண்மையாகவும் யதார்த்தமாகவும் அழைக்கப்பட்டது.

40. கட்சியால் இயக்கப்படும் இயக்கங்களில் நேரடியாகப் பங்கேற்பது போர்க்குணமிக்க பொதுவுடைமைவாதப் பத்திரிகையின் சரியான பண்பாகும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கட்சியின் நடவடிக்கை குறிப்பிட்டதொரு இயக்கத்தில் குவிந்திருக்குமானால், அந்தக் குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பணியாற்ற பத்திரிகை தனது அனைத்து துறைகளையும் – தலையங்கப் பக்கங்கள் மட்டுமல்ல – ஈடுபடுத்துவது அதன் கடமையாகும். இந்த இயக்கத்துக்கு உதவும்படியாக பத்திரிகை முழுவதிலும் – அதன் உள்ளடக்கம், உருவம் என்ற இரண்டிலும் – அதற்கான பொருளாயத மற்றும் மூலாதார விசயங்களைச் சேகரித்தளிப்பதை ஆசிரியர் குழு செய்ய வேண்டும்.

படிக்க:
சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

41. “நமது பத்திரிகை”க்காக சந்தாக்கள் சேகரிப்பது என்பது ஒரு கட்டமைப்பாக ஆக்கப்பட வேண்டும். தொழிலாளர்களைக் கொதித்தெழச் செய்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் (சந்தர்ப்பத்தையும்) தொழிலாளர்களின் அரசியல் மற்றும் சமூக உணர்வைத் தூண்டிவிடக் கூடிய விசேட நிகழ்ச்சியால் ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும் பயன்படுத்திக் கொள்வது முதலாவது விசயம். இவ்வாறாக, ஒவ்வொரு பெரிய வேலை நிறுத்த இயக்கம் அல்லது கதவடைப்பை அடுத்து – அப்போது பத்திரிகை பகிரங்கமாகவும், ஊக்கமாகவும் தொழிலாளர் நலன்களுக்காகக் குரல் கொடுத்திருக்கும் – போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மத்தியில் சந்தா சேர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும். பத்திரிகை சந்தா விண்ணப்பங்களையும் பொதுவுடைமையாளர்கள் ஊக்கமாக வேலை செய்யும் தொழில்களிலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிற்சங்க பிராக்சன்கள் பணியாற்றும் தொழில்களிலும் மட்டுமின்றி, எவ்வெப்போது சாத்தியமோ, அவ்வப்போதெல்லாம் விசேட குழுக்கள் அல்லது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யமு தொழிலாளர்கள் வீடுவீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும்.

இதுபோலவே, தொழிலாளர்களை எழுச்சியுறச் செய்த ஒவ்வொரு தேர்தல் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்தும் விசேட பிரச்சாரத்துக்கான குழுக்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தொழிலாளர்களின் பத்திரிகைக்காகத் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்த வேண்டும்.

மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பாதிக்கின்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் பிற இடர்ப்பாடுகள் வாயிலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது, பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழில் ரீதியில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களை வென்றெடுக்க வேண்டும். பத்திரிகைக்காக வீடு வீடாகச் சென்று திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துவதற்காக அவர்களை ஒழுங்கமைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரம் சந்தா சேர்ப்பு வேலைக்கு மிகமிகப் பொருத்தமான நேரமாகும் என்பதை அனுபவம் காட்டுகிறது. ஒரு மாதத்தின் கடைசி வாரத்தை பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலைக்குப் பயன்படுத்தத் தவறும் எந்த ஒரு உள்ளூர் குழுவும், பொதுவுடைமை இயக்கத்தைப் பரவலாக்குவதைப் பொருத்தவரை கடுமையான கேட்டை விளைவிக்கிறது என்று அர்த்தம். பத்திரிகைக்காகப் பிரச்சாரத்தை நடத்தும் வேலைக்கான குழு எந்தவொரு பொதுக் கூட்டத்திலும் அல்லது எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் இல்லாமல் இருக்கக் கூடாது. அதன் தொடக்கம், இடைவேளை, முடிவு ஆகியவற்றின் போது பத்திரிகைக்கான சந்தா பட்டியலுடன் தோன்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சங்கக் கூட்டத்தின் போது பிராக்சன்களும் ஒவ்வொரு பணிமனைக் கூட்டத்தின் போதும் குழு மற்றும் பிராக்சன்களும் இதே கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்சிப் பத்திரிகைக்காக உறுதியாக நிற்பது

42. கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சிப் பத்திரிகைக்காக இடையறாது வாதிட வேண்டும். அதன் எதிரிகளுக்கு எதிராக நின்று உறுதியாகப் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு எதிராக உத்வேகத்துடன் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகையின் அப்பட்டமான நச்சுத் தன்மையை, போலித் தனத்தை, செய்திகளை இருட்டடிப்பு செய்தலை, எல்லா வகையான இரட்டை மோசடிகளை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும்.

நாள்தோறும் மிகமிகக் கொடியதாகும் வர்க்க மோதல்களை மூடிமறைக்கும் சமூக ஜனநாயக மற்றும் சுயேட்சையான பத்திரிகையின் துரோகத்தனத்தை விடாப்பிடியாக அம்பலப்படுத்தி, அற்பமான விதண்டாவாதத்தில் ஈடுபடாமல், இடையறாத மற்றும் முன்னேறித் தாக்கும் விமர்சனத்தின் மூலம் இப்பத்திரிகைகளை வெற்றிகொள்ள வேண்டும். தொழிற்சங்கம் மற்றும் பிற தொழிலாளர்களது நிறுவனங்களின் உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தும், முடமாக்கும் சமூக ஜனநாயக பத்திரிகைகளின் செல்வாக்கிலிருந்து பிய்த்தெடுக்க தொழிற்சங்க மற்றும் பிராக்சன்கள் நிறுவன ரீதியிலான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வீட்டுக்கு வீடு நமது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் குறிப்பாக ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் செய்வதன் மூலம் சமூக ஜனநாயக பத்திரிகைக்கு எதிரான நமது போராட்டக் கூர்முனை சாதுரியமாகத் திருப்பிவிடப்பட வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்

1

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஒட்டுமொத்த நாட்டிற்கும், மக்களுக்கும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவிட்டு தனது கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கையை அமல்படுத்துகிறது பாசிச பாஜக அரசு.

அதன் ஒரு அங்கமாக புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இதனை கிட்டத்தட்ட தனது முதல் அரசாங்கம் அமைந்த 2014-ம் ஆண்டு முதல் எப்பாடு பட்டாவது அமல்படுத்த வேண்டும் என துடிக்கிறது. ஒவ்வொரு முறையும், இதனை அமல்படுத்த முயற்சித்து தோற்றுப் போயுள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு கல்வியாளர்களும், முற்போக்காளர்களும் இந்த தேசிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தியிருப்பதைத் தொகுத்து “தேசிய கல்விக் கொள்கை 2019 –  நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கொண்டுவரப்பட்டது.

இந்த வெளியீஇடு இன்று புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் அனைவருக்கும் சரியான பதிலடி வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல போராடும் அமைப்புகளுக்கு ஒரு கருத்தாயுதமாக இச் சிறு வெளியீடு அமையும். எனவே அந்நூலின் Pdf கோப்பை உங்களுக்காக வழங்குகிறோம். படியுங்கள்… பகிருங்கள்…

மின்னூலாக தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

நூல் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?
வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

அச்சு நூலாக வாங்க விரும்புவோர் கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும் :

வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெ-7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 600 095.
தொலைபேசி எண் : 94451 12675
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 25.00

ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி !

PP Letter head

நாள் 18-8-2020

பத்திரிகைச் செய்தி

ன்புடையீர் வணக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தமிழக அரசு மூடியது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்து வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது.

ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிரான இந்த வழக்கில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பி.ஆர்.பி.சி. தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் இணைந்து வாதிட்டனர். மேலும் திரு வைகோ, சி.பி.எம்., வணிகர் சங்கம், பேராசிரியர் பாத்திமாபாபு ஆகியோரும் இந்த வழக்கில் இணைந்து வாதிட்டனர். தமிழக அரசின் வாதங்களை தாண்டி ஸ்டெர்லைட்டின் 25 ஆண்டுகால சட்டமீறல்கள், மோசடி, கழிவுகளை அகற்றாமல் தேக்கி வைத்தது, நீர், காற்று மாசுபட்டது, பசுமை வளையம் அமைக்காமல் ஏமாற்றியது என பல்வேறு உண்மைகளை மக்கள் சார்பில் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்பிக்கபட்டது.

இத்தீர்ப்பு தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 15 பேர்களின் உயிர் தியாகத்திற்கு கிடைத்த மரியாதை. சுற்றுச்சூழலை நாசமாக்கி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளை விரட்டியடிக்க எப்படிப் போராட வேண்டும் என்பதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த முன்னுதாரணமானது தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையின் கடைசி செங்கல்லை பிரித்து கடலில் வீசி எறியும் வரை சட்டப் போராட்டமும் மக்கள் பேராட்டமும் இதே ஒற்றுமை, உறுதியுடன் தொடர வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கும் ஜாலியன்வாலாபாக் போன்று தூத்துக்குடியில் நினைவு தூண் அமைக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த தன் சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததை அனுமதிக்க முடியாது. படுகொலைக்கு காரணமான போலீசார் மற்றும் உத்திரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிக்கபட வேண்டும்.

படிக்க:
ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

கார்ப்பரேட்டு கொள்ளைக்கு ஆதரவாக பா.ஜ.க அரசு சுற்றுசூழல் சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வர முயலும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு முக்கியமானது.

பாசிச பாஜ.க மற்றும் இந்துத்துவா சக்திகள், ஊடக தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கும் வலதுசாரி கருத்தாளர்கள் துவக்கம் முதலே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசியதுடன், தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை, தியாகத்தை கொச்சைபடுத்தினர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க காவி பாசிசஸ்டுகள் அனைத்து துரோக வேலைகளையும் செய்ய துவங்குவார்கள்.

தமிழக மக்கள் விழிப்போடு இருந்து இவர்களை முறியடிக்க வேண்டும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்

ந்தக் குறுநூல் இரண்டு கட்டுரைகளை உள்ளடக்கியது. ஒன்று ஆர்.எஸ்.எஸ் எப்படி இந்துத் தீவிரவாதத்தைக் கட்டமைக்கிறது என்றும் மற்றொன்று எப்படி சிறுபான்மையினர் ஆர்.எஸ்.எஸ்-ஆல் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்குகிறது.

பல்வேறு கலாச்சாரம், மொழி, பண்பாடு கொண்ட தேசத்தில் இந்து பண்பாடு மட்டுமே உயர்ந்தது என்றும் அப்படி இந்துவாக இல்லாதவன் தேசவிரோதி என்றும் பல்வகைப்பட்ட தேசிய இனங்களின் மரபுரிமைகளைப் பறித்து ஒற்றைக் கலாச்சாரத்தை நம்மீது திணிக்கும் பாசிசச் செயல்பாடுகள் கருக்கொண்டதை விளக்கித் தெளிவுபடுத்துகிறார் இந்நூலாசிரியர்.

தேசிய இனங்களின் பொருளாதாரத்தையும், சிறுபான்மையினரின் வணிகத்தையும் வேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ்-இன் வளர்ச்சிக்கு அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் நிதிக்கட்டமைப்பையும் அதற்கு சங்பரிவார அமைப்புக்கள் ‘யோகா’ போன்ற நிதி ஆதாரங்களையும் ஆராய்ந்து அவர்களின் தீவிரவாதத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைகளை அறிந்துகொள்ள அனைவராலும் படிக்கப்பட வேண்டிய குறுநூல் இது. (பதிப்புரையிலிருந்து).

ஆர்.எஸ்.எஸ் – இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்!

…. ஆரிய இந்து தீவிரவாதத்தின் தத்துவார்த்த கோட்பாடுகளை வடிவமைக்கும் அதிகாரம் படைத்த அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh) செயல்படுகிறது. மத அடிப்படைவாத செயல்களை வி.எச்.பி என்று அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishva Hindu Parishad) செயல்படுத்தி வருகிறது. இந்த வி.எச்.பி-யின் திட்டங்களைச் செயல்படுத்தும் காவி ரவுடி கும்பலாக பஜ்ரங்தள் (bajran dal) எனும் இளைஞர் அமப்பு இருக்கிறது. காவி அடிப்படைவாதத்தின் மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி (Akhil Bharatiya Vidyarthi Parishad) செயல்பட்டு வருகிறது. இதைப் போன்று 30க்கும் மேற்பட்ட  அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தும் கூட்டாக சங் பரிவார் என்று அழைக்கப்படுகிறது.

வேலைக்காக அமெரிக்கா சென்று வாழத் தொடங்கிய இந்திய நடுத்தர வர்க்க இளைஞர்களை கார்ப்பரேட் சாமியார்களின் யோகா, தியானம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் தன்வயப்படுத்தி வைத்திருக்கிறது. காவி பயங்கரவாத சக்திகள் அமெரிக்காவிலும், சிலந்தி வலைபோல் பரவி பல நிர்வாகக் கட்டுமானங்களையும், உருவாக்கி செயல்பட்டு வருகிறது. சேவா விபா அமைப்பு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் நிதி திரட்டி இந்தியாவில் பல மதக்கலவரங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டாலும் இந்த அமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் இந்து அடிப்படைவாத கூட்டம்தான், ஒருவரே பல அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எச்.எஸ்.எஸ் (HSS – Hindu Swayamsevak Sangh) எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு அமெரிக்கவாழ் இந்தியர்களை ஒன்றுதிரட்ட FISI (Friends of Indian Society) எனும் அமைப்பை துவங்கி தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறது. அதேபோல் வி.எச்.பி.ஏ (VHPA – Vishva Hindu Parashad of America) எனும் அமைப்பு இந்துமதவாத செயல்களை பரப்பி வருகிறது. இந்திய மக்களுக்கு சேவை செய்யும் எனும் போர்வையில் Sewa International USA Ekal Vidyalaya Foundation – USA எனும் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை அமெரிக்காவில் திரட்டி இந்தியாவில் மதக் கலவரத்திற்கும் இந்து அடிப்படைவாத கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் உதவி வருகின்றன.

எந்தவிதமான சந்தேகமும் வராமல் இருப்பதற்காக அமெரிக்காவில் 1989ம் ஆண்டு IDRI (Indian Development Relief Fund) எனும் பொது அமைப்பை உருவாக்கி அவற்றின் ஊடாகவும் நிதி திரட்டும் வேலையை செய்து வருகிறது. இந்த IDRF எனும் மைய அமைப்புதான் கடந்த 27 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி நிதியை இந்தியாவிற்குள் கொண்டு வந்தது. (நூலிலிருந்து பக்கம் 7-11)

… தமிழ்நாட்டின் சிற்பங்கள், கோயில்கள், பக்தி இலக்கியங்கள், தொல்லியல், வரலாறு அனைத்தையும் தனக்குள் சேர்க்கப் பார்க்கிறது. இப்படித்தான் ஆரிய – வேத – சமஸ்கிருத பண்பாடு இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டது. தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக சொல்லப்படும் அனைத்தும் ஆரிய வேத மரபின் நீட்சியாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக தந்தைப் பெரியார் நம் மண்ணில் நிற்கிறார். (நூலிலிருந்து பக்கம் 26-28)

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் குண்டர்களால் வேட்டையாடப்படும் சிறுபான்மையினர்

…. இந்திய சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு ஏறத்தாழ 40,000க்கும் அதிகமான மக்கள் மதக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும் பகுதியினர் சிறுபான்மையின மக்கள், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

…. பாஜக ஆட்சி நடக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 2,920 கலவரங்கள் நடந்துள்ளன. அதில் 8,890 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 389 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். இக்கலவரங்களில் பெரிய தொகையான மக்கள் உடைமைகளை இழந்து வாழுகின்றனர். மோடி ஆட்சி செய்யும் கடந்த மூன்று ஆண்டுகளில் மதக்கலவரம் 28% அதிகமாகியுள்ளது. 2016ம் ஆண்டை ஒப்பிடும்போது 17% மதக்கலவரங்கள் அதிகரித்துள்ளன. (நூலிலிருந்து பக்கம் 39, 41)

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 35க்கும் அதிகமான கலவரங்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணையங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் காவல்துறையும் அரசாங்கமும் கலவரத்திற்கு துணைநின்றதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. குறிப்பாக முக்கியமான இந்துத்துவ மற்றும் பாஜக தலைவர்களின் பெயர்கள் பல்வேறு அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்பட்டது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அமைப்புகள் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையைச் Institutionalised riot system) செயல்படுத்தி வருகிறது. கலவரங்கள் எப்படி உருவாக்குவது, எந்தப் போக்கில் திசைதிருப்பப்பட வேண்டும், கலவரம் முடிந்ததற்கு பிறகு எவ்வாறு வழக்குகளைக் கையாள வேண்டும் போன்ற அனைத்துத் திட்டங்களும், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறது. இதுபோன்ற கலவரங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலமே அடங்கியுள்ளது. இப்படி வன்முறைச் செயல்களில் ஈடுபடும் இந்துத்துவா குண்டர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படுவது கிடையாது. மாறாக பாதிப்பிற்கு உள்ளான சிறுபான்மையினர் மீதுதான் அதிக வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் கலவரம் குறித்து கைது செய்யப்பட்டவர்களில் அதிகபடியானவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் என்பது மிக வேதனைக்குரியது.

….. வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்புச் (நியாயமும், இழப்பீடும் பெறுவதற்கான வழிவகை) சட்டத்தின் முன்வரைவு பல்வேறு முற்போக்கு சக்திகளைக் கொண்டு நீண்ட ஆய்வுக்கு பிறகு வடிவமைக்கப்பட்டது. இதில், 49 திருத்தங்கள் செய்யப்பட்டு மேலும், செழுமைப்படுத்தப்பட்டது. இந்துத்துவ அமைப்புகள் இந்த வரைவை கடுமையாக எதிர்த்து வந்தனர். அதற்குள்ள காரணங்களில் மிக முக்கியமானது பிரிவு 15ல் பின்வருமாறு பரிந்துரைக்கப்பட்டது.

படிக்க:
சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே

“ஒரு அரசு சாராத அமைப்புச் செய்யும் வகுப்பு மற்றும் இலக்கு வன்முறையை அதன் தலைவர் தடுக்கத் தவறினால் அவரின் தொண்டர்கள் செய்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் அவரும் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்”. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளின் பெருவாரியான தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். குறிப்பாக பாஜகவில் இன்று திகாரத்தில் உள்ளவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள். (நூலிலிருந்து பக்கம் 56, 60)

நூல் : ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
ஆசிரியர் : அரண்

வெளியீடு : நிமிர் வெளியீடு, 18, சுப்ரிதா பிளாட்ஸ், அவ்வையார் தெரு,
நங்கநல்லூர், சென்னை – 600 061
தொலைபேசி எண்: 72999 68999
மின்னஞ்சல்: nimirpublications@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ. 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !

லகம் முழுவதும் கோவிட்-19 பொதுமுடக்கம், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் சுமை என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக பெண்கள் மீதான குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது. கோவில் -19 பெரும் தொற்று ஏற்பட்டு சுமார் 8 மாதங்கள் கடந்தும் நம்மை பல்வேறு வகையில் அது துன்புறுத்தி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

உலகம் முழுக்க எல்லா நாடுகளும் இதைப்பற்றி பேசி கொண்டுயிருக்கையில் இந்தியா ஓரு பக்கம் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சுழல் ஆய்வு மேலாண்மை EIA-2020, இரயில்வே தனியார்மயம், பொதுத்துறை தனியார் மயமாக்கம் என நோய் தொற்றை கவனிக்காமல் தனியார் லாப நோக்கத்துக்காக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் ஊடக சுதந்திரம், முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு, ராமர் கோவில் பூஜை என வேறு பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்நேரத்தில் அதிகரித்து வருவதில் நாம் அதுகுறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என பேசுகின்றன. இதைப்பற்றி பிரபல நாளேடுகளான நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற தளங்கள் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்களை துவங்கி நடத்திவருகின்றன.

அதிலும் பொது முடக்கத்தில் பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சுழலை உண்டாக்கியுள்ளது. அலுவலகப்பணி மற்றும் வீட்டுப் பணிகள் என இரண்டும் சேர்ந்து வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் தங்களின் குழந்தைகள் கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகளையும் கண்காணிக்க வேண்டிய உள்ளது. வீட்டிலிருக்கும் ஆண்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதே போல பொது முடக்க காலத்தில் இனணயத்தில் ஆண்கள் அதிமாக போர்ன் (Porn) வீடியோக்கள் பார்பதும் அதிகரித்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் சார்ந்த பாலியல் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகிறது என உலக சுகாதார நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பாலியில் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது மேலும் Sex Traffic -ஐ ஊக்கவிக்க வகை செய்கிறது. ஆன்லைன் பாலியில் சீண்டல், குடும்ப வன்முறை என ஒருபக்கம் இப்படி எனில் மறுபக்கம் கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 பொது முடக்கத்தின் போது சுமார் 5,584 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது. ஆனாலும் அதுவும் கூட குறைவே. நமக்கு தெரியாமல் ஆயிரம் ஆயிரம் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் 118, ஆந்திராவில் 204, தெலுங்கானாவில் 165 என நாடு முழுக்க பல இடங்களில் குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டாலும், வட மற்றும் மத்திய இந்தியாவில் இது கணிசமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்க்க முடிகிறது.

படிக்க:
கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

இதைப்போன்றே UNICEF ஆய்வறிக்கையில் 2017-ல் இந்தியாவில் 27% பெண்குழந்தைகள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும் அதிலும் குறிப்பாக 7% குழந்தைகளுக்கு 15 வயதிற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது என சொல்கிறது. இந்த கோவிட்-19 பொதுமுடக்கம் மக்களிடம் கணிசமான வேறு சில உந்துதலையும் ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக குறைந்த செலவில் திருமணம், வரதட்சனை போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. உலகப் பார்வை என்ற அமைப்பு அதிகரித்து வரும் கொரானவால் “மேலும் 4 மில்லியன் கட்டாய குழந்தை திருமணத்திற்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது. காலவரையற்ற பள்ளி மூடல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழ்நிலை என எல்லாம் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

குழந்தை திருமணமும் கிராம-நகர்புற இடைவெளியும்

NFHS-4 வெளியிட்ட குழந்தை திருமணங்கள் குறித்த ஆய்வில் கிராமப்புறத்தில் 14.1 % -மாகவும் இது நகர்புறத்தில் 6.9% இருப்பதாக தெரிவிக்கிறது. இந்த இடைவெளி என்பது சுமார் 9% சதவிதம் கல்வியும், வேலைவாய்ப்பு, பொருளாதாரத்திலும் நகரத்தைவிட கிராமங்களில் பின் தாங்கிய சூழ்நிலையிலே இத்திருமணங்கள் நடப்பதாக தெரிவிக்கிறது.

பீகாரை சேர்ந்த 37 வயதான மீனா தனது 15 வயது மகளுடன் டில்லியில் புலம் பெயர் தொழிலாளாராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் கிராமத்தில் உறவினர்களுடன் படித்து வருகிறான். பெண் குழந்தை என்பதால் தனியாக கிராமத்தில் விடமுடியாத சூழ்நிலையில் தங்களுடன் டில்லிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றும் கூறுகிறார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது தனது மகளுக்கு ஒரு ஆணுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு முன் வரதட்சனை பணத்தை கொடுக்க வேண்டும். சமூகத்தில்  பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என கருதுவது திருமண சடங்கை மட்டுமே. இதற்கு காரணமாக பெண்களின் பாதுகாப்பு, வயது கூட இருப்பின் அதிகமான வரதட்சணை, அவளின் ‘கன்னித்தன்மை’ பாதுகாப்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதில் எங்கு நாம் அவர்களிடம் பெண்ணின் உரிமையை பற்றி பேசுவது!? இங்கு தான் இந்த இடைவெளி ஏழைக்கும் பணக்காரர்களுக்குமானது என்பது புரிகிறது. குறிப்பாக இச்சூழல் புலம்பெயர் தொழிலாளர்களின் மகள்களை கட்டாய திருமணத்திற்கு தள்ளுகிறது. பொதுமுடக்கம் போன்ற பல காரணங்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் கால்களுடன் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் என்றால் பருவமழை முன்னே பெய்ததால் அசாம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்கள் வெள்ளத்தால் பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த சுழ்நிலையில் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு செய்யும் சடங்காக எண்ணி, அதைச் செய்வது மேலும் அதிகரித்து வருகிறது.

படிக்க:
நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

Prohibition of Child Marriage Act 2006, என்ற சட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்கமுடிவதில்லை. மேலும் PCM Act 2006, நிறைவேற்றப்பட்டத்திலிருந்து 2017 வரை இப்படியான திருமணங்களின் மூலம் நடக்கும் உடலுறவு, பாலியல் வன்முறையாக கருதப்படவில்லை. அது திருமணத்தின் ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. பின் 2017-ற்கு பிறகு Independent through vs Union of India வழக்கு பதிவுச் செய்து 15 வயதிலிருந்து 18 வயதாக மாற்றி பிரிவு 375 IPC -இன் கீழ்  குழந்தைகளுக்கு எதிரானது என வரையறுக்கப்பட்டது. மேலும் இக் குழந்தைகளிடம் விருப்பமின்றி உடலுறவு கொள்வதும் தவறு எனவும், அவை கற்பழிப்பாக கருதப்படும் என்றும் தீர்ப்பளித்தது.

பாலியல் சுரண்டலுக்காக அதிகரிக்கும் குழந்தை கடத்தல் :

கோவிட்-19 பொது முடக்கத்தில் மற்றொரு பாதிப்பு குழந்தை கடத்தல். இது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டில்லியில் 15 வயது சிறுமி காணாமல் போனது குறித்து விசாரித்ததில் 9 குழந்தைகள் ஒரே சமயத்தில் வடக்கு டில்லியில் மீட்கப்பட்டனர்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 89 சதவீதம் பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளை உழைப்புக்காக கடத்துவது பொதுமுடக்கத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் “மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக” இருக்கும் என்று கூறியுள்ளனர்.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், உழைப்பு நோக்கத்திற்காக, பொதுமுடக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் மனித கடத்தல் அதிகரிப்பதற்கு “மிக அதிக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

“தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில், 76% பேர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் கடத்தல் ஆகிய நோக்கத்திற்காக மனிதக் கடத்தலை செய்கின்றனர் என்றும். கிராமப்புறங்களில் அதிக கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு முக்கிய தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது.

வாழ்வாதாரத்தை இழந்து பசி மற்றும் பட்டினியை எதிர்கொள்ளும் குடும்பங்கள், குழந்தை கடத்தல் உட்பட அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். கடத்தலால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது தொற்றுநோய்க்குப் பிந்தைய மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

குழந்தைகள் கடத்தப்படுவதிலிருந்து தடுத்துப் பாதுகாக்க கடத்தல் நடக்கும் பகுதிகளில் ஒரு பரந்த கட்டாய பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கள் அறிக்கையின் மூலம் நாங்கள் அரசிடம் பரிந்துரைக்கிறோம்,” என்று கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சங்கர் கூறுகிறார்.

தொற்றுநோய் உலகில் பல தொல்லைகளை கட்டவிழ்த்துவிட்டது. அதில் பெண்கள் மீதான அதன் தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை. மன அழுத்தத்திலிருந்து, நிதி உறுதியற்றதன்மை மற்றும் சுகாதாரத்துக்கான அணுகல் இல்லாமை வரை, வைரஸ் அனைத்து வயதினருக்கும் மற்றும் நாடுகளுக்கும் உள்ள பெண்களுக்கு கடுமையான பாதிப்பை தந்துள்ளது. இந்த அதிகரித்த சுமை பல பெண்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற மனநல பிரச்சினைகளை உருவாக்குக்கிறது. ஏராளமான பெண்கள், சமூக தனிமைப்படுத்தலின் விளைவாக கோபம் மற்றும் அதிக அளவு விரக்தியையும் அனுபவித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான தேசிய ஆணையம் கடந்த ஏப்ரல் மாதத்தில் உதவி எண்களை அறிவித்து இருந்தனர். இருந்தும் இப்படி நாடு முழுக்க குடும்ப வன்முறை, குழந்தை கடத்தல், பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால் அரசு இதை கவனிக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது. இதை தொடர்ந்து கேரள அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இயக்குனர் அனுபாமா குறுச்செய்தி / வாட்ஸ் ஆப் மூலம் மித்ரா 181 சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராட்ஷாவில் பெண்கள் பாதுகாப்பு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதையெல்லாம் பெண்களை விட ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அனைத்து பெண்களின் கோரிக்கையாக வைக்கின்றேன்.

சிந்துஜா சமூக ஆர்வலர்.

நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 08

முதல் பாகம்

பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது

ந்த முறையில் பொதுவுடைமைவாதச் செல்வாக்கின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட புதிய தலைமையானது, செயலூக்கமுள்ள தொழிலாளர் குழுக்களை ஒன்றுகுவிப்பதன் மூலமாக புதிய சக்தியாக்கிக் கொள்கிறது. சோசலிஸ்ட் கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமையை உந்தி முன்தள்ளுவதற்கு அல்லது அவற்றின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கு இந்தச் சக்தி பயன்படுத்தப்பட வேண்டும்.

நமது கட்சி மிகச் சிறந்த நிறுவனங்களைப் பெற்றும் அதன் கோரிக்கைகளுக்காக மிகப்பெரும் ஆதரவைப் பெற்றும் உள்ள தொழிற்பகுதிகளில், உள்ளூர் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்துறை கவுன்சில்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட நிர்பந்தத்தைக் கொடுப்பதன் மூலம் அப்பகுதிகளில் அங்குமிங்குமாக நடைபெறுகின்ற பொருளாதாரப் போராட்டங்களையும் இதுபோலவே பிற குழுக்களின் வளர்ந்துவரும் போராட்ட இயக்கத்தையும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டமாக வெற்றிகரமாக இணைக்க வேண்டும்.

இதன் பின்னர் இந்த இயக்கமானது, குறிப்பிட்ட தொழிற்கிளை நலன்களுக்கு அப்பாற்பட்டு ஆரம்ப நிலை கோரிக்கைகள் அனைத்தையும் முன்வைத்து இவற்றை நிறைவேற்றுவதற்கு போராட முன்வர வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள எல்லா நிறுவனங்களின் ஒன்றுபட்ட சக்திகளையும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய இயக்கத்தில் போராட்டத்திற்குத் தயாராக உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரின் தலைவனாக பொதுவுடைமைக் கட்சி தன்னை நிரூபித்துக் கொள்ளும். ஆனால், இத்தகைய ஒன்றுபட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தை எதிர்க்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவமும் “சோசலிஸ்ட்” கட்சியும் அவற்றின் சொந்த நிறத்தைக் காட்டி அரசியல் ரீதியில் மட்டுமின்றி, நடைமுறை நிறுவன ரீதியிலான கண்ணோட்டத்திலும் தம்மை அம்பலப்படுத்திக் கொள்ளும்.

ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை முன்னெடுத்துச் செல்வது எப்படி?

34. புதிய இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்ற கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது மக்கள்திரளினரைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பொதுவுடைமைக் கட்சி முயற்சிக்க வேண்டும். குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடுவதைத் தவிர்த்து சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நேரடியான வேண்டுகோள் விடுப்பது மிகச் சிறப்பானதாக அமையும். தீர்மானகரமான போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட அவர்களது அதிகாரத்துவத் தலைவர்கள் எத்தணிப்பதையும் மீறி எவ்வாறு வறுமையும் ஒடுக்குமுறையும் அவர்களைத் தமது எஜமானர்களுக்கு எதிராக வேறுவழியின்றிப் போராடும்படி தள்ளி வருகின்றன என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

கட்சியின் பத்திரிகைகள் குறிப்பாக தினசரி ஏடுகள், நாள்தோறும் வலியுறுத்த வேண்டியது என்னவெனில், அப்போதைய நெருக்கடியான நிலையில் பொதுவுடைமையாளர்கள் நிராதரவான தொழிலாளர்களின் எதிர்வரும் மற்றும் நடைமுறைப் போராட்டத்திற்குத் தலைமையேற்கத் தயாராய் இருக்கிறார்கள், ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் சாத்தியமான இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்களின் போரிடும் நிறுவனம் உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கிறது – என்பதையே. இந்தப் போராட்டங்கள் இன்றி – பழைய நிறுவனங்கள் இப்போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் அவற்றுக்குத் தடையேற்படுத்துவதற்கும் எவ்வளவுதான் முயன்ற போதிலும் – தொழிலாளர்களின் வளர்ந்துவரும் சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை மாற்றுவதற்கு சாத்தியமே இல்லை என்பதை நாம் நாள்தோறும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பொதுவுடைமைவாத பிராக்சன்கள் பொதுவுடைமையாளர்கள் சுயதியாகத்துக்குத் தயாராய் இருப்பதையும் இந்தப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதையும் சக தொழிலாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எப்படியாயினும், அப்போதைய நிலைமையில் எழுகின்ற எல்லா போராட்டங்களையும், இயக்கங்களையும் ஒன்றுபடுத்துவதும், உறுதிப்படுத்துவதும் பிரதானக் கடமையாகும். போராட்டத்தில் ஈர்க்கப்பட்டுள்ள தொழிற்துறை மற்றும் கைவினைத் தொழிலில் உள்ள கருக்குழுக்கள், பிராக்சன்கள் அனைத்தும் தமக்குள் நெருக்கமான இணைப்புகள் வைத்திருப்பது மட்டுமின்றி, வெடித்து எழக்கூடிய எல்லா இயக்கங்களுக்கும் தலைமை அளிக்கவும் வேண்டும். போராட்டத்தை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும், அதைப் பரவலாக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கரம் கோர்த்து பணியாற்றக் கூடிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்புள்ள ஊழியர்களை உடனுக்குடன் அனுப்பி மாவட்டக் கமிட்டிகளும் மத்தியக் கமிட்டிகளும் இயக்கத்துக்குத் தலைமை அளிக்க வேண்டும்.

அவசியமானால், அரசியல் வழியில் பிரச்சினைக்குப் பொதுத் தீர்வு காணும் கருத்தை வளர்ப்பதற்காக அனைத்து வகைப்பட்ட போராட்டங்களின் பொதுத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதும், வலியுறுத்துவதும் ஒவ்வொரு இடத்திலுமுள்ள நிறுவனத்தின் பிரதான கடமையாகும். போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து பொதுத்தன்மை பெறுகையில் போராட்டத் தலைமைகளை ஒரே மாதிரியான அமைப்புகளாக உருவாக்குவது அவசியமாகும். தொழிற்சங்க அதிகாரத்துவ வேலை நிறுத்தத் தலைவர்கள் தோல்வியுறும் இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்கள் உடனடியாக முன்வந்து நடவடிக்கைக்கான தீர்மானகரமான நிறுவனத்தை – சாதாரண ஆரம்ப நிறுவனத்தை – உத்திரவாதம் செய்ய வேண்டும். பிராக்சன்கள் மற்றும் தொழில் கவுன்சில்களின் கூட்டங்களிலும் சம்பந்தப்பட்ட தொழில்களின் பொதுக் கூட்டங்களிலும் விடாப்பிடியாக வலியுறுத்துவதன் மூலம், செயல்திறனுள்ள போர்க்குணமிக்க தலைமையின் கீழ் இதனைச் சாதிக்க முடியும்.

இயக்கம் பரவலாகி முதலாளிகளின் நிறுவனங்களின் தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத் தலையீட்டால் அரசியல் தன்மையைப் பெறும்போது, தொழிலாளர்கள் கவுன்சில்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பப் பிரச்சாரம் மற்றும் நிறுவன வேலையைத் தொடங்க வேண்டும். அத்தருணத்தில் இவை சாத்தியமாகவும் அவசியமானதாகவும் ஆகலாம்.

இங்குதான் கட்சி உறுப்புகள் அனைத்தும் தொழிலாளர் வர்க்கம் தனது சொந்தப் போராட்ட ஆயுதங்களை வார்த்தெடுப்பதன் மூலமே தனது சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சாரத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கோ அல்லது பழைய சோசலிஸ்ட் கட்சிகளுக்கோ இம்மியளவும் கருணை காட்டக் கூடாது.

35. ஏற்கெனவே பலமாக வளர்ந்துள்ள, குறிப்பாக மக்கள்திரளுடைய பெரிய பொதுவுடைமைக் கட்சிகள் மக்கள்திரள் நடவடிக்கைக்குத் தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும். பரந்துபட்ட மக்கள்திரளினருடன் நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கான அரசியல் ஆர்ப்பாட்டங்கள், பொருளாதார இயக்கங்கள் மற்றும் இதுபோன்ற உள்ளூர் நடவடிக்கைகள் அனைத்தின் அனுபவங்களை எப்போதும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். தலைமை நிர்வாகிகள், பொறுப்புள்ள கட்சி ஊழியர்கள், நம்பிக்கைக்குரிய பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடுகளில் எல்லா பெரிய இயக்கங்களிலும் பெற்ற அனுபவங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். இம்முறையில் வலைப்பின்னல் போன்ற தொடர்பு தொடர்ச்சியாக அதிகரிக்கும், பலப்படும், நம்பிக்கைக்குரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் மேலும் போரிடும் உணர்வுடன் எழுச்சியுறுவர். தலைமை நிர்வாகிகள் மற்றும் பொறுப்புளள கட்சி ஊழியர்களுக்கும் பணிமனைப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பரஸ்பரம் நம்பிக்கையான தொடர்புகள் (உறவுகள்) இருப்பதானது காலம் கனிவதற்கு முந்திய மக்கள்திரள் அரசியல் நடவடிக்கை இராது என்பதற்கும் சூழ்நிலைகளுக்கும் கட்சியின் உண்மையான பலத்துக்கும் ஏற்ற நடவடிக்கைகளே இருக்கும் என்பதற்கும் நிச்சயமான உத்திரவாதமாகும்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

கட்சி நிறுவனங்களுக்கும் பெரும் மக்கள்திரள் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பாட்டாளி வர்க்கத்தினருக்குமிடையே நெருக்கமான இணைப்புகளைக் கட்டியமைக்காமல் உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு இயக்கத்தை வளர்க்க முடியாது. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த சந்தேகத்திற்கிடமற்ற புரட்சிக் கொந்தளிப்பு – தொழிற்சாலைகளைக் கைப்பற்றுவதில் இது தெளிவாக வெளிப்பட்டது – அகாலமாக வீழ்ச்சியுற்றது. இதற்குப் பெருமளவு காரணமாக இருந்தது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகம் – நம்பிக்கை வைக்கத் தகுதி இல்லாத அரசியல் தலைவர்கள் – ஆகியவையாகும். கட்சிக்கும் தொழிலுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் அறவே இல்லாதது, அதாவது, கட்சி நலனில் அக்கறையுள்ள அரசியல் அறிவுமிக்க தொழில் நிலையப் பிரதிநிதிகள் இல்லாதது இதற்கு ஓரளவு காரணமாகும். இவ்வாண்டு (1921) ஆங்கிலேய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் சந்தேகத்துக்கு இடமின்றி இதே குறைபாடு அளவுக்கு அளவுக்கதிகமாக இருந்ததால் தோல்விக்கு உள்ளாயிற்று.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க