Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 227

வெளிப்படையான அரசு அல்ல – வெட்கக் கேடான மோடி அரசு !!

ரு அரசாங்கம் தன் சொந்த மக்களிடம் எவ்வளவு வெளிப்படைத் தன்மையுடன் நடந்துகொள்கிறதோ, அந்த அளவிற்கு, அந்த நாட்டின் ஜனநாயகம் பாதிப்பிற்கு உள்ளாகாமல் இருக்கும்.

வெளிப்படைத்தன்மை, அதிகமான ஆளுமை போன்ற வாயில் வடைசுடும் சமாச்சாரங்களை தேர்தல் முழக்கங்களாகக் கொண்டு ஆட்சியை அமைத்த மோடி அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையின் யோக்கியதை என்ன என்பதை சமீபத்தில் வெளியான பல்வேறு தகவல்கள் அம்பலப்படுத்துகின்றன.

பொதுவாக, நீதிமன்றத்தில் ஒரு குற்றவாளி தான் செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க, நடந்த குற்றத்தில் தனக்கு எந்தவிதத்திலும் பங்குமில்லை என்று பொய் சாட்சிகள் மூலம் நிரூபித்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சிப்பான். ஆனால் இங்கு மோடியரசோ ஒரு படி மேலேபோய், குற்றமே நடக்கவில்லை என்று நிறுவ முயல்கிறது.

குற்றமே நடக்கவில்லை என்று கூறுவது, எதிர்க்கட்சிகள் கேள்விகேட்டால் தகவல் இல்லை என்று கூறுவது என்பதையே தனது நடைமுறையாகக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

படிக்க :
♦ வெளிப்படைத் தன்மையாக இருங்கள் மோடி || முன்னாள் அரசுச் செயலர் கடிதம்
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் யாரும் இறக்கவில்லை

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மோடியரசு முற்று முழுதும் தோல்வியடைந்தது ஊர் அறிந்ததே. கொரோனா முதல் அலையின்போது, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகையையொட்டி குஜராத்தில் கூட்டம் நடத்தியது, மத்தியபிரதேசத்தில் குதிரை பேரம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடத்துவதற்காக கொரோனாவுக்கான பொது முடக்கத்தை தள்ளி வைத்தது என கொரோனா பரவலுக்கு முக்கிய காரணமாகவும் இருந்தது மோடி அரசுதான்.

கொரோனா முதல் அலையில் புலம்பெயர் தொழிலாளர்களின் அவலத்தையும், மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மருத்துவமனை வாசலிலும், வீதியிலும் காத்துக்கிடந்த நோயாளிகளையும் நாம் பார்த்தோம். நாடு முழுவத்கும் கொரோனா மரணங்கள் கோரத் தாண்டவம் ஆடின.

கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டது என வல்லுனர்கள் எச்சரித்த சமயத்திலும், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களையும், உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்டத்தையும் அனுமதித்து இரண்டாம் அலை பெரும் அபாயகரமானதாக உருவெடுக்க மோடி அரசு துணை நின்றது.

முதல் அலையை விட அபாயகரமானதாக, இரண்டாம் அலையின் கோரத்தாண்டவம் இருந்தது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் நாடே திண்டாடியதையும், சுடுகாடுகளில் விடிய விடிய பிணங்கள் எரிந்ததையும், கங்கையில் கொரோனா பிணங்கள் மிதந்ததையும் உலகமே காறி உமிழ்ந்தது. “தி ஆஸ்த்திரேலியன்தொடங்கி வாஷிங்டன் போஸ்ட்வரை அனைத்து ஊடகங்களும் மோடியை கொரோனா ஒழிப்பில் தோல்வியைத் தழுவியவர் என அம்பலப்படுத்தியது. உலக அரங்கில் இந்தியாவை தலைகுனியச் செய்திருக்கிறார் மோடி.

ஆனாலும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட இந்தியாவில் இறக்கவில்லை என நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது இந்த மானங்கெட்ட மோடி அரசு. ஒன்றிய அரசின், குடும்ப மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் பாரதி பிரவின் பவார் ராஜ்யசாபாவில் இதனை தெரிவித்தார்.

உலகமே காறி உமிழ்ந்த ஒரு நிகழ்வை ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றிருக்கிறார் மோடி. இதை விட கல்லூளிமங்கனாக ஒரு பிரதமர் இருக்க முடியுமா ?

விவசாயிகள் இறப்பா? அப்படி ஒன்று நடக்கவேயில்லை.

மோடியரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக கொண்டுவந்த மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் விவசாயிகள் போராடி வருகின்றனர். தொடர்ந்து பத்து மாதங்களுக்கும் மேலாக இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதையடுத்து விவசாய சங்களின் கூட்டமைப்பான சம்யுக்த் கிசான் கடந்த மார்ச் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இந்த போராட்டத்தில் இதுவரை 537 விவசாயிகள் உயிர் நீத்துள்ளனர், என்று கூறியதோடு, உயிர் நீத்த விவசாயிகளின் பெயர்ப் பட்டியலையும், அதே செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார்கள்.

ஆனால், போராட்டத்தில் உயிர்துறந்த விவசாயிசள் பற்றிய எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை என்று வேளாண்மை மற்றும் விவசாய நல்வாழ்வுத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமோர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதெல்லாம் பச்சைப் பொய் அல்லவா ?

மோடி கருப்பு பணத்தை ஒழிக்க வந்தவரா ?  ஒளிக்க வந்தவரா ?

8 நவம்பர், 2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி 500, 1000 தாள்கள் இனி செல்லாது என அறிவித்தார். அத்தோடு வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப் பட்டிருக்கும் கருப்பு பணத்தை ஒழிக்க கருப்பு பண ஒழிப்புச் சட்டம் 2015′ என்ற சட்டத்தையும் முன் தேதியிட்டு அமலுக்கு கொண்டுவந்தார். இதன்படி வங்கித் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக அமெரிக்கா உட்பட பல நாடுகளுடன் ஒப்பந்தமும் போடப்பட்டது.

ஆனால் தற்போது (2021), கடந்த பத்து வருடங்களில், சுவிஸ் வங்கி உட்பட வெளிநாட்டு வங்கிகளில், பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்பு பணம் பற்றிய எந்தத்தகவலும் தங்கள் அரசிடம் இல்லை என்கிறார், மத்திய நிதித்துறை அமைச்சர் இணை பங்கஜ் சவுத்ரி.

இந்திய அரசாங்கம், சுவிட்சர்லாந்து நாட்டுடன் போடப்பட்ட தகவல் பகிர்வு ஒப்பந்தம் இன்றும் நடைமுறையில் இருப்பதாக 2019-ல் கூறியது. போக சுவிட்சர்லாந்தின் மத்திய வங்கி, இந்தியாவை சேர்ந்த தனிநபர் மற்றும் குழுமங்கள் தங்கள் வங்கியில் 20,700₹ கோடி ரூபாய் வைப்பு வைத்துள்ளதாக 2020-ஆம் தெரிவித்தது. இத்தனை தகவல்கள் இருந்தும், வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கருப்பு பணம் பற்றிய தகவல் மட்டும் நம் அரசாங்கத்திடம் இல்லை.

இப்போது சொல்லுங்கள் கருப்புப் பண பாதுகாவலன் யார் ?

மலக்குழியில் மரணமடைந்த 340 பேர் 4 மாதத்தில் உயிர்பெற்று விட்டார்களா..?

கடந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை என்று ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த வர்களின் விவரங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல். ஹனுமந்தய்யா ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற இறப்புகள் ஒன்றுகூட பதிவாகவில்லை” என்று கூறி  சர்ச்சையை ஏற்படுத்தினார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இதே கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு இருந்தது. அப்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளின்போது 19 மாநிலங்களில் மட்டும் 340 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் அளித்திருந்தது. ஆனால், மழைக்காலக் கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லை என மோடி அரசு பதிலளித்துள்ளது. நான்கு மாதத்திற்கு உள்ளாகவேஅதுவும் நாடாளுமன்றத்திலேயே புள்ளிவிவர மோசடியை மோடி அரசு அரங்கேற்றியது.

மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள படுக்கை வசதி எத்தனை?

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி ப்ரவின் பவார், “மருத்துவமனைகளில் எத்தனை படுக்கை வசதி உள்ளது என்பது பற்றிய தகவல் எங்கள் அரசிடம் இல்லை. ஏனென்றால், சுகாதாரத்துறையானது மாநில அதிகாரங்களின் கீழ் வருவதால், எங்களிடம் இது பற்றிய தகவல் இல்லை, என்றார். இதன் பொருள் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அந்தந்த மாநில அரசாங்களுக்கே அதிக அளவு பொருப்பு உள்ளது, என்பதன்றி வேறில்லை.

எத்தனை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இதுவரை இழுத்து மூடப்பட்டுள்ள?

பொதுமுடக்கம் காரணமாக இதுவரை எத்தனை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன? என்ற எதிர்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு, இந்த அரசு நேரடியாக இதுவரை எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.

மாறாக சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்கவிக்க ரிசர்வ் வங்கி மூலம் தாங்கள் அளித்த வங்கிகடனையும், கடன் தொகைக்கான கால நீட்டிப்பையுமே பெருமிதத்தோடு கூறினார்கள்.

காற்று மாசுபாட்டினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை எத்தனை?

சுற்றுச்சூழல் பாதிப்பு பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த நேரத்தில், காற்று மாசுபாடு காரணமாக உயிர் இழந்தவர்கள் பற்றிய கேள்வியை, பாராளுமன்றத்தில் எழுப்பிய போது,  “காற்று மாசுபாட்டிற்கும், மனிதர்களின் இறப்பிற்கும் அல்லது நோய்க்குமான நேரடி தொடர்பை நிறுவுவதற்கான உறுதியான தரவுகள் எதுவும் எங்களிடம் இல்லைஎன்று சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே, பதிலளித்தார்.

ஆனால், 2019-ல் மட்டும் இந்தியாவில் 17-லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டினால் உயிரிழந்துள்ளனர் என்றும் இது ஒட்டு மொத்த மனித இறப்பில் 18% என்றும், ‘இந்திய அரசின்: உலகளாவிய நோய் தொற்றுக்கான ஆய்வறிக்கை 2019′, (‘States of India: The Global Burden of Disease Study 2019’) தெரிவித்துள்ளது.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்புக்கள் எத்தனை?

கோவிட் -19 கொரோனா இரண்டாவது அலையின் போது வேலை இழந்த சாதாரண அமைப்பு சாரா அல்லது ஒப்பந்த ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை ஒரு சில எம்.பி.க்கள் அரசிடம் கேட்டனர், எனினும், இது சார்ந்த எந்த விவரங்களையும் அரசு இதுவரை வழங்கவில்லை. அதற்கு பதிலாக, வேலைவாய்ப்பை அதிகரிக்க அரசாங்கம் மேற்கொண்ட பல முயற்சிகளை அது பட்டியலிட்டு தப்பித்தது.

படிக்க :
♦ ஆக்சிஜன் பற்றாக்குறையால் மரணம் இல்லை : மக்களை இழிவுபடுத்தும் மோடி அரசு !
♦ ஒரே நாளில் அதிகளவு தடுப்பூசி : ‘உலக சாதனை’ படைத்ததா மோடி அரசு?

இவை மட்டுமல்லாமல், கொரோனா முதல் அலையின்போது அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக பல புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தும் கிடைக்கும் வாகனங்களில் ஏறியும் தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல முயன்றனர். வெயிலின் தாக்கத்தால் சாலையில் மயங்கி விழுந்தும், ரயில் தண்டவாளத்தில் படுத்துறங்கும் போதும், அரசு ஏற்பாடு செய்த ரயிலில் பயணம் செய்யும் போது உணவு, தண்ணீர் என ஏதும் இல்லாததாலும் பலர் இறந்தனர். ஆனால் அப்படி இறந்தவர்கள் பற்றிய எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்கிறது அரசு.

அதேபோல் கொரோனாவால் உயிரிழந்த சுகாதார ஊழியர்கள்(மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் முதலியோர்) பற்றிய தகவலும் இந்த அரசிடம் இல்லையாம்.

கொரோனா பேரிடரின் போது தங்களின் உயிரைப்பயணம் வைத்து பணியாற்றியவர்கள் இவர்கள். இத்தகையவர்கள் பற்றிய தகவல் இல்லாததால், இவர்களுக்கு எந்த நிவாரணமும் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் இந்திய மருத்துவ கழகத்தின்(IMA) கண்டனங்களுக்கு உள்ளானது மோடி அரசு !

நடைபெறும் மதவாத பாசிச ஆட்சியில், ஆர்.எஸ்.எஸ்இன் கார்ப்பரேட் சேவையும், மதவாத அரசியலுமே மைய இலக்கு. அதனை நிறைவேற்றும் போக்கில் புள்ளிவிவரங்களை வெளியிடுவது தம்மை முழுமையாக அம்பலப்படுத்திவிடும் என்பதை உணர்ந்துள்ள மோடி அரசிடம் வெளிப்படைத் தன்மையை எதிர்பார்ப்பது ’நியாயமா’ ?

மூர்த்தி
செய்தி ஆதாரம் : பிசினஸ் இன்சைடர்

“போ.. போய் உன் பர்காவை போடு” – ஆப்கான் அவலம் !

ஞாயிறன்று காலையில், ஒரு வகுப்பிற்காக பல்கலைக்கழகம் நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன். பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து பெண்கள் கூட்டம் ஒன்று வெளியேறி ஓடிவந்தது. என்ன ஆயிற்று என நான் கேட்டேன். அதில் ஒரு பெண், தாலிபான்கள் காபுல் நகருக்கு வந்து விட்டதாகவும் புர்கா அணியாத பெண்களை அவர்கள் அடிப்பார்கள் என்றும் கூறி போலீசு அவர்கள் அனைவரையும் தங்கும் விடுதியில் இருந்து வெளியேற்றியதாகக் கூறினார்.

நாங்கள் அனைவரும் வீட்டிற்குச் செல்ல விரும்பினோம். ஆனால் நாங்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த இயலாது. ஓட்டுனர்கள் தங்களது வாகனங்களில் எங்களை ஏற்றிக் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் ஒரு பெண்ணை வாகனத்தில் ஏற்றிச் செல்வதற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள விரும்பவில்லை. தங்கும் விடுதியில் இருந்து வந்த பெண்களுக்கு இது இன்னும் மோசமான நிலைமை. அவர்கள் அனைவரும் காபுல் நகருக்கு வெளியில் இருந்து வந்து அங்கு தங்கியிருப்பவர்கள். எங்கே செல்வது என்ற அச்சத்திலும் குழப்பத்திலும் அவர்கள் ஆழ்ந்திருந்தனர்.

இதற்கிடையே, சுற்றி நின்று கொண்டிருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுமிகளை கிண்டல் செய்து கொண்டு, எங்களது மோசமான நிலைமையை எள்ளி நகையாடினர். ஒருவன், “ போ.. போய் உன் பர்காவை போடு” என்றான். மற்றொருவனோ, “வீதிகளில் சுற்றித் திரிவதற்கு உங்களுக்கான கடைசி நாள் இது” என்றான். மற்றொருவனோ, “ஒருநாள் உங்களில் நால்வரை நான் திருமணம் செய்து கொள்வேன்” என்றான்.

படிக்க :
♦ தாலிபான்களிடம் ஆப்கானை தாரைவார்த்த அமெரிக்கா !
♦ ஆப்கானிலிருந்து அமெரிக்கப் படைகள் விலகல் – பின்னணி என்ன ?

அரசாங்க அலுவலகங்கள் மூடிய நிலையில், எனது சகோதரி வீட்டை அடைய நகரங்களைத் தாண்டி பல கிலோமீட்டர் ஓடினாள். “எனது மக்களுக்கும் சமூகத்துக்கும் நான்காண்டுகள் சேவை புரிய உதவிய கணிணியை பெரும் துயரத்தோடு முடக்கினேன். கண்ணீரோடு எனது பணி மேஜையை விட்டு வெளியேறி எனது உடன் பணிபுரிவோரிடமிருந்து விடை பெற்றேன். எனது வேலையின் கடைசி நாள் இது என்பது எனக்குத் தெரியும்” என்று என் சகோதரி கூறினாள்.

ஆப்கானிஸ்தானில் உள்ள சிறந்த இரண்டு பல்கலைக்கழகங்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை கிட்டத்தட்ட முடித்திருந்தேன். இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆப்கானிஸ்தானின் அமெரிக்கப் பல்கலைக்கழகம் மற்றும் காபுல் பல்கலைக் கழகத்தில் இருந்து நான் பட்டம் பெற்றிருக்க வேண்டியது; ஆனால் அனைத்தும் என் கண் முன்னேயே இன்று காலையில் மறைந்தது.

இன்று நான் இத்தகைய மனுஷியாக இருப்பதற்காக பல இரவுகளும் பகல்களும் உழைத்திருக்கிறேன். இன்று காலை வீட்டிற்கு வந்தடைந்ததும் நானும் எனது சகோதரியும் செய்த முதல் காரியம், எங்களது அடையாள அட்டைகள், பட்டயங்கள், சான்றிதழ்கள் அனைத்தையும் மறைத்து வைத்ததுதான். இது பெருமளவில் பாதித்தது. நாங்கள் பெருமைப்படத்தக்க விசயங்களை நாங்கள் ஏன் மறைக்க வேண்டும்? தற்போதைய ஆப்கானிஸ்தானில், நாங்கள் மக்களாக அறியப்படுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டோம்.

ஒரு பெண்ணாக, ஆண்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த அரசியல் போரில் பாதிக்கப்பட்டவளாக நான் உணர்கிறேன். நான் இனி சத்தமாக சிரிக்க முடியாது. எனக்கு விருப்பமான பாடல்களை இனி கேட்க முடியாது. எனது நண்பர்களை எனது விருப்பமான தேநீர்க் கடைகளில் சந்திக்க முடியாது. நான் எனது விருப்பமான மஞ்சள் நிற உடையையும் பின்க் நிற உதட்டுச் சாயத்தையும் அணிய முடியாது. எனது வேலைக்கு இனி நான் போகவோ, பல ஆண்டுகள் உழைப்பைச் செலுத்தி சாதிக்க எண்ணிய எனது பல்கலைக்கழக பட்டப் படிப்பையோ நான் முடிக்க முடியாது.

எனது நகங்களை சீர்படுத்த நான் மிகவும் விருப்பப்படுவேன். வீட்டிற்கு நான் செல்லும் வழியில், நகத்தைச் சீர்படுத்த நான் வழக்கமாகச் செல்லும் அழகு நிலையத்தைப் பார்த்தேன். அழகான பெண்களின் படங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்தக் கடையின் முன் பக்கம், ஒரே இரவில் வெள்ளையடிக்கப்பட்டிருந்தது.

பெண்களின் பயம் நிறைந்த முகத்தையும், பெண்கள் படிப்பது, பணிக்குச் செல்வது, சுதந்திரமாக இருப்பதை விரும்பாத பெண்களை வெறுக்கின்ற ஆண்களின் முகத்தையும் தான் என்னைச் சுற்றி பார்க்க முடிந்தது. பெண்களை கிண்டல் செய்து கொண்டு சந்தோசமாக இருப்பவர்கள் தான் என்னை மிகவும் அதிகமாக பாதித்தனர். எங்களோடு துணை நிற்பதற்குப் பதிலாக அவர்கள் தாலிபான்களின் பக்கம் நின்றனர். தாலிபான்களுக்கு மேலதிக அதிகாரத்தையும் வழங்கினர்.

தற்போது பெற்றுள்ள குறைந்த சுதந்திரத்திற்காக, ஆஃப்கான் பெண்கள் பல தியாகத்தைச் செய்திருக்கின்றனர். ஒரு அனாதையாக நான், கல்வியைப் பெறுவதற்கு கார்பெட்டுகள் நெய்தேன். பொருளாதாரரீதியாக பல்வேறு சவால்களை எதிர்கொண்டேன். ஆனாலும் எனது எதிர்காலத்திற்கு நிறைய திட்டங்களை வைத்திருந்தேன். அனைத்தும் இவ்வாறு வந்து முடியும் என நான் எதிர்பார்க்கவில்லை.

எனது 24 ஆண்டுகால வாழ்க்கையில் நான் சாதித்த அனைத்தையும் நான் எரிக்க வேண்டும்போலத் தெரிகிறது. அமெரிக்கப் பல்கலைக்கழகத்தின் அடையாள அட்டையையோ, அல்லது விருதுகளையோ வைத்திருப்பது இப்போது ஆபத்தானது. இதை நாங்கள் வைத்துக் கொண்டாலும், அதனை எங்களால் பயன்படுத்த முடியாது. எங்களுக்கு இனி ஆப்கானிஸ்தானில் வேலை கிடையாது.

ஒன்றன் பின் ஒன்றாக மாநிலங்கள் வீழத் துவங்கியதும் எனது அழகான கணவுகள் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். தாலிபானின் முந்தைய ஆட்சிக் காலகட்டத்தையும் அவர்கள் பெண்களை நடத்திய விதத்தையும் குறித்து எனது தாயார் முன்பு கூறியதை எண்ணிப் பார்த்து, நானும் எனது சகோதரிகளும் அனைத்து இரவும் தூங்க முடியவில்லை.

எங்களது அனைத்து அடிப்படை உரிமைகளையும் மீண்டும் இழந்து, இருபது ஆண்டுகளுக்கு முந்தைய நிலைக்குச் செல்வோம் என்று நான் எதிர்பார்க்கவில்லை. எங்களது உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கான இருபதாண்டு போராட்டத்திற்குப் பிறகு, நாங்கள் பர்காக்களைத் தேடிக் கொண்டு எங்களது அடையாளங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.

படிக்க :
♦ பெண்கள் நடமாடத் தகுதியற்ற நாடா இந்தியா?
♦ பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !

கடந்த மாதங்களில், தாலிபான்கள் பல்வேறு மாநிலங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் எடுத்துக் கொண்ட போது நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி தங்களது மனைவிகளையும் பெண்களையும் காப்பாற்ற காபுலை நோக்கி வந்தார்கள். அவர்கள் பூங்காக்களிலோ திறந்த வெளிகளிலோ தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கான பண நன்கொடைகள், உணவு மற்றும் பிற தேவைகளை பெற்று அவர்களுக்கு உதவுவதற்கான அமெரிக்க பல்கலை மாணவர்களின் குழுக்களில் நானும் ஒருத்தியாக செயல்பட்டு, அம்மக்களுக்கு தேவையானவற்றை விநியோகித்தேன்.

சில குடும்பங்களின் கதைகளை நான் கேட்கையில், என்னால் எனது கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒரு குடும்பம் தனது மகனை போரில் இழந்துவிட்டது. அங்கிருந்து காபுலுக்குச் செல்ல டாக்சிக்கான பணம் இல்லை. ஆகையால் போக்குவரத்து கட்டணத்துக்கு ஈடாக தனது மருமகளை கொடுத்துவிட்டு வந்திருக்கின்றனர். ஒரு பயணத்துக்கான செலவிற்கு எப்படி ஒரு பெண்ணின் மதிப்பு ஈடாக முடியும் ?

இன்று, தாலிபான்கள் காபுல் நகரை அடைந்துவிட்டதாக நான் கேட்டபொழுது, நான் அடிமையாக்கப்படுவேன் என உணர்ந்தேன். அவர்களால் எனது வாழ்க்கையில் அவர்களது இஸ்டத்திற்கு விளையாட முடியும்.

நான் ஒரு ஆங்கில மொழிக் கல்வி மையத்தில் ஆசிரியையாக பணிபுரிந்தேன். மாணவர்கள், ஏ,பி,சி-யை படிக்கச் சொல்லித்தர வகுப்பிற்கு முன்னால் நிற்க முடியாது என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. எனது அழகான சின்னஞ்சிறிய மாணவிகள் தங்களது படிப்பை நிறுத்திவிட்டு அவர்களது வீட்டில்தான் இருப்பார்கள் என்று ஒவ்வொரு முறை நினைத்துப் பார்க்கையிலும், என் கண்ணீர் வழிகிறது

– ஒரு காபுல்வாசி

தமிழாக்கம் : கர்ணன்
நன்றி : கார்டியன்

பார்ப்பனர் அல்லாதார் அர்ச்சகராக நியமனம் : புரட்சிகர அரசியல் தலைமையின் வெற்றி || ம.க.இ.க அறிக்கை

17/08/2021

பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களில் 24 பேர் அர்ச்சகராக நியமனம் !
சரியான அரசியல் தலைமை, தொடர்ச்சியான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி !

பத்திரிகை செய்தி !

ஆலயத் தீண்டாமைக்கு எதிராக கோயிலின் உள்ளே சென்று வழிபடும் உரிமையைப் போராடிப் பெற்றதுபோல், கருவறைத் தீண்டாமையை ஒழிப்பதற்காக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து 1970-ல் தந்தை பெரியார் கருவறை நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார்.

அப்போது அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக நாங்கள் சட்டம் இயற்றுகிறோம், நீங்கள் போராட்டத்தை கைவிடுங்கள் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் பெரியார் போராட்டத்தை ஒத்தி வைத்தார்.

இதன் விளைவாக தமிழக அரசு 1971-ம் ஆண்டு வாரிசுரிமைப்படி அர்ச்சகர்கள் பணி நியமனத்தை ஒழித்து, இந்து சமய அறநிலையச் சட்டத்தில் திருத்தம் செய்தது. இதற்கு எதிராக பார்ப்பனர்களும் மடாதிபதிகளும் இந்த சட்டத்திருத்தம் தங்கள் மத உரிமைக்கு எதிராக உள்ளது என காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

படிக்க :
♦ சாதி மட்டுமே ஒரே தகுதி – அர்ச்சகர் வழக்கில் உச்சநீதி மன்றத் தீர்ப்பு !
♦ கருவறை தீண்டாமை, ஜெயா அரசின் துரோக சதி!

1972-ல் இவ்வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, அர்ச்சகர் என்பவரும் கோயில் கூலி ஊழியர்தான். வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமன உரிமையை ஒழித்து, தமிழக அரசு இயற்றிய சட்டத்திருத்தம் செல்லும். அதேசமயம் கோயில் பூசகர் தெய்வ வழிபாட்டில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும் ஆகமங்கள் படி குறித்த இனத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். எனவே, கோயிலின் மரபு வழக்கத்திற்கு மாறாக குறிப்பிட்ட இனத்தைச் சேராத ஒருவர் சாமி சிலையைத் தொட்டால் புனிதத் தன்மை கெட்டுவிடும் என்பதை அரசு கருத்தில் கொண்டு அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என அறிவியலுக்குப் புறம்பாக, நயவஞ்சமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை பெரியார் “ஆபரேசன் சக்சஸ் நோயாளி மரணம்” என நுட்பமாக கண்டித்தார்.

2002-ம் ஆண்டு கேரளாவில் ஈழவர் சாதியைச் சேர்ந்த ஒருவர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், பார்ப்பனர் அல்லாதவர் அர்ச்சகராகலாம், மரபு பழக்க வழக்கத்தின் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகராக முடியும் என்பதை ஏற்க முடியாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வழக்கின் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டுதான் திமுக அரசு இந்து அறநிலையச் சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்த 2006-ம் ஆண்டில் முதலில் அரசாணையும் பின்பு அர்ச்சகர் பணி நியமனத்தில் பழக்க வழக்கம் மரபு என்பதை ஒழிக்கும் வகையில் அவசர சட்டத்தையும் இயற்றியது. அப்போதும் மதுரையை சேர்ந்த பார்ப்பன ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சங்கம் இந்த அவசர சட்டத்திற்கு எதிராக 1972 தீர்ப்பின் அடிப்படையில் தடை ஆணையை பெற்றது. இதனால் திமுக அரசு சட்டத் திருத்தத்தில் உள்ள முக்கிய பகுதியை விட்டுவிட்டு சட்டம் இயற்றியது.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என 2006-இல் போடப்பட்ட அரசாணையின் படி அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் அமைக்கப்பட்டு 206 மாணவர்கள் ஒன்றரை ஆண்டுகள் பயிற்சி முடித்து 2008-ல் தீட்சையும் பெற்றனர். ஆனால், சான்றிதழ் கூட வழங்கப்படவில்லை அதையும் போராடித்தான் பெற்றனர். 2015-லேயே இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும் 7 ஆண்டுகளாக இருந்த அதிமுக ஆட்சி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசாணை குறித்து எந்தவித தெளிவான தீர்க்கமான முடிவு எடுக்காமலும் பிஜேபி கூட்டணியின் காரணமாகவும் கடைசி வரை தங்களுடைய ஆட்சியில் ஒரே ஒரு மாணவருக்கு அதுவும் ஆகம விதிக்கு உட்படாத ஒரு கோயிலில் மட்டுமே அர்ச்சகர் பணி நியமனம் செய்தது.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களின் போராட்டம் !

அதன்பிறகு திமுக தனது தேர்தல் அறிக்கையில் அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அர்ச்சகராக பணி நியமனம் வழங்குவோம் என்று அறிவித்திருந்தனர். அந்த அடிப்படையில் இப்பொழுது பார்ப்பனரல்லாதோர் இருபத்தி நான்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு அர்ச்சகர் பணியினை வழங்கப்பட்டுள்ளது. இதனை வரவேற்கிறோம்.

இந்த அர்ச்சகர் பணிநியமனம் என்பது தொடர்ச்சியான வரலாற்று ரீதியான போராட்டத்தின் விளைவே. 1920-களிலேயே தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிரான சமூக நீதிக்கான குரல் எழத் துவங்கியது. அதிலும் பெரியாரின் தீவிரமான பிரச்சாரமும் போராட்டமும் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு எதிராக மக்களை தட்டி எழுப்புவதாகவும் பலத்த அடியாகவும் இருந்தது.

அதில் ஒன்றுதான் 1970-களில் அறிவித்த கருவறை நுழைவுப் போராட்டம். பெரியாருக்கு பின் 1970-களில் தமிழகத்தில் மார்க்சிய லெனினிய இயக்கங்கள் தோன்றியபோது தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராகவும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான முன்னெடுப்புகளை செய்தது.

ஆகவே உழைக்கும் மக்களின் மீதான கலாச்சார பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு எதிரான போரட்டத்தினை முன்னெடுப்பதற்காக மக்கள் கலை இலக்கியக் கழகம் கட்டியமைக்கப்பட்டது. 90-களில் ம.க.இ.க-வின் அரசியல் தலைமை ஏகாதிபத்தியம் நமது நாட்டை கொள்ளையடிப்பதையும் அடிமையாக்குவதையும் நோக்கமாக கொண்டு அமல்படுத்தப்பட்ட மறுகாலனியாக்கத்தையும் இந்தியாவில் மதக்கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி இந்துக்களை ஒன்றுதிரட்டுவது இந்துராஷ்டிரத்தை அமைப்பது என்பதை நோக்கமாக கொண்டு செயல்பட்ட இந்து மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலை முறியடிப்பது ஆகிய இரு பிரதான கடமையை உள்ளடக்கிய செயல்தந்திர முழக்கமாக மறுகாலனியாக்கத்தையும், இந்து மதவெறி பாசிசத்தையும் முறியடிப்போம் என  முன்வைத்தது.

இதனடிப்படையில்தான் ம.க.இ.க-வும் அதன் தோழமை அமைப்புகளும் மக்கள் மத்தியில் பிரச்சாரங்கள், போராட்டங்களை முன்னெடுத்தது. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் கலாச்சாரம் பண்பாடு சாதித் தீண்டாமை போன்றவற்றில் நிலவும் பிற்போக்கு விழுமியங்களையும், தனியார்மயம் தாராளமயக் கொள்கையின் மூலமான மறுகாலனியாக்கத்திற்கு எதிராகவும் பார்ப்பன இந்துமத மேலாதிக்கத்திற்கு எதிராகப் போராடுவதை தங்களுடைய முக்கிய கடமையாக உருவாக்கி அதற்கான கூர்மையான செயல்தந்திரத்தை வகுத்து, அதனடிப்படையில் செயல்படத் தொடங்கியது. அக்காலகட்டத்தில்தான் ஆர்.எஸ்.எஸ், சமூகத்தை பின்னுக்கு இழுத்துச் செல்லும் அரசியல் சக்திகளாக உருவெடுத்தது.

நாம் அனைவரும் இந்துக்கள். வாருங்கள், ராமருக்கு கோயில் கட்டலாம் என்கிற ஆர்.எஸ்.எஸ்-ன் நயவஞ்சக கருத்துக்களை மக்கள் முன் அம்பலப்படுத்தும் விதமாக, “எல்லோரையும் இந்து என்கிறாயே எங்களை கருவறைக்குள் அழைத்துச் செல்ல தயாரா?” என கேள்வி எழுப்பியது ம.க.இ.க-வின் கருவறை நுழைவுப் போராட்டம்.

பெரியார் காலத்திற்கு பிறகு பார்ப்பனிய எதிர்ப்பு என்பது வலுவிழந்த நிலையில் ம.க.இ.க-வின் கருவறை நுழைவுப் போராட்டத்தை, கிராமங்களிலும் நகரங்களிலும் பிரச்சாரம், வெளியீடு, பாடல்கள் சுவரெழுத்து போன்ற வடிவத்தினூடாக வீச்சாக கொண்டு செல்லப்பட்டது.

மேலும், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களையும் இணைத்து ம.க.இ.க தோழர்கள் ஆண்களும் பெண்களும் கருவறையில் நுழைந்து கருவறைத் தீண்டாமைக்கெதிரான ஒரு அரசியல் நடவடிக்கையாக மாற்றியதன் மூலம் உழைக்கும் மக்களை மதவெறியூட்டி மோதவிட்டு பிளவுபடுத்தும் ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகத்தை கூர்மையாக அம்பலப்படுத்தியது.

பார்ப்பன, பண்பாட்டு ஆக்கிரமிப்பாக ஒடுக்குமுறையாக இருக்கக் கூடிய தியாகராஜ ஆராதனை விழாவில் ‘தமிழ் நீச பாசை’ என்ற மொழித் தீண்டாமையை எதிர்த்து “தமிழில் பாடு இல்லை.. தமிழ்நாட்டை விட்டு ஓடு” என்னும் முழக்கத்தின் கீழ் போராட்டம் நடத்தப்பட்டது.

பண்பாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒரு நிகழ்வாக தஞ்சையில் “தமிழ் மக்கள் இசை விழா” நடத்தப்பட்டு தமிழ் மக்களின் கலை இசை என்ற வடிவத்தினை தேர்வு செய்து ஆண்டுதோறும் திருவையாறு தியாகராஜ ஆராதனை என்ற பார்ப்பன மேலாதிக்க கலாச்சாரத்தை அவர்கள் நிலைநிறுத்த முயற்சிக்கின்ற ஒவ்வொரு ஆண்டிலும் அதற்கு எதிராக உழைக்கும் மக்களுடைய கலைகளாக தமிழ் மக்களின் கலைகளாக பார்ப்பன எதிர்ப்பு அரசியல் பண்பாட்டு உள்ளடக்கத்தை நடத்துகின்ற நிகழ்வின் தொடர்ச்சியாக தஞ்சாவூரில் ஒரு பண்பாட்டு இயக்கமாக வளர்க்கப்பட்டது.

பிறகு 2002-ல் குஜராத்தில் நடைபெற்ற மதக்கலவரத்தில் 2000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் படுகொலையை எதிர்த்து இந்து சாம்ராஜ்ய ஆதிக்கத்திற்கான திட்டத்தை வீழ்த்துவோம் என்ற வகையில் “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு” நடத்தி இந்து பார்ப்பன மேலாதிக்கத்தை அம்பலப்படுத்தியது. இதன்மூலம் பெரியார் மறைவுக்கு பின் மங்கிப்போன பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிரான உணர்வு ம.க.இ.க தொடர் போராட்டத்தின் மூலமாக மீண்டும் முன்னுக்கு கொண்டுவரப்பட்டது.

2006-ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டத்துக்கு எதிராக தடையாணை வாங்கிய பிறகு, அது அப்படியே உறங்கிப்போன காலகட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்பான மனித உரிமைப் பாதுகாப்பு மையம் இணைந்து பார்ப்பனரல்லாத அர்ச்சகர் பயிற்சி முடித்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் இந்த நடவடிக்கையை நாம் நடத்திக் காட்டினால் கருவறையில் இருக்கக் கூடிய தீண்டாமையை அகற்றுகின்ற முயற்சியின் துவக்கமாக அமைந்துவிடும் என்ற அரசியல் நோக்கத்தில்தான் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒன்றுதிரட்டி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கமாக உருவாக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு திராவிட இயக்கங்கள் பெரியாரிய இயக்கங்கள் ஆன்மிகப் பெரியோர்கள் போன்றவர்களெல்லாம் இந்தக் கோரிக்கைக்காக பல்வேறு காலகட்டங்களில் குரல் கொடுத்து இருந்தாலும், இது ஒரு அரசியல் இயக்கமாகவும் அதேபோன்று உச்சநீதிமன்றத்தில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் சார்பாக ஒரு இடை தலையீட்டு மனுவைத் தாக்கல் செய்து அந்த வழக்கிலும் வாதங்களை புரிகின்ற வகையில் உச்சநீதிமன்றம் முதல் நம்ம ஊர் தெரு வரைக்கும் அந்தப் போராட்ட இயக்கத்திற்கான கோரிக்கைகளை வலுப்படுத்தி சென்றதுதான் இந்த அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம்.

இதற்காக தமிழகம் முழுக்க இருக்கக் கூடிய பல்வேறு அமைப்புத் தோழர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு வெற்றிகரமான பணியாக மாற்றுவதற்கு வரலாற்றுப் பங்களிப்பை ம.க.இ.க, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மற்றும் தோழமை அமைப்புகள் இணைந்து செய்தது. எனவே கருவறை நுழைவுப் போராட்டத்தில் இருந்து துவங்கிய ம.க.இ.க-வின் மகத்தான போராட்டம், அதனுடைய சரியான அரசியல் வழிகாட்டுதல் புரிதலோடு இயங்கியப் போராட்டமானது, இன்று ஒரு மிக முக்கியமான வரலாற்று வெற்றியை சாதித்துள்ளது. 24 பார்ப்பனரல்லாத அர்ச்சகர் மாணவர்கள் ஒரே நேரத்தில் இன்று கருவறைக்குள் நுழைந்து பார்ப்பன ஆதிக்கத்தை உடைப்பதற்கான பூசாரிகளாக மாறி உள்ளார்கள்.

படிக்க :
♦ சபரிமலை பெண்கள் நுழைவு : கேரளாவை கலவர பூமியாக்கத் துடிக்கும் பாஜக!
♦ மதுரை 1939-ம் ஆண்டு கோவில் நுழைவு : சாந்துப் பட்டருக்கு சாணி ஊற்றிய பார்ப்பனர்கள்!

ஒரு கம்யூனிச அமைப்பானது, உழைக்கும் மக்கள் மீதான இழிவினை எதிர்த்துப் போராடி அவர்களுடைய கலாச்சார பண்பாட்டு உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பதன் அவசியத்தை இது உணர்த்தியது.

மேலும், இதன் ஊடாகத்தான் பார்ப்பன மேலாதிக்கத்திற்கான சாதி தீண்டாமையை அனைத்து இடங்களிலும் அகற்றுகின்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக ம.க.இ.க சாதித்துக் காட்டியிருக்கிறது. இந்த அடிப்படையில் ம.க.இ.க அரசியல் தலைமை பிரிவு, குறிப்பாக இந்த அரசியல் செயல்தந்திரத்தை வகுத்து பார்ப்பன இந்துமதவெறி பாசிசத்தின் ஆதிக்கத்திற்கான அதனுடைய தொடர்ச்சியான இந்து சாம்ராஜ்ய கனவை தமிழகத்தில் கட்டமைக்கின்ற நடவடிக்கைகளுக்கு எதிராக அனைத்து விதமான முட்டுக்கட்டைகளையும், எதிர்ப்பு நடவடிக்கைகளையும் மக்கள் இயக்கமாக மாற்றுவதில் ஒரு மிகச்சிறந்த பங்காற்றி இருக்கிறது என்று சொன்னால் அது மறுப்பதற்கில்லை.

ஆனால் இன்று அந்த அரசியல் சித்தாந்த வேர்களை புறந்தள்ளிவிட்டு, ஒரு சிலர் தாங்கள் தான் முன்னின்று செய்தவர்களாக காட்டப்படுவது என்பது ஒரு அயோக்கியத்தனமான நாணயமற்ற நடவடிக்கை என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆகவே, காவி இருள் சூழ்ந்த இந்நிலையில் கார்ப்பரேட் – காவி பாசிசத்தை முறியடித்து மக்களை பாதுகாக்கவும், தற்போது கிடைத்துள்ள இந்த வெற்றியை முழுமையான வெற்றியாக மாற்றவும் புரட்சிகர ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து கார்ப்பரேட் – காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடுவோம்.

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
தமிழ்நாடு – புதுவை.
தொடர்புக்கு : 9791653200

குதிராம் போஸ் : காலனியாதிக்கத்துக்கு எதிரான இளம் வீரன் !!

காலனியக்கத்திற்கு எதிரான இந்திய விடுதலைக்கான போராட்ட வரலாற்றில் வங்காள புரட்சியாளர்களின் சுவடுகளை ஒருபோதும் தவிர்க்க இயலாது. அத்தகைய வங்கத்தில் பிறந்து, பிரிட்டிஷ் சர்வாதிகார பேரரசை குலை நடுங்கச் செய்த குதிராம் போஸின் நினைவு தினம், ஆகஸ்ட் 11.  பதினெட்டு வயதே நிரம்பிய நிலையில் காலனியாதிக்கவாதிகளால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட குதிராம் போஸின் வாழ்வு, நாட்டின் விடுதலைக்கு இளைஞர்கள் தம்மை அர்ப்பணிக்க வேண்டிய தேவையை இன்றும் கூட உணர்த்தும் வல்லமை கொண்டது.

1889, டிசம்பர் மாதம் 3-ம் தேதி மேற்கு வங்காளத்தில், மிட்டாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஹபிப்பூர் என்ற கிராமத்தில் குதிராம் போஸ் பிறந்தார். அவரது தந்தை த்ரைலோக்யநாத், தாயார் லக்ஷ்மிபிரியா தேவி ஆவர். போஸின் தந்தை தாசில்தாராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குதிராம் தனது ஆறாவது வயதில் தாயை இழந்தார். அதற்கடுத்த வருடமே தந்தையையும் இழந்தார். அவரது அக்காவிடம் வளர்ந்தார். அக்காவின் கணவரான அமிர்தலால் ராய், போஸை ஹாமில்டன் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கிறார். அந்த நாட்களில் அனுசீலன் சமிதியின் நிறுவனரான அரவிந்தரின் பேச்சுக்களால் கவரப்படுகிறார். தன்னுடைய 15-வது வயதில் அனுசீலன் சமிதி என்ற இயக்கத்தில் சேர்ந்தார். அனுசீலன் சமிதி என்பது ஆயுதப் போராட்டத்தின் மூலமே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை ஒழித்துக் கட்டமுடியும் என்பதில் நம்பிக்கைக் கொண்ட அமைப்பாகும்.

படிக்க :
♦ புரட்சியாளரான பின்னும் பூணூல் அணிந்திருந்தாரா சந்திரசேகர் ஆசாத் ?
♦ இதே நாள் (08 ஏப்ரல்) 1929-ல் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசியது ஏன் ?

அவரின் வயதை ஒத்த சிறுவர்கள் எல்லாம் இன்று நடிகர்களின் பின்னால் சென்று கொண்டிருக்கும்போது, குதிராம் போஸோ அன்று நாட்டின் விடுதலைக்காக தன்னை அர்ப்பணிக்கும் கடினமான போராட்டத்தில் தன்னை மகிழ்ச்சியோடு ஈடுபடுத்திக் கொண்டார்.

தன்னுடைய 16-வது வயதில் பிரிட்டிஷ் எதிர்ப்பு துண்டறிக்கைகளை விநியோகித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். காலனிய ஆதிக்க போலீசு நிலையங்கள் மற்றும் பிரிட்டிஷ் அதிகாரிகளை குண்டுவீசி தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் சிறையில் அவருக்கு உருவாகியது. பின்னர் கல்கத்தாவை அடித்தளமாகக் கொண்டு செயல்பட்ட புரட்சியாளரான பரிந்தர குமார் கோஷின் தலைமையில் செயல்படும் விடுதலைப் போராட்டக் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறார்.

“ஜுகந்தர்” – அனுசீலன் சமிதியின் நாளிதழ். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் சுரண்டலுக்கெதிராகப் போராட வேண்டியதன் நோக்கத்தை பரப்புவதே அதன் தலையாய பணியாக இருந்தது. இதனாலேயே பல்வேறு தடைகளையும் இன்னல்களையும் சந்தித்தது. அச்சமயத்தில் அலிப்பூர் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருந்த டக்ளஸ் போர்ட், ஜூகந்தரின் ஆசிரியரான பூபேந்திரநாத் தத்தா மற்றும் இதர எழுத்தாளர்களை கண்காணிக்க உத்தரவிட்டார். எனினும் தனது தலையங்கங்களில் பிரிட்டிஷ் அரசை கடுமையாக சாடியது. இதனால் மேலும் 5 வழக்குகளைப் பரிசாகப் பெற்றது “ஜுகந்தர்”. அரசின் தொடர் அடக்குமுறைகளால் நிதி நெருக்கடியில் சிக்கியது.

டக்ளஸ் போர்ட், மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்றதில் இருந்தே இளம் அரசியல் செயல்பாட்டாளார்கள் மீது கடுமையான மற்றும் அநியாயமான தண்டனைகளை கொடுப்பதையே வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அமைதிவழிப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்குக் கூட பொது மக்கள் முன்னர் சவுக்கடி கொடுக்கும் தண்டனையை சாதாரணமாக வழங்கினார். இதன்மூலம் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்க நினைத்தார்.

இந்தியர்களை மனிதர்களாகக் கூட மதிக்காத இத்தகையப் போக்குகளை கடுமையாக எதிர்த்த அனுசீலன் சமிதி, அலிப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி டக்ளஸ் போர்ட்-ஐ தனது இலக்காக அறிவித்தது.

டக்ளஸ் போர்ட்–ஐ கொல்வதற்கு ஹேமச்சந்திர தாஸால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவுற்றதை அடுத்து, அனுசீலன் சமிதியானது அடுத்தக்கட்ட தயாரிப்பில் கவனம் செலுத்தியது. அதுவே இந்தியாவின் தீரமிக்க விடுதலைப் போராட்ட வரலாற்றின் பக்கங்களில் மறையாத நினைவானது.

1908-ஏப்ரலில் கொலை நடவடிக்கைக்காக அனுசீலன் சமிதியால், பிரபுல்லா சக்கியும், குதிராம் போஸூம் தெரிவு செய்யப்பட்டனர். டக்ளஸ் கிங்ஸ் போர்ட் உயிருக்கு ஆபத்து இருப்பதை மோப்பம் பிடித்த கல்கத்தா போலீசு, இது தொடர்பாக முசார்பூர் மாவட்ட கண்காணிப்பாளாருக்கு தகவல் அளித்தது. அம்மாவட்ட போலீசு, கிங்ஸ் போர்டுக்கு பாதுகாப்பை அளித்ததுடன் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டது.

இதனால் பிரபுல்ல சக்கி, தினேஷ் சந்திர ராய் என்ற பெயரிலும் குதிராம் போஸ், ஹரேன் சர்கார் என்ற பெயரிலும் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டனர். தர்மசாலாவில் சில நாட்கள் தங்கி இருந்து, டக்ளஸை நிழல் போல கண்காணித்து வந்தனர். அவனது நீதிமன்ற பணி நேரம், கிளம்பும் நேரம், அவனின் விருப்பப்பூர்வ இடமான கிளப்பில் இருக்கும் நேரம் என கிங்ஸ் போர்டின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர்களது கண்காணிப்பிற்குள் கொண்டு வந்தனர்.

ஏப்ரல் 30, 1908 கிங்ஸ் போர்டின் வாகனத்தை எதிர்பார்த்தபடி, குதிராமும், பிரபுல்ல சக்கியும் தங்களை மரங்களுக்கிடையில் புதைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். கிளப்பில் இருந்து தங்களது இல்லத்திற்கு செல்வதற்காக பலரும் கிளம்பிக் கொண்டு இருக்கிறார்கள் அரசு வழக்கறிஞர் பிரிங்கல் கென்னடி மகள் மற்றும் மனைவி ஆகியோர்  வண்டியில் சென்று கொண்டிருக்கிறார்கள்.

அந்த வண்டி கிங்ஸ்போர்டின் வீட்டை நெருங்குகையில், நீதிபதி கிங்ஸ்போர்டின் வண்டி என தவறுதலாக நினைத்து வெடிகுண்டை வீசிவிட்டு மின்னலென இருவரும் தப்பிக்கிறார்கள். இந்த வெடிகுண்டு வீச்சால் பலத்த காயமடைந்த இரு பெண்களும் அடுத்தடுத்து இறந்து போகின்றனர்.

இச்சம்பவம் நடைபெற்ற உடனேயே, இரவு 9 மணிக்குள்ளேயே மொத்த நகரமும் போலீசின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ரயில் நிலையங்கள் முழுவதும் கண்காணிக்கப்பட்டன. இதனை முன் கூட்டியே யூகித்த குதிராம் ஏறத்தாழ 25 மைல் வரை நடந்து சென்று வைனி என்ற ரயில் நிலையத்தை 1908, மே 1 அதிகாலை சென்றடைந்தார். மிகுந்த தாகமடைந்த அவர் ஒரு கடையில் தண்ணீரைக் கேட்கும்போது, இவரின் காலணியற்ற தோற்றத்தை கண்ட இரு போலீசுக்காரர்கள், விசாரிக்க ஆரம்பித்தனர்.

போலீசிடமிருந்து தப்பிக்க முனைந்த குதிராம் போஸ், தனது துப்பாக்கியின் பழுதால்  அதை பயன்படுத்த முடியாமல்போனது. அவரிடமிருந்து ரூ.30 பணம், 37 வெடிகுண்டுகள், ரயில்வே மேப் மற்றும் ரயில் கால அட்டவணை ஆகியவைகள் கைப்பற்றப்பட்டன. அவர் அடுத்த நாள் முசாபர்பூர் போலீசு நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டார்.

“அந்தச் சிறுவனைப் பார்க்க மக்கள் அதிகமாக அங்கே கூடி இருந்தனர். முதல்வகுப்பு பெட்டியில் இருந்து அவனை நடந்தே அழைத்து வந்தனர். அவனிடம் கொஞ்சமும் கவலையோ துக்கமோ இல்லை. மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தான்.”

மேற்கண்டவாறு ஸ்டேட்ஸ்மென் என்ற ஆங்கில இதழ் பதிவு செய்திருந்தது.

1908, மே 21-ம் தேதி விசாரணை தொடங்கியது. அரசுத்தரப்பு வழக்கறிஞர்களாக மன்னுக், பினோத பிகாரி மஜூம்தார் ஆகியோர் ஆஜராகினர். குதிராம் தரப்பிற்காக பண்டேபாத்யாயா, காளிதாஸ்பாசு உள்ளிட்ட வழக்கறிஞர்கள் இலவசமாக ஆஜராகினர்.

படிக்க :
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ மலரிடைப் புதைந்த கந்தகக் குண்டுகள்

1908, ஜூன் 13, தண்டனை அறிவிப்பதற்கான நாளின்போது பெயரில்லாத அநாமதேய வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. அது வங்காளிகளிடமிருந்து அல்ல மாறாக பீகாரிகளிடமிருந்து வந்தது. எனினும் குதிராமுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது.

அத்தீர்ப்புக்கு எதிராக குதிராம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பிரிட்டிஷ் நீதிபதிகளால் ஜூலை 18-ம் தேதி குதிராமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பப்பட்ட மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது. 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் 11-ம் தேதி தூக்கிலிடப்பட்டபோது குதிராம் போஸ் 18 ஆண்டுகளையும் 8 மாதங்களையும் நிறைவு செய்திருந்தார்.

கொல்கத்தாவின் வீதிகளில் மாணவர்கள் குதிராம் போஸுக்காக நிறைந்திருந்தார்கள். ஆனால் காந்தியோ “இந்திய மக்கள் ஒரு போது நாட்டின் விடுதலைக்காக இது போன்ற வழிமுறைகளை பின்பற்றக் கூடாது” என்று பாடம் எடுத்துக்கொண்டிருந்தார்.

“அச்சிறுவன் தூக்கு மேடைக்கு செல்லும்போது, நாட்டின் விடுதலை முழக்கங்கங்களை எழுப்பியவாறு மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான்.” என்று அடுத்த நாளில் வெளியான நாளிதழ்கள் பதிவு செய்தன.

தாய்நாட்டின் விடுதலைக்காக சிறுவயதில் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவரிடம் இருந்து உறுதியான போர்க்குணமிக்க விடுதலைப் போராட்ட உணர்வை நாம் கற்க வேண்டும்.


மருது
செய்தி ஆதாரம் : Economicstimes, indianexpress

இஸ்ரோ முதல் ஐ.சி.எஃப் வரை மிரட்டப்படும் விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் !

0

டந்த ஆகஸ்ட் 13 அன்று இந்து தமிழ் நாளிதழ் “உண்மையான தேச துரோகிகளுக்கு என்ன தண்டனை?” என்ற தலைப்பில் தலையங்க செய்தி வெளியிட்டிருந்தது. தேச துரோகிகளுக்கு என்ன தண்டனை என்பதை பார்ப்பதற்கு முன்னால், முதலில் உண்மையான நாட்டுப்பற்றாளர்கள், தேச பக்தர்கள் யார் மற்றும் இந்த நாட்டின் எதிரிகள், தேச துரோகிகள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.

ரயில் பெட்டி எஞ்சின்களை உருவாக்கும் நமது நாட்டின் பொதுத்துறை நிறுவனமான ஐ.சி.எஃப் நிறுவனம் தயாரித்த டிரெய்ன் – 18 (T-18) என்ற அதிநவீன – மணிக்கு 160 கிலோ மீட்டர் முதல் 180 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடிய அதிவேக ரயில் உற்பத்தியானது முடக்கப்பட்டுள்ளது. இதன் வடிவமைப்பையும், அழகையும், செயல்பாடுகளையும் குறித்து நியூஸ்-18, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் விவரிப்பதில் இருந்தே பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் உழைப்பின் வண்ணமும், சீரிய சிந்தனையையும் உணர முடியும்.

அவ்வளவு நேர்த்தியான அதிவேக – அதிநவீன ரயில் எஞ்சின் ஐ.சி.எஃப் நிறுவனத்தின் சொந்த முயற்சியில் முனைப்போடு, அந்நிய நாட்டு தொழிற்நுட்பம் இல்லாமல், சொந்த நாட்டு தொழிற்நுட்பத்துடன் மேக்-இன்-இந்தியா என்ற திட்டத்தின் கீழ் 80% அளவில் உள்நாட்டு உதிரி பாகங்களுடன் வெறும் 90 கோடி செலவில் உருவாக்கப்பட்டது. இந்த ரயிலை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தால் இந்த தொகையைவிட பல மடங்கு விலை அதிகரிக்கும்.

படிக்க :
♦ சென்னையின் பெருமை ஐசிஎஃப்பை விழுங்கும் தனியார்மயம் !
♦ சென்னை ஐ.சி.எப். சர்வதேச ரயில்பெட்டி கண்காட்சி ! படக்கட்டுரை

T-18 என்ற அதிவேக ரயிலை குறைந்த செலவில் அதிநவீன ரயிலாக உருவாக்கும் திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஐ.சி.எஃப் நிறுவன தலைவர், இயந்திரவியல் பொறியாளர் சுதான்சு உட்பட 11 அதிகாரிகள் மீது முறைகேடு குற்றம்சாட்டப்பட்டு, இந்தத் திட்டம் மூன்றாண்டுகளுக்கு முன்னரே நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆராய்ச்சி – வடிவமைப்பு ஆகியற்றை உரிய தர நிர்ணயக் கழகத்திடம் அனுமதி பெறாதது; ரயில் தயாரிப்பிற்கு டெண்டர் விட்டதில் முறைக்கேடு என்று குற்றம் சாட்டப்பட்டதோடு; இது தொடர்பான ஆவணங்களையும் ரயில்வே வாரியத்தின் உத்திரவின் பேரில் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றி விசாரணையையும் தொடங்கியது. அதனடிப்படையில் T-18 உற்பத்தியும், மேற்கண்ட 11 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்றாண்டுகளுக்குப் பின்னர் சுதான்சு உள்ளிட்ட 11 பேரும் குற்றமற்றவர்கள் என தற்போது விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். சரி, இவர்கள் மீது இப்படி ஒரு தவறான / போலி வழக்குப் பதிவு செய்ய என்ன அவசியம் ?

ரயில் பெட்டிக்கான எலெக்ட்ரிக் வேலைகளுக்கான டெண்டரை ஐ.சி.எஃப் நிர்வாகம் கோரியது. இதனடிப்படையில் பல நிறுவனங்கள் டெண்டரில் கலந்துக் கொண்டன. அதில் குறைவான தொகையுள்ள மேதா என்ற இந்திய நிறுவனத்தின் டெண்டரை அங்கீகரித்து அந்நிறுவனத்துடன் ஒப்பந்தமும் செய்துக் கொள்ளப்பட்டது. அதே வேலையில், அதிகமான தொகையுள்ள மற்ற நிறுவனங்களின் டெண்டர்களை [அதாவது, கனடாவைச் சேர்ந்த பம்பார்டியர் நிறுவனத்தின் டெண்டரையும், ஜெர்மனியைச் சேர்ந்த சீமன்ஸ் நிறுவனத்தின் டெண்டரையும்] நிராகரித்துவிட்டது.

மேலும் அந்த சமயத்தில், T-18 வகையைச் சார்ந்த 60 அதிவேக ரயில்களை வாங்க, ரயில்வே வாரியம் சர்வதேச டெண்டர்களை கோரப்போவதாகவும், அதில் ஐ.சி.எஃப் நிறுவனம் கலந்து கொள்ளாத வகையில் நிபந்தனைகள் இருப்பதாகவும், ரூ.25,000 கோடியில் வெளிநாட்டில் இருந்து ரயில்களை இறக்குமதி செய்யப்போவதாகவும் செய்திகள் – தகவல்கள் வந்துள்ளதாக ரயில்வே தலைவர் Y.K.யாதவ்-விற்கு சுதான்சு கடிதம் எழுதியுள்ளார்.

BSNL நிறுவனத்தையும் HAL நிறுவனத்தையும் இதே போலவே முடக்கியதையும் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும். இந்த பொதுத்துறை நிறுவனங்களை அம்பானி, மிட்டல் போன்ற கார்ப்பரேட்டுக்களுக்கு களவுக் கொடுத்ததோடு இதனை ஒப்பிடலாம்.

இதைப் போலவே ஐ.சி.எஃப் நிறுவனமும் T-18 திட்டமும் கார்ப்பரேட்களால் களவாடப் பட்டுவருகின்றன என்பது திண்ணம். ஆனால், சுருட்டப்போவதும், சூறையாடப் போவதும் எவ்வளவு மில்லியன் டாலர் என்பது கார்ப்பரேட்டுகளுக்குத் தான் வெளிச்சம்.

T-18-ஐ உருவாக்கியவர்களுக்கு எதிரான இந்த நடவடிக்கை, இந்திய தொழில்நுட்ப சாதனைகளை – சந்திராயன் விண்கல வடிவமைப்பு போன்ற பெருமிதங்களை –  சாதித்த விஞ்ஞானிகளுக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு இணையானது என்கிறார் சுதான்சு.

மேக்-இன்-இந்தியா என்ற மோடியின் கனவுத் திட்டத்தைக் கூட அந்நிய – உள்நாட்டு கார்ப்பரேட்கள் தான் தீர்மானிக்கின்றனர் என்பதோடு டி-18 திட்டம் முடக்கப்பட்டதன் மூலம், ஆளும் வர்க்கம், அதிகாரவர்க்கம், அரசியல்வாதிகள் ஆகியோரியின் கள்ளக் கூட்டை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

இப்படி பொதுத்துறை நிறுவனங்களில் சாதனை செய்தவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவது என்ன புதிய விவகாரமா ?இதை ஏற்கெனவே இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் விவகாரத்தில் செய்து காட்டியிருக்கிறார்களே !

நம்பி நாராயணன் மீது விசாரணை மட்டும் நடத்தப்படவில்லை. கைது நடவடிக்கையும், 50 நாட்கள் சிறை வாசத்தையும் சந்தித்தார் அவர்.  அது மட்டுமா ? ‘தேச துரோகி’ என்ற பட்டம் வேறு. இவர் மாநகராட்சிப் பள்ளியில் படித்து விஞ்ஞானியாகி, பின்பு இந்தியாவின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுடன் இணைந்து T-1 என்ற ராக்கெட் தயாரிப்பில் ஈடுபட்டவர். உலகில் முதல் திரவ எரிப்பொருளில் இயங்கும் ராக்கெட் எஞ்சினை அறிமுகப்படுத்தியவர்.

உலகம் போற்றிய இஸ்ரோவின் ‘க்ரையோஜினிக்’ எஞ்சின் ஆராய்ச்சியின் இயக்குனரான நம்பி நாராயணன், பாகிஸ்தான் உட்பட சில வெளிநாடுகளுக்கு திரவ ராக்கெட் எரிபொருள், க்ரையோஜினிக் எஞ்சின் தொடர்பான செய்திகளை இஸ்ரோவிலிருந்து திருடி விற்றதாக கேரள போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். இவருடன் இணை இயக்குநர் சசிக்குமார், ரஷ்ய விண்வெளி அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளர் சந்திர போஸ் போன்ற அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். சிபிஐ விசாரணைக்குப் பிறகு, இது புனையப்பட்ட [ஜோடிக்கப்பட்ட] வழக்கு என்ற அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர் என்பதை உலகமே அறியும்.

மேலும், விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தனது சுயசரிதையான “ORBIT OF MEMORIES” என்ற நூலில் “இந்தியா கிரயோகெனின் எஞ்சின் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெறுவது அமெரிக்காவுக்குப் பிடிக்கவில்லை. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா முன்னேற்றம் காண்பதற்கு தடை ஏற்படுத்த முயல்கிறது. சிஐஏ-வை ஏவிவிட்டு, அடுத்தவர்களை அழிப்பதில் வலிமைப் படைத்த அமெரிக்கா, தனக்கு மசிந்த இந்த போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு பொய் குற்றச்சாட்டுகளை போட வைத்து என்னைக் கைது செய்தது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தொழிற்நுட்பத்தை இந்தியாவுக்கு ரஷ்யா தரக்கூடாது என்று ஜெர்மனியும், பிரான்சும் ரஷ்யாவை மிரட்டின.

படிக்க :
♦ ரயில்வே தனியார்மயம் : ஏழைகளுக்கு எட்டாக் கனியாகும் ரயில் பயணம் !
♦ பயணிகள் இரயில்களை ஒழித்துக் கட்டும் மோடி அரசு !

இவ்வளவு கொடுமைகளை நிகழ்த்திய கொலைகாரப்படை CIA-வின் அடியாளாக செயல்பட்டு சொந்த நாட்டுக்கே உலைவைத்த இந்திய போலிசு அதிகாரிகளும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதை இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் தன்னுடைய சுயசரிதையில் அம்பலப்படுத்தியுள்ளார்.

இந்தியா இந்த தொழிற்நுட்பத்தி வளரக் கூடாது என கங்கனம் கட்டி வேலை செய்யும் இந்திய நாட்டின் – மக்களின் எதிரியான அமெரிக்க, ஜெர்மனி, பிரான்சு போன்ற ஏகாதிபத்திங்களுக்கு எதிராக ஒரு கண்டன அறிக்கைக் கூட இல்லையே ஏன்?

இதுதான் RSS,BJP பாசிச கும்பலின் இந்திய அதிகாரவர்க்கதின் ஏகாதிபத்திய தேசபக்தி ! வர்க்க புத்தி. ஆனால், உண்மையான நாட்டுப்பற்றாளர்களை – போராளிகளை, பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் போன்ற எழுத்தாளர்களை, நக்சல்பாரி புரட்சியாளர்களை தேச துரோகியாக சித்தரித்து சுட்டுக்கொள்ளுகிறது இந்த அரசு.

இத்தகைய பொதுத்துறை அழிப்பு நடவடிக்கைகளையும், ஒன்றிய அரசின் மக்கள் விரோத  செயல்பாடுகளையும் அம்பலப்படுத்திய ஆனந்த் தெல்ட்தும்டே, வரவர ராவ், சாய்பாபா, சுதா பரத்வாஜ் போன்ற செயற்பாட்டாளர்களை நகர்புற நக்சல்கள் என முத்திரை குத்தி, பொய் வழக்கில் கைது செய்து,  ஊபா சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து பிணை வழங்காமல் இன்றளவும் சிறையில் அடைத்திருக்கிறது பாஜக.

நீதித்துறை முதல் உளவுத் துறை வரை அரசுக் கட்டமைப்பின் அனைத்து உறுப்புகளையும் பெகாசஸ் போன்ற செயலிகள் மூலம் வேவு பார்ப்பது, அவர்களை மிரட்டியோ, அவர்கள் மீது பொய்வழக்கு போட்டோ அவர்களை முடக்குவது இதன் மூலம் தனது காவி கார்ப்பரேட் பாசிச திட்டங்களை நடைமுறைப்படுத்துகிறது பாஜக.

இன்று பொதுத்துறையை பாதுகாத்த ‘குற்றத்திற்காக’ தேசதுரோக முத்திரை குத்தி ஐசிஎஃப் அதிகாரிகள், இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் ஆகியோரைத் தண்டித்தது போல, நாளை நமக்கும் நடக்கலாம். கார்ப்பரேட் காவி பாசிச கும்பல் தமது அயோக்கியத்தனங்களை மறைக்க போடும் வெளி வேசம் தான்  தேசபக்தி, தேச துரோகி எனும் முத்திரைகள் அனைத்துமே !!


கதிரவன்

கண்காணிப்பு முதலாளித்துவம் : நமது சுய சிந்தனையின் பெரும் எதிரி !

மீபத்தில் தோழி ஒருவரின் திருமணத்திற்காக கட்டில், தலையணை, மெத்தை வாங்க என்னிடம் கேட்டு இருந்தார். நானும் இணையத்தில் அது குறித்துத் தேடி ஒரு நிறுவனத்திடமிருந்து வாங்கிக் கொடுத்தேன். அதன்பிறகு எனது தேடுப்பொறி தொடங்கி, முகநூல், மின்னஞ்சல் என எல்லாம் மெத்தை தலையணை கொண்ட விளம்பரங்களால் நிரம்பி வழிகிறது. இது போன்ற அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். இது ஏன், எப்படி நடக்கிறது என்று எப்போதாவது யோசித்து இருப்போமா?

இது ஒரு தனி உலகமாக செயல்பட்டுவருகிறது. நமது சிந்தனையை மாற்றியமைக்கத் தக்க ஒரு அபாய உலகம் அது. அதற்குப் பெயர் “கண்காணிப்பு முதலாளித்துவம்”.

“கண்காணிப்பு முதலாளித்துவம்” என்பது அடிப்படையில் ஒரு சந்தை உந்துதல் செயல்முறையை விவரிக்கிறது; இந்தச் சந்தையில் விற்பனைக்கான பொருள் உங்கள் தனிப்பட்ட தரவாகும். மேலும், இந்த தரவுகளின் சேகரிப்பு மற்றும் உற்பத்தி இணையத்தில் உலாவும் நம்மைப் போன்ற வெகுஜனங்களின் மீதான கண்காணிப்பை நம்பியுள்ளது. இந்த செயல்பாடு பெரும்பாலும் இணையத் தேடுபொறிகள் (கூகுள்) மற்றும் சமூக ஊடக தளங்கள் (பேஸ்புக்) போன்ற ‘இலவச’ ஆன்லைன் சேவைகளை வழங்கும் நிறுவனங்களால் மேற்கொள்ளப்படுகிறது.

படிக்க :
♦ இணையப் புரட்சியின் யோக்கியதையும் கூகுள் ரீடரும்!
♦ நீலப்பட படைப்பாளிகள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கூகிள் கிளாஸ் !

இந்த நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்தத் தக்க தரவுகளை உருவாக்க நமது ஆன்லைன் செயல்பாடுகளை (விருப்பு வெறுப்புகள், தேடல்கள், சமூக வலைப்பின்னல்கள், கொள்முதல்) சேகரித்து ஆராய்கின்றன. இந்த நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தும் கண்காணிப்பு, அதன் முழு பரிமாணமும் நமக்கு தெரியாமலேயே – நம்மால் புரிந்து கொள்ளப்படாமலேயே – பெரும்பாலும் செய்யப்படுகிறது.

தொழில்நுட்ப புரட்சியின் தொடர்ச்சியான முன்னேற்றங்கள் நம்மை திகைப்பூட்டும் வகையில் வளர்ந்துள்ளன. ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலின் பேராசிரியரான ஷோஷனா சுபோஃப் தனது “The age of Surveillance Capitalism” புத்தகத்தில் சிலிக்கான் பள்ளத்தாக்கு நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள்) மற்றும் பிற நிறுவனங்களும்  பயனர்களின் தகவலை எவ்வாறு கண்காணித்து கணித்து தங்களுக்குச் சாதகமான வகையிலான தகவலை உட்செலுத்தி நம்மை இயக்குகிறது என்பதை விளக்கியிருக்கிறார்.

உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் தனது சொந்த நோக்கங்களுக்காக நமது தனிப்பட்ட தரவை சுரண்டும் விதத்தில் நம்மை குருடர்களாகவும், செவிடர்களாகவும் ஆக்கியுள்ளன என்று எச்சரிக்கிறார், சுபோஃப். மேலும், இந்த “கண்காணிப்பு முதலாளித்துவம்” தனிநபர் தன்னாட்சியை குறைத்து ஜனநாயகத்தை வேரோடு அழிக்கிறது என்றும் கூறுகிறார்.

தரவு ஒரு பொருளாதார சந்தை

பெரும் தரவு பொருளாதாரம் (The Big Data Economy) 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரதானமான ஒன்றாக வளரத் துவங்குகிறது. சமீப காலங்களில், நமது பொருளாதாரம் தொழிற்சாலைகளில் பெருமளவிலான உற்பத்தி வரிசைகளில் இருந்து விலகி படிப்படியாக அறிவுசார் தொழில்நுட்பத்தை நம்பியிருக்கிறது. மறுபுறம், “கண்காணிப்பு முதலாளித்துவம்” டிஜிட்டல் உலகத்தை அடிப்படையாகக் கொண்ட வணிக மாதிரியை பயன்படுத்துகிறது. மேலும், பணம் சம்பாதிக்க “பெரும் தரவு”களையே நம்பியுள்ளது.

இந்த செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் தரவு பெரும்பாலும் அந்தந்த மக்களிடமிருந்து சேகரிக்கப்படுகிறது. அவர்களே அவர்களின் இலக்குகளாகவும் இருக்கின்றனர். உதாரணமாக, விளம்பரங்கள் மூலம் நம்மை குறிவைக்க கூகுள் தனிப்பட்ட ஆன்லைன் தரவுகளை நம்மிடமிருந்து சேகரிக்கிறது.அதன் மூலம் நமது விருப்பு வெறுப்புகள், தேடல்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு நமக்கு தேவையான விசயத்தை கணக்கிட்டு அது தொடர்பான விளம்பரங்களை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.

இதேபோல, பேஸ்புக் நமது தரவை வைத்து நாம் எப்படியான பொருளை வாங்க வேண்டும்; யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது போன்று சிந்தனையை நமக்கு தெரியாமலே நம்முள் கட்டமைக்கிறது. அதற்கேற்றாற் போன்ற பதிவுகள், காணொளிகள், போன்றவற்றை நமக்குத் தொடர்ச்சியாகக் காட்டுகிறது.

மூன்றாம் தரப்பு தரகர்கள் கூகுள் அல்லது பேஸ்புக் போன்ற தரவுகளை வைத்திருக்கும் நிறுவனங்களுக்கு நமது தரவை விற்பனை செய்கின்றனர். இந்த நிறுவனங்கள் பல்வேறு மூலங்களிலிருந்து தரவை வாங்குகின்றன. தனிநபர்கள் அல்லது தனிநபர்களின் குழுக்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து பின்னர் அதை விற்கின்றன.

உதாரணத்திற்கு, கடந்த ஆண்டு ஹெல்த் என்ஜின் (HealthEngine), எனும் மருத்துவ முன்பதிவு செயலி, வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பெர்த் வழக்கறிஞர்களுடன் குறிப்பாக பணியிட காயங்கள் அல்லது வாகன விபத்துகள் போன்ற தகவல்களை பகிர்ந்து கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா செயல்பாடுகள் இணைய நிறுவனங்கள் ஆன்லைன் செயல்பாட்டை எந்த அளவிற்கு கண்காணிக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்றன. கேம்பிரிட்ஜ் அனலிடிகாவின் செயல்பாடுகள் பேஸ்புக்கின் சொந்த விதிகளையும்  மீறி கல்வி ஆராய்ச்சி என்ற போர்வையில் தரவுகளைச் சேகரித்து விற்றன. அவர்களின் கையாளுதல்கள் அமெரிக்காவில் தேர்தல் சட்டத்தையும் அது மீறியிருக்கலாம்.

கேம்பிரிட்ஜ் அனலிட்டிக்ஸ் நடவடிக்கைகள் கேள்விக்குரியவையாக இருந்தபோதிலும், கண்காணிப்பு முதலாளித்துவத்தின் பெரிய வியாபாரிகளாகவும், முன்னணி போட்டியாளர்களாகவும், பேஸ்புக், கூகுள் தங்களால் முடிந்தவரை, இன்னும் சட்டப்பூர்வமாக தகவல்களைச் சேகரித்து வருகின்றனர். அதில், அவர்களின் பயனர்கள், பயனர்களின் ஆன்லைன் நண்பர்கள் மற்றும் அவர்களின் ஆஃப்லைன் நண்பர்கள் (நிழல் விவரக்குறிப்பு ஆங்கிலத்தில் Shadow Profile என அழைக்கப்படும்) பற்றிய தகவல்களும் அடங்கும்.

நிழல் சுயவிவரம் என்பது குறிப்பிட்ட சமூக தளத்தில் அவர்கள் இல்லாதபோதும் அவரைப் பற்றி உருவாக்கப்பட்ட ஒரு சுயவிவரமாகும். இப்படியான தகவல்கள் அவர்களின் நண்பர் யாரோ ஒருவருடன் தொடர்பு கொண்டதால் அவர்களைப் பற்றி சில தரவுகள் சேமிக்கப்படலாம். இந்த தளங்கள் மற்றும் இதிலிருந்து சேகரிக்கும் தகவலும் பெரும் லாபம் ஈட்டுகின்றன.

“கண்காணிப்பு முதலாளித்துவம்” யாரால்? எங்கிருந்து வந்தது?

கண்காணிப்பு முதலாளித்துவத்தை முதலில் கூகுள் கையில் எடுத்தது. பொருட்களுக்கு புதிய சந்தைகளை உருவாக்க தரவுகளை பிரித்தெடுக்கும் நடைமுறைகள் மற்றும் தொகுக்கப்பட்ட பயனர்களின் தரவைப் பயன்படுத்தினர்.

தற்போது, மிகப்பெரிய நிறுவனகளான கூகுள், அமேசான், பேஸ்புக் மற்றும் ஆப்பிள் ஒன்றாக செய்கிறார்கள். அவர்கள் நமது செயல்பாடுகள் பற்றிய தரவுகளை சேகரித்து கட்டுப்படுத்துகிறார்கள். நமது தரவுகளை பண்டங்களாகவும் சேவைகளாகவும் மாற்றுகின்றனர். இது இந்த நிறுவனங்களுக்கு வியக்கத்தக்க வணிக வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், அமேசான், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட் (கூகுள்), ஆப்பிள் மற்றும் பேஸ்புக் ஆகியவை சந்தை மூலதனமயமாக்கலின் மூலம் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் முதல் ஆறு இடங்களில் இடம் பெற்றுள்ளன.

உதாரணமாக, கூகுள், சராசரியாக ஒரு வினாடிக்கு 40,000 தேடல்கள், ஒரு நாளைக்கு 3.5 பில்லியன் மற்றும் வருடத்திற்கு 1.2 டிரில்லியன். அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் சமீபத்தில் 822 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடையது.

நமது தரவு ஆதாரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

புதிதாக கிடைக்கக்கூடிய தரவுகள், ஆதாரங்கள், தரவின் அளவு வியத்தகு முறையில் அதிகரித்துள்ளது. விரிவடைந்த தொழில்நுட்ப சந்தையில் தற்போது சென்சார்களை (Sensor) அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் அதிகரித்து வருவதுதான் காரணம்.

ஸ்மார்ட் வாட்ச், கூகுள் கிளாஸ், ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள், ட்ரோன்கள், சென்சார் இணைக்கப்பட்ட பொம்மைகள் மற்றும் தானியங்கி வாகனம் ஆகியவை அடங்கும். மைக்ரோஃபோன்கள், கேமராக்கள், ஆக்ஸிலரோமீட்டர்கள் மற்றும் வெப்பநிலை மற்றும் மோஷன் சென்சார்கள் போன்ற சென்சார்கள் சேகரிக்கப்பட்டு பண்டமாக்கக்கூடிய நமது செயல்பாடுகளின் (தரவு) பட்டியலில் கூடுதல் கவனம் பெறுகின்றது.

படிக்க :
♦ பெகாசஸ் ஸ்பைவேர் : உளவு மென்பொருள்களின் அரசன் !!
♦ பெகாசஸ் : சட்டரீதியாக எதிர்கொள்ள முடியுமா ?

பொதுவாகப் அணியக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் உடற்பயிற்சி கண்காணிப்புக் கருவி, நமது அன்றாட சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாகவே மாறி வருகின்றது. நமது செயல்பாடுகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகளைச் சேமித்து நமது உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி நிலையை தரவுகளாக மாற்றுகிறது.

இந்த தரவு சுகாதார காப்பீட்டு வழங்குநர்களுக்கு மிகவும் மதிப்பு வாய்ந்தவை. அமெரிக்காவில், சில காப்பீட்டு வழங்குநர்கள் காப்பீட்டிற்கு தகுதி பெறுவதற்கு பாலிசிதாரரின் சாதனத்திலிருந்து இந்த தரவையும் சமர்பிக்க வேண்டும்.

சென்சார் இணைக்கப்பட்ட பொம்மைகள் கண்காணிப்பு முதலாளித்துவத்துடன் மிகவும் தொடர்புடையவை. மற்றொரு வேகமாக வளர்ந்து வரும் சந்தையில் இவை முக்கிய இடம் வகிக்கின்றன. இந்த பொம்மைகளை மையமாக வைத்து குழந்தைகளின் தரவுகளை மற்றொரு மதிப்புமிக்க பொருளாக மாற்றி சந்தைப் படுத்துகின்றன.

ஓட்டுப் போடும் பெரியவர்கள் முதல் சிறு குழந்தைகள் வரை அனைவரின் தரவுகளும் பண்டங்கள் தான். அவை மனிதனின் தன்னாட்சியை, சுய சிந்தனையை இழக்கச் செய்து, பெரும் கார்ப்பரேட்டுகளின் நோக்கத்திற்கு ஏற்ப ஆடும்  பொம்மலாட்ட பொம்மைகளாக நம்மை மாற்றிவருகின்றன.

அறிவியல் பூர்வமான தொழில்நுட்பங்கள் முதலாளித்துவத்தின் கைகளில் சிக்கியிருக்கையில் அவை எவ்வளவு பெரிய மனிதப் பேரவலத்தை உண்டாக்கக் காத்திருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருக்கிறது !

சிந்துஜா சுந்தராஜ்
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்
disclaimer

இந்திய குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் சாதிய பாகுபாடு !

சாதி பாகுபாடு இந்தியாவில் குழந்தை வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து நிலைமையை எவ்வாறு பாதிக்கிறது?

லகில் உள்ள வளர்ச்சி குன்றிய குழந்தைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. அதாவது, ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள், அவர்களின் வயதுக்கு ஏற்ப உயரம் உலகளாவிய வேறுபாட்டு விகிதத்தை விட (அதாவது ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்பிற்கு) கீழே உள்ளது. வளர்ச்சி குன்றுதல் என்பது “ஊட்டச்சத்து குறைபாடு, மீண்டும் மீண்டும் தொற்று மற்றும் பொறுத்தமற்ற உளவியல் தூண்டுதலால் குழந்தைகள் அனுபவிக்கும் பலவீனமான வளர்ச்சி” என வரையறுக்கப்படுகிறது.

இது ஏன் முக்கியமான விசயமாகிறது? ஏனெனில் குழந்தைப்பருவத்தின் தொடக்கத்தில் உள்ள மோசமான ஆரோக்கியத்தின் குறியீடுகள் டீனேஜ் மற்றும் பெரும்பாலும் இளமைப் பருவத்திலும் தொடர்கின்றன. நோஞ்சான் மற்றும் வளர்ச்சி குன்றிய தன்மை என்பது ஒருவரின் பிந்தைய வாழ்க்கையில் உடல்நலக்குறைவு மற்றும் இறப்பு, தொற்று அல்லாத நோய்கள், கற்றல் திறன் மற்றும் உற்பத்தித்திறன்  போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்  பாதகமான விளைவுகளுடன் தொடர்புடையதாக உள்ளது.

உலகளவில் நான்கில் ஒரு குழுந்தை வளர்ச்சி குன்றியதாக உள்ளது என்று   வகைப்படுத்தப்பட்டிருக்க, இது ஒரு உலகளாவிய உடல் நலம் சார்ந்த சவாலாக கருதப்படுகிறது.

படிக்க :
♦ குழந்தை வளர்ப்பை முரணின்றி ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவது எப்படி ?
♦ உங்கள் குழந்தைகளின் புன்முறுவல்கள் எவ்வளவு அழகாக உள்ளன !

இது உடனடி நலன் சார்ந்த மூன்று முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. ஒன்று, ஒரு வயது அல்லது ஐந்து வயதில் வளர்ச்சி குன்றியிருக்கும் ஒரு குழந்தை,  பருவ வயதில் வளர்ச்சி குன்றியிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வளர முடியும் என்பதற்கு என்ன வாய்ப்பு? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்த அளவிற்கு வளர்ச்சி குறைபாடு தொடர்ந்து நீடிக்கும்? இரண்டு, வளர்ச்சி குன்றல் என்பது உடல்நலக் குறைவுக்கான புறநிலை யதார்த்த  குறியீடாக இருந்தாலும், அதன் பிற விளைவுகள் என்ன?

குறிப்பாக, மனித மூலதனம் மற்றும் அகம் சார்ந்த நலனுக்கான தாக்கங்கள் என்ன? மூன்று, வளர்ச்சி குன்றலுடன் தொடர்புடைய காரணிகளின் தொகுப்பு என்ன? வளர்ச்சி குன்றலின் சாத்தியம் வெறுமனே செல்வம் மற்றும் வருமானத்தின் விளைவாக இருக்கிறதா அல்லது கொள்கை தலையீடுகளுக்கு மிகவும் பொருத்தமான மற்ற காரணிகளை அடையாளம் காண முடியுமா?

எங்கள் சமீபத்திய ஆராய்ச்சியில் இந்தக் கேள்விகள் அனைத்தையும் ஆராய்ந்தோம். குறுகிய விடைகளாவன: ஒன்று, ஐந்து வயதில் கடுமையாக வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இந்தியாவில் 15 வயதில் 74% அதிகமாக வளர்ச்சி குன்ற வாய்ப்புள்ளது. அதாவது ஆரம்பகால குழந்தைப்பருவ வளர்ச்சி குன்றல் மிகவும் தொடர்ந்து நீடிக்கிறது.

இரண்டு, ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சி குன்றல் கணிதம் மற்றும் சொல்லகராதி ஆகியவற்றில் தகுதி பெறுதல் மற்றும் அறிவாற்றல் திறன்களை பாதிக்கிறது. அதேபோல் 15 மற்றும் 22 வயதில் அகநிலை சார்ந்த நல்வாழ்வை பாதிக்கிறது. வளர்ந்த நாடுகளின் ஆராய்ச்சி, குழந்தை பருவ வளர்ச்சி குன்றல் வேலைவாய்ப்பு மற்றும் ஊதியங்களையும் பாதிக்கும் என்று காட்டுகிறது.

இந்த கட்டுரையில் மூன்றாவது கேள்விக்கு நாங்கள் கவனம் செலுத்துகிறோம். ஆனால், நாம் அதற்கு செல்வதற்கு முன், நாம் ஒரு சர்வதேச சூழலில் இப்பிரச்சினையை  முன்வைக்க வேண்டும்.

இந்திய புதிர்

இந்தியாவில் வளர்ச்சி குன்றல் அதிகமாக ஏற்படுவது மட்டுமல்லாமல், சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 30 நாடுகளின் சராசரியுடன் ஒப்பிடுகையில், இந்திய வளர்ச்சி குன்றல் நிகழ்வுகளின் சராசரி அதிகமாக உள்ளது.

குழந்தையின் உயரம் பொதுவாக வறுமையுடன் எதிர்மறையாக தொடர்புடையது. ஏனெனில்  வளர்ச்சி குன்றல் – நோஞ்சான் குழந்தை என்பது நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். ஆகையால், இந்தியா சப்-சஹாராவை விட ஒரு பணக்கார நாடு என்பதால், சப்-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளை விட இந்திய குழந்தைகள் குட்டையாக இருப்பது எளிதில் புரிந்துகொள்ள முடியாது. இந்த புதிர், “இந்தியன் புதிர்” என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிர் தீர்க்க முயற்சித்த குறிப்பிடத்தக்க கல்வியியல் ஆய்வு கட்டுரை ஆவணங்களின் வடிவத்தில் தீவிர ஆய்வுக்கு வழிவகுத்தது (பொருளாதார அறிஞர்,  டீடன், 2007).

இந்த நிகழ்வுக்கான மேலோங்கிய விளக்கங்கள் பிறப்பு வரிசை மற்றும் மகன் விருப்பமாக (ஆண் பிள்ளை மோகம்) உள்ளது. (ஜெயச்சந்திரன் மற்றும் பாண்டே 2017): முதலாவதாக பிறந்த குழந்தைகள் வளர்ச்சி குன்றியதாக இல்லை. ஆனால், உயர சாய்வு (குள்ளமாதல்), குறிப்பாக பெண் குழந்தையாக இருந்தால்  இரண்டாவது குழந்தையிலிருந்து வினையாற்றுகிறது. பரவலாக இருக்கும் திறந்தவெளி மலம் கழித்தல், அதாவது, நோய் சூழல் (ஸ்பியர்ஸ், 2018); மற்றும் மரபணு வேறுபாடுகள் (பனகரியா, 2013). ஜெயச்சந்திரன் மற்றும் பாண்டே மற்றும் டீன் ஸ்பியர்ஸ் ஆகியோரால் வழங்கப்பட்ட சான்றுகள் மரபணு சார்ந்த விளக்கத்திற்கு எதிராக ஒரு தீவிரமான கேள்விக்குறியை எழுப்புகின்றன.

குழந்தையின் உயரத் தரவைப் பற்றிய எங்கள் முதல் பார்வை யாரும் உணராத ஒரு சித்திரத்தை வெளிப்படுத்தியது. மற்ற பல கட்டுரைகளில் கவனிக்கப்படாமல் இருப்பதைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்பட்டோம்.

படம் – 1

படம் 1 : துணை சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள 30 நாடுகளின் தரவை உள்ளடக்கியது, அவை அந்த நாடுகளில் ஐந்து வயதுக்குட்பட்ட 132 மில்லியன் மக்கள் தொகை மற்றும் இந்தியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட 121 மில்லியன் மக்கள் தொகையை உள்ளடக்கியதாக ஒருங்கிணைந்துள்ளது. இந்தத் தகவல்கள் சமீபத்திய மக்கள் தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் (DHS) சமீபத்திய சுற்றிலிருந்து பெறப்பட்டவை; 2015-2016-லிருந்து இந்தியாவுக்கும், 2010-க்குப் பிறகு துணை-சஹாரா ஆப்பிரிக்காவிலிருந்தும் பெறப்பட்டவை.

படம் 1-இன் பேனல் A வயதிற்கான உயரத்தை குறிக்கிறது. *(HFA Z- ஸ்கோர்). இந்திய குழந்தைகள் HFA Z – மதிப்பெண் – 1.48 ஐக் கொண்டுள்ளனர், இது துணை – சஹாரா ஆப்பிரிக்காவின் சராசரி – 1.32-ஐ விட கூடுதலாக 0.16 நிலையான விலகல் அலகுகள் ஆகும். பேனல் பி-யில் வளர்ச்சி குன்றியத் தன்மையின் விகிதம் நேரடியாக குறிப்பிடப்பட்டுள்ளது: அதாவது, பி ஆனது உலக குறிப்பு சராசரிக்கு கீழே 2 நிலையான விலகல்களுக்கு மேல் உள்ள குழந்தைகளின் விகிதம். துணை சஹாரா ஆப்பிரிக்காவை விட இந்தியாவில் குழந்தை பருவ வளர்ச்சி குன்றிய தன்மை 13% அதிகமாக இருப்பதை இந்த குழு காட்டுகிறது (36 எதிராக 31%). படத்தின் இந்த பகுதி முன்னர் பார்க்கப்பட்ட கட்டுரையால் நன்கு அறியப்பட்டதாகவும் மற்றும் பரவலாக பகுப்பாய்வு செய்யப்பட்டதாகவும் உள்ளது.

இது, உலக சுகாதார அமைப்பால் நிர்ணயிக்கப்பட்ட குழந்தைகளின் சராசரி உயரத்திலிருந்து ஒரு குழந்தையின் உண்மையான உயரத்தின் நிலையான விலகல்களின்  எண்ணிக்கை..

காணாமல் போன  இணைப்பு: சாதிய சமூக அடையாளத்தின் பங்கு

இருப்பினும், இந்தியா-சப்-சஹாரா ஆப்பிரிக்காவின் ஒப்பீடு, இந்திய சமுதாயத்திற்குள் இருக்கும் முக்கியமான சமத்துவமின்மையை விவரிக்கிறது. படம் 1-இன் குழு C மற்றும் D-இல், துணை-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் இந்தியாவில் உள்ள நான்கு முக்கிய சமூக குழுக்களுக்கான சராசரி HFA Z-மதிப்பெண் மற்றும் வளர்ச்சி குன்றிய தன்மை விகிதங்களை நாங்கள் குறிப்பிடுகிறோம்: அதாவது, ஆதிக்க சாதி இந்துக்கள் (UC-இந்துக்கள்), பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி-எஸ்டி), பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓபிசி) மற்றும் ஆதிக்க சாதி முஸ்லிம்கள் (யுசி-முஸ்லீம்கள், அதாவது தங்களை எஸ்சி அல்லது ஓபிசி என அடையாளப்படுத்தாத முஸ்லிம்கள்).: இந்த நான்கு வழி வகைப்பாடு இந்திய சமூகத்தின் இரண்டு முக்கிய பிளவுகளுக்கு (சாதி மற்றும் மதம்) வடிவம் கொடுக்கிறது..

படம் 1-ன் குழு சி, வளர்ச்சி குன்றிய தன்மை தொடர்பான விவாதத்தில் இதுவரை தவறவிட்ட ஒரு முறையை வெளிப்படுத்துகிறது: மேல் சாதி (UC) இந்துக்களைத் தவிர அனைத்து குழுக்களுக்கும் உயரக் குறைபாடு, துணை-சஹாரா ஆப்பிரிக்க குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிகமாக உள்ளது. குழு D அதே விஷயத்தை வித்தியாசமாக காட்டுகிறது: மேல்சாதி இந்து குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றியதன்மை விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் 31 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர். மேல்சாதி-இந்து குழந்தைகள் 26% வளர்ச்சி குன்றிய நிலையில், துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் உள்ள குழந்தைகளை விட 5 சதவிகிதம் புள்ளிகள் குறைவாக இருப்பார்கள்.

எஸ்சி-எஸ்டி, ஓபிசி மற்றும் யுசி-முஸ்லீம் குழந்தைகளில் முறையே 40%, 36% மற்றும் 35% வளர்ச்சி குன்றியுள்ளது. இதனால், SC-ST, OBC-க்கள் மற்றும் UC- முஸ்லீம் குழந்தைகள் 14, 10 மற்றும் 9 சதவிகித புள்ளிகள் அல்லது 35-50%, UC- இந்து குழந்தைகளுடன் ஒப்பிடும்போது அதிக வளர்ச்சி குன்றியிருக்க வாய்ப்புள்ளது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்தியாவில் உள்ள சமூகக் குழுக்களிடையே குழந்தைகளின் உயரத்தில் உள்ள இடைவெளிகள் இந்தியா-சப்-சஹாரா ஆப்பிரிக்கா குழந்தை உயர இடைவெளியை விட இரண்டு முதல் மூன்று மடங்கு அதிகம். முழு இந்தியா-துணை-சஹாரா ஆப்பிரிக்காவின் குழந்தை உயர இடைவெளியானது பின்தங்கிய குழுக்களின் குறைந்த குழந்தை உயரத்தால் கணக்கிடப்படுகிறது.

படம் 1-இல் காட்டப்பட்டுள்ள வடிவங்கள் “ஏன் இந்திய குழந்தைகள் ஆப்பிரிக்க குழந்தைகளை விட குறைவாக இருக்கிறார்கள்” என்ற கேள்வியானது” இந்தியாவிற்குள் உள்ள சமூக குழுக்களுக்கு இடையில் குழந்தையின் உயரத்தில் உள்ள இடைவெளிகள் ஏன் அதிகமாக உள்ளன?” என்ற கேள்வியால் மாற்றீடு செய்யப்பட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

நாங்கள் எங்கள் சமீபத்திய ஆய்வில் இதைப் பற்றி பேசுகிறோம். இந்தத் தரவு விவரணையில், இந்தியாவில் குழந்தைப்பருவ வளர்ச்சிக் குறைபாட்டில் சில முக்கிய அம்சங்களை நாங்கள் முன்வைக்கிறோம்.

மாவட்டங்கள் மற்றும் சமூக குழுக்கள் முழுவதும் வளர்ச்சி குன்றலில் மாறுபாடு

வளர்ச்சி குன்றிய தன்மை நிகழ்வுகளில் துணை தேசிய மாறுபாட்டை நாம் ஆராயும்போது, பிராந்திய மற்றும் சமூக குழு மாறுபாடுகளைக் காண்கிறோம். 2015-2016-க்கான தேசிய குடும்பம் மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் மதிப்பீடுகளை நாங்கள் வழங்குகிறோம் (NFHS-4).

அட்டவணை 1 வளர்ச்சி குன்றியதன்மை நிகழ்வுகள் வாரியாக சமூக குழு வாரியாக மாவட்டங்களின்  வளர்ச்சி குன்றியதன்மை எண்ணிக்கை மற்றும் பங்கை  காட்டுகிறது. இவை படம் 2-ம் காட்டப்பட்டுள்ளன. இது வண்ண-குறியிடப்பட்ட வெப்ப வரைபடங்களை மாவட்ட மற்றும் சமூக குழுக்களின் சராசரி விகிதத்தின் இடஞ்சார்ந்து ஏற்படுவதை காட்டுகிறது. அங்கு மெல்லிய கருப்பு கோடுகள் மாவட்ட எல்லைகளையும் மற்றும் அடர்த்தியான கருப்பு கோடுகள் மாநில எல்லைகளையும் மற்றும் நிறத்தின் அடர்த்தி வளர்ச்சி குன்றிய தன்மையின் பரவல் அதிகரித்து வருவதையும் குறிக்கிறது.

அட்டவணை 1 SC-ST குழந்தைகளுக்கு, 15 மாவட்டங்களில் (2.65%), வளர்ச்சி குன்றிய தன்மையின் சராசரி நிகழ்வு 0 முதல் 20% வரை உள்ளது; 90 மாவட்டங்களில் (15.93%) இது 20-க்கும் அதிகமாகவும் 30%-க்கு சமமாகவும் அல்லது குறைவாக உள்ளது; 171 மாவட்டங்களில் (30.27%) இது 30-க்கும் அதிகமாகவும், 40%-க்கும் குறைவாகவும் உள்ளது; 157 மாவட்டங்களில் (27.79%), இது 40-க்கும் அதிகமாகவும், 50%-க்கும் சமமாகவும் அல்லது குறைவாகவும் உள்ளது; மற்றும் 132 மாவட்டங்களில் (23.36%), இது 50%-க்கும் அதிகமாக உள்ளது. பிற சமூகக் குழுக்களுக்கு வளர்ச்சி குன்றியத் தன்மை அடுக்கு வீதத்தில் இடஞ்சார்ந்த மாறுபாட்டைக் காட்டும் மாவட்டங்களின் தொடர்புடைய எண் மற்றும் பங்கை அட்டவணை 1-ல் காணலாம்.

தொகுப்பாக, 40%-க்கும் அதிகமாக வளர்ச்சி குன்றும் தன்மை (அதாவது மிக அதிகமாக)  உள்ள மாவட்டங்களின் விகிதாச்சாரம் UC இந்துக்களுக்கு 15%; OBC-களுக்கு 37%; SC-ST-க்கு 51% மற்றும் UC முஸ்லீம்களுக்கு 57% ஆகும்.

படம் – 2

படம் 2, பிராந்திய வடிவங்களின் அடிப்படையில், பீகார், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிக அளவில் எஸ்.சி-எஸ்.டி அதிகமாக உள்ள பகுதிகளில் மிகவும் தெளிவான வடிவத்தைக் காட்டுகிறது. வடக்கு மற்றும் மத்திய சமவெளிகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் உள்ளன. இன்னும் குறிப்பாக, BIMARU பிராந்தியத்தில் உள்ள SC-ST குழந்தைகளுக்கு, 195 அல்லது 84% மாவட்டங்களில், வளர்ச்சிகுன்றல் பாதிப்பு 40%-க்கும் அதிகமாக உள்ளது; மேலும் 105 அல்லது 44.49% மாவட்டங்களில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகள் வளர்ச்சி குன்றியுள்ளனர்.

BIMARU பகுதி தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கு முற்றிலும் மாறுபட்டது; அனைத்து சாதி குழுக்களிலும் இத்தகைய தீவிர நிலை தடுமாற்றம் குறைவாக இருப்பது மட்டுமல்லாமல் சாதி குழுக்களில் உள்ள வேறுபாடுகளின் அளவு மிகவும் குறைவாக உள்ளது. ஆதிக்க சாதியினருக்கு, பிமாரு பிராந்தியத்தில், 38(16) சதவிகித மாவட்டங்களில் மட்டும், 40(50) சதவிகிதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி குன்றல் பாதிப்பு உள்ளது.

ஓபிசி மற்றும் ஆதிக்க சாதி முஸ்லீம்களுக்கு, பிமாரு பிராந்தியத்தில், முறையே 61% மற்றும் 71% மாவட்டங்களில் வளர்ச்சி குன்றும் பாதிப்பு 40%-க்கும் அதிகமாக உள்ளது.

சமூக குழுக்களுக்கும் பிராந்தியங்களுக்கும் இடையிலான இடைவெளிகளுக்கு வடிவம் கொடுப்பது என்ன?

சாதி இடைவெளிகளாக நாங்கள் வகைப்படுத்துவது வெறுமனே சமூக-பொருளாதார  கூறுகளில் உள்ள வேறுபாடுகள்தானா என்று பல வாசகர்கள் கேட்டனர். இது உண்மையாக இருந்தால், சூழ்நிலைகளில் உள்ள வேறுபாடுகள் சாதி குழுக்களுக்கிடையேயான குழந்தையின் வளர்ச்சி இடைவெளிகளை விளக்க வேண்டும்.

எங்கள் ஆராய்ச்சியில், இந்த காரணிகளை முதலில் ஆராய்வதன் மூலம் தொடங்குகிறோம்.

குழந்தையின் உயரத்தை பாதிக்கும் ஐந்து முக்கிய காரணிகளை நாங்கள் அடையாளம் காண்கிறோம் :

(i) சுகாதாரம் கிடைக்கப் பெறாமை முக்கியமாக இரண்டு விவகாரங்களால் மாறுபடுகிறது : கழிப்பிட வசதி இன்றி வயலிலோ புதர்களிலோ மலம் கழிக்கும் நிலை. அடுத்ததாக திறந்த வெளியில் மலம் கழிக்கும் ஒரு சூழல், அதனால் பாதிப்புக்கு ஆளாவது;
(ii) தாயின் மனித வளம், இரண்டு குறியீடுகளால் அளவிடப்படுகிறது: பள்ளியில் படித்த காலம் மற்றும் வாசிக்கும் திறன்;  இது உண்மையான சோதனை மூலம் அளவிடப்படுகிறது;
(iii) HFA Z- மதிப்பெண், உயரத்திற்கு ஏற்ற எடை (WFH) – Z மதிப்பெண் மற்றும் வயது ஆகியவற்றால் கணக்கிடப்படுகிற தாயின் மானுடவியல் நிலை;
(iv) சொத்து குறியீட்டு காரணி மதிப்பெண்ணால் அளவிடப்படுகின்ற சொத்து வேறுபாடுகள்; மற்றும்
(v) வீட்டு சொத்தில் பாகம் ஒதுக்கீடு மற்றும் கருவுறுதல் முடிவுகள், பிறப்பு வரிசை மற்றும் உடன்பிறப்புக்களின்  எண்ணிக்கை  ஆகியவற்றால்  நடக்கக்கூடியது.

படம் – 3

குழந்தைகளின் உயரத்தை பாதிக்கும் உப வேறுபாடுகளை பெரிய குழுக்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் காண்கிறோம். குறிப்பாக ஆதிக்கசாதி  இந்துக்களுக்கும் SC-ST-க்கும் இடையில் வேறுபாடுகளை காண்கிறோம். 23% ஆதிக்கசாதி இந்துக்களுடன் ஒப்பிடும்போது ஒரு சிலரை முதன்மைபடுத்தி முன்னிறுத்த, 58% எஸ்சி-எஸ்டி குடும்பங்கள் கழிப்பறை வசதி கிடைக்கப்பெறாமல் ஒரு புதர் அல்லது வயலில் திறந்தவெளியில் மலம் கழிக்க தள்ளப்படுகின்றன; யூசி-ஹிந்துக்களுக்கு தாய்வழி கல்வியறிவு 83%, SC-ST-க்கு 51%; எஸ்சி-எஸ்டி தாய்மார்கள் 5.26 ஆண்டுகள் பள்ளிப் படிப்புடன் ஒப்பிடுகையில் யுசி-ஹிந்து தாய்மார்களுக்கு 9.47; மற்றும் SC-ST தாய்மார்களின்  HFA Z-மதிப்பெண் -2.15 உடன் ஒப்பிடும்போது, UC – இந்து தாய்மார்களின் சராசரி HFA Z – மதிப்பெண் – 1.82 ஆக உள்ளது.

வளரும் சூழ்நிலைகள் தலித் மற்றும் ஆதிவாசி (SC-ST) குழந்தைகளுக்கு மிகவும் பாதகமானவையாக இருக்க, ஆதிக்க சாதி மற்றும் தலித் குழந்தைகள் வளரும் சூழலில் தெளிவாக பெரிய மற்றும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. சமூக-பொருளாதார  கூறுகளில் உள்ள இந்த வேறுபாடுகள் சமூக குழுக்களுக்கிடையேயான குழந்தையின் உயர இடைவெளியை விளக்குகிறதா?

ஒத்ததை ஒத்ததுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒரு வழிமுறையான எண்ட்ரோபி பேலன்சிங்கைப் பயன்படுத்தி, ஆதிக்க சாதி மற்றும் தலித் குழந்தைகளின் “பொருந்திய” மாதிரிகளில் வளர்ச்சி குன்றியதன்மையில் உள்ள வேறுபாடுகளை நாங்கள் ஆராய்கிறோம். அதாவது பல்வேறு பெரிய பரிணாமங்கள் நெடுக தங்களுடைய அரசியல் பொருளாதார பண்பு கூறுகள் பொருந்துகின்ற குழந்தைகள். BIMARU மாநிலங்களில் எங்கள் பொருந்திய மாதிரியில், SC-ST மற்றும் OBC குழந்தைகள் மேல்-சாதி குழந்தைகளை விட வளர்ச்சி குன்றி இருப்பதைக் காண்கிறோம். தாழ்த்தப்பட்ட சாதியினரின் குழந்தைகளிடையே அதிக வளர்ச்சி குன்றியிருப்பது ஒப்பீட்டளவில் அவர்களின் மிகவும் பின்தங்கிய சூழ்நிலைகளால் மட்டுமல்ல என்று இது அறிவுறுத்துகிறது.

யூசி மற்றும் தலித் (எஸ்சி) குழந்தைகளுக்கு இடையேயான இடைவெளிகள் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப்படுவதாக நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது சட்டவிரோதமான ஆனால், பரவலான தீண்டாமை நடைமுறையில் வெளிப்படுகிறது. தீண்டாமையின் சுய-அறிக்கை நடைமுறை அதிகமாக உள்ள மாவட்டங்களில் தலித் குழந்தைகளின் உயரம் குறைபாடு அதிகரிக்கிறது. தீண்டாமை மற்றும் குழந்தை உயரம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை மதிப்பிடுவதற்கு இந்திய மனித மேம்பாட்டு கணக்கெடுப்பின் (IHDS 2012) தரவை நாங்கள் பயன்படுத்துகிறோம்.

படிக்க :
♦ NEP -2020 : ஒளிந்திருக்கும் சாதியமும் ஆணாதிக்கமும் | பேரா. அனில் சத்கோபால்
♦ சாராஸ் திரைப்படம் : குழந்தைப் பேறு வரமா ? சாபமா ? || ராஜசங்கீதன்

தீண்டாமை நடைமுறையில் உள்ள பகுதிகளில் தலித் குழந்தைகளின் HFA Z-மதிப்பெண் கடுமையாக குறைகிறது என்பதை படம் 3 காட்டுகிறது. மாறாக, உயரம்/நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு நிலைகளுக்கும், தீண்டாமையை எதிர்கொள்ளும் குடும்பங்களின் விகிதாச்சாரத்திற்கும், ஆதிக்க சாதி குழந்தைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை.

மேலும், குழந்தை முன்னேற்றத்தின் முழுப் பாதையிலும் உள்ள தீண்டாமை நடைமுறையின் தாக்கத்தையும் நாங்கள் ஆராய்கிறோம். எங்களது முடிவுகள், தீண்டாமை கடைபிடிக்கும் குடும்பங்கள் அதிகம் உள்ள பகுதிகள்தான் தாழ்த்தப்பட்ட சமூக  தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் முழு அளவிலான பிரசவ கால மற்றும் பிரசவத்திற்கு  பிந்தய சுகாதார வசதிகளை பெறவோ அல்லது பயன்படுத்தவோ வாய்ப்பில்லாத பகுதிகளாக உள்ளன.

முடிவுரை

குழந்தை உயரத்தில் சாதிய இடைவெளிகள் (யாரும் குறித்து சொல்லவில்லை) முற்றிலும் வர்க்கம் அல்லது சமூக பொருளாதார நிலைகளின் ஒரு பிரதிபலிப்பு இல்லை என்று எங்களது ஆய்வு முடிவுகள் காட்டுகிறது. சாதிய குழுக்கள் குழந்தைகளின் உயரத்தை நிர்ணயிக்கிற விரிவான மாறிகளின் தொகுப்பில் வேறுபடுகையில், அதே கோவாரியட்டுகளின் சமநிலையில் இருக்கும் மாதிரிகளை ஒப்பிடும்போதும் கணிசமான இடைவெளிகள் இருப்பதை நாங்கள் காட்டுகிறோம்.

ஆதிக்க மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி (தலித்) குழந்தைகளுக்கிடையிலான உயர இடைவெளியோடு தீண்டாமை நடைமுறை தொடர்புடையது என்பதை ஆதாரங்கள் ஐயத்திற்கிடமின்றி எடுத்துக்காட்டுகின்றன. குறிப்பாக, தீண்டாமை நடைமுறையில் உள்ள வேறுபாடு ஆதிக்கசாதி குழந்தைகளின் உயரத்தை பாதிப்பதில்லை.

ஆனால், தீண்டாமை தொடர்பான நடைமுறைகள் அதிகமாக பரவுவது தலித் குழந்தைகளின் குறைந்த உயரத்துடன் தொடர்புடையது. முடிவுகள், இன்னும் கூடுதலாக, தாழ்தப்பட்ட சாதிய குழுக்களில் இருந்து வரும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சேவை வழங்குவதில் பாதிப்பை ஏற்படுத்தும் பாரபட்சமான நடைமுறைகளுக்கான பங்கை குறிப்பிடுகிறது. இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட சாதி குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

குறிப்பு: இக்கட்டுரை பொருளாதார தரவு மற்றும் பகுப்பாய்வு மையத்திற்காக (CEDA) எழுதப்பட்ட தரவு விவரணையை அடிப்படையாகக் கொண்டது. CEDA  வெளியிடப்பட்ட பிறகு வாசகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு உரையாற்ற அசல் பகுதி மாற்றப்பட்டுள்ளது.

ஆசிரியர் குறிப்பு : அஷ்வினி தேஷ்பாண்டே அசோகா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக உள்ளார். ராஜேஷ் ராமச்சந்திரன் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வாளர்.


கட்டுரையாளர் : அஷ்வினி தேஷ்பாண்டே
தமிழாக்கம் : முத்துக்குமார்
செய்தி ஆதாரம் : The Wire

ஆகஸ்ட் 15 : கார்ப்பரேட்டுகளுக்கான சுதந்திரம் ! மக்களுக்கு அல்ல || புமாஇமு கூட்டம்

1

”ஆகஸ்ட் – 15 சுதந்திரமா? அடிமைத் தனமா?” என்ற தலைப்பில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக அறைக்கூட்டம் 15.8.2021 மாலை 6 மணிக்கு பென்னாகரத்தில் நடைப்பெற்றது.

புமாஇமு மாவட்ட அமைப்பாளர், தோழர் சத்தியநாதன் தலைமை தாங்கினார். அவர் உரையில், இன்று இந்தியாவில் யாருக்கு சுதந்திரம் இருக்கிறது. இந்த நாட்டை கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும், காவி பாசிஸ்டுகளுக்கும் சுதந்திரம் உள்ளது. மக்களுக்கு உரிமைகளை கேட்டு போராடுவதற்கும், விவசாயிகள் போராடுவதற்கும் சுதந்திரம் இல்லை.

கல்வியை காவிமயமாக மாற்றம் செய்து, நீட், புதியக் கல்வி கொள்கை ஆகியவற்றை மாணவர்கள் மீது கட்டாயமாக திணித்து வருகிறது மோடி அரசு. பொதுத்துறைகளை சூறையாடி நாட்டை கொள்ளையடித்து, சீரழித்து வருகிறது. நாடாளுமன்றங்களில் தொடங்கி நாடு முழுவதும் மதவெறியை தூண்டுவது, “ஜெய் ஸ்ரீ ராம்” என்ற முழக்கத்தை வைத்து சிறுபாண்மை மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவது, எதிர்த்துப் போராடுபவர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து சிறையில் அடைப்பது, கொடூரச் சட்டங்களை இயற்றி பொதுச் சொத்துகளை  கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடுவது என்கிற பாசிச வேலையை செய்து கொண்டே, இதுதான் தேசபக்தி என மக்களை பிளவுபடுத்தி வருகிறது மோடி கும்பல்.

நமக்கு இன்று ஒரே பாதைதான் இருக்கிறது. அது பகத்சிங் வழியிலான பாதை, இது கார்ப்பரேட்டுகளுக்கான சுதந்திரம், மக்களுக்கு போலி சுதந்திரம், அடிமைத்தனம் இதில் நமக்கென்ன கொண்டாட்டம்? என்பதை விளக்கி தலைமை உரையை நிறைவு செய்தார்.

This slideshow requires JavaScript.

அடுத்ததாக சிறப்புரை ஆற்றிய மக்கள் அதிகாரம், மண்டல குழு உறுப்பினர், தோழர் அருண், தனது உரையில், 1947-ல் நடைப்பெற்ற நாடகத்தைதான் சுதந்திரம் என்று கொண்டாடுகிறார்கள். உண்மையில் என்ன நடந்தது?

இந்தியாவில் புரட்சிகரமான மாற்றம் வந்துவிட்டால் நாம் கொள்ளை அடிக்க முடியாது என்பதால் தனக்கு ஏற்ற அடிமைகளை உருவாக்கி வைத்தனர். நேரு போன்ற தேர்ந்தெடுத்த அடிமைகளை கொண்டு புதிய வகையில் மாற்றம் கொண்டுவந்தது பிரிட்டிஷ். நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற உழைக்கும் மக்கள் போராடி உயிர்நீத்துள்ளனர். பல ஆயிரம்பேர் சிறையில் அடைக்கபட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மிகக்கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இப்படி பல ஆயிரம் பேரின் உயிர்த்தியாகத்திலும் இந்திய சுதந்திரத்தை சோசலிச கனவுகளோடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட பகத்சிங்கும் அவரது சகதோழர்களும் உயிர் தியாகம் செய்தனர்.

இப்படி பலரின் தியாகத்தை மறைத்து பிரிட்டிஷுக்கு எதிரான புரட்சிகர எழுச்சிகளை அகிம்சை என்ற பெயரில் முடக்கிய காந்தியை மட்டும் முன்நிறுத்தி இன்று கொடியேற்றி இனிப்பு கொடுக்கின்றனர். 1947-ல் நாம் பெற்றதாக சொல்வது சுதந்திரமே அல்ல, அது அதிகார மாற்றம், மற்றொரு அடிமைதனத்தை நம் மீது திணித்த நாள் என்பதை வரலாற்று பூர்வமாக விளக்கி பேசினார். இறுதியாக புமாஇமு தோழர் வினய் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.

தகவல்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தருமபுரி மாவட்டம்,
6384569228.

மீன் வளத்தையும் மீனவர்களையும் அழிக்க வரும் கடல் மீன்வள மசோதா !

0

டந்து முடிந்த – இல்லை.. இல்லை.. பாஜக பாசிச கும்பலால் விரைவாக முடித்துக் கொள்ளப்பட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் ஒன்றிய அரசு அறிமுகம் செய்யவிருந்த 20-க்கும் மேற்பட்ட மசோதாக்களில் ஒன்றான தேசிய கடல் மீன்வள (ஒழுங்காற்று) மசோதா (2021) பெருவாரியான மீனவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீனவர்கள் என்றால் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது படகோட்டி திரைப்படத்தில் வரும் “கடல்மேல் பிறக்க வைத்தான், எங்களை கண்ணீரில் மிதக்கவிட்டான்” என்ற பாடல் வரிகளே. கரையில் மட்டுமல்ல, கடலிலும் வாழத் தகுதியற்றவர்களாக மீனவர்களை மாற்றுவதே இந்த கடல் மீன்வள மசோதா.

இம்மசோதாவின் படி, மீனவர்கள் 12 கடல் மைல்களுக்கு உட்பட்டே மீன்களை பிடிக்க வேண்டும். அதேவேளையில் எந்த வகையான மீன்களை பிடிக்கப்போகிறார்கள் என்பதையும் முன் கூட்டியே அரசு அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும்.

படிக்க :
♦ மீன்பிடி ஒழுங்குமுறை மசோதா: மீனவர் மீதான இந்திய அரசின் போர்!
♦ மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் எண்ணூர் ஆலைகள் ! | படக்கட்டுரை

கரையில் அரசு அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்ட மீன் வகைகளை மட்டுமே பிடிக்க வேண்டும். இதை மீறினால் முதல்முறை அபராதமும்; இரண்டாவது முறை அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனையும்; மீன்றாவது முறையும் மீறினால் படகு பறிமுதல் செய்யப்படும்; மீண்டும் தொழில் செய்ய முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது முடக்கப்படும்.

அப்படியென்றால் மீதமுள்ள கடல் மைல்களில் யார் மீன் பிடிப்பார்கள்? ராட்சத பகாசுரக் கம்பெனிகளும் அதன் ராட்சதக் கப்பல்களும் வலைகளும் தான். இவைகளன்றி மீன் பிடி தொழிலில் ஈடுபடும் (கட்டுமரப்படகு, நாட்டுப்படகு) எந்திர நாட்டுப்படகு, எந்திரப்படகு, விசைப்படகு என்ற 3 வகையினரை பெரும் அளவில் பாதிக்கும்.

மேலும், 12 கடல் மைல் தொலைவுக்குள் மட்டும்தான் மீன் பிடிக்க வேண்டும் என்ற நிபந்தனை. இதனால் முதலீடு, பராமரிப்பு செலவுகளுக்கேற்ற வருவாய் இருக்காது. நடுக்கடலுக்கு செல்லும்போது மட்டுமே இதற்கான வருவாயை எட்ட முடியும்.

கரையில் ஒப்புக் கொண்டபடி, இந்த வகை மீன்களைதான் பிடிக்க வேண்டும். மற்ற மீன் வகைகள் கிடைத்தாலும் திருப்பி கடலிலேயே விட்டு விட வேண்டும் என்பது கவைக்கு உதவாது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கடலின் சூழலுக்கேற்ப பலவகை மீன்கள் வாழவே செய்யும். அவைகள் அனைத்தும் வலையில் சிக்கவே செய்யும். இவற்றை தவிர்க்க முடியாது. இவைகளை திருப்பி விட வேண்டும் என்ற நிபந்தனை மீனவர்களின் முதலீட்டிற்கான வருவாயை தடை செய்து; அவர்களின் வாழ்வுரிமையை பறிப்பதாகவே அமையும்.

இதைவிடக் கொடுமை மசோதாவின் விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவில்லையெனில் அபராதம், அதையும் மீறினால் அபராதத்துடன் கூடிய சிறைத் தண்டனை, தொழில் முடக்கம். இதன்மூலம் மீன்களின் வாழ்வுரிமையைப் பறித்து தற்கொலைக்கு தள்ளும். இதைவிட வக்கிரம் வேறு என்ன இருக்க முடியும்?

இத்தகைய சட்டங்களும், மசோதாக்களும் நம் கடலின் மீன் வளத்தை நம் நாட்டு மீனவர்களுக்கும், மக்களுக்கும் சேர்க்க தகுதியற்றது என்பதை நிறுவுகிறது. இது இன்று மட்டும் நடந்த நிகழ்வல்ல.

இதற்கான அடிக்கல்லை தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கை அறிவிக்கப்பட்ட 1991-லேயே நாட்டப்பட்டது. தேசிய மீன்வளக் கொள்கையின் கீழ் கூட்டு மீன்பிடி திட்டத்தின் அடிப்படையில் வெளிநாட்டு கப்பல்களுக்கு மீன் பிடி உடிமம் வழங்கியதன் தொடர்ச்சியே இது.

ஆனால், அன்றைய தினத்தில் இத்திட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய அளவில் மீனவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவு அன்றைய நரசிம்மராவ் அரசால் வாபஸ் பெறப்பட்டது. இதற்கு முன்பும், பின்பும் பல்வேறு ஒழுங்காற்று மசோதாக்கள் கொண்டு வரப்பட்டும் மீன்வர்களின் அயராதப் போராட்டங்களினால் அவை தோல்வியையே தழுவி இருக்கின்றன. குறிப்பாக தற்போது 2021-ல் கொண்டு வரப்போகும் மசோதா ஏற்கனவே 2009, 2019-ல் கொண்டு வரப்பட்டு மீன்வர்களின் பரவலான எதிர்ப்பால் கைவிடப்பட்டன.

இது மீனவர்கள் பிரச்சனை என்று நாம் ஒதுங்கி இருக்க முடியாது. போராடியாக வேண்டும். ஏனெனில் நம் அனைவரின் அன்றாட உணவோடு தொடர்புடைய மீன் பிடி தொழிலில் பகாசுரக் கம்பெனிகளின் ராட்சத கப்பல்களை அதன் வலைகளை அனுமதித்தால், நாம் விரும்பி உண்ணும் பலவகை மீன்கள், ‘புத்தம் புதியதாகக்’ கிடைக்காது. அவைகளை அவர்கள் கப்பலிலேயே சுத்தம் செய்து டப்பாக்களில் அடைத்து அங்கிருந்தே தேவைப்படும் சந்தைகளுக்கு அனுப்பி விடுவார்கள். வேண்டுமானால் டப்பாவில் அடைக்கப்பட்ட மீன்களும், குளம், குட்டைகளின் மீன்களும்தான் நமக்கு கிடைக்கும். தரமான மீன்களை நாம் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பன்னாட்டு கார்ப்பரேட் மீன் பிடி கப்பல்கள், ராட்சத வலைகள் மூலம் முட்டைகள், குஞ்சுகள், தாய் மீன்கள், இறால்கள் அனைத்தையும் சேர்த்து அள்ளி விடுவார்கள். இதனால், மீன்வளம் அடியோடு அழிந்து, மீன் உற்பத்தியையே தடை செய்யப்படும். இதுதான் தனியார்மய தாரளமய உலகமயத்தின் சாதனை; நமக்கோ வேதனை. அதே வேளையில் நம்முடைய மீனவர்களோ, வலையில் சிக்கும் தாய் இறால்களையும் மீன்களையும் மீண்டும் கடலிலேயே விட்டுவிடுவார்கள். அவர்கள் வலையில் குஞ்சுகளும் முட்டைகளும் சிக்காது. அப்படியே ஒரு சில நேரங்களில் குஞ்சுகளும் முட்டைகளும் சிக்கினாலும் அவைகளை மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்கள். ஆகையால் மறுஉற்பத்திக்கு தடை ஏற்படாது. மீன்வளம் அழியாது.

நாட்டையும் மக்களையும் பாதிக்கும் இது போன்ற மசோதக்களை ஏன் ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும் என்று கேள்வி எழலாம். இதற்கு பதில் நமது ஆட்சியாளர்களும், ஆளும் வர்க்கமும் மறுகாலனியாக்கத்திற்கு கோடாரி கொம்பாக மாறியதன் விளைவே ஆகும்.

இதற்கு எதிராக இதுவரை பல்வேறு போரட்டங்கள் நடத்ததையும் கண்டோம். இனிமேல் போராட்டத்தை தொடர்ச்சியாக – இடைவிடாமல் நடத்திதான் ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தற்போது கூட தமிழகத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை நிறுத்ததையும், ஊர்வலத்தையும், ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியுள்ளனர். இருப்பினும் இவைகளை விட இன்னும் மூர்க்கமாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில் தற்போது நடக்கும் அதானி, அம்பானி கும்பலால் RSS, BJP தலைமையில் நடத்தப்படும் பாசிச ஆட்சி இதற்கெல்லாம் (தற்போதையப் போராட்டங்களுக்கு எல்லாம்) அசைந்து கொடுக்காது.

படிக்க :
♦ கொழும்பு துறைமுக நகரம் : சீனாவின் ஆதிக்கத்தின் கீழ் இலங்கை !
♦ சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

லட்சக்கணக்கான விவாசாயிகள் மாத கணக்கில் போராடியும் 300-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிரைப் பறி கொடுத்தும் வளைந்து கொடுக்காததோடு, கொடூரமாக ஒடுக்கவும் செய்தது மோடி அரசு. எனவே, மீனவர்கள மட்டுமல்லாமல். விவசாயிகள், தொழிலாளர்கள் அதே பிரிவினர் அனைவரையும் பாதிப்புக்கு உள்ளாக்குவது இந்த தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைதான் என்பதை நினைவில் நிறுத்தி அனைத்துப் பிரிவு மக்களும் ஒருங்கிணைந்த வகையில் குறிப்பாக ஆட்சியாளர்களுக்கு நிர்பந்தத்தை ஏற்படுத்தும் வகையில் போராடினால் ஒழிய இதற்கு விடிவும் பிறக்காது. இக்கோடரிக் கொம்பான பாசிசக் கும்பலை விழ்த்தவும் முடியாது.

கதிரவன்

இயற்கை அழிவிற்கு காரணம் உழைக்கும் மக்களா ? கார்ப்பரேட் முதலாளிகளா?

.நா இனியான உலகின் கதையை அறிவிக்கும் அறிக்கையை வெளியிட்டுவிட்டது. ‘தலைக்குமேலே வெள்ளம்போனால் சாண் என்ன முழம் என்ன’ என்கிற கதையை எட்டிவிட்டோம்.

காலநிலை மாற்றம் தீவிரப்படுவதற்கான முக்கியமான பிரச்சினை எங்கு இருக்கிறது தெரியுமா? காலநிலை மாற்றம் குறித்த உரையாடல்களில் இருக்கின்றன.

உரையாடல் 1 :  கார்பன் வாயு உமிழ்வுக்கு விவசாயமே காரணம்.

விவசாயத்தில் கார்பன் உமிழ்வு இருக்கிறதென்றாலும் ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் விவசாயத்தால் ஏற்படும் உமிழ்வு அல்ல பிரதான காரணம். பெரும் அளவில்  காடழித்து ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் நடத்தப்படும் கார்ப்பரேட் விவசாயத்தில்தான் கார்பன் உமிழ்வு அதிகம்.

படிக்க :
♦ ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!
♦ முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !

உரையாடல் 2 : மாடுகள் கார்பன் உமிழ்வுக்கு முக்கிய காரணம்.

மாட்டுக் கறிக்கென வளர்க்கப்படும் மாடுகளால்தான் கார்பன் உமிழ்வு நேர்கிறது என்கிற கருத்து திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. மாடு வளர்ப்பு என்பது மாட்டுக்கறிக்காக மட்டும் நடப்பதில்லை. பால் முதலிய பல காரணங்களுக்காக நடக்கிறது. அதுவும் தனி விவசாயிகள் வளர்க்கும் மாடுகளில் பிரச்சினை கிடையாது.

கார்ப்பரேட் ரக பெரும் பண்ணைகளில் வளர்க்கப்படும் மாடுகளின் எண்ணிக்கையே அதிகம். அவற்றின் கார்பன் உமிழ்வை நிவர்த்தி செய்யும் செயல்முறை நம்மிடம் கிடையாது. அதை செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அத்தகைய செயல்முறையை நிர்பந்திக்கும் வழக்கமும் நம்மிடமோ அரசுகளிடமோ கிடையாது.

உரையாடல் 3 : ஒரு மனிதன் தன்னளவில் உமிழப்படும் கார்பனை (Carbon Footprint) குறைக்க வேண்டும்.

தன்னளவில் ஏற்படுத்தும் கார்பன் உமிழ்வை குறைக்க அசைவம் சாப்பிட மாட்டார்கள். வாகனம் பயன்படுத்த மாட்டார்கள். தோல் காலணிகள் அணிய மாட்டார்கள். கேட்டால் இயற்கைக்கு பாதகமில்லாமல் வாழ்கிறார்களாம்.

கிரேக்கத்தில் நேர்ந்த காட்டு தீ புகைப்படம்

இந்தியாவின் தனிமனித கார்பன் தடத்துக்கான சராசரி ஒரு வருடத்துக்கு 0.6 டன்னாக இருக்கிறது. அதாவது ஒரு வருடத்தில் ஒரு இந்தியன் 0.6 டன் அளவு கார்பன் உமிழ்கிறான். அதையே சற்று பகுத்து பார்த்தால் ஏழை இந்தியன் 0.2 டன் கார்பன் உமிழ்கிறான். பணக்கார இந்தியன் 1.3 டன் கார்பன் உமிழ்கிறான். இதை அமெரிக்காவுக்கு பொருத்தி பார்த்தால் ஓராண்டில் சராசரியாக ஒரு அமெரிக்கன் 16 டன் கார்பன் உமிழ்கிறான்.

தனி நபர்கள் கார்பன் உமிழ்வை குறைத்தால் எல்லாம் சரியாகி விடுமா?

உதாரணத்துக்கு, அலுவலகம் என எத்தகைய அளவில் ஓர் அலுவலகம் தொடங்கப்பட்டாலும் அதன் ஒரு சதுர மீட்டர் அளவு 91 கிலோ கார்பனை உமிழ்கிறது. இதற்குள் அலுவலக பணியாளர் எண்ணிக்கை, கணிணிகள், ஸ்மார்ட்போன்கள் முதலிய விஷயங்களும் பிற பல விஷயங்களும் அடங்கும். ஆனால், நாம் அலுவலக வேலை பாணியை நிறுத்திவிடவில்லை. குறைக்கக் கூட இல்லை.

உரையாடல் 4 : காலநிலை மாற்றத்திற்கு மனிதனே காரணம்.

இயற்கைக்கு பாதகமாக மனிதன் இருக்கிறான் எனில் எந்த மனிதன்? பணக்கார மனிதனா, ஏழை மனிதனா, முதலாளி மனிதனா, தொழிலாளி மனிதனா? எந்த மனிதன்?

உரையாடல் 5 : காலநிலை மாற்றத்தின் சிக்கலை புரிந்த அரசியல்வாதிகள்.

பொல்சனாரோ, ட்ரம்ப் போல நேரடியாக காலநிலை மாற்றத்தை மறுப்போரை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவது எளிது. ஆனால், காலநிலை மாற்றம் இருப்பதை ஏற்றுக் கொண்டு, அதை சரிசெய்ய போராடுவதாக காட்டிக்கொண்டு காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தி அழிவை உறுதி செய்யும் அரசியல்வாதிகள் இருக்கிறார்கள் பாருங்கள். அவர்கள்தான் பிரச்சினை. சுலபமாக கண்டறியவும் முடியாது. கண்டறிந்து சொன்னாலும் ஏற்க மாட்டார்கள்.

உதாரணமாக மோடிக்கு ஐ.நா அவை ‘சுற்றுச்சூழல் காக்கும் சாம்பியன்’ என விருதளித்து கவுரவித்த துயரத்தை சொல்லலாம்.

இந்த ஐந்துவகை உரையாடல்களும் முதலாளித்துவத்தால் முதலாளித்துவத்துக்குள்ளேயே நிகழ்த்தப்படும் உரையாடல்கள்.

ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?

மொத்தப் படத்தையும் உணர்த்தும் ஒரு frame எப்போதுமே பட போஸ்டர்களாக இருக்கும். ஜுராசிக் பார்க் படத்தில் Dinosaurs ruled the planet என்கிற பதாகை மேலே விழுந்து, கத்திக் கொண்டிருக்கும் டைனோசரின் லோ ஆங்கிள் ஷாட், டைட்டானிக் படத்தில் கப்பலின் லோ ஆங்கிள் ஷாட் என்பன போல.

மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் குழாய் வெடித்து நெருப்புக் கண்ணை கொப்பளித்த புகைப்படம்

சமீப காலமாக இயற்கையும் சில போஸ்டர்களை செய்து கொடுத்துக் கொண்டிருந்தது. கடந்த வருடத்தில் கலிபோர்னியாவின் வானம் சிவப்பான புகைப்படம், மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் குழாய் வெடித்து நெருப்புக் கண்ணை கொப்பளித்த புகைப்படம், தற்போது கிரேக்கத்தில் நேர்ந்த காட்டு தீ புகைப்படம் போன்றவை இயற்கையின் சமீபத்திய போஸ்டர்கள்.

இந்த சூழலிலேனும் காலநிலை மாற்றம் உருவான உண்மையான காரணத்தை பேச வேண்டும்.

குற்றத்தை விசாரிக்காமல் குற்றவாளிகளை அடையாளம் காண முடியாது. குற்றவாளிகளை அடையாளம் காணாமல் தண்டனை கொடுத்தால் உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிட்டாது.

காலநிலை மாற்றத்துக்கான அடிப்படை காரணம் முதலாளித்துவம்

அவரவர் நாட்டின் வளத்தை சுரண்டுவதை தாண்டி வேறுவழியில்லாத சூழலில் முதலாளிகளுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக நீராவி எஞ்சின் 19-ம் நூற்றாண்டில்  கிடைத்தது.

பிற நாடுகளில் இருந்து வளங்களை சுரண்டி கொண்டு வரும் வாய்ப்பை ரயில் பாதைகள் உருவாக்கின. முதலாளி இருக்கும் நாட்டுக்குள்தான் சந்தை இருக்கும் என்ற நிலை போய் பல நாட்டு சந்தைகள் உருவாகவும் சூழல்கள் ஏற்பட்டது.

இன்று நாம் பேசும் கார்பன் உமிழ்வு வாழ்க்கைக்கான தொடக்கப்புள்ளி ரயில்களுக்கான கார்பனெடுக்க நிலம் தோண்டப்பட்டபோது போடப்பட்டது. பலவகை முதலீடுகளுக்காகவும் வளச்சுரண்டலுக்காகவும் மேலும் மேலும் நிலம் தோண்டப்பட்டது.

பெட்ரோல், மீதேன் என தோண்டி தோண்டி உற்பத்தி பெருக்கி இன்று நுகர்வாளர்களை விட அதிகமாக உற்பத்தி செய்யும் நிலையை முதலாளிகளின் வெறி உருவாக்கியிருக்கிறது.

இப்பதிவை படிக்கும் சூழலில் கடலையும் கூறு போட்டு விற்கும் மசோதாவை ஐ.நா-வின் சுற்றுச்சூழல் சாம்பியன் நிறைவேற்றி இருக்கிறார் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

என்னதான் தீர்வு?

Hypothetical Question. தீர்வுக்கான காலத்தை கடந்துவிட்டோம். இருந்தாலும் தெரிந்து கொள்வோம்.

கலிபோர்னியாவின் வானம் சிவப்பான புகைப்படம்

காலநிலை மாற்றம் பற்றி கவலைப்படும் முதலாளித்துவ அறிஞர்களோ, முதலாளித்துவ அரசியல்வாதிகளோ ஐ.நா-வோ உண்மையில் சுற்றுச்சூழலை அழிக்கும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்களை நேரடியாக கூட ஒன்றும் சொன்னதில்லை.

நியாம்கிரி தொடங்கி தூத்துக்குடி வரை நீளும் மக்களின் போராட்டங்கள்தாம் பகாசுர நிறுவனங்களை எதிர்த்து நின்று போராடி விரட்டி விட்டிருக்கின்றன.

தம் மண்ணை, தன் மொழியை, தன் வரலாறை காக்கப் போராடுவதற்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் நிறுவனங்களையும் திட்டங்களையும் எதிர்த்து போராடுவதற்கும் வித்தியாசங்கள் இல்லை.

பெருவிகித உற்பத்தியே பேரழிவுக்கான காரணம் என்கிற இடத்தை அடைந்துவிட்டோம். பெருந்தேசியமும் முதலாளித்துவமும் பேரழிவுக்கான அடிப்படை காரணங்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

படிக்க :
♦ கார்ப்பரேட்டுகளின் பலிபீடத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு !
♦ பருவநிலை மாற்றம் : எச்சரிக்கும் ஃபானி புயல் !

எடுக்கப்படும் வளம் எடுக்கப்படும் மண்ணுக்கே திரும்ப வேண்டும். அம்மண்ணின் மக்களுக்கே பயன்பட வேண்டும்.

குறிப்பிட்ட மக்கள் தொகுதி இருக்கும் எல்லையை வளமும் உற்பத்தியும் தாண்டும் போது மக்களுக்கும் வளத்துக்கும் அந்த வளத்தை கொடுக்கும் இயற்கைக்கும் இடையில் இருக்கும் உறவு அறுகிறது.

அப்பகுதியில் இருக்கும் மக்களின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் உட்பட்டு வளம் எடுக்கப்பட வேண்டுமென்கிற கட்டுப்பாடு இல்லாமல் போகிறது. உயிர்ச்சூழலின் மீட்டுருவாக்கம் தடைபடுகிறது. அழிவு உறுதிபடுகிறது.


முகநூலில் : Rajasangeethan

disclaimer

தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மோசமான நிலை !

கோவிட்-19 பெருந்தொற்று இந்த பொருளாதார அமைப்பின் ஒவ்வொரு துறையையும், இந்தியா மற்றும் உலக அளவில், மிகமோசமாக பாதித்துள்ளது. ஆனால், கல்வி துறையானது ஒப்பீட்டளவில் தன் வருமானத்தை தக்கவைத்துக் கொண்டது.

பள்ளிகளும் கல்லூரிகளும் இணையவழி கல்விமுறைக்கு தங்களை மாற்றிக் கொண்டனர். இணைய வழியில் கற்பிப்பதை காரணமாக வைத்து, பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடம் இருந்து முழு கல்வி கட்டணத்தை வசூலித்துவிட்டனர்.

கணக்கெடுப்பும் அதன் முடிவுகளும்

தனியார் கல்வி நிறுவனங்களின் வருமானம் பெருமளவு பாதிப்படையவில்லை. அதுபோலவே அக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் வாழ்நிலையும் பாதிப்படையவில்லை எனக்கூற முடியாது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆசிரியர்கள் பணி நீக்கமும் சம்பள குறைப்பும் குடும்பத்தை காப்பதற்காக கிடைக்கின்ற வேலைகளை செய்ய இவர்களை நிர்பந்தித்தன.

படிக்க :
♦ UGC-ன் புதிய வகை கற்றல் – கற்பித்தலுக்கான வழிகாட்டுதலைப் புறக்கணிக்கப்போம் || CCCE
♦ தமிழகப் பல்கலைக் கழகங்களில் பறிபோகும் 69 சதவிகித இடஒதுக்கீடு || CCCE

எடுத்துக்காட்டாக, ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் கொரோனா கால சம்பள குறைப்பினால் பாதிக்கப்பட்டு, பனை ஓலை வெட்டும் வேலைக்காக பனைமரம் ஏறும்போது தவறி விழுந்து இறந்துவிட்டார். இந்நிகழ்வானது கொரோனா பெருந்தொற்று அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் வேலை செய்யும் பேராசிரியர்களின் பணியிலும் வாழ்வாதாரத்திலும் ஏற்படுத்தியிருக்கும் பாதிப்புகளை ஆராய வேண்டும் என எங்களை உந்தியது.

சென்னை பல்கலை கழகத்தின் கீழ் இயங்கும் அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் பணி புரியும் 194 பேராசிரியர்களை தொடர்பு கொண்டு தகவல்களை சேகரித்தோம். இந்த தகவல் சேகரிப்பு ஜூன் 13 முதல் ஜூன் 26, 2021-வரை நடத்தப்பட்டது.

எங்களுடைய ஆய்வு முடிவுகளின் படி, கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பே அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு UGC நிர்ணயித்த அளவை விட குறைந்த சம்பளமுமே பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்டு வந்துள்ளது. இவர்களில் பெரும்பாலானேருக்கு பணி பாதுகாப்பு சலுகைகள் எதுவும் இல்லை.

கோப்புப்படம்

கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 194 பேரில், 137 நபர்கள் உதவி பேராசிரியர் பணிக்கு தேவையான, யுஜிசி (UGC) வழிக்காட்டியுள்ள, (PhD or NET or SET) தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள்.  இதில் 72% பேராசிரியர்கள் ரூ.25,000-கும் குறைவாகவும் 5.1% பேர் ரூ.10,000-க்கும் குறைவாகவும் சம்பளம் வாங்குகின்றனர்.

ஆனால், மத்திய அரசின் 7-வது சம்பள மறுசீராய்வு குழுவின் பரிந்துரைப்படி, உதவி பேராசிரியர்களுக்கான ஆரம்பநிலை மாத சம்பளம், ரூ.76,809-ஆக நிர்ணயித்துள்ளது. மேலும், ஆய்வு முடிவுகளின் படி, 38% பேராசிரியர்கள் மட்டுமே அரசு காப்பீடும்; 42% பேராசிரியர்கள் மட்டுமே சம்பளத்துடன் கூடிய விடுமுறை சலுகையும் பெற்றுள்ளனர்.

தனியார் கல்லூரி பேராசிரியர்களின் இந்த மோசமான நிலைக்கு காரணம், எந்தவொரு ஒழுங்குமுறை சட்டத்தின் மூலம் அக்கல்வி நிறுவனங்கள் கண்காணிக்கப்படாமல் இருப்பதுதான்.

புதிய தாராளவாதக கொள்கையை இந்திய அரசு பின்பற்றுகின்ற காரணத்தினால், அது உயர்கல்வி வழங்குகின்ற பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு வருகிறது. இதன் விளைவாக, பல தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அகில இந்திய உயர் கல்வி கணக்கெடுப்பு (All-India Survey on Higher Education) 2020 அறிக்கையின் படி, இந்தியாவிலுள்ள மொத்த கல்லூரிகளில் 65% கல்லூரிகள் அரசு உதவிபெறாத தனியார் கல்லூரிகளாகும்.

1980-களின் தொடக்கத்திலேயே உயர்கல்வியை தனியார்மயப்படுத்திய ஒரு சில மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டிலோ 77% தனியார் கல்லூரிகள் இருக்கின்றன. மேற்கண்ட இவ்விரங்கள் லாபமீட்டுவதையே அடிப்படையாகக் கொண்ட தனியார் கல்லூரிகளே உயர்கல்வித் துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனக் காட்டுகிறது.

இணையவழி கல்வி என்ற சுமை

இந்த பின்னணியில் இருந்துதான், கொரோனா பெருந்தொற்று காலத்தில், அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்வாதார பாதிப்பை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்கள் இணைய வழியில் மாணவர்கள் பயில்வதற்கு தங்களால் முடிந்த அனைத்து வகையான முயற்சிகளையும் செய்து வருகின்றனர்.

இருப்பினும், இணைய வசதியின்மை, இடப்பற்றாக்குறை தரமான தொழில்நுட்ப கருவிகள் இல்லாமை போன்ற காரணங்களில் ஒன்றோ அல்லது அனைத்து காரணங்களினாலோ இணையவழி கற்பித்தல்முறை கடினமாக உள்ளதாக கணக்கெடுப்பில் பங்கேற்ற பேராசிரியர்களில் 88% பேர்கள்  தெரிவித்துள்ளனர். இணைய வசதிகளை பேராசிரியர்கள் தங்களின் சொந்த செலவிலேயே ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.

கணக்கெடுக்கப்பட்ட 194 பேராசிரியர்களில் 132 பேர், தொலைப்பேசி, கணினி, மற்றும் தலையணி கேட்பொறி (headphone) போன்ற கருவிகளில் ஒன்றையோ அல்லது அனைத்தையுமோ தங்களது சொந்த செலவிலேயே வாங்கியுள்ளனர். 107 பேராசிரியர்கள் இணையவழி கற்பித்தலின் விளைவாக மனஅழுத்தத்திற்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளனர். இவையனைத்தும் தெரிவிப்பது என்னவென்றால் இப்பேராசிரியர்கள் உடலளவிலும், உணர்வு ரீதியாகவும் பொருளாதார ரீதியிலும் பல்வேறு நெருக்கடிகளை இப்பெருந்தொற்று காலத்தில் சகித்துக் கொண்டு இணையவழி கற்பித்தல் சேவையை வழங்கியுள்ளனர்.

இணையவழி கற்பித்தலுக்கான தனியார் கல்லூரி பேராசிரியர்களின் இப்பெரும் முயற்சிகளை இவர்கள் பணிபுரியும் கல்லூரி நிர்வாகத்தினால் அங்கிகரிக்கப்படவில்லை. மாறாக, தனியார் கல்லூரிகளின் சம்பள குறைப்பு நடவடிக்கையின் மூலம் இப்பேராசிரியர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

மொத்த பேராசிரியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே 2020-21-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் தாங்கள் பெற வேண்டிய முழு சம்பளத்தையும் பெற்றதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. மேலும் 10% பேராசிரியர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் 2020 வரை எந்த சம்பளமும் தரப்படவில்லை.

கோப்புப்படம்

கல்லூரிகள் இணையவழி கற்பித்தல் முறைக்கு மாறிவிட்டதால், கல்வி நிறுவனங்களுக்கான நிர்வாகச் செலவுகள் வெகுவாகக் குறைந்திருக்கும். கூடவே, தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் கல்வி கட்டணங்களையும் வசூலித்துவிட்டனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் பேராசிரியர்களின் சம்பளத்தை குறைத்தது எந்த வகையிலும் நியாயமில்லை.

தங்கள் வேலையை தக்க வைத்துகொள்ள சொந்த சேமிப்புகளை கணினி மற்றும் இணைய தொழில் நுட்பத்திற்கு செலவு செய்தும் இணையவழி கற்பித்தலினால் மனஅழுத்ததிற்கும் உள்ளாகியும் மோசமான சூழ்நிலையில் கடினமாக உழைத்த இப்பேராசிரியர்களின் சம்பளத்தை தனியார் கல்லூரி நிர்வாகங்கள் கொரோனா பெருந்தொற்றை சாக்காக வைத்து கொள்ளையடித்துள்ளனர்.

நியாயமற்ற சம்பள குறைப்புகள் தங்களை வேறு வேலைகளுக்கு செல்லவும் வட்டிக்கு பணம் வாங்கி வாழ்க்கை நடத்தும் நிலைக்கும் தள்ளியுள்ளதாக இப்பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். கட்டிட வேலை, விவசாய வேலை, வாகன பழுது பார்க்கும் வேலை, உணவு மற்றும் பல்பொருள்கள் வினியோகிக்கும் வேலை ஆகியவற்றைச் செய்துள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று அரசு உதவிபெறாத தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்வாதாரத்தை பெருமளவு பாதித்திருந்தாலும், சரியான சட்டப்பாதுகாப்பு இல்லாததினால் இப்பெருந்தொற்றுக்கு முன்பே தனியார் கல்லூரி பேராசிரியர்களின் பணிச்சூழல் மிகவும் மோசமாய்தான் இருந்துள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் கல்லூரி பேராசிரியர்களின் சம்பளப் பிடித்தம் முழுவதையும் கல்லூரி நிருவாகம் திருப்பியளிக்க வேண்டும்; எந்த காரணமும் இல்லாமல் பணி நீக்கம் செய்யப்பட்ட பேராசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்; கொரோனா பெருந்தொற்று காலத்தில் இணையவழி கற்பித்தலுக்காக ஆசிரியர்கள் செய்த செலவை திருப்பித்தர வேண்டும்.

படிக்க :
♦ பள்ளி மாணவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு கல்வியை கடைச் சரக்காக்கும் மோடி அரசு || CCCE
♦ இணையவழிக் கல்வி : கல்விக் கொள்ளைக்கான நவீனத் திட்டம் || CCCE

2018-ல் கேரளா அரசங்கம் யுஜிசி தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்களுக்கு நாளுன்றுக்கு ரூ.1750 விதம் மாதத்திற்கு ரூ.43,750 என்றும் யுஜிசி-ன் தகுதி இல்லாத விரிவுரையாளர்களுக்கு நாளென்றுக்கு ரூ.1600 வீதம் மாதத்திற்க்கு ரூ.40,000-ஐ அடிப்படை சம்பளமாக தனியார் கல்லூரிகள் வழங்க வேண்டுமென்று அரசாணை வெளியிட்டது. இதுமாதிரியான சட்டத்தினை தமிழக அரசும் இயற்ற வேண்டும்.

தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 1976-யை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதில், தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாக்க, உயர்கல்வி கண்காணிப்பு அமைப்புகளான கல்லூரி கல்வி இயக்குநரகம் மற்றும் பிராந்திய கல்லூரி கல்வி இணை இயக்குநரகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சட்டத்திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும்.

(குறிப்பு : கொரோனா பெருந்தொற்றினால் தனியார் கல்லூரி பேராசிரியர்களின் வாழ்நிலை மிகவும் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. ஆனால், கொரோனாவை காரணம்காட்டி பேராசிரியர்களின் சம்பளத்தைக் குறைத்ததின்மூலம் தனியார் கல்லூரி முதலாளிகள் பெருத்த லாபம் அடைந்துள்ளனர். இதுபற்றி தரவுகளோடு லயோயா கல்லூரி லைவ் நிறுவனத்தின் இயக்குனர் A.P.அருண்கண்ணன் மற்றும் மசசுசெட்ஸ் பல்கலைக்கழக ஆய்வாளர் கிசோர்குமார், சூர்யபிரகாஷ் இருவரும் எழுதிய கட்டுரை தி இந்து பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் தமிழாக்கமே இந்தக் கட்டுரை)

தமிழாக்கம் : பாரதி
CCCE-TN

செய்தி ஆதாரம் : The Hindu

தருமபுரி : மூங்கில் கூடை பின்னும் மக்களின் வாழ்நிலை !

ருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் மலைகளை ஒட்டி அமைந்துள்ளன கிருஷ்ணாபுரம், பூனைக்குண்டு, காட்டுக்கொள்ளை, போடூர் உள்ளிட்ட கிராமங்கள். அங்கு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக கூடை பின்னும் கைத்தொழில்தான் அம்மக்களின் வாழ்வாதாரம்.

அவ்வாறு பின்னப்படும் கூடைகளை தமிழகத்தின் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் பெங்களூரு, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்புவது வழக்கம். ஆனால், இன்றைக்கு கொரோனா ஊரடங்கு மற்றும் பிளாஸ்டிக் கூடை பயன்பாட்டால் இத்தொழில் சரிந்துவிட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

படிக்க :
♦ சாலையோர பிரம்புக் கடையும் சிறுவனின் சயின்டிஸ்ட் கனவும் !
♦ என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !

மூங்கிலை பயன்படுத்தி ஆடு, மாடு வளர்ப்புக்கான பட்டி, கோழி வளர்ப்பு, காய்கறி கூடைகள், தானிய விதைப்பு கூடை, மீன் பிடிப்பதற்கான கூடைகள் என பல்வேறு கைவண்ணங்களில் கூடைகளை பின்னுகின்றனர் இந்த கைத்தொழில் கலைஞர்கள்.

இந்த கைத்தொழில் கலைஞர்களின் பின்னால் உள்ள வாழ்க்கை எத்தனை பேருக்கு தெரியும்? அதிகாலை 5 மணிக்கு மலைக்கு செல்லும் மக்கள் அந்தி பொழுதில்தான் வீடு திரும்புகின்றனர். சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மலையை கடப்பதற்கு சுமார் 4 முதல் 5 மணி நேரத்தில் கடந்து ஒரு கட்டு மூங்கிலை தலையில் சுமந்துபடி பென்னாகரத்தில் ரூ.500-க்கு விற்பனை செய்கின்றனர்.

“வரும் வழியில் வனத்துறையினரின் கண்களில் மாட்டிவிட்டால் ரூ.200 அபராதம் போட்டு கத்தியும் வனத்துறையினரால் பறிமுதல் செய்யப்படும். யானை கண்ணில் மாட்டிவிட்டால் உயிரும் மிஞ்சாது. தினமும் பயந்து பயந்துதான் காட்டுக்குள் செல்வோம்” என்று வேதனையோடு கூறுகிறார் சரோஜா. விலைவாசி உயர்வு விண்ணை முட்டும் இந்த தருவாயில் ஒருவர் மட்டும் சென்றால் வாழ முடியாது என்ற நிலையில் பெண்களும் இந்த காட்டிற்குள் சென்று வருகிறார்கள்.

இந்த கூடைகளின் பயன்பாடு என்பது விவசாயத்தோடும், சிறுதொழிலோடும் பாரம்பரியத்தோடும் காலம்காலமாக பின்னிபிணைந்ததாக இருக்கிறது.

இயற்கை முறையில் தயார்செய்யப்படும் மூங்கில் குச்சிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்காமல் பிளாஸ்டிக்கை அனுமதித்தன் விளைவாக சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு, அத்தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்களின் வாழ்க்கையும் அழிந்து வருவது வேதனை அளிக்கிறது.

This slideshow requires JavaScript.

பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிப்பேன் என்று மாறி மாறி வரும் கட்சிகள் அறிவித்தாலும் பிளாஸ்டிக்கை ஒழிக்காமல், காடுகளை நம்பி பிழைப்பை நடத்தும் தொழிலாளர்களை ஒழித்துக்கட்டுகிறது.

காய்ந்த மூங்கில் குச்சிகளை வெட்டி பிழைப்பு நடத்தும் மக்களிடம் காடுகளை அழிக்கிறார்கள் என்று கூறி அபராதம் வசூலிக்கும் அரசு, ஈஷா யோகா நடத்தும் கார்ப்பரேட் சாமியார் ஜக்கி வாசுதேவ் சுமார் 2,000 ஏக்கர் வனப்பகுதியை வளைத்துப்போட்டு காடுகளை அழித்தால் அது கடவுள் பக்தி என்று வேடிக்கை பார்க்கிறது.

காடுகளை அழித்து கனிமவளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்தால் அதற்கு பெயர் நாட்டின் வளர்ச்சி, என்கிறார்கள். என்ன ஒரு ஜனநாயகம்? இதுதான் இன்றைய சுதந்திர இந்தியா? அடித்தட்டு மக்களுக்கு விடிவில்லாமல் சுதந்திரம் என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது.

பு.ஜ செய்தியாளர், தருமபுரி.

வெள்ளை அறிக்கையா? கட்டண உயர்வுகளுக்கான முன்னறிவிப்பா ?

0

டப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சியானது ரூ.5.70 லட்சம் கோடி கடனையும், ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பையும் தமிழகத்திற்கு உருவாக்கியதோடு, அதை தற்போதைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் தலையில் சுமத்திவிட்டு சென்றதையும் கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளார் தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.

அதிமுக 7 ஆண்டுகளில் உருவாக்கிய கடனையும் வருவாய் இழப்பையும், மக்கள் ஒத்துழைப்புடன் வரும் 5 ஆண்டுகளில் அடைத்து, கடன் இல்லா தமிழகத்தை உருவாக்கி விடுவோம் என்றும் உறுதி அளித்துள்ளார் நிதி அமைச்சர்.

தமிழகத்தின் நிதிநிலையை எப்படி உயர்த்துவார் என்பதையும் இந்த அறிவிப்பிலேயே தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர். “மக்கள் ஒத்துழைப்புடன்” இந்தக் கடனை அடைக்கப் போவதாகக் கூறியிருக்கிறார். அடிமை அதிமுக கும்பல் ஏற்றிவைத்த கடன்சுமை ஒன்றல்ல இரண்டல்ல சுமார் ரூ.5.70 லட்சம் கோடி. இக்கடனை அடைக்க வேண்டிய பொறுப்பு ஆட்சியாளர்களாகிய எங்களுக்கு மட்டுமல்ல ஒட்டுப்போட்ட உழைக்கும் மக்களாகிய உங்களுக்கும் தான் என சொல்லாமல் சொல்லிவிட்டார் பி.டி.ஆர்.

படிக்க :
♦ திமுக அரசே வேலை கொடு : சென்னையில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் !
♦ ஆர்.எஸ்.எஸ் – பாஜகவின் நிகழ்ச்சிநிரலுக்கு பின் செல்லும் திமுக || மக்கள் அதிகாரம்

“தமிழகத்தில் 2 கோடியே 16 லட்சத்து 24 ஆயிரத்து 238 குடும்பங்கள் உள்ளன. அதில் ஒவ்வொரு குடுப்பத்தின் மீதும் ரூ.2,64,944 (2 லட்சத்து 64 ஆயிரத்து 946) கடன் உள்ளது” என்ற குறிப்பான கணக்கீடு, இன்னும் துலக்கமாக இந்தக் கடன்களுக்கு மக்களை பொறுப்பாக்குவதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஒவ்வொரு கட்சிகளும் ஆளவரும்போது முந்தைய ஆட்சியாளர்கள் மீது “கஜானாவை காலி செய்துவிட்டார்கள்; கடனை ஏற்றிவிட்டார்கள்; ஊழல் செய்துவிட்டார்கள்; வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டார்கள்” என்று குறை கூறுவதும், அதை சரி செய்ய வரியை, கட்டணங்களை உயர்த்துவதும் காலங்காலமாக நடந்துவரும் ஒன்றுதான்.
கடந்த 2011-ம் ஆண்டு ஜெயா ஆட்சியில் அமர்ந்ததும், இதே பஞ்சப்பாட்டைப் பாடி, “இழந்த பொருளாதாரத்தை மீட்க கசப்பு மருந்தை சகித்துக் கொள்ளுமாறு” கூறி பேருந்து கட்டணத்தை தீயாக ஏற்றியது நினைவிருக்கலாம்.

கடந்த காலத்தில் அனைத்து ஆட்சியாளர்களும் மாநிலத்தின் நிதி நெருக்கடியை ‘இளிச்சவாயர்களாகிய’ நம் மீதுதான் சுமத்தி வந்த்கிருக்கின்றனர். இது மறுக்க முடியாத உண்மை.

திமுக அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், பல்வேறு சலுகைகளையும் இலவசங்களையும் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவித்தது. அதற்கான நிதியை நம்மிடமிருந்தே வசூலிப்பதற்கான ஒரு முன் தயாரிப்பு அறிக்கைதான் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் இந்த வெள்ளை அறிக்கை.

கடந்த காலங்களில் வெள்ளையறிக்கைகள் நிதிநிலைக்கு மட்டுமே வெளியிடப்படவில்லை. புயல்-வெள்ளம்-வரட்சி இவற்றிற்கான நிவாரணம், அத்தியாவசயப் பொருட்களின் விலையேற்றம், மத-இன-சாதி கலவரங்கள் இவைகளையொட்டி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்தும் வெள்ளை அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வெள்ளை அறிக்கை என்று சொல்லப்படும் கடந்த கால அறிக்கைகளில் உண்மை விவரங்களும் – தரவுகளும் முழுமையாக வெளியிடப்பட்டது இல்லை. அரசானது வெளிப்படையாக வருவதாக கூறிக்கொள்ளப்படும் வெள்ளை அறிக்கைகளில், எந்த அரசும் வெளிப்படையாக தங்களின் தவறுகளையும், குறைகளையும் முன்வைத்ததில்லை. அரசுக்குச் சாதகமான வகையில் தான் இந்த வெள்ளையறிக்கைகள் வெளியிடப்பட்டன.

அந்த வகையில் இந்த வெள்ளையறிக்கை உண்மைகளைக் கொண்டுள்ளது என நம்பலாம். ஏனெனில் திமுக அரசால் வெளியிடப்படும் இந்த வெள்ளையறிக்கை, கடந்த கால அடிமைகளின் ஆட்சியைப் பற்றியது அல்லவா ?

பொதுவாகவே ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியில் நடக்கும் விவகாரங்களுக்குத் தான் வெள்ளையறிக்கை கொடுப்பார்கள். இங்கு முந்தைய ஆட்சியின் யோக்கியதையை அம்பலப்படுத்தும் வெள்ளையறிக்கை வெளியாகியிருக்கிறது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்ட வெள்ளையறிக்கை முக்கியமாக 4 காரணங்களுக்காக வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

1. எதிர்கட்சியில் இருந்தபோது (வெள்ளை அறிக்கை வெளிப்படையாக) கேட்டதை, தாம் ஆளும் கட்சியாக வந்த பிறகு ஒளிவு மறைவின்றி வெளியிடுவதற்காகவும்
2. வெளிப்படை தன்மையான அரசாக இருக்க வேண்டுமென்பதற்காகவும்
3. நமது கடன், வருவாய், செலவினம், நிலுவைத்தொகை உள்ளிட்ட நிதிநிலையை தெரிவிப்பதற்காகவும்
4. மாநிலத்தின் வளர்ச்சி, வேலையின்மை, தனிநபர் வருமானம் எப்படி மாறியுள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும்
இந்த வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்த கால அதிமுக ஆட்சியின் முறைகேடுகள் அம்பலமாகியுள்ளதால் இதனை வெள்ளையறிக்கை எனலாம். ஆனால், வெளிப்படையான அரசு என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? தன்னுடைய ஆட்சியினைப் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட்டால் வெளிப்படையான அரசு என்று கூறிக்கொள்ளலாம். ஆனால் முந்தைய ஆட்சியின் அவலங்களை வெளியிட்டதையெல்லாம் வெளிப்படைத்தன்மை என்று கூறிக் கொள்வது நகைக்கத் தக்கதே.

இத்துடன் கூடுதல் அறிவுரையாக, எந்த ஒரு மாநிலத்திற்கும் வருவாய் அடிப்படை; அடிப்படை வருமானம் மட்டுமே. வருவாய் இல்லாத அரசு கடன் செலவினத்தையும் குறைக்க இயலாது என்பதையும் கூறிச் சென்றிருக்கிறார்.

வருவாய் இல்லாமல் வாழ்வை நடத்த முடியாது என்பதையும், வருவாய்க்கு உட்பட்டுதான் வாழ்வை நடத்த வேண்டும் என்பதையும் மீறினால் கடன் வாங்க வேண்டியது வரும் என்பதையும் சொந்த வாழ்க்கையிலேயே உணர்ந்து இருக்கிற நம்மிடம் ஏன் இதனை வலியுறுத்திச் சொல்ல வேண்டும்? எல்லாம் காரியமாகத்தான்.

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வரிகள், நீர், மின்சாரம், போக்குவரத்து ஆகியவற்றுக்கான கூடுதல் கட்டணத்தையும் நம் தலையில் சுமத்துவதற்கு முன்பான பீடிகைதான் இது.

ஆனால் இந்த வரிகளையும், கட்டண உயர்வையும் நாம் செலுத்துவதற்கு ஏற்றவகையில் நமது சம்பள உயர்வையோ, வேலை வாய்ப்பையோ உறுதி செய்வதற்கான எந்த முயற்சிகளைப் பற்றியும் வாய் திறக்கவில்லை.

அரசுத்துறையில், பொதுத்துறைகளின் நட்டத்திற்கும் வருவாய் இழப்புக்கும் நட்டத்திற்கும் கடனுக்கும் எந்த வகையிலும் மக்கள் காரணம் அல்ல. அரசியல்வாதிகளும் அரசு அதிகாரிகளும் ஆளும் வர்க்கமும் கூட்டுச் சேர்ந்து மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடித்து கல்லா கட்டுவதுதான் இவ்வளவு இழப்புகளுக்கும் காரணம்.

தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி அதன் மூலம், பெருமுதலாளிகளையும், பன்னாட்டு முதலாளிகளையும் கொள்ளையடிக்க வழிவகுப்பதும், அதில் கமிசனாக பல கோடிகளை அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பதுக்கிக் கொள்வதும்தான் இங்கு ஏற்பட்டிருக்கும் இழப்புகளுக்குக் காரணம்.

படிக்க :
♦ RSS-ன் நாஜி பாரம்பரியத்தை அம்பலப்படுத்தும் திரேந்தர் ஜா || முகமது இலியாஸ்
♦ இந்துத்துவத்தை கற்பிக்க தனி கல்வி வாரியம் அமைக்கும் மோடி அரசு !

இதற்கு மின்சாரத் துறை கொள்முதலில் நடந்திருக்கும் முறைகேடுகளும், சமீபத்தில் இலஞ்ச ஒழிப்புத்துறை தேடுதல் வேட்டை நடத்திய வேலுமணி ஊழல் விவகாரமும் நல்ல உதாரணங்கள்.

உண்மை இப்படி இருக்க, அரசுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை, கடன்கள் ஆகியவற்றுக்கான அடிப்படைக் காரணமாக அதிமுக அடிமைகளின் ஊழல் முறைகேடுகளைக் காட்டுகிறது திமுக அரசு. ஊழல் முறைகேடுகளின் ஊற்றுக்கண்ணான தனியார்மயக் கொள்கைகளைப் பற்றி எங்கும் வாய் திறக்கவில்லை.

கடந்த ஆட்சியில் முறைகேடுகளில் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரின் சொத்துக்களைப் பறிமுதல் செய்து இழப்புகளை மீட்டெடுப்பது மட்டுமின்றி ஊழலில் முக்கியப் பங்காற்றிய தனியார் நிறுவனங்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்து இழப்புகளை மீட்டெடுப்பதுதானே நியாயமானது.

சரி அதற்கு வழக்கு நடத்த நாளாகும் என்றாலும், வரிவிதிப்பு ஒன்றுதான் வருவாயைப் பெருக்குவதற்கான தீர்வா ? தனியார் பெருநிறுவனங்களுக்குப் போட்டியாக அரசே நிறுவனங்களை நடத்தி நிதி திரட்டலாமே? மாநில நெடுஞ்சாலைகளின் டோல்கேட்டுகளில் கொள்ளை இலாபமடிக்கும் தனியார் நிறுவனங்களை விரட்டிவிட்டு, அரசே நியாயமான கட்டணத்தைப் பெற முடியாதா ? தூய்மைப் பணியாளர்களை பணிக்கமர்த்தும் தனியார் துப்புரவு நிறுவனங்களை விரட்டிவிட்டு அரசே அதில் ஈடுபட்டு, அந்த தனியார் நிறுவனங்களுக்குச் செய்யும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாதா ? ஆனால் இவை எதையும் திமுக அரசு செய்யப்போவதில்லை.

ஏனெனில், தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளத்திற்கு மேலான ‘கிம்பளத்திற்கு’ ஆவன செய்கிறது. ஆகவே தமது ‘கிம்பள’ வருவாயை இழக்க ஒருபோதும் சம்மதிக்காத அரசியல்வாதிகளும் அதிகார வர்க்கமும், மொத்த சுமையையும் மக்களாகிய நமது முதுகில்தான் சுமத்துவர்.

சுருக்கமாகச் சொன்னால், வரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் கூடுதல் கட்டண, வரிவிதிப்புக்கான அறிவிப்புகளுக்கும், உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்தபிறகு இரண்டாம்கட்ட கட்டண, வரிவிகித உயர்வுக்கும் தயாராக இருக்குமாறு நமக்கு முன்னறிவிப்பு விடுக்கிறது நிதியமைச்சரின் வெள்ளை அறிக்கை !

கதிரவன்

ஐ.பி.சி.சி அறிக்கை : பருவநிலை மாற்றம் குறித்த அபாய எச்சரிக்கை!

.நா.வால் கூட்டப்பட்ட முன்னணி விஞ்ஞானிகள் குழு கடந்த திங்களன்று ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கை, மனிதகுலத்திற்கு ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை விடுக்கிறது. அது கூறுவதாவது : “பருவநிலை நெருக்கடி இங்கே உள்ளது; அதன் மிகவும் நாசகரமான விளைவுகளில் சில இப்போது தவிர்க்க முடியாதவையாகிவிட்டன. ஆக மிகப் பெருமளவிலும் விரைவாகவும் பசுமைக்குடில் வாயுக்கள் (Green house Gases) வெளியேற்றப்படுவதை குறைப்பதன் மூலம் மட்டுமே வரவிருக்கும் பேரழிவைக் கட்டுப்படுத்த முடியும்.”

பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச குழுவால் (ஐபிசிசி) கூட்டப்பட்ட 200 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் ஒன்றுகூடி ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை இது. இந்த புதிய அறிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான ஆய்வுகளின் ஒரு பரந்த பகுப்பாய்வை பிரதிபலிக்கிறது. ஏனெனில் உலகெங்கிலும் உள்ள மக்கள் வரலாறு காணாத வெப்பநிலை மற்றும் கொடிய தீவிர வானிலையால் – பேரழிவு காட்டுத்தீ முதல் மிதமிஞ்சிய பருவ மழை, தீவிர வறட்சி வரை – பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விஞ்ஞானிகளின் ஆய்வுப் பணி என்பது மனித செயல்பாடு – குறிப்பாக புதைபடிவ எரிபொருள்களை எரிப்பது – பருவநிலையை எந்த அளவிற்கு மாற்றியமைத்துள்ளது என்பது பற்றிய ஒரு திடுக்கிடச் செய்யும் மதிப்பீடு ஆகும் . “இதுவரையில்லாத அளவு” புவி வெப்பமயமாதல், பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்ட உயர்வு மற்றும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும், பேரழிவை ஏற்படுத்தும் பிற மாற்றங்களை இத்தகைய மனிதச் செயல்பாடுகள் உருவாக்குகின்றன. உலகின் அனைத்துப் பகுதிகளிலும், பெரும் பவளப் பாறைத் திட்டுகள் மற்றும் அமேசான் மழைக்காடுகள் போன்ற பல்லுயிரியல் சுற்றுச்சூழல் அமைப்புகளை ஆபத்தில் ஆழ்த்துவது, அனைத்து நகரங்களும் துடைத்தெறியப்படுவது உள்ளிட்ட மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. அதே போல, உலகின் அடர்ந்த மக்கள்தொகை கொண்ட பெரும் நிலப்பரப்புகளுக்கும் ஆபத்தை விளைவிக்கின்றன.

படிக்க :
♦ முதலாளித்துவமும் பருவநிலை மாற்றமும் !
♦ யூடியூபில் பரவும் பருவநிலை மாற்றம் குறித்த வதந்திகள் !

பாரிஸ்-சாக்ளே பல்கலைக்கழகத்தின் பருவநிலை விஞ்ஞானியும் அறிக்கையை தயாரித்த குழுவின் இணைத் தலைவருமான வாலரி மாசன்-டெல்மோட் “இந்த அறிக்கையானது உண்மை நிலவரத்தை உணர்த்துகிறது” என்று கூறுகிறார். மேலும், “இப்போது எங்களிடம் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால பருவநிலை பற்றிய தெளிவான சித்திரம் உள்ளது. இது (பருவநிலை மாற்றத்தில்) நாம் எதை நோக்கிச் செல்கிறோம், என்ன செய்ய முடியும், நாம் எப்படி தயார் செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ள இன்றியமையாதது.” என்கிறார்

புதிய பகுப்பாய்வின் ஒரு மையக் கண்டுபிடிப்பு என்னவென்றால், பாரிஸ் உடன்படிக்கையின் இலக்கான உலக வெப்பநிலை உயர்வை, தொழில்துறை உற்பத்திக்கு முந்தைய கட்டத்தை விட 1.5° செண்டிகிரேடுக்கு மிகாமல் கட்டுப்படுத்த வேண்டும் என்ற இலக்கு பேரபாயத்தில் உள்ளது. கொள்கை வகுப்பாளர்கள் (நாடுகளின் ஆட்சியாளர்கள்) பசுமைக்குடில் வாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டனர்.

அறிக்கையின்படி, 1850-ம் ஆண்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கடந்த நான்கு பத்தாண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டும், அதற்கு முந்தைய எந்த பத்தாண்டையும் விட தொடர்ந்து அதிக வெப்பமடைதல் நிகழ்ந்துள்ளது. வளிமண்டலத்தில் உள்ள கரியமில வாயுவானது இரண்டு மில்லியன் ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் தற்போதுள்ள “பசுமைக்குடில் வாயு உட்பட சுற்றுச் சூழலை மாசு படுத்தும் கழிவுகளின் வெளியேற்றத்தை வைத்துப் பார்க்கையில் புவியின் மேற்பரப்பு வெப்பமயமாவது குறைந்தபட்சம் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தொடரும்”

மறுகாலனியாக்க காலகட்டத்தில் தீவிரமாக அதிகரித்திருக்கும் புவி வெப்பமயமாதல்

“வரவிருக்கும் பத்தாண்டுகளில் கரியமில வாயு (கார்பன் டை ஆக்சைடு) மற்றும் பிற பசுமைக்குடில் வாயு வெளியேற்றப்படுவது தீவிரமாக குறைக்கப்படாவிட்டால் 21-ம் நூற்றாண்டில் புவி வெப்பமடைதல் 1.5°C(செண்டிகிரேடு) மற்றும் 2°C க்குள் இருக்க வேண்டும் என்ற இலக்கு மீறப்படும்” என்று ஐபிசிசி குழு எச்சரிக்கிறது.

“பருவநிலையில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களைப் பார்க்கும்போது, நூறாயிரக்கணக்கான ஆண்டுகள் இல்லாவிட்டாலும்கூட, இதற்கு முன்னர் ஆயிரக்கணக்கான ஆண்டுளில் முன்னெப்போதும் நடந்திராத மாற்றங்களாகும். ஏற்படப் போகும் இந்த மாற்றங்களில் சில ஏற்கெனவே தொடங்கிவிட்டன. இவை மீண்டும் தமது பழைய நிலைமைக்குத் திரும்ப முடியாதவை. உதாரணமாக கடல் மட்டம் உயரத் தொடங்கியிருப்பதானது இன்னும் நூறு ஆண்டுகளிலிருந்து ஆயிரம் ஆண்டுகள் வரை தொடர்ந்து மாற்றமின்றி உயர்ந்து கொண்டே இருக்கும்” என்று இந்த அறிக்கை கூறுகிறது. இது ஐபிசிசியின் 195 உறுப்பு நாடுகளால் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

“இருப்பினும், கரியமில வாயு மற்றும் பிற பசுமைக்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை உறுதியாகவும் மற்றும் தொடர்ச்சியாகவும் குறைக்கும்போது அது பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும்” என்று அறிக்கை வலியுறுத்துகிறது.

“இதனால் காற்றின் தரம் அதிகரிப்பது (காற்று சுத்தமடைவது) போன்றவை விரைவாக நடக்கும் என்றாலும் உலக வெப்பநிலை நிலைப்படுத்தப்படுவதைக் காண 20-30 ஆண்டுகள் ஆகலாம்” என்பதையும் அறிக்கை வலியுறுத்துகிறது.
ஐபிசிசி பணிக்குழுவின் மற்றொரு இணைத் தலைவரான பன்மாவோ ஜாய், “பருவநிலையை மாற்றமின்றி நிலைப்படுத்துவதற்கு பசுமை க்குடில் வாயுக்கள் வெளியேற்றப்படுவதை வலுவாகவும், விரைவாகவும் நீடித்தும் குறைக்க வேண்டும். மேலும் கரியமில வாயு வெளியேற்றப்படுவது நிகர-பூஜ்ஜிய நிலைக்கு, அதாவது முழுமுற்றாக நிறுத்தப்பட வேண்டும்.”

“மற்ற பசுமைக்குடில் வாயுக்கள் மற்றும் காற்று மாசுபாடுகளை, குறிப்பாக மீத்தேன் வாயு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவது, மக்கள் சுகாதாரம் மற்றும் பருவநிலை ஆகிய இரண்டிற்கும் நன்மைகளை ஏற்படுத்தும்,” என்று ஜாய் மேலும் கூறினார்.
“மற்ற பசுமைக் குடில் வாயுக்கள் மற்றும் காற்று மாசுபாடுகளை, குறிப்பாக மீத்தேன் ஆகியவற்றை கட்டுப்படுத்துவது, சுகாதாரம் மற்றும் பருவநிலை இரண்டிற்கும் நன்மைகளை ஏற்படுத்தும்,” என்று ஜாய் மேலும் கூறினார்.

இந்த அறிக்கை மூன்று தவணைகளில் வெளியிடப்பட உள்ளது. முதல் தவணையாக, 2021-ல் ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய மாநாட்டிற்காக கிளாஸ்கோவில் உலகத் தலைவர்கள் கூடுவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் இந்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய பருவநிலை போராட்டத்திற்கு ஒரு முக்கிய தருணமாக அமையும் என சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

“கிளாஸ்கோவில் நடக்க உள்ள ஐநாவின் பருவநிலை மாற்றம் பற்றிய மாநாடு உலக வெப்பநிலை கட்டுப்பாட்டை மீறி ஸ்பைரலாக உயர்ந்து செல்வதைத் தடுக்க நமக்குக் கிடைத்த கடைசி, சிறந்த வாய்ப்பாகப் பலரும் பார்க்கிறார்கள்,” என்று குளோபல் ஜஸ்டிஸ் நவ் என்ற அமைப்பின் டோரதி கிரேஸ் குயெர்ரெரோ கடந்த மாதம் எழுதினார்.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : மனிதகுலம் பிழைத்திருக்க சோசலிசம் ஒரு கட்டாயம் !
♦ ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“துரதிருஷ்டவசமாக, மிகவும் ஆபத்தான பருவநிலை தாக்கங்களைத் தடுப்பதற்கான ஒரு வழியாக விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள, உலக வெப்பமயமாதலை 1.5°C க்கு மட்டுப்படுத்துவதற்கான பாதையில் நாம் இன்னும் செல்லவில்லை. இந்த இலக்கை அடையத் தவறினால் மிகப்பெருமளவில் வகைதொகையில்லாத பாதிப்புகள் வளரும் நாடுகளுக்கு ஏற்படும்.” என்கிறார் டோரதி

ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், ஐபிசிசியின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் “மனிதகுலத்திற்கான அபாய எச்சரிக்கைக் குறியீடு” என்று கூறினார்.

“எச்சரிக்கை ஒலிகள் காதைச் செவிடாக்குகின்றன; ஆதாரங்கள் மறுக்க முடியாதவை; புதைபடிவ (கரிம) எரிபொருள் எரிப்பு மற்றும் காடழிப்பு ஆகியவற்றிலிருந்து பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் நமது கிரகத்தை மூச்சுத்திணறச் செய்து, பில்லியன்கணக்கான (ஒரு பில்லியன்=100 கோடி) மக்களை உடனடி ஆபத்தில் ஆழ்த்துகிறது,” என்றார் குட்டரெஸ். ” புவி வெப்பமடையும் நிகழ்வானது பூமியில் உள்ள ஒவ்வொரு பகுதியையும் பாதிக்கிறது. இதன் விளைவாக ஏற்படும் பல மாற்றங்கள் (பாதிப்புகள்), பாதிப்புக்கு முந்தைய நிலைமையை மீட்டெடுக்க முடியாதவை” என்கிறார் குட்டரெஸ்.

“பருவநிலை நெருக்கடியால முதன்மையாகப் பாதிக்கப்பட இருப்பவர்களின் உயிர்களையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க ஒரு தெளிவான தார்மீக மற்றும் பொருளாதார அவசியம் இருக்கிறது.” என்று கூறும் குட்டரெஸ் தொடர்ந்து, “நாம் இப்போது நமது ஆற்றல்களை இணைத்தால், பருவநிலை பேரழிவைத் தவிர்க்க முடியும். ஆனால், இன்றைய அறிக்கை தெளிவுபடுத்துவது போல், தாமதத்திற்கு நேரம் இல்லை மற்றும் சாக்குபோக்குகளுக்கும் இடமில்லை. கிளாஸ்கோவில் நடக்க உள்ள ஐக்கிய நாடுகள் பருவநிலை மாற்றம் பற்றிய இந்த மாநாடு வெற்றி பெறுவதை உறுதி செய்ய அரசுத் தலைவர்கள் மற்றும் இவற்றுக்குப் பொறுப்பான அனைத்து பங்குதாரர்களையும் நான் நம்புகிறேன்” என்று கூறினார்.


கட்டுரையாளர் : ஜேக் ஜான்சன்
தமிழில்: நாகராசு

மூலக் கட்டுரை : Countercurrents

பொருள் புரியாமலேயே பயன்படுத்தப்படும் கேடான வடமொழிச் சொற்கள் || வி.இ.குகநாதன்

ம்மந்தம், சம்மந்தி போன்ற சொற்கள் அதிகளவில் தமிழர்களால் பயன்படுத்தப்படும் வட மொழிச் சொற்களாகும். இவை தமிழ்ச் சொற்கள் அல்ல என்பன மட்டுமல்லாமல், பண்பாட்டு முறையில் இழிவான சொற்களுமாகும். பொதுவாக அச் சொற்கள் சம்மந்தம், சம்மந்தி எனத் திரிபடைந்த நிலையிலேயே இன்று பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைக் கிருபானந்த வாரியார் கூடத் தனது சொற்பொழிவுகளில் ஏளனம் செய்திருப்பார்; `சம்மந்தி` என்ற சொல்லில் `சம்` என்றால் `நல்ல` என்ற பொருள், `மந்தி` என்றால் குரங்கு என்ற பொருள், எனவே `நல்ல குரங்கு` என்பதே அதன் பொருள், அது சம்மந்தியல்ல `சம்பந்தி` என வாரியார் விளக்குவார். இத்தகைய திருந்திய வடிவமான சம்பந்தி, சம்பந்தம் என்பன கூட இழிவான சொற்களேயாகும். சம்பந்தம் ( Sambandham) என்ற சொல்லின் பண்பாட்டுப் பின்புலத்தினை விளங்கிக் கொள்ள நாம் கேரளாவுக்குத்தான் சென்று வர வேண்டும்.

“சம்பந்தம்” என்ற இச் சொல்லானது கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்னர்கள் ஏற்படுத்திய “தரவாடு” குடும்ப முறையுடன் தொடர்புடைய சொல்லாகும். கேரளா என்பது பழந் தமிழர்களின் நாடான சேர நாடேயாகும். சோழர்- பாண்டியர்களுக்குக் கூட இல்லாமல், சேரர்களை மட்டுமே பாடுவதற்காகப் “பதிற்றுப்பத்து” எனும் எட்டுத்தொகை நூலான ஒரு சங்க இலக்கியத் தொகுப்பு நூலொன்று கூட உண்டு.

படிக்க :
♦ தமிழர் திருநாள் : விழுங்கக் காத்திருக்கும் காவிகள் ! | வி.இ.குகநாதன்
♦ தை முதலே தமிழ்ப் புத்தாண்டு : வி.இ.குகநாதன்

முசிறிப் பட்டின அகழ்வாய்வும் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலுக்குச் சான்றாகும். அதே போல அசோகர் கல்வெட்டுகள் கூட, அக் கால சேர நாட்டின் இருப்புக்குச் சான்றாகவுள்ளது. இவ்வளவு வரலாறுகள் இருந்த போதும், புராணங்களோ பரசுராமர் கோடரியினை எறிந்து, நிலத்தைப் பிரித்து கேரளாவினை உருவாக்கியதாகவும், அதனை நம்பூதிரிப் பார்ப்பனர்களிடம் (பிராமணர்களிடம்) கொடுத்ததாகவும் சொல்லுகின்றன.

பத்தாம் நூற்றாண்டுக்குப் (CE 10th century) பின்னரே நம்பூதிரிகளின் பரவலான குடியேற்றம் சேர நாட்டில் இடம் பெறுகின்றது. அதற்கும் பின்னரே மலையாள மொழி பேசுபவர்களாகச் சேர நாட்டினர் மாறுகின்றனர். அதுவரை இந்த “சம்பந்தம்” என்ற உறவு முறை சேர நாட்டிலிருந்திருக்கவில்லை. குடியேறிய பார்ப்பனர்கள் திட்டமிட்ட வகையில் தமிழில் வடமொழிச் சொற்களைக் கலந்து, படிப்படியாக அங்கிருந்த தமிழினை “மலையாளம்” என வேறொரு மொழியாக மாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு தமிழிலிருந்து மலையாளத்தினைப் பிரித்தெடுத்தனை உருவகப்படுத்தியே  “பரசுராமர் கோடரி எறிந்து பிளந்த புராணக்கதை” தோற்றுவிக்கப்பட்டது. அதற்குப் பின்னரே நம்பூதிரிகள் ஆதிக்க சாதியாக உருவெடுத்தார்கள்.

“அந்தர்ஜன” நம்பூதிரி பெண்கள்

நம்பூதிரிகள் கேரளாவில் குடியேறும் போதே, இரண்டு திட்டங்களுடனேயே வந்திருந்தார்கள்; ஒன்று அரசர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளல், இரண்டாவதாக அங்குள்ள ஏனையோரினை தமக்குக் கீழ் கொண்டுவருதல். அதற்காக நம்பூதிரிகளில் குடும்பத்தில் மூத்தவன் மட்டுமே திருமணம் செய்து கொள்வான் எனவும் ஏனையோர் அரசனுக்குச் சேவை செய்வதற்காகத் தமது குடும்ப வாழ்வினை துறப்பார்கள் எனவும் கூறி, அதனை நடைமுறைப்படுத்தி, அரசனின் நற்பெயரினைப் பெற்றுக் கொண்டார்கள்.

அடுத்ததாக, அரசனின் படை வீரர்களாகவிருந்த நாயர்களைக் குறி வைத்தார்கள். படை வீரர்கள் குடும்பத்தவர்களாகவிருந்தால், அவர்கள் எவ்வாறு பற்றுறுதியுடன் போரிடுவார்கள், குடும்பம் என்று ஒன்றில்லாவிடில் துணிவுடன் போரிடுவார்கள், எனச் சொல்லி அரசனின் மனதினை மாற்றி, நாயர்களின் திருமணம் செய்யும் உரிமையினைப் பறித்தார்கள். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட உறவுமுறையே  “சம்பந்தம்”, அதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு வீட்டு முறையே “தரவாடு”.

நாயர் சாதி ஆண்களின் மண உரிமை பறிக்கப்பட்டதால் , நாயர் பெண்கள் துணையின்றியிருந்தார்கள். ஏற்கெனவே நம்பூதிரிச் சாதியில் மூத்த மகனுக்கு மட்டுமே நம்பூதிரிப் பெண்களை மணக்கும் உரிமையிருக்கின்றது எனப் பார்த்தோம். ஏனைய நம்பூதிரி ஆண்களுக்கு இப்போது இணையின்றியிருந்த நாயர்ப் பெண்களை முதலில் மணந்து உறவு கொள்வார்கள். அவ்வாறு நம்பூதிரிகளால் உறவு கொள்ளப்பட்ட பெண்களையே பின்பு நாயர் ஆண்கள் உறவு கொள்ள முடியும். இத்தகைய நாயர் பெண்களுடன் நம்பூதிரிப் பார்ப்பான்களுக்குச் செய்யப்படும் மணமே “சம்பந்தம்” எனவும், அவர்கள் தங்கியிருக்கும் வீட்டு முறையே “தரவாடு” எனவும் அழைக்கப்பட்டது.

நம்பூதிரி பெண்களின் ஒடுக்கப்பட்ட வாழ்நிலையை விளக்கும் அந்தர்ஜனம் நூல்

இத்தகைய “சம்பந்தம்” மூலம் இணையும் நாயர் பெண்கள் இரவில் மட்டுமே நம்பூதிரிக் கணவர்களுக்கருகில் செல்ல முடியும், பகலில் ஆறடி தள்ளி நின்றே பணிவிடை செய்ய வேண்டும். இங்கு பிறக்கும் குழந்தைகளும் சூத்திரர்களாகவே பார்ப்பனரால் கருதப்படுவார்கள். பார்ப்பனர் இவ்வாறு கருதினாலும் இவர்களோ தம்மைத் தாமே `ஆண்ட சாதி` எனவோ அல்லது `சத்திரியர்` எனவோ எண்ணிச் செயற்படுவார்கள்.

இங்குதான் மற்றொரு புராணக்கதையினையும் நினைவிற் கொள்ள வேண்டும். பரசுராமர் என்ற பார்ப்பனர் சத்திரியர்கள் எல்லோரையும் அழித்ததாகவும், பின்பு சத்திரியப் பெண்கள் துணையின்றிப் பார்ப்பனர்களுடன் புணர்ந்தே, அவர்களது தலைமுறை பெருகியது என்றும் செல்கின்றது அப் புராணக்கதை. அப் புராணக்கதையினை இங்கே பொருத்திப் பார்ப்பது நல்லது.

மேற்கூறியவாறு நம்பூதிரிகள் தரவாடு வீட்டு முறையில் நாயர்ப் பெண்களுடன் கொள்ளும் உறவுமுறையே “சம்பந்தம்” எனப்பட்டது. அதாவது நாயர் சாதிப் பெண்கள் நாயர் சாதி ஆண்களுடன் உறவு கொள்வதற்கு முன் நம்பூதிரிப் பார்ப்பானுடன் கொள்ளும் உறவே “சம்பந்தம்” எனப்பட்டது.

இந்த முறை பார்ப்பனப் பெண்களுக்குக் கூட கேடாகவே அமைந்தது; ஏனெனில் மூத்த பார்ப்பன ஆண்களை விடப் பெண்கள் அதிகமாக இருந்தமையால், பார்ப்பனப் பெண்கள் பல மனைவியரில் ஒருவராகவும் மூப்படைந்த பார்ப்பனர்களையே மணம் செய்ய வேண்டிய நிலையுள்ளவராகவும், காணப்பட்டார்கள். இங்கு பார்ப்பனப் பெண்கள் `அந்தர்ஜனம்` என்ற முறையில் வீட்டில் அடைபட்டே வாழ்ந்தார்கள். இது பற்றி எழுத்தாளர் தேவகி ( Devaki Nilayamgode ) எழுதிய “Antharjanam”  எனும் நூல் பல செய்திகளைத் தரும்.

இந்த இடத்தில்  “சம்பந்தம்” எனும் உறவு முறையின் உருவகப்படுத்தலாகவே திருமணங்களின் போது சொல்லப்படும் வடமொழி மந்திரம் ஒன்றினைக் கூட ஒப்பிட்டுப் பார்க்கலாம்; அந்த மந்திரம் “ஸோம: ப்ரதமோ…”(மந்திரத்தையும், அதற்கான விளக்கத்தினையும் படத்தில் காண்க).

இந்த மந்திரமானது ரிக் வேதத்தில் (Rig veda 10, 7:85) இருந்து தொகுக்கப்பட்டவையே. சூர்யா என்ற தேவப் பெண்ணிற்கு ஒன்றின் பின் ஒன்றாகப் பல தேவர்களுடன் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டது. அப்போது சொல்லப்பட்டவையே இத் திருமண மந்திரங்கள். இதனையே இன்றும் திருமணங்களில் பார்ப்பனர்கள் ஓதி வருகின்றார்கள். இதற்கு வேறு விளக்கங்கள் கொடுக்க அண்மைக்காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், இராமானுசர், ஆளவந்தார் (யாமுனாசார்யர்) போன்ற வேத விற்பனர்கள் தெளிவாகவே விளக்கியுள்ளார்கள்.

இன்று வெறும் மந்திரங்களாகவே உள்ள இந்த இழிநிலையினைப் பார்ப்பனர்கள் ஒரு காலத்தில் நடைமுறைப்படுத்தவே முனைந்துள்ளார்கள். அந்த நடைமுறைப்படுத்தல்தான் “சம்பந்தம்” எனும் உறவு முறையாகும். மற்றொரு கேரளா முறை “கெட்டு கல்யாணம்” எனப்படும். (கெட்டு கல்யாணம் என்ற சடங்கு முடிந்த உடனேயே தனது மகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளப் பலருக்கும் பெண்ணைப் பெற்ற தாயே அழைப்பு விடுவாள். அதில் நம்பூதிரிகளுக்கு முதல் உரிமை கொடுக்கப்படும்).

கேரளாவிற்கு ஏன் போகவேண்டும்! தமிழ்நாட்டிலேயே எமக்கு கடந்தகாலத்தில் ` இயற்பகை நாயனார்` என்ற எடுத்துக்காட்டு உண்டு. 63 நாயன்மார்களில் ஒருவரான இயற்பகை நாயனார் கதை கேள்விப்பட்டுள்ளீர்களா? சிவாச்சாரியார் ஒருவர் நாயனாரின் மனைவியினைக் கேட்டபோது, நாயனார் கூட்டிக்கொடுத்தது மட்டுமல்லாமல், குறுக்கே வந்த உறவினர்களையும் வெட்டிச் சாய்த்தவர். சிலர், சிவனே பிராமணவேடத்தில் வந்ததாகவும் கூறுவார்கள். இவ்வாறு தெய்வத்தின் வடிவம், தேவர்களின் (சோமன், கந்தர்வன், அக்னி ) வடிவம் தாமே என, வேதத்தினைக் காட்டி பார்ப்பனர்கள் தமிழ் மணப்பெண்களை புணர முனைந்திருந்தார்கள்.

இதனாலேயே பார்ப்பனர்கள் தமது சாதி தவிர்ந்த ஏனையோரினைச் சூத்திரர்கள் என அழைப்பார்கள். இங்கு “சூத்திரர்” என்பது “வைப்பாட்டி மக்கள்” என்றே பொருள் கொள்ளப்படும் என மறைமலை அடிகளார் தனது நூலான “தமிழர் மதம்” என்ற நூலின் 52-வது பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.

கேரளாவில் நடைமுறையிலிருந்த “சம்பந்தம்”, “கெட்டு கல்யாணம்” என்பனவற்றில் தமது பெண்களை நம்பூதிரிகளுக்கு முதலில் உறவு வைக்கக் கொடுப்பதனைப் பெருமையாக அக் காலத்தில் கருதியவர்களுண்டு. அதைப் பெரும் விழாவாகக் கொண்டாடியவர்களுமுண்டு. அந்தளவுக்கு மதம் அவர்களின் மூளையினை மயக்கியிருந்தது.

படிக்க:
♦ நூல் அறிமுகம் : இதுதான் பார்ப்பனியம்
♦ சிறப்புக் கட்டுரை : பார்ப்பனியம் – சமத்துவத்தின் முதல் எதிரி !

பின்னர் ஐரோப்பியர் ஆட்சிக் காலத்தில் இம் முறைகள் முடிவுக் கொண்டு வரப்பட்டன. எனினும் வடமொழியிலான திருமண மந்திரங்களும், “சம்பந்தம்” போன்ற சொல்லாடல்களும் அந்த கேட்டின் எச்சங்களாக இன்றும் தொடர்கின்றன.

எனவே வடமொழி மந்திரங்கள் ஓதித் திருமணங்கள் செய்வதனைத் தவிர்த்து, தமிழ் முறைப்படி மண விழாக்களை ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழில் வழிபாடு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், தமிழில் மண விழாக்களையும் நடாத்த மானமுள்ள தமிழர்கள் முன்வர வேண்டும்.

“சம்பந்தம்”, “சம்பந்தி” என்பதற்கான தமிழ்ச் சொற்கள் :

“சம்பந்தம்” என்பதைத் திருமணம்/ மண விழா/ இணையேற்பு விழா எனத் தமிழில் அழைக்கலாம். அதே போன்று “சம்பந்தி” என்பதனைத் தமிழில் “உறவாடி” என அழைக்கலாம். அதே போன்று கொண்டான்/ கொடுத்தான் என்ற சொற்களுமுண்டு.

“சம்பந்தம்”,  “சம்பந்தி” போன்ற சொற்களைத் தமிழாக்குவதன் மூலம் எமது மொழி வளர்ச்சியடைவது மட்டுமன்றி; எம் மீது திணிக்கப்பட்ட பண்பாட்டுக் கேடுகளையும் நீக்கிக் கொள்ளலாம். ஈழத்தில் ஒரு பழமொழி ஒன்றுண்டு: “தனக்கு எட்டாத சிங்களம், தன் பிடரிக்குச் சேதம்” என, அது வடமொழிக்கும் பொருந்தும். ஒரு கூடாத உறவு முறையினைக் குறித்த “சம்பந்தம்” எனும் சொல்லினை “நல்ல உறவு” என எம் மீது திணித்து விட்டார்களே !

வி.இ.குகநாதன்

disclaimer