Tuesday, June 23, 2026
முகப்பு பதிவு பக்கம் 430

மீ டூ : நாம் யார் பக்கம் நிற்பது ? வில்லவன்

5

நேற்று எங்கள் பள்ளி ஆசிரியர்கள் அறையில் அமைச்சர் ஜெயக்குமார் ஆடியோ தொடர்பாக ஒரு விவாதம் ஓடிற்று.

வில்லவன்

“அந்தப் பொண்ணு ஒரு ஐட்டமா இருக்கும்” என ஆரூடம் சொல்கிறார் ஒருவர்.

“அது எப்படி குழந்தை பிறக்கும் வரை ஒரு குடும்பம் விட்டு வைக்கும்?” என ஐயமெழுப்புகிறார் இன்னொருவர்.

“இதெல்லாம் பிளான் பண்ணி பிளாக்மெயில் பண்ற குடும்பம் போலருக்கு” என்கிறது இன்னொரு குரல்.

“கூப்பிட்டது அமைச்சர்ங்கறதால போயிருப்பா” என்றொரு கருத்தும் வந்தது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை, அதில் அவர் தவறு என்ன இருக்கிறது எனும் சிந்தனையே அவர்களிடம் மேலோங்கி நின்றது.

அத்தனை பேரும் அந்த பெண்ணும் அவர் தாயாரும் அமைச்சரை வளைக்கும் நோக்கில் அங்கே போயிருப்பார்கள் என்றே தீர்மானமாக நம்புகிறார்கள். அதில் இருப்பது ஜெயக்குமார் குரலா என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

நேற்று  நடிகை அமலா பால் தன்னிடம் இயக்குனர் சுசி.கணேசன் அநாகரீகமாக நடந்துகொண்டார் என குற்றம் சாட்டுகிறார். உடனே முகநூலில் இப்படி ஒரு எதிர்வினை வருகிறது “உன் புருசனோட ஒழுங்கா வாழ வக்கில்லை! நீ பத்தினின்னு நிரூபிச்சுட்டு அடுத்தவன் மேல கம்ப்ளெயிண்ட் பண்ணு.” என்பது பெரும்பான்மை தரப்பின் பொது விதியாக இருக்கிறது.

இதே கண்ணோட்டம்தான் சின்மயி விவகாரத்திலும் காணக்கிடைக்கின்றது. பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை, தாம்ப்ராஸ் நாராயணன் அய்யங்கார் தேவடியாள் என வர்ணித்ததைவிட கேவலமாக இருந்தது பாண்டேவின் கேள்விகள்.

பொதுவாக பாண்டேவை கழுவி ஊற்றுவதற்க்கு பேரார்வத்தோடு காத்திருக்கும் முகநூலில் இது விமர்சிக்கப்படவேயில்லை. சின்மயியின் முந்தைய நடவடிக்கைகள் வாயிலாக அவர் மீதான நம்பகத்தன்மை குறைந்துவிட்டது எனும் வாதம் அத்தனை நியாயமானது அல்ல. காரணம் வைரமுத்துவின் வரலாறும் மெச்சத்தக்கது இல்லை.

படிக்க :
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
♦ #MeToo : ஆண்களே ! இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல ! வதைக்கப்பட்ட கதை !

நாம் எல்லா சமயங்களிலும் நம் வெறுப்பை ஒரே அளவில் வெளிப்படுத்துவதில்லை. இந்துத்துவ பொறுக்கிகள் வைரமுத்துவை இலக்கு வைத்து தாக்கியபோது நாம் அவரது வரலாற்றை ஆராயவில்லை. இன்னும் பெரிய உதாரணம் வேண்டுமானால், சசிகலா தினகரன் மீதான தமிழக மக்களின் வெறுப்பு எத்தகையது? ஆனாலும் அவர்களை பாஜக ஒழிக்க முனைந்த போது இந்த கும்பல் (சசிகலா) இப்படியாவது நாசமாகட்டும் என அனேகர் கருதவில்லை. மாறாக அதிலும் பாஜகவின் மீதான எதிர் நிலைப்பாடே வலுவாக இருந்தது. ஆக இங்கே நம்மை (அதாவது பெரும்பான்மை சமூக ஊடக கருத்தாளர்கள்) சின்மயிக்கு எதிராக நிறுத்தி வைரமுத்துவுக்கு மவுன ஆதரவை வழங்க வைக்கும் காரணி எது?

ஒரு உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். நமது பெரும்பாலான நடத்தைகளும் நடவடிக்கைகளும் தானியங்கி செயல்பாடுகள் (ஆட்டோமேட்டிக்). அதில் நமது சமூக கற்றல் பெருமளவு தாக்கம் செலுத்தும். கம்யூனிசம் மற்றும் பெரியாரிசத்தை ஏற்றுக்கொண்டவர்களிடத்திலும் பகுதியளவுக்கான ஆணாதிக்க மனோபாவம் இருக்கும். அதனை ஒப்புக்கொள்ளவும் பிறகு சீர்திருத்திக்கொள்ளவும் தயாராய் இருக்கிறோமா என்பதை வைத்தே ஒரு கம்யூனிஸ்ட்டையும் பெரியாரிஸ்ட்டையும் மதிப்பிட வேண்டும்.

சின்மயி விவகாரத்தில் பாண்டே அவரிடம் நடத்திய நேர்காணல் வார்த்தைகளால் நடத்தப்பட்ட வன்முறை.

ஆகவே மீ டூ விவகாரத்தில், குறிப்பாக சின்மயி தொடர்பான நமது (சமூக வலைதளங்களில் இயங்கும் இடதுசாரி மற்றும் திராவிட சார்புடையவர்கள்) எதிர்வினைகளை இந்த கோணத்தில் சுயபரிசோதனை செய்துகொள்வது நல்லது.

சின்மயி, கவிஞர் வைரமுத்துவோடு பணியாற்றிய தருணங்களில் நிகழ்ந்த பாலியல் தாக்குதல் குறித்து ஒரு ட்வீட் போடுகிறார். வழக்கமாக ஒரு குற்றச்சாட்டு எழுந்தால் அது நிகழ்ந்திருக்க சாத்தியம் இருக்கிறதா என ஆராய்வோம்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் மும்பை குழு நடனப் பெண் ஒருவர் அபிஷேக் பச்சன் தன்னை மணந்துகொண்டதாக குற்றம் சாட்டினார். அவர் விவரித்த சம்பவம் யதார்த்தத்துக்கு முற்றிலும் பொருந்தாததாக இருந்தது (பார்ட்டியில் சந்தித்தார், எனக்கு பொட்டு வைத்து மனைவியாக ஏற்றுக்கொண்டார் என சொன்னதாக நினைவு). அப்படியான ஒரு பிறழ் நடவடிக்கையாக சின்மயியின் குற்றச்சாட்டு இல்லை.

இது நிகழ்ந்திருப்பதற்கான சாத்தியங்களை மறுக்க முடியாது. மேலும் சினிமாத்துறை மீதான பொதுவான அபிப்ராயம், இதெல்லாம் அங்கு சாதாரண நிகழ்வு என்பதுதான்.

ஏ.ஆர்.ரஹமானின் சகோதரி ரைஹானா வைரமுத்துவின் பாலியல் சீண்டல்கள் சினிமாத்துறையின் வெளிப்படையான ரகசியம் என்கிறார். வைரமுத்துவிடம் இதே வடிவத்திலான பாலியல் தாக்குதல்களை எதிர்கொண்டதாக ஒரு பெண் வெளிப்படையாக தன் பெயரைக் குறிப்பிட்டே குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்த தொடர் கருத்துக்களை வைத்துப் பார்க்கையில் வைரமுத்து இதனை செய்திருக்க முகாந்திரம் இருக்கிறது என நாம் சந்தேகித்திருக்க வேண்டும். ஆனாலும் நாம் சின்மயி எனும் பாடகியிடம் குற்றம் கண்டுபிடிப்பது எனும் புள்ளியில் இருந்து நகரவில்லை.

எலைட் ஃபெமினிசம், பார்ப்பன பெண் ஆகிய காரணங்கள் மட்டுமே வைரமுத்துவை நிரபராதி என நம்ப போதுமானவையா? அல்லது நாம் வெறுக்கத்தக்க ஒரு வரலாற்றைக்கொண்ட பெண்மணிக்கு இப்படி ஒரு பாலியல் சீண்டல் நடந்திருந்தால்தான் என்ன எனும் பழியுணர்ச்சியா?

இதன் பலனாக நாம் இரண்டு வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம். ஒரு போலியான தெய்வீக இமேஜை உருவாக்கி வைத்துக்கொண்டு இந்த கர்னாடக சங்கீத கும்பல் ஆடும் ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல. பார்ப்பனீயத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்களில் முக்கியமானது இந்த இந்த கர்னாடக சங்கீதம்.

பார்ப்பனரல்லாத சாதிப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு ஒரு பார்ப்பன குரு கிடைத்துவிட்டால் அடையும் மகிழ்ச்சி அளவில்லாதது. பார்ப்பனர்கள் தங்கள் தனிப்பட்ட அடையாளமாக கருதுவதும் கர்னாடக சங்கீதத்தைத்தான். ஆகவே இந்த “குரு”க்கள் தொடும் எல்லைக்குள் சிறார்களும் இளையோர்களும் ஏராளமாக இருக்கிறார்கள்.

மீ டூ நகர்வுகளில் சின்மயியின் பாத்திரம் இந்த தெய்வீக இமேஜை உடைப்பதற்கு கிடைத்த பெரும் சந்தர்ப்பம். சின்மயி மீதான வெறுப்பிலும் “நீ என்ன பத்தினியா” எனும் இந்தியாவின் பிரத்தியோக சிந்தனையின் விளைவாக நாம் அந்த வாய்ப்பை தவறவிட்டிருக்கிறோம். ஒரு குறைந்தபட்ச விளக்கம்கூட கொடுக்க அவசியமில்லாமல் அந்த பார்ப்பன கும்பல் தப்பித்திருக்கிறது.

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

இந்த விவகாரத்தில் அம்பலமான கதைகளை பேசுபொருளாக்கியிருந்தால் இன்னும் அதிகமான பெண்கள் அம்பலத்துக்கு வராத பல “குரு”க்களின் உண்மை முகத்தை தோலுரித்திருக்கக்கூடும். அவர்களிடம் சிக்குண்டிருப்பது பெரும்பாலும் பார்ப்பன குழந்தைகள்தான், அவர்களைக் காக்க வேண்டியதும் நம் பொறுப்பு இல்லையா?

பெரியாரது பெண்ணுரிமை செயல்பாடுகளின் முதல் பலனாளிகள் பார்ப்பன பெண்கள்தான். அதற்காக அவர் அச்செயலை நிறுத்திக்கொண்டாரா என்ன!

சின்மயியை மட்டும் இலக்கு வைக்கும் நமது பொது எதிர்வினையின் இன்னொரு கோணம்தான் என்னை பெரிதும் அச்சமூட்டுகிறது. சிறார்களுடன் பணியாற்றும் எந்த ஒரு ஆற்றுப்படுத்துனரிடமும் கேளுங்கள். அவர்களிடம் சில பாலியல் வன்முறை கதைகள் கிடைக்கும்.

மகளிடம் வல்லுறவு கொள்ளும் அப்பா அதனைக் கண்டும் கண்டிக்க முடியாத அம்மா, அப்பாவோடு தனியாக இருக்க பயமாக இருக்கிறது எனும் மாணவி தினசரி அதே அப்பாவோடு பள்ளிக்கு வருகிறார், பாலுறவு என்றால் என்னவென்று அறிய இயலாத வயதில் அதற்கு அறிமுகமாகி பிறகு அதனை இயல்பானதாக கருதி ரசிக்கும் சிறுமிகள், பாலியல் வன்முறையை தமது தவறாக கருதி குற்ற உணர்வில் தன்னைத்தானே சபித்துக்கொண்டிருக்கும் குழந்தைகள் என பட்டியலில் அடங்காத கேஸ் ஹிஸ்டரிகள் எங்கள் வட்டாரத்தில் கிடைக்கின்றன. பொது வெளியில் புழங்கும் முன்முடிவுகளும் எள்ளலும் இப்படியான குழந்தைகளிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை நாம் யோசிப்பதே இல்லை.

சின்மயிக்கும் நமக்கும் (சமூக ஊடக நண்பர்கள்) இருக்கும் தகராறு வெளியில் இருக்கும் பலருக்கும் தெரியாது. அப்படியான சூழலில் இத்தகைய விமர்சனங்களைக் படிக்கின்ற மற்றும் பாண்டே வகையறா (அந்த பிரஸ் மீட் நிருபர்களும்) ஆட்களின் வல்லுறவுக்கு நிகரான கேள்விகளும் இளையோர் மற்றும் மாணவர்களிடையே என்ன செய்தியை கொண்டுசெல்லும்?

இப்படி பாதிப்புக்கு ஆளாகும் பெண்கள் / மாணவர்கள் எண்ணிக்கை நாம் நினைத்துக்கொண்டிருப்பதைக் காட்டிலும் மிக அதிகம். இப்படியான சமூக எதிர்வினைகள் அவர்களை மேலும் மேலும் மனரீதியாக முடமாக்கலாம். அது பாலியல் குற்றவாளிகளை மேலும் மேலும் உற்சாகப்படுத்தும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் கருவுற்றிருப்பதை பிரசவம் வரை அறியாத பெற்றோர்கள் இருப்பதை சமீபத்தில் வந்த செய்தியொன்று சுட்டிக்காட்டுகின்றது. ஆசிரியர்கள் பேஸ்புக் பொதுக்கருத்தினையே வெளிப்படுத்துகிறார்கள். இதன் அபாயகரமான பின்விளைவுகளை யார் எதிர்கொள்வது?

வயாக்ரா புழக்கத்துக்குப் பிறகு வசதியான/ செல்வாக்கான கிழவர்கள் இப்படியான சீண்டல்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள் என்கிறார் உளவியலாளரான நண்பர் ஒருவர் (ஆளை மடக்கினால் போதும் எழுச்சிக்கு வயாக்ரா இருக்கிறது எனும் நம்பிக்கையில்).

ஊடகவியலாளர் சுகிதா தனக்கு தரப்பட வேண்டிய நீதிமன்ற ஆணையொன்றைப் பெற ஓராண்டு காத்திருந்ததாக சொல்கிறார். தொலைந்துபோன தமது ஆவணங்களைப் பற்றி புகார் கொடுத்து சி.எஸ்.ஆர் பெற ஒரு வாரம் அலைவதாக பதிவிடுகிறார். பிரபலமான ஒரு ஊடவியலாளரின் கதியே இப்படி இருக்கிறது. காதல் ஜோடிகளை அடாவடியாக பிரித்து பெண்ணை அப்பாவோடு கட்டாயப்படுத்தி அனுப்புகின்ற நீதிமன்றங்கள் இங்கிருக்கின்றன. இப்படி மிகக்கொடூரமான அமைப்புக்களை வைத்திருக்கும் நாம் சமூக ஊடகங்களையும் வழமையான போலீஸ் ஸ்டேஷன் போல மாற்றி எதை சாதிக்கப்போகிறோம்?

மீ டூ தவறாக பயன்படுத்தப்படலாமா என கேட்டால் அதற்கு வாய்ப்பு இருக்கின்றதுதான். அப்படியான வாய்ப்புக்கள் எல்லா குற்றங்களிலும் இருக்கின்றன. அதற்காக புகார் கொடுக்கும் எல்லோரையும் குற்றவாளிகள் போல நடத்த முடியாது.

பாலியல் சீண்டல் செய்யும் ஆட்கள் அடிப்படையில் கோழைகள். அதனால்தான் அவர்கள் தம்மிலும் மிக பலவீனமான ஆட்களை தெரிவு செய்கிறார்கள். இத்தகைய குற்றச்சாட்டுக்களை நேர்மையோடும் கரிசனத்தோடும் அனுகுவதன் வாயிலாக நாம் எதிர்காலத்தில் பல பாலியல் குற்றங்களை தடுக்க முடியும். ஒப்பீட்டளவில் அதன் எதிர்மறை விளைவுகள் குறைவாகவே இருக்கும்.

எனக்கும் சின்மயியை ஆதரிக்க வேண்டும் எனும் விருப்பம் இல்லை. ஆனால் சின்மயியை எதிர்க்கவேண்டும் எனும் அல்ப நோக்கத்திற்காக ஒரு பெரும் சமூக விரோத செயலை இலகுவாக கடந்துபோக இயலாது. மீ டூ போன்ற இயக்கங்களை இன்னும் செம்மைப்படுத்தவும் இன்னும் பரவலாக கொண்டு செல்லவும் நாம் முயற்சிக்கலாம்.

அதனை பகடி செய்யவோ அல்லது அவளுக்கு நல்லா வேணும் என சாபமிடவோ நான் தயாரில்லை. இவ்விவகாரத்தில் எப்படி எதிர்வினையாற்றுவது என குழப்பத்தில் இருக்கும் நண்பர்களுக்கும் நான் இதையே பரிந்துரைக்கிறேன்.

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

தாய் பாகம் 11 : உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள்

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 11

றுநாள் புகின், சமோய்லவ், சோமவ் முதலியவர்களையும் வேறு ஐந்து பேர்களையும் கைது செய்துவிட்டதாகத் தெரியவந்தது. அன்றிரவில் பியோதர் மாசின் பாவெலின் வீட்டிற்கு வந்தான். அவனது வீட்டிலும் சோதனை நடந்திருக்கிறது. அந்தச் சோதனையால், தான் ஒரு வீரனாகிவிட்டதாகக் கருதி மிகவும் சந்தோசப்பட்டுக் கொண்டிருந்தான்.

மாக்சிம் கார்க்கி

”நீ பயந்துவிட்டாயா, பியோதர்?” என்று கேட்டாள் தாய்.

அவன் வெளிறிப் போனான்; முகம் கடுகடுத்தது; மூக்குத் துவாரங்கள் நடுநடுங்கின.

“அந்த அதிகாரி என்னை அடித்துவிடுவான் என்று நான் பயந்தேன். அவன் பூதாகாரமாக இருந்தான். கரிய தாடி மயிரடர்ந்த கைகள். கண்களே இல்லாது போனவன் மாதிரி கறுப்பு மூக்குக் கண்ணாடி வேறு மாட்டியிருந்தான். அவன் ஆங்காரமாகச் சத்தமிட்டு, தரையைக் காலால் மிதித்தான். ‘உன்னை நான் சிறையில் போடுவேன்’ என்று கத்தினான். என்னை இதுவரையிலும் யாரும் அடித்ததில்லை. என் தாயும் தந்தையும் கூட அடித்ததில்லை. நான் அவர்களுக்கு ஒரே பிள்ளை; செல்லப்பிள்ளை.”

அவன் கண்களை ஒரு கணம் மூடினான். உதடுகளைக் கடித்துக்கொண்டான்; இரண்டு கைகளாலும் தலைமயிரைப் பின்புறமாகத் தள்ளிவிட்டுக்கொண்டான். பிறகு செக்கச் சிவந்த கண்களோடு பாவெலைப் பார்த்துச் சொன்னான்

”எவனாவது என்னை அடிக்கத் துணிந்தால் மூமூ அவ்வளவுதான் – நான் ஒரு வாளைப்போல் அவன் மீது பாய்ந்து சாடுவேன், என் பற்களால் கடித்துக் குதறுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னைக் கொன்று தீர்க்கட்டும்; அத்துடன் இந்த உயிர் போகட்டும்!”

”நீ ஒரு நோஞ்சான். சண்டைக்கே லாயக்கில்லை” என்றாள் தாய்.

“இருந்தாலும் சண்டை போடத்தான் செய்வேன்!” என்று அடி மூச்சுக் குரலில் பதிலளித்தான் பியோதர்.

பியோதர் போன பிறகு தாய் பாவெலை நோக்கிச் சொன்னாள்: ”எல்லோரையும்விட இவன்தான் முதலில் ஓடப்போகிறான்.”

பாவெல் பதில் பேசவில்லை .

சில நிமிட நேரத்தில், சமையலறைக்கு அடுத்துள்ள வாசற் கதவு திறக்கப்பட்டது. ரீபின் உள்ளே வந்தான்.

‘வணக்கம்’ என்று இளஞ்சிரிப்போடு சொன்னான் அவன். “நான் பழையபடி வந்துவிட்டேன். நேற்று ராத்திரி அவர்கள் என்னைக் கொண்டு வந்தார்கள்; இன்று நானாக வந்திருக்கிறேன். அவன் பாவெலின் கையைப் பிடித்துக் குலுக்கினான்; பெலகேயாவின் தோளில் கையைப் போட்டுக்கொண்டான்.

”எனக்குத் தேநீர் கிடைக்குமா” என்று கேட்டான்.

அடர்ந்து வளர்ந்த கரிய தாடியும், கறுத்த கண்களும் கொண்ட அவனது அகன்ற பழுப்பு முகத்தைக் கண்களால் மெளனமாய் அளந்து நோக்கினான் பாவெல். அவனது அமைதியான பார்வையில் ஏதோ ஓர் அர்த்தம் தொனித்தது.

தாய் தேநீருக்குத் தண்ணீர் போடுவதற்காக அடுக்களைக்குச் சென்றாள். பின் உட்கார்ந்து, தனது முழங்கைகளை மேஜை மீது ஊன்றி பாவெலையே பார்த்தான்.

”எவனாவது என்னை அடிக்கத் துணிந்தால் மூமூ அவ்வளவுதான் – நான் ஒரு வாளைப்போல் அவன் மீது பாய்ந்து சாடுவேன், என் பற்களால் கடித்துக் குதறுவேன். அவர்கள் வேண்டுமானால் என்னைக் கொன்று தீர்க்கட்டும்; அத்துடன் இந்த உயிர் போகட்டும்!

“சரி” என்று ஏதோ ஒரு சம்பாஷணையில் குறுக்கிட்டுப் பேசும் தோரணையில் பேச ஆரம்பித்தான் அவன், “உன்னிடம் நான் ஒளிவு மறைவில்லாமல் சொல்ல விரும்புகிறேன். உன்மீது கொஞ்ச காலமாய் எனக்கு ஒரு கண்தான். நானும் உனக்குப் பக்கத்து வீட்டிலேதான் குடியிருக்கிறேன். உன் வீட்டுக்கு நிறையப் பேர் வந்து போவதைப் பார்த்திருக்கிறேன். ஆனால் குடிப்பதைக் காணோம், கூச்சலையும் காணோம். அதுதான் முதல் காரணம். கலாட்டா பண்ணாமல் இருக்கிறவர்களை எல்லாரும் உடனே கவனிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஏனடா இப்படி இருக்கிறார்கள்? என்று அதிசயப்படுகிறார்கள். நான் ஒதுங்கி வாழ்கிறேனா, அது அவர்கள் கண்களை உறுத்திவிட்டது!”

அவனது பேச்சு அமைதியாகவும் அழுத்தமாகவும் ஒலித்தது. பேசும்போது அவன் தனது கரிய கரத்தால் தாடியை வருடிவிட்டுக்கொண்டே, பாவெலின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான்.

“ஊரில் உன்னைப்பற்றி எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். உதாரணமாக, என் எஜமான் உன்னை ஒரு மதத் துரோகி என்கிறார். நீ தான் தேவாலயத்துக்கே போவதில்லையே. நானும் போகவில்லை. பிறகு அந்தப் பிரசுரங்கள் வந்து சேர்ந்தன. அதுவும் உன் வேலையா?”

“ஆமாம்” என்றான் பாவெல்.

“நீ என்ன சொல்கிறாய்?” என்று சமையலறையிலிருந்தவாறு தலையை நீட்டிக்கொண்டு வந்து கேட்டாள் அவனது தாய். ”அதை நீ மட்டுமே செய்யவில்லை!”

பாவெல் சிரித்தான்; ரீபினும் சிரித்தான்.

”ரொம்ப சரி” என்றான் ரீபின்.

தனது வார்த்தைகளை அவர்கள் மதியாததைக் கண்டு மனம் புண்பட்ட மாதிரி சிணுங்கிக்கொண்டு உள்ளே போய்விட்டாள் தாய்.

”அந்தப் பிரசுரங்கள் இருக்கிறதே. அருமையான வேலை. மக்களைத் தூண்டிவிட்டுவிட்டன; மொத்தம் பத்தொன்பது. இல்லை?”

“ஆமாம்” என்றான் பாவெல்.

”அப்படியென்றால் நான் அத்தனையையும் படித்துவிட்டேன். அதிலுள்ள சில விஷயங்கள் தெளிவாக இல்லை; சில தேவையில்லாதவை. ஆனால், எவ்வளவோ விஷயங்களை ஒரு மனிதன் சொல்ல வேண்டியிருக்கும் போது இப்படி ஒன்றிரண்டு தப்பிப்போவது சகஜம் தான்.”

ரீபின் தனது வெள்ளைப் பற்கள் வெளியே தெரியும் வண்ணம் புன்னகை செய்தான்.

பிறகுதான் சோதனை நடந்தது. அதுதான் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. நீயும் அந்த ஹஹோலும் நிகலாயும் நீங்கள் எல்லாரும்……”

சொல்வதற்குச் சரியான வார்த்தை வாய்க்கு வராமல், அவன் பேச்சை நிறுத்திவிட்டு ஜன்னலுக்கு வெளியே பார்த்தான்; மேஜை மீது கைவிரல்களால் தாளம் கொட்டினான்.

“நீங்கள் எல்லாரும் உங்கள் உறுதியைக் காட்டிவிட்டீர்கள் மூமூஓ. பெரியவர்களே, உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள், நாங்கள் எங்கள் வழியில் போகிறோம் என்று சொல்வது மாதிரி இருந்தது. அந்த ஹஹோல் ரொம்ப அருமையான ஆசாமி. தொழிற்சாலையிலே அவன் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்போதெல்லாம் நான் எனக்குள் நினைத்துக்கொள்வேன் – இந்த ஆசாமியை எதுவும் அசைக்க முடியாது. சாவு ஒன்றுதான் இவனைச் சரிக்கட்டும். உருக்கினாலான பிறவி இவன்!  பாவெல், நான் சொல்வது உண்மைதானே?”

“ஆமாம்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னான் பாவெல்.

சோகத்தைத் தாங்கித் திரிவதற்கு நாம் பழகிப்போய்விட்டோம். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் தங்கள் கண்களை இருட்டடிப்புச் செய்து கொள்வதில்லை. சிலர் தாங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறார்கள்.

“நல்லது! என்னைப் பார். எனக்கு நாற்பது வயதாகிறது. உன்னை விட இரட்டை வயது. உன்னை விட இருபது மடங்கு அனுபவம் எனக்கு உண்டு. மூன்று வருஷத்திற்கு மேல் நான் பட்டாளத்தில் வேலை பார்த்தேன். இரண்டு தடவை கல்யாணம் பண்ணினேன். முதல் தாரம் செத்துப்போனாள். இரண்டாவது பெண்டாட்டியை நானே விரட்டியடித்துவிட்டேன். காகஸஸிலும் இருந்திருக்கிறேன். துகபர்தசி(1)களையும் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு வாழ்க்கையைச் சமாளிக்கத் தெரியாது. தெரியவே தெரியாது, தம்பி!”

அவனது நேரடியான பேச்சை ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தாள் தாய். இத்தனை வயதான ஒரு மனிதன் வந்து தனது மகனிடம் அவனது உள்ளத்தில் கிடந்ததையெல்லாம் திறந்து கொட்டிப் பேசுவதைக் காண்பது அவளுக்கு இன்பம் அளித்தது. ஆனால், பாவெல் நடந்து கொள்ளும் முறையோ சுமூகமாக மாற்றியிருப்பது போல் அவளுக்குத் தோன்றியது. எனவே தானாவது அவனுக்கு அன்பு காட்டி, அந்த வயோதிகனின் பேச்சுக்கு ஈடுகட்ட வேண்டும் என்று நினைத்தாள்.

“மிகயீல் இவானவிச்! ஏதாவது சாப்பிடுகிறாயா?” என்று கேட்டாள்.

“கேட்டதே போதும், அம்மா. நான் சாப்பிட்டாயிற்று. பாவெல், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டுமோ, அப்படி இருக்கவில்லை என்பதுதானே உன் எண்ணம்?”

பாவெல் இடத்தைவிட்டு எழுந்து, கைகளை முதுகுப்புறமாகக் கட்டிக்கொண்டு மேலும் கீழும் நடந்தான். .

வாழ்க்கை சரியான பாதையில்தான் போகிறது” என்று பேச ஆரம்பித்தான் பாவெல்; உங்களைக் கூடத் திறந்த மனத்தோடு இங்கு கொண்டு வந்து சேர்க்கவில்லையா? வாழ்நாள் முழுவதும் உழைத்துக்கொண்டிருக்கும் நம் போன்றவர்களை அது கொஞ்சம் கொஞ்சமாக ஒன்று சேர்க்கிறது; நம் அனைவரையும், ஒவ்வொருவரையும் ஒன்று சேர்க்கும் காலமும் வந்தே தீரும். வாழ்க்கை என்பது நமக்கு இன்று ஒரு பெரும் பாரமாகவும் அதீதமாகவும் இருக்கிறது. ஆனால் அதே வாழ்க்கைதான் தனது கசப்பான உண்மையை நமது கண்ணுக்கு முன்னால் காட்டுகிறது: வாழ்க்கைப் பிரச்சினைகளை நாம் எப்படி விரைவில் தீர்ப்பது என்பதற்கும் அதுவே வழிகாட்டுகிறது.”

”அப்படிச் சொல்லு, அதுதான் உண்மை” என்றான் ரீபின். ”மக்கள் அனைவரையும் பரிபூரணமாகச் சீர்படுத்தியே ஆகவேண்டும். ஒரு மனிதன் அசுத்தமாயிருந்தால், அவனைக் கொண்டுபோய்க் குளிப்பாட்டி, துடைத்துத் துவட்டி, அவனுக்குச் சுத்தமான ஆடைகளை அணிவித்தால் சரியாகிவிடுவான். கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பான். இல்லையா? ஆனால், அவன் உள்ளத்தைச் சுத்தப்படுத்துவது எப்படி அதுதான் சங்கதி!”

பாவெல் தொழிற்சாலையைப் பற்றியும் தொழிற்சாலை முதலாளிகளைப் பற்றியும், உலகின் பிற பாகங்களிலுள்ள தொழிலாளர்கள் எப்படித் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள் என்பது பற்றியும் உணர்ச்சிமயமாகப் பேசினான். சில சமயங்களில் பாவெலின் பேச்சுக்கு முத்தாய்ப்பு வைப்பது மாதிரி ரீபின் மேஜை மீது குத்துவான். இடையிடையே அவன் சொன்னான்.

”ஆமாம். அதுதான் சங்கதி!” ஒருமுறை சிரித்துக்கொண்டே சொன்னான்:

“நீ இன்னும் சின்னப்பிள்ளை. மனிதர்களைச் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை.”

”சின்னவன் பெரியவன் என்று பேச வேண்டாம்” என்று ரீபினின் முன்னால் வந்து நின்றுகொண்டு கடுமையாகச் சொன்னான் பாவெல்;

“யார் சொல்வது சரி என்பதைப் பார்ப்போம்!”

”அப்படியென்றால் – நீ சொல்கிறபடி பார்த்தால் – நம்மை ஏமாற்றுவதற்காகத்தான் கடவுளைக் கூட உண்டாக்கியிருக்கிறார்கள் என்றாகிறது. இல்லையா? ஹும். எனக்கும் அப்படித்தான்படுகிறது. நமது மதம் – ஒரு போலி, பொய்.”

இந்தச் சமயத்தில் தாய் வந்து சேர்ந்தாள். அவளுக்கோ கடவுள் நம்பிக்கை அதிகம். அந்த நம்பிக்கை அவளைப் பொறுத்தவரையில் புனிதமானது: உயிருக்குயிரானது. எனவே தனது மகன் கடவுளைப் பற்றியோ கடவுள் நம்பிக்கையைப் பற்றியோ ஏதாவது பேச ஆரம்பித்தால், அவள் தன் மகனைக் கூர்ந்து பார்ப்பாள்; கூரிய நாத்திக வார்த்தைகளால் தன் இதயத்தைக் கீற வேண்டாம் என்று தன் மகனிடம் மௌனமாய்க் கெஞ்சுவது போல் இருக்கும் அந்தப் பார்வை. எனினும் அவனது நாத்திகத்திற்குப் பின்னால் நம்பிக்கை ஒன்றிருப்பதாக அவளுக்குப்படும். அந்த எண்ணமே அவளை ஓரளவு சாந்தப்படுத்தும்.

“அவன் எண்ணங்கள் எனக்கு எப்படிப் புரியும்?” என்று தனக்குள் நினைத்துக்கொள்வாள் தாய்.

கடவுள் தன் உருவம் போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்னம்மா அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார்; மனிதன் கடவுளைப் போல் இருக்கிறான் என்பதுதானே. ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை, காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது.

பாவெலின் பேச்சு, வயதான ரீபினின் மனதைக் கூடப் புண்படுத்தி இருக்கும் என்று அவள் கருதினாள். ஆனால், ரீபினே அமைதியுடன் பாவெலை நோக்கி அது பற்றிக் கேட்டதைக் கண்டு அவளால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

“கடவுளைப் பற்றிப் பேசும்போது மட்டும், கொஞ்சம் ஆற அமரப் பேசு, அப்பா!” அவள் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு விட்டு அதிகமான உத்வேகத்தோடு பேசினாள்: ”நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள்! ஆனால் நானோ கிழவி. எனக்கோ, என் கடவுளை என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டு மட்டும் போய்விட்டால், என் துயரத்தைச் சொல்லியழக்கூட ஒரு துணையிராது!”

அவளது கண்களில் கண்ணீர் நிரம்பி நின்றது. தட்டுக்களைக் கழுவும்போது அவளது கைவிரல்கள் நடுங்கின.

“நீங்கள் எங்களைப் புரிந்து கொள்ளவேயில்லை, அம்மா” என்று மெதுவாகச் சொன்னான் பாவெல்.

“எங்களை மன்னித்துக்கொள். அம்மா” என்று மெதுவாக ஆழ்ந்த குரலில் சொன்னான் ரீபின். லேசாகச் சிரித்துக்கொண்டே பாவெலைப் பார்த்தான்.

”இத்தனை வருஷமாய் ஊறிப்போன உன் நம்பிக்கையைப் பிடுங்கியெறிய முடியாது என்பதை நான் மறந்துவிட்டேன்.”

“நீ நம்புகிற இரக்கமும் அன்பும் நிறைந்த கடவுளைப்பற்றி நான் பேசவில்லை” என்று தொடர்ந்தான் பாவெல்; “ஆனால் நமது குருக்கள் குண்டாந்தடி மாதிரி காட்டி நம்மைப் பயமுறுத்துகிறார்களே அந்தக் கடவுளை, ஒரு சிலரின் கொடுமைக்கு மக்களெல்லாம் பணிந்து கொடுக்க வேண்டும் என்று எந்தக் கடவுளின் பேரால் நம்மை நிர்ப்பந்தப்படுத்துகிறார்களோ அந்தக் கடவுளைப் பற்றித்தான், அம்மா, நான் பேசுகிறேன்.”

அதுதான் சங்கதி!” என்று மேஜையை அறைந்து கொண்டே சொன்னான் ரீபின். “அவர்கள் உண்மையான கடவுளைக் கூட நம்மிடமிருந்து பிடுங்கிக் கொண்டுவிட்டார்கள்! நம்மைத் தாக்குவதற்கு எல்லாவற்றையும் தமது கைக் கருவியாக மாற்றிக் கொண்டுவிட்டார்கள்! அம்மா, ஒரு கணம் சிந்தித்துப்பார். கடவுள் தன் உருவம் போலவே மனிதனையும் படைத்தான் என்கிறார்களே, அதற்கு என்னம்மா அர்த்தம்? கடவுள் மனிதனைப்போல் இருக்கிறார்; மனிதன் கடவுளைப் போல் இருக்கிறான் என்பதுதானே. ஆனால், இன்றோ நாம் கடவுள் மாதிரி இல்லை, காட்டு மிருகங்கள் மாதிரி இருக்கிறோம். தேவாலயத்தில் பூச்சாண்டிதானம்மா இருக்கிறது; நாம் நமது கடவுளை மாற்றியாக வேண்டும்: புனிதப்படுத்தியாக வேண்டும்; அவர்கள் கடவுளைப் பொய்யாலும் புனை சுருட்டாலும் மூடி மறைத்துவிட்டார்கள், நமது உள்ளங்களைக் கொன்று குவிப்பதற்காக, அவர்கள் கடவுளது திரு உருவத்தையே பாழாக்கிவிட்டார்கள், அம்மா !”

படிக்க:
கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்

அவன் அமைதியாகவே பேசினான். எனினும் அவனது பேச்சின் ஒவ்வொரு வார்த்தையும் காதில் பலத்த அறைபோலத் தாக்கி ஒலித்தது. கறுத்த தாடிக்குள்ளாக தெரியும் அவனது முகத்தின் நிழலாடிய துயரத்தைக் கண்டு பயந்தாள் அவள். அவனது கண்களின் இருண்ட ஒளியை அவளால் தாங்க முடியவில்லை; அந்த ஒளி அவளது இதயத்தில் ஏதோ ஒரு வேதனையை எழுப்பியது.

“இல்லை, இல்லை. நான் இங்கிருந்து போய்விடுகிறேன்” என்று தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள் தாய்; “இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கவே எனக்குச் சக்தி போதாது, போதாது!”

அவள் சமையலறைக்குள் விரைந்து சென்றுவிட்டாள். அவள் சென்றவுடன் ரீபின் பாவெலை நோக்கிச் சொன்னான். “பார்த்தாயா, பாவெல்? இந்த விஷயங்களுக்கு ஆதாரம் இதயமே தவிர, மூளை அல்ல. மனித மனத்தில், வேறு எதுவும் இல்லாத ஓர் இடத்தில், இந்த இதயம் இருக்கிறது.”

”அறிவுதான் மனிதனை விடுதலை செய்யும்” என்று உறுதியோடு சொன்னான். பாவெல்.

“ஆனால் அறிவு மனிதனுக்குப் பலம் தருவதில்லை” என்று உரக்கச் சொன்னான் ரீபின். “இதயம்தான் மனிதனுக்குப் பலம் தருகிறது. அறிவு அல்ல.”

தாய் தன் ஆடையணிகளைக் களைந்து மாற்றிவிட்டு பிரார்த்தனைகூடச் செய்யாமல் படுக்கப் போய்விட்டாள். அவளுக்குக் குளிராகவும், வெறுப்பாகவுமிருந்தது. ஆரம்பத்தில் புத்திசாலியாகவும், மனதுக்குப் பிடித்தவனாகவும் தோன்றிய ரீபின் மீது இப்போது பகைமை உணர்ச்சி உண்டாயிற்று.

அவன் பேசுவதைக் கேட்ட சமயத்தில் தனக்குள் நினைத்துக்கொண்டாள். “மதத்துரோகி குழப்பவாதி இவன் ஏன் இங்கு வந்து தொலைந்தான்?”

ஆனால் அவனோ நம்பிக்கை தோய்ந்த குரலில் அமைதியுடன் பேசிக்கொண்டே போனான்:

”அந்தப் புனிதமான இடத்தைக் காலியாக விடக்கூடாது. பாவெல். மனித இதயத்தில் கடவுள் குடியிருக்கும் இடம் ஒரு வேதனை இல்லம். அங்கிருந்து அவரைப் பிடுங்கியெறிந்தால், அந்த இடத்தில் படுகாயம் ஏற்படும். எனவே அவ்வில்லத்தில் ஒரு நம்பிக்கையை, மனித குலத்தின் நண்பனான ஒரு புதிய கடவுளைப் படைக்க வேண்டும். அது தான் சங்கதி ”

”கிறிஸ்து இருந்தாரே!” என்றான் பாவெல்.

“கிறிஸ்துவுக்கு ஆத்ம பலம் கிடையாது. ‘இந்தக் கோப்பை என் கையை விட்டுப் போகட்டும்’ என்றார் அவர். அவர் சீசரை ஆமோதித்து ஒப்புக்கொண்டார். மனிதர்களிடையே மனித ஆட்சியைக் கடவுள் எப்படி ஆமோதிக்க முடியும்? கடவுள்தான் சர்வ வல்லமையும் பொருந்தியவராயிற்றே. அவர் தமது ஆத்மாவைத் துண்டுபடுத்திப் பேச முடியாது. இதுதான் கடவுள் சித்தம். இதுதான் மனித சித்தம் என்று பாகுபாடு செய்ய முடியாது. ஆனால் கிறிஸ்துவோ வியாபாரத்தை ஒப்புக்கொண்டார். திருமணத்தை ஒப்புக்கொண்டார். மேலும், அத்தி மரத்தை அவர் சபித்தது இருக்கிறதே – அது தவறான காரியம். கனி தராதது மரத்தின் தவறா? அது போலவே மனத்தில் நலம் விளையாததற்கு அந்த மனம் பொறுப்பல்ல. எனது இதயத்தில் நானாகவா, விதையூன்றித் தீமையை வளர்த்தேன்?”

இருவரது பேச்சுக்களும் ஒன்றையொன்று கல்விப்பிடிப்பது மாதிரி உணர்ச்சி வசமான போராட்டத்தில் ஈடுபட்டிருந்தன. பாவெல் மேலும் கீழும் நடந்துலாவும்போது தரையில் காலடி ஓசை எழும்பியது. பாவெல் பேசும்போது வேறு எந்தச் சப்தமும் ஓங்கி ஒலிக்கவில்லை. அவனது குரலே உயர்ந்து ஒலித்தது. ரீபினோ அமைதியும் ஆழமும் நிறைந்த குரலில் பேசினான். அவன் பேசும்போது, கடிகாரப் பெண்டுல ஓசை கூட வெளியே சுவர்களில் விழுந்து வழியும் பனிமழையின் ஓசையும்கூட, தாயின் செவியில் நன்றாகக் கேட்டன.

”நான் என் பாஷையிலே, ஒரு கொல்லனின் பாஷையிலேயே பேசுகிறேன். கடவுள் ஒரு நெருப்பு! அவர் இதயத்தில்தான் வாழ்கிறார். ‘பூர்வத்தில் சொல்தான் பிறந்தது; அந்தச் சொல்தான் கடவுளாயிருந்தது’ என்கிறார்கள். எனவே சொல் தான் பரிசுத்த ஆவி!” என்றான் ரீபின்.

“இல்லை, சொல்தான் அறிவு” என்று அழுத்திக் கூறினான் பாவெல்,

”ரொம்ப சரி. அப்படியென்றால், கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் – ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!”

தாய் தூங்கிப் போய்விட்டாள்; ரீபின் போனது அவளுக்குத் தெரியாது.

ஆனால் அது முதற்கொண்டு பின் அங்கு அடிக்கடி வர ஆரம்பித்தான். அவன் வரும் சமயத்தில் பாவெலின் பிற தோழர்கள் யாரேனும் இருந்தால், அவன் தன் பாட்டுக்கு ஒரு மூலையிலே உட்கார்ந்து ஒன்றுமே பேசாமலிருப்பான். எப்போதாவது இடையிலே ”அதுதான் சங்கதி!’ என்று ஒரு வார்த்தையை மட்டும் போட்டுவிட்டுச் சும்மா இருந்துவிடுவான்.

ஒரு நாள் அவன் அங்கு கூடியிருந்த கூட்டத்தைத் தனது இருண்ட பார்வையால் நோட்டம் பார்த்துவிட்டுச் சோர்ந்த குரலில் பேசினான்.

“நிலைமை இன்று இப்படி இருக்கிறது என்பதைப் பற்றித்தான் நாம் பேச வேண்டுமே ஒழிய, அது நாளை எப்படி இருக்கும் என்பதைப் பற்றி அல்ல. நிலைமை எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது யாருக்குத் தெரியும்? மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டால், அவர்களே தங்களுக்கு எது நல்லது என்பதைத் தீர்மானித்துக் கொள்வார்கள். அவர்களைக் கேட்காமலேயே அவர்கள் தலைமீது வேண்டாத விரும்பாத விஷயங்களையெல்லாம் புகுத்தியாயிற்று. அவை போதும்! இனி அவர்களாகவே சிந்தித்துப் பார்க்க அவகாசம் கொடுப்போம். வேண்டுமென்றால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை, கல்வியை, கற்ற அறிவை, உதறித் தள்ளிவிட்டுப் போகட்டும், தேவாலயத்திலுள்ள கடவுளைப்போல், எல்லாமே தமக்கு எதிராகத்தான் அணிவகுத்து நிற்கின்றன என்பதை அவர்களே உணரட்டும். புத்தகங்களை அவர்கள் கையிலே கொடுங்கள். அவர்களே விடை கண்டு கொள்ளட்டும். ஆமாம்!”

ரொம்ப சரி. அப்படியென்றால், கடவுள் இதயத்தில் குடியிருக்கிறார், அறிவிலும் குடியிருக்கிறார் – ஆனால், நிச்சயமாக தேவாலயத்தில் அல்ல; தேவாலயம் கடவுளின் கல்லறை; கடவுளின் சமாதி!

ரீபினும் பாவெலும் தனியாக மட்டும் இருக்க நேர்ந்தால், அவர்கள் மூச்சுவிடாமல், முடிவில்லாமல் விவாதம் பண்ணிக் கொண்டேயிருப்பார்கள். எனினும் விவாதம் செய்யும்போது அவர்கள் தங்கள் நிதானத்தை இழந்து உணர்ச்சி வசப்படுவதில்லை. தாய் விவாதத்தை ஆர்வத்தோடு கேட்பாள். அவர்கள் என்னதான் சொல்கிறார்கள் என்பதை அறிய அரும்பாடு பட்டுக்கொண்டு, ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்பாள். சமயங்களில் அகன்ற தோளும் கரிய தாடியும் கொண்ட ரீபினும், நெடிது வளர்ந்த பலசாலியான தன் மகனும் கண்மூடித்தனமாக, குருடாகப் போவதாக அவளுக்குப் படும். அவர்கள் முதலில் ஒரு திசையில் செல்வார்கள். பிறகு மறு திசைக்குச் செல்வார்கள். போக்கிடம் தெரியாது. பிரச்சினைக்கு மார்க்கம் காணாது அவர்கள் கையால் நிலந்தடவிச் செல்வதாக, ஓரிடத்திலிருந்து வேறிடத்துக்கு மாறுவதாக, தாம் செல்லும்போது தமது கைப்பொருளைத் தவறவிட்டு, அவற்றைக் காலால் மிதித்துக்கொண்டு நடப்பதாகத் தோன்றும். அவர்கள் எங்கெங்கோ மோதிக்கொண்டார்கள். எதை எதையோ தொட்டு உணர்ந்து கொண்டார்கள், தங்களது கொள்கையையும் நம்பிக்கையையும் இழந்துவிடாமல் எதை எதையோ தூக்கிவிட்டெறிந்தார்கள்……

அவர்கள் எத்தனை எத்தனையோ பயங்கரமான, துணிச்சலான வார்த்தைகளைக் கேட்டுப் பழகுவதற்கு அவளுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். என்றாலும், அந்த வார்த்தைகள் ஆரம்பத்தில் அவளைத் தாக்கி உலுக்கியது போல், பின்னர் உலுப்பவில்லை. அந்த வார்த்தைகளை உதறித்தள்ள அவள் கற்றுக்கொண்டுவிட்டாள். சமயங்களில் கடவுளை மறுத்துச் சொல்லும் வார்த்தைகளில் கூட, கடவுள் நம்பிக்கை தொனிப்பதை அவள் கண்டாள். அப்படிக் காணும்போது அவள் அமைதியாக, எல்லாவற்றையும் மறந்து, மன்னித்துத் தனக்குத் தானே சிரித்துக்கொள்வாள். அவளுக்கு ரீபினைப் பிடிக்காவிட்டாலும், இப்போது அவள் உள்ளத்தில் அவன் பகைமை உணர்ச்சியைக் கிளப்பவில்லை.

ஒவ்வொரு வாரமும் அவள் வெளுத்த துணிமணிகளையும், புத்தகங்களையும் எடுத்துக்கொண்டு, ஹஹோலிடம் கொடுப்பதற்காகச் சிறைக்குச் செல்லுவாள். என்றாலும் ஒரே ஒரு தடவைதான் ஹஹோலைக் கண்டு பேச அவளை அனுமதித்தார்கள்.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !

திரும்பி வந்தபோது அவனைப்பற்றி அன்போடு அவள் பேசினாள். “அவன் கொஞ்சங்கூட மாறிவிடவில்லை. எல்லோரிடமும் நல்லபடியாகவே பழகுகிறான். அனைவரும் அவனிடம் தமாஷாகப் பேசுகிறார்கள். அவனுக்குக் கஷ்டமாய் மிகவும் கஷ்டமாய்த் தானிருக்கிறது. இருந்தாலும் அவன் அதை வெளியில் காட்டிக்கொள்வதே இல்லை.”

“அதுதான் சரி” என்று பேச ஆரம்பித்தான் ரீபின், ”நம்மையெல்லாம் சோகம்தான் மூடிப் போர்த்தியிருக்கிறது: நாம் சோகத்துக்குள்தான் இருக்கிறோம். இருந்தாலும், சோகத்தைத் தாங்கித் திரிவதற்கு நாம் பழகிப்போய்விட்டோம். இதில் பெருமைப்பட்டுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாரும் தங்கள் கண்களை இருட்டடிப்புச் செய்து கொள்வதில்லை. சிலர் தாங்களாகவே கண்களை மூடிக்கொள்கிறார்கள். அதுதான் சங்கதி! நாம் முட்டாள்தனமாயிருந்தால், நாம்தான் அதன் பலாபலனை அனுபவித்துத் தீர வேண்டும்!”

(தொடரும்)

அடிக் குறிப்புகள்:
(1) துகபர்தசி – ஒரு சமயக் கட்சியினர் — மொ – ர்.

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

 

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

(பாகம் – 5) இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?
(பாகம் – 6)நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்
(பாகம் – 7)  பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?
(பாகம் – 8) பாதி மனம் காதலிக்கிறது .. பாதி மனம் பகைக்கிறது ..
(பாகம் – 9) ஜாக்கிரதையாயிரு , இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது
(பாகம் – 10) நஹோத்கா , உம்மை நான் கைது செய்கிறேன் …

நீரோட்டம் எப்படி போகுதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகணும் !

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையம் சென்னையின் பழம்பெரும் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. இங்கிருந்து இந்தியாவின் எந்த மூலைக்கும் ரயிலில் பயணிக்கலாம். சரக்கு உற்பத்தி பொருட்களை எற்றிச் செல்லலாம். அந்த அளவிற்கு சமூக முன்னேற்றம் அடைந்துள்ளதில் வியப்பில்லை. ஆனால் இன்றும் சென்னையில் ஆங்காங்கே மாட்டு வண்டிகளை பார்க்க முடிகிறதே… அதுதான் ஆச்சர்யம்.

நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களே இந்த நெரிசலில் ஊர்ந்து செல்வதற்கு திணறும்பொழுது எப்படி இவர்கள் இதனை சமாளிக்கிறார்கள்? ஒரு காலத்தில் புகழ்பெற்று விளங்கியவை எல்லாம் காலப்போக்கில் மெல்ல காணாமல் போய்விடுகின்றன. காலச்சக்கரத்தின் ஓட்டத்திற்கு ஏற்பவரும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு மத்தியில் ஈடுகொடுக்க முடியாமல் மங்கி விடுகின்றன. அப்படி ஒரு காலத்தில் சென்னையில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருந்த ஜட்கா, மாட்டு வண்டிகள், ரிக்‌ஷாக்கள் போன்ற அனைத்தும் நவீன வாகனங்களின் வருகைக்கு பின் காணாமலே போய்விட்டன.

“சென்னையில் உள்ள முக்கிய நகரங்களுக்கு இடையில் சாலைகள் போடப்பட்ட பின்னர், போக்குவரத்து அதிகரிக்கத் தொடங்கியது. ரயில் கண்டுபிடிக்கப்பட்டு ராயபுரம், சென்ட்ரல் ரயில் நிலையங்கள் எல்லாம் வந்த பிறகு, வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வருபவர்களின் எண்ணிக்கை பெருகியது. ரயில் நிலையங்களில் வந்திறங்குபவர்களை அழைத்துச் செல்லும் வாகனம்தான் ஜட்கா மற்றும் ரிக்‌ஷாக்கள்.

படிக்க :
வெட்டிவேர் வாசம் – உள்ளே வியர்வையின் வீச்சம்!
சென்னை பாரீஸ் கார்னர் : இதோ பாக்குறியே இந்த ரோடு தான் எங்க வீடு !

ஒற்றை குதிரை பூட்டிய ஒரு சிறிய கூண்டு வண்டிதான் ஜட்கா வண்டி என்பார்கள். மாடு பூட்டிய சில ஜட்கா வண்டிகளும் ஆரம்பத்தில் இருந்தன. ஆனால் குதிரைகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் இவை சீக்கிரமே வழக்கொழிந்துவிட்டன”.

சென்னைக்கு வந்த ஆங்கிலேயர்களும் இந்த ஜட்கா வண்டியில்தான் பயணித்திருக்கிறார்கள். “எலட்ரிக் ட்ராம்கள்” வந்த பிறகு அனைத்தும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டன. இருப்பினும் மாட்டு வண்டிகள் மட்டும் சரக்கு பொருட்களை ஏற்றுவதற்கு பயன்பட்டு வந்தன. கிராமப்புறங்களில் அதிகளவில் விவசாயத்திற்கும், நகரங்களில் ஒற்றை மாட்டு வண்டிகள் சரக்கு ஏற்றவும் பயன்பட்டு வருகின்றன.

சென்னையின் வால்டாக்ஸ் சாலையில் இருக்கும் தனலட்சுமி ரைஸ் மில் எதிரில் உள்ள காலியிடத்தில் மூன்று நான்கு மாட்டு வண்டிகள் நிறுத்தி விட்டு, மாடுகளை அந்த வண்டியிலே கட்டி வைத்திருந்தனர்.

மாடுகள் அசைபோட்டுக்கொண்டே தீனியை எதிர்பார்த்திருக்க, அருகே வளர்ந்திருந்த பெரிய மர நிழலில் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர் மாட்டு வண்டி தொழிலாளர்கள்.  பகல் பதினோறு  மணி.. உண்ட மயக்கம்…… தூக்கத்தில் தெரிய…… அவர்களை வலிந்து எழுப்பினோம்…..

திடுக்கென்று எழுந்த அவர், எங்களைப் பார்த்ததும் தெரிந்துகொண்டார்போல…… “சொல்லுங்க இன்னா வேணும்….” என்றார்.

“இல்ல… லாரி, மினி வண்டி எல்லாம் வந்துடுச்சி…. இந்த காலத்துல அதுவும் சென்னையில இந்த வண்டிய வச்சிக்கிட்டு இருக்கிங்களே எப்படி”?

“அதுக்கு இன்னா பன்றது… தம்பி.. நம்ம பொழப்பு அப்படி இருக்குது என்றார் துக்கக் கலக்கத்துடன்…. அவர் பெயர் தாஸ்.  தாஸின் சொந்த ஊர் மரக்காணம்.

திரு தாஸ்

“முப்பது வருஷத்துக்கு முன்னாடியே சென்னைக்கு வந்துட்டேன். வந்ததுல இருந்து இந்த வேலைதான்… அப்பப்ப கெடக்கிற வேலைய செஞ்சி குடும்பத்த காப்பாத்துறேன்.

எங்களோட வேலையே ஹார்டுவேர் கம்பனியில இருக்க கம்பிய ஏத்திகிட்டுதான் போகனும். பக்கத்துல யாராவது பாக்ஸ் தூக்க கூப்பிட்டா லோடு இல்லாதப்ப போவோம். வேற எந்த வேலையும் தெரியாது. அதனாலதான் இதுலயே கெடந்து காலத்த ஓட்டிடலாம்னு இருக்கேன்.

ஒரு நாளைக்கு 400,500 ரூபா கெடைக்கும். இந்த வண்டியில நாலு டன் வரைக்கும் இரும்பு ஏத்த முடியும்..  ஒரு டன்னுக்கு 600,700 வரைக்கும் கொடுப்பாங்க…. ஒரு டன் கம்பிய ஏத்த மூனு ஆள் தேவை. அத மூனா நாங்க பிரிச்சிக்குவோம்.  மாட்டு வண்டிகாரருக்கு ஒரு அமெளண்ட் கொடுத்துடுவோம்.

இந்த ஒத்த மாடு வெல 60,000 வரைக்கும் விக்குறாங்க. இந்த மாட்ட வெலைக்கு கேட்டாங்க. ஓனரு கொடுக்க மாட்டேனு சொல்லிட்டாரு. மாடு வேணும்னா பெங்களூர் போயிட்டுதான் வாங்கி வருவோம். அந்த அளவுக்கு டிமாண்ட்.

இன்னிக்கு இந்த மாட்டு வண்டிக்கு வேலை இருக்குதுன்னா… அதுக்கு ஒரே காரணம்தான்.  லாரியில சரக்க கொண்டு போகனும்னா வாடகை, ஏத்துக்கூலி – இறக்கு கூலின்னு ஏகப்பட்டது ஆயிடும். எங்களுக்கு அப்படி இல்ல. பாதிக்கு பாதிதான் ஆகும்.

அதே மாதிரி எங்க வண்டி சந்து பொந்து எல்லா இடத்துக்கும் போகும். லாரி அப்படி போக முடியாது. நாங்களும் பால்மாறாம கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். சைட், கடை இரண்டு இடத்துக்கும் கொண்டு போயிட்டு இறக்கிடுவோம். மாசம் 15,000 லிருந்து 20,000 வரைக்கும் கெடைக்கும். அத வச்சிதான் எப்படியோ வாழ்க்க போயிட்டு இருக்கு…” என்று சொல்லிகொண்டிருக்கும்போதே மூட்டை இறக்கும் வேலை வந்ததால் அவசரமாக ஓடினார்.

அருகில் இருந்த ராமச்சந்திரன்  ஆர்வமாக பேச ஆரம்பித்தார். “சொந்த ஊர் வானூர். பதினாறு வயசுல இந்த மெட்ராசுக்கு வந்தேன்பா..  இன்னமும் இந்த மாட்டு வண்டியும்… மூட்ட தூக்குறதும் தான் தொழிலு.  எனக்கு தெரிஞ்சி இந்த மாட்டோட வெல… 400 ரூபா 500  ரூபா வரைக்கும் பல்லாவரம் சந்தையில வித்தாங்க. இப்ப நெனச்சிக்கூட பார்க்க முடியாது.

திரு ராமச்சந்திரன்

இவ்ளோ கம்மியான வெலைக்கு மாடு வித்ததா என்ன?

ஆமாம்..ப்பா.. அப்ப எல்லாம் கார்ப்பரேசன்ல குப்பை அள்ளுறதுக்கு மாட்டு வண்டியதான் பயன்படுத்தினாங்க. அந்த மாட்ட எல்லாம் விக்க டெண்டர் விடுவாங்க. அதை ஏலம் எடுத்து கொண்டு வந்து குறைந்த விலைக்கு சந்தையில விப்பாங்க…ப்பா..

அப்ப எல்லாம் மாட்டு வண்டியில மூட்ட அடிச்சினு போனா.. எல்லா செலவும் போக 5 ரூபா கெடக்கும். இப்ப முன்னூறு ரூபா கெடக்கிது.  இருபது ரூபாய்க்கு தவுடும், 150 ரூபாய்க்கு வக்கிலும் வாங்கி போடுவோம். போற இடமெல்லாம் வக்கில் கெடைக்கும். இப்ப எங்கயும் கெடக்கிறது இல்ல. விலையும் ஏறிடுச்சி.

நான் ஓட்டிட்டு இருந்த மாட்டு வண்டி கருவாடு சுமை மட்டும் தான் ஏத்துவோம். ராமேஸ்வரம், தூத்துக்குடியியில இருந்து கருவாடு வரும். அதை ஏத்துறதுக்கு எக்மோர் ரயில்வே ஸ்டேசன்ல போயி காத்து கெடப்போம்.  வண்டிய உள்ள விடமாட்டாங்க; மாடு சானம் போட்டுடும்னு. மாட்ட வெளியில கட்டிட்டு கையால வண்டிய உள்ள இழுத்து போவோம்.

அப்ப கார் மட்டும் தான் உள்ள விடுவாங்க. அவங்களும் டோக்கன் வாங்கிட்டுத்தான் வரனும். எங்களுக்கு எல்லாம் அந்த டோக்கன் கொடுக்க மாட்டங்க. எக்மோர்ல இருந்து  கருவாட்டு மண்டிக்கு ஏத்திகிட்டு வருவோம்.  இப்ப இருக்க மாதிரி வசதி எதுவும் இல்ல. வேலைக்கு போறவங்க எல்லாம் நடந்துதான் போவாங்க.  திருப்பிள்ளை ஏரியாவுல இருந்து மக்க வரிசையா  நிப்பாங்க. அவங்கள எல்லாம் இந்த மாட்டு வண்டியில தான் ஏத்திகிட்டு வருவோம். அதுக்கு 15 காசு வாங்குவோம்.

படிக்க :
மெரினா மூலிகை ஜூஸ் : பிழியப்படும் வாழ்க்கை !
தேன் மிட்டாய் போல இனிக்காது எங்கள் வாழ்க்கை !

நாளடைவுல வண்ணாரப்பேட்டை, யானைகவுனி, சால்ட்கோட்டைன்னு எல்லா இடத்துலயும் மாட்டுவண்டி அதிகமாயிடுச்சி.  ரைஸ்மில்லுல உமி மூட்டை ஏத்துறது, கொத்தால்சாவடிக்கு காய்கறி ஏத்துறது, டான்சி குடோன்ல இருந்து பொருட்களை ஏத்திகிட்டு வருவதுன்னு எல்லாம்  மாட்டு வண்டியில தான்.  இங்க மட்டுமே 75 மாட்டு வண்டிங்க இருந்துச்சி. அப்புறம் காலப்போக்குல எல்லாம் அழிஞ்சிடுச்சி. இப்ப வெறும் 7 வண்டிதான் இருக்கு.

இதுவே நிரந்தரமா இருந்தா போதும்னு… கெடக்கிற வருமானத்தை வச்சிகிட்டு இந்த வாழ்க்கையை ஓட்டிகிட்டு இருக்கேன். பொண்டாட்டி  இறந்துட்டாங்க… புள்ளங்க விட்டுட்டு போயிட்டாங்க….. இந்த ரைஸ் மில் குடோன்ல தான் வாழ்க்கை போயிகிட்டு இருக்கு…. இப்ப இந்த ரைஸ் மில்லும் வேற தொழிலுக்கு மாத்திட்டாங்க….காலத்தின் கட்டாயம்… நீரோட்டம் எப்படி போகிறதோ… அப்படித்தானே நம்ம வாழ்க்கையும் போகனும்…!

அட கடவுளே காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா ? அம்பேத்கர்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு (பகுதி – 6)

IV

துதான் காந்தியம். காந்தியம் என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டு விட்ட நிலையில், காந்தியம் நாட்டின் சட்டமாகுமானால், அதில் தீண்டாத மக்களின் கதி என்னவாக இருக்கும்? என்ற கேள்விக்கு விடை காண்பதற்கு அதிகமாய் மூளையைக் கசக்கிக் கொள்ள வேண்டியதில்லை. இந்துக்களிலேயே மிகக் கீழான இந்துவின் கதியோடு ஒப்பிடுகையில் தீண்டாத மக்களின் கதி எப்படி இருக்கும்? காந்திய சமூக அமைப்பு உருவாகுமானால் தீண்டாத மக்களின் கதி என்னவாக இருக்கும் என்பதைக் காட்டுவதற்கு சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாகி விட்டது. மிகக் கீழான இந்துவும் தீண்டாத மக்களும் பரம்பரைச் சொத்தில்லாத ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்கிற அளவில் தீண்டாத மக்களின் நிலை எந்த விதத்திலும் மேம்பட்டிருக்க முடியாது. ஏதாவது வேறுபாடு உண்டு என்றால் தீண்டாத மக்களின் நிலைதான் மோசமாக இருக்கும் என்பதை எளிதில் கூறிவிடலாம்.

ஏனென்றால் இந்தியாவில் சாதி இந்துக்களிலேயே மிகக் கீழான நிலையில் இருப்பவரும் கூட – ஏன், பழங்குடியாகவும் மலைவாசியாகவும் இருப்பவரும் கூட – கல்வியிலும் பொருளாதாரத்திலும் தீண்டாத மக்களைக் காட்டிலும் அவ்வளவாக மேம்பட்டிருக்கவில்லை என்றாலும் அவர்களை விட உயர்ந்தவராகவே இருக்கிறார். அவர் தீண்டாத மக்களைக் காட்டிலும் தம்மை உயர்ந்தவராகக் கருதிக் கொள்கிறார் என்பதல்ல. அவர் தீண்டாத மக்களைக் காட்டிலும் உயர்ந்தவர் என்று கொண்டாடும் உரிமையை இந்து சமுதாயம் ஏற்றுக் கொள்கிறது. ஆகவே தீண்டாத மக்கள் இப்போதிருப்பது போலவே தொடர்ந்து படுமோசமான நிலையில் இருந்து வருவார்; அதாவது அவர் செழுமைக் காலத்தில் கடைசியாக வேலைக்கு அமர்த்தப்படுவார்; மந்த காலத்தில் முதலில் வெளியே தள்ளப்படுவார்.

தீண்டாத மக்களை இந்தக் கதியிலிருந்து விடுவிப்பதற்கு காந்தியம் என்ன செய்கிறது? காந்தியம் தீண்டாமையை ஒழிப்பதாகச் சொல்லிக் கொள்கிறது. அதுதான் காந்தியத்தின் மாபெரும் சிறப்பு என்று போற்றப்படுகிறது. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் இந்தச் சிறப்புக்கு என்ன பொருள்? காந்தியத்தில் ஒரு மிகப் பெரும் கூறாகக் கருதப்படும் இந்தத் தீண்டாமை எதிர்ப்பின் மதிப்பை கணிக்க வேண்டுமானால், தீண்டாமை ஒழிப்புக்கான காந்தியாரது வேலைத்திட்டத்தின் வீச்சினை முழுமையாக புரிந்துக் கொள்வது அவசியமாகும். இந்துக்கள் தீண்டாத மக்களை தொடுவது பற்றி கவலைப்படமாட்டார்கள் என்பதற்கு மேல் அதற்கு வேறு ஏதாவது பொருள் உண்டா? தீண்டாத மக்கள் கல்வி பெறுவதற்கான உரிமை மீது சுமத்தப்பட்டிருக்கும் தடையை அகற்றுவது என்பது அதன் பொருளா? இந்த இரு கேள்விகளையும் தனித்தனியாக எடுத்துக் கொள்வது நன்று.

பிர்லா மாளிகையில் காந்தி

முதல் கேள்வியிலிருந்து தொடங்குவோம். இந்துவாக ஒருவர் தீண்டாத மக்களைத் தொட்ட பிறகு குளிக்கக் கூடாது என்று காந்தியார் கூறவில்லை. தீட்டு கழித்து தூய்மைப்படுத்தும் செயல் என்ற முறையில் இந்த தீட்டுக் கழித்தலுக்கு காந்தியார் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், தீண்டாத மக்களைத் தொடுவதன் மூலம் தீண்டாமை எப்படி ஒழிந்து விடும் என்பதைப் புரிந்துக் கொள்வது கடினமாய் உள்ளது. தீண்டாமை என்பது தொடுவதால் தீட்டுப்படுவது, தீட்டைக் கழிப்பதற்காகக் குளிப்பது என்ற கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இந்துக்களுடன் சமூக வழியில் ஒன்று கலப்பதை அது குறிக்குமா? தீண்டாமை ஒழிப்பு என்பது இந்துக்களும் தீண்டாத மக்களும் சேர்ந்து உண்பதையோ கலந்து மணம் புரிவதையோ குறிக்காது என்று காந்தியார் மிகவும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார்.

காந்தியாரின் தீண்டாமை எதிர்ப்பு என்பதன் பொருள் தீண்டாத மக்கள் அதி சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்படுவதற்குப் பதில் சூத்திரர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள் என்பதே. (12) இதற்கு மேல் காந்தியத்தில் ஒன்றுமில்லை. பழைய சூத்திரர்கள் புதிய சூத்திரர்களைத் தங்கள் அரவணைப்பில் ஏற்றுக் கொள்வார்களா என்ற பிரச்சனையை காந்தியார் பரிசீலிக்கவில்லை. அவர்கள் இப்படி ஏற்றுக் கொள்ளாவிட்டால் தீண்டாமை ஒழிப்பு என்பதே அர்த்தமற்ற கருத்தாகிறது; ஏனென்றால் அப்போதும் தீண்டாத மக்கள் ஒரு தனிப் பிரிவாகவே இருப்பார்கள். அனேகமாக காந்தியாருக்கும் தெரிந்திருக்கும். தீண்டாமை ஒழிப்பு என்பது தீண்டாத மக்களை சூத்திரர்கள் தன்வயமாக்கிக் கொள்ளும் நிலையை தோற்றுவிக்காது. அதனால்தான் காந்தியார் தீண்டாத மக்களுக்கு மாறுபட்ட புதிய பெயர் ஒன்றை கொடுத்திருப்பதாக தோன்றுகிறது. இந்தப் பெயர் உண்மையில் அனேகமாய் நடக்கப்போவதை முன்கூட்டியே எதிர்பார்த்து பதிவு செய்வதாக உள்ளது. தீண்டாத மக்களை அரிசனங்கள் என்று அழைப்பதன் மூலம் காந்தியார் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கிறார். தீண்டாத மக்களை சூத்திரர்கள் தன்வயமாக்கிக் கொள்ள முடியாத காரியம் என்பதை தெளிவாக்குகிறார். மேலும் தான் கொடுக்கிற புதிய பெயரைக் கொண்டு இந்த தன்வயமாக்கலை எதிர்த்து செயல் புரிந்து அதனை முடியாத காரியமாக்கிறார்.

படிக்க:
அரசு, அரசியல், அரசாங்கம், உரிமைகளற்ற மக்கள்!
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி

இரண்டாவது கேள்வியைப் பொறுத்தவரை தீண்டாத மக்கள் கல்வி பெறுவதற்கான உரிமை மீது சாத்திரங்கள் விதித்த பழைய தடையை அகற்றுவதற்கும் அவர்கள் அறிவும் கல்வியும் பெறுவதை அனுமதிப்பதற்கும் காந்தியம் அணியமாய் இருப்பது மெய்தான். காந்தியத்தில் தீண்டாத மக்கள் சட்டம் பயிலலாம். மருத்துவம் பயிலலாம்; பொறியியல் பயிலலாம் அல்லது அவர்கள் விரும்பக்கூடிய எதை வேண்டுமானாலும் பயிலலாம். அந்த அளவில் நல்லது. ஆனால் தீண்டாத மக்கள் தங்களது அறிவையும் கல்வியையும் பயன்படுத்திக் கொள்கிற உரிமை இருக்குமா? அவர்கள் தங்கள் தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற உரிமை இருக்குமா? அவர்கள் வழக்கறிஞர், மருத்துவர் அல்லது பொறியாளர் தொழிலை மேற்கொள்ள முடியுமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் காந்தியம் அளிக்கிற திட்டவட்டமான பதில் இல்லை என்பதே. (1)

தீண்டாத மக்கள் தங்கள் பரம்பரை தொழில்களைச் செய்து வர வேண்டும் அந்த தொழில்கள் தூய்மைக் கேடானவை என்பது இதற்கு விடை ஆகாதாம். பரம்பரைத் தொழிலாவதற்கு முன்னதாக விரும்பித் தேர்வு செய்ததாக இல்லாமல் கட்டாயத்தின் விளைவாக இருந்தது என்பதும் முக்கியமல்லவாம். காந்தியத்தின் வாதம் என்னவென்றால் தவறான முறையில் தீர்வு செய்யப்பட்டிருந்தாலும் கூட ஒரு முறை தீர்வு செய்யப்பட்டு விட்டால் என்றென்றைக்கும் தீர்வு செய்யப்பட்டதாகும் என்பதே. காந்தியத்தின் தீண்டாத மக்கள் என்றென்றைக்கும் தோட்டிகளாவே இருக்க வேண்டும் தீண்டாத மக்கள் வைதிகமான தீண்டாமை அமைப்பை இதைவிடவும் மேலெனக் கருதுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்து சாத்திரங்களால் தீண்டாத மக்கள் மீது சுமத்தப்பட்ட கட்டாய அறியாமை தோட்டி வேலை செய்வதை சகித்துக் கொள்ள கூடியதாக்கிற்று.

ஆனால், படித்த தீண்டாத மக்களைத் தோட்டி வேலை செய்யும்படி கட்டாயப்படுத்துகிற காந்தியம் கொடியதென்று தயங்காமல் சொல்லாம். காந்தியத்தின் கவர்ச்சிக் கூறு என்பது உண்மையில் படு மோசமான சாபக்கேடாகும். காந்தியத்தின் தீண்டாமை எதிர்ப்புத் திட்டத்தின் சிறப்பு என்பது கானல் நீரே. அத்திட்டத்தில் சாரம் ஒன்றுமில்லை.

V

தீண்டாத மக்கள் தங்களின் இறுதி விடுதலைக்கே வழி திறந்து விடக் கூடியது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் காந்தியத்தில் வேறு என்னதான் இருக்கிறது. தீண்டாமை எதிர்ப்பு இயக்கம் என்னும் இந்த மாயையை விலக்கி விட்டுப் பார்த்தால் காந்தியம் என்பது தீவிரமான வைதிக இந்து மதத்தின் புராதனப் பெயராகிய சனாதனக் கொள்கையின் மறுவடிவமே தவிர வேறல்ல. வைதிக இந்து மதத்தில் இல்லாத எது காந்தியத்தில் இருக்கிறது, இந்து மதத்தில் சாதி உண்டு, காந்தியத்திலும் சாதி உண்டு. இந்து மதம் பரம்பரைத் தொழில் என்னும் விதியில் நம்பிக்கை வைத்துள்ளது. காந்தியமும் அதில் நம்பிக்கை வைத்துள்ளது. இந்து மதம் பசு வழிபாட்டை கட்டளையாக பிறப்பிக்கிறது. காந்தியமும் அதையே செய்கிறது. இந்து மதம் கர்மாவின் விதியை இந்த உலகில் மனிதனின் நிலைமை என்ன என்பது முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது என்ற விதியைத் தூக்கிப் பிடிக்கிறது; காந்தியமும் அதையே செய்கிறது. இந்து மதம் சாத்திரங்களின் அதிகாரவுரிமையை ஏற்றுக் கொள்கிறது; காந்தியமும் அதை ஏற்றுக் கொள்கிறது. இந்து மதம் கடவுளின் அவதாரங்களில் நம்பிக்கை வைத்துள்ளது, காந்தியமும் அவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது. இந்து மதம் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்துள்ளது, காந்தியமும் அவற்றில் நம்பிக்கை வைத்துள்ளது. (2)

காந்தியம் செய்திருப்பதெல்லாம், இந்து மதத்திற்கு ஒரு தத்துவ ஞான நியாயத்தைக் கண்டுபிடித்திருப்பதும் அதன் சூத்திரங்களை நியாயப்படுத்தவதற்கான ஒரு தத்துவ ஞானத்தை உருவாக்கியிருப்பதே ஆகும். இந்து மதம் என்பது வழுக்கையானது; அதாவது முகத்தளவில் ஒரு கரடுமுரடான கொடிய அமைப்பில் தோற்றத்தைத் தாங்கியிருக்கும் விதித்தொகுப்பே தவிர வேறு அல்ல. காந்தியம் அதன் மேற்பரப்பை வழவழப்பாக்கி, கண்ணியமும் மதிப்புமான தோற்றத்தை அதற்கு வழங்கி, அதனைக் கவர்ச்சிகரமாக்கும் அளவுக்கு மாற்றம் செய்து வனப்பூட்டுகிற தத்துவ கோட்பாட்டை வழங்குகிறது. காந்தியம் இந்து மதத்தின் அம்மணத்தை மூடி மறைக்க வகுத்துரைக்கும் தத்துவ கோட்பாடுதான், என்ன? இந்தத் தத்துவ கோட்பாட்டை சுருக்கமாய்ச் சொல்லி விடலாம். “இந்து மதத்தில் இருப்பதெல்லாம் நல்லது, இந்து மதத்தில் இருப்பதெல்லாம் பொது மக்களின் நன்மைக்கு அவசியமானது என்பதுதான். அந்தத் தத்துவ கோட்பாடை வால்டேர் எழுதிய candide என்ற நூலை அறிந்திருப்பவர்கள் இந்தத் தத்துவ ஞானம் மாஸ்டர் பாஞ்சுலாசின் தத்துவ ஞானம் என்பதை அடையாளம் கண்டு கொள்வார்கள், வால்டேர் அதனை எப்படியெல்லாம் கேலி செய்தார் என்பதை நினைவு பகர்வார்கள். இந்துக்கள் காந்தியத்தின் தத்துவ ஞானம் குறித்து மகிழ்ந்து போயிருப்பதில் வியப்பில்லை. அது அவர்களுக்கு பொருத்தமாகவும் அவர்களின் நலனுக்கு ஏற்றதாகவும் உள்ளது என்பதில் ஐயமில்லை.

பேராசிரியர் இராதாகிருஷ்ணன்-மனப்பூர்வமாகவோ போலித்தனமாகவோ, நமக்குத் தெரியாது, அது குறித்து ஆராயத் தேவையில்லை-காந்தியாரை ‘பூவுலகக் கடவுள்’ என்று வர்ணிக்குமளவுக்குப் போயிருக்கிறார். இதன் பொருள் என்னவென்று தீண்டாத மக்கள் கருதுகிறார்கள்? அவர்களுக்கு இதன் பொருள் என்னவென்றால்; “காந்தி என்ற பெயருடைய இந்தக் கடவுள் இன்னலுற்றதோர் இனத்துக்கு ஆறுதலளிக்க வந்தார்; அவர் இந்தியாவைப் பார்த்தார், எல்லாம் நன்றாகவே உள்ளது. இந்துக்கள் சாதியின் விதியை நிறைவேற்றினாலே போதும், எல்லாம் நன்றாகவே இருக்கும் என்று கூறி, அதனை மாற்றாமல் விட்டார். இன்னலுற்ற இனத்தைப் பார்த்து அவர் ‘சாதி விதியை நிறைவேற்ற நான் வந்துள்ளேன்’ என்று கூறினார். அதிலிருந்து எள்முனையளவும் தனிவதற்கு இடமளிக்க மாட்டேன் என்றார்”.

காந்தியம் தீண்டாத மக்களுக்கு அளிக்கக் கூடிய நம்பிக்கை என்ன? தீண்டாத மக்களுக்கு இந்து மதம் கொடுமைகளின் கூடாரமே ஆகும். வேதங்களும் ஸ்மிருதிகளும் சாத்திரங்களும் சாதியின் இரும்பு விதியும் இதயமற்ற கர்மா விதியும் பிறப்பின் அடிப்படையில் தகுநிலையைத் தீர்மானிக்கும் அர்த்தமற்ற விதியும் புனிதமானவை, பிழையற்றவை என்பதெல்லாம் உண்மையில் இந்துமதம் தீண்டாத மக்களுக்கு எதிராக உருவாக்கியுள்ள சித்திரவதைக் கருவிகளே ஆகும். தீண்டாத மக்களின் வாழ்க்கையை சிதைத்து அடித்து நொறுக்கி நாசம் செய்துள்ள இதே கருவிகள் காந்தியத்தின் உள்மனத்தில் அப்படியே குறைவின்றி இருக்கக் காணலாம். காந்தியம் ஒரு சொர்க்கம் என்றும், இந்து மதத்தைப் போல் அது கொடுமைகளின் கூடாரம் அல்ல என்றும் தீண்டாத மக்களால் எப்படிச் சொல்ல முடியும்? தீண்டாத மக்களின் ஒரே எதிர்வினை, மிகவும் இயற்கையான எதிர்வினை காந்தியத்தை விட்டு ஓடிப் போவதாகவே இருக்கும்.

நான் கூறியிருப்பது பழைய வகைப்பட்ட காந்தியத்துக்கே பொருந்தும் என்று காந்தியவாதிகள் சொல்லக் கூடும். ஒரு புதிய காந்தியம், சாதியில்லாத காந்தியம் இருக்கிறதாம். சாதி ஒரு காலவழு என்று காந்தியார் சமீபத்தில் கூறியிருப்பது கருதியே இவர்கள் இப்படிச் சொல்வார்கள். (4) காந்தியாரின் இந்த அறிவிப்பு இயல்பாகவே சீர்திருத்தவாதிகளுக்கு மகிழ்ச்சியளித்தது. காந்தியாரைப் போன்ற ஒருவர் இந்துக்கள் மீது இவ்வளவு பயங்கரமான செல்வாக்கு படைத்த ஒருவர் ஒரு சமூகப் பிற்போக்காளராக மிகத் தீய பங்கு வகித்த பிறகு, சாதியமைப்புக்காகப் பரிந்து போராடுகிறவராக இருந்த பிறகு, நல்லதற்கும் கெட்டதற்கு மிடையே எந்த வேறுபாடும் காட்டாத வாதங்களைக் கொண்டு சிந்தனைத் திறனற்ற இந்துக்களை மயக்கி முட்டாளாக்கிய பிறகு, இப்படி மாறுபட்ட கருத்து வெளியிடக் கண்டு யார்தான் மகிழ்ச்சியடைய மாட்டார்கள்? ஆனால் இது உண்மையிலேயே குதூகலத்துக் குரியதுதானா? இது காந்தியத்தின் தன்மையை மாற்றி விடுகிறதா? இதனால் காந்தியம் முன்பிருந்ததைக் காட்டிலும் புதியதும் சிறந்ததுமான ‘இயமாகி’ விடுகிறதா? காந்தியாரின் இந்த கருத்து மாற்றத்தால் கவரப்படுகிறவர்கள் இரண்டு விவரங்களை மறந்து விடுகிறார்கள்.

முதலாவதாக, காந்தியார் கூறியிருப்பதெல்லாம், சாதி ஒரு காலவழு என்பதே. அது ஒரு தீமையென்று அவர் சொல்லவில்லை. அது கூடாத ஒன்று என்றும் அவர் கூறவில்லை. காந்தியார் சாதிக்கு ஆதரவாக இல்லை என்று வேண்டுமானால் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தாம் வருண அமைப்புக்கு எதிரானவர் என்று காந்தியார் கூறவில்லை. காந்தியாரின் வருண அமைப்புதான் என்ன? அது சாதி அமைப்புக்கான ஒரு புதிய பெயர்தான், சாதியமைப்பின் படுமோசமான கூறுகள் அனைத்தையும் தொடர்ந்து தன்னகத்தே வைத்துக் கொண்டிருப்பதுதான்.

காந்தியாரின் அறிவிப்பு காந்தியத்தில் எவ்வித அடிப்படை மாற்றத்தையும் குறிப்பதாகச் சொல்ல முடியாது. அது காந்தியத்தைத் தீண்டாத மக்களுக்கு ஏற்புடைய தாக்க முடியாது. இப்போதும் தீண்டாத மக்கள் இப்படிச் சொல்வதற்கு நியாயமான காரணம் இருக்கும்; “அட கடவுளே! காந்தி என்கிற இந்த மனிதர்தான் எங்கள் இரட்சகரா?”

முற்றும்.
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன?
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
(1) யங் இந்தியா, 1925 பிப்ரவரி 5.
(2) இப்பொருள் குறித்து காந்தியாரின் கருத்துக்களை அறியம், பார்க்கவும் மேலது பக்கம் 73-17.
(3) 1927 அக்டோபர் 6 தேசிய யங் இந்தியாவில் கந்தியாரின் சமயக் கொள்கைகள் அவராலேயே சுருக்கமாய் எடுத்துரைக்கப்பட்டன.
(4) இந்துஸ்தான் டைம்ஸ், 1945 ஏப்ரல் 15.

முந்தைய பகுதி:
பகுதி – 1: காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்
பகுதி – 2: தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என்றார் காந்தி
பகுதி – 3 : விலங்கு வாழ்க்கைக்குத் திரும்பிச் செல்வதே – காந்தியம்
பகுதி – 4 : சாதி பற்றிய காந்தியின் வாதங்கள் பைத்தியக்காரத்தனமானவை
பகுதி – 5 : சூழ்ச்சித் திறனே நின் பெயர்தான் காந்தியமா

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.

நூல் அறிமுகம் : அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு

ரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ என்ற புத்தகத்தின் வழி தமிழுலகிற்கு அறிமுகமானவர் ஜான் பெர்க்கின்ஸ். இரண்டாம் உலகப்போருக்கு பின் ஏற்பட்ட உலக புவிசார் அரசியல் என்பது (அமெரிக்க முதலாளித்துவ/சோசலிச (சோவியத் யூனியன்) பொருள் உற்பத்தி முறையின் மோதலாக வெளிப்பட்டது. இம்மோதலானது ஆயுதம் தாங்கிய இராணுவப் போராக வெளிப்படாமல், மறைமுகமாக அந்நாடுகளின் புலனாய்வு நிறுவனங்களின் செயற்பாடுகளில் மூலம் வெளிப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளில் சோசலிசப் புரட்சி மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் வளராமல் தடுப்பதற்கு பல்வேறு மறைமுகச் செயல்களை தன் நாட்டுப் புலனாய்வு நிறுவனமான சிஐஏ (CIA) மூலம் அமெரிக்க ஆளும் வர்க்கம் கட்டவிழ்த்தது. இச்செயல்பாட்டில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார நலன்களும் அடங்கியிருந்தன. இரண்டாம் உலகப்போருக்குப் பின் ஏற்பட்ட இவ்வரலாற்று நிகழ்வுகளை பிரிட்டிஷ் மார்க்சிய வரலாற்று ஆசிரியரான எரிக் ஹாப்ஸ்போம் (Eric Hobsbawm) போன்றவர்கள் விவரித்துள்ளனர்.

இங்கு மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ள புத்தகத்தின் ஆசிரியர் ஜான் பெர்க்கின்ஸ், மார்க்சிய வரலாற்று ஆசிரியரான எரிக் ஹாப்ஸ்போம் (Eic Hobsbawm) போன்றோ அல்லது நோம் சோம்ஸ்கி (Noam Chomsky) போன்றோ ஓர் அறிவு ஜீவி அல்லர். மார்க்சியவாதியும் அல்லர். அவர் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்கு துணை போன ஒரு ஆசாமி. அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் நலன்களுக்காக நியமிக்கப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் மன்றாடிய ஒரு பூர்ஷுவா கூலிக்காரர். முதலாளித்துவ பொருள் உற்பத்தி முறையின் அம்மனமான வறையாட்டத்திற்கு கைகொடுத்த நபர். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மேல் நின்று அழுத்திச் செல்லும் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்ற கொடிய மிதிவண்டியின் சக்கரத்தில் ஒரு பாகமாகச் செயல்பட்டவர். ஒரு கட்டத்திற்குப் பிறகு ஞானம் பெற்று, தனது வாழ்வு அனுபவங்களை எதிர்காலத் தலைமுறையினருக்குத் தெரியப்படுத்த முயன்று வருபவர். சுருங்கக் கூறின், நெல்லைப் பறித்து வீசி எறியும் உமியைப்போல் முதலாளிகளால் தூக்கி எறியப்பட்டவர்.

படிக்க:
அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை
ஹாலிவுட் காமெராவும் அமெரிக்க பீரங்கியும் !

‘The Secret History of the American Empire’ என்ற ஆங்கிலத் தலைப்புக் கொண்ட இப்புத்தகத்தில் ஜான் பெர்க்கின்ஸ் தனது வாழ்வு அனுபவங்களை அமெரிக்க பேரரசு உருவாகி வந்த வரலாற்று உண்மையோடு தொடர்புபடுத்தி விவரிக்கிறார். அமெரிக்க ஏகபோக முதலாளிகளின் வளர்ச்சியினையும், கம்யூனிச எதிர்ப்பைச் சாரமாகக் கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்க கொள்கையினையும் அடித்தளமாகக் கொண்டே ஜான் பெர்க்கின்ஸின் வாழ்வு அமைவதை இப்புத்தகத்தில் காணலாம். அவர் ஆற்றிய பணியும் அவ்விரண்டின் வளர்ச்சிக்கும், உதவியது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் வளர்ந்து வந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்று உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. தற்போது ‘பயங்கரவாத எதிர்ப்பு (war on terror) என்ற போர்வையில் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இராணுவ முகாம்களை நிறுவி அங்கு தனக்குச் சாதகமான பொம்மை ஆட்சியை நிறுவியுள்ளது. இதற்கு எதிராக இஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கை கொண்ட குழுக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் முதலாளித்துவப் பொருள் உற்பத்திமுறையின் இதயமாக விளங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சரியான விடை என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சியிலும், அதோடு நிறுவப்படும் கம்யூனிஸ ஆட்சியிலுமே உள்ளது என்பதில் ஐயம் இல்லை. அவ்வாறு விடை கொடுப்பதற்கு நமக்கு வரலாற்று அறிவு அவசிமாகிறது. அமெரிக்கப் பேரரசு வளர்ந்து வந்த வரலாற்றினைப் புரிந்து கொண்டால் மட்டுமே கம்யூனிஸ அரசியலில் சாதனை புரிய முடியும். அதற்கு இப்புத்தகம் ஓரளவிற்கு உதவும் என்ற நம்பிக்கை உள்ளது… (நூலின் பதிப்புரையிலிருந்து… பக்.5-6)

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா ?

இந்நூலில் வரும் மனிதர்களும் சம்பவங்களும் உண்மை . தனிப்பட்ட ஆவணங்களும், கடிதங்களும், குறிப்புகளும், மின்னஞ்சல்களும், நினைவுக் குறிப்புகளும், வெளியிடப்பட்ட ஆவணங்களும் அனுமதிக்கின்ற அளவு துல்லியமாகச் சித்திரிக்க சாத்தியமான எல்லா முயற்சிகளும் எடுத்துள்ளேன். சில விஷயங்களில் பெயர்களையும், விவரங்களையும் மாற்றியுள்ளேன். ஏனெனில் நான் பேட்டி கண்ட பலரின் முக்கியமான நிபந்தனை, தங்களின் பெயர் வெளியில் வரக்கூடாது என்பதாகும். மற்ற சில இடங்களில் கதையின் ஓட்டம் சரளமாக இருப்பதற்காகப் பல உரையாடல்களைச் சேர்த்து ஒரு உரையாடல் போல் வழங்கியுள்ளேன். ஆனால், கண்டிப்பாக அது இந்நூலின் நேர்மையைப் பாதிக்காது என்கிறபோது மட்டும்தான். வரலாற்று நிகழ்வுகளை விவாதிக்கும் போது, துல்லியமான தகவலைக் கொடுக்க வேண்டும் என்கிற கடமையுணர்வால் நான் வழிநடத்தப்பட்டேன். சில சமயங்களில் நான் பேட்டி கண்டவர்கள் கூறியவற்றிற்கு மூல ஆதாரங்களைச் சேர்த்துக் கொடுத்து வலுவூட்டியுள்ளேன். அவை பின் குறிப்புகளில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. எனினும், தனிநபர்கள் கூறிய கதைகளுக்குப் பின்னே இருக்கும் விவரங்களை மாற்றுவது அல்லது சரிபார்ப்பது என்பது இதில் அடங்காது.

ஒரு வர்த்தக விமானத்தைக் கடத்துவதில், ஒரு நாட்டின் அதிபரைக் கொலை செய்வதற்காக அந்நாட்டின் மீது – படையெடுப்பதில், அரசுகளின் தலைவர்களுக்கு லஞ்சம் கொடுப்பதில், – இயற்கைப் பேரழிவுகளிலிருந்தும் கொள்ளை லாபம் அடிப்பதில், – ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களை மயக்கி – தவறாக வழிநடத்தி தங்களுக்கு வேண்டியதைப் பிடுங்குவதில், மற்றும் இதர ரகசிய நடவடிக்கைகளில் தங்களது பாத்திரத்தைப் பற்றி – தனிநபர்கள் விவரிக்கும் கதைகள், அவர்களது கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கும் உரிமை எனக்கில்லை என்று நான் கருதுகிறேன். நான் – பங்கேற்ற ஒவ்வொரு முக்கிய நிகழ்வும் பிற எழுத்தாளர்களால், – வரலாற்றறிஞர்களால், பத்திரிகையாளர்களால் ஆவணப்படுத்தப்பட்டு  விட்டன. அல்லது உலக வங்கி போன்ற நிறுவனங்களின் ஆவணக் காப்பகங்களில் உள்ளன. கதை என்னுடையதாக இருக்கலாம். ஆனால் அதன் அத்தியாயங்கள் ஆவணப்படுத்துதல் சம்பந்தப்பட்டதாகும். (நூலாசிரியர் குறிப்பிலிருந்து…  பக்-9)

நூல்: அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு
(பொருளாதார அடியாட்கள், ரகசிய உளவாளிகள் மற்றும் உலகளாவிய ஊழல் குறித்த உண்மைகள்)
ஆசிரியர்: ஜான் பெர்கின்ஸ்
தமிழில்: அசோகன் முத்துசாமி

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
பேச: 044 – 24332424, 24332924
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com

பக்கங்கள்: 400
விலை: ரூ.180.00 (இரண்டாம் பதிப்பு)

இணையத்தில் வாங்க: thamizhbooks.com | commonfolks.in

இதர மின் நூல்கள் (e books)

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

மாறிவரும் சூழலில் மனநலமும் நம் செயல்பாடும் !

சார் எங்கம்மா இறந்துட்டாங்க அதனால என் பொண்ண டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிகிட்டு போவணும். நீங்க அவள டிஸ்சார்ஜ் செய்யுங்க என்றார் அந்த 15 வயது நோயரின் தாய். அப்போது இரவு 7.30 மணியிருக்கும். மதியம் 1.30 மணிக்கு நான் தான் அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தேன்.

“சார் ரெண்டு நாளா தூங்க மாட்றா, செத்துடறேன்னு சொல்லி மெரட்ரா, கோபப்பட்டு பொருளை போட்டு உடைக்கிறா…” அடுக்கிக் கொண்டே போனார் பெண்ணின் அம்மா.

அவர் கைகளில் வரிவரியாய் கீறல் தழும்புகள், இதென்னம்மா என்றேன்.

“உடம்பு முழுக்க இப்படி கிழிச்சிக்கிறா சார் கை, கால்கள்… கோபம் வந்தா இப்படி செய்றா…” என்றார் அவர். அழுது சிணிங்கிக் கொண்டே இருந்தார்  அந்த பெண்.

“சார் இவளுக்கு கஞ்சா குடிக்கிற பழக்கம் இருந்தது , மூணு மாசத்துக்கு முன்னாடி கல்யாணம் வேற பண்ணிகிட்டா…” என்றார் அவர் தாய்.

“நான் இப்ப கஞ்சா குடிக்கிறதில்லை சார் இவங்க பொய் சொல்றாங்க அது ரீஹாப்புக்கு போறதுக்கு முன்னால தான்…” என்றார் அழுதபடி.

ஏம்மா நீங்க எந்த ஏரியா என்றேன் நான்..

ஓட்டேரி பிரிக்கிளின் ரோடு சார்.

ஏம்மா 200 வருஷமா கீழ்பாக்கத்துல இருக்கிற ஆஸ்பத்திரியில் போதை பொருள், குடிக்கு டிரீட்ட்மெண்ட் குடுக்குறோமே உங்களுக்கு தெரியாதாமா?

தெரியாது சார் என்றார் அப்பாவித்தனமாக. “சார் எங்க ஏரியாவுல இருக்கிறவங்க……… ஏரியாவுல இருக்கிற ரீஹாப் அட்ரஸ் கொடுத்தாங்க மூணு மாசம் வெச்சிருந்தேன் சார்” என்றார்.

படிக்க :
மக்களுக்கு பொறுப்பானவர்களே மருத்துவர்கள் – Dr அரவிந்தன் சிவக்குமார்
பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்

எவ்வளவு மா செலவு செஞ்சே… மாதம் எவ்வளவு மா கட்டினே…?

மாசம் 10,000 சார் அட்வான்சு 10,000 ரூபா… 60,000-க்கு மேல செலவாயிடுச்சு சார்.

அதுக்கு வட்டி அசல் சேர்த்து ஒரு லட்சம் செலவழிச்சிருக்கியேம்மா. இலவசமா மெண்டல் ஆஸ்பத்திரியிருக்கே என்றேன் முட்டாள்தனமாக ஆதங்கத்தில்…

அந்த தாய்க்கு அ.ம.கா-வில் (அயனாவரம் மனநல காப்பகம்) போதை நீக்கியல் துறை இருக்கிறது தெரியாமல் தான் ரீஹாபுக்கு சென்றார் என்பதை உள்வாங்கிக் கொள்ளாமல் பேசினேன்.

இவர் யாரும்மா?

இவர் தான் என் பொண்ண கட்டிக்கிட்டவன்.

உனக்கென்ன வயசயசுப்பா?

பத்தொம்பொது சார் என்றான் அவன்.

அம்மா நான் அட்மிஷன் போடறேன் நீங்க யாராவது தங்கணும் ஒருத்தர் மாத்தி ஒருத்தர் இருக்கலாம்.

சார் நான் வேலைக்கு போணாதான் சாப்பாடு என்றார் அந்த தாய், அரை மனசோடு ஒப்புக்கொண்டார் பெண்ணின் கணவர். நேற்றைய இரவு பணியில் முதல் உரையாடல் நிகழ்ந்தது மதியம் 1.30மணி.

இரவு 7.30மணிக்கு அந்த பெண்ணின் தாய் டிஸ்சார்ஜ் கேட்டதும் பெண்ணின் கணவனிடம் “அவங்க அம்மா ஆகவேண்டியத பாக்க போவட்டும. நீ கூட தங்கேம்பா” என்று கேட்டேன்.

“சார் நான் 7.30 மணிக்கு வேலைக்கி போவணும் இல்லைன்னா வேலைய வுட்டு எடுத்துருவான் சார்…” என்றான் அப்பாவித்தனமாக.

”நீ உடனே வேலைக்கு கிளம்பு” என்றேன்.

தான் வேலைக்கு செல்லவேண்டும் என்பதால் தன் தாய் இறந்துவிட்டார் என்று பொய் சொல்லி டிஷ்சார்ஜ் வாங்கி சென்ற அந்த பெண்ணும் அவர் குடும்பத்தையும் நினைத்து நேற்று இரவு முழுக்க தூக்கம் வரவில்லை. பல கேள்விகள் என் மனத்திரையில் மோதிக்கொண்டே இருந்தன.

*****

யனாவரம் மன நல காப்பகத்திலிருந்து 2 கிமீட்டர் தொலைவு கூட இல்லாத செங்கற் சூளை சாலை, ஓட்டேரி பகுதி மக்களுக்கு பொது மருத்துவமனையில் போதை நீக்கியல் துறை இருக்கிறது என்பது அறியாமல் இருக்கின்றனர்.

அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் விட்டது யார் தவறு? எங்கோ  இருக்கும் ரீஹாப் மையத்தின் முகவிரி கொடுத்த அக்கம்பக்கத்தினர் ஏன் அ.ம.கா-வின் முகவரியை சொல்லவில்லை?

மாறிவரும் சூழலில் பதின் பருவருத்தினர் மனநலம் என்ற மையக் கருவில் உலக மனநல தினம் கொண்டாடப்பட்டதென்று நினைக்கிறேன். மாறிவரும் சூழல் எதை குறிக்கின்றது?

படிக்க :
♦ அரசு கூர்நோக்கு இல்லங்கள் : சிறுவர் வதைமுகாம்கள் !
♦ பஞ்சாபின் போதை – பாரதிய ஜனதாவின் சேவை !

மிகபெரிய பொருளாதார நெருக்கடியில் மூச்சு முட்டிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களை சர்வசாதாரணமாக நீங்க கூட இருந்து தான் ஆகணும் என்று சொல்வது மாறிவரும் இன்றைய சூழலில் சரியான வாதமா?

உலக வங்கியின் கொள்கை முடிவுகளை அதி வேகமாய் தீவிரமாய் நடைமுறைப்படுத்திவரும் நடுவண் அரசின் நவதாராள கொள்கை முடிவுகளால் தூள்தூளாக்கப்படும் பொது சுகாதாரத்துறையும், அதி வேகமாய் வளர்த்துவிடப்படும் தனியார் மையங்களும் இருக்கும் இந்த சூழலில் மாறி வரும் இன்றைய சூழலை ஒரு மருத்துவனாய் எப்படி புரிந்து கொள்ளாமல் மனநலத்தை பேணுவது பற்றி பேசமுடியும் ?

அப்படி பேசினால் யாருடைய பார்வையில் இருந்து பேசுவதாக அமையும்?

அரசு மருத்துவமனையில் உடனாளாரக இருந்தால் இன்றைய பொழுது சம்பளம் போகும். நாளை வேலை போகும். அதற்கு பதிலாக தனியார் மையத்தில் நோயரை சேர்த்தால் வேலைக்கு உத்திரவாதம்.

ஆனால் ரீஹாபுக்கு செலவழிக்க மீட்டர் வட்டிக்கு கடன் வாங்க வேண்டும்.  கடன் கட்ட வேலையாவது இருக்கிறது என்ற நடைமுறை லாஜிக்கில்தான் சாமானிய மக்கள் தனியார் ரீஹாப் மையங்கள் நோக்கி சிக்கிக் கொள்கின்றனர்.

“மாறிவரும் சூழல்” குறித்த பிரக்ஞையே இல்லாமல் எடுத்த முடிவை நடைமுறைப்படுத்தி, உடனாளர்களை சிறைவைப்பதால் பதின்பருவத்தினர் மனநலம் மட்டுமல்ல உடனாளர் மனநலத்தையும் குலைத்துவிடுகிறோம்.

சிகிச்சைக்காக சட்டைப்பை செலவினத்தால் கடனாளியாகி தற்கொலை செய்து கொள்ளும் இன்றைய சூழலில் நோயர்களை தனியே அனுமதித்து சிகிச்சை அளிப்பது மிகந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது.

மனநல மருத்துவர்கள் தாங்களே தங்களை  சிறைவைத்துக் கொண்ட பெல் ஜார்களை விட்டு வெளியே வந்து உலகை கவனிக்கவேண்டும், மக்களை பார்க்க வேண்டும், அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை தெரிந்தால் தானே புரிதலை நோக்கி பயணிக்க முடியும். புரிந்தால் தானே மக்களுக்கு உகந்த கொள்கை முடிவுகளை முன்வைக்க முடியும். அதுவும் மக்களை மையப்படுத்தியதாக இருக்கும்.

2004-ன் முற்பகுதிவரை  நோயாளிகளை உள்ளே காப்பகத்தில் அனுமதித்த இயக்குனர் மரு.முருகப்பன் ஏன் 2004-ன் பிற்பகுதியிலிருது காப்பகத்தில் நோயாளிகளை அனுமதிக்காமல், உடனாளர் இருக்கும் பொது வார்டில் அனுமதித்தார் என்பது அவர் மாறி வந்த அன்றைய சூழலை புரிந்து கொண்டு எப்படி கையாண்டார் என்பது வரலாறு .

என்.ஜி.ஓ ஒன்றின் ஆய்வகமாக ( NGO testing lab) அ.ம.கா மாற்றப்பட்ட 2004 வருடம் 2000 -த்துக்கும் மேல் நோயாளிகள் குவியத்தொடங்கிய போது ( நாளொன்றுக்கு சராசரியாக 5 நோயாளிகள் என்.ஜி.ஓக்கள் அழைத்து வந்த காலம் ) உள் கட்டமைப்பு சிக்கல், ஏற்கெனவே இருந்த நோயர்களின் பராமரிப்பு, மனநலமருத்துவர்கள் 8 பேர் மட்டும் இருந்த நிலையில் மாறி வந்த அச்சூழலில் அந்த முடிவெடுத்தார் டாக்டர் முருகப்பன்.

இன்று முருகப்பன் இருந்திருந்தால் அவர் நிச்சயம் என்ன செய்திருப்பார் என்று நமக்கு தெரியும் அவர் முடிவு நோயர்களை மட்டுமல்ல மக்களை மையப்படுத்தியே இருந்திருக்கும்.

மாறிவரும் சூழல் உழைக்கும் சாமானிய மக்களுக்கு எதிராக உள்ளது. அது அவர்களுக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுக்கின்றது என்ற புரிதல் இருந்தால் மட்டுமே மக்களின் மனநலத்தை மேம்படுத்தும் வழியை நாம் முன்வைக்கமுடியும்.
இல்லையேல் மாறிவரும் சூழல் யாருக்கு சாதகமாக இருக்கிறதோ அவர்களையே  வலுசேர்க்கும் வழியில் நம் செயல்பாடு அமைந்து விடும்.

நம்மை மக்களின் எதிர் துருவத்தில் கொண்டு போய் சேர்த்துவிடும்.

நன்றி : முகநூலில் மருத்துவர். அரவிந்தன் சிவக்குமார்

சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோகி படுகொலை | கேலிச்சித்திரங்கள்

வுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி, துருக்கி இஸ்தான்புல் நகரத்திலுள்ள சவுதி தூதரகத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார்.
சவுதி அரச குடும்பத்தின் அளவற்ற அதிகாரம் குறித்து தொடர்ந்து எழுதி வந்ததன் காரணமாக ஆத்திரமுற்ற இளவரசர் முகமது பின் சல்மானின் ஏற்பாட்டிலேதான் ஜமால் கசோகியின் படுகொலை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

கொல்லப்பட்ட பத்திரிகையாளர், ஜமால் கஷோகி.

துருக்கியில் உள்ள சவுதி தூதரகத்தில் தனது பாஸ்போர்டை புதுப்பிக்கும் பொருட்டு அக்டோபர் 2-ஆம் தேதி சென்றார் ஜமால் கசோகி. உள்ளே போனவர் திரும்பி வரவில்லை. தூதரகத்திலே வைத்து சவுதி உளவுப் போலீசாரால் கொடூர சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு பின்னர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சி.சி.டி.வி. காட்சிகள், தூதரக அதிகாரிகளுக்கும் சவுதி உளவுப் போலீசாருக்குமிடையே நடைபெற்ற உரையாடல் பதிவுகளை துருக்கி அரசும் ஊடகவியலாளர்களும் அம்பலப்படுத்திய பிறகே இவ்வுண்மை தெரிய வந்திருக்கிறது. வேறுவழியின்றி தற்போது உளவு போலீசு அதிகாரிகளை கைது செய்து விசாரணைக்குட்படுத்தியிருப்பதாக அறிவித்திருக்கிறது, சவுதி அரசு.

ஜமால் கசோகியின் கொடூர கொலை சதிக்குப் பின் பொதிந்துள்ள பல்வேறு உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன இக்கேலிச்சித்திரங்கள்.

“இங்கு ஜமால் கஷோகி இல்லை.”

ஆண்டோனியோ,ரோட்ரிகூயஸ், மெக்சிகோ.

உண்மைகளை எழுதினால் கிடைக்கும் பலன்

நஜி பெனாஜி, காசாப்ளாங்கா, மொராக்கோ.

அமெரிக்க வாளால் துண்டு துண்டாக்கப்பட்ட பத்திரிகை சுதந்திரம்

மரியன் கமென்ஸ்கி, வியன்னா, ஆஸ்திரியா.

வெறியாட்டம் போடும் கூட்டணி

மரியன் கமென்ஸ்கி, வியன்னா, ஆஸ்திரியா.

இரத்தக் கரையை பணத்தால் மறைக்கும் சவுதி இளவரசன்

ஒசாமா ஹஜ்ஜாஜ், அம்ம, ஜோர்டன்.

கஷோகியை கொன்ற நீதி இதுதான்.

நஜி பெனாஜி, காசாப்ளாங்கா, மொராக்கோ.

கொலைகாரனே கொலையை விசாரிக்கும் அவலம் சவுதியில்…

எமாட் ஹஜ்ஜாஜ், ஜோர்டன்.

கொல்லப்பட்ட பிறகும் அதிகாரத்தின் கழுத்தை நெறிக்கும் ஜமால் கஷோகி.

எமாட் ஹஜ்ஜாஜ், ஜோர்டன்.

என் தகப்பா .. நீதான்யா இந்த உலகத்துலயே நான் அப்பாவிங்கிறது ஒத்துக்கிட்ட ஒரே ஆளு !

மரியன் கமென்ஸ்கி வியன்னா, ஆஸ்திரியா.

ட்ரம்ப் சவுதி இளவரசனிடம் பணியவில்லை.

எமாட் ஹஜ்ஜாஜ், ஜோர்டன்.

படிக்க:
மெக்சிகோவில் தொடரும் பத்திரிக்கையாளர் படுகொலைகள் !
உண்மையைப் பேசாதே ! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசு ஒடுக்குமுறை !

நன்றி: cartoonmovement.com

தாய் பாகம் 10 : நஹோத்கா , உம்மை நான் கைது செய்கிறேன் …

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 10

லவரம் நிறைந்த அந்த இரவுக்குப் பிறகு, சுமார் ஒரு மாத காலம் கழித்து போலீஸார் வந்தே விட்டார்கள். அன்று நிகலாய் பாவெலையும் அந்திரேயையும் கண்டு பேசுவதற்காக வந்திருந்தான். அவர்கள் மூவரும் தங்களது பத்திரிகை விஷயமாக விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நடு இரவு.

மாக்சிம் கார்க்கி
ஏற்கெனவே படுக்கச் சென்றுவிட்ட தாய் தூக்கக் கலக்கத்தில் சொக்கியவாறே அவர்களது அமைதியும் ஆர்வமும் நிறைந்த பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாள். அப்போது அந்திரேய் ஜாக்கிரதையாக தனக்குப் பின்னால் கதவைத் தாளிட்டுவிட்டு சமையலறையைக் கடந்து சென்றான். அந்த சமயம் முற்றத்தில் ஏதோ தகரவாளி உருளும் சத்தம் கேட்டது; அதைத் தொடர்ந்து கதவும் படாரென்ற திறக்கப்பட்டது. அந்திரேய் சமையலறைக்குள் தாவி வந்து சேர்ந்தான்.

“அது பூட்ஸ் லாடச் சத்தம்தான்!” என்று இரகசியமாகச் சொன்னான்.

நடுங்கும் கைகளால் தன் ஆடையைச் சரிசெய்தபடி படுக்கையிலிருந்து துள்ளியெழுந்தாள் தாய். ஆனால் பாவெல் வாசல் நடைக்கு வந்து அமைதியாகச் சொன்னான்:

“நீங்கள் போய்ப் படுங்கள். உங்களுக்கு உடம்பு சரியில்லை!” வெளிவாசலருகில் ஏதோ சலசலப்புக் கேட்டது. பாவெல் வாசலுக்கு வந்து கதவைத் திறந்து, சத்தமிட்டான்:

”யார் அங்கே ?”

திடீரென்று ஓர் உயரமான, சாம்பல் நிற உருவம் அவன் முன் தோன்றியது. அதைத் தொடர்ந்து வந்தது இன்னொரு உருவம்; இதற்குள் இரண்டு போலீஸ்காரர்கள் பாவெலைப் பிடித்துத் தள்ளிவிட்டு, அவனுக்கு இரு புறத்திலும் காவல் நிற்கத் தொடங்கிவிட்டார்கள்.

“எங்களை எதிர்பார்க்கவில்லை, இல்லையா? ஹ!” என்று ஓர் உரத்த குரல் கேலியாகக் கேட்டது.

அப்படிப் பேசியவன் ஓர் உயரமான, ஒல்லியான, நறுக்கு மீசை அதிகாரி. பெத்யாகின் என்ற உள்ளுர்ப் போலீஸ்காரன் தாயின் படுக்கையை நோக்கி விரைந்தான்.

”எஜமான் இவள்தான் அவனது தாய்!” என்று ஒரு கையால் தனது தொப்பியைத் தொட்டுக்கொண்டும் மறு கையால் பெலகேயாவைச் சுட்டிக் காட்டிக்கொண்டும் சொன்னான்: ”அதோ, அவன்தான் அந்த ஆசாமி!” என்று கூறி பாவெலைச் சுட்டிக் காட்டினான்.

”பாவெல் விலாசவா?” என்று கண்களை ஏறச் சொருகிக்கொண்டே கேட்டான் அதிகாரி.

பாவெல் தலையை ஆட்டினான்.

”நான் உன் வீட்டை சோதனை போட வந்திருக்கிறேன்” என்று கூறிக்கொண்டே, மீசையைத் திருகிவிட்டுக் கொண்டான் அதிகாரி.

“ஏ, கிழவி, எழுந்திரு! உள்ளே யார் இருக்கிறது?” அறைக் கதவினூடே ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த அறைக்குள் நுழைந்தான் அவன்.

”உங்கள் பேர் எல்லாம் சொல்லுங்கள்!” என்ற குரல் அந்த அறையிலிருந்து கேட்டது.

அந்த அறையோ குறுகலான இடம் கொண்டது. அந்த அறையில் ஏனோ பூட்ஸ் பாலிஷின் நாற்றம் கப்பென்று அடித்தது. உள்ளூர்ப் போலீஸ்காரனும், வேறு இரு போலீஸ்காரர்களும் தடதடவென்று தரையை மிதித்துக்கொண்டு அரங்கிலுள்ள புத்தகங்களையெல்லாம் இழுத்தெடுத்து, அதிகாரியின் முன்னால் கிடந்த மேஜை மீது குவித்தார்கள்.

வெளியே செல்லும் வாசற்புறத்தில் இரண்டு பேர் சாட்சிகளாக வந்து நின்றார்கள். ஒருவன் பழைய பாத்திரத் தொழிலாளியான திவெர்யகோவ்: ஒருவன் கொல்லுப்பட்டறைத் தொழிலாளியான ரீபின். ரீபின் கறுத்த தடித்த ஆசாமி; திவெர்யகோவின் வீட்டில் ஓர் அறையில் அவன் குடியிருந்தான்.

“வணக்கம், நீலவ்னா !” என்று கரகரத்த அடித்த குரலில் தாயைப் பார்த்துச் சொன்னான் அவன்.

அவள் தன் ஆடையணிகளை மாட்டிக்கொண்டு, தன்னைத் தைரியப்படுத்திக் கொள்வதற்காக ஏதேதோ முனக ஆரம்பித்தாள்.

”இந்த மாதிரி நான் கேள்விப்பட்டது கூட இல்லை! இப்படி நடுராத்திரியிலே வந்து பிராணனை எடுக்கிறது. தூங்கிக்கொண்டிருக்கிற வேளையிலா, உள்ளே வருகிறது!”

அந்த அறையோ குறுகலான இடம் கொண்டது. அந்த அறையில் ஏனோ பூட்ஸ் பாலிஷின் நாற்றம் கப்பென்று அடித்தது. உள்ளூர்ப் போலீஸ்காரனும், வேறு இரு போலீஸ்காரர்களும் தடதடவென்று தரையை மிதித்துக்கொண்டு அரங்கிலுள்ள புத்தகங்களையெல்லாம் இழுத்தெடுத்து, அதிகாரியின் முன்னால் கிடந்த மேஜை மீது குவித்தார்கள். வேறு இருவர் சுவர்களை முஷ்டியால் குத்திப் பார்த்தார்கள்; நாற்காலிகளுக்கு அடியில் புரட்டிப் பார்த்தார்கள்; அவர்களில் ஒருவன் அடுப்புக்கு மேலே கூட ஏறிப்பார்த்தான். ஹஹோலும் நிகலாயும் ஒரு மூலையில் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்றுகொண்டிருந்தார்கள். அம்மைத் தழும்பு விழுந்த நிகலாயின் முகம் திட்டுத் திட்டாய்ச் சிவந்தது; அவனது சிறிய சாம்பல் நிறக் கண்கள் அதிகாரியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன. ஹஹோல் தன் மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு நின்றான். தாய் அந்த அறைக்குள் வந்தபோது, அவன் சிறிது சிரித்தான். அவளை உற்சாகப்படுத்த தலையை ஆட்டினான்.

பய பீதியிலிருந்து தப்பிப்பதற்காக, அவள் வழக்கம் போல் பக்கவாட்டில் அசைந்து நடக்கவில்லை. நெஞ்சை நிமிர்த்தி நேராக நடந்தாள், இந்தப் புதிய நடை அவளுக்கு ஒரு வேடிக்கையான கம்பீர பாவத்தை உண்டாக்கியது. அவள் தைரியமாகத் தடதடவென்று நடந்தாள். எனினும் அவளது புருவங்கள் மட்டும் பயத்தால் நடுங்கத்தான் செய்தன.

அந்த அதிகாரி அந்தப் புத்தகங்களை மெலிந்த விரல்களுள்ள தனது வெள்ளை நிறக் கைகளால் பற்றி எடுத்தான். விடுவிடென்று பக்கங்களைப் புரட்டினான்; மிகவும் அநாயாசமான லாவகத்தோடு அந்தப் புத்தகங்களை ஒரு புறம் எறிந்தான். சில புத்தகங்கள் சப்தமே செய்யாமல் பொத்தென்று விழுந்தன. யாருமே எதுவும் பேசவில்லை. அங்கு நிலவிய சப்தமெல்லாம் முசு முசுவென்று மூச்சு வாங்கும் வேர்த்துப்போன போலீஸ்காரர்களின் சுவாசமும் அவர்களது பூட்ஸ் சப்தமும், இடையிடையே ஒலிக்கும், அந்த ஒரே கேள்வியும்தான்.

”இங்கே பார்த்து முடித்துவிட்டாயா?”

பாவெலுக்கு அடுத்தாற்போல் சுவரையொட்டிச் சாய்ந்து நின்றாள் தாய்; அவன் எப்படிக் கைகளைக் கட்டியிருந்தானோ, அதுபோலவே அவளும் கட்டியிருந்தாள். அவளது பார்வை போலீஸ்காரர்கள் செல்லுமிடங்களுக்கெல்லாம் தொடர்ந்து சென்று கொண்டிருந்தது; கால்களில் பலம் குன்றுவதாகத் தோன்றியது. கண்களில் நீர்த்திரை மல்கியது.

”புத்தகங்களை ஏன் தரையில் எறிய வேண்டும்?’ என்று நிகலாயின் முரட்டுக் குரல் அமைதியைப் பிளந்து கொண்டு ஒலித்தது.

தாய் திடுக்கிட்டாள். திவெர்யகோவ் தன்னை யாரோ பிடித்துத் தள்ளிய பாவனையில் தலையை முன்னுக்கு இழுத்தான்; ரீபின் பற்களைக் கடித்துக்கொண்டு நிகலாயை வெறித்துப் பார்த்தான்.

அந்த அதிகாரி கண்களை நெரித்து, நிகலாயின் அசைவற்ற முகத்தை வெறித்துப் பார்த்தான். அவனது கைகள் புத்தகத்தின் பக்கங்களை இன்னும் வெகு துரிதமாகப் புரட்டத் தொடங்கின. சமயங்களில் அவன் தனது அகன்ற சாம்பல் நிறக் கண்களை மேலும் அகலத் திறந்து பார்த்தான். அந்தப் பார்வை அவன் ஏதோ தாங்க முடியாத வேதனையால் தவிப்பது போலவும், சக்தியற்ற கோபத்தில் வாய்விட்டுக் கத்தப்போவது போலவும் தோன்றியது.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

“ஏ, போலீஸ்காரா! புத்தகங்களைப் பொறுக்கி எடு!” என்று மீண்டும் சத்தமிட்டான் நிகலாய்.

உடனே எல்லாப் போலீஸ்காரர்களும் அவன் பக்கமாகக் கண் திருப்பினர். பிறகு தங்கள் அதிகாரியைப் பார்த்தனர். அதிகாரி நிமிர்ந்து நிகலாயின் அகன்ற உருவத்தின் மீது மெதுவான பார்வை செலுத்தினான்.

”ம்! அவற்றைப் பொறுக்குங்கள்!” என்று மூக்கால் உறுமினான் அவன்.

போலீஸ்காரர்களில் ஒருவன் உலைந்து கிழிந்து கிடந்த புத்தகங்களைக் குனிந்து பொறுக்கினான்.

“நிகலாய் கொஞ்சம் வாயை மூடிக்கொண்டுதான் இருக்கட்டுமே” என்று பாவெலைப் பார்த்து முனகினாள் தாய்.

அவனோ வெறுமனே தோளை மட்டும் குலுக்கிக் கொண்டான். ஹஹோல் தலையைக் குனிந்து கொண்டான்.

“இந்த பைபிளைப் படிப்பது யார்?”

“நான் தான்” என்றான் பாவெல்.

”இந்தப் புத்தகமெல்லாம் யாருடையவை?”

”என்னுடையவை” என்றான் பாவெல்.

”ரொம்ப சரி” என்று கூறிக்கொண்டே நாற்காலியில் சாய்ந்தான் அதிகாரி. தனது மெல்லிய கைவிரல்களை முறித்துச் சொடுக்கு விட்டுக்கொண்டான்; கால்களை மேஜைக்கு அடியில் நீட்டினான். மீசையைத் தடவிவிட்டுவிட்டு நிகலாயிடம் கேட்டான் ;

அந்தப் புத்தகங்களை ஒரு புறம் எறிந்தான். சில புத்தகங்கள் சப்தமே செய்யாமல் பொத்தென்று விழுந்தன. யாருமே எதுவும் பேசவில்லை. அங்கு நிலவிய சப்தமெல்லாம் முசு முசுவென்று மூச்சு வாங்கும் வேர்த்துப்போன போலீஸ்காரர்களின் சுவாசமும் அவர்களது பூட்ஸ் சப்தமும், இடையிடையே ஒலிக்கும், அந்த ஒரே கேள்வியும்தான்.

”நீ தான் அந்திரேய் நஹோத்காவா?”

“ஆமாம்” என்று ஓர் அடி முன்னால் வந்து சொன்னான் நிகலாய். ஹஹோல் அவனது தோளைப் பிடித்து இழுத்துப் பின்னுக்குத் தள்ளினான்.

‘அவன் சொல்வது தவறு. நான்தான் அந்திரேய்…”

அதிகாரி தன் கையை உயர்த்தி நிகலாயை மிரட்டினான்.

“ஜாக்கிரதையாயிரு!”

பிறகு அவன் தான் கொண்டு வந்திருந்த தஸ்தாவேஜுகளைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினான்.

ஜன்னலுக்கு வெளியே நிலவொளி எந்தவிதக் கவலையுமற்றுக் காய்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் முன்புறமாக யாரோ நடந்து செல்லும்போது, பனிக்கட்டிகள் நொறுங்கிக் கரகரப்பது கேட்டது.

”நஹோத்கா? நீ ஏற்கெனவே அரசியல் குற்றத்துக்கு ஆளான பேர்வழியில்லை” என்று கேட்டான் அதிகாரி.

“ஆமாம், ராஸ்தோவில் ஒருமுறை; சராத்தவில் ஒரு தடவை. ஆனால் அங்கே போலீஸ்காரர்கள் மரியாதையோடு நடந்து கொண்டார்கள்!”

அதிகாரி தனது வலது கண்ணை மூடி, அதைத் தேய்த்துவிட்டுக்கொண்டான். பிறகு அவன் தனது சிறிய பற்களை வெளிக் காட்டிக்கொண்டே கேட்டான்.

“தொழிற்சாலையில் சட்டவிரோதமான பிரசுரங்களில் வினியோகித்த போக்கிரிகள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா?”

ஹஹோல் லேசாகச் சிரித்தான் , உடம்பை ஆட்டிக்கொண்டான். அவன் ஏதோ பதில் சொல்ல முனையும் போது, மீண்டும் நிகலாய் குறுக்கிட்டுச் சத்தமிட்டான்.

“போக்கிரிகளையே நாங்கள் இப்போதுதான் பார்க்கிறோம்!”

ஒரே சவ அமைதி, ஒரு கணத்துக்கு ஸ்தம்பித்த சர்வ அமைதி நிலைத்தது.

தாயின் நெற்றியிலிருந்த வடுப்பாகம் வெளிறிட்டுப் போயிற்று: அவளது வலது புருவம் மேல் நோக்கி நெரிந்து உயர்ந்தது. ரீபினின் கரிய தாடி விபரீதமாக நடுநடுங்கியது. அவன் அந்தத் தாடியைக் கைவிரல்களால் கோதிக் கொடுத்துக்கொண்டே தலையைக் குனிந்தான்.

“இந்த நாயை வெளியே கொண்டு போ” என்று கர்ஜித்தான் அதிகாரி.

இரு போலீஸ்காரர்கள் நிகலாயின் கைகளைப் பற்றிப் பிடித்து, அவனைப் பலவந்தமாகச் சமையல் கட்டுக்குள் தள்ளிக்கொண்டு போனார்கள். அங்கு சென்றவுடன் அவன் தன் கால்களைத் தரையில் அழுத்தி ஊன்றி அசைய மறுத்தான்.

“நிறுத்துங்கள்!” என்று கத்தினான், “நான் என் சட்டையைப் போட்டுக் கொள்ள வேண்டும்!”

போலீஸ் தலைவன் முற்றத்திலிருந்து வந்து சேர்ந்தான். ”அங்கேயும் ஒன்றுமில்லை. எங்கும் பார்த்தாயிற்று.”

“பார்த்துப் புண்ணியம்? கிடைக்காதது அதிசயமில்லை. இங்கே இருப்பவன் ரொம்பக் கைதேர்ந்த புள்ளி. பிறகு இயல்புதானே” என்று சலித்துப் போய்ச் சொன்னான் அதிகாரி.

தாய் அவனது வலுவற்ற சில்லுக் குரலைக் கேட்டாள், மஞ்சள் நிறமான முகத்தைப் பயத்தோடு பார்த்தாள். பொது மக்களைச் சற்றும் மதியாத கர்வியான, ஓர் இரக்கமற்ற எதிரி தன்முன் நிற்பது போல் அவள் மனத்தில் பட்டது. இந்த மாதிரி நபர்களோடு அவளுக்கு என்றும் பரிச்சயம் ஏற்பட்டதில்லை. இப்படிச் சிலர் இருக்கிறார்கள் என்பதே அநேகமாய் மறந்துவிட்டது.

“இந்த மனிதன்தான் அந்தத் துண்டுப் பிரசுரங்களைக் கண்டு கோபப்பட்டவன் போலிருக்கிறது” என்று அவள் நினைத்துக்கொண்டாள்.

“அந்திரேய் அனிசுமோவிச் நஹோத்கா, கள்ளத்தனமாய் பிறந்தவரே, உம்மை நான் கைது செய்கிறேன்”

”நான் உன்னைக் கேட்கவில்லை” என்று கடுமையான குரலில் எதிர்த்துச் சொன்னான் அதிகாரி. “ஏ, கிழவி வாயைத் திற!”

”எதற்காக?” என்று அமைதியுடன் கேட்டான் ஹஹோல்.

“அது பின்னால் உமக்குத் தெரியும்” என்று நையாண்டியாய்ச் சொன்னான் அதிகாரி. ‘நீ படித்தவளா?” என்று பெலகேயாவைப் பார்த்துக் கேட்டான்.

“இல்லை, அவள் படிக்கவில்லை” என்றான் பாவெல்.

”நான் உன்னைக் கேட்கவில்லை” என்று கடுமையான குரலில் எதிர்த்துச் சொன்னான் அதிகாரி. “ஏ, கிழவி வாயைத் திற!”

தாயின் உள்ளத்தில் அந்த மனிதன் மீதுள்ள வெறுப்பு மேலோங்கியது. குளிர்ந்த தண்ணீரில் திடீரென்று விழுந்து விட்டது போல, அவளது உடம்பு முழுவதும் நடுநடுங்கி விறைத்தது. அவள் நிமிர்ந்து நின்றாள். அவளது நெற்றிவடு கன்றிச் சிவந்தது. அவளது புருவங்கள் கண்ணுக்குள் இறங்குவது போல சுழித்தன.

”சத்தம் ஒன்றும் போட வேண்டாம்!” என்று கையை நீட்டிக்கொண்டு சொன்னாள் தாய். “நீங்கள் இன்னும் சிறு வயதினர். உங்களுக்குத் துன்பமும் துயரமும் இன்னதென்று தெரியாது.”

“அம்மா, சாந்தமாயிருங்கள்” என்று கூறி பாவெல் அவளைப் பேசவிடாமல் தடுத்து நிறுத்த முயன்றான்.

”நில்லு, பாவெல்!” என்று கத்திக்கொண்டே, அவள் மேஜையை நோக்கி விரைந்தாள். ”நீங்கள் இவர்களை ஏன் இட்டுச் செல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“வாயை மூடு! அது உன் வேலையல்ல!” என்று அதிகாரி ஆவேசத்தோடு எழுந்து சத்தமிட்டான். “கைதான வெஸோவ்ஷிகோவைக் கொண்டு வாருங்கள்!”

பிறகு அவன் ஏதோ ஒரு காகிதத்தைத் தனது மூக்கினருகே கொண்டு போய் வாசிக்க ஆரம்பித்தான்.

போலீஸார் நிகலாயைக் கொண்டு வந்தார்கள். அதிகாரி வாசிப்பதை நிறுத்திவிட்டுக் கத்தினான்.

“உன் தொப்பியைத் தூர எடு”

ரீபின் பெலகேயாவிடம் வந்து, முழங்கையால் அவளை லேசாக இடித்துவிட்டுச் சொன்னான்.

“அம்மா, அதைரியப் படாதே.”

” என் கைகளை பிடித்துக்கொண்டால், தொப்பியை எப்படி எடுப்பதாம்?” என்று அந்த அதிகாரி வாசித்த வாக்குமூலத்தை அமுங்கடிக்கும் குரலில் சத்தமிட்டான், நிகலாய்.

“இதிலே கையெழுத்துப் போடு” என்று கையிலிருந்த காகிதத்தை மேசைமீது எறிந்துவிட்டு, கத்தினான் அதிகாரி.

அவர்கள் கையெழுத்திடும் போது, தாய் அவர்களைக் கவனமாகப் பார்த்தாள், அப்போது அவளது கோபம் தணிந்துவிட்டது; உணர்ச்சி உள்ளடங்கிவிட்டது. அவளது கண்களில் பலவீனமான துயர நிலையால் ஏற்பட்ட கண்ணீர்தான் நிரம்பித் ததும்பி நின்றது. அவளுக்குக் கல்யாணமானதிலிருந்து இருபது வருஷ காலமாக, இந்த மாதிரி எத்தனையோ தடவை கண்ணீர் விட்டிருக்கிறாள்; எனினும் கடந்த சில வருஷங்களாக, கண்ணீரின் வேதனையை மறந்திருந்தாள். அந்த அதிகாரி அவளைப் பார்த்தான், பிறகு துவேஷ பாவம் கொண்ட வறட்டுப் புன்னகையோடு சொன்னான்.

“தாயே! உன் கண்ணீரை மிச்சப்படுத்தி வை; இல்லையென்றால், பின்னால் அழுது தீர்க்கக் கண்ணீரே இருக்காது.”

அவளுக்கோ மீண்டும் கோபம் பொத்துக்கொண்டு வந்தது.

”ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணீர் உண்டு, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால், அப்போது தெரியும்!”

பளபளப்பான பூட்டு மாட்டியிருந்த சிறு பெட்டியில் தனது தஸ்தாவேஜுகளை அதிகாரி அவசரமாக வைத்தான்.

“புறப்படுங்கள்” என்று உத்தரவிட்டான்.

தன்னோடு அவர்கள் கைகுலுக்கிக் கொண்ட போது, அன்பும் அமைதியும் நிறைந்த குரலில் விடை கொடுத்தான் பாவெல்: ”போய்வா அந்திரேவ், போய்வா நிகலாய்”

”ஆமாமாம், போய்விட்டு வந்தாலும் வருவார்” என்று அந்த அதிகாரி எகத்தாளமாய்ச் சொன்னான்.

நிகலாய் நெடுமூச்சு விட்டான். அவனது தடித்த கழுத்தில் ரத்தம் பாய்ந்து புடைத்தது. அவனது கண்களில் கோபம் முட்டி மோதிப் பொங்கிக்கொண்டிருந்தது. ஹஹோல் பளிச்சென்று சிறு புன்னகை செய்து தலையை ஆட்டினான், தாயிடம் மட்டும் இரகசியமாக ஏதோ சொன்னான். அவளோ சிலுவைக் குறியிட்டபடி சொன்னாள்.

“கடவுள் யார் நல்லவர் என்பதைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்……..”

கடைசியாக, அந்தக் காக்கிச் சட்டை ஆசாமிகள் வாசல் புறத்தை நோக்கிச் சென்றார்கள், காலில் அணிந்த பூட்ஸின் தார் ஆணிகளின் சப்தம் கலகலத்து கறைய அவர்களும் கண் மறைந்து போய்விட்டார்கள். ரீபின் தான் கடைசியாகப் போனான். அவன் போகும்போது பாவெலைக் கவனமாய்ப் பார்த்துவிட்டுப் போனான்.

”சரி. நான் …. வ….ரட்….டுமா?” என்று ஏதோ சிந்தித்தவாறே சொல்லிவிட்டு, தாடியுள் இருமிக் கொண்டே வெளியே போனான்.

பாவெல் தனது கைகளைப் பின்னால் கோர்த்துக் கொண்டு சிதறிக்கிடந்த புத்தகங்களையும், துணிமணிகளையும் தாண்டித் தாண்டி மெதுவாக உலவினான்.

”பார்த்தாயா? அவர்கள் இப்படித்தான் செய்வார்கள்” என்று சோர்ந்துபோன குரலில் சொன்னான் அவன்.

அவனது தாய் குழம்பிக் கிடந்த வீட்டின் சூழ்நிலையைப் பரிதாபகரமாகப் பார்த்தாள்.

“நிகலாய் ஏன் இவ்வளவு முரட்டுத்தனமாய் நடந்துகொண்டான்?” என்று வருத்தத்தோடு கேட்டாள்.

“ஒருவேளை அவன் உள்ளுக்குள் பயந்து போயிருக்கலாம்” என்றான் பாவெல்.

”அவர்கள் பாட்டுக்கு வந்தார்கள். இவர்களைப் பிடித்தார்கள். கொண்டு போய்விட்டார்கள். இப்படித்தான்………” என்று கைகளை ஆட்டிக்கொண்டே சொன்னாள்.

”ஒரு தாய்க்கு எதற்கும், எத்தனை தடவை வேண்டுமானாலும், சிந்தித் தீர்க்க கண்ணீர் உண்டு, உங்களுக்கு ஒரு தாய் இருந்தால், அப்போது தெரியும்!”

அவளது மகன் கைது செய்யப்படவில்லை; எனவே அவளது இதயம் அமைதி நிறைந்து அடித்துக்கொண்டது. ஆனால், தன் கண் முன்னால் நடந்து போன மறக்க முடியாத அந்தக் காட்சியை நினைத்து நினைத்து அவளது சிந்தனை செயலற்று ஸ்தம்பித்துத் தவித்துக்கொண்டிருந்தது.

“அந்த மஞ்சள் மூஞ்சிக்காரன் மூமூ அவன் நம்மைக் கேலி செய்தான்! பயமுறுத்தினான்”

”சரி, அம்மா, என்று திடீரென்று தீர்மானமாகச் சொன்னான் பாவெல். ”நீ வா… இதையெல்லாம் ஒழுங்குபடுத்தலாம்.”

”அம்மா” என்றும்  ‘நீ’ என்றும் தாயை அழைத்தான். அவளுக்கு வெகு நெருக்கமாய் இருக்கும் பொழுதுதான் தாயை அவன் அவ்வாறு அழைப்பது வழக்கம். அவள் அருகே சென்று அவன் முகத்தைப் பார்த்தாள்.

”அவர்கள் உன்னை இழிவுபடுத்திவிட்டார்களா?” என்று அமைதியுடன் கேட்டாள்.

“ஆமாம், அதுதான் சங்கடமாயிருக்கிறது. அவர்கள் என்னையும் கொண்டு சென்றிருந்தால் நல்லது!”

அவனது கண்களில் கண்ணீர் ததும்பியிருப்பதாக அவளுக்குப் புலப்பட்டது. அவனது இதய வேதனையை ஆற்றுவதற்கு முயல்வது போல், அவள் பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னாள்.

”பொறு பொறு, அவர்கள் உன்னையும்கூடக் கொண்டு போய்விடுவார்கள்!”

”நிச்சயம் கொண்டு போவார்கள்!”

அவள் ஒரு கணம் மௌனமானாள்.

“பாஷா, நீ எவ்வளவு உறுதி வாய்ந்தவன்!” என்று சொன்னாள் அவள். ”நீ ஒரு வேளையாவது உன் தாயைத் தேற்றியிருக்கிறாயா? நான் ஏதோ பயங்கரத்தைச் சொன்னால், நீ அதைவிடப் பயங்கரத்தைச் சொல்லி, என்னையே பயப்பட வைக்கிறாயே!’ என்று பரிதவித்தாள்.

அவளை ஏறிட்டுப் பார்த்தவாறே தாயை நெருங்கினான் அவன்.

“எனக்கு அதெல்லாம் தெரியாது, அம்மா. நீதான் இதற்கெல்லாம் உன்னைப் பழக்கிக் கொள்ள வேண்டும்.”

அவள் பெருமூச்சு விட்டாள், உணர்ச்சி வசப்பட்டு வெடிக்கத் தயாராயிருக்கும் குரலை உள்ளடக்கிக்கொண்டு, சிறிது நேரம் கழித்து அவள் கூறினாள்.

”அவர்கள் மனிதர்களைச் சித்திரவதை செய்வார்கள் என்றா நினைக்கிறாய்? அந்த மனிதர்களின் உடம்பைக் கிழித்து, எலும்புகளை நொறுக்கி… அதைப்பற்றி நினைத்தாலே, ஐயோ, என் கண்ணே!…. என்னால் தாங்க முடியவில்லையடா ……..”

”அவர்கள் ஆன்மாவையே நொறுக்குகிறார்கள். அதுதான் மிகுந்த வேதனை தருகிறது. அவர்கள் தமது தீய கரங்களால் உன் ஆத்மாவைத் தொடும்போது………”

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

(பாகம் – 5) இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?
(பாகம் – 6) நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்
(பாகம் – 7)  பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?
(பாகம் – 8) பாதி மனம் காதலிக்கிறது .. பாதி மனம் பகைக்கிறது ..
(பாகம் – 9) ஜாக்கிரதையாயிரு , இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது

மீண்டும் தலையெடுக்கும் டெங்கு ! அனந்த சயனத்தில் அடிமை அரசு !

டகிழக்கு பருவ மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை தமிழகத்தில் டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை ஒரே வாரத்தில் 13 ஆகவும், தற்போது அவை 17 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழகம் முழுவதும் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை தமிழக அரசு டெங்குவை தடுப்பதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அதன் வெளிப்பாடுதான் 17 உயிர்கள் பலியாகியுள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு பலியான இரட்டை குழந்தைகள் தக்ஷன், தீக்ஷா (படம் – நன்றி : தினகரன்)

சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாதவரத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகளான தக்ஷன், தீக்ஷா ஆகியோர் டெங்கு காய்ச்சலால் கடந்த அக்டோபர் 21 -ம் தேதி உயிரிழந்தனர்.

சென்னை எண்ணூர் சேர்ந்த சாதிக்கின் மூன்று வயது மகன் சபிக் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தது. மேலும் கடந்த வாரங்களில் புளியந்தோப்பை சேர்ந்த அஸ்லாம், பெரம்பூரை சேர்ந்த ரிஸ்வான், மணலியை சேர்ந்த கவியரசன் உள்பட 5 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் இன்று நேற்று அல்ல. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கடந்த  2017-ல்  மத்திய அரசின் அறிக்கையில் “தேசிய அளவில் டெங்கு காய்ச்சலால் தமிழகத்தில் 23 ஆயிரத்து 35 பேர் பாதிக்கப்பட்டனர் என்றும் 63 பேர் உயிரிழந்தனர் என்றும் மாநில அளவில் தமிழகம்தான் முதலிடம்” எனவும் குறிப்பிட்டு இருந்தது. அதேபோல், கடந்த ஆண்டு மூவாயிரத்து 315 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவித்து இருந்தது.

மேலும் :
டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !
டெங்கு : செயலிழந்த எடப்பாடி அரசும் மாநகராட்சியுமே குற்றவாளிகள் !

அரசின் இந்த அறிக்கை ஒரு கடைந்தெடுத்த பொய் என்பது சமகாலத்தில் வாழும் அனைவருக்கும் தெரிந்ததே. கடந்த ஆண்டு டெங்குக் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பலரை ‘டெங்கு காய்ச்சல்’ என்று பதிவு செய்யாமல் ‘மர்மக் காய்ச்சல்’ என்றே பதிவு செய்து மக்களின் உயிரோடு விளையாடியது இந்த அரசு.

அரசு மருத்துவமனையின் மீது நம்பிக்கை இழந்து தனியார் மருத்துவமனையை மக்கள் நாடியதும், அவர்களிடம் முடிந்த அளவிற்கு காசையும் பிடுங்கிக் கொண்டு ‘டெங்குக் காய்ச்சல்’ என்று தெரிந்தவுடன் அரசு மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பிய கொடூரமும் அரங்கேறியது.

மற்றொருபுறம் டெங்கு காய்ச்சல் என்று பதியக் கூடாது என மறைமுகமாக தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த அய்யோக்கியத்தனங்களை எல்லாம் எளிதல் மறந்து விட முடியாது. “சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும்” பாணியில் செயல்பட்டுவிட்டு,  அரசின் சாமர்த்தியத்தால் டெங்கு காய்ச்சலைத் தடுத்து விட்டோமென்று வெட்கமில்லாமல் பொய் பேசியது அதிமுக கிரிமினல் அரசு.

அதேபாணியை இந்த ஆண்டும் செயல்படுத்துகிறது. பருவமழை தொடங்கிய அக்டோபர் முதற்கொண்டு தமிழகத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன என்பதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அதேபோல “அக்டோபர் 1ம் தேதி முதல் சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு இருக்கிறது” என்று அரசு சுகாதாரத்துறை செயலாளர் எச்சரித்தும் சுகாதார நடவடிக்கையை துரித்தப்படுத்தாமல், சின்னசிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 17 பேரை பலிகொடுத்துவிட்டு, அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்களாம்.

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,  “உள்ளாட்சி துறை மூலம் மொத்தம் 9,388 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் வாகனங்களில் பொருத்தப்பட்டு கொசு மருந்து அடிக்கப்படும் என்றும்,  தமிழகம் முழுவதும் மொத்தம் 1,81,859 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத் துறையுடன் இணைந்து வேகமாக பணியாற்ற  அறிவுறுத்தியுள்ளதாகவும், 50 வீட்டுக்கு ஒரு ஆள் என ஒவ்வொருவரும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

மேலும், கடந்த ஆண்டில் 100 சதவீத அறிகுறி இருந்தது. ஆனால் இந்த ஆண்டு 10 சதவீதம் மட்டுமே உள்ளது. ஆரம்பத்திலேயே இதை கட்டுப்படுத்தி எங்கேயும் இறப்பு வரக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம். டெங்கு நோயை தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அரசு அலுவலகங்கள், பஸ் ஸ்டாண்ட்கள், பள்ளிகள், கல்லூரிகளில் நிலவேம்பு கசாயம் இலவசமாக கொடுக்க சொல்லியுள்ளோம்” என்று அலட்சியமாகவும், முரணாகவும் சொல்லுகிறார்.

வடகிழக்கு பருவமழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே ஆறு பேர் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார்கள். சுகாதாரத்தில் பின் தங்கிய மாவட்டமான திருவள்ளூரில் இந்த ஆண்டு  மட்டும் 4000 பேர்  மர்மக் காய்ய்சல் காரணமாக தினந்தோறும் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வந்திருக்கின்றனர். அப்பொழுதே அதுகுறித்த நடவடிக்கை எடுக்கவில்லை அரசு.

அதன் விளைவு தற்பொழுது 105 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 17 பேருக்கு டெங்கு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு போதிய வசதிகள் இல்லாததால் 12 பேர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள யதார்த்தம்.

படிக்க :
♦ டெங்கு : ஒழிப்பது எப்படி? 
♦ டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !

தமிழகத்தில் அடிக்கடி மக்களை பாதிக்கக் கூடிய திடீர்க் காய்ச்சலில் இருந்து காப்பற்ற போதிய மருத்துவர்களோ, மருந்துகளோ இல்லை. கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையம் மற்றும் துணை  சுகாதார நிலையங்களில் ஒரெயொரு செவிலியர் மட்டும் சிகிச்சை அளிக்கும் அவல நிலைதான் உள்ளது.

இதனால் மாவட்டத்தில் இருக்கும் தலைமை மருத்துவமனைக்கு மக்கள் படையெடுக்கிறார்கள். இதனால் போதிய மருத்துவர்கள் இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாவதோடு, சிகிச்சை அளிக்கவும் திணறுகிறார்கள்.

“ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட எந்த மருத்துவமனைகளும் கொடிய இந்த காய்ச்சலை தடுப்பதற்கு உரிய முறையில் தயார் நிலையில் இல்லை. அரசின் சார்பில் மருத்துவ முகாம்கள் கூட பெருமளவில் நடத்தப்படவில்லை” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதனைப் பற்றியெல்லாம் கடுகளவும் கவலை இல்லாமல் மாநகராட்சி முதற்கொண்டு உள்ளாட்சி வரை அனைத்து பணிகளையும் தனியாருக்கு டெண்டர் விடுவது, அதன் மூலம் கொள்ளையடித்து கொழுத்து வாழ்வதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது இந்த பார்ப்பன அடியாள் கிரிமினல் அரசு.

கடந்த ஆண்டு மக்கள் டெங்குவால் மடிந்து கொண்டிருந்த பொழுது தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை விமரிசையாக கொண்டாடினர். இப்பொழுது அதிமுகவின் 47-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தில் இருக்கிறது.

வக்கிர மனம் படைத்த இந்த அரசு எந்த அளவிற்கு மக்கள் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இந்த சாட்சி ஒன்றே போதுமானது! மக்கள் பிணத்தின் மீதமர்ந்து அதிகாரத்தை சுவைக்கும் இந்த எடப்பாடி அரசு டெங்கு கொசுவை விட ஆபத்தானது!

 

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பள்ளி மாணவர்கள் கைது !

ஸ்டெர்லைட் என்ன செய்தாலும் கண்டுகொள்ள மாட்டோம் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மக்கள் போஸ்டர் ஒட்டினாலும் கைது செய்வோம் !
– தூத்துக்குடி போலீசின் அடக்குமுறை

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பாக “சிறப்பு சட்டம் இயற்று, ஸ்டெர்லைட்டை அகற்று” என்று தமிழக அரசுக்கு கோரிக்கையை முன்வைத்து 1000 சுவரொட்டிகள் 22.10.18, 23.08.18 ஆகிய நாட்களில் தூத்துக்குடியின் நகர்ப்பகுதி, கிராமப் பகுதிகளில் பரவலாக ஒட்டப்பட்டது.

அரசிடம் கோரிக்கையை முன்வைத்து சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கும் வேலையை செவ்வனே செய்தது தூத்துக்குடி போலீசு. குறிப்பாக ஸ்டெர்லைட்டுக்கு எதிராக சின்ன சலசலப்பைக் கூட  பொறுத்துக் கொள்ள தூத்துக்குடி போலீசால் முடிவதில்லை. நகர்ப்பகுதியில் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஒட்டிய சிறிது நேரத்திற்குள் கிழிக்கும் வேலையை தனிப்படை போட்டு செய்தது.

23.08.2018 அன்று காலையில் W.G.C சாலையில் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்ட கூட்டமைப்பு நிர்வாகிகளை மிரட்டி சுவரொட்டி ஒட்டுவதை நிறுத்தப் பார்த்தது. நிர்வாகிகளை போலீசு வேனில் ஏற்றுவதற்கும் முயற்சித்தது. உடனே கூட்டமைப்பின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் அரிராகவன் தலையிட்டு  பேசினார்.

அப்போது, அங்கிருந்த வடபாகம் காவல்நிலைய ஆய்வாளர், “நீங்கள் தலையிட வேண்டாம், எங்களுக்கு மேலிட ப்ரெசர் இருப்பதால்தான் இவ்வாறு செய்கிறோம், மற்றபடி நானும் உங்களுக்கு ஆதரவுதான்” என்று பேசியுள்ளார்.

அதற்கு “ ஸ்டெர்லைட் நிறுவனம் அரசால் மூடப்பட்ட நிறுவனம். அவர்கள் மக்களிடம் பணம் கொடுத்து கையும் களவுமாக பிடித்துக் கொடுத்தோம். ஆனால், அதற்கு எந்த FIR யும் நீங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால் ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதை மட்டும் தடுக்கிறீர்கள் என்று அரிராகவன் கேட்டுள்ளார். தொடர்ந்த வாக்குவாதத்தால் வேறு வழியின்றி நிர்வாகிகளை அழைத்துச் செல்வதை கைவிட்டுவிட்டு சென்றுள்ளனர்.

அதன் பிறகு பழைய பேருந்து நிலையத்தில் நண்பகல் நேரத்தில் போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்த மாணவர்களை மத்திய காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

வழக்கறிஞர்களும், கூட்டமைப்பு நிர்வாகிகளும் சென்று பேசியும் அவர்களை வெளியில் விடவில்லை. இன்ஸ்பெக்டர் வெளியில் சென்று விட்டார், மாலைதான் வருவார் என்று கூறி நேரத்தை கடத்துவதில் குறியாக இருந்துள்ளது போலீசு. அங்கேயே அரிராகவன் உள்ளிட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் சிலரும் மாலை வரை காத்திருந்துள்ளனர். ஆனால் எந்த பதிலும் இல்லை. பிறகு மாலையில் கூட்டமைப்பு நிர்வாகிகளும், ஊர் மக்களும் 50 பேருக்கு மேல் போலீசு ஸ்டேசனுக்கு முன்பு கூடியுள்ளனர்.

இவ்வாறு மக்கள் கூடிய பிறகுதான் காவல்துறை தனது போக்கை மாற்றிக் கொண்டது. அதுவரை மேலிருந்து சொன்னால்தான் செய்ய முடியும் என்று சொன்னவர்கள், “திறந்த வெளியில் அழகு குலைப்பதை தடுக்கும் சட்ட”த்தின் கீழ் எப்.ஐ.ஆர். மட்டும் போடுகிறோம், அழைத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

கூட்டமைப்பு நிர்வாகிகளும், மக்களும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஸ்டெர்லைட் ஆட்கள் குலசேகரம் திருவிழாவிற்கு பேனர் வைத்ததற்கும், கிராமங்களில் பணம் கொடுத்ததற்கும் என்ன வழக்கு போட்டுள்ளீர்கள்? தடை செய்யப்பட்ட நிறுவனத்திற்கு என்ன அடிப்படையில் தாசில்தாரும், காவல்துறையும் அனுமதி கொடுத்துள்ளீர்கள்? ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதை மட்டும் ஏன் குற்றமாக சித்தரிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியதற்கு எந்த பதிலும் இல்லை.

மாணவர்கள் மீது வழக்கு போட்டால், கருப்புக் கொடி காட்டுவோம், சாலை மறியலில் இறங்குவோம், மக்களைத் திரட்டுவோம் என மக்கள் அடுத்த கட்டத்திற்கு பேசத் தொடங்கியவுடன், நிலைமையின் தீவிரத்தை போலீசு உணர்ந்து கொண்டது.

இறுதியாக, நாங்கள் முறைப்படிதான் விசாரித்தோம் என்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் மட்டும் எழுதிக் கொடுத்து செல்லுங்கள் என்று பணிந்து வந்தது.

பார்க்க:
ஸ்டெர்லைட் புற்றுநோய்க்கு பண்டாரம்பட்டி கணேசம்மாள் பலி
தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

அதன் பிறகு மக்கள், போஸ்டரை கிழித்ததற்கு, கம்ப்ளெய்ண்ட் எழுதிக் கொடுத்தனர். கிழித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். முதலில வாங்க மறுத்தனர். போஸ்டரைக் கிழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என ஏற்கனவே ஏப்ரல் 24 மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முற்றுகைப் போராட்டத்தின் போது அப்போதிருந்த எஸ்.பி. வாக்குறுதி அளித்திருந்தார் என்பதை நினைவூட்டியபின் நிர்ப்பந்தத்தின் காரணமாக வாங்கிக் கொண்டனர்.

இரவு 9.00 மணியளவில் எஸ்.பி.-யைச் சந்திக்க கூட்டமைப்பில் இருந்து 50 பேர் சென்றனர். SP யை சந்திப்பதற்கு 5 பேரை அனுமதித்தனர். உள்ளே சென்ற கூட்டமைப்பு நிர்வாகிகள், நடந்தவற்றை கூறியுள்ளனர். ஸ்டெர்லைட் கம்பெனி ஊருக்குள் பணம் கொடுப்பதைப் பற்றியோ, குலசேகரத்தில் திருவிழாவிற்கு உதவிகள் செய்தது பற்றியோ, குளங்கள் தூர்வாருவது பற்றியோ எதுவும் தெரியாது. பேப்பரிலும் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

அதைப்பற்றி எதுவும் தெரியாதாம். மக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்ட தெருவுக்குள் போஸ்டர் ஒட்டுவது மட்டும் தெரிந்து விடுகிறதாம். மொத்த மாவட்ட நிர்வாகமும் ஸ்டெர்லைட் ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது என்பதும், எதிர்ப்பாளர்களை ஒடுக்குவதிலேயே குறியாக உள்ளது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது. இது கண்டனத்துக்குரியதாகும்.

அரசால் மூடப்பட்ட ஒரு கார்ப்பரேட் நிறுவனம், எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல், அதிகாரிகளையும் மதிக்காமல், சட்ட விரோதமாக நடந்து கொண்டாலும் அதனை தட்டிக்கேட்பதற்கு இயலாமல், கை கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை மக்கள் தங்கள் வாழ்வுரிமையைப் பாதுகாத்துக் கொள்ள சுவரொட்டி ஒட்டுவதையே கிரிமினல் குற்றமாக சித்தரிக்கிறது. அதன் மூலம் மக்கள் பயந்து ஒடுங்கி விடுவார்கள், போராட்டத்தைக் கைவிட்டு விடுவார்கள் என்றே மனக்கணக்கு போடுகிறது.

படிக்க:
சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

ஆனால் அப்படி ஒதுங்கிப் போய்விட மாட்டோம், அடுத்த தலைமுறையைப் பாதுகாப்பதற்கும், 14 உயிர்கள் பறிபோனதற்கும் இறுதிவரை போராடி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதே ஒரே தீர்வு என்பதை உணர்ந்து கொண்ட தூத்துக்குடி மக்களின், போராட்ட உணர்வே இச்சம்பவத்தில் மாணவர்களை மீட்டுக் கொண்டு வரக் காரணம்.

எப்படிப்பட்ட தடைகள் வந்தாலும்,  மக்களின் துணை கொண்டு தடைகளை முறியடித்து, ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடுவதற்கான இந்தப் போராட்டத்தை எடுத்துச் செல்வதற்கு ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு உறுதியோடு நிற்கும்.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு

*****

ஸ்டெர்லைட் : பொதுவாக்கெடுப்பு நடத்து !
மக்கள் அதிகாரம் அமைப்பின் கண்டன சுவரொட்டி!

சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா ? ம.க.இ.க. பாடல் காணொளி

#ayyappa #ReadyToWait #sabarimala #SabarimalaTemple

பரிமலையில் பெண்கள் நுழையலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், சங்க பரிவாரக் கும்பல், சபரிமலையில் பக்தர்களைச் சுரண்டித் தின்னும் தந்திரி குடும்பம்,   கேரளத்தின் பழமையின் அடையாளமான அரச குடும்பம் ஆகியவற்றின் ‘புனித’க் கூட்டு பெண்கள் நுழைவுக்கு எதிராக வெறியாட்டம் ஆடத் தொடங்கியிருக்கிறது.

சபரிமலையில் நடை திறக்கபட்ட பிறகு அங்கு சென்ற பல பெண்களை பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி தாக்கத் தொடங்கியது சங்கப் பரிவாரக் கும்பல். இராஜஸ்தான், உத்திரப் பிரதேசம் என வட இந்திய சங்க பரிவாரக் கும்பலை களத்தில் இறக்கி விட்டு இந்தத் தாக்குதல்களை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது.

இந்தத் தாக்குதல்களை பக்தர்கள் போராட்டம் என செய்தி போட்டு சங்க பரிவாரத்திற்கு தனது சேவையை செவ்வனே செய்தன தமிழ் இந்து போன்ற பத்திரிகைகள். இதே பத்திரிகைதான் தூத்துக்குடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை கலவரக்காரர்கள் என எழுதியது.

1970-களுக்கு முன்னர் அனைவரும் சென்ற கோவில் என்பதில் தொடங்கி ஆகம விதிகள் எதுவும் இல்லாத மலைக் கோவில் தான் ஐயப்பன் கோவில் என்பது வரையில் பல்வேறு ஆதாரப் பூர்வமான விவரங்கள் சொல்லப்பட்டும், இது நம்பிக்கை சார்ந்த விசயம் எனக் குதிக்கின்றனர் சங்கிகள். சபரி மலைக்கு பெண்கள் தீட்டு என்பது ஆர்.எஸ்.எஸ்.-ன் குரல் என்பதை அம்பலப்படுத்தி வெளிவந்திருக்கிறது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இந்தப் பாடல், “சபரி மலைக்கு வந்தா தீட்டா?”

பாடல் வரிகள்:

சபரிமலைக்கு வந்தா  தீட்டா தீட்டா?
எங்களைத் தடுக்க  தனி பூட்டா பூட்டா?
கடவுளின் நாட்டிலே … பெண்களை தடுக்குறே
gods  –  own country      ladies no entry
எந்தா  நியாயம் பறையூ சேட்டா சேட்டா!

அய்யப்பன் பிரம்மச்சாரி அவருக்கும் டவுட்டில்ல
ஆம்பிளை சாமிக மேல எங்களுக்கும் டவுட்டில்ல
ஆர்எஸ்எஸ் சங்கிகதான் ஆடுதுங்க  நடுவுல
உன் மேல டவுட்டுன்னா –  நீஇருந்துக்க வூட்டுல!

நாலுமணிக்கு   எழுப்பிவுட்டு
நானும் உன்கூட விரதமிருந்து
விடிய விடிய பஜனை பாட்டு
பட்டாளத்துக்கே ஆக்கிப்போட்டு
மகளிர் குழுவில் சீட்டு போட்டு
திரும்பும் வரைக்கும் விளக்கு போட்டு
திங்கிறதெல்லாம்  தின்னுபுட்டு
மலைக்கு மட்டும்…    பொம்பளை தீட்டு…

டாஸ்மாக்கிலே  தனி கிளாஸ் பாரிலே
மாலை கழுத்திலே… மட்டன் சுக்கா வாயிலே
பீடி சிகரெட்டு… சாமி சரணம், தப்பில்லே
பொண்டாட்டி வந்தா மட்டும்… புலி அடிக்குமாம் காட்டிலே!

மாராப்பு போட்டதுக்கு
மார்பை  அறுத்த  நாடு
மார்பை மறைப்பதற்கு
முலை வரி போட்ட நாடு
நாயர்  குல பெண்களை
நம்பூதிரிகள்  சிதைத்த  நாடு
அது கடவுளின் சொந்த நாடு…
தொடருது சாபக்கேடு!

பாடல் காணொளி:

Lyrics – English

They say we pollute the temple
They say we should be stopped – to save the God
This is God’s own country – Ladies.. No entry !
Is it fair ? Tell me chetta (brother) !

Lord Ayyappa is a brahmachari –
He is not afraid of us
Not doubtful of his celibacy
The male devotees –
We do not doubt their vow of celibacy either
Sanghis, if you are threatened by our presence
You better stay at home – Do not raise a ruckus

My dear husband,
Here is the story of your pilgrimage…
At 4 in the morning – I wake you up
With you – I observe all your vratas
You come in dozens for the nithya pooja
sing bhajans all through the night
I cook the feast – all of you eat heartily
No pollution then.
but for the temple, women are polluted.

Liquor does not pollute –
Bars provide ‘holy glasses’ for the Ayyappanmar.

occasional mutton sukka – also not a pollutant
smoking, no bar – these are modern days.

A mensurating wife ? No entry
She may risk losing her life
to the tigers of sabari hills

You say its all about tradition
The tradition that cut off the breasts of our women
for wearing the upper cloth
Your tradition of breast tax
The tradition that gave licence to the namboodiri brahmins
to ruin nair women at will

This is not tradition, but a curse –
The curse that continues to chase
the Gods own country.

Song Video:

படிக்க:
சபரிமலையில் பெண்களைத் தடுப்பது ஐயப்பனா? ஆர்.எஸ்.எஸ்.ஸா? | துரை சண்முகம் | காணொளி
தூத்துக்குடி : புதைந்தது உடலல்ல விதையான வீரமடா | ம.க.இ.க. பாடல்

RGNIYD மாணவர் போராட்டம் : ஒரு தேசியக் கல்வி நிறுவனம் சங்கிகளால் சீரழிக்கப்பட்ட கதை !

சென்னை ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது, இராஜீவ்காந்தி இளைஞர் முன்னேற்றத்திற்கான தேசிய கல்வி நிறுவனம். இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதியிலிருந்தும் மாணவர்கள் வந்து பயில்கின்றனர். சமூகவியல் சார்ந்த படிப்புப் பிரிவுகளைக் கொண்டதே இந்த பயிலகத்தின் சிறப்பாகும். இங்கு படிக்கும் மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமை, போதுமான ஆசிரியர்கள் இல்லாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நிர்வாகத்திடம் முன் வைத்தனர். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு நிர்வாகம் செவி சாய்க்கவில்லை. அதனைத் தொடர்ந்து மாணவர்கள் கடந்த அக்டோபர் 8-ம் தேதி முதல் 17-ம் தேதிவரையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்களில் மாணவர்கள் போராட்டம் பிசுபிசுத்துப் போய்விடும் என்றெண்ணிய நிர்வாகம், மாணவர்களின் தொடர்ச்சியான உறுதியான போராட்டத்தைக் கண்டு அம்மாணவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வந்தது.

மாணவர்கள் பின்வரும் கோரிக்கைகளை முக்கியமாக முன்வைத்தனர்.

  • மத்திய அரசின் சிறப்புக் கல்வி நிறுவனமாகிய இங்கு NAAC / UGC / NIRF போன்ற அங்கீகாரங்கள் ஏதும் இல்லாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இங்கு மாணவர் சேர்க்கையும் குறைவாக உள்ளது. கல்வி நிறுவனத்திற்கு அங்கீகாரம் பெற வேண்டும்.
  • மாணவர்களின் ஸ்காலர்சிப் தொகை முறையாக வழங்கப்படுவதில்லை.
  • இக்கல்வி நிறுவனத்திற்கான முத்திரையிலிருந்து இராஜீவ் காந்தி படம் நீக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்படும் சான்றிதழ்களிலும் இராஜீவ் காந்தி பட முத்திரை இன்றி கொடுக்கப்படுகிறது. இராஜீவ் காந்தி பட முத்திரை மீண்டும் அனைத்து சான்றிதழ்களிலும் கொண்டுவர வேண்டும்.
  • நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பல துறைகள், பேராசிரியர்கள் இல்லாமலேயே இயங்குகின்றன. அங்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
  • அடிக்கடி துறைகளின் பெயரை மாற்றுவது, துறைகளை இழுத்துய் மூடுவது போன்ற நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
  • மாணவ, மாணவியர் விடுதிகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் செயல்பாட்டில் இல்லை. மேலும் ஏற்கனவே இருக்கும் வசதிகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனை சரிசெய்ய வேண்டும்.
  • கல்லூரியில் உள்ள பல்வேறு வசதிகள் பராமரிப்பின்றியே இருக்கின்றன. முறையாக அனைத்தையும் பராமரிக்க வேண்டும்.
  • மாணவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சிகள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட வேண்டும்.
  • பிற நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்டும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வாய்ப்பு, ஆராய்ச்சி ஆகியவற்றிற்கு வசதி செய்து தரவேண்டும்.
  • தற்போது இருக்கும் மாணவர் கவுன்சில் அதிகாரம் இல்லாத அமைப்பாக இருப்பதால், மாணவர்களுக்கு சங்கம் தேவை. அதில் உடனடியாக தேர்தலும் நடத்தப்படவேண்டும்.
  • துணைப்பதிவாளர் மாணவர்களை மோசமாக நடத்துகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • உடனடியாக பயிலகத்திற்கு இயக்குனரை நியமிக்க வேண்டும்,

நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தைக்கு வந்த பதிவாளரிடம் இந்தக் கோரிக்கைகள் உள்ளிட்டு பல்வேறு கோரிக்கைகளை மாணவர்கள் முன்வைத்தனர்.

இந்தக் கோரிக்கைகளில் மாணவர்களின் ஸ்காலர்சிப் தொகை உள்ளிட்ட பொருளாதாரக் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றியிருக்கிறது நிர்வாகம். ஆசிரியர் நியமனம் மற்றும் இயக்குனர் நியமனம் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் பதிவாளர். அதே போல பிற அடிப்படை வசதிகளையும் செய்து தருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைக் கைவிட்டனர். தங்களது அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை எனில் மீண்டும் போராட்டம் தொடங்கும் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

தனிச்சிறப்பு பயிலகமாக 25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட இந்த பயிலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் எங்கிருந்து வந்தன, என்பதை சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும்.

இந்த பயிலகத்தில் தற்போது உடனடியாக இயக்குனரை போட வேண்டும் என மாணவ்ர்கள் போராடி வருகின்றனர். இதற்கு முன் இருந்த இயக்குனர் என்ன ஆனார் என்ற கேள்வி வருகிறதல்லவா ?

மதன் மோகன் கோயல்.

இங்கு பயிலகத்தின் முன்னாள் இயக்குனரின் பெயர் மதன் மோகன் கோயல். இவர் பதவியில் அமர்ந்தது, இந்தப் பயிலகத்தை படிப்படியாக திட்டமிட்டு சிதைத்துள்ளார். எவ்வித முன்னறிவிப்பும் கலந்தாலோசிப்பும் இன்றி கல்விநிறுவனத்தின் முத்திரையை மாற்றியுள்ளார். இதனால் மாணவர்களின் சான்றிதழ்களில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.

திடீரென ஒரு நாள் கல்வி நிறுவன வளாகத்தில் சாமி சிலை பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டிருப்பதாக அறிவித்து, ஒரே வாரத்திற்குள் ஒரு கோவிலையும் கட்டியுள்ளார். பாபர் மசூதியில் ராமர் கோவில் முளைத்த கதை போல உள்ளது அல்லவா ?

இதற்கு எதிராக மாணவர்கள் பயிலகத்திற்குள் மதம் சார்ந்து ஆலயங்கள் கொண்டு வரக் கூடாது எனக் கூறியுள்ளனர். ஆனால், நிர்வாகமோ இது ஆசிரியர்களுக்கானது. இதில் மாணவர்கள் தலையிடவேண்டிய அவசியமில்லை என்று கூறியுள்ளது. இது குறித்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதிய மாணவரை  அனைவருக்கும் முன்னிலையில் சாடி அவமானப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

படிக்க:
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?
இனி அம்பானிகள்தான் கல்வியின் அதிபதிகள் – எச்சரிக்கும் பேராசிரியர்கள் !

ஏற்கனவே நடைமுறையில் இருந்த மாணவர் சங்கத்தை கலைத்து மாணவர் கவுன்சிலாக மாற்றியிருகிறார். மாணவர் கவுன்சிலின் தலைவராக ஒரு ஆசிரியரை நியமித்திருக்கிறார். இயக்குனர் என்ற இந்த சங்கியின் கொண்டை இப்போது வெளியே தெளிவாகத் தெரிந்து விட்டது அல்லவா..

அதோடு முடியவில்லை. இன்னும் இருக்கிறது. உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட விமானம் ஒன்று ஏற்கெனவே பயிலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதற்கு காவி நிறத்தில் வண்ணம் பூசி அழகு பார்த்திருக்கிறார் இந்த சங்கி.

இப்படி கோவில், காவி நிறம் என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல்,  ஹிந்துத்துவ சங்கிகளை பங்கேற்கும் கருத்தரங்கங்கள் மற்றும் வேதங்கள், மகாபாரதம், இராமாயணம் குறித்த சொற்பொழிவுகளையும் ஏற்பாடு செய்துள்ளார்.

ஆசிரியர்களுக்கும் சில மாணவர்களுக்கும் கட்டாய இந்தி வகுப்புகளை ஏற்பாடு செய்து இந்து மதம் தொடர்பான போதனைகள் அங்கு சொல்லித் தரப்பட்டன

ஒரு சங்கியின் குணாம்சங்களில் ஏதோ ஒன்று மட்டும் விடுபட்டது போலத் தோன்றலாம். ஆம், பெண்களின் மீதான பாலியல் ஒடுக்குமுறை. மதன் மோகன் கோயல் என்ற இந்த சங்கி இயக்குனர், உடன் பணிபுரியும் பெண் ஆசிரியை ஒருவரிடத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது குறித்து அந்த பெண் புகாரளித்துள்ளார். அதனைத் தொடந்து விசாரணை ந்டந்து வந்துள்ளது.

விசாரணை நடந்த காலகட்டத்தில் அந்த ஆசிரியையை, இயக்குனருக்கு எதிரான புகாரை வாபஸ் பெறக் கூறி சக ஆசிரியர்களும், மூத்த பேராசிரியர்களும் மிரட்டியுள்ளனர். விசாரணையின் போதும் மாணவர்களை மறைமுகமாக கண்காணித்து வந்துள்ளார் கோயல். இதுவரை பாலியல் குற்றத்திற்கு அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கபப்ட்டதாகத் தெரியவில்லை. அவரை வேறு ஒரு பெரிய பதவிக்கு மாற்றி விட்டதாக கேள்விப்பட்டதாக மாணவர்கள் கூறுகின்றனர்.

அந்த சங்கி இயக்குனர் வெளியேற்றப்பட்ட பிறகு, தற்காலிக இயக்குனர் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவரும் அவ்வப்போது அலுவலகத்துக்கு வந்து சென்று அதிகாரத்தை முழுக்க முழுக்க துணைப் பதிவாளர் ஒருவரின் கையில் கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார். இந்த துணைப்பதிவாளர் முன்னாள் இயக்குனரின் கையாள் என்கின்றனர் மாணவர்கள். புதிய இயக்குனர் வந்தது முதல் மாணவர்களை பால்வாடிக் குழந்தைகளைப் போல நடத்துவது, அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறை விதிகளைப் போடுவது என துணைப் பதிவாளர் தனது இஷ்டத்திற்கு செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில், கல்வி நிறுவன வளாகத்துக்கு வெளியே மாணவி ஒருவருக்கு கொடுக்கப்பட்ட பாலியல் தொந்தரவைத் தொடர்ந்து, பெண் மாணவர்கள் மீது கடுமையான விதிமுறைகளை விதித்திருக்கிறார் துணை பதிவாளர். அதனைத் தொடர்ந்து அதை மாணவிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஒருமுறை விடுதி வளாகத்தில் மாணவிகள் வெளியே நின்று கொண்டிருந்த சமயத்தில் அங்கு வந்த துணை பதிவாளர், மாணவிகளை ஆபாசமான வார்த்தைகளால் சாடியுள்ளார். இதனைக் கண்டித்து மாணவிகள் புகாரளித்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையும் கண் துடைப்புக்காகவே நடந்தது என்கின்றனர் மாணவர்கள்.

அது மட்டுமல்ல, அதிகாரம் கைக்கு வந்ததும், நூலகத்தின் நேரத்தை தடாலடியாக இரவு 8 மணி வரை மட்டுமே என சுருக்கியுள்ளார் இந்த துணை பதிவாளர். இதற்கு எதிராக மாணவர்கள் போராடினர். போராடும் மாணவர்களைப் பயமுறுத்த, முன்னணி போராட்ட மாணவர்களில் 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளார் துணைப் பதிவாளர்.

இயக்குனர் என்ற பெயரில் ஒரு சங்கியால் சீரழிக்கப்பட்ட இந்தக் கல்வி நிறுவனத்தில், இன்று வரை மாணவர்களை காவிமயமாக்கவும், அடிமைகளாக்கவும் சங்க பரிவார கும்பல் முயற்சித்து வருகிறது. மாணவர்களின் இந்த உறுதியான போராட்டம் சங்கிகளுக்கு விழுந்த செருப்படிதான். எனினும், மாணவர்களின் கோரிக்கையை ஒட்டி அடுத்ததாக நியமிக்கப்படும் இயக்குனரும் இன்னொரு சங்கியாக இருந்தால் பாவம் அந்த மாணவர்களின் நிலை என்னவாக இருக்கும்?

மத்தியில் பாஜகவின் ஆட்சி இருக்கையில் சங்கியைத் தவிர வேறு யாரையாவது கல்விநிலைய இயக்குனராக நியமிப்பார்கள் என்ற நம்பிக்கை இங்கு யாருக்காவது உண்டா ?

தாய் பாகம் 9 : ஜாக்கிரதையாயிரு , இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது

மாக்சீம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 9

ந்தக் குடியிருப்பிலுள்ள மக்கள், நீல மையால் எழுதப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வினியோகித்த சோஷலிஸ்டுகளைப் பற்றிப் பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்தப் பிரசுரங்கள் தொழிற்சாலையின் ஒழுங்கு முறை பற்றி காரசாரமாக விமர்சனம் செய்தன; பீட்டர்ஸ்பர்க்கிலும், தென் ருஷியாவிலும் நடைபெறும் வேலை நிறுத்தங்களைப் பற்றிக் கூறினர். தங்களது சொந்த நல உரிமைகளைக் காப்பாற்றுவதற்காகத் தொழிலாளர் அனைவரும் ஒன்று சேர வேண்டும் எனப் போதித்தன.

மாக்சிம் கார்க்கி

தொழிற்சாலையில் நல்ல காசு பார்த்து வந்த நடுத்தர வயதினர் அதைக் கண்டு கோபாவேசம் கொண்டார்கள்.

“கலவரக்காரப் பயல்கள்! இவர்களுக்குச் செம்மையாய்க் கொடுக்கணும்” என்று கூறிக்கொண்டார்கள். அந்தத் துண்டுப் பிரசுரங்களைத் தமது முதலாளிமாரிடம் கொண்டு போய்க் கொடுத்தார்கள்.

இளவட்டப் பிள்ளைகள் அந்தப் பிரசுரங்களை உற்சாகத்தோடு வாசித்தார்கள்.

”இதெல்லாம் உண்மைதானே!” என்றார்கள் அவர்கள்.

உழைத்து உழைத்து ஓடாகிப்போன பெரும்பாலான தொழிலாளர்கள் நம்பிக்கையற்றுப் பேசினார்கள்: “இதனால் எல்லாம் என்ன நடந்துவிடப் போகிறது? அதெல்லாம் ஒன்றும் நடக்காத காரியம்.”

எனினும் அந்தத் துண்டுப் பிரசுரங்கள் தொழிலாளர் மத்தியில் ஒரு கிளர்ச்சியை உண்டுபண்ணி விட்டன. ஆனால், அந்த ஒருவார காலத்தில் வேறு புதுப் பிரசுரங்கள் ஏதும் வரக் காணோம். உடனே அந்தத் தொழிலாளர்கள் மட்டும் தம்முள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள்; ”ஒருவேளை அவர்கள் அச்சடிப்பதை நிறுத்திவிட்டார்கள் போலிருக்கிறது.”

ஆனால் அடுத்த திங்கட்கிழமையன்று எப்படியோ மீண்டும் புதுப் பிரசுரங்கள் வினியோகம் ஆயின. மீண்டும் தொழிலாளர்கள் தம்முள் குசுகுசுவென்று பேசிக்கொள்ள ஆரம்பித்தார்கள்.

தொழிற்சாலையிலும் சாராயக் கடையிலும் யாருக்குமே இனந்தெரியாத ஆட்கள் சிலரின் நடமாட்டம் அதிகரித்தது. இந்த ஆட்கள் அங்குமிங்கும் கவனமாகப் பார்ப்பதும், யாரிடமாவது எதையாவது கேட்பதும், ஒவ்வொருவர் பேசும்போதும் குறுக்கே தலையிட்டுப் பேசுவதுமாக இருந்தார்கள். அவர்களது அளவு கடந்த எச்சரிக்கையாலும் அவர்கள் ஜனங்களோடு பலவந்தமாய்ப் பழக முனையும் காரணத்தினாலும் அவர்கள் பிறரது சந்தேகப் பார்வைக்கு ஆளானார்கள்.

படிக்க:
மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !
நாடெங்கும் மீ டூ குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பதவிகள் பறிப்பு – தமிழகத்தில் ?

இந்தக் கிளர்ச்சிக்கெல்லாம் தனது மகனது வேலையே காரணம் என்பதைத் தாய் உணர்ந்து கொண்டாள். அவனைச் சுற்றி மக்கள் எப்படிக் குழுமுகிறார்கள் என்பதையும் அவள் கண்டாள். அவனுக்கு எதேனும் நேர்ந்துவிடுமோ என்ற கவலையோடு ஒரு பெருமித உணர்ச்சியும் அவளது இதயத்தில் கலந்தது.

ஒரு நாள் மாலையில் மரியா, விலாசவின் ஜன்னல் கதவைத் தட்டினாள். தாய் கதவைத் திறந்தவுடன், மரியா சிறிது உரத்த குரலில் இரகசியமாகச் சொன்னாள்:

”ஜாக்கிரதையாயிரு, பெலகேயா! இந்தப் பிள்ளைகளுக்கு ஆபத்து வரப்போகிறது. இன்றிரவு உன் வீட்டைச் சோதனை போடப்போகிறார்கள். மாசினுடைய வீட்டையும், நிகலாயின் வீட்டையும் கூடத்தான்.”

உழைத்து உழைத்து ஓடாகிப்போன பெரும்பாலான தொழிலாளர்கள் நம்பிக்கையற்றுப் பேசினார்கள்: “இதனால் எல்லாம் என்ன நடந்துவிடப் போகிறது? அதெல்லாம் ஒன்றும் நடக்காத காரியம்.”

மரியாவின் தடித்த உதடுகள் துடித்தன. அவள் தனது கொழுத்த மூக்கினால் பெருமூச்சுவிட்டாள். திருகத்திருக விழித்தாள், தெருவில் யாரையோ கண்களால் பின் தொடர்ந்தாள். அங்குமிங்கும் பரக்கப் பரக்கப் பார்த்தாள்.

“எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் உனக்கு ஏதும் சொல்லவில்லை, நான் உன்னை இன்று பார்க்கக்கூடவில்லை. புரிந்ததா?”

அவள் போய்விட்டாள்.

ஜன்னலை மூடிய பிறகும் தாய் மெதுவாக நாற்காலிக்குள் விழுந்து புதைந்து கிடந்தாள். ஆனால், தன் மகனுக்கு நேரவிருக்கும் பேராபத்தைப் பற்றிய பயபீதி அவளை உடனேயே எழுந்திருக்கச் செய்தது. அவள் அவசர அவசரமாக உடை உடுத்திக்கொண்டாள்; தலைமீது ஒரு கச்சையை மடித்துக் கட்டிக்கொண்டாள்; பியோதர் மாசினிடம் ஓடிப்போனாள்; அவன் சீக்காயிருந்தான். எனவே வேலைக்குப் போகவில்லை. அவள் உள்ளே நுழைந்தபோது, அவன் ஜன்னலருகே உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்; வலது கையை இடது கையால் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். நோய்வாய்ப்பட்டிருந்த அவனது வலது கைப் பெருவிரல் இயற்கைக்கு மாறாக நிமிர்ந்து நின்றது. அவள் சொன்ன செய்தியைக் கேட்டதும் அவனது முகம் வெளுத்தது. அவன் துள்ளியெழுந்தான்.

“ஓ, அப்படியா சேதி!” என்று முணுமுணுத்தான்.

”சரி. நாம் என்ன செய்யலாம்?” என்று நடுநடுங்கும் சுரத்தால் நெற்றி வியர்வையை வழித்துக் கொண்டே கேட்டாள் பெலகேயா.

“ஒரு நிமிஷம் பொறுங்கள். பயப்படாதீர்கள்” என்று கூறிவிட்டு, தனது சுருட்டைத் தலையை, இடது கையால் பின்னோக்கிக் கோதி  விட்டுக்கொண்டான் பியோதர் மாசின்.

”நீங்களே பயப்படுகிறீர்களே!’ என்று அவள் கத்தினாள்.

வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தாய் அங்கிருந்த சகல புத்தகங்களையும் ஒன்று சேர்த்தாள். அந்தப் புத்தகங்களை மார்பின் மீது அணைத்துப் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்து தத்தளித்தாள்;

”நானா?” அவன் முகம் கன்றிப் போயிற்று: வலிந்து புன்னகை செய்து கொண்டே , “ஆமாம்…….ம்…. அது போகட்டும்… நாம் இதை உடனே பாவெலுக்குத் தெரியப்படுத்த வேண்டும். நான் யாரையாவது அனுப்புகிறேன். நீங்கள் வீட்டுக்குப் போங்கள். வீணாகக் கவலைப் படாதீர்கள். அவர்கள் நம்மையென்ன அடிக்கவா செய்வார்கள்? அடிப்பார்களா?” என்று கூறினான்.

வீட்டுக்குத் திரும்பி வந்தவுடன் தாய் அங்கிருந்த சகல புத்தகங்களையும் ஒன்று சேர்த்தாள். அந்தப் புத்தகங்களை மார்பின் மீது அணைத்துப் பிடித்தவாறு அங்கும் இங்கும் நடந்து தத்தளித்தாள்; அடுப்பைப் பார்த்தாள்; அடுப்புக்குக் கீழே பார்த்தாள். தண்ணீர் பீப்பாயைப் பார்த்தாள். பாவெல் அந்தச் செய்தியைக் கேட்டவுடனேயே வீட்டுக்கு ஓடி வருவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் ஏமாந்தாள். அவன் வரவில்லை. கடைசியில் அவள் நடந்து நடந்து அலுத்துப்போய் சமையலறையிலிருந்த பெஞ்சின் மீது புத்தகங்களை வைத்துவிட்டு அதன் மீது உட்கார்ந்தாள், அந்த இடத்தைவிட்டு அசைவதற்கே பயந்து போய் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தாள். பாவெலும் ஹஹோலும் வீடு திரும்பும் வரையிலும் அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

”உங்களுக்கு விஷயம் தெரியுமா?” என்று அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் வாய்விட்டுக் கத்தினாள்.

“ஆமாம், தெரியும்” என்று புன்னகையோடு சொன்னான் பாவெல்; “நீ என்ன பயந்துவிட்டாயா?”

“ஆமாம், எனக்கு ஒரே பயம்; ஒரே பயமாயிருக்கிறது…”

”நீ பயப்படக்கூடாது. அதனால் பயனில்லை” என்று சொன்னான் ஹஹோல்.

”சரி, தேநீருக்குத் தண்ணீர்கூட வைக்கவில்லையா?’ என்று கேட்டான் பாவெல்.

“எல்லாம் இதனால் தான்” என்று கூறிக்கொண்டே தன்னிடத்தை விட்டு எழுந்து, புத்தகங்களைச் சுட்டிக்காட்டினாள் அவள்.

அவளது மகனும், ஹஹோலும் விழுந்து விழுந்து சிரித்தார்கள், அந்தச் சிரிப்பினால் அவள் மனம் சிறிது நிம்மதி பெற்றது. பாவெல் அந்தப் புத்தகங்களில் சிலவற்றைப் பொறுக்கி எடுத்து, புழக்கடைக்குச் சென்று ஒளித்து வைக்கப் போனான்.

”இதற்கெல்லாம் பயந்தால் ஒன்றுமே நடக்காது அம்மா” என்று கூறிக்கொண்டே தேநீர் அடுப்பை ஏற்றினான் ஹஹோல். ‘இந்த மாதிரி முட்டாள்தனத்தில் ஜனங்கள் தங்கள் நேரத்தைப் பாழடிப்பது இருக்கிறதே அது, படு மோசமான, வெட்ககரமான காரியம். இடைவாரிலே வாள்களைத் தொங்கவிட்டுக்கொண்டும், பூட்சுகளில் தார் ஆணிகளை மாட்டிக் கொண்டும் பெரிய பெரிய குண்டு மனிதர்கள் இங்கு வருவார்கள், இங்குள்ள எல்லாவற்றையும் குடைந்து துளைத்துப் பார்ப்பார்கள். படுக்கைக்கு கீழே அடுப்புக்குக் கீழே எல்லாம் பார்ப்பார்கள். மேலே ஒரு அட்டாலி இருந்தால் அதில் ஏறிப் பார்ப்பார்கள், நிலவறையிருந்தால் அதிலும் நுழைந்து பார்ப்பார்கள். அவர்களது மூஞ்சியிலும் தலையிலும் நூலாம்படை அப்பி அடைவதுதான் மிச்சமாயிருக்கும், ஏமாற்றத்தால் எரிந்து விழுவார்கள். திகைப்பார்கள்: வெட்கப்படுவார்கள்.

ஆனால், தாங்கள் மிகவும் மூர்க்கமாகவும் கோபமாகவும் இருப்பதாகப் பாசாங்கு செய்வார்கள். தங்களது தொழில் எவ்வளவு படுகேவலமானது என்பதை உணர்வார்கள். ஒரு தடவை இப்படித்தான் என்னுடைய சாமான்களையெல்லாம் அவர்கள் தாறுமாறாய் உலைத்தெறிந்து சீர்குலைத்துவிட்டார்கள். பிறகு அந்தப் பரிதவிப்பால், அவர்கள் இன்னது செய்வது எனத் தெரியாமல் திகைத்து வெளியேறினார்கள், போய்விட்டார்கள்.

படிக்க:
சோசலிசம்: முதலாளிகளின் கொடுங்கனவு ! பாட்டாளிகளின் கலங்கரை விளக்கம் !!
நான் உலகம்.. தொழிலாளி நானே உலகம் ! பாடல்

இன்னொரு முறை அவர்கள் போகும் போது என்னையும் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். பிறகு என்னைச் சிறையில் போட்டு, நாலுமாதகாலம் உள்ளே வைத்திருந்தார்கள். சிறைக்குள் போனால் நீ வெறுமனே உட்கார்ந்து இருப்பதைத் தவிர வேறு வேலையே கிடையாது. பிறகு சிறையிலிருக்கும்போது சம்மன்கள் வரும்; உன்னைத் தெருக்களின் வழியே சிப்பாய்கள் நடத்திச் செல்வார்கள். யாரோ ஒரு பெரிய தலைவன் உன்னை என்னென்னவோ கேள்வி கேட்பான். அந்தத் தலைவர்களில் எவனும் அப்படி ஒன்றும் புத்திசாலியல்ல. அர்த்தமற்று எது எதையோ கேட்பான். பிறகு மீண்டும் சிறைக்குக் கொண்டு போகுமாறு சிப்பாய்களுக்கு கட்டளையிட்டு உன்னை அங்குமிங்குமாக வெட்டியாக இழுத்தடிப்பார்கள்; அவர்கள் வாங்குகிற சம்பளத்துக்கு ஏதாவது மாரடித்து ஆக வேண்டுமே! கொஞ்ச நாள் போய்விட்டால், அவர்களே சலித்துப்போய் உன்னை விடுதலை செய்துவிடுவார்கள் அவ்வளவுதான்!”

“அந்திரியூஷா 1! நீங்கள் என்ன இப்படிப் பேசுகிறீர்கள்?” என்று கேட்டாள் தாய்.

அடுப்பை மூட்டி, ஊதுவதற்காகக் குனிந்து முழங்காலிட்டிருந்த ஹஹோல் நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் சிவந்து போயிருந்தது. பிறகு மீசையைத் திருகிவிட்டுக்கொண்டு கேட்டான்.

“எப்படிப் பேசுகிறேன்?”

“என்னவோ யாரும் உங்களைத் துன்புறுத்தாத மாதிரி!”

இடைவாரிலே வாள்களைத் தொங்கவிட்டுக்கொண்டும், பூட்சுகளில் தார் ஆணிகளை மாட்டிக் கொண்டும் பெரிய பெரிய குண்டு மனிதர்கள் இங்கு வருவார்கள், இங்குள்ள எல்லாவற்றையும் குடைந்து துளைத்துப் பார்ப்பார்கள். படுக்கைக்கு கீழே அடுப்புக்குக் கீழே எல்லாம் பார்ப்பார்கள்.

“இந்த உலகில் துன்புறாத ஆத்மா எங்கே அம்மா இருக்கிறது?” என்று இளம் புன்னகையோடு கூறிக்கொண்டே எழுந்து நின்று தலையை ஆட்டிக்கொண்டான். “அவர்கள் என்னை எவ்வளவோ துன்புறுத்தத்தான் செய்தார்கள். ஆனால் எனக்கு எல்லாம் பழகிப் போய்விட்டது. மரத்துப் போய்விட்டது. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள் என்று தெரிந்திருந்தும், நாம் என்ன செய்துவிட முடியும்? அந்தத் துன்பங்களையெல்லாம் பொருட்படுத்தினால், என் வேலைதான் கெடும்; அந்தத் துன்பங்களையெல்லாம் நினைத்துப் பார்ப்பதும் வீணான நேரக் கொலை தான். இதுதானம்மா வாழ்க்கை! சமயங்களில் மனிதர்களைக் கண்டாலே எனக்குக் கோபம் வரும். எண்ணிப்பார்த்தேன், இதிலென்ன பயன்? ஒவ்வொருத்தனும் அடுத்தவன் நம்மை அறையப் போகிறான் என்று எண்ணித்தான் பயப்படுகிறான். எனவே முதல் அடியை இவனே கெடுக்க முற்படுகிறான். இப்படித்தானம்மா வாழ்க்கை இருக்கிறது!

அவனது வார்த்தைகள் இத சுகத்தோடு பிறந்து வழிந்தன. அந்தப் பேச்சினால் அவளுக்கு அன்று நடக்கவிருக்கும் சோதனையைப் பற்றிய பயம் நீங்க ஆரம்பித்தது. அவனது முழிக் கண்களில் களிப்பு குடி கொண்டது. அவன் எவ்வளவு கோரமாயிருந்தாலும், லாவகமான உடற்கட்டு கொண்டவன் என்று கண்டாள்.

தாய் பெருமூச்செறிந்தாள்.

”அந்திரியூஷா! கடவுள் உங்களுக்கு அருள் செய்யட்டும்!” என்று மனதார வாழ்த்தினாள் அவள்.

ஹஹோல் தேநீர் அடுப்பருகே சென்று குந்தி உட்கார்ந்தான். ”எனக்கு நல்லருள் கொஞ்சம் கிடைத்தாலும் போதும். நான் அதை ஒன்றும் மறுதலிக்க மாட்டேன். ஆனால், அவ்வருளுக்காக நான் கை நீட்டி யாசகம் கேட்கமாட்டேன்” என்றான் ஹஹோல்.

பாவெல் புழக்கடையிலிருந்து வந்து சேர்ந்தான்.

”அவர்கள் ஒன்றும் கண்டுபிடிக்கப் போவதில்லை” என்று நம்பிக்கை நிறைந்த குரலில் சொல்லிவிட்டு, முகம், கை கழுவினான். பிறகு கைகளைத் துடைத்துக்கொண்டு, தாயின் பக்கமாகத் திரும்பினான்.

அவர்களது மூஞ்சியிலும் தலையிலும் நூலாம்படை அப்பி அடைவதுதான் மிச்சமாயிருக்கும், ஏமாற்றத்தால் எரிந்து விழுவார்கள். திகைப்பார்கள்: வெட்கப்படுவார்கள்.

“நீங்கள் மாத்திரம் பயந்ததாகக் காட்டிக்கொண்டால், உடனே அவர்களுக்குச் சந்தேகம் தட்டிவிடும். இந்த வீட்டில் ஏதோ இருக்கப் போய்த்தான் நீங்கள் இப்படி நடுங்கிச் சாகிறீர்கள் என்று அவர்கள் நினைத்துவிடுவார்கள். நாம் தப்பாக எதுவும் செய்யவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நியாயம் நமது பக்கத்தில் தான் இருக்கிறது. அந்த நியாயத்துக்காக, நாம் நமது ஆயுள் முழுவதுமே பாடுபடுவோம். அது ஒன்றுதான் நம் மீதுள்ள குற்றம்! பிறகு நாம் எதற்காகப் பயப்பட வேண்டும்?”

“நான் தைரியமாக இருப்பேன், பாஷா!” என்று அவள் உறுதி கூறினாள். ஆனால் உடனேயே அவள் மனங்குலைந்து பரிதாபமாகக் கூறினாள். “அவர்கள் சீக்கிரம் வந்து காரியத்தை முடித்துக்கொண்டு போனால் தேவலை!”

ஆனால் அவர்கள் அன்றிரவு வரவில்லை; காலையில் அந்தப் பிள்ளைகள் தன்னைக் கேலி செய்ய முனைவதற்கு முன்னால், தானே தன்னைக் கேலி செய்து சமாளித்துக்கொள்ள முயன்றாள்.

“பார்த்தாயா? பயம் வருவதற்கு முன்னாலேயே நான் பயந்து செத்தேன்” என்று கூறிக்கொண்டாள்.

(தொடரும்)

அடிக்குறிப்பு:
(1) அந்திரியூஷா – அந்திரேயைச் செல்லமாக அழைப்பது – (மொ-ர்.)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:
(பாகம் – 1) 50 வருடங்கள் வாழ்ந்த பிறகு ஒரு தொழிலாளி செத்து மறைவான் !
(பாகம் – 2) அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்

(பாகம் – 3) உயிர்த்தெழுந்த ஏசு கிறிஸ்து எம்மாஸை நோக்கிச் செல்கிறார்
(பாகம் – 4) நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் ?

(பாகம் – 5) இவர்கள் தானா அந்த சட்டவிரோதமான நபர்கள் ?
(பாகம் – 6) நாங்கள் அனைவரும் என்றோ ஒருநாள் சிறைக்குத்தான் போவோம்
(பாகம் – 7)  பாஷா ! நீ ஒரு சோஷலிஸ்டா ?
(பாகம் – 8) பாதி மனம் காதலிக்கிறது .. பாதி மனம் பகைக்கிறது ..

டெங்கு ஒழிப்பு : விடை மறுக்கப்படும் கேள்விகள் !

டெங்கு, மரணம், மெளனம்.. பேச மறுக்கிற விசயமும் திசைமாறும் விவாதமும்

1. டெங்கு காய்ச்சல், மரணங்களை நாம் எந்தச்சூழலின் பின்னணியில் ஆய்வு செய்யவேண்டும்? நிதி ஆயோக்கின் சமீபத்திய அறிக்கையின் பின்புலத்திலும், தனியார்மயமாக்கல், பொது சுகாதாரத்தை தனியாருக்கு தாரைவார்த்துக் கொண்டிருக்கும் சூழலில் வெகுசன மக்கள் நிலை மிகவும் vulnerable- ஆக இருக்கும் சூழலில் ஆய்வு செய்யப்படாமல் இருப்பதன் காரணம் என்ன?

2. கிருமி – நோய் – சிகிச்சை என்ற குறுகியல் கோட்பாட்டு சட்டகத்தின் வழியே நம்முடைய ஆய்வு முறையும் தொற்று நோய் பற்றிய புரிதலும், அதன் மீதான அணுகுமுறையும் சரியா? அந்த அணுகுமுறையால் சிக்கலை மேலும் அதிகமாக்கியுள்ளதா? தொற்று நோய்க்கான புரிதலும், அணுகுமுறையும், செயல்திட்டமும் எந்த சட்டகத்தின் வழியே இருக்கவேண்டும்?

3. உலகில் ஏதாவதொரு நாட்டில் டெங்கு நோய் தடுப்புமுறைகளுக்கு முன்மாதிரி செயல்திட்டம் உள்ளதா? அப்படி உள்ளதெனில் ஏன் அதை இந்திய அளவில் செயல்படுத்தப்படவில்லை? தமிழகத்தில் ஏன் அது நடைமுறையில் இல்லை?

4. கியூபாவில் 36 ஆண்டுகளுக்கு மேலாக டெங்கு தடுப்பு, ஒழிப்பு சிகிச்சை குறித்த ஆராய்ச்சியும் ஏடிஸ் கொசு ஒழிப்பு குறித்த செயல்திட்டத்தின் வெற்றியும் நம் கண்முன்னே உள்ளது. அதை நாம் ஏன் ஆய்வு செய்யாமல் இருக்கிறோம்? அப்படி ஆய்வு செய்தல் அவசியமில்லையா?

5. டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் எத்தனை முறை தாக்கியுள்ளது? அந்ததந்த வருடம் என்ன வகை டெங்கு சீரோடைப் ( serotype) வந்துள்ளது என்ற வரலாற்று பூர்வமான ஆய்வுகள் உள்ளனவா? இப்போது காய்ச்சலில் அவதியுற்ற மக்களின் ரத்தமாதிரிகளில் எந்த வகை டெங்கு வைரஸ் கிருமி தாக்கியது என்றும், இறந்தவர்களின் பரிசோதனைகளில் எந்த வகை டெங்கு கிருமி தாக்கியது என்று பதிவுகளில் உள்ளதா? இந்த ரத்த பரிசோதனை முடிவுகள் நோய் தடுப்புக்கு முக்கியமானதல்லவா?

படிக்க :
டெங்கு காய்ச்சல் : மாயையும் உண்மையும் – வீடியோ !
திருச்சி இனியாவை பலி கொண்டது டெங்கு மட்டுமா ?

6. டெங்கு காய்ச்சல் அதிகமாகியுள்ளதென்றதும் ஒருங்கிணைந்த ஒரு குழு நோய்பரப்பியல் நிபுணர், வெப்பமண்டல் நோய் வல்லுனரான மருத்துவர், பூச்சியியல் நிபுணர், வைரஸ் ஆராய்ச்சியாளர் ஏன் நாம் அமைக்கவில்லை. மருத்துவ ஆராய்ச்சிக்கும் நோய் தடுப்பிற்கும் அது முக்கியமானதல்லவா?

7. காய்ச்சலில் மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் ஊர், சமூகப் பொருளாதார நிலை, வாழும்சூழல், ஒடுக்கப்பட்ட வகுப்பினரா, ஊட்டசத்தின் அலகீட்டளவு, அவர் கிராமத்திலிருந்து மருத்துவமனை எவ்வளவு தூரத்தில் உள்ளது என்ற தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதா? இறந்தவர்களின் குறித்த ஆய்வுகள் கிராம அளவில் வீட்டிற்கு சென்று மேற்கொள்ளப்பட்டதா? அதற்கான காரணம் கண்டறியப்பட்டதா? மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்ளும் போது மேற்கூறப்பட்ட தரவுகள் தொற்று நோய் தடுப்பு செயல்திட்டம் வகுக்க மிக முக்கியமானது அது நம்மிடம் உள்ளதா?

8. டெங்கு நோயால் ரத்த அழுத்தம் குறைவாகி இறப்பவர்களுக்கான நோய் இடர் காரணிகளாக கியூப நாட்டு ஆய்வுகளில் சர்கரை நோய், ஆஸ்த்துமா தொந்தரவு குறிப்பிடப்பட்டுளது. தமிழக டெங்கு மரணங்களில் அந்த இடர்க் காரணிகள் எது என்பது நம்மிடம் உள்ளதா?

9. தடுப்பூசி தான் தீர்வு என்று பேசிவருகிறோம். டெங்கு தடுப்பூசி எல்லோருக்கும் போட முடியுமா? தடுப்பூசி போவாற்கு முன் நிபந்தனை என்ன? அதன் செயல் திறன் எந்த அளவு இருக்கும்? ஒரு முறை போட்டால் மீண்டும் டெங்கு வராதா? தடுப்பூசியினால் என்ன மாதிரியான பக்கவிளைவுகள் வரும், அதை எப்படி தடுப்பது? சுகாதார பொருளாதாரம் குறித்து பேசுபவர்கள் ஒரு தடுப்பூசியில் எத்தனை டாலர் முதலீடு செய்தால் டெங்கு நோயினால் ஏற்படும் நோய்ச்சுமையின் அளவு எவ்வளவு குறையும் ? டெங்கு பொருளாதாரத்தில் என்ன மாற்றம் வரும் என்ற ஆய்வுகள் செய்தோமா?

10. அதிவேக தீவிர நகரமயமாக்கல், பருவ நிலை மாற்றம் , சூழல் சிதைக்கப்படுவது, கொசுக்களின் பெருக்கம் அதிகமாகியுள்ள நிலை, கொசுக்களை கொசுப்புழுக்களை இயற்கையாகவே இரையாக உட்கொள்ளும் பூச்சிகள் ஏன் அழிந்தது? எப்படி பூச்சிக் கொல்லியினால் கொசுக்களுக்கு எதிர்ப்பு சக்தியும், மற்ற பூச்சிகள் மடிந்து போவதால் ஏற்படும் சமநிலைப்பிறழ்வு டெங்குவிற்கு ஏதுவாகவுள்ளது என்ற கோணத்தில் ஆய்வு செய்ய சூழலியலாளர்கள் உயிரியல் நிபுணர்கள், புவியியல் நிபுணர்களோடு இணைந்து மருத்துவர்கள் குழு செயல்பட தயாராக உள்ளனரா?

11. கொசு பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கைகளும் டெங்கு குறித்த நோய் சுமையும் பொருளாதார சுமையும் என்ன, அதற்கு பின்னால் பயனைடைபவர்கள் யார்? பாதிக்கப்படுபவர் யார்? சுகாதரத்தைப்பற்றி பேசும் போதும், நோய் தௌப்பு குறித்து நாம் பேசும் போது வர்க்கப்புள்ளியிலிருந்து தானே நாம் பேச வேண்டும் ? அதை தவிர்த்த நாம் பேசிடமுடியுமா?

நாம் விவாதிக்க வேண்டியவை நிறைய இருக்கிறது, நம்முடைய சட்டகம் அணுகுமுறை, உலக வங்கியின் தலையீடு, கொள்கை முடிவுகள், ஆய்வு முடிவுகள், கொள்கை முடிவுகள் அடுக்கி கொண்டே போகலாம்.

இதை விவாதிப்பதற்கான அறிவை மக்கள் நமக்கு கொடுத்திருக்கிறார்கள். நாம் யாருக்காக, எதை பேசப்போகிறோம், எவரின் குரலாக இருக்கப்போகிறோம் யாருக்கான வழக்குரைஞராக இருக்கப்போகிறோம் என்பது முக்கியம்.

நன்றி : முகநூலில் மருத்துவர். அரவிந்தன் சிவக்குமார்

மார்க்ஸ் ஜென்னிக்கு எழுதிய காதல் கடிதம் !

மார்க்ஸ் பிறந்தார் – 21
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

9. ஒரு மேதையும் அவருடைய சூழலும் – 1

  • உங்களுடைய முக்கியமான குணம்?
    கொள்கை உறுதி.
  • உங்களுக்கு மிகவும் பிடித்தமான மூதுரை?
    Nihil humani a me alienum puto. (மனிதனுக்குரிய அனைத்தும் எனக்கும் உரியன.) 
    கார்ல் மார்க்சின் ஒப்புதல்களிலிருந்து(1)

மார்க்சின் உலகக் கண்ணோட்டத்தின் முக்கியமான கூறுகள் உருவாக்கமடைந்த பொழுதே அவருடைய ஆளுமையும் உருவாகிவிட்டது. அந்த ஆளுமையில் விஞ்ஞானியும் புரட்சிக்காரரும் ஒன்றாக இணைந்திருந்தனர்.

மார்க்ஸ் விஞ்ஞானத் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்காரர்; அவர் புரட்சிக்களத்தில் முதல் விஞ்ஞானி. அவர் தத்துவஞானத்திலும் சமூகத்தைப் பற்றிய கருத்துக்களிலும் மெய்யாகவே ஒரு காப்பேர்னிக்கப் புரட்சியை ஏற்படுத்தியவர், புரட்சிகரமான தத்துவமும் செய்முறையும் கறாரான விஞ்ஞானப் பாதைகளில் சுழலும்படி “நிர்ப்பந்தித்தவர்”.

அவர் ஒரு முன்மாதிரியான மனிதர். கடந்த காலத்தின் கலாச்சார பாரம்பரியத்தினுள் தனக்குச் சமகாலத்தவர்கள் எல்லோரையும் காட்டிலும் மிகவும் ஆழமாகக் குதித்து அதை விமர்சன ரீதியில் திருத்தியமைத்து தனக்கு முன்பிருந்த மாபெரும் தத்துவஞானிகள் எவரையும் காட்டிலும் காலத்தை விஞ்சி நின்றவர்.

மார்க்ஸ் பல்துறையிலும் வளர்ச்சி அடைந்த மனிதர் என்றபடியால் அவர் படைப்புத் துறையிலும் பல்துறை வளத்தை வெளிப்படுத்தினார். மனிதனுடைய நடவடிக்கையில் அவருடைய சிந்தனையின் தேடல் தொட்டுச் செல்லாத ஒரு துறையைக் கண்டுபிடிப்பது கடினம். மார்க்சைப் பற்றி தத்துவஞானி மற்றும் பொருளியலாளர், சமூகவியலாளர் மற்றும் வரலாற்றாசிரியர், புரட்சிக்காரர் மற்றும் ஸ்தாபன அமைப்பாளர், கட்டுரையாளர் மற்றும் மொழி இயல் நிபுணர், இலக்கிய மேதை மற்றும் பத்திரிகையாளர் என்று நாம் கூறுவது நியாயமானதே.

மூலதனத்தை எழுதி முடித்த பிறகு, தர்க்கவியலும் தத்துவஞானத்தின் வரலாற்றைப் பற்றியும் பல்ஸாக்கைப் பற்றிய புத்தகங்களும் கிராக்கஸ் சகோதரர்களைப் பற்றி ஒரு நாடகமும் எழுதுவதற்கு மார்க்ஸ் உத்தேசித்திருந்தார் என்பதை நாம் அறிவோம். அவர் கணிதத்திலும் தொழில் நுட்பவியல் வரலாற்றுத் துறையிலும் சில தற்சிந்தனையான ஆராய்ச்சிகளை விட்டுச் சென்றார்; பெளதிகம், இரசாயனம், உயிரியல், பரிணாமத் தத்துவம் ஆகியவற்றின் சாதனைகளில் அவர் அக்கறை கொண்டிருந்தார்.

மார்க்ஸ் தன்னுடைய கலைக்களஞ்சிய அறிவையும் எல்லாத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்திருந்த திறமைகளையும் அவருக்கு உரிய முனைப்புடன் பொருளாதாரப் பிரச்சினைகளின் தீர்வுக்கு அர்ப்பணித்தார். அதுவே அவருடைய விஞ்ஞான ஆராய்ச்சியின் முக்கியமான குறிக்கோளாக இருந்தது. தன்னுடைய துறையில் மட்டுமே நிபுணத்துவத்தைக் கொண்ட ஒரு அறிஞர் மூலதனத்தைப் போன்ற ஒரு நூலை ஒருபோதும் எழுதியிருக்க முடியாது.

அவருடைய வெளித்தோற்றம் கம்பீரமானது; மார்க்சை மிகக் குறைந்த காலமே அறிந்தவர்கள், மார்க்சியத்துடன் சம்பந்தமில்லாதவர்கள் கூட இதைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ருஷ்யாவைச் சேர்ந்த மிதவாத எழுத்தாளரான பா. ஆன்னென்கவ் 1846 மார்ச்சில் பிரஸ்ஸல்ஸ் நகரத்தில் மார்க்சைச் சந்தித்தார். அவர் சுறுசுறுப்பும் உறுதியான சித்தமும் அழிக்க முடியாத நம்பிக்கையும் உடையவர், அவர் தோற்றம் மிகவும் கம்பீரமானது என்று எழுதினார். அடர்த்தியான கறுநிறத் தலைமுடியுள்ள பெருந்தலை, முடி உள்ள கரங்கள், பாதி திறந்து விடப்பட்ட கோட்டு அணிந்து அவர் எப்படித் தோன்றினாலும், என்ன செய்தாலும் அவருடைய தோற்றமே மற்றவர்களை மரியாதை செய்யத் தூண்டும் என்று ஆன்னென்கவ் எழுதினார்.

அவருடைய நடையுடை பாவனைகள் தனித் தன்மையுடன், துணிவு மற்றும் சுய நம்பிக்கையுடன் இருந்தன. மற்றவர்களுடன் பழகும் பொழுது சுதந்திர உணர்ச்சி ஓங்கியிருக்கும்; பொதுவாக அங்கீகரிக்கப்பட்டிருக்கும் பழக்கங்களிலிருந்து அவை வேறுபட்டிருக்கும். அவருடைய கரகரப்பான மணிக்குரல் மக்களையும் நிகழ்வுகளையும் பற்றி அவருடைய முடிவுகளின் இறுதியான தன்மைக்கு முற்றிலும் பொருந்தியிருக்கும்.

இருபத்தெட்டு வயது நிரம்பிய மார்க்ஸ் மனிதர்களின் மனங்களை ஆட்சி புரிவதற்கும் அவர்களுக்குத் தலைமை தாங்குவதற்கும் தன்னுடைய திறமையில் அழுத்தமான நம்பிக்கை கொண்டவர், “போலித் தீர்க்கதரிசிகள்”, “மனிதகுல இரட்சகர்கள்” அனைவருடைய அறிவீனத்தைப் பற்றி அருவருப்படைந்தவர் என்று ஆன்னென்கவ் எழுதினார்.

ஆன்னென்கவ் கம்யூனிஸ்ட் நிருபர்கள் கமிட்டியின் கூட்டத்தை வர்ணிக்கிறார். இக்கூட்டத்தின் போது மார்க்சுக்கும் கற்பனாவாத கம்யூனிசத்தின் (அதன் கரடுமுரடான, சமத்துவவாத வடிவத்தில்) தத்துவாசிரியர்களில் ஒருவரான வில்ஹெல்ம் வைத்லிங்குக்கும் மோதல் ஏற்பட்டது. வைத்லிங் தன்னுடைய குழப்பமான, ஆனால் உணர்ச்சிகரமான சொற்பொழிவுகளின் மூலம் தொழிலாளர்கள் மத்தியில் ஒரளவு ஆதரவைப் பெற்று ஜெர்மனியில் பரபரப்பை உண்டாக்கியிருந்தார்.

உங்களுடைய நடவடிக்கைகளில் எத்தகைய தத்துவக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்கு உத்தேசிக்கிறீர்கள் என்று மார்க்ஸ் வைத்லிங்கிடம் கூர்மையாகக் கேட்டார். இக்கேள்விக்குப் பதிலளிக்கின்ற முறையில், புதிய பொருளாதாரத் தத்துவங்களை உருவாக்குவது என்னுடைய நோக்கம் அல்ல, தொழிலாளர்கள் தங்களுடைய நிலைமையின் பயங்கரங்களைப் புரிந்து கொள்ளச் செய்வதும் ஜனநாயக கம்யூனிஸ்ட் கம்யூன்களில் அவர்கள் சேர்ந்து வாழும்படி போதிப்பதும் என்னுடைய நோக்கம் என்று முரண்பாடான முறையில் விளக்கமளிக்கத் தொடங்கினார் வைத்லிங்.

மார்க்ஸ் கோபத்துடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு திடீரென்று வைத்லிங்கின் பேச்சில் குறுக்கிட்டார். மக்களின் நடவடிக்கையை அவசியமாக்குகின்ற உறுதியான, தேர்ந்தாராயப்பட்ட காரணங்களைச் சொல்லாமல் அவர்களைத் தூண்டுவது வெறும் ஏமாற்று வித்தையே என்றார். கறாரான விஞ்ஞானக் கருத்துக்கள் அல்லது ஆக்கபூர்வமான போதனைகள் இல்லாமல் தொழிலாளியை அறைகூவுவது நம்பிக்கை மோசடிக்குச் சமம். அது ஒரு பக்கத்தில் தீர்க்கதரிசி இருப்பதாகவும் மறுபக்கத்தில் வாயைப் பிளந்து கொண்டிருக்கின்ற கழுதைகள் இருப்பதாகவும் அனுமானிக்கிறது என்றார்.

வைத்லிங்கின் வெளிறிய கன்னங்களில் இரத்தம் பாய்ந்தது. அவர் தன்னுடைய சேவைகளைப் பற்றி ஆர்ப்பாட்டமாகப் பேசத் தொடங்கினார்; வேதனைப்படுகின்ற நலிந்த மக்களின் உலகத்திலிருந்து வெகு தூரத்துக்கு அப்பால் இருந்து கொண்டு கொள்கைகளை ஆராய்ச்சி செய்வதையும் விமர்சிப்பதையும் காட்டிலும் என்னுடைய அடக்கமான சேவை பொது இலட்சியத்துக்கு அதிகமான முக்கியத்துவத்தைக் கொண்டது என்றார்.

மார்க்ஸ் இச்சொற்களைக் கேட்டு ஆத்திரத்துடன் மேசையின் மேல் ஓங்கிக் குத்தினார், மேசை மீது வைக்கப்பட்டிருந்த விளக்கு ஆடியது. “அறியாமை எவருக்கும் ஒருபோதும் உதவாது”(2) என்று குதித்தெழுந்து கூறினார். மார்க்சைச் சந்தித்த பலரும் அவர் மக்களையும் கொள்கைகளையும் பற்றி நயமற்ற விதத்தில் “தீர்ப்பு” வழங்குவதைப் பற்றி அதிர்ச்சி அடைந்தனர். மார்க்ஸ் பொறுமை இல்லாதவர், “சர்வாதிகாரமானவர்”, அவருடைய கருத்துக்களை ஆதரிக்காதவர்களிடம் “மெஃபிஸ்டோபிலிய” இகழ்ச்சியுடன் நடந்து கொள்பவர், இதரவை என்று அற்பவாத எழுத்தாளர்களும் வாழ்க்கை வரலாற்றாசிரியர்களும் அடிக்கடி அவரைக் கண்டனம் செய்திருக்கிறார்கள்.

மார்க்ஸ் தன்னுடைய எதிரிகளிடம் நடத்திய வாதங்களின் போது அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டார் என்பது உண்மையே. பிறவி அரசியல்வாதியும் புரட்சிக்காரருமான மார்க்ஸ் சமூக விஞ்ஞானத் துறையில் கருத்து வேறுபாடுகளை வெவ்வேறு சமூக-வர்க்க நிலைகளின் சண்டை என்று கருதினார்; கல்வித்துறையில் போலித்தனமான மரியாதையுடன் நடைபெறுகின்ற வாதங்களில் தோல்வியடைகின்ற தரப்பினர் முக மலர்ச்சியுடன் தோற்றமளிக்கின்ற கலையைப் பரிபூரணமாக்குகின்றனர்; அத்தகைய விவாதமாக அவர் நினைக்கவில்லை.

கொள்கைப் பிரச்சினைகள் ஏற்படும் பொழுது பல வருடங்கள் தன்னிடம் நெருங்கிப் பழகிய தோழர்களிடம் கூட மார்க்ஸ் தயவு காட்டமாட்டார். எல்லாவற்றிலும் ஒரே அளவுகோலைப் பின்பற்றிய மார்க்ஸ் மற்றவர்களுடைய நடவடிக்கைகளை மதிப்பிடுவதற்கு “மனித” நிலைக்கு ஒன்று, விஞ்ஞான, “தொழில்” நிலைக்கு ஒன்று என்று இரண்டு அளவுகோல்களைப் பயன்படுத்தவில்லை. ஒரு நபர் விஞ்ஞானத் தத்துவத்தில் அல்லது புரட்சிகர நடைமுறையில் “பிறழ்ந்து விட்டார்” என்றால் அவர் தார்மிகத் துறையிலும் தவறு செய்து விட்டதாகவே மார்க்ஸ் கருதினார், எனவே அவர் சிந்தனையாளர் அல்லது புரட்சிக்காரர் என்ற முறையில் மட்டுமல்லாமல் தனிநபர் என்ற முறையிலும் மார்க்சின் மரியாதையை இழந்தார். இதன் மறுதலையும் உண்டு ஒருவர் தனிப்பட்ட உறவுகளில் சிறிதளவு நேர்மையில்லாமல் நடந்து கொண்டாரென்ரறால் விஞ்ஞான மற்றும் அரசியல் துறைகளில் அவரை நம்பாதிருப்பதற்கு அது போதிய காரணம் என்று மார்க்ஸ் கருதினார்.

“பிளாட்டோவை நான் மதிக்கிறேன்; ஆனால் உண்மையை இன்னும் அதிகமாக மதிக்கிறேன்” என்ற மூதுரை நண்பர்களுடன் மார்க்ஸ் வைத்திருந்த உறவில் முழு விளக்கமடைந்தது. உண்மைக்குத் துரோகம் செய்த எவரையும் அவர் ஒருபோதும் மன்னிக்க மாட்டார். விஞ்ஞானப் பிரச்சினைகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுதல் முடிவில் நட்பை முறித்துக் கொள்வதற்கும் பிறகு உக்கிரமான விவாதங்களுக்கும் இட்டுச் செல்லும்.

பு. பெளவர், அ. ருட்டென்பெர்க், அ. ரூகே, பி. புரூதோன், மி. பக்கூனின், மோ. ஹேஸ், வி. வைத்லிங், கி. ஹேர்வெக் ஆகியோரை இதற்கு உதாரணங்களாகக் காட்டலாம்.

இளைஞராகிய மார்க்ஸ் ஆன்மிக வளர்ச்சியில் வேகமாக முன்னேறியபடியால் நேற்றைய தினத்தில் அவருடன் ஒத்த கருத்துக் கொண்டிருந்த இளம் நண்பர்கள் பின்னே விடப்பட்டனர். ஆனால் விவாதங்களின் போது மார்க்சின் ஆத்திரத்தைத் தூண்டியது இதுவல்ல; அவர் தன்னுடைய அறிவையும் திறமைகளையும் நிச்சயமாக விளம்பரம் செய்பவரல்ல. விஷயம் தெரியாமல் ஏற்படுகின்ற அறிவீனத்தை அவர் எப்பொழுதுமே புரிந்து கொண்டு மன்னிக்கக் கூடியவர்; ஆனால் மற்றவர்களுக்குப் போதிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும் உரிமை கொண்டாடிய “மேதாவிகளின்” அறிவீனத்தை அவர் மன்னிக்க மாட்டார். இச்சந்தர்ப்பத்தில் அவர்களிடம் அறியாமை தனிப்பட்ட பலவீனமாக இருக்கவில்லை, அது ஒரு சமூக ஆபத்தாக மாறிவிட்டது. மார்க்ஸ் அதை வன்மையாகக் கண்டனம் செய்வார்.

நபர்களை மதிப்பிடுவதிலும் மார்க்ஸ் அநேகமாகத் தவறு செய்ததில்லை. இந்த நபர் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வகிக்கின்ற சமூக நிலையை அவர் தெளிவாகப் பார்த்தது மட்டுமல்லாமல், அது எதிர்காலத்தில் அவரை எங்கே இட்டுச் செல்லும் என்பதையும் அவர் முன்னறியக் கூடியவர். அவருடைய தாக்குதல்கள் முதலில் நியாயமில்லாதவை என்று தோன்றும், ஆனால் முடிவில் மார்க்ஸ் கூறியபடியே சரியாக நடக்கும்.

புரூனோ பெளவர்

“சிந்தனையில்” பயங்கரவாதியான புரூனோ பெளவர் பிற்காலத்தில் பிற்போக்குவாத Kreuz-Zeitung இல் (“சிலுவைப் பத்திரிகை”) வேலை செய்யத் தொடங்கினார். அரசியல் தியாகியாக வாழ்க்கையைத் தொடங்கிய அடோல்ப் ருட் டென்பெர்க் Preussischer Staats-Anzeiger இன் (“பிரஷ்ய அரசுச் செய்தித்தாள்”) ஆசிரியராகின்ற அளவுக்குத் தரமிழந்தார். 1840க்களின் ஆரம்பத்தில் தன்னுடைய பிரசுரங்களில் அரசியல் போராட்டத்துக்கு அறைகூவிய அர்னோல்டு ரூகே தன் வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் பிஸ்மார்க்கின் ஆதரவாளரானார்.

வைத்லிங்கையும் புரூதோனேயும் பொறுத்தமட்டில், அவர்கள் ஒரே விதமான புகழையும் ஒரே விதமான முடிவையும் அடையும்படி விதிக்கப்பட்டிருந்தனர் என்று மேரிங் எழுதியிருப்பது முற்றிலும் சரியானதே. அவர்களுடைய பணிகளின் தொடக்கத்தில் வேறு எவரையும் காட்டிலும் மார்க்ஸ்தான் அவர்களை அதிகமாகப் பாராட்டியவர். தொழிலாளி வர்க்கத்திடம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் சுய உணர்வுக்கு அவர்கள் உதாரணம் என்று மார்க்ஸ் கருதினார். ஆனால் ஜெர்மானியக் கைவினைஞரின் குறுகிய வரையறைகளுக்கு அப்பால் வைத்லிங்கனால் முன்னேற முடியவில்லை. அது போல பிரெஞ்சுக் குட்டி முதலாளியின் குறுகிய வரையறைகளுக்கு அப்பால் புரூதோனால் முன்னேற முடியவில்லை. அவர்கள் வரலாற்று வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள், மார்க்சிடமிருந்து பிரிந்தார்கள். அவர்கள் ஆரம்பித்த காரியத்தை மார்க்ஸ் மேதாவிலாசத்துடன் பூர்த்தி செய்தார்.

மார்க்ஸ் வைத்லிங்குடன் முறித்துக் கொண்ட பிறகும்-தன்னுடைய பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோதிலும் – தொடர்ந்து அவருக்குப் பண உதவி செய்து கொண்டிருந்தார். “நீங்கள் அவரிடம் பகையுணர்ச்சி கொண்டிருந்தபோதிலும் உங்கள் பணப்பையில் ஏதாவது இருக்கின்ற வரை அதை மூடுகின்ற அளவுக்குப் போக மாட்டீர்கள் என்பது உங்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்டது தான்”(3) என்று ஹேஸ் இதனைப் பற்றி ஒரு கடிதத்தில் குறிப்பிட்டார்.

தன்னுடைய உள்ளுணர்ச்சி தன்னை ஏமாற்றிவிட்டதாக மார்க்ஸ் ஒரு சமயத்தில் நினைத்தார். பக்கூனின் மீது அவருக்கு நம்பிக்கையில்லா விட்டாலும் பக்கூனினுடைய புரட்சிகர நடவடிக்கை அவருடைய சந்தேகங்களை நிரூபிக்கவில்லை,. Neue Rheinische Zeitung இன் (“புதிய ரைன் பத்திரிகை”) ஆசிரியராக இருந்த பொழுது பக்கூனினுக்கு எதிர்ப்பான நடவடிக்கைகளைச் செய்ததைப் பற்றி மார்க்ஸ் உடனடியாக வருந்தினார். அவர் பக்கூனினுடன் சமாதானம் செய்து கொண்டார். “அவருக்காதரவாகப் பேசினார்.”(4)

சில வருடங்கள் கழிந்தன. முதலாவது அகிலத்தில் பக்கூனின் குறுங்குழுவாத நிலையை மேற்கொண்ட பொழுது தன் உள்ளுணர்ச்சி தன்னை முற்றிலும் ஏமாற்றிவிடவில்லை என்பதை மார்க்ஸ் கண்டார்.

“நான் மிகச் சிலருடன் மட்டுமே நட்புக் கொண்டிருக்கிறேன், ஆனால் அவர்களிடம் உறுதியான நட்பு வைத்திருக்கிறேன்”(5) என்று மார்க்ஸ் ஒரு சமயத்தில் கூறினார். ஆம், அவருக்கு நண்பர்கள், உண்மையான நண்பர்கள் மிகவும் சிலரே. ஆனால் அவர்கள் எவ்வளவு தூய்மையானவர்கள், பாட்டாளி வர்க்க இலட்சியத்துக்கு எவ்வளவு விசுவாசமானவர்கள்! வில்ஹெல்ம் வோல்ஃப், யோசிஃப் வெய்ட மையர், வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட், கியோர்கு வீர்த்.

வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட்

மார்க்ஸ் மிக அதிகமான அன்பும் நட்புணர்ச்சியும் கொண்டவர், அதனால்தான் அவர் தவறு செய்தவர்களை அதிகமாக வெறுத்தார். அவருடைய வாழ்க்கையில் இரு நபர்கள் மிகவும் அசாதாரணமான பாத்திரத்தை வகித்தனர். ஜென்னியின் காதலும் எங்கெல்சின் நட்பும் வாழ்க்கை மார்க்சுக்கு அளித்த மிகவும் சிறந்த கொடைகளாகும்.

ஜென்னி அவருடைய மனைவியாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பராகவும் ஆலோசகராகவும் அவருடைய புத்தகங்களின் முதல் விமர்சகராகவும் இருந்தாள். மார்க்ஸ் (அவருடைய நண்பர் ஹேய்னெயைப் போல) அவளுடைய நகைச்சுவையை, நயமான கலையுணர்ச்சியை, பரந்த அறிவை (சில துறைகளில் அவருடைய அறிவுக்குச் சிறிதும் குறைவில்லாதது) மிகவும் மதித்தார். அவர் ஜென்னியின் இலக்கியத் திறனை வியந்து போற்றினார்; கடிதம் எழுதுகின்ற கலையில் அவள் ஒப்பற்ற திறமை உடையவள் என்று கருதினார்.

மார்க்ஸ் அற்புதமான உரைநடை எழுதக் கூடியவர். அவருடைய உரைநடையில் “டாசிட்டசின் கடும் ஆவேசமும் ஜூவெனாலின் ஆபத்தான அங்கதமும் தாந்தேயின் புனிதமான சீற்றமும் கலந்திருக்கும்”(6) என்று வில்ஹெல்ம் லீப்க்னெஹ்ட் எழுதினார். எனினும் மார்க்ஸ் ஜென்னியின் உதவியுடன் தன்னுடைய எழுத்து வன்மையைப் பூரணமாக்கிக் கொண்டார்.

1844 ஜூன் மாதத்தில் ஜென்னி மார்க்சுக்கு எழுதிய மிகவும் சுவாரசியமான கடிதம் இன்னும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. ஜென்னி அக்கடிதத்தில் மார்க்சின் நடையை விமர்சித்துவிட்டு அவருக்கு அறிவுரை கூறுகிறாள்:

“…மிகவும் அதிகமான வெறுப்புடனும் எரிச்சலுடனும் எழுதாதீர்கள். உங்களுடைய மற்ற கட்டுரைகள் எவ்வளவு அதிகமான விளைவை ஏற்படுத்தின என்பது உங்களுக்குத் தெரியும். எதார்த்தமான முறையில் நயத்துடனும் நகைச்சுவையுடனும் இலேசாகவும் எழுதுங்கள். அன்பே! உங்கள் பேனாவைக் காகிதத்தின் மீது ஓட விடுங்கள், சில சமயங்களில் தடுக்கி விழுந்து விடுமானால், அதோடு சேர்த்து வாக்கியமும் சிதைவடைந்தாலும் கவலை வேண்டாம். உங்கள் சிந்தனைகள் பழைய காலத்துப் படைவீரர்களைப் போல அதிகமான உறுதியுடனும் துணிவுடனும் விறைப்பாக நிற்கின்றன. அவர்களைப் போல அவை ‘சாகும், ஆனால் சரணடைய மாட்டா’ (’elle meure, mais elle ne se rende pas’).

உடை ஏதோ சில சந்தர்ப்பங்களில் இறுக்கமாக இருக்கவே பொத்தான் மாட்டப்படாமல் தளர்வாகத் தொங்கினால் அது முக்கியமானதா? பிரெஞ்சுப் படைவீரர்களின் இயல்பான, தொய்வான தோற்றமே அவர்களுக்கு அதிகமான சிறப்பைத் தருகிறது. போலி உயரமுள்ள நமது பிரஷ்யர்களை நினைத்தால், அது உங்களுக்கு நடுக்கத்தைத் தரவில்லையா? பெல்டுகளைத் தளர்த்துங்கள், கழுத்துப்பட்டையைத் தளர்த்துங்கள், தலைக் கவசத்தையும் அகற்றுங்கள்; முடிவெச்சங்கள் இயல்பாகச் செல்லட்டும், சொற்கள் எப்படித் தோன்றுகின்றனவோ அப்படியே எழுதுங்கள். போர்க்களத்தில் ராணுவம் கறாரான ஒழுங்குமுறைப்படியே அணிவகுத்துச் செல்ல வேண்டும் என்பது அவசியமில்லையே. உங்களுடைய துருப்புகள்தான் போர்க்களத்தில் நின்று கொண்டிருக்கின்றனவே, அப்படித்தானே? தளகர்த்தருக்கு நல்வாழ்த்துக்கள்….”(7)

மார்க்சும் ஜென்னியும் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்த தம்பதிகள் என்பது அவர்களை நன்கறிந்த எல்லோருடைய கருத்தாகும். துன்பங்களோ, சோதனைகளோ அவர்களுடைய காதலை பலவீனப்படுத்தவில்லை; அதற்கு மாறாக, துன்பம் அவர்களுடைய அன்பை வலுப்படுத்தியது. அவர் மாணவப் பருவத்திலிருந்ததைப் போலவே முதிர்ச்சிக் காலத்தின் போதும் ஜென்னியை மென்மையாக, தீவிரமாகக் காதலித்தார்.

1856ம் வருடத்தில் ஜென்னி ஜெர்மனிக்குக் குறுகிய காலப் பயணம் சென்றிருந்தாள். அப்பொழுது ஜென்னிக்கு வயது நாற்பத்திரண்டு, பெரிய குடும்பத்தின் தாயாகவும் இருந்தாள். அப்பொழுது மார்க்ஸ் பாசத்துடன் ஜென்னிக்கு எழுதிய கடிதம் கிடைத்திருக்கிறது. அக்கடிதம் மனித உணர்ச்சிக்குச் சிறந்த ஆவணம். அதில் மென்மையும் உணர்ச்சியும் இருப்பதுடன் ஆழமான சிந்தனையும் நிறைந்திருக்கிறது. மார்க்சின் ஆளுமைக்கும் காலப் போக்கில் முதுமையடையாத அவருடைய இளமையான காதலுக்கும் அக்கடிதம் அடையாளமாக இருக்கின்றபடியால் அதிலிருந்து நீண்ட மேற்கோளைத் தருவது பொருத்தமே.

“என் அன்பிற்கினியவளே,

“நான் மறுபடியும் உனக்கு எழுதுகிறேன், ஏனென்றால் நான் தனியாக இருக்கிறேன், என் மனதில் நான் உன்னோடு எப்பொழுதும் உரையாடிக் கொண்டிருப்பதும் அதை நீ அறிந்து கொள்ள முடியாமல் அல்லது கேட்க முடியாமல் அல்லது எனக்குப் பதிலளிக்க முடியாமலிருப்பதும் என்னை வாட்டுகிறது….  எனக்கு முன்னால் நீ இருப்பதைப் பார்க்கிறேன், நான் உன்னை அன்போடு தொடுகிறேன், தலை முதல் கால் வரை உன்னை முத்தமிடுகிறேன், உனக்கு முன்னால் முழந்தாளிட்டுப் பணிகிறேன், ‘அன்பே! உன்னைக் காதலிக்கிறேன்’ என்று முணுமுணுக்கிறேன். ஆம், அந்த வெனிஸ் மூர் (ஒதேல்லோ. – ப-ர்.) எக்காலத்திலும் காதலித்ததைக் காட்டிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். அது உண்மை. போலியான, உளுத்துப் போன உலகம் எல்லா மனிதர்களையும் போலிகளாக, உளுத்துப் போனவர்களாகப் பார்க்கிறது. என்னை அவதூறு செய்பவர்கள், என் முதுகுக்குப் பின்னால் என்னைத் திட்டுபவர்களில் எவராவது இரண்டாந்தரமான நாடக அரங்கில் முதல்தரமான காதலன் பாத்திரத்தை நடிப்பதற்காக என்னை எப்பொழுதாவது குறை கூறியதுண்டா? ஆனால் அது உண்மையே. இந்தப் போக்கிரிகளுக்கு நகைச்சுவை இருக்குமானால் அவர்கள் உற்பத்தி மற்றும் பரிவர்த்தனை உறவுகளை ஒரு பக்கத்திலும் உன் காலடியில் நான் கிடப்பதை மறு பக்கத்திலும் ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள். இந்தப் படத்தையும் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று அந்த ஓவியத்துக்குக் கீழே எழுதியிருப்பார்கள். ஆனால் அவர்கள் முட்டாள்தனமான போக்கிரிகள், முட்டாள்களாகவே in seculum Seculorum (எக்காலத்திற்கும்- ப-ர்.) நீடிப்பார்கள்.

“…..ஒரு கனவில் என்னை விட்டு நீ போய்விட்டால் கூட காலம் அதற்குச் (என் காதலுக்குச் – ப-ர்.) செய்த சேவை என்பதை நான் உடனடியாக அறிந்து கொள்வேன். சூரிய ஒளியும் மழையும் செடி வளர்ச்சியடைவதற்கு உதவி செய்வதைப் போன்றதே இது. நீ என்னைப் பிரிந்த உடனே உன்னிடம் நான் கொண்டிருக்கின்ற காதல் அதன் மெய்யான வடிவத்தை, அதாவது பேருருவத்தை அடைகிறது; அதில் என்னுடைய ஆன்மாவின் முழுச் சக்தியும் என்னுடைய இதயத்தின் முழுப் பண்பும் குவிக்கப்பட்டிருக்கின்றன. நான் மறுபடியும் மனிதனாக உணர்கிறேன். ஏனென்றால் ஒரு மாபெரும் உணர்ச்சியை நான் உணர்கிறேன். நவீனக்கல்வி முறையும் பயிற்சியும் நம்மிடத்தில் ஏற்படுத்துகின்ற பல்வகைத் தன்மையும், அகநிலையான மற்றும் புறநிலையான காட்சிகளை நாம் சந்தேகிக்க உபயோகிக்கின்ற ஐயுறவுவாதமும் நம் அனைவரையும் சிறியவர்களாக, பலவீனமானவர்களாக சிணுங்குபவர்களாக, மன உறுதி இல்லாதவர்களாகச் செய்ய உத்தேசிக்கப்பட்டவை. ஆனால் காதல்-ஃபாயர்பாஹின் மனிதனிடத்தில் அல்ல, மொலிஷோட்டின் “வளர்சிதை மாற்றத்தில்” அல்ல, பாட்டாளி வர்க்கத்தின் மீது அல்ல, ஆனால் அன்பு நிறைந்த பெண்ணிடம், உன்னிடம் காதல் கொள்வது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது.

“அன்பே, நீ சிரிக்கலாம்; நான் திடீரென்று பிரசங்கத்தில் இறங்கிவிட்டது ஏன் என்று கேட்கலாம். ஆனால் உன்னுடைய இனிமை நிறைந்த தூய்மையான இதயத்தை என் இதயத்துடன் சேர்த்து அணைக்கிறேன். நான் மெளனமாக இருப்பேன், ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டேன். என் உதடுகளினால் உன்னை முத்தமிட இயலாதபடியால் என்னுடைய நாக்கினுல்தான் உன்னை முத்தமிடுவேன், வார்த்தைகளைத்தான் கொட்டுவேன். நான் கவிதை கூட எழுதுவேன் என்பது மெய்யே….

“உலகத்தில் பல பெண்கள் இருக்கிறார்கள், அவர்களில் சிலர் அழகானவர்கள் என்பது உண்மையே. ஆனால் ஒவ்வொரு அசைவிலும் ஒவ்வொரு சுருக்கத்திலும் என்னுடைய வாழ்க்கையின் மிகவும் சிறந்த, மிகவும் இனிமையான நினைவுகளைத் தூண்டுகின்ற அந்த முகத்தை நான் மறுபடியும் எங்கே காண்பேன்? உன்னுடைய இனிய முகத்தில் என்னுடைய முடிவில்லாத துயரங்களை, ஈடு செய்யப்பட முடியாத இழப்புக்களை (மார்க்சின் மகன் ஏட்கார் இறந்து விட்டதைப் பற்றிய குறிப்பு – ப-ர்.) நான் காண்கிறேன்; உன்னுடைய இனிய முகத்தை நான் முத்தமிடுகின்ற பொழுது நான் துயரங்களை முத்தமிட்டு விரட்டுகிறேன். ‘அவளுடைய கரங்களில் புதைந்து, அவளுடைய முத்தங்களில் புத்துயிர் பெற்று’ – அதாவது உன்னுடைய கரங்களில், உன்னுடைய முத்தங்களின் மூலம்; நான் பிராமணர்களுக்கும் பிதகோரசுக்கும் மறு பிறவியைப் பற்றி போதிப்பேன், கிறிஸ்துவ சமயத்துக்குத் திருமீட்டெழுச்சியைப் பற்றி அதன் போதனையைத் தருவேன்.”(7)

குடும்பத் துன்பங்களின் சுமைகள் எப்படி இருந்தபோதிலும் மார்க்சின் விஞ்ஞான மற்றும் அரசியல் பணியில் ஜென்னி அலுப்படையாமல் உதவி செய்தாள். பல வருட காலம் ஜென்னியே மார்க்சின் காரியதரிசிப் பொறுப்பில் பணியாற்றினாள், அவருடைய நூல்களைப் பிரதியெடுத்தாள், கட்சிப் பணிகளில் அவருடைய “தகவலறிவிப்பாளராக” இருந்தாள். சர்வதேசத் தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த பல பிரமுகர்களுடன் அவள் கடிதத் தொடர்பு வைத்திருந்தாள்; அந்த இயக்கம் சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலும் அவள் அக்கறை காட்டி வந்தாள். அவள் தன்னைக் கட்சியின் ஊழியன் என்று பெருமையாகக் கருதினாள். ஜென்னி லஸ்ஸாலுக்கு எழுதிய கடிதத்தில் நகைச்சுவை மிளிர்கிறது:

“அவசரமாக இந்தச் சிறு குறிப்பை எழுதுவதற்காக மன்னியுங்கள். என் தலையில் எவ்வளவோ கிடக்கிறது. செய்ய வேண்டிய கைவேலையும் ஏராளம். மேலும் இன்று நகரத்திற்கும் போக வேண்டும். எனவே இரண்டு அல்லது மூன்று மணிநேரம் சுறுசுறுப்பாக அலைந்து கொண்டிருப்பேன். நான் கட்சியின் இயங்கும் பகுதியில் இன்னும் இருக்கிறேன், அது முன்னே செல்கின்ற, மைல் கணக்கில் நடக்கின்ற கட்சி. மற்றவை எப்படி இருந்தாலும் நான் நல்ல கட்சிக்காரி அல்லது ஓடிக் கொண்டிருப்பவள். உங்களுக்குப் பிடித்தமானபடி வைத்துக் கொள்ளுங்கள்.”(8)

குறிப்புகள்;

(1)Reminiscences of Marx and Engels, p. 266.
(2)Ibid., p. 272.
(3)Franz Mehring, Karl Marx, The Story of his life, covici, Friede Publishers, New york, 1935, p. 145.
(4)Marx, Engles, Werke, Bd, 30, S. 498.
(5) Ibid., p. 488.
(6) Reminiscences of Marx and Engels, p. 103.
(7) Marx, Engles, Collected Works, Vol. 3, p. 579.
(8) Marx, Engles, Werke, Bd, 29, S. 532-536.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள் :

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்
  19. விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !
  20. அந்நியமாதலை ஒழிப்பது பிரதானமாக தனிச் சொத்துடைமையை ஒழிப்பதைப் பொறுத்திருக்கிறது !