Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 437

ஐரோப்பியர்களால் வாழ்வும் வளமும் பெற்ற வடமொழி | பொ.வேல்சாமி

0

நண்பர்களே….

எழுத்தாளர்
பொ. வேல்சாமி
வடமொழியாகிய சமஸ்கிருதமொழியின் சிறப்பை 13, 14 ம் நூற்றாண்டுகளில் அரேபியர்களின் வழியாக ஐரோப்பியர்கள் புரிந்துகொண்டனர் என்று வரலாறு கூறுகின்றது. 1651 இல் ஆப்ரகாம் ரோஜர் பர்த்திருஹரியின் “ஸீபாஷித த்ரிசதி” என்ற வடமொழி நூலை போர்த்துக்கீசிய மொழியிலும் டச்சு மொழியிலும் மொழிபெயர்த்தார். ஐரோப்பியர்களுக்கு அறிமுகமான முதல் வடமொழி நூல் இதுதான் என்று கூறுகின்றனர். தரங்கம்பாடியில் வசித்த ராபர்ட் டி நொபிலி (1577) தமிழ்நாட்டில் வேதங்களைத் தேடியதில் யஜீர் வேதத்தை மட்டும் கண்டுபிடித்து ஐரோப்பியாவிற்கு கொண்டு சென்றதாக அறிவித்தார். அந்நூலை வால்டேர் படித்து பிரான்ஸ் நாட்டு நூல்நிலையத்தில் சேர்த்ததாகத் தகவல் உண்டு. ஆனால் அது உண்மையான யஜீர் வேதம் அல்ல என்று பிற்காலத்தில் தெரிந்தது. கர்னல் போலியர் (COLONEL POLIER) 1798 இல் நான்கு வேதங்களையும் தேடிப் பிடித்து அவற்றை பிரிட்டிஷ் மியூசியத்தில் சேர்ப்பித்தார்.

சமஸ்கிருதமொழியை ஐரோப்பியர்கள் பலரும் ஆராய்ந்து நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியுள்ளனர். அவற்றுள் பல இப்பொழுதும் இணையத்தில் கிடைக்கின்றன. அப்படி எழுதியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்

1. சார்லெஸ் வில்கின்ஸ் (Charles Wilkins) 1750 -1836
2. ஸர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) 1746 -94 முதன்முதலாக தேவநாகரி எழுத்துகளில் அச்சிட்டவர் இவரே. அதனை அச்சு எழுத்துக்களாக உருவாக்கியவரும் இவரே.
3. ஹென்றி தாமஸ் கோல்புரூக் (Henry Thomas Cole brooke) 1765 – 1837 பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பியர்களில் பலரை சமஸ்கிருத பண்டிதர்களாக மாற்றியவர் இவரே.
4. ஷ்லெகல் (Friedrich Schlegel) 1772 -1829
5. பிரான்ஸ் பாப் (Franz Bopp) 1791 -1867. இவர் சமஸ்கிருத அகராதியை வெளியிட்டவர் என்ற தகவல் உண்டு.
6. பர்நாப் (Prof.Eugene Burnouf) 1801 -52. இவர் மாக்ஸ்முல்லரின் வடமொழி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
7. ரோஸன் (Friedrich Rosen) 1805-37. இவர் ஏட்டுச்சுவடிகளில் இருந்த ரிக் வேதத்தின் முதல் அஷ்டகத்தை சொற்களுக்கான அர்த்தங்களுடன் முதலில் பதிப்பித்தவர்.
8. பென்வே (Theodor Benfey) 1809 -1881 இவர் 1848 இல் சாம வேதத்தையும் 1866 இல் சமஸ்கிருத ஆங்கில அகராதியையும் வெளியிட்டார்.
9. மாக்ஸ்முல்லர் (Prof. Friedrich Max Muller) 1823-1900 இவர் ரிக் வேதத்தை சாயனருடைய விளக்கத்துடன் முதன்முதலில் பதிப்பித்தார். இவர் பதிப்பாசிரியராக இருந்து வெளியிட்ட சமஸ்கிருத நூல்களும் பிற நூல்களும் 50 தொகுதிகளாக இணையத்தில் உள்ளன. சுமார் 16000 பக்கங்கள் உள்ள இந்த தொகுதிகளை அரை மணிநேரத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
10. ராத் (Rudolph Roth) 1821-95 இவர் பேரா. போட்லிங் என்பவருடன் இணைந்து ரஷிய நாட்டின் “செயின்ட் பீட்டர்ஸ்பர்க்“ நகரத்தில் 1853 -75 க்கு இடையில் சமஸ்கிருத – ஜெர்மானிய பெரிய அகராதியை வெளியிட்டார். இன்றுவரை அந்த அகராதி வேதம் படிப்பவர்களுக்கு உறுதுணையான நூலாக நிலவி வருகிறது. 1848 -52 க்கு இடையில் யாஷ்க நிருத்தத்தை அதற்கான உரையுடனும் தாம் எழுதிய உரைவிளக்கத்துடனும் வெளியிட்டார்.

இப்படியாக ஐரோப்பியர்கள் பலரும் வடமொழிக்கு செய்துள்ள பணிகள் ஏராளமானது. இந்தக் காலக்கட்டத்தில் இந்தியர்களில் எவரும் இத்தகைய பணிகளில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்வந்த காலங்களில் தமிழ்நாட்டவரும் வேதங்களை அறிந்துகொள்வதற்காக அவற்றை மொழிபெயர்க்கும் பணி மிக சிலரால் தொடங்கப்பட்டது. ஜம்புநாதன் என்ற அறிஞர் நான்கு வேதங்களையும் மொழிபெயர்த்துள்ளார். இந்த தொகுதிகளை “அலைகள் வெளியீட்டகம்” மீண்டும் மறுபதிப்பு செய்துள்ளது. (சாம வேதம் மட்டும் இணையத்தில் இருக்கிறது.)

1939-42 காலகட்டத்தில் திருவொற்றியூரான் அடிமை எனும் த.ப.இராமசாமிப் பிள்ளை என்பவர் யஸீர் வேதம் முழுமையும் அதற்கு எழுதப்பட்ட வடமொழி உரைகள் அனைத்தையும் வடமொழி அறிஞரான காசிவாசி சிவானந்த யதீந்திர சுவாமிகளைக் கொண்டு மொழிபெயர்த்தார். அந்த மொழிபெயர்ப்பு தொடர்பான செய்திகளையும் யஸீர் வேதம் அதன் உரைகள் தொடர்பான செய்திகளையும் விரிவான முன்னுரைகளாக எழுதி பத்துபாகங்களில் வெளியிட்டுள்ளார். இந்த பத்துபாகங்களும் (சுமார் 5000 பக்கங்கள் உள்ளன ) படிப்பர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. இந்த நூலை எவரும் விற்பனை செய்யக்கூடாது என்ற குறிப்பு நூலில் உள்ளது.

இத்தகைய மனிதர்கள் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டார்கள், தமிழ்த் தொண்டில் ஈடுபட்டார்கள் என்று பேசுவது நியாயம் ஆகும். அதைவிட்டு தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்களை தமிழ்த் தொண்டு செய்தார்கள் என்று கூறுவது அறிவுடைமை ஆகுமா?

இந்த நூல்களை அனைத்தையும் எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான இணைப்பு உங்களுக்கு கொடுத்துள்ளேன். தயவுசெய்து நூல்களை படிக்க நேரம் இல்லாவிட்டாலும் நூலின் முன்னுரைகளை படிக்கும்படி கேட்டுகொள்கிறேன்.

♦ கிருஷ்ண எசுர்வேதம் தைத்திரீய சங்கிதை : மகாக்கினி சயனத்தின் சேடப் பிரகரணம் சாயணபாடியக் கருத்துப் பதவுரைகளுடன் கூடியது

♦ ஸாம-வேதம் : (தமிழ் மொழி பெயர்ப்பு)

***

”அண்ணா”வின் நூல்களைப் படிக்க வேண்டுமா…

நண்பர்களே….

“அண்ணா”வின் நூல்களைப் படிக்க விருப்பமுள்ள நண்பர்கள் தரவிறக்கம் செய்துகொள்ள இணைப்பைக் கொடுத்துள்ளேன்….

♦ அண்ணாவின் நூல்கள்

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

இந்திய இராணுவத்திற்கான செலவு : தேசப் பாதுகாப்பிற்கா – கார்ப்பரேட்டுகளை கை தூக்கவா ?

தொழிலாளர்களும், விவசாயிகளும் கடுமையாக உழைத்து அரசுக்கு வரி செலுத்துகிறோம். அந்த வரிப்பணத்தில் பெரும்பகுதியை தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் இராணுவத்துக்கு செலவிடுகிறது ஆளும் வர்க்கம்.

இப்போது சமீப காலமாக பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி என்று பல காரணங்கள் கூறப்பட்டாலும், கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசின் பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரி விதிப்பு உயர்வே இந்த நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. 2014-க்குப் பிறகு மட்டும் பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பின் மூலம் சுமார் 17 லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசு பெற்றிருக்கிறது. இதன்றி ஜி.எஸ்.டி மூலம் மாதம் 1 லட்சம் கோடி வீதம் வருடத்திற்கு 12 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கிறது.

இந்தப் பணத்திலிருந்துதான் பாதுகாப்புத் துறைக்கு பட்டுக் குஞ்சலம் வாங்கி அலங்கரித்துக் கொள்கிறது ஆளும் வர்க்கம். 2018-2019-க்கான மத்திய பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் இராணுவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உலகில் ராணுவத்திற்கு அதிகம் செலவிடும் நாடுகளில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5-வது இடத்தில இருக்கிறது இந்தியா. தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தப்படும் இந்தச் செலவு உண்மையிலேயே நாட்டின் பாதுகாப்பிற்குதான் பயன்படுத்தப்படுகிறதா? கார்ப்பரேட் கொள்ளைக்கே இந்த நிதி ஒதுக்கீடு சென்று கொண்டிருக்கிறது.

இராணுவத்திற்கு என்று ஒதுக்கப்படும் பணத்தில் பாதிக்கும் மேல் புதிய தளவாடங்கள் வாங்கவும், தளவாட பராமரிப்புக்காக வும் செலவிடப்படுகிறது. இராணுவ தளவாடங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இதற்கான ஒப்பந்தங்கள் அனைத்தும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்கப்படுகிறது.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் – டஸ்ஸால்ட் ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனம் தொடக்க விழா

போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், சமீபத்திய ரஃபேல் விமான ஊழல் வரை மேற்கத்திய கார்ப்பரேட்டுகளுடனான இந்த ஒப்பந்தங்களில் நடைபெறும் லஞ்ச ஊழல் முறைகேடுகள் பற்றிய விபரங்கள் ஆளும் வர்க்கங்களுக்கிடையேயான மோதலின் காரணமாக அவ்வப்போது வெளிவருகின்றன. தற்போது வெளியாகியிருக்கும் ரஃபேல் விமான ஊழல் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வது, ஏன் இராணுவத்துக்கு “தேசப்பாதுகாப்பு” என்ற பெயரில் இவ்வளவு பணம் ஒதுக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ள உதவும்.

2012-ம் ஆண்டு பிரான்சின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 126 நவீன ரக போர்விமானங்களை (18 விமானங்கள் பறக்கும் நிலையில்) அன்றைய மதிப்பில் சுமார் ரூ 54,000 கோடி செலவில் கொள்முதல் செய்வது, 108விமானங்களை இந்திய அரசின் HAL (இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட்) நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவிலேயே தயாரிப்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகியவை அடக்கம்.

ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு போட்ட புதிய ஒப்பந்தத்தின்படி, 36 விமானங்களை ஏறத்தாழ ரூ 60,000 கோடி கொடுத்து வாங்க வேண்டும், தொழில்நுட்ப பரிமாற்றம் கிடையாது. முக்கியமாக HAL நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் விமானங்களைத் தயாரிக்க வேண்டும் என்பது மாற்றப்பட்டு, அனில் அம்பானி புதிதாகத் திறந்த ரிலையன்ஸ் டிபென்ஸ் லிமிடெட் மூலமாக விமானங்களை சப்ளை செய்ய வேண்டும். ஒரு விமானத்தின் விலை ரூ 700 கோடியிலிருந்து ரூ 1600 கோடியாக இரண்டு மடங்கிற்கும் மேல் உயர்த்தப்பட்டிருக்கிறது, HAL நிறுவனத்திடம் இருந்து ரிலையன்சுக்கு ஒப்பந்தம் மாற்றப்பட்டிருக்கிறது என்பவை இதில் கவனிக்க வேண்டிய விசயங்கள்.

படிக்க:
ரஃபேல் ஊழல் : வாய் திறக்காத மோடியின் கருத்தே மெக்ரானின் கருத்தாம் !
ரஃபேல் விமானம் : மூட்டைப் பூச்சி மிசின் தயாரிக்க அம்பானிக்கு அள்ளிக் கொடுக்கும் மோடி

இதில்தான் ரூ 30,000கோடிக்கும் மேல் ஊழல் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகளும் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட முன்னாள் பா.ஜ.க தலைவர்களும் கூறுகின்றனர். ஒப்பந்த விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க மறுக்கும் மோடி அரசு, குற்றச்சாட்டுகளுக்கு எந்த பதிலும் கூறாமல் இதைப்பற்றி கேள்வி கேட்பவர்கள் தேசத்தின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றனர் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

பொதுத்துறை நிறுவனத்திடமிருந்து வாய்ப்பை பறித்து அம்பானிக்கு கொடுத்து விட்டீர்களே என்ற குற்றச்சாட்டுக்கு பதிலாக, அம்பானிக்கு மட்டுமில்லை 70 தனியார் நிறுவனங்களுக்கு காண்டிராக்ட் கொடுக்கப்பட உள்ளது என்று பதில் சொல்கிறார் மோடியின் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் எம்.ஜே.அக்பர். அதாவது, பொதுத்துறையில் வேலை வாய்ப்பை பலி கொடுத்து விட்டு தனியார் கார்ப்பரேட்டுகள் பையில் நமது வரிப்பணத்தை கொண்டு சேர்ப்பதுதான் தங்களது தேச பக்தியின் யோக்கியதை என்று வெளிப்படையாகவே அறிவிக்கிறார்கள்.

மோடி – ஹாலந்தே

“காந்தி அவர்களே, எங்களுக்கு தேசம் என்ற ஒன்றே இல்லாத நிலையில், தேசபக்தியைப் பற்றி எப்படி பேச முடியும்?” என்பதுதான் அம்பேத்கர், தேசபக்தி குறித்த காந்தியின் கேள்விக்கு அளித்த பதில். தேச பாதுகாப்பு என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப்படும் ராணுவம் என்பது உண்மையில் சொத்துடைமை வர்க்கங்களின் நலனை பாதுகாப்பதற்கான நிறுவனம்தான். இந்திய ஆளும் வர்க்கங்களுக்கும், பாகிஸ்தான் அல்லது சீன ஆளும் வர்க்கங்களுக்கும் இடையேதான் பகையும் போட்டியும் நிலவுகிறது. ஆனால், போரில் பலியிடப்படுவது உழைக்கும் வர்க்கம், ராணுவத்துக்கு செலவிடப்படுவது உழைக்கும் மக்களின் வரிப்பணம்.

ஒவ்வொரு நாட்டு முதலாளி வர்க்கமும் அண்டை நாடுகளை எதிரிகளாகக் காட்டி, தீவிரவாதிகள் என்று அச்சுறுத்தி தேசபக்தி என்ற திரையிட்டு தங்களை மறைத்துக் கொள்கின்றன. உண்மையில் உழைக்கும் மக்களுக்கு எதிரிகளாக இருப்பது கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களைப் பாதுகாக்கும் அரசுகளும்தான்.

இந்தியாவை ஆளும் கட்சிகளைப் பொறுத்தவரை டாடா, அம்பானி, அதானி உள்ளிட்ட தரகு முதலாளிகள்தான் தேசம், அவர்களின் நலனே தேசத்தின் நலன், அவர்களின் கொள்ளையை உறுதிப்படுத்துவதே தேசப்பாதுகாப்பு. தேசம், தேசியம், தேசபக்தி அனைத்தும் முதலாளிகளும் ஆளும்வர்க்கமும் மக்களுக்கெதிரான தங்களுடைய சுரண்டலை மறைப்பதற்கு போட்டுக்கொள்ளும் திரைகள்.

முதலாளிகளின் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் ராணுவம் இருக்கிறது என்றால், இப்போது அந்த ராணுவத்திற்காக செலவிடப்படும் வரிப்பணத்திலும் கைநனைத்து லாபமீட்டுகிறது, முதலாளி வர்க்கம்.

இதற்கும் இந்தியாவுக்கு முன்னோடி அமெரிக்காதான். அமெரிக்காவில் அரசாங்கப் பதவிகளில் ஆயுதத் தளவாடக் கம்பெனிகளின் முதலாளிகள் நேரடியாக பங்குபெறுகின்றனர். ஜார்ஜ் புஷ் ஆட்சிக் காலத்தில் அமெரிக்க துணை ஜனாதிபதியாக இருந்த டிக் சென்னி பதவி ஏற்பதற்கு முன்பு ஹல்லிபர்டன் என்ற எண்ணெய் கம்பெனியின் CEO-ஆக இருந்தார். 2000-ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த ஈராக் போரின் போது அமெரிக்க ராணுவத்தின் முக்கிய ஒப்பந்தங்கள், LOGCAP என்னும் மறுசீரமைப்புப் பணிகள் உட்பட ஹல்லிபர்டன் நிறுவனத்திற்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் (KBR) வழங்கப்பட்டு அமெரிக்கப் பொதுமக்களின் இலட்சக்கணக்கான டாலர் அள்ளி கொடுக்கப்பட்டது.

அமெரிக்க இராணுவத்தில் சண்டையிட தனியார் நிறுவனங்கள் ஆட்களை சப்ளை செய்வது அதிகரித்து 2003-ல் 2.4 இராணுவ வீரர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஈராக் போரில் அமெரிக்க இராணுவ வீரர்களை விட தனியார் நிறுவனங்களின் ஆட்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், சொத்துடைமை வர்க்கங்களின் நலனுக்காக பராமரிக்கப்படும் ராணுவ செலவில், முதலாளிகள் லாபம் ஈட்டும் போது, அதிகார வர்க்க தரகர்கள் ஊழல் செய்து சம்பாதிக்கிறார்கள்.

உண்மையில் நாட்டைக் காக்க வேண்டும் என்ற தேசபக்தி புரட்சிகர கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் தொழிலாளர், விவசாயிகள் உள்ளிட்ட உழைக்கும் வர்க்கத்திற்கே உரியது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப்படையை சோவியத் உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு வீழ்த்தியதன் மூலம் தங்கள் தேசத்தை மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகையும் முதலாளித்துவ வேட்டையிலிருந்து காத்தனர். அதுபோல அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களும் புரட்சிகர இயக்கங்களில் ஒன்று திரள்வதன் மூலம் தான் முதலாளி வர்க்கத்தை அம்பலப்படுத்தி வீழ்த்த முடியும்; நமது நாட்டையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.

செல்வம்
புதிய தொழிலாளி செப்டம்பர் 2018
நன்றி: new-democrats.

லிபரல் பார்ப்பனராவது எப்படி? வாழ்ந்து காட்டுகிறார் கட்ஜு

“சுப்ரீம் கோர்ட்டின் வீரம் இந்துக்களிடம் மட்டும் தானா? முஸ்லீம்களிடம் தனது வீரத்தை காட்டுமா?” – இதை யார் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?

எச்.ராஜா, ராமகோபாலன், அர்ஜூன் சம்பத், ஜெயமோகன் என பல பெயர்களை நீங்கள் யூகிக்ககூடும். ஆனால் இவர்கள் யாரும் இல்லை.இதை சொல்லியவர் ’லிபரல் ஜனநாயகவாதி’ என பெயரெடுத்த முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு.

கட்ஜு, மேலும் ஒருபடி மேலே போய் “நீதிபதிகளுக்கு சமநிலையும், கட்டுப்பாடும் இல்லை”  என்று கூறியிருக்கிறார். மேலே கூறப்பட்ட வாசகங்கள், “உயர் நீதிமன்றமாவது மயிராவது” என எச்.ராஜா பேசிய வசனத்தின் பாலிஷான வடிவம் என்றும் சொல்லலாம்.

லிபரல் கருத்துக்களைப் பேசும் ’தி வயர்’ இணையதளத்திலும், காவி பயங்கரவாதிகளின் ஆதரவு இணையதளமான ’ஸ்வராஜ்யா’ தளத்திலும் பத்தி எழுதிவருகிறார் கட்ஜூ. ஒருவர் ஒரே சமயத்தில் லிபரல் கருத்துக்களை பேசும் தளத்திலும், மதவெறியைப் பரப்பும் தளத்திலும் எழுத இயலுமா என்று உங்களுக்கு குழப்பமாக இருக்கிறதா? எனில் நீங்கள் லிபரல் பார்ப்பனர்கள் என்கிற பதத்தை இதுவரை கேள்விபட்டதில்லை என்று நினைக்கிறேன்.

அது என்ன லிபரல் பார்ப்பனர்கள்?

இதற்கு ஒவ்வொருவரும் பலவித அர்த்தம் சொல்கிறார்கள். அசைவம் சாப்பிடும் பார்ப்பனர்களை லிபரல் பார்பனர்கள் என்பதாகவும் இன்னும் பலவாறாகவும் பலர் பல வறையறைகளை வைத்திருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்னர் மணிரத்னம் படம் குறித்து பதிவர் யுவகிருஷ்ணா அவருக்கே உரிய பாணியில் எழுதியிருந்தார். அது லிபரல் பார்ப்பனர்களைப் பற்றிய ஒரு அறிமுகமாக வாசகர்களுக்கு இருக்கும் எனக் கருதுகிறேன். “முற்போக்கு பார்ப்பனர்கள் ஒரு எல்லை வரைதான் அனுமதிப்பார்கள். மணிரத்னம் பற்றி குறைகூறினால் வாய் மீதே போடுவார்கள்” என்று எழுதியிருந்தார் யுவகிருஷ்ணா.

லிபரல் பார்ப்பனர்களுக்கான ஒரு சிறப்பான உதாரணமாக நான் மார்க்கண்டேய கட்ஜுவை முன்வைக்கிறேன். அதற்கான ஆதாரத்தை நான் உங்களுக்கு புதிதாகத் தரப் போவதில்லை. கட்ஜுவே அனைத்து ஆதாரங்களையும் ஏற்கனவே தந்திருக்கிறார். அதை எடுத்தியம்பும் வேலையை மட்டுமே நான் இங்கு செய்யப் போகிறேன்.

கட்ஜு ஒரு லிபரல் பார்ப்பனர்தான் என்பதை நிருபிக்க மூன்று உதாரணங்களைத் தொகுத்தளிக்கிறேன்.

உதாரணம் #1: சபரிமலை வழக்கு vs முத்தலாக் வழக்கு

சபரிமலை வழக்கு குறித்து கட்ஜூ பின்வருமாறு சுவராஜ்யா தளத்தில் எழுதியுள்ளார்.

“ நீதிபதி இந்து மல்ஹோத்திரா தனது சிறுபான்மை தீர்ப்பில் சமநிலையுடன், சுயகட்டுப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் மற்ற நீதிபதிகளிடம் அவை இருப்பதாக சொல்ல முடியவில்லை. பல நூற்றாண்டு பழக்கவழக்கத்தில் தலையிடுவதன் மூலம் பிரச்சினைகளின் ஊற்றுக்கண்ணை திறந்திருக்கிறார்கள். நீதித்துறையை பெரும் பழி சுமக்க வைத்திருக்கிறார்கள்.

நீதித்துறை மத பழக்கவழக்கங்களில் தலையிடக் கூடாது. மதம் நம்பிக்கை சார்ந்தது. ஒவ்வொரு மதமும், வகையறாவுமே தங்களது மத நடவடிக்கைகளை தீர்மானித்துக் கொள்ள வேண்டும். (அனைத்து சாதி அர்ச்சகர் வழக்கில் இப்படித்தான் தீர்ப்பு வழங்கப்பட்டது)

பெரும்பான்மையான பள்ளிவாசல்களில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்படும் சில பள்ளிவாசல்களில் கூட தனியாக தொழுவதற்குத்தான் அனுமதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றம் முஸ்லீம்களிடம் தனது வீரத்தை காண்பித்து ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழ உத்தரவு அளிப்பார்களா? இல்லை சுப்ரீம் கோர்ட்டின் வீரம் இந்துக்களுக்கு மட்டும்தானா?”

உச்சநீதிமன்றம் இந்துக்களுக்கு அநீதி இழைத்து முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுவது போன்ற தோற்றத்தை இதன் மூலம் உருவாக்குகிறார் கட்ஜு.

மேற்கண்ட கட்டுரை எழுதுவதற்கு ஏழு நாட்களுக்கு முன்னதாகவே, மீண்டும் சொல்கிறேன், முன்னதாகவே தி வயரில் முத்தலாக் குறித்து பின்வருமாறு எழுதியிருக்கிறார் கட்ஜு.

பின்வருமாறு ஒரு வாதம் வைக்கப்படுகிறது. முத்தலாக் செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் முத்தலாக் சொல்வது என்பது மனைவியை கைவிடுவது என்பதாகிறது. அப்படியானால் மனைவியை கைவிடுவது ஏன் குறிப்பிட்ட மதத்தோடு தொடர்பு படுத்தப்படுகிறது. எந்த மதமாக இருந்தாலும் மனைவிகளை நிராதரவாக கைவிடும் கணவர்கள் அனைவரையும் ஏன் தண்டிக்கக் கூடாது?.

அப்படி செய்யலாம் என்றாலும் ஒரு தரப்பினரை சட்டவரம்புக்குள் கொண்டுவராமல் இருப்பதாலேயே அச்சட்டம் தவறு என்று ஆகிவிடாது. உதாரணமாக மருத்துவமனைக்கு அருகில் ஸ்பீக்கர் வைக்க அனுமதி இல்லை என்கிற சட்டத்தை அதே மருத்துவமனைக்கு அருகில் வண்டி ஹார்ன் சத்தம் தடை செய்யப்படவில்லை என்ற காரணத்திற்காக நீக்க முடியாது.

ஒரு சட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது, அனைவரும் இயற்கையாகவோ இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலோ ஒரே நிலையில் இருப்பதில்லை.

முத்தலாக் என்பது முஸ்லீம்களுக்கு தனிசிறப்பானது. ….. பிறமதத்தின் கணவர்களுக்கு தண்டனையில்லை என்பதற்காகவே முஸ்லீம்களிடம் நிலவி வரும் நிலப்பிரபுத்துவ பழக்கவழக்கத்தை ஒழிக்கும் சட்டத்திற்கு விலக்கு அளிக்க முடியாது.”

இப்போது நமது கேள்விகளுக்கு வருவோம்.

முத்தலாக் பிற்போக்கிலிருந்து வெளிவருவதாம். சபரிமலையில் மட்டும் மதத்திற்குள் நீதித்துறை தலையிடக்கூட்டாதாம் நம் மனுநீதியரசர் கட்ஜுவுக்கு

1. உச்ச நீதிமன்றம் முஸ்லீம்களின் மத விவகாரத்தில் தலையிட்டு தீர்ப்பளித்துள்ளது என்பது நமது முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு-க்கு நன்றாகவே தெரியும். எனினும் அத்தீர்ப்பையும் அதைத் தொடர்ந்து அரசு இயற்றிய சட்டத்தையும் ஆதரித்து கட்டுரையும் எழுதியுள்ளார் கட்ஜு.

உச்சநீதிமன்றமும் அரசும் முசுலீம்களின் மத விவகாரத்தில் தலையிட்டுள்ளன என்பது தெரிந்தும், சபரிமலை விசயத்தில் ”முஸ்லீம்கள் மீது கை வைக்க திராணி இருக்கிறதா?” என்று உச்சநீதிமன்றத்தை கேட்கிறார் கட்ஜூ. இதன் மூலம் இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த கட்ஜு முயல்வது ஏன் ?

  1. “ஒரு தரப்பினருக்கு பொருந்தாவிட்டாலும் சட்டம் சரியானதுதான். அவருக்கு பொருந்துமா? இவருக்கு பொருந்துமா? என்றெல்லாம் பார்க்கக் கூடாது” என்று 7 நாட்களுக்கு முன்னர் முத்தலாக் விவகாரத்தில் வகுப்பெடுத்துவிட்டு இப்போது சபரிமலை விசயத்தில் முஸ்லீம்களுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுப்பது ஏன் ?

முத்தலாக் விசயத்தில் பெரிய பண்டிதரை போல பல தீர்ப்புகளையும் அமெரிக்க நீதிபதியையும் மேற்கோள் காட்டிவிட்டு சபரிமலை என்றதும் ஒரு சங்கியைப் போல பொங்குகிறார் கட்ஜு.

படிக்க:
♦ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

நன்றாக கவனித்தும் பார்த்தால், கட்ஜு ’ஸ்வராஜ்யா’ என்கிற காவி பயங்கரவாத இணையதளத்தில் சபரிமலை குறித்து எழுதுகிறார்.   ‘தி வயரில்’ தம்மை முற்போக்காக காட்டிக்கொண்டு முத்தலாக்கை எதிர்த்தும் கட்டுரை எழுதுகிறார். முன்னதில் அவர் காஷ்மீரத்து பார்ப்பன கட்ஜு, பின்னதில் அவர் லிபரல் கட்ஜு.

உதாரணம் #2: அருந்ததிராய் மற்றும் பார்ப்பனியம் குறித்து கட்ஜு

” கட்ஜு லிபரல்தான். இந்த விவகாரத்தில் மட்டும் கொஞ்சம் நடுநிலை இழந்துவிட்டார் என்று சிலர் நினைக்கலாம். இல்லை கட்ஜூ இந்துக்களுக்கு ஆதாரவாக நிற்கிறார் என்றுகூட சில இந்துமத அப்பாவிகள் நம்பலாம். அவர்களுக்காவே அவரது எழுத்தில் இருந்தே இரண்டாவது உதாரணம்.

பார்ப்பனியம் என்ற சொல்லின் மூலம் தலித்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறாராம் அருந்ததி ராய்

இதில் அருந்ததிராயை ஒரு அறிவிலியாக நிருபிக்க நினைத்து எழுதியிருக்கிறார்.

பார்ப்பனர்களின் எண்ணிக்கைக்கும் அரசுத்துறையிலும் அதிகாரத்திலும் அவர்கள் வகிக்கும் பதவிகளுக்குமான விகிதாச்சாரம் குறித்த புள்ளிவிவரங்கள் தொடர்பாக அருந்ததிராய் எழுதியிருக்கும் கருத்தை கோடிட்டு கட்ஜூ எழுதுகிறார்

” அவர் (அருந்ததிராய்) பார்ப்பனியம் என்கிற வார்த்தையை பயன்படுத்துகிறார். சாதி அமைப்பு என்கிற வார்த்தைக்கு பதிலாக பார்ப்பனியம் என்கிற வார்த்தை பார்ப்பனர்களைக் காயப்படுத்துகிறது.” என்கிறார்.

அப்படி காயம்பட்ட பார்ப்பனர் யார் தெரியுமா ? அது வேறு யாருமல்ல.. நம் காஷ்மீரத்து பார்ப்பனர் கட்ஜுதான். தான் வாங்கிய அடிகளை, தன் கட்சிக்காரன் தாக்கப்பட்டதாகக் காட்டி மேடையில் பேசும் வடிவேலுவின் நகைச்சுவையை இது ஒத்திருந்தாலும் இப்படி காயம்படும்படி அடிக்கவேண்டுமா என்றும் சிலர் கேள்வி எழுப்பக்கூடும்.

பார்ப்பனியம் என்கிற வார்த்தை கட்ஜுவுக்கு ஏன் கோபத்தை வரவழைக்கிறது. சில மாதங்களுக்கு முன்னர் தோழர் மருதையன் எழுதிய கட்டுரையிலிருந்து சில வரிகளை கோடிட்டுக் காட்டுவது இங்கு பொருத்தமானதாக இருக்கும்.

” சாதி ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர்கள் யாருக்கும் தான் பிறந்த சாதியை விமரிசிக்கிறார்களே என்று சிந்தனையே எழவில்லை. தான் பிறந்த சாதியை யாரேனும் விமரிசிக்கும்போது அதன் காரணமாகக் கோபப்படுகிறவர் சாதி உணர்வைத் துறந்தவராக இருக்க முடியாது.”

மேலும் அருந்ததிராயின் மீது பின்வருமாறு தானே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து தானே தீர்ப்பும் எழுதுகிறார் கட்ஜு.

“பார்ப்பனர்களையும், பார்ப்பனியத்தையும் எதிர்த்து எழுதும் அருந்ததிராய் தலித்துகளை ஆதரிக்கிறார். இது தலித் மக்களுக்கு நன்மை பயப்பதல்ல மாறாக ஊறு விளைவிப்பது.

பார்ப்பனர்கள் தங்களது விகித்தாசாரத்து அதிகமாக பதிவிகளில் இருந்தாலும் அவர்களிலும் ஏழைகளும், வேலை இல்லாதவர்களும் இருக்கிறார்கள்.

‘பார்ப்பனியத்தை விமர்சிக்காமல் சாதியை ஒழிக்க முடியாது’ என்று அருந்ததிராய் கூறுவது அறிவிலித்தனமானது, சிறுபிள்ளைதனமானது.

அருந்ததிராயின் அறிவுஜீவி முகமூடியை கிழிக்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது”

 

– என எழுத்திலேயே சத்ரு சம்ஹார யாகம் நடத்தியிருக்கிறார் கட்ஜு.

முத்தலாக் vs சபரிமலை விசயத்திலேயே, தான் ஒரு அடிப்படை நேர்மைகூட இல்லாத நபர் என்பதைக் காட்டிய கட்ஜு, இப்போது பூணூலை பிடித்துக்கொண்டு சண்டமாருதம் செய்கிறார்.

படிக்க:
இந்து சாதி அமைப்புதான் முதலாளித்துவத்தின் தாய் – அருந்ததி ராய்
பாலிலும் இருக்குதய்யா பார்ப்பனியம்

சரி, இங்கு நாம் கட்ஜுவிடம் கேட்க வேண்டிய சில கேள்விகளுக்கு வருவோம் !

  1. பார்ப்பனியம் என்று அழைப்பது எப்படி தலித்துகளுக்கு எதிரானதாகும்?
  2. பார்ப்பனியம் என்று கூறுவது எப்படி மக்களை பிளவுபடுத்துவதாகும்? இப்படிக் கருதும் கட்ஜு எப்பேர்பட்ட சாதி வெறியராக இருக்க வேண்டும்?

கட்ஜூவுக்கு இருப்பது வெறும் சாதி உணர்வுதான், காழ்ப்பு கிடையாது என்று கூட சிலர் நினைக்ககூடும்.

அவரை வர்ணாசிரம மனுதர்ம கருத்துடையவர், சாதி வெறியர் என்றெல்லாம் கருத எனக்கும் கூட விருப்பமில்லைதான். ஆனால் அடுத்த உதாரணம் தவிர்க்கவியலாமல் அக்கருத்துக்குத்தான் நம்மை இட்டு செல்கிறது.

உதாரணம் #3: கருணாநிதி vs ஜெயலலிதா

கட்ஜூ என்கிற நீதிதேவர் ஒரு ஊழல் எதிர்ப்புப் போராளி என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரியாதவர்களுக்காக கருணாநிதியின் இறுதி நாட்களில் தமிழக மக்கள், ஊடகங்களில் கருணாநிதியைப் புகழ்ந்து கருத்துக்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது டிவிட்டினார் கட்ஜூ.

“ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கருணாநிதி குறித்து தமிழர்கள் பலர் கவலைப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் கேட்கவேண்டியது கருணாநிதி அரசியலுக்கு வருவதற்கு முன்னர் அவர் சொத்து எவ்வளவு ? இப்போது அவர், அவர் மனைவிகள், ஸ்டாலின், கனிமொழி, மாறன் உள்ளிட்டவர்களின் குடும்ப சொத்து எவ்வளவு? காமராசர் இறக்கும் போது அவரிடம் சொத்து இல்லை. எவ்வளவு பெரிய வேறுபாடு? “

கருணாநிதி குறித்து தமிழர்கள் கவலைப்படுவது கட்ஜூவுக்கு உள்ளக்குமுறலை ஏற்படுத்தியிருக்கிறது.

“அடேங்கப்பா ! லஞ்ச ஊழலை கொஞ்சம் கூட சகித்துக் கொள்ளாத பெரிய கோபக்காரர் போலத் தெரிகிறதே? எந்த ஊழல் குற்றச்சாட்டிலும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படாத கருணாநிதிக்கு எதிராகவே இப்படிப் பொங்குபவர், பல ஆண்டுகள் நீதிமன்றத்தை அலைக்கழித்து வாய்தா வாங்கி, இறுதியில் ஊழல் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவை கிழித்துத் தொங்க விட்டிருப்பார் போலத் தெரிகிறதே” என நினைக்கிறீர்களா ?

நமது முன்னாள் நீதிபதி ஜெயலலிதாவுக்கு என்ன நீதி சொல்லியிருக்கிறார் என்று பார்ப்போம். கருணாநிதியைப் போலவே ஜெயலலிதாவும் மருத்துவமனையில் இருந்த சமயத்தில் கட்ஜூ எழுதியது,

“ஜெயலலிதா ஒரு சிங்க குட்டி. அவரின் எதிரிகள் குரங்குகள். அவர் மீண்டு வருவார். பணிக்கு திரும்புவார். என் இளமை காலத்தில், அது அவரின் இளைமை காலமும்கூட, நான் அவர் மீது காதல் வயப்பட்டிருந்தேன்.”

ஒரு வேளை ஜெயலலிதாவின் ஊழல் குறித்து கட்ஜூவுக்கு தெரியாமல் இருந்திருக்குமோ? ஜெயலலிதாவுக்கு பயந்து கர்நாடகாவுக்கு மாற்றப்பட்ட வழக்கில் கணக்குப் பிழையுடன், “கூடுதலாக கொஞ்சம்தான் சொத்து சேர்த்திருக்கிறார் பரவாயில்லை” என்று குமாரசாமி வழங்கிய தீர்ப்புக்கு பிறகுதான் வாய்தா ராணி ஜெயலலிதா குறித்து “அவர் முதல்வராக இருந்தபோது நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்தவர். அவர் நீதித்துறையின் மீது செல்வாக்கு செலுத்த நினைத்ததில்லை” என்று குறிப்பிட்டார் கட்ஜு.

ஜெயலலிதா இறந்து பின்னர் உச்சநீதிமன்றத்தால் ஜெயா, சசிகலா குற்றவாளிகள் என தீர்ப்பான பிறகும் ஜெயலலிதா மீது தனக்கு இருந்த காதலை சிலாகித்து எழுதி மகிழ்ந்தார் கட்ஜூ.

ஊழல்களின் பேரரசி – கட்ஜுவின் ‘சிங்கக் குட்டி’ – ’அம்மா’

இன்று ஆறுமுகசாமி விசாரணைக்கு காரணமாக இருக்கும் ஜெயாவின் அப்பல்லோ மர்ம காலத்தில், ஜெயாவின் படங்களை வெளியிட கோரிக்கை வைத்திருந்தார் கருணாநிதி. அப்போது கட்ஜு, “கருணாநிதி என்ன மாதிரியான மனிதர். அவருக்கு மரியாதை தெரியாதா? ஒரு பெண்ணின் புகைப்படத்தை வெளியிடக் கோருவது அவமானம், வெட்ககேடு, மூர்க்கமானது. கருணாநிதிக்கு நாகரிகமே கிடையாது”  என்று எழுதியிருந்தார்.

சட்டப்படியே, எந்தவித நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் இல்லாத,  எந்த ஊழல் வழக்கிலும் தண்டனை பெறாதவர் கருணாநிதி. ஆனால் ”கருணாநிதிக்காக ஏன் கவலைப்படுகிறீர்கள்?, அவரிடம் சொத்துக் கணக்கு கேளுங்கள்” என தமிழக மக்களிடம் கோரும் நமது முன்னாள் நீதியரசர், உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஏ1 குற்றவாளி  ஜெயலலிதா குறித்து மாய்ந்து மாய்ந்து காதல் கொள்கிறார்.

அதாவது ”கருணாநிதி எனும் சூத்திரனுக்கு ஒரு நீதி, ஜெயலலிதா எனும் பார்ப்பனத்திக்கு ஒரு நீதி” என்பதுதான் கட்ஜுவின் நீதி – அதாவது மனுநீதிதான் கட்ஜுவின் நீதி என்பதே இதன்மூலம் தெளிவாகத் தெரிகிறது.

படிக்க:
ஜெயலலிதா: “புதிய கடவுளா? பழைய பிசாசா?”
மனு நீதி மன்றம் : சொத்துக் குவிப்பு வழக்கு உணர்த்தும் உண்மைகள் !

மேற்கண்ட மூன்று உதாரணங்களில் எடுத்தாளப்பட்ட கட்ஜுவின் சொந்த எழுத்துக்களின் முரண்களிலிருந்தே, ஒரு கிளாசிக்கல் லிபரல் பார்ப்பனருக்கான ‘டெக்ஸ்ட் புக்’ உதாரணம்தான் கட்ஜு என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

கொஞ்சம் பொறுங்கள்.. முடியவில்லை.. இன்னும் இருக்கிறது..

’ஸ்வராஜ்யா’வில் அவரது ”சமஸ்கிருதம் – ஒரு அறிவியல் மொழி” என்ற கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதேபோல தமிழின் குறைகளையும், தேவநாகரியின் மேன்மையையும் விளக்கி தமது முகநூலில் எழுதியிருக்கிறார்.

தமிழ், திராவிட இயக்கத்தின் மீதான வெறுப்பு அதனையொட்டி, கருணாநிதியின் மீதான தீராத வெறுப்பு, முத்தலாக் என்று வரும்போது லிபரல் பூச்சு, சபரிமலை விவகாரத்தில் பிற்போக்கு, பார்ப்பனியம் என்று பேசினால் நோவுவது, அதே சமயம் பத்திரிகை சுதந்திரம், சகிப்பின்மை, அது இது என கைவலிக்க டிவிட்டுவது – இதுதான் மார்க்கண்டேய கட்ஜு.

ஒரு லிபரலாக தன்னைக் காட்டிக்கொள்ளும் கட்ஜுவை புரிந்து கொள்வது எப்படி? முன்னர் குறிப்பிட்ட தோழர் மருதையனின் கட்டுரையில் ஹேராம் படம் வெளியான போது நடந்த நிகழ்வு ஒன்றை குறித்துக் கூறியிருப்பார்.

“புதிய கலாச்சாரம் இதழில், ‘ஹே ராம்’ திரைப்படத்துக்கு எழுதப்பட்ட விமரிசனத்தில் ஞாநிக்கு உடன்பாடு இல்லை.

பார்ப்பன நடுத்தர வர்க்கத்தை நீங்கள் அளவுக்கு அதிகமாக வில்லனாகப் பார்க்கிறீர்கள். அவர்கள் பெரும்பாலும் பயந்தாங்கொள்ளிகள். ஆபத்தற்றவர்கள்” என்றவாறு அவரது(ஞாநி) கருத்து அமைந்திருந்தது.

“மேற்பரப்பில் தெரியும் அவர்களது மென்மையைக் கண்டு ஏமாறக்கூடாது. அதன் தன்மைதான் நமது கவனத்துக்குரியது. பொருத்தமான தருணத்தில் அது விகாரமாக வெளிப்படும்” என்பது அன்று என் பதிலாக இருந்தது. என் கருத்தை அவர் ஏற்கவில்லை“

– என்று எழுதியிருப்பார். கட்ஜுவின் லிபரல் மேற்பரப்பு மென்மைக்குப் பின்னால், குடி கொண்டிருக்கும் பார்ப்பன ’மனு’நீதி அரசர் கட்ஜு விகாரமாக வெளிப்பட்ட சந்தர்ப்பங்களைத்தான் நாம் மேலே பார்த்தோம்.

’தி வயர்’, ’ஸ்க்ரோல்’, ’தி இந்து’ போன்ற பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவதாலேயே சிலரை முற்போக்கானவர்கள் என நம்மில் பலரும் நம்புகிறோம். அதனால்தான் கட்ஜுவோ, பி.ஏ.கிருஷ்ணனோ முற்போக்காளர்களாக நம்முன் நிறுத்தப்படுகிறார்கள்.

தன் தளத்தில் பத்தி எழுதும் கட்ஜூ, ’ஸ்வராஜ்யா’வில் மதவெறியைத் தூண்டும் வகையில் எழுதுவது குறித்து ‘தி வயர்’-க்கு பிரச்சினையில்லை. இதை ’நேர்மையற்ற அறிவுஜீவித்தனம்’ (Intellectual Dishonesty) என்று கருதுவதில்லை. மாறாக, கருத்து சுதந்திரம் என்பதாக இதை எடுத்துக் கொள்கிறார்கள்.

இதை கருத்துச் சுதந்திரமாக எடுத்துக் கொள்ள முடியுமா ? பாசிசத்தின் இருள் நம் மீது கவிந்து கொண்டிருக்கும் சூழலில் இத்தகைய லிபரல் பார்ப்பனர்களை அம்பலப்படுத்துவதே காலத்தின் கட்டாயமாகும்.

  • ரவி

நூல் அறிமுகம் : வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன்

வரலாற்றில் மன்னர்கள் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தார்களா?
மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் பொதுமக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள்?
மன்னர், மன்னரைச் சார்ந்தோர் நீங்கலாக ஏனையோருக்கு முகவரியில்லையா?
மன்னர்களுக்கெதிராகச் சிறு முணுமுணுப்புக்கூட எழவில்லையா?

தமிழர்களின் இரண்டாயிரம் ஆண்டு வரலாற்றுப் பாரம்பரியத்தில், அந்தப்புரங்களையும் போர்க்களங்களையும் தாண்டி எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன.

ஆற்றில் மிதந்து வந்த மாங்காயைத் திருடிய செயலுக்காக உயர் பறிக்கப்பட்டாளே சங்ககாலப் பெண் ஒருத்தி.

தான் மேய்த்த மாடு பயத்தம் செடியை மேய்ந்துவிட்டதற்காகக் கண்ணைப் பறிகொடுத்தாரே மிஞிலியின் தந்தை.

வைதீத சமயத்தை எதிர்த்தமைக்காகக் கழுவில் ஏற்றப்பட்டார்களே எண்ணாயிரம் சமணர்கள்.

குடி நீக்கிய பிரம்மதேயங்களும், தேவதானங்களும் உருவாகத் தம் நிலத்தை இழந்தார்களே, பல உழவர்கள்.

பிரம்மதேயமாக மாற்றப்பட்ட கிராமங்களில் கள் இறக்கும் உரிமையை இழந்தார்களே ஈழவர்கள்.

‘வெண்கல் உடைத்து மண்கலம் உடைத்து’ என்ற விதிமுறைப்படி தம் வெண்கலப் பாத்திரங்களைச் சோழப் பேரரசின் சேவகர்களிடம் பறிகொடுத்ததுடன், தம் வீட்டு மட்பாண்டங்களையும் அவர்கள் உடைப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தனரே சோழர்கால வேளாண்குடிகள்.

வீட்டின் முன்புறம் திண்ணை வைத்துக்கொள்ள, மாடிகட்ட, வெள்ளையடிக்கப் போராடித்தானே சோழர்கால இடையர்கள் இவ்வுரிமைகளைப் பெற்றார்கள்.

ஊதியமில்லாத கட்டாய வேலையை ‘வெட்டி’, ஊழியம் என்ற பெயர்களில் செய்து மாய்ந்துபோனார்களே நம் முன்னோர்.

தளிச் சேரிப் பெண்டிர்கள் எவ்வாறு உருவாக்கப்பட்டனர்?

அழகான பெண்களைக் கவர்ந்துவந்தும், விலைக்கு வாங்கியும், அவர்களுக்கென ‘அம்முவீடு’, ‘மங்களவிலாசம்’, ‘கல்யாண மகால்’ என்ற இருப்பிடங்களை உருவாக்கிய மன்னர்கள் யார்?

இடுப்புக்கு மேல் ஆடை அணியக்கூடாது என்ற கட்டுப்பாட்டை பெண்கள் மீது திணித்த மன்னர்கள் மற்றும் மேட்டிமை சாதியினர் யார்?

இக்கொடுமைகளுக்கெதிரான போராட்டங்கள் நடந்தனவா இல்லையா?

இவ்வாறு ஏராளமான கேள்விகளும் ஆய்வுக்குரிய செய்திகளும் தமிழக வரலாற்றிலும் உண்டு; இந்திய வரலாற்றிலும் உண்டு. அதிகாரப் பூர்வமான வரலாற்றுப் பாடநூல்களில் இவை இடம்பெறுவதில்லை….

படிக்க:
இராஜராஜ சோழன் ஆட்சி! பார்ப்பனியத்தின் மீட்சி!!
கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

வரலாறு என்பது மன்னர்கள் இல்லாமல் இல்லை என்ற கருத்து ஆதிக்கம் செலுத்துவதல்தான் வரலாற்று நாடகத்திற்குச் செங்கோலையும் கிரீடத்தையும் தேடி நம் பள்ளி மாணவர்கள் அலைகிறார்கள்.

உலக வரலாற்றிலும் இந்திய வரலாற்றிலும் மன்னர்களைத் தாண்டி நிகழ்ந்த நிகழ்வுகளும் வரலாற்று நிகழ்வுகளும்தான் என்ற உண்மை அவர்களுக்கு உணர்த்தப்படவில்லை.

உணர்த்தப்பட்டிருந்தால் கலிலியோ என்ற விஞ்ஞானி கண்ணை இழந்ததும், புருனோ என்ற விஞ்ஞானி உயிருடன் கொளுத்தப்பட்டதும், மகத் என்ற ஊரின் குளத்து நீரை ஆயிரக்கணக்கான மகர் சாதியினருடன் சென்று அம்பேத்கர் பருகியதும், தஞ்சை மண்ணின் விவசாயிகள் சாணிப்பால் குடித்ததும், சவுக்கால் அடிபட்டதும், அதற்கு எதிராக அவர்கள் கிளர்ந்தெழுந்ததும் வரலாற்று நிகழ்வுதான் என்பதை அறிந்திருப்பர்.

நூலின் முன்னுரையில் : ஆ.சிவசுப்பிரமணியன் (பக்: 13-15)

நூலாசிரியரைப் பற்றி: ஆ.சிவசுப்பிரமணியன் தமிழகத்தின் முக்கிய சமூக விஞ்ஞானிகளுள் ஒருவர். தூத்துக்குடி நகரில் வாழ்ந்து வரும் இவர் நாட்டார் வழக்காற்றியல், அடித்தள மக்கள் வரலாறு ஆகிய துறைகளில் நூல்கள் எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்வதிலும் ஆர்வம் கொண்டவர்.

நூல்: வரலாறும் வழக்காறும்
ஆசிரியர்: ஆ.சிவசுப்பிரமணியன்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்,
669, கே. பி. சாலை, நாகர்கோவில் 629 001.
பேச: 91-4652-278525
மின்னஞ்சல்: nagercoil@kalachuvadu.com

பக்கங்கள்: 120
விலை: ரூ.90.00

இணையத்தில் வாங்க: பனுவல் | CommonFolks

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

காந்தியம் என்பது என்ன ? பாபா சாகேப் அம்பேத்கர்

காந்தியம் தீண்டாத மக்களுக்குக் கேடு பகுதி – 1

து வரையிலும் இந்தியர்கள், இந்திய சமூக, பொருளாதார வாழ்க்கையின் புனரமைப்பு பற்றிப் பேசும் போது, தனிநபர்வாதமா கூட்டுவாதமா, முதலாளித்துவமா, சோசலிசமா, பழமைவாதமா முற்போக்குவாதமா என்ற தன்மையில் பேசி வருகிறார்கள். ஆனால் சமீப காலத்தில்தான் இந்திய வானில் ஒரு புதிய ‘வாதம்’ தோன்றியுள்ளது, அது காந்தியவாதம் (காந்தியம்) எனப்படுகிறது. சமீப காலத்தில் காந்தியாரே காந்தியம் என்ற ஒன்று இல்லை என மறுத்திருப்பது உண்மைதான். இந்த மறுப்பு காந்தியார் அழகுறச் சூடிக் கொள்ளும் அந்த வழக்கமான தன்னடக்கத்தைக் குறிப்பதாகுமே தவிர வேறல்ல. காந்தியம் என்ற ஒன்றே இல்லை என மெய்ப்பித்து விடாது. காந்தியாரிடமிருந்து எவ்வித எதிர்ப்புக் குரலும் இல்லாமல் காந்தியம் என்ற பெயருடன் அநேக நூல்கள் வந்து விட்டன. இந்தியாவிற்கு உள்ளேயும் வெளியேயும் அது ஏற்கெனவே சிலரது உள்ளத்தை ஈர்த்திருக்கிறது. மார்ச்சியத்திற்கு ஒரு மாற்றாக அதனை முன்னிறுத்தத் தயங்குவதில்லை, என்னும் அளவுக்கு சிலர் அதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

காந்தியத்தைப் பின்பற்றுகிறவர்கள் இதுவரை இந்த நூலில் எழுதப்பட்டிருப்பதையெல்லாம் படிக்க நேரிட்டால் பின்வரும் கேள்விகளைக் கேட்கக் கூடும்; தீண்டாத மக்கள் காந்தியாரிடமிருந்து என்ன எதிர்ப்பாத்தார்களோ அதை அவர் செய்யாமல் போயிருக்கலாம்; ஆனால் காந்தியம் தீண்டாத மக்களுக்கு வருங்காலம் குறித்து எவ்வித நம்பிக்கையும் ஏற்படுத்தவில்லையா? தீண்டாத மக்களின் நலனுக்காக காந்தியார் குறுகிய கால அடிப்படையிலும் மெல்ல மெல்லவும் விட்டு விட்டும் எடுத்த முயற்சிகளை மட்டுமே நான் நினைவில் வைத்திருப்பதாகவும், அவரால் வகுத்துரைக்கப்பட்ட கோட்பாடுகளின் உள்ளியல் நீளத்தை நான் மறந்து விட்டதாகவும் காந்தியத்தைப் பின்பற்றுவோர் குற்றஞ்சாட்டலாம். சில நேரம் இப்படி நேரிடுவதுண்டு என்பதை நான் ஏற்றுக் கொள்ளத் தயார்; நீண்ட கோட்பாட்டை வகுத்துரைப்பவர் குறுகிய அடி மட்டுமே எடுத்து வைக்கிறார்; என்றாவது ஒரு நாள் அந்தக் கோட்பாடு அதற்கே உரிய இயக்க ஆற்றலைக் கொண்டு நீண்ட அடி எடுத்து வைக்கும் படிச் செய்து, ஒரு நேரத்தில் விடப்பட்ட அனைவரையும் அரவணைத்துச் செல்ல வழிகோலும் என்ற நம்பிக்கையில் அந்தக் குறுகிய அடிக்காக அவரை மன்னித்து விடலாம்.

காந்தியம் அதனளவில் மிகவும் சுவாரசியமான ஆய்வுப் பொருளாகும். ஆனால் காந்தியாரைப் பரிசீலித்தப் பிறகு காந்தியத்தைப் பரிசீலிப்பது சலிப்பூட்டும் பணியாக இருந்தே தீரும்; காந்தியாரும் தீண்டாத மக்களும் என்பதைப் பரிசீலினையிலிருந்து விட்டு விட வேண்டும் என்பதுதான் என் முதற் கருத்தாக இருந்தது. அதே போது, நான் இந்த ஆய்வுப் பொருளைப் பரிசீலிக்காமல் விடுவதன் விளைவு பெரிதும் வருத்தத்திற்குரியதாக இருக்கக் கூடும் என்ற உண்மையை என்னால் அலட்சியம் செய்ய முடியவில்லை, ஏனென்றால், காந்தியாரை நான் அம்பலபடுத்தியுள்ள போதிலும் காந்தியத்தைப் பரிசீலிக்காமல் விட்டு விட்டால் காந்தியவாதிகள் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். காந்தியார் இது வரை தீண்டாத மக்களின் பிரச்சினையை தீர்க்கத் தவறி விட்டார் என்றால், தீண்டத்தகாதவர் இப்போதும் கூட காந்தியத்தில் விமோசனம் காண்பர் என்று அவர்கள் தொடர்ந்து போதனை செய்து வரக் கூடும். நான் இத்தகைய பிரசாரத்துக்கு இடமளிக்க விரும்பவில்லை என்பதால்தான் தொடக்கத்தில் எனக்கிருந்த தயக்கத்தை உதறிவிட்டு, காந்தியம் பற்றிய பரிசீலனையில் இறங்குகிறேன்.

II

காந்தியம் என்பது என்ன? அது எதைக் குறிக்கிறது? பொருளாதாரச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன? சமூகச் சிக்கல் தொடர்பாக அதன் போதனைகள் என்ன?

எடுத்த எடுப்பிலேயே ஒன்றைச் சொல்லிவிட வேண்டும்; காந்தியவாதிகள் சிலர் காந்தியம் பற்றி முற்றிலும் கற்பனையான ஒரு கருத்துருவத்தை இட்டுக் கட்டியிருக்கிறார்கள். இந்தக் கருத்துருவத்தின் படி, காந்தியம் என்பது கிராமத்துக்குத் திரும்பிச் செல்வதையும் கிராமத்தைத் தன்னிறைவாக்குவதையும் குறிக்கிறது. இது காந்தியத்தை வெறும் வட்டாரவாதம் தொடர்பான ஒன்றாக்கி விடுகிறது. காந்தியமானது வட்டாரவாதத்தைப் போல் சாமானியனமானதோ, அறியாத்தனமானதோ அல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன், வட்டாரவாதத்தை விடவும் மிகப் பெரிய உள்ளடக்கம் கொண்டது காந்தியம், வட்டாரவாதம் அதில் ஓர் அற்பச் சிறு பகுதிதான். அதற்கென்று ஒரு சமூகத் தத்துவம் உள்ளது; அதற்கென்று ஒரு பொருளாதாரத் தத்துவம் உள்ளது. காந்தியத்தின் பொருளாதார, சமூகத் தத்துவத்தைக் கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுவது வேண்டுமென்றே காந்தியம் பற்றி ஒரு தவறான படத்தைக் காட்டுவதாகும். காந்தியம் பற்றிய உண்மையான படத்தை காட்டுவதுதான் முதல் முக்கியத் தேவை,

தனது ஆசிரமத்தில், தாழ்த்தப்பட்டோர்களுடன் உரையாடும் காந்தி.

முதலில் சமூகச் சிக்கல் தொடர்பான காந்தியாரின் போதனைகளை எடுத்துக் கொள்வோம். சாதி அமைப்பு தொடர்பான காந்தியாரின் கருத்துக்கள் இந்தியாவில் சாதி அமைப்புதான் முக்கிய சமூகச் சிக்கலாக இருந்து வருகிறது 1921-22இல் நவஜீவன் என்னும் குஜராத்தி ஏட்டில் அவரால் முழு அளவில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டன. இந்தக் கட்டுரை1 குஜராத்தி மொழியில் எழுதப் பட்டியிருக்கிறது. அவருடைய கருத்துகளை அவருடைய சொற்களிலேயே முடிந்தவரை மிக நெருக்கமாய் சொல்கிறார்; ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கீழே தருகிறேன். காந்தியார் சொல்லுகிறார்:

“1. இந்து சமுதாயம் சாதி அமைப்பை அடித்தளமாகக் கொண்டிருப்பதால்தான் அதனால் தாக்குப் பிடித்து நிற்க முடிந்துள்ளது என்றுநான் நம்புகிறேன்”

“2. சுயராச்சியத்தின் வித்துக்களை சாதி அமைப்பில்தான் காண வேண்டும். வெவ்வேறு சாதிகள் இராணுவப் படையின் வெவ்வேறு பிரிவுகளைப் போன்றவை. ஒவ்வொரு பிரிவும் முழுமையின் நன்மைக்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது.”

“3. சாதி அமைப்பைத் தோற்றுவிக்க முடிந்த ஒரு சமுதாயம் ஈடற்ற அமைப்புத் திறனைப் பெற்றிருப்பதாகச் சொல்ல வேண்டும்.”

படிக்க:
யார் இந்த காந்தி ? தந்தை பெரியார்
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

“4. சாதி என்பது ஆரம்பக்கல்வியைப் பரப்புவதற்கு ஆயத்த நிலைச் சாதனங்களைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு சாதியும் அந்தச் சாதிக் குழந்தைகளின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள முடியும். சாதிக்கு ஓர் அரசில் அடிப்படை உள்ளது. அது ஒரு பிரதிநிதித்துவ அமைப்பிற்கான தேர்தல் தொகுதியாக இயங்க முடியும். சாதியானது ஒரே சாதியைச் சேர்ந்தவர்களிடையே ஏற்படும் பூசல்களைத் தீர்த்து வைப்பதற்கு நீதிபதிகளாகச் செயல்படுவதற்குரிய ஆட்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீதித் துறைக்குரிய பணிகளையும் ஆற்ற முடியும். சாதிகளைக் கொண்டு ஒவ்வொரு சாதியும் ஒரு பட்டாளத்தைக் கட்ட வேண்டும் என்று கோருவதன் மூலம் சாதிகளை வைத்து ஒரு பாதுகாப்புப் படையைக் கட்டுவது எளிது.”

“5. தேசிய ஒற்றுமையை வளர்ப்பதற்கு, வெவ்வேறு சாதியினர் சேர்ந்து உண்ணுவதோ, கலந்து மணம் புரிவதோ அவசியமில்லை என நம்புகிறேன். சேர்ந்து உண்ணுவது நட்புறவைத் தோற்றுவிக்கிறது என்பது அனுபவத்திற்கு மாறானது. இது உண்மை என்றால் ஐரோப்பாவில் போரே மூண்டிருக்காது.. உணவு உண்பது இயற்கைக் கடன் கழிப்பது போல் அருவருப்பானதொரு செயல். ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், இயற்கைக் கடன் கழித்த பிறகு நமக்கு அமைதி கிடைக்கிறது, உணவு சாப்பிட்ட பிறகோ சங்கடம் ஏற்படுகிறது. இயற்கைக் கடன் கழிக்கும் செயலைத் தனிமையில் செய்வது போலவே உணவு சாப்பிடுவதும் தனிமையில்தான் செய்யப்பட்டாக வேண்டும்.

கூட்டமொன்றில் உரையாற்றும் அம்பேத்கர்.

“6. இந்தியாவில் சகோதரர்களின் குழந்தைகளுக்கிடையே திருமணம் செய்து வைப்பதில்லை. அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை என்பதால் ஒருவரை ஒருவர் நேசிக்காமல் போய் விடுகிறார்களா? வைணவர்களிடையே பல பெண்கள் குடும்பத்தவர்களோடு சேர்ந்து சாப்பிட மாட்டார்கள், ஒரு பொதுவான தண்ணீர்ப் பானையிலிருந்து தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் மாட்டார்கள் என்னும் அளவுக்கு வைதீகமாய் இருக்கிறார்கள். அவர்களுக்கு அன்பு எதுவுமில்லையா? சாதி அமைப்பானது வெவ்வேறு சாதிகளிடையே சேர்ந்து உண்ணுவதையோ கலந்து மணம் புரிவதையோ அனுமதிப்பதில்லை என்பதால் அந்த அமைப்பை மோசமானது என்று கூறி விட முடியாது.

“7. சாதி என்பது கட்டுப்பாட்டுக்கு மறு பெயராகும். அது இன்ப நுகர்ச்சிக்கு வரம்பு விதிக்கிறது. ஒருவர் இன்ப நுகர்ச்சிக்கானச் சாதி வரம்புகளைக் கடப்பதை சாதி அனுமதிப்பதில்லை. சேர்ந்து உண்ணுவதற்கும் கலந்து மணம் புரிவதற்குமான தடை போன்ற சாதிக் கட்டுப்பாடுகளின் பொருள் இதுதான்.

“8. சாதி அமைப்பை அழித்து விட்டு மேற்கு ஐரோப்பிய சமூக அமைப்பை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள், இந்துக்கள் சாதி அமைப்பின் ஆன்மாவாகிய பரம்பரைத் தொழில் கோட்பாட்டைக் கைவிட்டாக வேண்டும் என்பதாகும். பரம்பரைக் கோட்பாடு ஒரு சாசுவதக் கோட்பாடாகும். அதை மாற்றுவதென்பது ஒழுங்கின்மையை உண்டு பண்ணுவதாகும். ஒருவரை எனது வாழ்நாள் முழுவதும் பிராமணர் என்று அழைக்க முடியா விட்டால் பிராமணரால் ஒரு பயனும் இல்லை. ஒவ்வொரு நாளும் பிராமணர் சூத்திரராகவும் சூத்திரர் பிராமணராகவும் மாற்றப்படுவதாயிருந்தால் குழப்பம் ஏற்படும்.

“9. சாதி அமைப்பு சமுதாயத்தின் இயற்கை ஒழுங்காகும். இந்தியாவில் அதற்கு மதச் சாயம் பூசப்பட்டுள்ளது. ஏனைய நாடுகள் சாதி அமைப்பின் பயன்பாட்டைப் புரிந்து கொள்ளாததால் அங்கு அது இறுக்கமற்ற நிலையில் தான் இருந்து வந்தது; ஆகவே இந்தியா சாதி அமைப்பிலிருந்து அடைந்துள்ள அதே நன்மையை அந்த நாடுகள் அடையவில்லை.

“இவை என் கருத்துகளாய் இருப்பதால் சாதி அமைப்பை அழிக்கப் புறப்பட்டிருப்பவர்கள் அனைவருக்கும் நான் எதிரானவன்.”

1922இல் காந்தியார் சாதி அமைப்பிற்கு வக்காலத்து வாங்கினார். அந்த ஆய்வைத் தொடர்ந்து கொண்டு செல்லுகையில், 1925ஆம் ஆண்டு காந்தியார் சாதி அமைப்பை சற்றே விமர்சனக் கண் கொண்டு பார்ப்பதைக் காண முடிகிறது. 1925 பிப்ரவரி 3ஆம் நாள் காந்தியார் கூறியது இதுதான்:

“சாதியானது கட்டுப்பாட்டைக் குறிக்கிறது என்பதால் நான் சாதிக்கு ஆதரவு தெரிவித்தேன். ஆனால் இப்போது சாதியானது கட்டுப்பாட்டைக் குறிக்கவில்லை, தடை சுவர்களைத்தான் குறிக்கிறது. கட்டுப்பாடு என்பது பெருமைக்குரியது, சுதந்திரம் பெறுவதற்கு உதவக் கூடியது. ஆனால் தடைச்சுவர் என்பது சங்கிலியைப் போன்றது. அது கட்டிப் போடுகிறது. இன்றுள்ள நிலையில் சாதிகளில் போற்றத்தக்கது எதுவுமில்லை. அவை சாத்திரங்களின் கோட்பாடுகளுக்கு மாறானவை. சாதிகளின் எண்ணிக்கைக்கு அளவில்லை; கலப்புத் திருமணத்துக்கு தடை உள்ளது. இது முன்னேற்றத்திற்குரிய நிலைமை அல்ல, வீழ்ச்சிக்குரிய நிலவரமே ஆகும்.”

இதிலிருந்து மீள்வதற்கு என்ன வழி? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் விதத்தில் காந்தியார் சொன்னார்:

“மிகச் சிறந்த பரிகாரம் சிறு சாதிகள் ஒன்றாய்ச் சேர்ந்து பெரிய சாதியாகி விட வேண்டும் என்பதே. இப்படி நான்கு பெரிய சாதிகள் இருக்க வேண்டும்; இவ்விதம் நாம் பழைய நால்வர்ண அமைப்பை மீண்டும் உருவாக்கி விடலாம்.”

சுருங்கச் சொல்லின், 1925 இல் காந்தியார் வர்ண சிரம அமைப்பை ஆதரிப்பவராகி விட்டார்.

புராதன இந்தியாவில் நிலவி வந்த பழைய வர்ண அமைப்பு சமுதாயத்தை நான்கு பிரிவுகளாகப் பிரித்து வைத்திருந்தது:
1) பார்ப்பனர்கள்; அவர்களின் வேலை கல்வி கற்பது;
2) சத்திரியர்கள்; இவர்களின் வேலை போர்த் தொழில்;
3) வைசியர்கள்; இவர்களின் வேலை வர்த்தகம்;
4) சூத்திரர்கள், இவர்களின் வேலை ஏனைய வகுப்புகளுக்குத் தொண்டூழியம் செய்தல்.

காந்தியாரின் வர்ண அமைப்பும், வைதிக இந்துக்களின் பழைய வர்ண அமைப்பும் ஒன்றுதானா? காந்தியார் தனது வர்ண அமைப்பைப் பின்வரும் சொற்களில் விளக்கினார் 2:

“1. வர்ணமாகப் பிரித்திருப்பது பிறப்பின் அடிப்படையிலானது என நான் நம்புகிறேன்.

“2. சூத்திரர் கல்வி கற்பதற்கோ தாக்குதல் – தற்காப்பு தொடர்பான இராணுவக் கலையைக் கற்பதற்கோ தடை போடும் படியான எதுவும் வர்ண அமைப்பில் இல்லை. மாறாக, பிறருக்குத் தொண்டூழியம் செய்ய ஒரு சத்திரியருக்கும் கூட உரிமை உண்டு. வர்ண அமைப்பில் அவருக்கு எவ்விதத் தடையுமில்லை . சூத்திரர் கல்வி கற்பதைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கி விடக் கூடாது என்றுதான் வர்ண அமைப்பு கட்டளையிடுகிறது. சத்திரியரும் தொண்டூழியம் செய்வதைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கி விடக்கூடாது.

சமுதாயத்திற்கு அவசியமான இழிவான தொழில்களைச் செய்து வந்தவர்களைச் சண்டாளர்கள் என்று அழைத்தது

(இதே போல் ஒரு பிராமணன் போர்க்கலை அல்லது வாணிகம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அவற்றைப் பிழைப்புத் தேடும் வழி ஆக்கிவிடக் கூடாது. வைசியன் கல்வி கற்கலாம் அல்லது போர்த்தொழில் பயிலலாம். ஆனால் அவற்றைப் பிழைப்பு தேடும் வழி ஆக்கிவிடக் கூடாது.)

“3. வர்ண அமைப்பு பிழைப்பு தேடும் வழியோடு தொடர்புடையது. ஒரு வர்ணத்தைச் சேர்ந்தவர் ஏனைய வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் தமது தனித் தேர்ச்சிக்குரியதாய்க் கொண்டிருக்கும் அறிவையோ, விஞ்ஞானம் -கலையையோ ஈட்டிக் கொள்வதால் எவ்விதத் தீமையுமில்லை. ஆனால் பிழைப்பு தேடும் வழியைப் பொறுத்த வரை, அவர் தம் வர்ணத்தின் தொழிலைத்தான் செய்தாக வேண்டும்; அதாவது அவருடைய மூதாதையர்களின் பரம்பரைத் தொழிலைத்தான் அவரும் செய்தாக வேண்டும்.

“4. வர்ண அமைப்பின் குறிக்கோள் போட்டா போட்டியையும் வர்க்கப் போராட்டத்தையும் வர்க்கப் போரையும் தடுப்பதாகும். நான்வர்ண அமைப்பில் நம்பிக்கை வைத்திருப்பது ஏனென்றால் அது ஆட்களின் கடமைகளையும் தொழில்களையும் நிர்ணயம் செய்து விடுகிறது.

“5. வர்ணம் என்பது ஒருவர் பிறப்பதற்கு முன்பே அவரது தொழில் நிர்ணயிக்கப்படுவதைக் குறிக்கின்றது.

“6. வர்ண அமைப்பில் தமது தொழிலைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் யாருக்கும் இல்லை. பரம்பரைதான் அவரது தொழிலை அவருக்காக நிர்ணயித்துக் கொடுக்கிறது”

படிக்க:
வரலாறு : பிர்லாவின் கரம்தான் காந்தியின் ஊடக அறம் !
காந்தியம் = அம்பானியம்!

பொருளாதார வாழ்க்கைத் துறைக்குத் திரும்புகையில் காந்தியார் இரு இலட்சியங்களை ஆதரிக்கிறார்:

இவற்றில் ஒன்று இயந்திர சாதனங்களை எதிர்ப்பதாகும். 1921இலேயே காந்தியார் இயந்திர சாதனங்களின் பால் தமக்குள்ள வெறுப்பை வெளிப்படுத்தினார். 1921 ஜனவரி 19ஆம் தேதிய யங் இண்டியா ஏட்டில் எழுதுகையில் காந்தியார் சொன்னார்:

”முன்னேற்றத்தின் கடிகார முள்ளை நான் பின்னுக்கு இழுக்க விரும்புகிறேனா? ஆலைகளுக்கு பதில் கைநூற்பையும் கைநெசவையும் கொண்டு வர விரும்புகிறேனா? இருப்புப் பாதைகளுக்குப் பதில் நாட்டு வண்டிகளைப் பயன்படுத்தலாம் என்று நான் விரும்புகிறேனா? இயந்திர சாதனங்களை எல்லாம் அடியோடு அழித்து விட விரும்புகிறேனா? இந்தக் கேள்விகளைப் பத்திரிகையாளர் சிலரும் பொது வாழ்வில் இருக்கும் சிலரும் கேட்டிருக்கிறார்கள். எனது பதில் இதுதான்: இயந்திர சாதனங்கள் மறைந்து போகுமானால் அதற்காக நான் கண்ணீர் விட மாட்டேன். அதனை ஒரு கொடிய நிகழ்ச்சியாகக் கருதவும் மாட்டேன்.

தொடரும்
காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
– டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்

நூலில், அத்தியாயம் – 11 பக்கம்: 327 முதல் 332 வரை.

அடிக்குறிப்புகள்:
1காந்தி சிட்சன் தொடரின் இரண்டாம் பாகத்தில் எண் 18 ஆக மீண்டும் அது அச்சிடப்பட்டுள்ளது.
2 இப்பொருள் குறித்து காந்தியார் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து எடுகோள்கள் தரப்படுகின்றன. இந்தக் கட்டுரை வர்ண வியவஸ்தா என்ற நூலில் தரப்பட்டுள்ளது இந்நூலில் மூலமொழியாகிய குஜராத்தியிலேயே காந்தியாரின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.

புத்தகக் குறிப்பு:

  • காங்கிரசும் காந்தியும் தீண்டாத மக்களுக்கு செய்ததென்ன
    – டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்
  • மகராஷ்டிர அரசின் கல்வித்துறை 1991-ல் வெளியிட்ட ஆங்கில பதிப்பின் தமிழாக்கம்
  • பக்கம்: 461 + 30
  • முதல் பதிப்பு: 24, செப்டம்பர் 1998
  • வெளியீடு,
    தலித் சாகித்ய அகாதமி,
    சென்னை – 600 073.

கொதிக்கும் யமஹா தொழிலாளர்கள்

காஞ்சிபுரம் ஒரகடம் சிப்காட் பகுதியில் இயங்கி வருகிது யமஹா நிறுவனத்தின் மோட்டார் பைக் தயாரிக்கும் தொழிற்சாலை. தொழிலாளர்கள் மீதான யமஹா நிர்வாகத்தின் ஒடுக்குமுறைகளையும், தொழிலாளர்களை சங்கமாக ஒருங்கிணைத்த சங்க முன்னணியாளர்கள் இருவரை பணிநீக்கம் செய்ததையும் கண்டித்து யமஹா தொழிலாளர்கள் அங்கே போராடி வருகின்றனர்.

இரண்டு நாளுக்கு மேல் விடுமுறை எடுத்தால் “அப்பா, அம்மாவைக் கூட்டிட்டு வா..” எனக் கூறுவது, தொழிலாளர்களின் பெற்றோர்களைக் கூப்பிட்டு மிரட்டுவது.. என பால்வாடி மாணவர்களை நடத்துவது போல தொழிலாளர்களை நடத்துகி்றது யமஹா நிர்வாகம்.

இதற்கு எதிராக தொழிற்சங்கம் அமைத்தால் தொழிற்சங்க நிர்வாகிகளை முன்னணியாளர்களை வீட்டிற்குச் சென்று மிரட்டுகிறது.

அப்பா இறந்துவிட்டார் என விடுமுறை கேட்டால், இறந்ததற்கு ஆதாரம் கேட்கிறார் ஒரு மனிதவளத்துறை அதிகாரி. இவர்கள் மனித உணர்வற்றவர்களாகவே இருக்கின்றனர். ஒரு தொழிலாளியை சக மனிதனாகக் கூட பார்க்க முடியாதவர்களாக இருக்கிறார்கள்.

இதற்கு எதிராக சங்கம் அமைத்த தொழிற்சங்க முன்னணியாளர்கள் பணிநீக்கம். இவற்றைக் கண்டித்து யமஹா நிரந்தரத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

குறிப்பு : இந்தப் பதிவில் இருந்த வீடியோக்கள் தொழிலாளிகள் கோரிக்கை காரணமாக தற்போது நீக்கப்பட்டிருக்கின்றன. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

பணக்காரர்கள் எப்படி உலகப் பணக்காரர்கள் ஆனார்கள் ?

நாளிதழ்களில் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் பணக்காரர்கள் பட்டியல் அவ்வப்போது வெளியாவது வழக்கம். அதில் இங்கே வெளியிடப்பட்டிருக்கும் பட்டியல் அந்தப் பணக்காரர்கள் எந்தெந்தத் துறையில் எப்படி வளர்ந்தார்கள் என்பதை வெறும் விவரமாகத் தருகிறது. நூறு கோடிக்கு அதிகமான அதாவது பத்து இலக்க வருமானத்தை அடைவது எப்படி நடக்கிறது?

பங்குச்சந்தை, நிதி வர்த்தகம் போன்ற ஊக வாணிபத் துறையில் இருந்து 14% பேர் வந்திருக்கின்றனர். மேட்டுக்குடி வர்க்கத்தின் உடை, ஆடம்பரப் பொருட்கள் தயாரிக்கும் துறையில் இருந்து 11%, இணைய சில்லறை வர்த்தகத்தில் இருந்து 13%, ரியல் எஸ்டேட் துறை 10%, உற்பத்தி துறை 9% என உலக பணக்காரர்கள் பிரிந்திருக்கறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? இந்த பணக்காரர்கள் சொத்து சேர்த்திருப்பது என்பது உலக மக்களின் வாழ்க்கைக்கு பயன்படக்கூடிய துறைகளில் இருந்து அல்ல. உற்பத்தி துறையின் 9% தவிர அனைத்தும் பயனற்ற துறைகளாக இருக்கின்றது. அந்த பயனற்ற துறைகளில் மக்கள் பணம் பலவகைகளில் திருப்பி விடப்படுவதே உலக பணக்காரர்களின் இந்த தினுசு தினுசான வளர்ச்சி!

லகப் பணக்காரர்களில் ஒருவராவதற்கு வழிகள் பல உள்ளன. அவர்களில் சிலர் கணினி விளையாட்டு இயந்திரங்களை (arcade machines) உருவாக்குகிறார்கள். சிலர் திருமண ஆடைகள் தயாரிக்கிறார்கள் இன்னும் சிலரோ சோயா சாஸ் விற்கிறார்கள், அல்லது புதுமையான செயலிகளை உருவாக்கி தங்களது செல்வத்தை பெருக்கிக் கொள்கிறார்கள். ஏனையோர் தொழில்நுட்ப நிறுவனங்களை வானளாவ வளர்த்து பெரும் செல்வம் ஈட்டுகின்றனர். பணக்காரர்களாக பல வழிகள் இருந்தாலும் பத்து இலக்கத்தை (1,00,00,00,000) அடைய சில வழிகளே உள்ளன.

போர்ப்ஸ் ‘2018 உலகப்பணக்காரர்கள் பட்டியலில் உள்ள பெரும்பாலானோர் மற்றவர்களின் பணத்தினை கையாளுவதன் மூலம்தான் பெரும் செல்வந்தர்களாகியுள்ளனர். மற்ற துறைகளை விட நிதி மற்றும் முதலீட்டுத்துறை –  தனியார் பங்கு உரிமையாளர்கள் (Private Equity Owners), கூட்டு பங்கு நிதி மேலாளர்கள் (Hedge Fund Managers) மற்றும் குறைந்த கமிசன் பங்கு வர்த்தகத் தரகர்கள் ஆகியோரைக் கொண்டு அதிகப்படியான செல்வந்தர்களை உருவாக்கியிருக்கிறது.

படிக்க :
ஏழை இந்தியர்களும் பில்லியனர் இந்தியர்களும் – ஒரு பார்வை
பிரச்சினை ஏழைகளின் வயிறா பணக்காரர்களின் வாயா ?

ஒட்டு மொத்தமாக 2,208 உலக பணக்காரர்களில் 310 பேர் (14%) இத்துறையிலிருந்து வந்திருக்கின்றனர். பிரேசில் முதல் இந்தோனேசியா வரை நிதித்துறையை சேர்ந்தவர்களே முதலிடத்தில் இருக்கின்றனர். அவர்களில் 24 நபர்கள் புதியவர்கள். குறியூட்டப்பட்ட பணத்தின் (cryptocurrency) மூலம் புதிய பணக்காரர்களான கிரிஸ் லார்சன், சாங்பெங் ஷாவோ மற்றும் அடமான கடன் நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் கனடாவைச் சேர்ந்த ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் இப்பட்டியலில் முதன் முறையாக இடம் பிடித்துள்ளனர்.

235 நபர்களுடன் (11%) ஆடையலங்கார மற்றும் சில்லறை வர்த்தகத்துறைகள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளன. உலகின் முதல் 20 பணக்காரர்களில் 6 பேர் இத்துறைகளை சேர்ந்தவர்கள்தான். ஆடையலங்கார விற்பனையாளர் ஜாரா, அழகுசாதன நிறுவனமான லோரியல் (L’Oreal), ஆடம்பர பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் LVMH மற்றும் வருமான அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நிறுவனமான வால்மார்ட் ஆகியவை முதல் 20 இடங்களில் உள்ளன. ஸ்பாங்ஸ் (Spanx) நிறுவனத்தின் வடிவமைப்பாளரான சாரா ப்ளாக்கிள், ’அண்டர் ஆர்மர்’ (Under Armour) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெவின் பிளாங், மற்றும் ஹோம் டிப்போட் பங்குதாரர்களான பெர்னார்ட் மார்கஸ், ஆர்தர் பிளாங்க் மற்றும் கென்னத் லாங்கோன் ஆகிய பெரும் பணக்காரர்களை இத்துறை தந்திருக்கிறது.

இணைய வர்த்தக ஜாம்பவானான அமேசான் நிறுவனம், சில்லறை வர்த்தகத்தில் அடி வாங்கியிருந்தாலும் 19 புதிய நபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இத்துறையில் பணம் பார்த்திருக்கின்றனர். இந்தியாவில் கட்டில் மெத்தைகள் விற்பனை செய்யும் ஷீலா கவுதம், ஜெர்மனியில் சில்லறை மின்னணு பொருட்கள் நிறுவனத்தை நடத்தும் ஹெல்கா கெல்லர்ஹால்ஸ் (Helga Kellerhals) மற்றும் கனடாவின் மிகப்பெரிய நகைக்கடையான டாலராமாவை (Dollarama) நடத்தும் லாரன்ஸ் ரோசி போன்றவர்கள் அதில் அடங்குவர்.

ஒட்டு மொத்தத்தில் ஆடையலங்காரம் மற்றும் சில்லறை வர்த்தகத்துறையின் சொத்து மதிப்பானது, இப்பட்டியலின் மொத்த சொத்தான 9.1 ட்ரில்லியன் டாலரில் (659 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) 13 விழுக்காடாக (87 இலட்சம் கோடி ரூபாய்) உள்ளது.

இப்பட்டியலில் 10 விழுக்காட்டினர் ரியல் எஸ்டேட் சாம்ராஜ்யங்களை நிறுவியதன் மூலம் உலக பணக்காரர்களாகியிருக்கின்றனர். 220 உலக பணக்காரர்களுடன் ரியல் எஸ்டேட் துறை இந்த ஆண்டு பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. ரியல் எஸ்டேட் துறையைப் பொறுத்தவரையில் சீனாவில் அதிக அளவாக 60 பணக்காரர்களும் அமெரிக்காவில் 44 பணக்காரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

படிக்க :
அமேசான் ப்ரைம் டே அன்று அமேசான் தொழிலாளர்கள் போராட்டம் !
ஆக்ஸ்ஃபாம் சர்வே : ஏழை இந்தியாவை ஒழிக்கும் பணக்கார இந்தியா !

பட்டியலில் இடம் பிடித்த அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்பின் சொத்து மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம். ஆனால் வேறொரு டொனால்டும் இருக்கிறார். அவரது சொத்து மதிப்பு அமெரிக்க அதிபரைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் முதலாளியான டொனால்ட் ப்ரென்னுடைய மொத்த சொத்து இந்திய ரூபாயில் 1 இலட்சம் கோடிக்கும் அதிகம்.

இப்பட்டியலில் 9 விழுக்காட்டினரை (207 நபர்கள்) உற்பத்தித்துறை உருவாக்கியிருக்கிறது. சென்ற ஆண்டின் எண்ணிக்கையான 171-ஐ ஒப்பிடும்போது அதிக புதிய நபர்களுடன் இந்த ஆண்டு மிகப்பெரும் பாய்ச்சல் ஏற்பட்டுள்ளது.  வியக்கத்தக்க வகையில் தொழில்நுட்பத்துறை இந்த ஆண்டு பின்னடைவை சந்தித்து 9 விழுகாட்டினருடன் ஐந்தாம் இடத்தையே பிடித்துள்ளது.

டொனால்ட் ட்ரம்ப்

ஆனால் இத்துறை மொத்த செல்வத்தில் 14 விழுக்காட்டை தன்வசமாக்கியுள்ளது. இத்துறையின் 8 தனிநபர்கள் பட்டியலின் முதல் 20 இடங்களில் உள்ளனர். உலகின் முதல் நூறு பில்லியன் டாலர் (7 இலட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம்) பணக்காரரான அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ் (Jeff Bezos) இப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். ஸ்ட்ரைப் (Stripe) எனும் பணப் பரிவர்த்தனை முனையத்தை உருவாக்கியதன் மூலம் பட்டியலில் இடம் பிடித்த 27 வயதேயான ஜான் கொலிசன் உட்பட 30 வயதிற்குட்பட்ட நான்கு பணக்காரர்களை இத்துறை உருவாக்கியுள்ளது.

பணக்காரர்களாகும் போக்கில் சில மாற்றங்கள் நடந்தாலும் பொதுவாக பணக்காரர்களே மென்மேலும் பணக்காரர்களாகிறார்கள். அரிசோனா குளிர் தேனீர்(Arizona Iced Tea) நிறுவனர் டான் வல்தாகியோ(Don Vultaggio) அல்லது கிரெய்க்லிஸ்ட்(Craigslist) நிறுவனர் கிரேக் நியூமார்க்கை எடுத்துக்கொள்ளலாம். இருவரும் சமீபத்தில் தான் மூன்று காற்புள்ளி (10,00,00,000 டாலர்) மன்றத்தில் (Three-Comma Club) இவர்கள் சேர்ந்துள்ளனர்.

இப்பட்டியலில் 33 விழுக்காட்டினருக்கு, அவர்களது முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்தின் மூலம்தான் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஃபோர்ப்ஸ் உலக பில்லியனர்கள் பட்டியல் (2018)-ல் இடம் பெற்ற முதல் 10 துறைகள்.

தொழில் துறை  

பில்லியனர்கள் எண்ணிக்கை

 

விழுக்காடு

நிதி மற்றும் முதலீட்டு நிறுவனங்கள் 310 14%
ஆடையலங்காரம் மற்றும் சில்லறை வர்த்தகம் 235 11%
ரியல் எஸ்டேட் 220 10%
உற்பத்தி 207 9%
தொழில்நுட்பம் 205 9%
பல் தொழில் 194 9%
உணவு மற்றும் பானங்கள் 165 7%
உடல்நலம் 134 6%
சக்தி 94 4%
ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு 73 3%

 

நன்றி : போர்ப்ஸ்
சுருக்கப்பட்ட தமிழாக்கம்:

விலங்குத் தன்மை மனிதனுக்குரியதாகிறது மனிதத் தன்மை விலங்காகிறது !

மார்க்ஸ் பிறந்தார் – 19
(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)

8. முழுமையான மனிதாபிமானமே கம்யூனிசம் – 2

மார்க்ஸ் புரட்சிகரப் பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு உறுதியான ஆதரவளிக்கும் நிலைக்கு மாறியதன் விளைவாக அவர் முதலாளிவர்க்க ஜனநாயகவாதிகளுடன், முதலாவதாகவும் முதன்மையாகவும் அர்னோல்டு ரூகேயுடன் முறித்துக் கொள்ள நேரிட்டது.

ரூகே எவ்வளவுதான் தீவிரவாதத்தைப் பேசினாலும் அவர் சுதந்திரத்தைப் பற்றிக் கனவு காண்கின்ற, ஆனால் அதற்குச் சிறிது கூட தியாகம் செய்ய விரும்பாத அற்பவாதியாகவே இருந்தார். Deutsch-Französische Jahrbücher இன் விற்பனையின் மூலம் கணிசமான வருமானம் கிடைக்குமென்று அவர் எதிர்பார்த்தார். இந்த நம்பிக்கைகள் தகர்ந்த பொழுது அவர் மனச்சோர்வுக்கு ஆளானார். கடைக்காரனைப் போல எல்லாவற்றின் மீதும் சந்தேகங் கொண்டார். வெளியீட்டுத் துறையில் மார்க்சின் ஒவ்வொரு முன்முயற்சியும் தன்னுடைய பணத்தைத் திருடுவதற்குச் செய்யப்படும் முயற்சி என்று ஓயாமல் சந்தேகப்பட்டார்.

அர்னோல்டு ரூகே

மார்க்ஸ் “பண விவகாரங்களில் மிகவும் அலட்சியமாக இருப்பார்” (மேரிங்); எனவே ரூகே அதைப் பயன்படுத்திக் கொள்வதற்குத் தயங்கவில்லை. மார்க்ஸ் மிகவும் வறுமையான நிலையில் இருந்தார்; அவர் குடும்பம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்தது (1844 மே மாதத்தில் அவருக்குப் பெண்குழந்தை பிறந்திருந்தது); ஆனால் ரூகே அந்த Jahrbucher இன் பிரதிகளை மட்டுமே அவருக்கு ஊதியமாகக் கொடுத்தார்.

எனினும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மார்க்சின் கம்யூனிசத்தின் விளைவாக ரூகேயிடம் அற்பவாதியின் பீதி தோன்றியது.

Jahrbücher -இன் ஆசிரியப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட மார்க்ஸ் தன்னுடைய விஞ்ஞான ஆராய்ச்சிகளில் அதிகமான தீவிரத்துடன் ஈடுபட்டார். முக்கியமான விஷயம் நிறைவேற்றப்பட்டு விட்டதாகத் தோன்றியது-புதிய உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படைகள் விரித்துரைக்கப்பட்டிருந்தன. ஆனால் மார்க்சுக்கு இது ஆரம்பம் மட்டுமே. அவர் மனிதகுலத்தின் மொத்தக் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மறுவிளக்கம் செய்கின்ற புதிய நோக்கைத் தேடிக் கொண்டிருந்தார்.

படிக்க :
♦ மார்க்சியத்தின் வரலாற்று வளர்ச்சி – நூல் அறிமுகம்

அவர் ஏராளமாகப் படித்தார்; புதிய திட்டங்கள் ஒவ்வொன்றாக அவருடைய மூளையில் உதித்தன. முதலில் சட்டம் பற்றிய ஹெகலியத் தத்துவஞானத்தைப் பற்றித் தன்னுடைய பூர்த்தியடையாத கையெழுத்துப் பிரதிக்குத் திரும்புவதற்கு அவர் விரும்பினார்; அதைக் கம்யூனிஸ்ட் நோக்கிலிருந்து இப்பொழுது திருத்தி எழுதுவதற்கு விரும்பினார். பிறகு அவர் பிரெஞ்சுப் புரட்சியின் வரலாற்றில் மூழ்கிவிட்டார்; கன்வென்ட்டின் வரலாற்றை எழுத வேண்டுமென்று மிகவும் விரும்பினார். கடைசியில் அவர் கற்பனாவாத சோஷலிஸ்டுகள் மற்றும் அரசியல் பொருளியலாளர்களைப் பற்றிய விமர்சனத்துக்குத் திரும்பினார்.

அவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும். தான் செய்த வேலையைப் பற்றி அவர் ஒருபோதும் திருப்தி அடைந்ததில்லை; அவர் எவ்வளவு அதிகமாகக் கற்றாரோ, அவ்வளவுக்கு அறிவுக் கடல் எல்லையற்றதாகத் தோன்றியது. அவர் எத்தனை பிரச்சினைகளைத் தன்னுடைய அறிவில் தீர்த்தாரோ, அந்த அளவுக்கு அதிகமான பிரச்சினைகள் அவருக்கு முன்னால் தோன்றின.

கையெழுத்துப் பிரதிகள் பூர்த்தியாகாமல் நின்றுவிட்டன, அவருடைய சிந்தனை புதிய கருத்துக்களைப் பிரசவித்துக் கொண்டு மேலும் முன்னோக்கிச் சென்றது. ஒரு பிரச்சினையின் நுட்பமான அம்சங்கள் அனைத்தையும் முழுமையாக ஆராய்ச்சி செய்வதற்கு முன்னால் தான் எழுதிய எதையுமே வெளியிடாதபடி சுய-விமர்சனம் என்ற பிசாசு மார்க்சைத் தடுத்தது.

“அவருடைய சிந்தனை மிகக் கூர்மையாக இயங்கியபடியால் அப்பொழுது எழுதப்பட்டதை அது உடனடியாக விஞ்சிவிடும்.”

மார்க்சின் ஆராய்ச்சிகளில் இந்தக் காலகட்டத்தை அர்னோல்டு ரூகே பின்வருமாறு வர்ணிக்கிறார்: “அவர் ஏராளமாகப் படிக்கிறார், அசாதாரணமான தீவிரத்துடன் பாடுபடுகிறார், அவரிடம் விமர்சனத் திறமை இருக்கிறது, ஆனால் அது சமயங்களில் வேண்டுமென்றே சீர்குலைந்த இயக்கவியலாக மாறிவிடுகிறது; அவர் எதையும் முடிப்பதில்லை, ஒன்றை விட்டு இன்னொன்றுக்குத் தாவிவிடுகிறார், மறுபடியும் முடிவில்லாத புத்தகக் கடலில் மூழ்கிப் போய்விடுகிறார்.”(1)

இப்படி அசாதாரணமான தீவிரத்தைக் கொண்ட விஞ்ஞான ஆராய்ச்சியும் தன்னுடைய சாதனையைப் பற்றித் தொடர்ச்சியான அதிருப்தியும் மார்க்சிடம் மனச் சோர்வை ஏற்படுத்தின. ஆனால் அதைப் பற்றி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இன்னும் அதிகமாகப் பாடுபடுவது, தொடர்ச்சியாகச் சில இரவுகளில் தூக்கமில்லாமற் படிப்பது என்ற ஒரு தீர்வு மட்டுமே அவருக்குத் தெரியும். “மார்க்ஸ், குறிப்பாக தன் உடல்நிலை சீர்குலைகின்ற வரை அவர் பாடுபடும் பொழுது, மூன்று அல்லது நான்கு இரவுகள் சேர்ந்தாற்போலத் தூங்காதிருக்கின்ற பொழுது அதிகமான எரிச்சலும் கோபமும் உள்ளவராக இருக்கிறார்”(2) என்று ரூகே எழுதினார்.

இந்த ஆராய்ச்சிகளின் முக்கியமான விளைவு ஒரு பெரிய பூர்த்தியடையாத நூலாகும். அது 1844ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

இப்புத்தகத்தில் மார்க்சியம் தோன்றிய “பிரசவ வேதனையின்” சுவடுகள் இன்னும் காணப்படுகின்றன. ஹெகல் மற்றும் ஃபாயர் பாஹிடமிருந்து அவர் கடன் வாங்கிய சொற்பிரயோகத்தில் இதைக் குறிப்பாகக் காண முடியும். ஆனால் பழைய தத்துவஞானக் கருத்தமைப்புகளின் மக்கிப்போன ஓட்டிலிருந்து சமூகத்தைப் பற்றி அடிப்படையான புதிய கருத்தின் முளைகள், உலகம் இதுவரை அறிந்திராத புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு அணுகுமுறையின் முளைகள் வெடித்துக் கிளம்பின.

படிக்க :
சிறப்புக்கட்டுரை : மூலதனத்தின் வரலாறும் வரலாற்றில் மூலதனமும்

இதில் முதல் தடவையாக சமூகத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்குப் பொருளாதார, தத்துவஞான மற்றும் சமூக-அரசியல் அணுகுமுறைகள் பரந்த அளவில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. இங்கே மனிதன் மொத்த ஆராய்ச்சியின் மையமாக இருக்கிறான்; இயற்கை, சமூகம் ஆகிய இரண்டுடனும் அவனுடைய சிக்கலான உறவுகளின் மொத்தப் பல்தொகுதியுடன் தோன்றுகிறான். உண்மையான, முரணில்லாத மனிதாபிமானம் என்ற நோக்கில் முதலாளித்துவச் சமூகத்திலுள்ள மனிதத் தன்மைக்குப் புறம்பான நிலைமைகளை ஆசிரியர் தத்ரூபமாக எழுதியிருக்கிறார். இதில் அரசியல் போராட்டக்காரருடைய ஆத்திரமும் வெறியும் மாபெரும் சிந்தனையாளருடைய முதிர்ந்த ஆராய்ச்சியுடன் இணைந்திருக்கின்றன.

இதில் ஸ்தூலமான யதார்த்தத்தைப் பற்றி மெய்யான அணுகுமுறை சமூக வளர்ச்சியின் தொலைவிலுள்ள காட்சிகளைப் பற்றிய பார்வையுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. இப்புத்தகம் மிகவும் ஆழமான பிரச்சினைகளை எழுப்புகிறது;அவற்றின் முக்கியத்துவம் பல நூற்றாண்டுகள் வரை நீடிக்கும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகள் என்ற நூலின் மீது எல்லா நாடுகளையும் சேர்ந்த தத்துவஞானிகள், பொருளியலாளர்கள், சமூகவியலாளர்கள் இப்பொழுது குறையாத அக்கறை காட்டுவது ஏன் என்பதை இது விளக்குகிறது.

1844 பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடு

கையேடுகளைப் பற்றி அதிக விவரமான வர்ணனை அல்லது மிகவும் புறநிலையான பொருள் விளக்கம் கூட அவற்றின் சிறப்புமிக்க கருத்து வளத்தை எடுத்துக்காட்டாது. ஒரு தலைப்பட்சமான கருத்துக்கள், வறட்டுக் கோட்பாட்டுத் திட்டங்களின் குறுகிய தன்மை ஆகிய தடைகளை நொறுக்கித் தள்ளுகின்ற, இயற்கையைப் பற்றிய விளக்கத்தில் மட்டுமல்லாமல் சமூக வளர்ச்சியைப் பற்றிய விளக்கத்திலும் கருத்துமுதல்வாதத்தின் கடைசி விலங்குகளை அகற்றுகின்ற தத்துவச் சிந்தனையின் துணிவுடைமையை, விரிந்த பரப்பை, கலையழகை முழுமையாக அனுபவிப்பதற்கு இப்புத்தகத்தை ஒருவர் படித்தால் (பல முறைகள்!) மட்டுமே முடியும்.

மனிதகுலத்தின் மொத்த வரலாற்றுக்கும் விளக்கத்தைப் பொருளாயத உறவுகளில் தேட வேண்டும்- இம்முடிவுக்கு மார்க்ஸ் ஏற்கெனவே வந்து விட்டார் – என்ற கருத்திலிருந்து மார்க்ஸ் இப்புத்தகத்தைத் தொடங்குகிறார். அதை அவர் பின்வருமாறு வகுத்தளிக்கிறார்: “… தனிச் சொத்துடைமையின் இயக்கத்தில் இன்னும் துல்லியமாகக் கூறுவதென்றால் பொருளாதாரத்தில், மொத்தப் புரட்சிகர இயக்கமும் தன்னுடைய அனுபவ ரீதியான மற்றும் தத்துவஞான அடிப்படையைக் காண்கிறது.”(3)

மனிதனின் உற்பத்தி வாழ்க்கை, அவனுடைய உழைப்பு – இதுதான் சமூக முன்னேற்றத்தின் முக்கியமான விசை. மனிதனுடைய உழைப்பு வெவ்வேறு சமூக நிலைமைகளில் வெவ்வேறு வடிவங்களை அடைகிறது. கடைசியில் “மொத்தமாக மக்கள் தொகையினரிடம் இரண்டு வர்க்கங்கள் – தொழிலாளி வர்க்கம், முதலாளி வர்க்கம் – மட்டுமே எஞ்சுகின்றன.(4)

ஃபாயர்பாஹின் சூக்குமமான மனிதனுடைய இடத்தில் மார்க்ஸ் பாட்டாளியை வைக்கிறார். ஃபாயர்பாஹின் ஒரு மனிதன் மற்றொரு மனிதனிடம் கொண்டிருக்கின்ற உறவுகளின் இடத்தில் மார்க்ஸ் தொழிலாளிக்கும் முதலாளிக்கும் வாழ்கின்ற உழைப்புக்கும் திரட்டப்பட்ட உழைப்புக்கும் (மூலதனம்) உள்ள உறவுகளை வைக்கிறார்.

எல்லாமே விற்பனை செய்யப்படுகின்ற, வாங்கப்படுகின்ற உலகத்தில், பணம் தலைமையான, தனிமுதலான சக்தியைக் கொண்டிருக்கின்ற உலகத்தில் தொழிலாளி ஒரு பண்டமாகத்தான் இருக்கிறான். அவனிடம் மூலதனமோ அல்லது வரமோ கிடையாது. அவன் உழைக்கின்ற சக்தியை மட்டுமே வைத்திருக்கிறான்; உழைப்பு சமூகத்தின் அனைத்துச் செல்வத்தையும் உற்பத்தி செய்கிறது.

முதலாளித்துவச் சமூகத்தின் இந்த உண்மையையே மார்க்ஸ் தன்னுடைய ஆராய்ச்சியின் தொடக்க நிலையாக வைக்கிறார்.

தொழிலாளி பொருளாயதச் செல்வத்தைப் படைக்கிறான்; ஆனால் அது அவனுக்குச் சொந்தமாக இருக்கவில்லை. மேலும் இச்செல்வம் தொழிலாளியிடமிருந்து அந்நியமாக்கப்படுவது மட்டுமின்றி மூலதனம் என்ற முறையில் தொழிலாளியை ஆட்சி புரிகின்ற அந்நியச் சக்தியாக தொழிலாளிக்கு எதிரிடையாக வைக்கப்படுகிறது. மார்க்ஸ் இந்த உண்மையை உழைப்பு அந்நியமாக்கப்படுதல் என்கிறார்.

தொழிலாளியின் உழைப்பு அதிகரிக்கின்ற பொழுது அவனால் படைக்கப்படுகின்ற செல்வங்களின் உலகமும் அதிகரிக்கிறது; ஆனால் தொழிலாளியின் மீது இந்தச் செல்வத்தின் ஆட்சியும் அதிகரிக்கிறது. முதலாளி முன்னிலும் அதிகமான சக்தியைப் பெறுகிறான், தொழிலாளி முன்னைக் காட்டிலும் ஏழையாகிறான்; அவனுடைய உரிமைகள் முன்னிலும் அதிகமாகப் பறிக்கப்படுகின்றன.

படிக்க :
மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

தொழிலாளி தன்னால் படைக்கப்பட்ட உழைப்புப் பொருளின் அடிமையாகிறான். அவனுடைய உழைப்பின் திரட்டு மூலதனத்தின், பணவியல் செல்வத்தின் வடிவத்தை அடைகிறது. அது தொழிலாளியை வேலைக்கு வைத்துக் கொள்கிறது, அவன் ஜீவிக்கின்ற சாதனத்தைத் தருகிறது, அவனுடைய வாழ்கின்ற உழைப்பையும் அவன் வாழ்க்கையையுமே பயன்படுத்துகிறது.

தொழிலாளியின் உழைப்பு அற்புதமான பொருள்களைப் படைக்கிறது; ஆனால் அது தொழிலாளியின் வறுமையையும் உற்பத்தி செய்கிறது. அது அரண்மனைகளைப் படைக்கிறது, ஆனால் தொழிலாளிகளுக்குச் சேரிகளை உற்பத்தி செய்கிறது. அது அழகைப் படைக்கிறது; ஆனால் தொழிலாளியை அவலட்சணமாக்குகிறது. அது மனிதர்களின் உழைப்புக்குப் பதிலாக இயந்திரங்களைக் கொண்டு வருகிறது; ஆனால் தொழிலாளர்களையே இயந்திரங்களாக மாற்றி விடுகிறது. அவன் செய்கின்ற உழைப்பு எவ்வளவு நுட்பமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு அவன் மூளை அழிகிறது.

இந்தத் தலைகீழான உலகத்தில் பொருள்கள் அவற்றைப் படைத்தவனை ஆட்சி செய்கின்றன; அங்கே மக்களுக்கு இடையிலான உறவுகள் பொருள்களுக்கு இடையிலான உறவுகளின் வடிவத்தில் தோன்றுகின்றன. இந்த உலகத்தை மார்க்ஸ் மூலதனத்திலும் அதற்குப் பூர்வாங்கமாக எழுதிய சில நூல்களிலும் பிற்காலத்தில் விரிவாக ஆராய்ந்தார். பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளில் தோன்றிய பிம்பம் இவற்றில் இன்னும் அதிகத் தத்ரூபமான, கொடுமைமிக்க உருவரைகளைப் பெறுகிறது.

நாம் கையேடுகளுக்குத் திரும்பி மார்க்சினுடைய வாதத்தைப் பின்தொடர்வோம். தொழிலாளியின் உழைப்பின் பலன்களை அவனிட மிருந்து அந்நியப்படுத்துவது இந்தப் பிரச்சினையின் ஒரே ஒரு அம்சம் மட்டுமே. மற்றொரு அம்சமும் இதே அளவுக்கு முக்கியமானதே. தொழிலாளியின் நடவடிக்கையின் ஜீவனோபாய நிகழ்வுப் போக்கே அந்நியப்படுத்தப்பட்ட தன்மையைக் கொண்டிருக்கிறது; அது அவனுடைய மனித சாராம்சத்தின் சுய அந்நியமாதலாகும்.

இதன் பொருள் என்ன? தொழிலாளி தன்னுடைய சுதந்திரமான விருப்பத்தின் பேரில் உழைக்கவில்லை, அவனுடைய உழைப்பு சுய நடவடிக்கை அல்ல; அது பலவந்தப்படுகின்ற, கட்டாய உழைப்பு; அந்த நிகழ்வுப் போக்கின் போது தொழிலாளி முதலாளியின் உடைமையாக இருக்கிறான்.

இந்தப் பலவந்தமான உழைப்பில் தொழிலாளி தன்னுடைய உடல் மற்றும் மனோ சக்தியைச் சுதந்திரமாக வளர்க்கவில்லை; அவன் உடல் ஓடாகத் தேய்கிறது, அவன் தன் உடலைக் கெடுத்து அறிவை அழித்துக் கொள்கிறான். உழைப்பின் மூலமாக அவன் ஒரு உண்மையான மனிதத் தேவையை, படைக்க வேண்டும் என்ற தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதுதான் தர்க்கம். ஆனல் அவனுக்கு உழைப்பு மிகவும் சாதாரணமான அவசியங்களைப் பூர்த்தி செய்வதற்குச் சாதனமாக இருக்கிறது. மக்கள் உழைப்பை ஒரு சாபக்கேடாகக் கருதுவதிலும் அருவருப்புடன் அதைச் செய்வதிலும் பிளேக் நோயைக் கண்டு ஓடுவதைப் போல அதிலிருந்து தப்பியோடுவதிலும் உழைப்பு அந்நியமாகியிருக்கின்ற தன்மையை மிகவும் தெளிவாகக் காணலாம்.

உழைப்பு மிகவும் மனிதத் தன்மை கொண்ட தேவையாகும். ஆனால் அந்த உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளி தன்னை ஒரு மனித ஜீவனாக உணர்வதில்லை. இங்கே அவன் பலவந்தம் செய்யப்பட்ட பிராணியாக, உயிருள்ள இயந்திரமாக மட்டுமே இயங்குகிறான். இதற்கு மாறான முறையில் உழைப்புக்கு வெளியே தான், அவனுடைய சாதாரணமான, அடிப்படையில் மிருகச் செயல்களை நிறைவேற்றுகின்ற பொழுது-உணவருந்துதல், மதுவருந்துதல், உடலின்ப நடவடிக்கை, உறக்கம், இதரவை-தொழிலாளி தன்னைச் சுதந்திரமாக இயங்குகின்ற மனிதப் பிறவியாக உணர்கிறான். “எது மிருகத் தன்மையோ அது மனிதனுக்கு உரியதாகிறது எது மனிதத் தன்மை உடையதோ அது மிருகமாக ஆகிறது.”(5)

இப்படி உழைப்பின் நிகழ்வுப் போக்கில் தொழிலாளியின் சுய அந்நியமாதல் நடைபெறுகிறது. இதன் நேரடியான விளைவே மனிதன் மனிதனிடமிருந்து அந்நியமாதல், தொழிலாளி மற்றும் முதலாளியின் எதிரிடையான நிலைகள்.

அந்நியமாதல் மற்றும் உழைப்பு சுய அந்நியமாதல் பிரச்சினை குறித்து மார்க்சின் பகுப்பாய்வு பொருளாதார யதார்த்தத்தைப் பற்றிக் கடுமையான விமர்சனம் என்று எதிர்மறையான அம்சத்தில் மட்டுமே வழக்கமாகப் பாராட்டப்படுகிறது. ஆனால் இந்த விமர்சனத்தில், இருக்கின்ற நிலைமையைப் பற்றி மார்க்சினுடைய மதிப்பீட்டை, உண்மையான மனித உழைப்பும் மனித உறவுகளும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி, அதாவது கம்யூனிஸ்ட் சமூகத்தைப் பற்றி அவருடைய கருத்துக்குப் பின்னால் உள்ள ஆக்க முறையான கொள்கை களை ஒருவர் தெளிவாகக் காண முடியும்.

உழைப்பு தனிமனிதனுடைய சுய அந்நியமாதலாக இல்லாமல், சுய உறுதிப்படுத்தலாக இருக்க வேண்டும். அது வாழ்க்கை நடத்துகின்ற சாதனமாக இல்லாமல், வாழ்க்கையின் சாராம்சமாக, மனிதன் தன்னுடைய திறமைகளை முழுமையாகவும் அகல்விரிவாகவும் வளர்த்துக் கொள்ளக் கூடிய நிகழ்வுப் போக்காக இருக்க வேண்டும். வெளியிலிருந்து வருகின்ற நிர்ப்பந்தம் உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்கக் கூடாது. படைக்க வேண்டும் என்ற ஆழமான உள்முனைப்பு உழைப்புக்குத் தூண்டுதலாக இருக்க வேண்டும்.

1844-ம் வருடத்தின் பொருளாதார மற்றும் தத்துவஞானக் கையேடுகளே மிகவும் ஒட்டியிருக்கின்ற பொருளியலாளர்களிடமிருந்து பெறப்பட்ட குறிப்பேடுகளில் அந்நியப்படுத்தப்பட்ட மனிதனின் உலகம் மனிதனுடைய உண்மையான சமூக சாரம்சத்தின், அவனுடைய “உண்மையான இனப்பொது வாழ்க்கையின்”(6) கேலிச்சித்திரம் என்று மார்க்ஸ் வர்ணிக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கின்ற உலகத்தில், அதாவது ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தில் இந்த உண்மையான வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இளம் மார்க்ஸ் குறிப்பேடுகளின் பின்வரும் பகுதியில் சித்திரிக்கிறார்:

“மக்கள் என்ற முறையில் நாம் உற்பத்தி செய்திருக்கிறோம் என்று வைத்துக்கொள்வோம்: ஒவ்வொருவரும் தன்னுடைய உற்பத்தி நிகழ்வுப் போக்கில் தன்னையும் பிறிதொருவரையும் இரட்டிப்பாக உறுதிப்படுத்தியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் நான்

1) …..அந்த நடவடிக்கையின் போது தனிப்பட்ட வாழ்க்கை வெளிப்பாட்டையும் உற்பத்திப் பொருளைப் பார்க்கும் பொழுது தனிப்பட்ட மகிழ்ச்சியையும் அடைந்திருக்கிறேன்.

2) என்னுடைய உற்பத்திப் பொருளை நீங்கள் உபயோகிக்கின்ற அல்லது ரசிக்கின்ற பொழுது மற்றொரு மனித உயிருக்கு அவசியமான ஒரு பொருளைப் படைத்திருக்கிறேன் என்ற சாதனையைப் பற்றி நேரடியான மகிழ்ச்சியை நானும் அடைகிறேன்;

3) உங்களுக்கும் மனித இனத்துக்கும் இடையில் நான் இடையீட்டாளராக இருந்திருக்கிறேன், உங்களுடைய இருத்தலின் தொடர்ச்சியாக, உங்களின் அவசியமான பகுதியாக நீங்கள் என்னை அறிந்திருக்கிறீர்கள், அப்படியே உணர்வீர்கள்…

4) என்னுடைய வாழ்க்கையின் தனிப்பட்ட வெளிப்பாட்டில் உங்களுடைய வாழ்க்கை வெளிப்பாட்டை நான் நேரடியாகப் படைத்திருக்கிறேன், ஆகவே என்னுடைய தனிப்பட்ட நடவடிக்கையில் எனது உண்மையான இருத்தலை, என்னுடைய மனித, என்னுடைய சமூக சாராம்சத்தை நான் நேரடியாக உறுதிப்படுத்தியிருக்கிறேன், கைவரப் பெற்றிருக்கிறேன்.

“என்னுடைய உழைப்பு வாழ்க்கையின் சுதந்திரமான வெளிப்பாடாக, ஆகவே வாழ்க்கையை அனுபவித்து மகிழ்வதாக இருக்கும். தனிச் சொத்துடைமைக்கு நடுவில் அது வாழ்க்கையை அந்நியப்படுத்தலே, ஏனென்றால் நான் வாழ்வதற்காக, வாழ்க்கைச் சாதனத்தைப் பெறுவதற்காக உழைக்கிறேன். என்னுடைய உழைப்பு வாழ்க்கை அல்ல.”(7)

குறிப்புகள்:

(1) Auguste Cornu, Karl Marx und Friedrich Engels. Leben und Werk, Bd. 2, S. 19.
(2) Ibid.
(3) Marx, Engels, Collected Works, Vol. 3, p. 297.
(4) Ibid., p. 266.
(5) Ibid., p. 275.
(6) Marx/Engels, Gesamtausgabe, Erste Abteilung, Bd. 3, S. 536.
(7) Ibid., S. 546-47. 284.

– தொடரும்

நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று,
(கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையின் புதிய முகவரி கீழே)
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம், 
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, 
நெற்குன்றம், சென்னை – 600 107.
(வெங்காய மண்டி பேருந்து நிறுத்தம் அருகில்)
பேச – (தற்காலிகமாக) : 99623 90277

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

முந்தைய பாகங்கள்:

  1. மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !
  2. அற்பவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் பிறந்தார் புரட்சியாளர் மார்க்ஸ்
  3. ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?
  4. பள்ளியில் சுமாரான மாணவராக இருந்தார் கார்ல் மார்க்ஸ் – ஏன் ?
  5. எல்லாவற்றையும் சந்தேகப்படு என்பது மார்க்சுக்குப் பிடித்தமான மூதுரை
  6. சுயவிமர்சனத்தில் இரக்கமற்றவர் கார்ல் மார்க்ஸ்
  7. மார்க்சும் ஏங்கெல்சும் முதலில் எழுதியவை கவிதை நூல்கள் – ஏன் ?
  8. கடவுள் மீது போர் தொடுத்த கார்ல் மார்க்ஸ் !
  9. மதத்தின் மூல வேர்கள் பூமியில் இருக்கின்றன – கார்ல் மார்க்ஸ்
  10. பண்படுத்துவது கலை – பாதை காட்டுவது தத்துவஞானம்
  11. தத்துவஞானத்தை புரிந்து கொள்ள பக்தர்களால் முடியாது !
  12. ஒரு மெய்யான தத்துவஞானியை சந்திக்கத் தயாரா ?
  13. கார்ல் மார்க்ஸ் : ஆய்வின் முடிவுக்கும் அஞ்சாதே ! ஆள்வோரின் ஆட்சிக்கும் அஞ்சாதே !
  14. கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !
  15. சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவுமில்லை – மார்க்ஸ்
  16. எல்லாத் தத்துவஞானத்துக்கும் அப்பால் சுதந்திரமாக இருக்கிறது இயற்கை !
  17. துன்பம் பற்றிய உங்கள் கருத்து என்ன ? கீழ்ப்படிதல் என்கிறார் கார்ல் மார்க்ஸ் !
  18. கார்ல் மார்க்ஸை மார்க்சியவாதியாக்கிய நகரம் பாரீஸ்

வேதவேள்விகளும் பல மனைவிகளும் – புறநானூறு | பொ.வேல்சாமி

0

நண்பர்களே….

எழுத்தாளர்
பொ. வேல்சாமி
புறநானூறு 166 ம் பாடல், வேள்வி செய்யக்கூடிய பார்ப்பனருக்குரிய தவிர்க்க முடியாத தகுதிகளில் ஒன்றாக பல மனைவிமார்களுடன் வாழ வேண்டும் என்று கூறுகிறது. இந்நூலின் பதிப்பாசிரியரான .வே.சாமிநாத அய்யர் எழுதியுள்ள ஆய்வுக்குறிப்பில் வேள்வியைச் செய்ய கூடிய பார்ப்பனர் குறைந்தபட்சம் மூன்று பெண்களையாவது திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றார். தமிழக வரலாற்றில் மிகப் பழங்காலத்திலிருந்து இன்றுவரை எல்லா வகையான சாதியினரும் இந்தக் கொள்கையை தவறாது பின்பற்றி வந்துள்ளனர். இக்கொள்கைக்கு மட்டும் எவரும் சாதிவேறுபாட்டைக் கணக்கில் கொள்வதில்லை. 18,19 ம் நூற்றாண்டுகளில் அரசர்கள் 200, 300 மனைவிகளை வைத்திருந்த அரிய பதிவுகளுடன் அரசர்களுக்கு கீழிருந்த அதிகாரிகள் தகுதிக்கேற்ற மனைவிகளை கொண்டிருந்த தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன. தமிழர்களின் நீண்ட நெடிய பண்பாட்டு வரலாற்றில் இந்த விசயத்தை மட்டும் என்றுமே இவர்கள் கைவிடவில்லை என்பதை தொல்காப்பியம் தொடங்கி இன்றைய அரசியல்வாதிகள் வரை இந்த தமிழ் மரபை நடைமுறைபடுத்தி வருவதை நாம் கண்குளிர காண்கிறோம்.

குறிப்பு:
1840 – 50 களில் ஆங்கிலேயர்கள் தஞ்சை மாவட்டத்தின் நிர்வாகத்தை நேரடியாக எடுத்துக் கொண்டனர். அதனால் அரசர்களின் நூற்றுக்கணக்கான மனைவிமார்களுக்கு உதவி பணம் வழங்குவதற்கு ஒரு தனி தாசில்தாரை நியமித்தனர். இந்தக் காலகட்டத்தில் பணியில் இருந்த தாசில்தாரின் பெயர் நடராஜபிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

பொ.வேல்சாமி: தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவர். தமிழக வரலாற்று ஆய்வில் ஈடுபாடு கொண்டவர். வரலாற்றுத் தரவுகளை மறுவாசிப்பு செய்வதும் மாற்று வரலாற்றை உருவாக்குவதும் இவரது எழுத்தின் முக்கிய நோக்கம். முகநூலில் தொடர்ச்சியாக எழுதுகிறார்.
எழுதிய நூல்கள்:

  • பொற்காலங்களும் இருண்ட காலங்களும்
  • கோவில் நிலம் சாதி
  • பொய்யும் வழுவும்

ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்

ஆள் அரவமற்ற பகுதிக்குள் தனித் தனித் தீவுகளாய் எழும்பி நிற்கும் ஆலை வளாகங்களுக்கிடையே… சாலையோரம் அமர்ந்து கொண்டு தொண்டை தண்ணீர் வற்ற முழக்கமிட்டுக் கொண்டிருந்தார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

”மெஷின் மாதிரி ஒன்னுக்குக்கூட போகாம வேலை செய்யனும். சம்பளம்னு நீயா பார்த்து போடுறத வாய மூடிட்டு வாங்கிட்டு போகனும். டிப்ளமோ படிச்சவன ஹவுஸ்கீப்பிங் வேலை பண்ணச் சொல்றதையும் சகிச்சி செய்யனும். சம்பளம் உயர்த்திக்கொடு, போனஸ் கொடு, சட்டப்படியான உரிமைகளை கொடுன்னு சங்கமா சேர்ந்து கேட்டா பழிவாங்குவியா? நாங்கள்லாம் என்ன உன்னோட அடிமைகளா?” கோபம் கொப்பளிக்க கேள்வியெழுப்புகிறார்கள் அந்தத் தொழிலாளர்கள்.

சங்கம் தொடங்கியதற்காக இரண்டு தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக பத்து நாட்களுக்கும் மேலாக உறுதியோடு போராட்டத்தைத் தொடரும், இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிலாளர்கள் இவர்கள்.

ஜப்பானை தலைமையிடமாகக் கொண்ட யமஹா மோட்டார் கம்பெனியின் துணை நிறுவனம்தான் இந்தியா யமஹா மோட்டார்ஸ். உலகெங்கும் பல கிளைகளை பரப்பியிருக்கும் இந்நிறுவனம், இந்தியாவில் உ.பி.யில் சூரஜ்பூர், ஹரியானவில் பாரிதாபாத் மற்றும் தமிழகத்தில் காஞ்சிபுரம் என மூன்று இடங்களில் பிரதான உற்பத்தி ஆலையை நிறுவியிருக்கிறது.

காஞ்சிபுரம், ஒரகடம் சிப்காட் பகுதியில் 150 கோடி முதலீட்டில் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆலையில் யமஹா நிறுவனத்தின் 6 பைக் மாடல்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த நிறுவனத்திற்கு உதிரிபாகங்களை தயாரித்து வழங்கும் பத்துக்கும் மேற்பட்ட சப்ளையர்ஸ் நிறுவனங்களும் இதே பகுதியில் அமைந்துள்ளன. இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்கள்.

தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கப் போவதாகக்கூறி, அரசின் பல்வேறு சலுகைகளைப் பெற்று தொடங்கப்பட்ட இந்த ஆலையில் பணியாற்றும் 4,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுள் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெறும் 807. எஞ்சியுள்ளவர்கள் ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்கள்.

வேலையைக் கற்றுக்கொண்டு திறம்பட செய்வதை பொறுத்து, இரண்டு ஆண்டுகளில் பணிநிரந்தரம் செய்து விடுவோம் என்று வாக்குறுதியளித்துதான் தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்திருக்கிறது, யமஹா. மூன்றரை ஆண்டுகள் ஓடிவிட்டது. வாக்குறுதியளித்தபடி பணிநிரந்தரம் செய்யவில்லை. சம்பளமும் உயர்த்திக் கொடுக்கவில்லை. ஆண்டுக்கு ரூ700 சம்பளம் உயர்த்தப்படுவதே பெரிய விசயம் என்கிறார்கள் தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளியின் சம்பளம் குறைந்தபட்சம் 12,500; அதிகபட்சம் 18,000. ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களின் சம்பளமோ 8,000 – லிருந்து 10,000க்குள்தான்.

நிறுவனத்தோடு முரண்பட்டுக் கொள்ளாமல், பணிநிரந்தரமாகும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு ஓட்டிவிடலாம் என்றுதான், நினைத்திருக்கிறார்கள். அவ்வாறும் மூன்றரை ஆண்டுகாலம் சகித்தும் பார்த்து விட்டார்கள். ஆலை தொடங்கப்பட்டபோது முதல் நூறு தொழிலாளர்களுள் ஒருவராக வேலையில் சேர்ந்தவருக்கே இன்னும் பணி நிரந்தரமாகவில்லை.

பணிநிரந்தரம் குறித்த கேட்டதற்கு, ”எனக்கு முன்னாடி இருந்தவங்க என்ன சொல்லி வேலைக்கு சேர்த்தாங்கன்னுலாம் எனக்குத் தெரியாது. கம்பெனி விதிப்படி 15 வருசம். உனக்காக வேணுன்னா ஆஃபர் தாரேன். 12 வருசத்துக்குள்ள உன்னோட பெர்ஃபாமென்ஸ் பார்த்து கன்பார்ம் பன்றேன்” என்று திமிராக பதிலளித்திருக்கிறது, யமஹா நிர்வாகம்.

இதற்கேற்ப தொழிலாளர்களை லெவல்-1, லெவல்-2 என்று வகைப்படுத்தியிருப்பதோடு மட்டுமின்றி, ஒவ்வொரு லெவலிலும் கேஸ்-1, கேஸ்-2 என்று உட்பிரிவுகளை உருவாக்கி அடுத்த லெவலுக்கு உயர்ந்து செல்லும் காலத்தின் அளவை தந்திரமாகக் கூட்டியிருக்கிறது. ”எனக்கு இப்பவே 30 வயசாகுது, இன்னும் 12 வருசம் கழிச்சி 42 வயசுல கன்பார்ம் ஆகி என் லைஃப்ல எப்போ செட்டிலாகிறது?” என்று கேள்வியெழுப்புகிறார், ஒரு தொழிலாளி.

”பால் விலையும் பெட்ரோல் விலையும் இன்ன தேதியில இன்ன விலை ஏத்தப் போறோம்னு சொல்லிட்டா ஏத்துறாங்க? ஆனா, எங்களுக்கு, அடுத்த வருசம் ஜனவரி மாசம் என்ன சம்பளம்னு இப்பவே சொல்லிட்டாங்க. இப்ப வாங்குற சம்பளத்தவிட 700 அதிகம். அதுதான் என்னோட அடுத்த வருசம் முழுசுக்கும் சம்பளம்” என்கிறார், மற்றொரு தொழிலாளி.

பணிநிரந்தரம், சம்பள உயர்வு, போனஸ் பற்றிய பிரச்சினைகள் ஒருபக்கம் இருந்தாலும் மிக முக்கியமாக ஆலையில் தாங்கள் மிகவும் கேவலமான முறையில் நடத்தப்படுவதாகக் குமுறுகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

படிக்க:
♦ மாருதி முதல் ஹூண்டாய் வரை…ஒடுக்கப்படும் தொழிலாளர்கள்!
♦ மாருதி சுசுகி: முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தொழிலாளி வர்க்கத்தின் போர்!

”ஆலை நடத்துறாங்களா, இல்ல ஸ்கூல் நடத்துறாங்களானு தெரியல. எதுக்கெடுத்தாலும் அப்பாவ கூட்டிட்டுவா… அம்மாவ கூட்டிட்டுவா.. இனிமே இதுமாதிரி நடக்காதுனு லெட்டர் எழுதி கொடு… ஒரு தொழிலாளிக்கு அம்மா மட்டும்தான். அவங்களும் ஹார்ட் பேசன்ட். அடுத்த மாசம் ஆபரேசன் பன்ற நிலையில இருக்கிறவங்க. உடம்பு முடியாதவங்க சார் கூட்டிட்டு வரமுடியாதுனு எவ்ளோ கெஞ்சுறான். கொஞ்சம்கூட இரக்கமே இல்லாம, ஆம்புலன்ஸ அனுப்புறேன் அள்ளிப்போட்டுட்டுவா அப்டின்றார் ஒரு ஹெச்.ஆர். அதிகாரி… இதவிடக் கொடுமை. பையன் மெட்ராஸ்ல பெரிய கம்பெனில வேலையில இருக்கானு பெருமையா நினைச்சிட்டிருந்த வயசான அப்பா ஒருத்தர், தன்னோட பையன் முன்னாடியே ஹெச்.ஆர். அதிகாரி கால்ல விழுந்து கெஞ்சுறார்… அப்படி என்னயா தப்பு பன்னிட்டோம் நாங்க?” என்று கேள்வியெழுப்புகிறார்கள் இந்தத் தொழிலாளர்கள்.

”எங்க அசெம்ப்ளி டிபார்ட்மெண்ட்ல 800 பேர் வேலை செய்றோம். இருக்கிறது ஒரு கேண்டீன். அதுலயும் ஒரே கவுண்டர்தான். 800 பேரும் வரிசையா நிப்பான். கையெல்லாம் கிரீசா இருக்கும். சோப்பாயிலைத் தேடி கையை கழுவிட்டு அந்த வரிசையில நின்னு சாப்பாட்ட வாங்கிட்டு உட்காந்தா சைரன் அடிக்கும். இன்னும் 5 நிமிசம்தான் இருக்குன்றதுக்கான சைரன். 5 நிமிசத்துல அவசரம் அவசரமா சாப்டு ஓடிப்போயிரலாம்னா… கம்பெனி வளாகத்துல ஓடக்கூடாதுனு ஒரு ரூல் இருக்கு. இப்போ நான் என்னா பன்றது? ஓடுனாலும் ஏன் ஓடுனேனு லெட்டர் எழுதி கொடுக்கனும். நடந்து போனா லேட் ஆகும். ஏன் லேட்னு லெட்டர் எழுதி கொடுக்கனும்.”

தமக்கு நேர்ந்த அவமானங்களை, தாம் சந்தித்தத் துயரங்களை விவரிக்கும் இவர்கள் அனைவரும் இளம் தொழிலாளர்கள். அதிகபட்ச வயது 30 இருக்கலாம். ஆலை நிர்வாகத்திற்கு எதிரான தொழிற்சங்கப் போராட்டங்களை நேரில் கண்டிராதவர்கள். துண்டறிக்கைகளை கையில் வைத்துக்கொண்டு செங்கொடியேந்தி கோஷம் போட்டுக் கொண்டிருந்தவர்களை, கம்பெனி பேருந்தின் கண்ணாடி வழியே கண்டும் காணாததுமாய் கடந்து போனவர்கள்.

தமது சொந்த அனுபவத்திலிருந்து குறைந்தபட்சம் சங்கமாக அணிதிரள வேண்டுமென்ற உந்துதலோடு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் வழிகாட்டலில் இந்தியா யமஹா மோட்டார்ஸ் தொழிற்சங்கமாக அணி திரண்டார்கள்.

சம்பள உயர்வு, போனஸ், சட்டப்படியான உரிமைகள் சிலவற்றைப் பட்டியலிட்டு யமஹா நிர்வாகம் தங்களுடன் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு வரவேண்டுமென்று தொழிலாளர் நலத்துறையிடம் தொழிற்தாவா எழுப்புகிறார்கள். தொழிலாளர் நலத்துறையும் செப்-20 அன்று பேச்சுவார்த்தைக்கு வருமாறு இருதரப்பையும் அழைக்கிறது. பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளும் பொருட்டு தங்கள் இருவருக்கும் இரண்டு மணிநேரம் அனுமதி வழங்குமாறு யமஹா நிறுவன அதிகாரிகளிடம் கோருகிறார்கள் சங்க முன்னணியாளர்களான பிரகாஷ் மற்றும் ராஜபாண்டியன் ஆகியோர். அனுமதி மறுக்கப்படுகிறது. விடுமுறைக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். பேச்சுவார்த்தைக்கு நிர்வாகத் தரப்பில் எவரும் வரவில்லை. மறுநாள் அவ்விரு தொழிலாளர்களையும் டிஸ்மிஸ் செய்துவிட்டதாகக்கூறி, ஆலைக்குள் விடமறுத்து தகராறு செய்கிறது, யமஹா. கனன்று கொண்டிருந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட அவ்விரு தொழிலாளர்களுக்கு ஆதரவாக அங்கேயே அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தை நடத்துகிறார்கள்.

ஆறு நாட்களாக நடைபெற்ற இப்போராட்டத்தை உடைக்க தொழிலாளர்கள் கழிவறையைப் பயன்படுத்த அனுமதி மறுப்பது; உணவு தர மறுப்பது என்பது தொடங்கி சங்க முன்னணியாளர்களின் வீடுகளுக்குச் சென்று அடியாட்களை வைத்து மிரட்டுவது வரையில் பல்வேறு முயற்சிகளை செய்து பார்த்தும் தோல்வியுற்றது.

இறுதியாக, நீதிமன்ற ஆணையைக் காட்டி போலீசை வைத்து தொழிலாளர்களை வெளியேற்ற முயற்சித்தது. ஆலையிலிருந்து வெளியேற மறுத்து அங்கிருந்த டவரில் ஏறிப் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.

சி.ஐ.டி.யு. தொழிற்சங்க முன்னணியாளர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆலை கேட்டிலிருந்து 200 மீட்டருக்கு அப்பால், கொளுத்தும் வெயிலில் சாமியானா பந்தல் அமைத்து உறுதிகுலையாமல் அமர்ந்திருக்கிருக்கிறார்கள் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்.

யமஹா தொழிலாளர்களுக்கு ஆதரவாக ராயல் என்பீல்டு தொழிலாளர்களின் போராட்டம்.

யமஹா தொழிலாளர்களின் இந்தப் போராட்டம், சக தொழிலாளர்கள் மத்தியில் ஒரு சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. உணவு சமைத்து எடுத்துவந்து கொடுத்திருக்கிறார்கள் பிற ஆலையில் பணிபுரியும் சக தொழிலாளர்கள். ரெனால்டு நிசான் ஆலைத்தொழிலாளர்கள் ரூ. 25,000 நிதியுதவியும் வழங்கியிருக்கின்றனர். யமஹா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக போர்டு, நிசான், ஹூண்டாய் கார் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களும், எம்.எஸ்.ஐ., அப்பல்லோ டயர்ஸ், ஜே.கே.டயர்ஸ், ராயல் என்பீல்டு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.

தோழர் முத்துக்குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலர், சி.ஐ.டி.யு.

ஆலையிலிருந்து வெளியேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதாகக்கூறி, நீதிமன்ற ஆணையைக் காட்டி, ”எங்களுக்கும் ஈகோ இருக்கும்ல” என்று எகத்தாளமாகப் பேசினாராம், ஒரு ஹெச்.ஆர். அதிகாரி. தொழிலாளர்களோ, ஆலையை கடந்து ஒன்றுபட்டு நிற்பதன்மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் ஆணவத்தை சற்றேனும் அசைத்திருக்கின்றனர்.

”தொழிலாளர்களை ஆலையிலிருந்து வெளியேற்றச் சொல்லி ஒருதலைபட்சமாக ஆணையிட்டது தவறு என்று நீதிமன்றத்தில் முறையிட்டோம். கேட்டிலிருந்து 200 மீட்டர் தள்ளி போராட்டத்தை நடத்திக்கொள்ளுங்கள் என்றுதானே உத்தரவிட்டோம். வெளியேற்ற சொல்லவில்லையே என்று புது வியாக்யானம் கொடுத்தது நீதிமன்றம். இவ்வளவுக்குப் பிறகும், பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுக்கிறது, யமஹா நிர்வாகம்.

கம்பெனியிலிருந்து பேருக்கு ஒருத்தர் மட்டும் வர்றாரு. அவரும், கம்பெனியில கேட்டு சொல்றேனு ஒரே பதிலைத்தான் சொல்றாரு. லேபர் ஆபிசிலிருந்து கம்பெனிக்கு போன் போட்டா போன எடுக்க மாட்டேங்குறாங்க. நாங்க என்ன சார் பன்னமுடியும்னு லேபர் ஆபிசரே கையை விரிக்கிறாரு. இந்த இலட்சணத்துலதான் இருக்கு” என்கிறார், சி.ஐ.டி.யு.வின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் முத்துக்குமார்.

”பரந்து விரிந்து கிடக்கும் சிப்காட் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வளைத்துப் போட்டு தொழில் செய்யும் யமஹா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தனி சாம்ராஜ்யமே நடத்தி வருகின்றன. இந்திய அரசின் சட்டங்களுக்கு நாங்கள் கட்டுப்படத்தேவையில்லை என்றுத் திமிராக நடந்து வருகின்றன. பண்ணையடிமைகளைவிட மிகக் கீழான நிலையில்தான் தங்கள் ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களை நடத்திவருகின்றன. இத்தகையப் பன்னாட்டு நிறுவனங்களின் ஆண்டைத்தனத்திற்கு எதிரானப் போராட்டங்களுள் ஒன்றுதான் யமஹா தொழிலாளர்களின் போராட்டம்.” என்கிறார், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தோழர் ஆ.கா.சிவா.

படிக்க:
சென்னை ஒரகடம் : கழிப்பறைக்கு ஸ்வைப் கார்டு போடும் அமெரிக்க சான்மினா
சென்னை திருப்பெரும்புதூர் : பு.ஜ.தொ.மு முற்றுகை

மேலும் ”இங்கு மட்டுமில்லை, சிறீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், இருங்காட்டுக் கோட்டை, சிறீபெரும்புதூர் மாம்பாக்கம், மறைமலைநகர் போன்ற சிப்காட் வளாகங்களிலும் இதுதான் நிலைமை. 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த தொழிலாளர்களை வீதியில் வீசியெறிந்துவிட்டு, அமெரிக்க நிறுவனமான ஹனிவெல் ஆலையை மூடிவிட்டது.

தோழர் ஆ.கா.சிவா, காஞ்சிபுரம் மாவட்ட செயலர், பு.ஜ.தொ.மு.

11 ஆண்டுகளாக இயங்கிவந்த தென்கொரிய நிறுவனமான டோங்சான் (DONGSAN) கடந்த மார்ச் முதல் ஆலையை மூடிவிட்டது. சட்டவிரோத ஆலை மூடலுக்கு எதிராக தொழிலாளர்கள் போட்ட வழக்கை பத்து மாதங்களுக்கும் மேலாக கிடப்பில் போட்டு வைத்திருக்கும் நீதிமன்றம் ஆலையிலுள்ள இயந்திரங்களை போலீசு பாதுகாப்போடு எடுத்து செல்ல உத்திரவிட்டிருக்கிறது. தனித்தனி ஆலையில் நடைபெறும் இத்தகையப் போராட்டங்களை ஒன்றிணைக்க வேண்டிய தேவை இன்று எழுந்திருக்கிறது. தனித்தனி ஆலைக்கு ஒரு சங்கம் அமைத்து போராட்டத்தைத் தொடர்வது என்பதைவிட, அந்தந்த சிப்காட் வளாகங்களுக்கென்று ஒருங்கிணைந்த ஒரு சங்கத்தை கட்டியமைக்க வேண்டியிருக்கிறது.” என்கிறார், அவர்.

தொழிற்பழகுநராக உள்ளே நுழையும் மாணவர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்திக்கொள்ளலாம் என்கிறது மோடி கொண்டுவந்திருக்கும் NEEM திட்டம். காண்டிராக்டு முறையில் நேரடியாக ஆலை நிர்வாகமே தொழிலாளர்களை பணியிலமர்த்திக்கொள்ளலாம். இவர்களுக்கு சட்டப்படியான இ.எஸ்.ஐ., பி.எஃப்., மட்டுமல்ல விபத்துக்கான இழப்பீடுக்கூட கொடுக்கத் தேவையில்லை என்கிறது FTE திட்டம்.

மண்ணூர் சிப்காட்டில் உள்ள ஹுண்டாய் சப்ளையர் தென்கொரிய நிறுவனமான எம்.எஸ்.ஐ.யில் NEEM திட்டம் நான்கு மாதங்களுக்கு முன்பே அமலுக்கு வந்துவிட்டது. இதே சிப்காட்டில் அமைந்துள்ள என்பீல்டு ஆலையில் 1000 மாணவர்களை NEEM திட்டத்தின்கீழ் உள்ளே நுழைக்கும் முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. இதற்காக, புரோபசனரி காலம் முடிந்து பணிநிரந்தரத்திற்காகக் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானத் தொழிலாளர்களை ஆட்குறைப்பு என்ற பெயரில் வெளியேற்றும் தருணத்திற்காகக் காத்திருக்கிறது.

ஓட்டுக் கட்சி அரசியல் விவாதங்களிலேயே மலிவான பரபரப்பை உருவாக்கி காலம் தள்ளும் ஊடகங்களின் மத்தியில், பிக் பாஸில் ரித்விகா வென்றதையே உருகி உருகி பேசும் ’அறிஞர்கள்’ மத்தியில், புதிய பைக் வாங்குவதற்கு ‘ஆராய்ச்சி’ செய்து அப்பாக்களிடம் மல்லுக் கட்டும் இளைஞர்கள் காலத்தில், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன?

யமஹா தொழிலாளிகள் போராட்டம் நடத்தும் களத்திற்கு செல்வோம்!
அங்கே நமது நுகர்பொருள் கலாச்சாரத்தின் நட்சத்திர பொருட்களை தயார் செய்யும் பன்னாட்டு நிறுவனங்களின் இன்னொரு முகத்தை அறிந்து கொள்வோம்.
யமஹா தொழிலாளிகளின் போராட்டத்தை ஆதரிப்போம்!

மலர்களே … மலர்களே … இது என்ன கனவா – ஒரு விவசாயி பாட முடியுமா ?

கோயம்பேடு : பூ விவசாயியின் வாழ்க்கையில் நறுமணம் வீசாத பூ சந்தை!

சென்னை கோயம்பேடு, வணிக உலகின் ஒரு சிறுநகரம். 295 ஏக்கரில் 2,800 காய்கறி கடைகள், 1,500 பழக்கடைகள், 446 பூக்கடைகள், சில்லரை வியாபரிகள் உள்ளிட்டு மொத்தம் 15 ஆயிரம் வணிகர்கள், ஐம்பதாயிரம் கூலித்தொழிலாளிகள் என்று அனைவரையும் உள்ளடக்கி சுழன்று கொண்டிருக்கிறது அந்த நகரம்.

சென்னை முழுவதும் வாழக்கூடிய சுமார் எண்பது லட்சம் மக்களின் அன்றாடத் தேவைகளை சில்லரை வியாபரிகள், அண்ணாச்சி கடைகள் மூலம் பூர்த்தி செய்வதற்காகவே இருபத்தி நான்கு மணி நேரமும் இயங்கிக்கொண்டிருக்கிறது.

கோயம்பேட்டின் மேற்கு பகுதி தொடங்கி கிழக்கு பகுதி வரை காய்கறிகள், பழங்கள், பூ மார்க்கெட் என தனிதனியாக பிரிக்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வருகின்றது. காய், பழங்களை ஒரு வாரம் வரை வைத்து விற்பனை செய்யலாம். ஆனால் பூ எப்படி சாத்தியமாகும்?  ஒருநாள் தாக்குப் பிடிப்பதே கடினம். அதிகபட்சம் இரண்டு நாள். அதற்குள் விற்றாக வேண்டும். இல்லையெனில் அடுத்த நாள் குப்பைக்குத்தான் செல்ல வேண்டும்.

அதனால்தான் என்னவோ, பூ மார்க்கெட்டில் உள்ளே நுழைந்ததும் நம்மிடம் விற்று விட துடிக்கிறார்கள் வியாபரிகள். ஆளுக்கொரு திசையில் இருந்து அழைக்கிறது பல குரல்கள். “வாங்கண்ணா..வாங்க.. இப்ப கட்ன மாலைதான்” என்று அவசரமாக அழைக்கும் சிறு வணிகர்கள் ஒருபக்கம்…

“வாங்கய்யா..வாங்க…மொழம் முப்பது ரூபா தான்” என்று கட்டி முடிக்கப்பட்ட பூக்களை கையில் வைத்துகொண்டு அழைக்கும் தாய்மார்களின் குரல்கள் மறுபக்கத்திலிருந்து நம்மை நோக்கி அழைக்கின்றன. அதிகாலை காற்றில் கலந்து வரும் மரிக்கொழுந்து, செண்டுப் பூக்களின் வாசத்தை விட இந்தக் குரல்களின் கவன ஈர்ப்பு அதிகம்.

சந்தையின் நீரூற்று ஒன்றின் அருகே நின்று பார்த்தால் பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து பூக்களை கட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கூடையை கையில் வைத்துக் கொண்டு “இந்த பன்னீர்ரோஸ் எவ்ளோ, அரளி, சம்மங்கி எவ்ளோ” என்று விசாரித்துக் கொண்டே இருக்கிறார்கள் பூ வாங்க வந்த பெண்கள். அவர்களுக்கு பதிலளித்துகொண்டே எடைபேடும் தொழிலாளிகள்.

அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படும் பூ மார்க்கெட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பூவை கொண்டு வரும் விவசாயிகள், விற்பனை செய்யும் கமிஷன் ஏஜெண்டுகள், பாதையோர பூ வியாபரிகள், நிமிரக்கூட நேரமின்றி பம்பரமாய் சுழலும் தொழிலாளிகள் என்று “கிளைகள் தெரியாத மரங்களாக” பூத்துக்கிடக்கின்றன இந்த பூ மார்க்கெட்.

அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த  “கட் பிளவர்ஸ்” (வெட்டு மலர்கள்) கடையை  அணுகியதும்.. “சார்.. இது வியாபார நேரம் கொஞ்ச நேரம் கழிச்சி வாங்களேன்..ப்ளீஸ்” என்று நம்மை நாகரீகமாக திருப்பியனுப்பினார்.

“கட் பிளவர்ஸ்” (வெட்டு மலர்கள்)

சற்று தொலைவில் மலைபோல் கொட்டிக்கிடந்த சாமந்திப் பூவின் அருகே அமர்ந்திருந்த பூ வியாபாரி பெருமாளிடம் பேசினோம். ஆர்வமாக பேசத்தொடங்கினார்.

“சென்னைக்கு 1989-ல வந்தேன். முப்பது வருஷம் ஆகப்போவுது.  இந்த தொழில்தான் எனக்கு சோறு போடுது..

பூ வியாபாரி பெருமாள்

பூ மார்க்கெட்ல மட்டும் ஆயிரத்துக்கும் மேல வியாபரிங்க இருக்காங்க. அதுல ஐநூரு வியாபரிங்களுக்கு மார்கெட்டுல கடை இருக்கு. ஒவ்வொரு கடையும் இருநூறு சதுர அடிக்கு கீழதான்.. ஆனா வாடகை நாற்பதாயிரத்துக்கு குறைவில்ல. அட்வான்ஸ் பல லட்சம்.

இதுல ஒரே கடைய இரண்டு பேரும் பங்கிட்டுக்குவோம். எவ்ளோ இட நெருக்கடியா இருந்தாலும் அதுக்குள்ளேதான் லோடு எல்லாத்தையும் எறக்கி வக்கனும். இல்லனா ரெய்டு வரும்போது புடிச்சிடுவாங்க” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ரெய்டு வருவதாக வந்த செய்தியை கேட்டு மார்க்கெட்டே சிறிது நேரம் பரபரப்பானது. எல்லோரும் பூக்களை எடுத்துக் கொண்டு மறைவான இடத்தை நோக்கி ஓடினார்கள். அந்த பரபரப்பு ஓய்ந்த பின்பு…மீண்டும் தொடங்கினார்…பெருமாள்.

“தோ..இப்ப பார்த்திங்கள்ல.. இப்படித்தான் அப்பபப்ப நடக்கும்..”என்று சொல்லிவிட்டு…..  “இந்த மார்க்கெட்டுல செண்டு மல்லி, கொய்மலர் ரோஜா சாதா, இதர ரோஜா, மல்லி, முல்லை, ஜாதிப் பூ, அரளி, சம்மங்கி, பட்டுப் பூ, மேரி கோல்ட், துளசி, மருகு, மரிக்கொழுந்துன்னு எல்லாம் வருது. கட் ஃபிளவர்ஸ்னு சொல்லக்கூடிய அழகு பூக்களும் வருது. இது எல்லாத்துக்கும் ஒரு சீசன் இருக்கு.

தமிழ்நாடு மட்டுமில்ல ஆந்திரா, கர்நாடகான்னு அண்டை மாநிலத்துல இருந்தும் வரும். மார்க்கெட்ல இருக்க ஒவ்வொரு வியாபாரிக்கும் பூ வந்து கொடுக்கிற விவசாயிங்க முப்பதுல இருந்து ஐம்பது பேர்கள நிரந்தரமா வச்சிருப்போம். ஒவ்வொருத்தருக்கும் குறைந்தது ஐந்து லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்துட்டு அவங்க பூ மகசூலை வாங்கிக்குவோம். விளஞ்ச பிறகு லாரி, வேன், கவர்ன்மெண்ட் பஸ்ஸு மூலமா தினமும் மார்க்கெட்டுக்கு கொண்டுவந்திடுவாங்க. இது வருஷம் ஃபுல்லா நடக்கும்.

“ஆந்திரா கடப்பாவுல இருந்து சாமந்தி பூ மே மாசம் கடைசியில வரும். அது முடிஞ்சா ஒசூர், கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில இருந்து சாமந்தி செப்டம்பர், அக்டோபர், நவம்பர்னு மூணு மாசம் தொடர்ச்சியா வரும்.

மல்லிப்பூ பிப்ரவரியில இருந்து கெடக்க ஆரம்பிச்சிடும். அது ஒரு ஆறு மாசத்துக்கு தடையில்லாம வந்துகிட்டே இருக்கும். சம்பங்கி கடலூர், திண்டிவனம், திருவண்ணாமலையில இருந்து வரும். முல்லை, ஜாதிப்பூ வேலூர்ல இருந்து வந்திடும்.

திண்டுக்கல், மணப்பாறையிலருந்து கனகாம்பரம், அரளி. எப்ரல் மாசத்துல இருந்து ஒரு ஆறு மாசம் வரும். மரிக்கொழுந்து வருஷம் முழுக்க வரும். சமயத்துல ஆந்திராவுல இருந்தும் வரும். ஓசூர், கர்நாடகாவுல இருந்து ரோஜா வரும்”

பூ வகையில பல நூறு இருந்தாலும் வருஷம் பூரா வியாபாரம் ஆவுறது ஒரு பத்து பூ தான். அதுக்கான மார்க்கெட் வருஷம் முழுக்க இருக்கும். அது கூட குறைய இருக்கும்.

பண்டிகை காலம், விசேச நேரத்துல  கணிசமா வியாபரம் ஆகும்.  ஒரு கூடை சாமந்தி இருபத்தி ஐந்து கிலோ இருக்கும். அது நூத்தி ஐம்பது ரூபாவுக்கும் போகும். அதைத் தாண்டியும் விக்கும். சமயத்துல வெறும் நாற்பது ரூபாவுக்கும் போகும். மழை , வெய்யிலு பூ தரத்தை பாதிக்கும். மார்க்கெட் ரேட்டு அதுக்கேத்த மாதிரி மாறும். இப்படி ஏத்த எறக்கமா இருக்கதால லாப-நஷ்டத்தை கணக்கு பாக்குறதுல சிரமம் இருக்கும்.

நாங்க அட்வான்ஸ் கொடுக்கிறதால எங்ககிட்ட வந்து கொடுக்கிறாங்க. நாங்க அவங்களோட மகசூலை வித்து தந்தா நூத்தி ஐம்பது ரூபா கமிஷன். ஒரு கூடைக்கு போக்குவரத்து செலவு, நூத்தி ஐம்பதுல இருந்து இருநூறு ஆகும். தூக்கு கூலி முப்பது, கூடைக்கான காசு இருபது… இது எல்லாத்தையும் கழிச்சிக்குனு தான் விவசாயிங்களுக்கு நாங்க கணக்கு கொடுப்போம்.

இதுல பெட்ரோல் விலை ஏறுனா போக்குவரத்து செலவு இருநூத்தி ஐம்பதா மாறும். அது அந்த சம்சாரிங்க தலையில தான் விடியும். எங்களுக்கு அது பாதிப்பு இல்ல. அதால மார்க்கெட் கூடகுறைய ஆவுறதும் எங்களால கணிக்க முடியாது. மார்கெட்டும் நிரந்தரமா இருக்க மாதிரி தான் தெரியுது.

“இந்தமாதிரி பெட்ரோல்-டீசல் திடீர் விலை உயர்வால பாதிக்கிறது விவசாயிங்க மட்டும்தான். அவங்களுக்கு தான் எல்லா விலையேற்றமும் தலையில விழுது. அதனால கடனை அவங்க ஏத்திகிட்டே போவாங்க. மகசூல்லயும் அவங்க பணம் பார்க்க முடியாது. அவங்களுக்கு எப்பவும் விடிவே கிடையாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே பூ வாங்க வந்த பெண்மனி ஒருவர் குறுக்கிட அவரை கவனிக்க கடை ஊழியர் ஒருவரை நியமித்துவிட்டு தொடர்ந்தார். அவரிடம் கேட்டோம்.

பெட்ரோல்டீசல் விலையுயர்வு, மழையினால ஏற்படுற அழிவு இதெல்லாம் விவிசாயி தலையில விழுந்திடுதுஅதையும் மீறி ஒரு விவசாயியால லாபம் பார்க்க முடியுமா? சில பத்திரிக்கைகள் மகசூல் அமோகம்விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சின்னு எழுதுறாங்களேஅது?

சரிதான். வாழ்ந்தவங்களும் இருக்காங்க… அது ரொம்ப கம்மிதான். மழையின்னா அழிவு. வெய்யிலுன்னா விளைச்சல் அதிகம். அதேசமயம் வரத்து அதிகமாகும் போது விலை குறையத்தானே செய்யும். அட்வான்ஸ் பணம் பல லட்சம் வாங்கிப்பாங்க. அதுமட்டுமில்லாத இவங்களோட குடும்ப செலவு, காது குத்தி, கல்யாணம் எல்லாத்துக்கும் குறுக்குல ஏராளமா எங்க கிட்ட கடன் வாங்கிடுவாங்க.

மகசூல் தவறிட்டா கொடுத்த கடன் இரண்டு வருஷத்துக்கு மேலயும் இழுக்கும். இப்ப சமீபத்துல நெறைய விவசாயிங்க நொடிஞ்சி போயிட்டாங்க. பல பேர் கடனை கொடுக்க முடியாம வீடு வாசல் இழந்து காணாம போயிட்டாங்க… சிலபேர் தொழிலையே மாத்திக்கிறாங்க.

படிக்க :
♦ பூக்காரம்மா….!
♦ பூக்காயம்…

கம்பனி வேலைக்கு, வீட்டோட ஆடு மாடு வளக்கிறதுன்னு போயிடுறாங்க.… சிலபேர் எப்படி பொழக்கிறதுன்னு தெரியாம முழிக்கிறாங்க. நாங்களும் கொடுத்த கடன வாங்க முடியாமலே போயிடும். இதுதான் விவசாயிங்களோட நெலம..  இதுல பெட்ரோல்-டீசல் விலையேற்றம் எதுவானாலும் விவசாயிக்குதான் பெரிய பாதிப்பு” என்றார்.

மார்கெட்டுக்கு சாமந்திப் பூ கொண்டு வந்திருந்த கிருஷ்ணகிரி-ஓசூர் விவசாயிகள் ராமப்பா, பி.ஆர்.எஸ். செல்வம் சோகம் தட்டிய முகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் கேட்டபோது…..

கிருஷ்ணகிரி-ஓசூர் விவசாயிகள் ராமப்பா, பி.ஆர்.எஸ். செல்வம்

“நாங்க இன்னா சொல்லுறது… காலையில நாலு மணிக்கு வூட்டுல இருந்து கிளம்பினேன். தோ.. இன்னும் உக்காந்துனு இருக்கேன். இன்னிக்கு சாயங்காலம் முழுக்க இங்கயே தான் கெடக்கனும். இதெல்லாம் வித்தா தான் காசு கையில கெடக்கும். இதுதான் எங்க பொழப்பு…” என்று விரக்தியாவே பேசினார்கள்.

விவசாயி ராமப்பாவிற்கு ஐந்து ஏக்கர் நிலம். “அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை” என்கிறார் அவர்.

“இப்ப இரண்டு ஏக்கர் மட்டும் தான் பயிரு வக்கிற மாதிரி இருக்குது. அதுவும் முழுசா  எந்த பயிரும் வக்க முடியாது. தானியம் எதுவும் வெளச்சல் இல்ல. பணப்பயிர் போட்டா எதாவது கிடைக்குமேன்னு பூ போடுறோம். எங்க ஊர் பக்கம் எல்லாம் பூமியில தண்ணியே இல்ல. மழையும் இல்ல. கிணறும் வறண்டு கிடக்கு… பிறகு எப்படி பயிர் வக்க முடியும்….

கடன வாங்கி ஆயிரம் அடி போர் போட்டாலும் தண்ணி கிடைக்கிறது இல்ல. அதுக்கு ஒன்னரை லட்சம் தண்டமா செலவு பன்றதா இருக்கு. எதையும் நம்ப முடியல. ஏதோ இத்தன நாள் கஷ்டப்பட்டு பசங்கள படிக்க வச்சேன். அவனுங்களுக்கும் வேலை கிடைக்காம வீட்டுலதான் இருக்காங்க. நிரந்தரமா ஒரு வருமானம் வரும்னு பார்த்தா ஒன்னும் இல்ல.

சரி வேற எங்கயாவது வேலைக்கு போகலாம்னாலும் ஒரு வேலையும் இல்ல. வாட்ச்மேன் வேலையத்த தவிர… இந்த காலத்துல படிச்சவங்களுக்கே நிரந்தமா வேலை இல்ல. எப்ப வேலைய விட்டு அனுப்புறானுங்கன்னே தெரியல. எப்படி வாழறது சொல்லுங்க…” என்று இறுகிய முகத்துடன் கேள்வியெழுப்புகிறார்.

“எல்லாம் விதியேன்னு நொந்து காலையில நானு லாரியில இந்த பூவ ஏத்திகிட்டு வண்டியிலயே வந்துட்டேன். இதை எல்லாம் பஸ்சுல போட்டு வந்தா கை செலவு கூட மிஞ்சாது. சாப்பட்டுக்கே இருநூறு ரூபா போயிடும்.  நாலு கூடை தான் வெளஞ்சது, ஒரு கூடை இருபத்தி அஞ்சி கிலோ வரும்.   120 ரூபா ரேட்டு போறதா சொன்னங்க.  இன்னும் ரெண்டு நாள் கழிச்சி கொண்டு வந்தா இந்த வெலயும் போகாது. இல்ல கூடவும் போவும்.

“எங்களுக்கு பக்கமா பெங்களுரு மார்கெட்டு இருக்கு.. அங்க போனா சுத்தமா அழிய வேண்டியதுதான். ஒரு நாளைக்கு ஒரு ரேட்டு போடுவான். அதை நம்பி கொண்டு போக முடியல.

அதே மாதிரி நம்ம பூவுன்னா மதிக்க மாட்றானுங்க. கர்நாடகா மண்ணுல வெளையிற பூ நல்லா இருக்கும். அருமையான மண்ணு. ரோஸ் நல்ல விளைச்சல்.  அதனால நம்ம பூவ மதிக்கிறதே இல்ல.

அதனால தான் எப்பேற்பட்டாவது இந்த மார்கெட்டுக்கு வந்துடுறேன்… இதுவும் இல்லனா என்னமாதிரி விவசாயிங்க எல்லாம் தூக்கு மாட்டிக்கினு தான் சாவனும்…” என்று சொல்லிவிட்டு மேற்கொண்டு பேச முடியாமல் முகத்தை திருப்பி கொண்டார் விவசாயி ராமப்பா.

பூ வியாபரத்தை “அழியும் பொருள்; அழியா தொழில்” என்பார்கள்… அது பொய்யாகும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது விவசாயிகளின் அழிவில்!

-வினவு புகைப்படச் செய்தியாளர்

சிவனடியார்கள் போர்வையில் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவம் !

1

சிவனடியார்கள் என்ற போர்வையில் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் நல்லூர் சரவணன் மீது தொடர் தாக்குதல் தொடுக்கும் இந்துத்துவ – சாதிய கூட்டணியின் சதித் திட்டத்தை முறியடிப்போம்!

றிவார்ந்த தமிழ் சமூகமே!

தமிழகத்தின் அறிவுசார் புலத்தில் ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக பாரிய பங்களிப்பை செலுத்தி வரும் கல்விநிலையம் சென்னைப் பல்கலைக்கழகம். இதன் அறிவியல் பூர்வமான செயல்பாடுகளை ஒழித்துக்கட்டி, புராணக் கட்டுக் கதைகளை, மூடநம்பிக்கையை புகுத்த சிவனடியார்கள் என்ற போர்வையில் காவிக் கும்பல் உள்ளே நுழைய முயற்சித்துள்ளது. ஆனால் விரல்விட்டு எண்ணக்கூடிய மாணவர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தால் இம்முயற்சி தற்காலிகமாக முறியடிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் ! (கோப்புப்படம்)

சைவ சித்தாந்தப் பெருமன்றத்தால் வெளியிடப்பட்டமாணிக்கவாசகர் காலமும் கருத்தும்   என்ற நூலின் ஆசிரியர் பிரபலமான தொல்பொருள் ஆய்வாளர் ஆர். பத்மாவதி. இதன் பதிப்பாசிரியர் சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறைத்தலைவரும் சைவ சித்தாந்தப் பெருமன்றத்தின் தலைவருமான பேராசிரியர் நல்லூர் சரவணன்.  இந்நூல் மாணிக்கவாசகர் குறித்தும் சைவப் பற்றாளரான பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் மீதும் பார்ப்பனிய சக்திகள் பல நூற்றாண்டுகளாக சுமத்தி வந்த அவதூறைத் துடைக்கும் விதமாக ஆதாரபூர்வமான தகவல்களுடன் வெளியாகியிருக்கிறது.

சிவநெறியாளரான வரகுணபாண்டியன், அமைச்சரான மாணிக்கவாசகரிடம் குதிரை வாங்கக் கொடுத்த அரசு நிதியை கையாடல் செய்து சிவனுக்கு கோயில் கட்டியதாகவும், அப்படி கட்டியதற்காக சிவபக்தரான மன்னனே சிவனடியாரான மாணிக்கவாசகரை தண்டித்ததாகவும் திருவிளையாடல் கட்டுக்கதையும், ஸ்தலபுராணங்களும் அவதூறு செய்கிறது. இதற்கு நரி-பரி எனும் கட்டுக்கதையை பல நூற்றாண்டுகளாகப் பரப்பி வந்தனர். இதன் பின்னால் மாணிக்கவாசகர், பாண்டிய மன்னன் ஆகியோருக்கெதிரான பார்ப்பன சூழ்ச்சி ஒளிந்துள்ளது.  ஆனால் இந்தக் கட்டுக்கதை உருவான வரலாற்றுப் பின்னணியை கல்வெட்டு ஆதாரங்கள், பக்தி இலக்கிய காலப் பாடல்கள், கோயில் வரலாறு, பிற சைவர்களின் ஆய்வுகள் ஆகியவற்றின் துணைகொண்டு ஆய்வுசெய்து, அவை கூறும் உண்மை வேறாக உள்ளதை ஆதாரபூர்வமாக நிறுவி, சமயக்குரவர் மாணிக்க வாசகரையும் சிவ பக்தர் வரகுணபாண்டியனையும் வரலாற்றுப் பழியிலிருந்து விடுவித்துள்ளது இந்நூல்.

மேலும் திருவிளையாடல் புராணத்தில் வரும் நரி-பரி கதை என்பது கட்டுக்கதை என்றும் உண்மையில் சைவ சித்தாந்தில் நரி என்பது அந்த கால புறச்சமயங்களான லோகாயுதவாதம், சங்கரரின் மாயாவாதம் போன்றவற்றை பின்பற்றுபவர்களைக் குறிப்பதாகவும், பரி (குதிரை) என்பது சைவத்தைப் பின்பற்றுபவர்களைக் குறிப்பிடுவதையும் ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளார் ஆசிரியர்.  இங்கு தான் இந்துத்துவ சக்திகளுக்கு பிரச்சனை வருகிறது. ஆதிசங்கரரின் பார்ப்பனிய தத்துவமான மாயாவாதத்தை எதிர்த்தவர் சமயக் குரவர் மாணிக்க வாசகர் என்ற கருத்தை பார்ப்பனிய சக்திகளால் சீரணிக்க முடியவில்லை.

ஏற்கனவே, சைவத்தை பார்ப்பனிய நீக்கம் செய்து, தமிழ் மதம் தான் சைவம் என நிலைநாட்டுவதற்காக கடந்த பல பத்தாண்டுகளாக உழைத்து வருபவர் பேரா. நல்லூர் சரவணன். ”வரலாற்றை மறுத்து சைவ சித்தாந்தத்தை படிப்பது என்பது அறிவியல் அணுகுமுறைக்கு ஏற்புடையது அல்ல. இன்றைய தலைமுறை அறிவியலை புறம் தள்ளி வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் ஆய்வு செய்தால் தொடர்ந்து தத்துவம் என்பதை_’சடங்காகவே’ அமைத்து விடுவர்” என்பது பேரா. நல்லூர் சரவணனின் கொள்கை.

இதை சீரணிக்க முடியாத பார்ப்பனியக் கும்பலும் இடதுசாரி, முற்போக்கு, தலித் ஆதரவு போர்வையில் வலம் வரும் சிண்டிக்கேட் உறுப்பினராக இருக்கும் இன்னொரு துறைத்தலைவரும் இணைந்து பேரா. நல்லூர் சரவணனை துறைத்தலைவர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு சென்னைப் பல்கலைக்கழக சமஸ்கிருதத் துறையில் துணை பேராசிரியராக இருந்த எந்த தகுதியுமற்ற ஒருவரை சைவ சித்தாந்தத் துறையின் தலைவராக நியமித்தனர்.  இந்நியமனத்திற்கெதிராக, பேரா. நல்லூர் சரவணன் நீதிமன்றத்திற்கு சென்று மீண்டும் முறைப்படி துறைத் தலைவரானார்.  இதை சகித்துக் கொள்ள முடியாத அந்த துறைத்தலைவர் ஊடகங்களில் பணிபுரியும் தனது முன்னாள் மாணவர்கள் மூலம் பேரா. நல்லூர் சரவணனை அவதூறு செய்து பத்திரிகைகளில் செய்தி வெளியிட வைத்தார்.

மறைமலையடிகளால் நூறு ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட சைவசித்தாந்த பெருமன்றத்திலும், சென்னைப் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறையிலும் இதுவரை அதிகாரம் படைத்த பதவிகளை குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்களே அனுபவித்து வந்தனர். இந்நிலையில் பிற சாதியை சேர்ந்த பார்ப்பனிய எதிர்ப்பு சிந்தனை கொண்ட சைவரான பேரா. நல்லூர் சரவணன் தலைவரானதை சகித்துக் கொள்ள முடியாமல் அவரை எப்படியாவது பதவிநீக்கம்  செய்யத் துடித்த சாதியாதிக்கக் கும்பல் கடைசியில் சரணடைந்த இடம் இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத்.  இதற்கு மூளையாக செயல்பட்டவர் தான் அந்த இன்னொரு துறைத்தலைவர் ஆவார். பேரா. சரவணனைப் பழிவாங்க அவர்களுக்கு கிடைத்த ஆயுதம் தான் ’மாணிக்க வாசகர் காலமும் கருத்தும்’ நூல்.

பேராசிரியர் நல்லூர் சரவணன்.

காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக இந்த நூல் வெளியிடப்பட்டதும் தங்கள் சதித்திட்டங்களை நிறைவேற்ற இவர்களுக்கு தருணம் கிடைத்தது. கடந்த இரண்டு மாதங்களாக பேரா. சரவணனுக்கும், ஆர். பத்மாவதிக்கும் எதிராக காவிக் கும்பல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.  மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இருவர் மீதும் வழக்குத் தொடத்தும் அடங்காத இந்துத்துவக் காலிகள், கவர்னரிடம் பேரா. சரவணனை நீக்கக் கோரி மனு அளித்துள்ளனர்.  ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்கான கவர்னர், இந்த விவகாரம் குறித்து பேரா. சரவணனை விசாரித்து நடவடிக்கை எடுக்க பதிவாளரைப் பணித்துள்ளார். அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையேதான் சுயசாதி நலனுக்காக சற்றும் கூச்சமின்றி பார்ப்பனிய-இந்துத்துவ சக்திகளோடு திரை மறைவுப் பேரங்களை நடத்தி இந்துத்துவ சக்திகள் பல்கலைக்கழக வளாகத்துள் நுழைந்து அதன் மாண்பை சீர்குலைக்க ஒத்தாசை செய்துக் கொடுத்துள்ளார் அந்த இன்னொரு துறைத்தலைவர். சிண்டிக்கேட் மீட்டிங் நடக்கும் நாளில் சிவனடியார்கள் என்ற போர்வையில் பல்கலைக்கழகத்திற்குள் நூற்றுக்கும் மேற்பட்ட இந்துத்துவக் காலிகள் சங்கு ஊதிக் கொண்டே சிண்டிக்கேட் மீட்டிங்கில் இருந்த துணை வேந்தரிடம் பேரா. சரவணனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நுழைய முயன்றதைதான் கிட்டத்தட்ட 5 மணி நேரம் வெறும் 15 மாணவர்கள் தைரியமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.  சிண்டிக்கேட் உறுப்பினரான அந்த துறைத்தலைவர் அன்றி யார் மீட்டிங் நடக்கும் தகவலை காவிக் கும்பல்களுக்கு தெரிவித்திருக்க முடியும்?  ஒரு பேராசிரியர் ஒரு நூலைப் பதிப்பித்ததற்காக பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து இவ்வளவு அக்கிரமங்களை செய்யத் துணிகிறார்கள் என்றால் இதற்கு ஒத்தாசை செய்தவர்கள் கொடுத்த தைரியம் தான் காரணம்.

படிக்க:
♦ சென்னை பல்கலை : இந்துத்துவ பாசிஸ்டுகளோடு APSC மாணவர்கள் நேருக்கு நேர் !
♦ காஞ்சி மடத்தின் வரலாறு : பொய்யிலே பிறந்தது

சுய சாதி நலன்களைப் பேணும் இது போன்ற பேராசிரியர்கள் தான் இன்று மாநிலப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பெரும்பாலானவற்றின் சாபம்.  இம்மாதியானவர்களின் சாதி சார்பு சிந்தனையும் ஒருங்கிணைவும் முற்போக்கு சிந்தனை கொண்ட மாணவர்கள், பிற சாதி மாணவர்கள் ஆகியோரை பழிவாங்கவும், நிர்வாகத்தில் இலாபி செய்வது, ’பெட்டி பாலிட்டிக்ஸ்’ செய்வது  போன்றவற்றால் பிற ஆசிரியர்களை ஓரங்கட்டி நமைச்சல் கொடுக்கவும் உபயோகப்படுத்துகின்றனர். இதன் நீட்சி தான் இன்று அந்த துறைத்தலைவரை இந்துத்துவக் கும்பலுடன் கைகோர்க்க செய்துள்ளது. சுயசாதி நலன்களுக்கான இந்த பெட்டி பாலிட்டிக்ஸ், உள்ளிருந்தே கொல்லும் வியாதி. இதை உடனடியாக வேரறுக்கவில்லையென்றால் ஒட்டு மொத்த அறிவுத்துறையையும் அழுகச் செய்யும் வல்லமை கொண்டது.

தொல்பொருள் ஆய்வாளர் ஆர். பத்மாவதி

மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் என்ற நூல் தொல்பொருள் ஆய்வில் புலமை பெற்ற ஆர். பத்மாவதியால் ஆதாரபூர்வமாக நிறுவப்பட்ட தரவுகளைக் கொண்ட ஆய்வுநூல். அது பார்ப்பனிய சக்திகளை பயமுறுத்துகிறது. வரலாற்றை புராணக் கட்டுக்கதைகள், மூடநம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதத்துடிப்பவர்கள் இவர்கள். எனவே அந்நூல் வெளிவரக் காரணமாக இருந்த பேரா. சரவணனை வேட்டையாடுகிறார்கள்.

இன்று அவர்கள் வென்றால் நாளைக்கு ஒவ்வொரு ஆய்வாளர்களின் ஆய்வும் இந்த சக்திகளின் தணிக்கைக்கு உட்படுத்தப் பட்ட பின்னர் தான் வெளியிடப்பட வேண்டும் என்ற நிலை ஏற்படும். சுதந்திரமான அறிவியல் பூர்வமான ஆய்வு இல்லாமல் ஒழிக்கப்படும் ஆபத்து நூற்றுக்கணக்கில் நம் வாசற்படியில் சங்கு ஊதிக் கொண்டு நிற்கிறது. அதைத் தடுத்து நிறுத்திய அந்த பதினைந்து மாணவர்களுடன் ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் கை கோர்த்தால் மட்டுமே இதை முறியடிக்க முடியும். இல்லையென்றால் தமிழ் மண்ணிலும் கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரேக்களின் இரத்தம் சிந்தப்படும்.

தமிழக அரசே! காவல் துறையே!

• சைவ சித்தாந்த துறைத்தலைவர் பேரா. நல்லூர் சரவணன் மீது சிவனடியார்கள் என்ற போர்வையில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி, மிரட்டும் காவிக் கும்பலை கைது செய்!

• அறிவியலுக்கு புறம்பாக மூட நம்பிக்கையை பரப்புரை செய்ய பேராசிரியர்களையும் துணைவேந்தரையும் பல்கலைக்கழகங்களுக்குள் நுழைந்து மிரட்டும் இந்து மக்கள் கட்சியை தடை செய்!

பல்கலைக்கழக நிர்வாகமே!

• சுயசாதியினரின் பதவி நலன்களுக்காக அதிகார துஷ்பிரயோகம் செய்து பல்கலைக்கழகத்திற்குள் சீர்குலைவை ஏற்படுத்த விழையும் பேராசிரியர்களை அடையாளம் கண்டு வேரறு! அவர்களின் பதவிகளை பறித்திடு!

• இந்துத்துவ-சாதிய சக்திகளின் தலையீடின்றி அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேற்கொள்ளும் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிய பாதுகாப்பை வழங்கு! அவர்களின் ஆய்வுகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கு!

• பேராசிரியர்களின் ஆய்வு சுதந்திரத்திற்குள் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரக் கவர்னரின் தலையீட்டை அனுமதியாதே!

பேராசிரியர்களே! மாணவர்களே!

•  இந்துத்துவ – சாதிய கூட்டணியின் ஜனநாயகவிரோத அறிவியல்-விரோத நடவடிக்கைகளை முறியடிக்க பேரா. நல்லூர் சரவணனுக்கு ஆதரவாக அணிதிரள்வீர்!

• சுயசாதி பதவி நலனுக்காக மதவாதிகளுடன் திரைமறைவுப் பேரம் நடத்தி பல்கலைக்கழகத்தின் மாண்பைக் குலைக்கும் ‘பெட்டி பாலிட்டிக்ஸ் பேராசிரியர்களை’ இனங்கண்டு தனிமைப்படுத்துவோம்!


தமிழ்நாடு.
நெ.7, மாதா கோவில் தெரு, நொளம்பூர், சென்னை – 95, 9445112675

இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவில் வளரும் புதிய சாதி !

ந்தியாவில் பிறந்து, ஆங்கிலத்திலேயே பேசும், ஆங்கிலத்திலேயே சிந்திக்கும் ஒரு பிரிவினரைப் பற்றி Scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.  இந்தக் கட்டுரையாளர் அவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் (ஆங்கிலோ இந்தியர்களைப் போன்று) என்று அழைக்கிறார்.

கட்டுரையாளர் சொல்வது போல மேட்டுக்குடி சாதியான இந்தப் பிரிவு குடும்பங்களின் எண்ணிக்கை 4 லட்சம்  என்று எடுத்துக் கொண்டால் இந்தியாவின் 26 கோடி குடும்பங்களில் இவர்கள் 0.15% மட்டுமே உள்ளனர்.

இவர்கள் அதிகாரவர்க்க மேட்டுக்குடி (ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், வெளியுறவுத் துறை அதிகாரிகள், நீதிபதிகள்) அல்லது வெளிநாட்டு இந்தியர் அல்லது மேட்டுக்குடி மருத்துவர், வழக்கறிஞர் குடும்பங்களிலிருந்து தோன்றுகின்றனர். பிற பிரிவினரும் தங்களது குழந்தைகளை இந்த அந்தஸ்துக்கு வளர்ப்பதை ஒரு கனவாக கொண்டிருக்கின்றனர்

இந்தப் பிரிவினர் அதிகார வர்க்கத்தில் இணைந்து சேவை செய்ய பயிற்றுவிக்கப்படுகின்றனர் (சர்வதேச பள்ளி, வெளிநாட்டு கல்லூரிகளில் படிப்பு) – ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியம் போல வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் ஏகாதிபத்திய நிறுவனங்களிலும், அரசு பதவிகளிலும் வேலை செய்யத் தயாரிக்கப்படுகின்றனர். அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களில், நிதி நிறுவனங்களில் பந்தய மூலதனத்துக்கு பணிவிடை செய்கின்றனர்.

ஊழல், சுரண்டல், கொள்ளை என்ற சுவடே தெரியாமல் தெளிவான முகத்துடன், வசதியான பங்களாக்களில், சொகுசு கார்களில் வாழ்வதை கனவாக வைத்து அதை அடைகின்றனர்.

சசிதாரூர் போன்ற ஒரு சிலர் கட்சிகளில் சேர்ந்து தலைவர்கள் ஆகின்றனர். இன்னும் கணிசமான பிரிவினர், தமக்குக் கிடைத்த கல்வி அறிவு மூலம் இந்திய சமூகத்தின் உண்மையான பிரச்சனைகளை புரிந்து கொண்டு அவற்றுக்கு எதிராக போராடுவதற்காக தம்மை புரட்சிகர அணிகளில் இணைத்துக் கொள்கின்றனர். சமூக, அரசியல் விடுதலைக்காக போராடுகின்றனர்.

*****

இந்திய ஆங்கிலேயர்கள் : இந்தியாவின் புத்தம் புதிய வேகமாக வளரும் சாதி – சஜித் பய்

ந்தியாவில் ஒரு செல்வாக்கு மிகுந்த மக்கள் தொகை மற்றும் உளவியல் பிரிவு உருவாகி வருகிறது. அது செல்வம் படைத்ததாகவும், நகர்ப்புறத்தைச் சார்ந்ததாகவும், உயர்கல்வி கற்றதாகவும் உள்ளது.

2012 – 2013-ம் ஆண்டிலிருந்து என்னுடை மகள்கள் எங்கள் தாய்மொழியான கொங்கணியில் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். அவள் ஆங்கிலத்தில் அதிகமாக பேச ஆரம்பித்ததற்கு மும்பையில் இருக்கும் அவளது பள்ளியில் ஆசிரியை வீட்டில் ஆங்கிலத்தில் பேசும்படி ஊக்குவித்ததோ, அல்லது வேறு ஏதோ தூண்டுதலாகவும் இருக்கலாம். இதில் கவலையளிக்கும் விஷயம் என்னவெனில், எங்கள் வீட்டை ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டு விட்டது. இப்போது, நாங்கள் அரிதாகவே கொங்கணியில் பேசிக் கொள்கிறோம்.

நாங்கள் விதிவிலக்கானவர்களல்ல. எங்களைப் போன்று வசதி படைத்த, நகர்ப்புற இந்தியாவின் மேட்டுக்குடி குடியிருப்புகளில் வாழும் பல குடும்பங்களில், தாய்மொழி அல்லாமல், ஆங்கிலமே பிரதான பேச்சு மொழியாக இருக்கிறது. அவர்களுக்கு, தாய்மொழியில் பேசுவதைக் காட்டிலும், ஆங்கிலம் மிகச் சரளமாக வருகிறது.

சிக்கலான எண்ணங்களைக் கூட ஆங்கிலத்தில் வெளிப்படுத்துவது சுலபமாக உள்ளது. நகர்ப்புறத்தில் வாழும், அதிகம் படித்த, பெரும்பாலும் சாதி, மத வேறுபாடுகளை பொருட்படுத்தாமல் திருமணம் செய்து கொண்டவர்களின் குடும்பங்கள் இந்த வகையில் வருகின்றன. இவர்களை இந்திய ஆங்கிலேயர்கள் என்று அழைக்கலாம்.

நமக்கு பரவலாக தெரியும் பழைய வகை ஆங்கிலோ இந்தியர்கள் ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள், பெரும்பாலும் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்த புதிய இந்திய ஆங்கிலேயர்களில் இந்துக்கள் பெரும்பான்மையாக, பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும் உள்ளனர். இவர்கள், மும்பை, தில்லி, சென்னை, பூனே, ஹைதராபாத், கொல்கத்தா போன்ற பெரு நகரங்களிலும், சிறிய அளவுகளில் மலைப் பிரதேச நகரங்களிலும், கோவாவிலும் வசிக்கின்றனர்.

குர்கான், தெற்கு டெல்லியின் சில பகுதிகள், தெற்கு மும்பை, பாந்த்ரா முதல் அந்தேரி வரையிலான புறநகர் பகுதிகள், பெங்களூருவின் இந்திரா நகர், கோரமங்கலா, புறவழிச் சாலையின் வேலியிடப்பட்ட குடியிருப்புகள் ஆகியவற்றில் இவர்கள் அதிகமாக காணப்படுவார்கள்.

பொருளாதார ரீதியாக மேல்தட்டு 1%-ஐ சேர்ந்த இவர்கள் மேற்கத்திய நடுத்தர வர்க்கத்தைப் போல் செலவு செய்ய வல்லவர்கள். தங்களது பிள்ளைகளை ஆர்யன், கபீர், கைரா, ஷானயா, தியா என்ற சர்வதேசிய யோகா பெயர்களைக் கொண்ட சர்வதேசப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள்.

ஒட்டு மொத்த மக்கள் தொகையில், தோராயமாக, 4 லட்சம் இந்திய ஆங்கிலேயர் குடும்பங்கள் இருப்பதாக நான் மதிப்பிடுகிறேன். துல்லியமான புள்ளிவிவரங்கள் கிடைக்கா விட்டாலும், 2001-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் படி 2.26 லட்சம் குடும்பங்கள் மட்டுமே ஆங்கிலத்தை தங்கள் பேச்சு மொழியாகக் கொண்டுள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் தோன்றிய இந்த வர்க்கம், அடுத்து வரும் 5 முதல் 7 ஆண்டுகளில், எண்ணிக்கையில் இரு மடங்காக உயரும். இதன் விளைவாக ஆங்கிலக் கல்விக்கான தேவை அதிகரித்து, மேற்கத்திய நாகரிகமும், கலாச்சாரமும் வளரும், [மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : இப்படி இந்துக்களே பெரும்பான்மையாக இருக்கும் இந்த வர்க்கம் அதிகரித்தால், கலாச்சாரக் காவலர்களான சங்கிகள் என்ன செய்வார்கள்!!!] சாதி கடந்த கலப்புத் திருமணங்கள் அதிகரிக்கும்.

இந்திய ஆங்கிலேயர் குடும்பங்களின் வளர்ச்சி, நம் சமூகத்தின் மீதும், தொழில்/ நிர்வாகம் மீதும் பாரிய விளைவுகளை உண்டாக்கும்.

சமூக ரீதியில், நடக்கும் கலப்புத் திருமணங்கள், இரு உயர்சாதி குடும்பங்கங்களுக்கு இடையிலானதாக அமையலாம். அல்லது வரலாற்று ரீதியில், கீழ் சாதியாக இருப்பினும், ஆதிக்க சாதியினராக இருப்பினும், அங்கும் இந்தக் கலப்பு நடக்கும். அந்தப் புது வர்க்கத்துக்குள் சேர்ந்து கொண்டதும் இவர்களது சாதிய அடையாளம் மாறிவிடுகிறது. எவ்வித சாதி, மத சடங்குகளையும் பின்பற்றாமல் சாதி அடையாளங்களை துறந்து இச்சமூகம் வாழ்கிறது.

இப்பிரிவினரில் சைவப் பழக்கமுள்ளவர்கள், தங்களது இணையின், அசைவப் பழக்கத்தை அங்கீகரிக்கிறார்கள். பொதுவாக, இக்குடும்பங்களில், சைவ உணவு பழக்கம் ஒரு அறமாக பின்பற்றப்படுகிறது, அதற்கு எந்த மத அடையாளமும் அவர்கள் கற்பித்துக்கொள்வதில்லை. சாதிய அடையாளங்களைத் துறந்து வாழும் இவர்களுக்கு, அவர்களது மந்தையில் ஒரு புது ஆட்டை சேர்த்துக்கொள்வதற்கு ஆங்கிலப் புலமை மட்டுமே காரணியாக விளங்குகிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள், போதுமான ஆங்கில அறிவும், மேற்கத்திய கலாச்சாரம் பற்றியும் அறிந்திருந்தால் இவர்களோடு ஐக்கியப்பட்டு விடலாம். ஏனெனில், இந்த புதிய சாதிப் பிரிவு பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பதில்லை.

இந்த வகுப்பினர், பாரம்பரிய முறைகளையோ, மத விழுமியங்களையோ கடைபிடிப்பதில்லை. அவர்களது ஆன்மீகத் தேடலுக்கு, ஸ்ரீ ஸ்ரீ ரவி ஷங்கர், ஜக்கி வாசுதேவ் போன்றோரை நாடிப் போகின்றனர். இந்தப் பிரிவினர் அதிகரிக்க அதிகரிக்க, இவர்களை போன்ற சாமியார்களும் அதிகரிக்கும் அவசியம் தோன்றும். இவர்கள் இந்து குருக்களிடம் மட்டும் அடைக்கலம் தேடுவதில்லை, சோகா கக்காய் போன்ற பிற மத குருக்களையும் பின்பற்றுகிறார்கள்.

இந்த இன மக்கள் வளர்ச்சியின் கூடவே, பல்வேறு வணிகங்களும் வளர்கின்றன. குறிப்பாக ஊடகம் மற்றும் கல்வித்துறை வளர்ந்து இவர்களது வருமானத்தை சுருட்டிக்கொள்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், இந்த இன மக்களுக்காகவே பிரத்யேகமான கல்விமுறைகள் உருவாக்கப்பட்டன. 90களில் இது போன்ற பள்ளிகள் தொடங்கப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றன. கடந்த தலைமுறை பெற்றோர்கள் முண்டியடித்து முன்னேறிய நிலையை போலன்றி, இந்தத் தலைமுறை பிள்ளைகள் மிகவும் சாதுவான, பன்முகத் திறமைகள் வாய்க்கப்பெற்ற பிள்ளைகளாக உருவாக்கப்பட்டனர். கல்லூரிப் படிப்புக்கு வெளிநாடு சென்று விடுவதற்கு இது போதுமானதாக இருந்தது.

பட்டப்படிப்புக்கு இந்தியாவில் தங்கி விடுவோர், அதிகம் போட்டியில்லாத, நேஷனல் சட்டக் கல்லூரி, சிருஷ்டி டிசைன் இன்ஸ்டிட்யூட், சிம்பயாஸிஸ் சர்வதேச கல்லூரி, மணிபால் பல்கலைக் கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்கின்றனர். காலப் போக்கில் இங்கும் போட்டி அதிகரித்தவுடன், ஷிவ் நாடார், ஓபி ஜிண்டால், பி.எம்.எல், முஞ்சல் போன்ற கார்ப்பரேட்டுகள் தொடங்கி நடத்தும் கல்வி நிறுவனங்கள் பிரபலமாகின. கடுமையான போட்டி நிலவும் நுழைவுத் தேர்வுகள் ஏதுமின்றி, சர்வதேச முறைகளைக் கொண்டு மதிப்பீடு செய்து இடம் வழங்கப்படுகிறது. போட்டிகள் அதிகமற்ற, முழுமையான, ஆளுமைகளாக உருவாக இந்த வகை கல்விமுறை உதவுகிறது.

கல்வி, ஊடகம் ஆகிய துறைகளைப் போல், இயற்கை/ ஆரோக்கிய உணவு வகைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்ற பிற வணிகங்கள் இந்த இன மக்களைக் குறி வைக்கின்றன. ஆனால், 25 லட்சம் முதல் 30 லட்சம் பேர் கொண்ட இந்த பிரிவினரைக் குறி வைத்து துவங்கி நடத்தப்படும் தொழில்கள், ஒரு குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு தேங்கி விடுகின்றன.

தங்களை ஒத்த பிற நடுத்தர மக்களைக் காட்டிலும் கூடுதல் விலை கொடுத்து இப்பொருட்களை வாங்குவது ஒரு அந்தஸ்தைத் தருவதாக இவர்களால் பார்க்கப்படுகிறது. இந்தப் பொருட்களைப் பயன்படுத்துவது தங்களுக்குப் பிரத்யேக அடையாளத்தைத் தருவதாகக் கருதிக்கொள்கின்றனர்.

தேர்தல் அரசியல், அரசின் கொள்கை முடிவுகள் ஆகியவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு இந்தப் பிரிவினர் இன்னும் வளரவில்லை. சட்ட அணுகுமுறை, என்.ஜி.ஓ பாணி போராட்டத்தில் ஈடுபடுவது, ஊடக கவனத்தை ஈர்ப்பது போன்ற செயல்கள் தான் இவர்கள் தேர்வு செய்யும் பாதை.

தேர்தல அரசியலில் பங்கெடுக்காவிட்டாலும், இவர்கள் ஐ.ஏ.எஸ் ஆகவும், பிற அதிகார வர்க்கங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். நிதி ஆயோக், அடல் இன்னோவேஷன் மிஷன் போன்ற நிறுவனங்களில் உட்புகுந்து ஆதிக்கம் செய்கின்றனர்.

வெளி மாநிலத்தில் வசிக்கும் இவ்வின மக்கள், கோவாவில் முதலீடு செய்து வீடு வாங்குகின்றனர். அங்கு நிலவும் மேற்கத்திய கலாச்சாரம், உணவு விடுதிகள், கடற்கரை, அவ்வின மக்கள் அதிகம் வசிப்பது ஆகிய காரணங்கள், இவர்களை கோவாவை நோக்கி இட்டுச் செல்கின்றன. பணி ஓய்வுக்குப் பிறகு கோவாவில் குடியேறுவதும் அதிகரித்துள்ளது. அடுத்தபடியாக, மேகாலயாவிலும் இந்த இன மக்கள் குடியேற்றம் நடக்கிறது. எனினும், இப்பகுதி, நகர்ப்புறத்திலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், உயர்குடி இந்திய ஆங்கிலேயர்கள் இங்கு சென்று குடியேறுவது அரிது.

குர்கான், மும்பையின் சில பகுதிகள், பெங்களூரின் சில பகுதிகளில் வசிக்கும் இவர்கள், தேர்தல் அரசியலில் பெரும் பங்கு ஆற்றாவிட்டாலும், கொள்கை முடிவுகளை எடுக்கும் இடத்தில் ஆக்கிரமித்திருப்பதால், தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமல் இருப்பது பற்றி இவர்கள் அதிகம் கவலை கொள்வதில்லை.

எண்ணிக்கையில் அதிகம் இல்லாத இந்த இன மக்கள், மிகவும் பிரபலமானவர்களாக இருப்பது ஒரு முரண். இருப்பினும் இவர்களது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, இவர்கள் ஒரு தனிப்பெரும் வர்க்கமாக, சாதியாக உருவாகி, தங்களுக்கென பிரத்யேகத் தேவைகள், நடத்தை, கவலைகள், விருப்பங்களைக் கொண்டுள்ளனர்.

இவர்கள் தங்களை ஒரு தனி சாதியாக அடையாளப் படுத்திக் கொள்ளாவிடினும், அவர்களுக்குள் மட்டும் திருமணங்கள் செய்து கொள்வது, ஆங்கிலம் பேசும் திறனையும், மற்ற இந்திய ஆங்கிலேய ஆங்லியன் மக்களுடன் பழக முடிவதையும் நிபந்தனையாக கொண்டுள்ளது.

இவை நால்வர்ண சாதியினருக்கு அதிகம் வாய்க்கப் பெற்றிருந்தாலும், வரலாற்று ரீதியாக, கீழ் சாதியாகக் கருதப்பட்டோரும், கலப்பு மணங்களின் மூலம், தங்களது சாதி அடையாளங்களிலிருந்து, இந்த புதிய அடையாளத்தை வரித்துக் கொண்டு “நம்மில்” ஒருவராக அவர்களால் ஆக முடிகிறது.

இந்த இனம் எண்ணிக்கையில் அதிகரித்து, பரிணமித்து, இந்த இந்தியக் குடியரசை எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறது என்பது மிகுந்த ஆவலுக்குரிய நிகழ்வாக உள்ளது!

தமிழாக்கம் : பிரியா
மூலக்கட்டுரை Indo-Anglians: The newest and fastest-growing caste in India
நன்றி : new-democrats

மாணவர்கள் இளைஞர்களிடம் பகத்சிங் 111-வது பிறந்தநாள் விழா !

1
  • ” மாணவர்கள் – இளைஞர்களை சீரழிக்கும் குட்கா போதைக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்.
  • விவசாயம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை ஒழித்து நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் மோடி அரசின் அநீதிக்கெதிராக பகத்சிங் வழியில் மாணவர் சங்கமாக ஒன்றிணைவோம் ! ”

என்ற உறுதியேற்பு நிகழ்வாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் பிறந்தநாளை கடைபிடித்தனர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர்.

* சென்னையில் மதுரவாயல் ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகில் 29.9.2018  அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், இசை சமர் பறை இசைக்குழுவின் தப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. மதுரவாயல் பிள்ளையார் கோவில் பகுதி செயலாளர் தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகர செயலாளர் தோழர் சாரதி கொடியேற்றி, உரையாற்றினார். இறுதியில் இனிப்பு வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, அன்று மாலை மதுரவாயல் இ.பி. அலுவலகம் அருகில் தெருமுனைக்கூட்டம் 6.30 மணியளவில் இசை சமர் பறை இசைக்குழுவின் தப்பாட்டத்துடன் தொடங்கியது. போதையில் கலாச்சாரத்தில் சீரழிக்கப்படும் இளம் தலைமுறை என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. ம.க.இ.க பாடல்களைத் தோழர்கள் பாடினர். இக்கூட்டத்தில் பகுதி மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடலூர் மாவட்ட பு.மா.இ.மு. சார்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் பகத்சிங்கை பற்றியும், அவருடைய தியாகத்தை பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.

* விருத்தாசலம் பகுதி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மணவர்கள் மத்தியில் பகத்சிங் படத்தை ஏந்தி, அவர் வழியில் பயணிக்க உறுதியேற்று பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர்.

* குடந்தையில், தோழர் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில், குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கி பகத்சிங் பிறந்தநாளைக் கொண்டாடினர். பகத்சிங்கின் தியாகத்தையும், விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பையும் கூறி, இன்றைய சூழலில் நமக்கு ஏன் பகத்சிங் தேவைப்படுகிறார் என்பதை மாணவர்களிடையே விளக்கி உரையாற்றினர்.

படிக்க:
♦ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
பகத்சிங் – புதிய சிந்தனையின் பிறப்பு

தகவல்:

தமிழ்நாடு.

மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி | கேலிச்சித்திரம்

செய்தி: துல்லியத் தாக்குதல் நினைவு தினம்: ஜோத்பூரில் இராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. உண்மையில் அந்தக் கண்காட்சியில் இடம்பெற வேண்டிய காட்சிகள் எவை?

மோடியின் ‘துல்லியத் தாக்குதல்’ தினக் கண்காட்சி

கருத்துப்படம்: வேலன்

படிக்க:
♦  தேசிய கீதம் போட்டாச்சு எழுந்து நில்லுடா ! – ம.க.இ.க. புதிய பாடல் !
♦  பெண் கல்வி : பாகிஸ்தான் மாதாவிடம் தோற்ற பாரத மாதா !

இணையுங்கள்: