Monday, June 29, 2026
முகப்பு பதிவு பக்கம் 334

சிந்துச் சமவெளி நாகரீகத்தின் குடிகள் யார் ? புதிய ஆதாரங்கள் !

indus-valley-civilization

இன்று (06.09.2019) அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மிக முக்கியமான நாள். சிந்துச் சமவெளியில் வசித்த மக்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்ற கேள்விக்கு மரபணு ரீதியாக ஓரளவுககு விடை கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக இரு கட்டுரைகள் உலகின் மிகச் சிறந்த ஆய்விதழ்களில் வெளியாகியிருக்கின்றன. முதலாவது கட்டுரை ‘The Genomic Formation of South and Central Asia’ என்ற தலைப்பில் Science இதழிலும் இரண்டாவது கட்டுரை Cell இதழிலும் வெளியாகியிருக்கிறது. இந்தக் கட்டுரை, ஹரப்பாவில் கிடைத்த எலும்புக்கூட்டை மரபணு ரீதியாக ஆய்வுசெய்து முடிவுகளை வைத்து எழுதப்பட்ட கட்டுரை.

முடிவுகள் இதுதான். அதாவது, ஹரப்பா நாகரீகத்தில் வசித்தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி மற்றும் இரானிய விவசாயிகளின் மரபணு இல்லை. இதன் அர்த்தம் என்னவென்றால், ஸ்டெப்பி புல்வெளி மரபணுவைக் கொண்டவர்கள், ஹரப்பா நாகரீகம் மறைந்த பிறகே இந்தியாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன்தான் இந்தோ – ஐரோப்பிய மொழியும் இந்தியாவுக்கு வந்திருக்கிறது.

Indus valley Civilizationஇரானிய விவசாயிகளின் மரபணுவும் இல்லை என்பதற்கு அர்த்தம், விவசாயம் உலகில் எங்கும் தோன்றும் முன்பே மேற்காசியாவிலிருந்து மனிதர்கள் இந்தியாவுக்கு வந்து, ஹரப்பா நாகரீகத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

ஆகவே ராக்கிகடியில் கிடைத்த டிஎன்ஏ முடிவுகளின்படி, ஹரப்பா நாகரிகத்தில் வசித்தவர்கள் ஆரம்பகால இந்தியர்களும் மேற்காசியாவிருந்து வந்தவர்களும்தான். அவர்கள் வாழ்ந்த காலத்தில் இந்தோ – ஆரிய மொழிகளைப் பேசிய ஸ்டெப்பி புல்வெளிவாசிகள் இந்தியாவில் இல்லை.

இதற்கடுத்த மற்றொரு விஷயமும் முக்கியமானது. அதாவது “Our findings also shed light on the origin of the second-largest language group in South Asia, Dravidian…The strong correlation between ASI ancestry and present-day Dravidian languages suggests that the ASI, which we have shown formed as groups with ancestry typical of the Indus Periphery Cline moved south & east…after the decline of the IVC to mix with groups with more AASI ancestry, most likely spoke an early Dravidian language.” என்று குறிப்பிட்டிருக்கிறது.

படிக்க :
♦ ஒலி வடிவில் செய்தி அறிக்கைகள் – செப்டம்பர் 2019 முதல் பாகம் | டவுண்லோடு
♦ சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு !

இதைச் சுருக்கமாக தமிழில் சொன்னால், “எங்களது கண்டுபிடிப்பு இன்னொரு விஷயத்தையும் சுட்டிக்காட்டுகிறது. அதாவது, தெற்காசியாவில் இரண்டாவது மிகப் பெரிய மொழிக் குழுமமான திராவிட மொழிக் குழுமத்தின் தோற்றம் பற்றியது இது. ஆதிகால தென்னிந்திய மூதாதையருக்கும் (ASI) தற்போதைய திராவிட மொழிகளுக்கும் இடையில் உள்ள பரஸ்பர ஒற்றுமையை வைத்துப் பார்க்கும்போது ஒரு விஷயம் புலனாகிறது.அதாவது, ஆதிகால தென்னிந்திய மூதாதையர் என்பவர்கள், சிந்துச் சமவெளி நாகரிகம் (IVC) மறையத் துவங்கியபோது கிழக்கிலும் தெற்கிலும் பரவி, மிக ஆதிகால தென்னிந்தியர்களுடன் (AASI) கலந்தனர். இவர்கள், ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசியிருக்கக்கூடும் ”

சுருக்கமாகச் சொன்னால் :

1. சிந்துச் சமவெளி காலத்திற்குப் பிறகே ஸ்டெப்பி புல்வெளி பகுதிகளிலிருந்து கங்கைச் சமவெளிக்கு ஆட்கள் வந்தனர்.

2. சிந்துச் சமவெளி மக்களுக்கும் தென்னிந்தியர்களுக்கும் தொடர்பு உண்டு. இவர்கள் ஆரம்பகால திராவிட மொழிகளைப் பேசினர்.

இது தொடர்பாக மேலும் படிக்க, மிகவும் புகழ்பெற்ற Early Indians புத்தகத்தை எழுதிய டோனி ஜோசப்பின் ட்விட்டர் பக்கத்தை பார்க்கவும்.

ஆய்வு முடிகளுக்கான இணைப்புகளும் உள்ளன.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தி பிரிண்ட் இணைய இதழும் தி எகனாமிக் டைம்ஸ் இதழும் இதனைத் தவறாக ரிப்போர்ட் செய்திருப்பதுதான். அதாவது, ராக்கிகடி எலும்புக்கூட்டில் ஸ்டெப்பி புல்வெளி மனிதனின் டிஎன்ஏ இல்லை என்பதை வைத்துக்கொண்டு, ஆரியர்கள் வெளியிலிருந்து வரவில்லை என்பதாக எழுதியிருக்கிறார்கள்.

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

disclaimer

மதுரை : தந்தை பெரியாரின் 141 -வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம் !

தந்தை பெரியார் சிந்தனையை உயர்த்திப் பிடிப்போம் ! கார்ப்பரேட் காவி பாசிசத்தை போராடி வீழ்த்துவோம் !

தந்தை ஈ.வெ.ரா. பெரியாரின் 141 – வது பிறந்த நாள் – அரங்கக் கூட்டம்

நாள் : 15.09.2019 ஞாயிறு மாலை 5.30 மணி
இடம் : மூட்டா அரங்கம், காக்கா தோப்பு, மதுரை.

தலைமை :

தோழர் கதிரவன்
மாநில செயற்குழு உறுப்பினர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

வரவேற்புரை :

தோழர் இராமலிங்கம்
அமைப்பாளர், ம.க.இ.க. மதுரை மாவட்டம்.

கருத்தாளர்கள் :

பேராசிரியர் மு. இராமசாமி
நிறுவனர், நிஜ நாடக இயக்கம். மதுரை.

வழக்கறிஞர் பெ. கனகவேல்
செயலாளர், சமநீதி வழக்குறைஞர்கள் சங்கம்.

தோழர் N. வீரபாண்டியன்
முன்னாள் மாநிலச் செயலாளர் AIBSNLAE, தமிழ்நாடு.

Madurai-Pala-Periyar-Birth-Slider

ந்தியா பல்வேறு தேசிய இனங்கள், மொழிகள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்ட நாடு ஆனால், கரும்புத் தோட்டத்தில் மதயானை புதுந்ததுபோல் காவி கார்ப்பரேட் கும்பல் குறிப்பாக தமிழக மக்கள் மீது கடும் தாக்குதலை தொடுத்திருக்கிறது.

ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே ரேசன் கார்டு இப்படி அறிவிப்புகள் தொடர்கின்றன. மேலும் ஒரே… ஒரே என்று தொடர்ந்தால் அது ஒரே கட்சி ஒரே தலைவன் என்று போய் நிற்கும்! ஒரே கட்சி பாரதிய ஜனதா. ஒரே தலைவர் மோடிதான்! பாரதிய ஜனதா பிற அரசியல் கட்சிகளைப் போன்றதல்ல, பிரதமர் மோடியும் பிற கட்சித் தலைவர்களைப் போன்றவர் அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கும் ஒரு கட்சி தான் பாரதிய ஜனதா! கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அரசியல் அடையாளம்தான் பிரதமர் மோடி!

ஒரு தேசிய இனத்தின் அடையாளம் மொழி. சமஸ்கிருதம்-இந்தி திணிப்பு ஏதோ தற்செயலானது அல்ல. திட்டமிட்ட திணிப்பு. 1937-ல் அப்போதைய சென்னை மாகாண பிரதமர் இராஜாஜி இந்தியை பள்ளிகளில் கட்டாயப் பாடம் என அறிவித்தார். இது தமிழர்களுக்கான கல்வி மறுப்பு. தமிழுக்கு அழிவு. இதை அனுமதிக்க முடியாது என தந்தை பெரியார் மக்களைத் திரட்டிப் போராடினார். சுமார் 2,250 பேர் கைது செய்யப்பட்டனர். வரலாற்றில் முதன்முதலில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட இந்தி எதிர்ப்பு போராட்டம் இதுவே! பெரியாருக்கு இரண்டு ஆண்டு சிறை! 2,000 ரூபாய் அபராதம்.

படிக்க:
பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?
பெரியார் பிறந்த நாள் : இந்து மதவெறி பயங்கரவாதத்தை முறியடிப்போம் !

இன்றைக்கு மீண்டும் இந்தி – சமஸ்கிருதத் திணிப்பு! தமிழ் இனம், மொழியின் மீது காவி கார்ப்பரேட்டுகளின் அடுத்தடுத்து தாக்குதல்! கடந்த ஐந்து ஆண்டுகளில் தலித்துகள், இசுலாமியர்கள், பெண்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. சென்ற ஆண்டு ஆர்.எஸ்.எஸ் கும்பல் கேரளாவில் ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையக் கூடாது என கூச்சல் கூப்பாடு. ஆர்ப்பாட்டம்!

வாழ்நாள் முழுவதும் தந்தை பெரியார் பார்ப்பனியத்தை எதிர்த்துப் போராடினார். பார்ப்பனியம் என்பது வெறும் சாதி மட்டுமல்ல, இந்துத்துவாவின் சிந்தாந்த உள்ளடக்கம். நாளை அமைக்கப்போவதாகச் சொல்லும் “இந்து ராஷ்டிரத்தின்” மனுநீதி! அதுதான் அவர்களின் அரசியல் சட்டம்.

கேரளாவில் வைக்கம் போராட்டம் வரலாற்று சிறப்புமிக்கது. போராட்டத்தை பெரியார் தலைமை தாங்கி நடத்தினார். 1924 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் வெடித்தது. வைக்கம் மகாதேவன் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் ஈழவர், தீயர், புலையர், பறையர் நடக்கக் கூடாது என சட்டம் இருந்தது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள்! அந்த தீண்டாமைக் கொடுமைச்சட்டம் ரத்துச் செய்யப்பட்டது. போராட்டகளத்தில் பெரும் வெற்றியை ஈட்டினார் பெரியார்!

பெரியார் வெறும் கடவுள் மறுப்பாளர் மட்டுமல்ல! சமூகநீதி, பெண் உரிமை, பெண் விடுதலை, மூடநம்பிக்கை ஒழிப்பு, மொழி உரிமை, தேசிய இன உரிமை, பண்பாட்டு உரிமை, சம உரிமை, சம வாய்ப்பு என அவரது களம் பரந்து விரிந்தது சமூகத்தின் அத்தனை நிகழ்வுகளையும் பகுத்துப் பார்க்கும் தொகுப்புத்தான் பெரியார் ! எங்கெல்லாம் ஒடுக்குமுறை இருந்ததோ அங்கெல்லாம் சென்று போராடும் போராளியாக களத்தில் நின்றார்!

இன்று கார்ப்பரேட் காவி பாசிச இருள் படர்ந்து வருகிறது. பெரியார் சிந்தனை சுடரை ஏந்துவோம்! கார்ப்பரேட் காவிப் பாசிச சக்திகளை போராடி வீழ்த்துவோம்!

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
மதுரை, தொடர்புக்கு : 97916 53200

பணமதிப்பழிப்பு : இன்னும் என்னென்ன பாடுபடுத்துமோ ?

Demonetisation

‘குற்றாலத்தில் இடி, இடித்து.. கும்பகோணத்தில் மழை பெய்த’ கதையாக மோடி செய்த டிமாண்டைசேஷன் அத்தனை தொழில்களையும் பதம் பார்த்துவிட்டது. இதில் இன்னொரு உதாரணம் இந்தக் கதை.

எப்போதும் நான் முடிவெட்டுவது வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு டீஸண்ட்டான சலூன் கடையில். ஏஸி வசதியுண்டு என்பதாலும், செலவும் நமக்குக் கட்டுப்படியாகும் அளவுக்கு இருப்பதாலும் தொடர்ந்து வாடிக்கையாளராக மாறிப் போனேன். அந்தக் கடையைத் திறந்து 2 வருடங்கள்தான் ஆனது.

சென்ற மாதம் கடைசியில் கடைக்குச் சென்றபோது புது ஆட்கள் கடையை மராமத்து பணிகளைச் செய்து கொண்டிருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் “திங்கள்கிழமை அன்னிக்கு புதுசா ரீ ஓப்பன் செய்றோம் ஸார். வந்திருங்க..” என்றார்கள்.

மாதிரிப்படம்

சரி.. விநாயகர் சதுர்த்தி அதுவுமா பெரியப்பனுக்கு முடியைக் காணிக்கையாக்கிருவோம் என்று நினைத்து நேற்றைக்குச் சென்றேன். கடையில் அனைவருமே புதுமுகங்கள். “எங்கப்பா பழைய ஆள்..?” என்றேன். “அவர் கடையை வித்திட்டுப் போயிட்டாருங்க. நாங்க இப்போ புதுசா வாங்கியிருக்கோம்..” என்றார்கள்.

அதிர்ச்சியாக இருந்தது. பழைய நண்பரான கார்த்திகேயன் மிகவும் சின்சியரான மனிதர். நமக்குப் பிடித்தால் மட்டும்தான் டிவியை ஆன் செய்வார். இல்லையென்றால் நிறுத்திவிடுவார். இடையில் செல்போனில் அழைப்பு வந்தாலும் எடுக்க மாட்டார். கடைக்குள் இருந்து யாராவது பேசிக் கொண்டேயிருந்தால் “பத்து நிமிஷம் கழித்து பேசுவோம்…” என்று பேச்சை நிறுத்துவார். இந்த மாதிரி குணங்களே நமக்கு மிகவும் பிடித்திருந்தது.

இப்போதைய புதிய ஆட்களும் அதே கட்டணத்தைத்தான் வாங்கினார்கள். முடி வெட்டுதல், ஷேவிங், டையிங் மூன்றுக்கும் சேர்த்து 300 ரூபாய்தான். ஸ்பீடு இல்லை என்றாலும் சரியாகவே இருந்தது இவர்களின் வேலை.

நன்றி சொல்லிவிட்டு அவர்களிடத்திலேயே பழைய முதலாளியான கார்த்திகேயனின் போன் நம்பரை வாங்கி அவரை அழைத்தேன்.

தொழிலை விட்டுவிட்டுச் சென்ற கதையைக் கேட்டேன். ஒரு பாட்டம் அழுது தீர்த்தார்..

படிக்க:
காஷ்மீர், நர்மதா : ஜனநாயகத்தை நொறுக்குவதற்கான சோதனைச் சாலைகள் !
♦ 50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

“4 லட்சம் ரூபா செலவு செஞ்சு அட்வான்ஸ் கொடுத்து புது கலர் அடிச்சி, சோபா வாங்கி.. பெரிய, பெரிய டீலக்ஸ் கடைகள்ல இருக்குற மாதிரி எக்யூப்மெண்ட்ஸெல்லாம் வாங்கி வைச்சேன் ஸார்.. கடைல ஆளும் போட்டிருந்தேன். உங்களுக்கே தெரியும். கடைக்கு செலவே மாதம் 35,000 ஆச்சு.

முதல்ல நல்லாத்தான் இருந்துச்சு.. தினத்துக்கு 2000-ல் இருந்து 3000-ரூபா வரைக்கும் வந்துக்கிட்டிருந்தது. அப்புறம் அந்த டிமாண்டடிசேஷன் வந்துச்சு பாருங்க. அன்னிக்கு ஆரம்பிச்சது பிரச்சினை.

“கைல காசில்லை. பேங்க்ல எடுக்கணும். அப்புறம் மேல கடைக்குப் போயிக்கலாம். அப்புறம் மொத்தமா முடியை வெட்டிக்கலாம்”ன்னு நினைச்சு ஷேவிங் செய்ய மட்டு்ம் கடைக்கு வந்தவங்ககூட நிக்க ஆரம்பிச்சாங்க..

அதுவே அவங்களுக்கு வசதியா போனதால முதல் ஆளா ஷேவிங்குக்கு மட்டும் வர்ற ஆட்கள் மட்டும் சுத்தமா நின்னுட்டாங்க. அப்புறம் முடி வெட்டுறது.. டை அடிக்க.. பேஷ் ப்ளீச்சீங் செய்யன்னு மட்டும் வந்தவங்களும் மாசத்துக்கு ஒரு தடவைன்னு குறைய ஆரம்பிச்சாங்க..

Demonetisationஇப்போ டை அடிக்கவும் ஷாம்பூ மாதிரியே ஜெல் வர ஆரம்பிச்ச உடனேயே அதுக்கு இருந்த கூட்டமும் குறைய ஆரம்பிச்சிருச்சு.. பிளீச்சிங்கிற்கு வந்தவங்களும் காசில்லை.. காசை மிச்சப்படுத்தணும்னு குறைய ஆரம்பிச்சாங்க.

இப்போ கடைசி சில மாதங்களாக வந்தவங்க எல்லாரும் முடி வெட்டுறதுக்கு மட்டும்தான். அதுலேயும் முடி வெட்டும்போது தேவைன்னா ஷேவிங் செய்வாங்க.. இப்படி பிஸினஸ் ஆட்கள் குறையக் குறைய.. எனக்கும் வரவு குறைஞ்சது..

முதல் ஆளா கடைல வேலை பார்த்த பையனை நிறுத்தினேன். நான் ஒரே ஆளே வேலை செஞ்சேன். காலை, மதியம், ராத்திரின்னு 3 பேர் மட்டுமே வர ஆரம்பிச்சாங்க.. ஒரு நாள் 1000-ம்ன்னா அடுத்த 3 நாட்களுக்கு 300 ரூபாய்க்கு மேல வரலை.. இதுல கடை வாடகை.. என் குடும்பச் செலவு.. இப்படி எல்லாமே பற்றாக்குறைல ஓடுச்சு..

ஏற்கெனவே விழுப்புரம் பக்கத்துல இருக்குற என் சொந்த ஊர்ல இருக்குற விவசாய நிலத்தை அடமானமா வைச்சு கடன் வாங்கித்தான் இதை ஆரம்பிச்சேன். இப்போ கடனையும் அடைக்க முடியலை.. இந்த எட்டு மாசமா கடன் வாங்கித்தான் வாழ்க்கையை ஓட்டிக்கிட்டிருக்கேன். இதுக்கு மேலேயும் முடியல ஸார்..

படிக்க:
பணமதிப்பழிப்பு மரணங்கள் : பதில் சொல்ல முடியாது என்கிறது பிரதமர் அலுவலகம் !
♦ இந்தியாவை குப்புறத் தள்ளிய பணமதிப்பழிப்பு : ”தி பிக் ரிவர்ஸ்” – நூல் அறிமுகம் !

அந்த 4 லட்சம் ரூபாய் கடன் இப்போ ஐந்தரை லட்சமா ஆகியிருக்கு. இப்போவரைக்கும் வட்டியைத்தான் நான் கட்டியிருக்கேன். அடுத்து என்ன செய்றதுன்னு தெரியலை ஸார்..

வீட்டம்மா புள்ளைகளைக் கூட்டிக்கிட்டு விழுப்புரத்துக்கே போயிட்டாங்க. எனக்கும் என்ன செய்றதுன்னு தெரியாமல் கடையை கை மாத்திவிட்டுட்டு வந்துட்டேன்.

கடைக்கு கொடுத்த அட்வான்ஸ், வீட்டுக்குக் கொடுத்த அட்வான்ஸ்ன்னு ஒரு லட்சம் ரூபாதான் கைல இருக்கு. இதை வைச்சு என்ன செய்றதுன்னு தெரியாமல் உக்காந்திருக்கேன் ஸார்..” என்றார்.

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை..!

நான் உட்பட மக்கள் பலரும் காசை மிச்சப்படுத்துவது தவறில்லைதான். ஆனால் திடீரென்று அது நிறுத்தப்பட்டால், இப்படி கடன் வாங்கி தொழில் செய்பவர்களின் நிலைமை பரிதாபமாகத்தான் இருக்கும்.

கட்டணத்தைக் குறைத்தால் அவர்களுக்குக் கட்டுப்படியாவதில்லை. கடை வாடகையே 15000 ரூபாய். கடையில் வேலை பார்க்க வருபவர்களுக்கு 15000 ரூபாய் சம்பளம் கொடுத்தாக வேண்டும். அதற்குக் குறைந்து யாரும் வருவதில்லையாம்.

மின் கட்டணம், பராமரிப்புக் கட்டணம், குடும்பச் செலவுகள் என்று பார்த்தால் இது போன்ற ஒரு கடைக்காரருக்கு மாதம் 50000 ரூபாய் வருமானம் வந்தால்தான் அவரால் பிழைப்பை நடத்த முடியும்.. இல்லையெனில்..?

நல்லா போயிட்டிருந்த எல்லா தொழில்களிலும் மண்ணையள்ளிப் போட்டது மோடி என்னும் கேடியின் இந்த டிமாண்ட்டிசேஷன் என்னும் நாணய மதிப்பிழப்புத் திட்டம்தான். அது அப்போது தெரியவில்லை. இப்போது பல தொழில்களையும் அது அழித்துக் கொண்டிருக்கிறது.

கடைசியில், இதன் முடிவு என்னவாகத்தான் இருக்கும் என்று யாருக்காச்சும் தெரியுமா..?

நன்றி : ஃபேஸ்புக்கில் Saravanan Savadamuthu 

மாணவர் கிருபாமோகன் நீக்கம் – அண்ணாமலை பல்கலை மாணவர்கள் போராட்டம் !

0
chidambaram-annamalai-university-protest

சென்னை பல்கலையில் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டத்தைச் சேர்ந்த மாணவர் கிருபாமோகன் நீக்கம் ! சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் !

சென்னை பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு மாணவர் கிருபாமோகன் தத்துவவியல் – பவுத்தத் துறையில் சேர்ந்துள்ளார். கடந்த ஒருமாதமாக கல்லூரிக்கு முறையாகச் சென்று பயின்று வந்த நிலையில், இருவாரங்களுக்கு முன்னர் ஒருநாள் அவரது துறைத்தலைவர் அழைத்து, கிருபா மோகனை கல்லூரியில் இருந்து வெளியேற்ற ஆளுநர் மாளிகை மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் தரப்பில் இருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும் தனது பணிக் காலத்தில் இத்தகைய அழுத்தத்தை சந்தித்ததில்லை எனவும் தெரிவித்தார். அதற்குக் காரணமாக கிருபா மோகன் அதே கல்லூரியில் கடந்த ஆண்டு இதழியல் படிக்கையில் கல்லூரியில் இயங்கும் அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்பாட்டாளராக இருந்ததுதான் காரணம் என்றும் தெரிவித்தார்.

Kiruba-mohan
மாணவர் கிருபாமோகன்

கடந்த வாரத்தில் கிருபா மோகனைக் கூப்பிட்டு அவரது சேர்க்கைக்கான ஆவணங்கள் பற்றாக்குறையாக இருப்பதைக் காரணம் காட்டி, அவரை கல்லூரியில் நீக்குவதாக ஒரு கடிதத்தை நீட்டியிருக்கிறார் துறைத் தலைவர்.

ஆனால், உண்மையான காரணம், கல்லூரி வளாகத்தில்  பல்கலைக்கழக மாணவர்களின் அடிப்படை பிரச்சனைக்கு குரல் கொடுப்பது என்பதோடு மட்டும் அல்லாமல் ஹைட்ரோகார்பன், எட்டுவழிசாலை, அணுக்கழிவு, பொள்ளாச்சி மாணவிகளை சீரழிந்த கும்பலுக்கு எதிராக போராட்டம் தொடங்கியது என தொடர்ந்து மாணவர்களுக்காகவும் சமூகத்துக்காகவும் போராடியுள்ளார். கல்லூரியில் உள்ள ஆசிரியர்களை மிரட்ட வந்த ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலை, மாணவர்களைத் திரட்டி விரட்டியடித்துள்ளார். இதுதான் RSS- BJP சங்கிகளுக்கு பிரச்சினை. அதனால்தான் ஆளுனர் மாளிகையில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்ற்னர். சென்னை பல்கலைக்கழகத்தின் இந்நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலை பல்கலைக்கழக அனைத்து மாணவர் கூட்டமைப்பு சார்பாக 06.09.2019 அன்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மாணவர்களின் கோரிக்கையாக:

  • மாணவர் கிருபாமோகனை பல்கலைக்கழகத்தில் எந்தவித நிபந்தனைகளும் இன்றி அனுமதிக்க வேண்டும்.
  • இதற்கு காரணமான ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் துரைசாமி ஆகியோர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
  • மாணவர்களின் கருத்திலோ, உரிமைகளிலோ பல்கலைக்கழக நிர்வாகம் தலையிடக்கூடாது.

என போராட்டத்தில் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
தொடர்புக்கு: 97888 08110

சிதைந்த கால்களுடனும் போர்முனைக்குச் செல்ல விருப்பம் !

உண்மை மனிதனின் கதை | மூன்றாம் பாகம் | அத்தியாயம் – 05

ஸ்தாலின் கிராத்! செய்தி அறிக்கையில் இந்தச் சொல் இன்னும் குறிக்கப்படவில்லை. ஆயினும் எல்லோருடைய வாய்களிலும் ஒலித்தது. 1942-ம் ஆண்டு இலையுதிர் காலத்தில் இந்தப் பெயர் கலவரத்துடனும் வேதனையுடனும் கூறப்பட்டது. நகரைப் பற்றி அல்ல, மரண ஆபத்தில் இருந்த நெருங்கிய நண்பனைப் பற்றி பேசுவது போல அதைப் பற்றி மக்கள் பேசிக் கொண்டார்கள். அந்த நகரின் அருகே ஸ்தெப்பியில் எங்கோ இருந்தாள் ஓல்கா. எத்தகைய துன்பங்களை அவள் அனுபவிக்க நேரிடுமோ, யார் கண்டது? இந்தக் காரணத்தினால் பொதுவாக எல்லோருக்கும் ஏற்பட்டிருந்த கலவரம் மெரேஸ்யேவுக்கு இன்னும் அதிகமாக உண்டாயிற்று. ஓல்காவுக்கு அவன் இப்போது தினந்தோறும் கடிதம் எழுதினான். ஏதோ ஒரு போர்க்களத் தபால் நிலையத்துக்கு விலாசம் இடப்பட்டிருந்த அவனது கடிதங்களுக்கு என்ன பொருள் இருக்க முடியும்? பின்வாங்கலின் அமளி குமளியில், வோல்காப் பிரதேச ஸ்தெப்பி வெளிகளில் தொடங்கியிருந்த அரக்கப் போரின் நரக நெருப்பில் இந்தக் கடிதங்கள் அவளுக்குப் போய்ச் சேருமா?

விமானிகளின் ஆரோக்கிய நிலையம் மிதிபட்ட எறும்பு புற்றுப் போலப் பதற்றமும் பரபரப்பும் அடைந்தது. ஒன்றுமே அறிவுக்கு எட்டவில்லை. வழக்கமாகப் படுக்கைவிட்டெழும் நேரத்துக்கு ஒரு மணி முன்னதாக, காலை ஏழு மணிக்கு வானொலிச் செய்தியைக் கேட்க மிக மிகச் சோம்பல் உள்ளவர்கள் கூடச் சென்று குழுமினார்கள். செய்தி விவரங்களில் விமானிகளின் சாகசச் செயல்களை குறிப்பிடுகையில் எல்லோர் முகங்களிலும் ஏக்கம் குடிகொண்டது. மனத்தாங்கல்களுடன் அவர்கள் மருத்துவத் தாதியிடம் குற்றம் பிடித்தார்கள், சிகிச்சை முறையையும் சாப்பாட்டையும் குறைக் கூறிச் சிடுசிடுத்தார்கள். போர் இவ்வளவு மும்முரமாக நடந்து கொண்டிருக்கையில் தாங்கள் ஸ்தாலின் கிராத் ஸ்தெப்பி வெளிகளில் சமர் புரிவதற்குப் பதிலாக இங்கே கண்ணாடி நீர் ஏரிக் கரையில், காட்டின் அமைதியில் வெயில் காய்ந்து கொண்டிருப்பதற்கு ஆரோக்கிய நிலைய நிர்வாகிகளே பொறுப்பாளிகள் என்பது போலிருந்தது விமானிகள் நடந்து கொண்ட விதம். முடிவில் இளைப்பாறுபவர்கள் தங்களுக்கு ஓய்வு தெவிட்டிவிட்டது என்று அறிவித்து, தங்களை உரிய காலத்துக்கு முன்பே போரிடும் படைப்பிரிவுகளுக்கு அனுப்பும்படி கோரினார்கள்.

விமானப் படைக்கு ஆட்கள் திரட்டும் குழுவினர் மாலைத் தறுவாயில் வந்தனர். இராணுவ மருத்துவச் சேவைப் பிரிவைச் சேர்ந்த சில கமாண்டர்கள் புழுதிபடிந்த மோட்டாரிலிருந்து இறங்கினார்கள். விமானப்படையில் பிரசித்தி பெற்றிருந்த முதல் வரிசை இராணுவ மருத்துவர் மிரொவோல்ஸ்க்கிய் முன் சீட்டிலிருந்து அதன் பின்புறத்தைப் பிடித்துக் கொண்டு சிரமத்துடன் எழுந்தார். பாரியான பருத்த சரீரமுள்ள இந்த மருத்துவர், விமானிகள் பால் தகப்பனார் போன்று பரிவு காட்டி வந்தமையால் அவர்களுடைய அன்புக்கு உரியவராக இருந்தார். விடுமுறையை நடுவில் நிறுத்திவிட்டு உடனே படைப்பிரிவு திரும்ப விருப்பம் உள்ள உடல் நலம் பெற்ற விமானிகளை தெரிந்தெடுக்கப்படுவது மறுநாள் காலையில் தொடங்கும் என்று இரவுச் சாப்பாட்டு நேரத்தில் அறிவிக்கப்பட்டது.

அன்று மெரேஸ்யேவ் பளபளவென்று விடியும்போதே எழுந்து, வழக்கமான உடற்பயிற்சி செய்யாமல் காட்டுக்குப் போய், காலை சிற்றுண்டி நேரம் வரை அங்கே சுற்றிக் கொண்டிருந்தான். சிற்றுண்டி வேளையில் அவன் எதையுமே சாப்பிடவில்லை. தட்டுக்களில் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டதற்காக உணவு பரிமாறுபவள் அவனைக் கடிந்து கொண்டாள். அதற்காக அலெக்ஸேய் அவளிடம் துடுக்காகப் பேசினான். அந்தப் பெண் அவனுக்கு நல்லதைத் தவிர வேறு எதையும் விரும்பவில்லை என்றும் அவளிடம் அவமரியாதையாகப் பேசுவது முறையல்ல வென்றும் ஸ்த்ருச்கோவ் கூறவே, அலெக்ஸேய் சடக்கென்று எழுந்து சாப்பாட்டு அறையிலிருந்து வெளியே போய்விட்டான். வழக்கத்தைவிட அதிகமாக நொண்டி நடந்தவாறு தன் அறைக்குப் போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டான்.

தேர்வுக் குழுவினர் ஹாலில் உட்கார்ந்து கொண்டார்கள். நுரையீரல் கொள்ளளவுமானி, வலிமைமானி, பார்வைச் சோதனைக்கான எழுத்துப் பட்டியல் முதலிய எல்லாவகைச் சாதனங்களும் அங்கே கொண்டுவரப்பட்டன. அடுத்த அறையில் ஆரோக்கிய நிலையத்தினர் எல்லோரும் குழுமியிருந்தார்கள். விடுமுறை முடிவதற்குமுன் படைப்பிரிவுகளுக்குத் திரும்ப விரும்பியவர்கள், அதாவது அநேகமாக இளைப்பாறுவோர் எல்லாருமே, மிக நீண்ட வரிசையாக அங்கே நின்றிருந்தார்கள். ஆனால் ஸீனா ஒவ்வொருவரது பெயரையும் தேர்வுக் குழுவிடம் போக வேண்டிய நேரத்தையும் குறித்த சீட்டுக்களை எல்லோருக்கும் வினியோகித்து அவர்களைக் கலைந்து போகும் படி கேட்டுக்கொண்டாள். முதல் நபர்கள் தேர்வுக் குழுவிடம் போய் வந்ததும், குழுவினர் பரிவுடனேயே பார்வையிடுவதாகவும் மட்டுமீறிக் குற்றம் கண்டுபிடிக்கவில்லை என்னும் வதந்தி பரவியது. வோல்கா பிரதேசத்தில் தீவிரமாகியிருந்த பிரமாண்டமான போருக்கு மேலும் மேலும் பிரயாசை தேவைப்பட்ட போது தேர்வுக் குழுவினர் எப்படிக் குற்றம் கண்டுபிடிப்பார்கள்? முன்வாயிலுக்கு எதிரே செங்கல் கைப்பிடிச் சுவர் மேல் கால்களை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தான் அலெக்ஸேய். எவனாவது வாயிலிருந்து வெளியே வந்ததும் விசேஷ அக்கறையும் இல்லாதவன் போன்ற பாவனையுடன் “என்ன ஆயிற்று?” என்று கேட்பான்.

“சண்டை போடுவோம்!” என்று போகிற போக்கில் சட்டைப் பொத்தான்களைப் போட்டுக் கொண்டோ, இடுப்பு வாரை இறுக்கிக் கொண்டோ சந்தோஷமாகப் பதிலளிப்பான் அவன்.

படிக்க:
மராட்டியம் : வரலாறு பாடநூல்கள் காவி மயமாக்கப்பட்ட வரலாறு !
காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

மெரேஸ்யெவுக்கு முன்பு தேர்வுக் குழுவிடம் போனான் புர்நாஸியான். கதவருகே கைத்தடியை வைத்துவிட்டு, இடமும் வலப்புறமுமாகத் தள்ளாடாமலும் குட்டைக் காலை அருத்திச் சாயாமலும் இருக்க முயன்றவாறு, உற்சாகத் தோற்றத்துடன் உள்ளே சென்றான். வெகுநேரம் அங்கே இருந்தான். முடிவில் கோபச் சொற்கள் திறந்த ஜன்னல் வழியே அலெக்ஸேயின் காதுகளுக்கு எட்டின. அப்புறம் எரிச்சலுடன் புடைச்சலுமாக வெளியே பாய்ந்து வந்தான் புர்ஸியான். கொடிய பார்வையால் அலெக்ஸேயை உறுத்து நோக்கிவிட்டு, அவன் பக்கம் திரும்பாமலே கெந்திக் கெந்தி நடந்து பூங்காவுக்கும் சென்றான்.

“சடங்கு பாராட்டும் அலுவலர்கள், பின்புலப் பெருச்சாளிகள்! விமானங்களைப் பற்றி இவர்கள் என்னத்தைக் கண்டார்கள்? இதென்ன, பாலே நடனம் என்று எண்ணி விட்டார்களோ? ஒரு கால் குட்டையாம்…… பாழாய்ப் போகிற எனிமாக் குழாய்கள், இன்ஷெக்ஷன் ஊசிகள்!” என்று அவன் வாய் பொரிந்து கொட்டியது.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

கேள்வி பதில் : முசுலீம்களை ஆர்.எஸ்.எஸ்  பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன ?

கேள்வி: //முஸ்லிம்களை ஆர்எஸ்எஸ் – பிஜேபி கும்பல் வெறுக்க காரணம் என்ன?//

– வடிவேல்

ன்புள்ள வடிவேல்,

இந்து – முசுலீம் பிரிவினை என்பது நமது நாட்டில் சென்ற நூற்றாண்டில்தான் உருவானது. அதற்கு முன் வரலாற்றில் இந்தப் பிரிவினை எங்கும் இல்லை. முகலாயர் ஆட்சியின் போது பல இந்து தளபதிகள் அவர்களிடம் வேலை பார்த்தனர். அதே போன்று மராட்டிய சிவாஜியின் படையில் முசுலீம் தளபதிகளும் உண்டு. ராஜபுத்திர இந்து மன்னர்கள், தக்காண முசுலீம் சுல்தான்கள் இன்னபிற வட்டார அரசர்களும் கூட இரு மதத்து மன்னர்களை தமது நலன் சார்ந்து அவ்வப்போது ஆதரித்தும் எதிர்த்தும் வந்திருக்கின்றனர்.

முதல் இந்திய சுதந்திரப் போர் 1857-ல் நடைபெற்ற போது கிளர்ச்சியாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அன்றைய மொகலாய வம்சத்து கடைசி பேரரசரான பகதூர் ஷா-வை இந்தியாவின் அரசராக பிரகடனம் செய்தனர். முகலாயர்களின் பச்சை பிறைக் கொடி தேசியக் கொடியாக காலனியாதிக்க எதிர்ப்பிற்கு பயன்படுத்தப்பட்டது. பின்னாளில் தீவிர இந்துத்துவவாதியாக வீழ்ந்து போன சாவர்க்கரே இதற்கு ஆதாரம். அவர் எழுதிய “எரிமலை அல்லது முதல் இந்திய சுதந்திரப் போர்” எனும் நூலில் அவர் பகதூர்ஷாவை இந்தியப் பேரரசர் என்றும் பச்சைக் கொடியை தேசியக் கொடி என்றும் வருணிக்கிறார். இதை சங்கிகளாலேயே மறுக்க முடியாது.

முதல் இந்திய சுதந்திரப் போருக்கு பிறகு இந்தியா நேரடியாக இங்கிலாந்து ஆட்சியின் கீழ் வந்தது. அதற்கு முன் கிழக்கிந்திய கம்பெனியே இந்தியாவை ஆண்டது. முதல் இந்திய சுதந்திரப் போரின் படிப்பினைகளில் ஒன்றாக ஆங்கிலேயர்கள் இந்தியாவில் பிரித்தாளும் சூழ்ச்சியை பின்பற்றத் துவங்கினார்கள். அது சாதி ரீதியாகவும் இருந்தது, மத ரீதியாகவும் இருந்தது. முதன்மையாக இந்து முஸ்லீம் பிரிவினை ஆங்கிலேயர்களின் திட்டத்தில் இருந்தது.

இதே காலகட்டத்தில் இந்திய அரசியலில் படித்த இந்து ஆதிக்க சாதி நடுத்தர வர்க்கத்தினர் செயல்பட ஆரம்பித்தனர். அவர்கள் இயற்கையாகவே இந்துமத வழக்கங்களை அரசியலில் பின்பற்ற ஆரம்பித்தனர். காங்கிரஸ் கட்சியின் திலகர் அதற்கோர் சான்று. ஆங்கிலேயர்களின் ஆரம்ப கால ஆட்சியால் மராத்திய சித்பவன பார்ப்பனர்கள் அதிகாரத்தை இழந்தனர். மராத்திய பேஷ்வாக்கள் இந்த சாதியைச் சார்ந்தவர்கள். அவ்வகையில் திலகர், 1925-ல் ஆர்.எஸ்.எஸ்-ஐ ஆரம்பித்த ஹெட்கேவார் அனைவரும் சித்பவன பார்ப்பனர்களே. காங்கிரசுக் கட்சியில் காந்தி தலைமையேற்ற பிறகும் அரசியலில் இந்துமயமாகும் போக்கு அதிகம் இருந்தது. வந்தே மாதரம் தேசிய கீதமாக்கப்பட்டதும் கூட அப்படித்தான். காங்கிரசு மிதவாத முறையில் இந்துத்துவ மயத்தை முன்வைத்தது என்றால் அதையே தீவிரமாக இந்து மகா சபாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் முன்வைத்தன.

இவர்கள் தோன்றுவதற்கு முன்பு 1905-ல் வங்காளம் முசுலீம்கள் அதிகம் கொண்ட கிழக்கு வங்காளம், இந்துக்கள் அதிகம் வாழும் மேற்கு வங்காளம் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. அப்போது ஆங்கில ஆளுநராக கர்சன் இருந்தார். இத்தகைய மதரீதியான பிளவை மக்கள் ஒன்றிணைந்து எதிர்த்து போரிட்டு மாற்றினார்கள். கர்சனும் தனது உத்திரவை திரும்ப பெற்றுக் கொண்டார். இதையடுத்து ஆங்கிலேயர்களின் பிளவு படுத்தும் அரசியல் முன்னிலும் அதிகமாய் நடக்கத் துவங்கியது.

savarkar-Gandhi-Jinnah
சாவர்க்கர் – ஜின்னா – காந்தி

காங்கிரசின் இந்துமதச் சார்பு  முஸ்லீம் லீகை தோற்றுவித்தது. லிபரல் கொள்கைகளைக் கொண்ட நாத்திகவாதியான ஜின்னா அதன் தலைவராக இருந்தார். மற்றொரு புறம் ஆங்கிலேயர்களை எதிர்க்காமல் முசுலீம்களை மட்டும் எதிர்ப்பதை கொள்கையாகக் கொண்டு இந்து மகாசபாவும், ஆர்.எஸ்.எஸ்-ம் ஆங்கிலேயர்கள் ஆதரவுடன் வளர ஆரம்பித்தன. இவ்விரண்டு அமைப்புகளும் அதனாலேயே தடை செய்யப்படாமல் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டன. கம்யூனிஸ்டுகள் தடை  செய்யப்பட்டது போல இவர்கள் நடத்தப்படவில்லை. இந்து மதவெறி அமைப்புகளும் பதிலுக்கு இந்திய சுதந்திரத்திற்காக எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. ஆங்கிலேயரை ஆதரித்தன.

இந்தப் போக்கினால் இந்தியா, இந்து – முஸ்லீம் என பிளவுபட ஆரம்பித்தது. அதன் உச்சமாய் 1947-ல் பிரிவினை காலத்தில் இலட்சக்கணக்கான இந்து முஸ்லீம் மக்கள் கொல்லப்பட்டனர். இரு மதங்களிலும் வன்முறை கோரத் தாண்டவமாடியது. பிரிவினையின் போது காந்தி பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தார்; அவரை ஒழித்தால்தான் இந்துக்களுக்கு நிம்மதி என்று இந்து தீவிரவாதியான கோட்சே காந்தியைக் கொன்றார். அப்போது ஆர்.எஸ்.எஸ் தடை செய்யப்பட்டாலும் பின்னாளில் அதன் கம்யூனிச எதிர்ப்பு காரணமாக தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

அன்று முதல் இன்று வரை ஆர்.எஸ்.எஸ் தனது இருப்பிற்கு முசுலீம் விரோதத்தை அடிப்படையாக வைத்திருக்கிறது. 47 முதல் இன்று வரை நடந்த இந்து முஸ்லீம் கலவரங்களுக்கு இந்துமதவெறியர்களே முதன்மைக் காரணம். அதன் போக்கில் முஸ்லீம்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் இந்து – இந்தியப் பண்பாட்டிற்கு விரோதமானவர்கள், இந்துக்கள் புனிதமாக கருதும் கோமாதவை வேண்டுமென்றே வெட்டித் தின்பவர்கள், மாட்டுக்கறி தின்பதால் அவர்கள் உடலில் துர்நாற்றம் வீசுகிறது, பாகிஸ்தானை ஆதரிப்பவர்கள், கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வென்றால் கை தட்டுபவர்கள், தாடி வைத்து குல்லா அணிந்து லுங்கி கட்டுபவர்கள் என்று ஏகப்பட்ட அவதூறுகளை உருவாக்கி அவற்றை பொது சமூகத்திற்கும் கடத்தி வைத்திருக்கிறார்கள். அதனால்தான் இன்றும் ஆதிக்க சாதி இந்துக்கள் தமது வீடுகளை முஸ்லீம்களுக்கு பொதுவில் வாடகைக்கு விடுவதில்லை.

Modi_Hitlerஎந்த ஒரு பாசிசக் கட்சிக்கும் கற்பனையான ஒரு எதிரி தேவை. ஜெர்மனியின் ஹிட்லர் யூதர்களை எதிர்த்தது போல இங்கே இந்துமதவெறியர்கள் முஸ்லீம்களை முதன்மையாக வைத்திருக்கிறார்கள். பட்டியலில் முஸ்லீம்களுக்கு அடுத்தபடியாக கிறித்தவர்களும், கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள்.

பசுப்படுகை எனப்படும் இந்தி மாநிலங்களில் முஸ்லீம்கள் சிறுபான்மை என்றாலும் சில இடங்களில் கணிசமாக வாழ்கிறார்கள். வர்த்தக ரீதியில் அவர்களோடு போட்டி போடும் இந்துமதத்தைச் சேர்ந்த நகர்ப்புறத்து வணிகர்கள், சிறு முதலாளிகள், நடுத்தர வர்க்கம் ஆகியோரை தனது முஸ்லீம் எதிர்ப்பு அரசியலுக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக வென்றெடுத்து வைத்திருக்கிறது. இதனால் முஸ்லீம்கள் அப்பகுதிகளில் இரண்டாம் தரக் குடிமக்களாக வாழ்கிறார்கள் என்பது மிகையில்லாத உண்மை.

எனவே பொதுக்கருத்தியலில் முஸ்லீம்களுக்கு எதிராக உருவாக்கப்பட்டிருக்கும் மாயை, பொய்களை நாம் அகற்றும் வண்ணம் தீவிரமாக பிரச்சாரம் செய்ய வேண்டும். ஏனெனில் இந்துமதவெறி என்பது முஸ்லீம்களுக்கு மட்டுமல்ல, உழைக்கும் இந்துக்களுக்கும் எதிரிதான்.

ஆர்.எஸ்.எஸ்-ன் அவதூறுகளை இணைப்பில் உள்ள தொடரில் விரிவாக பார்க்கலாம்.

நன்றி !

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்

அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2 | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

அன்புள்ள கர்ப்பிணி தாய்மார்களே – பாகம் 2

ர்ப்பம் தரித்த மூன்றாவது மாதம் முடியும் தருவாயில் ஒரு முக்கிய பரிசோதனை செய்வது நல்லது. இந்த பரிசோதனைக்கு “NT scan” என்று பெயர் அதாவது Nuchal translucency scan.

வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையின் கழுத்துப்பகுதிக்குப் பின் புறம் உள்ள பகுதியில் நிணநீர் சேகரிப்பு அதிகம் இருக்கிறதா, இல்லை சரியாக இருக்கிறதா என்று பரிசோதனை செய்வதே இந்த சோதனையின் நோக்கம். நார்மல் குழந்தைகளுக்கு நிணநீர் ஓட்டம் சரியாக இருக்கும். அதனால் கழுத்துக்கு பின் நீர் சேருவது இருக்காது.

Child-Scnஇதுவே இதயத்தில் பிறவி நோய் இருக்கும் குழந்தைகளுக்கும், மூளை நரம்பியல் நோய் இருக்கும் / மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் கழுத்துப்பகுதிக்குப்பின் நீர் அதிகமாக சேரும்.

பொதுவாக 12 வாரக்குழந்தைக்கு இந்த Nuchal translucency 3.2 mm -க்குள் இருப்பது குழந்தைக்கு பிறவிக்கோளாறு இல்லை என்பதை உறுதி செய்கிறது. சரி ஒருவேளை Nuchal translucency அதிகமாக இருந்தால் குழந்தைக்கு பிறவிக்கோளாறு கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் ஆகிவிடுமா???

நிச்சயம் ஆகாது. இந்த பரிசோதனை என்பது ஒரு screening testதான். அதாவது சமுதாயத்தில் பரவலாக செய்யப்படும் இந்தப்பரிசோதனையில் பாசிடிவ் என்று வந்தால் நோய் கட்டாயம் இருக்கிறது என்று அர்த்தம் இல்லை.

இந்த ஸ்கேனில் பாசிடிவ் தன்மை வந்தால் நாம் அதற்கடுத்து ட்ரிபிள் ஸ்க்ரீனிங் எனும் ரத்தப்பரிசோதனை செய்ய முடியும். இந்த ரத்தப்பரிசோதனையில்
தாயின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும் ரத்தத்தில் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் (இது சிசு உற்பத்தி செய்யும் ஒரு புரதம்) பீட்டா HCG (இது தொப்புள்கொடியில் இருந்து உருவாகும் ஒரு நொதி) மற்றும் ஈஸ்ட்ரையால் எனும் ஹார்மோன் இந்த மூன்றையும் தாயின் ரத்தத்தில் சோதிப்பதன் மூலம் நம்மால் சிசுவுக்கு இருக்கும் பிறவி நோய்களை கண்டறிய முடியும்.

படிக்க:
அன்புள்ள கர்ப்பிணித் தாய்மார்களே | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
♦ இந்தியாவின் பழங்கால பிரசவக் கொடுமைகள்

தாயின் ரத்தத்தில் AFP எனும் ஆல்பா ஃபீட்டோ ப்ரோட்டின் அதிகமாக இருந்தால் குழந்தைக்கு நரம்பு – மூளை சம்பந்தப்பட்ட நோய் இருப்பதாக அர்த்தம். AFP குறைவாக இருந்து HCG மிக அதிகமாக இருந்தால் குழந்தைக்கு டவ்ன் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் இருக்க வாய்ப்பு அதிகமாகிறது.

இத்தோடு சிசுவுக்கு மூக்கு எலும்பு உருவாகாமல் இருந்தால் டவுன் சிண்ட்ரோம் எனும் பிறவிக்குறைபாடு இருக்க வாய்ப்பு அதிகம். கர்ப்ப காலத்தின் இரண்டாவது மூன்று மாதங்களில் குழந்தை வளர்ச்சி அதற்கு பிறவிக்குறைபாடு இருக்கிறதா இல்லையா போன்ற பல விசயங்களை நம்மால் காண இயலும்.

மாதம் ஒருமுறை கட்டாயம் மருத்துவரைச் சந்தித்து ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவுகள், சிறுநீர் சர்க்கரை மற்றும் புரத அளவுகள் பரிசோதித்து வர வேண்டும்.

மூன்றாவது மாத முடிவில் ரணஜன்னி மற்றும் தொண்டை அடைப்பான் வியாதிகளுக்கு எதிரான Td எனும் தடுப்பூசியை ஒவ்வொரு கர்ப்பிணித் தாயும் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். முதல் தடுப்பூசி போடப்பட்ட ஒரு மாதம் கழித்து மற்றொரு Td ( Tetanus Diphtheria) தடுப்பூசி போட வேண்டும்.

இந்த தடுப்பூசி எதற்கு ?

குழந்தை பிறக்கும் போது ஏற்படும் ரனஜண்ணி (Neonatal tetanus) எனும் உயிர் கொல்லி நோயில் இருந்து குழந்தையைக் காக்கும். தொண்டை அடைப்பான் எனும் டிப்தீரியா நோய் வராமல் தாய் மற்றும் பிறக்க இருக்கும் சேயை காக்கும்.

இந்த மூன்று மாதங்களில் செய்ய வேண்டிய மற்றுமொரு முக்கிய வேலை.. குடற்புழு நீக்கம்.

வயிற்றில் இருக்கும் கொக்கிப்புழு, நாடாப்புழு போன்றவை ரத்தத்தை உறிஞ்சி அவை வாழும் தன்மை கொண்டவை. கர்ப்பிணிகளுக்கு கர்ப்ப காலத்தில் இரும்புச்சத்து குறைவது இயற்கை. இந்த புழுக்கள் ரத்த ஹீமோகுளோபின் அளவை இன்னும் அபாய அளவுக்கு குறைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே மருத்துவர் பரிந்துரையின் பேரில் குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மாதம் தாய்க்கு செய்ய வேண்டிய TARGET scan எனும் பிறவிக்குறைபாடு கண்டறிதல் பரிசோதனை பற்றி அடுத்த பகுதியில் பார்ப்போம்.

***

ந்தாவது மாதம் 18 வாரம் முதல் 21 வாரம் வரை முக்கியமான ஒரு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும். இதை Target scan என்று கூறுகிறோம். குழந்தையின் உடலில் ஏதேனும் உடல் சார்ந்த பிறவிக்கு குறைபாடு இருக்கிறதா என்று பார்க்கும் ஸ்கேனாகும்.

  • முகத்தில் மூக்கு எலும்பு உருவாகியிருக்கிறதா?
  • வாய்பிளவு – அன்னப்பிளவு இருக்கிறதா?
  • இதயத்தின் அறைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா?
  • குடல் பகுதி எப்படி இருக்கிறது?
  • குழந்தையின் கை மற்றும் கால்களின் வளர்ச்சி எப்படி இருக்கிறது?
  • கைகளில் விரல்கள் எத்தனை இருக்கின்றன?

என்பது வரை அத்தனையும் பரிசோதிக்கப்படும். இதன் மூலம் எந்த குறைபாடும் இல்லாத குழந்தை கர்ப்பபையில் வளர்கிறது என்று முடிவுக்கு வரலாம்.

கர்ப்பிணிகளுக்கு இந்த இரண்டாவது மும்மாதத்தின் கடைசியில் இருந்து
இரும்புச்சத்து குறைபாடு ஆரம்பிக்கும். எனவே இரும்புச்சத்துக்கான மாத்திரை நான்காவது மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்படும்.

target scanஇந்தியாவில் 90 சதவிகிதத்திற்கும் மேல் கர்ப்பிணித் தாய்மார்கள் ரத்த சோகை எனும் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்குக்காரணம் நமது வழக்கப்படி பெண்கள் வீட்டில் கடைசியாக மீதம் இருப்பதை உண்டு வாழ்ந்து வருவர்.

ஊட்டச்சத்து குறைவான உணவான அரசியை அதிகமாக உண்பர். ஊட்டச்சத்து அதிகமாக இருக்கும் முட்டை, மாமிசம் போன்ற உணவுகளை ஆண்களுக்கென; பிள்ளைகளுக்கென ஒதுக்கி வைக்கும் பழக்கம் நமது பெண்களிடையே உண்டு. இந்த வழக்கம் கல்வியறிவால் மெல்ல மெல்ல மாறிவருவது வரவேற்கத்தக்கது.

அசைவம் உண்ணும் கர்ப்பிணி பெண்களுக்கு தினமும் ஒரு முட்டை, வாரம் மூன்று முறையேனும் மாமிசம் உண்ணக் கிடைக்க வேண்டும். சைவம் மட்டும் உண்ணும் பெண்கள் கட்டாயம் புரதம் நிரம்பிய பயறு வகைகள், கடலை வகைகள், பருப்பு போன்றவற்றை அதிகம் உண்ண வேண்டும்.

காய்கறிகள் தினமும் 150 முதல் 200 கிராம் வரை உண்பது நல்லது. இன்றும் பிரசவத்தின் போதும், கர்ப்ப காலத்தின் போதும் தாய் சேய் மரணத்திற்கு முக்கிய காரணமாக இருப்பது “இரும்புச்சத்து குறைபாடு” எனும் அனீமியா ஆகும்.

கர்ப்பிணிக்கு முதல் மாதம் எடுக்கப்படும் Hemoglobin 12 g/dl என்ற அளவுக்கு மேல் இருந்தால் நல்லது. 10g/dl என்பது இந்திய சராசரி. இது தான் பெரும்பாலும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும். ஆகவே இதை நம் பெண்களுக்கு ஓகே என்ற அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

படிக்க:
உலகம் சுற்றும் எடப்பாடி – கருத்துக் கணிப்பு
♦ அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !

கர்ப்பமானது முதல் மாதங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்ல செல்ல அனீமியா கொஞ்சம் கொஞ்சமாக தலை தூக்கும். ஆகவே கட்டாயம் நான்காவது மாதத்தில் இருந்து இரும்புச்சத்து மாத்திரையை எடுத்துக்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.

இந்த இரும்புச்சத்து மாத்திரைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதற்கொண்டு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

அதற்கடுத்தபடியாக முக்கியமான சத்து “கால்சியம்”

கரு சிசுவாக வளர்ந்து குழந்தையாகும் போது குழந்தையின் எலும்புகள் உருவாக வேண்டும். அந்த எலும்புகள் உருவாகுவதற்கு தேவையான கால்சியம் தாயிடம் இருந்து செல்லும்.

அதாவது தாயின் ரத்தத்தில் இருந்து கால்சியம், சிசுவுக்குச் செல்லும். சிசு அந்த கால்சியத்தை உபயோகித்து தனது எலும்புகளை வளர்த்துக் கொள்ளும். தாயின் ரத்தத்தில் எப்போதும் கால்சியம் சத்து சரியான அளவில் இருக்க வேண்டும்

இதற்கு கால்சியம் சத்து நிரம்பிய எளிய உணவான முட்டைகள் உதவும். நாளொன்றுக்கு கட்டாயம் ஒரு முட்டை அல்லது இரண்டு முட்டைகள் உண்டு வருவது நல்லது. இத்துடன் கால்சியம் சத்துக்கான மாத்திரையையும் உட்கொள்ள அரசு பரிந்துரை செய்கிறது.

pregnancy-nutritionகால்சியம் சத்து குறைபாட்டால் தாய்க்கு கர்ப்ப காலம் முழுவதும் அதிகமான உடல் சோர்வு வலி ஏற்படும். குழந்தை என்பது ஒரு அழகிய ஒட்டுண்ணியாகும். ஒட்டுண்ணி வகை உயிரினங்களை Parasite என்கிறோம். குழந்தையும் தாயிடம் இருந்து சத்துகளையும் ரத்தத்தையும் உறுஞ்சி வாழ்வதாலும் வளர்வதாலும் அதுவும் ஒரு ஒட்டுண்ணி தான்.

இந்த மிகப்பெரும் ஒட்டுண்ணி உடலின் ஒரு பகுதியில் இருந்தாலும் உடல் அதை ஏற்றுக்கொள்கிறது. இதற்காக கர்ப்ப காலத்தில் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக குறைக்கப்படும். ஆகவே pregnancy is a hypo immune state.
எனவே இந்த காலத்தில் எளிதாக நோய் கிருமி தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும்.

தாய்மார்கள் தண்ணீர் பருகும் விசயத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். கொதிக்க வைத்து ஆறவைத்த நீரை மட்டுமே பருக வேண்டும். மிகுந்த தேவை தவிர அநாவசியமான நீண்ட தூர பயணங்களை தவிர்க்க வேண்டும். பயணம் செய்தாலும் ரயில் வண்டியை தேர்வு செய்ய வேண்டும்.

பைக் பயணங்களை குண்டும் குழியுமான சாலைகளில் செல்வதை தவிர்த்து விட வேண்டும். கூட்டமான ஜனநெரிசலான இடங்களை தவிர்க்கவும். அங்கே காற்றினால் பரவும் சளி இருமல் போன்ற நோய்கள் பரவ வாய்ப்பு அதிகமாகிறது. காய்ச்சல், சளி, இருமல் வந்தால் சுய மருத்துவம் எடுப்பது தவறு. மேலும் மருந்தகங்களில் சுயமாக மருந்துகள் எடுப்பது மாபெரும் தவறாக அமையும்.

உங்கள் மகப்பேறு மருத்துவரையோ அல்லது குடும்ப மருத்துவரையோ அணுகி மருந்துகள் எடுக்கவும். கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய அபாயகரமான மருந்துகள் உள்ளன. அவற்றை மருத்துவர்கள் மட்டுமே அறிவர்.

ஆகவே கர்ப்பிணிகள் கட்டாயம் மருத்துவரை சந்தித்து மட்டுமே மருந்துகள் உட்கொள்ள வேண்டும். ஐந்தாவது மாதத்தில் நடக்கும் முக்கிய நிகழ்வொன்றைப் பற்றி பின்வரும் (அடுத்த) பகுதியில் காண்போம்.

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

மலையகத் தோட்டங்களை தனியார் பிடியிலிருந்து மீட்போம் | இலங்கை பு.ஜ.மா.லெ. கட்சி

தோட்டங்களைத் தனியார் கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்கவேண்டும் ! – பு.ஜ.மா.லெ.க.-வின் மலையக பிராந்திய செயலாளர் தோழர் சுரேன் கோரிக்கை.

தோட்டங்களை அதாவது தோட்டக் குடியிருப்பு (லயன்அறைகள், தனி வீடுகள்) அதனோடு இணைந்த சுற்றுப்புறம் – விவசாய காணிகள், பாதைகள், மைதானம், வழிபாட்டிடம், இயற்கை வளங்கள் – ஆகியவற்றை தனியார் கம்பனிகளின் பிடியிலிருந்து மீட்டு முழுமையாக அரச நிர்வாகத்திற்குள் உள்வாங்க வேண்டும், அதற்காக நாம் அனைவரும் போராட வேண்டும். எமது பிரதிநிதிகள் முதலில் இப் பிரச்சினையை விளங்கிக் கொள்ள வேண்டும். பின் அதற்காக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மலையக பிராந்திய செயலாளரும் உக்குவளை பிரதேச சபை உறுப்பினருமான தோழர் டேவிட் சுரேன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், மாத்தளையில் எல்கடுவ பிளாண்டேஷன் நிர்வாகத்தில் இயங்கும் எல்கடுவ தோட்டம் செம்புவத்த, ரோட்டலா, குளிராட்டி, நடுத்தோட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளை உள்ளடக்கிய தோட்டம் ஆகும்.

இதில் செம்புவத்த பிரிவில் குளம் சார்ந்த அழகிய பிரதேசம் காணப்படுவதால் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் இடமாக காணப்படுகிறது. பருவ காலங்களில் மாதம் ஒன்றில் பல கோடிகளை வருமானமாக பார்க்கும் இடமாக திகழ்கிறது. இங்கு சுமார் 12 வருடங்களுக்கு மேல் ஓர் தோட்ட அதிகாரியே பதவியில் இருந்து வருகின்றார்.

தொழிலாளர் மத்தியில் முன்னணியில் இருக்கும் சிலருக்கு கடந்த காலங்களில் சலுகைகளை வழங்கி தனக்கு எதிராக யாரும் கிளம்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்து வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக இவர் செய்த தந்திரங்கள் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

சுற்றுலா பிரதேசம் என்பதால் பாதை ஓரங்களில் சிறு வியாபார கடைகளை மக்கள் நடத்தி வருகின்றனர். இதில் பல கடைகள் பிரதேச சபை அனுமதியோடு இடம்பெறுகின்றன. ஆனால் கடைகளை நடத்த முடியாது என்றும் தனது அனுமதி பெற்றே நடத்த வேண்டும் என்றும் அதிகாரம் புரிபவராக தோட்ட அதிகாரி காணப்படுகின்றார்.

செம்புவத்த பிரிவில் கன்னியம்மா ஊற்று கிணறு ஒன்று காணப்படுகின்றது. சுமார் 150 குடும்பங்கள் நீர்த் தேவையை பூர்த்தி செய்கின்ற வளமாக காணப்பட அதனை, நீர் தயாரிக்கும் தொழிற்சாலை ஆக மாற்ற தோட்ட அதிகாரி தந்திரமான முறையில் முயற்சி எடுத்து இருக்கின்றார்.

படிக்க :
மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் !
♦ இலங்கை : தோட்ட தொழிலாளர்களுக்கு துரோகம் இழைக்கும் கூட்டு ஒப்பந்த உடன்படிக்கை !

அப்பிரதேசத்தில் இளைஞர்களில் சிலர் முச்சக்கர வண்டி ஓட்டி பிழைப்பு நடத்துகின்றனர். வாகனத் தரிப்பிடத்திற்கு அனுமதிக்க முடியாது அதனை அகற்ற வேண்டும் என மிரட்டி அழுத்தம் கொடுத்திருக்கின்றார்.

இந் நடைமுறை பிரச்சனையிலிருந்து நாம் ஒன்றை நாட்டிற்கு முன்வைக்கலாம் என முயற்சி செய்கின்றோம்.

பிரதான பாதையிலிருந்து தோட்டத்திற்கு பிரவேசிக்கும் பாதையான காங்கிரீட் மண்பாதை அரசாங்க நிறுவனமான உள்ளுராட்சிக்குள் வருகின்றதா? தோட்ட நிர்வாகத்திற்குள் வருகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

தோழர் சுரேன்

அதற்கு அண்மையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 30-ம் இலக்க பிரதேச சபை சட்டம் என்ன சொல்கின்றது எனப் பார்த்தால் ”பிரதேச சபையின் ஒரு தொகுதி நிதியை இனி தோட்டத்துக்கு கொண்டு செல்லலாம், பிரதேச சபைக்கு ஒதுக்கப்பட்ட கடமை பொறுப்புகளுக்கு அமைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கலாம்.” என்று சொல்கின்றது.

நடைமுறையில் பிரதேச சபை பிரதான வீதியில் இருந்து தோட்டத்திற்கு பிரவேசிக்கும் வீதி ஒன்றை காங்கிரிட் இடுகின்றது என கொள்வோம், அதன்பின் அப்பாதை பராமரிப்பு பிரதேசசபையின் பொறுப்பாகும். பாதையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பிரதேச சபைக்கு சொந்தமானதாக கருதப்பட வேண்டும்.

அவ்வாறான பாதையோரத்தில் பிரதேச சபையின் அனுமதியோடு மக்கள் கடைகளை நடத்தலாம். அதனை தடுப்பதற்கு தோட்ட நிர்வாகத்திற்கு அதிகாரம் இல்லை என்பதே நியாயமானதாகும்.

ஆனால் இந்த நடைமுறை உதாரணம் மாபெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. பொறுப்பும் பராமரிப்பும் உள்ளுராட்சி நிறுவனத்திற்கா அல்லது தோட்ட நிர்வாகத்திற்கா என்பதே கேள்வியாகும்.

பிரதேசத்தின் நீர்வளம், இயற்கை வளங்கள் பிரதேச செயலாளருக்கும் பிரதேச சபைக்கும் பொறுப்பு என இருக்கையில் தோட்ட குடியிருப்புக்குள் காணப்படும், மக்கள் பயன்படுத்தும் ஊற்று கிணறு தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருவது பொருத்தமானதாக இருக்குமா?

படிக்க :
தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்
♦ “உன் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை” – ஒரே வாரத்தில் 17 தொழிலாளர்கள் மரணம் !

இளைஞர்கள் தமது தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்காக முச்சக்கர வண்டி ஓடுகின்றனர். வருமானம் வாய்ப்பு வரும் இடங்களில் அதனை கொண்டு பணம் தேடுகின்றனர்.

முச்சக்கரவண்டி தரிப்பிடம் பிரதேச சபையில் பதியப்பட வேண்டும். தோட்டங்களில் வண்டி தரிப்பிடத்தை பதிவு செய்ய தோட்ட அதிகாரியின் அனுமதி கடிதத்தை பிரதேச சபை எதிர்பார்த்தால் சரியானதாக இருக்குமா?

இது செம்புவத்தை டிவிஷனில் மட்டும் உள்ள பிரச்சனை அல்ல. ஒட்டுமொத்த மலையகம் எங்கும் இவ்வாறான சிக்கலான நடைமுறை காணப்படுகின்றது.

ஏனைய இடங்களின் உதாரணங்களும் படிப்பினைகளையும் முக்கியம் பெறுகின்றது.

மலையக மக்கள் எனப்படுபவர்கள் 200 வருடங்களாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் கூட்டம் ஆவர். கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களைக் கொண்ட ஒரு தேசிய இனம், மலையக தேசிய இனத்தின் இருப்பு இன்றுவரை சவால்மிக்கதாகவே இருந்து வருகின்றது.

மேற்படி உதாரணங்கள் மூலம் தோட்டக் குடியிருப்புகளில் வாழ்பவர்கள் தோட்டங்களில் நிம்மதியாக வாழ முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பது உறுதியாகிறது. மொத்தத்தில் தோட்டங்களில் மாட்டுப்பட்டி கட்டுவதற்கு கூட தோட்ட அதிகாரியிடம் அனுமதி வாங்கும் நடைமுறையை மாற்றியமைக்க நாம் போராட வேண்டும், எனவும் குறிப்பிட்டார்.

தகவல் : புதிய ஜனநாயக மாக்சிச – லெனினிசக் கட்சி முகநூல் பக்கத்தில் இருந்து.

disclaimer

சென்னை பல்கலை : கிருபாமோகனை மீண்டும் இணை ! மாணவர் போராட்டம் !

0

சென்னை பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர் கிருபா மோகனின் சேர்க்கை செல்லாது எனக் கூறி அவரை பல்கலையிலிருந்து நீக்கியுள்ளது பல்கலை நிர்வாகம்.

சென்னைப் பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்டம் எனும் மாணவர் அமைப்பு, சென்னைப் பல்கலை மாணவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்காகவும், பல்கலையில் நிர்வாகத்தால் புகுத்தப்படும் இந்துத்துவக் கருத்தியல்களுக்கு எதிராகவும், பல்வேறு சமூகப் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு இதே பல்கலையில் இதழியலில் முதுகலை பட்டம் முடித்த மாணவர் கிருபா மோகன், இந்த அமைப்பில் முன்னணியாக செயல்பட்டு வந்திருக்கிறார். இந்த ஆண்டு தத்துவவியலில் புத்த மதத் தத்துவம் பாடப்பிரிவில் படிக்க கல்லூரியில் மீண்டும் சேர்ந்துள்ளார்.

இதழியல் படிப்பு முடிந்தது அவரது  ‘தொல்லை’ முடிந்தது என்று கனா கண்டு கொண்டிருந்த ஏ.பி.வி.பி மற்றும் இந்துத்துவக் கும்பலின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போடும்வகையில் மீண்டும் பல்கலையில் கிருபா மோகன் சேர்ந்தார். இது பொறுக்க முடியாமல், ஆளுனர் மாளிகையிலிருந்து தத்துவவியல் துறைத்தலைவருக்கு தொடர்ச்சியாக கிருபா மோகனை கல்லூரியிலிருந்து வெளியேற்றுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னைப் பல்கலை காவிக் கும்பலுக்கு அடிபணிந்து பொய்க்காரணங்களைச் சொல்லி அவரை படிப்பிலிருந்து வெளியேற்றியதன் பின்னணியை அவரே விவரிக்கிறார். பாருங்கள் ! பகிருங்கள் !

சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட மாணவர் கிருபாமோகனை உடனடியாக பல்கலைக்கழகத்தில் இணைக்க வேண்டும் ! என்ற முழக்கத்தின் கீழ், கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“ஆளுநரின் உத்தரவின் பெயரில் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரின் தொடர் நெருக்கடியாலும் மாணவர் கிருபாமோகன் நீக்கப்பட்டுள்ளார். அவர் நீக்கப்படக் காரணம் என்னவென்றால் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதுதான்.

அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ‘RSS – ஆளுநர்’ கூடாரம் மேற்கொண்டுள்ளது. இதனை அம்பேத்கர் பெரியார் வழிநின்று முறியடிப்போம்” என மாணவர்கள் முழங்கினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம். 
தொடர்புக்கு : 97888 08110.

***

அம்பேத்கர் – பெரியார் வாசகர் வட்டத்தில் செயல்படுவது குற்றமா ?

  • சென்னைப் பல்கலைக்கழக மாணவர் கிருபாமோகன் நீக்கம் !
  • ஆளுநர் மாளிகை உத்தரவு !

மாணவர்கள், இளைஞர்களே !

  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் உத்தரவை திரும்பப் பெற குரல்கொடுப்போம் !
  • பாதிக்கப்பட்ட மாணவருக்கு துணைநிற்போம் !

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு. தொடர்புக்கு : 94451 12675.

***

ம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டத்தில் செயல்பட்டதற்காக ஆளுநரின் அழுத்தத்தின் பேரில் மாணவர் கிருபாமோகனது அட்மிசனை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் இரத்து செய்துள்ளது.

இதனை கண்டித்தும் மாணவர் கிருபாமோகனை மீண்டும் பல்கலைக்கழகத்தில் இணைக்கக் கோரியும் 05.09.2019 அன்று சென்னைப் பல்கலைக்கழக நுழைவு வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தை சென்னை பல்கலையில் செயல்பட்டு வரும் அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்ட தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
அம்பேத்கர் – பெரியார் படிப்பு வட்டம்.
தொடர்புக்கு : 97101 96787.

நூல் அறிமுகம் : வைக்கம் போராட்ட வரலாறு

வைக்கம் போராட்டம் என்பது கோவிலிலே நுழைவதற்காக நடந்த போராட்டம் அல்ல. அதுவே ரொம்பப் பேருக்குத் தெரியாது. முதலாவதாக வைக்கம் போராட்டத்தைப் பற்றித் தெளிவுபடுத்தப்படவேண்டிய உண்மை என்ன என்றால், தாழ்த்தப்பட்டவர்களோ, மற்றவர்களோ கோவிலுக்குள் போகவேண்டுமென்பதற்காக நடத்தப்பட்ட போராட்டமல்ல அது.

அது, கோவிலைச் சுற்றி இருந்த , தெருக்களிலே தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடக்கக்கூடாது என்று நிலவி வந்த அக்கிரமத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் ஆகும்.

வைக்கம் கோவிலைச் சுற்றி இருந்த தெருக்களிலே அவர்கள் நடக்க உரிமை பெற்றவர்களல்ல; அவர்கள் போனால் தீட்டுப்பட்டுவிடும். ஆகவே அவர்கள் ஊரைச் சுற்றிக் கொண்டுதான் போகவேண்டுமென்று நடைமுறைப்படுத்தி வைத்திருந்தார்கள்.

எனவே, தாழ்த்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தெருவிலே நடக்க உரிமை வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் போராட்டம் தொடங்கப்பட்டது.

தீண்டாதார் என்பதற்கு நாம் – Un-touchable என்ற வார்த்தையைத் தொட்டால் தீட்டு என்ற கருத்திலே பயன்படுத்துகிறோம். ஆனால் வைக்கத்திலே அவர்கள் அன்று அமைத்திருந்த சமுதாய முறையிலே – தீண்டுவது என்பது மட்டுமல்ல; அந்த மக்கள் மற்றவர்களை நெருங்குவதே தீட்டு Un touchable என்பது மட்டுமல்ல; அவர்கள் எல்லாம் Un-approchables அதாவது நெருங்கவே கூடாதவர்கள் என்று வகுத்து வைத்திருந்தார்கள்.

… இந்த வைக்கம் போராட்டம் எப்படித் தொடங்கியது என்ற உண்மையைத் தந்தை பெரியாரவர்களின் ”தீண்டாமையை ஒழித்தது யார்?” என்ற புத்தகத்திலே இருந்து முதலில் எடுத்துக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

தந்தை பெரியார் வைக்கம் போராட்டம் பற்றிப் பேசுகிறார் கேளுங்கள்.

“வைக்கத்திலே போராட்டம் ஆரம்பமானதே ஒரு சிறு நிகழ்ச்சியிலேயிருந்துதான்.

தோழர் மாதவன் என்ற பி.ஏ., பி.எல்., படித்த ஒரு வக்கீல் ஒரு வழக்குக்காக ஆஜராகப் போனார். வழக்கு விசாரணைக்கான கோர்ட் இடம் ராஜாவுடைய கொட்டாரத்தில் (அரண்மனையில்) ஒரு இடம். ராஜாவின் பிறந்த நாள் விழாவிற்கு அந்த ராஜாவுடைய கொட்டாரத்தின் (அரண்மனையின்) எல்லாப் பாகத்திலும் பந்தல் போடப்பட்டதில் கோர்ட் நடக்கும் இடமும் பந்தலுக்குள் அடங்கிவிட்டது. இந்த மாதவன் வக்கீல் ஒரு கேசில் ஆஜராக அங்கே போகவேண்டிய அவசியம் வந்தது. இராஜாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக முறை ஜெபம் ஆரம்பமாயிற்று. இந்த வக்கீல் ஈழவ (‘நாடார்’) சமுதாயத்தைச் சேர்ந்தவராதலால் அங்கே போகக்கூடாது என்று தடுத்தார்கள்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

அந்த நேரம் நான் தமிழ்நாட்டிலே தீண்டாமை விலக்கு என்பதில் தீவிரமாக இருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருந்த நேரம்” என்கிறார் அய்யா!

தமக்கு அதிலே எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பதற்காக இதைச் சொல்லுகின்றார்.

”எனவே, இந்தச் சம்பவம் எதிலே இருந்து கிளம்பியது?

ஒரு வழக்கறிஞருக்குப் படித்த மாதவன் என்ற ஈழவ சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர், வாதாடுவதற்காக நீதிமன்றம் இருக்கின்ற இடத்திற்குப் போகின்றார். ஆனால், இவர் கீழ்ச்சாதிக்காரர் என்பதால் அங்கே போகக்கூடாது என்கிறார்கள்.

இதிலிருந்து இரண்டு செய்திகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுடையை சாதி எங்கே போய் நிற்கிறதென்றால், அவனுடைய படிப்பையும் தாண்டி நிற்கிறது. வழக்கறிஞரானாலும் அவன் ஈழவன்தான் வக்கீல் அல்ல. அவனை ஒரு வழக்கறிஞனாகப் பார்க்கக்கூடிய சமுதாயமாக இந்த வர்ணாசிரமதர்ம சமுதாயம் இல்லை.

அந்த நிலையில், இதுதான் மற்றவர்களுக்கு ஆத்திரத்தையெல்லாம் உண்டாக்கியது.

மேலும், அய்யா சொல்லுகிறார்.

”இந்த மாவதன் (வக்கீல்) சங்கதியை வைத்தே திருவனந்தபுரத்து ஈழவ சமுதாயத் தலைவர்கள் சத்தியாகிரகம் ஆரம்பிக்க வேண்டுமென்று முடிவு செய்தனர். வக்கீல் மாதவன், டி.கே. மாதவன், கேரள காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.பி. கேசவமேனன் இவர்களோடு இன்னும் சிலரும் சேர்ந்து முடிவு செய்தார்கள்.

… ”முறை ஜெபத்தன்று ஆரம்பிப்பது என்று முடிவு செய்து எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டார்கள். நான் அப்போது தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருக்கிறேன். எந்த ஊரில் சத்தியாகிரகம் ஆரம்பிக்கலாமென்பதற்கு வைக்கத்தையே தேர்ந்தெடுத்தார்கள்.

ஏனென்றால், அந்த ஊரில்தான் ஊர் நடுவில் கோயிலும், அதன் 4 வாசலுக்கு எதிரிலும் 4 நேர் வீதிகளும், கோயில் மதில்கள் சுற்றிலும் பிரகாரம் தெருக்கள் எல்லாம் இருக்கும்.

அந்த வீதிகளில் கீழ்ச்சாதிக்காரர்களான அவர்ணஸ்தர்களும், அயித்தக்காரர்கள் எனப்படும் தீண்டாதாரும் நான்கு புறத் தெருக்களிலும் கோயில் வாசல்களுக்கு முன்னால் நடக்கக்கூடாது! மூன்று ஃபர்லாங் தூரத்திலேயும், 4 ஃபர்லாங் தூரத்திலேயும் இருக்கிற ரோட்டில்கூட நடக்காமல் ஒரு மைல் தூரம் வேறு ரோட்டில் சுற்றிக்கொண்டுதான் எதிர் ரோட்டுக்குப் போகவேண்டும். அயித்தக்காரர்களான தீண்டப்படாதவர்களைப் போலவேதான் ஈழவர்கள், ஆசாரிகள், வாணியர்கள், நெசவாளிகள் முதலியோரும் அந்த ரோட்டில் நடந்து போகக்கூடாது.

இதே மாதிரிதான் சுசீந்திரத்திலும் உள்ள கோயில் மற்றும் அந்த ராஜ்யத்தில் உள்ள மற்றக் கோயில்கள் பக்கம் அமைந்துள்ள தெருக்களிலும் நடக்க இவர்களுக்கு எந்தவித உரிமையும் கிடையாது.

வைக்கத்தில் கோயிலுக்கு பக்கமாக வாசலுக்கு எதிராக அமைந்த தெருக்களில்தான் எல்லா முக்கிய ஆபீசுகளும், கோர்ட், போலீஸ் ஸ்டேஷன் முதலியனவும் இருந்தன. ஏதாவது போலீஸ்காரர்களையோ, இன்ஸ்பெக்டர்களையோ, குமாஸ்தாக்களையோ மாற்றுவதானாலும்கூட கீழ்ச்சாதியர்களை அங்கு மாற்ற மாட்டார்கள். ஏனென்றால், அந்தப் போலீஸ் ஸ்டேஷன் கோர்ட்டுக்கள் இருக்கும் இடத்திற்குப்போக கீழ்ச்சாதியார்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், முக்கியமான கடைகளும் அந்த வீதிகளில்தான். ஆனதால் கீழ்ச்சாதிகள், கூலிகள் அங்கு செல்ல முடியாது. (நூலிலிருந்து பக்.9-13)

… காந்தியார் கோவில் பிரவேசத்தைப் பற்றிப் பேசும்போது அதுவும் சுயமரியாதைப் பிரச்சார நிர்ப்பந்தம் காரணமாய் கோவில் பிரவேசத்தை அனுமதிக்க வேண்டி வந்தபோது,

“கோவிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள் செல்வதில் எந்தக் கோவிலிலும் சூத்திரர்கள் எதுவரையில் செல்ல முடியுமோ அந்த அளவுவரையில் தான் தாழ்த்தப்பட்ட மக்கள் (அரிஜனங்கள்) செல்லலாம்.”

என்று சொல்லி அனுமதித்ததால் அந்த அளவுக்குத்தான் நாடார் சமுதாயம் உள்பட கோவில் பிரவேசமில்லாத எல்லா மக்களுக்கும் அனுமதி கிடைத்தது.

காந்தியாரின் தந்திரம்

அதன்மீது பெரியார் ஆத்திரப்பட்டு, “தீண்டாமை விலக்கு என்பதும், கோவில் பிரவேசம் என்பதும் சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதுதானா? பறையன் கீழ்சாதி என்பது மாற்றப்படவில்லையானால் அதற்குகாக சூத்திரனைப் பறையனோடு சேர்ப்பதா? இந்த அனுமதியானது இதுவரை நடுசாதியாக இருந்த சூத்திரர் என்பவர்கள் இப்போது கீழ்சாதியாகவே ஆக்கப்பட்டுவிட்டார்கள் ஆனதால் இதை நாம் அனுமதிக்கக்கூடாது” என்று வேகமாகப் பிரச்சாரம் செய்து வந்தார். இதன்மீது காந்தியார் மக்களை ஏமாற்ற வேறு ஒரு தந்திரம் செய்தார்.

அதாவது, “இதுவரையில் இதற்கு முன் பிராமணர்களுக்கு என்று மாத்திரம் எந்த இடம் இருந்து வந்ததோ அந்த இடத்திற்குப் பிராமணர்களும் செல்லக் கூடாது; மற்ற எல்லா சாதியாருக்கும் அனுமதிக்கப்பட்டிருந்த இடம் வரையிலுமேதான் பிராமணனும் செல்லலாம்” என்று அபிப்பிராயம் கூறி அந்தப்படியே பல கோவில்களில் மூங்கில் கழியைக் கொண்டு தடுப்புகட்டி தடை செய்யப்பட்டது.

பார்ப்பானுக்கு மட்டுமுள்ள தனி உரிமையா?

இதுபற்றி மதுரைக் கோவிலுக்குள் பெரியார் சில தோழர்களுடன் சென்று தடுக்கப்பட்ட இடத்தில் பல பார்ப்பனர்களும் பார்ப்பனத்திகளும் நிற்பதைக் கண்டு அங்கேயே அது பற்றிக் கிளர்ச்சி செய்தார்; பத்திரிகையில் எழுதினார் என்றாலும் அர்ச்சகர் என்ற பெயரில் இன்றும் பார்ப்பனர்கள் பார்ப்பனத்திகளும் உள் மண்டபத்தில் இருந்துதான் வணங்குகிறார்கள். இது எப்படியோ இருந்தாலும் பார்ப்பனன்தான் கர்ப்பக கிரகத்திற்குள் சிலை இருக்கும் இடத்திற்குள் போகலாம்; மற்றபடி சூத்திரனோ, பஞ்சமனோ என்பவர்கள் கர்ப்பக கிரகத்திற்குள் போகக்கூடாது என்கின்ற சாதிமுறை சாதிபேத முறை இன்றும்தான் இருந்து வருகிறது.

இது விஷயத்தில் காந்தியாருடையவும் பார்ப்பனர்களுடையவும் சூழ்ச்சி எல்லாம்.

பார்ப்பனர்களின் கவலை!

சாதி ஒழிக்கப்படுவதால், பார்ப்பனர்களுடைய தூய்மை கெட்டுவிடுகிறது என்பதோ, தங்கள் நிலைமை அசுத்தமாக்கப்பட்டுவிடுகிறது என்பதோ அல்லவே அல்ல. மற்றென்னவென்றால், தங்களுக்கு பார்ப்பனர்களுக்கு இருந்துவரும் உயர்வும் தனி உரிமைகளும், பாடுபடாமல் ஊரார் உழைப்பில் அனுபவிக்கும் சுகபோகமும், உயர்வாழ்வும், ஏகபோகமும் அழிந்துபோகுமே என்கின்ற கவலைதான்.

படிக்க:
பெரியார் மண்ணில் கருவறைத் தீண்டாமையை ஒழிப்போம் !
தீண்டாமையின் தலைநகரம் – மோடியின் குஜராத் !

இதை உத்தேசித்தேதான் சாதி என்பதில் எவ்வித தனிக்கடமையும் இல்லாமல் உயர்வு என்கின்ற உரிமையை மாத்திரம் அனுபவிக்கும்படி சட்டத்தால் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டார்கள் இதற்குக் காரணம் காந்தியார் செய்த மோசடியும் சூழ்ச்சியும் ஆன மாபெரும் துரோகம்தான்.  (நூலிலிருந்து பக்.75-76)

நூல் : வைக்கம் போராட்ட வரலாறு
தொகுப்பாசிரியர் : கி. வீரமணி., எம்.ஏ., பி.எல்.

வெளியீடு : திராவிடர் கழக வெளியீடு,
50, ஈ.வெ.கி. சம்பத் சாலை, சென்னை – 600 007.
தொலைபேசி எண் : 044 – 2661 8161 ; 8428 455 455

பக்கங்கள்: 96
விலை: ரூ 25.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க : panuvalnhm | periyarbooks

தேசிய கல்விக் கொள்கையை முறியடிப்போம் ! புதுவை அரங்க கூட்டம்

1

மோடியின் தேசிய கல்வி கொள்கையை முறியடிப்போம் ! என்ற தலைப்பின் கீழ் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் அரங்க கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு வந்திருந்த மாணவர்கள் – இளைஞர்கள், பேராசிரியர்களை பு.மா.இ.மு தோழர் பரத் வரவேற்றுப் பேசினார்.

அதன் பின் தோழர் ஏ. மோகன் அவர்கள் இக்கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். அவர் தனது தலைமையுரையில்: “இந்த தேசிய கல்வி கொள்கையின் வரைவு அறிக்கை ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா என்பது பல தேசிய இனங்களின் பல மொழி, கலச்சாரம் கொண்ட நாடு. இங்கு இரண்டு மொழிகளில் மட்டும் அறிக்கை வெளிடுவதும்; கிராமபுற ஏழை எளிய  மக்களிடம் மற்றும் மாணவர்களிடம் கருத்து கேட்கக் கூடாது என்ற நோக்கத்திலும்தான் ஒரு நாடகத்தை நடத்தி வருகின்றனர். ஆனால் இதனை நாம் முறியடிக்க வேண்டும்.” என பேசினார்.

அவருக்கு பின் கருத்துரையாற்றிய மாணவி பூங்குழலி அவர்கள் “மோடி அவர்கள் பதவி ஏற்ற உடனே அவசரமாக வெளியிட்டது, இந்த அறிக்கைதான். இந்தக் கல்விக் கொள்கை மக்களுக்கானதா? 484 பக்கம் கொண்ட இந்த கல்வி அறிக்கை பிரதிநிதித்துவப் படுத்தப்படாத மக்களாகிய பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பெண் கல்வியை பற்றி எதுவும் பேசவில்லை.

எனது அனுபவத்திலிருந்து சொல்கிறேன். நான் படித்த பள்ளி வகுப்பறையில் மொத்த மாணவர்கள் 54 பேர் அதில் இளங்கலை பட்டம் படிக்க சென்றவர்கள் 14 பேர், முதுகலை பட்டம் படிக்க சென்றவர்கள் 3 பேர்தான். மீதம் உள்ளவர்கள் எதாவது ஒரு வேலைக்கு செல்கிறார்கள். கல்வி என்பது இன்னமும் முழுவதும் போய் சேராமல் உள்ளது. உயர் கல்வி நிறுவனங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலைதான் இன்னமும் உள்ளது. நிர்மலாதேவி போன்ற பேராசிரியர்கள் பெண் கல்வியை அழிக்கிறார்கள்.

படிக்க:
“உன் உயிருக்கு இந்தியாவில் மதிப்பில்லை” – ஒரே வாரத்தில் 17 தொழிலாளர்கள் மரணம் !
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 – முறியடிப்போம் ! – குடந்தை அரங்கக்கூட்ட செய்தி | படங்கள்

இந்த நிலையில் மோடியின் கல்விக் கொள்கை பெண்களுக்கான உயர் கல்வியைப் பற்றியும், மாற்று திறனாளிகள் பற்றி எதுவும் பேசவில்லை. இவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும்விதமாக உள்ளது இந்த அறிக்கை. இதற்கு எதிராக தனித்தனியாக போராட முடியாது. அனைத்து மாணவர்களும் ஒன்றிணைந்துதான் போராட வேண்டும்.” என பேசினார்.

அவருக்குப் பின் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க செயலர், திரு ஜெ. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேசுகையில் : “அரசு பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து வருகிறது. காரணம் தரம் இல்லை, ஆசிரியர்கள் சரியில்லை என்ற ஒற்றை குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது. நிஜம் என்னவென்றால் 1 கி.மீ அளவில் ஆரம்பப் பள்ளி, 3 கி.மீ அளவில் நடுநிலைப்பள்ளி, 5 கி.மீ அளவில் உயர்நிலைப் பள்ளி, 8 கி.மீ அளவில் மேல்நிலைப் பள்ளி இருக்க வேண்டும் என்பதை, காமராஜர் ஆட்சி காலத்தில் கல்வித்துறை இயக்குனராக இருந்த மேட்டூர் சுந்தர வடிவேலு என்பவர் பரிந்துரைத்தார்.

திண்ணைப் பள்ளிக்கூடம், குருகுல பள்ளிக்கூடம் என்றெல்லாம் இருந்தது. ஆனால், எல்லா மக்களுக்கும் சமமான கல்வி கொடுக்கும் வகையில் இருந்ததா? அரசுப் பள்ளி உருவான பிறகுதான் சாதி, பாலினம் கடந்து அது சாத்தியமானது. அரசு பள்ளி உள்ள இடங்களில் 1 கி.மீ-க்குள் தனியார் பள்ளிகளுக்கு கண்மூடித்தனமாக அனுமதி கொடுத்துவிட்டு, அரசுப் பள்ளியின் குறைகளைச் சரிசெய்யாமல் விட்டது அரசுதான்.

கிராம சபையைக் கூட்டி அங்குள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். அரசு பள்ளிகளின் அவசியத்தைப் பற்றிப் பேசி மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கிறோம். அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்! மேலும் எழுத்தாளர் தமிழ் செல்வன் அவர்கள் இந்த வரைவு அறிக்கை என்பது “குழந்தை கல்விக்கான மரண சாசனம்” என்று சொல்கிறார். இது அரசு பள்ளிகளுக்கான மரண சாசனமும் கூட என்று கூறுவதற்கு ஏற்பதான் இந்த கல்விக் கொள்கை இருக்கிறது .

கோத்தாரி கல்விக் குழு 1968-ல் வெளியிட்ட அறிக்கை பத்து பக்கம் கூட இல்லை மிக அருமையான கல்விக் கொள்கை. இரண்டு முக்கியமான விஷயம் கல்வி என்பது மாநில பட்டியலில் இருந்தது. பள்ளிகளை தனியார் நடத்த அனுமதிக்கலாம் என்பது கொள்கை அளவில் இல்லை. 1986-ல் உருவான கல்வி கொள்கையில் (ராஜீவ் காந்தி ஆட்சியில்) மேலே சொன்ன இரண்டு அம்சங்களும் ஒழிக்கப்பட்டன.

தனியார்மய – தாராளமய கொள்கை அடிப்படையில் கல்வி கொடுப்பது அரசின் வேலை இல்லை. வசதி உள்ளவனுக்கு கல்வி, மருத்துவம் என்றானது. 1992-ல் (நரசிம்மராவ் ஆட்சியில்) கல்வியை வணிகமயமாக்கலாம் என காட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இன்று மோடி அதை மேலும் தீவிரமாக்கும் வகையில் தனியார் முதலாளிகளுக்காகவும், இந்து மதவெறியர்களுக்காகவும் மேலும் திருத்தியுள்ளார். “மோடியின் இந்த கல்விக் கொள்கையை குப்பையில் போட வேண்டும்” என கல்வியாளர் எஸ். எஸ். இராஜகோபாலன் கூறியுள்ளார். அதனை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும்.” என தனது உரையில் கூறினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அவரைத் தொடர்ந்து புதுவை பல்கலைக்கழக பேராசிரியர். ஜெரொம் அவர்கள் அவரது உரையில் : “இந்த புதிய கல்வி கொள்கை என்பது பா.ஜ.க என்ன நினைக்கிறார்களோ அதை நிறைவேற்ற பார்க்கிறார்கள். நம் சமூகத்தில் நம்முடைய வாழ்க்கையில் கல்வி என்பது பள்ளிக் கூடம், கல்லூரி இவையெல்லாம் இல்லாமல் இருந்தால் என்னவாக இருந்திருப்போம்?

நாம் என்ன வேலை செய்திருப்போம் ? நமது அப்பா – அம்மா என்ன வேலை செய்திருப்பார்கள் ? கல்வி என்பது நமது சமூகத்தில் எவ்வளவு அவசியமானது ? கல்வி கிடைப்பதற்கு முன் நமக்கு என்ன அடையாளம் என்றால் சாதிகள்தான். ஆனால் நவீன காலத்தில் எல்லா மக்களுக்கும் ஒரு பொதுவான அடையாளம். கல்விக்கேற்ற,  தகுதிக்கு ஏற்ற வேலை என்று மாறியுள்ளது. சாதி சார்ந்த ஒடுக்குமுறையில் இருந்தும், சாதி சார்ந்த தொழில் முறையில் இருந்தும் தப்பிப்பதற்காக என்றுதான் நாம் இந்த கல்விமுறையை பார்க்க முடியும்.

இப்போது கூட நூற்றுக்கு பத்து சதவிதம் பேர் மட்டும்தான் உயர்கல்விக்குப் போகிறார்கள். மற்றவர்களுக்கும் போதிய வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் எந்த திறனையும் வளர்த்துக் கொள்ளலாம் என்பது மனித இயல்பு.” என்று கூறினார்.

மேலும், மாணவர்கள் கல்வி உதவித் தொகை தொடர்பான சிக்கல்களையும், கடந்த காலங்களில் அவருடைய வகுப்பில் கூலி வேலை பார்க்கும் பிள்ளைகள் படித்து வந்ததையும், கட்டண உயர்வால் ஏழை மாணவர்களின் கல்வி பறிபோனதையும்  பகிர்ந்து கொண்டார். நாம் எந்த துறையில் வளர்ந்து வர முடியும் என்பதை தேர்வு செய்வதற்கு பக்குவப்படாமல் உள்ளார்கள் என்றால், நாம் என்னமாதிரியான கல்வித் திட்டத்தை வைத்துள்ளோம் என்பதை பார்க்க வேண்டும். மூன்றாம் வகுப்பிலேயே பொதுத் தேர்வு என்பது மீண்டும் குலத்தொழிலுக்கு தள்ளுவதுதான் என்பதை மிக எதார்த்தமாக விளக்கிப் பேசி தொடர்ந்து நமது போராட்டம்தான் இதற்கான விடையைத் தரும் எனக் கூறினார்.

படிக்க:
அசாம் – தேசிய குடிமக்கள் பட்டியல் குறிப்புகள் : முசுலீம்களுக்கு எதிரான சதி !
♦ தமிழகத்தை நாசமாக்காதே – விழுப்புரம் கருத்தரங்கம் | செய்தி – படங்கள்

அவரைத் தொடர்ந்து பேசிய பேராசிரியர் . இளங்கோ அவர்கள் : “நான் கலந்து கொண்ட கூட்டங்களியே இது தனித்துவம் வாய்ந்த கூட்டம் என்று கருதுகிறேன். உன்மையில் இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் இந்த கூட்டத்தை ரசிக்க வேண்டும், ஏனென்றால் நமக்கு மேலே உள்ளவர்கள் எதிர்ப்புகளே இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டு இருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும் பொழுது இங்கு ஒரு மேடை போட்டு தனது கருத்துக்களை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்யும் கருத்தாளர்கள் மத்தியில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். நாளை எங்களை அமர்த்தி நீங்கள் பேசவேண்டும் என்றால் உங்களுக்கு தேடல் இருக்க வேண்டும்.

எல்லோருக்கும் தேடல், சிரிப்பு, அழுகை உள்ளது. எதற்காக என்றால் தங்கள் சொந்த வாழ்க்கைகாக. ஆனால் சொந்த வாழ்க்கையை விட்டு பொது நலனுக்காக கோபப்பட வேண்டும். ஆனால் நமது நாட்டின் சாபக் கேடு என்னவென்றால் எது நடந்தாலும் நமக்கென்ன என்ற கூட்டம் தான் 99 சதவிதம் பேர். ஆனால் ஒவ்வொரு பிரச்சினையைப் பற்றியும் பேசி விவாதிக்க வேண்டும்.

காஷ்மீர் செல்வம் கொழிக்கும் இடம். அதானி, அம்பானி அங்கு சொத்து வாங்க வேண்டும் எனத் துடிக்கிறார்கள். அதே போலத்தான் பன்னாட்டு முதலாளிகளுக்கு கல்வியைத் திறந்து விடுவதுதான் இந்த கல்விக் கொள்கை. நாம் இதற்கு ஒரு பெயர் வைக்கலாம் என இதற்கு முன் பேசிய கூட்டத்தில் சொன்னேன், அது என்ன பெயர் என்றால் ஏகலைவனின் புதிய கட்டைவிரல்.

ஒடுக்கப்பட்டவர்களின் கல்வியறிவை பறித்துக் கொள்கின்ற வேலையை செய்கிறது இந்த கல்வி கொள்கை. மூவாயிரம் ஆண்டுகள் ஏமாந்தோம். இனி ஒரு நாளும் ஏமாற மாட்டோம். இந்த புதிய கல்வி கொள்கையில் சமுதாயம் என்ற வார்த்தைக்கு என்ன விளக்கம் என்பதை கடைசிவரை சொல்லவில்லை. அது என்ன சமுதாயம் என்றால் இனி கல்வியை RSS பார்த்துக் கொள்ளும் என்பதுதான். கல்வியை தனது வசப்படுத்திக் கொள்ளும். இந்த வரைவு அறிக்கையில் இடஒதுக்கீடு என்பதே இல்லை.” இவ்வாறு ஏராளமான விசயங்களை பகிர்ந்து கொண்டார்.

அவருக்கு அடுத்தபடியாக பேராசிரியர் ப.ரவிக்குமார் பேசுகையில் : “இந்த கல்விக் கொள்கையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமானால் இந்த புதிய கல்வி கொள்கை என்பது கார்ப்பரேட்டுகளுக்கும், பார்ப்பனர்களுக்கும் உகந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

தாய் மொழிவழிக் கல்வி என்பதை முழுவதுமாக மறுக்கவில்லை. ஆனால் மும்மொழிக் கொள்கை என்பது இந்தி பேசும் மாநிலத்திற்கு வேறொரு நீதியையும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு நீதியையும் முன்வைக்கிறது. மழலையர் கல்வியில் மட்டும் பென்கள் கல்வியை பற்றி பேசப்படும் வரைவு அறிக்கை உயர்கல்வியில் அது பற்றி பேசப்படவில்லை. தரம் தரம் என்று பேசப்படும் பொழுது நாம் சந்தேகப்பட வேண்டும். இந்த கல்விக் கொள்கையை பேசவேண்டியவர்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள்தான்.” என தனது கருத்தை பதிவு செய்தார்.

இறுதியாக புமாஇமு மாநில ஒருங்கிணைப்பளர் தோழர் . கணேசன் அவர்கள் “இந்த கல்வி கொள்கையை ஏன் நிராகரிக்க வேண்டும் என்றால் ஒரு வார்த்தையில் சொல்ல முடியும், தலைப்பிலேயே தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை என்று இருப்பதாலேயே நிராகரிக்கலாம். ஏனென்றால் இங்கு பல தேசிய இனங்கள் உள்ளன, அனைத்துக்கும் சேர்த்து ஒரே கல்விக் கொள்கை என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். தமிழகம் – புதுவை இரண்டு மாநிலங்கள் என்றாலும் சமூக அடிப்படையில் அரசியல், பொருளாதார அடிப்படையில் இணைந்ததாக இருந்து வருகிறது.

நாம் இங்கு கல்விக் கொள்கையை பொருத்தவரை தமிழகத்துக்கும், புதுவைக்கும் ஒரு மாதிரியாக இருக்கலாம் என பேசலாம். ஆனால் நமக்கும் உத்திரபிரதேசத்துக்கும் எவ்வாறு ஒரே கல்விக் கொள்கையை பேச இயலும். மொழியால், இனத்தால், கலச்சாரத்தால் இணைந்தவர்களா..?

நாடு முழுவதும் உள்ள கல்வியளர்கள் பேசுகிறார்கள் இதை நிராகரிக்க வேண்டும் என்று. ஆனால் துக்ளக் குரு மூர்த்தி என்ன சொல்கிறார், எடப்பாடி என்ன சொல்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.  இந்த 484 பக்க வரைவு அறிக்கையில் முதலில் தொடங்கி கடைசி பக்கம்வரை இரண்டு கொள்கைகள் பட்டவர்த்தனமாக சொல்லப்படுகிறது. ஒன்று இந்துத்துவா கொள்கை, மற்றொன்று கார்ப்பரேட் கொள்கை.

ஏற்கெனவே நிலவும் கல்விக் கொள்கையையே நாம் விரும்பவில்லை. நாங்கள் அதை மாற்றவேண்டும் என்று எண்ணுகிறோம். ஆனால் நீ சொல்லும் கல்வி கொள்கை வடிவத்தில் இல்லை. ஏன் பின்லாந்து கல்வி கொள்கை இந்தியாவுக்கு கொண்டு வர முடியாதா? அதை அரசு நினைத்தால் கொண்டு வரமுடியும். ஆனால் மோடி அரசு கொண்டுவருமா? வராது, ஏனென்றால் அனைவருக்குமான சமத்துவத்தை ஆர்.எஸ்.எஸ் என்றும் ஏற்காது.

இந்த கல்வி கொள்கையை அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டியதுதானே, அவ்வாறு வெளியிடமாட்டார்கள் ஏனென்றால், இதன் மீது யாரும் கருத்து சொல்லக் கூடாது என்பதுதான் அவர்களுடைய எண்ணம்.

பின்லாந்து கல்வியை பட்டியலிட்டுக் காட்டும்போது முதல் பத்து இடங்களுக்குள் வருகிறது. காரணம் அரசாங்கம் அதிக நிதி ஒதுக்குகிறது, தாய்மொழி வழியில் கல்வியை அறிவியல் பூர்வமாக கற்றுக் கொடுக்கிறது. ஆனால் இங்கு கார்ப்பரேட் முதலாளிக்கு அடிமையாக இருந்து சேவை செய்ய வேண்டும் என்பதுதான் இவர்கள் விருப்பம். இந்த கல்விக் கொள்கை என்பது கார்ப்பரேட் – காவி இரண்டும் இணைந்த புதியவகை ஹைபிரிட் வீரிய ஒட்டுரகம்.” என விரிவாக பேசினார்.

கூட்டத்தின் கடைசியாக தோழர் அரிஷ் அவர்கள் நன்றியுரையாற்றினார். அரங்க கூட்டத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள் மாற்று கட்சி நண்பர்கள் என சுமார் 120 பேர் கலந்துகொண்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, 
புதுச்சேரி. தொடர்புக்கு : 81244 12013

ஆறு வயதுக் குழந்தைகளின் அதிசயத் திறமையின் ரகசியங்கள் !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 4 | பாகம் – 06

அதிசயத்தின் “ரகசியங்கள்”

ன்று அதிசயம் நடக்குமா? இதோ இப்போதுதான் எல்லா எழுத்துகளையும் கற்று முடித்த ஆறு வயதுக் குழந்தைகளால் தமது மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் எழுத்து வடிவில் வடிக்க முடியுமா? நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்றாலும், சென்ற ஆண்டுகளின் அனுபவம் எனக்கு நம்பிக்கையளிக்கிறது. அவர்கள் அடிப்படை எழுத்து வடிவ அம்சங்களைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் 84 நாட்கள் இவர்களைத் தயார்படுத்தினேன். இதோ எனது முறையியலுக்கான பரிசோதனை நேரம் வந்து விட்டது. இன்றைய பாடத்தின் எல்லா “ரகசியங்களும்” இதில்தான் அடங்கியுள்ளன.

இதோ இந்த “ரகசியங்கள்”.

முதலில் என் வகுப்புக் குழந்தைகள் வார்த்தையின் கட்டமைப்பைப் பகுப்பாய்வு செய்யக் கற்றுக் கொள்கின்றனர். நான் செயற்கையாக நீண்டு இழுத்தபடி உச்சரிக்கும் வார்த்தைகளை இவர்கள் புரிந்து கொள்ளுமாறு செய்கிறேன், அவர்களே இம்மாதிரி உச்சரிக்கச் சொல்லித் தருகிறேன், இவற்றில் எந்த வரிசையில் ஒலிகள் ஒலிக்கின்றன என்பதையும் கவனித்துக் கொள்கிறேன். அட்டை வில்லைகளின் உதவியால் அவர்கள் வார்த்தையின் ஒலியமைப்பைக் கண்டுபிடிக்கின்றனர்.

இது பின்வருமாறு நடக்கிறது: வார்த்தையை மெதுவாக, இழுத்தபடி உச்சரித்து குழந்தை முதல் ஒலியைக் கண்டுபிடித்து அட்டை வில்லையைப் போடுகிறான் – நீல நிற அட்டைவில்லை மெய்யெழுத்தையும் சிவப்பு நிற அட்டைவில்லை உயிரெழுத்தையும் குறிக்கும்; வார்த்தையை மீண்டும் உச்சரித்து இரண்டாவது ஒலியைக் கண்டுபிடித்து அட்டைவில்லையைப் போடுகிறான். இதே போல் அடுத்து வரும் ஒலிகளைக் கண்டு பிடித்து அட்டை வில்லைகளைப் போடுகிறான். இவ்வாறாக வார்த்தையின் மாடல் இதன் ஒலியமைப்புடன் கிடைக்கிறது; இதை அவன் மாற்றியமைக்கலாம், ஒலிகளை மாற்றலாம், ஒரு ஒலிக்குப் பதிலாக வேறு ஒலியை வைக்கலாம், ஏதாவதொரு ஒலியை அகற்றலாம், இச்சந்தர்ப்பங்களில் எல்லாம் வார்த்தை எப்படி மாறுகிறது என்று கவனிக்கலாம்.

இத்திறமை தான் வார்த்தைகளை எழுதும் முறையின் அடிப்படையாகத் திகழுகிறது. நான் வார்த்தைகளை எழுதும் படி குழந்தைகளுக்குச் சொல்ல, அவர்களுக்கு இன்னமும் எழுத்துகள் தெரியாதாகையால், எந்த ஒரு எழுத்திற்கும் பதிலாக வட்டத்தைப் பயன்படுத்துவார்கள். இதை நான் அரை எழுத்து என்கிறேன். ஒவ்வொரு நாளும் செல்லச் செல்ல இந்த முறையில் வார்த்தைகளை எழுதும் திறமை வளருகிறது, ஒலிகளைக் கண்டுபிடிக்க வார்த்தைகளைப் பல முறை திரும்பச் சொல்ல வேண்டியதில்லை. முதல் முயற்சியிலேயே அவன் எழுதுகிறான். இவற்றையெல்லாம் குழந்தைகள் எழுத்துகளைக் கற்கும் முன்னரே கிரகிக்கின்றனர்.

பின்னர் எழுத்துகளைக் கற்றுக் கொள்ளக் கற்றுக் கொள்ள, கலப்பு முறையில் (இதுவரை கற்ற எழுத்துகளை அப்படியே எழுதியும் இதுவரை படிக்காத எழுத்துகளுக்கு வட்டங்களைப் பயன்படுத்தியும்) வார்த்தைகளை எழுதுமாறு குழந்தைகளுக்குச் சொல்கிறேன். இவ்வாறாக ஒவ்வொரு புது எழுத்தும் உடனடியாக, எதற்காக தோற்றுவிக்கப்பட்டதோ அந்த முறையினுள் (வார்த்தையின் எழுத்தாக) உடனடியாகச் சேருகிறது. அரை எழுத்து படிப்படியாக முழு எழுத்தாகிறது, எழுத்துகள் வட்டங்களை வெளித் தள்ளுகின்றன. எனவே ஆறு வயதுக் குழந்தைகள் எல்லா எழுத்துகளையும் கற்றுக் கொள்ளும் முன்னரே வார்த்தைகளை எழுதக் கற்கின்றனர். எனது முறையியலின் முதல் “ரகசியம்” இதுதான்.

அடுத்து வாக்கியங்களைப் பற்றி பார்ப்போம். படங்களைப் பார்த்து முக்கோண அட்டைகளைப் பயன்படுத்தி வாக்கியங்களை உருவாக்குமாறு குழந்தைகளுக்குச் சொல்கிறேன். பின்வருமாறு வாக்கியம் உருவாக்கப்படுகிறது: குழந்தை வாக்கியத்தை உச்சரித்து, முதல் வார்த்தையைக் கண்டுபிடித்து ஒரு அட்டையை வைக்கிறான், மீண்டும் அதே வாக்கியத்தை உச்சரித்து இரண்டாவது வார்த்தையைக் கண்டுபிடித்து மற்றொரு அட்டையை முதல் அட்டையின் அருகே வைக்கிறான், இதே போல் தொடருகிறது. இறுதியில் அவன் என்ன சொல்ல வந்தான் என்பதைப் பொறுத்து முற்றுப் புள்ளி, ஆச்சரியக் குறி அல்லது கேள்விக் குறியுடன் கூடிய அட்டையை வைக்கிறான். இவ்வாறாக வாக்கிய மாடல் கிடைக்கிறது.

இதில் வார்த்தைகளை மாற்றியமைக்கலாம், ஏதாவதொரு வார்த்தையை அகற்றலாம், புதிய வார்த்தையைச் சேர்க்கலாம். ஒவ்வொரு முறையும் அர்த்தம் எப்படி மாறுகிறது, வாக்கிய அமைப்பு எப்படி மாறுகிறது, அதன் உட்பொருள் எப்படி செழுமையடைகிறது அல்லது மோசமாகிறது என்று குழந்தை கவனிக்கிறான், வார்த்தைகளை எப்படி நன்றாக சேர்ப்பது என்று சிந்திக்கிறான். பின்னர் குழந்தைகள் “வாக்கியங்களை எழுத” கற்றுக் கொள்கின்றனர்: வாக்கியத்தை உச்சரித்து, முதல் வார்த்தையைக் கண்டுபிடித்து, அதை ”எழுதுகின்றனர்”, அதாவது நீண்ட முக்கோணத்தை வரைகின்றனர்; மீண்டும் அதே வாக்கியத்தை உச்சரித்து, இரண்டாவது வார்த்தையைக் கண்டுபிடித்து அதே வழியில் “எழுதுகின்றனர்”. வாக்கியத்தின் இறுதியில் முற்றுப் புள்ளியையோ, ஆச்சரியக் குறியையோ, கேள்விக் குறியையோ இடுகின்றனர். படங்களைப் பார்த்து சிறு கதைகளை ”எழுதவும்”, சொந்தக் கருத்துகள், உணர்ச்சிகளை “எழுதவும்” படிப்படியாக குழந்தைகளுக்குச் சொல்லித் தருகிறேன். இவ்வாறாக இந்த 84 நாட்களில் ஒவ்வொருவரும் ஒரு சில நோட்டுப் புத்தகங்களை முடிக்கின்றனர்.

இதில் என்ன ”எழுதப்பட்டுள்ளது” என்று இவர்களால் மட்டுமே படிக்க முடியும். இவர்கள் தமது ‘கட்டுரைகளைப்’ பாடங்களிலும் இடைவேளைகளிலும் எனக்குப் படித்துக் காட்டினர். எனவே, எழுத்துகளைக் கற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலேயே தமது மனப்பதிவுகள், உணர்ச்சிகளைப் பற்றி எழுதவும் தமது கருத்துகளை வரிவடிவத்தில் வெளியிடவும் குழந்தைகளுக்குத் தெரிந்திருந்தது என்றாகிறது. எனது முறையியலின் இரண்டாவது “ரகசியம்” இதுதான்.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !

அடுத்து, உணர்வு பூர்வமாகப் பேச, அதாவது எதை, எப்படி சொல்வது என்று முதலில் யோசித்து பின் பேசச் சொல்லித் தருகிறேன். இதற்கு நான் முதலில் பின்வரும் முறையைப் பின்பற்றுகிறேன்:

ஏதாவது ஒரு விஷயத்தை மெதுவாகத் திரும்பிச் சொல்ல, தம் மனப்பதிவுகள், உணர்ச்சிகளை மெதுவாக வெளியிட குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்கிறேன். அதுவும், இதுவரை எனக்குத் தெரியாததைச் சொல்லும்படி குழந்தைகளிடம் கூறுகிறேன். நான் புதிய படத்தைப் பார்க்கவில்லை, குழந்தை இதை நேற்று பார்த்திருக்கிறான். எனக்கு அப்படத்தைப் பற்றி அறிய ஆவல், அவனுக்கோ என்னுடன் பேச விருப்பம். அவன் ஞாயிற்றுக்கிழமையை எப்படிக் கழித்தான் என்று எனக்குத் தெரியாது, அவனுக்கோ தான் தந்தையுடன் எப்படி உலாவினான் என்று எனக்குச் சொல்ல விருப்பம். இவ்வாறாக எங்களிடம் பேச்சு தோன்றுகிறது, ஆனால் அவன் மெதுவாக, புரியும்படி, தெளிவாக, தேவையில்லாத வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் பயன்படுத்தாமல் சொல்ல வேண்டும்.

அவன் தன் கையில் வார்த்தை அட்டைவில்லைகளை வைத்திருக்கலாம். எனக்கோ, வகுப்பில் உள்ள அனைவருக்குமோ எதையாவது சொல்லும் போது இந்த அட்டைகளை வார்த்தைகளுக்கான அழகிய சிறு பெட்டியில் போடலாம். பகிர்ந்து கொள்ளும் இத்தேவை, எதையாவது தெரிவிக்கும் தேவை மிகவும் வலிமையானது, இது பேச்சின் உள்ளடக்கத்தை முன் கூட்டியே சிந்திப்பதில் தோன்றும் இடர்ப்பாடுகளைக் கடக்கக் குழந்தைகளுக்கு உதவும். இவையெல்லாம், தெளிவற்று, முழுமையின்றி பேச்சில் வரும் மனப்பதிவுகளை தடுத்து நிறுத்தவும் இவற்றிற்கு தெளிவைத் தரவும் இவற்றை வார்த்தைகள், சொற்றொடர்களால் அலங்கரிக்கவும் அவசியம்.

எனது நடைமுறையில், சிந்தனையையும் கருத்துக்களையும் எழுத்து வடிவில் வெளிப்படுத்தும் திறமையைக் குழந்தைகளிடம் வளர்ப்பதானது நன்கு பேசப் பழகும் போது நடைபெறுகிறது. அதுவும் பேச்சு வளர்ச்சி எழுத்து வளர்ச்சியின் ஒரு சில விதிகளின்படி நடைபெறுகிறது. எழுத்தின் அடிப்படைகளைத் தரும் நான் பேச்சுப் பழக்கத்தை அதிக விரைவாக வளர்க்க உதவுகிறேன். எழுதக் கற்றுத் தரும் எனது முறையியலின் மூன்றாவது “ரகசியம்” இதுதான்.

இப்போது எழுதும் விவரங்களைப் பார்ப்போம். குழந்தைகளிடம் எழுத்துப் பழக்கங்கள் உருவாகும் நிகழ்ச்சிப் போக்கை, இவர்களிடம் எழுத்து வடிவிலான உரையாடல் திறமையை வளர்க்கும் நிகழ்ச்சிப் போக்கிலிருந்து பிரிக்காமலிருப்பதுதான் முக்கியமென நான் கருதுகிறேன். இப்பிரச்சினையின் தீர்விற்காக பயிற்சிகள், எழுத்து மாதிரிகள் அடங்கிய நோட்டுப் புத்தகங்களை நான் தயாரித்தேன். எழுதக் கற்றுத்தரும் பொருட்டு எழுத்துகளின் தனிப்பட்ட பகுதிகளை எழுதித் தரும் பயிற்சிகளை நான் தருவதில்லை. மாறாக, தாய்மொழி எழுத்துகளை எழுதும்போது கையை எப்படியெல்லாம் அசைக்க வேண்டுமோ, அத்தகைய அசைவுகளை உள்ளடக்கிய வடிவங்களை வரைவதற்குப் பயிற்சியளிக்க நான் விரும்புகிறேன்.

படிக்க:
குழந்தைகள் உலகில் ஆத்திகம் Vs நாத்திகம் – ஓர் அனுபவம் !
இயற்கை சாதி பார்ப்பதில்லை ! ஆனால் மனிதர்கள் ?

எனவே, பின்னால் எந்த ஒரு எழுத்தையும் எழுதுவதில் குழந்தைகளுக்கு இடர்ப்பாடுகள் இருக்காது. குழந்தைகள் நோட்டுப் புத்தகங்களில் நான் சுயமாக வேலை செய்யப் பல்வேறு பயிற்சிகளை அளித்துள்ளேன்: படங்களைப் பார்த்து வார்த்தைகளையும் வாக்கியங்களையும் எழுதுவது, ஒலி ஓவியப் புதிர்களைப் போடுவது, வாக்கியங்களில் விட்டுப்போன வார்த்தைகளைப் பூர்த்தி செய்வது, கொடுக்கப்பட்ட எழுத்துகளிலிருந்து இயன்ற அளவு அதிக வார்த்தைகளை உருவாக்குவது, இன்ன பிற பயிற்சிகள் இவற்றிலடங்கும். இவ்வாறாக பல்வேறு எழுத்து வேலைகளைச் செய்யும்போது குழந்தைகள் எழுதும் பழக்கத்தைப் பெறுகின்றனர். எழுதச் சொல்லித் தரும் என் முறையியலின் நான்காவது “ரகசியம்” இதுதான்.

பிரபல சோவியத் மனவியல் நிபுணர் லேவ் விகோத்ஸ்கியின் கருத்து நிலை இந்த ”ரகசியங்கள்” அனைத்தின் அடிப்படையில் உள்ளது. எழுத்துக்கு விசேஷ மனவியல் நியதிகள் உண்டு, இதன் முறையை சாதாரணப் பேச்சு முறையோடு சேர்க்கக் கூடாது என்றார் அவர். இதனால் மனவியலின் பழைய கருத்து நிலை நிராகரிக்கப்படுகிறது. இதன்படி “பேச்சு + எழுத்துகளில் வடித்தல் = எழுத்து” என்றிருந்தது. இந்த எளிய, தவறான கருத்துதான் ஆரம்ப வகுப்புகளில் வழக்கமாக எழுத்துகளை கற்பிக்கும் முறையை இம்சிப்பதாக எனக்குத் தோன்றுகிறது.

எனது மாணவர்கள் தமது கட்டுரைகளை எனக்குத் தருகின்றனர். இவற்றில் பலவற்றில் பட்டாம்பூச்சிகள், மலர்கள், விமானங்கள், வீடுகள், வேறு படங்கள் உள்ளன. நான் கட்டுரைகளைப் படிக்கிறேன், அவற்றில் கற்பனைகளே இல்லை, எல்லாம் உண்மைகள். குழந்தைகள் தமது மனப்பதிவுகள், உணர்ச்சிகள், இன்ப துன்பங்களைப் பற்றி எழுத முடிந்தது குறித்து எனக்கு மகிழ்ச்சி. இந்தக் கட்டத்தில் எனது இலட்சியம் அடையப்பட்டு விட்டது. எனக்கு எது மகிழ்ச்சி தருகிறது என்று என்னையும் எழுதச் சொன்னால் நான் இப்படி எழுதுவேன்: “எனது ஆறு வயதுக் குழந்தைகளின் திறமை குறித்து, அதிசயம் நடந்தது குறித்து எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி!” இதற்கு நிரூபணமாகக் குழந்தைகளின் 37 ஒளிவுமறைவற்ற கட்டுரைகளையும் காட்டுவேன்.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

உலகம் சுற்றும் எடப்பாடி – கருத்துக் கணிப்பு

லையாளப் படங்களில் தமிழக அரசியல்வாதிகளை அடிக்கடி கிண்டல் செய்வார்கள். அப்படி கிண்டலடிக்கப்படும் பாத்திரத்தின் கெட்டப்பானது கறைவேட்டி, வெள்ளை சட்டை, கருப்புக் கண்ணாடி சகிதம் இருக்கும். மலையாளக் கரையோரத்து கிண்டல் விசயம் பாலக்காடு கணவாய் வழியாக கோவை, சேலத்தை எட்டியிருக்கும் போலும். எடப்பாடி உடனே கெட்டப்பை மாற்றிவிட்டார்.

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளைக் கொண்டு வரும் பெயரில் இலண்டன், அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார். அங்கே கோட்டு சூட்டு சகிதம் சிரித்தவாறு நடக்கிறார். தொப்பையை கட்டுப்படுத்தும் ‘சூட்’டினால் மூச்சு விட திணறினாலும் ஒய்யாரமாக காட்சி அளிப்பதில் கவனமாக இருக்கிறார். காமரா கோணங்கள் ஆயிரத்தை அத்துப்பிடியாக மனனம் செய்திருக்கும் மோடியின் வழியில் பழனிச்சாமியும் பயணிக்கிறார். இருப்பினும் இலண்டன் விமான நிலையத்திலேயே அவரை எதிர்த்து ஆர்ப்பாட்ட வரவேற்பும் இருந்தது. அதனால் புறவாசல் வழியாக பத்திரமாக வெளியேறினார்.

கிங்ஸ் மருத்துவமனையின் கிளை தமிழகத்தில் துவங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தமாம். அந்தப் புரிந்துணர்வு ஷாட்டில் நம்மவர்கள் (மாநிறத்தவர்) அதிகம் இருக்க வெண் தோல் வேந்தர்களை பூதக்கண்ணாடி வைத்து எண்ண வேண்டியிருக்கிறது. இனி அம்மா சுகவீனம் அடைந்து அப்பல்லோ போனதற்கு பதில் அய்யாக்கள் கிங்ஸ் போவார்கள் என்று மனப்பால் குடிக்காதீர்கள். இது புரிந்துணர்வுதான். தொலைதூரக் கல்வி போல இலண்டனில் இருந்து கொண்டே கிங்ஸ் மருத்துவமனை இணைய வழி மருத்துவம் பார்ப்பது வேண்டுமானால் நடக்கலாம்.

இலண்டனை வென்று விட்ட எடப்பாடி அடுத்து பூலோக சொர்க்கம் அமெரிக்காவிற்குச் சென்றார். ஒவ்வொரு ஷாட்டிலும் புதிய கோட்டு சூட்டுக்கள், ஷூக்கள் அணிந்தாலும் வேட்டி சட்டை போல சுதந்திரமாக அவரால் நடக்க முடியவில்லை என்றாலும் நடந்தார். ஏர் பிடிக்காமலே விவசாயி பட்டம் பெற்றவர் பபல்லோ நகரத்துக்குச் சென்று அங்குள்ள மாட்டுப் பண்ணையை பார்வையிட்டு மாடுகளுக்கு வைக்கோலும் கொடுத்தார். அமெரிக்க மாடு எப்படி வளர்க்கப்படுகிறது, எப்படி சாணி போடுகிறது போன்ற தொழில்நுட்பங்களை கேட்டறிந்தார்.

பிறகு நியூயார்க் பறந்தார். அங்கு முதலீட்டாளர்கள் என்ற பெயரில் அமெரிக்காவில் பெட்டிக்கடை போன்று நடத்தும் சிறு தொழில் முனைவர்கள் 200 பேர்களை சந்தித்தாராம். அவர்களை தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தாராம் எடப்பாடி. ஏற்கெனவே அமெரிக்க நிறுவனங்கள் வெளியே போகக்கூடாது என்று ட்ரம்ப் சிம்ம சொப்பனமாக தாண்டவமாடும் நேரத்தில் இந்த பெட்டிக்கடைகாரர்கள் முதலுக்கே மோசமென்று முடிவெடுப்பார்களா என்ன? இருந்தாலும் தமிழகத்தில் இப்படி ஒரு ஜீவன் கோட்டு சூட்டில் சிரமப்பட்டு கோரிக்கை விடுக்கிறதே என்று அவர்கள் இரங்கியிருக்கலாம். என்ன இருந்தாலும் போடப்படுவது வெறும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்தானே?

படிக்க:
பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?
♦ காஷ்மீர் குறித்து ரஜினி பேசியது ஏன் ? கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தொழில் துவங்கினால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி கேட்டர் பில்லர், ஃபோர்டு போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் மற்ற பெட்டிக்கடைகாரர்களுக்கு வகுப்பு எடுத்தார்களாம். அதில் இந்தியாவின் ஆட்டோமொபைல் நிறுவனம் அதல பாதாளத்தில் வீழ்ந்திருப்பது குறித்தும் சொல்லியிருப்பார்களா தெரியவில்லை. இது போதாது என செய்தி ஒளிபரப்புத் துறை தயாரித்த ஒரு விளம்பரப் படத்தையும் அங்கே திரையிட்டிருக்கிறார்கள். அதில் தமிழகம் பூசி மெழுகி பாலிசாக ஜொலிக்கிறது. இந்த பிரசண்டேசன் பம்மாத்துகளுக்கு அமெரிக்காதான் தலைநகரம். இருட்டு கடைக்கே அல்வாவா?

இறுதியில் ஜீன் மார்ட்டின், அக்குய்ல் சிஸ்டம்ஸ், சீடஸ் பர்மா, நியூரே கெமிக்கல்ஸ், நோவிட்டியம் லாப்ஸ், ஜோஹோ ஹெல்த், எஸ்.டி. எல்.ஜி.என்., சரம்-4, எமர்சன், ஆஸ்பைர் கன்சல்ட்டிங், ரிவேச்சர்-எல்.எல்.சி., ஜில்லியோன் டெக்னாலஜீஸ் உள்ளிட்ட 16 பெட்டிக்கடை நிறுவனங்கள், தமிழ்நாட்டில் ரூ.2,780 கோடி முதலீடு செய்து, தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்களாம்.

இதன்மூலம் தமிழ்நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இளைஞர்கள் பயன் பெறுவார்களாம்! இதன்படி ஒரு இளைஞருக்கு ரூ. 13,90,000 முதலீடாம். இலட்சக்கணக்கானோர் வேலையற்று இருக்கும் தமிழகத்தில் காகிதத்தில் உள்ள இந்த பெட்டிக்கடை முதலீடுகள் முதலில் வருமா என்பது தெரியாது. அப்படி வந்தாலும் அது எதையும் மாற்றி விடாது. ஈவண்ட் மேனேஜ்மெண்ட் போல இந்த முதலீடு மேனேஜ்மெண்ட் சுற்றுலாவை வைத்து தேம்ஸ் வென்றான், நியூயார்க் கொன்றான் என்று ரத்தத்தின் ரத்தங்கள் சுவரொட்டி ஒட்டி மீனம்பாக்கம் சுவர்களை விரயமாக்குவதைத் தவிர இந்த இன்பச் சுற்றுலாவால் எந்தப் பயனுமில்லை. ஏற்கெனவே சென்னை வர்த்தக மையத்தில் தலா 100 கோடி ரூபாயில் இரண்டு முறை நடந்த உலக முதலீட்டாளர் மாநாடுகளாலேயே எந்த பலனுமில்லை.

முக்கியமாக எடப்பாடியின் வெளிநாட்டு பயணச் செய்திகளை ஊடகங்கள் எதுவும் சொந்தமாக வெளியிடவில்லை. அவை தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இடம்பெற்றவை. அரசு விளம்பரங்களுக்காக அமெரிக்க விளம்பரங்களை ஊடகங்கள் வெளியிடுகின்றன.

இனி இன்றைய கருத்துக் கணிப்பின் கேள்வி

எடப்பாடியின் வெளிநாட்டு பயணம் ஏன்?

♣ கோட்டு சூட்டு கெட்டப்புக்காக
♣ அரசு செலவில் இன்பச் சுற்றுலா
♣ அன்னிய முதலீட்டை ஈர்க்க
♣ ஓபிஎஸ்ஸை ஓரங்கட்ட
♣ மோடிக்கு போட்டி

(பதில்களில் இரண்டை தெரிவு செய்யலாம்)
***
டிவிட்டரில் வாக்களிக்க :

யூடியூபில் வாக்களிக்க இங்கே அழுத்தவும்

பாசிசத்தின் பிரதிநிதிக்கு கரிசனம் காட்டலாமா ?

Tamilisai

திருமதி தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருப்பது என்பது எந்த வகையில் பார்த்தாலும் ஆர்.எஸ்.எஸ் / பாஜக முகாமுக்கு உத்வேகம் அளிக்கும் ஒரு செயல்தான்.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் / பாஜக மீது பொதுவாகவே ஒரு ‘நன்மதிப்பை’ அல்லது ‘எதிர்ப்புணர்வு குறைந்த ஒரு மனநிலையை’, பெருமளவில் ஒரு சமூகம் கொண்டிருக்குமானால் அது நாடார் சமூகமாக இருக்கக்கூடும். (இது ஒரு அனுமானம்தான், ஆய்வுப்பூர்வமான ஒரு முடிவு அல்ல). நாடார்கள் மிகப்பெரும்பான்மையான அளவில் இருக்கிற கன்னியாகுமரி தொகுதியில் பாஜக செல்வாக்கோடு இருக்கிறது. இந்த வளர்ச்சியை அவர்கள் ஓர் இரவில் பெற்றுவிடவில்லை. அனேகமாக 30 – 40 ஆண்டுகள் திட்டமிட்டு வேலை செய்திருக்கிறார்கள்.

Tamilisai-Ponnarகட்சியின் மாநில தலைவராக பொன். ராதாகிருஷ்ணன் இருந்தார், அவர் பிறகு மத்திய அமைச்சராக ஆக்கப்பட்டார், தமிழிசை மாநில தலைவராக நீண்டகாலம் இருந்தார், இப்போது கவர்னர் ஆக்கப்பட்டிருக்கிறார். என்னதான் கட்சிக்கு குறிப்பிடத்தக்க தேர்தல் வெற்றியை தமிழிசை பெற்றுத்தராவிட்டாலும், அவருடைய சின்சியர் உழைப்புக்கு ஒரு வெகுமதிதான் இந்த பதவி.

ஜாதிகாரனையும் சந்தோசப்படுத்தி, கட்சியின் பல்வேறு அணியினரையும் சந்தோசப்படுத்தி, தமிழிசையையும் சந்தோசப்படுத்தி, தமிழிசை மாநில தலைவராக இருப்பதை விரும்பாதவர்களையும் சந்தோசப்படுத்தி, சாமானிய அப்பாவி தமிழர்களையும் சந்தோசப்படுத்தி – இப்படி பல்வேறு தரப்பினரையும் திருப்தி செய்யும் விதமான பாஜகவிற்கு பலவகைகளிலும் சாதகமான ஒரு முடிவு இது.

எந்த வகையிலும் பாஜக/ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு முகாமை சேர்ந்த நமக்கு சாதகமான ஒரு செயலோ அல்லது தமிழிசையை பாராட்டி வாழ்த்துவதற்கான ஒரு செயலோ அல்ல இது.

படிக்க:
பிள்ளையார் சிலையும் போதை ஆசாமியும் !
♦ தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி

தமிழிசை ஒரு பெண் என்பதாலோ, அதிலும் பார்ப்பனரல்லாத சமூக பெண் என்பதாலோ, தமிழர் என்பதாலோ, அதிலும் பார்ப்பனரல்லாத தமிழர் என்பதாலோ, குமரி அனந்தன் மகள் என்பதாலோ, நம் வீட்டு பெண் போன்றதொரு தோற்றம் கொண்டவர் என்பதாலோ – இப்படி எந்தவொரு காரணத்தினாலோ அவர் ஃபாசிசத்தின் பிரதிநிதி என்கிற உண்மை இல்லாமல் ஆகிவிடாது.

பொதுவாகவே நம்மவர்கள் பலரிடம் தமிழிசை மீது ஒரு soft corner உண்டு. நம் தலைவர்கள் வீரமணி, ஸ்டாலின், கனிமொழி போன்றோர் இன்று கொடுத்திருக்கும் வாழ்த்து செய்தியிலும் கூட அதை பார்க்கலாம்.

ஆனால், தமிழிசையால் தூக்கி பிடிக்கப்படும் இந்துத்துவ ஃபாசிசம் என்பதற்கு தமிழர்கள் மீதோ திராவிடர்கள் மீதோ எந்தவிதமான soft corner-ம் கிடையாது என்பதை நாடறியும்!

Call a spade a spade என்பதைப் போல, ஃபாசிசத்தை ஃபாசிசம் என்று தயக்கமின்றி அடையாளப்படுத்துவோம்.

தமிழிசை என்னும் ஃபாசிசத்தின் பிரதிநிதிக்கு ஆளுனர் பதவி கிடைத்ததற்கு வாழ்த்துவது என்பது, ஃபாசிசத்தின் மீது பரிவு காட்டுமாறு மக்களை பழக்குவதைத் தவிர வேறு எதற்கும் பயன்படாது !

நன்றி : ஃபேஸ்புக்கில் Prabaharan Alagarsamy 

கேள்வி பதில் : சமூக மாற்றத்திற்கு சமூக அந்தஸ்து உள்ள தலைவர் தேவையா ?

கேள்வி: //”நீ பெரிய ஆளாக (பணக்காரன், வக்கீல், சமூக அந்தஸ்து பெற்றவன்) இருந்தால் தான் மக்கள் நீ சொல்வதைக் கேட்பார்கள். இல்லையெனில் மக்களுக்காக களப்பணி செய்யும் உன்னைப் போன்ற எவரையும் மக்கள் சட்டை செய்ய மாட்டார்கள். உன் உழைப்பும், எதிர்காலமும் வீணாகிவிடும்.

அப்படித்தான் அம்பேத்கர், பெரியார், அப்துல் கலாம் சமூகத்தின் மாற்றத்திற்கு பங்களிப்பு செய்தார்கள். மக்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று மக்கள் பணி செய்யும் என்னைப் போன்ற தோழர்களை அவநம்பிக்கைக்கு உள்ளாக்கி விடுகிறார்கள். அவநம்பிக்கையும் ஏற்பட்டு மனரீதியாக அழுத்தம் ஏற்படுகிறது. இதை எப்படி எதிர்கொள்வது?//

– மா.பேச்சிமுத்து

ன்புள்ள பேச்சிமுத்து,

அப்துல் கலாம் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு திணிக்கப்பட்டு பிரபலமானவர். அதனாலயே அவர் இறந்து போன பிறகு மக்களும் கணிசமாக மறந்து போனார்கள். அம்பேத்கரும், பெரியாரும் தங்களது திட்டமிட்ட செயல்பாட்டால் பிரபலமானார்கள். அதற்காக சொல்லடியும் கல்லடியும் பட்டு களத்தில் போராடினார்கள். அந்த போராட்டம் மலர் குவிந்த மென்மையான ரம்மியமான பாதையில் அல்ல!

periyar-ambedkarஅண்ணல் அம்பேத்கர் தனது காலத்தில் சாதி தீண்டாமைக்கு காரணமான இந்துமதத்தை, பார்ப்பனியத்தை முற்று முழுதாக அம்பலப்படுத்தினார். அதற்காகவே அவர் காலத்தில் மிகப்பெரும் ஆளுமையாக திகழ்ந்த காந்தியை துணிவுடன் எதிர்கொண்டார். காந்தியை விமரிசிப்பது என்பது மைய நீரோட்ட அரசியலை எதிர்ப்பதாகும். இருப்பினும் அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதே போன்று பெரியாரும் சமூகநீதிக்காகவும், பார்ப்பனிய மேலாதிக்கத்தை எதிர்த்தும் போராடினார். எனவே இவர்களுக்கு கிடைத்த பிரபலம், புகழ் என்பது அவர்களது சொந்த முயற்சிக்கு கிடைத்த ஒன்றாகும். சொல்லப்போனால் அவர்களுக்குரிய சமூக அந்தஸ்து இதனால் ஆரம்பத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்டது. தொடர்ச்சியான அவர்களது செயல்பாடே அவர்களுக்கு சமூகத்தில் ஒரு மதிப்பை பெற்றுத் தந்தது.

இந்திய போன்ற நிலவுடமை சமூகச் செல்வாக்கு உள்ள நாடுகளில் சமூக அந்தஸ்து உள்ளோருக்கு ஒரு செல்வாக்கும் புகழும் இருக்கும் என்பது உண்மையே. ஏற்றத் தாழ்வான வளரச்சி கொண்ட நம் நாட்டில் சொத்துடமையால் பிரிந்து கிடக்கும் சமூகத்தில் சமூக அந்தஸ்து கொண்டோர் பிரபலமாக முடியும் என்பதும் உண்மையே.

அதே நேரத்தில் சமூகத்தில் இருக்கும் மாற்றம் என்பது தனிநபர்களை மட்டும் மையமாக வைத்து தோன்றிடும் ஒன்றல்ல. அது சமூகத்தில் நடக்கும் வர்க்கப் போராட்டத்தின் வீச்சில் சில தனிநபர்களை குறிப்பிட்ட காலத்தில் தோற்றுவிக்கிறது. திராவிட இயக்கத்தின் செயல்பாட்டில் அத்தகைய சமூக அந்தஸ்து இல்லாத பல தலைவர்கள் தோன்றியிருக்கின்றனர்.

karunanidhiகருணாநிதியையே எடுத்துக் கொண்டால் அவர் பள்ளிப் படிப்பை கூட முடித்தவரல்ல. அவரது சாதியும் ஆதிக்க சாதி போன்று செல்வாக்கு கொண்டது அல்ல, சிறுபான்மையான மக்களைக் கொண்ட சாதி. ஆனால் அவரது முயற்சியால் அவர் தலைவரானார். பள்ளி நாட்களில் கையெழுத்து பத்திரிகை ஆரம்பித்தார். பின்பு முரசொலியை அச்சிட்டு ஆரம்பித்தார். உள்ளூரில் நாடகம் போட்டார். பின்பு நாடக வசனம் எழுதி சினிமாவிற்கு வசனம் எழுதும் நிலையை அடைந்தார். உள்ளூரில் பேசி பிறகு மாநிலம் முழுக்க பேசி பிரபலமானார். அன்றைக்கு இவரைப் போன்ற பலரை திராவிட இயக்கம் உருவாக்கியிருந்தது. முடிவெட்டும் சலூன்கள், மாணவர்களின் விடுதிகள் போன்றவை திராவிட இயக்கத்தின் அரசியல் பேசப்படும் மையங்களாகின. பார்ப்பனிய செல்வாக்கு கொண்ட ஒரு நாட்டில் சலூன்கள் எப்படி அரசியல் மையங்களாகின என்பது உங்களது கேள்விக்கு ஒரு விடை.

படிக்க:
கேள்வி பதில் : சதுர்த்தி – குழந்தை திருமணம் – நினைத்ததை எழுதுவது எப்படி ?
♦ மார்க்சியம் கற்பதற்கு கட்சி உறுப்பினராக இருப்பது நிபந்தனையா ?

இதற்கு நேரெதிராக ஜெயலலிதாவின் தலைமைப் பண்பை எடுத்துக் கொள்வோம். அவர் எம்.ஜி.ஆரால் நேரடியாக அரசியலில் திணிக்கப்பட்டார். பிறகு பார்ப்பனிய ஊடகங்களும், ஆளும் வர்க்கமும் அவரை தலைவராக சமூகத்தில் முன்வைத்தன. அவரும் எழுதிக் கொடுக்கப்பட்ட உரையை பிரச்சாரங்களில் வாசித்தார். அவரது பன்மொழிப்புலமையை மாபெரும் திறமையாக ஊடகங்கள் முன்வைத்து அவரை ஒரு இரும்புத் தலைவி என்றெல்லாம் சித்தரித்தன. இடையில் அரசியலை விட்டே ஓடுவதற்கும் அவர் தயாராக இருந்தார். அவர் பேசும் கூட்டங்களுக்கு மக்கள் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டனர். அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட சமூகநலத் திட்டங்களுக்கு அவரது பெயரே வைக்கப்பட்டு, ஏதோ ஜெயலலிதா தனது கைக்காசை போட்டு மக்களுக்கு வழங்கினார் என்பதாக சித்தரிக்கப்பட்டார். அந்த வகையில் அப்துல் கலாம் போன்று ஜெயலலிதாவும் சாதிய வர்க்க சமூகத்தில் திணிக்கப்பட்டு தலைவரானவர்களில் ஒருவர்.

நக்சல்பாரி எழுச்சி, தெலுங்கானா போராட்டம், மார்க்சிய-லெனினியக் கட்சியின் உதயம் போன்றவையும் இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவில் பெரும் மாற்றத்திற்கு வழிகோலிய நிகழ்வுகளாகும். இதிலெல்லாம் தனிநபர்களை விடுத்து ஒரு இயக்கமே மக்கள் மத்தியில் பேசப்பட்டது. ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள், மக்கள் அதிகாரம் போன்றவை மக்களிடையே அவற்றினது போராட்டம், கொள்கையால் மட்டுமே பிரபலமாகிறதே அன்றி அவற்றில் உள்ள தலைவர்கள், தனிநபர்களை வைத்து அல்ல!

PALAஒரு பேருந்து அல்லது ரயிலில் புதிய ஜனநாயகம் அல்லது புதிய கலாச்சாரம் பத்திரிகையை விற்கும் போது அந்த இடத்தில் பேசும் தோழரை மக்கள் தைரியமானவராக, இயக்கத்தின் செயல்பாட்டளராக கருதி ஆதரிக்கின்றனர். அதே போன்று மேடையில் பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் அப்படி கருதுகின்றனர். இங்கெல்லாம் தோழர்கள் ஒரு இயக்கத்தின் பிரதிநிதி என்று கருதப்பட்டு மக்களால் போற்றப்படுகின்றனர். அந்தஸ்து என்பது பிறப்பின் அடிப்படையில் கிடைக்கும் என்பது சாதிய சமூகத்தின் நிலை. மாறாக அந்த நிலையை செயல்பாட்டால் கிடைக்கும் ஒன்றாக மாற்றுவது இத்தகைய சமூக இயக்கங்களே!

படிக்க:
உ.பி. : மதிய உணவிற்கு ரொட்டி – உப்பு : அம்பலப்படுத்தினால் சதி வழக்கு !
♦ இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் ! நூல் – PDF வடிவில் !

ஆதிக்கசாதி மக்கள் பெரும்பான்மையாக வாழும் சில இடங்களில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளில் பிறப்பினால் தலித்துகளாக உள்ள தோழர்கள் இயக்க பொறுப்புகளில், தலைமையில் உள்ளனர். அந்த வகையில் அந்த இடத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு தலைமையும் தாங்குகின்றனர். இங்கே பிறப்பினால் கிடைக்கும் சாதிய அந்தஸ்துக்கு பதில் இயக்கத்தினால் கிடைக்கும் மதிப்பு ஒரு சான்று. அதுவும் சாதிய சமூகத்தின் நடைமுறையை மறுத்துவிட்டு கிடைக்கும் மதிப்பு அது. இத்தகைய நடைமுறையை வேறு இயக்கங்கள் செய்வது கடினம்.

எனவே நாம் பெரிய ஆளாக இல்லாமல் சமூகத்தில் வேலை செய்தால் பயனில்லை என்று பேசுவோரை வைத்து மனச்சோர்வு அடையத் தேவையில்லை. நமது காலச்சூழலை மாற்றுவதற்கு நாம் பல்வேறு தோழர்களுடன் ஒன்றிணைந்து செயல்படும் போது அந்த மாற்றம் நிச்சயம் வரும். அப்போது நமது போராட்டம் இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்படும். இதன் போக்கில் நமது நடைமுறையில் போராட்டங்களில் புடம் போடப்பட்டு புதிய தலைவர்களும் தோன்றுவார்கள்.

நன்றி!

♦ ♦ ♦

(கேள்வி பதில் பகுதிக்கு நிறைய கேள்விகளை நண்பர்கள் கேட்கிறார்கள். மகிழ்ச்சி. கூடுமானவரை உடனுக்குடன் பதிலளிக்க முயல்கிறோம். சில கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு கூடுதலான நேரம் தேவைப்படுகிறது. கொஞ்சம் காத்திருங்கள்.)

வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்:
கேள்விகளை பதிவு செய்யுங்கள்