Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 436

ரஜினி : எச்ச ராஜாவின் வெர்சன் 2 | துளைத்தெடுக்கிறது டிவிட்டர் !

Manogaran‏ @Manogar06618265
ஏண்டா ரஜினி பொறுக்கி ______ கலவரத்துக்கு சமூக விரோதிகள் தான் காரணம் என்றால் ஏண்டா அவங்களை போய் பார்க்க போன . இறந்த காவலர்களையும் காயம் அடைந்த காவலர்கலையும் போய் பார்த்துட்டு நிவாரண நிதிய கொடுக்க வேண்டியது தானே வேங்கை ____ மவனே #BAN காலா திரைப்படம்…….

கோபு‏ @SirkaliGobu
Packiarajan Sethuramalingam போராட்டத்தை வெறுக்கிற ஒருவன் முதலாளித்துவ அடிவருடியாகவும், சுரண்டி தின்று வயிறுவளர்ப்பவனாகவும், யாரோ ஒருவரை ஏமாற்றி வருமானத்திற்கு அதிகமாக பணம் பண்ணுபவனாகவும், சுயநல கிருமியாகவும் தான் இருந்திடல் வேண்டும். ரஜினி இதில் எல்லாவற்றிலும் பொருந்துகிறார்!

kadupethurarmylord‏ @kmlofficialt
முதல் முறையாக ரஜினி ரசிகர்களை பாராட்டுகிறேன் தூத்துக்குடி மக்களை சமூகவிரோதிகள் என்று கொச்சைப்படுத்திய நடிகர் ரஜினிக்காந்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு. காலா, 2.0 படங்களை புறக்கணிக்க தூத்துக்குடி மாவட்ட ரஜினி ரசிகர்கள் முடிவு

இராவணன்‏ @iRaavanaa
89க்கு முன்னால ஜெயலலிதா ஒரு பாஸிசப்பேய்னு சொன்னா நம்ப முடியுமா நம்மளால? ரஜினி வெள்ளந்தியெல்லாம் கிடையாது. காரியக்கிறுக்கன். வெறும் சினிமா புகழ் மட்டுமே மீடியாவை மயிர் மாத்திரமாக மதித்து ஏய் வேற கேள்வி இருக்கானு கேக்க வெக்குது அவன. அதிகாரம் கிடைச்சா?

Lakshmanan.P‏ @laksh_kgm
ரஜினி சொல்லித்தான் துப்பாக்கிச் சூட்டின் நியாய அநியாயத்தையும், கள நிலவரத்தையும், அரசியலையும் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் மக்கள் இல்லை.

Veera‏ @Veera_Vetri00
2 நிமிஷம் நின்னு கேள்விக்கு பதில் சொல்ல பொறுமையும் இல்லை அதற்கான அறிவும் இல்லை.. கேள்விக்கு பதில் இல்லைனா எச் ராஜா நிருபர்களை பார்த்து Anti Indian னு சொல்லுவாரு கேள்விக்கு பதில் இல்லைனா ரஜினிகாந்த் மக்களை பார்த்து Anti Social னு சொல்லுவாரு.. ரஜினி பிஜேபி Voice…

டெங்கு கொசு 💘 💗‏ @thalafantaqic
போராட்டங்கள் தொடர்ந்தால்…! தமிழகம் சுடுகாடாகிவிடும்..? -ரஜினி I feel there’s a strong msg in his statement. துப்பாக்கிகள் தொடர்ந்து வெடிக்கும் என்கிறாரோ…!

RAJA‏ @franccruzer
முதல்ல eps ops யும் இப்டிதா பிஜேபி சப்போர்ட் இல்லை னு சொன்னாங்க…அப்புறம் கேட்டா மாநில மக்களின் நலனுக்காக மத்திய அரசை ஆதரிக்கிறேன்னு சொன்னாங்க…இப்போ மொத்தமா அடிமையாட்டாங்க…ரஜினி யோட பேட்டி இன்னைக்கு பாக்கும்போது பிஜேபி தெரியுது…ரஜினி யோட உண்மை முகம் சீக்கிரம் வெளி வரும்…

நாகசோதி நாகமணி‏ @nagajothin
இது ரஜினி படம் அல்ல இயக்குனர் ரஞ்சித் படம் என்று நாளை முதல் இங்கே காலாவுக்கு வியாபார தந்திரங்கள் ஓடும்~ #நான்தான்பாரஜினிகாந்த்

Gold Pandiyan‏ @pandiyan_gold
@rajinikanth திருப்பூரில் டாஸ்மாக் கடைக்கு எதிராக போராடிய பெண்களின் தலைமுடியை பிடித்து இழுத்து சென்றானே போலீஸ் அப்போ எங்கே போயிருந்தீர்கள் ரஜினி?

🍃 🍁 Rajesh 🍁 🍃‏ @kaadhale_aadhal
Frustrated #Rajini expressed his anger in front of the Media. Look at the slang and attitude of @rajinikanth . This shows how immature behaviour & He will be not a good politician for sure. பதட்டமடைந்த ரஜினி மீடியா முன்று கோபத்தை வெளிப்படுத்துகிறார். அப்போது அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை, பேசும் முறையை பாருங்கள்! இதுவே அவருக்கு பொதுவெளியில் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ளத் தெரியவில்லை என்பதையும், அவர் ஒரு நல்ல அரசியல்வாதியாக இருக்க முடியாது என்பதையும் நிச்சயமாக காட்டுகிறது. #ஆமாநீங்கயாரு #ஆமாயார்நீங்க #நான்தான்பாரஜினிகாந்த்

MUGILAN CHANDRAKUMAR
.@rajinikanth sir, it’s ok to shut up even when someone thrusts the Mike on your face. How dare you insult an agitation of the people merely because you had to say something ரஜினி சார், யாராவது உங்களை மைக்குடன் புண்படுத்தும் கேள்வி கேட்டால் அமைதியாக இருக்கலாம். ஆனால் ஏதாவது சொல்லி சமாளிக்கவேண்டும் என்பதற்காக போராடும் மக்களை அவமதிப்பதற்கு உங்களுக்கு உரிமை இல்லை.

Rajesh Narayanan‏ @Rajesh_Joker
ரஜினி திரையில் மட்டும் 2.0 வாக நடிக்கவில்லை நிஜ வாழ்விலும் எச்ச ராஜாவின் 2.0 வாக நடித்து கொண்டு இருக்கிறார்…

வேதா பிரபாகர்‏ @vedaprabahar
ரஜினி: எப்போதும் போராட்டம் போராட்டம்னு போனா தமிழ்நாடு உருப்படாது…. தமிழன்:தமிழ்நாட்டை நாங்க பாத்துக்குறோம் சார்… நீங்க முடிஞ்சா காலாவை ஹிட் ஆக்குங்க #நான்தான்பாரஜினிகாந்த்

Rajesh Narayanan‏ @Rajesh_Joker
பல வருடங்களுக்கு முன் ரஜினி சப்பாணி கிட்ட வாங்குன அரைக்கு அப்புறம் இப்போ தான் அதே போல ஒரு அரை வாங்கியிருக்கார்…

சத்தியமேவெல்லும்.போஸ்செல்வா.BBA.BA.LLB‏ @BoseSelva8
1990களில் சில குண்டு வெடித்தற்க்கே தமிழ்நாட்டில் வெடிக்குண்டு கலாச்சாரம் பெருகி விட்டதுனு பேசி அம்மாவிடம் அடிவாங்கிய ரஜினி, அதற்கு பிறகு நாடு முழுவதும் கலவரத்தை உண்டுபண்ணின பிஜேபியை பற்றி ஒரு வார்த்தை பேசல தமிழ்நாட்டை எப்போதுமே கேவலப்படுத்த முயலும் விஷம் #நான்தான்பாரஜினிகாந்த்

Nanthivarman 🌞‏ @Nanthivarman16
”You all are anti-Indians” – எச். ராஜா “all you elis and porukkis” – சு.சுவாமி “தமிழ்நாட்டில் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள்” – பொன்னார் “தூத்துக்குடி வன்முறையில் சமூக விரோதிகள்” – ரஜினி மாவு அதே தான். இட்லியா, ”தோசையா”, ஊத்தப்பமா, இல்லை உப்புமாவா மாத்தறதாங்கறது

Shrîrâm‏ @shriRaM015
சமூகவிரோதிகள் புகுந்துவிட்ட்டார்கள் -ரஜினி !! ஒங்களுக்கு எப்படி தெரியும் ? அப்படித்தான்யா எழுதிருக்கு ! #நான்தான்பாரஜினிகாந்த்

Abdul Halik‏ @nahalik88
ரஜினி சார் வேகமா எங்க போறிங்க? என்னைய ஒருத்தன் யார்னு கேட்டுட்டான்… மேக்கப் போட்டு வந்து நான் தான் ரஜினினு காட்ட போறேன். #நான்தான்பாரஜினிகாந்த்

Kishore Ravi‏ @kishore59664745
#நான்தான்பாரஜினிகாந்த் விஜயகாந்த் அரசியலுக்கு வந்து பின் எடுத்த காமெடியன் என்ற பெயரை ரஜினி அரசியலுக்கு வருவதற்கு முன்பே எடுத்துக் கொண்டிருக்கிறார்!!!

நான் தமிழன், திராவிடன் இல்லை.‏ @TamilNaduMan
ரஜினி தொண்டர்களை நினைத்தால் தான் கவலையாக இருக்கு, வாழ வேண்டிய வயதில் ரஜினி லூசை நம்பி cutout பால் அபிஷேகம் என்று வாழ்க்கையை இழந்தீர்கள், இனி அரசியலில் இவன் கேவலமாக தோற்கும் போது, ரசிகனாய் இருந்த போது இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பையும் இழந்து,வாழ்க்கை வெறுத்து சீரழிய போகிறீர்கள்.

மீனம்மா‏ @meenammakayal
ஏ வேற ஏதாவது கேள்வி இருக்கா?..ன்னு ரஜினி கேக்கற தொணி.. இதுவரை உங்க கேள்விக்கு எல்லாம் பயங்கரமா பதில் சொல்லி உங்க வாய அடைச்சுட்டேன்டான்ற மாதிரியே இருக்குது.. யோவ் இதெல்லாம் நீ தெரிஞ்சுதான் பண்றியா.. 🙁

M.தாமோதரன்‏ @thamms777
யார் நீ என கேட்டதால் முகம் வெளிறிய ரஜினி பதட்டத்தில் பத்திரிகையாளர்களை ஏய் என விளித்த ரஜினி கூட்டத்தில் இப்படி கேள்வி கேட்டதுக்கே உங்களுக்கு இவளோ கோவம் வருதுன்னா எம் மக்கள் 13பேர் கொல்லப்பட்டார்களே அப்ப அவங்களுக்கு எப்படி கோவம் வரும் #நான்தான்பாரஜினிகாந்த்

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் : வினவு செய்தியாளரின் நேரடி அனுபவம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்:
வினவு செய்தியாளர்களின் நேரடி அனுபவங்கள் !

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ஆம் தேதி நடந்த போராட்டம் காலை எட்டு மணிக்கு முத்து நகரில் உள்ள பனிமாதா ஆலயத்தில் தொடங்கியது. அதே நேரத்தில் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் இருந்தும் மாவட்ட ஆட்சியர் அலுவலவகத்தை நோக்கி மக்கள் அணிதிரள ஆரம்பித்தனர். கிராமங்களில் இருந்து நிறைய பேர் வருவார்கள் என அவர்களை அங்கேயே முடக்கும் வேலையை போலீசு செய்ய ஆரம்பித்திருந்தது.

பனியமாதா ஆலயத்தில் உள்ள திடலில், ஆரம்பத்தில் சுமார் இருநூறு பேர் மட்டுமே கூடியிருந்த நிலையில் சிறிது நேரத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் திரள ஆரம்பித்தனர்.  மாதா கோவில் எதிரில் இருந்த சாலையில் மக்கள் கூட்டம் கூடியதால் போராட்டத்தின் முன்னணியாளர்கள், மக்களை ஒழுங்கமைத்து வாகன ஓட்டிகளுக்கு வழிவிட்டுக் கொண்டிருந்தனர். கூட்டம் கூடியதும் அங்கேயே மத்திய மாநில அரசுக்கு எதிராக தங்களது கண்டன முழக்கங்களை எழுப்பிக்கொண்டிருந்தனர். அப்பொழுதே அங்கு இருந்த போலீசின் ஒருபிரிவினர் வரிசையாக வெளியேறத் துவங்கினார்கள்.

மக்கள் நான்கு திசைகளிலிருந்தும் மாதாகோவில் திடலுக்கு வந்து கொண்டிருந்தனர். அடுத்த சில மணித்துளிகளில் பேரணி துவங்கியது. கிட்டத்தட்ட ஐநூறு மீட்டர் தூரம் பேரணி சென்ற நிலையில் அந்த பேரணியை முடக்கும் நோக்கில் போலீசின் வாகனங்களைக் கொண்டு பேரணி சென்ற தெருக்களில் மறித்து நிறுத்தினார்கள். அதனையும் பொருட்படுத்தாமல் பேரணியை மக்கள் தொடர்ந்தனர். ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் போலீசு இருந்தது. பேரணியின் கடைசியில் இரண்டே இரண்டு ஜீப்புகளில் போலீசு வந்தது.

பேரணி சென்ற தேவர்புரம், ஆசிரியர் காலனி, வ.உ.சி. கல்லூரி ஆகிய தெருக்கள் எங்கும் வீடுகள் பூட்டிக் கிடந்தன. கடைவீதிகள் வெறிச்சோடி போயிருந்தன. ஒட்டு மொத்த தூத்துக்குடியும் ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தது. மண்டையை பிளக்கும் உச்சி வெயிலில் பேரணி சென்றதால் தண்ணீர் கேட்டு குடிக்கக்கூட வீடுகள் இல்லை. கடையும் இல்லை. வெயிலின் தாக்கத்தில் தங்களது சக்தியை பேரணியின் பாதியிலேயே மக்கள் இழந்த நிலையில் போலீசு சொல்வது போல, இந்த மக்கள் வன்முறையில் ஈடுபடுவதற்கான வாய்ப்பே இல்லை. உடல்ரீதியான சக்தியை இழந்த பிறகும், அம்மக்களின் போராட்ட உணர்வே அவர்களை மாவட்ட ஆட்சியர் அலவலகம் வரை உந்தித் தள்ளியது என்றால் அது மிகையில்லை.

பேரணி, அம்பேத்கர் சிலையை தாண்டியதும் ஒரு சில போலீசார் பேரணிக்குள் ஊடுருவினர். அவர்களை மக்கள் அப்புறப்படுத்தினர். சிலர் ஆவேசத்தில் போலீசை  எதிர்க்க ஒடினாலும் அவர்களை தடுத்து நிறுத்தி அது நம் நோக்கமல்ல என்று விளக்கி புரிய வைத்தனர் மக்கள். சிறிது நேரம் கழித்து பேரணிக்குள் மாட்டை அவிழ்த்து விட்டது போலீசு. அந்த எதிர்பாராத நிகழ்வில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இதனை எல்லாம் சகித்துக் கொண்டு மூணாம் மைல் பாலம் அருகே சென்ற மக்கள் மீது திடீரென்று கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியது போலீசு. அதனால் ஆத்திரமடைந்த மக்கள் போலீசை விரட்டினார்கள். அநேகமாக இந்த காட்சியை மட்டும்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் காட்டினார்கள். அமைதியாக போய்க் கொண்டிருந்த பேரணி மீது போலீசார் திடீரென்று கண்ணீர்ப் புகை குண்டு வீசியதே அந்த அமைதி குலைந்து போனதற்குக் காரணம். அதன் பிறகே மக்கள் பாலத்தின் கீழ் இருந்த போலீசு தடுப்பரண்கள் மற்றும் சில வாகனங்களைக் கொளுத்தினர்.

அதற்குள் நிறையப் பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சென்று விட்டார்கள். மீதி பேர் மூணாம் மைல் பாலம் அருகே புகை மண்டலமாக மாறிப்போன அந்த இடத்தை கடக்க முடியால் பின்தங்கினர். கலவரம் செய்ய நினைத்திருந்தால் அங்கேயே மக்கள் கலைந்து சென்று செல்லுமிடங்களில் எல்லாம் தீ வைத்திருப்பார்கள். ஆனால் அவர்களது நோக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு சென்று அமர்ந்து போராட்டம் நடத்துவதுதான். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் நுழையும் போதே அங்கே போலீசார் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். முன்னே சென்ற மக்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியது போலீசு. ஆத்திரமடைந்த மக்கள் அங்கு நிறுத்தி வைத்திருந்த வாகனங்களை அடித்து நொறுக்கினர். இவையெல்லாம் தற்காப்பின் பொருட்டும், அமைதியான பேரணியின் மீது போலீசு நடத்திய தாக்குதலைக் கண்டித்தும் நடந்தவை.

இதன் பிறகே போலீசு கும்பல், காக்கைக் குருவிகளை சுடுவதைப் போன்று மக்களை சுட்டுத் தள்ளிய அந்த படுகொலை நிகழ்ந்தது.  சம்பவ இடத்திலேயே மூன்று பேர் இறந்தனர். மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடுவதுமாக இருந்தனர். துப்பாக்கி சூட்டில் பலியான, காயமடைந்தவர்களை மீட்பதா? இல்லை, துப்பாக்கி சூட்டில் இருந்து தங்களை காத்துக் கொள்வதா?  எனப் புரியாமல் மக்கள் கதறுகிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் உள்ளே இருந்த மக்கள் வேறு வழியின்றி தங்களைப் பாதுகாத்துக் கொள்ள ஆட்சியர் அலுவலகத்தில் தென்பட்ட கட்டிடங்களில் நுழைந்தனர். வெளியில் இருந்தவர்கள் சாலையில் அமர்ந்து கதறிக் கொண்டிருந்தனர். அடுத்து என்ன நடக்கும், யார் மீது துப்பாக்கித் தோட்டாக்கள் துளைக்கும் என்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் பெரும்பான்மையான மக்கள் கூட்டம் கலையாமல் உறுதியாக இருந்தனர். அப்போதும் போலீசுப் படை வெறி கொண்டவாறு கண்ணில் மாட்டியவர்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டவர்கள் மருத்துவனைக்கு அழைத்து செல்லப்படவில்லை. மக்கள்தான் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அரைமணி நேரம் கழித்துத்தான் ஆம்புலன்ஸ் உள்ளே வருகிறது. அதிலும் சிலரை ஏற்றி அனுப்புகிறார்கள். இதனை எல்லாம் மக்கள்தான் செய்து கொள்கிறார்கள். போலீசுப் படையோ தடியடி நடத்துவது, சுட்டுத்தள்ளுவது, கொளுத்துவது என்ற இந்த வெறிச்செயல்களில் மட்டும் குறியாய் இருந்தது. போலீசின் நோக்கம் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமென்பதோ, பொதுச்சொத்தை பாதுகாக்க வேண்டுமென்பதோ அல்ல.

இனி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் போராடக்கூடாது என்ற மரண பயத்தை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். அதனால்தான் பேரணி வந்த சாலையில் மக்கள் எங்கு நின்றிருந்தாலும் அவர்களை காட்டுமிராண்டித்தனமாக விரட்டி விரட்டி அடித்து துரத்தியது. ஒருவரையும் அந்த சாலையில் விட்டு வைக்கவில்லை. அந்த அடிகளும் ஏதோ மிரட்டி கூட்டத்தை கலைக்கும் எச்சரிக்கை அடிகள் அல்ல. உடலுக்கு படுகாயத்தை ஏற்படுத்தி, உள்ளத்தில் ஒரு மரணபயத்தை ஏற்படுத்தும் வண்ணம் கொடூரமானவை. ஒருவர் சிக்கினார் என்றால் அவரை சுற்றி வளைத்து நாயை அடிப்பது போல பத்து பதினைந்து நிமிடம் அடிப்பார்கள். இத்தகைய காட்சிகள் எல்லாம் ஒரு பத்திரிகையாளர் என்ற முறையில் கூட பார்ப்பதற்கோ, ஏற்பதற்கோ, பதிவு செய்வதற்கோ சாத்தியமல்ல. கண்முன்னே இப்படி அப்பாவி இளைஞர்களை அடிக்கும் காட்சிகள் எங்களை இப்போதும்கூட நிலைகுலைய வைக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டிற்கு பயந்து ஓடிய மக்களை விடாமல் துரத்தி வந்து FCI குடோன் அருகே கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள், வெறி பிடித்த போலீசார். இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவரை கீழே இறக்கி சாவியை பிடுங்கி தூக்கி எறிந்து விட்டு, அந்த வாகனத்தையும் தூக்கி வீசி எறிந்தது போலீசு. அந்தநாள் முழுவதும் தூத்துக்குடி மக்களை தனது வெறியாட்டத்திற்கு பலியாக்கியது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி சூடு நடத்திய கையோடு திரேஸ்புரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தி தனது வெறியை தீர்த்துகொண்டது போலீசு கும்பல். ஒன்றும் அறியாத ஜான்சி என்ற தாயின் தலையில் சுட்டதில், அவருடைய மூளையே சிதறி கொட்டிக் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் இன்னும் அதிலிருந்து மீள முடியாமல் இருக்கிறார்கள். அடுத்த நாள் காலை அப்பகுதி மக்களை சந்திக்கச் சென்றபோது கையில் ஆயுதம் வைத்திருப்பவர்களைக் கண்டு அஞ்சி நடுங்குவது போல் எங்களைக் கண்டும் ஓடி ஒளிகிறார்கள் திரேஸ்புரம் பகுதி மக்கள். இவர்கள்தான் போலீசுக்கு எதிராக கலவரம் செய்தார்கள் என்று ஊடகங்கள் வாந்தி எடுக்கின்றன.

மக்களிடம் அப்படி ஒரு மரணபயத்தை ஏற்படுத்துவதுதான் போலீசின் நோக்கம். ஆனால் இந்த அநீதிகளைக் கண்டு ஆத்திரமும், கோபமும் கொண்ட இளைஞர்கள் நிறைய பேர் செய்வதறியாது ஓடிக் கொண்டிருந்தனர். அவர்களை அங்கே வழிநடத்த யாருமில்லை. அல்லது இத்தகைய தாக்குதல் காலத்தில் ஒரு தலைமையே அங்கிருந்தாலும் ஆயுதங்களோடு தாக்குதலை நடத்தி வரும் போலீசிடமிருந்து மக்களை காப்பது சிரமமே! அதனால்தான் தங்களது கோபத்தை ஒரு சில வாகனங்களை தீவைப்பதன் மூலம் அவர்கள் தீர்த்துக்கொண்டனர்.

அரசு மருத்துவமனை முழுவதையும் போலீசு கைப்பற்றியதால் குண்டடிபட்டவர்களைக் கூட சென்று பார்க்க முடியாமல் மக்கள் தவித்த தவிப்பு ஒருக்காலும் அவர்களால் தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது. எங்களாலும் மறக்க முடியாத ஒன்று.

அடுத்த நாள் 23-ம் தேதி விடியற்காலை தூத்துக்குடி முழுவதும் மயான அமைதி நிலவியது. ஒரு சிலர் மட்டும் வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். சைக்கிளில் டீ விற்றுக் கொண்டிருந்த இடத்தில் மட்டும் சிறு கூட்டத்தை பார்க்க முடிந்தது. தூத்துக்குடி பேருந்து நிலையம், WGC கடை வீதி, திரேஸ்புரம் கடற்கரை, அண்ணாநகர் மார்கெட் மற்றும் கடைவீதி, என எங்கும் அமைதி. இன்று என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக் கிடந்தனர் தூத்துக்குடி மக்கள். ஆனால் அரசுக்கெதிரான கோபம் தணியாமல் இருந்தது.

சுமார் ஒன்பது மணியளவில் தூத்துக்குடியின் பதற்றமான பகுதியான திரேஸ்புரம், அண்ணாநகர், விவிடி சிக்னல், மூணாம் மைல், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல இடங்களில் போலீசு குவிக்கப்பட்டு இருந்தது.

மக்கள் அரசு மருத்துவமனையில் கூடிவிட்டனர்.  அரசு மருத்துவமனை முழுவதும் போலீசின் கட்டுப்பாட்டில் இருந்தது. மருத்துவமனையின் முன்கதவை மூடிவிட்டு வெளியே போலீசு காவல் காத்தது. துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் கட்சித் தலைவர்கள் சென்று பார்ப்பதற்கு மட்டும் அனுமதித்தது போலீசு. அப்போது மருத்துவமனையை திறக்கக்கோரி மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டனர். போலீசோ, பாடியை வாங்க சொல்லி மிரட்டியது. “மக்கள், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை பிணங்களை வாங்கப் போவதில்லை. அதற்காக கையெழுத்து போடவும் முடியாது” என்று தொடர்ந்து போலீசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

முக்கியமாக தமிழ் தெரியாத உயர்போலீசு அதிகாரி தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல், தங்கள் கோரிக்கைகளை சொல்லக்கூட முடியாமல் தவித்தனர்.

கமலஹாசன், டி.ராஜேந்தர் போன்ற சினிமா நடிகர்கள், அரசியல் கட்சி தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் முழக்கமிட்டனர். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத போலீசு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தத் துவங்கியது. சிறிது நேரத்தில் அவர்கள் மீது தடியடி நடத்தி கலைத்து கட்சித்தலைவர்கள் வந்து பார்ப்பதற்கு ஏதுவாக மருத்துவமனை வளாகத்தில் ‘அமைதியை’ நிலைநாட்டியது போலீசு. மருத்துவமனைக்கு வெளியே காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியதோடு மட்டுமில்லாமல் கண்ணீர் புகைக்குண்டும் வீசியது. வான் நோக்கி துப்பாக்கியால் சுட்டு மக்களை அச்சுறுத்தியது போலீசு. மருத்துவமனை வளாகத்தில் கூடியிருந்த நபர்கள் மிகவும் சொற்பமானவர்கள்தான். அதிலும் குறிப்பாக போலீசின் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். அவர்களைக்கூட அனுமதிக்க மனமில்லாமல் அடித்து விரட்டியதுதான் அரசு பயங்கரவாதத்தின் உச்சகட்டம்.

அதேநேரம் திருச்சி ஐஜி வரதராஜு தலைமையில் சிறப்பு அதிரடிப்படை வந்திறங்கியது. கிட்டத்தட்ட எட்டு மாவட்ட போலீசுப்படை உதவியுடன் தூத்துக்குடியில் மக்கள் வெளியே வர முடியாதபடி அராஜகங்களை நிகழ்த்தியது போலீசு கும்பல்.

விவிடி சிக்னலில் இருந்து பிரையன்ட் நகர் பன்னிரெண்டாவது தெருவரை போலீசு நடத்திய அணிவகுப்பு தொடக்கத்திலேயே சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது. பிரையண்ட் நகரில் வசிக்கக் கூடியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்க மக்கள். அங்கு இரண்டாவது தெருவில் இரண்டு பேருந்துகள் எரிகின்றன. ஒரு பேருந்து கொழுந்து விட்டு எரிகிறது. மற்றொரு பேருந்தை போலீசு அணைத்துக் கொண்டிருந்தது. கவனிக்கவும், பேருந்தை அணைத்துக் கொண்டிருந்தவர்கள் சீருடை அணியாத போலீசு. அந்த பன்னிரண்டு வீதியிலும் கல் வீச்சோ, மக்கள் கூட்டமாக நிற்பதோ எங்கும் இல்லை. அப்படி இருக்கும்போது அந்த பேருந்துகள் மட்டும் எப்படி எரிந்தன என்பதுதான் கேள்வி ? அணிவகுப்பு நடத்திய போலீசு அந்த தீயினை அணைக்கவோ, அல்லது பதட்டமோ இல்லாமல் பேருந்து எரிவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். மெரினா போராட்டத்தில் குடிசைக்கு போலீசு தீவைத்த சம்பவம்தான் தவிர்க்கவியலாமல் நம் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில்தான், பிரையன்ட் நகருக்கு நேர் எதிரே அமைந்துள்ள அண்ணா நகரில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தது. அதில் இருபத்து இரண்டே வயதான காளியப்பன் என்பவர் அந்த துப்பாக்கி சூட்டில் மரணமடைந்தார். மேலும் இரண்டு பேர் குண்டடி பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்கள்.அவர்களை அப்பகுதி மக்கள் தங்களது இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இறந்து கிடந்த காளியப்பனை காலால் உதைத்தும், கால்சட்டையை பிடித்து தரதரவென்று இழுத்தும் போட்டது போலீசு. இந்தியாவில் மக்களின் மதிப்பு என்ன என்பதற்கு இதை விட வேறு சான்று தேவையில்லை.

திரேஸ்புரம் பகுதியிலும் போலீசின் அராஜகம் தொடர அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள, போலீசு ஊருக்குள் வருவதை தடுப்பதற்கு வள்ளத்தினை (நாட்டுப்படகு) கொண்டுவந்து தெருவின் குறுக்கே போட்டிருந்தனர். அந்த  வள்ளத்தினை தீ வைத்துக் கொளுத்திய போலீசு அங்கேயும் துப்பாக்கிச் சூடு நடத்தி மக்களை கலைத்துள்ளது. இவை அனைத்தும் ஒரே நேரத்தில் சொல்லி வைத்தாற்போல் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்கள்.

அண்ணாநகரைப் பொறுத்தவரையில் நாடார் சாதி மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய பகுதி. இப்பகுதியில் போலீசு கும்பல் நிகழ்த்திய வன்முறை சொல்லி மாளாது. சாலைகளில் வருவோர் போவோர்களை எல்லாம் வழிமறித்து காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை நடத்தியது போலீசு கும்பல். அழுக்கு சட்டையணிந்த ஒரு இளைஞர் அவ்வழியாக வந்த குற்றத்திற்காக அவர் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நிகழ்த்தியது போலீசு.  வந்தவரோ, “நான் டிரைவராக இருக்கிறேன். எனக்கும் இந்த போராட்டத்திற்கும் சம்பந்தமில்லை, என்று கூறி தனது ஓட்டுனர் உரிமத்தை எடுத்து காட்டுகிறார். அதனை கொஞ்சமும் பொருட்படுத்தாத போலீசு கும்பல் அவரை சராமாரியாகத் தாக்கியது.

அதேபோல், இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை வழிமறித்து அவர்களிடம் எந்த விசாரணையும் செய்யாமல், அவர்கள் இளைஞர்கள் என்பதற்காகவே கொலைவெறியுடன் அடித்தது. அடி தாங்க முடியாமல் வண்டியின் பின்னால் உட்கார்ந்திருந்த ஒருவர் ஓடுகிறார். அவரை விடாமல் துரத்திச் சென்று பிடித்து வந்து அடிக்கிறார்கள். இந்த சம்பவங்களை எல்லாம் பத்திரிகையாளர்கள் படம் பிடிக்காமல் அமைதி காத்து போலீசு கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டனர் என்பது அருவெறுப்பின் உச்சம்.

அந்தக் கூட்டத்தில் இருந்த போலீசு ஒருவன், நாங்க அடிக்கிறதை எல்லாம் போட்டோ புடிக்கிறிங்களா? என்று மிரட்டும் தொனியில் பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கேட்க, அதற்கு கொஞ்சம் கூட சுரணையில்லாத சில பத்திரிகையாளர்கள், “நாங்கள் உங்கள் நண்பர்கள், இதனை எல்லாம் எடுக்க மாட்டோம்“ என்று சிரித்துக் கொண்டே சொல்கிறார்கள். இவர்கள் அனைவரும் தமிழகத்தின் முன்னணி பத்திரிகைகளில் பணியாற்றுபவர்கள்தான்.

அண்ணாநகர் ஏழாவது தெருவில் தடாலடியாக ஒரு வீட்டிற்குள் புகுந்த போலீசு கும்பல், ஒரு இளைஞரை வெளியே இழுத்து வந்து சராமரியாக தாக்கியது. அதேபோல் வயதான ஒருவரை ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கொண்டே போலீசு அடித்து உதைத்த காட்சி இவர்கள் எவ்வளவு பெரிய காட்டுமிராண்டிகள் என்பதையும் உணர்த்துகிறது. இத்தகைய சம்பவங்கள் எவையும் பத்திரிகையாளர்களால் பதிவு செய்யப்படவில்லை. இவற்றில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் விதி என்பது போலீசின் தாக்குதல்களை யாரும் படம் பிடிக்கக்கூடாது என்பதே.

மக்கள் ஆவேசத்தில் எதிர்தாக்குதலாக, கல் எரிவதையும், பெட்ரோல் குண்டு வீசுவதை மட்டும் எடுத்து ஒளிபரப்புவதற்காகவும், மக்களை வன்முறையாளர்கள் என்று சித்தரிப்பதற்கும்தான் போலீசும், ஊடக முதலாளிகளும் திட்டமிட்டுள்ளார்கள் என்பதற்கு இது மறுக்க முடியாத ஒரு சான்று.

சில பத்திரிகை நிருபர்கள் போலீசுக்கு மக்களைத் தாக்குவதற்கான சில வழிகளையும், ஆலோசனைகளையும் சொல்லிக்கொண்டும், போலீசு கும்பலோடு சேர்ந்து போராடிய மக்களை ஏளனம் செய்து நகைச்சுவை பேசியதெல்லாம் சகிக்க முடியாதவை. இத்தகைய சூழலிலும் நாங்கள் உலவிக் கொண்டிருந்தது ”வேறு வழியில்லை, இவற்றை எப்படியாவது பதிவு செய்ய வேண்டும்” என்ற ஒரே காரணத்திற்கு மட்டுமே.

தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியை போலீசால் கட்டுப்படுத்த முடியாத நிலையோ, மக்கள் சொன்னால் கேட்க மாட்டார்கள் என்ற நிலையோ இல்லை. அமைதியான முறையில் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் இந்த அரசுக்கு இல்லை. உண்மையில் மக்களுக்கு கலவரம் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்திருந்தால், அவர்கள் பேரணியாக வந்த வழியில் பல அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், சேதாரம் ஏற்படுத்தக் கூடிய கட்டிடங்கள் எத்தனையோ இருந்தன. ஆனால் மக்களின் நோக்கம் அதுவல்ல.

பேரணியை தடுக்க வேண்டும் என்று போலீசு நினைத்திருந்தால் விவிடி சிக்னலோ, அல்லது மூணாம் மைல் பாலம் அருகிலோ கூட மக்களின் குறைகளை கேட்டிருக்கலாம். அங்கேயே பேச்சு வார்த்தை நடத்தியிருக்கலாம். இல்லை மாவட்ட அலுவலகம் அருகே அவர்களை அமர வைத்திருந்தாலும் வேறு பிரச்சினைகள் வந்து விடப் போவதில்லை. ஆனால் எந்த இடத்திலும் மக்கள் என்ன கோரிக்கை வைக்கிறார்கள் என்று கேட்பதற்கு போலீசு தயாராக இல்லை. போலீசின் நோக்கம் இனி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக யாரும் பேசக்கூடாது, போராடக்கூடாது என்பது மட்டுமே. அதனால்தான் கொலை வெறியோடு இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளது. இது தற்செயலாக நடந்ததோ. கூட்டத்தை கலைக்க நடந்ததோ அல்ல. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட பச்சைப்படுகொலை. போலீசின் திட்டமிட்ட வன்முறை வெறியாட்டம்.

போலீசின் வெறியாட்டத்தைப் பார்க்கையில் வேதாந்தா ஸ்டெர்லைட்டின் நிதிக் கவனிப்பில் இவர்கள் வெகுவாக கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். ஈவு இரக்கமின்றி இவர்கள் அடிப்பதற்கு இந்தக் காரணத்தை தவிர வேறு காரணங்கள் இருக்க வாய்ப்பில்லை.

இவ்வளவு பெரிய கொலையும், அராஜகமும் நடந்தாலும் தூத்துக்குடி மக்கள் தமது போராட்ட உணர்விலும், ஸ்டெர்லைட்டை மூடுவதிலும் உறுதியாக இருக்கிறார்கள். அதனால்தான் எந்த அதிகாரி வந்தாலும், எந்த அமைச்சர் வந்தாலும் அவர்கள் அச்சமில்லாமல் கேள்வி கேட்கிறார்கள். இதுதான் அரசும் ஆளும் வர்க்கமும் இன்றளவும் பயப்படும் அம்சம்.

இன்றைக்கு எடப்பாடி அரசு ஸ்டெர்லைட்டை மூடுவதாக நாடகமாடியிருக்கிறது. இந்த நாடகத்தை தூத்துக்குடி மக்கள், கடந்த காலங்களிலேயே அறிந்திருக்கிறார்கள். மேலும் இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்தே போராடும் மக்கள் மீது கைது, வழக்கு, சிறை என பல அடக்குமுறைகளை போலீசு ஏவியிருந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை நடக்க விடாமல், போராட்டக் குழுவை உடைத்து விடலாம் என்ற போலீசின் சதித்திட்டங்கள் அனைத்தையும் மக்கள் முறியடித்தார்கள்.

இதுதான் போலீசும், அரசும் தூத்துக்குடி மக்கள் மீது நடத்திய படுகொலைக்கு பிரதான காரணம்!

  • வினவு செய்தியாளர்கள்.

இஸ்லாமோஃபோபியா- வெறும் வாய்ச்சொல் அல்ல ! அது முசுலீம் வெறுப்புணர்வின் அடையாளம் !

இசுலாமிய வெறுப்புணர்வு நோய் என்பது வெறுமனே வெறுப்பு என்பதைத் தாண்டி முசுலீம்கள் மீதான இன ஒடுக்குமுறையை குறிக்கும் பரந்துபட்ட பொருளை எதார்த்தத்தில் கொண்டிருக்கிறது.

”இசுலாமிய வெறுப்புணர்வு நோய் (Islamophobia) என்பது விவாதங்களை நிறுத்துவதற்கான புனைக் கதை” என்று தி டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையில் மெலனி பிலிப்ஸ் (Melanie Phillips) எனும் பத்திரிகையாளர் கண்டனம் செய்திருந்தார். அதற்கு முந்தைய வாரம், பி.பி.சியின் ஞாயிறு அரசியல் நிகழ்ச்சியில் அவரது புலம்பல் இரட்டிப்பாகியிருந்தது. அதில் முசுலீம் மக்கள் மீதான எந்த ஒரு  விமர்சனமும் இசுலாமிய வெறுப்பாக கருதப்படுவதாகக் கூறி அச்சொற்பதத்தையே நிராகரித்திருந்தார்.

மற்றவர்களும் கூட அச்சொற்பதத்தின் பயன்பாட்டை எதிர்த்திருக்கின்றனர். “நான் முசுலீம்களை பற்றிப் பேசவில்லை. நான் இசுலாத்தை பற்றிதான் பேசுகிறேன்” என்று தீவிர வலதுசாரியான டாமி ராபின்சன்(Tommy Robinson) முசுலீம்களுக்கு எதிரான தன்னுடைய சகிப்பின்மைக்கு முட்டுக் கொடுக்கிறார். விவாதத்தை முடக்குவது போன்ற போலியான வாதங்களை வைப்பதன் மூலம் “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்ற பதம் மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்படுவதை நாம் இங்கே பார்க்கிறோம்.

இது போன்ற சொற்பொருள் விளையாட்டுகளால் ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” எனும் பதத்தை மீண்டும் மீண்டும் நிராகரிப்பதன் மூலம் உண்மையான பிரச்சினைகளை இவர்கள் திசை திருப்புவது மலைப்பூட்டுகிறது. ஆனால் மெலனியின் கருத்துக்களுக்கு நெருக்கமானவர்களான ரோட் லிடில்(Rod Liddle) மற்றும் பிரெண்டன் ஒ’நெய்ல்(Brendan O’Neil) போன்றவர்கள் தங்களது இசுலாமிய வெறுப்பை வெளிப்படுத்துவதற்கான களத்தை மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் பி.பி.சி நிறுவனம் வழங்கியிருப்பதுதான் உண்மையில் கவலைக்குரியதாகும்.

மெலனியின் சகிப்புத்தன்மையற்ற வாதம் யூதர்கள் மற்றும் முசுலீம்களால் சரியாக விமர்சிக்கப்பட்டிருந்தாலும், ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ என்ற பதத்தின் சரியான பொருள் நோக்கம் என்ன என்று அதைப்பற்றி நன்கறிந்த தாராளவாதிகள் கூட கேட்டுக் கொண்டேயிருக்கின்றனர்.

இது போன்ற சொற்கள் தன்னளவில் முழுமைத்தன்மை பெற்றிருப்பது அரிது அல்லது அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் பல்வேறு வார்த்தைகள் எந்த ஒரு சராசரி வெறியுணர்வாளர்களிடமும்  சிறிய தாக்கத்தையே ஏற்படுத்துகின்றன.

“யூத – அரேபிய எதிர்ப்பு”(anti semitism) என்ற சொல்லை நாம் எடுத்துக் கொள்வோம். அகராதி விளக்கப்படியே மத்தியக் கிழக்கில் உள்ள அரேபியர்கள் மற்றும் யூதர்களுக்கு எதிரான சகிப்புத்தன்மையின்மையை இது குறிக்கிறது. ஆனால் இது பரவலாக யூத எதிர்ப்பு என்றுதான் புரிந்து கொள்ளப்படுகிறது. சமூகத்தில் யூத அரேபிய இன எதிர்ப்புகளும் சகிப்பின்மையும் பரவலாக இன்னும் இருக்கிறது என்று அது மேலும் கூறுகிறது. யூத – அரேபிய இனத்தைச் சேர்ந்தவராக இருப்பதால் ஒரு அரேபியருக்கு யூத எதிர்ப்புணர்வு இருக்காது என்று ஒருவர் கூறமுடியாது.

இதே போலதான் நல்லெண்ணம் கொண்ட பெரும்பாலான மக்கள் அகராதி விளக்கத்தைத் தாண்டி இசுலாமிய வெறுப்புணர்வு என்பதை ஒரு கருத்தாகவோ அல்லது சமூக நிகழ்வாகவோ புரிந்து கொண்டுள்ளனர்.

“இசுலாமிய வெறுப்புணர்வு நோய் – இஸ்லாம் ஃபோபியா” என்ற சொல்லை 1997-ம் ஆண்டு வெளியிட்ட தன்னுடைய அறிக்கையில் ரன்னிமேடே(Runnymede ) அறக்கட்டளை தான் முதன்முதலாக பிரபலப்படுத்தியது. முசுலீம்கள் மீதான வெறுப்பை குறிப்பதற்கு ஒரு சொற்பதம் தேவைப்பட்டதன் பின்னணியில் இது புழக்கத்தில் வந்தது. முதலில் “முசுலீம்களுக்கு எதிரான அடிப்படையற்ற வெறுப்பு, பின்னர் அதுவே அனைத்து முசுலீம்கள் மீது பயம் அல்லது வெறுப்பு” என்ற அடிப்படையில் ‘[அடிப்படையற்ற] அதீத பயம் அல்லது சமநிலை குலைந்த மனநோய்’ (“phobia” ) என்ற பின்னொட்டு சேர்க்கப்பட்டது.

“இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்ற சொற்பதம் இசுலாம் மீதான விமர்சனத்தையோ மாற்றுக் கருத்துக்களையோ கண்டனங்களையோ வெளிப்படுத்தக்கூடாது என்று கூறவில்லை என்று தெளிவாகவே ரன்னிமேடே அறிக்கை கூறியிருந்தது. இதை புரிந்து கொள்ளாமல் இருப்பது போல பாசாங்கு செய்வது மிகவும் முட்டாள்தனமானது.

எனினும் இந்த பதம் குறித்த விளக்கத்தின் மீது சந்தேகத்தை உருவாக்க, இப்பதத்தின் எதிர்ப்பாளர்கள், அதன் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் மீதான பரந்துபட்ட பகையுணர்ச்சியோடு, நம்பிக்கையின் மீதான விமர்சனத்தையும் இட்டுக்கட்ட முயற்சிக்கின்றனர்.

“குறைந்த இசுலாம்தான் தீவிரவாதத்திற்கான தீர்வு” என்ற கோட்பாட்டை முன்வைத்த டக்லஸ் முரே போன்ற சிலர் “இசுலாம் மீதான விமர்சனம்” என்ற போர்வையில் தங்களது எதிர்ப்புணர்வை சட்டபூர்வமாக்க முயல்கின்றனர். இங்கே இசுலாம் என்ற சொற்பதத்தை பயன்படுத்தியதன் அடி ஆழத்தில் பிரிட்டிஷ் கடற்கரைகள் பாதுகாப்பாக இருக்க முசுலிம்கள் குறைவாக இருக்க வேண்டும் என்ற பொருள் தேங்கியுள்ளது. முசுலிம்களை இன அழிப்பு செய்யாமலோ அல்லது ஒட்டுமொத்தமாக நாடு கடத்தாமலோ எப்படி இந்த குறிக்கோளை அடைய முடியும் என்பதை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது. இது கண்டிப்பாக இசுலாமின் மீதான விமர்சனம் அல்ல. மாறாக இது “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்”க்குள் கச்சிதமாக அடங்குகிறது.

மேலும் ”இசுலாமிய வெறுப்புணர்வு” என்ற சொற்பதத்தை சட்டபூர்வமாகவே காயடிப்பதற்கு முசுலீம் விரோத வெறுப்பு (anti-Muslim hatred) என்ற சொற்பதத்தை நைச்சியமாகப் பயன்படுத்துகிறார்கள். “இசுலாமிய வெறுப்புணர்வு நோய்” என்பது வெறும் வெறுப்பு என்பதைத் தாண்டி பரந்த பொருளை கொண்டுள்ளது. முசுலீம் விரோத வெறுப்பு என்ற சொற்பதம் பரவலான இன ரீதியான ஏற்றத் தாழ்வுகளை எதிரொலிக்கவில்லை.

முசுலீம்கள் இங்கிலாந்தைக் கைப்பற்றி விடுவார்கள் என்று 31% பிரிட்டிஷ் சிறுவர்கள் உண்மையில் கருதுகிறார்கள்; அதே போல முசுலீம்களின் எண்ணிக்கையை குறைக்கும் கட்சிக்கு 37% பிரிட்டிஷ் மக்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள். எதார்த்தத்தில் சக வெள்ளை இன கிறுத்துவர்களை விட முசுலீம் மக்களுக்கு 76% குறைவாகவே வேலை கிடைக்கிறது. மேலும், இங்கிலாந்தின் மிகவும் பின்தங்கிய 10% பகுதிகளில் தான் 50% முசுலீம் மக்கள் வாழ்கின்றனர். இச்சூழ்நிலைகள் அனைத்தும் வெறுமனே வெறுப்பு என்ற வார்த்தைக்குள் அடங்காது. இவை இசுலாமிய வெறுப்புணர்வு என்ற பரந்துபட்ட பொருள் கொண்ட வார்த்தைக்குள்ளே கச்சிதமாக அடங்குகின்றன.

மேலும் ‘இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ என்பது அதன் விரிந்த பொருளில் முசுலீம் இன வெறுப்புதான் என்பது தற்போது நன்கு நிறுவப்பட்டுள்ளது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பிரிட்டிஷ் மக்கள், காவல் துறையினர், ஊடகங்கள் மற்றும் பிரிட்டிஷ் பிரதமரையும் தாண்டி உலகம் முழுதும் இதன் பயன்பாடு பரவியிருக்கிறது. மேலும் அனைவருக்கும் அந்த வார்த்தை என்ன சொல்ல வருகிறது என்றும் தெரிந்திருக்கிறது.

’இசுலாமிய வெறுப்புணர்வு நோய் ‘ இருப்பது உண்மை. அது நம் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளில் அவற்றின் அனைத்து பரிமாணங்களோடும் வளர்ந்து வருகிறது. ’இசுலாமிய வெறுப்புணர்வை நோய்’ ஆட்கொண்டவர்களும் ’இசுலாமிய வெறுப்புணர்வு நோய்’ நிலவுவதை மறுப்பவர்களும், நமது தெரிவான  ‘இசுலாமிய வெறுப்புணர்வு’  எனும் பதத்தை பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து நகைப்பிற்குரியது. ஏனெனில் வெறும் வார்த்தை மாற்றம் அவர்களது வெறுப்புணர்வை ஒருபோதும் மாற்றப் போவது இல்லை.

வெறும் வார்த்தையைப் பிடித்து தொங்கி கொண்டிருப்பவர்கள் நடைமுறையில் முசுலீம்கள் மீதான விரோதப்போக்கு, வன்முறை மற்றும் இனவெறியை விட  அப்பதத்தின் சொற்பொருளைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறார்கள். அவர்களது ஆர்ப்பரிக்கும் மதவெறியை அவர்களது சொல் விளையாட்டுகள் மறைக்கும் என்றே கருதுகிறார்கள். ஆனால் அது அவர்களால் முடியாது. நாமும் பார்க்கத்தானே போகிறோம்.

-வினவுச் செய்திப் பிரிவு

கார்டியன் தளத்தில்  எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

பாரதக் குடிமக்கள் கொல்லப்படுதலும் வாய் திறவாத பாரதப் பிரதமரும் ! வினோத் துவா

ஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ

உரையின் தமிழ் வடிவம்

நமஸ்கார்,

இன்னும் ஒரு தடவை, அவரது வழக்கப்படி, அவரது பாரம்பரியப்படி பாரத நாட்டின் பிரதான சேவகர் (மோடியை இந்தியில் பிரதான் மந்திரி என்று சொல்லாமல் பிரதான சேவகர் என்றே வினோத் துவா குறிப்பிடுகிறார்) எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கிறார்.

11 பாரத குடிமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பாரத போலீசின் கையாலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள், ஒரு பாரத பிராந்தியத்திலேயே கொல்லப்பட்டிருக்கிறார்கள். அந்த பிராந்தியத்தின் பெயர் தமிழ்நாடு. ஆனால், மோடி இது பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஏன்?

இந்த நகரத்தை தமிழில் தூத்துக்குடி என்று அழைக்கிறார்கள். பிரிட்டனைச் சேர்ந்த ஒரு கம்பெனி அங்கு ஒரு தொழிற்சாலை அமைத்திருக்கிறது, அதன் முதலாளி அகர்வால் என்பவர், அனில் அகர்வால். அந்த கம்பெனியின் பெயர் வேதாந்தா.

அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு இது தொடர்பாக அவர்களது ஆரோக்கியத்தைப் பற்றியும், நிலத்தடி நீர் மாசுபடுதல் பற்றியும் தொடர்புடைய பல பிரச்சனைகள் உள்ளன. அவர்கள் இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்று பல நாட்களாக போராடி வருகிறார்கள். இந்தத் தொழிற்சாலையில் பெருமளவு தாது கலந்த மண்ணிலிருந்து தாமிரம் எடுத்து பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது.

வேதாந்தா அங்கு உருக்கு ஆலை அமைத்த பிறகு தண்ணீர் மாசுபடுதல் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டது, மக்களின் உடல்நிலை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டன, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்தது, (உச்சநீதிமன்றத்தில்) தடை விலகிய பிறகு இவர்கள் என்ன செய்தார்கள்? இந்தத் தொழிற்சாலையை இன்னும் பெரிதாக்குவதற்கு திட்டமிட்டார்கள். இதை மக்கள் இன்னும் அதிகமாக எதிர்த்தார்கள். 100 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடத்தியது, துப்பாக்கிச் சூட்டில் 11 (தற்போது 13) பேர் கொல்லப்பட்டனர்.

போலீஸ் துப்பாக்கிச் சூடு என்பது கொல்வதற்காக நடத்தப்படுவதில்லை. இதற்கான முழுமையான ஒரு நெறிமுறை (ப்ரோட்டக்கால்) இருக்கிறது. போலீஸ் எப்படி இதில் செயல்பட வேண்டும் என்று, நான் உங்களுக்கு இந்த நெறிமுறை பற்றி சொல்கிறேன்.

இது போலீசுக்கான விதிமுறை.
  • முதலில் கூடியிருக்கும் மக்களை சட்டத்துக்குப் புறம்பான கூடுகை என்று அறிவிக்க வேண்டும். இங்கு 100-வது நாள்தான் 144 தடை உத்தரவு போடப்பட்டது, 99 நாட்கள் வரை எந்தத் தடையும் போடப்படவில்லை.
  • இரண்டாவதாக, கூடியிருக்கும் மக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்த வேண்டும். (பாபா ராம்தேவ் ராம்லீலா மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது போலீஸ் கலைந்து போகும்படி சொன்னது. அப்போது அனைவரும் கலைந்து போய் விட்டார்கள். அப்போதுதான் ராம்தேவ் பெண்களுக்கான சல்வார் கமீஸ் அணிந்து கொண்டு தப்பி ஓடினார். உங்களுக்கு நினைவிருக்கும்). அது போல போலீஸ் “நீங்கள் தாமாகவே கலைந்து போய் விடுங்கள், திரும்பிப் போய் விடுங்கள்” என்று சொல்ல வேண்டும். அப்படி செய்தார்களா இல்லையா என்று நமக்குத் தெரியவில்லை.

அப்படி சொன்னதை அவர்கள் கேட்கவில்லை என்றால், அதன் பிறகு கூட்டத்தை கலைந்து போக வைக்க மாவட்ட ஆட்சியருக்குத்தான் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான உத்தரவிடும் அதிகாரம் உள்ளது.

  • முதல் கடுமையான நடவடிக்கை கண்ணீர் புகை பயன்படுத்துவது
  • இரண்டாவது நடவடிக்கை மெலிதான பேட்டன் தாக்குதல் அல்லது பிரம்பு தாக்குதல் நடத்த வேண்டும். தடியடி இல்லை. பிரம்பு தாக்குதல்தான், அதுவும் மெலிதான தாக்குதல் நடத்த வேண்டும்.
  • மூன்றாவது கடுமையான நடவடிக்கை தண்ணீரை பீய்ச்சியடிக்க வேண்டும். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.
இதற்குப் பிறகும் கூட்டம் கேட்கவில்லை என்றால், இந்த மூன்றும் பலனின்றி போய் விட்டால், அப்போதுதான் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்த முடியும்.
  • அதுவும் முதலில் எச்சரிக்கை விடுக்க வேண்டும். “நாங்கள் சுடப் போகிறோம்” – “வீ வில் ஓப்பன் ஃபயர்” என்று ஒலிபெருக்கி மூலம் சொல்ல வேண்டும். “இதனால் உயிரிழப்பு நேரிடக் கூடும்” என்று எச்சரிப்பதும் போலீசின் கடமை.
  • அதன் பிறகு ஒரு கலவர கொடி ஏற்ற வேண்டும், அதாவது துப்பாக்கிச் சூடு நடக்கப் போகிறது கலைந்து போய் விடுங்கள் என்று காட்டுவதற்கு ஒரு கொடியை ஏற்ற வேண்டும். இங்கு, அப்படி எதுவும் நடக்கவில்லை.
  • விதிமுறைகளின்படி இவ்வளவுக்கும் பிறகு போலீஸ் துப்பாக்கி சூடு ஆரம்பித்தால், முதலில் விண்ணை நோக்கி காற்றில் சுட வேண்டும்.
  • அதன் பிறகும் கூட்டம் கலைந்து போகவில்லை என்றால் இடுப்புக்குக் கீழ் சுட வேண்டும், காயப்படுத்தும் வகையில் சுட வேண்டும். கொல்லும் வகையில் சுடுவதற்கு போலீஸ் எப்போதும் சுடக் கூடாது.

இங்கு இன்சாஸ் ரைஃபிள் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். இதை ஸ்னைப்பர் துப்பாக்கி என்று நான் சொல்ல மாட்டேன். ஸ்னைப்பர் துப்பாக்கி வேறு வகையில் இருக்கும்.

இன்சாஸ் ரைஃபிள் ராணுவம், பி.எஸ்.எஃப், சி.ஆர்.பி.எஃப் பயன்படுத்தும் துப்பாக்கி. வழக்கமாக போலீஸ் கையில் பழைய 303 துப்பாக்கி இருக்கும். ஆனால், இங்கு இந்த இன்சாஸ் துப்பாக்கி பயன்படுத்தப்படுகிறது.

இந்த புகைப்படத்தில் தென்படுபவர்கள் குறி வைத்து சுடுகின்றனர். இது அனைத்தும் தெளிவாக உள்ளது.

வேதாந்தா மிகப்பெரிய கம்பெனி. இதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது யாரும் கீழ்நிலை அதிகாரியால் முடியாத ஒன்று. ஏனென்றால், இந்த நிறுவனம் பெரிய அளவில் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திருக்கிறது.

இது போன்ற கம்பெனிகளுக்காகத்தான் பட்ஜெட்டில் FCRA சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. 1976 முதல் இப்போது வரை எந்தெந்த வெளிநாட்டு கம்பெனிகள் நமது நாட்டு அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்தனவோ, 1976 முதல் அதாவது, எமர்ஜென்சி அமலில் இருந்த போது, திருமதி இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் இருந்தது. இப்போது பா.ஜ.க அரசு. அப்போது ஆரம்பித்து இப்போது வரைக்கும் எந்தெந்த வெளிநாட்டு கம்பெனி எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுத்தார்களோ காங்கிரசுக்கு, பா.ஜ.க-வுக்கு அதற்கு எந்த பரிசீலனையும் செய்யப்பட மாட்டாது.

இது நமது நிதி மந்திரி திரு அருண் ஜெட்லி பாரத வர்ஷத்துக்கு வழங்கிய கொடை. இதை நிதி மசோதாவில் ஒரு அடிக்குறிப்பின் வடிவில் சேர்த்து விட்டிருந்தார். இதன் மீது எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. ஏன்? ஏனென்றால் இரண்டு தரப்புக்கும் இதில் ஆதாயம் இருக்கிறது. காங்கிரசுக்கும் சரி, பா.ஜ.கவுக்கும் சரி, பிற கட்சிகளுக்கும் சரி.

11 பாரத குடிமக்கள் உயிரிழந்திருக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூடு கல் எறிந்தவர்கள் மீது மட்டுமோ, அல்லது அமைதியாக பேரணி நடத்துபவர்கள் மீது மட்டும் ஏன் நடக்கிறது? இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும், கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்த தருணத்தில் வேதாந்தாவின் தொழிற்சாலை மூடப்பட்டிருக்கிறது, இந்த கம்பெனி குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

FCRA-ல் அடிக்குறிப்பின் வடிவில், 1976 முதல் இப்போது வரை வெளிநாட்டு கம்பெனிகள் கொடுத்த நன்கொடை தொடர்பாக எந்த பரிசீலனையும் கிடையாது என்பது நீக்கப்பட வேண்டும். அப்போதுதான் அரசு மக்களுக்கானது, கார்ப்பரேட்டுகளுக்கானது இல்லை என்று நிரூபிக்கப்படும்.

டிரிக்கிள் டவுன் உண்மையில் வேலை செய்கிறதா என்று நமக்குத் தெரியவில்லை. இந்த விஷயத்தைப் பொறுத்த வரை இந்த கம்பெனி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும், ஒடிசாவிலும் நடத்தப்பட வேண்டும், ஜாம்பியாவிலும் இந்த கம்பெனி மீது விசாரணை நடத்த வேண்டும்.

இந்த கம்பெனி வேதாந்தா, இந்திய வங்கிகளுக்கு சுமார் 22,000 கோடி கடன் பாக்கி வைத்திருக்கிறது.

நன்றி : new-democrats

க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?

24

க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?

போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம்.
இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு  போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.

மானமுள்ள தமிழ் மக்களே, “காலா” வை கடைசி படம் ஆக்குங்கள்!

__________________________________________________

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு வக்காலத்து 3 பேர்  எடப்பாடி, பாஜக, ரஜினி ஆன்மீக அரசியல் அணி தயார்!

நேற்று எடப்பாடி 40 பக்கத்தில் சொன்னதைத்தான் சூப்பர் ஸ்டார் நாலே வார்த்தையில் சொல்கிறார். தூத்துக்குடி மக்களே போலீஸ் வெறியாட்டத்தை ஆதரிக்கும் ரஜினியை புறக்கணியுங்கள்.

கருத்துப்படம்: மக்கள் கலை இலக்கியக் கழகம், தமிழ்நாடு.

சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற ? | ராஜு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜுவிடம் நக்கீரன் இதழ் நடத்திய நேர்காணல் வீடியோ.

  • யார் சமூக விரோதி?
    பத்தாம் வகுப்பு மாணவியின் வாயில் சுட்டான் பாருங்க அவன்தான் சமூக விரோதி.
    இந்த போலீஸ்தான் சமூக விரோதி. 
  • எந்த அமைப்பைச் சார்ந்தவங்க, எந்த வேனுக்குத் தீவைச்சாங்க… காட்டு நீ…
    எந்த அமைப்பைச் சேர்ந்தவங்க கலெக்டர் ஆபீச அடிச்சி உடைச்சாங்க காட்டு நீ…
    ஆனா நீ செஞ்சதெல்லாம் வெளியில வந்துருக்குல்ல… 
  • எப்படி டி.ஜி.பி.யும் முதல்வரும் சுட்டது தெரியாது… நாங்க உத்தரவு கொடுக்கலனு எப்படி சொல்ல முடியும்?
    ஒரு டி.ஜி.பி.க்குத் தெரியாம தூத்துக்குடில 13 பேர சுட்ருவாங்களா? 
  • தூத்துக்குடி எஸ்.பி. மேல 13 கொலை வழக்கு போடனும்… சாதாரண ஜனங்க மேல ஒரு எப்.ஐ.ஆர். இருந்தா கூட வேலை தர மாட்டேங்கிரல்ல… வயித்துப் பொழப்புக்கு வெளிநாடு போயி பொழக்க முடியலைல்ல.. தூத்துக்குடி எஸ்.பி.யை வேலையை விட்டுத் தூக்கு… தற்காப்புக்குத்தான் சுட்டேனு கோர்ட்ல நிரூபிச்சுட்டு வரட்டும்… 
  • வானத்தப் பார்த்து சுடுறான்.. பூமியைப் பாத்து சுடறான்.. இதெல்லாம் என்ன பேச்சுங்க இது? சொந்த நாட்டு மக்களுக்கு எதிரா எதுக்கு துப்பாக்கி எடுத்துட்டு வர்ற? சொந்த மாவட்ட மக்கள் அவன் கோரிக்கைகாகப் போராடுறான் இங்க துப்பாக்கிக்கு என்ன வேலை? 
  • மக்கள் இனி எந்தப் போராட்டத்துக்கும் முன்வரக்கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவே அரங்கேற்றப்பட்ட திட்டமிட்ட படுகொலை இது. இது அரச பயங்கரவாதம்.

(நன்றி: நக்கீரன்)

நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?

0

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது சாலிஹ். 26 வயதான முகமது சாலிஹ், கடந்த 17ம் தேதி (2018, மே 17) கோழிக்கோட்டில் உள்ள பேபி நினைவு மருத்துவமனையில் (Baby Memorial Hospital) அனுமதிக்கப்படுகிறார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் காய்ச்சல், உயர் ரத்த அழுத்தத்துடன் ஒருவிதமான குழப்பமான மனநிலையில் இருந்துள்ளார் சாலிஹ்.
சாலிஹ் அனுமதிக்கப்பட்டதற்கு சரியாக 12 நாட்கள் முன்பு 23 வயதே நிரம்பிய அவரது இளைய சகோதரர் இதே போன்ற அறிகுறிகளுடன் பாதிக்கப்பட்டு இறந்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கேட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்யும் மருத்துவர்கள் மற்றும் உறவினர்கள்.

முதலில் இவர்கள் ஏதோவொரு வகையான விசத்தை அருந்தியிருக்க வேண்டுமென மருத்துவர்கள் சந்தேகித்துள்ளனர். ஆனால், அதே குடும்பத்திற்கு உறவினரான மரியம் என்கிற பெண்ணும் மூசா என்கிற முதியவர் ஒருவரும் இதே போன்ற அறிகுறிகளோடு பாதிக்கப்பட்டு இறந்து போனதைக் கேள்விப்படும் மருத்துவர்கள், விரிவான பரிசோதனைகள் மேற்கொள்கின்றனர். எனினும், அனுமதிக்கப்பட்ட 24 நான்கு மணி நேரத்திற்குள் சாலிஹ் மாரடைப்பால் இறந்து போகிறார்.

இதற்கிடையே சாலிஹின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை பெங்களூருவில் உள்ள மனிபால் மருத்துவமனையிலும், பூனேவில் உள்ள வைரஸ் பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படுகிறது. சாலிஹ் இறந்து இரண்டு நாட்கள் கழித்து அவர் நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார் என்பது கண்டறியப்படுகிறது. அடுத்த பத்தே நாட்களில் கேரள மாநிலத்தில் மட்டும் 14 பேர் இந்த வைரஸ் தாக்கி மரணமடைந்துள்ளனர்.

*****

முதன்முதலில் மலேசியாவில் 1998-ல் கண்டறியப்பட்டது நிபா வைரஸ். பன்றிப் பண்ணைகள் நடத்திய விவசாயிகளிடையே பரவிய நிபா வைரஸ், சுமார் 300 பேரைத் தாக்கி 100-க்கும் அதிகமானவர்களை பலி வாங்கியது. இந்தியாவைப் பொருத்தவரை மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் முதல் முதலாக 2001-ம் ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. சுமார் அறுபத்தாறு பேர் நோய் பாதிப்புக்கு ஆளாகி 45 பேர் பலியானார்கள்.

மீண்டும் 2007-ம் ஆண்டு அதே சிலிகுரி மாவட்டத்தில் ஐந்து பேரை நிபா வைரஸ் தாக்கியது. இம்முறை நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் ஐவரும் மாண்டனர்.
மலேசியாவைப் பொருத்தவரை 1999-க்குப் பின் நிபா வைரஸ் தாக்குதல் நிகழவில்லை. ஆனால், இந்தியா மற்றும் வங்கதேசத்தை சில வருட இடைவெளிக்கு ஒரு முறை தாக்கி வருகிறது.

ஐ.நா.-வின் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அபாயகரமான தொற்றுநோய்  பட்டியலில் ஜிகா மற்றும் எபோலா வைரஸ்களுடன் நிபா வைரசும் இடம் பிடித்துள்ளது. நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 70 சதவீதம் பேருக்கு மரணத்தை அளிக்கும் அளவுக்கு நிபா வைரஸ் வீரியம் மிக்கது என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

நிபா வைரஸ் எவ்வாறு பரவுகிறது?

மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிபைன்ஸ் போன்ற நாடுகளில் பன்றிகள் மற்றும் குதிரைகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியது நிபா வைரஸ். மலேசியாவில் இருந்து இந்தியத் துணைக்கண்டத்திற்கு வவ்வால்களின் மூலம் பரவியுள்ளது. பறக்கும் நரிகள் அல்ல்து டெரோபஸ் வவ்வால்கள் (Pteropus Bats) என்று அழைக்கப்படும் ஒரு வகையான பழந்தின்னி வவ்வால்களின் மூலம் இந்தியத் துணைக்கண்டத்தில் நிபா வைரஸ் பரவியுள்ளது.

கேரளாவில் சாலிஹ் குடும்பத்தினர் தமக்குச் சொந்தமான கினறு ஒன்றைத் தூர்வாரியதற்குப் பின்னரே அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்தக் கிணற்றினுள் வவ்வால்கள் வசித்து வந்துள்ளன.

நிபா வைரஸ் தாக்குதல் வேகமாக பரவி வருவதை அடுத்து சமூக வலைத்தளங்களில் வவ்வால்களை மொத்தமாக ஒழித்து விட்டால் இந்நோயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்பது போன்ற சதிக்கோட்பாடுகள் பரவத் துவங்கியது.

இதற்கு பதிலளித்துள்ள விஞ்ஞானிகள் சிலர், பொதுவாக எபோலா, மார்பர்க், சார்ஸ் மற்றும் நிபா வைரஸ்கள் வவ்வால் மூலம் பரவுகின்றன என்றாலும், வவ்வால்கள் மட்டுமே வைரஸ் கடத்திகளாக இருப்பதில்லை. பன்றி, குதிரை உள்ளிட்ட கால்நடைகள் மற்றும் இதர பறவையினங்களின் மூலமும் வைரஸ்கள் பரவுகின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட மிருக இனத்தை மொத்தமாக அழித்து விடுவது தீர்வல்ல என்கின்றனர் விஞ்ஞானிகள்.

கேரள மாநிலம் கோழிக்கேட்டில் நிபா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தவரின் இறுதி சடங்கில் உறவினர்கள்.

குறிப்பாக வவ்வால்கள் மகரந்தச் சேர்க்கைக்கு துணைபுரிவதோடு இயற்கையின் பல்லுயிர்ச் சூழலில் (Biodiversity) ஒரு முக்கியமான இடத்தையும் வகிக்கின்றன. பொதுவாக கால்நடைகளைச் சரியாக பராமரிக்காமல் விடுவது மற்றும் விலங்கினங்களின் இயற்கையான வசிப்பிடங்கள் அருகி வருவதால் மனிதர்களின் வசிப்பிடங்களுக்குள் அவை அத்துமீறுவது போன்ற காரணங்களாலேயே விலங்குகளிடமிருந்து வைரஸ்கள் தொற்றுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

கேரளத்திலும் கூட, சாலிஹ் குடும்பத்திற்கு சொந்தமான கிணற்றில் டெரோபஸ் வவ்வால்கள் வசித்தது விதிவிலக்கானது எனக் குறிப்பிடுகின்றனர். பொதுவாக மரங்களிலேயே வாழும் இந்த இனத்தைச் சேர்ந்த வவ்வால்கள் கிணற்றில் வசிப்பது மிக அரிதானது என்கின்றனர்.

*****

பாரமைக்சியோவைரிடே (Paramyxoviridae)என்கிற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நிபா வைரஸ், பொதுவாக விலங்குகளைக் கடத்தியாக (Carrier) பயன்படுத்த வல்லது. ஆனால், இதே குடும்பத்தைச் சேர்ந்த மற்ற வைரஸ்களை விட அதிகளவிலான விலங்குகளைக் கடத்தியாக பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு இதன் மரபணு சமீப காலங்களில் மேம்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.

ஆடு, மாடு, பன்றி, குதிரை உள்ளிட்ட கால்நடைகளில் இருந்து நாய்கள், பூனைகள் போன்ற வளர்ப்புப் பிராணிகள் வரை நிபா வைரசின் கடத்தியாகச் செயல்படும். பொதுவாக நிபா வைரஸ் தனக்கு கடத்தியாகச் செயல்படும் விலங்குகளைப் பெரிதும் பாதிப்பதில்லை.

பல லட்சம் வருடங்களாக இருந்து வரும் நிபா வைரஸ், சமீபத்திய ஆண்டுகளில் நோய் எதிர்ப்பு மருந்துகளைத் தாக்குப்பிடித்துப் பரவும் திறனைப் பெற்றுள்ளது; அதன் மரபணுக் கட்டுமானத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு முதலில் காய்ச்சல் தோன்றும்; அதைத் தொடர்ந்து அதிகளவு தலைவலியும் ஒருவிதமான குழம்பிய மனநிலையும் உருவாகும். உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் சரியாக ஒரே வாரத்தில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும். மனித உடலில் புகுந்த உடன் வெகுவிரைவில் தனது எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்ளும் நிபா வைரஸ், இரத்த நாளங்களில் அழற்சியை உண்டாக்கும்.

அடுத்து நரம்பு மண்டலத்தில் படர்ந்துள்ள எஃப்ரின் – பி2 மற்றும் எஃப்ரின் – பி3 என்கிற புரோட்டீன் திரவங்களை பாதிப்படையச் செய்வதன் மூலம் நோயாளியின் மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களைப் பாதித்து மரணத்தை விளைவிக்கும். மலேசியாவில் முதன்முதலாக மனிதர்களைத் தாக்கிய நிபா வைரஸ், 30 சதவீத மரணங்களை உண்டாக்கியது. அடுத்த சில ஆண்டுகளிலேயே இந்தியத் துணைக்கண்டத்தில் பரவிய போது 70 சதவீதம் அளவுக்கு மரணம் ஏற்படுத்தும் ஆற்றலை நிபா வைரஸ் அடைந்திருந்தது.

இந்த வைரசுக்கான தடுப்பு மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் தொற்றுநோய்த் தடுப்பு மற்றும் ஆராய்ச்சிகளுக்கான கூட்டமைப்பு (Coalition for Epidemic Preparedness Innovations (CEPI)) என்கிற ஆராய்ச்சி நிறுவனம் நிபா வைரசுக்குத் தடுப்பு மருந்துளைக் கண்டுபிடிக்க அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு மருந்துக் கம்பெனிகளுக்கு 25 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது.

எனினும், இந்நோய் மேற்குலத்திற்கு இதுவரை பெரும் அச்சுறுத்தலாக வளராத காரணத்தாலும், பெரும் எண்ணிக்கையிலான நோயாளிகள் இல்லாததால் சந்தை வாய்ப்புகள் குறைவு என்பதாலும் ஆராய்ச்சிப் பணிகள் மந்தகதியிலேயே நடந்து வருகின்றன.

உலகில் பரவும் ஆட்கொல்லி வைரஸ் கிருமிகளில் நான்கில் மூன்று பங்கு எண்ணிக்கையிலானவை விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவக் கூடியவைகளாகவே உள்ளன. இரண்டாயிரங்களின் துவக்கத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று விஞ்ஞானிகள் கொண்ட குழு ஒன்று, ஆட்கொல்லித் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க “ஒருங்கிணைந்த சுகாதார” (One Health) நடவடிக்கை ஒன்றைப் பரிந்துரை செய்துள்ளனர்.

இதன்படி மனிதர்கள் மற்றும் விலங்குகளின் சுகாதாரமும், விவசாயம் மற்றும் சூழலியல் சுகாதாரமும் முறையாகப் பேணப்பட வேண்டும் என்பதை முன்வைத்துள்ளனர். தற்போது மேற்குலக அரசாங்கங்கள் இந்த அணுகுமுறையை மேற்கொள்ளத் துவங்கியுள்ளனர்.

எனினும், இந்தியா போன்ற நாடுகளில் ஆட்கொல்லி நோய்கள் பரவிய பின்னரே அரசு நடவடிக்கையில் இறங்குகின்றது. நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களைத் தனிமைப்படுத்துவது, நோய் எதிர்ப்பு மற்றும் முன்னெச்சரிகைத் தடுப்பு மருந்துகள் கொடுப்பது என்கிற வழமையான பாணியே பின்பற்றப்படுகின்றது.

அரசே முன்னின்று நோய்கள் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாத சூழலில் தனிப்பட்ட முறையிலான சுகாதாரத்தைப் பேணுவது, வவ்வால் அல்லது பறவைகள் கடித்த பழங்களைத் தின்னாமல் தவிர்ப்பது போன்ற தனித்தீர்வுகள் மட்டுமே இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு.

தூய்மை இந்தியா போன்ற ஓட்டை வாளிகளைக் கொண்டு கடல் நீரை வாரி இறைக்கும் முட்டாள்தனமான திட்டங்களுக்கு அரசு கோடிகளை வாரியிறைக்கும் வரை நமது மக்கள் ஆட்கொல்லி நோய்களுக்கு பலியாவதைத் தவிர்க்க முடியாது.

சாக்கியன்.

மேலும் :

வேதாந்தா முதலாளிக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் | ஆழி.செந்தில்நாதன் | ஆதவன் தீட்சண்யா | நவீன் | ஓவியா

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 4

சமூக செயற்பாட்டாளர் ஆழி.செந்தில்நாதன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, திரைப்பட இயக்குநர் நவீன், சமூக செயற்பாட்டாளர் ஓவியா ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

தூத்துக்குடி படுகொலை : கண்டிக்காமல் இருப்பது பெருங்குற்றம் | அதிஷா | ஆடம்தாசன் | சல்மா | சுந்தர்ராஜன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 3

பத்திரிகையாளர் அதிஷா, திரைப்பட இயக்குநர் ஆடம்தாசன், கவிஞர் சல்மா, பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், பத்திரிகையாளர் பரிசல் கிருஷ்ணா ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

உயிருக்கு பயந்த தயிரு சாதமெல்லாம் ஒதுங்கு ! இது கபடிடா !

சென்னை போரூர் அருகில் உள்ள கெருகம்பாக்கம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு புறநகர். அங்கே ஆளுயர மைக் செட்டுகள், மைதானம் முழுக்க பல வண்ணங்களில் கபடி விளையாட்டு எற்பாடு அறிவிப்புகள், நிகழ்ச்சி மேடையில் அலங்கார தோரணங்களுக்கு பதிலாக கட்டி தொங்கவிடப்பட்ட பரிசுப் பொருட்கள்; சில்வர் தவளை, மின்விசிறிகள் போன்றவை புதிதாக பார்ப்போருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும்.

கபடி விளையாட்டுப் போட்டியில் அங்கே இருந்த இளைஞர்களின் கொண்டாட்டம், ஆடுகளத்தையே அதகளப்படுத்தியது. ஐ.பி.எல் இறுதி போட்டி நாளன்று (27.05.2018 – ஞாயிறு) இப்படி ஒரு காட்சியா? விளையாட்டு வீரர்களின் பரவசம் நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

அருகில் சென்று விளையாட்டு வீரர்களிடம் பேசினோம். அவர்கள் அடுத்தடுத்த போட்டிக்கான தயாரிப்பில் சுறுசுறுப்பாக இருந்தனர். கிடைத்த நேரத்தில் பேசுவதற்கு “அவசரம்… அவசரம்… சீக்கிரம் கேளுங்கள்” என்று உடல்மொழியில் பேச்சை தவிர்த்தனர்.

கிடைத்த நேரத்தில் சாலையோரங்களிலேயே துரித உடற்பயிற்சியை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் பேசிய பேச்சும், சொன்ன தகவல்களும் கபடி விளையாட்டில் தங்கள் வாழ்க்கையை எப்படி கரைத்துக் கொண்டுள்ளனர் என்று மிரள வைத்தனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து 70-க்கும் மேற்பட்ட கபடி விளையாட்டு அணிகள் போட்டியில் கலந்துள்ளனர். ஒவ்வொரு அணியிலும் விளையாட்டு வீரர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். இதில் டாப் 10 அணிகளுக்குள் தாங்களும் நிற்க வேண்டும், அதை தவறவிடக் கூடாது என்று குழு உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கின்றனர். தற்போது இருக்கும் வரிசையில் இன்னும் எப்படி முன்னேறுவது என்று தங்கள் பலம் – பலவீனங்களை அலசுகின்றனர்.

அரகம்தென், பாலவேடு, விருகை, கெருகை, அனகை, தண்டலம், மலையம்பாக்கம், சின்ன போரூர் அணிகள் மற்ற வீரர்கள் மத்தியில் மதிப்போடு வலம் வருகின்றனர். டாப் 10 வரிசையில் அவர்கள்தான் “கெத்து” என்றனர்.

களத்தில் இறங்கும் ஒவ்வொரு அணியும் திறமையானவர்கள் 7 பேரை போட்டியில் அனுமதிக்கின்றன. களத்தில் இறங்கும் வீரர்கள் ஒவ்வொருவரும் பொதுவில் கபடி விளையாட்டில் சிறந்தவர்கள் மட்டுமல்ல, களத்தில் எதிரியை வீழ்த்துவதற்கு 7 நிலைகளில் இருந்து தாக்கக்கூடிய தனிச்சிறப்பு பெற்றவர்கள்.

வலது மூலையிலிருந்து தாக்கும் வீரர், இடது மூலையிலிருந்து தாக்கும் வீரர், இவர்களுக்கு துணையாக உள்ளிருந்து உதவும் வீரர்கள் இருவர், அவர்களுக்கு பின்னால் “ஆல்டர் இன்” என்று சொல்லக்கூடிய எதிரியின் கடைசி தப்பித்தலுக்கு முட்டுக்கட்டை போடும் ஒருவர் – என்று கபடி விளையாட்டை ஒரு யுத்தக்களம் போலவே வியூகம் வகுத்து விளையாடுகின்றனர்.

பாடிவரும் எதிரணி வீரரை எல்லைக்குள் உள்ளிழுத்து, அதே நேரத்தில் கோட்டைத் தொடவிடாமல் போக்குக் காட்டி, திடீரென அவரை முடக்கி நிலைகுலைய வைப்பது, வென்று அடக்குவது ஒரு கலை.

ஒவ்வொரு மணித்துளியும் திடீர் திடீரென புதிய வியூகங்கள் வகுப்பதும், அதை தன்னுடைய உடல்மொழியின் மூலம் சக வீரர்களுக்குப் புரியவைப்பதும், ஏழு வீரர்களும் ஒரே மூளையாக மாறி அடக்குவதும், மின்னலடிக்கும் நேரத்தில் நடக்கும் அற்புதம் – ஒரு குழு சாகசம்.

தனிநபர் திறமைகள் இங்கு குழுவின் துரித உதவியின்றி முழுமை அடையாது. ஒரு நூல் பிசகினாலும் பார்வையாளர்களின் விமர்சனங்கள் எதிரொலிக்கும்.

பொருளாதார ரீதியிலும் சமூகரீதியிலும் அடித்தட்டில் உள்ளவர்களே  கபடி விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர்.

*****

“உயிருக்கு பயந்த தயிறு கும்பல் (பார்ப்பனர்கள்)தான் கபடி விளையாட்டை தீண்டத்தகாத விளையாட்டாக ஒதுக்கியது. அது மலையேறிவிட்டது. இனி கபடியும் ஐ.பி.எல் மாதிரி உலகம் முழுக்க ரசிக்கப்படும். அதன் ஆரம்பம்தான் “புரோ கபடி”. தமிழக வீரர்கள் பிரதாப் பிரபஞ்சன், திவாகர், அருண், ஜீவ குமார், சுரேஷ்குமார், வினோத் ஆகியோர் ஜெய்ப்பூர், மும்பை, உ.பி., ஹைதராபாத், டில்லி அணிகளில் விளையாடுகின்றனர்” என்றார் ஒரு கபடி வீரர்.

சென்னையைச் சுற்றிய மாவட்டங்களில் மட்டும் 350-க்கும் அதிகமாக பதிவு செய்யப்பட்ட விளையாட்டு அணிகள் இருக்கின்றன. இவர்கள் தங்களுக்குள் இணைந்து ஆண்டு முழுவதும் கபடி போட்டிகள் நடத்துகின்றனர். சுற்று முறையில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் போட்டிகளை மாறி மாறி நடத்துகின்றனர். ஆண்டு முழுக்க வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்கும், தனித் திறமைகளை மேம்படுத்திக் கொள்வதற்கும் இப்போட்டிகள் உதவுகின்றன.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு என்ற தர வரிசைப்படி நான்கு அணிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. வெற்றிபெறும் அணிகளுக்கு ரூ.25,000 முதல் 10,000 வரை பணமும் கேடயமும் வழங்கப்படுகின்றன. இந்தப் பரிசுப் பொருட்களை ஊரில் உள்ள வசதிபடைத்த பிரமுகர்களிடம் நன்கொடையாகப் பெறுகின்றனர்.

“ஹோம் கிளப்” என்ற உள்ளூர் அணி, “செட்டிங்க் கிளப்” என்ற வெளியூர் அணி என இருபெரும் பிரிவாக போட்டிகளை நடத்துகின்றனர். இதற்கென்று தனித்தனி விதிமுறைகளை வகுத்துக் கொண்டுள்ளனர்.

குறிப்பாக உள்ளூர் அணிதான் பகுதிவாழ் இளைஞர்களின் தேர்வாக இருக்கிறது. இவ்வணியின் வீரர்கள் வட்டார அளவில் வெற்றிப்பெற்று புகழ் பெற்றவுடன், தனியார் கல்லூரிகள், பெயரும் புகழும் சம்பாதிக்க அவ்வீரர்களுக்கு பல சலுகைகளைக் கொடுத்து தங்கள் கல்லூரிகளில் சேர்த்துக்கொள்ள போட்டிபோடுகின்றன. வறுமையில் வாடும் இவ்விளைஞர்களும் அதை ஒரு வரப்பிரசாதமாகக் கருதுகின்றனர்.

தங்கள் விளையாட்டுத் திறனை மேம்படுத்தி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் வெற்றிபெற்று போலீசு வேலையிலும், தனியார், பொதுத்துறை நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்லலாம் என்ற கனவோடு இருக்கின்றனர். இதையே தங்கள் பெற்றேர்களிடம் சொல்லி அவர்களது எதிர்ப்பை சமாளிக்கிறோம் என்கின்றனர்.

“எனக்கு படிக்கவே தெரியாது. இருந்தாலும் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் சேர்த்துக் கொண்டார்கள்” என்று வெடித்துச் சிரிக்கிறார், கபடி வீரர் சிவா.

விழா ஏற்பாட்டாளர்கள், வேதனையுடன் “எங்கள் ஊரில் பிழைக்கவந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், பொதுத் திடலில் போட்டிகள் நடத்தினால்கூட போலீசுக்கு புகார் கொடுக்கிறார்கள். விழாக்கூட்டமும், சத்தமும் தொந்தரவாக இருக்கிறது என்று எங்கள் மீது வழக்கும் தொடுக்கிறார்கள். போலீசாரும் இதையே காரணம் காட்டி விழாவையே முடக்க நினைக்கிறது. அவர்களை சமாளிக்க போலீசாரை விழாக்களுக்கு அழைத்து உபசரித்து அனுப்புகிறோம்” என்கின்றனர். அடுக்கு மாடி குடியிருப்பில் அடைந்து கிடைக்கும் நடுத்தர வர்க்கம் சின்னத்திரையில் பெருஞ்சத்தத்துடன் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்கும். அவர்களின் வாரிசுகளோ வீடியோ கேம்களில் மூழ்கி இருக்கும். அவர்களது உலகில் கபடியும் கபடிப் போட்டியும் இழிவான தொந்தரவான ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

*****

சென்னை போரூர் அருகே இருக்கும் புறநகர் பகுதி கெருகம்பாக்கம். ஒரு மாநகரத்தின் பகுதி போன்று அல்லாமல் கிராம சாயலுடனேயே இருக்கிறது. அடுக்குமாடிக் குடியிருப்புகள் மட்டுமே அதன் அடையாளத்துடன் ஒட்டாமல் தனித்து நிற்கிறது. மண்ணின் மைந்தர்களும், அடுக்குமாடிக் குடியிருப்புவாசிகளும் தண்ணீரில் எண்ணெயாக வாழ்வதாகவும் சொல்லலாம். இரண்டு நாள் தொடர் கபடி போட்டியின் இரண்டாம் நாள்தான் மே 27.

ராஜலிங்கம் (வெள்ளை சட்டை), கெருகை கபடி அணியின் முன்னாள் கேப்டன்.

நான்காவது தலைமுறையினர் இப்போது களத்தில் விளையாடுகின்றனர். இளைஞர்களை விளையாட்டில் ஊக்கப்படுத்துவதுதான் எங்கள் விருப்பம். இரண்டு மாதங்கள் இதற்கான தயாரிப்பு வேலைகளை செய்வோம்.

பணம் சேகரிப்பதும், 100-க்கும் மேற்பட்ட விளையாட்டு குழுக்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி, சம்மதம் பெறுவதும் அவர்களை வரவேற்று உபசரித்து வழியனுப்பி வைப்பது மிகப்பெரும் வேலை.

எந்த அசம்பாவிதமும் இல்லாமல் இதை செய்ய வேண்டும் என்ற கவலை கடைசிவரை எங்களை வாட்டும். வீரர்கள் அந்தந்த அணி சார்பாக வரும் அணி நிர்வாகிகள், ரசிகர்கள், பார்வையாளர்கள், பகுதி மக்கள், அடுக்குமாடி குடியிருப்புவாசிகள், போலீசு என ஒவ்வொருவரையும் சமாளிக்க வேண்டும்.

சதீஷ், கபடி வீரர், கெருகை

நான் 10-வதுதான் படிச்சிருக்கேன். எங்க ஊரு சீனியர்களைப் பாத்து எனக்கு சின்ன வயசிலேயே கபடி மேல ஆசை. பல போட்டிகளுக்கு பத்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்கு போய் வெளையாடியிருக்கேன். பலமுறை உடம்புல காயம், ரணமாயிடும். அதுக்காக வெளையாடுறத நிறுத்தமாட்டோம். அந்த நேரம் வெளையாட முடியலேன்னுதான் வருத்தமாயிருக்கும்.

பாடிக்கின்னு ரெய்டு போவும்போது ஆப்போனன்ட் (எதிர் அணி வீரர்) புடிச்சான். அவனுக்கு மேலே டைவ் அடிச்சி கோட்ட தொட்டேன். அவ்ளோதான் எழுந்திருக்க முடியல. இடது கை மணிக்கட்டு உடைஞ்சி தொங்குது. ஜி.எச்-ல ஒரு மாசம் வைத்தியம், 2 வருஷம் வேலையே செய்ய முடியல. திரும்பவும் வெளையாட வந்துட்டேன்.

ராஜ்கமல், கபடி வீரர்

நானும் பத்தாவதுதான் படிச்சேன். அதுக்கு மேல படிப்பு வரல. விளையாட்டே கதின்னு இருந்துட்டேன். எனக்கு எத்தனையோ தடவ விளையாடும்போது செம அடி. பாடிக்கினே ரெய்டு போவும்போது ஆப்பனட் (எதிரணி வீரர்) நம்ம மேலே பச்சாதபமே பாக்க மாட்டான். அவனுக்கு தேவை பாயிண்ட். நம்ம மேல பாசம் காட்டுற நேரமா அது?

அவன் கண்ணுக்கு நாம பாயிண்ட். கொலைவெறியோட லாக் பண்ணுவான். கண்ணு தெறக்குற நேரத்தில எல்லாம் முடிஞ்சிடும். எழுந்திருக்க முடியாது. சோல்டர் இறங்கும். நாலு பேர் மேல வுழும்போது பாதுகாப்பாவா வுழுவான். கழுத்து நரம்பு ஜிவ்வுனு இழுக்கும். அது கொஞ்ச நாளுக்குதான், திரும்பவும் கபடி ஆட ஓடியாந்துருவோம்.

மூவேந்தன், கபடி வீரர்

“படிப்ப பத்தி கேக்காதீங்க. எல்லாரும் படிச்ச படிப்புதான். 10-வது. அப்ப… கரெக்டா சொல்ட்டனா?

எங்களுக்கு போலீசு ஆவுறதுதான் லட்சியம். மத்த வேலை எல்லாம் எங்களுக்கு கிடைக்காது. சின்ன பையனிலிருந்து இந்த வெளையாட்டுதான். மூக்க தொட்டு பாருங்க கொளகொளன்னு இருக்கும். மூக்கு தண்டு உடைஞ்சே போச்சு. எதிரியை லாக் பண்ணும் போது கட்டுமேனிக்கு உதைப்பான். பாயிண்ட் அவனுக்கா, நமக்கா? இதுதான் அங்க.

ஆளெல்லாம் அப்ப கண்ணுக்கு தெரியாது. முட்டிமேல உதைச்சா, முட்டியே கழண்டிடும். தொடை ஜவ்வு அறுந்துறும். எதுவும் நடக்கும். அடுத்தது எப்படி ஜெயிக்கிறதுன்னுதான் அப்பவும் யோசிப்போம். அடிபத்தி பெருசா அலட்டிக்க மாட்டோம்.”

சுரேஷ், தனுஷ், சுபாஷ் – முறையே 7-வது, 10-வது, 8-வது படிக்கும் மாணவர்கள்.

“நாங்க எல்லாம் சி செட் பிளேயர்ஸ். சீனியர் எங்களுக்கு சொல்லி தருவாங்க. நாங்க பக்கத்தில, மாந்தோப்பு, கொளப்பாக்கம், அனகாபுத்தூர் போய் வெளையாடுவோம். எங்களுக்கு ஆப்பனட் தண்டலம், போரூர், மணிமேடு பசங்கதான். நல்லா வெளையாடுனா காலேஜ்ல சீட் கெடைக்குமுன்னு அண்ணங்க சொன்னாங்க.”

அப்பு, ப்ளஸ் 2 படிக்கும் மாணவர்

“இது வீர வெளையாட்டுன்னா, சாம்பார், தயிர் சோறு துன்றவன்லாம் இத கடைசி பெஞ்சு வெளையாட்டுன்னு சொல்வாங்க. உயிருக்கு பயந்தவனுங்க. நாங்க கயிறு போட்ட பசங்களயெல்லாம் இப்படித்தான் கலாய்ப்போம். அவனுங்க கோச்சுக்கினுவாங்க, ஆனா நாங்க விடமாட்டோம். திரும்பவும் அவனுங்கள ஃபிரண்ட் ஆக்கிப்போம்.”

கபடி போட்டி நடுவர்

“கபடி வெளையாட்டுல பல லெவல் இருக்கு. ஒரு டீம்ல மொத்தம் 12 பேர். 7 பேர் களத்துல, 5 பேர் சப்ஸ்டியூட்.

வீரர்கள் களத்துல இறங்கும்போது மது, போதைப் பொருட்கள் எதையும் பயன்படுத்தக் கூடாது. விதியை மீறும் வீரர்களுக்கு முதலில் பச்சை கார்டு காண்பித்து எச்சரிப்போம். திரும்பவும் தவறு செய்தால், மஞ்சள் கார்டு காட்டுவோம்.

குறிப்பிட்ட வீரர் தகாத முறையில் எதிரணி வீரர்களுக்கு உடல் ஊறு விளைவித்தால் சிவப்பு கார்ட் காட்டி வெளியேற்றுவோம். அந்த நபர் விழாவின் எந்த விளையாட்டிலும் கலந்துகொள்ள முடியாது. உயிருக்கு ஆபத்து ஏற்படும்படி நடந்துகொண்டால் அவரை விளையாட்டிலிருந்து விளக்கும்படி மாவட்டத் தலைமைக்கு சிபாரிசு செய்வோம்.”

சாம்ராஜ், விஸ்காம் மாணவர்

கபடி விளையாட்ட ஐ.பி.எல் கிரிக்கெட் மாதிரி ஊடகமோ, அரசோ கண்டுகொள்ளவில்லையே, ஏன் என்று கேட்டோம்.
சட்டென, “மோடி இருக்குற வரைக்கும் கண்டுக்காத இருக்குறதே நல்லதுன்னு நினைங்க. இல்லன்னா விலைவாசி, பெட்ரோல், செல்லாத ரூபா நோட்டு, ஜி.எஸ்.டி மாதிரி கபடியும் கைக்கெட்டாத விளையாட்டா மாறிடும்.

மணிகண்டன், 7வது படித்து முடித்துவிட்டு கொத்தனார் வேலை.

மணிகண்டன்

தங்கள் படிப்பை சொல்லும்போது ஒவ்வொருவரும் வெட்கப்படுகின்றனர். அதேசமயம், அடுத்தவரின் படிப்பு, மார்க், வேலையைச் சொல்லி கிண்டலடித்து, அப்பாவிக் குழந்தைகளாய் நம்மிடம் ஒட்டிக்கொள்கிறார்கள்.

“நாங்க தோத்துட்டோம் அண்ணே, நாங்க நல்லா விளையாடினோமா?” உண்மையில் இவர்கள் அசாதரணமான கபடி வீரர்கள்.

குறைந்த உணவு, அதிக உற்சாகம். கடும் குடும்பச்சூழல், அவற்றின் நடுவே நட்சத்திரங்களாய் ஜொலிக்கிறார்கள்.

கில்லி படத்தில் விஜய் கபடி விளையாடுவது போல் உங்களால் முடியுமா? என்ற கேள்விக்கு வெடித்து சிரிக்கிறார்கள்.

“அது கில்லி இல்லண்ணா, பல்லி” என்று கிண்டலடிக்கிறார்கள். 7 பேர அவுட்டாக்குவாரா…? இங்க வரச்சொல்லுன்னா அவர…”,என்று சிரிக்கிறார்கள்.

சதீஷ், முருகன், விஜய், சமீர் – பெருங்குடி பகுதி கபடி அணியினர்.

கில்லி படத்தில் நடிகர் விஜய் கபடி ஆடும் காட்சிகளை கலாய்க்கும் நிஜ வீரர்கள்.

-வினவு புகைப்படச் செய்தியாளர்கள்

மக்கள் அதிகாரம் மீதான அவதூறுகள் | பத்திரிகை செய்தி

தேதி; 29.05.2018

பத்திரிக்கைச் செய்தி!

அரசாணை என்பது கபட நாடகம் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடாது!
போராடும் மக்களை பயபீதியில் உறைய வைத்து
போராட்டத்தை கைவிடச் செய்யவே துப்பாக்கிச் சூடு – படுகொலை!

தூத்துக்குடியில் கடந்த 22-05-2018 அன்று கொலைகார ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக போராடி துப்பாக்கிச்சூட்டில் உயிர் நீர்த்த 13 போராளிகளுக்கு மக்கள் அதிகாரம் சார்பில் வீர வணக்கத்தை செலுத்துகிறோம். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினரின் துயரத்தை பகிர்ந்து கொள்கிறோம்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 22 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எல்லாக் கட்சி ஆட்சிகளிடமும் முறையிட்டுள்ளோம். மாவட்ட கலெக்டர்கள், போலீசு அதிகாரிகள், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் நூற்றுக்கணக்கில் மனுக்கொடுத்தாகிவிட்டது. ஒன்றும் நடக்கவில்லை. ஸ்டெர்லைட் ஆலை வெளியேற்றும் நச்சுகளால் இன்று மூச்சுக்காற்றும் நஞ்சாகிவிட்டது, குழந்தைகள் பிறக்கும் போதே ஊனமாக பிறக்கிறார்கள், புற்றுநோயால் சாகிறோம், இன்னும் பல நோய்களால் தாக்கப்பட்டு வருகிறோம்.  கொஞ்சம் கொஞ்சமாக ஏன் சாக வேண்டும்?.

இந்த போராட்டம் மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சாகர்மாலா, சரக்குப்பெட்டக இணையம் எதிர்ப்பு போராட்டங்கள் இனி தமிழகத்தில் நடக்க கூடாது, மீறினால் சுட்டுத்தள்ளி விடுவோம் என்ற பயபீதியை போராடும் மக்களிடம் ஏற்படுத்தி பணியவைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திட்டமிட்ட படுகொலை, போலீசு வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆலையை முடு என அமைதி வழியில் தொடர்ந்து போராடிய தூத்துக்குடி மக்கள் அதே வழியில் நூறாவது நாள் போராட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு முடிவு தெரியாமல் வீடு திரும்ப மாட்டோம் என முடிவு எடுத்தனர்.  22 ஆம் தேதி மாவட்ட நிர்வாகம் மக்களை அமைதி வழியில் போராட அனுமதித்திருந்தால் எதுவும் நடந்திருக்காது. அல்லது தற்போது அரசாணை போட்ட அரசு பத்து நாட்களுக்கு முன்பு செய்திருந்தால் இந்த கொடூரமான அரசு படுகொலை நடந்திருக்காது.

போராட்டத்தை பிளவுபடுத்தி சீர்குலைத்து ஒடுக்க முயன்றது, 144 தடை உத்திரவு போட்டது, அலை அலையாக காட்டாற்று வெள்ளமாக வந்த மக்களை தடுத்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கி மண்டையை உடைத்தது, கலெக்டர் போன்ற வருவாய் துறை அதிகாரிகள் இல்லாமல் ஆயுதங்களோடு போலீசாரே முழுமையாக மக்களை மூர்க்கத்தனமாக எதிர்கொண்டது, இவைகள்தான் மக்கள் ஆத்திரப்படுவதற்கு காரணம்.

பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?.

தீ வைப்பு சம்பவங்கள், வன்முறை போன்றவற்றில் போலீசாரின் திட்டமிட்ட பங்கு எவ்வளவு என்பதை ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதிநாளில் போலீசு நடந்துகொண்டதை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். ஸ்டெர்லைட் ஆலையின் முதலாளி, முதலமைச்சர், டி.ஜி.பி. அளவில் திட்டமிடப்பட்டு முழுமையாக ஒரு கொடூரமான கொலைவெறித் தாக்குதலை போராடிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது. அருகில் இருந்தும், குறிவைத்தும் நேருக்கு நேராக போராடிய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராடும் முன்னணியாளர்களை இயக்க நிர்வாகிகளை குறிபார்த்து சுட்டு கொலை செய்திருக்கிறார்கள். எத்தனை பேர் பலியானார்கள் என்பதை அரசு திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறது.

இந்த போராட்டம் மட்டுமல்ல, மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ, சாகர்மாலா, சரக்குப்பெட்டக இணையம் எதிர்ப்பு போராட்டங்கள் இனி தமிழகத்தில் நடக்க கூடாது, மீறினால் சுட்டுத்தள்ளி விடுவோம் என்ற பயபீதியை போராடும் மக்களிடம் ஏற்படுத்தி பணியவைக்க வேண்டும் என்ற நோக்கில்தான் திட்டமிட்ட படுகொலை, போலீசு வெறியாட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மக்களாட்சி, போலீசு மக்களின் காவலர்கள் என்பதெல்லாம் கடைந்தெடுத்த பித்தலாட்டம் என்பதை தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

தூத்துக்குடி கிராம – நகர பொது மக்கள் அடங்கிய ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்புதான் போராட்டத்தை வழி நடத்தி வந்தது. அதன் வழிகாட்டுதலை அனைத்து பிரிவு மக்களும் ஆதரித்து பங்கேற்று வந்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்புகள் அதை மூடியேத் தீர வேண்டும் என அறிவுப்பூர்வமாக நன்கு அறிந்து கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு ஒற்றுமையாக போராடி வருகின்றனர். அம்மக்களை போராடுவதற்கு வெளியில் இருந்து தூண்டுகிறார்கள் என அனில் அகர்வாலும் சொல்கிறார். போலீசும் சொல்கிறது. இது போராடும் மக்களை முட்டாளாக கருதி கொச்சைப்படுத்துவதாகும். ஐ.ஏ.எஸ். அல்லது அமைச்சர்கள் யாரானாலும் தூத்துக்குடி பெண்கள் கேட்கும் நியாயமான கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? முடியாது.

பல ஆயிரம் கோடி மூலதனத்தில் இயங்கும் பன்னாட்டு காரப்பரேட் முதலாளியை எதிர்த்து ஒரு மாவட்ட மக்கள் மட்டும் எப்படி போராடி வெல்ல முடியும். மக்கள் போராட்டத்தை ஆதரித்து அதில் பங்கேற்பவர்களை விசமிகள், வன்முறையாளர்கள் என்பது முற்றிலும் தவறானது கண்டிக்கத்தக்கது.

நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிப்பவர்கள் யாரும் அந்த மக்களின் போராட்டத்தில் கலந்து கொள்வதில் தவறு இல்லை. போராடி வரும் பல ஆயிரக்கணக்கான மக்களில் பலர் பல்வேறு அமைப்பு, கட்சிகளை சார்ந்தவர்கள் தான். பிரிட்டிஷ் ஆட்சியில்கூட இப்படி போராட்டத்தை வெளியூர்காரன், உள்ளுர்காரன் என பிரித்து பேசவில்லை. ஸ்டெர்லைட் முதலாளி, கலெக்டர், போலீசு எஸ்.பி. இவர்களெல்லாம் உள்ளுரா?. பல ஆயிரம் கோடி மூலதனத்தில் இயங்கும் பன்னாட்டு காரப்பரேட் முதலாளியை எதிர்த்து ஒரு மாவட்ட மக்கள் மட்டும் எப்படி போராடி வெல்ல முடியும். மக்கள் போராட்டத்தை ஆதரித்து அதில் பங்கேற்பவர்களை விசமிகள், வன்முறையாளர்கள் என்பது முற்றிலும் தவறானது கண்டிக்கத்தக்கது.

மக்கள் அதிகாரம் வன்முறை அமைப்பு அல்ல. டாஸ்மாக்கை மூடும் போராட்டம், விவசாயிகள் தற்கொலை, போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம், பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். மத வெறி பாசிசம்,  பணமதிப்பு நீக்கம், ஒக்கிப்புயல், மீனவர்கள் படுகொலை, வெள்ளப்பேரழிவு இப்படி எண்ணற்ற பிரச்சினைகளில் மக்கள் அதிகாரம் பிரச்சாரம், ஆர்ப்பாட்ம், பொதுக்கூட்டம், மாநாடு என நடத்தி தேசநலன், மக்கள் நலன் சார்ந்து கொள்கைப் பூர்வமாக தமிழக மக்களின் மதிப்பை, நம்பிக்கையை பெற்றுள்ளது. போராட்டத்தை வைத்து பிழைப்புவாதம் செய்யாமல் தியாகப்பூர்வமாக போராடுவார்கள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

போராட்ட உணர்வுகள், போராட்ட ஒற்றுமைகளை மழுங்கடிக்கச் செய்ய அவர்களுக்கு சிலகாலம் தேவை. அது முடிந்தவுடன் மீண்டும் கோர்ட் உத்திரவுப்படி ஆலையை இயக்குவார்கள்.

தேர்தல் கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இது ஆட்சியாளர்களுக்கும் போலீசுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடத்திய போராட்டத்தில் திட்டமிட்டு போலீசு நடத்திய துப்பாக்கிச்சூடு வன்முறை வெறியாட்டத்திற்கு காரணம் விஷமிகள், சமூக விரோதிகள், என சித்தரித்து மக்கள் அதிகாரம் அமைப்பை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் நோக்கத்தில் போலீசும் ஆட்சியாளர்களும் செயல்படுகின்றனர். இதற்கு  சில பத்திரிக்கை – ஊடகங்கள் பலியாகி மக்கள் அதிகாரம் அமைப்பின் மீது அவதூறு பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலை, அதன் அடிவருடியான போலீசின் இந்த பொய் பிரச்சாரத்தை மக்கள் நம்பத்தயாராக இல்லை. போலீசு எப்போதும் போராடும் மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, அனைத்துப் பிரிவு மக்களுக்கும் எதிரான வன்முறை கருவிதான்.

தமிழக அரசு தற்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடி சீல் வைத்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூட போடப்பட்டுள்ளது தமிழக அரசின் அரசாணை அல்ல, தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு அதிகாரி மூலம் போடப்பட்ட உத்திரவுதான். இது வெற்றுக்காதிகம், வலுவற்றது. இதற்கு நீதிமன்றத்தில் உடனே தடை வாங்கிவிட முடியும். இதை வெற்றி என கருதி தமிழக மக்கள் ஏமாந்து விடக்கூடாது. போராட்ட உணர்வுகள், போராட்ட ஒற்றுமைகளை மழுங்கடிக்கச் செய்ய அவர்களுக்கு சிலகாலம் தேவை. அது முடிந்தவுடன் மீண்டும் கோர்ட் உத்திரவுப்படி ஆலையை இயக்குவார்கள். எனவே தமிழக அரசு கொள்கை முடிவாக தமிழகத்தில் இனி காப்பர் ஆலையை இயக்க அனுமதிக்க மாட்டோம் என முடிவு செய்து அதை சட்டமாக இயற்ற வேண்டும். அதுமட்டுமல்ல ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்கடி மக்கள் எந்த காலத்திலும் இயக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற போராட்ட உறுதிதான் வேதாந்தா முதலாளி நாங்கள் தமிழகத்தலிருந்து ஸ்டெர்லைட் ஆலையை காலி செய்து எடுத்து கொண்டு போகிறோம் என்று அறிவிக்க வைக்கும். அதுதான் நிரந்தரமான இறுதியான வெற்றி. 

♦ இரத்தத்தை உறைய வைக்கும் படு பயங்கரமான இந்த துப்பாக்கிச் சூடு படுகொலைக்கு காரணமான  முதல்வர், போலீசு அதிகாரிகள் கொலை வழக்கில் தண்டிக்கப்பட வேண்டும்.

♦ சுட்டுக் கொன்றுவிட்டு இழப்பீடு தந்தால் போதும் என கருதுவது துப்பாக்கிச்சூட்டைவிட கொடூரமானது வக்கிரமானது. இந்த துப்பாகிச் சூடு குறித்து உயர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு மூலம் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

♦ கொலைகாரர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கவே ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை பயன்படும். டி.ஜி.பி. தூத்துக்குடி எஸ்.பி., டி.ஐ.ஜி., ஐ.ஜி., மாவட்ட ஆட்சியர் ஆகியோர் உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

 

இவண்
வழக்கறிஞர் சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்.

கலந்து கொண்டோர்:
வழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் காளியப்பன், மாநிலப் பொருளாளர், மக்கள் அதிகாரம்.
தோழர் வெற்றிவேல் செழியன், மண்டல ஒருங்கிணைப்பாளர், மக்கள் அதிகாரம்.

____

தூத்துக்குடி | யார் பயங்கரவாதி ? யார் சமூகவிரோதி | எழிலன் | கரன் கார்க்கி | ராஜூ முருகன் | காரல் மார்க்ஸ்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 13 பேரை படுகொலை செய்த அரசைக் கண்டித்து 26.05.2018 அன்று தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்கள், திரைக்கலைஞர்கள், எழுத்தாளர்கள் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து தங்களது உள்ளக்குமுறலை, கண்டனத்தை பகிர்ந்து கொண்டனர்.

பகுதி – 2

மருத்துவர் எழிலன், எழுத்தாளர் கரன் கார்க்கி, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், காரல் மார்க்ஸ் ஆகியோரின் கண்டனப் பதிவுகள்.

சுற்றுச்சூழல் விதிகளை திரித்து தூத்துக்குடி படுகொலைக்கு வித்திட்ட மோடி அரசு !

தூத்துக்குடி வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்காலை விரிவாக்கத்தை நிறுத்தக் கோரியும் அதை நிரந்தரமாக மூடச்சொல்லியும் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறை நிகழ்த்திய படுகொலைத்தாக்குதலில் 13 பேர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பலர் படுகாயமுற்றனர். தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தின் உருக்காலை விரிவாக்கத்திற்கு தற்காலிகத் தடை விதித்தும் மக்கள் கருத்துக்கேட்பிற்குப் பிறகே விரிவாக்கம் செய்ய வேண்டும் என்றும் அந்நிறுவனத்திற்கு மே 23 ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

ஆனால் வேதாந்தா நிறுவனமோ மக்களின் கருத்தைக் கேட்காமலேயே ஆலையின் உற்பத்தியை இரண்டு மடங்காக்க மத்திய அரசிடமிருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெற்றிருக்கிறோம் என்று சாதிக்கிறது. இத்தனைக்குப் பிறகும் அந்நிறுவனத்தால் எந்த நம்பிக்கையில் இப்படி கூற முடிகிறது?

சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நீதிமன்றத்தின் பல்வேறு ஆவணங்களின் படி 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுதான் வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு பெருநிறுவனங்களுக்கு பாதிக்கப்படும் பகுதியைச் சேர்ந்த மக்களது கருத்தைக் கேட்காமலேயே ஆலை விரிவாக்கம் செய்ய உதவி செய்துள்ளது.

நீதிமன்றம் மற்றும் அரசாங்கத்தின் ஆவணங்களைப் ஆய்வு செய்த போது பல்வேறு நிறுவனங்களின் நெருக்குதலுக்குப் பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்ட இந்த விதிவிலக்கு தெரிய வந்துள்ளது. இந்த விதிவிலக்கு முன்னால் சுற்றுச்சூழல் அமைச்சரால் “விளக்கம்” என்ற பெயரால் வழங்கப்பட்டது. இத்திருத்தம் தான் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்கள் தூத்துக்குடி போன்ற இடங்களில் மக்களது கருத்துக்களை கேட்காமல் பல மாதங்கள் முன்னதாகவே தொழிற்சாலை நிர்மாணத்தைத் தொடங்க வழிவகை செய்தது. திட்டத்தை தொடங்கும் முன் சட்டத்தின் படி மக்களது கருத்தினை கேட்க வேண்டும் என்று முந்தைய காங்கிரசு அரசு 2014 மே மாதம் கூறியிருந்த நிலையில் மோடி அரசின் விளக்கம் என்ற பெயரிலான சட்டத்திரிப்பு வேலை வேதாந்தா உள்ளிட்ட பெருநிறுவனங்களுக்கு நல்வாய்ப்பாய் அமைந்துவிட்டது.

வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமான மோடி அரசின் டிசம்பர் மாத அரசாணை மோசடியானது என்பதை 2016 ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயம் கண்டறிந்தது. தொடர்ந்து சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக அச்சுறுத்தியது. ஆனால் சட்டத்திருத்தத்தை திரும்பபப்பெற்றால் பலத்திட்டங்களை அது பாதிக்கும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

ஆயினும் முடிவில் மோடி அரசின் 2014 டிசம்பர் திருத்தத்தை பசுமைத் தீர்ப்பாயம் இரத்து செய்தது. சுற்றுச்சூழல் அனுமதியில்லாத தொழில்துறை பூங்காக்களில் புதிய திட்டங்களைத் தொடங்க பொதுமக்களின் கருத்துக் கேட்பை கட்டாயமாக்க தேவையான புதிய ஆணையை சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பிக்க வேண்டும் என்று பசுமைத் தீர்ப்பாயம் அறிவுறுத்தியது. ஆனால் அப்போது தூத்துக்குடியில் தன்னுடைய உற்பத்தியை இரட்டிப்பாக்க சுற்றுச்சூழல் அனுமதிக்கான காலநீட்டிப்பை வேதாந்தா நிறுவனம் பெற்றிருந்தது.

பசுமைத்தீர்ப்பாயத்தின் 2016 ம் ஆண்டு தீர்ப்பு மற்றும் வேறு உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு பொதுமக்களின் கருத்துக் கேட்பிற்கு பிறகே தொழிற்சாலையை விரிவாக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சுற்றுச்சூழல் அனுமதிக்கான வழக்கமான விதிமுறைகள் :

பெரும்பாலும் பெரிய தொழில்துறைத் திட்டங்கள் அனைத்திற்கும் மைய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட வேண்டும். தொழில் தொடங்கப்படும் பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை முதலில் ஒரு அறிக்கையாக தயாரித்து மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் பொதுமக்களின் கருத்துக்கேட்பிற்கு விட வேண்டும். பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சக வல்லுனர்களால் கருத்துக்கேட்பும் சுற்றுச்சூழல் மதிப்பீடுகளும் ஆய்வு செய்யப்பட்டு அதனடிப்படையில் அத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். கருத்துக்கேட்பின் போது அத்திட்டத்தை மக்கள் நிராகரிக்க முடியாது. ஆனால் திட்டம் தொடங்கும் முன்பே மக்களது பிரச்சினைகள் அனைத்தும் அந்நிறுவனத்தாலும் மத்திய அரசினாலும் தீர்க்கப்பட வேண்டும்.

2006-ம் ஆண்டின் சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் சில விதிவிலக்குகளை உருவாக்கியது. ஒரு தொழிற்பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி இருந்தால் அங்கே தொடங்கப்படும் சிறிய தொழிலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை மேலும் அதற்கு பொதுமக்கள் கருத்துக் கேட்பும் தேவையில்லை என்பதே அது.

இந்த விதிவிலக்குக் குறித்தக் கேள்விகள் 2014 மே மாதம் முந்தைய காங்கிரசு ஆட்சியில் எழுப்பப்பட்டன. சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் 2006 ம் ஆண்டு உருவாக்கப்படுவதற்கு நீண்ட நாட்கள் முன்பே ஒரு தொழிற்துறை பூங்கா தொடங்கப்பட்டு அதற்கு சுற்றுச்சூழல் அனுமதியும் கிடைக்காமலிருந்தால் என்ன செய்வது? இது போன்ற தொழிற் பூங்காக்களுக்கும் பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லையா என்பதே அக்கேள்விகளில் மையமானது.

காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் 2014 மே 16 ம் தேதி அதற்கு விளக்கம் கொடுத்தது. தொழிற் பூங்காவிற்கு சுற்றுச்சூழல் அனுமதி இருந்தால் மட்டுமே அங்கே தொடங்கப்படும் புதிய தொழில்களுக்கு பொது மக்களது கருத்துக்கேட்பு தேவையில்லை என்று அது கூறியது. 2006 ம் ஆண்டு சுற்றுச்சூழல் விதிமுறைகளின் படி மதிப்பீடு செய்யப்படாத தொழிற்பூங்காவில் தொடங்கப்படும் புதிய தொழில்களுக்கு பொதுமக்களது கருத்துக்களை கண்டிப்பாக கேட்க வேண்டும் என்று அது கூறியது.

ஆனால் “வியாபாரத்தை எளிதாக்குவது” என்ற தாரக மந்திரத்தை முழக்கமாக கொண்டு 2014 மே மாதம் 26 ம் நாள் ஆட்சியைப் பிடித்த மோடி அரசு பின்னர் அதை தலைகீழாக மாற்றியது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து அரசுக்கு கடிதங்கள் வந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இதற்கு பதிலளிக்கும் விதமாக புதிய “விளக்கத்தை” 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ம் தேதி ஒரு குறிப்பாணையாக மைய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டது. சுற்றுச்சூழல் அனுமதி பெறாத தொழிற்துறை பூங்காவில் புதிதாக தொடங்கவிருக்கும் தொழில்களுக்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு தேவையில்லை என்பதே அந்த விளக்கத்தின் பின் இருக்கும் திரிபு வேலை.

இப்படி காங்கிரசு அரசினால் சட்டபூர்வமாக செய்யப்பட்டத் திருத்தத்திற்கு வெறும் குறிப்பாணை மூலமாக புதிய “விளக்கம்” மோடி அரசினால் கொடுக்கப்பட்டது வேதாந்தா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு நற்பயனாய் வந்து சேர்ந்தது. வியாபாரத்தை எளிதாக்குவதற்காக ஓராண்டிலேயே செய்யப்பட்ட மோடியின் குறிப்பிடத்தக்க சீர்திருத்தமாக இந்திய தொழிற்துறை கூட்டமைப்பு பெருமை பொங்க இந்த மாற்றத்தைக் குறிப்பிட்டது.

வேதாந்தா பயனடைந்தது எப்படி:

தூத்துக்குடியிலுள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் தான் வேதாந்தாவின் தாமிர உருக்காலை முதலில் தொடங்கப்பட்டது. 2006-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அனுமதிக்கான விதிமுறைகள் வருவதற்கு முன்னரே அது தொடங்கப்பட்டது. வேதாந்தா நிறுவனம் தன்னுடைய தாமிர உருக்காலையின் உற்பத்தியைப் பெருக்குவதற்கான அனுமதியை 2009 ம் ஆண்டில் முதலில் கோரியது. காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகமும் சுற்றுச்சூழல் அனுமதியை அந்நிறுவனத்திற்குக் கொடுத்தது.

ஆனால் அந்த சுற்றுச்சூழல் அனுமதி ஐந்தாண்டுகளில் காலாவதியாகிப் போனது . மீண்டும் 2013 ம் ஆண்டு அனுமதியை நீட்டிக்க அன்றைய காங்கிரசு அரசிடம் ஓடியது வேதாந்தா நிறுவனம். ஆனால் காங்கிரசு அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கால நீட்டிப்பை இம்முறை 2014 ஆம் ஆண்டு மே மாதம் மறுத்து விட்டது. ஆனால் வேதாந்தா நிறுவனத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை 2018 டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க 2015 ம் ஆண்டு மார்ச் மாதம் அனுமதித்தது புதிதாக பதவியேற்ற மோடி அரசு. தொழில்களை தொடங்க பொதுமக்களின் கருத்துக்கேட்பு தேவையைக் குறித்த வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்த வந்த சூழலில் தான் இது நடந்தேறியது. தொடர்ந்து வேதாந்தா நிறுவனமும் விரிவாக்கத்தைத் தொடங்கியது.

இதனையொட்டி தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெடித்து நூறு நாட்களையும் கடந்தது. தொடர்ந்து நடந்தப் போராட்டத்தை தமிழக அரசு 13 பேரை படுகொலை செய்து நசுக்கியது இரத்தகறை படிந்த வரலாறாகிப் போனது.

– வினவு செய்திப் பிரிவு

மேலும் படிக்க:
Thoothukudi protest: How NDA govt decisions helped Vedanta bypass norms

எங்கே போனார் எடப்பாடி ? கேட்கிறார் தூத்துக்குடி போராளி | வீடியோ

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர்தப்பி, படுகாயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவது என்ற சம்பிரதாயமான நடவடிக்கையைக்கூட மேற்கொள்ள எடப்பாடி அரசு தயாராக இல்லை. மாறாக, 144 தடையுத்தரவு இருப்பதால் தூத்துக்குடி செல்லவில்லை என்று எகத்தாளமாக கோட்டையில் இருந்தபடியே பேட்டியளித்தார் எடப்பாடி.

எல்லாம் முடிந்த பின்னர், எடப்பாடியின் எடுபிடி, அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி நகருக்குள் நுழைந்ததுமே காத்திருந்தது அதிர்ச்சி. சென்ற இடமெல்லாம் கேள்விகளால் துளைத்து துரத்தியடித்தனர் தூத்துக்குடி மக்கள். மருத்துவமனைக்குள் சிகிச்சை பெறுவோரை பார்த்து ஆறுதல் கூறும் நாடகத்தையும் அரங்கேற்றிவிடும் திட்டத்தில் நுழைந்தார், கடம்பூர் ராஜூ.

உடம்பில் குண்டுகள் துளைத்தும், சதை கிழிந்தும், எலும்பு முறிந்தும் படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்று வரும் அந்த நிலையிலும் உறுதி குலையாமல், ”கம்பெனிகிட்ட எவ்வளவு காசு வாங்குனீங்க? அதவிட நா மூனு மடங்கு தாரேன். எப்போது ஆலையை மூடுவீங்க? வாயால சொல்லாதீங்க., எழுதி கொடுங்க” என்று அடுத்தடுத்த கேள்விகளால் அமைச்சரை திணறடித்தார், அந்தப் போராளி.

துப்பாக்கிச் சூடு நடந்து ஏழு நாளாகியும் எங்களை எட்டிக்கூடப் பார்க்காத எடப்பாடி எங்கேப் போனார்…? கேள்வியெழுப்புகிறார்கள்., தூத்துக்குடி மக்கள்.

இந்துத்துவ எதிர்ப்பில் ஒரு வீரகாவிய நையாண்டி

0
டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ (நடுவில்)

டில்லி ஆர்ச் பிஷப் அனில் குட்டோ மே 13 –ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆராதனையில் ஒரு அறிக்கையை வாசித்துள்ளார். அதில் நாட்டில் நிலவும் கொந்தளிப்பான நிலை மறைய கத்தோலிக்கர்கள் அனைவரும் மே மாதம் 13–ஆம் தேதியிலிருந்து அடுத்த ஒரு வருடத்துக்கு ஜெப விண்ணப்பம் மேற்கொள்ள கேட்டு கொண்டுள்ளார். கூடவே ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஒரு வேளையாவது நோன்பு இருக்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அனில் குட்டோவின் அறிக்கை ஒளிவு மறைவின்றி கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளையும், அதற்கு ஒரு மத ரீதியான எதிர்வினையையும் பேசுகிறது. அரசியலமைப்பு சட்டத்தில் உறுதிபடுத்தப்பட்டுள்ள ஜனநாயக கொள்கைகள் ஆட்டம் கண்டுள்ளதாகவும், மதச்சார்பற்ற கொள்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் 2019–இல் புதிய அரசு ஒன்றமைவதற்கு ஜெபவலிமையை கோருகிறது அந்த அறிக்கை. நாடு நலம் பெறவும், நாட்டின் தலைவர்களுக்கு புத்திமதி வேண்டியும் பொதுவாக ஜெபிப்பதை கிறிஸ்தவ பாதிரியார்கள் வழமையாக கொண்டவர்கள்.

ஆனால் டில்லி தலைமை பேராயரின் அறிக்கை சில திட்டவட்டமான விசயங்களை பேசுகிறது. இதற்கு காரணம் இல்லாமலில்லை. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு 2014–ஆம் வருடம் பொறுப்புக்கு வந்த பிறகு சிறுபான்மை மதத்தவர் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. இவை மோடி நேரடியாக தூண்டி நடைபெறுகின்றன என்று நம்ப வேண்டியதில்லை தான். ஆனால் அரசதிகாரத்தில் இருப்பவர்களின் உரைகளிலும், சமிக்கைகளிலும் உள்ள குறிப்புகளை உணர்ந்து ஹிட்லர் யுகத்தின் அட்டூழியங்களை நினைவுபடுத்தும் பாதகங்கள் சங்கபரிவார கும்பலால் அரங்கேற்றப்படுகின்றன. கிறிஸ்தவர்களுக்கெதிரான வன்முறைகள் 2014–ஆம் வருடம் 133 தாக்குதல்கள், 2015–இல் 155, 2016–இல் 348, 2017–இல் 736 வன்முறை சம்பவங்களாக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் கிறிஸ்தவர்களின் சதவீதம் வெறும் 2.3 மட்டுமே. சிறியதும் பெரியதுமான இந்த தாக்குதல்கள் ஒரு தாழ்நிலை போரென்றால் மிகையில்லை.

அடுத்த வருடம் மே 19–ஆம் தேதியுடன் மோடியின் ஐந்தாண்டுகால ஆட்சி நிறைவடைவது தான் மே 13–ஆம் தொடங்கிய ஜெப விண்ணப்பத்துக்கு காரணம் என்றாலும் அந்த நாளை தேர்ந்தெடுத்ததில் ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. மே 13 –ஆம் தேதி தூய ஃபாத்திமா அன்னையின் விழா நாள். ஃபாத்திமா அன்னை, லூர்து அன்னை எல்லாமுமே இயேசுவின் தாய் கன்னிமரியாவை சுட்டுபவை தான். இந்து புரிதலில் அவற்றை மரியாவின் அவதாரங்கள் எனலாம்.

போர்ச்சுகல் நாட்டில் ஃபாத்திமா என்ற இடத்தில் அமைந்ததொரு ஆலயத்தின் சேகரத்தில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூன்று சிறுமிகளுக்கு 1917–ஆம் வருடம் சில ரகசிய வெளிப்பாடுகள் கிடைத்தன. அச்சிறுமிகளின் பெயர்கள் ஜெசிந்தா மார்ட்டோ, பிரான்சிஸ்கோ மற்றும் லூசியா சான்றோஸ். 1917–ஆம் வருடம் மே 13–ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 13–ஆம் வரையான காலகட்டத்தில் மரியாவின் திருவருகையை கண்டுணர்ந்துள்ளனர்.

முதல் செய்தியாக உலகப் போர் சீக்கிரம் முடிவுக்கு வர ஜெபமாலை துணையுடன் அழுத்தமாக பிரார்த்திக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். அடுத்து ஜூன் மாதத்தில் நடந்த இரண்டாம் திருவருகையின் செய்தி சுவாரஸ்யத்துக்குள் பொதியப்பட்ட மற்றொரு சுவாரஸ்யம் எனலாம். கம்யூனிச கொள்கையிலிருந்து ரஷ்யா விடுபட கத்தோலிக்கர்கள் ஜெபிக்க கேட்டுக்கொண்டது இரண்டாம் ரகசியமாக பகிரப்பட்டுள்ளது. மூன்றாம் ரகசியம் ஆகஸ்ட் 13–ஆம் தேதி உரைக்கப்பட்டது. அது மனந்திரும்பாத பலர் அவதியுறப்போவது பற்றிய எச்சரிக்கை. அந்த வருடம் தமது கூற்றின் உண்மை தன்மைக்கு சான்றாக அக்டோபர் 13–ஆம் தேதி வானில் ஒரு அற்புதம் நிகழும் என்ற சிறுமிகளின் அறிவிப்பை தொடர்ந்து எழுபதாயிரம் மக்கள் ஃபாத்திமாவில் கூடினர். பத்திரிகையாளர்கள் எடுத்த புகைப்படத்தில் வெறும் இருட்டு மட்டும் தான் பதிவாகி உள்ளது. அந்த மூன்று சிறுமிகளில் இருவர் முன்னரே இறந்ததும் ஒருவர் பிழைத்திருந்ததும் கூட முன்னரே வெளிப்படுத்தப்பட்டது என்று நம்பப்படுகிறது. தூய ஃபாத்திமா அன்னையின் திருவருகையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களை முடித்த கையோடு தான் அனில் குட்டோவின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சரி விசயத்துக்குள் செல்வோம். இந்தியாவில் கிறித்தவ அணிதிரளுதலுக்கான புறநெருக்கடி ஒன்று வலுவாக தோன்றி இருக்கிறது என்றாலும் ஒரு குறிப்பிட்ட மத அடையாளத்துக்குள் சுருங்குவது அந்த நெருக்கடியின் தீர்வுக்கு பலனளிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ். இது போன்றதொரு எதிர்வினையை தான் எதிர்பார்ப்பது போலுள்ளது. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தங்கள் அளவில் சுருங்கிக் கொண்டால் அறுவடை எளிது என்று நினைக்கிறது.

குஜராத் மாநிலத் தேர்தலின் போது பந்தக் வாலா என்றொரு முஸ்லிம் பேராசிரியரின் பேட்டி ஸ்கிராலில் வெளிவந்தது. அவரிடம் பட்டேல்கள், பிற்பட்டவர்கள் மற்றும் தலித்களை ஒன்றிணைத்த ஹார்த்திக் பட்டேல், அல்பேஷ் தாக்கூர் மற்றும் ஜிக்னேஷ் மெவானி போன்ற சமூக தலைவர்கள் குஜராத்தில் கணிசமாக வாழும் முஸ்லிம்களிடம் ஏன் உருவாகவில்லை என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் ஒரு முஸ்லிம் தலைவர் எங்களிடம் உருவாகி விடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம். ஏனெனில் அதனை பி.ஜே.பி. தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பிருந்ததை உணர்ந்திருந்தோம் என்றார்.

அனில் குட்டோவின் அறிவிப்பு டில்லி மறைமாவட்டத்துக்கானது. அது இந்திய அளவில் எடுக்கப்பட்டது தான். என்றாலும் அதனை இந்திய அரசியலில் வாடிகனின் தலையீடாக காட்டுவதில் பா.ஜ.க.வும், அதன் சார்பு ஊடகங்களும் முனைப்பு காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களை ஏய்க்கும் உத்தி கொண்ட இந்த கதையாடலுக்குள் சிக்கிக் கொள்வது விவேகமாக இருக்காது. அது தேசம் முழுவதும் இப்போது சூல் கொண்டு வரும் நரேந்திர மோடி அரசுக்கெதிரான அதிருப்தி உணர்வை குலைத்து குஜராத், உ.பி. தேர்தல் முடிவுகள் போன்று சமூக முனைவாக்கத்துக்கு இட்டு சென்று விடும் அச்சம் தொக்கி நிற்கிறது. தங்கள் மீதான தாக்குதல்கள் பற்றிய புரிதலோ, எதிர் தாக்குதல் உணர்வோ இருக்கக் கூடாது என்பதல்ல இதன் அர்த்தம். ஆனால் அவை முழுமையின் நோக்கத்துக்கு (மோடியை அப்புறப்படுத்துவது) உதவுகின்ற வகையில் இருக்க வேண்டும். பொருளாதாரம், வெளிவிவகார கொள்கைகளில் ஏற்பட்டுள்ள தோல்வி தலித், இசுலாமியருக்கெதிரான தாக்குதல்கள், கருத்து சுதந்திரப் பறிப்பு, பகுத்தறிவாளர்கள் கொலை என்ற ஒருங்கிணைந்த கோணத்தில் இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொள்வது தான் நல்லது. கன்னிமரியாவின் ஆவியுரு புனைவின் வழியாக இந்துத்துவத்தை வீழ்த்த முற்படுவது வீரகாவிய நையாண்டி வகையினதாக இருக்கிறது.

  • ராஜ்
    (சமூக அரசியல் விமர்சகர்)