Wednesday, June 24, 2026
முகப்பு பதிவு பக்கம் 436

விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய எடப்பாடி அரசிடம் சாக்குப் பைகள் இல்லையாம் !

ஞ்சையில் அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பைகள் இல்லை என்றுகூறி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால் வண்டி வாடகை கொடுத்து விவசாயிகள் எடுத்து வந்த நெல்லை திருப்பி எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் மீண்டும் வண்டிக்கூலி கொடுக்கமுடியாத நிலையில் அங்கேயே திறந்த வெளியில் கொட்டி காத்திருந்தனர் விவசாயிகள்.

குவித்து வைத்துள்ள நெல்லை சாக்கு மூட்டைகளை போர்த்தி விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். இரவு, பகலாக நெல்லை பாதுகாப்பதால் நாள் ஒன்றுக்கு ரூ.300 செலவாகிறது என்கிறார்கள் விவசாயிகள்.

கொள்முதல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டிருக்கும் நெல்லை காண்பிக்கும் விவசாயிகள். (படம் : நன்றி – தினகரன்)

அண்மையில் சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக நெல்மணிகள் துளிர் விட துவங்கியிருக்கிறது. தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் அடிமாட்டு விலைக்கு கேட்பதால் அங்கும் கொண்டு செல்ல முடியாத கையறு நிலையில் நமது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தஞ்சாவூர் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தைச் சேர்ந்த கார்த்தி கூறியதாவது:

“எங்கள் பகுதியில் பல நூறு ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குவித்து வைத்துள்ளோம். கொள்முதல் நிலையம் திறக்கப்படவில்லை. அருகே உள்ள கொள்முதல் நிலையங்களில் சாக்குகள் இல்லை என்கின்றனர். மழை பெய்வதால் நெல்மணிகள் முளைவிடத் தொடங்கியுள்ளன. இதனால் விளைவித்த நெல்லை விற்பனை செய்யமுடியாமல் தவித்து வருகிறோம்” என்றார்.

இது குறித்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க துணை தலைவர் சுகுமாரன் கூறுகையில் :

“நேரடி கொள்முதல் நிலையங்களில் சாக்கு இல்லை என்று கூறி 15 நாட்களாக விவசாயிகள் கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்ய மறுக்கிறார்கள். இதனால் ஒவ்வொரு நிலையத்தின் முன்பும் விவசாயிகள் கொண்டு வந்த நெல் அனைத்தும் மழையில் நனைகின்றன. ஒவ்வொரு நிலையத்திலும் குறைந்தது 20 மூட்டைகள் அளவுக்கு நெல் முளைவிட்டு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே ஈரப்பத விதிமுறையை தளர்த்தி அனைத்து நெல்லையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும்”. என்கிறார் .

இதே போல தஞ்சை அருகே வயலூர் நரசநாயக்கபுரத்தில் விவசாயிகள் அறுவடை செய்த குறுவை நெல்லை வாங்குவதற்கு கடந்த ஒரு மாதமாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. இதனால் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையம் முன்பு விவசாயிகள் கொட்டி வைத்துள்ளனர். கஷ்டப்பட்டு அறுவடை செய்த நெல்லை வாங்குவதற்கு கூட அரசு தயாராக இல்லை.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது :

வயலூர் நரசநாயக்கபுரத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு வயலூர், ராமபுரம், குருவாடி, தோட்டக்காடு, கரம்பை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 350 ஏக்கர் உள்ளது. இங்கு அறுவடை செய்யப்படும் குறுவை, சம்பா நெல் கொள்முதல் செய்யப்படும்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்காததால் அறுவடை செய்த 7,000 நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பும், சாலைகளிலும் குவித்து வைத்துள்ளோம். இந்நிலையில் தஞ்சை பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது. நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீடித்தால் அறுவடை செய்துள்ள நெல்லை எப்படி விற்பனை செய்ய முடியும்.

17 சதவீத ஈரப்பத்துக்குள் இருந்தால் மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்படும். கடந்த 3 நாட்ளாக மழை பெய்வதால் நெல் முளைக்கும் அபாயம் உள்ளது. அறுவடை செய்த நெல்லை தனியாரிடம் விற்பனை செய்யலாம் என்றால் அடிமாட்டு விலைக்கு விற்பனை செய்ய வேண்டியுள்ளது. எனவே காலதாமதமின்றி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தஞ்சை – கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.

இதே போல வாண்டையார் இருப்பு, சின்னப்புலிகுடிகாடு பகுதி நெல் கொள்முதல் நிலையங்களில் வைத்திருந்த நெல்லும் முளைத்துவிட்டதால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.

கோப்புப் படம்

இதே போல தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி ஆரூரான் சர்க்கரை ஆலை, திருவிடைமருதூர் வட்டம் கோட்டூர் ஸ்ரீஅம்பிகா சர்க்கரை ஆலை ஆகியவற்றில் பணியாற்றும் 500-க்கும் கூடுதலான பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 9 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

ஊதியத்தை நிலுவைத் தொகையுடன் வழங்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லாத சூழலில், இரு சர்க்கரை ஆலைகளின் ஊழியர்களும் ஆலை வளாகங்களில் கடந்த 03-ம் தேதி முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இவ்விரு ஆலைகளும் கடந்த 3 ஆண்டுகளாக கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய சுமார் ரூ.100 கோடி நிலுவைத் தொகையை இன்னும் வழங்கவில்லை. இந்த ஆலைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் மொத்தமுள்ள 24 தனியார் சர்க்கரை ஆலைகளும் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1347 கோடி நிலுவை வைத்துள்ளன. “ ஆலை அதிபர்களிடம் 10 முறைக்கு மேல் பேச்சு நடத்திவிட்டோம். ஆனால், சர்க்கரை ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதால் நிலுவைத்தொகை வழங்க முடியாது என்று அவர்கள் கூறி விட்டனர்” என்று அமைச்சர் துரைக்கண்ணு ஆட்சியாளர்களின் கையாலாகாதத்தனத்தை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காவிரியில் தண்ணீருக்கு போராடி கிடைக்கப்பெற்ற கொஞ்ச நஞ்ச தண்ணீரில் கடைமடை கால்வாய்களுக்கு தண்ணீரும் வரவில்லை. இதை மீறி விளைவிக்கும் நெல்லையும் கொள்முதல் செய்யாமல் வீணாக்குகிறது அரசு. தன் கண்முன்னே விளைவித்த நெல்மணிகள் வீணாவதை தடுக்க இயலாமல் என்ன செய்வதென்று விழி பிதுங்கி நிற்கிறார்கள் விவசாயிகள். விளைவித்த கரும்புக்கு உரிய நிலுவையை ஆலைகள் தராமல் இழுத்தடிக்கிறார்கள்.

சாக்கு இல்லை என்பதெல்லாம் ஒரு காரணமா? ஒரு பொறுப்புள்ள அரசு இப்படி சொல்லமுடியுமா? இது போன்ற காரணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அரசு சொல்லுமா? சொன்னால் தான் 24 மணிநேர கார்ப்பரேட் ஊடகங்கள் சும்மா விட்டுவிடுவார்களா? அது நாடு முழுவதும் விவாதிக்கப்படும் பொருளாகியிருக்கும். ஆனால் விவசாயிகளிடன் அரசு துணிந்து சொல்ல காரணம் :

  1. கொள்கை அளவில் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்வதையும் அதை ரேசன் கடைகளில் விநியோகிப்பதையும் எதிர்க்கின்றன அரசுகள். உலக வங்கியின் திட்டப்படி இத்திட்டங்களுக்கு மூடுவிழா நடத்த திட்டமிட்டே அரசுகள் செயல்படுகின்றன.
  2. விவசாயிகள் தாமாகவே வெளியேறி டெல்டாவை ஹைட்ரோ கார்பன் மண்டலமாக்க வேண்டும் என்பது தான் இவர்கள் விருப்பம். எவ்வளவு தடைகளை கொடுத்தாலும் விவசாயிகள் மனம் தளராமல் விவாசாயத்தை தொடருவதை அரசுகள் விரும்பவில்லை. தொடர்ந்து தொல்லைகள் அளித்து வருகிறார்கள். டெல்டாவில் வேதாந்தா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சமீபத்தில் அனுமதி அளித்திருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
  3. நாடு முழுவதும் விவாசயிகளின் நிலை இதுதான் என்றாலும் தமிழகத்தில் பா.ஜ.க-எடப்படி கும்பல் சீரழிந்த நிலையை அடைந்திருக்கிறது. விவசாயிகளை எவ்வளவு கிள்ளுகீரையாக நினைத்தால் சாக்கு இல்லை என்பதை காரணமாக சொல்லும் எடப்படி கும்பல்.
    அடுத்த தேர்தலுக்கு மக்களிடம் செல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச எண்ணம் கூட இக்கும்பலுக்கு கிடையாது. இது தான் தங்கள் கடைசி ஆட்சி என்பதால் முடிந்த அளவு கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. சட்டவிரோத ஆட்சிக்கு முட்டுகொடுத்து வருகிறன நீதிமன்றமும், மத்திய பா.ஜ.க அரசும்.

இது தமிழக நிலை என்றால் டெல்லியில் போராடிய விவசாயிகளை அடித்து மண்டையை உடைத்து அனுப்புகிறது எடப்பாடியின் ஓனரான மோடி அரசு.

பங்கு சந்தையில் சிறு இறக்கம் ஏற்பட்டாலே ஓடி சென்று விளக்கம் சொல்கிறது அரசு. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கிறது அரசு. சமீபத்தில் நிர்வாக திறமை இல்லாமல் வீதிக்குவரவிருந்த ஐ.எல் & எஃ.எஸ் என்கிற நிறுவனத்தை கைதூக்கிவிடுவது என்கிற பெயரில் அதில் தலையிட்டு எல்.ஐ.சி பணத்தை அந்நிறுவனத்திற்குள் புகுத்த முயற்சி செய்துவருகிறது மத்திய அரசு. ஆனால் விவாசாயிகளுக்கோ சாக்கு இல்லை ஊசி இல்லை என உப்புசப்பில்லாத காரணத்தை கூறி அவர்களை துன்புறுத்துகிறது அரசு. போராடினால் மண்டையை உடைக்கிறது அரசு.

நமக்கு வேறு வழியில்லை, வெற்றி கிட்டும் வரை புது புது வழிகளில் போராடுவதை தவிர.

செய்தி ஆதாரங்கள் :

தங்கத்தில் உருளும் இந்திய மகாராஜாக்களின் திருமணங்கள் ! ஆவணப்படம்

ஆவென் லூத்தரா ( நடுவில் கருப்பு சட்டை அணிந்திருப்பவர் )

ந்த ஆவணப் படத்தின் துவக்கத்தில் பணக்காரத் திருமணம் ஒன்று காட்டப்படுகின்றது. ஆவென் லூத்தரா எனும் இளம் இந்தியப் பணக்காரனின் உறவினருடைய திருமணம். தனது இருபதுகளின் துவக்கத்தில் இருக்கும் ஆவென், மாதம் ஒரு மில்லியன் டாலருக்கும் ( ஏழு கோடி ரூபாய்) அதிகமாக சம்பாதிக்கிறார்.

மாதத்தின் பெரும் பகுதியை வெளிநாடுகளில் கழிக்கும் ஆவென், இந்த திருமணத்திற்கு விலை உயர்ந்த பரிசுப் பொருட்களுடன் வந்திருக்கிறார்.

“எந்தக் காரணத்திற்காகவும் இந்தத் திருமணத்தை தவற விட்டிருக்க மாட்டேன். எத்தனை வளர்ந்தாலும் நீங்கள் ஆரம்பித்த இடத்தை மறக்கக் கூடாது என்பார்கள் அல்லவா?” என்கிறார், ஆவென்.

ஆவென் லூத்தரா ( நடுவில் கருப்பு சட்டை அணிந்திருப்பவர் )

ஆவணப் படத்திற்காக மூன்று பணக்காரர்களைத் தெரிவு செய்துள்ளார் அதன் இயக்குனர். ஆவென் பணக்காரக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதிலேயே சொந்தமாக தொழில் துவங்கியவர்.

அடுத்து மகாராஷ்ட்ராவில் தலித் குடும்பம் ஒன்றில் பிறந்து, 12 வயதில் திருமணமாகி, 16 வயதில் கணவரைப் பிரிந்து, ஆயத்த ஆடைத் தொழிற்சாலையில் கூலி வேலை செய்து, பின் ரியல் எஸ்டேட்டில் கால்பதித்து முன்னேறிய கல்பனா சூரஜ்.

மூன்றாவதாக, ரேமண்ட்ஸ் கௌதம் சிங்கானியா. இம்மூவருக்குமான பொது இழை தங்கள் ‘பணக்காரத்தனத்தை’ பறைசாற்றிக் கொள்வது. இதை இம்மூவரும் வெவ்வேறு வகைகளில் வெளிப்படுத்துகின்றனர்.

படிக்க :
கேரளா : வெள்ளத்தால் தள்ளிப் போன திருமணம் !
வரதட்சிணையால் நின்றுபோன திருமணம்! அதிர்ச்சியூட்டும் நேரடி ரிப்போர்ட்!!

ஆவென் லூத்தரா ஒரு இணையத் தொழில்முனைவோர் என தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார். தனது 12வது வயதிலேயே செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியவர் என இயக்குனர் நமக்கு அறிமுகம் செய்கிறார். தற்போது மேட்டு ‘குடிமகன்கள்’ அல்லது மேட்டுக்குடியினரைப் போல் பீற்றிக் கொள்ள விரும்பும் உயர் நடுத்தரவர்க்கத்தினருக்காக ‘பாட்டில்பாப்’ என்கிற செயலி ஒன்றை உருவாக்கியிருக்கிறார்.

ஐந்து நட்சத்திர மதுக்கூடங்களில் எல்லோரும் பார்க்க வாகான இடத்தில் இருக்கும் மேசையை முன்பதிவு செய்ய உதவும் செயலி. இதை சந்தைப்படுத்த இங்கிலாந்து செல்லும் ஆவென், அடுத்த விமானத்தில் பெர்லின் செல்கிறார்.

பெர்லினில் இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமான சீனா, ரசியா, ஜெர்மன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பணக்கார குடும்பங்களின் குலக் கொழுந்துகளோடு மது விருந்து. ”எல்லோரும் கடினமாக உழைத்து கவனமாக கொண்டாட வேண்டும் என்கிறார்கள். நான் அறிவுப்பூர்வமாக உழைத்து கடினமாக கொண்டாட வேண்டும் என்கிறேன். கடின உழைப்பால் எதையும் சாதிக்க முடியாது; அவர்கள் முட்டாள்கள். முட்டாள்களால் பணம் சம்பாதிக்கவும் முடியாது”. மது ஆறாக ஓடும் அந்த விருந்தின் நோக்கம் என்ன? தன்னைப் இன்ஸ்டாகிராமில் பின்தொடரும் 2 லட்சம் பேருக்கு தன்னுடைய பணத்தின் வலிமையைக் காட்டுவதற்கு என்கிறார் ஆவென்.

தங்கமுலாம் பூசப்பட்ட ஜாகுவார் கார், தங்க இழைகளால் நிறுவன இலட்சிணை என ஆவெனைச் சுற்றிலும் செல்வம் ஆபாசமாய்ச் சிரிக்கிறது. மலைப்பாம்பின் தோலால் தயாரிக்கப்பட்ட காலணியைக் காட்டி, இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒன்றுதான் ஆனால் அதையெல்லாம் யார் பார்க்கப் போகிறார்கள் என நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறார். சுவரெழுத்து எழுதியதற்கும் போஸ்டர் ஒட்டியதற்கும் ‘தீவிரவாதிகள்’ என தீர்ப்பெழுதப்பட்டு கைது செய்யப்படும் தோழர்களின் நினைவு வந்தது.

படிக்க:
தீம் திருமணங்கள் : அழகின் வக்கிரம் !

கல்பனா சுராஜ் தனது பூர்வீக கிராமத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். பஞ்சைப் பராரிகள் நிறைந்த கிராமத்தின் தலித்துகள் குடியிறுப்பு. தனது இன்னோவா காரில் இருந்து பகட்டான உடையில் இறங்கி அந்தத் தெருக்களில் நடக்கும் கல்பனா, ஆதிக்க சாதித் தெருவையும் தங்கள் தெருவையும் பிரிக்கும் சாக்கடையைக் காட்டி விளக்குகிறார். பின் தான் பிறந்த வீட்டில் இருந்த விறகடுப்பை நமக்கு அறிமுகம் செய்கிறார். அதன் பின் ஒரு கண் பரிசோதனை முகாம். அந்த நாளின் பயணத் திட்டங்கள் முடிவுற்ற நிலையில் மும்பைக்குத் திரும்புகிறார்.

கல்பனா சுராஜ்

மும்பையில் தான் ரியல் எஸ்டேட் துறையில் வளர்ந்தது குறித்து கேமராவிற்கு விளக்கமாக சொல்கிறார். அவரது ஞாயிற்றுக் கிழமைகளை சமூக கடமைகளுக்காக ஒதுக்கியுள்ளதாக பின்னணிக் குரல் விளக்குகின்றது. அந்த ஞாயிற்றுக் கிழமை தனது பூர்வீக கிராமத்தில் இருந்து தங்களது இரண்டு மகள்களின் திருமணத்திற்கு உதவி கேட்டு வந்த பெற்றோரை கேமராவின் முன் சந்திக்கிறார்.

அவர்களிடம் 50,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகிறார். அந்த தந்தையின் கண்களில் கண்ணீர் வழிகின்றது. துரதிருஷ்டவசமாக அவர் கேமராவுக்கு முதுகைக் காட்டி நிற்கவே, “இதோ பாருங்கள், இவர் அழுகிறார்” என்று அவரது தோளைப் பிடித்து கேமராவை நோக்கித் திருப்புகிறார்.

பணக்காரப் பரம்பரையில் பிறந்தவர் கௌதம் சிங்கானியா. இன்னொரு விஜய் மல்லையா. தனது ஓய்வு நேரங்களை கார் ரேஸ்களிலும், தனது சொகுசுக் கப்பல் பார்ட்டிகளிலும் கழிக்கிறார். கார் பந்தையத்தில் இந்தியா முத்திரை பதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என தனது தேசபக்தியைப் பறைசாற்றிக் கொள்கிறார். திரையில் காட்சிகள் மாறுகின்றன.. இதே போல் மற்றொரு கார் ரேஸ் பிரியரான விஜய் மல்லையா தோன்றுகிறார்.

கௌதம் சிங்கானியா

பணக்கார அல்பைகளின் இருண்ட மற்றொரு பாகமாக வரி ஏய்ப்பில் ஈடுபடும் பணக்காரர்களைக் குறிப்பிடுகிறது ஆவணப்படம். ஆனால் உண்மையில் அது மட்டும் தான் இருண்ட பாகமா? ஆவெனின் நிறுவனத்தைக் கேமரா படம் பிடித்துக் கொண்டிருந்த போது பின்னணியில் வர்ணணையாளர் விவரிக்கிறார் ”மிகக் குறைந்த கூலிக்கு தொழில்நுட்ப வல்லுநர்கள் கிடைக்கும் நாடு இந்தியா…”; அதே போல், எந்நேரமும் பார்ட்டியிலும் பந்தைய மைதானத்திலும் கழிக்கும் சிங்கானியா (கேமராவுக்காக) தனது நேரடி விற்பனையகத்திற்கு ஆய்வு நடத்தச் செல்கிறார்.

அப்போது அங்கே பணிபுரியும் பெண் ஊழியர் “சார் இம்மாத இலக்கான இரண்டரை கோடியை நேற்றே அடைந்து விட்டோம்” என பணிவாக விளக்கிக் கொண்டிருக்கிறார்.

பணக்காரர்களின் உலகம் இந்தக் கூலிக்காரர்களின் வியர்வையின் மீதே நிற்கிறது என்பதற்கு ஆவணப்படம் நெடுக ஆங்காங்கே தெறிப்புகளைப் போல் சில வசனங்கள் உள்ளன. உண்மையும் அது தான். ஏழைகளும் உழைப்பாளர்களையும் சுரண்டுவதாலேயே பணக்காரச் சோம்பேரிகளின் உலகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது.

கல்பனா சூரஜ்ஜின் தயாள குணமும் பணம் சேர்க்கும் வித்தையும் விதந்தோதப்பட தெருக்களைப் பிரிக்கும் அந்த சாக்கடை தேவையாக இருக்கிறது. தனது சொந்த மக்கள் இன்னமும் சாதியச் சாக்கடையில் உழன்று கொண்டிருக்கையில் தனது படாடோபமான வாழ்க்கை எந்த உறுத்தலும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதை அந்த ஐம்பதாயிரம் உறுதி செய்து கொடுக்கிறது.

அதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அந்த ஏழைத் தகப்பனின் தோளைப் பிடித்து திருப்பி நமக்கு அந்த கண்ணீரை அறிமுகம் செய்து வைக்கிறார் கல்பனா.

நன்றி: அல்ஜசீரா
பதிவு: சாக்கியன்

பாசிசம் உலகமயத்தை எதிர்த்து புதிய சர்வதேசிய இயக்கம் போராடும் !

மெரிக்காவில் காங்கிரஸ் எனப்படும் பாராளுமன்றம் மற்றும் செனட் எனப்படும் மேலவைக்கான தேர்தல்கள் களைகட்டியிருக்கின்றன. அமெரிக்காவை பொருத்தவரை சோசலிசம் கம்யூனிசம் ஆகிய சொற்கள் வசவு சொற்களாக கருதப்பட்ட காலம் தற்போது கேள்விக்குள்ளாவதை இத்தேர்தல் பறைச்சாற்றுகிறது.

தங்களை சோசலிஸ்டுகள் என்று அழைத்துக்கொண்டு பலர் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அதோடு ஜனநாயக கட்சியின் உட்கட்சி தேர்தல்களில் சில இடங்களில் சோசலிஸ்டுகள் என தங்களை அழைத்துக்கொள்பவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சோசலிசம் என்பது விவாத பொருளாக மாறியிருக்கிறது.

அமெரிக்க ஜனநாய சோசலிஸ்டுகள் என்கிற அமைப்பு குறுகிய காலத்தில் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களைச் சேர்த்துள்ளது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இவ்வமைப்பு வளர்ந்து வருகிறது. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையின் தலைப்பு “ ‘ஆம் நாம் சோசலிஸ்டுதான்’ ஏன் சோசலிச முத்திரையை வேட்பாளர்கள் விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள்” . தி எக்கனாமிஸ்ட் பத்திரிகை “அமெரிக்காவில் சோசலிசம்” என்று கடந்த மாதம் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது.

கீன்சின் பொருளாதார கொள்கைகளை சோசலிசம் என்பதாக கருதுவது முதல் மார்க்சியத்தை ஏற்றுக்கொண்டு ஆனால் டிராட்ஸ்கியை ஆதரிப்பது என பல வகை கருத்துக்கள் இருந்தாலும் முதலாளித்துவம் தீங்கானது, பன்னாட்டு நிதிமூலதனம் தீங்கானது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். அமெரிக்காவில் தீச்சொல்லாக கருதப்பட்ட சோசலிசத்தையும், மார்க்சையும் மைய நீரோட்டத்திலேயே விவாத பொருளாக்கியிருக்கிறார்கள். அமைப்புச் சித்தாந்தம் இன்றி வால்வீதியில் போராடியவர்கள் இன்று சோசலிசம் குறித்து விவாதிக்கிறார்கள். உலக முதலாளித்துவ கருவறையில் சோசலிசம் குறித்து நடைபெறும் விவாதத்தில் சில பிரச்சினைகள் இருப்பினும் இது நம்மை மகிழ்ச்சி கொள்ள செய்கிறது. அவ்வகையில் கீழ்க்கண்ட கட்டுரை முக்கியமானது என்பதால் மொழிபெயர்ப்பு செய்து வெளியிடுகிறோம்.

அமெரிக்கா மற்றும் மேற்குலகில் முதலாளித்துவத்திற்கு எதிரான தற்போதைய உலகு தழுவிய நிலையையும் ஹிட்லர் உருவான காலத்துக்குமான பொருத்தப்பாட்டையும் அதற்கு தீர்வு என்ன என்பதையும் முன்வைத்து கீரிஸ் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் எழுதி கார்டியனில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு இது. கட்டுரையின் இறுதியில் கூறியுள்ளபடி இவர் முன்வைக்கும் தீர்வு என்பது கீனிசிய வாதம் முன்வைப்பதுதான். அதன்படி முதலாளித்துவ கட்டமைப்பை சிற்சில கண்காணிப்புகளோடும், எச்சரிக்கைகளோடும் தொடர்வதுதான். தற்போது உலகளாவிய புதிய சர்வதேச இடதுசாரி இயக்கத்தை முன்வைக்கும் ஆசிரியர் அதை பொதுவான கூட்டமைப்பாக மட்டுமே கூறுகிறார். ஆகவே இன்றைய பிரச்சினை என்ன என்ற அடிப்படையில் நோய்கூறு ஆய்வு ஓரளவிற்கு சரியாக சென்றாலும் சிகிச்சை என்று வரும் போது அது கொஞ்சம் மந்தமாகவே இருக்கிறது. தேவை அறுவை சிகிச்சையா இல்லை சாதாரண வலி நிவராணியா?

ஆசிரியர் வலி நிவாரணியை கோரினாலும் நோய் இப்போது தீவிரமடைந்துள்ளதை அவரது எழுத்துக்களில் நீங்கள் காணலாம். மதவாத பா.ஜ.க., பொருளாதார வலதுசாரி காங்கிரஸ் என நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நமக்கு மட்டுமானதாக இல்லாமல் பிற நாடுகளும் இதே பிரச்சினைகளைக் கொண்டிருப்பதை இக்கட்டுரை மூலம் அறிய முடிகிறது.

♦♦♦

சர்வதேசிய இடதுசாரிகளின் எதிர்காலம் : பாசிசத்தையும் உலகமயத்தையும் நமது புதிய சர்வதேசிய இயக்கம் எதிர்த்து போரிடும்!

யானிஸ் வருஃபகிஸ்

ம் சகாப்தம், நிதிமூலதன சாக்கடையிலிருந்து தோன்றிப் பரவியுள்ள உலகளாவிய வலதுசாரிகளின் (தேசிய வெறி சர்வதேசிய கூட்டணி ), வெற்றி ஊர்வலத்திற்காக நினைவு கூறப்படும். இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான வெற்றிகரமான போராட்டத்திற்காகவும் இது நினைவு கூறப்படுமா?  என்றாலும் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மெக்சிகோ, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் முற்போக்கு சக்திகள் தங்களுக்குள் ஒத்திசைவான முற்போக்கு அணிசேர்க்கைக்குத் தயராக இருக்கின்றனவா என்பதைப் பொருத்துதான் அது அமையும்.

நம் பணி முன்அனுபவம் இல்லாத ஒன்றல்ல. முதல் உலகப்போருக்கு பின்னர் பாசிஸ்டுகள் வன்முறையையும், போரையும், வதை முகாம்களையும் வாக்குக் கொடுத்து  ஆட்சிக்கு வரவில்லை. மாறாக முதலாளித்துவ நெருக்கடிகளுக்கு பிறகு தங்கள் சந்தை மதிப்பை இழந்து வெறும் விலங்குகளைப் போல நடத்தப்பட்ட மக்களிடம் உரையாடி ஆட்சிக்கு வந்தார்கள். பாசிஸ்டுகள் மக்களின் பிரச்சினைகளைப் பேசினார்கள், இழந்த பெருமைகளை மீட்டுத் தருவதாக வாக்குறுதியளித்தார்கள்.  தங்களைப் பற்றி  வெறும் வாடிக்கையாளர்கள் (consumers) என்பதைத் தாண்டியும்  மக்களைச் சிந்திக்க வைத்தார்கள், மக்களைத் தாங்கள் பெரும் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் என உணர வைத்தார்கள்.

மக்களுக்கு சுயமரியாதையை அளித்த அதே வேளையில், கிடைக்கப் பெற்ற மீள் நம்பிக்கையை அச்சுறுத்தும் ‘அயலாரைப்’ பற்றி எச்சரிக்கையும் செய்தார்கள். சமூக, வர்க்க பண்புகளை புறக்கணித்து வெறும் அடையாளங்களின் அடிப்படையில் நாம் vs எதிர் அயலர் என்கிற அரசியலை கட்டமைத்தார்கள். மக்களுக்கு சமூக அந்தஸ்தை இழக்க நேரிடும் அச்சம் முதலில் அயலார் மீதான மனித உரிமை மீறல்களையும் பின்னர் எல்லா எதிர்ப்புகளின் மீதுமான மனித உரிமை மீறல்களையும் சகித்துக் கொள்ள செய்தது. விரைவில் கட்டமைப்பு (establishment) உருவாக்கிய பொருளாதார நெருக்கடி அதன் அரசியல் மீதான கட்டுப்பாட்டைத் தகர்த்தது. அதே போல முற்போக்காளர்கள் ஒதுக்கப்பட்டார்கள் அல்லது சிறையிலடைக்கப்பட்டார்கள். எல்லாம் முடிந்தது.

இது டொனால்ட் டிரம்ப் எப்படி ஆட்சியைப் பிடித்தார்; பின்னர் எப்படி எதிர்கட்சியான ஜனநாயக கட்சி மீது எப்படி போர் தொடுத்திருக்கிறார் என்பதை நமக்கு நினைவுபடுத்தவில்லையா? இங்கிலாந்தின் கன்சர்வேட்டிவ் பிரெக்சிட் ஆதவாளர்கள் பல பத்தாண்டுகளாக தாங்கள் நிதிக்காக தவிக்கவிட்ட தேசிய மருத்துவ வசதியை எப்படி தற்போது ஆதரிக்கிறார்கள் என்பதையும், முன்னர் தாட்சரிசம் சந்தைச் சக்திகளுக்கு கீழ்படுத்திய ஜனநாயகத்தைத் தற்போது எப்படி ஆதரிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்தவில்லையா? இது ஆஸ்திரியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளின் தீவிரமான வலதுசாரி அரசுகளின் வழி இல்லையா? புதிய இத்தாலி அரசின் எதேச்சதிகார சால்வினி மற்றும் கிரீசின் கோல்டல் டான் நாசிகளின் வழி இல்லையா? (மோடியையும் இது நினைவுபடுத்துகிறது – மொ.ர்)

1930-களுக்கு பிறகு நாம் பார்க்கவே முடிந்திராத சர்வதேச தேசியவாதிகளின் அகிலம் மீண்டும் பிறப்பெடுப்பதை எங்கு நோக்கினும் வெளிப்படையாகப் பார்க்க முடிகிறது. கட்டமைப்பைப் (establishment) பொருத்தவரை பாசிசத்துக்கு முந்தைய ஜெர்மனி செய்த எல்லா தவறுகளையும் பெரும் விருப்பத்துடன் மீண்டும்  செயல்படுத்துகிறார்கள்.

நோய் கூறு ஆய்வு போதும். இப்போது தேவையான கேள்வி “நாம் என்ன செய்ய வேண்டும்?”.

உலகமய கட்டமைப்புகளுடன் செயல்தந்திர கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. நிதிமூலதனம் மற்றும் அதன் சித்தாந்தங்களுடன் டோனி பிளேர், ஹிலாரி கிளிண்டன், ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சிகள் மிக மிக அதிக சமரசங்களை செய்து கொண்டுள்ளார்கள். பல பத்தாண்டுகளாக திறந்த சந்தையின் கவர்ச்சியை – சந்தை மயமாக்கலுக்கு நம்மை ஒப்படைத்தால் அனைவரும் முன்னேறி விடலாம் – ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். முடிவே இல்லாத மின்தூக்கி நம்மை மேல்நோக்கி வாடிக்கையாளர் திருப்தி வரை கொண்டு செல்லும் என்று நம்பச் சொல்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்று உண்மையில் இல்லை.

இந்த மாயையை கடந்த 2008-இல் நிகழ்ந்த நம் தலைமுறையின் 1929 தகர்த்துவிட்டது.  கட்டமைப்போ பெரும்பான்மையினரின் சமூக நலதிட்டங்களை வெட்டுவது, சிறுபான்மை முதலாளிகளுக்கு சலுகைகள், அனைவருக்கும் எதேச்சதிகாரம்;  இவைகளைக் கொண்டு பிரச்சினையைச் சரிசெய்துவிட முடியும் எனச் செயல்படுகிறது. இதே சமயத்தில் மக்களிடம் வளர்ந்து வரும் அதிருப்திகளைக் கொண்டு தேசியவாதிகளின் அகிலம் வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

இதை முறியடிக்க முற்போக்காளர்கள், மக்களின் அமைதியின்மைக்கும், மகிழ்ச்சியின்மைக்குமான காரணத்தை மிக கூர்மையாக  வெளிப்படுத்த வேண்டும்: எண்ணிக்கையில் அதிகரித்துவரும் சமூக பாதுகாப்பில்லாத மக்களின் மீதும், மேற்கத்திய பாட்டாளி வர்க்கத்திடம் மிஞ்சியிருப்பவைகளின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதுமான உலகலாவிய சுயநல குழுக்களின் வர்க்கப் போர்தான் அக்காரணம்.

அடுத்ததாக நமது போராட்டங்களை புதிய சர்வதேசிய அணிசேர்க்கை மற்றும் ஒப்பந்தங்களின் வழியொட்டி அமைத்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் மட்டுமே நமது வாழ்க்கை, நம் சமூகம், நமது நகரங்கள் மற்றும் நாடுகளின் அதிகாரத்தை பெற முடியும். பன்னாட்டு நிதி மூலதனம் நமது சமூகத்தை சிதைக்காமல் தடுப்பதோடு, எந்த ஒரு நாடும் தனித்து இல்லை என்பதையும் நாம் தெரியப்படுத்த வேண்டும். எப்படிப் பருவநிலை மாற்றப் பிரச்சினை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளை கோருகின்றனவோ அதுபோலவே வறுமை ஒழிப்பு, கடன்கள் மற்றும் வங்கிகளுக்கு எதிரானப் போராட்டமும் பரஸ்பர ஒத்துழைப்பைக் கோருகின்றது. வரிவிதிப்புகள் நமது தொழிலாளர்களை பாதுகாக்காது என்பதை தெரியப்படுத்த வேண்டும். கூடவே உள்நாட்டு வேலைகளைப் பாதுகாப்பதோடு, ஏழைநாடுகளின் தொழிலாளர்களுக்கு அரசுகள் குறைந்தட்ச  வருமானத்தை உத்திரவதப்படுத்தும்படியான வர்த்தக உறவுகள் வேண்டி பிரச்சாரம் செய்ய வேண்டும்.

மேலும் நம் முற்போக்கு சர்வதேசிய கூட்டணி ஜான் மன்யார்டு கீன்ஸ்* பரிந்துரைத்தது போன்று ஒரு சர்வதேசிய நாணய தீர்வு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அது மூலதன பாய்ச்சலுக்கு கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்க வேண்டும். சர்வதேச அளவில் ஊதியம், வணிகம் மற்றும் நிதி ஆகியவற்றை மறுசமன் செய்வதன் மூலம் விருப்பமற்ற இடப்பெயர்வு, விருப்பமற்ற வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் குறைக்க முடியும். அதன் மூலம் சுதந்திரமான இடப்பெயர்வு உரிமை என்கிற மனித உரிமை மீதான தார்மீக அச்சம் நீக்கப்படும்.

யார் இவ்வத்தியாவசியத் தேவையான முற்போக்கு அகிலக் கூட்டணியை ஒன்றுபடுத்துவது? அதை ஆரம்பித்து வைக்க தகுதி வாய்ந்தவர்களுக்குக் குறைவில்லை. அமெரிக்காவின் பெர்னி சாண்டர்சின் “அரசியல் புரட்சி”, ஜெர்மி கோர்பைனின் தொழிலாளர் கட்சி, எங்களது ஐரோப்பிய ஜனநாயக இயக்கம், இந்தியாவில் சகிப்பின்மைக்கு எதிராகவும், சமூக நலத்திட்ட நிதிக் குறைப்புகளுக்கு எதிராகவும் போராடிவரும் பல்வேறு இயக்கங்கள் இதை செய்ய முடியும்.

இதை இன்றே ஆரம்பிப்போம். கோபத்தையும் வெறுப்பையும் நம்பிக்கையாக மாற்றும் அந்த நொடியில் நம்மை பலரும் பின் தொடருவார்கள்.

*– ரஷ்ய சோசலிச புரட்சிக்குப் பிறகு தங்கள் நாட்டு பாட்டாளி வர்க்கத்தைக் கண்டு அஞ்சிய மேற்குலக ஆளும் வர்க்கம், தங்களை காத்துக்கொள்ள சமூக நல திட்டங்கள் என்கிற ‘சலுகைகளை’ அளிக்க முன்வந்தார்கள். இந்த பின்னணியில் உதித்த சேம நல அரசு என்கிற கருத்தாக்கத்தின் மூலவர்களில் ஒருவர்தான் கீன்ஸ். சோசலிச முகாம் அழிந்த பிறகு இதற்கான தேவையும் அழிந்து பின்னர் பீரீட்மேனின் பொருளாதார கோட்பாடான தாராளமயக் கொள்கைகள் அமலுக்கு வந்தன. மேற்கத்திய முற்போக்கு சக்திகள், சோசலிஸ்டுகள் என்று அறிவித்து செயல்படுகிற பலர் கீன்சின் சேம நல அரசுகளை முற்போக்கானது என்று கொண்டாடி வருகிறார்கள்.

இக்கட்டுரையிலும் கட்டுரை ஆசிரியர் முதலாளித்துவ அமைப்பு சொல்லும் வளர்ச்சி உண்மையில்லை என்று கூறிவிட்டு அவரும் சேம நல அரசுக்காகவே வாதாடுகிறார்.

கீரிஸ் முன்னாள் நிதியமைச்சர் யானிஸ் வருஃபகிஸ் எழுதி கார்டியனில் வெளியாகியுள்ள கட்டுரையின் மொழிபெயர்ப்பு:
Our new international movement will fight rising fascism and globalists

படிக்க: When will Democrats wake up and resist the socialists’ scheme to take over their party?

சமையற் கலையை விட ஒளிப்பதிவுக் கலை வருமானம் அதிகமா ?

சென்னை கடற்கரையின் காலை நேரம். சுற்றித்திரிந்த ஏழைச் சிறுவர்களை இரண்டு இளைஞர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். முடிந்த கையோடு ஒருவர் தனது சட்டைப் பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து, ஒருவித தயக்கத்துடனே அச்சிறுவனின் கையில் திணித்து மெல்ல நகருகிறார். விஸ்காம் படிக்கும் மாணவர்கள் போலும் என நினைத்து பேச்சு கொடுத்தோம்.

“தம்பி என்ன படிக்கிறீங்க?”

“படிப்பெல்லாம் முடிச்சிட்டோம்னா. இப்போ வேலை செஞ்சிகிட்டிருக்கோம். நாங்க திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவங்க. என்னோட பேரு துரை, இவன் வெங்கட்.

கேட்டரிங் படிச்சா உடனே வேலை கிடைக்கும், நல்லா சம்பாதிச்சு குடும்பத்த காப்பாத்தலாமுன்னு பெரிய கனவோடு சென்னை வந்தோம். SRM-ல படிப்ப முடிச்சிட்டு வேலைக்கும் சேர்ந்துட்டோம். நான் ஃபெதர்ஸ்ல வேலை செய்யிறேன், வெங்கட் டொமினோவுல பிஸ்ஸா மேக்கரா இருக்கான். ஆளுக்கு பத்தாயிரம் சம்பளம் வாங்குறோம்.”

“ பத்தாயிரந்தான் சம்பளமா?”

ஷெஃப்பா (தலைமை சமையற் கலைஞர்) ஆனா நல்ல சம்பளம் வாங்கலாம். இப்ப நான் 3rd – 3-வது லெவல்ல இருக்கேன். இந்த லெவலுக்கு இதுதான் சம்பளம். ஷெஃப்பா ஆகணுமுன்னா பத்து லெவலுக்கு மேல தாண்டணும். அதுக்குள்ள எனக்கும் வயசாகிடும்.

அதனால, எங்களோட ஒரு வருச சம்பளத்துல கொஞ்சம் கொஞ்சமா சேத்து வச்ச பணத்துல இந்த கேமராவ வாங்கியிருக்கோம். வேலைநேரம் போக ஆறு, ஏரி, குளம், பீச்சுன்னு அலைஞ்சி திரிஞ்சி ஃபோட்டோ எடுத்து கத்துகிட்டிருக்கோம். அப்படியே வெட்டிங்க் ஃபோட்டோ கிராபரா ப்ரொஃபெஷன மாத்திரலாமுன்னு இருக்கோம்.”

சென்னை நகரில் காமராவோடு படம் பிடிக்கும் பலரையும் எப்போதும் பார்க்கலாம். சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி மற்றும் காட்சி ஊடக கல்வியின் கவர்ச்சி காரணமாக மாணவர்கள் – இளைஞர்கள் பலரும் காமராக்களோடு அன்றாடம் வலம் வருகிறார்கள். ஐ.டி நிறுவனங்களில் கூட வார இறுதி ஆர்வமாக பலரும் இத்துறையில் கணிசமாக இருக்கிறார்கள். இந்த கேட்டரிங் படித்த இளைஞர்களோ இத்துறையில் பயிற்சி பெற்றால் கணிசமாக ஊதியம் ஈட்டலாம் என நினைக்கிறார்கள். எப்படி சமையற் துறையில் பத்தாண்டு அனுபவம் தேவைப்படுகிறதோ அதே போன்று கேமராவிலும் அதே காலப் பயிற்சி தேவைப்படுகிறது.

இன்னொரு புறம் கல்யாண வீடியோவாகவே இருந்தாலும் கூட அங்கேயும் மூத்த கலைஞர்களுக்கு சொல்லிக் கொள்ளுமளவு வருமானம் இல்லை. பொதுவில் பொருளாதார வறட்சி காரணமாக மக்கள் அதிகம் செலவு செய்வதற்கு தயாராக இல்லை. மற்றொரு புறம் கொஞ்சம் காசு உள்ள நடுத்தர வர்க்கம் பல விசாரணைகளுக்கு பிறகு பிரபலமான புகைப்பட கலைஞர்களை அமர்த்திக் கொள்கிறது. அவர்களுக்கு ஊதியம் அதிகம் என்றாலும் அந்த வாய்ப்பு பலருக்கும் கிடைப்பதில்லை. இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் நம்பிக்கையில் இந்த இளைஞர்கள் முயற்சி செய்கிறார்கள்.

படிக்க:
பச்சமுத்துவின் பயோரியா பல்பொடி பல்கலைக் கழகம் – தோழர் ராஜு
420 மோசடி சாய் இன்ஸ்டிட்யூட்டை இழுத்து மூடு !

அந்த இளைஞர்களுக்கு வாழ்த்துகளும் சொல்ல முடியாமல், மறுப்பும் சொல்ல முடியாமல் திகைத்து நின்ற நேரத்தில், முன்னொரு நாள் நண்பர் ஒருவர் சொன்னது ஞாபகத்தில் வந்துபோனது; “வீடியோ எடிட்டிங் தெரிஞ்சாதான் கல்யாணத்துக்கே ஃபோட்டோ எடுக்ககூப்பிடுறாய்ங்க”.

ஆக இந்த இளைஞர்கள் இனி எடிட்டிங்கும் கற்றுக் கொள்ள வேண்டும்! அவர்கள் படம் எடுக்கும் ஏழை சிறுவர்கள் இவர்களுக்கு எப்போதும் இலவசமாக கிடைக்க்கும் ‘மாடல்களாக’ பயன்படுகிறார்கள். இவர்களைப் போன்ற ஏழை மாணவர்களோ நவீன காமராக்களை வாங்கும் நுகர்பொருள் சந்தையாக பயன்படுகிறார்கள்.

இதில் யார் யாரை படம் பிடித்து முன்னேறப் போகிறார்கள்?

சபரிமலை பெண்கள் நுழைவை ஆதரித்து சென்னை ம.க.இ.க. சுவரொட்டி பிரச்சாரம் !

ல்லா வயது பெண்களும் சபரிமலை செல்லலாம் தடையில்லை என உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை கேரள அரசு ஏற்றுக்கொண்டது; தேவசம் போர்டும் ஏற்றுக்கொண்டது; ஜனநாயக சக்திகளும் பல்வேறு கட்சிகளும் இதை ஏற்றுக் கொண்டுள்ளது. அதே நேரம் தற்போது கேரளாவில் இதை ஏற்ககூடாது என்று ஒரு கருத்தை உருவாக்கி வருகின்றனர். அதில் பந்தளம் அரச குடும்பத்தினர், தந்திரி குடும்பத்தினர் மற்றும் இந்துத்துவா இயக்கங்கள் தீவிரமாக இருக்கின்றனர்.

தமிழகத்திலும் இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, பி.ஜே.பி. கட்சியினர்கள் இந்தத் தீர்ப்பு தவறு என கூறுகின்றனர். ‘பெண்கள் தீட்டு’ என்ற கருத்தும் கோவிலுக்கு வந்தால் புனிதம் கெட்டுவிடும் என்பதும் தீண்டாமைவாதிகளான இந்துமதவெறியர்கள் பக்தர்கள் என்ற போர்வையில் ஒளிந்துகொண்டு பக்தியை வன்முறைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்கள். இந்த சதியை கண்டித்து ம.க.இ.க வினர் சென்னை முழுவதும் சுவரொட்டி பிரச்சாரம் மேற்கொண்டனர்.

படிக்க:
சபரிமலை பெண்கள் நுழைவு : போராட்டம் இன்னும் முடியவில்லை !
உச்சநீதி மன்றம் தீர்ப்பு : சபரிமலை அய்யப்பனின் ஆணாதிக்கம் தகர்ப்பு !

தகவல்: ம.க.இ.க., சென்னை.

ராயல் என்ஃபீல்டு : கிளர்ந்தெழும் தொழிலாளர் போராட்டம் | செய்தி – படங்கள் !

கைது ! வேலை பறிப்பு ! அச்சுறுத்தும் நிர்வாகம் – அரசு !
அடிபணியாத ராயல் என்பீல்டு தொழிலாளர்கள் போராட்டம் !!

  • தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் நீம் (NEEM), எஃப்.டி.இ (FTE) திட்டத்தின் கீழ் 150 தொழிலாளர்களை இணைக்கும் நிர்வாகத்தின் திட்டத்தை ரத்துசெய் !
  • சட்டப்படியான ஊதிய உயர்வை அமல்படுத்து !
  • சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத்துக்கு அங்கீகாரம் வழங்கு !
  • 480 நாட்களுக்கு மேல் வேலை செய்த தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய் !
  • கடந்த 2 ஆண்டுகளாக வழங்கப்படாத சட்டப்படியான போனஸை வழங்கு !

என மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13/09/2018 அன்று ராயல் என்பீல்டு நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் நோட்டீஸ் கொடுத்தனர். இதன்படி எந்தப் பேச்சுவார்த்தைக்கும் வராத நிர்வாகத்தைக் கண்டித்து 24/09/2018 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செப்டம்பர் 24, 26, 27 ஆகிய மூன்று தேதிகளிலும் எச்.ஆர் அதிகாரியான ராஜரத்தினம் நிர்வாகத்திடம் பேசுவதாக தொழிலாளர்களிடம் கூறினார். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது எந்தவித பழிவாங்கலும் கூடாது என்ற நிபந்தனையுடன் அதனை ஏற்று 30-ம் தேதி வேலைக்குச் சென்றுள்ளனர்.

படிக்க:
ஆம்பூர் ஷூ தொழிற்சாலை பெண் தொழிலாளர் போராட்டம்
மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்லட்டும்!

அவ்வாறு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களிடம் செல்போனை உள்ளே அனுமதிக்க முடியாது என மிரட்டியுள்ளது நிர்வாகம். மேலும் முறையாக வேலை நிறுத்த நோட்டிஸ் கொடுத்துத் தொடங்கிய போராட்டத்தை “சட்டவிரோத வேலை நிறுத்தம்” (Illegal Strike) எனக் கூறி தொழிலாளிகளின் 8 நாள் சம்பளத்தைப் பிடித்துள்ளது. 8 பேருக்கு சார்ஜ் சீட் கொடுத்துள்ளது. பெரியசாமி என்ற தொழிலாளியை டிஸ்மிஸ் செய்துள்ளது.

குழுமி நிற்கும் தொழிலாளர்கள்

இதனை எதிர்த்து மீண்டும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தைக் கலைக்க ஏற்கனவே பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதோடு பல்வேறு சதிகளையும் செய்யத் தொடங்கியது நிர்வாகம். உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியபோது பெண்களுக்கான கழிவறைகளை மூடுமாறு உத்தரவிட்டுள்ளார் ஒரு பெண் எச்.ஆர் அதிகாரி.

போராடும் இளம் தொழிலாளிகளின் வீடுகளுக்கு “உங்கள் மகன்/ மகள் நிர்வாகத்தை எதிர்த்துப் போராடுகிறார். அவர் எதிர்காலம் பறிபோய்விடும்” என கடிதங்கள் அனுப்பியுள்ளது. போராடும் தொழிலாளிகளுக்கு போன் செய்து வேலை பறிபோகும், எதிர்காலம் பாழாகும் என்று அச்சுறுத்தியதோடு மட்டுமின்றி ஊதிய உயர்வு தருவதாகவும் பணி நிரந்தரம் செய்வதாகவும் ஆசை வார்த்தைகளைக் காட்டி நயவஞ்சகமாகவும் தொழிலாளர் ஒற்றுமையை சிதைக்க முயன்றுள்ளது.

போலீசும் இதற்கேற்ப 26/09/2018 தேதிக்கு மேல் உள்ளிருப்புப் போராட்டம் கூடாது எனக் கூறியதோடு வெளியே வந்து போராடும்போது சாமியானா போட அனுமதி மறுத்துள்ளது. போக்குவரத்துக்கு சற்றும் இடையூறின்றிப் போராடியவர்களிடம் போலீசு கூறிய காரணம் “தேசிய நெடுஞ்சாலையில் ’சாமியானா’ போட அனுமதி கிடையாது” என்பதுதான்

குடும்பத்தினர் அச்சப்பட்டபோது பின் வாங்காமல் – நிர்வாகத்தின் அச்சுறுத்தலுக்கும் நயவஞ்சகத்துக்கும் பலியாகாமல் – கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது தொழிலாளர்கள் போராட்டம். சற்றும் அச்சமின்றிப் போராடும் பெண் தொழிலாளர்களது முழக்கங்கள் நிர்வாகத்தை அச்சுறுத்துகிறது. தான் மேற்கொண்ட எந்தவழியிலும் போராட்டத்தினைச் சிதைக்க முடியாமல் நிர்வாகம் தோற்றுள்ளது.

கடந்த 04/10/2018 அன்று ஏற்பட்ட பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தொழிலாளர்கள் மீதான எந்தவிதப் பழிவாங்கலும் கூடாது, போராட்டத்துக்கு முன்பிருந்த பணிச்சூழல் இருக்க வேண்டும் என்னும் நிபந்தனையின் அடிப்படையில் 05/10/2018 அன்று பணிக்குச் சென்றுள்ளனர். மீண்டும் செல்போன்களை அனுமதிக்க மறுத்ததோடு அவர்களிடம் “போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மன்னிப்புக் கோருகிறேன். இனி போராட்டங்களில் ஈடுபடமாட்டேன். நிர்வாகத்தின் அனைத்து விதிகளுக்கும் கட்டுப்பட்டு நடப்பேன்.” என அடிமைச் சாசனம் எழுதிவைத்து அதில் கையெழுத்தும் கேட்டுள்ளது.

படிக்க:
ஆலை நடத்துறாங்களா ? ஸ்கூல் நடத்துறாங்களா ? யமஹா தொழிலாளர் போராட்டம்
♦ சென்னை : தடைகளைத் தகர்த்த தென்கொரிய தூசான் தொழிலாளர் போராட்டம்

தொழிலாளர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200- க்கும் மேற்பட்ட போலீசு ஆலைக்குள் வந்து “எஃப்.ஐ.ஆர் போட்ருவோம் – வாழ்க்கை வீணாகிடும் – ஒழுங்கா வேலைக்குப் போங்க” என மிரட்டியுள்ளது. இதற்கு அடிபணியாமல் தொழிலாளர்கள் போராடவே சுமார் 300 தொழிலாளிகளைக் கைது செய்து வல்லக்கோட்டை திருமண மண்டபத்தில் அடைத்துள்ளது. இதை அறிந்த ஏனைய 2வது ஷிஃப்ட் தொழிலாளர்கள் அனைவரும் ஆலையின் வாசலில் திரண்டனர்.

மேலும் அசோக் லேலண்ட் உள்ளிட்ட 17 தொழிற்சாலைகளிலிருந்தும் தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவாக வந்து அணிதிரண்டுள்ளனர். போராடினால் வேலைபோகும், எதிர்காலம் பாழாகும் என்ற கருத்தைக் காட்டி இனியும் உழைக்கும் மக்களை ஏமாற்ற முடியாமல், பிளக்க முடியாமல் ஆளும் வர்க்கமும் அரசும் தோற்று நிற்கிறது. விவசாயிகள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் எனப் போராடுபவர்களின் பட்டியலில் தனது நீண்ட உறக்கத்தை உதறி எறிந்து தலைமை தாங்க வருகிறது தொழிலாளி வர்க்கம்.

இச்சூழலில் தோழர் பகத்சிங்கின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

“சற்றும் சோர்வடையாத நமது மனவுறுதி

ஒவ்வொரு நொடியும் எதிரிகளை பலவீனப்படுத்துகிறது.”

இணைய வணிகம் – மெய்நிகர் போதை | வில்லவன்

2

மெய்நிகர் உலகம் ஏற்படுத்தியிருக்கும் பெரும் மாற்றங்களில் சமூக ஊடகங்களுக்கு

வில்லவன்
அடுத்து முக்கியமானது இணைய வணிகம். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் எண்ணிக்கையில் திறக்கப்பட்ட பேரங்காடிகள் பல இப்போது கலையிழந்து நிற்கின்றன. அப்படியான புதிய பேரங்காடிகள் இப்போது அதே வேகத்தில் திறக்கப்படுவதில்லை. ஆன்லைன் மருந்துக்கடைகள் தங்கள் வாழ்வாதாரத்தை பறிப்பதாக மருந்துக்கடை உரிமையாளர்கள் புலம்புகிறார்கள். பிரதான வீதிகளில் மட்டுமல்ல உள்ளடங்கிய தெருக்களிலும் இடுப்புயர பைகளை சுமந்தபடி கொரியர் ஊழியர்கள் பயணிப்பதை அடிக்கடி காண முடிகிறது.

நான் தங்கியிருக்கும் விடுதியில் உள்ள இளைஞர்கள் திடீரென ஒரு மாலையில் பரபரப்பானார்கள். “”ஏய் ஃபலூடா 9 ரூபாய், சீக்கிரம் ஆர்டர் பண்ணு” என தகவல் பரிமாறிக்கொள்ளப்பட்டது. அப்போது உத்தேசமாக 10 பேரேனும் அலைபேசியை எடுக்க ஓடியிருப்பார்கள். பெங்களூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அமேசான் டெலிவரி ஊழியர் அரைமணி நேரம் நின்று வரிசையாக பொருட்களை டெலிவரி கொடுத்தவண்ணமிருக்கிறார் (மருத்துவமனை ஊழியர்கள் அந்த முகவரியில் வாங்கிக்கொள்கிறார்கள்). அவர் பையில் இருப்பதில் பாதி அங்கேயே காலியாகிறது. அமேசான்-இந்தியாவின் பாதி வருவாய் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்து வருவதாக தரவுகள் சொல்கின்றன. கண்களால் நேரடியாக பார்த்தோ அல்லது அணிந்து பார்த்தோ வாங்க வேண்டிய ஆடைகளும் மூக்குக்கண்ணாடியும்கூட இணையத்தின் வழியே பெருமளவு விற்பனையாகின்றன. அழுகும் பொருட்களான காய்கறி, இறைச்சி வகைகளை விற்க பிக் பேஸ்கெட் நிறுவனம் இயங்குகிறது. சீன இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே கியர்பெஸ்ட் எனும் தளம் இருக்கிறது.

ஆன்லைன் சந்தையின் வசீகரிக்கும் அம்சம் அதன் விலை. வெளி சந்தையில் 2500 ஆகும் கண்ணாடிகளை ஆன்லைன் கடைகளில் 1000 ரூபாய்க்கு வாங்கிவிட முடியும். மொபைல் போன்களின் விலையை கணிசமாக குறைத்தவை ஆன்லைன் வழியே போன் விற்பனை செய்யும் நிறுவனங்கள்தான். ஜியோமி நிறுவனம் ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்ற சம்பவம்கூட நடந்திருக்கிறது. பெருநகரங்களில் பயணத்தை/ பயணச் செலவை தவிர்ப்பதற்கும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வழி நுகர்வு என்பது வெறுமனே பொருள் தேவையை பூர்த்தி செய்யும் செயலாக இருப்பதில்லை.

சமீபத்தில் பேடிஎம் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு செருப்பு, ஸ்பூன் போன்ற பொருட்களை விற்பனை செய்தது (ஷிப்பிங் செலவு உட்பட). அதற்கு சில நாட்களுக்கு முன்னால் ஃபிலிப்கார்ட் நிறுவனம் தமது வாடிக்கையாளர்களுக்கு கோல்டு மெம்பர்ஷிப்பை இலவசமாக கொடுத்தது (இதில் பொருள் அனுப்பும் செலவு இலவசம் மற்றும் சில சலுகைகள் கிடைக்கும். இதையொத்த சலுகையை நீங்கள் அமேசானில் பெற ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்). சில வட இந்திய நகரங்களில் இப்போது மளிகைப் பொருட்களை பாதி விலைக்கு விற்கிறது அமேசான் (பேண்ட்ரி எனும் பெயரில் மளிகைப் பொருட்களை விற்கிறது அமேசான், இது பெருநகரங்களில் மட்டும்). எல்லா நிறுவனங்களும் இப்படியான திடீர் சலுகைகளை கொடுக்கின்றன. ஏன்?

படிக்க:
அமேசான் வழங்கும் கறுப்பு வெள்ளி !
வால்மார்ட் மேட் இன் பங்களாதேஷ் – ஆவணப்படம்

சில வகையான மொபைல் போன்கள் எப்போதும் கிடைக்காது. அவை ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விற்பனைக்கு வரும் (ஃபிளாஷ் சேல்). அப்போதும் சில நிமிடங்களில் அவை விற்றுத் தீர்ந்துவிடும். ஜியாமி போன்கள் பெரும்பாலும் இப்படித்தான் விற்பனையாகின்றன. அந்த நிறுவனங்களால் இந்த ஃபோன்களை பெருமளவில் உற்பத்தி செய்து குவித்துவிட முடியும். எவ்வளவு விற்பனை ஆகும் என்பதையும் கணிப்பதும் சுலபம். இருப்பினும் ஏன் ஓரிரு நிமிடங்களில் விற்பனை முடிந்துபோகுமாறு திட்டமிடுகிறார்கள்?

இது வியாபாரம் மட்டும் இல்லை. அந்த நிறுவனங்கள் மக்களை தயார்ப்படுத்துகின்றன. பொருள் வாங்குவது என்பதாக இல்லாமல் அந்த செயலியில் மக்கள் எப்போதும் மேய்ந்துகொண்டிருக்கவேண்டும் என்பதற்காகவே இந்தத் திடீர் சலுகைகள் தரப்படுகின்றன. திடீரென ஒரு சலுகை வரக்கூடும் எனும் எச்சரிக்கை உங்கள் மனதில் இருந்தால் நீங்கள் தொடர்ந்து அந்தத் தளங்களை பார்வையிட்டுக்கொண்டே இருப்பீர்கள். ஃபிளாஷ் சேல் என்பது அந்த பொருள் மீதான எதிர்பார்ப்பை உங்களிடம் உருவாக்குகிறது. அதில் பொருளை வாங்கிவிட்டால் லட்சம் பேரோடு போட்டியிட்டு வென்ற பரவசம் கிடைக்கிறது. அதில் பொருள் கிடைக்காவிட்டாலோ நீங்கள் தோற்றவராகிறீர்கள். ஆகவே அடுத்த முறை வென்றாக வேண்டும் எனும் முனைப்பை அந்தப் பொருள் உருவாக்குகிறது. மிகைப்படுத்தவில்லை, பல சமயங்களில் ஃபிளாஷ் சேல்களில் கிடைக்கும் பொருள் உங்களை மகிழ்ச்சிப்படுத்துவதில்லை. அந்தப் போட்டியில் கிடைக்கும் பரவசம் உங்களை தற்காலிகமாக மகிழ்வூட்டுகிறது. அதனால்தான் அந்த பரவசத்தை நுகர அடுத்த மாடல் ஃபோனின் ஃபிளாஷ் சேல் நடக்கையில் போனை மாற்றும் முடிவுக்கு பலர் செல்கிறார்கள். கிட்டத்தட்ட குடிகாரனுக்கு ஒப்பான நிலை இது.

ஆசிரியராக இருக்கும் என் நண்பர் ஒருவர் ரெட்மி 5 ப்ரோ ஃபோன் ஒன்றை விளையாடுத்தனமாக ஆர்டர் செய்ய முற்பட்டார் (இது முதல் முறை). பிறகு வரிசையாக நான்கு ஃபிளாஷ் விற்பனைகளில் அவரது முயற்சிகள் தோல்வியடைந்தன. இறுதியில் அந்த போனை வாங்குவது என்பது ஒரு கவுரவப் பிரச்சினையானது. கடைசி முறை நண்பரிடம் ஏர்டெல் சிம்மை கடன் வாங்கி (அதுதான் அங்கே ஒழுங்காக சிக்னல் கிடைக்குமாம்), கிரெடிட் கார்டு தகவல்களை முன்கூட்டியே செயலியில் உள்ளிட்டு காத்திருந்து அந்த போனை வாங்கியிருக்கிறார்.

படிக்க:
நுகர்வு – கழிவு – பண்பாடு : புதிய கலாச்சாரம் நவம்பர் 2016
நூலறிமுகம் : பன்றித் தீனி – பிக் பாஸ் – கொலைகார கோக் – செயற்கை நுண்ணறிவு

அவர் போனை அதிகம் பாவிப்பவர் அல்ல. அவரது வாட்சப் பயன்பாடுகூட மிகவும் குறைவானதே. ஆனால் அந்த போனை வாங்கியதன் மூலம் அவர் மனம் ”ஆன்லைனில் பொருள் வாங்குவது பரவசமூட்டக்கூடியது. அதில் நீ ஒரு வீரனைப்போல உணரலாம்” என விளங்கிக்கொண்டிருக்கும். ஆகவே அடுத்த முறை அவருக்கு மனச்சோர்வு உண்டாகும்போதெல்லாம் அவர் ஆன்லைன் வணிக செயலிகளை மேய்வார். காரணம் அது தரும் பரவசம் மனச்சோர்வை விலக்கும் எனும் நம்பிக்கை அவருக்குள் செலுத்தப்பட்டுவிட்டது. சூதாட்டக்காரர்களை செலுத்துவது இத்தகைய அடிமைத்தனம்தான்.

இப்படியான ஒரு வாய்ப்பு இருப்பதால்தான் நிறுவனங்கள் பெரும் மூலதனத்தை ஆன்லைன் வணிகத்தில் கொட்டுகின்றன. அமேசான்தான் இந்தியாவின் பெரிய ஆன்லைன் வணிக நிறுவனம்; அதன் முதலாளிதான் இன்று உலகின் பெரும் பணக்காரர். இந்த ஒரு நிறுவனம்தான் அமெரிக்காவின் 40% நுகர்பொருட்களை விற்கிறது. அமெரிக்காவில் இதுவரை சந்தையை கட்டுப்படுத்தி வந்த வால்மார்ட் தமது விற்பனை உத்திகளை மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இப்போது இருக்கிறது (வால்மார்ட் நடத்தியது ஒரு ரவுடி ராஜாங்கம், அவர்கள் கேட்ட விலைக்கு கொடுக்காவிட்டால் அந்த பொருளை சந்தையில் இருந்து ஒழிக்க வால்மார்ட்டால் முடியும். காரணம் சில்லறைவணிகம் பெருமளவு அவர்கள் வசம் இருந்தது).

அமேசான் இந்தியாவின் பெரிய போட்டியாளர் ஃபிலிப்கார்ட்டை இப்போது கையகப்படுத்தியிருப்பது வால்மார்ட் (ஃபிலிப்கார்ட் நிறுவனமானது ஈபே, மிந்த்ரா உள்ளிட்ட மேலும் சில இணையதள கடைகளை ஏற்கனவே கையகப்படுத்தியிருக்கிறது). இது அனேகமாக அமேசானுக்கு நெருக்கடி கொடுக்க வால்மார்ட் செய்த நடவடிக்கையாக இருக்கலாம். ஆன்லைன் வணிகத்தின் பெரும் சந்தையான இந்தியாவில் நுழையும் முயற்சியாக இருக்கலாம். அல்லது சந்தையில் நீடித்திருக்க ஆன்லைன் வணிகம் தவிர்க்க முடியாதது எனும் அனுமானமாக இருக்கலாம்.

இ காமர்ஸ் உலகின் இன்னொரு ராட்சசன் அலிபாபா இந்தியாவின் பேடிஎம் நிறுவனத்தில் பெரிய அளவில் முதலீடு செய்திருக்கிறது. இப்போது வாரன் பஃபட் நிறுவனம் அதில் கூடுதலாக முதலீடு செய்திருக்கிறது. ஆக இந்தியாவின் மிகப்பெரிய மூன்று ஆன்லைன் நிறுவனங்கள் வெளிநாட்டு கம்பெனிகள்தான். டாடா நிறுவனம் டாடா கிளிக் எனும் ஆன்லைன் நிறுவனத்தை நடத்துகிறது. ஸ்னாப்டீல் போன்ற பல கடைகளும் சந்தையில் போராடிக்கொண்டிருக்கின்றன. அவை இந்த மூன்று பகாசுரக் கம்பெனிகளிடம் தோற்கலாம் அல்லது கடையை அவர்களிடமே விற்றுவிட்டு கிளம்பலாம்.

எல்லோரும் இருக்கும்போது இந்தியாவின் ஓனர் அம்பானி மட்டும் சும்மாயிருப்பாரா? அவர் பங்கிற்கு ஏ ஜியோ எனும் செயலி வழி இணைய ஃபேஷன் கடையை நடத்துகிறார். ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் எனும் பெயரில் 400க்கும் மேலான ஆயத்த ஆடைக் கடைகளை முகேஷ் அம்பானி நிறுவனம் நடத்துகிறது. அதே பெயரில் இணைய வழி வியாபாரமும் நடக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய வேலைவாய்ப்பு பிரிவு ஜவுளித்துறைதான். அதனை சந்தியில் நிறுத்தும் வேலையை அம்பானி செய்யும் வாய்ப்பு தெளிவாகத் தெரிகிறது. காரணம் ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் ஆடைகள் பெரும்பாலும் மேட் இன் பங்களாதேஷ். ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி சந்தையை வங்காள தேசம் பெருமளவு கைப்பற்றிவிட்டது. இப்போது திருப்பூரை கொஞ்சம் உயிர்ப்போடு வைத்திருப்பது உள்ளூர் சந்தைதான். அதையும் வாரி வாயில் போட களமாடுகிறார் அம்பானி.

சந்தையை ஆக்கிரமிக்கும் இந்தப் போட்டி ஒரு போரைப்போல நடந்துகொண்டிருக்கிறது. அமேசான் தமது கிரேட் இண்டியன் சேல் எனும் பெருவிற்பனை விழாவை இந்த மாதம் நடத்துகிறது. அதே நாட்களில் ஃபிலிப்கார்ட் பிக் பில்லியன் டே எனும் விற்பனை விழாவை நடத்துகிறது. பேடிஎம் தன் பங்குக்கு கோல்டுபேக் ஷாப்பிங் ஃபெஸ்டிவலை நடத்தவிருக்கிறது. மற்ற அல்லு சில்லுகளும் தன் பங்கிற்கு ஏதேனும் நடத்தலாம். இதற்காக கோடிகளைக் கொட்டி விளம்பரம் செய்கிறார்கள். ஆன்லைன் ஷாப்பிங் அடிமைகளின் தீபாவளி இந்த மாதம் பதினைந்தாம் தேதியே முடிந்துவிடும். அந்த அளவுக்கு தயாரிப்பு வேலைகள் நடக்கின்றன.

2015, 16 ஆம் ஆண்டுகளில் பிக் பில்லியன் டே விற்பனையின்போது ஃபிலிப்கார்ட்டின் சர்வர்கள் முடங்கின. அந்த அளவுக்கு இணையக்கூட்டம் அந்த தளத்தை மொய்த்தது. அதே ஆண்டுகளில் நடந்த விற்பனைத் திருவிழாக்களில் அமேசானின் டெலிவரி பன்மடங்கானது. இருசக்கர வண்டிகளில் டெலிவரி ஆன தெருக்களில் எல்லாம் டாடா ஏஸ், டெம்போக்களில் டெலிவரி ஆனதை பார்த்திருக்கிறேன் (இரண்டாம் நிலை நகரங்களில்). ஆன்லைன் ஷாப்பிங்கை எப்படி திறம்பட செய்வது என ஆலோசனை வழங்கும் செயலிகள்கூட வந்தாயிற்று. பேடிஎம் நிறுவனம் இறக்குமதிப் பொருட்களை விற்பதற்கென்றே வேர்ல்டு ஸ்டோர் எனும் பிரத்தியோக பகுதியை தமது செயலியில் வைத்திருக்கிறது. அதில் தோடு, வளையல், பொம்மை என சகலமும் கிடைக்கின்றது. ஃபேன்சி ஸ்டோர் முதல் பிளாட்பாரக்கடை வரை எங்கும் செல்லாமல் உட்கார்ந்த இடத்திலேயே சீன சந்தையில் நீங்கள் பொருள் வாங்க இயலும். பிலிப்கார்ட் தமது கிட்டங்கிகளை முழுமையாக ரோபோக்கள் மூலம் கையாள நடவடிக்கை எடுத்திருக்கிறது. அதன் மூலம் 2 மணி நேர டெலிவரிகூட சாத்தியப்படலாம். அமேசான் ஏற்கனவே இதனை செய்ய ஆரம்பித்துவிட்டது.

இந்தப் போட்டியினால் நமக்கு எல்லாமே சல்லிசாக கிடைக்கிறது என நம்பிவிட வேண்டாம். விலையில் பல தில்லுமுல்லுகள் நடக்கின்றன. தி.நகர் தெருக்கடைகளில் நூறு ரூபாய்க்கு கிடைக்கும் மொபைல் கேஸ் இந்த தளங்களில் 200 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. சாதாரண மருந்துக் கடைகளில் 170 ரூபாய்க்கு விற்பனையாகும் செரிலாக் (குழந்தைகள் உணவு) அமேசானில் 286 ரூபாய், அதில் அதன் உண்மையான விலை 499 என பொய்யாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அமேசானின் தள்ளுபடி விலையைக் காட்டிலும் உள்ளூர் விலை 100 ரூபாய் குறைவு.

பேடிஎம் ஒரு சீன தயாரிப்பு கைக்கடிகாரத்துக்கு 100% கேஷ்பேக் என அறிவிக்கிறது (கேஷ்பேக் என்பது பொருளுக்கு நீங்கள் கொடுத்த பணம் சில நாளில் உங்கள் பேடிஎம் கணக்கில் வரவு வைக்கப்படும். அதற்கான பொருட்களை பிறகு நீங்கள் வாங்கிக்கொள்ளலாம்). ஆனால் அதன் விலையில் இருக்கிறது பித்தலாட்டம். அந்த பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய். ஆக 100 ரூபாய் கடிகாரத்தை 3300 ரூபாய் கொடுத்து வாங்கினால் பேடிஎம் உங்களுக்கு 3300 ரூபாயை திருப்பித்தரும் . அதுவும் பணமாக அல்ல, அவர்களிடமே பொருள் வாங்கி அந்த பணத்தை கழிக்க வேண்டும். (இது அப்பட்டமான ஏமாற்றுவேலை என்பதை சராசரி அறிவுடைய எவரும் கண்டுபிடிக்கலாம். ஆனால் அந்த கடிகாரம் 5 நிமிடங்களில் விற்றுத்தீர்கிறது.).

படிக்க:
குன்றத்தூர் அபிராமி : கலாச்சார நீதிபதிகளின் தற்குறித் தீர்ப்புகள்
மியூசிக்கல்லி செயலி உருவாக்கும் ரசனை எத்தகையது ?

இதன் சேதாரங்கள் மூன்று இடங்களில் வெளிப்படலாம்.

முதலில் இந்த ஷாப்பிங் மனோபாவம் நமது நடத்தையில் பாரிய மாற்றங்களை உருவாக்குகிறது. ஒரு தேவை உருவாகி அதற்காக நாம் ஒரு பொருளை வாங்குவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால் இப்போது ஷாப்பிங் தளங்கள் பொருளைக் காட்டி, உணர்வுகளைத் தூண்டி தேவையை வலிந்துத் திணிக்கின்றன. முதலில் ஒரு பரவச உணர்வுக்கு ஆட்பட்டு பிறகு அது பதட்டக்குறைப்பு செயலாக சுருங்குகிறது (கிட்டத்தட்ட சாராயத்தைப்போல). அதாவது ஷாப்பிங் செய்தால் நன்றாக இருக்கும் எனும் நிலைமாறி ஷாப்பிங் செய்யாவிட்டால் கைநடுக்கும் எனும் நிலைக்கு செல்லலாம். வெறுமையாக உணரும்போது ஷாப்பிங் தளங்களை மேயும் வேலையை பலரும் செய்வதை காணமுடிகிறது. மொபைல் அடிமைத்தனத்தைப்போல ஷாப்பிங் அடிமைகள் (அடிக்ட்) பரவலாக உருவாகிறார்கள்.  குக்கிராமங்களை வரை நீளும் ஸ்மார்ட்போன் பயன்பாடும் வலுப்படும் ஆன்லைன் வணிக கட்டமைப்பு இந்த அடிமைத்தனத்தை இன்னும் தீவிரமாக்கலாம்.

பிளாட்பார கடிகாரத்தின் விலை 3300 ரூபாய்.

இரண்டாவதாக இது நம் நாட்டில் இருக்கும் சிறுவணிக கட்டமைப்பை கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கும். இணையத்தில் இல்லாத பொருளே இல்லை எனும்போது, எல்லோர் கையிலும் ஸ்மார்ட் போன்கள் இருக்கும்போது, பணம் செலுத்தும் வழிகள் எளிமையாக இருக்கும்போது மக்கள் அதன் பக்கம் திரும்புவது நடந்தே தீரும். அவை இறுதியில் சாதாரண சிறு வியாபாரிகளை பாதிக்கும். மேலும் இந்த சப்ளை செயின் அளிக்கும் வேலைவாய்ப்பு முற்றிலும் நிரந்தரமில்லாதது. மூட்டை துக்கி முதுகுவலி வந்த பின்னால் அந்த டெலிவரி ஊழியர்கள் என்ன ஆவார்கள் என்பதற்கு எந்த பதிலும் இல்லை. அமேசானிலேயே விஷம் வாங்கிக்குடித்து சாகவேண்டியதுதான். மேலும் தேவையற்ற பொருட்களுக்கு செலவிடும் மக்கள் தேவையானவற்றுக்கு செலவைக் குறைப்பார்கள். அதுவும் மறைமுகமாக இந்தியாவின் வணிக கட்டமைப்பைத்தான் சிதைக்கும்.

இறுதியாக இந்த ஷாப்பிங் கலாச்சாரம் சேர்க்கும் குப்பைகள் ஒரு பெரும் சுற்றுச்சூழல் பிரச்சினை. வரும் ஜனவரி முதல் பாலித்தீன் மற்றும் பிளாஸ்ட்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு முடிவெடுத்திருக்கிறது (பைகள், டீ கோப்பைகள் போன்றவை). கிருஷ்ணகிரி வட்டாரத்தில் இப்போதே தடை வந்தாயிற்று. ரோட்டுக்கடை போடுபவர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் 5000 ரூபாய் அபராதம். ஆனால் உலகின் பெரும் பணக்காரர் அமேசானுக்கு அது பொருந்தாது. பொருட்களை சேதமாகாமல் அனுப்ப உபயோகிக்கப்படும் பிளாஸ்டிக் உறைகளும் பபுள் பேக்கிங் தாள்களும் தெர்மாகூல் அட்டைகளும் பெரும் சூழல் அபாயங்கள். மேலும் அளவுக்கு மீறி நுகரப்படும் தரமற்ற (மலிவான) சீன பொருட்கள் இன்னொரு சூழல் அபாயம். அவை வெகுசீக்கிரமே குப்பைக்குப் போகும். இப்போது சிறு நகரங்களில்கூட குப்பை கொட்ட இடமில்லை. இவற்றை கையாளவும் கட்டுப்படுத்தவும் எந்த திட்டமும் நம்மிடம் இல்லை.

நாம் இவை குறித்து கவலைப்பட ஆரம்பிக்கும்போது சிக்கல் கைமீறிப்போயிருக்கும். என்ன செய்யலாம்?

– வில்லவன்

அரசியல் விமர்சகர். வினவு தளத்தில் “வில்லவன் சொல்” எனும் தலைப்பில் பத்தி எழுதுகிறார்.

நூல் அறிமுகம் : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி

வனைக் கொன்றுவிடலாமென்று முடிவு செய்திருக்கிறோம். உங்களில் யார் இவனைச் சுட்டுக் கொல்கிறீர்கள்?

யாரும் எதுவும் பேசவில்லை .

லட்சுமணாவின் கண்டிப்பு மிகுந்த குரல் திரும்பவும் உயர்ந்தது.

தயாராக இருப்பவர்கள் கை தூக்குங்கள். மற்ற மூன்று பேரும் தயங்கிக் கொண்டே கைகளைத் தூக்கினார்கள். நான் கண்டு கொள்ளாமலிருந்து விட்டேன்.

“உனக்கென்ன, முடியாதா?

டி.ஒய்.எஸ். பி.யின் கேள்வி.

“இவனை நாங்கள் உயிருடனல்லவா பிடித்தோம், இவன் எந்த எதிர்ப்புமே காட்டவில்லையே? இவனை நீதிமன்றத்தில் அல்லவா ஆஜர்படுத்த வேண்டும்?”

“ப்ளடி, அதைத் தீர்மானிக்கிறது நீயா?”

லட்சுமணா சொன்னார்:

“இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும். அல்லது, நக்சலைட்களுடன் நடந்த மோதலில் மேலும் ஒரு கான்ஸ்டபிள் கொல்லப்படலாம்.”

‘நான் வர்க்கீசின் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தேன். ஒரு நிமிட யோசனை. பிறகு, வர்க்கீசை நானே கொன்று விடுவதாகத் தீர்மானித்தேன்.  “செய்கிறேன்.  குரலையுயர்த்திச் சொன்னேன். விசையை இழுத்தேன், குண்டு தெறித்தது. மிகச் சரியாக இடதுபுற நெஞ்சில்.”

குண்டு பாய்ந்த சத்தத்தையும் மீறி வர்க்கீசிடமிருந்து இறுதி சத்தம் முழங்கியது. “மாவோ ஐக்கியம் சிந்தாபாத். புரட்சி. வெல்லட்டும்”

1970 பெப்ரவரி 18 ஆம் தேதி சாயுங்கால நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தைப் பற்றிய ஒரு சுய வாக்குமூலம்தான் பி.ராமச்சந்தின் நாயர்  எனும் காவலரை வரலாற்றுத் திசை வெளிக்குக் கொண்டு வருகிறது.  சம்பவம் நிகழ்ந்த ஏழாண்டுகளுக்குப் பின் அதைக் குறிப்புகளாக எழுதி வர்க்கீசின் வலதுகரமாக அறியப்பட்ட தோழர் ஏ.வாசுவிடம் ஒப்படைத்த பிறகும் இரு பத்தாண்டுகளுக்குப் பிறகுதான் அந்தச் சுய ஒப்புதலை உலகம் அறிந்து கொண்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு போலீஸ்காரர் தனக்குச் செய்ய வேண்டியதிருந்த ஒரு பாதகச் செயலைச் சுயமாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார்: “நான் தான் அதைச் செய்தேன். என் கைகளாலேயே அதைச் செய்ய வேண்டியதாயிற்று. நான் இதோ உங்களெதிரில் நிற்கிறேன். என்னைத் தண்டியுங்கள்” என்று.

இதுவரை ஏ.வர்க்கீஸ் எனும் நக்சலைட் புரட்சிக்காரனின் சாவைப் பற்றி ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் மட்டுமே நமது நினைவுகளிலிருந்தன. ஒடுக்கப்பட்டோரின் பெருமான் என்றறியப்பட்டிருந்த வர்க்கீஸ் வயநாட்டின் காட்டில் வைத்து காவல்துறையால்… இடுப்பு வரை கொதிக்கும் நீரில் வேக கண்களைத் தோண்டியெடுத்து, உடலைச் சல்லடையாகச் சுட்டுத் துளைத்து, கையில் ஒரு நாட்டுத் துப்பாக்கியை வைத்து இன்று வர்கீஸ் பாறை என்றறியப்படும் பாறையின் மீது மல்லாந்தபடி படுக்க வைத்து…

ஒருமுறை ‘நாடுகத்திக’ என்ற நாடகத்திற்கு ஒரு வர்கீஸ் தினத்தன்று நானும் அங்கே போயிருந்தேன். ஆதிவாசிகள் நிறைந்த ஒரு சபை நாடகத்தின் இறுதிகட்டத்தில் தொல்குடித் தெய்வங்களை அழைத்து தங்களை விட்டுப் பிரிந்து சென்ற மூத்தார்களை அழைத்து நாடகத்தின் கதாபாத்திரங்கள் திமிர்த்தாடிய போது பார்வையாளர்களாக இருந்த ஆதிவாசிகள் அத்தனைபேரும் அவர்களுடன் சேர்ந்து நடத்திய ஆட்டம், ஒரு போதுமே மறக்க முடியாத நாடக அனுபவமாகவும் அரசியல் அனுபவமாகவும் இருக்கிறது. அப்போதும்கூட வர்க்கீசின் மரணம், ஒரு மோதலின்போது நடந்த கொலை என்ற மூடு பனிக்குள்தான் ஊடகங்களும் கவிஞர்களும் உருவாக்கியெடுத்த புனைவுகள் இருந்தன.

1970-ல் கேரளத்தில் நக்சல்பாரிகளைப் போலீசார் வேட்டையாடியபோது பழங்குடி மக்களுக்காகப் போராடிய தோழர் வர்க்கீசை, சி.ஆர்.பி. போலீஸ் கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயர் மேலதிகரியின் நிர்ப்பந்தத்தால் தனக்கு ஆதர்சமான மனிதரையே தன் கைகளால் கொன்றதைப் பற்றி 20 வருடங்களுக்குப் பின்னர் வெளியிட்ட தன் வாக்குமூலமே இந்நூல்.

அன்றுவரை வெறுமொரு காவலராக மட்டுமே இருந்த ராமச்சந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்தபிறகு, முப்பதாண்டுகளுக்கு முன் வயநாடன் காடுகளில் நடந்தவைகளைப் பற்றி உலகம் அறிந்து கொண்டது. அவர் சொல்கிறார். “இப்படித்தான் நடந்தது. என்னைக் கொல்ல வைத்தார்கள். எனக்குச் செய்ய வேண்டியதாயிற்று. முப்பது ஆண்டுகளாக நான் இந்தப் பாரத்தைச் சுமந்து திரிந்தேன். எனக்கு இதை வெளி உலகிற்குச் சொல்லியேயாக வேண்டும். உங்களில் சிலரிடம், தோழர் வர்க்கீசின் மிக நெருங்கிய சிலரிடம் சொல்லியும்கூட நீங்கள் இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையே? இதோ, நான் தஸ்தாவேஸ்கியின் ஒரு கதாபாத்திரம் போல்…”

அவசர நிலைக்காலம் முதல் தோழர் ஏ.வாசுவுடன் மிக நெருக்கமாகப் பழகி, அவரை அறிந்து கொண்டவன் என்ற நிலையில் நான் உறுதியாக நம்புகிறேன். வாசு அண்ணன், ராமச்சந்திரன் நாயரின் சுய ஒப்புதல் வாக்குமூலம் பற்றிய விஷயத்தை மறந்துதான் போயிருப்பாரென்று. அந்தக் குறிப்பு எங்கேயோ வைத்துத் தவறிவிட்டது. ஆனால் வர்க்கீசின் மரணத்தைப் பற்றிய உண்மைகளை அவசர நிலை வாபஸ் பெறப்பட்டதன் பின் நடந்த வர்க்கீஸ் தினம் முதல் (கேரளத்தில் முதன் முதலாக நக்சலைட்களின் இந்தப் பொதுக்கூட்டம் கோழிக்கோடு டவுண் ஹாலில் வைத்து நடந்தது) ஒவ்வொரு வர்க்கீஸ் தினத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் இந்தத் தோழர், வர்க்கீசின் நினைவுகளை உரத்த குரலில் பேசிக் கொண்டுதானிருக்கிறார்.

ஆனால் இந்த உண்மைகளுக்கு அடிப்படையாக இருக்கும் இந்த சுய ஒப்புதலின் குறிப்புகளை அவர் மறந்தே போய்விட்டார். ஏழெட்டு வருடங்களாகத் தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து விசாரணைகளுக்குள்ளாகி சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஒருவர் சராசரி மனோநிலையுடன் இருக்க முடியாது என்பதுதான் இயல்பு. அதன் காரணமாக அந்த மறதி, அவர் ஏற்ற சித்திரவதைகளின் கொடூரத்தையே காட்டுகிறது. தோழர் வாசு, தோழர் வர்க்கீசின் வீர மரணம் தொடர்பான உண்மைகளை, அதைத் தெரிவித்த காவலரின் சுய ஒப்புதலை எதற்காக மறைக்க வேண்டும்?

படிக்க:
வரலாறு: ஒரு மன்னன் மனிதனான கதை
காஷ்மீர்: கொலைகார இந்திய இராணுவத்தை நீதிமன்றம் தண்டிக்காது

கொஞ்சம் காலதாமதமாக நடந்திருந்தாலும் வெளிப்படுத்தப்பட்ட இந்த வாக்குமூலம், இறுதியாக நடந்த நமது புரட்சி இயக்கத்தை அதிகார வர்க்கம் எதிர்கொண்ட முறை, நாம் அவற்றை வாய்மூடி பார்த்து நின்ற விதம் திரும்பவும் ஒருமுறை விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்களாயிற்று. நமது அணுகுமுறைகள் ஜனநாயக விதிப்படி நடந்தேறுவதாக நாம் நம்பிக்கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது. இந்தக் காவலரின் மனசாட்சி முன் வைக்கும் கேள்விகள் மிக எளிமையானவை.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா? நீதித் துறையின் பொறுப்புகளைக் காவல்துறையிடம் ஒப்படைத்தது யார்? ஜனநாயகக் கட்டமைவின் கீழிருக்கும் ஒவ்வொரு பிரஜைகளாலும் கேட்கப்படவேண்டிய கேள்விகள் இவை.

இந்தக் கேள்விகளை நம் போன்ற குடிமக்கள் கேட்காமலிருக்கும்போது ஒரு காவலர் இரண்டு கைகளையும் மேலே உயர்த்திப் பிடித்து இதைக் கேட்கும்போது நாம் அப்படியே கூனிப் போகிறோம். நம்முடைய ஜனநாயக உணர்வும் மொத்தமே இவ்வளவுதானா? நம்மிடையிலுள்ள ஒருவரை ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் செழுமைப்படுத்தவும் முயற்சி செய்த ஒருவரை இப்படியெல்லாம் செய்த பிறகும் நாம் பிரஜைகள், ஆகா!

குற்றம் சாட்டப்பட்ட ஒருவனைப் பிடித்தால் அவனை நீதிமன்றத்தில் அல்லவா காவல் துறையினர் ஆஜர்படுத்த வேண்டும்? குற்றவாளியென்று அவனை முத்திரையடித்து அவனுக்குத் தண்டனையும் வழங்குவதற்கான அதிகாரம் காவல் துறைக்கு இருக்கிறதா? இதைச் செய்ய வேண்டியது நீதித்துறையல்லவா?

எதுவாயினும் வழக்கு இப்போது நீதிமன்றத்தில் இருக்கிறது. பொதுவாகவே, இப்படியொரு சுய ஒப்புதலை ஒருவர் வெளிப்படுத்தினால் அவரை காவல்துறையின் தரப்புசாட்சியாக்கி வழக்கைப் பதிவு செய்வதுதான் வழக்கம். இப்படித்தான் செய்யவும் வேண்டும். ஆனால், இங்கே சி.பி.ஐ. குற்றத்தை வெளிப்படுத்தியவரையே முதல் பிரதிவாதியாக்கி குற்றப்பத்திரிகையை அளித்திருக்கிறது. ராமச்சந்திரன் நாயர் பதறிவிடவில்லை.

அவர் சொல்கிறார். “நீதிமன்றம் தன்னைத் தண்டிக்க வேண்டும். வாழ்க்கையில் செய்த பாதகச் செயலுக்கானத் தண்டனையாகச் சிறையிலடைக்கப்பட வேண்டு மென்பதுதான் தனது கடைசி ஆசை” என்று. ஆனால், தன்னுடனிருக்கும் சக பிரதிவாதிகளான தனது மேலதிகாரிகளும் தன் இடது புறத்திலும் வலது புறத்திலுமாக நின்று தண்டனை அனுபவிக்க வேண்டும்; தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தேயாக வேண்டும்.

இதில், எல்லாக் குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்களா, முக்கியக் குற்றவாளிகள் மட்டும் தப்பித்துக் கொள்வார்களா, அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்ட பாவத்திற்கு, இந்தக் காவலர் மட்டுமே தண்டிக்கப்படுவாரா, என்னதான் நடக்கப் போகிறது என்ற மன உணர்வுகளை நாம் தற்போது வெளிக்காட்ட வேண்டாம். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால். இதனிடையில்தான் ராமச்சந்திரன் நாயர் தனது நினைவுகளைப் பதிவு செய்து கொள்ளத் துவங்கினார்.

ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் என்ற அளவில் கவனிக்கப்பட வேண்டிய ஒருவரது வாழ்க்கைக் கதை. அந்த முகம், அந்தப் பாவம், தைரியம், சஞ்சலமின்மை… தோழரின் அந்திம நிமிடங்களைப் பற்றி எழுதுவதற்கு இந்த ஆறாம் வகுப்பு படித்தவனிடம் வார்த்தைகளில்லை என்ற தயக்கத்தை வெளிப்படுத்தியிருந்தாலும் இது, அவரது பணிவை மட்டும்தான் காட்டுகிறது. இந்த வாழ்க்கைக் கதையினூடே நான் பல தடவை கடந்து சென்று, வாசிப்பின் தடங்கல்களைத் தவிர்ப்பதற்காக மட்டும் சில தலையீடுகள் செய்த ஒருவன் – இந்தப் புத்தகத்தின் எடிட்டர் என்ற நிலையில் பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை முன் வைக்கிறேன். பொக்குடனின், ஸி.கே.ஜானுவின், நளினி ஜமீலாவின், வினயாவின் நினைவுப் பகிர்வுகள் போல் மலையாளத்தில் எழுதப்பட்ட விளிம்பு நிலை வாழ்வியல் பதிவுகளில் இதுவுமொன்று.

படிக்க:
சட்டீஸ்கர் : அதிர்ச்சி நிறைந்த கதைகளால் நிரப்பப்பட்ட பஸ்தார் சாலை !
திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

நான் இவ்வளவு பொறுப்புணர்வுடன் இந்தப் புத்தகத்தை வெளிக்கொண்டு வர முன் வருவதற்கானக் காரணம், இது ஒப்புதல் வாக்கு மூலம் என்பது மட்டுமல்ல, இந்தப் புத்தகம் முப்பத்தி மூன்றரை வருடங்கள் காக்கியுடுத்தி ஒரு காவலராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர், அப்பட்டமாகத் திறந்து காட்டும் ஒரு வேதனை மிகுந்த வாழ்க்கைக் கதையும் என்பதுதான். தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

‘மனோரமா’ வார இதழில் வெளியான பழைய ‘டோம்ஸ்’ கேலிச் சித்திரத்தையும் நினைவுக்குக் கொண்டு வருகிறார். ‘நான்கு மனிதர்களும் ஒரு காவலரும்’. காவலரால் ஏன் ஐந்தாவது மனிதனாக ஆக முடியவில்லை. ராமச்சந்திரன் நாயர் சொல்கிறார். “நீங்கள் இவ்வளவு சம்பளம் கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை எப்படி நடந்து கொள்கிறதென்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அதையறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு இருக்கிறது. உங்களிடமிருந்து சம்பளம் வாங்குபவர்கள் நாங்கள். உங்களால் நிலைபெற்றிருக்கிறது இங்குள்ள அமைப்புகள். காக்கியென்றால் என்னவென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்”. காக்கிக்குள்ளிருக்கும் காவல்துறை எதுவென்பதை  வழக்கமான ஒரு சுய வரலாறுபோல் இந்த சுய ஒப்புதலை வாசிக்கத் துவங்கும் நாம் ஒரு காவலரின் வாழ்க்கையை பற்றி மட்டுமல்ல, நமது காவல்துறையைப் பற்றியும் அறிந்து கொள்கிறோம்.

நம் மொழியில் இதற்கு முன் இப்படியொரு அறிமுகம் நடந்ததில்லை. ஆகவே, நமக்கு இந்த சுயசரிதை ஒரு சாதாரண காவலரின் திடுக்கிடச் செய்யும் சுய அறிவிப்பாகவும் மாறுகிறது.

தனது 16வது வயதில் ஒரு டேப்பிங் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் துவங்கி இப்போது ஒரு பாதுகாப்புப் பணியாளராக வாழ்க்கையைக் தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார்.

காவல்துறையைப் பற்றி நமது திரைப்படங்கள் உருவாக்கும் ஒரு புனைவிருக்கிறதல்லவா? மம்முட்டியும், சுரேஷ் கோபியும், இப்போது பிரித்விராஜும் பிரதிநிதித்துவப்படுத்தும், நீதிமான்களும் யோக்கியர்களுமான காவல் அதிகாரிகள், இன்னசென்டும், ஜகதியும், மாமுக்கோயாவும், இந்தரன்சும் பிரதிநிதித்துவப்படுத்தும் சாதாரண காவலர்கள் எனும் கோமாளியும் ஏமாளியுமான வேடங்கள். அவசர நிலைக் காலத்தில் கக்கயம் முகாம் துவங்கி பல தடவைகள், பல இடங்களில் வைத்துக் காவலர்களுடன் பழகி, அவ்வப்போது அவர்களிடமிருந்து சிறு அளவிலான அடி உதையும் வாங்கி, சமூகப் பரப்பில் தொடர்ந்து இயங்கி வருபவன் என்ற நிலையில், என் அனுபவம் முற்றிலும் வேறானது.

நம்முடைய காவலர்கள் இதற்கு நேர் எதிரானவர்கள். நமது சாதாரணக் காவலர்கள் ஊமைகள். அவர்களுக்கு ஏமாளிகளும் கோமாளிகளுமாக ஆக வேண்டியச் சூழல்கள் உருவாவதற்கானக் காரணங்கள், காவல்துறையின் அதிகார மனோபாவங்களும் வர்ணாஸ்ரம் படிநிலைகளில் தாழ்த்தப்பட்டவர்கள் என்ற நிலையில் அவர்கள் அனுபவிக்க நேரும் கசப்பான உண்மைகளும்தான். தோளிலிருக்கும் நட்சத்திர அடையாளங்களின் எண்ணிக்கை அதிகரிக்குந்தோறும் அவர்களது மனவளம் குறைந்துகொண்டே வருகிறது. நேரடியாகப் பொருள் கொள்வதனால் அவர்கள் குற்றவாசனையுள்ளவர்களாக மாறிக் கொண்டிருக்கிறார்களென்பதுதான் அனுபவ உண்மை. இந்த உண்மையை எதிர்கொள்வதற்கு ஒரு ஊடகம் என்ற நிலையில் திரைப்படங்களால் இயலாமலாகி விடுகிறது.

ஆகவே, அவர்கள் அதிகார மையங்களைத் திருப்திபடுத்தும், மேலே எல்லாமே சரியாகத்தானிருக்கிறதென்பது போன்ற பிம்பங்களைத் தான் வார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பரத் சந்திரன் ஐ.பி.எஸ். எனும் சுரேஷ் கோபியின் புதிய திரைப்படம் இதை இப்போது எழுதிக் கொண்டிருக்கும்போது தியேட்டருக்கு வந்திருக்கிறது. இந்த வரிசையில் வந்த கடைசித் திரைப்படம் இது.

படிக்க:
மரணத்தை வென்றவன் நினைவைத் துரத்துகிறான் !
நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

ஒரு விஷயத்தை உரத்தக் குரலில் கேட்டு நான் இந்த முன்னுரையை முடித்துக் கொள்கிறேன். பி.ராமச்சந்திரன் நாயர் எனும் இந்த சாதாரணமான ஒரு காவலர் எழுதியதைப்போல் சுய வாழ்க்கையை வெளிப்படையாகத் திறந்துகாட்ட ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் தர ஏதாவதொரு ஐ.பி.எஸ்.காரர் முன்வருவாரா? அப்படியொன்று நடக்கும் வரை ராமச்சந்திரன் நாயரின் இந்த சுய வரலாறு அதன் நேர்மையின் பொருட்டு வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கும், எளிய காவலர் ஒருவரது வாழ்க்கைக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்?

இன்னசென்ட், ஜகதி, மாமுக்கோயா, இந்தரன்ஸ் வேடங்களில் கேலி செய்யப்படும் அத்தனை காவலர்களது வாழ்க்கையின் மதிப்பீடுகளையும் இந்தப் புத்தகம் மீட்டெடுத்திருக்கிறது. ஒரு காவலரால் மட்டுமே இது போன்ற  புத்தகத்தை எழுத முடியும், உயரதிகாரிகளால் முடியாது. மிகுந்த நம்பிக்கையுடன் நான் இந்தப் புத்தகத்தை வாசகர்களின் முன்வைக்கிறேன்.

(”பரத் சந்திரன் ஐ.பி.எஸ்., இது போன்ற ஒரு புத்தகம் எழுதுவாரா ?” என்ற தலைப்பில் சிவிக் சந்திரன் எழுதிய இந்நூலுக்கான முன்னுரை)

நூல்: நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
மலையாள மூலம்: ராமச்சந்திரன் நாயர்
(தமிழில்: குளச்சல் மு.யூசுப்)

வெளியீடு:மக்கள் கண்காணிப்பகம்,
6, வல்லபாய் சாலை, சொக்கிகுளம், மதுரை – 625 002.
பேச: 0452-2531874
மின்னஞ்சல்: info@pwtn.org

பக்கங்கள்: 214
விலை: ரூ.120.00

இணையத்தில் வாங்க: tamil books online | Common Folks | new book lands

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி:
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு:
வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி: 99623 90277

ஆப்பிள் நிறுவன அதிகாரியை கொலை செய்த உ.பி. போலீசு : இது 67- வது என்கவுண்டர் கொலை !

ப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி பணி முடித்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது உத்திரப் பிரதேச போலீசின் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக பலியாகியிருக்கிறார். இந்துத்துவ ரவுடி சாமியார் ஆதித்யநாத் பதவியேற்றதிலிருந்து தொடங்கிய என்கவுண்டர் பலிகளின் பட்டியலில் ஆப்பிள் நிறுவன விற்பனை அதிகாரி 67-வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு (28.09.2018) தனது சக பணியாளருடன் காரில் பயணித்துக்கொண்டிருந்தார் ஆப்பிள் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றிக்கொண்டிருந்த விவேக் திவாரி. லக்னௌ அருகே இவர்களுடைய வாகனத்தை இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் இருவர் வழிமறித்துள்ளனர். ஒரு போலீசுக்காரர் கையில் இருந்த லத்தியால் காரின் கண்ணாடி வழியே விட்டு தாக்கி நிறுத்த முயன்றிருக்கிறார். இதில் பதட்டமடைந்த விவேக் திவாரி, தொடர்ந்து காரை இயக்கியிருக்கிறார். இன்னொரு போலீசுக்காரர், எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கியை எடுத்து விவேக் திவாரியை சுட்டிருக்கிறார். இரத்த வெள்ளத்தில் சிறிது தூரம் சென்ற அந்தக் கார் பாதையோரம் இருந்த சுவரில் மோதி நின்றிருக்கிறது.

கொல்லப்பட்ட விவேக் திவாரி.

காரில் உடன் பயணித்த அலுவலக பெண் சனா கான், உயிருடன் இருந்த அவரை மருத்துவமனையில் சேர்க்க அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். ஆனால், எவரும் உதவவில்லை.

“சாலையின் இருபுறமும் ட்ரக்குகள் நின்றன. நான் அன்று என்னுடைய போனை வீட்டிலேயே விட்டுவிட்டேன். சாரின் போன் லாக்-ஆகி விட்டது. அருகில் இருந்தவர்களிடம் நிலைமையைச் சொல்லி போனைக் கேட்டேன். எவரும் தரவில்லை. 15 நிமிடம் கழித்து போலீசு ரோந்து வாகனம் வந்தது, அவர்கள் ஆம்புலன்சை அழைத்தார். அது வரவும் தாமதமானதால் போலீசு வாகனத்தில் கொண்டு செல்லக் கேட்டேன். மருத்துவமனைக்கு சாரை கொண்டு சென்றோம். ஆனாலும் காப்பாற்ற முடியவில்லை” என்கிறார்.  நடந்த விவரங்கள் குறித்து போலீசு வாக்குமூலம் வாங்கிக் கொண்ட பிறகும் தன்னை கண்காணிப்பதாக சனா கான் பயம் கொள்கிறார்.

‘தேவையில்லாமல் ஆயுதத்தை பயன்படுத்திய’ குற்றத்துக்காக பிரசாத் சவுத்ரி, சந்தீப் என்ற இரு போலீசுக்காரர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறுகிறது உ.பி. போலீசு. சுட்டுக்கொல்லப்பட்டவரின் பெயர் விவேக் திவாரி என்பதாலும் அவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றுகிறவர் என்பதாலும் இந்த ‘நடவடிக்கை’ எடுக்கப்பட்டிருக்கிறது என யூகிக்கலாம்.

இதுவரை உ.பி.யில் 1500 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டிருக்கின்றன; அதாவது ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு. இதில் குற்ற சம்பவங்களில் தொடர்புடைய 66 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700 பேர் காயங்களுடன் தப்பினர். 4 போலீசுக்காரர்கள் இந்த மோதலில் இறந்துள்ளனர். 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த என்கவுண்டர் ‘ஆபரேசனி’ன் போது காயமடைந்துள்ளனர்.

சுட்டுக்கொன்ற போலீசு கான்ஸ்டபிள் பிரசாத் சவுத்ரி.

இந்த ஆண்டு மே மாதம், முசாஃபர் நகரில் 50-வது என்கவுண்டர் கொலை செய்த போலீசுக்காரருக்கு ரூ. 50 ஆயிரம் சன்மானம் அளித்து ‘சிறப்பி’த்தது கொலைவெறி சாமியார் அரசு.

தான் பதவியேற்றவுடன் கிரிமினல்கள் அனைவரையும் சரண்டராகுங்கள் அல்லது மாநிலத்தை விட்டு ஓடுங்கள் (முதல் நபராக கொலை குற்றம்சாட்டப்பட்ட கிரிமினல் முதல்வர் என பெயர் பெற்ற ஆதித்யநாத் ஓடியிருக்கவேண்டும். ஆனால், இந்த இடத்தில் அவர் நீதியை நிலைநாட்ட வந்த தேவன் ஆகிவிட்டார்) என்றார். அதன்படி ‘ஆபரேசன் க்ளீன்’ என்ற திட்டத்தை போலீசு தொடங்கியது. உ.பி.போலீசு தெரிவித்துள்ள தகவலில் 2017 மார்ச் 20 முதல் 2018 ஜனவரி 31 வரை 1142 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன.

உ.பி.யின் முன்னாள் டி.ஜி.பி. ஏ.எல். பானர்ஜி  சொல்கிறார், “உ.பி. போலீசுக்காரர் இப்போது தலைமை காவல் அதிகாரிகளிடம் மட்டுமல்லாமல், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் செய்தி தொடர்பாளர்களுக்குக்கூட அறிக்கை அளிக்க வேண்டும்” என்கிறார்.

“நேரமின்மை காரணமாக போதிய பயிற்சியை காவலர்களுக்கு தர முடிவதில்லை. காவலர்களின் பயிற்சி காலத்தை ஒன்பது மாதங்களிலிருந்து ஆறு மாதங்களாக குறைத்துவிட்டோம். இந்த துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய காவலர்கள் இன்னமும் பயிற்சியில் இருந்து கொண்டிருக்கலாம். ஆனால், அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு துப்பாக்கியை எப்படி கையாள்வது என்பதே தெரியவில்லை” என்கிறார் முன்னாள் போலீசு அதிகாரி. போலீசு அதிகாரி முட்டுக்கொடுத்தாலும் சுடச்சொல்கிற உத்தரவு இருப்பதால்தானே ஒரு காவலர் துப்பாக்கியைத் தூக்குகிறார்? போலீசு அதிகாரி சொல்வதுபோல, சட்டத்தின்படி, எதிர்த் தாக்குதல் நடத்த மட்டுமே துப்பாக்கியை தூக்க வேண்டும். சாலையில் சென்று கொண்டிருந்த விவேக் திவாரி எவரைத் தாக்கினார்?

படிக்க:
உ.பி காவி தர்பார் : 1200 போலி மோதல் கொலை – 160 பேர் NSA – வில் கைது ! சிறப்புக் கட்டுரை
ரவுடி யோகி ஆதித்யநாத் : பார்ப்பனிய பாசிசத்தின் ஜனநாயகம்

தன்னுடைய 32 ஆண்டுகால பணி அனுபவத்தில் ‘உண்மையான என்கவுண்டர்’ மிக அரிதாக நடந்ததென மற்றொரு ஓய்வுபெற்ற போலீசு அதிகாரி எஸ்.எஸ். தாரபூரி ஒப்புக்கொள்கிறார் . என்கவுண்டர்களால் ஒருபோதும் குற்றங்களை குறைக்க முடியாது என்பது அவர் கருத்து. “உ.பி.யில் நடக்கும் என்கவுண்டர்கள் அனைத்தும் திட்டமிட்டு அரங்கேற்றப்படுபவையே” என்கிறார் அவர்.

உ.பி.யின் கொலைகார முதல்வர் யோகி ஆதித்யநாத்.

வெளியான தகவல்களின்படி அதிக அளவில் மீரட் பகுதியில் 449 என்கவுண்டர்கள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்து ஆக்ரா பகுதியில் 210 என்கவுண்டர்கள். மூன்றாவது இடம் பரேலிக்கு 196 என்கவுண்டர்கள். முதலமைச்சர் தொகுதியான கோரக்பூர் குறைவான என்கவுண்டர் நடந்த இடம். (முதலமைச்சர் தன் பரிவாரங்களுக்கு சிறப்பு சலுகை கொடுத்திருக்கிறார்)

திவாரியின் படுகொலைக்குப் பிறகு ‘தி ஏசியன் ஏஜ்’ இப்படி எழுதியிருந்தது, “ஆயுதம் தாங்கிய காவலருக்கு அரைகுறை பயிற்சி இருப்பது தெரிகிறது. ஆனாலும் அவரிடம் குண்டுகள் சேர்க்கப்பட்ட துப்பாக்கியை தந்திருக்கிறார்கள். போதிய பயிற்சி இல்லாதவர்களுக்கு லத்தி கொடுப்பது போதுமானது. இவர்களிடம் துப்பாக்கியை தருவது கொல்வதற்கு தரும் அனுமதியைப் போன்றதாகும். சுடுவதைக் காட்டிலும் தொடர்புடையவரை நிலைகுலையச் செய்யலாம் – ஆனால் இது கொல்வதற்கான பகிரங்க அழைப்பு!”.

உ.பி. நீர்பாசன துறை அமைச்சர் தரம்பால் சிங் சனிக்கிழமை அளித்த பேட்டியில் ஆதித்யநாத் ஆட்சி காலத்தில் ‘உண்மையான கிரிமினல்’கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள்” என்கிறார். கிருஷ்ண பரமாத்மா போல் கையைத் தூக்கி அருள்பாலிக்காத குறையாக எல்லோருக்கும் நீதி கிடைக்கும் என்கிறார். குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும் என்கிறார். இந்தியாவுக்கு நரேந்திர மோடி பிரதமராக கிடைத்திருப்பதும், உ.பி.க்கு ஆதித்யநாத் கிடைத்திருப்பதும் மக்கள் செய்த ‘பாக்கியம்’ என்கிறார்.

ஆமாம், கொலைகார ஆட்சியாளர்கள் கைகளில் துப்பாக்கியோடு அலைவது பாக்கியமா? பயங்கரமா?

– கலைமதி

செய்தி ஆதாரம்:

கல்வித்துறையின் நடவடிக்கை சமூக நீதிக்கு எதிரானது | கல்வியாளர்களின் கூட்டறிக்கை

 உயர்கல்விச் சேர்க்கைக்கு +1 பொதுத்தேர்வு மதிப்பெண்களை எடுத்துக்கொள்ள வேண்டும்!! என்பதை வலியுறுத்தி, தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகம், பள்ளிக் கல்விதுறைச் செயலகம், பள்ளிக் கல்வித் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் ஆகிய இடங்களில்  செப் 28, வெள்ளிக்கிழமை நேரில் அளிக்கப்பட்ட, கல்வி அமைப்புகள், கல்விச் செயல்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் சார்பான கூட்டறிக்கை.

•••

மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செப். 14, 2018 அன்று செய்தியாளர் சந்திப்பில் மேல்நிலைப் பள்ளிக் கல்வி இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வின் மதிப்பெண்கள் மட்டுமே கல்லூரிக் கல்விக்கான தகுதியாக கருதப்படும் எனவும் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்காகக் கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்புலம் மற்றும் உளவியல் பாங்கு ஆகியவற்றை நன்கு அறிந்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், சவால்கள், உயர்கல்வி வாய்ப்புகள் ஆகியவற்றைக் குறித்த புரிதலும் அக்கறையும் கொண்டு கல்வித் தளத்தில் நீண்டகாலமாகச் செயல்பட்டு வரும் கல்விச் செயல்பாட்டாளர்கள் மற்றும் தமிழகக் கல்வி நலனில் அக்கறைகொண்ட பல்வேறு அமைப்பினர் இணைந்து வெளியிடும் கூட்டறிக்கை.

♦ மேல்நிலைக் கல்வி முதலாண்டு (+1) பொதுத் தேர்வை நடத்திக்கொண்டே அதன் மதிப்பெண் உயர்கல்வியில் சேர்வதற்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது மிகுந்த வியப்பையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. மேல்நிலை முதலாண்டுக்குப் (+1) பொதுத் தேர்வு நடத்தவேண்டும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்ததன் நோக்கங்கள் இனி நிறைவேற வழியேயில்லை.

♦ அரசின் கொள்கை மாற்றம் தனியார் பள்ளிகளின் அழுத்தத்தால் நேர்ந்தது என்பதை மறுக்க முடியாது. மேனிலைக் கல்வியில் தனியார் பள்ளிகளின் தாக்கம் மிக அதிகம். தனியார் பள்ளிகள் இடும் கட்டளையைக் கல்வித் துறை நிறைவேற்றும் என்பது அண்மைக்கால வரலாறு. தற்போதும் அது நிறைவேறியுள்ளது.

♦ தொடர்ந்து மூன்றாண்டுகளுக்குப் பொதுத் தேர்வு எழுதினால் மாணவர்களுக்கு மன அழுத்தம் நேர்கிறது என்கிற பொத்தாம் பொதுவான காரணத்தை முன்வைப்பது ஏற்கத்தக்கதல்ல. மேல்நிலை முதலாண்டு (+1) பொதுத் தேர்வு மதிப்பெண்களை உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக் கொள்ளாமல் விடுவதால் மன அழுத்தம் குறையும் என்பதும் சரியான காரணமல்ல.

♦ மாணவர்களுக்கு நன்மை செய்யும் உண்மையான நோக்கம் தமிழக அரசின் புதிய முடிவில் இல்லை. மேல்நிலை முதலாண்டு (+1) பொதுத்தேர்வு மதிப்பெண்கள் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று கடந்த கல்வி ஆண்டில் அறிவித்துவிட்டு, இக்கல்வியாண்டில் மூன்று மாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு தற்போது மேல்நிலை வகுப்பில் படித்துவரும் மாணவர்களுக்கு ஏமாற்றத்தையும் குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும்.

♦ புதிய அரசாணை எண் 195, அரசாணை எண் 100-க்கு முரணாக உள்ளது. அரசாணை எண் 100-இல் 6, 7, 8 ஆகிய பத்திகளில் கூறப்பட்டுள்ள மோசமான நிலைக்கு மேல்நிலைப் பள்ளிக் கல்வியை மீண்டும் பின்னுக்கு இழுக்கும் வேலையை அரசாணை எண் 195 செய்கிறது.

♦ மேல்நிலை முதலாண்டு (+1) மதிப்பெண்களைக் கல்லூரிக் கல்விக்கான தகுதியாக ஏற்பதில்லை எனும் முடிவு, அரசுப் பள்ளிகள் மட்டுமே மேல்நிலை முதலாண்டுப் (+1) பாடங்களை நடத்துவதும், தனியார் பள்ளிகள் அதைப் புறக்கணிப்பதுமான நிலையை மீண்டும் உருவாக்கும். இதனால், கல்லூரிக் கல்விக்கான சேர்க்கையில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் கிராமப்புற ஏழை மாணவர்களைக் காட்டிலும் தனியார் பள்ளி மாணவர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறும் சமூக அநீதி தொடரும். அரசின் தற்போதைய பரிந்துரை சமூக நீதிக்கு எதிரானதாகும்.

தனியார் பள்ளி மாணவர்கள் கூடுதல் வாய்ப்புகளைப் பெறும் சமூக அநீதி தொடரும்.

♦ மேல்நிலை இரண்டாமாண்டு (+2) மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்ற அறிவிப்பு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மேலும் குறைவதற்கே வழிவகுக்கும். “தனியார் பள்ளிகள் தான் அதிக மதிப்பெண்களைப் பெற்றுத் தரவல்லவை” என்று ஏற்கனவே பெற்றோர்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ள மனநிலையினால் அரசுப் பள்ளி மேனிலைப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கை கணிசமாகக் குறைய நேரிடும். இதன் தொடர் விளைவாகக் கல்வி வணிகத்திற்கு மக்கள் மேலும் ஆட்படுவர். மாணவர் எண்ணிக்கை போதுமான அளவு இல்லை என்று அரசுப் பள்ளிகளையும் மேல்நிலை வகுப்புப் பாடப்பிரிவுகளையும் மூடும் நிலைக்கு அரசே வழிவகுப்பது ஒரு சமூகக் குற்றமாகும்.

♦ மேல்நிலைப் பள்ளிக் கல்வி என்பது இரண்டாண்டுப் படிப்பைக் கொண்ட ஒரு பாடத்திட்டம். இரண்டாம் ஆண்டு படிப்பு முதலாண்டுப் படிப்புடன் நெருங்கிய தொடர்புடையது. இரண்டாண்டுகளும் முழுமையாகப் பாடங்கள் நடத்தப்பட்டு மாணவர்கள் அவற்றைப் புரிந்து படித்தால் மட்டுமே உயர்கல்விக்கு முழுத் தகுதியுடையவர் ஆவர். முதலாண்டு முழுமையாக நடத்தப்படாமல் இரண்டாம் ஆண்டில் முழு மதிப்பெண் பெற்றிருந்தாலும் அம்மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்தபின் பட்டப் படிப்பில் முதலாண்டில் தடுமாறுவதும் தோல்வி அடைவதும் அனைவரும் அறிந்ததே. அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்கள் உயர்கல்வி வாய்ப்புகளை இழப்பதற்கும் தனியார் பள்ளி மாணவர்கள் கல்வித் தரமின்றி உயர்கல்வியில் சிக்கலுக்கு ஆளாவதும் தொடர்வதற்கே அரசின் முடிவு வழிவகுக்கும்.

♦ நாடுதழுவிய அளவிலான போட்டித் தேர்வுகளில் நமது மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறாமல் போவதற்கு மேல்நிலை முதலாண்டுப் (+1) பாடங்கள் முறையாகப் கற்பிக்கப்படாததும் ஒரு முதன்மைக் காரணம் என்பது கடந்த காலங்களில் தெளிவாகியுள்ளது. அரசின் புதிய முடிவினால் இந்த அவலம் மீண்டும் தொடரும்.

தமிழக அரசுக்கு முன்வைக்கும் கோரிக்கைகள்

♦ ஏற்கனவே உள்ள அரசாணை 100 இன் படி, மேல்நிலைக் கல்வி முதலாண்டு (+1) மற்றும் இரண்டாம் ஆண்டு (+2) பொதுத் தேர்வுகளை நடத்துவதும் இரண்டாண்டுப் பொதுத்தேர்வு மதிப்பெண்களையும் உயர்கல்விச் சேர்க்கைக்கு எடுத்துக்கொள்வதும் மட்டுமே சரியான தீர்வாகும். இத்தகைய அணுகுமுறை குழப்பமற்றதாகவும், மன அழுத்தமற்றதாகவும் எளிமையானதாகவும் அமையும். உயர்கல்விக்குத் தேவையான நல்ல அடித்தளத்தையும் இது அமைத்துத் தரும்.

♦ மாணவர்களைப் பொதுத் தேர்வுக்குத் தயார்படுத்தும் முறைகளை மன அழுத்தமற்றவையாக மாற்றவேண்டும். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள், விடுமுறை நாள் வகுப்புகள் நடத்துவதைத் தீவிரக் கண்காணிப்பின் மூலம் முற்றிலுமாக ஒழிக்கவேண்டும். அரசின் ஆணையை மீறும் பள்ளிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். எளிமையான தேர்வுகள், பாடச்சுமைக் குறைப்பு, தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு ஆகியவையே மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

♦ தற்போது முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கல்வி ஆண்டில் மூன்று பருவத் தேர்வுகள் (முப்பருவ முறை) நடத்தப்படுகின்றன. 10-ஆம் வகுப்பில் முப்பருவ முறை இல்லை. ஆண்டிறுதிப் பொதுத் தேர்வுக்குக் கல்வி ஆண்டின் பாடநூல்களை முழுமையாகப் படிக்கவேண்டும். தனியார் பள்ளியினருக்கிடையிலான வணிகப் போட்டியினால், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு மதிப்பெண்களைக் கவனத்தில் கொண்டு ஒன்பதாம் வகுப்பிலிருந்தே பத்தாம் வகுப்புப் பாடங்களைக் குருட்டு மனனம் செய்ய வைக்கின்றனர். ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ முறையில் படித்துவிட்டுப் பத்தாம் வகுப்பில் ஆண்டு இறுதிப் பொதுத் தேர்வு முறைக்கு மாணவர்களைத் தள்ளுவது குறித்தும் கவலைப்படவேண்டும். பத்தாம் வகுப்புக்கு அகமதிப்பீட்டு மதிப்பெண்கள், மொழிப்பாடத்தாள்கள் ஒன்றாகக் குறைப்பு போன்ற நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவேண்டும்.

படிக்க:
பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

♦ தனியார் பள்ளி மாணவர்கள் தனிப்படிப்பிற்கும் சிறப்பு வகுப்பிற்கும் சென்று கற்கின்றனர். இதுபோன்ற வாய்ப்புகள் அற்றவர்களே அரசுப் பள்ளி மாணவர்கள். பள்ளி வகுப்பறை ஒன்றே அவர்கள் கல்வி பெறும் இடம். அங்கு பழுதற்ற, தரமான கல்வியை உறுதி செய்யும் கடமையினின்று கல்வித்துறை விலகிக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றம். உட்கட்டமைப்பு வசதிகளோடு ஆசிரியர் தான் கற்றலுக்கு உதவும் பெரிய கருவி. அரசுப் பள்ளி மாணவர்களுடைய முழுமையான கற்றல் வாய்ப்புகளுக்கான பல்வேறு தடைகளைக் குறித்து உடனடியாக அக்கறையுள்ள ஆழமான ஆய்வு நடத்தித் தீர்வு காணவேண்டும்.

♦ அரசுப்பள்ளிகளில் செப். 30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகின்றது. புதிய பள்ளிகளைத் தரம் உயர்த்துவது ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்படுகிறது. புதிய பணியிடங்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கும் தலைமையாசிரியர்கள், பாட ஆசிரியர்கள் நியமனம் உடனடியாக நடைபெறுவதுமில்லை. பல அரசுப் பள்ளிகளில் மேனிலை வகுப்புப் பாடங்களுக்கு நீண்ட நாட்களுக்கு ஆசிரியர் நியமனங்கள் நடப்பதில்லை. அரசுப் பள்ளிகளில் ஒரு கல்வி ஆண்டில் 120 நாட்களுக்கு முழுமையான கற்பித்தல் நடப்பதே சாத்தியமற்றதாக உள்ளது. அரசுப் பள்ளி மாணவர் எதிர்கொள்ளும் இப்படிப்பட்ட சிக்கல்களுக்கு விடிவு காண வேண்டும். அரசுப் பள்ளி மாணவர்களை நிர்வாகக் குறைபாடுகளுக்குப் பலிகடாவாக்குவதிலிருந்து விடுவிப்பதே அரசின் கல்வி நெறியாக இருக்க வேண்டும். கற்பித்தலும், கற்றலும் முழுமையாக நடைபெற்ற பின்னரே பொதுத்தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.

நாமக்கல் பிராய்லர் பள்ளிகள் !

♦ மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வு முடிவுகள் வந்தவுடன் அரசு-தனியார், ஆண்-பெண், சாதி, நகர்ப்புறம்-கிராமப்புறம் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்பட்டு ஆராயப்படும். அதுபோல, மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வு முடிவுகளையும் ஆராயவேண்டும். குறைகளைச் சரி செய்யவேண்டும். ஏற்கனவே +2 பொதுத்தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் பின்தங்கியுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் ஒரு விழுக்காட்டினர் (1%) கூடச் சேர முடியவில்லை. போட்டி நிறைந்த வேளாண்மை, கால்நடை மருத்துவம் போன்ற உயர்கல்விப் படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது. கல்வியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், கற்றல் – கற்பித்தல் குறைபாடுகள் போன்றவற்றால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்புகளில் சமமான போட்டிக்கு வழியில்லாமல் போவதைத் தடுப்பதற்கும் உடனே வழி காணவேண்டும்.

♦ தனியார் பள்ளியினரின் அழுத்தத்தாலும் அவர்களின் வணிக நோக்கத்தாலும் கல்வியில் அரசின் கொள்கை மாற்றங்கள் நடைபெறக் கூடாது. அரசுப்பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் நடவடிக்கைகள் இனியும் கல்வியில் தொடரக்கூடாது.

மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு புதிய அரசாணை 195–ஐத் திரும்பப் பெற வேண்டுகிறோம்.

இக்கூட்டறிக்கையில் பங்குபெறுவோர்:

1. பேரா. பிரபா கல்விமணி (தலைவர், தாய்த்தமிழ்க் கல்விப் பணி)
2. பேரா. ச. மாடசாமி (எழுத்தாளர், கல்விச் செயல்பாட்டாளர்)
3. கண. குறிஞ்சி (மாநிலத் தலைவர், மக்கள் சிவில் உரிமைக் கழகம் – பியூசிஎல்)
4. பேரா. சே. கோச்சடை (தலைவர், மக்கள் கல்வி இயக்கம்)
5. பெ. மணியரசன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம்)
6. பொழிலன் (ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம்)
7. செ. நடேசன் (மொழி பெயர்ப்பாளர், முன்னாள் ஆசிரியர் இயக்கப் பொறுப்பாளர்)
8. சீ.தினேஷ் (மாநிலச் செயலாளர், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் – AISF)
9. சே. இளையராஜா (தமிழ்நாடு மாணவர் முன்னணி)
10. சா.கிள்ளிவளவன் (தலைவர், பெற்றோர் மாணவர் சங்கம்)
11. முனைவர் விஜய் அசோகன் (ஆராய்ச்சியாளர், சால்மர்ஸ் பல்கலைக்கழகம், சுவீடன்)
12. பேரா. சி. ஜோசப்பிரபாகர் (கல்விச் செயல்பாட்டாளர்)
13. சு.மூர்த்தி (கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு)
14. உமாமகேஸ்வரி (அசத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர் அமைப்பு – A3)
15. சுடரொளி (குழந்தை நேயப்பள்ளிகள் கூட்டமைப்பு)
16. வீ.சிவகாமி (அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம்)
17. க.மகாலட்சுமி கண்ணன் (தெருவிளக்கு கல்வி அறக்கட்டளை)
18. தமிழாசான் (குழந்தைகளைக் கொண்டாடுவோம் கல்வி அமைப்பு)
19. செ. சி. நடராஜ் (சுடர் – பழங்குடிக் குழந்தைத் தொழிலாளர் கல்வி அமைப்பு)
20. சு.தங்கவேல், அ.இருளப்பன் (தமிழகக் கல்விப் பாதுகாப்பு இயக்கம்)
21. விழியன் (சிறார் இலக்கிய எழுத்தாளர்)
22. மு. சிவகுருநாதன் (ஆசிரியர், எழுத்தாளர்)
23. ரெ. சிவா (ஆசிரியர், கலகல வகுப்பறை)
24. க.சரவணன் (ஆசிரியர், எழுத்தாளர்)
25. செ.மணிமாறன் (ஆசிரியர், கல்விச் செயல்பாட்டாளர்)
26. தா. வே. நடராஜன் (கல்பாக்கம் அணுமின் நிலைய விஞ்ஞானி – பணிநிறைவு)
27. முனைவர் தி. ராமகிருட்டிணன் (‘பரிதி’) (எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்)
28. க. இரா. சுப்பிரமணியன் (காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம்)
29. சுப்ரபாரதிமணியன் (எழுத்தாளர்)
30. எல். பெர்னாட் (மனித உரிமைக் கல்விச் செயல்பாட்டாளர்)
31. ஜெ. சியாம்சுந்தர் (ஆசிரியர் – சமத்துவக் கல்வி)
32. அ.சத்தியமாணிக்கம் (கலிலியோ அறிவியல் மையம்)
33. அமரந்தா (எழுத்தாளர், தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள் சங்கம்)
34. இரா. முருகப்பன் (திண்டிவனம் நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு)
35. எழில் அ. சுப்பிரமணியன் (செயலாளர், தாய்த்தமிழ்க் கல்விப்பணி அறக்கட்டளை, திருப்பூர்)
36. ப. க. அருள்குமார் (செயலாளர், பசுவபட்டி அரசுப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு)

தொடர்புக்கு:
பேரா. பிரபா கல்விமணி
(தலைவர், தாய்த்தமிழ்க் கல்விப் பணி)
மின்னஞ்சல்: kalvimani@gmail.com

பெட்ரோல் டீசல் விலை உயர்வு ! கும்மிடிப்பூண்டியில் திரண்ட பு.ஜ.தொ.மு. தொழிலாளிகள் !

”பெட்ரோல் டீசல் விலை உயர்வு! எரிந்து சாம்பலாகிறது மக்களின் வாழ்வாதாரம்! ” என்கிற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் கடந்த 01.10.2018 தேதியன்று மாலை 05:30 மணியளவில் கும்மிடிப்பூண்டி பஜாரில் தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேற்கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தலைமை வகித்தார். பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து மட்டுமல்ல இந்த ஆர்ப்பாட்டம் என்று உரையை ஆரம்பித்தார். உழைக்கும் மக்களின் சேமிப்பான வங்கிப் பணம் தொடர்ந்து வங்கிக்கடன் என்கிற பெயரிலே கார்ப்பரேட்டுகளின் கொள்ளைகளுக்கும், மக்களின் வரிப்பணம் வியாபம், ரஃபேல் போன்ற இமாலய ஊழல்களுக்கும், தற்போது தினம் தினம் உயர்ந்து வரும் பெட்ரோல் – டீசல் விலையேற்றத்திற்கும் தொடர்பு இருக்கிறது என்பதை உணர்த்தவும்தான் இந்த ஆர்ப்பாட்டம் என்றார். ஒட்டுமொத்த மக்களை சூழ்ந்துள்ள இத்தகைய அபாயகரமான நிலைமைகளை எதிர்த்து முறியடிக்க புரட்சிகர தலைமையின் கீழ் பெருந்திரள் மக்கள் போராட்டம் கட்டியமைக்க வேண்டும் என்பதை மக்களுக்கு உணர்த்துவது இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என பதிவு செய்தார்.

கண்டன உரையாற்றிய மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார், மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் மக்கள் விரோத செயல்களை வரிசைகிரமமாக அம்பலப்படுத்தி அதன் தொடர்ச்சியாகத்தான் பெட்ரோல் – டீசல் விலை உயர்வையும் பார்க்க வேண்டும். பெட்ரோல் – டீசல் விலையேற்றத்திற்குள் ஒளிந்திருக்கும் முதலாளிகளின் இலாப நோக்கத்தையும் புள்ளி விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

படிக்க:
பெட்ரோல் டீசல் விலை உயர்வு : நாட்டு மக்களை மெல்லக் கொல்லும் விஷம் !
காங்கிரசு ஆட்சியைவிட பெட்ரோல் விலை ரொம்ப கம்மி – புளுகும் மோடி அரசு

மேலும், ”மத்திய மாநில அரசுகள் ஒருபக்கம் இந்தியாவை வல்லரசாக்குவோம் எனச் சவடால் பேசிக்கொண்டு, அநியாய வரிக்கொள்ளை மூலமாக மக்களை பொருளாதார ரீதியில் ஓட்டாண்டிகளாக்கிக்கொண்டு, மறுபக்கம் பார்ப்பன பாசிச நடவடிக்கைகள் மூலமாக மக்களை  பண்பாட்டு கலாச்சாரத்தின் மீதும் தாக்குதல் நடத்தி மக்களை பிளவுபடுத்துகிறது. இவற்றை அம்பலப்படுத்துகின்ற அல்லது எதிர்த்து போராடுகின்ற அமைப்புகள், ஜனநாயக சக்திகள் மீது அடக்குமுறை செலுத்தப்பட்டு வருகிறது” என கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு சாட்சியமாக தற்போது திருபெரும்புதூரில் நடைபெற்றுவரும் தொழிலாளர் போராட்டங்களை எடுத்துரைத்தார். யமஹா, ராயல் என்ஃபீல்டு, MSI ஆகிய ஆலைத் தொழிலாளர்கள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தங்கள் சட்டப்படியான உரிமைகளைக் கேட்டு போராடிவரும் சூழலில் அவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பதற்கு மாறாக ஆலை முதலாளிகளுக்கு நேரடியாகவே அரசு துணை நிற்பதை அம்பலப்படுத்தி இவற்றிற்கு எதிராக வலுவான மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி செயல்படக்கூடிய ஆலைத் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினரோடு திரளாக கலந்துகொண்டு கண்டன முழக்கமிட்டனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தின் இடையே பெட்ரோல் – டீசல் விலை உயர்வு குறித்து தொழிலாளி ஒருவர் எழுதிய பாடல் ஒன்றை சினிமா பாடல் வரிகளை மாற்றியமைத்து பாடப்பட்டது. இது மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு – 94444 61480.

டெல்லி விவசாயிகள் பேரணி – மோடி போலீஸ் நடத்திய தடியடி ! படக்கட்டுரை

மோடி அரசின் விவசாயி விரோதப் போக்கை கண்டித்து உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட், அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களை சேர்ந்த 70,000 விவசாயிகள் டிராக்டர்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்களுடன் டெல்லியை நோக்கிச் சென்றனர். கடந்த அக்டோபர் 2, 2018 அன்று டெல்லியின் பல்வேறு நுழைவுச் சாலைகளில் அவர்கள் போலீசால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மீறி பேரணி நடத்த முயன்ற விவசாயிகள் மீது தடியடி, தண்ணீர் பீரங்கிகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளைக் கொண்டு போலீசு நடத்திய தாக்குதலில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்துள்ளனர்.

விவசாயிகள் சங்கத் தலைவர்களுள் ஒருவரான மகேந்திர சிங்கால் தொடங்கப்பட்ட பாரதிய கிசான் சங்கம் செப்டம்பர் 23-ம் தேதி ஹரித்துவாரில் இருந்து ”விவசாயிகளின் புரட்சிப் பயணத்தை” (Kisan Kranti Yatra) தொடங்கியது. குறைந்தபட்ச ஆதரவு விலை, குறைவான டீசல் விலை மற்றும் மின்சார கட்டணம், நிபந்தனையற்ற கடன் தள்ளுபடி, ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடங்கப்பட்ட இந்த பயணம் டெல்லியின் ’கிசான் காட்’ பகுதியில் கடந்த அக்டோபர் 2 அன்று முடிவடைவதாகத் திட்டமிடப்பட்டது.

படிக்க:
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
ரூபாய் 95 கோடி வீதம் 615 விவசாயிகளுக்கு கொடுத்தாராம் மோடி ! யார் அந்த விவசாயிகள் ?

டெல்லி போலீசு, இந்தப் போராட்டத்திற்கு எவ்வித வாய்ப்பும் வழங்காமல் அதனை முடக்க, டெல்லியின் பல்வேறு இடங்களில் தடையுத்தரவு போட்டிருந்தது. அக்டோபர் 2 அன்று டெல்லிக்குள் நுழைய முடியாதவாறு உத்திரப்பிரதேச எல்லையிலேயே விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர். “நாங்கள் நொய்டா வழியாக டெல்லிக்கு செல்ல முயற்சி செய்தோம். ஏனெனில் அந்த வழி ஒன்று தான் திறந்திருப்பதாக ஒருவர் கூறினார். ஆனால் அந்த வழியும் மூடப்பட்டு விட்டது. அதனால் இப்பொழுது இங்கேயே உட்கார்ந்திருக்கிறோம்.” என்று முசாபர்நகர் பயணத்தில் கலந்து கொண்ட பிரதீப் பன்வார் எனும் விவசாயி கூறினார்.

டெல்லியின் பல்வேறு நுழைவுப்பாதைகளில் விவசாயிகள் தடுக்கப்பட்டனர். அங்கு முழக்கமிட்ட விவசாயிகளின் மீது தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி கலைந்து போகச் சொன்னது மத்திய அரசின் அடியாட்படையான டெல்லி போலீசு. கலைந்து செல்ல மறுத்த விவசாயிகள் மீது தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தது போலீசு.

டெல்லி – உ.பி. எல்லையில் பேரணியில் கலந்து கொண்ட விவசாயிகள் இரவு உணவு தயாரிக்கும் பணியில்..
டெல்லிக்குள் நுழையும்  எல்லையில் காவல்துறையினரின் தடுப்பரணை உடைத்துச் செல்ல முயலும் விவசாயிகள்
விவசாயிகளுடன் மோதலில் ஈடுபடும் போலீசு.
போராடும் விவசாயிகளை கலைக்க தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தும் போலீசு.
போராடும் விவசாயிகளை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் போலீசு.
பாரதிய கிசான் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட விவசாயிகள் புரட்சி பயணத்தின் ஒரு பகுதியாக டெல்லியை நோக்கி செல்லும் விவசாயிகளின் பேரணி.
டெல்லி – உ.பி. எல்லையில் பாதுகாப்பு அரண்களோடு தாக்குதலுக்குத் தயாராக இருக்கும் போலீசு
விவசாயிகள் பேரணி காசியாபாத்திற்குள் நுழையும் காட்சி.
காசியாபாத்தில் உள்ள ஒரு சாலையை பேரணி கடந்து செல்லும் காட்சி
விவசாயிகள் பேரணி காரணமாக போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் தேசிய நெடுஞ்சாலை எண் 24-ல் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

படங்கள் நன்றி: அவுட்லுக், Kisan Kranti Yatra
செய்தி நன்றி: தி வயர்,  ♦ Police Use Lathi Charge, Water Cannons to Stop Over 70,000 Farmers From Entering Delhi

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கி 7,000 கோடி – குஜராத் சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி !

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு தராமல் இருக்கும் சம்பள பாக்கி 7,000 கோடி, குஜராத்தை சேர்ந்த சண்டேசரா குழுமம் தர மறுக்கும் கடன் 5000 கோடி!

அருண் கார்த்திக்
உத்தர பிரதேஷ், உத்தரகண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் பாரதிய கிசான் யூனியன் என்ற அமைப்பின் கீழ் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கி அக்-2 அன்று பேரணியாக சென்றனர். மத்திய அரசிடம் அவர்கள் கோரிக்கையை அளிப்பதும், ஆட்சியில் இருப்பவர்கள் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதும் அவர்கள் திட்டம். இப்படி சென்ற விவசாயிகளை டெல்லி – உ.பி. எல்லையிலேயே தடுத்து நிறுத்தி அவர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியது மத்திய அரசுக்கு கீழ் இருக்கும் டெல்லி போலீஸ்!

இந்த விவசாயிகளின் கோரிக்கைகளில் ஒன்று விவசாய கடன் தள்ளுபடி.

IL&FS (Infrastructure Leasing & Financial Services) என்ற நிறுவனம் திவாலாகி அதில் நடந்துவரும் குழப்பங்கள், ஊழல் புகார்கள் பற்றி வெகு மக்கள் பத்திரிக்கைகள் எழுத ஆரம்பித்து விட்டன அதனால் அதை பற்றி நமக்கு கொஞ்சம் தெரியும். முக்கியமான தகவல், IL&FS வாங்கி செலுத்த முடியாமல் இருக்கும் கடன் தொகை சுமார் ரூ. 91 ஆயிரம் கோடி. IL&FS பற்றிய விபரங்களை வேறு கட்டுரையில் பார்ப்போம், முதலில் செய்தியில் அதிகமாக பேசப்படாத கடன் வாங்கி திருப்பி செலுத்தாத நிறுவனம் ஒன்று பற்றி பார்ப்போம்.

விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கும் டெல்லி போலீசு.

ஸ்டெர்லிங் பையோடெக் (Sterling Biotech) என்கிற நிறுவனம் பற்றி நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. இது சண்டேசரா என்ற குழுமத்தை சேர்ந்த நிறுவனம்.

இந்த நிறுவனம் கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் வாராக்கடனாக வகை படுத்தப்பட்ட நிறுவனம்.

இந்த நிறுவனம் சம்மந்தமாக அக்டோபர் 1 அன்று பிசினஸ் ஸ்டேண்டர்டு என்ற பத்திரிக்கையில் செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியின் தலைப்பு – ‘Sterling group firms offer steep haircuts to lenders’. இதன் தமிழாக்கம் – ‘ஸ்டெர்லிங் குழும நிறுவனங்கள் கடன் தந்தவர்களுக்கு ஒண்ட முடி வெட்டும் வாய்ப்பை வழங்குகின்றனர்’.

இந்த ‘haircut’ (முடி வெட்டுதல்) என்பது பெரு நிறுவனங்களிடம் இருந்து வங்கிகள் கடன் வசூலிக்கும்போது உபயோகப்படுத்தப்படும் ஒரு சொல்லாடல். எடுத்துக்காட்டாக, ஒரு நிறுவனம் ஒரு வங்கியிடம் 100 கோடி கடன் வாங்கிக்கொண்டு திவாலாகி 60 கோடி மட்டுமே திருப்பி செலுத்தினால், அந்த தருணத்தில் ‘வங்கிகள் 40 கோடி haircut எடுத்துக்கொண்டன’ என்று கூறுவார்கள்.

ஸ்டெர்லிங் குழும நிறுவனம் இவ்வாறு முடி வெட்டிக்கொள்ளும்படி (haircut) கடன் கொடுத்த வங்கிகளுக்கு கூறுகிறார்கள்.

ஸ்டெர்லிங் பையோடெக் (Sterling Biotech) பெற்றிருந்த கடன் ரூ. 4200 கோடி, இது கடனை காட்டாமல் திவாலான நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது இந்த நிறுவனம் ரூ. 2400 கோடி மட்டுமே செலுத்த முடியும் என்று கூறுகிறது. வங்கிகளின் நேரம் நல்ல நேரமாக இருந்தால் ரூ. 1800 கோடி மட்டும், ஸ்வாஹா! இல்லையேல் ரூ. 4200 கொடியும் ஸ்வாஹா!

IL&FS நிறுவன அலுவலகம்.

சண்டேசரா குழும நிறுவனங்கள் மொத்தமாக செலுத்தாமல் இருக்கும் தொகை சுமார் ரூ. 5000 கோடி என்று பத்திரிக்கைகள் கூறுகின்றன.

இந்த நிறுவனத்தின் முதலாளி யார் தெரியுமா? செப்டம்பர் மாதம் குஜராத்தை சேர்ந்த இன்னொரு தொழிலதிபர் கடனை செலுத்தாமல் தப்பி ஓடினார் என்றும் அவர் சுருட்டிய தொகை ரூ. 5000 கோடி என்றும் ஒரு செய்தி வந்ததே, அவர் தான் இந்த கம்பனியின் முதலாளி. அவர் பெயர் நிதின் சண்டேசரா.

இது இப்போது ஆரம்பித்த பிரச்சனை அல்ல. 2012லேயே ஸ்டெர்லிங் குழுமத்துக்கு வங்கிகள் கொடுத்த ரூ. 6000 கோடி கடன் வாராக்கடனாக மாறும் அபாயம் உள்ளது என செய்தி வந்துள்ளது. வழக்கம் போல, அதிக கடன் கொடுத்த வங்கிகள் – SBI, PNB, IOB போன்ற அரசு வங்கிகள்.

படிக்க:
வராக்கடன் திவால் நிறுவனங்களை காப்பாற்ற விரும்பும் மோடி அரசு !
வங்கி மறுமுதலீடு : தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி !

இதோடு முடியவில்லை. 2011 இல் வருமான வரித்துறை ஸ்டெர்லிங் நிறுவன அலுவலகங்களில் ரெய்டு நடத்தி இருக்கிறார்கள். அதில் சில ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதில் இருந்து தப்பிக்க வருமான வரி துறை அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் லஞ்சம் வழங்கி உள்ளது, இதை CBI விசாரித்து 2017 இல் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இதுபோக ஹவாலா முறைகேடு செய்துள்ளதாக அமலாக்கத்துறை துறை வழக்கு பதிவு செய்தி விசாரித்து வருகிறது.

நிதின் சண்டேசரா.

இந்த மாதிரி உத்தமர்களுக்கு நாடு மக்கள் என்ற பேதம் எல்லாம் இல்லை. நைஜீரியாவில் எண்ணெய் வளங்களை எடுத்துக்கொண்டு 30 மில்லியன் டாலர் ராயல்ட்டி செலுத்தாமல் ஏமாற்றியதற்காக அந்த நாட்டு அரசு குழு ஒன்றால் ஸ்டெர்லிங் பையோடெக் நிறுவனம் விசாரிக்கப் படுகிறது என்ற செய்தி ஜூலை 2018-இல் வந்துள்ளது.

நிதின் சண்டேசரா இப்போது இருப்பதாக கருதப்படும் நாடும் நைஜீரியா தான்.

இந்த சண்டேசரா குழுமத்தின் வழக்கறிகராக இருந்தவர் யார் தெரியுமா? முகுல் ரோஹத்கி. முகுல் யார் தெரியுமா? நாட்டின் உயர்ந்த வழக்கறிஞர் பதவியான ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் பதவியை 2014 முதல் 2017 வரை வகித்தவர். முகுல், அனில் அம்பானியின் வழக்கறிஞராக இருந்தவர் என்பது கூடுதல் தகவல்.

இவை அனைத்திலும் சிறப்பு என்னவென்றால், மெகுல் சோக்சி தொடங்கி, நீரவ் மோடி, ஜெயின் மேத்தா என இந்த நிதின் சண்டேசரா வரை அனைவரும் குஜராத்தை சேர்ந்த முதலாளிகள். எதற்கெடுத்தாலும் குஜராத் மாடல் என்று கொக்கரிப்பவர்கள் ஏனோ இதற்கு மட்டும் வாய் திறப்பது இல்லை!

ஆக மொத்தத்தில், மக்களின் பணம் இன்னொரு 4300 கோடி ரூபாய் ஸ்வாஹா ஆகிறது, ஆகி உள்ளது!

போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது…

இந்த கோடிகளை வெறுமனே சொன்னால் புரிவது கொஞ்சம் கடினமாக உள்ளது. அதனால் புரிந்து கொள்ள வேறொன்றுடன் ஒப்பிடுவோம்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடம் அரசு பிடித்தம் செய்த நிலுவைத் தொகையான ரூ.7,000 கோடியை உடன் அளித்தல், ஊதிய முரண்பாடு களைதல், முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர். தற்போது அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் முறையான உடன்பாடு ஏற்படாததால் இன்று (அக்டோபர் 4, 2018) தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திக் கோட்டையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர். அதன்படி கோட்டையை முற்றுகையிட்டனர். இப்படி தொழிலாளிகளின் ஊதியத்தில் கை வைக்கும் அரசு முதலாளிகளுக்கு கடனையே தள்ளுபடி செய்கிறது!

சண்டேசரா கேட்பதும் கடன் தள்ளுபடி தான், டெல்லியில் அடி வாங்கி ரத்தம் சிந்திய விவசாயிகள் கேட்பதும் கடன் தள்ளுபடி தான். என்ன, நிதின் சண்டேசராவால் 2012-இல் இருந்து வழக்கு இருந்தும் கைதாகாமல் இருக்க முடியும்; நைஜீரியாவுக்கு தப்ப முடியும்; ஆனால் இந்த விவசாயிகளால் அவர்கள் நாட்டின் தலைநகருக்கு கூட செல்ல முடியாது! இந்த நிலையில் கடனை எங்கே தள்ளுபடி பண்ணுவது!

செய்தி ஆதாரம்:

– அருண் கார்த்திக்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : விழுப்புரம் மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டச் செய்தி – படங்கள்

பெட்ரோல் – டீசல் விலை உயர்வு! இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது!, என்ற தலைப்பில் கடந்த 29-09-2018 (சனி) அன்று மாலை 5 மணியளவில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் விழுப்புரம் மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம்  உளுந்தூர்பேட்டை வட்டார ஒருங்கிணைப்பாளர் தோழர், கிருஷ்ணமூர்த்தி  தலைமை தாங்கினார். சி.பி.ஐ. மாவட்ட செயலாளர்  தோழர் A.V.சரவணன், வி.சி.க. மாவட்ட செயலாளர் தோழர் சு.ஆற்றலரசு, மருதம் ஒருங்கிணைப்பாளர் தோழர், ரவி கார்த்திகேயன், பு.மா.இ.மு. விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் தோழர் ஞானவேல், மக்கள் அதிகாரம் விழுப்புரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன்ராஜ், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு ஆகியோர் கண்டன உரையாற்றினார், இந்த கூட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய முன்னணியாளர்கள் தங்களது உரையில், பெட்ரோல் – டீசல் விலை என்பது அன்றாடம் உயர்ந்துகொண்டே போகின்றது; இந்த விலை உயர்வு என்பது அன்றாட உழைக்கும் மக்களை பெரிதும் பாதிக்கும்; உணவு பொருட்களின் விலை உயரும் என்பதை சுட்டிக்காட்டினர்.

சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.38. ஆனால் மத்திய, மாநில அரசுகளின் வரி விதிப்பினால் நமக்கு ரூ.84 க்கு விற்கபடுகின்றது. மக்களின் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய மத்திய அரசோ, ”பெட்ரோல் விலை உயர்வை எங்களால் தடுக்க முடியாது; அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்றும்; விலை நிர்ணயத்தை GST க்குள் கொண்டுவர முடியாது; வேண்டும் என்றால் மாநில அரசின் வரியை குறைக்க சொல்லுங்கள்” என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டிருக்கும் பி.ஜே.பி. அரசை கண்டித்தனர். மேலும், பெட்ரோல் விலை உயர்வு மட்டுமின்றி, மக்களை பாதிக்கக்கூடிய எந்த ஒரு விசயத்திற்கும் வாய் திறக்க மறுக்கும் அடிமை எடப்பாடி அரசை கண்டித்தும் உரையாற்றினர்.

படிக்க:
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு : தண்டல் – வட்டி வாங்காத ஆட்டோகாரனே கெடையாது !
பெட்ரோல் விலை உயர்வு : இனியும் பொறுக்க முடியாது !

இதற்கிடையில் மாற்று கட்சி தோழர்கள் உரையாற்றியபோது மக்கள் அதிகாரம் தோழர்களின் மீதான அரசின் அடக்குமுறைகளை சுட்டிக்காட்டியும், இவ்வளவு அடக்குமுறைகளுக்கு இடையேயும் அவர்களின் சமரசமற்ற போராட்ட குணத்தை வாழ்த்தினர். மேலும், மக்கள் அதிகாரத்திற்கு என்றென்றும் நாங்கள் துணைநிற்போம் என்றனர்.

இறுதியாக பேசிய தோழர் ராஜு அவர்கள் மோடி அரசின் அனைத்துத் திட்டங்களும் படுதோல்வி, அதற்கு வெட்டி விளம்பர செலவு 4300, கோடி. இதனை மூடி மறைக்கவே தன்னை கொலை செய்ய சதி என்ற நாடகம் என்பதை அம்பலப்படுத்தினார். கார்ப்பரேட்டு முதலாளிகளுக்கு சேவை செய்துவரும் மோடி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்துஸ்தானிய ஏரோநாடிகல் லிமிடெட் என்ற பொதுத்துறை நிறுவனத்திடம் இருந்து எந்த அனுபவமும் இல்லாத, 30,000 கோடி கடனில் சிக்கித்தவிக்கும் அனில் அம்பானிக்கு கை மாற்றி கொடுத்து தான் ஒரு கார்ப்பரேட்டின் கைகூலி என்பதை நிரூபித்து இருக்கின்றார் எனக் கூறினார்.

நாட்டையே காவிமயமாக்க துடிக்கும் BJP, RSS கும்பல் வளர்ச்சி என்ற பெயரில் தமிழகத்திற்கு எதிராகக் கொண்டுவரும் அழிவுத் திட்டங்கள்; பெரும்பான்மையான உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை பறிக்கும் நீட்; பல்கலைக்கழக மானியக் குழு கலைப்பு போன்றவற்றிற்கு எதிராகப் போராட வேண்டும் என்றார். தமிழகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழல், குட்கா, டாஸ்மாக், பாலியல் வக்கிரங்கள் என சீரழிந்து கிரிமினல் கும்பல்களாக தமிழக அரசும், காவல்துறையும் மாறிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

மேலும், தங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடிவரும் மக்களை தீவிரவாதிகள் என்றும், சமூகவிரோதிகள் என்றும் முத்திரை குத்தி தன்னுடைய அதிகார பலத்தால் அடக்கி ஒடுக்க நினைக்கும் அரசின் சதித்தனத்தையும் அம்பலப்படுத்தினார். இந்த ஜனநாயக விரோத போக்கை இனியும் சகித்துக்கொள்ள வேண்டுமா? அனைத்து அதிகாரமும் மக்களுக்கே, நாம் இழந்ததை மீட்டெடுக்க மக்கள் அதிகாரமாய் மாறுவோம் என அறைகூவல் விடுத்தார்.

தகவல்:

விழுப்புரம் மண்டலம்.

மீடியாவை மிரட்டும் மோடி ! புதிய கலாச்சாரம் மின்னூல்

ஊடகங்களை மிரட்டும் மோடி

மீடியாவை மிரட்டும் மோடி

னநாயகத்தின் நான்காவது தூண் என மதிக்கப்படும் பத்திரிகைத் துறை மோடி பாசிசத்தின் பிரச்சார பீரங்கியாக மாறிக் கொண்டிருக்கிறது. நாடறிந்த ரஃபேல் ஊழலை பல ஊடகங்கள் வெளிநாட்டு சதி என விவாதிக்கின்றன.

சென்ற 2014 நாடாளுமன்றத் தேர்தலில் குஜராத்தில் வேர் கொண்டிருந்த மோடியை கார்ப்பரேட் ஊடகங்கள் இந்திய அளவில் சந்தைப்படுத்தின. அன்று முதல் மீடியாவின் மோடி சேவை தொடங்கியது. இந்த சேவைக்கு பணிய மறுத்த பத்திரிகையாளர்களின் கதி என்ன?

அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அடக்கி வாசிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டார்கள். கவுரி லங்கேஷ் போன்றவர்கள் வாழ்வதற்கே அனுமதியில்லை எனக் கொல்லப்பட்டார்கள். சில ஊடகங்களுக்கு வரும் விளம்பரங்கள் நிறுத்தப்பட்டன. மோடியை எதிர்த்து எழுதுபவர் எவருக்கும் தேசிய – பிராந்திய ஊடகங்களில் இடமில்லை !

இந்தப் பத்திரிகையாளர்கள் இ.பி.டபிள்.யூ, தி இந்து, ஹிந்துஸ்தான் டைம்ஸ், அவுட் லுக் என நாடறிந்த ஊடகங்களில் பணியாற்றியவர்கள். சிலர் தலைமை ஆசிரியராகவே பணியாற்றியவர்கள்.

தமிழகத்தில் கூட அற்ப விசயங்களுக்காக பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுகிறார்கள். எச்.ராஜாவும் எஸ்.வி.சேகரும் ரவுடி போல பேசுகின்றனர். முகவரியே இல்லாத தமிழக பா.ஜ.க. தலைவர்கள், காவி ஆதரவு சமூக ஆர்வலர்கள் அனைவரும் தமிழக ஊடகங்களால் கடந்த நான்காண்டுகளில் பிரபலமாக்கப்பட்டிருக்கிறார்கள். அர்னாப் கோஸ்வாமி போன்றோரோ சங்க பரிவாரத்தை எதிர்க்கும் எவரையும் தேசவிரோதி என பரபரப்பாக சித்தரிக்கின்றனர்.

மராட்டிய போலீசால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்ட ஐந்து மனித உரிமை செயற்பாட்டாளர்களை நகர்ப்புற நக்சல்கள் என மோடி ஆதரவு ஊடகங்கள் முத்திரை குத்தின. இறுதியாக போலீசின் செயலுக்கு தடை போட மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம்.

எழுதும் கைகளை முறித்தால் உண்மைகள் பரவாது, பொய்கள் ஆட்சி செய்யும் என்பது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் துணிபு! அதை முறியடிக்க வேண்டிய அவசியத்தை எடுத்துரைக்கிறது இந்தத் தொகுப்பு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்

மீடியாவை மிரட்டும் மோடி ! – புதிய கலாச்சாரம் அக்டோபர் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்

ஊடகங்களை மிரட்டும் மோடி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

மீடியாவை மிரட்டும் மோடி ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • ஊடகங்களை கொலை செய்வது எப்படி ? மோடி கையேடு!
  • இரண்டே மாதத்தில் ரங்கராஜ் பாண்டே ஆவது எப்படி?
  • மோடி அரசின் கூலிப்படையா பத்திரிகையாளர்கள் ?
  • 2019 தேர்தலுக்காக மோடி பிரச்சாரத்தை ஆரம்பித்தது தினத்தந்தி
  • அடுத்த ஆட்சியும் பா.ஜ.க.தான் தினமணி – தினமலர் தலையங்க ஆவேசம்!
  • டைம்ஸ் ஆப் இந்தியா : பத்திரிகை அல்ல! கார்ப்பரேட் + காவிகளின் விளம்பர நிறுவனம்!
  • சதீஷ் ஆச்சார்யா : அவர்கள் குனியச் சொன்னார்கள் இவர்கள் படுத்தேவிட்டார்கள்!
  • நியூஸ் 18 பத்திரிகையாளர்கள் வேலைநீக்கமா? பத்திரிகையாளர்களே பிளவுபடுங்கள்!
  • உண்மையைப் பேசாதே! பத்திரிகையாளர் மீது தொடரும் மோடி அரசின் ஒடுக்குமுறை!
  • மோடிக்கு பயந்து ஆசிரியரை நீக்கிய ஹிந்துஸ்தான் டைம்ஸ் !
  • தி இந்துவுக்கு ஒரு கேள்வி : எது ஊடக நெறி ?
  • அமித்ஷா சொத்து விவர நீக்கம் அறிவிக்கப்படாத அவசரநிலை!
  • செய்தியை ‘கவர்’ செய்ய ‘கவர்’ கொடுத்த ஒடிசா பாரதிய ஜனதா!
  • EPW : ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி – அதானி கூட்டணி!
  • குமுதம் புரோக்கரை வைத்திருப்பது அ.தி.மு.க-வா – பா.ஜ.க-வா?
  • பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
  • கோப்ரா போஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்!

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்

இலுமினாட்டி
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

ஆன்மீகக் கிரிமினல்கள்
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் !
அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more