Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 754

ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ.-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!

58

ஹரி மசூதிஇருபது ஆண்டுகளுக்கு முன்பு, அயோத்தியில் பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய கையோடு ஆர்.எஸ்.எஸ். சிவசேனா கும்பல் மும்பய் நகரில் நடத்திய கலவரத்தின்பொழுது, அந்நகரின் வடாலா பகுதியில் அமைந்துள்ள ஹரி மசூதியில் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்கள் மீது மும்பய் மாநகர போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 முசுலீம்கள் கொல்லப்பட்டனர்; மற்றொருவர் ‘காணாமல்’ போனார்.  மும்பய் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இப்படுகொலை சம்பவத்தைக் கடந்த மூன்றாண்டுகளாக விசாரித்து வந்த மையப் புலனாய்வுத் துறை, “இத்துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை உறுதி செய்யும் சுதந்திரமான சாட்சியங்கள் (Neutral witnesses)  எதுவுமில்லை” என நீதிமன்றத்தில் கடந்த டிசம்பரில் அறிக்கை அளித்திருக்கிறது.  இத்துப்பாக்கிச் சூடு சம்பவமும், அது பற்றி மையப் புலனாய்வுத் துறை விசாரணை நடத்தி முடிவுக்கு வந்த விதமும் இந்து மதவாதம் அரசு இயந்திரத்தின் பல்வேறு பிரிவுகளிலும் எத்துணை ஆழமாக ஊடுருவி நிறைந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.

ஜனவரி, 1993  இல் ஆர்.எஸ்.எஸ்.  சிவசேனை கும்பல் தலைமையில் நடந்த இந்து மதவெறிக் கலவரம் மும்பய் நகரெங்கும் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த ஒரு மதிய வேளையில், போலீசு உதவி ஆய்வாளர் நிகில் காப்சே தலைமையில் வந்த போலீசு பட்டாளமொன்று ஹரி மசூதியைச் சுற்றி வளைத்தது.  மதிய வேளை தொழுகை நடந்துகொண்டிருந்த நேரமது.  அக்காக்கிச் சட்டை கிரிமினல் கும்பல் எவ்வித முன்னெச்சரிக்கையும் செய்யாது, மசூதிக்குள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த முசுலீம்களை நோக்கிச் சுட்டதில் நான்கு பேர் மசூதிக்குள்ளேயே குண்டடிபட்டு இறந்து போனார்கள்.  ஒருவர் மசூதியிலிருந்து வெளியேற முயன்றபொழுது, நேருக்கு நேராக மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டார்.  சுட்டுக் கொல்லப்பட்ட முசுலீம்களின் உடல்களை போலீசு வேனில் எடுத்துப்போட்டு அப்புறப்படுத்திய மற்றொரு முசுலீம் அதற்குப் பின்‘காணாமல்’ போனார்.  பலர் படுகாயமடைந்தனர்.  இத்துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்துவதற்காக, ஹரி மசூதிப் பகுதியில் முசுலீம்கள் கலவரத்தில் இறங்கியதாகவும் கொலைவெறியோடு இந்துக்களைத் தாக்கியதாகவும் மும்பய் போலீசாரால் கதை புனையப்பட்டதோடு, அப்பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் 50 முசுலீம்கள் கைது செய்யப்பட்டனர்.

இத்துப்பாக்கிச் சூடு நடந்த ஒருசில நாட்களிலேயே அது பற்றி விசாரணை நடத்திய சர்வதேச பொதுமன்னிப்புக் கழகம் (Amnesty International) மும்பய் போலீசின் கட்டுக்கதையை அம்பலப்படுத்தியதோடு, நிகில் காப்சேயின் தலைமையில் துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசு பட்டாளத்தைக் குற்றவாளியாகவும் அறிவித்தது.  மும்பய்க் கலவரம் பற்றி விசாரணை நடத்துவதற்காக மகாராஷ்டிர மாநில அரசால் நியமிக்கப்பட்ட சிறீகிருஷ்ணா கமிசனும், “மனிதத்தன்மையற்ற முறையிலும் மிகக் கொடூரமாகவும் நடத்தப்பட்ட இத்துப்பாக்கிச் சூட்டை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது” எனத் தீர்ப்பளித்தது.

இத்துப்பாக்கிச் சூடு பற்றிய கிருஷ்ணா கமிசனின் பரிந்துரையை மகாராஷ்டிரா மாநிலத்தைப் பத்தாண்டுகளுக்கு முன்பு ஆண்ட பா.ஜ.க.  சிவசேனா கூட்டணியும் சரி, கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு  தேசியவாத காங்கிரசு கூட்டணியும் சரி, ஒரு பொருட்டாக மதிக்கவேயில்லை.  கலவரத்தின்பொழுது இந்து மதவெறி கிரிமினல் கும்பலுக்குத் துணையாக நின்ற போலீசு அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு அளித்து கௌரவிக்கும் வேலையை இவ்விரண்டு அரசுகளுமே சிரமேற்கொண்டு செய்தன.

இந்நிலையில் இத்துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் படுகாயமடைந்த ஃபரூக் மாப்கர், அப்பாவி முசுலீம்களைச் சட்டவிரோதமான முறையில் படுகொலை செய்த போலீசாரைத் தண்டிக்கக் கோரிப் போராடத் தொடங்கினார்.  இதனையடுத்து, நிகில் காப்சே உள்ளிட்ட போலீசார் மீது துறைரீதியான விசாரணை என்ற நாடகத்தை நடத்தி, அவர்களை உத்தமர்களாக அறிவித்தது, மாநில அரசு.  இதன் பின்னர், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஹரி மசூதி படுகொலை உள்ளிட்டு, அக்கலவரத்தின்பொழுது நடந்த பல படுகொலை சம்பவங்களை விசாரிப்பதற்காகச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்பட்டது.  மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த போலீசு அதிகாரிகளைக் கொண்டே உருவாக்கப்பட்ட இச்சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஹரி மசூதி உள்ளிட்ட பெரும்பாலான வழக்குகளை ஊத்தி மூடும் வேலையைச் சட்டப்படியே செய்து முடித்தது.  இனி மாநில அரசை நம்ப முடியாது என்ற நிலையில் இப்படுகொலை பற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி ஃபரூக் மாப்கர் வழக்கு தொடுத்தார்.

இவ்வழக்கு மும்பய் உயர் நீதிமன்றத்தில் நடந்தபொழுது, “இது சாதாரணமான வழக்கு” எனக் கூறி, இவ்வழக்கு விசாரணையை மீண்டும் மகாராஷ்டிரா போலீசிடமே தள்ளிவிட முயன்றது, சி.பி.ஐ.  எனினும், ஹரி மசூதி படுகொலையை சி.பி.ஐ. விசாரிக்குமாறு மும்பய் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  மகாராஷ்டிரா மாநில அரசு இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த மேல்முறையீடும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இம்மேல்முறையீட்டின்பொழுது, “போலீசு அதிகாரி நிகில் காப்சே இவ்வழக்கின் காரணமாக கடந்த 16 ஆண்டுகளாகப் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக” வாதாடியது, காங்கிரசு கூட்டணி அரசு.

இத்துணை இழுத்தடிப்புகள், எதிர்ப்புகளுக்குப் பின் விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்து உயிர் பிழைத்த முசுலீம்களின் சாட்சியங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தது.  “அவர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்கள்; எனவே, அவர்களின் சாட்சியத்தை சுதந்திரமான சாட்சியமாகவோ, நம்பகமான சாட்சியமாகவோ கருத முடியாது” என அவர்களுக்கு உள்நோக்கம் கற்பித்து அந்த சாட்சியங்களை நிராகரித்தது. மேலும், நிகில் காப்சே உள்ளிட்ட போலீசு அதிகாரிகளுக்கு எதிராகச் சாட்சியம் அளித்த முசுலீம்கள் அனைவரின் மீதும் கலவர வழக்குகள் பதிவாகியுள்ளன என்ற காரணத்தையும் வலிந்து சுட்டிக்காட்டியது.  அவ்வழக்குகள் பொய் வழக்குகள் என்பதையோ, அந்த உண்மை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்கள் அனைவரும் நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்டதையோ ஒதுக்கி வைத்துவிட்ட சி.பி.ஐ., பாதிக்கப்பட்ட முசுலீம்களைக் குற்றவாளிகளாகவே கருதி ஒருதலைப்பட்சமாகவே தனது விசாரணையை நடத்தியது.

இவ்விசாரணையின்பொழுது, பக்க சார்பு அற்றவர்கள் என்று தன்னால் மதிப்பிடப்பட்ட இரு சாட்சிகளும்  சி.பி.ஐ.ஆல் விசாரிக்கப்பட்டனர். அதிலொருவர் இந்து; மற்றொருவர், முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர்.  அந்த இந்துவின் சாட்சியம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஃபரூக் மாப்கர் அளித்த சாட்சியத்திலிருந்து வேறுபட்டிருந்தது.  முசுலீம் மதத்தைச் சேர்ந்தவர் அளித்த சாட்சியமோ, பாதிக்கப்பட்ட முசுலீம்கள் அளித்த சாட்சியங்களை ஒத்திருந்தது.  ஒரு இந்து அளித்த சாட்சியத்தை நம்பத்தக்கது என்று ஏற்றுக்கொண்ட சி.பி.ஐ., மற்றொரு சாட்சியம் அளித்த வாக்குமூலத்தை, அவர் முசுலீம் என்பதனாலேயே நிராகரித்தது.

ஹரி மசூதிஇவை அனைத்தும் சி.பி.ஐ. நடத்திய விசாரணை ஆர்.எஸ்.எஸ். சார்பு இந்து மதவாதக் கண்ணோட்டத்தில், அதாவது, இந்து பொய் சொல்லமாட்டான், துப்பாக்கிச் சூடு சட்டவிரோதமாக நடந்திருந்தாலும், துப்பாக்கியால் சுட்டவன் நம்ம ஆளு என்ற முசுலீம் வெறுப்பு அரசியல் அடிப்படையிலும்; இந்து மதவெறி கொண்ட போலீசாரைக் காப்பாற்ற வேண்டும் என்ற உள்நோக்கத்தோடும்தான் நடத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன.  ஃபரூக் மாப்கர் சி.பி.ஐ. அளித்துள்ள இந்த அறிக்கையை நிராகரிக்கக் கோரி தற்பொழுது வழக்கு தொடுத்திருக்கிறார்.

குஜராத் இனப் படுகொலையின்பொழுது நடந்த குல்பர்க் சொசைட்டி படுகொலைகளுக்கும் மோடிக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு, மோடிக்கும் அப்படுகொலைக்கும் தொடர்பில்லை என அறிக்கை அளித்திருப்பதாகக் கூறப்படுவதையும், ஹரி மசூதி படுகொலை வழக்கில் தொடர்புடைய காக்கிச்சட்டை கிரிமினல்களை விடுவித்து சி.பி.ஐ., இறுதி அறிக்கை அளித்திருப்பதையும் வெவ்வேறானதாகப் பிரித்துப் பார்க்க முடியாது.

அதுபோல, குஜராத் இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் ஆர்.எஸ்.எஸ். கும்பலையும், மும்பய்க் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்க மறுத்துவரும் காங்கிரசையும் இருவேறு துருவங்களாகப் பார்க்க முடியாது.

அப்சல் குருவுக்கும், கசாபுக்கும் தூக்கு தண்டனை விதிப்பதில் காட்டப்பட்ட நீதிமன்ற முனைப்பும் வேகமும், பால் தாக்கரே, அத்வானி, மோடி உள்ளிட்ட இந்து மதவெறி பாசிச கிரிமினல்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதில்கூடக் காட்டப்படுவதில்லை.  நரேந்திர மோடி மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஜாகியா ஜாஃப்ரி கடந்த பத்தாண்டுகளாகவும், நிகல் காப்சே மீது கொலைக் குற்றச்சாட்டினைப் பதிவு செய்யக் கோரி ஃபரூக் மாப்கர் கடந்த இருபது ஆண்டுகளாகவும் சட்டப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இந்து மதவெறிக் கலவரங்களால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குச் சட்டப்படியான உரிய நீதியை வழங்காமல் அலைக்கழிப்பதன் மூலம், அவர்களை இந்திய அரசு இரண்டாம்தர குடிமக்களாக நடத்துகிறது என்பது மட்டுமல்ல,  முசுலீம் பயங்கரவாதம் வளர்வதற்கான வாய்ப்பினையும் வாரி வழங்கி வருகிறது.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!

55

வல்லரசு முகத்தில் வழியும் மலம்கொத்தடிமை முறையா? அதெல்லாம் அந்தக் காலமுங்க என்பதுதான் பெரும்பாலோனோரின் எண்ணம். இது பற்றி, அத்தி பூத்தாற் போலத் தினப் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் எளிதில் கடந்து சென்று விடுகிறோம்.

உண்மை அத்தனை எளிதில் கடக்கக் கூடியதாய் இல்லை. விழுப்புரம் மாவட்டம் திருவாக்கரையில் கல்குவாரி ஒன்றில் வேலை செய்கிறார் 40 வயதான வெள்ளையன். கடந்த ஜனவரி 31ஆம் தேதி காலை இவரது வீட்டுக்கு வந்த கல்குவாரி முதலாளி துரையின் அடியாட்கள் இவரைச் சரமாரியாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். கல்குவாரியில் சம்மட்டி ஒன்றைத் திருடிவிட்டதாக இவர் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். தன்னுடன் வேலை செய்யும் வீரப்பன் என்பவரது சம்மட்டியை  இவர் 300 ரூபாய்க்கு விற்றுக் கொடுத்ததுதான் இவர் மீது சந்தேகப்படக் காரணம். இந்தச் சந்தேகத்துக்கு விசாரணை கிடையாது. நேரடியாகத் தண்டனைதான்.

முதலாளி துரையிடம், தான் திருடவில்லை  என்று வெள்ளையன் மன்றாடியுள்ளார்; ஒரு கட்டத்தில் சம்மட்டிக்கான தொகையை வேலை பார்த்துக் கழித்துக் கொள்வதாகச் சொல்லி, தன்னை விட்டுவிடக் கோரிக் கெஞ்சியுள்ளார்.  எதையும் பொருட்படுத்தாத கல்குவாரி முதலாளி, உன்ன மாதிரி ஆட்களுக்கு இப்படி தண்டனை கொடுத்தால்தான் பார்க்கிற மத்தவனுக்கும் புத்தி வரும் என்று சொல்லி, அங்கேயே ஒரு சட்டியைக் கொண்டுவரச் செய்து, மறைவாகச் சென்று தானே அதில் மலம் கழித்து, அதனைக் கொண்டு வந்து வெள்ளையனின் வாயில் திணித்துள்ளான்.

பிற கல்குவாரி தொழிலாளர்கள் மற்றும் வெள்ளையனின் மனைவி முன்னிலையில் இந்தக் கொடுமை அரங்கேறியுள்ளது. பிறகு வெள்ளையனைக் கொடூரமாக தாக்கியுள்ளனர்.  அடி தாங்காமல் மயங்கிச்  சரிந்தவரை  அடைத்து வைத்துக் கொண்டனர். இக்கொடுமைகளை  பார்த்தேயாக வேண்டும் என்று இவரது மனைவியை அடித்து உதைத்து நிர்பந்தித்துள்ளனர். இவையனைத்தையும் செல்பேசியில் படம்பிடித்தும் வைத்துள்ளான் முதலாளி துரை.  வெள்ளையனுடைய மற்றும் அவரது மாமனார் வீடுகளிலுள்ள பொருட்களைக்  கைப்பற்றிக் கொண்டு வீடுகளையும் பூட்டி வைத்துள்ளனர். வெள்ளையனின் 9 வயது மகளுக்கு இச்சம்பவம் பற்றி நினைவு கூர்ந்தாலே பேச்சுக் குழறுகிறது.

ஒரு சம்மட்டிக்காகவா இத்தனை வக்கிரமும், கொடூரமும் நிறைந்த வன்கொடுமை? சந்தேகத்தின் பேரிலேயே மொத்த வாழ்வையும் சீரழிக்கும் தண்டனையை கொடுக்கும் அதிகாரத்தைக் கல்குவாரி முதலாளிக்கு வழங்கியது யார்? எதற்கும் அஞ்சாமல் இத்தகைய கொடூரத்தை இழைக்கும் ஆண்டைத் திமிரை கல்குவாரி முதலாளி எங்கிருந்து பெற்றான்? 300 ரூபாயை முதலாளி முகத்தில் விட்டெறிந்துவிட்டு வேறு வேலைக்குப் போக வழியில்லாத அடிமை நிலையில் வெள்ளையனைக் கட்டுப்படுத்தி வைத்துள்ளது எது? இத்தனை கொடூரமும் கண்முன்னே நிகழ்ந்த போதும் எதிர்க்க இயலா கையறு நிலையில் கல்குவாரியில் வேலை செய்பவர்களைக் கட்டிப் போட்டு வைத்திருந்தது எது? இக்கேள்விகளுக்கு மனசாட்சியுள்ள அனைவரும் விடை காண வேண்டியுள்ளது.

கொத்தடிமை முறை ஒழிப்புச் சட்டம் 1976இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் போலவே கொத்தடிமை முறைக்குக் காரணமான சமூகப் பொருளாதார  காரணிகளை ஒழிக்க எந்தத் திட்டமும் இல்லாத வெறும் காகிதச் சட்டம்.  1978இல் நடத்தப்பட்ட  கணக்கெடுப்பின்படி 26 லட்சம் கொத்தடிமைகள் நாடு முழுவதும் இருந்தனர். 1995இல் தமிழகத்தில் மட்டும் 10 லட்சம் கொத்தடிமைகள் இருந்துள்ளனர் என உச்ச நீதிமன்றத்தின் அறிக்கை சொல்கிறது.  இன்றைய நிலையில், தமிழ்நாட்டு கல்குவாரிகளில் மட்டும் 5.5 லட்சம் கொத்தடிமைகள் வேலை செய்கின்றனர் என தமிழ்நாடு கல்லுடைக்கும் தொழிலாளர் சங்க நிறுவனர் ஞானமணி சொல்கிறார். கொத்தடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதைத்தான் இப்புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

நாடு முழுவதும் கொத்தடிமைகளாக இருப்பவர்களில் 80% பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள்.  விவசாயம் பொய்த்துப் போவது, குடும்பத் தேவைகளுக்காக அதிக வட்டிக்குக்  கடன் வாங்குவது, அதனை அடைக்க வேறு வழியின்றிக் கொத்தடிமைகளாக வருபவர்கள் ஒரு பக்கமெனில், பரம்பரை பரம்பரையாகவே கொத்தடிமைகளாக வேலை செய்பவர்களும் தொடர்கிறார்கள்.

திருவாக்கரையில் தாக்கப்பட்ட வெள்ளையன் சேலம் பகுதியைச் சேர்ந்தவர். இவரது தாத்தா, அப்பா காலத்திலிருந்தே கொத்தடிமைகளாக வேலை செய்து வருகின்றனர். வறுமை காரணமாகவும், நாடோடிகள் போலத் திரிய வேண்டியிருப்பதாலும் இவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதால் வாரிசுகளும் கொத்தடிமைகளாக தொடரும் அவலம் நிலவுகிறது.

கல்குவாரிகள், விவசாயம், செங்கல் சூளைகள், கனிமச் சுரங்கங்கள், தீப்பெட்டி, வெடிமருந்துத் தொழிற்சாலைகள், கோவை மாநகரின் தங்கப்பட்டறைகள் போன்றவைதாம் கொத்தடிமைகளை வேலைக்கு வைத்துள்ள பாரம்பரிய தொழில்துறைகள். இங்கெல்லாம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அன்றாட நிகழ்வுகளாகும்.

விபத்தின் காரணமாக இறப்போ, உடல் ஊனமோ  ஏற்பட்டால்  எந்த நிவாரணமும் வழங்கப்படுவதில்லை. எதிர்த்து கேள்வி கேட்டால் கொலை வெறித் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவ்வப்போது கணக்குக் காட்டுவதற்காக கொத்தடிமை நிலையிலிருந்து சிலரை  மீட்பதாகக் காட்டிக் கொள்கிறது அரசு. ஆனால், மீட்கப்பட்டவர்களோ மீண்டும் கொத்தடிமைகளாக செல்ல வேண்டிய நிலையில்தான் உள்ளனர். செங்கல் சூளையிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு அரசே  அமைத்துக் கொடுத்த செங்கல் சூளைகளைப் பல இடங்களில் முதலாளிகள் அடித்து நொறுக்கியுள்ளனர்.  கல்குவாரிகளிலிருந்து மீட்கப்பட்ட கொத்தடிமைகள் சொந்தமாகக் கல்குவாரிகள் நடத்த முற்பட்டு, முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் கடும் தாக்குதலை எதிர்கொள்கின்றனர்.

அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் ரவுடிகளுடன்  கொத்தடிமைகளை வேலைக்கமர்த்தும் முதலாளிகள் நெருங்கிய வலைப்பின்னலைப் பராமரிக்கிறார்கள். எனவே, எதிர்ப்பவர்களை ஒடுக்குவதும், ஓரிடத்தில் வேலையிழந்தவருக்கு வேறெங்கும் வேலை கிடைக்கவிடாமல் செய்வதும் சாத்தியமாகிறது. தட்டிக் கேட்க யாருமின்றித் தனி அரசாங்கம் நடத்தும் ஆண்டைத் திமிர்தான் தொழிலாளர்களை மிருகத்தினும் கேவலமாக நடத்த வைக்கிறது.

தமிழகத்தில்  ஆறு வருடங்களுக்கு முன்பு கல்லுடைப்போருக்கான குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்ட போதிலும், அது எங்குமே நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.  மேலும், கல்குவாரிகளில் 20% சட்டவிரோதமானவை என்று சொல்கிறார்  ஏ.ஐ.டி.யூ.சி துணைச் செயலாளர் கே.ரவி. இன்று இணையம், ஊடகங்களின் செல்வாக்கு காரணமாக அநீதிகளைத் தட்டிக் கேட்பதற்கான வாய்ப்பு வளர்ந்து விட்டதாகப் பலர் கருதிக்கொண்டிருந்தாலும், கொத்தடிமைக் கொடூரங்கள் அதிகரித்துத்தான் செல்கின்றன. அதிகாரிகளின் துணையுடன் முதலாளிகளின் நிலப்பிரபுத்துவ ஆண்டைத்தனம்தான் இங்கெல்லாம் ஆட்சி செய்கிறது.

திருவாக்கரை சம்பவம் போன்றவற்றில் தப்பித் தவறி மாட்டிக் கொள்ளும் சிலரும், பின்னர் முறைப்படி வெளியே வந்து விடுகிறார்கள்.

தமிழகம் தொழில்துறை வளர்ச்சியில் மட்டுமின்றி, கொத்தடிமைகள் அதிகமுள்ள மாநிலம் என்ற வகையிலும் இந்தியாவில் முன்னிலை வகிக்கிறது. மறுகாலனியாக்க கொள்கைகள் விவசாயிகளை ஏதுமற்றவர்களாக்கி வீதியில் வீசுகின்றன. சுமங்கலித் திட்டம் என்ற பெயரில் கிராமப்புற ஏழைப்பெண்களையும், அடுக்குமாடிக் கட்டிடங்களையும் நான்கு வழிச் சாலைகளையும் கட்டி எழுப்புவதற்காக எலிப் பொந்துகள் போன்ற தகரக் கொட்டகைகளில் தங்கி வேலை செய்யும் ஒடிசா, பீகார் தொழிலாளர்களையும் நவீன கொத்தடிமைகளாகத் தினமும் உருவாக்கி வருகின்றன.

நாடு நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவதாகவும், தொழிலாளர்களின் ஊதியமும் மக்களின் வாழ்க்கைத் தரமும் அதிவேகமாக உயர்ந்து வருவதாகவும் பிதற்றிக் கொண்டிருக்கும் கனவான்களின் முகத்திலறைகின்றன இவ்வுண்மைகள்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

ஐ.நா. தீர்மானம்: சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி!

10

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கடந்த மார்ச் 22ஆம் தேதியன்று  இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம், இந்தியாவின் சதித்தனமான திருத்தத்துடன் கூடிய ஆதரவோடு வெற்றி பெற்றுள்ளது. சீனா,ரஷ்யா, கியூபா முதலான நாடுகள் இத்தீர்மானத்தை எதிர்த்துள்ளன.

இத்தீர்மானம், இலங்கையின் சிங்கள இனவெறி அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் என்றும்,  ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரும் தீர்மானம் என்றும் திரும்பத் திரும்ப தமிழக ஓட்டுக்கட்சிகளும் தமிழினப் பிழைப்புவாதிகளும் ஊடகங்களும் பரபரப்பூட்டுகின்றனர். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிப்பது போலவும், ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கோருவது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால், இந்தத் தீர்மானத்தில் சிங்கள இனவெறி பாசிசபயங்கரவாத அரசின் போர்க்குற்றங்களையோ, இனப்படுகொலையையோ கண்டிப்பதாக எதுவுமில்லை. ராஜபக்சேவைப் போர்க்குற்றவாளியாக அறிவிக்கவிக்கவுமில்லை.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிசுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஜெனிவா நகரில் இந்தியா, இலங்கை உள்ளிட்டு 47 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில், எவ்வித அதிகாரமும் இல்லாத ஓர் அலங்கார அமைப்பாகும். ஒரு குறிப்பிட்ட நாடு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருப்பதாக இந்த கவுன்சிலில் பெரும்பான்மை நாடுகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினாலும், அதனை ஐ.நா. பொதுச்சபை விவாதித்து, அதனடிப்படையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரித்தால்தான் குற்றம் சாட்டப்பட்ட அந்நாட்டில் தலையிட முடியும். அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்கள் தங்களது மேலாதிக்க ஆக்கிரமிப்பு  நோக்கங்களுக்கு ஏற்ப  மனித உரிமைக் கவுன்சிலின் தீர்மானத்தைப் பயன்படுத்திக் கொள்வதுதான் இவ்வமைப்பின் நடைமுறைப் பயன்பாடாக  உள்ளது.

ஈழத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலைகளுக்குப் பிறகு, கடந்த 2009ஆம் ஆண்டில் மனித உரிமைக் கவுன்சிலில் சுவிட்சர்லாந்து அரசு ஈழப்போர் தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதுவும் சிங்கள இனவெறி அரசின்  இன அழிப்புப் படுகொலைக்கு எதிரான தீர்மானம் அல்ல. மக்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டு, இறுதிப் போரின் போது சிவிலியன்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும், அதையும் இதர மனித உரிமை மீறல்களையும் இலங்கை அரசே விசாரிக்க வேண்டுமென்றும் அத்தீர்மானம் குறிப்பிட்டது. சிங்கள இராணுவத்தின் போர்க்குற்றங்களைப் பற்றி மவுனம் சாதித்த அத்தீர்மானத்தை,  இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் என்றும், போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரும் தீர்மானம் என்றும் ஈழ ஆதரவாளர்களும் ஊடகங்களும் அன்று ஊதிப் பெருக்கினர். இத்தீர்மானத்தை எதிர்த்து இந்தியா, இலங்கை, சீனா, ரஷ்யா, கியூபா முதலான பெரும்பான்மை நாடுகள் வாக்களித்ததால் இத்தீர்மானம் தோல்வியடைந்தது.

இதேநேரத்தில் இலங்கை அரசு மற்றொரு தீர்மானத்தை முன்மொழிந்தது. பயங்கரவாதத்தை வீழ்த்தி வெற்றியைச் சாதித்துள்ள இலங்கை அரசையும் இராணுவத்தையும் பாராட்டிய அத்தீர்மானம், போரினால் அகதிகளாகியுள்ள மக்களுக்கும்,  பாதிக்கப்பட்ட பகுதிகளில் புனரமைப்பு செய்யவும் உலக நாடுகள் உதவ வேண்டுமென்று கோரியது. இப்படி ஆடுகளுக்காக அழுத ஓநாயின் தீர்மானத்தைப் பெரும்பான்மை நாடுகள் வாக்களித்து நிறைவேற்றின.

ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த இன அழிப்புப் படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும்  இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் பற்றி அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் மற்றும் புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களின் கண்டனங்களைத் தொடர்ந்து, சிங்கள இனவெறி பாசிச ராஜபக்சே கும்பல் 2010 மே மாதம் “கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி.)”  என்ற ஆணையத்தை நிறுவி விசாரணை நடத்துவதாக அறிவித்தது.  இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச அரங்குக்கு இழுக்கப்படுவதைத் தவிர்த்து, நீதியைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இலங்கையில் வளமாக உள்ளதாகக் காட்டிக் கொள்ளவும், இதன் மூலம் சர்வதேசத் தலையீட்டை முறியடிப்பதும்தான் இந்த ஆணையத்தை ராஜபக்சே கும்பல் அமைத்ததற்கான காரணம்.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிஇந்த ஆணையம் புலிகளின் போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டது. போரில் புலிகள் வீழ்த்தப்பட்டிருந்தாலும், அவர்களுடன் தொடர்புடைய புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களைத் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி வதைக்கும் நோக்கத்துடன் விசாரணையை நடத்தியது. இறுதிக் கட்டப் போரின்போது நடந்த அத்துமீறல்கள், தனிநபர்களின் பாதிப்புகள் பற்றியும் விசாரிப்பதாகத் தெரிவித்தது. இதன் மூலம் அரசு மற்றும் இராணுவ அதிகாரிகளில் ராஜபக்சே கும்பலுக்கு விசுவாசமாக இல்லாதவர்களை இனம் கண்டு களையெடுக்கவும், பழிவாங்கவும் இதனைப் பயன்படுத்திக் கொண்டது.

மனித உரிமை மீறல்கள் பிரச்சினையில் சிங்கள அரசாங்கத்தைப் பாதுகாத்ததில் இழிபுகழ் பெற்ற முன்னாள் அரசுத் தலைமை வழக்குரைஞர் சி.ஆர். டிசில்வா இந்த ஆணைக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். அரசாங்கத்தின் ரப்பர் ஸ்டாம்பாகச் செயல்பட்ட இந்த ஆணைக் குழு எந்த வகையிலும் சுயேட்சையானதோ, நடுநிலையானதோ அல்ல என்பது யாவரும் அறிந்த உண்மை.

இறுதியாக இந்த ஆணைக்குழு  தனது அறிக்கையை 2011 டிசம்பர் 16 அன்று வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின் போது சிங்கள இராணுவம் எவ்விதப் போர்க்குற்றமும் இழைக்கவில்லை; மக்களைப் பாதுகாக்க அக்கறையோடும் பொறுப்போடும் செயல்பட்டது என்றுதான் இந்த அறிக்கை கூறுகிறது. இந்த அறிக்கையையும்  ஐ.நா. வுக்குச் சமர்பிக்கப் போவதில்லை என்று சிங்கள அமைச்சரவை அறிவித்துவிட்டது.

இந்த நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்துவதுதான், அமெரிக்காவால் முன்மொழியப்பட்டு, தற்போது ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தின் சாரம். இத்தீர்மானம், போரின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சே கும்பலால் நடத்தப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கு எதிரானதல்ல. அந்த விவகாரத்துக்கும் இந்த தீர்மானத்துக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

போர்க்குற்றவாளியான ராஜபக்சே அரசு தம்மைத் தாமே விசாரணை செய்து கொண்டுள்ளதாகக் கூறும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆதரித்து, அதன் பரிந்துரைகளை விரைவாகச் செயல்படுத்தக் கோருகிறது, இத்தீர்மானம். நல்லிணக்க ஆணைக்குழு கவனத்தில் கொள்ளாத மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக நம்பகமான விசாரணை தொடங்கப்படவேண்டும் என்றும், சர்வதேசச் சட்டவிதிகள் மீறப்பட்டது குறித்த குற்றச்சாட்டுகள் பற்றி கவனம் செலுத்துமாறும் இலங்கை அரசை இத்தீர்மானம் கோருகிறது. இந் தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தனது வலுவான ஆதிக்கத்தை நிறுவும் போர்த்தந்திரத் திட்டத்தின் ஓர் அங்கமாகவே, சீனாவுடனான அரசு தந்திர மற்றும் பொருளாதார உறவுகளிலிருந்து விலகி நிற்குமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே அமெரிக்கா இத்தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளது. மற்றபடி, ராஜபக்சே கும்பலின் போர்க்குற்றங்கள் பற்றியோ, இனப்படுகொலை பற்றியோ இத்தீர்மானத்தில் ஒரு வார்த்தைகூட இல்லை.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரி

டப்ளின் தீர்ப்பாயத்தில் முன்னின்று உழைத்த, ஈழத் தமிழர்களால் நன்கறியப்பட்டவரான பால் நியூமென், ஐ.நா. மனித உரிமைகள் கமிசனின் தற்போதைய கூட்டத்தொடரில் இலங்கையில் நடந்துள்ள இனப்படுகொலை, போர்க்குற்றம் பற்றி எதுவுமே விவாதிக்கப்படவில்லை என்று பேட்டியளித்துள்ளார். இத்தீர்மானம் இலங்கையைக் கண்டிக்கும் நோக்கம் கொண்டதல்ல என்று ஜெனிவாவுக்கான அமெரிக்கத் தூதர் எலின் சாம்பர்லெய்ன் டோனஹே தெரிவித்துள்ளார். இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகள்கூட இந்தத் தீர்மானத்தில் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமேயில்லை என்கின்றனர். ஆனால், தமிழக ஓட்டுக்கட்சிகளும், சில பிழைப்புவாத ஈழ ஆதரவாளர்களும்  ஒன்றுமில்லாத இந்த வெற்றுத் தீர்மானத்தைத்தான் ஏதோ கேழ்வரகில் நெய் வடிந்த கதையாக ஏற்றிப்போற்றி, அமெரிக்காவானது, இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுவதைப் போல சித்தரிக்கின்றனர்.

“போர் முடிந்து மூன்றாண்டுகளே ஆகியுள்ள நிலையில், மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்” என்று கூறி அமெரிக்கா முன்வைத்த  இந்தத் தீர்மானத்தை ரஷ்யா, சீனா, கியூபா முதலான நாடுகள் எதிர்த்தன.  “இலங்கை போன்ற ஒரு ஜனநாயக நாட்டுக்கு அமைதி மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள போதிய அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறி தீர்மானத்தை எதிர்த்த இந்தியா, ஒரு திருத்தத்தை முன்வைத்து ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. “ஐ.நா. மனித உரிமைத் தூதர் அலுவலகம்  அளிக்கும் உதவியை இலங்கை ஏற்க வேண்டும்” என்ற வாசகங்களை நீக்கிவிட்டு, “ஐ.நா. மனித உரிமை தூதர் அலுவலகம் அளிக்கும் எத்தகைய உதவியையும் இலங்கை அரசுடன் கலந்தோலனை நடத்தி அதன் ஒப்புதலுடன் செய்யப்பட வேண்டும்” என்று முக்கியமான  இத்திருத்தத்தின் மூலம் இந்தியா இத்தீர்மானத்தை மேலும் செல்லாக்காசாக்கியுள்ளது. தொழில்நுட்ப உதவி என்ற விதியின் கீழுள்ள இந்த முக்கியமான அம்சத்தை திருத்தியமைத்து, இலங்கையின் மனித உரிமை மீறல் விசாரணைகளில் ஐ.நா. தலையிடுவதற்கன வாய்ப்பையும் அடைத்து, இலங்கை அரசு இத்தகைய சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் காப்பாற்றியிருக்கிறது இந்திய அரசு. இந்தியா செய்துள்ள இந்த ‘சிறிய’ திருத்தம் மனித உரிமை கமிசனிடமிருந்து இலங்கையைக் காப்பாற்றும் கவசமாகப் பயன்படும்.

அமெரிக்காவின் விசுவாச அடியாளாக உள்ள இந்தியா, தனது வட்டார மேலாதிக்க நலன்களுக்காக சிங்கள இனவெறி பாசிச பயங்கரவாதத்தை ஆதரித்து நிற்கும் நோக்கத்துடன்தான் முந்தைய மனித உரிமை பாதுகாப்பு கவுன்சிலில் சுவிஸ் தீர்மானத்தை எதிர்த்தது. பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல், இப்போதைய தீர்மானத்தை நரித்தனமான திருத்தத்துடன் ஆதரித்துள்ளது. இந்தியா இத்தீர்மானத்தை எதிர்த்ததை விட, ஆதரித்ததன் மூலம் இலங்கை அரசுக்கு மேலும் உதவியுள்ளது. ஆனால், இந்தியாவின் முடிவு இலங்கைக்கு எதிரானதாகவும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவானதாகவும் உள்ளதாக கருணாநிதி, ஜெயலலிதா மற்றும் பிற ஓட்டுக் கட்சிகளும் பிழைப்புவாதிகளும் போட்டி போட்டுக் கொண்டு உரிமை பாராட்டுகின்றனர்.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிஐ.நா. தீர்மானத்தில் சிங்கள இனவெறி ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கு எதிராக ஒன்றுமில்லை என்ற போதிலும், ‘இது எங்களுக்கும் தெரியும். இருந்தாலும், இதுவாவது நடக்கிறதே என்று பார்க்கவேண்டும். எவ்வித நடவடிக்கையுமின்றி தறிகெட்டுத் திரியும் சிங்கள இனவெறி பாசிஸ்டுகளுக்கு கடிவாளம் போடும் முயற்சியாகவே இதைப் பார்க்க வேண்டும். இது முதல் அடிதானே தவிர, முழுமையானதல்ல என்பது எங்களுக்குத் தெரியும்’ என்றெல்லாம் தமிழினப் பிழைப்புவாதிகள் நியாயவாதம் பேசுகின்றனர். இரண்டாம் பட்ச எதிரிகளுடன் தற்காலிகமாகக் கூட்டணி அமைத்து, முதன்மை எதிரியான இனவெறி பாசிச ராஜபக்சே கும்பலை வீழ்த்துவது என்ற அரசியல் உத்தியுடன் தாங்கள் அணுகுவதாக இதற்கு நியாயம் கற்பிக்கின்றனர். இப்படிச் செய்ததன் மூலம் இந்தியா போர்க்குற்றங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதே, அது நியாயமா?

இட்லரும் முசோலினியும் போல, இந்தியாவும் இலங்கையும் இணைந்து இழைத்ததே தமிழின அழிப்புப் போர்க்குற்றம். புலிகளையும் ஈழத் தமிழ் மக்களையும் பூண்டோடு ஒழிக்குமாறு முள்ளிவாய்க்கால் போரை வழிநடத்தியதில் இலங்கை அரசின் கூட்டாளிதான் இந்திய அரசு. போர்க்குற்றவாளியான இந்திய அரசிடம் பிழைப்புவாத ஈழ ஆதரவு அமைப்புகளும் ஓட்டுக் கட்சிகளும் ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டுப் போடச் சொல்லிக் கூப்பாடு போட்டன. ராஜபக்சேவுடன் இந்திய அரசையும் கூண்டிலேற்றுவதற்குப் பதிலாக, இலங்கை மட்டும்தான் போர்க்குற்றவாளி என்றும், இந்தியா முன்நின்று ஈழத் தமிழர்களுக்கு நீதியும் உரிமையும் பெற்றுத்தரும் என்றும் இவர்கள் பிரமையூட்டுகின்றனர். அதன் மூலம் போர்க்குற்றவாளியான இந்தியாவை தப்பவைக்கும் திருப்பணியைச் செய்துள்ளனர். போர்க் குற்றவாளியான இந்திய அரசை நியாயவானாகக் காட்டி, தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கச் செய்ததன் மூலம் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவையும் விடுவிக்கத் துணைபோயுள்ளனர்.

ஜெனிவா தீர்மானம் சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்தியா நரிகடல் வற்றி கருவாடு தின்னலாம் என்று காத்திருந்த கொக்கின் கதையாக, இந்திய உதவியுடன் ஈழ விடுதலையைச் சாதிக்க முடியும் என்று நம்ப வைத்து தமிழக இனவாதிகள் நடத்திய சந்தர்ப்பவாத அரசியலின் நீட்டிப்புதான் இது. இந்திய தேசியத்தை எதிர்ப்பதாகவும் தேசிய இன விடுதலையைச் சாதிக்கப் போவதாகவும்  சவடால் அடிக்கும் இத்தமிழினக் குழுக்களும் தலைவர்களும் அரசியல் ரீதியில் இந்திய வட்டார மேலாதிக்க அரசின் அப்பட்டமான கைக்கூலிகளாக உள்ளனர். அன்று ராஜீவ்  ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை வரவேற்று ஆதரித்த இவர்கள்தான், இன்று இந்தத் தீர்மானத்தையும் ஆதரிக்கிறார்கள். எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடக்க விட்டிருக்க மாட்டார்; இந்திரா காந்தி இருந்திருந்தால் ஈழத்தை விடுதலை செய்திருப்பார்; வங்கதேச விடுதலையைப் போல தனி ஈழத்தை உருவாக்கியிருப்பார்  என்றெல்லாம் ஏற்றிப் போற்றியவர்களும் இவர்கள்தான். இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்தால், அது இந்தியாவுக்கு பேராபத்து என்று பீதியூட்டி உபதேசம் செய்தவர்களும் இவர்கள்தான். ஈழ விடுதலைக்கு எதிரான பார்ப்பன பாசிச ஜெயலலிதாவை ஈழத்தாயாகச் சித்தரித்தவர்களும் இவர்கள்தான்.

இந்தியா அல்லது அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் முதுகில் ஏறி  ஈழத் தமிழர்க்கு நீதியும் உரிமை யும் பெற்று விட இயலுமெனக் கருதுவது வீண்கனவு மட்டுமல்ல; ஈழ விடுதலைக்கே எதிரான துரோகத்தனமாகும். இந்தியாவையும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களையும் தாஜா செய்தோ, அவற்றின் தயவினாலோ,  அரசு தந்திர நடவடிக்கைகள், அழுத்தங்கள் மூலமாகவோ  இந்திய  இலங்கை அரசுகளின் போர்க்குற்றங்களுக்கு ஒருக்காலும் நீதி பெற முடியாது. இத்தகைய பிழைப்புவாத  சந்தர்ப்பவாத ஈழ ஆதரவு அமைப்புகளையும் இயக்கங்களையும் அம்பலப்படுத்தி,  சர்வதேச அரசுகளைப் பணிய வைக்கும் தனித்துவமான  உறுதியான புரட்சிகர மக்கள் இயக்கங்களைக் கட்டியமைப்பதன் மூலம்தான் இப்போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க முடியும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

படிக்க

108 ஆம்புலன்ஸ் சேவை: தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்!

7

108 ஆம்புலன்ஸ் சேவை : தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்!

எதிர்பாராமல் நிகழும் சாலை விபத்துகள், தீ விபத்துகள், திடீர் மாரடைப்பு முதலானவற்றால் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று காப்பாற்றும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவையை ஜி.வி.கே. இ.எம்.ஆர்.ஐ. (அவசரகால மேலாண்மை மற்றும் ஆராய்ச்சிக் கழகம்) என்ற தனியார் நிறுவனம் இயக்கி வருகிறது.

அரசு சின்னத்தைப் பொறித்துக் கொண்டு ஆம்புலன்ஸ் சேவையை நடத்திவரும் இத்தனியார் நிறுவனத்தில் நாளொன்றுக்கு 12 மணி நேரம் வீதம் இரண்டு ஷிப்டுகளில் கொத்தடிமைகளாகப் பணிபுரியும் ஊழியர்கள், மாதம் ரூ.7000 சம்பளத்தில் வாரத்தில் ஏழு நாட்களிலும் வேலை செய்யுமாறும், பணியாளர்களுக்கு தங்குமிடமோ, ஓய்வறையோ இல்லாமல் வெட்டவெளியில் பணியாற்றுமாறும் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இதுபற்றி வாய்திறந்தால், ஊழியர்களை இடமாற்றம் செய்து பழிவாங்குவதும், மிரட்டுவதும் கேள்விமுறையின்றித் தொடர்கிறது.

இக்கொத்தடிமைத்தனத்துக்கு எதிராகக் குமுறிய சிவகங்கை, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களின் தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வின் வழிகாட்டுதலில் தமக்கென “108 தொழிலாளர் சங்கம்” என்ற பெயரில் தொழிற்சங்கத்தைக் கட்டியமைத்து போராடி வருகின்றனர்.  கடந்த 28.2.2012 அன்று இராமநாதபுரம் நகரின் கேணிக்கரையில் உள்ள டி.எஸ். திருமண மண்டபத்தில் ஜி.வி.கே. ஈ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தின் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெற்றபோது, இந்நிறுவனம் அரசு நிறுவனமல்ல என்பதையும், இது அரசு வேலைக்கான ஆள்சேர்ப்பு முகாமும் அல்ல என்பதையும் உணர்த்தி, இத்தனியார் நிறுவனம் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவருவதையும், சட்டவிரோதமாக வாரத்தின் ஏழு நாட்களிலும் 12 மணி நேரம் வேலை வாங்குவதையும்,  ஆம்புலன்ஸ் வண்டியில் மைலேஜ் கணக்கு, பஞ்சர் கணக்கு கேட்பதையும், வண்டியில் உயிர்காக்கும் மருந்துகள்உபகரணங்கள் இல்லாததையும் விளக்கி, இத்தனியார் நிறுவனத்தின் கொள்ளையையும் அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களிடமும், பகுதிவாழ் உழைக்கும் மக்களிடமும் 108 தொழிலாளர் சங்கத்தினர் பிரச்சாரம் செய்தனர். விவரம் தெரியாமல் நேர்முகத் தேர்வுக்கு வந்த இளைஞர்களிடம் இப்பிரச்சாரம்  பெருத்த வரவேற்பைப் பெற்றது.

இப்பிரச்சாரத்தாலும், இந்நிறுவனத்தால் சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்யப்பட்ட இரு தொழிலாளர்களுக்காக தொழிலாளர் நல அலுவலகத்தில் 108 தொழிலாளர் சங்கம் முறையிட்டதன் பேரில் அதிகாரிகள் இது குறித்து  விசாரணை நடத்தி வருவதாலும் ஜி.வி.கே. நிறுவனம் அரண்டு போயுள்ளது. சங்கத்தின் செயல்பாடுகளால் உற்சாகமும் புதிய நம்பிக்கையும் பெற்றுள்ள தொழிலாளர்கள், தமிழகமெங்குமுள்ள 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை அமைப்பாக்கிப் போராட ஆயத்தமாகி வருகின்றனர்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

ராமஜெயம் கொலை: காரணம், பின்னணி என்ன?

93
ராமஜெயம்
ராமஜெயம்

திருச்சியில் முன்னால் அமைச்சர் K.N.நேருவின் தம்பி ராமஜெயம் கடந்த 29.03.2012 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.!

கடந்த தி.மு.க ஆட்சியில் தனது அண்ணன் K.N.நேருவின் அனைத்து அரசுத்துறை, கட்சி சம்பந்தமான எல்லா பேரங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்தான் இந்த ராமஜயம். திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பண்பான ரியல்எஸ்டேட், கல்குவாரி கான்ட்ராக்ட் , கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என சகல வழிகளிலும் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தியதும், கோடிக்கணக்கில் சொத்து சேர்த்தும் இந்த வகையில்தான்.

நிலபேரங்கள், வீடு, ஹோட்டல்கள் இவரால் வளைக்கப் பட்டபோதும், கட்சியில் உள்ள      பிணக்குகள்கூட இவர் தலையீடு இல்லாமல் முடிவது கிடையாது. தி.மு.க தலைவரின் வாரிசுகள் வரும் போதும் போகும் போதும் தி.மு.கவின் தலைமையின் தனி கவனத்தை ஈக்கும்படி செயல்பட்டதுடன் தனது உறவுக்காரர் நெப்போலியனையே ஓரங்கட்டியதும் இந்த வகையில்தான்.

திருச்சியில் சாதாரண ஏர்செல் நிறுவனத்தின் ஏஜண்டாக செயல்பட்ட(Managing Director) காரணத்தால் M D என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டார். அண்ணன் அமைச்சர் என்பதால் அரசு அதிகாரிகள் , நில உரிமையாளர்கள், என சகல பிரிவினரையும் மிரட்டி காரியம் சாதித்தனர். இதனால்தான் அமைச்சரின் இலாக்காவில் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு ஒரு தொகை நிர்ணயித்து வசுலித்தும், குவாரி கான்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை, ‘ஜனனி’ மினரல்ஸ், ‘கேர் காலேஜ்’ என தனது சாம்ராஜ்ஜியத்தை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா என பரந்து விரிந்த வர்த்தக தொடர்பு மூலமாகவும் பல ஆயிரம் கோடிக்கு அதிபதியாகவும் மாறினார்.

இந்த காலகட்டத்தில் தான் திருச்சியில் 2007-ல் நில அதிபர் துரைராஜ் காரில் உயிரோடு எரித்து கொன்ற வழக்கிலும் , அதே நிலத்தில் தங்கராஜ் என்பவர் தற்கொலை செய்து கொண்டதிலும் , ராஜெயத்தின் தலையீடு உள்ளதாக காவல்துறை சந்தேகித்தது. ‘கலைஞர் அறிவாலயம்’ , காஞ்சனா பிளாசா, மாயாஸ் ஹோட்டல், பிரபல SRM மருத்துவக்கல்லூரி(‘பாரிவேந்தர் பச்சைமுத்து உடையார்’) கட்டுவது உள்ளிட்ட பிரச்சனையில் மிரட்டப்பட்டதும் திருச்சி மக்கள் அறிந்தது தான். நில அபகரிப்பு நடந்ததாக சில வழக்குகள் தற்சமயம் பதிவு செய்து விசாரிக்க பட்டுவந்தது.

ஆளும் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா சட்டமன்ற தேர்தலின் போது வாக்கு சேகரிக்க சென்ற இடமெல்லாம் தி.மு.க அமைச்சர்களை விட ராமஜயத்தை கடுமையாக விமர்சித்தார். திருச்சியில் வாக்கு கேட்டபோது திருச்சியை ‘இந்த கொள்ளை கும்பலிடமிருந்து மீட்க வாய்ப்பு தாருங்கள் ‘ என்று ஓட்டு கேட்டார்.  நேரு குடும்பத்தின் மீது அரசியலை தாண்டி எரிச்சலூடன் ஜெ அணுகுவதற்கு காரணம் ‘அழகிரி பாணி’ அரசியலில் ராமஜெயம் கைதேர்ந்தவர் என்பதுதான். வாகன விபத்தில் மரணமடைந்த சட்டமன்ற உறுப்பினரும், மற்றொரு தீடிர் பணக்கார அரசியல் ரவுடியுமான மரியம் பிச்சை இறப்பை திசைதிருப்பி K.N.நேரு குடும்பத்தினர் மீதும், தி.மு.க அலுவலகம் மீதும் அ.தி.மு.க குண்டர்கள் தாக்குதல் தொடுத்தது வாசகர்களுக்கு நினைவிருக்கும். இப்படி பலதரப்பினருக்கும் ஆளும் அ.தி.மு.கவுக்கும் தலைவலியாக கருதப்பட்ட ராமஜெயம் கடத்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது ஆச்சரியமல்ல !

மர்மங்கள் நிறைந்த அவரது வளர்ச்சி பாதை ஓட்டுபொறுக்கி அரசியலை ருசித்தவர்கள் வளரும் அதே பாதைதான். போலிசு – அதிகார வர்க்கம், நீதிமன்றங்கள் என அனைத்தும் இப்படிபட்ட திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை உருவாக்கி கொண்டிருக்கிறது. மறுகாலனியாக்க சுழல் அவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் வாய்ப்பை வளர்த்திருக்கிறது.

இவரது கொலை மர்மமாகவே நீடிக்கும் நிலையில் பத்திரிக்கைகளும், மக்களும் ஆளாளுக்கு ஓரு வகையில் பேசிக் கொண்டுள்ளனர். இன்று தூத்துக்குடி பெண் கவுன்சிலர் பிடிபட்டதாக செய்தி வந்துள்ளது.

கொலை எப்படி நடந்தது ! யார் செய்தார்கள் என்ற புலனாய்வுகள் ஒரு புறமிருக்கட்டும். தனது அண்ணனின் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி ரவுடி ராஜ்ஜியத்தை உருவாக்கி அதனுடன் தொழில் சாம்ராஜ்ஜியத்தை பலபடுத்திய புதிய பாணியிலான திடீர் அரசியல் ரவுடிதான் ராமஜயம்.

இவர்களது தாதா தனத்தால் பாதிக்கப்பட்டவர்களில் கீழ்நிலை மக்கள் மட்டுமல்லாமல் மேல்தட்டு பிரிவினரும் அடங்குவர். ரவுடிகளுக்கிடையிலான கோஷ்டி மோதலும் கூட உண்டு.

தருணத்திற்க்காக காத்திருந்த அதில் ஒருவர் தி.மு.க ஆட்சியை இழந்த தருணத்தில் வேலையை முடித்துள்ளார் என்பது மட்டும் அப்பட்டமான உண்மை.! தி.மு.க, அ.தி.மு.க இரு ஆட்சிக்காலங்களிலும் இத்தகைய அதிகார சண்டைகள் வழமையாக நடக்கும் ஒன்றுதான். அதே நேரம் இரு ஆட்சிகளிலும் இரு தரப்பு காண்ட்ராக்ட் முதலாளிகள் எதிர் தரப்பிற்கு கப்பம் கட்டி விட்டு தொழிலை செவ்வனே தொடர்வதும் வாடிக்கையான ஒன்றுதான். அதே நேரம் இதில் ஏகபோகமாக செயல்படுபவர்கள் மட்டும் எதிர்தரப்பு ஆட்சியின் போது சட்டபூர்வமாகவோ, சட்ட விரோதமாகவோ வேட்டையாடப்படுவார்கள்.

ஜெயா ஆட்சியில் தி.மு.க பிரமுகர்கள் மீது சொத்து குவிப்பு வழக்குகள், நில மோசடி வழக்குகள் என்று தீவிரமாக நடந்து வரும் வேளையில்தான் அது போதாது என்று ராமஜெயம் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த அரசியல் சூழ்நிலையில் குறிப்பிட்ட எதிர்தரப்பினர் பயன்படுத்திக் கொண்டு அவரை கொன்றிருக்கின்றனர். இதில் யார் கொன்றார்கள் என்பதை விட இத்தகைய கொலைகளுக்கும், கொள்ளைக்கும் காரணமான திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை தோற்றுவிக்கும் அரசியல் – சமூக சூழ்நிலையைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

_____________________________________________

செய்தி: ம.க.இ.க, திருச்சி.

______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள், சதிகள், கொள்ளைகள்!

18

மின்-கட்டண-உயர்வுமின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான்  மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு சொல்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை ‘முடிவுக்கு’ கொண்டு வரலாம்.

பாட்டில் தண்ணீரும் கேன் தண்ணீரும் தண்ணீர் பஞ்சத்தை இப்படித்தான் ‘ஒழித்திருக்கின்றன’. குடிதண்ணீர் வாங்க காசில்லை என்ற பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறை என்று யாரும் சொல்வதில்லை. அது பணப்பற்றாக்குறையாகிவிடுகிறது.

ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப் செய்வதைப் போல, 20, 30  ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்வதற்கும் எப்படி இன்று பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம். மின்சாரம் என்பது கத்தரிக்காயைப் போல அன்றாடம் சந்தையில் விலை மாறும் சரக்காகி வருகிறது. இந்த மாற்றம் வெகு வேகமாக நம்மீதும் திணிக்கப்படுகிறது.

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியும். இது மின்சாரத்துறையில் செய்யப்படும் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தமாகும் என்று கூறியிருக்கிறார் டில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி.சுதாகர். (பி.டி.ஐ; 26.2.12)

மைய அரசு அமைத்திருக்கும் ‘இந்தியா ஸ்மார்ட் கிரிட் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, மின்சார மீட்டரை ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் இந்தியா முழுவதற்கும் பத்து கோடி தேவையென்றும், அவற்றை மலிவு விலையில் உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி நகரிலுள்ள 87,000 வீடுகளில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த மீட்டர்கள் நிறுவப்படும் என்று இந்த டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. (ஐ.பி.என். லைவ், மார்ச் 3, 2012)

மின் விநியோகத்தின் மீதான மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், மின் திருட்டைத் தடுக்கும் முயற்சி, மின் செலவை மிச்சப்படுத்த மக்களுக்கு தரப்படும் வாய்ப்பு என்ற வார்த்தை ஜாலங்களால் இந்த திட்டத்தை நியாயப்படுத்துகிறது அரசு. உண்மை அதுவல்ல.  மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வது என்ற முறையையே ஒழித்துவிட்டு, சந்தையில் மின்சாரத்தின் விலை என்னவோ அதைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும் என்பதற்கு மக்களைப் பழக்குவதே இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தின் நோக்கம்.

28.3.2012 அன்று சட்டசபையில் மின்கட்டண உயர்வு தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா, கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மாநில மின்வாரியம் கோராவிட்டாலும்கூட, கட்டணத்தை உயர்த்துகின்ற அதிகாரம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு உண்டு என்று ஒரு விளக்கமளித்தார்.

மின்-கட்டண-உயர்வுதன்னுடைய அரசு அறிவித்திருக்கும் கட்டண உயர்வுக்கு, தான் பொறுப்பேற்றுக் கொள்ளாமல், வேறு யாரோ வைத்த செய்வினை போல ஜெயலலிதா சித்தரிக்கிறார் என்ற போதிலும், அப்படிப்பட்ட அதிகாரம் ஆணையத்துக்கு வழங்கப்பட்டிருப்பது உண்மையே.

மின்சார ஒழுங்குமுறை ஆணையம் என்பது மின்சார உற்பத்தி மற்றும் விநியோகத்தை தனியார்மயமாக்கும் நோக்கத்திற்காகவே உலக வங்கியின் ஆணைக்கேற்ப உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு.  கட்டண நிர்ணய அதிகாரம், உரிமம் வழங்கும் அதிகாரம் ஆகியவை மாநில அரசிடமிருந்து பிடுங்கி சுய அதிகாரம் பெற்ற அமைப்பான இதனிடம் வழங்கப்பட்டுவிட்டன.  இதற்கான சட்டம் 1998இலேயே இயற்றப்பட்டுவிட்டது.

மின்சாரத்தைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தச் சட்டம் போதுமானதாக இல்லை என்பதால் 2003இல் பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில் மத்திய மின்சாரச் சட்டம் இயற்றப்பட்டது.  இச்சட்டம், மின் உற்பத்தி  கம்பிகள் மூலம் கொண்டு செல்லுதல்  நுகர்வோருக்கு விநியோகித்தல் ஆகிய 3 பணிகளையும் மின்வாரியமே செய்வது திறமையின்மைக்கும் ஏகபோகத்துக்கும் வழிவகுப்பதால், வாரியங்களை மூன்றாக உடைக்கக் கூறியது. மின்சாரம் வணிக ரீதியில் விற்கப்படவேண்டும் என்றும், மின்சாரம்  உற்பத்தி செய்ய அரசாங்க உரிமம் தேவையில்லை என்றும், தனியார் முதலாளிகள் மின்னுற்பத்தி செய்வதுடன் மின்சாரச் சந்தையில் ஊக வணிக சூதாட்டமும் நடத்தலாம் என்றும் அனுமதித்தது. மின்வாரியங்கள் சொந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு, தனியாரிடம் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யுமாறும், விநியோகத்தையும் அவர்களிடம் ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியது. தனியாரிடமிருந்து அரசு கொள்முதல் செய்கின்ற மின்சாரத்திற்கு விலை நிர்ணயம் செய்யும் அதிகாரமும் ஆணையத்திடமே தரப்பட்டது. கட்டண உயர்வுக்கு எதிராக யாரும் நீதிமன்றத்தை நாடவியலாதென்றும், இதற்கென உருவாக்கப்படும் ‘மின்சாரத்துக்கான மேல்முறையீட்டு ஆணையம்’தான் தீர்ப்பளிக்க முடியும் என்றும் இச்சட்டம் கூறியது.

மின் உற்பத்தியிலிருந்து மாநில மின்வாரியங்கள் திட்டமிட்டே அகற்றப்பட்டன.  மின்சாரத் துறைக்கான நிதி, மாநில அரசுகளின் திட்ட ஒதுக்கீட்டில் 31.55 விழுக்காட்டிலிருந்து (199091) பத்தே ஆண்டுகளில் 15.25 விழுக்காடாக (200102) வீழ்ச்சி அடைந்தது. இலாபமீட்டி வந்த மின் வாரியங்கள் நட்டத்தில் விழத் தொடங்கின.

மின் வாரியங்கள் நட்டத்தில் விழுவதற்கான காரணமே, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம்தான் என்ற கருத்தை அரசும், ஊடகங்களும் திட்டமிட்டே உருவாக்கியிருக்கின்றன. 1994-95இல் தமிழக மின்வாரியம் ஈட்டிய உபரி ரூ. 347 கோடி. 2007-08 ஆம் ஆண்டில் இது 3512 கோடி ரூபாய் பற்றாக்குறையாக மாறியது. 1994 இலும் சரி, 2008 இலும் சரி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுத்தான் வருகிறது. நட்டத்திற்கு காரணம் அதுவல்ல.

1994 இல் தனது மின்சாரத் தேவையில் 0.4 சதவீதத்தை மட்டுமே தனியாரிடமிருந்து கொள்முதல் செய்து வந்த தமிழக மின்வாரியம், 2008  இல் சுமார் 35% மின்சாரத்தைத் தனியாரிடம் வாங்கியது. இன்று தமிழக மின்வாரியத்தின் கடன் சுமார் ரூ.56,000 கோடி. இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

“போட்டி இருந்தால் விலை குறையும். சேவைத்தரம் உயரும்” என்பதுதான், அரசுத்துறைகளை ஒழிப்பதற்கும், தனியார் துறையை ஊக்குவிப்பதற்கும் சொல்லப்படுகின்ற காரணம்.  மின்சாரத்துறையில் தனியார் அனுமதிக்கப்பட்ட பிறகு கட்டணம் குறையவில்லை. மாறாக, ஏறிக்கொண்டிருக்கிறது. மின் வாரியத்தை நட்டத்திலிருந்து காப்பாற்றத்தான் இந்த கட்டண உயர்வு என்று அரசு கூறினாலும் உண்மை அதுவல்ல.

தனியார் மின் உற்பத்தியாளர்களுடன் மின்வாரியங்கள் போட்டிருக்கும் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களின்படி, அந்த முதலாளிகளுக்குத் தரவேண்டிய தொகையைத் தருவதற்கு கட்டண உயர்வு அவசியம் என்று மத்திய மின்சார அமைச்சகத்தின் 21.1.2011 தேதியிட்ட கடிதம் தெளிவாகக் கூறுகிறது. (ஆதாரம் : ‘மின்சாரக் கட்டணம் தனியார்துறையின் வேட்டைக்காடு’, சா.காந்தி, ஒய்வு பெற்ற பொறியாளர்)

மின்-கட்டண-உயர்வுமின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் (Power Purchase Agreement) என்பதென்ன? தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு மாநில மின்வாரியங்கள் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்கள் இவை. இவற்றின்படி, ஒரு யூனிட் மின்சாரம் என்ன விலை என்பதும் எத்தனை மாதங்களுக்கு அந்த விலையில் மின்சாரத்தை தரவேண்டும்/பெற வேண்டும் என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடும்.  மின்சாரத்தின் விலையை இருதரப்பினரும் பேசித் தீர்மானிப்பர்.

இந்த வகை ஒப்பந்தங்களில் மிகவும் இழிபுகழ் பெற்றது என்ரான் ஒப்பந்தம். 90களில் தபோல் மின்நிலையத்திலிருந்து ஒரு யூனிட்  8 ரூபாய் விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்வதாக ஒப்பந்தம் போட்டு விட்டு, அந்த விலைக்கு மின்சாரம் வாங்க முடியாமல், மின்சார உற்பத்தியை நிறுத்தி வைப்பதற்காக மாதந்தோறும் நிலைக்கட்டணம் செலுத்தியே திவாலானது மகாராட்டிர அரசு.

தமிழகத்தில் அப்போலோ (மருத்துவமனை) குழுமத்துக்குச் சொந்தமான பிள்ளைப்பெருமாநல்லூர் மின்நிலையத்திலிருந்து 2005-06  இல் தமிழக அரசு வாங்கிய மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.17.78.  சாமல்பட்டி பவர் என்ற நிறுவனத்திடமிருந்து யூனிட் ரூ. 8.74; மதுரை பவர்  ரூ. 8.63. சென்னை பேசின் பிரிட்ஜில் மின் வாரியத்துக்குச் சொந்தமான நிலத்தில் அமைந்திருக்கும் ஜி.எம்.ஆர். என்ற தனியார் அனல் மின் நிலையத்திலிருந்து வாங்கப்பட்ட மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.6.58.  யூனிட்டுக்கு ரூ. 17.74 கொடுத்து அப்போலோ நிறுவனத்தின் மின்சாரத்தை வாங்க முடியாததால், மின்சாரம் வாங்கத் தவறியதற்குத் தண்டமாக, 2005-06  இல் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி வீதம் 330 கோடி ரூபாயை  கொடுத்திருக்கிறது மின்வாரியம்.(காந்தி, மேற்படிநூல்)

தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்யும் நீர்மின்சக்தியின் விலை யூனிட்டுக்கு 21 காசுகள். அனல் மின்சக்தியின் அதிகபட்ச விலை ரூ.2.14 காசுகள் என்பதையும் இங்கே ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். தமிழக மின் வாரியத்தின் 56,000 கோடி ரூபாய் கடனும், அதனைக் கட்டுவதற்கு  நாம் தரப்போகும் கூடுதல் கட்டணமும் அரசுக்குப் போகவில்லை. நேரே முதலாளிகளின் பணப்பெட்டிக்குத்தான் போய்ச் சேர்கிறது.

ஒப்பந்தம் செய்த விலையில் ஒப்பந்தப்படி மின்சாரம் வாங்கவில்லையென்றால், தங்களது மின் நிலையங்கள் இயங்காமல் சும்மா இருப்பதற்கே அபராதக் கட்டணம் வசூலித்து மின்வாரியத்தைத் திவாலாக்கும் கறார் பேர்வழிகளான தனியார் முதலாளிகள், தமது தரப்பில் ஒப்பந்தங்களை மதிக்கிறார்களா?

ஒரு யூனிட் 2.26 காசுக்கு மின்சாரம் சப்ளை செய்வதாக ஏலம் கேட்டு, டாடாவுக்குச் சொந்தமான முந்திரா அல்ட்ரா மெகா பிராஜக்ட் என்ற 4000 மெகாவாட் அனல் மின்நிலையம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. இதற்கான நிலக்கரியை இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்து வந்தது. இப்போது நிலக்கரியின் சர்வதேச விலை உயர்ந்துவிட்டதால், தான் ஏலம் கேட்ட விலையில் மின்சாரம் தர முடியாது என்றும் விலையைக் கூட்டவேண்டும் என்றும் கோருகிறது டாடா நிறுவனம். இந்தோனேசியாவில் உள்ள அந்த சுரங்கங்களும் டாடாவுக்கு சொந்தமானவையே என்பதால், மின்சாரத்தின் விலையைக் கூட்ட மறுக்கின்றன மாநில மின்வாரியங்கள்.

“மின்சாரத்தின் விலையைக் கூட்டித்தர மறுத்தால் மின்நிலையத்தை மூடுவோம். திவாலாகப்போவது நாங்கள் அல்ல, எங்களுக்கு கடன் கொடுத்த பொதுத்துறை வங்கிகள்தான். பரவாயில்லையா?” என்று தெனாவெட்டாக அரசை மிரட்டுகிறார் டாடா பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான அனில் சர்தானா. (எகனாமிக் டைம்ஸ், 5.2.2012)

தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும், மின் வாரியங்களுக்கும் சுமார் 4 இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்திருக்கும் பொதுத்துறை வங்கிகளோ, தங்களைத் திவால் ஆகாமல் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, மின் கட்டணத்தை உயர்த்துமாறு ஆணையத்திடம் முறையிடுகின்றன.

இன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் பெரும்பகுதி அனல் மின் உற்பத்தியே. இதற்குத் தேவையான நிலக்கரியை பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா தருகிறது. குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரத்தை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக மின்வாரியங்களுக்குச் சொந்தமான அனல் மின்நிலையங்களுக்குச் சலுகை விலையில் கரியை விற்கிறது கோல் இந்தியா. கோல் இந்தியா தருகின்ற நிலக்கரி போதாமல், கணிசமான அளவு நிலக்கரியை பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து கொள்கின்றன.

மின்-கட்டண-உயர்வுதற்போது உலகச் சந்தையில் நிலக்கரியின் விலை உயர்ந்து விட்டதைத் தொடர்ந்து, மன்மோகன்சிங்கை சந்தித்த டாடா, அம்பானி, ஜின்டால், அதானி உள்ளிட்ட தரகுப் பெருமுதலாளிகள், “மின்சாரத்தின் விலையை உயர்த்துங்கள், அல்லது நிலக்கரியைச் சலுகை விலையில் வழங்குங்கள். இல்லையேல் அனல் மின் நிலையங்களை மூடவேண்டிவரும்” என்று அன்புடன் மிரட்டியுள்ளனர். உடனே சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களையும் அதிகாரிகளையும் கூட்டிய மன்மோகன்சிங், முதலாளிகளுக்குத் தேவையான நிலக்கரியை வெட்டி எடுத்தோ, இறக்குமதி செய்தோ கொடுக்க வேண்டியது கோல் இந்தியா நிறுவனத்தின் பொறுப்பென்றும், ஒப்புக்கொண்டதில் 80% நிலக்கரியைத் தரத் தவறினால் முதலாளிகளுக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். உள்நாட்டு நிலக்கரியை குறைந்த விலையில் விற்பது மட்டுமல்ல; இறக்குமதி செய்து, தள்ளுபடி விலையில் இம்முதலாளிகளுக்கு விற்க வேண்டும்.

டாடாவுக்கு  இந்தோனேசியாவிலும், அதானிக்கு ஆஸ்திரேலியாவிலும் நிலக்கரிச் சுரங்கங்கள் உள்ளன. இந்தோனேசிய டாடாவிடமிருந்து அதிக விலைக்கு வாங்கி, இந்திய டாடாவுக்கு மானிய விலையில் நிலக்கரி விற்பனை! இதற்குப் பெயர் சுதந்திரப் போட்டி, மானியங்களை அகற்றுதல்!

இது மட்டுமல்ல, வரவிருக்கும் 6 ஆண்டுகளில் நிறுவப்படவுள்ள 40,000 மெகாவாட் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரிச் சுரங்கங்கள் தரகு முதலாளிகளுக்கு ‘சும்மா’ தூக்கித் தரப்பட்டிருக்கின்றன. இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை சந்தை விலையில் விற்று லாபம் பார்க்கப்போகிறார்கள். (பிசினெஸ் லைன், 15.3.2011)

தனியார் மின் உற்பத்தியாளர்களில் இரு பிரிவினர் உண்டு. உற்பத்தி செய்யும் மின்சாரத்தைக் குறிப்பிட்ட மின்வாரியத்துக்கோ, ஆலைக்கோ,  சில ஆண்டுகளுக்கு குறிப்பிட்ட விலையில் கொள்முதல் ஒப்பந்தங்கள் போட்டுக் கொண்டு, விற்பனை செய்பவர்கள்   சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள் (Independent Power Producers).

இத்தகைய ஒப்பந்தங்கள் ஏதுமில்லாமல் சந்தையில் அன்றன்றைக்கு நிலவும் மின்சாரத் தேவையின் அடிப்படையில், மின்சாரத்துக்கு விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்பவர்கள் வணிக மின் உற்பத்தியாளர்கள் (Mercantile Power Corporations). ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 17 ரூபாய்க்கும் மேல் கூடப் போவதுண்டு. இதற்கு உச்சவரம்பு ஏதும் கிடையாது.  இத்தகைய தனியார் பிணந்தின்னிகளிடம் மின்சாரம் வாங்கித்தான் தமிழக மின்வாரியம் திவாலாகியிருக்கிறது. சான்றாக, 2009-10  இல்  தமிழக மின்வாரியம், தனது மொத்த மின் தேவையில் 19 விழுக்காட்டை  வணிக மின் உற்பத்தியாளர்களிடம் வாங்கிவிட்டு, அதற்கு விலையாக தனது மொத்த வருவாயில் 49.45 விழுக்காட்டை கொடுத்திருக்கிறது.

இன்று 16,000 மெகாவாட் உற்பத்தியுடன் இந்திய மின் சந்தையின் 10%ஐ இவர்கள் கட்டுப்படுத்துகின்றனர். அடுத்த சில ஆண்டுகளுக்குள் மேலும் 40,000 மெகாவாட் இவர்களது பிடிக்குள் வர இருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய குறுகிய கால பிணந்தின்னி மின்சந்தை இந்தியச் சந்தைதான். இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அக். 2008 முதல் ‘பவர் எக்ஸ்சேஞ்ஜ் ஆப் இந்தியா’ என்ற ஆன்லைன் சந்தை தொடங்கப்பட்டு, இதில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தொடங்கி மூன்றாவது ஆண்டிலேயே 1000 கோடி யூனிட்டுகளுக்கு மேற்பட்ட மின்சாரம் இந்தச் சந்தையில் சூதாடப்பட்டிருக்கிறது என்று பெருமை பொங்க அறிவித்திருக்கிறார் மத்திய மின்சாரத்துறை இணை அமைச்சர் கே.சி.வேணுகோபால்.

தனியார் அணுமின் நிலையங்களும் அனுமதிக்கப்பட இருக்கின்றன. ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா பவர், லார்சன் அண்டு டூப்ரோ போன்ற நிறுவனங்கள் பிரான்சின் அரேவா, ஜப்பானிய தோஷிபா நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை வருகின்றன. இந்திய அணுசக்திக்கழகத்தின் (NPCIL) முன்னாள் தலைவர் வி.கே.சதுர்வேதி ரிலையன்ஸிலும், எஸ்.ஏ.வோரா என்ற முன்னாள் இயக்குநர் டாடா பவர் நிறுவனத்திலும் பொறுப்பேற்றிருக்கின்றனர்.  (அவுட்லுக், 22 அக்; 2007)

சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாற்று மின்சார முயற்சிகளும்கூட,  பெரும் தரகு முதலாளித்துவ நிறுவனங்களிடமே தரப்படுகின்றன. அவர்களுக்கு  மானியங்களை வாரி வழங்குவதுடன், அவர்கள் தயாரிக்கும் மின்சாரத்தையும் அடாத விலை கொடுத்து வாங்குகின்றன மின்வாரியங்கள். தமிழக மின்வாரியம் காற்றாலைகளுக்கு வைத்திருக்கும் கடன் மட்டும் 1500 கோடி ரூபாய்.

தற்போது 77% மின்சாரத்தை மத்திய, மாநில அரசு மின்நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. 23% தனியார் உற்பத்தி.  அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தனியார் முதலாளிகளின் பங்கை 60% ஆக உயர்த்தவிருப்பதாகக் கூறி அமெரிக்க முதலீட்டாளர்களை வரவேற்றிருக்கிறார் மத்திய மின்சார அமைச்சர் ஷிண்டே.

மின் உற்பத்தி மட்டுமல்ல, மின் விநியோகமும் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றது. டில்லி மின்விநியோக நிறுவனத்தின் பெயர், டாடா பவர் கம்பெனி என்றே மாற்றப்பட்டுவிட்டது.  உற்பத்தி, விநியோகம் இரண்டையும் அரசு மின்வாரியமே செய்வது ஏகபோகம் என்று கூறி, மாநில மின் வாரியங்களை உடைத்திருக்கும் அரசு, டாடாஅம்பானிகளின் நிறுவனங்கள் உற்பத்தியிலும் விநியோகத்திலும் மட்டுமின்றி எரிபொருளிலும்  தரகு முதலாளிகள் ஏகபோகம் செலுத்துவதை கேள்விக்குள்ளாக்கவில்லை.

மின்-கட்டண-உயர்வுஇருப்பினும், மோசமான சேவை, அசாத்தியமான கட்டண உயர்வு ஆகிவற்றால் தனியார் சேவை பல்லிளித்துவிட்டது. ஆத்திரம் கொண்ட டில்லி, மும்பை மக்கள் மீண்டும் அரசு மின்வாரியம் கோரிப் போராடுகின்றனர்.

மைய அரசு அமைத்திருக்கும் சுங்லு கமிட்டியோ, மின் தட இழப்பைக் குறைப்பதற்கு, மின் விநியோகத்தை மின்வாரியங்களிடமிருந்து பறித்து, அதைத் தனியார் முகவர்களுக்கு (Franchisee) கொடுக்குமாறும், கம்பிகள் டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட கட்டுமானங்களை 25 ஆண்டுகளுக்கு இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ள அவர்களை அனுமதிக்குமாறும் ஆலோசனை கூறியிருக்கிறது. பேருந்துநிலைய கக்கூசை ஏலம் விடுவது போல, 255 நகரங்களின் மின் விநியோகத்தை ஏலம் விட்டு அரசாங்கம் கல்லா கட்டிவிடலாம் என்றும், அந்த ஏலதாரர்கள் மக்களிடம் வசூலித்துக் கொள்ளட்டும் என்றும் ஆலோசனை கூறியிருக்கிறது. பஞ்சாப், ஹரியானாவில் 31 நகரங்களில் முன்னோட்டமாக இது அமல்படுத்தப்பட இருக்கிறது. (இந்தியன் பவர் செக்டார், 10.2.2012) நெடுஞ்சாலைத் துறை டோல்கேட்டுகள் வசூலில் வெற்றியடைந்திருப்பதால், அதே முறையிலான தனியார்துறைபொதுத்துறை கூட்டினை மின் விநியோகத்திலும் அமல்படுத்தலாமென்றும் அரசு சிந்தித்து வருகிறது. மின் கட்டண வசூலை உத்திரவாதப்படுத்த, ஸ்மார்ட் மீட்டருடன் ப்ரீ பெய்டு கார்டு முறையை இணைப்பது குறித்தும் பரிசீலித்து வருகிறார்கள்.

தெற்காசியா முழுவதற்கும் 30,000 கோடி டாலர் செலவில் ஒரு மின் விநியோக வலைப்பின்னலை அமைத்து, ஒரே மின்சாரச் சந்தையின் கீழ் தெற்காசியாவின் எல்லா நாடுகளையும் கொண்டுவரவேண்டும் என்பதும் இந்தியத் தரகுமுதலாளிகளின் வேட்கை. தெற்காசிய சுதந்திர வர்த்தக வலயத்துக்கான அமைச்சர்கள் கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஆனந்த் சர்மா இதனைக் கூறினார். இத்திட்டத்தின் அடிப்படையில்தான் இந்திய-இலங்கை கடல்வழி மின்தடம் அமைக்கப்பட இருக்கிறது.

இன்று நாம் சந்திக்கும் பிரச்சினையை மின் உற்பத்திப் பற்றாக்குறை தோற்றுவிக்கும் நெருக்கடி என்று மட்டும் குறுக்கிப் புரிந்து கொள்ள கூடாது. குஜராத்திடம் 2000 மெகாவாட் மின்சாரம் உபரியாக விற்க வழியில்லாமல் உள்ளது. முதலாளித்துவ பொருளாதாரத்தில் பற்றாக்குறையைக் காட்டிலும் அபாயகரமான பிரச்சினை உபரி.

நாளை தமிழகம் மின் உபரி மாநிலமாகலாம். ஆனால் அந்த உபரி, சாதாரண மக்களின் மின்சாரப் பற்றாக்குறையை அதிகரிக்கும். இந்திய உணவுக் கழகத்தின் கிடங்குகளில் பிதுங்கி வழியும் தானியம்,  மக்கள் அன்றாடம் உட்கொள்ளும் உணவின் அளவைக் குறைத்து வருவதைப் போல.

உணவுபட்டினியைத் தோற்றுவிக்கும். மின்சாரம் இருட்டையும் தோற்றுவிக்கும்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!

2

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !குலேபகாவலி என்றொரு பழைய திரைப்படத்தில் இப்படியொரு காட்சி வரும்.  ஒரு வீட்டின் திண்ணையில் உட்காரப் போகும் கதாநாயகனின் நண்பனிடம் அவ்வீட்டின் உரிமையாளர், “திண்ணையில உட்காரதீங்க, அப்புறம் திண்ணை வரி போட்டு விடுவாங்க” என்று எச்சரிப்பார்.  இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் சேவை வரியை விரிவாக்கியதன் மூலம், அப்படிப்பட்டதொரு வரிக் கொள்ளையை, மக்கள் மீது ஏவிவிட்டுள்ளது, மன்மோகன் சிங் அரசு.

தனியார்மயம்  தாராளமயத்தின் பின் அறிமுகப்படுத்தப்பட்ட சேவை வரி, இன்று ஆக்டோபஸ் போல மக்களைச் சுற்றிவளைத்து நெறித்து வருகிறது.  இந்த பட்ஜெட்டில் 17 இனங்களைத் தவிர, மற்ற அனைத்தையும், ஏறத்தாழ 119 இனங்களைச் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள மைய அரசு, அவ்வரி விதிப்பையும் 10 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்திவிட்டது.  சேவை வரியோடு, சுங்க வரி, உற்பத்தி வரிகளையும் உயர்த்தியிருப்பதன் மூலம், கடந்த ஆண்டைவிடக் கூடுதலாக 45,940 கோடி ரூபாயைப் பொதுமக்களிடமிருந்து கறந்துவிடும்படி பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இவ்வரிக் கொள்ளை ஒருபுறமிருக்க, பெட்ரோலியப் பொருட்களுக்குக் கொடுத்துவந்த மானியத்தில் 25,000 கோடி ரூபாயையும், யூரியாவிற்குக் கொடுத்து வந்த மானியத்தில் 7,000 கோடி ரூபாயையும் வெட்டித் தள்ளியதன் மூலமும்; 30,000 கோடி ரூபாய் அளவிற்குப் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியார் முதலாளிகளுக்கு விற்பதன் மூலமும் கஜானாவை நிரப்பிக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது, மைய அரசு.

மன்மோகன் சிங் கும்பல் சாமானிய மக்களை என்றுமே ஒரு பொருட்டாகக் கருதியதில்லை.  அக்கும்பல் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வினைக் கட்டுப்படுத்தாததோடு, அப்பொருட்களின் விலை மேலும் உயரும் எனத் தெரிந்தேதான், எரிகிற நெருப்பில் எண்ணெயை எடுத்து ஊற்றுவது போலத்தான், இந்தக் கூடுதல் வரி விதிப்பையும் மானிய வெட்டையும் கொண்டு வந்திருக்கிறது; இது மட்டுமின்றி, பட்ஜெட்டை அறிவித்த கையோடு, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தப் போவதாகவும் திமிரோடு அறிவித்திருக்கிறது.

விவசாய இடுபொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரி வரும் வேளையில், மன்மோகன் சிங் கும்பல் அக்கோரிக்கையை ஒரு பொருட்டாக மதிக்காமல், தெனாவட்டாக யூரியாவிற்கான மானியத்தை வெட்டியிருக்கிறது.  இதுவொருபுறமிருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டங்களில் யூரியாவிற்கான மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.  இந்நடவடிக்கை, யூரியாவின் விலையை கார்ப்பரேட் முதலாளிகளும் வர்த்தகச் சூதாடிகளும் தீர்மானிக்கும்படி விட்டுவிடும் முன்னோட்டம் தவிர வேறில்லை.  அம்மோனியா, பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் வழங்குவதையும், அவற்றின் விலையைத் தீர்மானிப்பதையும் நேரடியாகக் கைகழுவிய மைய அரசு, யூரியா விசயத்தில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் சதியில் இறங்கியிருக்கிறது.  இப்படியொரு நிலை இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்பொழுது யூரியாவிற்கு மானியம் வழங்குவது பெயரளவில் மட்டுமே இருக்கும்; அதே சமயம், யூரியாவின் விலையில் பெரும்பகுதி விவசாயிகளின் தலையில் சுமத்தப்படும்.

‘‘அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்” என பட்ஜெட் உரையில் கொள்கைப் பிரகடனம் செய்திருக்கிறார், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி.  இதற்கு இராணுவச் செலவு உள்ளிட்ட அரசின் ஊதாரிச் செலவுகளையும் மேல்தட்டு கும்பலுக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் வரித் தள்ளுபடி, வரிச் சலுகைகளையும் கட்டுப்படுத்தினாலே, அரசின் செலவைக் குறைத்துவிட முடியும்.  ஆனால், வழக்கம் போலவே இந்த பட்ஜெட்டும் மேல்தட்டுக் கும்பலின் நலனை முன்னிறுத்தியும், உழைக்கும் மக்களின் நலனைப் பலியிட்டும்தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் இராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 1,93,407 கோடி ரூபாய் நிதியில், 79,500 கோடி ரூபாய் ஆயுதங்களும் நவீன போர் விமானங்களும் வாங்க ஒதுக்கப்பட்டுள்ளது.  ஊழலில் ஊறிப் போன அதிகாரிகளுக்கும் ஆயுத பேரத் தரகர்களுக்கும் இதைவிட இனிப்பான செய்தி வேறெதுவும் இருக்க முடியாது.

நடுத்தர மற்றும் மேல்தட்டு வர்க்கத்தினருக்கு 4,500 கோடி ரூபாய் அளவிற்கு வருமான வரிச் சலுகையினை வாரி வழங்கியிருக்கிறார், நிதியமைச்சர்.  உழைக்கும் மக்களுக்கு மானிய விலையிலோ இலவசமாகவோ அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவதை ஓட்டுவங்கி அரசியல் எனத் திட்டித் தீர்க்கும் இக்கும்பல், தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த வருமான வரிச் சலுகை போதாது எனக் கூப்பாடு போடுகிறது.

இந்த ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை 5,21,980 கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.  அதேசமயம், கடந்த ஆண்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட 5,29,432 கோடி ரூபாய்க்கான வரிச் சலுகைகளுள் ஒன்றைக்கூட நிதியமைச்சர் இந்த பட்ஜெட்டில் ரத்து செய்யவில்லை. நிதிப் பற்றாக்குறை பூதகரமாக வளர்ந்து நிற்பதற்கு இந்த ஊரான் வீட்டு நெய்யே என்ற வள்ளல்தனம்தான் காரணம்.  ஆனால், பற்றாக்குறையைச் சமாளிக்க மானியத்தை வெட்டிய கையோடு, தொழிலாளர் வைப்பு நிதிக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியை 9.5 சதவீதத்திலிருந்து 8.25 சதவீதமாகக் குறைத்து, 4.5 கோடி தொழிலாளர்களின் எதிர்காலத்தைக் களவாடிவிட்டது, காங்கிரசு கூட்டணி அரசு.  இந்த வட்டிக் குறைப்பு மன்மோகன் சிங் கும்பலின் வக்கிரப் புத்தியையும் அற்பத்தனத்தையும் ஒருசேர எடுத்துக் காட்டுகிறது.

பட்ஜெட் : செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம் !திருவாளர் மன்மோகன் சிங் சமீபத்தில், “இந்தியாவில் உள்ள குழந்தைகளுள் 42 சதவீதத்தினர் ஊட்டச்சத்து இன்றி நோஞ்சான்களாக வளருவதாகவும், இதுவொரு தேசிய அவமானம்” என்றும் கூறினார்.  அடித்தட்டு மக்களை எந்தளவிற்கு வறுமையும் ஏழ்மையும் வாட்டி வருகின்றன என்பதை உறுதிப்படுத்தும் புள்ளிவிவரம் இது.  மன்மோகன் சிங் திடீர் ஞானோதயம் வாய்த்தவரைப் போல இப்படிக் கூறியிருக்கும் அதே சமயம், அவரது அல்லக்கையும் திட்ட கமிசனின் துணைத் தலைவருமான மாண்டேக் சிங் அலுவாலியா, “நகர்ப்புறத்தில் தனிநபர் வருமானம் நாளொன்றுக்கு ரூ.28.65க்குக் கீழாகவும், கிராமப்புறத்தில் தனிநபர் வருமானம் ரூ.22.42க்குக் கீழாகவும் இருப்பதுதான் வறுமைக் கோட்டின் அளவுகோல்.  இதன்படி வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்திய மக்களின் எண்ணிக்கை 37.2 விழுக்காட்டிலிருந்து 29.8 விழுக்காடாகக் குறைந்துவிட்டதென” தற்பொழுது தடாலடியாக அறிவித்திருக்கிறார்.  ஒருபுறம் நோஞ்சான் குழந்தைகளுக்காக முதலைக் கண்ணீர் வடித்துவிட்டு, மறுபுறம் வறியவர்களின் எண்ணிக்கைக் குறைந்துவிட்டதாகக் கணக்குக் காட்டுவது எப்பேர்பட்ட கயமைத்தனம்!

திட்ட கமிசன் தற்போது அறிவித்துள்ள வறுமைக் கோட்டின் அளவுகோல், அக்கமிசன் ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்திருந்த அளவுகோலைவிட, ஏறத்தாழ நான்கு ரூபாய் குறைவானது.  விலைவாசி உயர்ந்துகொண்டே செல்லும் சமயத்தில், வறியவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்ட வறுமைக் கோட்டின் அளவுகோலை வெட்டும் சில்லறைத்தனமான குறுக்குவழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுள்ளது, மன்மோகன்  அலுவாலியா கும்பல்.  இந்தக் குறுக்குப்புத்திக்கு எதிராக நாடெங்கும் கண்டனங்கள் எழுந்த பிறகும் அதைப் பொருட்படுத்தாத அலுவாலியா, “இந்தக் கணக்கு வேண்டுமானால் துல்லியம் இல்லாமல் இருக்கலாம்.  நாட்டில் வறுமை குறைந்திருக்கிறது.  பட்டினிச் சாவுகள் இல்லை என்பது உண்மையே” என இறுமாப்பாகப் பதில் அளித்திருக்கிறார்.

மன்மோகன்  அலுவாலியா  சிதம்பரம் கும்பல் தேர்ந்தெடுத்து அமல்படுத்தி வரும் பொருளாதார வளர்ச்சிப் பாதை, வறுமை, ஏழ்மை, சமூக ஏற்றத்தாழ்வை மட்டும் தீவிரமாக்கவில்லை; நாட்டின் பொருளாதாரத்தையும் சீர்குலைத்து நாசப்படுத்தி வருகிறது.  குறிப்பாக, நாட்டின் பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அவர்கள் எதிர்பார்த்த 8 சதவீத வளர்ச்சியை எட்டமுடியாமல் முடங்கிப் போய்விட்டது.  விவசாயம் போலவே, உற்பத்தி சார்ந்த தொழிற்துறையும் நீண்ட கோமா நிலைக்குச் சென்றுவிட்டது.  இவையனைத்தும் தனியார்மயம்  தாராளமயம் மிகப்பெரும் தோல்வி அடைந்துவிட்டது என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால், மன்மோகன் சிங் கும்பல் மண்ணுக்குள் தலை புதைக்கும் நெருப்புக் கோழியைப் போல, இந்த உண்மையைக் காண மறுப்பதோடு, தனியார்மயம்  தாராளமயத்தை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் இந்த நெருக்கடியிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற ஆகாயக் கோட்டையைக் கட்டி காட்டுகிறது.  இந்தச் செக்குமாட்டுத் தனத்தற்கு ஏற்றபடியே, பட்ஜெட்டில் நிதி மூலதனத்திற்கும், பங்குச் சந்தை முதலீட்டிற்கும், விமான சேவை, மின்சாரம் போன்ற துறைகளில் நுழைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சலுகைகள் வாரி வழங்கப்பட்டுள்ளன.  பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளைக் கொஞ்சம்கூடப் பொருட்படுத்தாமல்,  சில்லறை வணிகத்தில் 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிப்பது உள்ளிட்டுப்பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவுபடுத்தப் போவதாகவும் அறிவித்திருக்கிறது, காங்கிரசு கூட்டணி அரசு.

நாட்டையும் மக்களையும் மீள முடியாத பேரழிவில் தள்ளாமல் ஓய்வதில்லை எனக் கங்கணம் கட்டிக் கொண்டு மன்மோகன் சிங் கும்பல் வேலை செய்து வருவதைத்தான் இந்த பட்ஜெட்டும் எடுத்துக் காட்டியிருக்கிறது.  ஆனால், போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளோ, துடப்பக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல, “பட்ஜெட்டில் இந்த அளவிற்கு மானியத்தை வெட்டியிருக்கத் தேவையில்லை; மக்கள் நலத் திட்டங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக நிதி ஒதுக்கியிருக்கலாம்” என ஆலோசனைகளை அள்ளிவிட்டு வருகிறார்கள்.

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

 

தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!

145

பொதுவுடைமையைத் தனது பெயரில் தாங்கி, தேசிய இன விடுதலையைத் தனது இலட்சியமாக அறிவித்துக் கொண்ட ஒரு கட்சி குறுகிய இனவெறிக் கட்சியாக, அதுவும் பாசிச இனவெறிக் கட்சியாகவும் இருக்க முடியுமா? முடியும்  என்று திரும்பத் திரும்பக் காட்டி வருகிறது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (த.தே.பொ.க.) என்ற பெயரிலுள்ள ஒரு அமைப்பு.

பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்புவாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்.

“தமிழர் இன எழுச்சி ஏற்படும் போதெல்லாம் தமிழகத்திலுள்ள இடதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் வலதுசாரி இந்தியத் தேசியவாதிகளும் பீதி அடைகின்றனர். இந்தியத் தேசியத்திற்கும் இந்திய ஒற்றுமைக்கும் இடையூறு ஏற்பட்டு விடுமோ என்று கலவரமடைகின்றனர்; கலங்கித் தவிக்கின்றனர்.”

“இனி முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் வெறும் வர்க்கச் சிக்கலாகவும் அரசியல் கட்சிகளின் குறைபாடுகளாகவும் திரித்துக் காட்டி இரசவாதம் செய்வார்கள் இந்தியத் தேசிய இடதுசாரிகள்” (த.தே.பொ.கவின் பத்திரிக்கையான  தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம், 2012 மார்ச் 1613) என்று குற்றஞ்சாட்டும் மணியரசன் கும்பல் அதற்கு எடுத்துக்காட்டாக, ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளையும் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் இவற்றின் நிலைப்பாடுகளையும் சுட்டுகிறது.

இன முரண்பாட்டையும் இனச் சிக்கலையும் அலசி ஆராய்ந்து கரை கண்ட மேதையாகிய, சிந்தனைச் சிற்பியாகிய மணியரசனே! நேர்மையிருந்தால் இங்கே நாங்கள் எழுப்பும் சில கேள்விகளுக்கு உங்கள் பேராசான் நம்பூதிரிபாடு பாணியில் சுற்றி வளைக்காமல் நேரடியாகப் பதில் சொல்லுங்கள்:

தமிழ் தேசியம்இந்திய தேசியத்துக்கும் அதனால் சிறைப்படுத்தப்பட்டுள்ள தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, ஒடியா, வங்காளி, காசுமீரி, பஞ்சாபி, அசாமி முதலிய தேசிய இனங்களுக்கும் இடையிலான முரண்பாடுதானே பகை முரண்பாடு?அவ்வாறின்றி இத்தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் பகை முரண்பாடுகளா? ஒடுக்கப்படும் இந்த தேசிய இனங்கள் தமது எதிரியாக, பகைச் சக்தியாகக் கொண்டுள்ளது, இந்திய தேசியத்தைத்தானே தவிர தங்களைப் போன்ற நிலையிலுள்ள பிற தேசிய இனங்களை எதிரியாக பகை சக்தியாகக் கொள்ள முடியுமா?

நேரடியாகவே கேட்கிறோம்: தமிழ் தேசிய இனத்துக்கும் இந்திய தேசியத்துக்கும் இடையிலானதுதான் பகை முரண்பாடு; தமிழ் தேசியத்தின் எதிரியாக, பகை சக்தியாக இருப்பது, இந்திய தேசியம்தான்! அண்டை தேசிய இனங்களாக இருக்கும் மலையாள, கன்னட, தெலுங்கு இனங்களோடு ஆற்றுநீர் பகிர்வு, எல்லைப் பிரச்சினை போன்றவைகளில் முரண்பட்டு நிற்பதாலேயே தமிழ் தேசிய இனம் அவற்றை பகை சக்தியாக எதிரி சக்தியாகக் கருத முடியுமா?

இன்னும் நேரடியாக, பகிரங்கமாகவே கேட்கிறோம்: முல்லைப் பெரியாறு  தேவிகுளம், பீர்மேடு பிரச்சினைக்காக  மலையாளியையும்; காவிரி  கோலார் பிரச்சினைகளுக்காக கன்னடனையும்; பாலாறு  சித்தூர் பிரச்சினைகளுக்காக தெலுங்கனையும் தமிழன் எதிரியாகக் கொண்டு பகைநிலை எடுக்க வேண்டுமா? அப்படிச் செய்வதைத் தானே இந்திய தேசியம் விரும்புகிறது. அதுதானே இந்திய தேசியத்துக்குத் துணைபோவது? இதைத் தானே த.தே.பொ.க தலைமையாகிய நீங்கள் செய்கிறீர்கள்?

இந்திய தேசியத்திற்குள் சிறை வைக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களுக்கிடையிலான நதிநீர் மற்றும் எல்லைப் பிரச்சினைகளைப் பகை முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவது தானே இந்திய தேசியத்தை பராமரித்து, பாதுகாப்பது; இதன் மூலம் இந்திய தேசியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதுதானே த.தே.பொ.க.வின் வேலையாக இருக்கிறது?

தேசிய இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைப் பகை  முரண்பாடுகளாக வளர்த்து மோதவிடுவிடும் த.தே.பொ.க.வின் கொள்கையை, வேலையை ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் செய்யவில்லை என்று குத்தாட்டம் போடுகிறது மணியரசன் கும்பல்.

“முல்லைப் பெரியாறு அணைய மீட்க எல்லையை மூடு! பொருளாதாரத் தடைபோடு!” என்ற தலைப்பிலான  ம.க.இ.க. மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் 2012 ஜனவரி வெளியீடு குறித்து, “முல்லைப் பெரியாறு உரிமையை மீட்க, கேரளாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்றும்,கேரளாவுக்குச் செல்லும் 13 பாதைகளை மூடவேண்டும் என்றும், அது கூறுவது சரி. ஆனால் இதே ம.க.இ.க. கேரளாவுக்குப் பொருளாதாரத் தடை விதிக்கும் நமது கோரிக்கையை 11.02.2010இல் எதிர்த்து தனது வினவு இணையத் தளத்தில் எழுதியது என்று த.தே.பொ.க. வாதிடுகிறது.

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் கேரளத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான முரண்பாடு 2012  ஜனவரியில் நிலவிய அளவுக்கு 2010  பிப்ரவரியில் கூர்மையடைந்திருக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வினவு இணைய தளத்தில் எழுதியதை எடுத்து வைத்துக் கொண்டு மேற்படி கோரிக்கைகளை முன்வைத்த தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் முன்னுக்குப்பின் முரணாக எழுதுவதாகவும் இப்போதைய ‘தமிழின எழுச்சியை மடைமாற்றுகிறது ம.க.இ.க.’ என்றும் அவதூறு செய்கிறது த.தே.பொ.க.  அப்போதும்கூட கேரளாவுக்கு எதிரான பொருளாதார தடை, முற்றுகை விதிப்பது உடனடி நடவடிக்கையாக இருக்கக்கூடாது கடைசி பட்சமாக நடத்தலாம் என்று தான் வினவு இணையத்தளம் எழுதியிருந்தது.

2012 ஜனவரி வெளியீட்டில் முல்லை பெரியாறு பிரச்சினை கூர்மையடைந்ததற்கான அடிப்படையை விளக்கும் போது தனியார்மயம், தாராளமயம், உலகமயமாக்கத்தின் விளைவாக எழுந்தது என குறிப்பிட்டிருக்கிறோம். இது ஏதோ இனப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினையாகவும் இந்திய தேசியத்திற்கு ஆதரவாகவும் மடைமாற்றுவது என்றும் த.தே.பொ.க. வியாக்கியானம் செய்கிறது.

இந்திய தேசியத்தை உருவாக்கிப் பேணி வளர்க்கும் ஆளும் வர்க்கங்களையும் அவர்களின் தனியார்மயம்  தாராளமயமாக்கம்  உலகமயமாக்கத்தையும் ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகள் எதிர்ப்பது, எப்படி த.தே.பொ.க. சொல்வதைப் போல இன உணர்வாளர்களை இந்திய தேசியவாதத்திற்குள் இழுத்துச் செல்வதாகும்?

ஆனால், இந்திய தேசியத்தையும், அதைக் கட்டிக் காக்கும் இந்திய அரசையும் தனது பகைச் சக்தியாக அறிவித்துக் கொண்டுள்ள த.தே.பொ.க. அவற்றுக்கு எதிராக ஒரு புல்லைக் கூட பிடுங்கியதில்லை என்பது இருக்கட்டும்; ம.க.இ.க. முதலிய புரட்சிகர அமைப்புகளைவிட தமிழீழத்தின் உறுதியான, ஆதரவாளராகப் பீற்றிக் கொள்ளும் த.தே.பொ.க.வும் பிற தமிழ் இனவாதிகளும் கூட முள்ளிவாய்க்கால் படுகொலை வரை இந்தியாவை (இந்திய தேசியம், இந்திய அரசு முதலியவற்றை) தமிழீழ விடுதலையின் பகைச் சக்தி என்ற உண்மையைக்  சொல்லத் துணிந்ததுண்டா?

தமிழ் தேசியம்நக்சல்பாரிப் புரட்சிக் கட்சி தோன்றிய காலத்திலிருந்தே இந்திய தேசியத்துக்கு எதிராக தேசிய இனங்களின் விடுதலையை உயர்த்திப் பிடித்து வந்திருக்கிறது. அதனாலேயே தேசிய இனப் பிரச்சினை என்பது இனிமேலும் கிடையாது, முடிவுக்கு வந்துவிட்டது என்று தனது கட்சிப் பேராயத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நம்பூதிரியின் போலி மார்க்சிஸ்ட் கட்சி. அப்போதும் அந்தக் கட்சியில்தான் இன்றைய த.தே.பொ.க. தலமை குப்பை கொட்டிக் கொண்டிருந்தது. அதன்பிறகு வெவ்வேறு அவதாரமெடுத்து, தனது விரைவான சொந்த வளர்ச்சிக்கான குறுக்குவழி  “அடையாள அரசியல்” என்ற முறையில் த.தே.பொ.க. தலமை தெரிந்தெடுத்துக் கொண்டதுதான், தமிழ்த் தேசிய இனப் பிரச்சினை. மற்றபடி தமிழ்த் தேசிய இனத்தின் மீது அதற்குள்ள பற்றினால் அல்ல.

ஏற்கெனவே இங்கே பல பத்து தமிழ்த் தேசிய இனக் குழுக்கள் உள்ளன; அவை எல்லாவற்றையும் விடத் த.தே.பொ.கட்சித் தலைமை வித்தியாசமானதும் ஆழ்ந்த சிந்தனையும் தமிழ்த் தேசியத்தின் தீவிரப் பற்றும் தெளிவும் கொண்டதாகக் காட்டிக் கொள்கிறது; ஆனால், நடைமுறையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிராகவே த.தே.பொ.கட்சித் தலைமை பலவாறு உளறிக் கொட்டிக் கிளறி மூடுகிறது.

நிலவுடைமை பண்பாட்டையும், பார்ப்பனிய சனாதனத்தைப் புகுத்திய நிலவுடைமை மன்னர்களின் அருமை பெருமைகளை ஏற்றிப் போற்றி பாரம்பரிய உரிமை பாராட்டி தமிழ்த் தேசியத்தைக் கொச்சைப்படுத்துகிறது. இந்திய தேசியத்தை  இந்து தேசியத்தை உயர்த்திப் பிடித்த பார்ப்பனிய பாரதியைப் போற்றுகிறது. இராமன் தமிழ்க் கடவுள் என்று சொல்லி இந்துத்துவத்தையும் தமிழ்த் தேசியத்துக்குள் புகுத்துகிறது.

இவ்வாறு உண்மையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான இந்துத்துவ  இந்திய தேசியத்தையும் ஏற்றுக் கொண்டுள்ள த.தே.பொ.க. தலைமை, குறுகிய இனவெறி சிவசேனா பாசிசத்தையும் கையிலெடுத்துக் கொண்டுள்ளதில் வியப்பில்லை. பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடித் தமிழகத்தில் குடியேறும் பிற மாநிலத்தவர்கள் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள், தமிழர்களுக்கு எதிராக ஆதிக்கம் புரிபவர்கள், அவர்களை  வெளியேற்ற வேண்டும் என்று கூறி  சிவசேனாக்களின் பாசிச  இனவெறி பாணியில் நஞ்சு கக்குகிறது, த.தே.பொ.க. தலைமை.

“கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்முறை எனப் பலக் குற்றச் செயல் தமிழ்நாட்டில் பெருகிவிட்டதற்கு முகாமையான காரணம் வெளிமாநிலத்தவர்களின் மிகை வருகை என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது” என்று கூறும் த.தே.பொ.க. தலைமை, தானும் அதை வழிமொழிந்து, “தமிழகத்தில் தமிழர்கள் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறைகளை விட அதிக விகிதத்தில் வெளிமாநிலத்தவர் நடத்தும் கொள்ளை, பாலியல் வன்முறை நிகழ்வுகள் இருக்கின்றன” என்று பச்சையாக கோயாபல்சு புளுகுகளை அள்ளி வீசுகிறது.

குடியேறும் வெளிமாநிலத்தவர் அனைவரும் ஒரே வகையினர் அல்ல. இன்றைய தனியார்மயம், தாராளமயம், உலகமய சூழலில் வாழ்வாதாரங்கள் பிடுங்கப்பட்டு, துரத்தியடிக்கப்படும் உழைப்பாளி மக்கள் பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்ந்து,  ஓலைக்கொட்டைகளிலும்,  தகரக் கொட்டடிகளிலும் புழுங்கித் தவிக்கின்றனர். தமிழ் ஒப்பந்தக்காரர்களிடம் கொத்தடிமைகளாக அற்பக் கூலிக்கும், சில தமிழ்க் கிரிமினல்களின் கேட்பாரற்ற தாக்குதல், வழிப்பறிக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் பலியாகிறார்கள்.

தமிழகத்திலுள்ள சுயநிதிக் கல்லூரிகளில் சேர்ந்து சீரழிந்த பண்பாட்டிலும், கிரிமினல் குற்றங்களிலும் ஈடுபடும் வெளிமாநிலத்தவர் வேறொரு பிரிவினர். இவர்கள், தமது சொந்த மாநிலங்களில் குறுக்கு வழியில் செல்வத்தைக் குவிக்கும் குடும்பங்களின் செல்லப்பிள்ளைகள். இந்த வேறுபாட்டை  மூடிமறைக்கிறது, த.தே.பொ.க. தலைமை.

தமிழ்த் தேசத்தில் குடியேறும் வெளிமாநிலத்தவர்கள் எல்லாம் அடகுக்கடை, சினிமா முதலீட்டாளர்கள், தமிழர்கள் மீது ஆதிக்கமும் சுரண்டலும் செய்பவர்கள் மட்டுமல்ல,  கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் என்று பார்ப்பன  பாசிச ஜெயாவும் அதன் போலீசும் கூறுவதை வழிமொழிந்து மணியரசன் கும்பல் குற்றஞ் சுமத்துகிறது. அதனால் வெளிமாநிலத்தவர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று போராடவும் செய்கிறது.

வெளி தேசங்களில் குடியேறும் தமிழர்கள் எல்லாம்  உழைக்கும் மக்கள்;  குடியேறும் தமிழர்கள் அம்மாநிலங்களில் ஆதிக்கம் புரிபவர்களோ சுரண்டுபவர்களோ அல்ல என்று புளுகுகிறது, த.தே.பொ.க. தலைமை.

இதுவும் உண்மையல்ல. வெளிமாநிலங்களில் குடியேறும் தமிழர்களிலும் ஒருபிரிவினர் கந்துவட்டி  லேவாதேவியிலும், அம்பானி, டாடா, பிர்லாக்களின் கார்ப்பரேட் நிறுவனங்களில் அதிகார வர்க்க முதலாளிகளாகவும், (சசிகலா) நடராசன், தம்பிதுரை, தேவநாதன் போன்ற தமிழர்கள் உ.பி., பீகார், அரியானாவில் சுயநிதிக் கல்லூரிகள் வைத்துக் கொள்ளையடிக்கிறார்கள், குடிபெயரும் தமிழர்கள் மற்றும் புலம் பெயரும் ஈழத்தமிழர்களிலும் ஒரு சிலர் குற்றச் செயல்களில் பிடிபடுகின்றனர். அதற்காக எல்லாத் தமிழர்களையும் வெளியேற்ற வேண்டும் என்பது சரியாகுமா என்று மணியரசன் கும்பல்தான் கூறவேண்டும்.

பாசிசக் கழிசடை அரசியல் மணியரசன்களே! ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியில் வாழும் ஐந்து இலட்சம் உழைக்கும் தமிழ் மக்களைத் தாக்கும் சிவசேனா இனவெறியர்களுக்கும், உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைத் தாக்கும் அந்தந்த நாட்டு நிறவெறி பாசிஸ்டுகளுக்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு?

பின் குறிப்பு:  மணியரசன் வகையறாக்கள் எமக்கு எதிராகத் தமது அவதூறுகளைத் தொடர்வதற்கு வசதியாக ஒரு தகவல்:  எமது தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி நூற்றுக் கணக்கில் ஒரிசா, ஜார்கண்ட், பீகார், சட்டிஸ்கர், வங்காள புலம்பெயர் தொழிலாளர்களை உறுப்பினர்களாக்கி வருகிறது!

______________________________________________________

புதிய ஜனநாயகம், ஏப்ரல் – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!

22

உழைப்புச் சுரண்டல் – இளைஞர்களை விழுங்கிவரும் தமிழகம் !!

 “தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 லட்சம் புலம்பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கேயுள்ள தொழிலாளர்கள் குறைந்த கூலி மற்றும் அபாயகரமான பணி சூழல்களுக்கு வர மறுப்பதால் இந்த நிலை.  ஆனால் அத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ‘வட இந்தியர்கள்’ மேலுள்ள தவறான எண்ணம் காரணமாக எளிதாக தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்”

டந்த வார இறுதியி்ல், அலங்கோலமான தோற்றத்துடன், உடம்பில் சட்டையின்றி வந்த ஒரு மனிதன் ஏறக்குறைய சாவை சந்திக்கும் அளவிற்கு தாக்கப்பட்டார்.  காவல்துறையினரும், வேடிக்கை பார்த்த பொது மக்களும் அந்த மனிதன் நினைவை இழக்கும் வரை தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தனர்.  ஒரு சிலர் உற்சாகத்துடன் அந்த தாக்கும் கூட்டத்தை ஊக்குவித்தனர்.

இந்த நிகழ்வு நடப்பதற்கு 3 தினங்கள் முன்னதாக சமீபத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி 5 நபர்கள் நடு இரவில் காவல்துறையினரால் (என்கவுன்டர்) கொல்லப்பட்டதை சென்னை நகரம் கண்டது.

இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஒரு விஷ‌யம் பொதுவானதாக இருப்பதை அறியலாம் – ‘வட இந்தியர்’ என்ற காரணம்.  அந்த தாக்குதலை கண்ணுற்ற சாட்சி ஒருவர் பத்திரிகையாளரிடம் விவரிக்கும் போது கூட்டம் ‘வடஇந்திய திருடனை’ தாக்கியது, கடுமையாக தாக்கி நினைவிழந்த நிலையில் மெயின் ரோட்டிற்கு அவன் இழுத்து வரப்பட்டான் என்றார். தோற்றத்தில் வட இந்தியர் போல் காணப்பட்டவர் இறுதியில் ஆந்திராவிலிருந்து இங்கு பிழைக்க வந்த வெங்கட்ராவ் என தெரிய வந்தது.  எனவே யார் இந்த வட இந்தியர்கள், அவர்கள் இங்கே என்ன செய்கிறார்கள்.

தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!
கட்டிடத் தொழிலில் வட இந்திய இளைஞர்கள். தமிழகத்தில்ம 10 லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள் - படம் thehindu.com

வடஇந்தியர்

சென்னை உயர்நீதிமன்றம் முன்பாக ஆறு வழக்கறிஞர்கள் மற்றும் சமீபத்தில் என்கவுன்டர் நடந்த வேளச்சேரி பகுதி குடியிருப்போர் ஆகியோர் இணைந்து இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.  இந்த வட இந்தியர்கள் வட மாநிலங்களிலிருந்து கூலிக்கு வேலை தேடி வந்த தொழிலாளர்கள்.  நிதானமாக இங்கு பழகி காலூன்றிய பிறகு பல குற்றங்களை புரிய துவங்கினர்.  பெரும் பாலானவை மிகக் கொடூரமான மற்றும் கடுமையான குற்றங்கள், இவ்வாறாக அவர்களைப் பற்றி விவரிக்கிறது மேற்சொன்ன மனுக்கள்.  மேலும் அதில் விவரிக்கையில் வடஇந்தியர்களால் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்றும் சொல்லப்பட்டுள்ளது.  சில குழுக்களான வட இந்தியர்கள் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதால் தமிழக மக்களின் அமைதி பாதிக்கப்பட்டுள்ளது.  இத்தகைய மனுக்கள் காவல்துறை மேற்கொண்ட மனித உரிமை மீறல் கொலைகள்தான் நடந்துமுடிந்த என்கவுன்டர் என தாக்கல் செய்யப்பட்டுள்ள பொதுநலன் சார்ந்த மனுக்களை எதிர்த்து சொல்வதற்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  தீய நோக்கம் மற்றும் தவறான எண்ணத்துடன் மேற்படி மனுக்களில் சொல்லப் பட்டவை யாவும் உண்மையல்ல.  அவர்கள் ‘தொழிலாளர்கள்’.  ஆனால் அந்த உண்மை இதோடு நிற்கிறது.

தமிழ்நாட்டில் சென்னை, அதன் சுற்றுப்புறங்கள், கோவை, திருச்சி, மதுரை, ஓசூர், திருப்பூர், கன்னியாகுமரி, மற்றும் திருநெல்வேலி நகரங்களை மையங்களாக வைத்து ஏறக்குறைய 10 லட்சம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணி புரிவதாக கணக்கிடப்பட்டிருக்கிறது.

அசாம், பீகார், ஒரிசா, மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம் இன்னும் போபால் போன்ற பகுதிகளிலிருந்து பிழைப்பு தேடி வரும் இத்தகைய தொழிலாளர்கள் தனியார் மற்றும் அரசு சார்ந்த கட்டிட கட்டுமான பணிகள், சிறிய சிறிய பொறியியல் நிறுவனங்களின் பிரிவுகள், ஸ்டீல் ரோலிங் மில், லேத், பனியன் நிறுவனங்கள், ஆகியவற்றில் தொழிலாளர்களாக, சாலையோர உணவகங்கள், இன்னும் நகரின் ஆடம்பர உணவகங்கள் போன்றவற்றில் உணவு தயாரிப்பு, காவலர் பணி இன்னும் பண்ணை வீடுகள் போன்றவற்றில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நாட்களில் ஒரு சேரியையோ அல்லது மீனவ குப்பத்தை கடந்தோ நடந்து செல்லும்போது பெரும்பாலும் இனிமையான குரலில் போஜ்புரி, இந்தி, பங்ளா அல்லது ஒரிய மொழியில் பேச்சுக்கள் அல்லது பாட்டுக்களை கேட்கலாம்.

வட இந்திய “திருடர்கள்” என மோசமாக வருணிக்கப்பட்டவர்களில் யார் திருடர்கள், அவர்கள் திருட்டு எவ்வாறு நடைபெறுகிறது என்பதை அறிய முற்பட்டேன் நான்.  எனவே அப்போதுதான் பணி முடித்து திரும்பியிருந்த பீகார் இளைஞர்கள் சிலரை சந்தித்தேன்.  அவர்கள் நான்கைந்து பேர்களாக பழைய மகாபலிபுரம் சாலை அருகேயுள்ள சேரி ஒன்றில் சிறிய அறையில் வசிக்கின்றனர்.  120 சதுரஅடி அளவிலான அறை, இளம் பச்சை வண்ண சுவர், சுவரில் அடிக்கப்பட்ட ஆணிகளில் சில சட்டைகள், பேண்ட்கள், ஒரு கண்ணாடி, ஒரு பிளாஸ்டிக் சீப்பு, சிறிய பெட்டிகள், பைகள், ஒரு மண்ணெண்ணை அடுப்பு, சில சமையல் பானைகள், சட்டிகள், தட்டுகள், டம்ளர், இரண்டு வாளிகள், தரை விரிப்புகள், சில கைபேசிகள்.  கழிவரை இல்லை, பொது திறந்த வெளி குளிப்பிடம். அடுத்த வீட்டில் குடியிருக்கும் தொழிற்சாலை தொழிலாளி ஒருவருடன் ஒப்பிடும் போது வேறு எந்த குறிப்பிடத்தக்கவையோ, அல்லது இயல்பிலிருந்து மாறுபட்டோ எதுவுமில்லை.  இருவரும் புலம் பெயர்ந்தவர்கள்.  ஒரு வீட்டிலுள்ளவர் பிற மாநிலத்தவர், மற்றொரு வீடு பிற மாவட்டத்தை சேர்ந்தவர். முக்கியமான வேறுபாடு என்பது அவர்கள் பேசும் மொழி.  அடுத்த வீட்டுக்காரர் பேசுவது தமிழ், இந்த இளைஞர்கள் பேசுவது போஜ்புரி.  அடுத்த வீட்டுக்காரருக்கு குடும்பம் உள்ளது.  இந்த இளைஞர்கள் தங்கள் குடும்பங்களை சொந்த மாநிலத்தில் விட்டு விட்டு வந்துள்ளனர்.

பின்னர் சொல்லப்பட்டவர்கள் சந்திக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க வித்தியாசம், அவர்கள் அதிகம் தாக்குதலுக்கு உள்ளாகிற அளவிலான மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், ஒப்புக்கொள்ளவைக்கும் பணி நிபந்தனைகள் ஆகியவை ஆகும்.  பெரும்பாலான இத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு ஒப்பந்த காரர்கள், சார்நிலை ஒப்பந்தகாரர்களின் கீழ் அணிதிரட்டப்பட்டு பணி வழங்கப்படுகின்றனர்.

முன்னிராஜ் என்ற தலித் ஒப்பந்தகாரர் ஏறக்குறைய 650 பீகார் தொழிலாளர்களை தன்னிடத்தில் வைத்துக் கொண்டு ஓசூரை சுற்றியுள்ள  சிறிய முதலீட்டு பொறியியல் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பணிக்கு அனுப்பப்படுகின்றனர்.  எந்த இடமாக இருந்தாலும் இத்தகைய தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ 3500 முதல் 4000 வரை கூலி கொடுக்கப்படுகிறது,  அவர்கள் அதில் 10 சதவீதத்தை மேற்படி ஒப்பந்த காரருக்கு கொடுக்க வேண்டும்.  அந்த வகையில் ஒப்பந்தகாரருக்கு கிடைப்பது மாதம் உத்தேசமாக ரூ 2 லட்சத்திற்கு மேல்.  இது போல் ஏறக்குறைய 30000 தொழிலாளர்கள் பீகார், மேற்கு வங்கம், ஒரிசா, நேப்பால் பகுதியிலிருந்து வந்து இந்த பகுதிகளில் பணிபுரிகின்றனர்.

நம் பகுதி தொழிலாளர்கள் பெரும்பாலும் உடலுழைப்பு குறைந்த பணிகளை விரும்புவதுடன், இத்தகைய தொழிற்சாலைகளில் பணிபுரிய மறுக்கின்றனர். ஓசூர் சிறு தொழில் சங்கத்தை சேர்ந்த சம்பத் கூறுகையில் இந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நமது கலாச்சாரத்திற்குள் படையெடுப்பு போல் நுழைந்தவர்கள், இந்தி பேசுகின்றனர், துர்கா பூஜை வழிபடுகின்றனர் என்றார்.  முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ‘விரல்கள்’ என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள ஆவணப்படத்தில் எவ்வாறு நமது தொழிலாளர்கள் நாசூக்காக இத்தகைய தொழிற்சாலையில் பணிபுரிவதை தவிர்க்கின்றனர் என்பதை படம் பிடித்துள்ளனர்.  அந்த படத்தில் இந்த தொழிற்சாலைகளில் உள்ள ஆபத்தான பணி  சூழல்கள், நிபந்தனைகள் மற்றும் அடிக்கடி அவர்களின் விரல்கள் நசுங்கி இழக்கப்படுவதை விவரிக்கிறது.  இரும்பு தகடுகளை வடிவமைக்கும் பொறிகளில் இது அடிக்கடி நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.  சில மருத்துவ உதவிகள் தவிர இழப்பீடு என்ற வகையில் இவர்களுக்கு எந்த உதவியும் தரப்படுவதில்லை.

துயரம் நிறைந்த கதைகள்

“எங்கள் காயங்களுக்கு எந்த பண உதவியும் தரப்படுவதில்லை. நாங்கள் தான் அவற்றிற்கு செலவழிக்கவேண்டியுள்ளது.  ஏறக்குறைய தினசரி நான் என் கைகளில் அடிபட்டுக் கொள்கிறேன், என்னைப் போன்று பல தொழிலாளர்கள் காயமுறுகின்றனர்” என்று கூறுகிறார் 21 வயதான மனாஸ்.  இவர் கயா மாவட்டத்திலிருந்து இங்கு வந்து கடந்த 6 மாதங்களாக பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள பெருங்குடியில் தண்ணீர் அடிபம்பிற்கான வடிவங்கள் தயாரிப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

மனாஸ் தெரிவிக்கையில் என்னுடன் நான் பணிபுரியும் தொழிற்சாலையில் பணிபுரியும் அனைவரும் அசாம் மற்றும் பீகாரிலிருந்து வந்தவர்கள் என்றும், வாரத்தில் 6 நாட்கள் தினமும் 12 மணி நேரம் பணிபுரிகிறோம், எங்களுக்கு மாதச் சம்பளம் 6000 என்கிறார்.  அவருடன் உடன் வசிக்கும் 19 வயது தொழிலாளி கூறுகையில் நான் கடந்த வருடம் வேறு ஒரு தொழிற்சாலைக்கு பணிக்கு வந்தேன்.  அங்கு தினமும் 12 மணிநேரம் அதிகமான பளுவை தூக்கும் பணி என்பதால் நோய் வாய்ப்பட்டு அதை விட்டுவிட்டேன் என்றார்.

“நான் டெல்லியில் ஒரு உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன்.  3 மாதங்களுக்கு முன்னர் இங்கு வந்தேன்.  அங்கு தினமும் 16 மணி நேரப்பணிக்கு மாதம் ரூ 5000 கொடுத்தார்கள்.  இங்கு அதைக்காட்டிலும் குறைவான நேர பணிக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கிறது, இருப்பினும் நான் இங்கு தொடர விரும்பவில்லை, நான் பாதுகாப்பற்றவனாக உணர்கிறேன்.  இங்குள்ள காவல் துறையினர் எங்கள் வாழ்க்கையை துன்பத்திற்குரியதாக ஆக்குகின்றனர்” என்கிறார் நந்த்லால் என்ற கயா மாவட்ட தொழிலாளி.  இவர் 6 பேர் கொண்ட தனது குடும்பத்திற்கு மாதம் ரூ 4000 அனுப்பிவருவதாக கூறுகிறார்.  இதுவரை காவல்துறை துன்புறுத்தலைப் பற்றி எதுவும் கூறாத மனாஸ், வரிசையில் காத்திருந்தது போல், எனக்கும் இரவு 7 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே செல்ல பயமாக இருக்கிறது.  வெளியே சென்றால் நகர்வலம் வரும் காவலர் தடுத்து நிறுத்தி புகைப்பட அடையாள சான்று கோருகிறார்.  இல்லையென்று சொன்னால் காவல் நிலையத்திற்கு விசாரிக்க அழைத்துச் சென்றுவிடுவார்கள் என்றார்.  கடந்த மாத வங்கி கொள்ளை நிகழ்விற்கு பிறகு காவல்துறையினர் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வசிக்கும் சேரிகளில் புகுந்து அவர்கள் அடையாள சான்று, பணிபுரிவதற்கான அத்தாட்சி போன்றவற்றை வினவியுள்ளனர்.

முறைசாரா  தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த கீதா ராமகிருஷ்ணன் என்பவர் எங்கே, யார் இந்த பிற மாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டையும், பணிச்சான்றும் வழங்குவார்கள் என கேள்வி எழுப்புகிறார்.  பிற மாநிலங்களுக்கிடையேயான புலம் பெயர் தொழிலாளர்கள் சட்டத்தில் மாநிலங்களுக்கிடையே புலம் பெயரும் தொழிலாளி என்பதற்கான விளக்கமே பிரச்சனைக்குரியதாக உள்ளது.  அந்த சட்டம் ஒரு மாநில ஒப்பந்தகாரரால் பிற மாநில நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படும் தொழிலாளர்களை மட்டுமே அங்கீகரிக்கிறது.

பாதுகாப்பில்லை

இதை மொழிபெயர்த்து பார்த்தால் பெரும்பாலான இத்தகைய தொழிலாளர்கள் இந்தசட்ட வரம்பிற்குள் வரமாட்டார்கள்.  எனவே சம்பளம், மாற்றுப் பணிக்கான படிகள், பணி நிபந்தனை, நியமன நிபந்தனை போன்ற அந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள உரிமைகள் தொடர்பாக கேள்விகள் இவர்களுக்கு எழாது. சொல்லப் போனால் 2010-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் அனைத்து கட்டுமான பணி தொழிலாளர்களின் விபரங்கள் பதிவு செய்யப்பட வேண்டுமென்று உத்திரவிட்டது.  இரண்டு அரசாணைகள் காரணமாக இந்த தீர்ப்பு நிறைவேற்ற இயலாத சிரமத்தில் உள்ளது.

அந்த ஆணைகளில் பதிவிற்கு முன்பாக ஒவ்வொரு தொழிலாளியையும் கிராம நிர்வாக அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு சான்றளிக்கப் பட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.  எந்த ஒரு கிராம நிர்வாக அலுவலரும் இத்தகைய மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்துள்ள தொழிலாளர்களை சரி பார்த்து சான்று செய்ய தயாரில்லை என்கிறார் கீதா ராமகிருஷ்ணன்.  2009ல் இரண்டு பிற மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் மானபங்கப் படுத்தப்பட்ட நிகழ்விற்கு பிறகு இத்தகைய தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மாநில அளவிலான கொள்கை வரைவு செய்யப்பட்டது.  ஆனால் அது இன்னும் செயல்முறைக்கு வராமல் தூசியடைந்து உள்ளது.

மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களாகிவிட்டனர்.  பாதிக்கப்பட்ட குழுக்களான அவர்கள் பாதுகாப்பின்றி, எவ்வித சட்ட, சமூக காப்புமின்றி உள்ளனர்.  இத்தகைய தொழிலாளர்கள் மாநிலத்தவர்களால், அரசாங்கத்தால், அதிகமான பொறாமையுள்ள தேசியவாத அமைப்புகளால் இன்னும் வேதனையோடு சொல்லப்போனால் உள்ளூர் தொழிலாளர்களால் தாக்குதலுக்கு எளிதாக இலக்காக்கப்படுகின்றனர்.

____________________________________________________________________

நன்றி – மதுமிதா தத்தா (சென்னையில் வசித்துவரும் ஆர்வலர் மற்றும் ஆராய்ச்சியாளர்) – தி இந்து நாளிதழ்

Come south, young man, but here be dragons

தமிழில் – சித்திரகுப்தன்

_____________________________________________________________________

மொழி பெயர்ப்பாளர் குறிப்பு-

  உலகமயமாக்கல் சூழலில் திட்டமிட்டு விவசாயங்கள் அழிக்கப்படுவதால், இத்தகைய புலம் பெயர்தல் என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.  குறிப்பாக தமிழக தொழிலாளர் இளைஞர்கள் இதை அடுத்த மாநிலத்தவன்தானே அடிவாங்குகிறான், அல்லது சுரண்டப்படுகிறான் என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால், நமது உழைப்பின் ஊதியம் என்பதும் படிப்படியாக குறையத் துவங்கும்.  கார்ப்பரேட்களின் இத்தகைய உழைப்பு சுரண்டல்களுக்கெதிராக அணிதிரள வேண்டும்.  அத்தகைய வட மாநில இளைஞர்களையும் அணிதிரட்டி நியாயத்தை பெற போராட சொல்லிக் கொடுக்க வேண்டும்.

­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­_________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

21

“இந்திய இராணுவம்” என்றாலே பலருக்கும் பலவும் நினைவுக்கு வரும். பொதுவாகப் பார்த்தால் இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு தேசப்பற்று நினைவுக்கு வரும்;  மேட்டுக்குடி / ஐ.டி துறை இளைஞர்களுக்கு சாகசங்கள் நினைவுக்கு வரும்;  வடகிழக்குப் பெண்களுக்கு கற்பழிப்புகள் நினைவுக்கு வந்து ஆத்திரம் தோன்றும்;  காஷ்மீரிகளுக்குக் கொலைகள் நினைவுக்கு வந்து வன்மம் தோன்றும்;  தண்டகாரண்யக் காட்டின் பழங்குடி மக்களுக்கு மண் பறிபோகும் சோகம் நினைவுக்கு வந்து வீரம் பிறக்கும்;  விவசாயம் பொய்த்துப் போன வட மாநிலங்களில் பள்ளி முடித்த இளைஞர்களுக்கு சுட்ட ரொட்டியும் பருப்புக் கூட்டும் வறுத்த கறியும் நினைவுக்கு வந்து ஏக்கம் பிறக்கும்;  மொழி-இன வேறுபாடு இல்லாமல் மொக்கைகளுக்கு மலிவான மிலிட்டரி சரக்கு நினைவுக்கு வந்து எச்சிலூறும்..

பிறருக்குத் தோன்றுவதிருக்கட்டும் – அதே இராணுவத்தின் மேல் மட்டத்திலிருந்து கடைநிலைவரை உள்ள அதிகாரிகளுக்கு தாம் பணிபுரியும் பிரம்மாண்டமான இயந்திரத்தைப் பற்றி என்ன மாதிரியான சித்திரம் இருக்கும்?

அது என்னவென்பதைப் புரிந்து கொள்ள அவர்கள் வாழ்க்கையையும் அது உத்திரவாதப்படுத்திக் கொடுத்திருக்கும் அதிகார வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வது அவசியம். இராணுவத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவருக்கு சுமார் அறுபத்தோரு வகையான சலுகைகள் வழங்கப்படுகின்றது. துவக்கச் சம்பளமாக மாதம் ரூ 15,600-ல் இருந்து 39,100 வரை வழங்கப்படுகிறது. இது போக, சேவைச் சம்பளம் 6,000, போக்குவரத்து அலவன்சாக 1,600-ல் இருந்து 3200 வரை தரப்படுகிறது, சியாச்சின் போன்ற பகுதிகளில் பணிபுரிய தனியாக மாதம் 14,000, தரமான உணவுப் பொருட்கள் அனைத்தும் மலிவான விலைக்கு, வருடத்திற்கு இரண்டு மாதங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இலவச ரயில் பயணம், குடும்பம் மொத்தத்திற்கும் இலவச மருத்துவம், கண்டோன்மென்ட் பகுதிகளில் மலிவு விலைக்குத் தங்குமிடம், பெருநகரங்களில் சொந்த வீடு வாங்க ஒதுக்கீடு, சீருடைக்கு படி, செருப்புக்கு படி, அதற்குப் பாலீஷ் போட்டுக் கொள்ள படி… ஓய்வு பெற்ற பின்னும் வாழ்நாள் முழுக்க ஓய்வூதியம், அரசு வேலைகளில் இட ஒதுக்கீடு… இன்னும் சொல்லி மாளாது நண்பர்களே.

சுருங்கச் சொன்னால் இராணுவம் என்பது காயடிக்கப்பட்டு நன்றாக ஊதிப் பெருத்த பங்களா நாய். அளவற்ற அதிகாரம், கேள்விகளுக்கப்பாற்பட்ட போலிப் புனிதம், துப்பாக்கியேந்திய வெட்டிப் பெருமிதம், மக்களுக்கு இவர்கள் மேல் இருக்கும் அச்சம், செயலற்ற பலம் – இவை மொத்தமும் சேர்ந்து வழங்கும் ஒருவகை விசேடமான திமிர் – இவையெல்லாம்தான் ஒரு இராணுவ அதிகாரியின் ஆளுமையை தீர்மானிக்கின்றன.  2012-ம் ஆண்டு மட்டும் இந்திய இராணுவத்துக்கான அதிகாரப்பூர்வமான பட்ஜெட் ஒதுக்கீடு ஒரு லட்சத்து என்பத்தெட்டாயிரத்து எழுநூற்றுப் பத்து கோடிகள்(37.65 பில்லியன் டாலர்கள்)..!

இராணுவச் செலவினங்களைப் பொருத்தமட்டில் இந்திய இராணுவம் உலகளவில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. ஆயுத இறக்குமதியைப் பொருத்தவரை இந்தியா உலகளவில் முதலிடத்தில் இருக்கிறது. பிரம்மாண்டமான இராணுவ பட்ஜெட்டின் பெரும்பகுதி புதிய தளவாடங்கள் வாங்கவும், இருக்கும் உபகரணங்களை மேம்படுத்தவும் செலவிடப்படுகிறது. 2007 – 2012 கால அளவில் மட்டும் சுமார் 50 பில்லியன் டாலர்கள் புதிய தளவாடங்கள் வாங்க செலவிடப்பட்டதாக சுயேச்சையான மதிப்பீடு ஒன்று கூறுகிறது.

முன்பே குறிப்பிட்ட கேள்விகளுக்கப்பாற்பட்ட அளவற்ற அதிகாரமும் அதிகாரத் திமிரும் உள்ள ஒரு இடத்தில் இப்படி வரைமுறையின்றி நிதியைக் குவித்தால் என்னவாகும்? இதைத் தான் சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் தண்டோரா போட்டு உலகத்துக்கு அறிவிக்கின்றன.

இராணுவத் தலைமை தளபதி வி.கே. சிங்
இராணுவத் தலைமை தளபதி வி.கே. சிங்

மார்ச் 25-ம் தேதியிட்ட இந்துப் பத்திரிகையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி வி.கே சிங்கின் பேட்டி ஒன்று வெளியாகிறது. அதில், சுமார் ஒரு வருடத்திற்கு முன் அவரது சக அதிகாரி ஒருவர் (பின்னர் இது லெப்டினென்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் என்று உறுதிப்படுத்தப்பட்டது), 600 இராணுவத்திற்கான மாறுபட்ட புவியியல் பரப்பிலும் இயங்கங்கூடிய கனரக வாகனங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடக்காமலிருக்க 14 கோடிகள் லஞ்சமாக அளிக்க முன்வந்தார் என்றும், மேற்படி வாகனங்கள் தரமற்றதென்றும் குறிப்பிடுகிறார். தற்போது அதே கம்பெனியைச் சேர்ந்த சுமார் 7000 வாகனங்கள் இராணுவத்தின் பயன்பாட்டில் இருக்கின்றது. இப்படி தலைமைத் தளபதியிடமே லஞ்ச பேரம் பேசும் சூழல் இராணுவத்தில் உண்டானது குறித்து அவர் குறிப்பிடும் போது, “எங்கோ எப்படியோ நமது தரம் தாழ்ந்து வீழ்ந்து விட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

உடனே இந்தச் செய்தியைக் கையில் எடுத்துக் கொண்ட தேசிய ஊடகங்கள், இதற்கு மசாலா சேர்க்கும் விதமாக சமீப காலமாய் இராணுவத் தளபதிக்கும் அரசுக்கும் இடையே அவரது பிறப்புச் சான்றிதழ் குறித்து எழுந்துள்ள உரசல் போக்கோடு சம்பந்தப்படுத்தி, இதை அரசுக்கும் தளபதிக்குமான ‘மானப்’ பிரச்சினையாக ஊதிப் பெருக்கியது. இந்தியளவிலான ஆங்கில ஊடகங்களில் நடந்த விவாதங்களில், அரசும் தளபதியும் லஞ்ச விவகாரத்தை போதிய கவனத்துடன் கையாளவில்லையென்றும், தளபதியும் இது போன்ற அதிமுக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை பொதுவெளியில் வைத்திருக்கக் கூடாது என்றும் ஒரு பஞ்சாயத்தை நடத்தி இது சம்பந்தப்பட்ட ஆளுமைகளுக்கிடையேயான ஈகோ பிரச்சினை என்பதாக மட்டும் சுருக்கி விட முயன்றன.

ஆனால் விஷயம் அத்தோடு ஓய்ந்து விடுவதாக இல்லை. இது தொடர்பாக தற்போது வெளியாகியிருக்கும் விவரங்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஊழல் முறைகேட்டுப் பூதத்தை ‘உசுப்பி’ விட்டுள்ளது. 1986-ம் ஆண்டு செக்கோஸ்லோவாக்கிய நாட்டைச் சேர்ந்த டாட்ரா நிறுவனத்தோடு இராணுவத் தளவாட வாகனங்களை வாங்க இந்திய இராணுவம் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திடுகிறது. எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, செக்கோஸ்லோவாக்கியாவையும் விட்டு வைக்கவில்லை. அந்த நேரத்தில் தடுமாறிக் கொண்டிருந்த டாட்ரா நிறுவனத்தை லண்டனைச் சேர்ந்த வெக்ட்ரா நிறுவனம் கையகப்படுத்துகிறது. வெக்ட்ரா நிறுவனம் வெளிநாடு வாழ் இந்தியரான  ரவி ரிஷி என்பவருக்குச் சொந்தமானது.

டாட்ராவை இணைத்துக் கொண்ட வெக்ட்ரா, டாட்ரா சிப்பாக்ஸ் என்கிற வர்த்தக நிறுவனம் ஒன்றைத் துவக்குகிறது. டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனம் டாட்ரா வாகனங்களின் நேரடி உற்பத்தியாளராகத் தன்னைப் பதிவு செய்து கொள்ளவில்லை. டாட்ராவிடமிருந்து வாங்கி விற்கும் இடைநிலை நிறுவனம் தான் டாட்ரா சிப்பாக்ஸ். இங்கிலாந்து நாட்டின் கம்பெனி விவகாரங்களுக்கான இலாக்காவில் தனது தொழில் நடவடிக்கையாக டாட்ரா சிப்பாக்ஸ் குறிப்பிட்டுள்ளது இது தான் – “ஆன்மீகம் மற்றும் மதம் சார்ந்த சேவைகள்”. அதன் செயல்பாட்டு மூலதனம் (Working Capital) அன்றைய தேதியில்  வெறும் 30,000 பவுண்டுகள் தான். வேறு வகையாகச் சொல்லப் போனால், டாட்ரா சிப்பாக்ஸ் ஒரு உப்புமா கம்பெனி.

2003-ம் ஆண்டு வாக்கில் டாட்ராவில் அமெரிக்காவைச் சேர்ந்த டெரக்ஸ் நிறுவனம் பெருமளவு முதலீடு செய்கிறது. பின் 2006-ம் ஆண்டு தனது 80% பங்குகளை ப்ளூ ரிவர் என்கிற நிறுவனத்திற்கு டெரக்ஸ் கைமாற்றி விடுகிறது. ப்ளூ ரிவர் நிறுவனத்தின் நான்கு முக்கிய பங்கு நிறுவனங்கள் – வெக்ட்ரா, சாம் அய்ட், கே.பி.சி ப்ரைவேட் ஈக்விட்டி, மெடாவ்ஹில் மற்றும் ரொனால்ட் ஆடம்ஸ். வெக்ட்ரா, ரஷியாவைச் சேர்ந்த கமாஸ் என்கிற நிறுவனத்துடன் இணைந்து ஹொசூரில் கமாஸ் வெக்ட்ரா என்கிற அசெம்ப்ளி யூனிட்டை நடத்துகிறது.

கமாஸ் வெக்ட்ராவின் 51% பங்குகள் கமாஸிடமும், 49% பங்குகள் வெக்ட்ராவிடமும் உள்ளது. கடந்த 2010 டிசம்பர் மாதத்தில் கமாஸ் BEML நிறுவனத்திடம் ஒவ்வொரு வருடமும் 6000 ட்ரக்குகள் ( 4 X 4) சப்ளை செய்யும் ஒப்பந்தம் ஒன்றைக் கையெழுத்திட்டிருக்கிறது. இந்திய ராணுவம் வெளியிடும் தளவாடக் கொள்முதலுக்கான டெண்டரில் ஒரு பக்கம் வெக்ட்ரா சிப்பாக்ஸ் BEML மூலம் கலந்து கொள்ள அதற்கான போட்டி டெண்டரை கமாஸ் வெக்ட்ரா மூலமாக தாக்கல் செய்து வேறு போட்டி நிறுவனங்கள் போட்டியில் தேர்வாகி விடாதவாறு பார்த்துக் கொண்டு தமது ஏகபோகத்தை நிலைநாட்டியுள்ளனர்.

டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துடன் இராணுவத் தளவாடங்கள் பெற இராணுவ அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குட்பட்ட BEML ( Bharath Earth Movers Limited) 1992-ம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொள்கிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் BEML  இராணுவப் பயன்பாட்டுக்கான தளவாடங்கள் வாங்குவதில் மிக முக்கியமான வழிகாட்டி விதிமுறை ஒன்றை அப்போதே மீறியுள்ளது. அதாவது, இந்திய ராணுவத்துக்கான தளவாடம் எதுவானாலும், அதை நேரடி உற்பத்தியாளரிடம் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும் – மூன்றாம் தரப்பிடம் இருந்து கொள்முதல் செய்யக் கூடாது என்கிற விதி அப்போதே மீறப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் முக்கிய பங்குதாரரான ஜோஸப் மிஜெஸ்க்கி என்கிற ஸ்லோவாக்கிய தேசத்தைச் சேர்ந்த நபர் நிதி முறைகேடுகளுக்காக சிறை தண்டனை அனுபவித்தவர்.

மேற்படி சந்தேகத்துக்குரிய நிழல்கள் டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்தின் மேல் இருக்கும் போதே BEML அதனோடான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் 2003-ம் ஆண்டு காலகட்டத்தில் இறங்குகிறது (அமெரிக்காவின் டெரக்ஸ் வெக்ட்ராவுடன் கைகோர்த்த அதே காலகட்டம்). இந்த புதிய ஒப்பந்தத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த இராணுவ தளவாடப் பிரிவு டாட்ரா சிப்பாக்ஸ் நிறுவனத்துக்கு விளக்கக் கடிதம் ஒன்றை அனுப்பிவிட்டுப் பின் எந்த முகாந்திரமோ விளக்கமோ இன்றி அந்தக் கடிதத்தைத் திரும்ப வாங்கிக் கொள்கிறது.

டாட்ரா-டிரக்
டாட்ரா டிரக்

தற்போது சுமார் 7000 டாட்ரா டிரக்குகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தரம் குறைந்த இந்த வாகனம் ஒன்றில் விலை சுமார் 1 கோடி.  இதன் தரம் பற்றி புரிந்து கொள்ள ஒரு சிறிய உதாரணம் – பொதுவாக இந்தியச் சாலைகளில் ஓடும் வாகனங்களின் ஸ்டியரிங் வலதுபுறத்தில் அமைந்திருக்கும்; ஆனால், டாட்ரா ட்ரக்குகளின் ஸ்டியரிங்கோ இடது புறமாக அமைந்துள்ளது. இதன் காரணமாக இந்த ரக வாகனங்களை நெருக்கடி நேரங்களில் கையாள்வது சிரமமானது. இதைக் கொண்டு ‘தீவிரவாதிகளைத்’ துரத்தி.. பிடித்து.. சண்டை போட்டு… விஜயகாந்த்தால் மட்டுமே முடியும்.

டாட்ராவின் போட்டி நிறுவனமான உரால்ஸ், இதை விட திறன் மிக்க வாகனங்களை 40 லட்சம் ரூபாய்க்கே தர முடியும் என்கிறது ( இதே திறன் கொண்ட வாகனங்களை டாடாவும் அசோக் லைலேன்டு கம்பெனியும் 16-18 லட்சத்துக்கே சந்தையில் விற்று வருகிறது). டாட்ரா டிரக்கின் விலை மட்டுமல்ல, அதில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களும் மிக அதிக விலைக்கு இராணுவம் கொள்முதல் செய்கிறது. உதாரணமாக வெறும் 5,000 ரூபாய்களுக்கு வெளிச்சந்தையில் கிடைக்கும் தார்பாயை 30,000 ரூபாய்க்கு இராணுவத்திற்கு விற்கிறது டாட்ரா.

தேஜிந்தர் சிங் இராணுவ தளபதி வி.கே.சிங்கிடம் லஞ்சம் கொடுக்க முயன்றதாக சொல்லப்படுவது 2010 செப்டெம்பர் மாதம். சுமார் ஒன்றரை வருடங்கள் கழித்து இப்போது தான் அதை வெளியே எடுக்கிறார் வி.கே.சிங். இத்தனை மாதங்களாக இராணுவ அமைச்சரிடம் ‘வாய்ப்பேச்சாக’ சொன்னதைத் தாண்டி நடை பெற்ற ஊழலை அம்பலப்படுத்த ஒன்றும் செய்யவில்லை – சம்பந்தப்பட்ட நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதோடு வெக்ட்ரா சம்பந்தப்பட்ட நிறுவனங்களை இராணுவத்தோடு பொருளாதார உறவு வைத்துக் கொள்ள தடை விதிக்கவும் ( Blacklist) இல்லை. இதே தளபதி தான் தனது வயதுச் சான்றிதழைத் திருத்தவிலை என்கிற ஆத்திரத்தில் நீதிமன்றம் வரை அரசை இழுத்தவர். தனது சொந்த விஷயத்துக்காக அரசை எதிர்த்து நீதிமன்றத்தை நாடும் துணிச்சல் கொண்டவர், கண்ணுக்குத் தெரிந்து நடந்த ஊழலை மட்டும் அமைச்சரிடம் போகிற போக்கில் வாய்ப்பேச்சாக சொல்லியிருக்கிறார்.

தனது பதவியை நீட்டிக்க அரசு உதவவில்லை என்கிற நிலையில் தான் பதிலடியாக ஊழல் முறைகேடுகளை வெளிக்கொணருகிறார் தலைமை இராணுவ தளபதி. அதோடு சேர்த்து, வி.கே சிங் உரால்ஸ் நிறுவனத்தோடு கொண்டிருக்கும் நட்புறவும் கவனத்திற்குரியது. டி.ஆர்.டி.ஓவின் ஒப்புதலின்றியே அவர் வடகிழக்குப் பிராந்தியத் தளபதியாக இருந்த போது, அதிகாரப்பூர்வமற்ற முறையில் உரால்ஸ் நிறுவனத்தின் டிரக்குகளைச் சோதித்துப் பார்த்துள்ளார் என்கிற செய்தியும் தற்போது வெளிவந்துள்ளது.

இராணுவத்தில் ஒரு இயந்திரத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமென்றால் கடுமையான விதிமுறைகள் உண்டு. அதையெல்லாம் மீறி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி உரால்ஸ் டிரக்குகளை வி.கே.சிங் சொந்த ஆர்வத்தில் மட்டும் தான் சோதித்துப் பார்த்திருப்பார் என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. வெளிவரும் தகவல்களை வைத்துப் பார்த்தால், இராணுவத்தின் ஒரு சாரார் வெக்ட்ரா லாபியோடும் வி.கே.சிங் உரால்ஸ் லாபியோடும் நெருக்கம் காட்டியிருப்பது தெளிவாகிறது.சொந்தக் காரணமாகவோ அல்லது கார்ப்பரேட் லாபியின் எதிர் முனையில் நிற்பதாலேயோ தான் வி.கே.சிங் ஊழலை அம்பலப்படுத்தியிருக்கிறார் – அவரே பீற்றிக் கொள்வது போல் நியாய தர்மத்துக்குக் கட்டுபட்டு அல்ல.

இது ஒருபுறமிருக்க, இராணுவத் தளபதி லஞ்ச விவகாரத்தைக் கிளப்பியவுடன் களமிறங்கிய எதிர்கட்சிகள் பாராளுமன்றத்தில் இதைப் பற்றி விவாதிக்கக் கோரி ரகளையில் ஈடுபடுகின்றன. இராணுவத்தில் லஞ்சம் என்பது தேசியளவில் விவாதத்திற்குள்ளாவதோ, அதைத் தொட்டு ஒவ்வொரு பூதமாக வெளிக்கிளம்பி வருவதென்பதோ ஆளும் வர்க்கத்திற்கு பாரதூரமான விளைவுகளை உண்டாக்கி மூலத்தில் ஆப்பறைந்தது போலாகி விடக்கூடும். எனவே விவாதத்தை மடை மாற்றும் நோக்கில் மத்திய அரசு, இராணுவத்தின் தயார் நிலை பற்றி தளபதி பிரதமர் அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தை ஊடகங்களில் கசிய விடுகிறது.

இதைத் தொடர்ந்து லஞ்ச ஊழல் புகார்கள் பற்றிய விவாதங்கள் பின்னணிக்குப் போய் இராணுவ தளபதியின் ‘அடாவடித்தனம்’ முன்னுக்கு வருகிறது. நாட்டின் மானம் மரியாதை, இராணுவத்தின் மேல் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை என்று சகலமும் பறிபோய் விட்டதாக ஒப்பாரி வைக்கும் ஓட்டுக் கட்சிகள், இராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் அல்லது கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றன. இந்த விஷயத்தில் பிரதான எதிர்கட்சியான பாரதிய ஜனதா மட்டுமல்லாது வலது இடது போலி கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸோடு கரம் கோர்க்கிறார்கள்.

இந்த கூச்சலில் அகஸ்டா வெஸ்ட்லாண்டு என்கிற இத்தாலி நிறுவனம் இராணுவத்திற்கு ஹெலிகாப்டர்கள் சப்ளை செய்ய அமெரிக்க இடைத்தரகு கம்பெனி ஒன்றின் மூலம் 15% லஞ்சம் கொடுத்ததாக வெளியான செய்தி ஓசையின்றி அமுக்கப்பட்டு விட்டது. சாதாரணமாக தற்போது வெக்ட்ரா நிறுவனத்தின் மேல் சி.பி.ஐயை வைத்து ஒரு கண்துடைப்பு விசாரணையைத் துவக்கியுள்ளனர்.

இந்திய ராணுவத்தின் ஊழல் வரலாறு மிக நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. ‘சுதந்திர’ இந்தியாவின் முதல் ஊழலே இராணுவத்துக்கு ஜீப்புகள் வாங்கியதில் நடந்தது தான். அந்த வகையில் 1948-ம் ஆண்டே இந்தியாவில் ஊழலுக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்தவர் வி.கே கிருஷ்ணன் மேனன். அதைத் தொடர்ந்து, போபர்ஸ் ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கி ஊழல், கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆதர்ஷ் வீட்டு மனை ஊழல், கோல்ப் கார்ட் ஊழல், சுக்னா ரியல் எஸ்டேட் ஊழல்,  என்று சகலத்திலும் ஊழல் தான். சர்வதேச அளவில் ஆயுத பேரங்களைக் கட்டுப்படுத்தும் பலமான வலைப்பின்னல் கொண்ட மாஃபியா கும்பல்கள் தான் இந்திய இராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலையும் கட்டுப்படுத்துகின்றன.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்பெற்ற உயரதிகாரிகள் ஆயுத பேர இடைத்தரகு கம்பெனிகளில் ‘வல்லுனர்களாக’ சேர்ந்து ஆயுத மாஃபியாவின் அங்கங்களாகிறார்கள். ஆயுதக் கம்பெனிகளின் வலுவான லாபியிங் இயந்திரத்தின் நட்டு போல்ட்டுகளாய் மாறும் இவர்களுக்கு ஆயுதக் கொள்முதலில் பின்பற்றப்படும் டெண்டர் நடைமுறைகளும், எங்கே எதைத் தள்ளினால்  எப்படி காரியம் சாதிக்க முடியும் என்பதும் அத்துப்படி. அந்த வகையில் அவர்களை ‘கேடி கிரிமினல்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம்.

இந்திய இராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் இவர்கள் மூலமாகவே நடக்கிறது. உண்மையில் இந்திய இராணுவத்தின் ஆயுதக் கொள்முதல் கொள்கையை பாகிஸ்தானின் இராணுவத் தயாரிப்புகளோ சீனத்தின் இராணுவத் தயார்நிலையோ தீர்மானிப்பதில்லை – சர்வதேச ஆயுத பேர மாஃபியா கும்பலும், மேற்கத்திய நாடுகளின் ஆயுத உற்பத்திக் கார்ப்பரேட்டுகளும் தான் தீர்மானிக்கின்றனர்.

கடந்த பல பத்தாண்டுகளாக லட்சக்கணக்கான கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணத்தை விழுங்கி ஏப்பமிட்டு விட்டு ஒரு பகாசுர பூதம் போல் நீட்டிப் படுத்துக் கிடக்கிறது இராணுவம். இராணுவத்தின் அதிகார வர்க்கம், ஊழலிலும் உல்லாச சொகுசு வாழ்க்கையிலும் ஊறித் திளைத்துக் கிடக்கிறது. இராணுவம் என்கிற வார்த்தை நமது சிந்தனையில் என்னவிதமான சித்திரத்தை உண்டாக்குமோ – ஆனால், அதன் அதிகாரிகளுக்கு கண்களும், காதுகளும், உணர்ச்சிகளும் அற்ற ஒரு காமதேனுவின் சித்திரத்தை தான் அது உண்டாக்குகிறது. வேண்டும் மட்டும் கறந்து கொள்ளலாம், கேள்வி முறை கிடையாது, கட்டுப்பாடும் கிடையாது, தணிக்கை கிடையாது.

இந்த தேசத்தின் எல்லைகளை விட அளவில் ஊதிப் பருத்த மாபெரும் ஊழல் பெருச்சாளியாக ராணுவம் மக்களின் மேல் அழுத்திக் கொண்டிருக்கிறது. ஒரு அடியாள் படைக்கு இந்தத் தகுதியும் தராதரமுமே போதுமானதாக இருப்பதால் ஆளும் தரகு அதிகார வர்க்க முதலாளித்துவ கும்பல் இதைத் தெரிந்தே விட்டு வைத்திருக்கிறது. ‘கொல்’ என்றால் கொல்ல வேண்டும்; ‘அடி’ என்றால் அடிக்க வேண்டும் – ஏன் எதற்கு என்கிற கேள்விகள் அனாவசியம். தமது நடவடிக்கைகளால் ஏமாற்றமடையும் மக்களை மிதித்து நசுக்க இது போன்ற யானைக் கால்களே போதும் என்பதால் தான் அதன் ஊழல்கள் கண்டுகொள்ளப் படாமல் போகின்றன.

1948-ம் ஆண்டு நடந்த ஜீப் ஊழலின் விசாரணை எப்படி முடிவுற்றது தெரியுமா? அந்த ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட அனந்தசயனம் அய்யங்கார் கமிட்டியின் பரிந்துரைகளை புறம் தள்ளிய அப்போதைய உள்துறை மந்திரி கோவிந் வல்லப பந்த், ஊழல் விசாரணைகளை தமது அரசு மேற்கொண்டு தொடராமல்  இழுத்து மூடவிருப்பதாகவும், எதிர்கட்சிகளுக்கு இதில் உடன்பாடில்லையென்றால் அதைத் தேர்தல் பிரச்சினையாக மாற்றிக் கொள்ளட்டும் என்று செப்டெம்பர் 30 – 1955 அன்று திமிர்த்தனமாக அறிவிக்கிறார். ஊழலில் ஈடுபட்ட கிருஷ்ணன் மேனன், அதற்கடுத்த வருஷமே நேருவின் அமைச்சரவையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்.

மக்களுக்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்படாத திமிரிலிருந்தே புனிதம், பெருமிதம் போன்ற காலாவதியான சொற்களுக்குப் பின்னே ஒளிந்து கொண்டு ஊழல் செய்யும் துணிச்சல் இராணுவத்துக்கு வாய்க்கிறது. இதை ஊட்டி வளர்க்கும் அரசும், முதலாளிகள் இருக்கும் வரை அது ஊழலில் பெருத்து, அடக்குமுறையில் ஆட்டம் போடும். உழைக்கும் மக்களுக்கு ஆயுதம் ஏந்தும் உரிமை இருக்கும் போது உருவாகும் மக்கள் இராணுவம் இத்தகைய அதிகார வர்க்க பொறுக்கி இராணுவத்தினை இல்லமலாக்கும். அதுவரையிலும் நமது கோபம் இந்த பங்களா நாயை ஊட்டி வளர்க்கும் அரசுக்கு எதிராக திரும்பட்டும்.

______________________________________________

தமிழரசன்.
______________________________________________

தகவல் மூலம் மற்றும் இணைப்புகள் –

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அண்ணன் மாதவராஜின் கோபமும், ‘மார்க்சிஸ்ட்டுகளின்’ வெட்கமும்!

32

திவர்களோடு விவாதம் நடத்தி எத்தனை நாளாயிற்று! இது நம் குற்றமா, இல்லை வாய்ப்பு தராத சூழலின் சாபமா? முற்றிலும் சூழல் அப்படி இல்லை என்று சொல்ல முடியாது. ஆதீனம் ஜெயமோகன் எழுதும் ஒவ்வொரு கட்டுரையும் மறுவினைக்கான விருப்பத்தை எப்போதும் தோற்றுவிக்கிறது. நேரப்பிரச்சினை காரணமாக அவையெல்லாம் மனவெளிக் குகையின் ஆழங்களில் துள்ளிக் குதித்து தூங்குகின்றன.

இதற்கடுத்த வாய்ப்பை சி.பி.எம் பதிவர்கள்தான் வழங்க முடியும். அவர்களும் மறைந்த தோழர் “சந்திப்பு”  செல்வப்பெருமாள் போல ஊக்கமாக செயல்படுவதில்லை. செயல்படும் மாதவராஜ் போன்றவர்களும் எழுதுவதை குறைத்திருக்கிறார்கள். காவல் கோட்டம் – சாகித்ய அகாடமி விருது சர்ச்சை வந்த போது அண்ணன் மாதவராஜ் எழுதிய தொடர் கட்டுரைகள், அதன் மீது ஜெயமோகனது பதில் தொடர்பாகவெல்லாம் எழுதவே முடிவு செய்திருந்தோம். விவாதித்து ஒரு தோழர் எழுதியும் அது சரியாக வராததால் வெளியிடவில்லை. திருத்தி எழுதவும் நேரமில்லை. அப்போது விட்ட வாய்ப்பை இப்போதும் விட்டுவிடக்கூடாது என்பதால் இந்தப் பதிவு.

____________________________________

ண்ணன் மாதவராஜ் எழுதிய, “விமர்சனங்கள்: வார்த்தைகளைக் கொட்டாதீர்கள் “, எனும் கட்டுரையின் இணைப்பை தோழர் ஒருவர் அனுப்பியிருந்தார். பிறகு இந்தக் கட்டுரையை ஏன் எழுதினாரென்று விளங்கிக் கொள்ள மாதவராஜ் எழுதிய முந்தைய இரு கட்டுரைகளையும் படிக்க வேண்டியிருந்தது. முக்கியமாக பின்னூட்டங்கள். நீங்களும் ஒரு முறை படித்து விடுங்கள்.

1) அந்த பொறுக்கி டிஎஸ்பியை மக்கள் செருப்பால் அடிக்கலாமா வேண்டாமா?

2) “ஜெயலலிதாக்களும், கருணாநிதிகளும் நாசமாய்ப் போகட்டும்”

ஒரு டி.எஸ்.பி நடுச்சாலையில் நிற்கும் ஒரு தம்பதியனரை, ஆசிரியர் தேர்வுக்கான விண்ண்ப்பங்கள் வரவில்லை என்று போராடியதற்காக தாக்கியிருக்கிறார். இங்கு “அர்” விகுதி போட்டு நாம் எழுதியதை அவர் “இன்” விகுதி போட்டே எழுதியிருக்கிறார். போலீசு என்பது ஒரு வெறிநாய்க் கூட்டம்தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இருக்கும் இதனை மாதவராஜ் உழைக்கும் மக்களுக்கே உரிய ஆவேசத்துடன் கண்டிக்கிறார். பதிலுக்கு அந்த டி.எஸ்.பியை மக்கள் செருப்பால் அடிக்க வேண்டாமா என்றும் கேட்கிறார்.

இதற்கும் முந்தைய பதிவில் மின்கட்டண உயர்வை அறிவித்திருக்கும் ஜெயாவை அதே ஆவேசத்தோடும் விமரிசிக்கிறார். கருணாநிதி, ஜெயா என்று மாறி மாறி ஓட்டுப் போட்டு ஏமாறும் மக்கள் இனியாவது இரு கட்சியும் நாசமாக போகட்டும் என்று பேசுவார்களா என்றும் அத்தகைய எழுச்சி காரணமாக இந்த ‘ஜனநாயகம்’ நிலநடுக்கத்தை சந்திக்கும் என்று அவர் ஆதங்கத்துடன் எழுதுகிறார்.

இவற்றில் என்ன பிரச்சினை? குறிப்பிட்ட சம்பவங்கள், அரசு அறிவிப்புகள் மீது மக்கள் நலனிலிருந்து யதார்த்தமாக எழுதுபவர்கள் இப்படித்தான் எழுதுவார்கள். எழுதத் தெரியாத பாமர மக்களும் இப்படித்தான் பேசுவார்கள். எனினும் இவை நமது ‘மார்க்சிஸ்டு’ பெருந்தலைகளுக்கு பிடிக்கவில்லை. பின்னூட்டத்தில் அவர்கள் அனைவரும் அண்ணன் மாதவராஜை சாந்தப்படுத்தி, நேர்வழிப்படுத்தி, தணியவைக்க முயல்கிறார்கள். அவற்றில் சிலவற்றைப் படியுங்கள்:

“இல்லாத கரண்டுக்கு இரண்டு பங்கு கட்டணம் செலுத்தச் சொல்லும் குரல் ஜெயாவினுடையது அல்ல, முன்பு கருணாநிதியுடையதும் அல்ல. உலக வங்கியினுடையது. பன்னாட்டு நிதி மூலதனத்தினுடையது. வெற்று கோபத்தைவிடவும் சாபத்தைவிடவும் மேலும் தீவிரமான விழிப்புணர்வு வேலையைத் தான் காலம் நம்மிடம் கோருகிறது. இன்னும் தேர்ச்சியான வேலையை.” (எஸ் வி வேணுகோபாலன்)

“தற்பொழுது வரும் கட்டுரைகள் உங்களது கோபத்தை அதிகமாக காட்டுகிறது. தீர்வை சற்று நிதானமாக ஆழ யோசித்து இடுகையில் வெளியிட்டால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும் என நினைக்கிறேன்.” (தஞ்சை ரமேஷ்)

“வேண்டாம் நண்பரே! நாய்கடித்தால் திருப்பியா கடிக்க முடியும்..? (புலவர் இராமாநுசம்)

“அந்த டிஎஸ்பியை செருப்பால் அடித்தால் இனி இந்த மாதிரி நடக்காது என்று நினைத்தால் அது சரியல்ல. (பழனி கந்தசாமி)

“வணக்கம் தோழர் தங்களின் ஆவேசம் புரிகிறது அப்படி ஒருமுறை நடந்தால் நன்றாகவே இருக்கும் ஆனாலும் …நிறைய யோசிக்க வேண்டி உள்ளது ..தோழர்..என்ன செய்ய இந்த தேசத்தை ….? (தாமிரபரணி)

“இது தவறான அணுகுமுறை மாதவ். லட்சக்கணக்கான அதிகாரிகள் பதவியில் அவர்களின் கடமையைச் செய்யும் போது பத்து, இருபது அதிகாரிகள் இப்படி நடந்து கொள்வது சகஜம்தான்.உணர்ச்சிவசப்பட்டு சிந்தும் வார்த்தையும் செயலும் எந்தப் பலனையும் தராது. உங்கள் இடுகையின் தலைப்பும் உங்களின் முதிர்ச்சிக்குப் பொறுத்தமானதல்ல.” (சுந்தர்ஜி)

” மாதவ்! நான் அவருக்குரிய தண்டனை குறித்து எதுவும் பேசவில்லை.அதை மக்கள் எடுத்துக்கொள்ள ஆரம்பித்தால் நேரும் விபரீதங்களை மட்டுமே எழுதினேன். இப்போதும் சொல்கிறேன்.உங்களின் பக்குவமும் வாசிப்பும் நிச்சயமாகத் துணை நிற்கும். தவறு செய்பவர்களை ஆயிரம் ஆயிரம் முறை மன்னியுங்கள் என்று சொன்ன வேரிலிருந்து துவங்குகிறது நமது பயணம்.” (சுந்தர்ஜி)

இவர்களனைவரும் சி.பி.எம்மைச் சார்ந்தவர்களா என்பதறியோம். என்றாலும் இதுதான் சி.பி.எம்மின் அரசியல் பார்வை என்பதால் அது பிரச்சினையுமில்லை. அதே நேரம் இந்தப் பார்வை சி.பி.எம்மிற்கு மட்டும் உரியது அல்ல. அது பல விதங்களில் அரசியல் குறித்த நடுத்தர வர்க்கத்தின் பார்வையாகவும் இருக்கிறது. இந்த பின்னூட்டங்கள் போக பலரும் தனி மின்னஞ்சல், தொலைபேசி மூலம் மாதவராஜிடம், “உங்கள் கோபம் நியாயம் என்றாலும் வார்த்தைகள் பக்குவமாக, நிதானமாக இருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு அண்ணன் மாதவராஜ் அளித்திருக்கும் பதில் முதலில் சொன்ன தனி பதிவாகவே இருக்கிறது. சாரத்தில், ” தனிப்பட்ட மனிதனின் கோபம் இல்லை இது. ஒரு சமூக மனிதனின் குரலும், அடையாளமும் ஆகும். அடிப்பவர்களுக்கு எதிராக அடிவாங்குகிறவர்களின் சிந்தனை. அதிலிருக்கும் தார்மீக கோபத்தை புரிந்துகொள்ளுங்கள் என வேண்டுகிறேன். இருந்தபோதிலும், அந்த நண்பர்கள் சுட்டிக்காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சிக்கிறேன் இனி. ” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இது தொடர்பாக முந்தைய பதிவின் பின்னூட்டமொன்றில் இப்படி ஆவேசமாக கண்டிப்பது குறித்து, “அதற்காக நான் என் முதிர்ச்சி, பக்குவத்தை இழந்து போவது ஒன்றும் தப்பில்லை.” என்று தைரியமாகப் பேசும் மாதவராஜ் இனி ‘நண்பர்கள்’ சுட்டிக் காட்டும் பிரக்ஞையோடு இருக்க முயற்சித்திருப்பதாக கூறும் தயக்க, மயக்க, குழப்ப நிலைக்கு சென்றிருப்பதன் காரணம் என்ன?


டைட்டானிக் படத்தில் சீமான்களது உப்புச் சப்பில்லாத வாழ்வோடு பிணைக்கப்பட்ட ரோஸ் பிறகு இயல்பாக ஜாக்கை காதலிப்பாள். டேபிள் மேனர்சோடு சாப்பிடுவது போல, சபை மேனர்சோடு உடம்புக்கு வலிக்காமல் ஆடும் அவளை இழுத்துக் கொண்டு கீழ் தளத்தில் உழைக்கும் மக்களோடு பட்டையைக் கிளப்பும் குத்தாட்டத்தை ஆடுவான் ஜாக். மேல் தளத்தில் இருந்த நமது சி.பி.எம் தோழர்கள் கீழே மாதவராஜ் ஆடுவதைப் பார்த்து அதிர்ச்சி பொங்க கேட்கிறார்கள்: ஏன் தோழர் இப்படி?

அண்ணன் மாதவராஜ் அவர்களே, நீங்கள் கோபமடையக் கூடாது என்று உங்கள் தோழர்கள் கேட்கிறார்கள். நீங்களும் கோபமடைவதில் தவறில்லை, ஆனாலும் இனி எச்சரிக்கையாகக் கோபம் அடைவேன் என்று சுய விமரிசனம் செய்கிறீர்கள். தோழர்களை விமரிசனம் செய்ய வேண்டிய தருணத்தில் எதற்காக உங்களது சுய விமரிசனம்? ஒரு கம்யூனிஸ்ட்டுக்கு கோபம் வரக்கூடாது என்றால் நாம் என்ன சிவாய நமஹா என்று கோவிலைச் சுற்றி வரும் செக்குமாடுகளா?

விடுதலைக்கான தத்துவம் என்ற முறையில் மார்க்சியத்தை அறிவுப்பூர்வமாகவும், உழைக்கும் மக்களின் பிரதிநிதி என்ற வகையில் உணர்ச்சிப் பூர்வமாகவும் இருக்க வேண்டிய ஒரு கம்யூனிஸ்ட்டிடம் கோபம் கொள்ளக் கூடாது என்று யார் சொல்வார்கள்?

புரட்சி என்பதே மக்களின் அமைப்பாக்கப்பட்ட கோபம்தான். அந்த மாபெரும் ‘கோபத்தை’ மக்களிடம் உருவாக்குவதே ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் மையப் பணி. சுரணை, மானம், ரோஷம், பழிவாங்குவது, கோபம் முதலியவற்றை மக்களிடம் நினைவுபடுத்தினால்தான் நம் நினைவில் இருக்கும் புரட்சி என்பது வெளியே உருத்திரண்டு பௌதீக சக்தியாக மாறும். அந்த வகையில் மக்களை கோபம் கொள்ள வைப்பதன்றி நமது பணி ஏது?

ஒரு டி.எஸ்.பியை செருப்பால் அடிக்க வேண்டும் என்று கூறுவதினாலாயே புரட்சி வந்து விடாதுதான். ஆனால் அது அரசு, போலீசு, அதிகார வர்க்கம் முதலியவற்றை உள்ளது உள்ளபடி மக்களிடம் புரியவைப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு. மக்கள் தமது சொந்த உணர்வில் இந்த அரசு அமைப்பு அநீதியானது என்று புரிந்து கொள்வதற்கு ஒரு ஆரம்பம். ஆனால் உங்கள் தோழர்களோ இந்த ஆரம்பத்திற்கே சமாதி கட்டி ஜனகனமன பாடி முடிக்க நினைக்கிறார்கள். நூறு நல்ல போலீசில் ஓரிரு கெட்ட போலீசு இருப்பார்கள் என்று ஒட்டு மொத்த போலீசுத் துறைக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்கள்.

அப்படி என்றால் ஓரிரு கெட்ட அரசியல்வாதிகள், ஓரிரு கெட்ட அதிகாரிகள், ஓரிரு கெட்ட முதலாளிகள், ஓரிரு கெட்ட வல்லரசு நாடுகள் என்று அடுக்கினால் என்ன வரும்? ஓரிரு பிரச்சினைகள் தவிர நிலவுகின்ற இந்த சமூக அமைப்பே சாலச்சிறந்தது என்று முதலாளித்துவத்திற்கு வால் பிடிப்பதாய் அமையும். இதையேதான் பாராளுமன்ற ஜனநாயகம் ஒவ்வொரு முறையும் பல்லிளிக்கும் போதும் உங்கள் தோழர்கள்,“நமது மாண்பு என்ன, மரபு என்ன, சிறப்பு என்ன, சிங்காரம் என்ன” என்று பன்றிகள் புரளும் பாராளுமன்றத்திற்கு புனித வட்டம் பேசுகிறார்கள். ஆதாரம் வேண்டுமென்றால் முன்னாள் சபாநாயகர் சோமநாத் சட்டர்ஜி துவங்கி, சீதாராம் எச்சூரி வரை உச்சாடனம் செய்த மந்திரங்களை கேளுங்கள். பாராளுமன்றம் பன்றிகளின் தொழுவம்தான் என்று பன்றிகளே ஒத்துக்கொள்ளும் நிலையில் நாம் என்ன செய்ய வேண்டும்?

பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள மக்கள் போராட்டங்களுக்கும் இது பொருந்தும். மக்களே தமது சொந்த அனுபவத்தினூடாக இந்த அமைப்பை உணரும் போது நாம் ஒரு படி மேலே ஏறி பேசுவதற்கு பதில் மக்களையே ஒரு படி கீழிறங்கும்படி கோரினால் அவன் கம்யூனிஸ்ட்டா, இல்லை சிரிப்பு போலிசா?

கோபத்தில் வார்த்தைகளை விடக்கூடாது என்று ஓதுகிறார்கள் உங்கள் தோழர்கள். ஒரு சம்பவத்தை பார்த்து வரும் கோபம் அதற்குரிய வார்த்தைகளை சரியாகவே எடுத்துக் கொள்ளும். இதற்கு தணிக்கை போட்டால் அது கோபமா இல்லை சந்தானம் காமடியா? மக்கள் மீது நாம் கொண்டிருக்கும் நேசத்தின் அடிப்படையில்தான் நடந்து விட்ட சம்பவத்தின் பால் கோபம் கொள்கிறோம். அது செயற்கையானது அல்ல. அதே நேரம் அந்த புறநிலை நிகழ்வை வைத்து மக்களை அரசியல்படுத்தும் ஆற்றல் இருந்தால் அந்த கோபம் இன்னும் வலிமையாக வரும். ஆனால் உங்கள் தோழர்கள் அப்படி சொல்லவில்லை. கோபத்தை கம்மியாக்குங்கள் என்கிறார்கள். கோபத்தை குறைத்து நாம் என்ன சாதிக்கப் போகிறோம்? ரத்த அழுத்தத்தை தணிப்பதற்கா?

யோசித்துப் பாருங்கள், குஜராத்தில் முசுலீம் மக்களை இனப்படுகொலை செய்த நரவேட்டை மோடியை, ஜென்டில் மேன் மோடி என்றா அழைக்க முடியும்? கலவரத்தில் உற்றார் உறவினரை இழந்த முசுலீம் மக்கள் கூட்டத்தில் கொலைகார மோடி என்று பேசுவதற்கு பதில் முதலமைச்சர் மோடி சில தவறுகள் செய்திருக்கிறார் என்று பேசினால் அந்த மக்களின் கண்ணீரே உங்களை சாகடித்து விடாது?

ஜார்ஜ் புஷ்ஷின் மீது செருப்பை வீசியெறிந்த ‘குற்றத்திற்காக’ ஒன்பது மாத சிறை வாசத்திற்குப் பின், விடுதலையான முன்தாஜர் அல் ஜய்தி, ” என்னைக் கண்டிப்பவர்களுக்கு நான் சொல்வது:

நான் வீசியெறிந்த காலணி,
உடைந்து நொறுங்கிய எத்தனை வீடுகளை தாண்டி வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?
பலியான எத்தனை அப்பாவிகளின் குருதியைக் கடந்து வந்திருக்கிறதென்று
உங்களுக்குத் தெரியுமா?
எல்லா மதிப்பீடுகளும் மீறப்படும்பொழுது
செருப்புதான் சரியான பதிலடியாகத் தோன்றுகிறது.

என்று பேசினான். அல் ஜய்தியை நாம் கொண்டாடினோமா இல்லையா? அதே செருப்பு இங்கே ஒரு வெறிநாய் டி.எஸ்.பியை அடிக்க பயன்படுவதில் என்ன தவறு?

ஒரு வேளை உங்கள் தோழர்கள் இப்படியும் சொல்லலாம்: “தோழர் எகாதிபத்தியம் என்பது பெரிய விசயம். அதை இது போன்ற சில்லறைத்தனங்களால் வீழ்த்திவிட முடியாது, ஆகையால் இதையெல்லாம் நாம் ஊக்குவிக்க கூடாது”. சரி, ஏகாதிபத்தியத்தை எப்படி வீழ்த்துவார்களாம்? இந்தியாவில் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தை கைப்பற்றி பின்னர் அமெரிக்காவின் மேல் படையெடுப்பார்களா? அப்படி எனில் சீனா இன்னும் அப்படி படையெடுக்கவில்லையே? படையெடுக்க வேண்டாம். ஏகாதிபத்திய அமெரிக்காவோடு பொருளாதார உறவு கிடையாது என்று கூட சொல்லவில்லையே?  பரஸ்பர சமாதான சகவாழ்வு என ஏகாதிபத்தியங்களோடு சமரசமாக வாழ்வதை ஆரம்பித்து வைத்த குருசேவ் தொடங்கி, இன்றைய சீனா, இந்தியாவில் போலிக் கம்யூனிஸ்டுகள் வரை அப்படி முடிவெடுத்த பிறகு ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பது வெறும் வெங்காயம்தானே?

ஏகாதிபத்திய எதிர்ப்புக்கு செருப்பும் ஒரு ஆயுதம், ஒரு செருப்பு வீச்சு கூட பரந்து பட்ட மக்களை எகாதிபத்திய எதிர்ப்புக்கு அணி சேர்க்கும் என்பதால்தான் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்த செருப்பு வீச்சை கொண்டாடினார்கள். செருப்பு ஒரு குறியீடு. அந்தக் குறியீட்டின் மூலம் நாம் பெறும் அரசியல் ஆதாயம் என்ன என்று பார்க்க வேண்டுமே ஒழிய, கனவான்களது காந்திய அரசியலில் நின்று பிதற்றுவது அறியாமை.

கயர்லாஞ்சியிலோ, இல்லை நமது மேலவளவில் வெட்டிக் கொல்லப்பட்ட முருகேசனையே எடுத்துக் கொள்வோம். இதை தலித் மக்களிடம் மட்டுமல்ல, எல்லாப் பிரிவு மக்களிடம் பேசுவதாக இருந்தால் எப்படிப் பேச வேண்டும்? ஆதிக்கசாதி வெறியின் பால் நடத்தப்பட்டிருக்கும் இந்த கொலை பாதகத்தை கொஞ்சும் தமிழிலா கதைக்க முடியும்? தீப்பிடிக்கும் தமிழில் பொறிந்தால்தானே மற்ற பிரிவு மக்களிடம் கொஞ்சம் குற்ற உணர்வையும், தலித் மக்களிடம் நீதி கிடைக்க போராடுவோம் என்ற உத்வேகத்தையும் அளிக்க முடியும்? ஒருவேளை மாதவராஜுக்கு அட்வைசு செய்த அம்பிகள் பேசினால் எப்படி இருக்கும்? ” நடந்தது நடந்து விட்டது. நடப்பது நல்லனவாயிருக்கட்டும், மறப்போம், மன்னிப்போம் ” இப்படி உங்களால் பேசமுடியுமா மாதவராஜ்?

பாபர் மசூதி இடிப்பின் போது ” கடவுளின் பெயரால் கலவரம் வேண்டாம்” என்று உங்கள் தோழர்கள் ஏற்னவே இப்படித்தான் பேசியிருக்கிறார்கள். ‘இந்துக்களை’ புண்படுத்தாமல் இந்துத்வத்தை வீழ்த்த முடியுமா? 50களில் ராமாயணம் நாடகம் போட்ட எம்.ஆர்.ராதா தனது நாடகம் இந்துக்களை புண்படுத்தும் என்பதால் அப்படி நினைப்பவர்கள் வரவேண்டாம், அவர்களது காசும் வேண்டாம் என்று விளம்பர சுவரொட்டியிலேயே முழங்கியது குறித்து அறிவீர்களா? அந்த மண்தான் இன்றும் கொஞ்சமாவது பார்ப்பனிய எதிர்ப்பின் மரபை கொண்டிருக்கிறது. உங்கள் தோழர்களோ அதை நீர்த்துப் போகச் செய்யும் அரசியலை செய்து வருகிறார்கள்.

கோவை சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு தினத்தில் முதலாளிகளைப் பழிவாங்க தொழிலாளிகள் அணி திரளட்டும் என்று பேசுவோமா, இல்லை எல்லாம் சட்டம், நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும் என்று பேசுவோமா? இதற்கும் அருட்செல்வர் பொள்ளாட்சி மகாலிங்கம் நடத்தும் ஆன்மீகக் கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம்? வெண்மணி கொலைகாரர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது. முதன்மைக் குற்றவாளி கோபால கிருஷ்ண நாயுடுவை வெட்டிக் கொன்றது ஒரு மா.லெ இயக்கத் தோழன். கம்யூனிஸ்டு என்ற முறையில் இங்கு நாம் சட்டத்தின் பக்கமா? இல்லை புரட்சியின் பக்கமா?

புரட்சியின் பக்கம் இருப்பவர்கள் கோபமடைய வேண்டும். நடைபிணங்களைப் போல வாழும் மக்களை கிளர்ந்தெழுச் செய்யும் வலிமை படைத்த பெருங்கோபத்தை பயின்று கொள்ள வேண்டும். அப்படி முடியவில்லை என்றால் உண்மையில் கோபமடைபவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் தூற்றினால் அவர்களை என்னவென்று அழைப்பது?


தி.மு.க, அ.தி.மு.கவை புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் பேசமாட்டார்களா எனும் மாதவராஜின் இரண்டாவது கோபத்தை எடுத்துக் கொள்வோம். உண்மையில் இது கோபம் என்பதை விட ஒரு ஆதங்கம் என்றும் சொல்லலாம். தன் சொந்த அரசியலிலேயே நம்பிக்கை கொள்ளாத போது வேறு வழியின்றி வந்தடைந்திருக்கும் ஒரு முட்டுச் சந்து. ஆனால் இதில் ஒரு நேர்மை இருக்கிறது. தனது அரசியல் சரிதான் என்று கூற முடியாத போது வேறு வழியின்றி மக்களே அந்த இரு கட்சிகளையும் புறக்கணிக்க மாட்டார்களா என்று ஏங்கும் ஒரு மனநிலையை உணர முடிகிறது.

அதற்கும் சி.பி.எம் பெருந்தலைகள் பொங்கி எழுந்திருக்கிறார்கள். மின் கட்டண உயர்வுக்கு கருணாநிதியோ, இல்லை ஜெயலலிதாவோ காரணமில்லை உலக வங்கிதான் மூலம் என்று ஒருவர் அருள்வாக்கு பாடியிருக்கிறார். இதில் அரசியல் பிழை இல்லை. ஆனால் இதன் மூலம் அவர் என்ன சொல்கிறார்? அதாவது தி.மு.க, அ.தி.மு.கவை புறக்கணிப்பதில் பயனில்லை, நாம் உலக வங்கியை புறக்கணிக்க வேண்டும் என்கிறார். இதில் ஒரு உள் குத்தும் இருக்கிறது.

மக்கள் நாசமாகப் போக காரணமாக இருக்கும் ஜெயலலிதாவோடும், கருணாநிதியோடும் மாறி மாறி ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டணி வைக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சியும் நாசமாகப் போவதுதான் நியாயம் சார். ” என்று லக்கிலுக் யுவகிருஷ்ணா அதை சரியாக பிடித்திருக்கிறார்.

மார்க்சிஸ்ட் கட்சியினர் ஒவ்வொரு தேர்தலின் போதும் மாறி மாறி இரண்டு கட்சிகளின் தயவில் ஏதோ ஐந்து, ஐந்தரை சீட்டுக்கள் வாங்கி பரப்பிரம்மத்தை தரிசித்த போதையையே பாதையாக நினைத்து செட்டிலாகிவிட்டார்கள். இப்போது மக்கள் இரண்டு கட்சிகளையும் நாசமாக போகட்டும் என்று எண்ண வேண்டுமென்றால் அதில் அந்த கட்சிகளோடு கூட்டணி சேருபவர்களையும் நாசமாக போங்கள் என்று சொல்லக் கோருவதுதான் சரியாக இருக்கும். அதுதான் அந்த பெரிசு உலக வங்கியை இழுத்து வந்து கூட்டணி தருமத்தை பாதுகாக்கிறார். பாவம் அண்ணன் மாதவராஜ்! சுதந்திரமாகக் கோபம் அடைய முடியாத படி ஒரு அவலச் சூழல்.

சரி, விசயத்திற்கு வருவோம். மின்கட்டண உயர்வின் மூல காரணம் உலக வங்கி என்றே வைப்போம். அதை எப்படி எதிர்கொள்வது? யாரெல்லாம் உலக வங்கிக்கு அடியாள் வேலை பார்க்கிறார்களோ அவர்களை எதிர்ப்பதின் மூலம்தான் உலகவங்கிக்கான எதிர்ப்பை ஆரம்பிக்க முடியும். மக்களுக்கும் அடையாளம் காட்ட முடியும். அந்தப்படிக்கும் மாதவராஜ் சொன்னது போல இரு கட்சிகளும் நாசமாக போகட்டும் அல்லது இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும்.

ஆனால் சி.பி.எம்மின் அணுகுமுறைப்படி, கூட்டணி அவசியம். அதனால் இரு கட்சிகளையும் புறக்கணிக்க கூற முடியாது. அதனால் உலக வங்கியையும் எதிர்க்க முடியாதபடி போகிறது. இறுதியில் ஐந்தரை சீட்டுக்களே கதி மோட்சம் என்று காலம் தள்ள வேண்டியதுதான். போதாக்குறைக்கு இன்னொரு ஜெயலலிதாவான, தே.மு.தி.க கேப்டனை சி.பி.எம்மினர் கொஞ்சிக் குலாவ ஆரம்பித்திருக்கின்றனர். சரி, வாழ்க்கையில்தான் புரட்சி வராது, கூட்டணியிலாவது புரட்சி இருக்கட்டுமே என்று அவர்கள் நினைத்திருக்கலாமோ?

இந்த விசயத்தில் அண்ணன் மாதவராஜிடம் கொஞ்சம் நேர்மை இருப்பதை பார்க்கிறோம். அதனால்தான் அவர் சென்ற தேர்தலில் வாக்களிக்கவில்லை. கிட்டத்தட்ட தேர்தல் புறக்கணிப்புதான். ஆனாலும் அந்த நேர்மை விரைவில் முடிவெடுக்க வேண்டும். இல்லையேல் அது நீர்த்துபோய் கரைந்து மறைந்து விடும். தமிழகத்தின் இரண்டு கட்சிகளும் நாசமாக போகட்டும் என்று மக்கள் நினைக்க மாட்டார்களா என்ற அவரது ஆதங்கம், சொந்த முறையில் தனது அரசியல் மீது நம்பிக்கை இல்லாததால் வருகிறது. இல்லையேல் புறக்கணிக்கச் சொன்ன கையோடு மாற்று என்ன என்று அவர் கூறியிருக்க வேண்டும். அப்படி அவர் கூறவில்லை என்பதால்தான்,

அவர் “கோபம்” அடைவதை வரவேற்கிறோம். சரியான கோபம் சரியான செயலையும் காட்டும். அந்த வகையில் நியாயமான கோபத்திற்கு எதிர்காலம் உண்டு. இந்த கோபம் கண்டு வெட்கமடையும் சி.பி.எம் தோழர்களைப் பற்றி அண்ணன் மாதவராஜ் கவலைப்படத் தேவையில்லை. உண்மையில் அவரது கோபத்தை பாராட்டித்தான் பலரும் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். அந்த வகையில் இது பெரும்பான்மைக் கருத்தும் கூட.

மாறாக அவரது தோழர்கள் கூறுவது போல இனி கோபமடைவதில் சற்று எச்சரிக்கையாக இருப்பேன் என்று அவர் முடிவெடுத்தால் ஒரு போதும் கோபமே வராது. மக்கள் நலன், புரட்சி முதலானவையெல்லாம் நமது ஈகோ சார்ந்த வறட்டு கௌரவங்கள் அல்ல. பிழைகளை ஒப்புக் கொண்டு சரியானதை நோக்கி நகருவதும் கோழைத்தனமல்ல. அப்படி முடிவெடுக்கும் தைரியம் உள்ளவர்களே கம்யூனிசத்தின் உரத்தை பெற்று காரியம் சாதிக்க முடியும்.

அண்ணன் மாதவராஜ் முடிவெடுக்க காத்திருக்கிறோம்.

புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

9

புதிய-ஜனநாயகம்-ஏப்ரல்-2012

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

1.  அணு உலை அல்லது சிறை!
(அணு உலையைவிட அரசுதான் மிகக் கொடியது என்ற படிப்பினையை கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.)

 2.  அணு உலைகளைவிட ஆபத்தானவை!

 3. சிங்கள இனவெறி நாயைப் பாதுகாத்த இந்திய நரி!
(ஐ.நா.வின் தீர்மானத்தை திருத்தத்துடன் ஆதரித்து, பாசிச ராஜபக்சேவை மனித உரிமை மீறல் விசாரணைகளிலிருந்து காப்பாற்றியுள்ளது இந்தியா.)
( கியூபா: இனப்படுகொலைகளின் கவசமா, இறையாண்மை?)

4.  பாசிசமயமாகும் அரசு!
வடமாநிலத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, எல்லா பிரிவு மக்களையும் கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகக் கருதும் அரசின் அணுகுமுறை காலனிய ஆட்சியை நினைவுபடுத்துகிறது.)

5.தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!
(பிற மாநிலங்களில் இருந்து பிழைப்புத்தேடி குடியேறும் அனைவரும் கிரிமினல் குற்றவாளிகள் என்று கூறி சிவசேனா பாணியில் நஞ்சு கக்குகிறது த.தே.பொ.க. தலைமை.)

6.பெண்ணுரிமையின் பேராயுதம்.                                      
(அனைத்துலக மகளிர் தினம்.)

7. பகத்சிங் வழியில் விடுதலைப் போரைத் தொடர்வோம்!”                 
(பு.மா.இ.மு.வின் பிரச்சாரம், உறுதியேற்பு!)

8. செக்கு மீதேறி சிங்கப்பூர் பயணம்!                                    
(தனியார்மயம் – தாராளமயம் எல்லா முனைகளிலும் தோல்வியடைந்த பிறகும் அதே செக்குமாட்டுப் பாதையில் செலுத்தப்படுகிறது, பட்ஜெட்.)

9. தனியார்மயத்துக்கு எதிராகத் தொழிலாளர்களின் பிரச்சாரம்.
(108 ஆம்புலன்ஸ் சேவை:)

10. வர்க்க ஒற்றுமையுடன் முன்னேறும் ஓசூர் தொழிலாளர் போராட்டம்.

11. மின்சாரச் சந்தையை வட்டமிடும் பணந்தின்னிகள்.                    
(ஆன்லைன் சந்தையில் சூதாடப்படும் பண்டமாக மின்சாரத்தை அங்கீகரித்துள்ளது அரசு. வருங்காலத்தில் மின்கட்டணம் என்பது சந்தை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கும்.)

12. கட்டணக் கொள்ளையை வீழ்த்திய பெற்றோர்களின் போராட்டம்!

13. அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை உடனே செய்து கொடு!”                                                   
(புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் ஆர்ப்பாட்டம்.)

14. மக்களாட்சி அல்ல, மாஃபியா ஆட்சி!
(கனிம வளங்களைக் கொள்ளையிடும் மாஃபியாக்களின் ஆதிக்கமும் அட்டூழியங்களும் யாரும் கேள்வி கேட்க முடியாத வண்ணம் அதிகரித்து விட்டன்.)

15. வல்லரசின் முகத்தில் வழியும் மலம்!
(கொத்தடிமைத் தொழிலாளர்கள் எத்தனைக் கொடூரமாகச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டும் வெள்ளையன் என்ற தொழிலாளியின் கண்ணீர்க்கதை!)

16. அணுஉலை ஆதரவாளர்களுக்கு புகுஷிமா விடுக்கும் எச்சரிக்கை!        
(அணு விபத்து உள்ளிட்டு அனைத்து ஆலை விபத்துகளுக்கும் காரணமான முதலாளித்துவ இலாபவெறியையும் அதிகார வர்க்க அலட்சியத்தையும் அதிநவீன தொழில்நுட்பங்கள் தடுத்து விடுமா?)

17. பேரழிவின் தொடக்கம்!                                               
(உயிராதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்கு என்று அறிவித்திருப்பதன் மூலம் ஒரு பேரழிவை முன்மொழிகிறது, தேசியத் தண்ணீர்க் கொள்கை.)

18. விவசாயிகளின் தற்கொலையும் வங்கிகளின் வாராக்கடனும்.

புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

சசிகலா சேர்ப்பு: வாராயோ தோழி வாராயோ…………!

28
ஜெயா-சசிகலா
கேடி நம்பர் 1 - சீசன் 2 முடிந்தது

கிட்டத்தட்ட இரு மடங்காய் மின் கட்டண உயர்வை அறிவித்த கையோடு உடன் பிறவா சகோதரி சசிகலாவோடு இனி காயில்லை, பழம்தானென்று அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. மயிலாப்பூர் கும்பலுக்கு ஆதரவான தினமலர், ஹிந்து, தினமணி, குமுதம் முதலான பார்ப்பன ஊடகங்கள் இந்த செய்தியை வேண்டா விருப்பாக கொஞ்சம் சோகத்துடனேயே வெளியிட்டிருக்கின்றன.

கடந்த டிசம்பரில் ஆரம்பித்த இந்த நாடகம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும் இதை முற்றிலும் நாடகம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த இதே போன்றொதொரு பிரிவு – சேர்க்கையிலிருந்து இந்த 2011-12 எபிசோடு அளவிலும் தன்மையிலும் வேறுபட்டது.

சசிகலாவின் சேர்க்கைதான் ஜெயாவின் ஊழலுக்கு காரணமென்று அவரது நீக்கத்தை போற்றிப் பாடிய பார்ப்பன ஊடகங்களின் திரித்தலை மறுத்து அப்போது ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஜெயா – சசி கும்பலின் ஊழல், அதிகார முறைகேடுகள், பார்ப்பனிய பக்தி, பாசிச ஆட்சி அனைத்திற்கும் ஜெயாவே பிரதானமான காரணமென்று அதில் சுட்டியிருந்தோம்.

பெங்களூருவில் நடக்கும் சொத்து குவிப்பு வழக்கின் போதான நீதிபதியின் நேர்காணலுக்கு பதிலளித்த சசிகலா, சொத்து சேர்ப்பு குறித்த விவகாரம் எதிலும் ஜெயலலிதாவுக்கு சம்பந்தமில்லை என்று அறிவித்திருந்தார். பின்னர் ஓரிரு நாட்களுக்கு முன்னர் தனது உறவினர்கள், நண்பர்கள் பலர் ஜெயவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் முறையில் நடந்து கொண்டது தனக்கு தெரியாது, ஒருபோதும் தான் அக்காவிற்கு துரோகம் செய்ய நினைத்ததில்லை என்று ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். இதை முக்கியத்துவம் கொடுத்து காட்டிய ஜெயா டி.வி அடுத்த நாளே அவர் மீதான நீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக ஜெயா அறிவித்ததைக் காட்டியது. சகோதரிகள் மீண்டு சேர்ந்ததாக ஊடகங்களும் அறிவித்தன.

ஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம். எனினும் இந்த சொத்துப் பேரரசின் கடிவாளம் யாரிடம் இருக்க வேண்டுமென்பது இருவரிடையே எற்பட்டிருக்கும் முரண்பாடு. இந்த முரண்பாடு நட்பு முரண்பாடா, பகை முரண்பாடா என்றால் நிச்சயம் இது பகை முரண்பாடாக போக முடியாத அளவுக்கு சொத்துரிமை விவகாரங்கள் தடுக்கின்றன. மீறிப் போனால் அது இருவருக்குமே பிரச்சினை.

ஜெயா-சசி கும்பல் கடந்த ஆட்சிக்காலங்களில் முழு தமிழகத்தையுமே மொட்டையடித்து சுரண்டிச் சேர்த்த சொத்துக்களின் வலிமையில்தான் அ.தி.மு.க எனும் அடிமைகளது கட்சியை கட்டி மேய்ப்பதோடு ஆட்சியையும் பிடிக்கும் அளவுக்கு வலிமையாக இருக்கின்றது. இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பதால் எதை துறந்தாலும் அதன் விளைவு மற்றதை பாதிக்கும். அந்த பயம்தான் இருவரின் சேர்க்கைக்கும் நிபந்தனை. இதைத் தாண்டி இருவரும் சண்டை போட முடியாது.

எனினும் இப்போது கடிவாளம் ஜெயாவிடமே இருக்க வேண்டும் என்பதை இந்த 2012 எபிசோடு காண்பித்திருக்கிறது. மன்னார்குடி கும்பலில் சசிகலாவைத் தவிர அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்து தனது நாட்டாண்மையை ஜெ தெரிவித்திருக்கிறார். கைது வரை போகுமா என்று நினைத்திருந்த மன்னார்குடி கும்பல் இப்போது சிறையிலிருந்தவாறு சமாதான வழிகளைத் தேடி வருகிறது. சேர்ந்தே ஊழல் செய்திருந்தாலும் அதை விசாரணை செய்யும் உரிமையை ஜெயாவே வைத்துக் கொண்டதை எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை. காரணம் அவர் மீதான பார்ப்பன ஊடகங்களின் பக்தி.

ஆக மன்னார்குடி கும்பல் இனி  அடக்கி வாசிக்க வேண்டுமென்பதாக இந்த பிரிவு நாடகம் முடிந்திருக்கிறது. கூடவே சொத்து குவிப்பு வழக்கு இறுதி கட்டத்தை நெருங்கி வரும் வேளையில் சசிகலாவின் “அக்கா மேல எந்த தப்புமில்லை” எனும் வாக்குமூலமும் கூட இதில் பங்காற்றியிருக்கக் கூடும். அல்லது இது பேசி வைத்துக் கொண்டதாக இருக்குமென்று சிலர் கூறினாலும் அது முற்றிலும் அப்படி மட்டும் நடந்திருக்க முடியாது. ஏனெனில் மன்னார்குடி கும்பலின் சொத்துரிமையின் மேலாண்மை இப்போது மாறியிருக்கிறது என்பதால் பெங்களூரு வழக்கில் சசிகலா வாக்குமூலம் என்பது தொடர் விளைவுதான். நாடகத்தின் மையக் கதை அல்ல.

அடுத்து ஜெயா ஆட்சிக்கு வந்த எல்லா சமயங்களிலும் அவர் எடுத்த மக்கள் விரோத முடிவுகள், பார்ப்பன பாசிச அடக்குமுறைகள் அனைத்தும் அவரது வர்க்க நலன் சார்ந்து எடுக்கப்பட்ட ஒன்றுதான். அதற்கும் சசிகலாவுக்கும், மன்னார்குடி கும்பலுக்கும் விசேசமான தொடர்புமில்லை. தேவர் சாதிவெறியின் மேலாண்மை மட்டும் மன்னார்குடி கும்பலின் தனிச்சிறப்பு என்றாலும் இதுவும் பார்ப்பன பாசிசத்திற்கு உட்பட்ட ஒன்றுதான். தற்போது “ராமர் பாலம்” எனும் புராணப் புளுகைக்கூட தேசியச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதிலிருந்தும் ஜெயாவின் பார்ப்பன விசுவாசத்தை புரிந்து கொள்ளலாம்.

சட்டசபையில் விஜயகாந்த் நாக்கை தள்ளி மிரட்டும் பிரச்சினையில் ஜெயா திமிராக அறிவித்தது நினைவிருக்கிறதா? அதாவது பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு நடக்கும் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் தான் அமோக வெற்றி பெறுவேன் என்று அவர் அடித்துச் சொன்னது வெறுமனே தேர்தல் வெற்றி சார்ந்த ஒன்றல்ல. அது அவரது பாசிச திமிரை காட்டுகிறது.

மேலும் ஜெயாவின் ஆட்சி என்பது போலிசு மற்றும் அதிகார வர்க்கத்தினரை மட்டும் நம்பி நடத்தப்படும் சிறு கும்லது ஆட்சி. அவர்களுக்கு கட்டற்ற அதிகாரத்தை கொடுத்துவிட்டு கிட்டத்தட்ட இராணுவ ஆட்சி போன்றதொரு அமைப்பில் நடத்தப்படும் ஆட்சி. இது ஜெயாவின் தனிப்பட்ட பண்பு என்பதோடு, பொதுவில் பாசிஸ்ட்டுகள் அனைவருக்கும் உள்ள பொதுப்பண்பும் ஆகும். அந்த வகையில்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது ஜெயாவின் கிச்சன் கேபினட்டாக அமர்ந்திருக்கிறது. மக்களை அடக்கி ஒடுக்கும் இத்தகைய கட்டுக்கோப்பான ஆட்சிகளைத்தான் தற்போது முதலாளிகள் விரும்புகின்றனர். அதிகரித்து வரும் வாழ்க்கைப் பிரச்சினைகள் மக்களிடையே அமைப்பு ரீதியான எதிர்ப்பாக எழும் போது அதற்கு ஜெயா பாணியிலானா போலிசு ஆட்சிதான் தீர்வு என்பது ஆளும் வர்க்கத்தின் முடிவு.

பரமக்குடி துப்பாக்கி சூடாக இருக்கட்டும், இல்லை கூடங்குளம் மக்கள் மீதான அடக்குமுறையாக இருக்கட்டும் இவையெல்லாம் ஜெயாவின் பேயாட்சி என்பதோடு இந்தியாவுக்கே முன்னுதாரணமாகவும் இருப்பதை ஆளும் வர்க்கங்கள் உணர்ந்தே இருக்கின்றன. அத்தகைய போக்கின் அடையாளமாகத்தான் மயிலாப்பூர் கும்பல் இப்போது அம்மாவை சீராட்டி பாராட்டி வளர்த்து வருகின்றன. இதனால் ஜெயாவின் தனிப்பண்புக்கு இடமில்லை என்பதல்ல. இருவரும் தன்னளவில் ஒரே பார்வை உடையவர்கள். ஒருவேளை மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் ஜெயா அவர்களது அபிலாஷைகளை அவர்கள் சொல்லாமலேயே நிறைவேற்றும் ஆளுமை கொண்டவர். அதே போன்று மயிலாப்பூர் கும்பல் அந்தப்புறத்தில் இல்லை என்றாலும் பார்ப்பன ஊடகங்கள் ஜெயாவை எந்த தருணத்திலும் கை கழுவியது இல்லை.

ஊரறிந்த அவரது திமிரான நடவடிக்கைகள் கூட பார்ப்பன ஊடகங்களில் விமரிசிக்கப்படுவதில்லை. தினமணி வைத்தி மாமாவின் ஜால்ரா தலையங்கங்களே அதற்கு சான்று. ஆனால் இதே சலுகை கருணாநிதிக்கு இல்லை என்பதோடு அவரை தொட்டதுக்கெல்லாம் குத்தி காட்டுவதும் பார்ப்பன ஊடகங்களில் சாதாரணம். இது அரசியலிலும் இருக்கிறது. பாரதிய ஜனதாவோடு கூட்டணி இல்லை என்றாலும் அத்வானி, மோடி போன்றோர் போயஸ் தோட்டத்தில் அப்பாயிண்ட்மெண்ட் இல்லாமலே வந்து போகும் உரிமை உள்ளவர்கள். அதே போன்று பா.ஜ.கவின் கொள்கைகளை கூட்டணி இல்லாமலே ஆதரிக்கும் பண்பு ஜெயாவிடம் உண்டு.

மன்னார்குடி கும்பலுக்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்டிருக்கும் முரண்பாட்டை வெளியே தெரியாமல் உள் வட்ட பஞ்சாயத்தில் தீர்த்திருக்கலாமே என்று சிலர் கேட்கலாம். கூடிக் கொள்ளையடிப்பதிலும், சுரண்டுவதிலும்தான் ஆளும் வர்க்கத்தினரிடையே ஒற்றுமை இருக்கும். பங்கு பிரிப்பதில் முரண்பாடு வந்தால் அது வெளியே வந்தே தீரும். இதை 2 ஜி ஊழலிலும், நீரா ராடியா விவகாரத்திலும் பார்த்திருக்கிறோம். தரகு முதலாளிகளுக்கிடையே உள்ள வணிகப் போட்டி காரணமாகவே இந்த ஊழல் வெளியே வந்திருக்கிறது.

அதனால்தான் மன்னார்குடி கும்பலை முற்றிலும் நீக்கிவிட முடியாத நிலையில் ஜெயா இருக்கிறார். சசிகலாவோ, வெறு சில முக்கியமான உறவினர்களோ அனைவரும் ஜெயாவின் அனைத்து விசயங்களையும், அந்தரங்கங்களையும் அறிந்தவர்கள். அந்த அந்தரங்கத்தில் முக்கியமானது ஜெயாவின் ஊழல் சொத்துக்களும் அதன்  இன்றைய நிலைமையும். இதை வெளியே சொன்னால் ஜெயா பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். எனினும் இதை வெளியே சொல்வதால் மன்னார்குடி கும்பலும் பெரும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். ஒருவகையில் அது இருவருக்கும் தற்கொலைப் பாதை என்றும் சொல்லலாம்.

வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக மக்கள்தான் தற்கொலை செய்வார்களே ஒழிய முதலாளிகள் மாட்டார்கள். ஏனெனில் வாழ்க்கைப் பிரச்சினைகள் தோற்றுவிக்கும் தன்மானம், நாகரீகம், கௌரவம், அச்சம், நேர்மை போன்ற உணர்ச்சிகளெல்லாம் அதிகார பீடங்களில் இருப்பவர்களுக்கு இல்லை. அவையெல்லாம் மக்கள் திரள் முன்னே அவிழ்த்துப் போடப்படும் முகமூடிகள் என்பதைத்தாண்டி வேறு முக்கியத்துவம் இல்லை. ஆகவே அவர்கள் அடித்துக் கொண்டாலும், கூடிக் கொண்டாலும் அது மக்களிடையே நடப்பதைப் போன்று இருக்காது; இருக்கவும் முடியாது. ஆக ஜெயா சசி கும்பல் தங்களிடையே வரம்பு மீறி சண்டையிடும் தற்கொலைப் பாதையை எப்போதும் எடுக்காது. ஒரு வேளை அப்படி எடுக்கப்படும் பட்சத்தில் ஒரு கும்பல் பூண்டோடு அழிக்கப்படவேண்டியது அவசியம்.

அதற்குத்தான் மயிலாப்பூர் கும்பல் முனைகிறது. என்றாலும் அது அத்தனை சுலபமல்ல. சனிப்பெயர்ச்சியின் போது நீக்கப்பட்ட சசிகலா இப்போது முட்டாள்கள் தினத்தில் சேர்ந்திருக்கிறார். மக்களோ இன்னமும் சனியனை நீங்க முடியாமலும், முட்டாள்தினத்தின் காட்சிகளில் மயங்கியவாறும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

_____________________________________________________________________________

காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி!

65

காஷ்மீர்-இந்திய-அரசின்-கொலைவெறிகாஷ்மீர் மாநிலம்  பாரமுல்லா மாவட்டத்திலுள்ள போனியார் என்ற நகர்ப்புறத்தில் கடந்த ஜனவரி மாதம் மத்திய தொழிற்பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அல்டாஃப் அகமது ஸூத் என்ற 25 வயது இளைஞர் சம்பவம் நடந்த இடத்திலேயே இறந்து போனார்; 70 வயதான அப்துல் மஜித் கான் என்ற முதியவரும், பர்வாயிஸ் அகமது கான் என்ற மற்றொரு இளைஞரும் காயமடைந்தனர்.  இத்துப்பாக்கிச் சூடு துணை இராணுவப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலோ அல்லது காஷ்மீரின் விடுதலையைக் கோரும் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையோ அல்ல.  “தங்கள் பகுதிக்குத் தடையில்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும்” என்ற சாதாரணமான, அதேசமயம் அடிப்படைத் தேவைக்கான கோரிக்கையை முன்வைத்து ஊரி மின்சார நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலாகும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள வந்த பொதுமக்களின் எண்ணிக்கை ஏறத்தாழ ஐநூறுதான் எனப் பத்திரிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன.  அதேசமயம், அம்மின்சார நிலையத்தைப் பாதுகாத்து வந்த மத்திய தொழிற்பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களின் எண்ணிக்கையோ ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காகத் திரண்டிருந்த பொதுமக்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருந்ததையும் அச்சிப்பாய்கள் நிராயுதபாணியாக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த மக்கள் மீது துப்பாக்கியால் பல ரவுண்டுகள் சுட்டுத் தள்ளியதையும் அப்படையின் தலைமை அதிகாரி என்.ஆர். தாஸ் பத்திரிக்கையாளர்களிடம் எவ்விதக் குற்ற உணர்வுமின்றி அகங்காரத்தோடு விவரித்திருக்கிறார்.   “ஆர்ப்பாட்டக்காரர்களைச் சுட்டுக் கொல்ல வேண்டும்” என்ற கொலைவெறியோடுதான் இத்துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என்பதற்கு இதைவிட வேறு ஆதாரம் தேவையில்லை.

காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் மக்களை எந்த அளவிற்குப் புழுபூச்சிகளைவிடக் கீழாக மதிக்கிறார்கள் என்பதற்கு இந்தத் துப்பாக்கிச் சூடு மற்றொரு உதாரணமாகும்.  துணை இராணுவப் படையால் இந்த ஆர்ப்பாட்டத்தை மூடிமறைக்க முடிந்திருந்தால், சுட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப் அகமதுவும் காயம்பட்ட இருவரும் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டிருப்பார்கள்.

இப்படுகொலை தொடர்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஐந்து சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, கொல்லப்பட்ட அல்டாப் அகமதுவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் சொன்ன கையோடு, “இந்த ஐந்து பேருக்கும் தக்க தண்டனை வாங்கிக் கொடுப்பேன்” எனச் சவால்விட்டுள்ளார்.

ஆனால், இந்தக் கைதும், காஷ்மீர் முதல்வரின் சவடாலும் ஊரை ஏய்க்கும் நாடகம் என்பது காஷ்மீர் மக்களுக்குத் தெரியாத விசயமல்ல.  காஷ்மீரில் குவிக்கப்பட்டுள்ள இராணுவமும் துணை இராணுவப் படைகளும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம், கலவரப் பகுதிச் சட்டம், மத்திய ரிசர்வ் படைச் சட்டம் ஆகிய கருப்புச் சட்டங்களால் பாதுகாக்கப்படுகின்றன.  இச்சட்டங்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, கொட்டடிச் சித்திரவதை, ஆள் கடத்தல், சட்டவிரோத துப்பாக்கிச் சூடு என அனைத்துவிதமான மனித உரிமை மீறல்கள், அட்டூழியங்களை காஷ்மீர் மக்களின் மீது ஏவிவிடும் அதிகாரத்தையும், ஆணவத்தையும் இந்திய இராணுவத்திற்கும் துணை இராணுவப் படைகளுக்கும் வழங்கியுள்ளன.  மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் இராணுவ, துணை இராணுவப் படை சிப்பாய்கள், அதிகாரிகளின் மீது காஷ்மீர் மாநில அரசு வழக்குத் தொடுக்க வேண்டுமென்றால்கூட,  அதற்கு மைய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற நிபந்தனை ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திலும் மத்திய ரிசர்வ் போலீசு சட்டத்தின் 17ஆவது பிரிவிலும் உள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தானால் தூண்டிவிடப்படும் பயங்கரவாதத்தை ஒடுக்க வேண்டுமென்றால் தமக்கு இப்படிபட்ட அதிகாரமும் பாதுகாப்பும் வேண்டுமென இராணுவம் கூறி வருகிறது.  இச்சட்டத்தில் சில்லறை சீர்திருத்தங்களைச் செய்வதற்குக்கூட காங்கிரசும், பா.ஜ.க.வும், இராணுவமும் சம்மதிப்பதில்லை.  ஏதோ தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்காகத்தான் இராணுவத்திற்கு இந்த அதிகாரமும் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதைப் போல நம்மை நம்பவைக்க ஆளும் கும்பல் முயன்று வருகிறது.  ஆனால், இது அப்பட்டமான பொய்; அரசியல் உரிமைகளுக்காகப் போராடும் காஷ்மீரிகளை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்வதற்கும் இராணுவம் இச்சட்டத்தைப் பயன்படுத்தி வருகிறது என்பது பல நூறு முறை அம்பலமாகியிருக்கிறது.

காஷ்மீர்-இந்திய-அரசின்-கொலைவெறிகிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பிவந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக், 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்களை இச்சட்டத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அரசுப் படைகள் சுட்டுக் கொன்றுள்ளன.  காஷ்மீரின் பாரமுல்லா, பண்டிபோரா, ஹந்த்வாரா, குப்வாரா ஆகிய நான்கு மாவட்டங்களில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டு, இரகசியமாகப் புதைக்கப்பட்ட 2,730 சடலங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  இந்த இரகசியக் கல்லறைகள் குறித்து காஷ்மீர் மாநில அரசின் மனித உரிமை ஆணையம் நடத்திய ஆய்வில், பாகிஸ்தான் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டுப் புதைக்கப்பட்ட இவர்களுள் 574 பேர் உள்ளூர்வாசிகள் என்பது தெரியவந்துள்ளது.  இப்படி அப்பட்டமாக அம்பலமான மனித உரிமை மீறல் வழக்குகளில்கூட இராணுவத்தினர் தண்டிக்கப்படுவதை இச்சட்டத்தைப் பயன்படுத்தித் தடுத்து வருகிறது, மைய அரசு.

காஷ்மீர் மாநில அரசு இந்திய இராணுவ, துணை இராணுவப் படைகள் மீது 50 மனித உரிமை மீறல் கிரிமினல் வழக்குகளைத் தொடுத்து, அவற்றில் தொடர்புடைய சிப்பாய்கள்/அதிகாரிகளை விசாரிப்பதற்கான அனுமதி வழங்கக் கோரி மைய அரசிடம் விண்ணப்பித்திருந்தது.  இந்த 50 வழக்குகளில் 31 வழக்குகள் பாலியல் வன்முறை மற்றும் கொலை தொடர்புடையவை;  11 வழக்குகள் சட்டவிரோதக் கைது, சித்திரவதை தொடர்பானவை.  இவ்வழக்குகள் குறித்து காஷ்மீர் மாநில போலீசு விசாரணை நடத்தி, அதில் உண்மை இருப்பதைக் கண்டுபிடித்து ஏற்றுக்கொண்டு, அதன்பிறகுதான் மைய அரசிடம் குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிப்பதற்கு அனுமதி கோரியது.

இதில் ஒரு கொலை வழக்கு 1991 ஆம் ஆண்டு நடந்ததாகும்.  பட்வாரா என்ற ஊரைச் சேர்ந்த முகம்மது ஆயுப் பட் என்ற அப்பாவியை இந்திய இராணுவம் கொலை செய்து, அவரது சடலத்தை தால் ஏரியில் வீசியெறிந்தது.  இப்படுகொலையை அப்பொழுது சிறீநகர் பகுதியில் பணியாற்றிவந்த பிரிகேடியர் குல்ஷன் ராவ்தான் செய்தார் என்பது காஷ்மீர் மாநில போலீசு நடத்திய விசாரணையில் அம்பலமானது.  கொலை நடந்து பதினெட்டு ஆண்டுகள் கழித்து, மார்ச் 3, 2009 அன்று அந்த அதிகாரியை விசாரிக்க அனுமதிக்க முடியாது என அறிவித்தது மைய அரசு.

பீர்வாஹ் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை மேஜர் பதவியிலிருந்த இராணுவ அதிகாரி பாலியல் பலாத்காரப்படுத்த முயன்ற சம்பவம் 1997ஆம் ஆண்டு நடந்தது.  நான்கு ஆண்டுகள் கழித்து, 2001இல்தான் குற்றவாளியை அடையாளம் காண முடிந்தது.  இதற்குப் பின் பத்து ஆண்டுகள் கழித்து, குற்றவாளியான அந்த இராணுவ மேஜரை விசாரிக்க அனுமதிக்க முடியாதென செப்.12, 2011இல் அறிவித்தது, மைய அரசு.  பல ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்த இந்த 50 வழக்குகளில் 42 வழக்குகளைக் கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஒவ்வொன்றாக எடுத்து, “ஆதாரம் இல்லை’’, “விசாரணை மேலோட்டமாக நடத்தப்பட்டுள்ளது’’, “இராணுவத்தின் மரியாதையைக் கெடுக்கும் வண்ணம் புனையப்பட்ட பொய்க் குற்றச்சாட்டு” என்ற மொன்னையான காரணங்களைக் கூறி, அந்த வழக்குகளில் சம்மந்தப்பட்ட இராணுவ, துணை இராணுவத்தினரை விசாரிக்க அனுமதிதர மறுத்துவிட்டது,மைய அரசு.

அப்பாவிகளை எல்லைப்புறத்திற்குக் கடத்திக் கொண்டு போய் போலி மோதலில் சுட்டுக் கொல்வது மட்டுமல்ல, மோதல் நடந்திருப்பதாகப் பொய்க் கணக்குக் காட்டி பரிசுப் பணத்தைச் சுருட்டிக் கொள்வது, பதவி உயர்வுகளைப் பெறுவது என இராணுவமும் துணை இராணுவமும் காஷ்மீரில் நடத்தியிருக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் மோசடிகளுக்கும் அளவே கிடையாது.  1990ஆம் ஆண்டு தொடங்கி 2007ஆம் ஆண்டு முடியவுள்ள பதினேழு ஆண்டுகளில் காஷ்மீரில் ஏறத்தாழ 70,000 பேர் துப்பாக்கிச் சூடு, போலி மோதல், கொட்டடிக் கொலைகள் ஆகிய அரசு பயங்கரவாத அட்டூழியங்களுக்குப் பலியாகியுள்ளனர்.  அரசுப் படைகளால் விசாரணைக்கு இழுத்துச் செல்லப்பட்ட 8,000 பேர் காணாமல் போயிருப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.  காஷ்மீரிலிருந்து இராணுவத்தை விலக்கவும், ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கவும் கோரி கடந்த 2010ஆம் ஆண்டு காஷ்மீர் பள்ளத்தாக்கில் நடந்த ஆர்ப்பாட்டங்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.  காஷ்மீரில் அரசுப் படைகள் நடத்தியிருக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து அம்மாநில மனித உரிமை ஆணையத்திடம் மட்டும் கடந்த 14 ஆண்டுகளில் 5,699 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

உண்மை இவ்வாறிருக்க, கடந்த இருபது ஆண்டுகளில் வெறும் 50 வழக்குகளில் மட்டுமே குற்றமிழைத்த இராணுவத்தினரை விசாரிக்க மைய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.  இந்த 50 வழக்குகளில் தற்பொழுது 42 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.  தப்பித்தவறி மீதமுள்ள எட்டு வழக்குகளில் அனுமதி வழங்கப்பட்டாலும், வழக்கு விசாரணையை சிவில் நீதிமன்றங்களில் நடத்த மைய அரசு சம்மதிக்காது.  உண்மையும் நீதியும் இராணுவ நீதிமன்றங்களில் புதைக்கப்படும்.  இந்த அநீதியைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் காஷ்மீரிகள் ஏன் சகித்துக் கொள்ள வேண்டும்?

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

_____________________________________________________________

ஆத்திகவாதியை ஒரு நாத்திகன் கேள்வி கேட்கலாமா? கேள்வி – பதில்!

கடவுள் என்பது என் தனி விருப்பம். அதில் தலையிட உனக்கு உரிமையில்லைஎன்று சொல்வது சரியா, அப்படி சொல்பவர்களை என்ன செய்வது?

– ராஜன்

__________________________________________

அன்புள்ள ராஜன்,

கடவுள் நம்பிக்கை குறித்து பார்க்கும் முன் – இந்த ‘தனி’ விருப்பம், ‘தனிப்பட்ட’ நம்பிக்கை, ‘தனிப்பட்ட’ வாழ்க்கை என்பதைக் குறித்து பார்த்து விடுவோம். கடவுளை விடுங்கள், நாம் நமது வாழ்வில் கற்றுக் கொள்ளும் நல்லது – கெட்டது, புனிதமானது – புனிதமற்றது, சரி – தவறு என்பதை நாம் எங்கேயிருந்து கற்கிறோம்? நமது வாழ்வை வழிநடத்திச் செல்லும் ‘தனிப்பட்ட’ அறம் சார்ந்த விழுமியங்களை எப்படி கட்டமைத்துக் கொள்கிறோம்? இவையனைத்தும் ‘தனிப்பட்ட’ / ‘சொந்த’ முறையில் என்று நம்புகிறீர்களா?

கருத்துக்களும், உணர்ச்சிகளும், நம்பிக்கைகளும் நமது மனதின் அடியாழத்திலிருந்து சுயம்புவாய்த் தோன்றி விடுகிறதா என்ன? ஆப்கானிலும், ஈராக்கிலும், போஸ்னியாவிலும், ஈழத்திலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் ஏகாதிபத்தியங்களின் நலன்களுக்காக வீசப்படும் குண்டுகளால் உடல் கிழிந்து பிய்த்து எரியப்படும் மனித உடல்கள் நமக்கும் ஒரு அமெரிக்கனுக்கும் ஒரே விதமான உணர்ச்சியையா உண்டாக்குகிறது? செங்கொடி தீக்குளித்து இறந்தாள் என்பதைக் கேட்ட மாத்திரத்தில் நமக்குள் கையறு நிலையால் உந்தப்பட்ட ஒரு சோகம் எழவில்லையா? அந்தச் சாவு நம் மனதைப் பிசையவில்லையா? ஆனால், அதே சம்பவத்தை தினமலரால் காதல் தோல்வி என்று கொச்சைப்படுத்த முடிகிறதே?

நமது இந்தக் கருத்தும் தினமலரின் அந்தக் கருத்தும் சொந்த/தனிப்பட்ட முறையில் தான் உண்டானதென்று நம்புகிறீர்களா?  இல்லை.

நாம் வாழும் சூழல், நமது வர்க்கப் பின்புலம் போன்றவற்றின் அடிப்படையிலேயே நமது கருத்துக்களும் பிறக்கின்றன. நம்மைச் சுற்றியுள்ள சமூகம் நமக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்கிறது. நல்லது-கெட்டது, சரி – தவறு என்பதையெல்லாம் நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. நமது இதயம் சாலையில் அடிபட்டுக் கிடக்கும் தெரு நாயின் சிதறிய ரத்தத் துளிகளைக் கண்டு கூட பதறுகிறது. தினமலரின் இதயமோ ஈழத்தில் ஆயிரக்கணக்கில் செத்துச் சிதறிய அப்பாவி மனித உடல்களைக் கண்டு குதூகலிக்கிறது. சேனல் 4ன் வீடியோவைப் பற்றி ‘இன்ட்ரெஸ்டிங்கா ஏதும் இல்லை’ என்று கொக்கரிக்க வைக்கிறது. ராஜபக்சே கும்பலும் இது பொய் என்று ஊளையிட்டு விட்டு எளிதில் கடந்து செல்கிறது.

ஆக ஒரு விசயத்தை பார்த்து பதறுவதிலும், திமிரடைவதிலும் இரு வேறான போக்குகள் உள்ளிட்டு பல கருத்துக்கள் தோன்றுவதை பார்க்கிறோம். இவை எதுவும் சம்பந்தப்பட்டவர் சுயம்பாய் கண்டடைந்த கருத்து அல்ல. சமூகத்தில் பால் அவர் கொண்டிருக்கும் உறவே அந்தக் கருத்துக்களை கட்டியமைக்கிறது. எனினும் அநேகர் இத்தகைய கருத்துக்களை தானே யோசித்து வந்தடைந்த ஒன்று என்று கருதுகிறார்கள். வர்க்க ரீதியாக மேல் நோக்கி செல்லச் செல்ல இது மேலும் வலுவடையும்.

கடவுள் பற்றிய நமது கருத்துக்களையும் கூட அவ்வாறே நாம் ‘வெளியில்’ இருந்து தான் ‘உள்ளே’ இறக்கிக் கொள்கிறோம். ஒரு குழந்தை பிறக்கும் போதே இந்துவாகவோ,  முசுலீமாகவோ, கிருத்துவனாகவோ பிறப்பதில்லை. அதன் பெற்றோரும், அதனைச் சுற்றியமையும் சமூகமுமே அதற்கு ‘கடவுளை’ அறிமுகம் செய்து வைக்கின்றனர். அச்சமற்ற இயல்பையும், அளவற்ற ஆற்றலையும் கொண்ட குழந்தைகளை அதனைச் சுற்றியிருப்போர் தான் கடவுள் பூச்சாண்டி காட்டி அஞ்சி நடுங்கும் கோழைகளாக்குகின்றனர்.

ஆக, கடவுளை உங்கள் நண்பர் கண்டடைந்ததே  தனிப்பட்ட முறையில் அல்ல எனும் போதே அதில் விருப்பம் மட்டும் ‘தனிப்பட்டு’ இருக்க முடியாது. இருப்பினும் அந்த ‘தனிப்பட்ட’ கடவுள் நம்பிக்கை நான்கு சுவர்களுக்குள் மட்டும் பதுங்கிக் கொள்ளும் வரை, எவரையும் துன்புறுத்தாத வரை யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால், அவ்வாறு பதுங்கிக் கொள்வதில் கடவுள் நம்பிக்கைக்கு ஒரு பிரச்சினை இருக்கிறது. ஒரு நம்பிக்கை என்பது எதார்த்த அனுபவத்தில் சோதித்தறியப்பட்டு அதன் மூலம் பட்டை தீட்டப்பட்டு நமக்குள் உண்டாகும் பட்சத்தில் அதன் மேலான பற்றுறுதி கேள்விக்கிடமற்று இருக்கும். ஆனால் கடவுள் நம்பிக்கை என்பது சோதித்தலுக்கும் கேள்விகளுக்கும் அப்பாற்பட்டதாய் இருக்கிறது.

வட / தென் துருவங்களில் கடலில் மிதக்கும் ஐஸ் மலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அதன் சிறிய முனை மட்டுமே கடல் மட்டத்துக்கு மேலே கண்ணுக்குத் தெரியும் விதமாய் மிதந்து கொண்டிருக்கும். கடவுள் பற்றிய நம்பிக்கையும் அவ்வாறானதே. அது தனது கால்களின் கீழே ஆழமான அவநம்பிக்கையைக் கொண்டிருக்கிறது – அதன் மேல் தான் நிலை கொண்டுமிருக்கிறது. சுற்றிலும் சமூகத்தில் காணும் ஏற்றத்தாழ்வுகளும், அப்பாவி மக்கள் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களும் கடவுள் நம்பிக்கையின் அஸ்திவாரத்தை நித்தம் நித்தம் அசைத்துப் பார்த்துக் கொண்டேயிருக்கிறது.

வாழ்க்கை நெடுக தம்மோடு சுக துக்கங்களில் சேர்ந்து பயணிக்கப் போகும் காதலியிடம் கூட ஒரு சில முறைகள் தான் ‘ஐ லவ் யூ’ சொல்லி இருப்பார் – ஆனால், கடவுளைத் துதிக்கும் போது மட்டும் ஒருவர் தினசரி திரும்பத் திரும்ப தனது நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கிளிப்பிள்ளையைப் போல் ஓதிக் கொண்டேயிருக்கிறார். அதுவும் போதாமல், தனக்குள்ள கடவுள் சித்திரத்தை ஒத்திராத நம்பிக்கை கொண்டவர்களிடம் முரண்பட்டு உரசிப் பார்த்து தனக்குத்தானே திருப்தி கொள்கிறார்..

‘தனிப்பட்ட’ நம்பிக்கை என்பதே இப்படி வெளியே நடக்கும் உரசிப் பார்த்தல்களின் அறியாமை பலத்தில் தான் உயிர்வாழ்கிறது எனும் போது அதில் ‘தனிப்பட்டு’ மிஞ்சுவது தான் என்ன?  இதைப் பார்க்கும் முன், இதற்கு நேர் எதிரான ‘நம்பிக்கையற்ற’ நிலையைப் பற்றியும் பார்த்து விடலாம். இவையிரண்டும் தம்மளவில் நேரெதிர் துருவங்களாக இருந்தாலும், ஒரு மனிதனின் ஆளுமையையும் அவனது சமூகப் பொறுப்பையும் இவை மட்டுமே தீர்மானிப்பவைகளாக இல்லை.

நாத்திகவாதியாகவோ பகுத்தறிவுவாதியாகவோ இருப்பது மட்டுமே மாபெரும் தகுதி அல்ல. ஒருவர் தான் கொண்டிருக்கும் சமூக உறவில் என்ன வகையான பாத்திரத்தை வகிக்கிறார், மக்கள் நலன் சார்ந்து என்ன பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டிருக்கிறார் இவைகளின் அடிப்படையில் சமூகத்தை எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதும், அவரது சொந்த வாழ்க்கையில் சமூகத்தைப் பற்றிய அவர் கொண்டிருக்கும் மதிப்பீடுகள் எவ்வாறு எதிரொலிக்கிறது என்பதுவுமே முக்கியமானது.

இந்து பாஸிச பயங்கரவாத அமைப்பான ஆர். எஸ். எஸ் கும்பலுக்கு தத்துவார்த்த அடித்தளத்தை உண்டாக்கிக் கொடுத்தவரும், இந்து மகாசபையின் தலைவரும், காந்தி கொலையைத் திட்டமிட்டுக் கொடுத்தவருமான வி.டி சாவர்க்கரும் அவரது ஞான குருவான இத்தாலி பாசிஸ்ட் கட்சி தலைவர் பெனிட்டோ முசோலினியும் கூட கடவுள் நம்பிக்கையற்ற பகுத்தறிவுவாதிகள் தான். சாவர்க்கர் கடவுளை நம்பாத அதே நேரம் வேதத்தையும், பார்ப்பனிய வருண தர்மத்தையும் நம்பினார். எனினும் அவர் நாத்திகர்தான். ஆனால் சிதம்பரம் சிவனடியார் ஆறுமுகசாமியோ கடவுளை நம்பும் ஒரு பக்தர். ஆனால் அவரது பக்தி, இந்து மதத்தில் நிலவும் பார்ப்பன மேலாதிக்கம், மொழித் தீண்டாமை போன்ற இழிவுகளை சகித்துக் கொண்டிராமல் எதிர்த்துப் போராடும் நேர்மையான தன்மான உணர்ச்சிக்குத் தடையாய் நிற்கவில்லை. கடவுளை நம்பிய சித்தர்கள் கூட அதன் பெயரில் விளங்கிய ஏற்றத்தாழ்வுகளையும் பார்ப்பனிய இழிவையும் இடித்துரைத்துள்ளனர்.

ஆக, ஒருவர் சமூக அளவில் வகிக்கும் பாத்திரம் என்னவென்பதிலிருந்து தான் அவரை மதிப்பீடு செய்ய முடியுமேயொழிய கடவுளை நம்புகிறாரா இல்லையா என்பதைக் கொண்டல்ல. நாத்திராய் இருப்பது எப்படி மாபெரும் தகுதியாய் இல்லையோ அதே போல் ஆத்திகராய் இருப்பது ஒன்றே இழிவானதும் அல்ல – போற்றத்தக்கதுமல்ல. கடவுள் நம்பிக்கை சமூகத்தில் நிலவுவதற்கு ‘தனிப்பட்ட’ விருப்பங்கள் காரணமல்ல. அதன் காரணம் சமூக இயக்கத்தில் உள்ளது. நிலவும் சமூக அமைப்பில் பொருளாதாய வாழ்கையின் ஒவ்வொரு அழைக்கழிப்பிற்கும் முகங்கொடுத்து நாளும் நாளும் நொறுங்குண்டு போனவர்கள் தற்காலிகத் தேறுதலை இல்லாத ஆண்டவனிடம் தேடி ஓடுகிறார்கள்.  வீட்டினுள் தொலைத்ததை தெருவிலே தேடியலையும் மக்களின் அந்தக் கையறு நிலை ஒரு அவலம். அந்த அவலத்தை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமானது. அதனால் தான் மார்க்ஸ் மதம் ஒரு அபின் என்று குறிப்பிட்டு விட்டு,  அது “இதயமற்ற உலகின் இதயமாக இருக்கிறது” என்றார்.

வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி,  கல்யாணம் முடிய, குழந்தை பிறக்க, குழந்தையின் பள்ளிக்கூட சீட், படிப்பு, வேலை, அதற்கு ஒரு திருமணம், அதன் வாழ்க்கை…. என்று நீளும் வாழ்க்கைத் தேவைகளும் அது நிறைவேறாமல் போகும் சமூக எதார்த்தமும், உறைந்து போய் நிற்கும் ஏற்றத்தாழ்வுகளும் அப்பாவி மக்களை ‘ஆறுதலுடன்’ அணிதிரட்டி கோவில்களையும், ஆன்மீக நிறுவனங்களையும் நோக்கி விரட்டி விடுகிறது. தீர்வு அங்கேயில்லை என்பதையும் எங்கே உள்ளது என்பதையும் நேர்மறையில் உணர்த்த வேண்டியது நமது கடமை – வறட்டு நாத்திகத்தை மட்டும் பேசிக்கொண்டு மக்களுக்கு மேலாக நம்மைக் கருதிக் கொள்வதல்ல.  அதே நேரம், தீர்வுக்கான பாதையை நந்தி போல் மறைத்துக் கொண்டு கடவுள் நம்பிக்கை வரும் போது இடித்துரைப்பதும் நேர்மறையில் விமர்சிப்பதும் அவசியம்.

நமது விமர்சனங்கள் ஒரு புறமிருக்க, இந்த ‘ தனிப்பட்ட நம்பிக்கைகள்’ உதிர்ந்து ஒழிந்து போக வேண்டிய ஒரு சந்தர்பத்தை நேர்மையாக சமூகப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பவர்கள் ஒரு கட்டத்தில் எதிர்கொண்டே ஆக வேண்டும். அது எப்போது?

சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோயிலின் கருவறையினுள் பல நூற்றாண்டுகளாக மீளாத் துயிலில் ஆழ்ந்து கிடக்கும் சிற்பங்களிலும், புனித நூல்களிலும், புராணங்களிலும், ஹதீஸ்களிலும், இறைவன் அருளிய வேத்திலும் இல்லையென்பதையும், அந்தப் பிரச்சினைகளின் தோற்றுவாயாக இருக்கும் இந்த வர்க்க சமூகத்தை மாற்றியமைப்பதே தீர்வு என்பதையும் யாரொருவர் தமது சொந்த அனுபவத்தில் நேர்மறையில் உணர்ந்து வினையாற்றத் துவங்குகிறாரோ அப்போது அந்தப் போராட்டத்தின் உப விளைவாக கடவுள் இறந்து போகிறார். அந்த இடத்தில் கடவுள் அமர்ந்திருக்கும் அஸ்திவாரக் கல் ஆட்டம் காண்கிறது. சமூக மாற்றத்திற்கான போராட்டம் வென்று ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட்ட பின் கடவுளுக்கான தேவையே காலாவதியாகி விடுகிறது.  துன்பங்களின் தோற்றுவாய்கள் அடைக்கப்பட்டு விட்ட  தேறுதல் தர யாரும் தேவையில்லை அல்லவா?

இங்கே நாம் கையறு நிலையில் ஏற்பட்ட கடவுள் பக்தியையும் காரியவாதக் கடவுள் பக்தியையும் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும் – இரண்டையும் இருவேறு விதமாய் அணுக வேண்டியுள்ளது.

வாழ்வின் அத்தனை சுகங்களையும் அனுபவித்துக் கொண்டு, அதன் சகல இன்பங்களையும் நுகர்ந்து கொண்டு இடையிடையே எப்போதாவது எழும் குற்றவுணர்வைத் தவிர்த்துக் கொள்ள கோயில் உண்டியல்கள் முன்பும் கார்ப்பரேட் குரு பீடங்களின் முன்பும் திரளும் மேட்டுக்குடி கனவான்களின் நம்பிக்கையும் சாதாரண மக்களின் நம்பிக்கையும் ஒன்றல்ல.

வயதான மனைவியின் மருத்துவத்துக்கு சல்லிக்காசு கூட இல்லாமல், தாமதமாகி இழுத்துக் கொண்டேயிருக்கும் ஓய்வூதிய செட்டில்மெண்டு பாஸ் ஆக வேண்டுமே என்கிற பதைப்போடு வந்தவரும் – கறுப்புப் பணக் குவியலில் இருந்து ஒரு சிறிய துணுக்கை கிள்ளி உண்டியலில் போட்டு விட்டால் ரெய்டிலிருந்து தப்பலாமோவென்கிற ‘பதைபதைப்போடும்’  வந்தவரும் ஒன்றாகத் திருப்பதி ஏழுமலையான் முன் வரிசை கட்டி நிற்கிறார்களே, இவர்களின் பக்தி ஒன்றா?

இரண்டும் வேறுவேறானது என்றாலும் நாம் இரண்டிலும் தலையிட்டுத் தான் தீர வேண்டும் – ஆனால், அணுகுமுறையில் பாரிய வேறுபாடு இருக்கும். முந்தையவர் நம்மோடு ஒரே அணியில் நின்று போராட வேண்டியவர்; பிந்தையவரோ நமக்கு நேர் எதிரணியில் நிற்பவர் – எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டியவர்.

ஆக, கடவுள் நம்பிக்கையில் தனிப்பட்டது என்று எதுவுமில்லை. உங்கள் நண்பரால் தனது மூக்கு நுனியைத் தாண்டி எட்டிப்பார்க்காமல் அவரது நம்பிக்கையைக் கட்டி வைத்துக் கொள்ள முடியுமா என்று சோதித்துப் பாருங்கள். கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் நடத்தப்படும் அயோக்கியத்தனங்களையும், சமூக விடுதலைக்கு குறுக்கே கடவுள் நிற்பதையும் விமர்சனக் கண்ணோட்டத்தோடு பார்க்க முடிகிறதா என்று கவனியுங்கள். முடிகிறது என்றால், கவலையை விடுங்கள் கூடிய சீக்கிரம் கடவுள் பெட்டி சட்டியைக் கட்டிக் கொண்டு கிளம்பி விடுவார்.

_________________________________________________

தொடர்புடைய பதிவுகள்

__________________________________________

__________________________________________

__________________________________________

__________________________________________