Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 783

அடிமைப் பெண்ணும், போராடும் பெண்ணும் – விஜி

5

உழைக்கும் மகளிர்தினச் சிறப்புப் பதிவு – 7

தோ பெண்களை நினைவு கூற ஒரு தினம் அத்தனை பத்திரிகைகளிலும் அதற்கான கொண்டாட்டம். நாம முந்திக்கு எவ்ளவோ சுதந்திரமா இருக்கோம். முன்னேறியிருக்கோம்னு மட்டற்ற மகிழ்ச்சியால் மனம் திளைக்கிற இந்த நேரத்தில இதெல்லாம் நிஜமாவே உண்மையான்னு ஒரு நிமிடம் யோசிச்சு பார்க்கறேன். கண்ணீரை உள்வாங்கி கிட்டு காலத்தை கடத்திகிட்டிருக்கிற எத்தனையோ பெண்கள தான் வாழ்க்கையில நான் சந்திச்சுகிட்டிருக்கேன். இது கொண்டாட்டமா, இல்லை நம்மள நாமளே ஏமாத்திகிடறமான்னு நினைச்சு பாக்கிறேன்.

என்னோட உறவுக்கார பெண் தான் அந்த பொண்ணு. தாயில்லை. தகப்பனும் அண்ணனும் சீராட்டி வளர;த்து தேடித் தேடி மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. கட்டிக்கிட்டவன் ஒரு பக்கா அயோக்கியன். இது அந்த பொண்ணுக்கு ஒரு வருஷத்திலேயே நல்லா தெரிஞ்சிடுச்சு சொந்த வீட்டுலேயே தன் மனைவியோட நகை அத்தனையையும் திருடி செலவழிக்கிற அளவுக்கு கேவலமானவன்னும் தெரிஞ்சது. ஒரு பிள்ளையாயிடுச்சு -குடும்பம்னு வந்தா அவன் மனசு மாறும்னு சொன்னதால தொடர்ந்தது உறவு.

எதாவது சொத்தை வித்து அடைக்கிற அளவுக்கு கடன் வச்ச பிறகு தான் அவன் பண்ண அத்தனை பிராடும் வெளியில தெரியும். தன்னோட தவறை தவறே  இல்லாம செய்றதுல அவன் மன்னன். திருந்துவது போல நடித்து பொறுப்பானவன்னு, காட்டிகிட்ட அவனோட தொழிலிலும் கொஞ்சம் முன்னேற்றம். கையில புழங்குன பல இலட்சம் அவனோட இருட்டான பக்கங்களை நினைக்காம இருக்க வச்சது அவள.

அப்பவும் சுத்தி இருக்குறவங்க சொல்றாங்க, “இவன் நியாயமான முறையில சம்பாதிக்கிற மாதிரி தெரியலை, இப்படி யாரும் முன்னேற முடியாது, இதுல ஏதோ தப்பு இருக்குன்னு”. 1 லட்சம் 2 லட்சம்னு சம்பாசிச்ச மாதிரி புழங்குன இடத்துல 10 லட்சம் கடன் இருந்தது. “இப்பவாவது நீ யோசிச்சுக்க, இப்படிபட்டவங்க மாற மாட்டாங்க, அவனோட போராடி போராடி நீ உன் வாழ்க்கையை பணயம் வைக்காதேன்னு” சொன்னா, “தப்பா வர;ற காசுன்னாலும் வசதியான வாழ்க்கைக்கு பழக்கப்பட்டதனால என்ன செய்ய, இது தான் விதின்னு நினைச்சு கிட வேண்டியது தான், பன்னியோட சேர;ந்த கன்றும் பீ திங்கும்னு திங்க வேண்டியதுதான், இதுதான் வாழ்க்கைன்னு” பழகுக்கிறேன்னா. சொன்னவர்;கள் வாயடைத்து நின்றார்;கள்.

இன்னொரு குழந்தையும் ஆச்சு. திரும்பவும் ஏணி மரம் சறுக்கு மரம் கதை தான். 1+1ம் நம்ம தேவைக்காக எப்பவும் 11 ஆகாது. இரண்டு தான் ஆகும். யதார்த்தம் தெரியாம 11 ஆயிடும்னு ஆசைப்பட்ட அவளோட வாழ்க்கை இரண்டு பிள்ளைகளோட 20 லட்சம் கடனோட தலைமறைவா வாழ வாழ வேண்டிய நிலைமைக்கு வந்துருச்சு.

“ஐயோ”ன்னு ஒரு சொட்டு கண்ணீர் விட்டவங்க கூட இன்னைக்கு திரும்ப திரும்ப அவ தேர;ந்தெடுத்த பாதைய நினைச்சு பக்கத்துல கூட வரமாட்டேன்ட்டாங்க. இத்தனைக்கும் அவள் படிக்காதவள் அல்ல… சுயமாக தன் காலில் நின்று ஒரு வேலை தேடி கொள்ளக் கூடிய அளவு படித்தவள். எல்லாத்தையும் இழந்துட்ட அவ கையில் இரு பிள்ளைகள். புருசன் இன்னமும் அதே நிலையில் தான்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அவள நான் பார;த்து பேசினேன். “தெரியாம செஞ்சாத்தான் எந்த தப்புக்கும் மன்னிப்பு உண்டு. தெரிஞ்சே இது தான் வாழ்க்கைன்னு வாழ்;றவனோட நீ ஏன் வாழ துணியற. இப்பவும் ஒண்ணும் இல்லை நீ இப்படித்தான் இருப்பேன்னா உன்னோட வாழ மாட்டேன்னு தனிச்சு நில்லு ஒரு சரியான வாழ்க்கைக்காக போராடு”ன்னு சொன்னப்ப அவ சொன்னா “இல்லை எனக்கு அந்த துணிவில்லை”

இதுக்குள்ளேயே என்றாவது ஒரு நாள் இந்த நிலைமை மாறும். காலம் போகும் வழியில் போகட்டும்னா. அந்த பிள்ளைகள நினைச்சு அவள நினைச்சு என்னால சில நாள் தூங்க கூட முடியல. தன்னோட வாழ்க்கைக்காகவே ஒரு போராட்டம் பண்ண துணியாத இந்த பெண்கள் என்று சமூக சிந்தனையோட போராடுறதுன்னு ஒரு மலைப்பு.

_____________________________________

தே நேரம் அப்படி போராடி ஜெயிச்ச பொண்ணையும் பார்த்திருக்கேன்.

அவள் ஒரு கிராமப்புற பெண்.  +2 வரை படிச்சிருக்கா. தகப்பனில்லாம 5 பேர் கொண்ட குடும்பம், கடுமையான உழைப்பினால ஏதோ கௌரவமா பிழைச்சுக்கிட்டிருந்துச்சு. திருமண பேச்சு வந்தது. இந்த பெண்ணை என்னோட உறவுக்கார பையனுக்கு பேசி முடிச்சிருந்தாங்க. ஒரு அறிமுகத்துக்காக நான் இந்த பொண்ணை பார்;க்க போயிருந்தேன். ஏழ்மையிலும் நேர்மைன்னு படிச்சு தான் இருக்கேன். ஆனா அந்த குடும்பத்தை கண்ணார பார;த்தேன். பார;த்த உடனேயே ஏனோ ஒரு பெருமிதம். ச்சே! இப்படியும் மனிதர;கள் இருக்காங்களேன்னு மனதுள் அப்படி ஒரு சந்தோஷம்.

இவங்களோட திருமணமும் பேரம் படிஞ்சு முடிஞ்சது. அவன் ஒரு கூலித்தொழில் பார்ப்பவன். கல்யாணமான ஒரே மாசத்துல சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. சந்தேக நோய். நின்னா குத்தம், நிமி;ந்தா குத்தம். இதுல தூண்டி விட அவனோட கூட பிறந்தவுக. அதிர;ச்சியான உண்மை அவளுக்கும் புரிந்தது. உலகத்துல மாத்த முடியாததுன்னு எதுவும் இருக்குதா என்ன? சரி பண்ணுவோம்.

இது ஒரு போராட்டம். கடைசி வரை போராடி பார்ப்போம்னு நினைச்சா. அவனோட டார்ச்சர்  தாங்காம தற்கொலைக்கும் ஒரு முறை முயற்சி பன்னுணா. “பாரு, பாரு நான் எப்படி வச்சிருக்கேன், அவ தற்கொலைக்கு முயற்சி பண்றான்னு” என்னை அவட்ட பேச கூட்டிட்டு போனான். “இல்லை ஏதோ அவசரத்துல அப்படி பண்ணிட்டேன், இனி இப்படி பண்ண மாட்டேன்னா”. முடிஞ்ச அளவு சமாதானப்படுத்திட்டு வந்துட்டேன்.

கொஞ்ச நாள்லயே திரும்பவும் பிரச்சனை. அங்க உள்ள கிராம பஞ்சாயத்து வரைக்கும் பிரச்சனை போய் அப்புறம் எங்க கவனத்துக்கு வந்தது. அவன் உறவுன்றதனால எங்கள அவன் தான் கூப்பிட வந்தான்….. கண்ணீர; விட்டான். “நான் நல்லவன்னு” சத்தியமே பண்ணுனான். “இரு, நாங்க அந்த பொண்ணையும் பார்;த்து பேசிட்டு போறாம்”னு சொன்னோம். அவனோட சொந்தமா இருந்தும் அவ பக்கத்து நியாயத்தை நாங்க கேட்க போனதுனால மனம் திறந்து தன்னோட பிரச்னை என்னன்னு சொன்னா.

தப்பு பண்ணும் மகன். அதை தடவிக் கொடுக்கும் குடும்பம். “என்னால சமாளிக்க முடியல, இந்த சூழல்ல அவரோட வாழ்றதே போராட்டமா இருக்குன்”னா. பிரச்னையோட மையம் என்னன்னு தெரிஞ்சதால அவுக இரண்டு பேரையும் பேசி நாங்க இருக்குற ஊருக்கே கூட்டி வந்து குடி வச்சோம். எங்கள் முன்னாடி அப்படி ஒரு அம்மாஞ்சி வேஷம். ஆனால் அவளோட ஒரு சைக்கோ போன்ற அணுகுமுறை.

எங்களோட சின்ன சின்ன உதவிகளோட விளையாட்டு பிள்ளை மணல்வீடு கட்றாப்ல தன்னோட வாழ்க்கைய ஆரம்பிச்சா. தாய் தந்த சீதனமா கையிலே இருக்குற உழைப்பை மதிச்சா. அவன் 3 ரூபா தான் கொடுப்பான் செலவுக்கு. மாற்றுவோம், என்றாவது அவன் மாறுவான்னு அவன் போடுற அத்தனை தடைகளையும் தாண்டி கிட்டே வந்தா. ராத்திரி 1 மணி 2 மணிக்கு அவள ஏதோ ஒரு காரணம் சொல்லி சண்டை இழுத்து அடிச்சு போட்டுட்டு நல்ல பிள்ளை மாதிரி அவளுக்கு முந்தி இவன் வந்துடுவான். “அவ என்னை கொல்ல வாறா, அதனால அடிச்சிட்டு வந்துட்டேன்னு” இவன் வர பின்னாடியே இரத்தக் காயத்தோட அவ வருவா. பொறுப்பேற்றுக் கொண்ட நாங்களே பொறுமை இழந்தோம்.

போலீஸ் ஸ்டேஷன், பஞ்சாயத்து, தெருச் சண்டை, கருக்கலைப்பு என பிரச்சனை வளர்ந்து கிட்டே போச்சு. போராட்டத்தின் நெடிய பயணம் அவளை ஒரு முடிவு எடுக்கத் தூண்டியது.

அவ தெளிவாயிட்டா. இல்லை, இவன் திருந்தி நாம ஒரு நல்ல வாழ்க்கை வாழ முடியாதுன்னு. வாழ்க்கை பூராவும் போராடி வாய கட்டி வயித்த கட்டி காசு சேர்த்து கட்டி கொடுத்த நம்ம பிள்ளை வாழ்க்கை இப்படி ஆயிடுச்சேன்னே இந்த பொண்ணோட அம்மாவுக்கு மனநிலை பாதிச்சு ஆஸ்பத்திரியில சேர்க்கிரமாதிரி ஆயிருச்சு. நிலைமைய எங்கட்ட சொல்லிட்டு அவ அம்மா வீட்டுக்கு கிளம்பிட்டா.

அங்கயும் அவனோட தொந்தரவு தொடர்ந்துச்சு. “நீ ஒரு டாக்டரிடம் வா உன்னை சரிபடுத்திக்கோ. சரியான பிறகு இரண்டு பேரும் உழைச்சுனாலும் ஒரு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்னா” அவன் அதற்கு தயாரில்லை. “வீட்டுக்கு அடங்காதவ, அவன் அடிச்சா பணிஞ்சு போகாதவ, ஏன் நாங்கள்ளாம் இல்லை, ஆனாலும் பொம்பளைக்கு இவ்வளவு திமிரு ஆகாதப்பா”. எத்தனை எத்தனை பேச்சு. அனைத்தையும் தாங்கி நின்றாள்.

“வாழ்க்கை என்னுடையது, வழியும் என்னுடையது, முடிவும் என்னுடையதாகவே இருக்கட்டும்” என்றாள். நிமிர்ந்து நின்றாள். “நானும் போராடி பார்த்து விட்டேன், அவரு எதற்கும் ஒத்து வர்றமாதிரி இல்லை. இது தான் வாழ்க்கைன்னா நான் இனி இவரோட வாழ தயாராயில்லை”.

அவள் பட்ட பாட்டையும், அலைந்த அலைச்சலையும் அவளோட தெளிவான அணுகுமுறையும் பார்த்து எங்களுக்கே வீரம் வந்தது. அட இவள்ள பொம்பளைன்னு. அவன் குற்றம் சாட்டி போன அதே பஞ்சாயத்துலயே எந்த தயக்கமும் இல்லாம அவனோட குற்றங்களை ஆதார பூர்வமா நிரூபிச்சா. தானே தன்னோட பொண்டாட்டிக்கு மொட்டை கடுதாசி எழுதி யாரோடயோ தொடர்பு இருக்கு என்று சொல்லியிருந்தான். “அது அவன்  எழுத்துனதுன்னும், இப்படித்தான் அவன் இருப்பான்னா என்னால வாழ முடியாது”ன்னும் தெளிவா சொன்னா. அவனிடமிருந்து அதே பஞ்சாயத்து மூலமே தன்னோட திருமண உறவ ரத்து பண்ணீட்டா.

மறுமணமும் செஞ்சுகிட்டா. இன்னைக்கு ஒரு குழந்தைக்கும் தாயாகிட்டா. போன வாரம் போய் அவளை பார்த்து வந்தேன். பிரச்னைகளை கண்டு அதற்குள்ளேயே அழுந்தி தானாய் ஏதாவது ஆகி எல்லாம் காணாம போயிடுவோம்னு தான் எல்லா பெண்களும் நெனைச்சிருக்காங்க. இது சமூகம் சார்ந்த பிரச்சனை. அது புரியணும், நிலைமையை சமரசப்படுத்திகிட்டு மட்டுமே வாழ நினைக்கிறாங்க. தன் கை விலங்கொடிக்க யாரோ வருவாங்கன்னு இருக்காங்க. ஆனா போராடினால் மட்டுமே விடிவு.. விடிவு…. விடிவு….

எதிலும் எப்போதும்.

______________________________________________

விஜி
______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

46

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

ரகசியமாகப் பதிவு செய்யப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள கடந்தாண்டு இறுதிவாக்கில் பத்திரிகைகளில் கசிந்த போது உலகிலேயே முதலாம் பெரிய ஜனநாயகம் என்று போற்றிப் புகழப்படும் இந்திய ஜனநாயகத்தின் யோக்கியதை சிரிப்பாய்ச் சிரித்தது. உள்நாட்டுத் தரகு முதலாளிகள் மற்றும் பன்னாட்டு முதலாளிகளின் அபிலாஷைகளுக்கு உட்பட்டுத்தான் இன்னாருக்கு இன்ன மந்திரிப் பதவி என்பது தீர்மானிக்கப்படுகிறது என்கிற உண்மை தெட்டத் தெளிவாக சாட்சி ஆதாரங்களோடு மக்கள் முன் நிரூபணமானது.

அப்போது ஜனநாயகக் கோவணத்தில் விழுந்த பெத்தாம் பெரிய ஓட்டைக்கு சர்வகட்சிகளும் சேர்ந்து ஒருவழியாக ஒட்டுப் போட்டு ஒப்பேற்றினார்கள். அதற்குள் ஏற்கனவே பலமுறை அம்பலமாகி நைந்து போன ஜனநாயகக்  கோவணத்துக்கு இப்போது விக்கிலீக்ஸ் வடிவத்தில் அடுத்த ஆபத்து வந்துள்ளது. இந்தியத் தரகு முதலாளிகளே கேந்திரமான அமைச்சகத் துறைகளில் புகுந்து புறப்படும் போது அமெரிக்கா என்ன சும்மாவா?

இந்தியா சர்வதேச அரங்கில் பல்வேறு தருணங்களில் எடுத்த முடிவுகள் அமெரிக்க நலன்களுக்கு ஒத்திசைவானதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள இங்கே அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள், குறிப்பான சில காரியங்களைச் சாதித்துக் கொள்ள அப்பட்டமான அமெரிக்க அடிவருடிகளை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டது பற்றியும்  அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேசிக் கொண்ட விவரங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

மத்தியில் அமைச்சர்கள் தொடங்கி பிரதமர் வரையில் அமெரிக்க அடிமைகள் என்பது நமக்கொன்றும் ஒன்றும் புதிய செய்தியில்லையென்றாலும் தற்போது அமெரிக்கர்கள் தங்கள் சொந்த வாயாலேயே “நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” என்று அங்கீகரித்து உறுதி செய்திருப்பது தான் சிறப்பு. குறிப்பாக 2006-ஆம் ஆண்டு நடந்த அமைச்சரவை மாற்றங்களில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சராய் இருந்த மணி சங்கர் அய்யர் நீக்கப்பட்டு முரளி தியோரா நியமிக்கப்பட்டது குறித்து அமெரிக்க அதிகாரிகள் மிகவும் புளகாங்கிதம் அடைந்துள்ளனர். இந்த விபரங்கள் அடங்கிய இரகசிய ஆவணங்களை இந்துப் பத்திரிக்கை விக்கிலீக்சிடம் இருந்து பெற்று வெளியிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் இது குறித்தும் தொடர்ந்து சாமியாடி வரும் எதிர்க்கட்சிகள், பிரதமர் இவ்விவகாரம் குறித்த விளக்கம் ஒன்றைத் தெரிவிக்க வேண்டும் என்று கோரிவருகின்றன. பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இவ்விவகாரம் குறித்து பாராளுமன்றத்தில் ஜஸ்வந்த் சிங் பேசியுள்ளார். இந்திய வெளிவிவகாரக் கொள்கைகளை அமெரிக்கா தீர்மானிக்கும் படி விடக்கூடாது என்றெல்லாம் பெரிய நன்னூல் போல வியாக்கியானமும் செய்துள்ளார். இதே ஜஸ்வந்த் சிங் தான் பாராளுமன்ற எம்.பிக்களில் அமெரிக்காவிற்கு அரசாங்க மட்டத்தில் தரகு வேலை பார்க்கும் அமைப்பு ஒன்றை 2002-ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது துவக்கி வைத்தவர்.

தரகு முதலாளிகளின் சங்கமான ஃபிக்கியின் (Federation of Indian Chambers of Commerce and Industry) பேராதரவுடன் 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் துவங்கப்பட்ட இந்தோ-அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர் குழுமம் என்கிற அமெரிக்க அடிவருடிக் கும்பலைத் துவக்கி வைத்ததே ஜஸ்வந்த் சிங் தான். அதில் உறுப்பினராய் இருந்து தனது விசுவாசத்தை நிரூபித்துக் காட்டியதற்குக் கூலியாகத்தான் 2006-ஆம் ஆண்டு முரளி தியோராவுக்கு பெட்ரோலிய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தான் பாரதிய ஜனதாவின் அமெரிக்க ‘எதிர்ப்பு’ வீரவசனங்களின் லட்சணம்.

எதிர்கட்சிகளெல்லாம் அடிப்பது போல் அடிப்பதற்கு அழுவது போல் அழுது, தனது வழக்கமான வரலாற்றில் பெரும் சிறப்புப் பெற்ற ‘விளக்கத்தை’ கூடிய விரைவில் மவுனமோகன் சிங் வழங்கத் தான் போகிறார். ஆதி காலத்தில் ஹைட் சட்டத்திற்கும் சமீப காலத்தில் எஸ்-பேன்ட் விவகாரத்திலும் மிஸ்டர் மவுனத்தால் வழங்கப்பட்ட அந்த சிறப்பான விளக்கம் – “எனுக்கு ஒன்னியும் தெரியாது” என்பது தான். இவ்விவகாரத்திலும் கூடிய விரைவில் அதே போன்றதொரு ‘விளக்கத்தை’  அளிக்கத் தான் போகிறார். அதைத் தொடர்ந்து விஷயத்தை அறுபதடி ஆழக் குழிக்குள் போட்டு மூடி விட்டு பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்பை எல்லோருமாகச் சேர்ந்து காத்துக் கொள்வார்கள்.

ஆனால், வினவு வாசர்கள் இவ்விவகாரத்தை ஏதோ ‘அமெரிக்காவுக்கு ஆதரவான ஒருத்தரை மன்மோகன் அமைச்சராக்கினார்’ என்கிற அளவில் மட்டும் சுருக்கிப் புரிந்து கொள்ளக் கூடாது. மணிசங்கரய்யரை நீக்கி விட்டு முரளி தியோராவை அமைச்சராக்கியதன் பின்னணியில் பல்வேறு பரிமாணங்கள் உள்ளன.

ணிசங்கரய்யர் பெட்ரோலியத் துறை அமைச்சராக நீடிப்பதை ஏன் அமெரிக்கா விரும்பவில்லை?

இதற்கு விடை காணும் முன் அமெரிக்காவின் எண்ணைப் பசியைப் பற்றி சுருக்கமாகவாவது புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியின் காரணமாகத் தான் மத்திய கிழக்கில் உள்ள நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அவற்றை நேரடியாகவும் மறைமுகமாகவும் கட்டுப்படுத்தி முக்கியமான எண்ணை வளம் கொண்ட நாடுகளைத் தனக்கு அடிமையாக்கி வைத்துள்ளது. தனக்குக் கட்டுப்பட்டு ஒத்து வராத காரணத்தால் தான் பேரழிவு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்துக் கொண்டுள்ளது என்று சர்வதேச அளவில் பொய்ப் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு பீதியூட்டி ஈராக் மேல் போர் தொடுத்து அதைத் தனது நேரடி இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது.

இவ்வகையில் அமெரிக்காவுக்கு இப்பிராந்தியத்தில் கட்டுப்படாத இன்னொரு நாடு ஈரான். உலகின் மூன்றாவது பெரிய நிலத்தடி எண்ணை ரிசர்வையும் மூன்றாவது பெரிய இயற்கை எரிவாயு ரிசர்வையும் கொண்டுள்ள ஈரான் அமெரிக்காவுக்குக் கட்டுப்படாததோடு, இரண்டாயிரங்களின் மத்தியில் இருந்து தனது எண்ணை வர்த்தகத்தை சர்வதேச நாணயமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அமெரிக்க டாலரில் நடத்துவதில்லை என்று தீர்மானித்துள்ளது. மேலும்,  அமெரிக்காவின் மத்திய கிழக்கு அடியாளும் பிராந்திய ரவுடி நாடான இஸ்ரேலை நேரடியாக விமரிசித்து – விரோதித்துக் கொண்டுள்ளது ஈரான்.

அமெரிக்காவின் தீராத பெட்ரோல் பசியை ஈடுகட்ட வேண்டுமானால், சல்லிசாக மத்திய கிழக்கு எண்ணை வளத்தை கேட்பாரின்றி உறிஞ்ச வேண்டியது அவசியம். மேலும், சரிந்து வரும் தனது டாலரை நிலை நிறுத்த படாத பாடு பட்டு வரும் வேளையில் அதற்கு ஒரு மாற்று தோன்றி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது அமெரிக்கா. எனவே ஈராக்கை ஒழித்துக் கட்டியது போலவே ஈரானுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் அமெரிக்கா உள்ளது.  ஈரானின் மேல் போர் தொடுக்க ஒரு சந்தர்ப்பத்தையும் காரணத்தையும் எதிர்பார்த்து இரத்த வெறியோடு காத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

ஈராக் மேல் போர் தொடங்குவதற்கு பல ஆண்டுகள் முன்பிருந்தே எப்படி அமெரிக்கா அதன் மேல் பல்வேறு பொருளாதாரத் தடைகளைப் போட்டு பலவீனப்படுத்தியதோ அதே போல் ஈரான் மேலும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.  மட்டுமல்லாமல், ஈராக் போருக்கு முன் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகளைப் போலவே இப்போது ஈரானும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் முஸ்தீபுகளில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச அளவில் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது.  ஈரானுடன் பொருளாதார உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று சர்வதேச நாடுகளை நிர்பந்தித்தும் வருகிறது. ஈரானில் முதலீடு செய்யும் பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் அமெரிக்காவில் தமது தொழில் அலகுகளை நடத்த வேண்டுமானால் பெரும் நட்டஈடு வழங்க வேண்டும்.

இது இவ்வாறிருக்க, தொண்ணூறுகளின் மத்தியில் ஈரானில் இருந்து பாகிஸ்தானுக்கு குழாய் மூலம்  இயற்கை எரிவாயுவை சப்ளை செய்யும் திட்ட முன்வரைவு ஒன்று முன்வைக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஈரானின் தெற்கு பார்ஸ் எண்ணை வயலில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி வரையில் குழாய் பதிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. தொண்ணூறுகளின் இறுதியில் இத்திட்டத்தில் இந்தியாவையும் ஈரான் இணைத்துக் கொண்டது. பிப்ரவரி 1999-ஆம் ஆண்டு ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே இது தொடர்பாக ஒரு ஒப்பந்தமும் கையெழுத்தானது. அதில் தொடங்கி, இத்திட்டம் ஈரான்-பாகிஸ்தான்-இந்தியா (IPI) எரிவாயுக் குழாய்த் திட்டம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தான் இந்தியாவின் தலையில் அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா சுமத்துகிறது. இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் மேற்கில் காலாவதியான அணு உலைகளை கொழுத்த காசுக்கு இந்தியாவின் தலையில் ஏகாதிபத்திய நாடுகள் கட்டி விட வகைசெய்தாலும், இந்த ஒப்பந்தத்தின் பின்னணியில் அமெரிக்காவின் பல்வேறு இராணுவ / இராசதந்திர நலன்களும் பொதிந்து கிடக்கிறது. இந்தியவை நிரந்தரமாக அமெரிக்காவின் அடிமை நாடாக வைத்திருப்பது, தெற்காசியப் பிராந்தியத்தில் தனக்குக் கட்டுப்பட்ட ஒரு அடியாளாக இந்தியாவை வைத்திருப்பது என்பனவற்றை உள்ளடக்கிய பல்வேறு விரிவான அம்சங்கள் கொண்டது.

அணுசக்தி ஒப்பந்தத்தைக் காரணம் காட்டி இந்தியாவை  ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்து வெளியேறுமாறும், ஈரான் தனது மின் உற்பத்திக்காக அணு உலைகள் அமைப்பதையும் யுரேனியத்தை செரிவூட்டுவதை  எதிர்த்தும் சர்வதேச அணுசக்தி முகமையில் (IAEA) இந்தியா வாக்களிக்க வேண்டுமென்றும் அமெரிக்கா நிர்பந்திக்கிறது. அமெரிக்க நிர்பந்தத்திற்குப் பணிந்த இந்தியா, நவம்பர் 2009-இல் ஈரானுக்கு எதிராக வாக்களித்தது.

அதற்கும் முன்பாகவே 2006-ஆம் ஆண்டு முரளி தியோரா பெட்ரோலியத் துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டபின், உப்புசப்பில்லாத காரணங்களை முன்வைத்து ஐ-பி-ஐ எரிவாயுக் குழாய்த் திட்டத்திலிருந்தும் இந்தியா விலகுகிறது. இத்திட்டம் தொடர்பாக பாகிஸ்தான், ஈரான், இந்தியா இடையே நடக்கவிருந்த பல்வேறு முத்தரப்பு ஆலோசனைக் கூட்டங்களை சரியான காரணம் ஏதும் சொல்லாமல் இந்தியா புறக்கணித்துள்ளது.

ஈரானிலிருந்து எரிவாயுவை இந்தியா பெறும் திட்டத்திற்கு மாற்றாக துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கான், பாகிஸ்தான் வழியே இந்தியாவுக்கு எரிவாயுவைக் குழாய் மூலம் கொண்டு வரும் இன்னொரு திட்டத்தையும் இந்தியாவின் தலையில் சுமத்துகிறது அமெரிக்கா. இதற்கான ஒப்பந்தம் கடந்த டிசம்பர் மாதம் கையெழுத்தாகியுள்ளது. ஆப்கானின் வடகிழக்குப் பகுதி அமெரிக்க எதிர்ப்பு தாலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் இன்றைய நிலையையும் பாகிஸ்தானின் வடமேற்கு பிராந்தியத்திலும் (NWFP) பலுச்சிஸ்தானத்திலும் நிலவும் குழப்பங்களையும் கணக்கில் கொண்டால், இத்திட்டம் நிறைவேறுவதற்கான சாத்தியக் கூறுகளே இல்லை.

ஒருவேளை நேட்டோ படைகளை நேரடியாக இறக்கி குழாயை அமைத்து விட்டாலும், எரிவாயுக் குழாயின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒன்று இந்தியா தனது படைகளை ஆப்கானில் இறக்க வேண்டும் – அல்லது, எரிவாயுக் குழாயின் பாதுகாப்புக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதாவது ஆப்கான் புதைகுழியில் அமெரிக்கா சிக்குண்டுள்ள இன்றைய நிலையில், ஒன்று இந்தியா எரிவாயுக் குழாய் பாதுகாப்பு எனும் போர்வையில் நேரடியாக ஆப்கானில் இராணுவத் தலையீடு செய்ய வேண்டும் அல்லது மறைமுகமாக நேட்டோ படைகளின் செலவை ஏற்றுக் கொள்ள வேண்டும். அதாவது அமெரிக்கா ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்துள்ளது.

துர்க்மெனிஸ்தானிலிருந்து எரிவாயுவைப் பெறுவது ஒப்பீட்டு ரீதியில் அதிக செலவு பிடிக்கும் திட்டம் என்பதோடு பாதுகாப்புப் பிரச்சினைகளும் உள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் எரிவாயுத் தேவையையும் நாளுக்கு நாள் எகிறி வரும் பெட்ரோலியப் பொருட்களின் விலையையும் கணக்கில் கொண்டால், இந்தியா ஈரானின் எரிவாயுவைப் பெறுவதே சிக்கனமானது – சிக்கலில்லாதது. ஆனால், நாட்டின் நலனைத் தூக்கி குப்பையில் போட்டு விட்டு நேரடியாக அமெரிக்காவின் காலை நக்கிக் கொண்டிருக்கிறது மவுனமோகன் தலைமையிலான இந்தியா அரசாங்கம்.

மணிசங்கரய்யர் மேலான அமெரிக்காவின் எரிச்சலுக்கு முக்கியமான காரணம் அவர் வெளிப்படையாக ஈரான் எரிவாயுக் குழாய்த் திட்டத்தை ஆதரித்ததோடு அதை முன்னெடுக்கவும் முயற்சித்தது தான். தற்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளியாகி இருக்கும இரகசிய ஆவணங்களில் அமெரிக்க தூதரக அதிகாரி தனது குறிப்பில், இந்தியாவின் வெளிவிவகாரத் துறையில் தமக்கு இருக்கும் ஐந்தாம்படையில் ஒருவர், (அவர் கொஞ்சம் கவுரவமாக contacts என்கிறார்) மணிசங்கரய்யர் ஈரானுடனான எரிவாயுக் குழாய்த் திட்டத்தை முன்னெடுப்பது அத்துறையில் கடும் கசப்பை உண்டாக்கி விட்டுள்ளதாக தம்மிடம் தெரிவித்ததாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும், அமெரிக்க ஜனாதிபதியின் இந்திய வருகைக்கு முன் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் ஏதும் ஆச்சரியகரமான மாற்றங்கள்  இருந்திடக் கூடாது என்பதற்காக வெளிவிவகாரத் துறையை நேரடியாக மன்மோகன் சிங்கே தனக்குக் கீழ் கொண்டு வந்து விட்டார் என்றும், குறிப்பிட்ட அந்த அமைச்சரவை மாற்றத்தில் கபில் சிபல், சைஃபுத்தின் சோஸ், ஆனந்த் சர்மா, அஸ்வினி குமார் போன்ற அமெரிக்க நலன் விரும்பிகள் இடம்பெற்றிருப்பதையும் அந்த அதிகாரி தனது ஆவணத்தில் பதிவு செய்துள்ளார். அவர் அமைச்சரவை மாற்றத்திலேயே முக்கியமானதாகக் குறிப்பிடுவது மணிசங்கரய்யரின் நீக்கத்தைத் தான்.

ஆக, இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாகவும் ஈரானுக்கு எதிராகவும் சர்வதேச அரங்கில் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் – அதில் இந்தியாவின் நலனே பதிக்கப்பட்டாலும் கூட – என்று அமெரிக்கா காலால் இட்ட உத்தரவை நமது மவுனமோகன் தலையால் நிறைவேற்றியுள்ளார். முரளி தியோராவின் நியமனத்தை வெறுமனே அமெரிக்க சார்பு என்பதாக மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது – இந்த அமெரிக்க சார்பால் இந்தியா இழந்தது என்னவென்பதையும், மக்களின் நலன் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சேர்த்து தான் புரிந்து கொள்ள வேண்டும்.

அமெரிக்க கைக்கூலியாக மன்மோகன்-சோனியா கும்பல் ! ஆதாரங்கள் !!

லகின் பெரிய ஜனநாயகம்; மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கம் என்றெல்லாம் அலங்காரமாக பின்னி முடியப்பட்டுள்ள இந்தப் போலி ஜனநாயகக் கொண்டையின் உள்ளே புழுத்து நெளிவது அமெரிக்க நலன் என்னும் ஈரும் பேனும் தான். இது தம்மை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட பச்சை துரோகம் எனும் கூச்ச உணர்வு கூட இல்லாமல் ஒரு தொழில் முறை தரகனைப் போல சூடு சொரணையில்லாமல் ஒருவனால் செயல்பட முடிகிறது என்றால், அவன் எப்பேர்பட்ட ஒரு அயோக்கியனாக இருக்க முடியும்? ஆனால், முதலாளித்துவப் பத்திரிகைகளோ இவரைத் தான் படித்தவரென்றும் அப்பாவியென்றும் ஓயாமல் நம் காதுகளுக்குள் ஓதிக்கொண்டுள்ளன.

இந்திய ஆளும் கும்பலின் அமெரிக்க அடிமைத்தனம் அங்கொன்றும் இங்கொன்றுமாக முன்பே பத்திரிகைகளில் பேசப்பட்டிருந்தாலும் இப்போது மிக எடுப்பாக அமெரிக்கர்களின் வார்த்தைகளிலிருந்தே அம்பலமாகியுள்ளது.

நாடு எத்தகைய அபாயகரமான பாதையில் போய்க்கொண்டிருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்? ஆளும் காங்கிரசு கும்பலும் அதை தலைமை ஏற்றுநடத்தும் சோனியா – மன்மோகன்சிங் கும்பலும் எவ்வித கூச்ச நாச்சமின்றி அமெரிக்காவின் அடிமையாக இந்தியாவை மாற்றிக்கொண்டிருக்கிறது. இந்தக் கும்பலை அடித்து விரட்டாமல் இந்தியாவிற்கு இறையாண்மையோ, சுதந்திரமோ இல்லை.

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

ஆதாரங்கள்:

http://en.wikipedia.org/wiki/CentGas
http://en.wikipedia.org/wiki/Turkmenistan
http://en.wikipedia.org/wiki/Trans-Afghanistan_Pipeline
http://en.wikipedia.org/wiki/Iran%E2%80%93Pakistan%E2%80%93India_gas_pipeline
http://www.payvand.com/news/08/jun/IPI-map-US-gov.gif
http://www.payvand.com/news/08/jun/1158.html

http://ipsnews.net/news.asp?idnews=32152 – IPI in trouble
http://www.indiatvnews.com/news/India/Wikileaks_Aiyar_Was_Shifted_For_Being_Anti_US_-7119.html
http://www.indianexpress.com/news/wikileaks-row-oppn-corners-govt/763056/0
http://www.ndtv.com/article/india/wikileaks-cable-pro-us-cabinet-reshuffle-91832
http://www.telegraphindia.com/1110316/jsp/nation/story_13722263.jsp

http://www.iags.org/n0507071.htm
http://www.atimes.com/atimes/South_Asia/MB19Df01.html

http://www.onlinenews.com.pk/details.php?id=176177
http://www.indianexpress.com/news/iran-tells-india-cant-lower-gas-price/758134/1

http://www.ensec.org/index.php?option=com_content&view=article&id=282:politicking-over-central-asias-pipelines&catid=114:content0211&Itemid=374

http://english.farsnews.com/newstext.php?nn=8912220431
http://www.dailytimes.com.pk/default.asp?page=2011%5C03%5C12%5Cstory_12-3-2011_pg5_7 – 

http://www.energybulletin.net/node/12463

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

35
பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

கைப்பிள்ளையின் வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு இணையாக பதிவுலகில் அதிகம் பந்தாடப்படும் வார்த்தை பின்நவீனத்துவம். அனுஷ்காவின் இடுப்பழகை வருணிக்கும் மொக்கைகள் கூட வியப்பூட்டும் விதத்தில் அடுத்த வரியில் இந்த தத்துவத்தை பேசுவார்கள். இந்த சேதி அந்த தத்துவத்தை தமிழகத்தில் பரப்ப முயன்ற அந்த பிதாமகனுக்கு தெரியுமா தெரியவில்லை.

அந்த பிதாமகன் முன்னாள் பேராசிரியரும் அறிஞருமான அ.மார்க்ஸ். ஆனால் அவரும் கூட பத்தாண்டுகளாக முட்டி மோதி பார்த்துவிட்டு இந்த தத்துவத்தை நடைமுறைக்கு கொண்டு வருவது பெரும் சிக்கல் என உணர்ந்து தற்போது மிகப்பெரும் ஆச்சார ஒழுக்கவாதியாக மாறிவிட்டார். பேசினால் பல் உடையும், சிந்தித்தால் மூளை வெடிக்கும், விளக்கினால் போர் மூளும் என்ற நிலையில் உள்ள அந்த கடினமான தத்துவத்தை இன்று பதிவுலக பாமரரும் பேசும் நிலைக்கு காரணம் யார்? அது சாட்சாத் புரட்சித் தலைவியேதான்.

எனினும் பின்நவீனத்துவம் என்றால் என்ன? பதிவுலகின் சிரேஷ்ட அறிவு ஜீவிகளாகப் போற்றப்படும் ரோசாவசந்த், குருஜி சுந்தர், வளர்மதி, ஜமாலன், அ.மார்க்சின் சீடப்பிள்ளைகள், கல்வெட்டு, கவிராஜன், பத்ரி இவர்களிடம் கேட்டால் விளக்குவார்கள். என்னவென்று? பகுத்தறிவு, வன்முறை, அதிகாரம், கட்டுடைப்பு, விளிம்புநிலை, கொண்டாட்டம், ஆசிரியன் மரித்துவிட்டான் என்று நமக்கு புரியாத வார்த்தைகளில் முற்றுப்புள்ளியே இல்லாத வாக்கியங்களால் நான்ஸ்டாப்பாக பிளந்து கொட்டுவார்கள். அப்போதும் நமக்கு புரியுமா என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் மீது ஒரு பெரிய வியப்பு வரும். கற்றார்ந்த சான்றோர் என்று வணங்கத் தோன்றும்.

கோனார் நோட்ஸ் படித்து பாசாகியிருக்கும் நமக்கு அப்படி ஒரு நோட்ஸ் இருந்தால் புரிந்து கொள்ளலாம் என்று தோன்றுகிறதா? சரி. அதையும் பார்த்துவிடுவோம்.

இந்த உலகில் தூணிலும், துரும்பிலும், வீட்டிலும், வெளியிலும், கலையிலும், தத்துவத்திலும், அறிவிலும், ஆதிக்கத்திலும், வரலாற்றிலும், நிகழ்காலத்திலும், அரசிலும், அன்றாடங்காய்ச்சிகளிடத்திலும், கட்சிகளிலும், கம்யூனிசத்திலும் நீக்கமற நிறைந்திருக்கும் அதிகாரத்தை கேள்வி கேட்பதே பின்நவீனவத்தும். சுருக்கி சொன்னால் ஏட்டிக்கு போட்டி. அதாவது அதிகாரத்தில் இருக்கும் ஏட்டிக்கு அதிகாரத்தை எதிர்க்கும் போட்டி. பின்பு இந்த போட்டியே அதிகாரமான பிறகு புதிய போட்டி பிறக்கும். இப்படி தொடர்ந்து இந்த போட்டி போர் வளரும். போட்டி என்றதும் முனியாண்டி விலாஸ் போட்டி வறுவலை நினைத்துவிடாதீர்கள். அது குடல். இது கடல்.

இன்னும் புரியவில்லையா? நாம் சாப்பிடுவதற்கு வலது கையையும், கக்கா போய்விட்டு கழுவுவதற்கு இடது கையையும் பயன்படுத்துகிறோம். குழந்தைகளையும் அப்படி பழக்கப்படுத்துகிறோம். ஆனால் ஆய் போய்விட்டு எந்த கையை வைத்து கழுவுவது என்று ரூல்ஸ் பேசினால் அது அதிகாரம். அதை எதிர்ப்பது பின்நவீனவத்தும். வாயில் வரும் சளியை துப்பச் சொன்னால் அது அதிகாரம். அதை துப்பலாமா, விழுங்கலாமா என்பதை அந்த நபரே முடிவு செய்வார் என்று சொல்வது பின்நவீனவத்துவம்.

இதற்கு மேலும் புரியவில்லை என்றால் அதை புரட்சித் தலைவி நடத்தும் பொன்னான அரசியல் புரியவைக்கும்.

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

ஜனநாயகம்

பெரும்பான்மைக்கு சிறுபான்மை கட்டுப்படுதலே ஜனநாயகம். இது ஜனநாயகத்தில் அதிகாரம். அதிகாரமற்ற அந்த சிறுபான்மையே பெரும்பான்மையை கட்டுப்படுத்தினால் அது பின்நவீனவத்துவம். அதிலும் அந்த சிறுபான்மைக்கு பதில் ஒரு நபரே ஒரு கோடி மக்களை ஆண்டால்? அது சூப்பர் பின்நவீனவத்துவம். அல்லது புரட்சித் தலைவியிசம்.

தி.மு.கவில் கூட ஏதோ பேருக்கு உட்கட்சி ஜனநாயகம், தேர்தல் என்று வைத்து நடத்துகிறார்கள். ஆனால் அ.தி.மு.கவை பாருங்கள். அங்கு ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அம்மாதான் அங்கே ஜனநாயகம். அதுவும் நேரில் அடிக்கடி தரிசிக்க வாய்ப்பே இல்லாத ஜனநாயகம்.

மற்ற கட்சிகளெல்லாம் நேர்காணல் என்று பேருக்காவது சடங்கு நடத்தி வேட்பாளர்களை தெரிவு செய்கின்றன. அ.தி.மு.கவில் நேர்காணலுக்கு முன்னரே ஜோசியர்கள் மூலம் தெரிவு நடத்தப்படுகிறது. அதிலும் தற்போதைய செய்திப்படி அம்மா தெரிவு செய்திருந்த வேட்பாளர் பட்டியலில் பாதி பேர்களை மாற்றிவிட்டு சசிகலா கும்பலது பட்டியல்தான் வெளியிடப்பட்டிருக்கிறதாம். இத்தகைய திருட்டு வேலைகளை பின்நவீனவத்துவம் கொண்டாடும்.

ஜனநாயகம், கட்சி, தொண்டர்கள், தலைவர், முடிவுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் அதன் மாண்பு மண்ணாங்கட்டிகளை தூக்கி எறிந்து விட்டு புதிய விழுமியங்களை புரட்சித் தலைவி உருவாக்குகிறார் அல்லவா, அதுதான் பின்நவீனவத்துவம்.

_______________________________________________________

ஆணாதிக்கம்

ரஜினி, விஜயகாந்த் படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் உரையாடல்கள் ஏராளம். படையப்பாவில் பெண்களை எள்ளி நகையாடும் ரஜினி இன்று புரட்சித் தலைவியினை எதிர்த்து ஒரு வார்த்தை பேசமுடியாது என்ற நிலைமை யாரால் உருவாக்கப்பட்டது? “நீதான் கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா?” என்று எகத்தாளம் பேசிய விஜயகாந்தை போயஸ் தோட்டத்தில் கூழைக்கும்பிடு போடுமளவு அடக்கி ஒடுக்கியது யார்?

தமிழ் சினிமாவில் பேரன் பேத்தி எடுக்கும் வயது வந்தாலும் நடிகர்கள் மட்டும் கதாநாயகர்களாக நீடிப்பார்கள். நடிகைகளுக்கு அந்த வாய்ப்பில்லை. முப்பதை தாண்டினால் அண்ணி வேடம். நாற்பது என்றால் அம்மா. ஐம்து என்றால் பாட்டி. ஆனால் விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக், விஜய் என்று வயதாகிவரும் நடிகர்களை எல்லாம் இவர்களை விட வயதான புரட்சித்தலைவி ஆட்டிப்படைப்பது குறித்து பெண்ணுலகமே போற்றிப் பாடவேண்டிய விசயமில்லையா? இதெல்லாம் கோலிவுட்,பாலிவுட், ஹாலிவுட் என்று எந்த திரையுலகிலும் நடக்காத விசயமாயிற்றே?

“போற்றிப்பாடடி பெண்ணே,தேவர் காலடி மண்ணே” என்று தேவர் சாதி பெருமை பேசி, முரட்டு மீசையை நீவிவிடும் சிங்கங்கள் எல்லாம் புரட்சித் தலைவியின் காலில் விழுந்து கிடக்கிறதே, இதையெல்லாம் அம்பேத்கார், பெரியார் கூட சாதிக்க முடியாத விசயமாயிற்றே?

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

கம்யூனிசம்

இருபதாம் நூற்றாண்டில் மனிதகுல வன்முறைக்கு வித்திட்ட கம்யூனிசத்தை கட்டோடு வெறுப்பது பின்நவீனவத்துவத்தின் அடிப்படைகளில் ஒன்று. அத்தகைய கம்யூனிசத்தை தமிழகத்தில் கேலிப்பொருளாக்கியது புரட்சித் தலைவி அன்றி வேறு யார்?

டெல்லியிலிருந்து விமானத்தின் மூலம் வரும் பிரகாஷ் காரத், அடையாறில் விலை உயர்ந்த பொக்கே வாங்கிய தோழர்கள் எல்லாம் அம்மாவுக்காக சுத்தமான உடையணிந்து போயஸ்தோட்டத்தில் பார்த்து ஒப்பந்தம் போடுகிறார்கள். அத்தோடு விசயம் முடிந்துவிடவில்லை. தி.மு.க, காங்கிரசு கூட்டணி முறிவது போலானால் எங்கே அம்மா விரட்டிவிடுவாரோ என்று பதட்டத்தில் இருக்கிறார்கள்.

பத்து சீட்டு, பன்னிரெண்டு சீட்டு வாங்குவதற்குள் படாதபாடு படுகிறார்கள். வாங்கிய பிறகு கேட்ட தொகுதிகள் கிடைக்க தவம் இருக்கிறார்கள். அதையும் தாண்டி அம்மா அந்த சீட்டுகளில் அ.தி.மு.க வேட்பாளர்களை நிறுத்திய பிறகு செய்வதறியாது திகைக்கிறார்கள். இதற்காக தொப்புளில் பம்பரம் விட்ட தலைவனிடமெல்லாம் ஆலோசனை கேட்கிறார்கள். அந்த தலைவனை வைத்தாவது மூன்றாவது அணி என்று ஒப்பேத்த முடியுமா என்று கசப்புடன் பேசுகிறார்கள். இப்படி கம்யூனிஸ்ட்டுகளை காமடி பீசாக்கி சாதித்தது யார்?

நாங்கள் கூட கம்யூனிசத்தை பற்றி ஏதாவது எழுதினால் உடனே ரெண்டு பேர் வந்து “நீங்க மே.வங்கத்தில் என்ன கிழித்தீர்கள்?” என்று கேட்பார்கள். நாங்களும் பலமுறை அவர்கள் போலி கம்யூனிஸ்டுகள், நாங்கள் பேசுவது உண்மையான கம்யூனிசத்தை என்று விளக்கினாலும் இந்த விளக்கும் கொடுமையிலிருந்து எங்களுக்கு விடுதலையே கிடைத்ததில்லை. ஆனால் இன்று அம்மாவின் தயவால் அந்த வேலை மிச்சமாயிருக்கிறது என்பதை நன்றியுடன் நினைத்து பார்க்கிறோம். எங்களையே புரட்சித்தலைவிக்கு நன்றி செலுத்தும் நிலைக்கு தள்ளியது என்றால் அது வரலாற்றில் எத்தகைய அபூர்வமான நிகழ்வு? அதனால் அம்மாதான் ஒரிஜினல் பின்நவீனத்துவம்.

_______________________________________________________

ஈழம் – வைகோ

தமிழகத்தில் ஈழத்திற்கு ஆதரவான சக்திகளை ஒடுக்கி வதைத்த பெருமை அம்மாவுக்குத்தான். என்றாலும் அவரே இலை மலர்ந்தால் ஈழம் உதிக்கும் என்று பேசி, அவரால் அடக்குமுறைக்கு ஆளானவர்களையே ஈழத்தாய் என்று பேசவைத்த சாதனைக்கு வரலாற்றில் ஈடு இணை உண்டா? தொட்டதற்கெல்லாம் பார்ப்பன சதி என்று பேசும் தி.க வீரமணியே அம்மாதான் சமூகநீதி காத்த வீராங்கனை என்று பட்டம் கொடுத்து சில வருடங்கள் போயஸ்தோட்டத்து பூசாரியாக இருக்க வைத்தது லேசானதா என்ன?

அம்மாவால் 19 மாதங்கள் சிறை வைக்கப்பட்ட வைகோ பின்பு அவராகவே விரும்பி ஆயுள் முழுவதற்கும் அம்மாவின் பிடியில் இருக்கும் நிலையை யாரால் உருவாக்க முடியும்? கருணாநிதியை எதிர்த்து வீரம் பேசும் இந்த கலிங்கத்துப்பட்டி சிங்கம் கர்ஜிக்க முடியாமல் அம்மாவின் ராஜதந்திரத்தில் முடங்கிப் போனது சாதாரணமானதா என்ன?

ஒருகாலத்தில் கருணாநிதியே கண்டு அஞ்சிய வைகோவின் வளர்ச்சியை நிறுத்தி அவரது கட்சியை கால்பந்து போல் விளையாடி தமிழக அரசியலிலிருந்தே தூக்கி எறிந்ததை ஒரு பெண்ணால் எப்படி சாதிக்க முடிந்திருக்கிறது? விக் போட்ட கார்த்திக் போன்ற மலிவான காமடிகளெல்லாம்,”மிஷ்ஷ்ஷ்டர் வைஐஐஐகோ, என்னோட வந்துடுங்க, நாம கூஊஊட்டணி வச்சுக்கலாம்” என்று அழைக்குமளவு கோபாலசாமியின் நிலை சிரிப்பாய் சிரிப்பதற்கு அடி எடுத்துக் கொடுத்தது யார்?

இந்திய அரசும், ராஜபக்ஷேவும் தமிழ்நாட்டிலுள்ள ஈழ ஆதரவு சக்திகளை முடக்குவதற்கு ததிங்கிணத்தோம் போடும் நிலையில் 9 மாதம் ஊட்டியில் இருந்து கொண்டு அறிக்கை மூலமே அரசியல் செய்யும் தலைவி அதை செய்து முடித்திருக்கிறார் என்றால் இதையெல்லாம் ஆய்வு செய்து கண்டுபிடிப்பதற்கு அந்த ஆக்ஸ்போர்டு அறிவாளிகளால் கூட முடியாது.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஈழத்தின் வில்லி என்று தூற்றப்பட்ட தன்னையே ஈழத்தாயாக காட்ட வைத்தார் இல்லையா, இதுதான் பின்நவீனவத்துவ சாதனை.

_________________________________________________________

கேப்டன் விஜயகாந்த், வாட்ச்மேன் ஆன சாதனை!

தி.மு.க, அ.தி.மு.க எனும் இரண்டு கட்சிகளையே சமாளிக்கத் திணறும் தமிழகத்தில் மூன்றாவது க வாக வந்த தே.மு.தி.க போட்ட அலப்பறைகள்தான் என்ன? “ஆண்டவனோடும், மக்களோடும்தான் கூட்டணி” என்று முழங்கிய கேப்டனை குட்டி போட்டபூனை போல போயஸ் தோட்டத்தை சுற்றிவரச் செய்த பெருமை யாருடையது?

தமிழக மக்கள் வெள்ளேந்தியானவர்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புபவர்கள். அப்படித்தான் விஜயகாந்தின் வீர வசனங்களை நம்பித் தொலைத்தார்கள். புரட்சித் தலைவி மட்டும் இல்லை என்றால் இந்த நடிகரை உண்மையாக தெரிந்து கொள்வதற்கு மக்களுக்கு பலகாலம் பிடித்திருக்கும். ஆனால் அதற்கு தேவையே இல்லாமல் 41 சீட்டை கொடுத்து கட்டிப்போட்டு விட்டார் இல்லையா, இனி ஜன்மத்துக்கும் விஜயகாந்தின் வெத்துவேட்டு உதார்கள் எடுபடாது.

பின்நவீனத்துவ மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

மரபுகள், மாண்புகளை உடைத்தெறிந்த சாதனை!

தேர்தல், கூட்டணி கட்சிகள், தோழமை, அனைத்தின் மீது இருந்த பிரமைகளை உடைத்தெறிந்து எல்லாவற்றையும் கேலிப்பொருளாக்கிய சாதனை அத்தனை சுலபமல்ல. எல்லா கூட்டணி தலைவர்களும் தொகுதி எண்ணிக்கை உடன்பாடு கண்டுவிட்டு தொகுதிகளை தெரிவு செய்வதற்கு பேசிக்கொண்டிருக்கும் போது இதுதாண்டா தொகுதி என்று அடித்தாரே அத்தோடு அவர்களது சுயமரியாதை முடிந்தது. கூட்டணி தருமம் என்று உருவாக்கப்பட்டிருக்கும் மதிப்பீடுகளை உடைத்துவிட்டு தான் நினைப்பதே தருமம் என்று அறவியலுக்கு புதிய பொழிப்புரை எழுதியிருப்பதுதாதன் அசல் பின்நவீனவத்துவம்.

தலைமை என்பது மக்களால், அணிகளால் தேர்ந்து எடுக்கப்படுவது என்ற வழக்கத்தை மாற்றியது அம்மாதான். சினிமாவில் நடித்து, அந்த நாயகனால் கொண்டுவரப்பட்டு தலைவியாகி, சசிகலா எனும் பெண்ணின் நட்பு மூலம் ஒரு கட்சியை நடத்தி அரசியல் கட்சி என்பதே ஒரு கிச்சன் கேபினட்டின் வேலைதான் என்று காட்டியிருக்கிறாரே, இதற்கு இணையாக உலக வரலாற்றில் எதையும் சொல்ல முடியாது.

__________________________________________________________

ஆகவே இந்த ஜனநாயக அமைப்பு எப்படி செயல்படுகிறது, இது ஏன் போலி ஜனநாயகம் என்ற அரிய விசயத்தையெல்லாம் எளிமையாக கற்றுக்கொடுக்கும் புரட்சித்தலைவிதான் உண்மையாக பின்நவீனத்துவவாதி. ஆகவே அதற்காக நாம் அவரை வாழ்த்த வேண்டும்! மஹா அவ்தார் புரட்சித் தலைவிஜி வாழ்க!

_____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

கூட்டணி காமெடிகளின் சிச்சுவேசன் பாடல்கள் !

அனாதையான வைகோ, அய்யோ பாவம் சி.பி.ஐ, சி.பி.எம் தோழர்கள், சொங்கியான கேப்டன், அப்செட்டான கருணாநிதி இவர்களுக்கான சிச்சுவேசன் பாடல்களை ரீமிக்ஸ் செய்து சுடச்சுட தருகிறோம். கேளுங்கள், சுரணை கொள்ளுங்கள்!

1.’தோழர்’கள் வாங்கிய ‘தங்கத் தாரகைப்’ பதக்கம்

தானாக தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை ஜெயலலிதா அறிவிக்க,  அதிர்ச்சி கலந்த சோகத்தில் சி.பி.ஐ தோழர். தா.பாண்டியனும், சி.பி.எம் தோழர். ஜி.ராமகிருஷ்ணனும் பாடியது…

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!
வேதனைதான் வாழ்க்கையென்றால் தாங்காது… மாமி!
சொந்தம் ஒரு கைவிலங்கு நீ போட்டது – அதில்
கூட்டணி ஒரு கால்விலங்கு நான் போட்டது

(சோதனை மேல்..)

அரிவாளும், சுத்தியலும்.. ஆறுதல் சொல்ல
நான் அதைக்கூட அடகு வைத்தேன் போயசுக்குள்ள…
பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
எனக்கு அதிகாரமில்லையம்மா… அறிக்கையில் சொல்ல
ஒரு நாளும் இது போல் நான் அழுதவனல்ல – இந்த
தேர்தலையே “தாய்’ கெடுத்தாள் யாரிடம் சொல்ல

(சோதனை மேல்..)

விஜயகாந்த்: மாமா! காய்ஞ்சி போன கட்சியெல்லாம்
வத்தாத போயசைப் பார்த்து ஆறுதல் அடையும்…
அந்த போயசே நமக்கு காய்ஞ்சி போனா?
துன்பப்படறவங்க எல்லாம் கவலையை
தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க – அந்த தெய்வமே
நம்மள தெருவுல நிறுத்துனா…

தானாக அறிக்கைவிட்டாள்… சதையாடுது – அது
இடது என்றும் வலது என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் புரட்சி என்பது… அதில்
புரட்சித்தலைவி புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளமிது உன் அறிவிப்பு தாங்குமா
இடி போல தொகுதி வந்தால் மடி தாங்குமா?

(சோதனை மேல்…)

____________________________________________________________________

2. வைகோ பாடுகிறார்…..

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD0747%27&lang=en

நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே..
பம்பரத்தைப் பார்த்து இலை சொன்னது என்னைத் தொடாதே..
தாயகத்தைப் பார்த்து போயசு சொன்னது என்னைத் தொடாதே..
அண்ணன் வை.கோ.வைப் பார்த்து அம்மா சொன்னது என்னைத் தொடாதே..

(நிலவைப் பார்த்து..)

புதியதல்லவே தீண்டாமை என்பது
புதுமையல்லவே அதை நீயும் சொல்வது
சொன்ன வார்த்தையும் இரவல் தானது – அது
கருணாநிதியின் வாய் சொன்னது

(நிலவைப் பார்த்து…)

முப்பது சீட்டை தராத போதிலே – ஒரு
மூணு சீட்டுக்கும் தகுதி இல்லையா
புரட்சித் தலைவரை நீ தொடாவிடில்
நீயும் இல்லையே நானும் இல்லையே

(நிலவைப் பார்த்து…)

தங்கம் எடுத்த கை தங்கம் பார்த்ததா
கூட்டணி வைத்த கை தொகுதி பார்த்ததா
ஆலயம் செய்தோம் அங்கே அனுமதியில்லை – அண்ணன்
வைகோ இன்றி உனக்கு அழகேயில்லை

(நிலவைப் பார்த்து…)

__________________________________________________________

3. அம்முவுடன் கூட்டணி செட் ஆகுமா, ஆகாதா ? கன்பீசனில் கறுப்பு எம்.ஜி.ஆர்

அம்மாடி அம்முக்கு தங்க மனசு கொட்டுது இந்த முரசு
ஸ்காட்சுக்கு பண்ணெண்டு வயசு அவ சொல்லுக்கு நாலு கிளாசு

ஓஓஓஓஓஓ

எண்ணையில் எரியும் விளக்கு அவள் என்னையே அழைத்தது வியப்பு
என்னவோ நடக்குது நடப்பு – அதில் ஏதோ சுகமும் இருக்கு

யாருக்கு அம்மு கதை தெரியும் எம்.ஜி.யாருக்கு மட்டும் இது புரியும்.
கூட்டணி குழப்பங்கள் இருக்கும் பண்ருட்டியார் கன்னம் சிவக்கும்

(அம்மாடி..)

அடித்தால் அழுவேன் ஒருநாள்
அம்மு அணைத்தால் சிரிப்பேன் மறுநாள்
எடுப்பார் கைகளில் பிள்ளை ஒரு பகையோ உறவோ இல்லை

அம்முக்கு தமிழ்நாடு சொந்தம்
மிச்சம் மீதி கேப்டனுக்கு சொந்தம்
போயசுக்கு ரெட்ட இலை சொந்தம் – அவ
போட்ட எச்சிலைக்கு இந்த உள்ளம் சொந்தம்

(அம்மாடி…)

______________________________________________________________

4. காங்கிரசின் அடிமை கருணாநிதியின் அங்கலாய்ப்பு…

http://www.raaga.com/player4/?id=27042&mode=100&rand=0.4054366296121451

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
ஆசை கொள்வதில் அர்த்தம் என்னடா
காங்கிரஸ்காரன் குழப்பத்திலே

(அண்ணன் என்னடா..)

தங்கபாலுவே ஆனபோதிலும் வாயும் வயிறும் வேறடா..
சந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்
கோஷ்டி சண்டைகள் நூறடா..

(அண்ணன் என்னடா..)

தேர்தல் கமிசனை கொண்டு வந்து
கட்டி வைத்தவன் யாரடா
ஸ்பெக்ட்ரம் கட்டுகள் வைத்திருந்துமே
அவன் போடும் கண்டிஷன் பாரடா
அடித்த கொள்ளையில் கிடைத்த காசுகள்
அமுங்கிக் கிடப்பது வீணடா
பணத்தின் மீதுதான் பாசம் என்றபின்
பயந்து பயந்து ஏனடா
பதைக்கும் நெஞ்சினை அணைக்க இருக்கிறார்
போய் அழகிரியைப் பாரடா

(அண்ணன் என்னடா..)

வாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்
வந்தான் காங்கிரசு நாயடா – ராசாவை
உள்ளே வைத்தபின் யோக்கியன் போலே
நம்மை மிரட்டிப் பாக்கிறான் பாரடா…
நம்மை மிரட்டிப் பாக்கிறான் பாரடா…

(அண்ணன் என்னடா..)

________________________________________________________

துரை. சண்முகம்

__________________________________________________

ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி !

68
ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி மாமா!
துக்ளக் சோ - ரஜினி
ஃபியூஸ் போன ரஜினிக்கு மவுசு காட்டும் ஜூ.வி மாமா!
துக்ளக் சோ – ரஜினி

“கட்டம் கட்டினால் காட்டிக் கொடுப்பார் |விஜயகாந்த் தூதுவர்களை சந்தித்த அழகிரி – ஜெ ஷாக் | கங்கணம் கட்டும் காங்கிரஸ் | சோனியாவின் வருத்தம்-சமாளித்த கலைஞர்-டெல்லி டென்ஷன் | கூட்டணியா-சாதனையா-தி.மு.க எடுக்கும் ரிஸ்க் | கதறடிக்கும் காங்கிரசின் பொலிட்டகல் பிளாக்மெயில் | கூட்டணிக்கு 5 நிபந்த்தனை-தி.மு.க-காங்கிரஸ் உறவு தொடருமா-பரபர திருப்பம் | தோற்றுப்போன சி.டி சதி | நிதானித்த விஜயகாந்த்-படபடத்த ஜெ-விறுவிறு கிளைமாக்ஸ் காட்சிகள் | ஒரு இலை விழுந்தால் இரு இலை துளிர்க்கும்-காங்கிரசின் சூசக தகவல் | துடுக்கு முருகன்-துடிக்கும் கூட்டணி |உடைகிறது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி-கோபாலபுரம் டூ ஜன்பத் காட்சிகள் | கடைசி அஸ்திரம் கனிமொழி-குலாம் நபி போட்ட குண்டு | கருணாநிதி வைத்த மார்ச் 5 செக் | பணாலான காங்கிரஸ் ப்ளான்-ஆப்பு வைத்த கலைஞர் | ஜெயிக்க நினைக்கிறாரா-சினிமா எடுக்கப் போகிறாரா | கூட்டணியை கரை சேர்த்த சக்திகள் | சீறிய சோனியா-எகிறிய கலைஞர் | அடுத்த பஞ்சாயத்து-தி.மு.கவில் களைகட்டும் பங்கீடு | உறவு பிரிவு-முக்கிய கட்சிகளின் கலக்கல் திருப்பங்கள்……..”

இவையெல்லாம் ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிகைகளில் சமீபமாக வெளிவந்த அட்டைப்படக் கட்டுரை தலைப்புகள்!

அரசியல் என்றாலே சாக்கடை என்று சலித்துக் கொண்டு கூண்டுக்கிளி வாழ்க்கையில் காலத்தை ஓட்டும் நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து வீசப்பட்ட தலைப்புகள்தான் இவை. இந்த தலைப்புகளில் நெளியும் சாரம் என்ன? இவை வாசிப்பவர்களுக்கு தரும் சேதி என்ன?

இவையெல்லாம் ஏதோ தேர்தலுக்காக மட்டும் வைக்கப்பட்ட தலைப்புக்கள் அல்ல. தேர்தல் இல்லாத காலங்களிலும் அரசியல் கட்டுரைகளின் யோக்கியதை இதுதான். அதாவது அரசியல் நிகழ்வுகளைக் கூட ஏதோ திடுக்கிடும் மர்மமான சம்பவங்களைக் கொண்ட விறுவிறுப்பான மசாலா திரைப்படம் போல இவர்கள் பார்க்கிறார்கள், எழுதுகிறார்கள், அப்படி ஒரு இரசனையையும் உருவாக்குகிறார்கள். கூட்டணி கூத்துக்கள், தலைவர்களின் வெற்று சவுடால்கள், கொள்கையே இல்லாத வார்த்தை ஜாலங்கள், தன்மானமே இல்லாத உரிமை போர்கள், சுயமரியாதை அற்ற பட்டங்கள்…இவைதான் அரசியல் என்று நமக்கு ஊட்டப்படுகிறது.

தமிழகத்தின் அரசியல் தரம் மிகவும் தாழ்ந்து கிடப்பதாக புலம்பும் நடுத்தவர்க்கம் படிக்கும், இத்தகைய தலைப்புகளின் தரமே நமது அரசியலின் யோக்கியதைக்கு ஒரு துளிபதம். இதில் இவர்கள் சாதாரண மக்கள் அதாவது இந்த புலனாய்வு புலிகளை படிக்காத பாமரர்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்களிப்பதாக வேறு சலித்துக் கொள்வார்கள். சரி, இவர்கள் காசு வாங்கிக் கொண்டு படித்துக் களிக்கும் பத்திரிகைகளின் தரத்தை விட அது ஒன்றும் கீழானதில்லையே? துட்டுக்கு ஓட்டு என்பதை விட துட்டுக்கு மூளையை அடகு வைப்பது கேடானதில்லையா?

ரசியல் என்றால் என்ன?

எல்லா தனிமனிதர்களும் சமூகத்தோடு இணைந்து வாழ்வதன் மூலமே உயிர்வாழ முடியும். அந்த ஒப்பந்தத்தை அதிகாரத்தின் மூலம் ஒழுங்குபடுத்துவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பின் இயலே அரசியல். அந்த அதிகாரம் யாருக்காக, யாரால், யார் மீது ஏவப்படுகிறது என்பதிலிருந்து அந்த அரசியலின் மையமான அரசாங்கத்தின் வர்க்க நோக்கு தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் நமது நாட்டில் இருக்கும் அரசு என்பது முதலாளிகள், நிலப்பிரபுக்கள், ஏகாதிபத்தியங்கள் நலனுக்காக அதிகாரத்தை நம் மீது ஏவி கட்டுப்படுத்தி வருகிறது. இது குறித்து பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

அரசியல் என்பது நம் அன்றாட வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் ஊடுறுவியிருக்கிறது. வீட்டில் சமையல் அறையிலிருந்து, தெருவிலிருக்கும் ஏ.டிஎம் வரைக்கும் அதுவே அனைத்தையும் தீர்மானிக்கிறது. இத்தனை முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும் அந்த அரசாங்கத்திற்கான தேர்தலை இப்போது அறிவித்திருக்கிறார்கள். இந்த அரசு எப்படி செயல்படுகிறது, இதன் அதிகாரம் என்ன, அரசை வழிநடத்துவது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளா, இல்லை அதிகார வர்க்கமா என்பதெல்லாம் உண்மையில் பெரும்பாலான அறிவாளிகளுக்கே தெரியாத ஒன்று.

போகட்டும். இத்தகைய முக்கியத்துவத்தை கொண்டிருக்கும் ஒன்றின் மீதான தேர்தல் என்பது எப்படி புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது?

இந்த அரசு அமைப்பை நாங்கள் போலி ஜனநாயக அமைப்பு என்கிறோம். மற்றவர்கள் இதுதான் சாத்தியமான ஜனநாயகம் என்கிறார்கள். சரி, அவர்கள் வாதப்படி பார்த்தாலே கூட தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து பொதுப்புத்தியில் என்ன விதமான செய்திகள், ஆய்வுகள், விவாதங்கள் நடத்தப்பட்டிருக்க வேண்டும்?

பொருளாதாரம், விலைவாசி உயர்வு, கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, தொழில், மாணவர், இளைஞர், பெண்கள், என்று இந்த பிரச்சினைகளெல்லாம் தற்போது எப்படி இருக்கிறது என்றோ, இது குறித்து ஆட்சியிலிருக்கும் கட்சி என்ன செய்தது, அதை எதிர்க்கும் கட்சிகள் அதற்கு என்ன மாற்று திட்டம் வைத்திருக்கிறது என்றல்லவா இவை பொதுவெளியில் பேசப்பட்டிருக்க வேண்டும்?

ஆனால் பேசப்படுவது என்ன? பொதுக்கூட்ட மேடைகளில், பத்திரிகைகளில், பதிவுலகில் என்ன அலசப்படுகிறது? மேலே கண்ட அந்த திடுக்கிடும் தலைப்புகள்தான் அரசியல் என்றால் நாம் வாழ்வது நிச்சயமாக போலி ஜனநாயக அமைப்பில்தான். அதாவது நமது வாழ்வை தீர்மானிக்கும் அரசியல் குறித்து ஒரு வடிவேலு காமடியை இரசிக்கும் மனநிலையில்தான் நாம் இருக்கிறோம் என்று பொருள். இதுதான் மக்களின் தரம் என்றால் அங்கே நிச்சயம் ஜெயவும், வைகோவும், கருணாநிதியும், கார்த்திக்கும், விஜயகாந்தும்தான் இருப்பார்கள். அவர்களுக்கிடையேயான சுயநல முரண்பாடுகள் மட்டும் அரசியலாக ஆர்வத்துடன் படிக்கப்படும். இறுதியில் மக்கள் சுயவிருப்பத்தோடு இங்கே அடிமைகளாக மட்டுமே இருக்க முடியும்.

தனால்தான் ஜூனியர் விகடன் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ரஜினியை அட்டைப் படத்தில் போட்டுவிட்டு, “ரஜினி – சோ மீட்டிங் ரகசியம், யாருக்கு வாய்ஸ்?” என்று ஒரு தலைப்பை போட்டு வெட்கமே இல்லாமல் விற்கிறது. நாமும் வெட்கம் கெட்டு அதை காசு கொடுத்து படிக்கிறோம்.

அரசியலை ஒரு சினிமா கிசுகிசு போல பார்ப்பதற்கும், இரசிப்பதற்கும் கற்று கொடுத்து அதை ஒரு மலிவான, வெற்றிகரமான பாணியாக மாற்றிய பெருமை ஜூ.விக்கு சேரும். அந்த ராஜபாட்டையில்தான் நக்கீரன் முதல் ஏனைய புலனாய்வு புலிகள் வர்த்தக வெறியுடன் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஜூவியின் கழுகுதான் இந்த கிசுகிசு அரசியலின் சீனியர். இன்றும் அந்த கழுகு வாந்தியெடுப்பதைத்தான் படித்த தமிழர்கள் விரும்பிப் படிக்கிறார்கள். இந்த வார ஜூவியை வாங்கி பார்த்தால் அந்த ரஜினி வாய்ஸ் குறித்த செய்தி, மொத்தம் ஒரு பத்துவரிகளுக்குள் இருக்கும்.

அ.தி.மு.க கூட்டணியில் ஏகப்பட்ட சினிமா நட்சத்திரங்கள் இருப்பதால் ரஜினியை தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாக நாலு வார்த்தை பேசவைத்து அதை அவர்களது டி.வியில் போடுவதற்கு கருணாநிதி மூலம் முயன்றார்களாம். இது போயஸ் தோட்டத்திற்கு லீக்காகி அம்மா உடனே சோ ராமசாமியைக் கூப்பிட்டு, “ரஜினி பெண்ணு திருமணத்துக்கு போகலேன்னு எம்மேல வருத்தமா இருப்பாரு, அதை வைச்சு கருணாநிதி நமக்கு எதிரா அவரை யூஸ் பண்ண பாக்குறாரு, நீங்க உடனே போய் சந்திச்சு நமக்கு சாதகமா மாத்திடுங்க”ன்னு சொன்னராம். உடனே சோவும் ரஜினியை சந்திச்சாராம். ரஜினியும் இரு அணிக்கும் வாய்ஸ் கொடுக்க முடியாது, இரண்டு பேர் மேலயும் வருத்தங்கள் இருப்பதாக சொன்னாராம். இதுதான் மேட்டர். இது ஜூவியில் மட்டுமல்ல தினமலர் உள்ளிட்ட அ.தி.மு.க அணி ஆதரவு நாளிதழ்கள் எல்லாவற்றிலும் சுவரொட்டி செய்தியாகவே வெளிந்தது.

இந்த சந்திப்பெல்லாம் வரலாற்று புகழ் மிக்க சந்திப்பு என்றால் வரலாறு செய்த தவறுதான் என்ன?

அரசியலை பெருந்திரளான மக்கள் திரளின் நடவடிக்கையாக காட்டாமல் ஒரு சில தலைவர்களது விருப்பு வெறுப்போடு மட்டும் காட்டுவது எதைக் குறிக்கிறது? நாமெல்லாம் படித்தவர்களோ இல்லை படிக்காதவர்களோ யாராக இருந்தாலும் வெறும் அடிமைகளே என்பதுதான் இதன் உட்கிடை. இந்த செய்தி உண்மையாகவே இருக்கட்டும். இதில் கோடிக்கணக்கான தமிழ் மக்கள் கலந்து கொள்ளப்போகும் தேர்தலுக்கு என்ன முக்கியத்துவம் இருக்க முடியும்?

ரஜினி நினைத்தால் யாருக்காவது வாய்ஸ் கொடுத்து ஜெயிக்க வைக்க முடியும் என்பது ஒரு வாதத்துக்காக உண்மையாக இருக்கட்டும். எனில் அது குறித்து மக்களுக்கு இடித்துரைக்க வேண்டுமா, இல்லை அதை தேவவாக்காக பரப்ப வேண்டுமா? ரஜினி வாய்ஸ் கொடுப்பதை அவரது சொந்த விருப்பங்களே தெரிவு செய்யும் எனில் தமிழக மக்களெல்லாம் இளித்த வாயர்களா? நமது தலையெழுத்தை இந்த கட்டவுட் நாயகன்தான் தீர்மானிப்பான் என்றால் நாமெல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள் என்று உயிர்வாழ்வது தகுமா?

தமிழக மக்களுக்கு இருக்கும் சினிமா மோகத்தை வைத்து நட்சத்திரங்களை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஊடகங்களும் அதை ஊதி வளர்க்கின்றன. உண்மையில் இத்தகைய சினிமா நட்சத்திரங்களை மக்கள் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்களா என்ன? அப்படி அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இருந்தால் அது குறித்த விமரிசன விழிப்புணர்வையல்லவா ஊடகங்கள் எனப்படும் ஜனநாயகத் தூண்கள் செய்திருக்க வேண்டும்? மாறாக இவர்களே அந்த மோடிமஸ்தான் வேலையை காசுக்காகவும், மலிவான சர்குலேஷன் அதிகரிப்புக்காகவும் செய்கிறார்கள் என்றால் இவர்களை விபச்சாரத் மாமாக்கள் என்றே அழைக்க முடியும். நமது தேர்தல் குறித்த செய்திகளை இத்தகைய மாமாக்கள்தான் படிக்கத் தருகிறார்கள், நாமும் அதை விரும்பி படிக்கிறோம் என்றால் தமிழகத்தை ஒரு விபச்சார தேசம் என்றே அழைக்கலாமே?

1996-ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதொல்வியுற்று, தி.மு.க பெரு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ரஜினி, ” அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டா தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று தி.மு.கவிற்கு ஆதரவாக இரண்டு வார்த்தை பேசினார். உடனே தமிழக மக்கள் ஜெயாவை தூக்கி கிடாசிவிட்டு கருணாநிதியை ஆட்சியில் அமர்த்தினார்கள் என்று பல அறிவாளிகளும், ஊடகங்களும் ஒரு பொய்யை வரலாற்றில் பதிந்திருப்பதோடு அவ்வப்போது அதை நினைவுபடுத்தவும் செய்கிறார்கள்.

நடந்த உண்மை என்ன? அந்த தேர்தலுக்கு முன் தமிழகத்தை ஐந்தாண்டுகள் ஆட்சி செய்த ஜெயா-சசி கும்பல் பாசிச வெறியாட்டம் போட்டதோடு, முழு தமிழகத்தையும் மொட்டை போட்டது. ஊழல், சொத்து சேர்ப்பு, அதிகார ஆணவம், ஈழம் மற்றும் தமிழின ஆதரவாளர்கள் மீது அடக்குமுறை என்று சர்வாதிகாரத்தில் பீடை நடை போட்டது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் முழு தமிழ்நாட்டு மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு யாரும் எடுத்துக் கொடுக்க தேவையில்லாமல் ஜெயா கும்பல் மீது கடும் வெறுப்பு இருந்தது.

அந்த தேர்தலுக்காக கிராமங்களுக்கு சென்ற அ.தி.மு.க அமைச்சர்கள் பலர் செருப்படி பட்டனர். இந்த ஜெயா எதிர்ப்பு அலை காரணமாகவே தி.மு.க வெற்றி பெற்றது. ஒரு வேளை இந்த சூப்பர் ஸ்டார் அன்று அ.தி.மு.கவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? பிஞ்ச வெளக்குமாறால் அபிஷேகம்தான் கிடைத்திருக்கும். அன்று ஜெயாவை எதிர்த்து விரட்டுவது மக்களின் சொந்தப் பிரச்சினையாக இருக்கும் போது பவர் ஷூ போட்டு பால் கறப்பதாக நடிக்கும் இந்த கோமாளியா அதை தீர்மானிக்க முடியும்?

ஜெயா முதலமைச்சராக காரில் வரும்போது இந்த ரஜினி ஏதோ ஒரு சாலையில் காத்திருந்திருக்கிறார். இரண்டாவதாக பம்பொய் படமெடுத்த பிறகு மணிரத்தினத்தின் வீட்டுக் காம்பவுண்டில் யாரோ சிலர் வெடிக்காத வெங்காய வெடிகளை வீசினார்கள். இது இரண்டும் சூப்பர் ஸ்டாரின் மனதை பாதித்திதாம். பாட்ஷா திரைப்பட வெற்றி விழாவில் அதை அவர் ஏதோ முடிந்த வரை இதை புலம்பியவாறு வெளியிட்டார். இதுதான் இந்த வாய்ஸ் வாந்தியெடுக்கப்பட்ட வரலாறு.

அன்று தா.மா.காவையும் தி.மு.கவையும் இணைப்பதற்கு இந்த சோ ராமசாமி பாடுபட்டாராம். யார் இந்த சோ? தமிழகத்தின் நீரா ராடியா. ராடியாவுக்கு நீண்டமுடி இருக்கும். சோவுக்கு மொட்டை தலை. ராடியா முதலாளிகளுக்கான புரோக்கர் என்றால் சோ பார்ப்பனியத்துக்கு குறிப்பாக பா.ஜ.கவுக்கும், அ.தி.மு.கவிற்கும் புரோக்கர். தமிழகத்தின் பல தேர்தல் தலைவிதிகளை அதாவது அதற்கு காரணமான கூட்டணிகளை இந்த மொட்டைபாஸ்தான் தீர்மானிப்பார் என்று பலர் நம்புகிறார்கள்.

பார்ப்பனியத்துக்கு ஓரளவு ஆப்பு வைத்த திராவிட இயக்கத்தின் மேல் ஜென்ம விரோத பகையுடன் இருக்கும் சோ, பார்ப்பனர்கள், பிராமண சங்கம் சார்பாக தி.மு.கவிற்கு எதிராக எல்லா அரசியல் தரகு வேலைகளையும் பார்ப்பார். இப்படி மேல்மட்ட மனிதர்களின் அரசியல் நடவடிக்கைகள் மூலம் மக்களது தலைவிதியை தீர்மானிக்க விரும்பும் இந்த நரியை விமரிசித்து துரத்துவதற்கு பதில் ஊடகங்கள் சாணக்கியர் என்று கொண்டாடுகின்றன. காரணம் அந்த ஊடகங்களில் பெரும்பான்மையானவை பார்ப்பன ஊடகங்களாக இருப்பதுதான்.

மக்கள் தமது சொந்த உணர்வின் காரணமாக கருணாநிதியை எதிர்ப்பது ஆரோக்கியமானதா, இல்லை இந்த மொட்டை பாஸ் புரோக்கரது லாபி வேலை காரணமாக எதிர்ப்பது போல சித்தரிப்பது ஆரோக்கியமானதா? முதலாளிகளுக்கு ஆதரவாக யாரெல்லாம் அமைச்சர்கள் என்று நீரா ராடியா தீர்மானிப்பதற்கும், பார்ப்பனியத்துக்கு ஆதரவான கூட்டணியை இவர் தீர்மானிக்கிறார் என்பதற்கும் என்ன வேறுபாடு?

கருணாநிதியின் கார்ப்பரேட் குடும்ப ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கான கூட்டணி மாமா வேலைகளை இந்த மொட்டைப் பார்ப்பான்தான் செய்து முடித்தான் என்றால் இதை விட தமிழக மக்களை இழிவு செய்ய முடியுமா? ஆனால் ஊடகங்கள் அப்படி இழிவு செய்வதை தொடர்ந்து செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக ஸ்ரீரங்கத்து பாப்பாத்தியான ஜெயாவின் ராஜகுருவாக இந்த மைலாப்பூர் பாப்பான்தான் இருக்கிறார் என்பது அ.தி.மு.கவின் யோக்கியதையை பறை சாற்றுகிறது. அந்த வகையில் கருப்பு எம்.ஜி.ஆர் கூட இன்று போயஸ் தோட்டத்தில் சரணடைந்திருப்பது துக்ளக் ஆண்டுவிழாவிலேயே பேசப்பட்டது.

தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் துக்ளக் சோவின் நடவடிக்கைகளை அறியாதவர்கள், ஏற்காதவர்கள். அமெரிக்கா போக முடியாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும், அமெரிக்கா சென்றும் பார்ப்பனியத்தை தலைமுழுகாத தமிழ்நாட்டு பார்ப்பனர்களும்தான் சோவை தமது அரசியல் ஆசானாக கருதுகிறார்கள். இப்படி இந்த பார்ப்பன குரு தமிழக சட்டமன்ற தேர்தலில் சகுணியாட்டம் ஆடுவது நமது இழிவான அரசியல் யதார்த்தம்.

தனது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்பனை செய்யப்படுவதன் மூலமே கோடிஸ்வரரான ரஜினி எனும் நடிகனுக்கு, தமிழக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தல் குறித்து பேசுவதற்கு கூட தகுதி இல்லை. அடுத்த படத்தில் அண்டார்டிகாவில் ஏதோ இந்தி நடிகையுடன் கையைக் காலை அசைத்து ஆடப்போகிற இந்த சுயநலவாதிக்கு ஏதோ பெரும் வாய்ஸ் இருப்பதாகவும், அதை கண்டு தமிழகமே அஞ்சி நடுங்குவதாகவும் ஜூ.வி ஒரு தேர்ந்த மாமா போல சித்தரிப்பது பச்சையான அயோக்கியத்தனம்.

சொல்லப்போனால் ரஜினிக்கு இப்படி ஒரு வாய்ஸ் பவர் இருப்பதாகவும், அதனால் அவர் கட்சி ஆரம்பித்து தமிழகத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கதையை உருவாக்கி வெளியிட்டு இன்று வரை அது வரலாற்றில் இடம்பெற்றிருப்பதற்கு காரணமே துக்ளக் சோதான்.

பொது அரங்கில் இத்தகைய சகுணிகளும், வாய்ஸ் ஸ்டார்களும் என்று தூக்கியெறியப்படுகிறார்களோ அன்றுதான் தமிழகம் ஆரோக்கியமான அரசியல் பாதையில் அடியெடுத்து வைக்க முடியும். கருணாநிதி, ஜெயா போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளையும் வீழ்த்த முடியும். இல்லையேல் நமது தலையெழுத்தை ரஜினி, சோ போன்ற பாசிசக் கோமாளிகள்தான் தீர்மானிக்கப் போவதாக நம்மை மாற்றிவிடுவார்கள். அதை அடிமைத்தனம் என்றும் அழைக்கலாம்.

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

கனடாவில் பெண் வாழ்க்கை – ரதி

26

உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 6

மகளிர் தினம்! ஒரு காதலர் தினம் போல் பெரும் கவனயீர்ப்பு, கருத்து முக்கியத்துவம் என்பவற்றை இந்த தினம் பெறுவதில்லை. இது பெண்களுக்குரிய தினம். பெண்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். எங்கள் மீது இரக்கம் காட்டுங்கள், அன்பைப் பொழியுங்கள் என்கிற சுயபச்சாதாப புலம்பல்கள் அல்ல இந்த எழுத்துகள். பிறப்பிலேயே மறுக்கப்பட்ட, சமூக அரசியல் நிர்ப்பந்தங்களால் பறிக்கப்பட்ட பெண்களின் உரிமைகளை மீட்பதற்கான ஓர் அடையாள நாள்.

ஆரம்பகால பெண்மீதான அடக்குமுறைகள் ஓர் ஆணுக்கு அடங்கியவளாய் பெண் தன்னை உருவாக்கிக் கொள்வது என்பதோடு ஆரம்பித்து, சமூகத்தில் பெண் என்பவள் ஆணின் “கெளரவம்” என்கிற வரை நீடித்தது. இதைத்தான் வள்ளுவனின் வாசுகி, படிதாண்டாப் பத்தினி, கொலையும் செய்வாள் பத்தினி என்றார்கள் காலங்காலமாய். இயற்கையோடும், இயங்கியலோடும் ஒவ்வாத உவமைகளை சொல்லியே பெண் மனம் மயக்கப்பட்டது. வார்த்தைகளின் மகுடியில் மயங்கிப்போன பெண்மனம் இயல்பாய் அடிமை விலங்கை தனக்குத்தானே பூட்டவும் கற்றுக்கொண்டது. இவாறாக, பெண் தனக்குத்தானே வரித்துக்கொண்டதும், சமூகத்தால் விதிக்கப்பட்டதுமான எழுதாத விதிகளோடும், அழுத்தங்களோடும் வாழவும், குடும்பத்தை கட்டிக்காக்கவும் அன்றுமுதல் இன்றுவரை நிர்ப்பந்திக்கப்படுகிறாள்.

என் பார்வையில் பெண்ணுக்கு இரண்டு விதமான விலங்குகள் பூட்டப்படுகின்றன; கண்ணுக்குத் தெரிந்ததும், தெரியாததுமாக. பெண் என்பவளும் காதல், திருமணம் என்கிற இயல்பான உணர்வுகளால் தீண்டப்ப்படும்போது, அது குறித்த கனவுகள், கற்பனைகளில் மூழ்கி தன்னைத்தானே சமூகவிதிகளோடு பொருத்திக் கொள்வதும், தனக்குரிய புதியதோர் அங்கீகாரத்தை தேடுவதும் இயல்பாய் நடந்தேறுகிறது. தனக்குத்தானே ஓர் விலங்கை பூட்டிக்கொள்கிறேன் என்பது பெண்ணின் கண்ணுக்கும், புத்திக்கும் சுலபத்தில் எட்டுவதில்லை.

கண்ணுக்குத் தெரிந்தே பெண்கள் மீது பூட்டப்படுவது “தாலி” என்னும் விலங்கு. தாலி என்பது ஓர் மரபு. ஆணும், பெண்ணும் தங்களை திருமணம் என்கிற பந்தத்தில் இணைத்துக் கொள்வதற்கான அத்தாட்சி. மனித நாகரிகம் வளர்ச்சியடைவதற்கு முன், சட்டங்கள், விதிமுறைகள் இயற்றப்படுமுன் மனிதன் திருமணத்தை அடையாளப்படுத்த கண்டுபிடித்தது. அதில் கூட சந்திரமதியின் தாலி அரிச்சந்திரனின் கண்ணுக்கு மட்டும் தான் தெரியும் என்று சொல்லும் அபத்தங்கள்! பெண்ணை இழிவு செய்து, தாலியின் மகிமையை காப்பாற்றுவது தான் இலக்கியம், மரபு, கலாச்சாரம் என்றால் அதுகுறித்து பகுத்தறிவை பெண்கள் வளர்த்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிறது.

திருமண பந்தத்தில் தாலி என்கிற சின்னம் மட்டுமே பெண்ணுக்குரிய எந்தவொரு சமூக, பொருளாதார பாதுகாப்பையும், உத்தரவாதத்தையும் வழங்கி விடுவதில்லை. இரண்டு மனங்களுக்கு இடையே உண்டாகும் வேறுபாடுகளை, இடைவெளியை தாலி என்கிற சின்னம் களைந்துவிடுவதுமில்லை. இங்கே திருமணத்தில்  தாலி தேவையா இல்லையா என்பதல்ல கேள்வி. தாலி என்கிற சின்னம் இரண்டு மனங்களை இணைக்கிறதா அல்லது மனிதர்களை இணைக்கிறதா என்பதே கேள்வி.

கனடாவில் உலகின் ஏறக்குறைய எல்லா நாடுகளிலிருந்தும் வந்து குடியேறுகிறார்கள். யாராயினும் தங்கள் தனித்தன்மைகளை பேண கனடிய சட்ட திட்டங்களில் அனுமதியுண்டு. ஈழம், இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எல்லோருமே கனடாவில் பிறந்து வளர்ந்த அல்லது இங்கே நீண்டகாலமாக குடியேறி வந்து வாழ்ந்த பெண்களை திருமணம் செய்வது கிடையாது. பல ஆண்களும், சில பெண்களும் தங்கள் சொந்தநாட்டுக்குச் சென்று திருமணம் செய்து, பின்னர் கனேடிய குடிவரவு சட்டதிட்டங்களுக்கமைய தங்கள் துணையை இங்கே அழைத்துக்கொள்கிறார்கள்.

வாழ்க்கையின் ஆரம்ப நிலைகளில் எந்த குறை, நிறைகளும் கண்ணுக்கும், புத்திக்கும் பெரும்பாலும் எட்டுவதில்லை. மணிரத்னம் படத்தில் வரும், “புது வெள்ளைமழை பொழிகிறது…” என்கிற வகையில் வாழ்க்கை இனிக்கும். குறிப்பாக திருமணத்துக்குப் பின் தான் உடலுறவு என்கிற ஒன்றையே உய்த்தும், துய்த்தும் அறியும் பெண்ணுக்கு அந்தக் கணங்கள் போலவே வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களும் இருக்கும், இருக்கவேண்டும் என்கிற விருப்பமும், ஆவலும் இருக்கும்.

ஆனால், “தேனிலவு கட்டம்” (Honeymoon Phase) முடிய கொஞ்சம், கொஞ்சமாய் கணவனின் சுயரூபம் தெரியவர சில பெண்கள் மொழியும், வாழ்க்கையும் புரியாத அந்நிய தேசத்தில் நிர்க்கதியாகி நிற்கத்தான் செய்கிறார்கள். பெண்கள் மீதான வன்முறைக்கு கனேடிய சட்டத்தில் தண்டனை நிச்சயம், அதிலிருந்து தப்பமுடியாது என்று தெரிந்தாலும், தன் மனைவி தனக்கு இழக்கைப்படும் கொடுமையை வெளியே சொல்லமாட்டாள் என்கிற பெண்ணின் மடமைத்தனத்தை ஆண் தனக்கு சாதகமாக்கிக் கொள்கிறான். உடல், உள, பாலியல் ரீதியான வன்கொடுமைகளுக்கு மனைவி என்கிற பெயரில் பெண் பலியாக்கப்படுகிறாள். கணவன் எப்படி மனைவியை பாலியல் வன்முறை செய்ய முடியும் என்று சிலர் கேலியாக கேள்வி கேட்கக் கூடும். மனைவியே ஆனாலும் ஓர் பெண்ணின் சம்மதம் இல்லாமல் அவளை பாலியல் ரீதியாக கூட துன்புறுத்தக்கூடாது என்பது தான் சட்டம்.

கனடாவே என்றாலும் பெண்கள் கணவன் என்கிற ஆண் மூலம் எப்படி கொடுமைப்படுத்தபடுகிறார்கள் என்பது பற்றி நிறையவே சொல்லலாம். குடும்ப வன்முறை (Domestic Violence) என்பதால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா என்று சிலர் விதண்டாவாதம் செய்யலாம். எத்தனையோ அறிக்கைகள், ஆய்வுகள், உண்மைக்கதைகளை கேட்டபின் தெரிந்துகொண்டேன்; குடும்ப வன்முறையில் பெண்களே மிக அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். வேண்டாத பெண்டாட்டி கைபட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.

சில கணவன்மார்களுக்கு மனைவியை ஒதுக்கி வைக்க காரணங்கள் தாராளமாகவே கிடைக்கிறது. கனேடிய சட்ட திட்டங்களுக்கு அமைய ஸ்பொன்சரில் ஒருவர் வாழ்க்கைத் துணையை அழைத்து வந்தால் குறைந்தது பத்து வருடங்களுக்கு அவரே தன வாழ்க்கைத் துணைக்குத் தேவையான எல்லா செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அதன் விளைவுகள் பாரதூரமானதாக இருக்கும். இது போன்ற, எங்கே தங்களை நாட்டுக்கு திருப்பி அனுப்பி விடுவார்களோ என்கிற பயம் ஒருபுறமும், தன் பிறந்த வீட்டை எப்படி சமாளிப்பது என்கிற கிலியிலுமே பல பெண்கள் தங்களுக்கு நடக்கும் கொடுமைகளை வெளியே சொல்வதில்லை.

சில பெண்கள் மனநோயாளிகளாகவும் ஆகியிருக்கிறார்கள் என்று பெண்கள் அமைப்புகள் சொல்கின்றன. இதன் காரணமாக குழந்தைகளை, குழந்தைகள் காப்பக அமைப்புகள் தங்கள் பொறுப்பில் எடுத்துக்கொள்கிறார்கள். எப்படியோ, கட்டிய கணவனின் கொடுமைகளை இனியும் பொறுக்க முடியாது என்கிற நிலை வரும்போது கணவனை விட்டு விலகிச் சென்று தங்கள் வாழ்க்கையை மீள கட்டியெழுப்ப நிறையவே சிரமப்பட்டு பலர் வெற்றியும் அடைகிறார்கள். .

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பெரும்பாலும் பெண்களுக்குரிய தற்காலிக வதிவிடங்களில் (Shelters) தங்கவைக்கப்படுகிறார்கள். எதுவுமே இல்லாமல் பூஜ்யத்திலிருந்து வாழ்க்கையை தொடங்குகிறார்கள். இந்த நாட்டில் இவ்வாறு பாதிக்கப்படும் பெண்களுக்கு உதவ, அவர்களின் வாழ்க்கையை மீளவும் அவர்களின் சொந்த முயற்சியிலேயே கட்டியெழுப்ப நிறையவே அரசின் திட்டங்கள் இருக்கின்றன. வாழ்க்கையில் எந்தப் பிரச்சனை வந்தாலும் பெண்கள் பெரும்பாலும் பிறந்த வீட்டை நோக்கியே ஓட நினைப்பார்கள். ஆனாலும், எல்லாப் பெண்களுக்கும் அந்த ஆதரவு கிடைக்குமா நிச்சயமாக தெரியவில்லை. ஒரு முக்கிய காரணம் பெண் கணவனைப் பிரிந்து வந்தால் அது பெரும்பாலும் பெண்ணின் பிழையாகவே பார்க்கப்படுகிற ஓர் குறைபாடு எம் சமூகத்தில் நிலவுகிறது.  அதன் காரணமாகவே சில பெண்கள் இவாறான பிரச்சனைகள் வரும்போது பிறந்தவீட்டை தவிர்க்கிறார்கள்.

தனிமனித சுதந்திரங்கள் பறிக்கப்படும்போது  அது சார்ந்த சமூக கட்டமைப்பு அர்த்தமற்றதாகிப்போகிறது. கணவன் என்கிற உறவும், பெண்ணுக்கு விரோதமான சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பெண்ணுக்கு அபத்தமாய் தோன்றினால் அது அவர்கள் சமுதாயப் பிறழ்தல் ஆகவும் உருவாக காரணமாகிறது. அப்போது பாதிக்கப்படுவது அந்தப் பெண் மட்டுமல்ல அவளைச் சார்ந்து வாழும் குழந்தைகளும் தான்.

பெண்கள் கணவனைப் பிரிந்து வாழ்வது, விவாகரத்து கோருவது என்பது சமூகப் பிரச்சினையாய் மட்டும் பார்க்கப்படாமல், அது தனிமனிதப் பிரச்சனையாகவும்  பார்க்கப்பட்டால் தான் அதற்குரிய தீர்வை எட்டமுடியும் என்பது என் கருத்து. தாலி என்கிற கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்கிற வேலிகள், தடைகளாக உருவெடுக்காமல் பெண்களும் சுதந்திரமாய் தங்கள் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், பெண்களுக்கு கல்வி, சுயமாய் முடிவெடுக்கும் திறன் மற்றும் தைரியம் என்பன வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதேவேளை, பெண்ணுரிமைகள் அரசியல் ரீதியில் வென்றெடுக்கப்பட வேண்டுமானால் அதற்குரிய பலம்வாய்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் தேர்தல் அரசியல் ஜனநாயக ஒற்றை வாக்கு என்கிற ஒன்று மட்டும் பெண்ணுரிமையை அரசியல் ரீதியாகப் பெற்றுக் கொடுக்காது. பலம் வாய்ந்த அமைப்புகளாயும், அதனோடு தங்களை இணைத்துக்கொள்வதன் மூலமே பெண்கள் தங்கள் உரிமைகளை உறுதிப்படுத்தவும், பாதுகாக்கவும் முடியும்.

____________________________________________________________

ரதி

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

வைகோ – ஒரு அரசியல் அனாதையின் கதை!

103
வைகோ-ஒரு அரசியல் அனாதையின் கதை!

வைகோ-ஒரு அரசியல் அனாதையின் கதை!

ரு கோடி மக்கள் வாழும் சென்னை மாநகரத்தின் பரபரப்பிற்கு மத்தியில் ஒரிடத்தில் மட்டும் அமைதியும், சோகமும், ஆற்றாமையும் கடலென பொங்கி வழிகிறது. அந்த இடம் தாயகம். ம.தி.மு.கவின் தலைமை அலுவலகம். நேற்று முளைத்த காளான் கட்சிகள், லெட்டர் பேடு கட்சிகளெல்லாம் ஊடகங்களில் ஆரவாரமாக வலம் வந்து கொண்டிருக்கும் போது அந்த தலைவர் மட்டும் அவரது அண்ணா நகர் வீட்டில், தனிமையில் பேச முடியாமல், துக்கத்தை பகிர்ந்து கொள்ள முடியாமல் தன்னைத்தானே சிறைவைத்துக் கொண்டு அடைந்து போயிருக்கிறார். அவர் வைகோ.

தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்த வினவின் முதல் கட்டுரையே இப்படி ஒரு சோக சக்கரவர்த்தியைப் பற்றி பேச வேண்டியிருப்பதில் எங்களுக்கும் கொஞ்சம் வருத்தம்தான். ஆனாலும் கூர்ந்து கவனித்தால் இது சோகமில்லை, நகைச்சுவை என்பதறியலாம். என்ன, இந்த நகைச்சுவையை பார்த்து யாரும் வாய்விட்டு சிரிக்க முடியாது என்பதுதான் சோகம்.

வரலாற்றில் சோகம் என்பது ஒருவருக்கு ஒரு விடயத்தில் ஒருமுறைதான் வரமுடியும். ஆனால் வைகோவுக்கு மட்டும் அது தொடர்கதையாகி விடுகிறதே? நாளிதழ்களில் தேர்தல் குறித்த நவரசங்களும் விதவிதமாக ஊற்றி எழுதப்படுகின்றன. அரசியலையே மக்கள் நலன் நோக்கு இன்றி ஒரு பரபரப்பு, இரசனை, விறுவிறுப்பு கலந்த நொறுக்குத்தீனியாக கொடுப்பதையே ஊடகங்கள் செய்துவருகின்றன. அதில் கார்த்திக், டி.ராஜேந்தர், சரத்குமார் போன்ற நட்சத்திரங்களெல்லாம் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் போது வைகோ மட்டும் பிலாக்கணம் வைத்து அழுது கொண்டிருக்கிறார். அந்த வகையில் இந்த தேர்தலில் ஊடகங்கள் உருவாக்கியிருக்கும் நவரசத்தில் வைகோதான் சோகத்தின் நாயகனோ?

சில வருடங்களுக்கு முன்பு அநேகமாக 2007 என்று நினைவு. சென்னை புறநகர் ஒன்றில் ம.தி.மு,க துவங்கி பதிநான்கு ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம். நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சிறப்புரை. கழகத்தின் கண்மணிகளுக்கு முகமன் சொல்லி பேச ஆரம்பித்தார். ” எகிப்து பிரமிடில் இருப்பது 14 படிகள், ரோமாபுரி பந்தய மைதானத்தில் இருப்பது 14 படிகள், தி ஹேக் நகரின் சர்வதேச நீதிமன்றத்தில் இருப்பது 14 படிகள், வெள்ளை மாளிகை, ராஷ்ரிபதி பவன் எல்லாம் 14 படிகள், ராமன் வனவாசம் 14 ஆண்டுகள், பாண்டவர்கள் அஞ்ஞாதவாசம் 14 ஆண்டுகள்” என்று பிடித்தவர் அது போல வைகோவின் 14 ஆண்டு வனவாசம் முடிந்துவிட்டது என்றார். இனி அவர்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறவர் என்றும் சொன்னார். ஆனால் அவர்தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லவில்லை. அந்த வரைக்கும் கொஞ்சம் அடக்கம் இருந்தது உண்மை.

அப்போதே யோசித்தேன். இந்த வனவாசம் இன்னும் 20,25,50 ஆண்டுகள் என்று போனால் நாஞ்சில் சம்பத் வாயில் உலக வரலாறும், உலக கட்டிடங்களும் என்ன பாடுபடும் என்று நினைத்தேன். அதனால்தான் வைகோவின் விசயத்தில் சோகமல்ல, நகைச்சுவையே மேலோங்கி இருக்கிறது என்று மீண்டும் உறுதிபடுத்துகிறோம்.

வைகோ குறித்து நடுநிலைமையாளர்கள் சிலரிடம் உயர்ந்த மதிப்பீடு இருக்கிறது. “அவர் நல்லவர், இன்னும் ஊழல்கறை படியாதவர், பேச்சாற்றல், தலைமைப் பண்பு உள்ளவர், இறுதி வரை ஈழத்திற்கு அஞ்சாமல் குரல் கொடுத்தவர்” என்று அவரை போற்றுகிறார்கள். வைகோவின் கூட்டணி மாற்றங்கள் குறித்து விமரிசப்பவர்கள்கூட இந்த விடயங்களை ஒத்துக் கொள்கிறார்கள். எனினும் இது மிகவும் பிழையான சென்டிமெண்டான மதிப்பீடு என்கிறோம். ஒருவேளை சென்டிமெண்டாக உணர்ச்சிவசப்பட்டு, படுத்தி பேசும் வைகோ குறித்து இப்படித்தான் எண்ணுவார்களோ தெரியாது.

சென்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்று 35 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களை ம.தி.மு.க வென்றது. வரும் தேர்தலில் கூட்டணியில் மாற்றமில்லை என்றாலும் வைகோவிற்கு இரட்டை இலக்கில் இடங்கள் கிடைக்காது என்றுதான் ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 41, சி.பி.எம்முக்கு 12, சி.பி.ஐக்கு 10 பிறகு சின்ன கட்சிகளுக்கு ஒரிரு இடங்களெல்லாம் முடிவாகிவிட்ட நிலையில் ம.தி.மு.கவின் இடம் குறித்து மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தே.மு.க.தி.க வந்திருப்பதால் அதிக இடம் கொடுக்க முடியாது என்கிறது அ.தி.மு.க. வைகோ இதை உணராமல் இல்லை. எனினும் அவர் 25இல் ஆரம்பித்து 20இல் நின்று இறுதியாக 15வது கொடுங்கள் என்கிறாராம். அம்மாவோ 5இல் ஆரம்பித்து 7,8 என்று நிற்பதாக தகவல். இதனால்தான் புரட்சிப் புயல், புரட்சித் தலைவியை பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்து போட முடியாமல் அண்ணாநகர் வீட்டில் முடங்கி கிடக்கிறது.

ஆனாலும் நண்பர்களே இந்தக்காட்சி இப்போதுதான் முதல்முறையாக நடக்கிறது என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம். இரு வருடங்களுக்கு முன்னர் கூட அட்சர சுத்தமாக இப்படித்தான் நடந்தது. அதை கொஞ்சம் ஃபிளாஷ்பேக்கில் சென்று பார்ப்போம்.

2009-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல். அ.தி.மு.க அணியில் ம.தி.மு.க, பா.ம.க, சி.பி.எம், சி.பி.ஐ முதலான கட்சிகள் சேர்ந்து போட்டியிட்டன. இதில் ம.தி.மு.கவைத் தவிர மற்ற கட்சிகள் சமீபத்தில்தான் சேர்ந்திருந்தன. அவர்களுக்குரிய தொகுதிகளெல்லாம் ஒதுக்கப்பட்டாலும் வைகோவுக்கு ஒதுக்கீடு முடியவில்லை. அ.தி.மு.க நான்கு தருவதாக சொன்னது. வைகோ கராராக ஆறு என்று கேட்டார். அப்போதும் இதே நிலைதான். சோகம்தான்.

அப்போது ஈழப்பிரச்சினை உச்சகட்டத்தில் இருந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். தென்மாவட்டங்களை சேர்ந்த 200 மாணவர்கள் ஈழத்தமிழருக்காக சென்னையில் வந்து போராடுவதற்கு இரயிலில் வந்தனர். அவர்களை வரவேற்க வைகோ நிலையம் சென்றார். “ஈழத்தின் எதிரி ஜெயலலிதா அணியிலிருந்து வைகோவே வெளியேறு” என்று மாணவர்கள் முழக்கமிட்டார்கள். அதிர்ச்சியில் உறைந்த வைகோ செய்வதறியாது திரும்பினார். வெளியே நிருபர்கள் இன்னமும் தொகுதி உடன்பாடு முடியாதது குறித்து கேட்டார்கள். ” அது குறித்து பேசும் மனநிலையில் நான் இல்லை” என்று வைகோ வெருட்டென்று போய்விட்டார்.

இந்த மனநிலை ஈழத்தின் சோகத்தினால் வந்ததென்று நீங்கள் தவறாக கருதிவிடக்கூடாது. உண்மையில் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதால்தான் இந்த வருத்தம்.

ஒரு வழியாக ம.தி.மு.கவிற்கு நான்கு தொகுதிகள் விருதுநகர், தஞ்சை, நீலகிரி, ஈரோடு முடிவாகி வைகோவும் சிரிக்காத முகத்துடன் உம்மென்று ஜெயா அருகில் போஸ் கொடுத்து ஒப்பந்தத்தை காட்டினார். இந்த தொகுதிகளெல்லாம் அ.தி.மு.கவிற்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லாதது என்பதால் இதில் வெல்ல முடியாதென்பது வைகோவிற்கு தெரியாமல் இருந்திருக்காது. இருந்தாலும் அவர் வேறு என்ன செய்திருக்க முடியும்?

அப்போதும் ஏன் இப்போதும் கூட அவர் தனியாக தேர்தலில் நின்று பார்க்க முடியாது. அத்தகைய வெற்று சவடால் அடிப்பதற்கு அவர் ஒன்றும் முட்டாள் இல்லை.

ஆனால் அப்படி தனியாக வென்று காட்டுவதற்கென்றுதான் கட்சி ஆரம்பித்தார்.

1944-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தின் கலிங்கப்பட்டியில் பிறந்த வை. கோபால்சாமி, மாணவப் பருவத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலமாக அரசியலுக்கு அறிமுகமாகிறார். தி.மு.கவில் சேர்ந்து ஒரு குறிப்பிடத்தக்க இளைஞராக உருவெடுக்கிறார். 70களில் அவர் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படுகிறார். 80களில் ஈழப்பிரச்சினை முன்னுக்கு வரும்போது தி.மு.கவின் நிலைக்கேற்ப வைகோ அதில் தீவிரம் காட்டுகிறார். தனியாக சென்று பிரபாகரனை பார்க்கிறார்.

தலைமை பண்பு அற்ற மு.க ஸ்டாலினைவிட வைகோவின் செல்வாக்கு தி.மு.கவில் உயர்கிறது. பிரச்சினை வருகிறது. வைகோவா, ஸ்டாலினா என்ற போட்டியில் வைகோ கருணாநிதியிடமிருந்து விலகுகிறார். 1993-இல் ம.தி.மு.க உதயமாகிறது. எப்படியும் கருணாநிதி மரித்த பின் தி.மு.கவை முழுவதுமாக கைப்பற்றிவிடலாம் என்ற கணக்கு வைகோவிற்கு இல்லாமல் இருந்திருக்காது.

தி.மு.கவிலிருந்து ம.தி.மு.க பிரிந்தது கொள்கை முரண்பாட்டினால் அல்ல. அது தலைமையை யார் வைத்திருப்பது என்ற ஆதிக்க சண்டையின் விளைவாக நடந்தது. மற்றபடி கருணாநிதியின் உயிருக்கு வைகோவால் ஆபத்து என்ற புளுகை இப்போது கருணாநிதியன் பேரன்களே சட்டை செய்யமாட்டார்கள். இந்த பிளவுக்கு வைகோ காரணமாக இருக்கவில்லை என்றாலும் அவர் இதை ஒரு கொள்கை பிரச்சினையாக பார்க்கவில்லை. தி.மு.கவின் பிழைப்புவாதம், காரியவாதம், ஊழல் அத்தனையும் கொண்டிருந்த பத்து பதினைந்து கொட்டை போட்ட பெருச்சாளிகள்தான் அப்போது வைகோ உடன் சென்றனர். அவர்களும் கூட பின்னர் தி.மு.கவை வைகோ கைப்பற்றுவார் என்று கணக்கு பார்த்து சென்றிருக்கலாம். தற்போது அந்த கணக்கு பொய்த்திருப்பதால் அவர்களில் பெரும்பகுதியினர் ம.தி.மு.கவிலிருந்து விலகிவிட்டனர்.

மேலும் தி.மு.கவில் வைகோ ஒரு தலைவராக உருவானது என்பது தி.மு.கவின் எல்லா தலைவர்களும் தன்னை திட்டமிட்டே ஒரு தலைவராக உருவாக்கிய பாதையில் சேர்ந்ததுதான். படிப்பு, எழுத்து, செயற்கையான அலங்காரப்பேச்சு, உணர்ச்சிவசப்படும் ஆவேசப்பேச்சு, இத்தகைய மலிவான உத்திகளை வைத்தே அண்ணா முதல் கருணாநிதி வரை தலைவர்களாக உருவெடுத்தார்கள் என்றால் வைகோவும் அந்த பள்ளியில் வந்தவர்தான்.

உலகின் எல்லா தலைவர்களும் ஒரு போராட்டப்பாதையின் நிகழ்ச்சிப் போக்கில் ஆளானது போன்றுதான் தி.மு.கவின் ஆரம்பமும் இருந்த்து. என்றாலும் பின்னர் அது செயற்கையான உத்திகள், திறமைகள், சாதி செல்வாக்கு, பணபலம் என்று மாறிப்போனது. இவர்கள் யாரும் மக்கள் நலன் என்ற நோக்கில் புடம் போடப்பட்ட தலைவர்கள் அல்லர். அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

வைகோ தி.மு.கவில் இருக்கும் போது இத்தகைய செயற்கையான தலைவராகத்தான் இருந்தார் என்பதையே இங்கு பதிவு செய்கிறோம். இத்தகைய தலைமைகளுக்குள் அதிகாரத்திற்கான சண்டை என்பது சாதாரணமானதுதான். எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் , மு.கண்ணப்பனும் எதற்காக வைகோவை விட்டு பிரிந்தார்கள்? “மத்தியில் அமைச்சராகும் வாய்ப்பை வேண்டுமென்றே பறித்துவிட்டார், இனி இவரோடு குப்பை கொட்டுவதில் பலனில்லை” என்றுதான் அவர்கள் பறந்து போனார்கள்.

அண்ணாவின் கொள்கையை உண்மையாக பின்பற்றும் கட்சி என்று வைகோ கூறிக் கொண்டாலும் அது இத்தகைய எதிர்மறை உண்மைகளைத்தான் பிரதிபலிக்கிறது. 1996 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது அணியாக ம.தி.மு.க போட்டியிட்டாலும் ஒருதொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தனித்து போட்டியிட்ட பா.ம.க கூட நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது. அப்போது ஜெயா எதிர்ப்பு அலை தமிழகத்தில் வீசியபடியால் தி.மு.க பெரு வெற்றி பெற்றது. தி.மு.கவின் தலைமை தன்னை சதி செய்து நீக்கிவிட்டது என்பதையே மையமாக பேசிவந்த வைகோவின் பாதை அப்போது எடுபடவில்லை.

அந்த வகையில் தமிழக மக்களின் தேவை அறிந்து அரசியல் செய்யும் தலைவராக கூட அவர் இருந்ததில்லை. தி.மு.கவை வேறு வழியின்றி அந்த எதிர்ப்பு அலை ஆட்சியில் அமர்த்தியது.

இனி தனி ஆவர்த்தனம் செய்தால் மறைந்து மண்ணாகிவிடுவோம் என்று பதறிய வைகோ 98 நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து மூன்று தொகுதிகளில் வென்றார். தமிழகத்தையே மொட்டையடித்து பாசிச ஆட்டம் போட்ட ஜெயா சசி கும்பலோடு கூடி குலாவுவதற்கு அவர் வெட்கப்படவில்லை. அவரது அரசியல் நிலை மாற்றங்கள் மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்படவில்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அத்தோடு ஒரிஜினல் திராவிட இயக்கம் என்று கூறிய வைகோ பார்ப்பன பாசிசத்தை அரங்கேற்றுவதற்காக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றத் துடித்த பா.ஜ.க கூடவும் சேர்ந்தார்.

பா.ஜ.க உடனான கூட்டணி 2003 ஆண்டுவரை தொடர்ந்தது. மத்தியில் வாஜ்பாயி அரசை விசுவாசமான அடியாளாக ஆதரித்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நேரத்தில் கூட பாரளுமன்றத்தில் வாஜ்பாயி புகழ்பாடும் பக்தராக இருந்தார். வைகோ இதுவரை பண ஊழல் எதுவும் செய்ததில்லை என்பதை விட இந்த நடவடிக்கை பல மடங்கு ஊழல் தன்மை வாய்ந்தது. பார்ப்பனியத்துக்கு பல்லக்கு தூக்கியது காரணமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகமிழைத்தார்.

தமிழகத்தில் பா.ஜ.கவை ஒரு கட்சியாக்கி நிலைநிறுத்தியதில் தி.மு.க, அ.தி.மு.க முதலான பெரியகட்சிகளுக்கும் பங்கிருக்கிறது என்றாலும் சுத்த சுயம்பு என்று கூறிக்கொண்ட வைகோவின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் தி.மு.கவெல்லாம் சிலபல ஆண்டுகள் கழித்து சீரழிந்தது என்றால் ம.தி.மு.க தோன்றிய வேகத்தில் அதை சாதித்தது. இடையில் அவர் தி.மு.க கூடவும் கூட்டணி சேர்ந்தார். 2001 இல் அவர் ஜெயலலிதாவால் பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு 19 மாதங்கள் சிறையில் இருந்தார். இத்தகைய சிறை வாசம் கூட அவரது பிழைப்புவாதத்திற்கு நன்மை பயப்பதாக இல்லை.

இருப்பினும் 2006 சட்டமன்றத் தேர்தலில் அதே பாசிச ஜெயாவோடு கூட்டணி சேர்ந்தார். அதுவும் தி.மு.க ஒரு சீட்டு கொடுக்கவில்லை என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காரணத்திற்காக அணி மாறினார். முக்கியமாக 2009 பாராளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஈழத்தாய் என்ற பட்டம் வழங்கப்படவும் காரணமாக இருந்தார். தமிழகத்தில் புலி பூச்சாண்டி காட்டி ஏராளமான தமிழுணர்வாளர்களை கைது செய்து அடக்குமுறை ஆட்டம் போட்ட ஜெயலலிதாவின் மூலம் ஈழம் மலரும் என்று பேசுமளவு சீரழிந்தார்.

ஈழப் பிரச்சினையில் கூட வைகோ எப்போதும் இந்திய அரசிடம் கோரிக்கை வைத்து சாதித்து விடலாம் என்ற அணுகுமுறையையே கொண்டிருந்தார். ஒரு சில லாபி வேலைகள் செய்தால் ஈழப்பிரச்சினையை தீர்த்துவிடலாம் என்பதுதான் அவரது நிலை. முக்கியமாக இந்திய அரசு தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக ஈழப்பிரச்சினைக்கு வில்லனாக இருக்கிறது என்ற முறையில் அவரது அணுகுமுறை என்றும் இருந்ததில்லை.

மேலும் 2009ஆம் ஆண்டு ஈழப்பிரச்சினை முன்னணிக்கு வந்த போதும் அதை வைத்து மக்கள் திரள் போராட்டங்களை கட்டியமைப்பதற்கு பதில் அதை தேர்தல் முழக்கமாக்கி ஆதாயம் அடைய நினைத்தார். அ.தி.மு.கவும், பா.ஜ.கவும் வென்றுவிட்டால் ஈழப்போர் முடிவுக்கு வரும் என்று புலிகளையும் அவர்களது ஆதரவாளர்களையும் தவறாக வழிநடத்தியதில் வைகோவுக்கும் பெரும் பங்குண்டு.

முத்துக்குமார் இறந்த பிரச்சினையிலும் அது பெரிய போராட்டமாக உருவெடுத்துவிடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். பார்வதியம்மாள் சென்னை விமானநிலையம் வந்த போது கூட தனது இலட்சக்கணக்கான தொண்டர்களை விமானநிலையத்தில் திரட்டி போராட அவர் கனவிலும் கருதவில்லை. ஒரு அறிக்கையோடு முடித்துக கொண்டார். எனவே வைகோ ஈழப்பிரச்சினையில் நேர்மையாக இருந்தார் என்ற கருத்து குறித்து அவரைப் போற்றுபவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் ஒரு சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக அணிமாறிய வைகோ இந்த தேர்தலில் கிட்டத்தட்ட27 சீட்டுகள் கிடைக்காது என்றாலும் அணிமாற இயலாது என்ற இழிவான நிலைக்கு உயர்ந்திருக்கிறார். இதில் ஆறு சதவீதம் வாக்குகளும், இரண்டு எம்.எல்.ஏக்களும் இருந்தால்தான் மாநிலக் கட்சி என்ற தேர்தல் க மிஷன் அங்கீகாரம் கிடைக்கும். சென்ற தேர்தலில் பறி போன அந்த அங்கீகாரம் இனி எப்போதும் திரும்பாது என்பதுதான் களநிலவரம். மக்கள் நலன் என்ற அங்கீகாரத்திற்கு துரோகமிழைத்தவருக்கு இந்த டெக்னிக்கல் அங்கீகாரம்தான் தற்போது மிகப்பெரிய கௌரவப் பிரச்சினையாம். எனினும் அவர் இதையும் கடந்து வருவார்.

க கூட்டிக் கழித்துப் பார்த்தால் வைகோவின் இலக்குதான் என்ன? அவர் தமிழகத்தில் ஒரு தலைவராக உலா வர வேண்டும். ஊடகங்களில் அவரது கருப்பு மையடித்த மீசை கொண்ட படங்கள் வெளிவர வேண்டும். அவரது அறிக்கைகள் தினசரிகளில் இடம்பெறவேண்டும். சமீபத்தில் கூட உலக மகளிர் தினம், ஜப்பான் சுனாமி குறித்தெல்லாம் அறிக்கை வெளியிட்டார். அதே நேரம் உள்ளுக்குள் அ.தி.மு.க கூட்டணியில் ஒற்றை எண் தொகுதிகள்தானா என்று அவர் கொஞ்சமேனும் அழுதிருக்க வேண்டும்.

இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் ம.தி.மு.கவிற்கான தொகுதிகள் 5 கொடுக்கப்பட்டாலே அது பெரிய விசயம்தான். இதை இல்லை என்று வைகோவால் கூட மறுக்க முடியாது.

மக்கள் நலன் என்ற நோக்கில் வைகோவின் அரசியல் பயணம் என்றுமே நடந்தில்லை என்பதை வைத்து பார்க்கும்போது இன்று அவர் அரசியல் அனாதையாக ஓரங்கட்டப்பட்டார் என்பதற்கும் நாம் வருந்தத் தேவையில்லை. தமிழகத்தில் இரண்டு பெரிய கட்சிகள் எல்லா வகை சீரழிவுகளோடும் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் அவர்களது நிழலில் தங்கி வேலை செய்த வைகோ அவர்களது செல்வாக்கை மிஞ்ச முடியுமா என்ன?

ஆக இந்த இடம் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்பதில் புறநிலையான காரணங்களும், அகநிலையான காரணங்களும் உண்டு. அதில் வைகோ விரும்பி செய்த பணிகளையே மேலே விமரிசித்திருக்கிறோம். ஆக வைகோ வாய்ப்பு கிடைக்காததால் ஒருபெரிய தலைவராக முடியவில்லை என்று யாராவது சொன்னால் அவர் ம.தி.மு.க கட்சியில் சேரும் தகுதியைக் கொண்டிருக்கிறார் என்று பொருள். அதாவது அவரும் அரசியல் அனாதையாக முடிவு செய்து விட்டார். நாமும் நமது அனுதாபங்களை அவருக்கு தெரிவித்துக் கொள்வோம்.

 

inner_design400x300

அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா

10
அறிவியல் உலகில் பெண்கள் - அன்னா

உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 5

“The great gain would be freedom of thought. Women, more than men, are bound by tradition and authority. What the father, the brother, the doctor and the minister have said has been received undoubtingly. Until women throw off this reverence for authority they will not develop. When they do this, when they come to the truth through their investigations, when doubt leads them to discover, the truth which they get will be theirs and their minds will work on and on, unfettered.”

“இதனால் வரும் அபாரமான நன்மை சிந்திக்கும் சுதந்திரம். பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அப்பாவாலும் சகோதரனாலும் மருத்துவராலும் போதகர்களாலும் சொல்லப்படும் எல்லாம் ஒரு சந்தேகமும் இன்றி பெண்களால் உள்வாங்கப்படுகிறது. அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது. இதைச் செய்யின் அவர்கள் தமது கண்டுபிடிப்பிகளினூடாக உண்மையை அறிவர். சந்தேகம் அவர்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும். அவர்கள் கண்டுபிடித்தவை அவர்களுடையதாகும். அவர்களின் மனதுகள் தொடர்ந்து ஒரு தடையுமின்றி வேலை செய்துகொண்டிருக்கும்.”

http://en.wikipedia.org/wiki/Maria_Mitchell – Maria Mitchell – first woman member of the American Association for the Advancement of Science and first professor of astronomy at Vassar College (1818-1889)

அறிவியல் உலகில் பெண்கள் - அன்னா

நம்மைச் சுற்றியுள்ள சூழலை, தொலைவிலிருக்கும் நட்சத்திரங்களை, கோள்களை, பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனைகளும் கணிப்புகளும் நாம் மனிதராக இவ்வுலகத்தில் வாழத் தொடங்கியதிலிருந்தே தொடங்கிவிட்டோம். ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இதைச் செய்தனர். ஆனாலும் மற்றைய இடங்களில் எல்லாம் எப்படி பெண்களின் சாதனைகள் மறக்கப்பட்டனவோ இங்கும் அவ்வாறே herstory பலருக்குத் தெரியாது. போன வருடம் Royal Society of London 350 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது. உலகின் முதலில் உருவாக்கப்பட்ட அறிவியல் ஸ்தாபனங்களில் ஒன்று. இதில் எத்தனையோ பிர‌ப‌ல‌மான‌ விஞ்ஞானிக‌ள் உறுப்பின‌ராக‌ இருந்தாலும் பெண்க‌ளுக்கு உறுப்பின‌ராகும் அனும‌தி 1945 ஆம் ஆண்டே வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.

மேரி கியூரி, அநேக‌மான‌வ‌ர்க‌ளுக்குத் தெரிந்த‌ அறிவிய‌லாள‌ர். க‌திரிய‌க்க‌த்திற்கான‌ ஆய்வுக்காக‌ முத‌லில் அவ‌ர‌து துணைவ‌ரோடு சேர்ந்தும் பின் இரேடிய‌த்தைப் பிரித்தெடுத்த‌த‌ற்காக‌ தனியாக‌வும் நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர். இவ‌ருக்கே முத‌ன் முத‌லில் இரு நோப‌ல் ப‌ரிசுக‌ள் கிடைத்த‌ன‌. அதோடு இன்ற‌ள‌வில் இவ‌ர் ஒருவ‌ரே இரு வேறு அறியிய‌ல் த‌ள‌ங்க‌ளில் (பெள‌தீக‌விய‌ல், இர‌சாய‌ன‌விய‌ல்) நோப‌ல் ப‌ரிசு பெற்றுள்ளார். இவ்வ‌ள‌வு திற‌மைமிக்க‌வ‌ரை அவ‌ர‌து இர‌ண்டாவ‌து ப‌ரிசு பெற்ற‌ ஆண்டு கூட‌ பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான‌ ஸ்தாப‌ன‌ம் அவர் பெண் என்ற ஒரே காரணத்திற்காக உறுப்பின‌ராக‌ இணைக்க‌ ம‌றுத்த‌து.

இவ‌ருக்கும் முந்திய‌ கால‌த்தில் பெண்க‌ளின் மூளைக்கு அறிவிய‌ல் நோக்கில் சிந்திக்க‌ ச‌க்தியே இல்லை என்ப‌தே க‌ணிப்பீடாக‌ இருந்த‌து. பெண்க‌ள் எவ்வ‌ள‌வு திற‌மையான சிந்த‌னையாள‌ர்க‌ளாக‌ இருந்தார்கள் என்பதற்கும் அவர்களின் கணவர்களோடும் சகோதரர்களோடும் இணைந்து எத்தனையோ ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் செய்தார்கள் என்ப‌த‌ற்கும் நிறைய‌ சான்றுக‌ள் இருந்த‌ போதும் அந்நாட்க‌ளில் அவ‌ர்க‌ள் ஆய்வாளர்களின் மனைவிமாராகவும் சகோதரிகளாகவுமே அங்கீகரிக்கப்பட்டார்கள். ஆய்வுகளில் மட்டுமல்ல அறிவியல் எழுத்துகளிலும் அறிவியலை பொது சனத்திற்கும் சிறுவருக்கும் விளக்குவதிலும் அறிவியலைப் பிரபலப்படுத்துவதிலும் அக்காலப் பெண்கள் மிக‌ முக்கிய‌ ப‌ங்காற்றின‌ர்.

அறிவிய‌ல் ச‌மூக‌த்தில் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌தாலோ என்ன‌வோ ப‌ர‌ந்த‌ ச‌மூக‌த்தில் அறிவிய‌லின் ப‌ங்கு, க‌டமைக‌ள் பொறுப்புக‌ள் என்ப‌வ‌ற்றைப் ப‌ற்றி நாம் இப்போ யோசிக்கும‌ள‌வு அன்று அறிவிய‌ல் வ‌ட்ட‌த்திற்குள் இருந்த ஆண்களைவிடப் பெண்க‌ள் யோசித்தார்க‌ள். ம‌னித‌ ச‌முதாய‌த்தில் ம‌ற்றைய‌ வில‌ங்குக‌ளின் உரிமையைப் ப‌ற்றி முத‌லில் சிந்தித்த‌து அன்னா பர்போல்ட் (Anna)  எனும் பெண் விஞ்ஞானியே. அவ‌ரின் ஒக்ஸிச‌னைக் கண்டுபிடித்த மேல‌திகாரி யோச‌ப் பிறீஸ்லி எனும் இர‌சாய‌ன‌விய‌லாள‌ர் சுண்டெலிக‌ளில் ப‌ரிசோத‌னை செய்வார். ஒருமுறை சுண்டெலிகளை ஒரு வெற்றுக் கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்து காற்றை கொஞ்சம் கொஞ்சமாக அப்பாத்திரத்திலிருந்து வெளியேற்றும் போது சுண்டெலிகள் படும் அவஸ்தையைக் கண்ட அன்னா, அன்றிர‌வு சுண்டெலியே எழுதுவது போல் “கலாநிதி பிறீஸ்லிக்கு சுண்டெலியின் வேண்டுகோள்” எனத் தலைப்பிட்டு ஒரு கவிதை எழுதி அந்த எலிகளின் கூட்டில் ஒட்டி விட்டாராம்.

இக்காலத்தில் அறிவியலுக்கு பங்களிப்புச் செய்த என்னைக் கவர்ந்த இன்னொரு பெண்  http://en.wikipedia.org/wiki/Mary_Somerville மேரி சொமவில் (Mary Somerville). 1780 இல் பிறந்தவர். தனுக்குத்தானே கணிதத்தை கற்பித்துக் கொண்டவர். வானியலும் படித்தவர். ஒரு ஓவியரும் கூட. அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில் “ஏதாவதொன்றில் சாதிக்க வேண்டுமென்ற இலட்சியமுள்ளவள். உலகில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டதை விட உயர்ந்த நிலைக்குச் செல்லும் சக்தி பெண்களுக்கு உண்டென நம்புபவள்” என்றுள்ளார்.

மிகவும் திறமையான எழுத்தாளர். இவரின் அறிவியல் தொடர்பான எழுத்துக்களும் மொழிபெயர்ப்புகளும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. பொது மக்களிடையே அறிவியல் புரிதலுக்கும் இவரின் எழுத்துக்கள் மிகவும் உதவின. இவரின் சொந்தப் புத்தகமான “On the Connection of the Physical Sciences (1834), பல அறிவியல் துறைகளுக்குப் பொதுவான அடிப்படைத் தத்துவங்களையும் செய்முறைகளையும் அழகாக விளக்கியது. அது பற்றி ஒரு பெளதீகவியளாலர் இவ்வாறு கூறியிருந்தார், “இப்புத்தகம் பல விஞ்ஞானத்தின் ஆண்களின் மனதில் வேலைசெய்யும் எண்ணங்களை மிகவும் ஒருங்கிணைத்து இலகுவாக வழிகாட்டக்கூடியவாறு கூறியுள்ளதால் அவர்களின் பல கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும்.”

இவரின் எழுத்துக்களால் இவரின் பின்னால் வந்த பல இளம் பெண்களுக்கு ரோல் மொடலாக இருந்தவர். பதிவின் தொடக்கத்தில் கொடுத்த கூற்றைச் சொன்னவரும் இவரைப் பின்பற்றி அறிவியலுக்கு வந்தவரே. தனியே அறிவியலுடன் மட்டும் நின்று விடாமல் பெண்களுக்கு வாக்களிப்பு உரிமை கிடைப்பதற்கும் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் போராடியவர். அக்காலத்தில் விஞ்ஞானத்தின் அரசியாகக் கருதப்பட்ட இவருக்கு, பெண்ணிற்கு ஆய்வு செய்யச் சக்தியில்லை என்ற பொதுவான கருத்தால் அசலான எந்தவித ஆய்வும் செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை. முதலில் மிக நம்பிக்கையுடன் அறிவியல் பாதையில் கால் வைத்தவர், பின் “நான் ஒரு கண்டுபிடிப்பையும் செய்யவில்லை என உணர்கின்றேன். I had no originality. எனக்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தும் நான் ஒரு மேதையல்ல. அதை சொர்க்கத்திலிருந்து என் பாலினத்திற்கு வழங்கவில்லை. உயர்ந்த சக்திகள் வேறொரு இருப்பு நிலையில் (another state of existence) எமக்கு வழங்கப்படுமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.” என்கிறார். 🙁

இப்படி எத்தனையோ கஷ்டப்பட்டு சாதித்தவர்களின் சாதனைகளின் மேல் நின்று ஆய்வுகளில் ஈடுபடும் இன்றைய பல பெண்களிற்கு நிலைமை குறிப்பிடத்தக்களவு முன்னேறி இருப்பினும், மேரி சொமவில்லின் ஆரம்ப காலக் கூற்றையும் இறுதிக்காலக் கூற்றையும் வாசிக்கும் போது அதன் நிகழ்காலத்திற்கிணையான தன்மையை நினைக்க ஆச்சரியமாகவுள்ளது.

மிக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளியியல் விபரப்படி உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிலேயே கணித/விஞ்ஞானத்துறைகளில் பெண்கள் 20% பதவிகளில் மட்டுமே இருக்கிறார்கள். மேற்சொல்லப்பட்டது போல் அறிவியலின் herstory ஜக் கொஞ்சம் ஆராய்ந்தாலே தெளிவாகத் தெரியும், இது பெண்களுக்கு இயற்கையாகவே அறிவியல் ஞானம் இல்லாததால் அல்ல என்று. ஆனாலும் 2005 ஆம் ஆண்டு பிரபல ஹவேட் பல்கலைக்கழகத்தின் அந்நாள் president, Larry Summers கூட பெண்கள் பல்கலைக் கழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது சமுக்கத்தில் அவர்களுக்கெதிராகக் காட்டப்படும் பாகுபாடல்லாமல், இயற்கையிலேயே பெண்ணுக்கு அறிவியலில் நாட்டமோ திறனோ இல்லாமல் கூட இருக்கலாம் என்றார். அதன் பின்னே இப்பிரச்சனையைப் பற்றி ஓரளவிற்கு பலர் ஆராயத்தொடங்கினார்கள்.

கணித அறிவியல் பரீட்சைகளிலும் செய்முறைகளிலும் முன்னைய காலடட்டத்தில் இருந்த பால் வேறுபாடுகள் இப்போ மிகக் குறைந்துள்ள போதும், அறிவியல்/கணிதவியலில் அடிப்படைப் பட்டங்கள் எடுப்பதில் கூட 2000-ஆம் ஆண்டிலிருந்து ஆண்களை விடப் பெண்கள் கொஞ்சம் கூடுதலாக எண்ணிக்கையில் இருந்தும் அதன் பின் அறிவியல் துறையில் வேலை செய்யத் தயங்குவது ஏன்?

ஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கும் பாலியல் பாகுபாடுகள் எத்தனையோ பல்கூட்டமான உளவியல் மாற்றங்களையும் சிக்கலான‌ எதிர் விளைவுகளையும் கொடுக்கக்கூடியதென்று இதுவரைக்கும் செய்யப்பட்ட எத்தனையோ ஆய்வுகள் கூறுகின்றன. சில உதாரணங்களை நான் http://annatheanalyst.blogspot.com/2011/02/blog-post.html இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.

இவ்விளைவுகளை எத்தனையோ வடிவத்தில் பார்க்கலாம். ஒரு கணிதப் பரீட்சை அறையில் ஆண்கள் எண்ணிக்கையில் மிகக் கூடுதலாகவும் பெண்கள் மிகக் குறைந்தும் காணப்பட்டால் அந்தப் பரீட்சையில் பெண்கள் ஆண்களைவிட மிகக் குறைவாகவே மதிப்பெண் வாங்குவார்கள். அதேநேரம் இருபாலினரும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பின் மதிப்பெண்களில் குறிப்பிட்டளவு வித்தியாசங்கள் இருக்காது. பரீட்சைத் தாளில் எழுதுபவர் என்ன பாலினம் என்று கேட்டிருப்பது கூட பரீட்சை செய்யும் திறனை குறிப்பிட்டளவு பாதிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. இதிலிருந்து அடிமனதில் நாம் உணராமலே சமூகத்தின் கருதுகோள்கள் எம்மை எந்தளவிற்குப் பாதிக்கின்றன என அனுமானிக்கலாம்.

http://arts.uwaterloo.ca/~sspencer/spencerlab/articles/2002-Davies-Spencer-Quinn-Gerhardstein.pdf” இன்னொரு ஆய்வில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் சில ஆண்களையும் பெண்களையும் இரு கலப்புக் குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினருக்கு பாலியல் பாகுபாடுகளை முன்னிறுத்தும் விளம்பரங்களைக் (மிகவும் மெலிந்த பெண் diet soda வின் ருசியைச் சொல்வது, ஒரு குறிப்பிட்ட தோல் cream ஆல் தோலில் ஏற்படும் நன்மைகளை ஒரு பெண் சொல்வது போன்றவை)காட்டினர். மற்றைய குழுவிற்கு நடுநிலையான/ இருபாலாரும் கலந்து கொள்ளும் விளம்பரங்களைக் (insurance company/ கையடக்கத் தொலைபேசி பற்றிய விளம்பரங்கள்)காட்டினர். பின் இரு குழுக்களிடமும் எதிர்காலத்தில் வேலை செய்ய ஆர்வமான தொழில் துறைகள் பற்றிக் கேட்ட போது, முதல் குழுவிலிருந்த பெண்களை விட இரண்டாவது குழுவிலிருந்த பெண்கள் கூடுதலாக அறிவியல்/கணிதத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மாற்றத்திற்குத் தேவையானதெல்லாம் சில குறிப்பிட்ட stereotypes ஜ மறைத்தது மட்டும் தான். அநேகமான தமிழ்ப் படங்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் நித்தம் பார்க்கும் எம்மவர்களில் இதனால் ஏற்படும் வெளியில் தெரியாத எதிர் விளைவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.

இந்த stereotype http://thesituationist.wordpress.com/2011/01/03/the-gendered-situation-of-recommendation-letters அறிவியல் துறையைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல பெண்களின் பதவியுயர்வுக்கு மேலதிகாரிகள் எழுதும் கடிதங்களின் மொழிகளையும் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதையும் கூட‌ பாதிக்கின்றன. இதுமட்டுமல்ல‌, அப்படியே அடிபட்டு மேலே வந்து பெரிய பதவிகளில் இருக்கும் அநேகமான பெண்கள் திருமணமாகாதவர்கள் அல்லது பிள்ளைகள் இல்லாதவர்கள். எல்லாப் பெண்களும் திருமணம் செய்து பிள்ளை பெறத்தான் வேண்டுமென நிச்சயமாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் ஏன் திருமணமான, தாயான பெண்கள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாமலுள்ளது?

இந்த stereotypes இன் விளைவுகள் தனியே அறிவியல் தெரிவையோ பெண்களையோ மட்டும் பாதிப்பவை அல்ல. எந்த ஒடுக்கப்படும் குழுவிற்கும் எதிர் மறையான stereotype க்கும் பொருந்தும். உதாரணத்திற்கு எம் மகனுக்கு மொண்டோசொரி வகுப்பு தேர்ந்தெடுக்கும் போது பல இடங்களுக்கு சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு பிள்ளைகளை ஊக்குவிக்கும் தரத்தை அவதானிக்கச் சென்ற போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிந்தது. நான் சென்ற ஒரு இடத்திலும் ஆண் ஆசிரியர்கள் இல்லாதது. இருபாலினரும் படிப்பித்தால் கூடிய நன்மை தரும் என்ற கருத்துக்கொண்டவள் நான், அத்தோடு மகனுக்கும் ஒரு balanced perspective வரும் என்பது என் கருத்து. விசாரித்துப் பார்த்ததில் ஒரேயொரு இடம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆண்கள் மொண்டொசொரி சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் கதைத்த போது, இதே stereotype இன் தாக்கங்களையே பொறிந்து தள்ளினர். இதைப் பற்றி எம்மவர் சிலரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்னது “அப்பிடியே எங்காவது ஆண்கள் மொண்டொசொரி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை நிச்சயித்து அனுப்புங்கோ”. I was completely taken back. நம்பவே முடியவில்லை.

எப்படி இப்படியெல்லம் சிந்திக்கத் தோன்றுகிறது? ஏன் எம்மால் மனிதரை எம் வேறுபாடுகளையும் தாண்டி மனிதராக மதிக்க முடிவதில்லை. இந்தப் பாகுபாடுகளை ஒரு சமூகமாக முன்வந்து எப்போது மாற்றுவோம்?

______________________

– அன்னா
______________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

டிவி சீரியல் கொடுமைகளில் பெண்கள் – தீபா

22

உழைக்கும் மகளிர்தின சிறப்புப் பதிவு – 4

டிவி சீரியல்கள், அதுவும் மெகா சீரியல்களின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போம்.இந்தியாவில் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு ஒரு பத்தாண்டு காலத்தில் விளம்பரதாரர் வழங்கும் நிகழ்ச்சிகளாக தினமும் அரைமணி நேரம் ஏதாவது ஒரு நாடகம் ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்தி தூர்தர்ஷனில் ஓரளவுக்குத் தரமான தொடர் நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தன. தொடர்ந்து சென்னைத் தொலைக்காட்சியிலும் பதின்மூன்று வாரங்கள் வருமாறு சில நாடகங்கள் வந்தன. இவற்றினால் பெரிய அளவுக்கு நல்லவை அல்ல என்றாலும் கெட்டவையாகவும் இல்லை. மேலும் சினிமாவில் இடமில்லாத இலக்கியங்களுக்கும் சமூக அக்கறையுள்ள நிகழ்ச்சிகளுக்கும் தொலைக்காட்சியில் இடமிருக்கும் எனறு ஒரு நம்பிக்கை இருந்தது. எல்லாம் அடியோடு மாறிப் போனது சாட்டிலைட் டிவிக்களின் படையெடுப்பில்.

சாட்டிலைட் டி.வி. வந்தது முதல் ஸ்டார் டிவி போன்ற ஆங்கில சேனல்களில் ஒளிபரப்பப்பட்ட “போல்ட் அண்ட் பியுட்டிஃபுல்”, “சண்டா பார்பரா” “டைனாஸ்டி” போன்ற பல வருடங்களுக்கும் மேலாக ஓடிய அந்தத் தொடர்கள் தான் நம் தயாரிப்பாளர்களுக்கு பேராசை வரக் காரணமாக இருந்த முன்னோடிகள். சில வாரங்களுக்காக மட்டுமே கதை தேடி தயாரித்துச் சொற்பக் காசுபார்த்து வேறொரு தயாரிப்பாளருக்கு ”ஸ்லாட்டை” ஏன் விட்டுக் கொடுக்க வேண்டும்? மொத்தமாக ‘ஸ்லாட்’ புக் பண்ணி வைத்துக் கொண்டு கதை பண்ணிக் கொண்டே போகலாமே? அந்த மேல்நாட்டு சீரியல்களை நான் பார்த்ததில்லை. அதனால் அவை பற்றிய விமர்சனம் கூற நான் ஆளில்லை. ஆனால் அவை நமக்கு விளைவித்த கேடுகள் நமது மெகா சீரியல்கள்.

இவர்களின் முக்கிய டார்கெட்டுகள் கணவனையும் குழந்தைகளையும் அனுப்பிவிட்டு வீட்டில் தனிமையைக் கொல்லப் போராடும் பெண்கள் தான். அதனால் இந்த சீரியல்களில் நாயகிகளுக்குத் தான் முக்கியத்துவம். முக்கியத்துவம் என்று இங்கே குறிப்பிடுவது நிச்சயம் பாத்திரப்படைப்பின் மேன்மைக்காக‌ அல்ல.

இந்தக் கட்டுரை எழுதுவதற்காக சமீபத்தில் தவிர்க்கமுடியாமல், சில சீரியல்களைப் பார்க்க நேர்ந்தது. ஆஹா, என்ன அழகுக் காவியங்கள் அவை! எந்தவித லாஜிக்கும் இல்லாமல், நம்பவே முடியாத திடுக்திடுக் அல்லது மொக்கையான சம்பவங்கள் சேர்த்து புனையப்பட்ட கதைகள். கதையில் வரும் பாத்திரங்கள் மீது மட்டுமல்ல பார்க்கும் பெண்கள் மீதும் எவ்வளவு அலட்சியமான மதிப்பீடு இருந்தால் இப்படிப் பட்ட குப்பைகளை கூவிக் கூவி விளம்பரம் செய்து ஒளிபரப்புவார்கள் என்று தோன்றுகிறது. எந்தக் கழிசடையைக் காண்பித்தாலும் பார்ப்பார்க‌ள் என்கிற மனோபாவம் தான் இதற்குக் காரணம் என்று நினைக்கும் போது ஆத்திரமே வருகிறது. ஆம், நான் பார்த்தவரை அப்படித் தான் இருக்கின்றன இந்தச் சீரியல்கள்.

பிரபலமான சீரியல் ஒன்றில் வரும் நிகழ்ச்சி: மனைவி விபத்தொன்றில் தாயாகும் தன்மையை இழக்கிறாள். அதனால் கணவனுக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயல்கிறாளாம். அவள் கணவன், “யார் வந்தாலும் நீ தான் எனக்கு முக்கியம். அடுத்து வர்றவளுக்கு இரண்டாம் இடம் தான்” என்கிறானாம். அவள் புல்லரித்துப் போகிறாள். நமக்கோ டிவியை உடைத்து விடலாம் போல கை அரிக்கிறது.

ஆண்கள் பலமணம் புரிவது காலங்காலமாக‌ நடப்பது தானே? இதில் என்ன புதுமையைக் கண்டுவிட்டார்கள்?

தன்னிடம் குறை என்று தெரிந்தும் அதை மறைத்து மனைவியின் வாழ்வை நிர்மூலமாக்க்கும் ஆண்கள் இன்றளவும் எத்தனை பேர் இருக்கிறார்கள்? தந்தையாக இயலாத ஒரு கணவன் தன் மனைவியை மறுமணம் செய்து கொள்ளத் தூண்டுமாறு ஏன் காண்பிக்கக் கூடாது?

இன்னொரு சீரியல். வாடகைத் தாய்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறை, பிரச்னைகள் ஆகியவை குறித்தும் உண்மையான அக்கறையுடன் இவர்கள் ஒரு சீன் கூட எடுப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் எடுக்கலாமா? ஒரு கன்னிப் பெண் வாடகைத் தாயாகிறாளாம்! அவளுக்கும் குழந்தை வளரப் போகும் தாய்க்கும் இடையில் பிரச்னைகள் மூட்டிவிட ஒரு வில்லி. இவள் நாயகியை ஜெயிலுக்கு அனுப்புவாளாம்; பொய்யாகக் கொலைக் குற்றம் சுமத்துவாளாம், நிறைய பணம் சம்பாதித்து ஒரு கம்பெனியை நிர்வகிப்பாளாம், சகலகலாவில்லி!

இன்னொரு சீரியல். படிக்காத, வீட்டுவேலைகள் ஒழுங்காகப் பொறுப்பாகப் பார்க்கும், அன்பும் பொறுமையுமே உருவான பெண் தான் நாயகி. (வேறு மாதிரி எப்படி இருக்க முடியும்?) வேலைக்குப் போகும் அவளது அண்ணி அவளுக்குக் கேடு விளைவிக்கும் வில்லி! வேலைக்குப் போவதாகச் சொல்லிக் கொண்டு அவள் தன் நாத்தனாருக்குப் பிரச்னைகள் உண்டாக்கும் வேலைகளில் ஈடுபடுகிறாள். (வேலைக்குப் போகும் மருமகளா, எச்சரிக்கை!)

இன்னொரு அவியல், சாரி சீரியல்… இதில் பள்ள்யில் படித்துக் கொண்டிருக்கும் ஒரு பெண் தன் முறைமாமனைக் கல்யாணம் செய்து கொள்வதே தன் லட்சியம் என்று திரிகிறாள். அதே மாமனைத் தீவிரமாகக் காதலிப்பது, நன்கு படித்துச் சொந்தக் காலில் நிற்கும் ஒரு ஆஃபிஸர் பெண்மணி. என்ன பேராசையடா இந்த ஆண்களுக்கு?!

பொதுவாகவே சீரியல் நாயகிகள் இழுத்துக்கட்டிய பின்னல் அல்லது கொண்டை மற்றும் எட்டுமுழப் புடவைகளில் வருகிறார்கள். பெரும்பாலான வில்லிகள்  குட்டை முடி வைத்திருக்கிறார்கள், சிலர் ஜீன்ஸ் அணிந்திருக்கிறார்கள். இதுவும் ஒரு விஷமத்தனமான ஸ்டீரியோடைப். எல்லா சீரியல்களிலும் நாயகிகள் மைபூசிய கண்களுடன் குடம் குடமாக அழுகிறார்கள். வில்லிகள் லிப்ஸ்டிக் பூசிக் கொண்டு சிரிக்கிறார்கள்.

இதையெல்லாம் யார் பார்க்கச் சொல்கிறார்கள்? சானலை மாற்றிக் கொண்டு போக வேண்டியது தானே என்று சொல்பவர்கள் எத்தனை பேர் வீட்டில் தினம் இரண்டு சீரியலாவது பார்க்காத பெண்கள் இருக்கிறார்கள்? பல வீடுகளில் ஆண்களும் அல்லவா போட்டி போட்டுக் கொண்டு பார்க்கிறார்கள்.

ஆண்களைக் கவர்வதற்கென மாமியார் நாத்தனார், மருமகள்கள் வில்லிகள் பழிவாங்கல்கள் போதாதென்று இப்போதெல்லாம் கொலை, கற்பழிப்பு போன்ற மசாலா ஐட்டங்களையும் சேர்த்துக் கனஜோராக நமது வரவேற்பறையில் பரிமாறுகிறார்கள்.

“என்ன, ஊர்ல நாட்ல நடக்காததையா காமிக்கிறாங்க? இதெல்லாம் பாத்துத் தான் ஊர் உலகத்துல இப்படி எல்லாம் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கணும்” என்றும் ‘விஷய ஞானத்துடன்’ பேசுபவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

உண்மையில் சமூகத்தில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏழைகளுக்கும் நடக்கும் எத்தனையோ கொடுமைகளை இதே ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. அதை விடுத்து இல்லாத அபத்தங்களைப் புனைந்து காண்பித்து நம்மைப் பதைபதைப்புடன் பார்க்க வைக்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? அறியாமையை மூலதனமாக்கி லாபம் சம்பாதிப்பதோடு மட்டுமல்லாமல் அதை உரம் போட்டு வளர்ப்பதிலும் இந்தச் சீரியல்களுக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன என்பது தான் நிதர்சனம்.

ஒரு பெண் சொல்கிறார். “நான் இந்தச் சீரியல்களையெல்லாம் கதைக்காகப் பார்ப்பதே இல்லை. அதில் வரும் பெண்கள் அணிந்திருக்கும் புடவைகள் நகைகள் இதிலிருந்து லேட்டஸ்ட் ஃபாஷன் என்னவென்று தெரிந்து கொள்ளத்தான் பார்க்கிறேன்” என்று. இது வேறயா?

எது எப்படியோ, சீரியல் பார்க்கும் பழக்கமுடைய, நம் அன்புக்குரிய நான்கு பெண்களையாவது இம்மடமையை விட்டொழிக்க‌த் துணை புரிவோம் என்று இந்த மகளிர் தினத்தில் உறுதி எடுத்துக் கொள்வோமா?

உழைக்கும் மகளிர் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

___________________________________________

தீபா
___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

ரூ 3,74,937 கோடி ஊழல்!

ஆண்டுதோறும் (இந்திய) மத்திய அரசின் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை – அதனைத் தொடர்ந்து அந்தந்த மாநில அரசின் பட்ஜெட்.  அதற்கு 3 தினங்களுக்கு முன்பிருந்தே சம்பளப்பிரிவினர் என்று சொல்லப்படுகின்ற 2 சதவீதமாகவுள்ள நடுத்தர வர்க்கம், அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கிற திருவாளர் பொதுஜனம் ஆகிய அனைவரும் பரபரப்பாக இதில் அளிக்கப்படவுள்ள‌ சலுகைகளில் பெருமளவு தனக்குத்தான் கிடைக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்போடு இருப்பார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் செய்தித்தாள்களில் நிதியமைச்சர் பெரிய பெட்டியுடன் வரும் படம், பாராளுமன்ற உறுப்பினராயிருக்கின்ற தனது அபிமான நடிக, நடிகையரில் எவ‌ரேனும் இருவரது புகைப்படங்களுடன் செய்திகள் வந்தவுடன் மேலோட்டமாக சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரிக்கு என்ன சலுகை என்பதைப் பார்த்து விட்டு முனகி க்கொண்டே சம்பளப் பிரிவினர் ஒதுங்கி விடுவர்.  திருவாளர் அன்றாடங் காய்ச்சியோ சிகரெட், பீடி விலை உயர்ந்திருக்கிறதா, இல்லையா என்று பார்ப்பதோடு அவரது கடமை முடிந்தது. ஆளும் ஓட்டுக் கட்சியினர் எதையும் படித்துப் பார்க்காமல் எளியோருக்கான மிகச்சிறந்த பட்ஜெட் என்ற பேட்டியையும், எதிர் கட்சியானால் வருகின்ற தேர்தலைக் குறி வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிற ஆசை வார்த்தை பட்ஜெட், மற்றபடி ஏழை எளியோருக்கு எதுவும் சொல்லப்படவில்லை.  இதில்லை – அதில்லை என்று அறிக்கையோடு அவர் பணியும் முடிந்து விடும்.  மாவட்டந்தோறும் இருக்கிற சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற முதலாளிகளின் சங்கத்தில் யார் தலைவராக இருக்கிறாரோ அவர் சார்ந்த வணிகத்திற்கு சலுகை இருந்தால் அதைச் சிறந்த பட்ஜெட் என்றும், அவருக்கு சலுகை இல்லையெனில் அந்த வியாபாரத்தைக் குறிப்பிட்டு அதற்கு சலுகை வழங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிப்பதுடன் அவர்களது பணி முடிந்து விடும்.

சம்பளப் பிரிவினரிடமும், அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாங்கும் உணவு உள்ளிட்ட பொருட்களிலும் கராராக வரி வசூல் செய்யும் அரசு, வரிச்சலுகை, வரி வசூலாகா விட்டால் தள்ளுபடி என்பதெல்லாம் அனைத்து பட்ஜெட்களிலும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குத்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக  பி.சாய்நாத், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு எழுதியிருக்கிற கட்டுரையில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

Corporate socialism's 2G orgy
படம் - http://www.thehindu.com

 

ஸ்பெக்டிரம் விஞ்சும் கார்ப்பரேட் ஆபாசம் !

– பி.சாய்நாத்

இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.

2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது.  இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.

ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை  மட்டுமே.  இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை.  இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல.  கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்.

பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய பட்ஜெட்டில் இந்த அளவிற்கான மிகப்பெரும் தொகை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி என்பது ஒரு புறமிருக்க, மறுபுறம் விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது ஆயிரக்கணக்கான கோடிகளில் குறைந்துள்ளது.  டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஆர்.ராம்குமார் குறிப்பிடுவதைப் போல – அந்தப் பகுதிக்கான வருவாய் செலவினம் என்பது ரூ. 5568 கோடி வரை குறைந்துள்ளது.  விவசாயத்திற்குள்ளே பயிர்ப்பாதுகாப்பு என்பதற்கு மட்டும் உள்ள தொகையில் ரூ. 4477 கோடி குறைக்கப்பட்டுள்ளது.  அந்தப் பிரிவில் விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மறைந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.  உண்மையில்  பொருளாதார சேவையில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு பெருமளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

இவை கருத்தளவிலான வருவாய் இழப்பு மட்டுமே என கபில் சிபல் கூட வாதிட முடியாது.  ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இது போன்ற எண்கள் ‘வராத வருவாய்ப் பட்டியல்‘ என்ற அளவில் சேர்த்துக் கொண்டே செல்லப்படுகிறது.  இது கார்ப்பரேட் முதலாளிகளின் கடலில் விழும் மழையோடு, ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரிகளில் அரசு விட்டுக்கொடுக்கும் சலுகைளையும் சேர்த்தால் சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெருமுதலாளிகளுக்குத்தான் பெரிய அளவில் பயன் முழுவதும் சென்று சேருகிறது.  தொகைகளைப் பார்த்தால் மனதை அதிர வைக்கிறது.  உதாரணத்திற்கு பெரிய அளவில் சுங்க வரி அரசிற்கு வர வேண்டியதை விட்டுக் கொடுக்கும் சில இனங்களைப் பார்ப்போம்.  வைரத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொள்வோம்.  இந்த நடப்பு பட்ஜெட்டில் மிக அதிக அளவிலான சுங்கவரி விட்டுக் கொடுத்தல் இதற்கு ரூ. 48,798 கோடியளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.  அதாவது ஒட்டுமொத்த பொது விநியோக முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகையில் பாதி இது.  கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ. 95,675 கோடியாகும்.

இந்த இந்தியாவில்தான் தனியார் லாபத்திற்காக கொள்ளையடிக்கப்படுகிற பொதுமக்களது பணப்புழக்கம் என்பது வளர்ச்சிக்கான அளவாக சொல்லப்படுகிறது.  வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கலில் தங்கத்திற்கும், வைரத்திற்கும் பெரிய அளவிலான வரிச்சலுகை என்பது, ஏழை தொழிலாளர்களின் பணியைக் காப்பதற்கான நடவடிக்கையே என்ற ஒரு வாதத்தை நீங்கள் ஏற்கெனவே  கேள்விப்பட்டிருக்கலாம்.  மனதைத் தொடுகிறது. சொல்லப்போனால் அது சூரத்திலோ, வேறு எங்குமோ ஒருவரின் வேலையைக் கூட காப்பாற்றவில்லை.  சுரங்கத் தொழிலில் வேலையின்றி பல ஒரிசா தொழிலாளர்கள் சூரத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.  இன்னும் பிற தொழிலாளர்கள் விரக்தியில் தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.  தொழிற்சாலைகளுக்கான சலுகை என்பது 2008ஆம் ஆண்டு நெருக்கடிக்கு முன்னரே இருந்து வருகிறது.  மத்திய அரசின் கார்ப்பரேட் பொதுவுடைமையினால் மகாராஷ்டிர தொழிற்சாலைகள் பெரும் அளவில் பயனடைந்துள்ளன.
ஆம் 2008 நெருக்கடிக்கு முந்தைய 3 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் தினத்திற்கு 1800 பேர் வீதம் வேலை இழந்துள்ளனர்.

பட்ஜெட்டிற்கு திரும்ப வருவோம்.  ’இயந்திரங்கள்’ என்ற தலைப்பிலும் பெரிய அளவில் சுங்க வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.  இவை கண்டிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் நவீன மருத்துவ சாதனங்கைள உள்ளடக்கியது என்பதுடன், அவற்றிற்கு ஏறக்குறைய வரியே விதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தங்கள் மருத்துவமனைப் படுக்கைகளில் 30 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதாக இந்த வரிச்சலுகை பெறுவதற்கு காரணம் சொல்லப்பட்ட போதிலும், அவை எப்போதும் நிகழ்வ‌தில்லை.  மாறாக மற்றவர்களிடமிருந்து மாறுபடுவது போல காண்பித்து, பல கோடி ரூபாய் தொழிலுக்கு (மருத்துவமனைகளுக்கு) சலுகையை பெற சொல்லப்படும் ஒரு சமாதானம் மட்டுமே.  சுங்க வரியில் மொத்த வருவாய் விட்டுக் கொடுத்தல்தான். இந்த பட்ஜெட்டில் இந்த இனத்திற்கு 1,74,418 கோடி (இதில் ஏற்றுமதி சலுகைக்கான எண்கள் சேர்க்கப்படவில்லை).

இது போன்ற சுங்க வரியில் அரசிற்கு வரவேண்டிய வருவாயை விட்டுக் கொடுப்பதன் மூலம் மறுபுறம் நுகர்வோர்களுக்கு விலை குறைப்பு என்ற வகையில் அந்தத் தொகைகள் மாற்றப்பட்டு இறுதியாக நுகர்வோரைச் சென்றடைகிறது எனச் சொல்லப்படுகிறது.  ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.  பட்ஜெட்டில் மட்டுமல்ல, வேறு எங்குமில்லை. (ஆனால் தற்போது சில தமிழக கிராமங்களில் 2ஜி என்ற வகையில் எந்தத் தொகையும் கொள்ளையடிக்கப்படவில்லை – மாறாக  மக்களிடம் மலிவுக் கட்டணத்தை வசூலிக்க வைத்ததன் மூலம் மீந்த பணம் மக்களைத்தான் சென்றடைந்துள்ளது என்ற வாதம்தான் ஓங்கி ஒலிக்கிறது).  ஆனால் வெளிப்படையாக தெரிவது யாதெனில் சுங்கவரி வராக்கடன் தள்ளுபடி என்பது தொழிற்சாலைக்கும், வியாபாரத்திற்கும் நேரடியாகக் கிடைக்கின்ற பயன் ஆகும்.  மக்களை / நுகர்வோரைச் சென்றடைகிறது என்பது ஏமாற்று வாதம்தான், உண்மையல்ல.   இந்த பட்ஜெட்டில் சுங்க வரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ 1,98,291 கோடி என சொல்லப்பட்டுள்ளது.  தெளிவாக 2ஜி ஊழல் இழப்பை விட அதிகம் (கடந்த ஆண்டு வருவாய் இழப்பு ரூ 1,69,121 கோடி).

இதில் கவரக்கூடிய அம்சம் யாதெனில், ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர்.  ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக  எவ்வளவு தொகை என்று பார்க்கலாம்.  தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி.  நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி.  கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை.  இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்).  இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது.  நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம் (பட்டியலைப் பார்வையிடவும்).

கள்ளத்தனமாக வெளிநாட்டு முதலீடு என்பது போலல்லாமல் – இந்தக் கொள்ளைக்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது.  இது முந்தையது போல் பல தனி நபர் குற்றங்களின் கூட்டுத் தொகையல்ல.  மாறாக, அரசின் கொள்கை முடிவு.  இது மத்திய (இந்திய) அரசாங்கத்தின் பட்ஜெட்.  இத்தகைய பணபலம் பொருந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சொத்து சேரும் வகையில் நடைபெறும் இந்தப் பரிமாற்றங்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை.  சொல்லப் போனால் பட்ஜெட் கூட இது எந்த வகையிலான வருந்தத்தக்க போக்கு என்பதை உணர்வதில்லை.  கார்ப்பரேட் வருமானத்தைப் பொறுத்தவரை வராத வகை வருவாய் என்ற விட்டுக்கொடுத்தல் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.  ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது.  மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.  சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம்.  2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது.  கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது.  ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘.  ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.

அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு.  பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது.  அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.

___________________________________
நன்றி – தி இந்து 07/03/11)
– தமிழாக்கம் : சித்ரகுப்தன்
_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

39
நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்கள் என்றுதான் இவர்கள் நமக்கு அறிமுகம். அதன் பின்னே இவர்கள் யார், இவர்களது வாழ்க்கை என்ன, என்று நாம் அறிந்திருக்க மாட்டோம். பரபரப்பு செய்திகளைத் தாண்டி நாகை மீனவர்களது முழு வாழ்க்கை குறித்தும் இந்த நேரடி ரிப்போர்ட் ஒரு சித்திரத்தை வழங்குகிறது.

மனித குலத்தின் நாகரிகத் தொட்டில்களெல்லாம் மீனவர்களோடு தொடர்புடையவை. அந்த வகையில் நமது ஆதிகாலத்தின் அடிப்படை வேர் இந்த மீனவர்களது கடற்கரையில்தான் இருக்கிறது. இன்று காலம் மாறியிருந்தாலும் இந்த மனித குல முன்னோடிகளின் வாழ்க்கை பெரிதும் மாறிவிடவில்லை. இவர்களது உழைப்பை உறிஞ்சும் இந்த சமூக அமைப்பு இவர்களுக்கு விதித்திருக்கும் தடைகள் ஏராளம். அத்தனையையும் ஏற்றுக் கொண்டு இவர்கள் இன்றும் எல்லா அபாயங்களோடும் கடலுக்கு சென்று வருகிறார்கள். அந்த வாழ்க்கையை உங்களுக்கும் சிறிது காட்டுகிறோம். வந்து பாருங்கள்…….

வினவு

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

ன்னும் விடிந்திருக்கவில்லை. ஆனால், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே எரிந்துக் கொண்டிருந்த குண்டு விளக்குகளும், குழல் விளக்குகளும் சிந்திய ஒளி, புதிதாக அந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத்தான் வழிகாட்டியாக இருக்கிறது. மற்றபடி மீனவர்கள், அந்த ஒளிச்சிதறலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இருட்டும் ஒளிதான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் போல்  சுழன்றுக் கொண்டிருந்தார்கள். சமவெளியின் வெளிச்சத்திற்கு வராத அவர்களது வாழ்வு குறித்து, இந்த இருட்டு மர்மமாக புன்னகைத்து கொண்டிருந்தது. அந்த போதிய வெளிச்சமற்ற அந்த மீன்பிடித் துறைமுகத்தின் நீள, அகலங்களும், குறுக்கு வெட்டு பகுதிகளும் அவர்கள் கால்களுக்கும், கைகளுக்கும் பழக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது

முந்தைய நாள் இரவுதான் தமிழக முதல்வர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி உடன்பாட்டில் சிக்கல் எழுந்திருப்பதாகவும், அதிக இடங்களை அவர்கள் கேட்பதால் மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேறும் என்றும் அறிக்கைவிட்டிருந்தார். நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் அதிகாலை 3.30 மணிக்கு வந்திறங்கிய நாளிதழ்கள், இந்த அறிக்கையையே முதல் பக்கத்தில் அச்சிட்டிருந்தன.

புதிய பேருந்து நிலையத்திலிருந்து, நாகப்பட்டினம் இரயில் நிலையத்துக்கு பேருந்தில் வந்தால் அதிகபட்சம் பத்து நிமிடங்களும், ஆட்டோவில் வந்தால் அதிகபட்சம் ஐந்து நிமிடங்களும் ஆகின்றன. இரயில் நிலையத்தை தாண்டி நடந்தால் வேளாங்கண்ணிக்கு செல்லும் பாதை வலப்பக்கமாக திரும்புகிறது. அந்தச் சாலையில் நுழைந்ததுமே எதிர்படும் இரயில்வே கேட்டை கடந்தால், இடப்பக்கம் சுமாராக நூறடி தொலைவில் மீன்பிடித் துறைமுகம்.

ஆனால், எந்த மீனவரும் கருணாநிதியின் அந்த அறிக்கை குறித்து கடந்த ஞாயிறன்று (06.03.11) பேசவும் இல்லை. அக்கறை காட்டவும் இல்லை. கோடிகளை ஊழலாகவும், சுயநலத்தை கூட்டணியாகவும் வைத்திருக்கும் கோமகன்கள் குறித்து இந்த பாமரர்கள் கவலைப்படவில்லை. படகிலிருந்து மீன்களை இறக்குவதும், ஏலம் விடுவதற்காக வணிகர்களிடம் ஒப்படைப்பதுமாக இருந்தார்கள். அலுமினிய பேசினை இடுப்பில் வைத்தபடி, சிறிய மீன்களை வாங்குவதற்காக காத்திருந்த பெண்களின் எண்ணங்களும் அன்றைய வருமானம், தர வேண்டிய வட்டி, அடகுக் கடையில் இருந்த ‘குந்துமணி’ தங்கம் ஆகியவற்றைக் குறித்தே இருந்ததை தங்களுக்குள் அவர்கள் பேசிக் கொண்டிருந்ததில் இருந்து உணர முடிந்தது. அது உழைப்பவர்களின் உலகம்.

புதியதாக யார் வந்தாலும், என்ன கேள்வி கேட்டாலும் தயங்காமல் பதில் சொல்கிறார்கள். அதேநேரம் அவர்களது கண்களும், கைகளும் நொடிப்பொழுதைக் கூட வீணாக்காமல் பணிகளை செய்து கொண்டேயிருக்கின்றன.

மீன்பிடித் துறைமுகம் என பொதுவாக அப்பகுதியை அழைக்கவோ, அடையாளம் காட்டவோ முடியாதபடி மீனவர்கள் தங்கள் வசதிக்காகவும், பணிக்காகவும் பகுதிப் பகுதியாக அத்துறைமுகத்தை பிரித்திருக்கிறார்கள். ஓய்வுக்காக நிறுத்தப்பட்ட விசைப்படகுகள் ஒரு பக்கம் மிதக்க, மறுபக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் பராமரிப்புப் பணிகள் நடந்துக் கொண்டிருந்தன. அந்தப் பக்கத்தில் பிடித்து வந்த மீன்கள் ஏலத்தில் கேட்கப்பட்ட தொகைக்கு ஏற்ப உயர்ந்தும், தாழ்ந்தும் கொண்டிருந்தன என்றால், இந்தப் பக்கத்தில் கடலிலிருந்து கரைக்கும், கரையிலிருந்து கடலுக்கும் படகை இழுத்தபடி இருந்தார்கள். மொத்தத்தில் எல்லா பக்கத்திலும் மனித நடமாட்டம் இருந்தது. வேலைகள் நடந்துக் கொண்டிருந்தது.

அந்த உழைப்பின் உற்சாகத்தை பார்த்தது போல படிமங்களில் வடிப்பது கடினம். கடல் அன்னை எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயோடு துணிவை மட்டுமே மூலதனமாக கொண்டு நித்தம் சமர் புரியும் அந்த மனிதர்களின் சுவாசமும், இதற்கு இணையாக மணம் வீசும் மீன்களும் அந்த அழகான வெளியை உழைப்பின் கம்பீரத்தோடு நிரப்பியிருந்தன.

அதேபோல் அங்கிருந்த அனைவரையும் மீனவர்கள் என ஒரே அடையாளத்தோடு அழைக்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை. கடலுக்கு சென்று மீன் பிடிப்பவர்கள் மட்டுமே மீனவர்களாக சுட்டிக்காட்டப் படுகிறார்கள். மற்றவர்கள் மீனவர்களை சார்ந்து இயங்கும் தொழிலாளர்கள். ஒருவர் மற்றவரின் வேலையில் தலையிடுவதும் இல்லை; குறுக்கிடுவதும் இல்லை. சரியாகச் சொல்வதாக இருந்தால் மீனவர்களின் தலைமையில் அது ஒரு விறுவிறுப்பான உழைப்பாளிகளது குடும்பம்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
விசைப்படகுகள் பழுது பார்க்கப்படுகின்றன

விசைப்படகுகளை பழுது பார்ப்பதற்கு மட்டும் சுமாராக இருநூறு தொழிலாளர்கள் வரை இருக்கிறார்கள். வேலை நடக்கும் நாட்களில் தினக் கூலியாக அவர்களுக்கு நாளொன்றுக்கு ரூபாய் முந்நூறு முதல் ஐந்நூறு வரை ஊதியமாக கிடைக்கிறது. எல்லா நாட்களும் வேலை இருக்கும் என்று சொல்ல முடியாது. இரும்பாலான விசைப்படகு என்றால், துருவை சுரண்டுவது, வெல்டிங் செய்வது, என்ஜினை சர்வீஸ் பார்ப்பது, பெயிண்ட் அடிப்பது, அளவுக்கு அதிகமாக சேர்ந்த பாசிகளை அப்புறப்படுத்துவது ஆகியவை அடங்கும். மரத்தாலான விசைப்படகு என்றாலும் ஏறக்குறைய வேலைகள் இரும்பாலான விசைப்படகை பழுது பார்ப்பது போன்றதுதான். ஆனால், வெல்டிங்குக்கு பதில், மரச்சட்டங்களை பிணைப்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
விசைப்படகு பழுது பார்க்கும் பணியில்

அன்றைய தினம் கரைக்கு வந்த குமரி மீனவரின் விசைப்படகை பழுது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த மீனவர் கடந்த ஆறு மாதங்களாக வீட்டுக்குச் செல்லாதவர். ஆந்திரா, மேற்கு வங்கம், நாகப்பட்டினம்… என கடலோட்டத்துக்கு ஏற்ப பயணம் செய்துக் கொண்டிருப்பவர். கடல் பயண நாட்களில், கடலில் சிக்னல் கிடைத்தால் கடலிலும் இல்லாவிட்டால் கரைக்குத் திரும்பியதும் முதல்வேலையாக வீட்டை தொடர்புக் கொண்டு தான் உயிருடன் இருக்கும் விஷயத்தை தெரிவிப்பவர். ‘இன்னமும் ஆயிரம் ரூபா கூட சம்பாதிக்கல. எந்த மூஞ்சியை வச்சுகிட்டு வீட்டுக்கு போக..? பசங்களுக்கு வேற ஸ்கூல் பீஸ் கட்டணும். பயமா இருக்கு…’ என குரல் நடுங்க தன் வேதனையை பகிர்ந்துக் கொண்டார்.

இந்த குமரி மீனவர் போல மற்ற ஊர்களைச் சேர்ந்த எண்ணற்றவர்கள் நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு விசைப்படகை பழுது பார்க்கவும், பிடித்த மீன்களை விற்கவும் வருவார்கள் என அங்கிருந்தவர்கள் அவர் நகர்ந்ததும் குறிப்பிட்டார்கள். மற்ற ஊர்களிலிருந்து மீன்பிடிக்க வரும் மீனவர்களை உள்ளூர் மீனவர்கள் போட்டியாளராக கருதுவதில்லை. தேவையான உதவிகளை செய்கிறார்கள். அது போல இவர்களும் கடலின் போக்கிற்கேற்ப மற்ற ஊர்களுக்கு செல்வார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களைப் பொறுத்தவரை கடல் என்பது யாருடைய தனிச்சொத்துமல்ல. அது விரிந்து கிடக்கும் ஒரு பொக்கிஷம். அங்கு திறமையுடன் மீன்பிடித்து செல்வது அவரவர் பொறுப்பு. அதில் பாத்தியதை ஏதுமில்லை. இதனால் மீன்பிடிப்பு காரணமாக மீனவர்களுக்குள் சண்டை வராது என்பதல்ல. மாறாக கடலை ஒரு தனிச்சொத்தாக பார்க்கும் முதலாளித்துவ கண்ணோட்டம் அந்த வெள்ளேந்தி மனிதர்களிடத்தில் இல்லை. அந்த வகையில் மீனவர்களது சிந்தனை சோசலிசத்திற்கு நெருக்கமானது.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
விசைப்படகு தொழிற்சாலை

ரையை ஓட்டி, விசைப்படகுகளை தயாரிக்கும் நிறுவனங்கள் சின்னச் சின்னதாக இயங்குகின்றன. இரும்பாலான பெரிய விசைப்படகுகளை தயாரிக்க ரூபாய் 15 முதல் 20 லட்சம் வரை செலவாகிறது. 6 எம்.எம். அல்லது 8 எம்.எம். இரும்புத் தகடுகளை இதற்கு பயன்படுத்துகிறார்கள். இந்தவகையான விசைப்படகுகளை செய்து முடிக்க 3 மாதங்கள் வரை ஆகுமாம். 5 தொழிலாளர்கள் தினமும் 12 மணிநேரங்கள் வரை இதற்காக உழைக்கிறார்கள். இவர்களுக்கு நாளொன்றுக்கு கூலியாக ரூபாய் 175 கிடைக்கிறது. இத்தொழிலில் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்தவர்களே ஈடுபடுத்தப்படுகிறார்கள். காரணம், மலிவான கூலிக்கு அவர்களே வருகிறார்களாம். இப்படி தயாரிக்கப்படும் இரும்பாலான விசைப்படகு 5 ஆண்டுகள் வரை உழைக்கும் என்கிறார்கள். அதன்பிறகு வேறு விசைப்படகைத்தான் உருவாக்க வேண்டும்.

பதினைந்து ஆண்டுகள் வரை உழைக்கக் கூடிய மரத்தாலான பெரிய விசைப்படகை தயாரிக்க ரூபாய் முப்பது லட்சம் வரை செலவாகிறது. வாகை மரத்தையே இதற்கு பயன்படுத்துகிறார்கள். டீ, சாப்பாடு உட்பட நாளொன்றுக்கு ரூபாய் ஐநூறை கூலியாக பெற்றுக் கொண்டு ஆறு தொழிலாளர்கள், தினமும் 12 மணிநேரங்கள் இதற்காக உழைக்கிறார்கள். அப்போதுதான் நான்கு மாதத்தில் ஒரு விசைப்படகை உருவாக்க முடியும் என்கிறார்கள்.

இவை தவிர சின்னதான விசைப்படகுகளும் தயாரிக்கப்படுகின்றன. ஆனால், இரும்பாலான விசைப்படகோ அல்லது மரத்தாலான விசைப்படகோ; பெரியதோ, சிறியதோ, நாள், நட்சத்திரம் பார்த்து, பூஜை செய்த பிறகே தயாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
இறுதிக்கட்ட தயாரிப்பில்….

இந்த தயாரிப்பு நிறுவனங்களை ஓட்டி சின்னச் சின்ன லேத் பட்டறைகள் இயங்குகின்றன. தேவையான பொருட்களை சப்ளை செய்கின்றன. ஆர்டர் வராத நாட்களில் விசைப்படகை தயாரிக்கும் பணியிலுள்ள தொழிலாளர்கள் சும்மாதான் இருக்கிறார்கள் அல்லது வேறு ஊர் அல்லது மாநிலங்களுக்கு தச்சுப் பணிக்கோ அல்லது வெல்டிங் பணிக்கோ செல்கிறார்கள். அதுபோன்ற நேரங்களில் கிடைத்த கூலிகளை பெற்றுக் கொள்வார்களாம்.

இப்படி பணிபுரியும் தொழிலாளர்களில் 96%க்கும் அதிகமானவர்கள் தொழில் முறை கல்வியை கற்றவர்கள் அல்ல. அனுபவம் மற்றும் பயிற்சியின் வழியாகவே தொழிலை கற்றவர்கள். அதிகபட்சம் பன்னிரெண்டாம் வகுப்பும், குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பும் படித்தவர்களாக இந்தத் தலைமுறையை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களில் பலரும் மூன்றாம் வகுப்பை தாண்டாதவர்கள்.

என்றாலும் கல்வி கற்காதது அவர்களது தொழில் திறமையை எந்தவகையிலும் பாதிக்கவில்லை. தங்கள் அனுபவத்தின் வழியாக சுயமாக பல கருவிகளை கண்டுபிடித்திருக்கிறார்கள். உழைப்பை முடிந்தவரை எளிமையாக்கியிருக்கிறார்கள்.

உதாரணமாக விசைப்படகுகளை கரைக்கு இழுத்து, மீண்டும் கடலுக்கு விடும் பணியில் இருநூறு தொழிலாளர்கள் வரை ஈடுபட்டிருக்கிறார்கள். சராசரியாக இவர்களுக்கான நாள் கூலி ரூபாய் இருநூறு வரை இருக்கிறது. பெரிய விசைப்படகை கரைக்கு இழுக்கவும், கரையிலிருந்து அப்படகை கடலுக்கு விடவும் ஒரு கருவியை தயாரித்திருக்கிறார்கள். உருளை வடிவில் காணப்படும் அக்கருவியின் மேல் பாகம் வட்டமாக, மரப்பிடிகளுடன் இருக்கிறது. அப்பிடியை பிடித்தபடி தொழிலாளர்கள் நடந்தபடியே உருளையை சுற்றுகிறார்கள். இந்த உருளையுடன் பிணைக்கப்பட்ட இரும்புக் கம்பியின் மறுமுனை கரை அல்லது கடலில் இருக்கும் விசைப்படகுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. எனவே தொழிலாளர்கள் உருளையை சுற்றச் சுற்ற கரை அல்லது கடலுக்கு விசைப்படகு வருகிறது அல்லது செல்கிறது.

ஆனால், இப்பணியை முடிப்பதற்குள் அந்தத் தொழிலாளர்கள் பெருமளவு உதிரத்தை வியர்வையாக வெளியேற்றி விடுகிறார்கள். கால்களை வலுவாக ஊன்றி உருளையை சுற்றுவதால், கால் நரம்புகளும், கை நரம்புகளும் சுருள் சுருளாக அவர்கள் உடம்புக்குள் சுற்றிக் கொண்டு, தோலுக்கு வெளியே கோலி குண்டு அளவுக்கு கொப்பளம் போல் காட்சியளிக்கிறது. இந்தவகை உருளையை அவர்கள் உருவாக்குவதற்கு முன்பு வெறும் கைகளால்தான் கயிறு கட்டி விசைப்படகை இழுப்பார்களாம். ஆதிகாலத்தின் அடிப்படையான அறிவியல் கண்டுபிடிப்புகளெல்லாம் இத்தகைய உழைப்பாளிகளது படைப்புகளே என்பதற்கு இந்த தொழிலாளிகளே சாட்சி.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் இருக்கின்றன. அதிகபட்சம் நான்கு தெருக்களை கொண்டது ஒரு கிராமம். மொத்தமாக 50 ஆயிரம் மக்கள் இக்கிராமங்களில் வசிப்பதாக சொல்கிறார்கள். 2001-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுப்பின்படி, நாகை மாவட்டத்தில் 92,525 மக்கள் வசிப்பதாக அரசாங்கம் தெரிவிப்பதால் http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 கூட, குறைய இருந்தாலும் இந்தத் தொகையை ஓட்டித்தான் மக்கள் அங்கு வாழ்வதாக கொள்ளலாம்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
சுனாமிக்கு பின்னர் அரசு கட்டித்தந்த கான்கிரீட் வீடுகள்

கடற்கரையையொட்டி குடிசை வீடுகளும், சற்றே தள்ளி ஓட்டு வீடுகளும் இருக்கின்றன. ஆங்காங்கே காங்கிரீட் வீடுகளையும் பார்க்க முடிந்தது. வேளாங்கண்ணிக்கு செல்லும் சாலைக்கு மறுபுறம் சுனாமிக்கு பிறகு மீனவர்களுக்காக அரசு கட்டிக் கொடுத்த வீடுகள் இருக்கின்றன. ஆனால், பல வீடுகளில் கதவு உடைந்திருக்கிறது. சுவற்றில் விரிசல்கள் காணப்படுகின்றன. தவிர, மீனவர்கள் என்னும் பெயரில் அங்கு வசிப்பவர்களில் பலர் மீன்பிடி வேலைகளில் ஈடுபடுபவர்கள் அல்ல என்கிறார்கள்.

எனவே கடற்கரையை ஓட்டிய பகுதிகளிலேயே இன்றும் பெரும்பாலான மீனவர்கள் வசிக்கிறார்கள். ஒரு தெருவுக்கு மூன்று பெட்டிக் கடைகள் வரை இருக்கின்றன. உண்மையில் அவை ‘பொட்டிக்’ கடைகள். ‘லேஸ்’ சிப்சில் ஆரம்பித்து கோக், பெப்சி வரை அக்கடைகளில் கிடைக்கின்றன.

ரேஷன் கடைகளில் பொருட்கள் விற்கப்பட்டாலும் பெரும்பாலானவர்கள் – அவர்கள் விசைப்படகு உரிமையாளராக இருந்தாலும் சரி, உரிமையற்ற படகில் மீன் பிடிக்க செல்பவர்களாக இருந்தாலும் சரி – ரேஷன் அரிசியில் உணவு சமைப்பதில்லை. தங்கள் கார்டுக்கான அரிசியை வாங்கி வெளியில் விற்றுவிட்டு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படும் அரிசியையே வாங்குகிறார்கள். அதைப் பொங்கி கால் வயிற்றுக்கே உண்கிறார்கள். ‘வெயில்லயும், கடல்லயும் உழைச்சுட்டு வர்றோம். கால் வயித்துக்கு கஞ்சி குடிச்சாலும் நல்ல அரிசில குடிச்சாதாங்க எங்களால உசுரோட வாழ முடியும்…’

அனைத்து கிராமங்களையும் இணைக்கும் பிரதான சாலையில் ஷேர் ஆட்டோக்கள், ‘சர் சர்’ என விரைகின்றன. எந்த ஷேர் ஆட்டோவும் நிறுத்தத்தில் இரண்டு நிமிடங்களுக்கு மேல் நிற்பதில்லை. குறைந்தது 4 பேராவது ஏறிவிடுகிறார்கள். வேலை நேரங்களில், ஷேர் ஆட்டோக்களின் பின்புறம் பெண்களின் அலுமினிய பேசின்கள், மீன்களின் மணத்துடன் பயணம் செய்கின்றன.

கிராமங்களில் இந்து, முசுலீம், கிறித்தவ என்று மும்மத தெய்வங்களும் கொலு வீற்றிருக்கிறார்கள். திருவிழா காலங்களில் அவர்களுக்கு ஒருகுறையும் இல்லாமல் படையலிடப்படுகிறது. அந்தச் செலவை அப்பகுதி மக்களே ஏற்கிறார்கள்.

அரசு மருத்துவர் ஒருவர், அங்கு தனியாக க்ளினிக் வைத்திருக்கிறார். மாலை 5 மணி முதல் 8 மணி வரை ‘பார்வை நேரம்’. பொதுவாக அங்கு வசிக்கும் மீனவர்களுக்கு நோய் வந்தால், முதலில் ‘அய்யரை’ சந்திப்பார்களாம். விபூதியை மந்தரித்து அல்லது மந்திரம் சொல்லி தாயத்தை அவர் கொடுப்பாராம். அதை பூசிய பிறகும் அல்லது கட்டிக் கொண்ட பிறகும் நோய் குணமாகாவிட்டால் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு செல்வார்களாம்.

ஆனால், அரசு மருத்துவமனையில் குறை சொல்லும்படி எதுவும் இல்லை என்கிறார்கள். ‘ஐநூறு ரூபா வரை கேட்பாங்க. கொடுத்துட்டா நல்லா கவனிப்பாங்க…’ தவறாமல் பிரசவத்துக்கும் அங்குதான் செல்கிறார்கள். ‘ஆயிரம் ரூபா கொடுத்தா போதும்…’

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
உப்பில் பதப்படுத்தப்படும் மீன்கள்

மீன்பிடித் தொழிலில் ஈடுப்பட்டிருக்கும் மீனவர்களில் ஐநூறு பேர்கள் மட்டுமே விசைப்படகு உரிமையாளர்களாக இருப்பதாக சொல்கிறார்கள். 750 பெரிய விசைப்படகுகளும், 300 சிறிய விசைப்படகுகளும் இவர்களுக்கு சொந்தமாக இருக்கின்றன. இரண்டு அல்லது 3 படகுகளுக்கு உரிமையாளராக இருப்பவர்களும் உண்டு. இவர்கள், கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும்போது தன் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரை அந்த விசைப்படகுடன் அனுப்புகிறார். மொத்த மீனவர்களில் படகு எனும் உடமையற்ற மீனவர்கள்தான் ஆகப்பெரும்பான்மையினர்.

சிறிய விசைப்படகு என்றால், அதில் மூன்று அல்லது நான்கு மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். இப்படி செல்பவர்களில் ஒருவர் படகின் உரிமையாளர். இந்த மீனவர்கள் கடலுக்குள் வெகுதூரம் செல்வதில்லை. குறிப்பிட்ட கி.மீ.க்குள்ளேயே சுற்றி,  அதிகபட்சம் 2 நாட்கள் வரை கடலில் இருந்து மீன்பிடிக்கிறார்கள். இப்படி மீன் பிடிக்கச் செல்ல ஆகும் செலவை தன்னுடன் தன் படகில் வரும் மற்ற மீனவர்களுடன் உரிமையாளரும் சமமாக பகிர்ந்துக் கொள்கிறார்.

ஆனால், மீன்களை பிடித்து வந்து கரையிலுள்ள வணிகர்களிடம் ஏலத்துக்கு விற்றதும் கிடைக்கும் பணத்தில் சரி பாதியை – அதாவது ஐம்பது சதவிகிதத்தை – படகின் உரிமையாளர் மட்டுமே எடுத்துக் கொள்கிறார். மீதமுள்ள ஐம்பது சதவிகிதத்தையே அப்படகில் சென்ற மற்ற மீனவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துக் கொள்கிறார்கள். எனவே எவ்வளவுக்கு எவ்வளவு மீன் பிடிக்கிறார்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு உரிமையற்ற படகில் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வருமானம். அந்தவகையில் படகு வைத்திருப்பவரும், வைத்திராதவரும் இங்கே மீன்பிடி எனும் தொழிலை வைத்துத்தான் பிழைக்க முடியும். படகு இருந்து விட்டதனாலேயே ஒருவர் அன்றாடம் இலாபம் ஈட்ட முடியாது.

பணப் பரிமாற்றத்தை பொருத்தவரை சிறிய விசைப்படகுகளுக்கு சொல்லப்பட்டதேதான் பெரிய விசைப்படகுகளுக்கும் பொருந்தும். ஆனால், பெரிய விசைப்படகுகளில் 6 முதல் 8 வரையிலான மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். இவர்களில் ஒருவர், விசைப்படகின் உரிமையாளர். இவர்கள் ஆறு நாட்கள் வரை கடலில் இருக்கிறார்கள். வெகுதூரம் வரை பயணம் செய்கிறார்கள். கடலின் நீரோட்டத்தை பொருத்தே அவர்களது பயணம், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அமைகிறது. இவர்கள் அதிகம் ஆழ்கடலில்தான் மீன்பிடிக்கிறார்கள். சமயத்தில் இவர்கள் மேற்கு வங்கம் வரைக்கும் கூட செல்வதுண்டு.

சிறிய விசைப்படகோ அல்லது பெரிய விசைப்படகோ, மீன் பிடிக்கச் செல்வது என்பது சாதாரண விஷயமாக இருப்பதில்லை. இதற்கான முன் தயாரிப்பே பல ஆயிரங்களை விழுங்குகிறது. ஒவ்வொருமுறை மீன் பிடிக்கச் செல்லும்போதும் சிறிய விசைப்படகு என்றால் ரூபாய் 5 ஆயிரம் முதல் ரூபாய் 10 ஆயிரம் வரையிலும், பெரிய விசைப்படகாக இருந்தால் ரூபாய் 20 ஆயிரம் முதல் ரூபாய் 30 ஆயிரம் வரையிலும் முதலீடு செய்யவேண்டும். இதில், டீசலே பெரும் தொகையை விழுங்கும் அரக்கனாக இருக்கிறது. சிறிய விசைப்படகோ அல்லது பெரிய விசைப்படகோ ஒரு மணிநேர பயணத்துக்கு 10 லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. எனவே கையிருப்பில் தேவையான டீசலை சேகரிக்க வேண்டும்.

லிட்டருக்கு 10 ரூபாய் டீசல் விற்ற காலத்தில், ஒரு கிலோ இறால், ரூபாய் 700 முதல் ரூபாய் 800 வரை விலைபோனதாம். ஆனால், இன்று டீசல் விற்கும் விலையில், அதே இறால் மீன்கள் கிலோ 400 ரூபாய் முதல் ஐநூறு ரூபாய் வரையே விலைபோகிறதாம். எனவே டீசல் விலை ஏறும்போதெல்லாம் தங்கள் கழுத்து இன்னொரு பிடி அழுத்தத்துடன் நெறிக்கப்படுவதாக மீனவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவில் மீன்களுக்கென்று மிகப்பெரும் உள்நாட்டு சந்தை இருந்தாலும், அதற்கென்று போதிய மீன்வளம் இருந்தாலும் மீன்கள் விலை எப்போதும் அதிகம் இருப்பதற்கு ஒரு காரணம் இந்த டீசல் விலை உயர்வுதான். நமது அன்றாட காய்கறிகளின் விலை உயர்வுக்கு காரணமான டீசல்தான் மீனின் விலையை உயர்த்துவதற்கும் காரணமாகிறது. எனினும் மீனின் உயர்ந்த விலைக்கான ஆதாயம் மீனவர்களை சென்றடைவதில்லை. அது விவசாயிகளுக்கும் பொருந்துவது போலத்தான்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
ஐஸ் கட்டி தயாரிக்கும் தொழிற்சாலை

என்றாலும் டீசல் இல்லாமல் விசைப்படகை இயக்க முடியாது. எனவே என்ன விலை கொடுத்தாவது அதை வாங்கியாக வேண்டும். இதற்கு அடுத்து பெரிய விசைப்படகுகளில் செல்பவர்கள் கடலிலேயே சமைத்துச் சாப்பிட உணவுப் பொருட்களையும், மண்ணெண்ணெய்யையும் வாங்கியாக வேண்டும். பிறகு ஐஸ் கட்டிகள். சிறியதோ, பெரியதோ அனைத்து மீன்பிடி விசைப்படகுகளுக்கும் ஐஸ் கட்டிகள் அவசியம்.

இந்த ஐஸ் கட்டிகளை தயாரிப்பதற்கென்றே நாகப்பட்டின கடற்கரையை ஒட்டி 30க்கும் மேற்பட்ட ‘கம்பெனி’கள் இயங்குகின்றன. ஒரு கட்டி 50 கி. எடையில், ரூபாய் 60க்கு விற்கப்படுகிறது. சீசன் சமயத்தில் ஒவ்வொரு கம்பெனியும் முந்நூறு கட்டிகள் வரையும், சாதாரண நாட்களில் 50 கட்டிகள் வரையிலும் விற்கின்றன. ஒவ்வொரு கம்பெனியிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் 2 ஷிப்டுகளில் வேலை பார்க்கிறார்கள். தினமும் இரண்டு மணிநேரங்கள் மின்வெட்டு இருக்கிறது. என்றாலும் மின் கட்டணமாக குறைந்தது ஒவ்வொரு கம்பெனியும் ஒவ்வொரு முறையும் ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்துகின்றன. ஒரு பணியாளர் மாதம் ஒன்றுக்கு 15 ஷிப்டுகள் வரையே பணிபுரிய அனுமதிக்கப்படுகிறார். இதற்கு ஊதியமாக ரூபாய் மூவாயிரம் ரூபாய் முதல் நான்காயிரம் வரை பெற்றுக் கொள்கிறார்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

ஒவ்வொரு விசைப்படகு உரிமையாளரும், ஒவ்வொரு ஐஸ்கட்டி கம்பெனியுடன் தொடர்பில் இருக்கிறார். எனவே மீன் பிடிக்கச் செல்லும்போது தேவையான ஐஸ் கட்டிகளை கடனுக்கு வாங்கிச் செல்கிறார்கள். கரைக்கு வந்ததும் – மீன் பிடித்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; லாபம் வந்தாலும் சரி, நஷ்டமடைந்தாலும் சரி – உரிய பணத்தை கொடுத்துவிட வேண்டும்.

இப்படி டீசலில் ஆரம்பித்து, ஐஸ் கட்டிகள் வரை அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொண்டுதான் ஒவ்வொருமுறையும் கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறார்கள்.

அதாவது முன் பணமாக ஒவ்வொருமுறையும் ஒரு தொகையை ஒரு மீனவர் செலவழித்தாக வேண்டும். அப்போதுதான் அவரால் மீன்பிடிக்கவே கடலுக்கு செல்ல முடியும். இப்படி செலவழித்த பணத்துக்கு மேல் அவர் சம்பாதிக்க வேண்டுமானால் அவர் ஏராளமான மீன்களை ஒவ்வொருமுறையும் பிடித்தாக வேண்டும். அப்படி பிடித்தால்தான் அந்தமுறை அவர் கடலில் எத்தனை நாட்கள் இருந்தாரோ அத்தனை நாட்களுக்கான ஊதியம் கிடைக்கும் என்பது மட்டுமல்ல, அடுத்தமுறை அவர் கடலுக்குச் செல்ல முன் பணமும் கொடுக்க முடியும்.

ஆனால், ஒவ்வொருமுறையும் ஏராளமான மீன்கள் வலையில் சிக்கும் என்று சொல்ல முடியாது. பலமுறை பல மீனவர்கள் குறைந்த எண்ணிக்கையிலான மீன்களுடன் கரைக்குத் திரும்பியிருக்கிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
படகு கரைக்கு வந்தவுடன்  மீன்களை உடனடியாக ஐஸ் கொண்டு பாதுகாக்கும் பணியில்

ஒருவேளை கடலுக்கு செல்லும் மீனவர்களின் விசைப்படகுகள் நடுவழியில் பழுதாகி நின்றுவிட்டால், ஓயர்லெஸ் கருவி மூலம் தங்களுக்கு அருகில் இருக்கும் விசைப்படகுக்கு தகவல் தெரிவிக்கிறார்கள். அப்படி தகவல் தெரிவிக்க முடியாவிட்டால், வேறு யாராவது வந்து காப்பாற்றும் வரை நடுக்கடலிலேயே, எத்தனை நாட்களானாலும் இருக்கிறார்கள். பொதுவாக ஒவ்வொரு விசைப்படகும் எந்த திசையை நோக்கிச் செல்கிறது என்பதை கரையில் இருக்கும் மற்ற மீனவர்களுக்கு தெரிவித்துவிட்டே பயணப்படுவதால், குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த விசைப்படகு திரும்பாவிட்டால், அப்படகு சென்ற திசை நோக்கி உதவும் படகு விரைகிறது. பழுதாகி நிற்கும் படகை கயிறு கட்டி கரைக்கு இழுத்து வருகிறது. அதுபோன்ற நேரங்களில் பழுதான படகில் இருக்கும் மீனவர்கள்தான், அந்த உதவும் படகுக்கான டீசல் செலவு முதற்கொண்டு உணவு செலவு வரை அனைத்தையும் ஏற்க வேண்டும்.

அதேபோல் பெரிய விசைப்படகில் செல்லும் மீனவர்கள் என்னதான் போதிய மருந்து, மாத்திரைகளுடன் சென்றாலும் பாதி வழியில் அப்படகில் இருக்கும் மீனவர்களில் ஒருவர் இனம்புரியாத நோயால் பாதிக்கப்பட்டால், உடனடியாக குறிப்பிட்ட நாட்களுக்கு முன்பாகவே கரைக்கு திரும்பி விடுகிறார்கள். இதுபோன்ற தருணங்களில் ஏற்படும் நஷ்டங்களை நோயால் பாதிக்கப்பட்ட மீனவரே ஏற்கிறார்.

தப்பித் தவறி நடுக்கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது படகில் ஓட்டை விழுந்துவிட்டால், கடலில் மூழ்கி இறப்பதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார்கள்.

இப்படி அடுக்கடுக்காக இயற்கையாலும், மனிதர்களாலும் நஷ்டங்கள் ஏற்படுவதால், வேறு வழியின்றி வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள் அல்லது நகையை அடகு வைக்கிறார்கள்.

அதனாலேயே திருமணம் செய்து கொள்ளும் எந்த ஆண் மீனவரும் 10 சவரன் முதல் 25 சவரன் வரை நகை போடும்படி பெண் வீட்டாரை வற்புறுத்துகிறார். இந்த நகைகளை எந்த மீனவப் பெண்ணும் அணிவதில்லை. அவை பெரும்பாலும் அடகுக் கடையிலும், வணிகர்களின் வீடுகளிலும், விசைப்படகு உரிமையாளரின் வீட்டு பீரோவிலுமே உறங்குகின்றன.

நகையை அடகு வைப்பது தவிர, விசைப்படகு உரிமையாளர் அல்லது மீன்களை ஏலத்தில் எடுக்கும் வணிகர் ஆகியோரிடம் வட்டிக்கு பணம் வாங்குகிறார்கள். கந்து வட்டி, மீட்டர் வட்டி என்ற சொற்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. பதிலாக ரூபாய்க்கு ஒரு பைசா, இரண்டு பைசா, மூன்று பைசா என வட்டியை குறிப்பிடுகிறார்கள். இது மீன் விற்கும் பெண்களுக்கு நாள் கணக்கிலும், கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு வாரக் கணக்கிலுமாக அமைகிறது.

பலரது நகைகள் அடமானத்தில் மூழ்கியிருக்கின்றன. ஆனால், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாத எந்த மீனவரும் இல்லை என நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார்கள். கடல் இருக்கும் வரை தங்களால் உழைக்க முடியும். கடனை அடைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களிடம் வேரூன்றி இருக்கிறது. ஆயினும் இந்த நம்பிக்கையை கந்துவட்டிக்காரர்கள்தான் அறுவடை செய்கிறார்கள். அரசு வங்கிகளோ இந்த பாமர மனிதர்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை.

எந்த அரசு வங்கியும் இவர்களுக்கு கடன் தருவதில்லை என்பதால், வெளியிலேயே பணம் வாங்குகிறார்கள். விசைப்படகு உரிமையாளர் தனது படகில் உடன் வரும் குறிப்பிட்ட மீனவருக்கு கடன் தருகிறார் என்றால் மீன் பிடித்து வரும் லாபத்தில் அதை கழித்துக் கொள்வார் என்று பொருள். மீன்களை ஏலம் எடுக்கும் வணிகர், மீனவருக்கு கடன் தருகிறார் என்றால், அந்த மீனவர் பிடித்து வரும் மீன்கள் அந்த வணிகருக்கு மட்டுமே சொந்தம் என்று பொருள்.

இதுதவிர, மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை ஏலம் எடுப்பதற்காகவே குறிப்பிட்ட சில வணிகர்கள் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர வேறு யாரும் ஏலம் எடுக்க முடியாது. எனவே அவர்கள் சொல்வதுதான் விலை. மீனவர்களுக்கு அந்தவிலை கட்டுப்படியாகவில்லை என்றாலும் வேறு வழியில்லை. அவர்களுக்குத்தான் விற்றாக வேண்டும்.

ஆறு மாதங்களாக தன் வீட்டுக்குச் செல்லாத அந்த குமரி மீனவரின் முகமே பெரும்பாலான நாகை மீனவர்களின் முகங்களாகவும் இருக்கின்றன.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
வலை பின்னும் வேலையில்….

டலில்  எந்தளவுக்கு மீனவருக்கு வேலை இருக்கிறதோ அதே அளவுக்கு கரையிலும் வேலை இருக்கிறது. வலையை பிரிப்பது, காய வைப்பது, கிழிந்த வலையை தைப்பது, புதிய வலையை பின்னுவது, படகை கழுவுவது என அடுக்கடுக்கான வேலைகள் அவர்களுக்காக காத்திருக்கின்றன. அதனாலேயே கரையைத் தொட்டதும் அவர்கள் தங்கள் வீட்டுக்குச் செல்வதில்லை.

எந்தப் படகுக்கு எந்த வகையான அச்சில் வலை வேண்டும் என மீனவர்களுடன் கலந்தாலோசித்தே மீன் வளத்துறை வலைகளை தயாரிக்கிறது. ஆனால், அதில் உள்ளடி வேலைகள் நிறைய இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாக தனியாரிடம் வலை வாங்குவது தொடர்கிறது.

ஒவ்வொரு விசைப்படகுக்கும் அரசாங்க லைசன்ஸ் வாங்க வேண்டும். அப்படி வாங்கும் லைசன்ஸ் அப்படகு கடலில் மிதக்கும் வரைதான் செல்லுபடியாகும். பழுதாகி, வேறு புதிய படகை வாங்க நேர்ந்தால், திரும்பவும் லைசன்ஸ் வாங்க வேண்டும். அதேபோல், பெரிய விசைப்படகில் பயணிக்கும் ஒவ்வொரு மீனவரும் தங்களுக்கான அத்தாட்சிப் பத்திரத்தை கையில் வைத்திருக்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் லஞ்சம் கொடுத்தே ஆக வேண்டும்.

சுமாராக ஒரு பெரிய விசைப்படகுக்கு லைசென்ஸ் வாங்க வேண்டுமென்றால், ரூபாய் 25 ஆயிரம் வரை லஞ்சம் கொடுக்க வேண்டுமாம். அதேபோல் மீனவர்கள் தங்களுக்கான அத்தாட்சிப் பத்திரத்தை வாங்க வேண்டுமென்றால், ரூபாய் 10 ஆயிரம் வரை அழ வேண்டுமாம்.

சுருக்கமாக சொல்வதென்றால், தாங்கள் சுவாசிக்கக் கூட கப்பம் கட்ட வேண்டும் என்கிறார்கள் மீனவர்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
அழுகும் நிலையில் உள்ள மீன்கள் உடனடியாக கருவாட்டுத் தயாரிப்புக்குச் செல்கிறது

ரைக்கு வந்திறங்கும் மீன்களில், அழுகும் நிலையில் இருக்கும் மீன்களை உடனடியாக குறைந்த விலைக்கு கருவாட்டுக்காக விற்கிறார்கள். சின்னச் சின்ன குடிசைகளில் இப்படி வரும் மீன்களின் மீது உப்பைத் தடவி தண்ணீரில் ஊற வைத்து காய வைக்கும் பணியில் பலரும் ஈடுபட்டிருக்கிறார்கள். விடுமுறை நாட்களில், பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமியர் கூட இப்பணிகளில் தங்கள் பெற்றோருக்கு உதவியாக இருக்கிறார்கள்.

அதேபோல் தன் தாத்தாவுடன் சேர்ந்து துடுப்புத் துழாவும் சிறுவனையும் பார்க்க முடிந்தது. கரைக்குத் திரும்பிய சிறிய விசைப்படகிலிருந்து ஐஸ் பாக்ஸை சேகரித்து, ஐஸ் கம்பெனியில் ஒப்படைக்கும் பணி அவர்களுடையதாம். அருகிலிருக்கும் மெட்ரிக்குலேசன் பள்ளியில் ஆறாவது படிக்கும் அச்சிறுவன், விடுமுறை நாட்களில் இப்படி உழைத்து சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டே ‘டேம் பீஸ்’ கட்டுவதாக சொன்னான்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
கரைக்குத் திரும்பிய சிறிய படகிலிருந்து ஐஸ் பாக்ஸ் சேகரிக்கும் சிறுவன்

பெரும்பாலான ஆண்கள் சம்பாதிக்கும் பணத்தை குடித்தே அழிப்பதாகவும், சீட்டு விளையாடியே குடும்பத்தை கவனிக்காமல் விடுவதாகவும் பெண்கள் குமுறுகிறார்கள். உடலில் தெம்புள்ள பெண்கள்தான் பெரும்பாலும் மீன் விற்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள்.

வயதான பெண்களில் கணிசமானோர் வெயிலில் மீன்களை காய வைத்து விற்கும் வேலையை செய்கிறார்கள். இவர்களில் பலர், வெறும் பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் அல்லது ஆண் பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள். இந்தத் தகவலை சொல்லியபடியே கொளுத்தும் வெயிலில் அருவாள்மனையில் மீன்களை நறுக்கிக் கொண்டிருந்த மூதாட்டிக்கு வயது  72.

‘நாலு பொண்ணுங்களை பெத்தேன். மீன் பிடிக்கப் போன எம் புருஷன், படகு மூழ்கி செத்துட்டாரு. மூலைல உக்காந்து அழவா முடியும்? நாலு பொண்ணுங்களையும் உழைச்சு 12வது வரைக்கும் படிக்க வெச்சேன். வேலைக்கு போகணும்னு ஆசைப்பட்டதுங்க. ஆனா, எங்க வேலை கெடைக்குது..? அதான் நல்ல இடம்னு நம்பி நாலையும் கட்டிக் கொடுத்தேன். எம் போறாத வேளை… நாலும் நிம்மதியா இல்லை. பொழுதன்னைக்கும் அடியும், உதையும் வாங்கிட்டு இருக்குங்க. அப்பப்ப பணம் கேட்டு எம் மருமவனுங்க பொண்ணுங்களை அனுப்புவாங்க. அதுக்காகவே ஒருநாளைக்கு கால் வயித்து கஞ்சிய மட்டும் குடிச்சு பணத்தை சேத்துட்டு இருக்கேன். நடுவுல சம்மந்திங்க வேற அப்பப்ப செத்துட்டு இருக்காங்க. ஒவ்வொருமுறையும் சம்மந்தி சீரா 20 ஆயிரம் ரூபா வரைக்கும் செலவழிக்க வேண்டியிருக்கு. நான் ஓத்தக் கிழவி. என்ன பண்ணுவேன் சொல்லு…’

உதட்டிலிருந்து வார்தைதைகள் வெடித்தாலும் மூதாட்டியின் கைகள் மட்டும் பரபரவென மீன்களை அடுத்தடுத்து நறுக்கிக் கொண்டிருந்தன. இந்த மூதாட்டிக்கு அருகிலிருந்த ஐம்பது வயது பெண்மணி சொன்னார்:

‘பாவம், இதுக்கு சின்ன வயசுலேந்தே கண்ணு தெரியாது…’

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!
சிங்கள் கடற்படையினரால் தாக்கப்படும் பெரிய விசைப்படகுகள்

பெரிய விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்பவர்கள்தான் இப்போது செய்திகளில் அதிகம் அடிபடும் மீனவர்கள். இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகுபவர்கள் இவர்கள்தான்.

உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையில்தான் ஒவ்வொருமுறையும் இவர்கள் கடலுக்கு செல்கிறார்கள். எப்போது வேண்டுமானாலும் தங்கள் மீது துப்பாக்கி குண்டு பாயலாம் என்ற நிலையிலேயேதான் மீன் பிடிக்கிறார்கள். நாகப்பட்டினத்துக்கும் இலங்கைக்குமான தூரம் குறைவாக இருப்பதும், சர்வதேச கடல் எல்லை கரையிலிருந்து புறப்பட்ட சில மணித்துளிகளில் வருவதும் இவர்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கின்றன.

கடலில் எல்லை என்று எதுவுமில்லை என்பதே அனைத்து மீனவர்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. ஒரு வேளை அப்படி ஒரு எல்லை போட்டாலும் அதை அமல்படுத்துவது சாத்தியமே இல்லை. எல்லை தாண்டி பிடிக்கிறார்கள் என்று சொல்லும் கொழுப்பெடுத்தவர்களை ஒரு படகில் ஏற்றி எல்லையை காட்ட சொன்னால் எந்த காலத்திலும் காட்ட முடியாது.

ஆனால், இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுவது மட்டுமே தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையல்ல என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். கடலில் இவர்களை வளைத்துக் கொள்ளும் இலங்கை கடற்படையினர், எப்போதாவதுதான் சுடுவார்களாம். ஆனால், எப்போதும் பிடித்த மீன்களை அபகரிப்பது, வலை, டீசல், ஐஸ் பாக்ஸ், மீன் இருப்பதைக் காட்டும் கருவி, எக்கோ கருவி, திசை காட்டும் ஜி.பி.எஸ். ஆகியவற்றை பிடுங்கிக் கொள்வது, சமையல் பொருட்களை கைப்பற்றுவது, அடுப்பையும் மருந்து மாத்திரைகளையும் எடுத்து கடலில் வீசுவது, உடுத்திய துணிகளை கழற்றச் சொல்லியும் மாற்று உடைகளை எடுத்துக் கொண்டும் செல்வது, நிர்வாணமாகவே கரைக்கு அனுப்புவது, ஒருபால் உடலுறவுக்கு கட்டாயப்படுத்துவது, பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பது ஆகியவற்றை மேற்கொள்வார்களாம்.

அந்தவகையில் பெரிய விசைப்படகில் மீன் பிடிக்கச் செல்லும் பெரும்பாலான மீனவர்களின் உடலில் பிளாஸ்டிக் பைப்பால் வாங்கிய அடியின் தழும்புகள் இருக்கின்றன. ஒருமாதத்துக்கு சராசரியாக நான்குமுறை பெரிய விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் செல்கிறார்கள். அதில், இரண்டு முறையாவது இப்படி நிகழும் என்றும், ஒருமுறையாவது பிடித்த மீன்களை இலங்கை கடற்படையினரிடம் பறிகொடுத்துவிட்டு வெறுங்கையுடன் திரும்ப நேரிடும் என்றும் விரக்தியுடன் மீனவர்கள் சொல்கிறார்கள்.

இவைதவிர, நடுக்கடலில் எதிர்பாராத நேரங்களில் பெட்ரோல் குண்டை வீசி, விசைப்படகிலிருக்கும் மீனவர்களை எரிய வைப்பார்களாம். வெந்து தணிந்த உடலுடன் கரைக்கு திரும்பும் மீனவர்கள் அதன்பிறகு மீன் பிடிக்க கடலுக்கும் செல்ல முடியாது. போதிய வசதி இல்லாததால் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறவும் முடியாது. வாழ்க்கையை நினைத்து நினைந்து கண்ணீர் சிந்தியபடியே தன் எஞ்சிய நாட்களை கழிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.

முள்ளிவாய்க்கால் போருக்கு பிறகு இப்போது சிங்கள மீனவர்கள் அதிகம் வருகிறார்களாம். இவ்வளவு நாட்கள் புலி பயத்தில் இருந்தவர்கள் இப்போது அடிக்கடி வருகிறார்கள். ” இவ்வளவு நாட்கள் நீங்க சம்பாதிச்சிட்டீங்க, இனி நாங்க சம்பாதிக்கிறோம், இங்கு வராதே” என்றுதான் அவர்கள் சொல்வார்களாம். இலங்கையை சேர்ந்த தமிழ் மீனவர்கள் எப்போதாவதுதான் வருவதாக நாகை மீனவர்கள் சொல்கிறார்கள்.

இலங்கை கடற்படையின் முக்கிய நோக்கம் தமிழ் மீனவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி, மிரட்டி பாக் நீரிணை மீன்வளத்தை சிங்கள மீனவருக்காக பாதுகாப்பதுதான் என்று நாகை மீனவர்கள் கூறுகிறார்கள். இதற்கு மேல் இதன் அரசியல் பரிமாணத்தை அவர்கள் உணர்ந்திருக்கவில்லை அல்லது கவலைப்படவில்லை. எப்படியும் சிங்கள கடற்ப்படையினருக்கு பயந்து கொண்டுதான் மீன்பிடிக்க முடியும் என்பது தவிர்க்க முடியாத யதார்த்தமாக அவர்களுக்கு இருக்கிறது.

இவ்வளவு அவமானங்களையும், துயரங்களையும் தாங்கிக் கொண்டும், உயிருக்கு உத்திரவாதமில்லாத நிலையிலும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல காரணம், வேறெந்தத் தொழிலும் அவர்களுக்குத் தெரியாது என்பதுதான். வேறு எந்த தொழிற்சாலையும் சுற்றுவட்டாரத்தில் இல்லை என்பதுதான். அதனாலேயே கல்லூரிக்குச் சென்று படிக்கும் மீனவர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக் கூடியதாக இருக்கிறது. அப்படியே பட்டப்படிப்பை முடித்தாலும் அரசாங்க வேலையை மட்டுமே நம்பியிருக்கும் நிலை. தொழில் வாய்ப்பு குறித்த அறியாமை.

இந்திய கடலோர காவல்படையினர் பெயரளவுக்கு அங்கிருந்தாலும், தினமும் குறிப்பிட்ட கி.மீ. அல்லது குறிப்பிட்ட டீசலை செலவு செய்துதான் ரோந்துப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு இருப்பதால், இலங்கை கடற்படையினரின் எந்த அட்டூழியத்தையும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. நடுக்கடலில் படகு பழுதாகி நிற்கும் மீனவர்களின் நிலை குறித்தும் பதறுவதில்லை. தவிர, கூடுதலாக இந்திய கடலோர காவல்படையினர் செலவழிக்கும் ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் மேலிடத்திலிருந்து எழுத்துப்பூர்வமாக அனுமதி வாங்க வேண்டும் என்பதால் மீனவர்களின் பிரச்னைகளை அவர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை, காதுகொடுத்தும் கேட்பதில்லை. ஆனால் அதிகாரிகளது பிக்னிக் போட்டிங்குக்கு மட்டும் அழகாக கள்ளக்கணக்கு எழுதுவார்கள். அநேக இந்திய கடற்படையினருக்கு தமிழ் தெரியாது என்பதால் நாகை மீனவர்களது எந்த பிரச்சினை பற்றியும் அவர்களுக்கு குறிப்பாக தெரியாது.

மேலதிகமாக இராணுவம் என்பது பாமர மக்களுக்கு உதவுவது அல்ல என்பது இங்கே பலமுறை நிருபீக்கப்பட்டுள்ளது. அதனால் இந்திய கடலோரக்காவல் படை குறித்த மயக்கங்களெல்லாம் நாகை மீனவரிடத்தில் இல்லை. அவர்களைப் பொறுத்த வரை பல தொந்தரவுகளில் இதுவும் ஒன்று.

_______________________________________________________________

ன்னும் விடிந்திருக்கவில்லை. ஆனால், நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகம் மும்முரமாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே எரிந்துக் கொண்டிருந்த குண்டு விளக்குகளும், குழல் விளக்குகளும் சிந்திய ஒளி, புதிதாக அந்தப் பகுதிக்கு வருபவர்களுக்குத்தான் வழிகாட்டியாக இருக்கிறது. மற்றபடி மீனவர்கள், அந்த ஒளிச்சிதறலை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. இருட்டும் ஒளிதான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தவர்கள் போல்  சுழன்றுக் கொண்டிருந்தார்கள். அந்த மீன்பிடித் துறைமுகத்தின் நீள, அகலங்களும், குறுக்கு வெட்டு பகுதிகளும் அவர்கள் கால்களுக்கும், கைகளுக்கும் பழக்கப்பட்டிருந்ததை உணர முடிந்தது. எல்லா  இன்னல்களை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து அவர்களால் அங்கே  பணி செய்ய முடிகிறது. இல்லை செய்தாக வேண்டும். உழைப்பின்றி அந்த உழைப்பாளிகளால் ஒருபோதும் ஓய்ந்திருக்க இயலாது. நமக்கு மீன் தருவதற்காக எல்லா இன்னல்களையும் அந்த மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். தேவையென்றால் உயிரையும் தருகிறார்கள்.

நாகப்பட்டினம் மீனவர் வாழ்க்கை ! சிறப்பு நேரடி ரிப்போர்ட் !!

______________________________________________________________

வினவு செய்தியாளர்கள், நாகப்பட்டினத்திலிருந்து.

புகைப்படங்கள்: பார்த்திபன்

______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

புதிய ஜனநாயகம் – மார்ச் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – மாரச் 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

1) “”ஸ்பெக்ட்ரம் என்பது வெறும் ஊழல் மட்டுமில்லை: இது கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளை!” கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராகப் புரட்சிகர அமைப்புகளின் பிரச்சார இயக்கம்.

2) “டாக்டர் பிநாயக் சென்னுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையை உடனே ரத்து செய்து விடுதலை செய்!” மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டம்.

3) கல்லுளிமங்கன்!

4) தேசத் துரோகிகளின் தேசபக்தி!

5) தனியார்மயம் தாராளமயம் ஊழல்மயம்

6) “பிரசாத லட்டு பிடிப்பதையும் அவாள்தான் செய்ய வேண்டும்!”  ஆலயத் தீண்டாமையைப் பாதுகாக்கும் நீதித்துறை

7) தமிழக மீனவர் படுகொலை: எல்லை தாண்டுவதுதான் பிரச்சினையா?

8. “இந்தியாவின் மேலாதிக்க நலன்களுக்கு மீனவர்களைப் பலியிடாதே! மீனவர்களின் தற்காப்புக்கு ஆயுதம் ஏந்தும் உரிமையைச் சட்டப்படி வழங்கு! கச்சத்தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்டு!” பிரச்சாரம், ஆர்ப்பாட்டம், பொதுநல வழக்கு.

9) மதுரை அருகே ஒரு போபால்: மாடுகளைப் பலி கொண்ட நச்சு ஆலை.

10) தமிழகச் சட்டமன்றத் தேர்தலும் தமிழினவாதிகளின் பிழைப்புவாதமும்

11) அமெரிக்க அநீதி!

12) அரசுப் பள்ளியின் கட்டணக் கொள்ளை: மாணவர் போராட்டத்தின் மீது அடக்குமுறை!

13) எகிப்து மக்கள் எழுச்சி: விழலுக்கு இறைத்த நீரானதேன்?

14) தெற்கு சூடான் விடுதலை: ஏகாதிபத்தியங்களின் பகடைக்காயானது

15) போஸ்கோவிற்கு அனுமதி: கார்ப்பரேட் பகற்கொள்ளைக்குப் பட்டுக்கம்பளம்

16) ஜெய்தாபூர் அணுமின் திட்டம்: ஏகாதிபத்திய சேவைக்கு மக்கள் பலிகிடா!

17) மருந்தின் விலையும் இனி கசக்கும்!

18) குஜராத் இனப்படுகொலையில் மோடியின் பங்கு: புஸ்வானமானது புலன் விசாரணை

________________________________________________

புதிய ஜனநாயகம் மார்ச் 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

ஜான் தெரோய்ன்: பெண்களையும் அரசியல் பேச விடுங்கள்!-தமிழச்சி

17

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 3

ஜான் தெரோய்ன் - 1849
ஜான் தெரோய்ன் - 1849

பிரான்சில் மன்னராட்சி நடந்த காலமது. மார்க்சியம், சோசலிசம் போன்ற மக்கள் ஆட்சிக்கான போராட்டங்களும், தொழிலாளர்களுக்கான போராட்டங்களும், பெண்ணியவாதிகளின் பெண் விடுதலைக்கான குரல்களும் வெளிப்பட ஆரம்பித்த காலகட்டங்கள்.

ஜான் தெரோய்ன்’ [Jeanne Deroin] என்னும் பெண்மணியின் போராட்டம் அசாத்தியமாய் இருந்தது. இவரே பிரான்ஸ் நாட்டின் பெண் விடுதலைக்காக குரல் கொடுத்த முதல் பெண்ணியவாதியுமாவார்.

1805-இல் பாரிசில், 31-டிசம்பரில் பிறந்த ‘ஜான் தெரோய்ன்’ சுமாரான வசதியுள்ள குடும்பத்தை சேர்ந்தவர். அக்காலத்தில் பெண்கள் அதிகமாக படிக்க வைக்கப்படவில்லை. ஓரளவு மட்டுமே கல்வி கற்க அனுமதிக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் 1831-இல் ஆசிரியர் பயிற்சியில் தேர்வு பெற்றார். இருப்பினும் சொந்தமாக தொழில் நடத்த வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருந்த ஜான் தெரோய்ன் சிறு வயதில் இருந்தே தையற் கலையில் ஆர்வமாய் பயின்று வந்தார். அதுவே சொந்தமாக தையற் தொழில் நடத்தவும் காரணமானது.

ஒடுக்கப்பட்ட பெண்களுக்கு மத்தியில் ஜான் தெரோய்ன் ஆசிரியர் படிப்பும், சுயதொழிலும், தனித்து இயங்கும் பாங்கும் அவர் வாழ்ந்த பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

ஜான் தெரோய்ன் அரசியல் குறித்த விவாதங்கள், பெண் விடுதலைக்கான வாதங்கள் பல ஆண்களை மட்டுமல்ல. பெண்களையும் கூட எரிச்சல் அடைய வைத்தது.

‘பெண்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும்’,

‘பெண்களுக்கு கல்வி முக்கியம்’,

‘ஒவ்வொரு பெண்ணுக்கும் சுயவருமானம் இருந்ததால் தான் ஆண் அடக்கியாள முடியாது…’

‘திருமணத்திற்கு பிறகு பெண்களுக்கு பெயருக்கு பின்னால் எதற்காக கணவன் பெயர் இருக்க வேண்டும்..’

‘ஆண்களுக்கு இணையான கூலி உயர்வு’,

‘பெண்களும் அரசியலில் ஈடுபட வேண்டும்…’

போன்ற மாற்று கருத்துக்களை துணிச்சலாய் ஒரு பெண் பேசும் போது, ‘படித்த திமிர்’, ‘நாலு காசு சம்பாதிக்கும் தெனாவெட்டு’ என்று வழமையாக பெண்கள் மீது ஏவப்படும் ஏச்சுக்களில் இருந்தும் ஜான் தெரோய்ன் தப்பவில்லை.

எல்லா வசவுகளையும் துணிச்சலாய் எதிர்கொண்டார்.

ஜான் தெரோய்ன் 1832-இல் திருமணம் செய்து கொண்டார். “என் பெயருக்கு பின்னே என் கணவரின் பெயர் இருக்கக்கூடாது” என்று அறிவித்தார். கடைசி வரையிலும் அவர் கணவரின் பெயரை இணைக்கவே இல்லை.

3-குழந்தைகளுக்கு தாயான பின்னும் ஜான் தெரோய்ன் குடும்ப வாழ்க்கைக்குள் முடங்கிவிடவில்லை. மாக்ஸியம், சோசலிசம் தத்துவங்களை  வாசிப்பதில் கவனம் செலுத்தினார். இடதுசாரிகளின் அரசியல் கோட்பாட்டு தத்துவங்களோடு மன்னர் ஆட்சி சிந்தனைகள் ஒத்துப்போக முடியவில்லை.

அப்போது லூயி நெப்போலியனின் [Louis – Napoleon] மன்னராட்சி நடந்து கொண்டிருந்தது.

மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். மக்களாட்சி நடைமுறைக்கு வரவேண்டும் என்பதை இலட்சியமாய் கொண்டிருந்த ஜான் தெரோய்ன் சோசலிஸ்ட்டு கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.

அந்த காலகட்டத்தில் பெண்கள் மிகவும் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். பெண்கள் குடும்பத்தில் ஆண்களின் கட்டுக்குள் இயங்க வேண்டிய நெருக்கடியை மதமும், அரசும் பாரம்பரிய பழக்க வழக்கங்கள் என்றது.

பெண்கள் குரல்’ [La Voix des femmes] என்னும் பத்திரிக்கையை ஜான் தெரோய்ன் தொடங்கினார். பெண்களுக்கான ஊடகமாக அது இருந்தது. பெண்களின் உரிமைகள் குறித்து பெண்களின் மத்தியில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் ஜான் தெரோய்ன்.

அரசியல் விமரிசகராகவும், பெண்களுக்காகவும் போராடிக் கொண்டிருந்த ஜான் தெரோய்ன் தன்னுடைய 3-குழந்தைகளும் பெரியவர்களான பிறகே பொதுவாழ்க்கை களத்தில் தீவிரமாய் இயங்க ஆரம்பித்தார்.

குறிப்பாக பாரிசில் 1848-இல், மன்னராட்சிக்கு எதிராக பிப்ரவரி மாதம் 22, 23,  24, 25- தேதிகளில், ‘லூயி நெப்போலியன்’ மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியில் கலந்து கொண்டார். எனினும் அப்போராட்டம் கடுமையான அடக்குமுறையால் தோல்வியடைந்தது.

இந்த போராட்டத்தின் மூலமே ஜான் தெரோய்ன் பலரால் அறியப்பட்டார். மன்னாராட்சியின் கண்காணிப்புக்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டார். மக்களிடம் மன்னராட்சியை எதிர்க்கும் தைரியம் ஒரளவுக்கு வந்திருப்பதை அறிந்து லூயி நெப்போலியன் 1849-இல் மே மாதம் 13-ஆம் தேதியில் பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலில் மக்களின் சார்பாக போட்டியிடுபவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு செய்தார்.

ஜான் தெரோய்ன் பாராளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக மனு கொடுத்தார். அம்மனு நிராகரிக்கப்பட்டது. காரணம், அன்றைய அரசியல் சூழலில் பெண்கள் அரசியலில் ஈடுபட்டது கிடையாது. அனுமதியும் கிடையாது. ஐரோப்பாவில் மன்னராட்சி காலத்தில் பெண்களுக்கு ஓட்டுரிமையும் மறுக்கப்பட்டிருந்தது.

முதன்முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்த நாடு சுவீடன். பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுப்பதற்கான பரிசீலனை செய்ய எடுத்துக் கொண்ட காலங்கள் 53-வருடங்களின் இழுபறிக்கு பிறகே! [1718 – 1771]

இருந்தும் சுவீடனில் பெண்களின் ஓட்டுக்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது 1921-இல்தான்.

ஆனால், நியூசிலாந்து நாட்டில் 1893-இல் பெண்களுக்கு ஓட்டுப் போடும் உரிமை உண்டு என்று உருவாக்கிய சட்டத்தை 1919-லேயே செயல் திட்டத்திற்கு கொண்டு வந்துவிட்டார்கள்.

இதில் ஜான் தேலோய்ன் வாழ்ந்த காலங்கள் 1805 – 1894

பெண்களுக்கு ஓட்டுரிமை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் குடும்பத்தினரின் அடக்குமுறைக்கு பயந்து பெரும்பான்மையான பெண்கள் ஓட்டுப் போட தயங்கிய காலத்தில்,

ஒரு பெண் பாராளுமன்றத் தேர்தலில் நிற்கிறார் என்றால், அதுவும் மன்னராட்சிக்கு எதிரானவர் என்றால் எவ்வளவு எதிர்ப்புகளை ஜான் தேலோய்ன் சந்தித்திருப்பார் என்று நினைத்துப் பாருங்கள்.

பெண்களே கடுமையாக எதிர்த்தும், விமரிசித்தும் பேசி இருக்கிறார்கள். அதுவும் சாதாரண பெண்களும் இல்லை. இலக்கியத்துறையில் ஜான் தேலோய்ன் சமகால பெண்ணிய எழுத்தாளர்களான George Sand, Marie d’agoult போன்றவர்கள் ஜான் தேலோய்ன் தேர்தலில் நிற்பதையும், அவருடைய முற்போக்கு சிந்தனைகளையும் கடுமையான விமரிசித்தார்கள்.

“பெண்கள் ஏன் அரசியலில் ஈடுபடக் கூடாது? ஏன் தேர்தலில் நிற்கக்கூடாது,  எனக்கு உரிமை இருக்கிறது” என்று கலகக் குரல் எழுப்பினார் ஜான் தேலோய்ன்.

பிரான்ஸ் அரசாங்கம் மக்களை சாமாதானப்படுத்தும் நோக்கத்தில் விட்டுக் கொடுத்தது.

ஜான் தேலோய்ன் பாராளுமன்ற தேர்தலில் நின்று போட்டியிட்டார். 15- ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இருப்பினும் பிரான்ஸ் நாட்டில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் தகுதியை பெற்றார்.

எப்போதும் சக பெண்ணயவாதிகளை கடும் கண்டனம் செய்வார் ஜான் தேலோய்ன். “எழுத்துத்துறையில் அரசாங்கத்தை பகைத்துக் கொள்ளாமல் மக்களின் பிரச்சனைகளை பேசாமல் காவியமும், கவிதையும் கிழித்துக் கொண்டிருப்பதில் என்ன விடுதலையை காணப் போகிறீர்கள்? வாருங்கள் களத்திற்கு, போராட்டங்களில் ஈடுபட வாருங்கள். நம் பெண்களுக்காக நாம் தான் போராட வேண்டும்” என்று சக இலக்கிய பெண்ணியவாதிகளுக்கு அடிக்கடி வேண்டுகோள் வைப்பார் ஜான் தேலோய்ன்.

இலக்கிய பெண்ணியவாதிகளோ, ‘ஜான் தேலோய்ன் முற்போக்கு பெண்ணியம் கேடானது என்பதால் நாங்கள் விலகியே இருக்கிறோம்’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

ஜான் தேலோய்ன் நடத்திய ‘பெண்களின் குரல்’ பத்திரிகையில் படைப்புகளை அனுப்ப இலக்கிய பெண்கள் தயங்குவார்கள். சில பெண்களின் எழுத்துக்களோடு நடத்திக் கொண்டிருந்த அந்த ஊடகமும் அரசு அழுத்தத்தின் காரணமாக முடக்கப்பட்டது.

1851-இல் மீண்டும் இடதுசாரிகள் உதவியோடு “பிரான்ஸ் மன்னராட்சியை கலைக்க வேண்டும், மக்களாட்சி வர வேண்டும்” என்று போராட்டத்தை தோழர்களுடன்  ஜான் தேலோய்ன் தொடந்தார். இந்த போராட்டத்தில் மன்னராட்சியை கவிழ்க்கும் முயற்சி தோல்வி அடைந்தது. லூயி நெப்போலியன், “ஜான் தேலோய்ன் தேசத்துரோகி” என்று அறிவித்து அவரை நாடு கடத்தினான்.

இலண்டனில் அடைக்கலமான ஜான் தேலோய்ன் வறுமையில் தவித்தார். அங்கும் அரசியல் கண்காணிப்பாளர்களின் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். வேலை தேடிய இடங்களில் அரசியல் காரணங்கள் வேலை கொடுக்காமல் புறக்கணிக்கப்பட்டார்.

மிக வறிய நிலையில் வாடிய ஜான் தேலோய்ன் 1894-இல் 2-ஏப்ரலில் மரணம் அடைந்தார்.

நாடு கடத்தப்பட்ட போதும் ஜான் தேலோய்ன் பெண்களுக்கு எப்போதும் அறிவுறுத்தும் வார்த்தைகள்….

“பெண்களே பொது வாழ்க்கைக்கு வாருங்கள்,

சமூகத்தில் நமக்கான பங்களிப்புகள் ஆண்களுக்கு நிகரானது,

பெண்களே! நீங்களும் அரசியல் குறித்து பேசுங்கள்.

அதற்கான அறிவு நமக்கும் உண்டு…”

இதோ 2011-இல் மார்ச் 08- உலக பெண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த வருட பெண்கள் தினத்திற்கு ஓர் சிறப்பும் உண்டு.

நூறாவது பெண்கள் தினமாம் இன்று!

இன்றைய பெண்களின் நிலை எப்படி இருக்கிறது?

உலகில் மற்ற பாகங்களில் இருக்கும் பெண்களின் நிலையை குறித்து வேண்டாம். பிரான்சில் இருக்கும் பெண்களை குறித்து பார்ப்போம்…

பிரான்சில் மொத்த மக்கள் தொகை: 6,50,26,885.

2005- இல் எடுக்கப்பட்ட கணக்கின்படி பெண்கள் தொகை: 31.385 மில்லியன்.

அரசியலில் உள்ள பெண்கள் 18.5%

வன்புணர்ச்சிக்கு உள்ளாகும் பெண்களின் எண்ணிக்கை வருடத்திற்கு 75.000

ஆண்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்தின் சமபங்கு பெண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால் இன்றளவும் செயல்பாட்டில் ஆண்களை விட குறைந்த விதமே ஊதியம் வழங்கப்படுகிறது.

பிரான்ஸ் பெண்களுக்கு தீர்வு கிடைத்து விட்டதா?

சற்று இந்தியாவில் பெண்களின் நிலையை நினைத்து பாருங்கள். ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக எத்தனை பெண்கள் போராடுகிறார்கள்? இலக்கியத்துறையில் எத்தனை பெண்கள் தொடர்ச்சியாய் பெண் விடுதலைக்காக களம் இறங்கி போராடுகிறார்கள்?

‘பெண்குறி’, ‘முலை’, ‘பாலியல் சுதந்திர உரிமை’யை தாண்டி பேசப்பட வேண்டிய பெண்கள் பிரச்சனைகள் எவ்வளவோ இருக்கின்றனவே? சமுகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்காக இவர்கள் என்ன செய்தார்கள்?

நூற்றாண்டு மகளிர் தினத்தின் பெருமையை மெச்சும் இந்திய ‘பெண்ணியவாதிகளே’, நீங்கள் என்ன செய்து கிழித்தீர்கள்?

__________________________________________________________

தமிழச்சி, பெரியார் விழிப்புணர்வு இயக்கம் – அய்ரோப்பா, பிரான்ஸ்

__________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

தாய்லாந்தின் புன்னகை அரசிகள்! – சாந்தி

99
தாய்லாந்தின் புன்னகை அரசிகள் ! - சாந்தி

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 2

தாய்லாந்தின் புன்னகை அரசிகள் ! - சாந்தி

தாய்லாந்து நாட்டு பெண்களின் அழகும் அறிவும் உலகம் முழுதுமே அறிந்த விடயம்.. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சிகரமாகவும் , வீரமுள்ள அதே சமயத்தில் மிக்க மென்மையானவர்களாகவுமே காணப்படுவார்கள்… கவர்ச்சியான பெண்கள் மட்டுமல்ல , அதீத பெண்மைத்தனமும் நிறைந்தவர்கள்.. அதிகமான வெட்கம் எப்போதும் இருக்கும் முகத்தில்.. சின்ன  பேச்சோ , முக வாடுதலோ கூட அடுத்தவரை காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் மிக கவனமாயிருப்பார்கள்.. என் கஷ்டம் எனக்கு .. அதை நாந்தான் பார்த்துக்கொள்ளணும்.. உன்மேல் சுமத்தமாட்டேன்..  வெளிப்படுத்த கூட மாட்டேன்.. அதற்கு பதில் புன்னகைப்பேன்.. உன்னையும் புன்னகை செய்ய வைப்பேன்.. அப்படியே இந்த தொற்று ( வெட்கமும் , சிரிப்பும் )  நாடு முழுதுமே நாம் பார்க்கலாம்..

அதீத பெண்மைத்தனம்  என ஏன் சொல்லப்படுகிறார்கள் என்றால் மிக மென்மையான , மிருதுவான தோலும், மிக அழகிய , பட்டுப்போன்ற கருங்கூந்தலும் உடையவர்களாம்..ஆனால் பெண்மைக்கு இலக்கணமாய் இவற்றை சொன்னாலும் , வீரத்தில் எள்ளளவும் குறைந்தவர்களில்லை.. வீரம்  காட்டும் விதமே வித்யாசமாயும்.. கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்களாகவும் இருக்கிறார்கள்..

தான் எதிர்பார்க்கும் மரியாதையை அடுத்தவருக்கு முந்திக்கொண்டு தருவதாலேயேயும் , முகம் சுழிக்க வேண்டிய விசயத்தையும் , அன்போடு எடுத்தாழும் வித்தையையும்  உலகம் முழுதும்  திரும்பிப்பார்க்க செய்த விசேட குணங்கள்.. எச்சூழலிலும் அனுசரித்தும் போகக்கூடியவர்கள்.. அதீத பொறுமையுமுண்டு.. இவையெல்லாவற்றும் அடிப்படை அமைத்ததில்  புத்த மதக் கொள்கைக்கும் பெரும் பங்குண்டு..

அவர்களது நளினங்களை  அவர்களின் நடன அசைவுகளிலேயும் காணலாம்..அறுபது வயதிலும் 20 வயதினரைப்போல துடிப்போடு இருக்க ஆசைப்படுவார்கள்.. சோம்பி இருந்து பார்க்க முடியாது..

சரி இப்போது முக்கியமான விஷயத்துக்கு வருவோம்.. அவர்கள் குடும்ப அமைப்பு, பெண்ணுரிமை பற்றி..

____________________________________________

பெண்ணுரிமைக்கான அனுமதி 2004-ஆம் ஆண்டு சட்டபூர்வமாக வந்தாலும் , ஏற்கனவே பெண்கள் பங்கு சிறப்பாகவே இருந்து வந்துள்ளதால் அது குறித்து யாரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.. திருமணம் செய்ய முடிவெடுத்துவிட்டால், இல்லறம்,  குழந்தை வளர்ப்பில் மிகுந்த ஆர்வத்தோடும், பெருமையோடும் ஈடுபடுவார்கள்..கணவருக்கு மிக உறுதுணையாகவும் இருப்பார்கள்..

இங்கே பெண்ணுக்கு வரதட்சணை கொடுத்தே ஆண் மணமுடிக்கணும்.. அனேகர் படித்து நல்ல பெரிய வேலைகளுக்கு செலவதால் 3 மாதத்தில் குழந்தையை பெற்றோரிடமோ, பாதுகாப்பு  இல்லங்களிலோ விட்டுவிட்டு  வேலைக்கு செல்கின்றனர்.. குழந்தைப் பருவத்திலேயே மிகுந்த ஒழுக்கத்தோடும் , நன்னெறிகளோடும், மரியாதையோடும் சிறார்கள் வளர்க்கப்படுகின்றனர்..

ஒரு பொருளை வாங்குமுன்பே இருகரம் கூப்பி , ஒரு கால் முட்டியை மடக்கி (தாழ்ச்சியாக) நன்றி என சொல்லிவிட்டே வாங்குவார்கள்..

ஒரு முக்கியமான நற்பண்பு கருணை.. தன்னைவிட தன் குடும்பத்தார்க்கும் , உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பார்கள்..அதுவே ஒரு இன்பமயமான அன்புச்சூழலை உருவாக்கிவிடும்.. ஒருவருக்கொருவர் அன்போடு கிண்டலடித்துக் கொண்டும் , பகிர்ந்து கொண்டும்..

வாழ்க்கையை எளிதாக அதன் போக்கில் வாழ கற்றுக் கொண்டவர்கள்..இதனால் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாமல்  மனது எப்பவும் லேசாக இருக்கிறது அவர்களுக்கு ..

கீழ் தட்டு பெண்கள் உணவுக் கடை , சிகை அலங்காரம், மற்ற பொருட்கள்  விற்கும் கடைகளை  வைத்து பிழைப்பது எளிதாக உள்ளது..ஆண்கள் பலர் குடி மற்றும் பல பழக்கங்களுக்கு ஆளாவதால் குழந்தை வளர்க்கும் பொறுப்பு குறித்து நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர்.. விவாகரத்தானாலும் தனியே இருந்து துணிவா வாழக்கூடிய சமூக அமைப்பும் சிறப்பாகவே இருக்கிறது..

அனேக குடும்பங்களில் பெண்களே தலைமை தாங்குகின்றார்கள்.. அவர்கள் செய்ய முடியாத வேலை எதுவுமில்லை என்பதுபோல ஆணுக்கு இணையாக மிகப்பெரிய கண்டெய்னர் ஓட்டும் பெண்களும்,  குத்துச்சண்டை வீராங்கனைகளும், மார்க்கெட்டுகளில் மிகப்பெரிய மூடைகளை அலேக்காக துக்கி வேலை செய்யும் பெண்களையும் சாதாரணமாகக் காணலாம்.. கணவன் விட்டு சென்றானே என உட்கார்ந்து வருந்துவதெல்லாம் இல்லை.. பெண்கள் காவல்துறையிலும் ,  அரசியலிலும் , ராணுவத்திலும் கூட பங்கெடுக்கிறார்கள்..

நம்ம நாட்டு காந்தி சொன்னது இங்கேதான் நான் பார்க்கிறேன்.. எந்த நேரத்திலும் நள்ளிரவிலும் ஒரு பெண் தனியாக வேலைக்கு சென்று வர முடிகிறது.. பெண்களை மதிக்கிறார்கள்.. தாய்லாந்து என்றாலே பாலியல் தொழில் என அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது குறித்து மிக வேதனை அடைகிறார்கள் கடினமாய் உழைக்கும் மற்ற பெண்மணிகள்.. அத்தகைய தொழிலில் ஈடுபடுவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்தவர்கள்.. இருப்பினும் இவற்றை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டும் இருக்கிறது.. சட்டப்படி அங்கீகரிக்கப்படாத தொழில் தான் இன்னமும்..

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் என்றாலும் கத்தி கோபப்பட்டு பொருட்களை உடைப்பதெல்லாம் மிக அநாகரீகமான செயல்.. கோபப்பட்டு பார்ப்பது அரிது.. கோபம் என்றால் அமைதியாக தவிர்த்திடுவார்கள் அச்சூழலையே.. ஏமாற்றங்களை ஏற்க பழகியதால்  மனவளர்ச்சியற்ற குழந்தைகளையும் பொறுமையாக மிகுந்த அன்போடு சமூகமே  ஊக்கத்தோடு வளர்க்கின்றது.. அதுமட்டுமல்ல திருநங்கைகளுக்கும் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்து தந்து அவர்களை தலை நிமிரச்செய்துள்ளது.. அவர்கள் மக்களோடு மக்களாக.. யாரும் வித்யாசமாய் பார்ப்பது கூட இல்லை..இது நாம் கற்கவேண்டிய முக்கியமானது..

ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்போதும் அந்த சத்தம் கூட அடுத்தவருக்கு தொந்தரவாய் இருந்திடக்கூடாதென்பதற்காக ரகசியம் பேசுவது போன்ற ஒலியில் பேசுவதை கேட்பது ஆச்சரியமாக இருக்கும்.. பேருந்திலோ,போக்குவரத்து நெரிசலிலோ , வங்கியிலோ அதிக நேரம் காத்திருக்கணும் என்றாலும் , அமைதியாக முணுமுணுக்காமல் பொறுமையா காத்திருப்பார்கள்.. அதிலும் குழந்தைகள் , கர்ப்பிணி, வயோதிகருக்கு முன்னுரிமை கொடுக்கவும் உதவவும் முன்வருவார்கள்.. இதற்காக சிறு வயதிலேயே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்..

மேலும் சுத்தத்துக்கு முன்னுரிமை தருவார்கள்.. பொருட்களை சிறப்பாக அடுக்கவும் இடங்களை  அழகாக அலங்கரிக்கவும் தெரிந்தவர்கள்..எந்த வேலை செய்தாலும் அதிலொரு அழகு மிளிரும்.. முழுமை இருக்கும்.. மொத்தத்தில் அமைதி விரும்புவதால் தானும் அமைதியான சூழலை உருவாக்க பங்கெடுக்கணும் என்பதில் ஆரம்பிக்குது அந்த பொதுநலம் , ஒருவருக்கொருவர் உதவுவது..

ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பழக்கம் அருமையா இருக்கும்.. சாதம் மட்டும் தனித்தனியே வைத்துக்கொண்டு கூட்டு குழம்புகளை முதலில் அடுத்தவருக்கு ( அருகிலிருப்பவருக்கு )  பறிமாறிவிட்டே அவர்கள் உண்ணுவார்கள்..இவை தாண்டி இன்னும் சில கலாச்சார பழக்கவழக்கம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்துள்ளது..  அவை என்னவென்று பார்ப்போம்.

பெண் புகைபிடிப்பதோ குடிப்பதோ மிக அவமானமாக கருதும் அதே நேரத்தில் ஆணுக்கு அனுமதிக்கப்படுகிறது. விவாகரத்து கூட பெண்கள் முன்பெல்லாம் சமர்ப்பிக்க முடியாது.. கணவன் மீது உறுதியான குற்றச்சாட்டும், அவன் தன் சம்பாத்யத்தை வேறோருவருக்கு தருவதாக நிரூபணம் ஆனால் மட்டுமே.. ஆனால் ஒரு ஆணால் எளிதாக விவாகரத்து பெற முடியுதாம்.. இப்போது மாற்றம் கொண்டுவர முயல்கிறார்கள்..

” ஆண் யானையின் முன்னங்கால். பெண் பின்னங்கால் ” என ஒரு பழமொழி சொல்கிறார்கள் இப்படி அர்த்தம் வரும்படி.. அதாவது ஆணே முதன்மை என .. ஆனால் நிதர்சனத்தில் பெண்ணே நிர்வகிப்பதாய் பார்க்க முடிகிறது..கொஞ்சம் வசதியான வீட்டுப்பெண்கள் திருமணத்தை கூட ஒரு சிறை என்ற நோக்கில் பார்ப்பதால் அவர்கள் திருமணத்தை விரும்புவதில்லை.. பணம் இருக்கையில் கணவன் எதற்கு என்ற மனப்பான்மை பெண்களுக்கு வர ஆரம்பித்துவிட்டது .. அது பெண்ணுக்கு லாபமாக இருக்குதோ இல்லையோ, ஆணுக்கும் சமூகத்துக்கும் ஒரு ஆபத்தாகவே பார்க்கப்படுகிறது.. அதனால் திருமணம், குழந்தை பெறுவதையும் அரசு ஊக்குவிக்கின்றது..

கண்ணியமாக உடை உடுத்த பள்ளி கல்லூரிகளில் வலியுறுத்தப்படுகிறார்கள்..அனேக தாய் பெண்கள் வெளி நாடுகளுக்கு படிக்கவும் வேலைக்கு செல்லவும் தயங்குவதில்லை.. ஆக அங்கே இருந்து திரும்பினாலும் சொந்த நாட்டில் பாரம்பரிய கலாச்சாரத்தை விட்டுத் தருவதில்லை.. சீன வம்சா வழியினர் பலர் தாய்க்காரர் ஆனதாலோ என்னமோ , முதல் குழந்தை ஆணாக இருந்தால் நல்லது என்ற எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.. ஆனாலும் பெண் குழந்தை பிறந்தால் வருந்துவதெல்லாம் இல்லை.. கொண்டாடப்படுகிறார்கள்..

அனேக பெண்கள் படித்து நல்ல வேலையிலிருந்தாலும், தம் நாடு மேற்கத்திய கலாச்சாரத்தால் சீரழிக்கப்படுகிறது என்பதில் வருத்தப்படுகிறார்கள்..

_________________________________________________

தாய்லாந்து பெண்மணி பென்னி ( வயது 38 ) சொல்கிறார் ,

” எனக்கு 23 வயதாகும் போது  ஆண் தோழன் கிடைத்தார். பின் 3 வருடம் காதலித்தோம். அப்பதான் என் அம்மாவுக்கு கான்சர் நோய் தாக்கியது தெரிந்தது.. சிகிச்சை எடுத்து எல்லாவற்றையும் நான் கவனிக்கவேண்டிய சூழல்.. நான் மூத்த பெண்.. இரண்டு தங்கை , ஒரு தம்பி.. அனைவரும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்..அப்பா கடை வைத்திருக்கார்.. வருமானத்துக்கு குறைவில்லை என்றாலும் மருத்துவ செலவு , படிப்பு செலவுக்கு சரியா இருந்தது.. நான் உதவ வேண்டிய கட்டாயம்.. அந்த நேரம் என் காதலர் திருமணம் செய்ய கட்டாயப்படுத்தினார்.. என் நிலைமையில் அம்மாவுக்கு சரியாகும் வரை திருமணம் பற்றி எண்ணி பார்க்கவே  முடியவில்லை.. பாவம் காத்திருந்து விட்டு வேறொரு பெண்ணை மணமுடித்தார்.. இப்பவும் எனக்கு நல்ல நண்பன் அவன்..”.

அதன் பின் அவர் அம்மா மரணமடைந்ததும் , அப்பா இரண்டாம்  தரமாக ஒரு ஏழைப்பெண்ணை ( அவள் குழந்தையோடு ) திருமணம் செய்து கொண்டாராம்.. அந்த சிற்றன்னை இவளிடம் மிக அன்பாக இருப்பாராம்.. இவர் இங்கே தலைநகரில் வேலை பார்த்துவிட்டு வார இறுதியில் அப்பா வீட்டுக்கு செல்லும்போது அனைத்து துணிகளையும் துவைத்து தேய்த்து , சுவையான உணவு சமைத்து தந்து மகிழ்ச்சியளிப்பாராம்..

” உன் அப்பா இரண்டாவது திருமணம் செய்தது குறித்து  வருத்தமில்லையா ?. ” என்றால் , சிரித்துக்கொண்டே, வெட்கப்பட்டுக் கொண்டும், என் காதருகே வந்து “உனக்கு தெரியுமா , ஆண்கள் பெண் துணை இல்லாமல் வாழவே முடியாது.. ஹஹ..:) “.

ஆக ஆண் என்றால் அவனுக்கு பெண்ணின் தேவை அதிகம் என்பதை புரிந்தே வைத்துள்ளார்கள் இவர்கள் கலாச்சாரத்தில்.. சின்ன துணைவி வைத்திருப்பது அந்த காலந்தொட்டே பழக்கமாய் இருந்து வருகிறது பணக்காரர்கள் மத்தியில்.. அனேகமாக இந்த இரண்டாம் மனைவி ஏழை வீட்டு பெண்ணாக இருக்கிறார்.. சமூக அந்தஸ்து கிடையாது இவருக்கு..ஆனல் அது பற்றியெல்லாம் கவலைப்படவில்லை.. இப்போது படித்து முன்னேறுவதால் , பெண் கிடைப்பதே மிக அரிதாக உள்ளதாம்.. மேலும் மேல்நாட்டுக்காரர்கள் விரும்பி தாய் பெண்களை மணமுடிக்கின்றனர்.. அதனால் உள்ளூரில் பெண் தட்டுப்பாடு…

தன்னையும் , குடும்பத்தையும் , குழந்தைகளையும் , மிக நேர்த்தியாக , மிகுந்த அன்போடு கவனித்துக்கொள்வதால் பல வெளிநாட்டினர் தாய்லாந்து வந்து குடியேறுகின்றனர்.. அதனால் உள்நாட்டு ஆண்களுக்கு மணமுடிக்கவே பெண்கள் கிடைப்பது அரிதாகி வருவது கவலைக்குரிய விஷயம்..

ஏற்கனவே மணமகன் வரதட்சணை கொடுக்கணும், இப்ப பெண் வேறு கிடைக்காததால் பெண்ணின் மதிப்பை யோசித்துப்பாருங்கள்..

ஆக பெண் என்றால் செல்வம்/வருமானம்  என்றளவில் பெண்ணின் மதிப்பு கூடியுள்ளது.. பாலியல் தொழில் செய்வதற்கென்றே தாய்லாந்தின் வடகிழகு மாகாணத்திலிருந்து ( ஈசான் ) மிகவும் ஏழ்மை நிலையிலிருந்து வருகின்றனர்..அங்கு விவசாயமே முக்கிய தொழில்.. வறட்சி ஏற்பட்டதால் இப்படியாம்.. ஆக அப்பகுதியில் இது ஒரு கலாச்சாரமாகவே மாறிவிட்டது.  பாலியல்  தொழில் செய்வதாக கூறப்படும் பெண்களுக்கு அனேகமாக துணையாக ஒரு ஆண் இருப்பார்.. நிமிர்ந்த நடையோடு எவ்வித அச்சமோ, கூச்சமோ இல்லாமல் இதுவும் ஒரு வேலைதான் என்பதுபோல் தலைநிமிர்ந்து நடக்கிறார்கள். திருநங்கைகளும்.. அவர்கள் ஒரு மூன்றாவது பாலினமாக ஏற்கப்பட்டு  பல வருடங்களாகிவிட்டது.. இப்போதும் பல சேவை நிறுவனங்களும் , அரசும் , அவர்களுக்கு லட்சக்கணக்கில் செலவாகும்  பாலின மாற்று சிகிச்சைக்கு இலவசமாகவே  ஏற்பாடு செய்கிறார்கள்.

இன்னொரு முக்கிய செய்தி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னால் வந்த சீக்கியர்கள் (இந்திய வம்சாவழி) , இங்கே வந்து தாய்க்காரர்களாகவே மாறிவிட்டனர்.. சீக்கிய மதம் வளர்க்கவோ, பள்ளி நடத்தவோ , கலாச்சாரத்தை ஏற்பதிலோ , அவர்களுக்கு எல்லா துறையிலேயும் உரிமை கிடைத்திருப்பதிலேயே  தெரியும் இவர்களின் விசாலமான மனது.சீக்கிய கம்பெனிகள் பல இங்கே மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.. தாய்லாந்தின் முதல் பைலட் இந்திய வம்சாவழியில் வந்த தாய் பெண் நிதிஷா.. ( அவர் படம் இணைக்கப்ப்ட்டுள்ளது ) ..ஆக பெண் என்ன துறையில் முன்னேறணும் என்றாலும் இங்கே ஏதும் தடையில்லை..வானமே எல்லை அவளுக்கு..

ஈவ் டீஸிங் போன்ற எவ்வித பிரச்னைகளுமில்லை இங்கே.. ஆனாலும் சில கலாச்சார சீரழிவுகள் இருப்பதாக வருத்தப்படுகிறார் 45 வயது கூன். தங்.. (கூன் என்பது பெண்ணுக்கு முன் போடப்படும் அடைமொழி மரியாதைக்காக.. ஃபி என பெரியவர்களையும்  துணையையும் அழைப்பார்கள்.. ஃபி என்பது அண்ணா, அக்கா, எனவும் பொருள்படும்..அதே போல ஆண் பெண்ணிடம் பேசும்போழுது  “காப்” என முடிக்கணும் ஒவ்வொரு பேச்சையும்.. பெண் ஆணிடம் பேசும்போது “கா” என முடிக்கணும்.. இவை மரியாதை நிமித்தம் வலியுறுத்தப்படுகிறது.. “கா, காப்” என முடிக்கும்போதே புன்னகையோடு முடிக்கணும்.. )

நான் எண்ணிப்பார்க்கிறேன் நம் நாட்டிலும் இப்படி பாலியல் தொழிலாளிகளும் (பாலியல் தொழிலை ஒருபோதும் ஒழிக்க முடியாது என்ற பட்சத்தில்), திருநங்கைகளும்,  தலை நிமிர்ந்து நடக்கும் நாள் விரைவில் வருமா?..  தாய்லாந்து பெண்கள் கணவர் தன்னைவிட முக்கியத்துவம் வாய்ந்தவர்தான் என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.. ஆணுக்கு அதற்கான சக்தி இருக்கு என நம்புகின்றனர்.. பலர் அடங்கி போவதை தவறில்லை என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர்.. மேலும் ஆயுசுக்கும் தாங்கள் தங்கள் உடலழகை பேணி பாதுகாத்தால் தன் கணவர் தன்னை விட்டு போகமாட்டார் என நம்புகின்றனர்.. (இது கொஞ்சம் உவப்பில்லாத செய்தி எனினும்..பெண் போகப்பொருளல்லவே.

அதனால் எல்லோருமே மெலிவாக, கட்டுக்கோப்பாக இருக்க நல்ல ஆரோக்கியமான , அளவான உணவும் , உடற்பயிற்சியும்  தினமும் கடைபிடிக்கின்றனர்.. அரசும் இதுக்கு ஆங்காங்கே பூங்காக்களிலும் , பொது இடங்களிலும் உடற்பயிற்சியான ஏரோபிக்ஸ் இலவசமாக சொல்லித்தர ஏற்பாடு செய்துள்ளது அதிசயமாயிருக்கும்..

________________________________________________

நான் சந்தித்த கூன். ” பிரிம் “ என்ற பெண் வீட்டு வேலை செய்கிறார்.. காலையில் கிளம்பி அவர் செல்கையில் ஏதோ அலுவலுக்கு செல்வது  போலவே மிக சுத்தமாக அழகான உடுப்பு  போட்டுக்கொண்டு  , தலையை அழகாக சீவி , க்ளிப் போட்டுக்கொண்டு, அளவோடு  முகப்பூச்சும், லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டு ஆர்வமாக செல்கிறார்..போகும் வழியிலேயே வேலைக்கு செல்லும் அனைவரும் காலை உணவை வாங்கிக் கொள்கின்றனர்.. (உணவுகள் இங்கே மிக சுத்தமான முறையில் தயாரிக்கப்படுகின்றன)…

அந்த உணவு விற்பவர்களும் அனேகர் பெண்களே.. ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக்கொண்டே உணவும் தரப்படுகிறது..  பின் அந்த உணவை எடுத்துக்கொண்டு வேலை செய்யும் வீட்டில் வேலை முடிந்ததும் உண்கிறார். பல வீடுகளில் அவர்கள் மேசையிலேயே அமர்ந்து உண்ணவும் அனுமதிக்கப்படுகின்றார்கள்..”ப்ரிம்” கணவர் டாக்சி ஓட்டுனர்.. இவர்கள் இருவருமாய் சம்பாதித்து  கிராமத்தில் இருக்கும் அவர்கள் குழந்தைக்கும் , பெற்றோருக்கும் பணம் அனுப்புகின்றனர்..சில ஆண்கள் குடித்து பணத்தை செல்வழிப்பதில் மனைவியருக்கு வருத்தமுண்டு..  சில குடும்பங்கள் குடியால் , சூதாட்டத்தால் நிம்மதி இழப்பதாக சொல்கிறார்கள்.. குடித்துவிட்டு அடிக்கும் ஆண்கள் வெகு சிலரே.. சில பெண்கள் துணிவாக எதிர்த்து விடுகின்றனர்.. அப்படி எதிர்க்கும் பட்சத்தில் பொதுமக்களும் இணைந்து கொள்வார்களாம்..

ஆண்கள் அனேக வீடுகளில் சமைக்கின்றனர்  விரும்பியே.. வீட்டு வேலை செய்வதையும் இழிவாக நினைப்பதில்லை.. அலுவல் செல்லும் மனைவியருக்கு வீட்டிலிருந்து உதவும் கணவருண்டு.. குழந்தை வளர்ப்பையும் கூட அற்புதமாக , செய்யும் கணவருண்டு.. சில பெண்கள் வெளிநாடு சென்று வேலை செய்து பணம் அனுப்ப , கணவர் குழந்தைகளை , பெற்றோர்களை கவனித்துக் கொள்வதுண்டு.. சில உணவு கடைகள் நடத்தும் பெண்மணிக்கு கூட இருந்து உப வேலைகளை கணவரும் , பசங்களுமே செய்கின்றனர்.. இதை பல இடங்களில் வெகு சர்வ சாதாரணமாய் காணலாம்..

இதேபோல கூன்.” பிபூன்சாக் “ என்பவர் சொல்கிறார் .. தலைநகர் பாங்காக்கில் மட்டும் 60% பெண்கள் தனியே தங்கியிருந்த்தே வேலைக்கு செல்கின்றனர்.. தானும் அப்படி 5 வருடம் தங்கியிருந்ததாகவும் , தனக்கும் , மற்ற பெண்களுக்கும் எந்த ஆணாலும் பிரச்னை ஏற்பட்டதேயில்லை.. மாறாக நேரம் காலம் பார்க்காமல் உதவவே தயாராக இருப்பார்கள் எனவும் சொல்கின்றார்.. ஆம அதை கண்கூடாக பார்க்கலாம்..

இங்கே பல ஆண்கள் “பைக்மேன் , அல்லது மோட்டார்சைக்கிள் மேன்” (மோட்டார்பைக் டாக்சி) என அழைக்கப்படுகிறார்கள்.. அவர்களே  வேலைக்கு செல்பவர்களுக்கு சில நேரம் கடவுள் போல.. தலைநகரின் போக்குவரத்து நெரிசல் உலக பிரசித்தி.. அதில் இந்த பைக்மேன்கள் வாகனங்களுக்கிடையில் நெளிந்து , வளைந்து வெகு சாமர்த்தியமாகவும் மிக விரைவாகவும் வேலை செய்யுமிடத்துக்கு சென்று பத்திரமாக சேர்த்திடுவார்கள்..அனைவருக்கும் அடையாள அட்டையும் இருக்கிறது.. இவர்களை பல தெரு முனைகளில் பார்க்கலாம்,,பல வர்ண சட்டைகளோடு , புன்னகையோடும் காட்சியளிப்பார்கள்..ஆக பைக்கில் ஏறும்  பெண்மணிகளை தத்தம் குடும்ப உறுப்பினர்களாய் பார்க்கிறார்களே தவிர எவ்வித சபல மனப்பான்மையும் இல்லை..அனேகர் பள்ளி குழந்தைகளையும் இப்படி மிக பொறுப்போடு அழைத்து செல்வதுண்டு.. துணிந்து செல்லலாம் அவர்களை நம்பி எந்நேரமும்..

அதே போல இப்போது அவர்கள் தொழிலில் போட்டியாக பெண்களும் “பைக் வுமன்” களாக வலம் வருகிறார்கள்.. அவர்கள் நுழையாத இடமே இல்லை என்பது போல்.. அதற்கு முக்கிய காரணம் ஆண்களின் ஆதரவாகத்தானே இருக்க முடியும்..?.

பாகிஸ்தானில் தன் மாமியார் வீட்டுக்கு போகும்போது பெண்கள் அடிமை போல நடத்தப்படுவதை கண்டு மிக வேதனைப்படுகிறார் எனது ஒரு தோழி.. இந்திய தொலைக்காட்சிகளில் வரதட்சணை கொடுமைகளை பார்க்கும் போது இப்படியெல்லாம் நடக்குமா? என அதிசயப்படுகிறார்..

சட்டம் போட்டுத்தான் சம உரிமை ஏற்படுத்தவேண்டிய அவசியமில்லை. என நிரூபிக்கின்றார்கள் மெல்ல மெல்ல..பெண் முன்னேற்றத்தை தடுப்பதுமில்லை இங்கே.. புயிங்.நோக் ( புயிங் என்றால் பெண், .நோக் என்பது செல்லப்பெயர் , அவர்கள் விருப்பப்படி வைத்துக்கொள்வார்கள் . நோக் என்றால் பறவை என்ற அர்த்தம் . அவருக்கு பறவைகள் பிடிக்குமாம்.. )சொல்கிறார் , தான் சில வருடங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி படித்துக்கொண்டே வேலையும் செய்து சம்பாதித்ததாக.. அவர்  சகோதரி அமெரிக்காவிலும் ,தோழி ஜெர்மனியிலும் இதே போல் வேலை பார்த்ததாக.. ஆனாலும் பலரும் எங்களை ஏதோ  பாலியல் தொழிலாளி போல பார்ப்பது எமக்கு மிக தர்மசங்கடத்தையும் மன வருத்தத்தையும் தந்துள்ளது .. அதனால் நான் என்னுடைய நாட்டுக்கே திரும்பி வந்துவிட்டேன்.. என் நாட்டில்தான் எனக்கு அதிக அன்பும் ,மரியாதையும் கிடைக்கிறது என  மிகப்பெருமையாக கூறுகிறார்.. அது நான் பார்த்தவரையிலும் மிக உண்மையும்..

நீங்கள் ஏங்கேயாவது ஒரு தாய் பெண்ணை சந்திக்க நேர்ந்தால் புன்னகை என்ற ஆயுதத்தோடு மட்டும் அவர் உள்ளத்தை தொட்டுப் பாருங்கள் , ஆயுசுக்கும் மறக்க மாட்டார்.. அத்தனை மென்மையான மனதுடையவர்கள்… தாய்லாந்து பெண்கள் கடின உழைப்பாளிகள் ,  மிகச் சிறந்த குடும்பத்தலைவிகள் , . அவர்களை மதித்து  போற்றுவோம்..

( நான் பேட்டி காண என் தாய்லாந்து தோழி வீட்டுக்கு சென்றபோது அங்கே அக்கம்பக்கமுள்ளவரெல்லாம் என்னை மிகுந்த வாஞ்சையோடு நெஞ்சார தழுவி வரவேற்றனர்.. என் குழந்தைகளை அன்போடு வரவேற்றனர் அங்கேயுள்ள குழந்தைகள்.. பின் நானும் அவர்களோடு சமையலறையில் நின்று சமைக்க அனுமதி தந்தனர்..  சொல்லிக்கொடுத்தனர்.. பின் எல்லோருமாக சமைத்த அனைத்தையும் தரையில் நடுவில் வைத்து  சுற்றி உட்கார்ந்தோம்.. அப்போது தட்டில் சாதம் போட்டுக்கொண்டு பலவகை கூட்டுக்களை அவ்வப்போது எடுத்து போட்டுக்கொண்டு உண்ணவேண்டும்..எமக்காக சப்பாத்தியும் செய்திருந்தார் தோழியின் கணவரான பாகீஸ்தானியர்…. நான் கரண்டி உபயோகித்த போது என்னை அன்போடு தடுத்து , நீ வேற்று ஆள் அல்ல , அதனால்  சப்பாத்தியை பிட்டு கூட்டுக்குள் தேய்த்து எடுத்தே உண்ணவேண்டும்  என்றார் பிடிவாதமாய்..பின்பு மொட்டை மாடிக்கு சென்று அந்தாக்ஷரி போல பாட்டு பாடினார்கள்.. அப்போது உண்ண சில நாட்டுப்  பலகாரமும் , பழங்களும்..வீடு திரும்ப நள்ளிரவுக்கு மேல் ஆயிற்று.. அன்பு வைத்தார்களானால் அவர்களை மிஞ்சிடவே முடியாது.. என்பதை பலமுறை புரிந்துள்ளேன்.. )

தாய்லாந்து பெண்கள் பற்றி எழுத சந்தர்ப்பம் தந்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள்..

– சாந்தி

________________________________________________

வினவு பின்குறிப்பு:

ஓரிரு ஆண்டுகளாக ஜனநாயகத்திற்கான போராட்டமும், தெருச்சண்டைகளும் தாய்லாந்தில் அதிகரித்து வருவதை பார்க்கிறோம். உலகமயத்தின் ‘அருளால்’ அங்கும் சமூக ஏற்றத்தாழ்வு அதிவேகமாக விரிவடைந்து வருகிறது. தாய்லாந்தின் நாட்டுப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு விவசாயம் அழிந்து நகரங்களும் கேளிக்கை சுற்றுலாக்களுமே முக்கிய மையங்களாகி வருகின்றன. மேற்குலகின் மாந்தருக்கான ‘இனிய’ விபச்சார விடுதியாக தாய்லாந்து மாற்றப்பட்டிருப்பது ஒரு கசப்பான உண்மை. சாந்தி சொல்வது போல இது ஒரு மாநிலத்திலிருந்து வரும் ஏழைகள் காரணமாக இருந்தாலும் அத்தகைய நிலையை மேற்குலகும், அதற்கு இடம் கொடுக்கும் தாய்லாந்தின் ஆளும் வர்க்கங்களுமே தோற்றுவித்துள்ளன.

இதனால் தாய்லாந்து பெண்கள் என்றாலே விபச்சாரிகள் என்றொரு பார்வை உருவாகிவிட்டிருப்பது குறித்து இந்த கட்டுரையில் ஒரு தாய்லாந்து பெண் வருத்தப்படுகிறார். எனினும் அந்த வருத்தம் கோபமாக எழும்போதுதான் இந்த பெயருக்கு காரணமான கயவர்களை அப்புறப்படுத்த முடியும். புத்த மதமும், நிலவுடமைப் பண்பும் தோற்றுவித்திருக்கும் ஒருவித ‘மென்மையை’ தாய்லாந்து நாட்டின் பெண்களிடம் காண முடிகிறது. அதே நேரம் இதனாலேயே அவர்கள் அதிகம் சுரண்டப்படுவது கூட எளிதாகவே நடக்கலாம். இத்தகையை அதீதமான பெண்மை என்பது ஒருவித அடிமை நிலைதான். இதில் சாந்தி கூறும் நல்லவிசயங்கள் இருப்பது போலவே கெட்ட விசயங்களும் இருக்கின்றன.

ஒரு நாட்டின் சமூகத்தையும், குறிப்பாக பெண்களது நிலையையும் வரலாற்று ரீதியான பார்வையிலிருந்தே புரிந்து கொள்ள முடியும். அதற்கு இந்த கட்டுரை ஓரளவிற்காவது உதவி செய்யும். இதற்காக நேர்காணல்கள் எடுத்து முனைப்புடன் கட்டுரை அனுப்பிய பதிவர் சாந்திக்கு எமது நன்றிகள்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010

 

கணவனுக்கு எழுத முடியாத கடிதம்…..

66

உழைக்கும் மகளிர் தின சிறப்புப் பதிவு – 1

வினவு முன் குறிப்பு:

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் உழைக்கும் மகளிர் தினத்திற்காக பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பங்களிப்புடன் வினவுக்கு வரும் கட்டுரைகளை வெளியிடுகிறோம். இந்த முதல் கட்டுரை எழுதிய வாசகி அவரது மன உணர்வுகளை, வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையை, ஆழவும், அகலமுமாய் அழுத்திக் கொண்டிருக்கும் மனக்குமுறல்களை இங்கே பதிவு செய்கிறார். இந்தக் கடிதம் அவரது கணவரை நோக்கி எழுதப்பட்டாலும், அப்படி அவரது கணவனிடம் பேச முடியாது என்பதுதான் யதார்த்தம். குடும்பப் பிரச்சினைகள் என்று பொதுப்புத்தியில் டி.வி சீரியல் வழியாக பதிந்திருக்கும் ஜோடனைகளை கலைத்துவிட்டு மனைவி என்ற சுமையாகிப் போன வேலையோடு வாழும் பெண்ணின் மனதை இந்தக் கடிதம் கொந்தளிப்போடு ஒரு சித்திரமாக உணரவைக்கிறது. ஆண் என்ற அதிகாரத்தில் வாழும் ஆண்டைகளும், பெண் என்ற அடிமை நிலையை ஏற்றுக் கொண்ட பெண்களும் என்ற சமூக யதார்த்தத்தில் இந்தக் கடிதம் துயரத்துடன் எழுப்பும் கேள்விகள் முக்கியமானவை. இனிக் கடிதத்தை படியுங்கள்…..

_______________________________________________

ந்தக் கடிதத்தை நான் யாருக்காக எழுதுகிறேன். எனக்காகவா? இல்லை என் மனதில் உள்ளதை இந்தக் கடிதம் மூலம் உனக்கு தெரியப்படுத்தவா? இதனால் எனக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நப்பாசையா? இல்லை..எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை…என் மன உணர்வுகளை உன்னால் புரிந்து கொள்ள முடியாமல் போன மன அழுத்தத்திலிருந்து விடுபடவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

என் அம்மாவை கருவியாகக் கொண்டு இந்த உலகத்தில் எட்டிப் பார்த்த என்னை “அடடா! மூக்கும் முழியும் எப்படி இருக்கு பாரு? உன்னை எந்த மவராசன் வந்து கொத்திக்கொண்டு போகப்போறானோ?” என்று யாரோ சில பெண்கள் கேட்டு வைத்து எனக்கும், உனக்குமான (நிர்) பந்தத்தை அப்போதே ஏற்படுத்தி விட்டார்கள் என்று அம்மா சொன்னார். என்னைப் போல் நீ பிறந்த போதும், “நீ சிங்கக்குட்டிடா! எத்தனை பேரை ‘அடக்கி’, ‘ஆள’ப்பிறந்திருக்கிறாயோ?” என்று உனது ஆணாதிக்கத்தை எத்தனை பேர் தலை தூக்கி நிறுத்தி வைத்தார்களோ? தெரியவில்லை…ஆனால் நீ உன் கோபத்தை ‘அடக்கி’, ஒரு பெண்ணின் மனதை ‘ஆளப்’ பிறந்திருக்கிறாய் என்று யாராவது உனக்கு தெளிவாக சொல்லிக் கொடுத்திருக்கலாம்.

எத்தனையோ கனவுகளுடன் சுற்றித் திரிந்த என்னை, “அத்தனை கனவுகளையும் உன் கணவனின் காலடியில் போட்டுவிடு. அவன் தான் உன் கனவுகளுக்கு உரம் போடுபவன்” என்ற மந்திரங்களையெல்லாம் ஓதி என்னை உன் கையில் பிடித்துக் கொடுத்தார்களே….அவர்களுக்குத் தெரியுமா? நான் சுமக்கப்போவது உன் கனவுகளை மட்டும் தான் என்று.

பிறந்து வீட்டில் சொகுசாக வளர்ந்த என்னை, ‘நீதான் எனக்கு’ என்று முடிவான பிறகு அத்தனை ஆயக்கலைகளையும் கற்றுக்கொள்ள தயார்படுத்தினார்களே..இல்லாவிட்டால் நான் நல்ல மருமகளாக இருக்க முடியாது என்று சொல்லி அனுப்பினார்களே…பிறந்த வீட்டுப்பிரிவையும், உன் அருகாமையில் கிடைக்கும் வெட்கத்தையும், புது வீட்டு சொந்தங்களை பற்றித் தெரியாத தயக்கத்தையும் சுமந்து கொண்டு வந்த எனக்கு, உன் வார்த்தை அன்பு, அம்பாக மாறி என் மனதை குத்திக்கிழிக்கப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

திருமணத்துக்கு முன்பு நீ பேசும்போதெல்லாம், “இந்த திருமணம் நின்று விட்டால் உன்னை எங்காவது கடத்திக்கொண்டு கூட போய்விடுவேன்..நீ இல்லாத வாழ்க்கை எனக்கொரு வாழ்க்கையா?” என்று அன்பை பொழிந்தாயே…அப்போது என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை, திருமணமான ஒரே வாரத்தில் நீ உன் சுயரூபத்தை காட்டப்போகிறாய் என்று.

திருமணமானவுடன் மேலே படிக்கலாம் என்ற கனவுடன் இருந்த என்னை, “முதலில் புருஷனுக்கு தேவையானதை செய், அவனுக்கு எது பிடிக்கும், பிடிக்காது என்று தெரிந்து வைத்துக்கொள். அப்புறம் உன் சமத்து..உன் அப்பாவை பணம் அனுப்ப சொல்லி மேலே படித்துக்கொள்” என்று மாமியாருக்கே உள்ள அக்கறையைக் காட்டிய போது அசந்துதான் போனேன். அதெப்படி இந்த எலும்பில்லாத நாக்குக்கு சக்கரையைத் தடவவும், விஷத்தைக் கக்கவும் முடிகிறது? ஆச்சரியம்தான்!

சமையல் வேலையை நான் தெரிந்து வைத்திருக்கிறேனா என்பதை, வந்த முதல் நாளே டெஸ்ட் செய்து பார்த்த போது பயந்து நடுங்கித்தான் போனேன், இன்னும் எதற்கெல்லாம் டெஸ்ட் வைப்பார்களோ என்று. ‘அப்பாடா! ஒரு வழியாக சமாளித்தோமே’ என்று நானாக ஆசுவாசப்படுத்திக் கொண்ட வேளையில், மாமியார் இன்னொரு மருமகளான உன் அண்ணியைப் பார்த்து,  “நீ இப்படி சமைப்பாயா?” என்று கேட்டு வைத்து தொலைக்க, அவள் அதற்கு மேல் என்னுடன் ஒட்டாமல் என்னை விட்டு தள்ளியே இருந்துவிட்டாள். அதற்கும் மேல் அவளுக்கு என் மேல் என்ன வன்மமோ? புகுந்த வீட்டுக்குள் இப்படி ஒரு அரசியல் இருக்கும் என்பதை புதிதாக வந்த நான் எப்படி அறிவேன்?

இரண்டு மருமகள்கள் சேர்ந்தால் நம்மை ஆட்டிப்படைத்து விடுவார்கள் என்ற பயமோ என்னமோ, இருவரையும் ஆரம்பத்திலேயே பிரித்து வைக்கும் சூட்சுமம் உன் அம்மாவுக்குத் தெரிந்திருக்கிறது. உன் அண்ணியை என் கூடப்பிறந்த அக்காவைப் போல் நினைத்தேனே..ஆனால் அவள், என் கணவனான உனக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் எனக்கும் கொடுக்க மறந்தாள்?

உறவுகளுக்குள்ளேயே கணவனையும், மனைவியையும் வேறு வேறு இடத்தில் வைக்க, புகுந்த வீட்டு உறவுகளால் மட்டும் தான் முடிகிறது. நானும் உனக்கு எவ்வளவு முக்கியம் என்பதை ஏன் உன் உறவினர்களுக்கு புரிய வைக்க நீ முயற்சிக்கவில்லை? அவர்கள் அடித்துக்கொண்டால் என்ன? நாம் தப்பித்தோமே என்ற  எல்லா ஆண்களின் மனோபாவம் தான் உனக்கும். ‘ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம்’ என்று சொல்வதைப் போல இரண்டு பெண்கள் அடித்துக் கொண்டால் ஆண்களுக்குத்தான் கொண்டாட்டம் என்பது ஏன் இந்தப் பெண்களுக்கு புரிவதில்லை? இப்படி புரியாமல் இருப்பதுதானே ஆண்களின் பலம்.

திருமணமான ஒரு வாரத்திலேயே சீர், செனத்திகளை வாங்குவதற்காக என் அப்பா, அம்மாவுடன் அடித்துக்கொட்டுகிற மழையில் ஒவ்வொரு கடையாக ஏறி, இறங்கினோமே..அப்போது டிவி, ஃபிரிட்ஜ், வாஷிங்மெஷின் எல்லாம் இந்த இந்த அளவுகளில் வேண்டும் என்று நீ என் காதில் கிசுகிசுத்துக்கொண்டு வந்த போதெல்லாம் அது விளையாட்டு என்றுதானே நினைத்தேன். சமையல் பாத்திரங்கள், டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங்மெஷின், டிவிடி ப்ளேயர், கட்டில், பீரோ என்று அத்தனை பொருட்களும் அப்பா போட்டு வைத்திருந்த பட்ஜெட்டுக்குள் அடங்கிப்போனதில் உனக்கு என்ன வருத்தம் இருந்ததோ? அதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. கடைசியாக ஸ்பீக்க்கர் மட்டும் வாங்க முடியாமல் போனதால் உனக்கு என் வீட்டார் மேல் எந்தளவுக்கு கோபம் இருந்ததோ?

உன்னிடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்து வந்த எனக்கு, சீர் பொருட்களில் ஏதோ ஒன்று குறைந்ததை பெரிய கெளரவப் பிரச்சினையாக நீ ஆக்கிய போதும், அதையே திரும்ப திரும்ப சொல்லிக்காட்டிய போதும் அதிர்ச்சியில் உறைந்துதான் போனேன். கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. தொண்டையிலும்  ஏதோ கசந்தது. முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் என்னவோ? என் வாழ்க்கையை வியாபாரமாக்கிய அப்பா, அம்மாவின் மேல் கோபம் வந்தது.

அத்தனை கசப்புகளையும் மென்று முழுங்கிவிட்டு, வாழ்க்கை இப்படியும் இருக்கும் என்ற யதார்த்தை உணர்ந்து, ஆசையாக உன்னிடம் “என்னங்க..நான் ஒண்ணு கேட்கட்டுமா?” என்று ஆரம்பித்தால், “என்ன வேணும்னாலும் கேளு..ஆனா நகை வேணும்னு மட்டும் கேட்டிராத..அதுக்கெல்லாம் உங்க அப்பா இருக்காரு..உங்க அப்பா அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாதும்மா” சட்டென்று முகத்திலடித்தாற்போல் பேசிய பேச்சுக்கள் ரொம்ப நேரம் காதை விட்டு நீங்க மறுத்தது. அப்போதும் அவன் அன்பாக இல்லாவிட்டால் என்ன? நான் அதைவிட அன்பை அள்ளித்தருவேன் என்று நானே எனக்கு செய்து கொண்ட சமாதானம் தான் இன்னும் என் வாழ்க்கையைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறதோ…

பாஷை தெரியாத ஊரில் புது மனைவியாக வந்த என்னை தனியாக வீட்டிலேயே விட்டுவிட்டு ஏற்கனவே நீ இருந்த உன் அண்ணன் வீடே கதி என்று போய்விட்டாய். நீ அங்குதான் இருக்கிறாய் என்பது கூட தெரியாமல் உனக்காக ஆசை ஆசையாக சமைப்பதும், உனக்காக நான் காத்துக்கொண்டே இருந்ததும், உனக்காகவே பூ வைத்து, பொட்டு வைத்து சே! வீட்டைச் சுற்றிப்பார்க்கும் போது வீடும் மட்டுமல்ல…என் மனதும் வெறுமையாக இருந்தது. எனக்குப் பிடிக்கவே பிடிக்காத தனிமை! உனக்கு அதுதான் சந்தோஷம் என்று தெரிந்திருந்தால் நானும் உன்னுடய சந்தோஷங்களில் ஒரு தோழியாக பங்கெடுத்திருப்பேன். ஆனால் அதற்கும் நீ இடம் கொடுக்காமல் போனது எப்படி? நாம் இருவர் மட்டுமே பேசிக்கொள்ளும் வார்த்தைகள் எல்லாம் உனக்கு அண்ணியாக வாய்த்தவளுக்கு எப்படி தெரிந்தது?

ஏன் இதையெல்லாம் போய் அடுத்தவரிடம் சொல்கிறீர்கள் என்று கேட்டால் “நீ இப்போது வந்தவள், அவர்கள் என் கூடவே இருப்பவர்கள்” என்று நீ சொன்னபோது, பழைய உறவுகளை மறக்காமல் இருக்கும் ஆணாக பெருமைப்படுவேனா இல்லை என் மனதைப் புரிந்துகொள்ளாத கணவன் என்று வருத்தப்படுவேனா…. அண்ணியாக வாக்கப்பட்டவளோ, ஏதோ ஒரு நாள் என் முன்னால் அவளை மட்டம் தட்டிப் பேசிய மாமியாரை கேள்வி கேட்க தைரியமில்லாமல், என் மேல் கோபம்கொண்டு ஏன் தள்ளி வைத்தாள்? அதையும் நான் உனக்கு புரிய வைக்க முயற்சி செய்தால் அதைக் காதில் வாங்காத ஒரு அலட்சியம் எனக்கு கண்ணீராக முட்டிக்கொண்டு வந்ததை நீ அறிவாயா?

என்றோ வீசிய என் முற்போக்கு சிந்தனைகள், வார்த்தைகள் எல்லாம் இன்று இந்த தனிமையில் சுக்கு நூறாய் உடைந்து போனது யாருக்குத் தெரியப்போகிறது? தன் மனைவியின் கண்களில் காதலைத் தேடும் கணவன், அதே கண்களில் அவள் மனதையும் தேடாமல் இருப்பது எப்படி என்றுதான் எனக்கு இன்னும் விளங்கவில்லை.

திருமணமான பிறகும் குடியும், கும்மாளமுமாக பொழுதைக் கழிப்பதில் உனக்கு என்ன சந்தோஷமோ? உன்னை சுற்றியிருக்கும் சுவாரஸ்யங்களைத் தொலைத்து விட்டு எதில் தேடுகிறாய் உன் சந்தோஷத்தை? குடியும், புகையும் மட்டுமே வாழ்க்கையின் முதல் சந்தோஷம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் உன்னைப்பற்றி ஏன் உன் பெற்றோர்கள் முழுதாக அறியவில்லை? திருமணத்திற்குப் பிறகு மகன் செய்யும் சின்ன சின்னத் தவறுகளை பெற்றோர்கள் கண்டும், காணாமல் இருக்கிறார்களா அல்லது இருப்பது போல் நடிக்கிறார்களா? இன்னும் எனக்கு இந்தக் கேள்விக்கு விடை தெரியவில்லை.

உன் உடல்நிலையை மனதில் கொண்டு, உன் பெற்றோர் சொன்னாலாவது நீ திருந்தலாம் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் சொன்னால், அதற்கும் அவர்கள், “ஆண் பிள்ளை அப்படித்தான் இருப்பான். உனக்கு என் மகனை மயக்கத் தெரியவில்லை” என்று சம்மட்டியால் அடித்தது போல் சொன்னதில் நன்றாகவே அடையாளம் தெரிந்து கொண்டேன் சுயநலவாதிகளை.

சமயத்திற்கு தகுந்தாற்போல் பெண்களை சாடுவதில் இந்த சமூகத்திற்குத்தான் எத்தனை ஆசை!வேலைக்குப் போகும் பெண்ணா? “உனக்கு சம்பாதிக்கும் திமிர்” என்பதும், அதிகம் பேசினால் “வாயாடி”, அமைதியாக இருந்தால் “ஊமைக்கொட்டான் மாதிரி இருந்துக்கிட்டு…” என்று பட்டம் கொடுப்பதும், கணவனை சொல்பேச்சுக் கேட்க வைத்தால், “மயக்கி விட்டாள்” என்று சொல்வதும், அதே கணவன் மனைவி சொல்வதை கேட்காமல் இருந்தால், “மயக்கத் தெரியவில்லை” என்பதும் அப்பப்பா! போதுமடா சாமி! ஒரு பெண் படித்து பட்டம் பெறுகிறாளோ, இல்லையோ இந்த சமூகம் அவள் கேட்காமலேயே அத்தனை பட்டத்தையும் கொடுத்து விடுகிறது அதுவும் பெண்களாலேயே. வெளியுலகில் சாதிப்பதைத்தான் இத்தனை நாள் சாதனை என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இல்லை…குடும்ப உறவுகளுடன் போராடுவதும் பெண்களுக்கு மிகப்பெரிய சாதனைதான்.

திருமணத்திற்கு பிறகு வரும் ஒவ்வொரு பண்டிகையும் தலை தீபாவளி, தலைப்பொங்கல் என்ற பெயரில் வசூல் வேட்டையை நடத்தும் என்று அப்போது நான் அறிந்திருக்கவில்லை. தலைப்பொங்கல் வந்தபோது, “உன் அப்பாவை ஒரு ஐயாயிரம் பணம் அனுப்பச்சொல்” என்று வாய் கூசாமல் உன் அம்மா கேட்டபோது, அவர்களுக்கு இல்லவே இல்லாத வெட்கத்தால் வெட்கித் தலைகுனிந்தேன். இதற்கு மேலும் நான் வாயைத் திறக்காமல் இருக்க வேண்டும் என்று எப்படி நீ எதிர்பார்த்தாய்? எந்த மருமகளும் இவர்களை எதிர்த்து பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டா வருகிறாள்? எவ்வளவு கொடுத்தாலும் தீரவே தீராத இந்த வரதட்சணை ஆசை எந்தப் பெண்ணுக்கும் அருவெறுப்பைத் தராதா?

எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுக்காத உன் கைகள் ஏன் என் பிறந்த வீட்டுக்கு செய்ய வேண்டுமென்றால் மட்டும் பின்வாங்குகிறது? உன் அப்பா, அம்மாவையும் மிஞ்சிய ஆண்பிள்ளையாக உன்னைப் பார்க்கும் போது எந்த பெண்தான் ஆவேசப்படாமல் இருப்பாள். இன்னும் எனக்குத் தேவையான விஷயங்களை என் அப்பாவிடம் உரிமையாக கேட்பதுபோல் உன்னிடம் கேட்க முடிவதில்லை. இந்த விரிசல் ஏன் என்பதை யோசிக்கக்கூட உனக்கு அவகாசம் இல்லை? நம்மைத் தொல்லைப்படுத்தாமல் இருக்கும்வரை நமக்கு லாபம் என்ற சுயநலமான மனம்.

குழந்தை பிறந்தால் பிரச்சினை தீர்ந்து விடும் என்ற நினைப்பில் உன் கருவை ஆசையாக நான் சுமந்தபோது எனக்குள் ஏற்பட்ட மகிழ்ச்சியான மாற்றத்தை உன்னால் மட்டும் ஏன் உணர முடியாமல் போனது? கருவை சுமந்த நேரத்தில் கூட ஆறுதலான ஒரு பேச்சோ, அரவணைப்போ இல்லாத ஜடமாய் எப்படி நீ மாறிப்போனாய்? குழந்தை பெற்றுத் திரும்பிய உடனேயே, என் அன்பை கொஞ்சம் கொஞ்சமாக உணர வைத்துக்கொண்டிருந்த தருணத்தில் உன் அஜாக்கிரதையால் வேலையை இழந்து வந்தாய். அப்போதும் உன் மேல் முன்னைவிட அன்பாகத்தானே இருந்தேன்…

பிள்ளை வந்த நேரம் அப்பன் வேலை போச்சு என்று உன் வீட்டார் என் மனதைக் காயப்படுத்திய போதும் உனக்கு ஆதரவாக இருந்த அந்த தருணத்தை உன்னால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியுமா? உன் கல் நெஞ்சைக் கரைக்கும் கருவியாகவே மாறிப்போன நம் குழந்தையுடன் வேலையில்லாத உன்னையும் சேர்த்து தேற்றினேனே..அதில் உனக்கு தெரியவில்லையா என்னுடைய எதிர்பார்ப்பில்லாத அன்பு.

பிரச்சினை கொடுத்த இந்த இடத்தில் நாம் இருக்க வேண்டாம் என்று வேலையுடன் வேறு இடத்தில் வந்தவுடனாவது நீ மாறிவிடுவாய் என்று நினைத்தேனே…எதிலும் ஆர்வம் இல்லாமல் இருக்கும் உனக்கு தண்ணியடிப்பதிலும், தம்மடிப்பதிலும் மட்டும் எப்படி ஒரு ஆர்வத்தைக் கொண்டுவர முடிந்தது? வாழ்க்கையே அதைச் சுற்றித்தான் இருக்கிறது என்று நீயாக எழுப்பியிருக்கும் கோட்டையை உடைக்க முடியாமல், அதிலேயே மாட்டிக்கொண்ட என் வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தாயா?

உன்னைத் திருத்த‌ நான் எடுத்த முயற்சிகளை எல்லாம் தோற்கடிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அதிலிருந்து தப்பிக்கவும் நீயாகவே ஒரு வழியைத் தேடிக்கண்டுபிடித்தாயே….கையில் கைக்குழந்தையுடன் பின்னிரவு வரை வீட்டில் தனியாக அழுது கொண்டிருந்ததை பொறுக்காத என் அப்பா, “உங்கள் மகனிடம் எடுத்து சொல்லுங்கள்” என்று வேதனையுடன் சொன்னதை நீயும், உன் பெற்றோர்களும் இவர்கள் யார் நம்மை கேள்வி கேட்க என்ற ஈகோவுடன் என்னை வார்த்தைகளால் குத்திக் கிழித்தபோது இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று தான் நினைத்தேன்.

உன் தவறுகளிலிருந்து நீ தப்பித்துக் கொள்வதற்காகவும், உன்னை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற ஆணாதிக்கத்தாலும், “உங்களைப் பற்றி தவறாக பேசுகிறாள். அதனால் தான் நான் இப்படி லேட்டாக வருகிறேன்” என்று உன் பெற்றோர்களிடம் என்னைப் பற்றி தவறாகக் கூறி என் தலையில் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டாயே….இந்த சாதுர்யம் யாருக்கு வரும்? இதற்கு மேலும் உன்னைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வருமா? தப்பித்துக்கொள்ள இப்படி ஒரு வழி இருக்கும் என்று ஏன் என் முட்டாள் மனதுக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும்போதும் தொல்லையாக நினைத்து பிறந்த வீட்டிலேயே விட்டுவிட்டு வருவதும், அதிலிருந்து மீண்டு நானாகவே வெளியில் வருவதும் யாருக்காக என்று பல நேரம் புரியாமல் குழம்பித் தவிக்கிறேன்.

என் வாழ்க்கை எதை நோக்கிப் பயணிக்கிறது என்று நினைத்துப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு பைத்தியக்கார ஆஸ்பத்திரியே நினைவுக்கு வருகிறது. அந்த நினைப்பில் குழந்தை முகம் தெரியும்போது நானாகவே விழித்துக் கொள்கிறேன். அவள் முகத்தில் இருக்கும் மழலைச் சிரிப்பை கவனிக்கும்போது வாழ்க்கையை கொஞ்சம் பிடித்துக்கொள்கிறேன்.

டி.வியில் வரும் பெண்கள், வீதியில் வரும் பெண்கள் அனைவரையும் பாகுபாடில்லாமல் அலட்சியப் பார்வை வீசும் உனக்கு என் வீட்டுப்பிரச்சினையை எள்ளி நகையாடவும், அந்தப் பிரச்சினையில் குளிர்காய்வதற்கும் சொல்லியா தர வேண்டும்? பெரியவர்களின் குழப்பங்களுக்கெல்லாம் பலிகடா ஆக்கப்படுவது வீட்டிற்கு வரும் மருமகள் தானா? இன்னும் எத்தனை வருடங்கள் இப்படியே ஓடும் என்று நினைக்கும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. இந்தப் பெண்களுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனைப் பிரச்சினைகள்?

வீட்டிற்குள் என்னை மட்டம் தட்டிக் கொண்டே இருப்பதும், வெளியில் கொஞ்சம் பெருமையாக பேசுவதும் என்ற உன் இரண்டுபட்ட மனநிலை என்னைப் பல நேரம் ஆச்சரியப்பட வைக்கிறது. காலையில் இருந்து இரவு வரை எதற்காகவாவது கத்திக் கொண்டே இருப்பதும், இரவானால் இரண்டு அன்பான வார்த்தைகளை உதிப்பதும் ஏன் எனக்கு இத்தனை நாள் உறைக்கவில்லை? என் பிறந்த வீட்டுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் ஆறுதல் சொல்வது போல் அதை மேலும் கிளறி விடுவது என்ன ஒரு தந்திரம்? அதிலும் நிறைய குளிர்காய்ந்து விட்டு ஒன்றும் தெரியாத குழந்தை இமேஜை கொண்டு வந்துவிடுகிறாயே..அந்த சைக்கோத்தனம் என்னைத் தவிர வேறு யாருக்குத் தெரியும்?

எனக்கு வரதட்சணையாகத் தந்த நகைகளை என் வீட்டு விசேஷங்களுக்கு கூட போடவிடாமல் வம்பிழுத்த போது, என் பெற்றோர்கள் உன் அப்பா, அம்மாவிடம் சண்டை போட்டு அத்தனையும் பிடுங்கிக்கொண்டு வந்தார்கள். இந்தப் பெரியவர்களின் பிரச்சினையில் நீ ஏன் என்னை மட்டும் இன்னும் காயப்படுத்திக் கொண்டேயிருக்கிறாய்? நான் உன்னிடம் எதிர்பார்த்தது அன்பை மட்டும் தான், ஆனால் அந்த அன்பையும் பெறுவதற்கு, அத்தனை இடிகளை வாங்கியும்,  இன்னும் உன்னிடமிருந்து முழுதாக கிடைக்காமல் தவிக்கிறேனே….அத்தனையும் பொறுத்துக் கொண்டாலும் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத நேரத்தில் கூட உன் அன்பைக் காட்டத் தெரியாமல் இருப்பது எனக்கு ஆத்திரத்தைக் கொடுக்கிறது. அந்தக் கோபத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் என் உடல் பலத்தையும் இழக்கிறேன்.

நீ உன் பிறந்த வீட்டுக்குப் போ என்று விளையாட்டாக சொன்னாலும் மனம் பதைபதைக்கிறது. பிரச்சினையால் என்னையே தாங்கிக் கொண்டே இருப்பதால் என் கூடப் பிறந்தவர்களுக்கும் பெற்றோர்கள் மீது கோபம். திருமணத்திற்கு முன்னால் பிறந்த வீடாவது இருந்தது. ஆனால் புகுந்த வீடு கைவிட்டால் பிறந்த வீடும் நிரந்தரமில்லை. இது பெண்களுக்கே விதிக்கப்பட்ட சாபக்கேடோ!

ரோட்டில் போகும்போது ஆயிரம் பெண்களை நீ ரசித்தாலும் நான் இந்த நடிகனைப் பிடிக்கும் என்று சொன்னால் போதும். உன் தலையில் என்னென்ன கற்பனைகள் ஓடுமோ? பெண் மனசு ஆழம் என்று யார் எழுதி வைத்தார்கள், கணவன் எதை மனதில் வைத்து எதை வெளிப்படுத்துகிறான் என்று புரியாமல் இன்னும் எத்தனைப் பெண்கள் என்னைப்போல் இருக்கிறார்களோ? உன் தாழ்வு மனப்பான்மையால் வாழ்க்கையின் சுவாரஸ்யங்களை இழந்து விட்டு, அதை வெளிக்காட்டினால் இந்த உலகம் ஏசும் என்பதால் அந்தப் பழியையும் என்னையே தாங்கிக்கொள்ள சொல்வது நியாயமா?

எனக்கு பொறாமை வரவேண்டும் என்பதற்காக நீ காட்டும் சீண்டல்களால் எனக்கு பயமில்லை. உன் மனதையும் அப்படி ஒருத்தி கரைத்து விட்டால் அதைவிட சந்தோஷம் எனக்கு வேறெதுவுமில்லை. அப்படியாவது ஒரு பெண்ணின் மனதை நீ அறிந்து வந்தால் சரிதான்!

உனக்குத் தெரியுமா? உன்னை என் கணவனாக பார்க்காமல் என்னைப்போல் நீயும் ஒரு உயிர் என்று நினைப்பதால்தான் இன்னும் உனக்கு சேவை செய்யமுடிகிறது. உன்னைப் பெற்றவர்களை மாமனார், மாமியார் என்று நினைக்காமல் வயதான அப்பா, அம்மா என்று நினைப்பதால் தான் உறவுகளைத் தாண்டிய மனிதாபிமானத்துடன் அவர்களை தாங்கிக்கொள்ள முடிகிறது. இதையெல்லாம் என்று நீ உணரப்போகிறாயோ?

உன் வாழ்க்கையில் பிடிப்பு வர ஒரு வேலையைத் தேடிக்கொள் என்று அனைவரும் சொல்லும்போது, “எதை வேண்டுமானாலும் செய்” என்று அப்போதைய நல்லபிள்ளையாக சொல்லிவிட்டு, அதற்கு மேல் எதையும் யோசிக்க விடாமல் இருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை விஷயங்களையும் விஷ ஊசி போல் ஏற்றிவிடுவது எனக்கு இப்போது புரியாமல் இல்லை. உன்னை விட்டு மொத்தமாக வெளியில் வந்தால் தான் எனக்கான பிடிப்பை நான் தேடிக்கொள்ள முடியும் என்பதை நான் எப்படி மற்றவர்களுக்கு சொல்வேன்? இன்னும் நான் வேலைக்குப் போனால் உன் ஈகோவால் இன்னும் என்னென்ன பிரச்சினைகளை எனக்குள் திணிப்பாய் என்று நினைக்கும்போது இந்த நிம்மதியே போதும் என்று என் மனம் ஆறுதல் அடைகிறது.

நான் இல்லாத வாழ்க்கையிலும் உன்னை சீண்ட யாருமிருக்க மாட்டார்கள் என்று நினைக்கும் போது திரும்பவும் உன்னையே நினைத்துக் கவலைப்படுகிறேன். “என்னையே எனக்குப் பிடிக்கவில்லை” என்று சிகரெட்டை ஊதித்தள்ளும் போது உன்னைப் பார்த்து பரிதாபப்படுகிறேன். ஆனால் அதை நான் எப்போது சொன்னேன் என்பது போல உன் ஈகோவால் என்னைத் தட்டிக்கழிக்கும்போது சே! என்ன மனிதன் இவன்? என்று எரிச்சலடைகிறேன்.

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் சுதந்திரத்தில் நான் தலையிடாமல் இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்கு மட்டுமே நான் வேலைக்காரியாக இருக்கும் வரை;

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உன் குடும்ப பிரச்சினைகளை தாங்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
நம் குழந்தையை நானே வளர்க்கும் வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
என் விருப்பங்களை உன் மேல் திணிக்காத வரை

நான் உனக்கு அன்பான மனைவிதான்
உனக்காகவே வாழும் வரை!

மேலே படிக்கப்போகிறேன்..வாழ்க்கையை ரசித்து வாழப்போகிறேன்..என்ற கனவுகளுடன் வந்த நான் எனக்கான வாழ்க்கையை சரி செய்துகொள்ளவே நேரத்தை வீணடித்திருக்கிறேன். அடுத்த குழந்தையும் சீக்கிரம் பெற்றுக்கொள்ளுங்கள் என்று யாராவது சொல்லும்போதெல்லாம் வெறும் குழந்தையை சுமக்கும் பொருளாக மட்டுமே நான் இருப்பது அருவெறுப்பைத் தருகிறது. இந்த நிலையில் இன்னும் எத்தனைப் பெண்கள் இருக்கிறார்களோ?

இந்த உருப்படாத வாழ்க்கை எதற்கு உபயோகப்பட்டதோ இல்லையோ பலவித குணங்களுடன் உள்ள மனிதர்களைப் படிக்கவும், அதுவே என் எழுத்துக்களாக உருமாறவும் உதவியிருக்கிறது. ஓடும் வரை ஓடட்டும் இந்த பற்றற்ற வாழ்க்கை..மனதில் உள்ள போராட்டத்தை அன்பான மனிதர்களின் நகைச்சுவையான பேச்சுக்களால் மறக்கிறேன். குழந்தையின் எதிர்காலத்தில் என் அழுகையை அடக்கிக்கொள்கிறேன். அவளின் வளர்ச்சியில் என் சந்தோஷத்தை தேடிக்கொண்டே இருக்கிறேன்.

இப்படிக்கு
பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

__________________________________________

வினவு பின்குறிப்பு:

துயரமான யதார்த்தம், மீள முடியாத குடும்பம் என்ற இந்த பிரச்சினையிலிருந்து இவருக்கு மீள என்ன வழி? படிப்போ, இல்லை வேலைக்கு போவதோ முதலான கிரமமான வழிமுறைகள் மட்டுமே இதை தீர்த்துவிடுமா, தெரியவில்லை. குடும்பம் என்ற கூட்டிற்குள் நின்று மட்டும் ஒரு பெண் சமூக ரீதியாக விதிக்கப்பட்டிருக்கும் தளையை அறுத்துவிடவோ, அதை புரிந்து கொள்வதோ சிரமம் என்று தோன்றுகிறது. சமூக ரீதியான அனுபவம், சமூக மாற்றத்திற்கான முனைப்பு என்று பெரிய கோடு போட்டுக் கொண்டால்தான் குடும்பம் போடும் சின்னதான ஆனால் துயரமான கோட்டை அழிக்க முடியும். சமூக மாற்றத்திற்கான வேலைகளில் புடம்போடப்படும் பெண்கள்தான் தங்களைச் சுற்றியுள்ள வாழ்க்கையும் அது விதித்திருக்கும் கீழான இழிவுகளையும் புரிந்து கொள்வதோடு அவற்றை இரக்கமின்றி எதிர்த்து வெல்ல முடியும் என்பது எங்கள் அனுபவம். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

உழைக்கும் மகளிர் தின சிறப்பு பதிவுகள் 2010