Friday, June 20, 2025
முகப்பு பதிவு பக்கம் 440

இந்தியாவில் மூளைச்சாவு உடலுறுப்புகள் பணக்காரர்களுக்கு மட்டும்தானா ?

உறுப்பு கொடை கோரிக்கைகள் அனைத்தும் பணக்கார வர்க்கத்திற்காகவே.

காராஷ்டிராவின் கோண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியான ரிவ்யாணி ரஹங்டேல் 2018, ஏப்ரல், 18-ல் சாலையோர விபத்தொன்றில் சிக்கி மிகவும் ஆபத்தான கட்டத்தில் நாக்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள். தலையில் பலத்த அடிபட்டதால் அவள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டார்கள். ஆயினும் அவளது இதயம் இன்னமும் துடித்துக் கொண்டிருந்தது. கல்லீரலும், சிறுநீரகமும் இயங்கிக் கொண்டிருந்தன.

அத்துயரத்திலும் அவளது உறுப்புக்களைக் கொடையாக கொடுக்க அவளது பெற்றோர்கள் முன்வந்தனர். தன்னுடைய மகள் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியதும் இயங்கிக் கொண்டிருக்கும் அவளது மற்ற உறுப்புகளை கொடையாக கொடுத்து விடலாம் என்று தனக்குத் தோன்றியதாக சிறுமியின் தந்தை இராதேஷ்யாம் கூறினார். அவர் காவல் துறையில் ஓட்டுனராக பணிபுரிகிறார்.

ஏப்ரல் 28–ம் தேதி போராடிக் கொண்டிருந்த மற்ற நான்கு உயிர்களையும் அச்சிறுமி காப்பாற்றினாள். இதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் என்று அவளது நான்கு உறுப்புகளும் அவரகளுக்கு பயன்பட்டன. ஆனால் துயரத்தின் மையத்திலும் தமது நேசத்திற்குரியவர்களின் உடலுறுப்புகளை கொடையாக கொடுத்தாலும் அதற்கு எவ்வித எதிர்பார்ப்பும் அவர்கள் வைப்பதில்லை. மேலும் யாருடைய உயிர்களை அந்த உறுப்பு கொடைகள் காப்பாற்ற போகின்றன என்றும் அவர்களுக்குத் தெரியப்போவதில்லை.

போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்தி “பச்சை சாலைகள்” வழியாக குறித்த நேரத்திற்கு உறுப்புகள் எடுத்துச் செல்லப்பட்டு பல உயிர்கள் இன்று காப்பற்றப்படுகின்றன. பால், சாதி, மத அடையாளங்கள் கடந்து இப்படி கொடையாக கொடுக்கப்பட்ட உறுப்புகள் இந்தியா முழுவதும் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஒற்றுமையின் அடையாளமான இதை நாம் கொண்டாட வேண்டாமா?

கேட்பதற்கே உற்சாகமளிக்கும் இந்த செய்தியில் மோசமான ஒரு விசயமும் அடங்கியுள்ளது. மிகுந்த செலவு பிடிக்கும் இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை இந்தியாவில் மிக சொற்பமான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே நடக்கிறது. 95 விழுக்காட்டிற்கும் அதிகமாக இச்சிகிச்சை தனியார் மருத்துவமனைகளில் தான் நடக்கிறது. இதற்கு ஆகும் செலவு குறைந்தது 20-25 இலட்சங்கள். ஒப்பீட்டளவில் சிக்கல் குறைந்த சிறுநீரக உறுப்பு மாற்ற சிகிச்சைக்கே குறைந்தது 8-10 இலட்சங்கள் தேவை. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான முன்னுரிமைகள் குறித்த சமூக விதிமுறைகள் ஒவ்வொரு மாநிலங்களில் இருப்பினும் இந்திய சமூக அமைப்பின் பாரிய ஏற்றத்தாழ்வு காரணமாக வர்க்க பேதமற்ற இந்த உறுப்பு கொடைகள் முடிவில் பணக்கார வர்க்கத்திற்கே கிடைக்கிறது. இந்நிலையில் வர்க்க பேதமற்று “உறுப்பு தானம் செய்வீர்” என்று அறைகூவல் விடுக்கப்படுவது ஒரு நகைமுரண்.

ஏற்றத்தாழ்வான வாய்ப்புகள்

உயிர்காக்கும் உறுப்பு மாற்று சிகிச்சை இந்தியாவில் ஏனைய துறைகளை போலவே அரிதினும் அரிதாகவே ஏழைகளுக்கு கிடைக்கிறது.

தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் இந்திய மருத்துவத்துறையின் சிக்கலை மிகவும் தீவிரப்படுத்தி விட்டது. ஒரு சில மாநகரங்களில் உள்ள அற்பசொற்பமான அரசு மருத்துவமனைகளில் மட்டுமே இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது. சான்றாக 1-2 விழுக்காடு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. உலகளாவிய மருத்துவ சேவை கட்டமைப்பின் கீழ் நோயின் தன்மையைப் பொருத்தும் சமூக நீதியின் அடிப்படையிலுமே பெரும்பான்மையான நாடுகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்படுகிறது. சமூக நீதியின் அடிப்படையிலேயே உறுப்பு கொடைகள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டுமென்பது உலக சுகாதார மையத்தின் அடிப்படை விதிமுறையாகும்.

சிலப்பத்தாண்டுகளுக்கு முன்போலல்லாமல் உறுப்புக் கொடையாலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையாலும் பல இந்தியர்கள் இன்று பயன் பெறுகின்றனர். இந்திய அரசும் உறுப்பு கொடையை ஒரு தேசிய இயக்கமாக பரப்புரை செய்கிறது. பணம் படைத்த சிலருக்கு மட்டுமே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை கிடைக்கும் சமூக ஏற்றத்தாழ்வு கோலோச்சும் போது அனைவரையும் உறுப்பு கொடை கொடுக்குமாறு அரசு அறைகூவல் விடுப்பது ஒரு குரூரமான நகைச்சுவை.

நடக்காததை நடக்கும் என்கிறார்கள்

முதலாளித்துவ பொருளாதார மேதைகள் டிரிக்கில்-டவுன் விதி என்று சொல்வது போல பணக்காரர்களுக்கு கிடைத்தது போக மிச்ச சொச்ச உறுப்புகள் மேலிருந்து கீழாக வழிந்து ஏழைகளுக்கு கிடைக்கக்கூடும் என்று சிலர் நம்பிக் கொண்டிருக்கலாம். ஆனால் உறுப்புக்கொடை கொடுப்பவர்களின் எண்ணிக்கையை விட பணக்கரார்களின் எண்ணிக்கையே அதிகமாக இருப்பதால் இந்த நம்பிக்கையும் கேலிக்கூத்தாகிவிட்டது.

இந்த ஏற்றத்தாழ்வைப் போக்க ஏதேனும் சரியான வழியிருக்கிறதா? உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இதை சரி செய்ய முடியுமா? சரிபாதி உறுப்புகளை அரசு மருத்துவமனைகளுக்கு கொடுக்க வழிவகை செய்யலாம். அல்லது தனியார் மருத்துவமனைகளில் மானியம் கொடுப்பதன் மூலமும் செய்யலாம். ஏனெனில் பொதுமக்களின் நலனிற்காக உறுப்புகளை பிரித்து கொடுக்கும் தார்மீக உரிமையும் கடமையும் இந்த அரசிற்கு இருக்கிறது.

ஆனால் இதற்கு அரசு மருத்துவ கட்டமைப்பை சரி செய்யாமல் வழியில்லை. உண்மையில் முதன்முதலாக செய்யப்பட்ட வெற்றிகரமான உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை ஒவ்வொன்றும் அரசு மருத்துவமனைகளில் தான் செய்யப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சைக்காகும் செலவை தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம் போன்ற அரசு காப்பீடு திட்டங்களில் மூலமாக அரசு ஏற்கலாம். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பை (National Organ & Tissue Transplant Organisation) உருவாக்கியதன் மூலம் இந்திய அளவில் உறுப்பு மாற்றுக்கான செயல்பாடுகளை ஒருங்கிணைக்க அரசு விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது செய்து வரும் வெறும் பரப்புரை போலல்லாமல் உறுப்புகளை சமூக நீதியுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக யாருக்கு உடனடியாக தேவையோ அவர்களுக்கு தான் உறுப்பு கொடையை இந்த அமைப்பு பயன்படுத்தும் என்ற நம்பிக்கையில் தான் தங்களது அப்பா, அம்மா, குழந்தைகள் மற்றும் உடன் பிறந்தவர்களது உறுப்புகளை மக்கள் கொடையாக கொடுக்கிறார்கள்.

ரிவ்யாணி உயிருடன் இருந்திருந்தால் அவளுக்கு இப்பொழுது ஏழு வயதாகியிருக்கும். ரிவானியின் இதயம் தற்போது துடித்துக் கொண்டிருக்கும் மூன்று வயது குழந்தையொன்றின் பெற்றோருக்காக, ரிவ்யாணியின் தந்தை ரதேஷ்யாமிடம் ஒரு செய்தி இருந்தது. அந்த பெற்றோர்கள் அவர்களது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவது போலவே என்னுடைய மகளின் பிறந்த நாளான மே-5 யையும் கொண்டாட வேண்டும் என்ற செய்தியை அவர்களிடம் எப்படியாவது சேர்த்து விடுங்கள் என்பது தான் அது. அந்த செய்தி அவர்களிடம் சேர்ந்துவிடும் என்று ஒருவர் நம்பலாம். ஆனால் ரஹாங்டலஸ் போன்றவர்களின் கொடைகளை கொண்டாடும் அதே நேரத்தில் அதே கொடையை அவர்களை போன்ற ஏழை எளிய மக்களுக்கு கொடுக்க முயற்சி செய்வோமா?

-வினவுச் செய்திப் பிரிவு
நன்றி: scroll.in. Sanjay Nagral எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

மேலும் படிக்க:
Who gives, who lives? India’s organ transplant system continues to favour the rich

சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !

asifa-protest-kathua

சிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி !

காஷ்மீரைச் சேர்ந்த முசுலீம் சிறுமி ஆஷிஃபாவைக் கும்பல் வல்லுறவு செய்து கொன்றிருப்பது ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்தி வரும் முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியலின் ஒரு பகுதியே.

ம்மு மாநிலம் கதுவாவிலும், உ.பி. மாநிலம் உன்னாவிலும் சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கிய குற்றவாளிகளைப் பாதுகாத்தும் ஆதரித்தும் வரும் பா.ஜ.க., சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கும் குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை தரும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது.

இச்சட்டத் திருத்தம் அக்கட்சியின் இரட்டை வேடத்தை, கபடத்தனத்தை மட்டும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை. குற்றவாளிகளே நீதிபதிகளாக அதிகாரம் செலுத்தும் இழிவான, அபாயகரமான நிலையை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் இந்திய மக்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் அம்பலப்படுத்துகிறது.

ஜம்மு மாநிலம் கதுவா மாவட்டம் – ரஸானா கிராமத்தில் வசித்துவந்த ஆஷிஃபா என்ற எட்டே வயதான பால்மணம் மாறாத சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு, மிகவும் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம், ஆர்.எஸ்.எஸ். நடைமுறைப்படுத்திவரும் முசுலிம் எதிர்ப்பு இந்து மதவெறி அரசியல் திட்டத்தின் ஒரு பகுதி என்பதை இச்சம்பவம் தொடர்பான புலன் விசாரணையும் குற்றப் பத்திரிகையும் அம்பலப்படுத்துகின்றன.

ஆஷிஃபா, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த நாடோடி இனமான பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி. பக்கர்வால் சமூகத்தினர் முசுலீம் மதத்தின் சன்னி பிரிவைச் சேர்ந்த பழங்குடி இனத்தவராக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

asifaஅம்மாநிலத்தின் மொத்த மக்கட் தொகையில் 11.9 சதவீதமுள்ள இப்பழங்குடியின முசுலீம்கள், சொல்லிக்கொள்ளும்படியான நிலவுடமையோ, பிற வகையான சொத்துடமைகளோ இல்லாதவர்கள். இன்னமும் மாடுகளையும் குதிரைகளையும் மட்டுமே உடமையாகக் கொண்ட நாடோடி வாழ்க்கையைத்தான் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர். அக்கால்நடைகளை மேய்ப்பதும், அவற்றை வயல்வெளிகளில் பட்டி போடுவதும்தான் இவர்களது தொழில்.

குளிர்காலத்தில் ஜம்முவின் காட்டுப் பகுதிகளில் முகாமிட்டுத் தங்கும் இப்பழங்குடியின முசுலீம்கள், கோடை காலம் தொடங்கும் சமயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கிற்குக் கால்நடையாகவே இடம் பெயர்ந்து செல்கிறார்கள்.

பள்ளத்தாக்கின் புல்வெளிப் பகுதிகளில் குடிசை போட்டுத் தங்கி, கால்நடைகளை மேய்க்கும் இவர்கள், பக்ரீத் பண்டிகை காலத்தில் தாங்கள் வளர்த்துவரும் ஆடு, மாடுகளை இறைச்சிக்காகப் பள்ளத்தாக்கு பகுதி முசுலீம்களுக்கு விற்பதன் மூலம் வருவாய் ஈட்டுகின்றனர். சுழற்சி முறையில் பருவ காலங்கள் வந்து போவது போல, இவர்களும் ஜம்முவிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் மாறிமாறித் தங்கி வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த முப்பதாண்டுகளாக காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவரும் தன்னுரிமைக்கான போராட்டத்தை இராணுவரீதியில் வெற்றிகொள்ள முடியாத இந்திய ஆளும் வர்க்கம், அந்த நீதியான போராட்டத்தை இந்து – முசுலீம் மத மோதலாக மடைமாற்றிவிடத் தொடர்ந்து முயன்று வருகிறது.

இத்திட்டத்தின் களமாக ஜம்முவும், முன்னணி சக்திகளாக ஜம்முவில் ‘‘பெரும்பான்மையாக வசித்துவரும் பார்ப்பன பண்டிட்டுகளும், ராஜபுதன (டோக்ரா) சாதியினரும், சீக்கியர்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். வாஜ்பாயி ஆட்சியின்போது காஷ்மீரிலிருந்து ஜம்மு பகுதியைப் பிரித்துத் தனி மாநிலமாக்க முயன்று தோற்றுப் போனது இந்து மதவெறிக் கும்பல்.

2011 ஆண்டு வெளியிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஜம்முவின் மொத்த மக்கட்தொகையில் இந்துக்கள் 62 சதவீதமாகவும், முசுலீம்கள் 36 சதவீதமாகவும் உள்ளனர்.

ஆனால், இந்தியா ‘‘சுதந்திரம்” அடைவதற்கு முன்பு ஜம்முவிலும் முசுலீம்கள்தான் பெரும்பான்மையாக இருந்தனர். அச்சமயத்தில் ஜம்மு காஷ்மீரை ஆண்டு வந்த டோக்ரா சாதியைச் சேர்ந்த இந்து மன்னன் ஹரி சிங் முசுலீம்களுக்கு எதிராக நடத்திய இன அழித்தொழிப்பு நடவடிக்கையின் விளைவாகவே ஜம்முவில் இந்து பெரும்பான்மை நிறுவப்பட்டது.

kathua hindus support rapistsஅவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையில் இரண்டு இலட்சம் முசுலீம்கள் காணாமல் போயினர். ஐந்து இலட்சம் முசுலீம்கள் அகதிகளாக வெளியேறினர். இவ்வின அழித்தொழிப்பு நடவடிக்கையை காந்தி, நேரு தொடங்கி ஷேக் அப்துல்லா உள்ளிட்டுப் பலரும் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியிருக்கின்றனர். (Dogra Raj in Kashmir, Frontline, Nov.24, 2017)

அன்று இந்து மன்னன் ஹரி சிங் முசுலீம்களுக்கு எதிராக ஆயுதந்தாங்கி நடத்திய இன அழித்தொழிப்பு நடவடிக்கையை, இன்று ஆர்.எஸ்.எஸ். கும்பல், ‘‘ஜம்மு பகுதியில் குஜ்ஜார், பக்கர்வால் முசுலீம்களுக்குக் குடியுரிமையோ, சொத்துரிமையோ வழங்கக் கூடாது. வன உரிமைச் சட்டத்தின் கீழ் பக்கர்வால் முசுலீம்களுக்கு ஜம்மு பகுதியில் உள்ள காடுகளில் நிலங்கள் ஒதுக்கக் கூடாது.

குஜ்ஜார், பக்கர்வால் முசுலீம்களைப் பள்ளத்தாக்கு பகுதிக்குத் துரத்திவிடுவதன் மூலமாகத்தான் ஜம்முவின் இந்து பெரும்பான்மையைத் தக்க வைக்க முடியும்” என்ற வடிவத்தில் நடத்தி வருகிறது.

பக்கர்வால் முசுலீமான ஆஷிஃபா, கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். -இன் இந்த முசுலீம் எதிர்ப்புப் பிரச்சாரம்தான் அடிக்கொள்ளியாக இருந்திருக்கிறது.

இவ்வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ள சஞ்சிராம், ஆர்.எஸ்.எஸ். -இன் இந்த செயல்திட்டத்தை ரஸானா கிராமப்புற பகுதிகளில் நடைமுறைப்படுத்துவதில் மும்முரமாகச் செயல்பட்டு வந்திருக்கின்றான்.

ஜம்மு பகுதியில் ஆர்.எஸ்.எஸ். விதைத்துவரும் நஞ்சு, எந்தளவிற்குப் பெரும்பாலான இந்துக்கள் மத்தியில் ஊடுருவி, முசுலீம் எதிர்ப்பு அரசியலை இயல்பான நடைமுறையாக்கிவிட்டது என்பதை சஞ்சிராமும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக ரஸானா கிராம இந்துக்கள் அணி திரண்டு நிற்பதும் எடுத்துக்காட்டுகின்றன.

‘‘குளிர்காலத்தில் ஜம்முவின் காட்டுப்பகுதிகளில் முகாமிட்டுத் தங்கியிருக்கும் பக்கர்வால் முசுலீம்களிடம் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவர்கள் இனி ஜம்முவில் முகாமிடுவதற்கு ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்தித் தங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட வேண்டும் எனக் கோரி பக்கர்வால் முசுலீம்கள் போராடி வருவதைத் தடுக்க வேண்டும்” என்ற அரசியல் நோக்கிலேயே சிறுமி ஆஷிஃபாவின் மீது இந்தக் கொடூரமான பாலியல் வன்முறை ஏவிவிடப்பட்டிருக்கிறது.

jammu HC Lawyers support asifa killersசிறுமி ஆஷிஃபாவும் தற்செயலாகக் குறிவைக்கப்பட்ட பலிகடா அல்ல. சஞ்சிராமின் மருமகன் சுபம் சங்ராவுக்கு சிறுமி ஆஷிஃபாவுடன் பழக்கம் இருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு, அவனைக் கொண்டே அச்சிறுமியைக் கடத்தினான், சஞ்சிராம்.

கோவில் யாரும் சந்தேகப்பட முடியாத பொது இடம் என்பதால், கடத்தப்பட்ட சிறுமியைத் தனது கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில் அடைத்துவைத்தான். அடைத்துவைக்கப்பட்ட சிறுமி சத்தம்போட்டுத் திட்டத்தைப் பாழாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே, அச்சிறுமிக்கு அடுத்தடுத்து மயக்க மருந்தைச் செலுத்தி, அவளை மயங்கிய நிலையிலேயே வைத்திருந்தான்.

அச்சிறுமி மயங்கிய நிலையில் இருந்தபோதே, சுபம் சங்ரா அவளை வல்லுறவு செய்து சிதைத்தான். இந்தச் செய்தியையெல்லாம் உ.பி. மாநிலம் மீரட்டில் படித்துவரும் சஞ்சிராமின் மகன் விஷால் ஜன்கோத்ராவிடம் தெரிவித்து, உனது ஆசையைத் தீர்த்துக் கொள்ள உடனே கிளம்பி வா என அழைத்தான் சுபம் சங்ரா. இதற்காகவே மீரட்டிலிருந்து வந்த விஷால் ஜன்கோத்ரா மயங்கிய நிலையிலேயே ஆஷிஃபாவை வன்புணர்ந்தான்.

ஆஷிஃபாவைக் கொலைசெய்துவிடுவது என ஏற்கெனவே முடிவெடுத்திருந்த சஞ்சிராம், அச்சிறுமி தனது மகனாலும், மருமகனாலும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதை ஒரு பொருட்டாகவே கருதவில்லை.

உள்ளூர் சிறப்பு போலீசு படையில் பணியாற்றும் தீபக் கஜுரியாவோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு ஆஷிஃபாவைக் கொலை செய்து, அவளது சடலத்தைக் காட்டுக்குள் வீசியெறிந்துவிடுவது என சஞ்சிராம் திட்டமிட்ட நேரத்தில், குற்றுயிராகக் கிடந்த சிறுமியைத் தானும் புணர விரும்புவதாகக் கூறி, தனது மிருகத்தனமான இச்சையைத் தீர்த்துக் கொண்டான் தீபக் கஜுரியா.

ஆஷிஃபா, கடந்த ஜனவரி மாதம் 10 தேதி சஞ்சிராம் கும்பலால் கடத்தப்பட்டாள். ஜனவரி மாதம் 17 தேதி அவளது சடலம் காட்டுப் பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்டது. இடைப்பட்ட இந்த ஒரு வார காலமும் அச்சிறுமி மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தாள்.

மயக்கம் தெளிந்த சமயத்தில் எல்லாம் அடித்து உதைக்கப்பட்டு, மயக்க மருந்து கொடுக்கப்பட்டு மயக்கத்திற்குள் தள்ளப்பட்டாள். மயங்கிய நிலையிலேயே மூன்று இந்து மிருகங்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டாள்.

அளவுக்கு அதிகமான மயக்க மருந்து, சித்திரவதை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை ஆகியவற்றால் ஆஷிஃபா சாகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்த சமயத்திலும்கூட, அச்சிறுமியின் மீது இந்து மதவெறி பிடித்த சஞ்சிராம் கும்பல் இரக்கம் காட்டவில்லை.

அச்சிறுமியின் முதுகெலும்பை உடைத்து, தலை மீது ஒருமுறைக்கு இருமுறை பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுச் சிதைத்து, மிகக் கொடூரமான முறையில் அவளைக் கொன்று, சடலத்தைக் காட்டிற்குள் வீசியெறிந்தனர்.BJP Police Rape

ஆஷிஃபா காணாமல் போனவுடனேயே, அவளது உறவினர்கள் போலீசு நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், போலீசு அதிகாரிகளோ, ஆஷிஃபா எட்டு வயது சிறுமி என்பதையெல்லாம் பொருட்படுத்தாமல், அவள் யாருடனாவது ஓடிப் போயிருப்பாள் என வக்கிரத்தோடு பதில் அளித்துப் புகாரைக் கிடப்பில் போட்டனர்.

இன்னொருபுறம், போலீசு அதிகாரிகள் தீபக் கஜுரியாவும், திலக் ராஜும் ஆஷிஃபாவின் உறவினர்களோடு சேர்ந்துகொண்டு, அவளைத் தேடுவது போல நடித்தனர். சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பிறகு, சஞ்சிராமின் மருமகன் மீது மட்டும் வழக்குப் பதிவு செய்து, மற்ற குற்றவாளிகளைத் தப்பிக்க வைத்து, குற்றத்தின் தீவிரத்தன்மையை நீர்த்துப்போக வைத்தனர்.

ஆஷிஃபாவின் உறவினர்களும், பக்கர்வால் முசுலீம்களும் போராடிய பிறகுதான், விசாரணை உள்ளூர் போலீசிடமிருந்து மாநிலக் குற்றவியல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதன் பிறகுதான் குற்றவாளிகள் யார் யாரென்பதும் குற்றத்தின் பின்னுள்ள நோக்கமும் அம்பலமானது.

சஞ்சிராம், அவரது மகன் விஷால் ஜன்கோத்ரா, அவனது மருமகன் சுபம் சங்ரா, சஞ்சிராம் குடும்ப நண்பன் பிரவேஸ் குமார், போலீசு அதிகாரி தீபக் கஜுரியா ஆகியோர் மட்டுமின்றி, சஞ்சிராமிடமிருந்து இலஞ்சம் வாங்கிக்கொண்டு இக்குற்றத்தையும் சாட்சியங்களையும் அழிக்க முயன்ற போலீசு அதிகாரிகள் ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா உள்ளிட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டுக் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. ‘‘இந்த எட்டு பேரோடு குற்றவாளிகளின் எண்ணிக்கை முடிந்து போக வாய்ப்பில்லை” எனக் கூறியிருக்கிறார், விசாரணை அதிகாரி ரமேஷ்குமார் ஜல்லா.

அந்த அதிகாரி கூறியிருப்பது நடக்காவிட்டாலும்கூட, அந்த வார்த்தைகளில் அபாயகரமான உண்மை மறைந்து இருக்கத்தான் செய்கிறது.

கைது செய்யப்பட்டிருக்கும் எட்டுக் குற்றவாளிகளை வழக்கு, விசாரணை, தண்டனையிலிருந்து பாதுகாத்து, வழக்கைப் பத்தோடு பதினொன்றாக ஊத்தி மூடிவிடும் நோக்கில் இந்து ஏக்தா மஞ்ச் என்றொரு அமைப்பை ஜம்முவின் தெருக்களில் இறக்கிவிட்டிருக்கிறது, ஆர்.எஸ்.எஸ்.

நீதியைக் கொல்லும் நோக்கில் அவ்வமைப்பு நடத்திவரும் போராட்டங்களுக்கு ஜம்முவைச் சேர்ந்த இந்து பெரும்பான்மை தனது ஆதரவை வழங்கி வருகிறது.

ஆஷிஃபாவைக் கடத்தி, கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தி, கொன்ற குற்றத்தில் எட்டு பேரோ, பத்துப் பேரோ முதன்மைக் குற்றவாளிகள் என்றால், அக்குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கியிருக்கும் இந்துக்கள் அனைவரும் குற்றப் பட்டியலில் இரண்டாம், மூன்றாம் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள்.

ஆஷிஃபாவின் சடலத்தை ரஸானா கிராமத்தில் புதைப்பதற்குக்கூட மறுத்து, மனிதத்தன்மையற்ற வக்கிரத்தை வெளிப்படுத்தியிருக்கிறது, இந்துக்களின் மனசாட்சி.

ஜம்மு காஷ்மீர் மாநில அரசில் அமைச்சர்களாகப் பொறுப்பு வகிக்கும் பா.ஜ.க.வைச் சேர்ந்த லால் சிங்கும், சந்தர் பிரகாஷ் கங்காவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

விசாரணை அதிகாரி ரமேஷ் குமார் ஜல்லா நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய வந்த சமயத்தில், அதனைத் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் இறங்கியது ரஸானா நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம். நீதிமன்ற நடவடிக்கைகளைப் புறக்கணிக்குமாறு அறைகூவல் விட்டதோடு, குற்றவாளிகளுக்கு ஆதரவாக முழு அடைப்புப் போராட்டத்தை நடத்தியது ஜம்மு உயர் நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம்.

ஆஷிஃபா வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் வாதாடிவரும் பெண் வழக்குரைஞர் தீபிகா சிங் ரஜாவத்தை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே வைத்து வழக்குரைஞர் சங்கத் தலைவர் புபிந்தர் சிங் சலாதியா மிரட்டியிருக்கிறார். தீபிகா சிங் தனது உயிருக்கும் கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.

குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட இந்தப் போராட்டங்கள் அனைத்திலும் ‘தேசியக்’ கொடி பறக்கவிடப்பட்டது. ‘‘தேசியக் கொடியை மட்டுமல்ல, தேவையென்றால் ஏ.கே.47 துப்பாக்கியை ஏந்தி வருவோம்” எனப் பகிரங்கமாக மிரட்டல் விட்டார் ஜம்மு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் சங்கத் தலைவர், சலாதியா.

ஒரு முசுலீம் சிறுமி இந்து மதவெறி பிடித்த கிரிமினல்களால் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொல்லப்பட்டதைத் தேசபக்த நடவடிக்கையாகச் சித்திரிக்கும் குறியீடுகள் இவை.

இட்லரின் ஜெர்மனியில் மட்டும்தான் நடந்தது என்று நாம் கருதிக்கொண்டிருக்கும் அநீதி, அநியாயம், அசிங்கத்தை இந்து தேசியத்தின் பெயரால் இந்தியாவில் அரங்கேற்றி வருகிறது, ஆர்.எஸ்.எஸ். பார்ப்பன பாசிச கும்பல்.

ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் ஜம்மு பிராந்திய தலைமை மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க.வின் தேசியத் தலைமையும், மோடி தலைமையில் உள்ள மைய அரசும்கூடக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் அணுசரனையாகவும்தான் நடந்துவருகின்றன.

ஏப்ரல் மாத தொடக்கத்தில் கதுவா, உன்னாவ் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நாடு தழுவிய அளவில் விவாதப் பொருளான சமயத்தில் பிரதமர் மோடியோ, வேற்றுக் கிரகவாசி போல, தனது முகநூல் மற்றும் சுட்டுரை பக்கங்களில்தான் யோகா செய்யும் படத்தை வெளியிட்டார்.

நாடாளுமன்ற அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன்னின் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்திய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ அதிகாரிகளைப் பாராட்டினார்.

கதுவா, உன்னாவ் சம்பவங்கள் இரண்டிலும் சங்கிகள்தான் குற்றவாளிகள் என்ற உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைப் பொத்தாம் பொதுவாகக் கண்டித்துக் காலந்தாழ்த்தி அவர் விடுத்த அறிக்கை, முதலைக் கண்ணீருக்கு ஒப்பானது. முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் தந்திரம் நிறைந்தது.

கதுவாவில் ஆஷிஃபாவைச் சீரழித்தக் குற்றவாளிகளுக்கு ஆதரவாகத் தெருவில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.க.வைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் பதவி விலகியது தண்டனையல்ல எனக் காட்டுவற்காகவே, பா.ஜ.க.வைச் சேர்ந்த மற்ற அமைச்சர்களையும் அமைச்சரவையிலிருந்து விலக வைக்கும் மலிவான தந்திரத்தைக் கையாண்டது.

காங்கிரசு கூட்டணி ஆட்சியின்போது டெல்லியில் நடந்த நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கைப் பிடித்துக்கொண்டு வட இந்தியப் பெரு நகரங்கள் அனைத்திலும் மன்மோகன் சிங்கிற்கு எதிராக அரசியல் ஆர்ப்பாட்டங்களை நடத்திய ஆர்.எஸ்.எஸ்., ஆஷிஃபா வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட்டங்களை நடத்திவருகிறது.

இந்த எதிரும்புதிருமான அணுகுமுறையை, அறத்தின் அடிப்படையில் மட்டுமல்ல, ஆர்.எஸ்.எஸ்.இன் அரசியல் கணக்குகளைக் கொண்டும் மதிப்பிட வேண்டும்.

Go Back BJPநிர்பயா வழக்கை அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., ஆஷிஃபா வழக்கில், அதன் பின்னுள்ள இந்து மதவெறியை மறைத்து, அதனைச் சாதாரண வழக்காகக் காட்டுவதன் மூலம் நீர்த்துப் போக வைக்க முயலுகிறது.

இன்னொருபுறமோ, இந்த வழக்கில் இந்துக்கள் பழிவாங்கப்படுவதாகப் பொய்யான பிரச்சாரத்தை முன்னிறுத்தி, முசுலீம்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் எதிராக இந்துக்களைத் தூண்டி விடுகிறது.

முசுலீம்களைத் தேச விரோத சக்திகளாகச் சித்தரிக்கத் தயங்காத ஆர்.எஸ்.எஸ்., இப்பொழுது முசுலீம்களுக்கு எதிரான தனது ஒவ்வொரு வன்முறை நடவடிக்கையையும் தேசபக்த நடவடிக்கையாகச் சித்தரித்து வருகிறது.

மோடியால் குஜராத்தில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த அயோக்கியத்தனம், பா.ஜ.க. மைய அரசைக் கைப்பற்றிய பிறகு ‘‘தேசிய”மயமாக்கப்பட்டு வருகிறது.

குஜராத்தில் நடந்த இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்கு நீதி வழங்கக் கோரி போராடுவதையும் வாதிடுவதையும் குஜராத்திகளின் கௌவரத்தைச் சீர்குலைக்கும் நடவடிக்கையாகச் சித்தரித்தார், மோடி.

அந்த இனப் படுகொலையை நியாயமானதாகவும் இயல்பானதாகவும் ஏற்றுக்கொள்ளும்படியான மனோநிலையை குஜராத் இந்துக்களிடம் ஏற்படுத்துவதில் மோடியும் ஆர்.எஸ்.எஸ்ஸும் வெற்றியடைந்தனர்.

மோடி பிரதமர் நாற்காலியில் அமர்ந்தவுடனேயே அந்த குஜராத் பரிசோதனை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடிய கன்னையா உள்ளிட்ட மாணவர்கள் தேசவிரோத சக்திகளாகச் சித்தரிக்கப்பட்டு, அவர்களின் மீது ராஜதுரோக வழக்கு ஏவப்பட்டது.

அக்லக் படுகொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவன் இறந்தபோது, அவனது சடலத்தின் மீது தேசியக் கொடி போர்த்தப்பட்டது. பா.ஜ.க. அமைச்சர் நேரடியாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.

முசாபர்பூர் மாவட்டத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரம், இந்துக்கள் தமது பெண் குழந்தைகளின் கௌவரத்தைக் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்ட நியாயமான நடவடிக்கையாகச் சித்தரிக்கப்பட்டது.

குஜராத் உனாவில் இந்து மதவெறிக் கும்பல் நான்கு தாழ்த்தப்பட்ட இளைஞர்களைத் தாக்கியதைக் கைபேசியில் படம் பிடித்து ஒளிபரப்பி, அக்காட்டுமிராண்டித்தனத்தை பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நியாயப்படுத்தியது.

ராஜஸ்தான் மாநிலம் நகரைச் சேர்ந்த ஷாம்புலால் ரேகர், தனது கள்ள உறவைத் தொடரும் நோக்கில் முகம்மது அஃப்ரஸுல் என்ற பெங்காலி முசுலீம் தொழிலாளியை வெட்டிக் கொன்றான். கொலைகாரன் இந்து, கொல்லப்பட்டவன் முசுலீம் கூலித் தொழிலாளி என்பதால், இந்தப் படுகொலையை லவ் ஜிகாத்துக்கு எதிரான நியாயமான நடவடிக்கையாக இந்து மதவெறி அமைப்புகள் சித்தரித்தன.

கொலைகாரனின் கட்-அவுட் படங்கள் ராஜஸ்தான்-ஜோத்பூரில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்டன. அவனது வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, இந்து மதவெறிக் கும்பல் அந்நீதிமன்றக் கட்டிடத்தில் இருக்கும் கொடிக்கம்பத்தில் காவிக் கொடியை ஏற்றி ஆட்டம் போட்டது.

ஆஷிஃபா கூட்டுப் பாலியல் வன்கொடுமை இப்படி இயல்பானதாக, நியாயமானதாக, தேச பக்த நடவடிக்கையாகக் காட்டும் திசையில் சங்கப் பரிவார அமைப்புகள் எடுத்துச் செல்கின்றன.

ஆஷிஃபா வழக்கில், ஒரு பால்மணம் மாறாத சிறுமி மீது நடத்தப்பட்ட ஆகக் கொடூரமான பாலியல் வன்முறையையும் அதன் பின்னிருக்கும் இந்து மதவெறி அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது.

இச்சமயத்திலும்கூட, நகர்ப்புறத்து நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும், பெண்ணியவாதிகளும் இவ்வழக்கை அரசியல் ஆக்காமல், வெறும் பெண்களுக்கு எதிரான குற்றமாக மட்டுமே பார்க்க வேண்டும் எனக் கோரி வருவது, எதிரிகளைப் பாதுகாப்பதற்கே உதவும்.

-செல்வம்

-புதிய ஜனநாயகம், மே 2018

மோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா ? கருத்துப்படம்

0

மோடியின் காஷ்மீர் வருகைக்கு பிரிவினைவாத அமைப்புகள் எதிர்ப்பு
– தினமலர் செய்தி

தினமலரே,
Go Back Modi பலூன் பறக்கவிட்ட தமிழக மக்களை பிரிவினைவாதிகள் எனச் சொல்லத் தயாரா ?

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

காவிரி : உடுமலை – தருமபுரி களச் செய்திகள் !

“காவிரி உரிமை : குப்புறத் தள்ளிய டெல்லி குழியும் பறித்தது!” என்கிற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம் சார்பாக தமிழகம் முழுவதும் நடைபயணம், பொதுக்கூட்டம், தெருமுனைக்கூட்டம் என, தொடர் பிரச்சாரங்களும் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

உடுமலை

உடுமலையில் 14-05-18 அன்று நடைபெறுவதாக இருந்த மக்கள் அதிகாரத்தின் பொதுக்கூட்டம் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டு, அதே நாளில், பெரிய கடைவீதி கொங்கு திருமண மண்டபத்தில் அரங்கக் கூட்டமாக நடத்தப்பட்டது.

மக்கள் அதிகாரம் கோவை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் சூர்யா தலைமையில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில், தமிழ்நாடு திராவிடர் கழகத்தை சேர்ந்த தோழர் நாகராஜன், கணக்கம்பாளையம் ஆரசு ஊழியர்கள் – ஓய்வூதியர் குடியிருப்போர் நல சங்கத்தின்  திரு விவசாயபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தோழர் ரவிக்குமார், திராவிடர் கழகத்தை சேர்ந்த வழக்கறிஞர் தோழர் தம்பி பிரபாகரன், தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர் செந்தில்குமார், கொங்கு மண்டல ஆய்வு மையத்தின் திரு ரவிக்குமார், மற்றும் ராமி கவுண்டம்பாளையத்தை சேர்ந்த விவசாயி திரு நாச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.

“மக்கள் மத்தியில் தொடர்ந்து பணி செய்து கொண்டிருக்கிறீர்கள், சரியான கோணத்தில் பிரச்சனைகளையும், தீர்வையும் முன் வைக்கிறீர்கள், மக்கள் அதிகாரத்தோடு தொடர்ந்து நாங்களும் பயணிப்போம், போராடுவோம்” என்றனர்.

மக்கள் அதிகாரத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர்  தோழர் ராஜு , தனது உரையில், நீதி மன்றத்தின் வஞ்சக தீர்ப்பு, மத்திய மாநில அரசின் மெத்தன போக்கு, தமிழகத்தின் மீதான வன்மம், டெல்டாவை  சுடுகாடாக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற நாசகாரத் திட்டங்கள், விவசாயத்தை அழிக்கும் அரசின் தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றை அம்பலப்படுத்திய அவர், எம்மை போன்ற ஒன்றிரண்டு அமைப்புகள் மட்டும் போராடினால் தீர்வு கிடைக்காது, பெருந்திரளான மக்கள் பங்கேற்கும் போராட்டங்களாக உருவெடுக்க வேண்டுமென்றார்.

கூட்டத்தின் இடையே ம. க. இ. க.-வின் கலைநிகழ்ச்சி நிகழ்த்தப்பட்டது.

“இந்த அரசு விவசாயிகளுக்கு ஒன்றும் செய்யாது என தெரியும். ஆனால் ஏதோ ஒரு ஓரத்தில் நல்லவன் வந்தால் நடக்கும்  என நம்பியிருந்தேன். அது தவறு. போராடாமல் தீர்வு கிடைக்காது என்ற தெளிவை இந்தக்கூட்டம் தமக்கு வழங்கியதாக” தெரிவித்தார் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயி ஒருவர்.

இதற்கு முன்னதாக மக்கள் அதிகாரத்தின் தோழர்கள், மக்கள் மத்தியில் காவிரி உரிமை மீட்புப் போராட்டத்தின் தேவையை விளக்கி குடியிருப்பு பகுதிகளிலும், கடைவீதிகளிலும், ரயில், பேருந்து, ஆட்டோ என விரிவான அளவில் பிரச்சாரம் செய்திருந்தனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
உடுமலை. தொடர்புக்கு : 97885 58526

_____________________________________________________________________

தருமபுரி

ருமபுரியில் 08.05.2018 அன்று காலை10:00 மணி அளவில் பி.அக்ரகாரத்தில் மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

தோழர் ராஜா தனது உரையில், “காவிரிப் பிரச்சினையில் மோடி அரசு தமிழகத்தை சுடுகாடாக்க துடிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காது. தன்னுரிமைக்கான போராட்டத்தை கட்டியமைப்பதுதான் ஒரே தீர்வு” என பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலர் வழக்கறிஞர் ஜானகிராமன் , “கிருஷ்ணராஜசாகர் அணையில் துணை இராணுவத்தை அனுப்பி தண்ணீர் கொடுக்க வக்கற்ற மத்திய அரசு டெல்டாவில் துணை இராணுவத்தை இறக்கி போராடும் விவசாயிகளை பயமுறுத்துகிறது.” என மோடி அரசின் ஓரவஞ்சணையையும், திமிர்த்தனத்தையும் அம்பலப்படுத்தினார்.

இனியும் வேடிக்கை பார்க்காமல், அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணமிது.

தகவல்:
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்
தொடர்புக்கு: 81485 73417

கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?

4

யிலாப்பூர் மாஃபியாவின் டார்க் ஹொரர் காமடியனான எஸ்.வி.சேகர் மீது புகார் அளிக்கப்பட்டு, நீதிமன்றம் அவரை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்ட பிறகும், ஒன்றுமே நடக்கவில்லை. தனது வீட்டில் பகிரங்கமாக வாழும் எஸ்.வி.சேகர் சென்னையில் நடக்கும் கர்நாடக சங்கீத கச்சேரி முதல், பணக்காரர்களின் கருமாதி வரை பகிரங்கமாக கலந்து கொள்கிறார். இருப்பினும் அவர் கைது செய்யப்படவில்லை, ஏன்?

(மூன்று பதில்களை தெரிவு செய்யலாம்.)

கருத்துக் கணிப்பு : எஸ்.வி.சேகர் கைது செய்யப்படாதது ஏன் ?

  • பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றிய பிராமண சாதி என்பதால்!
  • தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனின் உறவினர் என்பதால்!
  • தமிழக போலீசுக்கு அவரைக் கைது செய்ய பயம்.
  • கைது செய்யுமளவு அவர் குற்றம் செய்யவில்லை.
  • பா.ஜ.க-விற்கு பயப்படும் எடப்பாடி அரசு!

கர்நாடகா : ஜனநாயகத்தைக் காப்பது சொகுசு விடுதிகளே !

நேற்றைய கர்நாடகத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், அரசியல்வாதிகளை சீட்டு நுனியில் அமரச் செய்திருந்த அதே அளவிற்கு சமூக வலைத்தள பயனர்களையும் பரபரப்பாக்கியிருந்தது. தொடக்கத்தில் பாஜக முன்னிலை வகித்து வந்ததில் தொடங்கி, இறுதியில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதாதள கூட்டணி குறித்த செய்தி வந்த பின்பும் தொடர்ந்து இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நிலையையும், பாஜக மேற்கொள்ளவிருக்கும் அதிரடிகளையும் எள்ளி நகையாடியிருக்கின்றனர் ட்விட்டர்வாசிகள்.

அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு …

சுஜேஷ்:

தாயே மின்னணுவாக்கு இயந்திரமே, எல்லாமே உன் கையிலதாம்மா இருக்கு …… #KarnatakaVerdict

தமிழகத்தின் ‘மிக்சர்’ புகழ் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதியம் 1.30 மணியளவிலேயே தென்னிந்தியாவிற்குள் பாஜக காலடி வைத்ததற்கு அமித்ஷா ‘ஜி’ -க்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:

இந்த சந்தோசமான தருணத்தில், தென்னிந்தியாவினுள் பாஜகவின் பிரம்மாண்டமான நுழைவிற்கான முன்னோட்டமாக, கர்நாடகத் தேர்தலில் பாஜக பெற்றிருக்கும் குறிப்பிடத் தகுந்த வெற்றிக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

*****

மெஹ்பூபா முஃப்தி:

கர்நாடகாவில் நட்சத்திர செயல்திறனைக் காட்டிய பாஜகவிற்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்.

*****

இவ்வாறு பாஜக ஆதரவு பிரபலங்கள், சமூக வலைத்தளங்களில் பாஜகவிற்கு வாழ்த்து மழைகளைப் பொழிந்து கொண்டிருக்கையில், படிப்படியாக பாஜக முன்னணியில் இருந்த தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்தது. இடையே காங்கிரசு, மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு ஆதரவு தெரிவித்து, கூட்டணி ஆட்சிக்கும், குமாரசாமி முதல்வராகவும் ஆதரவு தெரிவித்தது. பாஜக 104 தொகுதிகள் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 113 சீட்டுகள் தேவையான நிலையில் சமூக வலைதளங்களில் இந்திய ‘ஜனநாயகத்தின்’ உண்மையான சொரூபம் துகிலுறியப்பட்டு அம்பல மேடையில் ஏற்றப்பட்டது.

சுபாரிமேன்:

அமித்ஷா மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.-களை கூடையில் சேர்த்து வாங்கிக் கொண்டிருக்கிறார்.

*****

ஜிதேந்தர் சிங்:

அமித்ஷா இப்போது….

*****

சுனில் – தி கிரிகெட்டர்:

தற்போது (வெற்றி) பாஜக-விடமிருந்து தேவகவுடாவிற்கு.. #KarnatakaVerdict

*****

மனோகரன் கார்திக்:

மதசார்பற்ற ஜனதாதள எம்.எல்.ஏ.-க்களின் தற்போதைய மனநிலை
#KarnatakaVerdict #KarnatakaElections2018

*****

காங்கிரஸ் – ஜே.டி.எஸ். கூட்டணி அறிவிப்பைத் தொடர்ந்து வெற்றிக் களிப்பில் இருந்த பாஜகவினரை அவர்களது கொண்டாட்டங்களிலிருந்தே வாரியெடுத்தனர் டுவிட்டர்வாசிகள்.

மேக்நாத்:

பாஜகவினரே, கர்நாடக தேர்தல் முடிவுகள் உங்களுக்குச் சாதகமாக இன்று முடிவடையவில்லை என்றால் வெற்றிக் கொண்டாட்ட்த்திற்காக நீங்கள் வாங்கி வைத்திருந்த லட்டுக்களை வீசிவிடாதீர்கள்.
தயவுசெய்து பசித்தவர்களுக்கு அதைக் கொடுத்து, அவர்களுக்கு ஒரு நன்னாளைக் கொடுங்கள்.

*****

மஹேஷ்:

1 மணிக்கு முன்னால் …….             1 மணிக்குப் பின்னால் ……..

*****

மயுர் எஸ். குல்கர்னி :

இந்த முறை பாஜகவின் நிலை !! … #SayNoToBJP & never say #IamWithModi #KarnatakaVerdict #KarnatakaElections2018 #KarnatakaElectionResults2018 #KarnatakaElection #KarnatakaResults #KarnatakaPollResults

*****

கவுதம் பாஷின்:

அனைத்துக் கட்சிகளும் பட்டாசு வெடித்து, லட்டு  விநியோகித்த நாட்களில் இதுவும் ஒன்று. பாஜக மதிய வேளையில் செய்தது. காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் இப்போது செய்கின்றனர். அருமையான காமடி!

*****

துர்கா சென்குப்தா:

கர்நாடகா தேர்தல் முடிவுகளை வாசிப்பது டென்னிஸ் போட்டியைப் பார்ப்பது போன்று உள்ளது.

*****

ட்விட்டர்வாசிகள் நடைபெறவிருக்கும் குதிரைபேரத்தை கணக்கில் கொண்டு கர்நாடகத் தேர்தலில் இறுதியில் வெல்லப்போகிறவர்கள் சொகுசு விடுதிகளின் உரிமையாளர்களே என ட்விட்டுகளைப் போடத் தொடங்கிவிட்டனர்.

ரமேஷ் ஸ்ரீவத்ஸ்:

சொகுசு விடுதி உரிமையாளர் தான் வெற்றியாளர் போலத் தெரிகிறது

*****

டேனியல் செய்ட்:

இன்று ஏதோ ஒரு சொகுசு விடுதிக்கு பெரிய வியாபாரம் காத்திருக்கிறது.

*****

ஓமர் அப்துல்லா:

இப்போது, பெங்களூரு சுற்று வட்டாரத்தில் நான் ஒரு சொகுசு விடுதிக்கு உரிமையாளராக இருந்திருக்க வேண்டும் என விரும்புகிறேன்

*****

நவோமி டட்டா:

”இறுதி நடவடிக்கை” என்ற வார்த்தைக்குப் பொருத்தமான “the last resort” (கடைசி சொகுசு விடுதி) என்ற சொற்றொடரை ஆங்கில மொழிக்கு வழங்கியது கர்நாடக அரசியல்தான்.

*****

ரோஹினிசிங்:

சொகுசு விடுதி உரிமையாளர்களுக்கு நன்னாள் !

பாஜக எப்படியெல்லாம் ஆட்சியைப் பிடிக்க குறுக்குவழிகளைத் தேடிப் பிடிக்கும் என்பதையும் ட்விட்டர்வாசிகள் தங்கள் அனுபவ அறிவிலிருந்து போட ஆரம்பித்தனர்.

ரோஹின் தர்மகுமார்:

1. காங்கிரஸ் + மதசார்பற்ற ஜனதாதளம் ஆட்சியமைக்க உரிமை கோரல்
2. கவர்னர் பாஜகவை அழைத்தல்
3. கவர்னர் பாஜகவிற்கு பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு வார கால அவகாசமளித்தல்
4. சொகுசு விடுதிகள் விடுமுறை
5. மதசார்பற்ற ஜனதாதளம் பிரிதல்
6. பதவியேற்றல்.
சரிதானே ?

*****

சாகர்:

கர்நாடகாவில் இரண்டு விசயங்கள் நடக்கும் வாய்ப்புகள் உள்ளன
1. பாஜக இன்று அரசமைக்கும்
2. பாஜக சில மாதங்களுக்கு பின்னர் அரசமைக்கும்

*****

ராஃப்ல் காந்தி:

அந்த குண்டு மனிதன் அலைபேசியில் பேசிக் கொண்டிருக்கும் வரை இது முடிவதில்லை

– வினவு செய்திப் பிரிவு

 

உன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் !

.பி. மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு நடந்துவந்த குண்டாஸ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்டி, சட்டம் நிலைநாட்டிவிட்டதாகப் பீற்றி வருகிறார், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.

ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்ற பழமொழியோடுதான் இந்து மதவெறிக் கும்பலின் இந்த சுயதம்பட்டத்தை ஒப்பிட முடியும். பழைய குண்டர்கள் இடத்தை இப்பொழுது புதிய குண்டர்கள், அதாவது யாதவ் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குண்டர்கள் இடத்தை இப்பொழுது தாக்கூர் குண்டர்கள் பிடித்திருக்கிறார்கள்.

இந்துத்துவ ஆட்சியின் முன்மாதிரியாகக் காட்டப்பட்ட யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி, தாக்கூர் சாதிக் கிரிமினல்களின் காட்டாட்சியே என்பதை உன்னாவ் பாலியல் வன்முறை நிரூபிக்கிறது.

இந்த உண்மையை உன்னாவ் மாவட்டம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இளம் பெண், தாக்கூர் சாதியைச் சேர்ந்த அத்தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மற்றும் அவரது அடியாள் கும்பலால் கூட்டுப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்ட சம்பவமும், அதற்காக நீதி கேட்டுப் போராடிய அப்பெண்ணின் தந்தையை குல்தீப் சிங்கின் தம்பியும், அவனது அடியாட்களும் அடித்துக் கொன்ற சம்பவமும் அம்பலப்படுத்துகின்றன.

உ.பி. உன்னாவில் தாழ்த்தப்பட்ட பெண்ணிற்கும், காஷ்மீர் முசுலீம் சிறுமிக்கும் நேர்ந்திருக்கும் கொடூரங்களுக்கு இடையே அநேக ஒற்றுமைகள் உள்ளன.

இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட இருவருமே இந்துத்துவக் கும்பலால் வெறுக்கப்படும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிறுமி ஆஷிஃபா முசுலீம் எதிர்ப்பு இந்து மதவெறியின் காரணமாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டாள் என்றால், உ.பி.யில் ஆதிக்க சாதித் திமிரின் காரணமாகத் தாழ்த்தப்பட்ட பெண் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டாள்.

சாதி – தீண்டாமையையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்பது போலவே, முசுலீம் எதிர்ப்பு இந்துத்துவா அரசியலையும் இந்து மதத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டு சம்பவங்களிலுமே பாதிக்கப்பட்டவர்கள் போராடிய பிறகுதான், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

இரண்டு சம்பவங்களிலுமே குற்றவாளிகளைப் பாதுகாப்பதில் ஆர்.எஸ்.எஸ். இந்து மதவெறிக் கும்பல் முனைப்புக் காட்டி வருகிறது. இரண்டு சம்பவங்களிலுமே வழக்கை நீர்த்துப் போகச் செய்ய சி.பி.ஐ. விசாரணை கோரப்பட்டது.

கதுவா சம்பவத்தில் உள்ளூர் போலீசு குற்றவாளிகளோடு கூட்டு வைத்துக்கொண்டு அவர்களுக்கு அனுசரணையாக நடந்துகொண்டதென்றால், உ.பி. சம்பவத்திலோ யோக்கியன் ஆதித்யநாத்தின் கீழுள்ள போலீசு துறையே குற்றவாளிகள் செங்கர், அவனது தம்பி அதுல் சிங் ஆகியோரின் எடுபிடியாக நடந்துகொண்டு, அப்பெண்ணின் தந்தையைக் கொல்லுவதற்கும் உடந்தையாக இருந்திருக்கிறது.

கதுவா சம்பவம் விவாதப் பொருளாக இருந்த நேரத்தில், நரேந்திர மோடி அதனை ஒரு பொருட்டாகக் கருதாமல் சுவிட்சர்லாந்துக்குப் பறந்து போனார். உன்னாவ் சம்பவத்திற்குப் பதில் அளிக்க வேண்டிய ஆதித்யநாத்தோ, அதைப் புறக்கணித்துவிட்டு ம.பி. மாநிலத்திலுள்ள கோவிலுக்குச் சாமி கும்பிடப் போனார்.

உன்னாவ் சம்பவம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்திருக்கிறது. எம்.எல்.ஏ.விடம் உதவி கேட்டால், வேலை வாங்கித் தருவார் எனத் தந்திரமாக குல்தீப் சிங்கின் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட அத்தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பலவாறு மிரட்டி, குல்தீப் சிங்கும் அவனது அடியாட்களும் பாலியல் பலாத்காரப்படுத்தியிருக்கின்றனர்.

உள்ளூர் போலீசு ஒப்புக்குச் சப்பாணி பிரிவுகளில் வழக்கைப் பதிவு செய்து, குற்றவாளிகளைக் கைதும் செய்யாமல், பாதிக்கப்பட்ட பெண்ணை அலைக்கழித்தது. அவ்விளம் பெண் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்ற பிறகுதான், இப்பாலியல் பலாத்கார சம்பவமும், அப்பெண்ணின் தந்தை எம்.எல்.ஏ.வின் தம்பியால் அடித்து உதைக்கப்பட்டு, அவனது தூண்டுதலால் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டதும், சிறையிலேயே எம்.எல்.ஏ.வின் கைக்கூலி போலீசாரால் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டதும் வெளியுலகிற்குத் தெரியவந்தது.

பா.ஜ.க. ஆட்சியின் யோக்கியதை நாறிப் போன பிறகும்கூட, ஆதித்யநாத் அரசு குற்றவாளி குல்தீப் சிங்கைக் கைது செய்யவில்லை. காரணம், முதல்வர் ஆதித்யநாத் மட்டுமல்ல, அவரது அரசே தாக்கூர் சாதியைச் சேர்ந்த அதிகாரிகளால் நிரம்பி வழிகிறது என்பதுதான்.

அலகாபாத் உயர் நீதிமன்றம் குல்தீப் சிங்கைக் கைது செய்யாமல் இருப்பதைக் கண்டித்த பிறகும்கூட, மாநில போலீசு அசையவில்லை. மாறாக, உ.பி. மாநில டி.ஜி.பி. ஓம்பிரகாஷ் சிங் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில், சாதிப் பாசத்தோடு, ‘‘குல்தீப் சிங் தண்டிக்கப்பட்ட குற்றவாளி அல்ல என வக்காலத்து வாங்கியதோடு, அந்தக் காமக் கொடூரனை வார்த்தைக்கு வார்த்தை ‘‘மாண்புமிகு” என மதிப்புக் கொடுத்து அழைத்தார்.

இறுதியாக, ஆதித்யநாத் அரசு வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்து, குல்தீப் சிங்கைக் கைது செய்யும் நாடகத்தை அரங்கேற்றியது. அவனைக் கைது செய்வதற்குள், தனது மகளுக்கு நேர்ந்த கொடுமைக்கு நீதி கேட்டுப் போராடி வந்த சுரேந்தர் சிங், எம்.எல்.ஏ.வின் தம்பியாலும் போலீசாலும் கொடூரமாகத் தாக்கப்பட்டு ஏற்பட்ட காயங்களால் இரத்தக் கசிவுக்கு ஆளாகி இறந்து போனார்.

குல்தீப் சிங் கைது செய்யப்பட்டு, அவன் மீது சிறுமியைப் பாலியல் வல்லுறவு கொண்டது தொடர்பாக போஸ்கோ வழக்குப் பாய்ச்சப்பட்டிருக்கலாம். ஆனாலும், அவன் பா.ஜ.க.-விலிருந்து இதுவரை நீக்கப்படவில்லை. அவனது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்படவில்லை.

எந்தவொரு ஆதிக்கசாதியைச் சேர்ந்த தலைவனும் அவனைத் தண்டிக்கக் கோரவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தைக் கொலை செய்யும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது, பா.ஜ.க.

அப்பெண்ணை நடத்தை கெட்டவளாகச் சித்தரித்து வருகிறார்கள் குல்தீப் சிங்கின் ஆதரவாளர்கள். உ.பி. பைரியா மாவட்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேந்திர சிங், ‘‘இரண்டு, மூன்று குழந்தைகளுக்குத் தாயான பெண்ணைப் போய் யாராவது வன்புணர்வார்களா?” என ஆணாதிக்கத் திமிரோடு அறிக்கைவிடுத்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரும் பார்ப்பன சாதிவெறியனுமான எஸ்.வி.சேகர் பெண் பத்திரிகை நிருபர்களைக் கேவலமாகச் சித்திரித்து பதிவிட்டதற்கும், சுரேந்திர சிங்கின் திமிருக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.

பெண்கள் குறித்த இந்து மதவெறிக் கும்பலின் பார்வை ஆணாதிக்கத் திமிரும், வக்கிரமும், பிற்போக்குத்தனமும் நிரம்பியது என்பதைத்தான் உ.பி. சுரேந்திர சிங்கும், தமிழகத்து எஸ்.வி.சேகர், குருமூர்த்தி, எச்ச ராஜா வகையறாக்களும் நிரூபித்து வருகிறார்கள்.

இவை அனைத்திற்கும் மேலாக யோக்கியன் ஆதித்யநாத் அரசு, பா.ஜ.க.வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சுவாமி சின்மயானந்தா மீது நடந்துவந்த பாலியல் வல்லுறவு மற்றும் கடத்தல் வழக்கைத் திரும்பப் பெறப் போவதாக அறிவித்து, தனது ஆட்சியில் பெண்களின் கதி இதுதான் எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக இந்து மதவெறிக் கும்பல் நடத்திய ரத யாத்திரைக்குத் தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக் கிளம்பியதையடுத்து, ‘‘ராம ராஜ்ஜியம் அமைப்போம் என யாத்திரை நடத்துபவர்கள் கூறுவதில் என்ன தவறு காண முடியும்?” என எதிர்கேள்வி எழுப்பியது இந்து மதவெறிக் கும்பல்.

ராம ராஜ்ஜியம் அமைந்தால் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் மட்டுமல்ல இந்தியப் பெண்களின் கதியே அதோ கதிதான் என்பதை உன்னாவும், கதுவாவும் முன்கூட்டியே எடுத்துக்காட்டுகின்றன.

– குப்பன்
புதிய ஜனநாயகம், மே 2018

வாத்துக்கறி சாப்பிடலாமா ? படக்கட்டுரை

சென்னையின் செம்பரம்பாக்கம் ஏரிக்கரையோரம் அந்தக் குடிசைகள் கண்ணில் பட்டன. நாலு குச்சியை நட்டு கந்தலான துணிகளால் மூடப்பட்டிருந்தது அக்குடிசை. குடிசையோரம் நூறு நூற்றைம்பது வாத்துகள் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தன. அங்கே ஏழெட்டு பேர் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அருகில் சென்று பார்த்தோம். ஞாயிற்றுக்கிழமையென்பதால், அருகாமை பகுதி மக்கள் பலர் வாத்துக்கறி வாங்குவதற்காக வந்திருந்தார்கள்.

புரதச்சத்து மிகுந்த கறி வகைகள் – ஆட்டுக்கறி  ரூ 600, மாட்டுக்கறி ரூ 300, கோழிக்கறி ரூ 150 என சென்னையில விற்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு வாத்துக்கறியை உறித்துக் கொடுத்தால் அதன் விலை ரூ. 200. கோழிக்கறியை விட சற்று கடினமாக இருப்பதால் ஆட்டுக்கறி வாங்க முடியாதோரும், ஊரில் வாத்துக்கறி சாப்பிட்டு பழகியோரும் இங்கு வாங்க வருகிறார்கள். எனினும் இதை சாப்பிட்டு பழகாதோர் இதன் கவிச்சி மணம் அதிகம் என்று தயங்கக் கூடும். உண்மையில் அது வாத்துக் கறியின் மணம். பழகிவிட்டால் உங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.

பிராய்லர் கோழிகளை தவிர்க்க நினைப்போருக்கு இந்த வாத்துக்கறி ஒரு வரம். அதே போல வாத்து முட்டைகளையும் கறி விரும்பும் நண்பர்கள் அவசியம் வாங்கி உண்ணலாம். கோழி முட்டையை விட அளவில் பெரியதாக இருக்கும் இம்முட்டைகளை அவித்தும், வறுத்தம், ஆம்லேட் போட்டும் சாப்பிடலாம்.

”அண்ணே, வாங்க எத்தனை வாத்து வேணும்? உரிக்காம எடுத்திங்கன்னா 180 ரூபா, உரிச்சிகொடுத்தா 200 ரூபா” மூச்சிறைக்க நம்மை கூவியழைத்தார் அவர்.

”நமக்கு ரெண்டு உருப்படி கொடுப்பா…” நம்மை முந்திக்கொண்டு தமக்கான ஆர்டரை கொடுத்தார், ஒரு வாடிக்கையாளர். வாத்தின் கழுத்தைத் வினாடியில் திருகி தூக்கி போடுகிறார் ஒருவர். அதை லாவகமாக கேட்ச் செய்த படியே, வாத்தின் வெள்ளைநிற இறகுகளை மட்டும் பூப்போல பிடுங்கி கோணியில் போடுகிறார், மற்றொருவர்.

அண்ணே.. எதுக்காக இந்த வெள்ளை இறகு?
ஷட்டில் கார்க் (இறகு பந்து – பேட்மிட்டன் விளையாட்டில் பயன்படும் பந்து) தயாரிக்க, கல்கத்தா போகுது.

ஒரு இறகுக்கு எவ்வளோ கொடுப்பாங்க?
கிலோவுக்கு ரூ.1500லிருந்து 2000 ஆயிரம் ரூபாய் தருவாங்க.

ஒரு நாளைக்கு எத்தனை கிலோ இறகு எடுப்பீங்க?
அட நீங்க ஒன்னு., கால் கிலோவிலிருந்து அரை கிலோ வரைக்கும் சேக்கறதுக்கே, நந்தம்பாக்கம், சோமங்களம்னு கால்கடுக்க ஊர் பூரா சுத்தணும், என்று சலித்துக்கொண்டார், அந்த வடமாநிலத் தொழிலாளி.

வாத்துப்பண்ணை வைத்திருப்பவர்களைத் தேடிச்சென்று கைக்காசை போட்டு இறகுகளை வாங்கி பின்னர் தரம் பிரித்து பெருவியாபாரிகளிடம் விற்பது இவரது தொழில். இவரையும் இவரது பேச்சையும் வைத்து வடமாநிலத் தொழிலாளி என்றே கணிக்க முடியாத அளவுக்கு, இந்தத் தொழிலோடும் மக்களோடும் ஒன்று கலந்திருக்கிறார் இவர்.

வெள்ளை இறகுகள் பிடுங்கப்பட்ட வாத்துக்கள், அடுத்து கொதிக்கும் நீரில் மூழ்கி எடுக்கப்படுகிறது.

எஞ்சியிருக்கும் இறகுகளை நீக்கியபின்னர், மஞ்சள் தடவி வாட்டியெடுக்கிறார்கள். பின், வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப அவர்களே சிறு சிறு துண்டுகளாக்கியும் கொடுத்து விடுகிறார்கள்.

மொத்தக் குடும்பமுமே, ஆளுக்கொரு வேலை செய்து கொண்டிருந்தது. குடும்பத் தலைவர் குமாரிடம் பேச்சு கொடுத்தோம்.,

”இதே செம்பரம்பாக்கம்தான் சொந்த ஊரு. ஊருக்குள்ள வீடு இருக்கு. வாத்துங்களுக்காக இங்க குடிசை போட்ருக்கோம். இதுங்களுக்கு காவலா இங்கேயே தங்கியாகனும். ஒரு முப்பது வருசத்துக்கு முன்னாடி 500 வாத்துகளுக்கு மேல நாங்களே வச்சிருந்தோம். அப்போல்லாம், தண்ணி எப்போதும் கெடைக்கும். அறுவடை முடிஞ்ச வயல்ல விட்டோம்னா நெல்லு, நத்த, மீனு, தவளன்னு நல்லா தீனியை சாப்பிட்டு கொழுகொழுன்னு இருக்கும். அதெல்லாம் என் அப்பா, தாத்தாவோட முடிஞ்சுபோச்சு. இப்ப எப்படி நிக்குது பாருங்க, கொழுப்பே இல்லாம, வத்தலும் தொத்தலுமா!” என்று வருத்தத்தோடு வாத்துக் கூட்டத்தைக் காட்டினார் குமார்.

அப்போ, இந்த வாத்துங்களையெல்லாம் நீங்க வளர்க்கிறதில்லையா?

”வாத்த மேய்க்கிறதுக்கு வய வரப்பு எங்க இருக்கு? முன்ன மாதிரி, இப்பல்லாம் வாத்த சொந்தமா வளர்க்க முடியுமா? தீனி போட்டுத்தான் சமாளிக்க முடியுமா? அதெல்லாம் ஒருகாலம். ஏதோ வாத்து விக்கிறத பொறுத்து மாசத்துக்கு ஒன்னு ரெண்டு வாட்டி ஆந்திரா இல்லாட்டி கடலுர் போயி லோடு எடுத்து வருவோம். இங்க கொண்டாந்து அத விக்கிற வரைக்கும் ஒரு பத்து பதினஞ்சி நாளு அதுங்கள பாத்துப்போம்.

தோ… இங்கத் தேங்கிக்கிடக்கிற குட்டையில கொஞ்ச நேரம் நனையவுட்டு பட்டியில அடைச்சிருவோம். ஞாயித்துக்கிழமைன்னா சுத்துபட்டு ஊர்லருந்து கூட்டமா வருவாங்க… மத்த நாள்லலாம் ஏதோ ஒன்னு ரெண்டு வாத்துங்க விக்கும். வாத்து ஏத்தியாந்த வண்டிக்கூலி, வாத்துக்கு தீனி செலவுன்னு போக வாத்துக்கு 30 ரூபா கெடக்கிறதே பெரிய விசயம்.”

‘வாத்துக்கறியில் என்ன ஸ்பெஷல்?” வாத்துக்கறி வாங்க வந்திருந்த வாடிக்கையாளர்களை வழிமறித்துக் கேட்டோம். ”அட நீங்க வேற, ஆட்டுக்கறி வெல அதிகமுன்னு மாட்டுக்கறி வாங்கினோம், அதுவும் கட்டுப்படியாகாம ப்ராய்லர் வாங்கினோம். இருநூறு ரூபாய்க்கு வாத்துக்கறி கிடைக்கிது, அதான், இப்ப வாத்துக்கறிய வாங்கி சாப்பிட்டுக்கிட்டிருக்கோம். ” என்றார் ஒருவர்.

”ஏற்கெனவே, ப்ராய்லருல ஊசி போடுறான், மருந்து அடிக்கிறான்னு சொல்லி பிராய்லர் கோழிக்கறி சாப்டுறதுக்கு மக்கள் யோசிக்கிறாங்க. இதுல, வாத்துக்கறி சாப்ட்டா உடம்புக்கு நல்லது, இது ஸ்பெஷல்னு நீங்க மீடியாவுல போட்டீங்கனா, அதுக்கு ஒரு கூட்டம் வந்துரும். அப்புறம் இந்த விலைக்கும் வாத்து கிடைக்காம போயிடும்.” என்று புன்னகைத்ததும்ப நம்மை வழியனுப்பி வைத்தார், மற்றொரு வாடிக்கையாளர்.

– வினவு புகைப்படச் செய்தியாளர்கள்.

சகிப்பின்மையே பண்டைய பார்ப்பனிய இந்தியாவின் வரலாறு ! நூலறிமுகம்

ரலாற்றில் ஒரு சில சந்தர்ப்பங்களில் நாம் அடிப்படை ஆதாரங்களை நோக்கிச் செல்ல வேண்டிய காலகட்டங்கள் வரும். அப்படிப்பட்ட ஒரு அசாதாரணமான இன்றைய காலகட்டத்தில் நம்மால் தவிர்க்க முடியாத ஒரு நூலை எழுதியிருக்கிறார், பேராசிரியர்  டி.என்.ஜா. (D.N.Jha)

”பொதுப்புத்திக்கு எதிராக: அடையாளம், சகிப்பின்மை மற்றும் வரலாறு குறித்த குறிப்புகள்” (Against the Grain: Notes on Identity, Intolerance and History) என்ற தனது நூலில் இந்தியாவின் பண்டைய வரலாற்றை அக்காலகட்டத்தைச் சேர்ந்தவர்களின் குறிப்புகள், எழுத்துக்கள் மூலம் விரிவாக எடுத்துரைக்கிறார். அதன் முலம், இன்றைய பாடபுத்தகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகளை உடைக்கிறார்.  

பரிசுத்தமான சகிப்புத்தன்மை, அகிம்சை மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கியே பண்டைய இந்தியா இருந்ததாக பல்வேறு அரசியல் துறையினரும் சித்தாந்த வேறுபாடின்றி கூறிவருகின்றனர். வரலாற்று உண்மைகள் குறித்த அக்கறையற்றவர்களுக்கும் அன்று நிலவிய சாதிய, பாலின மற்றும் வர்க்கரீதியிலான ஒடுக்குமுறை மற்றும் வன்முறைகளை அலட்சியமாகக் கடந்து செல்பவர்களுக்கும் இவ்வாறு பூசி மொழுகப்பட்ட பண்டைய இந்தியா மிகவும் வசதியானதாக இருக்கிறது. கடந்த கால மற்றும் சமகால வரலாற்றின் கடுமையான யதார்த்தத்தைக் குறித்து அவர்கள் கண்டுகொள்வதில்லை

டி.என்.ஜா அவர்களின் ”பொதுப்புத்திக்கு எதிராக” எனும் கட்டுரைத் தொகுப்பு நூல், பல்வேறு வரலாற்று உண்மைகளை எவ்வளவு அபாயகரமான அளவிற்கு நாம் மறந்து வருகிறோம் என்பதை சரியான நேரத்தில் நினைவுபடுத்துகிறது. ’பசுப் புதிர்’, ’பாரதமாதா’, ’பண்டைய இந்தியாவில் பார்ப்பனிய சகிப்பின்மை’ உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் பல்வேறு பிரச்சினைக்குரிய விசயங்களை எடுத்துரைப்பதன் மூலம் ஒருகாலத்தில் சங்கபரிவாரத்தால் கட்டியமைக்கப்பட்டு, தற்போது பள்ளிக்கூடங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் வெகுவாகப் பரப்பப்பட்டுள்ள கட்டுக்கதைகளை உடைத்திருக்கிறார் நூலாசிரியர்.

வரலாற்றாய்வாளர் டி.என்.ஜா

பண்டைய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக வாழ்வை மறுகட்டமைப்பு செய்வதற்கான முயற்சியில் மார்க்சிய அறிஞரான டி.என்.ஜா. இறங்கியிருக்கிறார். அதற்காக பண்டைக்கால நூல்களை பல பத்தாண்டுகளாக படித்திருக்கிறார். ஆம், இவ்வுலகம் கடந்து வந்த நீண்ட பாதையின் வரலாற்றை வெளிக் கொணரும் இத்தகைய கடுமையான பணிகளுக்கு குறுக்கு வழிகள் வேறு எதுவும் கிடையாது.

இத்தகைய பணிகளில் ஈடுபடும் அறிஞர்கள் பல நூல்களை ஆய்ந்து, அதிலிருந்து பெற்ற கண்டுபிடிப்புகளை தொல்பொருளியல், கல்வெட்டியல் மற்றும் நாணயவியல் ஆதாரங்களோடு ஒப்பிட்டுப் பார்ப்பதில் பல பத்தாண்டுகள் செலவிடுகின்றனர். அத்தகைய அறிவுத்திறனை வரலாற்றுக்கு புறம்பானவை என்றோ, அரசியல் வேட்கையைத் தணிப்பதற்கான சுவாரசியமான முழக்கங்கள் என்றோ வெறுமனே வெட்டிச் சுருக்கிவிட முடியாது.

இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளின் சாரமானது, கலாச்சார தேசியத்தின் நம்பிக்கையாளர்களின் ’பெரும்பான்மைவாதத்தை’ ஆதரிக்கும் கருத்துக்களுக்கு நேர்மாறானதாக இருக்கிறது. அகிம்சை, மத நல்லிணக்கம் மற்றும் அனைத்து சமூகங்களின் மீதான சகிப்புத்தன்மை என இந்தியாவின் ‘வளமான கலாச்சாரம்’ குறித்து ஓதப்படும் சுயதுதி தம்பட்டங்களுக்கு நேரெதிராக, பண்டைய நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டுகிறார் டி.என்.ஜா.

சில அறிஞர்கள் பண்டைய இந்தியாவில் பல்வேறு மதப்பிரிவுகளுக்கு மத்தியிலான பரஸ்பர இணக்கம் இருந்ததாகக் காட்டுவதற்கு குறிப்பிடும் சில உதாரணங்களை, தனது நூலில் ”பண்டைய இந்தியாவில் பார்ப்பனிய சகிப்பின்மை” எனத் தலைப்பிடப்பட்ட ஒரு அத்தியாயத்தில் உற்று நோக்குகிறார். கிபி ஆறாம் நூற்றாண்டின் மத்தியில் வேத எதிர்ப்பு மதமான பௌத்த மதத்தின் நிறுவனரான புத்தர், பல்வேறு புராணங்களிலும் விஷ்ணுவின் அவதாரமாக காட்டப்படுகிறார். 11-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தசாவதார சரித்திரம் மற்றும் 12ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கீதா கோவிந்தம் போன்ற நூல்களிலும் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருப்பதையும் டி.என்.ஜா நோக்குகிறார்.

பண்டைய இந்தியாவைக் குறித்த இத்தகைய ஓர் இனிமையான பிம்பத்தை டி.என்.ஜா மறுக்கிறார். இந்தியா சமயங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை கொண்ட நாடு என்ற கருத்தாக்கத்தை குறுக்கு விசாரணை செய்ய போதுமான எதிர் ஆதாரங்கள் இன்னுமும் இருக்கின்றன என்கிறார். இது குறித்து மேலும் கூறுகையில் ”வெவ்வேறு பார்ப்பனப் பிரிவுகள் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டதற்கு நம்மிடம் எக்கச்சக்கமான ஆதாரங்கள் உள்ளன. அது மட்டுமல்லாது, பண்டைய இந்தியாவில் இருந்த வேறுபட்ட இரு மதங்களான புத்த மதம் மற்றும் சமண மதத்தின்பாலும் அவர்கள் கடுமையான விரோதம் கொண்டிருந்தனர்” என்கிறார்.

ஒவ்வொரு வகுப்புவாத, மதவாத வன்முறைச் சம்பவங்களுக்குப் பிறகும் அரசியல்வாதிகளால் வழக்கமாக விடப்படும் வாய்ஜாலங்களுக்கு நேர் முரணாக, பண்டைய இந்தியா குறித்த டி.என்.ஜா-வின் மறுகட்டமைப்பு அமைந்துள்ளது. இந்நூல், மதங்களுக்கிடையிலான மோதல் நிலைமைகளும், வன்முறைகளும் பண்டையகாலத்திலிருந்தே இந்திய கலாச்சாரத்தில் ஊடாடி இருந்திருக்கிறது என்பதை எடுத்துக் காட்டுகிறது. இந்தியா முழுவதும் முசுலீம்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் சமகால கும்பல் வன்முறை கலாச்சாரம் என்பது ஏதோ ஒரு தடப்பிறழ்வு அல்ல. எப்போதுமே காட்சியிலிருக்கும் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளின் பெரும் வடிவம்தான் அது.

கூன் பாண்டியனால் சமணர்கள் கழுவேற்றப்பட்டதைக் குறிக்கும் கல்வெட்டு.

புத்த, சமண மதங்களுக்கு எதிரான வசைகள் அடிக்கடி கடுமையான வன்முறை நடவடிக்கைகளாக மாற்றப்பட்டன என்பதை குறிப்பிடுகிறார் டி.என்.ஜா. ஹுனா ஆட்சியாளனான மிஹிரகுலா என்ற சிவபக்தன், 1600 புத்த ஸ்தூபிகள் மற்றும் மடங்களை அழித்ததோடு ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகளையும் பாமரர்களையும் கொன்றதை, 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த யுவான் சுவாங் எழுதியிருப்பதை உதாரணமாக சுட்டிக் காட்டுகிறார்.  ஆனால் இந்தியாவில் வழிபாட்டுத் தலங்களை இடிக்கும் கலாச்சாரத்தை, முசுலீம் வருகையின் பண்பாக்குவதையே ஆதிக்க அரசியல் பிரச்சாரம் விரும்பியது. இந்தியக் கலாச்சாரத்தின் உயர்ந்த தன்மையை, அமைதி மற்றும் சகிப்புத் தன்மையின் கலாச்சாரமாக நிறுவ சமூக அறிவியல் நூல்களை மாற்றும் முயற்சிகள் தற்போது விடாப்பிடியாக மேற்கொள்ளப்படுகின்றன. மாறாக, தீவிரத்தன்மையும் சகிப்பின்மையும் இசுலாத்தின் குணமாகக் காட்டப்படுகின்றன.

இந்த தளத்தில்தான் டி.என்.ஜா-வின் ஆய்வு கேள்வி எழுப்புகிறது. ”ஸ்ரமணியத்தைப் பின்பற்றியவர்கள் பார்ப்பனியத்தின் தாக்குதலுக்கு எதிராக பதிலடி கொடுத்ததற்கு ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும், பார்ப்பனப் பிரிவினர், பிற மதத்தினர் மீது சகிப்புத்தன்மையோடு இருந்ததாகச் சொல்லப்படுவதால் அவர்கள் வன்முறையற்றவர்கள் என்ற கருத்தே நீடித்து வருகிறது. ஆனால், இதற்கு முரணாக மத்திய காலங்களிலும் அதன் பின்னரும் அவர்கள் மதச் சண்டைகளைத் தூண்டுவதிலும், வகுப்புவாத வன்முறைகளைப் தூண்டுவதிலும் முன்னணி பாத்திரம் வகித்ததாகத் தெரிகிறது” என்கிறார் டி.என்.ஜா.

இந்தியா குறித்து ஆய்வு செய்த 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரசீக அறிஞர் அல்பெருனி, பார்ப்பன மதத்தினர் குறித்துக் கூறுகையில் அவர்கள், ”இருமாப்புடையவர்களாகவும், முட்டாள்தனமான தற்பெருமையும், கர்வமும் கொண்டவர்களாகவும் இருக்கின்றனர். தங்கள் மதத்தைப் போன்று வேறு மதம் எதுவும் இல்லை என நினைக்கின்றனர்” என்று எழுதியிருக்கிறார்.

மிஹிரகுலா

விரிவான தளத்தில் பார்க்கையில், அமைதி மற்றும் அகிம்சையை வலியுறுத்தும் மதங்கள் உட்பட அனைத்து மதங்களும் வன்முறையின் கூறுகளைத் தமக்குள் கொண்டுள்ளன என்பதை இந்நூலின் ஒர் பகுதி எடுத்துக் காட்டுகிறது. அகிம்சையினை தழுவிக் கொண்டவர்களான புத்த பிட்சுகளின் வன்முறையை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்ளுவோம். அவர்களின் வன்முறைப் பட்டியலில் உள்ள சமகாலத்திய நாடுகளில் இலங்கையும் பர்மாவும் உண்டு.

பண்டைய இந்தியாவிலும் கூட பௌத்தர்களும் சமணர்களும், பார்ப்பன நம்பிக்கைகளுக்கும் சடங்குகளுக்கும் எதிராக பதிலடி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் “புத்தரும் கூட மூன்று வேதங்களையும், ’முட்டாள்தனமான பேச்சுகள்’ என்றும் ’நீரில்லாத பாலைவனம்’ என்றும் அவர்களது மெய்யறிவை ‘வழியற்ற வனம்’ என்றும் ‘நரகம்’ என்றும் விவரித்தார்” என்று டி.என்.ஜா குறிப்பிடுகிறார் .

மத மேலாதிக்கத்துக்கான உந்துதல் என்பது ஏதேனும் ஒரு மதத்திற்கு  மட்டும் குறிப்பான விசயமல்ல. டி.என்.ஜா-வின் இந்த நூல் அனைத்து மதங்களும் மேலாதிக்கத்துக்கான இந்தப் போரில் ஈடுபட்டிருந்தன என்பதை எடுத்துரைக்கிறது. குறிப்பான வரலாற்றுக் காலகட்டங்களில் குறிப்பான அமைப்புகளால் முன்வைக்கப்படும் சவால்களுக்கு ஒருவர் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியிருக்கிறார் டி.என்.ஜா.

– தி வயர் இணையதளத்தில் அதன் மேலாண்மை ஆசிரியர் மொனொபினா குப்தா எழுதிய நூலறிமுகத்தின் தமிழாக்கம்.

வாரம் இரு நூல்களை அறிமுகம் செய்கிறோம். நூல்களை அனுப்ப விரும்புவோர் இரண்டு பிரதிகள் அனுப்பவும். சமூக, பொருளாதார, அரசியல், மொழிபெயர்ப்பு நூல்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். கவிதை, சிறுகதை நூல்களை அனுப்ப வேண்டாம்.

நூல்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Puthiya Kalacharam – Vinavu
122, Nehru Park (Slum Clearance Board),
Poonamallee High Road,
Chennai 600084.
Tamilnadu, India
Mobile – (91) 99411 75876

கர்நாடகம் : விலையா ? கொலையா ? கருத்துப்படம்

கர்நாடகத் தேர்தல் முடிவு ! பெரும்பான்மையை நிரூபிக்க ஒருவாரம் கெடு !

கருத்துப்படம் : வேலன்

“பா.ஜ.க.-வுக்குத் தேவைப்படுபவர்கள் வெகு சில எம்.எல்.ஏக்கள்தான் என்பதாலும், “விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை என்பதனாலும் எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது உறுதியாக கூறவியலாது. சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.”

கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …

இணையுங்கள்:

No : 1 அடிமை ஓ.பி.எஸ். ! கருத்துப்படம்

1

தென்னிந்தியாவிற்குள் நுழையும் பா.ஜ.க.-விற்கு வாழ்த்துக்கள்.

-ஓ.பன்னீர்செல்வம்

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

பா.ஜ.க ஆதரவு மருந்துக் கம்பெனி முதலாளிக்காக மக்களை தாக்கும் புதுவை அரசு !

க்கள் விரோத சுற்றுச்சூழலை நாசமாக்கும் பேரழிவு அபாயம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களை அங்கீகரிப்பதிலும், அவர்களுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்வதிலும் தேசிய கட்சிகளான காங்கிரசு, பி.ஜே.பி. இடையில் எந்த வேறுபாடும் இல்லை என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கடலோர கிராமமான காலாப்பட்டில் இயங்கும் சாசன் ஸ்ரைட்ஸ் நிறுவனத்தை விரிவாக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலே இதற்கு சாட்சி.

1990-களில் சாசன் பார்மசிடிக்கல் என்ற நிறுவனமும் ஸ்ரைட்ஸ் ஆர்கோ லேப் என்ற நிறுவனமும் கூட்டுச் சேர்ந்து வலி நிவாரண மருந்துகள், ஊசிகள், மாத்திரைகள் தயாரிக்கும் உற்பத்தியில் இறங்கியது.  இந்தியா உட்பட அமெரிக்க, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் உற்பத்திக்கான தொழிற்சாலைகளும், 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கும் சந்தையைக் கைப்பற்றியுள்ள இப்பன்னாட்டு நிறுவனம், இந்தியாவில் பெங்களூருவைத் தலைமையகமாக் கொண்டு செயல்படுகிறது.

அருண்குமார் என்ற பி.ஜே.பி.-யினை ஆதரிக்கும் முதலாளியால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 566 மில்லியன் டாலர். இந்த பன்னாட்டு நிறுவனத்தின் ஐந்து ஆலைகள் இந்தியாவில் உள்ளது.  ஏழு ஆலைகள் ஆப்பிரிக்காவிலும்  இத்தாலி மற்றும் இங்கிலாந்தில் தலா ஒரு ஆலைகள் இயங்கி வருகின்றன.  தமிழகத்தில் கடலூரிலும் புதுச்சேரியில் காலாப்பட்டு பகுதியிலும் இதன் ஆலைகள் செயல்படுகிறது.

முதலாளித்துவம் உருவாக்கியுள்ள சுற்றுச்சூழல் கேடுகளினால் ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள், விபத்துக்களினால் ஏற்படும் உடல் ஊனங்கள், அடிபடுவதினால் ஏற்படும் காயங்கள் இவற்றிலிருந்து பாதிக்கப்படுபவர்களை காப்பாற்றுவதாகக் கூறிக்கொண்டு, தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள், இரசாயனங்களைப் பயன்படுத்தி மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதால் இந்த தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியினைச் சுற்றிலும் நிலத்தடி நீரும், காற்றும் பல மடங்கு மாசுபட்டுள்ளது. இந்த ஆலைக்குள் பணிபுரியும் தொழிலாளர்கள் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம் போன்ற நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.

இந்த ஆலைப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்தே 2500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைப் பணியமர்த்தியுள்ளது நிர்வாகம். ஒப்பீட்டு ரீதியாக பிற ஆலைகளை விட ரூ.25,000/- முதல் 30,000/- வரை என கூடுதலாக சம்பளம் கொடுத்து வருகிறது.

இதன்மூலம், தனக்கு விசுவாசமான கருங்காலிகளை, அடியாட்களை தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரிலிருந்தே  உருவாக்குவதில் இந்த நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது என்றே சொல்லலாம். அதனால், தங்களுக்கோ, பகுதி மக்களுக்கோ ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி அக்கறையற்றவர்களாக ஆக்கப்பட்டிருக்கின்றனர்.

தற்போதைய உற்பத்தி நிலையிலேயே சுற்றுச்சூழல் மாசுபாட்டால் மக்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகி வரும் சூழலில், ஆண்டுக்கு 4,000 டன் உற்பத்தி என்ற இலக்கிலிருந்து ஆண்டொன்றுக்கு 9,500 டன்னாக உற்பத்தியை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறது. இவ்விரிவாக்கத்திற்கான சடங்குகளில் ஒன்றான கருத்துக் கேட்புக் கூட்டத்தினை கடந்த மே-8 அன்று ஏற்பாடு செய்தது புதுவை அரசு.

1987-இல் புதுவை அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் கடற்கரையிலிருந்து ஆறு கி.மீ.-க்குள் நாளொன்றுக்கு 10 இலட்சம் லிட்டருக்கு மிகாமல் தண்ணீர் பயன்படுத்தும் தொழிற்சாலைகளை அனுமதிப்பது என்று வெளியிட்டது. அதன் பிறகு, 1988-இல் கடலோர கிராமங்களான கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், காலாப்பட்டு, மணப்பட்டு, பன்னித்திட்டு பகுதிகளில் இரசாயன ஆலை அமைக்கக் கூடாது என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டது.

மீண்டும் 1990-இல் மேற்படி இரண்டு அரசாணைகளுக்கு உட்பட்டு அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளுக்குக் கூட விரிவாக்கம் செய்ய அனுமதிக்கக் கூடாது எனவும் அரசாணை வெளியிட்டது. ஏற்கனவே, அரசு விதிகளின் படி விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் இந்த ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு புதுச்சேரி சுற்றுச்சுழல் துறை அனுமதி அளித்துள்ளது.

இவர்கள் போட்ட அரசாணையை இவர்களே மீறி விரிவாக்கம் செய்ய அனுமதி அளித்து விட்டு, மக்களை ஏமாற்ற கண் துடைப்பிற்காக கருத்துக்கணிப்புக் கூட்டம் நடத்தினர்.

ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதிக்கக்கூடாது என்று சுற்றுவட்டார கிராம மக்கள் தொடக்கம் முதலே தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மக்களின் இந்த எதிர்ப்பை மீறி, கருத்துக்கேட்புக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தமது எதிர்ப்பை பதிவு செய்வது என்ற முடிவுடன், அமைதியான முறையில் மக்கள் கருப்புக் கொடியுடன் சென்றனர்.

இதனால் பீதியடைந்த சுற்றுச்சூழல் துறை கருத்துக் கணிப்புக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்தியது. ஆக, கருத்துக் கணிப்பின் நோக்கம், மக்களின் கருத்தைக் கேட்பதற்காக அல்ல, அரசின் கருத்தைத் திணிப்பதற்கான முயற்சிதான் என்பது இதன்மூலம் அம்பலமானது.

கூட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து, கூடியிருந்த மக்கள் கருப்புக்கொடிகளுடன் ஆலையை நோக்கி முன்னேறிச் சென்றனர். அவர்களின் கருத்தைக்கூடக் கேட்கத் தயாரில்லாத அரசு, ஆலையை நோக்கி முற்றுகையிடச் செல்வதை அனுமதிக்குமா என்ன? அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசி அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது புதுவை அரசு.

பா.ஜ.க. ஆதரவாளரான இந்த ஆலை முதலாளிக்கு புதுவையின் ஆளும் கட்சியான காங்கிரசு அடியாள் வேலை பார்க்கிறது. ஆலை விரிவாக்கத்தை எதிர்க்கும் மக்களுக்கு எதிராக அரசு எந்திரத்தை ஏவிவிடுகிறது. முதலாளிகளைப் பாதுகாப்பதில் காங்கிரசு – பி.ஜே.பி.-க்கு எந்த வேறுபாடும் இல்லை என்பதற்கு துலக்கமான சான்று இந்த சம்பவம்.

இந்த உண்மைகளையும், ஆலை விரிவாக்கத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கியும், போலிசு – காங்கிரசு – பா.ஜ.க. ரவுடிக் கும்பலின் கூட்டுத் தாக்குதலை கண்டித்தும், தொழிலாளர்கள் மத்தியிலும், புதுவை உழைக்கும் மக்களின் மத்தியிலும் விரிவான பிரச்சார இயக்கத்தை மேற்கொண்டு வரும் பு.ஜ.தொ.மு., அடுத்தக்கட்டப் போராட்டத்திற்கு அவர்களை ஆயத்தமாக்கி வருகிறது.

தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி. தொடரபுக்கு: 95977 89801.

கடலூர் மின்துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : தொழிலாளிகள் மனதை வென்ற NDLF அணி !

கடலூர் மின் துறை கூட்டுறவு சங்கத் தேர்தல் : கொள்ளையே கூட்டணிக்குக் ‘கொள்கை’ !

மின் துறையில் பு.ஜ.தொ.மு.-வின் இணைப்பு சங்கமான தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி கடந்த ஆண்டு, மார்ச் மாதம் உதயமானது.

மின் துறை தொழிலாளர்கள், ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் அதே நேரம், மின் துறையில் மட்டுமல்லாது, பரந்துபட்ட அடித்தட்டு மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்கான காரணங்களை விளக்கியும், அது தொடர்பான போராட்டங்களை நடத்தியும், தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு  வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகு மே 07 அன்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடந்தது.

கடலூர் கோட்டத்திற்கு உட்பட்டு நடந்த தேர்தலில், பு.ஜ.தொ.மு. சங்கத்தின் சார்பில் NDLF-அணியாக களமிறங்கினோம். மொத்தம் உள்ள 11 இடங்களுக்கான தேர்தலில் 07 இடங்களில் தனித்துப் போட்டியிட்டோம்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சி.ஐ.டி.யூ., ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட இடதுசாரி சங்கங்களின் ஐக்கிய முன்னணி ஒரு அணியாகவும், தொ.மு.ச. ஒரு அணியாகவும், அ.தி.மு.க. உள்ளிட்ட சில கட்சிகள் ஒரு அணியாகவும் போட்டியிட்டன.

ஐ.என்.டி.யூ.சி (காங்கிரசு), பி.எம்.எஸ் (பி.ஜே.பி.), தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் (தே.மு.தி.க.) மற்றும் அண்ணா தொழிற்சங்கம் இணைந்து உருவாக்கியுள்ள “கொள்ளை கூட்டணி”

இதில் வேடிக்கை என்னவென்றால், அண்ணா தொழிற்சங்கம் (அ.தி.மு.க.), ஐ.என்.டி.யூ.சி (காங்கிரசு), பி.எம்.எஸ் (பி.ஜே.பி.), தேசிய முற்போக்கு தொழிலாளர் சங்கம் (தே.மு.தி.க.) ஆகிய சங்கங்கள் இணைந்து கூட்டணி அமைத்ததுதான்.

கொள்கையிலே எதிரும், புதிருமாக காட்டிக் கொண்டு, ஆட்சியில் மக்களை பணத்தைச் சூறையாடவும், சங்கத் தேர்தல் என வந்தால் கூட்டு வைத்துக் கொண்டு தொழிலாளர் பணத்தைக் கொள்ளையிடவும் செய்கின்றனர்.

அதாவது, எதிரில் இருந்தாலும், சேர்ந்து இருந்தாலும், கொள்ளையடிப்பது தான் ‘கொள்கையாகக்’ கொண்டு வலம் வந்தனர்.

தொ.மு.ச. அணியோ பல லட்சங்களைச் செலவு செய்து, 100 ரூபாய் பணம், குவாட்டர், கோழி பிரியாணியுடன் வாக்காளர்களை வேன் வைத்து அழைத்து வந்தனர்.

குவாட்டர் நெடியுடன், ஓட்டுப் போடச் சென்ற வாக்காளர் ஒருவர், தான் காலையில் ஒரே ஒருவருக்கு மட்டும் தான் ஓட்டுப் போட்டதாகவும், மற்றவர்களுக்கு ஓட்டுப் போட, ஓட்டுப் பெட்டியிலே போட்ட வாக்குச் சீட்டை எடுத்துக் கொடுக்குமாறு குடிபோதையில் தகராறு செய்தார். குவாட்டர் ஓட்டு, செல்லாத ஓட்டு என்ற கதையாகிப் போனது.

தொழிலாளர்களை நேரில் சென்று சந்திக்கும் தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி (NDLF அணியினர்) தோழர்கள்.

கடலூர் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு கிளைகளுக்கு நேரடியாகச் சென்று தொழிலாளர்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டோம்.

சிவப்பு என்றாலே அது பு.ஜ.தொ.மு. தான் !

எங்கு சென்றாலும் சிவப்பு சட்டை சகிதமாக நமது தோழர்கள் வலம் வந்ததால், மின் துறையில் சிவப்பின் அடையாளமாக இருந்த சி.ஐ.டி.யூ. அணியினர். சிவப்பு சட்டை போட முடியாமல் நெளிந்தனர்.

சிவப்பு சட்டை அணிய முடியாது போனதால் சிவப்பு துண்டுடன் பிரச்சாரம் செய்யும் சி.ஐ.டி.யூ.-வினர்.

தப்பித் தவறி யாராவது போட்டாலும், அவர்களை NDLF அணியா என்று தொழிலாளர்கள் கேட்க ஆரம்பித்ததால், சிவப்பு சட்டை போடுவதை ஒட்டு மொத்தமாக நிறுத்திக் கொண்டனர்.

சிவப்பு என்றாலே அது நாம் தான் என்ற அடையாளத்தை தோழர்கள் ஏற்படுத்தியுள்ளனர். அதனால், சிவப்புத் துண்டிற்கு மாறி, அதைப் பற்றியும் தொழிலாளர்கள் கேட்க ஆரம்பித்ததால், சிவப்பையே பயன்படுத்த முடியாத நிலைக்கு ஆளாகி உள்ளனர் சி.ஐ.டி.யூ. அணியினர்.

நமது பிரச்சாரத்தை தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வாக்குச்சாவடியாக உள்ள நகராட்சிப் பள்ளி வாயிலில் நமது சுவரொட்டியை மறைக்க வேண்டும் என்று சி.ஐ.டி.யூ. அணியினர் தேர்தல் அதிகாரியிடம் முறையிட்டு, சுவரொட்டியை மறைக்கச் செய்தனர்.

மறைக்கப் பட்ட பு.ஜ.தொ.மு. -வின் சுவரொட்டி.

மற்ற அணியினர், கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு நிர்வாக, சீர்திருத்தங்களை வாக்குறுதிகளாக அள்ளி வீசிக் கொண்டிருந்த பொழுது, நேர்மையான நிர்வாகம் என்ற ஒற்றை வாக்குறுதியுடன் களமிறங்கினோம். நமது தோழர்கள் அனைவரும்.

தொழிலாளர்களை நேரடியாக சந்தித்தது முதல், தேர்தலுக்கான விளம்பர பேனர்களை வைக்கிற வரை, பல்வேறு வேலைகளில் தோழர்களே முன் நின்று கடும் வேலைகளை செய்தது, பலரையும் கவனிக்க வைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதை விட, நேர்மையான சங்கம் தேவை என்பதை தொழிலாளர்களை உணர வைத்ததில் நமது NDLF அணி வெற்றிபெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
தமிழ்நாடு மின் ஊழியர்கள் ஜனநாயக முன்னணி,
இணைப்பு : புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கடலூர் கோட்டம். தொடர்புக்கு: 95977 89801.

கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …

3

ர்நாடகத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைப்பதை ஆதரிப்பதாக காங்கிரஸ் அறிவித்திருக்கிறது. ஆளுநர் குஜராத்தின் முன்னாள் அமைச்சர், அவர் பா.ஜ.க. வை ஆட்சியமைக்க அழைப்பாரா, அல்லது பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட காங், குமாரசாமி கூட்டணியை அழைப்பாரா, அல்லது வித்யாசாகர் ராவைப் போல எஸ்கேப் ஆகிவிடுவாரா என்பது நமக்கு மட்டுமல்ல, எடியூரப்பாவுக்கும் தெரியாது.

அது அமித் ஷாவுக்கும் மோடிக்கும் மட்டுமே வெளிச்சம்.

மணிப்பூர், கோவா, மேகாலயாவில் ஹிந்து ராஷ்டிரம் அமைக்க பெரும்பான்மையை விலை கொடுத்து வாங்கியது போல, இங்கேயும் வாங்குவதற்கு பனியாஜி நிச்சயம் விரும்புவார். தம்மை விற்றுக் கொள்வதற்கு குமாரசாமி கட்சி எம்.எல்.ஏ க்களிலும் பலர் தயாராகவும் இருப்பார்கள். அவர்கள் ஏற்கனவே அவ்வாறு விலை போனவர்கள்தான். சிக்கல் என்னவென்றால், இந்த பேக்கரி டீலிங்குகளில் கர்நாடக அரசியல்வாதிகளும் கில்லாடிகள் என்பதுதான்.

இருந்த போதிலும், பா.ஜ.க.-வுக்குத் தேவைப்படுபவர்கள் வெகு சில எம்.எல்.ஏக்கள்தான் என்பதாலும், “விலை அல்லது கொலை” என்பதுதான் பனியாஜியின் அணுகுமுறை என்பதனாலும் எதுவொன்றும் நடக்காது என்று நாம் இப்போது உறுதியாக கூறவியலாது. சாதி முதல் பெல்லாரி பிரதர்ஸ் வரையிலான எல்லா ஆயுதங்களையும் பா.ஜ.க. பயன்படுத்தும்.

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு எடியூரப்பாவுக்கு ஆளுநர் அவகாசம் கொடுத்துவிட்டால், குமாரசாமி, காங்கிரசு கூட்டணி உடனடியாக ஒரு கூவத்தூரைத் தேடி ஓடவேண்டி வரும். அந்த கூவத்தூர் ஆந்திரத்திலோ, கேரளத்திலோ, வங்காளத்திலோ இருக்கலாம். நிச்சயம் தமிழ்நாடல்ல.

பா.ஜ.க.-வும் காங்கிரசும் ஒன்றல்ல, பா.ஜ.க.-வும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஒன்றல்ல என்பது உண்மைதான். “இரு தரப்பினரும் ஒன்றல்ல” என்று சொல்வது வேறு, “பா.ஜ.க. விற்கு இவர்கள் அரசியல் மாற்று” என்று புரிந்து கொள்வது வேறு.

குமாரசாமி கூட்டணி ஆட்சியமைப்பதை அமித் ஷா அனுமதிக்கும் பட்சத்தில் அது ஒரு தொலைநோக்குத் திட்டமாக இருக்கும். கூட்டணிக்குள் பதவிச் முரண்பாடுகளைக் கிளப்பி, 2019 தேர்தலுக்கு முன் கூட்டணியை உடைக்கும் திட்டமாக அது இருக்கலாம்.

எதுவாக இருப்பினும், தொலைக்காட்சிகள் அனைவருக்கும் அடுத்து வரும் நாட்கள் தொடர் தீபாவாளிதான். இந்தப் பதவிச் சூதாட்டத்தை ருசிகரமான அரசியலாக மாற்றித்தரும் வேலையை அவர்கள் செய்வார்கள்.

***

நாம் விசயத்துக்கு வருவோம். இன்று காலையில் பா.ஜ.க. தனிப்பெரும்பான்மை பெற்றுவிடும் என்பது போல தேர்தல் முடிவுகள் வந்தபோது அதை யாரும் ரசித்திருக்க மாட்டார்கள் – தேர்தல் அரசியலில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட.
குமாரசாமி – காங்கிரசு கூட்டணி ஆட்சிக்கு வருவது பலருக்கு ஆறுதலாக இருக்கக்கூடும். குமாரசாமி – காங்கிரசு கூட்டணி எவ்வளவு மோசமான நபர்களால் நிரம்பியதாக இருந்த போதிலும், பெருந்தீமையான பா.ஜ.க.வை ஒப்பிடும்போது இந்தக் கூட்டணி பரவாயில்லை என்பதுதான் மேற்சொன்ன ஆறுதலுக்கு உரிய நியாயம்.

பா.ஜ.க.-வும் காங்கிரசும் ஒன்றல்ல, பா.ஜ.க.-வும் மதச்சார்பற்ற ஜனதாதளமும் ஒன்றல்ல என்பது உண்மைதான். எனினும் இவர்கள் பா.ஜ.க.-வின் மதவெறியையும், பாசிசத் தாக்குதல்களையும் தடுத்து நிறுத்தப் போகின்ற மாற்றல்ல. “இரு தரப்பினரும் ஒன்றல்ல” என்று சொல்வது வேறு, “பா.ஜ.க. விற்கு இவர்கள் அரசியல் மாற்று” என்று புரிந்து கொள்வது வேறு.

இருந்த போதிலும் இந்துத்துவ பாசிசம் நாடு முழுவதையும் ஆக்கிரமித்து வரும் சூழலில், மண் குதிரை என்று தெரிந்தாலும், “வேறென்ன செய்வது, நம்பிவைப்போம்” என்று பலர் எண்ணுகின்றனர். இது குறிப்பிட்ட கட்சிகள் மீதான நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை தொடர்பான பிரச்சினை மட்டுமல்ல, இந்த அரசமைப்பின் மீதான நம்பிக்கை தொடர்பான பிரச்சனை.

கட்சிகள் அதிகார வர்க்கம் நீதித்துறை உள்ளிட்ட இந்த ஜனநாயக அமைப்பு முற்றிலுமாகத் தோற்று விட்டது என்பதற்கு ஆயிரம் நிரூபணங்கள் வந்த போதிலும், இந்த அமைப்பின் இந்துத்துவ சார்பு, ஆதிக்க சாதிச் சாய்வு, கார்ப்பரேட் அடியாள்தனம் என்பவையெல்லாம் அன்றாடம் நிரூபிக்கப்பட்ட போதிலும், சாதி – மதச் சார்பு, ஊழல் ஆகியவற்றால் இந்தத் தேர்தல் முறையே சிரிப்பாய் சிரித்த போதிலும் – இந்த “ஜனநாயக அமைப்பின்” துணை கொண்டே, இந்துத்துவ பாசிசத்தை வீழ்த்திவிட முடியும் என்று பலர் நம்புகின்றனர்.

“மோடி வெல்லப்படமுடியாதவர்” என்ற பிம்பம் தேர்தல் அரசியல் திருகுதாளங்களால் உருவாக்கப்பட்டதாகும். மோடிக்கு எதிராக நாடெங்கும் திரண்டிருக்கும் மக்களின்  கோபம் அதற்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு வடிவங்களை எடுக்கவில்லை என்பதுதான் மோடியின் வலிமை.

“ஒரு வரியில் சொல்வதென்றால், மாயாவதி – அகிலேஷ் – காங் கூட்டணி அமைத்திருந்தால் உ.பி. யில் பா.ஜ.க. வை வீழ்த்தியிருக்கலாம். கர்நாடகத்தில் காங் – குமாரசாமி கூட்டணி வைத்திருந்தால் பா.ஜ.க.வை முறியடித்திருக்கலாம். மாநிலக் கட்சிகளும் காங்கிரசும் இணைந்து ஒரு மெகா கூட்டணி அமைத்தால் 2019 இல் மோடியை தோற்கடித்து விடலாம்” என்ற கோணத்தில் மட்டுமே சிந்திக்கின்றனர்.

***

ப்படியானால், பா.ஜ.க. வின் தேர்தல் தோல்விதான் இந்துத்துவத்தின் தோல்வியா? குமாரசாமியின் வெற்றி மதச்சார்பின்மையின் வெற்றியா? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது அபத்தம் என்று புரியும்.

தன்னுடைய மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடைய, “மதச்சார்பின்மை பற்று” குறித்து நம்மைக் காட்டிலும் குமாரசாமிக்கு தெளிவாகத் தெரியும். குமாரசாமியின் “மதச்சார்பின்மைப் பற்று” குறித்து தேவ கவுடாவுக்குத் தெரியும். தங்கள் மந்தையிலிருந்து எந்தெந்த ஆடுகளை அமித் ஷா திருடக்கூடும் என்பது தந்தைக்கும் மகனுக்கும் தெளிவாகத் தெரியும்.

இந்தக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இந்துத்துவ எதிர்ப்பு கொள்கையெல்லாம் இல்லை என்பது மட்டுமல்ல, குமாரசாமிக்கு வாக்களித்த வாக்காளர்களும் இந்துத்துவ எதிர்ப்புக்காக வாக்களிக்கவில்லை என்பதும் அவை சாதி வாக்குகள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. குமாரசாமி ஒருவேளை பா.ஜ.க. வுடன் கூட்டணி சேர்ந்தாலும் அவரது கட்சியினரும் சரி, வாக்காளர்களும் சரி அதிர்ச்சியடையப்போவதில்லை. இவையெல்லாம் ஏற்கெனவே நடந்த கதைகள்தான். குமாரசாமி மட்டுமல்ல, இன்றைய பா.ஜ.க. எதிர்ப்பு மாநிலக்கட்சிகள் பலரும் முன்னர் பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.-வுடன் கூட்டு சேர்ந்தவர்கள்தான்.

அதேபோல, பா.ஜ.க.-வுக்கு போடப்பட்ட ஓட்டுகள் அனைத்தும் இந்துத்துவக் கொள்கைக்கு போடப்பட்ட ஓட்டுகள் அல்ல. காங் ஆட்சியின் மீதான அதிருப்தி, சாதி, அம்மாநிலத்தின் மடாதிபதிகள் வாக்காளர்கள் மீது செலுத்தும் செல்வாக்கு, அனைத்துக்கும் மேலாக, கர்நாடக மாநில அரசியல் இதுவரை காணாத அளவுக்கு, ஓட்டுக்கு 3000 ரூபாய் வரை பா.ஜ.க. வாரி இரைத்திருப்பது – போன்ற பல விசயங்கள் பா.ஜ.க.-வின் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கின்றன.
எனவே, பா.ஜ.க. வின் வெற்றியாகட்டும், அல்லது எதிர்தரப்பின் வெற்றியாகட்டும் அவற்றை இந்துத்துவ ஆதரவு அல்லது இந்துத்துவ எதிர்ப்பு என்ற ஒற்றைப் பரிமாணத்தில் புரிந்து கொள்வது பிழையானது.

***

ன்று, இந்து மதவெறிக்கு எதிரான நடவடிக்கைகளாகட்டும், தனியார்மய தாராளமயத் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களாகட்டும், நாடெங்கும் இவற்றை முன்நின்று நடத்துபவர்களில் பெரும்பான்மையினர் தேர்தல் அரசியல் கட்சி சார்புக்கு அப்பாற்பட்ட மக்கள் மற்றும் அறிவுத்துறையினர்தான். இவற்றின் பயனை அறுவடை செய்து கொள்வதற்கான அடையாள நடவடிக்கைகளில் மட்டுமே தேர்தல் கட்சிகள் ஈடுபடுகின்றன.

“மோடி வெல்லப்படமுடியாதவர்” என்ற பிம்பம் தேர்தல் அரசியல் திருகுதாளங்களால் உருவாக்கப்பட்டிருப்பதாகும். உண்மையில் மோடிக்கு எதிராக நாடெங்கும் திரண்டிருக்கும் மக்களின் வெறுப்பும் கோபமும் அதற்குப் பொருத்தமான அரசியல் அமைப்பு வடிவங்களை எடுக்கவில்லை என்பதுதான் மோடியின் வலிமை. எனவே, சமூகத்தையும் அரசியலையும் ஜனநாயகப் படுத்துகின்ற வகையிலான போராட்டங்களை கீழிருந்து கட்டியமைப்பதுதான் இந்துத்துவத்துக்கும் சரி, புதிய தாராளவாத தாக்குதல்களுக்கும் சரி, உண்மையான சவாலாக இருக்கும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம். தமிழ்ச் சமூகத்தின் பொது மனநிலையாக இருக்கின்ற இந்து மதவெறியின் மீதான வெறுப்புதான் இந்துத்துவத்துக்கு எதிரான உண்மையான அரசியல் ஆற்றல். இதைக் கண்டுதான் பா.ஜ.க. அஞ்சுகிறது. இதைத்தான் நாடு முழுவதும் நாம் உருவாக்க வேண்டும்.

மக்களின் இந்துவெறி எதிர்ப்பு, தனியார்மய தாராளமய எதிர்ப்பு அரசியல் ஆற்றலுக்குரிய அமைப்பு வடிவம், மக்களுடைய அதிகாரமாகத்தான் இருக்க முடியுமேயன்றி, அதனை இன்றைய தேர்தல் அரசியலுக்குள் அடக்க முடியாது.
“இதெல்லாம் சரியானதாக இருப்பினும், இப்போதைக்கு சாத்தியமற்றது” என்று பலர் எண்ணலாம். இப்போதைக்கு சாத்தியம் எது? குமாரசாமி ஆட்சியா? அதை இந்துத்துவ எதிர்ப்பு ஆட்சி என்று நம்பி மனநிறைவு கொள்ளலாமா? அல்லது உண்மையை எதிர்கொண்டு “சாத்தியமற்றதற்காக” போராடலாமா?

என்ன செய்வது என்பதை நாமே யோசித்துப் புரிந்து கொள்ளலாம். அல்லது அமித் ஷா நமக்குப் புரிய வைப்பதற்கும் வாய்ப்புண்டு.

– மருதையன்
(மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.)

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை !

ராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மகாஜன் என்ற அரசு அதிகாரி, தன் மீது தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சக ஊழியர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

மும்பை உயர் நீதிமன்றத்தால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட அவரது கோரிக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உதய் உமேஷ் லலித் மற்றும் ஆதர்ஷ் குமார் கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாஜன் மீது வழக்குப் பதியப்பட்டது சரி என்றோ, தவறு என்றோ தீர்ப்பளித்திருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அந்த எல்லையையும் தாண்டி, இந்தத் தனிப்பட்ட வழக்கைப் பொதுமைப்படுத்தி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தையே திருத்தி எழுதியிருக்கிறார்கள். தங்களது தீர்ப்பில் பல இடங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திற்கு எதிராக வன்மத்தைக் கக்கியுள்ளனர். குறிப்பாக, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அப்பாவி மக்களுக்கு எதிராகத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள், பணத்திற்கு ஆசைப்பட்டுப் பொய்ப் புகார் கொடுத்து வழக்குப் பதிவு செய்கிறார்கள் எனக் குறிப்பிட்டுத் திருத்தங்களை நியாயப்படுத்தியிருக்கின்றனர்.

தீண்டாமைக் குற்றங்கள் நாடெங்கும் அதிகரித்து வரும் சூழலில், உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு, இனி சாதிவெறியர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வதே இயலாது என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

மிக முக்கியமாக, இனி இந்தச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுள் ஒருவரைக் கைது செய்ய வேண்டுமென்றால், மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அதுவே குற்றம் சாட்டப்படுபவர் அரசு அதிகாரியாக இருந்தால், அவர் சார்ந்த துறையின் உயர் அதிகாரியின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

மேலும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகள் அனைத்திலும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரைக் குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே கருதப்பட வேண்டும் என்றும், ஆரம்பகட்ட விசாரணைக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தவறு செய்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக விசாரணை அதிகாரி கருதும்பட்சத்தில் மட்டுமே முதல் தகவலறிக்கை பதிவு செய்யப்பட வேண்டுமென்றும், அவ்வாறு இல்லையெனில் வழக்கே பதிவு செய்யத் தேவையில்லை என்றும் தங்களது தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் 18- பிரிவு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் பிணை வழங்கினால், அவர் சாட்சிகளை மிரட்டிக் கலைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற அடிப்படையில் முன் பிணை வழங்குவதைத் தடை செய்கிறது. ஆனால், அதனையும் திருத்திக் குற்றம் சாட்டப்பட்டவருக்கு முன் பிணை வழங்கலாம் என்றும் தங்களது தீர்ப்பில் கூறியுள்ளனர்.

சமூக நீதியின்பாற்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தங்களோ, மாற்றங்களோ கொண்டுவர வேண்டுமென்றால், அத்திருத்தங்களை ஏற்பது அல்லது மறுப்பது தொடர்பாக விவாதங்களை நடத்தி, அவற்றைச் செய்வதற்குத் தகுதியும் அதிகாரமும் கொண்ட இடம் நாடாளுமன்றம் மட்டும்தான்.

ஆனால், இரண்டு நீதிபதிகள் தங்களது அதிகாரத்தை அத்துமீறிப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தையே நீர்த்துப் போகச் செய்துள்ளனர்.

காகித அளவில்கூட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கக் கூடாது எனச் செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இந் நீதிபதிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் ‘‘வன்கொடுமை குறித்து அலசும் முன், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின்னணியை நாம் முதலில் பார்க்க வேண்டும்.

தாழ்த்தப்பட்டவர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும், தாக்குதல்களையும் தடுக்க 1955 ஆண்டு தீண்டாமை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அதுவே 1977 குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம் (பி.சி.ஆர்.) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

ஆனால், இப்பழைய சட்டங்களின் மூலம் தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தீண்டாமைக் குற்றங்களைத் தடுக்கவோ, குற்றவாளிகளைத் தண்டிக்கவோ முடியவில்லை.
தமிழகத்தில் இம்மானுவேல் சேகரன் கொலை, அதனைத் தொடர்ந்து நடந்த முதுகுளத்தூர் கலவரம், கீழ்வெண்மனியில் 44 தாழ்த்தப்பட்ட கூலி விவசாயிகள் ஆதிக்க சாதி நிலவுடமைக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டது உள்ளிட்டு நாடு முழுவதும் நடந்த தாழ்த்தப்பட்டவர்கள் மீதான தாக்குதல் வழக்குகளில் குற்றவாளிகளை பி.சி.ஆர். சட்டத்தின்படித் தண்டிக்க இயலவில்லை.

பி.சி.ஆர். சட்டம் பரிந்துரைத்த தண்டனைகளின் அளவும், அதனை ஒத்த கிரிமினல் குற்றங்களுக்கு மற்ற இந்தியச் சட்டங்கள் அளித்த தண்டனைகளை விடக் குறைவாக இருந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தீண்டாமைக் குற்றங்களும் புதுப்புது வடிவங்களை எடுத்து, பழைய சட்டங்களின் கீழ் தண்டிக்க முடியாத நிலைமை உருவானது.

தங்களுக்கு எதிராக ஆதிக்க சாதியினர் இழைக்கும் வன்கொடுமைகள் குறித்துத் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் அதிகரித்து வந்த அதிருப்தியையும், கோபத்தினையும் எதிர்கொள்ளவியலாத நிலையில்தான், மைய அரசு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை 1989- ஆண்டு கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின் விதிகள் அனைத்தும் 1969- ஆண்டு அமைக்கப்பட்ட இளையபெருமாள் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. இப்படிப்பட்ட வரலாறு கொண்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத்தான் இந்த நீதிபதிகள் தங்களது தீர்ப்பின் மூலம் செல்லாக் காசாக்கியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து நாடு முழுவதும் தலித் அமைப்புகள் நடத்திய போராட்டங்கள் அரசின் அடக்குமுறையைச் சந்தித்துள்ளன. குறிப்பாக, பா.ஜ.க. ஆளும் மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், இராஜஸ்தான் மாநிலங்களில் தீர்ப்புக்கு எதிராகப் போராடியவர்கள் மீது போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 9 தாழ்த்தப்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினரின் வீடு உட்பட போராட்டத்தின் முன்னணியாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அமைப்புகளால் சென்னையில் நடத்தப்பட்ட பேரணியைக்கூட நகர்ப்புறத்து ஆதிக்க சாதியினரால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அப்பேரணி மீது வன்மத்தைக் கக்கினர்.

தாழ்த்தப்பட்டவர்கள் வேண்டுமென்றே பிற சாதியினர் மீது பொய்வழக்குப் போடுகிறார்கள் என்று இராமதாசு போன்ற ஆதிக்க சாதித் தலைவர்கள் வீண்பழி சுமத்தி வருவதைத் தங்களது தீர்ப்பில் பிரதிபலித்துள்ள நீதிபதிகள், அதனை நியாயப்படுத்தும்விதமாகத் தேசிய குற்றப் பதிவு மையத்தின் புள்ளி விவரங்களைக் காட்டியுள்ளனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 2016- ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்ட 15,638 வழக்குகளில், 11,024 வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், 4,119 வழக்குகளில் மட்டுமே குற்றம்சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதனால் பெரும்பாண்மை வழக்குகள் போலி வழக்குகள் என்றும் கூறுகின்றனர்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கு நீதிபதிகள் பிரயோகித்துள்ள அதே அளவுகோலின்படி பார்த்தால், இந்தியத் தண்டனைச் சட்டங்களின் கீழ் பதியப்படும் பெரும்பாலான வழக்குகளையும் பொய் வழக்குகள் எனக் கூறலாம்.

இழிபுகழ்பெற்ற தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுள், 1 சதவீதத்துக்கும் குறைவானவர்கள்தான் அச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட்டனர். ஆனாலும், அந்தச் சட்டத்தைக் கைவிட ஆளும் வர்க்கமும் போலீசு அதிகாரிகளும் விரும்பவேயில்லை.

பிரிட்டிஷ் காலத்திய ராஜதுரோகச் சட்டத்தின் கீழ் புனையப்பட்ட வழக்குகளுள் பெரும்பாலானவை போலி வழக்குகள்தான். டாஸ்மாக்கை எதிர்த்துப் பாடியதற்காக ம.க.இ.க. பாடகர் தோழர் கோவன் மீது ராஜதுரோகக் குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்து, தனது முகத்தில் கரியைப் பூசிக் கொண்டது பாசிச ஜெயா கும்பல்.

துஷ்பிரயோகம் செய்யப்படும் பல்வேறு இந்தியத் தண்டனைச் சட்டங்களைத் திருத்த முன்வராத உச்ச நீதிமன்றம், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்தி நீர்த்துப் போகச் செய்வதன் காரணம் ஒன்றேதான் அது நீதிபதிகளின் ஆதிக்க சாதித் திமிர்.

தங்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்கொடுமைகளை வழக்காகப் பதிவு செய்யவே தாழ்த்தப்பட்டவர்கள் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது. உள்ளூர் ஆதிக்கச் சாதி அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு அதிகாரிகள் எப்போதும் இத்தகைய குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தி ஒதுக்கிவிடுவர்.

வழக்கைப் பதிவு செய்ய வேண்டிய போலீஸ் அதிகாரிகள் வழக்கே பதியாமல் தவிர்த்து விடுகின்றனர். அப்படியே பதிந்தாலும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியாமல் விட்டுவிடுவர். வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிய வேண்டி போராட்டங்கள் மூலம் நிர்பந்திக்கும் போதும்கூடச் சரியான பிரிவுகளின் கீழ் பதியாமல் விட்டுவிடுவர்.

இவை எல்லாவற்றையும் தாண்டி வழக்கு பதியப்பட்டாலும், விசாரணையின் போக்கில் வழக்கை வலுவிழக்கச் செய்யும் உள்ளடி வேலைகளைச் செய்வார்கள். வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது போலீஸ் அதிகாரிகளும் அரசு தரப்பு வழக்கறிஞரும் கூட்டுச் சேர்ந்து கொண்டு, வழக்கை மிகவும் அலட்சியமாகக் கையாண்டு வழக்கை ஒன்றும் இல்லாமல் செய்துவிடுவர். இதன் காரணமாகவே பெரும்பாலான வழக்குகளில் கீழமை நீதிமன்றங்களில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இது குறித்து ஆய்வு செய்துள்ள நீதிக்கான சபை என்ற அமைப்பைச் சேர்ந்த வல்ஜிபாய் படேல், குஜராத் மாநிலத்தில் 1995 முதல் பதியப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட 450 வழக்குகளை எடுத்துக் கொண்டு, அவற்றில் 95% வழக்குகளில் போலீசும், அரசு தரப்பும் போதுமான ஆதாரங்களைக் கொடுக்காமல் வழக்கை ஏனோ தானோவென்று நடத்தியதுதான் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்படுவதற்கான முக்கிய காரணம் என்று கூறுகிறார்.

மீதமுள்ள 5% வழக்குகளில் நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு மதிக்காததன் காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளன.

சில வழக்குகளில் பாதிக்கப்பட்டவரின் சாதிச் சான்றிதழ் இணைக்கப்படவில்லை என்ற மொன்னையான காரணத்தைக் கூறி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆய்வு குஜராத் மாநிலத்தை மட்டும் மையமாகக் கொண்டு நடத்தப்பட்டிருந்தாலும், நாடு முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.

சாதி மறுப்பு திருமணம் செய்த காரணத்திற்காக வன்னிய சாதி வெறியர்களால் கொல்லப்பட்ட கண்ணகி முருகேசன் இணையர் வழக்கில் குற்றவாளிகள் இதுநாள் வரை தண்டிக்கப்படவில்லை. சாட்சிகளை மிரட்டி பிறழ்சாட்சிகளாக மாற்றி, அவ்வழக்கைப் பொய்வழக்காக மாற்றும் அபாயம் உருவாகியிருக்கிறது. தர்மபுரி இளவரசன் திவ்யா வழக்கின் அடிப்படையே வன்கொடுமைதான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தமிழகத்தில் கடந்த ஆறு ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் 94% வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

2011 முதல் 2016 வரையில் பதிவு செய்யப்பட்டுள்ள 1,934 வழக்குகளில் 108 வழக்குகளில் மட்டுமே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்திய அளவில் இது மேலும் குறைவாக வெறும் 1.6 சதவிதமாக இருக்கிறது. இதில் பெரும்பான்மை வழக்குகளில் அரசுத் தரப்பு வழக்கை முறையாக நடத்தாததுதான் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

மராட்டிய மாநிலம் கயர்லாஞ்சியில் தாழ்த்தப்பட்ட போட்மாங்கே குடும்பத்தினர் 2006 ஆண்டு ஆதிக்க சாதி வெறியர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலையை ஏற்படுத்தியது. இருப்பினும் இவ்வழக்கில்கூட வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை.

இந்த வழக்கிலும் சரி, 2002 ஆண்டு செத்த மாட்டின் தோலை உரித்ததற்காக, அரியானவில் விசுவ இந்து பரிசத் குண்டர்களால் ஐந்து தாழ்த்தப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் சரி, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்படாததற்கு நீதிபதிகள் கூறும் காரணம் அயோக்கியத்தனமானது. ‘‘பாதிக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் என்று குற்றவாளிகளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” என நீதிபதிகள் தமது தீர்ப்பில் குறிப்பிடுகின்றனர்.

இவ்விரு படுகொலைகளின் போதும் கொல்லப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் என்பது ஒட்டுமொத்த கிராமத்திற்கும் தெரிந்திருந்தது, அவர்கள் கொல்லப்பட்டதன் காரணமும் உலகத்துக்கே தெரிந்திருந்தது. இந்நிலையில் குற்றவாளிகளுக்குக் கொல்லப்பட்டவர்களின் சாதி தெரியாது என்று நீதிபதிகள் கூறுவது அப்பட்டமான பொய். உள்நோக்கம் கொண்டது.

இனி தாழ்த்தப்பட்டவர்களைக் கொலை செய்யும் போதோ, பாலியல் வல்லுறவு செய்யும்போதோ அத்தகைய குற்றங்களை இழைக்கும் ஆதிக்க சாதியினர், தாழ்த்தப்பட்ட மக்களின் சாதிப்பெயரைச் சொல்லித் திட்டியபடியே அந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டால் மட்டும்தான் அதனை வன்கொடுமையாகக் கருதமுடியும் என்று நீதிபதிகள் கருதுகின்றனர் போலும்!

வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கடுமையாக இருப்பதாகக் கூறப்படும்போதே இதுதான் நிலை. தற்பொழுது உச்ச நீதிமன்றம் செய்திருக்கும் திருத்தங்களின்படி தாழ்த்தப்பட்டவர்கள் ஒருவர் மீது அச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோர மாவட்ட போலீசு கண்காணிப்பாளரைப் பார்க்க வேண்டும்; அல்லது அரசு உயர் அதிகாரிகளின் அனுமதியைப் பெற வேண்டும். இவையெல்லாம் தாழ்த்தப்பட்டவர்களை அலைக்கழித்து, வழக்குப் பதிவதை முளையிலேயே கைவிடச் செய்துவிடும் சதித்தனம் ஆகும்.

உச்ச நீதிமன்றத்தின் ஆகப் பெரும்பான்மை நீதிபதிகள் ஆதிக்க சாதியினராகத்தான் இருக்கின்றனர். இவர்களின் கண்ணோட்டமும் ஆதிக்க சாதிப் பணக்கார வர்க்க கண்ணோட்டமாகத்தான் இருக்கிறது. தீண்டாமையை இயல்பாகப் பார்ப்பது இவர்களது கண்ணோட்டத்திலேயே ஊறியிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் மாநிலங்களில் அதிகரித்து வருகின்ற தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதலும், சட்ட வரம்புகளை மீறி உச்ச நீதிமன்றம் வன்கொடுமைச் சட்டத்தின் மீது தொடுத்திருக்கின்ற இந்தத் தாக்குதலும் வேறு வேறானவை அல்ல. இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது பார்ப்பனிய சாதி ஆதிக்கவாதிகளின் ‘‘மன் கி பாத்”!

-அழகு

-புதிய ஜனநாயகம், மே 2018