சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். இதை பிராணிகள் வதை செய்யப்படும் என்பதாக வன்மத்துடன் தினமணி குறிப்பிட்டுள்ளது. சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?
உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? மேலும் சட்டம் ஒழுங்கு சமூகப் பிரச்சினைகளில் போராட வருவோர் எவரும் தங்களுக்கென்று தனியாக சலுகைகள் கோருவது எப்படி சரியாக இருக்க முடியும்? உன் மத அனுஷ்டானங்களை எப்போதும் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அதற்குரிய கட்டுப்பாடுடன் சமூக விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?
தற்போது உ.பி இறைச்சிக்கூடங்கள் மற்றும் ஜைன சாமியாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றது ஆகிய இரு காரணங்களை எதிர்த்தும் வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே சவுண்டு விட்டு போராட்டம் நடத்துகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடந்ததாம். இதில் சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.
இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர். எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.
இறைச்சியை எதிர்த்து நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி போன்ற வன்மத்தை வெளியிட்டிருக்கின்றன.
முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள். விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார் ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார். பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?
இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவு என்று ராம கோபாலன் கூறியிருக்கும் பச்சைப் பொய்யை பாருங்கள். தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன. இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர். காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.
மேலும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் எவரும் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவரல்ல என்பதற்கு காரணம் அவர்கள் கோமாதைவை குலதெய்வமாக போற்றுகிறார்கள் என்பதல்ல. விவசாயத்திற்கும், பாலுக்கும் பயன்படும் கால்நடைகளை அவர்கள் கொல்ல விரும்பவதில்லை. ஆனால் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர். பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் வேறு வழியில்லை. இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது. மேலைநாடுகள் போல இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படும் நிலை இங்கு இல்லை. இதன்றி கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் என்பது குடும்பத்தின் பெரிய செலவுகளை ஏற்கும் ஒரு மலிவான முதலீடாக இருக்கின்றது. அவைகள் இறைச்சிக்கென்றே வளர்க்கப்படுகின்றன.
மேலும் கூலி விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், நகரத்து ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும். முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.
வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. அக்காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, ஜைன மதங்கள் விவசாயப் பொருளாதாரத்தை காக்கும் வண்ணமும் கால்நடையை பாதுகாக்கும் பொருட்டும் சைவ உணவுப் பழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. அதன் பின்னரே பார்ப்பனிய இந்து மதத்தில் சைவ உணவுப் பழக்கம் வந்ததோடு அசைவ உணவு உண்பவர்களை இழிவாக பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.
இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை. அதற்கு இந்துமதவெறி அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் பார்ப்பனப் பண்பாட்டு பாசிசமே காரணமாகும். ஹரியாணாவில் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்தே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.
ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.
கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.
மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள். தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.
இதற்கு மேல் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?
அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.
அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள், பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!
சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!
கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் சங்கீதா. பட்டதாரியான சங்கீதா தன்னை விட படிப்பில் குறைந்த, எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த தர்மராஜை சாதி கட்டுப்பாடுகளை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். பணி புரியும் இடத்தில் இயல்பாக ஏற்பட்ட இக்காதலை திருமணம் வரை கொண்டு செல்வதற்கு அவர் கடுமையாகப் போராடினார்.
சமூகத்தில் அரதப் பழசாகிப் போன சாதி நம்பிக்கையைத் தூக்கி எறிந்தவருக்கு, தனியார்மயம் தாராளமயம் உருவாக்கிய புதிய சமூகச் சீர்குலைவுகளைப் புரிந்து கொள்ளவது அவ்வளவு எளிதாகக் கைவரவில்லை. தன்னுடைய கணவரைப் போல் தன்னுடைய மகன் படிப்பில் சோடை போய் விடக் கூடாது என்பதற்காக தன்னுடைய சக்தியை மீறி செலவு செய்து, அந்தப் பகுதியிலேயே சிறந்த பள்ளி என்று கூறப்படும் பெர்க்ஸ் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்துள்ளார் .
அவரது மகன் U K G செல்லும் போது ரூ.12,000 /- கட்டணம் செலுத்துமாறு பள்ளி நிர்வாகம் கூறியதை ஏற்றுக்கொண்டு ரூ.5000 /- செலுத்தியுள்ளார். மீதிப் பணத்திற்கு பல இடங்களில் கடன் கேட்டு பார்த்துள்ளார். ஆனால் எங்கும் பணம் கிடைக்கவில்லை. விரக்தியடைந்த சங்கீதா கடைசியாக மண்ணெண்ணெய் ஊற்றித் தன் மேல் தீ வைத்துக் கொண்டார். தன் குழந்தை படிக்க இயலாமல் தற்குறியாய் அலைய வேண்டியிருக்குமோ என்று எண்ணி அதை கற்பனை செய்யக்கூட சகிக்காமல் இந்த உலகை விட்டே சென்றுவிட்டார் சங்கீதா.
மனைவியை காப்பாற்றும் முயற்சியில் அடைந்த தீக்காயங்களுடன் தர்மராஜ்
ஒரு புறம் தனியார்மயம், தாராளமயம் உருவாக்கிய நுகர்வுக் கலாச்சாரம் சாதாரண மக்களது மனதை ஊடுருவிச் சீரழிக்கிறது. முதலாளித்துவ ஊடகங்கள் பிரதிபலிக்கும் மேட்டுக்குடி வாழ்க்கையைத்தான் உண்மையான வாழ்க்கை என்று எண்ணிக் கொண்டு, தானும் அதுபோல வாழத் தலைப்படும் முயற்சி பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்தவர்களிடமும் ஊடுருவி செல்வாக்கு செலுத்துகிறது. ஒருபுறம் நுகர்வுக் கலாச்சாரம், மறுபுறம் தனியார் பள்ளி முதலாளிகளின் கொள்ளை லாபவெறி.
பிரச்சனைக்குட்பட்ட பள்ளியில் நீதிபதி கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணம் என்னவோ ரூ.3558 தான். ஆனால் பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் தொகையோ ரூ.12000. கோவிந்தராசன் கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் சுமார் 3 மடங்கு அதிகம். குழந்தைகளை கடத்திப் பணம் பறிக்க அவர்களைத் தேடிப்போய், கடத்திப் பணம் பறிக்க வேண்டும். ஆனால் இந்தக் கல்விக் கொள்ளையர்களிடம் பெற்றோர்களே தமது குழந்தைகளை ஒப்படைக்கின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் இந்தக் கல்விக் கொள்ளையர்களின் கையில்தான் உள்ளது என்று எண்ணிக் கொள்கின்றனர். இந்தக் கொள்ளையர்களின் உத்திரவுக்கு குரங்குகள் போல் ஆடுகின்றனர்.
இந்த நாட்டு மக்களின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டிய அரசோ, புதிதாக அரசுப் பள்ளிகள் எதையும் கடந்த 20 ஆண்டுகளாகத் திறக்கவில்லை. அப்படியே திறந்திருந்தாலும் அது இந்த நாட்டின் மக்கள் தொகையைக் கணக்கிலெடுத்துப் பார்க்கும் போது ஒன்றுமேயில்லை.
அரசியலமைப்புச் சட்டம் 21-4 பிரிவின்படி இலவசக் கல்வி அளிக்க வேண்டிய அரசே உலக வங்கி , உலக வர்த்தகக் கழகம் ஆகியவற்றின் உத்திரவின் பேரில் அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதித்து விட்டு, மக்களுக்குக் கல்வி கற்பிக்கும் வேலையையே கந்து வட்டி, லேவா தேவிக்காரர்களிடமும், கருப்புப் பண முதலைகளிடமும், பகற்கொள்ளையர்களிடமும் ஒப்படைத்து விட்டது.
இந்திய அரசியல் சட்டம் வரையறுத்துள்ள சில சில்லறை உரிமைகள் கூட உலகம் முழுவதும் அதற்கு முன் நடந்த மக்கள் போராட்டத்தின் விளைவே ஆகும். மக்களின் போராட்ட குணம் இன்று நீர்த்துப் போய்விட்ட படியால் மக்களின் எதிரிகள், பகற் கொள்ளையர்களின் கை மேலோங்கியுள்ளது.
மக்களின் உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள, மக்களை ஒன்று திரட்டிப் போராடும் முயற்சியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கல்விக் கட்டணத்திற்கு எதிராகத் துண்டுப் பிரசுரங்களை மக்களிடம் விநியோகித்து, சங்கீதாவை தற்கொலைக்குத் தூண்டிய பெர்க்ஸ் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுவரொட்டிகளும் ஒட்டியுள்ளனர்.
தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் நடத்தும் கல்விக் கட்டணக் கொள்ளைக்கெதிராகவும், கோவிந்தராசன் கமிட்டியின் கட்டணத்தை நடைமுறைப் படுத்தக் கோரியும் கடந்த 20.05.2011 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
ஆர்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தினர்
ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் உறுப்பினர்கள் மற்றும் பொதுவான ஜனநாயக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் அபு தாகிர் ஆர்ப்பாட்டத்தைத் துவக்கி வைக்க, மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உரையாற்றினார். மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் மணிவண்ணன் சிறப்புரையாற்றினார் .
சங்கீதாவின் கொலைக்கு காரணமான பள்ளிக் கொள்ளையர்களின் இலாப வெறியை கோவை மக்கள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உணரத் துவங்கியிருக்கின்றனர். மனித உரிமைப் பாதுகாப்பு மையத் தோழர்களிடம் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்கள் தத்தமது பகுதி தனியார் பள்ளிகளின் சுரண்டலை எதிர்த்து புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். சங்கீதாவின் மரணம் அந்த வகையில் ஒரு தீப்பொறியாக பயன்பட்டிருக்கிறது.
__________________________________________________ தகவல் – மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை
__________________________________________________
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
அமைச்சர் மரியம்பிச்சை சாலை விபத்தில் இறந்த பிறகு பலரும் மனிதாபிமான நோக்கில் இரங்கல் தெரிவித்தனர். ஆனால் அதிகாரக் கொழுப்பில் ஏற்பட்ட அந்த சாலை விபத்தும் சரி, அதன் பின் அ.தி.மு.க மற்றும் த.மு.மு.க காலிகள் திருச்சியில் செய்த கலவரங்களும் சரி மரியம்பிச்சையின் யோக்கியதையை நிரூபிக்கின்றன. அந்த கலவரங்கள் குறித்தும், ரவுடி மரியம்பிச்சை மந்திரியான கதையும் இங்கே தரப்பட்டிருக்கிறது. மேலும் கடந்த காலத்தில் இந்த ரவுடி மரியம்பிச்சை ம.க.இ.கவோடு மோதி மூக்குடைபட்டதும் இப்போது நினைவுக்கு வருகிறது. ஆக ‘அம்மா’ ஆட்சியில் நாம் நிறைய போராட்டங்களுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்பதை ரவுடி மரியம்பிச்சையின் மரணம் தெரிவிக்கிறது. படியுங்கள், பயம் கொள்ளாதீர்கள், அணி சேருங்கள்!
திருச்சி மேற்குத் தொகுதியில் தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை தோற்கடித்து அ.இ.அ.தி.மு.க-வின் சட்ட மன்ற உறுப்பினராகவும், சுற்றுச்சூழல் அமைச்சராகவும் பொறுப்பேற்ற மரியம்பிச்சை கடந்த 22.05.2011 ஞாயிறு அன்று சென்னை செல்லும்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பலியானார். உடன் வந்த நண்பர்கள், காவல் துறை ஆய்வாளர் ஆகியோரர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேற்கண்ட விபத்து நடப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் திருச்சி அமெரிக்கன் மருத்துவமனைக்கு அருகாமையில் உள்ள பெரும்பிடுகு முத்திரையர் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மரியம்பிச்சையும், அமைச்சர் என்.ஆர்.சிவபதியும் ஒன்றன் பின் ஒன்றாக தனித்தனி காரில் சென்னைக்கு புறப்பட்டனர்.
11 மணிக்கு அம்மாவைப் பார்க்க வேண்டும், எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற அவசரத்தில் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் பயணித்ததாகவும் முன்னாள் சென்ற டிரெய்லர் லாரியை முந்திச் செல்வதற்காக ஹாரன் அடித்துக்கொண்டே வேகமாக சென்ற போது எதிர்பாராதவிதமாக மோதிவிட்டது என்றும் அவரது கார் டிரைவர் ஆனந்தன் கூறியுள்ளார். பாதுகாவலரும், படுகாயத்துடன் உயிர் தப்பிய துணை ஆய்வாளருமான மகேஷ்-ம் இதை உறுதி செய்துள்ளார். நிலைமை இப்படி இருக்க விபத்தில் மீட்கப்பட்டவர்கள் திருச்சி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட வேகத்தில் அமைச்சர் மரியம்பிச்சை பலியான செய்தி ஊடகங்கள் வாயிலாக காட்டுத்தீயாக பரவியது.
காலை 8.30 மணிக்கெல்லாம் அ.இ.அ.தி.மு.க காலிகளும், இஸ்லாமிய அமைப்பான த.மு.மு.க-வும், “கே.என்.நேரு.ஆள் வைத்து லாரி ஏற்றி கொன்றுவிட்டான்” என வதந்தி பரப்பி, கடைகளையும், பொது வாகனங்களையும் தாக்கத் துவங்கினர். மக்கள் நெருக்கமுள்ள பல இடங்களில் அருவருக்கத்தக்க வார்த்தைகளை கூறி கற்களையும், கட்டானையும் வீசவே பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், பேருந்துகளும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பதற்றம் பற்றிக்கொண்டது. அரசு பேருந்துகள் மற்றும் சில தனியார் பேருந்துகளின் கண்ணாடிகளும் நொறுக்கப்பட்டன. தி.மு.க.கொடிமரங்கள், பெயர்ப் பலகைகள், கலைஞர் படிப்பகம் என பலவும் இவ்வாறே உடைத்து நொறுக்கப்பட்டன.
விபத்து நடந்த அன்றும் அடக்கம் செய்யப்பட்ட இரண்டாம் நாளும் இரு சக்கர வாகனங்களில் தலா 3 பேர் வீதம் த.மு.மு.க மற்றும் அ.தி.மு.க. காலிகள் கொடிகளுடனும், கட்டானுடனும் கத்திக் கொண்டே கடைகளை மூட வைத்தனர். இதைத்தான் மரியம்பிச்சையின் இறப்புக்கு அனுதாபம் தெரிவித்து கடைகள் அனைத்தும் இரண்டு நாட்கள் மூடப்பட்டது போல செய்தி ஊடகங்கள் சித்தரித்தன.
இறுதி அஞ்சலி செலுத்த வந்த பாசிச ஜெயலலிதாவும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு அரசியல் பழி வாங்குதலுக்கான தனது பங்கை செவ்வனே செய்து தனது கூட்டணி கட்சி காலிகளையும் ஊக்கப்படுத்தினார்.
ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதைப் பயன்படுத்தி தி.மு.க – வின் மீது பழிபோட்டு கொடி கம்பங்களை சாய்த்தும் அலுவலகங்களை நொறுக்கியும் கலவரம் செய்தது போலவே இப்போதும் மாவட்ட அளவில் நடந்து கொண்டனர்.
ஊழல் வழக்கில் ஜெயாவுக்கு தண்டனை வழங்கப்பட்டவுடன் 3 விவசாயக்கல்லூரி மாணவிகளை எரித்துக்கொன்ற அதே வெறியோடு இங்கும் ரத்தத்தின் ரத்தங்கள் களமிறங்கினர். த.மு.மு.க,தே.மு.தி.க போன்ற புதிய பங்காளிகளும் சேர்ந்து கொண்டபின் கேட்கவா வேண்டும்?
சாவு செய்தி கேட்டு அரசு மருத்துவமனை முன்பாகக் குவிந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்தனர். மினி லாரியில் லுங்கி கட்டிக்கொண்டு சலம்பிக்கொண்டு வந்த கும்பல் எல்லாக் கடைகளையும் பூட்டவைத்தனர். கடைக்குப் பொருள் வாங்கவந்த பெண்கள், முதியவர்களையும் அடித்து விரட்டினர். கறிக்கடைக்கு வந்த கும்பல், அங்கு தொங்கிய உரித்த ஆட்டை வெட்டிவீசியது.
கிராமங்களிலிருந்து காய் கறிகளை தலைச்சுமையாக கொண்டு வந்த பெண்கள் அவற்றை மார்க்கெட்டில் விற்கமுடியாமல் தெருவுக்கு கொண்டு சென்று பஸ்ஸுக்கு காசு கிடைத்தால் கூடப்போதும்; மீண்டும் இதைத் தூக்கி சுமக்க முழயாது என்று பதறியதும் 10 ரூபாய்க்கு 10 வாழைக்காய் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கதறியதும் பார்ப்போரை கண்ணீர் விட வைத்தது.
மேலப்புதூர் பகுதியில் தி.மு.க கொடி கம்பங்கள் சாய்க்கப்பட்டதுடன் போக்குவரத்தை நிறுத்துவதற்காக இந்த கும்பல் போட்ட வெறியாட்டத்தில் ஒரு புங்க மரமே வெறும் கையால் சாய்க்கப்பட்டது. அது விழுந்ததில் கார் ஒன்று அடியில் சிக்கி நொறுங்கியது. (படம் இணைக்கப்பட்டுள்ளது.)
மல்லிகைபுரம் பகுதியில் தி.மு.க அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டது. கடை மூடப்பட்டதைவிட வண்டியில் வலம்வந்து வெறியாட்டம் போட்ட விடலைகளின் வசவுகள், பல கடைக் காரர்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது. இருப்பினும் புலம்புவதைத்தவிர அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. இவர்களின் வெறியாட்டத்திற்கு அத்தியாவசிய பொருளான மருந்துக் கடைகள் கூட தப்பவில்லை. பேருந்துகளின் கண்ணாடிகள் பல நொறுக்கப்பட்டன. காவல் துறையே பல பகுதிகளின் போக்குவரத்தை நிறுத்தி மக்களை அல்லாடவைத்தது. எப்போதாவது ஒரு அரசுப்பேருந்து மட்டும் பந்த் நடக்கவில்லை எனறு காட்டுவதற்காக ஆட்சியாளர்களால் இயக்கப்பட்டன.
இவ்வளவு வெறியாட்டங்களும் காவல்துறையின் கண்ணெதிரில்தான் நடந்தது. கை கட்டி வாய்பொத்தி வேடிக்கை பார்ப்பதற்கு மேல் அவர்கள் வேறெதுவும் செய்யவில்லை. காலித்தனத்தை எதிர்த்துக்கேட்டு அடிவாங்கிய தி.மு.க காரர் மீதே பொய் வழக்குப்போட்ட கொடுமையும் நடந்தது. போலீசே கடையை ழூடிட்டுப் போ என்று விரட்டி காலித்தனத்துக்கு துணை நின்றனர். அதே போலீசார் சில இடங்களில் ரொம்ப ஆடுறாங்க என்று புலம்பியதும் நடந்தது. குடும்பம் இல்லாமல் நகரத்தில் தங்கி வேலை செய்யும் ஏராளமான இளைஞர்கள் உணவு, டீ கூட கிடைக்காமல் திண்டாடினர். இது முதல் நாளோடு முடியவில்லை. இரண்டாம் நாள் கடை திறக்கலாமென வந்த பலரும்கூட விடலைகளின் வெறியாட்டத்துடன் ஏச்சு பேச்சுகளை வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்தது.
மரியம்பிச்சை ஒரு முசுலிம் என்பதால் கூடுதல் உரிமை எடுத்துக் கொண்ட த.மு.மு.க- வினர், அமைச்சரின் உடலை தங்கள் அமைப்பு பெயர் பொறித்த பெட்டியில்தான் வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து மாற்றியது முதல் இருசக்கர வாகனங்களில் சுற்றி வந்து கடை மூடச்சொல்லி கட்டாயப்படுத்தியது, சவஅடக்கம் நடக்கவிருந்த பள்ளிவாசல் பகுதியில் சாலையையே அடைத்து மேடை போட்டு போக்குவரத்தை ஸதம்பிக்கச் செய்தது வரை அனைத்திலும் செய்த அலப்பரை மக்களால் தாங்கமுடியவில்லை. அம்மா வந்தவுடனே ஆட்டமும் தொடங்கிவிட்டது என்றே புலம்பத்தொடங்கினர்.
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, ஊழல், குடும்ப ஆட்சி என்ற பல வெறுப்புகள் காரணமாக அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்ட மக்கள் தற்போதே ஏண்டா போட்டோம் என்று உணரும் நிலையை உருவாக்கிவிட்டனர். என்னதான் பத்திரிக்கைகளும் அறிவாளிகளும் இடது,வலது போலிகளும் “அம்மா மாறிட்டாங்கன்னு” டயலாக் பேசினாலும் தான் பழைய காட்டேறிதான் என்பதை மறைத்துக் கொள்ள அம்மா எப்போதுமே முயன்றதில்லை. இரத்தத்தின் இரத்தங்களும் இத்தனை ஆண்டுகளாக அடக்கிவைத்த தங்களின் ஆட்டத்தையெல்லாம் பத்தே நாளில் காட்டி விட்டார்கள். இது மீண்டும் தி.மு.க-வுக்கு ஆதரவான அனுதாபமாக மாறலாம். அது எந்த வகையிலும் மக்களுக்குப் பயன்படப்போவதில்லை. மக்கள் இதே ஓட்டுச்சீட்டு பாதையில் மாற்றைத்தேடி எந்த பயனும் இல்லை. மக்கள்கையில் அதிகாரம் கிடைக்கக் கூடிய புதிய மாற்றத்திற்காக சிந்திக்கவேண்டும் என்பதையே நிகழ்வுகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்
யார் இந்த மரியம்பிச்சை? ஒரு ரவுடி மந்திரியான கதை!
மக்களின் நலனுக்காக பாடுபட்டவர் போல் காட்டப்படும் இந்த மரியம்பிச்சை இராமநாதபுரம் கமுதி பனையூர் கிராமத்திலிருந்து பிழைப்புத்தேடி சிறுவயதிலேயே திருச்சியில் குடியேறி தட்டு வண்டியில் காய்கறி விற்று மிக எளிமையாக வாழத்துவங்கியவர். ஆனால் நாளடைவில் கள்ளச்சாராயம் விற்பதில் துவங்கி காவல்துறையுடன் ஏற்பட்ட மாமுல் நெருக்கத்தில் அர்ச்சுனன் என்ற எஸ்.ஐ. க்கு பினாமியாக, ரவுடியாக இருந்து செல்வாக்கடைந்தார். நாளடைவில் அவருடைய மனைவியோடு மரியம்பிச்சைக்கு ஏற்பட்ட கள்ள உறவால் மனம் நொந்து அந்த காவல் துறை அதிகாரி தற்கொலை செய்து கொண்டதால் அந்த சொத்துக்களுக்கு சொந்தக்காரர் ஆனார். சக சாராய ரவுடி பிச்சமுத்தோடு ஏற்பட்ட சண்டையில், தன்னைக் கொல்ல முயன்று பதிலாக தன் தம்பியை கொடூரமாக கொன்றதற்கு பழிவாங்க பிச்சைமுத்து கும்பலோடு ஏற்பட்ட பல மோதல்கள், ஆள்கடத்தல் சம்பவங்கள். இறுதியாக காவல் துறையோடு தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி ரவுடி பிச்சைமுத்துவையும் முட்டை ரவியையும் என்கவுண்டரில் கொன்றொழித்து தன்னை பாதுகாத்துக் கொண்டவர். இதுதான் மரியம்பிச்சையின் வரலாறு.
இப்படி கள்ளச்சாராயம், கட்டபஞ்சாயத்து என திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக வளர்ந்து மரியம் திரையரங்கம், மரியம் திருமண மண்டபம், மரியம் நகர், ஜோதி ஆனந்த் திரையரங்கம், திருச்சி கலையரங்கம் திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்தது என கோடிகளில் புரண்ட மரியம்பிச்சை அரசியல் பாதுகாப்புக்காக அ.தி.மு.க-வில் தஞ்சம் அடைந்து ஜெயா,சசியின் பினாமியாக செயல்பட்டு ஜெயாவின் தீவிர பக்தராகவும் விசுவாசியாகவும் மாறினார்.
இந்த காலகட்டத்தில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளை ஒழித்துகட்டுவோம், நக்சல் பாரிப் பாதையை முன்னெடுப்போம் என தமிழகம் முழுவதுமம் ம.க.இ.க. இயக்கம் எடுத்த நேரத்தில் இந்த மரியம்பிச்சையும் திடீர் பணக்கார அரசியல் ரவுடியாக அறிவிக்கப்பட்டார். அதற்கான பொதுக்கூட்டத்தில் தகராறு செய்ய வந்து மூக்குடைபட்டு அடங்கினார்.
சொந்த வாழ்க்கையில் நேர்மையில்லாமலும், அடுத்தவர் மனைவியோடு கள்ள உறவ, அத்துடன் கஸ்தூரி, லில்லி, பாத்திமாகனி என பலரை மனைவிகளாக்கி கொண்டது அனைத்தும் சங்கிலியாண்டபுரம் மக்கள் அறிந்த கதைதான்.
மேலும் தான் வார்டு உறுப்பினராக, கவுன்சிலராக, கோட்டத்தலைவராக இருந்த காலத்தில் குடிநீர் இணைப்புக்காக 8 ஆயிரம், 10 ஆயிரம் என பொதுமக்களிடம் பணம் பிடுங்கியதாலும் சாலைகள், கழிப்பிடங்கள் கட்டுவதில் நடந்த முறைகேடுகள் காரணமாகவும் பொதுமக்கள் காறி உமிழ்ந்தனர். செந்தணீர்புரத்தில் அரசு புறம்போக்கை வளைத்து அந்த இடத்தில் சிமெண்ட் தயாரிக்கப் பயன்படும் நச்சுக்கழிவுகளை கொட்டியதால் சுற்றுப்புறச்சுழலும், நிலத்தடிநீரும் நஞ்சானது இதை எதிர்த்து ம.க.இ.க, பு.மா.இ.மு தோழர்கள் போராடிய போது பொன்மலை ஆய்வாளர் காதர் பாட்ஷா மற்றும் காக்கிகள் பொன்மலை காவல் நிலையத்தின் கதவுகளை சாத்திக்கொண்டு 16 தோழர்களை மிருகத்தனமாக தாக்கியது. எனினும் அந்தப் போராட்டத்தில் மக்கள் வெற்றி பெற்றனர். இதிலும் மக்கள் விரோதியாக அம்பலமானவர்தான் இந்த மரியம்பிச்சை.
இப்படிப்பட்ட ஒரு சமூக விரோத நபராக இருந்த மரியம்பிச்சை கடந்த இரண்டு தேர்தல்களில் நின்று தோற்றுப் போனாலும் விலைவாசி உயர்வு, மின்வெட்டு கருணாநிதி கும்பலின் கொள்ளைக்கு எதிராக மக்கள் அளித்த வாக்கு தஞ்சத்தில் மந்திரியாக மாறிய கதை இதுதான்.
அ.தி.மு.க. கும்பல் மரியம்பிச்சையின் மரணத்தை வைத்து திருச்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி கொள்வதற்கும், பழிவாங்குவதற்கும் எப்படி பயன்படுத்திக் கொண்டதோ அதே நோக்கத்தில் த.மு.மு.க- வும் இதை தங்களின் மீட்சி மற்றும் பழிவாங்குதலுக்கான ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டது.
திருச்சி நகரத்தின் முக்கிய வீதிகளிலே இரு தினங்களும் கடை அடைப்பை கட்டாயமாக்கி காலித்தனங்களில் ஈடுபட வைத்ததும், காவல் துறையினர் முன்பே கற்களை வீசி கடைகளை அடைக்கவைத்ததும் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் அனுமதிக்காத பாலக்கரை பிராதன மெயின் ரோட்டை மறித்து இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்ததும், காவல் துறையினரே விலகிக்கொள்ளுங்கள் என தன் நிகழ்ச்சியாக மாற்றி நடத்தியதும், இஸ்லாமிய மக்களே முகம் சுழிக்கும் அளவுக்கு மரியம்பிச்சை புகழ்பாடியதும் அரங்கேறின.
மரியம்பிச்சை சடலம் இருந்த குளிர்சாதனப்பெட்டிக்கு அருகே இவர்கள்தான் முக்கியமான பாதுகாவலர்கள் போல காட்டிக் கொண்டதும், ஜெயா வந்த போது கூட போஸ் கொடுத்ததும் இங்கே பதிவு செய்யத் தக்கது.
மொத்ததில் மக்கள் விரோத ரவுடி மரியம்பிச்சையின் மரணத்தில் தி.மு.க.வினரை இணைத்து பழிவாங்க துடிக்கும் ஜெயலலிதாவின எண்ணம் ஒருபுறம் , தி.மு.க.வோடு போட்டியிட்டு த.மு.மு.க-வும் கடந்த காலங்களில் தோல்வியுற்ற கணக்கை இம்மரணத்தில் சரி செய்து கொண்டது மறுபுறம் என இரு வேறு அரசியல் நோக்கில் இந்த மரணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
விபத்தால் ஏற்பட்ட மரணமோ அரசியல் ரவுடிகளுக்குள்ளே மோதிக்கொண்டதால் ஏற்பட்ட மரணமோ எப்படியிருப்பினும் மக்கள் விரோதிக்காக மக்கள் யாரும் கண்ணீர் சிந்தவோ, கவலை கொள்ளவோ போவதில்லை. அவர்கள் போட்ட வெறியாட்டத்தை எதிர் கொள்ள தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே தற்போதைய உடனடித் தேவை.
உறையூர் கடைவீதியில் கடை வைத்துள்ள ம.க.இ.க தோழர் சீனிவாசன் இந்த நாட்களில் கடையை மூடாததும் மக்கள் செல்வாக்குடன் அவர் அப்பகுதியில் கடையை திறந்து நடத்தியதும் பின்பற்ற வேண்ழய முன்னுதாரணமாகும். கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் அப்பகுதியில் கும்பலாக சென்ற போதும் கூட இவரை மூடச் சொல்ல யாரும் துணியவில்லை. இதையே நகரம் முழுக்க உள்ள வணிகர்கள் சங்கமாய் இருந்து அறிவிப்பு கொடுத்து திரண்டு நின்றிருந்தால் இந்த காலித்தனங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்திருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த முன்னுதாரணமாகும்.
குறிப்பு :
1. மரியம்பிச்சை இறப்புக்கு பின்னர் 25-05-2011 அன்று தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசும் போது முன்னாள் அமைச்சர் நேரு, “தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் மரியம்பிச்சை எனக்கு நல்ல நண்பர், கொலை செய்யும் அளவுக்கு என்னை மோசமாக சித்தரித்து விட்டனரே” என்று புலம்பியுள்ளார்..உடல் அடக்கம் செய்யப்பட்டபின் திருச்சி சிவா மற்றும் பலர் மரியம்பிச்சையின் இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்து வந்துள்ளனா. அ.தி.மு.க. வில் ஒருவர் கூட இதற்கெல்லாம் எதிர்ப்பு காட்டவில்லை. தி.மு.க. செயல்வீரர் கூட்டத்தில் உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளனர். இதிலிருந்து இரண்டு கட்சிகளும் கூட்டுக் கொள்ளையர்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
2. பெரும்பிடுகு முத்துரையர் சதய விழாவில் பங்கேற்ற மரியம்பிச்சை விபத்தில் மரணம் அடைந்த பிறகும் சதய விழா நிகழ்ச்சிகள் எந்த குறையும் இல்லாமல் அன்று முழுவதும் நடந்தது. இவ்வளவு கலவரம் செய்து துக்கம் கொண்டாட வைத்தவர்கள் யாரும் அவர்களை கண்டிக்கவில்லை. அவர்களும் குறைந்தபட்ச நாகரீகம் கருதிக்கூட மாலை அணிவிப்பு, போட்டா எடுப்பது முதல் ஊர்வலமாக டெம்போ வண்டியில் ஏறி கூச்சலிட்டு ரகளை செய்தது வரை எதையும் குறைத்துக்கொள்ள தயாரில்லை..
சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 1
இந்து மதம்தான் தேசபக்தியென்றும், மற்ற மதங்களெல்லாம் தேச விரோதமென்றும், சிறுபான்மை மத மக்களெல்லாம் வெளிநாடுகளின் பால் பற்று கொண்டவர்கள் என்றெல்லாம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அப்பட்டமாக பிரச்சாரம் செய்கிறது. மக்களது வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் எளிய நிகழ்வுகளைக்கூட இவர்கள் தங்களது பாசிச பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள். பொதுப்புத்தியில் இவர்கள் விதைக்கும் விஷம் ஆழமானது. அவற்றை வேரறுத்து புதிய கலாச்சரம் வெளியிட்டிருக்கும் இந்த நூல் தமிழகத்தில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. அந்த கட்டுரைகளை இங்கே வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மதம்மாறினால்தேசியஉணர்வுமாறுமா?
”மதமாற்றம்என்பதுவெறும்கடவுளைமட்டும்மாற்றிக்கொள்ளும்விசயமல்ல. அதுஒருதேசியமாற்றம். இந்துமதத்திலிருக்கும்போது‘வணக்கம்‘ சொன்னவர், முசுலீமாகமாறும்போது‘அஸ்ஸலாமுஅலைக்கும்‘ என்கிறார்.
வணக்கம் என்ற வார்த்தை பார்ப்பன இந்துப் பண்பாடல்ல என்பது முதல் விசயம். ‘நமஸ்காரத்தை’ ஒழித்து தமிழகத்தில் ‘வணக்கத்தை’க் கொண்டு வந்தது திராவிட இயக்கத்தின் முயற்சியாகும். அது மட்டுமல்ல, க்ஷேமம் நலமாகவும், அபேட்சகர் வேட்பாளராகவும், பொதுக்கழிப்பிட ஸ்திரீ – புருஷன், ஆண் – பெண்ணாகவும், இன்னும் ஏராளமான சொற்கள் மாற்றப்பட்டு மக்களுக்கு உதவி புரிந்தன. ஆனால், இன்றும் ஆர்.எஸ்.எஸ்.- இல் இருக்கும் இளித்தவாய்த் தமிழர்கள் கூட ‘நமஸ்தே ஜீ’ எனக் கூற வேண்டும் என்பதுதான் அவர்கள் மரபு.
அடுத்து, ‘குட் மார்னிங்’ சொல்பவர்களெல்லாம் கிறித்தவரா? வெள்ளையர்கள் கொண்டு வந்த மரியாதை குறித்த சொற்களும் பழக்கங்களும்தான் இந்தியாவில் பரப்பப்பட்டன; அநேக நாடுகளிலும் வழக்கத்திலிருக்கிறது. அரசு அதிகார வர்க்கத்தில் தொடங்கிய இந்த ஆங்கில மரியாதையை அனைவருக்கும் பரப்பி விட்டதே ‘அவாள்’தான். இன்று ‘குட்மார்னிங்’ பழைய சம்பிரதாயமாகி, ”ஹாய், ஹல்லோ” தான் நகரங்களில் கொடிகட்டிப் பறக்கின்றது. இதைப் பரப்பிவிட்டவர்கள் பாதிரியார்களா என்ன?
தோத்திரம் என்ற சொல் ஸ்தோத்திரம் என்ற சமஸ்கிருதச் சொல்தான். பார்ப்பனர்கள் கிறித்துவ மதத்திற்கு மாறியோது சடங்குகளையும் சமஸ்கிருதத்தையும் கொண்டு சென்றதன் விளைவே இது. அதிலும் ‘ஸ்’-ஐ உருவிவிட்டு வெறும் தோத்திரமாக்கியது தாழ்த்தப்பட்ட கிறித்தவ மக்களே.
கிறித்தவர்களின் கை குலுக்கவும், இசுலாமியர்களின் ஆரத் தழுவும் முறையும், பார்ப்பனியத்தைவிட நாகரீகமான பழக்கங்களாகும். நமஸ்காரம் என்பது கை கூப்பி, தலை தாழ்த்தி முழு உடலையும் கிடத்தி வணங்கும் முறையாகும். அதுவும் கடவுள், பார்ப்பனர்கள், மன்னர்கள், மடாதிபதிகள், மேல்சாதியினர், தற்போது தலைவர்கள் – அதிகாரவர்க்கம் – மந்திரிகள் போன்றோருக்குச் செலுத்தப்படும் அடிமைத்தனமாகும்.
மக்களுக்குள் மனிதர்களுக்குள் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்தி விசாரித்தல் என்பது இந்து மரபிலேயே இல்லை. பார்ப்பனியத்தின் கறைபட்ட தமிழின் ‘வணக்கமும்’ இதற்கு விதி விலக்கல்ல. முக்கியமாக நமஸ்காரம் யாரையும் தொட வேண்டிய அவசியமில்லாமல், தீண்டாமையை க்ஷேமமாகப் பாதுகாக்கிறது.
ஆக கிறித்தவ, இசுலாமிய மேலை நாட்டுப் பண்பாட்டின்படி சகமனிதனைக் கைகுலுக்கி, ஆரத்தழுவும் முறையையே நாம் மேற்கொள்ள வேண்டும். இதற்கேற்ற புதிய தமிழ்ச் சொல்லும் கண்டுபிடிக்க வேண்டும். இம்முறையில் தீண்டாமை ஒழிப்பும் உள்ளது. எனவே அவமரியாதையின் பிறப்பிடமான பார்ப்பனப் பண்பாட்டின் சொந்தக்காரர்களுக்கு மரியாதை குறித்துப் பேசும் அருகதையில்லை.
ஆ) வேட்டிபோய்பேண்ட், லுங்கி
இந்துப் பண்பாட்டின்படி வெளி ஆடைகள் மட்டுமல்ல, உள் ஆடைகளும் மாறியிருக்கிறதா என்று ஏன் ஆராயவில்லை? கோவணம், லங்கோடு அணியாதவர்கள் எப்படி ‘இந்து’க்களாக இருக்க முடியும்? ஏதோ குர்ஆனிலும், பைபிளிலிலும் சொல்லப்பட்டிருப்பதுபோல லுங்கி இசுலாத்திற்கும், பேண்ட் கிறித்தவத்திற்கும் சொந்தமானது என்பது முழு முட்டாள்தனமாகும். அரேபியாவில் எந்த முசுலீம் லுங்கி உடுத்துகின்றான்? உடைகள் என்பது வர்க்கம், தொழில், தட்பவெப்ப நிலை சம்பந்தப்பட்டதுதான். பேண்ட் உலகத்திற்கும், லுங்கி ஆசியாவுக்கும் பொதுவான உடைகள்தான்.
உழைக்கும் மக்களுக்கு லுங்கி உடுத்தினால் வேலை செய்ய வசதியாக இருக்கிறது. லுங்கி உடுத்துபவர்கள் எல்லாம் முசுலீம்கள் என்றால் இந்துக்கள் எண்ணிக்கை சிறுபான்மையாகிவிடும். சேலையைவிட முகலாயர்கள் அறிமுகப்படுத்திய சுரிதார், சல்வார் கமீஸ் வசதியாக இருக்கிறது என்பதால்தான் பெண்கள் விரும்பி அணிகிறார்கள். வேண்டுமானால் அதை ஆர்.எஸ்.எஸ் தடுக்கட்டுமே? அவ்வளவு ஏன்? ஷாகாவில் பயிற்சி பெரும் ஸ்வயம் சேவக குண்டர்கள் அணியும் அரைக்கால் சட்டை, பெல்ட் ஷூ எல்லாம் இந்துப் பண்பாடா? இன்னும் இராணுவம், போலீசு, கமாண்டோ எல்லாருக்கும் வேட்டி, மரச்செருப்பை மட்டும் போட வைத்து பாரதப் பண்பாட்டைக் காப்பாற்றுங்கள். டெண்டுல்கருக்கு பஞ்சக்கச்சம் உடுத்துங்கள். பி.டி.உஷாவிற்கு மடிசார் கட்டி ஓடச் சொல்லுங்கள்.
இவற்றைவிட சட்டை, பேண்ட் துணி தயாரிக்கும் விமல், அர்விந்த், ஜே.சி.டி, குவாலியர், ரேமண்ட்ஸ், மதுரா கோட்ஸ், லட்சுமி மில் போன்ற இந்து பனியா முதலாளிகளிடம் அதை நிறுத்திவிட்டு, வேட்டி, கோவணம் லங்கோடு மட்டும் தயாரிக்க ஆணையிடுங்களேன்.
வீடு வாசல் தெளித்து கோலமிட வேண்டுமென்றால் முதலில் வீடும் வாசலும் வேண்டும். அப்படியே இருந்தாலும் ‘அழகு படுத்துவது’ என்பது வர்க்கம், வசதிக்கேற்பவே மாறுகிறது. மீனவப் பெண் வீட்டின் முன் கருவாடும், விவசாயப் பெண்ணின் வீட்டில் தானியமும், குயவர் பெண் வீட்டில் களிமண் சேறும், கால்நடை வளர்க்கும் பெண்வீட்டில் புழுக்கைகளும் நிறைந்திருக்கும்.
ஆனால், பார்ப்பன – மேல்சாதி – மேல்தட்டுப் பிரிவினரின் வீடுகள் முன் பெரிய வாசல், துளசி மாடம், சிறு கோவில், தோட்டம் எல்லாம் இருக்கும். ஏதோ உலகிலேயே இந்து வீடுதான் சுத்தமாக இருப்பது போலவும் ஏனைய வீடுகள் பன்றித் தொழுவமாக இருப்பதாகவும் இவர்கள் கூறுவது பிதற்றல். குத்து விளக்கு வகையறாவெல்லாம் என்றைக்குமே ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்கள் பயன்படுத்தியது கிடையாது; முடியாது. முதலில் அகல் விளக்கு, காடா விளக்கு, சிம்னி, அரிக்கன் என்றுதான் மாறியது. தற்போதுதான் குத்துவிளக்கு அறிமுகமாகியது என்றாலும் அது இல்லாத வீடு இந்து வீடில்லை என்றால் இந்துக்கள் சிறுபான்மையினராகி விடுவார்கள்.
அதேபோல பட்டுச் சேலை உடுத்தி, தலை நிறைய பூச்சூடி, உடல் முழுவதும் ஆபரணங்கள் அணிவது மேல்சாதி மேட்டுக்குடியினர் மட்டும்தான். உழைக்கும் பெண்களைப் பொறுத்தவரை இப்பேர்ப்பட்ட அலங்காரங்களெல்லாம் வெகு அரிது. மேலும் இந்த அழகுக் கலைகளெல்லாம் பெண்களைப் போகப் பொருளாக்கி நுகர்வதற்காக ஆணாதிக்கமும், மதமும், முதலாளித்துவமும் உருவாக்கிய அடிமைத்தனம்தான். எனவே அனைத்து மதங்களும் பெண்ணைப் போக பொருளாக வைப்பதற்கு விதித்திருக்கும் பூ, பொட்டு, பர்தா போன்றவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறோம். தற்போது சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் தொடங்கி ஏகப்பட்ட இந்து அப்சரஸ்கள் உலக அழகி பட்டங்களை வென்று பாரத மாதாவின் புகழை எட்டுத் திக்கும் பரப்பி வந்தாலும், அவர்கள் அழகை வளர்த்த விதமே ‘கிறித்தவ’ப் பாணியிலான மேற்கத்திய அலங்கார முறைகளில்தான்.
இது குறித்துக் கவலைப்படும் இந்து மதவெறியர்கள், இந்துப் பண்பாட்டின்படி அழகிகளை உருவாக்கி உலகை வீழ்த்துவதற்கு, காமசூத்திரம், சௌந்தர்யலகரி, கனகதாரா ஸ்தோத்திரம், ஜெயதேவரின் அஷ்டபதி போன்ற பக்தி ரசம் சொட்டும் இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களை வைத்துக் கல்லூரிப் பெண்களிடம் விநியோகிக்கலாம்.
அவ்வாறு செய்தால், பெண்களே இவர்களை செருப்பாலடித்து ‘ஈவ் டீசிங்’ கேஸில் பிடித்துக் கொடுப்பார்கள்.
விமானத் தாங்கிக் கப்பல்களோ, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளோ, அணுகுண்டு வெடிப்போ அனைத்தையும் நாள் நட்சத்திரம் பார்த்து, யாகம் வளர்த்து, கற்பூரம் – குத்து விளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்துத்தான் இன்றும் இயக்கி வைக்கின்றார்கள். அன்னியச் செலாவணித் தட்டுப்பாடோ, பணவீக்கமோ என்றால் ரிசர்வ் வங்கியில் உடனே ஒரு பூசை செய்கிறார்கள். குடமுழுக்கிற்கு மட்டுமல்ல, தேர்தல் நாளையே சங்கராச்சாரிதான் குறிக்கிறார். பெரும் நிறுவனங்கள் வருடந்தோறும் தமது அலுவலகங்களை வாஸ்து சாஸ்திரப்படி கன்னாபின்னாவென்று இடித்து மாற்றுகின்றன. இந்தியா என்பது ‘பாம்பாட்டிகளின் தேசம், பண்டாரங்களின் நாடு’ என்று பெயர் வருவதற்குக் காரணமே இந்தப் பார்ப்பன முட்டாள்தனங்கள்தான்.
அறிவியல், பகுத்தறிவு, மதச்சார்பற்ற நோக்கில் முன்னேறிவரும் வாழ்க்கைக்கு மதச் சடங்குகள் தேவையில்லை. ஏனென்றால் இம்மூன்றும் வளருவதற்குத் தடைவிதித்ததே மதங்கள்தான். எனவே, இலட்சக்கணக்கான ரூபாய்கள் வீணடிக்கப்பட்டு ‘பாரத பண்பாட்டின்படி’ ஆரம்பிக்கப்படும் காரியங்கள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும். இவைகளுக்கு ரிப்பன் வெட்டுவது எவ்வளவோ மேல். அதிருக்கட்டும். துவக்க விழாக்களில் ‘இந்து’ குத்துவிளக்கை ‘கிறித்துவ’ மெழுதுவர்த்தியால்தான் கொளுத்துகிறார் அத்வானி. பாரதப் பண்பாட்டின்படி அவர் கையில் தீவிட்டியைக் கொடுத்து விடலாமே! பொருத்தமாகவும் இருக்கும்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்பது இந்துப் பண்பாடல்ல. ‘ஒருத்திக்கு ஒருவன்தான்’ இந்துப் பண்பாடாகும். அதாவது ஆணுக்கு எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பெண்ணுக்கு ஒருவன் மட்டுமே கணவனாக முடியும். மேலும் இந்தப் பண்பாடு உலகெங்கிலும் இருக்கும் ஆணாதிக்கப் பண்பாடுதான்.
பலதாரமணத்தை ஒழித்து ‘ஒருவனுக்கு ஒருத்திதான்’ என்பதை 1950-இல் அம்பேத்கார்தான் சட்டமாகக் கொண்டு வந்தார். அதை மட்டுமல்ல, குழந்தை மணத்தடை, விதவை மறுமணம், விவாகரத்து அனைத்தையும் இந்துமத வெறியர்கள்தான் எதிர்த்தார்கள்; முசுலீம்கள் அல்ல. எனவே சமீபகாலம் வரை ஒருவன் பல பெண்களை வைத்திருப்பதுதான் இந்துப் பண்பாக இருந்தது. 7-ஆம் நூற்றாண்டிலாவது நபி நாயகம் 4 மனைவிக்கு மேல் மணக்கக்கூடாது எனக் கட்டுப்பாடு விதித்தார். ஆனால், இந்து மதத்தில் 20-ம் நூற்றாண்டு வரை அந்தக் கட்டுப்பாடு கூட இல்லை என்பதே முக்கியம்.
விவாகரத்து என்பது மேற்கிலிருந்து வந்த சாபக்கேடு என்கிறார்கள். இல்லை, அது ஒரு ஜனநாயக உரிமையாகும். இந்து தர்மப்படி புல்லாகப் பொறுக்கியாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, விவாகரத்து ஒரு பெண்ணுக்குரிய உரிமைகளைக் கொடுக்கின்றது. எனவே, மேற்கோ, கிழக்கோ சரியான பண்பாடு எங்கிருந்து வந்தாலும் முதலில் மரியாதை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
இந்து மத இலக்கியங்களில் தெய்வங்களும் பார்ப்பனர்களும் மாறுவேடம் பூண்டு கள்ள உளவு கொள்வது, கற்பழிப்பது என்பது சாதாரண விசயம். இத்தகைய ‘உரிமைகள்’ இன்று பறிபோன நிலையில்தான் இந்து மத வெறியர்கள், குய்யோ முறையோ என்று கத்துகிறார்கள். இந்தக் கொடுமைகள் பெருமளவு இல்லாமல், விவாகரத்து, மறுமணம் போன்றவை நம்நாட்டு உழைக்கும் மக்களிடம் இயல்பாக இருந்தது. இதை எண்ணித்தான் நாம் பெருமைப்பட வேண்டும்.
இதன்படிப் பார்த்தால் இந்துக்களின் புனித இடங்களான பசுபதிநாத் நேபாளத்திலும், கைலாயமும் மானசரோவரும் சீனாவிலும் இருக்கின்றது. இவ்விடங்களுக்குச் செல்லும் இந்துக்கள் இந்தியாவின் தேசவிரோதிகள் என்றே கருத வேண்டும். உலகெங்கும் வாழ்ந்து வரும் புத்த மதத்தினர் தென் கிழக்காசிய நாடுகளில் பெரும்பான்மையினராக வாழ்கின்றனர். இவர்களுக்கு இந்தியாவின் புத்த கயா புனிதமான இடமென்பதால், அவர்கள் அந்தந்த நாடுகளின் தேச விரோதிகளா?
அதேபோல் இந்தியாவில் இருந்து பல தலைமுறைகளுக்கு முன்பே, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், மொரீஷியஸ், மாலத்தீவு, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இந்தியர்கள் குடியேறி வாழ்கிறார்கள். இன்று அந்நாடுகளின் குடிமக்களாக, ஏன் அமைச்சர்களாகக் கூட இருக்கிறார்கள். இந்தியா மறந்து போனாலும் மதம் என்ற அடிப்படையில் இங்குள்ள புனித இடங்கள்தான் அவர்களுக்கும் புனிதம். இதனால் இவர்களைத் தேசத்துரோகி என்று அந்நாடுகள் அடித்துத் துரத்தலாமா?
வாடிகனும், பெத்லஹேமும், மெக்கா, மெதினாவும் உலக கிறித்தவ, முசுலீம் மக்கள் அனைவருக்கும் புனிதமான இடங்களாகும். ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி உலகிலுள்ள மற்ற கிறித்தவ, முசுலீம் நாட்டு மக்களுக்கு தேசபக்தி இல்லை என்றாகிறது. அல்லது உலகில் ஒரு கிறித்தவ நாடும், ஒரு முசுலீம் நாடும் மட்டும்தான் இருக்க வேண்டும். ஏன் அப்படி இல்லை? அப்படி இருக்க முடியாது என்பதைத்தான், ஒரு தேசத்தையோ, தேசபக்தியையோ ஒரு மதத்தால் உருவாக்க முடியாது என்ற உண்மை நமக்கு உணர்த்துகிறது. தேசம் உருவாக அரசியல், சமூகம், பொருளாதாரம், மொழி, பண்பாடு – போன்றவைதான் காரணமாக முடியும். மத நம்பிக்கையும், புனித நகரங்களும் யாருக்கும் தேசபக்தியை உருவாக்க வக்கற்றவையே!
பார்ப்பன, மேல் சாதியினரைத் தவிர்த்து பெரும்பான்மை உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தீர்த்த யாத்திரைகளெல்லாம் கிடையாது. நாட்டுப்பற்று என்றால் என்ன? ஸ்வயம் சேவகர்கள் பாரத மாதா போட்டோவுக்குப் பூசை செய்வது அல்ல. நாட்டு மக்களைச் சுரண்டல், ஒடுக்கு முறை, பிற்போக்கு அனைத்திலும் இருந்து விடுவிக்க தளராமல் போராடுவதுதான் நாட்டுப்பற்றைக் குறிக்கும். இது காசிக்கோ, மெக்காவுக்கோ யாத்திரை செல்வதால் வருவதல்ல.
”கங்கைக் கரையிலும், காவிரிக் கரையிலும் அரிசியை உணவாக உட்கொண்டு வாழும் சில ஜந்துக்கள், வேதத்திலேயே எல்லாம் கண்டுபிடிச்சாச்சாக்கும் என்று மமதையுடன் பிதற்றுவதை” புதுமைப்பித்தன் குறிப்பிடுகிறார். வேதம் மட்டுமல்ல அனைத்துப் பிற்போக்குத் தன்மைகளையும் முதியோருக்குக் கட்டுப்படல் என்ற இன்னொரு பிற்போக்கின் மூலம்தான் பார்ப்பனியம் வாழையடி வாழையாகத் தொடருகின்றது. அதனால்தான் எல்லாப் பிரிவினரிடமும் உள்ள புதுமையும், துடிப்பும் கொண்ட இளைய பிரிவினர்கூட இத்தகைய முட்டாள் முதியவர்களால் விரைவில் முதியவராக்கப்படுகின்றனர்.
எனவே முதுமை, இயலாமை, ஓய்வு என்ற அளவிலே மட்டும்தான் முதியவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு ஒரு சமூகத்துக்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில் அவர்களது முட்டாள் தனங்கள் பிற்போக்குக் குணங்கள் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் போராடுவதையும் அதே சமூகம் செய்ய வேண்டும் என்கிறோம்.
இந்துப் பஞ்சாங்கத்தின்படியே எல்லா இந்துக்களுக்கும் ஒரே வருடப்பிறப்பு என்பது கிடையாது. தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, வடகிழக்கு போன்று பல வருடப் பிறப்புக்கள் கொண்டாடப்படுகின்றன. வழக்கம்போல இவையும் பார்ப்பன மேல்சாதி – மேல் தட்டினர் கொண்டாடுபவைதான். வாழ்நாள் முழுதும் ஏழ்மையில் உழலும் அடித்தட்டு மக்களுக்கு பழைய – புதிய என்ற வருடப் பிரிவினைக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை.
ஜனவரி ஆரம்பத்தை – கிறித்தவ மதத்தினர் மட்டுமல்ல, உலகமே கொண்டாடி வருகின்றது. கோவிலில் போய் அர்ச்சனை செய்து புத்தாண்டு கொண்டாடுவது நடுத்தர வர்க்க மக்களின் பழக்கமாக ஏற்பட்டு விட்டது. பல இசுலாமிய நாடுகளிலும் இத்தினம் விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. பிறந்த நாளுக்குக் கோவிலுக்குப் போவதோ, கேக் வெட்டுவதோ முக்கியமல்ல. அப்படி ஒரு நாள் இருப்பதே தெரியாமல்தான் சாதாரண மக்கள் வாழுகின்றனர். மேலும் ‘ஜன்ம நட்சத்திரம்’ என்ற கடவுளர்கள், மன்னர்கள், பார்ப்பனர்கள் ஆகியோரது தினங்கள்தான் இந்துக்களுக்கு முக்கியமாகும்.
மற்றபடி பொதுமக்கள் தங்கள் பிறந்தநாள், திருமண நாள் கொண்டாடுவது ஆங்கிலேயர்கள் அறிமுகப்படுத்திய பண்பாடு. இதையும் காசு உள்ள நடுத்தர வர்க்கம்தான் கொண்டாடுகிறது. கேக்கோ, பாயசமோ எல்லாம் நுகர்வுக் கலாசாரத்தின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத்தான் லாபம் தருமே ஒழிய, மக்களுக்கல்ல. சர்வதேச மூலதனச் சுரண்டலுக்கு மத லேபிளெல்லாம் கிடையாது. ‘லோகாயதம் பெருகி அராஜகங்கள் வளருவது’ என்று, சாரத்தில் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்களைத்தான் குறிப்பிடுகிறார்கள். அதாவது சாதி, தீண்டாமை எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு, இட ஒதுக்கீடு ஆதரவு, தேசிய இன ஒடுக்குமுறை எதிர்ப்பு ஆகிய போராட்டங்கள்தான் அவர்களுக்குக் கலிகாலத்தை உணர்த்துகின்றது.
மற்றபடி கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள் மதமாற்றத்தினால் நடக்கிறது என்றால் எதைச் சொல்லி அழ? பிரேமானந்தா, சந்திராசுவாமி, சாயிபாபா, ஜெயா – சசி கும்பல், அர்ஷத்மேத்தா, ஜெயின் சகோதரர்கள், சம்பல் கொள்ளையர்கள், இன்டர்நெட் விபச்சாரி பிரகாஷ் போன்றோர்களெல்லாம் ரகசியமாக மதம் மாறியவர்களா? இதற்கு இராம.கோபாலனைப் போட்டு ஒரு விசாரணைக் கமிஷன் நியமித்து, வெள்ளை அறிக்கை வெளியிடுங்களேன்!
அரசியல் என்றால் என்னவென்று நேர்மறையில் விளக்குவதை விட எதிலெல்லாம் அரசியல் ஒளிந்து கொண்டு என்னவாக இருக்கிறது என்று விளக்குவது சிரமமானது. அதுவே ஒரு சினிமா எனும் போது காட்சிக் கலையின் உணர்ச்சி வெள்ளத்தில் பார்வையாளர்கள் கட்டுண்டே இருக்க முடியும் என்பதால் கூரிய விமரிசனப் பார்வையை ஏற்படுத்தும் முயற்சி இன்னும் கடினமாக மாறிவிடுகிறது.
சினிமா ஒரு பொழுதுபோக்கு என்ற நிலை மாறி பொழுதைப் போக்குவது என்பதன் பொருளே அது சினிமாதான் என்று மாறியிருக்கும்போது ஒரு திரைப்படத்தைக் கருத்தியல் தளத்தில் நின்று பார்ப்பது, சிந்திப்பது, விவாதிப்பதினூடாகத்தான் காட்சிக் கலையின் உணர்ச்சிக் கவர்ச்சியிலிருந்து நம் சொந்த விழிப்புணர்வு வழியாக விடுதலை பெற முடியும். இல்லையென்றால் அந்த அபினின் போதையில் நம்மிடம் கருக்கொண்டிருக்கும் முற்போக்கான அரசியல் பாதை நம்மையறியாமலே குழப்பமடையக் கூடும். அப்படித்தான் சாதாரண மக்களிடம் பல்வேறு ஆளும் வர்க்க அரசியல் கருத்துக்கள் குடியேறுகின்றன. இந்தக் குடியேற்றத்துக்கு இந்தி பேசும் மாநிலங்களில் தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ரங் தே பஸந்தி இந்தித் திரைப்படம் ஓர் எடுத்துக்காட்டு.
தற்போதைய சினிமா ஃபார்முலாவின் படி விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்ட இந்தப் படத்தைப் பார்க்க இயலாத வாசகர்களுக்காக கதையைச் சுருக்கமாகத் தருகிறோம்.
லண்டனில் இருக்கும் ஓர் ஆங்கிலேயப் பெண் இந்தியாவில் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய புரட்சிகர வீரர்களான சந்திரசேகர ஆசாத், பகத்சிங், ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்பகுல்லாகான் முதலானவர்களின் வரலாற்றில் ஆர்வம் கொள்கிறாள். அவர்களைப் பற்றி அவள் எடுக்க விரும்பும் ஆவணப்படம் மிகுந்த செலவு பிடிக்கும் என்பதால் அவள் வேலை பார்க்கும், என்.ஆர்.ஐ. இந்தியர்களை இயக்குநர்களாகக் கொண்ட நிறுவனம் மறுத்து விடுகிறது. இதனால் தன் சொந்த முயற்சியில் படமெடுப்பதற்கு இந்தியா கிளம்புகிறாள்.
புதுதில்லியில் இறங்குபவளை வரவேற்கும் ஒரு இந்தியத் தோழியின் உதவியோடு தன் ஆவணப்படத்தில் நடிக்க வைப்பதற்கு பல கல்லூரி மாணவர்களைச் சந்திக்கிறாள். ஆசாத், பகத்சிங் உரையாடல்களைப் பேசத் திணறும் அந்த நவநாகரீக இளைஞர்களைக் கண்டு சலிப்புக் கொள்கிறாள். சலித்தவளை ஜாலியாக மாற்றுவதற்கு அந்த இந்தியத் தோழி தன்னுடைய நண்பர் வட்டத்தை அறிமுகம் செய்கிறாள்.
ஆமிர்கானின் அந்த நண்பர் வட்டம் வண்ணமயமானது. இந்து, முசுலீம், சீக்கியர், ஓவியர், அதிவேகமாக பைக் ஓட்டுபவர்கள், பீரைக் குடித்தவாறே பனைமர உயரத்தில் இருந்து தண்ணீரில் குதிப்பவர்கள், இப்படிப் பல அடையாளங்களோடு ஆட்டமும், பாட்டமுமாய் நாளைக் கழிப்பவர்கள். தோழியின் காதலனான மாதவன் இந்திய விமானப்படையில் பைலட்டாகப் பணியாற்றுபவர். அவரும் இந்தக் கும்மாளத்தில் அவ்வப்போது பங்கு பெறுபவர்.
இந்த நண்பர் வட்டத்தின் இளமைத் துடிப்பில் மனதைப் பறி கொடுத்த அந்த வெள்ளைக்காரப் பெண்மணி இவர்கள்தான் தன் படத்தில் நடிப்பதற்குப் பொருத்தமானவர்கள் என்று முடிவு செய்கிறாள். இந்த நண்பர் வட்டத்திற்கு பாரதப் பண்பாடு குறித்து உபதேசம் செய்து சண்டையிடும் அதுல் குல்கர்னி ஒரு தீவிரமான பாரதீய ஜனதா தொண்டர். அவரையும் தன் படத்தில் நடிக்க வைப்பதற்குத் தேர்வு செய்கிறாள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நண்பர் வட்டத்தினர் பின்னர் ஏற்றுக் கொள்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த ஆவணப்படத்தை தமாசாகக் கருதும் நண்பர்கள் அந்த வெள்ளையினப் பெண்ணின் தீவிரமான அக்கறையை உணர்ந்து வசனங்களையெல்லாம் மனப்பாடம் செய்து நடிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். நவ ஜவான் பாரத் சபாவின் உறுப்பினர்கள் நெருப்பின் மேல் உறுதிமொழியெடுப்பது, காகோரி ரயில் கொள்ளை, லாலாலஜபதிராய் மீதான தடியடி, அதற்குப் பதிலடியாக ஆங்கிலப் போலீசு அதிகாரியான ஸாண்டர்சைக் கொலை செய்வது, பாராளுமன்றத்தில் பகத்சிங் குண்டு வீசுவது எல்லாம் படமாக்கப்படுகின்றன.
இறுதியில் போராளிகள் தூக்கிலிடப்படும் காட்சிகளைத் திரையில் பார்க்கும் நண்பர்கள் சில கணங்கள் உறைந்து போகிறார்கள். ஒரு மேட்டுக்குடி மது பாரில் அமர்ந்த படி, சீரழிந்து வரும் இன்றைய இந்தியாவைக் காப்பாற்றுவது குறித்து விவாதிக்கிறார்கள். பைலட் மாதவன், படித்தவர்கள் இராணுவத்துக்கும், ஐ.ஏ.எஸ்ஸுக்கும், அரசியலுக்கும் வரவேண்டும் என்கிறார். படவேலைகளுக்கு இடையே ஆட்டமும், பாட்டமுமான அவர்களது கொண்டாட்ட வாழ்க்கையும் தொடருகின்றது.
ஆனால் மிக்21 விமானத்தில் பறந்த மாதவன் விபத்தில் இறந்து போக நண்பர்களின் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருகிறது. விமானப் படையில் பல ஆண்டுகளாகப் பணியிலிருக்கும் ரசியாவின் மிக்21 விமானங்கள் அடிக்கடி விபத்திற்குள்ளாவது குறித்துப் புலனாய்வு செய்த என்.டி.டி.வி தொலைக்காட்சி, தரங்குறைந்த மிக் ரக விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பதாக அறிவிக்கிறது. ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க. அமைச்சரவையில் ஊழல் செய்த அந்த மந்திரி விமானம் வாங்கியதில் ஊழல் ஒன்றுமில்லையெனவும், விமானம் விபத்திற்குள்ளானதற்கு பைலட்டின் தவறே காரணம் என்றும் அலட்சியமாகக் கூறுகிறார்.
அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மாணவர்களைத் திரட்டி இந்தியா கேட் எதிரே (குடியரசுத் தின ஊர்வலம் நடக்கும் இடம்) மெழுகுவர்த்தி ஏந்தி அமைதியாக ஊர்வலம் நடத்தி தங்களது எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். எரிச்சலடையும் மந்திரி போலீசை விட்டுக் கொடூரமாகத் தடியடித் தாக்குதலை நடத்துகிறார். பலருக்கு மண்டை உடைகிறது. மாதவனின் வயதான அம்மா கோமா நிலைக்குப் போகிறார். இந்தக் காட்சி லஜபதிராயின் தடியடிக்காட்சிகளுடன் மாற்றி மாற்றிக் காண்பிக்கப்படுகிறது.
ஆத்திரமடைந்த நண்பர்கள் முதன்முதலாக அரட்டைக்குப் பதிலாகக் கோபத்துடன் கூடி விவாதிக்கிறார்கள். தாங்கள் ஏற்று நடித்த புரட்சியாளர்களின் வசனங்களை இப்போது நிஜத்தில் பேசுகிறார்கள். இங்கும் ஆசாத்தும், பகத்சிங்கும், பிஸ்மில்லும் மாறி மாறி வந்து பேசுகிறார்கள். எது நிழல் எது நிஜம் என்ற பேதம் தெரியாதபடி விவாதம் நடைபெறுகிறது. இறுதியில் மந்திரியைக் கொல்வது என்று முடிவெடுக்கிறார்கள்.
ஆவணப்படத்தில் இடம் பெறும் சான்டர்ஸ் கொலைக்காட்சியைப் போலவே அதே சூழலில், அதே உத்தியோடு மந்திரி கொலை செய்யப்படுகிறார். தொலைக்காட்சியில் பரபரப்புச் செய்தியாக இடம் பெறும் இந்தச் சம்பவத்திற்குக் காரணம் யார் என்று தெரியாத சூழ்நிலையில் ஐ.எஸ்.ஐ. சதியாக இருக்குமோ என்று அரசியல் உலகில் பேசப்படுகிறது. தங்களது கொலைக்கான நியாயம் இதன் மூலம் மறைக்கப்படுவது கண்டு குமுறும் நண்பர்கள் அதை உலகிற்குச் சொல்லுவதென முடிவெடுக்கிறார்கள். ஒருநாள் அதிகாலையில் ஆல் இந்தியா ரேடியோவைக் கைப்பற்றி நேரடி ஒலிபரப்பில் தங்கள் தரப்பு நியாயத்தைத் தெரிவிக்கிறார்கள். தொலைபேசியில் வாழ்த்துக்களுடன் வரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார்கள். தொலைக்காட்சிகளிலும் இந்தச் சம்பவம் தலைப்புச் செய்தியாகக் காட்டப்படுகிறது.
இவர்களைப் பயங்கரவாதிகளாகக் கருதும் அரசு அதிரடிப்படையை வானொலி நிலையத்திற்கு அனுப்புகிறது. நண்பர்கள் அனைவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சல்லடையாகத் துளைக்கப்பட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஆவணப்படத்தில் தாங்கள் தூக்கிலிடப்படும் காட்சிகளை நினைத்தவாறே சிரித்துக்கொண்டே சாகிறார்கள். என்.டி.டி.வியின் காமராக்கள் வழியாக இந்தியா முழுவதும் இளைஞர்களும், மாணவர்களும் அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதோடு படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை உணர்ச்சிப் பெருக்கோடு பேசுகிறார்கள். திரையரங்கை விட்டு வெளியேறும் ரசிகர்கள், வரலாற்றிலிருந்து பகத்சிங்கும், ஆசாத்தும் தங்களுக்குப் பிடித்த விதத்தில் உயிர்த்தெழுந்து வருவதை கைதட்டியவாறே எண்ணி மகிழ்ந்தவாறு மனதில் பாரத்துடன் வெளியேறுகிறார்கள்.
நகர்ப்புற அதிலும் மாநகரப் பார்வையாளர்களைக் குறிவைத்து சுமார் 30 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் 600 பிரதிகள் எடுக்கப்பட்டு உலகெங்கும் வெளியிடப்பட்டு முதல் வாரத்திலேயே தயாரிப்புச் செலவை வசூலித்து விட்டதாம். இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன? மாறுபட்ட திரைக்கதை என்பதாலும் இருக்கலாம். அந்த மாறுபாடு என்ன, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள், இப்படத்தின் உணர்ச்சி தோற்றுவிக்கும் அரசியல் என்ன என்பதைப் பரிசீலிப்பதற்கு முன் சில கொசுறு விசயங்களைப் பார்த்து விடலாம்.
அந்த வெள்ளைக்காரப் பெண் தன் சமகால அரசியல் உணர்வுக்கு உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஆவணப்படம் எடுக்க அமெரிக்காவும், பிரிட்டனும் ஆக்கிரமித்திருக்கும் இராக்கிற்குத்தான் சென்றிருக்க வேண்டும். சரி போகட்டும், இந்தியாவிற்கு வந்தவள் அந்த நண்பர் வட்டத்துடன் ஆடிப் பாடிப் பழகுபவள் மறந்தும் கூட இராக் மீதான ஆக்கிரமிப்பு குறித்துப் பேசவில்லை.
இதற்கும் இந்தப் படத்திற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம். இருக்கிறது. படத்திற்கு ஸ்பான்சரே கொக்கோ கோலாதான். படத்தில் நண்பர்கள் சாப்பிட்டவாறே அரட்டையடிக்கும் பஞ்சாப் தாபா காட்சிகள் முழுக்க கோக் விளம்பரங்கள்தான். நடிகர் ஆமிர்கானும் கோக்கின் முக்கியமான விளம்பர நட்சத்திரமாவார். படம் வெளிவந்த தினங்களில் கோக் தனது பாட்டில்களில் ரங் தே பஸந்தி ஸ்டிக்கர் ஒட்டியே விநியோகித்திருக்கிறது. பிளாச்சிமடாவிலும், கங்கைகொண்டானிலும் போராடும் மக்களை ஒடுக்க தனி சாம்ராச்சியமே நடத்திவரும் கோக் இங்கே ஹீரோக்களின் மனம் கவர்ந்த பானமாக இருக்கிறது. 21ஆம் நூற்றாண்டின் இந்திய தேசபக்தியில் கோக்கும் ஒரு அங்கம் என்பது உலகமயமாக்கம் தோற்றுவித்திருக்கும் ஒரு கள்ள உறவு போலும்.
அடுத்து மிக்21 விமானம் எனும் ரசியவிமானம் வாங்கியதில் ஊழல் என்று வருகிறது. இதுவே எப்16 எனும் தரங்குறைந்த அமெரிக்க விமானம் வாங்கியதில் ஊழல் என்று எடுத்திருக்க முடியுமா? அல்லது உண்மையான இராணுவ ஊழல்களான போஃபர்ஸ் பீரங்கி, கார்கில் சவப்பெட்டி ஊழல், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல் ஊழல் போன்றவற்றை வைத்து எடுத்திருக்க முடியுமா?
அப்படி எடுத்திருந்தால் அமெரிக்க அடிமைத்தனத்திலும், இந்த ஊழல்களிலும் ஊறித் திளைத்திருக்கும் தற்போதைய காங்கிரசு அரசு, ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகையை நல்லடக்கம் செய்தது போல இந்தப்படத்தைப் புதைத்திருக்கும். எனவே, ஊழல் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் ஆளுபவர்களின் மனம் நோகாமல் பேசவேண்டும் என்ற விதியை படம் செவ்வனே பின்பற்றியிருக்கிறது.
மகிழ்ச்சியாக வாழும் அந்த நண்பர் வட்டத்தில் சோகத்தைக் கொண்டு வரும் ஒரு ஊழல் மந்திரியை எப்படிப் போட்டுத் தள்ளுவது என்பதை வித்தியாசமாகச் சொல்லவேண்டும் என்று யோசித்திருக்கும் இந்தப் படத்தின் படைப்பாளிகள் அதற்காக மட்டுமே பகத்சிங், ஆசாத் வரலாற்றை வம்படியாய் இழுத்து வந்திருக்கிறார்கள். ஏற்கெனவே பகத்சிங்கிற்கு பொட்டு வைத்தும், ஆசாத்துக்குப் பூணூல் போட்டும் இந்து மதவெறியர்கள் செய்யும் அநீதி ஒருபுறம். மறுபுறம் பாராளுமன்றப் பூசை செய்யும் போலி கம்யூனிஸ்ட்டுகள் தங்களால் கனவிலும் செய்யமுடியாத சாகசங்களைச் செய்திருக்கும் பகத்சிங்கை ஆக்ஷன் ஹீரோவாக அணிகளுக்குச் சித்தரிக்கும் அயோக்கியத்தனம். இப்போது இந்தப் படமும் தனது பங்குக்கு பகத்சிங்கை இம்சை செய்கிறது.
ஆங்கிலேயருக்கு எதிரான இந்திய மக்களின் வீரமிக்க போராட்டங்களை பலமுறை காட்டிக் கொடுத்தும் கருவறுத்தும் வந்தது காந்தி காங்கிரசு துரோகக் கும்பல். இந்தத் துரோக வரலாற்றுக்கெதிரான குறியீடுதான் பகத்சிங். தனது சிறைக்குறிப்புக்களில் இந்தியாவில் மலர வேண்டிய சோசலிச ஆட்சி குறித்தும், அதற்கு மக்களை அணிதிரட்டிச் செய்யவேண்டிய புரட்சிப் பணி குறித்தும், பரிசீலனை செய்து கனவு காணும் இந்த வரலாற்று நாயகனை பொய்யான சித்தரிப்புக்களிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. இந்தப் படத்தில் கேளிக்கைகள் செய்வதிலும், மந்திரியைக் கொல்வதிலும் ஈடுபடும் மேட்டுக்குடி இளைஞர்களின் சாகச உணர்வை ஒளிவட்டம் போட்டுக் காண்பிப்பதற்காக பகத்சிங்கும் ஏனைய போராளிகளும் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
ஆவணப்படம் எடுக்க வந்த அந்தப் பெண் நல்ல நடிகர்கள் வேண்டுமென்றால் புதுதில்லி தேசிய நாடகப் பயிற்சிப் பள்ளிக்குச் சென்றிருந்தால் விசயம் முடிந்திருக்கும். ஆனால் அதில் கதை இருந்திருக்காது. ரசிகர்களும் படத்தில் ஒன்றியிருக்க முடியாது.
பீர் கோக்கைக் குடித்துக் கொண்டு அந்தரத்தில் சாகசம் செய்யும் இந்த இளைஞர்கள், கும்மிருட்டிலும் ஜீப்பையும் பைக்கையும் அதிவேகமாய் ஓட்டும் இந்த இளைஞர்கள், எப்போதும் ஆட்டமும் பாட்டமும் அரட்டையுமாய் இருக்கும் இந்த இளைஞர்கள், ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் நேசிக்கும் இந்த இளைஞர்களின் கூட்டத்தை படம் ஆரம்பித்த சில மணித்துளிகளிலேயே ரசிகர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்; அங்கீகரிக்கின்றனர்; அந்தக் குழுவில் சேர விரும்புகின்றனர்; அல்லது சேர்ந்து விட்டனர். இத்தகைய துடிப்பான இளைஞர் குழாமில்தான் பார்வையாளர்கள் தங்களைக் காண்கின்றனரே ஒழிய பகத்சிங் முதலான போராளிகளில் அல்ல. இந்த நண்பர் வட்டத்திற்குள் ஆவணப்படத்தின் மூலம் வந்து போவதால்தான் அந்தப் புரட்சி வீரர்களுக்குரிய சிறப்பை ரசிகர்கள் அளிக்கின்றனர்.
தகவல் புரட்சி நடைபெறும் மாநகரங்களில் ஐந்து இலக்கச் சம்பளம் வாங்கும் மேட்டுக்குடி நடுத்தரவர்க்கம் சனி, ஞாயிறு வார விடுமுறைகளில் இப்படித்தான் வாழ்கிறது அல்லது வாழ விரும்புகிறது. சுற்றிலும் சுயநலம் சூழ வாழ்ந்து கொண்டே இன்னும் மேலே செல்வதையே இலட்சியமாகக் கொண்டு நகரும் நிஜ வாழ்க்கையானது திரையில் தன்னை இவ்வாறு அறிந்துணர்வதில் வியப்பில்லை. இந்த வாழ்க்கையைத்தான் சமூகப் பொறுப்புள்ள வாழ்க்கையாக அந்த வர்க்கம் கருதிக் கொள்கிறது.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் உரைகளைப் பேசி நடிக்கும் அந்த இளைஞர்கள் ஊரைச் சுற்றியவாறு கேலி பேசித் திரியும் தங்களது அற்பவாழ்க்கை குறித்து எள்ளளவேனும் குற்ற உணர்வு அடைவதில்லை. மாறாக, தாங்கள் ஏற்கெனவே நல்லவர்கள் எனவும் தங்களைப் போன்ற நல்லவர்கள் அரசியலுக்கு வராமல் இருப்பது மட்டும் நல்லதல்ல என்று அதையும் மேலோட்டமாக பாரில் அமர்ந்து கொண்டு மது அருந்தியவாறு பேசிக் கொள்கிறார்கள். கோப்பையில் இருக்கும் மது தீர்வதற்குள் மாதவன் இறந்துவிட உடனே மந்திரியைக் கொன்று தியாகியாகிறார்கள்.
அந்த மந்திரிகூட மக்களிடம் செல்வாக்குப் பெற்று அரசியலில் பல படிகளைத் தாண்டி மந்திரியாகி அப்புறம்தான் ஊழல் செய்ய முடியும். ஆனால் இந்த மேட்டுக்குடி இளைஞர்களுக்கு இந்தப் படிநிலைகள் ஏதும் இல்லை. ஒரே அடியில் தலைவர்களாகி விடுகிறார்கள். இந்தப் படத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியல் இதுதான். எள்ளளவும் சமூகப் பொறுப்பற்று வாழும் மேட்டுக்குடி வர்க்கம் சமூகத்துக்குப் பொறுப்பான அரியணையில் தன்னை அமரவைத்து முடிசூட்டாததினால்தான் சமூகம் சீரழிவதாகக் கருதிக் கொள்கிறது.
இந்தக் கருத்துக்களை முதல்வன், அந்நியன் படங்கள் முதல் ஹிந்துப் பத்திரிக்கைக்கு வாசகர் கடிதம் எழுதும் ஓய்வு பெற்ற பார்ப்பன ஆதிக்க சாதி அரசு அதிகாரிகள் வரை எங்கும் பார்க்கலாம். எம்.ஜி.ஆர். படங்களில் கூட நாயகன் வில்லனை அழிப்பதற்கு பல்வேறு காரணங்கள், நியாயங்கள், சம்பவங்கள் சொல்லப்பட்டு கடைசியில்தான் அநீதி ஒழிந்து நீதி வெற்றி பெறும். மேட்டுக்குடி வர்க்கத்திற்கு அந்தப் பொறுமை இருப்பதில்லை. அதனால்தான் அதற்கு ஜனநாயகம் பிடிப்பதில்லை. பாசிசமும், சர்வாதிகாரமும் மேட்டுக்குடி வர்க்கத்திற்குப் பொருந்திவருகிற அரசியல் கோட்பாடுகள். எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் அருண்ஷோரி முதல் துக்ளக் சோ வரை பல அறிவாளிகளைக் கூறலாம். படத்தில் தங்கள் வட்டத்தின் மகிழ்ச்சி குலைந்துபோன ஒரே காரணத்திற்காக மட்டும் உடனே துப்பாக்கி தூக்குகிறார்கள். இல்லையேல் அந்தக் கைகளில் பீர் பாட்டில் மட்டும் இருந்திருக்கும்.
தற்போது தேசியப் பத்திரிக்கைகளில் அடிபடும் ஜெசிகாலால் விவகாரத்தைப் பாருங்கள். மனுசர்மா ஹரியானா காங்கிரசு மந்திரியின் மகன், விகாஷ் யாதவ் உ.பி. தாதா டி.பி. யாதவின் மகன், அமர்தீப் சிங், அலோக் கன்னா இருவரும் கோகோ கோலாவில் மானேஜர்கள்; இந்த நண்பர் வட்டம் 1999இல் ஒரு நள்ளிரவில் மதுவருந்த டாமரின்ட் கோர்ட் எனும் பாருக்கு செல்கிறார்கள். மது பரிமாறும் ஜெசிகா லால் நேரமாகிவிட்டது என்று மறுக்கிறாள். வார்த்தைகள் தடிக்கின்றன. உடனே மனுசர்மா தனது ரிவால்வரால் ஜெசிகாவைச் சுட்டுக் கொல்கிறான்.
சுமார் 100 பேர் முன்னிலையில் நடந்த இந்தப் படுகொலைக்கான வழக்கு ஆறு ஆண்டுகளாய் நடந்து தற்போது குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த நண்பர் வட்டத்திற்கும் படத்தில் வரும் அமீர்கானின் நண்பர் வட்டத்திற்கும் என்ன வேறுபாடு? ஒருவேளை இவர்கள் அந்த பாருக்குச் சென்று மது மறுக்கப்பட்டிருந்தால் என்ன நடந்திருக்கும்? துப்பாக்கி இல்லாமல் போயிருந்தால் வெறும் கைகலப்பில் முடிந்திருக்கும். மனுசர்மாவைக் காப்பாற்ற பெரும் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் மட்டுமின்றி சம்பவத்தின் போது உடன் சென்ற நண்பர்களும் பெரும் பிரயத்தனம் செய்திருக்கிறார்கள். இங்கும் நண்பர்கள் ஒருவருக்கொருவர் நேசிக்கத்தானே செய்கிறார்கள். இந்த நட்புவட்டங்களின் மகிழ்ச்சிகளில் ஒன்றில் மந்திரி குறுக்கிடுகிறான், மற்றொன்றில் மது பரிமாறும் பெண் குறுக்கிடுகிறாள், அவ்வளவுதான் வேறுபாடு.
படத்தில் புரட்சிகரமான டி.வி.யாக வரும் பிரணாய் ராயின் என்.டி.டி.வி. நிஜத்திலும் அப்படிக் காட்டிக் கொள்ள முயலுகிறது. ஜெசிகாவுக்கு ஆதரவாக பலரும் மெழுகுவர்த்தி ஏந்தி இந்தியா கேட்டில் அமைதியாக எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள். 2 இலட்சம் பேர் என்.டி.டி.விக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்களாம். அதை எடுத்துக் கொண்டு பிரணாய் ராய் அப்துல் கலாமைப் பார்த்து நீதி வேண்டுமென கோரிக்கை வைத்தாராம். இதை அந்த டி.வி. ஏதோ மாபெரும் புரட்சி நடவடிக்கையாக சித்தரித்து நேரடியாக ஒளிபரப்புகிறது.
இதே பிரணாய் ராய் லாவோசில் நடந்த பொருளாதார மாநாட்டில் அனில் அம்பானி உள்ளிட்ட முதலாளிகளோடு “”உலக முதலாளிகளே இந்தியாவிற்குள் முதலீடு செய்ய வாருங்கள்” என்று டான்ஸ் ஆடியவர். பில் கேட்ஸ் இந்தியாவிற்கு வந்த போது பரம்பொருளைக் கண்ட பரவசத்துடன் பேட்டி எடுத்தவர். புஷ்ஷூக்கு மன்மோகன் சிங் விருந்து அளித்தபோது கலந்து கொள்ள வாய்ப்பு பெற்றவர். இப்படிப் பன்னாட்டு முதலாளிகளுக்கு அடிமையாக இருக்கும் ஒரு ஜந்து தன்னை ஒரு போராளியாகக் காட்டிக் கொள்வதை என்னவென்று அழைப்பது?
ஜெசிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை என்று பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பேசுவதிலும் ஒரு நடுத்தர வர்க்க அரசியல் இருக்கிறது. ஜெசிகா லால் ஒரு பெண், அதிலும் ஒரு விளம்பர மாடல். இந்தப் பெண் கொலை செய்யப்பட்ட சோகத்தை மாநகரத்து நடுத்தர வர்க்கத்தின் சோகமாக மாற்றுவதில் ஊடக முதலாளிகளுக்குப் பெரிய பலன் இருக்கிறது. ஜெசிகாவிற்குப் பதில் மதுக்கோப்பை கழுவும் ஒரு பையன் கொலை செய்யப்பட்டிருந்தால் அது இந்த அளவுக்குப் பேசப்பட்டிருக்காது.
இந்தப் பத்தாண்டுகளில் பம்பாய்க் கலவரம், குஜராத் கலவரம், மேலவளவுப் படுகொலை, ரன்பீர்சேனா அட்டூழியங்கள் என்று நீதி கிடைக்காத சம்பவங்கள் எத்தனை இருக்கின்றன? அதற்கெல்லாம் என்.டி.டி.வி இயக்கம் எடுக்கவில்லை. குடியரசுத் தலைவரைப் பார்க்கவில்லை. படத்திற்கு கோக் போல ஸ்பான்சர் செய்திருக்கும் அந்த டிவி., திரையில் வரும் காட்சிகளைப் போல நிஜத்தில் காட்டிக் கொள்வதற்கு ஜெசிகாவின் வழக்கு அதற்கு ஒரு வாய்ப்பு வழங்கியிருக்கிறது. கூடவே இரண்டு இலட்சம் எஸ்.எம்.எஸ். செய்திகள் அனுப்பிய அந்த நடுத்தர வர்க்கமும் தன்னை மாபெரும் சமூகப் போராளியாகக் கருதிக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் இந்தக் கோழைகள் எவரும் குறைந்தபட்சம் மனுசர்மாவைத் தூக்கில் போடவேண்டும் என்று கூடக் கேட்கவில்லை.
ஜெசிகா லாலுக்கு நீதி வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது கோரிக்கை. பொல்லாத நீதி! ஆக இந்தப் படம் ஏன் வெற்றி பெற்றது, பார்வையாளர்கள் எதில் ஒன்றினார்கள் என்பதை ஜெசிகாவின் வழக்கு என்ற உண்மை எடுப்பாக விளக்கி விடுவதால், நாம் தனியாக விளக்குவதற்கு ஒன்றுமில்லை.
– புதிய கலாச்சாரம், ஏப்ரல் 2006 ____________________________________________________________
இது போன்ற எண்ணிறந்த முக்கியமான திரைப்படங்களுக்கு விமரிசனம் எழுதியிருக்கும் புதிய கலாச்சாரம் மற்றும் வினவு கட்டுரைகள் இதுவரை இரண்டு புத்தகங்களாக வந்திருக்கின்றன. வாங்கிப் படித்துப் பாருங்கள்.
திருமண தினத்தன்று மணமகன் வரதட்சிணையை இருமடங்காக உயர்த்தியதால் மணமகள் திருமணத்தை நிறுத்தினார் என்று செய்தியைப் பார்த்தேன்.
மணமகள்(சுனிதா) எம்பிஏ படித்திருக்கிறார். மணமகன்(சதீஷ் ஜனார்தனன்) ஐடி துறையில் வேலை செய்கிறார். நிச்சியிக்கப்பட்ட திருமணத்தில் மணமகளுக்கு 100 சவரன்களும்., மணமகனுக்கு 25 சவரன்களும் போடுவதாக ஏற்பாடு. கூட இன்னொரு 100 சவரன்கள் கொடுத்தால்தான் கல்யாணத்தன்று மண்டபத்துக்கே வருவேன் என்று மணமகன் வீட்டார் சொன்னதை அடுத்து இந்த திருமணம் நிறுத்தப்பட்டிருக்கிறது. இதுபோன்ற செய்திகள் ஒரு சிறு செய்திக்குறிப்பைப் போல் மட்டுமே பெட்டிக்குள் அடங்கிவிடுகிறது. சமூகமும் இந்த நாற்றமெடுத்த குப்பைகளை தனக்குள் மூடிமறைத்து, ”இந்த காலத்துலே யாருங்க வரதட்சிணை எல்லாம் வாங்குறாங்க, பெத்தவங்கதான் பொண்ணுங்களுக்கு கொடுக்கறாங்க,அதெல்லாம் ஊர்ல கிராமத்துலதாங்க” என்று சொல்லிக்கொண்டு எப்போதும்போல இயங்கத் தொடங்கி விடுகிறது. . இந்த செய்தியை பார்த்ததும் அதிர்ச்சியாக இருந்தது.
100 பவுன் நகைக்காக நின்று போன சுனிதாவின் திருமணம்! பின்னணித் தகவல்கள்!!
அன்று மாலையே சுனிதாவை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) அவரது வீட்டில் சந்தித்தேன். விவரங்கள் சொல்லிக் கேட்டதுமே, அவரே வெளியில் வந்தார். மிகவும் எளிமையாக இருந்தார். சென்ற வருடம்தான் எம்பிஏ முடித்திருக்கிறார். அவராகவே பேச ஆரம்பித்தார். தமிழ் மேட்ரிமோனி வாயிலாக இருகுடும்பங்களும் பரிச்சயம். ஜாதகத்தை பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். இருவருக்குமிடையே பொதுவான உறவினர்கள் இருக்கவே, இருவரும் தூரத்துச் சொந்தமென்று தெரிய வந்திருக்கிறது. மணமகனுக்கு தந்தை இல்லை. தாயும், மணமகனது மாமாவும்தான் சம்பிரதாயமாக கை நனைத்து, திருமணத்தை பேசி நிச்சயித்திருக்கிறார்கள். அப்போது மணமகனின் தாய் சந்திரிகா தனது மகளுக்கு திருமணத்தின்போது 50 சவரன்கள் நகை போட்டதாகவும் சுனிதாவுக்கும் அதே அளவு நகை போட்டால் கவுரவமாக இருக்குமென்றும் சூசகமாக பெண் வீட்டாரிடம் சொல்லியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, கோயம்பேடு அருகில் உள்ள பெரிய ஹோட்டலில் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது. நிச்சயத்துக்கு பின்னர்,
50 சவரன்களை 100 சவரன்களாக போடுமாறும் அது அல்லாது மணமகனுக்கு 25 சவரன்கள் போடவேண்டுமென்றும் மணமகன் வீட்டார் தொலைபேசி மூலமாக வலியுறுத்தியிருக்கின்றனர். திருமணத்தை நிச்சயித்து விட்டதால் பெண் வீட்டாரும் ஒப்புக் கொண்டிருக்கின்றனர். அதோடு, ஐந்து கிலோ வெள்ளிச் சாமன்களும் வேண்டுமென்றும் கூறியிருக்கின்றனர்.
சதீஷ் டிசிஎஸ் நிறுவனத்தில் ஐ.டித்துறையில் வேலை செய்வதாகவும் மாதம் 45 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும், கையில் 42 ஆயிரம் வருவதாகவும் கூறியிருக்கின்றனர். தற்போது மும்பையில் வேலை செய்வதாகவும் திருமணத்துக்கு பின்னர் மும்பையில்தான் குடித்தனம் என்றும் தெரிவித்திருக்கின்றனர். மணமகனின் தாய் சந்திரிகா. கந்துவட்டிக்கு பணம் கொடுப்பவர். கோயம்பேடு மார்க்கெட்டில் அவரைத் தெரியாதவர்கள் யாருமில்லை. தெரிந்தவர்களாக, தூரத்து உறவினர்களாக இருப்பதாலும், உறவினர் ஒருவர் மணமகன் வீட்டாரைப் பற்றி நல்லவிதமாகக் கூறியதாலும் பெண் வீட்டார் மணமகனைப் பற்றி பெரிதாக எதுவும் கவலை கொள்ளவில்லை. நிச்சயத்துக்குப் பின்னர்தான் வேலையைப் பற்றி மிகவும் வற்புறுத்திக் கேட்ட பின்னரே சதீஷ் டிசிஎஸ் பி.பி.ஓவில் வேலை செய்வதாக சொல்லியுள்ளனர்.
மணமகனின் மாமா ராகவன் என்பவர்தான் மணமகள் வீட்டாருடன் அடிக்கடி தொடர்பு கொண்டுள்ளார். ஒரு சில சம்பிரதாயங்களில் இரு குடும்பத்தினருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்தபோது இதற்கெல்லாம் ஒப்புக் கொள்ளாவிட்டால் கல்யாணத்தை நிறுத்திவிடுவோம் என்றும் சொல்லியிருக்கின்றார். பொதுவாக திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் இதுபோல அபசகுனமாக பேசமாட்டார்கள் என்றும் மணமகனது மாமா, திருமணத்தை நிறுத்துவதிலேயே குறியாக இருந்ததாகவும் நினைவு கூர்கிறார் சுனிதா. திருமணம் இந்த மாதம் 17-ஆம் தேதி காலை ராமாவரத்தில் நடைபெறுவதாக இருந்தது.முதல்நாள் மாலை ரிசப்சன்.
திருமணத்துக்கு இரண்டு நாட்கள் இருக்கும்போது மணமகனது மாமா நேராக வீட்டிற்கு வந்து, ஒப்புக்கொண்டதற்கும் மேலாக 100 சவரன் நகை போட்டால்தான் திருமணம் நடக்குமென்று கூறியிருக்கிறார். பெண் வீட்டார், எப்படி அதற்குள் 100 சவரன் போடமுடியுமென்றும் இரண்டு நாட்களுக்குள் கொடுக்க முடியாதென்றும் கூறியிருக்கின்றனர். கொடுக்காவிட்டால் திருமணம் நடக்காதென்று கறாராக கூறிவிட்டுச் சென்றிருக்கிறார், ராகவன். சுனிதாவின் பெற்றோர் சதீசின் தாயை தொடர்பு கொண்டபோது ராகவன் போனிலும் மிரட்டியிருக்கிறார். கூட 100 சவரன்கள் இல்லாவிட்டால் மணமகன் மண்டபத்துக்கு வரமாட்டாரென்றும் சொல்லியிருக்கிறார்கள். பத்திரிக்கை அச்சடித்து ஊரெல்லாம் கொடுத்த பின்னால் இது போல சொல்வது சரியல்ல என்று பெண் வீட்டாரும் கேட்டிருக்கிறார்கள்.
அதோடு, ஞாயிற்றுக்கிழமை சுனிதா பியூட்டி பார்லர் சென்று கைகளில் மருதாணியிட்டு ஒப்பனை செய்து கொண்டு மண்டபத்தில் காத்திருந்தார். மணமகன் வீட்டாரோ அவர்களது உறவினர்களோ ஒருவரும் வரவில்லை. இரவு எட்டரை மணிவரை பார்த்த பின்னர், பெண் வீட்டார் மணமகன் வீட்டாரை தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார்கள். ரீச் ஆகவில்லை.
உடனே சில உறவினர்கள் பெரம்பூரில் உள்ள மணமகன், அவரது அக்கா, மாமா வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார்கள். வீடு பூட்டப்பட்டிருக்கிறது. யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை. சனிக்கிழமை மாலையே அவர்கள் வீட்டைப் பூட்டிக் கொண்டு கிளம்பி விட்டதாக அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்கள் பக்கத்து சில உறவினர்களிடம் கேட்டபோது, சுனிதாவின் பெற்றோர் சதீசின் வீட்டை சுனிதாவின் பெயரில் எழுதித்தர கேட்டதாகவும் அப்போதுதான் திருமணம் நடக்குமென்று சொன்னதாகவும், அதனால் திருமணத்தை நிறுத்தி விட்டதாகவும் சதீசின் தாய் தெரிவித்ததாக சொல்லியிருக்கிறார்கள். அப்போதுதான், சதீஷ் வீட்டினர் திட்டமிட்டு இந்த திருமணத்தை நிறுத்தியிருப்பது சுனிதாவின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் தெரியவந்துள்ளது. ”எங்கள் வீட்டிற்கு நான் ஒரே பெண். இருக்கும் சொத்தெல்லாம் எனக்குத்தானென்று முன்பே பேச்சு. இதில், எதற்காக சதீசின் வீட்டை எழுதிக் கேட்கப் போகிறார்கள்? இதில் ஏதாவது லாஜிக் இருக்கிறதா? ”என்கிறார் சுனிதா.
அதன்பின் சுதாரித்துக் கொண்ட சுனிதா வீட்டினர் ஆதம்பாக்கத்தில் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமையால் திருமணம் நின்று போனதாக போலீசில் கேஸ் கொடுத்திருக்கிறார்கள்.
சதீசுக்கு சொந்த ஊர் ஆற்காடு. அங்கும், மும்பையிலும் போலிசார் தற்போது தேடி வருகிறார்கள். சதீசின் மாமா ராகவன் எக்மோரில் ஒரு ஜூஸ் கடை வைத்திருக்கிறார். அவர்தான் காலையில் கடையைத் திறந்து கொடுத்துவிட்டு மாலையில் பூட்டிவிட்டு பணத்தை வாங்கிச் செல்வாராம். கடையைப் பார்த்துக் கொள்பவர் 70 வயது முதியவர் ஒருவர்.அங்கும் கடந்த மூன்று நாட்களாக சுனிதாவின் உறவினர்கள் சென்று பார்த்து வருகிறார்கள். அவர் வருவதேயில்லையாம். அதோடு, அந்த முதியவருக்கும் எந்த தகவலும் தெரியவில்லையாம்.
அந்த மாமாவுக்கு மூன்று மகள்களென்றும் அவரது மகள்களில் ஒருவரை திருமணம் செய்து கொடுக்க அவருக்கு விருப்பமிருந்ததாக தெரிகிறது. அவரால் இவ்வளவு வரதட்சிணை கொடுக்க முடியாததால், சதீசின் தாய் சந்திரிக்காவுக்கு அதில் விருப்பமில்லை. அதனாலேயே சுனிதாவை நிச்சயம் செய்திருக்கிறார்கள். ஆனாலும், ராகவன் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த விரும்பியிருக்கலாமென்றும் அதற்காக இந்த திட்டத்தை நிறைவேற்றியிருக்கலாமென்றும் சுனிதாவின் உறவினர்கள் கருதுகிறார்கள்.
சதீஷ் எப்படியாவது தண்டிக்கப்படவேண்டுமென்று கோபத்தோடு இருக்கிறார்கள் சுனிதாவின் வீட்டினர். நான் வீட்டிற்குச் சென்றபோது சுனிதாவோடு ஒரு சில நண்பர்கள் இருந்தனர். அவர்களும் மிகுந்த கோபத்தோடு இருந்தனர். சுனிதாவின் பெற்றோர் மணமகன் வீட்டாரைப் பற்றி நன்றாக விசாரித்திருக்க வேண்டுமென்றும் இப்படியா அசால்டாக இருப்பதென்பதும்தான் அவர்களுடைய கோபம். அதோடு, சதீஷ் போன்ற பொறுக்கிகளை சும்மா விடக்கூடாதென்றும் வரதட்சிணை பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பரவ வேண்டுமென்றும் உறுதியாகக் கூறினர்.
“அவனைப்பாருங்க, எவ்ளோ டீசண்டா இருக்கான், அவனைப் பாத்தா இந்த மாதிரின்னு சொல்ல முடியுமா” என்றார்கள், சதீசின் படத்தைக் காட்டியபடி. ஆமாம், பார்க்க டீசண்டாக இருந்தாலும் சதீஷ் செய்தது பச்சை அயோக்கியத்தனம்தான். பணத்தாசைக்கும் நுகர்வு கலாசாரத்துக்கும் டீசண்டெல்லாம் இல்லையே!
முதலிலேயே 100 சவரன் என்று கேட்கும்போதே அதாவது வரதட்சிணை கொடுத்துதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிலை வரும்போதே நீங்கள் எதுவும் ஆட்சேபிக்க வில்லையா என்று சுனிதாவிடம் கேட்டதற்கு ”வரதட்சிணையை வேண்டாமென்று இளையோராகிய நாங்கள் சொன்னாலும் பெற்றோர் கேட்க மாட்டார்கள். உறவினர்களுக்காகவாவது தங்க நகைகள், சீர்கள் போட்டாக வேண்டியது கட்டாயம். அதுவும் எங்கள் சாதியில் (முதலியார்) குறைந்தது ஜம்பத்துக்கும் அதிகமாக போடுவார்கள். சாப்பாட்டிற்காக அதிகம் செலவு செய்வார்கள்.” என்றார்.
வரதட்சிணையை பல்வேறு வழிகளில் நியாயப்படுத்தும் சமூகம்!
அவர் சொல்வதிலும் உண்மை இருக்கிறது. சாதிப் பெருமைக்காகவும், தங்கள் பணபலத்தை பறை சாற்றவும் பணம் படைத்தவர்கள் திருமணத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்கின்றனர். முதலியார்,நாடார், தேவர், கம்மா நாயுடு போன்ற சாதிகளில் 100 சவரன் என்பது மிகவும் சாதாரணமாம், அதோடு, பெண்களுக்கும் நகை மற்றும் சீர் செனத்தியோடு புகுந்த வீட்டுக்குச் சென்றால்தான் மதிப்பு என்ற எண்ணமும் இருக்கிறது. இயல்பாகவே, பொருள் இருந்தால்தான் தனக்கு மதிப்பு என்ற சமூக அடையாளம் குடும்பங்களிலும் பிரதிபலிக்கிறது.
என்னதான் புகுந்த வீட்டில் சமையல் முதற் கொண்டு பாத்ரூம் வரை சகல வேலைகளையும் தானே செய்வதாக இருந்தாலும் தனது மதிப்பு என்பது தன்னுடன் கொண்டு வந்திருக்கும் அல்லது தான் அணிந்திருக்கும் தங்க நகைகளில் இருப்பதாக எண்ணிக் கொள்வது வேதனையானது. வீட்டுவேலைகள் செய்வதை தவறென்று சொல்லவில்லை. ஆனால், விருப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவீட்டுக்கு மருமகளாகி விட்டால் வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாக வேண்டிய கட்டாயம் பெண்களுக்கு இருக்கிறது. ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் கொண்டு வந்தாலும் மணப்பெண் அடுத்த நாளே அந்த வீட்டின் சமையற்காரியாகவும், வேலைக்காரியாகவும் சமயங்களில் கால் மிதியடியாகவும் மாறிவிடவேண்டும். மணமகனிடம் அது போன்ற கடமைகளை நமது சமூகம் எதிர்பார்ப்பதில்லை. அவன் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வதையே இழிவாக கருதுகிறது.
தங்கள் பெண்ணுக்கு நிலபுலன்களை, நகைகளை அளிப்பது அவர்களுக்கு தாங்கள் அளிக்கும் பாதுகாப்பாகக் கருதுகிறார்கள் பெற்றோர்கள். பெண்கள் இரண்டாந்தரமாக நடத்தப்படும் நமது சமூகத்தில் இதனை புரிந்து கொள்ள முடிகிறது. கணவன் இறந்துவிட்டால் அல்லது அவசரத்துக்கு உதவும் என்ற எண்ணத்தில் வரதட்சிணை பெண்ணுக்கு ஒரு முதலீடாக பயன்படலாம். எனினும், திருமணம் என்பது பெற்றோருக்கு மகிழ்ச்சியானதானதொன்றாக இல்லாமல் பெரும் சுமையாக மாறிப் போய்விடுவதுதான் நடைமுறையில் காணப்படும் சோகம். திருமணம் என்பது இரு குடும்பங்களுக்கிடையிலான ஒரு பிசினஸ் ஒப்பந்தம் என்பதாகத்தான் இருக்கிறது.
முன்பெல்லாம் பெண் படித்திருந்தால், ”பொண்ணு படிச்சிருக்கு” என்று சொல்லி வரதட்சிணை குறைவாக போடுவதைப் பார்த்திருக்கலாம். அதாவது படிப்பே ஒரு இன்வெஸ்ட்மெண்ட் மாதிரிதான், பெண் வேலைக்குப் போகிறாள்,அந்த சம்பளம் உனக்குத்தானே வரப்போகிறது அப்படி வேலைக்குப் போகவில்லையென்றால், கல்யாணத்துக்குப் பிறகு உன் மனைவியை நீ வேலைக்கு அனுப்பிக்கொள் என்பது அதன் உள்ளர்த்தம். மனைவி வேலைக்கு போவதில் தப்பில்லை. ஆனால், சம்பளத்தை வாங்கி கணவன் கையில் கொடுப்பதற்காக வேலைக்கு போவது என்பது மறைமுக வரதட்சிணைதானே!
பெண் பிறந்து விட்டாலே செலவுதான் என்ற எண்ணமே நமது சமூகத்தில் மேலோங்கி இருக்கிறது. பெண்கள் சகல துறைகளிலும் முன்னேறி விட்டார்கள் என்றாலும் இன்றும் அது பெருமளவு மாறிவிடவில்லை. மாறாக, அதிகரித்திருக்கிறது. ”எந்த குழந்தைன்னாலும் பரவாயில்ல” என்று கூறும் நகரத்துப் பெற்றோர்களோ இரண்டாவது குழந்தையும் பெண்ணாகி விட்டால் முகத்தை தொங்கப் போட்டுக் கொள்வதையோ அல்லது மனதுக்குள் மறுகுவதையோ காணமுடிவது இதனால்தான். கிராமப்புறங்களில் சொல்லவே வேண்டாம்.
கொஞ்சம் உற்றுப் பார்த்தால், நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், ஒரு பெண் தனது குடும்பத்தினருக்கு, தந்தைக்கு, அண்ணனுக்கு, பின்னர் புகுந்த வீட்டினருக்கு சொந்தமான பொருளாகத்தான் எப்போதும் இருக்கிறாள். அவளைப் பற்றிய அனைத்தையும் மேலே குறிப்பிட்டவர்களே தீர்மானிக்கின்றனர். என்ன உடுத்துவது, என்ன படிப்பது என்பது முதல் யாரைத் திருமணம் செய்து கொள்வது என்பது வரை தந்தையோ, அண்ணனோ, உற்றார் உறவினர்களோ, சோசியரோ, கணவனோதான் தீர்மானிக்கிறார்கள்.
நவீன சமூகத்தில் நவீனமாக விரவி நிற்கும் வரதட்சணையும், பெண்ணடிமைத்தனமும் !
முதலாளித்துவம், இதிலெல்லாம் நவீனத்தைப் புகுத்துவதில்லை. மாறாக, பிற்போக்குத்தனங்களைத்தான் கலாசாரமென்றும் பாரம்பரியமென்றும் மக்கள் மனதில் நுட்பமாக பதியவைத்து தனது லாபவெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்கிறது.
பெண் குழந்தைக்காக என்று ஒவ்வொரு நாளும் மார்க்கெட்டில் வெளிவரும் சேமிப்புத் திட்டங்களையும், அதற்கான விளம்பரங்களையும் பார்த்தாலே புரிந்து கொள்ள முடியும். குறிப்பாக, பெண் குழந்தை பிறந்து விட்டால் அதன் திருமணத்துக்க்காக சேமிக்கத்தான் எத்தனை திட்டங்கள்!!
அதோடு, ஒவ்வொரு வருடமும் திட்டமிட்டு நகையையும் சேர்த்து வைப்பது நடுத்தர வர்க்கத்தினரின் வழக்கம். அழகுக்காக அணிந்து கொள்வது என்பதோடு ஒரு பாதுகாப்பு என்ற வகையிலும் இந்திய குடும்பங்களில் நகைக்கு இடமுண்டு. என்னதான் இந்தியா புதியதாக மாறிவிட்டது என்று சொன்னாலும் வரதட்சிணை விஷயத்தில் மாறத் தயாரில்லை. முதலாளிகள் மாற்றவும் தயாரில்லை.
பழங்காலத்தில் பானைக்குள் தங்கம் சேர்த்து வைத்தனர். தற்போது பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளுக்கு ஐசிஐசிஐ போன்ற வங்கிகளிடமிருந்து தங்கக் கட்டிகளை நேரடியாக வாங்கி சேமிக்கிறார்கள். அல்லது, நகைக் கடைகளில் ஒரு வருடத்திற்கு இவ்வளவு என்று மாதா மாதம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேமிக்கிறார்கள். நகைக்கடைகளுக்கு இது வட்டியில்லா கடன். அதாவது, பெண் என்றால் திருமணம், அந்த திருமணத்துக்கு தேவை வரதட்சிணை. இதுதான் அடிப்படை மனோபாவம். இந்த மனோபாவத்தை சந்தையும் உபயோகப்படுத்திக் கொண்டு மக்களை உறிஞ்சியெடுக்கிறது.
இந்த செய்தியை, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், வாசித்ததும் உடனிருந்த நண்பரிடம் அதிர்ச்சியுடன் பகிர்ந்து கொண்டேன். அவரோ ரொம்ப கூலாக “ஐம்பதாயிரம் சம்பளத்துக்கு 100 சவரன் எதுக்கு? அது கொஞ்சம் அதிகமில்லையா?” என்றார். வரதட்சிணை என்பது அருவருப்பை ஏற்படுத்துவதற்கு பதில் ஏற்றுக் கொண்டு வாழவேண்டிய ஒன்றாக மாறிவிட்டதையே இது குறிக்கிறது. தகுதியுடைய மாப்பிள்ளைகளுக்கு இவ்வளவு ரேட் என்பது சொல்லப்படாத விதி. அந்த ரேட்டானது மணமகனது சமூக பொருளாதார அந்தஸ்து, வருங்காலத்தில் அவர் எட்டக்கூடிய உயரங்கள், மணமகனது பெற்றோரின் கவுரவம், மணமகளின் வேலை மற்றும் சம்பளம்,மணமக்களது நிறம், மணமக்களது சொத்து, நிலம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடும். பெண்ணின் கல்வித்தகுதி என்னவாக இருந்தாலும், ஆணுக்குப் பெண் சமம் என்று பேசினாலும் அதெல்லாம் வேலைக்கு ஆவதில்லை. வரதட்சிணைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும்.
என்னதான் வரதட்சிணை தவறு என்று பேசினாலும் ”எதுக்கு வம்பு, என்னைக்காவது உதவும்” என்று மக்களும் வாங்கி வைத்து விடுகிறார்கள். முற்போக்காக பேசினாலும், வாழ்க்கை என்று வரும்போது முற்போக்கெல்லாம் உதவாது, ஊரோடு ஒத்துவாழ வேண்டுமென்று பெருமையாக சொல்லிக் கொள்ளவும் செய்வார்கள்.
அதோடு பெற்றோர்களும், தங்களைப் போல அல்லது தங்களை விட உயர்ந்த அந்தஸ்துள்ள குடும்பத்தில் தங்கள் பெண்ணை மண முடித்துக்கொடுத்தால் மகிழ்ச்சியாக இருப்பாள் என்றும் நினைக்கின்றனர். டாக்டர் மற்றும் உயர் அதிகாரிகள், வெளிநாட்டில் வேலை பார்க்கும் மாப்பிள்ளைகளுக்கு வேறு ரேட். மணமகன் வீட்டாரும் தங்கள் உயர் அந்தஸ்தைக் காட்டுவதற்காக பெண் வீட்டாரிடம் பேரம் பேசுகின்றனர். பொருளாதார மந்தத்தைப் பொறுத்து ஐடி மாப்பிள்ளைகளின் மவுசு கூடுகிறது அல்லது குறைகிறது என்பதும் ஒரு வாதமாக இருக்கிறது.
இதில் கிடைத்த வரை லாபம் என்று மணமகன் வீட்டாரும் நினைக்கிறார்கள். அதனாலேயே நாக்கூசாமல் வரதட்சிணை கேட்கிறார்கள். கேட்டதைக் கொடுக்கா விட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவதாக மிரட்டுகிறார்கள். ஏனெனில். திருமணம் நிச்சயித்த பின்னர் நின்று விட்டால் அது பெண்ணுக்குத்தான் இழுக்கு என்பதாக ஒரு பொதுக்கருத்து நிலவுகிறது. திருமணம் நின்று விட்ட பெண்ணைக் குறித்து பல கட்டுக்கதைகள் பரப்பப்படும். அதனால், முள்ளு மேல சேலை பட்டால் என்ற லாஜிக்படி பெண்ணின் பெற்றோர் இருதலைக்கொள்ளி எறும்பாக தவிக்க நேரிடுகிறது.
வரதட்சிணை என்பது வர்க்கத்தைப் பொறுத்து பெருமளவு மாறுபடுகிறது. நடுத்தர வர்க்கத்துக்கு கார் என்றால் அடித்தட்டு மக்களுக்கு பைக். 50 சவரன்கள் என்பது 5 சவரன்களாக இருக்கிறது. பொதுவாக இன்று சவரன் விற்கும் விலையில் 100 சவரன் என்பது உயர் நடுத்தர வர்க்கம் மற்றும் மேல்தட்டு மக்களுக்கே சாத்தியம். வரதட்சிணை அதோடு நின்று விடுவதில்லை. தங்க நகையில் ஆரம்பித்து வெள்ளிப் பாத்திரங்கள், கார்,வீடு, இன்ன மண்டபத்தில்தான் திருமணம், இன்ன மெனு என்பது வரை சகலத்திலும் வியாபித்திருக்கிறது. ஐ.டித்துறை மணமகனென்றால் கிராக்கி அதிகந்தான். பொதுவாக நடுத்தர வர்க்கத்துக்கு 20 சவரன் நகை சாதாரணம். அதோடு கடன் வாங்கி 35 முதல் 40 வரை சமாளிக்கிறார்கள். அதோடு, வீட்டுக்குத் தேவையான சமையல் பாத்திரங்கள், எல்சிடி டீவி, வாசிங் மெஷின், பிரிட்ஜ், டைனிங் டேபிள், சோபா செட் என்று பட்டியல் மிகவும் நீளம்.
எப்படியாவது கேட்டதைக் கொடுத்து திருமணத்தை நடத்த வேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாகிறார்கள். இந்த வரதட்சிணையானது திருமணத்தோடு மட்டும் நின்று விடுவதில்லை. ஆடி, தீபாவளி, பொங்கல், தலைப்பிரசவம், அதற்கடுத்த பிரசவங்கள், வீடு கட்டினால், புது வீடு புகுந்தால் என்று நகையாக, பணமாக, பட்டுப் புடவைகளாக,வேட்டிகளாக தொட்டு தொடரும் இந்த பாரம்பரியம். கேட்டதைக் கொடுக்கும் காமதேனு பசுவாக பெண் வீட்டாரை நினைத்துக் கொள்கிறார்கள்.
அந்த பேராசை பெரும்பாலான சமயங்களில் பெண்ணின் மரணத்தில் வந்து முடிகிறது. அந்த மரணங்களும் சமூகத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் தற்கொலை என்ற ஒற்றைச் சொல்லில் இழுத்து மூடப்பட்டுவிடும்.
வரதட்சிணை வாங்குவதும் குற்றம் பெறுவதும் குற்றம் என்று சட்டம் இருந்தாலும் ஏன் ஒழிக்க முடியவில்லை?
வரதட்சிணை புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்த விதமாகத்தான் இருக்கிறது. படித்தவர்கள் அதிகமுள்ள கேரளாவில், 1993 இல் வரதட்சிணைப்புகார்கள் 380ஆக இருந்தது 2002இல் 2774 ஆக அதிகரித்தது. 2008இல் 4000 வரதட்சிணைப் புகார்களாக உயர்ந்திருக்கிறது.
திருமணம் என்பது ஒருவரது குடும்பப் பொருளாதாரத்தை உயர்த்தக் கிடைக்கும் வாய்ப்பாக முதலாளித்துவ சமூகத்தில் மாறிவிட்டது. வரதட்சிணையைப் பேசி முடிப்பதற்காகக் கூட சில தனியார் நிறுவனங்கள் இயங்குகின்றன.
இப்போதெல்லாம் நடுத்தரவர்க்கத்தினர் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி ஐடி மோகமோ, ஃபேஷனோ, கவுரவமோ அல்லது சுற்றியிருப்பவர்களின் அழுத்தமோ, பிள்ளைகள் இன்ஜினியருக்குத்தான் படித்தாக வேண்டும். தனியார் கல்லூரிகள் என்றால், பி.ஈ படித்து முடித்து வெளியே வர குறைந்தது பத்து லட்சம் செலவாகியிருக்கும். அப்படி பி ஈ படித்து வெளியே வந்தால், பி ஈ படித்தவர்களைத்தான் மணம் செய்யவேண்டும்.டாக்டருக்குப் படித்தவர்கள் டாக்டர்களைத்தான் மணம் செய்யவேண்டும். செலவழித்ததை விரைவில் பெற ஆண்களுக்கு இருக்கும் ஒரு காரிய சாத்தியமான வழி வரதட்சிணை. கல்வி முதற்கொண்டு பாஸ்போர்ட், லைசென்ஸ் வரை அனைத்தையும் லஞ்சம் கொடுத்து அல்லது கடன் வாங்கி செலவழித்து பெறுபவனுக்கு வரதட்சிணை என்பது தவறு என்ற எண்ணம் ஏற்படுவதில்லை. அதனாலேயே, பெண்ணோடு வரும் பொருளை தனது அந்தஸ்தோடு தொடர்புடையதாக, அதற்கு தான் முழுத் தகுதியுடையவனாக எண்ணிக்கொள்கிறான்.
பெண்ணை எடுத்துக்கொண்டால், ஆரம்பத்திலிருந்தே அவள் ஒரு பெரும் சுமை, எங்கோ தள்ளிவிட வேண்டிய ஒரு பொருள், கல்யாணம் செய்து இன்னொரு வீட்டுக்குச் சென்று வாழவேண்டியவள், நமது கவுரவத்தை கட்டிக் காப்பாற்ற வேண்டிய வஸ்து என்ற நோக்கத்தோடுதான் வளர்க்கப் படுகிறாள். இதனால் என்னதான் படித்தாலும் பிற்போக்குத்தனங்களை கலாச்சாரமென்று நம்பி பின்பற்றுகின்றனர். இந்த பின்னணியில் பார்க்கும்போது வரதட்சிணை கொடுப்பது தவறு என்றெல்லாம் பெண்களுக்கு, சரி ஆண்களுக்கும் சரி, தோன்றுவதில்லை. வரதட்சிணை கேட்கலாம், ஆனால் அளவுக்கதிகமாகக் கேட்டு டார்ச்சர் கொடுக்கக் கூடாது என்பதுதான் அதிகபட்சமான புரிதலாக இருக்கிறது. எந்தப் பிரச்சினை என்றாலும் பேசித் தீர்த்துக் கொண்டிருக்க வேண்டும், திருமணத்துக்கு வராமல் ஒளிந்து கொள்வது என்ன நியாயம் – இதுதான் சுனிதாவின் கேள்வியாகவும் இருக்கிறது.
திருமணம் என்பது வாழ்க்கையா இல்லை வியாபாரமா?
திருமணம் என்பது எனக்காக இல்லாமல் நான் போட்டு வரும் நகைக்காக அல்லது நான் கொண்டு வரும் பொருளுக்காக ஏன் நடக்க வேண்டும் என்று கேள்வி வராதது ஏன்?
நாங்கள் சொன்னாலும் பெற்றோர் கேட்கமாட்டார்களென்ற ஒரே சப்பைக்கட்டை எத்தனை காலம்தான் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்கள்?
இதையெல்லாம் விடுத்து ஆண்கள் தைரியமாக வரதட்சிணையை வாங்க மறுக்கவேண்டும். திருமண வாழ்க்கை என்பது பிசினஸ் அல்ல, ஆணும் பெண்ணும் சேர்ந்து தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து கொள்வது என்று உணர வேண்டும். சுயமரியாதையுடன் பெண் வீட்டாரிடமிருந்து திருமணத்துக்காகவோ அல்லது திருமண வாழ்க்கைக்காகவோ பரிசுகளை, பணத்தை,நகைகளை,சொத்தை பிடுங்குவதை நிறுத்த வேண்டும். அப்படி ஒரு பெண் கொண்டு வருவது ரத்தக்கறை படிந்த சீர் என்பதை நினைவில் நிறுத்த வேண்டும்.
பெண்களும் அப்படி வரதட்சிணை கொடுத்து மணம் புரிந்து கொள்வதை எதிர்த்து நிற்க வேண்டும். அப்படி ஒருவன் தன்னை மணம் புரிந்து கொள்ள பணம் கேட்கிறான் எனில் அவனை தூக்கியெறிய தயங்கக் கூடாது. அதோடு, புகுந்த வீட்டுக்கு பரிசுப் பொருட்களோடு சென்றால்தான் மதிப்பு என்ற மாயையிலிருந்தும் வெளிவர வேண்டும்.
வரதட்சிணை ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்திய சமூகத்தில் வழக்கமாக இருந்திருக்கிறது என்பது உண்மையாக இருந்தாலும் இன்றும் அதையே பிடித்துத் தொங்கிப் பிடித்துக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. வரதட்சிணை வாங்குபவர்கள் அத்தனை பேரும் வரதட்சிணையால் உயிரை,வாழ்க்கையை இழந்தவர்களுக்கு பொறுப்பேற்க வேண்டியவர்களே!
ஆண் உயர்ந்தவன், தட்சிணையை ஏற்றுக்கொண்டு பெண்ணை வாழ வைக்க வேண்டியன் என்று ஆணாதிக்கத்தை உயர்த்தி பிடிக்கும் அதே வேளை பெண்ணடிமைத்தனத்துக்கும் துணை போகிறது இந்த சமூக அமைப்பு. இதனாலேயே பெண்கள் பிறந்தாலே வேண்டாத சுமையாக பார்க்க வேண்டிய அவலநிலைக்கு பெற்றோர் தள்ளப்படுகிறார்கள். இதனை நாம் சமூக ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் எதிர்த்து போராட வேண்டியவர்களாக இருக்கிறோம். அதற்கு சுனிதா ஒரு ஆரம்பப் புள்ளியாக இருந்தாலும் இந்த சமூக அவலத்தின் முழுப் பரிமாணத்தை இன்னும் உணர வேண்டியவராக இருக்கிறார். அப்போதுதான் அவருக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி அல்லது சந்தையில் விலைபேசி விற்கும் பொருளாக அவர் இருப்பது குறித்த பிரக்ஞையை உணர முடியும்.
கேள்வி : நான் பிறந்தது முதல் கடந்த 27 வருடங்களாக நம் தமிழ் நாட்டில் வசித்து வருகிறேன்….குறிப்பாக வேலை காரணமாக சென்னையில் கடந்த 6 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். சமீபத்தில் நான் தங்கியிருந்த தனியார் விடுதியில் ஒரு நாள் நான் தெலுங்கில் பேசிய காரணத்திற்காக என் பக்கத்து அறையை சேர்ந்த சில அன்பர்களால் தாக்கப்பட்டேன். என்னை கொல்டி என்றும் வந்தேறி என்றும் அர்ச்சித்து என்னை அந்த இடத்தை விட்டு வெளியேறச் சொன்னார்கள். நான் என்னை பற்றி எடுத்து சொன்னேன்…நாங்கள் எப்போதோ நாயக்கர் ஆட்சிக்காலத்தில் குடிபெயர்ந்து கடந்த சில நூற்றாண்டுகளாகவே தமிழர் பண்பாடோடு கலந்து எங்கள் வாழ்கை முறையை கொண்டுள்ளோம் என்றும்…தெலுங்கில் ஒன்றும் எழுதவோ முழுமையாக பேசவோ வாசிக்கவோ தெரியாது…..எனக்கு தமிழ் தான் எல்லாமும் என்று வாதிட்டேன். பயனாக மேலும் இரண்டு குத்துகள் மார்பில் விழுந்தன. நான் என்னை மனப்பூர்வமாக ஒரு தமிழனாகவே கருதுகிறேன். எனக்கு பல நேரங்களில் என்னைப்பற்றி தர்மசங்கடமாகவே உணர்கிறேன். நான் தமிழன்தான் என்பதை மற்றவர்கள் எப்படி உணர்வார்கள்..?என் தாய் மொழி தெலுங்கு என்ற காரணத்திற்காக நான் தமிழில் சிந்திப்பதை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது அல்லவா? என் கேள்வி இதுதான்…நான் என்னை யாராக நினைப்பது?? இதை பற்றி நியாமான பதிலுக்கு வினவை விட்டால் நாதியில்லை. ஒருவேளை இந்த கேள்வி மிகவும் மொன்னையாகவோ ஒரு சரியான புரிதலுடனோ இல்லாமலிருப்பின் மன்னிக்கவும்.
– கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்,
உங்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி குறித்து மிகவும் வருந்துகிறோம், கோபம் கொள்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.
உங்களை யாராக நினைப்பது என்ற கேள்விக்கு பதில், தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட தமிழன் என்று தைரியமாக சொல்லுங்கள்! இதில் மூடி மறைப்பதற்கோ, தற்காப்பு நிலையில் நின்று பேசுவதோ தேவையில்லை.
தமிழக எல்லைகளில் வாழும் மக்கள் அனைவரும் இரு மொழிகளையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமிருக்கிறது. கேரள, கர்நாடக, ஆந்திர எல்லையில் இருக்கும் மக்கள் தேவை கருதி இப்படி இரு மொழி பயன்பாட்டுக்காரர்களாக இருக்கிறார்கள். சில நேரம் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் எல்லைக்கு அந்தப்புறத்திலும், மற்ற மாநில மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் இங்கேயும் வாழவேண்டியிருக்கலாம். எல்லை என்பது நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒன்றே அன்றி அதுவே எல்லாமும் அல்ல.
பாக் இந்திய எல்லையில் இருக்கும் மக்களுக்கு இரண்டு நாடுகளும் ஒன்றுதான். இங்கே ஊதிவிடப்படும் தேசபக்தி காய்ச்சலோடெல்லாம் அங்கே அவர்கள் வாழ முடியாது. அவர்களது கால்நடைகள் எல்லையைத் தாண்டி மேயும். திருமண மற்றும் இதர விசேட நிகழ்ச்சிகளுக்கு அவர்கள் அடிக்கடி எல்லையை தாண்ட வேண்டியிருக்கும். இருநாட்டு இராணுவங்களில் யார் தாக்கினாலும் அதன் பாதிப்பு இருநாட்டு மக்களுக்கும் உண்டு. எனவே இந்தியாவில் பாதுகாப்பாக இருந்து கொண்டு தேசபக்தி சாமியாடும் அம்பிகளின் மனநிலைக்கும் எல்லையில் வாழும் அந்த மக்களின் மனநிலைக்கும் பாரிய வேறுபாடு உண்டு.
எனவே எந்த தேசிய இன மக்கள் வாழும் நாட்டிலும் இது போன்ற வேற்று மொழி பேசும் மக்கள் சிறுபான்மையினராக இருப்பார்கள். இங்கே பெரும்பான்மையாக இருக்கும் தமிழ் மொழி பேசும் மக்கள் கூட பெங்களூருவிலோ இல்லை மும்பை தாரவியிலோ, திருவனந்தபுரத்திலோ மொழிச் சிறுபான்மையினராக இருக்கிறார்கள். இங்கு மற்ற மொழி மக்கள் கேலி செய்யப்படுவது போல அங்கே அவர்கள் மதராசி, பாண்டிக்காரன் என்று கேலி செய்யப்படுகிறார்கள். இதைத் தாண்டி எல்லா இடங்களிலும் உழைக்கும் மக்களிடையே மொழிவெறி என்பது கிஞ்சித்தும் கிடையாது.
மேலும் நீங்கள் குறிப்பிட்டது போல நாயக்கர் காலம் போல பல்வேறு வரலாற்றுக் காலங்களினூடாக தமிழகத்தில் பல்வேறு தேசிய இன மக்கள் குடியேறியிருக்கிறார்கள். அதில் மராத்தி, கன்னடம், மலையாளம், உருது, இந்தி என்று பல மொழி பேசுபவர்கள் உண்டு. இந்தியா முழுவதுமே பல நூற்றாண்டுகளாக இந்த மொழிக் கலப்பு நடந்திருக்கிறது. இதில் தூய தேசிய ரத்தத்தைக் கொண்ட இனம் என்று எதுவும் இல்லை. எனவே வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்டவர்கள் ஒரு தேசிய இனத்தில் இருப்பது இந்தியா முழுமைக்கும் உள்ள ஒன்று. இத்தகைய கலப்பு இன்றி எந்த தேசிய இனமும், மாநிலமும் இல்லை.
நீங்கள் கேரளத்தில் கொல்லம் நகர் வரையிலும் முழுக்க தமிழ் மொழி மட்டுமே கூட பேசி வாழ முடியும். முழு கேரளத்திலும் கூட தமிழை மட்டும் வைத்துக் கொண்டு பயணம் செய்யலாம். அதே போல திருப்பதி, சித்தூர் மாவட்டங்களில் தமிழும் முழுப் பயன்பாட்டில் உள்ளது. தெலுங்கு பேசும் மக்கள் வேலூர் வரையிலும் வந்து செல்ல முடியும். கன்னட மொழி பேசும் மக்கள் ஓசூர் வரையிலும் புழங்குகிறார்கள். இவையெல்லாம் யதார்த்தமாக மக்களிடையே தவிர்க்கவியலாமல் இருக்கின்ற மொழிக் கலப்பு அம்சங்கள்.
உங்களைப் போன்ற பின்னணி கொண்டவர்கள் சில நூற்றாண்டுகளுக்கு முன்னரே குடியேறி வீட்டில் மட்டும் அதுவும் கொச்சைத் தெலுங்கு பேசிவிட்டு, பொதுவெளியில் தமிழராக வாழ்ந்து வருபவர்கள். ஆனால் தற்போது கூட ஆந்திராவிலோ, இல்லை கேரளாவிலோ இருந்து மக்கள் இங்கு குடியேறி வாழலாம். தத்தமது தாய்மொழிகளைப் பேசும் மலையாளியாகவோ இல்லை தெலுங்கராகவோ தமிழ்நாட்டில் வாழலாம். இதை தவறு என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. தமிழ்நாட்டில் தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்தான் வாழ முடியும் என்பது சட்டப்படியும், தார்மீகரீதியாகவும், யதார்த்தமாகவும் சரியல்ல.
இந்தியாவில் காலனிய ஆட்சிக் காலத்தில்தான் தேசிய இனங்கள் தத்தமது அடையாளங்களோடு தோன்றத் துவங்கியிருந்தது. அவை முழு நிறைவான வளர்ச்சி பெற்ற தேசிய இனங்களாக மாறிக் கொள்வதற்கு காலனிய ஆட்சி தடையாக இருந்தது. ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னர் தமிழன் என்ற உணர்வோ இல்லை நாடோ இங்கு இருந்ததில்லை. சங்ககாலம் தொட்டு தமிழனது அடையாளங்கள் பாடல்கள் மூலம் பேசப்பட்டாலும் அவை இன்றைய தமிழனது தேசிய உணர்வை கொண்டிருக்கவில்லை, கொண்டிருக்கவும் வாய்ப்பில்லை. அன்று சேர, சோழ, பாண்டிய நாடுகளாகத்தான் மக்கள் இருந்தார்கள். இன்றும் தென்கேரள மக்கள் தமிழ் மக்களை பாண்டிக்காரர்கள் என்றுதான் அழைக்கிறார்கள். இன்று நாம் பேசும் பொதுவான தமிழ்மொழி கூட அன்று இருந்ததில்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு பொருளாதாரப் பரிவர்த்தனை காரணமாகவே நாம் பேசும் இன்றைய பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது. இன்றும் கச்சாவான கொங்கு தமிழ், திருவிதாங்கூர் தமிழ், மலைவாழ் மக்களின் தமிழ், சென்னைத் தமிழ் , தெலுங்குத் தமிழ், கன்னடத் தமிழ், மலையாளத் தமிழ் முதலான வழக்குகளை பொதுவான தமிழர்களே புரிந்து கொள்வது கடினம்.
முன்னர் வட்டாரத் தமிழ் வழக்கு மட்டும் பேசி வந்தவர்கள் இன்று உள்ளூரில் மட்டும் அப்படிப் பேசிவிட்டு பிழைக்க வந்த இடத்தில் பொதுத் தமிழை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர். இப்படித்தான் பத்திரிகைகள், சினிமா, இலக்கியம், அலுவலங்களில் பயன்படும் பொதுத் தமிழ் உருவாகியிருக்கிறது.
ஆங்கிலேயருக்கு முன்னர் தமிழ்நாட்டு மக்களிடையே ஒன்று சேர்ந்து வாழ்வதற்கான பொருளாதாரத் தேவையோ, சாத்தியமோ இருந்ததில்லை. ஒரு நபர் என்ன மொழியைப் பேசுகிறார் என்பது அவருடைய சமூக – பொருளாதார வாழ்க்கையே தீர்மானிக்கின்றது. நாமக்கல் லாரி டிரைவர்கள் வட இந்தியாவுக்கு அடிக்கடி செல்வதன் மூலம் இந்தி மொழியைக் கற்கின்றனர். பஞ்சாபிலிருந்து இங்கு வரும் சிங் டிரைவர்கள் தமிழைக் கற்கின்றனர். கன்னியாகுமாரியில் மணல், சிப்பி விற்கும் சிறுவன் ஐந்தாறு இந்திய மொழிகளைப் பேசுகிறான். சென்னை அண்ணா சமாதியில் மீன் வருவலை விற்கும் மீனவர் வங்க மொழியை சரளமாகப் பேசுகிறார். மும்பையில் வாழும் பிற தேசிய இன மக்கள் தத்தமது தாய் மொழியோடு மராத்தி, இந்தி, உருதுவை கற்றுத் தேர்கின்றனர். இன்று தமிழகத்தில் அதிகார, நிர்வாக, பொழுது போக்கு துறைகளில் ஆங்கிலம் கோலேச்சுகிறது. ஏழை எளிய மக்கள் கூட சரளமான ஆங்கில வார்த்தைகளை தமது பயன்பாட்டுக்கு பயன்படுத்துகின்றனர். இவற்றை யதார்த்தமாக புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்து இயல்பாகவே இப்படி மொழிக்கலப்பு ஏற்படுவதை, ஏற்பட்டு விட்டதை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. மேலும் பல்வேறு தேசிய இன மக்கள் இப்படி கலந்து வாழும் சூழலை நாம் கைதட்டி வரவேற்க வேண்டும். சாதிகளுக்குள் சாதி மறுப்பு மணம் நடக்க வேண்டும் என்று விரும்புவது போல தேசிய இனங்களுக்குள்ளும் இனமறுப்பு மணங்கள் நடக்க வேண்டும் என்கிறோம். எதிர்காலத்தில் இத்தகைய இனங்கள் கலந்து மனித இனம் ஒன்றே எனும் நிலை வருவதே தேவையானது, சாத்தியமானது, அறிவியல் பூர்வமானது, எதிர்காலத்தைக் கொண்டிருப்பது என்கிறோம். அப்பா பஞ்சாபியாகவும், அம்மா தமிழாகவும் இருந்தால் பிள்ளைகள் இரண்டு மொழிகளையும் தெரிந்து கொள்வதோடு, இரு மாநில பண்பாடுகளையும் அறிந்து கொண்டு முன்னோக்கி செல்லும். மக்களிடையே ஒற்றுமை வளரும். இப்படி தமிழ், மலையாள, கன்னட, தெலுங்கு, மராத்தி, பீகாரி, உ.பி என எல்லா இனங்களும் கலக்க வேண்டும். நம்நாட்டில் மட்டுமல்ல உலக அளவிலும் இப்போது இருக்கும் இனங்கள் எதிர்காலத்தில் இப்படித்தான் கலந்து எழும். தூய இனம் என்பதற்கு வரலாற்றில் எதிர்காலமில்லை.
இப்படி மற்ற தேசிய இனமக்கள் தமிழ்நாட்டில் குடியேறினால் தமிழர் வளம் அழியும் என்று தமிழின வெறியர்கள் கூப்பாடு போடுவார்கள். இது உண்மையெனக் கொண்டால் இன்று ஈழத்தமிழர்கள் ஐரோப்பாவிலும், கனடாவிலும் இலட்சக்கணக்கில் வாழ்கிறார்கள். இவர்களைப் போன்ற அகதிகள் அங்கே வாழ்வதால் அந்தந்த நாடுகளின் வெள்ளையர்களுக்கு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அங்கே புதிய நாசிசக் கட்சிகள் தோன்றி ஓரளவுக்கு செல்வாக்கோடு இருக்கின்றன. தமிழ்நாட்டில் மற்ற மொழிக்காரர்கள் இருக்க்க் கூடாது என்று பாசிசம் பேசும் தமிழினவெறியர்கள் ஐரோப்பிய பாசிஸ்ட்டுகள் சொல்வதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இன்று மும்பையில் ஏழை பீகாரிகளை வெறிகொண்டு தாக்கும் சிவசேனா வெறிநாய்களை மனிதநேயம் கொண்டோர் எவரேனும் ஏற்றுக் கொள்வார்களா? தமிழ்நாட்டில் இருக்கும் அதுவும் டாடா சுமோவில் நிரப்புமளவு தொண்டர் படையுள்ள கட்சிகளைச் சேர்ந்த சில தமிழின வெறியர்கள்தான் அப்படி ராஜ்தாக்கரேவுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டு தெருக்களையும், கழிப்பறைகளையும் தெலுங்கு பேசும் அருந்ததி இன மக்கள்தான் சுத்தம் செய்கின்றனர். எங்கள் கழிவுகளை அகற்றுவதற்குத் தெலுங்கர்கள் தேவையில்லை, இனி நாங்களே முதலியார், கவுண்டர், தேவர், கோனார் என்று முறை வைத்து சுத்தம் செய்து கொள்கிறோம் என்று சுத்த தமிழர்கள் முன்வருவார்களா? அதே போன்று இரவுக் காவல் காக்கும் நேபாளத்து கூர்காக்கள், தச்சு வேலை செய்யும் ராஜஸ்தானத்து தொழிலாளர்கள், காங்கிரீட் கலவை போடும் தெலங்கு தொழிலாளர்கள், சாலையில் குழி பறிக்கும் கன்னட தொழிலாளர்கள், உணவகங்களில் மேசையை துடைக்கும் வடகிழக்கு தொழிலாளர்கள் என்று இவர்களது வேலையை தமிழன்தான் செய்ய வேண்டும் என்று யாராவது கேட்க முன்வருவார்களா என்ன?
அதே போன்று நாமக்கல் முட்டை, கோழியை மலையாளிகளுக்கு விற்க கூடாது, கம்பத்தின் காய்கனிகளை கேரளாவுக்கு கொண்டு செல்லக்கூடாது, ஈரோட்டின் மஞ்சள் தமிழக எல்லையைத் தாண்ட முடியாது, திருப்பூரின் உள்ளாடைகள் மற்ற மாநிலங்களுக்கு விற்க கூடாது என்று தூய தமிழினவாதிகள் பிரச்சாரம் செய்தால் மக்களே நையப் புடைப்பார்கள். அதே போன்று இன்று தமிழகம் சாப்பிடும் சோறு, காய்கள், மளிகைப் பொருட்களில் கணிசமானவை அண்டை மாநிலங்களிலிருந்து வருவபைதான்.
இன்று தமிழக வளத்தை அப்படியே கொள்ளையடிப்பவர்கள் மலையாளிகளோ, தெலுங்கர்களோ அல்லர். பன்னாட்டு நிறுவனங்களும், தரகு முதலாளிகளும்தான் நம் வளத்தை சுருட்டிக் கொண்டு செல்கின்றனர். இவர்களுக்கெல்லாம் இன அடையாளம் ஏதுதமில்லை. ரிலையன்ஸ், ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபெய்ன் முதலான நிறுவனங்களை வெளியேற்றுவதற்கு இந்த தமிழினவாதிகள் வருவார்களா? மாட்டார்கள். மாறாக டீக்கடை வைத்திருக்கும் மலையாளிகளை விரட்ட வேண்டுமென்று துள்ளிக் குதித்து வருவார்கள். இதுதான் இவர்களது தமிழ் வீரத்தின் இலட்சணம்.
இதனால் இந்தியாவில் தேசிய இன ஒடுக்குமுறை இல்லை என்று பொருளல்ல. பார்ப்பனிய இந்து தேசிய ஒடுக்கு முறையினால் தமிழ் மட்டுமல்ல பிற தேசிய இனங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். அதனால்தான் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்கிறோம். மொழி, பண்பாடு, கல்வி என்று எல்லாத் துறைகளிலும் இந்த ஒடுக்கு முறையை நாம் எதிர்த்துப் போராட வேண்டும். காவிரி, முல்லைப் பெரியாறு பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது என்பதற்காக நாம் மைய அரசை எதிர்த்து போர்க்குணத்தோடு போராட வேண்டும். மாறாக அதன் பொருட்டு கன்னட, மலையாள மக்களை இனவெறி கொண்டு பகைத்துக் கொள்வதில் பயனில்லை.
எனினும் இந்திய மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வு என்பது பொது எதிரியை அவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பதிலேயே வரும். அதை பிரிந்து கொண்டு செய்வதால் பயனில்லை. சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சொல்வதோடு இந்தியாவின் தேசிய இன மக்கள் வர்க்க ரீதியாக ஒன்று சேர்ந்து வாழவேண்டும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம். அதே போன்று ஒவ்வொரு தேசிய இனத்தின் தனித்தன்மை என்பது அதனுடைய ஜனநாயக விழுமியங்களுக்காகவே போற்றப்படவேண்டும். அவற்றில் இருக்கும் நிலவுடமை பிற்போக்குத்தனங்களை எதிர்க்க வேண்டும்.
தமிழிசை மரபு, பார்ப்பனிய எதிர்ப்பு மரபு போன்றவைதான் தமிழின் போற்றுதலுக்குரிய மரபுகள். இதைத் தவிர தமிழில் இன்று கோலேச்சுவது சாதிய ஆதிக்கம்தான். தாழத்த்தப்பட்ட தமிழர்களை ஊருக்குள் செருப்போடு செல்லக்கூடாது என்றுதான் ஆதிக்க சாதி தமிழர்கள் நடத்துகிறார்கள். இந்நிலையில் தலித் தமிழன் எங்கனம் தமிழனென்று உணர முடியும்? இப்படி சாதியால் மட்டுமல்ல வர்க்க ரீதியாகவும் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள். டி.வி.எஸ் அய்யங்காரும், ஸ்பிக் முத்தையா செட்டியாரும், பொள்ளாச்சி மகாலிங்கமும் வேண்டுமானால் முதலாளிகள் என்ற முறையில் தமிழன் என்று பேச முடியும். ஆனால் இவர்களோடு சரிக்கு சமமாக தொழிலாளிகள், நிலமற்ற விவசாயிகள் தமிழனென்று பழக முடியுமா என்ன?
ஆகவே சாதி, மத, மொழி அடையாளங்களையெல்லாம் விட வர்க்க அடையாளமே நம் வாழ்க்கையை தீர்மானிக்கின்ற ஒன்றாக இருக்கிறது. கார்த்திகேயன், அதன்படி நீங்கள் உங்களை உழைக்கின்ற வர்க்கமாக நினைத்து வாழுங்கள். உழைக்கும் வர்க்கத்தில் விவசாயிகள், தொழிலாளிகள், நடுத்தர வர்க்கம் போன்றவர்களோடு இணைந்து எழும் அந்த வர்க்க உணர்வே நமது வாழ்க்கைப் பிரச்சினைகளுக்கு தீர்க்கும் வல்லமையை தரும்.
எனினும் தமிழின வெறியர்களுக்கு எதிர்காலமில்லை என்று நாம் அவரசமாக முடிவெடுத்துவிடக்கூடாது. இன்று வட மாநிலத் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகம் வந்து வேலை செய்கின்றனர். நாளை இவர்கள் இன வேறுபாடு கடந்து தமிழக தொழிலாளிகளோடு சேர்ந்து போராடும் நேரத்தில் முதலாளிகள் இதை திட்டமிட்டு பிரிக்கும் வண்ணம் தமிழின வெறியை தூண்டிவிடலாம். அப்படித்தான் மும்பை டெக்ஸ்டைல்ஸ் தொழிலாளர் சங்கங்களை உடைப்பதற்கு முதலாளிகள் சிவசேனாவை வளர்த்து விட்டனர்.
தமிழகத்தில் அப்படி ஒரு நிலை வந்தால் நாம் இனவேறுபாடு இன்றி தொழிலாளிகளை அணிதிரட்டி முதலாளிகளையும் அவர்களது காசில் வரும் தமிழின வெறியர்களையும் வேரறுக்க வேண்டும். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் அதை நிச்சயம் செய்வோம். மதவெறி, சாதிவெறிக்கு மட்டுமல்ல இனவெறிக்கும் தமிழகத்தில் இடமில்லை என்று காட்டுவோம்.
கார்த்திகேயன்,
இந்த பதில் உங்களது குழப்பத்தையும், துயரத்தையும் தணித்து விட்டு தலைநிமிர்ந்து வாழும் தைரியத்தை தந்திருக்கிறதா? அறிய ஆவலாயிருக்கிறோம். நன்றி
திகார் சிறை எண் 6-இல் அடைக்கப்பட்டிருக்கும் கனிமொழிக்கு மின்விசிறி, தொலைக்காட்சி, தினசரிகள், கட்டில் போன்ற வசதிகளெல்லாம் அளிக்கப்பட்டிருக்கின்றன. இதுவே சாதாரண விசாரணைக் கைதிகளென்றால் ஜட்டியுடன் நிற்கவைத்து மிரட்டி உருட்டி அனுப்புவார்கள். பிளாக்கில் நுழைந்த உடனே சீனியர் கைதிகள் என்னென்ன வேலை செய்ய வேண்டுமென்று பட்டியலிடுவார்கள். அதில் செல்லை பெருக்கி துடைப்பதும், கழிப்பறையை சுத்தம் செய்வதும் முதலில் இருக்கும்.
ஆனால் மேன்மக்களுக்கு இத்தகைய பிரச்சினைகள் எதுவுமில்லை. ரயிலிலோ, விமானத்திலோ, இல்லை சிறை என்றாலும் அவர்களுக்கு முதல் வகுப்புதான். முன்னர் ஒரு முறை சிக்கன நடவடிக்கை என்ற நாடகத்திற்காக அமைச்சர்களெல்லாம் விமானப் பயணத்தில் முதல் வகுப்பை தவிர்ப்பார்கள் என்று அறிவித்தது போல சிறையிலும் சிக்கன நடவடிக்கைக்காக முதல் வகுப்பு இல்லை என்று அறிவித்தால் வரும் அரசியல்வாதி, அதிகாரி, முதலாளிகளுக்கு வாழ்க்கை என்றால் என்னவென்று புரியவைக்க முடியும்.
கனிமொழி கைதை வைத்து தி.மு.கவை எதிர்க்கும் பலரும் மிகப்பெரும் சாதனையை அடைந்து விட்டது போல துள்ளிக் குதிக்கிறார்கள். ஈழ ஆதரவாளர்கள் முள்ளிவாய்க்காலில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட மக்களுக்காக கருணாநிதியை பழிவாங்கிவிட்டதாக திருப்தி அடைகிறார்கள். இந்த சந்தோஷக்காரர்களுக்கு அரசியலின் அரிச்சுவடி கூட தெரியவில்லை என்பதோடு, அவர்கள் கொண்டிருக்கும் ஈழம், தி.மு.க எதிர்ப்பு குறித்தும் எதுவும் தெரிந்திருக்கவில்லை. குறிப்பிட்ட பிரச்சினையில் மக்களை அணிதிரட்டி தீர்க்க வேண்டிய பொறுமை வழிமுறைகளெல்லாம் இவர்களுக்கில்லை. ஏதாவது குறுக்கு வழியில் நடக்கும் நிகழ்வுகளை வைத்தே தீர்த்துவிடலாம் என நினைக்கிறார்கள்.
ஸ்பெக்ட்ரம் ஊழல் உச்சநீதிமன்ற ஆணைப்படி விசாரிக்கப்படுகிறது. பாராளுமன்ற கூட்டு விசராணைக் குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ராசா, அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவையெல்லாம் மத்திய அரசின் திட்டப்படி நடந்தவையல்ல. சில தற்செயலான நிகழ்வுகள் சேர்ந்து இந்த ஊழல் விவகாரத்தை இப்போதுள்ளபடி நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இந்த விவாகாரத்தை தோண்ட தோண்ட அது ஊழலின் ஊற்று மூலமான முதலாளிகளை நோக்கி பாயும். அதனால் இந்த விவகாரத்தில் இத்தோடு விட்டுவிட்டு எப்படி கழண்டு கொள்ளலாம் என்பதே காங்கிரசு கும்பலின் கணக்கு.
இந்த பிரச்சினை தி.மு.கவிற்கும் தெரியும். மற்றவர்களெல்லாம் இதை வைத்து காங்கிரசு தி.மு.க பிளவு என்று சித்தரிக்க முயலும்போதெல்லாம் சில அப்பாவிகள் அப்படி நடக்குமென்று மகிழ்வுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் தி.மு.கவோ என்ன நடந்தாலும் காங்கிரசை விட்டுப் போகமாட்டோம் என்று பெவிக்கால் போல ஒட்டிக்கொண்டிருப்பதை இவர்கள் அறியவில்லை.
மன்மோகன் அரசாங்கத்தின் இரண்டாண்டு நிறைவு விருந்துக்கு கூட டி.ஆர் பாலு மரியாதையுடன் அனுப்பிவைக்கப்பட்டார். அந்த விருந்தில் ஊழலை ஒழிக்கப் போவதாக மன்மோகனும், சோனியாவும் பேசியது நல்ல தமாஷ். ஆதர்ஷ் ஊழல், காமன்வெல்த் ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று காங்கிரசு கூட்டணி அரசின் ஊழல்களெல்லாம் வரிசையாக அணிவகுக்க அந்த அணிவகுப்பின் மரியாதை ஏற்பவர்கள்தான் ஊழலை ஒழிக்கப் போகிறார்களாம்.
எனவே இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் இதற்குமேல் சூடு பிடிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி என்பதே அவர்களது பிரச்சினை. அப்படித் தடுக்க முடியாவிட்டால் பல தலைகளோடு, பல அடிப்படை நிலைகளும் கேள்விக்குள்ளாக்கப்படும். ஆகவே இந்த விளையாட்டை பாதுகாப்பாக எப்படி விளையாடப் போகிறார்கள் என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஆனாலும் ராஜாத்தி அம்மாள் தனது மகள் சிறையில் சென்றது குறித்து கதறி அழுதாராம். கருணாநிதியும் தள்ளாத வயதில் டெல்லி சென்று சந்திக்கிறாராம். கனிமொழி கைதுக்காக டெல்லி சென்றதைக் கூட அவர் கூடவே ராசா, சரத்குமாரையும் பார்ப்பதற்காக செல்வதாக குறிப்பிட்டார். ராசா சிறைக்கு போய் இத்தனை நாளாகிறது. அப்போது தோன்றாத பாசம் இப்போது தோன்றிருப்பதாக கூறுவது நல்ல காமெடி.
கருணாநிதிக்கு இரண்டு குடும்பங்கள், எண்ணிறந்த வாரிசுகள், தி.மு.கவின் படுதோல்வி, பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்கள் இன்னபிற பிரச்சனைகளோடு கனிமொழி கைதும் சேர்ந்துவிட்டது. தயாளு அம்மாளின் வாரிசுகள் சம்பாதித்ததோடு பிடிபடவில்லை என்பதும் ராசாத்தி அம்மாளின் வாரிசு மட்டும் பிடிபட்டது என்றும் குடும்ப பூசல்கள். இதையெல்லாம் பார்த்தால் தமிழக மக்கள் அளித்திருக்கும் ஓய்வு என்பது கருணாநிதிக்கு அமைதியாக இருக்காது என்று தெரிகிறது.
இதில் கனிமொழி இரண்டு கோடி ரூபாய் கொடுத்து கலைஞர் டி.வியில் வலியுறுத்தி சேர்த்தது நான்தான் என்று வேறு உடன்பிறப்புக்கு கடிதம் எழுதுகிறார். ஊரைக் கொள்ளையடித்து உலையில் போட்டவன் என்று நிரூபணம் ஆகிய நிலையிலும் தன்னையும், தன் குடும்பத்தாரையும் எளிமை, அர்ப்பணிப்பு, தியாகம் நிறைந்த ஒழுக்கசீலர்களாக வெட்கம் கெட்டு சித்தரிப்பதற்கு அவர் கூச்சமே படவில்லை. தி.மு.கவின் இன்றைய பிழைப்புவாதத்தில் இத்தகைய அற உணர்ச்சிகளை எதிர்பார்ப்பது குதிரைக்கு கொம்பு முளைப்பது போலத்தான்.
கருணாநிதியும், அவரது கட்சியும் கார்ப்பரேட் நலன் விரும்பும் சக்திகள் என்றாகிவிட்ட நிலையிலும் வட இந்திய ஊடகங்கள் தமது தமிழின விரோத வெறுப்பை கைவிடவில்லை. கனிமொழியின் கைதை காட்டிய, விவாதித்த வட இந்திய ஊடகங்கள் எல்லாம் அதை ஜன்மவிரோதத்தோடு சித்தரித்தன. தற்போது இலங்கையின் கஸ்டடியில் இருக்கும் கே.பியை வைத்து தி.மு.வின் பிராமண எதிர்ப்பு கொள்கையே ராஜிவ் காந்தியின் மரணத்திற்கு காரணம் என்ற காமடியையெல்லாம் ஒளிபரப்புகின்றன. கருணாநிதியே தான் பழை ஆள் இல்லை என்று கதறி அழுதாலும் இவர்கள் மன்னிப்பதாக இல்லை. திராவிட இயக்கத்தின் மீதான வன்மத்தை அவர்கள் எப்போதும் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
ராமச்சந்திராவில் ரஜினி! ஊடகங்களின் மகா முக்கிய கவலை!
ராணா படத்தில் நடித்துக் கொண்டிருந்த ரஜினிக்கு உடல்நலமில்லை. முதலில் இசபெல்லாவிலும், தற்போது ராமச்சந்திராவிலும் சிகிச்சை பெறுகிறார். இந்தியாவில் பலருக்கும் குறிப்பாக பாமரருக்கு வரும் நிமோனியா காய்ச்சல் அவருக்கு ஒரு விபத்துப் போல வந்திருக்கிறது.
அவ்வளவுதான். ஊடகங்களில் எத்தனை எத்தனை செய்திகள், பிரேக்கிங் நியூஸ்கள், வதந்திகள், கிசுகிசுக்கள்…..? இந்த பியூஸ் போன நபருக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
இசபெல்லாவில் இரகசியத்தை பாதுகாக்க முடியவில்லை என்று ராமச்சந்திராவில் ஒப்பந்தம் போட்டு சேர்த்தார்களாம். இரட்டை இலைக்கே ஓட்டுப்போட்டிருந்தாலும், தள்ளாத வயதில் எதிர்கால அரசியல் நலன்கருதி பார்க்க வந்த கருணாநிதியை ரஜினி மகள் பேசி அனுப்பிவிட்டாராம். மோடியையும், சந்திரபாபு நாயுடுவையும் சந்தித்த ரஜினி தன்னை ஏன் சந்திக்கவில்லை என்று கருணாநிதிக்கு கடுப்பாம்.
நாட்டில் காலரா, மலேரியா முதலான தொற்று நோய்கள் வந்து மருந்து மாத்திரைகள் கூட இல்லாமல் சாகும் மக்களைக் கொண்ட நாட்டில் ஒரு நட்சத்திர நடிகனுக்கு அபரிதமான முக்கியத்துவம். ரஜினி இட்டிலி சாப்பிட்டதையும், வாழைத்தண்டு இரசம் குடித்ததையும் தமிழக ஊடகங்கள் கூச்சமே இல்லாமல் பிரைம் டைம் செய்திகளாக்குகின்றன. ரசிகர்கள் யாகம் வளர்த்ததையும், அலகு குத்துவதையும் சொல்லி உசுப்பி விடுகின்றன.
பாபா படத்தின் போது கழுத்தில் போடும் டாலரைக்கூட டிசைன் செய்து அதற்கும் விலை வைத்து, மொத்தமாக சுருட்டலாம் என்று பிளான் போட்ட அக்மார்க் அவாள் மாமி லதா தினசரி வந்து ரஜினி நன்றாக நலமாக இருப்பதால் தமிழகம் எரிமலை போன்று வெடிக்க வேண்டியதில்லை என்று கூறுவதையெல்லாம் எப்படி சகிப்பது?
ரஜினி சற்று குணமான நிலையில் அமெரிக்காவிற்கு மேல்சிகிச்சைக்காக பயணம் செய்யப் போவதாக ஜூனியர் விகடன் குறிப்பிடுகிறது. ரஜினி சுத்தமான தேசபக்தர் என்பதால் இந்திய மருத்துவமனையின் சிகிச்சைகளை உதறிவிட்டு அமெரிக்காவிற்கு செல்வதை யாரும் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் ஒரு நிமோனியாக காய்ச்சலுக்கே அமெரிக்கா என்றால் யூரின் டிரபிள் என்றால் சிங்கப்பூர் செல்வார்களோ?
ரஜினி உடல்நிலை குறித்த வரலாற்று சிறப்புமிக்க செய்திகளை அதாவது இட்லி, வடை சாப்பிட்டது, ரசம் குடித்தது, குடும்பத்தோடு அரட்டை அடித்தது, ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்தது எல்லாம் ஊடகங்களில் வரவேண்டுமென்று எந்த தமிழன் அழுதான்? இவை வரவில்லை என்றால் யார் குடியும் முழுகாது என்று தெரிந்தும் ஊடகங்கள் திட்டமிட்டே இதை காயத்ரி மந்திரம் போல வேளா வேளைக்கு ஒதுகின்றன.
தமிழகத்தில் செய்தி ஊடகங்களின் தரம் என்ன என்பதற்கு இந்த ரஜினி அக்கப்போரே சான்று. எனில் மக்களின் வாழ்வாதாரமான செய்திகள் என்றுமே இவற்றில் வரப்போவதில்லை என்பதற்கும் இதுவே ஆதாரம்.
இதே தலைப்பில் முன்னரே எழுயிருந்தோம். இன்னும் எத்தனை தடவை அப்படியே எழுதுவது?
தி.மு.கவின் தோல்வியை தங்களது வெற்றியாக கொண்டாடும் பட்டியலில் பொறுக்கி நித்தியானந்தாவும் சேர்ந்திருக்கிறார். இவரது சாபத்தால்தான் தி.மு.க படுதோல்வி அடைந்திருக்கிறதாம். இந்த உண்மையை தனது பொற்கால ஆட்சிக்காக ஏங்கித்தான் தமிழக மக்கள் வாக்களித்திருக்கிறார்கள் என்று பேசும் புரட்சித் தலைவியின் காதில் யாராவது போட்டு வைத்தால் அம்பிக்கு சட்னி நிச்சயம்.
திருவண்ணாமலையில் தரிசனம் கொடுத்த இந்த பொறுக்கி இன்னமும் தெனாவெட்டாக பேசியிருக்கிறார். ரஞ்சிதாவுடன் அவர் செய்த நடவடிக்கைகள் எல்லாம் மாஃபிங் செய்யப்பட்டதாம். வீடியோ படத்தில் இருப்பது அவரில்லையாம். அப்படியே இருந்தாலும் அதை கேட்க வேண்டியது நீதிமன்றம்தானாம். இப்படி ஃபுல் மப்பில் பேசக்கூடிய கருத்துக்களை இந்த சாமியார் நிதானமாகவே உதிர்த்திருக்கிறார்.
இத்தனை அம்பலப்பட்ட பிறகும் ஒரு மோசடிக்காரன் தனது காவி சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் எந்தப் பழுதுமில்லாமல் கட்ட முடிகிறது என்பதுதான் நாம் கவலைப்படத்தக்க ஒன்று. நித்தியானந்தாவின் பொறுக்கித்தனத்தை அடக்கப்பட்ட இளைஞனின் காமம் என்று அனுதாபப் பா வாசித்த நமது அண்ணன் சா.தமிழ்ச்செல்வன் இப்போது என்ன பா பாடுவார் என்பது தெரியவில்லை.
ஒரு சதுர இன்ச் கொண்ட பொருளை சக்தியாக்கி 2500 கி.மீட்டர் தொலைவுக்கு அனுப்பும் சாதனையை வரும் ஜூலை 15இல் இந்த அம்பி நடத்தப் போகிறாராம். இப்படி சக்தி உள்ள இந்த அம்பி அந்த பலான வீடியோவை அதுவும் படுக்கை அறைக்குள் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த காமராவை கண்டுபிடிக்க முடியவில்லையே? ஆய் போய்விட்டு கழுவத் தெரியாதவன் சூரியனுக்கு பேன் பார்த்த கதைதான். ஆனாலும் இந்த பொறுக்கி சாமியாருக்கு பணக்கார முட்டாள் பக்தர்கள் இருக்கும் வரையிலும் எந்தக் குறையுமில்லை.
கோயம்பேட்டில் மூட்டை தூக்கினால்தான் மூன்று வேளை சோறு என்று இந்த ஜன்மத்தை விட்டிருந்தால் கொஞ்சமாவது திருந்தியிருக்கும். அதை விடுத்து இன்னமும் தங்கத் தாம்பாளத்தில் வைத்து தாலாட்டு பாடும்போது நித்தியின் திமிர் புடைத்துக் கொண்டுதான் இருக்கும்.
சின்னக்குத்தூசி எனும் புனைபெயரில் தமிழக அரசியல் – பத்திரிகை உலகில் பிரபலமாக அறியப்பட்ட இரா.தியாகராஜன் 22.05.2011 அன்று காலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 77.
1934ஆம் ஆண்டு திருவாரில் பிறந்த சின்னக்குத்தூசி மாணவப் பருவத்தில் திராவிட இயக்கத்தின் வீச்சில் கவரப்படுகிறார். பின்னர் பள்ளி ஆசிரியராகவும், அதன் பின்னர் பல பத்திரிகைகளிலும் பணியாற்றிருக்கிறார். பல ஆண்டுகள் முரசொலியிலும் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். ஜூனியர் விகடனிலும், நக்கீரனிலும் தொடர்களை எழுதியிருக்கிறார். கடந்த ஓராண்டாக பில்ராத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்த காலங்களிலும் எழுத்துப் பணியையோ நண்பர்களோடு உரையாடுவதையோ அவர் நிறுத்தவில்லை.
2000ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் திருவல்லிக்கேணி மேன்ஷனில் அவர் தங்கியிருந்த போது அடிக்கடி அவரைச் சந்தித்திருக்கிறேன். அப்போது பல அரசியல் கட்சியைச் சேர்ந்தோர், முன்னாள் இந்நாள் பத்திரிகையாளர்கள், அனவரும் நாள், கிழமை, நேரம் முறை வைத்து அவரை சந்திக்க வருவார்கள்.
பகல், மாலை, இரவு என எந்நேரமும் பலரோடு அவர் விவாதங்களில் ஈடுபடுவதைக் கண்ட நான் அவர் எப்போது படிக்கிறார், எழுதுகிறார் என்பதை ஆர்வத்துடன் கேட்டிருக்கிறேன். காலை நான்கு மணிக்கு எழுபவர் ஒன்பது மணிக்குள் படிப்பு, எழுத்து வேலைகளை முடித்து விடுவார். அவர் அறை முழுவதும் பத்திரிகைகளும், நூல்களும், கோப்புகளும் நிறைந்து இருக்கும். தினசரியில் வரும் செய்திகளை தலைப்புக்கேற்றவாறு கிழித்து அந்தந்த உறையில் போட்டு விடுவார். அதில் சர்வதேச அரசியல் முதல் மணிப்பூர், அசாம் என வடகிழக்கு மாநில அரசியல் வரை அனைத்தும் இருக்கும்.
இதுபோக அவர் நினைவாற்றலே ஒரு பெரும் நூலகம்தான். தமிழகத்தின் அறுபது ஆண்டுகால அரசியல் விவரங்களை எப்போது கேட்டாலும் சரளமாகச் சொல்வார். தனது செய்திக் கோப்புகளையும், மிகுந்த விட்ட நூல்களையும் பரமாரிப்பதற்கு அவர் என்றுமே அலுத்துக் கொண்டதில்லை. எழுத்துப்பணி, பொதுவாழ்க்கைக்காக திருமணமே செய்யாமல் வாழ்ந்த அவரது இறுதிக் காலத்தை நக்கீரன் கோபால் சிறப்பாகவே பார்த்துக் கொண்டார். இப்போது இறந்த பிறகும் கூட அவருக்கென்று உறவினர்கள் யாருமில்லை. அவரது உடல் கூட நக்கீரன் அலுவலகத்தில்தான் வைக்கப்பட்டு இறுதி ஊர்வலத்திற்கு சென்றது.
நான் அவரைப் பார்த்த காலத்தில் தி.மு.கதான் ஆளும் கட்சி. முற்பகலில் முரசொலி அலுவலகத்துக்கு சென்றுவிட்டு பிற்பகலில்தான் அறைக்குத் திரும்புவார். கருணாநிதியை அடிக்கடி சந்திக்க கூடியவர். எனினும் அந்த செல்வாக்கை தனது சொந்த நலனுக்கென்று பயன்படுத்திக் கொள்ளாதவர்.
90களின் துவக்கத்தில் ம.க.இ.க நடத்திய திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டம் குறித்து தொடர்ச்சியான அக்கறையை அவர் வெளிப்படுத்தினார். அப்போது தமிழகத்தில் ஜெயா ஆட்சி. பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து பார்ப்பன இந்து மதவெறி தலைவிரித்தாடிய காலம். அரங்கநாதன் கருவறைக்குள் பெரியார், அம்பேத்கரின் படங்களுடன் தோழர்கள் நிற்கும் புகைப்படத்தை சுவரொட்டியாக அச்சிடுவதற்கு அச்சக உரிமையாளர்கள் அஞ்சினர். இதைச் சொன்னவுடன், தானாக முன்வந்து உதவினார். அவர் காட்டிய ஈடுபாட்டின் காரணமாக, கருவறை நுழைவுப் போராட்டம் பற்றி முரசொலியில் தொடர்ந்து கட்டுரைகள், தலையங்கங்கள் வந்தன. ஓராண்டுக்குப் பின் அந்த போராட்டத்தை நினைவு கூர்ந்து முரசொலியில் எழுதினார். பின்னர் பல ஆண்டுகள் கழித்து கருவறை நுழைவுப் போராட்ட வழக்கில் தீர்ப்பு வந்தபோது அதையும் முரசொலியில் பதிவு செய்தார். அதே போல ம.க.இ.க வின் தமிழ் மக்கள் இசைவிழாவை ஒட்டி, தமிழிசை மரபு பற்றியும் நக்கீரனில் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.
இவை எதுவும் “எழுதுங்கள்” என்று கேட்டுக் கொண்டதற்காக எழுதப்பட்டவை அல்ல, அவர் தானாகவே சொந்த ஈடுபாட்டின் பேரில் எழுதியவை. பார்ப்பனிய எதிர்ப்பை தி.மு.கவே கைவிட்ட நிலையில், ஒரு நக்சல் இயக்கம் அதனை மக்கள் திரள் இயக்கமாக கொண்டு செல்வது குறித்து அவருக்கு உண்மையிலேயே மகிழ்ச்சிதான். புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களையும் தொகுப்பாக்கி வைத்திருந்தார். ம.க.இ.கவின் பாடல் ஒலிப்பேழைகளை பலமுறை அவருக்கு அளித்திருக்கிறேன். அதை வாங்கி பலருக்கும் உற்சாகத்துடன் அறிமுகம் செய்தார். ஒவ்வொரு முறையும் அதற்கான பணத்தை வேண்டாமென்றாலும் “இலவசமாவா கட்சி நடத்துரீங்க” என்று வற்புறுத்தி அளிப்பார். பத்திரிகைகளையும் சில பிரதிகள் வாங்கிக் கொண்டு மறவாமல் காசு கொடுப்பார்.
அவரைப் பார்க்க பிரபலங்கள் வரும் போது, நான் சற்றுத் தயக்கத்துடன் விடைபெறுவதாக சொன்னாலும், “பரவாயில்லை இருங்கள்” என்று அமர்த்துவார், அறிமுகப் படுத்துவார். ம.க.இ.க என்று சொன்னவுடன், கொஞ்சம் கோபமாகவும், கொஞ்சம் அசட்டுத்தனமாகவும் அவர்கள் ஏதாவது பேசினால், உடனே முன்னெச்செரிக்கையாக தலையிட்டு நிறுத்துவார். பொதுவுடமை கொள்கையில் தீவிரம் கொண்ட அதே நேரம் துடுக்காகப் பேசுகின்ற அவசரக்கார இளைஞனாகவே என்னை அவர் கருதியிருந்தார்.
சிலநேரம் அவர் பேசும் விசயங்கள் மூலம் நான் வாழ்ந்திராத திராவிட இயக்கத்தின் நாட்களை அனுபவித்திருக்கிறேன். அவற்றையெல்லாம் குறிப்புகளாகக் கூட எழுதி வைக்கவில்லையே என்று இப்போது வருந்துகிறேன். அந்தக்கால பாய்ஸ் கம்பெனி நாடகங்களின் திரைச்சீலைக்காக இந்து மத தெய்வங்கள் உருவங்களாக வரையப்பட்டு பின்னர் அவை சிவகாசி காலெண்டராக மாறி, பின்னர் நாம் காணும் இந்து மத தெய்வங்களாக கண்ணாடி பிரேமுக்குள் நுழைந்த கதையை அவர் விவரித்தது நினைவுக்கு வருகிறது. அவர் பேச ஆரம்பித்தால் அப்படியே நாம் அவரது நினைவுகளைப் பின்தொடர்ந்து திராவிட இயக்கத்தின் வரலாற்றுக் காலத்துக்குள் சென்று விடுவோம்.
பிறப்பால் அவர் ஒரு பார்ப்பனர் என்பது கூட பலருக்கு அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் அதன் சுவடு கூட தெரியாமல் உண்மையாக வாழ்ந்த சுயமரியாதை இயக்கத்தின் அறிவாளி அவர். அவரது எழுத்துக்களை நக்கீரன் பதிப்பகம் பல நூல்களாக வெளியிட்டிருக்கிறது. அவரது தொடர் நக்கீரனில் வாரம் இருமுறை வருவது நின்று போய் ஒரு முறை என்று ஆனது. ஏனென்று கேட்ட போது படிப்பவர்களின் வரவேற்பு இன்மை என்று அவர் மிகவும் எதார்த்தமாக குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது.
சின்னக்குத்தூசியை பார்க்க வருபவர்கள் அனைவரும் “முன்னொரு காலத்தில் நல்ல அரசியல் இருந்தது” என்பன போன்ற மலரும் நினைவுகளையே பகிர்ந்து கொண்டார்கள். ஆனால் நான் அவருடன் தீவிரமாக விவாதம் செய்திருக்கிறேன். பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தது வரையிலான பல விசயங்களில் தி.மு.க சந்தர்ப்பவாத, பிழைப்புவாதக் கட்சியாக சீரழிந்ததை அவருடன் பேசியிருக்கிறேன். பேசி பலனில்லை என்றபோது நிறுத்தியிருக்கிறேன்.
அந்த விவாதங்களில் சின்னக்குத்தூசி தெரிவித்த இறுதிக் கருத்து என்னவென்றால், ” தி.மு.க போன்ற கட்சிகள் மக்கள் திரள் அரசியலில்(தேர்தல்) இருப்பதால் எந்த விசயத்தையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரம் கருதியோ, தூய கொள்கை காரணமாகவோ பேசிவிட முடியாது. மக்களுக்கு பொறுப்பான கட்சி என்பதால் சில விசயங்களில் நீக்கு போக்காகத்தான் இருக்க முடியும். அதே நேரம் ம.க.இ.க போன்ற இயக்கங்கள் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா, இல்லையா என்று கவலைப்படுவதில்லை (தேர்தல் புறக்கணிப்பு). எனவே சமரசமில்லாமல் தங்களது கொள்கைகளை பேசிக் கொண்டிருக்கிறார்கள். மாஸ் பொலிட்டிக்ஸ் என்று போனால் தி.மு.க மாதிரி தான் இயங்க முடியும்.” இதுதான் அவர் கருத்து.
இந்தக் கருத்து சின்னக்குத்தூசியின் கருத்து மட்டுமல்ல, போலிக் கம்யூனிஸ்டுகள், தலித் இயக்கத் தலைவர்கள் பலரும் தெரிவிக்கும் ஒன்றுதான். முக்கியமாக சந்தர்ப்பவாத அரசியல் அனைத்தும் இத்தகைய ‘கொள்கை’ விளக்கத்தில் முடிவதை பலமுறை பார்த்திருக்கிறேன்.
சின்னக்குத்தூசியிடம் இந்த கருத்தை குறிப்பாகவே விவாதித்திருக்கிறேன். “இந்துமதவெறி என்ற பதத்தைக்கூட தி.மு.க பயன்படுத்தாதற்கு காரணம் தேர்தலில் ‘இந்துக்கள்’ ஓட்டு போய்விடும் என்பது மட்டுமல்ல, இந்து வெறி தேவர் வெறி என்று மதம் சாதியின் பெயர் குறிப்பிட்டு பேசினால் திமுகவுக்கு உள்ளேயே பிரச்சினை ஏற்படும். மக்கள் மத்தியில் பிரச்சினையாகும் என்பது அடுத்த விசயம்தான். இந்துமதவெறி பாசிசம் குறித்த ம.க.இ.க வின் பிரச்சாரம் ‘இந்துக்களிடம்’ தான் செய்யப்படுகிறது. அதற்கு ‘இந்துக்கள்’ தான் ஆதரவும் நிதியும் அளிக்கின்றனர். மாஸ் பாலிடிக்ஸ் என்ற பெயரில் தமது சொந்த சந்தர்ப்பவாதத்துக்கு மக்களைப் பொறுப்பாக்க கூடாது” என்று விவாதித்திருக்கிறேன்.
சின்னக்குத்தூசி இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாதவரல்ல. ஆனால் அப்படிப் புரிந்து கொள்ள விடாமல் திமுக பாசத்தையும் விஞ்சிய ஒரு கலைஞர் பாசம் அவர் கண்ணை மறைத்தது. தி.மு.கவின் சந்தர்ப்பவாதங்களுக்கெல்லாம் தான் சப்பைக்கட்டுவது, நடுநிலையாளர்களிடம் கூட வெறுப்புணர்வை தோற்றுவிக்கிறது என்று தெரிந்த போதிலும், அவரால் அதிலிருந்து விடுபட முடியவில்லை.
திராவிட இயக்கத்திலும் சரி கம்யூனிஸ்டு இயக்கத்திலும் சரி, இலட்சியத்தின் பால் மதிப்பு கொண்ட முதியவர்கள் சிலர் இருக்கின்றார்கள். தம்மளவில் நேர்மையாக வாழக்கூடிய அவர்கள், “கல்லானாலும் புல்லானாலும் இந்தக் கட்சிதான்” என்று ஒரு வகை கற்பு நிலையைப் பேணுகிறார்கள். தமது இலட்சியத்தில் கொண்டிருக்கும் பற்றுறுதி குறித்த மனநிறைவு மட்டுமே இவர்களது வாழ்க்கைக்கு ஒரு வகையில் அர்த்தம் தருகிறது. தனது கட்சியும் அதன் தலைவரும் கண் முன்னே சீரழியும் காட்சி அந்த அர்த்தத்தை அரித்துத் தின்கிறது.
திமுக வின் சமீபத்திய தேர்தல் தோல்வி கருணாநிதிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மட்டுமல்ல, சின்னக்குத்தூசிக்கும் அது ஒரு தனிப்பட்ட துயரமாகவே இருந்திருக்கும். கருணாநிதி குடும்பத்தினரின் துயரத்திற்கு “பொருளாயத” அடிப்படை உண்டு. சின்னக்குத்தூசியின் துயரத்துக்கு கருத்தியலைத் தவிர வேறு எந்த அடிப்படையும் கிடையாது.
சின்னக்குத்தூசியின் மறைவு நம்மிடம் ஏற்படுத்தும் துயரமும் அத்தகையதுதான். பார்ப்பனிய எதிர்ப்பு, சுயமரியாதை உணர்வு, பகுத்தறிவு என்பன போன்ற நேர்மறை அம்சங்கள் திராவிட இயக்கத்திடமிருந்து ஏற்கெனவே விடைபெற்று விட்ட நிலையில், சின்னக்குத்தூசியும் விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.
அவரை இழந்ததால் வாடுவதற்கு அவருக்கு ஒரு குடும்பம் இல்லை. அவரது இழப்புக்காக வாடும் நிலையில் திமுகவும் இல்லை. நாம் வாடுகிறோம். அவ்வாறு உண்மையில் வாடுபவர்களுடன் நமது துயரத்தைப் பகிர்ந்து கொள்கிறோம்.
________________________________
வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]
இன அழிப்பு போர்க்குற்றவாளி ராஜபக்சேவைத் தண்டிக்கவும், இனப்படுகொலைக்கு துணைநின்ற மன்மோகன் அரசை திரைகிழிக்கவும், ஈழமக்களது சுயநிர்ணய உரிமைக்கு ஆதரவாகவும் மக்கள் கலை இலக்கியக் கழகமும் அதன் தோழமை அமைப்புகளும் மே 18 அன்று ஆர்பாட்டம் நடத்தினர்.
படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்
சென்னை
சென்னையில் சைதை பனகல் மாளிகை முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளும், கூடவே சிறுவர்களும், பெண்களும் ஏராளமாகப் பங்குபற்றினர்.
திருச்சி
திருச்சியில் ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் சார்பாக கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய ஆர்ப்பாட்டம் புத்தூர் நாலு ரோடு பகுதியில் நடைபெற்றது.
கோவை
கோவையில் புஜதொமு தோழர் விளவை ராமசாமி தலைமையில் ம.க.இ.க தோழர் மணிவண்ணன் உரையாற்ற மே 18 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் போரை நடத்திய உலக நாடுகளைப் பற்றியும், ராஜீவ் சாகாவிடினும் தரகுமுதலாளிகளுக்காக இந்தப் போர் நடைபெற்றே தீரும் என்பதை விளக்கியும், உள்நாட்டில் இந்தியா தன் மக்கள் மீதே முதலாளிகளுக்கு ஆதரவாக தொடுத்திருக்கும் போர்கள் பற்றியும் விளக்கி தோழர்கள் உரையாற்றினர்.
தர்மபுரி
தருமபுரியில் விவிமு தோழர்கள் காலை 11 மணிக்கு ராஜகோபால் பூங்கா அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சிவகங்கை
போர்க்குற்றவாளியான ராஜபக்ஷே மற்றும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரைத் தண்டிக்கக் கோரும் ஆர்ப்பாட்டம் மே 18 அன்று சிவகங்கை அரண்மனை வாயிலின் முன் நடைபெற்றது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் இரண்டாமாண்டு நிறைவை ஒட்டி நடைபெற்ற இவ்வார்ப்பாட்டத்தில் ம.க.இ.க வைச் சார்ந்த தோழர் மயில்வாகனன் உரையாற்றினார். புஜதொமு தோழர் ஆனந்த் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சி.பி.ஐ என்றழைக்கப்படும் மத்தியப் புலனாய்வுத் துறை பற்றி நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. ஊர் நாட்டில் ஓட்டுக் கட்சித் தலைவர்கள் வீட்டிலிருந்து காணாமல் போன ஜிம்மியில் ஆரம்பித்து லோக்கல் போலீசால் ‘கண்டு’ பிடிக்க முடியாத கோழி களவாணி வரை துப்புத் துலக்கிக் கண்டு பிடிக்கும் சூராதி சூரர்களாக இவர்களை ஊடகங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். கருணாநிதி வீட்டில் சி.பி.ஐ விசாரணை ரெய்டு என்றும் ஏதோ இந்த சூரப்புலிகளைப் பார்த்து கருணாநிதி குடும்பமே நடுநடுங்கி வீட்டின் மூலையில் குந்த வைத்து உட்கார்ந்திருப்பது போல தினமலர் அடிக்கடி குதூகலிப்பதையும் கூட நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
தமிழ்த் திரையுலகின் தீவிரவாத ஒழிப்புப் பிரிவின் சூப்பர் கமாண்டோவான கேப்டன் விஜயகாந்த் பல படங்களில் டில்லி சி.பி.ஐ அதிகாரியாகத் தோன்றி பாகிஸ்தான் தீவிரவாதியிடம் தங்கத் தமிழில் லெச்சர் அடித்தே டயர்டாக்கி மடக்கிப் பிடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். மலையாளத் திரைப்படங்களிலும் கூட மம்மூட்டி மோகன்லால் வகையறாக்கள் சி.பி.ஐ அதிகாரிகளாகத் தோன்றி உள்ளூர் போலீசால் கண்டே பிடிக்கமுடியாத பல்வேறு சிக்கலான வழக்குகளைத் தீர்த்துக் கொடுத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன் ஏதோ கோழியோ ஆடோ களவு போன மேட்டரில் சி.பி.ஐ விசாரணை கோரி தொடுக்கப்பட்ட ஒரு வழக்கில் “அட விடுங்கப்பா… இவங்க எத்தனை ஊர் பஞ்சாயத்தைத் தான் தீர்க்க முடியும்” என்று சி.பி.ஐயின் மேல் கருணையோடு ஒரு நீதிபதி தீர்ப்பு கூட வழங்கியிருந்தார்.
இப்படியாக சி.பி.ஐ பற்றிய ஒரு பயங்கரமான இமேஜும், அவர்களின் விசாரணையின் மேல் மக்களிடையே ஒரு நம்பிக்கையையும் பல ஆண்டுகளாகவே திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. எதுக்கு இத்தனை பில்டப் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்படி ஊடகங்களாலும் சினிமா உலகத்தாலும் ஷெர்லக் ஹோம்சுக்கு இணையான துப்பறிவாளர்களாக ஜாக்கி வைத்து தூக்கிப் பிடிக்கப்பட்ட சி.பி.ஐ, சமீப நாட்களாக மக்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அல்லாமல் எதார்த்தத்தில் சீரியஸான காமெடி பீஸ்களாகத் தான் இருக்கிறார்கள் என்கிற உண்மை இப்போது அம்பலமாகியிருக்கிறது.
ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன கதை!
கிம் டேவி, புரூலியா, பீட்டர் ப்ளீச், ஆனந்த மார்க்கம் போன்ற பெயர்களை நீங்கள் மறந்திருக்கலாம்; எனவே ஒரு சிறிய நினைவூட்டல். 1995-ம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் மேற்குவங்க மாநிலம் புரூலியா மாவட்டத்தில் திடீர் என்று ஒரு மர்ம விமானத்தில் வந்த சிலர் ஆயுத மூட்டைகளைப் போட்டனர். அப்போது அது தேசிய அளவில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்த சமயத்தில் அம்மாநிலத்தில் அதிகாரத்திலிருந்த சி.பி.எம் கட்சியை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த ஆனந்த மார்க்கம் என்கிற தீவிரவாத சாமியார் கும்பலுக்குத் தான் இந்த ஆயுத மூட்டைகள் போடப்பட்டதாக சொல்லப்பட்டது. பின்னர் ஆயுதத்தைப் போட்ட விமானம் திரும்பும் வழியில் மடக்கிய சி.பி.ஐ அதிகாரிகள், அதில் பயணம் செய்த விமானக் குழுவினரையும் ஆயுத வியாபாரி பீட்டர் ப்லீச் மற்றும் ஆயுதக் கடத்தலின் சூத்ரதாரியான நீல்ஸ் க்ரிஸ்டியன் நீல்ஸன் என்கிற கிம் டேவியையும் கைது செய்தது.
கைது செய்யப்பட்டவர்களில் கிம் டேவி ‘மர்மமான’ முறையில் தப்பியோடி விட்டான் என்று சொன்ன சி.பி.ஐ, அவனைத் தேடி உலகெல்லாம் ஆட்களை அனுப்பிக் கொண்டிருந்தது. சரி. அடுத்து கையிலிருக்கும் பீட்டர் ப்ளீச்சையாவது விசாரித்து தண்டித்திருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கலாம் – மன்னிக்கவும். அவருக்கு ஜனாதிபதியின் மன்னிப்பை வாங்கிக் கொடுத்து பத்திரமாக வழியனுப்பி வைத்தது.
இதற்கிடையே இப்போது திடீர் ஞானோதயம் பெற்று டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் ‘தலைமறைவாக’ இருக்கும் கிம் டேவியைப் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக உதார் காட்ட ஆரம்பித்தது சி.பி.ஐ. இதைக் கேள்விப்பட்ட கிம் டேவி, கடந்த மாதம் இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் தோன்றி, தான் மறைந்து வாழவில்லையென்றும், பல ஆண்டுகளாக கோபன்ஹேகனில் தான் வாழ்ந்து வருவதாகவும், அங்கே பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துக் கொண்டும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொண்டும் வெளிப்படையாகவே செயல்பட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தான் கோபன் ஹேகனில் இருப்பது சி.பி.ஐக்குத் தெரியும் என்றும் அப்படியிருந்தும், சி.பி.ஐ அதிகாரிகள் இந்திய மக்களின் வரிப்பணத்தில் தன்னைத் ‘தேடி’ இத்தனை ஆண்டுகளாக உலகச் சுற்றுலா போய்க் கொண்டிருந்தாரத்கள் என்று இந்திய துப்பறியும் புலிகளின் டவுசரைக் கிழித்தார்.
இன்னும் ஒரு படி மேலே போய், தான் ஒன்றும் தப்பிக்கவில்லையென்றும், தன்னை பாதுகாப்பாக நேபாள எல்லைக்கு அழைத்துச் சென்று வழியனுப்பி வைத்ததே சி.பி.ஐ தான் என்றும் உண்மையை போட்டு உடைத்தார். ஏனெனில் அப்போது மத்தியிலிருந்த காங்கிரசு அரசு மேற்கு வங்கத்திலிருக்கும் சி.பி.எம் அரசைக் கலைப்பதற்கு ஒரு முகாந்திரம் வேண்டுமென்று, திட்டமிட்டே இந்த ஆயுதக் கடத்தலை நடத்தியதாகவும், அவர்கள் எதிர்பார்த்தது போல் நடவாமல் மொத்த திட்டமும் சொதப்பலாகி விட்டதால், தன்னை நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரிக்க பயந்து கொண்டு தான் தன்னை பாதுகாப்பாக தப்ப விட்டனர் என்றும் சொல்கிறார்.
இதற்கு மேல் இவனை விட்டால் மிஞ்சியிருக்கும் கோவணத்தையும் உருவி விடுவான் என்று முடிவு கட்டிய சி.பி.ஐ, உடனடியாக கிம் டேவியை டென்மார்க்கிலிருந்து கைது செய்து அழைத்து வர ஒரு குழுவை அனுப்புகிறது. உடனே உங்களுக்கு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு வரும் விஜயகாந்த் நினைவுக்கு வரலாம் – முதலில் அந்தக் கற்பனைகளை எல்லாம் ரப்பர் வைத்து அழித்து விடுங்கள். இங்கேயிருந்து விமானம் ஏறி இன்னொரு நாட்டுக்கு பயங்கரமான தீவிரவாதியைப் பிடித்து வரப் போன சூரப்புலிகள் போகும் போது அதற்குத் தேவையான வாரன்டை எடுத்துப் போக ‘மறந்து’ விட்டார்களாம். ஏதோ ஹால் டிக்கட்டை மறந்து விட்டு பரீட்சைக்குப் போன அப்பாவி மாணவன் போல அங்கே டென்மார்க் அதிகாரிகள் முன் பல்லைக் காட்டிக் கொண்டும் பின் மண்டையைச் சொறிந்து கொண்டும் இப்போது நின்று கொண்டிருக்கிறார்கள்.
இதுக்குப் பேசாமல் விஜயகாந்தையே அனுப்பியிருக்கலாம். டென்மார்க் காவல் துறையினரிடம் தமிழில் வாதாடி தீவிரவாதியை மட்டுமல்ல எக்ஸ்ட்ரா பிட்டிங்காக அந்த நாட்டு பிரதமரையே கூட தூக்கி வந்திருப்பார். இப்ப பாருங்க வட போச்சு.
ஊரெல்லாம் தேடிவிட்டு தன் தொப்பைக்குக் கீழே குனிந்து பார்க்க மறந்த கதை
சமீபத்தில் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட உடன், பாகிஸ்தானில் தான் உலகத்துத் தீவிரவாதிகளெல்லாம் இருப்பது போலவும் ஒரு சீன் போட்டது இந்திய வெளியுறவுத்துறை. இதற்காக பாகிஸ்தானில் பதுங்கிக் கிடக்கும் ‘அதிபயங்கரமான ஐம்பது தீவிரவாதிகள்’ பட்டியல் ஒன்றைத் தயாரித்த உள்துறை அமைச்சகம், அதைப் பாகிஸ்தான் அரசிடம் கொடுத்து இவர்களைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டது. அதைத் தொடர்ந்து களத்திலிறங்கிய இந்திய முதலாளித்துவ ஊடகங்கள், தமது பஜனையை ஆரம்பித்து சிறப்பாக நடத்தி வந்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகச் சொல்லப்பட்ட மேற்படி தீவிரவாதிகள் பட்டியலில் இருக்கும் வாஜுல் காமர் கான் என்பவர், மும்பையின் அருகே உள்ள தானேவில் தான் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார் என்கிற உண்மை ஊடகங்களில் அம்பலமானது. உடனே இதற்கு விளக்கமளித்த மத்திய உள்துறை அமைச்சர் செட்டிநாட்டுச் சிதம்பரம், இது ஏதோ சின்னத் தவறு தான் என்றும், தெரியாமல் நடந்து விட்ட இத்தவறைப் பற்றி தீவிரமாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களைத் தண்டிப்பதாகவும், நடந்ததற்குத் தானே பொறுப்பேற்றுக் கொள்வதாகவும் அறிவித்தார்.
அவர் சொல்லி வாய் மூடவில்லை. அதற்குள் அதே பட்டியலில் இருக்கும் இன்னொரு தீவிரவாதியான பெரோஸ் அப்துல் ரஷீத் கானும் இந்தியாவில் தான் இருக்கிறார் என்கிற உண்மை அம்பலமாகிறது. முதல் நபராவது ஒளிந்து வாழும் நபர். இரண்டாவது நபரோ ஏற்கனவே இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருப்பவர்.
ஏற்கனவே கைதான பெரோஸ் கான் மீது சர்வதேச போலீஸில் சொல்லி ஒரு பிடி வாரண்ட்டையும் வாங்கி வைத்துக் கொண்டு உலகமெல்லாம் தேடியலைந்துள்ளது சி.பி.ஐ. அது மட்டுமல்லாமல், இந்தியச் சிறையிலிருக்கும் இந்த நபர் பாகிஸ்தானில் ‘ஒளிந்து’ கொண்டிருப்பதாகவும், பாகிஸ்தான் அரசு இந்தத் தீவிரவாதியைப் பிடிக்க ஒத்துழைக்கவில்லை என்றும் எனவே பாகிஸ்தான் தீவிரவாத நாடு என்றும் தீவிரமாக பிரச்சாரமும் செய்து வந்தது.
தேடப்படுவது யார் பிடிபட்டது யார் என்கிற சாதாரண விவரத்தைக் கூட சரிபார்க்கத் துப்பில்லாத இந்த விசாரணை அமைப்பு தான் ஸ்பெக்ட்ரம், ஆதர்ஷ் உள்ளிட்ட பல்வேறு ஊழல் முறைகேடுகளை விசாரித்து வருகிறது என்பதை வாசர்களுக்கு நினைவூட்டுகிறோம். தீவிரமான போலீஸ் பயிற்சி, ஒற்றறிவதிலும், உளவுத் தகவல்களைச் சேகரிப்பதிலும், விசாரணை முறைகளிலும் உலகத்தரமான பயிற்சி, என்று சகல வகைகளிலும் தேர்ச்சி பெற்ற தொழில் முறை நிறுவனமே இந்த லட்சணத்தில் இருக்கும் போது, அண்ணா ஹசாரே உருவாக்க நினைக்கும் ஜன் லோக்பால் விசாரணை அமைப்பு எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை வாசகர்கள் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.
சி.பி.ஐ, ஐ.பி, என்.ஐ.ஏ உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகளும் உளவுப் பிரிவும் உண்மையில் குற்றத்தடுப்பு, உண்மையைக் கண்டறிதல் என்கிற மக்கள் நல நோக்குக்காக இல்லாமல் வெறும் ஆளும் வர்க்க சேவைக்கென்றே வளர்த்தெடுக்கப்பட்டிருப்பதன் விளைவு தான் இப்போதைய இந்த அவமானங்களுக்குக் காரணம். ஃபோபார்ஸ் முதல் ரிலையன்சு வரை பல்வேறு ஊழல் வழக்குகளில் குற்றவாளிகளையும், முதலாளிகளையும் காப்பாற்றிய நிறுவனம்தான் இந்த சி.பி.ஐ.
ஆட்சிக்கு எதிரானவர்களைக் கண்காணிப்பது, மிரட்டுவது என்பதற்காகவே பயன்படுத்தப்படும் இந்தக் கருவிகள், என்ன தான் பயிற்சியளிக்கப்பட்டாலும் கடைசியில் இப்படி காமெடிப் பீஸுகளாக சீரழிந்து போவது தவிர்க்க முடியாது என்பதே நிதர்சனம். லோக்கல் போலீசு சரியில்லை, சி.பி.ஐதான் உலகத்தரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் மிடில்கிளாஸ் மாதவன்கள் இனியாவது உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்ளட்டும்.
சமகால தமிழ் சினிமாவின் முன்னுரிமை என்பது வெகுமக்கள் ‘ரசனையை’ அடிப்படையாகக் கொண்டது. ’மக்கள் எதை விரும்புறாங்களோ, அதைத்தான் நாங்க சினிமாவில் காட்டுறோம்’ என்பது சினிமாக்காரர்களின் டெம்ப்ளேட் ஸ்டேட்மெண்ட். ’சமூகத்தின் விருப்ப ரசனையை நாங்கள் காட்சிப் படுத்துகிறோம்’ எனச் சொல்லும் இவர்கள், அதில் எந்த அளவுக்கு நேர்மையோடு இருக்கிறார்கள் என்பது ஒரு பக்கம். அன்றாடம் நாம் காணும் புறவயமான உண்மைகளை, சமூக யதார்த்தங்களை திரையில் கொண்டு வருகிறார்களா என்றால் பெரும்பாலும் இல்லை. தற்போது வெளியாகி தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கும் ’வானம்’ திரைப்படம், மேற்கண்ட புள்ளிகளில் இருந்து விலகி, சமகால இந்தியாவை அதன் அசல் முகங்களோடு அணுகுகிறது.
ஐந்து வகை இந்தியா… ’வானம்’ கதையை இப்படி சுருக்கமாக மதிப்பிடலாம். ஆந்திரா, பெங்களூரூ, கோவை, தூத்துக்குடி, சென்னையின் சேரி என அசலான ஐந்து வகை இந்தியாவிலிருந்து பல்வேறு பிரச்சினைகளுக்காக ஐந்து வகையான பாத்திரங்கள் சென்னையை நோக்கி வருகிறார்கள். விபச்சாரி, யுப்பி வகை மேல்தட்டு இளைஞன், குப்பத்து ஏழை இளைஞன், வறுமையில் வாடும் நெசவாளி, நேர்மையாக வாழும் நடுத்தர வரக்க முசுலீம் என்று அந்த ஐந்து பாத்திரங்களும் சமகால இந்தியாவின் கதைகளை விவரிக்கின்றன.ஒரு திரைக்கதைக்குள் ஐந்து கதைகளைத் தனித்தனியே விவரித்து, அதன் இயல்பில் எதிர்பாராப் புள்ளி ஒன்றில் ஐந்தையும் சந்திக்க வைத்திருக்கும் இந்த திரைக்கதை யுத்தி வடிவத்தில் மட்டுமல்ல, அது எடுத்துக் கொண்ட பேசு பொருளுக்காகவும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது. தெலுங்கில் ‘வேதம்’ என்னும் பெயரில் வெளியான இந்த படத்தை இயக்கிய க்ரிஷ் என்பவரே தமிழிலும் இயக்கியிருக்கிறார்.
நகர்ப்புற குப்பத்து இளைஞனாக வரும் சிம்புவின் பாத்திரப் படைப்பு ஒரு துல்லியமான சித்திரம். குப்பத்தில் பிறந்தாலும் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சிம்புவுக்கு கோடீஸ்வர பெண்ணுடன் காதல் ஏற்படுகிறது. அவள், புத்தாண்டில் ஒரு பார்ட்டிக்கு அழைத்துப் போகச் சொல்கிறாள். பார்ட்டிக்குச் செல்வதற்கு ஒரு இரவுக்கு 40 ஆயிரம் கட்டணம். இந்தப் பணத்தை ஏதேனும் ஒரு வழியில் சம்பாதிக்க வேண்டும். சாலையில் நடந்து செல்லும் பெண்களின் கழுத்தில் இருந்து செயின் அறுப்பது, திருடுவது என எந்த எல்லைக்கும் போகிறார் சிம்பு.
இன்றைய நகர்ப்புறத்து இளைஞர்களின் வாழ்க்கை அவர்கள் ஏழைகளாகவே இருந்தாலும், நுகர்வு கலாசாரத்துடன் பின்னி பிணைந்திருக்கிறது. அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும், வாழ விரும்பும் வாழ்க்கைக்குமான தொலைவு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்த மனப்போராட்டத்தில் தன்னை சூழ்ந்திருக்கும் துன்ப துயரங்களை போக்கும் வழிமுறைகளை ஆராயாமல், எதை செய்தேனும் நவீன வாழ்வின் இன்பங்களை சுகிக்க வேண்டும் எனும் வேட்கை இளைஞர்களின் மனங்களில் விதைக்கப்படுகிறது. அதற்காக அவர்கள் எந்த எல்லைக்குச் செல்லவும் தயங்குவதில்லை.
இதை, செயின் அறுக்கும் சிம்புவின் பாத்திரத்தோடு நேரடியாக பொருத்திப் புரிந்துகொள்வது ஒரு பக்கம்.. மறுவளமாக பார்த்தால் உழைப்பு, மேலும் உழைப்பு, மேலும் மேலும் உழைப்பு என தன்னைத்தானே வருத்திக்கொண்டு உழைத்து, தான் ஆசைப்பட்ட சுகவாழ்வை அடைவது இன்னொரு பக்கம். தனது உழைப்புக்கும், சம்பளத்துக்குமான இடைவெளி அதிகமாய் இருப்பதைப் பற்றியும், தான் சுரண்டப்படுவது பற்றியும் இவர்கள் யோசிப்பதில்லை. மாறாக, மேற்கொண்டு ஓவர்டைம் செய்து கூடுதலாக சில ஆயிரம் சம்பாதித்துவிட முடியாதா என்றுதான் தேடித் திரிகின்றனர். இப்படி நுகர்வுக் கலாசாரம் தின்று துப்பிய சக்கைகளாய் மாற்றப்பட்டிருக்கும் இன்றைய நகர்ப்புறத்து அடித்தட்டு இளைஞர்களின் பிரதிநிதிதான் சிம்பு.
பொதுவாக தமிழ் சினிமாவில் குப்பத்து இளைஞர்கள் என்றால் அவர்களை அரசியல்வாதிகளின் அடியாட்களாக மட்டுமே சித்தரிக்கும் போக்கில் இருந்தும் இப்படம் விலகி நிற்கிறது. உதிரிப் பாட்டாளி வர்க்கத்தின் விட்டேத்தியான இளைஞர்களாக சிம்புவும், சந்தானமும் வருகிறார்கள். இவர்கள்தான் இன்றைய சேரிகளின் யதார்த்தம் என்பதை யதார்த்தமாகவே காட்டியிருக்கிறார்கள். அவர்கள் பேசும் பல வசனங்கள் மிக கூர்மையாகவும், இயல்போடும் இருக்கின்றன. ‘சாவு நல்லாயிருக்கனும்னாக் கூட பணம் வேணும் போலருக்குதே’ என்பதில் தொடங்கி, ‘பணக்காரன்னா சிரிக்க மாட்டான், கை தட்ட மாட்டான், விசில் அடிக்க மாட்டான்’ என்பது போன்ற பல இடங்கள் குறிப்பிடத்தக்கவை.
சிம்புவுக்கும் பணக்காரப் பெண்ணுக்குமான காதல் என்பதும் வழக்கமான தமிழ் சினிமாவின் தன்மையில் இருந்து முற்றிலும் வேறுபட்டதே. காதலுக்காக எதையும் செய்யலாம் என புனிதப்படுத்தப்பட்டிருக்கும் சூழலில், ஒரு ஏழை இளைஞனின் கோணத்தில் இருந்து பணக்காரப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என கணக்குப் போடுவதும், கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கும் அந்தப் பெண் பார்ட்டிக்கு பாஸ் வாங்கும் 40 ஆயிரம் பணத்துக்கு சிம்புவைவே முழுக்க டார்ச்சர் செய்வதும்… காதல் என்பது காரியவாதமாக மாறிவிட்டிருப்பதையே நினைவூட்டுகிறது. தமிழ் சினிமா சித்தரிக்கும் ‘புனிதக்’ காதலில் இருந்து இந்தக் காதல் நிச்சயம் மாறுபட்டிருக்கிறது.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் சொந்த ரசனையை மட்டுமே பெரிதெனப் பேசித் திரியும் பரத் பாத்திரம் மேல்தட்டு இளைஞர்களின் அசல் பிம்பம். பல பணக்கார நண்பர்கள் தங்களின் மிகப்பெரிய சோகமாக சொல்லும் விஷயங்களைக் கேட்டால் நமக்கு சிரிப்பு வரும். ‘நான் நாலு வருஷம் ஹாஸ்டலில் தங்கியிருந்தேன். அப்போ நானே துணி துவைப்பேன். நல்ல ஹோட்டலைக் கண்டுபிடிச்சு சாப்பிடுறதே பெரிய டார்ச்சரா இருக்கும். ஆனால், நான் அவ்வளவு கஷ்டப்பட்டது எங்க வீட்டுக்குக் கொஞ்சம் கூடத் தெரியாது.’ என்று சொன்னார் பணக்கார பிரபலம் ஒருவர். துணி உடுத்துவதும், உணவு உண்ணுவதுமே கனவாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் வாழும் நாட்டில் அந்த வசதிகளை அனுபவிப்பதில் ஏற்படும் சிறிய வசதிக் குறைபாடுதான் அவர்கள் வாழ்வின் மிகப்பெரிய சோகம் என்றால்… என்ன சொல்வது?
பரத் அப்படிப்பட்ட இளைஞர்களில் ஒருவர். இறந்து விட்ட தந்தையைப் போல இராணுவத்தில் சேருவதற்கு தாய் வற்புறுத்துவதை அவர் மறுக்கிறார். இசைதான் தனது எதிர்காலம் என்று கூறுகிறார். ஓர் இசை நிகழ்ச்சிக்காக பெங்களூரில் இருந்து தன் குழுவுடன் சென்னையை நோக்கி காரில் வரும் பரத், லாரி டிரைவர் சிங் ஒருவரை ஓவர்டேக் செய்யும் முயற்சியில் ஒரு விபத்தை ஏற்படுத்துகிறார். பலர் அடிபட்டு சாலையில் விழ, அதைப்பற்றி கவலையேப்படாமல் காரை ஓட்டிக் கடந்துபோகிறார். ’காப்பாற்ற வேண்டாமா?’ என்கிறாள் கூடவே வரும் தோழி ‘அதுக்கெல்லாம் ஆள் இருப்பாங்க. பார்த்துப்பாங்க’ என்கிறார் பரத்.
தன்னால்தான் அந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது என்ற குற்ற உணர்வு கூட இல்லாமல், அடிபட்ட மனிதர்களை காப்பாற்ற வேண்டும் என்பதையே அலட்சியமாக கருதும் அவரது நடத்தைதான் பணக்கார இந்திய இளைஞர்களின் பொதுப் பண்பு. மும்பையிலோ, டெல்லியிலோ அதிநவீன பி.எம்.டபிள்யூ காரில் குடி போதையில் அதி வேகத்துடன் ஓட்டி பாதசாரிகளைக் கொல்லும் இளைஞர்களெல்லாம் வேறு எப்படி இருப்பார்கள்? ஜெசிகாலால் எனும் மது பரிமாறும் பெண்ணைக் கொன்ற மனுசர்மா எனும் அதிகார வர்க்கத்து இளைஞன் மிகச்சாதாரண விசயத்துக்காக கோபம் கொண்டு துப்பாக்கி எடுத்தவன். பரத்தின் இந்த சுபாவம் கண்டு அவனது தோழி வருத்தம் கொள்கிறாள்.
அதையே அவனிடமும் தெரிவிக்கிறாள். அவனிடம் ஏதோ கொஞ்சம் மியூசிக் சென்ஸ் இருக்கிறது என்றாலும் அவன் பாடும் போது உணர்ச்சியில் தோய்ந்து பாடுவதில்லை என்று கூறுகிறாள். அந்த உணர்ச்சியற்ற பாவனைக்கும், சக மனிதர்களது துக்கத்தை உணர்ச்சியற்று பாராமுகமாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதை அந்த அழகான காட்சி கவித்துவமாக உணர்த்துகிறது.
எந்த சிங் டிரைவரை முந்திச் சென்று பரத் விபத்தை ஏற்படுத்துகிறாரோ, அதே சிங்-தான் பிற்பாடு பரத்துக்கு காவி காலிகளால் பிரச்னை ஏற்படும்போது தைரியத்துடன் இறங்கி நின்று அவர்களை அடித்து விரட்டி பரத்தின் உயிரை காப்பாற்றுகிறார். இதில் குறிப்பாக பரத் – வேகா இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது ’ஃப்ரெண்ட்ஸா இருந்தா ராக்கி கட்டு. காதலர்கள்னா தாலியைக் கட்டு’ என பிரச்னை செய்கிறது இந்துத்துவ ரவுடிக் கும்பல். ’என்ன பாஸ் இதெல்லாம்?’ என அதிர்ச்சியாகும் பரத்தும், வேகாவும் முதல் முறையாக இப்படிப்பட்ட இந்துத்வ வன்முறையை எதிர் கொள்கின்றனர். இந்த அடாவடித்தனத்தை நிஜமாகவே வருடா வருடம் செய்யும் ஸ்ரீராம் சேனா, இந்து முன்னணி காலிகள் நம் நினைவுக்கு வருகிறார்கள். கர்நாடக எல்லையில் நடக்கும் அந்த சம்பவம் திரைக்கதையில் உண்மையென நம்புமளவு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது.
அந்த காவி ரவுடிகளின் வன்முறையை எதிர்த்துத் தாக்கி பரத்தையும் அவரது காதலியையும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த லாரி டிரைவர் சிங் காப்பாற்றுகிறார். அதன்மூலம் பரத்தின் சுயநலப் பண்பு கடும் குற்ற உணர்ச்சி கொள்கிறது. அதற்கு பின் ஒரு சில நிமிடங்களே வரும் பாடலில் முதன்முறையாக பரத் உணர்ச்சி பாவத்துடன் பாடுகிறார். பாடல் வரிகளோ சக மனிதன் துன்பம் கண்டு ஒரு துளி கண்ணீரையாவது சிந்தும் மனிதாபிமானத்தை குறிக்கிறது. பெங்களூரூ நட்சத்திர விடுதிகளில் ராக், பாப் டான்சில் படுவேகமாக கிதாரை மீட்டி கடுமையான முகபாவனையோடு பாடும் இல்லை கத்தும் பரத் இங்கே மென்மையான அசைவில் பாடல் வரிகளோடு தோய்ந்து பாடுகிறார். படத்தில் இது ஒரு கவித்துவமான காட்சி.
பாலியல் தொழிலாளியாக வரும் அனுஷ்காவின் பாத்திரமும், ஊரும் தமிழ்ச் சூழலுக்கு அந்நியமாக இருந்தாலும் காவல்துறையினருடன் அவர் பேசும் பல வசனங்கள், குறிப்பாக… ‘நாங்க டிரஸ்ஸை அவுத்துட்டு செய்யுறதை நீங்க டிரஸ்ஸைப் போட்டுக்கிட்டு செய்யுறீங்க’ போன்றவை கூர்மையானவை. ஆந்திரா எல்லையில் ஒரு விபச்சார கும்பலில் மாட்டிக் கொண்ட அனுஷ்காவும், அவரது தோழியான திருநங்கையும் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்னையில் தனியாக தொழில் நடத்த ரயிலேறுகிறார்கள். திருநங்கை ஒருவருக்கு ஹீரோயின் முத்தம் இடும் காட்சி அநேகமாக தமிழ் சினிமாவில் இது முதல்முறையாக இருக்கக்கூடும். இறுதிக் காட்சியில் இந்த தொழிலை விட்டுவிட்டு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம் என்று அவர்கள் மறைகிறார்கள்.
கிராமப்புறங்களில் வாழ வழியற்று கந்துவட்டிக்கு பணம் வாங்கி, அந்தக் கடனை அடைப்பதற்கு மகனை அடகு வைத்து, அவனை மீட்பதற்கு கிட்னியை விற்று… என விவரிக்கப்பட்டிருக்கும் சரண்யாவின் பாத்திரத்தைப் பார்த்து, ‘இப்படியெல்லாமா நடக்குது?’ என்று பலர் நினைக்கக்கூடும். இந்தக் கதையிலாவது சரண்யா, தனக்குத் தெரிந்து தன் கிட்னியை விற்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனைகள், பல அப்பாவி ஏழைகளிடம் அவர்களுக்கேத் தெரியாமல் கிட்னித் திருடிய கதைகளை நாம் படித்திருக்கிறோம். ’இந்தியா முன்னேறுகிறது, தொழில்வாய்ப்புகள் பெருகிக்கிடக்கின்றன’ என பிரசாரம் செய்யப்படும் இதே இந்தியாவில்தான் விவசாயம் பொய்த்துப்போய் வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் அதிகரிக்கிறது. சரண்யாவும் அவரது வயதான மாமனாரும் சென்னை வந்து கிட்னி விற்க முனையும் காட்சிகள் யதார்த்தமாகவும், ஏழ்மையில் அவலத்தை கூர்மையாகவும் காட்டுகின்றன.
‘வானம்’ படத்தின் மற்றொரு முக்கியமானதும், சிக்கலானதுமான பாத்திரம் பிரகாஷ்ராஜினுடையது. ’இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் உருவாதவதற்கான காரணமாக இருப்பது இந்துத் தீவிரவாதமே’ என்ற கருத்து முதல்முறையாக தமிழ்த் திரையில் மிக வெளிப்படையாகப் பேசப்படுகிறது. ஒரு சராசரி இஸ்லாமிய நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த பிரகாஷ்ராஜ் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தின் வேர்களையும், அது இஸ்லாமிய தீவிரவாதத்துக்கான காரண சக்தியாக எப்படி விளங்குகிறது என்பதையும் ஓர் எளிய கதையோட்டத்தில் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் க்ரிஷ்.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கும் தெரு வழியே கர்ப்பிணி மனைவியுடன் டூ-வீலரில் போகிறார் பிரகாஷ்ராஜ். இந்துத்துவ காலிகள் பிரகாஷ்ராஜின் மனைவியை வம்புக்கு இழுத்து அனைவரையும் அடித்து நொறுக்குகின்றனர். அவரது மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தை கலைந்துவிடுகிறது. இதில் தானும் அடிவாங்கி தன்னால் எதையும் செய்ய முடியாத பிரகாஷ்ராஜின் தம்பி, இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் ஒன்றில் சேர்கிறார்.. என்பதாகப் போகிறது பிரகாஷ்ராஜ் அத்தியாயத்தின் கதை.
3 வருடம் கழித்து தனது தம்பியைத்தேடி பிரகாஷ்ராஜூம் அவரது மனைவியும் சென்னை வருகிறார்கள். கோவையில் அவரை அடித்து நொறுக்கும் இந்துத்வ ஆதரவாளரான போலீஸ் ஒருவன் சென்னையில் அவரை தீவிரவாதியாக்கி கைது செய்கிறான். அப்பாவி முசுலீம்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதை பிரகாஷ்ராஜின் பாத்திரச் சித்தரிப்பு நேர்மையாக உணர்த்துகிறது.
பிரகாஷ்ராஜின் ஊர் கோயம்புத்தூர் என்பதில் தொடங்கும் அரசியல் மொத்த படத்திலும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் இந்த பாத்திரத்தின் மீது விமர்சனங்களை வைக்கும் சிலர், “இந்துக்கள் தங்களது ஊர்வலத்தின் இடையில் புகுந்த இஸ்லாமியர்களை மதவெறியோடு அடித்தார்கள். ஆனால், அதற்கு பழிவாங்கும் முஸ்லீம்களோ பல ஆயிரம் அப்பாவி மக்கள் ஒன்றுகூடும் மருத்துவமனையில் குண்டு வைக்கிறார்கள் என்று நிறுவுவதுதான் இந்த கதையின் அபாயகரமான அரசியல். அதாவது இந்துக்களுடையது மதவெறி ; இஸ்லாமியர்களுடையது தீவிரவாதம் என்றுதான் படம் சொல்கிறது” என்கிறார்கள்.
இதை நாம் ஒரு பகுதி அளவில் பரிசீலிக்க வேண்டும் என்றாலும் ஒட்டுமொத்த படத்தையும் பார்க்கும்போது இயக்குநருக்கு இப்படி நிறுவுவதற்கான அடிப்படைகள் இருப்பதாக தோன்றவில்லை. அதுபோலவே, பிரகாஷ்ராஜ் குடும்பம் மீது நிகழ்த்தப்படும் வன்முறையையும், இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்களின் எதிர்வன்முறையையும் இணை வைத்துப் பார்க்கத் தேவையில்லை என்றே கருதுகிறோம். ஏனெனில் கதையில் சொல்லப்பட்டிருக்கும் அம்சங்களின்படி, இந்துக்களின் தீவிரவாதம், ஒரு சமூக வன்முறையாகவும், முஸ்லீம்களின் எதிர்வன்முறை தனிப்பட்ட தீவிரவாதக் குழுக்களுடையதாகவுமே சித்தரிக்கப்படுகிறது. எனினும் இறுதிக்காட்சியில் சில தீவிர இசுலாமிய இளைஞர்கள் மருத்துவமனையில் இருக்கும் பொதுமக்களை காக்காய் குருவி போல சுட்டுக் கொல்வது பொருத்தமாக இல்லை. இயக்குநர் அதை மும்பை தாக்குதலிருந்து எடுத்திருக்கலாம் என்றாலும் அந்தக் களம் வேறு. கோவையிலிருந்து வரும் ஒரு முசுலீம் இளைஞனது பார்வையில் இப்படி நடந்ததாக காட்டுவது பொருத்தமாகவும் இல்லை, சரியாகவும் இல்லை.
’வானம்’ படத்தின் மிக முக்கிய அரசியலாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, போலீஸின் அயோக்கியத்தனங்களை அம்பலப்படுத்தி இருப்பதைத்தான். பிரகாஷ்ராஜின் கதையில் இந்திய இந்து மனநிலையின் கூட்டுவன்முறை மட்டும் சொல்லப்படவில்லை… அதற்கு இசைவான வகையில், இந்துத்துவத்தின் மொத்த அஜண்டாவையும் நிறைவேற்றித் தரும் கூலிப்படையாக இந்தியக் காவல்துறை எப்படி செயல்படுகிறது என்பதும் தெளிவாக விவரிக்கப்படுகிறது. இன்ஸ்பெக்டராக வரும் நபர் அப்படியே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து நேரடியாக கிளம்பி வந்தது போலவே இருக்கிறார். அதைப்போலவே அனுஷ்காவிடம் பணம் பிடுங்கும் இன்ஸ்பெக்டர் ராதாரவியின் பாத்திரம், அதே ராதாரவி பாத்திரம் சிம்புவிடம் பணம் பிடுங்குவது, மாமியிடம் போனில் பம்முவது… என அனைத்தும் நுணுக்கமான பதிவுகள்.
சில கதைக்களங்களின் அந்நியத்தன்மை, அவசியம் இல்லாத, ரசிக்கவும் முடியாத பாடல்கள், இழுத்தடிக்கப்படும் இறுதி மருத்துவமனைக் காட்சிகள் போன்றவற்றை விட, படத்தின் அபாயகரமான அம்சம் அதன் இறுதிக் காட்சிகள்தான். ஐந்து வகை இந்தியாவின் பிரச்னைகளை ஐந்து கதைகளாக சொல்லிக்கொண்டு வரும் இயக்குநர் கடைசியில் ஐந்தையும் ஒரு அரசியலற்ற வெறும் மனிதாபிமான செண்டிமெண்டில் இணைக்கிறார். ஐந்துக்குமான தீர்வாக செண்டிமெண்டையே முன் வைக்கிறார்.
அப்பாவியான தன்னை தீவிரவாதி போல சித்தரித்து கொடுமைபடுத்தும் இந்துத்வ இன்ஸ்பெக்டரை தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றுகிறார் பிரகாஷ்ராஜ். இதைப்பார்த்து மட்டும் அந்த ஆர்.எஸ்.எஸ் இன்ஸ்பெக்டர் திருந்துகிறார் என்றால் பொருள் என்ன? அப்பாவி முசுலீம்கள் அனைவரும் இப்படித்தான் இந்துமதவெறியர்களை திருத்த வேண்டுமென்றால் ஒவ்வொரு திருந்தலுக்கும் ஒரு சில முசுலீம்கள் சாகவேண்டுமோ? இந்து மதவெறி வெறும் மனிதாபிமானத்தால் மட்டும் திருத்தப்படும் ஒன்றல்ல. அது உழைக்கும் மக்களை அணிதிரட்டி வன்முறை மூலம் ஒழிக்கப்பட வேண்டிய கிருமி.
இதைத்தவிர இந்தப்படம் சமகாலத் தமிழ்ப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட முறையில் யதார்த்தமான கதைக் களங்களிலிருந்து பயணிக்கிறது. ஐந்து வகை இந்தியாவையும் காட்சிப்படுத்தியதிலிருந்து, கதையை கொண்டு போன விதத்திலும் சரி நாம் அசலான இந்தியாவைப் பார்க்கிறோம். அரசியல் களங்களை கதையாகக் கொண்டு அதை சுவராசியமான கதை சொல்லல் காட்சிகளின் மூலம் படமாக்கியிருக்கும் இயக்குநர் க்ரிஷ் உண்மையிலேயே ஆச்சரியமான இயக்குநர்தான். அவருக்கும், படக்குழுவினருக்கும் நமது வாழ்த்துக்கள்!
பிரித்தானியாவில் உழைக்கும் மக்கள் போராடிப்பெற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை அந்த நாட்டின் கூட்டரசாங்கம், ஒவ்வொன்றாக அழித்து வருவதற்கு எதிராக ஒவ்வொரு நாளும் எங்காவது ஒரு மூலையில் மக்கள் போராடுகிறார்கள். சுகாதார சேவை தனியார் மயமாக்கப்படு, மக்களின் உயிர் பொருளாதார நெருக்கடிக்குள் ஊசலாடுகிறது. உயர்கல்வி கற்றுக்கொள்ள இனிமேல் பணம்படைத்தவர்களால் தான் இயலும் என கூட்டரசாங்கம் கூச்சமின்றி ஒத்துக்கொள்கிறது.
பிரஞ்சு நாடு முதலாளித்துவப் புரட்சிக்கும், முதலாளித்துவ ஜனநாயக உருவாக்கத்திற்கும் முன்னுதாரணமாக முன்வைக்கப்படுகின்ற அரசு. வீரஞ்செறிந்த மக்கள் திரள் அமைப்புக்களின் போராட்டங்கள் அவர்களின் வாழ்வாதாரங்களை உறுதிப்படுத்தும் உரிமைகளை வென்றெடுக்க வழி செய்திருக்கின்றது. சீர்திருத்தப் போராட்டங்களாக முடிந்து போன இப்போராட்டங்கள், புரட்சியை நோக்கி வளர்த்தெடுக்கப்படவில்லை என்பதும், அதற்கான முன்நகர்வைத் தடுப்பதற்கு ஏகபோக அரசுகள் அழித்தொழித்த மனித உயிர்கள் ஆயிரமாயிரம் எனபதும் வேறானவை.
இன்று மக்கள் வென்றெடுத்த அடிப்படை உரிமைகள் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றன. சார்க்கோசியின்(பிரான்ஸ் அதிபர்) கோரப்பிடியில் மக்கள் இழந்துகொண்டிருப்பது அவர்களின் உழைப்பும் எதிர்காலமும்.
ஸ்பெயினில் அரச ஊழியர்களுக்கு இனிமேல் ஊதிய உயர்வு கிடையாது என அரசு அறிவித்திருக்கிறது. வேலையற்றோருக்கான உதவித் தொகை கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
கிரேக்கம், அயர்லாந்து போன்ற நாடுகளைத் தொடர்ந்து போர்ச்சுக்கல் அரசு மீள முடியாத கடன் நெருக்கடிக்கு உள்ளானது. உடனடித் தேவையாக 80 பில்லியன் யூரோக்கள் வழங்கப்படாவிட்டால் போர்ச்சுக்கல் நாடு நிலைகொள்ள முடியாது உருக்குலைந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அதாவது அதன் முதலாளித்துவப் பொருளாதார அமைப்பு அழிவின் விழிம்பிற்குள் தள்ளப்பட்டுவிடும்.
இதற்காக ஐரோப்பிய நாடுகளும் உலக நிதி நிறுவனமும் தமது உதவிக்கரங்களை போர்ச்சுக்கல்லுக்கு விரித்துள்ளன. அதாவது ஐரோப்பிய உழைக்கும் மக்களின் வரிப்பணமும், அவர்கள் வென்றெடுத்த வாழ்வாதரங்களும், மூன்றாமுலக நாடுகளில் வெளியக வியாபரம் என்ற பெயரில் சுரண்டப்படும் பணமும், உலகின் வளங்களை மனித உரிமையின் பெயரால் சுரண்டிச் சேகரிக்கும் பணமும் போர்ச்சுக்கல்லுக்கு வழங்கப்படும் 80 மில்லியன் யூரோக்களில் சோகமாய் மறைந்து கிடக்கிறது.
உலகின் பெரும்பகுதியான மக்கள் ஒரு நேர உணவிற்காக கையேந்தும் நிலை காணப்படும் நிலையில், அமெரிக்கத் தனியாதிக்கத்தால் சுரண்டப்படும் ஒரு பகுதியான 700 பில்லியன் டாலர்களை அமெரிக்க வங்கிகளையும் தனியார் உற்பத்தி நிறுவனங்களையும் காப்பாற்றுவதற்காகவும், சுரண்டல் அமைப்பை மறுசீரமைப்புச் செய்வதற்காகவும் அமரிக்க அரசு வழங்கியிருந்தது. “சட்ட ரீதியான” இதே பகற்கொள்ளை பிரித்தானியாவிலும், ஏனைய சில ஐரோப்பிய நாடுகளிலும் நடத்தி முடிக்கப்பட்டு இரண்டு வருட எல்லைக்குள் போர்ச்சுக்கல்லிற்கு மக்கள் பணம் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகிறது.
மில்லியன்களை பதுக்கி வைத்திருக்கும் பெரு முதலாளிகளின் எந்த வகையான பங்களிப்பும் இவ்வாறு தாரைவார்க்கப்படும் பணத்தில் வழங்க்கப்பட்டதில்லை. இலாபத்தை அதிகரிப்பதே (profit maximising) முதலாளித்துவத்தின் இருப்பிற்கு அடிப்படையானது என்பதால் பெரு முதலாளிகளின் இலாபம் குறைக்கப்படுமானால் முதலாளித்துவத்தின் இயக்கம் நிறுத்தப்படும். ஆக, உழைக்கும் மக்களிடம் ஒட்டச் சுரண்டுவதைத் தவிர வேறு வழிகள் அதிகார வர்க்கத்திற்கு கிடையாது.
எவ்வளவு நாட்களுக்கு இவ்வாறு மில்லியன்களை நாடுகளுக்கும் வங்கிகளுக்கும் வழங்கிக்கொண்டிருப்பது? போராட்ட மரபுடைய முன்னேறிய ஐரோப்பிய உழைக்கும் வர்க்கம் முழு முனைப்புடன் தெருவிற்கு வருமானால் ஐரோப்பிய ஏகாதிபத்தியப் பொருளாதாரம் தனது சாவிற்கான நாட்களை விரல்விட்டு எண்ணிக்கொள்ளாலாம்.
இந்தப் பின்னணியில் தான் எரி பொருளுக்கான யுத்தத்தை அமரிக்க ஐரோப்பிய யுத்தப் பிரபுக்கள் மத்திய கிழக்கில் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அழிவின் எல்லைக்குள் நகர்த்தப்பட்டிருக்கும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை மீட்க இப்போது போரைத் தவிர ஏகாதிபத்தியங்களுக்கு மாற்று வழி அற்றுப் போயிருக்கும் நிலையில் உலகின் பணம் செழிக்கும் மத்திய கிழக்கைக் குறிவத்து அப்பாவிகளின் தலையில் குண்டுமழை பொழிகிறார்கள்.
இதில் கேவலம் என்னவென்றால் யுத்தத்தை நடத்தும் பணத்தைக் கூட மேற்கு ஏகபோகங்கள் செலவிடவில்லை. லிபிய அரசின் பணமாக பல பில்லியன் டாலர்களை அமரிக்க அரசு முடக்கியுள்ளது. சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்ட கடாபியின் பணம் முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. முன்னதாக துனிசிய அதிபர் பென் அலியின் வைப்புப் பணமான சில பில்லியன்களை சுவிஸ் வங்கி முடக்கியிருந்தது.
எகிப்திய அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் பணம், அவரின் பினாமிகள் ஆதரவாளர்களின் பணம், கடாபியினதும் பினாமிகளதும் தனிப்பட்ட சொத்துக்கள் என்று பல நூறு பில்லியன்கள் போர்ச் செலவிற்கு மேலதிகமாகவே அமரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களிடம் முடங்கிப் போகலாம் என கணிப்பீடுகள் கூறுகின்றன. லிபிய அரசிற்குச் சொந்தமான 30 பில்லியன் டாலர்கள் ஏற்கனவே அமரிக்காவால் முடக்கப்படுள்ளது. அவுஸ்திரிய மத்திய வங்கி லிபிய அரசின் 1.6 பில்லியன்களை முடக்கியுள்ளது. பிரித்தானியா அபகரித்துக் கொண்ட பணம் 3.3 பில்லியன் டாலர்கள். இவை தவிர பினாமிகளின் பணம் இதற்கும் அதிகாமாகலாம் என கூறப்படுகின்றது.
யுத்த முனைப்பிற்கும், அதன் பின்னான காலனிய நிர்வாகத்தைக் கட்டமைப்பதற்கும், புதிய சுரண்டல் பொறிமுறையை உருவாக்குவதற்கும் மத்திய கிழக்குச் சர்வாதிகாரிகளிடமிருந்தும், அரசுகளிடமிருந்தும் அபகரிக்கப்பட்ட பணம் பயன்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அதற்கு அவர்கள் “மனிதாபிமான உதவி” எனப் பெயரிட்டுக் கொள்வார்கள்.
மேற்கத்திய முதலாளித்துவ ஊடகங்களுக்கு இப்போது புதிதாய் ஒரு அவல் கிடைத்துள்ளது. கடந்த சில நாட்களாக வாய் வலிக்க அந்த அவலை மென்று குதப்பி வருகிறார்கள். அவர்களின் இளைய பங்காளிகளான இந்திய முதலாளித்துவ ஊடகங்களும் ‘உலகச் செய்திகளில்’ தமது மேற்கத்திய சகபாடிகள் குதப்பித் துப்பிய அதே அவலை மீண்டும் ஒரு முறை மென்று, இந்திய வண்ணத்தில் கடைபரப்புகிறார்கள். ஒசாமா கொல்லப்பட்ட பின் தற்காலிகமாக ஏற்பட்டிருந்த ‘உலக’ செய்திப் பிரிவின் பஞ்சத்தை இப்படியாக இந்த ‘அவல்’ நிரப்பியுள்ளது.
சரி சரி விஷயத்திற்கு வருகிறோம். அந்த ‘அவலின்’ பெயர் டொமினிக் ஸ்ட்ரௌஸ் கா(ஹ்)ன். பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த அதிபர் தேர்தலில் இப்போதைய அதிபர் சார்கோஸியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுபவர் தான் ஸ்ட்ரௌஸ் கான். ஒரு விஷயம். ‘சோசலிஸ்ட்’ கட்சி என்ற பெயரைப் பார்த்தவுடன் ‘சோசலிஸ்டு – கம்யூனிஸ்ட்டு – மார்க்ஸ் – ஏங்கெல்ஸ்’ என்றெல்லாம் உங்கள் கற்பனைக் குதிரையைப் பறக்க விடாமல் ஒரு ஓரமாகக் கட்டிப் போட்டு வையுங்கள். ஏனெனில், இதற்கும் அதற்கும் மயிரளவிற்கும் கூட சம்பந்தம் கிடையாது.
இப்போது விவகாரம் என்னவென்றால், மேற்படி ஸ்ட்ரௌஸ் கான் கடந்த பல ஆண்டுகளாக ஒரு நவீன கால ஸ்ரீ கிருஷ்ணனாக வலம் வந்திருக்கிறார் – அதாவது ஒரு ஸ்த்ரீ லோலனாக – அதாவது ஒரு பொம்பளைப் பொறுக்கியாக. இப்போது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு நட்சத்திர ஹோட்டலின் பெண் ஊழியர் ஒருவரை இந்த நபர் தனது எண்ணற்ற கோபியரில் ஒருவராக நினைத்து அணுக அதாவது பாலியல் வன்முறை செய்ய முயன்று, அது வெடித்து பிரச்சினையாகியுள்ளது. இப்போதைக்கு விசாரணை என்கிற பெயரில் உள்ளே தள்ளியிருக்கிறார்கள்.
இதில் ஸ்ட்ரௌஸ் கான் வெறுமனே ப்ரெஞ்சு அரசியல்வாதி என்பதைக் கடந்து ஐ.எம்.எஃப் எனப்படும் பன்னாட்டு நிதி நிறுவனத்தின் (International Monetary Fund) தலைவராகவும் இருப்பதால் விவகாரம் உலக அளவிலான ஊடகங்களில் வெளியாகி நாறிக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பொறுத்தளவில் ஒரு உலகளவிலான அமைப்பின் தலைவராயிருக்கும் ஒருவர் தனிமனித ஒழுக்கமற்று பொறுக்கித் திரிந்ததை ஒரு மாபெரும் குற்றம் போல எழுதுகிறார்கள். ஆம் – அவர் குற்றவாளி என்று தான் நாமும் சொல்கிறோம்.
இப்போது அவர் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படலாம் – அல்லது நிரூபிக்கப்படாமலே போகலாம். ஆனாலும், நாம் அவரைக் குற்றவாளியென்றே கருதுகிறோம். நமது கருத்து ஸ்ட்ரௌஸ் கான் தனிப்பட்ட முறையில் சில பெண்களை வல்லுறவிற்குக் கட்டாயப்படுத்தினார் என்று வந்துள்ள செய்திகளின் அடிப்படையிலிருந்து மட்டும் எழுவதல்ல – அது ஒரு காரணம் தானென்றாலும் அதையும் கடந்து உலகெங்கும் பல்வேறு நாடுகளில் பல லட்சம் பெண்கள் தாலியறுத்ததற்கும் வல்லுறவிற்குள்ளாக்கப்பட்டதற்கும் இதே ஸ்ட்ரௌஸ் காரணமாக இருந்தார் என்கிற எதார்த்த உண்மையின் அடிப்படையிலானது.
உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தைக் குலைத்து அந்நாடுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்து அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இசைவான அராஜகக் கும்பல்கள் மக்களை நேரிடையாக கொன்று குவித்ததற்கும் ஸ்ட்ரௌஸின் தலைமையில் இயங்கும் பன்னாட்டு நிதி நிறுவனமே காரணமாக இருந்துள்ளது. மத்திய கால கத்தோலிக்கச் சர்ச்சைப் போல எவ்வகையிலும் ஜனநாயகப் பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்படாத – சாமானிய மக்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லாத இவ்வமைப்பே உலகின் பல்வேறு நாடுகளில் அரங்கேறிய சதிப்புரட்சிகளுக்கு சூத்ரதாரியாக செயல்பட்டுள்ளது.
2009-ம் ஆண்டு ஆகஸ்ட்டு மாத வாக்கில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மானுவேல் ஸெலாயாவைத் துப்பாக்கி முனையில் (ஜூனில்) நாடு கடத்தி விட்டு அதிகாரத்திற்கு வந்த ஹோன்டுராஸின் சதிப் புரட்சி கும்பலுக்கு 150.1 மில்லியன் டாலர்களை உதவித் தொகையாக வழங்கியுள்ளது ஐ.எம்.எஃப். அந்த சமயத்தில் பெரும்பாலான உலக நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஹோன்டுராஸின் அந்த அரசாங்கத்தை அங்கீகரித்திருக்கவில்லை. மிக மோசமான மனித உரிமை மீறல்களால் அம்பலப்பட்டு நாறிக் கொண்டிருந்த அக்கும்பலின் கரத்தை வலுப்படுத்தும் விதமாகவே ஐ.எம்.எஃப் வழங்கிய நிதி அமைந்தது.
ஹோண்டுராஸில் மட்டுமல்லாமல், 2002-ல் மக்களால் ஜனநாயகப் பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வெனிசுவேலாவின் சாவேஸ் திடீர் இராணுவப் புரட்சியினால் அதிகாரத்தை இழந்திருந்த சமயத்திலும் இராணுவ சதிகாரர்களுக்கு ஐ.எம்.எஃப் தனது வெளிப்படையான ஆதரவைத் தெரிவித்து உதவியும் செய்துள்ளது.
வட மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் எண்ணை வளத்தை உறிஞ்சிக் கொள்ள தடையாக இருந்த பல்வேறு அரசாங்கங்களை அமெரிக்க ஏகாதிபத்தியம் இதே போன்ற சதிப் புரட்சிகளின் மூலம் தூக்கியெறிந்த போதும் கூட புதிதாக அமையும் அராஜகவாதிகளின் அரசாங்கங்களுக்கு ஐ.எம்.எஃப் நிதியுதவியளித்துள்ளது. ஐவரி கோஸ்ட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கொபாக்போவை எதிர்த்த அமெரிக்க கைபொம்மையான ஒட்டாராவை ஆதரித்ததும் இதே ஐ.எம்.எஃப் தான்.
நேரடியான சதிப்புரட்சிகளைக் கடந்து, தமக்கு இணக்கமான அரசுகளைக் கூட மேலும் மேலும் அடிமையாக்குவதற்காக கடன் வலையில் சிக்க வைக்க அமெரிக்காவின் கைத்தடியாகவே ஐ.எம்.எஃப் செயலாற்றியுள்ளது. அந்த வகையில், நைஜீரியா, சியாரா லியோன், கென்யா, ஜிம்பாவே, சோமாலியா, ருவாண்டா உள்ளிட்ட பல்வேறு ஆப்ரிக்க நாடுகளை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைத்து மொத்த நாட்டையே ஓட்டாண்டியாக்கிச் சுரண்ட ஒரு பொருளாதாரப் பேரழிவு ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்தியது ஐ.எம்.எஃபைத் தான்.
எண்ணை உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கைப்பற்ற பல்வேறு ஆப்ரிக்க இனக்குழுக்களைச் சேர்ந்த உள்ளூர் யுத்த பிரபுக்களுக்கு ஆயுத உதவி, நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு உதவிகளைச் செய்து, அதனால் விளையும் உள்நாட்டுக் குழப்பத்தில் யாருடைய கை மேலோங்கியுள்ளதோ அந்த குழுவை ஒரு ‘அரசாக’ அங்கீகரித்து அவர்களுக்கு வெளிப்படையாகவே நிதியுதவி செய்ய அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒரு கருவி தான் ஐ.எம்.எஃப். அந்த வகையில், கணக்கற்ற பெண்கள் வன்முறை கும்பலால் கொல்லப்பட்டும் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டும் உள்ளனர்.
இது போன்ற ஐ.எம்.எஃபின் நடவடிக்கைகளை அவ்வமைப்பிலேயே ஒரு பொருளாதார அடியாளாகப் பணியாற்றி பல நாடுகளை சீரழித்த ஜான் பெர்கின்ஸ் என்பவர் பின்னர் தனது அனுபவங்களை விரிவாகப் பதிவு செய்து “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” (விடியல் பதிப்பகத்தில் கிடைக்கிறது) என்கிற பெயரில் ஒரு நூலே எழுதியுள்ளார்.
இதுவும் போக, தற்போது உலகையே ஒரு மாபெரும் கருமேகம் போலப் பீடித்து ஆட்டிப்படைத்து வரும் சர்வதேசப் பெருமந்தத்திற்கும் ஐ.எம்.எஃப் ஒரு காரணமாக இருந்துள்ளது. இதை அவர்களே நடத்திய சுயேச்சையான ஆய்வின் முடிவில் ஒப்புக் கொண்டும் உள்ளனர்.
ஆக, உலகம் முழுவதும் லட்சக்கணக்கான பெண்கள் தாலியறுத்தற்கும் வல்லுறவிற்கு உள்ளாக்கப்பட்டதற்கும் காரணமான ஒரு அமைப்பின் தலைவரை அவரது சொந்த வாழ்க்கையின் தவறுகளுடைய ஒளியில் வைத்து மட்டும் குற்றவாளியென்றோ குற்றவாளியில்லையென்றோ பார்க்க முடியாது. பார்க்கவும் கூடாது.
இப்போதே ப்ரெஞ்சு எதிர்கட்சிகள் ஸ்ட்ரௌஸின் மேல் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலாக ‘இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா’ என்று சொல்லத் துவங்கி விட்டனர். தனிமனித பாலியல் ஒழுக்கம் மட்டும் தான் ஒரு மனிதனை அளவிடுவதற்கான அளவுகோல் என்றால் நீங்கள் நரேந்திர மோடியை யோக்கியவான் என்று ஒப்புக் கொள்ள நேரிடும். மோடியோ இல்லை பிற ஆர்.எஸ்.எஸ் டவுசர்களோ தனிப்பட்ட வகையில் ஒருவேளை யோக்கியர்களாகக் கூட இருக்கலாம். பெண்களை ஏறெடுத்தும் பார்க்காத தவசீலர்களாகக் (ஆனாலும் அது உண்மையல்ல) கூட இருக்கலாம். ஆனால், இந்த ஒழுக்க சீலர்கள் சமூகத்தோடு கொண்டுள்ள உறவு – அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்னவென்பதிலிருந்து தான் முழுமையான ஒரு மதிப்பீட்டிற்கு வரமுடியும்.
தினமும் குளித்து, நெற்றியில் திலகமிட்டுக் கொண்டு ஒழுங்காக ஷாகா போய் முறையாக உடற்பயிற்சியும் யோகாசனமும் செய்யும் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் தான் கலவரம் என்று வந்து விட்டால் அப்பாவி முசுலீம் பெண்கள் மேல் பாய்ந்து குதறுகிறார்கள். தனிப்பட்ட முறையில் பீடி சிகரெட் தண்ணி என்று எந்த பழக்கமும் இல்லாத இவர்களை நீங்கள் நல்லவன் என்று சொல்வீர்களா இல்லை சமூக ரீதியில் மத பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விடுவதால் அயோக்கியன் என்று சொல்வீர்களா?
ஸ்ட்ரௌஸ் கானின் தனிப்பட்ட யோக்கிய / அயோக்கிய நடவடிக்கைகள் அல்ல நமது கவனத்திற்குரியது – அவராலும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பினாலும் உலகளவில் மக்கள் மேல் ஏவிவிடப்பட்டுள்ள பொருளாதார பயங்கரவாதமுமே நமது கவனத்திற்குரியது. அதுவே நாம் எதிர்த்து வீழ்த்த வேண்டிய மோசமான அபாயம்.
மேலும் உலகம் முழுவதும் உள்ள ஏழைநாடுகளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கடன் கொடுக்கும் ஒரு கந்து வட்டிக்காரன், ஊரைக் கொள்ளையடித்து தனது உலையை நடத்துபவன், தனிப்பட்ட வாழ்வில் பொறுக்கியாக இல்லாமல் எப்படி இருப்பான்?
முதலில் தமிழன் என்ற வார்த்தைக்கு இறுக்கமான இலக்கணத்தை வரையறுக்க இயலுமா தெரியவில்லை. பொதுவில் தமிழ்நாட்டில் வாழ்ந்து தமிழை பேசக்கூடியவர்கள்தான் தமிழரென்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் இன்று தமிழன் என்ற பெயரில் அவன் அறியப்படுவதில்லை. தமிழோடு பல பெயர்கள் சூழலுக்கேற்றவாறு ஒட்டிக் கொண்டுள்ளன.
சன்.டி.வி மெகா சீரியல் பார்க்கும் குடும்பத் தமிழன், கலைஞர் டி.வியின் மானாட மயிலாடவில் லயிக்கும் குதூகலத் தமிழன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐ.பி.எல்லில் இரசிக்கும் லோக்கல் தமிழன், டெண்டுல்கர் சதமடித்தால் ஆர்ப்பரிக்கும் இந்தியத் தமிழன், ராணா படத்துக்காக நா தொ போட்டு காத்திருக்கும் இரசிகத் தமிழன், கமலின் அடுத்த கெட்டப்புக்காக தவம் இருக்கும் உலக சினிமாத் தமிழன், தினமலரின் ஜோசியப் பக்கத்தை காசு கொடுத்து நம்பும் மூடநம்பிக்கைத் தமிழன், சாய்பாபாவுக்காக கண்ணீர் விட்டு அழும் பக்தித் தமிழன், நித்தியானந்தாவுக்கு படம் போட்டு பிரச்சாரம் செய்யும் எழுத்தாளத் தமிழன், பால் தினகரனுக்காக பாக்கெட் மணி அனுப்பும் பரதேசித் தமிழன், விசா இல்லாமல் மலேசியா சென்று சிறையில் வாடும் கனவுத் தமிழன், விசாவோடு வளைகுடாவில் முடங்கிப் போன நனவுத் தமிழன், பச்சை அட்டையோடு அமெரிக்காவில் செட்டிலான பணக்காரத் தமிழன், தீக்குச்சி அடுக்கி பீடி சுருட்டும் ஏழை இளையத் தமிழன், பங்குச் சந்தையில் சூதாடி பணம் சேர்த்து முன்னேறும் காரியவாதத் தமிழன், பிசா – பர்கர்- கென்டகி சிக்கனோடு வாழும் சிட்டித் தமிழன், முறுக்கு சட்டியோடு ஆந்திராவுக்கு பிழைக்க போயிருக்கும் வில்லேஜ் தமிழன், தேயிலைத் தோட்டங்களில் பனியால் கருகும் தோட்டத் தமிழன், ஆர்கானிக் டீயைச் சுவைத்தவாறே நட்சத்திர விடுதியில் பிசினஸ் பேசும் முதலாளித் தமிழன், கரும்பலகை இல்லாத பள்ளிக்கூடத்தில் பயிலும் கிராமத்து தமிழன், கணினி – செல்பேசியோடு பள்ளிக்கு செல்லும் பட்டணத்து தமிழன், இலங்கை கப்பற்படையிடம் சிக்காமல் கடலில் தொழில் செய்ய பாடுபடும் மீனவத் தமிழன், ஜெயலலிதாவின் காலில் விழுந்து கிடக்கும் மறத் தமிழன், கருணாநிதி குடும்ப அரசியல் தொழிலை ஏற்றுக் கொள்ளும் உடன்பிறப்புத் தமிழன், சோனியாவிடமும் அடிமைப்பட்டுக் கிடக்கும் வேட்டிக் கிழிப்புத் தமிழன்,
இறுதியாக பதிவுலகில் ‘வட போச்சே’ என்று பின்னூட்டமிடும் வெட்டித் தமிழன், போதுமா?
கேள்வி: நம் நாட்டைப் பொருத்தவரையில் பொதுவுடைமைக் கொள்கை என்பது வளரத் துவங்கியிருக்கிறதா? வளர்ந்து கொண்டிருக்கிறதா? அல்லது வளருமா? ஏனென்றால் பொதுவுடைமைப் பற்றிய போதிய சிந்தனை பொதுமக்களிடம் சென்றடையவில்லை என்பதும் உண்மைதானே?
– இனியவன்
அன்புள்ள இனியவன்,
நம் நாட்டில் பொதுவுடைமைக் கொள்கையின் வளர்ச்சி என்பது பொதுவுடமைக் கட்சிகளின் வளர்ச்சி, தேய்வோடு சம்பந்தப்பட்டது. இடது, வலது கம்யூனிஸ்ட் கட்சிகள் பாராளுமன்ற தேர்தல் சகதியில் விழுந்து புரண்டு சரணடைந்து விட்டார்கள். 1925 முதல் 1960கள் வரை இவர்களே பொதுவுடைமைக் கட்சியென அறியப்பட்டார்கள். முக்கியமாக இந்தியாவின் விசேட சமூக நிலைமைகளை ஆய்வு செய்து எவ்வாறு புரட்சி செய்யப் போகிறோம் என்பதில் சோடை போனார்கள். 47க்கு முன்பிருந்தே காங்கிரசு, காந்தியின் வாலாகவும் செயல்பட்டார்கள். தமது சொந்தக் கொள்கையின் மூலம் மக்களைத் திரட்டமுடியும் என்ற நம்பிக்கை இல்லாது இருந்தார்கள்.
இவர்களுக்கு மாற்றாக இவர்களிடமிருந்தே கிளம்பி இவர்களது திரிபுவாதத்தை தகர்த்தெறிந்து 1960களின் பிற்பகுதியில் எழுந்த நக்சல்பாரிக் கட்சி ஆரம்பத்தில் இழைத்த இடது தீவிரத் தவறுகள் காரணமாக பின்னடைவு கண்டது. பிறகு சில மாநிலங்களில் தவறுகளை திருத்திக் கொண்டு தீவிரமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறது.
1990களில் உலக அளவில் சோவியத் யூனியன் என்ற பெயரில் இருந்த போலி கம்யூனிசம் விழுந்த போது ஒரு அதிர்ச்சி இருந்தது. பின்னர் அடுத்த பத்தாண்டுகளில் முதலாளித்துவ நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தற்போது மேற்குலகின் மக்கள் பொதுவுடமை கொள்கைகளை தேடிப் படிப்பதாக ஊடகங்கள் கூறுகின்றன.
இந்தியாவிலும் இடதுசாரி முகாமைச் சேர்ந்த அறிவு ஜீவிகளே ஊடகங்களில் காத்திரமான ஆய்வுக் கட்டுரைகளை எழுதுகிறார்கள். மறுகாலனியாக்கத்தின் கேடுகளை எதிர்த்து இடதுசாரி கட்சிகளே தொடர்ந்து போராடுகின்றன. தமிழகத்தில் என்.சி.பி.எச், பாரதி புத்தகலாயம், கீழைக்காற்று கடைகளில் மார்க்சிய நூல்கள் அதிகம் விற்கின்றன. விற்றுத் தீர்ந்த பல நூல்கள் இப்போது கிடைப்பதில்லை.
எனினும் போலிக் கம்யூனிஸ்டுகளின் கெட்ட பெயர் உருவாக்கியிருக்கும் சூழல் எங்களையும் அடிக்கிறது. வினவில் கூட பல புதியவர்கள் சீனா, மே.வங்கத்தை வைத்து எங்கள் விமரிசிப்பது இன்னமும் நடக்கிறது. போயஸ் தோட்டத்தில் சென்று அம்மா காலில் விழாத குறையாக செஞ்சட்டை தலைவர்கள் நடத்தும் பூஜை குறித்து நாங்கள் எவ்வளவுதான் விமரிசித்தாலும் மக்களுக்கு மனம் ஒப்புவதில்லை. இருப்பினும் பொதுவில் போலிக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களையும் உள்ளிட்டு கம்யூனிஸ்டுகள் என்றாலே எளிமையானவர்கள், ஊழல் செய்யாதவர்கள், மக்களுக்காக போராடுபவர்கள் என்று மக்கள் சந்தேகமின்றி கருதுகிறார்கள். கூடவே இவர்களை பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் செல்லமாகவும் கடிந்து கொள்வார்கள்.
எங்களைப் பொறுத்த வரை தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் பேருந்துகள், இரயில்கள், குடியிருப்புகள், ஆலைகள் என எல்லா இடங்களிலும் பல இலட்சக்கணக்கான மக்களை எங்கள் தோழர்கள் சந்தித்து பிரச்சாரம் செய்கிறார்கள். இதற்கு மேலும் பொதுவுடமைக் கொள்கை வளர்கிறது என்பதற்கு வினவின் சிறு வெற்றியையும் சொல்லலாமே?
மற்ற கொள்கைகளெல்லாம் அநீதியான இந்த உலகோடு ஒட்ட ஒழுகும் தன்மையைக் கொண்டிருப்பதால் அவைகள் மக்களிடம் பரப்புவது சுலபம். ஆனால் பொதுவுடைமை கொள்கை என்பது ஒட்டு மொத்த சமூகத்தையும் அடியோடு மாற்றவேண்டும் என்பதை இலக்காகக் கொண்டிருப்பதால் மக்களிடம் பரப்புவது சிரமம். ஆனால் பிரச்சினைகளோடு ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பொதுவுடைமைக் கொள்கைகள் மட்டுமே மக்களோடு இணைவதற்கான எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது.
கேள்வி: ஆங்கிலத்தில் மூன்று வேளை உண்ணுவதற்கும் பிரேக்பாஸ்ட், லஞ்ச், டின்னர் என்று பெயர்கள் உள்ளன. அது போன்று தமிழில் உண்டா?
– சுதா செந்தில்
அன்புள்ள சுதா செந்தில்,
மூன்று வேளை சாப்பாடு ஆங்கிலப் பெயர்களுக்கு இணையாக தமிழில் உண்டா என்று தமிழிறிஞர்களைத்தான் கேட்க வேண்டும். எங்களுக்குத் தெரிந்து இல்லை என்றுதான் நினைக்கிறோம். ஒருவேளை தமிழ் மொழியில் அப்படிப் பெயர்கள் இருந்தாலும் தமிழ் மக்களிடம் இத்தகைய மும்முறை சாப்பாட்டுப் பெயர்கள் வழக்கத்தில் இல்லை என்பதை நிச்சயமாகக் கூறலாம். ஏனெனில் இன்றும் கூட பெரும்பான்மைத் தமிழ் மக்களின் வீடுகளில் மூன்று முறை சமையலோ, சாப்பாடோ கிடையாது. அதிக பட்சம் ஒரு முறைதான் சமையலே! இதுதான் யதார்த்தம் எனும் போது மூன்று பெயர்களுக்கான தேவையே எழவில்லையே?
“தி கிட்” எனும் சார்லி சாப்ளினது திரைப்படத்தில் அவர் ஒரு அனாதைச் சிறுவனை வளர்ப்பார். அவரது குடிசையில் ஓட்டை ஒடிசலுடன் இருக்கும் ஒரு மேசைதான் டைனிங் டேபிள். சாப்பிட இருந்தாலும், இல்லாவிட்டாலும் டேபிள் மேனர்சோடு சிறுவனை சாப்பிடுமாறு சாப்ளின் பயிற்சி அளிப்பார். வயிற்றுக்கில்லையென்றாலும் நாகரீகத்தை விட முடியாதல்லவா என்று சாப்ளின் கேலி செய்வது இங்கு நினைவுக்கு வருகிறது.
தமிழக உணவு வகைகள், வட்டார உணவு ருசிகள் என்று இப்போது நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கத்தை குறிவைத்து நடத்தப்படும் உணவு மேளாக்கள் எல்லாம் வட்டார ஆதிக்க சாதியினரின் உணவு பழக்கங்களைத்தான் வைத்திருக்கின்றன. ஆனால் நிலமற்ற கூலி விவசாயிகளும் சரி, இல்லை சிறு விவசாயிகளும் சரி, இல்லை கொஞ்சம் வசதியான விவசாயிகளாக இருந்தாலும் சரி இத்தகைய தினுசு தினுசான உணவு வகைகளெல்லாம் அவர்களது வாழ்வில் இல்லை.
காலையில் நீராகாரம், மதியம் வற மிளகாய் அல்லது பச்சைமிளகாயோடு பழையது, இரவு சுடு சோறு என்பதே பெரும்பாலான கிராமத்து மக்களது உணவு. இதுவும் கூட முன்னர் தினை வகைகளோடு கம்பு, கேழ்வரகு, சோளம் முதலியவற்றை வைத்து களி, கூழ், ரொட்டி என்று இருந்தது. இன்றும் கூட பல கிராமங்களில் தீபாவளி, பொங்கல் முதலான பண்டிகைகளின் போதுதான் இட்லி, தோசையை செய்கிறார்கள். தருமபுரியில் களி உருண்டையை சாப்பிடும் திறனை வைத்து சித்தாள், பெரியாள் ஊதியத்தை முடிவு செய்வார்கள். இந்தக் களியை நீங்கள் மென்று சுவைக்க முடியாது. அப்படியே விழுங்க வேண்டும்.
குமரி மாவட்டத்தில் நீர் அதிகம் உள்ள பருப்புக் குழம்பு, தஞ்சையிலோ, ஈரோட்டிலோ இருக்கும் விவசாயிகளிடம் புளி கரைத்த நீர்க்குழம்பு இவைதான் அன்றாட குழம்பு வகைகள். அந்த குழம்பில் அன்று என்ன காய் போடுகிறார்கள் என்பதுதான் அவர்களுக்கு விசேசம். சென்னையின் சேரிகளில் வாழும் மக்கள் அனைவரும் இரவுதான் முறையான சமையல் செய்து சாப்பிடுகிறார்கள். பகலில் தேநீர், பன் என்று ஏதோ ஓட்டுகிறார்கள். இவர்களது அசைவ சமையல் கூட கோழி, மீன்களின் கழிவாக கருதப்படும் பகுதிகளை வைத்தே இருக்கும். அதாவது கோழிக் குழம்பு என்றால் கோழிகளின் தலை இருக்கும்.
அறுசுவைகளுக்கும் பெயர் பெற்ற செட்டிநாட்டு சமையல், பார்ப்பனர் சமையல், சைவ வேளாளர் சமையல், கொங்கு சமையல் போன்றவையெல்லாம் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் இல்லை. ஆனால் பத்திரிகைகளெல்லாம் இவற்றைத்தான் தமிழரது உணவு வகைகள் என்று போற்றுகின்றன. நிலவுடமை சமூகத்தின் சுரண்டலில் தலைமை இடம் வகிக்கும் இத்தகைய சாதிகளது வாழ்க்கை முறையில்தான் இத்தகைய விருந்துகள் இருக்க முடியும். ஆனால் இவற்றை மட்டும் தமிழர் உணவு என்று சொல்வது முழுத் தமிழகத்தையும் பிரதிபலிப்பதாக ஆகாது.
சான்றாக ஆம்பூர் பிரியாணி, மாட்டுக்கறி வறுவலை தமிழர் உணவாக இவர்கள் ஏற்கமாட்டார்கள். ஆனால் இன்று நகர்ப்புறங்களின் கடுமுழைப்பு தொழிலாளிகள் தங்களது புரதத் தேவைக்காக கையேந்தி பவன்களில் மலிவான மாட்டுக்கறி உணவை விரும்பி சாப்பிடுகிறார்கள். டிகாஷன் காபியை விரும்பி அருந்துபவர்கள் அநேகம் பேர் பார்ப்பன ‘மேல்’ சாதியதினர்தான். ஆனால் தேநீர் என்பது தொழிலாளிகளின் பானமாக இருக்கிறது. சென்னை புள்ளாபுரத்தில் அருந்ததியினர் வாழும் பகுதியில் மாட்டுக்கறி உப்புக்கண்டத்தில் செய்யப்படும் சிப்ஸ் மிகவும் பிரபலம்.
ஆக தமிழர்களது உணவு முறைகள் அனைத்தும் வர்க்க வாழ்நிலைக்கேற்ப பிரிந்து இருக்கிறது. சாரத்தில் மூன்று வேளை சாப்பிடும் பழக்கமோ, வசதியோ அற்ற மக்கள் கணிசமாக வாழும் நாட்டில் நாம் ஆங்கில முறையில் மூன்று வேளை உண்ணுவதற்கான பெயர்களுக்கு எங்கே போவது?
மதுரையைச் சேர்ந்த மாவட்டங்களில் என்னதான் விருந்து சாப்பிட்டாலும் மக்கள் “கஞ்சி குடிச்சாச்சா” என்றுதான் கேட்பார்கள். அதையே நாமும் தமிழக உணவு முறைப் பெயராக கொள்ளலாமே? என்ன சொல்கிறீர்கள்?