Wednesday, June 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 779

புதிய ஜனநாயகம் – மே 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் – மே 2011 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

புதிய ஜனநாயகம் மே 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “இது கார்ப்பரேட் முதலாளிகளிம் பகற்கொள்ளைக்கான ஜனநாயகம்! ஓட்டுப் போடாதே! புரட்சி செய்” -புரட்சிகர அமைப்புகளின் தேர்தல் புறக்கணிப்புப் பிரச்சாரம்.
  2. ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்
  3. ஊழல் ஒழிப்பு: ஹசாரேவின் நாடகமும் நக்சல்பாரிகளின் போராட்டமும்
  4. ஓட்ட்டுப் பொறுக்குவதில் எதிரெதிர் அணி! கார்ப்பரேட் சேவையில் ஓரணி!
  5. ஒட்டுண்ணிக் கட்சிகளின் கையறுநிலை
  6. உடுக்கையடிக்கும் பத்திரிகைகள் சாமியாடும் தேர்தல் ஆணையம்
  7. டௌ கெமிக்கல்ஸுக்கு சி.பி.எம்.இன் ஆராதனை!
  8. ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டம்: புண்ணுக்குப் புனுகு!
  9. சட்டிஸ்கர்: இந்திய அரசின் போர்க்குற்றங்கள்
  10. அணு மின் உற்பத்திக்குத் தொழிலாளர் பலிகிடா!
  11. அரபு சர்வாதிகாரிகளைத்தாங்கும் அமெரிக்க ஜனநாயகம்
  12. பஞ்சாப்: பிணக்காடாகும் கோதுமைக் களஞ்சியம்
  13. எஸ்.டி.எஸ். மெட்ரிக் பள்ளியின் மிரட்டல், வசூல் வேட்டை: கல்விக் கொள்ளையர்களுக்கு எதிராக…
  14. ‘வல்லரசின்’ மரணப் பொந்துகள்!

புதிய ஜனநாயகம் மே 2011 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 4 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மதுரை வில்லூர் தேவர் சாதிவெறி!

108

madurai-villur

துரை திருமங்கலத்திற்கு அருகிலுள்ள டி. கல்லுப்பட்டி வட்டத்தை சார்ந்த வில்லூர் கிராமத்தில் ஆதிக்க சாதியான முக்குலத்தோரின் உட்பிரிவான அகமுடையார் சாதியைச் சார்ந்தவர்கள் அதிகம். சிறுபான்மையான தாழ்த்தப்பட்டவர்கள் சுமார் 300 குடும்பத்தினரும் இங்கு வசித்து வருகின்றனர்.

அகமுடையார்கள் வசிக்கும் மேலத்தெருவான காளியம்மன் கோவில் தெருவிற்குள் தாழ்த்தப்பட்டவர்கள் சைக்கிளிலோ அல்லது செருப்பு அணிந்தோ போக கூடாது என்பது இப்போது கூட எழுதப்படாத விதி. மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் கூட தேவர் சாதி மாணவர்களை ஐயா என்றுதான் உடன்பயிலும் தாழ்த்தப்பட்டவன் அழைக்க வேண்டுமாம். இது இந்து பாசிசம் கோலோச்சும் குஜராத்திலோ அல்லது வடக்கின் இந்தி பேசும் மாநிலங்களிலோ நடக்கவில்லை. பெரியார் பிறந்த மண்ணில்தான் இந்தக் கொடுமை.

இருபத்தியொன்றாம் நூற்றாண்டிலுமா இப்படி என முகவாயை தேய்ப்பவர்களும், 2020- இல் எப்படியாவது வல்லரசாக வேண்டும் என கங்கணம் கட்டிக் கொண்டு வாளாவிருப்பவர்களும் அவசியம் போய் வர வேண்டிய இந்தியாவின் பல கிராமங்களில் ஒன்றுதான் வில்லூர்.

இந்த கிராமத்தில் வசிக்கும் குரு என்பவரின் இளைய மகன் தங்கபாண்டியன். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்தாலும் பள்ளியில் கிடைத்த அவமானங்களையும் சகித்துக் கொண்டு ஆசிரியர் பயிற்சி வரைக்கும் படித்து விட்டு, தற்போது வேலை தேடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர்களுக்கு 7 ஏக்கர் விவசாய நிலம் வாங்க முடிந்த காரணமே அக்குடும்பத்தினர் மீது தேவர் சாதியினர் கோபமடைய போதுமான காரணமாக இருக்கையில் தங்கபாண்டியனின் எதிர்கால வாத்தியார் வேலை என்பது அவர்களது கோபத் தீயில் எண்ணெய் ஊற்றுவதாகவே இருந்தது.

தந்தை வாங்கித் தந்த மோட்டார் சைக்கிளில் ஊரை வலம் வர விரும்பினார் அந்த இளைஞர். அப்படி வலம் வருகையில் காளியம்மன் கோவில் தெருவிற்குள்ளும் அவரது மோட்டார் சைக்கிள் போகவே, ஆத்திரமடைந்த அகமுடையார் சாதியினர் சுமார் ஐந்து பேர் ஒன்று சேர்ந்து அவரைத் தாக்கியுள்ளனர். 27 வயது நிரம்பிய தங்கப்பாண்டியனை தாக்கிய அகமுடையார் சாதியைச் சேர்ந்த ஐவரில் மூவர் 24 வயது இளைஞர்கள். மற்ற இருவரும் நாற்பதுகளில் உள்ளவர்கள். இன்று யாரும் சாதி பார்ப்பதில்லை என்பதை பேசுபவர்கள் இதனைக் கவனிக்கவேண்டும். பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளையும் பிடுங்கிக் கொண்டார்கள்.

இது குறித்து தங்கப்பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் 5 பேரும், தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டனர். கடந்த சனியன்று இரவு நடந்த இச்சம்பவத்திற்கு மறுநாள் போலீசு கண்காணிப்பாளர் அஸ்ரா கார்க் தலைமையில் அமைதி ஏற்படுத்த அமைதிக்குழு அமைக்கும் பணியை அரசுத் தரப்பு தொடங்கியது.

ஆனால் தங்களிடம் வந்து அபராதம் கட்டி, மன்னிப்புக் கேட்டு மோட்டார் சைக்கிளைத் திரும்ப பெறாமல் போலீசுக்குப் போனதால் ஆத்திரமடைந்த ஆதிக்க சாதியினர் எஸ்.பி மீதும் தாக்குதலை நடத்தினர். காவல்துறை இணை ஆணையாளரின் வாகனத்தையும் சேதப்படுத்தினர்.

இதனையடுத்து போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், லத்தி சார்ஜீலும் பலர் காயமடைந்தனர். 53 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் முன்னிலையிலேயே தங்கப்பாண்டியனின் அண்ணன் முருகன் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தி உள்ளனர். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் ஒரு குடும்பம் முன்னேறுவதையே சகிக்க முடியாத அளவுக்கு சாதிவெறி கோலோச்சுகிறது.

தாழ்த்தப்பட்டவனுக்கு தேநீர்க்கடையில் தனிக்குவளையும், மேலத்தெருவில் செருப்புப் போடத் தடையும் உள்ள ஊருக்குள் தாழ்த்தப்பட்டவன் வாத்தியாருக்குப் படித்திருப்பதும், அவன் பேண்ட் சட்டை போடுவதும் அந்த ஊரில் அதுவும் மேலத்தெருவிலே புதுசாக வாங்கிய மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறான் என்றால் சாதிவெறியால் அதை ஜீரணிக்க முடியவில்லை. ஒரு வேளை தங்கபாண்டியனின் ஆசிரியர், பொருளாதாரத் தகுதி காரணமாக அகமுடையார் சமூகப் பெண்கள் அவனைக் காதலித்திருந்தால் என்ன நடக்கும்? கொலைதான் நடக்கும்.

மதுரை பகுதியைச் சேர்ந்தவர்கள் எவரும் அங்கே நிலவும் ஆதிக்க சாதிவெறியை நன்கு உணர்ந்திருப்பார்கள். பத்தாண்டுகள் அங்கே வாழ்ந்தவன்  என்ற முறையில் நானே இதை பார்த்திருக்கிறேன். அக்டோபர் 30- ஆம் தேதி பிறந்து, அதே தேதியில் மறைந்த முத்துராமலிங்கம் என்ற சாதிவெறியனை சாமியாக கும்பிடும் தேவர் சாதியினர், அந்த குருபூஜைக்கு சுயமரியாதை இயக்க அரசியல்வாதிகளை மாத்திரமின்றி, போலிக் கம்யூனிஸ்டுகளையும் வரவழைக்குமளவுக்கு செல்வாக்கான ஆதிக்க சாதியினர். பசும்பொன் கிராமத்திற்கு லாரி,  வேன்களில் நிரம்பி வழியும் தேவர் சாதி குடிமகன்கள் மதுரை மேலமாசி வீதி வழியே அம்பேத்கரையும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியையும் அர்ச்சிக்கும் வார்த்தைகளை காதால் கேட்கவே கூசும்.

பருத்தி வீரன் கார்த்திக் போல அம்மா மார் சிறுவாடு சேர்த்து வைத்த பணத்தில் குடித்துக் கூத்தடிப்பதும், அம்மா போனபிறகு வழியில்லாமல் பொறுக்கித் தின்ன ரவுடியாவதும் என இச்சாதியின் பெரும்பாலான ரவுடிகளால் மதுரை நிரம்பி வழிகிறது.

மச்சி, மாப்பிள்ளை என்று சக நண்பர்களைப் பதின்வயதில் கூப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு மதுரைப் பகுதியில் வழங்கிவரும் பங்காளி என்ற உறவுமுறை புரிவதற்கு சிரமமானதுதான். ஆதிக்க சாதிகள் தமக்குள் மாத்திரம் விளித்துக்கொள்ளப் பயன்படுத்தும் பிரத்யேக வார்த்தை அது என எனக்கு தெரியாது. அப்படித் தெரியாமல் விளித்து, அவர்களிடம் வாங்கியும் கட்டிக்கொண்டவன் நான். எல்லோரையும் உறவுமுறை வைத்துப் பேசினாலும் தாழ்த்தப்பட்டவர்களை மாத்திரம் அப்படி மறந்தும் கூப்பிட மாட்டார்கள்.

அப்போதுதான் பாரதி கண்ணம்மா திரைப்படம் வந்து போயிருந்தது. எனது அறையை கல்லூரி விடுதியில் பகிர்ந்து கொண்ட சக வகுப்பு மாணவனுக்கு நடிகை மீனாவைப் பிடிக்காது. ஏன் என கடைசி வரை அவன் சொல்லவே இல்லை. கல்லூரி இறுதி நாளில் அவனே சொன்னது இது. “பின்ன என்னடா ! எங்க தேவர் சாதில பொறந்துட்டு போயும் போயும் எஸ்சி தான் கெடச்சானா காதலிக்கிறதுக்கு.”

கஞ்சிக்கில்லை என்றாலும் இத்துப் போன சாதி கௌரவத்திற்காக இந்த தேவர் சாதி வெறியர்கள் நடத்தும் அயோக்கியத்தனங்கள் நிறைய உண்டு. வசதியான தொழில் நடத்தும் தேவர் சாதி பிரமுகர்கள்தான் ஏழை தேவர் சாதி மக்களை வைத்து இப்படி சாதிவெறியைக் கிளப்பிவிட்டு குளிர் காய்கின்றனர். இவர்களை பொது அரங்கில் அம்பலப்படுத்தி விரட்டும் போது மட்டும்தான் வில்லூர் போன்ற கிராமங்களில் இந்தக் கொடுமைகள் நடப்பது குறையும்.

_________________________________________________________

வசந்தன்
_________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

ராஜபக்சேவின் போர்க்குற்றங்கள்: ஏகாதிபத்தியங்களின் இரட்டை வேடம்!

லங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டு புலிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இறுதிக்கட்ட போரின்போது நடந்த படுகொலைகள், அத்துமீறல்கள் குறித்துப் பன்னாட்டு மனித உரிமைச் சட்டங்களின்படி எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பது குறித்துத் தனக்கு ஆலோசனை வழங்குமாறு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் அமைத்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட, மனித குல வரலாற்றில் நடந்த இன்னுமொரு மிகக் கொடூரமான இனப்படுகொலை பற்றியும், மனித உரிமை மீறல்கள் அட்டூழியங்களையும் இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. போர்க்குற்றங்கள் பற்றிய அனைத்துலகச் சட்டங்களின் படி, இலங்கை அரசே விசாரணையை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்றும், வடக்கு  கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்கி, அதன் செயற்பாடுகளைக் கண்காணிக்க சுதந்திரமான பன்னாட்டுக் குழுவை ஐ.நா. பொதுச் செயலர் அமைக்க வேண்டும் என்றும் இந்த நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது.

இந்த அறிக்கை இலங்கை அரசு பாரிய போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிடும் அதேசமயம், புலிகளும் பெருமளவிலான போர்க்குற்றங்களை இழைத்துள்ளதாகப் பட்டியலிட்டு இருதரப்பையும் சம அளவில் வைத்துத்தான் குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், “புலிகள் அளித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவின் ஒருதலைபட்சமான அறிக்கையை ஏற்க இயலாது” என்றும், இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் எல்லைமீறித் தலையிட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஐ.நா. குழு சீர்குலைப்பதாகவும் குற்றம் சாட்டி, ராஜபக்சே கும்பல் தேசிய வெறியையும் இனவெறியையும் தூண்டிவிட்டு வருகிறது.

ஐ.நா. பொதுச் செயலர் தனிப்பட்ட முறையில் தனக்கு ஆலோசனை வழங்க இக்குழுவை நியமித்துள்ளாரே தவிர, இது ஐ.நா. மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அல்ல. இக்குழுவின் அறிக்கையும் ஐ.நா. மன்றத்தின் அறிக்கையோ, போர்க்குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையோ அல்ல. இப்படித்தான், கடந்த 2009ஆம் ஆண்டில் ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைக் கவுன்சில் என்ற எவ்வித அதிகாரமும் இல்லாத அமைப்பின் வாயிலாக, ஈழப்போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதிப் போரின்போது நடந்த ஈழத் தமிழினப் படுகொலையையும் போர்க் குற்றங்களையும் சாடி அனைத்துலக மனித உரிமைக்கான தன்னார்வ அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்ததால் ஜனநாயக நாடகமாடுவதற்காகவும், ஐரோப்பிய நாடுகளில் போராடிய புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களுக்கு தற்காலிக மன ஆறுதல் தருவதற்காகவும் மேற்கொள்ளப்பட்ட பாசிபிச சதியாகவே இப்படியொரு தீர்மானம் அப்போது நிறைவேற்றப்பட்டது. இதை ஐ.நா. பொதுச் சபையில் வைத்து விவாதித்துப் பாதுகாப்புக் கவுன்சிலில் அங்கீகரித்தால்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதால், அத்தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாக முடங்கிப் போனது. இப்போது மீண்டும் அதேவழியில் ஐ.நா. பொதுச் செயலர் நியமித்துள்ள நிபுணர் குழுவின் அறிக்கையும் அமைந்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான இன்றைய ஒற்றைத் துருவ ஏகாதிபத்திய உலகில், இனப்படுகொலைகளை நடத்திவரும் பாசிச  இராணுவ சர்வாதிகார அரசுகள் அனைத்தும் ஏகாதிபத்தியங்களின் விருப்பத்திற்கேற்ப கண்டும் காணாமல் விடப்படுகின்றன அல்லது விசாரணை மேற்கொள்ளப்பட்டு தலையீடும் ஆக்கிரமிப்பும் தொடர்கின்றன. அதேசமயம், அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் தலையீட்டையோ அத்துமீறலையோ ஆக்கிரமிப்பையோ யாரும் வாயளவில்கூட கண்டிக்க முடியாது.

இத்தகைய நிலைமையில், அமெரிக்காவும் அதன் தலைமையிலான ஏகாதிபத்திய உலகமும் இலங்கை அரசின் போர்க்குற்றங்களைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிடவே விரும்புகின்றன. அதேசமயம், ஈழத் தமிழின அழிப்புப் போர் குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகளின் கண்டனத்தால், ஜனநாயக நாடகமாடவும் செய்கின்றன. ஏகாதிபத்தியங்களின் மேலாதிக்க ஆக்கிரமிப்பு நோக்கங்களுக்கு ஏற்பச் செயல்படும் கைப்பாவையான ஐ.நா. மன்றமும் அதற்கேற்ப தலையாட்டுகிறது.

இறுதிக் கட்ட ஈழப் போரில் நடந்துள்ள மனித உரிமை மீறல்களைப் பட்டியலிட்டு நிபுணர் குழு மூலம் ஆவணப்படுத்தி, அவசியமேற்படும்போது ராஜபக்சே கும்பலுக்கு எதிராக அதைப் பயன்படுத்தலாம் என்பதுதான் ஏகாதிபத்தியங்களின் திட்டமாக உள்ளது. மனித உரிமை  ஜனநாயகம்  பயங்கரவாத எதிர்ப்பு நாடகமாடிக் கொண்டு ஈராக், ஆப்கான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்கள் மட்டுமல்ல; அண்மைக் காலமாக, அரபு நாடுகளில் அமெரிக்க விசுவாச சர்வாதிகார ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டங்கள் தமது ஆதிக்கத்துக்கும் கொள்ளைக்கும் எதிரானதாகத் திரும்பிவிடாதிருக்க, மனித உரிமை  ஜனநாயக நாடகமாடிக் கொண்டு ஏகாதிபத்தியங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் இந்த உண்மையை நிரூபித்துக் காட்டுகின்றன.

மறுபுறம், இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவுக்குப் போட்டியாக இலங்கையை ஒரு தளமாகப் பயன்படுத்த மேற்கொள்ளும் முயற்சியாகவே இலங்கை அரசுக்கு ரஷ்யா, சீனா முதலான நாடுகள் ஆதரவளிக்கின்றன. இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையை தாஜா செய்யும் நோக்கத்துடன் அமெரிக்காவின் நம்பகமான கூட்டாளியான பாகிஸ்தான், ஈழப் போரின்போது இலங்கைக்கு ஏராளமான ஆயுதங்களை விற்று ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்றது. இலங்கை அரசு சீனா பக்கம் சாய்ந்து விடாமல் தனது மேலாதிக்கப் பிடியில் இருத்தி வைப்பதற்காகவே இந்தியா, ஈழத்தில் மறைமுகமாகப் போரை வழிநடத்தி ராஜபக்சே கும்பலுக்கு உற்ற துணையாக நின்றது. மனித உரிமை மீறல் குறித்து விசாரணை நடந்தால், இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. இத்தகைய நிலைமைகள்தான் இலங்கை அரசை இந்த நாடுகள் ஆதரிக்கக் காரணமாக உள்ளன.

இந்திய அரசு ஈழத்தமிழின அழிப்புப் போரில் முக்கிய பங்கு வகித்திருப்பது மட்டுமல்ல; காஷ்மீர், வடகிழக்கிந்தியாவின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டங்கள் மற்றும் இந்தியாவின் மத்திய கிழக்குப் பகுதியில் காட்டுவேட்டை என்ற பெயரில் நடத்திவரும் நரவேட்டை முதலானவற்றிலும் மனித உரிமைகளைக் காலில் போட்டு மிதித்து அப்பட்டமான அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கொடூர அரசு என்பது நிரூபணமாகியுள்ளது. இருப்பினும், ஒரு போரில் மனித உரிமை ஜனநாயக உரிமைகளை மதிக்காமல் அட்டூழியங்களில் ஈடுபடுவதுதான் போர்க் குற்றம் என்பதாகவும், உள்நாட்டில் அரசு பயங்கரவாத அட்டூழியங்களையும் புரட்சிகரஜனநாயக இயக்கங்களின் போராட்டங்களையும் சமப்படுத்தி இருதரப்பும் மனித உரிமைகளை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டுவதாகவும்தான் ஏகாதிபத்தியங்கள் மற்றும் சில மனித உரிமை அமைப்புகளின் நடவடிக்கைகளாக உள்ளன. தமிழினவாதிகளும் ஈழ ஆதரவு நாடகமாடும் ஓட்டுக் கட்சிகளும், ஏதோ இந்திய அரசு இதுவரை போர்க்குற்றங்களில் ஈடுபடாதது போலவும், ராஜபக்சே கும்பலுக்கு ஆதரவாக நின்று ஈழப் போரை வழிநடத்தியதுதான் போர்க்குற்றம் என்பதாகவும் மாய்மாலம் செய்து, இந்திய அரசு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கின்றனர்.

இன்றைய நிலையில், சர்வதேச சமூகம் என்று தமிழினவாதிகளால் சித்தரிக்கப்படும் மேற்கத்திய ஏகாதிபத்திய அரசுகள் எவையும் போர்க்குற்றவாளியான ராஜபக்சே கும்பலுக்கு எதிராக இல்லை. அப்படி இருப்பதைப் போல தமிழினவாதிகள் இன்னமும் நம்புகின்றனர். ராஜபக்சே கும்பல் மீது போர்க்குற்றம் சாட்டும் மேலைநாடுகளின் மனித உரிமை இயக்கங்களும்கூட ஒரு சில செயல்வீரர்களின் நடவடிக்கைகளாகவும் ஊடகங்களின் அம்பலப்படுத்தல்களாகவும் அமெரிக்காவின் தலையீட்டைக் கோருவதாகவும் உள்ளனவே தவிர, மக்கள்திரள் இயக்கமாக முன்னேறவில்லை. இந்நிலையில், ஈழத்திலும் இந்தியாவிலும் மட்டுமின்றி, உலகெங்கும் போர்க்குற்றவாளி ராஜபக்சே கும்பலுக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்குவதும், ஏகாதிபத்திய சதிகளை அம்பலப்படுத்தி, அக்கும்பலைத் தண்டிக்க மக்கள்திரள் இயக்கங்களைக் கட்டியமைத்து இறுதிவரை முன்னெடுத்துச் செல்வதும்தான் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.

______________________________________________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2011

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய மே தினப் பேரணி சிறப்பாக நடந்தேறியது. சென்னை, கடலூர், திருச்சி, கோவை, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். உசிலையில் மட்டும் போலீசு ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மே தினத்திற்கு கூட ஊர்வலம் அனுமதி இல்லை எனும் பாசிச நிலையை வந்தடைந்திருக்கிறோம். அதனால் போராட்டம் நின்றுவிடப் போவதில்லை. மே நாள் தரும் ஊக்கத்தில் அது தொடர்ந்து நடக்கும். இங்கே ஊர்வலக் காட்சிகளை ஊர் வாரியாக வெளியிடுகிறோம்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

 

உசிலம்பட்டி

மே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டி

 

திருச்சி

மே நாள் 2011 - திருச்சி

ஓசூர்

ஓசூரில் கடந்த மே 1 அன்று நடந்த மேதின நிகழ்வில், விவசாயிகள் விடுதலை முன்னணி ஐ சார்ந்த தோழர் முனிராஜ் மே தினப் பேரணியைத் துவக்கி வைத்துப் பேசினார். பேரணியின் முடிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட விவிமு  தோழர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

மே தினம் எனும் தொழிலாளர் தினம், 8 மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற தமது கோரிக்கைகளுக்காகப் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தைப் போராடி பணிய வைத்த தினம். இன்று தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகளால் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களும், தனியார் அல்லது அரசு நிறுவனம் என்ற வேறுபாடு இல்லாமல் தினசரி 16 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர்.

எனவே கேக் வெட்டிக் கொண்டாடவோ, கோவிலுக்குப் போய் கும்பிடுவதற்கோ இந்நாளைப் பயன்படுத்தக் கூடாது.  நமது உரிமையை நிலைநாட்ட, முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டிட‌  வேண்டும்.  கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எதிராகப் போராடி நமது நாட்டைப் பாதுகாக்க‌ வேண்டும். அதற்காக தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கம் என்ற வகையில் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இதற்கான சூளூரையை இந்நாளில் ஏற்பதுதான் சரியானது என்று பேச்சாளர்கள் பேசினர்.

கமாஸ் வெக்ட்ரா ஆலையின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் முருகன் நன்றியுரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான மக்களும், செஞ்சட்டையணிந்த தோழர்களும், பெண்களும், குழந்தைகளும் முழக்கங்களை பாதகைகளுடன் முழங்கியது ஓசூரில் தொழிலாளர்களுக்கு மேதினத்தில் வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும், தாம் ஒன்றுபடுவதன் அவசியத்தை உணரவைப்பதாகவும் அமைந்திருந்தது.

மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே நாள் 2011 - ஓசூர்

கோவை

கோவையில் மே 1 பேரணி மாலை 4 மணிக்கு சிவானந்தா காலனியிலிருந்து புறப்பட்டு . சித்தாபுத்தூர் V  K மேனன் வீதியில் பொதுக்கூட்டத்துடன் முடிந்தது, பேரணியில் 950 க்கும் மேற்பட்ட தோழர்களும் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பேரணியின் இடையில் பெரும் காற்றுடன் மழை வந்தும் பேரணி சற்றும் கலையாமல் நடந்தது.  பொதுமக்களின் பார்வையில் மே தினத்தை கொண்டாட முழு தகுதி உடையவர்கள் இவர்களே என்பதை உணர்த்தியது. இறுதியில் அடாத பெரும் மழையிலும் பொதுக்கூட்டத்தில் நிகழ்ச்சி முடியும் வரைதோழர்கள் கலையாமல் நின்றனர்  . இதே வேளையில் மழையின் காரணமாக சிபிஐ-சிபிஎம் கட்சியின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவை

சென்னை

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பூந்தமல்லியில் மே நாள் விழா  நிகழ்ச்சி நடந்தது.

பல தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்த உரிமைகளை அடகு வைக்க முண்டியடிக்கும் போலிகளின் குத்தாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் மத்தியில் போராட்டமே மகிழ்ச்சி என்ற  மார்க்சிய ஆசானின் கூற்றுக்கேற்ப புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் மே நாள் விழா போராட்டமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்டது. வர்க்கப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு முறைப்படி வீரவணக்கம் செலுத்தி பேரணி  கல்லறை பேருந்து நிறுத்தத்தில் காலை 10 மணிக்கு பறை முழக்கத்தோடு புஜதொமு தலைவர் அ.முகுந்தன் தலைமையில் தொடங்கியது.”மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு ?” என்று  நாட்டின் இயற்கை வளத்தை கொள்¨ளயடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடக்கோரும்  பாடல் இசைக்கப்பட்டது.

ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்கள் செஞ்சட்டையுடன் செங்கொடியேந்தி  தொழிலாளி வர்க்கத்தின் உரிமைககளை ப¡துகாப்பதற்காக இழந்து போன உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, அந்த கம்யூனிச செஞ்சுடரை ஏந்தி  பேரணியாய் சென்றார்கள்.  இருங்காட்டுக்கோட்டை, திருப்பெரும்புதூர் பகுதியிலே பணிபுரிந்து சுரண்டப்படும் தொழிலாளிகள் பரவலாக வாழும்  பகுதிகளின் ஊடாக  பேரணி சென்றது. அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிக்கக்கோரியும், தனியார் மயம் தாராளமயம் உலக மயத்தை முறியடிக்ககோரியும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும், ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க நக்சல் பாரிப் பாதையில் அணி திரளக்கோரியும் முழக்கங்கள் முழங்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் மாவோவின் படங்களை ஏந்தி  அவர்களின் உண்மையான வாரிசுகளாக களத்திலே  தங்கள் குடும்பங்களோடு தோழர்கள் சென்றார்கள்.   தோழர்கள் மூன்று கிலோமீட்டர் பேரணியாய் சென்றார்கள் என்றால் மக்கள் பெருந்திரளாக ஆதரித்து தோழர்களுக்கு தண்ணீர் தேவையா என்று தோழமையோடு வினவினார்கள்.

பூந்தமல்லி  நீதி மன்றம் அருகே 11 மணிக்கு பேரணி முடிவுற்றது . அவ்விடத்திலே   ஆர்ப்பாட்டம் தொடங்கியது. புஜதொமு மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றி வேல் செழியன்  சிறப்புரையாற்றினார்.  125 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் தொழிலாளார்களால் எட்டு மணி நேர வேலை என்ற  தொழிலாளிவர்க்கத்தின் கோரிக்கைக்காக தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் முழுக்க பற்றிப்படர்ந்து பல தொழிலாளர்கள் குருதி சிந்தி சாதித்தது. ஆனால் அப்படி போராடி வாங்கிய உரிமைகள் இன்றைய மறூகாலனியாக்கச் சூழலில் நசுக்கப்பட்டு,  வேலைகள் பறிக்கப்பட்டு, தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையற்ற அடிமையாக தொழிலாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  சிஐடியூ, ஏஐடியுசி போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் தொற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றபடி தாளம் போடுபவையாக உள்ளன. தொழிலாளிகளிடம் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கு மாறாக அவர்களின் போர்க்குணத்தை சிதைக்கின்றன. தொழிலாளிகள் தம் உரிமையை மீட்டெடுக்க ஓட்டுக்கட்சிகளை நம்பிப்பலனில்லை. புரட்சிகர தொழிற்சங்கமான புஜதொமு தொழிலாளர்களின் போராடி வென்றதையும் , புஜதொமுவைப்பற்றி அரசு பரப்பும் பெ¡ய் செய்திகளையே போலி கம்யூனிஸ்டுகள் பரப்பிக்கொண்டு செல்லும் வேளையில் தொழிலாளி வர்க்கத்தின் இன்னல் தீர புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வென்றும் அதற்கு நக்சல்பாரிப் பாதையில் அணிதிரள  வேண்டுமென்றும் அறைகூவியது சிறப்புறை . பாட்டளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது

மே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னை

கடலூர்

மே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரி

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?

நீங்கள் அச்சப்படுகின்ற எதிரியா நாங்கள் ?

‌க்ச‌ல்க‌ள் எல்லாம் தீவிர‌வாதிக‌ள் அவ‌ர்க‌ளை ஒடுக்க‌வே நாங்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு எதிரான‌ ச‌ண்டையில் ஈடுப‌ட்டுள்ளோம் என்று கூறும் இந்திய‌ பாதுகாப்பு(!) ப‌டையின் உண்மை முக‌த்தை தோலுரித்து காட்டுகின்ற‌து இக்க‌ட்டுரை. வீரப்ப‌னின் தேடுத‌ல் வேட்டையில் எவ்வாறு அங்கு வாழ்ந்த‌ சோள‌க‌ர் ப‌ழ‌ங்குடி இன‌ ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்ப‌தை ச‌.பால‌முருக‌ன் எழுதிய‌ சோள‌க‌ர் தொட்டி என்ற‌ நாவ‌ல் மிக தெளிவாக பதிந்துள்ளது.

அதைப் போலவே மாவோவின‌ர்களை  தேடும் வேட்டையில் பாதிக்க‌ப்ப‌டும் ப‌ழ‌ங்குடி இன‌ம‌க்க‌ளின் வாழ்க்கை நிலையைப் ப‌ற்றி தெரிந்து கொள்ள‌ இக்க‌ட்டுரை ஒரு சிறிய‌ அள‌விலாவ‌து உங்க‌ளுக்கு உத‌வும்.  மேலும் இதுபோல பாதிக்கப்படுகின்ற பழங்குடி இன மக்களுக்கு ஆதரவாக போராடும் பினாயக் சென் போன்றோர் அரச நிறுவனங்களால் ஒரு தேச‌துரோகியைப் போல சித்தரித்து கைது செய்யப்பட்டு அடைப்பது அவரை மட்டும் தண்டிப்பதற்காக அல்ல…குறிப்பாக மக்களுக்காக வேலை செய்பவர்களிடம் ஒரு அச்ச‌ உணர்வை எப்பொழுதுமே வைத்திருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அந்த அச்ச‌த்தின் மூலமாக மக்களை ஆட்சி செய்வது தான் இராணுவ ஆட்சி, இந்தியாவிலும் இந்த முறையிலான‌ இராணுவ ஆட்சியே நடக்கின்றது…..

இந்த கட்டுரையின் இறுதியில் கோவசி அத்மா என்ற பழங்குடி விவசாயி கூறுவது போல இங்கு இரண்டு வேறுபட்ட அரசுகள் உள்ளன (ஒன்று ஏழை இந்தியா, மற்றொன்று பணக்கார இந்தியா)என்பதை தனது அண்மைய தீர்ப்பின் மூலமாக உச்சநீதிமன்றம் வேறுவழியில்லாமல் உறுதி செய்துள்ளது.

காவல் துறையின் இயக்கல்களுக்கு(operation) நடுவே தாண்டேவாடாவில் வாழுகின்ற மனிதர்களான பழங்குடிகளின் உண்மையான நிலையைப் பற்றியும், அங்கு மார்ச் மாத நடுப்பகுதியில் நடைபெற்ற‌ படுகொலை நிகழ்வுகளைப் பற்றியும் விவரிக்கின்றது இக்கட்டுரை. இக்கட்டுரையை எழுதியவர் தெகல்கா நாளிதழின் நிருபரான‌ துசா மிட்டல்…

______________________________________________

ந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான மாவோவினர் இந்திய‌ எல்லைப் பாதுகாப்பு படையினர் பயணம் செய்த பேருந்தின் மீது நடத்திய மிக மோசமான  தாக்குத‌ல் ந‌டைபெற்று இன்றோடு(6 ஏப்ரல் 2011) ஒர் ஆண்டு ஆகின்ற‌து. க‌ட‌ந்த ஆண்டு இதே நாளில் தான் ச‌ட்டீசுக‌ரின் வ‌ன‌ப்ப‌குதியில் 76 எல்லைப் பாதுகாப்புப‌டை வீர‌ர்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ப‌டுகொலை மாவோவின‌ர் மீதான‌ எதிர் ந‌ட‌வ‌டிக்கைக‌ளை அதிக‌ப்ப‌டுத்துவ‌த‌ற்கான‌ கார‌ணியாக‌ ஆன‌து. ஓர் ஆண்டுக்கு பின்ன‌ர் அதே வ‌ன‌ம் இன்னொரு ப‌டுகொலை நிக‌ழ்வைச் ச‌ந்தித்துள்ள‌து. ஆனால் இந்த‌ முறை ப‌டுகொலையை செய்த‌து நாம் எதிரிகளாகக் கருதும் மாவோவின‌ர் அல்ல, இந்திய‌ பாதுகாப்பு ப‌டைக‌ள் என்ப‌து தெக‌ல்கா நாளித‌ழின் விசாரணையிலிருந்து தெரிய‌ வ‌ருகின்ற‌து. இதில் தாக்குத‌லுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் இந்தியாவில் உள்ள‌ ச‌க‌ம‌க்க‌ளின் க‌ண்க‌ளுக்கு (தெரிந்தும்)தெரியாத‌ ப‌ழ‌ங்குடிகளே.

மார்ச் இர‌ண்டாவ‌து வார‌த்தில் பாதுகாப்பு ப‌டை ந‌ட‌த்திய இய‌க்க‌ல் ஐந்து நாட்க‌ள் நீடித்த‌து. இதில் இந்திய‌ பாதுகாப்பு ப‌டை தாண்டேவாடா மாவ‌ட்ட‌த்தின் வனப்பகுதியின் உள்ளே உள்ள‌ மூன்று கிராம‌ங்க‌ளை முற்றிலுமாக‌ தீவைத்து கொளுத்தியுள்ள‌து. இதில் மொத்த‌ம் முன்னூறு குடிசைக‌ள் எறிந்து சாம்ப‌லாயின‌. நூற்றுக்க‌ண‌க்கான‌ ப‌ழ‌ங்குடி ம‌க்க‌ள் வீடிழ‌ந்தார்க‌ள். மூன்று பெண்க‌ள் பாலிய‌ல் வ‌ன்புண‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். மூன்று ப‌ழ‌ங்குடியின‌ ம‌க்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். ப‌ழ‌ங்குடிக‌ளின் தானிய‌ சேமிப்புக‌ள் எல்லாம் தீக்கிறைக்கப்பட்டுள்ள‌ன‌. ப‌ழ‌ங்குடிக‌ள் சேமித்து வைத்திருந்த‌(மொத்த‌ இருப்பு) த‌ங்க‌ ந‌கைக‌ள், ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ரூபாய்க‌ள் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

கொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒருவ‌ரின் உட‌ல் ஒரு ம‌ர‌த்தில் தொங்க‌விட‌ப்ப‌ட்டும், ம‌ற்ற‌ ஒருவ‌ரின் உட‌ல் கோடாரியால் இர‌ண்டாக‌ பிள‌க்க‌ப்ப‌ட்டும் கிட‌ந்த‌து. அவ‌ர்க‌ளின் வாழ்வாதார‌மான‌ கோழி, ஆடு, உண‌வுப் பொருட்களும் கொள்ளைய‌டிக்க‌ப்பட்டுள்ள‌‌ன‌.

இதைப் ப‌ற்றிய‌ செய்தி “Rajastan Patrika” என்ற ஒரே ஒரு இந்தி நாளிதழலும், “இந்து” நாளித‌ழிலும், சில‌ உள்ளூர் தொலைக்காட்சி அலைவ‌ரிசைக‌ளிலும் வெளிவ‌ந்த‌தை த‌விர வேறு எந்த‌ ஒரு த‌னிப்ப‌ட்ட‌ விசார‌ணைக‌ளும் மேற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. தாண்டேவாடாவில் காவல்துறை தலைமை அதிகாரியான கல்லுரி என்பவரின் தலைமையில் தான் இந்திய‌ துணை இராணுவமும், மற்ற படைகளும் இய‌ங்குகின்றன‌. இவ‌ர் இந்த‌ ப‌டுகொலையும், தீ வைப்பும் “மாவோவின‌ரின் பர‌ப்புரை யுத்தி” என்கின்றார். ச‌ட்டீசுக‌ர் மாநில‌ உள்துறை ம‌ந்திரி ந‌ன்கிராம் க‌ன்வாரோ இந்த‌ தீ வைப்புக‌ளுக்கு கார‌ண‌ம் மாவோவின‌ர் தான் என‌க் குற்ற‌ம் சாட்டுகின்றார்.

இந்த‌ ப‌டுகொலை நிக‌ழ்வுக்கு பின்ன‌ரான‌ மார்ச் இறுதி வார‌ங்க‌ளில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளில் நுழைவ‌த‌ற்கு ப‌ல தனிப்பட்ட விசாரணை குழுக்க‌ளுக்கு த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து. ச‌ட்டீசுக‌ர் மாநில‌ முத‌ல்வ‌ர் இராமன் சிங்கின் உத்திரவாத‌த்தின் பேரில் காவ‌ல்துறையின‌ரின் பாதுகாப்போடு சென்ற‌ ச‌மூக‌ செய‌ல்பாட்டாள‌ரான‌ சுவாமி அக்னிவினேசு வெறி கொண்ட‌‌ ஒரு கூட்ட‌த்தின‌ரால் தாக்க‌ப்ப‌ட்டார். உள்ளூர் ப‌த்திரிகையாள‌ர்க‌ள் ப‌ல‌ர் தாக்க‌ப்பட்டுள்ளார்கள், மேலும் கைது செய்து சிறையில் அடைத்துவிடுவோம் என்று காவ‌ல்துறையால் மிர‌ட்ட‌ப்பட்டுமுள்ளார்க‌ள்.

தாண்டேவாடா மாவ‌ட்ட‌ ஆட்சிய‌ர் கொடுத்த‌ நிவார‌ண‌ப் பொருட்க‌ளை ஏற்றிச் சென்ற‌ சுமையுந்தின் ஓட்டுநர், க‌ர்த‌ம் சூர்யா என்ற‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியினால் தாக்க‌ப்ப‌ட்டார். இந்த காதம் சூர்யா இதற்கு முன்னர் ஒரு க‌ற்ப‌ழிப்பு வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்பட்டவர். இவ‌ரை க‌ண்டுபிடிக்க‌முடிய‌வில்லை என்று காவல்துறை கூறுகின்ற‌‌து. பாதுகாப்பு பிர‌ச்ச‌னை என்ற‌ பெய‌ரில் ச‌ட்டீசுக‌ர் மாநில‌ எதிர் க‌ட்சியைச் சேர்ந்த‌ 11 ச‌ட்ட‌ம‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் இந்த‌ ப‌குதிக்குள் நுழைவ‌த‌ற்கு அனும‌தி ம‌றுக்க‌ப்பட்டுள்ள‌‌து. ப‌ல‌ வித‌மான‌ இழுத்த‌டிப்புக‌ளுக்கு பின்ன‌ர் வேலை செய்ய‌த்துவ‌ங்கிய‌ மாநில‌ நிர்வாக‌ம் தாண்டேவாடா மாவ‌ட்ட‌ காவல்துறை த‌லைமை அதிகாரி க‌ல்லுரியை இட‌மாற்ற‌ம் செய்து, மேலும் இந்த‌ ப‌டுகொலை தொட‌ர்பான‌ நீதி விசார‌ணை ந‌ட‌க்கும் என்று உத்திர‌வாத‌த்தையும் வ‌ழ‌ங்கியுள்ள‌து.

க‌ட‌ந்த‌ வார‌ம் காவ‌ல்துறையின் அர‌ண்க‌ளை தாண்டி செல்வ‌த‌ற்காக‌ மிக‌வும் தொலைவான‌ காட்டுப்ப‌குதியின் மூல‌மாக‌ பாதிக்க‌ப்ப‌ட்ட‌ கிராம‌ங்க‌ளை தெக‌ல்கா குழுவின‌ர் சென்ற‌டைந்த‌ன‌ர். ம‌த்திய‌ காவ‌ல் ப‌டை வீர‌ர்க‌ள், “கோப்ரா”, “கோய” அதிரடி படையைச் சேர்ந்த அதிகாரிக‌ள், காவ‌ல்துறை அதிகாரிக‌ள் எல்லாம் சேர்ந்து தான் இந்த‌ ப‌டுகொலையை நிகழ்த்தினார்கள் என்று நிக‌ழ்வை நேரில் க‌ண்ட‌ சாட்சிக‌ள் எம்மிடம்(தெகல்கா) கூறினார்க‌ள். மேலும் இவ‌ர்க‌ளுக்கு உறுதுணையாக‌ உடுப்பு அணிந்தும், பொது ம‌க்க‌ளைப் போன்ற‌ உடைய‌ணிந்தும் இருந்த‌ சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிகளும் இருந்துள்ளார்கள்.

“இந்த‌ப் ப‌குதியில் நாட்டுத்துப்பாக்கிக‌ள் போன்ற‌ ஆயுத‌ங்க‌ள் உற்ப‌த்தி செய்ய‌ப்ப‌டுவ‌தாக‌ காவ‌ல்துறை க‌ருதியிருந்த‌து. மேலும் கிடைத்திருந்த‌ உள‌வுத்த‌க‌வ‌ல்க‌ளின் ப‌டி முக்கிய‌மான‌ மாவோவின‌ர் இந்த‌ப் ப‌குதியில் ப‌துங்கியிருப்ப‌தாக‌வும் எங்களுக்கு த‌க‌வ‌ல்க‌ள் வ‌ந்த‌ன‌” என‌ காவ‌ல்துறை வ‌ட்டார‌ங்க‌ள் தெரிவிக்கின்ற‌ன. அவர்கள் மேலும் கூறுகையில் “இந்த‌ கிராம‌த்தில் உள்ள‌வ‌ர்க‌ள் எல்லாம் ந‌க்ச‌ல் ஆத‌ர‌வாள‌ர்க‌ள், தெரிந்தோ, தெரியாம‌லோ ந‌க்ச‌ல்க‌ளுக்கு அவ‌ர்க‌ள் உட‌ந்தையாக‌வும், 76 ப‌டை வீர‌ர்க‌ள் கொல்ல‌ப்ப‌டுவ‌த‌ற்கு உத‌வியும் உள்ளார்க‌ள்”.

தீ வைத்து கொழுத்த‌ப்ப‌ட்ட‌ மோர்பளி, திமாபுர், தர்மத்லா கிராம‌ங்க‌ள் ம‌யான‌ பூமியைப் போல‌ எங்க‌ளுக்கு காட்சிய‌ளித்த‌ன‌. அந்த‌ நில‌ப்ப‌குதி மொத்த‌‌மும் எரிந்த‌ குடிசைக‌ளையும், ஆள் அரவமற்ற எரிந்து போன தானிய‌ங்க‌ளைக் கொண்ட‌ ப‌ழ‌ங்கால‌ தாழிக‌ளையும் கொண்ட இடிந்து போன வீடுகளையும் மட்டுமே கொண்டிருந்த‌து. இது ச‌ல்வா சூடும் ந‌டைபெற்ற‌ ஆர‌ம்ப‌ கால‌ க‌ட்ட‌த்தை எம‌க்கு நினைவூட்டிய‌து. 2005-ல் தொடங்கிய ச‌ல்வா சூடும் இய‌க்க‌லினால் மொத்த‌ம் 645 கிராம‌ங்க‌ள் எரித்து சாம்ப‌லாக்க‌ப்பட்டது, மொத்த‌ம் 60,000 ம‌க்க‌ள் உள்நாட்டிலேயே இட‌ப்பெய‌ர்வுக்கு உள்ளாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். இந்த‌ ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல் அர‌ச‌ உத‌வி பெற்ற‌ ஒரு ஆயுத‌ப்ப‌டை இயக்கல் என்ப‌து பெரும்பான்மையோரால் ஒப்புக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ஒன்றாகும்.


பாதுகாப்பு ப‌டையினரால் தாக்க‌ப்ப‌ட்டு, க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ ஐம்லா சோகி
பாதுகாப்பு ப‌டையினரால் தாக்க‌ப்ப‌ட்டு, க‌ற்ப‌ழிக்க‌ப்ப‌ட்ட‌ ஐம்லா சோகி


அது போல‌ ஒரு பெரிய‌ இட‌ப்பெய‌ர்வு இப்பொழுது ந‌ட‌க்க‌வில்லை என்றாலும், இது போன்ற‌ நிக‌ழ்வுக‌ளால் வீடுக‌ளை இழ‌ந்து பாதிக்க‌ப்பட்ட‌ ப‌ழ‌ங்குடிக‌ள் ஆந்திர‌ மாநில‌த்திற்கு இட‌ம்பெய‌ர்ந்து அங்கு கூலி வேலைக‌ளில் ஈடுப‌ட்டு வ‌ருகின்றார்க‌ள். இதை விடுத்த‌ அந்த‌ கிராம‌ங்க‌ளிலேயே வாழ்ந்து வ‌ருப‌வ‌ர்க‌ள் வீடுக‌ள் இல்லாத‌ காரண‌‌த்தினால் பெரிய‌ ம‌ர‌ங்களின் கீழ் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் வாழ்ந்து வ‌ருகின்றார்க‌ள். இந்த‌ கொடூர‌ நிக‌ழ்வை செய்த‌து சீருடை அணிந்த‌ மாவோவின‌ர் என்று முத‌லில் க‌ருத‌ப்ப‌ட்ட‌து.

ஆனால் இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ உள்ளூர்வாசிக‌ள் இந்த‌ தாக்குத‌லில் ஈடுப‌ட்ட‌வ‌ர்க‌ள் அர‌ச‌ ப‌டையைச் சேர்ந்த‌வ‌ர்க‌ளே என்றும், அவ‌ர்க‌ளில் சில‌ர‌து பெய‌ர்க‌ளையும் கூறினார்க‌ள்: ந‌க‌ர‌ம் ப‌குதியைச் சேர்ந்த‌ இர‌மேசு என்ற‌ ம‌த்க‌ம் பீமா, லேகாப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ தெல‌ம் அன்ட, மோர்பளி ப‌குதியைச் சேர்ந்த‌ புத்கே ம‌ரா, குர்ராப‌ரோ ப‌குதியைச் சேர்ந்த‌ கிச்சே ந‌ந்தா (இவ‌ர் ஏற்க‌ன‌வே சிங்கார‌ம் என்ற‌ ப‌குதியில் 19 ப‌ழ‌ங்குடியின‌ரைக் கொலை செய்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்), மிசுமா ப‌குதியைச் சேர்ந்த‌ க‌ர்த‌ம் சூர்யா (இவ‌ர் ஏற்க‌ன‌வே 4 ப‌ழ‌ங்குடி இன‌ பெண்க‌ளை க‌ற்ப‌ழித்த‌ வ‌ழ‌க்கில் குற்ற‌ம் சாட்ட‌ப்ப‌ட்ட‌வ‌ர்). மேலும் ந‌ந்தா, சூர்யாவைக் கைது செய்ய‌ச் சொல்லி நீதிம‌ன்ற‌ம் பிற‌ப்பித்த‌ தீர்ப்பு ஒன்றும் நிலுவையில் உள்ள‌து. வ‌ழ‌மை போல‌வே இவ‌ர்க‌ளை எல்லாம் காண‌வில்லை என்று காவ‌ல்துறை கூறுகின்ற‌து.

இவ‌ர்க‌ளில் சில‌ர் ச‌ர‌ண‌டைந்த‌ மாவோவின‌ர் (பின்னர் அர‌ச‌ த‌ர‌ப்பால் மூளைச்ச‌ல‌வை செய்ய‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள்), சில‌ர் ச‌ல்வாசூடும் இய‌க்க‌லில் ப‌ணியாற்றி பின்ன‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக‌ ஆன‌வ‌ர்க‌ள், சில‌ர் சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரியாக ப‌ணியாற்றி “கோய”அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளாக‌ ப‌த‌வி உய‌ர்வு பெற்ற‌வ‌ர்க‌ள். அர‌சு ச‌ல்வா சூடும் இய‌க்க‌ம் முடிவுக்கு வ‌ந்துவிட்ட‌தாக‌ கூறுகின்ற‌து, ஆனால் அந்த‌ இய‌க்க‌லில் ப‌ணியாற்றிய‌வ‌ர்க‌ள் தான் அதிர‌டி ப‌டைக‌ளிலும், சிற‌ப்பு காவ‌ல்துறை அதிகாரிக‌ளாக‌வும் ப‌ணியாற்றி வ‌ருகின்றார்க‌ள். ச‌ல்வா சூடும் இய‌க்க‌ல்…துணைப் பாதுகாப்பு ப‌டை இய‌க்க‌ல் என்று பெய‌ர் மாற்ற‌ம் தான் அடைந்திருக்கின்ற‌தே த‌விர‌ ச‌ல்வா சூடும் முடிந்து, துணை இராணுவ‌ப்ப‌டையின் ந‌டவ‌டிக்கைக‌ள் தொட‌ங்கி இருக்கின்ற‌ன‌ என்ப‌த‌ற்கான‌ சான்றுக‌ள் தென்ப‌ட‌வே இல்லை.

மேலும் இங்கு த‌னிப்ப‌ட்ட‌ ப‌கை ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்றதா இல்லை மாவோவின‌ருக்கு எதிரான ந‌ட‌வ‌டிக்கைக‌ள் ந‌ட‌க்கின்ற‌தா என்பதும் தெளிவாக தெரியாத‌ நிலையே நிலவுகின்றது. இந்த படுகொலை நிகழ்விற்கு உடந்தையாக இருந்த த‌ன் ம‌கன்(புத்கே மற) சாக‌ வேண்டும் என்று நினைக்கும் மோர்ப‌ளி வாசியான‌ புத்கே ல‌ச்சாவை நீங்க‌ள் ச‌ந்திந்தால் தான் இங்கு ந‌ட‌ந்து வ‌ரும் உள்நாட்டுப் போர் எந்த‌ள‌வு ம‌க்க‌ளை பாதித்துள்ள‌து என்ப‌து உங்க‌ளுக்கு தெரிய‌ வ‌ரும். புத்கே ல‌ச்சா மேலும் கூறுகையில் தொட‌க்க‌த்தில் புத்கே ம‌ற‌ குடிப்ப‌ழ‌க்க‌த்தில் ஈடுப‌ட்டு பெண்க‌ளிட‌ம் த‌வ‌றாக‌ ந‌ட‌க்க‌ முற்ப‌ட்டான், பின்னர் ஒரு பெண்ணை க‌ற்ப‌ழித்து என‌க்கு தீராத‌ க‌ள‌ங்க‌த்தை உண்டாக்கிவிட்டு இந்த‌ கிராம‌த்தை விட்டே வெளியேறிவிட்டான்.

“அவ‌ன் ஆந்திராவில் கூலி வேலை செய்வ‌தாக‌வும், எங்கேயாவ‌து அவ‌ன் த‌ங்க‌ நேர்ந்தால் அங்குள்ள‌ ப‌சு, உண‌வு தானிய‌ங்க‌ள், ப‌ண‌த்தை திருடி வ‌ருவ‌தாக‌வும்” நான் கேள்விப்ப‌ட்டேன் என‌ புத்கே ல‌ச்சா கூறுகின்றார். இதன் பின்ன‌ர் கடந்த ஆண்டு(2010)ச‌த்தீசுக‌ர் வ‌ந்த‌ த‌ன் ம‌க‌ன் நேரடியாக கோன்டா ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் குழுவிற்கு த‌லைமை பொறுப்பு வ‌கித்ததாகவும், இதன் பின்னர் சில மாதங்களிலேயே அவனுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு சிறப்பு காவல்துறை அதிகாரியானான், அவனுக்கு அரச படைகளின் சீருடையும், ஒரு துப்பாக்கியும், மாதம் 3,000 ரூபாய் சம்பளமும் அரசால் வழங்கப்பட்டது. அவன் மட்டும் தனியாக இந்த கிராமத்திற்கு மீண்டும் வந்தால் இங்கிருக்கும் மக்கள் எல்லாம் ஒன்றாக‌ சேர்ந்து அவனை கொன்று விடுங்க‌ள் என்று நான் இங்குள்ள‌ மக்களிடம் கூறுவேன் என்கிறார் புத்கே லச்சா.

ப‌டுகொலையை நேரில் க‌ண்ட‌ சாட்சிய‌ங்க‌ள் கூறிய‌த‌ன் அடிப்ப‌டையில் அந்த‌ நாட்க‌ளில் நிக‌ழ்ந்தவை…..

11 மார்ச், காலை 8.00 மணி – இடம். மோர்பளி

பாதுகாப்பு ப‌டையினரால் தன் கண‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின‌ருகே நிற்கின்றார் ம‌த்வி உங்கி
பாதுகாப்பு ப‌டையினரால் தன் கண‌வ‌ன் கொல்ல‌ப்ப‌ட்ட‌ ம‌ர‌த்தின‌ருகே நிற்கின்றார் ம‌த்வி உங்கி

அரச படை இரண்டு பிரிவுகளாக மோர்பளி கிராமத்திற்குள் நுழைந்தார்கள். மத்வி கங்காவின் குழந்தைகள் தண்ணீர் எடுக்கச் சென்ற குளத்தை ஒட்டிய பாதை வழியாக முதல் அணி வந்தது. அவர்கள் வரும் சத்தத்தை கேட்டு தன் குடும்பத்தை எச்சரிக்க சென்றார் மத்வி கங்கா(வயது 40), ஆனால் அவர்கள் அதற்குள்ளாக அங்கு வந்துவிட்டார்கள். மத்வி கங்காவையும், அவரது மகள் லக்கேவையும்(17 வயது), மகன் பீமா மூவரையும் தாக்கியுள்ளார்கள், பின்னர் அவர்களை கட்டி கிராமத்திற்குள் இழுத்து வந்துள்ளார்கள். பின்னர் அவர்களிடம் “மாவோவினர் எங்கே என்று? கேட்டுள்ளார்கள்.

முதல் அணி மோர்பளி கிராமத்திற்குள் வருவதற்கு முன்னதாகவே அந்த கிராமத்தில் வசித்த 200 பேரும் கிராமத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். அரச படைக்கு மாவோவினரோ, மக்கள் தயாரிப்பதாக சொன்ன நாட்டு துப்பாக்கிகளோ எதுவும் கிடைக்கவில்லை. அவர்களுக்கு கிடைத்ததெல்லாம் மாவோவினர் மாவீரர்களுக்காக கட்டிய 15 அடி உயர நினைவுச் சின்னம் மட்டுமே. அந்த கிராமத்தில் மாவோவினரின் நினைவுச் சின்னம் இருப்பதாலேயே அந்த கிராமவாசிகள் அனைவரும் மாவோவினர் என்று கூறி விடமுடியாது.

ம‌று புற‌ம், இர‌ண்டாவ‌து அணி வ‌ரும் பொழுது, 40 வ‌ய‌தான‌ ஐம்லா என்ப‌வ‌ர் த‌ன‌து நில‌த்தை உழுது கொண்டிருந்தார். அவரை நோக்கி வந்த இரண்டாம் அணியைச் சேர்ந்தவர்கள் “எழுந்து, அந்த ப‌க்க‌மாக‌ச் செல், நாங்க‌ள் எல்லோரும் ஆந்திர‌ பிரிவைச் சேர்ந்த‌ ந‌க‌ச‌ல்க‌ள், நாங்க‌ள் அவ‌ச‌ர‌மாக‌ ஒரு ச‌ந்திப்பிற்குச் சென்று கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்க‌ள். அவ‌ர் அங்கிருந்து ந‌க‌ர‌ ம‌றுக்க‌வே, அவ‌ரை த‌ங்க‌ள் கைக‌ளிலிருந்த‌ இல‌த்தி க‌ம்பைக் கொண்டு தாக்கி, அவ‌ர் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்த அவரது வாழ்நாள் சேமிப்பான‌‌ ரூ. 10,000த்தை அவ‌ரிட‌ம் இருந்து ப‌ரித்து, அவரது இரு பெண் குழந்தைகளின் கண் முன்பே அவ‌ரை பாலிய‌ல் துன்புறுத்த‌லுக்கு உட்ப‌டுத்தினார்க‌ள். (ச‌ல்வா சூடும் கால‌த்தில் அடிக்க‌டி வீட்டிற்கு தீ வைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌டைபெறத் தொட‌ங்கிய‌தால் இங்கு வாழும் பழ‌ங்குடிக‌ள் த‌ங்க‌ள் வாழ்நாள் சேமிப்புக‌ளான‌ த‌ங்க‌ ந‌கைக‌ளையும், ப‌ண‌த்தையும் எங்கு சென்றாலும் த‌ங்க‌ளுட‌னே எடுத்துச் செல்ல‌த்தொட‌ங்கினார்க‌ள்..இல்லையென்றால் அவையும் எரிந்து சாம்ப‌லாகிவிடும்)

அந்த‌ கிராம‌த்தில் உள்ள‌ 35 வீடுக‌ளிலுள்ள‌ பொருட்க‌ளையும் க‌ளவாடி, அங்கிருந்த‌ ம‌க்க‌ளை அடித்து துன்புறுத்திய‌ இரு அணிக‌ளும், கையில் தீக்குச்சி மற்றும் கல்லெண்ணெய்(petrol) மூலம் அந்த‌ கிராம‌த்தை எரித்து விட்டுச் சென்றார்க‌ள். விவ‌சாயியான‌ க‌ர்த்தி ல‌ச்சாவின் ம‌ண் குடிசை இத‌ற்கு முன்பே ஒருமுறை ச‌ல்வா சூடும் ப‌டையின‌ரால் 2006ல் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இது இர‌ண்டாவ‌து முறை. “எத்த‌னை முறை தான் நான் என‌து குடிசையும் மீள‌க்க‌ட்டுவ‌து?, மீண்டும் அவ‌ர்க‌ள் வ‌ந்து என‌து குடிசையை கொளுத்த‌மாட்டார்க‌ள் என்ப‌து என்ன‌ நிச்ச‌ய‌ம் என்று?” அவ‌ர் கேட்கின்றார்.

அங்க‌ன்வாடி ப‌ணியாள‌ரான‌ சோடி சான்டோவின் குடிசையும் இதில் எரிக்க‌ப்ப‌ட்ட‌து. இவ‌ர‌து குடிசையில் தான் க‌ர்ப்பிணி பெண்க‌ளுக்காக‌ அர‌சினால் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் உண‌வுப் பொருட்க‌ள் வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன. சோடி சாண்டோவின் குடிசை தான் இந்த கிராமத்திலிருந்த ஒரே அரச அலுவலகம்.  ப‌ள்ளிக்கூட‌ங்க‌ள், நியாய‌ விலைக் க‌டைக‌ள், குடி நீர் என்று எல்லா அடிப்ப‌டை தேவைக‌ளுக்கும் இவ‌ர்க‌ள் த‌ங்கள் கிராம‌த்திருந்து நெடுந்தூர‌ம் ப‌ய‌ணிக்க‌ வேண்டியிருந்த‌து. மேலும் இது போன்ற‌ இட‌ங்க‌ளைச் சுற்றி ம‌த்திய‌ பாதுகாப்பு ப‌டையின் முகாம்க‌ளும், காவ‌ல்துறை நிலையங்களும் இருந்த‌ன.

புதிதாக கட்டப்பட்ட இரண்டு ஆசிரம பள்ளிக்கூடங்கள் கூட இந்த கிராமத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கின்றன‌. சல்வா சூடுமினால் வனப்பகுதியின் உள்ளிருக்கும் கிராமங்கள் தீ வைத்து காலி செய்யப்படுவதற்கும், அரசின் வளர்ச்சிப் பணிகளுக்கான அலுவலகங்கள் முக்கிய சாலைகளின் அருகிலேயே அமைந்திருப்பதற்கும் தொடர்புகள் இல்லாமல் இல்லை. முதலில் அவர்களது இடங்களிலிருந்து பழங்குடி மக்களை விரட்டி காவல்துறை, மற்ற படைகளின் கண்காணிப்பிலேயே வைப்பது தான் அவர்களின் உத்தி.

பாதுகாப்பு ப‌டையினால் த‌ன‌து வீடு, சேமிப்பு மொத்த‌த்தையும் இழ‌ந்த‌ ரேவா கொசா
பாதுகாப்பு ப‌டையினால் த‌ன‌து வீடு, சேமிப்பு மொத்த‌த்தையும் இழ‌ந்த‌ ரேவா கொசா

மோர்ப‌ளி கிராம‌த்தை தீவைத்து கொளுத்திய‌ பின்ன‌ர் ஒரு குழு க‌ங்கா, ம‌ற்றும் அவ‌ர‌து இரண்டு பிள்ளைக‌‌ளையும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள‌ சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌ம் நோக்கி புற‌ப்ப‌ட்ட‌து. போகின்ற‌ வ‌ழியில் ப‌டையின‌ர் வ‌ண்டியை நிறுத்தி தாங்க‌ள் கொள்ளைய‌டித்து வ‌ந்திருந்த‌ 50 கோழிக‌ளையும்(இதில் இரண்டு கோழிகள் கங்காவிற்கு சொந்தமானவை) ச‌மைத்து உண்டு, பின் ஓய்வெடுத்த‌ பின்ன‌ரே சென்றார்க‌ள். காவ‌ல்துறை நிலைய‌த்தில் க‌ங்காவும், அவ‌ர‌து இர‌ண்டு பிள்ளைக‌ளும் சிற‌ப்பு கால்துறை அதிகாரிக‌ளால் மீண்டும் தாக்க‌ப்ப‌ட்டார்க‌ள். “ஏன் அங்கிருந்து ஓடினீர்கள்? என்று அவ‌ர்க‌ள் கேட்ட‌த‌ற்கு, அவ‌ர் த‌ன‌து கிராம‌த்தில் ந‌ட‌ந்த‌ கொள்ளை, தீவைப்பு ச‌ம்ப‌வ‌ங்க‌ளை அவ‌ர்க‌ளிட‌ம் கூறினார், ஆனால் அவ‌ர்க‌ள் ப‌திவு செய்த‌து என்ன‌வோ க‌ங்கா குடும்ப‌த்தின‌ரின் பெய‌ர்க‌ளை ம‌ட்டுமே.

இத‌ற்கிடையில் கங்காவின் 17வ‌ய‌து பெண்னை அருகிலிருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றார்க‌ள், அடுத்த‌ நாள் காலையில் கிழிந்து போன‌ உள்ளாடைக‌ளுடன் அரை நிர்வாணமாக‌ அவ‌ள் வெளியே வ‌ந்தாள். “அவ‌ளை அடித்து துன்புறுத்தி க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள்” என்று கூறுகின்றார் க‌ங்கா. தெக‌ல்கா குழுவின‌ர் மோர்ப‌ளி கிராம‌த்திற்கு சென்ற‌ பொழுது அந்த‌ பெண் தனக்கு புதுத்துணிக‌ள் வாங்குவ‌த‌ற்காக‌ கூலி வேலை செய்ய‌ ஏற்க‌ன‌வே ஆந்திராவிற்கு சென்றிருந்தாள்.

மோர்ப‌ளியில் இருந்த‌ இர‌ண்டாவ‌து அணி அங்கிருந்து வ‌ன‌ப்ப‌குதியை சோத‌னை செய்ய‌ச் சென்ற‌ பொழுது 35 வ‌ய‌தான‌ ம‌த்வி உங்கி ம‌வுவா விதைக‌ளை பிரித்து வைத்துக்கொண்டிருந்தார், அவ‌ர‌து க‌ண‌வ‌ரான‌ ம‌த்வி சுக்கா (40 வயது) அருகிலுள்ள புளியமரத்தில் நன்றாக பழுத்திருந்த புளியங்காய்களை பறித்துக்கொண்டிருந்தார். அரசபடையின் காலணி சத்தத்தை கேட்ட உடனே மரத்தில் இருந்து கீழே இறங்கிய மத்வி சுக்கா இலைகள் அதிகமாக‌ இருந்த‌ டெண்டு ம‌ர‌த்தில் ஏறி ம‌றைந்து கொண்டார். ம‌த்வி உங்கி அங்கிருந்து ஓடி த‌ன‌து குடிசைக்குள் சென்று விட்டார். அவ‌ர‌து ஒரு வ‌ய‌து ம‌க‌ளை தூக்கி வைத்துக் கொண்டார். அவ‌ர‌து வீட்டிற்குள் புகுந்த அரச‌ப‌டையின‌ர் அவ‌ரை தாக்கி அவ‌ள‌து மேல்ச‌ட்டையை கிழித்துள்ளார்க‌ள்.

ப‌டையின‌ர் அங்கிருந்து ந‌க‌ர்ந்து செல்லும் போது துப்பாக்கி ச‌த்த‌ம் கேட்க‌, த‌ன‌து குடிசையில் இருந்து வெளியே த‌வ‌ழ்ந்த‌ ப‌டியே(நடக்க முடியாததால்) வ‌ந்த‌ உங்கி த‌ன‌து க‌ண‌வ‌ரை தேடி‌ச்சென்றார். அவ‌ர‌து க‌ண‌வ‌ர் இருந்த‌ இட‌த்தில் ஒரே இர‌த்த‌மாக‌ இருந்த‌து ஆனால் அவ‌ர‌து உட‌ல் அங்கில்லை, ச‌ற்று நிமிர்ந்து மேலே பார்த்தால் அவ‌ர‌து க‌ணவ‌ரின் உட‌ல் ம‌ர‌க்கிளைக்கு இடையில் குத்த‌ப்ப‌ட்டு தொங்கிக்கொண்டிருந்தது.  “இங்கே தான் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் என‌து க‌ண‌வ‌ரை சுட்டுக் கொன்றார்க‌ள்” என்று ஒரு கால‌த்தில் தான் வ‌ழிப்ப‌ட்ட வந்த அந்த‌ ம‌ர‌த்தைக் நம்மிடம் காட்டுகின்றார்.

13 மார்ச், ம‌திய‌ம் 12 ம‌ணி, புத்தாம்ப‌டு கிராம‌ம்

அன்று ம‌திய‌ம் சிந்த‌ல்ந‌ர் ம‌த்திய‌ ஆயுத‌ப் ப‌டைப்பிரிவு முகாமில் இருந்த‌ 300 பேர் திமாபுரை நோக்கி செல்ல‌த் தொட‌ங்கினார்க‌ள். அந்த‌ ப‌குதியில் மாவோவின‌ர் முகாம் அமைத்திருப்ப‌தாக‌ காவ‌ல்துறை த‌ர‌ப்பு கூறிய‌து. திமாபுர் செல்லும் வ‌ழியில் புத்தாம்ப‌டு கிராம‌த்தை அவ‌ர்க‌ள் சுற்றி வ‌ளைத்தார்க‌ள். ச‌ற்று தூர‌த்தில் அர‌ச‌ ப‌டையின‌ர் வ‌ருவ‌தைக் க‌ண்ட‌ அந்த‌ கிராம‌ ம‌க்க‌ள் ப‌ய‌த்தில் ஓட‌த் தொட‌ங்க, உடனடியாக‌ ப‌டையின‌ர் அவ‌ர்க‌ளை நோக்கி சுட‌த்தொட‌ங்கினார்க‌ள். இதில் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌த்க‌ம் கித்மீ கூறுகையில் “அவ‌ர்க‌ள் என்னை கொன்று விட்டார்க‌ள் என்றே நினைத்தேன், ஆனால் ந‌ல்வாய்ப்பாக(luckily) அந்த‌ குண்டு என் காலில் பாய்ந்த‌த‌னால் நான் த‌ப்பித்தேன்”. இப்பொழுது அவர் தனது கால்க‌ளை இழுத்துக் கொண்டே காட்டிற்குள் செல்கின்றார். த‌லையில் டெண்டூ இலைக‌ளை ஒரு கூடையில் சும‌ந்து கொண்டும், காலில் துப்பாக்கி குண்டோடும் அவ‌ர் வாழ்ந்து வ‌ருகின்றார்.

ஆனால் கித்மீயைப் போல‌ ப‌த்சே பீமாவிற்கும்(வ‌ய‌து 40), ம‌ன்னு ராமிற்கும் ந‌ல்வாய்ப்பு கை கொடுக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் இருவ‌ரையும் கைது செய்து அழைத்து கொண்டு ப‌டையின‌ர் திமாபுர் நோக்கி ப‌ய‌ணித்தார்க‌ள். த‌ன‌து க‌ண‌வ‌ன் பீமாவை விட்டு விடுமாறு அவ‌ர‌து ம‌னைவி ப‌த்சே ல‌க்மீ ப‌டையின‌ரிட‌ம் கெஞ்சினாள், இன்னும் ஒரு நாளில் அவ‌ரை விடுவித்து விடுவோம் என‌‌ ப‌டையின‌ர் அவ‌ருக்கு உறுதிய‌ளித்தார்க‌ள். ஆனால் இர‌ண்டு நாள் க‌ழித்து திமாபுரில் முழ‌ங்காலி‌டப‌ட்டு தொழுகை செய்யும் நிலையில் அவ‌ர‌து க‌ண‌வ‌ரின் உட‌லை இர‌த்த‌ வெள்ள‌த்தில் ம‌ட்டுமே ல‌க்மீயால் காண‌முடிந்த‌து. அப்போதும் கூட‌ அவ‌ர‌து க‌ண‌வ‌ரைக் கொன்ற‌ கோடாரி அவ‌ர‌து முதுகுப்ப‌குதியின் உள்ளே இருந்த‌து, அவ‌ர‌து கைக‌ளே ஒரு க‌யிற்றின் மூல‌மாக‌ பின்னால் க‌ட்ட‌ப்ப‌ட்டிருந்த‌து.

13 மார்ச், மாலை 3 ம‌ணி, திமாபுர் கிராம‌ம்….

எரிந்து போன‌ தானிய‌ங்க‌ளிலிருந்து சில‌ ந‌ல்ல‌ தானிய‌ங்க‌ளை ம‌த்வி பிசேவும், அவ‌ர‌து குழ‌ந்தைக‌ளும் பிரித்தெடுக்கின்றார்க‌ள்.
எரிந்து போன‌ தானிய‌ங்க‌ளிலிருந்து சில‌ ந‌ல்ல‌ தானிய‌ங்க‌ளை ம‌த்வி பிசேவும், அவ‌ர‌து குழ‌ந்தைக‌ளும் பிரித்தெடுக்கின்றார்க‌ள்.

மாலை 3 ம‌ணிய‌ள‌வில் பாதுகாப்பு‌ ப‌டையின‌ர் திமாபுர் கிராம‌த்திற்குள் நுழைந்த‌ன‌ர். திமாபுர் கிராம‌ம் அர‌சினால் புற‌க்க‌ணிக்க‌ப்ப‌ட்ட‌ ஒரு கிராம‌மாகும், ப‌ள்ளிக் கூட‌ங்க‌ள் கிடையாது, நியாய‌ விலைக் க‌டைக‌ள் கிடையாது, குடிநீர் வ‌ச‌தியும் கிடையாது. அங்கு இருந்த‌ ஒரு தொட‌க்க‌ப்ப‌ள்ளியும் ச‌ல்வா சூடும் தொட‌ங்கிய‌ பிற‌கு முற்றிலுமாக‌ செய‌ல்ப‌டுவ‌தில்லை (ச‌ல்வா சூடும் ப‌டையினரால் ஆசிரிய‌ர்க‌ள் யாரும் வ‌ன‌ப்ப‌குதிக்குள் நுழைய‌ வேண்டாம் என்று மிர‌ட்ட‌ப்ப‌ட்டார்க‌ள்)  மேலும் திமாபுர் கிராம‌த்திற்கு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் கிடையாது. முன்ன‌ர் ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ராக‌ இருந்த‌ ம‌த்க‌ம் ம‌சுகா இப்பொழுது தோர்ந‌ப‌ல் ப‌குதியில் உள்ள‌ ச‌ல்வா சூடும் முகாமில் உள்ளார். 2006ஆம் ஆண்டிற்கு பின்ன‌ர் எந்த‌ ஒரு ப‌ஞ்சாய‌த்து உறுப்பின‌ரும் இந்த‌ கிராம‌த்திற்கு வருவதும் கூட கிடையாது.

13 மார்ச் அன்று சில‌ குடிசைக‌ளை எரித்துக் கொண்டே அர‌ச‌ ப‌டை திமாபுர் கிராம‌த்திற்குள் மாவோவின‌ரையோ அல்ல‌து கிராம‌வாசிக‌ளையோ தேடிய‌ப‌டியே உள்ளே நுழைந்த‌து. ஆடுக‌ளும், கோழிக‌ளும் ம‌ட்டுமே அங்கிருந்த‌ உயிருள்ள‌ பொருட்க‌ளாகும். வ‌ழ‌மை போல‌வே அவ‌ற்றை கொன்று த‌ங்களின் இர‌வு உண‌வாக்கிக் கொண்டார்க‌ள். இர‌வு அவ‌ர்க‌ள் அங்கேயே த‌ங்கிவிட்டு, காலையில் அங்கிருந்து வெளியே செல்லும் வ‌ழியில்(2கிலோ மீட்ட‌ர் தொலைவில்) மாவோவின‌ரின் தாக்குத‌லுக்கு உள்ளானார்க‌ள்.
“அங்குள்ள‌ கிராம‌ங்க‌ளை பாதுகாக்க‌வே எங்க‌ள‌து ம‌க்க‌ள் விடுத‌லை க‌ர‌ந்த‌டி இராணுவ‌ம்(people liberation guerrills Army) அவ‌ர்க‌ளை தாக்கிய‌து” என்ற‌ கையெழுத்து பிர‌தி ஒன்று தெக‌ல்கா குழுவின‌ருக்கு வ‌ந்த‌து. இந்த‌ கையெழுத்து பிர‌தியின் கீழே – மாவோவிவ‌ன‌ரின் தெற்கு பாசுட‌ர் ப‌டையணியின் த‌லைமை அதிகாரி – வெங்க‌டேசு என்று கையொப்ப‌ம் இட‌ப்ப‌ட்டிருந்த‌து. மேலும் அந்த‌ அறிக்கையில் “க‌ல்லுரிக்கும்(மாநில‌ காவ‌ல்துறை த‌லைமை அதிகாரி) அவ‌ர‌து ப‌டைக‌ளுக்கும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் எப்பொழுது வேண்டுமானாலும் வேட்டையாட‌ப்ப‌டும் வ‌ன‌ மிருக‌ங்க‌ள் ஆகிவிட்டார்க‌ளா? எப்பொழுதெல்லாம் இவர்களில் எவர் ஒருவ‌ரை அவர்கள் பார்த்தாலும், அவ‌ரை தாக்கியோ, கொன்றோ, அல்ல‌து அவ‌ர‌து பொருட்க‌ளை கொள்ளைய‌டித்தோ செல்கின்றார்க‌ள். அர‌ச‌ நிர்வாக‌ம் ஆதிவாசிக‌ளுக்கான‌ அபிவிருத்தி(development) திட்ட‌ங்க‌ளைப் ப‌ற்றி பேசி வ‌ருகின்ற‌து. ஆனால் நீங்க‌ள் பார்த்துவ‌ரும் இந்த‌ கிராம‌வாசிக‌ள் ஆதிவாசிக‌ளைப் போல‌வா ந‌ட‌த்த‌ப்ப‌டுகின்றார்க‌ள்?” என்று எழுத‌ப்ப‌ட்டுள்ள‌து.

மாவோவின‌ரின் தாக்குத‌லில் 3 “கோயா” அதிர‌டிப்ப‌டை அதிகாரிக‌ளும், 1 மாவோவின‌ரும் கொல்ல‌ப்ப‌ட்டார்க‌ள். இத‌ன் பின்ன‌ர் பாதுகாப்பு‌ ப‌டை மீண்டும் திமாபுர் கிராம‌த்திற்கு திரும்பிய‌து. அடுத்த‌ நாள் முழுவ‌தும் அங்கே த‌ங்கியிருந்த‌ ப‌டையின‌ர், 15 மார்ச் அதிகாலையில் கிராம‌த்தை விட்டு சிந்த‌ல்ந‌ர் நோக்கி புற‌ப்ப‌ட்டார்க‌ள். வ‌ழ‌மை போல‌வே அங்கிருந்த‌ 50 குடிசைக‌ளை தீவைத்து கொளுத்தி, தாங்க‌ள் கைது செய்து கொண்டு வ‌ந்த‌ ப‌த்சே பீமாவை அங்கேயே கொன்றுவிட்டு சென்றார்க‌ள். ம‌ன்னு ராமை அவ‌ர்க‌ள் தங்க‌ளுட‌னே சிந்த‌ல்ந‌ர் காவ‌ல்நிலைய‌த்திற்கு அழைத்துச் சென்றார்க‌ள்.

இர‌ண்டு நாட்க‌ளுக்கு பின்ன‌ர் த‌ன‌து க‌ண‌வ‌ரான ம‌ன்னு ராமைத் தேடி சிந்த‌ல்ந‌ர் வ‌ந்தார்‌ ம‌ங்க‌லி‌. “காவ‌ல்நிலைய‌த்திலிருந்து ஒரு நூறு மீட்ட‌ர் தொலைவில் ஒரு இர‌த்த‌ வெள்ள‌ம் ப‌டிந்திருந்த‌து” என‌ அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். அந்த‌ இட‌த்தில் தான் ம‌ன்னு சுட்டு கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌ அங்கிருக்கும் கிராம‌வாசிகளும் கூறினார்க‌ள். காவ‌ல்துறை இந்த‌ தாக்குத‌லில் 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தாக‌வும், ஒரு ந‌க்ச‌லின் உட‌ல் கிடைத்துள்ள‌தாக‌வும் கூறிய‌து. 35 ந‌க்ச‌ல்க‌ள் கொல்ல‌ப்ப‌ட்ட‌தை மாவோவின‌ர் ம‌றுத்துள்ளார்க‌ள். காவ‌ல்துறை கூறும் அந்த‌ ஒரு உட‌லும் க‌ண்டிப்பாக‌ ம‌ன்னு ராமுடையதாக‌‌த்தான் இருக்கும்.

16 மார்ச், காலை 5 ம‌ணி, த‌ர்ம‌த்லா கிராம‌ம்

எரிந்து, ப‌குதி இடிந்து போன‌ த‌ன் வீட்டினுள்ளே கோவசி அத்மா உட‌ன் அவ‌ர‌து ம‌னைவி
எரிந்து, ப‌குதி இடிந்து போன‌ த‌ன் வீட்டினுள்ளே கோவசி அத்மா உட‌ன் அவ‌ர‌து ம‌னைவி

நான்கு ப‌க்க‌மும் இருந்த‌ வ‌ருகின்ற‌ ப‌டையின‌ரின் ச‌த்த‌த்தை கேட்டு அந்த‌ கிராம‌ம் அன்று விழித்த‌து. “எப்ப‌டி நீங்க‌ள் ந‌க்ச‌ல்க‌ளுக்கு த‌ங்குவ‌த‌ற்கு இட‌ம் கொடுக்க‌லாம்? எப்ப‌டி அவ‌ர்க‌ளுக்கு ச‌மைத்து கொடுத்தீர்க‌ள்? என்று ச‌த்த‌ம் போட்டு கொண்டே ப‌டை சீருடையும், க‌ருப்பு முக‌மூடியும் அணிந்த‌ ஒருவ‌ர் ம‌த்வி முக்காவை அவ‌ர‌து ம‌ண்குடிசையில் இருந்து வெளியே இழுத்து வ‌ந்தான். ம‌ற்றுமொரு ப‌டைக்குழு அவ‌ருக்கு பின்னால் தீக்குச்சிக‌ளோடு நின்று கொண்டிருந்த‌து, இன்னொரு ப‌டைய‌ணியோ தீயை ப‌ற்ற‌வைத்து ஒருபுற‌ம் எறிந்து கொண்டிருந்தார்க‌ள்.

ஓடி த‌ப்பிக்க‌ முடியாத‌வ‌ர்க‌ள் ப‌டையின‌ரிட‌ம் மாட்டிக்கொண்டார்க‌ள். அவ‌ர்க‌ளில் 30 வ‌ய‌தான் ஐம்லா சோகியும் ஒருவ‌ர். அவ‌ர்க‌ள் என்னை துப்பாக்கி முனையில் வைத்து வ‌ன‌ப்ப‌குதிக்குள் இழுத்துச்  சென்றார்க‌ள். ச‌ற்று தூர‌ம் சென்ற‌ பின்ன‌ர் அவ‌ரை துப்பாக்கியின் க‌ன‌மான‌ பின்புற‌ப்பகுதியின் மூல‌ம் அடித்து தாக்கி, க‌ற்ப‌ழித்துள்ளார்க‌ள். பலமாக தாக்கப்பட்டதினால் சில‌ நிமிட‌ங்க‌ளில்  அவ‌ர் ம‌ய‌ங்கியுள்ளார். அன்று ந‌ட‌ந்த‌தை அவ‌ர் நினைவு கூறுகையில் ஒருவ‌ர் க‌த்தியை எடுத்து அருகில் வ‌ந்த‌தாக‌வும் அதை வைத்து அவ‌ர் என்ன‌ செய்தார் என்று த‌ன‌க்கு நினைவில்லை என்றும் அவ‌ர் எ‌ம்மிட‌ம் கூறினார். ஆனால் அவ‌ர‌து க‌ண்ணிற்கு ச‌ற்று கீழே ஆழ‌மான‌ வெட்டுக்காய‌ங்க‌ள் உள்ள‌ன‌. அவ‌ரால் த‌ற்பொழுது ச‌ரியாக‌ பார்க்க‌ முடிவதில்லை. ம‌ய‌க்க‌ம் தெளிந்து ஒரும‌ணி நேர‌ம் க‌ழித்து அவ‌ர் எழுந்து பார்க்கும் பொழுது அவ‌ர் இடுப்பில் முடிந்து வைத்திருந்த‌ வாழ்நாள் சேமிப்பான‌ ரூ.8,000மும், த‌ங்க‌ காத‌ணிக‌ளும், மூக்குத்தியும் காணாம‌ல் போயிருந்த‌ன‌. மேலும் அவ‌ர‌து வீடும் தீக்கிரையாகி இருந்த‌து.

“நான் ம‌ய‌க்க‌ம‌டைந்து விட்ட‌தால் என்னை யார் க‌ற்ப‌ழித்தார்க‌ள் என்று என்னால் அடையாள‌ம் காட்ட இயலவில்லை, என‌க்கு நீதி கிடைக்க‌ வாய்ப்புள்ள‌தா?, என‌க்கு என்ன‌ ந‌டைபெற்ற‌து என்று நான் இந்த‌ உல‌க‌த்திற்கு கூற‌ வேண்டும், என்னை இந்த‌ நிலைக்கு உள்ளாக்கிய‌வ‌ர்க‌ள் த‌ண்டிக்க‌ப்ப‌ட‌வேண்டும்” என கூறுகின்றார் ஐம்லா சோகி.

இரண்டு ம‌ணி நேர‌த்திற்கு பிறகு த‌ர்மத்லா கிராம‌த்தை விட்டு பாதுகாப்பு ப‌டை வெளியேறிய‌து. அவ‌ர்க‌ள் செல்லும் போது த‌ர்ம‌த்லா கிராம‌வாசிக‌ளான‌ ம‌த்வா ஆன்டாவையும், ம‌த்வா ஐதாவையும் கயிற்றினால் க‌ட்டி த‌ங்க‌ளுட‌ன் இழுத்துச் சென்றார்க‌ள். இந்த‌ இர‌ண்டு ம‌ணி நேர‌த்தில் மொத்த‌ம் 207 குடிசைக‌ள் இடிக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன‌. ம‌த்வி முகா த‌ன‌து வீட்டிற்கு திரும்பி வ‌ந்த‌ பொழுது த‌ன‌து சில‌ லுங்கிக‌ளையும், வாழ்நாள் சேமிப்பான‌ ரூபாய், 2,000த்தையும், 60 அரிசி மூட்டைக‌ளையும், 20 விதை மூட்டைக‌ளும் கொண்டிருந்த‌ அந்த‌ வீடு முழுவதுமாக இடிக்கப்பட்டு குப்பை மேடாக‌ காட்சிய‌ளித்த‌து.

ஒரு வார‌த்திற்கு பின்ன‌ர் அர‌சு பாதிக்க‌ப்ப‌ட்ட‌ குடும்ப‌ங்க‌ளுக்கு அனுப்பிய நிவாரணப் பொருட்களான‌ அரிசி, ப‌ருப்பு போன்ற‌வைக‌ளும், எரிந்த குடிசைகளுக்கு ரூபாய். 3,000மும் அவ‌ர்க‌ளுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து. “இர‌ண்டு மாறுப‌ட்ட‌ அர‌சுக‌ள் இங்கு உள்ள‌ன‌வா? (ஒரு அர‌சு எங்க‌ள் வீடுக‌ளை இடித்து தீக்கிரைய‌க்குகின்ற‌து, ம‌ற்றொன்று நிவார‌ண‌மாக‌ அரிசியும், ப‌ண‌மும் கொடுக்கின்ற‌து), எப்ப‌டி இந்த‌ இர‌ண்டு அர‌சுக‌ளும் ஒன்றாக‌ இருக்க‌ முடியும்?” என்று விவ‌சாயியான‌ கௌவாசி அத்மா கேட்கின்றார்.

______________________________________________________________________________
செய்தி/படங்கள் – ந‌ன்றி : துசா மிட்ட‌ல், தெக‌ல்கா

மூல‌ம்: http://www.tehelka.com/story_main49.asp?filename=Ne160411Are.asp

மொழியாக்க‌ம்: ந‌ற்ற‌மிழ‌ன்.ப‌

______________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!

61

ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அல்ஜசிரா உட்பட உலக ஊடகங்கள் அனைத்தும் வரும் நாட்களில் இதையே பேசிக்கொண்டிருக்கும். சமீப காலமாக ஒபாமாவின் செல்வாக்கு சரிந்து வருகிறது என்ற பின்னணியில் வந்திருக்கும் இந்த அறிவிப்பின் முக்கியத்துவம் என்ன? ஆப்கானில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்களை பலிகொடுத்து, சில ஆயிரம் மக்களைக் கொன்று வரும் அமெரிக்க இராணுவம் அங்கே வெற்றியைப் பெறவில்லை. கூடவே வீரர்களை குவித்தும் நிலைமையை தக்கவைக்க முடியவில்லை என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது. ஈராக், ஆப்கான், போன்ற புதை குழியில் சிக்கியிருக்கும் அமெரிக்கா தற்போது லிபியாவிலும் ஆக்கிரமிக்கத் துவக்கியிருக்கிறது. தனது ஆக்கிரமிப்பு போர்களின் சிக்கலை தீர்ப்பதற்கு மேலும் மேலும் ஆக்கிரமிப்பு போர்களை அதிகரிப்பதே அதன் முன் உள்ள தீர்வு.

பின்லேடன் உள்ளிட்ட இசுலாமிய பயங்கரவாதம் என்பதை இறைவன் தோற்றுவிக்கவில்லை. அமெரிக்காதான் தோற்றுவித்தது. இது குறித்த வரலாற்றுப் பார்வையை இந்தக் கட்டுரை வழங்குவதோடு எல்லா பயங்கரவாதங்களும் ஏகாதிபத்தியங்களாலும், உள்நாட்டு பிற்போக்கு அரசுகளாலும் பராமரிக்கப்படுவதையும் விளக்குகிறது. மதம் போர்த்தியிருக்கும் இந்த மாயத் திரையை அறுப்பதினூடாகத்தான் மூன்றால் உலக நாடுகளின் மக்கள் தங்களை சுரண்டி வரும் உள்நாட்டு, ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை முறியடிக்க முடியும். பின்லேடன் மறைவு குறித்த செய்திகள், பின்னணிகள் முதலானவற்றை பொறுத்திருந்து பார்த்துவிட்டு விரிவான கட்டுரை வெளியிடுகிறோம். அதற்கு முன்னுரையாக இந்தக் கட்டுரை உங்களுக்கு ஒரு அடிப்படை புரிதலை ஏற்படுத்தும். பின்லேடனை பிடிப்பதற்காக ஆப்கனிலும், பாக்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்போது பின்லேடன் கொல்லப்பட்டதனால் அந்த துயரம் குறைந்து விடுமா? இல்லை என்றுதானை தோன்றுகிறது.

பின்லேடனை வைத்து முசுலீம்கள் அனைவரும் பயங்கரவாதிகள், பாக்கிற்கு அடித்து விரட்டப்படவேண்டியவர்கள் என்று இந்துமதவெறியர்கள் ஏற்கனவே செய்து வந்த பிரச்சாரத்தை இப்போது வலுவுடன் செய்வாகள். ஆனால் பின்லேடனை விட பலமடங்கு ஆபத்தான இந்த இந்துத்வ பயங்கரவாதிகள் இந்தியாவில் இன்னும் தண்டிக்கப்படவில்லை. அதனால் இவர்களை நாம் சட்டத்தின் மூலம் அல்ல உழைக்கும் மக்களை அணிதிரட்டித்தான் ஒழிக்க முடியும். அது குறித்தும் இந்தக்கட்டுரை விளக்குகிறது.

_______________________________________________________

பின்லேடன்
பின்லேடன் கொலை – படம் அல்ஜசீரா

ஏதோ சில முட்டாள் முல்லாக்கள்தான் இன்று உலகம் முழுவதும் வெடிக்கும் பயங்கரவாதங்களுக்கு காரணமென பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். மற்ற மதங்களை விட உணர்ச்சிப்பூர்வமாகவும், கட்டுப்பாடாகவும், ஒரு இயக்கம் போலவும் இசுலாமிய மதம் பின்பற்றப்படுவது உண்மைதானென்றாலும், இந்தப் பலவீனத்தை முதலீட்டாக்கி அரசியல் சூதாட்டங்களுக்கும் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தி இசுலாமிய நாடுகளிலிருக்கும் மக்களை மதத்தின் பெயரால் ஆளும்வர்க்கங்கள் சுரண்டிக் கொழுப்பதற்குக் காரணகர்த்தா அமெரிக்காதான்.

வளைகுடா நாடுகளில் பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து பாலைவனமான அப்பகுதி ஏகாதிபத்திய அரசியலில் முக்கியத்துவம் பெற்றது. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இந்தப் பாலைவன நாடுகளின் அரசியல் திசைவழியை ஏகாதிபத்திய நாடுகள் தமது நலனுக்கேற்ப அமைத்துக் கொண்டன. குறிப்பாக இங்கிலாந்தும், பின்னர் அமெரிக்காவும் அரபு நாடுகளின் எண்ணைய் தொழிலைக் கையிலெடுத்துக் கொண்டு அதற்குத் தோதான பிற்போக்கு சக்திகளை நாடாள அனுமதித்தன.

அப்போது பரவிவந்த கம்யூனிச ‘அபாயத்திற்கு’ எதிராகவும், தேசிய விடுதலைப் போராட்டங்களை திசை திருப்புவதற்கும் அரபு நாடுகளின் இசுலாமிய மதவாதிகளை அமெரிக்கா ஆதரித்தது. இன்று வரை அரபு நாடுகளில் மன்னராட்சி தொடர்வதற்கும் முழு நாடும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில ஷேக்குகளின் கையில் இருப்பதற்கும் அமெரிக்க ஆதரவுதான் அடிப்படை. இன்று உலகம் முழுவதும் ஜனநாயகம் பற்றி பாடம் நடத்தும் அமெரிக்கா சவுதி நாடுகளில் மட்டும் மன்னர்களின் சர்வாதிகார ஆட்சியை சந்தர்ப்பவசமாக ஆதரிக்கிறது. இதற்கு நன்றிக்கடனாக ஷேக்குகள் பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் எண்ணெய் தொழில் நடத்துவதும், கிடைக்கும் அபரிதமான பணத்தை இந்நிறுவனங்களில் முதலீடு செய்வதும் என பரஸ்பரம் உறவு தொடர்கிறது.

உள்நாட்டில் எல்லாப் பிற்போக்குத்தனங்களையும் அமல் படுத்தும் ஷேக்குகள் சொந்த நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கு இசுலாத்தின் காவலர்களாக நடிக்கின்றனர். மதத்தின் உணர்ச்சியைக் கிளறிவிட்டு தமது செல்வத்தைக் காப்பாற்றும் இந்த ஷேக்குகள் உலகம் முழுவதும் இசுலாமிய மதவாத அமைப்புக்களுக்கு அள்ளிக் கொடுக்கும் புரவலர்களாகவும் இருக்கின்றனர். இசுலாமிய மதம் எந்த அளவுக்கு மக்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு இலாபமுண்டு என்பதை இவர்கள் தமது சொந்த அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றனர். ஷேக்குகளின் கையிலிருக்கும் வரை அரபு நாடுகளின் எண்ணெய் வளத்தை உறிஞ்சலாம் என்பதால் அமெரிக்காவும் இந்த அணுகுமுறையை அனுமதிக்கிறது.

இப்படித்தான் அரபுநாடுகளில் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் கம்யூனிஸ்ட்டுகளும், ஜனநாயக சக்திகளும், தேசிய வாதிகளும் கொடுராமாக ஒடுக்கப்பட்டனர். மக்களின் விடுதலைப் பெருமூச்சை எழுப்பி விட்ட இச்சக்திகள் ஒடுக்கப்பட்டதால் ஏற்பட்ட வெற்றிடம் மதவாதத்தால் நிரப்பப்பட்டது.

ஈராக்கில் இப்படித்தான் கம்யூனிஸ்டுகளைக் கொடுரமாக அழித்துவிட்டு சதாம் உசேனின் பாத் கட்சி ஆட்சிக்கு வந்தது. வளைகுடா நாடுகளில் ஈராக்கை ஒரு வட்டார அடியாளாக உருவாக்கும் பொருட்டு அமெரிக்கா சதாம் உசேனை எல்லா வகையிலும் ஆதரித்தது. அதே காலத்தில் ஈரானில் ஷா மன்ன்னது சர்வாதிகார ஆட்சியையும் அமெரிக்கா ஆதரித்தது. மற்ற கட்சிகளெல்லாம் பிராந்தியத்தில் தடைசெய்யப்பட்டதால் அமெரிக்க எதிர்ப்புக்கும் இசுலாமிய மதம்தான் பயன்படும் என்பதை கொமெனி புரிந்து கொண்டார். அப்படித்தான் ஈரானில் ஷா ஆட்சி தூக்கியெறியப்பட்டு கொமெனியின் தலைமையில் இசுலாமிய மதவாதிகள் ஆட்சியைப் பிடித்தனர். இதனால் கொமெனியின் ஈரானைத் தாக்கி அழிக்க சதாம் உசேனை அமெரிக்கா பயன்படுத்தியது. அவருக்கு ஆயுத உதவியை அபரிதமாக வழங்கி ஈராக்- ஈரான் போரை அமெரிக்கா துவக்கியது. இருதரப்பிலும் பத்து இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட இந்தப் போர் சில ஆண்டுகள் நீடித்தது. அமெரிக்கா வழங்கிய ரசாயன வாயுவின் மூலம் பல ஈரானிய வீரர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டதெல்லாம் பின்னாளில் அம்பலமாயின. அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்ட இசுலாமிய மதவாதம் ஈரானில் மட்டும் அமெரிக்காவை எதிர்ப்பதாகக் கருக்கொள்ள ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் இசுரேல் உருவாக்கப்பட்டது. பின்னாளில் யூதவெறி இசுரேல் அரசால் பாலஸ்தீன மக்கள் அவர்களது சொந்த மண்ணிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக மாறினர். மத்திய கிழக்கில் இசுரேலை ஒரு வலிமையான அடியாளாக உருவாக்குதற்கு தேவையான எல்லா உதவிகளையும் அமெரிக்கா அன்றும் செய்தது. இன்றும் செய்து வருகிறது. ஆரம்பத்தில் தமது தாயகத்திற்காக போராடத்துவங்கிய பாலஸ்தீன மக்களின் போராட்டத்தில் மதம் இருக்கவில்லை. பின்னாளில் துரோகமிழைத்த யாசர் அராபத்தின் பி.எல்.ஓ இயக்கம்கூட மதச்சார்பற்ற இயக்கமாகத்தான் அன்று போராடியது. பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை மதச்சார்பானதாக மாற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயன்று வந்தது.

பாலஸ்தீன், ஈரான் இரண்டு நாடுகளிலும் மக்கள் மதத்தின் துணை கொண்டு அமெரிக்காவை எதிர்த்து வந்தாலும் மொத்தத்தில் இசுலாமிய மக்கள் மதத்தின் பால் கட்ட்டுண்டு கிடப்பது அமெரிக்காவுக்கு சாதகமாகத்தான் இருந்த்து. மதத்தின் பெயரால் நடத்தப்படும் தேசிய விடுதலைப் போரட்டங்களையெல்லாம் தனிமைப் படுத்தி முடக்கவும், அதே மதம் பயன்படுகிறது என்பதால் மொத்தத்தில் அமெரிக்காவிற்கு இந்த மதவாத அணுகுமுறை ஆதாயமாகவே இருந்தது. அரபு ஷேக்குகளுடன் ஒரு புறமும், மறுபுறம் இசுரேல் எனவும் அமெரிக்காவின் மத்தியக் கிழக்கு கொள்கை உருவாக்கப்பட்டது.

இந்நிலையில் சோவியத் யூனியன் என்ற சமூக ஏகாதிபத்தியம் ( சொல்லில் சோசலிசம், செயலில் ஏகாதிபத்தியம் ) 1979 இல் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அமெரிக்கா, சோவியத்யூனியன் இரண்டு நாடுகளும் அன்று கெடுபிடிப்போரின் உச்சத்தில் இருந்தன. உலக மேலாதிக்கத்திற்காக மறைவுக் கெடுபிடிப் போர்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டன. அன்று உலக நாடுகள் எந்தப் பிரச்சினையென்றாலும் இரண்டில் ஒன்றை சார்ந்து இருக்குமளவுக்கு பிரிந்திருந்தன. இப்படி ஆப்கானில் போலிக் கம்யூனிசம் நஜிபுல்லாவின் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் அமெரிக்கா சோவியத் யூனியனை அங்கிருந்து விரட்டுவதற்கு முயற்சிகளை ஆரம்பித்தது. பின்னர் 1989இல் சோவியத் யூனியன் ஆப்கானிலிருந்து வெளியேறும் வரை அமெரிக்கா தன் முயற்சிகளை விடவில்லை.

ஆப்கானில் நாத்திகர்களும் சாத்தானின் வாரிசுகளுமாகிய கம்யூனிஸ்ட்டுகள் ஆக்கிரமித்திருப்பதாகப் பிரச்சாரம் மேற்கொண்ட அமெரிக்கா அவர்களை விரட்டுவதற்கு புனிதப்போர் துவங்குமாறு இசுலாமிய மதவாதிகளை அணிதிரட்ட ஆரம்பித்தது. இன்றைக்கு அமெரிக்காவை எதிர்த்து புனிதப்போர் நடத்தும் பயங்கரவாதிகள் இப்படித்தான் தோற்றுவிக்கப்பட்டனர். முஜாகிதீன்களுக்கான ஆயத உதவி முதல் பணம் வரை எல்லாம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாயின. அமெரிக்க, இங்கிலாந்து நாடுகளின் ஆசிய வானொலிச் சேவைகள் இந்தப் புனிதப் போருக்கான மதப்பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டன. இசுலாமிய நாடுகளிலிருந்து போராளிகள் மதத்தைக் காப்பாற்றுவதற்கென்றே இறக்குமதி செய்யப்பட்டனர். இப்படித்தான் பின்னாளில் அல்கைய்தா ஆரம்பித்த பின்லேடன் சவுதியிலிருந்து ஆப்கானுக்கு இடம்பெயர்ந்தார்.

இதற்கான மையமாக பாக்கிஸ்தான் பயன்படுத்தப்பட்டது. பாக்கிஸ்தானின் எல்லா மாநிலங்களிலும் அமெரிக்கா அளித்த பிச்சைக்காசின் உதவியோடு நூற்றுக்கணக்கான மதரசாக்கள் திறக்கப்பட்டன. டாலரின் தயவில் குர்ஆன் வியந்தோதப்பட்டது. இந்த மதரசாக்களின் மூலம் ஆயிரக்கணக்கான முஜாகிதீன்கள் உருவாக்கப்பட்டு ஆப்கானுக்கு அனுப்பப்பட்டனர். இந்த வேலைகளை பாக்கின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமெரிக்காவின் ஆணைக்கேற்ப ஒருங்கிணைத்தது. இந்த அடியாள் வேலைக்காகவே பாக்கின் இராணுவ சர்வாதிகார ஆட்சிகளை அமெரிக்கா முழுமனதுடன் ஆதரித்தது. இன்றைக்கும் பாக்கின் ஜனநாயக அரசாங்கம் உண்மையான அதிகாரமின்றி பொம்மை ஆட்சி நடத்துமளவுக்கு இராணுவமும், உளவுத் துறையும் சூத்திரதாரிகளாக இருக்கின்றனர் என்றால் அதற்குக் காரணம் அமெரிக்கவின் ஆசிதான்.

பின்னர் ஆப்கானில் சில ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து சோவியத் யூனியன் தன் படைகளை விலக்கிக் கொண்டது. ஆதரவின்றி தத்தளித்த நஜிபுல்லா முஜாகிதீன்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். போலி கம்யூனிஸ்டுகளின் ஆட்சியிலிருந்த ஆப்கானில் கல்வி, பெண்ணுரிமை, போன்ற நலத்திட்டங்களெல்லாம் அமல்படுத்தப்பட்ட போது அவை இசுலாத்திற்கு விரோதமென அமெரிக்காவால் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்கள் அமெரிக்க ஆசியுடன் களத்தில் இறங்கினர். ஆப்கானில் இத்தகைய முட்டாள் மதவாதிகள் ஆட்சியிலிருப்பது தனக்குப் பல விதங்களில் உதவியாக இருக்குமென எதிர்பார்த்த அமெரிக்காவும் இதற்குத் துணைபுரிந்தது. மேலும் மத்திய ஆசியாவின் கனிம வளத்தை குறிப்பாக எண்ணெய் எரிவாயுவை குழாய் மூலம் ஆப்கான், பாக் வழியாக துறைமுகங்களுக்கு கொண்டு செல்லும் தேவையை அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் உணர்ந்திருந்தன. அந்த வகையில் ஆப்கானின் இருப்பிடம் செயல்தந்திர ரீதீயாக அமெரிக்காவிற்கு முக்கியமான ஒன்றாக இருந்தது.

ஆப்கானில் புகுந்த தாலிபான்கள் நஜிபுல்லாவைக் கொன்று தெருவில் தொங்கவிட்டனர். காட்டுமிரண்டித்தனமான ஒழுங்குகளெல்லாம் இசுலாத்தின் பெயரில் அமல்படுத்தப்பட்டன. பர்தா அணியாத பெண்கள், கல்வி கற்ற பெண்கள், எல்லோருக்கும் கல்லடி கிடைத்தது. புரதான பெருமை வாய்ந்த புத்தர் சிலையும் இடிக்கப்பட்டது. அப்போதெல்லாம் அமெரிக்கா தாலிபானை கைவிடவில்லை என்பது இங்கே முக்கியம்.தாலிபானின் ஆட்சியை உலகநாடுகள் அங்கீகரிக்கவில்லையெனினும் அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி, பாக்கிஸ்தான் நாடுகள் மட்டும் அங்கீகரித்தன. இயற்கை எரிவாயுக் குழாய் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைக்காக தாலிபான் பிரதிநிதிகளை அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு அழைத்து வந்தன. ஆரம்பத்தில் முஜாகிதீன்களின் வருவாய்க்காக கஞ்சா உற்பத்தியை பெரும் பரப்பளவில் பயிரிடுவதற்கு அமெரிக்காவின் சி.ஐ.ஏ நிறுவனம் உதவியிருந்தது. ஏழை நாடான ஆப்கானில் தாலிபானின் முக்கிய வருவாயாக கஞ்சா உற்பத்தி திகழ்ந்தது. இதை மேற்குலகின் சந்தைக்கு கொண்டு செல்லத் தேவையான வழிகளையும் சி.ஐ.ஏ ஏற்படுத்திக் கொடுத்தது.

இக்காலத்தில் ருமைலா எண்ணெய் வயலின்மூலம் தனது எண்ணெய் வளத்தை குவைத் நாடு, அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளின் உதவியோடு ஆக்கிரமிக்க  முயன்றதால் சினமடைந்த சதாம் உசேன் குவைத் மீது போர் தொடுத்தார். தான் வளர்த்த ஒரு சர்வாதிகாரி தனக்கே எதிராகத் திரும்பியதைக் கண்ட அமெரிக்கா ஈராக்கின் மீது போர் தொடுத்தது. சதாம் உசேனைத் தூக்கி எறிந்து விட்டு வேறு ஒரு பொம்மை ஆட்சியைக் கொண்டு வர அமெரிக்கா எத்தணித்தது. ஏற்கனவே பாலஸ்தீன், ஈரான் பிரச்சினைகளில் இருந்த இசுலாத்தின் அமெரிக்க வெறுப்பு இப்போது ஈராக்கிற்கும் பரவியது. தான் உரமிட்டு வளர்த்த இசுலாமிய மதவாதம் தனக்கே எமனாகத் திரும்புமென அமெரிக்கா அப்போது எதிர்பார்த்திருக்கவில்லை. சில அசட்டு மதவாதிகள் என்ன செய்துவிட முடியுமென மேற்குலகம் மெத்தனமாக இருந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த வரை அமெரிக்காவால் தோற்றுவித்து வளர்க்கப்பட்ட இசுலாமிய மதவாதம் அமெரிக்காவை இரட்சகனாகக் கருதிவந்தது. சோவியத் யூனியன் வெளியேறிய பிறகு இருவரும் தமது நலன்களால் பிரிவுகொள்ளும் சூழ்நிலை வந்தது. முதல் வளைகுடாப் போரும், இசுரேலின் அடாவடித்தனங்களும் பொதுவில் இசுலாமிய மக்களை சினம் கொள்ள வைத்தது. இந்தப் பின்னணியில்தான் பின்லேடனின் அல்கைதா தனது முன்னாள் ஏஜமானனை எதிரியாக அறிவித்து 90களின் பிற்பகுதியில் சில நாடுகளிலிருந்த அமெரிக்க தூதரகங்களை குண்டுவைத்துத் தாக்கியது. அமெரிக்காவின் கட்டளையோடு பாக்கின் பங்களிப்போடு உருவான தாலிபான்களும் அல்கைதா பக்கம் சாயத்துவங்கினர். சன்னி பிரிவின் கடுங்கோட்பாட்டுவாதிகளான தாலிபான்களை பாக்கின் இராணுவ அதிகார வர்க்கம் ஆதரித்து வந்தாலும் அமெரிக்காவை எதிரியாகக் கருதும் தாலிபான்களை மாற்ற முடியாமல் திணற ஆரம்பித்தது.

மதவாதிகளை அறிவுப்பூர்வமாக ஏமாற்ற முடியாமலும், உணர்ச்சிப் பூர்வமாக சமாளிக்க முடியாமலும் இருந்த நேரத்தில்தான் 2001 உலக வர்த்தக மையம் அல்கைதாவால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்கு தெரியாமல் நடந்திருக்க முடியுமா என்பதையும் உத்திரவாதம் செய்ய முடியாது. இதை தெரிந்து வேண்டுமென்றே நடக்கவிட்டு மக்களின் உணர்ச்சிபூர்வமான ஆதரவுடன் ஆப்கானையும், ஈராக்கையும் ஆக்கிரமிப்பதற்கென்றே கூட இது அனுமதிக்கப்பட்டிருக்கலாம். பயங்கரவாதத்திற்கெதிரான போர் என அறிவித்து இருநாடுகளையும் பின்னாளில் ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை இராணுவ பலத்தை அந்நாடுகளில் அதிகரித்து வருகிறது என்பதையும் பார்க்கவேண்டும். இன்னொரு கோணத்தில் டாலரால் ஊட்டி வளர்க்கப்பட்ட இசுலாமியத் தீவிரவாதம் தனது தர்க்கபூர்வமான வளர்ச்சியில் சுயேச்சையாக அமெரிக்காவை எதிர்க்கும் இயல்பான நிலைக்கு வந்ததையும் மறுக்க முடியாது. அதே சமயம் இந்த இரண்டு முரண்பட்ட நிலைகளையும் அமெரிக்கா தனது நலனுக்காக பயன்படுத்துகிறது என்பதுதான் எல்லவற்றையும் விட முக்கியமானது. பின்லேடன் பிடிபடாத வரைக்கும் அவர் அமெரிக்காவைப் பொறுத்தவரை பொன்முட்டையிடும் வாத்துதான். பிடிபட்டாலும் புதிய வாத்துக்கள் உருவாக்கப்பட்டு பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு தொடரும்.

இன்று ஈராக்கில் பல இலட்சம் மக்கள் கொல்லப்பட்டு சதாம் உசேனும் அமெரிக்க சதியால் தூக்கிலிடப்பட்டுவிட்டார். ஆப்கானிலும் அதே நிலைமை உருவாகிவிட்டது. ஆனாலும் போர் இன்னமும் முடியவில்லை. ஆப்கான் பாக் எல்லைப் பகுதியில் இருக்கும் அல்கைதா, தாலிபானை ஒடுக்குவதற்காக போரை தீவிரப்படுத்துவேன் என புதிய அதிபர் ஒபாமா அறிவித்திருக்கிறார். அடுத்தது ஈரான் அணுகுண்டு பூச்சாண்டி காட்டுவதாக அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் பட்டியலில் வருவதற்குக் காத்திருக்கிறது. இத்தகைய சூழலில் இதுவரை அமெரிக்காவின் அடியாளாகச் செயல்பட்ட பாக்கிஸ்தானில் குழப்பமான சூழ்நிலை தொடர்கிறது.

இந்தியாவைப் போல அல்லது இன்னமும் அதிகமாக ஏழை நாடாக இருக்கும் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் சூதாட்டத்தில் ஏராளமாக இழந்திருக்கிறது. முதல்பலி ஜனநாயகம். பாக்கின் இராணுவ சர்வாதிகாரிகளை அமெரிக்கா நிபந்தனையின்றி ஆதரித்தற்கும் ஆப்கான் பிரச்சினை ஒரு முக்கியமான காரணமாகும். மேலும் முன்னர் இந்திரா காந்தி காலம் வரை இந்தியா சோவியத் முகாமில் இருந்ததால் அமெரிக்கா தனது இயல்பான கூட்டாளியாக பாக்கை மாற்றிவந்தது. சோவியத் ஆக்கிரமிப்பு இந்த உறவை உறுதி செய்தது. இதற்குப் பொருத்தமாக இராணுவ சர்வாதிகாரம் பாக்கில் நிலை கொண்டது. இராணுவ அதிகார வர்க்கமே பாக்கில் சொத்துக்களையும், தொழில்களையும் கையில் வைத்திருக்கிறது. இந்தியாவிற்கு எதிரான தேசபக்த உணர்ச்சியில் மக்களை மூழ்கடித்துவிட்டு இந்த இராணுவ சர்வாதிகாரிகள் செல்வத்தில் திளைத்தார்கள். பின்னர் முஜாகிதீன்களுக்காக மதரசாக்கள் ஆரம்பிக்கப்பட்டதும் இந்த ஏழை நாட்டின் மக்கள் மதவாத வெறிக்கும் பலியாகினர். இதற்கு முன்னர் இசுலாத்தில் மதவாதம் மட்டுமே இருந்தது என்றால் சி.ஐ.ஏ தயவில் உருவாக்கப்பட்ட இந்த மதரசாக்கள் இசுலாமிய கடுங்கோட்பாட்டு வாதத்தை முதன்முறையாக உருவாக்கின.

தாலிபான் வீழ்ச்சிக்குப் பிறகு இந்த மதரசாக்களுக்கான அமெரிக்க, சவுதி புரவலர்கள் கையை விரித்தாலும் மதவாதம் வீறு கொண்டு எழும் வண்ணம் ஈராக், செசன்யா, காஷ்மீர், பாலஸ்தீனம், லெபனான் என பல தீர்க்க முடியாத பிரச்சினைகள், ஏகாதிபத்தியங்களால் தீர்வு தடை செய்யப்பட்டிருக்கும் பிரச்சினைகள் உதவி செய்தன. மேலும் பாக்கின் ஐ.எஸ்.ஐ உளவுத் துறை தனது அமெரிக்கா எஜமானின் உதவியோடு இந்த வேலைகளை இதுவரை செய்து வந்தவர்கள் இப்போது அதே வேலைகளுக்கு எதிராக செய்யவேண்டுமெனும்போது பிரச்சினை வருகிறது. ஐ.எஸ்.ஐ அமைப்பில் இப்பொது அமெரிக்க ஆதரவு, தாலிபான்-அல்கைதா ஆதரவு, அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட காஷ்மீர் அமைப்பு ஆதரவு என பல குழுக்கள் பல போக்குகள் இருக்கின்றன. இராணுவமும் அதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆப்கான் பாக் எல்லையில் அமெரிக்காவின் கட்டளைக்கேற்ப இசுலாமிய தீவிரவாதிகளுக்கெதிராக போரிடும் பாக் இராணுவம் இதுவரை 2000 வீரர்களை இழந்திருக்கிறது. இந்தப் போரை தொடரும் மனநிலையில் துருப்புக்கள் இல்லை என்பதும் முக்கியம். பாக்கின் சிவில் அரசாங்கம் அமெரிக்காவின் கட்டளையை முழுமனதுடன் ஆதரித்தாலும் இராணுவமும், உளவுத் துறை அமைப்பும் அவர்களது கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் இன்று பாக்கிஸ்தான் யார் கட்டுப்பாட்லும் இல்லை என்று சொன்னால் மிகையல்ல.

மதவாதத்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட நாட்டில் இன்று அதே மதவாதத்தை எதிர்க்கவேண்டுமென்றால் எப்படிச் செய்வது? பாக்கின் ஆளும்வர்க்கம் அமெரிக்காவின் அடிவருடி என்பதால் அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்கத்தான் செய்கிறார்கள். பெனாசிர் புட்டோ முதல் பலரும் அதில் பலியாயிருக்கிறார்கள். ஜூலை 2007 முதல் இன்று வரை பாக்கில் நடந்த நூற்றுக்கணக்கான தற்கொலைத் தாக்குதலில் 1200பேர் இறந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இந்தியாவை விட இசுலாமிய பயங்கரவாதத்தால் அதிகம்பேரை பலி கொடுத்திருப்பது பாக்கிஸ்தான்தான். இந்தியாவில் தடை செய்யப்பட்டிருக்கும் லஷ்கர் இ தொய்பா பாக்கிலும் தடை செய்யப்பட்ட இயக்கம்தான். இந்தியாவில் தாக்குதலை மேற்கொள்ளும் மசூரின் ஜெய்ஷி முகம்மது இயக்கம் பாக்கிலும் ஆட்சியாளர்களைக் குறிவைத்து பல தாக்குதல்களை மேற்கொண்டிருக்கிறது. இப்படி ஏகாதிபத்தித்தினாலும், மதத் தீவிரவாதத்தினாலும் நெருக்கடியின் உச்சத்திலிருக்கும் ஒரு நாட்டிலிருந்ததுதான் மும்பைத் தாக்குதலுக்கான குழு வந்திருக்கிறது.

இதற்கும் பல காரணங்கள் இருக்கின்றது. ஆப்கான் எல்லையில் போரிடும் பாக்கின் இராணுவத்தை விடுவிக்கவேண்டுமென  பாக் இராணுவத்திலும், ஐ.எஸ்.ஐ யிலும் சிலர் நினைத்திருக்கலாம். அவர்களே அப்படி நினைக்காவிட்டாலும்  இந்தியாவுக்கும் பாக்கிற்கும் ஒரு பதட்டத்தை தோற்றுவித்தால் தங்கள் மீது போர் தொடுத்திருக்கும் பாக் இராணுவத்திலிருந்து தற்காலிகமாக விடுதலை பெறலாம் என்று இசுலாமியத் தீவிரவாதிகள் நினைத்திருக்கலாம். இதை காஷ்மீருக்காக போராடும் சில மதவாதக் குழுக்கள் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது அமெரிக்காவே இந்தத் தாக்குதலை தெரிந்திருந்தும் அனுமதித்து அதன்மூலம் தனது பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு இந்தியவை இன்னமும் அதிகமாக பயன்படுத்தலாம் என்று நினைத்திருக்கலாம். ஏகாதிபத்தியக் கட்டமைப்பில் சிக்கியிருக்கும் உலகில் எல்லாப் பிரச்சினைகளும் நாம் நினைப்பதுபோல அவ்வளவு எளிமையாக புறத்தோற்றத்தில் இருப்பதில்லை. நண்பன் யார், எதிரி யார், காரணம் எது, விளைவு என்ன, என்பதெல்லாம் இங்கு சுலபமாகத் தெரிவதில்லை.

இன்று இந்தியா பாக் மீது போர் தொடுக்க வேண்டுமென சில ‘தேசபக்தர்கள்’ வலியுறுத்துகிறார்கள். பாக்கிலிருக்கும் இசுலாமியத் தீவிரவாதிகளும் அப்படித்தான் விரும்புகிறார்கள். அப்படி ஒரு போர் வரும் பட்சத்தில் இருநாட்டு மக்களும் அடையப்போகும் அழிவிற்கு முன்னால் இது ஒரு அணு ஆயுத யுத்தமாக மாறுவதற்கும் வாய்ப்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இன்று பாக்கிலிருக்கும் அணு ஆயுதத்தின் மீது யாருக்கு கட்டுப்பாடு இருக்கிறது என்பதை அறுதியிட முடியாது. எனவே பாக்கிஸ்தானை போரிலிருந்து தவிர்ப்பதற்கு யாரையும் விட இந்தியாவுக்குத்தான் அவசியம் அதிகமிருக்கிறது. இரு நாட்டு தேசபக்தி வெறியை கிளறி விட்டு இருநாடுகளுக்கும் ஆயுதம் விற்று இலாபம் பார்த்திருக்கும் அமெரிக்காவும் இத்தகைய போர் அபாயத்தை கட்டுப்படுத்தும் வழியை யோசிப்பதை விட அதனால் கிடைக்கும் ஆதாயத்தையே முதன்மையாக வைத்து செயல்படுகிறது. இந்தியாவின் பதட்டத்தை தணிப்பதும், பாக்கை கட்டுப்படுத்துவதும் அவர்கள் இதன் பொருட்டே செய்கிறார்கள். இந்த குழப்பமான நிலையை அமெரிக்க எதிர்பப்பிற்கு எப்படிப் பயன்படுத்த முடியும் என்பதே இசுலாமிய தீவிரவாதிகளின் நிலை. இத்தகைய சதிகளும், சூழ்ச்சிகளும் நிறைந்த காலத்தில் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டம் சிக்கிக் கொண்டிருப்பது இன்றைய காலத்தின் அவலம்.

இசுலாமிய பயங்கரவாதத்தை இசுலாமிய மக்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்மக்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் மதவாதிகள், அவர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்களாக இருந்தாலும் மதவாதம் என்ற முறையில் சித்தாந்தம் என்ற நிலையில் பயங்கரவாதிகளோடு ஒன்றுபடவே செய்கிறார்கள். உலகம் முழுவதும் இசுலாத்தின் ஆட்சி வரப்போவதாகவும், ஷரியத்தின் சட்ட ஒழுங்கில்தான் உலகம் அமைதி பெறமுடியுமென்றும், மனித குலத்திற்கு இசுலாம் மட்டுமே விடுதலை அளிக்கப் போவதாகவும் நம்புகிறார்கள். இதை காந்திய வழியில் செய்வதா, அல்கைதா வழியில் செய்வதா என்பதில்தான் வேறுபாடு. ஆனால் இந்த மதப்புனிதம் இசுலாம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நிலவியதில்லை என்பதோடு இனியும் நிலவ முடியாது என்பதுதான் உண்மை.

ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள். மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.

இசுலாமிய நாடுகள் பல இருந்தாலும் அவை மதத்தான் ஒரு சகோதர உணர்வைப் பெறவில்லை. இனம், மொழி, இன்னும் பல பிரிவினைகளோடுதான் இசுலாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ஷியா, சன்னி மதப் பிரிவுகள் இன்னமும் சண்டையிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. இதில் பல நூறு மக்கள் இன்றும் கொல்லப்பட்டுத்தான் வருகின்றனர். ஈரான், ஈராக் போர் இசுலாமிய சகோதரவத்துவத்தால் நடை பெறாமல் போகவில்லை. ஈராக் முசுலீம் மக்களை கொன்று குவிக்கும் அமெரிக்க இராணுவத்திற்குத் தேவையான எல்லா வசதிகளையும் முசுலாம் நாடுகளான சவுதியும், குவைத்தும்தான் செய்து வருகிறது. அரபு மன்னர்களும், ஷேக்குகளும் தமது நாட்டு செல்வத்தை அமெரிக்காவில்தான் முதலீடு செய்திருக்கின்றனர். அப்பாவிப் பெண்களை பர்தா போடவில்லையென்றால் தண்டிக்க வேண்டும் என்று வாதாடும் மதவாதிகள் எல்லா ஒழுக்கக்கேடுகளையும் வைத்துக் கொண்டு வாழும் ஷேக்குகளை கண்டிப்பதில்லை. தஸ்லிமா நஸ்ரீன் என்ற பெண்ணிற்கு எதிராக வாளைச் சுழற்றும் மதவாதிகள் எவரும் இந்த ஷேக்குகளுக்கு எதிராக பத்வாவைப் பிறப்பிக்கவில்லை.

பிலிப்பைன்சைச் சேர்ந்த சிறுமி சாரா தன்னை பாலியல் வன்முறை செய்த கிழட்டு ஷேக்கை தற்காப்பிற்காகக் கொன்றபோது அவளுக்கு மரணதண்டனை வழங்கியதுதான் ஷரியத்தின் இலட்சணம். ஐதராபாத்தைச் சேர்ந்த ஆமினாவைப் போன்ற ஏழைச்சிறுமிகளை பலதாரமுறை என்ற பெயரில் அரபு நாடுகளுக்கு கடத்துவதுதான் இசுலாம் வழங்கியிருக்கும் மதச்சுதந்திரம். ஷாபானு என்ற முதிய பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கக்கூடாது என்று போராடியதுதான் இந்தியாவின் இசுலாமிய மதவாதிகளின் உரிமையாக அறியப்பட்டது. சாரத்தில் ஏழைகளுக்கும், பெண்களுக்கும் இசுலாமிய மதவாதிகள் செய்திருக்கும் அநீதிகள் பல. ஏழை இசுலாமிய நாடுகளிலிருக்கும் வறிய மக்களின் வர்க்க கோரிக்கைகளுக்காக தமது சுண்டு விரலைக்கூட அசைத்திராத இந்த வீரர்கள்தான் மதம் என்ற பெயரில் இன்றைக்கும் பல பிற்போக்குத்தனங்களுக்காக போராடுகிறார்கள். இசுலாமிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் இந்த அடிப்படைவாதத்தை எதிர்த்துப் போராடும்போதுதான் உண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காக போராடும் வல்லமையை அவர்கள் பெற முடியும். கண்மூடித்தனமான பயங்கரவாதத்திற்கு சலிக்காமல் சப்ளை செய்யும் இளைஞர்களை தடுப்பதும் அப்போதுதான் சாத்தியம்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.

இசுலாமிய மக்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் அவர்கள் பயங்கரவாதிகளாக பார்க்கப்படுவதும், வாடகைக்கு வீடு கூட கிடைக்காது என்ற நிலையில் சமூக வாழ்க்கையில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவதும் இருக்கத்தான் செய்கிறது. இந்த நிலைமைக்கு அந்த மக்கள் காரணமல்ல என்றாலும் அப்போதும் அவர்கள் மதவாதத்திலிருந்து விலகி இருக்கவேண்டும் என்பதையே இங்கு மீண்டும் வலியுறுத்துகிறோம். மசூதிக்கு செல்வதும், அல்லாவைத் தொழுவதும் நமக்குள்ள தனிப்பட்ட உரிமைகள், அதைத்தாண்டி நமது சமூக வாழ்க்கைக்கு அந்த உரிமைகளை பயன்படுத்துவதில் பலனில்லை என்பதையே இசுலாமிய மக்கள் உணரவேண்டும். இந்த விதி இசுலாத்திற்கு மட்டுமல்ல எல்லா மதங்களுக்கும் பொருந்தும் என்பதையும் சேர்த்தே சொல்கிறோம்.

மும்பைத் தாக்குதலைச் செய்த பயங்கரவாதிகளை வினவு கண்டிக்கவில்லை என சில நண்பர்கள் பின்னூட்டமிட்டிருந்தார்கள். வினவு நிச்சயாமாகக் கண்டிக்கிறது. ஆனால் நமது கண்டிப்பு அம்புகளுக்கு மட்டுமல்ல அவற்றை எய்த கைகளுக்கும் சேர்த்தே போகவேண்டும். அந்தக் கைகளில் அமெரிக்காவின் கையே முக்கியமானது என்பதை இந்தத் தொடரின் மூலமாக இயன்ற அளவு விளக்கியிருக்கிறோம். இந்தியாவில் இருப்பவர்கள் முக்கியமாக இந்து மதவெறியர்களை கண்டிப்பதும், காஷ்மீர் போராட்டத்தினை ஆதரிப்பதும் செய்யும்போதுதான் இசுலாமிய பயங்கரவாதத்தையும் கண்டிக்க முடியும். முன்னதை தவிர்த்துவிட்டு பின்னதை மட்டும் கண்டிப்பதில் பயனில்லை. அது வெறுமனே தேசபக்தி என்ற பெயரில் இந்திய ஆளும்வர்க்கங்கள் உருவாக்கும் மற்றொரு மதவாதம்தான்.

மும்பைத் தாக்குதலினால் இசுலாமிய பயங்கரவாதிகள் மக்களைக் கொன்றது போக பல தீங்குகளை நாட்டு மக்களுக்கு அளித்திருக்கிறார்கள். காஷ்மீரில் சுய நிர்ணய உரிமைப் போராட்டம் மீண்டும் மக்களை அணிதிரட்டி வளர்ந்து வரும் நிலையில் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் அதைக் கொச்சைப் படுத்தி அவதூறு செய்கிறது. ஏற்கனவே இனப்படுகொலை செய்யும் இந்துமதவெறியர்களின் பாசிச வேட்கையையும் அதற்கான நியாயத்தையும் இந்தப் பயங்கரவாதத் தாக்குதல் இலவசமாக வழங்கியிருக்கிறது. பொடாவை விட அதிக அடக்குமுறைகள் கொண்ட பயங்கரவாத எதிர்ப்பு மசோதா பாரளுமன்றத்தில் நிறைவேறியிருக்கிறது. இனி சிறுபான்மை மக்களும், இந்திய அரசை எதிர்த்துப் போராடும் புரட்சிகர அமைப்புகளும் இந்த சட்டத்தால் கேள்வி முறையின்றி வேட்டையாடப்படுவார்கள். ஈழத்திற்காக குரல் கொடுப்பவர்களைக்கூட இந்தச் சட்டப்பிரிவின் மூலம் ஒடுக்க முடியும். அமெரிக்காவின் மறுகாலனியாதிக்கச் சுரண்டல்களுக்கெதிராக போராடும் உலக மக்களின் அரசியலை பயங்கரவாதிகளின் இந்தத் தாக்குதல் மூழ்கடித்து திசைதிருப்புகிறது.

இந்தியாவில் இந்துத்வமும், பாக்கில் இசுலாமிய அடிப்படைவாதமும் பாரிய அளவில் தீங்கிழைத்திருக்கின்றன. இரு நாட்டு மக்களும் இந்த இரு அடிப்படைவாதங்களையும் எதிர்த்துப் போராடும்போதுதான் இந்தியத் துணைகண்டத்தில் நடக்கும், நடைபெறப்போகும் பயங்கரவாதங்களை தடுக்கமுடியும். இந்த போராட்டத்தில் எந்த அளவுக்கு முன்னேறுகிறோமோ அந்த அளவு அமெரிக்கா நடத்தும் ஆக்கிரமிப்பு சூதாட்டங்களையும் தடுக்க முடியும். மதத்தை வைத்து ஏகாதிபத்தியங்கள் நடத்திவரும் பதிலிப்போரிலிருந்து நாம் விடுபடுதோடு உண்மையான வர்க்கப் போரை அறிவிக்கவும் முடியும். இவை எதுவும் நிறைவேற முடியாத கனவல்ல. ஏனெனில் இறுதியில் நம் செயல்பாட்டை மதம் தீர்மானிப்பதில்லை, நம் சமூக வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது. அந்த உண்மையிலிருந்து கற்றுக்கொண்டு இந்துத்வப் பயங்கரவாதம், இசுலாமிய பயங்கரவாதம், அமெரிக்க பயங்கரவாதம் என எல்லா பயங்கரவாதங்களையும் எதிர்த்துப் போராடுவோம்.

___________________________________________________________________________________________________

மும்பை 26/11 தாக்குதலை ஒட்டி வினவில் வெளிவந்த தொடர் கட்டுரையின் இறுதிப்பகுதி (முதல் பதிப்பு 18-12-2008 )
___________________________________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மும்பை 26/11


மே நாள் சிலிர்க்கும்!

வர்க்கமாய் உணர்தலே
உயர்திணை…
ஏதோ, வாழ்ந்தோம் என்பது
அஃறிணை.

சங்கமாய் திரள்வதே சரிநிலை
வெறும் சந்ததிப்பெருக்குதல் உயிர்ப்பிழை.
பலரும் போராடி பெற்றதுன் பயன்நிலை
போராடும் வர்க்கத்துடன் சேராதிருப்பது இழிநிலை

ஈழமோ, காசுமீரோ
இந்திய மேலாதிக்கக் கொடுங்கொலை…
சிக்காகோவோ, சிங்கூரோ
உரிமைக் கேட்டால் படுகொலை…

நமைச்சுற்றி பகை வர்க்கம்
உலகெங்கும் ஓர் இழை,
அரசியல் வேண்டாமென்பது சதி வலை,
அறுத்தெறிந்து! அமைப்பாகு தொழிலாளியே,
மே நாள் அழைக்கிறது!
வர்க்கப் போராட்டமே உன் வாழ்நிலை.
பாட்டாளி வர்க்கமாய் ஒன்று சேர் பயமில்லை!

எதற்கெடுத்தாலும், “எனக்கு நேரமில்லை
இந்தப் புரட்சி… இயக்கமெல்லாம் பழக்கமில்லை
கொடி பிடித்தல்… கோஷமிடுதல் ஒத்து வராது…
கூட்டமாய் சேர்ந்து நின்றால் உடம்புக்கு ஆகாது”
என ஒதுங்கிக் கொள்பவன் முகத்தைப் பார்த்து
மேலும் சிவக்குது மே நாள்!

கடித்து அழிக்க வரும் கட்டெறும்பை
எதிர்கொண்டு வேர்விடும், விதை.
அரித்துத்தின்ன வரும் கரையானை
முறியடித்து தலைநிமிரும் வேர்,
ஆடு, மாடுகள் மிதித்தும் அடங்காமல்
வேலியோரம் மெல்ல முன்கை உயர்த்தும் செடி,
பசையற்ற வேலி முள்ளை அப்படியே பற்றிக் கொண்டு
குடிசையின் உச்சியில் போய்
சொந்தமாய் பூக்கும் பறங்கிப் பூவின் அழகு!
உனக்கும் வேண்டுமா?
போராடிப் பார்!

உணவுக் கூடத்திலும்
உளவுபார்க்கும் கேமரா,
வார்த்தையை பிடுங்கி
உனது வர்க்க உணர்வை சோதிக்கும் சூப்பர்வைசர்,
கட்டளைக்கு எதிராக இமைத்தாலே
பணிநீக்கும் அதிகாரம்,
புரையேறினாலும்
சக தொழிலாளியிடம் தண்ணீர் கேட்க கை நீட்டாமல்
தானே தலையில் அடித்துக் கொண்டு
தனியே ஒதுங்கும் பயம்கொண்ட தொழிலாளி

இத்தனைக்கும் மத்தியில்
ஆங்கே… ஒரு சங்கத்தை உருவாக்கி
கொடியேற்றி தலைநிமிரும் தொழிலாளர்..
அவர் போராட்ட அழகில்
மே நாள் சிலிர்க்கும்!

உயிரைக்கொடுத்துப் போராடி
மேநாள் தியாகிகள் பெற்றுக்கொடுத்த உரிமைகளை
ஒவ்வொன்றாய் இழப்பது
நம் வாழ்நாளின் கேவலம்.

உழைப்பை கூலிக்கு விற்பதையே
எதிர்த்தவர்கள் அவர்கள் – இன்றோ
உணர்ச்சியையும் கூலிக்கு விற்கத் தயார்,
உலகமயச் சுரண்டலுக்கும் இணங்கத் தயார்.
இருப்பவர்களின் காட்சிகளைப் பார்த்து
இறந்தவர் கனவு அஞ்சுகிறது!

மேநாளின் இலக்கு,
எட்டுமணிநேர வேலை மட்டுமல்ல,
முதலாளித்துவத்தையே எடுத்தெறியும் வேலை.

மேநாளின் சிறப்பு,
நம்மை முதலாளித்துவ சிந்தனையிலிருந்து
விடுவித்துக் கொள்வதுதான்…

செய்! மேநாள் சிலிர்க்கும்…

_______________________________________________

– துரை.சண்முகம்.
_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

உழவர்கள் மடியும் போது கிரிக்கெட் ஒரு கேடா?

ம், நீங்கள் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் “உலகக் கோப்பை” தொலையட்டும், அதற்கான விழாக்கள் தொலையட்டும், அரசுகளால் அந்த வீரர்களுக்கு பரிசாக வழங்கப்படும் இலவச நிலங்களும், கோடிக்கணக்கான ரூபாய்களும் தொலையட்டும், ஏன்? இந்த “விழாக்கள்” நடக்கிற இடத்திலிருந்து சில கி.மீ தூரங்களில் எனது உணவுக்கு வழிவகுக்கும் உழவர்கள் மாண்டு கொண்டிருக்கும் போது, நான் எப்படி காலன் கணக்கில் பீரும், மதுவும் அருந்திக் கொண்டு குதியாட்டம் போட முடியும்.

உங்களுக்குத் தெரியுமா, 9 சதவீத வளர்ச்சியுடன் அடுத்த பொருளாதார வளர்ந்த நாடு என்று புகழப்படும், இந்த மிளிரும் நாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் மட்டும் ஒரு நாளைக்கு சராசரியாக  47 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது.

கடந்த மாதம், மார்ச் 5-ம் நாள், வெள்ளிக்கிழமை மாலை பெங்களூருவின் நீர் நிரம்ப வேண்டிய இடங்களிலெல்லாம் வழிந்து கொண்டிருக்கும் போது, காதைச் செவிடாக்கும் பாடல்கள் ஒலிபெருக்கி மூலம் வானை நிரப்பிக் கொண்டிருக்கும் போது, ஆடம்பர விடுதிகளில், பாரிஸ்டாசில் உட்கார்ந்து கொண்டு உலகக் கோப்பையில் இந்தியாவின் சந்தர்ப்பத்தை பற்றி சுவாரசியமாய் விவாதித்துக் கொண்டிருக்கும் போது அதே பெங்களூருவிலிருந்து 100 கி.மீ. தூரத்தில் சுவாமிகவுடா, வசந்தம்மா என்ற விவசாய ஜோடிகள் அவர்களது இரண்டு குழந்தைகளை நிற்கதியாய் விட்டுவிட்டு தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

ஏன் அவர்கள் இதைச் செய்தார்கள்?  அவர்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்களா? இல்லை. அவர்கள் குடிகாரர்களா? இல்லை. அவர்களுக்கு தீராத வியாதியா? இல்லை. பிறகு ஏன்? ரூ  80 ஆயிரம் கடன் வாங்கியது சிறிது சிறிதாக கூடி ஒரு லட்சத்தி இருபதாயிரம் வரை உயர்ந்த கடனாகக் கட்ட இயலாமல் போனதே காரணம் (இது கம்ப்யூட்டர் கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு ஜோடியின் ஒரு மாத ஊதியம், அவர்கள் 2 அல்லது 3 மாதங்கள் கடனுக்கு கட்டும் மாத தவணை)

ஏனென்றால் அவர்களுக்குத் தெரியும் அந்தக் கடனை தங்களால் எப்போதும் திரும்பக் கட்ட இயலாது என்று, அவர்கள் பாதிப்பிற்குள்ளானார்கள்.  அரசாங்கத்தாலும் பாதிப்படையச் செய்யப்பட்டார்கள்.  30 சதவீதத்திலிருந்து 5 சதவீதத்திற்கு (பட்டு) சில்க்-ற்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்தது இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில்.  அவர்கள் ஏற்கனவே நலிந்து போன பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகள்.  இந்த இறக்குமதி வரிச் சலுகையால் சீனாவிலிருந்து மலிந்த விலைக்கு பட்டு முதலான பொருட்கள் நமது நாட்டின் சந்தையில் வந்து குவியும், நமது விவசாயிகள் நிற்கதியாய் நிற்பார்கள்.

கடந்த 15 ஆண்டுகளில் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.  உங்களால் நம்ப முடிகிறதா? நம்மில் பெரும்பாலானோருக்கு இந்த உண்மை தெரியாது. ஏன்? உலகத்திலேயே மிகப்பெரிய ஊடகம் என்று போற்றப்படும், இந்தியாவின் ஊடகங்கள் இத்தகைய தகவல்களை கொடுப்பதில், சேகரிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.  ஏனென்றால் அவர்கள் கேளிக்கை விடுதிகளிலும், அரங்குகளிலும், ஆடம்பர அரங்கேற்றங்களிலும், கேளிக்கை களிலும்தான் ஆர்வம் காட்டுகின்றனர்.  பாகிஸ்தான் அணி விளையாட்டு தொடர் ஆரம்பிக்க உள்ள நாளுக்கு முதல்நாள் வேர்க்க விறுவிறுக்க பயிற்சி செய்யும் போது, ஏன் நமது நாட்டு வீரர்கள் அவ்வாறு பயிற்சி செய்யவில்லை என்பதில்தான் அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் “பூனம் பாண்டே” (விளம்பர மாடல்) மீது அதிக ஆர்வம் காட்டுவார்கள்.

ஊடகங்கள் சனநாயகத்தின் மூன்றாவது கண் என்பார்கள்.  சனநாயகத்தின் நான்காவது தூண் என்பார்கள்? ஆனால், இங்கோ ஊடகங்கள் “தரகர்களாக” மாறிவிட்டன, சுத்தமான வியாபாரம்.

எனவே ஊடகங்கள்  மூலம் இத்தகைய சாவுகளை தெரிந்து கொள்வது சாத்தியமற்றது.  பிறகு யார் இருக்கிறார்கள்?  அரசாங்கம் செய்யுமா?  ஆனால் நமக்கெல்லாம் தெரியும் அரசாங்கம் எப்படி செயல்படுகிறதென்று.

பிறிதொருநாள் நான் பெங்களூருவின் விஞ்ஞான் சபா (சட்டசபை) பக்கம் கடந்து போக வேண்டியிருந்தது. அங்கே நான் வாசித்த ஒரு வார்த்தை இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது.  அங்கே ஓரிடத்தில் “அரசாங்கத்தின் வேலை ஆண்டவன் வேலை” என்று எழுதப்பட்டிருந்தது.  அப்போதுதான் புரிந்தது அரசாங்கம் தங்களது எல்லாப் பணிகளையும் ஆண்டவனிடத்தில் விட்டு விட்டார்கள் என்பது.

கர்நாடக முதல்வர் திருவாளர் எடியூரப்பா அனைத்து வீரர்களுக்கும் நிலம் பரிசாக வழங்கப் போவதாக அறிவித்தார்.  ஆனால் நிலம் எங்கே?  பெங்களூரிலேயேவா? திருவாளர் முதலமைச்சரை நீங்கள் கேலியாக பார்க்கிறீர்கள்.  உடனே திருவாளர் முதலமைச்சர் தனது முடிவை மாற்றிக் கொண்டு பணமாக கொடுக்க தீர்மானிக்கிறார்.  ஆனால், அதுவும் எங்கிருந்து வரும்?  உங்களது, எனது வரிதான் உள்ளதே.  ஏற்கனவே கோடிக் கணக்கில் பணம் ஈட்டும் அந்த கிரிக்கெட் வீரர்களைக் காட்டிலும், அதிகம் பணத் தேவையில் பாடுபடுபவர்கள் இந்த ஏழை விவசாயிகள் இல்லையா?

அரசுக்குச் சொந்தமான ஒரு வங்கி நீங்கள் ஒரு “மெர்சிடீஸ் பென்ஸ்” கார் வாங்க கடன் கேட்டால் 6 சதவீத வட்டிக்கு கடன் கொடுப்பார்கள்.  ஆனால் அதே வங்கியில் ஒரு விவசாயி டிராக்டர் வாங்க கடன் கேட்டால் வங்கி எவ்வளவு வட்டி கேட்கும் தெரியுமா? 15 சதவீதம்.  ஏற்றத் தாழ்வின் ஆழத்தைப் பாருங்கள்.  தண்ணீர் பாட்டில் ரூ15-க்கு விற்கப்படும் போது, செல்போனின் சிம் கார்டு இலவசமாக கொடுக்கப்படுகிறது.  இனி எவ்வளவு காலத்திற்குத்தான் நமக்கு உணவளிக்கும் உழவர்களின் கையைக் கடிக்கப் போகிறோம்.  சமீபத்தில் வெங்காய விலை ஒரு உதாரணம்.

2008ல் லக்மே இந்தியா ஒரு அலங்கார காட்சி ஒன்றை மும்பையில் உள்ள ஒரு 5 நட்சத்திர ஹோட்டலில் நடத்தியது.  அதில் 500 பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.  அந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பொருள் “பருத்தி”.  இந்த ஆடம்பர ஹோட்டலிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் உள்ள இடங்களில் ஒரு நாளைக்கு சராசரியாக 4 லிருந்து 5 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.  எத்தனை தொலைக்காட்சி நிருபர்கள் இதைப் படம் பிடித்திருப்பார்கள்?  ஒருவருமில்லை.

60 சதவீததத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தியாவில் ஒரு நாளைக்கு ரூ 20-ல் தங்களது அன்றாட வாழ்க்கையை நடத்திக் கொண்டுள்ளனர்.  டயட் என்ற நாம் அருந்தும் ஒரு கோக் பானத்தின் விலை அவர்களது ஒரு நாளைய வாழ்க்கை.  ஒரு நாள் இரவு-பகல் கிரிக்கெட் ஆட்டத்திற்கு செலவிடப்படும் மின்சாரம், விவசாயி பல வாரங்களுக்கு பயன்படுத்த போதுமானது.  உங்களுக்கு ஒன்று தெரியுமா?  மின்சார நிறுத்தம் கூட வர்க்க நலன் சார்ந்ததாக உள்ளது. பெரும் நகரங்களுக்கு 2 மணிநேரம், சிறு நகரங்களுக்கு 4 மணிநேரம், கிராமங்களுக்கோ 8 மணி நேரம், இப்போது யாருக்கு அதிக மின்சாரம் தேவைப் படுகிறது.  இரவு பகலாக தனது மோட்டாரை இயக்கி, நீர் பாய்ச்சி பயிர் வளர்க்கும் விவசாயிக்கா, இலகுவாக கிடைக்கும் வருமானத்தை செலவு செய்து கணினியில் இந்திய லீக் கிரிக்கெட் பார்க்கும் சில மேற்குடி அலுவலர்களுக்கா?

நமது பிறந்த நாள் விழாக்களில் எத்தனை ஆயிரம் ரூபாய்களை வாரி இறைக்கிறோம்.  குளிர் சாதனம் பொருத்தப்பட்ட கார்களில் அங்கும் இங்கும் பறக்கிறோம்.  வார இறுதியில் கூர்க்கு (மலைவாழ் சுற்றுலாத்தலம்) செல்ல நமது குளிரூட்டப்பட்ட அறைகளில் மெத்தை போன்ற சோபாக்களில் அமர்ந்து கொண்டே திட்டமிடும் போது, அந்த வழியாக போகும் போது, அதற்கு மிக அருகில் உள்ள கிராமங்களில் ரூ 10 ஆயிரம் கடனுக்காக விவசாயிகள் பூச்சி மருந்து குடித்தோ, தூக்கில் தொங்கியோ தங்களை மாய்த்துக் கொண்டிருக்கிறார்களே அது குறித்து நாம் எண்ணியதுண்டா?

பன்றிக் காய்ச்சல் வந்த போது ஒரே அமளி, ஆர்ப்பாட்டம்.  ஒவ்வொரு இறப்பும், ஒவ்வொரு நிமிடமும், ஊடகங்களில் காட்டப்பட்டது, ஏன்?  ஏனென்றால் இந்த நோய் அபரிமித மாத வருமானம் வாங்கும் கணணி பொறியாளர்களை, மத்திய தர வர்க்கத்தினரை நேரடியாகத் தாக்கியதே காரணம். அங்கே உடனே முக்கியத்துவம் வந்தது.  நிவாரண முகாம்கள் தோன்றியது.  அரசாஙகத்தாலேயே விசாரணை மையங்கள் அமைக்கப்பட்டது இந்த வர்க்கத்தினரை திருப்திப் படுத்துவதற்காக. ஆனால் மறுபுறம், ஒவ்வொரு நாளும் 47 பேர் கடந்த 15 ஆண்டுகளாக மடிந்து வருகிறார்கள்.  யாராவது இதைத் தடுக்கவோ, அதைப்பற்றி கவலைப்படுவதோ இல்லை ஏன்?

ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்ட ஒரு மாதத்திற்குள் அவனது மனைவி தனது குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து, தானும் குடித்து மடிவது அல்லது குழந்தைகளை அநாதையாக விட்டு விட்டு தான் மட்டும் மடிவது என்ற நிலைதான் நிலவுகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தப்பூரில் ஒரு துயருற்ற விவசாய பெண்மணி அரசு நடத்தும் விதைக் கடையில் கடனுக்கு பூச்சி மருந்தை வாங்கிக் குடித்துவிட்டு உயிரை விட்டார்.  வாழ்நாள் முழுவதும் கடனில் இருந்தவள், இறந்த பின்னும் கடனை விட்டுச் செல்ல வேண்டிய பரிதாப நிலை.

பல நூற்றாண்டுகளுக்கு முன் ரோம் சாம்ராஜ்யத்திற்க நீரோ என்ற பேரரசன் இருந்தான்.  அவன் பலமான அரசனாக இருந்தான்.  ஆனால் அதே நேரத்தில் கலை, கவிதை, குடி என்று வாழ்க்கை முழுவதும் கேளிக்கையாகவே வாழ்க்கையை நடத்தினான்.  ஒரு முறை அவன் மிகப் பெரிய விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அதற்கு சமுதாயத்திலுள்ள கவிஞர்கள், ஓவியர்கள், அறிவுஜீவிகள், சிந்தனையாளர்கள் என்று அனைவரையும் அழைத்திருந்தான்.  ஒவ்வொருவரும் மகிழ்ச்சியில் குடிக்கவும், உண்ணவும், சிரித்தும் மகிழ்ந்திருந்தார்கள்.  நேரம் ஆக ஆக கேளிக்கை அதன் உச்சத்தை அடைந்தது.  இரவும் வந்தது.  அதை அப்படியே தொடர வேண்டும் என்றான் நீரோ மன்னன்.  இந்த நேரத்தில் அந்த மன்னன் அவனது நாட்டு சிறையிலிருந்த அனைத்து குற்றவாளிகளையும் அவன் தோட்டத்தை சுற்றி நிற்க வைத்து அனைவரையும் தீயிலிட்டான்.  அது அவனது விருந்தினர்களுக்கு, கேளிக்கை தொடர்வதற்கு தேவையான வெளிச்சத்தை கொடுத்ததாம்.  அந்த விருந்தினர்களுக்க மகிழ்ச்சியான நேரம்தான்.  ஆனால் அதற்கு கொடுக்கப்பட்ட விலை குறித்து அவர்களுக்கு தெரியுமா?  அந்த விருந்தினர்களுக்கு என்ன நிலையான மனசாட்சி இருந்திருக்கும்.

நீரோவின் விருந்தினர்கள்

அன்று நீரோ மன்னனின் விருந்தில் என்ன நடந்ததோ அதற்கும் இன்று நம் நாட்டில் நடந்து கொண்டிருப்பதற்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை.  மத்திய தர வர்க்கத்தை சேர்ந்த, கைநிறைய சம்பாதித்து, கடைவீதிகளைச் சுற்றி வரும், கிரிக்கெட் மோகத்திலிருக்கும், விருந்து பிரியர்களான நாம்தான் நீரோவின் விருந்தாளிகள். மடிந்து போகும் நம் விவசாயிகளின் உயிரில் அந்த கேளிக்கைகளை நாம் அனுபவிக்கிறோம்.  ஒவ்வொரு ஆண்டின் அரசின் பட்ஜெட்டும் வசதியானவர்களுக்கு சாதகமானதாக இருக்கிறது.  அவர்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைவதற்கு நமது விவசாயிகளிடமிருந்து நிலங்களை புடு்ங்கி கொடுப்பதுடன், புதிய தாராளமயக் கொள்கையென்ற பெயரில் அவர்களுக்குத்தான் அதிகமான வரிச்சலுகை, இறக்குமதி வரிகுறைப்பு.  லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு தகுதியற்ற தயாரிப்பாக இருந்தாலும், அவர்களின் கடன்களுக்கு அதிகமான வட்டிச் சலுகைகள் என்று அபரிமிதமாக கொடுக்கப்படுகிறது.  ஏனென்றால் நாமெல்லாம் நீரோவின் விருந்தினர்கள் இல்லையா?

நான் இந்த விழாக்களுக்கெல்லாம் எதிரியல்ல.  நான் கிரிக்கெட் விளையாட்டிற்கு கூட எதிரியல்ல.  உலகக் கோப்பைக்கு எதிரானவனல்ல.  எனது நாட்டு மக்கள், விவசாயிகள், கிராமத்து மக்கள் எல்லோரும் இணைந்து குதூகலிக்கும் போது, எனது விவசாயிகள் கொடூரமாக தங்களது உயிரை தாங்களே மாய்த்துக் கொள்ளாத போது, மெர்சிடீஸ் பென்சுக்கும், டிராக்டருக்கும் கடனுக்கு ஒரே மாதிரி வட்டி விகிதம் வசூலிக்கப்படும் போது, இந்தியா உலக அளவில் ஒன்றை சாதிக்கிறதென்றால், முதலில் குதூகலிப்பவன், கூச்சலிடுபவன் நானாகத்தான் இருக்கும். அந்த நாளில்தான் கையில் இந்தியக் கொடியை ஏந்திக் கொண்டு பாரத் மாதாவிற்கு ஜே என்று கோஷமிட்டுக் கொண்டு மோட்டார் பைக்கில் வலம் வருவேன்.  ஆனால் இல்லை.  இன்றில்லை.  எனக்கு உணவு கொடுக்கும் விவசாயிகள் துயரத்திலில்லை என்பது வரை நான் இதைத்தான் சொல்வேன்.  உங்களது ஆடம்பர கடை வீதிகளும் நாசமாய் போகட்டும்மென்று.  உங்களது இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி நாசமாய் போகட்டுமென்று. உலகக் கோப்பை நாசமாய் போகட்டுமென்று.  உங்களது அனைத்து கொண்டாட்டங்களும் நாசமாய் போகட்டுமென்று.

_______________________________________________

உழவர்கள் மடியும் போது ” உலகக் கோப்பை,” ஒரு கேடா?
– நரேந்திர ஷெகாவத்,
நன்றி – தி ஹிந்து 24.04.11

தமிழில் – சித்ரகுப்தன்

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஏழைகள் படிக்கக் கூடாது! சரி கொன்றுவிடலாமா?

ஏழைகள் படிக்கக்கூடாது! அப்போ கொன்றுவிடலாமா?

ழை மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதால் பள்ளியின் ஒழுக்கமும், தரமும் கெட்டுவிடும், ஆசியர்களிடமும் ஒழுங்கு குலையும் என்று சென்னை அடையாறிலிருக்கும் ஸ்ரீ சங்கரா சீனியர் செகண்டரி பள்ளி கருதுவதாக வந்த செய்தியைப் பார்த்திருப்பீர்கள்.

இதற்கு எடுத்துக்காட்டாக  ஒரு மாணவரின் செயல்திறனையும் அவரது பொருளாதார நிலைமையையும் இணைத்து ஒரு அறிக்கையை சுற்றுக்கு விட்டுள்ளார் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சுபலா அனந்தநாராயணன். அதோடு, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள், அனைவருக்குமான கல்வி உரிமை மசோதாவை எதிர்த்து போராடும் படியும் தூண்டியிருக்கிறார்.

முதலில் இந்த கல்வி கற்கும் உரிமை என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்டிருந்த திட்டம்தான் அது. பாதிக்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகள் குறைந்தபட்சம் எட்டு வருடம் கூட கல்வி கற்பதில்லை. ஒன்று பள்ளியின் பக்கமே வருவதில்லை அல்லது பாதியில் படிப்பை விட்டு நின்று விடுகிறார்கள். இந்த பிள்ளைகளில் மிகப் பெரும்பான்மையினர் வசதி வாய்ப்பற்ற ஏழை மக்கள்.  இந்த கல்வி கற்கும் உரிமை, கோத்தாரி கல்விக் குழுவினரால் பொது பள்ளிக்கூட அமைப்பை நோக்கிய ஒரு சிறுமுயற்சியாக, 1964-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்திய கல்வியமைப்பில், சாதி மற்றும் சமூக-பொருளாதார நிலைமைகள் உருவாக்கியுள்ள ஏற்றதாழ்வுகளை களைவதற்காக செய்யப்பட்ட சமூக சீர்திருத்தமே இந்த பொது பள்ளிக்கூட அமைப்பு. இந்த மசோதா 1964,1986 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் முறையே நிறைவேற்ற முயன்றும் தோல்வியையே கண்டது.

இந்த மசோதாவுக்காக, பட்ஜெட்டில் 12,000 கோடிகள்  நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. உலகிலேயே, ஆரம்பக் கல்விக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கி வரும் நாடு இந்தியாதான். இதுவும் வருடா வருடம் குறைந்து கொண்டே வருகிறது. இது முதலில் தில்லியில் நடைமுறைக்கு வந்து, இப்போது அனைத்து பள்ளிகளிலும் அமுலாகத் தொடங்கியிருக்கிறது.

இந்த மசோதாவின்படி, குழந்தைகளை, பெற்றோர்களை இன்டர்வியூ என்ற பெயரில் நேர்காணல் செய்வது மற்றும் கேபிடேசன் கட்டணம் வசூலிப்பது இரண்டுமே தண்டனைக்குரியது. கேபிடேசன் கட்டணம் வசூலித்தால் கட்டப்படும் பீஸ் தொகையைப்போல் 10 மடங்கும்,  குழந்தைகளையும் பெற்றோரையும் நேர்முகம் கண்டால் 25000 ரூ முதல் 50000 ரூ வரையும் அபராதம் வசூலிக்கப்படும். 25 சதவீத இடங்களை வசதி வாய்ப்பற்ற ஏழை மக்களுக்கு ஒதுக்க வேண்டும்.

ஆரம்பக் கல்வியை முடிக்கும்வரை பள்ளி நிர்வாகம் குழந்தைகளை தண்டிப்பதோ அல்லது பள்ளியை விட்டு அனுப்புவதோ கூடாது. ஒரு கிலோ மீட்டர் சுற்று வட்டாரத்தில் இருப்பவர்கள் அந்த வட்டாரத்திலிருக்கும் பள்ளியிலேயே படிக்க வேண்டும்.இவையெல்லாம் அதில் சொல்லப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்கள். இத்தனைக்கும், கல்வி கற்கும் உரிமை, முதல் எட்டு வருடங்களுக்கு மட்டுமே கல்வியை உறுதி செய்கிறது. (அதற்கு பிறகு அந்த மாணவர்களை பற்றிய கவலை யாருக்கும் இல்லை. பள்ளிகள் நினைத்தால் வெளியேற்றலாம். )

கல்வியை முழுக்க தனியார் மயம் ஆக்கிய நிலையில் இந்த மசோதா எதையும் மாற்றாது. மேலும் இனி அரசுக் கல்லூரிகள், பள்ளிகள் ஏதும் புதிதாகத் திறக்கப்படாது என்ற சாத்தியத்தையும் இம்மசோதா கொண்டிருக்கிறது. முக்கியமாக தனியார் பள்ளிகள், கல்லூரிகள் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இம்மசோதா தீர்த்திருந்தால் இப்படி தனியே ஏழைகளை சேர்க்க வேண்டுமென்ற சலுகை தேவைப்படாமாலேயே போயிருக்கலாம்.

இருப்பினும் இந்த பெயரளவு சலுகைகளைக் கூட தாங்கமுடியாமல் இந்த தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் லாபி வேலையை செய்யத் துவங்கியுள்ளன. இந்த மசோதா இவர்களது வருமானத்தை பாதிக்கிறதாம். அதன் முதல் கட்டமாகத்தான் இந்த இரு பள்ளிக்கூடங்கள் வேலையை காட்டத் தொடங்கியிருக்கின்றன -சங்கரா சீனியர் செகண்டரி பள்ளியும், லேடி ஆண்டாள் பள்ளியும்..

இன்று  பள்ளிக்கூடம் என்பது ஒரு பெரிய பிசினஸ். சென்னையில்தான் எத்தனை வகை வகையான பள்ளிக் கூடங்கள். வகுப்பறைகளில் ஏசியுடன், ஏசியில்லாமல், ஒன்றாம் வகுப்பிலிருந்தே லேப்டாப், பாடதிட்டங்கள்/வீட்டுப்பாடங்கள் ஆன்லைனிலே செய்து அனுப்பும் படியான வசதிக்கொண்டவை, என் ஆர் ஐ பிள்ளைகள் படிக்க என்று ஏராளமான வகைகள் உண்டு. ஒவ்வொரு பள்ளியும் அதன் வசதிகளுக்கும், பெயருக்கும் தகுந்தபடி நுழைவுக்கட்டணங்களை வசூலிக்கின்றன, அவை லட்சங்களில் ஆரம்பித்து ஆயிரங்களில் முடிகிறது.

அந்த பிசினஸின் முக்கியத்துவம் கருதித்தான் அரசியல்வாதிகள், ரவுடிகள், அவர்களது வாரிசுகள் என்று பலரும், கல்வி கற்றிருக்கிறார்களோ இல்லையோ கல்வித்தந்தையும் கல்வித்தாயுமாக பரிணாமம் எடுக்கின்றனர். இப்படி, ஆரம்பக் கல்வியிலேயே வர்க்கப் பாகுபாடுகள் நிறைந்திருக்கிறது. வசதி வாய்ப்புள்ளவர்கள் பெரிய பணக்கார பள்ளிக்குச் செல்கிறார்கள். இல்லாதவர்கள், விலை குறைந்த படிப்பை படிக்கிறார்கள். ஆரம்ப கல்வியிபிலிருந்து தொடங்கும்  இந்த முரண்கள் முடிவடையாததது.

பொதுவாக, நகருக்குள் இருக்கும், இந்த பள்ளிகளில் படிக்க ஒன்று நடிக நடிகையர், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், அதிகாரிகள், வசதியான நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பிள்ளைகளாக இருக்க வேண்டும் அல்லது என் ஆர் ஐக்களின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். இதுதான் அடிப்படை தகுதி. அதற்கு அடுத்த லெவலில் இருப்பது நடுத்தர வர்க்கத்திற்கான பள்ளிகள். இந்த பள்ளிகளுக்குத்தான் அப்துல்கலாம் கனவு காணச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்-அவர் படித்து வந்த பின்னணியை மறந்துவிட்டு. இந்தியா வல்லரசாவதைப் பற்றி பாடம் நடத்துகிறார். ஏழை மக்களை தூக்கியெறிந்துவிட்டால் இந்தியா வல்லரசாகி விடும் போல.

உயர்ரகக் கல்வி நிறுவனங்கள், சிறந்த பள்ளி என்பதெல்லாம் ஒரு ஏமாற்று. ஒரு சிறந்த பள்ளி என்பது படிப்பில் எப்படிபட்ட மாணவராக இருந்தாலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டும். அதை விடுத்து, பள்ளிக்கூட ஆசிரியர்களும், பெற்றோர்களும்.. சங்கம் அமைத்து எந்த மாதிரியான  குழந்தைகளை சேர்த்து கல்வி புகட்டுவது என்றும் பள்ளிக்கூட சூழலுக்கும் தரத்துக்கும் பங்கம் வராத வகையில் பள்ளியை பாதுகாப்பதும் எங்கள் உரிமை என்று சொல்வது சொத்துரிமை சார்ந்ததேயன்றி கல்விப்பணி சார்ந்ததல்ல.

அந்த பிள்ளைகள் வந்து சேர்ந்தால் அனுமதி மறுக்க முடியாது, வகுப்பறைகள் முதல் பள்ளிக்கூடமே பாழாகி விடும், அதோடு உங்கள் பிள்ளைகளின் கல்வியும் பாதிக்கப்படுமென்று அந்த தலைமையாசிரியர் பதறுகிறாரே, ஏன்? தங்கள் பிள்ளைகள் ஏழை மாணவர்களோடு  ஒன்றாக அமர்ந்து கல்வி கற்றால் ஆசிரியர்களும் பெற்றோரும் ஏன் கதறுகிறார்கள்? எது அவர்களை தடுக்கிறது? ஏழை மாணவர்கள் அழுக்காக இருப்பார்கள், கெட்ட பழக்க வழக்கங்கள் உடையவர்கள் அதைப் பார்த்து எங்கள் பிள்ளைகளும் கற்றுக் கொள்வார்கள் என்று அரற்றுகிறார்கள்.

வகுப்பறையில், ஏழை மாணவர்கள் இருந்தால் பாடம் நடத்த கத்த நேரிடும், பாடங்களை படிக்க கஷ்டப்படுவார்கள் என்கிறார்கள் ஆசிரியர்கள் அவர்கள் பங்குக்கு. ஏழை மாணவர்களோடு சேர்ந்தால் எங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் பேச வராது என்றெல்லாம் சாக்கு போக்குகள் சொல்கிறார்கள். குஷ்பூவின் பிள்ளைகள் லேடி ஆண்டாள் பள்ளியில் படிக்கின்றனர். ஏழைகளின் ஓட்டு வேண்டி பிரச்சாரம் செய்த குஷ்பூ அவர்களது பிள்ளைகளை சேர்த்துக் கொள்ள நிர்வாகத்தினரிடம் பிரச்சாரம் செய்வாரா?

ஏழை மாணவர்களுடன் பழகுவதால்தான் தங்கள் வீட்டுப் பிள்ளைகள் கெட்ட வார்த்தைகளை பேசக் கற்றுக் கொள்வதாக மத்திய தர வர்க்கத்தில் ஒரு பொது கருத்து நிலவுகிறது. ஏன், பணக்கார வீட்டுப்பிள்ளைகள் கெட்டவார்த்தைகள் பேசுவதேயில்லையா? நம்முன் நிறுத்தப்படும் முகங்களைப் பாருங்கள். விளம்பரங்களில் சச்சின் வருவதைப் போல தன்ராஜ் பிள்ளை ஏன் வருவதில்லை? சற்று வெள்ளையாக, படித்தவர் போல நடை உடை பாவனைகளைக் கொண்டிருந்தால் “வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்” என்றுதானே நம்புகிறார்கள். நடைமுறையில், எல்லா பித்தலாட்டங்களும் எங்கிருந்துதான் உதிக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதற்கு ப.சிதம்பரத்திலிருந்து பதிவுலக நர்சிம் வரை உதாரணங்கள் உண்டு.

இந்த முரணின் சற்றே பெரிய வடிவம்தான் கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த திவ்யாவின் படுகொலை. வகுப்பறையில் வைத்திருந்த பணம் காணோமென்றதும் என்ன நடந்தது? ஏழை என்பதாலேயே திவ்யா திருடியிருக்கக்கூடுமென்று பேராசிரியர்களுக்கு சந்தேகம் வந்தது. உடைகளைக் களையச் சொல்லி சோதனை செய்துள்ளனர். ஏன் மற்ற மாணவியருக்குச் அது போல சோதனை செய்யவில்லை? திவ்யாவை மட்டும் அப்படி சோதனை செய்ய என்ன காரணம்? ஏழை எனபதுதானே. ஏழை என்றால் திருடுவார்கள் என்ற பொதுபுத்திதானே. இதே பொதுபுத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினருக்கும் இல்லாமலிருக்குமா? இதே பொதுபுத்தி, ஏழைப்பிள்ளைகள் நன்றாக படித்தால் எப்படியெல்லாம் கொட்டப் போகிறதோ?

நசிந்து போன விவசாயம், நலிந்துவிட்ட தொழில்கள், வேலையின்மை, கடன், சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக பிடுங்கபட்ட விளைநிலங்கள்  என்று பல காரணங்களால் மக்கள் இந்தியாவின் வடகோடிக்கும் தென்கோடிக்கும் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பீகார், ஒரிஸ்ஸாவிலிருந்து 100 ரூபாய்க்கும் 200 ரூபாய்க்கும் கூலிக்கு வந்து கட்டிடவேலை முதல் ஓட்டல் வேலை வரை செய்து பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதேபோல, தமிழக விவசாயிகள் பாத்திரம் பண்டங்களை தூக்கிக் கொண்டு ஊர் ஊராக பிழைப்பு தேடி அலைந்துக்கொண்டிருக்கிறார்கள். நிரந்தர வேலையில்லாமல் கிடைக்கும் வேலையை செய்து பிழைக்கும்படி நகரத்தை நோக்கி துரத்தப்படுகிறார்கள். நமது பிள்ளையாவது படித்து முன்னேறினால் போதும் என்ற பெற்றோரின் நம்பிக்கையை சுமந்து வரும் அந்த குழந்தைகளின் குறைந்த பட்ச ஆரம்ப கல்விக்கான வழியை ஆசிரியர்களும், பெற்றோர்க்ளும் சேர்ந்து அடைக்கிறார்கள். அவர்களைக் கண்டுதான் மூக்கைப் பொத்துகிறார்கள். துரத்தியடிக்கிறார்கள்.

இந்திய உழைக்கும் மக்களின் கல்வி உரிமையை மறுத்தது பார்ப்பனியம். சம்ஸ்கிருதம் பேசினால் நாக்கை அறுக்க வேண்டும் என்றது மனுஸ்மிருதி. இன்று அடையாரில் இருக்கும் ஒரு பார்ப்பனப் பள்ளியும், பார்ப்பன முதல்வரும் ஏழைகளை தடை செய்வோம் என்று பகிரங்கமாக பேசுகிறார்கள். புதிய பார்ப்பனியம்! பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று பார்ப்பனியமும், வெள்ளை நிற ஆரியர்களைத் தவிர மற்றவர்கள் அடிமைகள் என்று ஹிட்லரின் நாசிசமும் பேசிய வரலாறு இன்று திரும்புகிறது. ஒரு வேளை இந்தியா வல்லரசாக வேண்டுமென்பதற்காக ஏழைகளை மொத்தமாகக் கொன்றுவிடுவார்களோ தெரியவில்லை. அப்போது இந்த கல்வி, கத்திரிக்காய் பிரச்சினை ஏதுமில்லையே?

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்… ஏழை மாணவர்களுடன் தங்களது பிள்ளைகள் ஒன்றாக அமர்ந்து படிப்பதைக்கூட நடுத்தர வர்க்கத்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. பள்ளிக்கூடத்தை விட்டே துரத்த திட்டமிடுகிறது பள்ளி நிர்வாகம். நாட்டைவிட்டே துரத்த திட்டமிடுகிறது மன்மோகனின் அரசாங்கம். ஜெய்தாப்பூரில் அணு உலையை எதிர்த்து போராடும் மக்களை சுடும் அரசாங்கம்  டாடாவின் உயிர்வாழும் உரிமைக்கு பரிந்து கொண்டு வருகிறது.

இப்படி, ஏற்றத் தாழ்வுகளை அதிகரித்துச் செல்வது பாசிசத்திலேதான் போய் முடியும். தகுதியிருப்பவர்கள் மட்டுமே இந்த ”வல்லரசில்” வாழ முடியும். பணத்தைக் கொடுத்து நுகரும் வசதியிருப்பவர்களுக்கு மட்டுமே இங்கு இடம். தாகத்துக்கு குடிக்கும் நீரையே  விலை கொடுத்து வாங்கிக் குடிக்கும் நிலையைப்போல சுவாசிக்கும் காற்றுக்கு கூட விலை வைத்தாலும் வைப்பார்கள் இந்த வியாபாரிகள். அப்படி ஒரு திட்டத்தோடு பன்னாட்டு வியாபாரிகள் வந்தாலும் அதில் கையெழுத்திடுவார் மன்மோகன்.

ஆரம்ப கல்விக்கே இந்தநிலை என்றால், மொத்த கல்வித்துறையையுமே தனியார்மயமாக்க திட்டங்கள் தீட்டியிருக்கிறார் கபில்சிபல். மன்மோகன் சிங் பொருளாதாரக் கதவுகளை திறந்து விட்டது போல, கல்வித்துறையின் கதவுகளை இவர் திறந்துவிடப் போகிறார். பன்னாட்டு பல்கலைகழகங்கள் அரசாங்கத்தின் தலையீடு இல்லாமல் இங்கு வியாபாரம் செய்து போட்டி போட்டுக் கொண்டு கல்வியின் ‘தரத்தை’அதாவது பிசினசை உயர்த்தப் போகின்றன.

இன்று ஆரம்பக் கல்விக்கே பல ஆயிரங்கள் செலவு செய்யும் நடுத்தர வர்க்கம், வெளிநாட்டு  பல்கலைக்கழகங்களின் பகாசுர பசிக்கு என்ன செய்யப் போகிறது? உயர்ந்த படிப்பு, உயர்ந்த தரம், வெளிநாட்டு படிப்பை உள்நாட்டிலேயே குறைந்த விலையில் படிக்கலேம் என்றெல்லாம்  மயக்கி நடுத்தர வர்க்கத்தினரை பந்தாடப் போகிறது, கபில் சிபலின் புதிய கல்விக்கொள்கை. நுகரும் தகுதியுள்ளவரே வாடிக்கையாளர். அப்போது, இன்றைய  ஏழை மாணவர்களின் நிலையை எட்டியிருப்பார்கள்  இன்றைய வாடிக்கையாளர்கள்.  கல்வி அப்போது இவர்களுக்கு எட்டாக்கனியாக  மாறியிருக்கும். அதுதான் தனியார்மயமும் தாராளமயமும் வெளிப்படுத்தும் கோரமுகம்.

இதனை, இன்றே உணர்ந்து சரியான போராட்டத்தை இனங் கண்டு தங்களை இணைத்துக் கொள்வதே தங்கள் பிள்ளைகளுக்கு நடுத்தர வர்க்கம் தரும் உண்மையான கல்வியாக இருக்கும்.

_________________________________________________________

– சந்தனமுல்லை

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

பாண்டிச்சேரி கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!

9

புதுவை கவர்னர் இக்பால் சிங் ஒரு பிக்பாக்கெட்டாமே!
'பிக்பாக்கெட்' இக்பால் சிங்

ந்தியாவின் தேசிய கௌரவங்கள் லிஸ்ட்டில் கவர்னர்களுக்கு முக்கிய இடமுண்டு. அரசியல் சட்டத்தின் ஆட்சியை அவர்தான் பாதுகாக்கிறார் என்ற பில்டப்பும், கவர்னர் மாளிகை, குடியரசு தின மரியாதை என்று ஏகப்பட்ட அயிட்டங்களும் அதில் அடக்கம்.

அப்பேற்பட்ட மரியாதை கொண்ட இந்த பதவியை பிக்பாக்கெட் என்று அழைப்பதில் சில அப்பாவி தேசபக்தர்களுக்கு வருத்தம் இருக்கும். போகட்டும், வருத்தத்தை கொஞ்சம் தாங்கிக் கொண்டு மீதியைப் படியுங்கள், நீங்களே கும்முவீர்கள்!

வெளியே குதிரை வளர்ப்பு தொழிலைக் காட்டிவிட்டு உள்ளுக்குள் முதலாளிகள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் கறுப்புப் பணத்தை வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கியிருக்கும் ஹசன் அலியை அமலாக்கப்பிரிவு கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. இந்த ஹசன் அலி சிங்கப்பூர் போவதற்கு பாஸ்போர்ட் வாங்கிக் கொடுத்தவர் தான் தற்போது புதுச்சேரியில் கவர்னராக இருக்கும் இக்பால் சிங். அப்போது பீகார் மாநில காங்கிரஸ் எம்.பியாக இருந்தவர்.

இந்த சிங்கப்பூர் விஜயம் மூலமும் கருப்புப் பணம் வெளியேறிக்கிறது என்பதால் ஹசன் அலிக்கும், கவர்னர் சிங்குக்கும் உள்ள தொடர்பை தற்போது விசாரித்து வருகிறார்கள். எனினும் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த கவர்னர் என்பதால் சிங் அப்படி சுலபமாக சிக்கவிடமாட்டார்கள்.

நேற்று அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் புதுச்சேரி பந்த் நடந்திருக்கிறது. நோக்கம் ஊழல் கவர்னரை மாற்றச் சொல்வது. அதிலும் கூட அந்த சிங்கை தண்டிக்க வேண்டும் என்று கூட அவர்கள் கோரவில்லை. சரி, ஊழல் கட்சியான அ.தி.மு.கவே மக்கள் ஆதரவுடன் பந்த் நடத்துமளவுக்கு சிங் என்ன செய்தார்?

இவரது அப்பா லால்சிங், ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது அடிபட்டவராம். அந்த தகுதியை வைத்து அரசியலில் ஆளான இக்பால் சிங் மோசடிகளின் மூலம் சொத்து பத்துக்களை பெருக்கி வருகிறார். சரக்குக்கு பேர் போன புதுச்சேரியில் இவர் குடிக்கும் சீமைச்சாராய விஸ்கியின் ஒரு ஃபுல்லின் விலை ஒரு இலட்சமாம். கவர்னரின் உதவியாளரான அதிகாரிகளே இதை புரோக்கர்கள் மூலம் வாங்கி வைப்பார்களாம். என்ன விடயமாக இருந்தாலும் கவர்னரோ அவரது உதவியாளரான எஸ்.கே.சிங்கோ இலஞ்சத்தை வெளிப்படையாக கேட்டு வாங்குவார்களாம்.

வீட்டுவசதித் துறையில் பெரும் ஊழல் நடந்ததாக ஒரு புகார் கவர்னருக்கு வர சிங் என்ன செய்தார் தெரியுமா? உடனே அந்த மந்திரியை தொடர்பு கொண்டு பங்கு கேட்டு மிரட்டினாராம். இவையெல்லாம் சில பத்திரிகைகளில் வந்துள்ளன. ஒருவேளை இதற்கெல்லாம் என்ன ஆதாரம் என்று தேசபக்தர்கள் கேட்கக்கூடும். அதற்காகவே ஒரு 70mm ஸ்பெஷல் கொள்ளை ஒன்று நடந்து ஆதாரப்பூர்வமாக அனைத்து பத்திரிகைகளிலும் வந்திருக்கிறது.

தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவின் மகன் சுகன்ஜித்சிங்கும், இந்த இக்பால் சிங்கின் மூத்த மகனும் சேர்ந்து ஒரு அறக்கட்டளையை (கொள்ளையடிக்கிறதெல்லாம் இப்ப இந்த பேரில்தான்) துவங்கி அதன்மூலம் ஒரு மருத்துவ கல்லூரியை தொடங்க திட்டமிட்டனர். டாக்டர் கல்லூரியென்றால்தான் நன்கொடையை வைட்டமின் சி-யில வாங்க முடியும். இதற்கு காரைக்கால் அருகே நெடுங்காட்டில் 50 ஏக்கர் நிலத்தை வளைத்திருக்கின்றனர். அடுத்து புதுவை அரசின் அனுமதி கோரிய போது சுகாதார செயலாளர் விஜயன் மறுத்திருக்கிறார்.

உடனே அவரை விடுமுறையில் அனுப்பிவிட்டு வேறு அதிகாரியைப் போட்டு காரியத்தை சாதித்த போது விசயம் வெளியே வந்து நாறத் துவங்கியிருக்கிறது. இதில் பேரு ரிப்பேரு ஆனதும் நம்ம இக்பால் சிங், அப்போது கூட மனமில்லாமல் கல்லூரிக்கான அனுமதியையும், இடத்தையும் விற்பதற்கு முயற்சி செய்கிறாராம். இது நடந்தால் ஊழல் செய்யாத மாதிரியும் இருக்கும். நிஜத்தில் பல பத்து கோடிகளை சாப்பிட்ட மாதிரியும் இருக்கும்.

கடைசியாக்த்தான் இந்த சர்தார்ஜியோட நட்பு கருப்புப் பணக்குதிரை ஹசன் அலியோட இருக்கிறது என்பது தெரிய வந்தது. இதற்க்காக டெல்லி சென்று விளக்கம் கொடுத்த சர்தார்ஜி இன்னும் பதவி விலகாமல் ஜம்மென்று இருக்கிறார். அப்படியே அவர் பதவி விலகினாலும் அது ஒன்றும் தண்டனை இல்லையே? கொள்ளையடித்த பணம் இருக்கையில் அடுத்து மேகலாயாவிற்கு கூட கவர்னராக செல்லலாம்.

கவர்னர் மாளிகை என்று எல்லா மாநிலங்களிலும் ஒரு பெரும் நிலப்பரப்பை வளைத்து மாளிகைகளை கட்டி, நூற்றுக்கணக்கான வேலையாட்கள், அதிகாரிகளைப் போட்டு, இவர்களுக்கு செய்யப்படும் மரியாதை என்ன, போற்றுதல் என்ன, புடலங்காய் என்ன…

புதுச்சேரி போன்ற சிறு மாநிலங்களிலேயே இவர்கள் இப்படி ஆட்டம் போட்டால் பெரிய மாநிலங்களில் எப்படி ஆட்டம் போடுவார்கள்? ‘ரப்பர் ஸ்டாம்பு’ என்று கேலி செய்யப்படும் இந்த ஜந்துக்களே இப்படி என்றால் அதிகாரம் கொண்ட அமைச்சர்களைப் பற்றி சொல்லவா வேண்டும்?

காங்கிரசு கட்சி தனது பழைய பெருச்சாளிகள் பலருக்கும் இப்படித்தான் வாழ்வும், தொழிலும் அளித்து வருகிறது. ஹைதராபாத்தில் என்.டி.திவாரி போட்ட குத்தாட்டம் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது அந்த குத்தாட்டம், வழிப்பறிக் கொள்ளையாக புதுச்சேரிக்கு வந்திருக்கிறது. நீங்கள் மிகவும் மதிக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் பாதுகாவலர்களான கவர்னர்களின் நடைமுறை இப்படித்தான் இருக்கிறது. இவர்களை தண்டிக்க வேண்டுமென்றால் இந்த பெருச்சாளிகளை உருவாக்கும் அரசியல் அமைப்பை தகர்க்க வேண்டும். தேவையில்லை என்பவர்கள் என்ன செய்யலாம் சொல்லுங்கள்!

__________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

சென்னை பூந்தமல்லியில் மே தினப் பேரணி: அனைவரும் வருக!

அன்பார்ந்த நண்பர்களே,may-day-2011

மே தினம்! இந்த உலகில் மனித குலத்தின் ஆகப் பெரும்பான்மையினருக்கு,  உரிமைகளை பெற்றுத் தந்த தினம். செந்நீர் சிந்தி, தியாகம் புரிந்து போராட்டத்தின் மூலமே மறுக்கப்பட்ட நமது உரிமைகளை கைப்பற்ற முடியும் என்று நிரூபித்த தினம்!

இது ஏதோ தொழிலாளர் தினம் என்று மட்டும் சிலர் நினைக்கிறார்கள். இல்லை நீங்கள் எந்த வேலை செய்பவராக இருந்தாலும் உங்களுக்கு கிடைத்திருக்கும் எட்டுமணி நேர வேலை, ஓய்வு, விடுமுறை, பணிப்பாதுகாப்பு, இதர உரிமைகள் அத்தனையும் முதலாளிகளின் கருணையால் கிடைத்து விடவில்லை. அவை ஒவ்வொன்றும் முதலாளிகளை அடி பணியவைத்து தொழிலாளர் வர்க்கம் கொண்டு வந்த அடிப்படை உரிமைகள்.

தனது தொழிற்சாலையில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுத்த தொழிலாளி வர்க்கம்தான் பின்னர் அனைத்து மக்களின் விடுதலைக்காக சோசலிசப் புரட்சிகளையும் நடத்தியிருக்கிறது. இன்று உலகில் சோசலிச முகாம் இல்லை என்பதால் அதன் முக்கியத்துவம் குறைந்து விடவில்லை, முன்பை விட அதிகமாயிருக்கிறது.

அமெரிக்காவின் உலக மேலாதிக்கமும், மறுகாலனியாக்கமும் முழு உலகையும் அரசியல், சமூக, பொருளாதாரம் அத்தனையிலும் சுரண்டி ஆதிக்கம் செய்கிறது. மேலாதிக்க வெறி பிடித்தலையும் அதன் ஆக்கிரமிப்பு போர்கள் அதிகரித்து வருகின்றன. ஆப்கான், ஈராக், லிபியா, பாக்கிஸ்தான் என்று பல நாடுகளில் அதன் ஆதிக்க வெறிக்காக அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்படுகின்றனர்.

இந்தியாவைப் பொறுத்தவரை பன்னாட்டு நிறுவனங்கள், அமெரிக்காவின் ஆசிபெற்ற தரகு முதலாளிகள் சேர்ந்து ஒட்டச் சுரண்டுகின்றனர். தேசத்தின் தலைவிதியே இவர்களது லாபவெறிக்காக திருத்தி எழுதப்படுகிறது. சமீப காலமாக இருந்து வந்த குறைந்த பட்ச உரிமைகள் கூட இன்று தொழிலாளி வர்க்கத்திற்கு கிடையாது. சிறப்பு பொருளாதா மண்டலங்கள் என்ற பெயரில் அடிமைகள் மட்டும் வசிக்கும் முதலாளிகளின் சமஸ்தானங்கள் அதிகரித்து வருகின்றன.

நாடு வல்லரசாகிறது என்ற பெயரில் டாடா, அம்பானி, மிட்டல் போன்ற தரகு முதலாளிகள் நாட்டின் அரசியல் பொருளாதாரத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததுடன், மேற்குறிப்பிட்ட கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையை சட்டப்படியே நடத்த அரசே கொள்கை வகுத்துத் தருகிறது.

நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில், அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் இலவசங்களை போட்டிப்போட்டுக் கொண்டு அறிவித்தார்களே ! எந்த கட்சியாவது (பெயரளவில் இருக்கின்ற) “தொழிலாளர் சட்டப்படி, ஊதிய உயர்வு, போனஸ் பிற உரிமைகள் வழங்க உத்திரவாதப்படுத்துவோம் ! 1926 தொழிற்சங்க சட்டப்படி சங்கம் வைத்துக்கொள்ளும் உரிமையை அங்கீகரிப்போம். இதை மீறும் முதலாளிகளை தண்டிப்போம்” என்று சொன்னார்களா ? யாரும் சொல்லவில்லை. ஆக… உரிமைகளற்ற இலவசம் என்பது உயிரற்ற உடலுக்கு சமமானது. அந்த வகையில் இன்றைக்கு தொழிலாளர்கள் மட்டுமல்ல, இதரப் பிரிவு உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் சூறையாடப்பட்டு நாடோடிகளாக்கப்பட்டிருக்கிறார்ள். இந்த கொடுமைகளுக்கு காரணமான, கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையையும், இதற்கு அடிப்படையாக இருக்கும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியுள்ளது.

இந்த மே தினத்தில் இந்த கடமையினை அறைகூவலாக விடுத்து ம.க.இ.க வும் தோழமை அமைப்புகளும் தமிழகம் முழுவதும் மே தினத்தை போராட்ட நாளாக கடைபிடிக்கின்றன. நுகர்வு கலாச்சார பண்டிகைகளையே கொண்டாடும் நாம் உண்மையில் கடைபிடிக்க வேண்டிய நாள் மே தினமாகும்.

மே நாள் என்ற உரிமைக்கு வித்திட்ட நாளில், அனைத்துப் பிரிவு உழைக்கும் மக்களையும் போராட்டத்திற்கு அறைகூவும் விதமாக நடைபெறவிருக்கும் பேரணியில் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நமது அரசியல், சமூக கடமைகளை நினைவுபடுத்தும் இந்த நாளில் கலந்து கொள்வதன் மூலம் உங்களது அரசியல் வாழ்வை ஆரம்பிக்கலாம். வாருங்கள், விடுதலைப்பணியில் சேருங்கள்!!

________________________________________

மே நாள் பேரணி

மே 1, 2011

பேரணி துவங்குமிடம்: கல்லறை பேருந்து நிறுத்தம், ஜேம்ஸ் தெரு அருகில், பூந்தமல்லி

நேரம்: காலை 9.30 மணி

தலைமை: தோழர் முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

முழக்கங்கள்:

மே நாள் வாழ்க!

சர்வதேசப் பாட்டாளி வர்க்க ஒற்றுமை ஓங்குக!

அமெரிக்க உலக மேலாதிக்கத்தையும் மறுகாலனியாக்கத்தையும் முறியடிப்போம்!

சட்டபூர்வமாக அரசு சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளி வர்க்கம் பகற்கொள்ளை அடிக்க வழி வகுக்கும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயத்தை முறியடிப்போம்!

கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு பாதை வகுத்துக் கொடுத்து லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகள் அதிகாரிகளின் கொட்டத்தை ஒடுக்குவோம்!

ஊழல் ஒழிப்பு, நல்லாட்சி என்று பேசி கார்ப்பரேட் பகற்கொள்ளையை மூடிமறைக்கும் ஊடகங்கள், ‘உத்தமர்கள்’, தன்னார்வக் குழுக்களின் முகமூடிகளைக் கிழித்தெறிவோம்!

கார்ப்பரேட் கொள்ளையர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகளை நாமே தண்டிக்க, நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம்!

_____________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
பெண்கள் விடுதலை முன்னணி
சென்னை, அலைபேசி: 94448 34519

வினவு: 97100 82506

__________________________

வினவுடன் இணையுங்கள்

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?

15

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?ழலை ஒழித்துக் கட்டிவிட்டு தான் மறுவேலை என்று இந்தியாவின் நீதித் துறையும் மத்திய புலனாய்வுத் துறையும் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருப்பது போல ஆங்கில செய்தி ஊடகங்களில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் சீசனில் சிறப்பாகக் கல்லா கட்டி முடித்த பின், இப்போது செய்திச் சேனல்களின் ஸ்டூடியோக்களில் நடந்து கொண்டிருப்பது நியாயத் தீர்ப்பு சீசன்.

துரித வாழ்க்கை, துரித உணவு, அதிவேக பைக், அதிவேகக் காதல், அதிவேக விளையாட்டு என்று அனைத்திலும் அதிவேகத்தை விரும்பும் அவர்களின் நேயர்கள் தொய்ந்து போய் விடக்கூடாது என்பதற்காக நீதியையும் துரிதப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் விசாரணைக்கு அழைத்து வரும் போது கல்மாடியின் மேல் எரியப்பட்ட பிய்ந்த செருப்பின் மனசாட்சியைப் பற்றிய வியாக்கியானங்களால் செய்திச் சேனல்கள் நிரம்பி வழிகின்றன.

இது ஊழல் செய்திகளின் படையெடுப்பால் நொந்து போய் அவலச் சுவையில் ஆழ்ந்திருந்த ஆங்கில செய்திச் சேனல்களின் நேயர்களுக்கு இப்போது ஒரு ரிலாக்சேசன் கிடைத்திருக்கிறது.  வாய்க்கால் வரப்புத் தகராறுகளுக்குக் கூட தலைமுறை தலைமுறையாய் நீதி மன்றங்களின் படியேறி சலித்துப் போன சாமானிய மக்களுக்குக் கூட ஒருவேளை உண்மையிலேயே இந்த முறை உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத் தான் தீர வேண்டியிருக்குமோவென்ற சந்தேகம்  தோன்றியிருக்கலாம்.

அதன் உண்மைத் தன்மையை நாம் உரசிப் பார்க்கும் முன் மக்களுக்கு மேற்கண்டவாறு நம்பிக்கையூட்டு விதமாக கடந்த சில நாட்களாக ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான விசாரணைகளிலும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணைகளிலும் நடந்துள்ள சில ‘திருப்பங்களை’ நாம் அறிந்து கொள்வது அவசியம்.

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை விவகாரத்தில் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளை விசாரித்து வரும் சி.பி.ஐ, தற்போது அதன் மீது தனது இரண்டாவது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே தி.மு.கவின் மத்திய அமைச்சர் ஆ.ராசா, அவரது உதவியாளர் சந்தோலியா மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புத் துறை செயலாளர் சித்தார்த் பெகுரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஸ்வான் டெலிகாமின் (தற்போது எடில்சாட்) சாகித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா, ரிலையன்ஸ் டெலிகாமின் உயரதிகாரியான ஹரி நாயர் மற்றும் சுரேந்திரா உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டாவது குற்றப் பத்திரிகையில் கருணாநிதியின் செல்வப் புதல்வி கனிமொழியின் பெயரும் கலைஞர் தொலைக்காட்சியின் உயரதிகாரியான சரத் குமார் பெயரும் இணைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேல் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு, ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு விற்றதற்காக லஞ்சமாகப் பெற்றார்கள் என்பதே. லஞ்சப் பணமான 200 கோடி ரூபாயை மொரிஷியஸில் உள்ள உப்புமா கம்பெனிகள் மூலம் கலைஞர் தொலைக்காட்சிக்கு கைமாற்றியுள்ளனர். சி.பி.ஐ விசாரணை துவங்கியதும் அவசரகோலத்தில் அதைத் திருப்பிக் கொடுக்கவும் முயற்சித்துள்ளனர்.

தேசிய அளவிலான ஊடகங்கள் இந்நடவடிக்கைகள் ஊழலை ஒழித்து விடும் என்பது போலச் சொல்வதைக் கடந்து, சி.பி.ஐ விசாரணைகளால் கிடுக்கிப் பிடி போடப்பட்ட தி.மு.க, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை மனதில் கொண்டு வேறு வழியின்றி காங்கிரசு கூட்டணியில் இருந்து வெளியேற முடியாமல் தவிப்பதாகச் சொல்கிறார்கள். கனிமொழியின் பெயரும் சரத் குமாரின் பெயரும் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருப்பது விசாரணைகளின் களத்தை கருணாநிதியின் வீட்டுக்குள்ளேயே கொண்டு வந்து விட்டதாக அதிரும் பின்னணி இசையின் ஊடாக அறிவிக்கிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க, காமன்வெல்த் போட்டிகளையும் அதில் நடந்த ஊழல்களையும் நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். அதுபற்றிய செய்திகள் வெளியான போது இந்தியாவின் மானம் மரியாதையெல்லாம் சர்வதேச அரங்கில் சிறப்பாகக் கொடி கட்டிப் பறந்தது. தற்போது சுழன்றடித்து வரும் ஊழல் புயல்களுக்கான ஒரு முன்னறிவிப்பாக அமைந்தது காமன்வெல்த் ஊழல்.

முறைகேடுகளைப் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளியாகி நாற்றமடிக்கத் துவங்கிய பின்னும் அப்போது காமன்வெல்த் போட்டிகளின் பொறுப்பாளராகவும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருந்த சுரேஷ் கல்மாடியின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. ஆ.ராசாவுக்குக் கொடுக்கப்பட்டதைப் போல் அவருக்கும் போதிய அவகாசம் அளிக்கப்பட்டது.

காமன்வெல்த் போட்டிகளில் நடந்த ஊழலைப் பற்றிய பரபரப்பான செய்திகளின் வெளிச்சத்தில் அது தொடர்பான டெண்டர் விவரங்கள், பட்ஜெட் ஒதுக்கீடு, கான்ட்ராக்ட் விவரங்கள் அடங்கிய முக்கியமான கோப்புகள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்புக் கமிட்டி அலுவலகத்திலிருந்து திடீரென்று ‘காணாமல்’ போன செய்திகள் அமுக்கப்பட்டது. இப்போது தும்பை விட்டு வாலைப் பிடித்த கதையாக சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பசியாலும் பட்டினியாலும் பரிதவித்துக் கிடக்கும் நிலையில், சுமார் முப்பதாயிரம் கோடிகளை அள்ளியிறைத்து, நான்கு லட்சம் குடிசைவாசிகளை தில்லியிலிருந்து விரட்டியடித்து, தில்லி நகரத்துக்கு புதுப் பணக்கார வேஷம் கட்டிவிடும் முயற்சியாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சுமார் பத்து லட்சம் கூலித் தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிந்து, பல நாடுகளில் இருந்து வரும் வெள்ளைத் தோல் துரைமார்களை மகிழ்விக்கும் முகமாய் நாற்பதாயிரம் பெண்களை வடகிழக்கு மாநிலங்களிலிருந்து கடத்தி வந்து விபச்சாரத்தில் தள்ளி நடத்தப்பட்ட அந்த விளையாட்டுப் போட்டி, பல பன்னாட்டுக் கம்பெனிகள் கொள்ளையடிப்பதற்கென்றே நடத்தப்பட்டதாகும்.

அதில் நடந்த ஊழல் முறைகேடுகள் வெளியே கசிந்த போது அது மேட்டுக்குடி இந்தியர்களின் கவுரவப் பிரச்சினையாகிப் போனது. அதே போல் ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரம்மாண்டமான பரிமாணம் மக்களை திகைப்புக்குள்ளாக்கியது. ஒரு இலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடிகள் எனும் பிரம்மாண்டம் அதிர்ச்சியூட்டியது. தற்போது ரிலையன்ஸ் மற்றும் எடில்சாட்டின் உயரதிகாரிகளுக்கு பிணை மறுக்கப்படும் செய்திகள் நேயர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஊட்டியிருக்கின்றன. சுரேஷ் கல்மாடியின் மீது வீசப்பட்ட செருப்பைத் தாங்களே வீசியதாக உணர்வுப் பூர்வமாய் நம்பவைக்கும் விதமாய் ஊடகங்கள் அதை ஒரு திகில் சம்பவத்தைப் போல் காட்சிப்படுத்துகின்றன.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் நடந்த ஊழல்கள் ஊழலுக்கான புதிய இலக்கணத்தைப் படைத்துள்ளன. தனியார் கம்பெனிகள் கொள்ளை அடிப்படிப்பதற்காகவே ஆயிரக்கணக்கான கோடிகளை வாரியிறைத்து நடத்தப்பட்ட காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள். ஏதாவது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கமிஷன் அடிப்பது, கள்ளக் கணக்குக் காட்டுவது என்பதைக் கடந்து ஊழல் செய்வதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது தான் காமன்வெல்த் போட்டிகள். நெல்லுக்குப் பாய்ந்ததில் கொஞ்சம் புல்லுக்கும் என்றில்லாமல் – நெல்லே போடாத புல் வயலில் மக்களின் வரிப்பணத்தை அள்ளி வீசினார்கள்.

இப்படி தனியார் முதலாளிகளும், காண்டிராக்டர்களும் மஞ்சக் குளிப்பதற்காகவே பென்சன் தொகையிலிருந்து 171 கோடிகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலிருந்து 744 கோடிகள், மற்றும் தில்லி கார்பொரேஷன் ஊழியர்களின் சம்பளப் பணத்திலிருந்து 80 சதவீதம் என்று மக்கள் பணத்திலிருந்தும் பிற நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்தும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காகத் திருப்பி விடப்பட்டது. இப்படி மக்கள் பணத்தை எடுத்து மேன்மக்களின் ஓய்வு நேரக் கொண்டாட்டங்களுக்கு செலவழித்துத் தீர்த்ததில் ஊழல் இருப்பதாக முதலாளித்துவ ஊடகங்களோ இப்போது குபீர் ஊழல் எதிர்ப்புப் போராளியாக அவதாரம் எடுத்திருக்கும் அண்ணா ஹசாரேவோ நினைப்பதில்லை.

அதே போல் மக்களுக்குச் சொந்தமான ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை அடிமாட்டு விலைக்கு பன்னாட்டுக் கம்பெனிகளுக்கும் உள்நாட்டுத் தரகுமுதலாளிகளுக்கும் தாரை வார்த்ததைப் பற்றியும் இவர்கள் மூச்சு விடுவதில்லை. உண்மையில் நடந்த கொள்ளையை அப்படியே மூடி மறைத்து விட்டு அதில் நடந்த சில சில்லறையான நடைமுறைத் தவறுகளைத் தான் ஊழல் என்றும் அது பற்றி நடந்து வரும் விசாரணைகளையும் தான் ஊழல் ஒழிப்பிற்கான முகாந்திரம்  என்றும் சொல்கிறார்கள்.

இந்த விசாரணைகளையும் அதன் மீது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையையும் கைதுகளையும் கவனிக்கும் எவருக்கும் ஒரு விஷயம் துலக்கமாகப் புரியும். அதாவது, ஸ்வான் டெலிகாம் என்பதே ரிலையன்சின் டம்மி கம்பெனி என்பது தெட்டத் தெளிவாக நிரூபணமாகியும் அனில் அம்பானியின் மேல் கைவைக்கத் துணியவில்லை. அதே போல், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் நடந்துள்ளது என்று ஒப்புக் கொள்பவர்களும் கூட, அப்படி அநியாய விலையில் விற்கப்பட்டதைப் பறிமுதல் செய்ய வேண்டும்  என்று சொல்வதில்லை. விசாரணைகளை விறுவிறுப்பாக நடத்துவது போல் பம்மாத்து செய்யும் அரசும் கூட அவ்வாறு சொல்வதில்லை.

கனிமொழி-கல்மாடி: ஊழல் எதிர்ப்பா? ஊடக பரபரப்பா?மாறாக, ராசாவிற்குப் பின் கபில் சிபல் அத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டு ரத்தன் டாடா, சுனில் மிட்டல், அனில் அம்பானி ஆகிய தனியார் தரகு முதலாளிகளை வருந்தி அழைத்து அவர்களது தொழிலுக்கு எந்தவிதமான பாதிப்பையும் தமது அரசு உண்டாக்கி விடாது என்கிற உத்திரவாதத்தை அளிக்கிறார். இன்னும் ஒரு படி மேலே போய், ஸ்பெக்ட்ரம் விற்பனையில் ஊழல் எதுவும் நடக்கவில்லை என்றும் அறிவிக்கிறார். இவரோடு கூடி கும்மியடித்து தான் ஊழலுக்கு எதிரான சட்டத்தை உருவாக்கப் போவதாக அண்ணா ஹசாரே அறிவித்துள்ளார் என்பதை வாசகர்கள் நினைவில் கொள்ளட்டும்.

அதே போல்,  மக்களின் வரிப்பணத்தை வெட்டி கவுரவத்துக்கும் வீண் ஆடம்பரத்துக்கும் வாரியிறைத்ததை ஊழல் என்று முதலாளித்துவ ஊடகங்கள் சொல்வதில்லை – அதன் நேயர்களான படித்த நடுத்தர வர்க்கமும் அவ்வாறு நினைக்கவில்லை. நாட்டின் பெரும்பான்மையான மக்கள் பசியாலும் பட்டினியாலும் வாடும் போது இப்படி மேனைமக்கள் கூடிக் கூத்தடிக்கவும் இந்தியாவின் இல்லாத கவுரவத்தை பறைசாற்றிக் கொள்ளவும் ஆயிரக்கணக்கான கோடிகளை அள்ளியிறைத்தது ஊழல் இல்லை – அப்படித் தேனை அள்ளி வழங்கிய கல்மாடி புறங்கையை நக்கியது மட்டும் ஊழல் என்கிறார்கள்.

ஆ.ராசாவோ, கல்மாடியோ, கனிமொழியோ தண்டிக்கப்படக் கூடாது என்பதல்ல எமது வாதம். இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால், இவர்கள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தவர்கள் தான். இவர்களின் செயல்பாடுகள் குற்றத்திற்கு உடந்தையாக இருந்தன என்கிற வரம்பிற்கு உட்பட்டது தான். உண்மையில் நடந்த குற்றம் என்பது முற்றிலும் வேறு. அதைச் செய்தவர்கள் இன்னமும் வெளியில் தான் உலாவுகிறார்கள்.

காமன்வெல்த் போட்டியைப் போன்ற ஒரு வீண் ஆடம்பரம் இன்னுமொரு முறை மக்களின் வரிப்பணத்திலிருந்து நடக்காமல் தடுப்பதை இந்த விசாரணைகள் செய்துவிடப் போவதில்லை. அடுத்து இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திட்டத்தோடு அரசு காய் நகர்த்திக் கொண்டு வருகிறது. இன்னும் அதற்கான ஏற்பாடுகள், உள்கட்டமைப்புகள் என்னும் பெயரில் மக்களின் வரிப்பணம் வாரியிறைக்கப் படுவதை இந்த விசாரணைகளும் கைதுகளும் அண்ணா ஹசாரேக்களின் போராட்டங்களும், மெழுகுவர்த்திகளும் தடுத்துவிடப் போவதில்லை. அது இந்தியாவின் கவுரவம் என்கிறார்கள்.

அதே போல், மக்களுக்குச் சொந்தமான பொதுச் சொத்து கொள்ளை போவதையும் தடுக்கப் போவதில்லை. அவையெல்லாம் பொருளாதார நடவடிக்கைகள் எனும் பெயரில் சட்டப்பூர்வமாக்கியிருக்கிறார்கள். இதோ வேதாந்தாவின் தொழிற்சாலைக்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. அவர்கள் அள்ளிச் செல்லும் இயற்கை வளங்கள் என்பது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையை விட பல மடங்கு அதிகமானது. அதற்காக அவர்கள் அரசுக்குத் தரப் போகும் தொகையானது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைக்குக் கொடுக்கப்பட்ட தொகையை விட குறைவானது.

இது இயக்குநர் ஷங்கர் போன்றவர்களின் ஒருவகையான  தயிர்வடைத்தனமான சிந்தனை. அதாவது தெருவில் எச்சில் துப்புவது குற்றம் – உலக நாடுகளின் கழிவுகளெல்லாம் இந்தியக் கடலில் துப்புவது? பிக்பாக்கெட் அடிப்பது மாபெரும் தவறு – மக்கள் பணத்திலிருந்து வரிச்சலுகையெனும் பெயரில் ஐந்து லட்சம் கோடிகளை முதலாளிகளின் பாக்கெட்டில் வைப்பது?  ஆனால் இவர்கள் பிந்தயதை நியாயப்படுத்துகிறார்கள் என்பதை உங்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிகையில் இழுத்து விடப்பட்டிருப்பதால்  கருணாநிதி மனவுளைச்சளுக்கு ஆளாகி விட்டார் என்றும் ஈழத்துக்கு அவர் இழைத்த துரோகங்களுக்கு அது ஆண்டவனாகப் பார்த்து அளித்த ஒரு தண்டனையென்றும் இணையத்தில் வாள் சுழற்றும் தமிழினவாதிகள் கருதுகிறார்கள். இது காரியக்கிறுக்கைப் போன்றதொரு காரியவாத அப்பாவித்தனம்.

இதோ இன்றைய செய்திகளில் பாராளுமன்றப்  பொதுக் கணக்குகளுக்கான கமிட்டியின் விசாரணை வரைவு அறிக்கையில் ஸ்பெக்ட்ரம் ஊழலை பிரதமர் மௌனமாக இருந்து அங்கீகரித்தார் என்றும் சிதம்பரத்துக்கு அதில் இருந்த தொடர்பையும் அம்பலப்படுத்தியதை காங்கிரசு தி.மு.க இரண்டுமே ஒன்றாக சேர்ந்து கொண்டு இரட்டைக் குழல் துப்பாக்கியைப் போல எதிர்க்கிறார்கள். கலைஞர் டி.வியில் இருபது சதவீத பங்குகளைக் கொண்ட கனிமொழி குற்றப் பத்திரிகையில் சதிக்கு உடந்தையாக இருந்தார் எனும் அம்சத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறார் – அதே நேரம் அதில் அறுபது சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும் தயாளு அம்மாள் சேர்க்கப்படவில்லை.

அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் டெலிகாமின் உயரதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கம்பெனிக்குச் சொந்தக்காரரான அனில் அம்பானியை விசாரணைகளில் இருந்து விடுவித்திருக்கிறார்கள்.

கல்மாடியை காங்கிரசு கட்சியிலிருந்து விலக்கிவிட்டது என்றும் ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் என்றும் முதலாளித்துவ ஊடகங்கள் அலறிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவர் நீக்கப்படவில்லையென்றும் விசாரணைகளுக்காக சிறையில் இருப்பதால் ஒரு இடைக்கால ஏற்பாடாகவே தாம் பொறுப்பேற்றிருப்பதாகவும் மல்ஹோத்ரா தெரிவிக்கிறார்.

இந்த ஊழல் விசாரணைகள் மூலம் அரசு புலி வாலைப் பிடித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அதிலிருந்து எப்படி வெளியே வருவது எப்படி முடித்துக் கொள்வது என்பதிலும் தான் அவர்கள் முன் இப்போதிருக்கும் ஒரே பிரச்சினை. கல்மாடி, கனிமொழி போன்ற சில விட்டுக் கொடுப்புகளை செய்து விட்டு ஒரேயடியாக ஊத்திமூடி விட முடியுமா என்றே பார்க்கிறார்கள்.

வாசகர்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசு என்பதே முதலாளிகளின் நலனைக் காப்பதற்கும் அதன் கொள்ளைகளுக்கு உறுதுணையாக இருப்பதற்குமே இருக்கிறது. காங்கிரசு பாரதிய ஜனதா என்று இதில் கட்சி வேறு பாடெல்லாம் கிடையாது என்பதே உண்மை. மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவர்களுக்குக் கீழே இருக்கும் ஒரு சில நபர்களை பலியாடுகளாக்கி மற்றவர்களைத் தப்புவிக்கும் முகமாகவே இந்த விசாரணைகளின் திசைவழி இருக்கிறது என்பதை எதார்த்த நிலமைகள் தெளிவாகக் காட்டுகிறது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது தேசத்தின் கவுரவம் – அம்பானி உலகப் பணக்காரர் பட்டியலில் இடம் பெறுவது தேசத்தின் கவுரவம் என்று நினைக்கும் நடுத்தர வர்க்க பார்வையின் மூலம் நாம் ஊழலின் ஊற்றுமூலத்தை புரிந்து கொள்ள முடியாது. ஊழலின் மிக அடிப்படையாகவும் ஊற்றுமூலமாகவும் இருக்கும் தனியார்மய தாராளமய உலகமயப் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து வீழ்த்தாமல் ஊழலை  ஒழித்துக் கட்டிவிடலாம் என்று நம்புவதே அடிப்படையற்றது என்பது தான் யதார்த்தமான நிலவரமாக உள்ளது.

கனிமொழி குற்றப்பத்திரிகையில் வந்ததை வைத்து தமிழக கிசுகிசு அரசியல் ஏடுகள் எல்லாம் கருணாநிதி குடும்ப பிரச்சினை, கனிமொழியை கைவிட்டு விட்டார்கள், காங்கிரசு உறவு பாதிப்பு, கருணாநிதி டென்ஷன் என்று மாலை நேர டி.வி சீரியல்களின் கதைகளை எழுதுகிறார்கள். இத்தகைய அரட்டைகளின் மத்தியில் நாம் இந்த ஊழல்களின் அடிப்படையைப் புரிந்து கொள்ள முடியாது. அதுதான் இந்த ஊழல் செய்தவர்களின் பெரும்பலம். நமது பலவீனத்தை எப்போது விடப்போகிறோம்?

________________________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

ஸ்பெக்ட்ரம் ஊழல்

காமன்வெல்த் ஊழல்

விக்கி லீக்ஸ்

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!

10

அண்ணாச்சி கடையில் வைத்துத்தான் கலா, அவளது அம்மா சாந்தி இருவரும் பழக்கம். தினசரி ஒரு ஆண் மளிகை, காய்கறிகளை வாங்குவது குறித்து அவர்களுக்கு வியப்பு. “அம்மா ஊருல இருக்காங்களா, எப்ப வருவாங்க” என்று சமாதானம் கொள்வதும், கூடவே இத்தகைய ஆண்கள் குறித்த பரிதாபமும் கலந்து என்னிடம் பேசுவார்கள். அந்த பரிதாபம் தவறு என்று விளக்க முனையும் போதெல்லாம் சிரித்தவாறு அதை முடித்து விடுவார்கள்.

கலாவுக்கு 25 வயதளவிலும் அம்மாவுக்கு 50க்கு மேலும் இருக்கும். சாந்தி பாசக்கார மதுரையிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்தவர். ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இங்கு வசிக்கிறார். சுற்று வட்டாரங்களில் நிலையாக வசிக்கும் குடும்பங்கள் அனைத்திலும் அவரது பெயர் பிரபலம். அவரது பேச்சில் மதுரையின் மண்வாடை இன்னமும் மணம் வீசுகிறது. வயது தரும் சுகவீனங்கள் அவ்வப்போது வந்து செல்லும். சில நாட்கள் ஓய்வு எடுக்கலாமே என்றால்,” உழைச்சாத்தானே வாழ முடியும், நம்மளுக்கெல்லாம் லீவும் கிடையாது, ஒழிச்சலும் கிடையாது” என்பார்.

வீட்டு வேலைதான் சாந்தியின் அலுவலக வேலை. இந்த வயதிலும் கூட அவர் நான்கைந்து வீடுகளில் வேலை பார்க்கிறார். ஒரு சில வீடுகளில் இருபது ஆண்டுகளாகவும் பணி செய்கிறார். சுற்று வட்டாரத்தின் நல்லது கெட்டதுகளில் எல்லாம் அக்கறையுடன் கலந்து கொள்வார். வெள்ளேந்தியான அவரது பேச்சு இன்னமும் நகரத்தின் மர்மங்களை கற்றுக்கொள்வதாகவோ, புரிந்து கொள்வதாகவோ இல்லை. ” இந்த வீட்டுக்காரங்க எல்லாம் ஊருக்கு போகும் போது சாவியை சாந்தியம்மா கிட்ட கொடுத்துட்டு போவாங்க! அந்த அம்மா மேல அவ்வளவு நம்பிக்கை” என்று அண்ணாச்சி சொல்வார்.

கலா ஒரு எவர்சில்வர் பாத்திரக் கம்பெனியில் வேலை செய்கிறாள். எப்போதும் களைப்பிருந்தாலும் உண்மையில் களையாக மலர்ந்திருக்கும் முகம். அவளுடன் பேச ஆரம்பிக்கும் போது கண்களில் தோன்றும் மலர்ச்சியை கவனித்திருக்கிறேன். நட்புக்காக அந்த கண்கள் எப்போதும் காத்துக் கொண்டிருப்பது போலத் தோன்றும். வேலையைப் பற்றி கேட்டாள் விரிவாக சொல்வாள். பாத்திரங்களுக்கு பவுடர் போட்டு பாலீஷ் செய்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலை. தினமும் நூறு ரூபாய் சம்பளம். எப்படியும் வாரத்திற்கு 500 கிடைக்கும். விடுமுறை, விடுப்பு என்றால் சம்பளம் கிடையாது. சீசன் குறைவான நேரங்களில் விடுமுறை அதிகம்.

ஆனால் இதுமட்டுமே கலாவின் வேலை அல்ல. காலையில் கம்பெனி வேலைக்கு போகும் முன்பு அம்மாவுடன் ஒரு வீட்டிற்கு சென்று துணிகளை துவைத்துக் காயப்போடுவாள். அந்நேரத்தில் தெருவில் நடந்து  கொண்டிருந்தால், “என்னண்ணே இன்னைக்கு என்ன குழம்பு” என்று சிரிப்பாள். காலை வேலைக்கு பிறகு வீடு சென்று குளித்துவிட்டு கம்பெனிக்கு செல்வாள். இந்த நேரக்குறைவிலும் அவளது உடை அலங்காரங்கள் எளிமையுடன் கொஞ்சம் நேர்த்தியாகவே இருக்கும். தினமும் தலை நிறைய பூச்சூடியே செல்வதை பார்த்திருக்கிறேன். பூக்களின் மீது அவளுக்கு நேசம் அதிகம்தான்.

மதிய உணவுக்காக வீடு வந்து இருப்பதை சாப்பிட்டு விட்டு இருக்கும் அரைமணி நேரத்தில் மற்றுமொரு வீட்டிற்கு சென்று பெருக்கி துடைப்பாள். மாலை வந்ததும் இன்னுமொரு வீடு. ஆக மூன்று வீடுகளில் வேலை, பகல் முழுவதும் கம்பெனி வேலை…. ஆனால் இந்த நெருக்கடியான பணிச்சூழல் குறித்து எப்போதும் அவளிடம் சலிப்போ, களைப்போ, விரக்தியோ, புகாரோ காண முடிந்ததில்லை. தற்செயலாக சந்திக்க நேர்ந்தால் ஒரு சிரிப்பு, ஒரு விசாரிப்பு… மலர்ந்து விரியும் அந்தக் கண்களில் இருக்கும் கனிவு என்னை எப்போதும் உற்சாகப்படுத்துகிறது.

சங்கிலித் தொடர் போன்ற இந்த வேலை உலகத்திற்கு அப்பால் என்ன நடக்கிறது என்பதை அவளால் தெரிந்து கொள்ள முடியாது. இந்தியா – பாக் கிரிக்கெட் போட்டியின் போது அவளை அண்ணாச்சி கடையில் சந்தித்தேன். இன்று கம்பெனிக்கு போகவில்லையா என்று கேட்டதற்கு, ” அதாண்ணே கிரிக்கெட்டுல இந்தியா ஜெயிச்சுருச்சுன்னு கம்பெனியில அரை நாள் லீவு விட்டாங்க” என்றாள். உண்மையில் அது போட்டியை பார்ப்பதற்காக இந்தியா முழுவதும் அரசு, தனியார் அனைவராலும் அளிக்கப்பட்ட விடுமுறை. அதில்  பத்து பேர்கள் வேலை செய்யும் கலாவின் சிறு கம்பெனியும் அடக்கம் என்பது கொஞ்சம் ஆச்சரியம்தான். ஆனாலும் இந்த போட்டியை பார்க்க முனைப்பில்லாத வேறு ஒரு இந்தியாவைச் சேர்ந்தவளான கலாவுக்கு அன்று கொஞ்சம் ஓய்வு கிடைத்திருக்குமோ?

சாந்தி தனது சம்பாத்தியத்தில் இரு மகள்களை கட்டிக் கொடுத்திருக்கிறார். அவர்களையெல்லாம் கோடை விடுமுறைக்கு அழைத்து வந்து கவனிக்க வேண்டும் என்பதை கடமையாகவும், பாசத்தோடும், நிறைவோடும் சொல்வார். சாந்திக்கு ஒரு வயதான அண்ணனும் உண்டு. அவருக்கென்று குடும்பம் ஏதுமில்லை என நினைக்கிறேன். காலை வேலைகளில் இவரும் சாந்தியம்மாவோடு வேலைக்கு போவார். சிறு உதவிகள் செய்வார். மாலை வேளைகளில் தெருவில் இருக்கும் தண்ணீர் தொட்டியின் நீர்விடும் நேரத்தை கவனித்துக் கொள்வார். இதில் வருமானம் ஏதுமில்லை.

இவர்கள் மூவரும் 1000ரூபாய் வாடகையுள்ள குடிசையில் வாழ்கிறார்கள். வீட்டில் சமையல் என்பது கிடைக்கும் நேரத்தை பொறுத்தது. சனி, ஞாயிறு கூட இதே நிலைமைதான். சில வேளைகளில் அருகாமை வீட்டில் இட்டலி விற்கும் பெண்ணிடமிருந்து வாங்குவார்கள். சில நாட்கள் நானும் அங்கு செல்லும் போது, ” என்னண்ணே இன்னைக்கு சமையல் லீவா” கலா கேட்பாள். சாந்தியம்மா கிண்டல் செய்யும் மகளை கடிந்து கொள்வார். இலவச டி.வீ, அடுப்பு எல்லாம் சாந்திக்கும் கிடைத்திருக்கிறது. அது குறித்து பேசும் போது ” எல்லாம் நம்ம பணம்தான். நம்மகிட்ட வசூலித்து நமக்கே தாராங்க” என்றார். தேவை காரணமாக டி.வியை விற்று விட்டார்கள்.

வேலை செய்யும் ஒரு வீட்டில் ஏதோ பழைய பெரிய டி.வியைக் கொடுத்திருக்கிறார்கள். அது அடிக்கடி மக்கர் செய்கிறது. அதை எப்படி சரி செய்வது என்று என்னிடம் ஆலோசனை கேட்பார் சாந்தி. இடையில் தேர்தல் வந்தது. யாருக்கு ஓட்டு போட்டீர்கள் என்றேன். இரட்டை இலை என்றார். காரணம் உள்ளூர் அ.தி.மு.க பிரமுகர்தான் சாந்திக்கும் தமிழக அரசுக்குமான பாலமாக திகழ்பவர். டி.வி, அடுப்பு கூட அவர் மூலம்தான் கிடைத்ததாம். ஆதலால் தி.மு.க அரசின் நலத் திட்டங்களை வாங்கிக் கொடுத்தபடியால் அ.தி.மு.கவுக்கு ஓட்டு. அவர்களைப் பொறுத்தவரை அந்த அ.தி.மு.க காரர்தான் தமிழக அரசு.

சமீபத்தில் ஒரு நாள் முதன் முறையாக கலாவின் முகத்தில் இருக்க கூடாத ஒரு சோகத்தை கவனித்தேன். விசாரித்த போது வேலை செய்யும் ஒரு வீட்டில் ஏதோ ஸ்டூலில் ஏறி பரணில் இருக்கும் பொருளை எடுக்க முனைந்த போது சாந்தியம்மா தவறி விழுந்து விட்டார். எலும்பு முறிவு எதுவும் இல்லையென்றாலும் கடுமையான வலி. நான்கு நாட்கள் நகர முடியாமல் படுக்கையில் இருந்திருக்கிறார். இதிலிருந்து மீண்டு வந்த போது அடுத்த இடி தயாராக காத்துக் கொண்டிருந்தது.

சில நாட்களாகவே அவருக்கு கடும் தலைவலி. மருத்துவரைப் பார்த்ததில் கண்ணில் பிரச்சினை, அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்று சொல்லிவிட்டார்கள். ஓரிரு வருடங்களுக்கு முன்பாகவே கண் பரிசோதனை செய்து கண்ணாடியும் வாங்கி வைத்திருந்தார் சாந்தி. ஆனால் அலுவலக வேலை போல வீட்டு வேலை செய்பவர்கள் அதுவும் சாந்தி அப்படி எந்நேரமும் கண்ணாடி அணிந்திருப்பது சாத்தியமல்ல. அதற்கு அவர் பழகிக் கொள்ளவும் இல்லை.

அறுவை சிகிச்சைக்கு பத்தோ, இருபதோ ஆயிரம் ஆகுமாம். எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் இலவசமாக செய்யலாம், தனியார் மருத்துவமனைகள் போல நன்றாகவும் கவனிப்பார்கள் என்று பேசிப்பார்த்தேன். அவர்களுக்கு அது தெரியாமல் இல்லை. எனினும் அவர்கள் வேலை செய்யும் வீட்டுக்காரர்களில் நெருக்கமானவர்கள் சிலர் தனியாரிடமே செய்து கொள்ளச் சொல்லியிருப்பதோடு கொஞ்சம் பண உதவி செய்வதாகவும் வாக்களித்திருக்கிறார்களாம். வேறு பிரச்சினைகள் என்றால் பரவாயில்லை, கண் இருந்தால்தானே வேலை செய்ய முடியும் என்று சாந்தி யோசிக்கிறார்.

தற்காலிகமாக புதுக்கண்ணாடி ஒன்று வாங்கியிருக்கிறார். அதில் பார்த்தால் கீழே எதுவும் தெரியவில்லையாம். கண்ணிலிருந்தும் நீர் அதிகம் வடிகிறதாம். போகப் போக சரியாகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்களாம். இதில் சரியாகவில்லை என்றால் அறுவை சிகிச்சையாம். இப்போது முன்பு போல எல்லா வீடுகளுக்கும் சாந்தி செல்வதில்லை. கலாதான் அவற்றை செய்து ஈடு கொடுக்கிறாள். இதனால் பலநாட்கள் கம்பெனி வேலைக்கு போகவில்லை. பெயரில் கம்பெனி இருந்தாலும் அது ஒரு தினக்கூலி கடைதான். என்று வேண்டுமானாலும் போய்க் கொள்ளலாம்.

கம்பெனி வேலைக்கு போகாத நாட்களில் கலாவின் அலங்காரத்தை பார்க்க முடியாது. சமயத்தில் நைட்டி, துப்பாட்டாவோடு கூட மாமவுடன் அவள் அருகாமை வீடுகளுக்கு செல்வாள். சமயத்தில் சாந்தியும் செல்கிறார். என்ன நோவு வந்தாலும் அவர்களால் வேலை செய்ய முடியாமல் இருக்க முடியாதோ என்னமோ?

சாந்திக்கு இப்போது இருக்கும் ஒரே கடமை மகளை திருமணம் செய்து கொடுப்பதுதான். அதற்காக அவர் கொஞ்சம் சேமித்தும் வைத்திருக்கிறார். கண் ஆப்பரேஷனது செலவு குறித்தும் பயம் இருக்கிறது. கலா மணமாகி போய்விட்டால் சாந்தியம்மாவும் அவரது அண்ணனும் என்ன செய்வார்கள்? ஏதாவது படுத்த படுக்கையாகி விட்டால் யார் பார்ப்பார்கள்? வீடுகளுக்கு செய்யும் வேலை நின்று போனால் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? இதையெல்லாம் கணக்கிலெடுத்துதான் கலா திருமணம் செய்வாளா? கேள்விகள்…. நெருடுகின்றன.

அவர்களைப் பொறுத்தவரை அத்தகைய தொலை நோக்கு திட்டம், பாதுகாப்பு எதுவும் கிடையாது. அவர்களது உலகத்திற்கு வெளியே இருந்து பார்ப்பதால் மட்டுமே நமக்கு இந்த கேள்விகள் தோன்றுகின்றன. ஏழைகள் வாழ்க்கையை இயல்பாக எதிர்கொண்டு யதார்த்தமாக செல்கிறார்கள். இழப்பின் வலி அவர்களையும் துன்புறுத்தும் என்றாலும் அதன் காலம் குறுகியதுதான்.

இதே மீண்டும் கலாவின் எளிமையான அலங்கார உடையோடு கூடிய பழைய உற்சாகத்தை பார்க்கிறேன். ” என்னண்ணே ஞாயிற்றுக்கிழமைக்கு கறி ஏதும் எடுக்கலியா? ஒரு நா உங்க சமையலை சாப்பிடணும்னே, நீங்க கூப்பிடலேன்னாலும் நான் கண்டிப்பா வருவேன்”.

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!

8

அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!டந்தவருடம் அமைதிக்கான நோபல் பரிசை ஓபாமா பெற்றார். இது நமக்கு மட்டுமல்ல, அவருக்கேக் கூட அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இந்த வருடம் அந்த ’அதிர்ச்சிக்குரிய’ பரிசைப் பெற்றிருப்பவர் சீனத்தைச் சேர்ந்த லியு ஜியாபோ. இவ்விருதைப் பெறுவதற்குமுன் சீனாவிலேயே அவரைப் பற்றி அறிந்தவர்கள் மிகவும் குறைவு. இவ்விருதுக்குப் பின்னரே அவரைப் பெருமளவு மக்கள் தெரிந்துக்கொண்டார்கள். அதன்பின் நிறைய கட்டுரைகளும் செய்திகளும் அவரைப்பற்றி வெளிவந்தன. மனிதஉரிமை போராளி என்று பத்திரிக்கைகள் புகழாரம் சூட்டின. தற்போது அவர் அரசாங்கக் கைதியாக சீனநாட்டின்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நோபல் பரிசு பெற்ற விவரம் கூட அவருக்குத் தெரியாது என்றும் அவரை அவரது துணைவி கூடசந்திக்க அனுமதி மறுப்பு என்றும் பரபரப்பான செய்திகள் வெளிவந்தன.

லியுவிற்கு நோபல்பரிசு கிடைத்தது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. நார்வேயிலிருக்கும் பாராளுமன்ற கமிட்டியினால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் மட்டும் லியு நோபல் பரிசை வென்றிடவில்லை. மாறாக, சீனாவுக்கெதிரான அமெரிக்க மேலாதிக்கத்தின் அங்கமாகவே திட்டமிடப்பட்டு லியுவிற்கு கொடுக்கப்பட்டது. சீன நாட்டோடு வலிமையான பொருளாதார பந்தத்தால் அமெரிக்கா பிணைக்கப்பட்டுள்ளது என்றாலும், அரசியல் ரீதியில் அந்நாட்டை அடக்கி வைத்திருக்கவே அமெரிக்கா விரும்புகிறது. வளர்ந்து வரும் சீன பொருளாதரமும் அமெரிக்காவிற்கு இசைவாக இல்லை. எனவே மனித உரிமை என்ற முகாந்திரத்தில் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சீனாவை குட்டுவதற்கு அமெரிக்கா தயங்கியதில்லை. இப்போது நோபல் பரிசால் குட்டுகிறது.

இந்த அமைதிக்கானநோபல் பரிசை சீனாவை சேர்ந்தவருக்கு அதிலும் லியூ ஜியாபோவுக்குக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? மனிதஉரிமைக்காக அவர் என்ன செய்தார்? இந்த கேள்விகளுக்கானவிடைகள் நமக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் தருகின்றன.

அமெரிக்காவின் அத்தனை மேலாதிக்க போர்களுக்கும் அவர்  துணைபோயிருக்கிறார் என்ற உண்மைதான் அது. சீனாவில் இருந்து கொண்டே தொடர்ந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார். கொரியா மற்றும் வியட்நாம் மீது அமெரிக்கா தொடுத்த ஆக்கிரமிப்பு போர்களையும், ஈராக் மற்றும் ஆஃப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பு போர்களையும் வெளிப்படையாக ஆதரித்திருக்கிறார் இந்த லியு. 2004-ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ஈராக் போருக்கு ஆதரவாகப் பேசி ஜார்ஜ் புஷ்ஷை புகழ்ந்திருக்கிறார்.

இந்தப் போர்களும் எல்லாம் பச்சையான மேலாதிக்க வெறிக்காக கொடூரமாக நடத்தப்பட்டவை. அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை நிலைநாட்டிக்கொள்ள நிகழ்த்தப்பட்டவை. அவற்றை ஆதரிப்பதே அப்பட்டமான மிகப்பெரும் மனித உரிமை மீறல். அதுமட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேலை நிலைப்பாட்டை ஆதரித்து, பாலஸ்தீனியர்களை குற்றம் சாட்டுகிறார் இந்த ’மனித உரிமை போராளி’ லியு.

அப்படிபட்டவரை மனிதஉரிமைப் போராளி என்று மேலைநாட்டு ஊடகங்கள் அழைப்பது சீனவை மட்டுமல்ல உலக மக்களையே அவமதிப்பதாகும். சீன அரசாங்கத்துக்குள் தங்கள் ஏஜெண்டுகளை நுழைக்க முடியாது என்று கண்டுகொண்ட அமெரிக்க முதலான மேற்கத்திய நாடுகள், இதுபோன்ற நூதன வழிகளைத் தேர்ந்தெடுக்கின்றன. சீனஅரசுக்கெதிராகப் பேசியவர் என்பதோடு அமெரிக்காவின் அத்தனை செயல்களுக்கும் கூஜாவாக இருந்தவர் என்பதே இந்த லியூவின் முக்கியமான தகுதிகள். அமெரிக்க ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் இந்த அயோக்கியருக்கு நோபல் பரிசு கொடுத்திருப்பதன் மூலம் சீனாவை மனித உரிமை மீறிய நாடு என்று பிரச்சாரம் செய்வதற்கு தோதாக இருக்கும் என்பதே இந்த அழுகுணியாட்டத்தின் நோக்கம்.

சீனா மனித உரிமையை மீறியதா, பின்பற்றுகிறதா என்பதெல்லாம் அமெரிக்காவின் கவலை அல்ல. அப்படி இருந்திருந்தால் அமெரிக்கா மலிவாக நுகர்வதற்காக சீனத்து தொழிலாளிகள் கசக்கி பிழியப்படுவது குறித்தும், நிலக்கரி சுரங்க விபத்தில் ஆண்டுதோறும் பல நூறு தொழிலாளிகள் இறந்து போவது குறித்தும் அமெரிக்கா பேசியிருக்க வேண்டும். ஆனால் என்றுமே அப்படி பேசியதில்லை.

இந்த நோபல் பரிசின் கண்ணைப் பறிக்கும் விளம்பர ஒளியில் லியு செய்த குற்றம் காணாமல் போய் ஊடகங்கள் சொல்வதே உண்மையென்று மக்கள் நம்பிவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது.

பென் சென்டர் என்ற எழுத்தாளர்கள் அமைப்பின் தலைவராக 2007 வரை லியு இருந்திருக்கிறார். பென் சென்டர், மனிதஉரிமை மற்றும் ஜனநாயகத்துக்கான, ஆங்கிலோ- அமெரிக்க தன்னார்வ மற்றும் தனியார் குழுக்களின் முக்கிய அமைப்பு.  இந்த அமைப்பிற்கு படியளக்கும் ஸ்பான்சர்களின் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்குத்தான் இந்த பென்சென்டரை வைத்திருக்கிறார்கள். லியு தற்போது அவ்வமைப்பின்  போர்டு உறுப்பினர்களில் ஒருவர்.

இவ்வமைப்புக்கும்,  அமெரிக்கா அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டு வாஷிங்கடனை அடிப்படையாக கொண்டு இயங்கும் மற்றொரு பேச்சுரிமை அமைப்பான ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்புக்கும் நெருங்கிய தொடர்புண்டு.  1941-இல் இரண்டாம் உலகப்போரின்போது அமெரிக்க உளவுத்துறையால் கம்யூனிஸ்டுகளுக்கெதிரான பிரச்சாரத்துக்கு உபயோகப்படுத்திக் கொள்ளப்பட்ட அமைப்பு இந்தஃப்ரீடம் ஹவுஸ்.

திபெத், மியான்மர், உக்ரைன், ஜியார்ஜியா, செர்பியா மற்றும் கிர்கிஸ்தான் போன்றநாடுகளில் முக்கியமான தன்னார்வக் குழுக்களின் மூலமாக அமெரிக்காவின் அதிகாரவர்க்க நபர்களுக்கான கொள்கைகளை திருப்திகரமாக நிறைவேற்றுவது இந்த அமைப்பின் சமீபத்திய நடவடிக்கைகளாகும். அவ்வமைப்பைச் சார்ந்து சீனாவில் இயங்கும் அமைப்புதான் பென் சென்டர்.
இதிலிருந்தே லியுவின் நிலைப்பாடும், அவருக்கு நோபல் பரிசு வழங்கியதன் நோக்கத்தையும் புரிந்துக்கொள்ளலாம்.

சீனாவில் தாராளமயமாக்கல் முழுமையாக வரவேண்டும்; சந்தை எல்லோருக்கும் திறந்துவிடப்படவேண்டும் ; வெளிநாட்டு வங்கிகளை வரவேற்கவேண்டும்; அந்நிய முதலீடுகளுக்கு வழிவகை செய்ய வேண்டும்; மொத்தத்தில் கார்ப்பரேட்டுகளுக்கும், முதலாளிகளுக்கும், வங்கிகளுக்கும் நாட்டை தாரை வார்த்துக்கொடுக்க வேண்டும் என்று அப்பட்டமாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்தான் லியு ஜியாபோ. சீனா இன்னும் அதிகமாக முதலாளித்துவப் பாதையில் பயணிக்கவேண்டும், முதலாளித்துவப் பொருளாதாரத்தில் வளரவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அவரது ஆதரவாளர்களின் நிலைப்பாடு.அமெரிக்க கூஜாவா? நோபல் பரிசு நிச்சயம்!

இந்த நோக்கில் சீனா ஏற்கனவே சென்று விட்டது என்பதுதான் உண்மை. அதாவது பொருளாதரத்தில் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொண்ட சீனா அரசு அமைப்பில் மட்டும் ஒரு கட்சி சர்வாதிகாரத்தை வைத்திருக்கிறது. அதையும் திறந்து விடவேண்டும் என்பதுதான் லியு மற்றும் அமெரிக்காவின் நோக்கம்.

இதனை அவர் 2008-இல் எழுதியசார்ட்டர் 8-இல் மேற்குலகஅரசியல்பாணியை சீனா கடைப்பிடிக்க வேண்டுமென்றும்,அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்க வேண்டுமென்றும் நிலங்களை தனியார் கையகப்படுத்தப்படவேண்டுமென்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறார். முதலாளித்துவத்தில்தான் வளர்ச்சி அடங்கி இருக்கிறது என்று அவர் கருதுகிறார். மறுகாலனியாக்கத்தை ஆதரிக்கிறார். மேலும், அவர் தலைமை தாங்கிய நிறுவனங்களெல்லாம் அமெரிக்காவின் நிதி உதவியைப் பெற்றிருக்கின்றன.
இந்தநிலையில் அவர் நோபல் பரிசு பெற்றிருப்பதை பொருத்தி பார்க்கலாம்.

அதோடு,  லியு ஜியாபோவை நோபல் பரிசுக்குப் பரிந்துரைத்த நபரையும் கருத்தில் கொள்ளவேண்டும்.லியுவை அமைதிக்கான பரிசுக்கு பரிந்துரைத்தவர் வேறு யாருமல்ல, அமெரிக்க அரசாங்கத்திடமிருந்தும், சிஐஏவிடமிருந்தும் நீண்ட காலமாக நிதியுதவி பெற்று வரும் தலாய் லாமாதான் அவர். அவரோடு, லியுவை பரிந்துரைத்தவர்கள் பட்டியலில் பல நேட்டோ அதிகாரிகளும் அடங்குவர்.இதிலிருந்தே அந்தபரிசின் அரசியலை விளங்கிக்கொள்ளலாம்.

நோபல் பரிசானது அமைதிக்கானதாகக் கொள்ளாமல் எதற்கானதாக இருக்கிறது ?  அமெரிக்காவின் வழிகாட்டுதலின் பேரால், தன்னார்வக் குழுக்களின் வழியாக  அமெரிக்காவின் கூஜாக்களுக்கு விளம்பரம் செய்து வழங்கப்படுகிறது. இதற்கு லியு ஜியாபோ ஒரு கருவி. உலகில் எத்தனையோ நாடுகளில் எத்தனையோ பேர் அரசாங்கக் கைதிகளாக வைக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் நிறவெறிக்கு சான்றாக, முமியா அபு ஜமால் எனும் கறுப்பின பத்திரிக்கையாளர் செய்யாத குற்றத்துக்காக தூக்குதண்டனை கைதியாக நாட்களை பென்சில்வேனியா சிறையில் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். லியு ஜியாபோவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் ஒபாமா முமியா அபு ஜமாலை விடுவிப்பாரா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்கிறார். அதேபோல லியுவின் விடுதலைக்கு குரல் கொடுக்கும் அமெரிக்கா இங்கு இந்திய அரசால் சிறையில் வதைக்கப்படும் பினாயக் சென் என்ற உண்மையான மனித உரிமைப் போராளிக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.

முதலாளித்துவ நாடுகளில் மக்களின் பொது சொத்துகள் முதல் உழைப்பு வரை எப்படி சுரண்டப்படுகின்றது என்பதற்கும் ஏற்றதாழ்வுகள் எப்படி அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பதையும் இந்தியாவிலேயே கண்கூடாகக் காணலாம். இதற்கு ஐரோப்பிய நாடுகளும் விதிவிலக்கல்ல. 200 ஆண்டுகளுக்கு மேலாக முதலாளித்துவத்திலிருந்து காலாவதியாகிக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலேயே பெரும்பாலான மக்கள் முதலாளித்துவத்தை தூக்கியெறிய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். இந்தஅமைப்பை மாற்றவேண்டும் என்று போராடுகிறார்கள்.தனியார்மயம், உண்மையில் வளர்ச்சியை பாதிக்கிறது என்பதை பல லத்தீன் அமெரிக்கநாடுகளில், இந்தியாவில் கண்கூடாகக் காணலாம்.

அமைதிக்கான நோபல் பரிசு என்பது அமெரிக்க மேலாதிக்க அரசியலுக்கான ஒரு கருவிதானே தவிர மனிதஉரிமைகளைப் பற்றியோ அல்லது ஜனநாயகத்தைப் பற்றியோ, அப்பாவி மக்கள் மீதான போர்கள் குறித்தோ அதற்கு எந்தக் கவலைகளுமில்லை என்பதையும் இந்தவருடத்தின் பரிசு பெற்றலியு ஜியாபோ அமெரிக்காவின் போர்களை உற்சாகப்படுத்துபவராகஇருந்திருக்கிறார் என்பதையும் ஊடகங்கள் அம்பலப்படுத்தாது. நாம் அம்பலப்படுத்த வேண்டும்.
____________________________________________________________

சந்தனமுல்லை, புதிய கலாச்சாரம் – 2011
______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

“புதிய தலைமுறை” நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

135
நடிகர் சூர்யா நமக்கு முன்மாதிரியா?

உழைத்து முன்னேறலாம் என்ற கருத்து மக்களைக் காயடிக்கவே பயன்படுகிறது!

ழக்கம் போல இந்தக் கட்டுரை மிகுதியாகவோ குறைவாகவோ எதிர்ப்பை சந்திக்கலாம். “எல்லாரையும் குற்றம் சொல்கிறீர்களே, யார்தான் நல்லவர்கள், நீங்க மட்டும் யோக்கியமா, நீங்கள் எதாவது சமூகப்பணி செய்திருக்கிறீர்களா, சினிமாக்காரரை சினிமாக்காரராக பாருங்கள், அவர்களால் முடிந்த உதவி செய்வதை எதிர்க்காமலாவது இருங்கள்….” என்றெல்லாம் வாழையடி வாழையாக ஊட்டப்பட்டிருக்கும் “உன்னால் முடியும் தம்பி” டைப்பில் கேட்பார்கள். ஆனாலும் அப்படி கேட்பவர்கள் கொஞ்சம் அருள் கூர்ந்து இதை படித்து விட்டு அந்தக் கேள்விகள் சரியா என்று சொல்லட்டும்.

தமிழகத்தை மொக்கை தேசமாக்கி வரும் சினிமா, தொலைக்காட்சி, சீரியல்கள் போக நாம் கவலைப்பட வேண்டிய மற்றொரு அயிட்டம் அப்துல் கலாம் டைப் தன்னம்பிக்கை போதை கலாச்சாரம். இதை அன்று அமெரிக்க ரிடர்ன் உதயமூர்த்தி துவங்கி வைத்தார். பின்னர் அப்துல்கலாம் அதை நவீன ஊடக வசதி, ஜனாதிபதி அதிகார வசதி மூலம் தமிழகமெங்கும் விஷமரம் போல வளர்த்தெடுத்தார்.

பள்ளி நிர்வாகிகளது கட்டளைக்காக திரட்டப்பட்ட அந்த அப்பாவிக் குழந்தைகளிடம் “குழந்தைகளே கனவு காணுங்கள், 2020-இல் இந்தியா வல்லரசாகப் போகிறது” என தேசிய கீத மொக்கையாக்கினார். இன்றைக்கு இருவரும் மார்க்கெட்டில் இல்லையென்றாலும் இந்த சரக்குதான் பத்திரிகை, ஊடகங்கள், புத்தகக் கண்காட்சி எல்லாவற்றிலும் விலை போகிற சரக்கு. அதுதான் இது “நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை சாதிப்பீர்கள்!”.

உழைத்தால் வெற்றியெனும் இந்த தாராக மந்திரம் மேற்கத்திய நாடுகளின் நடுத்தர வர்க்கத்தை, அரசியல் ரீதியாக மொன்னையாக்குவதற்காகவும், பறிக்கப்பட்ட உரிமைகளுக்கு போராடாமல் இருப்பதற்கும், வாழ்க்கை தோல்விகளுக்கு தன்னையே காரணமெனக் கற்பித்துக் கொள்ளவும், நுகர்வு கலாச்சாரத்தின் மறுபக்கமாக, சுயநலத்தை ஒரு ஒழுக்கம் போல பின்பற்றுவதற்காகவும் திட்டமிட்டு திணிக்கப்பட்ட ஒரு மோசடிச் சரக்காகும். அப்படி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த சரக்கு போதனைகள் கடந்த பத்திருபது ஆண்டுகளாக தமிழ் வாரப் பத்திரிகைகளில் போதையூட்டும் பல தொடர்களாக வந்திருக்கின்றன.

இந்தியாவிலும் மறுகாலனியாக்கத்தின் விளைவாக ஏழைகள் அதிகரிப்பது போல நடுத்தர வர்க்கமும் அதிகரித்து வருகிறது. அவர்கள் வளர்ச்சிக்கேற்ப இந்த சரக்கும் சந்தையில் மிகுந்த கிராக்கியைக் கொண்டிருக்கிறது. இந்த ‘உழைத்து’ முன்னேறிய முதலாளிகளின் வாழ்க்கையை ஜிகினா வார்த்தையில் செட்டப்போடு தயாரித்துதான் கிழக்கு பதிப்பகத்தின் பெரும்பாலான புத்தகங்கள் படையெடுக்கின்றன.

இக்காலச் சூழலில்தான் எஸ்.ஆர்.எம் எனும் பிரம்மாண்டமான கார்ப்பரேட் உயர்கல்வி தொழிலை நடத்தி வரும் பச்சமுத்து, “புதிய தலைமுறை” பத்திரிகையை ஆரம்பித்தார். தனது தொழிலை இடையூறின்றி ஒரு சேஃப்டியோடு நடத்துவதற்காக இந்த தேர்தலில் ஒரு கட்சி ஆரம்பித்து எல்லா தொகுதிகளிலும் போட்டியிட வைத்தார். அதற்காக மண்வெட்டி விவசாயி தோற்றத்தில், கமாண்டோ படத்தில் ஆர்னால்டு துப்பாக்கியுடன் வருவது போல போஸ் கொடுத்து வெளியிடப்பட்ட சுவரொட்டியை நீங்களும் பார்த்து நகைத்திருப்பீர்கள். தொழில், ஊடகம், கட்சி என்று எல்லா துறைகளிலும் கால் பதித்து தமது சாம்ராஜ்ஜியத்தை விஸ்தரிப்பது இப்போதைய முதலாளிகளின் பாணியாகும். பச்சமுத்துவும் அப்படித்தான்.

புதிய தலைமுறை பத்திரிகையின் முழுமுதல் கொள்கையே இந்த ‘உன்னால் முடியும் தம்பி’ மேட்டர்தான். ஆரம்பத்தில் அட்டை டூ அட்டை இந்த அப்துல் கலாம் டைப் மொக்கையையே போட்டு வதைத்தார்கள். அதனாலேயே ஓரிரண்டு இதழ் வாங்கிவிட்டு நிறுத்தி விட்டேன். அச்சமயம் ஒரு நண்பர் கூட ” இந்த இதழில் வேலை செய்யும் அனைவரும் கொஞ்ச நாளுல மொக்கைச் சக்கரவர்த்தியாகி விடுவாங்க” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.

தற்போது இந்த தன்னம்பிக்கை சரக்கோடு, அரசியல், பரபரப்பு நிகழ்வுகள் என்று கொஞ்சம் காக்டெயில் போல கலந்து “புதிய தலைமுறை”யில் தருகிறார்கள். ஆனாலும் சுய முன்னேறத்தின் மூலம் சாதிக்கப் போகும் அந்த இந்திய வல்லரசுக் கனவுதான் இவர்கள் சட்டியில் இருக்கும் ஒரே பதார்த்தம்.

புதிய தலைமுறை இதழின் செய்தியாளர்கள் யுவகிருஷ்ணா (லக்கிலுக்), அதிஷா இருவரும் நடிகர் சூர்யாவை பேட்டி கண்டு அவர் பேசியதையே பெரும் வாழ்க்கை சாதனையாக வரித்தும், விரித்தும் எழுதியிருக்கிறார்கள். சினிமா நடிகரைப் பற்றியதென்பதால்  இந்த கட்டுரை நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதாவது சூர்யா மாபெரும் சாதனையாளராகவும், அவரிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமெனவும் பரவசப்படுகிறார்கள். இதை எழுதியவர்களுக்கும் நிறைய பாராட்டுக்கள்! இப்படி ஒரு கட்டுரை எழுத வாய்ப்பு கொடுத்தமைக்காக நாமும் பாராட்டினை தெரிவித்துக் கொள்வோம்.

சூர்யாவின் சினிமா வெற்றிக்கு காரணம் என்ன? திறமையா? பின்னணியா?

“புதிய தலைமுறை” சூர்யா நமக்கு முன்மாதிரியா? முடிந்தால் அந்தக் கட்டுரையை படித்து விடுங்கள். அதில் சரவணன் எனும் சராசரி நடுத்தர வர்க்க இளைஞன் இன்று வெற்றியடைந்த திரை நட்சத்திரமாக உயர்ந்திருப்பதை சிலாகித்து சொல்கிறார்கள். கல்லூரி முடித்த சரவணன் வேலைக்கு மிகவும் மெனக்கெடவில்லை. அவரது உறவினர்கள் கார்மெண்ட் தொழிலில் இருந்தபடியால் ஒரு வேலையை தேடிக்கொள்கிறார். இதில் தனிப்பட்ட சாதனை எங்கே உள்ளது? அதே போல பட்டப்படிப்பு முடித்ததே சாதனையென்றால் தமிழகத்தில் வருடா வருடம் சில இலட்சம் சாதனையாளர்களை நாம் வாழ்த்த வேண்டும்.

மேலும் சிவக்குமாரின் மகன் என்ற அடையாளமும், அதற்குரிய சமூக அங்கீகாரமும், இறுதியாக சுயசாதி உறவினர்களது ஆதரவும்தான் அய்யாவின் துணித் தொழில் இரகசியம். இதில் அவர் கடுமையாக உழைத்து எட்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் மேலாளர் பதவியை அடைகிறாராம். எல்லா குடும்ப நிறுவனங்களிலும் குடும்ப உறுப்பினர்களே முக்கிய பதவியை அடைகிறார்கள். சான்றாக இந்து பேப்பரில் ராம், ரவி, முரளி, மாலினி போன்ற ஐய்யங்கார் வாரிசுகளெல்லாம் அந்த பேப்பரின் உரிமையாளர்கள் என்ற தகுதியில்தானே எடிட்டோரியல் பதவிகளை வகித்தார்கள்? திருபாய் அம்பானியின் மகன்களான முகேஷ், அனில் இருவரும் பொதுத் தேர்வு போட்டித் தேர்வு எழுதியா தலைமை நிர்வாகியானார்கள்?

அவ்வளவு ஏன், பச்சமுத்துவின் முதல் மகன் எஸ்.ஆர்.எம் கல்வித் தொழிலையும், இரண்டாவது மகன் புதிய தலைமுறை பத்திரிகையையும் கவனித்துக் கொள்கிறார்கள்.  இது பச்சமுத்து என்ற பண்ணையாரின் மகன்கள் என்பதால் கிடைத்ததா, இல்லை அவர்கள் சொந்தமாக கஷ்டப்பட்டு உழைத்து கிடைத்ததா?

இடையில் வீட்டிற்கு வரும் இயக்குநர்கள் சரவணனை நடிக்க வரும்படி அழைக்கிறார்களாம். அவரோ விருப்பமில்லாமல் தட்டிக் கழிக்கிறாராம். இதை கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள். தமிழகத்தில் ஒரு நடுத்தர வர்க்க இளைஞனிடம் யாராவது ஒரு இயக்குநர் நடிக்க வரும்படி அழைத்தால் என்ன செய்வான்? காலில் விழுந்து அதை ஏற்றுக் கொள்வான். இங்கே சிவக்குமார் பையன் என்ற காரணத்திற்காக வாரிசு அடிப்படையில் மட்டுமே பலர் கூப்பிடுகின்றனர். அவர்களெல்லாம் போண்டா இயக்குநர்கள் என்று கருதிய சரவணன் இறுதியில் அறிவாளி இயக்குநர் மணிரத்தினம் சொந்தப் படம் என்று அழைத்ததும் தட்டமுடியாமல் சம்மதிக்கிறாராம். இப்படியாக “நேருக்கு நேர்” படத்தில் அறிமுகமாகிறார்.

இந்தக் காலத்தில்தான் தமிழக அரசியலில் மட்டுமல்ல, சினிமாவிலும் வாரிசுகளே நுழைய முடியும் என்ற நிலை உருவாகிறது. விஜய், சிம்பு, சூர்யா, அருண் விஜயகுமார், தனுஷ், ஜெயம்ரவி, அதர்வா, விஷால், சிபிராஜ், பிரஷாந்த், கார்த்தி என்று ஏராளம்பேர் வாரிசு தகுதியில்தான் கதாநாயகனாக நடிக்கிறார்கள். அதன்படி சரவணன் சூர்யாவாக மாறியதற்கு சொந்த தனிப்பட்ட தகுதி ஏதும் காரணமில்லை. சொல்லப் போனால் சூர்யாவை விட பல தகுதி கொண்ட இளைஞர்களெல்லாம் இந்த சமூகப்பின்னணி இல்லாமல்தான் சினிமாவில் நுழைய முடியவில்லை.

ஆக சினிமாவில் நுழைவதற்கு இப்படிப்பட்ட வாரிசுகள்தான் நுழைய முடியும் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதில்லையா? பழைய மன்னராட்சிக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? இதேபோல குமுதம், விகடன், தினமலர், தினத்தந்தி போன்ற பத்திரிகைகளிலும்  கூட வாரிசுகளே தீர்மானிக்கிறார்கள். அரசியலை எடுத்துக் கொண்டால் ராகுல் காந்தி முதல் கனிமொழி வரை ஆயிரத்தெட்டு எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆக அரசியல், சினிமா, ஊடகம் எல்லாம் பணக்கார குடும்பங்களால் மட்டுமே கட்டுப்படுத்தப்படும் என்றால் அந்த நாட்டில் மக்களெல்லாம் அடிமைகள் என்றே பொருள். சூர்யா சினிமாவில் நுழைந்தது என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொண்டால் உண்மை விளங்கும்.

அடுத்து ஆரம்பத்தில் நான்கைந்து வருடங்கள் அவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. தோல்வியாம். இதற்குப் பிறகுதான் அவர் டான்ஸ், சண்டை என்ற வித்தைகளையெல்லாம் கற்கிறாராம். ராகுல்காந்தி அரசியலுக்கு வந்து இளைஞர் காங்கிரஸ் தலைவராகி அதன் பிறகு ஆயிரத்தெட்டு வசதிகளோடு அரசியல் ‘கற்பது’ போல நம்ம சூர்யாவும் கற்றுக் கொள்கிறார். முக்கியமாக அவரது படங்கள் தோல்வியடைந்தன என்றாலும் சினிமா உலகில் இருந்து அவர் தூக்கியெறியப்படவில்லை.

பாரதிராஜா, பாக்யராஜ், இளையராஜா போன்ற கிராமத்து இளைஞர்களெல்லாம் கனவுடன் சென்னை வந்து தமிழக சினிமாவை ஆட்டுவித்ததெல்லாம் இன்று கனவில் கூட சாத்தியமில்லை. ஷங்கர், மணிரத்தினம், கவுதம் மேனன் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளாராக சேரவேண்டுமென்றால் டாக்டர், இன்ஜினியர், எம்.பி.ஏ இன்னபிற உயர்கல்விகளோடு ஆங்கிலம், பிரெஞ்சு, இந்தி என்று கூடுதல் மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும். இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர சாதாரண இளைஞர்கள் எவரும் சினிமாவில் நுழைய முடியாதபடி அங்கே பெரும் சுவர் எழுப்பப்பட்டு விட்டது. வசதி, சிபாரிசு, அரசியல் பின்னணி என்று இருந்தால்தான் முடியும்.

இப்படித்தான் உண்மையான திறமைகள் தமிழ் சினிமாவில் நுழைய முடியாமலும், அப்படி நுழைந்தாலும் சில ஆதிக்க கும்பல்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே வேலை செய்ய முடியும். ஆக சூர்யா தனது மேலான பின்னணி காரணமாக பெரிய போட்டிகள் எதுவுமின்றி ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் நீடித்திருக்கிறார்.

இந்நிலையில் இயக்குநர் பாலாவிடம் வாய்ப்பு கேட்டாராம். அவரும் சூர்யாவை வைத்து நந்தாவை எடுத்தாராம். அதன் பிறகு ஏறுமுகமாம்.  இதில் என்ன முன்மாதிரி உள்ளது? இயக்குனர் சொன்னபடி கேட்டு ஒருவர் நடித்திருக்கிறாரே அது அவரது ஆற்றலில்லையா என பலர் கேட்கலாம்.  மார்க்கெட் போன சியான் விக்ரமை முன்னணி நட்சத்திரமாக்கிய இயக்குநர் பாலவிடம் நமது இலக்கிய குருஜி நாயகனாக நடித்தால் கூட கம்பீரமாக மிளிர்வார் எனும்போது நடிப்பு பின்னணியும், அனுபவமும் உடைய சூர்யாவின் வெற்றிக்கு பாலாவை பாராட்டலாமே ஒழிய இதை சூர்யா தனிப்பட்டு உழைத்து முன்னேறியதாகச் சொல்லவதற்கு எதாவது இருக்கிறதா? சினிமா என்பது இயக்குனர் முதல் லைட்பாய் வரை பலரின் கூட்டுமுயற்சி . அதன் வெற்றியை ஒருவருக்கு மட்டுமே உரித்தாக்குவது என்பது மோசடி.  சில நல்ல இயக்குநர்கள, விறுவிறுப்பான கதைகள், வெற்றியடைந்த இசை என்று காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் சூர்யாவின் வெற்றிப் பின்னணி. இத்தகைய வாய்ப்பு கிடைக்கும் போது உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒரு இளைஞன் கூட வெற்றி பெறமுடியும். ஆனால் அவனுக்கு சூர்யாவைப் போன்ற பின்னணி இருக்காது என்பதால் அது சாத்தியமில்லை.

மேலும் சினிமாவைப் பொறுத்த வரை ஒரு நடிகரது முகம் தொடர்ந்து திணிக்கப்படும்போது அந்த முகத்தை மக்கள் வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கப்படுகிறார்கள்.  சான்றாக நடிகர் விஜயை எடுத்துக் கொள்வோம். சூர்யா போல இல்லாமல் அப்பா சந்திரசேகரால் திட்டமிட்டு வளர்த்து நுழைக்கப்பட்டவர் விஜய். நடிக்க வரும்போதே அவருக்கு நடனம், சண்டை, ஃபார்முலா நடிப்பு எல்லாம் தெரியும். ஆனால் ஆரம்ப காலத்தில் வரும் விஜயின் முகத்தை நீங்கள் கூட சகித்திருக்க மாட்டீர்கள். அப்போதெல்லாம் எஸ்.ஏ சந்திரசேகர் மகனுக்கு ஜோடியாக சங்கவி போன்ற நடிகைகளை கவர்ச்சி காட்டி நடிக்க வைத்தார். காதல் காட்சிகளையெல்லாம் நீலப்படங்கள் போல எடுத்தார். அதனால் அன்று ரசிகர்கள் விஜயைப் பார்க்க சென்றார்கள் என்பது கூட உண்மையில்லை. ஆனால் அசராத தந்தையின் முயற்சியால் விஜய் தொடர்ந்து சினிமாவில் நீடிக்க அந்த முகம் இப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. எனவே தற்போது உள்ள தகவல் ஊடக தொழில் நுட்பத்தில் ஒரு வீட்டுப் பூனையைக்கூட ஒருசிலபடங்களில் நடிக்க வைத்து ஸ்டாராக மாற்ற முடியும். தேவர் பிலிம்சின் ஆடு,மாடு, யானைகளெல்லாம் உழைத்து முன்னேறிய கதையாக ஒத்துக் கொண்டால் நாம் சூர்யாவையும் ஒத்துக் கொள்ளலாம்.

கல்வி கற்பது மக்களது உரிமையா? வள்ளல்களது தர்மமா?

சினிமாவிற்கு அடுத்து சூர்யா தனது வள்ளல் பாத்திரத்திற்கு வருகிறார். தந்தை சிவக்குமார் ஆரம்பித்து வைத்த கல்வி உதவியை இப்போது அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பெரியதாக நடத்தி வருகிறாராம். ஏழை மாணவர்களுக்கு உதவி, கல்லூரி படிப்பு, காம்பஸ் இன்டர்வீயு என்று வேலை வாங்கித் தருவது வரை செய்கிறாராம். இது தெரியாமல் தமிழக இளைஞர்கள் அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் போய் தவமிருக்கிறார்களே ஏன்? கன்னியாகுமரி முதல் சென்னை வரை படிப்புக்கும், வேலைக்கும் அலையும் அத்தனை இளைஞர்களும் சூர்யா வீட்டிற்கு வந்தால் எதிர்காலத்தையே வெறும் ஐந்து நிமிடத்தில் பெற்று விடலாமே?

கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அள்ளிவிடுவது மக்களை பிச்சைக்காரர்களாக்கும் உத்தி என்று நோகாமல் எக்காளம் பேசுபவர்கள் சூர்யாவின் இந்த கல்விப் பிச்சை பற்றி என்ன சொல்வார்கள்? உடனே இது கல்வி என்பதால் டி.வியோடு ஒப்பிட முடியாது, படிப்பைக் கொடுத்தால் அந்த பையன் தனது எதிர்காலத்தை தானே அடைவான், இது அடிப்படையான சமூக மாற்றத்திற்கான உதவி என்று வாதாடுவார்கள்.

ஒரு குழந்தை படிப்பதும், படிக்காமல் போவதும் அதனுடைய தனிப்பட்ட பிரச்சினையா? இல்லை அந்த குடும்பத்தின் பிரச்சினையா? இல்லை இவர்களைப் போன்ற ஒட்டு மொத்த மக்களிடமிருந்து வரிவசூலிக்கும் அரசின் பிரச்சினையா? நாட்டு மக்களுக்கு இலவச, தரமான கல்வி கொடுக்க வேண்டிய அரசு அதை ஒழித்து விட்டு காசு இருப்பவனுக்குத்தான் கல்வி என்று சுயநிதிக் கல்லூரி முதலாளிகளை ஊக்குவிக்கிறது. புதிய தலைமுறையில் தன்னம்பிக்கை சரக்கை போதிக்கும் பச்சமுத்துவின் எஸ்.எம்.ஆர் கல்லூரிகளில் இலவசமாகவா கல்வி கொடுக்கிறார்கள்? இல்லை பல இலட்சங்களில் மாணவர்களுக்கு கல்வியை விற்கிறார்கள்.

நடிகர் சூர்யா வெற்றிகரமான நட்சத்திரமாக உருவெடுத்து, அகரம் அறக்கட்டளையை நடத்தும் இந்தக் காலத்தில்தான் ஏழைகளும், கீழ்த்தட்டு நடுத்தர மக்களும் உயர்கல்வி கற்க முடியாது என்ற நிலைமை வந்து விட்டது. மாதச்சம்பளம் வாங்கும் நடுத்தர வர்க்கமும் குழந்தைகளின் கல்விக்காக நுரை விடும் அளவுக்கு வதைபட்டு ஒடுகிறது. இதில இந்த நல்லவர் கல்வி உதவி செய்கிறாராம். யாரை ஏமாற்றுகிறீர்கள்?

சமீபத்தில் கூட சென்னை எம்.சி.ராஜா அரசு விடுதியில் படிக்கும் தலித் மாணவர்கள் விடுதியின் அவல நிலை காரணமாக சாலை மறியல் செய்தார்கள். இன்னும் நிலைமை அப்படியேதான் உள்ளது. இதற்கு முன் பல வருடங்களாக அப்படித்தான் உள்ளது. ஒரு வேளை சூர்யாவிற்கு கல்விதான் அக்கறை என்றிருந்தால் இந்த சாலை மறியலில் கலந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராடினார்களே அதில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

சமீபத்தில் சென்னை மேட்டுக்குடி பள்ளி ஒன்று ஏழைகளை பள்ளியில் சேர்க்கச் சொல்லும் அரசின் கொள்கை முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர்களிடம் பிரச்சாரம் செய்கிறது. இந்த பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சூர்யா உண்ணாவிரதமோ குறைந்தபட்சம் மெழுகுவர்த்தி போராட்டமோ செய்வாரா?  எஸ்.ஆர்.எம் கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் 25லிருந்து 50 இலட்சமும் இல்லை அதற்கு மேலும் வசூலிக்கிறாரே பச்சமுத்து அவரை எதிர்த்து ஒரு அறிக்கையாவது விட்டுப் பார்க்கட்டுமே. அதை நமது புதிய தலைமுறை செய்தியாளர்கள் ஒரு ரிப்போர்ட்டாக எழுதட்டும். நாமும் சூர்யாவின் சமூக கடமையை மெச்சுவோம்.

ஆம். இன்றைக்கு நமது மாணவர்களுக்கு தரமான இலவசமான கல்வி கிடைக்க வேண்டுமென்றால் நாம் அதற்காக அரசை எதிர்த்து போராட வேண்டும். இது ஒன்றும் நமக்கு தரப்படும் பிச்சை அல்ல. நமது உரிமை. பறிக்கப்பட்ட அந்த உரிமைக்காக மக்கள் அணி திரண்டு போராடும்போது மட்டுமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை என்ற நிலையை சமூகம் அடைய முடியும். இந்த போராட்ட உணர்வு இருக்கக் கூடாது என்ற அடிமைகளின் நிலையைத்தான் இத்தகைய கல்வி வள்ளல்களின் நடவடிக்கைகள் உருவாக்குகிறது. மேலும் சமூகமாக நாம் சேர்ந்து போராடி பெற வேண்டிய உரிமைக்கான சிந்தனையை, இப்படி பணக்காரர்களின் கருணை உள்ளத்தால் ஒரு சிலருக்கு வழி ஏற்படும் என்ற மாயையை உருவாக்கி அழிக்கிறார்கள்.

நண்பர்களே, நடிகர் சூர்யாவின் சினிமா பிடிக்கும், அவரது நடிப்பு பிடிக்கும் என்று சொன்னால் பிரச்சினை அல்ல. அது வெறும் இரசனை சம்பந்தப்பட்டது. ஆனால் அவரது வெற்றியிலிருந்து நாமும் கற்றுக் கொண்டு உழைத்தால் நல்ல நிலையை அடைய முடியும் என்று சொன்னால் அது ஆபாசமானது, கண்டனத்திற்குரியது. அயன் படத்தின் டிக்கெட் சிலநூறுகள் என்றால் அது பல ஆயிரங்களில் தியேட்டர் முதலாளிக்கும், இலட்சங்களில் வினியோகஸ்தருக்கும், கோடிகளில் தயாரிப்பாளருக்கும் போகிறது. அந்த கோடிகளில் சிலவற்றை எடுத்துக் கொள்ளும் கோடீஸ்வரன்தான் சூர்யா. இவரைப் போன்ற பெரும் பணக்காரர்கள் தத்தமது குடும்பங்களின் தேவைக்கு மீறி பிரம்மாண்டமாக சேர்த்து வைத்திருக்கும் பணத்தால்தான் பல ஏழைகள் படிக்க முடியவில்லை என்பதுதான் உண்மை. இதை மறைக்க ஒரு லட்சத்தை தானம் செய்து அதை பல லட்சங்களுக்கு விளம்பரம் செய்கிறார்கள். தன்னை ஒரு வள்ளல் போல முன்னிறுத்துகிறார்கள். ஊடகங்களும் இந்த நட்சத்திர சேவையை செவ்வனே செய்து வருகிறது.

உன்னால் முடியும் தம்பி சித்தாந்தத்தின் சூட்சுமே மக்களை காயடிப்பதுதான். இதில் தொடர்ந்து பயணம் செய்தால் நடுத்தர வர்க்கம் பாசிசத்தை ஆதரிக்கும் மனநிலைக்கு இயல்பாக பழகிக் கொள்ளும். ஆளும் வர்க்கமும் அதைத்தான் விரும்புகிறது. மக்களைச் சுரண்டி வாழும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இப்போது “கார்ப்பரேட் சமூக பொறுப்பு” என்று சீன்போடுவது அதிகரித்திருக்கிறது.

நமது இயலாமை என்பது நமது பறிக்கப்பட்ட செல்வத்தில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வதுதான் நமது விடுதலைக்கான ஒரே வழி. ஆகவே இந்த கனவான்களையும், தரும வள்ளல்களையும் எப்போதும் விலக்கி வையுங்கள். விடுதலைக்கான சிந்தனையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். நமக்கான முன்னுதாரணங்களை நாம் பகத்சிங்கிடம் தேடவேண்டுமே ஒழிய, ஒரு கட்டவுட் நட்சத்திரத்திடமிருந்து அல்ல.

____________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: