Thursday, May 8, 2025
முகப்பு பதிவு பக்கம் 749

சென்னை செவிலியர் போராட்டம் – நேரடி ரிப்போர்ட்!

8

அப்பல்லோவின் மிடுக்கான மருத்துவ சேவை

சர்வதேச உழைக்கும் மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தினமணி நாளிதழின் முதல் பக்கத்தில் அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் ஒரு விளம்பரம் வெளியாகியிருந்தது. ‘உலகத் தரத்திலான மருத்துவ சேவையை அளிக்க உங்களை அழைக்கிறோம்’ என்று செவிலியர்களை நோக்கிய விளம்பரம் அது. உழைக்கும் மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக அப்பல்லோ குழுமம் பணி செய்யும் செவிலியரை போற்றியுள்ளதாக வாசகர்களுக்குத் தோன்றியிருக்க வேண்டும்.

ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பு அப்பல்லோ நிர்வாகம் செவிலியர்கள் தமது பணிச் சூழல்களை மேம்படுத்தக் கோரி நடத்த உத்தேசித்திருந்த போராட்டத்தை எதிர்த்து நீதி மன்ற உத்தரவு வாங்கியது அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்படவில்லை. ‘பங்குச் சந்தையில் தமது பங்குகளின் விலை பாதிக்கப்பட்டு விடக் கூடாது’ என்று போராட்டத்தை துணி போட்டு மூடி விட முயற்சி செய்து கொண்டிருக்கும் அப்பல்லோவின் கார்ப்பரேட் முதலாளித்துவத்தை அந்த விளம்பரத்தில் தேடினால் கூட கிடைக்கவில்லை.

செவிலியர்கள் டிசம்பர் மாதமே தமது கோரிக்கைகளை நிர்வாகத்தின் முன் வைத்து, ஜனவரி 20 முதல் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக நோட்டிஸ் கொடுத்திருந்ததும் நிர்வாகம் சமரசத்துக்கு அழைத்து பின்னர் எந்த வித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை என்பது அந்த விளம்பரத்தில் சொல்லப்படவில்லை. முந்தைய நாள் அப்போல்லோவைச் சேர்ந்த 800 நர்ஸூகளும் போர்டிஸ் மலர் மருத்துவமனையை சேர்ந்த 200 நர்ஸூகளும் பார்க் டவுனில் உள்ள மெமோரியல் ஹாலில் நடத்திய ஆர்ப்பாட்டத்தைப் பற்றி அந்த விளம்பரம் பேசவில்லை.

மூன்று ஆண்டுகள் அனுபவம் உடைய செவிலியருக்கு சுமர் 6,000 ரூபாய் மட்டும் மாதச் சம்பளம் வழங்குவது, அவர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்திருப்பது, வேலையை விட்டு விலக விரும்பினால் அனுபவச் சான்றிதழையும் தகுதிச் சான்றிதழ்களையும் தராமல் மிரட்டுவது என்ற நடவடிக்கைகள் அந்த விளம்பரத்தைப் படிப்பவர்களுக்குத் தெரிந்திருக்கப் போவதில்லை.

மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம்

இதே போன்ற தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளான முகப்பேர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனை மற்றும் போர்டிஸ் மலர் மருத்துவமனையின் செவிலியர்களும் அதே மாதிரியான கோரிக்கைகளை முன் வைத்து மார்ச் 2-ம் தேதி தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள்.

அனுதினமும் மருத்துவமனைகளில் இரவு பகல் பாராமல் நோயுற்றவர்களுக்கு உதவி புரியும் செவிலியர்கள் பெரும் போராட்டங்களுக்கிடையேதான் வாழ்க்கை நடத்துகிறார்கள். நிரந்தர வேலை என்ற உத்தரவாதம் கிடையாது, பற்றாக்குறை சம்பளம், கல்விக்கு வாங்கிய கடன் சுமை, குறைவான செவிலியர்களை மட்டும் வேலைக்கு அமர்த்தியிருப்பதால் அழுத்தும் வேலைப் பளு, இதன் நடுவில் இவர்கள் வேலை செய்வது இயந்திரங்களுடன் அல்ல நோயுற்ற மனிதர்களுடன். இத்தனை அழுத்தங்களுக்கு மத்தியிலும் இன்முகத்துடன் கவனமாக சேவை செய்ய முனையும் வெள்ளுடை உழைப்பாளிகள் இவர்கள்.

இப்படியாக மிகுந்த பொறுப்புள்ள பணியில் பல அழுத்தங்களின் கீழ்தான் செவிலியர்கள் வேலை செய்கிறார்கள். அதுவும் தனியார் மருத்துவமனைகளில் கேட்கவே வேண்டாம். அந்த அழுத்தங்களை எதிர்த்து பீரிட்டு வெளிப்பட்டது செவிலியர்களின் போராட்டம்.

அவர்கள் வைத்த கோரிக்கைகள் ஜனநாயகமானவை மட்டுமல்ல, அத்தியாவசியமானவையும் கூட

  • – சம்பளம் உயர்வு வேண்டும்
  • – கொத்தடிமைகளை போல நடத்தக்கூடாது.
  • – தங்களிடம் வாங்கி வைத்துள்ள சான்றிதழ்களை திருப்பி தர வேண்டும்.
  • – தங்களுக்கு போட்டுள்ள பிணை ஒப்பந்தங்களை (bond) ரத்து செய்ய வேண்டும்.
  • – நோயாளிகளின் பராமரிப்புக்குத் தேவையான அளவு போதிய செவிலியர்களை பணிக்கு அமர்த்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை அவர்கள் திடீரென்று ஒரு நாள் சொல்லிவிட்டு வேலை நிறுத்தம் செய்ய வில்லை. இந்த கோரிக்கைகளை 6 மாதம் முன்பே மருத்துவமனை நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததைத் தொடர்ந்து, மீண்டும் நினைவூட்டி கோரிக்கை மெனு கொடுத்துள்ளனர். ஒரு மாதம் கழித்தும் பதில் இல்லை.  ‘கோரிக்கைகளை கண்டு கொள்ளவில்லையென்றால் வேலை நிறுத்தம் செய்வோம்’ என்று நிர்வாகத்திற்கு நோட்டிஸ் அனுப்பி ஒரு மாதத்திற்குப் பிறகும் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவே தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

MMM மருத்துவமனை

சென்னையில் உயர்நடுத்தர வர்க்க, நடுத்தர வர்க்க குடும்பங்கள் அதிகமாக வாழும் அண்ணா நகர்-முகப்பேர் பகுதியில் உள்ளது மெட்ராஸ் மெடிகல் மிஷன் எனும் தனியார் மருத்துவமனை. ‘முழுக்க தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்’ ஆரம்பிக்கபட்டதாக தன் வலைத்தளத்தில் முழங்குகிறது மருத்துவமனை நிர்வாகம். இந்த MMM  மருத்துவமனை கட்டிடங்கள் பார்க்க ஐந்து நட்சத்திர விடுதி மாதிரி ஜொலிக்கின்றன, நோயாளிகளிடம் வசூலிக்கும் கட்டணத்திற்கும் குறைவில்லை. நோயாளிகளிடன் உறிஞ்சி நல்ல லாபம் பார்க்கும் அதே நேரம் செவிலியர்கள் போன்ற சாதாரண ஊழியர்களிடமிருந்தும் உறிஞ்சுகிறது.

மார்ச் 3-ம் தேதி, வியாழக் கிழமை அந்த மருத்துவமனையில் வேலை பார்க்கும் 300 செவிலியர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இவர்கள் ஒன்றும் தொழிற்சாலையில் வேலை செய்யவில்லையே, வேலை நிறுத்தம் செய்தால் நோயாளிகளை யார் பார்த்துக்கொள்வது? இந்த அக்கறையுடன் 60 செவிலியர்களை வார்டில் நிறுத்திவிட்டு, 240 பேர் மாத்திரம் கீழே வந்து போராடத் தொடங்கினார்கள்.

வேலை நிறுத்தம் தொடங்கும் முன் இவர்களாகவே போலிசுக்கும் அறிவித்தனர். இத்தனை நாள் கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் மௌனம் சாதித்த நிர்வாகம், வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பித்த அரைமணி நேரத்தில் ஒரு நோட்டிஸ் அனுப்பியது. ‘வேலை நிறுத்தம் செய்யும் பெண்கள் உடனடியாக மருத்துவமனை ஆஸ்டலில் இருந்து வெளியேற வேண்டும். யாருக்கும் உணவு கிடையாது’ வேலை நிறுத்தம் செய்யத் தூண்டியதாக 3 பேரை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யும் ஆணையும் பிறப்பிக்கப்பட்டது.

சன் டீவி செய்தியாளர்கள் முதலில் வந்து செய்திகளை சேகரித்து போயிருக்கிறார்கள். நாம் மருத்துவமனை வளாகத்துக்குச் சென்ற போது சுதாரித்துக் கொண்டிருந்த நிர்வாகம் வேறு எந்த ஊடகங்களையும் வேலை நிறுத்தம் செய்யும் செவிலியர்களுடன் பேச அனுமதிக்கவில்லை.

போராட்டம் செய்பவர்களுடன் பேசியதில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 வருட படிப்பிற்கு 2 லட்சம் முதல் 4 லட்சம் வரை வங்கியில் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்தது. கடனுக்கு மாதம் ரூபாய் 3,500 வங்கிக்குக் கட்ட வேண்டும். மாதச் சம்பளம் ரூபாய் 7,500ல் பிடிப்புகள் போக ரூபாய் 5,700தான் கையில் வரும். மருத்துவமனை ஆஸ்டலில் தங்க ரூபாய் 700, உணவுக்கு ரூபாய் 700 போக கையில் ரூபாய் 4,300 நிற்கும்.  பெரும்பாலனோருக்கு வங்கிக் கடன் போக கட்டியது போக மீதி 800 ரூபாய்தான் இருக்கும். வீட்டில் இருந்து ஏதாவது பணம் வாங்கித்தான் சென்னையில் பிழைப்பு ஓடுகிறது.

வெளியே வேலை தேடிச் செல்ல முடியாது. சான்றிதழ்கள், அனுபவச் சான்றிதழ் மருத்துவமை நிர்வாகத்திடமிருந்து கிடைக்காது. அவற்றை பெறுவதற்கு பிணை ஒப்பந்தத்தின்படி ரூபாய் 50,000 கொடுக்க வேண்டும், அப்படியே வெளியில் வேலை தேடினாலும் எங்கும் தனியார் மயமாகி விட்ட சூழலில் மற்ற மருத்துவமனைகளிலும் இதே போன்ற பணிச்சூழல்தான்.

”இதுக்கு மேலே என்ன சார் வேணும், வெளியேவும் பொழைக்க விடமாட்டாங்க, இங்கேயும் சம்பளம் கொடுக்கமாட்டாங்க, நாங்க என்ன செய்ய? எங்களுக்கு பயம் இல்லை, நாங்க போராடத்தான் போறோம். வீட்டில் சொல்லிட்டோம். அவங்களும் எங்களுக்கு ஆதரவு தராங்க. எங்களுக்கு வேற என்ன வழி இருக்கு சொல்லுங்க” என்று கேட்டுக் கொண்டு போராட்ட களத்தில் இறங்கி நின்றார்கள் செவிலியர்கள்.

மறு நாள் போராட்டம் என்று தெரிந்தவுடன் அரசு பணிநல மேலாளர் இவர்களைச் சந்தித்துள்ளார். அரசு யாருக்கு ஆதரவு தரும்? ‘ஏதாவது நோயாளியின் உடல் நிலையை மோசமாகச் செய்து, செவிலியரின் வேலை நிறுத்தத்தால் நோயாளிகள் பாதிப்பு என்று நிர்வாகம் அவர்களை ஜெயிலுக்கு அனுப்புவது கூட நடக்கலாம்’ என்று போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்கு அக்கறையாக ‘அறிவுரை’ கூறியிருக்கிறார் அவர்.

செவிலியர்களின் பணிச் சூழல்

ஒரு காலத்தில் செவிலியர்கள் அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் வளைகுடா நாடுகளுக்கும் பறந்தபடி இருக்க செவிலியர்களுக்கான படிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெற்றது, தனியார் செவிலியர் கல்லுரிகள் புற்றீசல் போல முளைத்தன. இப்போது அரசு மருத்துவ சேவைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. அரசு மருத்துவர்களும், செவிலியர்களும் மக்களின் தேவைக்கேற்ப நியமிக்கப்படுவதில்லை. இன்னொரு பக்கம் வெளிநாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இப்பொழுது இருப்பது தனியார் மருத்துவமனைகள் மட்டும்தான். அவை இந்த ரிசர்வ் பட்டாளமாக நிற்கும் இந்த வேலையில்லா பட்டதாரிகளை சுரண்டி தமது வளர்ச்சியை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘இந்தியா முழுவதும் இதே நிலைமைதான்’ என்கிறார் அனைத்திந்திய செவிலியர்கள் சங்கம், தமிழ்நாடு கிளையின் செயலாளர் ஜினி கெம்ப். பல லட்ச ரூபாய் செலவு செய்து நர்ஸிங் படித்து விட்டு இது போன்ற பெரிய கார்ப்பரேட் மருத்துவமனைகளில் கொத்தடிமைகளாக பணி செய்யும் நிலையில் இருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான செவிலியர்கள். அந்த நிலைமையை எதிர்த்து போராட்டத்தில் இறங்கி தம்முடைய மற்றும் நோயாளிகளின் அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் போராட்டத்தில் அடி எடுத்து வைத்து முன்னுதாரணமாக திகழ்கிறார்கள் MMM மருத்துவமனை செவிலியர்கள்.

செவிலியர்கள் சங்கம் கேரளாவில் இது போன்ற போராட்டத்தின் மூலம், படித்து முடித்தபின் உடன் வேலைக்குச் சேரும் புதிய நர்ஸூக்கு 14,000 ரூபாய் சம்பளம் என்பதை சாதித்திருக்கிறார்கள்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

மலர், MMM நிர்வாகங்கள் அடிபணிந்தன

ஐந்து நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு அந்த மருத்துவமனை நிர்வாகங்கள் இத்தனை வருடங்களாக நடத்தி வந்திருந்த அராஜக நடைமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து,

  • — கட்டாயமாக வாங்கி வைத்திருந்த சான்றிதழ்களை திருப்பித் தந்து விடுவது
  • — பணியை விட்டுப் போகாமலிருக்க போட்டிருந்த பிணை ஒப்பந்தத்தை ரத்து செய்வது
  • — சம்பளத்தை உயர்த்துவது

என்ற போராடும் செவிலியர்களின் கோரிக்கைகளான அடிப்படை நியாயங்களை நிறைவேற்றுவதாக அடிபணிந்திருக்கிறார்கள். மலர், MMM மருத்துவமனை செவிலியர் தமது கோரிக்கைகளில் வெற்றி பெற்றாலும் அப்போல்லோ செவிலியர்களின் போராட்டம் வெற்றி பெறும் வரை தமது ஆதரவு தொடரும் என்று அறிவித்துள்ளார்கள்.

‘இழப்பதற்கு இனி எதுவும் இல்லை’ எனும் போது போராடுவது ஒன்றே தீர்வு. இதை தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து தங்கள் அடிப்படை கோரிக்கைகளுக்காக போராடி உழைக்கும் மகளிர் தின வாரத்தில் வெற்றி ஈட்டியிருக்கிறார்கள் மலர் மற்றும் MMM மருத்துவமனை செவிலியர்கள்.

அடிப்படை வாழ்வுரிமை சுரண்டப்படும் போது அதை எதிர்த்து கிளர்ந்து எழுவது உழைக்கும் மக்களின் இயல்பு. ஒப்பீட்டளவில் வசதியாக வாழும் தகவல் தொடர்புத் துறை ஊழியர்கள் போன்றவர்கள் ‘தாம் அடிமைகள்’ என்பதை உணர்வதற்கு கொஞ்சம் அதிக காலம் பிடிக்கும். ஆனால் எல்லோரும் ‘தமக்கு அளிக்கப்பட்டுள்ள வாழ்க்கை என்பது சுரண்டலின் வடிவம், அதன் மூலம் தமக்கு கிடைத்திருப்பது கௌரவமான வாழ்க்கை இல்லை’ என்று உணரும் போது, முதலாளித்துவ அதிகார அமைப்புகளை தூக்கி எறிந்து உழைக்கும் மக்களின் அதிகாரத்தை நிலை நாட்டுவார்கள்.

____________________________________________________

– வினவு செய்தியாளர்.

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுன்லோட்!

8

புதிய கலாச்சாரம் மார்ச் 2012

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள  கட்டுரைகள்:

1. பாராமுகம்

2. சென்னை போலி மோதல் கொலை: துப்பாக்கி – குற்றத்தை உருவாக்குவதுமில்லை, ஒழிப்பதுமில்லை!

3. தனியார்மயத்தை கொழுக்க வைக்கும் கல்வி பெறும் உரிமைச் சட்டம்!

4. தின்னத் தங்கம் – குடிக்கக் கடல் – உழைப்பதற்கு அடிமைகள்…. துபாய்

5. விஜய் டி.வி.சூப்பர் சிங்கர்: தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சி சுரண்டல்!

6. வீடியோ கேம்: கணினித் திரையில் ஒரு ரவுடியிசப் பள்ளி!

7. ஜேம்ஸ்பாண்ட்: ஒரு நாயகன் வில்லனான கதை!

8. தி ரெட் மார்க்கெட்: மேற்கத்திய ஆரோக்கியத்திற்கு ஏழை நாடுகளின் மக்கள் பலி!

9. திரை விமரிசனம்: விசில் பிளோயர் – அமெரிக்க ஐ.நா அமைதிப் படையின் அட்டூழியங்கள்!

10. சிரிக்க முடியாத வாழ்க்கை

11. அணுத்திமிர்

புதிய கலாச்சாரம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 5 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

______________________________

வினவுடன் இணையுங்கள்

கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!

109

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பை சேர்ந்த மணமேல்குடி பாசித் மரைக்காயர் என்பவர்  பெண்களிடம் தவறாக நடந்ததையும்; மனைவி மற்றும் அவருடைய பெண் குழந்தையும் அனாதையாக விட்டு விட்டு, மற்றொருucmd ஏழைப் பெண்ணை இரண்டாம் திருமணம் செய்ததையும்: ஆணாதிக்க திமிருடன் “இஸ்லாமிய முறைப்படி சரி” என்று கூறி ஜமாத்தில் தனக்கு சாதகமாக தீர்ப்பும் பெற்றதையும் வினவின் வாசகர்கள் தழிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் பொறுக்கி தளபதி பாசித்மரைக்காயர் என்ற தலைப்பில் வெளியான கட்டுரை மூலம் அறிந்திருப்பீர்கள்.

இந்த இஸ்லாமிய தீர்ப்பால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஏழை குடும்பத்தினர் இப்பகுதியில் செயல்படும் புரட்சிகர அமைப்புகளின் தோழர்களிடம் புகார் செய்யவே தோழர்களுடைய உதவியால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதால், பாசித் சிறையிலடைக்கப்பட்டு இப்பொழுது பிணையில் வெளியில் உள்ளார். இவ் விசயத்தில் இஸ்லாமியர்கள்  பாசித்தை விமர்சித்தாலும், இஸஃலாமிய கொள்கையை தூக்கி பிடித்தனர். தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் அமைப்பினர் பாசித் திருமணம் செய்ததால் அவரை அமைப்பை விட்டு நீக்கிவிட்டோம் என்றும் பிறகு பொறுப்பிலிருந்து நீக்கி விட்டதாகவும்” கதை அளந்தனர்.

ஆனால் பாசித் மரைக்காயர் சிறையில் அடைக்கப்பட்ட போது தவ்ஹித் ஜமாத்துதான் அவருக்கு ஆதரவாக அனைத்து நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவந்தனர். இன்று ஒருபடி மேலே சென்று முதல் மனைவி மற்றும் குடும்பத்தினரை நேரிலும், போனிலும் கிரிமினல் வழக்கை வாபஸ் பெறக் கோரியும், சிவில் வழக்கு தாக்கல் செய்ய வேண்டாம் என்றும் மிரட்டுகிறார்கள்.

“நீங்கள் காபிர்களின் (தோழர்களின்) பேச்சை கேட்டு போலிசுக்கு சென்றதால் உங்களுக்கு பாசித் எந்த பணமும் தரவில்லை. மேலும் அவர்கள் சொல்வதை கேட்டு சிவில் வழக்கு தாக்கல் செய்தால் உங்கள் பணமும் இருக்கின்ற ஒரே வீடும் வழக்கு செலவுக்காக காலியாகிவிடும்.” என்று மிரட்டி பார்த்துள்ளனர்.

தலாக் தலாக் தலாக்
படத்தை பெரியதாக பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஆனால் இந்த மிரட்டல் பேச்சுக்கு அடிபணியாத அப்பெண் “எனக்கு இஸ்லாமியர்களைவிட தோழர்கள் மீதுதான் நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது; என் வாழ்க்கை பாசித்தால் நாசமாய் போய்விட்டது; இனி எந்த இஸ்லாமிய பெண்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது”. என பதில் கூறியுள்ளார்.

இதனால் இந்த இஸ்லாமிய காவலர்கள் (பாசித்தின் தவ்ஹீத் ஜமாத்வாதி கூட்டாளிகள்) தங்களது இஸ்லாமிய சட்டபுலமையை வெளிபடுத்தும் விதமாக அந்த அப்பாவி பெண்ணுக்கு பதிவு அஞ்சல் (Register Post) மூலம் விவாகாரத்து அனுப்பியுள்ளனர்.

இஸ்லாம் பெண்ணுக்கு உரிமைகளை வாரி வழங்கி இருப்பதாக கூறுவர்கள் கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இருப்பதற்கு நேர்மையாக பதில் கூறவேண்டும்.

1. இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு சுதந்திரம் வழங்கி இருப்பதாக கூறுகிறிர்களே….பெண்ணை போகப் பொருளாக பயன்படுத்திவிட்டு நினைத்தால் விவகாரத்து செய்யும் ஆணின் இந்த வக்கிர மனம் ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் இல்லையா?

2. கடிதம், தொலைபேசி மற்றும் வேரொறு சாட்சியும் இல்லாமல் விவாகாரத்து செய்யும் இந்த நடைமுறைகள் இஸ்லாத்தை தவிர, வேறெந்த மதத்திலும் இந்த கொடுமை இல்லையே… எங்கே இருக்கிறது இஸ்லாத்தில் பெண்ணுரிமை? பெண்ணுரிமை என்பதை “மைக்ரோஸ்கோப்” வைத்து கண்டுபிடித்து இஸ்லாமிய அறிஞர்கள் அறியத்தர வேண்டுகிறோம்.

3. முத்தலாக்கையும் ஒரே தடவையில் கூறக்கூடாது என்று வாய்கிழிய பேசும் தவ்ஹீத் ஜமாத்தினர், தன்னுடைய உறுப்பினர்க்கு காட்டியுள்ள வழி முத்தலாக்கையும் ஒரே தடவையில் அதுவும் பதிவு அஞ்சலில் அனுப்பும் வழியைத்தான். எங்கள் அமைப்பிலுள்ளவர்கள்தான் அக்மார்க் இஸ்லாமியர்கள் என்று பிதற்றுகிறீர்களே. இதுதான் நீங்கள் கற்றுக்கொடுத்துள்ள தவ்ஹீதுவாதியின் லட்சணமோ?

4. கோபத்தில் கூட ஒரு கணவன் “தலாக், தலாக், தலாக்” என சொல்லிவிட்டால் அந்த தலாக் செல்லும் என்றும், கணவனுடன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அப் பெண்ணை வேறொருவர்க்கு திருமணம் செய்து, பின்பு விவகாரத்து பெற்று மீண்டும் பழைய கணவர்க்கு புதிதாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறீர்களே. இதுதான் எளிய மார்க்கம் இஸ்லாமா?

5. தவ்ஹித் ஜாமத்தை விட்டு பாசித்தை நீக்கிவிட்டதாக கூறினீர்கள்.. ஆனால் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டத்திற்கும், பிரசாரத்திற்கும், ஊரில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கும் பாசித்தான் முக்கிய புள்ளி. தலை இல்லாம வால் ஆடமுடியுமா? ஆணாதிக்கவாதிகள் இல்லாமல் இஸ்லாமோ அல்லது தவ்ஹித் ஜமாத்தோ நிலைத்து இருக்கமுடியுமா?

6. கந்துரி விழாக்களை (தர்கா நிகழ்ச்சிகள்) தடை செய்ய கூறும் தவ்ஹித் ஜாமத், பாசித் தனது இரண்டாவது மனைவியை அருகில் உள்ள கோட்டைபட்டினம் மகான் ராவுத்தர் அப்பா தர்கா கந்துரி விழாவிற்கு அழைத்து டூர் சென்றரே அதற்கு எந்த ஹதிஸ்லேயாவது விதிவிலக்கு உள்ளதா? (முதல் மனைவி பாசித்திற்கு பிடிக்காமல் போனதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் மனைவி தர்காவிற்கு செல்கிறார் என்பதுதான்)

சரி விஷயத்திற்கு வருவோம் கடிதம், தொலைபேசி மூலம் விவகாரத்து செய்தால் செல்லுமா? செல்லும் என்றால் இஸ்லாமிய மதம் பெண்ணுக்கு என்னதான் உரிமைகள் வழங்கி இருந்தாலும் அது தலையில்லா முண்டத்திற்கு சமம் தானே? பெண்களை போகப்பொருளாக பயன்படுத்த உரிமை வழங்கி இருக்கும் மதம் தான் இஸ்லாமா? அதன் விளைவுதான் பாசித் போன்றவர்களா?. ஆனாலும் உள்ளூர் ஜமாத் அவர் அனுப்பிய தலாக் கடிதத்தை புறக்கணித்ததுடன் கண்டித்தும் உள்ளனர்.

பெண்கள் தங்களுக்கான விடுதலை மற்றும் பிரச்சனைகளுக்கான தீர்வை இந்த ஆணாதிக்கவாதிகளிடம் கிஞ்சித்தும் தேட முடியாது. மாறாக ஆணாதிக்கவாதிகளின் தோலை உரித்து தங்களுக்கான உரிமையை நிலைநாட்ட சமூக மாற்றத்திற்காக போரடும் புரட்சிகர அமைப்புகளில் இருந்துதான் பெறமுடியும். இதனையே கடிதம் மூலம் விவாகாரத்து செய்து இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகள் நமக்கு திமிருடன் அறிவித்து இருக்கிறார்கள்.

இனி இஸ்லாமிய பெண்கள் அந்த ஆணாதிக்கவாதிகளின் நடைமுறைகளை புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலம் மட்டுமே இஸ்லாமிய ஆணாதிக்கவாதிகளின் கொட்டத்தை ஒடுக்கமுடியும்.

 ___________________________________________________

– ஜமால்

___________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

_________________________________________________

புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்!

18

ஐரோப்பாஉழைக்கும் மக்களின் போராட்டங்களால் ஐரோப்பா கண்டத்திலுள்ள கிரீஸ் நாடு மீண்டும் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளது. கிரேக்க நாட்டில் கடந்த பிப்ரவரி 12 அன்று நாடாளுமன்றத்தின் முன் நடந்த போராட்டத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் பங்கேற்று அரசின் சமூகச் செலவினக் குறைப்புத் திட்டத்துக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியுள்ளனர்.

தீராத நிதி நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையில் இருந்த  கிரீஸ் நாட்டின் நெருக்கடிக்கு,  நலத்திட்டங்கள்  மானிய வெட்டு முதலான பொருளாதாரத் தாக்குதல்களையே  ஐரோப்பிய ஆணைக்குழு, ஐரோப்பிய மத்திய வங்கி, சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) ஆகிய மும்மூர்த்திகள் தீர்வாக முன்வைக்கின்றனர். இதனைச் செயல்படுத்தாவிட்டால் நாடு திவாலாகி பொருளாதாரப் பேரழிவு ஏற்படும் என்று நிர்ப்பந்தமாக இதனைத் திணித்து வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திணிக்கப்பட்ட இத்தகைய நெருக்கடிக்கான தீர்வுத் திட்டங்கள் அனைத்தும் மிகப்பெரிய மோசடி என்பதையும், வறுமையும் வேலையின்மையும்  துயரமும் தீவிரமாகிவிட்டதையும் தற்போதையை நிலைமேகளே நிரூபித்துக்  காட்டுகின்றன. தனியார் துறையில் 20 சதவீத அளவிற்கும், பொதுத்துறையில் 50 சதவீத அளவிற்கும் ஊதியங்கள் குறைந்துள்ளன. கடந்த ஆண்டில் பொருளாதாரம் 7 சதவீத அளவுக்கும், தொழிற்துறை உற்பத்தி 16 சதவீத அளவுக்கும் வீழ்ச்சியடைந்துள்ளது. மதிப்புக் கூட்டு வரி உயர்வால் ஒரு லட்சம் சிறு மற்றும் சில்லறை வர்த்தக நிறுவனங்கள் திவாலாகிவிட்டன.

இத்தனையும் போதாதென்று, கடந்த பிப்ரவரியில் கொண்டுவரப்பட்ட புதிய சமூகச் செலவின வெட்டுத் திட்டத்தின்படி, 2015இல் இன்னும் கூடுதலாக ஒன்றரை லட்சம் அரசுத்துறை தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்படவுள்ளனர். “ஒரு முழம் கயிறா, அல்லது ஒரு துளி விஷமா என்கிற வெவ்வேறு வடிவிலான மரணத்துக்கு இடையில் ஏதாவதொன்றைத் தேர்ந்தெடுக்குமாறு ஆட்சியாளர்கள் எங்களைத் தள்ளுகின்றனர்; இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று இத்தாக்குதலை எதிர்த்து கிரீஸ் மக்கள் தொடர்ந்து போராடுகின்றனர்.

கிரீஸ் நாட்டு உழைக்கும் மக்கள் தங்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டால், அது ஐரோப்பாவிலுள்ள பிற நாடுகளிலுள்ள உழைக்கும் மக்களுக்குப் பெரும் உத்வேகத்தை அளித்துவிடும் என்று இந்த ஒன்றியத்தின் செல்வாக்கு மிக்க நாடுகளான ஜெர்மனியும் பிரான்சும் அஞ்சுகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோவின் மதிப்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, விரைவாக  கிரீசை நெருக்கடியிலிருந்து மீட்பது என்ற பெயரில் மானியவெட்டுகளைத் தீவிரமாக்குமாறு நிர்பந்தித்து,  கிரீசை தங்களது மேலாதிக்கத் திட்டங்களுக்கான சோதனைக் கூடமாகப் பயன்படுத்தி வருகின்றன.

ஐரோப்பா26 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாடு மட்டும்தான் நெருக்கடியில் சிக்கி திவாலாகும் விளிம்பில் இருப்பதாகவும், அதனைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் முதலாளித்துவ உலகம் சித்தரித்து வந்தது. ஆனால், இன்று பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் கிரீசின் கதியை அடைந்து குடிமுழுகிக் கொண்டிருக்கின்றன என்பதை முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே வேறுவழியின்றி இப்போது ஒப்புக் கொள்கின்றனர்.  தான் பட்டகடனைத் திருப்பிக் கொடுக்கும் ஆற்றலில்  “ஏஏஏ” என்ற மிக உயர் தரத்தில் இருந்த உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, கடந்த 2011 ஆகஸ்டில் அத்தகுதியை இழந்து விட்டது என்று ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீடு நிறுவனம் அறிவித்தது. மற்றொரு பொருளாதார வல்லரசான ஜப்பானும் அத்தகுதியை இழந்து நீண்டகாலமாகிவிட்டது. எஞ்சியிருந்த ஐரோப்பிய ஒன்றியமும் இன்று அந்த நிலைக்குத் தள்ளப்பட்டு முழுகிக் கொண்டிருக்கிறது.

ஸ்டாண்டர்டு அண்டு புவர் என்ற தர மதிப்பீட்டு நிறுவனம் கடந்த கடந்த ஜனவரி 12 இல் பிரான்ஸ், ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 9 நாடுகள் கடனைத் திருப்பிச் செலுத்தும் ஆற்றலை இழந்துவிட்டன என்றும், தற்போதைய நிலையில்  ஜெர்மனி, லக்சம்பர்க், பின்லாந்து, நெதர்லாந்து ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே ஓரளவுக்கு தமது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலைக் கொண்டுள்ளதாகவும், இந்நாடுகள் உதவினால்தான் ஐரோப்பிய பொருளாதாரத்தையும் யூரோ நாணயத்தையும் காப்பாற்ற முடியும் என்றும் அந்நிறுவனம்  அறிவித்துள்ளது.

தங்களது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான ஆற்றலை 9 நாடுகள் இழந்துவிட்டதால், “ஏஏஏ” தரத்தில் நீடித்து வந்த “ஐரோப்பிய நிதிச் சீரமைப்பு ஏற்பாடு’’ (EFSF) என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் திவாலான நாடுகளை மீட்பதற்கான நிதியமைப்பும் இப்போது அதன் தரத்தை இழக்கத் தொடங்கியுள்ளது என்று அடுத்த நான்கு நாட்களில் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. நெருக்கடியில் சிக்கியுள்ள நாடுகள் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் மக்களின் நுகர்வு குறைந்துள்ளதோடு, அரசின் வரிவருவாயும் குறைந்துவிட்டது என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தின் பல நாடுகளில் உண்மைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

ஐரோப்பாஏற்கெனவே அயர்லாந்தில் ஏற்றுமதி உபரி மூலம் நெருக்கடியைச் சமாளித்துவிட்டதாக ஏகாதிபத்தியவாதிகள் சித்தரித்தனர். ஆனால் நெருக்கடிக்கு முன்பிருந்த வேலையில்லாத் திண்டாட்டத்தை விட, இப்போது அந்நாட்டில் வேலையின்மை தீவிரமாகிவிட்டது. இதர நாடுகள் இறக்குமதி செய்தால்தான் அந்நாடு தனது நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க முடியும் என்ற நிலையில் இருப்பதால், அது எந்நேரமும் திவாலாகும் நிலையில் உள்ளது. கிரீசும் அயர்லாந்தும் இரட்டை இலக்க பணவீக்கத்தால் தவிக்கின்றன. ஸ்பெயின் நாடு 23 சதவீத வேலையின்மையால் தத்தளிக்கிறது.

ஏறத்தாழ அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசாங்கக் கடன் பத்திரங்களும் இன்று மதிப்பிழந்து போய்விட்டன. ஐரோப்பிய ஒன்றியத்தில் செல்வாக்கு மிக்க இன்னொரு நாடான பிரிட்டன், 1930களில் நிலவிய பெருமந்த நிலைமையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பிரிட்டனில், 1996ஆம் ஆண்டுக்குப் பிறகு 2011ஆம் ஆண்டில்தான் மிக அதிகமாக 20.64 லட்சம் பேர் வேலையின்றித் தவிப்பதாகவும், இது 2012இல் 30 லட்சமாக உயரும் என்றும் அரசின் புள்ளிவிவரம் கூறுகிறது.

கூடுதல் விலைக்கு கடன்களை வாங்கி, தமது நாடுகளின் திவாலாகும் நிலையிலுள்ள வங்கிகளை மீட்குமாறு நெருக்கடியில் சிக்கி திவாலாகும் நிலையிலுள்ள நாடுகளிடம் ஜெர்மனியும் பிரான்சும்  நிர்ப்பந்திக்கின்றன. இதன் விளைவாக, நிதித்துறையில் கடுமையான சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டியிருக்கும்;  இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைந்து அரசின் வரி வருவாயும் குறையும் என்பதால் என்ன செய்வது என்று புரியாமல் இந்நாடுகளின் வங்கிகள் தடுமாறுகின்றன.

மொத்தத்தில் அமெரிக்கா, ஜப்பான் மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியமும் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தலைவர்கள் யூரோ நாணயத்தைக் காப்பாற்றுவதற்காக கடந்த டிசம்பர் 9 அன்று பிரஸ்ஸெல்ஸ் நகரில் நடத்திய உச்சி மாநாடும் தோல்வியில் முடிந்துள்ளதால், ஐரோப்பிய ஒன்றியமே சிதைந்து சின்னாபின்னமாகிப் போகும் சூழல்தான் நிலவுகிறது. பெருகிவரும் நெருக்கடிகள் மீண்டுமொரு உலகப் பொருளாதார நெருக்கடி முற்றுவதற்கான அறிகுறிகளைத்தான் காட்டுகிறதேயொழிய, தீர்வதற்கான வாய்ப்புகளோ வழிகளோ தென்படவேயில்லை.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம்! இந்தியாவின் அடிமைத்தனம்!!

33

மீனவர் கொலைகேரளத்தின் கொல்லம் மீன்பிடி துறைமுகம் அருகே, இந்திய கடல் எல்லைக்குட்பட்ட அரபிக் கடல்பகுதியில் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியன்று மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, “என்ரிகா லாக்ஸி” என்ற இத்தாலி நாட்டு எண்ணெய்ச் சரக்குக் கப்பலில் இருந்த பாதுகாப்புப் படையினர் கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த ஜெலஸ்டின், அஜீஸ்பிங்கு ஆகிய மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இக்கொடுஞ்செயலுக்காக கொலைகாரர்களைக் கைது செய்து தண்டிக்கவும், கொல்லப்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு அக்கப்பல் நிர்வாகத்திடம் நிவாரணம் பெறவும், மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்காத இந்திய அரசு, ஏகாதிபத்தியவாதிகளின் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை மீண்டுமொருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளது.

இந்தியக் கடல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இத்துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதால், கடலோரக் காவற்படை அந்தக் கப்பலை கொச்சி துறைமுகத்துக்குக் கொண்டுவந்து, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களைக் கைது செய்ய முயன்ற போது, எச்சரிக்கை செய்தபோதிலும் விலகிச் செல்லாமல் தங்கள் கப்பலை நோக்கி படகு வந்ததால், கடற்கொள்ளையர்கள் என்று கருதி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அக்கப்பலின் தலைமை மாலுமி நியாயவாதம் பேசி கைது நடவடிக்கையைத் தட்டிக் கழித்துள்ளார்.  ஆனால், கப்பலிலிருந்து பைனாகுலர் மூலம் பார்த்தாலே படகில் வருவது மீனவர்களா, அல்லது கடற்கொள்ளையர்களா என்பது தெரிந்துவிடும்.

மேலும், இது எச்சரிக்கைக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு அல்ல என்பதை மீனவர்களின் படகில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டு பாய்ந்திருப்பதே நிரூபித்துக் காட்டுகிறது. சர்வதேசக் கடல் எல்லையில்தான் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாகப் புளுகி, இந்தியச் சட்டத்துக்கு நாங்கள் கட்டுப்பட முடியாது என்று அந்த இத்தாலிக் கப்பலின் தலைமை மாலுமி திமிராகக் கூறியுள்ளார். இவற்றை  நிராகரித்து உடனடியாகக் குற்றவாளிகளைக் கைது செய்வதற்குப் பதிலாக, இந்திய அரசு பணிந்து போய் அக்கப்பலின் பாதுகாப்புப் படைச் சிப்பாய்கள் இருவர் மீது முதல் தகவல் அறிக்கை மட்டும் பதிவு செய்தது.

இத்தாலிய தூதரக அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 4 நாட்களுக்குப் பின்னர்தான், கொலைகாரர்களான மசிமிலியானோ லதோர் மற்றும் சல்வடோர் கிரோனே என்ற இரண்டு பாதுகாப்புப்படை சிப்பாய்களைச் சரணடையுமாறு கேரள போலீசு கோரியது. ஆனாலும்,கெடு முடிந்து 8 மணிநேரத்துக்குப் பின்னர்தான் அவர்களை அக்கப்பலின் அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தும்போது இத்தாலிய தூதரக தலைமை அதிகாரியும் பாதுகாப்பு அதிகாரியும் உடன் இருப்பதற்கும் இந்தியா ஒப்புக் கொண்டது. கொச்சி அருகே மத்திய தொழிற்பாதுகாப்புப் படையின் விருந்தினர் மாளிகையில் வைத்து ராஜமரியாதையுடன் ‘விசாரணை’ நடந்துள்ளது. அதன் பின்னரே அவர்கள் கொல்லம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி டெல்லி வந்த இத்தாலிய வெளியுறவுத்துறை அமைச்சர், இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தக உறவு இந்த விவகாரத்தால் பாதிக்கப்படக் கூடாது என்றும், அந்நிய மண்ணில் எங்கள் நாட்டினர் கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்டால், இத்தாலிய சட்டப்படிதான் விசாரிக்க முடியும் என்றும் எச்சரித்தார். இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள் முதலானவற்றைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தவும் இத்தாலி ஒத்துழைக்கவில்லை. அக்கப்பல் அதிகாரிகள் அவற்றை ஒரு அறையில் வைத்துப் பூட்டி, இத்தாலிய அதிகாரிகளிடம் அல்லது சர்வதேசிய புலனாய்வு அமைப்பினரிடம் மட்டுமே அவற்றை ஒப்படைக்க முடியும் என்று திமிராகக் கூறிவிட்டனர். நீண்ட இழுபறிக்குப் பின்னரே, இந்திய மற்றும் இத்தாலிய அதிகாரிகள் சேர்ந்து விசாரணைக்காக அத்துப்பாக்கிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டால், உடனடியாகக் கைது செய்யும் இந்திய அரசு, ஏகாதிபத்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் கொலைக்குற்றங்களில் ஈடுபட்டால்கூட கைது செய்து தண்டிக்க முன்வராமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது. இந்திய சட்டப்படியே இச்சம்பவத்துக்குத் தீர்வு காணப்படும் என்று இந்திய அரசு அறிவித்துள்ள போதிலும், அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் அடிமையை விஞ்சும் விசுவாசத்துடன் இந்த விவகாரத்தை நீர்த்துப் போக வைக்கும் திசையில்தான் உள்ளன.

அரபிக்கடல் பகுதியில் இதுவரை சோமாலியக் கடற்கொள்ளையர்களின் தாக்குதலே நடந்திருந்தாத நிலையில், சோமாலியக் கொள்ளையர்கள் என்று தவறாகக் கணித்து இத்தாலிய வணிகக் கப்பலின் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும்,  ஒருவிதப் பதற்றத்தில்தான் இத்துப்பாக்கிச் சூடு நடந்திருக்குமேயொழிய, சிங்கள ராணுவத்தைப் போல வெறிகொண்டு நிகழ்த்தியிருக்க வாய்ப்பில்லை என்றும் இந்திய ஆட்சியாளர்களின் நோக்கத்துக்கு ஏற்ப  தினமணி தலையங்கம் எழுதுகிறது.  துனா மீன்களுக்கு மிகப்பெரிய வலை விரித்திருக்கும் மீனவர்கள், வர்த்தகக் கப்பல்கள் அந்த வழியில் வரும்போது அவற்றால் தங்கள் வலைகள் சேதமடையும் என்று பயந்து, மீன்பிடி படகுகளைக் குறுக்கே கொண்டுபோய் நிறுத்தி அந்தப் பெரிய கப்பல்களை விலகிப் போகச் செய்வார்கள் என்பதால், ஒரு மீன்பிடிப் படகு தங்களை நோக்கி முன்னேறி வருகிற நிலையில், இத்தாலியக் கப்பலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கவும் வாய்ப்புள்ளது என்று இத்தாலியக் கப்பலின் தாக்குதலுக்கு வக்காலத்து வாங்கி, மீனவர்களின் மீது பழியைப் போடுகிறது.

மீனவர் கொலைதற்போதைய இத்தாலியக் கப்பல் விவகாரம் மட்டுமல்ல; அதற்கு முன்பாக நடந்துள்ள ஏராளமான விவகாரங்களிலும் இந்திய அரசின் அடிமைத்தனமும் ஏகாதிபத்திய விசுவாசமும் நாடெங்கும் நாறிப் போயுள்ளது. 1995 டிசம்பரில் மே.வங்கத்தின் புருலியாவில் இரகசியாக ஆயுதங்களை விமானம் மூலம் இறக்கிய சர்வதேச கிரிமினல் குற்றக் கும்பலைச் சேர்ந்த பிரிட்டனின் பீட்டர் பிளீச் மற்றும் 5 லாட்விய நாட்டினர் கைது செய்யப்பட்ட பின்னர்,  ரஷ்ய வல்லரசு மற்றும் பிரிட்டனின் நிர்ப்பந்தங்களால் இக்குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டனர்.

இந்திய முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாம், முன்னாள் இராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், இந்தியத் தூதரகப் பெண் அதிகாரி உள்ளிட்ட பல பிரபலமான இந்தியர்கள் அமெரிக்க விமான நிலையங்களில் நிர்வாணப்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்டபோதும்,  அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் கிரிமினல்களைப் போல கண்காணிக்கப்பட்டபோதும்,  இந்த அவமதிப்புகளுக்கு எதிராக இந்தியா வாய் திறக்கவில்லை. இந்திய அரசு, தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை வெளிக்காட்டியிருப்பதையே, இத்தாலியக் கப்பல் விவகாரம் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

___________________________________________

புதிய ஜனநாயகம், மார்ச் – 2012

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அட உங்களைத்தான் சொல்வது கேட்கிறதா?

3

தொலைக்காட்சி ”நாதஸ்வரத்தை”
தொடரும் பெண்ணே,
உலகமயம் உன் நிம்மதிக்கு
சங்கூதும் சத்தம் உனக்குக் கேட்கிறதா?

”செல்லமே”
ரொம்ப நாளைக்கு ஓடாது,
வெறித்துப் பார்த்து, பார்த்து
உனக்கு கண் ஆபரேசன்
ராடன் ராதிகாவுக்கு கலெக்சன்,                                                    ‘
முண்டமே’ என பெண்களை
வெட்டிச் சிதைக்கும் முதலாளித்துவ
உண்மை நிகழ்ச்சிகளை
கொஞ்சம் திரும்பிப்பார்!

சுய உதவிக்குழுக்கள்
நம் போராட்ட உணர்வை அரிக்கும்
முதலாளித்துவப் புழுக்கள்.
வங்கிக் கடனை தூக்கி எறி,
உன் வர்க்க கடனை தீர்ப்பதற்கு பார்….

காணுமிடமெல்லாம் கைத்தோலுரியும்
பெண்களின் உழைப்பு – உங்கள்
கண்கள் உறுத்தலையோ?

ஆணென்று மீசை முறுக்கும்
அன்பான உழைப்போரே,
உன்னையொத்த பெண்களின் கூலியுழைப்பு
உனக்கும் சேர்த்து
விடுதலையை வேண்டும் குரல்
உன் செவிகளுக்கு கேட்கலையோ?

பங்களாக்களின் பத்துப்பாத்திரத்தில்
வெளுக்கும் துணிகளில், தரைகளில்
உரிந்து பளிச்சிடுகிறது
பெண்ணின் தோல்!
பெட்ரோல் பங்குகளில்
பிழியப்பட்டு வழிகிறது
பெண்ணின் வியர்வை!

பன்னாட்டுக் கம்பெனி
கோக் – பெப்சி பாட்டில்களில்
கழுவப்படுகிறது
பெண்ணின் ரத்தம்!

கட்டிட வேலையில், அரிசி ஆலையில்
கான்வென்ட் பள்ளியில், கணினித் துறையில்
ஒவ்வொரு பணியிலும் உருவப்படுகிறது
பெண்ணின் நரம்புகள்!

பணிச் சுரண்டல், பாலியல் சுரண்டல்
காதல் சுரண்டல், குடும்பச் சுரண்டல்… என
பெண்ணைச் சுரண்டி
தின்னும் முதலாளித்துவம்தான், அதன் சிந்தனைதான்

உன்னையும் சுரண்டுகிறது என்பதை உணர்வாயா ஆண்மகனே!

பெண்களை உரசுவதையே
பெரும் சாதனையாய்க் கருதும் நண்பா!
உன்னை மொத்தமும் வாட்டுகிற,
முதலாளித்துவத்தோடு உரச ‘தில்’ இருந்தால்
வா, பெண்கள் அமைப்புப் பக்கம்!

சொந்த வர்க்கத்தை,
மனைவியாய், மகளாய், சகோதரியாய்
வேலைக்காரியாய்
சுரண்டி சுகம் கண்டது போதும்,
‘ஆம்பிளை’ சிங்கங்களே! தயங்காமல்
உழைக்கும் வர்க்கமாய் ஒன்று சேர்ந்து
போராட வாரும்…..!

____________________________________________________

துரை. சண்முகம்

____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

32

குருதியில் மலர்ந்த மகளிர் தினம்: மார்ச் 8 திருச்சியில் கூட்டம்!

சமூக விடுதலையே! பெண் விடுதலை!

குருதியில் மலர்ந்த அனைத்துலக பெண்கள் தினம்!

அரங்கக் கூட்டம்:
கவிதை, நாடகம், புரட்சிகர கலைநிகழ்ச்சி

நாள்: 8.3.2012, வியாழன்- மாலை 6 மணி
இடம்: கைத்தறி நெசவாளர் கல்யாண மண்டபம்,

தலைமை: தோழர் இந்துமதி, செயலர், பெ.வி.மு, திருச்சி.

சிறப்புரை: ‘மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும்’

– கவிஞர் தோழர் துரை.சண்முகம்
மக்கள் கலை இலக்கியக் கழகம், சென்னை.

‘பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா?’

தோழர் மீனாட்சி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை.

பெ.வி.மு-வின் ‘நவீன அடிமைகள்’ நாடகம், ம.க.இ.க மையக் கலைக்குழுவின்  புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெறும்.

கூட்ட ஏற்பாடு: பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.

__________________________________

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி இரத்தம் சிந்திய நாள்!

அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் பெறவேண்டி போராடச் சொல்லும் பெண்கள் தினம் மார்ச் -8. இந்த உண்மை மறைக்கப்பட்டு, கோலப்போட்டி, சமையல் போட்டி, அழகிப்போட்டி என பெண்களின் சிந்தனை திட்டமிட்டு திசை திருப்பப்பட்டுள்ளது. இன்று காதலர் தினம் போல பெண்களுக்கு ஏதோ ஒரு பரிசு கொடுத்து வாழ்த்துக்கூறுவது என்று நிறுவனமயப்படுத்தப் பட்டிருக்கிறது.

பெண் வயிற்றில் பிறந்து, பெண்ணால் வளர்க்கப்பட்டு, பெண்ணோடு வாழ்பவர்கள்தான் எனினும், பெண்ணின் துயரங்களையும், விருப்பங்களையும், உணர்வுகளையும் ஆண்கள் தெரிந்து கொள்வதில்லை. தெரிந்து கொள்ள இந்த ஆணாதிக்க சமூகம் விரும்புவதுமில்லை.

இந்த நிலையை மாற்றி பெண்ணுரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் -8, 1857இல் நியூயார்க்கில் உழைக்கும் வர்க்கப் பெண்களின் அமைப்புகள் தோன்றி போராட்டங்களை முன்னெடுத்தன. அம்மாநாட்டில் இயற்றப்பட்ட புரட்சிகர தீர்மானங்களும், சட்டத்திருத்தங்கள் மூலமான உரிமைகளையும் முன் வைத்து போராட்டங்கள் நடத்தப்பட்டது. உழைக்கும் பெண்கள் இரத்தம் சிந்தி வென்றெடுத்த இந்த உரிமைகள்தான் இன்று பல நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப் பட்டிருக்கின்றன. ஆனலும் இன்றைய நம் பெண்களுக்கு போராடி வென்ற பெண்ணிய உரிமைகள் இல்லாமல் போய்விட்டது ஏன்?

பொருளாதார விடுதலைதான் பெண்விடுதலையின் முதல்படி. அப்படிப் பார்த்தால் முன்னெப்போதைக் காட்டிலும் பெண்கள் படிப்பதும், வேலைக்குப் போவதும் அதிகரித்திருக்கிறது. இந்தப் பொருளாதார சுதந்திரம் ஒரு பெண் என்ற முறையில் கூடுதல் சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியுள்ளதா? அல்லது பெண்ண்டிமைத்தனம் புதிய வடிவங்களில் இவர்கள் மீது திணிக்கப்பட்டிருக்கிறதா? இந்த அடிமைத்தனத்தை இன்றைய தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கின்ற மறுகாலனியாக்கச்சூழலில் பெண்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள்? என்ற கேள்விகளுக்கு விடை தேடுவோரையும், பெண்கள் விடுதலையிலும் சமூகவிடுதலையிலும் அக்கறையுள்ள அனைவரையும் அரங்குக்கூட்டத்திற்கு அழைக்கிறோம்.

பெண்கள் விடுதலை முன்னணி

தொடர்புக்கு: தோழர் நிர்மலா, பெ.வி.மு, திருச்சி. செல் 8012421471

_______________________________________________________________

– பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி

_______________________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

புதிய ஜனநாயகம் – மார்ச் 2012 மின்னிதழ் (PDF) டவுண்லோட்!

12

புதிய ஜனநாயகம்

புதிய ஜனநாயகம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள்!

  1. “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – புரட்சிகர அமைப்புகள் நெல்லை மற்றும் கூடங்குளத்தில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி!
  2. கூடங்குளம்: மக்கள் போராட்டத்தை முறியடிக்க மத்திய – மாநில அரசுகளில் சதி!
  3. மின்வெட்டு: இருளில் மறைந்துள்ள உண்மைகள்!
  4. குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
  5. ஹரி மசூதி படுகொலை வழக்கு: சி.பி.ஐ-க்குள் ஒளிந்திருக்கும் காவித்தனம்!
  6. யேனாம் படுகொலை: முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிராக….
  7. ‘இந்துக்களே’, மரத்துப் போனதா உங்கள் மனசாட்சி?
  8. காஷ்மீர்: அரசுப் படைகளின் கொலைவெறி
  9. “கூடங்குளம் அணு உலையை இழுத்து மூடு!” – மக்களின் பேராதரவோடு தொடரும் பிரச்சார இயக்கம்
  10. “ஆபத்தான அணுஉலை வேண்டாம்! அனைவருக்கும் தடையற்ற மின்சாரம் வேண்டும்” – எதிரிகளை இனங்காட்டி….துரோகிகளைத் தோலுரித்து போராட அறைகூவிய பொதுக்கூட்டம்!
  11. தீண்டாமையின் புதிய அவதாரம்
  12. மீனவர் சுட்டுக்கொலை: இத்தாலியின் திமிர்த்தனம், இந்தியாவின் அடிமைத்தனம்!
  13. டெல்லி கார் குண்டு வெடிப்பு: பாவம் ஓரிடம், பழி ஓரிடமா?
  14. புதை சேற்றில் சிக்கியது ஐரோப்பிய ஒன்றியம்
  15. ஜெயாவின் நிர்வாகத்திறன்: கலைகிறது பார்ப்பன பம்மாத்து!

புதிய ஜனநாயகம் மார்ச் 2012 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 3 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து சேவ் லிங்க்  ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் (RIGHT CLICK LINK –  SAVE TARGET AS or SAVE LINK AS)

__________________________________

வினவுடன் இணையுங்கள்

ஆகவே தோழர்களே……!

11
கார்க்கியின் தாய்
மக்சிம் கார்க்கி

ரசியப் புரட்சி முடிந்து 95-ஆம் ஆண்டு தொடங்குகிறது. பொதுவுடமைக் கட்சிகள் மட்டும் வரலாற்றின் இவ்வொளியை ஏந்திச் செல்கின்றன. மேல்நிலை வல்லரசுகளின் கிடுக்கிப் பிடியில் மாட்டிக் கொண்டுள்ள உலகில் சோசலிச நாடு என்று எதுவும் இல்லை. மனித குலத்தின் இருளகற்ற சிவப்புச் சூரியன் தோன்றுவானா? சுரண்டலற்ற பொதுவுடமை சமூகம் என்பது கனவா?

மக்கள் நம் பக்கம் வருவார்களா? தலை கீழாக நின்று பார்த்தாலும் மக்களை திருத்த முடியவில்லையே? கார்க்கியிடம் கேட்டோம்.

ரசியப் புரட்சியின் பின் பாட்டாளி வர்க்கத்துக்காக இலக்கியத்தின் துணை கொண்டு போராடியவர், தோழமையுடன் சொன்னார்.

_________________________________________

மக்சிம் - கார்க்கி
கார்க்கி

ன் வாலிபப் பருவத்தில் வாழ்க்கையைப் பற்றி என்றைக்கும் குறைபட்டுக் கொண்டதாக எனக்கு நினைவில்லை; என்னைச் சூழ்ந்து வாழ்ந்த மக்களுக்கோ குறைபட்டுக் கொள்வதிலே ஒரு பிரியம் இருந்தது. ஆனால் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதில் விருப்பமில்லாமலிருப்பதை அவர்கள் மறைப்பதற்காகத்தான், வஞ்சகமாக இப்படிச் செய்கிறார்கள் என்று உணர்ந்து கொண்டதும், அவர்களைக் காப்பியடிப்பதைத் தவிர்க்க நான் முயன்றேன்.

அதிகமாகக் குறைபட்டுக் கொள்கிறவர்கள் தான் எதையும் எதிர்த்து சமாளிக்கத் திறனற்றிருக்கிறார்கள் என்றும், பொதுவாகவே மற்றவர்களின் மேல் எல்லாவற்றையும் போட்டுவிட்டு தாம் சுகமாக இருக்கப் பார்க்கிறவர்கள் என்றும் வெகு சீக்கிரத்திலேயே கண்டு கொண்டேன்.

எனக்குப் புரியாத விஷயங்கள் நிறைய இருந்தன என்றாலும், இந்த மாதிரி மனிதர்களுக்கு ”சகஜமான” வாழ்க்கையை முழுக்க விட்டுக் தொலைப்பதற்கு முடியவில்லை என்று பட்டது. குட்டி பூர்ஷுவா என்ற நாடகத்தில் வருகிற குடிகாரப் பாடகன் சொல்கிற மாதிரி, இவர்கள் ”அறையிலிருக்கிற மேஜை நாற்காலிகளை மாற்றி மாற்றி வைத்து ஒழுங்கு செய்வது” தவிர வேறொன்றும் செய்யத் திறனில்லாதவர்களே.

வாழ்க்கையில் அழகோ பொருளோ எதுவும் இருக்கவில்லை. சில்லிட்டுப்போன ஒட்டிக் கொள்கிற அர்த்தமின்மைதான் இருந்தது. இந்த நிலை எல்லோருக்கும் பழக்கமாகி விட்டிருந்ததால் யாருமே அதன் வறுமையை துயரச் சாயலை, ஆழமின்மையைக் கவனிக்கவில்லை.

என்னைச் சுற்றி எங்கு பார்த்தாலும் கருமித்தனமான சின்னப் புத்தி படைத்த மக்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் பேராசை, பகைமை, கெட்ட எண்ணம், சண்டை சச்சரவுகள், வழக்காடல்கள் எல்லாம் எதிலிருந்து கிளம்பின தெரியுமா?

தனது கோழிக் குஞ்சின் காலை அண்டை வீட்டுக்காரரின் பிள்ளை ஒடித்து விட்டான், அல்லது சன்னல் கண்ணாடியை உடைத்து விட்டான், அல்லது ஒரு இனிப்புப் பண்டம் கெட்டுப்போய் விட்டது, முட்டைக்கோஸ்- சூப் அவசியத்துக்கு மேலாக வெந்துவிட்டது, அல்லது பால் கெட்டுவிட்டது என்ற காரணங்களுக்காக, ஒரு தாத்தல் சர்க்கரைக்கோ ஒரு கஜம் துணிக்கோ கடைக்காரன் கூடுதலாக ஒரு தம்பிடி வாங்கி விட்டானே என்பதற்காக, அவர்கள் மணிக்கணக்காக உட்கார்ந்து வருந்த முடியும்.

அண்டை வீட்டுக்கரனுக்கு ஏதாவது ஒரு சிறு துன்பம் ஏற்ப்பட்டாலும் அவர்களுக்கு நிஜமான மகிழ்ச்சி பிறந்துவிடும்; அனுதாபப்படுவதாகப் பாசாங்கு பண்ணி அதை மறைப்பார்கள். பிலிஸ்டைன் (அற்பவாதம்) கனவுகணும் பரலோகத்தில் நான் நன்றாகத் தெரிந்து கொண்டேன்; அதுதான் மக்களிடையை அற்பத்தனமான காசாசை பிடித்த பகைமையை உண்டாக்கி வந்தது.

சட்டிப்பானைகள், கோழி, வாத்துக்கள், முட்டைக்கோஸ், காய்கறிகள், தோசை, அப்பங்கள், மாதாகோவில் விஜயங்கள், ஜனன மரணச் சடங்குகள், மூக்குப் பிடிக்கத் தீனி, பன்றித்தனமான நடத்தை- இதுதான் நான் வளர்ந்த சூழலைச் சேர்ந்த மக்களின் வாழ்க்கையின் உள்ளடக்கம்.

அந்த அருவருக்கத்தக்க வாழ்க்கை எனக்கு சமயங்களில் மறந்து போகிற அளவுக்கு மயக்கத்தை உண்டாக்கிவிடும்.

ஆம், தோழர்களே! வாழ்க்கையின் பண்பற்ற தன்மையும் கொடுமையும் விளைவிக்கிற பீதியை நான் வெகுவாக அனுபவித்திருக்கிறேன். ஒரு சமயம் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்குக் கூடச் சென்றிருக்கிறேன். அதைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் சுடுகிறமாதிரி ஒரு வெட்கமும் என் மீது எனக்கே ஒரு வெறுப்பும் உண்டாகிறது.

அந்தப் பீதியை நான் வென்று விலக்கியது எப்போது தெரியுமா? கெட்ட குணத்தை விட அதிகமாக மக்களிடம் குடிகொண்டிருப்பது அறியாமைதான் என்று நான் உணர்ந்து கொண்ட போதுதான்.

என்னைப் பயமுறுத்தி வந்தது அவர்களுமல்ல என் வாழ்க்கையுமல்ல; சமூகத்தைப் பற்றியும் மற்றவற்றைப் பற்றியும் என்னிடமிருந்த அறியாமை, வாழ்க்கையின் எதிரே தற்காத்துக் கொள்ளத் தெரியாத நிலை, கையறுந்த நிலை, இவைதான் எனக்குப் பயத்தையளித்து வந்தன என்று தெரிந்து கொண்டபோதுதான்.

ஆம், அதுதான் உண்மை விஷயம். இதைப்பற்றி நீங்களும் நன்றாக யோசிக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். ஏனென்றால், உங்களில் சில பேர் முனகுவதற்குக் காரணம் உங்களுடைய தற்காப்பற்ற நிலை பற்றிய உணர்வும், மனிதனை உள்ளும் புறமும் ஒடுக்கி வதைக்கிறதற்குப் ”பழைய உலகம்” உபயோகிக்கிறதனைத்தையும் எதிர்த்து நிற்பதற்குள்ள திறமையில் நம்பிக்கையின்மையும்தான்.

விஞ்ஞானம், கலை, தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் மனித பலம் சாதித்த, உண்மையிலே மதிப்பும் நிரந்தரமான பயனும் சௌந்தர்யமும் உள்ள, சாதனைகள் அனைத்தும் சில நபர்களால் சிருஷ்டிக்கப்பட்டவை;

அவர்கள் அவற்றை வர்ணனைக்கெட்டாத கஷ்ட நிலைமைகளிலே வேலை செய்துதான் சிருஷ்டித்தனர்; சமுதாயத்தின் ஆழ்ந்த அறியாமைக்கும், கிறிஸ்து மத நிறுவனத்தின் கொடிய பகைமைக்கும், முதலாளி வர்க்கத்தினரின் பேராசைக்கும், கலை- விஞ்ஞானங்களைப் போற்றிப் பேணும் வள்ளல்களின் சபலத்துக்குரிய தேவைகளுக்கும் ஈடுகொடுத்து எதிர்த்த படிதான் சிருஷ்டித்தார்கள்.

இளைஞர்களாகிய நீங்கள் இதை உணர்ந்திருத்தல் வேண்டும். பண்பாட்டைச் சிருஷ்டித்தவர்களில் சாதாரண உழைப்பாளிகள் பலர் இருந்து வந்துள்ளனர் என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்;

உதாரணம், பாரடே என்கிற மகத்தான பொருளியல் விஞ்ஞானியும் புனைவாளர் ஆகிய எடிஸனும். நூல் நூற்கும் யந்திரத்தைப் புனைந்த ஆர்க்கரைட் ஒரு முடிதிருத்தும் தொழிலாளி; கலைச்சித்திர வேலைப்பாடுள்ள மண்பாண்டத் தொழிலைச் சிருஷ்டித்த தலைசிறந்த நபர்களில் பெர்னார்ட் பாலிஸ்ஸி என்பவரும் ஒருவர். அவர் ஒரு கொல்லன்; உலகறிந்த தலை சிறந்த நாடகாசிரியராகிய ஷேக்ஸ்பியர் ஒரு சாதாரண நடிகர்; மோலியேரும் அப்படியேதான்.

மக்கள் எப்படித் தமது ஆற்றல்களை வளர்த்துக் கொள்ள முடிந்தது என்பதற்கு இம்மாதிரி நூற்றுக்கணக்கான உதாரணங்களைத் தரக்கூடும்.

உங்களிடத்திலும் உங்கள் பலத்திலும் நம்பிக்கை கொள்ளும் உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்; இடையூறுகளைச் சமாளிப்பதன் வழியேதான், சித்தத்தை எஃகுபோல் ஆக்கிக் கொள்வதின் வழியே தான் அந்த நம்பிக்கையைப் பெறமுடியும்.

பழைமையின் சின்னத்தனமான இழிந்த பாரம்பரியத்தை உங்களிடமிருந்தும் உங்கள் சூழலிலிருந்தும் அழித்துவிட நீங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால், பிறகு நீங்கள் எப்படி பழைய உலகத்தைத் துறப்பதற்கு (இந்தச் சொற்கள் தொழிலாளர் விடுதலை கீதம் என்று 1875 – லிருந்து இருந்து வரும் ஒரு ருஷ்யப் புரட்சிப் பாடலிலிருந்து எடுக்கப்பட்டவை) சக்தி பெற முடியும்? அந்தப் பாடல் போதிக்கிறபடி நடப்பதற்கு உங்களுக்கு வலிமையும் விருப்பமும் இல்லாவிட்டால் அதை உங்களால் பாட முடியாது.

தன்னைத் தானே வென்றுகொள்வது கூட ஒருவனுக்கு எவ்வளவோ வலுவூட்டிவிடுகிறது. உடற்பயிற்சி ஒருவனுக்கு அதிக ஆரோக்கியமும் தெம்பும் தருகிறது என்று உங்களுக்குத் தெரியும். அதே மாதிரியான பயிற்சியை மனத்திற்கும் சித்தத்துக்கும் தர வேண்டும்.

(‘நான் எவ்வாறு எழுதக் கற்றுக்கொண்டேன்’- மாக்ஸிம் கார்க்கியின் நூலிலிருந்து தொகுக்கப்பட்டது)

________________________________________________

–   புதிய கலாச்சாரம், ஜனவரி – 1997

___________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சந்தை வாழும்வரை ஹிட்லருக்கு மரணமில்லை!

10

1999-ஆம் ஆண்டு ஏப்ரல் 20 அன்று, அமெரிக்கப் பள்ளி ஒன்றில் இரு மாணவர்கள் சக மாணவர்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்றார்கள் என்ற செய்தியை வாசகர்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.  சக மாணவர்களையே வெறியுடன் கொல்லுமளவுக்கு என்ன காரணம்? இப்படுகொலை பற்றிய விவரங்களுடன் அமெரிக்க சமூகத்தினரிடையே ஒரு கருத்துப் பயணம் சென்று வந்தால், அதற்கு விடைகாண முடியும்.

எரிக் ஹாரிஸ் - டைலான் லெபோல்ட்
எரிக் ஹாரிஸ் - டைலான் லெபோல்ட்

படுகொலை நடத்திய எரிக் ஹாரிஸ் (18வயது) தைலான் லெபோல்டு(17வயது) இருவரும் பங்களா, ஆளுக்கொரு கார் என வசதியாக வாழும் மேட்டுக்கடி மாணவர்கள். ஏனைய அமெரிக்க மாணவனைப் போல தினசரி இன்டர்நெட், திரைப் படங்கள், வீடியோ விளையாட்டு, ராக் இசை இவற்றிலேயே பல மணி நேரம் மூழ்கிக் கிடந்தவர்கள்.

இவர்கள் படிக்கும் கொலம்பைன் பள்ளியில் மாணவர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட ஒரு குழுவின் பெயர் டிரன்ஞ்ச் கோட் மாஃபியா (கோட் அணிந்த குண்டர் படை). வேடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட இக்குழுவில் காலப்போக்கில் வெள்ளையின வெறியுடன் புதிய நாசிசக் கருத்துக்கள் பரவ ஆரம்பித்தன. எரிக்கும், தைலானும் அதில் முன்னணி வகித்தனர்*.

வகுப்பு நடவடிக்கைகளிலும் அவை வெளிப்பட்டன. தாம் விரும்பாத மாணவர்களுடன் சில்லறைத் தகறாறுகளில்  ஈடுபட்டனர். ஆங்கில மனப்பாடம், புதுமைத்திறன் வகுப்புகளில் சாத்தானின் நரகம் பற்றிய கவிதையைப் பாடினர். வீடியோ வகுப்பில் தமக்குப் பிடிக்காத விளையாட்டு மாணவர்களைக் கொல்வது போல் படம் பிடித்துச் சமர்ப்பித்தனர். இன்டர் நெட்டில் வெப்சைட் ஆரம்பித்து தமது கொள்கைகளை அறிவித்தனர். இணையத்திலேயே குண்டுகள் தயாரிப்பதையும், கள்ளத் துப்பாக்கிச் சந்தையையும் அறிந்து கொண்டனர்.

பல துப்பாக்கிகள் வாங்கினர். கார் நிறுத்தும அறையில் ‘பைப் குண்டுகள்’ தயாரித்தனர். பள்ளியைத் தகர்க்கும் திட்டத்தைக் கணிப்பொறி உதவியுடன் வடிவமைத்தனர். தம்மை தீவிரக் கலகக்காரர்களாகவும், அடிமைப் படுத்தும் சமூகத்திற்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டுமெனவும், அவமதிக்கும் எவரையும் அழிக்க வேண்டுமெனவும், மொத்த உலகின் (பள்ளியின்) வாழ்வும், சாவும் தங்கள் கையிலிருப்பதாகவும் அவர்கள் கருதிக் கொண்டனர்; உறுதி பூண்டனர்.

நெடுங்காலம் இதைச் சுற்றியே தீவிரமாக இயங்கிய அவர்களது சிந்தனையும் செயலும் ஏப்ரல் 20க்காகக் காத்திருந்தன. அந்த நாள் ஹிட்லரின் பிறந்த நாள்.

இருவரும் கருப்பு பனியன், முகமூடியுடன் கருப்புக்காரில் ஆயுதங்களுடன் புறப்பட்டனர். பள்ளியில் நுழைந்து மாணவர்களை விரட்டி, கேலி செய்து, கேள்வி கேட்டு நெற்றிப் பொட்டில் சுட்டனர். இறந்தவர்களில் வெள்ளையின மாணவர்கள்தான் அதிகம் என்றாலும், அவர்கள் கருப்பர்களைத் தேடினர். ‘ஏசையா ஷீல்ஸ்’ என்ற மாணவன் மட்டும் சிக்கினான். இம்மாணவனைச் சுட்டுக் கொன்று, ”ஒரு நீக்ரோவின் மூளை இப்படி சிதறிக் கிடப்பதைப் பார்ப்பதற்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா”, என்று குதூகலித்துக் கொண்டனர்.

முழுப் பள்ளியையே தகர்க்க வந்தவர்கள் அது இயலாதென்றதும், கையில் கிடைத்த 13 பேரை சுட்டுவிட்டு இறுதியில் தற்கொலை செய்து கொண்டனர். ஒரு அமெரிக்கச் சிப்பாய்கூடச் சாகாமல் ஈராக்கையும் செர்பியாவையும் உயர் தொழில்நுட்ப யுத்தத்தால் உட்கார்ந்த இடத்திலிருந்தே தரைமட்டமாக்கிவிட்டு, தங்களது இராணுவ நடவடிக்கையைப் பற்றி அறிவுபூர்வமாக விளக்கிக் கொண்டிருந்த அமெரிக்க அறிஞர்கள், சொந்த வீட்டில் இழவு விழுந்தவுடன் உணர்ச்சி வசப்பட்டுக் கதறுகிறார்கள்.

இத்தேசிய சோகத்தை தொலைக்காட்சியில் பகிர்ந்து கொண்ட கிளிண்டன், ”பிரச்சினைகளைப் பேசித்தான் தீர்க்க வேண்டுமே ஒழிய துப்பாக்கியினால் அல்ல என்படை நமது குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்” என்றார்.

உண்மைதான். ஆனால் உலகப் பிரச்சினைகளுக்குப் பீரங்கியால் தீர்வுகாணும் கிளிண்டன், ”துப்பாக்கியால் தீர்வு காணக் கூடாது” என்ற அன்பு மார்க்கத்தைத் தன் பிள்ளைகளுக்கு எப்படிக் கற்றுக் கொடுக்க முடியும்?

அமெரிக்க வன்முறைப் பண்பாட்டை தீர்ப்பதற்கான அவர்களது தீர்வுகள் எல்லாம் போகாத ஊருக்கு வழிகாட்டுகின்றன என்பதைத்தான் அச்சமூக யதார்த்தம் சுட்டுகின்ற உண்மை.

80-களுக்கு முன் தமது அறிவுத்தேடலை நூலகத்தில் நடத்திய அமெரிக்க மாணவர்கள் இன்று இன்டர்நெட்டில் சுற்றுகின்றனர். அப்படிச் சுற்றும் போதுதான் எரிக்கும், தைலானும் தமது ஆயுதச் சேகரிப்பை நெட்டின் உதவியால் செய்து முடித்தனர். கணினியிலும், நெட்டிலும் மூழ்கிக் கிடப்பது அங்கே ஒரு வாழ்க்கை முறையாக மாறிவிட்டது.

இன்டர்நெட் -20-ஆம் நூற்றாண்டின் ஒரு அறிவியல் புரட்சிதான். எல்லை கடந்த பண்பாட்டு உரையாடல்கள், அறிவுப் பரிமாற்றம், தகவல் தொடர்பில் மாபெரும் புரட்சி என்பதெல்லாம் சரி. அதன் பயனையும், அளவுகோலையும் தீர்மானிப்பது யார்? அது வீட்டு அறைக்குள் உலகின் அழகையும், அறிவையும் மட்டும் கொண்டு வரவில்லை. அதன் அசிங்கத்தையும் அறிவீனத்தையும் சேர்த்தே கொண்டு வருகிறது. உலகின் மேலாதிக்க சக்கிகள்தான் இன்டர்நெட்டையும் கட்டுப்படுத்துகின்றன. அதனால்தான் அது மொத்த உலக- மக்களின் வாழ்க்கையையும், நலனையும் பிரதிபலிப்பதில்லை.

தனிநபர் வாதம் அழுந்திப்போன மேற்கத்திய சமூகத்தை சிந்தனை, செயல் இரண்டையும் தீர்மானிக்கின்ற கணினிப் பண்பாடு, தனிநபர் வெறியாக மாற்றிவிட்டது. அதன்படி ‘நெட்’ மூலம் சீராட்டி வளர்க்கப்படும் அமெரிக்கக் குழந்தைகள், பல வகைகளில் வெம்பிப் போகின்றனர். நிறவெறி, பாலியல் வக்கிரம், தீவிர மூடநம்பிக்கை, திருடுவது- குண்டு தயாரிப்பது போன்றவற்றை யாருமறியாமல் தனியாகத் தெரிந்து கொள்கின்றனர். அதன் போக்கில் சரி, தவறு பேதம் மறைந்து, சமூக நோக்கம் குறைந்தும் போகிறது.

அதனால் குழந்தைகள் பார்க்கக் கூடாத விசயங்களைத் தடுக்க, சென்சார், ரோந்து, தடுப்பான் போன்ற முறைகளை கணினி நிறுவனங்கள் பெற்றோருக்கு உதவியாக அறிமுகப்படுத்தியுள்ளன. ஒரு சராசரி கணினி அறிவு பெற்ற சிறுவன் இத்தகைய தடுப்பான்களைத் தகர்க்க முடியும் என்பது ஒருபுறமிருக்கட்டும். எதைப் பார்க்கலாம், கூடாது என்ற கொள்கையை யார் முடிவு செய்வது?

கம்யூனிச வெறுப்பில், வேண்டுமானால் பெற்றோர்- கணினி நிறுவனங்கள் ஒன்றுபடலாம். பாலியல் வெறி – ஒழுக்கம், மதம் – அறிவியல், பகுத்தறிவு – மூடநம்பிக்கை, தனிநபர் – சமூக உறவு, இவற்றில் அவர்கள் கொள்கை என்ன? வாழ்க்கையை சந்தை தீர்மானிக்கும்போது, அதன் மதிப்பீடுகளை பைபிளா தீர்மானிக்க முடியும்?

கணினியைக் கட்டுப்படுத்துவதில் உள்ள சிக்கல்களைப் போலவே, வன்முறை வீடியோ விளையாட்டைத் தடை செய்வதிலும் உள்ளது. சதைகளைப் பிய்த்து, எலும்புகளை நொறுக்கி உன்னால் எத்தனை பேரைக் கொல்ல முடியும் என்று சவால்விடும் ‘டூம்’ (பேரழிவு) என்ற வீடியோ விளையாட்டு அங்கே இப்போது பிரபலமாகி வருகிறது. ,எரிக்கும், தைலானும் இதைத்தான் விரும்பி விளையாடினர்கள்.

அமெரிக்காவில் மரபு சார் விளையாட்டுக்களை விட, முழு சமூகமும் வீடியோ விளையாட்டில் ஈடுபட்டே காலங்கழிக்கிறது. நோக்கமின்றி விளையாடும் ஒருநபர் காலப்போக்கில் இயக்குநர் என்பதிலிருந்து வீடியோவால் இயக்கப்படுபவராக மாற்றப்படுகிறார். இதைத்தான் போதை என்கிறோம். தடைகளையெல்லாம் தகர்த்து, எதிரிகளைச் சின்னா பின்னமாக்கும் வித்தையை வீடியோ விளையாட்டில் கற்றுக் கொண்ட சிறுவன் தன்னை அதிஉயர் மனிதனாகக் கருதும் போலி மயக்க உணர்வில் ஆட்கொள்ளப்படுகிறான். அது, அவனது தினசரி வாழ்வின் சமநிலையைக் குலைக்கிறது. சிறு அளவு மனநிலைப் பிறழ்வும் ஏற்படுகிறது.

வன்முறை வீடியோவைத் தடை செய்யப் போராடும் டேவிட் கிராஸ்மென் கூறுகிறார், ”வன்முறை வீடியோ விளையாட்டுக்கள், கொலைக்கு எதிராக ஒரு மனிதனிடம் இயல்பாய் இருக்கும் மனித மதிப்பீடுகளை நொறுக்குகிறது. கொல்வதை ஒரு இன்பியல் அனுபவமாகவும் கற்றுக் கொடுக்கிறது.”

எனவே வீடியோ விளையாட்டைத் தடை செய்ய முடியுமா? குறைந்த பட்சம் அதிலுள்ள வன்முறையையாவது தணிக்கை செய்ய முடியுமா?

”திரைப்படத்தைப் போல வீடியோ விளையாட்டு ஒரு கலை உணர்வின் வெளிப்பாடு. அதன்படி அமெரிக்க அரசியல் சட்டத்தின் முதல் திருத்தம் (First Amendment) வழங்கியிருக்கும் பேச்சு – கருத்துரிமை சுதந்திரத்தின் கீழ் அதைத் தடை செய்ய முடியாது. மேலும் வன்முறை அம்சங்களை வைத்திருக்கும் எதையும் தடை செய்ய வேண்டுமென்றால் முதலில் பைபிளைத் தடை செய்ய வேண்டுமே?”

நெற்றியடியாக அடிக்கிறார் லோவன்ஸடீன். இந்தக் ‘கருத்துரிமைப் போராளி’ யார் தெரியுமா? அமெரிக்க டிஜிட்டல் மென்பொருள் சங்கத்தின் தலைவர்.

எனவே வீடியோ விளையாட்டைத் தடுக்க முடியாது. துப்பாக்கியைத் தடை செய்ய முடியுமா என்று பார்ப்போம்.

அமெரிக்காவின் பல மாநிலங்களில் துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் தேவையில்லை என்றாலும் வசதி படைத்தோரே அதை வாங்கிப் பராமரிக்க முடியும். இருப்பினும் அமெரிக்காவில் பல ஆயிரம் துப்பாக்கிகள் வழக்கத்தில் உள்ளன. கொலம்பைன் படுகொலையை வைத்து துப்பாக்கியை தடை செய்வது தவறு எனக்கூறும் ஆயுத அதிபர்கள், ஒரு தனி நபர் தன்னைப் பாதுகாக்கும் உரிமையை மறுப்பது சட்டவிரோதம் என்பதையும் நினைவுபடுத்துகின்றனர்.

ஆனால் அமெரிக்காவிலிருக்கும் துப்பாக்கிகள் தனிநபரைப் பாதுகாக்கவோ, திருடர்கள், ரவுடிகளைச் சுடவோ அதிகம் பயன்படவில்லை. மாறாக தற்கொலைக்கும், உறவினர் நண்பர்களைச் சுடுவதற்கும்தான் பயன்படுகிறது என்பதைப் பல கருத்துக் கணிப்புக்கள் நிருபணமாக்கியிருக்கின்றன.

ஆயுத அதிபர்களின் நன்கொடையில் வாழ்வு பெறும் அரசியல் தலைவர்கள், துப்பாக்கி மற்றும் வன்முறை பிரச்சினைகள் பற்றி தேசிய விவாதம் நடத்தலாமே என்று வாஜ்பாயி பாணியில் நழுவுகின்றனர். துப்பாக்கிக்கு ஆதரவாக ‘தேசிய துப்பாக்கி சங்கம்’ (NRA) பல ஆண்டுகளாகப் போராடி வருகிறது. ‘துப்பாக்கி வன்முறை அதிகமானால், சிறைகளைப் பெரிதாகக் கட்டலாமே’! என்பது இவர்களின் வாதங்களில் ஒன்று.

சில மாணவர்களின் வன்முறையில் பலியாகும் சில மனித உயிர்களைக் காட்டிலும் பல பில்லியன் கோடி டாலர் புரளும் பல்வேறு ஆயுத- தளவாடத் தொழில்கள் முக்கியமில்லையா?

சமூகத்தின் வன்முறைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத்தான் இவ்வளவு சிக்கல்கள்; குறிப்பிட்ட கொலம்பைன் படுகொலைக்காவது சட்டரீதியான நடவடிக்கைகள் ஏதும் உண்டா? முதல் பிரச்சினை, குற்றவாளிகள் இருவரும் இறந்து விட்டார்கள். தனது மகன்களின் தவறான நடத்தையைப் பார்க்கத் தவறிய பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது வழக்குப் போட முடியுமா? அது சரியல்ல. இம்மாணவர்களின் மிரட்டலைப் பற்றி புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசு மீது முடியுமா? அதிலும் பிரச்சினை. அம்மாணவர்களுக்கு வெப்சைட் ஒதுக்கிய ‘அமெரிக்கா ஆன்லைன்’ நிறுவனத்தின் மீது முடியுமா? நிச்சயம் முடியாது. கள்ளச் சந்தையில் துப்பாக்கி வாங்கிக் கொடுத்த தரகர்களையாவது கைது செய்யலாமே? அங்கும் ஒரு சிக்கல். கொலம்பைன் பள்ளி இருக்கும் கொலராடோ மாநிலத்தில் 18 வயதடைந்த நபர் துப்பாக்கி வைத்திருக்க லைசன்ஸ் தேவையில்லை. எரிக்கின் வயது 18. இங்கும் வழிகள் அடைபட்டுவிட்டன. இறுதியில் படுகாயமடைந்த சில மாணவர்களுக்கு நிவாரண நிதியாவது கிடைக்குமா என்று சட்ட வல்லுநரகள் மண்டையைக் குடைகின்றனர்.

இன்டர் நெட், வீடியோ, திரைப்படம், ராக் இசை, துப்பாக்கி- இவற்றிலிருக்கும் வன்முறை அம்சங்கள்தான் ஒரு அமெரிக்கச் சிறுவனின் கிரிமினல் நடவடிக்கைக்குக் காரணமா? ஆம், பெற்றோரின் அரவணைப்பு, பள்ளிகளின் வழிகாட்டல், மதத்தின் ஒழுக்கம், சமூக நிறுவனங்களின் அங்கீகாரம் போன்றவை முறையாக இருந்தால் வன்முறைப் பண்பாட்டை வேரறுக்க முடியும் என்பது அமெரிக்க அறிவாளிகளின் கருத்து. துளி அளவு கூட முடியாது என்பது என்பது நமது கருத்து. ஏன், எப்படி?

ஒரு மனிதனிடம் சகமனிதனைக கொல்லும் வெறி ஏற்படுவதற்கு உளவியலை விட சமூகவியல் காரணங்களே அடிப்படையாகும். எனினும் குறிப்பிட்ட சூழ்நிலையில் ஏற்படும் மனச் சமநிலைப் பிறழ்வு விசேடமான உளவியல் காரணங்களையும் கொண்டிருக்கும்.

அமெரிக்கா மற்றும் மேற்குலகின் வன்முறைகளில் முக்கியமானது, அந்தச் சமூகங்களின் இயங்கு தன்மையே வன்முறையின் வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதுதான். பிறக்கும்போதே ஒரு குழந்தையின் மூளை வன்முறைப் பதிவுகளோடு தோன்றுவதில்லை. சுமார் 15 வயதுவரை, அதன் பதிவு நரம்புகள் சுற்றுப்புறச் சமூக வாழ்வின் அறிவை வேகமாகவும், துடிப்போடும் அறிந்து கொண்டு பதிவு செய்கின்றன. எதை, எப்படி, எங்கிருந்து கற்கிறது என்பதில்தான் வன்முறையின் கருவும் உருவாக முடியும்.

வன்முறை எண்ணம் தோன்றுவதற்கான மனவெறுமை, தனிமை விருப்பம், தன்னிரக்கம், தோல்வி மனப்பான்மை, பொறாமை, வஞ்சகம், பாலியல் வெறி, நிறவெறி போன்ற பண்புகள் ஒரு முதலாளித்துவ சமூகத்தில் தவிர்க்க முடியதது. அல்லது சந்தையை அச்சாணியாகக் கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவச் சமூகம் இப்படித்தான் இயங்க முடியும். வேறு வழியில்லை.

கம்யூனிச நாடுகளில் ஒரு தனிமனிதனின்  திறமைகளை நசுக்கி, சுதந்திரம் மறுத்து விலங்காக நடத்துகிறார்கள் என்பது மார்க்சிய எதிர்ப்பாளர்களின் முக்கிய அவதூறுகளில் ஒன்று. ஆனால் இத்தகைய கொலைகாரர்களோ இதே குற்றச்சாட்டை அமெரிக்க சமூகத்தின் மீது வைக்கிறார்கள். தாங்கள் கொலைகாரர்களாக மாறக் காரணமே இதுதான் என்கிறார்கள். மிசிசிபியைச் சேர்ந்த 16 வயது வுட்ஹாம் (சொந்தத் தாயையும், சக மாணவர்கள் மூவரையும் கொன்றவன்) கூறும் வாக்குமூலத்தைப் பாருங்கள். ”நான் ஒரு பைத்தியமல்ல…. என்னைச் சோதிக்கும் இவ்வுலகை வெறுக்கிறேன்…. சமூகம் எங்களைத் தள்ளினால்  நாங்களும் திருப்பித் தள்ளுவோம் என்பதை உணர்த்தவே இக்கொலைகளைச் செய்தேன்…. இது உங்கள் கவனத்தை ஈர்த்து, உதவி கோரி கெஞ்சுவதற்கு அல்ல. இது, தவிர்க்க முடியாத ஒரு வன்முறைப் போராட்டத்தின் அலறல். உங்கள் கண்களை என்னால் திறக்க முடியவில்லை என்றால் வன்முறை தவிர்த்த வழிகளில் அதைச் செய்ய முடியவில்லை என்றால் அறிவுப்பூர்மாகவும் அதைக் காண்பிக்க முடியவில்லை என்றால், பிறகு ஒரு துப்பாக்கிக் குண்டின் மூலம் அதைச் செய்து முடிப்பேன்.”

முதலாளித்துவ நாடுகளில் ஒரு தனிநபர் சமூகத்துடன் எவ்வளவு தீவிரமாக முரண்பட முடியும் என்பதற்கு இந்தக் கொலைகார மாணவனின் ‘கவிதை’ வரிகளே சான்று. பன்னாட்டு வர்த்தக நிறுவனங்களுக்கிடையே சந்தைப் போராகவும், முதலாளித்துவ நாடுகளிடையே ஆக்கிரமிப்புப் போராகவும் வெளிப்படும் முரண்பாடு, தனிநபர்களுக்கிடையிலான உறவுகளையும் சீர் குலைக்கிறது.

ஒரு வயது வந்த அமெரிக்க மாணவன் தன் சமூகத்திடம் கற்கும் முக்கிய நீதி ”வாழ்க்கையில் வேகமாய் ஓடு, இடையூறுகளை இரக்கமின்றி தாண்டு, வெற்றி பெற்றால் பணமும் ஆடம்பரமும் கொண்ட அமெரிக்க வாழ்க்கை நிச்சயம்; தோல்வியுற்றால் எதுவுமில்லை”- என்பதுதான்.

அதனால்தான் உதட்டிலே சிரிப்பும் உள்ளத்திலே வெறுப்பும், கைகுலுக்கலில் நட்பும் கால்வாருவதில் பகையும், தோற்றத்தில் கவர்ச்சியும் நடத்தையில் அசிங்கமும், பேச்சில் நளினமும் முடிவெடுப்பதில் இரக்கமின்மையும், தனி வாழ்க்கையில் ஆடம்பரமும் சமூக வாழ்க்கையில் அவலங்களும் – அங்கே ஒரு சமூகப் பண்பாக உள்ளது. அமெரிக்காவின் நிழலும் – நிஜமும் இதுதான்.

80-களுக்குப் பிறகு உற்பத்தியில் ஏற்பட்ட நவீன மாற்றம், உலக மயமாக்கத்தினால் பல்லாயிரம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர். செல்வந்தர்கள், சாதாரண மக்களின் வாழ்க்கை வேறுபாடும் முன்பைவிட அதிகரித்திருக்கிறது.

92- லாஸ் ஏஞ்செல்ஸ் கருப்பர்- வெள்ளையர் கலவரம் இறுதியில் அரசு-  வணிக நிறுவனங்களைச் சூறையாடுவதில் முடிந்தது இதற்கோர் சான்று. அதன்பின் கலிபோர்னியா மாநிலத்தில் இலட்சாதிபதிகள், கோடிசுவரர்களுக்கு பாதுகாப்புக் கோட்டையுடன் கூடிய ஒரு தனி நகரையே உருவாக்கிவிட்டார்கள்.

எங்கு சென்றாலும் வன்முறையின் பீதியிலிருந்து அவர்கள் தப்ப முடியுமா? உலக மயமாக்கத்தின் சுரண்டலைச் சுருட்டும் அமெரிக்கா, அதன் கேடுகளின் பெரும்பகுதியை மூன்றாம் உலக நாடுகளின் மீதும் , சிறுபகுதியைத் தன் நாட்டு மக்கள் மீதும் செலுத்தி வருகிறது. ஆடம்பரம், ஏழ்மை இரண்டுமே வன்முறையின் பிடியிலிருந்து நழுவ முடியாது.

கொலம்பைன் படுகொலை குறித்த அவர்களது கவலைகளும், வாதங்களும் இத்தகைய இருமைப் பண்புகளைக் கொண்டு இக்கட்டில் நிற்கின்றன. வன்முறைகளை அடக்குவதற்கான வழிகள் தெரிவது போல் தெரிந்து பின்னர் மறைகின்றன. அமெரிக்க ஏகாதிபத்திய சமூகம் என்ற மாபெரும் முடிச்சை அவிழ்க்காமல் இதற்கு வழி ஏதுமில்லை. வன்முறை பற்றிய பீதியை உருவாக்கினால்தான் துப்பாக்கிகள் விற்க முடியும். பாலுணர்வு வெறியைக் கிளப்பினால்தான் வயாக்ரா விற்கமுடியும். அழகின்மையை உணர வைத்தால்தான் அழகு சாதனங்கள் விற்பனையாகும். எய்ட்ஸ் பயத்தைக் கிளப்பினால்தான் ஆணுறையை விற்க முடியும். நுகர்பொருள் வெறியை அவிழ்த்து விட்டால்தான் வட்டி- வங்கித் தொழில் வளரும். ஆம். நோயைப் பரப்பினால்தான் மருந்துகள் விற்பனையாகும். அமெரிக்க வாழ்க்கைத்தரம் என்ற வசதியைப் பெறுவதற்கு, அமெரிக்க மக்கள் கொடுக்கும் காணிக்கைப் பலிகளே, இப்பள்ளிப் படுகொலைகள்.

­­­­­­­­­­­­­­­­­­­­­­­______________________________________________  

–    புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 1999

_______________________________________________

*. (பின்னாளில் அவர்கள் டிரெஞ்ச் கோட் மாபியாவில் இல்லையென்று உறுதிப்படுத்தப்பட்டாலும், ஹிட்லரின் ”இறுதித் தீர்வை”  போற்றி எழுதிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது)

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சிறுகதை: பிராமீன்

86

“மாங்கா…. மாங்கா…”

மீனாட்சி மாமி எட்டிப் பார்த்தவுடன், செல்லத்துரை குரலை மேலும் உயர்த்தினான். ”மாங்கா… மாங்கா… ருசியான மாங்கா” மங்களத்து மாமியும் பக்கத்து வீட்ட மாமிகளும் வாசலுக்கு வந்துவிட்டதைப் பார்த்த செல்லத் துரைக்கு முகத்தில் சிரிப்பு ததும்பியது.

”என்ன மாமி எல்லோரும் பாத்திரத்தோடு வந்துட்டிங்க. இன்னைக்குன்னு பாத்து சரக்கு வேற கம்மியா போட்டுட்டு வந்துட்டேன். ஆளுக்கு ரெண்டு கிலோ போடட்டா?”

”ஏண்டா கூறுகட்டி விக்கறத போயி கிலோ கணக்குல விக்கிற அளவுக்கு நோக்கு கிராக்கி முத்திடுச்சோ! கிட்டக்க வா மொதல்ல கூடய பாப்போம்”

சைக்கிள் அருகில் வந்ததும், கூடையிலிருந்து வந்த நாற்றத்தை மூச்சில் இழுத்த  பார்வதி மாமி கூன் விழுந்த முதுகை நிமிர்த்தி அவனைச் சந்தேகத்துடன் பார்வையால் அளந்தாள்.

”ஏண்டா வீணா போன மாங்காயா கொண்டாந்துருக்கியோ! இந்த நாத்தம் நார்றது”

”நல்ல மீனுன்னா இப்படித்தான் மாமி நாறும், வேணும்ணா பாருங்க,” கூடைக்கு மேல் மூடியிருந்த சாக்கைத் திறந்தான்.

”திருட்டு முழி முழிச்ச்சிண்டு அவன் சிரிக்கறப்பவே நெனச்சேன். கிராதகம் பண்ணுவான்னு. மற்றவர்களும் வசவை ஆரம்பித்தனர்.

”பாவி கம்மனாட்டி, கோகுலாஷ்டமியும் அதுவுமா, இப்படி பண்றியே மாங்காண்ணா நாங்க பாத்திரத்தோட வந்தோம். நோக்கே நன்னாருக்கா இப்படி பண்றது” அதுக்கு மேல் மீன் நாற்றத்தில் நிற்க விரும்பாமல் சரேலென்று திண்ணைக்கு ஓடி வாயை வளைத்தும் நெளித்தும் முணுமுணுத்த வண்ணமிருந்தனர்.

வெக்கு வெக்கென்று சிரித்துக் கொண்டிருந்த செல்லத்துரையைப் பார்த்து பொரிந்து தள்ளினாள் பார்வதி மாமி.

”அந்தக் கண்றாவிய, தண்ணிய கொட்டிண்டு இன்னும் ஏண்டா நிக்கற? மொதல்ல சைக்கிள நகர்த்து. போடா! போனா போறது உங்கப்பன் காலத்லேர்ந்து அக்கிரகாரத்த நம்பி பொழச்ச குடும்பமாச்சேன்னு உன்கிட்ட கறிகா வாங்கிண்டிருந்தோம. இந்த கண்றாவிய கொண்டாந்து வச்சிண்டு மாங்கான்னு எங்களவாள நக்கல் பண்ணியோ, இனிமே யாரும் ஒன்னிட்ட எதுவும் வாங்க மாட்டா, நீ போடா மொதல்ல.”

”சும்மா பயப்படாதீங்க மாமி, மெட்ராசுல போயி பாருங்க உங்க ஆளுங்க மாட்டுக்கறிய என்னா போடு போடுறாங்கண்ணு.”

”நீ காலங்காத்தால தண்ணி போட்டுட்டு வந்துட்டியா? போடா மொதல்ல”

”கோவிச்சுக்காத மாமி, வெறும் தயிறு சோற திங்கறதுனாலத்தான் கொற வயசுலேயே தலை ஆடுது. கூன் விழுது. எங்கள மாதிரி எலும்பையும், மீனையும் கடிச்சு பாருங்க. இடுப்பு என்னமா நிக்குதுன்னு. என்னா போடட்டா ஒரு கிலோ?”

”இல்ல இல்ல, இவன் நம்ப பேச்சுக்குப் படியமாட்டான். ஏய்! ராமமூர்த்தி இங்க வாயேன்….”

”தே! மாமி அந்தாள இழுத்து வுட்றாத. திருக்கைய உப்புல வச்சி தேக்கிற மாதிரி, வாயாலயே வச்சி தேச்சிடுவாரு தேச்சி” சிரித்துக் கொண்டே, கால் சட்டைக்கு மேலே கைலியை தூக்கிவிட்டவாறு சைக்கிளை ஒரு மிதி மிதித்து ”மாங்கா….. மாங்கா… மீனு… மீனு” என்று சிரித்தபடியே புறப்பட்டான்.

”மாங்கா மாங்கான்னு சத்தம் வந்துதேன்னு வடாம் போட்ட கையோட அப்படியே வந்தேன். கட்டயிலே போறவன் மீன் கூடய வச்சிண்டு என்ன பேச்சு பேசறான் பார்த்தேளா!” மங்களத்து மாமியின் பொறுமலோடு பார்வதியும் ஒத்திசைத்தாள்.

”எல்லாம் அழியறத்துக்கு காலம்டி, ஒரு காலத்துல இந்த அக்கிரகாரத்துல கால வைக்கவே நடுங்னவாள்லாம் இப்ப நம்பளவாள நக்கல் பண்ணிண்டு போறா.”

”கேக்க ஆள் இல்லியோன்னோ அதான், கண்டதும் நம்பள நக்கல் பண்றது. மொதல்ல இந்த போஸ்ட் ஆபீஸ் வந்தது. ஒரு சேரி ஆள் வந்தான். அடுத்து தெருவுல இந்த தாய் சேய் விடுதி வந்தது சூத்திரவாள் வந்தா. இப்ப இது அக்கிரகாரமாவா இருக்கு…. க்கூம்.”

”இந்த முத்துசாமி அய்யர் மெட்ராசோட போறேனிட்டு காசுக்காக சூத்திரன் கிட்ட வீட்ட வித்துட்டு போயிட்டார். நம்பளவாளே சரியில்லாதப்போ யார குத்தம் சொல்றது.”

”சரி போயி ஆத்துல வேலைய பாருங்கோ” பார்வதி மாமி வழிமொழிய கலைந்தனர்.

***

”வாசு வாங்க என்ன ஹாயா உட்கார்ந்திட்டேள்” ராமமூர்த்தி அய்யர் வழக்கமான வெண்பொங்கல் சிரிப்பை பரிமாறினார்.

மாலை நேர சுலோகங்களை முடித்துக் கொண்டு திருநீறு, சந்தனம் மணக்க ராமமூர்த்தி அய்யர திண்ணையில் வந்து உட்கார்ந்தால், யாரும் பக்கத்தில் போகவே பயப்படுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டு பாகவதம் பாடி ”இது கூட தெரியாதா? என்னத்த எம். எஸ்சி. படிக்கிறேள்” என்று மடக்குவதும், ஏதாவது ஒரு ஆங்கில வார்த்தையைச் சொல்லி அர்த்தம் கேட்டு தெரியாமல் விழிப்பவர்களைப் பார்த்து ”என்ன கான்வென்ட் படிப்போ எழவோ? ஒரு மண்ணும் தெரிய மாட்டேங்கறது” என்று பலருக்கும் முன் அவமானப்படுத்தி ”இத்தனைக்கும் நான் அந்தக்கால பத்தாவது” என்று அவர் சிரிக்கும் சிரிப்புக்கு எதிர் நிற்க முடியாமல் பலரும் பயந்து ஒதுங்குவார்கள்.

என்னை மட்டும் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடுத்து அவர் அழைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இதுவரை அவரது பேச்சுக்கு ஒத்துப் போகாமல் எதிர்கேள்வி கேட்கும் என்னை முழுவதுமாகப் பணியவைக்க வாதத்தை ஆரம்பிப்பது அவரது வழக்கம்.

இவ்வளவு ஆர்வமாக வரவேற்க காரணம் என்னவாயிருக்கும்? காலையில் தெருவில் நடந்த சம்பவத்தை நினைவில் வைத்துக் கொண்டு ராமமூர்த்தி அய்யர் பக்கம் போனேனே.

”என்ன சார் ஏதும் முக்கியமான விசயமா?”

”என்ன இருந்தாலும் நானெல்லாம் ஓல்டு ஜெனரேஷன். உங்கள மாதிரி புதுமை, பகுத்தறிவெல்லாம் நேக்குத் தோண மாட்டேன்றதே!”

சுற்றி வளைத்து எங்கு வருகிறார் என்பது புரிந்தது. மௌனமாகச் சிரித்துக் கொண்டேன். ”சொல்லுங்கோ வேற என்ன நியூஸ், ஏதாவது ராமசாமி நாயக்கர் புக் படிச்சிருப்பேயே பிராமின்ஸ குத்தம் சொன்னா உங்களுக்கு வெல்லம்…. ஹி…. ஹி….”

”என்ன சார் நீங்க வேற, காரணம் இல்லாம ஒருத்தர திட்டுனா ஏத்துக்க முடியுமா? தேவையானத தெரிஞ்சுக்க வேண்டியதுதான்.”

”ஜாடையா எங்களவாள திட்றத சரிதான்றேள். காலைல தெருவுல நடந்த்தை பாத்தேளா, யாரு தப்பு பண்றா, சொல்லுங்கோ.”

”ஓ! அந்த செல்லத்துரையா?”

”என்ன சாதாரணமா ஓ போடறேள். நீங்கதான் பகுத்தறிவு பாக்குற ஆள். அவன் செஞ்சது சரியா சொல்லுங்கோ! என்ன பேசிண்டே இருக்கேன், சிரிக்கிறேள்” உணர்ச்சிகரமானார் அய்யர்.

”இது அக்கிரகாரம்னு தெரியும், இங்க இருக்கிறவா பிராமின்னு தெரியும். இங்க வந்து மீனு, மீனுன்னு கத்தறான், ஆளுக்கு ரெண்டு கிலோ வேணுமான்னு கேக்கறான்னா, எவ்ளோ இன்டீசென்ட் பிகேவியர். இங்க இருக்கிற நான்பிரமின்ஸ் பார்த்து சிரிச்சிட்டுதானே இருந்தாள், யாராவது அந்த படவாவ கண்டிச்சாளா? பிராமின், நான்பிராமின் பேதம் பாக்காம எவ்ளோ டீசென்டா இருந்துண்டு இருக்கோம். அடுத்தவாளுக்குப் புடிக்காததை செஞ்சி அதுல ஆனந்தம் அனுபவிக்கிறன்னா அவனோட புத்திய என்ன சொல்றது? இத எந்த பகுத்தறிவும் கேட்காதோ?” ஆவேசமும், ஆலோசனையுமாக பேச்சு நீண்டது.

”சொல்லுங்க வாசு, இது அசிங்கமில்லையா? எங்களவாதான் மேனியில பூணூல் போட்டாலே தப்புன்னு வாதம் பண்றேள்! அடுத்தவா வேணாம்னு ஒதுக்குறத அடுத்தவா மேல அத்துமீறி நடந்துக்குறதுக்கு யாரு தப்பு சொல்றது. இதுதான் டெமாக்ரசியா? சொல்லுங்கோ.”

பேசிக் கொண்டே போனவர், தெருப்பக்கம் கவனித்தவாறு ” தோப்பனார் தேடறார் போல இருக்கு. போயிட்டு வாங்கோ, நீங்களும் நானும் எங்க போயிடப்பொறோம், ஆற அமர பேசலாம். கொஞ்சம் சாமர்த்தியமா யோசிக்கிற ஆளாச்சேன்னு உங்க காதுலயும் போட்டேன் அவ்வளவுதான்,” சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்தார்.

****

முதல் நாள் இராமமூர்த்தி அய்யரிடம் மேற்கொண்டு பேச நினைத்தைப் பேச இயலாது போயிற்று. காலையிலிருந்து தெருப்பக்கம் அவரைத் தேடிக் கொண்டிருந்தன எனது கண்கள். வீட்டிலிருந்து தென்படுவார் என எதிர்பார்த்தேன். இராமமூர்த்தி அய்யர் தெருவிலிருந்து வீட்டுப்பக்கம் வழக்கத்தைவிட வேகமாக நடந்து வந்தார். அவரது வட்டவடிவமான தொந்தியும், பூணூலும் புவியீர்ப்பு விசையோடு போராடுவது போல அசைந்து கொண்டிருந்தது.

“என்ன சார் இவ்வளவு வேகமா வாரீங்க, ஏதும் அவசரமான வேலையா?”

”என்ன தெரியாதது போல கேக்கறேள்! கம்மாளத் தெருவுல புதுசா கட்டுன வினாயகர் கோவிலுக்கு இன்னிக்கு மகா சம்புரோட்சணமோன்னோ! அதான் பாராயணத்துக்கு காத்தாலயே போயிட்டேன். அபிஷேகத்துக்கு சந்தனம் வாங்கி ஆத்துலேயே மறந்து வச்சிட்டு போயிட்டேன், அதான் வேகு வேகுன்னு கொண்டு போயி கொடுதிட்டு வர்றேன். அப்பாடா… நாராயணா…. நமச்சிவாயா…” துண்டால் தொந்தியில் வழிந்த வியர்வையை ஒற்றியபடி திண்ணையில் உட்கார்ந்தார்.

”அப்புறம் என்ன சேதி, ஊரே அங்க தெரண்டு நிக்கறது. நீங்க மட்டும் வரமாட்டேள்”

”ஓ! அதானா காலைலேர்ந்து நமகா, நமகான்னு சத்தம் கேட்டுச்சு”

”நீங்க காத்தால கேட்டது என்னோட வாய்ஸ்தான். வேதபாராயாணம் உங்களுக்கு நக்கலா படுதா”

”இல்ல சார் நேத்து நீங்க சொன்ன மாதிரியே நல்லா யோசிச்சு பார்த்தேன். செல்லத்துரை செஞ்சதையே இப்ப நீங்களும் செய்யறீங்களே, அதான், என்ன சொல்றதுன்னே தெரியலே”

”அந்த மீன்காரன் மாதிரி நானா? என்னது குண்டதூக்கி போடறேள்” பரபரத்தார் இராமமூர்த்தி.

”வாங்கப் புடிக்காதவங்க கிட்ட மீனு மீனுன்னு கத்தறது தப்புன்னா, சமஸ்கிருதம்னா என்னன்னு தெரியாதவங்ககிட்ட போயி மைக்கசெட்டு போட்டு நீங்க நமகா, நமகான்னு கத்தறது மட்டும் சரியா? நீங்களே யோசிச்சு பாருங்க. அந்தத் தெருவுல இருக்கறவங்களுக்கு தமிழைத் தவிர வேறெதுவும் தெரியாது. நீங்க கர்நாடக சங்கீதம் கச்சேரி வேற வெச்சீருக்கீங்க. இப்படி அவங்க விருப்பத்த மதிக்காம இதுதான் பாட்டு, இதுதான் வேதம்னு நீங்க திணிக்கறது மட்டும் எந்த வகையில சார் டெமாக்ரசி?”

”ஹி… ஹி…. யாரோ எழுதி வச்சத படிச்சுட்டு தப்பாப்  பேசறேள். உங்களுக்குப் புரிய வைக்க நம்மால ஆகாது. சரி. அந்த சாப்டர விடுங்கோ. கொஞ்சம் கட்டையை சாச்சிட்டு திரும்பவும் பாராயணம் பண்ண போகணும்.”

”அப்ப திரும்பவும் மீன்விக்க போறீங்கன்னு சொல்லுங்க.”

ஆவேசமாகி வாதம் பொறி பறக்கப் போகிறதென்று எதிர்பார்த்தேன்.

”ஆஹா…. ஹா… ஹா…. ஒங்களுக்கு அனுபவம் பத்தாது. அதான் தெரியாம பேசறேள். சாதாரண மேட்டர போயி ரொம்ப சீரியசா எடுத்துக்கறேளே. போயி நீங்களும் ரெஸ்டு எடுங்கோ. ஏன் சும்மா பேசிண்டு. திண்ணைல வேற காத்த காணோம். ரொம்ப புழுங்கறது….” போய்க் கொண்டே இருந்தார்.

இதற்கு முன், நழுவிச் செல்வதில் இப்படியொரு உயிரினத்தை இதற்குமுன் பார்த்திராத அதிர்ச்சியில் வாயடைத்து நின்றேன்.

________________________________________ 

புதிய கலாச்சாரம், செப்டம்பர் 1999.

_________________________________________

வினவுடன் இணையுங்கள்

குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை! ஒத்தூதும் தமிழக அரசு !!

3

குளோபல் பார்மாடெக் நிர்வாகத்தின் ஒடுக்குமுறை ! ஒத்தூதும் தமிழக அரசு !!

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை  பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.

இங்கு பணிபுரிந்துவரும் 196 நிரந்தரத் தொழிலாளர்களில் 174 பேர் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்திலும், 18 பேர் ஏ.ஐ.டி.யு.சி. எனும் தொழிற்சங்கத்திலும் இணைந்துள்ளதால், இரண்டு சங்கங்கள் இந்நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. அரசால் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள பெரும்பான்மை சங்கமான குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தை ஏற்க மறுத்தும் ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு வரமறுத்தும், சங்கத்தின் முன்னணியாளர்களைப் பணிநீக்கம் செய்தும் இந்நிறுவனம் மிரட்டி வருகிறது. எனவே, சட்டப்படிப் பிரச்சினையைத் தீர்த்துவைக்கக் கோரி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் கடந்த 26.12.2011 அன்று இச்சங்கத்தினர் முறையிட்ட போது,தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன்,  “நீங்கள் லேபர் கோர்ட்டில் வழக்காடிக் கொள்ளுங்கள்” என்று ஒருதலைப்பட்சமாக அறிவித்துவிட்டு, சிறுபான்மைச் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி.யுடன் சட்டவிரோதமாகக் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

சிறுபான்மை சங்கத்தின் மூலம் துரோக ஒப்பந்தத்தைத் திணிக்க முயற்சிக்கும் இச்சதியை  எதிர்த்தும், முதலாளிகளின் கைக்கூலியாகச் செயல்படும் தொழிலாளர் நல அலுவலர் திரு.முனியன் மற்றும் தொழிலாளர்துறை துணைத் தலைமை ஆய்வாளர் திரு.ஜெகதீசன் ஆகியோரைப் பணிநீக்கம் செய்யக் கோரியும், ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையை நடத்தக் கோரியும் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் 4.1.2012 அன்று காலை  கிருஷ்ணகிரி தொழிலாளர் நல அலுவலகம் முன்பாக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், நிறைமாதக் கர்ப்பிணியான பெண்தொழிலாளி ஒருவர் உணவருந்தியதும் சிறிது நேரம் கண்ணயர்ந்த போது, குளோபல் ஃபார்மாடெக் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரியான ஏகாம்பரம் பொறுக்கித்தனமாக இதை இரகசியமாகப்  படம் பிடித்து,பகிரங்கமாக வெளியிட்டு அவமானப்படுத்தியதோடு, தொழிலாளர்கள் வேலை நேரத்தில் உறங்கியதாகப் பொய்குற்றம் சாட்டி 30 பேரைப் பழிவங்கியுள்ளான். தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்திவரும் இந்நிறுவனம், போராடும் தொழிலாளர்களைப் பழிவாங்க எந்த அளவுக்குக் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது என்பதை நிர்வாக அதிகாரியின் இக்கீழ்த்தரமான செயல் படம் பிடித்துக் காட்டியுள்ளது.

இந்தப் பொறுக்கித்தனத்தைக் கண்டு வெகுண்டெழுந்த தொழிலாளர்கள், பெண்களின் உடை மாற்றும் அறையில் இரகசியமாகக் கேமராவில் புகைப்படம் எடுத்த நிர்வாக அதிகாரியான பொறுக்கி ஏகாம்பரத்தைக் கைது செய்யக் கோரி 11.1.2012 அன்று ஓசூர்  ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.  பெண் தொழிலாளர்களின் கண்டன உரையும் எழுச்சிகரமான முழக்கங்களுமாக ஓசூர் நகரை அதிர வைத்தது, இந்த ஆர்ப்பாட்டம்.

– புதிய ஜனநாயகம், பிப்ரவரி-2012

காதல் எதிர்ப்பு: பாகிஸ்தானில் ‘இந்து முன்னணி’ ஆண்டியின் ரெய்டு!

33

காதலர் தினத்தில் பொது இடங்களில் இருக்கும் காதலர்களை துரத்தி அடாவடி செய்யும் வெறிநாய்கள் இந்திய நாட்டில் மட்டும்தான் உலாவுகின்றன என்று நினைக்க வேண்டாம். ஒரு பக்கம் மதரசாக்கள், மறுபக்கம் குண்டு வெடிப்புகள் என்று இஸ்லாமிய சொர்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானில் இன்னும் சுவராஸ்யமான நிகழ்வுகள் காணக் கிடைக்கின்றன. பாக்கைச் சேர்ந்த சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாயா கான் என்பவரின் தலைமையில் பல ஆண்டிகள் படப்பிடிப்பு குழுவினருடன் பொது இடங்களுக்குப் போகிறார்கள். இணையாக உட்கார்ந்திருக்கும் காதலர்களை மோப்பம் பிடித்து தட்டிக் கேட்கிறார்கள். இவர்களுக்குப் பிடித்திருப்பது தொலைக்காட்சி ஊடக வெறி.

இந்த காணொளியை இதில் பார்க்கலாம்.

 

ரெய்டு ஆண்டி மாயா கான்
‘ரெய்டு’ ஆண்டி மாயா கான்

குழந்தைகளை நல்வழியில் வளர்ப்பது பற்றி விவாதித்துக் கொண்டே, கையில் மைக்குடன் கேமராக்கள் பின் தொடர சாலைகளில் சுற்றுகிறார்கள். எலி வேட்டையாடும் பரபரப்பை உருவாக்கியபடியே வேக வேகமாக நடக்கிறார்கள்.

ஆங்காங்கு  மறைந்து உட்கார்ந்திருக்கும் இளம் தம்பதியினர் இவர்களைப் பார்த்த பின் பதறி ஓடுகிறார்கள். அவர்களைத் துரத்தி துரத்தி கேள்வி கேட்க முயற்சிக்கிறார் மாயா கான். மூச்சிரைத்தாலும் ‘ஹலோ, ஹலோ, ஹலோ’ என்று நாயைப் போல குரைத்துக் கொண்டு காதலர்களை துரத்துகிறார். பிரைவசியை எதிர்பார்த்து பூங்காக்களுக்கு வந்திருக்கும் காதலர்கள் காமராவுடன் வரும் மாயா கானைப் பார்த்த உடன் அலறுகிறார்கள். பர்தா அணிந்த இளம்பெண்ணை நோக்கி ‘அஸ்லாமு அலைக்கும்’ என்று மாயா கான் கத்துகிறார்.

கடைசியில் உடன் வரும் ஆண்டிகளை பின்தங்கச் சொல்லி விட்டு தனியாகப் போய் ஒரு தம்பதியை பிடித்து விடுகிறார். மைக்கையும் கேமராவையும் அணைத்து விட்டதாக உறுதி கூறி விட்டு பேச்சு கொடுக்கிறார், ஆனால் பேச்சும் படமும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது. அவர்கள் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டவர்கள் என்று தெரிய வருகிறது. காமராவும் மைக்கும் இயங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்த இரண்டு பேரும் பயந்தபடியே எழுந்து போய் விடுகிறார்கள்.

அதே பூங்காவில் இருக்கும் ஹிஜாப் அணிந்த ஒரு பெண் காதலருடன் பொது இடத்துக்கு வரத் துணிந்த பெண்ணை எதிர்த்து ஆவேசமாக கத்துகிறார். ‘திருமணம் நிச்சயமானவர்கள் என்றால் அவரவர் வீட்டில் சந்திக்க வேண்டியதுதானே, பொது இடத்தில் பூங்காவில் வருவது தவறு. இதற்கு பல குடும்பங்களில் அனுமதி கிடையாது, குடும்பத்தினரின் நம்பிக்கையை பொய்ப்பிக்கிறீர்கள். இந்த மாதிரி இடத்துக்கு வருகிறார்கள் என்றால் அவர்கள் நிச்சயம் முறையான உறவு கொண்டவர்கள் இல்லை என்று தெரிகிறது’.

‘நான்கைந்து தம்பதிகள் இருந்தார்கள். எல்லோரையும் துரத்தி விட்டோம்!. நம்மைத் தவிர பூங்காவில் யாரும் இல்லை’ என்று ஒரு ஆண்டி வில்லத்தனமாக சிரிக்கிறார். கராச்சியின் எல்லா பூங்காக்களிலும் இன்று யாரும் வரத் துணிய மாட்டார்கள் என்று ஆண்டிமார்கள் எக்காளத்துடன் மார் தட்டுகிறார்கள்.

மாயாவின் புகழ்பாடும் ஜால்ராக்களுக்கு மத்தியில் அந்தப் பகுதியில் வசிக்கும் ஒரு அங்கிள், பூங்காவில் வந்து உட்காரும் இளைஞர்களுக்கு எதிராக தனது புனித எண்ணங்களை ஆவேசமாக சொல்கிறார்.

இந்த நிகழ்ச்சியை எதிர்த்து வலைப்பதிவுகளிலும் டுவிட்டரிலும் வெளியான கருத்துக்களைத் தொடர்ந்து மாயா கான், சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பு ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்படுகிறார். ஆனால், பாகிஸ்தானிய சமூகத்தின் எண்ணப் போக்கின் ஒரு குறுக்கு வெட்டுதான் மாயா கான். இளைஞர்கள் ஆணும் பெண்ணுமாக பூங்காக்களில் அமர்ந்து பொழுது போக்குவது என்பது நாகரீக சமூகங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உரிமை. அதைக் கூட பாகிஸ்தானிய இளைஞர்களுக்கு மறுக்கும் மதவாத பாசிசப் போக்கின் வெளிப்பாடுதான் மாயாகான்.

இந்த ஆண்டிகளுக்கு அடுத்தவர்களின் தனிப்பட்ட விவகாரங்களில் மூக்கை நுழைக்கும் கூச்சம் சிறிதளவும் இல்லாததோடு, அதை தொலைக்காட்சியில் காட்டி சம்பாதிக்கவும் தயக்கமில்லை.

இந்தியாவில் காதலர் தினத்தன்று இந்து முன்னணி, ஸ்ரீராம் சேனா கும்பல் பொது இடங்களுக்கு சென்று காதலர்களை வேட்டை நாய்களாக துரத்துவதின் பாகிஸ்தானிய கிளைதான் மாயாகான். அதெப்படி, மதவாதிகள் எல்லாரும் ஒரே மாதிரி சிந்திக்கிறார்கள்?

– செழியன்

தொடர்புடைய பதிவுகள்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடு! சென்னை பொதுக்கூட்ட காட்சிகள்!!

32

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்ற தலைப்பில் சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில், மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில்  பிப்ரவரி 25ம் தேதி, மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது.  அப்பகுதி உழைக்கும் மக்கள், வியாபாரிகள், சென்னை முழுவதிலிமிருந்து திரண்ட அரசியல் ஆர்வலர்கள், என அனைவரின் ஆதரவோடும்  கூட்டம் நடைபெற்றது. சரியாக 6 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இந்த கூட்டத்திற்கு  பு.ஜ.தொ.மு  மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் தலைமை வகித்தார்.  பின்னர் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

பவர் கட்டு, பவர் கட்டு,  பன்னாட்டு கம்பெனிக்கு பாடையை கட்டு என்ற பாடல்  நாட்டின் மொத்த மின்சாரத்தையும் விழுங்கி சிறு தொழில்களுக்கும் மக்களுக்கும்  இருளைத் தருகின்ற பன்னாட்டு கம்பெனியை ஒழித்துக்கட்டாமல் தீர்வு இல்லை என்றது. ”கரண்ட் வேணுமின்னா ரிஸ்க் எடுக்க வேண்டும் என்ற மக்களிடம் உபதேசம் செய்யும் அறிவாளிகளை’ அம்பலப்படுத்தி தனது வாழ்க்கையையே தினமும் ரிஸ்க் ஆக கொண்டு செல்லும் மீனவர், கட்டிடத்தொழிலாளி, சுரங்கத்தொழிலாளி, ஓட்டுனர்  ஆகிய தொழிலாளர்களின்  உழைப்பினை பறிக்கும் பன்னாட்டு முதலாளிகளுக்கு எதிரான “மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு? என்ற பாடல் முழங்கியது.

யாருக்கோதானே பிரச்சினை நமக்கென்ன என்று இல்லாமல் நாம் உழைப்போராய் ஒன்றுபட வேண்டும் என்பதை வலியுறுத்தி ”உழைக்கும் மக்களே ஒன்று படு” என்ற பாடல் இசைக்கப்பட்டது. கூடங்குளம் மக்களின் போராட்டம் எந்த திசைவழியில் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில்அணு உலையை விரட்டணும்னா போராட்டத்த மாத்தணும், கூடங்குளம் இன்னுமொரு நந்திகிராம மாறணும்என்று இசைக்கப்பட்ட பாடலுடன் தோழர்கள் மற்றும் மக்களின் பலத்த கைத்தட்டலுடன் கலை நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

அடுத்ததாக “ஆதிக்க அணு உலை அடங்காது இடிந்த கரைஎன்ற தனது கவிதையை மகஇக தோழர் துரை.சண்முகம் வாசித்தார். 30 லட்சம் கொள்ளையடித்தால் என்கவுண்டர், நாட்டையே கொள்ளையடித்தால் சீப் மினிஸ்டர் என்ற ஆரம்பித்து பஸ் ஸ்டாண்ட் கக்கூசின் நோயிலிருந்து காக்காத அரசு அணு விபத்திலிருந்து நம்மை எப்படி பாதுகாக்கும்? என்ற எள்ளலுடன் பொய்யில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் வந்தால் அதன் மூலம் பொய்யாய்ப்புழுகும் நாராயணசாமி மற்றும் கலாமின் வாயில் 10 ஆயிரம் MW மின்சாரம்  தயாரிக்கும்  திட்டத்தையும் முன்வைத்தார். கூடங்குளம் மக்களின் போராட்டத்தை வரவேற்றும் அப்போராட்டப் புயல் கரை சேர்ந்தே தீரும் என்பதையும் கூறி தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற கொள்கையின்படி அனைத்தையும் அன்னியனுக்கு தாரைவார்த்துவிட்ட இந்த அரசு,  நாட்டை கொள்ளையடித்து அடிமையாக்குவதற்கு பெயர் மறுகாலனியாக்கம் என்றால், நாங்கள்தான் நாட்டையே மக்களை காக்கும் நக்சல்பரி” என்று தனது கவிதையை நிறைவு செய்தார்.

அடுத்ததாக மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தனது சிறப்புரையில் “2010ம் ஆண்டுக்குள் 50,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படும் என்று அப்துல் கலாமின் குரு விக்ரம் சாராபாய் சவடால் விட்டுப் போனதையும் நாட்டில் உள்ள 20 அணு மின் உலைகள் மூலம் தற்போது கிடைப்பதோ 4130 மெகாவாட் என்றும் அந்த அணு உலைகள் இயக்கவே 4000 மெகாவாட் மின்சாரம் அளிக்கப்படுவதையும் கூறி மின்வெட்டிற்கு அணு உலை மாற்று என்பதே பொய் என்றார்.

அந்த அணு உலைகள் பாதுகாப்பானவை என்று மக்களிடம் பொய்ப்பிரச்சாரம் செய்வதையும் செர்னோபிலில் ஏற்பட்ட கதிர்வீச்சு பரவி 2700 ச.கி தாண்டியுள்ள இங்கிலாந்தில் ஆடுகள் லட்சக்கணக்கில் புதைக்கப்பட்டதையும் கல்பாக்கம் பகுதி  மக்கள் தற்போது அணு கதிர்வீச்சினால் முன்னைவிட பல மடங்கு நோய்களினால் பாதிக்கப்பட்டு இருப்பதை டாக்டர் மஞ்சுளா அம்பலப்படுத்தியுள்ள அதே வேளையில், விளம்பரத்தில் டாக்டர் சாந்தா கூலிக்கு மாரடிப்பதையும் சுட்டிக்காட்டிப்பேசினார். அணு உலை பாதுகாப்பானது அல்ல என்பதற்கு இதுவரை நடந்த அணுக் கதிர்வீச்சு விபத்துக்களே சாட்சி என்றும்  இருந்தும் அணு உலை பாதுகாப்பானது என்று கூறும் விஞ்ஞானிகள் முதலாளிகளின் கைக்கூலிகள் என்பதை அம்பலப்படுத்தினார்.

பொதுசொத்துக்களை விழுங்க தனியார் மயம் – தாராளாமயம் – உலகமயக் கொள்கைகள் காத்திருப்பதையும் கூறி அதற்கு எதிராக உழைக்கும் மக்கள்  நெஞ்சுரத்தோடு போராடிக் கொண்டிருப்பதையும் மக்களைக் காக்க அது மட்டுமே தீர்வு” என்று கூறினார்.

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் மனோ தங்கராஜ்  தனது சிறப்புரையில் “கூடங்குளம் மக்களின் போராட்டத்தை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்ற ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புக்களுக்கு நன்றியை தெரிவித்து, காங், பிஜேபி, இந்து முன்னணி கூட்டணிகள் இப்போராட்டத்தை நசுக்க முயலும் போதும் இப்போராட்டம் இவ்வளவு நாள் நீடிப்பதற்கு காரணம் அதை காக்க ம.க.இ.க போன்ற பல அமைப்புக்கள் தமிழகம் முழுவதும் தரும் ஆதரவே என்றும் கூறினார். போராட்டத்திற்கு வெளி நாட்டில் இருந்து பணம் வருவதாக ஒரு நாட்டின் பிரதமர் பொய் பேசுவதையும் மக்களின் போராட்டம் வெளி நாட்டு நிதியில் இருந்து அல்ல உழைக்கும் மக்களின் நிதியில் இருந்து நடப்பதையும் விளக்கினார். கூடங்குளத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுவதற்கு ஏற்கனவே 6 அடுக்கு பாதுகாப்பு உள்ள டெல்லியிலேயே அணு உலையை வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அணு உலை எதிர்ப்பு போராட்டம் இன்றல்ல, 25 ஆண்டுகளாக நீடித்து வருவதற்கு 1988ல் அணு உலைக்கு எதிரான போராட்ட்த்தில் தான் குளச்சலில் கைது செய்யப்பட்டதையும் கூறி  புரட்சிகர அமைப்புக்களின் துணையோடு அணு உலையை தடுப்போம்”” என்றும் கூறினார்.

அடுத்ததாக கூடங்குளத்தின் போராளிகள் மேடையில் அறிமுகம் செய்யப்பட்டனர். அப்பெண்களின் ”வெல்கவே! அணு உலையை எதிர்க்கும் மக்களின் போராட்டம் வெல்கவே ” என்ற பாடலை கூட்டத்திற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான கூடங்குளம் பெண்கள் கைத்தட்டி சேர்ந்து பாடினார்கள். அணு உலையை வைப்பதற்கு எங்கள் நிலம் என்ன சாக்கடையா? என்ற அவர்களின் கேள்வி சூடு சொரணை உள்ள எவரையும் அசைத்துப் பார்ப்பதாக இருந்தது.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப்பொதுச்செயலர் தோழர் மருதையன் “இந்த கூடங்குளம் போராட்டம் என்பது  ஓட்டுக் கட்சிகள் அல்லாமல் தன்னந்தனியாக மக்களால் மட்டுமே நடத்தப்படுவதுதான். இது தமிழகத்திற்கே முன் மாதிரி அதனால்தான் மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஓட்டுக்கட்சிகளை தமிழகத்திலிருந்தே அகற்ற இது ஒரு முன்னறிவிப்பு” என்று  தனது சிறப்புரையை தொடங்கினார்.

திடீரென போராட்டம் செய்கிறார்கள் என்று கூறுபவர்கள் மஹாராஷ்டிராவில் பிரெஞ்சு நிறுவனத்துடனான 10,000மெகாவாட் அணு உலைக்கு எதிராக விவசாயிகள் ஒரு அங்குலம் கூட தரமுடியாது என்று நடத்தும் போராட்டத்தை ஆதரிப்பது இல்லை என்பதை அம்பலப்படுத்தினார். பல ஆயிரம் கி.மீ தாண்டியும் அணுக்கதிர் வீச்சினால் ஏற்பட்ட பாதிப்புக்களையோ உயிர்ப்பலிகளையோ அரசு திட்டமிட்டு இருட்டடிப்பு செய்கிறது . இது ஏதோ செர்னோபில், புகுஷிமா, கூடங்குளம் பிரச்சினை அல்ல, இந்தியாவின் உலகம் முழுமைக்குமான பிரச்சினை. பல தலைமுறைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்குதான் இந்த மக்களின் போராட்டம் தொடர்கிறதென்பதையும் இதில் மக்களின் கருத்தையே கேட்காத தமிழக அரசின் நிபுணர் குழு ஒரு ஏமாற்று வேலை” என்று கூறினார்.

மேலும் “நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதையும், மின்வெட்டு சமமாக பிரிக்கப்படாமல் அதில் 70% சிறு தொழில்கள் மேல் சுமத்தப்படுவதையும் இதனால் சிறு தொழில்கள் பாதிக்கப்பட்டு  நசிந்து போகிறது எடுத்துக்காட்டிப் பேசினார். சென்னையில் அளிக்கப்படும் மொத்த மின்சாரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கழிவறைக்கும் கூட ஏசியை பயன்படுத்தும் மேட்டுக்குடிகள் 80%  மின்சாரத்தை எடுத்துக்கொண்டு அதனால் ஏற்படும் பற்றாக்குறையை சிறு தொழில்கள் மற்றும் உழைக்கும் மக்களின் மீது சுமத்துவதை விவரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

மருத்துவம், தண்ணீர் என அனைத்தையுமே விற்பனைப் பண்டமாக மாற்றிய தனியார்மயம் தாராளமயம் உலகமயம் தான் மின்சாரத்தையும் மாற்றி உள்ளது. மின்சாரத்தை தேக்கிவைக்க முடியாது என்ற ஒரே காரணத்திற்காக ஒரு யூனிட் மின்சாரம் ஒரே மாதத்தில் ரூ1.10 முதல் ரூ12.00 வரை தனியார் முதலாளிகளால் விற்கப்படுகிறது.

தனியாரிடம் 19 ரூ/ யூனிட்க்கு மின்சாரத்தை வாங்கும் அரசு, நோக்கியா, போர்டு போன்ற பன்னாட்டு கம்பெனிகளுக்கு சலுகை விலையில் அளிப்பது தான் இந்த மின் பற்றாக்குறைக்கு காரணம் என்றார். மேலும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தற்போது ரூ5.50ல் வழங்கப்படும் மின்சாரத்தை 3.50ரூ ஆக குறைக்க மின்சார வாரியம் ஒழுங்கு முறை ஆணையத்திடம் முறையிட்டிருக்கும் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்திப் பேசினார்.

“கடந்த 30 ஆண்டுகளில் ஒரு அணு உலையைக்கூட திறக்காத நாடுகள்தான் இந்தியாவில் அணு உலையை விற்க ஒப்பந்தம் போடுகின்றன. இந்தச் சூழலில் கொண்டுவரப்படும் அணு உலை மின்சாரத்திற்கு அல்ல. அது 17 லட்சம் கோடி ரூபாய்களுக்கு போடப்பட்ட  இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு. இந்த அணு உலையின் கழிவினை பாதுகாக்க இடம் இன்று வரை உலகில் கண்டுபிடிக்கப்படவே இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதற்கு மாற்று கூடங்குளம் அணு உலையை அங்கே புதைப்பதுதான் ஒரே வழி.  அதை நாட்டின் மீது பற்று கொண்ட நக்சல்பாரிகளால், மக்களுடைய வலிமையால் மட்டுமே சாதிக்க முடியும்” என்று தனது சிறப்புரையை நிறைவு செய்தார்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சென்னைக்கிளைத் தோழர்களின் நாடகம், ”பன்னாட்டு நிறுவனங்களால் நமது மின்சாரம் பறிக்கப்படுவதையும் அதற்கு மாற்றாக கூறப்படும் அணு உலை என்பது மக்களை கொல்லவந்த இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தின் பிண உலை என்பதையும் தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் விளைவான  இந்த அணு உலையை மக்கள்  அடித்து விரட்ட வேண்டும்” என்பதை வலியுறுத்தும் வகையில் அமைந்தது.

நன்றியுரை பு.மா.இ.மு.-ன் மாநில அமைப்பாளர் தோழர் கணேசன் கூறினார். இறுதியில் பாட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் பொதுக்கூட்டம் நிறைவு பெற்றது.

ஆபத்தான அணு உலை வேண்டாம் ! அனைவருக்கும் மின்சாரம் வேண்டும் ! என்பதை வலியுறுத்தும் வகையில் புகைப்படக் காட்சிகள் இந்தக்கூட்டத்தில் இடம் பெற்றது. இந்தக்கூட்டத்தில் சென்னை, கூடங்குளம் பகுதி மக்கள், தொழிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் உழைக்கும் மக்கள் என 5000த்திற்க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர் பகுதி மக்களோ இந்த பொதுக்கூட்டத்திற்கு தங்களது நிதியை அள்ளித்தந்தனர்.  பொதுக்கூட்ட செலவுகளுக்காக துண்டேந்தி பெறப்பட்ட 15,000 ரூபாய் என்பது அப்பகுதி மக்கள் இந்த கருத்துக்கு கொடுத்த ஆதரவையே காட்டியது.  கூட்டத்தின் பின்புறம் பார்வையாளர்களுக்காக  நிகழ்ச்சி திரையிடப்பட்டது. அந்த புரஜெக்டருக்கு மின்சாரம் தடைபட்ட போது உடனே அருகில் இருந்த கடைக்காரர் தன்னுடைய கடையில் இருந்து மின்சாரம் கொடுத்து உதவினார்.

கூட்டம் முடிந்த உடன் ஒரு சிறு வியாபாரி,”வழக்கமா 8 மணிக்கு கடைய மூடிட்டு போயிருவேன், இன்னைக்கு கூட்டத்துக்காக கடைசி வரை திறந்திருந்தேன், எங்களுக்கு எவ்வளவு வேணாலும் கரண்டு கட்டு வரட்டும், ஆனா அந்த மக்களோட தாலிய அறுத்துட்டு அணு மின்சாரமெல்லாம் எங்களுக்கு வேண்டாம்” என்று நெகிழ்ச்சியாக சொன்னார். தோழர்கள் நிதி வசூல் செய்த போது பெண் போலீசு உட்பட சில போலிசுக்காரர்களும், “எங்க்கிட்ட கேட்கமாட்டீங்களா” என்று நிதி அளித்தனர்.

கூடங்குளம் அணு உலை என்பது மின்வெட்டை தீர்க்க வந்ததல்ல, அது அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தின் விளைவு, தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தின் பிரதிபலிப்பு. மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மொத்த மின்சாரத்தையும் பறித்து தங்களுக்கு மின்வெட்டை மட்டுமே பரிசாகத்தரும் பன்னாட்டு கம்பெனிகளையும் அதற்கு சேவை செய்யக்கூடிய அரசு மற்றும் ஓட்டுக்கட்சிகளையும் விரட்டுவது மட்டுமே இதற்கு தீர்வு என்பதாக இந்த பொதுக்கூட்டம் அமைந்தது.

    • ( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!

28

ரசியலை அக்குவேறு ஆணிவேராகப் அலசிக் கொண்டிருப்பவரிடம் போய் நீங்கென்ன கட்சி சார்? என்றால், ”அட நீங்க வேற…. நான் சோத்துக் கட்சி சார்”, என்று நகைச்சுவையாக நழுவிக் கொள்வதைப் பார்த்திருப்பீர்கள். அதுவெறும் நகைச்சுவை இல்லை. சாப்பிடுவதற்கென்றே ஒரு கட்சி கட்டியது போல சிலர் ‘சோத்துக்கட்சியாகவே’ களத்தில் இருக்கிறார்கள்.

உங்கள் ஊர் உயரதர உணவு விடுதிகளை ஒரு முறை வலம் வந்து பாருங்கள், அங்கு மேசையில் செங்கிஸ்கான் படையெடுப்பால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட பிரதேசம் போல, மிச்சம் மீதம் கிடக்கும் உணவுத் துண்டங்களையும், குவிந்து கிடக்கும் தட்டுக்களையும் பார்த்து உங்களாலும் ஒரு முடிவுக்கு வரமுடியும்.

பசிக்காகச் சாப்பிடுவது ஒரு வகை, ருசிக்காகச் சாப்பிடுவது இன்னொரு வகை. இந்த இரண்டாவது வகையினரைக் குறி வைத்து உணவுத் தொழில் உற்பத்தியாளர்கள் ‘ஆவி’ பறக்கப் புதுப்புது அயிட்டங்களை அவிழ்த்து விட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். சும்மாவா, ”பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும், இவை நாலும் கலந்து தருவதாகப்” பகவானுக்கே மெனுகார்டு போட்ட மண்ணாயிற்றே.

என்ன, சுவையுணர்வைப் பற்றிய கேலிக்குரலாகப் படுகிறதா? சுவையுணர்வின் மீது மீளாக்காதல் கொண்டிருப்போர் பற்றிய ஒரு மேல் முறையீடு என்று வைத்துக் கொள்ளுங்களேன்.

உணவில் சுவை கூடாது என்பதல்ல; காய் கனிகளையும் கீரைகளையும் மேய்ந்து கொள்ளலாம் என்றோ, அவ்வாறு மேய்ந்து கொண்டிருக்கும் பிராணிகள் மீது பாய்ந்து கொள்ளலாம் என்றோ நாம் சொல்ல வரவில்லை.

மனித நாகரீகத்தின் வளர்ச்சியின் ஊடாகச் சுவையுணர்வு வளர்கிறது; ஆனால் இந்தச் சுவையுணர்வு பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கத்துடன் ஒத்துச் செல்லாமல், குடிமக்களில் சிலருக்கு, உடம்பிலிருந்து நாக்கு மட்டும் தனியே நீண்டு வளர்ந்து செல்கிறதே, இந்த விகாரம்தான் கொஞ்சம் கவலையளிக்கிறது.

நாக்கு, மொழியைப் பழகுவதற்கு முன்பே சுவையைப் பழகிவிடுகிறது. ஆறு சுவைகளையும் சுவைப்பதற்குரிய சுவை நரம்புகள் நாவில் இருப்பதாய் ஆரம்ப வகுப்புகளிலேயே படம் போட்டுப் பாகங்களை விளக்கியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் இன்று உணவுப் பழக்கத்தில் அறுசுவை ஆயிரம் வகை சுவையாகி ‘யாகாவராயினும் நாகாக்க’ முடியாமல், மனமே ஒரு நாக்காக மாறி புதிய புதிய சுவைகளைத் தேடி அலைய ஆரம்பித்து விட்டது. ருசி வேட்டைக்காரக்கரர்களின் தட்டுத் தடுமாற்றங்களைப் போக்கி ‘தட்டு’ வரை கொண்டு போய்ச் சேர்க்கும் வேலையை தகவல் தொடர்புச் சாதனங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டன.

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி !

”சாப்பிட வாங்க” என்று அலை வரிசையின் வழியாக, உலை வைத்து செய்து காண்பிக்கிறது சென்னைத் தொலைக்காட்சி. சன்.டிவியில் ஸ்டார் சமையல். இப்படி ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சியும் தனது நிகழ்ச்சி நிரலில் உள்ள கரம் மசாலா போதாதென்று புதிய வகை சமையலுக்கென்றே நேரம் ஒதுக்கி பார்ப்போருக்கு ருசி காட்டி வருகிறார்கள்.

பத்திரிகைகளிலும் விதம் விதமான சமையல் குறிப்புகள். குங்குமத்தில் வி.ஐ.பி. கிச்சன் என்று ஒரு பகுதி ஒதுக்கி பிரபலங்களின் கைப்பக்குவத்திற்குச் செய்முறை விளக்கம் சொல்லி வாசகிகளின் ‘படைப்பாற்றலை” தூண்டி விடுகிறார்கள்.

டி.வி.யில் ஒரு விளம்பரம்; கிரிக்கெட் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் பையன் ஒருவன் ஒரு ரன் அடிக்கும் போது ஒரு பிஸ்கட்டை கடிக்கிறான். இரண்டு ரன்னுக்கு இரண்டு பிஸ்கட், நான்கு ரன்னுக்கு நான்கு என கடிப்பவன் கடைசியில் மொத்த பிஸ்கட்டையும் வெறிகொண்டு கடிக்கிறான். “உங்களால் ஒன்றோடு திருப்தி அடைய முடியாது” என்ற வசனத்தோடு விளம்பரம் முடிகிறது.

சின்னப்பிள்ளைகளிடம் வெறும் வாயை மூடிக்கொண்டு “ஆகா நல்லாயிருக்கு” என்று வாயை மென்று வேடிக்கை காட்டுவது போல இன்னொரு விளம்பரம்; தக்காளி சூப்பை கையில் வைத்துக் கொண்டு இது ஹாட்டா? இல்லை ஸ்வீட்டா? என்று கேள்வி கேட்டு விடையேதும் சொல்லாமல் “நீங்களே சுவைத்துப் பாருங்ளேன்” என்று உசுப்பிவிடுகிறது. என்ன சுவையென்று சொல்லிப்பார்ப்பவர்களை ஒரு முடிவுக்கு வரவழைப்பதை விட வாங்கி அனுபவிக்கவேண்டுமென்ற எண்ணத்தை தூண்டும் வியாபார உத்திதான் இது. விதவிதமான திட, திர உணவு வகைகள் விளம்பரத்தின் வழியாக நாக்கைப்பிடித்து இழுக்க, செய்து பார்க்க வசதியும் வாய்ப்பும் இல்லாதவர்கள் ” ஒரே ஒரு முறையாவது ருசி பார்த்து விடுவோமே” என்று உணவுவிடுதிகளுக்கு சென்று மேசையின் முன்பு ஒருவகைத் திகிலை அனுபவிக்கும் சுவையே தனியானது.

ஒரு நடுத்தரமான உணவுவிடுதி அது. அந்நிய நாட்டுக்குள் நுழையும் உளவாளி போலத் தயங்கித் தயங்கி வந்தவர் மேசைக்கு முன்பு அமர்ந்தார். அவர் கண்ணை முதலில் கவர்ந்தது பிளாஸ்டிக் பலகையில் தத்ரூபமாகத் தெரியும் உணவு வகைகள். பச்சை நரம்புகள் தெரிய தட்டு வடிவில் செதுக்கப்பட்டிருக்கும் வாழை இலை, அதற்கு மேல் பொன் நிறத்தில் ‘அடுக்குமாடி போல’ போண்டா. பக்கத்தில் வெளிர்பச்சை நிறத்தில் புதினா சட்னி, கசாப்புக் கடைக்கு முன்பு கண்டுண்ட நாயைப் போல வெகுநேரம் அதையே வெறித்துப் பார்த்தவர், பின்பு சுற்றிலும் சாப்பிடுவர்களைப் பார்வையிட்டார்.

சர்வர் நெருங்க, பக்கத்து மேசையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரின் தட்டைக் காண்பித்து ”அதுல ஒண்ணு கொண்டு வாங்க” என்று கண்ணை மூடிக்கொண்டு கிணற்றில் குதிப்பது போலத் துணிந்து அடித்தார். மேசைக்கு வந்த புதியவகை பூரியை வாராது வந்த மாமணிபோல வாஞ்சையாய் நோக்கினார். ஒரு சிக்கல், அதிலுள்ள எலுமிச்சம் பழத் துண்டைக் கடிப்பதா, பிழிவதா என்ன செய்வது என்று குழம்பிப் போனார். சுற்றிலும் செய்து காண்பிக்கும் நபர்களைத் தேடி ஏமாந்தார்.

மீள வழியில்லை. எடுத்து வாயிலேயே பிழிந்து கொண்டார். சர்வர் தூரத்திலிருந்து பார்த்த பார்வை இருக்கிறதே, ”உனக்கெல்லாம் ஏண்டா இந்த ஹோட்டல்?” என்று அதற்குப் பொழிப்புரை போடலாம். அப்படியொரு பார்வை அது.

மீண்டும் சோதனை. கைகழுவும் நவீன வகைக் குழாயை திருகி, இழுத்து, திருப்பி…. பிறகு அழுத்தித் தண்ணீர் வரவழைப்பதற்குள் கண்களில் தண்ணீர் வராத குறைதான். அடுத்து கை துடைக்கும் சவ்வுக் காகிதத்தை கண்டவருக்கு மீண்டும் குழப்பம். எடுக்கலாமா, விடலாமா என யோசித்தவர் அவ்வளவு வெளுப்பானதைத் தொடத் தயங்கி தன்வழியே ஒதுங்கினார். ஒரு வழியாக கல்லாப் பெட்டியை தாண்டி வரும் வரைக்கும் அவர்பட்ட பாடு ஒரு ‘ருசிகரமான’ அனுபவம். கடையை ஒருமுறை அவர் நிமிர்ந்து பார்க்கும் பார்வை இருக்கிறதே போதுமடா சாமி என்பது போல!

இன்னுமொருவரின் புலம்பலோ வேறுவிதம் ”மினி மீல்ஸாம், மினி மீல்ஸ், பேசாம ஒரு சாப்பாடே சாப்பிட்டிருக்கலாம் வயிறும் ரொம்பல, வாயும் ரொம்பல போயி ரெண்டு வாழைப்பழம் சாப்பிட்டாத்தான் பசி அடங்கும்.” என்று கொடுத்த காசு செரிக்காமல் ‘விபத்துக்குள்ளானதை’ நொந்து கொண்டார்.

இப்படி ருசி எனும் மாயமானுக்கு பின்னே ஓடிக்களைத்துப் போய் திரும்புபவர்கள் ஒரு புறம். இன்னொருபுறம் புதிய, புதிய உணவு வகைகளிடம் குடியுரிமை கேட்பவர்கள். வாழ்க்கையின் அசல் சுவையை அனுபவிக்கச் சொல்லும் ‘காட்பரீஸூடன்’ கை குலுக்கி ‘புதிய உலகத்தில்’ திரும்பிப் பார்க்காமல் போய்க் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!

உணவு விடுதிக்குள் புகுந்து சர்வரிடம் ‘என்னப்பா இதத்தவிர வேறு எதுவும் புதுசா இல்லையா?’ என்ற சலிப்போடு ”தந்தூரில புதுசா ஏதாவது கொண்டு வா” என்று ஆர்டர் தந்துவிட்டு மேசைக்கு வரப்போகிற உணவு என்னவாய் இருக்கும் என்ற த்ரில் கலந்த சுவைஞர்களின் நாக்கை கட்டிப் போட உணவுச் சங்கிலியும் நீண்டு கொண்டே போகிறது.

பாக்கர், எஸ்ட்ரா பாவு, மஷ்ரும் பீசா, புல்கா, அல்லூ பாலக், மட்டர் பான்னர், ஸ்டஃப்டு கேப்ஸிகம், – என்ன இது? வானவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கும் புதிய கிரகங்களா? வாடிக்கையாளர்களுக்காக உணவுத்துறை விற்பன்னர்கள் வாணலியில் கண்டு பிடித்திருக்கும் புதுப்புது ருசியான ரகங்கள்தான் இவை. இன்னும் பஞ்சவர்ண தோசை, நவரத்ன குருமா என்று பாரம்பரியத்தை இழைத்துக் கொடுக்கும் பலகார வகைகளும் உண்டு.

சாப்பாட்டு ‘ராமர்கள்’ ஒன்றை ருசி பார்த்த பிறகு இன்னொன்றுக்கு ”இரு உன்னை இன்னொரு நாள் வச்சிக்கிறேன்” என்று பொருமிக்கொள்கிறார்கள். இந்த ”ருசிகண்டேன், ருசியே கண்டேன்” என்று போகின்ற பேர்வழிகள் கடைசியில் ”தின்னுகெட்ட பரம்பரை சார்” என்று பெருமை பேசவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

ருசிகண்ட பூனைகளுக்கு நேரமேது, காலமேது? வெளியூர் செல்லும் பேருந்துகள் இரவு ஒரு மணி இரண்டு மணிக்கு நிறுத்தும் இடங்களில் பெப்சியும், கொக்கோகோலாவையும் விட்டுகட்டுபவர்களைப் பார்த்தால், வெகு தூரத்திலிருந்து வைக்கோல் வண்டியை இழுத்து வந்து இளைப்பாறும் மாட்டுக்குக்கூட மயக்கம் வரும். ஒருவருக்கொருவர் போட்டி போட்டுச் செய்யும் சந்தை கலாச்சாரத்தின் நள்ளிரவுத் தாக்குதலை அங்கே பார்க்கலாம்.

இப்படி நேரம், காலம் இன்றி விதம்விதமாகச் சாப்பிடுவதையே லட்சியமாக, பொழுதுபோக்காக, பண்பாடாக ஆக்கிக் கொண்டவர்களின் தேடுதல் வேட்டையின் திசைகளில்தான் புட்டி உணவுகள், பாஸ்ட் ஃபுட் உணவு விடுதிகள் எந்நேரமும் அனுபவிக்கச் சொல்லி அழைக்கின்றன.

இந்த ருசிகர உலகத்தில் நுழைபவர்களின் ‘மன அமைதியை’க் கெடுக்கும் வண்ணம் பசி எடுத்தவர்களின் கூட்டம் பார்வையிலும் பட்டுவிடாதபடி. கண்ணாடிச் சுவர்களுக்குள் கலகலப்பாக நடக்கிறது வியாபாரம். பின்னே பழைய சோறாய் இருந்தால் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலாம், சில்லி சிக்கனாய் இருந்தால், காசில்லாதவனுக்குக் கதவைச் சாத்தடி கதைதான். திருப்தி இல்லாமல் ருசி தேடி அலைபவர்களை உலகத்தரத்திற்கு உயர்த்த கென்டகி போன்ற பன்னாட்டு உணவுத் தயாரிப்பாளர்கள் கோழிக்கறியின் நளபாகத்தைக் காட்டி உலகின் பெரும் பாகத்தை வளைத்துப் போடுகிறார்கள்.

போதை தலைக்கேற தலைக்கேற எவ்வளவுதான் சுவையான உணவு இருந்தாலும் ”என்னடி சாப்பாடு?” என்று எட்டி உதைக்கும் குடிகாரனைப் போல ”இன்னும் ருசி, இன்னும் ருசி” என்று எதிலும் அடங்காமல், காயசண்டிகையின் பசிநோய் போல ருசி நோய் கொள்பவர்களுக்கு மத்தியில்தான், உழைக்கக் கூடிய மக்களோ,

”தங்க உளுந்தலசி, தாம்பளம் போல் தோஜ சுட்டு” என்று தன்வீட்டில் தோசை சுட்டுச் சாப்பிடுவதையே இலக்கியமாக்கி வியக்கின்றனர். விதைத்து, நட்டு, அறுத்து உழைத்து வந்த அந்த நெல்மணியிலிருந்து ஒரு பலகாரம் செய்து சாப்பிட முடியாத அவர்களின் நிலைமையைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தால் இந்த சோத்துக் கட்சிக்காரர்களின் நாக்கில் முளைத்திருக்கும் சுவைமொட்டுகள் தானாக மரத்துப் போய்விடும்.

புதிய கலாச்சாரம், நவம்பர் 1997.