Tuesday, May 6, 2025
முகப்பு பதிவு பக்கம் 742

போலி சாமியார்-நல்ல சாமியார் பிழையான வழக்கு! (இறுதிப்) பாகம் 6

58

நித்தியானந்தா-கார்டூன்-8

போலி சாமியார் – நல்ல சாமியார் பிழையான வழக்கு!

பார்ப்பனிய இந்து மதத்தைப் பொறுத்த வரை நல்ல சாமியார், போலி சாமியார் என்ற வேறுபாடுகள் இல்லை. பார்ப்பனியத்தின் அநீதியான சமூக அமைப்பு – சடங்குகளை எதிர்த்து வந்ததால்தான் புத்த, சமண, சாருவாகன, சித்தர்களை பார்ப்பனிய எதிர் மரபு என்று போற்றுகிறோம். அவர்களெல்லாம் பார்ப்பனியத்தை அவரவர் கால வரம்புகளோடு எதிர்த்துக் கேள்வி கேட்டார்கள். கேள்வி கேட்டவர்கள் மன்னர்களின் ஆயுத பலத்தால் ஒழிக்கப்பட்டார்கள். அவர்களது இலக்கியங்களும் அழிக்கப்பட்டன. அந்தக் கேள்விகளின் இருப்பு பார்ப்பனியத்தால் கரைக்கப்பட்ட பிறகு உலகோடு ஒட்ட ஒழுகலே இங்கு விதியாகிப் போனது. இன்றைக்கு நாம் காணும் சாமியார்களும், அதற்கு முந்தைய வரலாற்றில் உள்ள சாமியார்களும் பார்ப்பனியத்தின் ஏற்றத்தாழ்வான வருண சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டவர்கள். சே குவேரா போன்று ‘இந்துக்களால்’ இமேஜ் கவர்ச்சியுடன் போற்றப்படும் விவேகானந்தரும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

இந்தப் பின்னணியில் பார்ப்பனியம் முன்வைக்கும் துறவறம் என்பது இத்தகைய சமூக அநீதியை ஏற்று வாழும் மக்கள் வியந்தோதுவதற்காக முன்வைக்கப்பட்ட ‘தியாகம்’ போன்றது. ஆனால் சிற்றின்பங்களை துறப்பதால் மட்டும்தான் அந்த தியாகம் தனது மேலாண்மையைக் கோருகிறது. சமூக துன்பங்களை மதம், சடங்கு, மரபு என்று ஏற்று வாழும் மக்கள்தான் உண்மையில் தியாகம் செய்பவர்கள். அந்த தியாகத்தை விதியென கற்பித்து சிவனே என்று வாழ்வதைத்தான் பார்ப்பனியத் துறவிகள் பேசி வந்தனர். மீறுபவர்களை அரசு உதவியுடன் தண்டித்தும் வந்தனர்.

சங்கர மடத்தையோ, சைவ ஆதீனங்களையோ இத்தகைய பின்னணியில் பொருத்திப் பார்த்தால் அவற்றின் வரலாற்றுப் பாத்திரத்தை புரிந்து கொள்ளலாம். துறவிகள் மக்கள் நலனுக்காக தமது இன்பங்களை துறக்கவில்லை. மக்களை ஆதிக்கம் செய்யும் பார்ப்பனியத்தின் மேலாண்மையை நிறுவும் பொருட்டே குடும்ப வாழ்க்கையைத் துறந்தார்கள். மன்னர்களுக்கும் பார்ப்பனியத்தின் இதர ஆளும் வர்க்கங்களுக்கும் தேவைப்படும் சித்தாந்த தலைமையை துறவிகள் அளித்ததனர். பதிலுக்கு அவர்களுக்கு தரப்படும் மரியாதை மன்னர்களின் ஆயுத வலிமை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. ஒரு வேளை அத்தகைய ஆயுத வலிமை தேவையில்லாத நிலை என்றால் அதைக்கூட பார்ப்பனியத்தின் சமூக அமைப்புதான் தோற்றுவித்திருந்தது.

சாமியார்களைப் பற்றி கேள்வி கேட்கக் கூடாது, சந்தேகப்படக் கூடாது, கேலி செய்யக்கூடாது போன்றவையெல்லாம் இயல்பான சட்டதிட்டங்களாக உருவாகி அமையப் பெற்றன. பார்ப்பனிய சமூக அமைப்பை கேள்வி கேட்க முடியாது என்பதும், பார்ப்பனியத்தின் துறவிகளை கேள்வி கேட்கக் கூடாது என்பதும் வேறு வேறு அல்ல. எனவேதான் மடங்கள் நிறுவனங்களாக நிலை பெற்ற பிறகுதான் மடத்தலைவர்கள் கெட்டுப் போனார்கள் என்ற வாதம் தவறு என்கிறோம். அவையெல்லாம் துணை விளைவுகள் மட்டுமே. மடங்களின் தார்மீக பலம் பார்ப்பனிய சமூகத்தின் பலத்தில் குடி கொண்டிருக்கிறது என்பதிலிருந்தே மடத்தலைவர்களின் புனிதமும், அரச மனோபாவமும், கேளிக்கை நாட்டமும் வருகின்றனது. ஒன்று இல்லை என்பதால் மற்றது மகத்தானது அல்ல.

நித்தியானந்தா-9
பணமும் பொருளும்தான் பரம்பொருள், இது புரியாம நீ பாட்டுக்கு ஜீப்புல ஏறுனா எப்படி?

சிற்றின்ப நாட்டம் இல்லாமல் வாழ்ந்த செத்துப் போன சீனியர் சங்கராச்சாரி, ரமணர் போன்றவர்களை நடப்பு கார்ப்பரேட் சாமியார்களுக்கு மாற்றாக சிலர் கூறுகின்றார்கள். இத்தகைய ‘ஒழுக்க’ சாமியார்களெல்லாம் பார்ப்பனியத்தின் அநீதியான சமூக ஒழுக்கத்தை பின்பற்றுவதைத்தான் தங்களது துறவறத்தின் ஆன்மாவாகக் கொண்டிருந்தார்கள். ஆன்மாவிலேயே இத்தகைய அழுக்கு இருக்கும் போது அவர்களது ஆண்குறிகள் அடங்கியிருந்தால் என்ன, ஆடினால்தான் என்ன? அதனால்தான் நித்தியானந்தாவும், ஜெயேந்திரனும் சரி, சந்திரசேகர சங்கராச்சாரி, ரமணரும் சரி இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்கிறோம்.

சமூகத்தை முற்று முழுதாகத் துறந்து வாழ்தல் ‘கடவுளு’க்கும் கூட சாத்தியமில்லை. துறவிகளின் ஆடம்பர மடங்களுக்குப் பின்னால் உழைக்கும் மக்களின் சமாதியாகிப்போன வாழ்வே அஸ்திவாரம். ஜெயமோகனது குருவான நித்ய சைதன்ய யதி கூட ஊட்டியில் முக்கியமான இடத்தில் ஒரு வசதியான குருகுலத்தை கட்டியிருக்கிறார். அவர் ஏன் நாங்குநேரி பாலைவனத்தில் கட்டவில்லை, காஸ்ட்லியான சுற்றுலா மண்ணில் ஏன் கட்டினார், காசு ஏது, மடத்தின் புரவலர்கள் யார், அவர்கள் எப்படி சம்பாதிக்கிறார்கள் என்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தால் அங்கே இருப்பது துறவறமா இல்லை சுரண்டல் அறமா என்பதை உள்ளுணர்வு இன்றியே தெளியலாம்.

சமூகத்தில் இருக்கும் அநீதிகளை மாய்ப்பதற்க்காக தனது வாழ்க்கை இன்பங்களை துறப்பதோடு அதை தான் மட்டும் செய்ய முடியாது, ஒரு மக்கள் கூட்டத்தால் மட்டுமே செய்ய முடியுமென ஒருவன் முனைந்தால் அவனை துறவி என்று அழைக்கலாம். அல்லது போராளிகள் என்றும் அழைக்காலம். பார்ப்பனியத்தின் வரலாற்றில் இந்தப்போராளிகள் இருந்த இடம் தெரியாமல் ஒழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஒழிப்பின் மரபைத்தான் ஆதீனமாகவும், மடங்களாகவும் நாம் பார்க்கிறோம். இதற்கும் மேல் ஒத்துக்கொள்ள தயங்குபவர்கள் உண்மையான துறவிகளைப் பார்க்க வேண்டுமென்றால் பழனி படிக்கட்டில் பிச்சை எடுக்கும் சாமியார்களை போற்றுங்கள், பிரச்சினை இல்லை.

எனவே இத்தகைய பின்னணியில் புரிந்து கொள்வதால்தான் நாம் நித்தியானந்தா ஆதீனமாகக் கூடாது என்ற பிழையான கோரிக்கையை வைக்கவில்லை. அப்படி வைத்தால் நல்ல ஆதீனம், நல்ல சாமியார் என்ற முறையில் பார்ப்பனியத்தின் அநீதிக்கு துணை போன தவறினைச் செய்தவர் ஆவோம்.

சாரமாக இந்தப்பிரச்சினையில் நாம் வைக்கும் மையமான கோரிக்கை என்ன? ஆதீனங்கள், மடங்களது சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட வேண்டும். மரபு என்ற பெயரில் இருக்கும் பார்ப்பனிய அடிமைத்தனங்கள் ஒழிக்கப்பட வேண்டும். மதம் சமூகத்தின் அனைத்து துறைகளிலும் இருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். துறவிகள், சாமியார்கள் என ஆக விரும்பும் எவரும் பழனி படிக்கட்டில் அமர்ந்து மட்டுமே பிச்சை எடுக்க வேண்டும்.

இத்தகைய கோரிக்கைகள் நிறைவேறப் போராடும் சூழ்நிலைக்கு நித்தியானந்தா ஆதீனமாவது உரம் சேர்க்கும். பிடிபட்ட பொறுக்கிக்கும் பிடிபடாத பொறுக்கிகளுக்கும் நடக்கும் இந்த சண்டையை நாம் பார்ப்பனியத்திற்கு பாடை கட்டும் நோக்கத்திற்கு பயன்படுத்துவோம். தோற்கடிக்கப்பட்ட பார்ப்பனிய எதிர் மரபின் இறுதி வெற்றியை நிலைநாட்டுவோம்.

•முற்றும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்தி ‘விளிம்பு நிலை’ கலகக்காரரா? பாகம் 5

5

நித்திக்கு ஆதரவாக வரும் ‘முற்போக்காளர்கள்’!

நித்தியானந்தாவிற்கு அச்சுறுத்தும் தொண்டை முள்ளாக பாலியல் குற்றச்சாட்டு பூதாகரமாக எழுந்து நிற்பதை யாரும் மறுக்க முடியாது. தாராளமய சிந்தனை கொண்ட ‘முற்போக்காளர்கள்’ பலரும் இதை ஒரு குற்றமாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதை இங்கே சேர்த்துப் பார்க்க வேண்டும். நித்தியானந்தாவின் துறவறமும், பாலியல் வேட்கையும் அவரது தனிப்பட்ட விசயம், அவரது படுக்கை அறையை எட்டிப்பார்ப்பது அநாகரீகம் என்கிறார்கள் அந்த ‘முற்போக்காளர்கள்’. ஒருவேளை அது தவறு என்றாலும் அதை கேட்க்க அருகதை உள்ளவர்கள் அவரது பக்தர்கள்தானே அன்றி மற்றவர்கள் அல்ல என்றும் கூறுகிறார்கள். இதை நித்தியானந்தாவும் பலமுறை விளக்கமாகக் கூறியிருக்கிறார்.

லிபரல் சிந்தனையும் பார்ப்பனிய ஆன்மீகமும் இப்படி ஒத்துப் போவது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் இந்த வாதத்தை குற்றவாளிகள் பலரும் அவ்வப்போது எழுப்புவது வாடிக்கையானதுதான். பேருந்தில் பிக்பாக்கட் அடிக்கும் ஒருவன் கூட தன்னை அடிப்பதற்கு பணத்தை இழந்தவனுக்குத்தான் உரிமை உண்டெனக் கூறுவான். சட்டமும் கூட பாதிக்கப்பட்டவன் புகார் அளித்தால்தான் வழக்கையே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும். அப்பட்டமான பாலியல் வன்முறை நடந்தாலும் கூட பாதிக்கப்பட்டவள் புகார் தர தயாரில்லை எனும் போது குற்றம் இழைத்தவரை சட்டப்படியே தண்டிக்க முடியாது.

இதை வைத்து குற்றவாளிகள் யோக்கியமானவர்கள் என்று ஆகிவிட முடியுமா? பாதிக்கப்பட்டவர்கள் வெளிப்படையாக புகார் தெரிவிப்பதன் மூலம் தனது சமூக பாதுகாப்பை இழந்து விடுவார்கள் என்ற யதார்த்தமே அவர்களது சரணாகதி அணுகுமுறையை தீர்மானிக்கிறது. இது குறிப்பிட்ட சமூகத்தின் குற்றமே அன்றி பாதிக்கப்பட்டவரின் கோழைத்தனம் அல்ல.

நித்தியானந்தாவின் ஊடக உலக கொ.ப.செவாக செயல்பட்ட சாரு நிவேதிதாவின் சாட் வக்கிரத்தையே எடுத்துக் கொள்வோம். பாதிக்கப்பட்ட பெண் பொது வெளியில் புகாராக்கி வழக்கு தொடுக்க முன்வராத நிலையில் சாரு மீண்டும் சகஜமாக தனது பணிகளைத் தொடருகிறார். சட்டத்தின் மொழியில் அவர் குற்றவாளி இல்லை. ஆனால் அவர் வக்கிரத்திற்கு மறுக்க முடியாத சான்று இருந்தும் லீகலாக பதியப்படவில்லை என்று கிழக்குப் பதிப்பகம் பத்ரியோ, பத்திரிகையாளர் ஞாநியோ சகஜமாக அவரோடு பேசுகிறார்கள், புத்தகத்தை போடுகிறார்கள், அறிமுகம் செய்கிறார்கள்.

பொதுவில் பெண்கள் மீது இழைக்கப்படும் பாலியல் வக்கிரங்களை நாள்பட நாள்பட சமூகம் ஒரு பாரதூரமான அநீதியாக பார்ப்பதில்லை. இதைத்தான் இதெல்லாம் ஒரு விசயமா என்று அருணகிரி கேட்கிறார். கூடவே ஒரு படுக்கையறைக்குள் நடக்கும் விசயத்தை வைத்தெல்லாம் ஒருவனை தண்டிக்க முடியாது என்றும் இந்த சிந்தனையாளர்கள் கூறுகிறார்கள்.

நல்லது, விவசாயியின் வயலுக்குள்ளேயும், ஏழையின் குடிசைக்குள்ளேயும் அரசும், முதலாளிகளும் அநீதியாக தலையிடுகின்றனர். மின்வெட்டை ஏற்க வேண்டுமென உத்தரவு போடுகின்றனர். சமையலறைக்குள் புகுந்து விலைவாசி ஏற்றத்தை ஏற்றே ஆகவேண்டும் என கட்டளையிடுகின்றனர். மனைவி, குழந்தைகளை விட்டு பிரிந்தே வேலை செய்ய வேண்டும் என்று அலைய விடுகின்றனர்.

இவையெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடுவது ஆகாதா? கேட்டால் நாட்டின் நலனுக்காக தலையிடலாம் என்பார்கள். உண்மையில் இந்த நலன் முதலாளிகளின் நலனுக்காகத்தான் தலையீடு செய்கிறது. எனில் மக்களின் நலனுக்காக ஒரு முதலாளி, சாமியாரின் படுக்கையறைக்குள் ஏன் தலையிடக்கூடாது? முகேஷ் அம்பானி கட்டியிருக்கும் ஆன்டிலியா மாளிகையை பணக் காரர்களின் வக்கிரம் என்று சொல்வது அவரது தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவது ஆகிவிடுமா? ரஜினியின் வருமானம் பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட்டின் மூலம் வருகிறது என்று சொல்வது அவரது தனிப்பட்ட தொழிலில் தலையிடுவது ஆகுமா?

ஆம். நித்தியானந்தாவின் மாளிகை மடமும், வசதிகளும், ஏவல் வேலைகளுக்கு காத்திருக்கும் சேவிகைகளும் மக்கள் பணத்தை ஏமாற்றி பெறப்பட்ட ஒன்று. இதை பக்தன் மட்டும்தான் கேட்க முடியுமென்றால் இந்த உலகில் எல்லா அநீதிகளையும் யாரும் எதிர்த்து கேட்க முடியாது. அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை ஈராக் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், ஆதிக்க சாதியின் திமிரை தலித் மக்கள்தான் எதிர்க்க வேண்டும், கோவிலில் தமிழ் நுழைவதற்கு பக்தன்தான் போராட வேண்டும், பாலியல் வன்முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்தான் போராட வேண்டும் என்று பேசினால் அந்த தாராளமய சிந்தனையாளர்கள் ஒத்துக் கொள்வார்களா?

நித்தி - சாரு
நித்தி : வாங்கடா வாங்க ஆதினம் வண்டிக்கு பின்னால – சாரு : வட போச்சே 🙁

நித்தி விளிம்பு நிலை கலகக்காராரா?

இவர்களோடு ஒத்துப் போகும் பின்நவீனத்துவ அறிவாளிகளும் கூட நித்தியானந்தாவின் கலகத்தை வரவேற்று வாழ்த்துப்பா பாட வாய்ப்பிருக்கிறது.

தற்போது மதுரை ஆதீனத்தில் திருநங்கைகள் முக்கிய பொறுப்பில் வைக்கப்படுவார்கள் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை அவர்கள் வரவேற்கவே செய்வார்கள். மேலும் தான் ஆண்மை, பெண்மை கடந்தவர் என்று நித்தியானந்தா அறிவித்திருப்பதை திருநங்கை போல இருப்பவர் ஆதீனமாக முடியாது என்று அர்ஜூன் சம்பத் கோஷ்டி தெரிவித்திருக்கிறது. இதுவும் திருநங்கைகளை இழிவுபடுத்தும் ஒன்றுதான். இவற்றை வைத்தெல்லாம் நித்தியானந்தாவை நாம் பெண்ணுரிமை போராளியாகவோ, ‘விளிம்பு நிலை’ கலகக் காரனாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. கொண்டால் சங்கர மட, மதுரை ஆதீன அந்தப்புறங்களில் பெண்கள் வந்திருப்பதால் மடத் தலைவர்களை பெண்ணுரிமைப் போராளிகளாவும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

பின்னாளில் தனது பாலியல் அத்து மீறல்கள் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டால் தான் மன ரீதியாக திருநங்கை மாதிரியானவர் என்று தப்பித்துக் கொள்ளலாமென நித்தி யோசித்திருக்கலாம். சட்டத்திற்கு இந்த மொழி என்றால் சமூகத்திற்கு அப்படி சொல்ல முடியாது. அதனால்தான் தான் ஒரு அர்த்தநாரீஸ்வரர் என்று ஒரே போடாக போட்டுவிட்டார் நித்தி.

மாமூல் வாங்கியே வயிற்றையும், பாங்க பாலன்சையும் வளர்க்கும் ஒரு ரவுடி ஊரின் கோவிலுக்கு கொடை என்றதும் வாரி வழங்குவதில்லையா? மக்களும் அவனது தயாளா குணத்தை போற்றுவதில்லையா? அது போலவே தனது பொறுக்கித்தனத்தை மறைப்பதற்கும் மடை மாற்றுவதற்கும் நித்தி இந்த கலகக்கார வேடத்தை கையிலெடுக்கிறார். இதிலெல்லாம் பின் நவீனத்துவ அறிவாளிகள் விழுந்து விடுவார்கள் என்றால் அவர்களை ஆண்டவன் தெரிதாவால் கூட காப்பாற்ற முடியாது.

சங்கர மடத்திலோ, மதுரை ஆதீனத்திலோ பெண்கள் பெண்ணுரிமையின் பாற்பட்டு வரவில்லை. அந்தப்புறத்து நாயகிகளாகத்தான் மறைமுகமாக கொண்டு வரப்படுகிறார்கள். ஆதலால் இது நாம் பெருமைப்படத்தக்க ஒன்றல்ல. சபரிமலையில் பெண்கள் வழிபடவேண்டும், கருவறைக்குள் பெண்கள் பூஜை செய்ய உரிமை வேண்டும், ஆதீன, மடங்களின் தலைவர்களாகவும் பெண்கள் வருவதற்கு உரிமை வேண்டும் என்று கோரினால்தான் அது பெண்ணுரிமையின் பாற்பட்டது.

‘கற்பை’ப் போற்றும் இந்துமதம்தான் தேவதாசிகளையும் கொண்டு வந்திருக்கிறது. ‘தாய்மையை’க் கொண்டாடும் இந்து மதம்தான் தாய்மார்களை உடன்கட்டை ஏற்றிக் கொன்றது. ஆறுகளுக்கு பெண்களது பெயரை வைத்ததாகப் பீற்றிக் கொள்ளும் பார்ப்பனியம்தான் விதவைப் பட்டத்தையும் திணித்தது. ‘குழந்தைகள் தெய்வங்கள்’ என்று பார்த்த பார்ப்பனியம்தான் பால்ய விவாகத்தையும் பேணி வளர்த்தது. எனவே பார்ப்பனியத்தின் ஒழுக்கமும், ஒழுக்கமின்மையும் என்பது ஒரு அடக்குமுறையின் மறுபாதி நாணயம்.

இதற்கு மேலும் நித்தியானந்தாவின் தனிப்பட்ட உரிமைகள் குறித்து கவலைப்படுவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது. என்றாலும் இதை வைத்து நித்தியானந்தா ஆதீனமாவதற்கு உரிமை இல்லை என்று நாம் கூறவில்லை. உரிமை உண்டு என்று ‘ஆதரிக்கவே’ செய்கிறோம்.

அதற்கு போலி சாமியார், நல்ல சாமியார் என்ற பொருட்பிழை கொண்ட வழக்கை பரிசீலிக்க வேண்டும்.

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

நித்தி: மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்! பாகம் 4

5

மயிறுப் பிரச்சினையும், மரபின் பித்தலாட்டமும்!

ஆதினம் அருணகிரியே நித்தியின் நீண்ட முடிதான் அவரது டிரேட் மார்க் என்று அங்கீகரித்து விட்ட புடியால் முடி பிரச்சினையை ஏன் எழுப்புகிறீர்கள் என்று கேட்கிறார் நித்தியானந்தா. இந்து மதத்திற்கு எத்தனையோ சோதனைகள் இருக்கும் போது மயிரெல்லாம் ஒரு பிரச்சினையா என்று அவர் கேட்பதில் நியாயம் இருக்கிறது. இவைதான் சைவ ஆதீன மகா சன்னிதானங்கள் கண்டு பிடித்த மரபு மீறல். எனில் எது மரபு? எவை மரபு மீறல்?

பெருசு உயிரோடு இருக்கும்போது தனது காதலியுடன் ஓடிப்போன ஜெயேந்திரன் போகும் போது தண்டத்தை கொண்டு செல்லவில்லை. அதை விட்ட உடனேயே அவரது சங்கர மட பதவி ரத்தாகிவிட்டது என்பதெல்லாம் பார்ப்பனியத்தின் கீர்த்தி கருதி மாற்றப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்த ஜெயேந்திரர் மீண்டும் மட பட்டத்தை பெற்றார். இப்படி ஆயிரத்தெட்டு விதி மீறல்களெல்லாம் அவரவர் தேவை கருதி எல்லா ஆதினங்களிலும் நடந்திருக்கின்ற உண்மைகள்.

கோவில் கருவறைகளை எடுத்துக் கொள்வோம். மற்ற சாதியினர் புரோகிதராக வரலாமெனும் போது மட்டுமே இது ஆகம விதிக்கு எதிரானது என்று பார்ப்பனர்கள் ஊளையிடுவது வழக்கம். ஆனால் கோவில் கருவறைக்குள், மின்சாரம், டியூப்லைட்டு, சோடியம் விளக்கு, ஏர் கூலர்கள், டைல்ஸுகள் எல்லாம் இன்று நுழைந்திருக்கின்றன. இவையெல்லாம் உள்ளே வரலாம் என்று எந்த ஆகமத்தில் கூறப்பட்டிருக்கின்றன? இல்லை ‘1500’ ஆண்டு மரபு உள்ள மதுரை ஆதினம் கல்மடமாக இருந்து இன்று ஏ.சி மடமாக மாறியிருக்கிறதே இதற்கென்ன பொருள்? ஆகவே ஆகம விதி, மரபு என்பதெல்லாம் பார்ப்பனிய ஆதிக்கத்திற்கு உட்பட்டு மாறிக்கொள்ளும், வேறு விளக்கங்களும் தரப்படும். எனில் அந்த சலுகை நித்தியானந்தாவிற்கு மட்டும் கிடையாதா?

சங்கராச்சாரியும், ஆதீனங்களும் காரிலும், விமானங்களிலும், இரயிலிலும் செல்வதெல்லாம் எந்த மரபில் வருகின்றன? இவையெல்லாம் காலத்துகேற்ற மாற்றங்கள் எனில் பக்தர்களின் மனம் கவர்ந்த நித்தியின் முடி மட்டும் வெட்டப்பட்டு மொட்டையடிக்க வேண்டுமா? ஆகவே நித்தியானந்தாவை மரபு கருதி ஏற்கக் கூடாது என்பதில் அவர்களே சீரியசாக கருதும் எவையுமில்லை. ஏனென்றால் இந்த மரபு விதிமுறைகளின் மையமாக இருப்பது ஒரு ஆதினத்தின் வாரிசை நியமிக்கும் உரிமை உயிரோடு இருக்கும் ஆதினத்திற்குத்தான் உண்டு என்பதே. இதை மறுக்க முடியாது. மறுத்தால் இதுதான் ஆகப்பெரிய மரபு மீறல்.

நித்தியானந்தா-மொட்டை
பழயை ஆதினம்: தம்பி நித்தி மொட்டை போடறீயா? நித்தி : ஏண்ணே அதான் இவ்ளோ கொட்டை போட்டிருக்கேனே?

 

மரபின் மையம் சொத்துடைமையில்தான்! தீர்வு அரசுடமையில்தான்!

எனவே ஆதினங்களை ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்வு செய்ய வேண்டுமென்று கூறினால்தான் இந்தப் பிரச்சினையில் மற்றவர் தர்க்க ரீதியாக தட்டிக் கேட்பதற்கு வழியுண்டு. அது சாத்தியமில்லை என்றால் வேறு எவையும் சாத்தியத்திற்குள் வந்துவிடாது. மற்ற ஆதினங்கள் இது குறித்து நீதிமன்றத்திற்கு போவதும் சிரமம். போனாலும் அப்படி சட்டென்று முடிகிற விசயமல்ல. ஏனெனில் இந்தக் குழாயடிச் சண்டைக்கு நீதிமன்றம் சென்றால் அப்படி ஒரு புதிய மரபு ஏற்படுத்தப்படுமென்றால் எந்த ஆதினங்களும் நிம்மதியாகத் தூங்க முடியாது. அதனால்தான் அவர்களில் சிலர் இது குறித்து அறநிலையத்துறைக்கும், புரட்சித் தலைவியின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக பேசுகின்றனர்.

இங்கு வாசகர்கள் ஒரு விசயத்தை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு அறநிலையத்துறையின் கீழ் இந்து கோவில்களை வைத்திருப்பது தவறு, அவற்றை மீண்டும் ‘இந்துக்கள்’ அதாவது ஆதிக்க சாதி அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டுமென்று கூப்பாடு போட்டவர்கள் இப்போது மட்டும் அரசு தலையீடு செய்ய வேண்டும் என்று கோருகிறார்கள். ஒரு சிலர் மதுரை ஆதீனத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டுமென்றும் கேட்கிறார்கள். மக்கள் பிரதிநிதியாக இருக்கும் மதச்சார்பற்ற அரசு இன்றி ‘1500’ ஆண்டுகள் வரலாறு கொண்ட ஆதீனம் கூட காப்பாற்றப்பட முடியாது எனில் அந்த நீதி கோவில்களுக்கு மட்டும் இல்லையா? ஏன் இந்த இரட்டை வேடப் பேச்சு?

மசூதிகளும், சர்ச்சுகளும் அந்தந்த சிறுபான்மையினர் கையில் இருக்கும் போது கோவில்கள் மட்டும் இந்துக்கள் வசமில்லையா என்று நியாயம் பேசிய இந்து மதவெறியர்கள் இப்படி தடாலென்று சரணாகதி அடைகிறார்கள் என்பதை நாம் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த முரண்பாட்டின் மையம் என்ன? ஆதினங்களோ, கோவில்களோ தனியார் சொத்துக்களாக இருக்கும் பட்சத்தில் அங்கே என்ன முறைகேடுகள் நடந்தாலும் வெளியார் தலையிட முடியாது.  முறைகேடுகளை தட்டி கேட்க வேண்டுமென்றால் அவை மக்கள் சொத்தாகவோ இல்லை அரசு மேற்பார்வையிலோ இருக்க வேண்டும்.

ஆகவே இந்துமதவெறியர்களின் முன் இருவழிகள்தான் இருக்கின்றன. தனியாரென்றால் தில்லு முல்லுகளை சகித்துக் கொள்ள வேண்டும். தட்டிக் கேட்க வேண்டுமென்றால் அரசுதான் அவற்றை ஏற்று நடத்த வேண்டும். என்ன பதில் தருவார்கள்? இங்கும் கூட மதுரை ஆதீனத்தின் எதிர் கோஷ்டி மடத்தின் உள்ளே  நுழைந்து கூட எதிர்ப்பைக் காட்ட முடியவில்லை. தற்போது மதுரை ஆதீனம் நித்தியானந்தாவிற்கு பாத்தியப்பட்ட சொத்தாக மாறிவிட்டபடியால் அவர்கள் நுழைவதற்கு அனுமதி இல்லை. மீறி நுழைந்தால் போலீசு கைது செய்யும்.

ஏற்கனவே கூறியபடி ஆதினங்கள் என்பவை தனி ஒருவருக்கு சொந்தமாக இருக்கம் பட்சத்தில் புதிய ஆதீனங்களின் நியமனம் குறித்து ஒருவர் அதிருப்தி மட்டுமே தெரிவிக்கலாமே ஒழிய தடுத்து நிறுத்த முடியாது. இதை தற்போதைய மதுரை ஆதினமான அருணகிரி பல முறை நேரடியாகவும், மறைமுகமாவும், மிரட்டலோடும் தெரிவித்திருக்கிறார். இதை எதிர் கொள்ள அவர்கள் செய்த ஏற்பாடு என்ன?

நித்தியின் வசிய மருந்து! அருணகிரியின் பிசினெஸ் உடன்பாடு!!

அருணகிரி அவர்கள் சுய நினைவில் இல்லை, நித்தியின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறார் என்று பேசியதோடு நீதிமன்றத்திலும் வழக்கு போட்டார்கள். அதாவது ஒரு முதலாளி சுய நினைவோடு உயில் எழுதவில்லை என்றால் செல்லுபடியாகாது என்று தமிழ் சினிமாவில் கேட்டிருப்போமே? ஆனாலும் தான் குத்துக் கல்லாகத்தான் இருக்கிறேன் என்று ஆதினம் போட்ட உத்தரவை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு அந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விட்டது. இதிலும் ஒரு தத்துவப் பிரச்சினை உண்டு.

ஓஷோ போன்ற கார்ப்பரேட் சாமியார்களும் சரி, கங்கை மகாமத்திற்கு வரும் நாகா சாமியார்களும் சரி போதை வஸ்துகளோடுதான் பரப்பிரம்மத்தோடு ஒன்றுகின்றனர். அவை கஞ்சா, அபின் என்று மட்டும் இருக்க வேண்டியதில்லை. ரோல்ஸ்ராய்ஸ் காராகவோ, பிரதமர் துவங்கி பாமரர் வரை காலில் விழுவதாகவோ  கூட இருக்கலாம். மதுரை ஆதீனமும் தனக்கு நீண்ட காலம் இளைப்பு பிரச்சினை இருந்ததாகவும் தற்போது நித்தி அதை குணப்படுத்தி விட்டதாகவும் கூறியிருக்கிறார்.

நித்தியானந்தா வசிய சக்தி உள்ளவரென்று அவரது எதிர்ப்பாளர்கள் கூட கூறுகிறார்கள். பொருள்களை பயன்படுத்தத் தெரிந்த எவரும் வசிய ஆற்றலை தாராளமாகப் பெறலாம். இங்கே கூட நித்தி ஸ்டராய்டு மருந்துகளை பெரிய ஆதீனத்திற்கு கொடுத்திருக்கலாம். வயதான அருணகிரி இன்றோ நாளையோ மண்டைப்போடும் தருணத்தில் இருப்பதால் இதனால் ஒன்றும் குடி மூழ்கிவிடாது. குவார்ட்டரில் பெப்பர் கலந்து அடித்தால் தொண்டைக் கட்டு சரியாகிவிடும் என்று விவேக் ஒரு படத்தில் சொல்வாரில்லையா, நிஜத்திலும் இத்தகைய மருந்துகளை கார்ப்பரேட் சாமியார்கள் பயன்படுத்தினால் யார் கண்டு பிடிக்க முடியும்?

நித்தியானந்தா
எங்க்கிட்டயும் செருப்பிருக்கு நாங்களும் வீசுவோம் - எதிர் கோஷ்டி மீது செருப்பு வீசிய நித்தி ஆதரவு கோஷ்டி

ஆனாலும் மதுரை ஆதீனம் நித்தியின் கார்ப்பரேட் பாணி ஆன்மீகத்தில்தான் மனதைப் பறி கொடுத்திருக்கிறார். அதற்கு விலையாக ஐந்து கோடி ரூபாய்களையும் வாங்கியிருக்கிறார். முற்றும் துறந்த ஆதீனத்திற்கு இந்த பணம் எப்படிப் பயன்படும் என்று கேட்பது அறீவீனம். ஊருக்கு மூன்று, நான்கு குடும்பங்கள் இருக்கையில் அவருடைய மாதாந்திர பட்ஜெட் என்பது நிச்சம் பெரிய தொகைதான். ஆகவே இந்த ஆதீன வாரிசு நிகழ்வு என்பது பக்காவான பிசினெஸ்ஸாகவும் இருக்கிறது. ஏராளமான சொத்துக்களை வைத்திருக்கும் ஆதீனங்கள் இயற்கையாகவே பிசினெஸ் ஆட்களாக இருந்தாக வேண்டும் என்பது தவிர்க்க முடியாத நியதி. இதைப் புரிந்து கொண்டால் மதுரை ஆதீனத்திற்கும் நித்தியானந்தாவிற்கு ஏற்பட்ட வணிக நடவடிக்கையை குறை சொல்ல முடியாது.

இறுதியாக நித்தியை எதிர்ப்பவர்கள் அவரது பாலியல் முறைகேட்டினை மட்டும் வைத்து ஏதாவது செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள். ஆனால் நித்தியின் படுக்கையறையில் எட்டிப்ப பார்த்து முடிவு செய்வது அநாகரீகம் என்கிறார்கள் சில தனி மனித உரிமையாளர்கள்.  எது தனியுரிமை? எது தனியுரிமை மீறல்?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்! பாகம் 3

37

சங்கர மடத்தின் பார்ப்புக்கு ஒரு நீதி! மனு தர்மத்தின் நியதி!

பார்ப்பனியத்தின் தலைமை பீடமாக திகழ்ந்த சங்கர மடத்தை அவாள்களும் சரி, அவாள்களின் அரசியல் இயக்கமான ஆர்.எஸ்.எஸ்ஸூம் சரி என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். தற்போது நித்தியானந்தா ஆதீனமாக மலர்ந்திருக்கும் நிலையில் யாரும் ஜெயேந்திரன் விவகாரத்தை எழுப்பி விடக்கூடாது என்பதில் தினமணி வைத்தி மாமா மிகவும் கவலைப்ப்படுவது அதற்கோர் சான்று. அதாவது ஜெயேந்திரன் மடாதிபதியாக இருக்கும் போதுதான் குற்றம் சாட்டப்பட்டாராம். அது நீதிமன்றத்தால் நிரூபணமாகாத நிலையில் அவர் பதவி விலக தேவையில்லையாம். ஆனால் நித்தியானந்தா பாலியல் குற்றம் சாட்டப்பட்ட நிலையில் புதிதாக மடத்தின் தலைவராக வருவது சரியில்லை என்று புலம்புகிறது தினமணி. எனில் அவர் நித்தியானந்தா தியான பீடத்தின் தலையாக வலம் வருவதில் வைத்திக்கு உடன்பாடுதான். புதிய பதவிதான் பிரச்சினையாம்.

நெஞ்சு நிமிர்த்தி ” நீதான் குற்றவாளி” என்று சொல்ல முடியாத துர்பாக்கிய நிலைதான், “நித்தியானந்தா ஆதினத்திற்கு பொருத்தமானவர் அல்ல, மரபுகள் தேவைப்படாத சித்த மரபைச் சேர்ந்தவர்”, என்றெல்லாம் செத்துப்போகும் பாயிண்டுகளை வைத்து பேசுகிறார் வைத்தி மாமா. என்னதான் கவனமாக இருந்தாலும் மல்லாக்க படுத்து துப்பும் போது எச்சில் கீழேதானே விழவேண்டும்?

நித்திக்காக வெட்கப்படும் ‘இந்துக்களை’ காப்பாற்ற வருகிறார் ஜெயமோகன்!

ஜெயமோகன்
நோ, நோ! திஸ் நான்சென்ஸ் இஸ் நாட் ஒரிஜினல் ஆன்மீகம் என்கிறார் ஜெயமோகன்

கொலையே செய்தாலும் ஒரு பார்ப்பனருக்கு மரண தண்டனை இல்லை எனும் மனு தர்ம விதி ஜெயேந்திரன் விசயத்திலும் அப்பட்டமாக பின்பற்றப்படுகிறது. பார்ப்பனரல்லாத சாமியார்களின் லீலைகளை கண்டிக்கும் எவரும் சங்கர மடத்திற்கு மட்டும் அனிச்சை செயலாய் விலக்கு கொடுத்து விடுகிறார்கள். நித்தியானந்தாவின் படுக்கையறை ஆட்டம் நாறிய போது தனது இந்து பக்தர்களை ஆற்றுப்படுத்தும் விதமாக ஆன்மீகம் – போலி ஆன்மீகம் தொடரை ஜெயமோகன் எழுதியிருந்தார்.

ஆனால் செத்துப் போன சீனியர் சங்கராச்சாரியின் சாதித் திமிர், மொழித் திமிர், ஆணாதிக்க திமிர் எல்லாவற்றையும் கடந்து அவர் ஒரு கலாச்சாரக் காவலர் என்று கொண்டாடும் ஜெயமோகன் அந்தக் காவலர் நியமித்த ஜெயேந்திரனது குற்றங்களுக்கும் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். இவர் வேறு, அவர் வேறு என்று ஒற்றை வரியில் கடந்து செல்ல முடியாது. பெருசின் உள்ளொளிதானே சிறுசின் ஞானத்தை கண்டுபிடித்து அரியணையில் ஏற்றியிருக்கிறது. பெருசு உயிரோடு இருக்கும் போது மட்டும் சிறிசு நல்லாத்தான் இருந்தார் என்ற வாதமெல்லாம் பூமாரம் போல திருப்பித் தாக்கும்.

நமது கேள்வி எளிமையானது. அதிகார, அரசியல் தரகு மையமாக மாறியதால் மட்டும் ஜெயேந்திரன் தவறு செய்து விடவில்லை. இந்த வாதத்தை நீட்டித்தால் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வருமுன்னர் ஆர்.எஸ்.எஸ் கூட ஒழுக்கமாகத்தான் இருந்தது என்றும் சொல்லலாம். ஆனால் உண்மை அதுவல்ல. அரசியல் அதிகாரத்தை சுவைப்பதற்காக நெடுங்காலம் போராடிய இந்துமதவெறியர்கள் குறிப்பிட்ட காலத்தில் அதை பறித்தெடுக்கிறார்கள்.

ஒழுக்கத்தை வெறுமனே பாலியல் சார்ந்த தனிப்பட்ட ஒழுக்கமாக மட்டும் குறுக்குவதால் சமூகம் சார்ந்த பேரொழுக்கங்கள் மறைந்து கொள்கின்றன. கூடவே தனது ஆதிக்க பாசிசக் கொள்கையை நியாயப்படுத்தவும் செய்கின்றன. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட மக்கள் கூட்டத்தை மதத்தால் சாதியால் மொழியால் ஒடுக்கும் கும்பல் பெண்ணாசை துறப்பு அல்லது தொடுப்பின் மூலம் தனது சமூக ஒழுக்கக் கேட்டை ஒழுக்கமாக சித்தரிக்கிறது.

ஜெயமோகன் போன்றோர் விழும் இடம் துல்லியமாக இதுதான். அந்த வகையில் பெரிய சங்கராச்சாரி மற்றும் ஆட்சிக்கு முந்தைய ஆர்.எஸ்.எஸ் கூட்டம் தன்னளவிலேயே உழைக்கும் மக்களுக்கு எதிரான பார்ப்பன பாசிசத்தை கொள்கையாகவும், மதமாகவும், சடங்காகவும் கொண்டிருந்ததார்கள். இந்த ஒடுக்குமுறை அரசியலை விடவா ஜெயேந்திரனது பாலியல் ஒழுக்கம் கீழானது? இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்கிறோம். ஒன்றின் வெளிப்பாடு மற்றதை இல்லை என்றோ உயர்ந்தது என்றோ ஆக்கிவிடாது. ஆயினும் இந்த எளிய உண்மையை ஜெயமோகன்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.

மக்களுக்கான ஜனநாயகத்தை மறுப்பதால்தான் ஞானிகள், மடங்கள், அற்பவாத இலக்கியவாதிகளின் இருப்பு கருத்தாலும், நடைமுறையாலும் தனது வம்படியான மேல் இருப்பை தக்க வைத்துக் கொள்கிறது. அப்படித்தான் இவர்களது அகங்காரமே நீதிமன்றமாகவும், தன்னிலையே கேள்விக்கு அப்பாற்பட்டும், கருத்தே எதிர்க்கப்படக்கூடாததாகவும் தொழிற்படுகின்றன. அதனால் சமூகத்தின் பரந்துபட்ட செயல் துடிப்பில் வைத்து இவர்கள் எப்போதும் தங்களை விமரிசனம் செய்து கொள்ள மாட்டார்கள். ஆகவேதான் இத்தகைய ஞானிகளை நாம் மட்டுமே புரிந்து கொள்ள வேண்டுமே அன்றி நம்மை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது பாமரத்தனம் என்று ஜெயமோகன் நீண்ட காலமாக ஓதுகிறார். பார்ப்பனியத் திமிரின் இலக்கிய சாட்சியாக அவர் நீடித்திருப்பதன் தத்துவம் இதுதான்.

சைவ ஆதீனங்கள் – பார்ப்பனியத்தின் பங்காளிகள்!

ஆக நித்தியானந்தாவை மட்டம் தட்டும் போக்கில் ஜெயேந்திரனை கண்டு கொள்ளாமல் விடுவதில் பார்ப்பனிய ஆதிக்கமும், அடிமைத்தனமும் நிச்சயமாக இருக்கிறது என்கிறோம். இதனால் சைவ ஆதீனங்கள் அனைத்தும் பார்ப்பனியத்தை எதிர்க்கிறது என்பதல்ல. சொல்லப் போனால் இவர்களும் பார்ப்பனியத்தின் பிரச்சார பீரங்கிகிகள்தான். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆவதை எதிர்க்கும் பார்ப்பன சிவாச்சாரியர்களுக்கு சைவ ஆதீனங்கள்தான் தோள் கொடுத்தார்கள். கருவறையில் தமிழ் மொழி கூடாது என்பதையும் இவர்கள்தான் முன்னின்று பேசினார்கள். அந்த வகையில் இவர்களது பார்ப்பனிய கிரைம் ரிகார்டு நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. இவர்களது கோவில்களில் கூட பார்ப்பனர்கள்தான் புரோகிதர்களாக உள்ளனர்.

பார்ப்பனியத்தின் சமூக அடக்குமுறைக்கு மாற்றாக வந்த சமண புத்த மதங்களை இரத்தத்தால் அழித்த வரலாற்றில் ஆதீனங்களுக்கும் இடமுண்டு. சமண துறவிகளை கழுவிலேற்றிக் கொன்ற திருஞான சம்பந்தர்தான் மதுரை ஆதீனத்தின் ஸ்தாபகராம். எனில் கொலைகார சம்பந்தரை விட குஷால் பேர்வழி நித்தியானந்தா எவ்வளவோ மேலில்லையா? அல்லது அந்த கொலைக்கும் இந்த மன்மதக் கலைக்கும் தொடர்பில்லையா? பெண்ணாசையை விட ஒரு முழு சமூகத்தையே ஆட்டிப்படைக்கும் ஆசை பேராசை இல்லையா?

ஆர்.எஸ்.எஸ் கூட்டத்திற்கு தேவைப்படும் உதவிகளையும் இந்த ஆதினங்கள் கண்ணும் கருத்துமாக செய்துதான் வருகின்றனர். குன்னக்குடி போன்ற ஒரிரு விதிவிலக்குகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் பார்ப்பன ஆதிக்கத்தின் தளகர்த்தர்களாகத்தான் அனைத்து ஆதீனங்களும் இருக்கின்றனர். இங்கும் கூட சைவ வேளாளர் சாதிகளைச் சேர்ந்தோர் மட்டும்தான் தம்பிரான்களாகவும், ஆதீனமாகவும் வர முடியும். தற்போது நித்தியானந்தா விவகாரத்தில் மரபு என்ற பெயரில் இதைத்தான் எழுப்புகிறார்கள்.

நித்தியானந்தா-மதுரை ஆதீனம் மீட்புக் குழு
ஆதீனம்! தீர்ப்ப மாத்திச் சொல்லு! இப்படிக்கு, நெல்லைக்கண்ணன், அர்ஜூன் சம்பத், முருகன்ஜி , மதுரை ஆதீனம் மீட்புக் குழு!

சைவப் பிள்ளைதான் ஆதீனமென்றால், மற்றவர்கள் வேசி மக்களா?

அதாவது சைவ வேளாளர், சைவ முதலியார், சைவ செட்டியார் சாதிகளைச் சேர்ந்தோர்தான் ஆதினமாக வரமுடியுமாம். நித்தியானந்தா ஆற்காடு முதலியார் என்பதால் தகுதியில்லை என்கிறார்கள். அர்ஜூன் சம்பத் கும்பலோடு இணைந்திருக்கும் நெல்லைக் கண்ணன் போன்றோர் இதை ஒரு பெரிய நல்லொழுக்க விசயமாக திரும்பத் திரும்ப ஓதுகின்றனர். ஆனாலும் நித்தியானந்தா தொண்டை மண்டல முதலியார்தான், தகுதியுள்ளவர்தான் என்று எக்சிஸ்டிங் மதுரை ஆதினம் ஓதியபடியே வாதாடுகிறார்.

சங்கர மடத்திற்கு பார்ப்பனர்கள், சைவ ஆதீனங்களுக்கு சைவ வேளாளர்கள் என்பதெல்லாம் மரபோ மண்ணாங்கட்டியாகவோ இருக்கட்டும். இவையெல்லாம் மற்ற ‘இந்து’க்களை இழிவு படுத்துகிறது என்று எவருக்குமே தோன்றவில்லை ஏன்? பூணூல் பார்ப்பானும், விபூதி சைவப் பிள்ளையும்தான் ‘இந்து’க்களுக்கு மத குருக்களாக வர முடியும் என்றால் அங்கே மானமுள்ள ‘இந்து’வுக்கு என்ன வேலை? இந்து முன்னணியின் பார்ப்பனிய ஆதிக்கத்திற்காக பிரிந்து சென்றதாக கூறிக் கொள்ளும் இந்து மக்கள் கட்சி தற்போது அந்த ஆதிக்கத்தை சைவப் பிள்ளைக்கு மாற்றித் தரத் துடிப்பது ஏன்?

சக்கலியரும் சங்கராச்சாரியாகலாம், பறையரும் ஆதீனமாகலாம் என்று கேட்க வேண்டிய காலத்தில் மரபின் பெயரால் உழைக்கும் மக்களை இவர்கள் ஆதிக்கம் செய்யவே துடிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு துலக்கமான சான்று. நித்தியானந்தாவும் இந்த மரபை மீற விரும்பவில்லை. தானும் சைவ வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்தான் என்று உறவினர்களை நிறுத்தியே கேட்கிறார். ஒரு வேளை அவர் சைவ வேளாளர் பிரிவுக்குள் வரவில்லை என்றாலும் மற்ற ஆதினங்கள் என்ன செய்ய முடியும்? சாதி குறித்த நிரூபிக்குமாறு ஒரு சிவில் வழக்கு போட்டால் அது கீழிருந்து சுப்ரீம் கோர்ட்டு போய் பைசல் ஆவதற்குள் நித்தியானந்தாவின் பேரனே ஆதீனமாகலாம். அல்லது நித்தியும் அவரது உறவினர்களும் சைவ வேளாளர்தான் என்று ஒரு சான்றிதழை பெறமுடியாதா என்ன?

இத்தகைய குற்றச்சாட்டுகளையெல்லாம் நித்தியானந்தா விரும்பவே செய்கிறார். பாலியல் தவிர்த்த மற்ற விவகாரங்களை பெரிது படுத்தப்படுமானால் அது அவருக்கு உதவியாகத்தான் இருக்குமென்பது தெரியும். நித்தியானந்தா மதுரை ஆதீனமாக நிலை பெற்று கார்ப்பரேட் நிறுவன உத்தியால் பிரபலமாக்கி விட்டார் என்றால் ஏனைய வவ்வால் புகழ் ஆதீனங்கள் கீர்த்தியை இழந்து விடுமென்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. இதை நித்தியானந்தாவே குறிப்பிடுவது சுவாரசியமான ஒன்று. இவர்களது குழாயடிச் சண்டைக்கு இப்படியும் ஒரு கோணமிருக்கிறது.

இந்நிலையில்தான் நித்தியை எதிர்க்கும் ஆதீனங்களும், அர்ஜூன் சம்பத் கும்பலும் மயிறுப் பிரச்சினையை மரபுப் பிரச்சினையாக மாற்றி சண்டமாருதம் செய்கிறார்கள். உண்மையில் இந்த மரபின் அடிப்படை என்ன?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்? பாகம் 2

7

நித்தியானந்தா அயோக்கியன் என்றால் யோக்கியர்கள் யார்?

மதுரை ஆதீனம் அருணகிரி தனது வாரிசை நியமித்தார் என்றதும் மற்ற ஆதீனங்களால் அதை முற்று முழுதாக அதாவது வெளிப்படையாக எதிர்க்க முடியவில்லை. மதுரை ஆதீனம் மரபை மாற்றிவிட்டார் என்று பலவீனமான அதுவும் காறி உமிழத்தக்க பார்ப்பனிய சடங்குகளில்தான் அவர்களது விமரிசனம் மையம் கொண்டிருக்கிறது. நித்தியானந்தா சைவப்பிள்ளை இல்லை, தீட்சை பெறவில்லை, திருமேனியில் 16 இடங்களில் திருநீறு பூசவில்லை, மொட்டையடிக்கவில்லை, தனியாக மடம் வைத்திருக்கிறார், என்று இறுதியில்தான் பாலியல் குற்றச்சாட்டு உடையவர் என்கிறார்கள்.

எதற்கு இப்படி வெட்டியாக அற்ப விசயங்களை மரபு என்ற பெயரில் பட்டியிலிட வேண்டும்? நித்தியானந்தா ஒரு பொறுக்கி என்று மட்டும் சொல்லி ஏன் எதிர்க்க முடியவில்லை? சைவ ஒழுக்கத்தை தீர்மானிக்கும் விசயமாக முடி ஏன் இருக்கிறது? இதற்கு மாட்சிமை தாங்கிய ஆதினங்கள் யாரும் வாயைத் திறக்க முடியாது. நித்தியானந்தாவே அதற்கு பதிலளித்திருக்கிறார். அதாவது தனது படுக்கையறையை 24 மணிநேர கேமரா கண்காணிப்பிற்குள் வைத்திருக்க முடியுமென்றும் மற்ற ஆதீனங்கள் தயாரா என்று அவர் சவால் விட்டிருக்கிறார். ஒருவேளை தனது படுக்கையறை ஊரறிந்து விட்டபடியால் அதில் புதிதான மர்மங்கள் இல்லை என்றும் அவர் நினைத்திருக்கக் கூடும்.

இதற்கு ஏதோ வயதான ஒரு ஆதீனம் மட்டும் சவாலை ஏற்றிருக்கிறார். மற்றவர்கள் கமுக்கமாக அமைதி காக்கிறார்கள். இப்படி நித்தியானந்தா ஏதோ ஏட்டிக்குப் போட்டியாக மட்டும் கேட்டிருக்கிறார் என்பதல்ல. அவர் அனைத்து ஆதீனங்களுக்கும் மிகப் பணிவாகவே தனது விளக்கத்தை கேட்குமாறு கோரியிருந்தார். அவர்களோ அருணகிரியை மட்டும் சந்திப்பதாகவும், நித்தியானந்தாவை சந்திக்க முடியாதெனவும் மறுத்து விட்டார்கள். தான் யோக்கியனில்லை என்று அவர்கள் கூக்குரலிட்டபடியால் இவரும் “நீங்கள் மட்டும் யோக்கியர்களா?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார். இந்த பூமாரங் சண்டையின் வேர் என்னவென்று புரிகிறதா?

“ஆட்டத்தை இருவரும் ஆடுகிறோம், என்னை மட்டும் தனிமைப்படுத்த நினைக்காதீர்கள்” என்பதே நித்தியின் விமரிசனம். ஒரு வேளை நித்தியானந்தா இதைக் கிளப்பவில்லை என்றாலும் பிரச்சினை இதுதான், யார் யோக்கியர்கள், எது அளவு கோல்?

தற்போது ஆதினமாக இருக்கும் அருணகிரியையே எடுத்துக் கொள்ளுங்களேன். முரசொலியில் நிருபராக பணியாற்றி பின்னர் சொத்துக்கு ஆசைப்பட்டு விபத்து போல ஆதீனமாகிறார். இவர் ஆடாத மன்மத ஆட்டமா, திருவிளையாடல்களா? மதுரை ஆதீனத்தில் சமையலறை முதல் பொக்கிஷ அறை முதல் வளைய வந்த செல்வி, சுதா, வைஷ்ணவி போன்றோர் நித்தியானந்தாவோடு ஏற்பட்ட அதிகாரச் சண்டை காரணமாக மாறி மாறி இந்த உண்மைகளை புட்டு வைக்கிறார்கள். அதுவும் வைஷ்ணவி வாழும் கச்சனம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் மதுரை ஆதீனத்திடம், ” ஊருக்கு மூணு வைப்பாட்டிகளை வைச்சிருக்கியா?” என்று அதே கிராமத்திலேயே சண்டை போட்டிருக்கிறார். சுதா என்ற அந்த இளம்பெண் ‘மகா சன்னிதானத்தை’ மாமா என்றுதான் கூப்பிடுவாராம்.

தி.மு.க ஆதரவு, ஈழ ஆதரவு, என்று அரசியல் ஆதரவோடும், இமேஜோடும் தனது அந்தப்புரத்து நாயகிகளை அனுபவித்தபடிதான் அருணகிரி ஆட்டம் போட்டிருக்கிறார். இப்போது வயதாகிவிட்டாலும் தனது திருப்பணியை கட்டிளங்காளையான நித்தி இளமை முறுக்குடன் தொடருவார் என்று அவர் விரும்புகிறார். அந்த வகையில் அருணகிரி தனது வாரிசை சரியாகத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

அதிலும், நித்தி மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து அவர் கூறுகையில், “இந்தக் காலத்தில் யார் மீதுதான் பாலியல் குற்றச்சாட்டுக்கள் இல்லை” என்று தீர்ப்போடு விடுதலையையும் வழங்கியிருக்கிறார். யார்தான் ஊழல் செய்யவில்லை, யார்தான் யோக்கியன், யார்தான் ஆசைப்படவில்லை என்று நாடு முழுக்கவே இத்தகைய பொன்மொழிகள் வலுவான யதார்த்தத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதால் அருணகிரியின் பேச்சு பொறுக்கித்தனத்தை ஒத்துக் கொள்ளும் நேர்மையான பேச்சு.

ஆர்.எஸ்.எஸ் கும்பலும், அர்ஜூன் சம்பத் கும்பலும் ஏன் அடக்கி வாசிக்கிறார்கள் என்று இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும். நித்தியானந்தாவை அவர்கள் எதிர்ப்பது போல மலர்ச்சண்டை போடுவதற்கு காரணம் அவர் ஆதாரத்தோடு பிடிபட்டுவிட்டார். அருணகிரி அப்படி பிடிபடவில்லை. பிடிபடாதாவரை இந்து தர்மம் யோக்கியமானது. ஆகவே இதை பெரிதாக்க பெரிதாக்க அவர்களுக்குத்தான் சிக்கல். மற்ற ஆதீனங்களின் ஜல்சா ஆட்டங்களை நித்தியானந்தா வெளிப்படுத்த ஆரம்பித்தால் இந்துமதவெறியர்கள் ஒட்டு மொத்தமாக தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டியிருக்கும். ஆனால் அப்படி செய்யுமளவுக்கு அவர்கள் ஒன்றும் மான, ரோசம் கொண்டவர்கள் அல்ல என்பது வேறு விசயம். இவை புதிய பிரச்சினையும் அல்ல. வரலாறு நெடுகிலும் அவர்கள் அறிந்த ஒன்றுதான்.

மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்
மதுரையில் நடந்த ஆதீன மீட்பு ஆலோசனை மாநாட்டில் மகா சந்நிதானங்கள் மற்றும் பலர்

கும்பலோடு கும்பலாக நித்தியை கும்மும் ஜெயேந்திரனது பார்ப்பன சூழ்ச்சி!

அதே நேரம் முடியோடும், ரஞ்சிதாவோடும் சுற்றும் நித்தியானந்தா மதுரை ஆதீனமாவதற்கு தகுதியற்றவர் என்று சங்கர் சாரி ஜெயேந்திரனும் வெட்கமின்றி புகார் படித்திருக்கிறார்.

சங்கராச்சாரியின் யோக்கியதையை இறந்து போன எழுத்தாளர் அனுராதா ரமணன் உலகறியச் செய்திருப்பதை நினைவுபடுத்திக் கொள்வோம். சங்கர் சாரியின் ஆசை அயோக்கியத்தனத்திறத்கு மறுத்தவர் இவரென்றால் ஒத்துப்போனவர்களின் பட்டியலோ மிகப்பெரியது. அவற்றில் நடிகைகள் முதல் நாட்டியத் தாரகைகள் முதல் பலருண்டு. அவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்பது அப்போதும் கூட மேல் கீழ் தராசை விடாத ஜெயேந்திரனின் ஆச்சார ஒழுக்கத்தை காட்டுகிறது. எனினும் ஒரு களவாணி மற்றொரு களவாணியை களவாணி என்று நல்லவன் போல் திட்டுவதை திட்டப்படும் களவாணிகள் சகித்துக் கொள்வதில்லை. தற்போது ரஞ்சிதா அதற்க்காக ஜெயேந்திரன் மீது வழக்கு போட்டிருக்கிறார். ரத்து செய்ய சங்கர மட மேனேஜர் தூது போவதாக செய்திகள் வந்திருக்கின்றன.

நித்தியானந்தாவை முழு வில்லனாக மாற்றுவதன் மூலம் தனது வில்லத்தனம் மறக்கப்படலாம் என்ற மலிவான உத்தியே ஜெயேந்திரனது அணுகுமுறையில் வெளிப்படுகிறது. ஆனாலும் இந்தப் போட்டியில் விட்டுக் கொடுக்குமளவு நித்தியானந்தா ஒன்றும் விரல் சூப்பும் குழந்தையல்ல. சொல்லப் போனால் நித்தியை மறுக்கும் சாமியார்களை ஒண்டிக்கு ஒண்டி வருவாயா என்று அவர் விடும் சவால்களை ஆதீன உலகம் இதுவரை கண்டிருக்கவில்லை.

சங்கரசாச்சாரியின் மீது வழக்கு, தருமபுரம் ஆதீனம் முன்னால் ஆர்ப்பாட்டம், மதுரை ஆதீன பாதுகாப்புக் குழு, ஊடகங்களுக்கு சுடச்சுடப் பதில் என்று அவரது வேகத்திற்கு மற்றவர்கள் ஈடு கொடுக்க முடியாததன் காரணம் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்பதல்ல, எதிர்ப்பதற்கு போதுமான ஒழுக்க சரக்கில்லை என்பதே.

திருமணம் ஆனாலும், ஆகாவிட்டாலும் பாலுறவு கொள்ள முடியாத சூழ்நிலை என்பது உழைக்கும் மக்களைப் பொறுத்தவரை சர்வசாதாரணம். ஆனால் இதையே பிரமச்சரியம் என்றும் உலகிலேயே கடினமான தவமென்றும், தியாகமென்றும் பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் வரலாறு நெடுகிலும் அச்சுறுத்தியே வந்திருக்கின்றனர். அப்போது தொழில்நுட்பம் வளரவில்லை, எதிர்த்துக் கேட்கும் ஜனநாயமில்லை என்பதால் அந்த ஆச்சார வேடம் பல காலம் ஓடியது. இப்போது சூழ்நிலை திரைச்சீலைகளை தூக்கி விடுகிறது.

ஆர்.எஸ்.எஸ் இன் புதிய முழக்கம்: செக்ஸ் மாதா கி ஜெய்!

ஜெயேந்திர-சரஸ்வதி-ஸ்வாமிகள்
சங்கரராமன் கொலைவழக்கில் கைதானவர்தான் காஞ்சி பெரியவாள் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக்குகளின் தியாகத்தில் மைய இடம் வகிக்கும் பிரமச்சரியம் அறிவியில் ரீதியாக சாத்தியமற்றது என்பதைத் தாண்டி, அதிகாரத்தை ருசிக்கும் மேட்டுக்குடியினர் எவரும் சைவப்புலிகளாக இருக்க முடியாது என்பதால் அந்தப்புரக் கிசுகிசுக்கள் ஆதாரத்துடன் வெளிவருகின்றன. வாஜ்பாயி, இல.கணேசன்களது ஆண்மைகள் குமுதத்தின் கிசுகிசு கதைகளிலேயே வெளிவந்திருக்கின்றன. சி.டியுடன் பிடிபட்ட சஞ்சய் ஜோஷி எனும் பிரச்சாரக் மற்றும் பா.ஜ.கவின் தலைவர் தற்போது மீண்டும் பொறுப்பிற்கு வந்திருக்கிறார். பெங்களூருவிலும், அகமதாபாத்திலும் சட்டசபையிலேயே பிட்டுப்படம் பார்த்த பெருமையும் பா.ஜ.க உறுப்பினர்களுடையதுதான்.

கூடுதல் போனசாக மத்தியப் பிரதேசத்தில் துருவ் நாராயண் சிங் எனும் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினரும் தனது பங்கிற்கு செக்ஸ் மாதாகி ஜெய் என்று புனிதப் பணியில் சேர்ந்திருக்கிறார். ஷெக்சா மசூத் எனும் பெண் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொல்வதற்கு ஏற்பாடு செய்தவர் சஹிதா பர்வேஸ் எனும் மேட்டுக்குடி இசுலாமியப் பெண். இந்த இரண்டு பெண்களும் துருவின் காதலிகள். இது போக சட்டப்பூர்வமாக துருவுக்கு ஒரு மனைவியும், சாட்சியமாக குழந்தைகளும் உண்டு. இவரும் ஆர்.எஸ்.எஸ் ஆல் கண்டெடுக்கப்பட்ட ஒரு முத்துதான்.

கிழட்டு என்.டி.திவாரி, ராஜஸ்தான் காங்கிரஸ் அமைச்சர்கள், அபிஷேக் மனு சிங்வி போன்ற காங்கிரசுகாரர்கள்தான் பா.ஜ.கவின் செக்ஸ் திருப்பணிக்கு தோள்கொடுத்து ஆறுதல் தருகிறார்கள். ஆனால் இந்து மதவெறியர்களுக்கு இதெல்லாம் கூட பிரச்சினை இல்லை. சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரி மாட்டியதும்தான் ஆடிப் போனார்கள். அன்றைக்கு பார்ப்பன இந்துத்வ உலகமே ஜெயேந்திரனை காப்பாற்றத் துடித்தது. டெல்லியில் வாஜ்பாயி உள்ளிட்டோர் உண்ணாவிரதம் இருந்தார்களென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

ஜெயேந்திரனது பாலியல் கூத்துக்களை அம்பலப்படுத்தியதால்தான் சங்கரராமன்  கொல்லப்பட்டார். சங்கர் சாரியின் கூலிப்படை கோவிலில் வைத்தே கொன்றது. தேவநாதனது கருவறை செக்ஸ் சி.டி தோற்றுவித்த அதிர்வலைகள் கூட வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த கொடூரத்திற்கு ஏற்படவில்லை. தேவநாதன் கூட பக்தர்களின் நம்பிக்கையைத்தான் இழிவு படுத்தினார். ஜெயேந்திரனோ பக்தர்கள் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்பதற்க்காக கொலையே செய்தார். இன்றைக்கு நித்தியானந்தை “கையப் பிடிச்சு இழுத்தியா” என்று சவுண்டு விடும் அர்ஜூன் சம்பத் கும்பல் கூட அன்று பார்ப்பன பீடத்தின் முன் வீழ்ந்து கிடந்தது.

ஜெயேந்திரனைக் காப்பாற்ற தினமணி நேரடியாகவும், ஜெயமோகன் மறைமுகமாகவும் பாடுபடுகின்றனர். அந்தக் கதை அடுத்த பதிவில்…..

– தொடரும்
_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

நித்தியானந்தா மதுரை ஆதீனமானதில் என்ன தப்பு? பாகம் 1

24

பா.ஜ.கவின் மதுரை சங்கமம், நித்தியால் பஞ்சரான கதை!

தமிழர்களின் ‘பண்பாட்டுத்’ தலைநகராகத் திகழும் மதுரை தனது வரலாற்றில் முக்கியமான அத்தியாயத்தை சமீபத்தில் உலகறியக் காட்டியிருக்கிறது. செய்தி தெரிந்ததுதான். மதுரை ஆதீனத்தின் 293வது தலைவராக நித்தியானந்தா நியமிக்கப் பட்டிருக்கிறார். நியிமித்தது அருணகிரி எனப்படும் 292வது நடப்பு ஆதீனம். மடங்களில் சிவனே என்று படுத்துறங்கும் காமா சோமாவாக இருக்கும் தம்பிரான்களில் ஒருவர்தான் புதிய ஆதீனமென்றால் இந்த அளவுக்கு பேசப்பட்டிருக்காது.

அத்தகைய தம்பிரான்களும், மற்றைய ஆதீனங்களும் அப்படி காமா சோமா பார்ட்டிகள் இல்லை என்றாலும், அவர்களது அந்தப்புறத்தில் ரஞ்சிதா போன்ற திரையுலகத் தாரகைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால் ஊடக வெளிச்சமும் இல்லை. சொத்துக்கள் இருந்தும் வவ்வால்கள் மட்டும் வந்து போகும் பாழடைந்த சிவன் கோவிலைப் போன்று ஆதீனங்களின் அன்றாட தர்பார்களில் சுறுசுறுப்பும்,விறுவிறுப்பும் துளிக்கூட இல்லை. ஆகவே மன்மதலீலை புகழ் மற்றும் கார்ப்பரேட் சாமியார் நித்தியானந்தா ஆதீனம் ஆனார் என்பதால் ஊடகங்கள் துவங்கி பாமரர் வரை படித்து, ரசித்து, பொழுதைப் போக்குகின்றனர்.

என்றாலும் தமிழகத்தில் செயல்படும் இந்துமதவெறி அமைப்புகளுக்கு இது ஒரு மரண அடிச் செய்தி. இது முதல் அடி இல்லையென்றாலும் முக்கியமான அடி. மெல்லவும், முழுங்கவும், தள்ளவும் முடியாமல் அவர்கள் படும் அவஸ்தை இருக்கிறதே அதை புரிந்து கொண்டால் வருடக்கணக்கில் ரூம் போட்டு சிரிக்கலாம்.

புதுப்படங்கள் குறித்த மவுத் டாக்கா, அந்தப் படங்களில் வரும் உடை, வளையல்கள் ரிலீசாவதா எல்லாம் மதுரையில்தான் முதலில் போணியாகும். லெட்டர் பேடு கட்சிகள் முதல் தே.மு.தி.க காமடி பீஸ்கள் வரை மதுரையில் மாநாடு நடத்தினால்தான் அரசியல் உலகில் கவனிக்கப்படுவார்கள். அப்படித்தான் அரசியல் அனாதை பட்டத்திற்கு போட்டி போடும் தமிழக பாரதிய ஜனதா, மதுரையில் “தாமரை சங்கமம்” என்ற பெயரில் மாநாடு நடத்தியிருக்கிறது. ஆயினும் ஊடகங்களில் தாமரைக்கு கிடைக்கவே வாய்ப்பில்லாத கவரேஜை, அதே மதுரையில் ஆதினமானதன் மூலம் நித்தியானந்தா ஒரே அடியில் அள்ளிச் சென்றுவிட்டார்.

தி.மு.க, அ.தி.மு.கவின் தயவில் ஓரிரு தொகுதிகளை ருசி பார்த்த பாரதிய ஜனதாவை அந்தக் கட்சிகள் தேவையின்மை கருதி சீண்டுவதே இல்லை. எனினும் தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு மாற்றாக தனித்து ஆட்சியைப் பிடிக்க பாரதிய ஜனதா தயாராகி வருவதை மெய்ப்பிக்கும் மாநாடு என்று அவர்களாகிய அவாள்கள் சிரிக்காமலேயே ஜம்பமடிக்கிறார்கள். இது விஜயகாந்த், ராம்தாஸ் என்று எல்லா கோமாளிகளும் புலம்பும் இத்துப் போன டயலாக்தான். யாரும் கவனிக்கமாட்டார்களா என ஏங்கும் பிச்சைக்காரன், மனக்கோட்டையில் ஊரின் அரசனாக தன்னைத்தானே முடிசூட்டிக் கொள்வது போலத்தான் பாரதிய ஜனதாவின் மதுரை மாநாடும். இந்திய அளவிலேயே இந்துத்வம் சூடு பிடிக்க முடியாத நிலை. தமிழகத்திலோ அது இன்னும் பரிதாபமாக இருக்கும் நிலையில் அந்த பரிதாபத்தை அய்யோ பாவமாக மாற்றி விட்டது மதுரை ஆதின பட்டமேற்பு விழா.

மதுரை ஆதீனமானார் நித்தி
மதுரை ஆதீனமானார் நித்தி

நித்தி ஆதீனமானதை ஜீரணிக்கவோ, வாந்தி எடுக்கவோ முடியவில்லை!

மாநாடு குறித்த பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து கேட்ட போது, “புதிய ஆதீனம் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை. எனினும் இதை வைத்து இந்து மதத்தை விமரிசிப்பது சரியில்லை” என்றார் பா.ஜவின் தமிழகத் தலைவர் பொன். இராதாகிருஷ்ணன். இந்த வாக்கு மூலத்தில் டன் கணக்கில் உறைந்திருக்கும் துயரத்தை உங்களால் உணர முடிகிறதா?

ஆரம்பத்திலிருந்தே நித்தியானந்தா ஆதீனமானதை ‘எதிர்ப்பதாகக்’ கூறும் காமடி பாசிஸ்ட்டுகளான இந்து மக்கள் கட்சியினரின் வாக்கு மூலத்தை கவனித்தால் அதே துயரத்தை கொஞ்சம் கவித்துவமாக ருசிக்க முடியும். மேலும் ரஞ்சிதா அத்தியாயத்தின் போதே இவர்கள் நித்தியானந்தாவை எதிர்த்து செய்த குட்டி கலாட்டாக்கள் அனைத்தும் மலிவான ஊடக விளம்பரங்களை நாடித்தான். கர்நாடகாவின் ஸ்ரீராம் சேனா காசு வாங்கிக் கொண்டு செய்யும் கலாட்டக்கள் போலவும் இவர்களது குத்தாட்டங்களைக் கருத முடியும். அதன்படி மறைமுகமாக இது நித்தியானந்தாவின் செட்டப்பாகக் கூட இருக்கலாம்.

அர்ஜூன் சம்பத் கும்பலுக்கு உண்மையிலேயே ஆதீனம் குறித்து அக்கறை உள்ளதாக வைத்துக் கொண்டாலும் அதன் அடிப்படையில் உள்ளது ‘இந்து தர்மம்’ குறித்த பெருமிதம் அல்ல. வடிவேலு காமடியையே விஞ்சும் வண்ணம் மாறிவரும் பார்ப்பனியத்துக்கு ஏதாவது நட்டுவைத்து முட்டுக் கொடுக்க முடியாதா என்ற அவல நிலைதான் அந்த அக்கறை. அதனால்தான் இந்த கும்பல் பழைய ஆதீனத்தை எதிர்க்காமல், புதிய ஆதீனத்தை மட்டும் எதிர்க்கிறது. ஜெயேந்திரனை விடுத்து நித்தியானந்தாவை மட்டும் குறி வைக்கிறது. அந்த எதிர்ப்பும் மடத்திற்குள் சென்று திருஞானசம்பந்தரை வழிபடுவோமென்றுதான் காந்திய வழியில்தான் காட்டப்படுகிறது. இன்னும் தேவராம் பாடியும், மதுரை ஆதீனத்தை வாழ்த்தியும்தான் அவர்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள்.

காரணம் என்ன? இதில் தெளிவான நிலையெடுத்து போராட வேண்டி வந்தால் அது கரையான் புற்றுக்குள் கைவிடுவதைப் போல. பூதத்தைக் கிளப்பாமல் கிணறு வெட்ட முடியுமா என்ன? இந்து மதத்தின் மேன்மைகளை சொல்லி பிரச்சாரம் செய்ய முடியாத நிலையில், அதன் கீழ்மைகளை முடிந்த அளவுக்கு மறைக்க முயல்வதுதான் இந்து மக்கள் கட்சியின் வியூகம். அதனால்தான் எதிர்ப்பைக் காட்டுவதிலும், வார்த்தைகளை உச்சரிப்பதிலும் மிகுந்த கவனம் காட்டுகிறார்கள். சாரமாகச் சொல்வதென்றால் இந்த பிரச்சினையை தீவிரமாக கிளப்புவதன் மூலம் பார்ப்பனிய இந்து மதம் எள்ளி நகையாடப்படும் என்பதை அவர்கள் அறிந்தேயிருக்கிறார்கள். இதில்தான் சங்க பரிவாரங்களுக்கும், அவர்களிடமிருந்து விலகியதாகக் கூறிக் கொள்ளும் அர்ஜூன் சம்பத் கும்பலுக்கும் வரம்புக்குட்பட்ட போட்டி நடக்கிறது. ஆர்.எஸ்.எஸ் கூட்டம் பெரிது என்பதால் சற்று அடக்கி வாசிக்கிறார்கள். இந்து மக்கள் கட்சி சிறு கும்பல் என்பதால் விசில் சத்தம் கொஞ்சம் அதிகம்.

நித்தியானந்தா
நித்தி ஆதீனமாவதை எதிர்த்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம்

ஆதினங்கள் – மடங்கள் – சாமியார்களின் இரத்த வரலாறு!

திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள், குன்னக்குடி உள்ளிட்ட பெரும் ஆதீனங்களும், சில்லறை மடங்களும் ஒன்று கூடி தங்களது அதிருப்தியை அல்லது எதிர்ப்பு மாதிரி ஒன்றைத் தெரிவித்திருக்கிறார்கள். ஒரு மடத்தை ஆதீனமா, சில்லறையா என்று எதைக் கொண்டு அளவிடுவது? சில்லறையை அதாவது சொத்தை வைத்துத்தான். மேற்கண்ட ஆதீனங்களும், சங்கர மடமும் டாடா, பிர்லா, அம்பானி போன்று சில ஆயிரம் கோடி சொத்துக் கொண்டவைகள். பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், கிராமங்கள், கடைகள், கல்லூரிகள், கோவில்கள், மருத்துவமனைகள் என்று கிட்டத்தட்ட தனி சாம்ராஜ்ஜியமே நடத்துகிறார்கள்.

“நித்தியானந்தாவை ஆதீனமாக அறிவித்திருப்பதை பத்து நாட்களுக்குள் ரத்து செய்ய வேண்டும்” என்று இந்த ஆன்மீக முதலாளிகள் தீர்மானித்த போது ஆரம்பத்தில் குன்னக்குடி பொன்னம்பலம் சம்மதிக்கவில்லை. “ஒவ்வொரு ஆதீனமும் தனது வாரிசையே ஆதினமாக நியமிக்க வேண்டும். வாரிசுகள் இல்லாத பட்சத்தில் திருவாவடுதுறை, தரும்புரம் என இருபெரும் ஆதீனங்களும் சேர்ந்து வாரிசுகளை தேர்ந்தெடுப்பார்கள்” என்ற வாக்கியத்தை அவர் ஏற்கவில்லை. அதை நீக்கிவிட்டே தீர்மானத்தில் அனைவரும் கையெழுத்திட்டார்கள்.

தங்களது சாம்ராஜ்ஜியத்தின் வாரிசுதார்களை தேர்ந்தெடுக்கும் உரிமை தம்மை விட்டுப் போகக்கூடாது என்றால் அதன் சூட்சுமம் ஆதீனங்களின் சொத்துடைமையில் பொதிந்திருக்கிறது. அம்பானி சொத்தை அவரது குண்டு பையனுக்கு கொடுப்பாரா இல்லை தெருவில் போகும் குப்பனுக்கு கொடுப்பாரா? முதலாளிகளுக்கு மட்டுமல்ல ஆதீனங்களுக்கும் இந்த வாரிசு முறை பொருந்தும்.

வருணாசிரமத்தை இதயமாகக் கொண்டு வாழும் பார்பனிய இந்து மதத்தில் ஆரம்பத்தில் வேள்வி வழிபாடே பிரதானம். உருவ வழிபாடும், கோவில்களும் சமண மதத்திற்குரியவை. அதே போன்று மதப்பிரச்சாரத்திற்கும், கல்விக்கும் பயன்பட்ட மடங்கள், பள்ளிகள் போன்றவையும் புத்த, சமண மதத்திற்குரியவை. பார்ப்பனியம் நிலை பெற்ற பிறகு இவற்றை திருடிக் கொண்டார்கள். தமிழகத்தில் பிற்கால சோழர்கள் காலத்தில் பார்ப்பனியாமயமாக்கத்தின் பகுதியாக மன்னர்களின் ஆதரவுடன் இத்தகைய ஆதீனங்கள் எழுந்தன. புராண புரட்டுக்கதைகளால் இவர்களது வரலாற்றுக் காலம் ஊதி உப்பவைக்கப்பட்டாலும் அவற்றுக்கென்று நேரடி ஆதாரம் ஏதுமில்லை.

பண்டைய இந்தியாவில் கோவில்களே அரசியல், பொருளாதார, கருவூல நிறுவனமாக இருந்தன. கஜினி முகமது மட்டுமல்ல, எல்லா இந்து மன்னர்களுமே எதிரி நாட்டுக் கோவில்களை கொள்ளையடித்திருக்கின்றனர். பொக்கிஷங்களை கைப்பற்றுவது என்பதைத் தாண்டிய மத விரோதம், கடவுள் விரோதம் ஏதுமில்லை. கோவில்களின் துணை நிறுவனமாக ஆதீனங்கள் தோன்றியதும், ஏராளமான மக்களும், கிராமங்களும், இலவச சமூக உழைப்பும் தானமாக கொடுக்கப்பட்டன. இவற்றை அனுபவிக்கின்ற உரிமை பார்ப்பன – ‘மேல்’ சாதியினருக்கு மன்னர்களால் அளிக்கப்பட்டன. அப்படித்தான் ஆதீனங்களின் உறவினர்களும், சாதிக்காரர்களும், மறைமுக வாரிசுகளும், பினாமிகளும் இத்தகைய மக்கள் சொத்துக்களை காலம் காலமாக ஆண்டு அனுபவித்து வருகின்றனர்.

மதத்தின் பெயரால் இருப்பதாலேயே அவர்களின் சுரண்டும் உரிமை இயற்கை உரிமை போல மக்களால் சகித்துக் கொள்ளப்படுகின்றது. 1930களில் தமிழகத்தில் உள்ள கோவில்களை நீதிக்கட்சி அரசுடமை ஆக்கிய போதுதான் அந்தந்த வட்டார ஆதிக்க சாதி அறங்காவலர்கள் கொன்ற கணக்கும், தின்ற கணக்கும் தெரிய வந்தது. அப்போதும் சரி, 47க்கு பின்னரும் சரி, ஆதீனங்களின் சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்படாமல் நீடித்திருக்குமாறு விடப்பட்டன.

சொத்துடமையின் மையத்தில் சுழலுவதால் ஆதீனங்களின் இருப்பும், பிறப்பும், நிறைய மர்மங்களையும், வன்முறைகளையும் கொண்டிருக்கின்றன. முகலாய மன்னர்கள்தான் தமது இரத்த உறவுகளைக் கொன்றுவிட்டு பட்டம் சூட்டிக் கொண்டார்கள் என்று இந்து வெறியர்கள் பீற்றிக் கொள்வது வழக்கம். இது எல்லா மன்னர்களுக்கும் பொருந்தும் என்பதை வரலாறு காட்டியிருக்கின்றது.

மன்னர்களை விடுங்கள், துறவறம் பேசும் சாமியார்கள், மடாதிபதிகளின் வன்முறைகளைப் பாருங்கள். புட்டபர்த்தியில் நடக்காத கொலையா, சாயி பாபா – ரஜ்னீஷிடம் இல்லாத பாலியல் வக்கிரமா, பாபா ராம் தேவ் செய்யாத வருமான வரி ஏய்ப்பா, ஆர்.எஸ்.எஸ்-இன் ராமஜன்ம பூமி முக்தி மோர்ச்சா தலைவர்கள் நடத்தாத ஹவாலா மோசடியா, இல்லை ‘தாயுள்ள’த்தோடு இருக்கும் அமிர்தானந்தா மாயி மடத்தில்தான் கொலை நடக்கவில்லையா?

ஏன், ஆதீனங்களின் வரலாற்ற்றைக் கூட பாருங்கள். 2002 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதினத்தை இளைய ஆதீனம் கொலை செய்து விட்டு கைப்பற்ற முயன்ற கதை சனாதான தர்மத்தின் சமீபத்திய யோக்கியதையைக்  காட்டுகிறது.

சைவத்தையும், தமிழையும் வளர்ப்பதாகக் கூறும் இவர்களது சிந்தை டில்லி சுல்தான்களை விடவும் வன்முறையானது என்பதற்கு இதுவே போதுமானது. தற்போதைய மதுரை ஆதீனம் கூட இடையில் ஓரிருவர்களை பட்டம் கட்டி பின்னர் பங்கு பிரிப்பதில் சண்டை வந்ததால் மடத்தை விட்டே விரட்டியிருக்கிறார். அடுத்த வாரிசு தான்தானென்று நம்பி ஏமாந்த தம்பிரான்கள் பலரது சண்டையும், அவர்களில் சிலர் தனி மடங்கள் கண்டதும் எப்போதும் நடக்கின்ற வரலாறு.

எனவே வாரிசுச் சண்டைகள், பட்டமேற்பதில் போட்டி எல்லாம் வாழையடி வாழையாக மடங்களில் நடக்கின்ற ஒன்றுதான். இதில் நித்தியானந்தா மட்டும் அயோக்கியன் என்றால் யோக்கியன் யார் என்ற கேள்விக்கு விடை உண்டா?

– தொடரும்

_____________________________________________________

_____________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று! – மதுரையில் அரங்கக்கூட்டம்! அனைவரும் வருக!!

6

மறுகாலனியாக்கம்மறுகாலனியாக்கத்தை மாய்க்கவல்ல ஒரே மாற்று!

அரங்கக்கூட்டம்

நாள்:
20.5.2012, ஞாயிறு, மாலை 5 மணி

இடம்:
V.P வேலாயுத நாடார் – ராஜலெட்சுமி கல்யாண மண்டபம்,
பிளாட் எண். 436, கிழக்கு 9-வது தெரு,
கே.கே. நகர். மதுரை.
(பேட்டா ஷோரூம் அருகாமை ரோடு,
சுந்தரம் பார்க் எதிர் ரோடு)

பஸ் நிறுத்தம்:
3,3A- வக்ஃப் போர்டு, C4 – சுந்தரம் பார்க்

தலைமை:

தோழர். கதிரவன்,
மாநில செயற்குழு உறுப்பினர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

சிறப்புரை:

தோழர். மருதையன்
பொதுச்செயலர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு

அனைவரும் வருக!

______________________________________

மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை

______________________________________

வினவுடன் இணையுங்கள்

ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு…..

20

ஒவ்வொரு நாளும் இருநூறு கி.மீ. தூரம் வரை புகைவண்டியில் கடந்து வேகமாக சென்னைக்குள் வந்து விட்டு, மாலை ஆறு மணிக்கு மீண்டும் அதே வேகத்துடன் இன்னொரு இருநூறு கி.மீ பின்னோக்கிப் பயணித்து, இடைப்பட்ட நான்கு மணி நேரத்தை இருளில் உண்டு, உறங்கிக் கழித்து விட்டு, அதிகாலை நான்கு மணிக்கு மீண்டும் எழுந்து சென்னைக்கு பயணிப்பவர்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?

காலை ஒன்பதரை மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும் ஏலகிரி விரைவு வண்டி, நடைமேடையை அடைவதற்குள்ளாகவே பெட்டிகளிலிருந்து குதிப்பவர்கள், நடைமேடையில் பாதம் பட்ட உடனே கூட்டம் கூட்டமாக வாயிலை நோக்கி ஓடுகிறார்கள். வாயிலை அடைந்ததும் மாநகரப் பேருந்துகளில் திணித்துக் கொண்டு சென்னை நகரின் பல்வேறு திசைகளுக்கும் சிதறி மறைந்து போகிறார்கள். மீண்டும் மாலை 5 மணி முதல் 5.55க்குள் அனைத்துத் திசைகளிலிருந்தும் சென்ட்ரலை நோக்கிக் விரையும் கூட்டம், காலையில் வந்த அதே ஏலகிரி விரைவு வண்டிக்குள் தன்னைத் திணித்துக் கொள்கின்றது.

சென்னையில் புதிது புதிதாக எழும் அடுக்குமாடிக் கட்டிடங்களுக்காக கொத்தனார், சித்தாள், தச்சர், பிளம்பர், பெயிண்டர் என பல்வேறு கூலி வேலை செய்பவர்களையும், தனியார், அரசு அலுவலகங்களில் மாதச்சம்பளம் பெறுபவர்களையும் உள்ளடக்கியது தான் இந்தப் பயணிகள் கூட்டம். இவர்களில் பெண்களும் உண்டு.

ஏலகிரி விரைவு வண்டி சென்னை சென்ட்ரலிலிருந்து தருமபுரி மாவட்டம் திருப்பத்தூர் வரை செல்கின்றது. இந்த வண்டிப் பயணிகளில் பெரும்பான்மையினர் ஜோலார்பேட்டையைச் சேர்ந்தவர்கள். இவர்களுடன் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், காட்பாடி, ஆற்காடு, வாலாஜா, திருத்தணி, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களும் கணிசமான அளவில் வருகிறார்கள்.

சென்னை சென்டரல் நிலையம். மாலை மணி 5.50. கிளம்புவதற்கு தயார் நிலையில் நான்காவது நடைமேடையில் நிற்கிறது ஏலகிரி விரைவு வண்டி. வண்டியைப் பிடித்து விட்ட மகிழ்ச்சியில் வண்டியை நெருங்கினேன். நெருங்க நெருங்க மூத்திரம், பான்பராக், சிகரெட் அனைத்தும் கலந்த ஒரு துர்நாற்றம் ‘குப்‘ எனக் காற்றில் கலந்து வீசியதால் குமட்டிக் கொண்டு வந்தது. ‘கடும்பயணத்தின் களைப்பை இந்த போதைப் பொருட்கள்தான் நீக்குகின்றதோ ? என்னவோ ?! ‘

‘இந்தப் பெட்டியில் ஏறினால் மூச்சுக் கூட விட முடியாது போலிருக்கின்றதே !‘ என்று எண்ணியபடியே அடுத்த பெட்டியை நோக்கி நகர்ந்த போது முந்தைய பெட்டியின் கழிவறையைப் பார்க்க நேர்ந்தது. கழிவறையின் ஜன்னலில் பலகை ஒன்று பொருத்தப்பட்டிருக்கும் இல்லையா ? அது அங்கே இல்லை. எனவே வெளியிலிருந்து பார்த்த போது கழிவறையின் உள்பக்கம் ‘பளிச்‘ எனத் தெரிந்தது. ‘சரி ! ஒரு சில பெட்டிகள் இப்படித்தான் இருக்கும்‘ என அடுத்த பெட்டியை நெருங்கினால் அங்கேயும் அதே நாற்றம், இப்பெட்டியிலும் கழிவறைக்கு ஜன்னல் பலகை இல்லை. எல்லாம் ஒன்று தான் என்று முடிவு செய்து கொண்டு ஒரு பெட்டியில் ஏறி விட்டேன். வண்டி கிளம்ப சில நொடிகளே இருந்தன. இந்த நேரத்திலும் பலர் பறந்து வந்து வண்டியில் தொற்றிக் கொண்டனர்.

ஏலகிரி விரைவு வண்டி சரியாக 5.55 க்கு கிளம்பி விடும். தாமதம் என்பது இந்த வண்டிக்கு விதிவிலக்கு. எனவே தினசரிப் பயணிகள் அனைத்தையும் திட்டமிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும். தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் அவர்களிடமிருக்கும் குறைவான ஓய்வு நேரத்தையும், கூடுதலான செலவையும் எடுத்துக்கொள்ளும். 5 மணிக்கு வேலை முடிந்தால் 5.10 க்குள்  பேருந்தைப் பிடிக்க வேண்டும். அடுத்து இருப்பது 45 நிமிடங்களே ! அதற்குள் வண்டிக்குள் இருக்க வேண்டும். ஏறிய பேருந்து தாமதமாகின்றது என்று தெரிந்தால் உடனடியாக ‘அடுத்து என்ன ?‘ என்று யோசிக்க வேண்டும்.

வேறு பேருந்திலோ, ஷேர் ஆட்டோவிலோ மாறி ஓட வேண்டும். இந்த நிமிடக் கணக்கில் ஏற்படும் தாமதத்தால் ஏலகிரியைத் தவற விட்டால் எல்லாம் முடிந்தது. அடுத்து அந்தத் திசையில் எந்த வண்டி கிளம்புகிறதோ அதில் தான் போக வேண்டும். அது 7 மணிக்கும் இருக்கலாம்; 8 மணிக்கும் இருக்கலாம். ஏலகிரியில் போனாலே சாப்பிட்டுவிட்டு தூங்க 12 மணி ஆகி விடும். அடுத்த வண்டி  என்றால் அதுவே 1 அல்லது 2 மணியாகலாம். ஆனால் காலையில் எழும் நேரம் அதே 4 அல்லது 4.30 மணி தான்.

சென்னை-ஜோலார்பேட்டை

சரியாக 5.55 க்கு வண்டி நகர்ந்தது. நாங்கள் வாசலில் நின்று கொண்டிருந்தோம். வேகமெடுத்து ஓடிய அடுத்த சில நிமிடங்களில் பெரம்பூரை வந்தடைந்தது வண்டி. அங்கே மேலும் நூற்றுக்கணக்கானவர்களை நிரப்பிக்கொண்டு மேலும் வேகமெடுத்தது. பெட்டியில் அனைத்து இருக்கைகளும் நிரம்பியிருந்தது என்பதல்ல விசயம்; முழுப் பெட்டியுமே நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. பெட்டியின் முன் வாசல் படிக்கட்டில் துவங்கி பின் வாசல் படிக்கட்டு வரை உட்கார்ந்திருக்கிறார்கள், அதே போல எதிர்ப்பக்கமும். படிகளை தாண்டி பெட்டிக்குள்ளே பார்த்தால் இடைவெளியின்றி வரிசையாக நூற்றுக்கணக்கில் நிற்கிறார்கள்.

சென்னையிலேயே குடியிருக்க போதிய வருவாய் இல்லாததால் தான் இவர்கள் இந்த சாகசப் பயணத்தைத் தினசரி மேற்கொள்கிறார்கள். வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் என்றாலும் தினந்தோறும் சந்தித்துக் கொள்வதால் இயல்பாக ஒருவருக்கொருவர் நண்பர்களாகி விடுகிறார்கள். தங்களுக்குள்ளேயே அரையட்டையடித்துக் கொண்டும், அரசியல் பேசிக் கொண்டும், சொந்த வாழ்க்கையின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொண்டும் பயணிக்கிறார்கள். தினசரிப் பயணம் என்பதால் புகைவண்டியில் தின்பண்டங்களை விற்பவர்களும் இவர்களுக்கு நண்பர்களாகி விடுகிறார்கள்.

இவர்களில் யாராவது ஒரு சிலர் வாங்கி வரும் செய்தித்தாள்கள் வண்டிக்குள் வந்த மறுகணமே அனைவருக்குமானதாகி விடுகின்றது. அதே போல தாம் எடுத்து வரும் தண்ணீரை இரண்டு மடக்கு குடித்துவிட்டு யாராவது கேட்டுவிடுவார்களோ என்று அற்பத்தனமாக சீட்டுக்கடியில் சொருகாமல் அதை அனைவருக்குமானது என்று பொது இடத்தில் எல்லோரும் வைக்கிறார்கள்.

படிக்கட்டில் அமர்ந்து கொண்டிருந்த ஒருவர் நிற்பதற்காக எழ நான் அதில் அமர்ந்து கொண்டேன். எனக்கருகில் அமர்ந்திருந்தவர் வெங்கடேசன். தினமும் சோளிங்கரிலிருந்து சென்னைக்கு  கடந்த ஓராண்டாக வந்து செல்கிறார்.

‘இதுக்கு முன்னாடி பதிமூணு வருசமா சோளிங்கர்ல இருக்கிற டி.வி.எஸ் ல வேல செஞ்சேன் சார். 55 ரூபாய்க்கு வேலைக்கு சேர்ந்து பதிமூணு வருசத்துல 320 ரூபா தான் சம்பளம் உயர்ந்துச்சு. நிரந்தரமாக்கச் சொல்லி தொழிலாளிங்க எல்லாம் கேஸ் போட்டோம். அவன் நிரந்தரமா எங்கள வீட்டுக்கு அனுப்பிட்டான். அதுக்கப்புறம் இந்த வேலைக்குத் தான் வர்றேன். சோளிங்கர்ல இருந்து எங்க ஊரு ஆறு கி.மீ. சோளிங்கர்ல இறங்கி அங்கயிருந்து சைக்கிள மிதிச்சிருவேன். எட்டர ஒம்பது மணிக்கு வீட்டுக்குப் போனா, சாப்பிட்டு தூங்க பதினோரு மணியாகிடும். காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து கௌம்பிருவேன். 7 மணிக்கு வண்டி. அந்த வண்டிய பிடிச்சு திருவள்ளூர்ல இறங்கி, அங்கிருந்து அடுத்து பட்டாபிராமுக்கு லோக்கல் ட்ரெய்ன்ல ஏறி 9 மணிக்கு வேலைக்கு எடுக்குற இடத்துல நிக்கணும். அப்படி கரெக்டான டைமுக்கு நின்னா தான் வேலை. இதுல எங்கையாச்சும் லேட்டாச்சுன்னா பாதி நாள் வேலை தான் கணக்கு‘ என்றார் வெங்கடேசன்.

அருகில் அமர்ந்து கொண்டிருந்த கந்தன் என்பவரும் சோளிங்கரிலிருந்து தான் வருகிறார். இவர் வரும் போது காலை 5 மணிக்கு சோளிங்கரில் நிற்கும் காவிரி விரைவு வண்டியில் ஏறி ஏழு மணிக்குள் பட்டபிராமில் இறங்க வேண்டும். ‘அங்கே எந்த இடத்தில் வேலை‘ என்றதும், ‘மார்க்கெட் இருக்கு சார். அங்க தான் வேலை‘ என்றார். ‘என்ன மார்க்கெட்? காய்கறி மார்க்கெட்லயா வேலை‘ என்றதும் ‘இல்ல சார், அது வேலைக்கு ஆள் எடுக்குற மார்க்கெட். அங்க நிறைய புரோக்கர், காண்ட்ராக்ட் காரங்க எல்லாம் வேலைக்கு ஆள் எடுக்க வருவாங்க. என்னென்ன வேலைக்கு ஆள் தேவையோ எல்லாத்தையும் கூட்டிட்டு எட்டு மணிக்குள்ள வேலை இடத்துக்கு கூட்டிட்டு போய்டுவாங்க. அதனால ஏழு மணிக்குள்ள போனா தான் வேலை கிடைக்கும்‘ என்று பேசிக்கொண்டே எழுந்தார். அடுத்து நிறுத்தம் வந்து விட்டது. ‘வர்றேன் சார்‘ என்று சோளிங்கரில் இறங்கிக் கொண்டார் கந்தன்.

கூட்டத்திலிருந்து சற்று தலையை உயர்த்தி கழிவறைப் பக்கம் எட்டிப் பார்த்த போது இரண்டு கழிவறைகளில் ஒன்றின் கதவு மட்டும் உள்பக்கமாகத் தாளிடப்பட்டிருந்தது. திறந்திருந்த மற்றொரு கழிவறையின் வாசலிலிருந்து கழிவறையில் மலம் கழிக்க கால்களை வைக்கும் மேடை வரை மொத்தம் ஆறு பேர் உட்கார்ந்திருந்தனர். அப்போது தான் கழிவறை ஜன்னல் பலகைகளின் பயன்பாடு என்ன என்பதைப் புரிய முடிந்தது. அந்தப் பலகைகள் தான் நமது மக்களுக்கு கழிவறைக்குள் அமரும் இருக்கையாக பயன்படுகிறது. திறந்த ஜன்னல் வழியாக சுவாசிக்க கொஞ்சம் காற்றும் கிடைக்கிறது.

அப்படி அமர்ந்திருந்தவர்களில் ஒருவர் வாலாஜாவிலிருந்து கட்டிட வேலைக்கு வரும் ரவி. அவரைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களும் அவருடன் வேலைக்கு வந்தவர்கள் தான். அவர்களுக்கு அருகிலேயே எனக்கும் அமர இடம் கொடுத்தனர். இந்த வண்டியில் வரும் பெரும்பான்மை கூலித்தொழிலாளர்களின் மாதிரியாக ரவியை எடுத்துக் கொள்ளலாம். ரவிக்கு சொந்த ஊர் வாலாஜாவுக்கு அருகிலுள்ள நீலகண்டராயன்பேட்டை. வயது நாற்பத்தெட்டு. இரண்டு பிள்ளைகள். சில மாதங்களுக்கு முன்பு தான் மகளைத் திருமணம் செய்து கொடுத்துள்ளார். மகன் பத்தாம் வகுப்பில் தோல்வி. மனைவி அவ்வப்போது கிராமத்திலேயே கிடைக்கும் கூலி வேலைகளுக்குச் செல்வாராம். குடும்பத்தின் முதன்மையான வருவாய் இவரை நம்பியே உள்ளது.

சென்னையில் புதிய கட்டுமானம் நடக்கின்ற இடங்களில் பொறியாளர் சொல்லுகின்ற வடிவத்தில் கட்டிடத்தை  எழுப்பும் நூற்றுக்கணக்கானவர்களில் ரவியும் ஒருவர். சித்தாள் அடுக்கும் செங்கற்களையும், சிமெண்டையும் கொண்டு சுவர்களைக் கட்டி எழுப்புவது தான் ரவியின் வேலை. இதற்கு தினசரி கூலி நானூற்று ஐம்பது ரூபாய். சென்னைக்கு வந்து செல்ல போக்குவரத்து, தேநீர் ஆகியவற்றுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் செலவாகி விடுகின்றது. கடந்த ஐந்தாண்டுகளாக ரவி இந்த வேலையில் இருக்கிறார். சுவரெழுப்ப தினமும் குறைந்தது ஐநூறு செங்கற்களையாவது குனிந்து குனிந்து எடுக்கிறார். பூசுவதற்கு அதைவிட இரு மடங்கு அதிகமான முறை குனிந்து கலவையை எடுக்கிறார். காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கும் வேலை மாலை ஐந்து மணிக்கு முடிவடைகின்றது.

பகற்பொழுது முழுவதும் குனிந்து, நிமிர்ந்து உழைத்த தொழிலாளர்கள் வேலை முடிந்ததும் வண்டியைப் பிடிக்க ஓடோடி வருகிறார்கள். கணிசமானோர் வாரத்தில் மூன்று நாட்களாவது டாஸ்மாக்கில் ஐந்து பத்து நிமிடங்களில் அவசர கதியாக மதுவருந்தி விட்டு வருகின்றனர். உடல் வலி, பயண வலி அனைத்திற்கும் இதுவே உத்திரவாதமான ’மருந்து’. புகைவண்டியில் ஏறியதுமே தளர்வுற்று, கழிவறைகளில் சுருண்டு கொள்கிறார்கள். எட்டரை மணிக்கு வாலாஜாவில் இறங்கும் ரவி அங்கிருந்து பத்து கி.மீ. தொலைவிலுள்ள நீலகண்டராயன்பேட்டையை அடைய பத்தரை மணியாகி விடுகின்றது. பிறகு சாப்பிட்டு விட்டுத் தூங்க பதினொன்று, பன்னிரெண்டாகி விடும். எட்டு மணி நேரம் கூட நிம்மதியாக உறங்காமல் காலை நாலு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்ப வேண்டும். ஒவ்வொரு நாளும்  வீட்டிற்குள் வரும் போதும், கிளம்பும் போதும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் தான் குழந்தைகளைப் பார்க்க முடியும். அன்று கறி சமைத்து சாப்பிட்டு விட்டு, முழுவதும் அவருக்கு ஓய்வு, உறக்கம் தான்.

குடும்பம், குழந்தைகள், மனைவி, இல்லம் என எல்லாம் இருந்தும் அமைதியான, ரசனையான வாழ்க்கை எதுவும் இந்தப் பயணிகளுக்கு வாய்க்கவில்லை. சாவி கொடுக்கப்பட்ட எந்திரங்களைப் போல சென்னைக்கு வந்து போகும் இந்த மக்களிடம் வாழ்க்கைக் கதைகள் அல்லது வலிகள் ஏராளமிருக்கின்றன. அந்த சோகமான கதைகளைச் சுமந்து கொண்டுதான் ஏற்காடு விரைவு வண்டி தினமும் சடசடவென்று ஓடுகின்றது.

வேலைக்குக் கிளம்பும் போது இரு வேளை உணவையும் கூடையில் எடுத்துக் கொள்கிறார்கள். காலை உணவை பயணத்தின்போது முடிக்கிறார்கள். புளி மூட்டைகளைப் போல திணிக்கப்பட்டிருக்கும் இடத்தில் எப்படி சாப்பிடுவது ? எந்த இடத்தில் நிற்கிறார்களோ அந்த இடத்தில் நின்றபடியே சாப்பிட வேண்டும். கழிவறையில் நின்றால் அங்கேயே தான் சாப்பிட வேண்டும்! சாப்பிட்ட பிறகு கை கழுவும் இடத்திற்கெல்லாம் போய் கழுவ முடியாது. அப்படி இப்படி எந்தப் பக்கமும் நகரக் கூட இடம் இருக்காது.

‘பையன் பத்தாம் வகுப்பு பெயிலானா என்ன ! மறுபடியும் எழுதச் சொல்லலாம் இல்ல!‘ ரவியிடம் பேச்சுக் கொடுத்தேன்.‘அதுக்கும் காசு தானே சார் பிரச்சினை. மாசம் மூவாயிரம் பீசு சார்‘ என்றார். அப்போது ஒருவர் சிறுநீர் கழிக்க உள்ளே செல்ல வேண்டும் என்றார். கழிவறை மேடையில் போடப்பட்டிருந்த ஜன்னல் பலகையை எடுத்து ஓரமாகச் சாய்த்து வைத்துவிட்டு ஒவ்வொருவராக வெளியே வந்தனர். அவர் உள்ளே சென்றார். மீண்டும் அவர் வெளியே வந்ததும் பழையபடி பலகையை இருக்கையாக்கிக் கொண்டு அமர்ந்தனர். கழிப்பறையைப் பயன்படுத்திக் கொண்டும், –பயணித்துக் கொண்டும் செல்லும் இந்தக் காட்சியின் அதிர்ச்சியில் நான் உறைந்திருக்க, ரவி அதை சட்டை செய்யாமல் தொடர்ந்தார்.

‘பொண்ணு கல்யாணத்துல லட்சக்கணக்குல கடன் ஆகிடுச்சு சார். அதுக்கு வட்டி கட்ட தான் சரியா இருக்கு. கடனை அடைக்க முடியல. அடுத்து தங்கச்சிங்க இருக்காங்க. அவங்களையும் நாங்க தான் பார்த்துக்கணும். அப்பா இல்ல. மூணு அண்ணனுங்க. பொண்ணு கல்யாணத்துல கடன் மூன்றரை லட்சம்.‘  ‘அவ்வளவு செலவு பண்ணி எதுக்கு கல்யாணம் பண்ணீங்க ?‘  ‘நகையே பத்து பவுண் சார். அதுக்கு மட்டுமே ரெண்டு லட்சம் ஆயிருச்சு. அப்புறம் கல்யாணச் செலவு எல்லாம் சேத்து மூன்றரை ஆகிடுச்சு. கூலி வேலை செய்றோம்னு கேவலமா பார்க்கிறாங்க, நம்மளும் நல்லா நடத்திக்காட்டணும்னு தான் கடனை வாங்கியாவது கல்யாணத்தைப் பெருசா நடத்தணும்னு நடத்தினோம்.‘   அவர் பேசுவதை மற்றவர்கள் உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

‘நான்லாம் அஞ்சு வருசமா தான் சார் இந்த வேலைக்கு வந்து போறேன். இருக்கிறதுலேயே இவன் தான் சார் சீனியர்‘ என்று அருகிலிருந்த சதீசைக் காட்டினார்.  சதீசு பதினைந்து ஆண்டுகளாகத் தினமும் சென்னைக்கு வந்து போகிறார். அவருடைய கண்கள் நன்றாகச் சிவந்திருந்தன. ‘என்ன இப்படி சிவந்திருக்கு. சரியா தூக்கம் இல்லையா ?‘ ‘இல்லை சார்! சீலிங்கை பூசும் போது சிமெண்ட் பால் கண்ணுல விழும். இத்தனை வருசமா அது பட்டு பட்டு தான் இப்படி இருக்கு‘ என்றார். சதீசுக்கு வயது முப்பது. சரியாகப் படிக்கவில்லை என்பதால் பதினைந்து வயதிலேயே கூலியாளாக வேலைக்கு வந்து இன்று மேஸ்திரியாக இருக்கிறார். ரவி வாங்குகின்ற சம்பளம் தான் இவருக்கும்.

‘இந்தப் பையன் இன்னைக்கு தான் சார் வந்திருக்கான், பத்தாவது பெயிலாகிட்டான்‘ என்று மூலையில் உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு பையனைக் காட்டிச் சொன்னார் சதீசு. அந்தப் பையனுக்கு பதினைந்து வயது தான் இருக்கும். அன்றிலிருந்து அவனும் அந்த இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட ஒருவனாக பிணைக்கப்பட்டு விட்டான்.

அடுத்த பெட்டியில் ஏறினேன். கூட்டமாகப் பலர் குழுமி நின்று கொண்டிருந்த ஒரு இடத்தில் கட்சிகளை ஒரு குரல் மானக்கேடாகத் திட்டிக் கொண்டிருந்தது. அதாவது அங்கே ‘அரசியல் விவாதம்‘ நடந்து கொண்டிருந்தது. அருகில் நின்று கொண்டிருந்தவரிடம் ‘என்ன சார் விவாதம்‘ என்றேன். ‘தி.மு.க. கனிமொழி, அலைக்கற்றை பற்றி‘ என்றார். அவர் பெயர் சுந்தர். ‘மின்வெட்டு, மின்கட்டண உயர்வு பற்றி எல்லாம் பேசலையா ?‘ என்றதும், ‘நீங்க ரொம்ப லேட்டு, அதெல்லாம் சோளிங்கருக்கு முன்னாடியே பேசியாச்சு‘ என்றார்.

சுந்தர் ஆர்.பி.எஃப். இல் (ரயில்வே பாதுகாப்புப்படை) வேலை செய்கிறார். ஜோலார்பேட்டையிலிருந்து தினமும் ஆவடி ஸ்டேசனுக்கு வந்து செல்கிறார். அவர் சக பயணிகளுடன் ஒரு காவலரைப் போல நடந்து கொள்ளவில்லை. சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தார். இரவு பன்னிரெண்டு மணிக்கு வீட்டிற்குள் நுழைந்து காலை நான்கு மணிக்குக் கிளம்பும் பல்லாயிரக்கணக்கான பயணிகளில் இவரும் ஒருவர். இப்போது வண்டி சற்று வேகம் குறைந்தது. ஏதோ ஒரு நிறுத்தம் வருவதற்கான அறிகுறி அது. ’நம்ம தாய் நாடு வந்துருச்சு எல்லோரும் வாங்க‘ என்றார் ஒருவர். அது காட்பாடி. நிறைய பேர் இறங்கினர். ’தாய்நாட்டில்’ வாழ முடியாமல் ’அந்நிய’ நாட்டிற்கு அலுத்துக் களைத்து செல்லும் பயணம் என்று அவர் சொல்லுகிறாரோ?

காட்பாடியில் இறங்குபவர்களில் கணிசமானவர்கள் அங்கிருந்து வேலூருக்கு இரு சக்கர வாகனங்களிலும், பேருந்துகளிலும் செல்கிறார்கள். காட்பாடி தாண்டியதும் சற்றுக் கூட்டம் குறைந்தது. பிறகு வந்த முகுந்தராயபுரத்தில் அடுத்த பெட்டிக்கு மாறினேன். அங்கு கணிசமாக கூட்டம் குறைந்திருந்தது. அருகில் அமர்ந்து கொண்டிருந்த செல்வராஜ் என்பவர் வனத்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர். சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் அலுவலகம். வீடு வேலூர். இந்த வண்டியில் தான் தினமும் வந்து செல்கிறார். ‘ஏன் சார்? வேலூருக்கே மாற்றலாகி வரலாமே‘ என்றால், ‘அதுக்கு இப்படி ட்ரெய்ன்லயே அலைஞ்சிறலாம்‘ என்றார். வேலூர் அலுவலகத்திலுள்ள ஒரு அதிகாரியின் குடைச்சலால் தான் இவரே சென்னைக்கு மாற்றல் கேட்டு வந்திருக்கிறார்.

அடுத்தடுத்து வந்த ஊர்களில் இறங்க வேண்டியவர்கள் எல்லாம் இறங்கி, இருளில் மறைந்து போனார்கள். நான் இரவு முழுவதையும் இரயில் நிலையத்திலேயே கழித்துவிட்டு காலை ஐந்து மணிக்கு வரும் ஏலகிரிக்காக ஜோலார்பேட்டையில் காத்திருந்தேன். காலையில் வண்டியைப் பிடித்து சென்னை திரும்பினேன்.

சென்னையில் இறங்கியதும் பக்கத்து நடைமேடையில் ஒரு வண்டி நின்று கொண்டிருந்தது.

அந்த வண்டியைப் பார்த்ததுமே ‘நாம் என்ன ஐரோப்பிய இரயில் நிலையத்திற்குள் ஏதும் வந்து விட்டோமோ?!‘ என்று ஒரு விநாடி தோன்றியது. இதுவரை அந்த வண்டியை அங்கே பார்த்ததில்லை. அது அவ்வளவு சுத்தமாகவும், பளபளப்பாகவும் இருந்தது. அது பெங்களூர் செல்லும் சதாப்தி விரைவு வண்டி. அந்த வண்டியில் பொதுப்பெட்டிகள் இல்லை. அது முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்ட உயர்தர மக்களுக்கான வண்டி.

அன்றாடம் கழிப்பறையில் அமர்ந்து கொண்டு பயணிக்கும் மக்களுக்கு வாய்த்த ஏலகிரி விரைவு வண்டி இருக்கும் நாட்டில்தான் சதாப்தியும் செல்கிறது. இரண்டு இந்தியா இருக்கிறது என்பதற்கு வேறு சான்று வேண்டுமா என்ன?

குடியிருக்கும் ஊரில் ஒரு குறைந்தபட்ச வேலையும், வாழ்க்கையும் இல்லாமல் இந்த மக்கள் தினந்தோறும் இந்த நரக வாழ்க்கையை ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்?

ஏலகிரியில் செல்லும் மக்களுக்கு மானாட மயிலாடவோ, ஏர்டெல் சூப்பர் சிங்கரோ, ஐ.பி.எல் போன்றனவோ இல்லை. சீரியல்களோ எதுவுமில்லை. வார விடுமுறையில் சுற்றுலாவோ, உயர்தர உணவு விடுதிக்குச் செல்வதோ, இன்னபிற நடுத்தர வர்க்க கேளிக்கைகளெல்லாம் இந்த மக்களின் கனவில் கூட இல்லை. இவர்களை அடித்துத் தோய்த்துதான் பணக்காரர்களின் இந்தியா நாளொரு மேனி, பொழுதொரு வண்ணமுமாக ஜொலிக்கிறது.

ஒளிரும் இந்தியாவைப் பார்க்க வேண்டுமா? ஏலகிரியில் ஒரு முறை பயணம் செய்யுங்கள்! கண்ணைப் பறிக்கும் அந்த அவல வாழ்க்கைக் காட்சிகளின் அதிர்ச்சிகளிலிருந்து நான் இன்னமும் மீளவில்லை.

______________________________________________________

– வினவு செய்தியாளர், – புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

குடிமக்களை கிரிமினல்களாக நடத்தும் பாசிசத்தை முறியடிப்போம்!

19

வாடகைதாரர்களின் விவரம் திரட்டும் சென்னை போலீசின் உத்தரவுக்கு நீதிமன்றத் தடை!

வாடகைதாரர் விவரம்சென்னை மாநகரப் போலீசு நடத்திய போலி மோதல் கொலைகளும், வடமாநிலத் தொழிலாளர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டதும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளன. சென்னையில் வாடகைதாரர்கள் என்ற பெயரில் குடியிருக்கும் ‘சமூக விரோதி’களால் பொது அமைதிக்கும் பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், வீட்டு உரிமையாளர்கள் தாங்கள் குடியமர்த்திருக்கும் வாடகைதாரர்கள் பற்றிய விவரங்களை அருகாமை போலீசு நிலையத்தில் தரவேண்டும் என்றும், அவ்வாறு அளிக்கத் தவறினால், வீட்டு உரிமையாளர்கள் மீது இ.பீ.கோ பிரிவு 188இன் கீழ் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநகர போலீசு உத்தரவிட்டது. குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ், மார்ச் 3ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த உத்தரவின்படி, போலீசு தருகின்ற படிவத்தில், ‘வாடகைதாரரின் புகைப்படம், அடையாள அட்டை, அவரது நிரந்தர முகவரி, அவர் ஏற்கெனவே குடியிருந்த முகவரி, செல்பேசி எண், வேலை செய்யும் இடத்தின் முகவரி, வீட்டில் தங்கியிருப்பவர்கள் குறித்த விவரம்’ ஆகியவற்றைத் தரவேண்டும்.  வீட்டு உரிமையாளர் அதற்கு கைச்சான்றும் அளிக்க வேண்டும்.

ஜெயா அரசின் அப்பட்டமான இந்த பாசிச நடவடிக்கையை ஓட்டுப் பொறுக்கிகள் யாரும் கண்டிக்கவில்லை. சில மனித உரிமை அமைப்புகளும் வழக்குரைஞர்களும் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். வலுவான எதிர்ப்பேதும் இல்லாததால், உள்ளூர் ஓட்டுப்பொறுக்கித் தலைவர்கள் மூலம் வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது போலீசு. வீட்டு உரிமையாளர்களின் பார்வையில், வாடகைதாரர்கள் சந்தேகத்திற்கிடமான குற்றவாளிகளாக மாறிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் (HRPC) இவ்வுத்தரவுக்கு எதிராக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்றையும் தாக்கல் செய்தது. போலீசின் உத்தரவு வாடகைதாரர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பறிப்பதுடன், அவர்களது தனிமைச் சுதந்திரத்தை மறுப்பதாகவும், சொந்த வீடு இல்லாதவர்களையும் வெளிமாநிலத்தவரையும் கிரிமினல்களாகச் சித்தரிப்பதாகவும், வீட்டு உரிமையாளர்களை ஆள்காட்டிகளாக மாற்றுவதாகவும் வாதிட்ட ம.உ.பா.மையம், இந்த உத்தரவுக்கு உடனே  தடை விதிக்கக் கோரியது. வீட்டு உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் 30.3.2012 அன்று தடை விதித்த உயர் நீதிமன்றம் 25.4.2012 அன்று மொத்த உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. போலீசின் இவ்வுத்தரவு  தடுக்கப்படாமலிருந்தால், தமிழகம் முழுவதற்கும் இது விரிவுபடுத்தப்பட்டிருக்கும்.

பயங்கரவாத தடுப்பு, கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை அதிகரித்து வருகின்றன, மத்தியமாநில அரசுகள். மக்கள் மீதான மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் அதிகரிக்க அதிகரிக்க, அவற்றுக்கெதிரான போராட்டங்களும் அதிகரிக்கும் என்பதால், குடிமக்கள் அனைவரையும் கண்காணிக்கப்பட வேண்டிய குற்றவாளிகளாகவே அரசும் ஆளும் வர்க்கமும் கருதுகின்றன. மத்தியமாநில உளவுத் தரவுகளை ஒருங்கிணைக்கும் “நாட்கிரிட்” என்ற தேசிய உளவு வலைப்பின்னல், ஆதார் அட்டை, வீதிகளில் ஆங்காங்கே நிறுவப்படும் டி.வி. காமெராக்கள், கல்லூரி மாணவர்கள், வடமாநில தொழிலாளர் போன்றோரின் தரவுகள் திரட்டப்படுதல் போன்றவற்றின் வரிசையில் வருகிறது, சென்னை போலீசின் இவ்வுத்தரவு.

பாசிசம் வெகுவேகமாக நிறுவனப்படுத்தப்படுகிறது. சுருக்கு இறுகுமுன்னர் விழித்துக்கொண்டு அதனை அறுத்தெறிந்தாகவேண்டும்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே – 2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

நிஜாமின் கஜானாவுக்கு வரி கிடையாதா?

9

ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2008-ஆம் ஆண்டு வெளியிட்ட கடந்த நூற்றாண்டின் (1900-2000) பணக்கார வரலாற்று மாந்தர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருக்கும் ஹைதராபாத் நிஜாமின் அதிகாரப்பூர்வ சொத்து மதிப்பு 210.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இதே பட்டியலில் இருபதாவதாக வரும் பில்கேட்சின் சொத்து மதிப்பு 101 பில்லியன் டாலர்கள் தான்.

இந்த சொத்துக்களனைத்தும் அந்தக் காலத்தில் நிஜாம் வயலில் இறங்கி நாற்று நட்டோ, சுமை சுமந்து சம்பாதித்ததோ அல்ல. முகலாயர் காலம் தொடங்கி வெள்ளையர்  காலம் வரை தக்காணத்தில் அவர்களுக்கு அடியாளாகப் பணியாற்றி, மக்களைப் பல்வேறு வரிகளின் மூலம் கசக்கிப் பிழிந்து சம்பாதித்தவைதான். இது போக சிறப்பான அடிமையாகப் பணியாற்றியதற்காக வெள்ளை அதிகாரிகளாலும், காலனிய அரசாலும் அளிக்கப்பட்ட பல்வேறு பரிசுப்பொருட்களும் தான் நிஜாமின் கஜானாவில் நிறைந்துள்ளது.

அன்றைக்கு வெள்ளையனின் காலில் விழுந்து கிடந்த மைசூரின் உடையாரும், திருவிதாங்கூர் ராஜாவும், ஆற்காடு நவாப்பும், கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனும், தொண்டைமானும், இன்னும் சிந்தியாக்களும், மராத்திய பேஷ்வாக்களும் இன்றும் சுகபோகிகளாகவே வாழ்கிறார்கள். அவர்களது மாளிகைகள், இதர சொத்துக்களைப் பறிமுதல் செய்யாத இந்திய அரசு இன்றும் அவற்றைப் போஷித்து வருகின்றது.

திப்பு சுல்தான் உள்ளிட்ட தியாகிகள் வெள்ளையனை எதிர்த்த போது, ஹைதராபாத் நிஜாம்கள் பச்சையான துரோகம் புரிந்து காலனிய அரசுக்கு வால் பிடித்தார்கள். இவர்களின் ஊதாரித்தனமும், உல்லாச வாழ்வும் உலகறிந்தது. ஹைதராபாத்தின் ஆறாவது நிஜாம், ஒரு வாத்து முட்டையின் அளவுள்ள வைரத்தையே செருப்பில் பதித்து வைத்திருந்திருக்கிறார். அவரது மரணத்திற்குப் பின் அதைக் கண்டெடுக்கும் அவரது வாரிசு, அந்த வைரத்தை பேப்பர் வெயிட்டாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

இப்பேர்ப்பட்ட பெயருக்கும், புகழுக்கும் உரிய நிஜாம் குடும்பத்தார் இப்போது மாபெரும் அவமானத்தில் உழல்வதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அது என்ன அவமானம்?

1995-ம் ஆண்டு நிஜாமின் கட்டுப்பாட்டில் இருந்த தங்க நகைகளில் ஒரு பகுதியை இந்திய அரசு 206 கோடி ரூபாய்களுக்கு வாங்குகிறது. இதற்கு வருமான வரித்துறை சுமார் 30 கோடி ரூபாய்களை வரியாக விதிக்கின்றது. தங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தை தாம் விற்பதற்கு அரசுக்கு ஏன் பங்கு கொடுக்க வேண்டும் என்று கொதித்தெழுந்த நிஜாமின் வாரிசுகள், நீதிமன்றத்தை நாடுகிறார்கள். சில ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கு நடந்து கொண்டிருக்கும் போதே இடைக்கால ஏற்பாடாக சுமார் 15.45 கோடியை வருமானவரித் துறையிடம் வரியாகவும், 15.05 கோடியை வங்கியில் பிணைத் தொகையாகவும் வைக்கிறது அரச குடும்பம்.

இந்த 15.05 கோடியில் அரச குடும்பத்து வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட்ட ஈவுத்தொகை போக தற்போது 8.66 கோடிதான் மீந்துள்ளது. மீதம் உள்ள தொகையோடு வட்டியையும் சேர்த்து 8.99 கோடியை நிஜாம் குடும்பம் வரிப் பாக்கியாக வைத்துள்ளது. சுமார் 120 வாரிசுகளைக் கொண்ட நிஜாம் குடும்பத்தினர் இந்தத் தொகையைச் செலுத்த வேண்டுமென்று நோட்டீசு விடுத்துள்ளது வருமான வரித்துறை. அரச குடும்பத்துக்கே நோட்டீசா என்று கொதித்துப் போன நிஜாமின் வாரிசுகள், இதற்காக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி வரை சென்று முறையிட்டுள்ளனர்.

இதைப் பற்றி மனம் வெதும்பிப் பேசிய நிஜாம் ஓஸ்மான் அலியின் கொள்ளுப் பேரன் நவாப் நஜஃப் அலிகான், “நாங்கள் தில்லி சென்று போராடுவோம். அப்போது தான் அரசகுடும்பத்துக்கு வருமான வரித்துறை இழைத்துள்ள அவமானத்தை இந்த நாடும், மக்களும் புரிந்து கொள்வார்கள்” என்று புலம்பியுள்ளார்.

ஹைதராபாத்-நிஜாம்

வெள்ளையனை அண்டிப்பிழைத்த இந்தக் கைக்கூலிகள் தமது துரோகத்தனத்துக்கு அளிக்கப் பட்ட பரிசுகளுக்கு வரிகட்டுவதை அவமானம் என்கிறார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்ததற்கு வீசப்பட்ட எலும்புத் துண்டுகளை நட்ட ஈடின்றிக் கைப்பற்றுவோம் என்று அறிவிக்க துப்போ திராணியோ இல்லாத இந்த ‘சுதந்திர’ அரசின் நிதியமைச்சர் ’நிஜாமின் கவலையைப் போக்க அரசு நடவடிக்கையெடுக்கும்’ என்று உறுதியளிக்கிறார். திப்புவையும், மருதுவையும், கட்டபொம்மனையும் மறைத்து விட்ட முதலாளித்துவ ஊடகங்களோ நிஜாமின் ’துயரத்துக்கு’ மனமிரங்குகின்றன – மைசூர் உடையாரின் வருடாந்திர கேளிக்கைகளுக்கு சிறப்புக் கவனம் கொடுத்து வெளியிடுகின்றன.

கட்டபொம்மனைக் கைது செய்து கும்பினியின் காலை நக்கி அடிமைச் சேவகம் புரிந்த தொண்டைமானின் வாரிசு திருச்சியின் முன்னாள் மேயர் என்றால், வடக்கே சிந்தியாக்கள், காஷ்மீரின் கரண் சிங் என்று சுதந்திரத்துக்குப் பின் நேரடியாக ஓட்டுக் கட்சி அரசியலில் ஈடுபட்டு அதிகாரத்தைத் தொடர்ந்து ருசித்தவர்கள் ஏராளம்.  அப்படி நேரடியான வாய்ப்புக் கிடைக்காத வெள்ளைக்காரனின் சவுக்கு நுனிகளான ஜமீன்களும், இன்ன பிற சிற்றரசர்களும் வட்டார அளவில் பெரும் செல்வாக்கு செலுத்தும் நிலச்சுவான்தார்களாகவே நீடித்து வருகிறார்கள்.

உண்மை என்னவெனில் இவர்களைப் பராமரிக்கும் இந்திய அரசு கூட கைக்கூலிகளின் அரசு என்ற முறையில் நடப்பது கும்பினியின் ஆட்சி தான் – என்ன, கவர்னரின் தலையில் தொப்பிக்குப் பதில் டர்பன் இருக்கின்றது.

______________________________________________________

 – புதிய கலாச்சாரம், மே – 2012

______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

ஈழம் : இந்தியாவின் புதிய நாடகம் !

13
ஈழம் - இந்தியாவின் புதிய நாடகம்

ஈழம் - இந்தியாவின் புதிய நாடகம்கடந்த மார்ச் மாதத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை சதித்தனமான திருத்தங்களுடன் இந்தியா ஆதரித்து இலங்கையைக் காப்பாற்றிய போதிலும், ராஜபக்சேவுக்கு தன்னிலை விளக்கமளித்து மன்மோகன்சிங் கடிதம் எழுதிய போதிலும், ராஜபக்சே கும்பல் இந்தியாவுக்குத் தனது கோபத்தையும் அதிருப்தியைக் காட்டியது. இலங்கை அமைச்சர்கள் சகட்டு மேனிக்கு இந்தியாவைத் தாக்கிப் பேசினர். பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதிச் சாடினர். சிங்கள வெறியர்கள் மட்டக்கிளப்பில் காந்தி, விவேகானந்தர் சிலைகளை உடைத்தனர். மேற்கத்திய ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பதாகக் காட்டுவதற்காக சாரணர் இயக்கத்தின் நிறுவனரும் ஆங்கிலேயருமான பேடன்ட் பவல் சிலையை உடைத்தனர். ஈழத்தமிழர் எதிர்ப்பைக் காட்டுவதற்காக விபுலானந்த அடிகளார், புலவர்மணி பெரியதம்பிப் பிள்ளை ஆகிய தமிழறிஞர்களின் சிலையை உடைத்தனர். ஆனாலும் இந்தியா பெயரளவுக்கு ஒரு கண்டனத்தை தெரிவித்துவிட்டு,   சிதைக்கப்பட்ட காந்தி சிலையைச் செப்பனிட உதவுவோம் என்று மான உணர்ச்சியே இல்லாமல் அறிவித்தது.

ஐ.நா. தீர்மானத்துக்குப் பிறகு, இந்தியாவுக்குத் தமது அதிருப்தியைக் காட்டும் நோக்கத்தோடு  “கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாது, அதன் கதிர்வீச்சு இலங்கைக்குப் பாதிப்பை உண்டாக்கும்” என்றார் இலங்கை அமைச்சர். ஈழத் தமிழர்களிடம் தனி ஈழத்துக்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தி.மு.க.தலைவர் கருணாநிதியும், ஈழ ஆதரவாளர்களும் கருத்து தெரிவித்தவுடன், “முதலில் உங்கள் நாட்டிலுள்ள காஷ்மீரில் கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு அப்புறம் ஈழத்தைப் பற்றி பேசுங்கள்” என்கிறார் இன்னுமொரு சிங்கள அமைச்சர். ஆனாலும் இந்திய அரசு இவை பற்றி வாய்திறக்கவில்லை.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் நிலையை அறிய கடந்த 2009ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று வந்தது. இப்போது ராஜபக்சே கும்பல் இந்தியாவை ஆத்திரமூட்டி அலட்சியப்படுத்திய நிலையில், கடந்த ஏப்ரல் 16 முதல் ஆறுநாள் சுற்றுப்பயணமாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவியான சுஷ்மா சுவராஜ் தலைமையில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறது. ஐ.நா. தீர்மானத்தின்படி இலங்கையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக்  காட்டுவதற்காகவும், பொருளாதார  வர்த்த ஒப்பந்தங்கள் குறித்துப் பேசவுமே இந்தக் குழு இலங்கைக்கு அனுப்பப்பட்டது. இலங்கையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகக் காட்டுவதற்காக,  ராஜபக்சே அரசு  நாடாளுமன்றத் தேர்வுக் குழுவை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேருமாறு வலியுறுத்துவதும் இந்திய நாடாளுமன்றக் குழுவின் நோக்கமாக இருந்தது.

மற்றபடி, ஈழத் தமிழின அழிப்புப் போரினால் தமது வாழ்வை இழந்து முகாம்களில் இன்னமும் வதைபடும் தமிழர்களைப் பார்க்கும் நோக்கமே இந்தக் குழுவுக்குக் கிடையாது. ஆனால் முகாம்களிலுள்ள தமிழர்களைச் சந்தித்து, போருக்குப் பிந்தைய மறுநிர்மாணப் பணிகளை இக்குழு பார்வையிட்டு ஏதோ ராஜபக்சே கும்பலின் மீது இந்தியா நடவடிக்கை எடுக்கப் போவதைப் போல தமிழக ஊடகங்கள் கதை பரப்பின.

ஈழம் - இந்தியாவின் புதிய நாடகம்ஈழத் தமிழின அழிப்புப் போர் நடந்து கொண்டிருந்தபோது அன்றைய இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி முதலானோர் இலங்கைக்குச் சென்ற போதெல்லாம், ஏதோ போர் நிறுத்தத்துக்காகத்தான் செல்கிறார்கள் என்று தமிழக ஓட்டுக் கட்சிகளும் ஊடகங்களும் பிரமையூட்டிதைப் போலவே இப்போதும் நடந்துள்ளது.

ஈழத் தமிழர்களை அடைத்து வைத்துள்ள முகாம்களில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில முகாம்களை மட்டும் பார்வையிட அனுமதித்த ராஜபக்சே அரசு, இந்திய எம்.பி.க்கள் குழுவை குளுகுளு அறைகளில் உட்கார வைத்து, தடபுடல் விருந்து வைத்து வழியனுப்பி வைத்துள்ளது.  இன்னமும் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தமிழர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாத நிலையில்,  முள்வேலி முகாம்களில் 6,000 பேர்கள்தான் இருக்கிறார்கள், அவர்களும் வரும்  ஜூன் மாதத்துக்குள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு கூறியதை அப்படியே இந்தியக் குழுவினர் கொழும்புவில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். ‘எங்கள் நாட்டின் தேசியத் தந்தையாகிய காந்தி சிலையை ஏன் உடைத்தாய்’ என்று கூட இந்தக் குழு கேட்கவில்லை.

குழுவின் தலைவராக உள்ள சுஷ்மா சுவராஜ் ராஜபக்சேவைச் சந்தித்துப் பேசி வைரமாலையைப் பரிசாகப் பெற்று வந்துள்ளார். “ஈழத்து எம்.ஜி.ஆர்.” என்று ஈழத் துரோகி டக்ளசைப் பாராட்டியிருக்கிறார், காங்கிரசு எம்.பி.யான சுதர்சன நாச்சியப்பன். நிவாரணப் பணிகள் முன்னேற்றகரமாக உள்ளது, ஈழத் தமிழ் மக்கள் தனி ஈழத்தை விரும்பவில்லை,  தமிழர் பகுதிகளிலிருந்து இராணுவத்தைத் திரும்பப்பெற ராஜபக்சே உறுதியளித்துள்ளார் என்று பேட்டியளிக்கிறார், போலி கம்யூனிஸ்டு எம்.பி.யான டி.கே. ரங்கராஜன். ஆனால் ராஜபக்சேவோ, எங்கள் நாட்டின் ராணுவத்தை எங்கள் நாட்டிலுள்ள பகுதிகளில் நிறுத்தாமல் வேறு எங்கு நிறுத்த முடியும் என்று மறுநாளே பேட்டியளிக்கிறார். தனி ஈழம் கேட்பவர்கள் பயங்கரவாதிகள் என்கிறார் கோத்தபய.

தமிழர் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்றும், 13வது சட்டத் திருத்தத்தைப் பற்றியும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரமும் அரசியல் உரிமைகளும் வழங்குவதைப் பற்றி வலியுறுத்தியதாகவும், இதற்கு ராஜபக்சே ஒப்புக்கொண்டுள்ளதாகவும் இங்கே சுஷ்மா சுவராஜ் பேட்டியளிக்கிறார். ஆனால், “இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் அதிகாரப் பரவல் குறித்து எந்த விவாதமும் நடக்கவில்லை. சுஷ்மா கூறுவது போல 13வது சட்டத்திருத்தம் பற்றியோ, அதிகாரப்பரவல் குறித்தோ எந்த உத்திரவாதமும் தரப்படவில்லை” என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதேபோல, கடந்த ஜனவரியில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று ராஜபக்சே உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால் அவர் இந்தியா திரும்பும் முன்னரே, அப்படியொரு உறுதியைத் தரவில்லை என்று ராஜபக்சே திடலடியாக மறுத்தார். மொத்தத்தில் இந்திய எம்.பி.க்கள் குழுவின் இலங்கைப் பயணம், தமிழர்களை ஏய்க்கும் இன்னுமொரு மோசடி நாடகம் என்பதும், ஈழத் தமிழ் மக்களை வதைத்துக் கொண்டிருக்கும் ராஜபக்சே கும்பலுக்கு ஜனநாயக சாயம் பூசும் நடவடிக்கைதான் என்பதும் மீண்டும் அம்பலப்பட்டுப் போயுள்ளது.

ஈழம் - இந்தியாவின் புதிய நாடகம்இதுவொருபுறமிருக்க, ஆத்திரமூட்டி எகத்தாளம் செய்யும் ராஜபக்சே கும்பலிடம் இந்தியா ஏன் இப்படி அனுசரணையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே மையமான கேள்வி. ஈழத் தமிழின அழிப்புப் போரை நாங்கள் மட்டும் தனித்து நடத்தவில்லை;  இந்திய அரசின் வழிகாட்டுதலுடன் அதன் துணையுடன்தான் நடத்தினோம் என்று ராஜபக்சே கும்பல் உலக அரங்கில் அம்பலப்படுத்திவிடும் என்ற அச்சத்தால்தான், இலங்கை எட்டி உதைத்தாலும் இந்திய அரசு அனுசரித்துப் போவதாக ஒருபிரிவு தமிழினவாதிகள் காரணம் காட்டுகின்றனர்.

இதுதான் காரணமெனில், காஷ்மீரில் கருத்துக் கணிப்பை நடத்திவிட்டு அப்புறம் ஈழத்தைப் பற்றி பேசு என்று இலங்கை அமைச்சர் சாடுவதைக் கேட்டுக் கொண்டு மன்மோகன் சோனியா கும்பல் மட்டுமின்றி, இந்துத்துவ பா.ஜ.க.வும் மவுனம் சாதிக்கிறதே அது, ஏன்? இலங்கையுடன் இந்தியா அனுசரித்துப் போவது மட்டுமல்ல. பாகிஸ்தானுக்கு எதிரான போர்களை நடத்தி, இந்திய தேசியத்தை பாக். எதிர்ப்பின் மீது கட்டிய இந்திய ஆட்சியாளர்கள், இப்போது பாகிஸ்தானுடன் பொருளாதாரவர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டுள்ளதோடு  மின்சாரமும் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்கள். ஏன் இப்படி பாகிஸ்தானுடன் இந்தியா இணக்கமாக நடந்து கொள்கிறது என்பதையும் பரிசீலிப்பது அவசியம்.

இந்தியத் தரகுப் பெருமுதலாளிகளின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய அரசின் வர்க்கத் தன்மையிலிருந்துதான், அம்முதலாளிகளின் நலன்களிலிருந்துதான் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தீர்மானிக்கப்படுகிறது. இந்தியத் தரகு முதலாளிகளின் பொருளாதார நலன்களையும், தெற்காசியப் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை உறுதிப்படுத்திக் கொண்டு இப்பிராந்தியத்தை அம்முதலாளிகளுக்காக வளைத்துப் போடுவதையும்தான்  இந்திய அரசு தனது முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்திய முதலாளிகளின் பல்லாயிரம் கோடி மூதலீடுகளையும் ஆதிக்கத்தையும் பாதுகாக்கவும் விரிவாக்கவும் இந்த அடிப்படைகளிலிருந்துதான், இலங்கை மற்றும் பாக்.குடன் இணக்கமாகவும், விட்டுக் கொடுத்தும் இந்தியா நடந்து கொள்கிறது. இந்த நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ராஜபக்சே கும்பல் தனது இனவெறி பாசிசத்துக்கு நியாயம் தேடிக் கொள்கிறது. மக்களை இனவெறி தேசியவெறியில் ஆழ்த்தி உள்நாட்டுப் பிரச்சினைகளைத் திசைதிருப்பவும் முயற்சிக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் மேலாதிக்க நோக்கங்களையும், தரகுப் பெருமுதலாளிகளின் நலன்களுக்காகவே நேற்று ஈழத் தமிழினஅழிப்புப் போரை வழிநடத்தியதையும், இன்று இலங்கை காறி உமிழ்ந்தாலும் வளைந்து கொடுத்துப் போவதையும் அம்பலப்படுத்தி, இந்திய அரசை எதிர்த்துப் போராடி முடமாக்குவதுதான் முக்கிய கடமையாகும். அதை விடுத்து, சுண்டைக்காய் நாடு நம்மை அலட்சியப்படுத்துவதாகவும்,  தமிழகத்தின் விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள் இக்குழுவில் சேர்க்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களும் இனவாதிகளும் சூடேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

_______________________________________________________

_______________________________________________________

_______________________________________________________

சம்புகர்களின் கொலை!

38

கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்பதுதான் உங்களுக்கு எனது இறுதி அறிவுரை. செல்வத்துக்காகவோ அல்லது அதிகாரத்துக்காகவோ இல்லை நம்முடைய போராட்டம், அது சுதந்திரத்துக்கான போராட்டம். அது மனித ஆளுமையை மீட்டெடுப்பதற்கான போராட்டம்”

— பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்

‘சதாராவில் இருக்கும் தனது பள்ளியில் தான் தண்ணீர் குடிக்க முடியாது’ என்பதைப் பீம் தனது 10 வது வயதில் 1901-ஆம் ஆண்டு உணர்ந்தார். இந்தியாவின் பெரும்பாலான தலித்துகளைப் போலவே அவருக்கும் ‘வெளிநாட்டில் ரயில் வண்டியிலிருந்து வெளியில் தள்ளப்படுவதன் மூலம்’ இனப்பாகுபாட்டின் கசப்புச் சுவை தெரிய வேண்டியிருக்கவில்லை. இருந்தாலும், கல்விக்கான தாகம் அம்பேத்கரை தொடர்ந்து செலுத்தியது. கொலம்பியா பல்கலைக்கழகத்திலும், லண்டன் பொருளாதாரக் கல்லூரியிலும் முனைவர் பட்டம் பெற்று 1918-இல் நாடு திரும்பிய பிறகு மீண்டும் அவரது தீண்டாமை நினைவூட்டப்பட்டது. பரோடா மகாராஜாவின் ஆதரவு, சிறந்த கல்வி, பணம், நல்ல உடைகள் எதுவும் ‘தாகத்தை மதிப்போடு தணித்துக் கொள்ளவோ, நல்ல குடியிருப்பைத் தேடவோ’ அவருக்கு உதவி செய்யவில்லை. ஒரு சில சாதிகள் அடிப்படையிலேயே தாழ்ந்தவை என்று நம்பிய அமைப்பின் நஞ்சை முறிக்க அவர் இட ஒதுக்கீடு என்ற மாற்று மருந்தைப் பரிந்துரைத்தார். கற்றுக் கொள், ஒன்று திரள், போராடு என்ற சீர்திருத்த சோசலிச முழக்கத்தை அவர் தலித்துகளுக்கு வழங்கினார்.

இந்தியாவில் இட ஒதுக்கீடு என்பது மனித ஆளுமையை மீட்டுக் கொள்வதற்கான போராட்டம். கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இன்னமும் இயல்பாக மறுக்கப்பட்டு வரும் மனித உரிமைகளுக்கான போராட்டம்.

கடந்த மார்ச் மாதம் 3-ஆம் தேதி அன்று, அனில் குமார் மீனா என்ற பழங்குடி இன மாணவர் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில்  (எய்ம்ஸ்- AIIMS)  உள்ள அவரது விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தி மீடியத்தில் படித்த அவர், இராஜஸ்தானின் பரானைச் சேர்ந்த விவசாயியின் மகன். 12-ஆம் வகுப்பில் 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து, எய்ம்ஸ் நுழைவுத்தேர்வில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். சரியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது விடுதி அறையில் தூக்கு போட்டுக் கொண்டு தற்கொலை செய்த பால் முகுந்த் பாரதியின் அடிச்சுவட்டை அனில் குமார் மீனாவும் பின்பற்றியிருக்கிறார்.

தலித்-மாணவர்கள்-கொலை
அனில் குமார் மீனாவின் தற்கொலைக்குப் பிறகு எய்ம்ஸ் இயக்குனரின் வீட்டுக்கு வெளியில் மார்ச் 4, 2012 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தும் மாணவர்கள்

இதை எழுதிக் கொண்டிருக்கும் போது, லக்னோ சத்ரபதி ஷாகுஜி மருத்துவப் பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் நீரஜ் குமார் தனது உயிரை மாய்த்துக் கொள்வதில் தோல்வி அடைந்த செய்தி வருகின்றது. உயர் கல்வி நிறுவனங்களைப்  பன்முகப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் இன்சைட் அறக்கட்டளையின் ஆய்வின்படி கடந்த ஐந்து ஆண்டுகளில் 19 தலித்/பழங்குடி மாணவர்கள் இது போன்று தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. விபரங்களுக்கு அட்டவணையைப் பார்க்கவும்.

இந்திய பள்ளிகளில் நிகழும் வாழ்வும் சாவும்

  • மலேபுலா ஸ்ரீகாந்த், ஜனவரி 1, 2007 –  இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, மும்பை
  • அஜய் எஸ். சந்திரா, ஆக. 26, 2007 – ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு, இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி), பெங்களூரு
  • ஜஸ்பிரீத் சிங், ஜனவரி 27, 2008 – இறுதி ஆண்டு எம்பிபிஎஸ், அரசு மருத்துவக் கல்லூரி, சண்டிகர்
  • செந்தில் குமார், பிப்ரவரி 23, 2008 – பி.எச்.டி, இயற்பியல் துறை, ஹைதராபாத் பல்கலைக்கழகம்
  • பிரசாந்த் குரீல், ஏப்ரல் 19, 2008 –  முதலாம் ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
  • ஜி. சுமன், ஜனவரி 2, 2009  – இறுதி ஆண்டு எம்.டெக், ஐஐடி, கான்பூர்
  • அங்கிதா வேக்தா, ஏப்ரல் 20, 2009 – முதலாம ஆண்டு, பி.எஸ்.சி (நர்சிங்), சிங்கி நர்சிங் நிலையம், அகமதாபாத்
  • டி. ஸ்யாம் குமார், ஆக. 13, 2009  – முதலாம் ஆண்டு பி.டெக்,  சரோஜினி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஹைதராபாத்
  • எஸ். அமராவதி, நவ 4, 2009  – தேசிய இளநிலை பெண் குத்துச்சண்டை வீரர்,  சிறப்பு பயிற்சி மையம், ஆந்திரப் பிரதேச விளையாட்டு ஆணையம், ஹைதராபாத்
  • பன்தி அனுஷா, நவம்பர் 5, 2009 – பி.காம், இறுதி ஆண்டு, வில்லா மேரி கல்லூரி, ஹைதராபாத்
  • புஷ்பாஞ்சலி பூர்த்தி, ஜனவரி 30, 2010  – முதலாம் ஆண்டு, எம்.பி.ஏ., விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், பெங்களூரு
  • சுஷில் குமார் சௌத்ரி, ஜனவரி 31, 2010 –  இறுதி ஆண்டு, எம்.பி.பி.எஸ், சத்ரபதி ஷாகுஜி மகாராஜ் மருத்துவப் பல்கலைக்கழகம் (முன்னாள் கேஜிஎம்சி), லக்னோ
  • ஜே.கே. ரமேஷ், ஜூலை 1, 2010 –  இரண்டாம் ஆண்டு பி.எஸ்.சி, விவசாய அறிவியல் பல்கலைக்கழகம், பெங்களூரு
  • மாதுரி சேலே, நவம்பர் 17, 2010 – இறுதி ஆண்டு பி.டெக், ஐஐடி, கான்பூர்
  • ஜி. வரலக்ஷ்மி, ஜனவரி 30, 2011 – பி.டெக் முதலாம் ஆண்டு,  விக்னான் பொறியியல் கல்லூரி, ஹைதராபாத்
  • மனிஷ் குமார், பிப்ரவரி 13, 2011 – மூன்றாம் ஆண்டு, பி.டெக், ஐஐடி, ரூர்க்கி
  • லினேஷ் மோகன் காலே, ஏப்ரல் 16, 2011 – இளநிலை, நோய் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய நிறுவனம், புது தில்லி
  • அனில் குமார் மீனா, மார்ச் 3, 2012 – முதலாம் ஆண்டு, எய்ம்ஸ், புது தில்லி

(தகவல்: இன்சைட் அறக்கட்டளை)

ஆனால், பெரும்பகுதி கிராமப்புற இந்தியாவில் தலித் மாணவர்கள் தனியாக உட்கார வைக்கப்படுகிறார்கள். பள்ளி வளாகத்தைத் தூய்மை செய்யவும், கழிவறைகளைச் சுத்தம் செய்யவும் பணிக்கப்படுகிறார்கள். ஓம் பிரகாஷ் வால்மீகி என்ற இந்தி தலித் எழுத்தாளர் தனது சுயசரிதையில் தலைமை ஆசிரியரால் தனது சாதித் தொழிலைச் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட அவமானத்தை நினைவு கூர்கிறார். ‘போய் விளையாட்டு மைதானம் முழுவதையும் பெருக்கு, இல்லா விட்டால் உன் குண்டியில் மிளகாய்களைத் திணித்து பள்ளியிலிருந்து துரத்தி விடுவேன்’ என்று தலைமை ஆசிரியர் அவரிடம் சொன்னாராம். பகிர்ந்து கொள்வதற்கான இது போன்ற கொடும் நிகழ்வுகள் முறையாகக் கல்வி கற்ற ஒவ்வொரு முதல் தலைமுறை தலித்திடமும் இருக்கின்றன.

பாகுபாடு பாராட்டும் இந்தக் கல்வி அமைப்பில் தாக்குப் பிடிக்கும் ஒவ்வொரு இளைஞருக்கும் நான்கு குடும்ப உறுப்பினர்கள் ஒரு வேளை உணவை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. உடன் பிறந்தவர்கள் விவசாயக் கூலிகளாக வேலை செய்து ஒருவரின் கனவையும், நம்பிக்கையையும் நிறைவேற்ற உதவ வேண்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பெரும்பகுதி குழந்தைகள் வீட்டு வேலை செய்பவர்களாக, குழந்தைத் தொழிலாளர்களாக அல்லது பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களாகத் தொடர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு தலித் பெண்ணுக்கான சூழ்நிலை இன்னும் மோசமாக இருக்கின்றது. மகாராஷ்டிராவின் காயர்லஞ்சியில் 17 வயது பிரியங்கா போட்மாங்கே படித்து மதிப்பான வாழ்க்கையைத் தேடினார் என்ற உண்மை ஆதிக்க நிலவுடைமைச் சாதிகளின் கோபத்தைத் தூண்டியது. அவரும் அவரது தாய் சுரேகாவும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்டு கொல்லப்பட்டார்கள். அவரது சகோதரர்கள் வெட்டி வீசப்பட்டார்கள்.

இது போன்ற கடக்க முடியாத சாத்தியங்களை எதிர்த்து நின்று உயர் கல்வி நிறுவனங்களைப் போய்ச் சேரும் தலித்துகளை – புள்ளிவிபரங்களின் படி நூற்றில் 2 தலித்துகள் இதைச் சாதிக்கின்றனர் – ஆசிரியர்களின் மற்றும் சக மாணவர்களின் குத்தலும், கிண்டலும் வரவேற்கின்றன. கொடுமைப்படுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படாவிட்டால் உணர்வு ரீதியாக அவர்கள் நசுக்கப்படுகிறார்கள்.

***

டந்த பிப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கருப்பின மாணவர்கள் குறைவாக பிரதிநிதித்துவப் படுத்தப்பட்டுள்ளது பற்றி பிரிட்டிஷ் ஊடகங்களில் ஒரு விவாதம் நடந்தது. வேறு விசயங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியவராக இருந்தாலும், பிரதமர் டேவிட் காமரூன் இந்த விவாதத்தில் தலையிட்டு, அவர் படித்த ஆக்ஸ்போர்டு போன்ற பல்கலைக்கழகங்கள் கருப்பின மற்றும் சிறுபான்மைக் குழுக்களிலிருந்து மிகக் குறைவான எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருப்பது “கேவலமானது” என்று சொன்னார்.

“2010 இல் பிரிட்டனின் இரண்டு பழமையான பல்கலைக்கழகங்களில் சேரும் மாணவர்களில் நூற்றில் ஒரு பங்கை விடக் குறைவானர்கள்தான் கருப்பு இனத்தினர். ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்ட 2617 பேரில் 20 பேர் கருப்பு இன மாணவர்கள். இது 2009-இன் 29 பேரிலிருந்து குறைந்திருந்தது” என்று டெலிகிராப் கூறியது.

தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கருப்பின நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் லேமி, தகவல் பெறும் உரிமையின் மூலம் தரவுகளை சேகரித்து இந்த “ஆக்ஸ்பிரிட்ஜ் வெறுமையை” பற்றி குறைபட்டுக் கொண்டு, தி கார்டியனில் ஒரு கட்டுரை எழுதினார்.

பிரிட்டனில் நடக்கும் இந்த விவாதம், இந்தியாவில் நிலவும் பேரமைதிக்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. தலித் மாணவர்களுக்கு எதிராக அக மதிப்பீட்டில் (குறிப்பாக செய்முறைத் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வுகளில்) பாகுபாடு காட்டப்படுவதாகவும், அவர்கள் தங்கும் விடுதிகள், உணவு அறைகள், விளையாட்டு மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பிரித்து வைக்கப்படுவதாகவும் தகவல்கள் வந்ததைத் தொடர்ந்து 2006-இல் அப்போதைய பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் சுகதேவ் தோரட்டின் தலைமையிலான மூன்று பேர் குழு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் செயல்பாடுகளைப் பற்றி விசாரணை நடத்தியது. 77 பக்க தோரட் அறிக்கை நிர்வாகத்தைப் பல முனைகளிலும் குற்றஞ்சாட்டி, பரிந்துரைகளை முன் வைத்தது. ஆனால் அந்த அறிக்கை முன் முடிவுகளுடன் தயாரிக்கப்பட்டது என்று ஒதுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ள சம்பவங்களில் ஒன்று இதோ.

ஏப்ரல் 2006-இல், உமா காந்த் என்ற தலித் எய்ம்ஸ் மாணவர், தான் தங்கியிருந்த அறை எண் 45-இன் கதவில் “இந்தப் பகுதியிலிருந்து தொலைந்து போ” என்று எழுதப்பட்டிருந்ததைப் பார்த்தார். அப்படி எழுதிய ரவுடிகள் ஒரு தடவை உமாகாந்த் அறைக்குள் இருக்கும்போது வெளியிலிருந்து கதவைப் பூட்டி விட்டனர். இது பற்றி உமாகாந்த் ஒரு முறையான புகார் பதிவு செய்தார். என்ன நடந்தது?. மாணவர்களுக்கு “அவர்களது கடமைகள், கட்டுப்பாட்டை பின்பற்றுதல், ஒருவருக்கொருவர் சகிப்புத் தன்மையுடன் பழகுதல் போன்றவை நினைவூட்டப்பட்டு அவர்கள் படிப்பில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தபட்டனர்”. குற்றவாளிகள் தலித் மாணவருடன் கைகுலுக்க வைக்கப்பட்டனர்.

அவர்களோ அதற்குப் பிறகு உமாகாந்தைப் பிடித்து உதைத்து, ஒதுக்கப்பட்ட இன்னொரு பகுதிக்கு அவரை அறை மாற்றிக்கொள்ள வைத்தனர். அந்தப் பகுதிதான் எல்லா ‘ஷெட்யூல்களும்’ இருக்க வேண்டிய இடம். தெரிந்தே நடந்த எய்ம்ஸ் நிர்வாகத்தின் அலட்சியங்கள் இப்படி இருக்கும் போது அனில் மீனா, பால் முகுந்ந் பாரதி இவர்களின் மரணம் கொலைகளாகக் கருதப்பட வேண்டாமா?

இத்தகைய கொலைகள் எய்ம்சில் மட்டும் நடக்கவில்லை. ஆகஸ்ட் 26, 2007 இல், பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தில் 21 வயதான அஜய் ஸ்ரீ சந்திரா என்ற ஒருங்கிணைந்த ஆய்வுப்படிப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். பொதுப்பிரிவில் ஐ.ஐ.எஸ்.சி.க்கு தேர்வு பெற்றாலும், ஒதுக்கப்பட்ட பிரிவில்தான் அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார். அதன் பின்னர் அவருக்கு நரகம் ஆரம்பித்தது. ஏதோ ஒரு வகைத் தண்டனையாக ஒரே சோதனையை மூன்றாவது முறை திரும்பச் செய்து கொண்டிருந்த போது ஆய்வகத்தில் இருந்த சூழலை அவர் தனது நாட்குறிப்பில் விவரிக்கிறார்.

“நேரம் 11.45 முற்பகல். நான் தவறான ஆய்வகத்தில் இருக்கிறேன். அல்லது இந்த ஆய்வகம் எனக்கு உரியது இல்லை. அந்தக் கண்கள், அவை என்னைப் பயமுறுத்துகின்றன. அவ்வளவு உயர்வு/தாழ்வு மனப்பான்மையுடன் என்னைப் பார்க்கின்றன”.

தலித்-மாணவர்கள்-கொலை
ஐஐஎஸ்சி இளநிலை மாணவர் அஜய் ஸ்ரீ சந்திராவின் நாட்குறிப்பிலிருந்து ஒரு பக்கம். அவர் ஆகஸ்ட் 26, 2007 அன்று தற்கொலை செய்து கொண்டார்

அனில் மீனா ‘மன அழுத்தத்தால்’ இறந்தார் என்று எய்ம்ஸ் சொல்ல, அஜய் சந்திரா படிப்புச் சுமையைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இறந்தார் என்று ஐ.ஐ.எஸ்.சி முடிவு செய்தது.

கடந்த சில ஆண்டுகளாக இட ஒதுக்கீடு மூலம் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு உதவுவதற்காக சில பலவீனமான சீர்திருத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆளுமையை வளர்த்துக் கொள்வதற்கும், ஆங்கில திறமைகளுக்கும் விரைவு பயிற்சி வகுப்புகள் மூலம் மாணவர்கள் உயர்தர அறிவியல், மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிலையங்களில் தாக்குப் பிடிக்க உதவிகள் வழங்கப்படுகின்றன. கோழிக்கோட்டைச் சேர்ந்த சமூக மாற்றத்துக்கான ஆய்வு மற்றும் கல்விக்கான மையம், தலித்/பழங்குடி மாணவர்களுக்கு ஒரு வார காலத்துக்கான ‘சுய முன்னேற்ற’ நிகழ்ச்சிகளை கல்லூரி வளாகங்களில் நடத்த முன்வருகின்றது. அதன் மூலம் ஐ.ஐ.எம்.களிலும் ஐ.ஐ.டி.களிலும் அவர்கள் பொருந்திப் போக உதவி செய்கிறது. ஐ.ஐ.டி தில்லியில் சென்ற ஆண்டு அத்தகைய பயிற்சி வகுப்பை அந்நிறுவனம் நடத்தியது.

ஆனால் இந்தக் கல்வி நிலையங்களின் பெரும்பகுதியினரான ஆதிக்க சாதி ஆசிரியர்களையும், மாணவர்களையும், ஏகலைவர்களின் பெருவிரல்களை வெட்டி எறிய வலியுறுத்தும் துரோணாச்சாரியர்களையும், அர்ஜூனன்களையும் மாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கவில்லை. உண்மையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தேவையில்லை, பாகுபாடு காட்டுபவர்களுக்குத்தான் உதவி தேவை.

எய்ம்ஸ், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எஸ்.சி-களில் கொல்லப்பட்ட தலித்/பழங்குடி மாணவர்களின் எண்ணிக்கையில், பாதி அளவு ஹார்வர்டு அல்லது ஆக்ஸ்போர்டில் கறுப்பின மாணவர்கள் கொல்லப்பட்டால் என்னவிதமான விளைவுகள் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்.

குப்தா அல்லது ஷர்மா என்ற உயர்சாதிப் பெயர்களுடைய இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும்போது அது இனவெறி என்று பேசப்படுகின்றது. அது நாடுகளுக்கிடையேயான பிரச்சனையாகக் கூட ஆகிறது. தலித் மற்றும் பழங்குடி மாணவர்கள் இந்திய வளாகங்களில் மரணத்துக்குத் துரத்தப்படும் போது ஒரு முணுமுணுப்பு கூட இல்லை. தலித்துகளுக்கு எதிரான இத்தகைய முன் முடிவுகளையும், அவற்றால் விளையும் கொலைகளையும் மறுப்பதோடில்லாமல், நியாயப்படுத்தவும் செய்யும் அளவுக்கு இந்தியச் சமூகத்தை எது இவ்வளவு வெட்கமற்றதாக மாற்றியிருக்கின்றது?  இட ஒதுக்கீடுகளின் அடிப்படையையே எதிர்க்கும் காழ்ப்புணர்வு நிறைந்த வாதங்களை உறுதிப்படுத்துவதற்குக் கூட இந்த இறப்புகள் பயன்படுத்தப்படுவது எவ்வளவு கேவலமானது?

2003-இன் ஹிட் திரைப்படம் முன்னாபாய் எம்பிபிஎஸ் திரைப்படத்தின் கதாநாயகன் முரளி பிரசாத் ஷர்மா என்ற பிராமண சாதிப் பெயரை பெருமையுடன் சுமக்கிறான். பணம் பறித்தல், மிரட்டுதல், ஆள் கடத்தல் போன்ற தினசரி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ரவுடியான முரளி மோசடியின் மூலம் மருத்துவக் கல்லூரியில் சேருகிறான். எம்பிபிஎஸ் தேர்விலும் ஏமாற்றி தேர்ச்சி பெற முயற்சிக்கிறான். உணர்ச்சியற்ற அமைப்புக்கு எதிலான கலகக் குரலாக அவன் நேசிக்கப்படவும், போற்றப்படவும் செய்தான். முன்னாபாயின் நகைச்சுவையும் செய்தியும் இவ்வளவு பிரபலமானது குறித்து ஆச்சரியப்படுவதற்கில்லை, ஏனென்றால் அவற்றைச் செய்தது ஒரு ஷர்மா.

அனில் மீனாவும், பால் முகுந்த் பாரதியும் முரளி பிரசாத் ஷர்மாவைப் போல் இல்லாமல் கடினமாக உழைத்து எய்ம்சுக்குப் போய்ச் சேர்ந்தனர், ஏமாற்றிச் சேரவில்லை. அவர்களின் மரணத்தில் பல லட்சம் தலித், பழங்குடி மக்களின் நம்பிக்கைகள் நசுக்கப்பட்டன. அஜய் சந்திரா, கடுமையான தீர்ப்பு சொல்லும் கண்கள் அவரை பயமுறுத்தியதை பற்றிப் பேசுகிறார். அஜ்ய்கள், அனில்கள், பால் முகுந்த்களின் கண்களை அவற்றுக்கு உரிய மரியாதையுடன் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. அதுவரை இந்த மரணங்கள் நம்மை விட்டுவிடப் போவதில்லை.

_________________________________________________________

நன்றி: ஆனந்த், அவுட்லுக்

தமிழாக்கம்: செழியன்

__________________________________________________________

 வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

BCCI : பில்லியனர்கள் கட்டுப்பாட்டில் இந்திய கிரிக்கெட்- பி சாய்நாத்

2

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டிருந்த போது சாய்நாத் எழுதியது இந்தக் கட்டுரை (17.1.2012, தி ஹிந்து). ஐ.பி.எல் இன் 5வது பருவம் பரபரப்பாக சந்தைப்படுத்தப்பட்டு வரும் இன்றைய சூழலில் டெஸ்ட் கிரிக்கெட் மீதும், இந்திய ஆட்டக்காரர்கள் மீதும் ஐ.பி.எல் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளை நினைவுபடுத்திக் கொள்ள உதவியாக அதன் மொழிபெயர்ப்பை வெளியிடுகிறோம். 

ந்தியன் பிரிமீயர் லீகில் (ஐ.பி.எல்) 30 அல்லது 40 ஓட்டங்கள் (20 ஓட்டங்களாவது) அதிரடியாக எடுத்து விட்டால் போதுமானது. ஆஸ்திரேலியாவில் நமது ஆட்டக்காரர்கள் அதைத்தான் இன்னமும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஐ.பி.எல் இல் மட்டையைக் கண்டபடி சுழற்றி சுமார் 30 ஓட்டங்கள் எடுத்தால், அவ்வப்போது தட்டுத் தடுமாறி ஒரு 50 எடுத்து விட்டால், 20 லட்சம் டாலர்களைச் சம்பாதித்து விடலாம். 90 நாள் சீசனில் ஒரு சில முறை நான்கு ஓவர்கள் பந்து வீச வேண்டும், அவ்வளவுதான் தேவை. மோசமான முயற்சிக்கே இவ்வளவு ஊக்கம் கிடைக்கும் போது சிறப்பாகச் செயல்படுவது தேவையில்லாமல் போய் விடுகின்றது.

இந்திய கிரிக்கெட் வாரியம் என்ற ஒரே நிறுவனம் தனியார் (ஐ.பி.எல்) கிரிக்கெட்டையும், தேசிய கிரிக்கெட்டையும் நிர்வாகம் செய்கின்றது. அவற்றில் ஒன்றின் மூலம் பெருமளவு பணம் சம்பாதிப்பதை சாத்தியமாக்குகின்றது. தங்க முட்டையிடும் வாத்தான இன்னொன்றின் கழுத்தை நெரிக்கின்றது. நம்ம ’பசங்க’ அதிகமாக கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என்பது பிரச்சனை இல்லை. அவர்கள் உண்மையான கிரிக்கெட் விளையாடவில்லை என்பதுதான் சிக்கல். கவனமும், செறிவும், நுட்பமும், ஆற்றலும் சிறிதளவு கூட தேவைப்படாத ஐ.பி.எல் 20/20 இல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அது வெளிப்படையாகத் தெரிகின்றது.

அதிகமாகி வரும் ஐபிஎல் தாக்கம்

நமது அணியில் விளையாடுபவர்கள் மோசமான வீரர்களா என்ன? புண்பட்ட நம்முடைய மனம் அந்த எளிய முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறது. இப்போது இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றினாலும், இதுவரை இல்லாத மிகச்சிறந்த பேட்டிங் வரிசை என்ற அடித்தளத்தின் மீதுதான் இந்திய கிரிக்கெட் வெகு காலமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பது உண்மை. ஒரு டெண்டுல்கர், டிராவிட், லட்சுமண் அல்லது சேவாக் போன்ற உன்னதமும், தரமும், சாதனையும் நிறைந்த வீரர்களை நாம் இனி ஒரு போதும் பார்க்கவே முடியாமல் போகலாம். கடைசியில் மிச்சமிருக்கும் டெஸ்ட் போட்டியில் அணி சிறப்பாக விளையாடுவதைக் காணக் கிடைக்கலாம். ஆனால், நான் அதை நம்பிக் கொண்டிருக்கவில்லை.

விளம்பரத்தால் இயக்கப்பட்டு, ஊடகங்களால் வழி நடத்தப்பட்டு, பரபரப்பை இலக்காக வைத்து விளையாடுவது ஐ.பி.எல் இல் அளவுக்கு அதிகமாக இருக்கின்றது. குறுக்கப்பட்ட மைதான எல்லைகளைத் தாண்டி சிக்சர்கள் விளாசுவது அல்லது களத்தில் இறங்கி சுமார் 30 பந்துகள் விளையாடி விட்டுப் போவது, இவற்றுக்காக பெரிய அளவில் புகழப்பட்டு, பணத்தை மூட்டையாகக் குவித்துக் கொள்ளலாம். ஐ.பி.எல் சீசனில்  விளையாடிய சில வீரர்கள் முக்கியமான ஆட்டப் பயணங்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்கிந்தியத் தீவுப் பயணத்தைத் தவிர்த்தார்கள். மற்றவர்கள் ’களைப்பாக’ உணர்ந்த போது, நாட்டுக்காக விளையாடுவதிலிருந்து ’இடைவேளை’ எடுத்துக் கொண்டார்கள். ஆனால் காயத்தோடும், கட்டுகளோடும் ஐ.பி.எல் இல் விளையாடினார்கள். இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் நடந்தவை காத்துக் கொண்டிருந்த பேரழிவுகள். நம்மிடம் மகத்தான ஆட்டக்காரர்கள் இருந்ததால் அவை கொஞ்சம் தள்ளிப் போடப்பட்டன, அவ்வளவுதான்.

எவ்வளவு திறமையிருந்தாலும், யாருக்காக விளையாடுகிறீர்கள் என்பது முக்கியம். ’உங்கள் நாட்டுக்காக விளையாடுகிறீர்களா? கிரிக்கெட்டை இந்தியாவில் உயர் நிலைக்குக் கொண்டு வந்த தேசிய அணியின் வெற்றி தோல்விகளைப் பின்தொடரும் கோடிக்கணக்கான மக்களுக்காக விளையாடுகிறீர்களா? அல்லது நீங்கள் விஜய் மல்லையா, முகேஷ் அம்பானி போன்றவர்களுக்காக விளையாடுகிறீர்களா?’ சுயநலத்திற்காக ஐ.பி.எல் மீது காதலாகிப் போயிருக்கும் ஊடகங்கள் எழுப்ப முடியாத முக்கியக் கேள்வி இது. இந்தியாவின் மிகச்சிறந்த திறமையாளர்களை நாம் தனியார் அணி உரிமையாளர்களுக்கு உரிமையாக்கினோம். அதற்கான விலையை இந்திய கிரிக்கெட் கொடுக்கிறது.

இங்கிலாந்திலும், ஆஸ்திரேலியாவிலும் நம்மைத் துவைத்துக் காயப் போட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஐ.பி.எல்லில் விளையாடவில்லை. சிலர் வேண்டுமென்றே அதைத் தவிர்க்கும் சரியான முடிவை எடுத்தார்கள். சூழலைப் புரிந்து கொள்வது என்பது கால நிலையையும், ஆடுகளத்தையும் மட்டும் பொறுத்தது அல்ல. உண்மையான விளையாட்டுக்கு ஏதுவாக மனதளவில் தயாராகிக் கொள்வதையும் பொறுத்தது. ஊக்கத்துக்கான அடிப்படையைப் பற்றித் தெளிவாக இருப்பதையும் பொறுத்தது.

ஐபிஎல்

’நாட்டுக்கு முன்னதாக கிளப்’

இந்திய அணியின் திறமையைப் பார்த்து அதிர்ச்சி அடைய நமக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. ஆனால், ஆச்சரியப்படுவதற்கு எந்த உரிமையும் இல்லை. ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு பாதையும் இதற்குத்தான் வழி வகுத்தது. வீரர்கள் தேசிய அணியின் போட்டிகளைத் தவிர்த்து விட்டு ஐ.பி.எல்லில் விளையாடிய போது நடந்த ’நாட்டுக்கு முன்னதாக கிளப்’ விவாதம் நினைவில் இருக்கிறதா?

’கிளப்புகள்’ என்ற விஷயமே இங்கு இல்லை என்ற உண்மையை அந்த விவாதம் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. குறைந்தபட்சம் கிளப்புகள் என்று பன்மையில் இல்லை. ஐ.பி.எல் ’கிளப்புகள்’ மற்ற விளையாட்டுக்களில் இருக்கும் கிளப்புகளைப் போல வெகுஜனங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. விவாதம் ’நாட்டுக்கு முன்னதாக கிளப்’ என்பதைப் பற்றியது அல்ல. அதற்கு அப்படி ஒரு உருவம் தருவது, இந்த சீரழிவுக்கு ’நமது கிளப்பை ஆதரிக்கும் மக்களுக்காக விளையாடுகிறோமா அல்லது தேசிய அணியை ஆதரிக்கும் கோடிக்கணக்கானவர்களுக்காக விளையாடுகிறோமா?’ என்ற இல்லாத தார்மீக மேற்பூச்சைக் கொடுக்கிறது.

உண்மையில் இங்கே இருக்கும் ஒரே ’கிளப்’ அரசு மானியம் பெறும் கோடீஸ்வரர்களின் கிளப் மட்டும்தான்.

கிரிக்கெட் ஸ்தாபனத்தின் வழியாக ஆட்டக்காரர்களின் (மற்றும் பெரும்பாலான ஊடகங்களின்) விசுவாசம் இந்த கிளப்பிற்குத்தான் உள்ளது. பிசிசிஐ என்பது இப்போது பில்லியனர்கள் (கோடீஸ்வரர்கள்) கட்டுப்படுத்தும் இந்திய கிரிக்கெட் என்பதைத்தான் குறிக்கிறது. நமது முன்னணி கிரிக்கெட் திறமையாளர்கள் கார்ப்பரேட் நிதி நிலை அறிக்கை (பேலன்ஸ் ஷீட்) யின் சொத்துக்களாகச் சுருக்கப்பட்டு விட்டனர்.

ஆஸ்திரேலியப் பயணத்தின் பின்னடைவுகளுக்கு இந்திய கிரிக்கெட்டின் மூத்த நால்வரையும் அவமானப்படுத்தி பலி கொடுப்பது, ஐ.பி.எல் இந்திய கிரிக்கெட்டை எப்படிச் சீரழிக்கின்றது என்ற விவாதத்தை திசை திருப்பி விடுவதாகவே முடியும். விமர்சனங்கள் அனைத்தும் ஆட்டக்காரர்களைப் பற்றியும், அவர்களின் மோசமான விளையாட்டை பற்றியுமே இருக்கின்றன. தேர்வாளர்கள் மீது கூட சில பாய்ச்சல்கள் நடக்கலாம். ஆனால் ஐ.பி.எல் எப்படி இந்திய கிரிக்கெட்டைக் குதறி சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது என்பதும், உலகம் முழுவதிலும் கிரிக்கெட்டுக்கு எப்படி தீங்கிழைத்திருக்கிறது என்பதும் பேசப்படப் போவதில்லை.

விளையாட்டுத் திறன் இல்லை என்று இப்போது கிழித்துக் குதறப்படும் லட்சுமணன் ஆஸ்திரேலியாவில் பெருமைப்படும்படியான சராசரி வைத்திருப்பவர். சந்தேகத்துக்கிடமில்லாமல் எல்லாக் காலங்களிலும் சிறந்த மட்டையாளர்களில் ஒருவர். இன்னும் ஓரிருவர்களும் அவரைப் போன்றவர்கள்தான். இதற்கு முன்பு அவர்கள் ஆஸ்திரேலியாவில் விளையாடியதில்லை என்றோ, நன்கு செயல்படவில்லை என்றோ சொல்ல முடியாது. இந்த முறையின் வீழ்ச்சி வயதாகி விட்டதால் மட்டும்தானா? சில வாரங்களுக்கு முன்பு,  இந்தப் பயணம் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை வெற்றி கொள்ள மிகச்சிறந்த ஒரு வாய்ப்பு என்று நிபுணர்கள் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் நமது மிகச் சிறந்த அணி விளையாடச் செல்கின்றது. மிகச் சிறந்த அணி எங்காவது ஒரு சில வாரங்களில் கிழடு தட்டி விடுமா? என்ன நடந்தது?

ஐ.பி.எல் நடந்தது. இந்தப் பேரழிவுப் பயணங்களுக்கு வெகுநாள் முன்பே அது நடந்தது. 90 நாட்களுக்கு கிளப் மட்டத்திலான தரக்குறைவான கிரிக்கெட் விளையாடி காயங்களைச் சுமந்து கொண்டிருந்த வீரர்களால் நிரம்பியிருந்த அணி இருந்தது. ஆண்டுதோறும் மேலும் மேலும் தரக்குறைவான ஆட்டத்துக்குத்தான் ஐ.பி.எல் அவர்களைத் தயாரிக்கிறது, உயர் தரத்திலான கிரிக்கெட்டுக்காகத் தயாரிப்பதில்லை. காயங்களோடு அவர்கள் ஐ.பி.எல்லில் தொடர்ந்து விளையாடினார்கள். ஏனென்றால் பிசிசிஐ – ஐ.பி.எல் தனியார் கிரிக்கெட்டுக்குத்தான் பெருமளவு பணத்தைத் திரட்டியது, உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு இல்லை.

உள்நாட்டு விளையாட்டுதான் இந்திய கிரிக்கெட்டுக்கு திறமையானவர்களை உருவாக்கி அளித்து வருகிறது. ரஞ்சிப் போட்டிகளின் மூலம்தான் நமது மகத்தானவர்கள் உருவானார்கள். சிலர் 19 வயதுக்குக் குறைவானவர்களின் ஆட்டங்களின் மூலமாக வளர்ந்தார்கள். ஐ.பி.எல் மூலமாக ஒருவர் கூட உருவெடுக்கவில்லை. உண்மையில் ஐ.பி.எல் மிக நளினமான டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டக்காரர்களாக உருவெடுத்திருக்கக் கூடிய இளைஞர்கள் மீது மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. ஆனால் இன்று ஊட்டச்சத்து பாய்வது ஐ.பி.எல் ஐ நோக்கித்தான்.

ஆஸ்திரேலியாவில் ஒரு வலுவான உள்நாட்டுப் போட்டியும். ஆரோக்கியமான ஆட்ட மரபும் இருக்கிறது. நாம் கவனக்குறைவால் நம்முடையவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். நினைத்துப் பாருங்கள் ; பிசிசிஐ உள்நாட்டு விளையாட்டின் நிலைமையை உயர்த்தியிருக்க முடியும். அதைச் செய்வதற்கான பணம் அதனிடம் இருக்கின்றது. ஆனால் விருப்பம் இல்லை. ஐ.பி.எல் மூலம் வரும் பணம் தனியார் பைகளுக்குள் போகின்றது. உள்நாட்டு கிரிக்கெட் மூலம் அதைச் சாதிப்பது மிகவும் கடினம். கிரிக்கெட்டின் அதி-வணிகமயமாக்கலின் விளைவாக அது இன்று பணம், முகவர்கள், அதிகார மட்டத்தில் ஆதரவு தேடுபவர்கள், பெரு நிறுவனங்கள், அங்கீகாரம் தருபவர்கள், விளம்பரதாரர்கள் இவர்களின் குழப்படியாக இருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டு ஒரு பக்க விளைவாகச் சுருங்கி விட்டிருக்கின்றது. (சில ஆட்டக்காரர்களை அணியில் சேர்க்காமல் இருப்பது இந்த அமைப்பில் நிலவும் ’பிராண்ட் மதிப்பை’ கருத்தில் கொண்டால் தேர்வாளர்களுக்கு முடியாத ஒன்றாக இருக்கின்றது).

ஐபிஎல்-மங்காத்தா

வெகு தூரம் வரை பாதிப்பு

தாக்கம் இந்தியாவுக்கும் அப்பால் இருக்கிறது. எல்லா இடங்களிலும் கிரிக்கெட்டின் தரமும், கால அட்டவணைகளும், முன்னுரிமைகளும் ஐ.பி.எல் ஆல் பாதிக்கப்படுகின்றன. இலங்கையின் இதுவரை மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஏ. மலிங்கா, ஐ.பி.எல் இல் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். சில நாடுகளுக்கு, இது காலப்போக்கில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தியது. ஐ.பி.எல் இல் விளையாடும் பல ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் ஓய்வு பெற்றவர்கள். ஆஸ்திரேலியாவில் இன்னமும் விளையாடும் மூத்த ஆட்டக்காரர்கள் தேசியக் கடமையில் கவனம் செலுத்துவதற்காக ஐ.பி.எல் ஐத் தவிர்த்து விட்டார்கள்.

இந்தியாவில் நமது மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் ஐ.பி.எல் இல் ஆழமாகப் புதைந்திருக்கின்றனர். இப்போது, வெளியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அது தெரிகின்றது. ஐ.பி.எல் – டி20 இல் சிரமப்படும் தேவையே இல்லாமல் எளிதாக விளையாடும்படி இருக்கிறது என்று இந்தியாவில் ரசிகர்களால் மிகவும் நேசிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் ஆட்டக்காரர் தனது நண்பர்களிடம் தனிப்பட்ட முறையில் சொன்னாராம். பீல்டிங்? ஒரு போட்டியில் அதிகபட்சம் ஐந்து தடவைகள் பந்து உங்கள் பக்கமாக வரக்கூடும். அதிகபட்சம் நீங்கள் நான்கு ஓவர்கள் பந்து வீச வேண்டியிருக்கும். எல்லாம் நான்கு மணி நேரத்தில் முடிந்து போகும். ஒரு நாள் சர்வதேச போட்டிகள் திறமையை இன்னும் பல மடங்கு சோதிப்பவை, ஐந்து நாள் டெஸ்ட் போட்டிகள் சந்தேகத்துக்கிடமில்லாமல் உச்சபட்ச சவாலாக இருப்பவை.

ஒரு சில முன்னாள் தலைசிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் – இந்திய கிரிக்கெட்டுக்கு எதிரிகளாக அவர்கள் இல்லை – ஐ.பி.எல் இன் தாக்கத்தைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். இயான் போத்தம் மற்றும் அர்ஜூன ரணதுங்காவும் அவர்களில் அடங்குவார்கள். இந்தியாவில், நமது தலைசிறந்த சாதனையாளர்கள் ஐ.பி.எல் ஐ விமர்சிப்பதைத் தவிர்ப்பது மட்டுமில்லாமல், எண்ணற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதற்கு வக்காலத்தும் வாங்குகிறார்கள். பிசிசிஐ-ஐ.பி.எல் பண இயந்திரத்தின் உள்வாங்கும் ஆற்றல் வியப்புக்குரியது. பிசிசிஐ மூலம் வர்ணனையாளர்களுக்கு இருக்கும் விசுவாசங்களுக்கிடையிலான (தொழில் மற்றும் வாங்கிய காசு) சிறிதளவு முரண்பாடு அவ்வப்போது தற்காலிகமாகப் பேசப்படுகிறது. பிசிசிஐ மூலம் கோடிக் கணக்கில் வருமானம் ஈட்டும் அவர்கள் அதன் செல்லக் குழந்தையை விமர்சிக்கப் போவதில்லை.

கோடிக்கணக்கான விளம்பர வருவாய் ஊட்டப்பட்ட ஊடகங்களும் தமது குரலை உயர்த்தும் என்று எதிர்பார்க்க முடியாது. பிசிசிஐ-ஐ.பி.எல் இல் நடக்கும் ஊழல்களிலும், விசுவாச முரண்பாடுகளிலும் ஒரு பகுதி இருந்தால் கூட வேறு எந்த நிறுவனமும் நீண்ட காலம் முன்னரே கூர்மையான ஊடக மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கும். ஐ.பி.எல் மீது வருமான வரித்துறை அல்லது அமலாக்கத் துறை நடவடிக்கைகள் எடுக்கும் போதுதான் விபரங்கள் சிறிதளவு வெளியில் வருகின்றன. ஊடகங்களினால் அல்ல. ஐ.பி.எல் வலைப்பின்னலில் இடம் பெற்றுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். அதனால் அவர்கள் அதை விமர்சன நோக்கில் ஆய்வு செய்ய முடியாமல் போகின்றது.

இப்போது விளையாடும் ஆட்டக்காரர்கள் அதை விமர்சிப்பதற்கு வாய்ப்பே இல்லை. (தங்கள் விளையாட்டு வாழ்க்கையை மதித்தால் பிசிசிஐ செய்யும் எதையும் விமரிசிக்க முடியாது) இது கிரிக்கெட்டின் காமதேனுவாக முன் வைக்கப்படும் போது எப்படி அதை விமர்சனம் செய்ய முடியும்?

பிசிசிஐ தெரிந்தே தேர்ந்தெடுத்த/தேர்ந்தெடுக்கும் நிலை அது. அது நாட்டில் கிரிக்கெட்டைக் கட்டுப்படுத்துகிறது. பண பலத்தைக் கொண்டு உலக அளவிலும் அது ஆதிக்கம் செலுத்துகின்றது. மற்ற நாடுகளின் வருத்தத்தையும் அது நமக்குச் சம்பாதித்துத் தருகின்றது. பிசிசிஐ கிரிக்கெட்டின் ஒரு வடிவத்தை விட இன்னொரு வடிவத்துக்கு சிறப்புரிமை கொடுக்க முடிவு செய்ததை பொறுத்தது இல்லை அது. சிலர் வாதிடுவது போல கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களுக்குமே இடம் இருக்க முடியும். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் பொது மக்களின் நலன்களை ஒதுக்கி விட்டு தனியார் நலனுக்கு சிறப்புரிமை கொடுக்கின்றது. நாம் அதற்கான விலையைக் கொடுக்கிறோம். இதுதான் பிரச்சனை.

கூக்குரல்கள் அடங்கி, சில ஆட்டக்காரர்கள் பலி கொடுக்கப்பட்ட பிறகும் நிலைமை சீரடையப் போவதில்லை. இந்திய கிரிக்கெட்டின் அமைப்பும், ஆட்ட மரபும் பெருமளவு மோசமான திசையில் செலுத்தப்பட்டிருக்கின்றன. உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு புத்துயிர் கொடுப்பதைப் பற்றியும், கோடீஸ்வரர்கள் கிளப்பிலிருந்து கிரிக்கெட்டை மீட்டெடுத்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்.

_______________________________________________

நன்றி: தி இந்து – தமிழாக்கம்: செழியன்

கார்டூன் – ஆச்சார்யா

_______________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா?

6

அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா? – நெல்லை, இடிந்தகரை, கூட்டப்புளியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கூட்டங்கள்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாகூடங்குளம் அணு உலைக்கு எதிராகப்  போராடும் மக்கள் மீது அரசு தொடுத்திருக்கும் பொய் வழக்குகளைத் திரும்பப்பெறக் கோரி ஏப்ரல் 21ஆம் தேதியன்று நெல்லை, இடிந்தகரை, கூட்டப்புளி ஆகிய இடங்களில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் கூட்டங்களை நடத்தியது.

நெல்லை கோல்டன் ஹாலில் காலை 10 மணிக்குத் தொடங்கிய கருத்தரங்கிற்கு தோழர் சிவராசபூபதி (ம.உ.பா.மையம், நாகர்கோவில்) தலைமை தாங்கினார்.  1908 மார்ச் 8 அன்று நெல்லையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் பேசிய வ.உ.சி. மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டதையும், உடனே பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நெல்லை மக்கள் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க கலகத்தையும் நினைவு கூர்ந்த தோழர் வாஞ்சிநாதன் (ம.உ.பா.மையம், மதுரை), அரசின் மீது அவநம்பிக்கை கொள்ள வைப்பது கிரிமினல் குற்றம் என்று கூறும் இந்திய தண்டனை சட்டம், பேச்சுரிமையையே ரத்து செய்கிறது என்பதை அம்பலப்படுத்தினார்.

பேராசிரியர் தொ. பரமசிவம், அணு உலை அபாயம் பற்றி இவ்வளவு பேசிய போதிலும், அதனை எதிர்த்துப் பேச நெல்லையில் ஒரு மருத்துவர் கூட முன்வராததைக் குறிப்பிட்டு, ஒருவேளை புற்றுநோய் பரவினால் மருத்துவமனை கட்டிப் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறார்கள் போலும் என்று சாடினார். பாடம் நடத்தும்போது தீப்பிடித்தாலும், ஆசிரியர் தீயை அணைக்கப்போகக் கூடாது, பாடம்தான் நடத்த வேண்டுமென்ற உளவியல் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறினார், பேராசிரியர் அமலநாதன்.

பாகிஸ்தானுக்கு 5000 மெகாவாட் மின்சாரம் விற்கப் போவதாக கூறிக்கொண்டே, மின்சாரப் பற்றாக்குறையைப் போக்கத்தான் அணு மின்சாரம் என்று அரசு புளுகுகிறது என்றும், பன்னாட்டு அணு உலை முதலாளிகளின் வணிகத்துக்கு உதவு வதுதான் இதன் நோக்கம் என்றும் விளக்கினார், ம.க.இ.க. இணைச் செயலர் காளியப்பன்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாசிங்குர், நந்திகிராம், போஸ்கோ, கலிங்கா நகர் போராட்டங்கள் குறித்து சிறப்புரையாற்றிய பெங்களூரு உயர் நீதிமன்ற வழக்குரைஞர் பாலன் விளக்கினார்.  இங்கெல்லாம் மக்களின் போராட்டமும், பெண்களின் துடைப்பமும்தான் பன்னாட்டு முதலாளிகளை விரட்டியிருக்கிறதேயன்றி, நீதிமன்றங்களல்ல என்று தெளிவுபடுத்தினார்.

மதியம் ஒரு மணிக்கு கருத்தரங்கம் நிறைவு பெற்றது. பிற்பகல் சுமார் 3 மணிக்கு இடிந்தகரையில் நிகழ்ச்சிகள் தொடங்கின. வழக்குரைஞர்களும் ஆயிரக்கணக்கான மக்களும் இணைந்து போராட்ட முழக்கங்களை எழுப்ப, எழுச்சிகரமாகத் தொடங்கியது நிகழ்ச்சி.

துவக்கவுரை ஆற்றிய சுப.உதயகுமார், “இப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நம்மோடு நிற்கிறது. இன்று நூற்றுக்கு மேற்பட்ட வழக்குரைஞர்கள் சாதாரண மக்களுக்காக இங்கே வந்துள்ளார்கள். நமக்கு வழக்கு பிரச்சனை என்றால் அவர்களைத்தான் கேட்கிறோம். அவர்கள்தான் நம் வழக்குகள் அனைத்தையும் நடத்துகிறார்கள். நெருக்கடியான நேரங்களிலும் நள்ளிரவிலும்கூட நம்மை சந்திக்க வருகிறார்கள். அவர்கள் கொள்கைக்காக நிற்கிறார்கள்; வழக்குகளுக்காக அவர்கள் நம்மிடம் ஒரு காசு கூடச் சம்பளம் வாங்கவில்லை என்பதை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்” என்று கூறி வழக்குரைஞர்களை அறிமுகப்படுத்தியவுடன் மக்கள் நேசத்துடன் கரவொலி எழுப்பினர்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமா

“பொய்வழக்கு, வாய்தா, சிறை எதற்கும் அஞ்ச வேண்டாம். ஒரு முறை சிறைக்குப் போய் வந்து விட்டால் அச்சம் போய்விடும். 144 தடை போட்டபோதும் நாங்கள் வந்தோம், வருவோம், உங்களுக்குத் துணை நிற்போம். போராடுங்கள்” என்றார் தோழர் வாஞ்சிநாதன்.

“தோற்று விட்டதாகக் கூறுகிறார்கள். இன்னும் ஆட்டமே முடியவில்லையே. இது அணு உலைக்கு எதிரான ஒரு உள்ளூர் போராட்டம் அல்ல. தனியார்மயத்துக்கு எதிரான போராட்டம். இந்தப் போராட்டம் தொடரும். ஏனென்றால், அவர்களிடம் நீதி இல்லை. மோட்டார் வாகன விபத்துக்குக்கூட குடும்பத்தின் நிலைக்கு ஏற்ப நட்டஈடு உண்டு. அணு விபத்துக்கு கிடையாதாம். ஆனால், அணு உலை பாதுகாப்பானதாம். எப்படி இருக்கிறது இந்த நியாயம்?” என்று கேள்வி எழுப்பினார் தோழர் ராஜு.

“எமக்காக வழக்கு மட்டும் நடத்தவில்ல. அணு உலைக்கு எதிராக இயக்கமும் நடத்துகிறீர்கள்; கைது செய்யப்பட்ட மக்களைச் சிறை வாசலில் நள்ளிரவு நேரத்தில் பெண்கள் குழந்தைகளுடன் வந்து பார்த்ததை இணையம் மூலம் தெரிந்து நெகிழ்ந்தோம்” என நன்றி கூறினார் புஷ்பராயன்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாஇரவு சுமார் 8 மணி அளவில் கூட்டப்புளியில் தொடங்கியது பொதுக்கூட்டம். அந்த ஊரின் பங்குத்தந்தையும், போராட்டத்தில் மக்களுடன் நின்று, தேசத்துரோக வழக்கில் மக்களுடன் கைது செய்யப்பட்டு சிறை சென்றவருமான அருட்திரு சுசீலன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அடக்குமுறை தொடங்கியவுடன் கூடங்குளத்தில் கைது செய்யப்பட்டு, தேசத்துரோக வழக்கில் சிறை வைக்கப்பட்ட வழக்குரைஞர் சிவசுப்பிரமணியன், தாங்கள் கைது செய்யப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன் போராட்டத்தில் குதித்த கூட்டப்புளி மக்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறி, அணு உலையை மூடுவதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் சிறை செல்வதற்கு தயாராக இருப்பதாகவும் அறிவித்தார்.

வழக்குரைஞர் மில்டன், (ம.உ.பா.மையம், சென்னை) அரசு போடும் தேசத்துரோக வழக்குகள் எதுவும் நிற்கக்கூடியவை அல்ல என்றும், அச்சுறுத்தும் நோக்கத்துக்காகவே போடப்படும் பொய்வழக்குகளே அவை என்றும் அம்பலப்படுத்தினார். “தமிழ்நாட்டு பூமி என்ன குப்பைத்தொட்டியா, அத ரசியாக்காரனுக்கு வித்துப்புட்டியா” என்று முன்னர் பிரச்சாரம் செய்ததை நினைவு கூர்ந்த வழக்குரைஞர் சுரேஷ், அதன் பயனை இப்போது காண்பதாகக் கூறினார்.

வழமையான போராட்டமுறைகளை மாற்ற வேண்டும் என்று கூறிய வழக்குரைஞர் பாலன், கோலாரில் நகராட்சி கழிவறையை சுத்தம் செய்யாத நிர்வாகத்தை எதிர்த்து, கமிசனரின் கார் மீதும், போலீசு மீதும் மலத்தைக் கரைத்து ஊற்றி போராடியதை விளக்கியபோது, மக்கள் உற்சாகத்தில் ஆரவாரித்தனர்.

கூடங்குள்ம அணு உலையை எதிர்ப்பது தேசத்துரோகமாஇறுதியாகப் பேசிய தோழர் ராஜு, “நச்சுப்பாம்பை பார்த்தால் அடிக்கிறோம். முடியுமா முடியாதா என்று விவாதித்து முடிவெடுப்பதில்லை. அப்படித்தான் அணு உலை விவகாரமும். கடலூரில் கெமிக்கல் நிறுவனங்கள் கழிவைக் கடலில் விடுவதால் மீன்பிடி தொழிலே அழிந்து விட்டது. இளநீரின் நிறம் மஞ்சளாகிவிட்டது. எல்லாம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒப்புதலுடன் சட்டப்படிதான் நடக்கின்றது. விட்டால் இதே கதி கூட்டப்புளிக்கும் ஏற்படும். முதலில் சிலருக்கு புற்றுநோய் வரும்போது அதிர்ச்சியாக இருக்கும். போகப்போக பழகி, அது நம் சொந்தப் பிரச்சினையாகிவிடும். அந்த நிலை வர அனுமதிக்க கூடாது.

நம்முடைய போராட்டத்தை ஒடுக்க  8 மாவட்ட போலீசு குவிக்கப்படுகிறது. 8 மாவட்ட மக்கள் நமக்கு ஆதரவாகப் போராடியிருந்தால் போலீசைக் குவிக்க முடியுமா? போலீசு நம்மை சிதறடிப்பது போல, நாம் போலீசின் சக்தியைச் சிதறடிக்க வேண்டுமானால், பிற பகுதி மக்களுடன் நாம் திரண்டு போராட வேண்டும்” என்று அறைகூவல் விடுத்தார். உள்ளூர் ஆசிரியர் பெல்லார்மின் நன்றி கூறினார். வழக்குரைஞர்கள் மற்றும் தோழர்கள் அனைவருக்கும் இரவு உணவளித்தனர் கூட்டப்புளி மக்கள்.

கைது, சிறை போன்ற அரசின் அடக்கு முறைகள் காரணமாக, அரசு  போலீசு  நீதிமன்றம் குறித்து மக்கள் கொண்டிருந்த மாயைகள் அகலத் தொடங்கியிருக்கின்றன. அணு உலை அகற்றப்படும் முன் இந்த மாயைகள் முற்றிலுமாக அகன்றுவிடும்

_________________________________________

– புதிய ஜனநாயகம், மே-2012

__________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

சினேகா – பிரசன்னா திருமணம்: ரெட்டைத் தாலி புரட்சிடே!

84
சிநேகா-பிரசன்னா-திருமணம்

ஏலேய் வேலயத்த வெட்டிப்பயலுவளா, தமிழ்நாட்டுல இதுவரை இரண்டு புரட்சிதாம்டே இருந்துச்சு. ஒண்ணு புரட்சித்தலைவர்-தலைவி வகையறா, ரெண்டாவது ” என் தங்கம், என்னுரிமை”ன்னு கல்யாண் ஜூவல்லரியில பிரபு நடத்துற புரட்சிப் போராட்டம். இப்போ இந்த கசுமாலங்களோட மூணாவதா ஒண்ணு சேந்துருக்கு, அதாம்டே சினேகா அக்காவோட ரெட்டைத் தாலி புரட்சி!

ஞாயித்துக் கிழமையும் அதுவுமா எங்கூரு சலீம் பாய் கடையில பொட்டாட்டுக் (குறும்பாடு) கறியக் கூட எடுத்து திங்காம சினேகா அக்கா கல்யாணத்தை பத்தி சிவனே மவனேன்னு எழுதுதனே ஏம்லே? உழைச்சு பிழைக்கிற மக்கமாறு அன்னாடம் கஞ்சி குடிச்சு வாழுததுக்கு கூட வக்கு இல்லாத நாட்டுல இந்த சினிமாக்காரனோட கலியாணம், கருமாதியை நியூசு, வியூசு, மேட்டரு, ஹெட்டிங்கு, சென்சேஷன்னு செங்கோட்டை சாப்பாட்டுகடை மாஸ்டரு அடிக்கிற புரோட்டா மாறி பிச்சு உதறதானுகளே, என்னைக்காவது ரோசனை பண்ணியிருக்கியாலே?

பிச்சுப் போட்ட புரோட்டாவ தின்னா அடுத்த நாளு ஆய் போவியா, இல்ல அமுதத்த கக்குவியா? சினேகா அக்கா கல்யாண மேட்டரு மாதிரி உசிலம்பட்டியில பேச்சியம்மாளுக்கும், மதுரை வீரனுக்கும் கண்ணாலம்னு ஒரு சேதிய, அவுத்து வுட்டா உச்சி மோந்து படிப்பியா இல்ல, வேற வேலவெட்டி இல்லயான்னு ஒதுக்கிவிட்டு போவியா?

தம்பி பிரசன்னாவுக்கும், அக்கா சினேகாவுக்கும் கல்யாணம்னு கேள்விப்பட்ட பிறகு வயிறெறிஞ்ச பயலுவள வுடுங்க, மத்த பயலுவளும் நமக்கு சினேகா மாதிரி ஒரு மனைவி அமையலேன்னு ஃபீல் பண்ணுறதயும் வுடுங்க, மொத்தமாப் பாத்தா அல்லாரும் அந்த தம்பதிமாரை மனசாரா வாழ்த்திருப்பீக! நானு இந்தக் கல்யாணத்தை இப்புடி கலாய்க்கிறதப் பாத்து அவுகளெக்கெல்லாம் பெரிசா கோபம் வருமுன்னு எனக்கு தெரியுமுடே! மவுசுல ஸ்க்ரோல் பண்ணியே கண்ணீரு வுடுற இந்த ஃபீல் பார்ட்டிங்களுக்கு, இது ஒரு சினிமா பீர் பார்ட்டின்னு உரைக்கிற மேறி எழுதணாத்தாம்லே என்னோட வெப்ராளம் (ஆற்றாமை) அடங்கும்.

ஏலேய் போக்கத்த பயலுகளா, நீங்க நினைக்கிற மாதிரி இந்தக் கல்யாணம் ஒரு எளஞ்ஜோடிங்க கல்யாணம் காட்சின்னு ஆரம்பிக்கிற புதுசான வாழ்க்கை  இல்லேலே, இது பக்கா பிசினஸ். இல்லேன்னா ஒரு புது சினிமான்னும் சொல்லலாம். ஒரு சினிமாக்குண்டான பட்ஜெட், பிசினெஸ், காஸ்ட்யூம், பி.ஆர்.வோ, ஸ்பான்சரு, திரைக்கதை, டிவிஸ்ட்டுன்னு அத்தனை ஐட்டங்களும் இதுல உண்டுன்னு சொன்னா நம்புவியாலே?

இந்தத் தம்பியும் நம்ம அக்காவும் அவுகளோட கல்யாணத்த டி.வியில ஒளிபரப்பதுக்கு எம்புட்டு துட்டு வாங்குனாகன்னு தெரியுமாடே? மூணு கோடி ரூபாய்னு சொல்லுதாக. இது பொய்யுன்னு புலம்புற மல்லு வேட்டி மைனருங்க அல்லாப் பத்தரிகையையும் புரட்டி பாருங்கடே, “லம்பான அமவுண்டுக்கு திருமண ஒளிபரப்பை வித்துட்டாங்கன்னு” கொட்டை எழுத்துல நியூஸ் போட்டுருக்கான்.

இதுக்கு காஸ்ட்லி கல்வி முதலாளி பச்சமத்துவோட புதிய தலைமுறையும், கிழட்டு நரி முர்டோச்சோட விஜய் டி.வியும் போட்டி போட்டானுகளாம். கடைசியில முர்டோச் மூணு கோடிக்கு ஏலத்துல ஜெயிச்சுருக்கான். இந்தப் பயபுள்ளதான் ஏற்கனவே பிரபலமாருங்க கல்யாணத்தை விஜயில “நம்ம வீட்டு கல்யாணம்” னு காட்டி காசு சுருட்டுறதுல சீப்பான எக்ஸ்பர்ட்டு!

ஏலேய் உடம்ப வித்து பிழைக்குற பொம்பளைங்களை விபச்சாரின்னு யோக்கியனாட்டாம் பேசுத பயபுள்ளங்ககிட்ட ஒண்ணு கேக்கேன். அது விபச்சாரம்னா இப்புடி கல்யாணத்தை காசுக்காக டெலிகாஸ்ட்டு பண்ணுன்னு விக்கிறதுக்குப் பேரு என்னடே? அது பாடி விபச்சாரம்ணா, இது டெலிகாஸ்ட்டு விபச்சாரம்ணு சொல்லலாம்லா? மதுரை ஆதீனமாக முடியோட முடிசூட்டியிருக்கிற நித்தியானந்தா, ரஞ்சிதாவோட சல்லாபம் போட்டபோது அடுத்தவங்க படுக்கையறையை எட்டிப் பாக்கது தர்மமான்னு நம்ப பிசினஸ் பாய் மனுஷ்ய புத்திரன்ல இருந்து, த.மு.எ.க.ச தமிழ்ச் செல்வன் வரைக்கும் நெம்ப ஃபீல் பண்ணிணாக. ஏலேய் அதே மாதிரி தனிப்பட்ட கல்யாணத்தை ஊரு பூறா பாக்கதுக்கு ரேட் போட்டு விக்கானே, இது மட்டும் தர்மமாலே? ரஞ்சி எபிசோடுல சன் டி.விக்காரன் செலவில்லாம சுருட்டுனான், இங்க அக்கா எபிசோடுல கொஞ்சம் முதலீடு போட்டு சுருட்டுறான், அம்புட்டுதாம்டே வித்தியாசம்!

இன்னைக்கு கல்யாணத்த வித்து பணம் பண்ணுறவன் நாளைக்கு காது குத்து, மொட்டை, பூணூல் கல்யாணம், புது வீடு, பொறந்த நாளுன்னு அல்லாத்தையும் விப்பானுகல்லா?

நாட்டுல ஆயிரத்தெட்டு அநீதிங்க நடக்கையில, இப்புடி சினிமாக்காரனோட கல்யாணம், கருமாதியக் காண்பிச்சு உன் டேஸ்ட்ட வேஸ்ட்டு பண்ணி, நேரத்தையும் ஸ்வாகா செஞ்சு, குப்பைங்களை பொழுது போக்குண்ணு மூளையில திணிக்கிறானே, எந்த பயலுக்காவது சொரணை இருக்கா?

சரி அத்தோட வுடாம நாளைக்கே தேனிலவையும் டெலிகாஸ்ட்டு பண்ணுடான்னு விக்க மாட்டானுகளா என்ன? அமெரிக்காவுல இப்புடி புதுமணத் தம்பதிமாரு இணையத்துல முதலிரவை காட்டி காசு பாக்கையில நாளன்னைக்கு நம்ம தமிழ் சினிமா பயலுக செய்யமாட்டான்னு என்ன நிச்சயம்? ஏற்கனவே ஸ்டார் வேல்யூ வெளம்பரத்துக்காக தம்பி சிம்பு, நயனுக்கு முத்தா கொடுத்து அதை ஃபீரியா யூ டியூபுல ஓடவிட்ட கதை ஞாபகமிருக்குல்லா? அது மேறி படத்துல நடிக்கிறதை படுக்கையில செஞ்சு காமிச்சு அதுக்கு தேனிலவு லைவ்வுன்னு போட்டா உன்ன மாறி போக்கத்த பயலுவ ஜொள்ளு வடிய பாக்க மாட்டீகளா என்ன? உட்டா நாளைக்கே அக்கா சினேகா வூட்டு கோழி முட்டயை போடுறதையம் ரியாலிட்டி ஷோன்னு போட்டு அதுக்கு நாலஞ்சு ஸ்பான்சர பிடிச்சு நாலரைக்கோடி தமிழருமாருங்கள பாக்க வச்சு பேசவும் வைப்பான்.

வழக்கு எண், சினேகா திருமணம் இரண்டையும் ஏலத்துல எடுத்தவன் விஜய் டி.விங்குறதாலா படத்தோட சினிமா நிருபர்களுக்கான ஷோவ ஐஞ்சு நாள் முன்னாடி  வச்சுட்டானாம். படம் பாக்க வந்த நிருபருங்கிட்ட கல்யாண அழைப்பிதழ் கொடுத்து உறுதி செஞ்சுகிட்டான்.வெள்ளிக்கிழமை சினிமா நிருபருங்கள உள்ளிட்டு ஊரு உலகம் முழுக்க சினேகா அக்கா திருமணத்தை மட்டும் பேசணும்கிறதுதான் விஜய் டிவியோட பிளான். இதுல அண்ணன் பாலாஜி சக்திவேலுக்கு வருத்தம் இருந்தாலும் விஜய் டி.விய பகைச்சுக்க முடியாதுல்லா. என்ன இருந்தாலும் அவன்தான படியளக்குற எசமான்!

அடுத்து அக்கா கல்யாண டெலிகாஸ்ட்டுக்கு ஏத்த மாதிரி லைட்டிங், கலரு எல்லாம் ஒரு ஆர்ட் டைரக்டரை வைச்சு போட்டிருக்கான். இது போக நகைங்க, ஆடைகளுக்கு ஸ்பான்சரு சரவணா ஸ்டோராம். ஏலேய் இது கல்யாணம் இல்ல, அது பேருல நடக்குற ஷூட்டிங்குன்னு இப்பவாச்சும் ஒத்துக்கிவியாலே?

பெறவு சினேகா, பிரசன்னாவோட பி.ஆர்.ஓவாக இருக்குறவரை வைச்சு தினசரி ஒரு நியூஸ் வரமாதிரி ஏற்பாடு செஞ்சிருக்கான் விஜய் டி.வி. அந்த நியூசு எல்லாம் தினத்தந்தியிலிருந்து, ஜூ.வி, ஆ.வி, குமுதம் அப்புறம் நம்மோட இணையத் தந்தியான தட்ஸ்தமிழ் வரைக்கும் பத்தி பத்தியா போட்டு மந்தை மந்தையா மேய வுட்டுறுக்காணுவ. நியூஸ் வரவர மக்கமாருகிட்ட மவுத் டாக் வளர வளர நாளைக்கு விஜய் டி.வி கண்ணாலத்தை காட்டும் போது டி.ஆர்.பி ரேட்டிங்கு எகிறுமுல்லா?

“சென்னை வானகரகத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில்” கல்யாணம் நடக்குதுன்னு அந்த மண்டபத்த கூட ஒரு நியூசாக போட்டுருக்கானுக. மத்தபடி புன்னகை இளவரசியோட கல்யாணம் புரட்சித் தலைவி கட்சியோட பொதுக்குழு நடக்குற மண்டபத்துல நடந்துச்சுன்னு ஒரு பயலும் போடல. ஏன்னா ரெண்டுமே நாடகம்தாங்குற சங்கதி மக்களுக்கு தெரிஞ்சிருமுல்லா?

அது கூட பரவாயில்ல, சினேகா அக்கா திருமண அழைப்பிதழ எடுத்துக்கிணு குடும்பத்தோட புரட்சித் தலைவியையும், கலைஞரையும் பாத்ததா ஒரு நியூஸ் போட்டுக்காணுக. ஏம்லே இன்விட்டேஷன் கொடுக்குறதுக்கு குடும்பத்தோட போகாமா வீட்டு நாயைக் இட்டுக்கினா போவாக? இதெல்லாம் ஒரு நியூசுன்னு நீ படிப்பேன்கிற நம்பிக்கையில போடுதாம்லே. கல்யாணத்தன்னைக்கு புரட்சி வரலை, தமிழினத் தலைவர் மட்டும் நம்பர் 2 குடும்பத்தோட வந்து ஆசிர்வதிக்கிறாரு. நம்பர் 1க்கும், 2க்கும் நாந்தான் கல்யாணத்துக்கு வருவேன்னு சண்டை நடந்துச்சான்னு தெரியல. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வருடத்தில பெருசுக்குத்தான் சினேகா கல்யாணம் மாறி எவ்ளோ கமிட்மெண்ட்ஸ்.

பெறவு நலங்கு, மொகந்தி நிகழ்ச்சிங்க, நடிகமாருக்கு தனி ‘பார்ட்டி’ன்னு கூட நியூஸுங்க பன்னிக்குட்டி மாதிரி அணிவகுக்குதுங்க. பார்ட்டியில எத்தனை லிட்டர் காக்டெயிலு ஓடுச்சுன்னு நிருபக்கமாரு நீயூஸ் போடல. அவனே இப்படி சினிமாக்காரவுக பார்ட்டிக்கு போய்த்தான் தாகத்தை தணிச்சுக்கிடுதான். அப்பாலிகா சினேகா அக்கா, பிரசன்னாவோட தனிக்குடித்தனம் போவாகளா, இல்லை கூட்டுக் குடும்பமா, கலியாணத்துக்குப் பிறகு நடிப்பாகளா, சமையல் பண்ணுவாகளான்னு ஒண்ணு விடல. இவ்ளோ நியூஸ் போட்டவனுக கல்யாணத்துக்கு முன்ன புன்னகைச்ச மாதிரி கல்யாணத்துக்கு பின்னயும் அக்கா சிரிப்பாகளான்னு போடவே இல்லை? என்ன இருந்தாலும் வரலாறு முக்கியமுல்லா?

சிநேகா-பிரசன்னா-திருமணம்

 

கல்யாணத்தன்னைக்கு ரெண்டு பேரும் ஏழு இலட்சம் ரூபாய் பணத்துல பெங்களூரு டிசைனர் உடைங்கள போட்டத அறிவாளி பத்திரிகை தினமணிக்காரன் நியூசா போட்டுறுக்கான். அதுல உள்ள முக்கியமான நியூஸ் எதுன்னா தம்பி பிரசன்னா அக்காவுக்கு ரெண்டு வாட்டி தாலி கட்டுனாராம். இந்த ரெண்டு வாட்டிக்கும் அக்கா ரெண்டு பட்டுப்புடவைங்களை காஞ்சிபுரத்துல சொல்லி 25 இலட்சத்துல செய்ஞ்சாங்களாம்.

சரி, எதுக்குடே ரெண்டு தபா தாலி கட்டணும்? தம்பி வந்து தெலுங்கு பாப்பார சாதியாம். அக்கா நாயுடு சாதியாம். அதுனால மொதவாட்டி நாயுடு ஸ்டைல தாலி கட்டுன தம்பி, அரைமணி நேர கேப்புல பாப்பார முறைப்படி ரெண்டாவது தாலி கட்டுனாராம். காதல் கல்யாணம், கலப்புத் திருமணம்னு சொல்லிட்டு தாலியக் கட்டுறுதுல கூட சாதிய வுடமாட்டானுகளாம். ரெண்டு சாதியுமே ‘மேல்சாதி’ங்குறதுன்னால ரெண்டு சாதிக்காறவுனகளும் ஒருத்தருக்கொருத்தரு வுட்டுக்க கொடுக்க மாட்டான்.

சரிலே நாளைக்கு அக்கா சினேகாவுக்கு ஒரு குழந்தை பொறந்து, வளந்து ஆளாயி, ஐயங்காரு – ரெட்டி காம்பினேஷன்ல ஒரு வாரிசை கல்யாணம் பண்றதா வச்சுக்குவோம். கூட்டிப்பாத்தா இங்கன நாலு சாதி வருது. அந்தப்படிக்கு நாளைக்கு சினேகா அக்கா குழந்தை நாலுவாட்டி தாலி கட்டுமா?

இதுல சினேகா அக்கா, “ஆட்டோகிராப்” படத்துல வெள்ளையும் சொள்ளையுமாக “ஒவ்வொரு பூக்களுமே”ன்னு பாட்டுப்பாடி இளைஞர்களுக்கு அட்வைசு சொல்ற பார்ட்டி. இயக்குநர் சேரன் சொல்லிக்கொடுத்ததை அக்கா நடிச்சாகன்னு கூட விவரமில்லாத நாட்டுல இந்த இமேஜை உண்மைன்னு நம்பி பல பள்ளிக்கூடத்துக்காரனுக அக்காவ கூப்பிட்டு பள்ளி விழாக்களை நடத்துறானுக. இந்தக் கொடுமையை என்னண்ணு சொல்ல?

இந்த ஆண்டு பிப்ரவரி மாசம், ” சென்னை கொளத்தூர் எவர்வின் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் 20ம் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை சினேகா பேசியதாவது,”ன்னு ஒரு நியூச பாத்தேன். அதுல அக்கா ஆசிரியை உமா மகேஸ்வரி கொலையப் பத்தியெல்லாம் நெம்ப ஃபீல் பண்ணி பேசியிருக்காக. இப்புடி ஊரு உலகத்துக்கு அட்வசு பண்ணுற அக்கா தான் கல்யாணத்துல ஊரு உலகம் மெச்சுற மாதிரி நடந்திருக்கணும்லா? தம்பி பிரசன்னாவும் லயோலா காலேஜூல படிச்சு கொஞ்சம் நஞ்சம் ‘முற்போக்கு’ விசயமெல்லாம் பேசுற ஆளுதான். ஆனா ரெண்டு பயபுள்ளைகளும் இப்புடி சாதிய வுட்டுக்கொடுக்கமாட்டாகன்னா அப்பறும் எதுக்குடே ஊரு உலகத்துக்கு நியாயத்தை கத்துக் கொடுக்கீக?

சரி, இப்புடி ரெண்டு தபா தாலி கட்டுனா சட்டப்படி எதுடே செல்லும்? நம்ப தோஸ்த்து லாயருகிட்ட கேட்டா சட்டமே இப்படி ஒரு சிச்சிவேஷனை சந்திச்சதில்லைங்குறாரு. அதாவது இந்து திருமண சட்டப்படி அக்னியை சுத்தி வந்தா கல்யாணம் ரிஜிஸ்டர் ஆனா மேறியாம். அப்படின்னா இங்கன தம்பியும், அக்காவும் ரெண்டு தபா அக்னியை சுத்தி வந்து ரெண்டு தபா தாலி கட்டியிருக்காக. முத தபாதான் சட்டப்படி செல்லும்ணா நாயுடுக்காரன் கல்யாணம்தான் லீகலுக்குள்ள வரும். இது தெரிஞ்சா பார்ப்பானுங்க துள்ளிக் குதிப்பானுங்க. அடுத்து ஒரு பெண்ணுக்கு ரெண்டாவது தபா தாலி கட்டுறதா இருந்தா முத கல்யாணத்தை விவாகரத்து செஞ்சிருக்கணும். அப்போ முதல்ல தாலியக் கட்டி விவாகரத்து செய்ஞ்சிட்டு ரெண்டாவது தபா கட்டுனாத்தான் தெலுங்கு பாப்பார முறை திருமணம் செல்லும். அப்போ நாயுடுக்காரன் திருமணம் அதோகதி.

ஆக ரெண்டு வாட்டிதாலி கட்டுனதால விசயம் முடியல. நாயுடுக்காரனுவகளும், பாப்பானுகளும் நல்லா யோசிச்சு ஃபைசல் பண்ணி ஒரு முடிவுக்கு வாங்கடே. உங்க சாதித் திமிரை ஆய்வு பண்ணுணா கல்யாணத்தன்னைக்கே விவாகரத்த பேச வேண்டியிருக்குதுல்லா? சினேகா அக்கா கல்யாணம் காச்சியுமா இருக்கிறச்சே காளமேகம் இப்புடி அபஸகுனமாக விவாகரத்து பேசுறானேன்னு எம்மேல பாயாதீக? நானா ரெண்டு தபா தாலி கட்டச் சொன்னேன்?

மக்கா, உழைக்குற மக்கள் பல பேரு சாதியக் கடாசிட்டு கல்யாணம் பண்ணியிருக்காக. அங்க இல்லாம் இப்புடி இரட்டைத்தாலிங்குற கேவலம்லாம் இல்லடே. ஆனா ரெண்டு சினிமா வி.ஐ.பிங்க அதுவும் ஊரு உலகத்துக்கு தன்னோட கல்யாணத்த வித்து பாக்கச் சொன்னவன், இப்புடி ரெண்டு தாலி கட்டுற கேவலத்தை, சாதித் திமிரை வுடமுடியாதுன்னு பெருமையா பேசுறானே அதுதாம்லே மகா கேவலம். அந்தக் கேவலத்தை டி.வியில வேற காட்டுறான்னா பாக்குறவன் கேனயன்னுதானடே நெனைப்பு! இதுல நாளைக்கே சாதி மாறிக் கல்யாணம் பண்ணுறவனெல்லாம் இதே மாதிரி ரெட்டைத்தாலி கட்டணும்னு ஒரு புது சடங்கை இந்தக் கசுமாலங்க ஆரம்பிச்சு வச்சுருக்கானுவ. ஒரு தாலியவே விடணும்னு நம்ம தோழருங்க போராடிக்கிட்டிருக்கிற நாட்டுல இனி காதல் திருமணம்னா ரெண்டு தாலின்னா, அதைக் கட்டுறவ லோடு அடிக்கிற மாடா, இல்ல மனுஷியா?

தம்பி பிரசன்னாவும், சினேகா அக்காவும் அவ்வளவா மார்கெட் இல்லாத நடிகருங்கன்னாலும் ஐஞ்சாறு படத்துல நடிச்சுக் கிடைக்கிற காச ஒரே வாட்டி லம்பா மூணு கோடிக்கு வுத்து சுருட்டிட்டிங்கல்லா. இதுல கல்யாணத்துக்க்காக அக்கா பண்ருட்டியில இருக்கிற திருமண மண்டபத்தை வுத்துட்டாகளான்னு நொம்ப ஃபீல் பண்ணி பத்திரிகைகாரனுவ எழுறான். ஏலேய் போக்கத்த மூதிகளா, நடிகைங்க மார்கெட் இல்லேன்னாலும் வளைகுடா நாடுகளுக்கு போய் கலை நிகழ்ச்சி நடத்தி சம்பாதிக்கிறது உங்களுக்குத் தெரியும்தானடே, பெறவு என்ன ஃபீலிங்கு?

இனி, என்ன? விஜய் டீ.விக்காரன் நம்ம வீட்டு கல்யாணம்கிற தொடருல சினேகா அக்கா கல்யாணத்தை போட்டு, அவுக எப்புடி சந்திச்சாக, யாரு புரபோசல் பண்ணுணாக, வீட்டு எதிர்ப்பை எப்படி சமாளிச்சாக, ரெட்டைத் தாலி எப்புடி கண்டுபிடிச்சாகன்னு நாலஞ்சு வாரம் ஓட்டுவான்.

மக்களே, தமிழ்நாட்டுல இந்த ரெண்டு, மூணு மாசத்துல ஐஞ்சாறு கவுரவக் கொலைங்க நடந்திருக்கு. அந்தக் கொலையில இருக்குற சாதி வெறிக்கும், இந்த இரட்டைத் தாலியில இருக்கிற சாதி வெறிக்கும் என்னடே வித்தியாசம்? அதயும் ஒரு டி.விக்காரன் தமிழ்நாட்டு மக்களுக்கு காட்டப் போறாம்னா, நாமல்லாம் சுரணையுள்ள பயபுள்ளைகளா, பீயத் தின்னுற பன்னிகளா?

______________________________________________________

– காளமேகம் அண்ணாச்சி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: